Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த ஸ்ரீ முகுந்த3மாலை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

January 14, 2022

ஶ்ரீமுகுந்த₃மாலா
கு₃ஷ்யதே யஸ்ய நக₃ரே ரங்க₃யாத்ரா தி₃நே தி₃நே
தமஹம் ஶிரஸா வந்தே₃ ராஜாநம் குலஶேக₂ரம்

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்த ப்ரியேதி ப⁴வலுண்ட²ந கோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயநேதி ஜக³ந் நிவாஸேதி
ஆலாபநம் ப்ரதி பத³ம் குரு மாம் முகுந்த³ ॥ 1॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீநந்த³நோঽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரநாஶோ முகுந்த:³ ॥ 2॥

முகுந்த³! மூர்த்⁴நா ப்ரணிபத்ய யாசே ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³ ப⁴வே ப⁴வே மேঽஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த் ॥ 3॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வம த்³வந்த்³வஹேதோ:
கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யா ராமா ம்ருʼது³தநுலதா நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³ய ப⁴வநே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 4॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுநிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வந் பூர்வ கர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹு மதம் ஜந்ம ஜந்மாந்தரேঽபி
த்வத் பாதா³ம்போ⁴ருஹ யுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 5॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரித-ஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

க்ருʼஷ்ண! த்வதீ³ய பத³பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மாநஸ ராஜ ஹம்ஸ: ।
ப்ராண ப்ரயாண ஸமயே கப² வாத பித்தை:
கண்டா²வரோத⁴நவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ ஹஸிதாந நாம்பு³ஜம்
நந்த³கோ³ப தநயம் பராத்பரம் நாரதா³தி³ முநிவ்ருʼந்த³ வந்தி³தம் ॥ 8॥

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமரு பரிகி²ந்ந: க்லேஶமத்³ய த்யஜாமி ॥ 9॥

ஸரஸிஜ நயநே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுக²தரமபரம் ந ஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம்ருʼதேந துல்யம் ॥ 10॥

மாபீ⁴ர்மந்த³மநோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ் சிரம் யாதநா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாப ரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபநீய ப⁴க்தி ஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத³நகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 11॥

ப⁴வ ஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுத து³ஹித்ருʼகளத்ர த்ராண பா⁴ரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ப⁴வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12॥

ப⁴வஜலதி⁴ மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மாஸ்மகா:³ காதரத்வம் ।
ஸரஸி ஜத்³ருʼஶி தே³வே தாரகீ ப⁴க்திரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தார யிஷ்யத் யவஶ்யம் ॥ 13॥

த்ருʼஷ்ணா தோயே மத³நபவநோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தநய ஸஹஜ க்³ராஹ  ஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மந்
பாதா³ம் போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்திநாவம் ப்ரயச்ச² ॥ 14॥

மாத்³ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்தி ஹீநாந் பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்ய ப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யாந்ய தா³க்²யாந ஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வந பதே சேதஸா பஹ்நுவாநாந்
மாபூ⁴வம் த்வத் ஸபர்யா வ்யதிகர ரஹிதோ ஜந்ம ஜந்மாந்தரேঽபி ॥ 15॥

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோகய லோசநத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।
அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷத⁴ம் விதநுதே நிர்வாநமாத்யந்திகம் ॥ 17॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 18॥

ப்ருʼத்²வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ঽநல:
தேஜோ நி:ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥ 19॥

ப³த்³தே⁴நாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:
கண்டே²ந ஸ்வரக³த்³க³தே³ந நயநேநோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³நா ।
நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ள த்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 20॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலநிதே⁴ ஹே ஸிந்து⁴கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।
ஹே ராமாநுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீஜநநாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்யரக்ஷாமணி:
கோ³பீலோசநசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி:
ய: காந்தாமணிருக்மிணீக⁴நகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ஶ்ரேயோ தே³வஶிகா²மணிர்தி³ஶது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 22॥

ஶத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபநிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ்ஸங்க⁴நிர்யாணமந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநபு⁴ஜக³ ஸந்த³ஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸாப²ல்யமந்த்ரம் ॥ 23॥

வ்யாமோஹப்ரஶமௌஷத⁴ம் முநிமநோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிஜக³தாம் ஸஞ்ஜீவநைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸநைகௌஷத⁴ம்
ஶ்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மந: ஶ்ரீக்ருʼஷ்ண தி³வ்யௌஷத⁴ம் ॥ 24॥

ஆம்நாயாப்⁴யஸநாந்யரண்யருதி³தம் வேத³வ்ரதாந் யந்வஹம்
மேத³ஶ்சே²த³ப²லாநி பூர்தவித⁴யஸ் ஸர்வேஹுதம் ப⁴ஸ்மநி ।
தீர்தா²நாமவகா³ஹநாநி ச க³ஜஸ்நாநம் விநா யத்பத³ –
த்³வந்த்³வாம்போ⁴ருஹ ஸம்ஸ்ம்ருʼதிர் விஜயதே தே³வஸ் ஸ நாராயண: ॥ 25॥

ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கே ந ப்ராபுர்வாஞ்சி²தம் பாபிநோঽபி ।
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

மஜ்ஜந்மந: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே!
மத்ப்ரார்த²நீயமத³நுக்³ரஹ ஏஷ ஏவ ।
த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரக ப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-
ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகநாத² ॥ 27॥

நாதே² ந: புருஷோத்தமே த்ரிஜக³தா மேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஶ மல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 28॥

மத³ந பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மநஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்நி ।
ஹரநயநக்ருʼஶாநுநா க்ருʼஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 29॥

தத்த்வம் ப்³ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லாநி ।
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ³சராணி ॥ 30॥

இத³ம் ஶரீரம் பரிணாமபேஶலம் பதத்யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।
கிமௌஷதை:⁴ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதே நிராமயம் க்ருʼஷ்ணரஸாயநம் பிப³ ॥ 31॥

தா³ரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருʼத்யவர்க:³ ப்ரஸாத:³ ।
முக்திர்மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்த்வய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருʼஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।
க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோঽஸ்ம்யஹம்
க்ருʼஷ்ணே திஷ்ட²தி விஶ்வமேதத³கி²லம் ஹேக்ருʼஷ்ண! ஸம்ரக்ஷ மாம் ॥ 33॥

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வந் குரு மய்யநாதே²
விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: க²லு த்வம் ।
ஸம்ஸாரஸாக³ரநிமக்³நமநந்த தீ³நம்
உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோঽஸி ॥ 34॥

நமாமி நாராயண பாத³பங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸதா³ ।
வதா³மி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

ஶ்ரீநாத² நாராயண வாஸுதே³வ
ஶ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।
ஶ்ரீபத்³மநாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 36॥

அநந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।
வக்தும் ஸமர்தோ²ঽபி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி⁴முக்²யம் ॥ 37॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।
ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

க்ஷீரஸாக³ர தரங்க³ஶீகரா ஸாரதாரகித சாருமூர்தயே ।
போ⁴கி³போ⁴க³ ஶயநீயஶாயிநே மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 39॥

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ
மித்ரே த்³விஜந்மவரபத்³ம ஶராவபூ⁴தாம் ।
தேநாம்பு³ஜாக்ஷ சரணாம்பு³ஜ ஷட்பதே³ந
ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலஶேக²ரேண ॥

॥ இதி ஶ்ரீகுலஶேக²ரேண விரசிதா முகுந்த³மாலா ஸம்பூர்ணம் ॥

—-

தனியன்:
গুஷ்யதே யஸ்ய நগரே ரங்গயாத்ரா দিநே দিநே
தமஹம் শিரஸா வந்দে ராஜாநம் குலশেখரம்.

கு₃ஷ்யதே யஸ்ய நக₃ரே ரங்க₃யாத்ரா தி₃நே தி₃நே
தமஹம் ஶிரஸா வந்தே₃ ராஜாநம் குலஶேக₂ரம்

யஸ்ய – யாவரொரு குலசேகரப் பெருமாளுடைய,
நகரே – கொல்லியென்னும் நகரத்தில்,
திநே திநே – நாள்தோறும்,
ரங்க யாத்ரா – ‘ஸ்ரீரங்க யாத்ரை’ என்கிற சப்தமானது,
குஷ்யதே – (ஜநங்களால்) கோஷிக்கப்படுகிறதோ,
தம் ராஜாநம் – அந்த ராஜாவாகிய,
குலசேகரம் – ஸ்ரீ குலசேகராழ்வாரை,
அஹம் – அடியேன்,
சிரஸா வந்தே – தலையினால் வணங்குகின்றேன்.

——-

ஶ்ரீவல்ல◌ேভதி வர◌ேদதி দயாபரேதி ভக்தப்ரியேதி ভவலுண்ঠநகோவி◌ேদதி ।
நா◌ேথதி நாগஶயநேதி ஜগந்நிவாஸேதி ஆலாபிநம் ப்ரதிபদம் குரு மாம் முகுந்দ ॥ 1॥

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்த ப்ரியேதி ப⁴வலுண்ட²ந கோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயநேதி ஜக³ந்நிவாஸேதி
ஆலாபநம் ப்ரதிபத³ம் குரு மாம் முகுந்த³ ॥ 1॥

ஹே முகுந்த! – உபய விபூதியை அளிக்க வல்ல எம்பெருமானே!,
ஸ்ரீ வல்லப! இதி -ஶ்ரிய:பதி என்றும்,
வரத! இதி – (அடியார்க்கு) அபேஷிதங்களை அளிப்பவனே! என்றும்,
தயா பர! இதி – அடியார் படும் துக்கங்களைப் பொறுக்க மாட்டாத ஸ்வபாவமுடை யவனே! என்றும்,
பக்த ப்ரிய! இதி – அடியார்கட்கு அன்பனே! என்றும்,
பவலுண்டந கோவித! இதி – ஸம்ஸாரத்தைத் தொலைக்க வல்லவனே! என்றும்,
நாத! இதி – ஸர்வ ஸ்வாமிந்! என்றும்,
நாக சயந! இதி – அரவணை மேல் பள்ளி கொள்பவனே! என்றும்,
ஜகந் நிவாஸ! இதி – திரு வயிற்றை இருப்பிடமாக்கி அவற்றை நோக்குமவனே! என்றும்,
ப்ரதிபதம் – அடிக்கடி,
ஆலாபிநம் – சொல்லுமவனாக,
மாம் – அடியேனை,
குரு – செய்தருளாய்.

———

ஜயது ஜயது ◌ேদவோ ◌ேদவகீநந்দநோயம்
ஜயது ஜயது கৃஷ்ணோ வৃஷ்ணிவம்ஶப்ரদீபঃ ।
ஜயது ஜயது மேঘஶ்யாமலঃ கோமலாங்◌ேগা
ஜயது ஜயது பৃথ்வீভாரநாஶோ முகுந்দঃ ॥ 2॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீநந்த³நோঽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணி வம்ஶ ப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரநாஶோ முகுந்த:³ ॥ 2॥

அயம் – இந்த,
தேவ: – தேவனான,
தேவகீ நந்தந: – தேவகியின் மகனான கண்ணபிரான், – வாழ்க! வாழ்க!!,
வ்ருஷ்ணி வம்ச ப்ரதீப: – வ்ருஷ்ணி என்னும் அரசனுடைய குலத்துக்கு விளக்காய்த் தோன்றிய கண்ணன், ஜயது ஜயது-;
மேகச்யாமல: – காளமேகம் போற் கரிய பிரானாய்,
கோமள அங்க: – அழகிய திருமேனியை யுடையனான் கண்ணபிரான், ஜயது ஜயது-;
ப்ருத்வீபார நாச: – பூமிக்குச் சுமையான துர்ஜநங்களை ஒழிக்குமவனான,
முகுந்த: – கண்ணபிரான், ஜயது ஜயது – வாழ்க! வாழ்க!!

————

முகுந்দ மூர்ধ்நா ப்ரணிபத்ய யாசே ভவந்தமேகாந்தமியந்தமர்থம் ।
அவிஸ்மৃதிஸ்த்வச்சரணாரவிந்◌ேদ ভவே ভவே மேঽஸ்து ভவத்ப்ரஸாদாத் ॥ 3॥

முகுந்த³! மூர்த்⁴நா ப்ரணிபத்ய யாசே ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ் த்வச் சரணாரவிந்தே³ ப⁴வே ப⁴வே மேঽஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த் ॥ 3॥

முகுந்த – புக்தீ முக்திகளைத் தரவல்ல கண்ணபிரானே!,
பவந்தம் – தேவரீரை,
மூர்த்நா – தலையாலே,
ப்ரணிபத்ய – ஸேவித்து,
இயந்தம் அர்த்தம் ஏகாந்தம் – இவ்வளவு பொருளை மாத்திரம்,
யாசே – யாசிக்கின்றேன்! (அஃது என்? எனில்),
மே – எனக்கு,
பவே பவே – பிறவிதோறும்,
பவத்ப்ரஸாதாத் – தேவரீருடைய அநுக்ரஹத்தினால்,
த்வத் சரணாரவிந்தே – தேவரீருடைய திருவடித் தாமரை விஷயத்தில்,
அவிஸ்ம்ருதி: – மறப்பு இல்லாமை,
அஸ்து – இருக்க வேணும்.

—————

நாஹம் வந்◌ேদ தவ சரணயோர்দ்வந்দ்வமদ்வந்দ்வஹேதோঃ
கும்ভீபாகம் গுருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யாராமாமৃদுதநுலதா நந்দநே நாபி ரந்தும்
ভாவே ভாவே ஹৃদயভவநே ভாவயேயம் ভவந்தம் ॥ 4॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வம த்³வந்த்³வ ஹேதோ:
கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபநேதும் ।
ரம்யா ராமா ம்ருʼது³தநு லதா நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³ய ப⁴வநே பா⁴வ யேயம் ப⁴வந்தம் ॥ 4॥

அஹம் – அடியேன்,
தவ – தேவரீருடைய,
சரணயோ:த்வந்த்வம் – திருவடியிணையை,
அத்வந்த்வஹேதோ: – ஸுக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்.;
கும்பீபாகம் – கும்பீபாகமென்னும் பெயரையுடைய,
குரும் – பெருத்த [கொடிதான],
நாரகம் – நரகத்தை,
அபநேதும் அபி – போக்கடிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
ரம்யா: – அழகாயும்,
ம்ருது தநு லதா: – ஸுகுமாரமாய்க் கொடி போன்ற சரீரத்தையுடையவர்களுமான,
ராமா: – பெண்களை [அப்ஸரஸ்ஸுக்களை],
நந்தநே – (இந்திரனது) நந்தநவநத்தில்,
ரந்தும் அபி – அநுபவிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்; (பின்னை எதுக்காக ஸேவிக்கிறீரென்றால்;),
ஹே ஹரே! – அடியார்களின் துயரத்தைப் போக்குமவனே!,
பாவே பாவே – பிறவி தோறும்,
ஹ்ருதய பவநே – ஹ்ருதயமாகிற மாளிகையில்,
பவந்தம் – தேவரீரை,
பாவயேயம் – த்யாநம் பண்ணக் கடவேன். (இப் பேறு பெறுகைக்காகத் தான் ஸேவிக்கிறேனென்று சேஷ பூரணம்.)

————

நாஸ்থா ধர்மே ந வஸுநிசயே நைவ காமோப◌ேভা◌ேগ
யদயদ் ভவ்யம் ভவது ভগவந் பூர்வகர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்থ்யம் மம বஹுமதம் ஜந்மஜந்மாந்தரேঽபி
த்வத்பாদாம்◌ேভাருஹயுগগதா நிஶ்சலா ভக்திரஸ்து ॥ 5॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுநிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வந் பூர்வ கர்மாநுரூபம் ।
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹு மதம் ஜந்ம ஜந்மாந்தரேঽபி
த்வத் பாதா³ம்போ⁴ருஹ யுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 5॥

ஹே பகவந் – ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே!,
மம – அடியேனுக்கு,
தர்மே! – (ஆமுஷ்மிக ஸாதனமான) தர்மத்தில்,
ஆஸ்தா ந – ஆசையில்லை;
வஸு நிசயே – (ஐஹிக ஸாதநமான) பணக் குவியலிலும்,
ஆஸ்தா ந – ஆசையில்லை;
காம உபபோகே – விஷய போகத்திலும்,
ஆஸ்தா ந ஏவ – ஆசை இல்லவே யில்லை;
பூர்வ கர்ம அநுரூபம் – ஊழ்வினைக்குத் தக்கபடி,
யத் யத் பவ்யம் – எது எது உண்டாகக் கடவதோ,
(தத் – அது) பவது – உண்டாகட்டும்;
(ஆனால்)
த்வத் பாத அம்போ ருஹ யுக கதா – தேவரீருடைய திருவடித் தாமரையிணையிற் பதிந்திருக்கிற,
பக்தி: – பக்தியானது,
ஜந்ம ஜந்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
நிஶ்சலா – அசையாமல்,
அஸ்து – இருக்க வேண்டும்;
(இதி யத் – என்பது யாதொன்று)
ஏதத் – இதுவே,
மம பஹுமதம் – எனக்கு இஷ்டமாய்,
ப்ரார்த்யம் -ப்ரார்த்திக்கத் தக்கதுமாயிருக்கிறது.

————–

দிவி வா ভுவி வா மமாஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவধீரித-ஶாரদாரவிந்◌ெদள சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரித-ஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேঽபி சிந்தயாமி ॥ 6॥

ஹே நரக அந்தக – வாராய் நரக நாசனே!,
மம – எனக்கு,
திவி வா –ஸ்வர்க்கத்தி லாவது,
புவி வா – பூமியிலாவது,
நரகே வா – நரகத்திலாவது,
பர காமம் – (உனது) இஷ்டப்படி,
வாஸ: – வாஸமானது,
அஸ்து – நேரட்டும்,
அவதீரிதசாரத அரவிந்தெள – திரஸ்கரிக்கப்பட்ட சரத் காலத் தாமரையை யுடைய
[சரத்காலத் தாமரையிற் காட்டிலும் மேற்பட்ட],
தே சரணெள – தேவரீருடைய திருவடிகளை,
மரணே அபி – (ஸகல கரணங்களும் ஓய்ந்திருக்கும்படியான) மரண காலத்திலும்,
சிந்தயாமி – சிந்திக்கக் கடவேன்.

————

கৃஷ்ண! த்வদீய பদபங்கஜ பஞ்ஜராந்த:
அদ்யைவ மே விஶது மாநஸ ராஜஹம்ஸঃ ।
ப்ராணப்ரயாணஸமயே கফவாதபித்தைঃ
கண்ঠாவரோধந-வி◌ெধள ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

க்ருʼஷ்ண! த்வதீ³ய பத³பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மாநஸ ராஜ ஹம்ஸ: ।
ப்ராண ப்ரயாண ஸமயே கப²வாத பித்தை:
கண்டா²வரோத⁴நவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 7॥

க்ருஷ்ண! – கண்ண பிரானே!,
ப்ராண ப்ரயாண ஸமயே – உயிர் போகும் போது,
கப வாத பித்தை: – கோழை, வாயு, பித்தம் இவற்றால்,
கண்டாவரோதந விதெள – கண்டமானது அடைபட்டவளவில்,
தே – தேவரீருடைய,
ஸ்மரணம் – நினைவானது,
குத: – எப்படி உண்டாகும்?, (உண்டாக மாட்டாதாகையால்)
மே – என்னுடைய,
மாநஸ ராஜ ஹம்ஸ: – மநஸ்ஸாகிற உயர்ந்த ஹம்ஸமானது,
த்வதீய பத பங்கஜ பஞ்சர அந்த: – தேவரீருடையதான திருவடித் தாமரைகளாகிற கூட்டினுள்ளே,
அத்ய ஏவ – இப்பொழுதே,
விசது – நுழையக் கடவது.

——

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்দமந்দ ஹஸிதாநநாம்বுஜம்
நந்দ◌ேগাப தநயம் பராத்பரம் நாரদாদி முநிவৃந்দ வந்দிதம் ॥ 8॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ ஹஸிதாந நாம்பு³ஜம்
நந்த³கோ³ப தநயம் பராத் பரம் நாரதா³தி³ முநி வ்ருʼந்த³ வந்தி³தம் ॥ 8॥

மந்த மந்த ஹஸித ஆநந அம்புஜம் – புன்முறுவல் செய்கின்ற தாமரை மலர் போன்ற திருமுகத்தை யுடையனாய்,
நாரத ஆதி முநி ப்ருந்த வந்திதம் – நாரதர் முதலிய முனிவர் கணங்களால் தொழப் பட்டவனாய்,
பராத் பரம் – உயர்ந்தவர்களிற் காட்டிலும் மேலான உயர்ந்தவனாய்,
ஹரிம் – பாவங்களைப் போக்குமவனாய்,
நந்தகோப தநயம் ஏவ – நந்தகோபன் குமாரனான கண்ண பிரானையே,
ஸந்ததம் – எப்போதும்,
சிந்தயாமி – சிந்திக்கின்றேன்.

—————

கரசரணஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி ভுஜவீசிவ்யாகுலேঽগாধமார்◌ேগ ।
ஹரிஸரஸி விগாஹ்யாபீய தேஜோ ஜலௌঘம்
ভவமருபரிখிந்நঃ க்லேஶமদ்ய த்யஜாமி ॥ 9॥

கர சரண ஸரோஜே காந்திமந் நேத்ர மீநே
ஶ்ரம முஷி பு⁴ஜ வீசி வ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யா பீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வ மரு பரிகி²ந்ந: க்லேஶ மத்³ய த்யஜாமி ॥ 9॥

கர சரண ஸரோஜே – திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய்,
காந்திமந் நேத்ர மீநே – அழகிய திருக்கண்களாகிற கயல்களை யுடையதாய்,
ச்ரமமுஷி – விடாயைத் தீர்க்குமதாய்,
புஜ வீசி வ்யாகுலே – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய்,
அகாத மார்க்கே – மிகவும் ஆழமான,
ஹரி ஸரஸி – எம்பெருமானாகிற தடாகத்தில்,
விகாஹ்ய – குடைந்து நீராடி,
தேஜோ ஜல ஓகம் – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை,
ஆபீய – பாநம் பண்ணி,
பவ மரு பரிகிந்ந – ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்,
கேதம் – அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை,
அத்ய – இப்போது,
த்யஜாமி – விடுகின்றேன்.

—————-

ஸரஸிஜநயநே ஸஶங்খசக்ரே முரভிদி மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுখதரமபரம் ந ஜாது ஜாநே ஹரிசரணஸ்மரணாமৃதேந துல்யம் ॥ 10॥

ஸரஸிஜ நயநே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த! ரந்தும் ।
ஸுக²தரம பரம் ந ஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம்ருʼதேந துல்யம் ॥ 10॥

ஸ்வ சித்த – எனக்குச் செல்வமான நெஞ்சே!,
ஸரஸிஜ நயநே – தாமரை போன்ற கண்களை யுடையனாய்,
ஸ சங்க சக்ரே – திருவாழி திருச் சங்குகளோடு கூடினவனாய்,
முரபிதி – முராஸுரனைக் கொன்றவனான கண்ண பிரானிடத்து,
ரந்தும் – ரமிப்பதற்கு,
மா விரம – க்ஷணமும் விட்டு ஒழியாதே;
ஹரி சரண ஸ்மரண அம்ருதேந – எம்பெருமானது திருவடிகளைச் சிந்திப்பதாகிற அம்ருதத்தோடு,
துல்யம் – ஒத்ததாய்,
ஸுக தரம் – மிகவும் ஸுககரமாயிருப்பதான,
அபரம் – வேறொன்றையும்,
ஜாது – ஒரு காலும்,
ந ஜாநே – நான் அறிகின்றிலேன்.

—————–

மாভீர் மந்দமநோ விசிந்த்ய বஹுধா யாமீஶ்சிரம் யாதநாঃ
நாமீ நঃ ப்ரভவந்தி பாபரிபவஸ் ஸ்வாமீ நநு ஶ்ரீধரঃ ।
ஆலஸ்யம் வ்யபநீய ভக்திஸுலভம் ধ்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோদநகரோ দாஸஸ்ய கிம் ந க்ஷமঃ ॥ 11॥

மாபீ⁴ர் மந்த³மநோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ் சிரம் யாதநா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாப ரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபநீய ப⁴க்தி ஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத³ந கரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 11॥

ஹே! மந்த மந:! – ஓ அற்பமான நெஞ்சே!,
யாமீ: – யமனுடையதான,
யாதநா: – தண்டனைகளை,
சிரம் – வெகு காலம்,
பஹுத: – பலவிதமாக,
விசிந்த்ய – சிந்தித்து (உனக்கு),
பீ: மா(ஸ்து) – பயமுண்டாகவேண்டாம்;
அமீ – இந்த,
பாப ரிபவ: – பாவங்களாகிற சத்ருக்கள் நமக்கு,
ந ப்ரபவந்தி – செங்கோல் செலுத்துமவையல்ல;
நநு – பின்னையோவென்றால்,
ஸ்ரீதர: – திருமால்,
ந:ஸ்வாமி – நமக்கு ஸ்வாமியாயிருக்கிறார்,
ஆலஸ்யம் – சோம்பலை,
வ்யபநீய – தொலைத்து,
பக்தி ஸுலபம் – பக்திக்கு எளியனான,
நாராயணம் – ஸ்ரீமந்நாராயணனை,
த்யாயஸ்வ -த்யாநம் பண்ணு;
லோகஸ்ய – உலகத்துக்கு எல்லாம்,
வ்யஸந அபநோதந கர: – துன்பத்தைப் போக்குகின்ற அவர்,
தாஸஸ்ய – அவர்க்கே அடிமைப்பட்டிருக்கும் எனக்கு,
ந க்ஷம: கிம் – (பாபத்தைப் போக்க) மாட்டாதவரோ?

——————

ভவஜலধிগதாநாம் দ்வந்দ்வவாதாஹதாநாம்
ஸுதদுஹிதৃகளத்ர த்ராணভாரார்দிதாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ভவது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 12॥

ப⁴வ ஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வ வாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகளத்ர த்ராண பா⁴ரார்தி³தாநாம் ।
விஷம விஷய தோயே மஜ்ஜ தாம ப்லவாநாம்
ப⁴வது ஶரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ॥ 12॥

பவ ஜலதி கதாநாம் – ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்தவர்களாயும்,
த்வந்த்வ வாத ஆஹதாநாம் – ஸுகதுக்கங்களாகிற பெருங்காற்றினால் அடிபட்டவர்களாயும்,
ஸுத-துஹித்ரு களத்ர த்ராண பார-அர்த்திதாநாம் – மகன், மகள், மனைவி, இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப்பட்டவர்களாயும்,
விஷம விஷய தோயே -க்ரூரமான சப்தாதி விஷயங்களாகிற ஜலத்தில்,
மஜ்ஜதாம் – மூழ்கினவர்களாயும்,
அப்லவாநாம் – (இப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்துதற்கு உரிய) ஓடமற்றவர்களாயுமிருக்கிற,
நாரணாம் – மனிதர்களுக்கு,
விஷ்ணு போத: ஏக: – விஷ்ணுவாகிற ஓடம் ஒன்றே,
சரணம் – ரக்ஷகமாக,
பவது – ஆகக்கடவது.

———-

ভவஜலধிமগாধம் দுஸ்தரம் நிஸ்தரேயம்
கথமஹமிதி சேதோ மாஸ்மগாঃ காதரத்வம் ।
ஸரஸிஜদৃஶி ◌ேদவே தாவகீ ভக்திரேகா
நரகভிদி நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் ॥ 13॥

ப⁴வஜலதி⁴ மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மாஸ்மகா:³ காதரத்வம் ।
ஸரஸி ஜத்³ருʼஶி தே³வே தாரகீ ப⁴க்தி ரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத் யவஶ்யம் ॥ 13॥

ஹே சேத:! – வாராய் மனமே!,
அகாதம் – ஆழமானதும்,
துஸ்தரம் – தன் முயற்சியால் தாண்டக் கூடாததுமான,
பவ ஜலதிம் – ஸம்ஸார ஸாகரத்தை,
அஹம் – நான்,
கதம் – எப்படி,
நிஸ்தரேயம் – தாண்டுவேன்?,
இதி – என்று,
காதரத்வம் – அஞ்சி யிருப்பதை,
மாஸ்ம கா: – அடையாதே; [அஞ்சாதே என்றபடி],
நரகபிதி – நரகாஸுரனைக் கொன்றவனும்,
ஸரஸிஜ த்ருசி – தாமரை போன்ற திருக் கண்களை யுடையனுமான,
தேவே – எம்பெருமானிடத்தில்,
நிஷண்ணா – பற்றி யிருக்கிற,
தாவகீ – உன்னுடையதான,
பக்தி: ஏகா – பக்தி யொன்றே,
அவஶ்யம் – நிஸ் ஸம்சயமாக,
தாரயிஷ்யதி – தாண்டி வைக்கும்.

—————–

தৃஷ்ணாதோயே மদநபவநோদ்ধூதமோஹோர்மிமாலே
দாராவர்தே தநயஸஹஜগ்ராஹ ஸங்ঘாகுலே ச ।
ஸம்ஸாராখ்யே மஹதி ஜல◌ெধள மஜ்ஜதாம் நஸ்த்ரிধாமந்
பாদாம்◌ேভাஜே வரদ! ভவதோ ভக்திநாவம் ப்ரயச்ছ ॥ 14॥

த்ருʼஷ்ணா தோயே மத³ந பவநோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தநய ஸஹஜ க்³ராஹ ஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ் த்ரிதா⁴மந்
பாதா³ம் போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தி நாவம் ப்ரயச்ச² ॥ 14॥

த்ரிதாமந் – மூன்று இடங்களில் எழுந்தருளியிருக்கிற,
ஹே வரத! – வாராய் வரதனே!,
த்ருஷ்ணா தோயே – ஆசையாகிற ஜலத்தை யுடையதும்,
மதந பவந உத்தூத மோஹ ஊர்மி மாலே – மந்மதனாகிற வாயுவினால் கிளப்பப்பட்ட மோஹமாகிற அலைகளின் வரிசைகளை யுடையதும்,
தார ஆவர்த்தே – மனைவியாகிற சுழிகளை யுடையதும்,
தநய ஸஹஜ க்ராஹ ஸங்க ஆகுலே ச – மக்கள் உடன் பிறந்தவர்கள் இவர்களாகிற முதலைக் கூட்டங்களால் கலங்கி யுமிருக்கிற,
ஸம்ஸார ஆக்க்யே – ஸம்ஸாரமென்கிற பெயரை யுடைய,
மஹதி – பெரிதான,
ஜலதெள – கடலில்,
மஜ்ஜதாம் ந: – மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு,
பவத: – தேவரீருடைய,
பாத அம்போஜே – திருவடித் தாமரையில்,
பக்தி நாவம் – பக்தியாகிற ஓடத்தை,
ப்ரயச்ச – தந்தருள வேணும்.

————

மாদ்ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபிভவதோ ভக்திஹீநாந் பদாব்ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யবந்ধம் தவ சரிதமபாஸ்யாந்ய দாখ்யாநஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாধவ! த்வாமபி ভுவநபதே! சேதஸாபஹ்நுவாநாந்
மாভூவம் த்வத்ஸபர்யாவ்யதிகரரஹிதோ ஜந்மஜந்மாந்தரேঽபி ॥ 15॥

மாத்³ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷண மபி ப⁴வதோ ப⁴க்தி ஹீநாந் பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்ய ப³ந்த⁴ம் தவ சரிதம பாஸ்யாந்ய தா³க்²யாந ஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வந பதே சேதஸா பஹ்நுவாநாந்
மாபூ⁴வம் த்வத் ஸபர்யா வ்யதிகர ரஹிதோ ஜந்ம ஜந்மாந்தரேঽபி ॥ 15॥

ஹே புவந பதே! – வாராய் லோகாதிபதியே!,
பவத: – தேவரீருடைய,
பத அப்ஜே – திருவடித் தாமரையில்,
க்ஷணம் அபி – க்ஷண காலமும்,
பக்தி ஹீநாந் – பக்தியற்றவர் களான,
க்ஷீண புண்யாந் – தெளர்ப்பாக்யசாலிகளை,
மாத்ராக்ஷம் – நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்;
ச்ராவ்ய பந்தம் – செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய,
தவ சரிதம் – தேவரீருடைய சரித்திரத்தை,
அபாஸ்ய – விட்டு,
அந்யத் – வேறான,
ஆக்க்யாந ஜாதம் – பிரபந்தங்களை,
மாச்ரெளஷம் – காது கொடுத்துக் கேட்க மாட்டேன்;
ஹே மாதவ – திருமாலே!,
த்வாம் – தேவரீரை,
அபஹ்நுவாநாந் – திரஸ்கரிக்குமவர்களை,
சேதஸா – நெஞ்சால், மாஸ்மார்ஷம் – நினைக்க மாட்டேன்,
ஜன்ம ஜன்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
த்வத் ஸபர்யாவ்யதிகா ரஹித: – தேவரீருடைய திருவாராதனமில்லாதவனாக,
மா பூவம் – இருக்க மாட்டேன்.

—————–

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ভஜ ஶ்ரீধரம்
பாணிদ்வந்দ்வ ஸமர்சயாச்யுத கথாঃ ஶ்ரோத்ரদ்வய த்வம் ஶৃணு ।
கৃஷ்ணம் லோகய லோசநদ்வய ஹரேர் গச்ছாங்ঘ்ரியுগ்மாலயம்
ஜிঘ்ர ঘ்ராண முகுந்দபாদதுலஸீம் மூர்ধந் நமா◌ேধাக்ஷஜம் ॥ 16॥

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணி த்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ர த்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோக்ய லோசந த்³வய ஹரேர் க³ச்சா²ங்க்⁴ரி யுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥ 16॥

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
கேசவம் – கேசியைக் கொன்ற கண்ணபிரானை,
கீர்த்தய – ஸ்தோத்ரம் செய்;
ஹே சேத: – வாராய் நெஞ்சே!,
முரரிபும் – முராஸுரனைக் கொன்ற கண்ணபிரானை,
பஜ – பற்று;
பாணி த்வந்த்வ – இரண்டு கைகளே!,
ஸ்ரீதரம் – திருமாலை,
ஸமர்ச்சய – ஆராதியுங்கள்;
ச்ரோத்ர த்வய! – இரண்டு காதுகளே!,
அச்யுத கதா: – அடியாரைக் கைவிடாதவனான எம்பெருமானுடைய சரித்ரங்களை,
த்வம் ச்ருணு – கேளுங்கள்;
லோசந த்வய – இரண்டு கண்களே!,
க்ருஷ்ணம் – கண்ண பிரானை,
லோக்ய – ஸேவியுங்கள்;
அங்க்ரியுக்ம – இரண்டு கால்களே!,
ஹரே: – எம்பெருமானுடைய,
ஆலயம் – ஸந்நிதியைக் குறித்து,
கச்ச – போங்கள்;
ஹே க்ராண! – வாராய் மூக்கே!,
முகுந்த பாத துளஸீம் – ஸ்ரீக்ருஷ்ணனது திருவடிகளிற் சாத்திய திருத்துழாயை,
ஜிக்ர – அநுபவி;
ஹே மூர்த்தந்! – வாராய் தலையே!,
அதோக்ஷஜம் – எம்பெருமானை,
நம – வணங்கு.

—————–

ஹே லோகாঃ ஶ்ருணுத ப்ரஸூதி மரணவ்யா◌ேধஶ் சிகித்ஸாமிமாம்
யோগஜ்ஞாঃ ஸமுদாஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாদயঃ ।
அந்தர்ஜ்யோதி ரமேய மேகமமৃதம் கৃஷ்ணாখ்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷধம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் ॥ 17॥

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதி மரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞ வல்க்யாத³ய: ।
அந்தர் ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்
தத் பீதம் பரமௌஷத⁴ம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் ॥ 17॥

ஹே லோகா: – ஜநங்களே!,
யோகஜ்ஞா: – யோக முறையை அறிந்தவர்களான,
யாஜ்ஞவல்க்ய ஆதய: – யாஜ்ஞ வல்க்யர் முதலிய,
முநய – ரிஷிகள்,
யாம் – யாதொன்றை,
ப்ரஸூதி மரணவ்யாதே: – பிறப்பு இறப்பாகிற வ்யாதிக்கு,
சிகித்ஸாம் – பரிஹாரமாக,
ஸமுதாஹரந்தி – கூறுகின்றார்களோ,
இமாம் – இந்த சிகித்ஸையை,
ச்ருணுத – கேளுங்கள்;
அந்தர் ஜ்யோதி: – உள்ளே தேஜோ ராசியாயும்,
அமேயம் – அளவிடக் கூடாததாயும்,
க்ருஷ்ண ஆக்க்யம் – ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயரை யுடையதாயுமுள்ள,
அம்ருதம் ஏகம் – அம்ருதமொன்றே,
ஆரியதாம் – (உங்களால்) பாநம் பண்ணப் படட்டும்;
தத் பரம ஒளஷதம் – அந்தச் சிறந்த மருந்தானது,
பீதம் ஸத் – பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு,
ஆத்யந்திகம் – சாச்வதமான,
நிர்வாணம் – ஸெளக்கியத்தை,
விதநுதே – உண்டு பண்ணுகிறது.

—————–

ஹே மர்த்யாঃ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபதঃ
ஸம்ஸாரார்ணவமாபদூர்மிবஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்থிதாঃ ।
நாநாஜ்ஞாநமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயধ்வம் முஹுঃ ॥ 18॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மி ப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நாநா அஜ்ஞாநம்  அபாஸ்ய  சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸ ப்ரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 18॥

ஆபத் ஊர்மி பஹுளம் – ஆபத்துக்களாகிற அலைகளால் மிகுந்த,
ஸம்ஸார அர்ணவம் – ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே,
ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா: – ஆழ அழுந்திக் கிடக்கிற,
ஹே மர்த்யா: – வாரீர் மனிதர்களே!,
வ: பரமம் ஹிதம் – உங்களுக்கு மேலான ஹிதத்தை,
ஸம்க்ஷேபத: – சுருக்கமாக,
வக்ஷ்யாமி – (இதோ) சொல்லப்போகிறேன்;
ச்ருணுத – கேளுங்கள்; (என்னவென்றால்),
நாநா அஜ்ஞாநம் – பலவிதமான அஜ்ஞானங்களை,
அபாஸ்ய – விலக்கி;
ஸ ப்ரணவம் – ஓங்காரத்தோடு கூடிய,
“நமோ நாராயணாய” இதி அமும்மந்த்ரம் – ‘நமோ நாராயணாய’ என்கிற இத் திருமந்த்ரத்தை,
சேதஸி – மனதில்,
முஹு: – அடிக்கடி,
ப்ரணாம ஸஹிதம் (யதா ததா) – வணக்கத்தோடு கூடிக் கொண்டிருக்கும்படி,
ப்ராவர்த்தயத்வம் – அநுஸந்தியுங்கள்.

————-

பৃথ்வீ ரேணுரணுঃ பயாம்ஸி கணிகாঃ ফல்গுஸ்ফுலிங்◌ேগা லগুঃ
தேஜோ நிঃஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்ধ்ரம் ஸுஸூக்ஷ்மம் நভঃ ।
க்ஷுদ்ரா ருদ்ரபிதாமஹப்ரভৃதயঃ கீடாঃ ஸமஸ்தாঃ ஸுராঃ
দৃஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ভூமாவধூதாவধிঃ ॥ 19॥

ப்ருʼத்²வீ  ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ঽநல:
தேஜோ நி:ஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
க்ஷுத்³ரா ருத்³ர பிதாமஹ ப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥ 19॥

யத்ர – யாதொரு மஹிமையானது,
த்ருஷ்டே ஸதி – காணப்பட்டவளவில்,
ப்ருத்வீ – பூமியானது,
அணு: -ஸ்வல்பமான,
ரேணு: – துகளாகவும்,
பயாம்ஸி – ஜலதத்வமானது,
பல்கு: கணிகா – சிறு திவலையாகவும்,
தேஜ: – தேஜஸ்த்தவமானது,
லகு: – அதிக்ஷூத்ரமான,
ஸ்புலிங்க: – நெருப்புப் பொறியாகவும்,
மருத் – வாயு தத்வமானது,
தநுதரம் – மிகவும் அற்பமான,
நிஶ்வஸநம் – மூச்சுக் காற்றாகவும்,
நப: – ஆகாச தத்துவமானது,
ஸு ஸூக்ஷ்மம் – மிகவும் ஸூக்ஷ்மமான,
ரந்த்ரம் – த்வாரகமாகவும்,
ருத்ர பீதாமஹ ப்ரப்ருதய: – சிவன், பிரமன் முதலிய, ஸமஸ்தா:
ஸுரா: – தேவர்களெல்லோரும்,
க்ஷுத்ரா: கீடா: – அற்பமான புழுக்களாகவும்
(ஆலக்ஷ்யந்தே) – தோன்றுகிறார்களோ,
ஸ: – அப்படிப்பட்டதாய்,
அவதூத அவதி: – எல்லையில்லாததாய்,
தாவக: – உம்முடையதான,
பூமா – மஹிமையானது,
விஜயதே – மேன்மையுற்று விளங்குகின்றது.

————-

বদ்◌ேধநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா গாத்ரைঃ ஸரோமோদ்গமைঃ
கண்◌ேঠந ஸ்வரগদ்গ◌ேদந நயநேநோদ்গீர்ணবாஷ்பாம்বுநா ।
நித்யம் த்வச்சரணாரவிந்দ யுগளধ்யாநாமৃதாஸ்வாদிநாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பদ்யதாம் ஜீவிதம் ॥ 20॥

ப³த்³தே⁴நாஞ்ஜலிநா நதேந ஶிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:
கண்டே²ந ஸ்வர க³த்³க³தே³ந நயநே நோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³நா ।
நித்யம் த்வச் சரணாரவிந்த³யுக³ள த்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 20॥

ஹே ஸரஸீருஹாக்ஷ! – தாமரை போன்ற திருக் கண்களையுடைய பெருமானே!,
பத்தோ – சேர்க்கப்பட்ட,
அஞ்சலிநா – அஞ்சலி முத்ரையாலும்,
நதேந – வணங்கிய,
சிரஸா – தலையினாலும்,
ஸரோம உத்கமை: – மயிற்கூச்செறிதலோடு கூடிய,
காத்ரை: – அவயவங்களினாலும்,
ஸ்வரகத்கதேந – தழுதழுத்த ஸ்வரத்தோடு கூடிய,
கண்டேந – கண்டத்தினாலும்,
உத்கீர்ண பாஷ்ப அம்புநா – சொரிகிற கண்ணீரை யுடைய,
நயநேந – நேத்திரத்தினாலும்,
நித்யம் – எப்போதும்,
த்வத் சரண அரவிந்த யுகள த்யாந அம்ருத ஆஸ்வாதிநாம் – தேவரீருடைய இரண்டு
திருவடித் தாமரைகளைச் சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற,
அஸ்மாகம் – அடியோங்களுக்கு,
ஜீவிதம் – ஜீவநமானது,
ஸததம் – எக்காலத்திலும்,
ஸம்பத்யதாம் – குறையற்றிருக்க வேண்டும்.

—————–

ஹே ◌ேগাபாலக! ஹே கৃபாஜலநி◌ேধ! ஹே ஸிந்ধுகந்யாபதே!
ஹே கம்ஸாந்தக! ஹே গஜேந்দ்ரகருணாபாரீண! ஹே மாধவ! ।
ஹே ராமாநுஜ! ஹே ஜগத்த்ரயগுரோ! ஹே புண்ডரீகாக்ஷ! மாம்
ஹே ◌ேগাபீஜநநாথ! பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபா ஜலநிதே⁴ ஹே ஸிந்து⁴கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ர கருணாபாரீண ஹே மாத⁴வ ।
ஹே ராமாநுஜ ஹே ஜக³த் த்ரய கு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீ ஜந நாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் விநா ॥ 21॥

ஹே கோபாலக! – ஆநிரை காத்தவனே!,
ஹேக்ருபாஜலநிதே! – கருணைக்கடலே!,
ஹே ஸிந்து கந்யாபதே! – பாற்கடல் மகளான பிராட்டியின் கணவனே!,
ஹே கம்ஸ அந்தக! – கம்ஸனை யொழித்தவனே!,
ஹே கஜேந்த்ர கருணாபாரீண! – கஜேந்திராழ்வானுக்கு அருள் புரிய வல்லவனே!,
ஹே மாதவ! – மாதவனே!,
ஹே ராமாநுஜ – பலராமானுக்குப் பின் பிறந்தவனே!,
ஹே ஜகத் த்ரய குரோ! – மூவுலகங்கட்கும் தலைவனே!,
ஹே புண்டரீகாக்ஷ! – தாமரைக் கண்ணனே!,
ஹே கோபீ ஜந நாத! – இடைச்சியர்க்கு இறைவனே!,
மாம் – அடியேனை,
பாலய – ரக்ஷித்தருள வேணும்;
த்வாம் விநா – உன்னைத் தவிர,
பரம் – வேறொரு புகலை,
ந ஜாநாமி – அறிகிறேனில்லை.

—————-

ভக்தாபாயভுஜங்গগாருডமணிஸ் த்ரைலோக்யரக்ஷாமணிர்
◌ேগাபீலோசந சாதகாம்বுদமணிঃ ஸௌந்দர்யமுদ்ராமணிঃ ।
யঃ காந்தாமணிருக்மிணீ ঘநகுசদ்வந்দ்வைகভூஷாமணிঃ
ஶ்ரேயோ ◌ேদவஶிখாமணிர் দிஶது நோ ◌ேগাபால சூডாமணிঃ ॥ 22॥

ப⁴க்தாபாய பு⁴ஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்ய  ரக்ஷாமணி:
கோ³பீ லோசந சாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்ய முத்³ராமணி:
ய: காந்தாமணிருக்மிணீ க⁴நகுச த்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:
ஶ்ரேயோ தே³வ ஶிகா²மணிர் தி³ஶது நோ கோ³பால சூடா³மணி: ॥ 22॥

பக்த அபாய புஜங்க காரூடமணி: – அடியார்களின் ஆபத்துக்களாகிற ஸர்ப்பத்துக்கு கருடமணியாயும்,
த்ரைலோக்ய ரக்ஷாமணி: மூவுலகங்கட்கும் ரக்ஷணார்த்தமான மணியாயும்,
கோபீ லோசநசாதக அம்புதமணி: – ஆய்ச்சிகளின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்நமாயும்,
ஸெளந்தர்ய முத்ராமணி: – ஸெளந்தர்யத்துக்கு முத்ராமணியாயும்,
காந்தாமணி ருக்மணீ கநகுச த்வந்த்வ ஏக பூஷாமணி: – மாதர்களுக்குள் சிறந்தவளான ருக்மணிப் பிராட்டியின்
நெருங்கிய இரண்டு ஸ்தநங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்,
தேவ சிகாமணி – தேவர்களுக்குச் சிரோபூஷணமான மணியாயும்,
கோபால சூடாமணி: – இடையர்களுக்குத் தலைவராயுமிருப்பவர்,
ய: – யாவரொருவரோ,
(ஸ:) – அந்த ஸ்ரீக்ருஷ்ணன்,
ந: – நமக்கு,
ச்ரேய: – நன்மையை,
திசது – அருள வேணும்.

————–

ஶத்ருச்◌ேছ◌ைদகமந்த்ரம் ஸகலமுபநிஷদ்வாக்ய ஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசித தமஸஸ்ஸங்ঘ நிர்யாணமந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸநভுஜগ ஸந்দஷ்ட ஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீகৃஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்மஸாফல்யமந்த்ரம் ॥ 23॥

ஶத்ருச்சே²தை³க மந்த்ரம் ஸகலமுபநிஷத்³வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார மந்த்ரம் ஸமுசித தமஸ் ஸங்க⁴நிர்யாண மந்த்ரம் ।
ஸர்வைஶ்வர்யைக மந்த்ரம் வ்யஸந பு⁴ஜக³ ஸந்த³ஷ்ட ஸந் த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருʼஷ்ண மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜந்ம ஸாப²ல்ய மந்த்ரம் ॥ 23॥

ஶத்ருச் சேத ஏக மந்த்ரம் – சத்ருக்களின் நாசத்திற்கு மந்த்ரமாய்,
உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம் – வைதிக வாக்கியங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப்பட்ட மந்த்ரமாய்,
ஸர்வ ஐச்வர்ய ஏக மந்த்ரம் – துன்பங்களாகிற ஸர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் மந்த்ரமாய்,
ஸம்ஸார உத்தார மந்த்ரம் – ஸம்ஸாரத்தில் நின்றும் கரையேற்ற வல்ல மந்த்ரமாய்,
ஸமுபசிததமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம் – மிகவும் வளர்ந்திருக்கிற அஜ்ஞாநவிருளைப் போக்க வல்ல மந்த்ரமாய்,
ஜந்ம ஸாபல்ய மந்த்ரம் – ஜந்மத்திற்குப் பயன்தரவல்ல மந்த்ரமாயிருக்கிற,
ஸகலம் ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரம் – ஸமஸ்தமான ஸ்ரீக்ருஷ்ண மந்த்ரத்தையும்,
ஹே ஜிஹ்வே – வாராய் நாக்கே,
ஸததம் – எப்போதும்,
ஜப ஜப – இடைவிடாமல் ஜபம் பண்ணு.

—————

வ்யாமோஹப்ரஶமௌஷধம் முநிமநோவৃத்திப்ரவৃத்த்யௌஷধம்
◌ைদத்யேந்দ்ரார்திகரௌஷধம் த்ரிஜগதாம் ஸஞ்ஜீவநைகௌஷধம் ।
ভக்தாத்யந்தஹிதௌஷধம் ভவভயப்ரধ்வம்ஸநைகௌஷধம்
ஶ்ரேயঃப்ராப்திகரௌஷধம் பிব மநঃ ஶ்ரீகৃஷ்ணদிவ்யௌஷধம் ॥ 24॥

வ்யாமோஹ ப்ரஶமௌஷத⁴ம் முநி மநோ வ்ருʼத்தி ப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிஜக³தாம் ஸஞ்ஜீவநைகௌஷத⁴ம் ।
ப⁴க்தாத்யந்த ஹிதௌஷத⁴ம் ப⁴வ ப⁴ய ப்ரத்⁴வம்ஸநைகௌஷத⁴ம்
ஶ்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மந: ஶ்ரீக்ருʼஷ்ண தி³வ்யௌஷத⁴ம் ॥ 24॥

ஹே மந: – வாராய் மனதே!,
வ்யாமோஹ ப்ரசம ஒளஷதம் – (விஷயாந்தரங்களிலுள்ள) மோஹத்தைப் போக்க வல்ல மருந்தாயும்,
முநி மநோ வ்ருத்தி ப்ரவ்ருத்தி ஒளஷதம் – முனிவர்களின் மனதைத் தன்னிடத்திற் செலுத்திக் கொள்ளவல்ல மருந்தாயும்,
தைத்யேந்த்ர ஆர்த்தி கர ஒளஷதம் – அஸுரர்களில் தலைவரான காலநேமி முதலியவர்களுக்குத் தீராத துன்பத்தைத் தரும் மருந்தாயும்,
த்ரிஜகதாம் – மூவுலகத்தவர்க்கும்,
ஸஞ்சீவந ஏந ஒளஷதம் – உஜ்ஜீவனத்துக்குரிய முக்கியமான மருந்தாயும்,
பக்த அத்யந்தஹித ஒளஷதம் – அடியவர்கட்கு மிகவும் ஹிதத்தைச் செய்கிற ஒளஷதமாயும்,
பவ பயப்ரத் வம்ஸந ஏக ஒளஷதம் – ஸம்ஸார பயத்தைப் போக்குவதில் முக்கியமான மருந்தாயும்,
ச்ரேய:ப்ராப்திகா ஒளஷதம் – கண்ணபிரானாகிற அருமையான மருந்தை,
பிப – உட்கொள்ளாய்.

————–

ஆம்நாயாভ்யஸநாந்யரண்யருদிதம் வேদவ்ரதாந் யந்வஹம்
மேদஶ்◌ேছদফலாநி – பூர்தவிধயஸ் ஸர்வேஹுதம் ভஸ்மநி ।
தீர்থாநாமவগாஹநாநி ச গஜஸ்நாநம் விநா யத்பদ –
দ்வந்দ்வாம்◌ேভাருஹ ஸம்ஸ்மৃதிர் விஜயதே ◌ேদவஸ்ஸ நாராயணঃ ॥ 25॥

ஆம்நாயாப்⁴யஸநாந்யரண்யருதி³தம் வேத³வ்ரதாந் யந்வஹம்
மேத³ஶ் சே²த³ப²லாநி பூர்தவித⁴யஸ் ஸர்வே ஹுதம் ப⁴ஸ்மநி ।
தீர்தா²நாமவகா³ஹநாநி ச க³ஜ ஸ்நாநம் விநா யத் பத³ –
த்³வந்த்³வாம்போ⁴ருஹ ஸம் ஸ்ம்ருʼதிர் விஜயதே தே³வஸ் ஸ நாராயண: ॥ 25॥

யத் பத த்வந்த்வ அம்போருஹ ஸம்ஸ்ருதீ: விநா – யாவனொரு ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித் தாமரையிணைகளின்
சிந்தனையில்லாமற் போனால்,
ஆம்நாய அப்யஸநாநி – வேதாத்யயநங்கள்,
அரண்ய ருதிதம் – காட்டில் அழுததுபோல் வீணோ;
அந்வஹம் – நாள்தோறும் (செய்கிற),
வேத வ்ரதாநி – வேதத்திற் சொன்ன (உபவாஸம் முதலிய) வ்ரதங்கள்,
மேதச்சேத பலாநி – மாம்ஸ சோஷணத்தையே பலனாக உடையனவோ,
ஸர்வே பூர்த்த வீதய: – குளம் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம காரியங்கள் யாவும்,
பஸ்மநி ஹுதம் – சாம்பலில் செய்த ஹோமம் போல் வ்யர்த்தமோ,
தீர்த்தாநாம் – கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில்,
அவகாஹநாநி ச – நீராடுவதும்,
கஜ ஸ்நாநம் – யானை முழுகுவதுபோல் வ்யர்த்தமோ,
ஸ: தேவ: நாராயண: – அப்படிப்பட்ட தேவனான நாராயணன்,
விஜயதே – அனைவரினும் மேம்பட்டு விளங்குகின்றார்.

————–

ஶ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாখ்யம்
கே ந ப்ராபுர்வாஞ்ছிதம் பாபிநோঽபி ।
ஹா நঃ பூர்வம் வாக்ப்ரவৃத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் গர்ভவாஸாদிদுঃখம் ॥ 26॥

ஶ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி²தம் பாபிநோঽபி ।
ஹா ந: பூர்வம் வாக் ப்ரவ்ருʼத்தா ந தஸ்மிந் –
தேந ப்ராப்தம் க³ர்ப்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

நாராயண ஆக்க்யம் – நாராயணென்கிற,
ஸ்ரீமந் நாம – திருமாலின் திருநாமத்தை,
ப்ரோச்ய – சொல்லி,
கே பாபிந: அபி – எந்த பாபிகளானவர்களுந்தான்,
வாஞ்சிதம் – இஷ்டத்தை,
ந ப்ராபு: – அடையவில்லை;
ந: வாக் – நம்முடைய வாக்கானது,
பூர்வம் – முன்னே,
தஸ்மிந் ந ப்ரவ்ருத்தா – அந்த நாராயண நாமோச்சாரணத்தில் சொல்ல வில்லை;
தேந – அதனால்,
கர்ப்ப வாஸ ஆதி து:க்கம் – கர்ப்ப வாஸம் முதலான துக்கமானது,
ஹா! ப்ராப்தம் – அந்தோ! நேர்ந்தது.

—————

மஜ்ஜந்மநঃ ফலமிদம் மধுகைடভாரே
மத்ப்ரார்থநீய மদநுগ்ரஹ ஏஷ ஏவ ।
த்வদ்ভৃத்யভৃத்யபரிசாரக ভৃத்யভৃத்ய-
ভৃத்யஸ்ய ভৃத்ய இதி மாம்ஸ்மர லோகநாথ ॥ 27॥

மஜ் ஜந்மந: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே!
மத் ப்ரார்த²நீய மத³நுக்³ரஹ ஏஷ ஏவ ।
த்வத்³ப்⁴ருʼத்ய ப்⁴ருʼத்ய பரிசாரக ப்⁴ருʼத்ய ப்⁴ருʼத்ய-
ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோக நாத² ॥ 27॥

ஹே மதுகைடப அரே! – மதுகைடபர்களை அழித்தவனே!,
மத் ஜந்மந: – அடியேனுடைய ஜன்மத்திற்கு,
இதம் பலம் – இதுதான் பலன்;
மத் ப்ரார்த்தநீய மதநுக்ரஹ: ஏஷ: ஏவ – என்னால் ப்ரார்த்திக்கத் தக்கதாய் என் விஷயத்தில்
நீ செய்ய வேண்டியதான அநுக்ரஹம் இதுவேதான்; (எது? என்னில்;)
ஹே லோக நாத! – வாராய் லோக நாதனே!,
மாம் – அடியேனை,
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய: இதி – உனக்குச் சரமாவதி தாஸனாக, திருவுள்ளம் பற்ற வேணும்.

—————-

நா◌ேথ நঃபுருஷோத்தமே த்ரிஜগதாமேகாধிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பদஸ்ய দாதரி ஸுரே நாராயணே திஷ்ঠதி ।
யம் கஞ்சித்புருஷாধமம் கதிபயগ்ராமேஶ மல்பார்থদம்
ஸேவாயை மৃগயாமஹே நரமஹோ! மூகா வராகா வயம் ॥ 28॥

நாதே² ந: புருஷோத்தமே த்ரி ஜக³தா மேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித் புருஷாத⁴மம் கதி பய க்³ராமேஶ மல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 28॥

புருஷ உத்தமே – புருஷர்களில் தலைவனாயும்,
த்ரி ஜகதாம் ஏக அதிபே – மூன்று லோகங்களுக்கும் ஒரே கடவுளாயும்,
சேதஸா ஸேவ்யே – நெஞ்சினால் நினைக்கத் தக்கவனாயும்,
ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி – தன் இருப்பிடமான பரம பதத்தை அளிப்பவனாயுமுள்ள,
நாராயணே ஸுரே – ஸ்ரீமந் நாராயணனான தேவன்,
ந: நாதே திஷ்டதி ஸதி – நமக்கு நாதனாயிருக்குமளவில் (அவனைப் பற்றாமல்),
கதிபய க்ராம ஈசம் – சில க்ராமங்களுக்குக் கடவனாயும்,
அல்ப அர்த்ததம் – ஸ்வல்ப தநத்தைக் கொடுப்பவனாயும்,
புருஷ அதமம் – புருஷர்களில் கடைகெட்டவனாயுமிருக்கிற,
யம்கஞ்சித் நரம் – யாரோவொரு மனிதனை,
ஸேவாயைம்ருகயா மஹே – ஸேவிப்பதற்குத் தேடுகிறோம்;
அஹோ! – ஆச்சரியம்!,
வயம் மூகா: வராகா: – இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகமற்றவர்களாயுமிரா நின்றோம்.

————–

மদந பரிஹர ஸ்থிதிம் மদீயே
மநஸி முகுந்দபদாரவிந்দধாம்நி ।
ஹரநயந கৃஶாநுநா கৃஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரேঃ ॥ 29॥

மத³ந பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மநஸி முகுந்த³பதா³ர விந்த³தா⁴ம்நி ।
ஹர நயந க்ருʼஶாநுநா க்ருʼஶோঽஸி
ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே: ॥ 29॥

ஹே மதந! – வாராய் மன்மதனே!,
முகுந்த பதாரவிந்த தாம்நி – ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித்தாமரைகட்கு இருப்பிடமான,
மதீயே மநஸி – எனது நெஞ்சில்,
ஸ்திதிம் பரிஹர – இருப்பை விட்டிடு;
ஹர நயந க்ருசாதுநா – சிவனின் நெற்றிக் கண்ணில் நின்றுமுண்டான நெருப்பினால்,
க்ருச: அஸி – (முன்னமே) சரீரமற்றவனாக இருக்கிறாய்;
முராரே! – கண்ணபிரானுடைய,
சக்ர பராக்ரமம் – திருவாழி யாழ்வானது பராக்கிரமத்தை,
ந ஸ்மரஸி? – நீ நினைக்கவில்லையோ?

————

தத்த்வம் ব்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மধு க்ஷரந்தீவ ஸதாம் ফலாநி ।
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே!
நாமாநி நாராயண◌ேগাசராணி ॥ 30॥

தத்த்வம் ப்³ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லாநி ।
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலி ரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ³சராணி ॥ 30॥

ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
பரஸ்மாத் பரம் – மேலானதிற் காட்டிலும் மேலானதாகிய [மிகவுஞ் சிறந்த],
தத்வம் – தத்துவத்தை,
ப்ருவாணாநி – சொல்லுகின்றனவாய்,
ஸதாம் மது க்ஷரந்தி – ஸத்துக்களுக்கு மதுவைப் பெருக்குகிற,
பலாநி இவ – பழங்களைப் போன்றனவாய்,
நாராயண கோசராணி – ஸ்ரீமந் நாராயணன் விஷயமான,
நாமாநி – திருநாமங்களை,
ப்ராவர்த்தய – அடிக்கடி அநுஸந்தானம் செய்; [ஜபஞ்செய்.]
ப்ராஞ்ஜலி: அஸ்மி – (நீ அப்படி செய்வதற்காக உனக்குக்) கைகூப்பி நிற்கின்றேன்.

————-

இদம் ஶரீரம் பரிணாமபேஶலம்
பதத்யவஶ்யம் ஶ்லথஸந்ধி ஜர்ஜரம் ।
கிமௌஷ◌ைধঃ க்லிஶ்யஸி மூঢ দுர்மதே!
நிராமயம் கৃஷ்ணரஸாயநம் பிব ॥ 31॥

இத³ம் ஶரீரம் பரிணாம பேஶலம்
பதத் யவஶ்யம் ஶ்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।
கிமௌஷதை:⁴ க்லிஶ்யஸி மூட⁴ து³ர்மதே
நிராமயம் க்ருʼஷ்ண ரஸாயநம் பிப³ ॥ 31॥

இதம் சரீரம் – இந்த சரீரமானது,
பரிணாம பேஷலம் – நாளடைவில் துவண்டும்,
ச்லத ஸந்தி ஜர்ஜரம் – தளர்ந்த தாதுக்களை யுடையதாய்க் கொண்டு சிதலமாயும்,
அவச்யம் பததி – அவச்யம் நசிக்கப் போகிறது;
ஹே மூட! துர்மதே – வாராய் அஜ்ஞாநியே! கெட்ட புத்தியை யுடையவனே!,
ஒளஷதை: – மருந்துகளினால்,
கிம் க்லிஶ்யஸி – ஏன் வருந்துகிறாய்?,
நிராமயம் – (ஸம்ஸாரமாகிற) வியாதியைப் போக்குமதான,
க்ருஷ்ண ரஸாயநம் – ஸ்ரீக்ருஷ்ணனாகிற ரஸாயநத்தை,
பிப – பாநம் பண்ணு.

————

দாரா வாராகரவரஸுதா தே தநூஜோ விரிஞ்சঃ
ஸ்தோதா வேদஸ்தவ ஸுரগணோ ভৃத்யவர்গঃ ப்ரஸாদঃ ।
முக்திர்மாயா ஜগদவிகலம் தாவகீ ◌ேদவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ்தவய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

தா³ரா வாராகர வர ஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுர க³ணோ ப்⁴ருʼத்ய வர்க:³ ப்ரஸாத:³ ।
முக்திர் மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் வலரிபு ஸுதஸ் த்வய்யதோঽந்யந்ந ஜாநே ॥ 32॥

தே தாரா: – தேவரீருக்கு மனைவி,
வாராகர வர ஸுதா – திருப்பாற்கடலின் மகளான பிராட்டி,
தநுஜ: விரிஞ்ச: – மகனோ சதுர்முகன்;
ஸ்தோதா வேத: துதி பாடகனோ வேதம்;
ப்ருத்ய வர்க்க: ஸுரகண: – வேலைக்காரர்களோ தேவதைகள்;
முக்தி: தவ ப்ரஸாத: – மோக்ஷம் தேவரீருடைய அநுக்ரஹம்;
அவிகலம் ஜகத் – ஸகல லோகமும்,
தாவகீ மாயா – தேவரீருடைய ப்ரக்ருதி;
தே மாதா தேவகீ – தேவரீருக்குத் தாய் தேவகிப் பிராட்டி;
மித்ரம் வலரிபு ஸுத: – தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்;
அத: அந்யத் – அதைக் காட்டிலும் வேறானவற்றை,
த்வயி ந ஜாநே – உன்னிடத்தில் நான் அறிகிறேனில்லை.

—————-

கৃஷ்ணோ ரக்ஷது நோ ஜগத்த்ரயগுருঃ கৃஷ்ணம் நமஸ்யாம்யஹம்
கৃஷ்ணேநாமரஶத்ரவோ விநிஹதாঃ கৃஷ்ணாய தஸ்மை நமঃ ।
கৃஷ்ணா◌ேদவ ஸமுத்থிதம் ஜগদிদம் கৃஷ்ணஸ்ய দாஸோঽஸ்ம்யஹம்
கৃஷ்ணே திஷ்ঠதி விஶ்வமேதদখிலம் ஹே! கৃஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥ 33॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த் த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருʼஷ்ணேநாமர ஶத்ரவோ விநிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।
க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோঽஸ்ம்யஹம்
க்ருʼஷ்ணே திஷ்ட²தி விஶ்வ மேதத³கி²லம் ஹே க்ருʼஷ்ண! ஸம் ரக்ஷ மாம் ॥ 33॥

ஜகத்த்ரய குரு: – மூன்று லோகங்களுக்கும் தலைவனான்,
க்ருஷ்ண: ந: ரக்ஷது -க்ருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுக;
அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி – நான் க்ருஷ்ணனை வணங்குகிறேன்;
யேந க்ருஷ்ணேந – யாவனொரு க்ருஷ்ணனால்,
அமரசத்ரவ: விநிஹ தா: – அஸுரர்கள் கொல்லப்பட்டார்களோ,
தஸ்மை க்ருஷ்ணாய நம: – அந்த க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம்;
இதம் ஜகத் – இவ்வுலகமானது,
க்ருஷ்ணாத் ஏவ – கண்ணனிடமிருந்தே,
ஸமுத்திதம் – உண்டாயிற்று; (ஆகையால்)
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ: அஸ்மி – நான் கண்ணனுக்கு அடியனாயிருக்கிறேன்;
ஏதத் ஸர்வம் அகிலம் – இந்த ஸமஸ்த பிரபஞ்சமும்,
க்ருஷ்ணே திஷ்டதி – கண்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது.
ஹேக்ருஷ்ண! – ஸ்ரீக்ருஷ்ணனே!,
மாம் ஸம்ரக்ஷ – அடியேனைக் காத்தருள வேணும்.

————

ஸத்த்வம் ப்ரஸீদ ভগவந் குரு மய்யநா◌ேথ
விஷ்ணோ! கৃபாம் பரமகாருணிகঃ খலு த்வம் ।
ஸம்ஸாரஸாগர நிமগ்நமநந்த দீநம்
உদ்ধர்து மர்ஹஸி ஹரே! புருஷோத்தமோঽஸி ॥ 34॥

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வந் குரு மய்ய நாதே²
விஷ்ணோ க்ருʼபாம் பரம காருணிக: க²லு த்வம் ।
ஸம்ஸார ஸாக³ர நிமக்³ந மநந்த தீ³நம்
உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோঽஸி ॥ 34॥

ஹே பகவந்! – ஷாட்குண்ய பரிபூர்ணனே!,
விஷ்ணோ! – எங்கும் வ்யாபித்திருப்பவனே!,
ஸ:த்வம் – வேதப்ரஸித்தனான நீ,
அநாதே மயி – வேறு புகலற்ற என்மீது,
க்ருபாம் குரு – அருள்புரியவேணும்;
ப்ரஸீத – குளிர்ந்த முகமாயிருக்கவேணும்;
ஹே ஹரே! – அடியார் துயரைத் தீர்ப்பவனே!,
அநந்த! – இன்ன காலத்திலிருப்பவன், இன்ன தேசத்திலிருப் பவன், இன்ன வஸ்துவைப்போலிருப்பவன்
என்று துணிந்து சொல்லமுடியாதபடி மூன்றுவித பரிச்சேதங்களுமில்லாதவனே!,
த்வம் பரம காருணிக: கில – நீ பேரருளாளனன்றோ?,
ஸம்ஸார ஸாகர நிமக்நம் – ஸம்ஸாரக் கடலில் மூழ்கினவனாய்,
தீநம் – அலைந்து கொண்டிருக்கிற அடியேனை,
உத்தர்த்தும் அர்ஹஸி – கரையேற்றக் கடவை;
புருஷோத்தம: அஸி – புருஷர்களிற் சிறந்தவனாயிருக்கிறாய்.

—————-

நமாமி நாராயணபாদபங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸদா ।
வদாமி நாராயணநாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

நமாமி நாராயண பாத³ பங்கஜம்
கரோமி நாராயண பூஜநம் ஸதா³ ।
வதா³மி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்த்வமவ்யயம் ॥ 35॥

நாராயண பாத பங்கஜம் – ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடித் தாமரையை,
நமாமி – ஸேவிக்கிறேன்;
நாராயண பூஜநம் – எம்பெருமானுடைய திருவாராதநத்தை,
ஸதா கரோமி – எப்போதும் பண்ணுகிறேன்;
நிர்மலம் – குற்றமற்ற,
நாராயண நாம – ஸ்ரீமந்நாராயண நாமத்தை,
வதாமி – உச்சரிக்கிறேன்;
அவ்யயம் நாராயண தத்வம் – அழிவற்ற பர தத்வமான நாராயணனை,
ஸ்மராமி – சிந்திக்கிறேன்.

—————

ஶ்ரீநாথ! நாராயண! வாஸு◌ேদவ! ஶ்ரீகৃஷ்ண ভக்தப்ரிய! சக்ரபாணே! ।
ஶ்ரீபদ்மநாভாச்யுத! கைடভாரே! ஶ்ரீராம! பদ்மாக்ஷ! ஹரே! முராரே ॥ 36॥

ஶ்ரீநாத² நாராயண வாஸுதே³வ
ஶ்ரீக்ருʼஷ்ண ப⁴க்த ப்ரிய சக்ர பாணே ।
ஶ்ரீபத்³மநாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஶ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 36॥

—————

அநந்த! வைகுண்ঠ! முகுந்দ! கৃஷ்ண! ◌ேগাவிந்দ! দாமோদர! மாধவேதி ।
வக்தும் ஸமர்◌ேথাঽபி ந வக்தி கஶ்சித் அஹோ! ஜநாநாம் வ்யஸநாভிமுখ்யம் ॥ 37॥

அநந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।
வக்தும் ஸமர்தோ²ঽபி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி⁴முக்²யம் ॥ 37॥

ஸ்ரீநாத! – ஹே லக்ஷ்மீபதியே!,
நாராயண – நாராயணனே!,
வாஸுதேவ – வாஸுதேவனே!,
ஸ்ரீக்ருஷ்ண – ஸ்ரீக்ருஷ்ணனே!,
பக்தப்ரிய – பக்தவத்ஸலனே!,
சக்ரபாணே – சக்கரக்கையனே!,
ஸ்ரீபத்மநாப – ஹே பத்மநாபனே!,
அச்யுத – அடியாரை ஒருகாலும் நழுவவிடாதவனே!,
கைடப அரே! – கைடபனென்னும் அசுரனைக் கொன்றவனே!,
ஸ்ரீராம – சக்ரவர்த்தி திருமகனே!,
பத்மாக்ஷ – புண்டரீகாக்ஷனே!,
ஹரே! – பாபங்களைப் போக்குமவனே!,
முராரே – முராசுரனைக் கொன்றவனே!,
அநந்த – முடிவில்லாதவனே!,
வைகுண்ட – வைகுண்டனே!,
முகுந்த – முகுந்தனே!,
க்ருஷ்ண – கண்ணபிரானே!,
கோவிந்த – கோவிந்தனே!,
தாமோதர – தாமோதரனே!,
மாதவ! இதி – மாதவனே என்றிப்படி (பகவந்நாமங்களை),
வக்தும் – சொல்லுவதற்கு,
ஸமர்த்த: அபி – ஸமர்த்தனாயினும்,
கச்சித் ந வக்தி – ஒருவனும் சொல்லுகிறதில்லை,
ஜநாநாம் – இவ்வுலகத்தவர்களுக்கு,
வ்யஸந ஆபிமுக்யம் – (விஷயாந்தரங்களில் மண்டித்) துன்பப்படுவதிலேயே நோக்கமாயிருக்குந் தன்மை,
அஹோ! – ஆச்சரியம்!

————

ধ்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹৃத்பদ்மமধ்யே ஸததம் வ்யவஸ்থிதம் ।
ஸமாஹிதாநாம் ஸததாভயப்ரদம்
தே யாந்தி ஸிদ்ধிம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

த்⁴யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருʼத் பத்³ம மத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।
ஸமாஹிதாநாம் ஸததாப⁴ய ப்ரத³ம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ॥ 38॥

ஹ்ருத் பத்ம மத்யே – ஹ்ருதய கமலத்தின் நடுவில்,
ஸததம்வ்யவஸ்திதம் – எப்போதும் வீற்றிருப்பவரும்,
ஸமாஹிதாநாம் – ஸமாதியிலே ஊன்றியிருக்கும் யோகிகளுக்கு,
ஸதத அபய ப்ரதம் – ஸர்வ காலத்திலும் ‘அஞ்சேல்’ என்று அபயப்ரதாநம் பண்ணுமவரும்,
அவ்யயம் – ஒருநாளும் அழியாதவரும்,
அநந்தம் – அபரிச்சிந்நராயு முள்ள,
விஷ்ணும் – ஸ்ரீமஹாவிஷ்ணுவை,
யே த்யாயந்தி – எவர் த்யானம் செய்கிறார்களோ,
தே – அவர்கள்,
பரமாம் வைஷ்ணவீம் ஸித்திம் – சிறந்த வைஷ்ணவ ஸித்தியை,
யாந்தி – அடைகின்றார்கள்.

———-

க்ஷீரஸாগரதரங்গஶீகரா –
ஸாரதாரகித சாருமூர்தயே ।
◌ேভাগி◌ேভা গஶயநீயஶாயிநே
மாধவாய மধுவிদ்விஷே நமঃ ॥ 39॥

க்ஷீர ஸாக³ர தரங்க³ஶீகர
ஆஸார தாரகித சாரு மூர்தயே ।
போ⁴கி³போ⁴க³ ஶயநீய ஶாயிநே
மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥ 39॥

க்ஷீரஸாகர தரங்க சீகர ஆஸார தாரகித சாரு மூர்த்தயே – திருப்பாற்கடலில் அலைகளின் சிறு திவலைகளின்
பெருக்கினால் நக்ஷத்திரம் படிந்தாற்போன்று அழகிய திருமேனியை யுடையராய்,
போகி போக சயநீய சாயிநே – திருவனந்தாழ்வானுடைய திருமேனியாகிற திருப்படுக்கையில் கண்வளருமவராய்,
மதுவித்விஷே – மதுவென்கிற அசுரனைக் கொன்றவரான,
மாதவாய – திருமாலுக்கு,
நம: – நமஸ்காரம்.

————

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதிধரௌ கவிலோகவீரௌ
மித்ரே দ்விஜந்மவரபদ்ம ஶராவভூதாம் ।
தேநாம்বுஜாக்ஷ சரணாம்বுஜ ஷட்ப◌ேদந
ராஜ்ஞா கৃதா கৃதிரியம் குலஶேখரேண ॥ 40॥

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதி த⁴ரௌ கவி லோகவீரௌ
மித்ரே த்³வி ஜந்ம வர பத்³ம ஶராவபூ⁴தாம் ।
தேநாம்பு³ஜாக்ஷ சரணாம்பு³ஜ ஷட் பதே³ந
ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலஶேக²ரேண ॥

யஸ்ய – யாவரொரு குலசேகரர்க்கு,
ஸ்ருதிதரெள – வேத வித்துக்களாயும்,
கவி லோக வீரெள – கவிகளுக்குள் சிறந்தவர்களயும்,
த்விஜந்மவர பத்மசரெள – ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாயுமுள்ள ‘பத்மன்’ ‘சரண்’ என்னும் இருவர்கள்,
ப்ரியெள மித்ரே அபூதாம் – ஆப்த மித்திரர்களாக இருந்தார்களோ,
அம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட் பதேந – தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு
வண்டு போல் அந்தரங்கரான,
தேந – அந்த,
குலசேகரேணராஜ்ஞா – குலசேகர மஹாராஜராலே,
இயம் க்ருதி: க்ருதா – இந்த ஸ்தோத்ர க்ரந்தம் செய்யப் பட்டது.

——–

॥ இதி ஶ்ரீகுலஶேখர விரசித முகுந்দமாலா ஸம்பூர்ணம் ॥

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் அருளிச் செய்த ஸ்ரீ ஸூதர்சன சதகம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமி தெளிவுரை —

January 10, 2022

ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராத்தே சைவ விஷேத:
சிந்ததீய: சக்ரபாணி: ஸர்வா
கௌக விநாசந: ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத

என்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி,
எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..

சுதர்ஸன காயத்ரி
ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தந்நோ சக்ர ப்ரஜோதயாத்.

சக்கரத்தாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள் உள்ளன.
அவை, சக்கரம் மழு ஈட்டி தண்டு அங்குசம் அக்னி கத்தி ஆகியவை வலப்புற கையிலும்
வேல் சங்கம் வில் பாசம் கலப்பை வஜ்ரம் கதை உலக்கை சூலம் ஆகியவை இடது கையிலும் ஏந்தியுள்ளார்

———-

ஸ்ரீ ஸூதர்சன உபாசகர் –
நூறு ஸ்லோகங்கள் -மந்த்ர ரூபம் –
ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் நோவு சாத்தி இருக்க
ஸ்ரீ கூரத்தாழ்வான் நியமித்து அருளிச் செய்த கிரந்தம்
பூர்ண ஸ்வஸ்தம் அடைந்து மீண்டும் கைங்கர்யம் செய்தாராம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனம் என்றும் சொல்வர் –

ஆழி எழ -திருவாய் -7-4-வென்றி தரும் பத்து மேவிக் கற்பாருக்கே

மார்கழி கேட்டை
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பெரிய நம்பி போல் இவரதும்
கீழ திருச்சித்ர வீதி திரு மாளிகை

——–

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில்  ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் ஸ்ரீ பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ஸ்ரீ ரெங்கேச விஜ்ஞப்தி கராம யஸ்ய சகார சக்ரேஸ நுதிம் நிவ்ருத்தியே
ஸமாஸ்ரயேஹம் வர பூரணீம் யஸ் தம் கூர நாராயண நாமகம் முநிம்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரின் நோய் தீர்க்க -அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல
ஸ்ரீ திருவாழி ஆழ்வான் விஷயமாக ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை அருளிச் செய்த
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமியை வணங்குவோம் –

இந்த திவ்ய கிரந்தம் க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யரான ஸ்ரீ ராமானுஜருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே நமக்கு கிடைத்த மஹா நிதியாகுமே –

—–

ஸுவ் தர்சன் யுஜ்ஜி ஹாநா திசி விசிதி திரஸ் க்ருத்ய சாவித்ர மர்ச்சிஸ்
பாஹ்யா பாஹ்ய அந்தகார ஷதஸ் ஜகதக தங்கார பூம்நா ஸ்வதாம் நா
தோர் கர்ஜு தூர கர்ஜத் விபு தரிபுஸ் வதூ கண்ட வைகல்ய கல்யா
ஜ்வாலா ஜாஜ்வல்யமாநா விதரது பவதாம் வீப்ஸயா பீப்ஸிதாநி —1–

அகவிருள் புறவிருள் எனப்படும் இரண்டாலும் தடுமாறும் உலகோருக்கு
அந்த இருட்டுக்களைத் தொலைத்து வாழ வைக்க வல்ல
தன்னொளியாலே ஸூர்யனின் ஒளியைக் கீழ்ப்படுத்தி எங்கும் ஒளி விட்டு வியாபித்து விளங்குவதும்
தம் புஜ பலத்தால் கொக்கரிக்கும் அசுரர்களின் பெண்களைக் கைம் பெண்களாக ஆக்குவதில் வல்லமை பெற்றதும்
எப்போதும் ஒப்புயர்வற்று ஜ்வலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ஸூதர்சன ஜ்வாலையானது
உங்களுடைய விருப்பங்களை எல்லாம் பரிபூர்ணமாக நிறைவேற்றட்டும் –

——–

தேஜஸ்ஸூ பிறவியைப் போக்கி அருளி அந்தமில் பேர் இன்பமே கொடுக்க வல்லது அன்றோ –

ப்ரத்யுத்யா தம் மயூகைர் நபஸி தின க்ருதஸ் ப்ராப்த சேவம் ப்ரபாவிர்
பூமவ் ஸுவ்மேர வீபிர் திவிவரி வஸிதம் தீப்திபிர் தேவதாம் நாம்
பூயஸ்யை பூதயே வஸ் ஸ்புரது ஸகல திக் ப்ராந்த்ர ஸாந்த்ர ஸ்பு லிங்கம்
சாக்ரம் ஜாக்ரத் ப்ரதாபம் த்ரி புவன விஜய வ்யக்ர முக்ரம் மஹஸ் தத் –-2-

பூ லோகத்தில் மேரு மலையில் ஒளிகளினால் ஸேவிக்கப் பெற்றதும்
ஆகாசத்தினில் ஸூர்ய கிரணங்களால் எதிர் கொண்டு உபசரிக்கப் பட்டதும்
ஸ்வர்க்க லோகத்தில் தேவர்களுடைய மாளிகைகளின் ப்ரகாசங்களால் ஸூஸ்ருஷை செய்யப் பெற்றதும்
மூ உலகங்களையும் வெல்லும் முயற்சி யுடையதும்
எப்போதும் ப்ரதாபத்தோடு இருந்து கொண்டு எதிரிகளுக்கு பயத்தை உண்டு பண்ணக் கூடியதும்
மிகவும் பிரசித்தமான ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானின் தேஜஸ்ஸூ உங்களுக்கு
அபரிமித ஐஸ்வர்யங்களைக் கொடுப்பதாக விளங்கட்டும் –

——————————–

கவலையை நீக்கி நிரந்தரமான மகிழ்ச்சியை அளிக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் கற்பக வ்ருக்ஷம் என்கிறார் –

பூர்ணே பூரைஸ் ஸூதாநாம் ஸூ மஹதி லஸதஸ் ஸோம பிம்பாலவாலே
பாஹா ஸாகா வருத்த ஷிதி ககன திவஸ் சக்ர ராஜ த்ருமஸ்ய
ஜ்யோதிஸ் சத்மா பிரவாள பிரகடித ஸூமநஸ் ஸம்பதுத்தம் ஸ லஷ்மீம்
புஷ்ணன் நாஸா முகேஷு ப்ரதிஸது பவதாம் ஸ ப்ரகர்ஷம் ப்ரஹர்ஷம் –3-

அம்ருத ப்ரவாஹங்களால் நிறைந்து பரிபூர்ணமாய் –
மிகப் பெருமை பொருந்திய சந்த்ர பிம்பமாகிற பாத்தியில் விளங்குகின்றதும்
திருக் கைகள் ஆகிற கிளைகளினால் பூமி ஆகாசம் ஸ்வர்க்கம் முதலிய இடங்களில் வியாபித்ததாகவும்
இருக்கும் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஆகிற கற்பக மரத்தின் புஷ்ப ஸம்ருத்தியையும்
தேவர்களின் செல்வத்தையும் விளங்குவதாகவும்
திசைகளில் எங்கும் பரவி அவற்றுக்கு ஸீரோ பூஷணமாகவும் இருந்து கொண்டு
அழகைத் தருவதாயும் இருந்துள்ள ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் ஜ்யோதிஸ்ஸூ ஆகிற தளிர்
உங்களுக்கு மேன்மை பொருந்திய சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———–

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லது என்கிறார் –

ஆராதாராத் ஸஹஸ்ராத் விசரதி விமத ஷேப தஷாத்ய தஷாத்
நாபேர் பாஸ்வத்ஸ நாபேர் நிஜ விபவ பரிச்சின்ன பூமேஸ் ச நேமே
ஆம் நாயை ரேக கண்டைர் ஸ்துத மஹிமமஹோ மாதவீ யஸ்ய ஹேதே
தத்வோ திஷ்வேதமாநம் சதஸ்ரு ஷு சதுரஸ் புஷ்யதாத் பூருஷார்த்தான் –4-

அரம் அக்ஷம் நாபி நேமி ஆகியவை ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் அவயவங்கள்
அவற்றில் இருந்து தோன்றிக் கிளர்ந்து எழும் ஜ்வாலையே ஸூ தர்சனுடைய ஜ்வாலையாகும்
அப்படிப்பட்ட ஸூ தர்சனுடைய தேஜஸ்ஸூ
உங்களுக்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் மிகுதியாக அள்ளிக் கொடுக் கட்டும் –

————-

ஸ்யாமம் தாம பர ஸ்ருத்யா க்வசன பகவதஸ் க்வாபி பப்ரு ப்ரக்ருத்யா
சுப்ரம் சேஷஸ்ய பாஸா க்வசன பணி ருசா க்வாபி தஸ்யைவ ரக்தம்
நீலம் ஸ்ரீ நேத்ர காந்த்யா க்வசிதபி மிது நஸ்யாதி மஸ்யேவ சித்ராம்
வ்யாதன்வா நம் விதானஸ்ரியம் உபசி நுதாத் சர்ம வச் சக்ர பாநம் –5-

பகவானின் திருமேனி நிறத்தின் பரவலால் சில இடங்களில் ஸ்யாம -பாசியின் நிறமாகவும் –
சில இடங்களில் மஞ்சள் நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் நிறத்தால் சில இடங்களில் வெள்ளை நிறமாகவும்
திருவனந்த ஆழ்வானின் திருமுடியில் இருக்கும் மாணிக்க ஒளியினால் சில இடங்களில் சிகப்பு நிறமாகவும்
கரு நெய்தல் போன்ற பிராட்டியின் கண் ஒளியினால் சில இடங்களில் நீல நிறமாகவும்
ஆக பல பல நிறங்கள் நிறைந்த ஸ்ரீ ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
பெருமாளும் பிராட்டியுமான திவ்ய தம்பதிகளுக்கு அழகிய விதானம் -மேற்கட்டி போல் விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களுக்கு ஸூ கத்தைத் தந்திடுக –

————-

ஸம் ஸந்த்யுந்மேஷ முச்சோஷித பரம ஹஸோ பாஸ்வத கைட பாரே
இந்தே சந்த்யேவ நக்கஞ்சர விலயகரீ யா ஜகத் வந்த நீயா
பந்நூ கச்சாய பந்துச்ச விகடித கநச்சேதமே தஸ்விநீ ஸா
ராதாங்கீ ரஸ்மி பங்கீ ப்ரணதது பவதாம் ப்ரத்ய ஹோத்தா நமே ந –6-

சந்திரன் முதலிய கிரஹங்களின் தேஜஸ்ஸை -மறைத்து -அழித்து -இல்லாதபடி செய்கிறது ஸூர்யனின் ஒளி
அந்த ஸூர்ய உதயத்தை விளங்கச் செய்கிறது ப்ராதஸ் ஸந்த்யை
அதே போல் பிரதிபஷிகளின் வலிமைகளை-தேஜஸ்களை – எல்லாம் அழிக்கும் எம்பெருமான்
சோபையை -சாதுர்யத்தை -விளங்கச் செய்கிறது ஸூ தரிசனத்தின் தேஜஸ்
இரவில் திரியும் துஷ்ட கொடிய ஜந்துக்கள் எல்லாம் ஸூர்ய உதயத்தைக் கண்டவாறே மறைந்து போகும்
இரவில் திரியும் அஸூர ராக்ஷஸர்கள் ஸூ தர்சன ஜ்வாலையைக் கண்டவாறே மறைந்து அழிந்து போவார்கள்
உதய ஸூர்யனின் செவ்விய கிரணங்கள் மேகத்தோடே கலந்து மேகத்தையும் சிவக்க வைக்கும்
ஸூ தர்சன கிரணங்கள் காள மேகத்தோடே கலந்து காள மேகத்தையும் சிவக்கச் செய்யும்
அப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்கள் பாவத்தை அழிக்கட்டும்

———

ஸாம்யம் தூம்யா ப்ரவ்ருத்தயா ப்ரகடயதி நபஸ் தாரகா ஜாலகா நி
ஸ்பவ் லிங்கீம் யாந்தி காந்திம் திசதி யதுதயே மேரு ரங்கார சங்காம்
அக்நிர் மக்ந அர்ச்சிர் ஐக்யம் பஜதி திநநிசா வல்லபவ் துர்ல பாபவ்
ஜ்வாலா வர்த்தா விவ ஸ்தஸ் ப்ரஹரண பதிஜம் தாம வஸ் தத் திநோது –7-

ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ கிளர்ந்து எழும் காலத்தில் தோன்றும் புகை மண்டலம் ஆகாசம் முழுவதும் பரவுதலால்
ஆகாசம் புகைக் கூண்டு போல் தோற்றம் அளிக்கிறது
நக்ஷத்திரங்கள் எல்லாம் நெருப்புப் பொறிகளாகத் தோற்றம் அளிக்கின்றன
ப்ரகாசகமான மேரு மலையானது பாதி எரிந்த கொள்ளிக் கட்டையைப் போலே ஒளி குன்றிக் காட்சி அளிக்கிறது
ஸூர்ய சந்திரர்கள் ஒளியை இழந்து சிறுவர்கள் விளையாடும் மாவலியில் இருந்து தோன்றும்
ஒளி வட்டம் போல் தோற்றம் அளிக்கின்றனர்
இப்படி எல்லா ஒளிப் பொருள்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்கும் ஸூதர்சன ஜ்யோதிஸ்ஸூ உங்களை மகிழ்விக்கட்டும் –

————-

த்ருஷ்டே திவ்யோம சக்ரே விகச நவ ஜபா ஸன்னிகாஸே சகாசம்
ஸ்வர் பாநுர் பானுரேஷ ஸ்புடமிதி கலயன் நாகதோ வேக தோஸ்ய
நிஷடப்தோ யைர் நிவ்ருத்தோ விதுமிவ ஸஹஸா ஸ்ப்ரஷ்டு மத்யாபி நேஷ்டே
கர்மாம்சும் தே கடந்தா மஹித விஹதயே பாநவோ பாஸ்வரா வஸ் –-8-

ஒரு சமயம் திருவாழி ஆழ்வான் ஆகாசத்தில் ஜபா புஷ்பம் போலே செக்கச்செவேல் என்று காணப்பட்டார்
ராஹு அவரை ஸூர்யனாக எண்ணி அருகிலே செல்ல ஒளியின் மிகுதியால் தாக்கப்பட்டுத் திரும்பினான்
அது முதல் கிரஹண காலத்திலும் உண்மையான ஸூர்யனைப் பிடிக்கச் சென்றாலும்
இவன் ஸூர்யனா ஸூ தர்சன ஆழ்வானா என்று சிந்தித்து முடிவுக்கு வந்த பின்பே ஸூர்யனைத் தாமதித்துப் பிடிக்கிறானாம்
ஸூர்யனை விட பன்மடங்கு ஒளி யுள்ள திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்கள் பகைவர்களை அழித்து ரக்ஷிக்கட்டும் –

————–

தேவம் ஹே மாத்ரி துங்கம் ப்ருது புஜ சிகரம் பிப் ரதீம் மத்ய தேசே
நாபி த்வீபாபி ராமாமர விபி நவதீம் சேஷ சீர்ஷா ஸநஸ்த்தாம்
நேமிம் ப்ர்யாய பூமிம் தினகர கிரணா த்ருஷ்ட ஸீம பரீத்ய
ப்ரீத்யை வஸ் சக்ர வாலா சல இவ விலஸந்நஸ்து திவ்யாஸ்த்ர ரஸ்மி–9-

திருவாழி ஆழ்வானின் நேமியைச் சுற்றி விளங்கும் ஜ்வாலையைப் பார்த்தால் பூமியைச் சுற்றி
லோகாலோக பர்வதம் -சக்ர வாள மலை -விளங்குவது போல் இருக்கிறது –
பூமி பெரிய சிகரத்தை யுடைய மேரு மலையைத் தன்னிடம் கொண்டு இருக்கிறது
தீவுகள் காடுகள் முதலியவற்றோடு திருவனந்த ஆழ்வானின் திரு முடியின் மீது இருக்கிறது
ஸூ தர்சன நேமியும் பூமியைப் போலவே இருக்கிறது
நேமியின் நடுவில் ஸ்ரீ ஸூ தர்சன உருவமே மேரு மலை
அவருடைய புஜங்கள் மேரு மலையின் சிகரம்
அவரது நாபியே தீவு
அரங்களே காடுகள்
பூமியைச் சுற்றி லோகாலோக பர்வதம் இருக்கிறது -இது ஸூர்ய கிரணங்களே புகாத இடம் -இருள் மயம்
இப்படிப்பட்ட ஸூ தர்சன ஜ்யோதி எப்போதும் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கட்டும் –

———-

ஏகம் லோகஸ்ய சஷுர் த்விவித மப நுதத் கர்ம நம் ரத்ரி நேத்ரம்
தாத்ரார்த்தாநாம் சதுணாம் கமய தரிகணம் பஞ்ச தாம் ஷட் குணாட்ட்யம்
ஸப்தார்ச்சி ஸ்ஸோஷி தாஷ்டா பத நவ கிரண ஸ்ரேணி ரஜ்யத் தஸாஸம்
பர்யஸ்யாத்வ ஸ்ஸதாங்க வயவ பரிப்ருட ஜ்யோதிரீ தீஸ் ஸஹஸ்ரம் —10-

உலகத்திற்குக் கண் போன்றதும் -புண்ய பாபங்கள் ஆகிற இரு வினைகளையும் போக்கடிப்பதும்
முக் கண்ணனால் -பரமசிவனால் -வணங்கப்படுவதும் –
தர்மார்த்த காம மோக்ஷங்களை அளிப்பதும் -பகைவர்களின் கூட்டங்களை அழிப்பதும்
ஞானம் சக்தி முதலிய ஆறு குணங்கள் நிறையப் பெற்றதும்
தீயில் காய்ச்சப்பட்ட தங்கம் போன்ற சிவந்த கிரணங்களால் பத்து திசைகளையும் வியாபித்து
இருப்பதுமான ஸூ தர்சன ஜ்யோதிஸ்ஸூ
உங்களுடைய அனைத்து துன்பங்களையும் அழித்து உங்களை ரக்ஷிக்கட்டும்

இந்த ஸ்லோகத்தில் எண்களின் பெயர்கள் அமைத்துள்ளது போல்
கருட பஞ்சாசத்தில் ஐந்தாம் ஸ்லோகம் அமைந்துள்ளது

ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-

ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –

———–

உச்சண்டே யச்சி கண்டே நிபிடயதி நப க்ரோட மர்க்கோட தித்யாம்
அப்யஸ்ய ப்ரவ்டதாப க்லபித வபுரபோ பிப்ர தீர பிரப்பங்க்தீ
தத்தே சுஷ்யத் ஸூ தோத் ஸோ விதுரப மதுந ஷவ்த்ர கோசஸ்ய ஸாம்யம்
ரக்ஷந் த்வஸ்த்ர ப்ரபோஸ்தே ரசித ஸூ சரித வ்யுஷ்ட யோ க்ருஷ்ட யோவ –11-

எந்த ஸூதர்சன ஆழ்வானின் கிரணங்கள் -சுடர்க்கொழுந்து -சுடர் ஒளி ஆகாசத்தை அடைந்தவுடன் அதனால் மிகவும் தபிக்கப்பட்டு
ஸூர்யன் மழை மேகங்களான கரு முகிலுக்குள் புகுந்து புகுந்து ஸஞ்சரிக்கிறானோ
தன்னிடமுள்ள அம்ருதப் பெருக்கு வற்றிப் போய் தேன் அற்ற தேனடை போல் சந்திரன் ஆகிறானோ
மேன்மேலும் புண்ணியத்தை வளர்க்க வல்ல அப்படிப்பட்ட திருவாழி ஆழ்வானின் கிரணங்கள் உங்களைக் காத்து அருளட்டும் –
ஆழ்வார்கள் கனலாழி அனலாழி என்றே அருளிச் செய்கிறார்கள் அன்றோ –

————-

திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டம் எங்கும் வியாபித்து
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிக்கிறது –

பத்மவ்கோ தீர்க்கி காம்ப ஸ்வயநி தர தடே கைரி காம்பு ப்ரபாத
ஸிந்தூரம் குஞ்ஜ ராணாம் திசி திசி ககநே ஸாந்த்யமேக ப்ரபந்த
பாராவாரே ப்ரவாளோ வந புவி ச ததா ப்ரேஷ்ய மாண ப்ரமுக்தை
ஸாதிஷ்டம் வ ப்ரபோதம் ஜனயது தநு ஜத் வேஷிண ஸ்த்வைஷ ராஸி –12-

ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் திக்கஜங்களிடம் சிந்தூரப்பொடியாகவும்
ஆகாசத்தில் அந்திப்பொழுது தோன்றும் சிவந்த மேகத்திரளாகவும்
கடலில் பவழமாகவும் காடுகளில் செந்தளிராகவும் பாமர மக்களால் பார்க்கப்படுகின்ற
திருவாழி ஆழ்வானின் கிரண ஸமூஹம் -ஒளிக்கூட்டமானது உங்களுக்கு நல்ல அறிவை உண்டாக்கட்டும்

————

பாநோ பாநோ த்வதீயாஸ் புரதி குமுதி நீ மித்ர தே குத்ர தேஜஸ்
தாராஸ் ஸ்தாரா ததீ ரோஸ்ய நல ந பவதஸ் ஸ்வைர மை ரம்ம தார்ச்சிஸ்
ஸம்ஸன் தீத்தம் நபஸ் ஸ்தா யதுதய ஸமயே சக்ர ராஜாம் சவஸ்தே
யுஷ் மாகம் ப்ரவ்டதாப ப்ரபவ பவகதா பக்ரமாய க்ரமந்தாம் —13-

ஸூ தர்சன கிரணங்களின் உதய காலத்தில் ஆகாசத்தில் திவ்ய விமானங்களில் செல்லும் தேவ கந்தர்வாதிகள்
ஓ ஸூர்யனே உன் ஒளியும் மங்கிப் போய் விட்டதே –
சந்திரனே உன் தேஜஸ்ஸூ என்னவாயிற்று
நக்ஷத்ரங்களே வெகுதூரம் சென்று விடுங்கள்
ஓ அக்னி பகவானே நீ இப்படி ஒளி குறைந்து பல ப்ரகாஸ -ஹீனனாக -ஆகி விட்டாயே
ஓ வஜ்ர அக்னியின் தேஜஸ்ஸே நீ ஸூ தர்சன ஒளியில் கலந்து உருவழிந்து தனித்தன்மையை இழந்து விட்டாயே
என்று கூறும்படி பெருமை வாய்ந்த
ஸூ தர்சன ஆழ்வானின் கிரணங்கள் தாப த்ரயங்களுக்கு பிறப்பிடமாகிய பிறவி நோயைத் தீர்க்கட்டும் –

————

ஜக்த்வா கர்ணே ஷு தூர் வாங்குர மரி ஸூத் ருசா மஹிஷு ஸ்வர்வதூ நாம்
பீத்வா ஸாம்ப ஸ்ஸரந்த்யஸ் ஸ வ்ருஷ மநு கதா வல்லவே நாதி மேந
காவோ வஸ் சக்ர பர்த்துஸ் பரமம்ருத ரஸம் ப்ரஸ்ரிதாம் துஹாநா
ருத்திம் ஸ்வா லோக லுப்த த்ரி புவன தமஸ ஸானு பந்தாம் ததந்தாம் –14-

அஸூர அரக்கர் மாதர்கள் மங்களகரமாகக் காதுகளில் அணிந்து கொண்டிருக்கும் அறுகம் புல்லைத் தின்று
தேவ மாதர்களின் கண்ணீரைப் பருகுகின்றனவும்
தரும நெறியில் சென்று மோக்ஷத்தில் ருசியை உண்டாக்குகின்ற ஸூ தர்சன கிரணங்கள்
நிலையான செல்வத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்
அறுகம் புல்லைத் தின்று தண்ணீரைப் பருகி காளையொடு
சேர்ந்து திரிகின்றவையும் தங்களுக்குப் பின்னால் கண்ணனை கோபாலனை வரப் பெற்றவையும்
அம்ருதம் போன்ற பாலைக் கொடுப்பவையும்
தம் கடாக்ஷத்தினால் மூன்று உலகத்தாரின் அறியாமையும் ஆகிற இருளைப் போக்கி அருளுவதுமான
கண்ணபிரானின் பசுக்கள் உங்களுக்குத் தொடர்ந்து நிலையான செல்வத்தை அளிக்கட்டும் –

————

ஸேநாம் ஸேநாம் மகோநோ மஹதி ரண முகேலம் பயம் லம் பயந்தீ
உத்ஸே கோஷ்ணுலு தோஷ் ணாம் ப்ரதம த்விஷதா மா வலீர்யா வலீடே
விஸ்வம் விஸ்வம் பராத்யம் ரத பததி பதேர் லீலயா பால யந்தீ
வ்ருத்திஸ் ஸா தீதிதீ நாம் வ்ருஜிந மநு ஜனுர் மார் ஜயத் வார்ஜிதம் வ –15–

பெரிய போர் களத்தில் தலைவர்களோடு கூடிய இந்திர சேனையைப் பயமுறுத்தி செருக்கினால்
போர் செய்யத் துடிக்கின்ற வலிய கைகளைக் கொண்ட அசுரர்களின் கூட்டங்களை அழித்து
பூமி முதலிய எல்லா உலகங்களையும் அவலீலையாக ரஷிக்கின்ற ஸூ தர்சன ஆழ்வானுடைய கிரணங்கள்
நீங்கள் பிறவி தோறும் ஈட்டிய பாவங்களை அழிக்கட்டும்

———

தப்தா ஸ்வேநோஷ் மணேவ ப்ரதிபட வபுஷா மஸ்ர தாரா தயந்தீ
ப்ராப்தேவ ஷீபபாவம் ப்ரதி திச ம ஸக்ருத் தன்வதீ கூர்ணிதாநி
வம்ஸாஸ்த்தி ஸ்போட ஸப்தம் ப்ரகடயதி படூன் யாவ ஹந்த்யட்ட ஹாஸான்
பாஸா வ ஸ்யந்த நாங்க ப்ரபு சமுதயிநீ ஸ்பந்த தாம் சிந்தி தாய –16-

தனது உஷ்ணத்தினால் தாபம் அடைந்தது போல் எந்த திருவாழி ஆழ்வானின் பிரகாஸமானது
எதிரிகளின் உடலில் தோன்றும் ரத்தைப் பெருக்கைப் பருகி பெருமிதம் கொண்டு எல்லாத் திசைகளிலும்
சுற்றிக் கொண்டும் சத்ருக்களின் முதுகு எலும்பை முறிக்கும் பேர் ஒலியை எழுப்பிக் கொண்டும்
அட்டஹாஸ மான பெரும் சிரிப்பை வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறதோ
அந்த ஸூ தர்சன ப்ரபையானது உங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சிறிது புறப்படட்டும் –

———–

தேவை ராஸேவ்ய மாநோ தநு ஜபட புஜா தண்ட தர்போஷ் மதப்தை
ஆசாரோ தோதி லங்கீ லுடதுடு படலீ லஷ்ய டிண்டீரபிண்ட
ரிங்கஜ்ஜ்வாலா தரங்க த்ருடித ரிபு தரு வ்ராத பாதோக்ர மார்க
சாக்ரோ வஸ்ஸோசி ரோக ஸ்ஸ மயது துரிதா பஹ் நவம் தாவ வஹ்னிம் –17-

திருவாழி ஆழ்வானின் ஜ்வாலை ப்ரவாஹம் போன்றது -ஸூர்ய வெப்பத்தினால் தபிக்கப் படுகிறவர்கள்
ஜல ப்ரவாஹத்தில் ஆழ்ந்து மூழ்குவார்கள்
அது போல் அஸூரர்களின் புஜ பலத்தின் செருக்கினால் தபிக்கப் பட்ட தேவர்கள் திருவாழி ஆழ்வானின்
ஜ்வாலப் ப்ரவாஹத்தில் மூழ்கி வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்
ஜலப் ப்ரவாஹம் நுரைகள் மிகுந்து ஜ்வாலையும் கரை கடந்து செல்லும் திசைகளைக் கடந்து செல்கிறது
வெள்ளம் மரங்களை அறுத்து வீழ்த்தி வழிகளை எல்லாம் பயங்கரமாக ஆக்கும்
ஜ்வாலைப் ப்ரவாஹமும் சத்ருக்களின் உடல்களை அறுத்து வீழ்த்தி அச்சத்தை ஏற்படுத்து கிறது
இத்தகைய ஜ்வாலைப் பிரவாகம் உங்களுடைய பாவங்கள் ஆகிற காட்டுது தீயை அணைக்கட்டும் –

———–

ப்ராம் யந்தீ ஸம்ஸ்ரிதாநாம் பிரம சம நகரீச் சத்ந ஸூர்ய ப்ரகாசா
ஸூர்யா லோகாநு ரூபா ரிபுஹ்ருதய தமஸ் காரிணீ நிஸ்தமஸ்கா
தாரா ஸம்பாதி நீ ச பிரகடித தஹநா தீப்திரஸ்த்ரே சிதுர் வ
சித்ரா பத்ராய வித்ரா வித விமத ஐநா ஜாய தாமாய தாய –18–

தன்னிடம் புத்தி பிரமம் இல்லாவிட்டாலும் பிரமத்தினால் சுழற்சியினால் ஆஸ்ரிதர்களின் பிரமத்தைப் போக்குவதும்
ஸூர்யனை மறைத்தாயினும் (ஆழி கொண்டு இரவி மறைத்தான் -நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற -பெரியாழ்வார் )
ஸூரி ஜனங்களின் பண்டிதர்களின் -நல்லறிவு வளர்வதற்கு உதவுவதும்
தன்னிடம் தமஸ்ஸூ இல்லா விட்டாலும் சத்ருக்களின் நெஞ்சில் அஞ்ஞான இருளை உண்டு பண்ணுவதும்
பெரு மழையைத் தருவதாயினும் சத்ருக்களின் மீது அக்னியை வெளிப்படுத்துவதுமான
ஸூ தர்சன ஜ்வாலை உங்களுக்கு மங்களங்களை அளிக்கட்டும் –

———-

நிந்யேவந்யேவ காசீ தவசிகி ஜடில ஜ்யோதிஷா யேந தாஹம்
க்ருத்யா வ்ருத்யா விலில்யே சலப ஸூலபயா யத்ர சித்ர ப்ரபாவே
ருத்ரோப் யத்ரேர் துஹித்ரா ஸஹ கஹந குஹாம் யத் பயா தப்ய யாஸீத்
திஸ்யாத் விச்வார்ச்சிதோ வஸ் ஸ சுப ம நிப்ருதம் சவுரி ஹேதி ப்ரதாப –19-

முன்பு ஒரு கால் ஸூ தர்சன ஜ்யோதி காசீ பட்டணத்தைக் கொளுத்தியது –
பவ்ண்டர வாஸூ தேவ வத வ்ருத்தாந்தம் இத்தை விவரிக்கும் –
துர்வாஸ முனிவரால் தோற்றுவிக்கப் பட்ட க்ருத்யையானது -ஏவல் -ஸூ தர்சன தேஜஸ்ஸில்
வீட்டில் பூச்சி போல் மாண்டு ஒழிந்தது (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-34-31இத்தை விவரிக்கும் )
ஒரு சமயம் திருவாழியின் தேஜஸ்ஸைக் கண்டு பயந்து பரமசிவன் பார்வதியோடு ஓடிச் சென்று
மலைக்குகையில் ஒளிந்து கொண்டு தப்பித் பிழைத்தான் (ஸ்ரீ கூரேச விஜயம் -14 ஸ்லோகம் இத்தை விவரிக்கும் )
அப்படிப்பட்ட பெருமை கொண்ட ஸூ தர்சன ப்ரபாபமானது உங்களுக்கு நிலையான மங்களங்களைக் கொடுக்கட்டும் –

————-

உத்யன் பிம்பாது தாரான் நயன ஜல ஹிமம் மார்ஜயன் நிர் ஜரீணாம்
அஞ்ஞான த்வாந்த மூர்ச்சாகர ஜநிரஜநீ பஞ்ஜந வ்யஞ்ஜி தாத்வா
ந்யக் குர்வாணோ க்ரஹாணாம் ஸ்புரண மப ஹரன் நர்ச்சிஷஸ் பாவ கீயாஸ்
சக்ரே சார்க்க ப்ரகாசோ திசது தச திசோ வ்யச் நு வாநம் யசோவ -20-

ஸூ தர்சன ஸூர்ய பிரகாசம் ஸூ தர்சன ஸூர்ய பிம்பத்தில் இருந்து உண்டாகிறது
தேவமாதரின் கண்ணீர் ஆகிய பனியை நீக்குகிறது
மோகத்தை உண்டு பண்ணும் ஸம்ஸாரமாகிற ராத்ரியை அழித்து விவேகத்தை ஏற்படுத்தி
நல்ல வழியை விளக்கிக் காட்டுகிறது
கிரஹங்களின் ஒளியை மழுங்கச் செய்கிறது -அக்னியின் ஒளியைக் கொள்ளை கொள்கிறது
கோடி ஸூர்ய ப்ரகாஸத்தை யுடைய இந்த ஸூ தர்சன ஸூர்ய ப்ரகாஸம்
பத்துத் திசைகளிலும் பரவக்கூடிய புகழைக் கொடுக்கட்டும் –

———–

வர்கஸ்ய ஸ்வர்க்க தாம் நாமபி தநுஜ நுஷாம் விக்ரஹம் நிக்ர ஹீதும்
தாதும் ஸத்யோ பலா நாம் ஸ்ரீ ய மதி சயி நீம் பத்ர பங்கா நு வ்ருத்யா
யோக்தும் தே தீப்யதே யா யுகபதபி புரோ பூதி மய்யா ப்ரக்ருதியா
ஸாவோ நுத்யா தவித்யாம் த்யுதி ரம்ருத ரஸ ஸ்யந்தி நீ ஸ் யாந்த நாஙகீ--21-

மோக்ஷ ரஸத்தைப் பெருக்கும் திருவாழி ஆழ்வானின் ப்ரகாஸமானது ஒரே சமயத்தில்
அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்படும் விரோதத்தையும் அசுரர்களை ஒழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகப் பெண்களுக்கு மென்மேலும் ஸம்பத்தைக் கொடுப்பதற்கும்
அசுரர்களின் சேனைகளின் உள்ள வாகனங்களை அழிப்பதால் செல்வத்தை அழிப்பதற்கும்
ஒரே சமயத்தில் தேவ லோகத்தில் ஐஸ்வர்யம் நிரம்புவதற்கும்
அசுரப் பட்டணங்களை சாம்பலாக்குவதற்கும் சக்தி யுள்ளதாக விளங்குகின்றது
அப்படிப்பட்ட ஸூ தர்சன த்யுதியானது உங்களுடைய அஞ்ஞானத்தை நீக்கட்டும் –

அஸுர ஸமூஹ த்வம்சமும் தேவ ஸமூஹ ஜீவனமும் ஒரே சமயத்தில் நிகழ்வது ஆலங்காரிக நியாயம்

—————

தாஹம் தாம் ஸபத் நான் சமரபுவி லஸத் பஸ்மநா வர்த்மநா யான்
க்ரவ்யாத ப்ரேத பூ தாத்யபி லஷித புஷா ப்ரீத காபாலிகே ந
கங்கா லை கால தவ்தம் கிரிமிவ குருதே யஸ் ஸ்வ கீர் தேர் விஹர்த்தும்
க்ருஷ்டிஸ் ஸாந்த்ருஷ்ட்டிகம் வ ஸகல முப நயத்வாயு தாக்ரே சரஸ்ய –-22-

திருவாழி ஆழ்வானின் கிரணமானது போர்க்களத்தில் அசுரர் ராக்ஷஸர்கள் தேஹங்களை நீறு படக் கொளுத்தி பஸ்மம் படிந்ததும்
அவர்களுடைய சரீரத்தின் மாம்சங்களால் பூத ப்ரேத பிசாசுகளுக்கு திருப்தி அளித்ததும்
அழித்த உடல்களின் வெண்மையான எலும்புகளை மலையாகக் குவித்துத் தன் காதலியான கீர்த்திக்கு புகழுக்கு
விளையாட்டு வெள்ளி மலையாகச் செய்ததுமாய் விளங்குகிறது
அந்த ஸூ தர்சன கிரணம் உங்களுக்கு எல்லா வகையான பலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் –
___________________________________________

“தக்தாநாம் தாநவாநாம் ஸபஸிதநிசயை;அஸ்த்திபிஸ் ஸர்வ சுப்ராம்
ப்ருத்வீம் க்ருத்வாபி பூயோ நவருதிர ஜரீ கௌதுகம் கௌணபேப்ய:
குர்வாணம் பாஷ்ப பூரை: குசதடகுஸ்ருண க்ஷாலநைஸ் தத்வநூ நாம்
பாபம் பாபச்யமாநம் சமயது பவதாம் சஸ்த்ரராஜஸ்ய தேஜ:”.–23-

ஸூதர்சன தேஜஸாலே அசுரர்கள் கொளுத்தப்பட்டு, அவர்களுடைய சரீரத்திலுள்ள மாம்ஸங்களும் நன்கு உண்ணப்பட்டு ,
எலும்பும் நீறுமே எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டு , இனி நமக்கு உணவு கிதைக்க வழியே இல்லையே என்று
பூதப்ரேதாதிகள் ஏங்கி இருந்தன.
ஸூதர்சன கிரண பிரகாசத்தைக் கண்ட அசுரமாதர்கள் தங்களுடைய கணவர்கள் இறந்தார்கள் என்பதை அறிந்து
கண்ணீர்விட்டு அழுந்தார்கள். அக்கண்ணீர் பெருக்கு அவர்களுடைர மார்பில் இருந்த குங்குமங்களை அழித்து சிவப்பாகப் பெருகிறது.
இதைக் கண்ட அந்த பூதப்ரேதாதிகள் நமக்கு புதிய இரத்தம் கிடைத்துவிட்டது.பருகி மகிழ்வோம் என்று ஆசைப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஸூதர்சன த்யுதி உங்களுடைய பாபங்களை போக்கடிக்கட்டும்.

___________________________________________

மாகாந் மோஷம் லலாடநல இதி மதநத்வேஷிணா த்யாயதேவ
ஸ்ரஷ்ட்ரா ப்ரோந்நித்ரவாஸாம்புஜ தலபடலப்லோஷமுத்பச்யதேவ,
வஜ்ராக்நிர் மாஸ்ம நாசம் வ்ரஜதிதி சகிதேநேவ சக்ரேண பத்தை:
ஸ்தோர்த்ரைரஸ் த்ரேச்வரஸ்ய த்யது துரிதசதம் த்யோதமாநா த்யுதிர் வ”.--24-

தன்னுடைய நெற்றிக்கண் நாசம் அடையாமல் இருக்கவேண்டும் என்று எப்போதும் தியானம் செய்யும் ருத்திரனும்,
தன்னுடைய இருப்பிடமான தாமரை மலர் எரிந்து போய்விடாமல் இருக்கவேண்டும் என்று சிந்திக்கும் பிரம்மாவும் ,
தன்னுடைய வஜ்ராயுதத்தின் அக்னி நாசம் அடையாமல் இருக்க வேண்டுமே என்று பயப்படும் இந்திரனும்
எப்போதும் ஸூதர்சன த்யுதியை ஸ்தோத்திரம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஸூதர்சன தேஜஸ் உங்களுடைய நூற்றுக் கணக்கான பாவங்களைக் போக்கட்டும்.

———-

(இதுவரை ஸூதர்சன ஜ்வாலை வர்ணனம்)
25 முதல் 38 வரை நேமி(சக்ரத்தின் மறுபக்கம்) வர்ணம்.
தனித்தனியே பாகங்களை வர்ணித்தாலும் திருவாழியான சுதர்சன பெருமைகளே ஆகும்.

சஸ்த்ராஸ்த்ரம் சாத்ரவாணாம் சலபகுலமிவ ஜ்வாலயா லேலிஹாநா
கோஷை: ஸ்வை: க்ஷோபயந்தீ விகடித பகவத்யோக நித்ராந் ஸ்முத்ராந்
வ்யூடோர: ப்ரௌடசார த்ருடித படு ரடத் கீகஸ க்ஷுண்ணதைத்யா
நேமிஸ் ஸெளதர்சநீ வ: ச்ரியமதிசயநீம் தாசதாதா சதாப்தம்”.--25-

விட்டில் பூச்சிகளின் கூட்டங்களைக் கவர்ந்து அழிப்பது போல் அசுர ராக்ஷஸர்களின் அஸ்த்ர சஸ்திரங்களை அழிப்பதும்
எம்பெருமானின் யோக நித்திரையைக் தம் ஓசையினால் கலைக்கும் சமுத்திரத்தை தன் கோஷங்களினால் கலங்கச் செய்வதும்,
அசுரர்களின் உடலை அழிப்பதுமான ஸூதர்சன நேமி நூறாண்டுகள் உங்களுக்குச் செல்வம் அளிக்கட்டும்.

மந்த்ர சுத்தமான ஆயுதங்கள் அஸ்திரங்கள்
அமந்த்ரமானவை அஸ்திரங்கள்

———

தாரா சக்ரஸ்ய தாராகண கண விததி த்யோதிதத்யுப்ரசாரா
பாராவாராம்புபூர க்வதன பிசுநிதோத்தாள பாதாளயாத்ரா,
கோத்ராத்ரிஸ்போடசப்த ப்ரகடித வஸுதாமண்டலீ சண்டயாநா
பந்தாநம் வ: ப்ரதிச்யாத் ப்ரசமநகுசலா பாப்மநாமாத்ம நீநம்”.–26-(கண விததிகுப் பதில் -கபிச க்ருணி பாட பேதம் )

நக்ஷத்திர கூட்டங்கள் போல் தன் தீப்பொறிகளினால் வானத்தை நிறைத்துக்கொண்டு ஆகாச சஞ்சாரம் செய்வதும்,
கடல் நீரையும் வற்றச்செய்து கொண்டு பாதாள லோகத்தில் சஞ்சரிப்பதும் ,
குல பர்வதங்களை யெல்லாம் பிளந்து கொண்டு பூமண்டலத்தில் திரிகின்றதும் ,
பாவங்களைத் தணியச் செய்யவல்லதுமான திருவாழியின் நேமியானது
உங்களுக்கு ஆத்ம ஹிதமான வழியை (அர்ச்சிராதி மார்கத்தை) அல்லது அதற்கு நிகரான ஸத் மார்கத்தையோ கொடுக்கட்டும்.

___________________________________________

யாத்ரா யா த்ராதலோகா ப்ரகடித வருணத்ராஸமுத்ரே ஸமுத்ரே
ஸத்த்வாஸத்த்வா ஸஹோஷ்மா க்ரு தஸகமிதகஸ்பந்தகாநா ததாநா,
ஹாநிம் ஹா நிந்திதாநாம் ஜகதி பரிஷதாம் தாதவீநாம் நவீநாம்
சக்ரே சக்ரேசநேமிஸ் சமுபஹரது ஸா ஸப்ரபாவப்ரபா வ:”.–27-

உலகங்களை ரக்ஷிப்பதும், ‘தமக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ’ என்று வருணன் நடுங்குவதை
விளக்கிக் கொண்டிருக்கும் கடலில் அடிக்கடி சஞ்சரிப்பதும் , சேதன அசேதனங்களால் தாங்க முடியாத ப்ரதாபத்தை கொண்டதும்,
தன்னுடைய இறகுகளின் உதவியால் ஆங்காங்கு பறந்து சென்று ஜனங்களுக்குப் பலவகையாகத் தொல்லைகளைக்
கொடுத்துக் கொண்டிருந்த மலைகளின் இறகுகளை அழித்து மலைகளின் சஞ்சாரத்தை நிறுத்தி
மலைகளை ஒரே இடத்தில் இருக்குமாறு ஆக்கியதும், அசுரக் கூட்டங்களை அழித்து மேலும் ஒளி பெற்று விளங்குவதுமான
ஸூதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை கொடுக்கட்டும்.

(இந்திரனின் வஜ்ராயுதமே மலைகளின் இறகுகளை வெட்டியதாக சரித்திரம்.ஆயினும்
ஸூதர்சன ஆழ்வானின் சக்தியே வஜ்ராயுதத்தில் அமைந்து இச் செயலை செய்ததாக கொள்ள வேண்டும்.)

___________________________________________

யத்ராமித்ராந் திதக்ஷௌ ப்ரவிசதி பலிநோ நாம நிஸ்ஸீமதாம்நி
க்ரஸ் தாச ஸ்தாபசீர்ணை: ப்ரகுணிதஸிகதோ மௌக்திகைச் சௌக்திகேயை:
ராசிர் வாராமபாராம் ப்ரகடயதி புநர் வைரி தாராச்ருபூரை:
வ்ருத்திம் நிர்யாதி நிர்யாபயது ஸ துரிதாந்யஸ்த்ரராஜப்ராதி வ:”.--28-

அபரிமிதமான தேஜஸையுடைய ஸூதர்சன நேமியானது சத்ருக்களை அழிப்பதற்கு கடல் வழியாக பாதாள லோகத்திற்கு
சென்ற போது கடல்நீர் வற்றிப்போய் , ஸூதர்சன வெப்பத்தால் சிதறி விழுந்த முத்துக்கள் எங்கும் மணலில் நிறைந்திருந்தன.
அங்கு சென்று அசுரர்களை அழித்துத் திரும்பிய பிறகு , அசுர பத்தினிகளின் கண்ணீர் பெருக்கால் மீண்டும் கடல் நிரம்பியது.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸூதர்சன நேமியானது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.

___________________________________________

கக்ஷ்யாதௌல்யேந கத்ரூ தநயபணமணீந் கல்யதீபஸ்ய யுஞ்ஜந்
பாதாளநத ப்ரபாதீ நிகிலமபி தம: ஸ்வேந தாம்நா நிகீர்ய,
தைதேப்ரேயஸீநாம் வமதி – ஹ்ருதி ஹதப்ரேயஸாம் பூயஸா ய:
சக்ராக்ரீயாக்ரதேசோ தஹது விலஸிதம் பஹ்வஸாவம்ஹஸாம் வ:”.–29-

திருவாழி ஆழ்வானின் நேமியானது பாதாள லோகம் சென்று நாகங்களின் படங்களிலுள்ள மாணிக்கங்களை ,
தன்னுடைய தேஜஸினால் ஒளி குன்றச் செய்து , அவற்றைப் பகல் விளக்குகளாக ஆக்கியது.
தன் ஒளியினால் அங்கிருந்த இருளைக் கவர்ந்து , விதவைகளான அசுர ஸ்திரீகளின் நெஞ்சில் கொண்டு வந்து தேக்கியது.
இப்படிப்பட்ட திருவாழியாழ்வான் உங்கள் பாவங்களின் பெருமிடுக்கை எரித்து அழிக்கட்டும்.

___________________________________________

க்ருஷ்ணாம் போதஸ்ய பூஷா க்ருத நயந நய வ்யாஹதிர் பார்கவஸ்ய
ப்ராப்தாமாவே தயந்தீ ப்ரதிபட ஸுத்ருசாம் உத்படாம் பாஷ்ப வ்ருஷ்டிம்,
நிஷ்டப்தாஷ்டாபத ஸ்ரீஸ் ஸமமர சமு கர்ஜிதைருஜ்ஜிஹாநா
கீர்திம் வ: கே தகீபி ப்ரதயது ஸத்ருசம் சஞ்சலா சக்ர தாரா”.–30-

எம்பெருமானாகிற கருமேகத்திற்கு ஆபரணமாகவும் , சுக்கிரனின் கண்ணை அழித்தவனும்,
அசுர ராக்ஷ ஸ்த்ரீகளிடமிருந்து கண்ணீராகிய மழையப் பெருகச் செய்ததும்,
நன்கு காய்ச்சப்பட்ட பொன் போன்று பளப்பளபாக விளங்குவதும் ,
தேவ சேனைகளின் விஜய முழக்கங்களோடு புறப்படுகின்றதும், மின்னல் போன்று சஞ்சலமாயும் இருக்கிற
ஸூதர்சன நேமியானது உங்களுக்குத் தாழம்பூ போன்ற புகழை செழிப்பாக வளரச்செய்யட்டும்.

——–

வப்ராணாம் பேதநீம் ய: பரிணதிம் அகிலச்லாகநீயாம் ததாந:
க்ஷúண்ணாம் நக்ஷத்ர மாலாம் திசி திசி விகிரந் வித்யுதா துல்யகக்ஷ்யா:
நிர்யாணே நோத்கடேந ப்ரகடயதி நவம் தாநவாரிப்ரகர்ஷம்
சக்ராதீசஸ்ய பத்ரோ வசயது பவதாம் ஸ ப்ரதிச் சித்த வ்ருத்திம்”.–31-

ஸூதர்சன நேமி பத்ரம் என்னும் யானை போன்றது. அந்த யானை தந்தங்களால் கரைகளை இடித்துத் தள்ளும்;
ஸூதர்சனமும் சத்ருக்களின் பட்டணங்களிலுள்ல ப்ராகாரங்களைப் பிளக்கிறது.
தனக்கு அணிவிக்கப்பட்ட இருப்பத்தேழு முத்துக்களைக் கொண்ட நக்ஷத்திர மாலையை யானை
கீழே வீழ்த்திப் பொடியாக்கி இறைத்துவிடும்.
ஸூதர்சனமும் மின்னல் போல் ஒளி மிக்கு இருக்கிறது.
அந்த யானை அபாங்க வழியாக மதஜலத்தைப் பெருக்கும்;
ஸூதர்சனம் ஆடம்பரமாக வெளியில் புறப்படும்போதே எம்பெருமானின் பெருமையை வெளிபடுத்திக் கொண்டு புறப்படும்.
அனைவராலும் கொண்டாடத்தக்க மங்களகரமான அந்த ஸூதர்சன நேமியானது உங்களுடைய மனத்தை இஷ்சப்படி திரியாமல் அடக்கியாளட்டும்.

கஜ ஜாதியில் பத்ரம் ஓன்று

___________________________________________

நாகௌகச் சத்ரு ஜத்ரு த்ருடந விகடித ஸ்கந்த நீரந்த்ர நிர்யத்
நவ்யக்ரவ்யாஸ்ரஹவ்ய க்ரஸந ரஸ லஸஜ்ஜ்வால ஜிஹ்வால வஹ்நிம்
யம் த்ருஷ்ட்வா ஸாம்யுகீநம் புநரபி விததத்யாசி ஷோ வீர்ய வ்ருத்த்யை
கீர்வாணா நிர்வ்ருணாநா விதரது ஸ ஜயம் விஷ்ணு ஹேதி ப்ரதிர் வ:”.–32-

தேவ சத்ருக்களான அசுர ராக்ஷஸர்களின் தோள் பட்டைகளை அறுத்து வீழ்த்துவதால் விரிந்த தோள்களிலிருந்து
பெருகும் மாமிச ரத்தங்களைப் புதிய ஹவிஸ்ஸை பெறுவதில் ஆசையோடு ஜ்வாலையாகிற நாக்கைத்
தீட்டிக்கொன்டு இருக்கும் அக்னியை உடையதும்,யுத்தம் செய்வதில் வல்லதும் மேன் மேலும் வீர்யம் வளர வேண்டும் என்று
தேவர்களால் மங்களாசாசனம் செய்யப்படுவதுமான ஸூதர்சன நேமியானது
எப்போதும் ஐய ப்ரதமாக இருந்து கொண்டு உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்.

___________________________________________

“தந்வாத் வந்யஸ்ய தாராஸ லிலமிவ தநம் துர்கதஸ்யேவ த்ருஷ்டி:
ஜாத்யந்தஸ்யேவ பங்கோ: பத விஹ்ருதிரிவ ப்ரீணநீ ப்ரேம பாஜாம்:
பத்யுர் மாயா க்ரியாயாம் ப்ரகட பரிணதிர் விச்வ ரக்ஷாக் ஷமாயாம்
மாயா மாயாமிநீம் வஸ் த்ருடயது மஹதீ நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.--33-

பாலைவனத்தில் நடந்து சென்று பெருந்தாகம் கொண்டவனுக்கு ஓடும் தண்ணீர் கிடைத்தது போலவும்,
குருடனுக்குப் பார்வை கிடைத்தது போலவும்,நொண்டிக்கு காலால் நடப்து விளையாடும் நிலை கிடைத்தது போலவும் ,
பக்தர்களுக்கு ப்ரீதியை உண்டு பண்ணக் கூடியதும் ஸ்ரீபதியான எம்பெருமானின் இவ்வுலகங்களை ரக்ஷிக்கும் சமயத்தில்
எம்பெருமானாகவே பரிணமிப்பதுமான (மாறுவதுமான) ஸூதர்சன நேமியானது
உங்களுடைய தொடர்ச்சியாக வுள்ள அவித்யையை நீக்கட்டும்.

___________________________________________

த்ராணம் யா விஷ்டபாநாம் விதரதி ச யயா கல்ப்யதே காம பூர்த்தி:
ந ஸ்தாதும் யத் புரஸ்தாத் ப்ரபவதி கலயா ப்யோஷதீ நாமதீச:,
உந்மேஷோ யாதி யஸ்யா ந ஸமயநியதிம் ஸா ச்ரியம் வ: ப்ரதேயாத்
ந்யக்க்ருத்ய த்யோதமாநா த்ரிபுர ஹர த்ருசம் நேமிர ஸ்த்ரேச்வரஸ்ய”.--34-

சிவன் சம்ஹாரத்தைச் செய்கிறவனாதலால் அவனுடைய நெற்றிக் கண் உலகங்களுக்கு நாசத்தை அழிக்கும்.
ஸூதர்சன நேமியானது லோக ரக்ஷணத்தில் ஊற்றமுடையதாக இருக்கும்.
தவ நிலையில் இருக்கும் சிவனுடைய நெற்றிக் கண்னால் மன்மதன் எரிக்கப்பட்டு சரீரம் இழந்தான்.
தக்ஷ முனிவனின் சாபத்தால் கலைகள் குறைந்து ஒளி குன்றிய சந்திரன் முக்கண்ணனின் கண் எதிரில் காலமாத்ரனாக நின்றான்.
அந்த சந்திரன் கலாமாத்ரனாகவும் சக்ர நேமியின் எதிரில் நிற்க இயலாதவனானான்.
முக்கண்ணனின் நெற்றிக்கண் ஏதோ ஒரு கால விசேஷத்தில் சம்ஹார காலத்தில் திறந்துப் பிரகாசமாயிற்று.
சக்கர நேமியின் பிரகாசம் எல்லாக் காலத்திலும் உண்டு.
இப்படி பலவகைகளாலே முக்கண்ணனின் நெற்றிக் கண்ணை வென்று விளங்கும் சக்ர நேமியானது உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கட்டும்.

___________________________________________

நக்ஷத்ர க்ஷோத பூதி ப்ரகர விகிரண ச்வேதி தாசாவகாசா
ஜீர்ணை: பர்ணைரிவ த்யாம் ஜலதர படலைச் சூர்ணி தைரூர் ணுவாநா,
ஆஜா வாஜாந வாஜா நதரிபுஜ நதாரண்ய மாவர்தமாநா
நேமிர் வாத்யேவ சாக்ரி ப்ரணுதது பவதாம் ஸம்ஹதம் பாப தூலம்.--35-

நக்ஷத்திர கூட்டங்களாகிற சாம்பலை நான்கு பக்கமும் வீசி திகந்தங்களை எல்லாம் வெளுக்கச் செய்ததும்,
மேகக் கூட்டங்களைப் பொடியாக்கி ஆகாசத்தை மறைத்ததும், அசுர ராக்ஷஸர்களாகிற அரண்யத்தில் பெரு வேகத்தோடு சுழல்வதும்
பெருங்காற்று போன்றதுமான சக்ர நேமியானது உங்களுடைய பாபமாகிற பஞ்சுகளை உருவழிக்கட்டும்.
காற்று நிலத்திலுள்ள நீறுகளை வாரியிறைத்துத் திசைகளை வெளுக்கடிக்கும்.
சக்ர நேமியும் நக்ஷத்திரங்களைப் பொடியாக்கி வீசி திகந்தங்களை வெளுக்கச் செய்யும்.
காற்று பழுத்து விழுந்த இலைகளை எல்லாம் வீசி எறிந்து வானத்தை மறைக்கும்.
நேமியும் மேகங்களைப் பொடியாக்கி சிதிலமாக்கி ஆகாசத்தை மறைக்கச் செய்யும்.
காற்று, பெருங்காடுகளை நோக்கிச் செல்லும்.
நேமியும் சத்ருக்களாகிற அரண்யத்தை நோக்கிச் சுழன்று செல்லும்.
காற்று பஞ்சுகளைப் பறக்கடிக்கும்.
சக்ர நேமியும் பாப ராசிகளைப் பறக்கடிக்கும்.
___________________________________________

க்ஷிப்த்வா நேபத்த்ய சாடீமிவ ஜல தகடாம் ஜிஷ்ணு கோதண்ட சித்ராம்
தாரா புஞ்ஜம் ப்ரஸூநாஞ்ஜலிமிவ விபுலே வ்யோம ரங்கே விகீர்ய,
நிர்வேத க்லாநி சிந்தா ப்ரப்ருதி பரவசா நந்தரா தாந வேந்த்ராந்
ந்ருத்யந் நாநா லயாட்யம் நட இவ தநுதாம் சர்ம சக்ர ப்ரதிர் வ:”.–36-

நடன அரங்கில் நாட்டியமாடும் நாட்டியக்காரனைப் போன்றது சக்ர நேமி.
நாட்டியமாடுகிறவன் நடன அரங்கில் புகும் போது பல வண்ணங்களைக் கொண்ட திரையைத் தள்ளிவிட்டு புஷ்பாஞ்சலி செய்வான்.
சக்ர நேமியும் ஆகாசத்தில் புகும் போது வான வில்லால் பல நிறங்களோடு காட்சியளிக்கும் மேக மண்டலத்தை நீக்கிக் கொண்டு
நக்ஷத்திரக் கூட்டங்களை வாரி இறைக்கும்.
நாட்டியக்காரன் நாட்டியமாடும்போது அபிநயத்தினால் சபையில் சிலருக்கு துக்கம், சிலருக்கு முகவாட்டம்,
சிலருக்கு விசாரம் முதலியவற்றை ஏற்படுத்துவான்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களிடையே துக்கம் வாட்டம் விசாரம் முதலியவற்றை ஏற்படுத்திக் கொண்டு
பலவகை லயங்களோடு கூத்தாடுகிறது.அப்படிப்பட்ட சுதர்சன நேமியானது உங்களுக்கு சுகத்தை உண்டு பண்ணட்டும்.
___________________________________________

ஸூதர்சன நேமியை மேகமாலையாக உருவகித்துக் கூறும் சுலோகம் இது.

தௌர்கத்யப்ரௌடதாப ப்ரதிபட விபவா வித்ததாராஸ் ஸ்ருஜந்தீ
கர்ஜந்தீ சீத்க்ரியாபிர் ஜ்வலதநல சிகோத்தாமஸெள தாம நீகா,
அவ்யாத் க்ரவ்யாத்வதூடீ நயந ஜலபரைர் திக்ஷú நவ்யாநநாவ்யாந்
புஷ்யந்தீ ஸிந்துபூராந் ரதசரணபதேர் நேமிகா தம் பிநீவ:”--37-

மேகமாலை தாங்கமுடியாத தாபத்தையும் மழையையும் கொடுக்கும்.
ஏழ்மையினால் ஏற்படும் அளவற்ற துக்கத்தைப் போக்கடிக்கும் வகையில் ஸூதர்சன நேமி செல்வ மழையைக் கொடுக்கும்.
மேகங்கள் இடி இடித்துக் கொண்டுக் கிளம்பும்.
பளபளப்பான மின்னல்களைக் கொண்டிருக்கும்.சக்ர நேமியும் கர்ஜித்துக் கொண்டு கிளர்ந்து எழும்; அக்னி ஜ்வாலை மின்னும்.
மேகங்கள் மழை பொழிந்து நதிகளில் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
சக்ரநேமியும் அசுர ராக்ஷஸ பத்னிகளின் கண்களில் கண்ணீர் பிரவாஹத்தை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன நேமியானது உங்களை காப்பாற்றட்டும்.

___________________________________________

ஸூதர்சன நேமியை யாகம் செய்யும் யஜமானனாக உருவகப்படுத்துகிறது இந்த ஸ்லோகம்.

“ஸந்தோஹம் தாந வாநாம அஜஸமஜமிவாஸ் லப்ய ஜாஜ்வல்ய மாநே
வந்ஹாவந்ஹாய ஜுஹ்வத் த்ரிதச பரிஷதே ஸ்வ ஸ்வபாக ப்ரதாயீ,
ஸ்தோத்ரைர் ப்ரஹ்மாதி கீதைர் முகர பரிஸரம் ச்லாக்க்யசஸ்த் ப்ரயோகம்
ப்ராப்தஸ் ஸங்க்ராம ஸத்ரம் ப்ரதிரஸுர ரிபோ: ப்ரார்த்திதம் ப்ரஸ்நுதாம் வ:”.–38-

யஜமானன் ‘பசூந் ஆலபேத’ என்கிற விதிக்குச் சேர ஆடுகளை வெட்டி யாகாக்னியில் ஆஹூதிகளைச் செய்கிறான்.
ஸூதர்சன நேமியானது அசுர வர்கங்களை வெட்டி வீழ்த்தி யுத்தாக்னியில் இடுகிறது.
பிரம்மா,உத்காதா முதலானவர்கள் உச்சரிக்கும் ஸ்தோத்திரம் ஒலிகள் நிறைந்த இடம் யாக பூமி;
பிரம்மா முதலான தேவர்களால் துதிக்கப்படும் ஸ்தோத்திர ஒலிகள் நிறைந்தது யுத்த பூமி.
சாஸ்த்ர ரூபமான மந்த்ர வாக்யமும் சஸ்த்ர ரூபமான வேத வாக்கியமும் கேட்கப்படும் இடம் யாகபூமி.
கத்தி முதலான சஸ்திரகளின் சப்தங்கள் கேட்கும் இடம் யுத்தபூமி.
இவ்வாறு அசுர ராக்ஷஸர்களை வீழ்துவதும் , தேவ சமூஹம் விரும்புவடைக் கொடுக்கின்றதுமான
திருவாழியின் நேமியானது உங்களுடைய அபேக்ஷித்தைப் பெருக்கட்டும்.

___________________________________________

இனி முதல் 50 வது ஸ்லோகம் வரை அர வர்ணனம்.

அரம் என்பது திருவாழியாழ்வானின் பாகங்களில் ஒன்று.
குடைகளில் கம்பி போல சக்கரத்தில் விளங்கும் பாகம்.
அரங்களை வர்ணித்தாலும் அது திருவாழி யாழ்வானையே துதித்ததாக ஆகும்.

உத்பாதாலாத கல்பாந் யஸுர பரிஷதா மாஹவ ப்ரார்த்தி நீநாம்
அத்வாந த்வாவபோத க்ஷபண சண தம: க்ஷேபதீபோமாநி
த்ரைலோக்யாகார பாரோத்வஹந ஸஹமணி ஸ்தம்ப ஸம்பத் ஸகாநி
த்ராயந் நாமந்தி மாயாம் விபதி ஸபதி வோஸ்ராணி ஸெளதர்சநாநி”.–39-

உத்பாதம் திடீர் என்று தோன்றும் அசூப நிமித்தங்கள்
யுத்தத்தை விரும்புகிற அசுர கூட்டங்களுக்கு ஏற்படப் போகும் விநாசத்தை முன் கூட்டியே தோற்றுவிக்கும் ஆகாசக்
கொள்ளிக் கட்டை போன்றவைகளாயும்
நல்ல வழி தீய வழிகளை தெரிந்து கொள்வதைக் கெடுக்கும் இருளை நீக்குவதில் தீவட்டிகள் போன்றவைகளாயும்,
மூவுலகமாகிற மாளிகையின் சுமைகளைத் தாங்கும் ரத்ன ஸ்தம்பம் போன்றவைகளாயும் இருக்கிற
திருவாழி யாழ்வானின் அரங்கள் உங்களைக் கடைசி கால ஆபத்திலிருந்து காப்பாற்றட்டும்.

___________________________________________

கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் சக்ர அரங்கள் -கநக லதைகளாக உருவகம் இதில் –

ஜ்வாலாஜால ப்ரவாள ஸ்தபகித சிரஸோ நாபி மாவால யந்த்ய:
ஸிக்தா ரக்தம்பு பூரைச் சகலித வபுஷாம் சாத்ரவா நீகிநீநாம்,
சக்ரா க்ரீட ப்ரரூடா புஜக சய புஜோ பக்ந நிச்ந ப்ரசாரா:
புஷ்யந்த்ய: கீர்த்தி புஷ்பாண்யர கநக லதா: ப்ரீ தயே வ: ப்ரதந்தாம்”.--40-

திருவாழியாகிறத் தோட்டத்தில் முளைத்தவை யாகிற நாபி என்னும் அவயவத்தைப் பாத்திகளாகக் கொன்டு,
சத்ரு சேனைகளின் ரத்தமாகிற ஜலத்தினால் நனைக்கப்பட்டு ,
அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளின் புஜத்தையே தான் வளர்வதற்குக் கொழு கொம்பாக நாடிச் செல்வதுமாயும் ,
ஜ்வாலைகளாகிற கொழுந்துகளைக் கொத்தாக கொண்டும் விளங்கும் அரங்களாகிற பொற்கொடிகள்
உங்களுடைய ப்ரீதி அதிகமாவதற்காக வளர்ந்து வ்ருத்தி அடையட்டும்.

___________________________________________

சக்கரத்தின் அரங்களும் ஆதிசேஷன் படங்களும் ஒன்று.

“ஜ்வாலா ஜாலாப்தி முத்ரம் க்ஷிதிவலய மிவா விபிப்ரரதீ நேமி சக்ரம்
நாகேந்த்ரஸ்யேவ நாபே; பண பரிஷதிவ ப்ரௌடாத்ந ப்ரகாசா,
தத்தாம் வோ திவ்ய ஹேதேர் மதிமரவிததி: க்க்யாத ஸாஹஸ்ர ஸங்க்க்யா
ஸங்க்க்யாவத் ஸங்க்க சித்தஸ் ஸ்ரவண ஹர குணஸ் யந்தி ஸந்தர்ப்ப கர்ப்பாம்”.–41-

ஆதிசேஷனின் பணங்கள் பூ மண்டலத்தைத் தாங்கி கொண்டிருக்கும்.
அரங்களும் சக்கரத்தின் நேமியைத் தாங்கி நிற்கும்.
பூமண்டலம் சமுத்திரத்தின் திரத்தினால் சூழப்பட்டு இருக்கும்.
நேமியும் ஜ்வாலையால் சூழப்பட்டிருக்கும்.
சுருண்டிருக்கும் பாம்பின் உடம்பிலிருந்து பல படங்கள் பரவி பரந்து இருக்கும்.
ஸூதர்சன நாபியிலிருந்து பல அரங்கள் பணைந்திருக்கும்.
பாம்பு பணங்களில் ரத்தினங்கள் இருக்குமாதலால் ரத்தின ப்ரகாசமாக இருக்கும்.
அரங்களும் ரத்தின ப்ரகாசங்கள் நிறைந்தவையாக இருக்கும்.

இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு பண்டிதர்களின் நெஞ்சையும் காதுகளையும் கவரக் கூடிய சொற்களைச்
சொல்லும்படியான வாக் விலாஸங்களைப் பெருக்கும் புத்தியை அளிகட்டும்.

___________________________________________

ப்ரம்ஹேசோப க்ரமாணாம் பஹுவித விமத க்ஷோத ஸம்மோதி தாநாம்
ஸேவாயை தேவதாநாம் தநுஜ குலரிபோ: பிண்டிகாத் யங்க பாஜாம்,
தத்தத் தாமாந்த ஸீமா விபஜந விதயே மாநத கண்டாயமாநா
பூமாநம் பூயஸா வோ திசது தசசதீ பாஸ்வராணா மராணாம்”.--42-

தங்கள் தங்களுடைய சத்ருக்களைத் திருவாழி வாழ்வான் பங்கப்படுத்தி அழித்து அருளினர் என்கிற காரணத்தினால்
நன்றி தெரிவிக்கும் வகையில் அத்திருவாழி யாழ்வானை எப்போதும் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு சேவிப்பதற்காக
பிரம்மா சிவன் இந்திரன் முதலிய தேவர்கள் சக்கரத்தின் நாபி முதலிய அவயவங்களை வந்து அடைந்திருக்கிறார்கள்.
அவரவர்களுக்கு உரிய இடங்களை உலகத்தை அளந்து கொடுக்கும் அளவு கோல்களோ என்னும்படி இருக்கும்
அரங்கள் உங்களுக்கு அதிசயமான வியக்கத்தக்க பெருமையை அளிக்கட்டும்.
(சக்கரத்தாழ்வாரின் நாபி முதலான அவயவங்களில் பிரம்மேசாதி தேவர்களை ஆவாஹனம் பண்ணி
இருப்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறது.)

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் ஒரு சமுத்திரமாக ரூபிக்கப்படுகிறார்.

“ஜ்வாலா கல்லோல மாலா நிபிட பரிஸராம் நேமி வேலாம் ததாநே
பூர்வேணா க்ராந்த மத்த்யே புவந மய ஹவிர் போஜிநா பூருஷேண,
ப்ரஸ்ப் பூர்ஜத் ப்ராஜ்ய ரத்நே ரதபத ஜலதா வேதமாநை: ஸ்புலிங்கை:
பத்ரம் வோ வித்ருமாணாம் ச்ரயமர விததிர் விஸ்த்ருணாநா விதத்தாம்”.–43-

சமுத்திரம் அலைகள் மோதுகின்ற கரையை உடையதாக இருக்கும்.
ஸ்ரீ ஸூதர்சனாழவான் ஜ்வாலைகளாகிற அலைகள் மோதும் நேமியாகிற கரையை உடையவர்.
ஜல ரூபமான ஹவிஸ்ஸைப் புஜிகின்ற பூர்வ புருஷனை தன் நடுவில் கொண்டிருக்கும் சமுத்ரம் ,
உலகங்களை எல்லாம் புஜிக்கும் ஸூதர்சன புருஷன் வீற்றிருக்கும் மத்திய ப்ரதேசத்தைக் கொண்டிருக்கும் சக்கரம்.
கடலின் பவழங்கள் இருக்கும்.
பவழம் போன்ற தீப் நொறிகளை யுடைய அரங்களைக் கொண்டிருக்கும் திருவாழி.அரங்களே பவழ ஜ்வாலையை ஒத்திருக்கும்.
கடலில் ரதனங்கள் இருக்கும். திருவாழியிலும் ரத்னங்களே அமைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு க்ஷேமத்தை அளிகட்டும்.

வைஸ்வாரன அக்னியே -கடலில் வடவாக்னியாக ஜாலமாகிற ஹவிஸ்ஸைப்
புஜிக்கும் பரமாத்மா -ப்ரஹ்ம ஸூதரம் சொல்லுமே

___________________________________________

ஸூதர்சன நாபியும் தாமரையும் ஒன்று.-

நா ஸீரஸ் வைர பக்ந ப்ரதிபட ருதிரா ஸார தாரா வஸேகாந்
ஏகாந்த ஸ்மேர பத்ம ப்ரகர ஸஹ சரச் சாயயா ப்ராப்ய நாப்யா,
முக்தாநீ வாங்குராணி ஸ்புரத நல சிகா தர்சித ப்ராக் ப்ரவாளா நி
அவ்யாகாதேந பவ்யம் ப்ரதது பவதாம் திவ்ய ஹேதேரராணி.–44-

தாமரையிலிருந்து அங்குரங்கள் தோன்றும்;
அது போல் நாபியிலிருந்து வெளியில் தோன்றும் அரங்கள் காட்சியளிக்கின்றன.
நாபியே தாமரைப்பூ.
தண்ணீர் பாய்ச்சப் பெற்று தண்ணீரில் நனைந்த விதையிலிருந்தே முளைகள் தோன்றும்.
போர் களத்தில் அழிக்கப்ட்ட அசுர ராக்ஷஸர்களின் ரத்த தாரைகளையே தண்ணீராகப் பெற்று
அரங்களாகிய அங்குரங்கள் தோற்றுவிக்கப் பட்டனவாம்.
அங்குரங்கள் தோன்றும் போது நுனியில் சிவந்த தளிர்களைக் கொண்டிருக்கும்.
இங்கும் ஆரங்களின் அக்னி ஜ்வாலைகள் தளிர்கள் போல் சிவந்திருக்கின்றன.
நன்றாக மலர்ந்த தாமரைகளின் சோபைகளைக் கொண்டது ஸூதர்சன நாபீ கமலம்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அரங்கள் உங்களுக்கு இடையூறு இன்றி க்ஷேமத்தை அளிக்கட்டும்.

___________________________________________

தாவோல்கா மண்டலீவ த்ரும கண கஹநே பாட பஸ்யேவ வஹ்நே
ஜ்வாலா வ்ருத்திர் மஹாப்தௌ பரவயஸி தமஸி ப்ராதரர்க்க ப்ரபேவ.
சக்ரே யா தாநவாநாம் ஹய கரடிகடா ஸங்கடே ஜாகடீதி
ப்ராஜ்யம் ஸா வ: ப்ரதேயாத் பதமர பரிஷத் பத்மநாபா யுதஸ்ய”.–45-

காட்டுத் தீ பற்றி யெரிந்து மரங்கள் அடர்ந்த காட்டை அழிப்பது போலவும்,
கடலில் படபாக்னி ஜ்வலித்து மிகுதியான தண்ணீரை உட்கொள்வது போலவும்,
ஸூரியன் உதயமாகிப் பேரிருளை அழிப்பது போலவும்,
திருவாழியாழ்வானின் அரச சமூஹம், யானைக் கூட்டம் குதிரைக் கூட்டங்கள் நிறைந்த
அசுர மண்டலத்தில் புகுந்து அசுரர்களை அழிக்கின்றது.
அப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுக்கட்டும்.

___________________________________________

திருவாழியே குடை.-

தாபாத் தைத்ய ப்ரதாபாத பஸமுசிதாத் த்ராயமாணம் த்ரிலோகீம்
லோலைர் ஜ்வாலா கலாபை; ப்ரகடய தபிதச் சீந பட்டாஞ் சலாநி,
ச்சத்ராகாரம் சலாகா இவ கநக க்ருதாச் ஸெளரிதோர் தண்டலக்நம்
பூயாஸுர் பூஷ யந்த்யோ ரத சரண மர ஸ்ப்பூர்த்தய; கீர்தயே வ”.–46-

வெய்யிலிலிருந்து குடை நம்மைக் காப்பாற்றுகிறது.ஆதலால் குடைக்கு ஆதபத்ரம் என்று பெயர்.
திருவாழி, அசுர ராக்ஷஸர்களின் ப்ரதாபமாகிற தாபத்திலே அகப்பட்டுக் கொண்டு வருந்துகிற உலகங்களைக் காப்பாற்றுகிறது.
குடையில் குடைக் கம்பிகள் இருக்கும்.
அதுபோல சக்கரத்திலும் பொற் கம்பிகள் போன்ற அரங்கள் இருக்கும்.
குடையில் சீனப்பட்டு ஜாலர்கள் தொங்க விடப்பட்டு இருக்கும்.
சக்கரத்தைச் சுற்றி ஜ்வாலைகள் சுழன்று கொண்டிருக்கும். அவை ஜாலர்களாக இருக்கும்.
ஒரு காம்பில் குடை மாட்டப்பட்டு இருக்கும்.
சக்கரமும் பகவானின் திருக் கையாகிற மணிக் காம்பில் மாட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அரங்கள் உங்களுக்குக் கீர்த்தியை (புகழை) உண்டு பண்ணட்டும்.

___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அரங்கள், யானை கட்டும் கம்பங்களைப் போன்றவை.

நாபீ சாலா நிகாதாம் நஹந ஸமுசிதாம் வைரிலக்ஷ்மீ வசாநாம்
ஸம்யத் வாரீ ஹ்ருதாநாம் ஸமநுவிதததீ காஞ்ச நாலாந பங்க்திம்.
ராஜ்யா ச ப்ராஜ்யத் தைத்ய வ்ரஜ விஜய மஹோத்தம் பிதாநாம் புஜாநாம்
துல்யா சக்ராரமாலா துலயது பவதாம் தூலவச் சத்ரு லோகம்”.–47-

ஒரு பெரிய சாலையில் யானைகளைக் கட்டுவதற்கென்று பல கட்டுத் தறிகள் நாட்டப் பட்டிருக்கும்.
அது போல் சக்ர நாபியாகிற சாலையில் பல அரங்கள் இருக்கின்றன.
போர்களமே யானைப் படுகுழி. அதில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்ட யானைகள் அசுர ராக்ஷஸர்கள்.
அவர்களுடைய சம்பத்துக்களே யானைப் பேடைகள்.
அவற்றைக் கட்டும் ஆலாநபங்க்தியே ஸ்வர்ணமயமான அரங்கள்.
பகைவர்களை வெல்லும் காலத்தில் கைகளை உயரே தூக்கி ஆராவாரம் செய்வதுண்டு.
அசுர வர்கங்களை வெல்லும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்ய உயரே தூக்கிய புஜ பங்க்திகள் போல் இருக்கின்றன அரங்கள்.
இப்படிப்பட்ட சக்கரத்தாழ்வாரின் அரங்கள் உங்களுடைய சத்ரு வர்க்கத்தை பஞ்சு போல் பறக்கடிக்கட்டும்.

___________________________________________

பூமியைச் சுற்றி இருக்கும் மலை
உள்ளும் புறமும் இரண்டும் இடைவெளி இன்றி உள்ளதால் லோகாலோகம் எனப்படும்
சக்ரவாளம் லோகாலோக பர்வதம் -ஸூர்ய கிரணங்கள் பிரவேசிக்காத பாகம் உண்டே அங்கு
நேமி சக்ரத்தைச் சுற்றி இருப்பதால் லோகாலோகம் -சக்ரவாளமாக ரூபிக்கப்படுகிறது –

ஆநேமச் சக்ரவாலாத் த்விஷ இவ விததா: பிண்டிகாசண்டதீப்தே:
தீப்தா தீபா இவாஸ்ராத் கஹநரணதமீகாஹீந: பூருஷஸ்ய,
சரணே ரேகாயிதாநாம் ரதசரணமயே சத்ருசௌண்டீர்யஹேம்நாம்
ரேகா: ப்ரத்யக்ரலக்நா இவ புவநமரச்ரேணய: ப்ரீணயந்து”.–48-

நேமியாகிற லோக பர்வதம் வரை பரவி இருக்கும் நாபியாகிற ஸூரிய கிரணங்கள் போன்றவயையும்,
போர்களத்தில் நள்ளிரவில் புகும் ஸூதர்சன புருஷன் அருகில் விளங்கும் தீவட்டிகள் போன்றவையும் ,
சக்கரமாகிற உரைகல்லில் உரைக்கப்பட்ட சத்ரு பராக்ரமமாகிற ஸ்வர்ணத்தின் ரேகைகள் போன்றவையுமான
ஸ்ரீஸூதர்சன அரங்கள் உலகை மகிழ்வுடன் வாழ வைக்கட்டும்.

___________________________________________

திருவாழியைத் தாமரையாக ரூபிக்கிறார்.

தீப்தைரர்சி : ப்ரரோஹைர் தலவதி வித்ருதே பாஹு நாளேந விஷ்ணோ:
உத்யத் ப்ரத்யோத நாபம் ப்ரதயதி புருஷம் கர்ணிகா வர்ணிகாயாம்,
சூடாலம் வேத மௌளிம் கலயதி கமலே சக்ரநாம் நோபலக்ஷ்யே
லக்ஷ்மீம் ஸ்ப்பாரா மராணி ப்ரதி விததது வ: கேஸர ஸ்ரீகராணி”.–49-

தாமரை பல இதழ்களைக் கொண்டிருக்கும்.
திருவாழியின் வர்த்துலாகாரமான ஜ்வாலையின் ஸமூஹமே இதழ்கள்.
தாமரை மலர் நாளத்தின் நுனியில் இருக்கும்.
திருவாழியும் எம்பெருமானின் திருக் கைகளாகிற நாளத்தினால் தரிக்கப்பட்டு இருக்கிறது.
தாமரையின் நடுவில் கர்ணிகை (மகரந்தம் அடங்கிய பாகம்) என்று ஒன்று இருக்கும்.
சக்கரமாகிய கமலத்தின் நடுவில் மிகவும் ப்ரகாசமுடைய ஸூதர்சன புருஷன் இருக்கிறார்.
தாமரை சிரோ பூஷணமாக இருந்து அலங்கரிக்கும்.
திருவாழியும் வேத சிரஸ்ஸான உபநிஷத்தை அலங்கரிக்கின்றார்.
கமலத்தின் செந்நிறமான தாதுக்கள் உள்ளன.
திருவாழிக் கமலத்தில் அரங்கள் கேஸரங்களாக இருக்கின்றன.
அந்த அரங்கள் உங்களுக்கு லக்ஷ்மீ கடாக்ஷத்தை அளிகட்டும்.

மஹா உபநிஷத் சதபதம் போன்ற வேதாந்த பாகங்களில்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானின் மகிமைகள் பேசப்படும் –

___________________________________________

சக்கரமே மலை –
நேமியும் நாபியும் அதன் தாழ்வரை –
சிவந்த மலை அருவிகளே அரங்கள்

தாதுஸ் யந்தைர மந்தை: கலுஷித வபுஷோ நிர்ஜ் ஜராம்ப: ப்ரபாதாந்
அர்சிஷ் மத்யா ஸ்வ மூர்த்யா ரத சரண கிரேர் நேமி நாபீ தடஸ்ய,
வ்யாகுர்வாணார பங்க்திர் விதரது விபுதா லிஸ்த்ருதிம் வித்த கோடீ
கோடீ ரச்சத்ர பீடிகடக கரிகடா சாமர ஸ்ரக்விணீம் வ:”.–50-

நேமியும் நாபியுமாகிற தாழ்வரையைக் கொண்ட சக்ரமாகிற பர்வதத்திலிருந்து ,
கைரிகாதி தாதுப் பொருள்களால் கலங்கி மேலிருந்து கீழே விழும் மலை யருவி வீழ்ச்சிகளைப் போன்ற
ஒளி மிக்க அரங்கள் உங்களுக்கு தன ராசிகளையும் ,
கீரிடம் தோள்வளை மாலை முதலியவற்றை அணிந்து கொண்டு,
திவ்ய சிம்மாசனத்தின் மேல் ஒற்றைக் குடையின் நிழலில் இருபுறமும் சாமரம் வீசப் பெற்று அமரும் பாக்யத்தையும்
பல்லாயிரம் யானைகளைக் கட்டிக் காப்பாற்றி வாழும் வைபவத்தையும் விளைவிக்கட்டும்.

___________________________________________

4- நாபி வர்ணனம்
இது முதல் அறுபத்தொன்றாம் சுலோகம் முடிய நாபி வர்ணனம்.
சுதர்சனாழ்வானின் அவயவங்களில் ஒன்று நாபி.
அவயவங்களுக்கு தனித்தனியாகப் பெருமையைச் சொன்னாலும் அது சுதர்சனாழ்வானுக்கே சொன்னதாக ஆகும்.

ஜக்யேந் த்வாத சாநா மசிசிர மஹஸாம் தர்சயந்தீ ப்ரவ்ருத்திம்
தத்த ஸ்வர்லோக லக்ஷ்ம்யாஸ் திலக இவ முகே பத்ம ராகத்ரவேண,
தேயாத் தைதேய தர்பக்ஷித கரண ரண ப்ரீணிதாம் போஜநாபி:
நாபிர் நாபித்வ முர்வ்யாஸ் ஸுரபதி விபவ ஸ்பர்கிஸெள தர்சநீ வ:“.–51-

திருவாழியாழ்வானின் நாபி த்வாதச ஆதித்யர்களும் ஒன்று சேர்ந்து சக்ர நாபியாக ஆயிற்றே
என்று சொல்லும்படி ப்ரகாசமாக இருக்கிறது.
ஸ்வர்க லோக சாம்ராஜ்ய லக்ஷ்மியின் முகத்தில் பத்மராக மணியின் திரவத்தால் இடப்பட்ட திலகம் போன்று இருக்கிறது.
அசுரர்களின் கொழுப்பை அடக்கவல்ல போர் முறையினால் எம்பெருமானை மகிழ்விப்பதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நாபியானது செல்வச் சிறப்பு மிக்க இந்திரனுடைய ஆட்சிக்கு சமமான அரசாட்சியை உங்களுக்கு அளிக்கட்டும்.

___________________________________________

ஸூதர்சன நாபியை படபாக்னியாக ரூபகம் செய்கிறார்.

சஸ்த்ர ஸ்யாமே சதாங்க க்ஷிதிருப்தி தரளை ருத்தரங்கே துரங்கை:
த்வங்கந் மாதங்க நக்ரே குபிதபட முகச்சாய முக்த ப்ரவாளே:
அஸ்தோகம் ப்ரஸ்துவாநா ப்ரதிபட ஜலதௌ பாடவம் பாடபஸ்ய
ஸ்ரேயோ வஸ் ஸம்விதத் தாம் ஸ்ரித துரித ஹரா ஸ்ரீதராஸ் த்ரஸ்ய நாபி:”–52-

சமுத்திரம் கறுத்து இருக்கும்.
சத்ரு சைன்யமாகிற கடலும் சஸ்திரங்களால் கறுத்திருக்கும்.
மைநாகம் முதலிய மலைகளைக் கொண்டது சமுத்திரம் .
மலை போன்ற தேர்களைக் கொண்டது சத்ரு சைன்யம்.
கடலில் பெரிய பெரிய அலைகள் தாவி வரும்.
சத்ரு சைன்யத்தில் பெரிய பெரிய வெண் குதிரைகள் தாவி வரும்.
கடலில் மிகப் பெரியதாக கறுத்த முதலைகள் இருக்கும்.
சத்ரு சைன்யத்திலும் போர் வீரர்களின் முகங்கள் சீறிச் சிவந்து காணப்படுகின்றன.
இப்பட்டிப்பட்ட சத்ரு சைன்யக் கடலில் இருந்து கொண்டு சைன்யத்தையே விழுங்கும் படபாக்னி போன்ற
சக்ர நாபியானது உங்களுக்கு மங்களத்தை உண்டு பண்ணட்டும்.

___________________________________________

ஜ்வாலா சூடால காலநல சலந ஸமாடம்பரா ஸமாம்பராயம்
யாஸாவாஸாத்ய மாத்யத் ஸுரஸு பட புஜாஸ்போட கோலாஹலாட்யம்,
தைத்யாரண்யம் தஹந்தீ விரசயதி யசோபூதி சுப்ராம் தரித்ரீம்
ஸா வச் சக்ரஸ்ய நக்ரஸ்யத ம்ருதித ஜகத் த்ராயிணீ நாபிரவ்யாத்”.–53-

தேவாசூரர்கள் போர் செய்யும் போர் களத்தில் புகுந்து, காலாக்னி போல் ஜ்வாலைகளினால்
அசுர ராக்ஷஸ சைன்யமாகிற பெருங்காட்டைக் கொளுத்தி சத்ருசைன்யத்தை அழித்ததால் ஏற்பட்ட புகழாகிற
சாம்பலை பூமி முழுவதும் பரப்பி வெளுப்பாக ஆக்கிய சக்ர நாபியானது,
முதலை வாயில் அகப்பட்டுத் துடித்த கஜேந்திராழ்வானை ரக்ஷித்தது போல் உங்களை ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

சக்ர நாபி ராத்ரியாக வர்ணிக்கப்படுகிறது.

விந்தந்தீ ஸாந்த்ய மர்சிர் விதலித வபுஷ: ப்ரத்யநீகஸ்ய ரக்தை:
ஸ்பாயந் நக்ஷத்ர ராசிர் திசிதிசி கணச கீகஸை: கீர்யமாணை:
நாகௌக: பக்ஷ்மலாக்ஷீ நவமத ஹஸித ச்சாயாயா சந்த்ர பாதாந்
ராதாங்கீ விஸ்த்ருணாநா ரசயது குசலம் பிண்டி காயாமிநீ வ:”.–54-

ராத்திரியானது சாயங்காலத்தில் சந்தியா வேளையின் சிவந்த ஒளியைப் பெற்று சிவந்திருக்கும்.
சக்ர நாபியானது ராக்ஷஸர்களின் உடல்களைச் சிதைத்து அவற்றிலிருந்து தோன்றிய
ரக்தங்களால் நனைக்கப்பட்டு சிவந்திருக்கும்.
ராத்திரியானது நக்ஷத்திர கூட்டங்களால் வியாபிக்கப்பட்டு இருக்கும்.
சக்கர நாபியானது சத்ருக்களின் எலும்புகளைப் பொடியாக்கி எங்கும் இறைத்து இருப்பதால்
நக்ஷத்திரங்களால் நிரப்பப்பட்டது போல் இருக்கும்.
ராத்திரியானது சந்திரனின் ஒளியைப் பெற்றிருக்கும்.
சக்ர நாபியும் தேவதாஸ்த்ரீகள் சிரிப்பொளியால் நிலவு ஒளி வீசுவது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுக்கு க்ஷேமத்தை பண்ணட்டும்.

___________________________________________

சக்ர நாபியானது சக்ர ஜ்வாலையாகிற நதியில் ஏற்பட்ட சுழிபோல் இருக்கிறது.

நிஸ் ஸீமம் நிஸ் ஸ்ருதாயா: புஜதரணி தராகாடாத: கைடபாரே
ஆசாகூலங்க ஷர்த்ரே ஹதபல மஹாம் போதி மாஸாதயந்த்யா:
சக்ர ஜ்வாலா பகாயாச் சலதர லஹரீ மாவிகா தந்துராயா:
பிப்ரத்யா வர்தபாவம் ப்ரமயது புவநே பிண்டிகா வ: ப்ரசஸ்திம்”.–55-

பெரிய ஆறுகள் எல்லாம் மலைகளிலிருந்தே தோன்றி வெளிவரும்;பெருகும்.
எம்பெருமானின் மலை போன்ற புஜத்திலிருந்தே சக்ரஜ்வாலையாகிற நதி வெளிவருகிறது.
மஹாநதிகள் கரை புரண்டு ஓடும். ஜ்வாலா நதியும் திசைகளை மறைத்துக் கொண்டு பரவியுள்ளது.
நதிகள் கடலில் போய் சேரும்.சக்ர ஜ்வாலையும் தேவாசூர சைன்யமாகிற பெருங்கடலில் கலந்திருக்கும்.
நதிகள் அலைகளைக் கொண்டிருக்கும். சக்ரஜ்வாலா நதியும் பல ஆரங்களாகிற அலைகளைக் கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட சக்ர நாபியானது உலகமெங்கும் உங்கள் புகழைப் பரப்பட்டும்

———————–

ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.

பாணௌ க்ருத வாஹ வாக்ரே ப்ரதிபட விஜயோ பார்ஜிதாம் வீரலக்ஷ்மீம்
ஆநீதா யாஸ்த தோஸ்யா: ஸ்வ ஸலித மஸுரத்வேஷிணா பூருஷேண,
ப்ராஸாதம் வாஸ ஹேதோர் விரசித மருணை ரச்மிபிஸ் ஸூசயந்தி
நாபீர்வோ நிர்மிமீதாம் ரதசரண பதேர் நிர்வ்ருதிம் நிர்விகாதாம்”.–56

சத்ருக்களை வென்று சம்பாதித்து கொள்ளப்பட்ட வீரலக்ஷ்மியைப் போர்களத்தில் பாணி க்ரஹனம்
செய்து கொண்டு அழைத்து வந்து அவள் சுகமாஎ வாழ்வதற்காக
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன புருஷனால் சிவந்த கிரணங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மாட மாளிகைகள் போன்ற
ஸூதர்சன நாபியானது, ஒரு மாட மாளிகையாக வருணிக்கப்படுகிறது.
தர்சன நாபியானது உங்களுக்கு இடையூறு இல்லாத சுகத்தை உண்டு பண்ணட்டும்.

———–

டிண்டீரா பாண்டு கண்டை ரரியுவதி முகை: பிண்டிகா க்ருஷ்ணஹேதே:
உச்சண்டாச்ரு ப்ரவர்ஷை ருபரததிலகை: உக்த சௌண்டீர்ய சர்யா,
த்வித்ர க்ராமாதி பத்ய த்ருஹிண மதமஷீ தூஷிதாக்ஷ க்ஷமாப்ருத்
ஸேவாஹேவா கபாகம் சமயது பவ தாம் கர்ம சர்மப்ர தீபம்.–57-

பர்த்தாக்களின் விரஹத்தினால் வெளுத்திருக்கிற சத்ரு ஸ்த்ரீகளின் கன்னங்களும்
அவர்களும் எப்போதும் அழுது கொண்டே இருப்பதும்,
நெற்றியில் மங்களகரமான திலகம் இல்லாததுமான நிலைகள் சக்ர நாபியின் மிடுக்கை அறுதி இடுகின்றன.
இரண்டு மூன்று கிராமங்களுக்கு அதிபதியாக இருப்பதைக் கொண்டே, தங்களை பிரம்மாவாக நினைத்துக் கொண்டும் ,
அஹங்கார மமகாரங்களால் இந்திரியங்கள் கெட்டு இருக்கும் அரசர்களுக்கு அடிமைப் பட்டிருக்க வேண்டும் என்ற
துர்புத்தியைத் தோற்றுவிக்கும் துஷ்கர்மாவை சக்ர நாபியானது போக்கி அருளட்டும்.

___________________________________________

பர்யாப்தா முந்நதிம் யா ப்ரதயதி கமலம் யா திரோபாவ்ய பாதி
ஸ்ரஷ்டுஸ் ஸ்ருஷ்டேர் தவீய: குவலய மஹிதம் யா பிபர்தி ஸ்வரூபம்,
பூம்நா ஸ்வேநாந்தரிக்ஷம் கபலயதி ச யா ஸா விசித்ரா விதத்தாம்
தைதேயாராதிநாபிர் த்ரவிண பதிபத த்வேஷிணீம் ஸம்ப தம் வ:”–58-

பரிபூர்ணமான உயர்வை விளக்கி பிரகாசப்படுத்தி கொண்டிருப்பதும் ,
தாமரைப் பூவையும் திரஸ்கரித்து விளங்குவதும் பூமண்டலத்திலுள்ளவர்களாலும் பூஜிக்கப்படும்
ஸ்வரூபத்தை உடையதும் தன் பெருமையினால் அந்தரிக்ஷ லோகத்தையும் வெல்வதுமாகிற
விசித்திரமான ஸூதர்சன நாபியானது உங்களுக்கு குபேர செல்வத்தினும் மேலான செல்வத்தை அளிக்கட்டும்.
___________________________________________

பிரம்மா விஷ்ணு ருத்ரர்களாகிற த்ரீமூர்த்திகளின் பத்னி சாதர்ம்யம்
சக்ர நாபிக்கு உண்டு என்று இதில் கூறப்படுகிறது

வாணி வாங்கைச் சதுர்பிஸ் ஸதஸி ஸுமநஸாம் த்யோதமாந ஸ்வரூபா
பாஹ்வந்தஸ்த்தா முராரே பிமத மகிலம் ஸ்ரீரிவ ஸ்பர்சயந்தீ,
துர்கேவோக்ரா க்ருதிர் யா த்ரிபுவந ஜநந ஸ்தேம ஸம்ஹார துர்யா
மர்யாதா லங்கநம் வ: க்ஷபயது மஹதீ ஹேதி வர்யஸ்ய நாபி:”--59-

வாக்தேவதையான சரஸ்வதியானவள் பண்டிதர்கள் நிரம்பி ஸதஸ்ஸில்
பரா பச்யன்தீ மத்யமா வைகரீ என்ற நான்கு அவயவங்களோடு கூடினவளாய் விளங்குவாள்.
சக்ர நாபியும் ஜ்வாலா நேமி அரம் அக்ஷம் என்கிற சக்ர அவயவங்களோடு கூடினதாய் தேவ ஸதஸ்ஸில் விளங்கும்.
மஹாலட்சுமி யானவள் பகவானின் திருமார்பில் அகலகில்லேன் இறையும் என்று இருந்து கொண்டு
எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பாள்.
சக்ர நாபியானது பகவானின் கை நுனியில் இருந்து கொண்டு வேண்டியதெல்லாம் தரும்.
பார்வதி போல் உக்ரமான ரூபத்தோடு இருந்து கொண்டு அசுர ராக்ஷஸர்களின்
சம்ஹார காரியத்தைக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட சக்ர நாபியானது உங்களுடைய ஸ்வாதந்திரிய அபிமானத்தைப் போக்கி
சேஷ்வத மர்யாதையை வளர்க்கட்டும்.
___________________________________________

ஸ்ரக்பிஸ் ஸந்தான ஜாபிர் மதுர மது ரஸ ஸ்யந்த சந்தோஹி நீபிஸ்
பாடீரை ப்ரவ்ட சந்த்ரா தப சய ஸூஷ மாலோ பநைர் லேப நைச்ச
தூபை காலா கரூணாமபி ஸூர ஸூத்ருஸோ விஸ்ர மர்ச்சா ஸூ யஸ்யா
கந்தம் ருந்தந்தி சா வ சிரம ஸூ ரபிதோ நபி ரவ்யதா பவ்யாத் –60-

தேவதா ஸ்தீரிகள் திருவாராதனங்களில் தேன் மணம் வீசும் கற்பக மலர் மாலைகளாலும்
பாரிஜாத புஷ்பங்களாலும் நிலாவின் ஒளியையும் வெல்லும் சந்தனப் பூச்சுக்களாலும்
காரகில் தூபங்களாலும் ஆராதிப்பதால்
அசுர ராக்ஷஸ சரீரங்களின் மாம்ச சம்பந்தத்தினால் ஏற்பட்ட துர்கந்தங்கள் நீங்கிப் பரிமளம் வீசும்
சக்ர நாபியானது நெடுநாட்கள் வரை உங்களை அசுபத்திலிருந்து ரக்ஷிக்கட்டும்.

___________________________________________

அம்ஹஸ் ஸம்ஹத்யா தக்த்வா ப்ரதிஜநி ஜநிதம் ப்ரௌட ஸம்ஸார வந்யா
தூராத் வந்யாந தந்யாந் மஹதி விநதிபிர் தாமநி ஸ்தாபயந்தீ,
விச்ராந்திம் சாச்வதீம் யா நயதி ரமயதாம் சக்ர ராஜஸ்ய நாபி:
ஸம்யந்மோ முஹ்யமாந த்ரி தச ரிபுதசா ஸாக்ஷணீ ஸாக்ஷிணீ வ:”–61-

சம்சாரமாகிற மருகாந்தாரத்தில் காதம் பலவும் திரிந்து உழன்று வருந்தினவர்களின் பல ஜன்மங்களில்
செய்து ஒன்று சேர்ந்த பாவங்களைக் கொளுத்திவிட்டு,
பாபமில்லாதவர்கள் அடையும் இடமாகிய பரமபதத்திற்கு அழைத்து சென்று, அவர்களை நிலை நிறுத்தி
முடிவில்லாத பேரின்பத்தை அளிக்கின்ற சக்ர நாபியானது அநிஷ்டத்தை நீக்குவதிலும் இஷ்டத்தைக் கொடுப்பதிலும்
வல்லமை பொருந்திய சக்ர நாபியானது உங்கள் கண்களை மகிழ்விக்கட்டும்.
___________________________________________

அஷ வர்ணனம் –

ஸ்ருத்வா யந்நாம சப்தம் ச்ருதி பத கடுகம் தேவ ந க்ரீட நேஷு
ஸ்வர்வைரி ஸ்வைரவத்யோ பய விவசதிய: காதரந்யஸ்தசாரா:
மந்தாக்ஷம் யாந்த்யமந்தம் ப்ரதி யுவதி முகைர் தர்சிதோத் ப்ராஸதர்பை:
அக்ஷம் ஸெளதர்சநம் தத் க்ஷபயது பவதா மேதமாநம் தநாயாம்”.–62-

சக்கரத்தின் நடுவில் குறி போன்று ஓரிடம் உள்ளது.இது ஸூதர்சன அவயவங்களில் ஒன்று,
இதற்கு அக்ஷம் என்று பெயர். சொக்காட்தம் என்ற விளையாட்டிற்கும் அக்ஷம் என்று பெயர்.
அக்ஷம் என்ற பெயரைக் கேட்டாலே அசுரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் நடுக்கம்.
ஒரு சமயம் அசுர ஸ்தீரிகள் தேவ மாதர்களோடு சொக்காட்டம் விளையாடினார்கள்.
அப்போது தேவ மாதர்களில் ஒருத்தி எதிர் பாராத விதமாய் அக்ஷம் என்று சொன்னாள்.
ஸூதர்சனத்தால் தாங்கள் விதவைகளாக ஆனபடியால் அக்ஷம் என்ற சொல்லைக் கேட்டவுடனே
ஸூதர்சனாழ்வானின் பெயர் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி விட்டது என்று அஞ்சி நடுங்கி ஆட்டக்காய்களை வீசி எறிந்தார்கள்.
இவர்களுக்கு அஸ்தாநஞ பயசங்கை ஏற்படுவதைக் கண்ட தேவமாதர்கள் சிரிக்க, இவர்கள் வெட்கிதலை குனிந்தார்கள்.
இப்படிப்பட்ட சக்ராக்ஷமானது உங்களுக்கு மேன் மேலும் ஏற்படும் பொருளாசையைத் தடுக்கட்டும்.
___________________________________________

ஸ்ரீ ஸூதர்சனத்தின் அக்ஷத்தை வானத்தில் முழங்கும் இடியாக உருவகம் செய்கிறார்.

வ்யஸ்த ஸ்கந்தம் விசீர்ண ப்ரஸவ பரிகரம் ப்ரத்த பத்ரோப மர்தம்
ஸம்யத் வர்ஷாஸு தர்ஷா துர கக பரிஷத் பீ தரக்தோ தகாஸு
அக்ஷம் ரக்ஷஸ் தரூணாமச நிவத்சநை: ஆபதந் மூர்த்நி மூர்த்நி
ஸ்தா தஸ்த்ரா தீசி துர்வ : ஸ்பதகித யசஸோ த்வேஷிணாம் ப்லோஷணாய”.–63-

மழைக் காலங்களில் இடியானது வானத்திலிருந்து மரங்களின் மீது விழுந்து மரக் கிளைகளை முறிக்கும்.
சுதர்சனாக்ஷம் போர்க் காலங்களில் அசுர ராக்ஷஸர்களின் மீது விழுந்து அவர்களுடைய தோள் பட்டைகளை முறிக்கும்.
இடியானது புஷ்பங்களைச் சிதற அடித்துக் கொண்டு விழும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் பிரஜைகளையும் பரிஜனங்களையும் சிதற அடிக்கும்.
இடியானது மரங்களில் இருக்கும் இலைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
அக்ஷமும் அசுர ராக்ஷஸர்களின் ரதகஜ துரக பதாதிகளாகிற சேனைகளுக்கு நாசத்தை உண்டு பண்ணும்.
மழை காலத்தில் நீர்நிலைகளில் சேரும் தண்ணீர் சிவந்திருக்கும்.
தாஹத்தோடு திரியும் பக்ஷிகள் அந்தத் தண்ணீரைப் பருகும்.
அது போல் போர் களங்களில் ஏற்படும் ரக்த தாரைகளை தேவ சமூஹம் பாணங்கள் பருகுவது போல் இருகின்றன.
இப்படிப்பட்ட மகா யசஸ்வியான சக்ராக்ஷமானது உங்களுடைய சத்ருக்களை அழித்து
உங்களுக்கு ஸம்ருத்தியான கீர்த்தியை உண்டாக்கட்டும்.

___________________________________________

திருவாழியாழ்வானை யுத்தமாகிற யக்ஞத்தில் தீக்ஷிதனாகவும்,
சக்ர நாபியை யாக வேதியாகவும்
சக்ர நேமியை சக்ர நேமியை தர்வியாகவும்,
அசுரகுலத்தை ஹவிஸாகவும் ,
அக்ஷத்தை ஹோம குண்டமாகவும் இதில் கூறுகிறார்.

தீக்ஷாம் ஸங்க்ராம ஸத்ரே மஹதி க்ருதவதோ தீப்திபிஸ் ஹம்ஹதாபி:
ஜிஹ்வாலே ஸப்த ஜிஹ்வே தநுஜகுல ஹவிர் ஜுஹ்வதோ நேமி ஜுஹவா,
வைகுண்டாஸ்ரஸ்ய குண்டம் மஹதிவ விலஸத் பிண்டிகா வேதி மத்யே
திச்யாத் திவ்யர்த்திதேச்யம் பதமிஹ பவதா மக்ஷதோந்மேஷ மக்ஷம்”.–64-

மஹாஸத்ரம் என்னும் யாகத்தில் பெரிய யக்ஞத்தில் தீக்ஷிதன் அக்னியில் ஹவிஸ்ஸை இடுவான்.
அது போல் திருவாழி யாழ்வானும் தன்னிடத்தில் உள்ள அக்னியில் அசுர ராக்ஷஸர்களாகிற ஹவிஸ்ஹை இடுகிறார்.
ஹோம ஸாதன பாத்ரங்களில் ஒன்று ஜுஹூ என்பது
அது ஹோமத்திற்கு உரிய பொருள்களை அக்னியில் கொண்டு வந்து சேர்க்கும்.
சக்ர நேமியும் அசுர ராக்ஷஸர்களைத் திரட்டிப் பிடித்து குண்டலத்தில் சேர்க்கிறது.
அக்ஷமே ஹோம குண்டம், ஹோமகுண்டம் ஹோமம் முடிந்த பிறகு நேரம் செல்லச் செல்ல
ஒளி குறைந்து கரியாய் கிடக்கும்.
இங்கு சக்ராக்ஷம் எப்போதும் ஒளி குன்றாமல் இருக்கும்.
இந்த அக்ஷம் உங்களுக்கு திவ்ய பதவியை கொடுக்கட்டும்.

அக்னி
காளீ கராளீ மநோஜவா ஸூலோஹிதா ஸூதூம்ரவர்ணா ஸ்பிலிங்கிநீ விஸ்வதாஸா –
என்று அக்னிக்கு ஏழு நாக்குகள்
___________________________________________

திருவாழியின் அக்ஷமும் சிம்மமும் ஒன்றே.
அக்ஷத்தின் செயலும் ஒன்றாகவே இருக்கிறது.

துங்காத் தோர த்ரி ச்ருங்காத் தநுஜவி ஜயிந: ஸ்பஷ்ட தாநோத்யமாநாம்
சத்ருஸ்தம் பேர மாணாம் சிரஸி நிபதித: ஸ்ரஸ்த முக்தாஸ்த்தி புஞ்ஜே,
ரக்தைரப்யத மூர்த்தேர் விதலந கவிதைர் வ்யக்த வீராயிதர்த்தே:
ஹர்யக்ஷஸ்யாரி பங்கம் ஜநயது ஜகதாம் ஈடிதம் க்ரீடிதம் வ:”--65-

சிம்மம் மலை சிகரத்திலிருந்து யானைகளின் தலை மீது பாய்ந்து, அவற்றின் தலைகளிலிருந்து
முத்துக்களை உதிர்த்து ரத்தத்தில் அளைந்து தன் வீர்யத்தை காட்டும்.
அக்ஷமும் திருவாழியும் எம்பெருமானுடைய ஈரிரண்டு மால் வரைத் தோளிலிருந்து அசுர ராக்ஷஸர்களாகிற
யானைகளின் மீது பாய்ந்து, எலும்புகளைச் சிதற அடித்து ரத்தத்தில் அளைந்து தன் வீரியத்தைக் காட்டுகிறது.
எல்லா லோகங்களாலும் புகழப்படுகிற திருவாழியின் திருவிளையாடல்
உங்களுடைய சத்ருக்களுக்குத் தோல்வியை உண்டு பண்ணட்டும்.

___________________________________

உந்மீலத் பத்ம ராகம் கடகமிவ த்ருதம் பாஹுநா யந் முராரே:
தீப்தாந் ரச்மீந் ததாநம் நயநமிவ யதுத்தாரகம் விஷ்டபஸ்ய,
சக்ரேசார்கஸ்ய யத்வா பரிதிரபிததத் தைத்யஹத்யாமிவ த்ராக்
அக்ஷம் பக்ஷே பதித்வா பரிகடயது வ: தத் த்ரடிஷ்டாம் ப்ரதிஷ்டாம்”.–61-

எம்பெருமான் அணிந்து கொள்ளும் தோள் வளை பத்மராகக் கற்களால் இழைக்கப்பட்டுருக்கும்.
திருவாழி யாழ்வானின் அக்ஷம் தாமரை போல சிவந்திருக்கும். உலகுக்கு ஓர் கண்ணாக இருக்கும் .
இன்னார் இனியார் என்று இல்லாமல் பக்தர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி உஜ்ஜீவிக்கச் செய்யும்.
ஸூரியனைச் சுற்றி இருக்கும் அக்ஷம் , அசுர ராக்ஷஸர்களின் அழிவை அறிவிக்கும் பரிவேஷம் போல் இருக்கிறது.
இப்படிப்பட்ட அக்ஷமானது உங்களுக்கு நிலையான பெருமதிப்பை விரைவில் அளித்திடுக.

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் பகவானுக்கு நித்ய திவ்ய ஆபரணமாகவும்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பரிந்து காவல் புரியும் நித்ய ஸூரியாகவும்
ஆஸ்ரித ஸம் ரக்ஷகராயும் இருக்கிறார் அன்றோ –

___________________________________

இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு அடிகள் வராஹ அவதாரத்தின் சரீரத்தை கூறுகிறது.
(ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் வலிமையினால் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட்டான். தேவர்கள், மஹாரிஷிகள் ஆகியோரின் வேண்டுக்கோளை ஏற்றுத்
திருமால் வராஹாவதாரத்தை மேற்கொண்டு கடலுள் சென்று அவ்வசூரனை தேடிப் பிடித்துப் போர் செய்து
அவனை தந்தங்களினால் குத்திக் கொன்று, பாதாளத்தோடு சேர்ந்திருந்த பூமியைத் தன் கோடுகளினால்
மேலே கொண்டு வந்து ஜல தத்துவத்தின் மேல் விரித்தனன்).
ஆதி வராஹம் -வராஹ நாயனார் –
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத்துருவாய்

க்ரீடத் ப்ராக் க்ரோட தம்ஷ்ட்ராஹதி தளித ஹிரண்யாக் ஷவக்ஷ: கவாட
ப்ராதுர்ப் பூத ப்ரபூத க்ஷதஜ ஸமுதி தாரண்ய முத்ரம் ஸமுத்ரம்,
உந்மீலத் கிம்சுகாபை ருபஹஸ தமிதை: அம்சுபி: ஸம்சயக்நீம்
அக்ஷம் சக்ரஸ்ய தத்தாமக சதசமநம் தாசுஷீம் மேமுஷீம் வ:”.–67-

முருக்க மலர் போன்று தேஜஸ்ஸை உடைய கோல வராஹம் தன் கோடுகளினால் ஹிரண்யாக்ஷனை
மார்பில் குத்திய போது ரத்தம் கிளர்ந்து கடல் நீரையே செந்நிறமாக்கியது.
அந்த நிறத்தையும் தோற்கடிப்பதாக இருக்கிறது ஸூதர்சன அக்ஷத்தின் நிறம்.
அந்த அக்ஷம் உங்களது பாவ சமூகத்தையும் அழித்து சம்சயங்களைப் போக்கவல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.
___________________________________

உலகில் தேஜஸானது ஸூர்யன் சந்திரன் அக்னி என்று மூன்றும் சேர்ந்து அக்ஷமாக இருக்கிறது
என்று இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

பத்மோல்லாஸ ப்ரதம் யஜ் ஜநயதி ஜகதீ மேதமாந ப்ரபோ தாம்
யஸ்ய ச்சாயா ஸமாநா லஸதி பரிஸரே ரோஹிணீ தாரகாக்ரியா,
நாநா ஹேத் யுந்நதத்வம் பரகடயதி ச யத் ப்ராப்த க்ருஷ்ண ப்ரயாணம்
த்ரேதா பிந்நஸ்ய தாம்நஸ் ஸ்முதய இவ தத் பாது வச் சாக்ரமக்ஷம்”.–68-

ஸூரியன் தாமரையை மலர்விக்கிறது. இருளை நீக்கி பிரகாசத்தை வளர்கிறான்.
தீயோரை அழித்து நல்லோரை ரக்ஷிப்பது என்ற சங்கல்பம் கொண்ட பெரிய பிராட்டியாரின் திருவுள்ளத்தை உகப்பிக்கிறான்.
உத்க்ருஷ்டமான ஞானத்தை வளர்கிறான்.
கார்த்திகை நக்ஷத்திரங்கள் ஏழு.மற்ற அஸ்வினி முதலான நக்ஷத்திரங்கள் இருப்பத்தாறு.
ஆக மொத்தம் முப்பத்து மூன்று நக்ஷத்திரங்கள்.இவற்றுள் ரோகிணி நக்ஷத்திரத்தின் மீது சந்திரனுக்கு ப்ரேமம் அதிகம்.
ஸூதர்சன யந்திர அமைப்பில் ப்ரணவஸ்தாபனம் உண்டு என்று கூறப்படுகிறது.
இப்படி ஸ்ரேஷ்டமாய் சிவந்த ஒளியுடன் அக்ஷம் விளங்குகிறது.
பல ஜ்வாலைகளில் அக்னி ஜ்வாலையே உயர்ந்தது.புகையைப் பின்பற்றி புகை வழயே அக்னி செல்லும்.
அஸ்திரங்களில் சிறந்தது திருவாழி. க்ருஷ்ண பரமாத்மாவின் திருவுள்ளத்தைப் பின் பற்றியே இது செல்லும்.
இப்படிப்பட்ட ஸூதர்சன அக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

இந்த ஸ்லோகத்தில் பரசு ராம விருந்தாந்தம் கூறப்படுகிறது.
(ஸ்ரீமந்நாராயணனன் ஜமத்கனி மஹரிஷிக்கும் ரேணுகைக்கும் குமாரனாக அவதரித்தவர்.
இவர் பரசு எனப்படும் கோடாலிப் படையை ஆயுதமாக வைத்திருந்தார்.
தந்தையைக் கொன்ற கார்த்த வீர்யார்ஜுனன் மீது கொண்டிருந்த கோபத்தினால் அவனையும் அழித்து
இருபத்தொரு தலை முறை க்ஷத்திரிய அரசர்களையும் கொன்று, அவர்களுடைய ரத்தத்தினால் ஏற்பட்ட
குளத்தில் நீராடி அதில் பித்ரு தர்பணம் செய்ததாக வரலாறு).

சோசிர்பி: பத்மராக த்ரவஸம ஸுஷமைச் சோபமாநாவகாசம்
ப்ரத்ய க்ராசோக ராக ப்ரதிபட வபுஷா பூஷிதம் பூருஷேண
அந்த: ஸ்வச் சந்த மக்நோத்தி ப்ருகு தநயம் க்ஷத்ரியாணாம் ஹதாநாம்
ஆரப்தம் சோணி தௌகைஸ் ஸர இவ பவதோ திவ்ய ஹேத் யக்ஷமவ்யாத்.”–69-

பத்ம ராகத்வம் போல் சிவந்து பெரிய குழிபோல் இருக்கிறது சக்ராக்ஷம்,
அசோக மலர் போல் சிவந்த ஒளியை உடைய ஸூதர்சன புருஷன் அக்ஷத்தின் நடுவில் இருப்பதானது,
ரக்த தடாகத்தில் மூழ்க்கிக் கிளம்பும் பரசுராமனே என்று சொல்லும்படி இருந்தது.
அப்படிப்பட்ட சக்ராக்ஷம் உங்களை ரக்ஷிக்கட்டும்.
___________________________________

மத்தாநாமிந் த்ரியாணாம் க்ருத விஷய மஹா காநந க்ரீடநாநாம்
ஸ்ருஷ்டம் சக்ரேச்வரேண க்ரஹண திஷணயா வாரிவத் வாரணாநாம்,
கம்பீரம் யந்த்ரகர்தம் கமபி க்ருததியோ மந்வதே யத் ப்ரதேயாத்
அஸ்தூலாம் ஸம்விதம் வஸ் த்ரிஜக தபிமத ஸ்தூலலக்ஷம் தத்க்ஷம்”--70-

பெரிய காடுகளில் கொழுத்து திரியும் யானைகளை பிடிப்பதற்காக அரசர்கள் மிகவும் ஆழமான
பெரும் பள்ளத்தை வெட்டுவிப்பார்கள். இந்த யானை விழும் பள்ளத்திற்கு வாரீ என்று பெயர்.
விஷயாந்தரங்களாகிற காடுகளில் மதம் கொண்டு திரியும் ஐம்புலன்களாகிற இந்திரியங்களை
மடக்கிப் பிடிக்கும் குழியாக இருக்கிறது சக்ராக்ஷம்.
இந்தக் குழியை வெட்டினவர் திருவாழியாழ்வான்.
அப்படிப்பட்ட ஸூதர்சன சக்கரமானது உங்களுக்கு ஸூக்ஷ்ம புத்தியை அளிக்கட்டும்.

———-

ப்ராணாதீந் ஸம்நியம்ய ப்ரணி ஹித மநஸாம் யோகிநாமந் தரங்கே
துங்கம் ஸங்கோச்ய ரூபம் விரசித தஹராகாச க்ருச்ச் ராஸிகேந,
ப்ராப்தம் யத் பூருஷேண ஸ்வ மஹிம ஸத்ருசம் தாம காம ப்ரதம் வ:
பூயாத் தத் பூர்புவஸ் ஸ்வஸ்த்ரய வரிவஸிதம் புஷ்கராக்ஷா யுதாக்ஷம்”.--71-

ப்ராணன் முதலான வாயுக்களை அடக்கி மனோ திடத்துடன் இருக்கும் யோகிகளின் ஹ்ருதயத்தில்
உள்ள மிகவும் ஸூக்ஷ்மமான தஹாரகாசத்தில், தன் பெரிய வடிவைச் சுருக்கிக் கொண்டு
திருவாழியாழ்வான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு வீற்றிருக்கிறார்.
அவருக்குத் தன் பெருமைக்கு ஏற்றவாறு தாராளமாக வீற்றிருக்க அக்ஷஸ்தானம் கிடைத்தது.
அதில் திருவாழி யாழ்வான் விசாலமான திருமேனியுடன் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறார்.
மூவுலகங்களிலும் பூஜிக்கப்படுகிற செங்கண்மாலின் திவ்யாயுதத்தினுடைய மிகப் பெரிய
சக்ராக்ஷமானது உங்களுக்கு சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கட்டும்.
___________________________________

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் தோற்றமளிக்கும் ஆகாசம் போல்
சக்கரத்தின் அக்ஷம் இருக்கிறது.

வித்தாந் வீத்ரேண தாம்நா சரண நகபுவா பத்த வாஸஸ்ய மத்யே
சக்ராத் யக்ஷஸ்ய பிப்ரத் பரிஹஸித ஜபாபுஷ்ப கோசாந் ப்ரகாசாந்:
சுப்ரை ரப்ரைர தப்ரைச் சரதி தத இதோ வ்யோம விப்ராஜமாநம்
ப்ராதஸ் த்யாதி த்யரோசிஸ் ததமிவ பவத: பாது ராதாங்கமக்ஷம்”.–72-

இலையுதிர் காலத்தில் ஸூர்யோதய மையத்தில் ஆகாசத்தில் வெண்ணிறமான மேகக் கூட்டங்கள் நிறைந்திருக்கும்.
சில இடங்களில் வெண்மையான நிறமும்
சில இடங்களில் அடி வானத்தில் தோன்றும் ஸூரியனின் செஞ்சுடர் பரவி இருக்கும்.
அது போல் திருவாழியாழ்வானின் திருவடி நகங்களிலிருந்து தோன்றும் வெண்சுடர்களும்
ஜபாகுஸுமம்(செம்பருத்தி) என்ற புஷ்பம் போன்ற செஞ்சுடர்களும் எங்கும் கலந்து காணப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஆகாசம் போல் இருக்கும் திருவாழியின் அக்ஷம் உங்களைக் காப்பாற்றட்டும்.
___________________________________

ஸ்ரீ வாணீ வாங் ம்ருடாந்யோ விதததி பஜநம் சக்தயோ யஸ்ய திக்ஷú
ப்ராஹ வ்யூஹம் யதாத்யம் ப்ரதமமபி குணம் பாரதீ பாஞ்சராத்ரீ,
கோராம் சாந்தாம் ச மூர்த்திம் ப்ரதயதி புருஷ: ப்ராக் தந: ப்ரார்த்தநாபி:
பக்தாநாம் யஸ்ய மத்யே திசது ததந காமக் ஷமத்யக்ஷதாம் வ:”–73-

ஸ்ரீ ஸூதர்சன அக்ஷமானது,
வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்கள் என்று சொல்லப்படுகின்ற ப்ரதம வியூகமாகவும்
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்களுள்
ஞானம் என்கிற ப்ரதம(முதல்) குணமாக அஹிர்புத்நிய சம்ஹிதைகளிலே சொல்லப்படுகிறது.
ஸ்ரீ, வாணீ,வாக், ம்ருடாநீ ஆகிய நான்கும் வாசுதேவாதிகளான நான்கு மூர்த்திகளின் சக்திகள்.
இவை நான்கும் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டு ஸூதர்சனரின் அக்ஷத்தை ஸ்தோத்திரம் செய்கின்றன
என்று பாஞ்சராத்ர சாஸ்திரம் கூறுகிறது.
பக்தர்கள் மங்களாசாசனம் செய்வதற்காக சேவிக்கும் போது சாந்த மூர்த்தியாக ஸூதர்சனாழ்வான் சேவை சாதிக்கிறார்.
பக்தர்கள் அநிஷ்ட நிவாரணத்திற்காக பிரார்த்திக்கும் போது பயங்கர உருவத்துடன் சேவை சாதிக்கிறார்.
அப்படிப்பட்டவர் உங்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் தன்மையை அளிக்கட்டும்.
___________________________________

ரக்ஷ: பக்ஷேண ரக்ஷத் க்ஷதமமரகணம் லக்ஷ்ய வைலக்ஷ்ய மாஜௌ
லக்ஷ்மீ மக்ஷீய மாணாம் வல மதந புஜே வஜ்ர சிக்ஷாநபேக்ஷே,
நிக்ஷிப்ய க்ஷிப்ர மத்ய க்ஷயதி ஜகதி யத் தக்ஷ தாம் திவ்ய ஹேதே:
அக்ஷாமா மக்ஷமாம் தத் க்ஷபயது பவதாமக்ஷ ஜில்லக்ஷ மக்ஷம்”.--74-

போர் களத்தில் ராக்ஷஸர்களாலே தாக்கப்பட்டு வெட்கமடைந்து தலை குனிந்து நிற்கும்
தேவ கணத்தை ரக்ஷித்து நிற்கிறது ஸூதர்சன அக்ஷம்.
வஜ்ராயுதத்தைப் பிரயோகிக்கும் முறை அறிய இசையாத இந்திரனுடைய கையில் குன்றாத
விஜய லட்சுமியை கொண்டுவந்து சேர்த்து
(வஜ்ராயுதத்தினால் ஆக வேண்டிய காரியத்தை தானே நிர்வகித்து)
தன் சாமர்த்தியத்தைச் சக்ராக்ஷம் உலகுக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட ஸூதர்சனத்தின் அக்ஷத்தினால் கொடிய வியாதி போன்ற பொறாமை நீங்கட்டும்.

இந்த்ரிய கிங்கரர்கள் ஜெயித்தவர்கள் அஹிர் புத்ந்யாதிகள் என்கிறார் ஸ்வாமி தேசிகன்

___________________________________

(இது முதல் 100 ஸ்லோகம் வரை சுதர்சன புருஷ வர்ணநம்)

ஜ்யோதிச் சூடால மௌளிஸ் த்ரி நயந வதன: க்ஷோடசோத் துங்க பாஹு:
ப்ரத்யாலீடேந திஷ்டந் ப்ரணவ சச தராதார ஷட்கோண வர்தீ,
நிஸ் ஸீமேந ஸ்வதாம்நா நிகிலமபி ஜகத் க்ஷேமவந் நிர்மிமாண:
பூயாத் ஸெளதர் சநோ வ: ப்ரதிபட பருஷ: பூருஷ: பௌருஷாய”.--75-

ஜோதிர் மயமான ஊர்த்வாக்ரமான ஜடா முடியை உடையவராய்,
மூன்று கண்களைக் கொண்டவராய்,
பதினாறு திருக்கைகளைக் கொண்டவராய்,
இடத் திருவடியை நீட்டிக் கொண்டு வலத் திருவடியைக் குறுக்கி நிற்பதாகிற ப்ரத்யாலீட ஸ்திதியில் நிற்பவராய்,
ப்ரணவத்தையும் சந்திரமண்டலத்தையும் ஆதாரமாக கொண்ட ஷட் கோணத்தில் இருப்பவராய்
எல்லை யில்லாத தன் தேஜஸ்ஸால் எல்லா உலகங்களுக்கும் க்ஷேமத்தை அளிப்பவராய்,
அசுர ராக்ஷசர்களுக்கு கொடியவராகவும் இருக்கும் திருவாழியாழ்வான் உங்களுக்கு பௌருஷத்தை அளிக்கட்டும்.

முன் பக்கம் சந்த்ர மண்டலத்தையும்
அதில் ப்ரணவத்தையும்
அதன் மேல் ஷட் குணத்தையும் எழுதி
அதன் மேல் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானை ப்ரதிஷ்டானம் செய்து
ஸ்ரீ ஸூ தர்சன யந்த்ரம் அமைப்பார்கள் –

———

வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷணம் கைடபாரே:
சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ரா நக பரசு முக வ்யாபிநீ தத் விபூத்யாம்
கர்தும் யத் தத்வ போதோ ந நிசிதமதிபிர் நாரதாத்யைச்ச சக்ய:
தைவீம் வோ மாநுஷீம் ச க்ஷிபது ஸ விபதம் துஸ்தரா மஸ்த்ர ராஜ:”.–76-

பகவத் சாஸ்த்ரங்கள் திருவாழி யாழ்வானை பரவாசுதேவனுடைய சங்கல்பமாக தெரிவிக்கின்றன.
திருவாழி யாழ்வானுடைய சக்தியானது எம்பெருமானின் விபவாவதாரங்களில்
ராமாவதாரத்தில் அவனது பாணங்களிலும்
வராஹாவதரத்தில் கோரைப் பற்களிலும்
நரசிம்ம அவதாரத்தில் நகங்களிலும்
பரசுராம அவதாரத்தில் கோடாலியிலும்
மற்ற அவதாரங்களில் அந்தந்த அவதாரங்களில் மேற்கொண்ட ஆயுதங்களிலும் ஆவேசித்து இருந்தது.
வாமனாவதாரத்தில் வாமனனின் கை பவித்திரத்திலும் திருவாழியின் சக்தி ஆவேசித்து இருந்தது.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையன் -பெரியாழ்வார்
திருவாழியின் உண்மையான ஸ்வரூபத்தை நாரத மகரிஷிகளாலும் அறிந்து கொள்ள முடியாது.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் தைவாதீனமும் மனுஷ்யாதீநமுமான ஆபத்தைப் போக்கட்டும்.

___________________________________

ரூடஸ் தாரா லவாலே ருசிர தலசய: ச்யாமலைச் சஸ்த்ர ஜாலை:
ஜவாலாபிஸ் ஸப்ரவாள: ப்ரகடித குஸுமோ பத்த ஸங்கை: ஸ்புலிங்கை:,
ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ:
தத்தா முத்தோ: ப்ரகாண்ட: பலமபி லஷிதம் விஷ்ணு ஸங்கல்ப வ்ருக்ஷ:”.--77-

விரும்பிய பலன்களை கொடுக்கும் விஷ்ணு சங்கல்பமும் சக்கரத்தாழ்வாராகிற கல்ப விருக்ஷமும் ஒன்றே.
திருவடிகளை வணங்கியவற்கு இயற்கையான தன்னுடைய நிழலால் சம்சார தாபத்தைப் போக்கி
பகவத் சங்கல்பமானது விரும்பிய பலன்களைக் கொடுக்கும்.
ஓம் என்கிற ப்ரணவமாகிற பாத்தியில்
கறுத்த ஆயுத சமூகங்களாகிற இலைகளையும்
ஜ்வாலைகளாகிற தளிர்களையும்
தீப்பொறிகளாகிற புஷ்பங்களையும் கொண்டிருக்கும் திருவாழி யாழ்வானாகிற கற்பக மரம்,
தன்னை அடைந்தவர்களுக்கு நிழல் தந்து வெப்பத்தைப் போக்கி
உயர்ந்த கிளைகளாகிற திருக் கைகளால் உங்களுக்கு வேண்டிய பலன்களைக் கொடுக்கட்டும்.
___________________________________

தாம்நா மைரம் மதாநாம் நிசயமிவ சிரஸ்தாயிநாம் த்வாதசாநாம்
மார்த்தண்டாநாம் ஸமூடம் மஹ இவ பஹுலாம் ரத்ன பாஸா மிவர்த்திம்
அர்சிஸ் ஸங்காதமேகீ க்ருதமிவ சிகிநாம் பாட பாக்ரே ஸராணாம்
சங்கந்தே யஸ்ய ரூபம் ஸ பவது பவதாம் தேஜஸே சக்ர ராஜா”.–78-

நிலைத்து மிளிரும் ( அபூத உவமை )மின்னோலிகளின் திரளோ!
த்வாதச ஆதித்யர்களின் திரண்ட தேஜஸ்ஸோ!
ரத்னங்களின் ஒளி ஸ்ம்ருத்தியோ!
படபாக்னிகளைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமான அக்னிகளின் தேஜோ ராசியோ! என்று
மகான்கள் கலங்கி கூறும்படியான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான் உங்களுக்கு தேஜஸை அளிக்கட்டும்.
___________________________________

உக்ரம் பச்யா க்ஷமுத்யத் ப்ருகுடி ஸமுகுடம் குண்டலி ஸ்பஷ்ட தம்ஷ்ட்ரம்
சண்டாஸ்த்ரைர் பாஹு தண்டைர் லஸதநல ஸமக்ஷௌளம லக்ஷ்யோருகாண்டம்,
ப்ரத்யா லீடஸ்த பாதம் ப்ரதயது பவதாம் பாலந வ்யக்ரமக்ரே
சக்ரேசோ காலகாலேரித பட விகடாடோப லோபாய ரூபம்”.–79-

தீப்பொறி பறக்கும் கண்களையும், நெறித்த புருவங்களையும்,
கீரிடம், காதணிகள் முதலியவற்றையும் கோரப் பற்களையும்
கைகளில் பயங்கரமான ஆயுதங்களையும்
மெல்லிய பட்டு வஸ்திரம் அணிந்திருப்பதால் விரும்பிக் காணும் தொடைகளையும்
இடக்காலை நீட்டி வலக்காலைக் குறுக்கி நின்று ரக்ஷிப்பதில் ஊக்கமுடையதுமான ரூபத்தை யுடைய திருவாழி யாழ்வான்,
அகாலத்தில் ம்ருத்யுவினால் ஏவப்பட்ட யம படர்களுடைய கோலகலங்களை ஒழிப்பதற்குப் ப்ரகாசிப்பிக்க வேணும்.
யம படர்களை வெருட்டி ஓட்டி அருள வேணும்.
___________________________________

சக்ரம் குந்தம் க்ருபாணம் பரசுஹு தவஹா வங்குசம் தண்ட சக்தீ
சங்கம் கோ தாண்டபாசௌ ஹல முஸல கதா வஜ்ர சூலாம்ச் ச ஹேதீந்,
தோர்பிஸ் ஸவ்யாபஸவ்யைர் தததுலபல ஸ்தம்பி தாராதிதர்பை:
வ்யூஹஸ் தேஜோபிமாநீ நரக விஜயிநோ ஜரும்பதாம் ஸம்பதே வா:”.--80-

சக்ரம் முதலிய பதினாறு ஆயுதங்களையும்
ஒப்பற்ற பலத்தினால் சத்ருக்களின் கொழுப்பை அடக்கின தன்னுடைய இடக்கை வலக்கைகளால் தாங்கி நிற்பவரும்,
நரகாசுரனை அழித்த எம்பெருமானுடைய தேஜஸ் எல்லாம் தன்னுடையது என்று அபிமானிக்கும்
அவதாரமான திருவாழியாழ்வான் உங்களுடைய சம்பத்துகளுக்காக ஓங்கி விளங்கட்டும்.

(வலப்பக்கம் எட்டு கைகள் வலப்பக்கம் எட்டு கைகள்.
வலப்பக்கம் : சக்கரம் ,ஈட்டி, கத்தி,கோடாலி, சதமுகாக்கனி, மாவட்டி, தண்டு, வேல்.
இடப்பக்கம்: சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை,கதை, வஜ்ரம், சூலம்.)
___________________________________

பீதம் கேசே ரிபோரப்யஸ்ருஜி ரதபதே ஸம்ச்ரிதேப் யுத்கடாஷம்
சந்த்ராத : காரி யந்த்ரே வபுஷி ச தளநே மண்டலே ச ஸ்வராங்கம்,
ஹஸ்தே வக்த்ரே ச ஹேதி ஸ்தபகி தமஸமம் லோசநே மோசநே ச
ஸ்தாதஸ்தோகாய தாம்நே ஸுர வர பரிஷத் ஸேவிதம் தைவதம் வ:”.–81-

ஸூதர்சனம் பொன் மயமான கேசத்தை உடையது;
சத்ருக்களின் ரத்தத்தை குடித்தது.
சக்கரத்தில் கம்பீரமான அக்ஷத்தை உடையது;
பக்தர்கள் பால் தோன்றும் கடாக்ஷத்தை உடையது.(அக்ஷம் உத் கடாக்ஷம் )
யந்திரத்தில் சந்திரனைத் தாழ்த்தியது;
(ஸூதர்சன யந்திரத்தில் சந்திரனை எழுதி அதன் மேல் அன்றோ யந்த்ர ஸ்தாபனம் )
ஒளியினால் சந்திரனை வென்றது.
சத்ருக்களைக் கண்டிக்கும் போது வெற்றியை உணர்த்தும் சிம்ம நாதம்;
சந்திர மண்டலம் ப்ரணவத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும்.
ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் கை;
திருக் கண்களில் சமமில்லாத பார்வை;
தேவர்களின் தலைவர்களால் சேவிக்கப்படும் திருவாழியாகிற தெய்வம் உங்களுக்கு
அளவற்ற தேஜஸைக் கொடுக்கட்டும்.
___________________________________

திருவாழி ஆழ்வான் ஸக்ரவர்த்தீ சாம்யம்

சித்ராகாரை: ஸ்வசாரைர் மித ஸகல ஜகஜ் ஜாக ரூக ப்ரதாப:
மந்த்ரம் தந்த்ராநுரூபம் மநஸி கலயதோ மாநயந்நாத்ம குஹ்யாந்.
பஞ்சாங்கஸ் பூர்த்தி நிர்வர்திந ரிபுவிஜயோ தாம ஷண்ணாம் குணாநாம்
லக்ஷ்மீம் ராஜா நைஸ்த்தோ விதரது பவதாம் பூருஷச் சக்ரவர்த்தீ”.--82-

திருவாழி யாழ்வான் கண்டநலுண்டன ஹரணம் ஆகியவற்றைச் செய்து கொண்டு,
சஞ்சாரங்களால் எல்லா லோகங்களிலும் வியாபித்து இருப்பார்.
சக்ரவர்த்தி தன்னுடைய ஒற்றர்களை உலகமெங்கும் பரவச் செய்வான்.
அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் சொல்லியபடி சுதர்சன மந்திரத்தை மறைத்து வைத்துக் கொண்டு
தியானிப்பவர்களிடம் திருவாழி யாழ்வான் திருவுள்ளம் இரங்குவார்.
ராஜ ரகசியமான விஷயங்களை வெளியிடாமல் அந்தரங்கமாக வைத்துப் பேசும் ராஜாங்க புருஷர்களை அரசன் பஹீமானிப்பான்.
திருவாழி யாழ்வான் ஜ்வாலை நாபி நேமி அரம் அக்ஷம் என்ற ஐந்து அங்கங்களால் சத்ருக்களை வெல்வார்.
அரசனும் ஐந்து கர்மங்களை செய்து எதிரிகளை வெல்வார்.
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு இருப்பிடமானவர் திருவாழி.
சந்தி விக்ரஹ யான ஆசன த்வைநீ பாவ சம்ச்ரயங்களுக்கு இருப்பிடமானவன் அரசன்.
திருவாழி சந்த்ர மண்டல ஆசனத்திலும் அரசன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பான்.
சக்கரவர்த்தியான இத்தகைய திருவாழி உங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்.

___________________________________

(ஸ்ரீ ஸூதர்சனாழ்வாரின் பயண வேகத்தை இந்த ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார் ஸ்ரீ கூர நாராயணர்)

அக்ஷா வ்ருத்தா ப்ரமாலாந்யர விவர லுடச் சந்த்ர சண்டத்யுதீநி
ஜ்வாலா ஜாலாவ்லீட ஸ்புடதுடு படலீ பாண்டு திங்மண்டலாநி,
சக்ராந்தா க்ராந்த சக்ராசல சலித மஹீ சக்ர வாலார்த சேஷாணி
அஸ்த்ர க்ராமாக்ரீமஸ்ய ப்ரததது பவதாம் ப்ரார்த்திதம் ப்ரஸ்த்திதாநி”.–83-

ஸ்ரீ ஸூதர்சனர் வேகமாக செல்லும் போது மேகக் கூட்டங்கள் அக்ஷங்களில் சுழன்று வரும்.
ஸூரியனும் சந்திரனும் அரங்களுக்கு இடையே புரளும்.
நக்ஷத்திரக் கூட்டங்கள் ஸூதர்சன ஜ்வாலைகளால் மோதப்பட்டு திசைகளின் எல்லையில்
சிதறிப் பரவி வெளிச்சத்தை உண்டாக்கும்.
சக்ர நேமியானது சக்ரவாள பர்வதம் வரை செல்வதால் மலை நடுங்கி அதனால் பூமியும் நடுங்கி
பூமியைத் தாங்கும் அரவரசனும் (திருவனந்தாழ்வானும்) துன்பமடைவார்.
இத்தகைய திருவாழியின் சஞ்சாரமானது நீங்கள் விரும்பியவற்றை உங்களுக்குக் கொடுக்கட்டும்.
___________________________________

சூலம் த்யக்தாத்ம சீலம் ஸ்ருணி ரணுக க்ருணி: பட்டிஸ: ஸ்பஷ்டஸாத:
சக்திச் சாலீ நசக்தி: குலிசமகுசலம் குண்டதார: குடார:
தண்டச் சண்டத்வ சூந்யோ பவதி தநு தநுர் யத் புரஸ்தாத் ஸ வ: ஸ்தாத்
க்ரஸ்தாசேஷாஸ்த்ர கர்வோ ரத சரணீபதி: கர்மணே சார்மணாய”.–84-

மிகப் பிரசித்தமான ஆயுதங்கள் திருவாழியின் முன்னே இருந்தும் இல்லாதது போல் ஆயின.
சூலம் சத்ருக்களை அழிக்கும் சாமர்த்தியத்தை விட்டது.
அங்குசம் ஒளி மழுங்கிப் போயிற்று.
பட்டாக்கத்தி களைத்துப் போய்விட்டது. (பட்டிஸ:-பட்டாக்கத்தி)
சக்தி என்ற ஆயுதம் வலிமை யற்று வெட்கமடைந்து தலை குனியப் பெற்றது.
வஜ்ராயுதம் சாமர்த்யம் அற்றுப் போய் விட்டது.
கோடாலி கூர்மை மழுங்கப் பெற்றது.
தண்டாயுதம் சாதுவாகி விட்டது.
வில் இளைத்துப் போய் விட்டது.
இப்படி எல்லா அஸ்திரங்களுடைய செருக்கையும் கொள்ளை கொண்ட திருவாழி யாழ்வான்
பிரம்மானந்த சாதனமான நல்ல காரியங்களில் உங்களுக்கு முயற்சியை உண்டு பண்ணட்டும்.
___________________________________

க்ஷாண்ணா ஜாநேய ப்ருந்தம் ஷுபித ரத கணம் ஸந்த ஸாந்நாஹ்ய யூதம்
க்ஷ்வேலா ஸம்ரம்ப ஹேலா கலகல விகலத் பூர்வகீர் வாண கர்வம்,
குர்வாணஸ் ஸாம்பராயம் ரத சரணபதி: ஸ்தேயஸீம் வ: ப்ரசஸ்திம்
துக்தாம் துக்தாப்தி பாஸம் பய விவச சுநா ஸீர நாஸீர வர்தீ.--85-

சத்ருக்களால் ஏற்படும் பயத்திற்கு அஞ்சி இந்திரன் ஓடி வந்து ஸூதர்சனாழ்வானைச் சரணமடைந்தான்.
அதனால் தேவாசுர யுத்தத்தில் ஸூதர்சனாழ்வான் இந்திரனுடைய சேனைகளுக்கு சகாயமாகச் சென்று
சத்ருக்களின் ரத கஜ துரகபதாதிகள் அழியும்படியாக சிம்ம நாத லீலா கோலகலங்களைச் செய்து போர் செய்தார்.
அப்படிப்பட்ட திருவாழி யாழ்வான் பாற்கடல் போன்ற வெண்மையான புகழை மேன் மேலும் வளரச் செய்யட்டும்.

கீர்த்தியை வெண்மையாகக் கூறுவது கவி மரபு

_____________________________

த்ருஹ்யத் தோச்சாலி மாலி ப்ரஹரண ரபஸோத்தாநிதே வைநதேயே
வித்ராதி த்ராக் ப்ரயுக்த: ப்ரதந புவி பராவர் தமாநேந பர்த்ரா,
நிர்ஜ்த்ய ப்ரத்ய நீகம் நிரவதிக சரத்தாஸ்தி காச்விய ரத்த்யம்
பத்த்யம் விஸ்வஸ்ய தாச்வாந் ப்ரதயது பவதோ ஹேதிரிந்த்ராநுஜஸ்ய”.–86-

பிறர்க்குத் தீங்கு இழைக்கும் புஜ பலத்தை உடைய மாலி என்ற அரக்கனுடைய ஆயுதத்தினால்
போர்களத்தில் தாக்கப்பட்டு கருடன் ஓடிச் சென்றவளவில்,
பகவான் அக்கருடன் மேல் ஏறிக்கொண்டு போர்களத்திற்கு வந்துத் திருவாழியினால் பகைவர்களின்
ரத கஜ துரகபதாதிகளை அழித்து மாலியின் தலையை அறுத்துத் தள்ளி வென்றான்.
உத்தர ராமாயணம் 7 சர்க்கம் இத்தைச் சொல்லும்
அப்படிப்பட்ட பகவானின் திருவாழியாழ்வான் உங்களைப் புகழுடையவராக ஆக்கட்டும்.
___________________________________

நந்தி ந்யாய நந்த சூத்யே கலதி கண பதௌ வ்யாகுலே பாஹுலேயெ
சண்டே சாகித்ய குண்டே ப்ரமத பரிஷதி ப்ராப்தவத்யாம் ப்ரமாதம்,
உச்சித் யாஜௌ பலிஷ்டம் பலிஜ புஜவநம் யோத தாவாதி பிக்ஷோ:
பிக்ஷாம் தத் ப்ராண ரூபாம் ஸ பவத குசலம் க்ருஷ்ண ஹேதி: க்ஷிணோது”.–87-

மஹாபலியின் வம்சத்தில் பிறந்தவன் பாணாசுரன்.இவன் பரம சிவனிடமிருந்து வர பலங்களைப் பெற்றவன்.
ஆயிரம் கைகளையும் தன் நகரத்தைச் சுற்றி ரக்ஷகமாக இருக்கும்படி நெருப்பு மதில்களையும்
அளவற்ற செல்வத்தையும் பெற்றவன். சிவன் தன் கணங்களோடு பாணசுரனின் மாளிகையைப் பாடுகாத்து வந்தான்.
ஒரு சமயம் தன் பெண்ணாகிய உஷையின் காரணமாகக் கண்ணனின் நேரனாகிய அநிருத்தனைச் சிறையில் வைத்தான்.
இதை அறிந்த கண்னன் பாணசுரனோடு போர் செய்தான்.அப் போரில் நந்தி மகிழ்ச்சி இழந்தார்.
விநாயகர் போரிலிருந்து பின் வாங்கினார். சுப்ரமண்யர் கலங்கினார்.சண்டன் செயலற்றுப் போனான்.
ப்ரதம (முதன்மை) கணங்களெல்லாம் பயந்தோடின.
அப்போது ஸூதர்சனாழ்வான் வாணசுரனின் ஆயிரம் தோள்களை துணித்தார். உயிர் பிச்சை அளித்தார்.
அப்படிப்பட்ட திருவாழி உங்கள் தீமைகளை அழிக்கட்டும்.
___________________________________

ரக்தௌ காப்யக்த முக்தாபல லுலித லலத் வீசி வ்ருத்தௌ மஹாப்தௌ
ஸந்த்யா ஸம்பத்த தாரா ஜலதர சபலாகாச நீகாச காந்தௌ,
கம்பீராரம்ப மம்பச் சரம ஸுரகுலம் வேத விக்நம் விநிக்நந்
நிர்விக்நம் வ: ப்ரஸூதாம் வ்யபகத விபதம் ஸம்பதம் சக்ர ராஜ:”–88-

ஒரு காலத்தில் பிரம்மாவிடமிருந்து அசுரர்கள் வேதங்களைக் கவர்ந்து சென்று கடலுக்குள் ஒளிந்துக் கொண்டார்கள்.
ஸூதர்சனாழ்வான் அதனுள் புகுந்து அவர்களை கொன்றார்.
அப்போது அசுரர்களின் உடம்பிலிருந்து கிளம்பிய இரத்தத் தாரைகள் கடலில் இருக்கும் முத்துக்களோடு சேர்ந்து
முத்துக்களை செந்நிறமாக்கிக் கொண்டு அலைகளோடு சேர்ந்து வீசின.
அந்தக் காட்சி நக்ஷத்திரங்களாலும் காள மேகங்களாலும் சூழப்பட்ட சந்தியா கால ஆகாசம் போல் இருந்ததாம்.
இப்படி வேதாபஹார அசுரர்களை அழிப்பதில் கம்பீரமான முயற்சியைக் கொண்ட
திருவாழி யாழ்வான் உங்களுக்கு அபாயமற்ற செல்வத்தை இடையூறு இன்றி அளிக்கட்டும்.
___________________________________

காசீ விப்லோஷ சைத்ய க்ஷபண தரணிஜ த்வம்ஸ ஸூர்யாபிதாந
க்ராஹத் வேதாத்வ மாலி த்ருடநமுக கதா வஸ்து ஸத் கீர்தி காதா:
கீயேந்தே கிந்நரீபி: கநக கிரி குஹா கேஹிநீபீர் யதியா:
தேயாத் தைதேயவைரீ ஸ ஸகல புவந ஸ்லாகநீயாம் ஸ்ரியம் வ:”–89-

மேரு மலைக் குகைகளில் வாழும் கின்னர ஸ்தீரிகளால் காசீ தகனம் சிசுபால வதம் நகராசூர வதம்
சூர்யனை மறைத்த வரலாறு கஜேந்திரனைக் காப்பாற்ற முதலையை அழித்தல் மாலிக வதம் ஆகியவை
எந்த ஸூதர்சனாழ்வானின் வெற்றிச் சரிதங்களாகப் பாடப் படுகின்றனவோ அப்படிப்பட்ட
சக்கரத்தாழ்வார் எல்லோரும் புகழும் சம்பத்தை உங்களுக்குக் கொடுக்கட்டும்.

சீ மாலிகனவன் -பாசுரத்தில் பெரியாழ்வார் மாலிகன் வதம் அருளிச் செய்கிறார்

___________________________________

நாநா வர்ணாந் விவ்ருண்வந் விரசித புவநாநுக்ரஹாந் விக்ரஹாந் ய:
சக்ரேஷ் வஷ்டாஸு ம்ருஷ்டா ஸுர வர தருணி கண்ட்ட கஸ்தூரிகேஷு;
ஆதாரா தர்ண மாலாவதிஷு வஸதி ய: பூருஷோ வஸ் ஸ தேயாத்
வ்யத்வை ருத்தூத ஸத்த்வை: உபஹிதம பஹிர் த்வாந்த மத்வாந்த வர்தீ”.–90-

ஸ்ரீ ஸூதர்சன புருஷன் எட்டுச் சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும்
ஆறு சக்கரங்களில் வீற்றிருக்கிறார் என்றும் பல ஸந்நிவேசங்கள் சொல்லப்படுகின்றன.
முதல் சக்கரம் ப்ரணவ சக்கரம். எட்டாம் சக்கரம் மாத்ருகா சக்கரம் எனப்படும்.
இந்த எட்டு சங்கரங்களும் அசுரர்களை அழித்தமையால் அவர்களுடைய பத்னிகள் தம் கழுத்தில் அணிந்த
கஸ்தூரி அழிந்து போய் விதவையானார்கள்.
ஸாத்விகர்களின் நெஞ்சில் வகிக்கும் ஸ்ரீ ஸூதர்சனாழ்வான் உலக மக்களை அனுக்ரகிப்பதற்காக
நீலம் மஞ்சள் முதலிய நிறங்களைக் கொண்ட திருமேனியுடன் இந்த எட்டு சக்கரங்களில் எழுந்தருளியிருப்பார்.
ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் கெட்ட வழிகளில் சென்று நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட
அஞ்ஞான அந்தகாரத்தை இந்த ஸூதர்சனாழ்வான் அழிக்கட்டும்.
___________________________________

த்வாத் ரிம்சத் ஷோட ஸாஷ்ட ப்ரப்ருதி ப்ருது புஜ ஸ் பூர்த்தி பிர் மூர்த்தி பேதை
காலாத்யே சக்ர ஷட்கே பிரகடித விபவ பஞ்ச க்ருத்ய அநு ரூபம்
அர்த்தா நா மர்த்தி தாநா மஹரஹ ரகிலம் நிர் விலம்பைர்
குர்வாணோ பக்த வர்கம் குசலி நம வதா தாயு தக்ரா மணீர் வ--91-

ஷடரம் கால சக்ரம் பஞ்சாரம் ப்ருத்வீ சக்ரம் சதுரரம் அப் சக்ரம் த்ரி அரம் தேஜஸ் சக்ரம் த்வி அரம்
வாயு சக்ரம் ஏகாரம் ஆகாச சக்ரம் ஆகிய ஆறு சக்கரங்களுக்கும்
உத்பத்தி ஸ்திதி ஸம்ஹாரம் நிக்ரஹம் அனுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில் களுக்கும் ஏற்றவாறு
முப்பத்திரண்டு -பதினாறு -எட்டு -நான்கு -இரண்டு புஜங்களுடன் கூடிய திருமேனியுடன்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார் சேவை சாதித்து அருள்கிறார்
இவ்வாறு இருப்பது பக்தர்கள் விரும்பிய பலன்களை கால விளம்பம் இல்லாமல் அளித்து ரக்ஷிக்கவே
இவ்வாறு க்ஷேமத்தை அளிக்கும் திருவாழி ஆழ்வான் உங்களை ரக்ஷிக்கட்டும் –

___________________________________

கோணை ரர்ணைஸ் ஸரோஜை ரபி கபிச குணை ஷ் ஷட் பிருத் பின்ன சோபே
ஸ்ரீ வாணீ பூர் விகாபிர் தததி விலஸதஸ் சக்திபிர் கேசவாதீன்
தாரந்தே பூபுரா தவ் ரத சரண கதா சார்ங்க கட்க அங்கி தாஸே
யந்த்ரே தந்த் ரோதிதே வஸ் ஸ்புரது க்ருத பதம் லஷ்ம லஷ்மீ ஸகஸ்ய –92-

ஷட் கோணங்களும் ஷட் அக்ஷரங்களும் ஷட் பத்மங்களும் அமைந்தது ஸூ தர்சன யந்த்ரம்
யந்திரத்தின் நடுவில் இருக்கும் ஸூ தர்சன புருஷன் சிவந்த உடலும் சிவந்த வஸ்திரமும்
சிவந்த தலை மயிரும் சிவந்த கண்களும் கொண்டவராய் இருப்பர்
அந்த நிற ஒளியால் பத்மங்கள் எல்லாம் செம்பட்டை நிறமுடையதாக -கபிச குணம் இருக்கும் –
இந்த யந்திரத்தில் கேசவன் முதல் தாமோதரன் வரை யில் உள்ள பன்னிரண்டு மூர்த்திகள்

கேசவன் நாராயணன் மாதவன் –இவர்கள் வாஸூதேவ வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ஸ்ரீ சக்திகள்
கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன் -இவர்கள் ஸங்கர்ஷண வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாணீ சக்திகள்
திரிவிக்ரமன் வாமனன் ஸ்ரீ தரன் -இவர்கள் ப்ரத்யும்னன் வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று வாக் சக்திகள்
ஹ்ருஷீகேசன் பத்ம நாபன் தாமோதரன் -இவர்கள் அநிருத்த வியஷ்ட்டி பூதர்கள் –
இவர்களுக்கு மூன்று ம்ருடாநீ சக்திகள் சக்திகள்
என்ற முறையில் அமைந்து இருப்பார்கள் –

எந்திரத்தை அமைக்கும் போது முதலில் பூ புரத்தையும் முடிவில் ப்ரணவத்தையும் அமைப்பர்
யந்திரத்தின் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் சக்கரம் கதை வில் கத்தி ஆகிய நான்கு ஆயுதங்களை அமைப்பர்
இப்படிப்பட்ட யந்திரத்தில் இருக்கும் ஸூ தர்சனர் ஸ்ரீ யபதி ரூபமாக இருப்பர்
இது உங்களுக்கு ப்ரத்யக்ஷம் ஆகட்டும்

___________________________________

அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படும் மா ஹேந்திர மண்டலம்-என்ற
எந்திர அமைப்பை இந்த ஸ்லோகம் கூறுகிறது –

தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே கபட கிடிதநோ கைடபாரே ரதஸ்தாத்
ஊர்த்வம் ஹாஸேந வித்தே நரஹரி வபுஷா மண்டலே வாஸ வீயே
ப்ராக் ப்ரத்யக் சாந்த்ய சாந்த்ரச் சவி பர பரிதே வ்யோம் நி வித்யோத மாந
தைதேயோத் பாத ஸம்ஸீ ரவிரிவ ரஹயத் வஸ்த்ர ராஜோ ருஜம் வ –-93-

யந்த்ரத்தின் கீழ் பாகத்தில் வராஹ நாயனாரையும்
மேல் பாகத்தில் நரஸிம்ஹ மூர்த்தியையும் தியானிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது
கீழே வராஹத்தின் தந்த காந்தியும்
மேல் இருந்து நரஸிம்ஹனுடைய சிரிப்பு ஒளியும் கலந்து யந்த்ரம் கடார வர்ணம் பெற்று இருக்கும்
கிழக்கு மேற்கு ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கும்
வராஹத்தின் தந்த காந்தி இயற்கையிலே வெளுத்ததாயினும் ஹிரண்யாக்ஷனைக் கொல்லும் போது
அவனுடைய உடலில் தோன்றிய ரத்தத்தின் ஒளியினால் சிவந்ததாயிற்று
நரஸிம்ஹனின் சிரிப்பு ஒளியும் ஹிரண்யன் ரத்த ஒளியால் சிவந்ததாயிற்று
இவை இரண்டும் சந்த்யா காலம் போல் தோற்றம் அளித்தது
இதன் நடுவில் இருக்கும் திருவாழி ஆழ்வான் அசுரர் குலம் அழிய ஆகாசத்தில் தோன்றும்
உத்பாத ஸூர்யன் போல் தோன்றுவார் –
இப்படிப்பட்ட ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் -உங்களுடைய ரோகத்தை -வியாதியை -நீக்கட்டும்
கடார வர்ணம் -கபில வர்ணம் –

___________________________________

கோணே க்வாபி ஸ்திதோபி த்ரி புவன விததச் சந்த்ர தாமாபி ரூஷ
ருக்மச்சாயோபி க்ருஷ்ணா க்ருதி ரநல மயோ ப்யாச்ரித த்ராண காரீ
தாரா ஸாரோபி தீப்தோ தினகர ருசி ரோப் யுல்லஸத் தாரக ஸ்ரீ
சக்ரே சச் சித்ர பூமா விதாது விமத த்ரா ஸனம் ஸாஸனம் வா —94-

திருவாழி ஆழ்வான் எந்திரத்தின் ஏக தேசத்தில் எழுந்து அருளி இருந்தாலும் மூன்று லோகங்களையும் வியாபித்தவராயும் இருக்கிறார்
சந்தோஷத்தை அளிப்பவராயினும் தீஷ்ண ஸ்வ பாவத்தை யுடையவராயும்
சந்திரனை இருப்பிடமாகக் கொண்டு இருந்தாலும் சத்ருக்களுக்கு பயத்தை அளிப்பவராயும்
பொன் நிறம் கொண்டவராயினும் பகவானைப் போலே நீல நிறம் உடையவராயும்
அக்னி மயமாக இருந்தாலும் ஆஸ்ரித ரக்ஷகராயும்
குளிர்ந்த மழையைக் கொடுப்பவராயினும் ஜ்வலித்துக் கொண்டு இருப்பவராயும்
ஸூர்யன் போலே பிரகாசிப்பவராயினும் நக்ஷத்ர சோபையை உடையவராயும் இருக்கிறார்
இவ்வாறு விருத்த தர்மங்கள் உறைவிடமாய் இருந்து கொண்டு ஆச்சர்யமான மஹிமையை யுடையவரான
திருவாழி ஆழ்வான் உங்களுடைய ப்ரதிபஷிகளுக்கு பயத்தை உண்டு பண்ணட்டும்

___________________________________

சுக்லச் சக்ர ஸ்தவஸ்தே ஸஹ தஹந கலாம் கால தேயம் ந கால
கிம் வோ ரஷாம் ஸி ரஷா தவ பலது பதே யாத ஸாம் பாத ஸேவா
வாயோ ஹ்ருத்யோ ஸி பர்த்து ஸ்த் யஜ தநத மதம் ஸேவ்ய தாம் த்ர்யம்ப கேதி
ப்ரா ஹுர் யத் யந்த்ர பாலா ஸதனுஜ விஜயீ ஹந்து தந்த்ரா லு தாம் வ — 95-

தேவேந்த்ரனே நீ ஸ்தோத்ரம் செய்வது சுத்தமாக இருக்கிறது –
அக்னி பகவானே சிறிது நேரம் நில்
யமதர்மன் உனக்கு இது சமயம் அன்று
ராக்ஷஸர்களே உங்களுக்கு இனிமேல் ரக்ஷணம் இல்லை
எது
வருணனே நீ பண்ணிக் கொண்டு இருந்த ஸூ தர்சன கைங்கர்யம் பலித்திடுக
வாயு பகவானே நீ திருவாழி ஆழ்வானுக்கு உகப்பாக இருக்கிறாய்
குபேரனே துர் அஹங்காரத்தை விடு
வாராய் முக்கண்ணனே திருவாழியை வணங்கு
என்று எந்த ஸூ தர்சனுடைய யந்த்ர பாலகர்கள் சொல்லுகிறார்களோ
அந்தத் திருவாழி ஆழ்வான் உங்களுடைய சோம்பேறித்தனத்தை ஒழிக்கட்டும் –

___________________________________

இது ஒரு யந்த்ர அமைப்பு -அஹிர் புத்ன்ய ஸம்ஹிதையில் சொல்லப்படுகிறது –

காயத்ர்யர் ணார சக்ரே ப்ரதம மநு சக ஸ்மேரே பத்ராரவிந்தே
பிம்பம் வந்ஹேஸ் த்ரி கோணம் வஹதி ஜயி ஜயாத் யஷ்ட சக்தவ் நிஷண்ணா
சோகம் வோ அசோக மூலே பத ஸவித லஸத் பீம பீமா ஷபீ மா
பும்சோ திவயாஸ்த்ர தாமா புருஷ ஹரி மயீ மூர்த்தி ரஸ்ய த்வ பூர்வா –96-

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய -என்பது த்வாதச அக்ஷர மந்த்ரம்
யந்திரத்தில் பன்னிரண்டு தளங்கள் உள்ள பத்மம் அமைக்க வேண்டும்
நடுவில் அக்னியின் த்ரிகோண பிம்பத்தை அமைத்தல் வேண்டும்
ப்ராசீ திசையில் -ஐயை
ஆக்நேய திசையில் மோஹிநீ
யாம்ய திசையில் -விஜயை
நிருரித திசையில் -ஹலாதி நீ
மேற்கு திசையில் -அஜிதை
வாயு திசையில் மாயை -கறுப்பு நிறம்
வடக்கில் -அபராஜிதை
ஈசான்ய திசையில் -ஸித்தி
என்று அது அஷ்ட சித்திகளை உடையதாக இருக்க வேண்டும்
இருபத்து நான்கு அரங்களைக் கொண்ட சக்கரத்தில் -(காயத்ரியின் அக்ஷரங்கள் இருபத்து நான்கு )
அசோகா மரத்தடியில் -திருவாழியின் திருவடி வாரத்தில் பயத்தை உண்டு பண்ணும் இரண்டு பீமாஷர்கள் அமைய வேண்டும்
இப்படிப்பட்ட சக்கரத்தில் ஸூ தர்சன மூர்த்தியின் நரஸிம்ஹ மூர்த்தி இருப்பார்
இவர் நான்கு கைகளில் நான்கு சக்கரங்களை வைத்துக் கொண்டு யோக பட்டம் சாத்திக் கொண்டு இருப்பார்
இந்த நரஸிம்ஹ மூர்த்தியான ஸூ தர்சனர் உங்களுடைய துக்கத்தைப் போக்கட்டும்

___________________________________

பாச்சாத் யாசோக புஷ்ப ப்ரகர நிப திதைஸ் ப்ராப்த ராகம் பராகை
ஸந்த்யா ரோசிஸ் ஸ்கந்தைர் ஸ்வ பத சச தரம் ப்ரேஷ்ய தாராநு ஷக்தம்
பத்மா நா பத்த கோசா நிவ ஸூர நிவஹை ரஞ்ஜலீன் கல்ப்ய மாநான்
சக்ராதீ ஸோபி நந்தன் ப்ரதி சது ஸத்ரு ஸீம் உத்தம ஸ்லோக தாம் வ –97–

யந்திரத்தின் அமைப்பில் -எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கிற அசோகா மரத்தில் உள்ள
புஷபங்களில் இருந்து மகரந்தத் தூள் கீழே விழுகின்றன
மகரந்துக்களின் நிறம் ஸந்த்யா காலம் போல் சிவந்து இருக்கிறது –
அந்தத் தூள்களால் சிவந்து இருந்துள்ள பிரணவ ஸம்பந்தமுடைய -நக்ஷத்ரம் -சம்பந்தமுடைய –
திருவாழி ஆழ்வானின் சந்த்ர மண்டலத்தைப் பார்த்து
தேவ கணங்கள் தாமரை மொட்டு போல் அஞ்சலியை ச் செய்கின்றன –
அவற்றைக் கொண்டு திரு உள்ளம் உகக்கும் திருவாழி ஆழ்வான்
தன் கீர்த்தி போன்ற உத்தமமான கீர்த்தியை உங்களுக்கு அளிக்கட்டும்

___________________________________

ரக்தா சோகஸ்ய வேதஸ்ய ச நிஹி தபதம் ப்ராப்த சாகஸ்ய மூலே
சக்ரை ரஸ்த்ரை ஸ்த தாத்யைரபி மஹித சதுர்த் விச் சதுர் பாஹு தண்டம்
ஆஸீ நம் பாச மாநம் ஸ்தித மபி பயதஸ் த்ராய தாம் தத்வ மேகம்
பச்சாத் பூர்வத்ர பாகே ஸ்புட நர ஹரிதா மாநுஷம் ஜாநு ஷாத்வா –-98-

சக்கரத்தின் பின் பாகத்தில் சாகோப சாகமாக வளர்ந்து இருக்கிற அசோக மரத்தின் அடியிலும்
வேத மூலமான ப்ரணவத்திலும்
நான்கு திருக்கைகளிலும் சக்கரத்தைத் தரித்துக் கொண்டு
சக்கரத்தின் பிற்பகுதியில் வீற்று இருந்த திருக் கோலத்தில் இருக்கும் நரசிம்மரின் தன்மையும்
சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைக் கொண்ட திருக்கைகளுடன் முன் பக்கத்தில் நிற்கும்
மனிதத்தன்மையும் கொண்டு விளங்கப்பெற்ற ஒரு தத்வம்
உங்களை ஸம்ஸாரிக பயத்தில் இருந்து காப்பாற்றட்டும் –

___________________________________

ப்ராணே தத்த ப்ரயாணே முஷி ததிசி த்ருசி த்யக்த சாரே சரீரே
மத்யாம் வ்யாமோஹ வத்யாம் சதமஸி மனஸி வ்யாஹதே வ்யாஹ்ருதே ச
‘சக்ர அந்தர் வர்த்தி ம்ருத்யு ப்ரதி பய முபயாகார சித்திரம் பவித்ரம்
தேஜஸ் தத் திஷ்ட் டதாம் வஸ்த்ரி தச குல தனம் த்ரீ க்ஷணம் தீஷ்ண தம்ஷ்ட்ரம் –99-

உடல் இளைத்து மதி மருண்டு நெஞ்சு இருண்டு கண்களில் பார்வை மறைந்து பேச்சு தடுமாறி
உயிர் போகும் அளவில் அந்த ம்ருத்யுவுக்கும் பயத்தை அளிக்க வல்லவரும்
ஸூ தர்சன சக்கரத்தில் நடுவில் இருக்கும் மிகவும் பரிசுத்தமான-இரண்டு உருவம் கொண்ட –
ஆபத் தனமாவன -முக்கண்களை யுடைய – நரஸிம்ஹர் உங்களுக்கு சேவை சாதித்து
உங்களுடைய பயத்தை நீக்கி உங்களைக் காப்பாற்றட்டும் –

___________________________________

யஸ்மிந் விந்யஸ்ய பாரம் விஜயிநி ஜகதாம் ஜங்கம ஸ்தாவராணாம்
லஷ்மீ நாராயணாக்க்யம் மிதுன மநு பவத்யத் யுதாரான் விஹாரான்
ஆரோக்யம் பூதி மாயுஸ் க்ருதமிஹ பஹு நா யத்யதாஸ்த் தாபதம் வ
தத் தத் ஸத்யஸ் ஸமஸ்தம் திசது ச புருஷோ திவ்ய ஹேத்யக்ஷ வர்த்தீ –-100-

பெருமாளும் பிராட்டியும் ஸகல சராசரங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஜெயசீலனான
ஸூ தர்சன ஆழ்வானிடம் ஒப்படைத்து விட்டுப் போக லீலைகளிலே ஈடுபடுவார்கள்
அப்படிப்பட்ட நிர்வாஹப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை நடத்தி வரும் திருவாழி யாழ்வான்
உங்களுக்கு ஆரோக்யம் ஐஸ்வர்யம் நீண்ட ஆயூஸ்ஸூ மற்றும் நீங்கள்
அர்த்தித்த புருஷார்த்தங்களை எல்லாம் உடனே கொடுத்து அருளட்டும்
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் ஸர்வ அபீஷ்ட பல ப்ரதன் அன்றோ –
இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகம் அவன் கடாக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் –

___________________________________

பத்யா நாம் தத்வ வித்யா த்யு மணி கிரிச வீத் யங்க சங்க்யா தராணாம்
அர்ச்சிஷ்யங்கேஷு நேம்யா திஷு ச பரமத பும்ஸி ஷட் விம்ச தேச்ச
சங்கைஸ் சவ் தர்சனம் ய படதி க்ருதமிதம் கூர நாராயணே ந
ஸ்தோத்ரம் நிர் விஷ்ட போகோ பஜதி ஸ பரமாம் சக்ர ஸாயுஜ்ய லஷ்மீம் –-101-

இந்த ஸ்தோத்ரத்தில்
ஸூ தரிசன ஜ்வாலையை வருணித்துக் கூறும் 24 ஸ்லோகங்கள்
நேமியை வருணித்துக் கூறும் 14 ஸ்லோகங்கள்
அரங்களை வருணித்துக் கூறும் 12 ஸ்லோகங்கள்
நாபியை வருணித்துக் கூறும் 11 ஸ்லோகங்கள்
அஷத்தை வருணித்துக் கூறும் 13 ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஸூ தர்சன புருஷனை வருணித்துக் கூறும் 26 ஸ்லோகங்கள்
பல ஸ்ருதி ஸ்லோகம் ஓன்று
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீ ஸூ தர்சன சதகத்தை வாசிப்பவர்கள்
இந்த உலகில் ஐஹிக போகங்களை எல்லாம் பூர்ணமாக அனுபவித்துப்
பின்பு
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரோடு பரம ஸாம்யம் என்னும் அந்தமில் பேர் இன்பம் பெற்று மகிழ்வார்கள்

_____________________________________________________________________

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஸ்தல சயனத்துறைவார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ விஜய வல்லி ஸமேத ஸ்ரீ ஸூ தர்சன பர ப்ரஹ்மணே நம
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–

January 6, 2022

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன்,
புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.
அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர்.
அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

———

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

————

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் -ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி -ஸ்ரீ வேங்கடேச மங்களம் —

January 2, 2022

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி,
ஸ்வாமி ஸ்ரீ இராமானுசரின் மறு அவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆணைப்படி
ஸ்ரீ திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
ஸ்ரீ ஹஸ்தி கிரி அண்ணா -ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமியால் இயற்றப்பட்டது.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களம் (14 பாடல்கள்) ஆகிய
நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே “ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்” ஆகும்.

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

இத்த2ம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

———-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–24-

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

———-

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

இத்தம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

——–

ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம்

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணிதாதுலநீலதநோ ।
கமலாயதலோசந லோகபதே
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே ॥ 1 ॥

ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²
ப்ரமுகா²கி²லதை³வதமௌளிமணே ।
ஶரணாக³தவத்ஸல ஸாரநிதே⁴
பரிபாலய மாம் வ்ருஷஶைலபதே ॥ 2 ॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹை-
ரநுவேலக்ருதைரபராத⁴ஶதை꞉ ।
ப⁴ரிதம் த்வரிதம் வ்ருஷஶைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ॥ 3 ॥

அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே-
-ர்ஜநதாபி⁴மதாதி⁴கதா³நரதாத் ।
பரதே³வதயா க³தி³தாந்நிக³மை꞉
கமலாத³யிதாந்ந பரம் கலயே ॥ 4 ॥

கலவேணுரவாவஶகோ³பவதூ⁴-
-ஶதகோடிவ்ருதாத்ஸ்மரகோடிஸமாத் ।
ப்ரதிவல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த்
வஸுதே³வஸுதாந்ந பரம் கலயே ॥ 5 ॥

அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே²
ஜக³தே³கத⁴நுர்த⁴ர தீ⁴ரமதே ।
ரகு⁴நாயக ராம ரமேஶ விபோ⁴
வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ ॥ 6 ॥

அவநீதநயா கமநீயகரம்
ரஜநீகரசாருமுகா²ம்பு³ருஹம் ।
ரஜநீசரராஜதமோமிஹிரம்
மஹநீயமஹம் ரகு⁴ராமமயே ॥ 7 ॥

ஸுமுக²ம் ஸுஹ்ருத³ம் ஸுலப⁴ம் ஸுக²த³ம்
ஸ்வநுஜம் ச ஸுகாயமமோக⁴ஶரம் ।
அபஹாய ரகூ⁴த்³வஹமந்யமஹம்
ந கத²ஞ்சந கஞ்சந ஜாது ப⁴ஜே ॥ 8 ॥

விநா வேங்கடேஶம் ந நாதோ² ந நாத²꞉
ஸதா³ வேங்கடேஶம் ஸ்மராமி ஸ்மராமி ।
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³
ப்ரியம் வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ॥ 9 ॥

அஹம் தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³ம-
-ப்ரணாமேச்ச²யா(ஆ)க³த்ய ஸேவாம் கரோமி ।
ஸக்ருத்ஸேவயா நித்யஸேவாப²லம் த்வம்
ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ ॥ 10 ॥

அஜ்ஞாநிநா மயா தோ³ஷாநஶேஷாந்விஹிதாந் ஹரே ।
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஶேஷஶைலஶிகா²மணே ॥ 11 ॥

இதி ஶ்ரீவேங்கடேஶ ஸ்தோத்ரம் ।

———-

ஸ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே–(ஸ்லோகம் 15)

தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின்
பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன்.
பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர்.
அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள் தான் சம்சாரத்திலிருந்து
நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டியருளினார்.

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இதி ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

——–

ஸ்ரீ வேங்கடேச மங்களம் :

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்தி நாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –1-

லஷ்மீ ஸ விப்ரமாலோக ஸூப்ரூ விப்ரம சஷுஷே
சஷுஷே ஸர்வ லோகாநாம் வேங்கடேசாய மங்களம் –2-

ஸ்ரீ வெங்கடாத்ரி ஸ்ருங்காக்க்ர மங்களா பரணங்கரயே
மங்களாநாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம் –3-

ஸர்வா வயவ ஸுந்தர்ய ஸம்பதா ஸர்வ சேத ஸாம்
ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம் –4-

நித்யா நிரவத்யாய ஸத்யா நந்த சிதாத்மநே
ஸர்வ அந்தராத்மநே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –5-

ஸ்வதஸ் ஸர்வ விதே ஸர்வ ஸக்தயே ஸர்வ சேஷிணே
ஸூலபாய ஸூஸீலாய வேங்கடேசாய மங்களம் –6-

பரஸ்மை ப்ரஹ்மணே பூர்ண காமாய பரமாத்மநே
ப்ரயுஜ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம் –7-

ஆகால தத்வம் ஆஸ்ராந்தம் ஆத்மநாம் அநு பஸ்யதாம்
அத்ருப் யம் ருத ரூபாய வேங்கடேசாய மங்களம் –8-

ப்ராயஸ் ஸ்வ சரணவ் பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –9-

தயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கை ரிவ ஸீதலை
அபாங்கை சிஞ்சதே விஸ்வம் வேங்கடேசாய மங்களம் –10-

ஸ்ரக் பூஷாம் பரஹேதீ நாம் ஸூ ஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்தி சமநா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –11-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே
ரமயா ரம மாணாய வேங்கடேசாய மங்களம் –12-

ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸி நே
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –13-

எல்லா மங்களங்களும் சர்வ வ்யாபகனான திருவேங்கடமுடையானிடம் மேம்படட்டும்,
அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹா லக்ஷ்மி குடி கொண்டிருப்பாள்,
மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கி யிருக்கிறான்.

மங்களா ஸாஸன பரைர் மதாசார்ய புரோகமை
ஸர்வைஸ் ச பூர்வைர் ஆச்சார்யை ஸத் க்ருதா யாஸ்து மங்களம் –14

புண்யம் ஸ்லோகம் யஜமாநாய க்ருண்வதீ –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் –ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம் –ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்–

January 1, 2022

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே!! நிராபாஸாய தீமஹி!! தந்நோ ஸ்ரீநிவாஸஹ் : ப்ரசோதயாத்!

———

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம்

ஓம் ஶ்ரீ வேஂகடேஶாய நமஃ
ஓம் ஶ்ரீநிவாஸாய நமஃ
ஓம் லக்ஷ்மிபதயே நமஃ
ஓம் அநாநுயாய நமஃ
ஓம் அம்ருதாம்ஶநே நமஃ
ஓம் மாத4வாய நமஃ
ஓம் க்ருஷ்ணாய நமஃ
ஓம் ஶ்ரீஹரயே நமஃ
ஓம் ஜ்ஞாநபஂஜராய நமஃ || 9 ||

ஓம் ஶ்ரீவத்ஸ வக்ஷஸே நமஃ
ஓம் ஜக3த்3வந்த்3யாய நமஃ
ஓம் கோ3விந்தா3ய நமஃ
ஓம் ஶாஶ்வதாய நமஃ
ஓம் ப்ரப4வே நமஃ
ஓம் ஶேஶாத்3ரிநிலாயாய நமஃ
ஓம் தே3வாய நமஃ
ஓம் கேஶவாய நமஃ
ஓம் மது4ஸூத3நாய நமஃ || 18 ||

ஓம் அம்ருதாய நமஃ
ஓம் விஷ்ணவே நமஃ
ஓம் அச்யுதாய நமஃ
ஓம் பத்3மிநீப்ரியாய நமஃ
ஓம் ஸர்வேஶாய நமஃ
ஓம் கோ3பாலாய நமஃ
ஓம் புருஷோத்தமாய நமஃ
ஓம் கோ3பீஶ்வராய நமஃ
ஓம் பரஂஜ்யோதிஷே நமஃ || 27 ||

ஓம் வ்தெகுண்ட2 பதயே நமஃ
ஓம் அவ்யயாய நமஃ
ஓம் ஸுதா4தநவே நமஃ
ஓம் யாத3 வேந்த்3ராய நமஃ
ஓம் நித்ய யௌவநரூபவதே நமஃ
ஓம் நிரஂஜநாய நமஃ
ஓம் விராபா4ஸாய நமஃ
ஓம் நித்ய த்ருப்த்தாய நமஃ
ஓம் த4ராபதயே நமஃ || 36 ||

ஓம் ஸுரபதயே நமஃ
ஓம் நிர்மலாய நமஃ
ஓம் தே3வபூஜிதாய நமஃ
ஓம் சதுர்பு4ஜாய நமஃ
ஓம் சக்ரத4ராய நமஃ
ஓம் சதுர்வேதா3த்மகாய நமஃ
ஓம் த்ரிதா4ம்நே நமஃ
ஓம் த்ரிகு3ணாஶ்ரயாய நமஃ
ஓம் நிர்விகல்பாய நமஃ || 45 ||

ஓம் நிஷ்களஂகாய நமஃ
ஓம் நிராந்தகாய நமஃ
ஓம் ஆர்தலோகாப4யப்ரதா3ய நமஃ
ஓம் நிருப்ரத3வாய நமஃ
ஓம் நிர்கு3ணாய நமஃ
ஓம் க3தா3த4ராய நமஃ
ஓம் ஶார்ஞ்ஙபாணயே நமஃ
ஓம் நந்த3கிநீ நமஃ
ஓம் ஶங்க3தா3ரகாய நமஃ || 54 ||

ஓம் அநேகமூர்தயே நமஃ
ஓம் அவ்யக்தாய நமஃ
ஓம் கடிஹஸ்தாய நமஃ
ஓம் வரப்ரதா3ய நமஃ
ஓம் அநேகாத்மநே நமஃ
ஓம் தீ3நப3ந்த4வே நமஃ
ஓம் ஜக3த்3வ்யாபிநே நமஃ
ஓம் ஆகாஶராஜவரதா3ய நமஃ
ஓம் யோகி3ஹ்ருத்பத்3ஶமந்தி3ராய நமஃ || 63 ||

ஓம் தா3மோத3ராய நமஃ
ஓம் ஜக3த்பாலாய நமஃ
ஓம் பாபக்4நாய நமஃ
ஓம் ப4க்தவத்ஸலாய நமஃ
ஓம் த்ரிவிக்ரமாய நமஃ
ஓம் ஶிம்ஶுமாராய நமஃ
ஓம் ஜடாமகுட ஶோபி4தாய நமஃ
ஓம் ஶங்க3 மத்3யோல்ல ஸந்மஂஜு கிஂகிண்யாட்4ய நமஃ
ஓம் காருண்ட3காய நமஃ || 72 ||

ஓம் நீலமோக4ஶ்யாம தநவே நமஃ
ஓம் பி3ல்வபத்த்ரார்சந ப்ரியாய நமஃ
ஓம் ஜக3த்கர்த்ரே நமஃ
ஓம் ஜக3த்ஸாக்ஷிணே நமஃ
ஓம் ஜக3த்பதயே நமஃ
ஓம் சிந்திதார்த4 ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஜிஷ்ணவே நமஃ
ஓம் தா3ஶார்ஹாய நமஃ
ஓம் த3ஶரூபவதே நமஃ || 81 ||

ஓம் தே3வகீ நந்த3நாய நமஃ
ஓம் ஶௌரயே நமஃ
ஓம் ஹயரீவாய நமஃ
ஓம் ஜநார்த4நாய நமஃ
ஓம் கந்யாஶ்ரணதாரேஜ்யாய நமஃ
ஓம் பீதாம்ப3ரத4ராய நமஃ
ஓம் அநகா4ய நமஃ
ஓம் வநமாலிநே நமஃ
ஓம் பத்3மநாபா4ய நமஃ || 90 ||

ஓம் ம்ருக3யாஸக்த மாநஸாய நமஃ
ஓம் அஶ்வரூடா4ய நமஃ
ஓம் க2ட்3க3தா4ரிணே நமஃ
ஓம் த4நார்ஜந ஸமுத்ஸுகாய நமஃ
ஓம் க4நதாரல ஸந்மத்4யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நமஃ
ஓம் ஸச்சிதாநந்த3ரூபாய நமஃ
ஓம் ஜக3ந்மங்கள3 தா3யகாய நமஃ
ஓம் யஜ்ஞபோ4க்ரே நமஃ
ஓம் சிந்மயாய நமஃ || 99 ||

ஓம் பரமேஶ்வராய நமஃ
ஓம் பரமார்த4ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஶாந்தாய நமஃ
ஓம் ஶ்ரீமதே நமஃ
ஓம் தோ3ர்த3ண்ட3 விக்ரமாய நமஃ
ஓம் பரப்3ரஹ்மணே நமஃ
ஓம் ஶ்ரீவிப4வே நமஃ
ஓம் ஜக3தீ3ஶ்வராய நமஃ
ஓம் ஆலிவேலு மங்கா3 ஸஹித வேஂகடேஶ்வராய நமஃ || 108 ||

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் ||

————–

ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

அஸ்ய ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்³ரஹ்மா ருஷி꞉
அநுஷ்டுப் ச²ந்த³꞉
ஶ்ரீ வேங்கடேஶ்வரோ தே³வதா இஷ்டார்தே² விநியோக³꞉ ।

நாராயணோ ஜக³ந்நாதோ² வாரிஜாஸநவந்தி³த꞉ ।
ஸ்வாமிபுஷ்கரிணீவாஸீ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ ॥ 1 ॥

பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
கந்த³ர்பகோடிலாவண்ய꞉ கமலாயதலோசந꞉ ॥ 2 ॥

இந்தி³ராபதிகோ³விந்த³꞉ சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
விஶ்வாத்மா விஶ்வலோகேஶோ ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉ ॥ 3 ॥

ஏதத்³த்³வாத³ஶநாமாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²நிர்முக்தோ த⁴நதா⁴ந்யஸம்ருத்³தி⁴மாந் ॥ 4 ॥

ஜநவஶ்யம் ராஜவஶ்யம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
தி³வ்யதேஜ꞉ ஸமாப்நோதி தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தி ॥ 5 ॥

க்³ரஹரோகா³தி³நாஶம் ச காமிதார்த²ப²லப்ரத³ம் ।
இஹ ஜந்மநி ஸௌக்²யம் ச விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 6 ॥

இதி ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ ஶ்ரீ வேங்கடேஶத்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।

1-நாராயணோ
2-ஜக³ந்நாதோ²
3-வாரிஜாஸநவந்தி³த꞉ ।
4-ஸ்வாமி புஷ்கரிணீ வாஸீ
5-ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ
6-க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
7-கந்த³ர்ப கோடி லாவண்ய꞉
8-கமலாயதலோசந꞉ ॥ 2 ॥
9–இந்தி³ராபதிகோ³விந்த³꞉
10-சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
11-விஶ்வாத்மா
12-விஶ்வலோகேஶோ
ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉

———————

ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்

திருமலையில் உறையும் எம்பெருமான் தன்னை நாடி வருவோருக்கு எல்லா மங்களங்களையும்
இனிதே வழங்கி ரட்சிக்கும் வரப்பிரசாதி.
ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகத்தை எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்து நலம் பெறலாம்.

இது சர்வ மங்களங்களை அருள்வதோடு, சகல துக்கங்களையும் போக்கும் வல்லமை படைத்தது.

ஸ்ரீக்ஷோண்யோ ரமணீ யுகம் ஸுரமணி புத்ரோபி வாணீ பதி:
பௌத்ரச் சந்த்ர சிரோமணி: பணிபதி: சய்யா ஸுரா: ஸேவகா:
தார்க்ஷ்யோ யஸ்யரதோ மஹச்ச பவனம் ப்ரஹ்மாண்டமாத்ய: புமான்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்ரீதேவி-பூதேவி ஆகிய இரு அழகிய மனைவியரைக் கொண்ட பெருமாளே,
சரஸ்வதியின் நாயகனான பிரம்மதேவனைப் புத்திரனாக அடைந்தவரே,
சந்திரனை தலையில் சூடிய ருத்ரனைப் பேரனாகப் பெற்றவரே,
ஆதிசேஷனே படுக்கையாக, தேவர்களே வேலைக்காரர்களாகப் பணிபுரிய,
கருடனை வாகனமாகக் கொண்டவரே,
இந்த அண்ட சராசரத்தையே வீடாகக் கொண்டிருப்பவரே,
ஆதி புருஷனே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

யத் தேஜோரவிகோடி கோடி கிராணான் திக்க்ருத்ய ஜேஜீயதே
யஸ்ய ஸ்ரீவதனாம் புஜஸ்யஸுஷமா ராகேந்து கோடீரபி:
ஸௌந்தர்யம் ச மனோ பவானபி பஹூன் காந்திச்ச காதம்பினீம்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

கோடி கோடி சூரியர்களின் பேரொளியையும் விஞ்சிய தேஜஸ் கொண்ட பெருமாளே,
கோடி கோடி சந்திரன்களின் பிரகாசத்தையும் மங்கச் செய்யும் ஒளிவீசும் திருமுகம் கொண்டவரே,
கோடி கோடி மன்மதர்களின் பேரழகையும் குன்றச் செய்யும் எழில் மிகுந்தவரே,
மேகக் கூட்டங்களையும் மீறி நிர்மலமாய் விளங்கும் பரந்த ஆகாயத்தையும் விட பிரமாண்டமானவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

நானா ரத்ன கிரீட குண்டல முகைர் பூஷா கணைர் பூஷித:
ஸ்ரீமத் கௌஸ்து பரத்ன பவ்ய ஹ்ருதய: ஸ்ரீவத்ஸ ஸல்லாஞ்சன:
வித்யுத் வர்ண ஸுவர்ண வஸ்த்ர ருசிரோ ய: சங்க சக்ராதிபி:
ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பலவித ரத்னங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடம், குண்டலம் முதலான ஆபரணங்களுடன் கம்பீரமாக
அலங்கரிக்கப்பட்டிருக்கும் பெருமாளே,
கௌஸ்துப ரத்தினம் எனப்படும் விலை மதிப்பில்லா ரத்தின ஆபரணத்தை மார்பில் அணிந்து
பேரெழில் பரமனாகக் காட்சியளிப்பவரே,
ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சத்தால் மிகைப்பட்ட அழகுடன் திகழ்பவரே,
கொடி மின்னலோ என்று வியக்க வைக்கும் வண்ணம் பிரகாசம் மிகுந்த தங்கப் பட்டாடை யில் ஜொலிப்பவரே,
சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து வீரப் பேரழகுடன் ஒளிர்பவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

யத் பாலேம் ருக்னாபி சாரு திலகோ நேத்ரேப்ஜ த்ராயதே
கஸ்தூரீ கண ஸார கேஸரமிலச் ஸ்ரீகந்த ஸாரோத்ரவை:
கந்தைர் லிப்த தனு: ஸுகந்த ஸுமனோ மாலாதரோய: ப்ரபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

கஸ்தூரி திலகத்தினை நெற்றியில் அணிந்து அதனால் பிரகாசமாகத் துலங்கும் பெருமாளே,
தாமரை இதழ்களோ கண்கள் என்று வியக்க வைக்கும் மென்மையான பார்வை கொண்டவரே,
கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த மிகுந்த நறுமணமிக்க சந்தனம் பூசப்பட்ட
சுகந்த சரீரத்தைக் கொண்டவரே,
நல்ல வாசனையுள்ள மலர் மாலைகளைத் தரித்து அம்மலர்களுக்கே பெருமை தேடித் தரும் பிரபுவே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———–

ஏதத் திவ்ய பதம்மமாஸ்திபுவி தத் ஸம்பச்யதே த்யாதராத்
பக்த்தேப்யஸ் ஸ்வ கரேண தர்சயதி யத் த்ருஷ்ட்யாதி ஸௌக்யம் கத:
ஏதத் பக்திமதாமியானபி பவாம்போதிர்ன தீதிஸ்ப்ருசன்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

பூமி மீது பதிந்திருக்கும் தங்களது திருவடிகளைப் பார்க்குமாறு, தங்களது திருக்கரத்தால் சுட்டிக் காட்டும் பெருமாளே,
அந்தத் திருவடிகளை சரணடை யும் பக்தர்களுக்கு பரம சௌக்கியத்தையும், பேரானந்தத்தையும் அருளும் பெருமாளே,
அந்த பாத சரண நிழலையே அடைக்கலமாகக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களுடைய சம்சார சாகர மானது,
முழங்காலளவில் ஓடும் ஒரு நதி போல தான் என்பதையும் இந்த சமிக்ஞை மூலம் விளக்கும் பரம்பொருளே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
ஸௌவர்ணாலய மண்டிதோ விதி முகைர் பர்ஹிர்முகை: ஸேவித:
ய: சத்ரூன் ஹனயன்னி ஜானவதி சஸ்ரீபூவராஹாத்மக:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்வாமி புஷ்கரிணி என்னும் குளக்கரையில் நிரந்தரமாக வாசம் செய்யும் பெருமாளே,
பிரம்மா முதலான தேவர்களால் சேவிக்கப்படும், தங்க மயமான அலங்காரம் கொண்ட கோயிலைக் கொண்டவரே,
சத்ருக்களை அடியோடு நாசம் செய்து, தன்னைச் சார்ந்தவர்களை எந்தத் துன்பமும் அணுகாதபடி காக்கும் பரந்தாமா,
யக்ஞவராஹ மூர்த்தியாக விளங்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————–

யோ ப்ரஹ்மாதி ஸுரான் முனீச்ச மனுஜான் ப்ரஹ்மோதஸவாயாகதான்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட மனாபபூவ பஹுசஸ்தைரர்சிதஸ் ஸம்ஸ்துத:
தேப்யோ ய: ப்ரதத த்வரான் பஹுவிதான் லக்ஷ்மீ நிவாஸோ விபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பிரம்மோற்சவத்திற்காக வந்திருக்கும் பிரம்மன் முதலான தேவர்களையும், மஹரிஷிகளையும்,
மனிதர்களையும் கண்டு மிகப் பேரானந்தம் கொள்ளும் பெருமாளே,
அவர்களது அர்ச்சனை யாலும், துதியாலும் மிகுந்த சந்தோஷம் அடையும் பெருமாளே,
அவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் அருளி
அவர்களை மகிழ்விக்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————

யோ தேவோ புவிவர்த்ததே கலியுகே வைகுண்டலோகஸ்திதோ
பக்தானாம் பரிபாலனாய ஸததம் காருண்யவாராம் நிதி:
ஸ்ரீசேஷாக்யமஹீத்ரமஸ்தகமணிர் பக்தைக சிந்தாமணி:
ஸ்ரீமத்வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இந்தக் கலியுகத்தில் பக்தர்களைக் காப்பதற்காக வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் பெருமாளே,
பக்தர்கள் அனைவருக்கும் கருணைக் கடலாகத் திகழ்பவரே,
ஸ்ரீசேஷம் என்னும் மலையின் சிகரத்தில் மணி போலப் பிரகாசிக்கும் பேரொளியே,
பக்தர்களுக்கு சிந்தாமணி போல் விளங்கும் ஒளி வழிகாட்டியே, வேங்கடாசலபதியான ஹரியே,
எனக்கு மங்களம் அருள்வீராக.

——–

சேஷாத்ரி ப்ரபு மங்களாஷ்டகமிதம் துஷ்டேன யஸ்யேசிது:
ப்ரீத்யர்த்தம் ரசிதும் சமேச சரண த்வந்த்வைகநிஷ்டாவதா
வைவாஹ்யாதி ஸுபக்ரியாஸுபடிதம் யை: ஸாதுதேஷாமபி
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இது சேஷாத்ரிநாதனுடைய மங்களாஷ்டகம்.
பகவான் ஸ்ரீநிவாஸனுடைய சரண கமலங்களை சரணடைந்து அவற்றின் மீதே மிகுந்த பற்றும்,
சந்தோஷமும் கொண்ட ஸ்ரீவாதிராஜயதியால், ஸ்ரீநிவாஸனை குதூகலப்படுத்த இயற்றப்பட்டது.

திருமணம் முதலான மங்கள விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த மங்களாஷ்டகம் படிக்கப்பட்டால்,
அதைப் படிப்பவருக்கும், கேட்பவர் அனைவருக்கும் வேங்கடாசலபதியான ஹரி,
எல்லா மங்களங் களையும் குறைவின்றி அருள்வார்.

———-

ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்

ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப3ல: |
ராமேஷ்ட: பா2ல்கு3ந-ஸக2: பிங்கா3க்ஷோsமிதவிக்ரம: ||
உத3தி4க்ரமண: சைவ ஸீதாசோக விநாஶசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

ஏவம் த்வாஶ நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோ3தே4ச நிர்ப4யோ விஜயீ பவேத்

1-ஹநுமான்
2-அஞ்ஜநா ஸூநு:
3-வாயு புத்ரோ
4-மஹாப3ல: |
5-ராமேஷ்ட:
6-பா2ல்கு3ந-ஸக2:
7-பிங்கா3க்ஷோs
8-மிதவிக்ரம: ||
9-உத3தி4க்ரமண: சைவ
10-ஸீதாசோக விநாஶசன: |
11-லக்ஷ்மண: ப்ராணததா
12-தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் –ஸ்ரீ மந்தர புஷ்பம்–

January 1, 2022

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா
ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம். (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |

ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |

ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |

அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |

ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

———————-

ஸ்ரீ மந்தர புஷ்பம்–

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ,
அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான்.
நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ
அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

எவனொருவன் நீரின் ஆதாரத்தை புரிந்து கொள்கிறானோ
அவன் பசு மற்றும் மிருகங்கள், புத்திர செல்வங்கள், மலர்கள் எல்லாவற்றையும் பெறுவான்.

————–

“ஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி”

“எவனொருவன் நீரின் மலரை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.”

இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை.
நீர் மற்றும் மலர்.

‘ஆபா’என்றால் நீர்.நீரின் குணம் இடைவிடாமல் ஒழுகிக் கொண்டிருப்பது; ஓடிக் கொண்டிருப்பது; எழும்பி எழும்பி அடங்குவது.
மழை இடை விடாமல் பெயர்தது என்கிறோம் நீர் வீழ்ச்சி நின்று நின்று வருவதில்லை. நதி ஓடிக் கொண்டே யிருக்கிறது.
கடலலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பி அடங்குகிறது.

நமது வாழ்வும் அதே போல்த் தான்.நமது அனுபவங்கள் புலன்கள் கொண்டு வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது
என்று முன்னால் கண்டோம். புலன்கள் ஒரு நொடி கூட ஓய்ந்திருப்பதில்லை.
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் அவை தகவல்களை சேகரித்துக் கொண்டேயிருக்கிறது;
மூளை அவைகளை அலசி ஆராய்ந்து உருவம் கொடுக்கிறது.

இந்த இடைவெளி யில்லாத நீரொழுக்கு தான் , நீரோட்டம் தான் நமது வாழ்க்கை.
பிறப்பிலிருந்து இறப்பு வரையும் பிறகு மறு பிறப்பும் அதன் பின் மறுபடியும் இறக்கும் வரையும் இந்த நீரோட்டம் நிலைப்பதில்லை.
எண்ண அலைகள் நம் உலகிற்கு உருக் கொடுக்கிறது. அதைத் தவிர வேறு உலகம் கிடையாது.
உலகமே நம் மனத்தில் தான் நிலை கொள்கின்றது. அதற்கென்று தனி இருப்பு கிடையாது.இது தான் உண்மை.
இந்த உண்மையை அறிதல் தான் இந்த நீரோட்டத்தில், நீர் வீழ்ச்சியில், சம்சாரக் கடலில் மலரும் மலர்.இது தான் ஞானம்.

எவனொருவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
இது தான் முதல் பாகத்தில் பொருள்.நமது முன்னோர்கள் ஞானிகள் இதைத் தான் பூடகமாக சொல்லியுள்ளார்கள்.

புத்திர பாக்கியம், செடி- கொடிகள், மலர்கள், பசு மற்றும் கால்நடை செல்வங்கள்
மனிதன் இச்சிக்கும் ஐசுவரியங்கிளுக்கு உதாரணங்கள்.
மேலே சொன்ன உண்மையை அறிந்தவன் எல்லா செல்வங்களும் பெற்றவன் பெறும்
ஆனந்தத்தை விட மேலான ஆனந்தம் கிடைத்தவனாகிறான்.

சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி

நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

நிலவின் இயற்கை தன்மை ஒளி தருவது.எது மனிதனுக்கு ஒளி தருகிறது? மனம் தான்.
மனம் புலன்கள் பெற்றுத் தரும் தகவல்களை் மூளைக்குள் ஆராய்ந்து பதிவு செய்யவில்லை என்றால் நமக்கு எந்த அறிவும் இராது.
நாம் வெறும் ஜடமாகத்தான் இருப்போம்.

ஆகவே நமக்கு ஒளி தரும் நிலவு தான் மனம்.

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் நிலவு இன்று இருந்தது போல் நாளை இராது.
ஒன்று வளர்ந்து கொண்டே யிருக்கும் அல்லது தேய்ந்து கொண்டே யிருக்கும்.
மனமும் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை.
மனம் ஒரு நிமிடம் ஆனந்தத்தில் ஆறாடும்; மறு நிமிடமே துயரங்கள் எனும் மேகக் கூட்டத்தில் மறைந்து துன்பப்படும் .
இதற்கெல்லாம் காரணம் அது கடந்து போகும் அனுபவங்கள். அது தான் உலக வாழ்க்கை.
அந்த அனுபவங்களில் பூத்த மலர் தான் மனம்.

மனம் என்பதற்கு பௌதிக உருவம் கிடையாது.
அது மூளையிலேயோ வேறு எங்கோ இருக்கிறது என்று குறிப்பிட்டு கூற முடியாது.
அது புலன்கள் கொண்டுவரும் தகவல்களை சேகரித்து வைக்கும் ஒரு கிடங்கு அவ்வளவு தான்.

உலகம் என்பது எண்ணற்ற மனிதர்களின் மனங்கள் சேகரித்து வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டு
பதிவு செய்துள்ள தகவல்கள் தான்.
ஒவ்வொருவரின் உலகமும் வேறு வேறு விதமாக இருக்கிறது.
ஆகவே மனம் என்பது ஒரு சத்தியமல்லாத ஒன்று.
அதன் கட்டளைகளை நிராகரித்து விட்டு ஆத்மா சொல்வது படி நடந்து கொண்டால்
விஷய வாசனைகள் அறவே அழிந்து தூய்மை யடைந்தவனாவான்.
அவன் பசு, புத்திரர்கள், மலர்கள் போன்ற எல்லா செல்வங்களையும் பெறுவான்.

இந்த உண்மையை புரிந்து கொண்டவன் சர்வ ஐசுவரியங்களையும் பெறுகிறான்.

——————

மந்திரம் இரண்டு

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நதி மணல் மீது ஓடும் போது ஒழுகும் பொழுது ஒரு நிறத்திலிருக்கும்;
களி மண்ணிலும் சேற்றிலும் ஓடும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும்;
பாறை மீது ஓடி வரும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும.
சில நேரங்களில் தெளிந்த நீரோடை; மற்று சில நேரங்களில் கலக்கலான நீரோட்டம்.
இவைக்கெல்லாம் ஆதாரம் அது எதன் மீது ஒழுகுகின்றதோ அந்த மண்.
அது போல் நமது அனுபவங்களுக்கும் ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அது எது?

ப்ரஹ்மம் அல்லது பரப் ப்ரஹ்மம் அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் தான் நம் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
வாசனைகளற்ற, மாசற்ற, தூய பிரம்மம் நமது வாழ்வின் ஆதாரம்.
இந்த ப்ரஹ்மம் அல்லது அவபோதம் இல்லையென்றால் நாம் எதையும் அனுபவிக்க முடியாது.
நமது புலன்களும், மனமும், புத்தியும் வேலை செய்யாது

இந்த உண்மையை அறிந்தவன் ஆத்ம சாஷாத்கார மடைந்தவனாகிறான்.
அவனிலிருந்த எல்லா விருப்பு- வெறுப்புக்களுக்கும வாசனைகளும் ஒழிந்து போய் விடுகின்றன.
அவன் ப்ரஹ்மமே ஆகிவிடுகிறான். அவன் எதாலும் பாதிக்கப்படமாட்டான். அவனுக்கு இன்ப- துன்பங்கள் கிடையாது.

ப்ரஹ்மம் நெருப்பு. அது எல்லா மாசுக்களையும், வாசனைகளையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது.
இந்த ப்ரஹ்மமெனும் நெருப்பு தான் வாழ்க்கை அல்லது உலகமெனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
இந்த உண்மையை அறிந்தவன் பரம சாந்தியை அடைகிறான்..

மந்திரம் இரண்டு (தொடர்கிறது)

அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (2)

அக்னி என்றால் எது ஒன்று இடைவிடாமல் மேல் நோக்கி போய்க் கொண்டிருக்கிறதோ அது அக்னி.
’ அக்னி’ உண்டாவது உண்மையான பரமாத்மாவைத் மறைத்து – மறந்து , புலன்கள் கொண்டு வரும் தகவல்களை் மெருகேற்றி
பரமாத்மாவின் மீது பதித்து பொய்யான ஒரு ‘நானை’ உருவாக்குகிறது.
அந்த அக்னி – ஜீவாத்மா இந்த ‘மாய நான்’ தான் ‘உண்மையான நான்’ என்று நம்ப ஆரம்பிக்கிறது.

உண்மையான ‘ நான்’ விருப்பு வெறுப்பில்லாத, ஆதியும் அந்தமும்்இல்லாத சர்வ வியாபி!
ஆனால் புலன்கள் தரும் தகவல்களை நம்பி,தன் விஷய வாசனைகளால் மாசுற்று, அஞ்ஞானத்தில் உழலுகின்றது ஜீவாத்மா!
இந்த மாய நான் ஒரு விதத்தில் பார்த்தால் அக்னியே!

இந்த அக்னி தான் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு லௌகீக பார்வைக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த அவித்யை நீங்கிவிட்டால் மாசற்ற தூய பரப் பிரம்மத்தை உணர முடியும்.
ஆகவே அக்னிக்கு ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களால் உருவான, காணப்படும் உலகம்.
அந்த நீரிற்கு ஆதாரம் இந்த அக்னி. அக்னி- தானும் எரிந்து, அனுபவங்களையும் எரித்து துன்பத்திற்காளாகிறது.

இந்த உண்மையை உணர்ந்தவன் எல்லா செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாவான்

இந்த அக்னிக்கும் ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் உளவான அனுபவங்கள்.
ஆக, அக்னிக்கும் ஆதாரம் நீரே! இப்படி ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து மாய நானை உயிருடன் வைத்துக் கொள்கிறது.
அனுபவங்கள் அழிந்தால் பொய்யான இந்த நான் அழிந்து விடும்.
இந்த பொய்யான நான் அழிந்து மெய்யான நான் உணரப்பட்டுவிட்டால் அனுபவங்கள் இராது.

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில்( ப்ரஹ்மத்தில், அனந்தாவபோதத்தில்) நிலை பெற்றவன் ஆகிறான்.

நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் ( ப்ரஹ்மத்தில்)நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

சுருக்கமாக சொல்லப் போனால் அப்படிப் பட்டவன் சத்திய சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

————-

மந்திரம் 3

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காற்றே நீரின் ஆதாரம்.
யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காற்றின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

நீரின் ஆதாரத்தை அறிந்தவன் பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.நீரின் ஆதாரம் காற்றே!
காற்று அல்லது வாயு இல்லை யென்றால் பிராணன் இல்லை.
பிராணன் இல்லை யென்றால் புலன்கள் செயல் பட மாட்டா!
புலன்கள் செயல் பட வில்லை யென்றால் மனதிற்கும் புத்திக்கும் தகவல்கள் கிடைக்காது.
அனுபவங்களும் இல்லை யென்றாகி விடும். ஆகவே லௌகீக வாழ்விற்கு, அனுபவங்கள் எனும் நீர் வீழ்ச்சிக்கு ஆதாரம் காற்றே.
இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மம் எனும் சத்தியத்தை அறிந்து அதில் நிலை கொள்ள முடியும்.

ஆத்மா அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் விருப்பு வெறுப்பில்லாதது. வாசனைகள் இல்லாதது.
அப்படிப்பட்ட ஆத்மா வெளியுலக வஸ்துக்களுடன் தொடர்பு ஏற்பட்டு புலன்கள் மூலம் தகவல்களை சேகரித்து
அனுபவங்களாக மாற்ற பிராணனின் உதவி தேவை.
ஆக பிராணன் அல்லது வாயு தான் அனுபவங்களின் ஆதாரம்.

காற்றிற்கு என்ன ஆதாரம்?

அனுபவங்களே பிராணனின் ஆதாரம். அனுபவங்கள் இல்லை யென்றால், புலன்கள் செயல் படவில்லையென்றால்
பிராணன் இருந்தும் பயனில்லை. ‘ கோமா’ நிலையிலிருப்பார்கள் பிராணனுடன் தான் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு, புலன்கள் வேலை செய்யாததால் தங்களைச் சுற்றி யுள்ள உலகம் என்ன என்ற அனுபவம் கிடையாது.
அனுபவங்கள் இருந்தால் தான் பிராணனுக்கும் பயனுண்டு. ஆகவே பிராணனுக்கு ஆதாரம் அனுபவங்கள் எனும் நீரோட்டமே! .

இந்த உண்மைகளை எவனொருவன் அறிகிறானோ அவன் ப்ரஹ்மனை அறிகிறான்.-ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான்.

————-

மந்த்ரம் 4

யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி
அஸெள வை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோமுஷ்ய தபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்
ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம்.
யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ,
அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் பிரம்மத்தை அறிந்து அதில் நிலை கொள்கிறான்.
அதாவது ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.தன்னையே அறிந்தவனாகிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

நீர் என்பது புலன்கள் சேகரித்துத் தரும் தகவல்களின் அடிப்படையில்
மனம் உருவகப்படுத்தும் உலகானுபவங்கள்தான் என்று முன்னே கண்டோம்.
அந்த உலக அனுபவங்கள் உருவாக வேண்டும் என்றால் பரமனின் அருள் இல்லாமல் முடியாது.

அந்த பரமனோ, தகிக்கிம் சூரியனாக விளங்குகிறான்.
அந்த சூரியன்- ப்ரஹ்மன் தான் நீரின் ஆதாரம் எனப் புரிந்து கொண்டவன்
அந்த ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.

பிரம்மன் உலக அனுபவங்களுக்கெல்லாம் சாட்சி மாத்திரமாக நிலை கொள்கிறான்.
சூரியனின் தாபமோ, நீரின் குளிர்மையோ பரமாத்மாவைத் பாதிப்பதில்லை.
ஆனால் அவனில்லை யென்றால் உயிரோட்டம் கிடையாது.
உலக அனுபவங்களும் கிடையாது.ஆகவே உங்களுடைய அனுபவங்களெனும் நீரிற்கும் இந்த ப்ரஹ்மன் தான் ஆதாரம்.
இதை அறிந்தவன் ப்ரஹ்மனில் நிலை கொள்கிறான்.

ஆக உலகமாகின்ற அனுபவங்கள். எனும் நீரிற்கு சூரியன் ஆதாரம். அந்த சூரியனுக்கு அந்த நீரே ஆதாரம்.
அனுபவங்கள் இல்லை யென்றால் சூரியனை எப்படி அறிவது?

————-

மந்த்ரம் 5

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யச் சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் ( ஆத்மாவில்) நிலை பெற்றவன் ஆகிறான்.
நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) )

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.நீர் என்றால் அனுபவங்கள் என்று முன்னால் கண்டோம்.
இந்த அனுபவங்களோ மனதின் செயல்பாட்டினால் உளவாகிறது.
இந்த மனம் நிலவை ஒத்ததாகவே உள்ளது என்றும் கண்டோம்.
நிலவில் அமுது கலசம் உள்ளது. அது போல் மனம் தான் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கின்றது.

நிலவு ஒளிக்கும் இருளிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது.

மனமும் இன்ப- துன்பங்களிடையே ஊஞ்சலாடுகிறது.

மனம் அல்லது நிலவு சூரியனைப் போல் ஸ்திரத் தன்மையோடு இருப்பதில்லை.
மனமும் பிரம்மனைப் போல் உறுதியாக எதாலும் பாதிக்கப் படாமல் நிலை கொள்வதில்லை.

நிலவிற்கு தனதான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பு தான் அதன் ஒளி! .
அது போல் மனதிற்கும் தனியாக இருப்பு கிடையாது.அது வெறும் ஜடமே!

மனம் பலதரப்பட்ட உணர்ச்சிகளை உணருகிறது, சாஷி மாத்திரமாயுள்ள பிரம்மனின் சைதன்யத்தால்த் தான்.

மனம் உலகப் பொருட்களை அனுபவிப்பது பரமாத்மாவின் சைதன்யத்தால்த்தான் என்றிருந்தாலும்,
அது மனம் பரமாத்மாவிலிருந்து தனியானது என்று கற்பனை செய்து பௌதிக இன்பங்களைத் தேடி ஓடுகிறது.

மனம் அனுபவிக்கின்ற எல்லா சுகங்களும் அந்த பரமாத்மாவிற்கே உரித்தானது.
ஏனென்றால் அந்த பரமாத்மாவின் ஆதாரத்தில் தான் மனம் நிலை கொள்கின்றது. ஆனால் மனம் அவித்யையினால் மயக்கமுற்று
அதே இன்ப அனுபங்களை வெளியுலக ஜடப்பொருட்களில் தேடுகிறது.

இப்படிப்பட்ட மனம் தான் எல்லா அனுபங்களுக்கும் ஆதாரம். ஆகவே நிலவு தான் நீரிற்கு ஆதாரம்.

ஆனால் எல்லா அனுபவங்களும் மனதில் மையங்கொண்டுள்ளது.மனம் உருவாவதே அனுபவங்களை சேகரிப்பதற்குத்தான்.
ஆகவே அனுபவங்களே மனதிற்கு ஆதாரம்.அனுபவங்கள் இல்லையென்றால் மனம் இல்லை.

நிலவும் நீரும் ஒன்றிற்கொன்று ஆதரவாக நிலை கொள்கின்றது. இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவன்.
அவன் அந்த பரம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் செல்வத்தின் ஐசுவரியங்களையும் அடைகிறான்

——————

மந்த்ரம் 6

யோபாமாயதனம் வேத ஆயதனாவான் பவதி॥
நக்ஷத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (6)

யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

நக்ஷத்திரம். என்றால் என்ன? எது ஒன்று மாற்றத்திற்கு ஆட்படாமல் அழிவில்லாமல் இருக்கிறதோ அது நக்ஷத்திரம்.
நக்ஷத்திரங்கள் இடம் மாறுவதில்லை–ஒரே இடத்தில் நிலை கொள்கின்றான!
அவை ப்ரஹ்மனால் – சிருஷ்டி கர்த்தாவால் நிர்ணயிக்கப் பட்ட நியதிகள்.
ப்ரஹ்மன் தான் எல்லா உயிரினங்களின் ஒட்டு மொத்தமான மனம்.

அவன் ஹிரண்ய கர்பத்தின் ஈசன்.அவன் தன் சிருஷ்டிகளின் எல்லா அனுபவங்களையும் அனுபவிப்பவன்.
ஆனால் எப்பொழுதும் சாஷி மாத்திரமாக நிலை கொள்கிறான்.எந்த அனுபவங்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
தனது சிருஷ்டி விருப்பத்தை தனது எண்ணப்படி பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதின் மூலம் திருப்திப் படுத்திக் கொள்கிறான்.
தனது சிருஷ்டிகளுக்கான சட்ட திட்டங்களை அவனே வகுத்துக் கொள்கிறான்.அப்படிப் பட்ட பிரம்மனின் எண்ணங்களே

எல்லா சிருஷ்டிகளின் அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஆகவே அனுபவங்களாகப்பட்ட நீரிற்கு பிரம்மனால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களான நட்சத்திரங்களே ஆதாரம்.
சிருஷ்டிகளோ பிரம்மனின் சிருஷ்டி வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக தோன்றியவையாகும்.
ஆகவே சிருஷ்டிகளின் அனுபவங்கள் தான் பிரம்மன் வகுத்துக் சட்டதிட்டங்களுக்கு ஆதாரம்.
நக்ஷத்திரங்களுக்கு ஆதாரம் அனுபவங்களே!
இந்த உண்மையை உணர்ந்தவன் பிரம்மனின்- தன்னில்- ஆத்மாவில் நிலைகொள்கிறான்.
அவன் ஆத்ம சாக்ஷத்காரம் அடைந்தவனாகிறான்.

————–

மந்த்ரம் 7

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வாஅபாமாயதனம் ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
மேகமே நீரின் ஆதாரம்.
யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே மேகங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரின்- அனுபவங்களின் ஆதாரத்தை எவனொருவன் அறிகிறானோ,
அவன் ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான். ப்ரஹ்மத்துடன் ஐக்கியமாகிறான்.

அனுபவங்களின்- நீரின் ஆதாரம் யாது? மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது
மழை பொழிகின்ற மேகம் தான் நீரின் ஆதாரம் என்று
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றும்.
மேகத்திலிருந்து நீர் வருகிறது என்று சொல்வதற்கு ரிஷி வரவேண்டியதில்லை.சாமானியர்களுக்கே புரியும்.

பிறகு அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

பர்ஜன்யா என்றால் நீர் நிறைந்த மேகம்.
இடி முழக்கமிடும் மேகம்.
எப்பொழுது வேண்டுமானாலும்
நீர் திவளைகளை கொட்டித் தீர்த்து விட தயாராக இருக்கின்ற மேகம்.

‘வெளிவராத வாசனைகள் ‘ எப்பொழுது வேண்டுமானாலும் ஜீவாத்மாவை பயன்படுத்தி அனுபவங்களை
சிருஷ்டிக்கத் தயாராய் இருக்கின்ற மேகம் தான் நீரின் ஆதாரம்.
அதற்கு கால- இடம்- கட்டுப்பாடு உண்டு.
பரம சாந்தியுடைய பிரமனிலிருந்து ஜீவன் மாறுபடுவது எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற வாசனைகள் நிறைந்த
இடி மேகங்களால்  தான்.ஜீவாத்மா எப்பொழுதும் ஒலிகளாலும் உருவங்களாலும் கட்டப்ட்டிருக்கின்றது.
நாம- ரூப வேற்றுமைகளால் கவரப்பட்டு அல்லல் படுகிறது..

இந்த வாசனைகள் நிறைந்த மேகங்கள் தான் ஜீவாத்மாவின் அனுபவங்கள் எனும் நீரிற்கு ஆதாரம்.

ஜீவாத்மாவின் வாசனைகள் அனுபவங்களாக மாறுகிறது. புலன்களின் வாசனைகளுக்கு அறுதி கிடையாது.
ஒன்று நிறைவேறும் பொழுது இன்னொன்று முளைத்தெழுகிறது.
ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிதான் என்றிருந்தாலும்
ஒன்றிலிருந்து முளைத்தது தான் மற்றொன்று.

மழைத் துளிகள் தனித் தனி தான் என்றாலும் ஒரே நீர் வீழ்ச்சி போல் தோன்றுகிறதல்லவா!
ஒரு நீர்த் துளி தான் இன்னொரு நீர்த் துளிக்கு ஆதாரம்.
ஆகவே மேகங்கள் உருவாவதற்கு நீர்த் துளிகளே காரணம்.
பூமியில் விழுகின்ற நீர் ஆவியாகி மேலே போய் மேகங்கள் உருவாகின்றன.
மீண்டும் மழைத் துளிகளாக பூமியை வந்தடைகின்றன.

அவ்வாறு மேகங்களுக்கும் ஆதாரம் நீரே தான்.
இந்த உண்மையை – இந்த சாக்கிரியத்தை எவனொருவன் அறிகிறானோ அவன்
ப்ரஹ்ம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் மேற்கொண்டு வாசனைகளுக்கு இடம் தரான்.
அவன் சர்வ ஐசுவரியங்களுக்கும் அதிபதியாகிறான். அவன் ப்ரஹ்மமேமாகி விடுகிறான்

——————

மந்த்ரம் 8

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யஸ் ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காலமே நீரின் ஆதாரம்.
யார் காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காலத்தின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

‘ஸம்வத்ஸரம்’ தான் நீரின் ஆதாரம். நீர் என்றால் உலக அனுபவங்கள். இந்த அனுபவங்கள் பொறிகள்( இந்திரியங்கள்)
சேகரித்து வழங்கும் வெளியுலக தகவல்களை ஆதாரமாக்கி மனம் நெய்தெடுத்த கற்பனைகள்.இவைகளுக்கு ‘ ஸம்வத்ஸரம்’ தான் ஆதாரம்.

‘ ஸம்வத்ஸரம்’ என்றால் -பருவங்கள் இணைந்து உருவானது ஸம்வத்ஸரம். இது வருடம் என்றும் கூறப்படுகிறது.
மழைக்காலம், குளிர்காலம் , இலையுதிர்காலம், வஸந்த காலம், வேனல்காலம் இப்படி பல காலங்கள் இணைந்து உருவாவது வருடம்.
இது ஒரு காலயளவு.அந்த காலயளவில் பருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

இந்த கால யளவிற்குள் உயிரினங்களின் வாசனைகளும் மாறி மாறி வருகிறது. உயிரினங்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற
மாற்றங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு அளவு கோல் இது.
பிறப்பு, குழந்தைப் பருவம், பால்யம், இளைமை, வளர்ச்சி, முதுமை, இறப்பு என்ற மாற்றங்கள் உடலிற்கேறபடுகின்றன்.
இவைகளை கணக்கிடுவதற்கான அளவுகோல் வருடம் .

இந்த பருவ மாற்றங்களுக்கேற்ப மனம் உருவாக்கும் அனுபவங்களின் குணங்களும் மாறுகின்றன.
குழந்தைப் பருவத்தில் கண்டு மகிழ்நதவை இளைமையில் பொருளற்றதாக தோன்றுகிறது.
இளைமையில் தன்னை வசீகரத்தவை முதுமையில் வேண்டாதவையாகின்றன.
உயிரினங்களுக்கு ஏற்படும் இன்ப- துன்பங்களும் பருவத்திற்கேற்ப மாறுகின்றன.

ஆகவே பருவங்கள் சேர்ந்து உருவாகும் வருடம் என்ற காலயளவு தான் அனுபவங்கள் எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.

இந்த உண்மையை உணர்ந்தவன், அனுபங்களின் அநித்தியத்தை உணர்ந்தவன் தன்னில்- உண்மையான ‘நான்’ நிலை கொள்கின்றான்.
ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான்.

ப்ரஹ்மன் வாசனைகளின் விதைகளை தாங்கி நிற்கும் விருட்சம்.
அந்த மரத்தில் உருவாகின்ற விதைகள் முளைத்து வாசனைகளாகின்றன.,
அந்த வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக உயிரினங்கள் ( ஜீவாத்மாக்கள்) தங்கள் புலன்கள் மூலம் ஆற்றும் கர்மங்கள் அனுபவங்களாக மாறுகின்றன.
ஆனால் அனுபவங்கள் காலத்திற்கேற்ப மாறுகின்றன.
மாறுகின்ற அனுபவங்களை ஆதாரமாக்கி கொண்டு நாம் காலத்தை இளைமை என்றோ முதுமை என்றோ பால்யம் என்றோ கூறுகிறோம்.
ஆகவே அனுபவங்கள் தான் காலத்திற்கு ஆதாரம்.

இந்த அனுபவங்கள், வாசனைகளை பூர்த்தி பண்ணுவதற்கான கர்மங்களிலிருந்து உருவான அனுபவங்கள்,
அதனாலுண்டாகின்ற வேதனைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது ஜீவாத்மா.
அந்த அனுபவங்களின் ஆழம்
ஜீவாத்மாவின் அவித்யைக் பொறுத்துள்ளது.இருளில் காணப்படும் பேயைப்போல், சரீரம் எனும் பேய்
ப்ரஹ்மனின்- பரமாத்மாவின் உண்மை சொரூபத்தையும் மறைத்து பூதாகார வடிவம் எடுக்கிறது.

இவ்வாறு ஸ்தூல உருவம் எடுக்கின்ற அல்லது ஸ்தூல சரீரத்துடன் தன்னை
ஐக்கியப்படுத்திக் கொள்கின்ற ஜீவாத்மா தான் எல்லாவித அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஸ்தூல ரூபம் நீராகவும் மலராகவும்,
காற்றாகவும் மேகங்களாகவும்
காலமாகவும் தோற்றமளிக்கின்றன.

நீர் அனுபவங்களையும்
மலர் தகவல்களையும்
தொடர்புகள் காற்றாகவும்,
வெளிவராத ஆசைகளும் வாசனைகளும் மேகங்களாகவும்,
தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற மாற்றங்கள் காலமாகவும் உணரப்படுகிறது.

இம்மாதிரி தோன்றுகின்ற மாயத் தோற்றங்களின் உண்மையை உணர்ந்தவன் ப்ரஹ்மனை உணர்ந்தவன்.
அவன் தன்னிலேயே நிலை கொள்ள முடிகிறது.

ப்ரஹ்மத்தின் உண்மையை அஞ்ஞானம் மறைத்து கொண்டிருக்கின்றது.
ஞானம் எனும் தோணியின் உதவியுடன் தான்
அதன் சத்திய சொரூபத்தை அறியமுடியும்.

———–

மந்த்ரம் 9–

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ,
அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)

எவனொருவன் பரமனின் உண்மையை அறிகிறானோ அவன் பரமனே ஆகிறான். எல்லா ஆத்மாவும் பரமாத்மாவே!
ஜீவாத்மா என்பது வாஸனைகளால் உளவான மாயத் திரையினால் மூடப்பட்ட பரமாத்மாவே! அந்த மாயத்திரை தான் அவித்யை!
அந்த அவித்யை எனும் மாயத் திரை விலகி விட்டால் பரமாத்மா வெளிப்படும்.

அது ப்ரஹ்ம சாஷாத்காரம் அல்லது ஆத்ம சாஷாத்காரம்.அந்த ஞானம் பெற்று விட்டால் அவனை லௌகீக வாசனைகள் எதுவும் பாதிக்காது.
எவ்வாறு ஓடத்தில் பயணிக்கும் பொழுது ஒருவனை வெளியிலுள்ள நீர் நனைக்காதோ
அது போல் ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனை அவனை சுற்றி நடக்கும் எதுவும் பாதிக்காது.
அவன் ப்ரஹ்ம நிலையில் உறுதியாக நிலை கொள்கிறான்.

———–

மந்த்ரம் 10

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹா ராஜாய நம: (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம்.
விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு
எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.

ஸாஷாத் காரத்துக்குப் பின்பு
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய செல்வ பிரார்த்தனையுடன் தலைக் கட்டுகிறது –

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் நிறைவுற்றது

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நீளா ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ நீளா ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

ஓம் நீளா தேவீம் ஸரணம் அஹம் ப்ரபத்யே
க்ருணாஹி

க்ருதவதீ ஸவிதராதி பத்யை: பயஸ்வதீர் அந்திராஸானோ அஸ்து
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ன்ய-கோரா ஸ்யேஸானா ஸஹஸோயா

மனோதா ப்ருஹஸ்பதிர்-மாதரிஸ் வோத வாயுஸ்-ஸந்துவானா வாதா அபி
நோ க்ருணந்து விஷ்டம்போ திவோதருண: ப்ருதிவ்யா

அஸ்யேஸானா ஜகதோ விஷ்ணு பத்னீ

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

—————————

க்ருதவதீ –புருஷகாரம்
ஸவிதராதி பத்யை -நெருக்கம் போகும் தலைமை இவளுக்கே
பயஸ்வதீ -நெய் பால் அனைத்தும் அளிப்பவள்
அந்திராசா நோ அஸ்து -ஸர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள்
த்ருவா திசாம் -வழி -நிலை பெற்ற திசை காட்டி அருளுபவள்
விஷ்ணு பத்ந்யகோரா -கோரா பார்வை இல்லை -ஸ்ரீ விஷ்ணு பத்னீ
ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ் –ப்ருஹஸ்பதியும் வாயுவும் -அடங்கி வழிபடுபவர் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஸூக்தம்-(ஸ்ரீ ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)

December 31, 2021

ஸ்ரீ ஸூக்தம்

ஓம் ||
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜத ஸ்ர’ஜாம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |–1-

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ -என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக

ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,–மானைப் போன்றவள்- பக்தி வைத்து கட்டிப் போடலாம் -தானே கட்டுண்ணப்பண்ணும் பெரு மாயமுள்ளவள்-

——-

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||–2-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மநப-காமிநீம் யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷானஹம்

ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –

————-

அஶ்வ பூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||–3-

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –

————-

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–4-

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப ஹ்வயே ஸ்ரியம்

ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –

——

சந்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌ அலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே ||–4-

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –

————

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||–5-

ஆதித்ய-வர்ணே தபஸோ திஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:

ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –

———–

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்ரு’த்திம் ததாது’ மே ||–6-

உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணினா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே-ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே

தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்

———-

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்ருஹாத் ||-7-

க்ஷúத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்–7-

க்ஷúத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –

———

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–8-

கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம்

கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –

———-

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||–9-

மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி
பஸூனாம் ரூப மன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ:

ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழிச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்

——–

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||–10-

கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம-மாலிநீம்

கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –

———-

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||–11-

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே

சிக்லீத -மஹா லஷ்மியின் திருமகனான சிக்லீதர முனிவரே
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –

———

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–12-

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே –
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்

————

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–13-

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –

————

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||–14-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம் புருஷானஹம்

ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –

————

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி |
தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||–15-

ஸ்ரீ மஹா லஷ்மியை அறிந்து கொள்வோம்
திருமாலின் கேள்வியைத் தியானிப்போம்
அந்த திருமகள் நம்மைத் தூண்டி அருளுவாளாக –

————

பல ஸ்ருதிகள் –

ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம்
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்

பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம – ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம்

அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே தனம்-மே
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே

பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-நுகூலே த்வத்பாத – பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ

புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே

தன-மக்நிர்-தனம் வாயும்-தனம் ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே

வைநதேய ஸோமம் பிப ஸோமம் பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:

ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி ப்ரஸீத மஹ்யம்

விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம்யச்யுத-வல்லபாம்

மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்

மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
õபமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” |
தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஷாந்தி ஃ ஷாந்தி ஃஷாந்தி ஃ’ ||

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூ ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ பூ ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

பூமிர்பூம்னா-த்யௌர்-வரிணா-ந்தரிக்ஷம்
மஹித்வா உபஸ்தே தே தேவ்யதிதே-க்னி-மன்னாத

மன்னாத்யாயாததே ஆயங்கௌ: ப்ருஸ்னிரக்ரமீ தஸனன்
மாதரம் புன: பிதரம் ச ப்ரயந்த்ஸுவ: த்ரி ஸத்தாம விராஜதி வாக்

பதங்காய ஸிஸ்ரியே ப்ரத்யஸ்ய வஹ த்யுபி: அஸ்ய
ப்ராணாதபானத்-யந்தஸ்சரதி ரோசனா வ்யக்யன் மஹிஷ: ஸுவ:

யத்த்வா க்ருத்த: பரோவபமன்யுனா யதவர்த்யா ஸுகல்ப-மக்னே
தத்தவ புனஸ்-த்வோத்தீபயாமஸி யத்தே மன்யு பரோப்தஸ்ய ப்ருதிவீ-

மனுதத்வஸே ஆதித்யா விஸ்வே தத்தேவோ வஸவஸ்ச ஸமாபரன்
மனோஜ்யோதிர்-ஜுஷதா-மாஜ்யம் விஸ்சின்னம் யஜ்ஞ ஸமிமம் ததாது
ப்ருஹஸ்பதிஸ்-தனுதாமிமம் நோ விஸ்வே தேவா இஹ மாதயந்தாம்

மேதினீ தேவீ வஸுந்தரா ஸ்யாத்-வஸுதா தேவீ வாஸவீ
ப்ரஹ்மவர்ச்சஸ: பித்ருணா ஸ்ரோத்ரம் சக்ஷúர்மன: தேவீ ஹிரண்ய-
கர்பிணீ தேவீ ப்ரஸோதரீ ரஸனே ஸத்யாயனே ஸீத

ஸமுத்ரவதீ ஸாவித்ரீஹ நோ தேவீ மஹ்யகீ மஹாதரணீ
மஹோர்யதிஸ்த ஸ்ருங்கே ஸ்ருங்கே யஜ்ஞே யஜ்ஞே விபீஷணீ
இந்த்ரபத்னீ வ்யாஜனீ ஸுரஸித இஹ

வாயுபரீ ஜலஸயனீ ஸ்வயந்தாரா ஸத்யந்தோபரி மேதினீ
ஸோபரிதத்தங்காய

விஷ்ணு-பத்னீம் மஹீம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்

தனுர்தராயை ச வித்மஹே ஸர்வ ஸித்த்யை ச தீமஹி
தந்நோ தரா ப்ரசோதயாத்

இஷு-ஸாலி-யவ-ஸஸ்ய-பலாட்யாம் பாரிஜாத ரு-ஸோபித-மூலே
ஸ்வர்ண ரத்ன மணி மண்டப மத்யே சிந்தயேத் ஸகல-லோக-தரித்ரீம்

ஸ்யாமாம் விசித்ராம் நவரத் பூஷிதாம் சதுர்புஜாம்
துங்கபயோதரான்விதாம் இந்தீவராக்ஷீம் நவஸாலிமஞ்ஜரீம் ஸுகம்
ததானாம் வஸுதாம் பஜாமஹே

ஸக்துமிவ தித உனா புனந்தோ யத்ர தீரா மனஸா
வாசமக்ரத அத்ரா ஸகாய: ஸக்யானி ஜானதே
பைத்ரஷாம் லக்ஷ்மீர்-நிஹிதா திவாசி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இதி பூ ஸூக்தம்

———–

பூமி -மிக பெரியவள் –அனைத்தையும் அடக்கி -விஸ்வம் பர -அவனையும் தரிக்கும் ஸ்ரீ பாதுகை -அத்தையும் தரிக்கும் –
பூம் நா பரந்து விரிந்து சப்த த்வீபங்கள் -ஜம்பூத் த்வீபம் நாம் –
மேருவின் தக்ஷிண திக்கில் நாம் உள்ளோம்
லக்ஷம் யோஜனை நடுவில் உள்ள ஜம்பூத் த்வீபம்
கடல் அதே அளவு -அடுத்த த்வீபம் -இரண்டு லக்ஷம் -இப்படியே -பூ லோகம்
மேலே ஆறு லோகங்கள் -கீழே ஏழு லோகங்கள் –
அண்டகடாகங்கள் -ஒவ் ஒரு அண்டத்துக்கும் ஒரு நான்முகன் –
யவ்ர்வரிணா– மேன்மை -ஆகாசம்
கர்ப்பத்துக்குள் உதைக்கும் குழந்தை -தாய் மகிழ்வது போலே நாம் பண்ணும் அபசாரங்களை கொள்கிறாள் –
தாங்கும் ஆதாரம் –
தேசோயம் ஸர்வ காம புக் –ஷேத்ரங்களே அபேக்ஷிதங்களைக் கொடுக்கும் –
ஸ்ரீ தேவி சாஸ்த்ர காம்யம் -இவளை ஸ்பர்சிக்கலாமே -தாய் நாடு தாய் மொழி –கர்ம பூமி -சாதனம் செய்து அவனை அடைய –

யவ்ர்வரிணா–ஆகாசமாகவே -ஸ்வர்க்கமும் சேர்த்து
அந்தரிக்ஷம் மஹீத்வா -அந்தரிக்ஷமும் பூமி பிராட்டியே
உபஸ்தே தே தே – வ்யதிதே அக்நி மந் நாத மந் நாத் யாயததே -ஜீவாத்மா சோறு -அருகில் சேர்ப்பது -அவனை தருவாள்
ஆயங்கவ் பிரதிஸ் நிரக்மீத -ஸூர்ய மண்டல மத்திய வர்த்தீ -நாராயணன் –
செய்யாதோர் ஞாயிற்றை காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் -அந்தர்யாமியாக வரிக்க
சநத் மாதரம் புந பித்தராஞ்ச ப்ரயன் ஸூவ -இவளைப் பற்ற வேண்டும் -பிராட்டி பரிகரம் என்றே உகப்பான் அன்றோ –

மேதி நீ தேவீ வஸூந்தரா ஸ்யாத் வஸூதா தேவீ வாஸவீ
திரு நாமங்கள் வரிசையாக -அருளிச் செய்கிறார் –
மேதிநீ -நம் மேல் ஆசை -மேதஸ்-மதம் மது கைடபர் இருந்ததால் -குழந்தை அழுக்கை தான் தாங்கி
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகள் –
தேவீ –காந்தி -பிரகாசம் -அழுக்கு கீழே சொல்லி -அதனாலே ஓளி –விடுபவன்
ஹிரண்ய வர்ணாம் -பெருமையால்
ராமன் குணங்களால் பும்ஸாம் சித்த அபஹாரி –கண்ணன் தீமையால் தோஷங்களால் ஜெயித்தவன் -கண்டவர் மனம் வழங்கும் –
வஸூந்தரா -தங்கள் வெள்ளி ரத்னம் அனைத்தும் கொடுப்பவள் -வஸூ செல்வம்
வஸூ தா -வாஸவீ–போஷித்து வளர்க்கிறாள் –அன்னம் இத்யாதி
தரணீ -தரிக்கிற படியால்
பிருத்வி –பிருத் மஹா ராஜா -காலம் -பஞ்சம் வர -தநுஸ் கொண்டு துரத்த —
என்னை வைத்துக் கொண்டே வாழ -பசு மாட்டு ஸ்தானம் -இடைப்பிள்ளையாக பிறந்து கரந்து கொள்
கடைந்து அனைத்தும் வாங்க பட்டதால் பிருத்வீ
அவனி –சர்வம் சகேத் சகித்து கொள்வதால்

ஸ்ரீ விஷ்ணு சித்த கல்ப வல்லி–சாஷாத் ஷமா -கருணையில் ஸ்ரீ தேவியை ஒத்தவள் -இரண்டையும்
ஸ்ரீ வராஹ பெருமை -பட்டர் –
மீன் சமுத்திரத்தில் அவரே
கூர்மம் மந்த்ரம் அழுத்த
நரசிம்மம் கழுத்துக்கு மேல்
வாமநன் வஞ்சனை
கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
சம்சார பிரளயம் எடுக்க ஸ்ரீ வராஹம் –
சத ரூபை என்பவள் -ஸ்வயம்பு மனு கல்யாணம் -ஸ்ரீ வராஹ அவதாரம் -சப்புடா பத்ர லோசனன் -அப்பொழுதும் தாமரைக் கண்ணன்
ஆமையான கேசனே -கேசமும் உண்டே -ப்ரஹ்ம வர்ச்சஸ பித்ரூணாம் ஸ்ரோத்ரம்
ஈனச் சொல் ஆயினுமாக -பிரியம் ஹிதம் அருளும் மாதா பிதா -ஆழ்வார் -நைச்ய பாவம்–கிடந்த பிரான் –
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் -தன்னையே கொடுக்காதே -அதுவும் –
ஞானப் பிரானை அல்லால் இல்லது இல்லை – -நான் கண்ட நல்லதுவே –
அந்த ஞானப் பிரான் -பூமி பிராட்டியை இடம் வைத்து நமக்கு இவள் திருவடிகளைக் காட்டி அருளுகிறார் –
தானே ஆசன பீடமாக இருந்து காட்டிக் கொடுத்து அருளுகிறார் –
அவன் இடம் உபதேசம் பெற்று நம்மிடம் கொடுத்து அருளினாள் ஆண்டாள் –
கீர்த்தனம் -பிரபதனம் -ஸ்வஸ்மை அர்ப்பணம் -முக்கரணங்கள் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கை தொழுது
ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் –
அப்பொழுது தானே இவள் நடுக்கம் போனது –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி –நயாமி மத் பக்தம்-
திரு மோகூர் ஆத்தன் இவன் வார்த்தையை நடத்தி காட்டி அருளுகிறார் -ஆப்தன் -காள மேகப் பெருமாள் –
சரண்ய முகுந்தத்வம் ஸுரி பெருமாள் –
கிடந்து இருந்து நின்று அளந்து இடந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை -மால் செய்யும் –
ஜீவனாம்சம் போலே மார்பில் ஏக தேசம் கொடுத்து –இவள் இடம் -மால் –
திரு மால் – திருவின் இடம் மால் -திரு இடம் மால் -வேறே இடத்தில் மால் -என்றுமாம்
விராடன் -அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –
லஷ்மீர் -ராஜ ஹம்சம் -பஷி-ஆனந்த நடனம் -சாயா இவ -இவர்கள் –
நிழல் தானே நிழல் கொடுக்க முடியும் -இவள் மூலமே நமக்கு –சேர்ந்து கைங்கர்யம் –
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால் திரு மகளுக்கே–வருந்தி அழ வில்லை –
கடல் அசையும் நானே ஸ்திரம் -கால மயக்கம் துறை -பட்டர் நிர்வாகம்
மழை காலம் வருவேன் சொன்னவன் வர வில்லை -தோழி சமாதானம் -மழை இல்லை -ஸ்ரீ தேவி -கூட போனதால் பூமி பிராட்டி அழுகை –
வருத்தம் -இல்லை -பொய்யான விஷயம் சொல்லி சமாதானம் –
சஜாதீயை பூமி தேவதை –ஸ்ரீ தேவி விஜாதீயை -விஷ்ணு -வைஷ்ணவி -ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதே அவள் –
குணம் அவள் -மணம் இவள் -செல்வம் அவள் -செல்வம் விளையும் ஸ்தானம் இவள்
அழகு கொண்டவள் -புகழ் கொண்டவள் -ஆதரவு -ஆதாரம் –
அஹந்தை-கோஷிப்பாள் -போஷிப்பவள் இவள் –

சமுத்ராவதீ ஸாவித்ரீ -ஆடை சமுத்திரம் நெற்றி திலகம் ஸூரியன்- சுடர் சுட்டி சீரார் –
மலைகள் திரு முலைத் தடங்கள் -புற்று -காது -வால்மீகி -24000-ஸ்லோகங்கள் -பூமி பிராட்டியே சாஷாத் திருப்பாவை –
கோதாவுக்காகவே தக்ஷிணா -ஸ்ரீ அரங்கன் -தேசிகன் -தந்தை சொல்ல மாட்டார்களே -அதனால் விபீஷணனுக்காக
கூந்தல் -மழை –த்ரி வேணி சங்கம் –
படி எடுத்து காட்டும் படி அன்று அவன் படிவம் –தோற்றிற்று குரங்கை கேட்க -ஆண்டாள் -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –
த்ரிஜடை கனவால் அவள் -ஆயனுக்காக தான் கண்டா கனவு
சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் சேர்த்து வேண்டும் இவளுக்கு –
தெளிந்த சிந்தைக்கு போக்ய பாக துவரை–பூமியில் நின்றும் இருந்தும் கிடந்தும் -என் நெஞ்சுள்ளே –
அரங்கன் இடமும்-ஸேவ்யமான அம்ருதம் நம் பெருமாள் –
தொட்டிலுலும் -ராமன் கிருஷ்ணன் -கிடந்தவாறும் -நின்றவாறும் -இருந்தவாறும் –

ஓம் தநுர்த் தராயை வித்மஹே ஸர்வ சித்தயைச தீ மஹீ
தந்நோ தரா ப்ரசோதயாத் –தனுர் திருக்கையில் வைத்து நம் -ஞானம் -தூண்டி விடுகிறாள்
குற்றம் இல்லையே –அவள் பொறுக்க சொல்ல -இவள் யாருமே குற்றம் செய்ய வில்லை -இருவர் இருக்க நமக்கு என் குறை –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

December 31, 2021

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

ஸ்ரீ ரிக்வேதம் முழுவதிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பல இடங்களில் துதிக்கப் பட்டாலும்,
அவருக்கென்று முழுமையாக சில துதிகள் மட்டுமே உள்ளன.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த ஸுக்தம்.

ஓம்

விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம்
ய: பார்த்தி வானி விமமே ரஜாக்ம்ஸி
யோ அஸ்க பாயதுத் தரகம் ஸதஸ்தம்
விசக்ர மாணஸ் த்ரேதோருகாய: –1-

யார் பூமியையும் அதிலுள்ள அனைத்தயும் உருவாக்கி உள்ளாரோ,
மேலே உள்ள விண்ணுலதைத் தாங்கியுள்ளாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ,
சான்றோரால் போற்றப் படுகிறாரோ அந்த மஹாவிஷ்ணுவின் மகிமை மிக்க செயல்களைப் போற்றுவோம்.

———

விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி
விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி
விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவ மஸி
விஷ்ணவே த்வா –2-

யாக மண்டபத்தின் வாசல்படி விட்டமே, நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய். பின்புறமாக இருக்கிறாய்.
வாசற்கால்களே, நீங்கள் அவரது இரண்டு கால்களாக உள்ளீர்கள்.
கயிறே, நீ அவரது நாடிகளாக இருக்கிறாய்.
முடிச்சுகளே, நீங்கள் விஷ்ணுவின் முடிச்சுகளாக இருக்கிறீர்கள்.
யாக மண்டபமே, நீ விஷ்ணுமயமாகவே இருக்கிறாய்.
விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக உன்னை வணங்குகிறேன்.

——–

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யாம்
நரோ யத்ர தேவயவோ மதந்தி
உருக்ரமஸ்ய ஸ ஹி பந்துரித்தா
விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: –3-

எங்கே தேவர்கள் மகிழ்கிறார்களோ, எங்கே மனிதர்கள் போக விரும்பு கிறார்களோ,
எது விஷ்ணுவின் மனத்திற்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகின்றதோ,
விஷ்ணுவின் மேலான அந்தத் திருவடிகளை நான் அடைவேனாக.

———–

ப்ரதத்விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய
ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்ட்டா:
யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு
அதிக்ஷியந்தி புவனானி விச்வா
பரோ மாத்ரயா தனுவா வ்ருதான
ந தே மஹித்வமன்வச்னுவந்தி –4-

மலைமீது திரிகின்ற பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,
மூன்று பெரிய அடிகளில் எல்லா உலகங்களையும் அடக்கியவருமான அந்த விஷ்ணுவை
அவரது மகிமைகளுக்காகப் போற்றுவோம்.

———–

உ பே தே வித்வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ
தேவத்வம் பரமஸ்ய வித்ஸே
விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம்
க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே தசஸ்யன் –5-

உமது மணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையே நாங்கள் அறிவோம்.
ஒளி பொருந்திய திருமாலே, நீர் மட்டுமே மேலான உலகை அறிவீர்.
இந்த பூமியில் நீர் நடந்து, அதனை இருப்பிடமாகக் கொள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுத்துள்ளீர்.

—————

த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ:
ஊருக்ஷிதிக்ம் ஸுஜனிமாசகார த்ரிர் தேவ:
ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்ச்சஸம் மஹித்வா
ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான்
த்வேஷக்ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –6-

பணிவு மிக்க ஜனங்கள் அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள்.
அவர் இந்த பூமியை அவர்களுக்காக பரந்த வாழ்விடமாகச் செய்துள்ளார்.
எண்ணற்ற அழகுகள் பொருந்திய இந்த பூமியை விஷ்ணு தமது மகிமையினால் மூன்று முறை அளந்துள்ளார்.
மஹா விஷ்ணுவே! உமது மேலான பெருமை காரணமாக நீர் விஷ்ணு என்று பெயர் பெறுகிறீர்.
மேலும், இது உமது மகிமைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

———-

அதோ தேவா அவந்து நோ யதா விஷ்ணுர் விசக்ரமே
ப்ருதிவ்யாஸ் ஸப்த தாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே
த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாக்ம் ஸுரே –7-

எந்த பூமியின் ஏழு பகுதிகளிலும் விஷ்ணு நடந்தாரோ அந்த பூமியின் பாவங்களிலிருந்து தேவர்கள் நம்மைக் காக்கட்டும்.
விஷ்ணு நடந்த போது தமது திருவடிகளை மூன்று முறை வைத்தார். அவரது திருப்பாத தூசியால் பூமி மூடப்பட்டது.

——————

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய:
ததோ தர்மாணி தாரயன் விஷ்ணோ கர்மாணி பச்யதோ
யதோ வ்ரதானி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ்ஸகா — 8-

விஷ்ணு அனைத்தையும் காப்பவரும் யாராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார்.
அவர் தமது மூன்று அடிகளால் உலகை அளந்து இங்கே தர்மங்களை நிறுவியுள்ளார்.
இந்திரனின் நெருங்கிய நண்பரான விஷ்ணுவின் செயல்களைப் பாருங்கள்.
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

———-

தத் விஷ்ணோ பரமம் பதக்ம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம் தத் விப்ராஸோ விபன்யவோ
ஜாக்ருவாக்ம் ஸஸ்ஸமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -9-

பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
எப்போதும் காண்கிறார்கள். கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,
விழிப்புற்றவர்களுமான இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிபெறச் செய்கிறார்கள்.

——————–

பர்யாப்த்யா அனந்தராயாய ஸர்பஸ்தோமோ(அ)திராத்ர
உத்தம மஹர் பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய
ஜித்யை ஸர்வமேவ தேனாப்னோதி ஸர்வம் ஜயதி –10-

அளவற்ற வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்கா புகழ் பெறுவதற்கும் அதிராத்ரம் எனப்படும் யாகமே
மிக மேலான யாகம் ஆகிறது. அந்த யாகத்தால் எல்லாம் கிடைக்கிறது,
எல்லா வெற்றியும் கிடைக்கிறது, எல்லாமே அடையப் படுகிறது. எல்லாமே வளம் பெறுகிறது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

————-