Archive for the ‘Sri Baashyam’ Category

ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -2-ஸாதந பாதம் –

November 17, 2023

தபஸ்‌, ஸ்வாத்தியாயம்‌, ஈஸ்வரப் பிரணிதாநம்‌ இவை கர்ம யோகம்‌.–1-

முந்திய அத்‌தியாயத்தில்‌, எவன்‌ மநம்‌ ஒழிவை அடைந்து அந்தர் முகப்பட்டு சமாதியில்‌ நோக்காயுள்ளதோ அவனுக்குப் பயன்படும்படியாக. யோகம்‌ சொல்லப்பட்டது. எவன்‌ மனம் அந்தர் படாமல் வெளி விஷயங்களில் ப்ரவர்த்திக்கின்றதோ அவனும்‌ யோகியாக ஆதலுக்கு அனுகூலமான ஸாதநக்கள்‌
இந்த அத்தியாயத்தில்‌ சொல்லப்படுகின்றன.

தபஸ்‌ என்றால்‌ தாபத்தை உண்டு பண்ணுதல்‌,. அதனால்‌ மநம் மொழி, மெய்யைப்‌ பரிசுத்‌தப்படுத்தல்‌.
மநத்தில்‌ ஏற்படும்‌ அசுத்தியானது வெகுகாலமாய்‌. இருந்து வருகிற கர்ம கிலேசங்களால்‌ நாநா விதமாயும்‌, விஷய நுகர்ச்சியில்‌ பிரவிர்‌த்‌திக்கும்படி.யாயும்‌ செய்கிறது-அது தபஸ்ஸினால்‌ பேதிக்கப்படுகிறது – ௮தனால்‌ தபஸ்‌ முக்கிய ஸாதனம் -சித்தத்தின்‌ பிரஸாதத்தைப்‌, பாதிக்காமல்‌ இத்‌ தபஸ்‌ நிகழ வேண்டும்‌.-தபஸ்‌ என்றால்‌ காயக்லேசம்‌ எனப்‌ பெ௱ருள்‌ பெறும்‌. சுத்தமாக ஆகாரமின்மை யோசாப்பியாசதிற்கு விரோதம்‌. இதனால்‌ மித போஜநம்‌ வேண்டும் என்பது இங்கு கிரஹிக்கப்படுறது. அதனால் தான்‌ சித்தத்தின்‌ பிரஸாதத்தைப்‌ பாதிக்காமல்‌ என்‌று எச்சரிக்கை ஏற்பட்டிருக்கிறது .-

ஸ்வாத்தியாயம்‌ யோகத்திற்குச்‌ சாதகமான பிரணவ முதலிய. பரிசுத்த மந்த்ரங்களை ஜபித்தாலும்
உபநிஷத் முதலிய மோக்ஷ சாஸ்‌திரத்தைப்‌. படித்தலும்‌ இதில்‌ அடங்கும்‌.

ஈஸ்வரப்‌. பிரணிதாநம்‌, ப்ர -நன்றாய் நிதாநம்‌ — வைத்தல்‌:
சகல காரியங்களையும்‌ பரம குருவான ஈஸ்வரனிடத்தில. அர்ப்பணம்‌ செய்‌தல்‌,

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத் பரா–
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே—৷৷12.6৷৷

அது (முன்‌ சொல்லிய கிரியா யோகமானது) ஸமாதி நிலையை ய்டைவதற்கும் கிலேசங்களைக்‌ குறை செய்து கொண்டு வருதலுக்கும்‌ (பிரயோஜநமாம்‌), –2-

அக் கிலேசங்களாவன:–அவித்யை – அஸ்மிதை,-ராகத் -துவேஷம்‌,-அபிநிவேசம்‌ (உயிர் மேல்‌ பற்று)–3-

இவை ஐந்தும்‌ மனிதனை ஆஸ்ரயித்து குணங்களை
ஸ்திரப் படுத்துகின்றன. மஹத்‌, அகங்காரம்‌, தந்மாத்ரைகள்‌ முதலிய பரிணாமங்களை விருத்தி செய்கின்றன. காரிய காரண பரம்‌பரையை விருத்தி அடையும்படி, பண்ணுகின்றன, ஒன்றுக்கொன்று உதவியாக விருக்து கர்மங்களின் பரிபாகத்தை உண்டு பண்ணுகின்றன

ப்ர ஸூப்த, தது, விச்சிந்ந, உதார என்ற நான்கு வித அவஸ்தைகளை யுடைய மேற் கண்ட அஸ்மிதை முதலிய நான்கு கிலேசங்களுக்கும்‌ அவித்‌யை என்பது, இருப்பிடமாம்‌,–4-

பிர ஸூப்‌த வெளியாகாமல்‌ வித்தில்‌ மரம் போல உள்ளடங்கி யிருத்தல்‌.
தந -ஒரு வாஸனையை, வேறொரு எதிரிடையான வாஸனையை அப்பியாஸம்‌ செய்து குறைத்தல்‌,
லிச்சிந்ந — ஒரு விர்த்தி வெளிப்படுவம் காலத்தில்‌, மற்ற விர்திகள்‌ ஒடுங்குதல்‌.
உதார ஓர்‌ ஓர்‌ விஷயத்தை நோக்கி விர்த்தி வெளிப்படுதல்‌.
மேற் கண்டபடி நாலுவிதமான அவஸ்தைகளை அஸ்மிதை முதலிய கிலேசங்கள் பெறுகின்றன.
புருஷ் ஸாக்ஷத்காரம்‌ பெறுமவனுக்கு இக் கிலேசங்கள்‌ வறுத்த விதை போல ஆகும்‌. திரும்பவும்‌ ௮வைகள்‌ முளைக்கலாம்‌.-அவனைப்‌ பாதிக்காலாம்‌, அது ஐந்தாம்‌ ௮வஸ்தை எனப்‌ பெயர்‌ பெறும்‌,
அதனால்‌ அந்த ஜென்மம் அவனுடைய கடையா ஐந்மாம்‌. விதேசுப்‌ பிரக்ருதி லயாளுக்கு அவர்கள்‌ மஹத்தான சுகங்கள் அனுபவிக்குலம் காலத்தில்‌, கிலேசங்கள்‌ பிரஸுப்த அவஸ்தையைப்‌ பெறும்‌. அச் சுகங்கள்‌ முடியுங்காலத்தில்‌ திரும்பவும்‌, அவர்‌கள்‌ ஜந்மம்‌ பெறும்‌ சமயத்‌தில்‌ அவர்களைப்‌ பாதிக்கும்‌.
கிலேசங்கள்‌ வர வரக்‌ குறைதலுக்கு இப்பாதம்‌ முதல்‌ ஸூத்ரத்தில்‌ சொல்லி யிருக்கிற தபஸ்‌ முதலானவை ஸாதநங்களாம்‌,
எல்லாக்‌ கிலேசங்களும்‌ ௮வித்தையின்‌ பேதங்களாம்‌.
தத்வங்களில்‌ லயமம் அடைவர்களுடைய கிலேசங்கள்‌ பிரஸுப்த அவல்தையைப்‌ பெறும்‌,
யோகிகளுடைய கிலேசங்கள்‌ தநு என்ற அலஸ்தையைப்‌ பெறும்‌.
ஸாதாரண விஷயிகளுடைய கிலேசங்கள்‌ விச்சிந்ந , உதார என்ற ௮வஸ்தைகளைப்‌ பெறும்‌.

அநித்தியத்தையும்‌, அசுத்தத்தையும்‌, துக்கத்தையும்‌, அநாத்மாவையும்‌ முறையே நித்தியமாயும்‌, சுத்தமாயும்‌, சுகமாயும்‌, ஆத்மாவாயும்‌ நினைத்தல்‌ அவித்தையாம்‌.–5-

அநித்தியத்தை நித்தியமாக நினைத்தல்‌, பிருதிவி
முதலிய பஞ்ச பூதங்களை நித்தியமென்று நினைத்து, அவைகளை உபாஸனை செப்து,
அவைகளின்‌ ஸ்வரூபத்தைப்‌ பெற வேண்டுமெனச்‌ சிலர்‌ முயலுகின்றுர்கள்‌. அவ்விதமே, சந்திரன்‌; சூரியன் ,
நக்ஷத்திரங்கள்‌ முதலியவைகளை நித்தியமாக நினை த்து அவைகளின்‌ தாரதம்மியம்‌ (நிலைமை) அடைய விரும்பினவராய் நாநாவிதமான கர்மங்களைச் சிலர்‌ அனுஷ்டிக்கிறார்கள்‌. அமரர்களாக வேண்டுமெனப்‌ பல தேவர்களை உபாஸிக்கின்‌றார்கள்‌.

அசுத்தத்தைச்‌ சுத்தமாய்‌ நினைத்தல்‌.–மாதாவின்‌ கர்ப்பாசயம்‌ என்ற இடம்‌, மாதா பிதாக்களின்‌ சுக்ல சோணித சம்பந்தத்தினால்‌ ஏற்படும்‌ உற்பத்தி நிலை,
மாதா உட்கொள்ளும்‌ உண்வினின்று சுண்‌டப் பெற்ற உணவு, கர்ப்பப்பையினின்று சிசு வெளிவந்த மேல்‌ உண்‌டாகும்‌ வியர்வை, மரணம்‌ முதலியன ௮சுத்தமாக இருக்கின்‌றன.
அவற்றைச்‌ சுத்தமென்று மதித்தல்‌, அசுத்தமாக இருக்கின்ற, சரீரத்தைச்‌ சுத்தமென்று மதித்தல்‌,
இவ்வித மதி யீ நத்தால்‌ ஸ்திரீகளைச்‌ சந்திரனைப் போலவும்‌ இன்னும்‌ பலவிசமாக வர்ணித்தலும்‌,,
பாபத்தைப்‌ புண்ணியமென நினைத்தலும்‌, தீயதை நலமெனக்‌ ௧௫தலும்‌ இவை போன்றவை இதில்‌ அடங்கும்‌.

துக்கத்தைச்‌ சுகமென்று நினைத்தல்‌, அறிஞர்‌ உலகத்தில்‌ உள்ள யாவும்‌ துக்கமெனக்‌ கருதுவர்‌,
பிறக்தோர் உறுவது பெருகிய துன்பம்‌
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்‌
பற்றின்‌ வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி -மணிமேகலைச் செய்யுள் இங்கு கவனிக்கத் தக்கது.

அநாத்மாவை ஆத்மாவாக நினைத்தல்‌:–அநாத்மாவாகிய புத்திர களத்திராதிகளையும்‌, போகத்‌திற்கு இருப்பி.மான
சரீரத்தையும் இந்திரியங்களையும்‌, மநத்தையும்‌ ஆத்மாவென நினைத்தல்‌.
நான்கு விதமாய்ச்‌ சொல்லப்பட்டிருக்கிற ௮வித்தையானது பெருகி வரும்‌ கிலேசங்களுக்குக்‌ காரணமாயும்‌, காமத்திற்கும்‌ அதின்‌ பலத்திற்கும்‌ இருப்பிடமாயும்‌, ஆகிறது.
அமித்ரன்‌ என்ற பதம்‌, மித்‌ரமின்மை என்ற அர்த்தத்தை மாத்திரம்‌ சூறிப்பிடாமல்‌ மித்ரன்‌ என்பதற்கு எதிரிடையான சத்துருவைக்‌ குறிப்பிடுகிறது ,
அவ்விதமே அவித்தை என்ற பதம்‌ ஞாநமின்மை என்ற அர்த்தத்தை மாத்திரம்‌ குறிப்பிடாமல்‌ வித்தைக்கு எதிரிடையான அவித்தை என்ற பதார்த்‌தத்தைக்‌ குறிப்பிடுகிறது , அவித்தை என்பது பாவ-வஸ்துவாம்‌–அபாவமன்று. .

பார்க்கிறவன்‌ (த்ருக்‌) பார்க்கச்‌ சாதநமான கருவியுடனே*(தர்சந அகங்காரத்துடனே) சேர்ந்து ஒன்றாய் இருப்பவன்‌ போல நடைபெறும்‌ நிலைமை அஸ்மிதையாம்‌. –6-

புருஷன்‌ பார்க்கிறவன்‌( திருக்‌). –தர்சநம்‌, பார்வை யென்றும்‌, பார்வைக்குச்‌ சாதநம்‌ என்றும்‌ பொருள்படும்‌. ஆனால்‌ இவ் விடத்தில்‌ சாதநமான அந்தக் கரணமாம்‌.–புருஷன்‌ அந்தக் கரணத்துடன்‌ சேர்ந்து ஒன்றாய்‌ இருப்பது போலத்‌ தோன்றுதல்‌ அஸ்‌மிதை ,
ஆத்மாவான புருஷன்‌ ௮நாத்மாவான அந்தக்காணத்தில்‌, நான்‌ அதாவது ஆத்மா என்றபிமானித்தல்‌ அஸ்மிதை என்பதாம்‌,-பரர்க்கிறவனான ஆத்மா பரர்வைக்குச்‌ சாதனத்தைத் தான்‌ என்றபிமாநித்தல்‌.-பார்வைக்குள்‌ சாதநமாவது அந்தக் கரணம்‌. இது
அகங்காரம்‌, புத்தி, சித்தம்‌, மநஸ்‌, எனப்‌ பிரியும்‌. இவைகளில்‌ அகங்காரம்‌ மூலம்‌, சித்தம்‌ என்பது முன்‌ அனுபவத்தைச்‌ சிந்திப்‌பது , மநஸ்‌ என்பது பிரக்ருதத்தில்‌ விஷயங்களை அறிவது, புத்தி என்பது ௮விவேகம்‌ ஏற்பட்டுச்‌ சந்தேகம் வரும் கால்‌ தீர்மானிப்பது .
ஆத்மா எப்போதும்‌ பரிணாமமில்லாதவன்‌. அந்தக் கரணம்‌ எப்‌போதும்‌ பரிணாமமுள்ளது . ஆத்மா சேதநன்‌, அந்தக் கரணம்‌ அநாத்மா -ஜடம் –
நாம் கோபம்‌, துக்கம் , சந்தோஷம்‌ முதலிய அனுபவங்கள்‌ அடையுங்கால்‌, .நான்‌ கோபி, துக்கி நான்‌ ஸந்தோஷி என்று சொல்லும் போது அந்தக் கரணத்துடன்‌ சேர்ந்து. அப்படி நினைக்கிறோம் .
ஆத்மா, அந்தக் கரணம்‌ இவைகளின்‌ உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தால்‌ கைவல்லியம்‌ ஏற்படும்‌.
சைவல்யம்‌ என்பது தன் நிலை ஆத்மாவும்‌ ௮ந்தக் கரணமும்‌ சம்பந்தப்பட்டால்‌ விஷயங்களின்‌ ௮னுபவம்‌ உண்டாகும்‌. இன்றேல்‌ தன்‌:நிலையில்‌ ஆத்மா இருக்கிறான்‌.

ஆசையானது ஸூகத்தையும்‌ ஸூக ஸாதநத்தையும்‌ நோக்கியதாக நடைபெறுகிறது.–7-

முன் அனுபவித்‌த ஸூகத்தின்‌ ஸ்மரணையால்‌, ஸூகத்தின் மீது அல்லது ஸூக ஸாதநத்தின்மீது உண்டாகும்‌ ஆசை ராகம்‌ எனப்படும்‌.
ஸுக சிந்தனையின் மேலுள்ள ஆசையும்‌ இதில்‌ அடங்‌கும்‌ |

வெறுப்பானது துக்த்தையும்‌ துக்க ஸாதநத்தையும்‌ நோக்கியதாக நடைபெறுகிறது.–8-

முன் அனுபவித்‌த துக்கத்தின்‌ ஸ்மரணையால்‌, துக்கத்தின் மீது அல்லது துக்க ஸாதநத்தின்மீது உண்டாகும்‌ வெறுப்பு த்வேஷம் எனப்படும்‌.
ஸுக சிந்தனையின் மேலுள்ள ஆசையும்‌ இதில்‌ அடங்‌கும்‌ |

அபிநிவேசம்‌ என்பது ஸ்வபாவமாய்‌ வாஸநா ரூபமாக நிகழ்வதாயும்‌ ஸாதாரண மனிதனிடத்தில்‌ போல வித்துவானிடமும் கூட ஸ்திரப் பட்டிருக்கிறதாயுமுள்ள ஓர் பற்று.–9-

உயிர்ப்பற்று , அதாவது . முன்‌ ஜந்மத்‌தின்‌ மரணானுபவம்‌ பின்‌ ஜந்மத்தில்‌ வாஸநா ரூபமாக விருந்து கொண்டு, ஆத்மாவானது சரீராதிகளினின்‌று விட்டுப் பிரிதல்‌ உண்டாகக் கூடாதென்ற மநோ விர்த்தி ௮பிநிவேசமாம்‌. இஃது எல்லாப்‌ பிராணிகளிடமும்‌ உள்ளது,
“நான்‌ இறக்காமல்‌ என்றும்‌ இருக்கக் கடவேன்‌ ”” என்ற பிரார்த்தனை ரூபமான விர்த்தி எல்லா ஜீவ.ராஸிகளிலும்‌ தவறாமல்‌ இருக்கின்றது.
மரண அனுபலமில்லானுக்கு இஃது இருக்கப் பாலதன்று. மரண பயம்‌ இருக்கின்றமையால்‌ பூர்வ ஐந்மம்‌ உண்டென்று அனுமாநிக்கலாகும்‌, பிறந்த புழுவுக்குங்கூட மரண பயம்‌ உள்ளது.-இது பிரத்தியக்ஷம்‌, அனு மாநம்‌, சப்தம்‌ என்ற பிரமாணங்களால்‌’ ‘உண்டாடகின்றதன்று, அறிவில்லானிடமும்‌, அறிவுள்ளானிடமும்‌ இது ஸமாநமாக இருக்கின்றது.

வாசநா ரூபமான ஸூஷ்ஷமமான கிலேசங்கள்‌ எதிரிடையான பரிணாமங்களால்‌ தள்ளத் தக்கன.–10-

கிலேசங்கள்‌’ஸ்‌தூலம்‌, ஸூஷ்மம்‌ என இரு வகைத்து -வாஸநா ரூபமானவை ஸுூ்ஷ்மமானவை.
யோகியின்‌ மநம்‌ ஸமாதியை யடையும் போது மேற் கண்ட ஐவகையான கிலேசங்கள்‌ வறுத்த வித்தைப் போலாகி மநத்துடன்‌ லயமடைகின்றன.
மநம்‌ விஷயங்களை நோக்கிப்‌ .பகிர் முகப்‌ படாமல்‌, தனக்குக்‌ கரணமான ௮ஸ்மிதையை நோக்கி அந்தர் முகப்பட்டு ஸ்வருப. நாசம்‌ பெறுகிறது
இது தான்‌ எதிரிடையான பரிணாமம்‌ பெறல்‌.-மநம்‌ நாசம் உறுகிறதனால் , ௮து சம்பந்தமாகவுள்ள. சூஷ்மமான
கிலேஸங்களும்‌ நாசமடைகின்‌றன.

(ஸ்தூலமான கிலேசங்களான) விர்த்திகள்‌ தியாநத்தினல்‌ தள்ளத் தக்கவைகள்‌.–11–

முன்‌ சூத்திரத்தில்‌ வாஸநா ரூபமான சூஷ்மமான. கிலேசங்கள்‌ அழிவுறும்‌ முறை உபேசிக்கப்பட்டது .
இந்த சூத்திரத்தில்‌ ஸ்தூலமான கிலேசங்கள்‌ (அவைகளே விர்த்திகளாம்‌)அழிவுறும்‌ முறை சொல்லப்படுகின்றது.-அதாவது அவைகள்‌ தியாநத்தால்‌ அழிகின்றன.-அழுக்கான வஸ்திரம்‌ தோய்க்கப் பட்டால்‌ அதன்‌ ஸ்தூலமான மலம்‌ முதலில்‌ போகின்றது – பின்பு உவர் மண்‌ முதலியவை சேர்த்‌துத் தோய்‌த்தால்‌ ௮தன்‌ சூஷ்மமான மலம்‌ போகின்றது.-மலத்தின்‌ வாஸனையானது வஸ்திரம் அழியும் வரை நிற்பதாகும்‌. வஸ்‌திரம்‌ அழிந்தால் அதுவும்‌ அழியும்‌; அவ்விதமே அடர்த்தியான,கிலேசங்கள்‌ கிரியா யோகத்தால்‌ பிரிந்து விலகியும் தியானத்தால் ஸூஷ்மமாகியும் பின்பு மநோ நாசத்தால்‌ நாசமடைகின்றன,

(புண்ணிய பாப) கர்மங்களின்‌ ஸம்ஸ்காரம்‌ கிலேசங்களை மூலமாக உடையது. இது திர்ஷ்டமான இந்த ஜந்மத்திலும்‌ அதிர்ஷ்டமான ஜந்மத்‌திலும்‌ அறியப்பாலது,–12-

கிலேசங்கள் இன்னவை என்ற நிரூபணம்‌ முன்னர்‌ ஏற்பட்டது. கிலேசங்கள் என்ற பெயர்‌ வருதலுக்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌,
அவைகள்‌ சாஷாத்தாக கேரில்‌ சுக துக்கங்களை உண்டு பண்ணா விட்டாலும்‌, கர்மங்களை உண்டு பண்ணி
அவைகள்‌ மூலமாய்‌ மனிதனைக்‌ கர்ம பலங்களை ௮னுபவிக்கும்படி.யாகச்‌ செய்‌கின்‌றமையால்‌ அவைகளுக்கு அப்பெயர்‌ ஏற்பட்டது.
இதில்‌ கர்மங்‌களின்‌ காரணம்‌, கர்மங்களின்‌ ஸ்வரூபம்‌, கர்மங்‌களின்‌ பலம்‌ இவை மூன்றும்‌ பிரஸ்தாபிக்கப்படுகின்றன,
அவித்தை முதலிய கிலேசங்‌களை முன் வைத்துத் தான்‌, புண்ணிய பாப கர்மங்களில்‌ பிரவிர்த்தி உண்டாகின்றது.
அதனால்‌ கிலேசங்கள்‌ கர்மங்களின்‌ காரணமாகும்‌.
கர்மங்களின்‌ ஸ்வரூபம்‌: மு.தலில்‌ ஸ்‌தூலமாக வெளிப்பட்ட கர்மங்‌கள்‌ இந்த ஜந்மத்திலோ வரும்‌ ஐந்மத்திலோ பலனைக்‌ கொடுக்கும்‌ வரையில்‌, ஸம்ஸ்கார ரூபமாக சூஷ்ம நிலைமையை அடைகின்‌ றது.-அது ஆசயம்‌ என்று சூத்திரத்தில்‌ சொல்லப் பெற்றிருக்கிறது .

கர்மங்களின்‌ பலன்‌ இருவகைத்து, ஒன்று, கர்மங்கள்‌ நிகழும் ஐந்மத்திலேயே பலன்‌ உண்டாகலும்‌ அனுபவித்தாலும் அறிதலுமாம்‌;
மற்றொன்று, இனி வரும்‌ ஜந்மாந்தரங்களில்‌ பலன்‌ உண்டாக, அதை அந்த அந்த ஐந்மாந்தரங்களில்‌ ௮நுபவித்தலும்‌ ௮றிதலுமாம்‌,

நந்திகேசுவரர்‌ மனிதனாகப்‌ பிறந்து தீவிர தபஸ்‌, மந்த்ர ஐபம்‌, ஸமாதி முதலியவைகளால்‌ ஈஸ்வர ஆராதனைகளைப்‌ புரிந்து
அவைகளின்‌ பயனாக ௮தே ஜந்மத்தில்‌ தேவஜாதி , தீர்க்க ஆயுஸ்‌, திவ்‌விய போகங்களையும்‌ அடைந்தார்‌,

விசுவாமித்திரர்‌ தீவிரமான தபஸ்‌ முதலியவைகளால்‌, ௮தே ஜென்மத்தில் உயர்ந்த ஜாதி, தீர்க்க ஆயுஸ்‌, ஸித்திகள்‌ இவைகளைப்‌ பெற்றார்

௮வ்விதமே உக்கிரமான பாப கர்மத்தால்‌ பலன்‌ இந்த ஜந்மத்திலேயே உண்டாகும்‌. நகுஷன்‌ முன்‌ ஜந்மத்தில்‌ செய்த புண்ணிய கர்ம பலனாக இந்திர பதவி பெற்றும்‌ உடனே கொடிய பாபம்‌ செய்ததினால்‌ ௮தே ஜன்மத்தில்‌ ஸர்ப்பமாக ஆனான்‌.

அதிர்ஷ்ட கர்ம பலன்களாவன:–இதே ஜந்மத்தில்‌ யாதொரு காரணமுமின்றி நன்மை அல்லது தீமையான ஸம்பவங்கள்‌ ஒருவனுக்கு நேரிடுகின்றன.
அவைகளின்‌ காரணத்தை ஆராய்வோமாகில்‌ அச் சம்பவங்கள்‌, முன்‌ ஜந்மங்களிற்‌ செய்த கர்மங்களின்‌ பலன்‌ எனவே மதிக்கத் தக்கன.
சில கர்மங்கள் செய்கின்றோம்‌. அவைகளின்‌ பலனை இனி வரும்‌ ஜென்மங்களில் ௮னு பவிப்போம்‌.

கர்மாசயத்திற்கு மூலமான கிலேசமானது இருந்தால் தான்‌, ஜநநம்‌ தீர்க்காயுஸ்‌, போகம்‌ என்றவை கர்மங்கவின்‌ பலனாக ஏற்படும்‌.–13-

கர்மங்களின்‌ பலன்கள்‌ ஏற்பட வேண்டுமாயின்‌ கிலேசங்கள்‌ இருத்தல்‌ வேண்டும்‌, அதனால்‌ கிலேசங்களின்‌ க்ஷயத்தை அடையும்‌ யோகிக்கு கர்ம பலன்கள்‌ இடையா என்று இதன்‌ மூலமாக ஏற்படுகிறது. யோகி யானவன்‌, பிரகிருதி புருஷ விவேகம்‌ பெற்று, அதனால்‌ கிலேசங்களைத்‌ தகிக்கிறான்‌. கிலேசங்கள்‌ போகவே, உமி போன நெல்‌ வித்தைப் போல; கர்மங்கள்‌ பலனைக்‌ கொடுக்கும்‌ தன்மையை இழக்கின்றன.

கர்ம பரிபாகம்‌ மூன்று விதம்‌:–
(1) ஜாதி, மக்கள்‌, தேவம்‌,நரகர்‌, விலங்கு முதலியன.
(2) ஆயுஸ்‌ உயிருடன்‌ இருக்கும்‌ காலம்‌ தீர்க்கமாக இருத்தல் வேண்டும்‌.
(3) போகம்‌, இது தான்‌ கர்மங்களின்‌ பலனுடைய அநுபவம்‌. முன்‌ ஜாதியும்‌ ஆயுஸும்‌ இதற்கு ஸாதநம்‌.

ஒரே ஜந்மத்தில்‌ பரஸ்பர விருத்தமான சுக , துக்க அனுபவங்கள் காணப் படுவதால் , முன்‌ கர்மங்களுள்‌ பரிபாகமுள்ள அநேகங்கள்‌ ஒன்று சேர்ந்து ஒரு ஜந்மத்தைக்‌ கொடுக்கின்றன என ஏற்படுகிறது-ஆனால்‌ ஒரு பெரிய கர்மம்‌ மாத்திரம்‌ அந்த ஜந்மத்தின்‌
பொது கதியை நடத்தும் ,–சிறியனவான பல கர்மங்கள்‌ அந்த ஜென்மத்தில் பல சமயங்களில்‌ சுகங்களையும்‌ துக்கங்களையும்‌ உண்டு பண்ணும்‌
சில கர்மங்கள்‌ பிறப்பையும்‌, சில ஆயுஸ்ஸையும்‌, சில போகத்தையும்‌ கொடுக்கின்றன
கர்மங்களின்‌ ஸ்வரூபத்தை அறிதல் மிகவும்‌ கஷ்டமானது.-
பொதுவாய்க்‌ கர்மங்கள்‌ இரண்டு விதமான தகைமைகளுடை,யன
(1) அவைகள்‌ செய்யப் பெறும்‌ ஜந்மத்திலே யாவது , வரும்‌ ஐந்மத்திலே யாவது சுக துக்கமான போகங்களை உண்டு பண்ணும்‌ இயல்பின.
(2) ஒரு விதமான கர்மத்தைச்‌ செய்‌து கொண்டு வருவதால் ,அத் தன்மையன கர்மங்களைச்‌ செய்யத் தூண்டும்‌ வாஸனை ஏற்படுகின்றது.
அவ் வாஸனை நன்மையாக இருப்பின்‌, விவேகத்தினால்‌ அதை யறிந்து , அதை விருத்தி செய்தலும்‌, அது தீமையாக இருப்பின்‌ வைராக்யத்தால் ௮தைத்‌ தவிர்த்து வேறு நல்ல கர்மத்தை அப்பியாஸம்‌ செய்தலும்‌ யோக சாஸ்திரத்தின்‌ உபதேசமாம்‌,
கர்மங்கள்‌ பூமியில்‌ பிறப்புக்கும்‌ இறப்புக்கும்‌ மத்ய காலத்தில் தான்‌ பெரும்பாலும்‌ ஏற்படுன்றன. இறந்த மேல்‌ மறு ஜந்மம்‌ ஏற்படும்‌ வரை அவைகள்‌ அநேகமாக உண்டாகின்றன அல்ல.
அப்போது முன்‌ கர்மங்களின்‌ அனுபவம்‌ மாத்திரம்‌ நிகழும் -சிறு பான்மையாய்‌ லோகாந்தரங்களில்‌ ஜீவன்‌ கர்மம்‌ செய்தல்‌ கூடும்‌.
மரண காலத்தில்‌ இனி வரும்‌ ஜந்மத்திற்குக்‌ காரணமாகும்‌ பரி பக்குவமான கர்மங்கள்‌ நன்றாய் வியக்தப்படுகின்றன ;-ஜீவனின்‌ பிரஞ்ஞையில்‌ தோன்றுகின்றன. இது விஷயமாகப்‌ ப்ருஹத்‌ ஆரண்‌ணியக உபநிஷத்‌, 4-வது அத்தியாயம்‌, 4-வது பிராஹ்மணம்‌,
2-ம்‌ மந்த்ரத்தையம்‌, அதன்மேல்‌ ஸ்ரீமத்‌ சங்கராசார்யரவா்களின்‌ பாஷ்யத்தையும்‌ பார்க்க.
பகவத் கீதை 8-ம்‌ அத்தி, 6-ம்‌ சுலோகமும்‌, 2-ம்‌ அத்தி. 78-ம்‌ சுலோகமும்‌ இங்கு கவநிக்கத்‌ தக்கன.

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.
ஸ்தித்வாஸ்யாமந்த காலேபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி—৷৷2.72৷৷

அர்ஜுனா இப்படிப்பட்ட நிலை ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது –
இதை அடைந்து மனிதன் மயக்கம் அடைவது இல்லை –
ஆயுளின் கடைசிப் பகுதியிலாவது இதில் நிலை நின்று ஆத்மாவை அடைகிறான்

யம் யம் வாபி ஸ்மரந் பாவம் த்யஜத் யந்தே கலேவரம்.—
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித-–৷৷8.6৷৷

அர்ஜுனா கடைசிக் காலத்தில் எந்த எந்த நிலையை நினைத்துக் கொண்டு சரீரத்தை விடுகிறானோ
அந்த அந்த நிலையையே அடைகிறான் -ஏன் எனில்
எப்போதும் அந்த நிலையிலேயே நினைவைச் செலுத்துகிறவன் அன்றோ
அந்திம ஸ்ம்ருதி -என்னை நினைத்து இருந்தவன் என்னை அடைகிறான் -ஜட பரதர் -மான் -விருத்தாந்தம் –
மானுடைய தன்மை போலே -சாயுஜ்யம் பெறுவோம் அவன் நினைவாகவே இருந்து –

இதனால் தான்‌, மரணகாலத்தில்‌ பகவந் நாமத்தை உச்சரித்தலும்‌ உபநிஷத்‌ முதலான பாராயணங்களும்‌ மரிக்கிறவன் காதில்‌ படும்படி.யாக உச்சரிக்கின்றார்கள்‌,
அவைகளால்‌ நல்ல சிந்தனை யுண்டாகி , அவன்‌ அச் சிந்தனைக்கு உரிய நற் கதியை யடைதல்‌ கூடும்‌ என்பதாம்‌.

அவை (ஜாதி, ஆயுஸ்‌, போகம்‌) சுக, துக்கங்களைப்‌ பலனாக்‌ உடையன -ஏனெனில்‌
அவைகளுக்கு (ஜாதி, ஆயுஸ்‌, போகங்களுக்கு ) புண்‌ணிய பாப கர்மங்கள்‌ காரணமாக இநக்கின்றமையால்‌.–14-

புண்ணிய, பாப கர்மங்கள்‌, ஜாதி, ஆயுஸ்களை உண்டு பண்ணுகின்றன, அவைகள்‌ உண்டாகவே, கர்ம பலங்களான சு௧ துக்கங்களின்‌ அனுபவம்‌ ஏற்படுகின்றது.-ஜாதி, ஆயுஸ்கள்‌ விலக்‌கப் படுவதற்காக உபாயத்தைத்‌ தெரிவிக்க இந்த சூத்தம்‌ எற்பட்டிருக்கிறது,

விவேகியாகிய யோகிக்கு எல்லாம்‌ (விஷய சுகம் எல்லாம்‌) துக்கமாகவே இருக்கின்றன. ஏனெனில்‌,
(விர்த்திகளின்‌) பரிணாமம்‌ (அவைகள்‌ நிகழங்காலத்தில்‌ உண்டாம்‌.) தாபம்‌, (பூர்வ ) வாஸனைகள்‌ துக்கமாகத்‌ தோன்றுகின்றன, தவிரவும்‌ குணங்களால்‌ உண்டாகும்‌ மநோ விர்‌த்திகள்‌ பரஸ்பர விரோதங்களாகவும்‌ இருக்கின்றன.–15-

(1) துக்கத்தைக்‌ கொடுக்கச்‌ கூடிய ஜாதி, ஆயுஸ்‌, முதலியவை தள்ளத் தக்கவை யாயினும்‌, சுகத்தைக்‌ கொடுக்கக்‌ கூடிய ஜாதி, ஆயுஸ்கள்‌ தள்ளத் தக்கவை யல்லவே என்ற வினவிற்கு இந்த சூத்திரம்‌ சமாதாநம்‌ சொல்லுகிறது . -யோகிக்கு எல்லாம்‌ துக்கமே
(2) விஷயசுகம்‌ அவித்தையா லேற்படுகிறது. சுகம்‌ என்பது கர்மேந்திரியம்‌, ஞாநேந்திரியம்‌, மநம்‌ இவைகள்‌ சலநமற்று’ ஒய்வடைதல்‌. ௮தாவது அவைகள்‌ திருப்தி யடைதல்‌.-அத்‌ திருப்தி. யில்லாமல்‌ ௮வை ௪ஞ்சலித்துக் கொண்டிருக்குமாகில்‌ துக்கப்‌ பிராப்தி யேற்படுகிறது. விஷய சுகக்களை யநுபவிப்பதினால்‌ அவைகளின்‌ ஆசை முடிவு பெறாது பெருகுவதாகும்‌.
தேள்‌ கொட்டுமெனப்‌ பயந்து ஸர்ப்பம்‌ கடிக்கப்‌ பெற்றால் போல, விஷய சுகங்களின்‌ போகத்தால்‌ திருப்தி பெற்று அவைகளின்‌ ஆசையைத் தொலைக்க கருதுகிறவனாவன்‌, இன்னும்‌ ௮திக ஆசை பற்றியவனாகி அதிகத் துக்கங்களுக்கு உள்ளாவான்

விஷய சுகங்களை அடிக்கடி அநுபவிக்க, காமாக்நி விருத்தி யடைகிறது. -இச்சை கொண்ட. விஷயம்‌ கிடைக்காவிடில்‌ துக்கமுண்டாகும்‌.
கிடைத்தாலும் அனுபவிக்க முடியாவிட்டாலும்‌ துக்கமுண்டாகும்‌. அனுபவித்தற்குத் தடை செய்பவர்களிடம்‌ துவேஷமுண்டாகும்‌.
தன்னிஷ்டப்படி. விஷய சுகங்களை யனுபவிக்கிறதினாலும்‌ வியாதிகள்‌ நேரிடுவதாகும்‌. இவை போன்று பரிணாமத்தின்‌ துக்கம்‌ நிகழும்‌,

விஷய சுகம்‌ அனுபவிக்குங்காலத்தில்‌, ,௮து நீடித்திருக்கமாட்‌டாதே என்ற கவலையும்‌, அதினால்‌ என்ன கெடுதல்‌ நேரிடுமோ என்‌ற கவலையும்‌ இவை போன்று தாபத்தின்‌ துக்கம்‌ நிகழும்‌.-ஸுக துக்க அதுபவங்களினால்‌ அவைகளின்‌ வாஸனைகள்‌ அமைகின்‌றன. ௮வை உண்மையில்‌ யோகிக்கு துக்கமே,
இதனால்‌ பகவான்‌ கௌதம புத்தர்‌ ஜந்மம்‌ துக்கம்‌, வியாதி துக்கம்‌, ஜரை துக்கம்‌, ஸகலமும்‌ துக்கமென்று உபதேசித்தார்‌.

வரப் போகின்ற துக்கம்‌ (பிரயத்தநத்தால்‌) தவிர்க்கத் தக்கது.-16-

(1) வியாதி, வியாதியின்‌ காரணம்‌, அதை நிவிர்த்திக்கும்‌ உபாயம்‌, ஆரோக்யம்‌ இந் நான்கும்‌ எவ்விதம்‌ வைத்திய சாஸ்திரத்தில் விசாரிக்கப்‌ படுகின்‌றனவோ, அவ்விதமே இந்த சாஸ்‌திரத்திலும்‌ (யல) தள்ளத் தக்கது இன்னது, ௮தன்‌ காரணம்‌,அதைத்‌ தவிர்க்கிறதற்கு உண்டான உபாயம்‌, பின்பு மோக்ஷம்‌ என்பன விசாரிக்கத் தக்கவை. இந்த சூத்ரம் முதலாவதான ஹேயத்தைப் பற்றியது

(2) மூன்று காலத்திலும்‌, துக்கம்‌ தள்‌ளத் தக்கதாக விருந்தாலும் இறந்த காலத்தைப் பற்றிய துக்கம்‌ அனுபவித்துச் சென்றமையாலும்‌, நிகழ் காலத்தைப் பற்றிய துக்கம்‌ ௮னுபவிக்கப்படுகின்‌றமையாலும்‌, அவைகள்‌ தள்ளுவதற்க்குச்‌ சாத்தியமானவையல்ல,
அதனால்‌ வருங்காலத்தைப் பற்றிய துக்கம்‌ மாத்‌திரம்‌ தள்ளத் தக்கது என்று இந்த சூத்ரம் அறிவிக்கிறது

புருஷனுக்கும்‌ புத்திக்கும் உள்ள சம்பந்தமானது (ஹேய) துக்கத்திற்‌குக்‌ காரணமாம்‌,–17-

(1) புருஷனிடத்‌தில் இருக்கின்ற சைதந்ய சக்த்தியானது புத்தியில்‌ பிரவேசிக்கின்றதினால்‌, உதாஸீநனான புருஷன்‌ திரஷ்டா எனப்படுகின்றான்‌.
திருஸ்யம்‌ என்னால்‌, பு,த்தியில்‌ தோன்றுகிற எல்லா விஷயங்களுமாம்‌. புத்தி யென்பது பிரதாநத்தின்‌ ௮தி சூஷ்மமான நிலைமை, –
மநஸ்‌, சித்தம்‌, அகங்காரம்‌, புத்தி முதலியன பிரக்ருதியின்‌ பரிணாமங்கள்‌.

(2) புருஷன்‌ ஹிருதய குகையில்‌ இருக்கிறான்‌. அவன்‌ ஸமீபத்திலிருக்கிறது புத்தி. அதனால்‌ புத்தியை மாத்திரம்‌ புருஷன்‌ அறியலாம்‌.
அதனால்‌ புத்தியைத்‌ திருச்யம்‌ எனச்‌ சொல்லலாம்‌.
மற்றைய வஸ்துக்கள்‌ புருஷனுடன்‌ ஸாக்ஷாத்‌ ஸம்பந்த மின்மையால்‌, அவைகளைத்‌ திருச்யம்‌ என எப்படிச்‌ சொல்லுதல்‌ கூடும்‌?
இதற்குச்‌ சமாதாநம்‌, புத்தியானது எல்லா விஷயங்களையும்‌ இந்திரியங்கள்‌ மூலமாய்க்‌ கிரஹித்து, அவ்வவ்விஷயங்கள்‌ ரூபமாகத்‌ தன்‌னைப்‌ பரிணமித்துக் கொள்ளுகின்றது. அத் தகைய புத்தியைப்‌ புருஷன்‌ சாஷாத்கரிப்பதால்‌, புத்தியில்‌ பரிணாமமாக அமைந்திருக்கின்ற எல்லா விஷயங்களையும்‌ புருஷன்‌ அறிந்தவனாக ஆகின்றான்‌.-அதனால்‌ எல்லா விஷயங்களும்‌ திருச்பமாக ஏற்படுகின்றன.

(3) புருஷனிடமுள்ள சைதன்னிய சக்தியைப்‌ புத்தி அடைவதாலும்‌ புருஷனுக்கு அடுத்து சமீபத்தில்‌ புத்தி இருக்கின்‌றமையாலும்‌ இரண்டும்‌ (புருஷனும்‌ புத்தியும்‌) ஒன்று போலத்‌ தோன்றுகின்‌றன. அயஸ் காந்தத்தைப்போல, புத்தியானது புருஷனிடமுள்ள
சக்தியை ஆகர்ஷித்த, புருஷனும்‌ தானும்‌ அபேதமாகத்‌ தோன்று கின்றது-.
இந்த அபேதப்‌ பிராந்தி தான்‌ அவித்தை என்னப்படும்‌,
இது தான்‌ துக்கதிற்குக் காரணம்‌. இப் பிராந்தியை விலக்குவதினால்‌ கைவல்லியம்‌ ஏற்படும்‌. முன்‌ தனிமையாக இருந்தால்‌ யாதொரு கெடுதியுமில்லை. ௮து காலில்‌ தைத்தால்‌ துக்கமுண்டாகிறது-அத்தைப் பிடுங்கி எறிந்தால்‌ துக்கம்‌ நீங்குகிறது -.
அது போல புத்திக்கும்‌ புருஷனுக்கும்‌ ஏற்பட்டிருக்கிற ஸம்யோகம்‌ நிங்கினால்‌ துக்கம்‌ நீங்குகிறது

(4)புத்திபின்‌ சத்துவத்தை, ரஜஸ்‌ தமோ குணங்கள்‌ மேல்‌ போக விடாமல்‌ பாதிக்கின்‌றன. அவை யிரண்டையும்‌ விலக்கி,
சத்துவகுணம்‌ மாத்திரம்‌ மேலிடும்படி செய்தால்‌, புத்தியானது புருஷ சாஷாத்காரத்தைப் பெறுகிறது .

திருசயம்‌ என்பது பிரகாசம்‌, கிரியை, இருத்தல்‌, இவைகளை உடையதாகவும்‌, பூதங்கள்‌, இந்திரியங்கள்‌ ரூபமாகவும்‌,
(புருஷனுக்கு) போக கைவல்லியங்களை& கொடுக்கக்‌ கூடியதாகவும்‌, இருக்கிறது.–18-

திருச்யத்தின்‌ ஸ்வரூபம்‌ இந்த சூத்திரத்தில்‌ சொல்‌லப்படுகிறது. பிரதாநம்‌ முதல்‌ பெளதிகங்கள்‌ வரை (ஸ்தாவர ஐங்கமங்கள்‌ வரை) யுள்ள ஸமஸ்த பதார்த்தங்களும்‌ திருச்யமெனப்படும்‌.-பிரகாசம்‌, கிரியை, இருத்தல்‌, என்பன முறையே சத்வ, ரஜஸ்‌, தமோ குணங்களின்‌ காரியமாம்‌. குணங்கள்‌ சூக்ஷ்மமாக விருக்கின்‌றமையால்‌, அவைகளைப்‌ பிரஸ்தாபிக்காமல்‌ அவைகளின்‌ காரியங்கள்‌ பிரஸ்‌தாபிக்கப்‌ பட்டிருக்கின்‌றன.-

பிரகாசம்‌ –ஸத்வ குணம்‌ மேலிடுதல்‌,
கிரியை –ரஜோ குணம்‌ மேவிடுதல்‌- சஞ்சலமாக இருத்தல்‌.
இருத்தல்‌ –மேற் கண்ட இரண்டும்‌ இல்லாமல்‌ மோக ரூபமாக இருத்தல்‌.
வஸ்‌க்கள்‌ குணங்களால்‌ தார தம்மியப்படு கின்றன. பிரதாநமே பஞ்ச தந் மாத்திரைகளாகவும்‌, பூதங்களாகவும்‌ கர்ம இந்த்ரியங்களாகவும் ஞாந இந்திரியங்களாகவும்‌ புத்தி, சித்தம்‌, மநஸ்‌, அஹங்காரங்களாகவும் பரிணமிக்கின்றது
போகம் அபவர்க்கம்‌, விஷய நுகர்ச்சி, வீடு அல்லது கைவல்லியம்‌ இவைகளைப்‌ புருஷனுக்குக்‌ கொடுக்கிறவைகளாக மேற் கண்ட பிரதாநத்‌தின்‌ பரிணாமங்களிருக்கின்‌றன.

சைவ ஸித்தாந்தத்தில்‌ சொல்லுகிறபடி தனு , கரண, புவந
போகங்கள்‌, புருஷன்‌ மேன்‌ மேலும்‌ சித்த சுத்தி பெற்றுக்‌ கடை முறையில்‌ வீடுபெற ஏற்பட்டி.ருக்கின்‌றன–

திருச்யம்‌ அல்லது பிரபஞ்சத்தின்‌ பிரயோஜநம்‌ யாது – புருஷன்‌ ௮னுபவம்‌ பெறுதலின்‌ பொருட்டாம்‌. புருஷன்‌ தன்‌ இயற்கை நிலைமையின்‌ அருமையையும்‌ பெருமையையும்‌ மறந்தான்‌.
ஒரு கதை–இந்த்ரன்‌ ஒரு காலத்‌தில்‌ பன்‌றியாக ஆயினான்‌; தன்‌ பெட்‌டைப்பன்றியுடனும்‌, குட்டிகளான பரிவாரங்களுடனும்‌ உல்லாசமாகவும்‌ சந்தோஷமாகவும்‌ காலங்கழித்தான்‌.
தேவர்கள்‌ இந்திரனின்‌ நிலையைக் கண்டு வியஸநமுற்று ஓ! பன்‌ றியே! நீவிர்‌ இந்திரனாவீர்‌.-நீவீர்‌ பன்றியாக உழலுவான் ஏன் என்று வினவ, இந்திரனான பன்றி சொன்னதாவது:–
*நான்‌ இந் நிலையிலேயே இருக்கட்டும்‌, இது எனக்குச்‌ சுகமாக இருக்கின்றது. தேவலோகம்‌ எனக்கு வேண்‌டாம்‌.”
இதைக்‌ கேட்ட. தேவர்கள்‌ வியப்புற்று இன்னவிதம்‌ செய்‌தால்‌ இந் நிலையை விட்டு இந்திரன்‌ திரும்புவார்‌ எனசத் தெரியாமல்‌:திகைப்புற்றார்கள்‌.
பின்பு ஒன்று ஓன்றாய்ப்‌ பன்‌றிக் குட்டிகளை அவர்கள கொல்ல ஆரம்பித்தார்கள்‌. கடையில்‌ பெண்‌ பன்றியையும்‌ கொன்றார்கள்‌.
எல்லாப்‌ பன்றிக் குட்டிகளும்‌ தன்‌ இணை பிரியாத பெட்டைப் பன்றியும்‌ இறந்த மேல்‌ பன்றி ரூபமான இந்திரன்‌.மிக வியஸனமுற்று -கோ! * என்று கதறி ௮ழுகவே, தேவர்கள் ௮ப்பன்றி சரீரத்தை வெட்டிப்‌ பிளந்தார்கள்‌.
அதனின்று திடீரென்று இந்திரன்‌ வெளிவத்து, இது என்ன கனவு! என்று சிரித்‌தான்‌, இவ்விதம்‌ புருஷன்‌ ப்ரக்ருதியுடன் ஸம்பர்சித்து , அபேத நினைவு கொள்ளுகிறான்‌.
சோஹாஹம்‌ சான்ற பாவநை பெறுகிறான்‌.-தன்னுடைய உண்மை நிலையை மறக்கிறான்‌. புருஷனான ஆத்துமா
உண்மையில்‌ சுத்தனுகவும்‌ ௮சங்கனாகவும்‌ இருக்கிறான்‌.
பிரபஞ்சமாகிய திருச்யத்துடன்‌ புருஷன் சம்பந்தம்‌ பெறுகிறதலினால்‌, சுக துக்கங்களுக்குட்பட்டவன்‌ போலக்‌ காணப் படுகிறான்
இச் சம்‌பந்தத்தை அனுபவத்‌தினால்‌ விலக்‌கிக் கொள்ளு தலின்‌ பொருட்டு யோக சாஸ்‌திரம்‌ பிரவிர்த்தித்தது (இது விவேகாநந்தர்‌ சொல்லியது )

விசேஷங்கள்‌, அவிசேஷங்கள்‌, லிங்கம்‌, அலிங்கம்‌, இவை(சத்வ, ரஜஸ்‌, தமஸ்‌) என்ற குணங்களின்‌ பரிணாமங்கள்‌.–19-

(1) விசேஷங்களாவன, பிருதிவி, அப்பு, தேஜஸ்‌, வாயு, ஆகாயம்‌ என்ற 5 மஹா பூதங்களும்‌, 5 கர்ம இந்திரியங்களும்‌ 5 ஞாந இந்திரியங்களும்‌, மநம்‌ 1, ஆக 16,-இவை எப்போதும்‌ மாறி மாறிக் கொண்டிருக்கின்‌றமையால்‌ ஸாங்க்ய சாஸ்‌திரத்தில்‌ விகாரங்‌கள்‌ எனப்‌ பெயர்‌ பெறும்‌.
இவை 16ம்‌ காரியங்களே அல்லாமல்‌ காரணமல்ல

(2) அவிசேஷங்களாவன பஞ்ச தன்மாத்திரைகள்‌, அகங்கார தத்துவம்‌ ஆக 6 இவை புத்தி (மஹத் தத்துவத்தின்‌) யின்காரியங்களாயும்‌, மேற்கண்ட 16 விசேஷங்களுக்குக்‌ காரணமாகவும்‌ இருக்கின்றன.
இவை புத்தியின்‌ காரியமாக இருக்கின்‌றமையால்‌ விகிருதி-என்றும்‌, விசேஷங்களுக்குக்‌ காரணமாக இருக்கின்‌றமையால்‌ பிரகிருதி என்‌றும்‌, இரண்டு தன்மைகளை உத்தசித்து பிரகிருதி விகிருதி என்றும்‌ பெயர்‌ பெறும்‌. ்‌

(3) லிங்கம்‌, மஹத் தத்துவம்‌: மூலப் பிரகிருதியான அலிங்கத்‌ தில்‌ இது லயமடைவதால்‌, இது லிங்கமெனப்‌ பெயர்‌ பெறும்‌,
(4) அலிங்கம்‌, மூலப்‌ பிரகிருதி, இது லயம்‌ அடையக்‌கூடியது, பிறிதொன்றுமில்லை. அதனால்‌ இது அலிங்க.மென்னப்படும் .
இது குணங்களுக்குள்‌ தார தம்மியமில்லாத ஸம்யா௮வஸ்தை
விசேஷங்கள்‌ 16-அவிசேஷங்கள்‌ 6, மஹத் தத்துவம்‌ 1,-மூலப்பிரகிருதி 1, ஆக தத்துவக்கள்‌ 24, புருஷன்‌ உள்பட. 25,

பார்க்கிறவன்‌ (புருஷன்‌) அறிவை (ஞாநத்தை) ஸ்வருபமாக உடையவன்‌- சுத்தன்‌, அதாவது பரிணாமமில்லாதவன்‌.-ஆயினும்‌ புத்தி விர்த்தியை அநுசரித்து விஷயங்களைக்‌ கிரஹிக்கிறன்‌,-20-

(1) புருஷன்‌ சுத்தனாய்‌ இருப்பினும்‌, புத்தியின்‌ விர்த்தி விசேஷங்களில்‌ பிரதி பிம்பிக்ககின்றமையால்‌, புத்தியின்‌ சலனங்கள் புருஷனுடையவையாக நினைக்கப் படுகின்‌றன,
(2) புருஷன்‌, சேதநன்‌. புத்தி, ௮சேதநம்‌. புத்திக்குப்‌ பல சாமக் கிரியைகள்‌ வேண்டும்‌. அவையாவன, இந்திரியங்கள்‌, விஷயங்கள்‌ முதலியன,
(3) புருஷன்‌ ஸ்வார்த்தன்‌, புத்தி பரார்த்தம்‌, சைதந்நியமே புருஷன்‌.

திருஸ்ய வஸ்துவின்‌ ஸ்வருபம்‌ (இருத்தலானது) அவனுடைய (புருஷனுடைய) பிரயோஜநத்திற்காகவாம்‌.–21-

(1) திருச்யம்‌, அதாவது வஸ்‌துக்களானவை கார்‌யம்‌, காரணம்‌, கரணம்‌, என குணத் திரயங்களாக இருக்கின்றன.
அவை புருஷனின்‌ போகத்தின்‌ பொருட்டும்‌, மோக்ஷத்தின்‌ பொருட்டுமாம்‌. பிருஹதாரண்ணியக உபநிஷத்தின்‌ மைத்திரேயி பிராஹ்‌மணத்தில்‌ இது பற்றி உபதேசம் உள்ளது
(2) திருஸ்ய வஸ்துக்களூக்கு அழிவு உண்டு, புருஷனுக்கு அழிவில்லை.
(3)அத்வைத வேதாந்திகளின்‌ அபிப்பிராயத்தில்‌, ப்ரஹ்மமே பிரபஞ்ச ஸ்வருபமாகத்‌ தோன்றுகிறது என்பதாம்‌.
சாங்க்ய யோகிகள்‌ மதத்தில்‌ புருஷனும்‌ பிரபஞ்சமும்‌ வேறாக இருப்பினும் புருஷனுடை.ப சம்பந்தமின்றி பிரபஞ்சம்‌ (ஸத்‌) இருத்தலைப்‌ பெறுதலின்றாம்‌.

போகம்‌, அபவர்க்கம்‌ இரண்டையும்‌ அடைந்த புருஷனை -முக்தனை -உத்தேசிக்க, பிரதாநம்‌ நாசமுற்றாலும் ,
அது முக்தனுக்கும் மற்றவர்களுக்கும்‌ பொதுவாய் உள்ளமையினால் போதா வரயுன்ளமையால்‌,
(அம்‌ மற்றவர்களை உத்தேசிக்க) நாசம் உறுகிறதில்லை.–22-

(1) யோகிகள்‌ மதத்தில்‌ புருஷர்கள்‌ பலர்‌. – ௮தனால்‌ ஒருவன்‌ முக்தி பெறுவதினால்‌, பிரதாநம்‌ அவனைக்‌ குறித்து நாசமடைந்தாலும்‌, மற்றவர்களுக்கு நாசமடைகிறதில்லை, வேதாந்திகள்‌ மதத்தில்‌, புருஷன்‌ ஒருவனே ஆயினும்‌, புருஷன்‌ பிரதிபிம்‌பிக்கின்ற உபாதிகள்‌ பலவாறாக இருக்கின்றமையால்‌, உபாதிகள்‌ நாசமுறும்‌ வரையில்‌ ஸம்ஸார பந்தம்‌ உண்டு.
(2) பிரதாநம்‌ ஒன்று, புருஷர்கள்‌ பலர்‌, இது சாங்க்ய யோகிகளின்‌ ஸித்தாந்தம்‌. -புருஷார்த்தம்‌ பெற்றவனுக்குப்‌ பிரதாநம்‌ இல்லை. புருஷார்த்தம்‌ பெறாதவனுக்கு, பிரதாநமானது, மஹதாதி ரூபமாகப்‌ பரிணமித்து , ஸம்ஸாரத்தை, யுண்டு பண்ணுகிறது.
இதனால்‌ ஒருவன்‌ முக்திப் பேறு மற்றவர்களுக்கு இன்றாம்‌ என்பது ஸித்தாந்தம்‌ பெறுகிறது

திருஸ்யம் , திரஷ்டா, இவ் விரண்டின்‌ சக்திகளின்‌ சம்பந்தமானது ஸ்வரூபத்தை அடைதலுக்குக்‌ காரணமாம்‌,–23-

(1) ஸ்வம்‌, திருச்யம்‌ அதன்‌ சக்தி என்றால்‌, ஜடத்‌தன்மை. பார்க்கத் தகுந்ததாக இருத்தல்‌ புத்தி முதல் .கீழ்க் கடையில்‌ உள்ள யாவற்றும்‌ திருச்யமாம்‌.
ஸ்வாமி என்றால்‌ (ஸ்வத்தை) உடையவன்‌, அதாவது புருஷன்‌, புத்தி (அந்தக்‌ கரணம்‌), விஷயமங்கள்‌ (திருச்யங்கள்‌) இருக்கின்றன.
புத்தி இந்திரியங்களுடன்‌ சேர்ந்து வெளி நோக்கி விஷயங்களைக்‌ கிரஹிக்க, போகங்கள்‌ உண்‌டா கின்றன, அதனால்‌ பந்தம் ஏற்படுகின்றது .
புத்தி, இந்திரியங்களின் சம்பந்தத்தைத் தவிர்ததுப்‌ புருஷனை அறிதல்‌ அபவர்க்கம்‌ எனப்படும்‌.-அதுவே கைவல்லியமாம்‌,
இவ்விதம்‌ யோகியான வன்‌ கைவல்லிய நிலையைப்‌ பெறவே, பிரதாநம்‌ இவனுக்கு, முன்‌ சூத்திரத்தில்‌ சொல்லியபடி நாசத்தை அடைகிறது,
கட உபநிஷத் இந்த்ரியங்கள்‌, மநம்‌, இவைகளுடன்‌ புருஷன்‌ சேருங்கால் போக்தா என்று அறிஞர்கள்‌ சொல்‌லுகிறார்கள்-இவைகளை விட்ட புருஷன்‌ முக்தனாகிறான் என்று சொல்லப்படுகிறது.

(3) ஸம்யோகம்‌ என்பது முன்‌ 1-வது குறிப்பில்‌ கண்டபடி.புத்திபின்‌ மூலமாய் விஷயங்களுடன்‌ சம்பந்தத் திலும்‌ விஷயங்களைத்‌ தவிர்த்து புத்தி புருஷனை சாஷாத்காரித்தலுமாம்-பிரகிருதி புருஷ ஸம் யோகத்தின்‌ முடிவான பிரயோஜநம்‌ யாதெனில்‌, புத்தி முதலில்‌ விஷயங்களுடன்‌ சம்பந்தம் பெற்று , விஷய நுகர்ச்சியின்‌ துக்கத்தை அனுபவத்தால்‌ அறிந்து அவைகளைச்‌ சிறுகச்‌ சிறுகத்‌ தவிர்த்து, வெளி நோக்கியதான புத்தி பின்பு அந்தர் முகப்பட்டு
ஆத்ம விஷயங்களில்‌ பயின்று , கடை முறையில்‌ ஆத்ம சாஷாத்காரம் பெறுதலுக்கேயாம்‌.
ஆத்ம ஸாக்ஷாத்காரம்‌ பெறவ, பிரக்ருதி புருஷ விவேகம்‌ ஏற்படும்‌. ஞாநம்‌, அதாவது புருஷ தர்சனம் பிரகிருதி புருஷ வியோகத்திற்குக் காரணமாம்‌,
அதர்சநம்‌ (அவித்யை ) பிரகிருதி புருஷ ஸம்யோகத்திற்குக்‌ காரணமாம்‌. அவித்யை என்ற திறை நீங்கவே , ஸ்வதஸ் ஸித்தமான கைவல்லியம்‌ ஸித்‌திக்கிறது.-இந்த தாvபரியத்தை ஸ்ரீ கீதையின்‌ முடிவில்‌ ௮ர்ஜுநன்‌ சொல்லி யிருக்கிறார்‌:–
மயக்கம் தீர்ந்தது -முன்னிருந்த ஞானத்தைத் திரும்பப் பெற்றேன்
இதில் ஸ்ம்ருதி -முன் நினைவு பத பிரயோகம் -எப்பொழுதும் ஜீவாத்மா ஸர்வஞ்ஞனாய் இருந்தும் மயக்கத்தால் அறியாதவன் போல் இருக்கிறான் -மயக்கம் நீங்கவே ஸ்வ பாவிகமான ஞானம் வெளிப்படுகிறது

அதற்கு (பிரகிநதி புருஷ ஸம்யோகத்திற்கு )க் காரணம்‌ அவித்தையாம்‌.–24-

முன்‌ சூத்தாத்தில்‌ ஸம்யோகத்தின்‌ ஸ்வரூபம்‌,காரியம்‌, இரண்டும்‌ சொல்லப்பட்டன. இந்த சூத்திரத்தில்‌ அதன்‌ காரணம்‌ சொல்லப்படுகிறது.
அவித்யை (பிராந்தி ஞாநத்தினல்‌ உண்டாகிற வாஸனை ) ஸம்‌யோகத்திற்குக்‌ காரணம்‌. திரஷ்டாவையும்‌,-திருச்யத்தையும்‌ ஒன்று படுத்தி, நான்‌ என நினைத்தல்‌ பிராந்தி. அந்த பிராந்தி வாஸநை யுடன்‌ கூடிய மனமானது பிரளய காலத்தில்‌ பிரதானத்தில் லயம் அடைந்து
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அந்த பிராந்தி வாஸநை யுடன்‌ வெளி வருகிறது.-இத் தன்மையான மநஸ்ஸி னால்‌ தான்‌ பந்தம்‌ உண்டாகிறது
அதனால்‌ அநாத்மாவில்‌ ஆத்மாவை நினைத்தும்‌,நான்‌ எனது என்ற பாவனைகளை ஜீவன்‌ விருத்தி செய்கிறான்‌,

அது (அவித்தை) இல்லாமல்‌ போதலினால்‌ முன்‌ சொல்லிய) புத்தி, புருஷன்‌ இரண்டின்‌ ஸம்யோகம்‌ அற்றுப்போகின்றது.
(இதற்கு) ஹாநம்‌ என்று பெயர்‌, அதுவே (இந்த ஹாநம்‌ நிகழ்தல்‌) சைதந்நிய ஸ்ரூபியாகிய புருஷனுக்குக்‌ கைவல்லியமாம்‌,–25-

முன்னர்‌ தள்ளத் தக்ககான துக்கம்‌ இன்னதென்றும்‌
துக்க காரணம்‌ இன்னதென்றும்‌, நிரூபணம்‌ செய்து ஹாநம்‌ (வீடுதல்‌) என்பது இன்னது என்று இந்த சூத்திரத்தில்‌ வியவஹரிக்‌கிறார்‌.
பந்த நிவிர்த்தி ஏற்பட்டால்‌ ஸ்வதஸ் ஹித்‌தமான ‘ புருஷ ஸ்வரூபம்‌ வெளியாகிறது என்று முன்‌ சொல்லியபடி, இப்போதும்‌ அவிததை நிங்கவே, புருஷ ஸ்வரூபம்‌ ஸித்திக்கிறதென்று இந்த சூத்திரத்தில்‌ சொல்லப்படுகிறது

ஸ்திரமான விவேக ஞாநம்‌ முன்‌ சொல்லிய ஹாநம்‌ பெறுதலுக்குச்‌ சாதநமாம்‌.–26-

(1) விவேகம்‌, திரஷ்டாவான புருஷன்‌ வேறு, திருச்யமாகிய புத்தி முதலிய பிரபஞ்சம்‌ வேறு, என ஆராய்‌தல்‌.
ஞாநம்‌, அதை அறிதல்‌. விப்லவம்‌ என்றால்‌ மித்தியா ஞாநம்‌.
(2) முதலில்‌ சாஸ்‌திர ஞாநத்தால்‌ விவேக ஞாநமானது சாதாரணமாய்‌ உண்டாகிறது. ௮ஃது அனுபவமில்லாமல்‌ பரோக்ஷ ஞாநம்‌ ஏற்படுகிறது.
பின்பு மநத்தினால்‌ அந்த சாஸ்‌திர ஞாநம்‌ திடப்பட்டும்‌, விஷயங்களில்‌ மநத்திற்கு வைராக்கியம்‌ உண்டாக்கியும்‌,
அதனால்‌ மநஸ்‌ ஆனது அந்தர் முகப்பட்டு, புருஷனையே நிரந்தரமாகத் தியானித்து மனஸ் ஆனது புருஷ ஸ்வரூபத்தைப்‌ பெறுகிறது.
இதைத் தான்‌ அவிப்லவ* என்ற பதம்‌ விவரிக்கிறது.

அவனுடைய (அந்த யோகியினுடைய) பிரஜ்ஜை யானது கட முறையில்‌ ஏழு படிகளை உடையது.–27-

(1) ஸ்திரமான்‌ விவேகத்தை யுடைய யோகியின்‌ பிரஞ்ஜைக்கு ஏழு படிகள்‌ உள்ளன.
i அறிய வேண்டியவை அறியப் பட்டன. இனி அறிய வேண்டியவை ஒன்றுமில்லை. இந்த பூமியில்‌ ஸர்வ ஸம்சயங்களும்‌ நிவிர்த்தி அடைகின்றன, தன்னை அறிய வேண்டுமென்ற விருப்பம்‌ மாத்திரம்‌ உள்ளது. ்‌
ii, பந்தத்‌துக்குக் காரணமான கிலேசங்கள்‌ எல்லாம்‌ நாசம்‌
பண்ணப் பெற்றன. ஸர்வ துக்கங்களும்‌ நிவிர்த்தி யடைகின்‌றன.
iii, இனி அடைய வேண்டியவை ஒன்றுமில்லை. ஸர்வ காமப்‌ பிராப்தி உண்டாகின்றது. இப்போது இவனுக்கு ஆப்‌த . காமன்‌ என்று பெயர்
iv. இனிச்‌ செய்ய வேண்டியவை ஒன்றுமில்லை. – நான்‌ கிருத கிருத்தியன்‌ என்ற ஞாநம்‌ உண்டாகிறது
v–சர்வ கார்ய நிவர்த்தி ஏற்படுகிறது, புத்தியானது நிர்‌மலமாகி சோக நிவிர்த்தியைப்‌ பெறுகிறது ,
ஆறாம்படியில்‌ புத்திக்கே காரணமான குணங்கள் இவனை விட்டு நழுவிப் பிரதாநத்‌தில்‌ லயமடைகின்றன. புத்தியும்‌ சூந்யம்‌ பெறுகிறது.
இதில்‌ “அபயம்‌?” என்று உபநிஷத்துக்களில்‌ சொல்‌லப் பெறும்‌ நிலை ஏற்படுகிறது .
7-இதில்‌ புருஷன்‌ தனிமையாக இருக்கிறான்‌. எல்லா ஸம்பந்தங்களும்‌ விலக, கேவலனாக இருக்கிறான்‌. இதுவே கைவல்‌லிய நிலை,

முதல் நான்கு படிகளில்‌ கார்யங்களினின்‌று கிரமமாக விடுதலையும்‌ ஐந்தாம் ஆறாம் படிகளில்‌ காரணங்களினின்‌று விடுதலையும்‌ ஏற்படுகின்றன. ஏழாம்படியில்‌, ஸ்வரூப மாத்ரமாக புருஷன்‌ இருத்தலும்‌ எற்படுகிறது.

உபநிஷத்துக்களும் மேற்கண்ட ஏழு படிகளையும் அடியில்‌ வருமாறு சொல்லப் படுகிறன:

காரண ரூபத்தில் பரமாயும் -கார்ய ரூபத்தால் அபரமாயும் -இருக்கின்ற அந்த பரமாத்மாவை ஒருவன் பார்ப்பானாகில்
ஹ்ருதயத்தின் கண் உள்ள அவித்யா வாஸனா மயமான பந்தங்கள் பேதிக்கப் பெற்று விட்டுப் போகின்றன
ஸமஸ்தமான ஸம்சயங்களும் நாசமுறுகின்றன -இந்த ஞானியின் ஆகாமி ஸஞ்சித கர்மங்களும் நசிக்கின்றன

நான்‌ ஏதோ காரணத்தால்‌ சுப கர்மத்தைச்‌ செய்யாமற்‌ போனேனே, ஏதோ காரணத்தால்‌ பாப கர்மததைச்‌ செய்தேனே என்ற தாபத்தால்‌ ௮ந்த ஞாநியானவன்‌ தபிக்கப் பெறுகிறானில்லை.

அந்த ஞாநி , பிரஹ்மமாக இருந்து , ஒரே காலத்தில்‌ எல்லாக்‌ கர்மங்களையும்‌ ௮டைகிறான்‌.
ஒருவன்‌ தன்‌ ஸ்வரூபம் இன்னதென்று அறிவானாகில் , அவன்‌ செய்ய வேண்டிய காரியம்‌ என்ன? ௮வன்‌ செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, என்‌றபடி..

எங்கும்‌ ஆத்மா ஒன்றையே பார்க்கிறவனுக்கு மோஹம்‌ ஏது சோகம்‌ ஏது ?

ஆத்மாவை அறிந்தவன் பயமற்ற நிலையைப் பெறுகிறான்

பிரஹ்மமானது ஸத் ரூபமாயும்‌, சித் ரூபமாயும்‌, ப்ரிச்சேதமில்லாததாயும்‌ இருக்கிறது. பிரஹ்மத்தை அறிந்தவன்‌ பிரஹ்மமாகவே ஆகிறான் –

யோக அங்கங்களை அநுஷ்டிப்பதினால்‌ மநத்தின்‌ மலம்‌ குறையக்‌ குறைய, புருஷ ஸாக்ஷாத்காரம்‌ வரையில்‌, ஞாநப் பிரகாசமானது மேன்‌மேலும்‌ உண்டாகிறது.–28-

ஜந்து வகையாயுள்ள (அவித்தை, அஸ்மிதை, ராகம்‌, துவேஷம்‌, அபிநி வேசம்‌)விபரியய ஞாநம்‌ யோகாங்கங்களான யமம்‌,நியமம்‌, முதலியவைகளைச்‌ சரியாய்‌ அப்பியஸிப்பதினால்‌ குறைவு படுகிறது.-அதன்‌ முடிவில்‌ புருஷ தர்சநம்‌ எற்படுகிறது. யோக அங்கங்களை அனுஷ்டித்தால்‌ பிரகிருதி புருஷ விவேக ஞாநம்‌ தானே உண்டாகின்றது.-அவ் வனுஷ்டாநத்தால்‌ மந மலம்‌ நீங்கவே, ஸ்வதஸ் ஸித்தமான புருஷனின்‌ ஸாக்ஷாத்கராரம்‌ ஏற்படுகிறது.

யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, பிராணயாமம்‌, பிரத்தியாஹாரம்‌, தாரணை தியாநம்‌, ஸமாதி என்பன யோக முறையில் எட்டு அங்கங்களாம்‌.–29-

(1) இதில்‌ சொல்லப்பட்டிருக்கிற வரிசையில்‌ முன்னதை அப்பியஸிக்காமல்‌, பின்னதை மாத்திரம்‌ அப்பியஸித்‌தால்‌ பிரயோஜநம் அன்று.
உதாரணமாக யமம்‌ மாத்திரம்‌ தனித்‌து அப்பியஸிக்கலாம்‌, யமம்‌ இன்றி, நியமம்‌ முதலியவற்றை அப்பியஸித்தால்‌ பிரயோஜநமுண்டாகாது. அப்படியே யமம்‌, நியமம்‌ இன்றி ஆஸநம்‌ மாத்திரம்‌ பிரயோஜாமின்றாம்‌. அப்படியே பின்‌னுள்ளவைகளைப் பற்றியும்‌ அறிந்து கொள்க, .

முதல்‌ பாதத்தில்‌ பிரஸ்தாபித்துள்ள அப்பியாஸம்‌,வைராக்கியம்‌, வீரியம்‌ முதலியவை யமம்‌ முதலியவைகளுள்‌ அடங்‌கும்‌.
அப்படியே வேதாந்திகள்‌ சொல்லுகிற விவேகம்‌, வைராக்கியம்‌, ஷட் ஸம்பத்தி, முமுஷுத்துவம்‌ இவைகளும்‌ யமம்‌ முதலியவைகளுள் அடங்கும்

அஹிம்ஸை, சத்தியம்‌, களவின்மை, இந்திரிய நிக்கிரஹம்‌, திரவிய அபேக்ஷையின்மை, இவை யமத்தின்‌ ஸ்வரூபங்களாம்‌-30-

அஹிம்ஸை: –மநம்‌, வாக்கு, காயத்தால்‌ எவ்விதத்‌தாலும்‌, எக் காலத்திலும்‌, எப் பிராணிக்கும்‌ ஹிம்ஸை செய்யாதிருத்தல்‌.
சத்தியம் முதலான மற்றையவை அஹிம்ஸை என்ற தர்மத்தைச்‌ சுத்தம் செய்வதற்கும்‌, பூர்த்தி பெறச்‌ செய்வதற்கும்‌ ஏற்பட்ட ஸாதநங்கள்‌.
அஹிம்ஸை என்ற ,தர்மத்தைப்‌ பரிபாலிக்காமல்‌ மற்றைய கர்மங்களை அனுஷ்ட்டித்தல் பிரயோஜனம் இல்லை. அஹிம்ஸை என்ற தர்மம்‌ மற்றைய தர்மங்களின்‌ அனுஷ்டாநம் இன்‌றி பூர்‌த்தி பெறாதாகையால்‌, அவைகள்‌ முக்கிய ஸாதநங்களாம்‌.

ஸத்தியம்‌:–பிறர்‌ நன்மையின்‌ பொருட்டு, பிரமாணங்களால் கிரஹித்து மநத்தால்‌ நினைத்தபடி வாக்‌கினால்‌ சொல்லுதல்‌.
இதைக்‌ கேட்கிறவன்‌ உள்ளபடி. கிரஹிக்கும்படியாகச்‌ சொல்ல வேண்டும்‌,
வஞ்சகமும்‌ கபடமுமுள்ளதாயும்‌, கேட்கிறவன்‌ உள்ளபடி அறியாமலிருக்கும்படி யாகவும்‌ மொழிதல்‌ சத்தியமன்று, உண்மையாயிருப்பினும்‌, பிராணிகளுக்கு நன்மை பயக்கக் கூடிய மொழி மாத்திரம்‌ சத்தியமாகும்‌. உண்மையாயிருப்பினும்‌ தீமை பயக்கக்‌ கூடியவை ௮சத்தியமேயாகும்‌,
ஒருகால்‌ நன்மை உண்டு பண்ணக்‌ கூடியதான பொய்யும்‌ சத்தியத்தின்‌ பெருமையைப்‌ பெறும்‌.
பொய்ம்மையும்‌ வாய்மை யிட,த்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்‌..–என்ற குறள்‌ இங்கு கவனிக்கத்‌ தக்கது,
மனுவின்‌ வசநம்‌ இதுவாம்‌–உண்மை பேசு, ௮து பிரிய கரமாக இருத்தல்‌, வேண்டும்‌. உண்மையான வார்த்தையாயினும்‌, பிரியமினறேல்‌,
அதைச்‌ சொல்லுதலைதத் தவிர்‌, பிரியமானதென்று பொய்யைப்‌ பேசாதே.

களவின்மை:–பலாத்காரமாகவாவது, இரஹஸ்யமாகவாவது,பிறர்‌ பொருளை அபஹரிக்காமல்‌ இருத்தலும்‌, அத் தன்மையான சிந்தனையைத் தவிர்த்தலும்‌, இந்திரிய நிக்கிரஹம்‌ அல்லது பிரஹ்மசர்யம்‌,ஸ்‌த்ரீகள் பற்றிய காமனைகளைத் தவிர்த்தலுமாகிய இவையே களவின்மையாம்‌.
ஸ்திரீகள்‌ பற்றிய காமனைகள்‌: இது 9 வித,மான அங்கங்களை யுடையன.
(1) ராகத்துடன்‌ ஸ்திரீகளைப்‌ பார்த்தல்‌ (2) ஸ்பர்சித்தல்‌, (3) அவர்கள்‌ வார்த்தைகளைக்‌ கேட்டல்‌,(4) அவர்களைச்‌ சிந்தித்தல் (5) அவர்களைப் பற்றிப்‌ பேசுதல்‌,
(6) அவர்களுடன்‌ விளையாடல்‌, (7)அவர்களுடன்‌ பேசுதல் (8) அவர்களைப் பற்றி ஸங்கற்பித்தல்‌, (9) அவர்களுடன்‌
ஸம் ஸர்கம்‌ செய்தல்‌ என்பவைகளாம்‌.

பிரஹ்மசர்யம்‌:–பிரஹ்ம வேதத்தை உத்தேசித்து, சர்யம்‌-நியமங்களை அனுஷ்டி.த்தல்‌. வேதாத்தியயநம்‌ செய்தலுக்கு, இந்திரிய நிக்ரஹம்‌ . முக்கியமானதால்‌, பிரஹ்ம சர்‌யம் என்ற பெயர்‌ இந்திரிய நிக்கிரஹத்திக்கு எற்பட்டு விட்டது .

திரவிய அபேஷை இன்மை:–சரீர யாத்திரைக்கு இன்றியமை யாவைகளைத் தவிர மற்ற விஷயங்களில்‌ பிர விருத்தி இல்லாமல் இருத்தல் என்பது இதன்‌ முக்கிய கருத்து.-சொத்தைச்‌ சம்பாதித்தல் அத்தைப் பேணுதல் அதற்காகப் பிறரை ஹிம்ஸித்தல்‌ இவைகளைத் தவிர்க்க வேண்டும்‌.

ஜாதி, தேசம்‌, காலம்‌, ஸமயம்‌ இவைகளின்‌ வரம்புக்கு உட்படாமல்‌, யோகத்தின்‌ எல்லாப்‌ பூமீகளிலும்‌, யமம்‌ என்ற விரதமானது அநுஷ்டிக்கத் தக்கது, இதைப்‌ பூர்ணமாக அனுஷ்டித்தல்‌ மஹாவிரதம் எனப்படும்‌.–31-

உதாரணமாக, மீன்‌ பிடிக்கிறவன்‌ மீனை மாத்திரம்‌ ஹிம்ஸித்தல்‌ கூடும்‌ என்று சொன்னாலும்‌, மற்றவைகளைத்‌ தவிர்த்தல் ஜாதி,
கோவில்‌ முதலிய புண்ணிய ஷேத்திரங்களில்‌ ஹிம்ஸித்‌ தலை விலக்கல்‌– தேசம்‌,
அமாவாஸ்யை முதலிய பருவ காலங்களில்‌ தவிர்த்தல்‌–காலம்‌.
சிராத்தம்‌ முதலியவைகளில்‌ தவிர்த்தல்‌ ஸமயம்‌.
இப்படியே சத்தியம்‌ முதலிய யமங்களையும்‌ சேர்த்து ஆராய்ந்து கொள்ளுக.

பரிசுத்தம்‌ செய்து கொள்ளுதல்‌ ஸந்தோஷம்‌,(தபஸ்‌) துவந்தங்‌களைச்‌ சகித்தல்‌, (ஸ்வாத்தியாயம்‌) யோக ஸித்திக்கநுகூலமான மந்த்ரங்‌களை ஜபித்தல்
(ஈஸ்வரப்‌ பிரணிதாநம்‌) எல்லாக்‌ கர்மங்களையும்‌ ஈஸ்வரனிடம்‌ அர்ப்பணம்‌ செய்தல் , நியமமாம்‌.–32-

பரிசுத்தம்‌ செய்து கொள்ளுதல்‌ இரு வகைத்து -ஓன்று பாஹ்ப செளசம்‌, ஜலம் முதலியவைகளால்‌ ஸ்தால சரீரத்தைச்‌ சுத்தம் செய்தல்‌.
இரண்டாவது ஆந்த்ர செளசம்‌ — மைத்ரீ,
முதிதா முதலிய ஸத்‌ பாவங்களால்‌ மநத்தின்‌ மலத்தை நீக்குதல்‌.
ஸந்தோஷம்‌ : கிடைத்ததை வைத்துத்‌ திருப்தி பெறல்‌,
தபஸ்‌ : காயக்‌ கிலேசத்திற்குரிய சாந்த்ராயண விரதத்தை அனுஷ்டித்தல் — ஸுக துக்கங்களான துவந்தங்களை ஸகித்தல்‌.
மற்றவைகள்‌ சூத்திரத்தின்‌ அர்த்தத்திலேயே விளங்கும்‌.

யம நியமங்களுக்கு விருத்தமான சங்கற்பங்களால்‌ தடைகள் நேரிடுமாகில் அச் சங்கற்பங்களின்‌ தோஷங்களை நினைக்கப்பாலது,- –33-

யோகத்திற்தத்‌ தடைகளான ஹிம்ஸை முதிலியன, தான்‌ நேரில்‌ செய்தாலும்‌, பிறரைச்‌ செய்யும்ப்டி ஏவினாலும்‌, அதைச்‌ சரியென்று அநுமோதித்தாலும்‌, (எல்லாம்‌ பாபமே யென்றும்‌), அவை ஆசையினாலாவது, கோபத்தினாலாவது, மோஹத்தினாலாவது உண்டாயினும்‌, அவை அற்பமாயினும்‌, மத்திமமாயினும்‌, அதிகமாயினும்‌ ஏற்பட்டாலும்‌, அவை முடிவில்லாத்‌ துக்கங்களுக்கும்‌, அறிவில்லாமைக்கும்‌ காரணமாகின்றன எனச்‌ சிந்திக்கத் தக்கவை.–34-

(1) இந்த சூத்திரத்தில்‌ யம, நியமங்களுக்கு விரோதிகளான எண்ணங்களின்‌ ஸ்வரூபத்தையும்‌, அவை உண்டாகும்‌
பிரகாரத்தையும்‌, காரணங்களையும்‌, உட்பிரிவுகளையும்‌, ௮வைகளின்‌ பயன்களையும்‌ விவரித்திருக்கிறார்‌.
(2) துக்கங்கள்‌ என்றால்‌ துக்கங்களுக்கு உரிய ௮நேக ஜென்மங்கள் என்று தாத்பர்யம்‌.

அஹிம்ஸை ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறும் பொழுது, அந்த யோகியின்‌ முன்னர்‌ பகைமை போய் விடும்‌.–35-

அ்‌த் தர்மத்தை அனுஷ்டிக்கிறவன்‌ முன்னிலையில்‌ பரஸ்பரம்‌ வைரியாயுள்ள ஜீவ ராசிகளும்‌ கூட விரோதத்தை விட்டு,பரஸ்பரம்‌ அன்பு பாராட்டும்‌.
உதாரணம்‌: பசு, புலி; பாம்பு, கீரி;எலி, பூனை முதலியனவாம்‌. மஹா தேவரின்‌ குடும்பம்‌ இங்கு கவனிக்கத் தக்கது —

ஸத்திய விரதம்‌ ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, யோகியின்‌ வார்த்‌தை கர்ம பலத்தை உண்டு பண்ணும்‌ தன்மையை உடையதாகிறது.–36-

ஸத்தியம்‌ என்ற தர்மம்‌ பூர்ணமாக ஏற்படவே, யோகியின்‌ வார்த்தை பலிக்கக் கூடிய து. விளையாட்டில்‌ சொன்னாலும்‌ கூட பலிக்கும்‌. நன்மை, தீமை என்ற இரு பலன்களையும்‌ அளிக்கும்‌. ௮வன்‌ வார்த்தை தவறாது :

களவின்மை ஸ்திரப்பட்டுப்‌ பூர்ணமாகவே, எல்லா விடத்திலும்‌, எல்‌லாக்‌ காலத்திலும்‌ ரத்நங்கள்‌ ழதலிய எல்லாப்‌ பொருள்களும்‌ அவனை யடையும்‌–37-

பிரஹ்ம சர்யம்‌ ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, வீர்ய லாபம்‌ உண்‌டாகும்‌.–38-

வீர்யத்தை வியயம்‌ பண்ணாமல்‌ உள்ளே அடக்க, மநத் தெளிவு, புத்தி நுட்பம்‌, தைர்யம்‌, பலம்‌ உண்டாகும்‌. அஷ்ட, ஸித்திகள் எற்படும்‌,–

பிரதி க்ரஹ்ம்‌ இல்லாமை ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, பிறப்பின்‌ காரணம்‌ தெளிவு பெறும்‌.–39-

பிறரிடம்‌ யாதொன்றையும்‌ கிரஹிக்காமலும்‌ இச்சிக்‌காமலும்‌ இருத்தல்‌ ஸ்‌திரப்படுமாகில்‌, யோகி யானவன்‌
பிரகிருத ஐந்மம்‌ உண்டாதலுக்கு யாது காரணம்‌ என்றும்‌, முன்‌ ஜந்மங்களில்‌ தான்‌ செய்த கர்மங்கள்‌ இன்னவை யென்றும்‌,
அவை இனி எத்‌தனை ஐந்மங்களை உண்டு பண்ணுமென்றும்‌, தான்‌ கைவல்யம்‌ பெறும்‌ வரை ஏற்படும்‌ ஜந்மங்கள்‌ இன்னவையென்றும்‌ அறிவான்‌.

பிறர்‌ உதவியை நாடான்‌, என்பதனால்‌, தான்‌ தனித்து நிற்கும்‌ தகைமையை யுடையவனாவான்‌. ஜநநத்தை உண்டு பண்ணும்‌ இரணத்தை இனிச்‌ செய்யான்‌.
௮தனால்‌ ௮வன்‌ மநம்‌ தூய்மை பெறுகிறது. அந் நிலையின்‌ பயனாய்ப்‌ பிறப்பு இன்னதென்பதையும்‌,௮தன்‌ பிரகாரத்தையும்‌ (மக்கள்‌, தேவர்‌, நரகர்‌ முதலியவைகள்‌),பிறப்‌பின்‌ காரணங்களான கிலேசங்களையும்‌ கர்மங்களையும்‌, அதன்‌ பலனான துக்கத்தையும்‌, முடிவான புருஷ ஸாஷாத் காரத்தையும் குரு உபதேசத்தால்‌ அறிகிறான்-

சவ்சம்‌ (சுத்தம்‌) பூர்ணமாக ஏற்படவே தன்‌ அவயவங்களில்‌ அருவருப்பும்‌, பிறருடன்‌ சேராமலிருத்தலும்‌ உண்டாகின்றன.–40-

இனி , நியமங்களின்‌ ஸித்திகளைச்‌ சொல்‌லுகிறார்‌. தன்‌ சரீரத்தை அடிக்கடி உள்ளும்‌ புறமும்‌ சுத்தி செய்து வரவே, அதன்‌ ஆராய்ச்சி எற்படுகிறது .
அதன்‌ தன்மை ௮சுத்தமென அறிகிறான்‌, அதனால்‌ சரிரத்தின் மேலுள்ள அபிமாநம்‌ விட்டு விலகுகிறது -பிறர்‌ சரீரங்களைப் பற்றி இன்னும்‌ அதிகமான அருவருப்பு உண்டாகிறது.

அதனால்‌ (சவ்சத்தின்‌ ஸித்தியால) மநம்‌ சுத்தம்‌ பெறுதலும்‌,அதனால்‌ மநத்‌ தெளிவும்‌, அதனால்‌ மநம்‌ ஒருமைப் படுதலும்‌,
அதனால்‌ இந்திரிய ஐயமும் ,முடிவில்‌ ஆத்ம ஸாக்ஷாத் காரம்‌ பெறுதலுக்கரிய தகைமையை அடைதலும்‌ ஏற்படுகின்றன.–41-

ஸந்தோஷம்‌ என்ற நியமம்‌ ஸித்தி பெறுதலினால்‌ உயர்நமுள்ள ஸுகம்‌ உண்டாகும்‌.–42-

எல்லா விஷய சுகங்களையும்‌ அனுபவித்தலால்‌ ஏற்படும்‌ ஸந்தோஷத்தைப்‌ பார்க்கிலும்‌, அவைகளில்‌ விருப்பு வெறுப்பு என்ற பற்றில்லாமல்‌ இருத்தலினால்‌ ஏற்படும்‌ ஸந்தோஷம்‌ மிகவும்‌ உயர்நலமுடையது. தைத்தரீய உபநிஷத்‌தின்‌, ஆநந்‌த மீமாம்ஸையில்‌ இந்தப்‌ பற்றில்லாமை கடை முறையில்‌ பிரஹ்ம ஆநந்தத்தைக்‌ கொடுக்கும்‌ என்ற உபதேசமுள்ளது.

தபஸ்ஸினல்‌ அசுத்தத்திற்குக்‌ காரணமாம்‌ கிலேசங்கள்‌ நசித்துப்‌ போகின்றன. அதன்‌ பயனாகச்‌ சரீரத்திற்கும்‌ இந்திரீயங்களுக்கும்‌ ஸித்திகள்‌ ஏற்படுகின்றன.–43-

சித்திகள்‌, அணிமா முதலான 8 ஸித்திகளும்‌,இந்த்ரியங்களுக்கு லோகாந்தரத்திலும்‌, தேசாந்தரத்திலும்‌, காலாந்திரத்திலும்‌ நேரிடும்‌ விஷயங்களைப்‌ பார்த்தல்‌, கேட்டல்‌ முதவிய ஸித்திகளும்‌ உண்டாகும்‌.

(யோகானுகூலமான) மந்த்ரங்களை ஜபிக்கிறதினால்‌, இஷ்டமான தேவர்களுடைய ஸாந்நித்தியம்‌ உண்டாகிறது,–44-

மந்த்ர ஜபத்தினால்‌ மந்தர அதிஷ்டாந தேவர்கள்‌,மந்த்ரத்தைக்‌ கண்டு பிடித்த ரிஷிகள்‌, ஸித்‌த புருஷர்கள்‌ இவர்கள்‌ இவனுக்கு தர்சநத்தைக்‌ கொடுத்து, அநுக்ரஹம்‌ செய்கிறார்கள்‌.

ஈஸ்வரனைத்‌ தியாநம்‌ செய்வதால்‌ அல்லது ஈஸ்வரனுக்குத்‌ தன்னை அர்ப்பணம்‌ செய்வதால்‌ ஸமாதியின்‌ ஸித்தி ஏற்படுகிறது.–45-

ஈஸ்வரத் தியானத்தால் ஸமாதி பூர்ணம் பெறுதல் உண்டாகிறது -அதாவது யோகியின்‌ பிரக்ஞை விசாலமாகிறது.
கால தேசங்களின்‌ வரம்பின்‌றி எல்லாவற்றையும்‌ ௮றியும்‌ தகைமையைப்‌ பெறுகிறான்‌,
ஈஸ்வரத்‌ தியாநத்தால்‌, ஸமாதி பூர்ணம்‌ உண்டாகிறது என்பதினால்‌ யமம்‌ முதலியவை வேண்டுவது இல்லை என்று அர்த்‌தமில்லை.
யமம்‌ முதலியவை மாத்‌திரம்‌ இருந்து ஈஸ்வரத்‌ தியாநம்‌ இல்லாவிடில்‌ ஸமாதி ஸித்தி உண்டாகாது என்பது பொருள்‌.

ஆஸநம்‌ என்பது ஸ்தீர கரமாயும்‌, ஸுக கரமாயும்‌ இருத்தலாம்‌.–46-

ஆஸநம்‌ இருவகைத்து , ஒன்று பாஹ்ய ஆஸநம்‌-வஸ்‌த்ரம்‌, கருப்பு மான் தோல்‌, தர்ப்பை, கம்பளம்‌ முதலியன-
இரண்டாவது சாரீர ஆஸநம்‌, பத்மாஸநம்‌, வீராஸநம்‌, பத்ராஸநம்‌,ஸ்வஸ்‌திகாஸநம்‌, தண்டாஸநம்‌ முதலியன.
முந்தியவை சரிரத்‌திற்குப்‌ புறம்பானவை. பிந்தியவை சரீர அவயவங்களைப்‌ பலவிதமாக அமைத்துக் கொள்ளுதலால்‌ ஏற்படுகின்‌றவை. ்‌

முயற்சியைத்‌ தேயும்படி செய்தலானும்‌, அநந்தன்‌ உபாஸனையாலும்‌ ஆஸந ஜயம்‌ உண்டாகும்‌.–47-

முயற்சியைச்‌ தேயும்படி, செய்தல்‌, என்றால்‌, மநம்‌, மெய்‌, மொழிகளால்‌ ஸாதாரணமாய்‌ உண்டாகும்‌ பிரயத்நங்களைத்‌ தடுத்து ஒருமுகப்படுத்தல்‌.
அநந்தன்‌ -ஆதிசேஷன்‌, பூமியைத்‌ தாங்குகிற 1,000 தலைகளை யுடைய ஆதி சேஷனை உபாஸனை செய்வதால்‌, ஆஸந ஜயத்தைப் பெறுகிறான்‌.
அநந்தன் ஆஸநத்திற்கு அபிமாநியான தேவதை -புராண வரலாற்றை நீக்‌கி , ௮தன் கண்‌ குப்‌தமாயுள்ள உண்மையை
வெளியிடில்‌, பூமிக்கு ஆகர்ஷண சக்தி யுண்டு,ஸூர்யனுக்கும்‌ ஆகர்‌ஷண சக்தி யுண்டு, இரண்டும்‌ ஒன்று மற்றொன்றை இழுக்கின்‌றன.
பூமி சிறிது, அதனால்‌ அதன்‌ சக்தியும்‌ சிறிது. சூரியன்‌ பெரிது, .அதனால்‌ ௮தன்‌ சக்தியும் பெரிது. அக் காரணத்தால்‌ பூமி, சூரியனிடம்‌ வீழ்ந்து போகாமல்‌ தன்‌ நிலையைக் காப்பாற்றிக் கொண்டு தான்‌ இயங்குகின்றது போல, யோகியானவன்‌ பெரிதான பலமான உலகப்‌ பற்றுக்களை ஜயித்து, அந்தர் முகப்பட்டு, மநத்தை ஒரு முகப் படுத்தி ஸ்‌திரப்படுத்திக் கொள்ளல்‌ வேண்டும்‌. ஆகர்ஷண சக்தியை ஸர்ப்பமாகப்‌ பிரதீகப் படுத்தப் பட்டிருக்கிறது

அதனால்‌, (ஆஸந ஜயத்தினால்‌) துவந்தங்கவின்‌ உபத்திரவம்‌ இன்றாம்‌.–48-

துவந்தங்கள்‌ — சீதோஷ்ண முதலியவைகள்‌.

அதில்‌ (ஆஸந ஜயம்‌ ஏற்படும்போது) சுவாஸத்தின்‌ வரத்துப்போக்கை நிறுத்தல்‌ பிராணாயாமமாம்‌.–49-

(1) ஆஸந ஐயத்தின்‌ மூலம்‌ சரீரம்‌ ஸ்வாதீநம்‌ ஆகிக்‌கொண்டு வர , பிராணாயாமம்‌ செய்தல்‌ இயலும்‌. பிராணன்‌ -பிராணனை, ஆயாமம்‌ -நீளும்படி செய்தல்‌.

ஸாதாரணமாய்‌, உஸ்வாஸமும்‌, நிஸ்வாஸமும்‌ நம்முடைய பிரயத்நமின்றி யாதொரு தடையில்லாமல்‌ விரைவாய்‌ நடைபெறுகிறது.
பிரயத்நத்தால்‌ ௮வை அளவுக்குட்பட்டு நடை பெறும்படி செய்தல்‌. அதாவது, உட் கொள்ளும்‌ ஸ்வாஸத்தை விரைவாய்த்‌ தானே செல்லாமல்‌ தடுத்து நீண்டகாலம்‌ நிகழும்படியாகவும்‌-அவ்விதமே உட்கொண்ட ஸ்வாஸத்தை வெளியேறாமல்‌ நீண்ட காலம்‌ தங்கும்படி செய்தலும்‌, பின்னர்‌ நிஸ்வாஸமாகி வெளியேறும்‌. ஸ்வாஸத்தை நீண்ட காலம்‌ நிகழும்படி. செய்தலும்‌ பிராணாயாமம்‌ எனப்படும்‌. உஸ்வாஸம்‌ – பூரகம்‌, நிறுத்தல்‌ = கும்பகம்‌, நிஸ்வாஸம் = ரேசகம்‌,

வெறுமையாக சுவாஸத்தை மேற்கண்டபடி. நிகழும்ப்டி, செய்தல்‌ மாத்திரம்‌ போதாது. மநு ஸ்ம்ருதியும்
பிரணவத்தோடு கூடிய ஏழு வியாஹிருதிகள்‌, காயத்ரீ,௮தன்‌ சிரஸ்‌ இவைகளை மநத்தால்‌ மும் முறை ஜபித்து சுவாஸத்தை நிரோதம்‌ செய்தல்‌, பிராணாயாமம்‌ என்பதாம்‌.-இது துவிஜர்கள்‌ செய்ய வேண்டிய முறை, ஏனையர்‌ அவரவர்கள்‌ இஷ்ட தேவதையைத் தியாநம்‌ பண்ணிக் கொண்டு செய்தல்‌ நலமாம்‌,

வெளிப் போகின்ற சுவாஸம்‌ (ரேசகம் ) என்ன, உட்கொள்ளும்‌ சுவாஸம்‌ (பூரகம்‌) என்ன, நிறுத்தப் பெறும்‌ சுவாஸம்‌ (கும்பகம்‌) என்ன,
இவைகளை தேசத்தினாலும்‌, காலத்தினாலும்‌ எண்ணிக்கையாலும்‌ கவநித்துப்‌ பார்த்து வருதவினால் சுவாஸம் நீண்டதாயும் சூஷ்மமாகவும் ஆகுதல் இயலும் –

(1) ரேசகம்‌ முன்‌ மாசம்‌ 12 அங்குலம்‌ நீண்டது -இந்த மாஸம்‌ 18 அங்குலம்‌ நீண்டது என்றறிவது தேசத்தால்‌ அறிதலாம்
முன்‌ மாசம்‌ 2 நிமிஷ காலம்‌ ரேசகம்‌ நிகழ்ந்தது -, இந்த மாஸம்‌ 3 நிமிஷ காலம்‌ நிகழ்ந்தது என்று அறிவது
காலத்தால்‌ அறிதலாம்‌.-முன்‌ மாசம்‌ 1 முதல்‌ 10 வரை எண்ணும்‌ வரைக்கும்‌ ரேசகம்‌ நடை பெற்றது ; இந்த மாஸம்‌ 1 முதல்‌ 20 வரை எண்ணும்‌ வரைக்கும்‌ ரேசகம்‌ நடை பெற்றது என்று அறிவது எண்ணிக்கையால்‌ அறிதலாம்‌.
இவ் விதமே, பூரகம்‌, கும்பகம்‌ முதலியவைகளையும்‌ தேசம்‌, காலம்‌, எண்ணிக்கைகளைச்‌ சேர்தது அறிந்து கொள்ளுக –
(2) ஸ்வபாவமாப்‌ ஏற்படும்‌ உஸ்வாஸ நிஸ்வாஸங்களை அப்‌படி. நிகழாமல்‌ பிரயத்நத்தால்‌ சிறுகச்‌ சிறுகத்‌ தடுத்து வந்து , கடை முறையில்‌ கும்பகம்‌ தீர்க்க காலம்‌ நிகழும்படி. செய்தல்‌ தான்‌ பிராணாயாத்தின்‌ , முக்கியக்‌ கருத்தாம்‌. அதனால்‌, மநம்‌ சலநமற்று ஓய்வைப் பெறும்‌.
(3) ரேசகத்தின்‌ அப்பியாஸத்தில்‌ ஸ்வாஸம்‌ எப்படி. நீண்டு வருகிறது என்பதை, பஞ்சு முதலிய மெல்லிய (திரவியங்களை மூக்கின்‌ முன்னர்‌ வைத்துப்‌ பரீக்ஷிக்க வேண்டும்‌.-பூரகத்தின் அப்பியபாஸத்தில்‌ எவ்விதம்‌ ஸ்வாஸம்‌ நீண்டு உட்கொள்ளப்படுகிறது என்‌பதை, முதல்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ மார்பு வரையும்‌, இரண்‌டாம்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ நாபி வரையும்‌, மூன்றாம்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ மூலாதாரம்‌ வரையும்‌, பின்னர்‌ கடைமுறையில்‌ சரீரம்‌ முழுமையும்‌ ஸ்வாஸம்‌ எரும்பு போல்‌ ஊரிக்கொண்டு பிரவேஸித்து ஸஞ்சரிக்கிறதைக் கவநமாய்‌ ஆராய்ந்து ௮றியலாம்‌.

4-பிராணன்‌, சாதாரணமாய்‌ சுவாஸம்‌ (பிராணவாயு) என்‌றாலும்‌, உண்மையில்‌, சரீரத்தின் கண்ணுள்ள எல்லா சக்திகளுக்கும் ஏற்பட்ட பெயர்‌,
பிரச்ந உபநிஷத்தில்‌, உலகத்திலுள்ளவைகள்‌ ரயி, பிராணன்‌ என இரண்டாகப்‌ பிரிக்கப் பட்டுள்ளன.
பிராணாயாம ஐயம்‌ என்றால்‌, அந்தப்‌ பிராணனை ஸ்வாதீநப்‌ படுத்தலாம்‌,

பிராணவாயு நாஸித் துவாரங்களிரண்டிலும்‌ மாறி மாறி ஸஞ்சரிக்கின்றது -, இடது துவாரத்தின்‌ வழியாய்ச்‌ செல்லும்‌ போது , இடை கலை யென்றும்‌, சந்திரன்‌ யென்றும்‌, வலது துவாரத்தின் வழியாய்ச்‌ செல்லும்‌ போது பிங்கலை யென்றும்‌, சூரியனென்றும்‌, புருவ மத்தியில்‌ ௮து நிற்கும் போது, ஸுஷும்நா அல்லது சுழி முனை யென்றும்‌ அக்கிநி என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
(6) தமிழ்‌ நூல்களில்‌, முக்கியமாக ஒளவையாரது ஞாநக்‌குறளில்‌, பிராணாயாமத்திற்கு வாயு தாரணை என்று பெயர்‌ வழங்குகிறது .
(7) சுவாஸமானது நாஸித் துவாரங்களில்‌ நடை பெறுவதில்‌ ஒவ்வொரு நாஸியில்‌ 5 நாழிகை மாறி மாறி நடை பெறும்‌. அப்படி நடை பெறுவதில்‌ 5 பாகமாகப்‌ பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகத்திலும்‌ அடியில்‌ வரும்‌ விவரப்படி. காலம்‌ செல்லும்‌.
பிருத்வீ -1.5 நாழிகை -அப்பு -1,25 நாழிகை -தேயு -1 நாழிகை -வாயு 0.75 நாழிகை –ஆகாயம் -0.5 நாழிகை
பிருத்வீ என்றால் இரு நாஸித் துவாரங்களுக்கும் மத்தியில் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
அப்பு என்றால் நாஸித் துவாரத்தின் வெளிப்பகுதியைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
தேயு என்றால் நாஸித் துவாரத்தின் மேற் பக்கத்தைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
வாயு என்றால் நாஸித் துவாரத்தின் கீழ் பாகத்தைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
ஆகாசம் என்றால் துவாரம் முழுவதையும் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
இவற்றைப்பற்றிய மற்ற விவரங்களை அகஸ்தியர் சர ஸாஸ்த்ரத்தில் கண்டு கொள்க
சுவாஸ கதியின் மாத்ர விவரங்களை ஹடயோக ப்ரதீபிகை முதலிய சாஸ்திரங்களில் கண்டு கொள்க

நான்காவது, (ரேசகம்‌; பூரகம்‌, கும்பகம்‌ இவைகள்‌ நீங்கலாக )வெளி (ரேசகம்‌) உள் (பூரகம் ) விஷயங்களின்றி சம்பவிக்கிறது.–51-

ஸாதாரண அப்பியாஸி கும்பகம்‌ பண்ணுதல்‌,-ரேசக பூரகங்களின்‌ சம்பந்தத்துடன் நிகழ்வது -இதில்‌ பிரஸ் தாபிக்கப் படுவது கேவல கும்பகம்‌. அதாவது ரேசக பூரகங்களின்றி, நினைத்த மாத்திரத்தில் செய்தலாம்‌. இது உயர் தர நிலையாம்‌,

அதனால்‌ (பிராணயாமத்தினல்‌) பிரகாசத்தை (புத்தியின்‌ தெளிவை மறைக்கிற திறையானது வர வர நீங்குகிறது.–52-

(1) பிராணயாமம்‌ செய்து வருகின்ற யோகியின்‌ புத்தியை மறைக்கிற ஆவரண ரூபமான கர்மமானது வரவரக் குறைவு படுகிறது.
கர்மமானது புத்தியில்‌ ராகத்தை அதிகப்படுத்தி, புத்தியின்‌ ஸத்வ குணத்தை மறைத்து, விஷயாதிகளில்‌ ப்ரவர்த்திக்கும் செய்கிறது -அதனால்‌, புத்தியின்‌ பிரகாசம்‌ (தெளிவு )குறைகிறது. இதுவே இங்கு ‘ ஆவரணம்‌ என்று சொல்லப் பட்டு இருக்கிறது.
முறைப்படி பிராணாயாமம்‌ செய்வதினால்‌, இந்த ஆவரணம் வர வர நீங்கி புத்தி பிரகாசத்தைப்‌ பெறுகிறது

பிராணாயாமத்தைவிட உயர்ந்த தபஸ்‌ வேறில்லை. அதனால்‌ சித்த சுத்‌தி உண்டாகும்‌. அதனால்‌ ஞாநப் பிரகாசம்‌ ஏற்படும்‌.–பஞ்சசிகாசாரியர்‌.
(2)எல்லாப்‌ பாபங்களுக்கும்‌ பிராணாயாமம்‌ பிராயச்சித்தமாக விதிக்கப் பெற்றிருக்கிறது-அது சரீரம்‌, இந்திரியங்கள்‌, மநம்‌ இவைகளிலுள்ள தோஷங்களை விலக்கும்‌, எல்லாப்‌ பிராயச் சித்‌தங்‌களிலும்‌ பிராணாயாமம்‌ உயர்ந்தது. மற்றைய பிராயச்‌ சித்தங்கள்‌,
சரீரம்‌, இந்திரியங்கள்‌ இவைகளைச்‌ சுத்தம்‌ செய்யும்‌. அவைகளின்‌ பயனாக, மநம்‌ சுத்தம் பெறும்‌. பிராணாயாமமோ, மனத்தை நேராகவே சுத்தம்‌ செய்யும்‌ இயல்பினது, ஈஸ்வர ஸாஷாத்காரத்தையும் உண்டு பண்ணும்‌.

(பிராணாயாமத்தினால்‌ ஆவரணம் நீங்கவே) மநத்திற்கு தாரணையின்‌ தகைமை உண்டாகிறது.–53-

மநத்தை ஒரு இடத்தில்‌ நிறுத்தல்‌ தாரணையாம்‌.-விபூதி பாதம்‌ முதல்‌ சூத்திரத்தில்‌ இதன்‌ விவரம்‌ சொல்லப்பட்‌டிருக்கிறது .

பிரத்யா ஹாரம்‌ என்பது , இந்திரியங்கள்‌ விஷயங்களுடன்‌ சம்பந்தமில்லாமல்‌ சித்தத்தினுடைய தன்மையை அநு சரிப்பது போல இருத்தலாம்‌. –54-

(1) பிராணாயாம அப்பியாஸத்தால்‌ ஆவரணம்‌ பொய்த்துப் போய்‌, மநம்‌ வைராக்யம்‌ பெற்று புருஷ ஸாக்ஷாத்‌காரத்தை நோக்கி அபி விருத்தி யுள்ளதாக ஆகின்றது .-அந் நிலையில்‌ இந்திரியங்கள்‌ விஷயங்களுடன்‌ சம்பந்திக்காமல்‌ மநத்தையே அனு ஸரிக்கின்றன. பிரத்தியாஹாரம்‌: பிரதி – பிரதி லோமமாக,-எதிரிடையாக -ஆஹாரம்‌ – பிரவிர்த்திக்கும்படி செய்தல்‌: அதாவது
இந்திரியங்களை விஷய சம்பந்தங்களினின்று பெயர்த்து, அதற்கு எதிரிடையாக மநத்துடன்‌ பொருந்தும்படி. செய்தல்‌.

(2)இந்திரியங்களின்‌ ஸ்வபாவம்‌ விஷயங்களுடன்‌ சம்பதித்தல்‌, -அச்சம்பத்தத்தை நீக்கினால்‌, ஸத்துவத்‌துடன்‌ சம்பந்திக்கும்‌.
யோக்யதை யின்றி ஜடமாக இருக்கின்‌ற மையால்‌ மநத்துடன்‌ சம்‌பந்தப்பட்டது போல்‌ (இவ) என்று பதம்‌ உபயோகிக்கப் பட்டுள்ளது .
மநத்திற்கு சத்‌வத்தைக்‌ கிரஹிக்கும்‌ யோக்யதை உண்டு.
(3) இராணித்‌. தேனியானது வெளிக் கிளம்ப , மற்றைத்‌ தேனீக்கள்‌ வெளிக் கிளம்புமாப் போல, மநம்‌ வெளியேற இந்திரியங்கள்‌ அதைத்‌ தொடர்கின்றன.

அதனால்‌ (பிரத்யாஹாரத்தால்‌) இந்திரியங்கள்‌ பூர்ணமாய், வசப்பட்‌டிருக்கும்‌ தன்மை உண்டாகிறது.–55-

(1) வசப்படுதல்‌–, பூர்ணமாய்‌ (பரமமாய்‌)) வசப்படுதல்‌ இவை இரண்டிற்கும்‌ வித்யாஸமுண்டு.
சப்த முதலிய விஷயங்களை ராகத்‌ துவேஷமின்றி ௮னுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள் சிலர்

(2) சாஸ்த்ரங்களில்‌ நிஷேதிக்கப் படாத விஷயங்களை
அனுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள்‌ வேறு இலர்‌.
(3) விஷயங்களின்‌ வசமாகாமல்‌. ஸ்வ இச்சையாக அவைகளை அனுபவித்தல்‌ என்கிறார்கள்‌ மற்றும்‌ சிலர்‌,
(4) ராகத்‌ துவேஷமில்லாமலும்‌, அவைகளின்‌ பயனாகிய சுக துக்கங்களில்லாமலும்‌ தட்ஸ்‌தனாக இருந்து விஷயங்களை அனுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள்‌ இன்னும்‌ இலர்‌.
(5). ஏகாக்ரதை பெற்ற. மநத்துடன்‌ இந்திரியங்கள்‌ ஒருமைப் பட்டபடியால்‌, விஷயங்கள்‌ முன்னிருந்தாலும் அவைகளைக்‌. க்ரஹிக்காமல் இருத்தல்‌ இந்திரிய, ஜயம்‌
என்கிறார் ஜைகீஷவ்ய மஹரிஷி
(6)இந்த ஐந்தாம் அபிப்பிராயத்தைகத் தான்‌ பூர்ணமாப்‌
(பரமமாய்‌) இந்திரியங்களை வசப்படுத்தல்‌ என்கிறார்‌ பகவான் பதஞ்சலியாரும்‌.
ஒரு. இந்திரியத்தை ஜயித்தால்‌ மற்றைய இந்திரியங்களின்‌ ஐயம்‌ ஏற்படுறதில்லை, –மநமானது அந்தர் முகப்பட்டு விஷயங்களின்‌ சம்பந்தமின்றி நிரோதம்‌ பெறுங்காலத்தில்‌ எல்லா இந்திரியங்களின்‌ ஜயமும்‌ உண்டாகிறது. இதுதான்‌ பரமாவசியம்‌ என்று மூலத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது .,
(i) இந்த பாதத்தில்‌ 1, கிரியாயோகம்‌ ii, கிலேசுங்கள்‌
3- கர்மங்களின்‌ பரிபாகம்‌, விபாகங்கள்‌ -4- அவைகளின்‌ பயனான ஹேயம்‌ (துக்கம்‌) -5-துக்கசத்தின்‌ காரணம்‌,-அதன்‌ நிவிருத்தி உபாயம்‌, அதன்‌ நிவ்ருத்தியான அதாவது . கைவல்யம்‌ இவைகளைப் பற்றிச்‌ சொல்லியிருக்கின்‌றது .

யமம்‌ முதலிய. யோக அஷ்டாங்களில்‌ யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, பிராணாயாமம்‌, பிரத்யாஹாரம்‌ என்ற ஐந்து பஹிரங்க சாதகங்களும்‌ இத்த; பாதத்திலும்‌,
தாரணை , தியாநம்‌, ஸமாதி அடுத்த பாதத்‌திலும்‌ சொல்லப்பட்டிருக்கின்றன.்‌

சாதன பாதம்‌ முற்றிற்று,

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -1-சமாதி பாதம் —

November 17, 2023

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ – உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது.

முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர். பதஞ்ஜலி அதை சூத்திர வடிவமாக்கினார். யோக சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும் வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள்.

இந்த பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு.
யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள். ஐக்கியம்; ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம்.

இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற தீக்ஷை கிடைத்தவருக்கே உரித்தாகும். இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது. பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்ஜலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார்.

முதலில் வருவது சமாதி யோகம். இதில் யோகம் என்பது என்ன என்பதைப்பற்றி சிறிது விளக்கி பின் வெவ்வேறு வகையான சமாதிகளைப்பற்றி சொல்லப்படுகிறது. அடுத்து வரும் சாதனா பாதத்தில் எப்படி சமாதி அடையப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விபூதி பாதத்தில் அடையப்படும் சித்திகள் குறித்தும், கடைசியாக கைவல்லிய பாதத்தில்
கைவல்லியத்தை அடைவது குறித்தும் சொல்லப்படுகிறது.

அத² யோகா³நுஶாஸநம் || 1||

[யோக சாத்திரத்தை பதஞ்சலி விளக்குகிறார்.] யோக சாஸ்திரம் தொடங்கப்படும்.

யோகம் என்பதென்ன?
யோக³ஶ்சித்த வ்ரு«த்தி நிரோத⁴: || 2||
 
சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.

சூத்திரங்களில் இதான் பிரச்சினை. சுலபமா சொல்லிவிட்டு போய் விட்டார்! இப்போது சித்த விருத்தி என்றால் என்ன? அடக்குவது என்றால் என்ன என்றெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்து மிகச்சரியான விடை கண்டு பிடித்துவிட்டால் சாஸ்திரமே படித்ததாகும்! போகட்டும், நாம் இங்கே
மேலோட்டமாகத்தான் பார்த்துக்கொண்டு போகிறோம்.

சித்தம் என்பதென்ன? வேறு பதிவில் இதை பார்த்தோம். அந்தக்கரணத்தின் ஒரு பகுதி. எளிமையாக சொல்ல மனதின் வேறு வடிவம் எனலாம். எதையாவது யோசிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக அதைப்பத்தியே யோசித்துக்கொண்டு போனால் அது சித்தம் ஆகும். சப்ஜெக்டை விட்டு வேறு வழியில் போவது இல்லை. சாதாரணமாக நாம் எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறோம். சற்று நேரத்திலேயே வேறு எண்ணம் கிளைத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம். இதை சரியாக அறிய ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இதை படிக்க ஆரம்பிக்கு முன் எதைப்பற்றி நினைத்துக்கொண்டு இருந்தீர்கள்? அதற்கு முன்? அதற்கு முன்? இப்படியே ஆராய்ந்தால் 5 நிமிடங்கள் முன் யோசிக்க ஆரம்பித்ததும் இப்போது யோசிப்பதும் இடையில் யோசித்தவையும் பலவாக இருக்கும். இப்படி பல வழியிலும் ஓடுவது மனசு.

மனம் போகிற போக்கில் விடாமல் மனசை கட்டுப்படுத்தி குவித்து சிதறாமல் ஒரே வழியில் ஓடுவது சித்தம். இப்படி சித்தம் தொடர்ந்து ஓடுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கட்டுப்படுத்தி கடைசியில் நிறுத்திவிட்டால் அது யோகம்.

ததா³ த்³ரு«ஷ்டு​: ஸ்வரூபே’வஸ்தா²நம் || 3||

அப்படி செய்யும் போது [சைதன்யமான (இயங்கு சக்தியாக) உள்ள புருஷனுக்கு] தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.
போன சூத்திரம் சுலபமா இருந்தது. உடனே அடுத்தது டெக்னிகல் ஆயிடுத்து! அப்படி செய்யும் போது ….- புரியுது. சித்தத்தை அடக்கும்போது. சைதன்யம்? புருஷன்? சைதன்யம் என்பது இயக்கு சக்தி. எது நம்மை –உடம்பை, மனசை- இயக்குகிறதோ அது. புருஷன் என்பது இங்கே (யோக சாஸ்திரத்தில்) ஜீவாத்மாவை குறிக்குது. ஜீவாத்மாவை ‘கண்ணைக்கட்டி’, தான் வேற ஏதோ ன்னு நினைக்க வெச்சதே இந்த அந்தக்கரணம்தான். மனசு, சித்தமெல்லாமே அந்தக்கரணம்தான். அதனால அந்தக்கரணம் நிற்கும் போது, தான் சொந்த நிலையில் இருப்பது ஜீவனுக்கு தெரிஞ்சு போகும்.

வ்ரு«த்தி ஸாரூப்யமிதரத்ர || 4||

ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.

சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?

வ்ரு«த்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா || 5||
தாமசமும் ராஜஸமும் சாத்விகமும் ஆன மனோ விருத்திகள் ஐந்து வகையாகும்.

மனசோட வளர்ச்சி- விரிவு – ஐந்து விதமாம். அவை சாத்விகமாகவோ ராஜசமாகவோ தாமசமாகவோ இருக்கலாம்.
ஏதோ க்ளிஷ்டா ன்னு சொல்லி இருக்கே? மன பாதிப்பு. [மனக் கிலேசம் என்ற வார்த்தை இதை ஒட்டினதே.] ராஜச, தாமஸ மனோ வ்ருத்திகள் வீண் மன பாதிப்பை செய்வதால் அவை கிலிஷ்டா. இதனால் சுக, துக்கங்கள் உண்டாகும்.
சாத்விக மனோ வ்ருத்தி செய்கிற பாதிப்பு வீண் இல்லை. அதனால் அது அக்லிஷ்டா. இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः ।।6।।
ப்ரமாண விபர்யய விகல்ப நித்³ரா ஸ்ம்ரு«தய: || 6||
இவை (சித்த விருத்திகள்) பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி ஆகியன.
ப்ரத்யக்ஷாநுமாநாக³மா: ப்ரமாணாநி || 7||
பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.

(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)
நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது “ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு” ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.

विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8||
ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம்.

இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட “உண்மை” நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.

ஶப்³த³ஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப​: || 9||

ஒலியால் உண்டு செய்யப்பட்ட ஞானத்தை அனுசரித்து உண்டாவது விகல்பம். இது முன்னேயே சொன்னிங்களேன்னா கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. இது வஸ்துவின் உண்மையை எதிர் பார்ப்பது இல்லை. ஒரு மனிதனுடைய புத்தகம் ன்னு சொல்லும் போது மனிதன் வேறு; புத்தகம் வேறு; ஆனால் இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு என்று தெரியும். இதில் உண்மை இருக்கு. ஆனா மலடியின் பிள்ளை ன்னு சொல்லும் போது மேலோட்டமா அர்த்தம் சம்பந்தம் இருக்கு, ஆனாலும் இது உண்மையா இருக்க முடியாது. இப்படி உண்மை இருக்கானு கவலைப்படாம ஒரு விஷயத்தை புரிஞ்சுகிறது விகல்பம்.

அபா⁴வ ப்ரத்யயாலம்ப³நா வ்ரு«த்திர் நித்³ரா || 10||
\

முன் கூறிய விருத்திகள் இல்லாததற்கு காரணமான தமோ குணத்தை விஷயமாக உடைய விருத்தி நித்திரை ஆகும்.
இது ரஜோ சத்வ குணங்களால் உண்டாகும் விருத்திகளை அழிக்கும்.
மூன்று குணங்களும் எப்போதும் இருந்தாலும் ஒரு குணம் மேலோங்கி மற்றதை அழிக்கக்கூடும். இப்படி தமோ குணம் மேலோங்கி மற்றதை அழிக்கலாம்.
விழிப்பு நிலையும் இல்லாம, கனவு நிலையும் இல்லாம தூங்கும்போது தமோ குணமே மேல் நிற்கும். இதை சுசுப்தி என்பர். கனவு நிலயில் நாம் பல செயல்களை செய்யலாம்; இல்லை சாந்தமாகவும் இருக்கலாம். அதனால கனவு நிலையில் ரஜோ சத்வ விருத்திகள் இருக்கும். சுசுப்தி என்கிறது ஆழ் உறக்கம். இதுவும் ஸமாதியும் ஒன்று இல்லை. ஸமாதியில் இந்த தமோ குண விருத்தி இராது.

அநுபூ⁴த விஷயா ஸம்°ப்ரமோஷ​: ஸ்ம்ரு«தி​: || 11||

அனுபவிக்கபட்ட விஷயத்தின் நாசமில்லா அறிவு ஸ்ம்ருதி விருத்தி ஆகும்.


அனுபவிச்சது ன்னு சொல்லும் போது இது பிரமாணமா இருக்கணுமே? இது வேற. அனுபவத்தில ஸ்தூலமாக பார்த்ததை நினைவில் வைப்பது அனுபவம். அதே விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கிரகித்து கொண்டால் அது ஸ்ம்ருதி. ஒரு கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் செய்கிறோம். அங்கே கண்ணால பார்த்தது ஒண்ணு. ஆனால் அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.

அப்⁴யாஸவைராக்³யாப்⁴யாம்° தந்நிரோத⁴​: || 12||

இந்த விருத்திகளை அடக்கி தன் சுய நிலையில் நிற்பது பயிற்சியாலும், பற்றின்மையாலும் இயலும்.


யோகம் என்கிறது சித்தத்தை நிறுத்துவதுன்னு சொல்லியாச்சில்ல? அத எப்படி நிறுத்தறது என்பதே கேள்வி.
வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம். உலக சம்சாரங்களில பற்றை விட்டுவிட்டு தொடர்ந்து அப்பியாசம் – பயிற்சி செய்ய சித்தம் நின்று யோகம் உண்டாகும். அதெப்படி பற்று விடறதுன்னா – புலன்கள் எது பின்னால ஓடுதோ அதிலே இருக்கிற குற்றங்களை- தோஷங்களை பார்க்க ஆரம்பிக்கணும். ஆமாம்; துரியோதனப் பார்வை வேணும். அல்லது குணங்களை விமர்சிக்கணும். இப்படி செய்வதை பழக சித்தத்திற்கு வெளியே செல்லும் நாட்டம் குறைந்து போகும். இது விருத்தி நிரோதம் ஆகும்.
நமக்கு சக்கரை வியாதி இருக்கு. ரொம்ப பிடிச்ச மை.பா வை பார்கிறோமா? இதை இப்ப சாப்பிடலாம், ஆனா அப்புறம் சர்க்கரை அதிகமாகி யார் அவஸ்தை படுகிறதுன்னு எண்ணம் வரணும்
ஒத்தனுக்கு சோறு சில நாட்கள் கிடைக்கலை. காட்டு வழியிலே போகும் போது அங்க இலை போட்டு நல்ல சாப்பாட்டு போட்டு வெச்சு இருக்கு. சாப்பிட ஆசைதான். அப்ப இன்னொருத்தன் வந்து சொல்கிறான், “ஏம்பா, ஆளில்லாத வனத்தில இப்படி சாப்பாடு போட்டு வெச்சு இருக்குன்னா ஏதோ சூது இருக்குன்னு புரிஞ்சுக்க வேணாமா? இதை கேட்டு உணர்ந்த சாப்பிட உட்கார்ந்த ஆசாமி ஒடிப்போயிடறான். பசியாக இருந்தாலும் இப்படி அறிவு வந்துவிட்டா மனசு திரும்பிவிடும். இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்.

தத்ர ஸ்தி²தௌ யத்நோ’ப்⁴யாஸ​: || 13||
 

இவ்விரண்டில் பயிற்சி (அப்பியாஸம்) என்பது ரஜோ தமோ விருத்திகளை நீக்கி யமம், நியமம் முதலான சாதனையை பின்பற்றுவது. ராஜசத்தால் விஷயங்கள் அதிகமாகிற விக்ஷேபம் என்பது உண்டாகும். தமஸ் விருத்தியானால் லயம் ஆகும். அதாவது விஷயங்கள் குறைந்து போகும். இது நல்லதுன்னு மேம்போக்கா தோன்றினாலும் அப்படி இல்லை. இப்படி வைராக்கியம் வரும் போது விவேக ஞானத்தை பயிற்சி செய்ய வேண்டும். இந்த ரஜஸ் தமஸ் இரண்டும் குறைந்து சத்வம் அதிகமாகி ஏகாக்ரதை வரணும். அதை எப்படி கொண்டு வரதுன்னா..

ஸ து தீ³ர்க⁴காலா நைரந்தர்ய்ய ஸத்கார ஸேவிதோ த்³ரு«ட⁴பூ⁴மி || 14||

அந்த பயிற்சியானது நீண்ட காலமும் இடைவிடாதும் ஶ்ரத்தை , பிரமசர்யம், தவம் இவற்றுடன் பல வழிகளிலும் செய்யப்பட வேண்டியது. அப்படி செய்யும் போது அது திடப்படுகிறது.

குருவிடமும் சாஸ்திரத்திடமும் விஶ்வாசத்துடனும், வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமலும் இடைவெளியில்லாமல் அப்பியாசிக்க வேண்டும். ஒரு காட்டுக்காளையை போன்றது சித்தம். காளையை வண்டியில் கட்டி சவாரி செய்ய விருப்பமுள்ளவன் காளையை அதன் விருப்பப்படி ஓட விடமாட்டான். வண்டியில் கட்டும்போது சண்டித்தனம் பண்ண இடம் தர மாட்டான். முயற்சியை கைவிடமாட்டான். முடியாதுன்னு தோணும்போது முன்னே செய்து வெற்றி அடைஞ்சவர்களை பாத்து நம்பிக்கை கொள்வான். மெள்ள மெள்ள அதை எப்படியும் வசப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அதை வழிக்கு கொண்டு வருவான்.

த்³ரு«ஷ்டாநு ஶ்ரவிக விஷய வித்ரு«ஷ்ணஸ்ய வஶீகார ஸம்°ஜ்ஞா வைராக்³யம் || 15||

ஸ்த்ரீ, அன்னம், பானம், ஐஸ்வர்யம், முதலான பார்க்கக்கூடியதிலும்; வேதம் சொன்ன சொர்க்கம், பிரகிருதி, லயம், போன்ற பார்க்க முடியாத விஷயங்களிலும் ஆசையில்லாத சித்தம் “இவை எல்லாம் என்னை சேர்ந்தவை; ஆனால் நான் இவற்றை சேர்ந்தவனில்லை”ன்னு நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களை விலக்கும் புத்தி (உபேக்ஷை) வசீகார வைராக்கியம் (பற்றற்ற நிலை) ஆகும்.

இந்த வைராக்கியமே பல வகையானது. எது சாரமானது, எதில் சாரமில்லைன்னு குரு மூலமும், சாஸ்திரங்கள் மூலமும் தெரிந்து, அவற்றை விலக்க முயற்சி எடுப்பது யதமான வைராக்கியம். அப்படி முயற்சி செய்து “இதெல்லாம் விலக்கிவிட்டோம்; இதெல்லாம் இன்னும் விலக்கனும்” ன்னு அறிகிறது வியதிரேக வைராக்யம். இப்படியே போகும்போது நமக்கு ‘இது நல்லது, இது கெட்டது’ ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா? அதையும் விலக்குவது ஏகேந்திரிய வைராக்கியம். அதாவது நல்லது மேலே விருப்பமும், கெட்டது மேலே வெறுப்பும் கூட இல்லாம இருக்கிறது.

இந்த வைராக்கியங்கள் கூட போதாதாம். இவற்றால் ஞானம்ன்னு நினைச்சுகிற போலி குற்றமுள்ள – ஞானம் வரக்கூடுமாம். அதனால் சூத்திரம் சொல்லுவது நாலாவது வகையான வசீகார வைராக்கியம்.

தத்பரம்° புருஷக்²யாதேர் கு³ணவைத்ரு«ஷ்ணயம் || 16||

புருஷ சாக்ஷாத்காரம் உண்டான பிறகு ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்களான குணங்களில் இருந்து பற்றற்று இருப்பது எது உண்டோ அது பரவைராக்கியம்.

தோஷங்களை பார்த்து வசீகார வைராக்யம் வந்தது. இது அடுத்து வரும் பர வைராக்கியத்துக்கு காரணமாகிறது. குரு-சாஸ்த்திர துணையோடு புருஷனின் (ஜீவாத்மாவின்) சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. இதிலேயே நின்று பயிற்சி செய்வது தர்மமேகத்யானம் என்கிறாங்க. இதனால ரஜோ, தமோ குண அழுக்கு முழுவதும் போயிடும். சத்வத்திலேயே நிலைக்கும். அப்போது சித்தம் தெளிவாயிடும். இதை கைவல்ய நிலைன்னும் பராகாஷ்டை ந்நும் சொல்வதுண்டு. இந்த நிலையிலே மன கிலேசங்கள் (சஞ்சலம்) யோகியை விட்டு நீங்கும். சம்சார பந்தங்கள் அறும்.

விதர்க விசாராநந்தா³ ஸ்மிதாரூபாநு க³மாத் ஸம்°ப்ரஜ்ஞாத: || 17||

விதர்கம் (பருப்பொருளை காணல்), விசாரம் (ஸூக்ஷ்ம வடிவை சிந்தித்தல்) ,ஆனந்தம் (ரஜோ, தமோ சம்பந்தம் சிறிது இருக்கும் போது இந்திரியங்களால் அறியப்படும் ஆனந்தம்), அஸ்மிதை (சித்தம் மட்டுமே உள்ளதென அறிதல்) இவை சொரூபத்துடன் சேர்ந்து இருப்பதால் உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.

மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் சித்தத்தை ஒரு விஷயத்தில் வைப்பது பாவனை ஆகும்.
பாவனை ஒரு பருப்பொருளில் இருக்கலாம். இது விதர்க்கம். ஒரு லிங்கம் (குறி), தெய்வ வடிவம், ஜ்யோதி இப்படி. இதுக்கு ஒரு உருவம் இருக்கும். ஒரு சப்தம்- சொல்- அதை குறிக்கும். இந்த பாவனையோட அடைகிறது ஸவிதர்க்கம்.
அல்லது பாவனை பருப் பொருளில் இல்லாம இருக்கலாம். இதுக்கு முன்னோ பின்னோ ஒரு தோற்றம் இராது. இதை எந்த சொல்லும் குறிக்காது. இந்த பாவனையோட அடைகிறது நிர்விதர்க்கம்.
பாவனை கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்மமான பொருளில் இருக்கலாம். ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.

ஸவிசாரத்துக்கு உதாரணம் பார்க்கலாமா? மனசையே எடுத்துக்கலாம். அது என்ன செய்கிறது, எங்கே போகிறது ன்னு கவனிக்கிறது ஸவிசார பாவனை. (இதுவே ரமணர் காட்டிய வழி.)
விதர்க்கம், விசாரம் இரண்டும் சேர்ந்தது க்ராஹ்ய ஸமாதி (த்யானம்). அதெப்படி இரண்டும் ஒண்ணா சேரும்ன்னா…. ஒரு பொருளோட தோற்றம், அதோட ஸூக்ஷ்ம சொரூபம் ரெண்டையுமே ஒரே நேரத்திலே த்யானிக்கலாம் இல்லையா?
சத்வமான சித்தம் ரஜோ, தமோ சலனங்களோட த்யானம் செய்கிறப்ப இந்திரியங்கள் மூலமா சுகமும் பிரகாசமும் அனுபவிக்கப்படும். இது ஆநந்தம்.
மூடிய கண் முன்னே கோடி சூர்ய பிரகாசத்தோட ஏதோ தெரிகிறது. இல்லை அருமையான மல்லிகைப்பூ வாசனை உணர்கிறோம். தென்றல் வருடின மாதிரி உணர்கிறோம். அபூர்வமான இசை கேட்கிறது. இவை எல்லாம் ரஜோ தமோ குண சலனங்கள். சத்வ சித்தம் அனுபவிக்கும் போது இவை ஆநந்தம் ஆகும்.
இப்படி ரஜோ, தமோ சலனங்கள் இல்லைன்னா அது ஸாஸ்மிதம். இந்த அஸ்மிதத்திலே சத்வமான சித்தம் இருக்கு என்கிறது மட்டுமே உணரலாம். வேற தூல, ஸூக்ஷ்ம இந்திரிய (புலன்கள்) சமாசாரம் ஒண்ணுமே தெரியாது.
இந்த விதர்க்கம், விசாரம், ஆநந்தம், அஸ்மிதை நாலுமே ஒரு வகை.- ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
ப்ரக்ஞை ன்னு கேள்வி பட்டிருக்கோம் இல்லையா. உணர்ச்சி. அனெஸ்தடிஸ்ட் ஊசி போட்டார். ப்ரக்ஞை போயிடுத்து. ஆபரேஷன் நடந்ததே தெரியாது என்கிறோம். ஸமாதியிலே ஏதோ ஒரு உணர்ச்சி இருந்தா அது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
விராம ப்ரத்யயாப்⁴யாஸ பூர்வ​: ஸம்°ஸ்கார ஶேஷோ’ந்ய​: || 18||

விருத்தி இல்லாமைக்கு காரணமான பர வைராக்கியத்தோட பயிற்சியை உபாயமாக உடையதும், சம்ஸ்காரத்தை மட்டும் மீதமாக உடையதுமான யோகமே மற்றது (அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.)

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியிலே ஒரு விஷயத்தில் பாவனை வைக்கப்பட்டது இல்லையா? அதிலே சித்த விருத்தி கொஞ்சம் இருந்தது. ஆனால் அலைய விடாம ஒரே விஷயத்தில வைக்கப்பட்டது என்பதே அதில சிறப்பு. ஆனா யோகம்ன்னா சித்த விருத்தியை நிறுத்தறது ன்னு இல்லை பார்த்தோம்? ஆக நாம் இதையும் தாண்டனும். அப்ப எதோட பயிற்சி செய்யணும்? முன்னே பர வைராக்கியம்ன்னு பார்த்தோமில்லையா? எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று இருப்பது- அதே உபாயம்.
இது அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இப்ப யோகியோட நிலை என்ன? ஸ்தூல -பருப் – பொருட்களோட சம்பந்தமில்லை; ஸூக்ஷ்ம பொருட்களோட சம்பந்தமில்லை. இந்திரியங்களோட சம்பந்தமில்லை. ஏன் இப்படி சம்பந்தமில்லை? ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.

அட! பர வைராக்கியத்திலே எல்லாம் விட்டுப்போயிடும்ன்னு சொன்னாபோல இருக்கேன்னா, ஆமாம், முந்தைய சம்ஸ்காரம் எல்லாம் விட்டுடும்; ஆனா இப்ப பழகுகிற பர வைராக்கியம் ஒரு சம்ஸ்காரத்தை உண்டு பண்ணுமே? அது மிஞ்சும். இது கொஞ்சம் விசேஷமானதால் இது வேற ஒரு சித்தத்தை –எண்ண ஓட்டத்தை- தோற்றுவிக்காது. இதுக்கு அடுத்தபடியான மோக்ஷத்தில இந்த சித்தம் கூட இல்லாம போயிடும். அந்த சித்தத்தோட ஒட்டிக்கொண்டு இருக்கிற சம்ஸ்காரமும் போயிடும்.

ப⁴வ ப்ரத்யயோ விதே³ஹ ப்ரக்ரு«தி லயாநாம் || 19||

பவ பிரத்யயம்:
அவித்தையை காரணமாக உடைய ஸமாதியானது தேகமற்றவர்களுக்கு, பிரக்ருதியில் லயமடைந்தவர்களுக்கு உண்டாகிறது.
ரத்தம், மாம்சம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை ஆகியன உள்ளவர் தேகம் உடையவர். இது நாமெல்லாம். இந்திரியங்கள், பஞ்ச பூத தன் மாத்திரைகள், (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை) அஹங்காரம், மகத்துவம் இவற்றை உடையது ஸூக்ஷ்ம சரீரம். இந்திரன் முதலான தேவர்கள் இப்படி இருக்காங்க. இந்த இந்திரியங்கள், அஹங்காரம் எல்லாம் இருக்கிறதாலேதான் இவங்களுக்கும் நம்ம மாதிரி கோப தாபங்கள், ஆசைகள் எல்லாம் இருக்கு. இவர்களோட புண்ணியம் அனுபவிச்சு தீர்ந்ததும் திருப்பி சம்சாரத்திலே கிடக்க வேண்டியதுதான். (தேவர்களும் கடவுளும் வேற வேறன்னு தெரியும்தானே?)

சரி, பிரக்ருதியில் லயம் அப்படின்னா என்னது?
இந்த உலகங்கள் எல்லாம் எதுலேந்து வந்ததோ அந்த மூலப்பொருள் ப்ரக்ருதி. ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் எல்லாமே இதுலிருந்து வந்தவையே. இவற்றோட பலவித சேர்க்கையால உலகத்தில பார்க்கிற விஷயங்கள் எல்லாம் உருவாச்சு. இந்த மூலப்பொருளோட லயம் ஆகமுடியும். ப்ரக்ருதி என்பதே மாயை ஆனதால் இதுவும் அவித்தையாக சொல்கிறாங்க.

உபாசனா காலத்திலே இந்திரியங்களை, பஞ்சபூத தன் மாத்திரைகளை, அஹங்காரத்தை, புத்தி தத்துவத்தை ஆன்மாவாக உபாசிக்கிறதுண்டு. பிரக்ருதியையும் உபாசிக்கிறதுண்டு. ஆன்மாவுக்கு ரூபம்ன்னு ஒண்ணு தெரியாதில்லையா! அப்போது அந்த அந்த தத்துவத்தில் பல மன்வந்தர காலம் லயமாக இருப்பர். இந்திரிய உபாசனை செய்தவர்களுக்கு அந்த இந்திரியத்துக்கு அபிமானி தேவதையின் சொரூப ப்ராப்தி கிட்டும். (விவரங்கள் பின்னாலே விபூதி பாதத்திலே வரும்.)

நம் உண்மை சொரூபத்தை தெரியாம மறைக்கிறது ஆவரண சக்தி. இதில் பல மட்டம் இருக்கு. பிரக்ருதியை உபாசிக்கிறவங்க இந்த மறைப்பில் பல மட்டங்களை கடந்து பிரகிருதியின் மறைப்பு வரை போய் பிரக்ருதியாவே ஆகிடுவாங்க. மனசையும் அனுபவத்தையும் இவங்களால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் மாயை விடலை இல்லையா? ஒரு நூறாயிரம் வருஷங்கள் ஆனா பிறகு தேவர்களாகி திருப்பி உழல வேண்டியதுதான்.
இரண்டிலேயும் மறு பிறப்பு இருக்கு. அதனால முமுக்ஷுக்கள் இந்த வகை ஸமாதியை விரும்புவதில்லை.

ஶ்ரத்³தா⁴ வீர்ய ஸ்ம்ரு«தி ஸமாதி⁴ ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் || 20||

உபாய பிரத்யயம்: விதேஹ லயர், பிரகிருதி லயர் ஆகியோரை விட வேறானவர்களுக்கு ஶ்ரத்தையும் அதனால் தாரணையும், அதனால் த்யானமும், அதனால் த்யானிக்கப்பட்டதின் சாக்ஷாத்காரத்தால் ஸமாதியும் இது வலுப்பட்டு ஸம்ப்ரக்ஞாத ஸமாதியும் நிகழ உபாயம் உண்டாகிறது. இந்த உபாயங்கள் வேண்டும் என்று குருவை அண்டுதலும், அவரால் உபதேசிக்கப்பட்டது இதற்கு அனுசரனையாக உள்ள யுக்திகள் – இவற்றை விஷயமாக கொண்ட சித்தத்தின் தெளிவே ஶ்ரத்தை ஆகும். அம்மா குழந்தையை பாதுகாக்கிறது போல ஶ்ரத்தை அப்பியாசம் செய்கிறவங்களை எல்லா இடையூறுகளிலிருந்தும் காப்பாற்றும்.
இந்த ஶ்ரத்தை பயிற்சி செய்வோருக்கு தாரணையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இதுவே வீர்யம். அதால் த்யானிக்கிற தத்துவத்தில் நிலைப்பாடு உண்டாகும். இது ஸ்ம்ருதி. இது முறையே ஸமாதி, ஸம்ப்ரக்ஞாத ஸமாதி, அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என கொண்டுவிடும்.

தீவ்ர ஸம்°வேகா³நா மாஸந்ந​: ||21||

உபாயத்தை அனுஷ்டிப்பதில் தீவிர வேகமுள்ளவருக்கு ஸமாதி கிடைப்பது தாமதமற்றதாகிறது.

ம்ரு«து³ மத்⁴யாதி⁴ மாத்ரத்வாத்ததோ’பி விஶேஷ​: || 22||

உபாய அனுஷ்டானத்தில் தீவிர வேகத்திலும் உள்ள வேகமானது ம்ருது தீவ்ரம், மத்திய தீவ்ரம், அதி மாத்ர தீவ்ரம் என வகைப்படும். இதனால் ஸமாதியிலும் அதன் பலன் கிடைப்பதிலும் வேறுபாடு உண்டாகும்.
அடுத்து திடுதிப்பென்று ஒரு திருப்பம் வருகிறது!

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத்³வா || 23||

ஈஸ்வரனுடைய பக்தி விசேஷத்திலிருந்தோ [மிக விரைவில் ஸமாதி லாபம் உண்டாகிறது.]
முன்னே பார்த்தது எல்லாம் ஜீவனின் முயற்சியில் செய்தவை. இப்போது ஈஸ்வர பக்தியால் மிக விரைவில் ஸமாதி உண்டாகும் என சொல்லப்படுகிறது. இந்த வழியில் க்லேசங்கள் ஏதும் இரா. ஆகவே இது சுலபமாக சாத்தியமாகும்.

க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ரு«ஷ்ட​: புருஷ விஶேஷ ஈஶ்வர​: || 24||

ஈஸ்வரனின் சொரூபம்: அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஸ்வரன். ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு வேளை ஜீவன் ரொம்ப முன்னேறி ஈஸ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஸ்வரனாக முடியாது. பிரகிருதி சம்பந்தம் இல்லாம கைவல்ய நிலையிலே இருந்தாக்கூட ஒரு காலத்திலே க்லேசங்களோட இருந்ததால ஈசனாக முடியாது. பிரகிருதி லயமடைந்தாலும் வியவகாரிகங்களிலே (நடைமுறையிலே) பந்தம் இருக்கும்; தேவர்களும் மனிதர்களும் போல் போகம் அனுபவிக்கிறது தெரியும்; தாக்ஷ்ணிக பந்தம் இருக்கும். யோக சித்தாந்தப்படி கைவல்ய நிலை அடைந்தவர் முன்னரே இந்த பந்தங்களை அனுபவிச்சுட்டு அப்புறமே கைவல்ய நிலை அடைந்தவர். ஈஸ்வரனுக்கோ முக்காலங்களிலும் பந்தங்களில்லை.
ஜீவனுக்கு புருஷன் என்று பெயர். க்லேசங்கள் அந்தக்கரணத்தை சார்ந்தவை. இந்த அந்தக்கரணமே ஜீவனோட முக்கிய லக்ஷணம். ஆகவே ஜீவனுக்கு அந்தக்கரணத்தோட க்லேசங்களால உண்டாகும் சுக துக்கங்களுடைய சம்பந்தம் உண்டு. ஈஸ்வரனோ தன் சங்கல்பத்தாலேயே எதையும் சாதிக்க வல்லவன்.

தத்ர நிரதஶயம் ° ஸர்வஜ்ஞ்ய பீ³ஜம் || 25||

எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்கு (ஞானத்திற்கு) காரணமான அறிவின் உயர்வு-தாழ்வு தன்மை ஈஸ்வரனிடத்தில் முடிவற்றதாகிறது. (நிரதிசயம்).
உலகத்திலே மக்கள் ஒருவரை விட ஒருவர் அறிவு அதிகமுள்ளவர் குறைவுள்ளவர் என்று உள்ளது. ஆனால் ஈஸ்வரனுடைய அறிவு எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
ஈஸ்வரன் சர்வக்ஞன், தயை உள்ளவன். அப்படியானால் ஜீவர்களை ஏற்றத்தாழ்வுடன் படைப்பானேன் என்று கேள்வி எழும். ஒரு குயவன் பானை செய்ய முக்கியம். மண்ணும் முக்கியம். குயவன் என்னத்தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் மண் நன்றாக இல்லையானால் பானை நன்றாக இராது. மண்ணை பிசையும் நீர் உப்பு நீராக இருந்தால் பானை சரியாக வராது. அது போல ஈஸ்வரன் சிருஷ்டிக்கு காரணம் ஆனாலும் அந்த அந்த ஜீவனின் முன் பிறவியில் சம்பாதித்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியை தருவார். (இப்படி ஈஸ்வரன் சிருஷ்டிக்கு நிமித்த காரணம் மட்டுமே என்பர்.) பின்னே தயை எங்கே வந்தது என்றால் சாஸ்திரங்களை கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் வைராக்கியமும் தன்னிடம் பக்தியும் ஏற்பட்டு உபாசிக்கிறவர்களுக்கு பிரகிருதியின் பந்தத்தை நீக்கி கைவல்யம் அளிப்பார்.

ஸ ஏஷ​: பூர்வேஷாமபி கு³ரு​: காலேநாநவச்சே²தா³த் || 26||

அந்த ஈஸ்வரன் ஆதியில் உண்டான பிரம்மா முதலானவர்களுக்கும் குருவாக இருக்கிறார். காலத்தால் ஆயுளின் அளவு கூறப்படாமல் இருக்கிறார்.

தஸ்ய வாசக​: ப்ரணவ​: || 27||

பிரணவமானது அவருக்கு வாசகமாகும். (பெயராகும்.)
பிரணவம் என்பது பகவானின் மங்களகரமான சுபத்தை செய்யும் குணத்தை குறிக்கும். எப்படி ஒரு குழந்தை தன்னை “அம்மா” என்று அழைப்பதால் அன்னை மகிழ்வாளோ அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.

தஜ்ஜபஸ்தத³ர்த² பா⁴வநம் || 28||

அந்த பிரணவத்தை ஜபிப்பது, அதன் பொருளான பரமாத்மாவை அடிக்கடி மனதில் இருத்தி த்யானிப்பது ப்ரணிதானம் எனப்படும்.

ஜபம் என்பதன் பொருள் மந்திரத்தின் அக்ஷரங்களை மனதில் வாங்கி மனோ விருத்தியை ஆவிருத்தி செய்வதே. அப்போது பிரணவத்தின் பொருளான பரம்பொருளையும் அடிக்கடி மனத்தால் த்யானித்து வர வேண்டும். இது ப்ரணிதானம். உபாம்சு ஜபம் எனவும் சொல்வர். இதற்கு முன் படி வாசிக ஜபம்.

தத​: ப்ரத்யக் சேதநாதி⁴ க³மோ’ப்யந்தராயா பா⁴வாஶ்ச || 29||

ஈஸ்வர ப்ரணிதானத்தால் தேகம் முதலானவற்றை விட வேறாக அறியப்படுகின்றவனும் சேதனனுமான ஜீவனுடைய உண்மையான அறிவும் உண்டாகிறது; வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.

எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? பரமாத்மாவை த்யானிக்க ஜீவனுக்கு தன் சொரூப ஞானம் எப்படி உண்டாயிற்று? ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்று இல்லையானாலும் யோக சித்தாந்தப்படி அவற்றின் சொரூபம் ஒன்றே. (அத்வைத சித்தாந்தத்தில் கூடஸ்தனும் பிரம்மமும் வேறில்லை என்பது போல)

வ்யாதி⁴ ஸ்த்யாந ஸம்°ஶய ப்ரமாதா³”லஸ்யா’ விரதி ப்⁴ராந்தி த³ர்ஶாநா’ லப்³த⁴ பூ⁴மிகத்வாநவஸ்தி² தத்வாநி சித்த விக்ஷேபாஸ்தே’ந்தராயா​: || 30||

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும்,
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும்
சம்சயம் = சந்தேகங்கள்
பிரமாத = யோகங்களை அனுஷ்டிக்காமல் இருப்பது
ஆலச்ய = சோம்பல், எதிலும் பிரவ்ருதி இல்லாமல் இருத்தல்.
அவிரதி = விஷயத்தில் ஆசை
பிராந்தி தர்சன = சாஸ்திரம் கூறியதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை.
சித்த விக்ஷேபா = மனத்தை அலைக்கழிக்கிற தோஷங்கள்
இவற்றில் எவை உண்டோ அவை யோகத்துக்கு விக்கினங்களாம் .

து³​:க² தௌ³ர் மநஸ்யாங்க³மே ஜயத் வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷேப ஸஹபு⁴வ​: || 31||

துக்கம், (ஆத்யாத்மிக, ஆதி பௌதிக ஆதி ஸத்விக துன்பங்கள்.)
தௌர் மநஸ்ய =ஆவலுக்கு தடையேற்பட்ட காலத்தில் மனதில் உண்டாகும் கலக்கமும்.
அங்க³மே ஜயத்வ = சரீரத்தின் அவயங்களின் ஆட்டமும்
ஶ்வாஸ = இஷ்டமில்லாவிட்டாலும் வெளிக்காற்று உள் செல்லுதலும்
ப்ரஶ்வாஸா = இஷ்டமில்லாவிட்டாலும் உள் காற்று வெளி செல்லுதலும்
ஆகிய இந்த நான்கும் சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
இந்த விக்கினங்களை தவிர்க்க நல்ல உபாயம் பிரணவம் முதலான மஹா மந்திர ஜபங்களும், இவற்றின் பொருளான பரமாத்மாவை மனதில் இருத்துவதும்தான்.

தத் ப்ரதிஷேதா⁴ர்த²மேகதத்த்வாபா⁴யாஸ​: || 32||

அந்த விக்கினங்களை தவிர்க்க ஏதாவது தத்துவம் ஒன்றில் மனதை நிறுத்தி த்யானம் செய்வதே.
சூத்திரம் 29 இல் ஈஸ்வர ப்ரணிதானம் விக்கினங்களை போக்கும் எனச்சொல்லப்பட்டது. அந்த திட பக்தி, வைராக்கியம் இல்லையெனில் என்ன செய்வது? ஏதேனும் ஒரு மூர்த்தியில் மனதை நிறுத்தி தாரணை, த்யானம் செய்து வர வேண்டும். வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.

மைத்ரீ கருணா முதி³தோபேக்ஷாணாம்° ஸுக² து³​:க² புண்யாபுண்ய விஷயாணாம்° பா⁴வநாதஶ் சித்த ப்ரஸாத³நம் || 33||

சுக துக்கமுள்ளவர்கள், புண்ய அபுண்யம் செய்பவர்கள் விஷயத்தில் முறையே சிநேகம், கருணை, தயை, உதாசீனம் ஆகியன கொள்ள சித்தத்தில் தெளிவு உண்டாகிறது.

சித்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசூயை முதலான குணங்கள் அங்கே குடி ஏறி விடும். பின் அவ்விடத்தில் ஸமாதி உண்டாகாது.
அதற்கு என்ன வழி? பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.

மற்றவருக்கு – சுகமாக இருப்பவரிடம் நட்பு வேண்டும். துக்கமுள்ளவரிடம் கருணை வேண்டும். புண்ய சீலர்களிடம் ப்ரீதி இருக்க வேண்டும். புண்யம் செய்யாதவரிடம் உதாசீனம் இருக்க வேண்டும். (அப்போதுதான் வெறுப்பு இல்லாதிருக்கும். எனக்கு மிகவும் பயனானது இது.)
இப்படி செய்ய ரஜோ தமோ குணங்கள் போய் சத்வம் பெருகும்.

ப்ரச்ச²ர்த³நவிதா⁴ரணாப்⁴யாம்° வா ப்ராணஸ்ய || 34||

பிராண வாயுவை, யோக சாஸ்திரத்தில் சொல்லியபடி (உள்ளே இருக்கும் காற்றை) வெளிவிடுதல், அல்லது உள்ளிழுத்து அடக்கி வைத்தல் (கும்பகம்) இவற்றாலாவது தெளிவு ஏற்படும்.
இங்கே ரேசகம் என்று சொல்லியிருந்தாலும் பூரகம், கும்பகம், ரேசகம் மூன்றும் அடங்கிய பிராணாயாமம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என பாஷ்யங்கள் சொல்கின்றன.
மனத்தெளிவுக்கு வேறு உபாயங்களும் உள்ளன.

விஷயவதீ வா ப்ரவ்ரு«த்திருத்பந்நா ஸ்த²திநிப³ந்தி⁴நீ || 35||

யோக சாஸ்திரங்களில் சொல்லிய விஷயங்களில் பிரவ்ருத்தியை உண்டான மனது தெளிந்த நிலைக்கு சாதனமாகிறது.

தாரணை, த்யானம், ஸமாதி மூன்றுக்குமே ஸம்யமம் எனப்பொதுப் பெயர். இவற்றை எவ்விடத்தில் வைத்து பயிற்சி செய்தால் என்ன பிரவ்ருத்தி (ஈடுபாடு) ஏற்படுகிறது என்பது இருக்கிறது. மூக்கின் நுனியில் சித்தத்தை வைத்து சம்யமம் செய்ய திவ்ய வாசனை அனுபவம் ஏற்படும்;  நாக்கின் நுனியில் வைக்க ருசி அனுபவம்; உள் மோவாய்க் கட்டையில் ரூபம். நாக்கின் நடுவில் தொடுதல்; நாக்கின் மூலத்தில் சப்தம். இப்படி ஒவ்வொரு இடத்தில் பிரவ்ருத்தி ஏற்பட்டு அங்கே சித்தம் நிலைபெறுகிறது.
சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் செல்ல சந்தேகங்கள் நீங்கும். சந்தேகமும் பயமும் நீங்க சாஸ்திரங்கள் உபதேசித்த விவேகம் –க்யாதி முதலியவற்றின் பலனில் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை அந்த வழியில் திடமான பிரவ்ருத்தியை உண்டாக்கும்.

வேறு உபாயங்களும் உண்டு.

விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.

 ஸ்வப்ந நித்³ராஜ்ஞாநாலம்ப³நம்° வா || 38||

ஸ்வப்னத்திலும் சுசுப்தியிலும் அறியப்பட்ட வஸ்துவை த்யானம் செய்கிற சித்தம் நிலைத்து நிற்கிறது.
பகவானை ஆராதனை செய்வதாக கனவு காண்கிறோம். அப்படியே விழித்து அந்த காட்சியை மனதில் இருத்தினால் சித்தம் நிலைபெறும். அது போல் சுசுப்தியில் ஏற்படும் சுகானுபவத்தை மனதில் இருத்தினாலும் சித்தம் நிலைபெறும்.

யதா²பி⁴ மதத⁴யாநாத்³வா || 39||

தனக்கு பிடித்த ரூபத்தை த்யானம் செய்வதால் சித்தம் நிலைபெறும்.
34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்) இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்). இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).
பரமாணு பரம மஹத்த்வாந்தோ’ஸ்ய வஶீகார​: || 40||

ஸூக்ஷ்ம விஷயத்தில் பிரவேசித்த இந்த சித்தத்திற்கு பரமாணு முதல் பரம மஹத்தானதை முடிவாக கொண்ட எல்லா விஷயங்களிலும் தடங்கல் இல்லாமை ஏற்படுகிறது.
இதுவே சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை.

க்ஷீண வ்ரு«த்தேபி⁴ ஜாதஸ்யேவ மணே க்³ரஹீத்ரு« க்³ரஹண க்³ராஹ்யேஷு தத் ஸ்த²த த³ஞ்ஜநதா ஸமாபத்தி​: || 41||

க்ஷீணமடைந்த (நலிவுற்ற) ராஜஸ, தாமஸ வ்ருத்திகளை உடைய சித்தத்திற்கு இயற்கையில் சுத்தமான மணி போன்ற கிரகிப்பவன் – ஆத்மா- விடத்திலும், கிரகிக்கும் சாதனமான இந்திரியங்களிடத்திலும், கிரகிக்கப்படும் விஷயங்களிடத்திலும் சாக்ஷாத்காரம் உண்டாகிறது.

இதை ஸமாபத்தி என்றும் சொல்வர்.

பச்சை புல்வெளியில் லயித்த சித்தத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இருந்தபோது ஒரு மாடு அதன் மீது ஓடியதால் அவர் அலறினார். அவர் முதுகில் குளம்புகளின் சுவடுகள் உண்டானதாக கதை. இது புல்வெளியுடன் ஏற்பட்ட ஏகாக்ரத்தையால் உண்டானது. இது கிரகிக்கப்பட்ட விஷயத்தில் உண்டானதால் கிராஹ்ய ஸமாதி.
இது போல இந்திரியங்கள் (10) மனஸ், புத்தி, அகங்காரம் என 13 வித அஹம் தத்துவங்களுடன் ஏகாக்ரம் (ஒன்றுதல்) ஏற்படலாம். விஷயத்தை கிரகிக்கும் சாதனத்தில் ஸமாதி என்பதால் இதை கிரஹண ஸமாதி என்பர்.
இதையும் தாண்டியது ஆன்மா. இதில் ஏற்படும் ஸமாதி கிரஹீத்ரு ஸமாதி ஆகும்.
சாக்ஷாத்காரம் இப்படிப்பட்ட ரூபங்கள் உள்ளது.

தத்ர ஶப்³தா³ர்த²ஜ்ஞாந விகல்பை​: ஸம்°கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி​: || 42||

முன் சொல்லிய ஸமாதிகளுள் சப்தம், அர்த்தம், அர்த்தத்தைப்பற்றிய ஞானம் இவற்றின் பேதம் தெரியாமல் இருக்கும் நிலைக்கு ஒப்பான சாக்ஷாத்காரம் ஸவிதர்க்கம் எனப்படும்.

கோ என்ற சம்ஸ்க்ருத சப்தம் ஒரு சொல். அதற்கு பசு என்பது பொருள். கோ என்று கேட்கும் போது அது நம் புத்தியில் ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது. ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக சம்பந்தப்படுத்தி அறிவது விகல்ப ஞானம். இதற்கு ஒப்பானதே ஸவிதர்க்க ஸமாதி. இதில் சப்தம், பொருள், ஞானம் மூன்றும் ஒன்றாக கலந்ததாகவே கொள்ளப்படும்.

ஸ்ம்ரு«தி பரிஶுத்³தௌ⁴ ஸ்வரூப ஶூந்யே வார்த² மாத்ர நிர்பா⁴ஸா நிர்விதர்கா || 43||

சங்கேதம் (குறிப்பு) என்ற சக்தி-ஞானம் விலகியபோது ஸமாதி பிரக்ஞையானது தனக்குரிய க்ராஹகத்வம் என்ற பிரக்ஞா ரூபத்தால் இல்லாதது போல ஆகி, அபேதமற்ற பசு முதலிய க்ராஹ்யத்தோடு (அர்த்தத்தோடு) மட்டும் பிரகாசிக்கின்ற ஸமாதியானது நிர்விதர்க்க ஸமாதி எனப்படுகிறது.
எளிமையாக சொல்ல: நினைப்பில் சுத்தி ஏற்பட்டு சுய ரூபத்தில் உள்ளபோது வேறுபாடில்லாமல் பொருள் மட்டுமே உணரப்படும்போது அது நிர்விதர்க்கம் ஆகும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இறைவன் ஒருவித குறிப்பை உலகை படைக்கும்போதே ஏற்படுத்தி உள்ளார். சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக அறிவதற்கு சங்கேதம் என்ற சக்தி காரணமாகும். இது இல்லாதபோது பொருள் மட்டுமே தோற்றத்தை அடைந்து நிற்கும். இந்த ஸமாதி நிர்விதர்க்க ஸமாதி. (இந்த சங்கேதம் இருக்கும்போது அது ஸவிதர்க்க சமாதி; நேற்று பார்த்தோம் இல்லையா?)

மேற்கண்ட இரண்டும் ஸ்தூல விஷயமான ஸமாதியை விளக்குகின்றன.

ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்²யாதா || 44||

முன் கூறப்பட்ட ஸ்தூல விஷயமுடைய ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதியை கொண்டே பரமாணு முதலிய ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக உடைய ஸவிசாரம், நிர்விசாரம் என்று சொல்லப்படும் சமாபத்தி (ஸமாதி) தெளிவாக உபதேசிக்கப் பட்டதாகிறது.

ஸ்தூல சமாசாரம் எளிதாக புரிகிறது. ஒரு குடம் என்றால் அது ஸ்தூலமாக இருப்பதால் எளிதாக புரிகிறது. ஸூக்ஷ்ம வஸ்துக்கள் அப்படி புரிவதில்லை.
பெயர்களும் ரூபங்களும் (உருவங்களும்) நிரம்பியுள்ள இவ்வுலகத்தில் கீழ் மட்ட ஸவிசார, நிர்விசார ஸமாதிகளை புரிந்து கொள்வதே கடினம்.
ஸூக்ஷ்ம ஸமாதி ஸவிசாரம், நிர்விசாரம் என இரு வகைப்படும். இதை வகைப்படுத்த விஷயமாவது (parameter) பரமாணு மட்டுமில்லை; பஞ்ச தன் மாத்திரை முதல் ப்ரக்ருதி வரை உள்ள தத்துவங்களும் கூட. இவை ஸூக்ஷ்ம மானதால் ஸூக்ஷ்ம ஸமாதி என பெயர் வந்தது.

ஸூக்ஷ்ம விஷயத்வம்° சாலிங்க³பர்யவஸாநம் || 45||

மேற்கூறிய ஸமாதிக்கு ஸூக்ஷ்மமான விஷயத்தை உடைய தன்மையும் பிரதானத்தை முடிவாக உடையது.

ஸூக்ஷ்மமானவை யாவை?
பரமாணுக்கள் ஐந்து வகைப்படும். பஞ்ச தன் மாத்திரைகளில் ஒவ்வொரு தன் மாத்திரையும் அதனதன் பரமாணுவுக்கு முக்கிய காரணம் ஆகும். மற்றதன் பரமாணுவுக்கு அங்கமாகும். (வேதாந்தத்தில் பஞ்சீகரணம் பற்றி அறிந்தவருக்கு இது புரிய சுலபமாக இருக்கும். ஆனால் வேறானது.)

பரமாணுக்கள் ஐந்து.

௧.பார்த்திவம். ௨.ஆப்யம். ௩.தைஜசம் ௪.வாயவ்யம். ௫.நாபசம்
முக்கிய காரணங்கள்: ௧.பார்த்திவம். – கந்தம் (வாசனை). அங்கம்: ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௨.ஆப்யம். – ரசம்.- அங்கம்: ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௩.தைஜசம் – ரூபம் அங்கம்: ஸ்பர்சம் சப்தம்
௪.வாயவ்யம்.- ஸ்பர்சம் அங்கம்: சப்தம்
௫.நாபசம் – சப்தம்.

இந்த பரமாணுக்கள் காரியங்கள். அதாவது (result) ரிசல்ட். இவற்றுக்கு காரணம் (cause) தன் மாத்திரைகள். பரமாணுக்கள் மிக சிறியன ஆயினும் ஸ்தூலமானவை.

தா ஏவ ஸபீ³ஜ​: ஸமாதி⁴​: || 46||

முன் சொன்ன அனைத்தும் பந்தத்திற்கு சாதனமான க்ராஹ்யத்தை (பற்றை) உடைய ஸமாதி ஆகும்.
அதாவது அது ஸமாதி ஆனாலும் ஒரு விஷயத்தை பற்றி நிற்கிறது.
ஸவிதர்க்கமும் நிர்விதர்க்கமும் பருப்பொருளை பற்றி நிற்கிறது. ஸவிசாரமும் நிர்விசாரமும் ஸூக்ஷ்ம பொருளை பற்றி இருக்கின்றன. இவை நான்காலும் மோக்ஷம் கிடைக்காது. இவை நான்கும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள் எனப்படும்.

41 – 45 சூத்திரங்களில் ஸமாதி வகைகள் விளக்கப்பட்டன. க்ரஹீத்ரு, க்ரஹணம். க்ராஹ்யம் – அதாவது பற்றுவோன், பற்று, பற்றப்பட்டது இவற்றை கொண்டு பிரிக்கப்பட்டது.

க்ராஹ்யத்தில் பற்றப்பட்டது ஸ்தூலமா இல்லை ஸூக்ஷ்மமா என்பதை வைத்து பிரிக்கப்பட்டது. ஸ்தூலத்தில் ஸவிதர்க்கம், நிர்விதர்க்கம் என இரண்டு வகை ஆயிற்று. ஸூக்ஷ்ம ஸமாதியில் ஸவிசாரம், நிர்விசாரம் என இரண்டு வகை ஆயிற்று. பற்றுதல், பற்றுவோன் என்பனவற்றை விஷயமாக கொண்டு சவிகல்பம், நிர்விகல்பம் என இரண்டு வகை ஆயிற்று.
மேலும் க்ரஹணத்தை மட்டும் கொண்ட ஸமாதியில் ஆனந்தத்துடன் – ஸானந்தம்; ஆநந்தம் மட்டும் (கேவல ஆநந்தம்) என இரண்டு வகை ஆயிற்று.

மூன்றாவதாக க்ரஹீத்ரு ஸமாதியில் அஸ்மிதை உடன் கூடியது, ஸாஸ்மிதை. அஸ்மிதை மட்டுமே கேவல அஸ்மிதை என இரண்டு வகை ஆயிற்று. சப்தம் ஆனது அர்த்தம், ஞானம் இவற்றுடன் கூடிய போது ஸவிகல்பம் என்றும், சப்தம் அர்த்தத்தை விட்டு ஞானத்துடன் மட்டும் கூடிய போது நிர்விகல்பம் என்றும் ஆயிற்று.

நிர்விசார வைஶாரத்³யே’த்⁴யாத்ம ப்ரஸாத³​: || 47||

நிர்விசார ஸமாதிக்கு ஆதிக்யம் உண்டாகும் போது கிலேச வாசனைகள் இல்லாத சித்தத்தில் தெளிவு ஏற்படுகிறது.
நிர்விசார ஸமாதியை பழக ரஜோ, தமோ குணங்கள் நீங்கி சத்வம் மேலிடும். அதனால் அவித்தை முதலான கிலேசங்களின் வாசனை நீங்கும், இப்படிப்பட்ட சித்தத்தில் அறிவு உண்டாகும். இந்த ஞானம் உண்டானவன் ஆன்மாவை எல்லாவற்றிலும் சிறந்ததாக கண்டு கொள்கிறான். அப்படி ஞானம் வராதவர்களைப் பார்த்து இவன் துக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நிர்விசார ஸமாதி சித்திக்கவே ஒவ்வொரு சாதகனும் முயற்சி செய்ய வேண்டும்.

ரு«தம்ப⁴ரா தத்ர ப்ரஜ்ஞா || 48||

சித்தத்தெளிவு ஏற்பட்ட போது உண்டாகும் அறிவு ருதம்பரா எனப்படும்.

இந்த நிர்விசார ஸமாதியில் சத்தியமான வஸ்துவின் தோற்றமே கிடைப்பதால் ருதம்பரா என்ற பெயர் இந்த பிரக்ஞைக்குப் பொருத்தம். இத்தகைய நிலை தர்மமேக ஸமாதிக்கு இட்டுச்செல்லும்.

ஶ்ருதாநுமாந ப்ரஜ்ஞாப்⁴யா மந்யவிஷயா விஶேஷார்த²த்வாத் || 49||
ஶ்ருத அநுமாந ப்ரஜ்ஞாப்⁴யாம் அந்ய விஷயா விஶேஷார் த²த்வாத்

சப்தத்தாலும் அனுமானத்தாலும் உண்டாகிற பிரக்ஞையை விட இது வேறானது. அது சாமான்யமானது. இந்த ருதம்பரா பிரக்ஞை அவற்றுக்கு எட்டாததை விஷயமாக உடையது.
ஞானம் பிரமாணங்களால் உண்டாகும். இவற்றில் சப்தமும், அனுமானமும் சாமான்ய ஞானத்தையே தரும். மலையில் புகை என்றால் அது மலையில் புகை இருக்கிறது என்ற சாமான்ய ஞானத்தையும், அங்கே ஏதோ எரிகிறது, அதனால் புகை வருகிறது என்ற சாமான்ய ஞானமும் கிடைக்கும். ஏன் புகை? எப்படிப்பட்ட நெருப்பு? எப்படி வந்தது போன்ற விசேஷ ஞானம் கிடைக்காது.

பிரத்யக்ஷம் என்பது இன்னொரு பிரமாணம். இது இரு வகை. சாமான்ய ப்ரத்யக்ஷம், யோக பயிற்சியால் உண்டாகும் ப்ரத்யக்ஷம்.

சாமான்ய ப்ரத்யக்ஷம் புலன்களால் ஏற்படுகிறது. இதன் வீச்சு குறைவானது. புலன்களில் குற்றம் இருந்தால் அது ஞானத்தை பொய்யாக்கி விடுகிறது. ஒரு புலன் அறிவதை மற்றொன்று அறிவதில்லை. அதனால் அப்படியே உண்மை ஞானம் கிடைத்தாலும் விசேஷமான ஞானம் ஒன்றும் முழுமையாக கிடைப்பதில்லை.

யோக ப்ரத்யக்ஷ ஞானம் அப்படி இல்லை. அது இந்திரியங்களை சார்ந்து இல்லை. ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை க்ரஹிக்கும். புதையல் போன்ற மறைந்துள்ளவற்றையும் கிரஹிக்கும். வேறு தேசம், லோகம் இவற்றிலுள்ளதையும் கிரஹிக்கும். அகவே இந்த யோகஜ ப்ரத்யக்ஷ ஞானத்தை ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை என உபதேசிக்கிறார்.

இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக்கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப்படுத்துகிறது. யோகப்பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான்.
இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ’ந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴ || 50||
தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ அந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴

மேற்கூறிய ருதம்பரா பிரக்ஞையால் உண்டான நிரோத சம்ஸ்காரமானது வேறு வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை செய்வதாக ஆகிறது.

வெளியில் உள்ள சப்தம் முதலான விஷயங்களையே சித்தம் பற்றி செல்கிறது. இது பல ஜன்ம பழக்கம் ஆகும். இது வ்யுத்தான சம்ஸ்காரம் எனப்படும். தத்துவ பழக்கம் பெற வைராக்கியம் முதலான சாதனங்கள் உள்ளன. இந்த தத்வ பழக்கம் இதை தடை செய்யும். ருதம்பரா பிரக்ஞா ஏற்படில் இது முழுதும் தடை செய்யப்பட்டதாகும். அவித்தை முதலிய க்லேசங்கள் குறைந்து சித்தம் விவேக க்யாதியை அடைந்து செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததாய் காரணத்தில் லயம் அடைந்து விடும். இந்த நிலையில் யோகியின் சித்தம் தன் காரியம் என்று எதையும் செய்ய சக்தி இல்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி…..

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி:
தஸ்யாபி நிரோதே⁴ ஸர்வநிரோதா⁴ந்நிர்பீ³ஜ: ஸமாதி⁴: || 51||

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் சம்ஸ்காரத்தினுடையதும் அதன் பிரக்ஞையின் உடையுதுமான நிரோதம் (தடை) உண்டான போது, எல்லாம் தடை செய்யப்பட்டதால் தன்னிலை மாறுவதற்கு ஏதுமில்லாத அஸம்ப்ரக்ஞாத ஸமாதி உண்டாகிறது.

யோக சாஸ்திரம் கேட்டலும், பொருளை மனனம் செய்வதும், புருஷனை மட்டும் த்யானம் செய்யும் பழக்கமான தர்மமேக ஸமாதியை உண்டாக்கும். பின் பர வைராக்கியம் என்ற பிரக்ஞையின் தெளிவு ஏற்பட்டு தர்மமேக ஸமாதியில் ருசி உண்டாகும். புருஷனை மட்டும் த்யானிக்க அதன் சாக்ஷாத்காரம் ஏற்படுகிறது; நிர் பீஜ யோகம் சித்திக்கிறது. [அதாவது சித்தம் முளை விடுவதில்லை.] இதுவே பழக, வேலையில்லாமல் சித்தம் அதன் காரணமான பிரக்ருதியில் ஒடுங்கிவிடும். செய்ய வேண்டிய காரியம் ஏதும் இருந்தால்தானே சித்தம் அதன் காரணத்தை விட்டு கிளம்பிப்போகும்? இப்படிப்பட்ட நிலை அடைந்த பின் செய்ய ஏதுமில்லை. யோகி புருஷனின் ஸ்வரூப மாத்திரத்தில் நிலை பெற்று முக்தனாகிறான்.

ஸமாதி பாதம் முடிந்தது.
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -1-ஸமாதி பாதம் –

November 17, 2023

பதஞ்சலி மஹாமுனிவர்‌, சரீர சுத்தி செய்து, ௮கனால்‌ காய ஸித்தி பெறுவதற்கு அநுகூலமாக வைத்திய சாஸ்திரத்தையும்‌;
வாககு சுத்தி செய்து, அதனால்‌ சப்‌தப் பிரஹ்ம உபாஸனை நலம்‌ தரும்படி. அனுஷ்டிப்பதற்கு,  பாணிநி வியாகரண சூத்திரங்கட்குப்‌ பெயர்போன மஹா பாஷ்யத்தையும்‌ ;-மனத்தைச்‌ சுத்த செய்து, கைவல்யம்‌.பெறுவதற்கு அனுகூலமாக இந்த யோக சாஸ்‌திரத்‌தையும்‌,-மனிதர்களின்‌ மேல்‌ உள்ள. காருண்யத்தினால்‌ அருளிச்‌ செய்தார்‌.
அவர்‌.இன்ன தேசத்தில்‌ இன்ன காலத்தில்‌ அவதரித்‌தார் என்பது, வியக்தமாகத்‌ தெரியவில்லை.
ஆனால்‌ இற்றைக்கு 2,300 வருஷங்களுக்கு முன்னர்‌ காஷ்மீரத்தில்‌ இருந்து இருக்கலாம் என்று வித்துவான்‌௧ளின்‌ அபிப்பிராயம்‌.
இவளை ஆதிசேஷ அவதாரமரசச்‌ சொல்‌லுவதுண்டு,

யோகசாஸ்திரம்‌ நான்கு பாதங்களாக நடை பெறுகிறது
(1) சமாதி பாதம்‌
(2) ஸாதந பாதம்‌
(3) விபூதி பாதம்‌
(4) கைவல்ய பாதம்‌ என்பனவாம்‌,

இக்த யோக சாஸ்திரத்துக்கு பாஷ்பம்‌ செய்தவர்‌ வியாசர்‌,

இவர்‌ பகவான்‌ ஸ்ரீ, வேதவியாளர்‌ எனச்‌ சிலர்‌ அபிப்பிராயப்படுகின்‌றனர்‌.
மற்றும்‌ இலர்‌, இவர்‌ வேரொரு ரிஷியாவர்‌ என்றும்‌, வேத வியாஸாரல்லர்‌ என்றும்‌ சொல்‌ கிறார்கள்‌.
இவ்வியாஸ பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிச்ரர்‌ என்பவர் தத்வ வைசாரதி ‘” என்னும்‌ விரிவான வியாக்யானம்‌ செய்‌திருக்கிறார்‌.
மேலும்‌, விஞ்ஞானபிக்ஷு என்பவர்‌ **யோக வார்த்திகம்‌” என்னும்‌ வார்த்திகமும்‌ எழுதியுள்‌ளார்‌-
ஸ்ரீ. போஜ ராஜர்‌ என்பவர்‌, ராஜ மார்த்தாண்டம்‌’” என்னும்‌ ஓர்‌ விருத்தியையும்‌ செய்திருக்கிறார்‌.

———————-

சகல கிலேசங்களும்‌ அற்றுப் போனவரும் , உக்கிரமான விஷத்தை யுடையவராயும்‌, அநேக முகங்களை யுடையராயும்‌,
யோக ஸித்தியைக்‌ கொடுக்கிறவராயும்‌, எப்போதும்‌ தியானத்தில்‌ இருப்பவராயமுள்ள
ஸர்ப்ப ராஜாவான ஆதி சேஷன்‌, உலகத்தின்‌ அநுக்கிரகத்திற்‌காக அனேக ரூபமாக அவதரிக்கிறர்‌. அத்தகைய ஆதிசேஷ பகவான்‌ சீஷர்களான உங்களை இரக்ஷிக்கட்டும்‌. –பதஞ்சலியார்‌ ஸ்தோத்திரம்‌.

வாக்கு , காயம்‌, மனம்‌ இவைகளின்‌ மலங்களைப்‌ போக்கடிக்கும் படியாக முறையே சப்த சாஸ்த்ரத்தையும்‌,
வைத்திய சாஸ்திரத்தையும்‌, யோக சாஸ்திரத்தையும்‌ ஜன உபகாரமாக அருளிய பகவான் பதஞ்சலியாரைப் போற்றுவாம்‌.

—————

(1) சமாதி பாதம்‌

யோக சாஸ்திரம்‌ பூர்வ மறையின்‌ சார்பாய்‌ ஆரம்பிக்கப் படுகிறது.–1-

ஆதியில்‌ சாங்கியதுக்குக்‌ கபில முனியும்‌, வேதாந்தத்திற்கு வியாச பகவானும்‌ இருக்கன்‌றமை போல,
யோக சாஸ்திர,த்‌திற்கு ஆதி கர்த்தர்‌ ஹிரண்ணிய கர்ப்பராவர்‌:
பதஞ்சலியார்‌ முன்‌னுள்ள சாஸ்‌திரத்தை அநுசரித்துப்‌. பிரக்ருத நூலைச்‌ செய்திருக்கின்றனமையால்‌
சூத்திரத்தில்‌ **அநு சாஸநம்‌” என்ற பதம்‌. உபயோகிக்கப்‌ பட்டுள்ளது.

யோகம்‌ என்றால்‌ சமாதி என்று பொருள்‌, அல்லது சேர்தல்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, –
ஜீவாத்மா பரமாத்மாவினுடன்‌ ஒன்றுபடுதலாம்‌. -முன்னது தான்‌ இந்த நூலாசிரியரின்‌ கருத்து.
யோக சாஸ்‌திரத்‌தின்‌ பிரயோஜனம்‌ ப்ரக்ருதிக்குட்பட்ட ஆன்மாவை வியோகம்‌ பெறும்படி செய்தல்‌.
பந்தத்‌திற்குட்பட்டவன்‌ யந்த விமோசனம்‌ பெறுதலுக்குச்‌ .சாதனமான நூல்

சிதித்தமானது ஐந்து பூழிகள்‌ அல்லது ஐந்து படிகளை உடையது.
(1 ஷிப்தம்‌-சஞ்சலமான நிலைமை:
(2) ‘மூடம்‌-ஒன்‌றும் அறியாத நிலைமை.
(8) விஷிப்‌தம்–சொற்ப காலம்‌ சஞ்சலமின்‌மையும்‌, வெகு காலம்‌ சஞ்சலமுண்மையும்‌ இருக்கின்ற நிலைமை.
(4). ஏகாக்கிரம்‌- ஓரே வஸ்துவை அவ லம்பித்திருக்கின்‌ற
நிலைமை.
(5) நிருத்தம்‌ –விருத்தி சூந்யமான நிலைமை,

ஆனால்‌ விருத்தி பீஜமாகிய சம்ஸ்கார மாத்‌திரம்‌ உள்ள. நிலைமை.
முதல்‌ மூன்று படிகளில்‌ யோகாப்பியாசம்‌ முடியாது, : நான்காம் ஐந்தாம் படிகளில்‌ கூடும்‌.

—————

யோகம்‌ என்பது சித்த ந்ருத்திகளை நிரோதம்‌ செய்தலாம்‌.–2-

இந்த சூத்‌திரத்தால்‌ நிருத்தம்‌ என்ற நிலையான : அஸம்பிரஞ்ஜாத சமாதி என்பது மாத்திரம் தான்‌ யோகம்‌ எனப்‌ பொருள்படும்‌.
ஆனால்‌ எல்லாச்‌ சித்த விர்த்திகள்‌ என்று சூத்திரத்‌தில்‌ சொல்லாமையால்‌ கீழான படிகளான ஷிப்தம்‌, மூடம்‌, விக்ஷிப்‌தம்‌ இவைகளை நீக்கி
ஏகாக்கிரம்‌, நிருத்தம்‌ என்ற இரண்டு படிகளும்‌ யோகப் பயிற்சிக்கு உரியதாகும்‌,
சித்தம்‌ என்பது சத்வ, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற முக் குணங்களுடன் கூடி நிகழ்வது. -சத்வ குணமானது எப்போதும்‌ ௮தனிடம்‌ உள்ளது,
சித்தம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை களுடன் சம்பந்திக்கும் போது, உலக விஷயங்களின்‌ பாவங்கள்‌ உண்‌டாகின்றன
தமல்‌ மேலிட்டால்‌, அதர்மம்‌, அஞ்ஞானம்‌, லைராக்‌கியமின்மை, ஐஸ்வரியமின்‌மை மனத்திற்கு எற்படும்‌.
ரஜஸ்‌ மேலிட்டால்‌, மேலிட்ட .பாவங்களின்‌ எதிர் மறையான நிலைமை உண்டாகிறது.

ரஜஸ்‌ அற்பமேனும்‌ இல்லாமல்‌ பொய்த்துப் போமாகில்‌, புருஷஸ்வ ரூபத்தில்‌ பிரதிஷ்டை உண்டாகிறது.
இந் நிலையானது தர்மமேகத் தியானத்‌திற்குப்‌ போதலுக்கு. அனு கூலமாயுள்ளது .
தர்ம மேக சமாதி வரையில்‌ உள்ள சமாதியின்‌ பல படிகள்‌ ஸம் பிரஞ்ஞாத சமாதியில்‌ அடங்கும்‌.
தர்ம மேக சமாதியைப் பற்றிப்‌ பின்னர்‌ விவரிப்‌போம்‌,

ஸம்ஸ்சார மாத்திரம்‌ மிகுந்து இருந்து விர்க்திகள்‌ ஓழிவடையும் போது , அந்நிலை அஸம் பிரஞ்ஞாத சமாதியாம்‌,
யோகம்‌ ஸம்‌ பிரஞ்ஞாத சமாதி யென்றும்‌ அஸம்‌ பிரஞ்ஞாத சமாதி யென்‌றும்‌ இருவகைக் தாம்‌.
இவ் விரண்டும்‌ முறையே ஸ்பீஜம்‌ என்றும்‌ நிர்பீ ஜம்‌ என்‌றும்‌ பெயர் பெறும்‌.

—————–

அப்போது. (விக்ருதிகள்‌ அடங்கும் போது) புருஷன்‌ தன்‌ ஸ்வரூபத்‌தில்‌ இருப்பான்‌. –3-

விக்ருதிகள்‌ அடங்கினால்‌ வீஷயம்‌ ஒன்‌றுமில்லை.-அச் சமயத்தில்‌ கேவலம்‌ தன்னிலைபில்‌ புருஷன்‌ இருப்பான்‌.
அது கைவல்ய ஸ்திதியைப்‌ போன்றதாம்‌,

ஏனைய காலத்தில்‌ (விக்ருதிகள்‌ அடங்காமல்‌ இருக்கின்ற காலத்தில்‌) புருஷன்‌, நிகழம்‌ அந்தந்த விரக்தியுடன்‌, ஸம்பந்தித்து இருப்பான்‌. –4-

விக்ருதிகள்‌ ஐவகை. சில துக்க்காமானவை. சில துக்கமின்மையானவை. –5-

பிரமாணம்‌, விபரியயம்‌, விகற்பம்‌, நித்திரை, ஸ்மரணை என்பன ஐவகை விர்த்திகளாம்‌. –6-

பிரத்யக்ஷம்‌, அநுமானம்‌, ஆகமம்‌ என்பன பீரமாணங்கள்‌. –7-

உபமானம்‌, அருத்தாபத்தி, அனுபலப்தி, இம்‌ மூன்றையும்‌ சேர்த்து சிலர்‌ ஆறு பிரமாணங்கள்‌ உண்டென்பார்கள்‌.
ஆனால்‌ இவை மூன்றும்‌ ௮நுமானத்தில்‌ அடங்கும்‌,
ஆகமம்‌ ஆப்‌த வாக்கியம்‌, சப்தம்‌, –சர்வஞ்ஞனாகவும்‌, கருணை யுள்ளவனாகவுமிருக்‌கின்ற புருஷனின்‌ வாசகம்‌.

இம்மூன்று ்‌ பிரமாணங்களினும்‌ தாரதம்மியமுண்டு.
சாதாரண மனிதன்‌ பிரத்தியக்ஷத்தையும்‌,
அறிவில் மிகுந்தவன் பிரத்தியக்ஷம்‌ அனுமானத்தையும்‌,
இன்னும்‌ விசால அறிஞன்‌ சப்தத்தையும்‌ பிரமாணமாகக் கொள்ளுவான்‌,
எல்லாம்‌ பிரமாணங்களும்‌, ஆத்ம ஸம்வித்‌ பெறும் வரையில்‌ பயனுள்ளவை,
ஆத்‌ம ஸம்வித்‌ அடைத்த மஹா புருஷனுக்குத்‌ தன்னுடைய சாக்ஷாத்காரமே அன்றி, மத்றவை பிரமாணமன்று ,
அந்த உயர்நிலை பெறுவதற்கே, பிரமாணங்கள்‌ படிகளாம்‌,-சாதனங்களாம்‌.

விபர்யயலம் என்பது ஒரு வஸ்துவிற்கு உரிய ஸ்லருபம்‌ தோன்றாமல் பொய்யான வேறே ஒரு ஸ்வரூபம் தோன்றலாம்‌.–8-

சந்தேகம் என்பது விபர்யயத்தில்‌ சேர்ந்ததாகவே சூத்‌திரக்காரர்‌ அபிப்பிராயம்‌. அதனால்‌ அதைப் பற்றி வேறாகச்‌ சொல்ல வில்லை.

விகற்ப்பம்‌ என்பது வஸ்து உண்மையில்‌ இன்றி, வார்ததை மாத்திரையை அநுசரித்து உண்டாகும்‌ மனோ விர்த்தியாம்‌.–9-

முயக்கொம்பு, வந்தியா புத்திரன்‌, சைதன்னியம்‌
(அறிவு) புருவனுடைய ஸ்வரூபம்‌, ( இதில்‌ சை தன்னியம்‌, புருஷன்‌ என்ற இரண்டு வார்த்தைகளினால்‌
வித்தியாசமிருப்பினும்‌, அவைகள்‌ குறிக்கும்‌ பொருள்‌ ஒன்‌றே , இரண்டல்ல).
ராகுவின்‌ தலை இவை போன்றவை உதாரணமாகும்‌.

———

நித்திரை என்பது வெளி விஷய பிரஜ்ஜை இன்றி (சத்வ ரஜோ குணங்கள்‌ அடங்கி, தமோ குணம்‌ மேலிடும்‌ காலையில்‌) அவித்யை சம்பந் தமான மநோ விர்த்தியாம்‌.–10-

சாதாரண ஜனங்களின்‌ அபிப்பிராயத்தில்‌, நித்திரையில்‌ விர்த்தி சூன்யமாம்‌.
தூங்கி விழித்ததன் மேல்‌, “சுகமாய்‌ தூங்கினேன்‌” என்ற ஸ்மரணை இருக்கின்‌றமையால்‌,
உண்மையில்‌ அது தூக்கத்‌தில்‌ ௮பாவ ரூபமான ஒரு விர்த்தியாக இருக்கின்றது.

ஸ்மிருதி என்பது அனுபவித்த விஷயம்‌ மனத்தை விட்டு நழவாமல் இருத்தலாம்–11-

அனுபவித்த(பிரமாணத்தினால்‌ அனுபவித்த) இவ் வைந்து விர்த்திகளும்‌ சகம்‌, துக்கம்‌, மோகம்‌ இவைகளுக்குட் பட்டவை.
இவ் விர்த்திகளில்‌ பிரமாணம்‌, விபரியயம்‌, விகற்பம்‌ இவை மூன்றும்‌-ஜாக்கரத அவஸ்‌தையில்‌ அனுபவிக்கப் படுகின்‌றன.
இவைகளின்‌ வாசனைகள்‌ மாத்திரம்‌ ஸ்வப்ந அபவஸ்தையில்‌ அனுபவிக்கப்படுகின்‌றன –
ஸூ ஷுப்தி அவஸ்தையில்‌ நித்திரை மாத்திரம்‌ உள்ளது,
ஸ்மிருதி மற்றைய இரண்டு அவஸ்தைகளிலும்‌ உள்ளது -நித்திரையில்‌ இன்றாம்‌.

இவைகள்‌ (மேற்கண்ட விர்த்திகனள் ) அப்பியாசம்‌, வைராக்கியம்‌(என்ற உபாயங்களால்‌) நிரோதம்‌ செய்யத் தக்கவை.–12=

மநோ விர்‌த்திகளாகிற பிரவாகமானது , சத்வம்‌ மேலிட்டிருந்தால்‌, நல்ல மார்க்கத்திலும்‌, ரஜஸ்‌, தமஸ்கள்‌ மேலிட்டிருந்தால்‌ தீய மார்க்கத்திலும்‌ செல்லுகின்றது.
நல்‌ மார்க்கம்‌ என்பது அந்தர் முகமாய்க் கைவல்லியத்துக்குக்‌ கொண்டு போய்ச்‌ சேர்ப்பிக்கும்‌.
தீய மார்க்கமானது விஷய நுகர்ச்சி என்ற ஸம்ஸாரத்‌திற்குள்‌ கொண்டு போய்‌ விடும்‌,
வைராக்ய ஸாதநத்தால்‌, விஷயப்‌ பிரவாகத்தைத்‌ தடுத்து அணை போட்டும்‌, அப்பியாச ஸாதனத்தால்
நல்ல மார்க்கம்‌ என்றதனை வெட்டி விட்டும்‌, அதில்‌ மநோ விர்த்திகளைச் செல்லும்படி. செய்தலுமாம்‌.
வைராக்கியம்‌, பிரதி பந்தம்‌ அநிஷ்ட நிவிர்‌த்தியையும்‌, அப்பியாசம்‌ இஷ்டப் பிராப்‌தியையும்‌ தரும்‌.

அதில்‌ (அப் புருஷனிடத்நில்‌) மனத்தை ஸ்திரமாக நிறுத்தலின்‌ ழயற்சி அப்பியாசமாம்‌,–13-

பஹிர் முகமாகிய விர்த்திகள்‌ போய் அந்தர் முகமான விர்த்திகள்‌ நடை பெறல்‌ ஸ்‌திதி எனப்படும்‌.
அந் நிலையை ௮டைவதற்காக, பஹிர்‌ அந்தர் சாதநங்களை அனுஷ்டித்தல்‌ அப்பியாசமாம்‌.

நீண்ட காலம் இடையறாமல் குறித்த லஷ்யத்தில் ப்ரயத்தனத்துடன் அவ்வப்பியாஸம் நிகழுமாகில் அது திடமானதாகும் –14-

வைராக்யம் என்பது சாஸ்திரங்களில் பிரஸ்தாபித்து இருக்கிற ப்ரத்யக்ஷ விஷயங்களில் அவாவின்றி
அவைகளை ஸ்வா தந்தர்யம் செய்யும் தகைமையாகும்–15

வேண்டுதல் -வேண்டாமை -இல்லா நிலைமை வைராக்யம் -அது நாலு படி யுள்ளது
1- யதமாநம் -முயற்சி -மனம் இந்திரிய விஷயங்களில் செல்லாமல் தடுத்தலின் முயற்சி முதல்படி
2- வியதிரேகம் -அம்முயற்சி செய்கிறதில் சில விஷயங்களைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் முன்னரே தள்ளப்பட்ட விஷயங்கள் ஆகின்றன
அதாவது அவைகள் சம்பந்தமாக வைராக்யம் பக்குவமாய் இருக்கிறது
சில நம்மை இழுக்கின்றன -அவை நம்மை இழுக்காமல் தடுக்க முயல்கின்றோம் -இவைகளை பற்றிய வைராக்யம் பக்குவமாகிக் கொண்டு வருகின்றது
சில நம்மை இழுக்கின்றன -ஆனால் அவைகளைத் தடுக்க எவ்வித முயற்சியும் செய்ய நாம் ஆரம்பிக்க வில்லை
இவைகளை பற்றி வைராக்யம் ஏற்டபட்டு இனி பக்குவம் ஆக வேண்டும்
இவ்விதமாக விஷயங்களின் இழுப்பில் தாரதம்யம் அறிதல் இரண்டாம் படி
3-ஏகேந்த்ரியம் -பக்குவமான வைகளில் இந்திரியங்கள் சலிக்காமல் இருக்க மனம் மாத்ரம் விஷயங்களில் விருப்பு அல்லது வெறுப்பு கொள்ளுதல்
மனமாகிய ஒரு இந்திரியத்தின் தொழில் இருக்கின்றமையால் ஏகேந்த்ரியம் என்பது மூன்றாம் படி
4-வஸீ காரம்-விஷயங்கள் தாமே ஒழிவை அடைகின்றன -இந்திரியங்கள் சலிக்கவில்லை –
மனத்தில் உள்ள விருப்பு வெறுப்பு அற்றுப்போதல் -அதனால் ஸூ தந்திரம் ஏற்படும்
நாம் விஷயங்களின் வசமாகாமல் அவைகளை நமது வசமாக்கிக் கொள்ளுதல் -வசீகரம் நான்காம் படி
புருஷ தர்சனம் நிகழ்வதால் இது உண்டாகும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை

ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –
ஏக ஆஸ்ரய தோஷம்

ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்

பரம வைராக்கியம்‌ என்பது, புருஷ தர்சனம்‌ நிகழ்வதினால்‌(சத்வ,ரஜஸ்‌, தமஸ்‌ என்ற) குணங்களினும்‌ பற்றில்லாத நிலையாம்‌.–16-

சாதாரண வைராக்கியம்‌, காரியங்களான விஷயங்களில்‌ பற்றில்லாமை. –காரணங்களான குணங்களில்‌, பற்றில்லாமை பரம வைராக்யம்‌.
முன்னது அபர வைராக்கியம்‌ என்றும்‌ பின்‌னது பரம வைராக்கியம்‌ என்றும்‌ பெயர் பெறும்‌.
முன்னது ஸத்வ குணம்‌ மேலிட்டு ரஜோ குணம்‌ சம்பந்தமுடையதாய்‌ தமஸ்‌ அற்றுப் போயிருக்கின்‌ற நிலை.
இதில்‌ சித்திகள்‌ அடையலாம்‌. சுவர்க்கம்‌, விதேகிகளின்‌ நிலைமை, பிரக்ருதி லயம்‌ முகலியவை பெறலாம்‌. பின்னதான பரம வைராக்யம் பெற்ற யோகி மேற்படி அனுப வங்கள்‌ அடைய அருகனாக விருந்தும்‌; அவைகளை அலஷியம்‌ செய்து புருஷ தர்சநம்‌ நோக்கமுள்ளவனாக, புருஷனை சாஷாத்கரிக்கிறான்‌.

ஸம் பிரஞ்ஞாத ஸமாதி என்பது விதர்க்கம்‌, விசாரம்‌, ஆநந்தம்‌ அஸ்மிதை என (நால்‌ வகை) ரூபத்தை அனுசரித்து நிகழ்வதாதம்‌.–17-

சாதனங்களைச்‌ சொல்லி, பின்னர்‌ சாத்தியம்‌, அதாவது அடையப்படும்‌ ஸமாதிகளைச்‌ சொல்லுகின்றார்‌.
ஸமாதி இரு விதம்‌. முதற்படி ஸம் பிரஞ்ஞாத ஸமாதி,-இரண்டாம்படி. ௮ஸம்பிரஞ்ஞாத ஸமாதி.
ஸம் பிரஞ்ஞாத ௪மாதி நான்கு உட்பிரிவுகளை யுடை.
பது. யோகி யானவன்‌ ஸ்தூல வஸ்துவை முதன்மையில்‌ தியானம்‌ செய்து (விதர்க்கம்‌),
பின்பு ௮தன்‌ ஸூஷ்ம நிலையான. தன்மாத்திரைகளைத் த்யானம் இயாசம்‌ செய்கிறான்‌ (விசாரம்‌).
இது வில் வித்தையில்‌ பழகுவோன்‌, முதலில்‌ ஸ்தூல லஷியத்தையும்‌, பின்பு ஸூஷ்ம லக்ஷியத்தையும்‌. வைத்துப்‌ பழகுவது போன்றதாகும்‌.

(1) ஸ்தூல வஸ்து த்யானம் –விதர்க்கம்‌.
(2) ஸூக்ஷ்ம வஸ்து தியானம்‌–விசாரம்‌,
(8) இந்திரியங்கள்‌ ஸ்தூல வஸ்‌துக்களில்‌ செல்லாமல்‌ அதனதன்‌ ஸ்தானத்தில்‌ நிற்கும்படி செய்‌தலினால்‌ உண்டாகும்‌ அனுபவம்‌–ஆனந்தம்
(4) வேறு ஒன்றும்‌ மனத்தில்‌ வராமல்‌ பிரயத்தனத்தால்‌ தடுத்து நான்‌ என்ற பிரஞ்ஞை மட்டும்‌ இருப்பது ௮ஸ்மிதை,
விசாரம்‌, ஆனந்தம்‌; ௮ஸ்மிதை இம் மூன்றும்‌ விதர்க்கத்தில்‌ இருக்கின்‌றன
ஆனந்தம் ௮ஸ்மிதை இவ் விரண்டும்‌ விசாரத்திலிருக்கின்‌றன. அஸ்மிதை மாத்திரம்‌ ஆனந்தத்தில்‌ இருக்கின்றது.

மேதல் கண்ட. விஷயங்களையே அடியில்‌ வருமாறு சொல்லலாம்‌:
(1) முதற் படியில்‌ ஸ்தூல விஷயங்களின்‌ ஓன்றை லஷியம்‌ செய்து தியாநம்‌ நிகழும்‌–விதர்க்கம்‌,
(3) இரண்டாம் படியில்‌ ஸூஷ்மமான விஷயங்களின்‌ யாதேனும்‌ ஒன்றை லக்ஷியம் செய்து த்யானம் நிகழும்‌.
பஞ்ச தன்மாத்திரை அஹங்காரம் , மஹத் தத்‌வம்‌ முதலியவைகளில்‌ ஒன்றின்‌ மேல்‌ தியாநிப்பது –விசாசம்‌.
(3) மூன்றாம் படியில்‌, ஸ்தூல ஸூஷ்ம விஷயங்கள்‌ இல்லாமல்‌, இந்திரியங்களை அதனதன்‌ ஸ்தானத்தில்‌ நிறுத்தி, அந் நிலையில்‌ தியாநம்‌ பண்ணுவது ஆனந்தம்‌,
4- நான்காம் படியில் இந்திரியங்களையும்‌ விட்டு நான்‌ என்ற பாவம்‌ தனித்திருத்தல்‌ ௮ஸ்மிதை ,
இம் முறையில்‌ மனத்திற்கு யாதேனும்‌ ஆலம்பநம்‌ (பிடிப்பு) உள்ளது , அதனால்‌ இந் த ஸமாதிக்கு ஸம் பிரஞ்ஞாத ஸமாதி எனப்‌ பெயர்‌.

மற்றது (அஸம் பிரஞ்ஞாத சமாதி யானது) மநஸ் சிங்களம் இன்மையை அடிக்கடி அப்பியசிப்பதினால் உண்டாதம்‌.
(ஆனால் ) சித்தத்தில்‌ பூர்வ ஸம்ஸ்கார சேஷமிருக்கும்‌.–18-

இம்முறையின்‌ அப்பியாஸம்‌ ஸ்‌திரமான பிறகு, ஒரு
வித அலம்பநமுமின்றி மனம்‌ தனித்திருத்தல்‌ எற்படும்‌.
ஆனால்‌ ஸம்ஸ்கார சேஷம்‌, இச் சமாதி நிகழுங்கால்‌, இருக்கும்‌, -இச் சேஷமும்‌ இச் சமாதி ஸ்திரப்படு மாகில்‌ ஓழியும்‌.

இந் நிலையைத்‌ திரு மூலர்‌ அடியில்‌ வருமாறு பிரஸ்‌,தாபிக்கிறார்‌–
நானென்றுந் தானென்று நாடி நான்‌ சாரவே
தானென்று நானென்‌ றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்‌
றானென்று நானென்‌றுஞ்‌ சாற்‌ற கிலேனே –திருமந்திரம்

இது எல்லா விர்த்திகளும்‌ ஓய்ந்த நிலை. –திரிபுடி, அற்ற படி–ஆனால்‌ இது ஸூஷ்ப்தியின் லயம்‌ அன்று –
பிரஞ்ஞை மாத்திரம்‌ இருக்கும்‌. -அலை யற்ற கடல் போன்ற நிலை இது,
திரை பொரா மன்‌னும்‌ அமிர்தத் தெண்‌ கடலே” என்ற மாணிக்க வாசகர்‌ ௮னுபவ வாக்கு இங்கு கவனிக்கத் தக்கது .
ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குணங்கள்‌ நீங்கப் பெற்று , சுத்த ஸத்வ குண ஸ்வரூபமாகவே ஆகின்ற நிலை இது:வாம்‌.
பர வைராக்கியம்‌ இவ் வுயர் நிலைக்குச்‌ சாதனமாம்‌-

மனத்‌தின்‌ ஏகாக்கிர நிலையில்‌ ஸம் பிரஞ்ஞாத சமாதி ஏற்படக்‌ கூடியது, மனத்தின்‌ நிருத்த நிலையில்‌, அஸம் பிரஞ்ஞாத சமாதி ஏற்படக் கூடியது .
அதனால்‌ ௮ஸம்பிரஞ்ஞாத சமாதி, நிரோத சமாதி என்றும்‌ பெயர்‌ பெறும்‌,

இந்த அஸம் பிரஞ்ஞாத சமாதி யானது( வைராக்கியம்‌ முற்றும்‌ ஏற்‌படாமல்‌ போன நிலையில்‌)
தேவர்களின்‌ ஸ்தானத்தையும்‌ பிரகிருதி லய ஸ்தானத்தையும்‌ கொடுக்கும்‌.

அஸம்பிரஞ்ஞாத சமாதி
(1) பவப் பிரத்தியயம்‌
(2) உபாயப் பிரத்தியயம்‌ என இரு படிகள்‌ உடையது,

(1) பவப் பிரத்தியயம்‌, அவித்தையைக்‌ காரணமாக உடையது -அதாவது அவித்தையின்‌ சம்பந்தமுடையது,
இந்நிலையில் அவித்யை என்ற ஆவரணம்‌ உள்ளது -. பல புவனங்களின்‌ போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இச்சை யோகியைப் பற்றி நிற்கும்‌,–வைதேகியம் அல்லது தேவர்களின்‌ நிலைமையும்‌ இதல்‌ அடங்கும்‌.-இவ்வித ௮னுபவங்களுக்குக்‌ கால வரம்பு உண்டு,
இந்திரியங்களை உபாஸிக்கிறவர்கள்‌, 10 மந்வந்தரங்கள்‌ லோகாந்தரங்களில்‌ வசிப்பார்கள் என்றும்‌,
பூதங்களை, ௮தாவது பஞ்ச தந் மாத்திரைகளை உபாஸிக்கிறவர்கள்‌ 100 மந்வந்தரங்கள் லோகாந் தரங்களிலும்‌,
அகங்காரத்தை உபாஸிக்கிறவர்கள்‌ 1000 மந்வந்தரங்கள்‌ லோகார்தரங்களிலும்‌ வசிப்பார்கள் என்றும்‌ வாயு புராணத்தில்‌ சொல்லி யிருக்கிறது,

பிரக்ருதி லயாள்‌, மகத்‌, அவியக்தம்‌ முதலியவைகளை உபாஸிக்‌கிறவர்கள்‌. அதாவது அதுவும்‌ தானும்‌ ஒன்று என, உபாஸிக்றவர்கள்‌. சரீரம்‌ போன பிறகு, உபாஸ்யுமான வஸ்துவுடன்‌ லயத்தை அடைகிறார்கள்‌.

புநஷன்‌ எந்த சங்கல்பத்துடள்‌ மரணம் அடைகிறானோ , அந்த சங்கல்ப ரூபமாக லோகாந்தரத்தில்‌ ஆகிறன்‌. –சாந்தோக்யம்

**கெளந்தேய (ஒருவன்‌ தனது வாழ்வின்‌) முடிவிலே எந்தெந்தப்‌ பொருளை நினைந்து சரீரத்தை விடுகின்றானோ .
அதனைப்‌ பற்றிய பாவனையை எப்பொழதும்‌ பாவித்த, (ஸம்பாதித்துக் கொண்ட) வனாய் அதையே அடைகிறான்‌. –ஸ்ரீ கீதை

இவர்களுக்கு நீடித்த சுகமிருக்தானும்‌ அதற்கு முடிவு உண்டு—புநர் ஜென்மம் உண்டு.
தவளைகளின்‌ கருக்கள்‌ மழையில்லாத காலத்தில்‌ மண்ணோடு கலந்து அந்தர்கதமாக இருக்கின்றன.
அவை போல, இப்பிரக்௫தி லயாள்‌ அவியக்தத்தில்‌ லயமடைகிறார்கள்‌.
பின்பு தவளைக்‌ கருக்கள்‌: வருஷ காலத்தில்‌ உண்டாகுமாறு போல, இப் பிரகிருதி லயாளரானவர்கள்‌, பூமியில்‌ சரீரம்‌ பெறுகிறார்கள்‌.
அவர்களுக்கு அந்த லய காலத்தில்‌ அந்த லயம்‌ கைவல்லியத்‌திற்குச்‌ சமமானதாகத்‌ தோன்றும்‌;
ஆனால்‌, அது கைவல்லியமன்று .

உபாயப் பிரத்தியயம்‌:–புருஷ ஸாக்ஷாத்காரத்னத உண்டி பண்‌ணுதல்‌ மநத்தின்‌ பிரயோஜாம்‌.
மேற்கண்ட பிரக்ருதியை ௮னுபவங்களில்‌ பற்றில்லாமல்‌, மநம்‌ மேல்‌ நோக்கி , புருஷ தர்ஸநம்‌ பெறுமாகி ல்‌, ௮துவே கைவல்லிய நிலை. இது தான்‌ உபாயப் பிரத்யயம்‌.
மஹத்தை அதாவது புத்தியை நான்‌ என்று உபாஸிக்கிறவர்கள்‌, 10,000 மந்வந்தரங்கள்‌. லோகாக்‌தரங்களில்‌ வசிப்பார்கள்‌ என்றும்‌,
அவியக்தத்தை உபாஸிப்பவர்கள்‌ 100,000 மந்வந் தரங்கள் லோகாந்தரங்களில்‌ வசிப்பார்கள்‌ என்றும்‌,
புருஷ தர்சனம் அடைகிறவர்கள்‌ கால வரம்பைத்‌ தாண்டுகிறார்கள்‌ என்றும்‌, வாயு புராணத்தில்‌ சொல்லி யிருக்கின்‌றன,

முன்‌ பிரஸ்தாபித்த தேவர்களின்‌ ஸ்தாநம்‌,-பிரகிருதிலயஸ்தாநம்‌ இவைகளைக்‌ கருதாத) மற்றவர்களுக்கு
சிரத்தை, வீரியம்‌, ஸ்ம்ருதி; ஸமாதீ இவைகள்‌ மூலமாய்‌ (கைவல்யம்‌ சித்திக்கும்‌.)–20-

சிரத்தை என்பது இங்கு, உயர் நலம் அமைந்த லஷ்யமான கைவல்யத்தை நோக்கான மநத்‌தின்‌ தெளிவும்‌, ௮தனால்‌ மநத்தின்‌ விசேஷ முயற்சியுமாம்‌.
புத்தி மேன்மேலும்‌ தெளிவு பெற, விரியம்‌, அதாவது மந எழுச்சி, மந உத்ஸாகம்‌ ஏற்படும்‌,

ஸ்ம்ருதி: அந்த உயர் நலமுள்ள லக்ஷியம்‌ மநத்தில்‌ தோன்றவே, அதை இடையறாது நினைத்தல்‌, த்யாநித்தல்‌.
ஸமாதி: அப்படி நினைத்தலால்‌ மநம்‌ ஐகாக்ரியம்‌ -கொள்ளும்‌.-மநச் சலநமின்மை: உண்டாம்‌.
பிரஞ்ஜை : மநம்‌ ஸமாதி பெறவே யதார்த்தமான .ஞாநம்‌,
‘மெய்யுணர்வு உண்டாகும்‌.
இவைகளில்‌ முன்னது , .பின்னது உண்டாவதத்கு .அநு கூலமாலம் ,

தீவிரமான வைராக்கியம் உள்ளர்களுக்‌கு ஸமாதி நிலை ஸமீபமா யுள்ளது.–21-

யோகிகள் 9 வித படி.களில்‌ உள்ளவர்கள்‌. உபாயங்‌கள்‌, வைராக்கியங்களின்‌ தார .தம்மியங்களினால்‌ அப்‌ படிகள்‌ ஏற்படுகின்றன.
உபாயம்‌ மூன்று விதம்‌–மிருது , மத்தியமம்‌, அதிமாத்‌திரை;-வைராக்கியமும்‌ மூன்று விதம்‌.
அதி மாத்திரையான உபாயம்‌, அதி மாத்ரையான வைராக்கியம்‌ இவை யிரண்டும்‌ கூடிய யோகிக்கு,
இந்த சூத்திரத்திற்‌ சொல்லிய பிரகாரம்‌, ஸமாதி ஸமீபத்‌திலுள்ளது . அதாவது ஸமாதி லாபம்‌, ஸமாதி பலம்‌ உண்டாகிறது –

சிரத்தை முதலிய உபாயங்களை அப்பியஸித்தாலும்‌, ஸமாதி லாபம்‌, ஏன்‌ எல்லாரும்‌ அடைய வில்லை என்றால்‌,
மேற்கண்ட விதமாக, சிரத்தை முதலியவைகள்‌ பல படிகளாக இருக்கின்றன,
அப்‌ படிகளின் கண்ணுள்ள யோகிகள்‌ பல திறத்தாராக இருக்கின்றார்கள்‌. -உபாயம்‌, வைராக்யம்‌ பல தாரதம்மியங்களை உடையன.
அத்‌ தார தம்மியங்களுக்குக்‌ காரணம்‌, பூர்வ ஜந்மங்களில்‌ ஏற்பட்ட ஸம்ஸ்கார விசேஷங்களாம்‌.
ஸம் பிரஞ்ஞாத ஸமாதியின்‌ பலன்‌ அஸம்பிரஞ்ஞாத ஸமாதியாம்‌, அஸம் பிரஞ்ஞாத சமாதியின் கைவல்லயமாம்‌

மேலும் அத் தீவிரமான வைராக்கியம்‌ மூன்று படிகளை உடையது-மிருது, மத்தியமம்‌, அதிமாத்திரை .–அவைகளில்‌ பின்னது முன்னதை விட. விசேஷமாம்‌.–22

ஈஸ்வர பக்தி விசேஷத்தினாலாவது.–23-

முன்‌ 20-ம்‌ சூத்‌திரத்தில்‌: கண்ட உபாயங்களைத் தவிர, பின்வரும்‌ சூத்‌திரங்களில்‌ பிரஸ்‌தாபிக்கப்படும்‌. இன்னும்‌
பல: உபாயங்களால்‌ ஸமாதி நிலையைப்‌ பெறலாம்‌ என்பதைச்‌ சொல்லுகிறார் -இந்த சூத்திரத்தில்‌ ஈஸ்வரப்‌ பிரணிதாநம்‌, ௮தாவது
இறைவனிடம் அன்பின்‌ மிகுதியால்‌ ஸமாதி லாபம்‌, பலம்‌ பெறலாம்‌ என்பது சொல்லப்படுகிறது.
வேறு வியாபாரமின்‌ றி பக்தியினால்‌ மாத்திரம்‌.இச் சமாதி லாபம்‌ ஸித்‌திக்கும்‌.
பக்தி. என்பது. மநம்‌,. மொழி, மெய்‌களால்‌ நிகழ்வன… பக்தியினால்‌ மாத்திரம்‌ என்பதனை கீதை -9-22- சொல்லும்

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்—৷৷9.22৷৷

என்னை நினைப்பது தவிர வேறு பயன் இல்லாதவர்களாய் -என்னையே நினைப்பவர்களாய் –
எந்த மஹாத்மாக்கள் என்னை எல்லாக் கல்யாண குணங்களோடும் எல்லா விபூதிகளோடும் முழுமையாக
உபாசிக்கிறார்களோ -என்னோடு எப்போதும் சேர்ந்து இருக்கையையே விரும்பும் அவர்களுக்கு
நான் என்னை அடைவதாகிற யோகத்தையும் –
மறுபடி சம்சாரத்துக்குத் திரும்பி வராமையாகிய ஷேமத்தையும் அளிக்கிறேன்

கிலேசம்‌, கர்மம்‌, பலன்கள்‌, ஆசயம்‌ இவைகள்‌ இல்லாத புருஷ ஸ்ரேஷ்டன்‌ ஈஸ்வரனாம்‌–24–

ஈஸ்வரன் எத் தன்‌மையன்‌ என்பதை, 24, 25, 26-வது சூத்திரங்களிலும்‌,
அவரைப்‌ பக்‌தி செய்யும்‌ முறையை -27- 28-லும்‌,
அதன்‌ பயனை 29-லும்‌. விவரிக்கிறார்‌.

கிலேசம்‌, 2-வது பாதம்‌… 8-ம்‌ சூத்திரத்திற்‌: சொல்லி யிருக்கிறபடி, அவித்தை, அஸ்மிதை, ராகம்‌, துவேஷம்‌, ௮பி நிவேசம்‌, என்பனவாம்‌.
கர்மங்கள்‌ என்றால் அவைகளுக்குக்‌ காரணமான நன்மை, தீமையாம்‌.
பலம்‌ என்பது அக் கர்மங்சளின்‌ பயன்கள்‌- -அவை . ஜாதி ; ஆயுஸ்‌, போகங்கள்‌ என்பவையாம்‌.
ஆசயம்‌ என்றால் : பூர்வ கர்ம வாசனைகள்‌… இப்‌ பூர்வ கர்ம வாசனைகளே இந்த ஜென்மத்தில்‌ கர்மங்கள்‌ நடைபெறக்‌ காரணமாகும்‌.
இவை சித்தத்தில்‌ ஸம்ஸ்கார ரூபமாக இருக்கின்றன. புருஷன்‌ அவைகளின்‌ பலன்களை அனுபவிப்பதால்‌ அவனிடம்‌ ஆரோபிக்கப்படுகின்‌றன.
இவை , சண்‌டையில்‌ யுத்த வீரர்கள் ஜயித்தாலும்‌ தோல்வி யடைந்தாலும்‌, அஜ் ஜயமும்‌ தோல்வியும்‌ இராஜாவைச்‌ சேர்கின்‌றமை போலவாம் .
இந்த போகம்‌ சுத்தமாய்ப்‌ பற்றாத புருஷ ஸ்ரேஷ்டன்‌ ஈஸ்வரன்‌.

(1) வேதாந்திகள்‌, ஜீவனுக்கு அஞ்ஞாந தசையில்‌, கர்த்ருத்துவமும் போக்த்ருக்‌வமும்‌ உணடென்பார்‌. சாங்க்யர்களும் பாதஞ்சலர்களும்‌, கர்த்ருத்வம்‌ புத்திக்கும்‌, போக்த்ருக்துவம்‌ ஜீவனுக்கும்‌ உண்டென்பார்கள்‌. இந்த வித்தியாசம்‌ கவனிக்கக்‌ தக்கது.
(2) கைவல்யத்தை அடைந்த மஹா புருஷர்கள்‌ அநேகர்‌ உண்டு. ஆனால்‌, அவர்கள்‌ ஈஸ்வரர்கள்‌ ஆக மாட்டார்கள்‌ என்பதைக்‌ குறிப்பிட,
சிரேஷ்டன்‌, விசேஷன்‌ என்ற பதங்கள் உபயோகிக்கப்‌.பட்டு இருக்கின்றன
அவர்களுக்கு முன்‌ மூன்று பந்தங்கள்‌ இருந்து; பின்‌ அவைகள்‌ விலகிவிட்டன.

மூன்று பந்தங்களாவன
பிரகிருதிலயாளுக்கு ்‌ மூலப் பிரகிருதியால்‌ மாத்திரம்‌ பந்தம் உண்டு:

விதேகாளுக்கு (தேவர்களுக்கு): பிரக்ருதி விகாரங்‌களால்‌ (மஹத்‌, அஹங்காரம்‌, பஞ்ச தன் ,மாத்திரைகளால்‌) ஏற்படுகிற பந்தம் உண்டு,

மேற்கண்டவர்களுக்குக்‌ கீழானவர்களுக்கு தக்ஷிணாதி பந்தம் உண்டு. அதாவது பூத பவ்திகமான பந்தம் . .

ஈஸ்வரனோ எப்போதும்‌ எக்காலத்திலும்‌ பந்தம் இல்லாதவன்‌
பிரகிருதிலயாளுக்கு முன்‌னும்‌ பந்தம்‌ இருந்தது. இனியும்‌ பந்தம்‌.நேரிடும்‌. அவர்களுக்குப்‌. பிரக்ருதி யாலேயே பந்தம் ஏற்படுகிறது –

(3) அத் தன்மையான புருஷ ஸ்ரேஷ்டர்‌ இருக்கிறார் என்பதற்குப்‌ பிரமாணம்‌ என்னவென்ளால்‌, சாஸ்திரம் தான்‌.–ஸாஸ்த்ரம் எப்படிப்‌ பிரமாணமாகும்‌?
௮து உத்தம மானவர்களின்‌ உயர் நலம் அமைந்த புத்தியின்‌: ௮னுபவ ஞானம்‌. அத் தன்மையான புத்திக்‌கும்‌ சாஸ்திரத்திற்கும்‌ உள்ள சம்பந்தம்‌ அநாதி .
இது முன்னது, இது பின்னது என்று நம்மால்‌ அறிய முடியாது. அதனால்‌ ஈஸ்வரன் என்றும்‌ முக்தர்‌, என்றும்‌ எல்லா-சம்பத்துமுள்ளவர்‌.
மேலானவரையும்‌ சமானமான வரையும்‌ இல்லாதவர்‌,-அவர்‌ எல்லா ஐஸ்வர்யத்துக்கும்‌ முடிவ, எல்லை.

மனனக மலமற மலர் மிசை யெழு தரும்‌
மனனுணர்‌ வளவிலன்‌ பொறி யுணர்‌ வவையிலன்‌
இனனுணர்‌ முழுநல மெதிர் நிகழ்‌ கழிவினும்‌
இனனிலன் எனனுயர்‌ மிகுநரை யிலனே..

(4) உலகத்தில்‌ எல்லா வகையாலும்‌ சமமாயுள்ள இரண்டு
வஸ்துக்கள்‌ இல்லை. காலத்‌தினாலாவது வித்தியாலம்‌. ஏற்படும்‌.
““முன்புமாய்ப்‌ பின்பு மூழுதுமாய்ப்‌ பரந்த முத்தனே! முடிவிலா முதலே! ?
“குறைவிலா நிறைவே! கோதிலா ௮முதே !
ஈறிலாச்‌ கொழுஞ்சுடர்க்குன்றே!” மாணிக்க வாசகர்‌..-என்றபடி தானாய் தனி முதலாய் என்றும் உள்ளவர்

அத்வைத வேதாந்தத்தின்‌ மோக்ஷத்திற்கும்‌ பாதஞ்சலாள்‌
சைவல்யத்திற்கும்‌ வித்யாஸம்‌ என்னவென்றால்‌,
பின்னதில்‌ ஜீவ பேதத்துவம்‌, ஈஸ்வர பேதத்துவம்‌ இருக்கின்றன. முன்னதில்‌ இவைகள்‌ அற்று அகண்டாகார விர்த்தியைப்‌ பெறுதலே மோஷமாகும்

ஐஸ்வரியம்‌, ஞாநம் , இச்சா, கிரியா, சக்நிகளின்‌ ஸம்‌:பூர்ணமும்‌, விசேஷ ஞாநமும்‌, கிரியையும்‌ ஈஸ்வரனிடம்‌ எவ்விதம்‌ இருக்கப்பால் என?
ஈஸ்வரன்‌ ஸதா முக்தன்‌.. அவித்தைக்குப்‌ புறம்‌பானவர்‌. போக அப வர்க்கங்களுக்காக நம்மைப் போல அவருக்கு. மநம்‌ இல்லை.
அப்படியானால்‌ மநம்‌ இன்றி, ஞாநம் இரியா சக்திகள்‌ எவ்விதம்‌ அவரிடம்‌ உள்ளன என்றால்‌,
ஜீவர்களிடம்‌ உள்ள மநம்‌.ஸத்துவ, ரஜஸ்‌, தமஸ்‌ உள்ளதாக இருக்கிறது. அவர்‌ சுத்த ஸத்வமான மநத்தைச்‌ சுவிகரித்துக் கொள்ளுகிறார்‌.
தாமே அத்த சுத்த மநத்தில்‌, ஞாநம் , கிரியை-என்ற சக்திகள்‌ அமைகின்றன.
ஈஸ்வரன்‌ இத் தன்மையான மநத்தைச்‌ சுவிகரித்துக் கொளல்‌, மனிதர்களைப் போல் ௮வித்யையால் அன்று. அதனால்‌ இம் மநத்தில்‌ ஸ்வாமி,ஸ்வாமித்துவம்‌ இல்லை. ஜனங்கலின் மேலுள்ள பரம. கருணையால்‌,.
தாபத் திரயத்தினின்‌று அவர்களைக்‌ கரை யேற்றும்‌ பொருட்டு,
ஞாந தர்ம உபசேசத்திற்காக, தாமே சுத்த சத்துவமான மநத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்‌.
சாதாரண மனிதன்‌ அவித்தை வசமாகிறான்‌. ஈஸ்வரன்‌, ௮வித்தையின்‌ ஸ்வரூபத்தைத் தெரிந்து . கொண்டு…
அவித்தையை, லோகோபஹாரார்த்தம்‌, ஸ்‌வீகரித்துக் கொள்ளுகிறார்‌.
இராமனின்‌ வேஷம்‌ பூண்ட ஒருவன்‌, இராமனாக. நடித்தாலும்‌, அந்த நாடக காலத்‌திலும்‌, உண்மையில்‌ தான்‌
ராமன்‌ அல்லன்‌ என்த் தெரிந்து இருப்பான் போல, ஈஸ்வரன்‌ தாமே இந்த அவித்யை வருவித்‌துக் கொள்ளுகிறார்‌. இது அவருடைய தத்துவம் அன்று

(6) ஜகத்திற்கு க்ஷேமம்‌ உண்டாக்க வேண்டியதற்காக, ஸத்வ குணத்தை ஈஸ்வரன்‌ ஸ்வீகரித்துக் கொள்ளுகிறார்‌.

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

ஸத்வ குணமிருந்தால்‌ தான்‌, ஐகத்திற்கு அநு க்‌ரஹம்‌ செய்ய வேண்டுமென்று ஈஸ்வரனுக்கு இச்சை யுண்டாகிறது,
இவ் விதமாக அந்நியோந்நிய ஆஸ்ரய தோக்ஷம்‌ போலத் தோன்றுகிறது–உண்மையில்‌.இல்லை,
ஜகத்‌ ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம்‌ என்பவை அநாதியாக இருப்பதால்‌, ஈஸ்வரனிடம்‌ எப்போதும்‌ ஸத்துவ குணம்‌ உள்ளது.
அடுத்த கல்பத்தில்‌, ஸ்ருஷ்டி முறை இவ் விதமென்று சங்கல்பித்துக்‌ கொண்டு, ஈஸ்வரன்‌ ஒரு கல்பத்தின்‌ சிருஷ்டியை ஸம்ஹரிக்கிறார் –
முன்‌ சங்கல்பமானது மூலப் பிரகிருதியுடன்‌ மஹாப்‌பிரளய காலத்தில்‌ லய அவஸ்தையைப்‌ பெற்றிருந்தாலும்‌,
சிருஷ்டி காலத்தில்‌ அந்த ஸங்கல்ப வாசனையானது ,பின்பு ஈஸ்வரனின்‌ ஸத்வ ஸித்த ருபமாகப்‌ பரிணமிக்கின்றது.
ஒருவன்‌ மறு நாள்‌ சூரிய உதயத்திற்கு முன்‌ எழுந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன்‌ தூங்குகிறான்‌.
பின்பு, அவ்வெண்ணத்தின்‌ காரியமாக, அந்தக்‌ குறிப்பிட்ட காலத்தில்‌ எழுந்திருக்கிறான்‌.
இது போலவே ஈஸ்வரன்‌ ஸ்ருஷ்டி விஷயமும்‌, ஈஸ்வரன்‌ ஐகத்திற்கு ௮நு க்ரஹம்‌ செய்ய வேண்டுமென்று இச்சையும்‌,
௮தற்காகச்‌ சத்‌துவ குணத்தைச்‌ சுவீகரித்தலும்‌, அதனால்‌ ஸ்ருஷ்டியும்‌, இவை அநாதியாக
இருக்கின்‌றமையால்‌) மேல் கண்ட அந்யோன்ய ஆஸ்ரய தோஷம்‌ இல்லை.

(9) பிரளய காலத்தில்‌, ஈஸ்வரனின்‌ சித்தமானது, பிரகிருதியில்‌ லயத்தை அடைகிறது இல்லை யென்று சிலர்‌ சொல்லுவார்‌. அது சரி யன்று.
பிரகிருதியில்‌ லயத்தை அடையாமல் போனால்‌,சித்தம்‌ ௮தினின்று உண்டானதாகச்‌ சொல்ல இயலா.து ,
சித்தம்‌ ஜடமாயும்‌, ஈஸ்வரன்‌ சேதனனாகவும்‌ இருக்‌கின்றமையால்‌, சித்தம்‌ ஈஸ்வரனிடமிருந்து உண்டாவது என்று சொல்ல இயலாது .
அதனால்‌, மூன்றாவதாக வேறு ஒன்றைக்‌ கற்பிக்க,-மூன்றாவதாது இருப்பத்குப்‌ பிரமாணம்‌ இல்லை.
அதனால்‌, ஈஸ்வரரின்‌ சித்தமானது பிரதாநத்தில்‌ லயம்‌ ௮டைகிறது.

மேற்கண்டபடி சொல்வதற்குப்‌ பிரமாணம்‌ யாது?சாஸ்‌த்ரம் அதாவது வேதம்‌, ஸ்மிருதி, புராணங்கள்‌, இதிஹாஸங்கள்‌,
இவைகள்‌ ஈஸ்வரனின்‌ உத்கிருஷ்ட ஸத்வ குணத்தினின்று உண்‌டாயின. அதாவது மகரிஷிகளின்‌
சுத்த மநத்தின்‌ ஸத்துவ நிலையில்‌ தோன்றிய விஷயங்கள்‌ பின்பு வெளி வந்தன

அவரிடத்தில்‌ (ஈஸ்வரனிடத்தில்‌)) எல்லாவற்றையும்‌ அறியும்‌ சக்தியானது உயர்வற உயர்வு பெற்றது .–23-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் இத்யாதி
இந்திரியங்களுக்குப்‌ புறம்பாய்‌ உள்ள விஷயங்களில்‌,
நடந்த விஷ்யம்‌, நடக்கப் போகும்‌ விஷயம்‌, நடக்கிற விஷயம்‌ இவைகளைசத் தனியாகவோ, ஒருங்காகவோ, பெரிதாகவோ, அல்லது சிறிதாகவோ அறியும்‌. சக்தியானது ஸர்வஞ்ஞபீஜம்‌, அதாவதுமேன்மேலும்‌ பெருகிக் கொண்டு போய்‌ எந்த இடத்தில்‌ முடிவு பெறுகிறதோ, அந்த ஞாந ஸ்வரூபி ஈஸ்வரன்‌.
ஞாநம்‌ பெருகிக் கொண்டு போய்‌ முடிவுபெறும்‌ இடம்‌ ஈஸ்வரன்‌ என்றதினால்‌, ஈஸ்வரன்‌. இருக்கிறான்‌ என்று சித்திக்கும்‌.
௮ப்போது, சப்தப்‌ பிரமாணம்‌ வேண்டுவது இல்லையே என்றால்‌, அறுமாநத்தில்‌ ஈஸ்வரன்‌ உளன்‌ என்று சாமாந்தியமான அறிவு மாத்திரம்‌ உண்டாகும்‌.
அவன்‌ குணங்களைப் பற்றியும்‌, இத்தன்மையன்‌ என்பதைப்‌ பற்றியும்‌ உள்ள விசேஷ ஞாநம்‌ சப்தப் பிரமாணத்தினால் தான்‌ உண்‌டாகும்‌.

அவருடைய ஸ்ருஷ்டியினால்‌ அவருக்கு யாதொரு பிரயோஜாநமுமில்லை. பிராணிகளின பிரயோஜநம்‌ உண்டாகிறது-பிராணிகளுக்கு ஞான தர்மங்களை உபதேஸிப்பதனால்‌,“ கல்பம்‌, பிரளயம்‌, மஹாப் பிரளயம்‌ இவைகளில் எற்படும்‌ ஜநந மரணங்களினின்று பிராணிகள்‌ .கரையேறும்படி செய்வது தான்‌ ஈஸ்வரன்‌ அடையும்‌ பிரயோஜநம்‌.இவ்விதமே பஞ்ச சிகாசாரியார்‌ முன்னர்‌ அடியில்‌ வருமாறு சொல்லி யிருக்கின்றார்
.” ஆதி வித்வான் (கபிலர்‌) சுத்த ஸாத்விக சித்தத்தை நிர்மித்து, அதன்‌ மூலமாய்‌, கருணையால்‌ ஜிஞ்ஞாஸூவாகிய ஆசுரி ‘என்பவருக்கு ஸாங்கிய சாஸ்திரத்‌தை உபதேஸித்தார்‌.
கபிலர்‌, மஹா விஷ்ணுவின்‌ ௮வதாரமாகையால்‌, ஈஸ்வரன்‌ பிராகிருத்‌ சரீரமில்லாதவர்‌, அதனால்‌ சுத்த சித்தத்தை நிர்மித்துக் கொண்டார் எனச்‌ சொல்லி யிருக்கிறது.”
3. சாதாரணமாய்‌ ஜநங்களுக்கு, அறிவு, ரஜஸ்‌, தமஸ்‌. என்ற குணங்களின்‌ சம்பந்தத்‌தினுல்‌, மநம்‌ ஆவரண விஷேப சக்திகளுக்‌கு உட்பட்டிருக்கிறது. -ஈஸ்வரனுக்கோ இவை யில்லை.
4-புத்தர் கபிலர் அர்ஹதர்கள்‌ முதலான அநேக தீர்த்தங்கரர்கள்‌ (சாஸ்திரத்தை உண்டு பண்ணியவர்கள்‌, அவதார புருஷர்கள் மஹான்கள் அந்த அந்த மதங்களில்‌ ஏன் ஸர்வஞ்ஞா்களாகச் சொல்லக்கூடாது-ஸர்வஞ்ஞன் என்ற பதம் அனுமானத்தினால் ஒருவன் என்றே ஏற்படும்
அனுமானத்தினால் ஸாமாந்யமான ஞாநம்‌ உண்டாகுமே யன்றி விசேஷ ஞாநம்‌ உண்டாகாது. அவ் வீஸ்வரனுடைய விசேஷ குணங்‌களைப் பற்றிய ஞாநம்‌ உண்டாகாது,அது ஆகமத்தினால்‌ தான்‌ கூடும்‌. (ஆகமம்‌- வருதல்‌. இந்திரியங்கட்குப்‌ புறம்பான விஷயங்களைப்‌ புத்திக்குத்‌ தெரிவிக்கும்‌ சாஸ்திரம்‌, ஆகமம்‌.
இது வழக்கமாய்‌ வேதத்‌திற்கே சொல்லப் படுகிறது). ஆனால்‌ புத்தர்‌ முதலியவர்களால்‌, உண்டு பண்ணப்பட்ட சாஸ்‌திரங்கள்‌ ஆகமங்கள்‌ ஆக மாட்டா, ஆகம ஆபாசமாம்‌. போலியானவைகள்‌ எல்லாப்‌ பிரமாணங்களுக்கும்‌ விரோதமான க்ஷணிக ஞாநம்‌, ஆத்மா இல்லை என்‌பது
முதலியவைகளை அம்மத சாஸ்திரங்கள்‌ உபதேஸிப்பதனால்‌ அவை புத்திக்கு மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன.
சுருதி, ஸ்ம்ருதி , இதிஹாஸங்கள்‌, புராணங்கள்‌ இவைகள்‌ தான்‌ இஹ, பர , லோக விஷய சுகங்கள்‌, ஸாஸ்தமான பேறு இவைகளை அடைவதற்கு உண்மையான உபா யங்களை உபதேஸிக்கின்றன.
ஈஸ்வரனின்‌ பெயர்‌, குணங்கள்‌ முதலியவை வேத சாஸ்‌திரங்களால்‌ தான்‌ ௮றியக் கூடியவை, பெயர்‌ என்‌றால்‌ ஆறு அங்கங்கள்‌. பத்து குணக்கள்‌ ஏற்படுகின்றன

இவ்விதம்‌ வாயு புராணம்‌:– எல்லாவற்றையும்‌ அறியும் தன்‌மை, என்றும்‌ திருப்தியாபிருத்தல்‌, ௮நாதியான ஞாநம்‌, ஸ்வ தந்த்ரம் , குறைவில்லா சக்தி , அநன்த சக்தி இவை ஆறும்‌ ஈஸ்வர அங்‌கங்கள்‌ என்று அறிஞர்கள்‌ சொல்‌லுகின்றார்கள்‌.
ஞாநம்‌, வைராக்‌கியம்‌, ஐஸ்வரியம்‌, தபஸ்‌, ஸத்தியம்‌, ஷமை, தைர்யம்‌, ஜகத்தை சிருஷ்டிக்கும்‌ சக்‌தி -ஆத்ம ஸ்வருப ஞாநம்‌, எல்லாவற்றிற்கும்‌ அதிஷ்டமாக விருத்தல்‌ என்ற 10 குணங்கள்‌ எப்பொழுதும்‌ அழிவில்லாமல்‌ ஈஸ்வரனிடம்‌ இருக்கின்றன.
இத்தன்மையான குணங்‌களை உடையவரானால்‌ துக்கம்‌ நிறைந்த இந்த லோகத்தை ஈஸ்வரன்‌ சிருஷ்டித்திருக்க மாட்டார்‌ என்ற ஆக்ஷேபணைக்கு சமாதாநம்‌ :–பரம சிரேயஸ் கரமான கைவல்யத்தைப்‌ பிராணிகள்‌ அடையும்‌ பொருட்டு சுக துக்கங்களை ஏற்படுத்தி, அவைகளின்‌ ௮னுபவங்களினால்‌ பிராணிகளின்‌ மநஸ்‌ சுத்தியாகி , ஞாநம்‌ உண்டாகி, பிரகிருதி புருஷ விவேகம்‌ ஏற்படுகிறது . அதனால்‌ கைவல்யம்‌ சித்திக்கிறது -இது ஈஸ்வரனின்‌ பரம காருண்யத்தைக்‌ காட்டுகிறது.

முக்தி இரு விதம் :–1) சத்யோ முக்தி (2) கிரம முக்தி –இந்த ஜந்மத்திலேயே உடனே முக்தி பெறுதல்‌ ஒரு விதம்‌.
மேல்‌ மேல்‌ படியேறி மேல்‌ மேல்‌ லோகங்களிற்‌ சென்று கடைசியில்‌ பிரஹ்ம லோகம்‌ 7-வது லோகம்‌) போய்‌
பிரஹ்மாவுடன்‌ தங்கி யிருந்து மஹா பிரளயாந்தத்தில்‌ பிரஹ்மாவுடன்‌ சேர்ந்து முக்தி பெறுதல்‌ தான்‌ கிரம முக்தி எனக்‌ கூறப்படுவது.
ஈஸ்வரனால்‌ உபதேஸிக்கப்‌ பட்ட ஞாந தர்மங்‌களினால்‌ அநேகர் இம் முக்தியை அடைகிறார்கள்‌–மற்றவர்களோ பிரகிருதியில்‌ லயமடைகிறார்கள்‌,
மரணத்துக்குச்‌ சமாநமான துக்கத்தை யடைகிறார்கள்‌. அவரவர்கள்‌ விகாச முறையில்‌ இருக்கின்‌ற படிகளான நிலைமையுடன்‌ லயம்‌ அடைகின்றார்கள்‌.
பின்பு வேறு ஒரு பிரஹ்மாண்டம்‌ ஸ்ருஷ்ட்டி ஏற்படும் காலத்தில் அந்தந்த நிலையில்‌ வெளிக் கிளம்புகின்றார்கள்
ஆனால் இவர்கள் ப்ரக்ருதி லயர்கள் அல்லர் , பிரகருதி லயர்கள்‌ உபாஸனைக் கிரமத்தில்‌ முக்‌தி யடைகின்றவர்கள்‌.
பிரஹ்மாவின்‌ ஒரு பகலில்‌ 14 கல்பம்‌, 14 “மனு , 14 இந்திரன் , இவ்வாறு! ௮திகாரிகள்‌ பதினான்கு பதினான்காக நிகழும்‌, பிரண்மாவின்‌ இராத்திரி தினப் பிரளயம்‌, ஓர் ஓர் கல்பத்தில் -பூ: பூவ: ஸ-மவ: என்ற மூன்று லோகங்களுக்கு மாத்திரம்‌ லயம்‌,
4 யுகங்களும்‌ 72 தரம்‌ சுற்றி வந்தால்‌ ஒரு கல்பம்‌. இப்போது பிரஹ்மாவுக்கு 51-வது வயது நடப்பு.
வைவஸ்வத மந்வந்தரத்தில்‌ 27 தடவை சதுர் யுகங்களும்‌ சுற்றி வந்து விட்டன. பிரஹ்மாவின்‌ 100-வதுவயசு முற்றுப்பெறுகிற காலமே மஹாப் பிரளய காலமாம்‌. சத்திய லோகத்தில்‌ பூசல்கள்‌ எல்லாம்‌ லயமடைகின்‌றன.-யோகிகளின் குரு பரம்பரை ஈஸ்வரன்‌, ஹிரண்ணிய கர்ப்பராவர்‌,

கால வரம்பைக் கடந்தவராகையால்‌ அவர்‌, பூர்விக ஞாநாசாசியர்‌களின்‌ குரு வாவர்‌–26-

அவருடைய பெயர் பிரணவம்–27-

பிரணவம்‌ என்பதின்‌ பொருள்‌ என்றும்‌ புதிதாயுள்ளது . என்பதாம்‌,” மற்றைய சப்‌த ராஸிகள்‌ மாறும்‌,
பிரணவம்‌ ஒன்றே என்றும்‌ மாறாதது , நித்யமானது. *ஓம்‌’ என்ற பதத்தித்‌குப் பொருள்‌ ஈஸ்வரன்‌ என்பதே
பதம்‌, அர்த்தம்‌ (பொருள்‌) இவைகளின்‌ ஸம்பந்தம்‌ ஸங்கேதமாக எற்பட்டதா , அல்லது தீபம்‌, பிரகாசம்‌ இவைகளின்‌ சம்பந்தம்‌ போன்று என்றும்‌ உடன்‌ நிகழ்வதா!
அவருக்கும்‌ (அர்த்தத்திற்கும்‌ பிரணவத்தித்கும்‌ பதத்திக்கும்‌ உள்ள சம்பந்தம்‌ ஸ்வபாவமாய்‌ என்றும்‌ உள்ளது.
மேலும்‌, சங்கேதம் என்றால்‌ மனிதர்களுடைய தன்று. ஈஸ்வரனால்‌ சிருஷ்டி காலத்திலேயே, இன்ன பதத்திற்கு இன்ன பொருளென்று சங்கற்பிக்கப் பட்டது .
பதத்திற்கும்‌ அர்த்தத்திற்கும்‌ உள்ள சம்பந்ததை சங்கேதம்‌ வெளிப்படுத்துகின்‌றது.
பிதா, புத்தன்‌ என்பவர்களுக்குள்‌ நிகமும்‌ சம்பக்தம்‌ என்றும்‌ உள்ளது. அதை வார்த்தை பிரகாசப்படுத்‌துகிறது
ஓர் ஓர் கல்பத்தின்‌ முடிவில்‌, பிராணிகள்‌ வாசனைகளுடன்‌
லயமடைந்து, பின்பு வேறு கல்ப ஆரம்பத்தில்‌ எல்லா வாசனைகளுடன்‌ வெளி வருமாறு போலே , சப்‌த ராஸிகள்‌ அவைகளின்‌ சக்தியுடன்‌
(இன்ன அர்த்தத்திற்கு இன்ன சப்தம்‌ என்ற சம்பந்தம்‌) பிரளய காலத்தில்‌ பிரக்ருதியில்‌ லயம்‌ ௮டைகின்றன. பின்பு ஸ்ருஷ்டி காலத்தில்‌ வெளிப் படுகின்றன,
சப்தத்திற்கும்‌ .அர்த்தத்திற்குமுள்ள சம்பந்தம்‌ பரிணாம நித்தியம்‌, கூடஸ்‌த. நித்தியமன்று .-புருஷன்‌ ஒருவனே கூடஸ்‌த நித்தியன்‌
சப்‌த ராசிகள் எப்போதும்‌ மாறிக் கொண்டே யிருக்கின்‌றன.
பூமிபினின்று உண்டாகின்ற ஜீவ ராசிகள்‌ (உத் பிஜம்‌) மற்ற காலங்களில்‌ பூமியோடு பூமியாக லயமாகி, வருஷ காலத்தில்‌ வெளியாகின்றன.
அவை போல ஸ்ருஷ்டி காலத்தில்‌, முன்‌ லயம்‌ அடைந்த வஸ்துக்கள்‌, ஜீவ ராஸிகள்‌, -சப்‌த .ராசிகள்‌ பின்‌ வெளிப்படுகின்‌றன.*

அப் பிரணவத்தை ஜபித்தலும்‌ அதன்‌ பொருளாகிய ஈஸ்வரனைத்‌ தியாநித்தலும்‌ வேண்டும்‌.28-

அப்புடிச்‌ செய்வதனால்‌ யோகியின்‌ ,மனம் ஆவரண விக்ஷேப சக்தி குறைந்து வர ஐகாக்ரிபம்‌ பெறுகிறது
அந்த ஐகாக்ரியத்தினால்‌ ஸமாதியும்‌ ௮தன்‌ பலனான ஈஸ்வரப்‌ பிரகாசமும்‌ உண்‌டாகும்‌.

அதனால்‌ (பிரணவ தியாநத்தினால்‌) பருஷனுடைய உண்மையான ஸ்வரூப ஞாநமும்‌ விக்நங்கள்‌ நீங்குதலும்‌ உண்டாகும்‌,–29-

ஈஸ்வரப்‌ பிரஸாதத்தினல்‌ வியாதி முதலானவைகள்‌-இவனை அணுகா. இவனை விட்டு அகன்று விடும்‌.
தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தைப்‌ பார்ப்பான்‌. ஈஸ்வரன் ஸுத்தனாயும் பிரஸந்நராயும்‌ (கிலேசங்கள்‌ இல்லாதவராயும்‌),
கேவலனாயும்‌ (புண்‌ணிய பாப சம்பந்தம் இல்லாதவனாயும் -ஜென்ம ஆயுஸ் போகங்க ள் இல்லாதவனாயும்‌ எப்படி. இருக்கிறுனோ,
அப்படியே புத்திக்குப்‌ பிரகாசத்தை உண்டு பண்ணுகிற புருஷனும்‌ இருக்கிறான்‌.
விருத்த தர்மங்‌கள்‌ உள்ள இரண்டு வஸ்‌துக்களில்‌ ஒன்றை அறிந்தால்‌ மற்றதை அறிய முடியாது. ஓரே மாதிரியான தர்மங்களை யுடையவைகளாக இருப்பின்‌ ஒன்றை அறிந்தால்‌ மற்றதை அறிதல்‌ கூடும்‌,
அதனால்‌, ஈஸ்வரனுக்கும்‌ புருஷனுக்கும்‌ (யோகியின்‌ புத்திக்கு சாஷியான புருஷனுக்கும்‌) மேற்கண்டபடி. குண ஸாம்யமிருப்பகால்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தை அறிவதால்‌, புருஷ ஸ்வருபத்தை அறிவதாகும்‌.
பிரத்யக் சேதனன்‌ என்றால்‌ அவித்தியாவான்‌, ௮தாவ,து உள்ளபடி அறியாமல்‌ விபரீதமாக அறிவன்‌ என்பதாம்‌,
இதன்‌ தேர்ந்த கருத்து, இந்தப்‌ பிரணவ உபாஸனையால்‌, சித்தம்‌ அந்தர் முகப்படுத்தலும் தடைகள்‌ நீங்குதலும்‌ உண்டாகும்‌.

தடைகளாவன?–(1) வியாதி, (2) மந நொய்மை, (8) ஸம்சயம்‌,(4) பிரமாதம்‌, (5) ஆலஸ்யம்‌, (6) அவிரதி (துறத்தல் இன்மை),
(7) பிராந்தி தர்சநம்‌, (5) யோக பூமியை அடையாமை,(9) சமாதி நிலையினின்று நழவுதல்‌. மநத்திற்கு விக்ஷேபத்தை யுண்டு பண்ணும்‌ தடைகளான,
இவை ஒன்பது, இவைகளால் தான்‌ மநோ விர்த்திகள்‌ உண்டாகின்றன.–30-

வியாதி வாத, பித்த, ஸ்லேஷ்ம தாதுக்களும்‌, ஆகாரங்‌ களின்‌ ரசமும்‌, மநஸ்‌ முதலிய விந்திரியங்களும்‌ நேர்மை யில்லாமலிருத்‌தலால்‌ உண்டாகும்‌.
மந நொய்மை–ஒரு காரியத்தைச்‌ செய்வதற்குத்‌ தகுதி இல்லாமை, அதாவது, பூர்வ அனுபவமின்மையாலும்‌,
பூர்வ ஸம்ஸ்காரம் இன்மையாலும்‌ ஒரு காரியத்தைச்‌ செய்வதற்குத்‌ தகைமையின்றி இருத்தல்‌.
ஸம்சய்ம்‌– இதுவோ அதுவோவென்று சந்தேகம் கொள்ளுதல்

பிரமாதம்‌-ஸமாதி ஸாதநங்களில்‌ பிரவிர்த்தி யில்லாமை.
ஆலஸ்யம்‌– தமஸினால்‌, சரீரம்‌, மநம்‌; இரண்டும்‌ பிரவிர்த்தி இல்லாமல்‌ இருத்தல்‌,
அவிரதி– விஷய சுகங்களின்‌ மேல்‌ ஆசை, விஷயங்களில்‌ ஓழிவில்லாமை.
பிராந்தி தர்சநம்‌–பிரமையினால்‌ ஒன்றை வேறொன்றாக வறிதல்‌
யோக பூமியை யடையாமை-*யோகாப்பியாஸம்‌ செய்து கொண்டு வருகையில்‌ உயர்ந்த ஸமாதி நிலையைப்‌ பெறாமல்‌
கீழான பூமிகளின் கண்‌ உண்டாம்‌ சித்திகளின்‌ மேல்‌ ஆசை கொண்டு, அவைகளில்‌ திருப்தியாக விருத்தல்‌.
ஸமாதி நிலையினின்று நழுவுதல்‌ — ஸமாதி நிலை பெற்ற பிறகு அதைக்‌ காப்பாற்றிக் கொள்வதில்‌ முயற்சி யில்லாமை,

துக்கம்‌, தவ்ர் மநஸ்யம்‌, சரீர நடுக்கம்‌, உச்வாஸம்‌, நிச்வாஸம்‌ இவை விக்ஷேபத்துடன்‌ நிகழ்பவை.–31-

துக்கம்‌ என்பது ஆத்யாத்மிகம்‌, ஆதி பெளதிகம்‌, ஆதி தைவிகம்‌ இவைகளால்‌ உண்டாகும்‌.துக்கம்‌– பிரதி கூலமான ௮னுபவம்‌.
தெளர்மால்யம்‌- செய்த முயற்சி பலிக்காமல்‌ அதனால்‌ உண்‌டாம்‌ மநச் சஞ்சலமாம்‌.
சரீர நடுக்கம்‌- அங்கங்களின்‌ அசைவு. இது யோகாப்பியாஸத்திற்கு விரோதி, –
உச்வாஸ நிச்வாஸம்‌–நம்முடைய ஸ்வாதீநமின்‌றி காற்று உள்‌ளே போவதும்‌ வெளியே வருதலும்‌,
ரேசகம்‌, பூரகம்‌ என்றவை இத்தனை மாத்திரை என்ற ௮ள வுக்‌குட் பட்டு சுவாஸம்‌ நடை பெறும் படி செய்‌தல்‌,

இவைகளை நிவிர்த்தித்து ஒன்றான தத்துவத்தை மாத்திரம்‌ அப்பியஸித்‌தல்‌ வேண்டும்‌.–32-

(1) நிவிர்த்தித்து என்றால்‌, முன்‌ சொல்லி யிருக்கிற படி, வைராக்யத்தால் நிவிர்த்தி எற்படுத்தலாம்‌,
ஒன்றான தத்துவம்‌ என்பதற்கு ஈஸ்வரன்‌ என்பது அர்த்‌தமாம்‌.
விஞ்ஞாந பிஷுவின்‌அபிப்‌பிராயப்படி யாதேனும்‌ ஒரு தத்துவத்தைப்‌ பற்றிச்‌ சிந்தனை கொள்ளுதல்‌ இதில்‌ பயன்படும்‌ என்‌கிறார் ,
ஆனால்‌ முன்னுள்ள சூத்திரங்களை நோக்க , ஈஸ்வரன்‌ என்று கொள்ளுதலே உசிதமாகும்‌.
மேலும்‌ மநம்‌ ஒருமுகப் பட வேண்டுமென்றால்‌ உயர்வற உயர்நலம் அமைந்த அந்த பரம புருஷனையே தியானித்தல் வேண்டும்‌.

க்ஷணிக விஞ்ஞா௩ வாதிகளின்‌ மத கண்டநம்‌:…-
(1) அவர்கள்‌ மதப்படி, மநோ விர்த்திகளைத்‌ தவிர,மநம்‌ என்று பிரத்தியேகமாக வேறு ஓன்‌றுமில்லை.
ஒவ்வொரு விர்த்தியம்‌ க்ஷணிகம்‌ –அதனால்‌ ஒவ்வொரு விர்த்தியும் நிகழ்தல் ஏகாக்கரமாகும்‌-
அதனால்‌ விக்ஷிப்தமே இல்லை என முடியும்‌. அதனால்‌ யோகாப்பியாஸ முயற்சி வேண்டுவதில்லை யென வேற்படும்‌. அது சரி யன்று
மநம்‌ வேறு, க்ஷணிகமன்று, நிலையுள்ளது. ஒரு பதார்த்தத்தையோ பல பதார்த் தங்களினின்‌று வேறுபடுத்‌தி
அந்த வேறு படுத்தப்பட்ட பதார்த்தத்தில்‌ மநத்தை நிற்கும்படி செய்தல்‌ கூடும்‌, அதனால்‌ ஏகாக்ரம்‌ எற்படும்‌,
அதனால் விக்ஷேப நிவர்த்திக்காகச் செய்ய வேண்டிய முயற்‌சி பிரயோஜநமுள்ளது தான்‌.
2) க்ஷணிக விஞ்ஞாந வாதிகளின்‌ வேறு அபிப்பிராயம்‌-
விர்‌த்திகள்‌ பல உள. அவைகளின்‌ பிரவாகத்தில்‌, ஓரே விர்த்தியாகவே மநம்‌ மாறி நிற்றல் கூடுமன்றோ?
௮து சரியன்று -. அவர்களின்‌ ஸித்‌தாந்தப்படி, விருத்தியும்‌ மநமும்‌ க்ஷணிகமென்பதனால்‌, இரண்டினும்‌ பிரவாகம்‌ ஏற்படுதல்‌ கூடாது.
அதனால் ஏகாக்கிரம் உண்டாவதற்கு அவகாசமில்லை. நான்‌ என்ற ஆலய விஞ்ஞாகம்‌ (சாமாந்ய அஹங்காரம்
என்பார்‌ வேதாந்திகள்‌) என்ற ஸ்திரமான நிலைமை இருக்கின்றது என்றாலோ,
அந்த “நான்‌!” என்பதற்கு விக்ஷிப்தம் ,இன்‌மையாலும்‌, விக்ஷிப்‌தம்‌ மநத்தை பொறுத்ததாக விருக்கின்றமையாலும்‌ யோக முயற்சி. பிரயோஜநம்‌ இன்றே என்பது ஏற்படும்‌,

3-க்ஷணிக விஞ்ஞாநவாதிகள்‌, ௮தாவது வைநாசிகர்களின்‌ சித்தாந்தத்தில்‌, தர்மம்‌ ஒன்றே உளது.-அது ஆஸ்ரயிக்கும்‌ தர்மி என்பது இலது என்பதாம்‌. அதனால்‌ அந்தக் கரணம்‌ இல்லை என்‌பார்‌.
விர்த்திகளின்‌ பிரவாகம்‌ இருக்கின்றது என்றால்‌, அது சரி : யன்று. பிரவாகம்‌ என்றால்‌ ஸஜாதீயப்‌ பிரத்தியயம்‌ (ஒரே மாதிரி யான விர்த்திகள்‌) தொடர்ந்து நிகழ வேண்டும்‌,
அப்படியில்லாமல்‌ விஜாதீயப்‌ பிரத்தியயம்‌ (விருத்தமான பிரத்தியயங்கள்‌] நடை பெற்றால் பிரவாகம்‌ எங்கனம் உண்டாகும்‌? விர்த்திகள்‌ தனித்தனியாக உண்டாகி அழிகின்றமையால்‌, ஒரு விர்க்தியின்‌ பலனை மற்றொரு விர்த்தி அனுபவிப்பதும்‌ அறிதலும்‌ எங்கனம்‌?

4-மநம்‌ ஒவ்வொரு ஷணத்தித்கும்‌ வேறு வேறு என்றால்‌ நான்‌ என்ற அநுபவம்‌ நிகழ மாட்டாது.
விர்த்தி பேதங்கள்‌ இருப்‌பினும்‌, நான்‌ என்ற தொடர்புள்ளது. விர்த்திகள்‌ விஷயங்கள்‌ வெவ்வேறு ஆயினும்‌, நான்‌ என்ற ஞானம் அபி பின்னமாக அனுபவத்திலிருக்கின்றது.
சித்தம்‌ ஓவ்வொரு விஷயத்திற்கும்‌ வேறு வேறு ஆயின் இந்த நான்‌ என்ற அநுபவம்‌ எப்படி உண்டாகும்‌?
அது பிரமை (மருள்‌) என்று சொல்வது சரியன்று, அபேதமான “அஹம்‌” என்ற ஞாநம்‌ பிரத்தியஷமான அநுபவம்‌, இதற்கு விரோதமான வைநாசிகர்களின்‌ மதம்‌ சரியன்று,

சுகமாமிருப்பவர்கள்‌, துக்கிக்கிறவர்கள்‌, புண்யம்‌ செய்பவர்கள்‌,பாபிகள்‌. இவர்களிடம்‌ முறையே
ஸ்நேஹம் , கருணை, சந்தோஷம்‌, உபேக்ஷை இப் பாவனைகளை அப்பியாசம்‌ செய்வதால்‌ மனம் பிரஸாதம்‌ பெறுகிறது.–33

ராகத்‌ த்வேஷாதிகள்‌, அகங்காரம்‌, அசூயை , சரிஷை, கோபம்‌ முதலிய துர்க் குணங்கள்‌ நீங்கி மநம்‌ நிர்மல்மாக வேண்டியதற்கு உபாயம்‌ சொல்லுகின்றார்‌. சுகமாயிருப்பவரைப்‌ பார்‌த்தால் ஈரிஷை உண்டாகும்‌ அதனால்‌ மநத்திற்குக்‌ கல்மஷ்ம்‌ உண்‌டாகும்‌.
அப்படி, உண்டாகாமல்‌ இருத்தற்‌ பொருட்டு அவர் பால்‌ ஸ்நேஹ பாவத்தையும் துக்கத்திற்குள்ளானவர்களிடம்‌ தயை, காருண்ணியத்தையும்‌ புண்ணியம்‌ செய்பவர்களிடம்‌ சந்தோஷத்தையும்‌, பாபம்‌ செய்பவரிடத்தில்‌, அவரையும்‌ அவர்‌ செய்யும்‌ பாபத்‌
தொழிலையும் பற்றிக்‌ கவநியாதிருத்தலையும்‌, நம்‌ மநத்தில்‌ உண்டு பண்ணிக் கொளல்‌ வேண்டும்‌.
அப்படிச்‌ செய்வதனால்‌ மநத்தின்‌ சாஞ்சல்லியம்‌ நீங்கும்‌. பரிசுத்தமாகவும்‌, ரஜஸ்‌, தமோ குணங்கள்‌ நீங்கப் யெற்று, மநம்‌ சுத்த ஸாத்விக குணமுடைய தாகும்‌ அதனால்‌ சித்தம்‌ ஐகாக்ரியம்‌ அடையும்‌, மநம்‌ ஒரு நிலைப் பெறும்‌.

இந்த சூத்திரம்‌ த்யான காலங்களில்‌ தவிர, மற்ற காலங்களில்‌,-அதாவது உலகத்தில்‌ நடைபெறும் காலத்தில்‌, யோகி ஒழுக வேண்‌டிய முறையை உபதேசிக்கின்றது

பிராணனைப்‌ பிரயத்நத்தால்‌ (யோக முறைப்படி) வெளியே விடுதலும் , உள்ளே நிறுத்தலும்‌, என்ற பயிற்சியாலாவது (மநத்தை ஒருதலைப்‌ படுத்தல்‌ வேண்டும்‌,)–34-

முந்திய சூத்திரத்திற்‌ சொல்லியிருக்கிறபடி. **மைத்‌ரீ கருணை ”” முதலிய தன்மைகள்‌ ஏற்படாவிடில்‌, மநத்தை ஒரு நிலையில்‌ இருக்கும்படி செய்தலுக்குச்‌ சாதநங்களைச்‌ சொல்‌கிறார்‌,
இந்த சூத்திரத்தில்‌ ஒரு உபாயம்‌ சொல்லுகிறார் அது தான் -பிராணாயாமம் – வா என்பது இனி வரும்‌ மற்ற சாதநங்களை உத்தேசித்தது.
பிராணாயாமம் செய்தலினால் மனத்தின் கண் உண்டாகும் விர்த்திகள் ஒடுங்கும்

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்கு உண்டு
மன்மனம் எங்‌கில்லை வாயுவும் அங்கு இல்லை
மன்மனத்‌ துள்ளே மகிழ்ந்து இருப்‌ பார்க்கு
மன்மனத் துள்ளே மனோ லயமாமே….திரு மந்த்ரம்

வெளியே விடுதல்‌ (ரேசகம்‌ செய்தல்‌) உள்ளே நிறுத்தல்‌ (கும்‌பகம்‌ செய்தல்‌) என்ற முறை இந்த சூத்திரத்தில்‌ சொல்லி யிருக்கிறது .
அதாவது பூரகம்‌ செய்யாமல்‌ கும்பகம்‌ செய்தலாம்‌. இம்‌ முறையில்‌ வெளியேறின வாயுவை வெளியிலேயே இருக்கும்படி. செய்தல்‌ கும்பகமாம்‌.
இவ்விதம்‌ செய்வதால்‌, சரீரம்‌ லகுத்துவத்தை அடைகிறது,-அதன் மேல்‌ மநம்‌ ஸ்‌திரப்படுறது,
பூரகம்‌, கும்பகம்‌, பின்பு ரேசகம்‌ என்ற முறை மற்ற ஓன்று -அது இந்தவிடத்தில் சொல்லப்பட வில்லை

அல்லது. விஷயங்களை ஆஸ்ரயித்த பிரவிர்த்தியானது மநத்தை அசையாமல்‌ கட்டுப்படுத்‌தும்‌–35-..

விசேஷமான இந்திரிய சக்திகளை உண்டுபண்ணக் கூடிய மூக்கு நுனி முதலிய ஸாதாநங்களில்‌ இத்த ஏகாக்ரிய முறைகளே நாடுதல்‌,
யோக முறையில்‌ நன்னம்பிக்கையை யுண்டு பண்ணும்‌.-அப்‌படிச்‌ செய்வதால்‌ தூரத் திருஷ்டி தூரக் கேள்வி, வாசனைப்‌ பொருளின்றி நல்ல வாசனைகளின்‌ அனுபவம்‌ இவை போன்ற சித்திகள்‌ உண்‌டாகிறதனால்‌, யோகாப்பியாசத்‌தில்‌ உண்மையான நம்பிக்கை ஏற்படும்‌. அதனால்‌, தீவிரமான யோக முயற்சி உண்டாகும்‌.
நாஸிகாக்கிரத்தில்‌ மநத்தை நிறுத்தினால்‌ திவ்விய(சூக்ஷ்மமான) கந்தங்களின்‌ ௮னுபவமும்‌, நாக்கின்‌ நுனியில்‌ மநத்தை நிறுத்தித்‌
தியாநம்‌ பண்ணினால்‌ தாரணை, த்யானம் , சமாதி முறைகளை அப்பியஸித்தால்‌ (இதுவே ஸம்யமம் என்றும்‌ பெயர் பெறும்‌),
திவ்ய ரஸங்களின்‌ அநுபவமும்‌, தாலுவில்‌ தியாநம் செய்தால்‌ திவ்ய ரூபங்களின்‌ அனுபவமும்‌, நாவின்‌ மத்தியில்‌ த்யானம் செய்தால்‌ திவ்ய ஸ்பரிசங்களின்‌ ௮னுபவமும்‌, நாவின்‌ அடி மூலத்தில் த்யானம் செய்‌தால் திவ்ய சப்‌தங்சனின்‌ ௮நுபவமும்‌ உண்டாகும்‌.
இவ்விதமான அனுபவம்‌ ஏற்பட்டால்‌ ஸம்சயம் நீங்கி ஸ்தைர்யம்‌ உண்டாகி சமாதிப் பிரஞ்ஞைக்கு துவாரம்‌ (வழி) உண்டாகும்‌.
முன்‌ சொன்ன த்யானமானது சந்திரன் சூரியன்‌, , கிரகங்கள்‌, ரத்நங்கள்‌, தீபம்‌,மணி, முதலியவைகள்‌ மேலும்‌ நிகழலாம்‌,
அதனால்‌ மேற்கண்ட. படி சமாதி பிரஞ்ஞைக்கு வழி ஏற்படும்‌.

சாஸ்திரத்தினாலும்‌, அனுமாநத்தினாலும்‌, குரு உபதேசத்தாலும்‌ தெரிந்த விஷயம்‌ ௮வன்‌ அவன்‌ ஸ்வந்த ௮நுபவமில்லாவிடில்‌ பரோஷமாகவே யிருக்கும்‌.
அதனால்‌ மோக்ஷம்‌ முதலிய சூஷ்ம விஷயங்களில்‌, உண்மையான ஸ்திரமான நம்பிக்கை உண்டாகிறது இல்லை.
யாதேனும்‌ ஒரு சூஷ்மமான விஷயத்தில்‌ பிரத்தியஷ மான அனுபவம்‌ ஏற்படுமாகில்‌ சாஸ்திரம்‌, அனுமாநம்‌,
குரு உபதேசம் இவைகளால்‌ தெரிந்து கொண்ட ஞாநம்‌ ஸ்‌திரப் படுகிறது .
அதனால்‌ மோக்ஷம்‌ வரையுள்ள மற்ற சூஷ்மமான விஷயங்கள்‌ உண்மையென நம்பிக்கை உண்டாகிறன்றன
இதனால்‌ தான்‌ மநத்திற்கு ஸம்ஸ்கார அப்பியாஸ முறைகள்‌ சொல்லப் படுகின்றன.
விர்திகள்‌ நானா விதமாக மாறிக் கொண்டிருக்கிறமையால்‌ விர்த்திகள்‌ ஒடுங்கும் பொருட்டு அநேக அப்பியாஸங்கள்‌ இப்போது சொல்லப் படுகின்றன. அந்த அப்பியாஸம்‌ பிரயோஜநப் படவேண்டு மானால்,-அதாவது மநத்தின்‌ ஸ்திரமான நிலை உண்டாக வேண்டுமானால்‌, அப்பியஸிக்கப்டும்‌ முறையைத் தவிர மற்ற விஷயங்களில்‌ வைராக்‌யமும் வேண்டும்‌.-அந்த வைராக்கியத்தை வசீகாரம்‌ எனச்‌ சொல்‌கிறது.

அல்லது துக்கம் இல்லாமல் ஜோதிஸ்ஸை -மனத்தின் ஸ்த்வ பாவத்தை) ஆஸ்ரயித்த பிரவி௫த்தி (மநத்தை அசையாமல்‌ கட்டுப்படுத்‌தும்‌.)–36-

ஹிருதய புண்டரீகத்‌தில்‌ மநத்தை நிறுத்தி , தாரணை தியாநம்‌, ஸமாதி கொள்ளுகிறவனுக்கு புத்தி நிர்மலமாகவும்‌
ஆகாசம் போல்‌ எல்லாவற்றிலும்‌ வியாபிக்கும்‌ இயல்பின தாகவும் ஆகிறது

ஹிருதய புண்டரீகத்தில்‌ ஒரு சக்ரம்‌ உள்ளது . அது 8 தளமுள்ளது- அதோ முகமானதாக இருக்கிறது.
பிராணாயாமத்‌தினால்‌ ஊர்த்‌வ முகமாகத்‌ திருப்பி, அதில்‌ மநத்தை நிறுத்த வேண்டும்‌, ௮தன்‌ மத்தியில்‌ சூரிய மண்டலம்‌ ஜாக்கிரத அவஸ்தையின்‌ இருப்பிடமும்‌ அகாரம்‌ என்ற அக்ஷரமும்‌,
௮தன்‌ மேல்‌ சந்திர மண்‌டலம்‌ ஸ்வப்ந அவஸ்தையின்‌ இருப்பிடமும்‌ உகாரம்‌ என்ற அக்ஷரமும்‌,
அதற்கும் மேல் அக்நி மண்டலம்‌ ஸூஷுுப்தி அவஸ்தையின்‌ இருப்பிமுடம்‌ மகாரம்‌ என்ற அஷரமும்‌, அதற்கும்‌ மேல்‌,பர வியோம ஸ்வரூபம்‌ துரீய அவஸ்தை பிரஹ்ம நாதம்‌ என்று சொல்லப்படும்‌ அர்த்த மாத்திரையும்‌ இருக்கின்றன.
அந்தத்‌ தாமரையின்‌ கர்ணிகையில்‌ ஊர்த்துவ முகமான ப்ரஹ்ம நாடி இருக்கின்றது -அது சூரியாதி மண்டலங்களின்‌ மத்‌தியில்‌ பிரவேசிக்கிறது. அதற்கு. மேல்‌ போய்க் கொண்டிருக்கிறது ஸுஷும்நா நாடி.-அது வெளியிலுள்ள சூரிய மண்டலங்களைத் தாண்டிப் போகின்றது. அது தான்‌ மநத்தின்‌ ஸரியான ஸ்தாநம்‌,-அதில்‌ தாரணை, தியாநம்‌ செய்தால்‌, சித்த ஸம்வித்‌ உண்டாகிறது – வஸ்துக்களின்‌ உண்மையான நிலை (Thought Forms) ஸாஷாத்காரம்‌ பெறுகிறான்‌,-அந்த ஸ்தாநத்‌தில்‌ மநம்‌ நிற்பதினால்‌ சூரியன்‌, சந்திரன்‌, கிரகங்கள்‌, ரத்நங்கள்‌ இவைகளின்‌ தேஜோ ருபங்களாக நாநா விதாமாகத்‌ தோன்றுகிறது . அதாவது அந்த மநம்‌ அந்த ரூபங்களாக ஆகிறது .
ஸுுஷும்நா நாடியை ஆஸ்ரயித்திருக்கின்றமையால்‌, இந்‌த மநஸ்‌ ரஜஸ்‌, தமஸ்‌ இரண்டும்‌ குறைந்தும்‌ சத்வம்‌ மேலிட்டும்‌ இருக்கின்றது .
அதனால்‌ அந்த நிலை ஜோதிஷ் மதீ (ஜோதிஸை உடைய) என்று சூத்‌திரத்தத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது –

முன்னே சொல்லியபடி விஷயங்களில்‌ சம்பந்தம்‌ பெற்றது போல் , அஸ்மிதையில்‌ (நான்‌ இருக்றேன்‌ என்ற பாவம்‌) ஏகாக்ரம் பெற்ற மநஸ்‌ ஆனது
அலையற்ற சமுத்திரம்‌ போலவும்‌, சாந்தமாயும்‌, (ரஜஸ்‌, தமஸ்‌ அற்றதாயும்‌) எங்கும்‌ வியாபகமுள்ளதாயும்‌, நான்‌ என்ற சுத்தப்‌ பிரஞ்ஞஜை மாத்திரம்‌ உள்ளதாயுமிருக்‌கின்றது .இவ்விதமாகவே சாங்க்ய சூத்திர வியாக்கியாதாவான பஞ்சசிகாசாரியாரும்‌ சொல்‌லுகின்றார்‌,

விஷயங்களை ஆஸ்ரயித்து நிகழும்‌ பிரவிர்த்தியும்‌, அஸ்மிதையை ஆஸ்ரயித்த மநப்‌ பிரவிர்த்தியும்‌ ஜோதிஷ்மதீ எனப்‌.பெயர்‌ பெறும்‌.
இதனால்‌ யோகியின்‌ மநம்‌ ஸ்திரமான நிலையை யடைகின்றது,

அல்லது ஆசைவிட்ட மஹா புருஷர்களை மநம்‌ விஷயிகரித்தலிதனால்‌ (௮து ஸ்தைர்யம்‌ பெறும்‌.)–37-

ஆசை விட்டவர்களான வியாஸர்‌ முதலிய மஹ ரிஷிகளின் குணங்களைத்‌ தியானித்தல் வேண்டும்‌.
அவர்களின்‌ மநோ நிலையைத்‌ த்யானித்தலால் அந் நிலையை, அப்பியாஸம்‌ செய்கிற யோகி பெறுகிறான்‌.

அல்லது ஸ்வப்நத்திலும்‌ நித்திரையிலும்‌ ஏற்படும்‌ ஞாநத்தை ஆஸ்ரயித்துத்‌ தியாநிப்பதால்‌ மநம்‌ நிலை பெறும்‌.–38-

(1) வேறு ஒரு அர்த்தம்‌ “அல்லது ஸ்வப்நத்திலும்‌ நித்திரையிலும் ஞாநம்‌ நழுவாது வைத்துக் கொளல்‌,”” என்‌பதாம்‌.
ஜாக்கிரதையினின்று ஸ்வப்நத்திற்குப்‌ போகும் போதும்‌, ஸ்வப்நத்தினின்று ஸூஷுப்திக்குப்‌ போகும்போதும்‌ நான்‌ என்ற பிரஞ்ஜையின்‌ தொடர்பு அற்றுப் போகிறது.-அத் தொடர்பு அறாமல்‌, பிரஞ்ஜை நிலைத்தல்‌ வேண்டும்‌. அற்றுப் போகும்‌ நிலையை பாழ்‌ என்று சொல்கிறது .
அப்‌ பாழைத்‌ தாண்டுதலுக்கு முயல வேண்டும்‌. இது தான்‌ இந்த சூத்திரத்தின்‌ தாத்பரியம்‌.
நினைவிற்கும்‌ கனவிற்கும்‌ மத்தியில்‌ ஒரு பாழ்‌, கனவிற்கும்‌ ஸுாஷுப்‌திக்கும்‌ மத்‌தியில்‌ ஒரு பாழ்‌,
ஸுாஷுப்‌திக்கும்‌ துரியத்துக்குலம் . மத்தியில்‌ ஒரு பாழ்‌, ஆக முப்பாழ்கள்‌, அதாவது லய ஸ்தாநங்கள்‌ உண்டு,

இந்திரியங்களுக்கு விஷயங்கள்‌ இல்லாமலும் , மநஸ்‌ ஆனது வாஸநா ரூபமான விஷயங்களை அனுபகிக்கும்‌ ஸமயம்‌ ஸ்வப்னமாம்
நித்திரையில் லக்ஷணம் முன் 19 சூத்திரத்தில் கண்டு கொள்க

ஸ்வப்நத்தில்‌ யாதேனும்‌ ஒரு தேவதை அல்லது மஹா புருஷர்‌ அல்லது உயர்ந்த பாவம்‌ தோன்றும்‌ பக்ஷத்தில்‌
நினைவில்‌ அந்த தேவதை, அந்த புருஷன்‌, அந்த. உயர்ந்த பாவம்‌ இவைகளின் மேல்‌ மநத்தை நிறுத்தினால்‌, மநம்‌ ஒரு முகப்படும்‌. யோகி ஸ்தைர்யம்‌ பெறுவான்
ஸுஷுப்தியின்‌ ஞாநம்‌ –ஸாத்விக ஸுஷுப்‌தியின்‌ ஞாநம்‌, “சுகமாய்த்‌ தூங்கினேன்‌ ‘* என்ற மட்டில் தான்‌ ஸ்மிருதி நினைவில்‌ உண்டாகும்‌.
அந் நிலையில்‌ (சகம்‌ ௮னுபவித்த நித்திரை சமயத்தில்‌) மநம்‌ தன்‌ நிலையிலிருக்கும்‌. ௮துவே ஏகாக்ரமான நிலை,
பிரஹ்ம வித்துக்கள்‌ அந்த ஸுுஷுப்தி சுகத்தையே பிரஹ்ம ஸ்வரூபம்‌ என்‌கின்றார்கள்‌,
சாந்தோக்கிய உபரிஷத்தில்‌ ஸுஷுப்‌தியின்‌ விசாரணையைப் பற்றிய விஷயம்‌ இங்கு கவநிக்கத் தக்கது.

அல்லது எது உனக்க நலமெனப்படகிறதோ, அதின்‌ மேல்‌ தியாநித்தலினால்–39-

எது பிரியமாக விருக்கறதோ, அதன் மேல்‌ மநம்‌ நிற்பதாகும்‌. அதனால்‌ ஐகாக்ரியம்‌ சித்திக்கும்‌.
தேவதையைத் தனக்குப்‌ பிரியமான ரூபமாக) தியாநித்தலினால்‌, மநம்‌ ஸ்தைர்யம்‌ பெறும்‌,

(இவ் விதமாகத்‌ தியாநிக்கின்ற யோகிக்கு) பாம அணு முதல்‌ பரம மஹத்‌ வரையில்‌ உள்ள எல்லாம்‌) ஸ்வாதீநப் படும்‌,–40-

மேற் கண்ட உபாயங்களினால்‌, யோகி யானவன்‌ ஸ்தூல வஸ்து முதல்‌ வர வர மஹா ஸூக்ஷ்ம வஸ்து வரை த்யானம் செய்யும் படியான திறமையும்‌
சூஷ்ம வஸ்து முதல்‌ மஹா ஸ்தூல வஸ்து வரை தியாநம்‌ செய்யும்படியான திறமையும்‌ பெறுதல்‌ கூடும்‌. இதில்‌ எவ்விதத் தடையும்‌ கிடையாது.
இந் நிலையைப்‌ பெற்ற யோகி யானவன்‌, ஜகாக்ரியத்‌தின்‌ – பூர்ணத் திறமையைப்‌ பெறுகிறான்‌. இனி அவ்விஷயத்தில்‌ பழக்கம்‌ வேண்டுவதில்லை.

இவ்வித அப்பியாசத்தால்‌, மநோ விர்த்திகள்‌ ஷீணமாகி யிருக்கின்ற யோகியின்‌ மதஸ்‌ அஸ்மிதையையும்‌ இந்திரியங்கள்‌, விஷயங்கள்‌ இவைகளுடன்‌ ஏகி பாவத்தையும்‌ அடையும்‌. நிர்மலமான ஸ்படிக மணியைப்‌ போன்றதாதம்‌.–41-

ஸ்படிக மணியின்‌ ஸமீபத்தில்‌ செம்பருத்தியின்‌ புஷ்பத்தை வைத்தால்‌ அதன்‌ நிறம்‌ ௮ம்‌ மணியில்‌ தோன்றிடும்‌, அது போல யோகியின் மநம்‌ நிகழும்‌,
விர்‌திகள்‌, சாத்விக, ராஜஸ்‌ தாமஸம்‌ என மூன்று விதங்கள்‌, ராஜஸ, தாமஸ விர்திகள் மாத்ரம் ஷயத்தை அடைகின்றன-சாத்விக விர்த்தி மட்டும் இருக்கின்‌றது .
சாத்விக விர்த்தி நிகழ்‌தலைத் தான்‌ மநம்‌ அந்தர் முகப்படுகிறது என்று சொல்லுகிறது.
மற்ற இரண்டு விர்‌த்திகள்‌ (ராஜஸ, தாமஸம்‌) பஹிர்‌ முகமானவை.
முதன்மைபில்‌ இவ்விரண்டு வித விர்திகள்‌ அடங்கி , மநம்‌ அந்தர் முகப்படும்‌, சாத்விக விர்த்தி மாத்திரம்‌ நிகழும்‌.
பின்பு, இவ் விர்தியும்‌ ஒடுங்கும் .
ராஜ்ஸ தாமஸ விர்‌திகள்‌ நிகழும்‌ காலத்தில்‌ மநம்‌ மலிநமாக விருக்கும்‌, இவை நீங்கி ஸாத்லிக விர்த்தி
௮திகப்படவே, மநம்‌ ஸ்படிகம் போல்‌ நிர்மலமாக இருக்கும்‌. அப் போது எந்த வஸ்‌து வுட.ன்‌ மநம்‌ ஸம்பந்தப் படுகிறதோ,௮ந்த வஸ்துவின்‌ தன்மையாக ஆகி விடுகிறது.
இதற்கு க்ராஹ்ய ஸமா பத்தி என்று பெயர் -௮து ஓர்‌ நிலைமை, மநஸ்‌ ஆனது விஷயங்களுடன்‌ சம்பந்திக்காமல்‌, இந்திரியங்களுடன்‌ மாத்திரம்‌ சம்பந்தித்து இந்திரியங்களை விஷயமாகக் கொள்ளும்‌ நிலைமை
‘இரண்டாவது. -கிரஹண ஸமா பத்தி – மநம்‌ பிரமாதாவுடன்‌ (ஆத்மாவுடன்‌) சம்பந்தித்தல்‌
மூன்றாம்‌ நிலைமை. இதற்கு கிரஹீதிரு ஸமாபத்தி என்று பெயர்‌. கிரஹீதிரு என்றால்‌ க்ரஹிக்கிறவன் -அதாவது ஆத்மா என்றர்த்தம்‌
ஸமாபத்தி– தந் மயமான பரிணாமம்‌, தன்னிடத்தில்‌ உள்ள ஆத்மாவினிடம்‌ தந் மயப்படுதலைத்‌ தவிர,
முக்தர்களான சுகர்‌, பிரஹ்லாதர்‌ முதலானவர்களிடம்‌ மநத்தை ஓரே பிடியாய்‌ நிறுத்தலும்‌ இந்த ஸமாபத்தியிலடங்கும்‌.

மேற்கண்ட ஸமாபத்திகளுக்குள்‌, சப்தம்‌, அர்த்தம்‌; ஜாநம்‌ இவைகளுடன்‌ கலந்து நிகழம்‌ ஸமாபத்தியானது ஸ்விதீர்க்க ஸமாபத்தி என்று பெயர்‌ பெறும்‌.–42-

41-ம்‌ ‘ சூத்‌ரத்தில்‌ ஸமாபத்தியின்‌ பொதுவான லக்ஷணம் சொன்னார்‌, இந்த சூத்திரம்‌ முதல்‌ 44-ம்‌ சூத்திரம்‌ வரையில்‌, ஸமாபத்தியின்‌ விசேஷ லக்ஷணங்கள்‌ சொல்லப் படுகின்றன.
உதாரணமாக இந்த ஸமாபத்தியில்‌ “பசு? என்ற பதம்‌, அதன்‌ பொருள்‌, அதன்‌ ஞாநம்‌ இவை த்யானத்தில் கலந்து நிற்றலாகும்‌.
இது திரிபுடி நிகிழும்‌ நிலை. அதாவது மநோ விர்த்தியானது மேற்கண்ட மூன்றிலும்‌ சம்பந்தப்பட்டிருக்கும்‌.
பதத்தையும்‌ ஞாநத்தையும்‌ விட்டு பொருள் மாத்‌திரத்தில் மநம்‌ தனித்து நின்றால்‌, அத்துடன்‌ ஒன்றுபட்டால்‌, அது நிர் விதர்க்க ஸமாபத்தி என்று சொல்லப்படும்‌.
அதாவது இதில்‌ சப்தத்தினுடைய ஸங்கேத ஞாநமும்‌, அனுமாத்‌திற்கு ஸாதநமான ஸ்மரணமும்‌ விலகும் போது, மநம்‌ அர்த்தத்தில்‌ மாத்திரம்‌ நிற்கும்‌.
இந்த நிர்விதர்க்க ஸமாபத்தியில்‌ உண்டாகின்ற வஸ்து ஞாநமானது யோகிக்கு உண்மையான பிரத்தியக்ஷப்‌ பிரமாணமாகிறது,
இப்பிரமாணம்‌, சப்தம்‌, ௮னுமாநம்‌ என்ற பிரமாணங்‌களுக்குக்‌ காரணமாக இருக்கின்றது.

ஸ்மிருதி போயும்‌, நான்‌ என்ற பிரஜ்ஜை அற்று இருக்கிறது போலவும்‌ (தியாதம்‌ பண்ணப்படும்‌) வஸ்து மாத்திரமாக
மநம்‌ நிற்கும்‌ நிலமை யானது, நிர் விதர்க்க ஸமாபத்தி எனச்‌ சொல்லப்படும்‌,–43–

ஸ்மிருதி, பிரத்தியக்ஷம்‌, சப்தம்‌, அனு மாநம்‌ முதலிய பிரமாணங்களால்‌ அனுபவித்‌த விஷயங்களின்‌ நினைப்பு .
இந்த ஸமாப்தியில்‌ திரிபுடி. அற்று மநம்‌ வஸ்‌து ரூபமாக ஆகிறது
மேற் கூறிய இரண்டு ஸமாபத்திகளும்‌ ஸ்தூலமான: வஸ்‌துக்களைக்‌ தியாநித்தலாம் ,

முன்‌ சொன்ன (ஸ விதர்க்க நிர் விதர்க்க ஸமாபத்திகளின்‌ முறைப்படியே) ஸூக்ஷ்மமான வஸ்துக்களை விஷயீ கரிக்கிற .
ஸ விசார, நிர்விசார ஸமாபத்திகள்‌ சொல்லப் படுகின்றன்.

முன்‌ ஸ விதர்க்க நிர் விதர்க்க ஸமாபத்‌திகளில்‌, ஸ்தூல மான விஷயங்களின்‌ த்யானம் திரிபுடி. உள்ளதாகவும்‌, திரிபுடி, ௮ற்றதாகவும்‌ நிகழ்ந்தது.-அவ்விதமே சூஷ்மமமான்‌ வஸ்துக்களை விஷமீ கரித்தலிலும்‌, தியாநித்தலிஓம்‌, திரிபுடி உள்ள்து ஸ விசார்‌ ஸமாபத்தி என்றும்‌,-திரிபுடி, அற்றது நிர் விசார ஸமாபத்தி மென்‌றும் அறியத்தக்கது –
விசாரம்‌ என்றால்‌ தியாநத்தில்‌ ஒரு நிலையாம்‌, தர்க்க விசாரம்‌ அன்றாம்‌.
ஸூஷ்ம வஸ்து என்றால்‌ பரம அணு: இவைகள்‌” அலையும்‌ மநத்தை நிறுத்தும்‌ முறை

(மேற்கண்ட) ஸூஷ்மம்மான் வஸ்துவை விஷயி கரித்தலானது மூலப்‌ ப்ரக்ருதி வரை நடை பெறுகிறது.–45-

பஞ்ச பூகங்களின் ஸூஷ்மமமான நிலை –பஞ்ச தன்மாத்திரைகள் — பஞ்ச தன்மாத்திரைகள் ஸூஷ்மமமான நிலை லிங்கம்‌ அதாவது மஹத் த,த்வம்‌,
மஹத் தத்துவத்தின்‌ ஸூஷ்மமமான நிலை அலிங்‌கம்‌, ௮தாவது மூலப் ப்ரக்ருதி -. மூலப் ப்ரக்ருதியை விட ஸூஷ்மமான வஸ்து இல்லை.
மூலப் ப்ரக்ருதியை விட சூஷ்மமாகப்‌ புருஷன்‌ இருந்தாலும்‌, புருஷன்‌ பிரபஞ்சத்‌திற்கு உபாதான காரணமாக
இல்லை, மூலப் பிரருதி பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக, இருக்கின்றமையால்‌, அதுவே முடிவாகச்‌ சொல்லப் பட்டு இருக்கிறது

(மேற்கண்ட நாலு ஸமாபத்திகளும்‌) பீஜத்துடன்‌ கூடிய ஸமாதிகளே.–46-

“பீஜத்துடன்‌ கூடிய” என்றால்‌ “வெளியிலுள்ள வஸ்‌துவை ஆலம்பநமாக ஆஸ்ரயித்த ” என்பதாம்‌.

நிர்விசார சமாதியில் சாமர்த்தியம் உள்ளவனாகில் மனத்தில் தெளிவான ஞானம் உண்டாகிறது –47-

ரஜஸ்‌, தமஸ்‌ இவைகள்‌ விஷயங்களை மறைத்தலாகிய ஆவரணத்தை யுண்டு பண்ணுகின்‌றன,
இவைகள்‌ யோகாப்பியாஸத்தினால்‌ போகவே, மநம்‌ ஸத்துவமாகப்‌ பிரகாசிக்கின்றது ,
பாண்டித்தியம்‌ உண்டாகும் போது, சாதாரணமாய் ஏனையருக்கு ஞாநம்‌ ஒன்‌றன் பின்‌ ஒன்றாய்க் கிரமமாக உண்டாகிறது – இந்நிலையை அடைந்தவனுக்கு அப்படியின்றி ஏக காலத்‌தில்‌ எல்லா விஷயங்களின்‌ ஞாநம்‌ உண்டாகின்றது .
இந் நிலையில்‌ உள்‌ளவன்‌, பிறர்‌ யாராலும்‌ பரிதபிக்கக் கூடாதவனாக ௮த் தன்மையான உயர்ந்த ஸ்தாநத்தை அடைந்து பர்வதத்தின்‌ மேலுச்சியிலுள்ளவன்‌ போல, ஜநங்களைக்‌ கருணையுடன்‌ பார்க்கிறான்‌.-இவ்விதம்‌ மஹா பாரதத்தில்‌ சாந்தி பர்வத்தில்‌ சொல்லப்பட்டுள்ளது.

அந் நிலையிலுள்ள பிரஜ்ஞை ‘ரிதம்பரா* என்று பெயர்‌ பெறும்‌,—48-

அந் நிலையில்‌ உள்ள பிரஞ்ஞையானது, ஸம்சய விபரியங்களின்றி வஸ்துக்களின்‌ உண்மையான ஸ்வரூபத்தையே அறிவிக்கிறது
ரிதம்பரா – உண்மை தரித்தல்‌.

முன்‌ சொல்லிய ரிதம்பரா என்ற பிரஜ்ஜையானது) ஸ்ருதி, அநுமாநங்களால்‌ ஏற்படும்‌ பிரஜ்ஜையை விட வேறானது,
அது வஸ்துக்களின்‌ விசேஷ:ஸ்வரூபத்தைத்‌ தெரிவிக்கிறது.,–49-

ஸ்ருதி ௮னு மாநங்களால்‌ கிடைக்கும்‌ ஞாநம்‌ சாமாந்‌நியமானது. வஸ்துக்களின்‌ விசேஷ ஸ்வருபத்தைக்‌ காட்டும்‌ தன்‌மையது அல்ல,
ரிதம்பரா என்ற பிரஞ்ஞையானது மேற் கண்ட . இரண்டு பிரமாணங்களும்‌ பிரவேசிக்க இயலாத பிரஞ்ஞாபூமி
இதில்‌ உள்ளபடி -யதார்த்த ஞாநம்‌ உண்டாகிறது.-சூக்ஷ்மமாண பரம அணுக்கள்‌, மறைவுள்ள வஸ்துக்கள்‌, தூரத்தினுள்ள வஸ்துக்கள்‌ இந்த பிரஞ்ஞா நிலையில்‌, பிரத்தியக்ஷமாகின்‌ றன.-இவைகள்‌ லௌகிக ப்ரத்யக்ஷம் சப்தம்‌, அனுமாநங்களான பிரமாணங்களுக்குப்‌ புறம்பானவை.

மேற்கண்ட (ரிதம்பரா என்ற பிர்ஜ்ஞா நிலையால்‌ ஏற்படும்‌ ஸம்ஸ்காரமானது) மற்றைய வெளி விஷயங்களால்‌ ஏற்படும்
ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாகாமல்‌ தடுக்கும்‌ தன்மையது –50-

இந் நிலையில்‌ உள்ள யோகியானவன்‌, வெளி லிஷயங்‌கள்‌ தன்‌ மநத்‌தில்‌ தங்க இடம்‌ கொடான்‌.
அத்தன்மையான பூர்வ வாஸனைகள்‌ இருப்பினும்‌, ௮வைகள்‌ தன்னை மேற் கொள்ளவும்‌ இடங்‌கொடான்‌.
ஸமாதியினால்‌, பிரஞ்ஜையானது ஸ்‌திரப்படுகிறது.-ஆனால்‌ ஸமாதி ருபமான ஸம்ஸ்காரமானது , மேன்மேலும்‌ விருசத்தி யடைகிறது.
சாதாரண விஷய அனுபவத்தில்‌ மநம்‌ அதன் கண்‌ சேர நிற்பது போல ஸமாதி நிலை உறுதிப்பட, மநம்‌ அந் நிலையில்‌ இருப்பதாகும்‌.
இரண்டிற்கும்‌ வித்‌தியாஸம்‌ இல்லை யென்றாலோ,-வித்தியாஸம்‌ உண்டு. ஸமாதி நிலையால்‌: ஏற்படும்‌ ஐகாக்ரியமானது மநத்தின்‌ விஷய வாஸனைகளைப் போக்கி அதைத்‌ தூய்மைப் படுத்தும்‌ இயல்பினது புருஷ ஸாஷாத்காரம்‌ உண்டாகும்படி, செய்கிறது.
புருஷ ஸாஷாத்காரம்‌ உண்டாகவே மநம்‌ விர்‌த்தி யின்றி ஓய்வடைகிறது. மநோ நாசம்‌ உண்டாகிறது என்னலாம்‌. விஷய அனுபவத்தின் ஐகாக்ரியமானது விஷய அனுபவங்களை விருத்தி பண்ணுகிறது–

மேற்கண்ட ரிதம்பரா ப்ரஞ்ஜையால் ஏற்படுகின்ற ஸம்ஸ்கார ப்ரவாஹத்திற்குத் தடை உண்டாகும் போது
எல்லா ஸம்ஸ்காரங்களுக்கும் தடை உண்டாகின்றன அந்நிலை நிர்பீஜம் என்ற சமாதியாகும் -51-

இந்த நிர்பீஜ ஸமாதியானது எல்லா ஸம்ஸ் காரங்களையும் பாதிக்கின்றது. இதனால்‌ மநத்தின்‌ விஷய அனுபவச் செயல்‌ அற்றுப் போகிறது -.
யோகியானவன் கைவல்லியத்தை அடைகிறான் அந்நிலையில்‌ புருஷன்‌ தன்‌ ஸ்வருப மாத்திரத்தில்‌ இருப்பவனாயும்‌, சுத்தனாயும்‌, கேவலனாயும்‌ ஆகிறான்-இந்நிலையில்‌ முக்தன்‌ எனப் படுகிறான்‌. முதன்மையில்‌, பல விர்த்திகளால்‌ சித்தம்‌ அலை யுள்ளதாக. இருந்து பின்னர்‌ யோகப் பயிற்சியால் பல விர்த்திகள்‌ தவிர்ந்து, ஒரே விர்த்தி மாத்திரம்‌ எற்பட்டது.
இந் நிலையில்‌ நான்‌ என்ற பிரஜ்ஜை உள்ளது. பின்னமர் அந்த விர்த்தியும்‌ ஒழியவே. கைவல்லிய ப:தவி ஸித்திக்கிறது-
அடியில்‌ வரும்‌ திரு மந்த்ர வசநம்‌ இங்கு கவனிக்கத் தக்கது …

நான் என்றும் தான் என்று நாடி நான்‌ சாரவே
தானென்று நானென்‌று இரண்டிலாத்‌ தற்பதங்‌
தானென்று தானென்ற. தத்துவ நல்கலாற் ,
றானென்று நானென்றுஞ்‌ சாற்றகிலேனே

சாற்ற அரிதாகிய தத்துவஞ்‌ சித்தித்தால்
ஆற்ற அரிதாகிய ஐந்தும் அடங்கிடு
மேற்றிகழ்‌ ஞானம்‌ விளக்கொளி யாய்நிற்கும்‌.
பாற் பர சாயுச்சிய மாகும்‌ பதியே– திரு மூவம்‌

ஸமாதி பாதம்‌ முற்றிற்று,

———————————————————

ஸ்ரீபாஷ்யம்–

July 7, 2023

ஸ்ரீபாஷ்யம் முகவுரை..
வேதாந்த சூத்ரம் என்றால் என்ன?
இவை வேத வியாசரால் உபநிஷத் கூறுவது பிரம்மத்தை பற்றியே என்று நிலை நிறுத்துவதற்காக சொல்லப் பட்டது.
இதை மறுக்கும் வேதாந்தம் தவிர பிற மதங்களாவன பெளத்த ஜைனம், சாங்கியம் நியாயம் முதலியன.

இவைகளில் சாங்கியம் ஞாயம் இவை இரண்டும் வேதத்தை ஆதரித்தாலும் பிரம்மம், ஜீவன், ஜகத் இவைகளைப்பற்றி வேறுவிதமான கருத்தை வலியுருத்துகின்றன . பௌத்தமும் ஜைனமும் வேதத்தையே ஒத்துக்கொள்வதில்லை.
இவைகளின் வாதங்களை முறியடித்து பிரம்மம்தான் உபநிஷத் வாக்கியங்களின் முக்கிய கருத்து என்பதை நிலை நாட்டுவதும் இல்லாமல் பிரம்மத்திடமிருந்துதான் உலகம் தோன்றியது என்பதையும் பிரம்ம சூத்ரம் விளக்குகிறது.
சங்கரர் ராமானுஜர் இவர்களுடைய பாஷ்யங்கள் பிரம்ம சூத்ரத்தின் முக்கிய விளக்கங்களை ஒட்டியே இருந்தபோதிலும் அவரவர் சித்தாந்தத்தின்படி ஒரு சில விஷயங்களில் வேறுபடுகின்றன.
முக்கியமாக அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வதத்துக்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளை ஆராய்ந்து பிறகு மற்ற மதங்களின் வேறுபாடுகளையும் பார்ப்போம்.
ஜீவன் பிரம்மம் ஜகத் இவைகளைப் பற்றிய கொள்கைகள் தான் இந்த வேற்றுமைக்குக் காரணம்.

அத்வைதம்
ப்ரஹ்மம் சத்யம்- ப்ரஹமமே உண்மை.
ஜகத் மித்யா- உலகம் ஒரு மாயத் தோற்றம்.
ஜீவோ ப்ஹ்ம்மைவ நாபர: -ஜீவன் ப்ர்ஹமத்தைத் தவிர வேறு இல்லை.
பிரம்மம் நிர்குணம் நிர்விசேஷ சின்மாத்ரம்- குணங்களற்ற வேறுபடுத்தமுடியாத ஞானமே.
மாயை அல்லது அவித்யை என்பது தோற்றுவிக்கப் படாத (அனாதியான) நேர் மறையான (பாசிடிவ்) வஸ்து.
பிரம்மம் உலகைப் படைத்தது எப்படி என்றால் ஒரு கயிறு பாம்பைப் படைத்தது போல.
அதாவது கயிறைப் பாம்பென்று எண்ணுவது போல.

விசிஷ்டாத்வைதம்
ப்ரஹ்மம், ஜீவன், ஜகத் மூன்றும் உண்மைத் தோற்றமே.
சேதனம் அசேதனம் ஆகிய இவை கொண்ட உலகம் ஈஸ்வரனின் சரீரம்.
ப்ரஹ்ம ஜீவ ஐக்கியம் என்பது உயிருக்கும் சரீரத்துக்கும் உள்ளதைப்போன்றது.
பிரம்மம் என்பது அனந்த கல்யாண குணங்களுடன் கூடிய நாராயணனே.
மாயை என்பது ஈஸ்வர சக்தி . அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது.
பிரம்மமே உலகின் காரணம். உலகம் அதனால் செய்யப்பட காரியம்
.மண்ணிலிருந்து குடம் போல. மண் எப்படி உண்மையோ அதே போல குடமும் உண்மை. காரியம் என்பது காரணத்தின் இன்னொரு உருவமே

உலகம் மாயை என்பதை அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்த்துவிட்டு பிறகு விசிஷ்டத்வைத கொள்கையை பார்க்கலாம்.
உலகம் மாயை என்றால் உலகம் என்று ஒன்று இல்லவே இல்லையா?. ஆகாசத்தாமரை , முயல் கொம்பு இவை போன்ற இல்லவே இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஒன்றா? மந்திரவாதியின் மாயாஜாலம் மாதிரியா?
அத்வைதம் சொல்வது என்னவென்றால் அது அப்படி அல்ல. இருக்கும் பொருளை வேறு மாதிரியாகக் காண்பது.
அரை இருட்டில் ஒரு கயிறைப்பார்த்து பாம்பென்று நினைக்கிறோம். அது இல்லாத வஸ்து அன்று. ஆனால் அது வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கிறது.

இதை வ்யாவஹாரிகக சத்தியம் என்று அத்வைதம் சொல்லுகிறது, அதாவது நடைமுறையில் உலகம் பொய் அல்ல. ஆனால் எல்லாம் பிரம்மமே என்ற உண்மையை நம் அவித்யை மறைப்பதனால் அது பிரம்மமாகத் தோன்றுவதில்லை. உலகமாகத் தோன்றுகிறது.
பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் அதாவது எக்காலத்திலும் உள்ள உண்மை. அதைத்தவிர உலகம் என்பது மந்திரவாதி காட்டுவது மாதிரி உருவெளித் தோற்றமோ இல்லை ஆகாசத்தாமரை , முயல் கொம்பு என்ற இல்லவே இல்லாத வஸ்துவோ அல்ல.
இது எதனால் ஏற்படுகிறது.? இதற்கு விடை அத்தியாசம் என்று அத்வைதம் கூறுகிறது,. அதாவது ஒன்றின் குணங்களை அறியாமையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
இது error perception அல்லது தவறான பார்வை என்பது .

அத்தியாசம் என்பது என்ன?
அதாவது ஒன்றின் குணங்களை தவறான பார்வையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
தவறான பார்வை எப்படி ஏற்படுகிறது? ஒரு கயிறைப் பார்க்கிறோம், சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பாம்புபோலத் தோன்றுகிறது. இது தவறான பார்வை அல்லது erraneous perception. அது ஏன் பாம்புபோலத் தோன்றவேண்டும்? ஏனென்றால் நாம் பாம்பை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
ஒரு பொருளைப் பார்க்கின்றபோது அது என்னவென்றே தெரியவில்லை என்றால் அது புரியாத பார்வை (non-apprehension).
அதை வேறு ஒன்றாகப புரிந்து கொள்வது தவறான பார்வை(misapprehension or erraneous perception)
என்னவென்று தெரியாத ஒன்றைப் பார்க்கும்போது மனித மனம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றை அதனுடன் பொருத்திப் பார்த்துத் தவறாகப் புரிந்துகொள்கிறது. பாம்பின் குணாதிசயங்களை கயிற்றின்மேல் ஏற்றி அதைப பாம்பாகப் பார்ப்பதுதான் அத்தியாசம்.

அத்வைதம் கூறுவது என்னவென்றால் கயிறு பாம்பாகத் தோன்றும்போது அது நிஜம் . ஆனால் அது பாம்பல்ல கயிறு என்று அறியும்போது அது பொய்.
அதே போல பிரம்மத்தை உலகமாகக் காணும்போது அது நிஜம் . ஆனால் பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் எல்லாம் பிரம்மம் என்ற நிலையில் உலகம் உண்மை அல்ல என்ற தெளிவு ஏற்படுகிறது.
அதனால் பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் , அதாவது எப்போதும் உள்ள உண்மை, பிரபஞ்சம் வ்யாவ்ஹாரிக்க சத்யம் , நடைமுறையில் உண்மை என்று அத்வைதம் கூறுகிறது,
பிரம்மஞானியும் உலகத்தை உணர்கிறான், அது மாயமாய் மறைவதில்லை. ஆனால் அது பிரம்மமே என்று அறிகிறான்.

இதற்கு மாறாக விசிஷ்டாத்வைதம் கூறுவது பிரபஞ்சம் உண்மை பிரம்மமும் உண்மை . இதை சரீர சரீரி பாவம் மூலமாக ஸ்தாபிக்கிறார். பிரம்மமே பிரபஞ்சம் . இதைப் பிறகு விரிவாகக் காணலாம் .
ஸ்ரீபாஷ்யம் வேதாந்த சூத்ரங்களின் விசிஷ்டாத்வைத பரமான விளக்கம்.
இதன் சரித்திரப் பின்னணியை சிறிது ஆராய்வோம். வேதத்தை அனுசரித்து யாகயக்ஞாதிகள் செய்து அதன் பலனை அடைந்தவர்கள் மீமாம்சகர்கள் . இதைச் சொல்லும் பாகம் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டம் எனப்படும். வேதத்தின் பின் பகுதி உத்தர மீமாம்சம் அல்லது ஞானகாண்டம் எனப்படும். இதில்தான் உபநிஷத்துக்கள் காணப்படுகின்றன.

மீமாம்சகர்களைப் பொறுத்தவரையில் வேதம் சொல்லுவது கர்மகாண்டம்தான். பின் பாகமான உபநிஷத்துக்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அந்த காலகட்டத்தில் யாகம் யக்ஞம் முதலியவை மட்டுமே வைதிக காரியங்கள் எனக் கருதப்பட்டு உயிர் பலி மிகுதியாக செய்யப்பட்டு வந்தபோது புத்தர் தோன்றினார் ,
அவர் இறப்பிற்கு பிறகு எதுவும் இல்லை. எல்லாம் அநித்தியம். சுவர்க்கம் மறுபிறப்பு இவைகளுக்காக உயிர்ப்பலி கொடுப்பது பாவம் என்று அஹிம்சையை வலியுறுத்தினார். இந்த கொள்கை பரவினதும் மக்கள் யாகம் முதல்யவைகளை விட்டதுமல்லாமல் வேதத்தையே விட்டுவிட்டனர்.
இந்த காலகட்டத்தில்தான் சங்கரர் தோன்றினார். உலகம் அநித்தியம்தான். ஆனால் நித்தியமான வஸ்து ஒன்று உண்டு. அதுதான் உபநிஷத்துக்களில் சொல்ல்ப்பட்டிருக்கிறது என்று பிரம்மத்தை நிலை நாட்டினார்.
இவ்வாறு அந்தந்த சூழ்நிலையை ஒட்டியே வேதங்களின் உபதேசங்களை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல் தவறான மார்கத்தில் செல்வதைத்தடுக்க இறைவனே அனுப்பியவர்கள்தான் மகான்கள்.

சங்கரர் காலத்திற்குப்பிறகு அவருடைய மித்யாவாதம் அவர்பின் வந்தவர்களால் பலத்து பக்தி என்பதே குறைந்துவிடுமோ என்ற சந்தர்ப்பத்தில் இறைவனின் தூதர்களாக ராமானுஜர் மத்வர் இவர்கள் தோன்றினர்.
வடக்கிலும் பல பக்தர்கள் தோன்றி பக்தியை வளர்த்தனர்.
வேதாந்தசூத்ரங்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஒழுங்குபடுத்தி சுருக்கமாக சொல்வதற்கு முற்படுகின்றன. சங்கரராலும் ராமானுஜராலும் எழுதப்பட்ட பாஷ்யங்கள் ப்ரம்ம்சூத்ரத்தைத் தழுவியே இருந்தாலும் பிரம்மம், ஜகத், ஜீவன் இவைகளின் நிலை பற்றிய விளக்கங்களில் அவரவர் கொள்கைக்கேற்ப மாறுபடுகின்றன.

மங்களச்லோகம்
வேதார்த்த சங்க்ரஹத்தில் உள்ளபடி இதிலேயும் ராமானுஜர் நாராயணனை ஸ்ரீனிவாசன் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஸ்ரீனிவாசன் என்பது நாராயணனையும் குறிக்கும் அல்லவா?
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே
வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே
ஸ்ருதிசிரஸிவிதீப்தேபரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மமபரஸ்மின் சேமுஷீ பக்திரூபா
என் புத்தியானது பக்திரூபத்தில் வேதத்தின் முடிமேல் விளங்கி தன்னை வணங்கும் எவரையும் காக்கும் வ்ரதம் கொண்டு பிரபஞ்சத்தைப் படித்து, காத்து அழிக்கும் அலகிலா விளையாட்டுடைய பரபிரம்மஸ்வரூபமான நாராயணனிடத்தில் லயிக்கட்டும்.
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே– பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, , ஜன்ம , காத்தல், ஸ்தேம, அழித்தல், பங்க, இவை யாவையும் அவனுடைய லீலை. பங்காதி என்றால் அழித்தல் முதலிய என்பது பொருள். சிருஷ்டி, காத்தல் அழித்தல் மூன்றையும் சொல்லிய பிறகு எதற்கு ஒரு ஆதி பதம்?
அதாவது அவன் பிரபஞ்சத்தை ப்படைத்தது மட்டும் அல்லாமல் அதன் உள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது.
அகிலம் என்றால் சர்வம் என்று பொருள். ஆனால் அகிலம் என்ற சொல்லை கையாண்டது ஏனென்றால் அ என்ற அகாரம் மங்களகரமானதும் அல்லாமல் அகாரம் நாராயணனைக் குறிக்கிறது. ,
பக்திரூபா சேமுஷீ– பக்தி ரூபமான புத்தி என்பதன் மூலம் பகவானை அடைய பக்தியே வழி என்று சொல்கிறார், புத்திபூர்வமான ஞானம் பக்திமூலம் வருவதாகும்.
வேதத்தின் முடிமேல் விளங்கி, சுருதி சிரசி விதீப்த, அதாவது வேதத்தின் முடிபோன்றது உபநிஷத்,. அதனால் சொல்லப்படுபவன் நாராயணனே என்று பொருள்.
பக்தியுடன் தன்னை ஆச்ரயிக்கும் உயிர்களை ரட்சிக்கும் வ்ரதத்தை உடையவன் வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்கிறார்.
ராமாவதாரத்தில் விபீஷண சரணாகதி கட்டத்தில் இதை அவன் வாயிலிருந்தே கேட்டோம் அல்லவா?
‘சக்ருத் ஏவ பிரபன்னானாம் தவாஸ்மி இதி வாதினாம்
அபயம் சர்வபூதானாம் ததாமி இதி வரதம் மம” என்று.
சர்வபூதானாம் என்றால் எந்த உயிர்க்கும் என்று பொருள் கஜேந்த்ரனுக்கும் ஜடாயுவுக்கும் அருள் பாலிக்கவில்லையா?
ஸுதர்சனசூரி ஸ்ரீபாஷ்ய விளக்கத்தில் கூறுகிறார், அவன் காப்பது மட்டும் அல்ல கடைசியில் மோக்ஷமே தந்துவிடுகிறான் என்று.

பிரம்மசூத்ரம் நான்கு பெரிய பிரிவுகளைக்கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பகுதிகள். முதல் பிரிவின் முதல் பகுதியில் அத்வைதத்தின் கொள்கைகளும் அதற்கு விசிஷ்டாத்வைதத்தின் மறுப்புகளும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எளிதாகப் புரியும்படி இருப்பதனால் அதை அங்கு பார்ர்க்கலாம்.
பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
சூத்ரம் 1
अथ अथो ब्रह्म जिग्ज्ञासा
அதாதோ பிரம்மஜிக்ஞாஸா
(अथ) அத-அதன் பின்
(अत) அத:-ஆகையால்
(ब्रह्म जिग्ज्ञासा) பிரம்மஜிக்ஞாஸா- பிரம்மத்தைப்பற்றி அறியும் ஆவல் ஏற்படுகிறது.
அத (अथ) என்னும் சொல் மங்களம், ஆரம்பம், பிறகு, இவைகளைக் குறிக்கும் சொல். இவ்விடத்தில் பிறகு என்ற அர்த்தத்திலேயே சொல்லப்பட்டிருந்தாலும் எதற்குப் பிறகு என்பது சங்கரராலும் ராமானுஜராலும் இரண்டு விதமாக விளக்கப்படுகிறது.
சங்கரரின் விளக்கம்- அத- அதற்குப்பிறகு என்பது எதைக்குறிக்கிறது என்றால் பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஆத்மசாதனைக்கு அப்புறம் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்று பொருள் என்கிறார்.
ஆத்மசாதனை என்றால் என்ன? இது சாதனா சம்பத் என்று கூறப்படும் நால்வகைப் பட்டது.
நித்ய அநித்திய விவேகம்- அதாவது எது அழியாப் பொருள் எது அழியும் பொருள் என்ற பகுத்தறிவு.பிரம்மமே நித்தியம் பிரபஞ்சம் அநித்தியம் என்று அறிவது.
இஹ அமுத்ர பல விராகம்- இந்த லோகத்திலும் மற்ற லோகங்களிலும் கிடைக்கக் கூடிய பலன்களில் ஆசையின்மை. அதாவது யாகயக்ஞாதிகள் மூலம் கிடிக்கக்கூடிய பலன்கள் அநித்தியம் என்று அவைகளில் பற்றின்மை.
சமதமாதிசம்பத்- இந்த்ரியங்கள் மனம் இவற்றை வசப்படுத்துவது.
முமுக்ஷுத்வம் – பிறப்பிறப்பற்ற முக்தி நிலையை அடைவதில் ஆர்வம்.
இது உள்ளவர் எவராயினும் பிரம்மஞானத்திற்கு முயற்சிக்கலாம் என்பது சங்கரர் கூற்று.

வேதத்தின் கர்மகாண்டத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கர்மகாண்டத்தை . அதாவது பூர்வமீமாம்சம் என்று சொல்லப்படும் வேதத்தின் முதல் பகுதியை கற்காமலேயே பிற்பகுதியான உபநிஷத் அல்லது ஞானகாண்டம் மூலம் பிரம்மஞானத்தை அடையலாம் என்று சொல்கிறார்.
ராமானுஜரின் சித்தாந்தத்தின்படி வேதம் ஓர் முழுமையான பொருள் . அதனால் பூர்வபாகம் உத்தரபாகம் இரண்டுமே முக்கியமானவை,.
அதனால் கர்ம காண்டத்தில் சொல்லி உள்ளபடி வேத கர்மாக்களை செய்து விட்டு அதன் பின் அவைகளால் அடையும் பலன் தாற்காலிகம் ஆனதே என்று உணர்ந்து பிரம்மத்தை அடையும் முயற்சியையே அத (பிறகு) என்ற சொல் குறிக்கிறது என்கிறார்.

இந்த வேற்றுமை காரணமாகவே சன்யாசம் ஏற்கும் முறை அத்வைதத்திலும் விசிஷ்டாத்வைதத்திலும் மாறுபடுகிறது. பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராகவே சன்யாசம் கொள்வது அத்வைதம் கிருஹதாஸ்ரமத்திற்குப் பிறகு சன்யாசம் கொள்வது விசிஷ்டாத்வதம்
.அத: ஆகையினால் என்பது இந்த மேற் சொன்ன அறிவினால் என்பது பொருள்.
பிரம்மஜிக்ஞாஸா-பிரம்மத்தை அறியும் ஆவல் இது எப்படி ஏற்படுகிறது?
வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றி வேதத்தில் சொல்லியுள்ள தர்மங்களை அனுசரித்து யாகயக்ஞாதிகளை செய்தபோதிலும் பிறப்பு இறப்பு இவை மாறி மாறி வருவதால் களைப்படிந்த ஜீவன் இதிலிருந்து மீள வழி உள்ளதா என எண்ணி வேதங்களின் முடிவுப்பகுதியான உபநிஷத்துக்களை நாடுகிறான்.
அங்கு வேதாந்த வாக்கியங்கள் மூலம் பிரம்மத்தை அடைவதுதான் ஒரே வழி என்று தெரிந்து பிரம்மத்தைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறான்.
இதுதான் இந்த சூத்ரத்தின் பொருள்.

சரி. பிரம்மம் என்றால் என்ன ? இது அடுத்த சூத்ரம்.
ஜன்மாத்யஸ்ய யத:- சூத்ரம் 1.1.2 continued
அத்வைதக் கொள்கையின்படி இந்த உலகம் உண்மையன்று. அப்படி இருக்கையில் இந்த சூத்திரத்தை சங்கரர் எவ்வாறு விளக்குகிறார் ?
அத்வைதகோட்பாட்டின்படி உலகம் உண்மை அல்ல. அப்படி இருக்கையில் பிரம்மம் தான் உலகத்தைத் தோற்றுவிக்கிறது, அதைக் காக்கிறது பின்னர் அழிக்கிறது என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
இதற்கு அத்வைதத்தின் பதில்.
கயிறைப் பாம்பென்று நினைக்கிறோம். பாம்பைத் தோற்றுவித்தது எது?
கயிறே அல்லவா? அது கயிறு என்று தெரிந்த பின் பாம்பு எங்கே போகிறது? கயிறிலேயே மறைகிறது. கயிறைப் பாம்பாகப் பார்க்கும் வரை அந்தப் பாம்பை எது நிலைக்கச் செய்கிறது?
கயிறுதானே?

இதே போல பிரம்மம்தான் உண்மை என்று தெரியும் வரை உலகம் உண்மையாகவே தெரிகிறது. அதனால் இந்த உலகம் தோன்றுவதற்குக் காரணம் பிரம்மம்தான் என்று ஆகிறதல்லவா? உலகத்தைக் காணும்போது அதை நிலை நிறுத்துவது பிரம்மம்தானே? பிறகு பிரம்மத்தை அறிந்த பிறகு இந்த உலகம் உண்மை அல்ல என்று தெரியும்போது அது பிரம்மமாகவே காண்கிறோம் . அப்போது அதை அழிப்பதும் பிரம்மம் தானே ?
விசிஷ்டத்வைத சித்தாந்தத்தின் படி உலகம் பொய் அல்ல . பிரம்மத்தின் படிவம் (another form). எல்லாம் சூக்ஷ்ம வடிவில் இருப்பது பிரம்மத்தில். அதுவே ஸ்தூல வடிவத்தில் உலகமாக இருக்கிறது.

அதனால் உலகம், ஜகத், ஜீவன் , ஈஸ்வரன் மூன்றும் பிரிக்கமுடியாதவை. பிரம்மம் உயிர் என்றால் ஜகத் ,ஜீவன் இவை அதன் உடல். எப்படி பானை என்பது சூக்ஷ்ம உருவத்தில் மண்ணாக இருக்கிறதோ அதுபோல.
இங்கு திருமூலர் வாக்கைப் பார்ப்போம்.
மரத்தில் மறைத்தது மாமதயானை மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். இங்கு யானையும் நிஜம் மரமும் நிஜம் .பார்வையில் தான் வேறுபாடு. அதே போல பார் முதல் பூதம் அதாவது இந்த பிரபஞ்சமும் நிஜம் பிரம்மனும் நிஜம்.
பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றது ஆழ்வார் பார்வையில். நம் பார்வையில் வெற்றிலையும் சோறும் தான் படுகிறது, இதுதான் வித்தியாசம்.

பிரம்மத்தை அறிய வேதமே பிரமாணம்.
ஸ்ரீபாஷ்யம் -1.1.3–பிரம்மசூத்ரம் – –சூத்ரம். 3
சாஸ்திர யோனித்வாத்-
சாஸ்திரம் அதாவது உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி.
இது எதற்கு என்றால் பிரம்மத்தை உபநிஷத்தில் சொல்லியதால்தான் அறிய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில்.
ஒரு வஸ்துவைப் பற்றி அறிய சாதாரணமாக உலகத்தில் மூன்று முக்கிய வழிகள் உண்டு.

ப்ரத்யக்ஷம்- நேரில் பார்த்து அறிவது.
அதாவது நம் இந்த்ரியங்கள் மூலம், கண்ணால் பார்த்தோ, செவியால் கேட்டோ, நாசியால் நுகர்ந்தோ, நாக்கினால் ருசி பார்த்தோ அல்லது தொடு உணர்ச்சியாலோ தான் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவம் ஏற்படுகிறது.
சுகம் துக்கம் என்பதைக் கூட இந்த்ரியங்கள் மூலம் உண்டான அனுபவத்தினால்தான் உணர்கிறோம். இவ்வாறு உணர்ச்சி எண்ணம் எல்லாமே ப்ரத்யக்ஷம் மூலம் தான் ஏற்படுகிறது.

அனுமானம் – ஒன்றை அனுமானத்தினால் அறிவது.
ஒரு மலையில் புகை காண்கிறோம் . உடனே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம். அதை பிரத்யக்ஷமாகப் பார்க்கவில்லை என்றாலும், நெருப்பில்லாமல் புகையுமா என்ற அனுமானத்தின் மூலம் அறிகிறோம் அல்லவா?

உவமானம் – சில விஷயங்களை இதைப்போல் அது என்ற உவமானத்தின் மூலம் அறிகிறோம்.
ஒருவன் புலியைப் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளலாம். அவன் காட்டுக்குப் போகிறான். அவனிடம் ஒரு நண்பன் ‘அங்கே புலி இருக்கும் ஜாக்கிரதை” என்கிறான் அதற்கு அவன் புலி எப்படி இருக்கும் என்று கேட்டால் அது பூனயைப்போலதான் இருக்கும் ஆனால் பெரிதாக மஞ்சளாக இருக்கும் மேலே கோடுகள் இருக்கும் ” என்று கூறுகிறான். உடனே அவன் காட்டில் அந்த மாதிரி ஒரு மிருகத்தைப் பார்த்தவுடன் இது புலிதான் என்று அறிந்து கொள்வான் அல்லவா?

இதையெல்லாம் தாண்டிய நாலாவது அறியும் முறை தர்க சாஸ்திரப்படி சப்தம் அல்லது verbal testimony.
சப்தம் என்பதை ஆப்த வாக்கியம் என்று சொல்வது உண்டு. அதாவது நமக்கு நம்பத்தகுந்த நபர் ஒன்று சொன்னால் அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறோம் . ஒருவன் வேற்றூரில் இருக்கும்போது அவன் நண்பனோ அல்லது நெருங்கிய உறவினரோ ஒரு செய்தி நல்லதோ அல்லதோ சொன்னால் அதை நம்பி உடனே செயல் படுவான் அல்லவா?
நமக்கு மிகவும் நெருங்கிய நம்பத்தகுந்த ஆதாரம் வேதம்தானே?
ஆதலால் பிரம்மத்தை அறிய ஆதாரமாயிருப்பது வேதம் அல்லது உபநிஷ என்பது இந்த சூத்ரத்தின் பொருள்.
ஏனென்றால் பிரம்மத்தை ப்ரத்யக்ஷம் மூலம் அறியமுடியாது. இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனால்.
அனுமானமும் உபயோகம் ஆகாது ஏனென்றால் அதைக் குறிக்கும் அடையாளம் நெருப்புக்கு புகையைப் போல எதுவும் கிடையாது.
உபமானம் காட்ட முடியாது அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லாததால்.
அதை அறிந்தவர் யாரும் நமக்கு அது என்ன என்பதைச் சொல்ல முடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். அதனால் வேதமே அதாவது உபநிஷதமே பிரம்மத்திற்கு பிரமாணம்.

நான்காவது  சமன்வயாதிகாரணம் எனப்படும். சூத்திரம் “தத்து சமன்வயத்“.

ஸ்ரீ பாஷ்யம்-பிரம்மசூத்ரம் – -சூத்ரம் 5
பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் என்று உபநிஷத் வாக்கியங்களின் மூலம் ஸ்தாபித்த பின்னர் உலகம் தோன்றுவதற்கு காரணம் ப்ரகருதி பிரம்மம் அல்ல என்ற ஸாங்கிய மதத்தின் கொள்கையை மறுப்பது இந்த சூத்ரம்.
ஈக்ஷதே: ந அசப்தம்
அதுவல்ல (அதாவது ப்ரக்ருதி) காரணம், ஏனென்றால் ‘ஈக்ஷதே’ அது ஸங்கல்பித்தது’ என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி வேதத்திற்கு விரோதமானது.
ஸாங்கிய சாஸ்திரத்தின்படி, உலகம் மூன்று குணங்களால் ஆனது. இந்த மூன்று குணங்கள் பிரகிருதி அல்லது இயற்கையில் உள்ளவை. இது எப்படி என்று தெரிந்துகொள்ள் சற்று ஸாங்கிய வாதத்தை பார்ப்போம்.
அவர்கள் கூற்றுப்படி ஜீவன் என்பது புருஷன் இயற்கை என்பது பிரகிருதி. இரண்டும் உண்மையான தத்துவங்கள். பிரகிருதி உருவமற்றது அதில் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலக்காமல் தனித்தனியாக உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை.
பிறகு இவை கலந்து மஹத் அல்லது புத்தி என்ற தத்துவம் உண்டாகிறது. புத்தியில் இருந்து அஹங்காரம் தோன்றி அது சாத்விகம், ராஜஸிகம் தாமஸிகம் என்று மூன்றுவகையாகப் பிரிகிறது. சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்த்ரியங்கள் மனம் இவை தோன்றுகின்றன. தாமஸிக அஹங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன. ராஜச அஹங்காரம் இவை இரண்டும் செயல்பட உதவுகிறது (like a catalytic agent)

புருஷன் அல்லது ஜீவன் இந்த பிரகிருதியுடன் தன்னை அக்ஞானத்தினால் ஐக்யப்படுத்திக்கொண்டு சுகதுக்கங்களை அனுபவித்து சம்சாரத்தில் சிக்கி ஜனனமரணங்களை அனுபவிக்கிறான். ஒரு சமயம் இதை உணர்ந்து பிரகிருதியில் இருந்து விடுபட்டு முக்தியை அடைகிறான்.
பிரக்ருதி சிருஷ்டிக்கு காரணம் என்ன என்றால் புருஷனின் சமீபமே.
இதற்கு என்ன காரணம் கூறப்படுகிறது என்றால் ஒரு பொருள் எதனில் இருந்து தோன்றியதோ அதன் குணங்கள் அந்தப் பொருளுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். உலகத்தில் உள்ள எல்லாமே மூன்று குணங்களின் மாறுபாடு. ஆகையால் அவற்றிற்கு காரணம் ஆன பிரகிருதியே உலகத்தின் காரணம்.
இதை மறுப்பது இந்த சூத்திரம்.

உபநிஷத்தில் ‘தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய‘ என்ற வாக்கியத்தின் மூலம் உலகை படைத்தது ஜடமான பிரகிருதி அல்ல என்பது தெளிவாகிறது. ‘அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று,’ என்பது உணரும் திறமற்ற (insentient) பிரக்ருதிக்கு சரியாக அமையாது.
ஆனால் காரணத்தின் குணங்கள் அதன் மூலம் தோன்றியதில் இருக்க வேண்டுமே , முக்குணங்கள் அற்ற பிரம்மம் எப்படி இந்த உலகத்தின் காரணமாகும் என்பதற்கு ராமானுஜரின் பதில் என்னவென்றால்,
பிரம்மம் எல்லாவற்றிற்கும் உள்ளே அந்தராத்மாவாக இருப்பதனால் எல்லாமே பிரம்மத்தின் உடல் ஆதலால் எப்படி இந்த பஞ்சபூதங்களினால் ஆன உடலுக்கு உயிர் காரணமோ அதே போல இந்த ப்ரபஞ்சத்திற்கு பிரம்மமே காரணம்,
சூக்ஷ்ம சித் அசித் விசிஷ்ட பிரம்மம் ஆத்மா , ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரம்மம் உலகம். அதாவது எல்லா உயிர்களும் ஜடவஸ்துக்களும் உருவற்ற வடிவில் உள்ளது பிரம்மம். அதுவே உருவமாக உள்ளது உலகம்.
ஸாங்க்ய வாதம் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. சங்கல்பித்தது என்ற ஒரே சொல் அது பிரம்மமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வேதத்தில் ‘அக்னி சங்கல்பித்தது’ ‘நீர் சங்கல்பித்தது’ எனற வாக்கியங்கள் உண்டு,.அதனால் உணரும் திறன்(sentiency) என்பது அவசியமில்லை என்று. இதற்கு அடுத்த சூத்திரம் பதிலாகிறது.

வேதங்கள் அறிவின் எல்லையற்ற பொக்கிஷம். அவை யாராலும் இயற்றப்படவில்லை, எனவே அவை “அபௌருஷேயா” என்று அழைக்கப்படுகின்றன. வேதங்களின் முக்கிய அம்சங்கள், அவை ஆரம்பம் (அனாதி), நித்தியம் (நித்யம்) மற்றும் களங்கமற்றவை (நிர்தோஷம்) ஆகும்.-வேதங்கள் உலகில் மிக உயர்ந்த அதிகாரம் மற்றும் வேதங்களை விட உயர்ந்த சாஸ்திரம் அல்லது வேதம் எதுவும் இல்லை. வைதிகர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு (அதாவது, வேதங்களின் அதிகாரத்தை நம்புபவர்கள்), வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அதிகாரம். அதிகாரம் சமஸ்கிருதத்தில் பிரமனா என்று அழைக்கப்படுகிறது.

பராசர முனிவரின் மகன் பதராயண முனிவர் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம். இவர் கிருஷ்ணத்வைபாயன வியாசர் என்றும் அழைக்கப்படுகிறார். வியாசர் என்ற சொல்லுக்கு வேதங்களைத் துறந்தவர் என்று பொருள். எனவே பதராயண முனிவர் வேதங்களை நான்கு மடங்காகப் பிரித்தார்.-முதல் அலகு ரிக்வேதம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குழுக்கள் யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதம் என்று அழைக்கப்படுகின்றன. ரிக் வேதத்தில் 21 கிளைகளும், யஜுர் வேதத்தில் 100 கிளைகளும், சாமவேதத்தில் 1000 கிளைகளும், அதர்வண வேதத்தில் 9 கிளைகளும் உள்ளன. அதனால் வேதங்கள் அறிவின் எல்லையற்ற பொக்கிஷமாக மாறியது. எல்லையற்றது என்பது முடிவில்லாதது.

ஒவ்வொரு வேதத்திலும் உள்ள ஒவ்வொரு கிளையும் மீண்டும் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம் மற்றும் உபநிடதங்கள் என நான்கு பிசிஷன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாகம் அல்லது யாகத்தில் சொல்லப்படும் அல்லது உச்சரிக்கப்படும் மந்திரங்களை சம்ஹிதை கையாள்கிறது. பிராமணர் ஒரு யாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையைக் கையாளுகிறார்.

ஆரண்யகம் என்பது ஒரு காட்டில் ஓதப்படும் வேதங்களின் பகுதி. வேதங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் உபநிடதம், பர பிரம்மன் அல்லது வெறும் பிரம்மன் என்று அழைக்கப்படும் பரமபிதாவை நேரடியாகக் கையாள்கிறது, மேலும் அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அல்லது விஷ்ணு.வேத வாசகங்கள் அல்லது மேற்கோள்கள் வேத வாக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேத வாக்கியங்கள் அல்லது வேறு வார்த்தைகளில் வேதங்கள் மீண்டும் விதி, அர்த்தவாதம் மற்றும் மந்திரம் என வகைப்படுத்தப்படுகின்றன. விதி என்பது ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய, ஒரு வார்த்தையின் பலனை அல்லது பிற உலகங்களில் ஒரு பலனை அடைய ஒரு கட்டளை அல்லது கட்டளை. உதாரணமாக ஒருவர் சொர்க்கம் அல்லது ஸ்வர்கத்தை அடைய விரும்பினால், அவர் ஜோதிஷ்டோம யாகம் செய்ய வேண்டும். அர்த்தவாத வாக்யா என்பது ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட கர்மாவைச் செய்வதற்கான விளம்பரம், விளம்பரம் அல்லது தூண்டுதலுடன் தொடர்புடையது. மந்திரம் என்பது வேதங்களின் ஒரு பகுதி, இது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் ஆசீர்வாதங்களைத் தூண்டுவதற்காக ஓதப்படுகிறது.

உபநிடதங்கள் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனைப் போற்றுகின்றன.-ஒரு உபநிடதம் என்பது ஒரு வேதம், இது பரமாத்மாவிற்கு மிகவும் “அருகில்” உள்ளது.-ஒரு உபநிடதம் ஸ்ரீமன் நாராயணனை நேரடியாகக் கையாள்கிறது.உபநிடதங்கள் வேதாந்தம், த்ரய்யந்தம், நிகமந்தா அல்லது ஸ்ருத்யந்தம் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வேதங்களின் கடைசிப் பகுதிகளாகும். வேதங்கள் ஸ்ருதி என்றும் அழைக்கப்படுகின்றன. சாஸ்திரம் என்பது படிப்பதன் மூலம் படிப்பவர்களுக்கு அறிவைத் தரும் ஒரு வேதமாகும்.

உபநிடதங்கள் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகிய மூன்று விஷயங்களைக் கற்பிக்கும் வேதாந்த சாஸ்திரங்கள். இவை இந்நூலின் போக்கில் பொருத்தமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் பிரம்மசூத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை அறிய வேண்டும். வேதங்களின் பொருள் தெளிவாக இல்லை மற்றும் மறைந்துள்ளது. சில வேத வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன.-வெளிப்படையான முரண்பாட்டை அகற்ற சரியான விளக்கம் தேவை. அரசியலமைப்பின் சில பிரிவுகள் குறித்து சந்தேகம் எழும் போது சரியான விளக்கத்திற்காக உச்ச நீதிமன்றத்தை இந்திய ஜனாதிபதி குறிப்பிடுவது போன்றது இது.

வேதங்கள் என்பது பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை உருவாக்கும் போது அவற்றைப் பயன்படுத்திய பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அமைப்பு. அவர் வேதங்களை எழுதியவர் அல்ல, ஆனால் அவற்றை மட்டுமே நினைவு கூர்கிறார், மேலும் “சதுர்முக பிரம்மா” (நான்கு தலை பிரம்மா) தனது தொப்புளில் இருந்து உருவாக்கி அதையே கற்பிக்கிறார்.

வேதங்களின் பொருள் மறைந்திருப்பதால், வேதங்களின் சரியான விளக்கத்திற்கு ஒரு கற்றல் பிரிவு அவசியம் தேவைப்பட்டது.-கற்றலில் 14 கிளைகள் உள்ளன, அவற்றில் வேதங்களைச் சரியாக உச்சரிப்பதற்கும் ஒவ்வொரு வேதச் சொல்லின் தோற்றத்தை அறிந்து கொள்வதற்கும் ஆறு கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வேத வார்த்தையின் அர்த்தத்தையும் அறிந்து, யாகங்களைச் செய்வதற்கு ஏற்ற மங்களகரமான தேதிகளைத் தீர்மானித்தல், யாகங்களைச் செய்வதில் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மற்றும் ஒவ்வொரு மந்திரத்தின் அளவை அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆறு கிளைகள் வேதங்கள் அல்லது வேதங்களின் துணைப் பொருட்கள் என்று அறியப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் அவை சிக்ஷா, வியாகரனா, சண்டஸ், நிருக்தம், ஜோதிஷம் மற்றும் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன.

மற்ற நான்கு கிளைகள் மீமாம்சா, நியாயா, புராணங்கள் ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் மகாபாரதம் மற்றும் தர்ம சாஸ்திரம் உட்பட. இப்போது பிரம்மசூத்திரங்கள் மீமாம்சா சாஸ்திரம் அல்லது மீமாம்சா கற்றலின் கீழ் வருகின்றன. மீமாம்சா என்ற வார்த்தையின் அர்த்தம், ஒரு முடிவுக்கு வருவதற்கு வேத நூல்களின் தொடர்புடைய மற்றும் பொருத்தமான விவாதம்.

எனவே மீமாம்சா என்பது கற்றலின் கிளையாகும், இது முக்கியமாக வேத வாக்கியங்களைப் பற்றி விவாதிக்கும், அவை தெளிவு இல்லாத மற்றும் பல்வேறு விளக்கங்கள் சாத்தியமாகும். எனவே உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களுக்கு சரியான விளக்கங்களை சூத்திரங்களை இயற்றுவதன் மூலம் செய்ய முடியும் என்று வியாச முனிவர் நினைத்தார். சூத்ரா என்பது அபோரிசம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சூத்திரத்தின் சிறப்பியல்புகள் என்னவென்றால், அது ஒரு குறிப்பிட்ட சூழலுடன் தொடர்புடைய முழுமையான, தெளிவான மற்றும் தெளிவற்ற பொருளைக் கொடுக்கும் குறைந்தபட்ச எழுத்துக்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டுள்ளது. ஒரு சூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு திட்டவட்டமான நோக்கம் உள்ளது, எதுவும் அர்த்தமற்றது அல்லது நோக்கமற்றது. இந்திய தத்துவத்தின் பல்வேறு அமைப்புகளின் அழகு என்னவென்றால், ஒவ்வொரு அமைப்பின் அடிப்படை உரையும் சூத்திர வடிவில் உள்ளது. சூத்திரங்களை இயற்றியவர்கள் எல்லாம் அறிஞர்கள் (சர்வஜ்ஞர்கள்) சூப்பர் மனித சக்திகளையும் அறிவையும் கொண்டவர்கள்.

சூத்திரங்களின் அர்த்தத்தை விரிவுபடுத்துவதற்காக, பல அறிஞர்கள் பின்னர் தோன்றி அவற்றுக்கு விளக்கவுரைகளை எழுதினார்கள். எனவே வியாச முனிவர் ஏற்கனவே கூறியது போல் வேதங்களை நான்கு குழுக்களாகப் பிரித்த பிறகு, உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களுக்கு சூத்திர வடிவில் சரியான விளக்கங்களை வழங்க முடிவு செய்தார்.

மீண்டும் வேதங்களின் மற்றொரு வகைப்பாடு அது கையாளும் விஷயத்தைப் பொறுத்து உள்ளது. வகைப்பாடு கர்மகாண்டம் (2) தேவதா காண்டா மற்றும் (3) பிரம்ம காண்டா

கர்மகாண்டம் என்பது யாகங்கள் அல்லது யாகங்கள் தொடர்பான வேதங்களின் பகுதியைக் குறிக்கிறது, அவை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வழிபாட்டு முறைகளாகக் கருதப்படுகின்றன.=அக்னி, சோமா, இந்திரன், வருணன், சூரியன், யமன், ருத்ரன், பிரஜாபதி, வாயு, மித்ரவருணன் போன்ற கடவுள்களின் (தேவதாக்கள்) இயல்புகள் மற்றும் பண்புகளைக் கையாளும் வேதங்களின் பகுதியை தேவதகண்டம் குறிக்கிறது.

பிரம்மகாண்டம் பிரத்தியேகமாக பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இயல்பு, வடிவம், பண்புகள், சர்வ வல்லமை மற்றும் சூப்பர் மனித சக்தியைக் கையாளும் உபநிடதங்களைக் குறிக்கிறது.

ஜைமினி முனிவர் மற்றும் கசகிருத முனிவர் வேத வியாசர் என்றும் அழைக்கப்படும் பதராயண முனிவரின் சீடர்கள். கர்மகாண்டத்தின் கீழ் வரும் வேத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்கான சூத்திரங்களை இயற்றும்படி பகவான் பாதராயணன் ஜைமினியை வழிநடத்தினார், அதன்படி ஜைமினி சூத்திரங்களை இயற்றினார். இந்த சூத்திரங்கள் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள், கர்மமீமாம்ச சூத்திரங்கள் அல்லது கர்மகண்ட சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் பன்னிரண்டு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தேவதா காண்டத்தின் வகையின் கீழ் வரும் வேத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்காக சூத்திரங்களை இயற்றும்படி மீண்டும் பதராயணன் கசக்ரிட்ஸ்னாவை வழிநடத்தினார். அதன்படி கசக்ரிட்ஸ்னா இயற்றிய சூத்திரங்கள் மற்றும் இந்த சூத்திரங்கள் தேவதா காண்டா அல்லது சங்கர்ஷ காண்டா என்று அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் மீண்டும் நான்கு அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக இந்த சூத்திரங்கள் இப்போது கிடைக்கவில்லை.

உபநிடத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்காக பிரம்மகாண்டத்திற்கு அவரே சூத்திரங்களை இயற்ற வேண்டும் என்று பதராயண நினைத்தார். இந்த சூத்திரங்கள் பிரம்ம சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன மற்றும் பிரம்ம சூத்திரங்களை உள்ளடக்கிய இந்த மீமாம்சம் உத்தர மீமாம்சா, பிரம்ம மீமாம்சா அல்லது சரிரக மீமாம்சா என்று அழைக்கப்படுகிறது. பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீமன் நாராயணனை பிரம்மன் என்றும், உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் அனைத்தும் அவரது உடல்கள் என்பதால் அவர் சாரிரக என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பிரம்ம சூத்திரங்கள் மீண்டும் நான்கு அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

விசிஷ்டாத்வைத தத்துவத்தில் கர்மகாண்டம், தேவதா காண்டம் மற்றும் பிரம்ம காண்டம் அடங்கிய மீமாம்சசாஸ்திரம் கற்றலின் ஒரே கிளையாகும், இது ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரால் வலியுறுத்தப்படுகிறது. எனவே இந்த மீமாம்ச சாஸ்திரம் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி மொத்தம் 20 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

கர்ம காண்டத்தின் முதல் சூத்திரம் “அதாதோ தர்ம ஜிஜ்னாஸ”.-பிரம்ம சூத்திரங்களில் முதல் சூத்திரம் “அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்னாஸ” ஆகும். பிரம்ம சூத்திரங்களில் கடைசி சூத்திரம் “அனாவிருத்தி சப்தத், அனாவிருத்தி சப்தத்” ஆகும்.

மீமாம்ச சாஸ்திரத்தின் அமைப்பு பின்வருமாறு. சூத்திரங்கள், அதிகாரங்கள், பதங்கள் மற்றும் அத்தியாயங்கள். பல சூத்திரங்கள் ஒரு அதிகாரத்தை உருவாக்குகின்றன, பல அதிகாரங்கள் கால் பகுதியை உருவாக்குகின்றன, இது பாதம் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் பிரம்மசூத்திரத்தில், நான்கு பாதங்கள் ஒரு அத்தியாயத்தை உருவாக்குகின்றன.

தேவதகண்டத்தில் உள்ள கடைசி மூன்று சூத்திரங்கள் சில ஆச்சார்யர்களால் தங்கள் படைப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, அவை “அந்தே: ஹரௌ ததர்ஷநாத், ச விஸ்ருரஹஹி, தத் ப்ரம்ஹேத்ய சக்ஷதே”. எனவே கடைசி சூத்திரத்தில் உள்ள பிரம்மன் என்ற சொல் முதல் பிரம்மசூத்திரத்தில் “அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்னாஸ” என்று வருகிறது என்று கூறப்படுகிறது. இங்கு பிரம்மா (பிரம்மன்) என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கும், நான்கு தலை பிரம்மா அல்ல.

மீமாம்ச சாஸ்திரத்தின் படிப்பின் வரிசை பின்வருமாறு, இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்தது. ஒரு சிறுவன் தனது 8வது வயதில் நூல் வைபவம் அல்லது உபநயனம் செய்து, குருவின் பாதத்தில் அமர்ந்து உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களைக் கற்பதற்காக அவனது தந்தையால் குருகுலத்திற்கு அனுப்பப்படுகிறான்.

வேதங்களில் தேர்ச்சி பெற்ற பிறகு, வேதங்களின் அர்த்தத்தை அறியும் ஆர்வம் அவருக்கு இயல்பாகவே இருக்கும். பின்னர் அவர் வேதங்களின் பொருளைப் படிப்பார் மற்றும் கர்ம காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு யாகங்களைப் பற்றிய பொதுவான அறிவைப் பெறுவார், தேவதா காண்டத்தில் உள்ள தேவதைகள் மற்றும் உபநிடதங்களில் உள்ள பிரம்மன். பின்னர் அவர் பூர்வ மீமாம்சை மற்றும் தேவதா மீமாம்சை படிப்பை மேற்கொள்கிறார்.

யாகங்கள் அல்லது சொர்க்கம் (ஸ்வர்கம்) போன்ற யாகங்களைச் செய்வதன் மூலம் அடையும் புண்ணியங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் நித்தியமானவை அல்ல என்பதை மேற்கூறியவற்றைப் படிப்பதில் அவர் அறிந்து கொள்கிறார். சொர்க்கம் செல்வதற்காக யாகங்கள் செய்து பெற்ற புண்ணியத்தை சொர்க்கத்தில் கழித்தபின், அங்குள்ள சுகங்களை அனுபவித்துவிட்டு, மீண்டும் ஒரு பிறவிக்காக இவ்வுலகிற்கு வந்து, இவ்வுலகில் உள்ள துன்பங்களுக்கு ஆளாகிறான்.

ஆகவே, யாகங்களின் மூலம் சொர்க்கத்தை அடைவதன் பயனற்ற தன்மையை அவன் உணரும் போது, ​​அவன் சொல் இன்பங்கள் மற்றும் சொர்க்க இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வை வளர்த்து, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் வெறுப்படைகிறான். அவர் முன்பு செய்த உபநிடதங்களைப் படிப்பதன் மூலம், அவருக்கு பிரம்மத்தைப் பற்றிய பொதுவான அறிவு உள்ளது. பிரம்மன் மீது தியானம் செய்வதன் மூலம் அவர் ஸ்ரீ வைகுண்ட லோகத்தில் நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை அடைய முடியும். பிரம்மனைப் பற்றிய இந்த மேலோட்டமான அறிவு, பிரம்மன் அல்லது பரமாத்மாவைப் பற்றிய தீவிரமான மற்றும் ஆழமான விவாதத்திற்கு அவரைத் தூண்டுகிறது, இந்த கட்டத்தில்தான் பிரம்மசூத்திரங்கள் பொருத்தத்தை அடைகின்றன.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி முதல் சூத்திரம் “அதாதோ பிரம்மா ஜிஜ்னாஸ” ஆகும். இதன் பொருள் அத: பிறகு என்றும் அத: எனவே என்றும் பொருள். “அதாதோ ப்ரஹ்ம ஜிகுவாஸ” என்றால் பிரம்மத்தை அறியும் ஆசை.

“அகில புவன ஜென்ம ஸ்தேம பங்கடி லீலே விநாத விவிதா பூத வ்ரதா ரக்ஷைகதீக்ஷே,

ஸ்ருதி ஶிரஸி விதீப்தே ப்ராஹ்மணீ ஶ்ரீநிவாஸே பவது மம பரஸ்மின் ஷேமுஷி பக்தி ரூபா

ஸ்ரீ ராமானுஜர், உபநிடதங்களில் ஒளிரும் பிரம்மனாகவும், பிரபஞ்சத்தின் உருவாக்கம், காத்தல் மற்றும் அழித்தல் விளையாட்டை விளையாடுபவரும், பக்தி யோகம் செய்தோ, பக்தி யோகம் செய்தோ அல்லது தம்முடைய பாதத்தில் பிரபத்தி செய்தோ மோட்சத்தை அருளும் ஸ்ரீநிவாஸரைப் பிரார்த்திக்கிறார். ராமானுஜர், பக்தியின் வடிவத்தின் அறிவை (மனநிலை) பெற்றவராக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். இந்நூலின் எஞ்சிய பகுதி ஸ்ரீ பாஷ்யத்தின் சுருக்கம்.

ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களில் 4 அத்தியாயங்கள் மற்றும் 16 பதங்கள் (ஒவ்வொரு அத்தியாயத்திலும் 4 பதங்கள்) பெயர்களைக் கொடுக்கிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது புகழ்பெற்ற படைப்பான ஸ்ரீ அதிகார சாராவளியில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பண்புகளை நான்கு அத்தியாயங்களிலும் 16  பாதங்களிலும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ பாஷ்ய விசாவி பிரம்மசூத்ரங்களில் விவாதத்திற்கு வரும் உபநிடதங்களின் பெயர்கள் ஈசாவாஸ்யோபனிஷத், கேனோபநிஷத், கடோபநிஷத், முண்டகௌபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், பிரஷ்ணோபநிஷத், இதரேய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், பிருஹதாரண்யக உபநிஷத், தாத்தீய உபநிஷத் அனிஷத், சுபலோபநிஷத், மஹோபநிஷத், அக்னி ரகசியம், அதர்வசிகோபநிஷத் மற்றும் மைத்ராயணி உபநிஷத் போன்றவை.

ஒவ்வொரு வேதாந்த வேதமும் தத்துவம், ஹித மற்றும் புருஷார்த்தத்தைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். தத்வ என்பது உண்மையான பொருள், ஹித என்பது பொருள், புருஷார்த்தம் இலக்கு.

தத்வாவைப் பொறுத்த வரையில், பரமாத்மா பரமாத்மா (உயிர்மை), ஜீவாத்மா என்பது உள்ளுணர்வான ஆத்மா மற்றும் பிரகிருதி, உணர்ச்சியற்ற பொருள் ஆகிய மூன்று உண்மையான பொருள்கள் உள்ளன.

மேற்கூறிய ஒவ்வொன்றிலும் பரா என்ற பெயரடைச் சேர்ந்தால் பரதத்வா என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன், பரமஹிதா என்பது அவரது காலடியில் இருக்கும் பிரபத்தி, பரம புருஷார்த்தம் என்பது பைன் தம்பதிகளின் தாமரை பாதங்களை அடைவதே உச்ச லட்சியம். ஸ்ரீ வைகுண்டம் மற்றும் அவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் நித்திய பொருத்தமான மற்றும் எல்லா வகையான சேவைகளையும் செய்து வருகிறது. இதுவே நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பம் அல்லது மோட்சம்.

ஸ்ரீ பாஷ்யத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பரதத்வாவையும், மூன்றாவது அத்தியாயம் பரமஹிதையையும், நான்காவது அத்தியாயம் பரம புருஷார்த்தத்தையும், பரம லட்சியத்தையும் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்களின் பெயர்கள்

1) முதல் அத்தியாயம் சமன்வய அத்யாயா என்று அழைக்கப்படுகிறது. அன்வய என்றால் இணைப்பு, இணைப்பு அல்லது உறவு. சமன்வய என்றால் சரியான இணைப்பு அல்லது நல்ல இணைப்பு.

இந்த முதல் அத்தியாயத்தில் சூத்ரகார பாதராயணம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பான அனைத்து வேத மற்றும் உபநிடத நூல்களையும் கையாள்கிறது. பிரபஞ்சத்தை உருவாக்கியவர் “ஜகத் கரணா” என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்கள் ஜகத் கரண வஸ்துவைக் குறிக்க பல சொற்களைப் பயன்படுத்துகின்றன. அவை சத், அஸத், பிரம்மா, ஆத்மா, ஆகாசம், பிராணன், ஜோதி, ஹிரண்யகர்ப்ப, ஷம்பு, நாராயண முதலியன.

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் ஒருவரே இருக்க முடியும், அதுவே பகவான் ஸ்ரீமன் நாராயணன். பிரளயம் அல்லது பிரளய காலத்தில் ஸ்ரீமன் நாராயணன் தன் துணைவியான மஹாலக்ஷ்மியுடன் இருந்தான், வேறு யாரும் இல்லை என்று மஹோபநிஷத்தில் உள்ள வாசகத்திலிருந்து இது தெளிவாகிறது. மேலும் ஸ்ரீமன் நாராயணன் நான்கு தலைகள் கொண்ட பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிறரைப் படைத்தார். எனவே ஸ்ரீமன் நாராயணனே ஜகத்காரண வஸ்து. எனவே மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பெயர்களும் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன, எனவே அவை அவருடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அத்தியாயத்தில் ஸ்ரீமன் நாராயணனின் பண்பு (காரணம்). இது சமஸ்கிருதத்தில் காரணத்வம் என்று அழைக்கப்படுகிறது.

2) 2 வது அத்தியாயம் அவிரோதா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

விரோதா என்றால் ஆட்சேபனை. அவிரோதா என்றால் ஆட்சேபனை இல்லை. இந்த அத்தியாயத்தில் ஸ்ரீமன் நாராயணனே ஜகத்காரணவஸ்து என்று மற்றவர்கள் எழுப்பிய தர்க்கரீதியான ஆட்சேபனைகளுக்கு சூத்ரகாரர் உறுதியுடன் பதிலளித்து, அவர்களின் வாதங்களை மறுத்து, பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று நிறுவுகிறார். எனவே இந்த அத்தியாயத்தில் உள்ள கல்யாண குணம் அல்லது மங்கள குணம் அபத்யத்வம் என்பது இந்த உண்மைக்கு துணை (மறுப்பு) இல்லை.

3) 3வது அத்தியாயம் சாதனா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

சாதனா என்பது நித்திய பேரின்பம் அல்லது மோட்சத்தை அடைவதற்கு ஏற்றுக்கொள்வதாகும். சாதனா என்பது உபய போன்றதே. நமது தத்துவத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனே உபய (அர்த்தம்) மற்றும் அவரே உபேயாக, அடைய வேண்டிய பொருளாகவும் இருக்கிறார். அவரைப் பிரியப்படுத்தவும் அவருடைய அருளைப் பெறவும் பக்தி அல்லது பிரபத்தி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர் சித்தோபாய (தயாரான பொருள்) என்று அழைக்கப்படுகிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார். தனிப்பட்ட ஒருவரால் செய்யப்படும் பக்தி அல்லது பிரபத்தி சதியோபாயா எனப்படும். பக்தி என்பது அவரைப் பற்றிய ஆழ்ந்த தியானம் மற்றும் பிரபத்தி அவர் காலடியில் சரணடைவது. எனவே 3 வது அத்தியாயத்தில் கல்யாண குணம் என்பது உபயத்வம் அதாவது அவர் தயாராக அல்லது எப்போதும் கிடைக்கக்கூடிய வழிமுறையாகும்.

4) நான்காவது அத்தியாயம் பல அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

பலா என்றால் பழம். பக்தி அல்லது பிரபத்தி செய்த பிறகு ஒரு தனி ஆன்மா அல்லது ஜீவாத்மா பரமபதம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வைகுந்தத்தில் உள்ள பைன் தம்பதிகளின் தாமரையை அடைகிறது. இந்த அத்தியாயத்தில் சிறப்பிக்கப்படும் கல்யாண குணம் உபேயத்வா அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடைய வேண்டிய பொருள். மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணன் இருவரும் எப்போதும் ஒன்றாகவும், பிரிக்க முடியாதவர்களாகவும் இருப்பதால் இருவரும் ஒன்றாக உயர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் அது மஹாலக்ஷ்மியையும் உள்ளடக்கியது, ஏனெனில் ஜகத்கரனத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் ஆகியவை தெய்வீக தம்பதிகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் பொருந்தும்.

இறுதியாக பிரம்மசூத்திரத்தில் உள்ள 16 பாதங்களின் பெயர்களையும் அவை ஒவ்வொன்றிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்களையும் தெரிந்து கொள்வோம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, முதல் அத்தியாயம் அல்லது சமன்வய அத்யாயா பிரபஞ்சத்தின் காரணத்தைப் பற்றி பேசும் அனைத்து வகையான உபநிடத பத்திகளையும் கையாள்கிறது. சில நூல்களில், ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா ஜகத் காரனாக அல்லது பிரபஞ்சத்தின் படைப்பாளராகத் தோன்றுகிறது.

சில வாக்கியங்களில் பிரகிருதியில் பிரபஞ்சத்திற்குக் காரணமான முதற்பொருள் என்றும் அழைக்கப்படும் உணர்வு அல்லாத பொருள் தோன்றுகிறது. பிரகிருதிக்கு பிரதானா என்றும் பெயர். இந்த வாக்கியங்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி முதல் அத்தியாயத்தின் நான்கு பதங்களில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1) முதல் பாதத்தில், மிகவும் தெளிவாக இல்லாத பத்திகள் கையாளப்படுகின்றன.–சமஸ்கிருதத்தில் இது “அஸ்பஷ்டதர ஜீவாடி லிங்க வாக்யா” என்று அழைக்கப்படுகிறது. எனவே முதல் பாதம் அஸ்பஷ்டதார ஜீவாதி லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணம் அல்லது இந்த பாதத்தில் உள்ள மங்களகரமான பண்பு மற்றும் அதன் விளைவான அடைமொழி (ஸ்ரஷ்டா). அவர் பிரபஞ்சத்தின் காரணம் அல்லது படைப்பாளர் என்று அர்த்தம். கல்யாண குணம் ஸ்ரஷ்ட்ர்த்வம்.

2) முதல் அத்தியாயத்தின் இரண்டாவது பாதம் அவற்றின் இறக்குமதியில் தெளிவாக இல்லாத பத்திகளைக் கையாள்கிறது. இது சமஸ்கிருதத்தில் அஸ்பஷ்டா என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த பாதம் “அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அடைமொழி தேஹி ஆகும். தேஹி என்பது ஒவ்வொரு உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற நிறுவனத்திலும் உள்ள உள்ள ஆத்மா அல்லது அந்தர்யாமி. கல்யாண குணம் தேஹித்வம். உணர்வு மற்றும் உணர்வு இல்லாத இரண்டும் ஸ்ரீமன் நாராயணனின் உடல்கள். தேஹி என்றால் உடலை உடையவன் என்று பொருள், அதனால் ஆத்மா என்று பொருள். பகவான் ஸ்ரீமன் நாராயணரே அனைத்து உயிர்களுக்கும் ஆத்மா (ஆன்மா) ஆவார்.

3) முதல் அத்தியாயத்தின் 3வது பாதம் தெளிவான ஜகத் கரண வாக்கியங்களைக் கையாள்கிறது. ‘தெளிவு’ என்றால் ஸ்பஷ்டம். எனவே இந்த பாதம் ‘ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க’ பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் அடைமொழி ஸ்வனிஷ்டா, அதாவது அவர் முழு பிரபஞ்சத்தையும் தனது சொந்த விருப்பத்தால் ஆதரிக்கும் அதே வேளையில் அவர் தன்னையும் ஆதரிக்கிறார். கல்யாண குணம் ஸ்வநிஷ்டத்வம்.

4) 4வது பாதம் மிகத் தெளிவான ஜகத்காரண-வாக்கியங்களைக் கையாள்கிறது. மிகவும் தெளிவானது ஸ்பஷ்டதாரா என்று பொருள்படும். எனவே இந்த பாதம் ஸ்பஷ்டதர ஜீவாதி லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் பிராமணன் நிரவாதி மஹிமா என்று அழைக்கப்படுகிறான். ஸ்ரீமன் நாராயணனின் மகத்துவம் வரம்பற்றது அல்லது எல்லையற்றது என்பது இதன் பொருள். பிரபஞ்சத்திற்கு இறைவன் உபாதான காரனாகவும், நிமித்த காரனாகவும் இருப்பதனால்தான் இந்த அளவற்ற பெருமை. உலகில் எந்தவொரு பொருளுக்கும் மூன்று கரணங்கள் அல்லது காரணங்கள் உள்ளன. முதலாவது பொருள் காரணம் அல்லது உபாதான கரணமாகும். இரண்டாவது செயல்பாட்டு காரணம் அல்லது நிமித்த கரணமாகும். மூன்றாவது கருவி காரணம் அல்லது சககாரி கரணம். உதாரணமாக ஒரு தங்க ஆபரணம் செய்ய வேண்டும் என்றால், தங்கம் உபாதான கரணத்தை உருவாக்குகிறது. ஆபரணம் செய்யும் பொற்கொல்லன் நிமித்த கரணன். அவர் ஆபரணத்தை உருவாக்குவதற்கு பல கருவிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த கருவிகள் கருவி காரணமாக அல்லது சககாரி கரணம் ஆகும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீமன் நாராயணனே உபாதான கர்ணனாகவும், நிமித்த காரனாகவும், சககாரி காரனாகவும் இருக்கிறார். அவர் தனது சொந்த விருப்பத்தால் பிரபஞ்சத்தை உருவாக்குகிறார் மற்றும் எந்த கருவியும் தேவையில்லை என்பதால், சககாரி கரணமானது நிமித்த கரணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”.

5) இரண்டாவது அத்தியாயத்தில் முதல் காலாண்டு அல்லது பாதம் ஸ்மிருதி பாதம் என அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கபிலரே பௌத்தம் போன்ற நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தின் ஸ்தாபகர் மற்றும் பிரச்சாரகர் ஆவார். அவருடைய போதனைகள் வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் எதிரானது என்பதால், அவற்றின் தத்துவங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கபில ஸ்மிருதியை எழுதியவர் ஸ்ரீ கபிலா. இந்த ஸ்மிருதியின் அடிப்படையில் ஸ்ரீ விஷ்ணு பிரபஞ்சத்திற்குக் காரணமானவர் என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்த சிந்தனைப் பள்ளியின்படி, பிரகிருதியே பிரபஞ்சத்திற்குக் காரணம். சூத்ரகாரர் அல்லது பிரம்மசூத்திரத்தின் ஆசிரியர் மேற்கண்ட ஆட்சேபனைகளை விதித்து ஸ்ரீமன் நாராயணனே ஜகத் கரணன் என்று நிறுவுகிறார். இந்த பாதத்தில் அவர் “அபஸ்த பாத” என்று அழைக்கப்படுகிறார், அதாவது அவர் சவால் செய்ய முடியாதவர். கல்யாண குணம் என்பது “அபஸ்த பாதத்வம்”.

6) இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள இரண்டாவது பாதம் தர்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சூத்ரகாரரான பதராயண முனிவர் சங்கய, வைசேசிக, பௌத்த, ஜைன மற்றும் பசுபத போன்ற மற்ற தத்துவ அமைப்புகளுக்கு எதிராக அவர்களின் தத்துவங்களில் உள்ள குறைகளை எடுத்துரைத்து, அவற்றையெல்லாம் தர்க்க ரீதியாக மறுதலிக்கிறார். எனவே இந்த பாதம் தர்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாத முனிவர் பதராயணன், விஷ்ணு கோவில்களில் வழிபாடுகளைக் கையாளும் பாஞ்சராத்ர ஆகமங்களின் அதிகாரத்தை நிறுவுகிறார், மேலும் அது வேதங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்பதை நிரூபிக்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள பிராமணனின் பெயர் “ஸ்ரீதப்த:” அதாவது பஞ்சராத்ர சாஸ்திரப்படி தினசரி சடங்குகளை செய்பவர்களின் நண்பன். இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “ஸ்ரீதப்தத்வம்”.

7) இரண்டாவது அத்தியாயத்தில் மூன்றாவது பாதம் வியாத் பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் தான் சூத்ரகாரர் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய பஞ்சபூதங்களை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறார். இந்த உருவாக்கம் “மாற்றம்” மூலம். களிமண் பானையாக மாறுவது போன்ற மாற்றம் அன்யதாபாவா என்று அழைக்கப்படுகிறது. ஜீவாஸ்கள் நித்தியமானவை என்பதால் உடல் ரீதியாக எந்த மாற்றமும் இருக்க முடியாது.

அவற்றில் மாற்றம் “பண்புகளில்” உள்ளது. இந்த பண்பு தர்மபூத ஞானம் என்று அழைக்கப்படுகிறது, இதன் மூலம் ஜீவர்கள் பொருட்களை அறிய முடியும். இந்த குணம் பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலி வரை மாறுபடும். பரமாத்மா (ஸ்ரீமன் நாராயணன்), ஆதிசேஷர், விஷ்வக்சேனர், கருடன் போன்ற நித்யாக்கள் மற்றும் முக்தர்கள் முக்தி பெற்றவர்கள் ஆகியோரின் உணர்ச்சியற்ற அல்லது உயிரற்ற பொருட்கள் மற்றும் முடிவிலியின் விஷயத்தில் இது பூஜ்ஜியமாகும். சம்சாரத்தின் பந்தத்தில் இருக்கும் ஜீவர்களின் விஷயத்தில், தர்மபூத குணம் ஒருவருடைய கடந்தகால செயல்கள் அல்லது கர்மாவைப் பொறுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுபடும். எனவே இந்த தர்ம பூத குணமானது, ஸ்ரீமந் நாராயணன் அவர்களின் கடந்த கால செயல்களின்படி உண்டாக்கும் ஜீவாக்களில் விரிவடைவதற்கும் சுருங்குவதற்கும் உட்பட்டது.

இந்த குணாதிசயம் ஸ்வபாவா என்று அழைக்கப்படுகிறது மற்றும் அதன் விரிவாக்கம் அல்லது சுருக்கத்தின் மாற்றம் ஸ்வபாவ அன்யதாபாவா ஆகும். இந்த பாதத்தில் ஸ்ரீமன் நாராயணனின் பெயர் “காத்மாதே: உச்சித ஜனன கிருத்“, அதாவது காவில் (காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமியை உள்ளடக்கியது) மற்றும் ஜீவாத்மாக்களில் பொருத்தமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். பஞ்சபூதங்களின் விஷயத்தில் பொருத்தமான மாற்றம் “ஸ்வரூப அன்யதாபவ” மற்றும் ஜீவாத்மாக்களின் விஷயத்தில் “ஸ்வபவ அன்யதாபவ” ஆகும். இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “காத்மாதே: உச்சித ஜனன கிருத்வம்”.

8) 2வது அத்தியாயத்தில் நான்காவது பாதம் இந்திரிய பாதம் எனப்படும். இந்திரியம் என்றால் புலன்கள். ஸ்ரீமன் நாராயணன் புலன்களின் உருவாக்கத்தை ஏற்படுத்துகிறார். எனவே இந்த பாதத்தில் அவரது பெயர் “இந்திரியதே: உசித ஜனன கிருத்வ்”, அதாவது அவர் புலன்களின் பொருத்தமான படைப்பை உருவாக்குகிறார். இந்த பாதத்தில் உள்ள மங்களகரமான பண்பு “இந்த்ரியதே: உச்சித ஜனன கிருத்வம்”.

9) 3வது அத்தியாயத்தில் முதல் காலாண்டு வைராக்ய பாதம். வைராக்கியம் என்றால் இங்கே அல்லது சொர்க்கத்தில் உள்ள வார்த்தை இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வு. மோட்சம் அல்லது முக்தி என்ற எல்லையற்ற மற்றும் நித்திய பேரின்பத்தை ஒரு நபர் விரும்புவதற்கு இந்தப் பற்றின்மை அவசியம். சம்சார பந்தத்தில் அல்லது வெவ்வேறு அவஸ்தைகள் அல்லது நிலைகளில் ஒரு ஜீவன் (நபர்) அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து இந்த வைராக்யத்தைப் பெறலாம்.

அவை (1) ஜாக்ரதாவஸ்தா எனப்படும் விழிப்பு நிலை (2) சுஷுப்தி அவஸ்தா எனப்படும் நல்ல உறக்க நிலை (3) ஸ்வப்னா அவஸ்தா எனப்படும் கனவு நிலை மற்றும் (4) மூர்ச்ச அவஸ்தா எனப்படும் கோமா நிலை (நினைவற்ற நிலை). இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “சம்ஸ்ருதௌ தந்த்ர வஹி” அதாவது இறைவன் ஜீவனை சம்சாரத்தின் மூலம் நடத்துகிறார். கல்யாணகுணே ஸம்ஸ்ருதௌ தந்த்ர வஹித்வம்

10) 3வது அத்தியாயத்தில் 2வது பாதம் உபய லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. உபய லிங்கம் ஸ்ரீமன் நாராயணனின் இரண்டு பிரத்யேக குணாதிசயங்களாகும், அவை ஹேயபிரத்யநீகத்வா மற்றும் கல்யாண குணகரத்வா. ஹேயபிரத்யநீகத்வா என்றால் களங்கமற்ற அல்லது கெட்ட குணங்கள் இல்லாதது. கல்யாண குண அகாரத்வம் என்றால் அனைத்து கல்யாண குணங்கள் அல்லது மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக இருப்பது. சம்சாரத்தில் இருக்கும் ஜீவன் ஒவ்வொரு அம்சத்திலும் தன்னை விட மேலான ஒரு பொருளை அடைய ஆசைப்படுகிறான். இந்த உயர்ந்த மேன்மை என்பது மேற்கூறிய இரண்டு பண்புகளின் உடைமையாகும். சூத்ரகார ஸ்ரீ பாதராயணன் இந்த பாதத்தில் மேற்கண்ட குணாதிசயங்களைக் கையாள்கிறார். இந்த பாதத்தில் உள்ள கல்யாணகுணம் “நிர்தோஷத்வாதி-ரம்யத்வம்”. நிர்தோஷத்வா என்றால் களங்கமற்ற தன்மை. ரம்யத்வா என்றால் மங்களகரமான பண்புகள்.

11) 3வது அத்தியாயத்தில் 3வது பாதம் “குண உபசம்ஹார பாதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் முப்பத்திரண்டு பிரம்மவித்யாக்கள், அவை ஒவ்வொன்றும் மோட்சத்தை அடைவதற்கான வழிவகையான பக்தி யோகத்தின் ஒரு வகை அல்லது வடிவமாகும். பிரம்மவித்யா என்றால் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனை தியானிப்பது. குண உபசம்ஹாரம் என்பது வெவ்வேறு உபநிடதங்களில் உபதேசிக்கப்படும் அதே பிரம்மவித்யாவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்மனின் குணங்களைச் சேர்ப்பது. இந்த பாதத்தில் உள்ள பெயர், பல்வேறு பிரம்ம வித்யாக்களில் பிராமணன் தியானத்தின் பொருள். இது பஹுபஜனபாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடலில், “நானா சபாதி பேதாத்” என்ற சூத்திரத்தில் பிரபத்தி ஒரு சுயாதீனமான வழிமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

12) 3 வது அத்தியாயத்தின் 4 வது பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது, இதில் பக்தி யோகாவின் பல்வேறு முன் தேவைகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “ஸ்வராஹ கர்ம ப்ரஸாத்யா” அதாவது வர்ண மற்றும் ஆசிரம நிலைக்குத் தகுந்த தினசரி சடங்குகளைச் செய்பவர்களுக்கு அவர் அருள் புரிகிறார்.

13) 4 வது அத்தியாயத்தில் முதல் பாதம் ஆவ்ரித்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் தியானம் செய்யும் முறை மற்றும் முறை பற்றி விவாதிக்கப்படுகிறது. ஆவ்ரித்தி என்றால் மீண்டும் மீண்டும் பக்தி யோகம் செய்வது. மோட்சம் அடையும் வரை இதை தினமும் செய்ய வேண்டும். இறைவனின் பெயர் பாபச்சித், அதாவது பக்தி அல்லது பிரபத்தி செய்பவர்களின் பாவங்களை அழிப்பவர்.

14) 4 வது அத்தியாயத்தில் உள்ள இரண்டாவது பாதத்திற்கு உத்கிராந்தி பாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் ஜீவா (மோட்சத்தை அடைய வேண்டியவர்) மரண சரீரத்திலிருந்து புறப்படும் முறை விவாதிக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள பிரம்மனின் பெயர் “பிரம்ம நாடி கதி கிருத்” அதாவது ஜீவாவை பிரம்மநாடிக்குள் நுழைய அவர் உதவுகிறார். பிரம்மநதி என்பது உடலின் தொப்புளிலிருந்து தலை வரை இயங்கும் நாடி. இந்த நாடி வழியாக ஜீவா உடலை விட்டு வெளியே வந்தால் மோட்சத்தை அடைகிறான்.

15) 4 வது அத்தியாயத்தில் உள்ள மூன்றாவது பாதம் கதி பாதம் என்று அழைக்கப்படுகிறது, இது ஜீவன் ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து முக்தாத்மாவாக (முக்தாத்மா) ஆகும் பாதையைக் குறிக்கிறது. இந்த பாதை அர்ச்சிராதி மார்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “ஆதிவாஹா” அதாவது ஆதிவாஹிகர்கள் எனப்படும் பன்னிரண்டு பேர் மூலம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஜீவாத்மா நடத்த ஏற்பாடு செய்கிறார்.

16) 4 வது அத்தியாயத்தில் உள்ள கடைசி பாதம் பல பாதம் என்று அழைக்கப்படுகிறது, இது முக்தியடைந்த ஆத்மா தெய்வீக தம்பதியினரின் தாமரை பாதங்களை அடைந்து, எட்டு குணங்கள் அல்லது பரிபூரணத்தைப் பெறுகிறது மற்றும் நித்திய சேவை செய்வதன் மூலம் நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை அடைகிறது. அங்கே தெய்வீக ஜோடி. ஸ்ரீமன் நாராயணன், பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குக் காரணமானவராகவும், மஹாலக்ஷ்மியின் மனைவியாகவும் இருப்பதைத் தவிர, எல்லா வகையிலும் முக்தாத்மாவை தனக்குச் சமமாக ஆக்குகிறார். இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “சாம்யதா” அதாவது சமத்துவத்தை வழங்குபவர்.

இதுவே ஸ்ரீ பாஷ்யத்தின் சாராம்சம்.

————

முதல் அத்யாய சமன்வய அத்யாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் (பதா என்பது கால்) 11 அதிகாரங்கள் உள்ளன.

அதிகாரம் என்பது ஒரு உபநிடதத்தின் ஒரு குறிப்பிட்ட உரையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு பாதத்தில் உள்ள ஒரு துணைப் பிரிவு அல்லது பிஷன் ஆகும், இறுதியில் பதராயண முனிவரான சூத்ரகாரர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட உரைக்கு சரியான விளக்கத்தை அளித்து தீர்ப்பை வழங்குகிறார். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உபநிடத உரை தற்செயலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் அது “சங்கதி” யின் படி ஒரு முறையான வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டது, அதாவது முந்தைய அதிகாரத்திற்கும் அடுத்த அதிகாரத்திற்கும் இடையிலான வரிசை அல்லது இணைப்பு (இணைப்பு). மீமாம்ச சாஸ்திரத்தில் பொதுவாக தர்க்கரீதியான இணைப்பு என்று பொருள்படும் இந்த சங்கதி, சாஸ்திரம், காந்தா, த்விகா, அத்யாய, பாத, பீடிகா, அதிகாரம் மற்றும் சூத்திரம் எனப்படும் எட்டு நிலைகளைக் குறிக்கிறது.

சூத்திரம் அதிகாரத்தில் உள்ளது. அதிகாரம் பீடிகைக்குள் உள்ளது, பீடிகை என்பது பாதத்தில் உள்ளது, பாதம் என்பது அத்யாயத்திற்குள் உள்ளது, அத்யாயமானது காண்டத்திற்குள் உள்ளது மற்றும் காண்டம் சாஸ்திரத்திற்குள் உள்ளது.

இங்கே சாஸ்திரம் என்பது உபநிடதங்கள் உட்பட வேதங்களின் விளக்கத்தை கையாளும் மீமாம்சா ஆகும். சாஸ்திரம் கர்ம காண்டமாகவும் பிரம்ம காண்டமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.

யாகங்கள் மற்றும் இஷ்டிகள் என்றும் அழைக்கப்படும் யாகங்களைச் செய்வதோடு தொடர்புடைய வேத நூல்களின் விளக்கத்தைக் கையாளும் கர்மகாண்டம். யாகத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக பசு (ஆடு போன்ற) விலங்கு பலியிடப்படுகிறது. யாகம் செய்பவன் மட்டுமின்றி மிருகமும் சொர்க்கம் செல்லும் என்பது நம்பிக்கை. இஷ்டி என்பது எந்த ஒரு பிராணியையும் பலியிடாத ஒரு யாகமாகும், மேலும் இது குழந்தைகளைப் பெறுவதற்கான புத்திர காமேஷ்டி, செல்வம் பெற வயவ்ய இஷ்டி, மழை பெறுவதற்கான கரிரி இஷ்டி போன்ற வார்த்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக செய்யப்படுகிறது. கர்ம காண்டம் கர்ம மீமாம்சா, பூர்வ மீமாம்சா அல்லது கபந்த மீமாம்சா என்றும் அழைக்கப்படுகிறது.

சாஸ்திரத்தின் இரண்டாவது கோட்பாடு, பிரம்ம காண்டம், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனுடன் நேரடியாக தொடர்புடைய உபநிடத நூல்களின் விளக்கத்தைக் கையாள்வதாகும். கர்ம காண்டத்திற்கும் பிரம்ம காண்டத்திற்கும் உள்ள தொடர்பு கந்த சங்கதி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா காண்டமானது பூர்வ த்விகா அல்லது முன்னாள் த்விகா மற்றும் உத்தர  த்விகா அல்லது பிந்தைய த்விகா ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. திவிகா என்றால் இரண்டு அத்தியாயங்கள்.

பூர்வ த்விகா பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மனை நேரடியாகக் கையாள்வதால் சித்தத் த்விகா என்றும் அழைக்கப்படுகிறது. பக்தி (தியானம்) அல்லது பிரபத்தி மூலம் பிரம்மனை அடைய வேண்டும் என்பதால் உத்தரா த்விகா சத்யா த்விகா என்று அழைக்கப்படுகிறது. பூர்வ த்விகா மற்றும் உத்தரா த்விகா இடையே உள்ள இணைப்பு த்விகா சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

அத்யாய சங்கதி : – ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பிரம்ம காண்டத்தில் சமன்வய அத்யாயா, அவிரோத அத்யாயா, சாதனா அத்யாயா மற்றும் பல அத்யாயா என்று நான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒரு அத்யாயாவிற்கும் பின் வரும் அத்யாயாவிற்கும் இடையிலான தொடர்பு அத்யாய சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

பத சங்கதி :– ஒவ்வொரு அத்யாயமும் நான்கு பாதங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 16 பாதங்கள் அறிமுகத்தில் மிகவும் விரிவாகக் கையாளப்பட்டுள்ளன. முந்திய பாதவிற்கும் பின் வரும் பாதவிற்கும் இடையே உள்ள தொடர்பு பத சங்கதி.

பேடிகா :- ஒரு பாதத்தில் உள்ள பேடிகா என்பது பொதுவான கருப்பொருளைக் கொண்ட அதிகாரங்களின் குழு. அதிகாரங்களை கையாளும் போது இது விரிவாகக் கூறப்படும். ஒரு பேடிகாவிற்கும் அடுத்த பேடிகாவிற்கும் உள்ள தொடர் தொடர்பு பெட்டிக சங்கதி.

அதிகார சங்கதி :- ஏற்கனவே கூறியது போல், முந்தைய அதிகாரத்திற்கும் பின் வரும் அதிகாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பு அதிகார சங்கதி எனப்படும்.

சூத்ர சங்கதி :- முந்தைய சூத்திரத்திற்கும் பின் வரும் சூத்திரத்திற்கும் இடையே உள்ள தர்க்கரீதியான தொடர்பை சூத்ர சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து எட்டு வகையான சங்கதிகளிலும், அதிகார சங்கதி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்த சங்கதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் விவாதத்திற்கு பொருத்தமான உபநிடத உரையைத் தேர்ந்தெடுப்பதில் கருவியாக உள்ளது.

ஒவ்வொரு அதிகாரத்திலும் ஐந்து கூறுகள் உள்ளன.

சங்கதி – முந்தைய அதிகாரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே உள்ள தொடர் இணைப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

விஷயம் – உபநிடதத்தின் ஒரு குறிப்பிட்ட தலைப்பு, இது விவாதத்திற்கும் அதன் சரியான விளக்கத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சம்ஷய உத்தானகரணம் – விளக்கத்தில் எழும் சந்தேகத்திற்கான அடிப்படை அல்லது காரணம்.

பூர்வ பக்ஷா – ஒவ்வொரு காட்சிப் புள்ளிக்கும் எப்போதும் ஒரு எதிர் பார்வைப் புள்ளி இருக்கும். எதிர் பார்வையை முன்வைப்பவர் பூர்வபக்ஷி என்றும் அவருடைய வாதம் பூர்வ பக்ஷ என்றும் அழைக்கப்படுகிறார். பூர்வ பக்ஷி எதிரி என்றும் அழைக்கப்படுகிறது.

சித்தாந்த – பூர்வ பக்ஷியின் வாதத்தைக் கேட்டபின் சூத்ரகாரர் பாதராயணன் (வேத வியாசர்) சூத்திர வடிவில் தீர்ப்பை வழங்குகிறார்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் இப்போது அதிகாரங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்.

———-

முதல் அத்தியாயத்தின் முதல் பாதத்தில் 11 அதிகரணங்கள் உள்ளன.

முதல் நான்கு அதிகரணங்களான ஜிஜ்ஞாஸ அதிகாரம், ஜன்மாதி அதிகாரம், சாஸ்த்ர யோனித்வா அதிகாரம் மற்றும் சமன்வயாதிகரணமும் ஒரே பேடிகாவைச் சேர்ந்தவையாகும், ஏனெனில் இயற்கையில் அறிமுகமான நான்கு அதிகரணங்களும் பொதுவாக பூர்வபக்ஷினின் (எதிர்ப்பவர்கள்) ஆய்வுக்கு எழுப்பும் ஆட்சேபனைகளை முறியடிக்கும் பொதுவான அம்சமாகும். பிரம்மனின்.

அடுத்த மூன்று அதிகாரங்களான இக்ஷத்யாதிகாரணம், ஆனந்தமயாதிகாரணம், அந்தர் அதிகாரங்கள் இரண்டாம் பீடிகையைச் சேர்ந்தவை, ஏனென்றால் உணர்வற்ற ஒருவன் பிராமணனாக இருக்க முடியாது, ஜீவன் பிரம்மனாக இருக்க முடியாது, விஸ்வாமித்திர முனிவர் போன்ற அதீத மனித சக்திகளைப் பெற்ற நல்லொழுக்கமுள்ளவனும் பிரம்மனாக முடியாது. .

அடுத்த இரண்டு அதிகாரங்களான ஆகாச அதிகாரம் மற்றும் பிராண அதிகாரம் 3வது பீடிகையைச் சேர்ந்தவை ஆகாசம் மற்றும் பிராண இரண்டும் “பிரம்மன்”, முதன்மையாக பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கின்றன.

ஜோதிராதிகரணம் மற்றும் இந்திரன் பிரணாதிகரணம் என்ற இரண்டு அதிகாரங்களும் 4வது பீடிகையைச் சேர்ந்தவை, ஏனென்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஜோதி, இந்திரன் மற்றும் பிராணனுக்கு அந்தர்யாமியாக உள்ளார்.

முதல் அதிகாரம் ஜிஜ்னாஸ அதிகாரணா என்றும், முதல் சூத்திரம் அத்ததோ பிரம்மஜிஜ்ஞாசா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம், பின்வருமாறு. ‘அதா’ என்றால் “பிறகு”, அதாவது கர்ம காண்டத்தில் அல்லது பூர்வ மீமாம்சத்தில் கர்ம விசாரத்தைச் செய்த பிறகு, ஜைமினி முனிவர் சூத்திரங்களை இயற்றினார்.

அதா: என்றால் “எனவே”, அதாவது, “யாகங்கள் போன்ற யாகங்களைச் செய்வதை உள்ளடக்கிய கர்மாக்கள் செய்பவர்களுக்கு நித்தியமான மற்றும் வரம்பற்ற பலன்களைத் தருவதில்லை என்ற உண்மையை உணர்ந்ததால்.”

பிரம்மா ஜிஜ்னாசா என்பது பிரம்மத்தைப் பற்றிய ஆய்வு அல்லது தியானம் செய்பவருக்கு நித்திய மற்றும் வரம்பற்ற பேரின்பத்தை அளிக்கும் தியானத்திற்கு (பக்தி யோகா) வழிவகுக்கும் பிரம்மத்தைப் பற்றிய விவாதம் என்று பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து தெய்வீக தம்பதியருக்கு நித்திய சேவை செய்தல்.

இங்கு நிரீஷ்வர மீமாம்சகரான பூர்வபக்ஷி (எதிரி) பிரம்மன் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு ஆட்சேபனையை எழுப்புகிறார். பிரம்மன் பற்றிய அடிப்படைக் கருத்தைப் பெற முடியாதபோது, ​​பிரம்மத்தைப் பற்றிய விசாரணையை எவ்வாறு தொடங்குவது என்று கூறுகிறார்.

அடிப்படைக் கருத்து சமஸ்கிருதத்தில் வியூட்பட்டி என்று அழைக்கப்படுகிறது. 2 அல்லது 3 வயதுடைய சிறு குழந்தைகள், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் முதலில் தெரிந்து கொண்ட பிறகு பேசத் தொடங்குவார்கள்.

நிரீஷ்வர மீமாம்சகா கூறுகையில், சிறு குழந்தையால் பிடிக்கப்படும் எந்தவொரு பொருளும் செயல் சார்ந்தது. உதாரணமாக, ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் குழந்தையின் முன்னிலையில், ஒருவர் மற்றொரு நபரிடம் மின்விசிறியை இயக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு நபர் மின்விசிறியை இயக்குகிறார், மின்விசிறி சுழலத் தொடங்குகிறது. இந்த செயலை கூர்ந்து கவனிக்கும் குழந்தை சுவிட்ச் மற்றும் ஃபேன் பற்றிய அடிப்படைக் கருத்தைப் பெறுகிறது, இது செயல் சார்ந்த கருத்து என்று அழைக்கப்படுகிறது, இது சமஸ்கிருதத்தில் காரியே வ்யுத்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற வகை வ்யூட்பட்டி சித்தே வ்யூட்பட்டி என்று அழைக்கப்படுகிறது, அதாவது செயலில் ஈடுபடாத மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் அடிப்படைக் கருத்தை குழந்தை பெறுகிறது.-இந்த பொருள்கள் சித்தா என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்ரீ ராமானுஜர் முதல் சூத்ரத்தைப் பற்றிக் கூறும் போது, ​​ஒரு சிறு குழந்தை பின்வரும் முறையில் சித்தே வ்யுத்பத்தியையும் பெற வல்லது என்று கூறுகிறார். ஒரு முதியவர் குழந்தைக்கு ஒவ்வொரு பொருளையும் காட்டுகிறார், அந்தப் பொருளை நோக்கி விரலைக் காட்டி அதன் பெயரைச் சொல்கிறார். இது இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், குழந்தை பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு பெயர்களைக் கூறுகிறது. எனவே சித்தே வ்யுத்பத்தி மற்றும் காரியே வ்யுத்பத்தி இரண்டும் உண்மை மற்றும் செல்லுபடியாகும்.

நிரீஷ்வர மீமாம்சகர், பிரம்மன் எந்தச் செயலிலும் சம்பந்தப்படாததால், அவனைப் பற்றிய எந்த எண்ணமும் சாத்தியமில்லை என்று வாதிடுகிறார். இந்த வாதத்தை ஸ்ரீ பகவத் ராமானுஜம் மறுத்தார், ஏனென்றால் பிரம்மனைப் பொறுத்தவரை சித்தே வ்யுத்பத்தியும் சாத்தியமாகும். எனவே பிரம்மன் பற்றிய விவாதம் தொடங்கலாம்.

முண்டக உபநிடதம் கூறுகிறது, ஒரு நபர் வெறும் யாகங்களைச் செய்வதால் தனக்கு நித்தியமான மற்றும் எல்லையற்ற பேரின்பம் கிடைக்காது என்று வெறுப்படைந்த பிறகு, ஒரு கற்றறிந்த ஆச்சார்யாவை அணுகி, ஆச்சார்யாவின் தினசரி பயன்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் சமித் என்ற குச்சியை அவருக்கு வழங்குகிறார். மேலும் அவரை பிராமணப் படிப்பில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறார். பின்னர் ஆச்சார்யா தீட்சையைத் தொடங்குகிறார். இதுவே முதல் அதிகாரத்தின் தொகையும் பொருளும் ஆகும்.

இரண்டாவது அதிகாரம் ஜன்மத்யாதிகாரணம் எனப்படும். “ஜன்மத்யஸ்ய யதஹ்” என்பது சூத்ரம். பிராமணனின் வரையறையோ அல்லது தனித்தன்மையோ தெளிவாக இல்லாதபோது அதை எப்படி விசாரிப்பது என்பது குறித்து இங்கு மீண்டும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது.

இந்த தனித்துவமான பண்பு சமஸ்கிருதத்தில் லக்ஷணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தனிச்சிறப்பு தைத்தரிய உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருணனின் மகனான பிருகு முனிவர் தன் தந்தையை அணுகி பிரம்மனைப் பற்றி சொல்லுமாறு வேண்டினார். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, “அதை” தியானிப்பவர்களுக்கு முக்தியை அளிப்பது பிரம்மன் என்று பிருகுவிடம் தந்தை கூறினார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

அஸ்யா – நம்மைச் சுற்றி நாம் காணும் இந்தப் பிரபஞ்சத்திற்கு.

ஜன்மாதி – உருவாக்கம், முதலியன. அதாவது, பாதுகாப்பு, அழிவு மற்றும் விடுதலை.

யத:- யாரால் மேற்சொன்ன விஷயங்கள் நடக்கின்றனவோ அதுவே பிரம்மம்.

மூன்றாவது அதிகாரம் சாஸ்த்ர யோனித்வாதிகாரணம் என்றும் சூத்ரம் “சாஸ்த்ரயோனித்வாத்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள பூர்வபக்ஷின் அல்லது எதிரி தர்கிகா அல்லது தர்க்கவாதி. சரியான அறிவுக்கு மூன்று வழிகள் உள்ளன, இதன் மூலம் நாம் விஷயங்களை அறிய முடியும். அவை (1) பிரத்யக்ஷம் அதாவது சிற்றின்ப உணர்வு (2) அனுமன் அதாவது அனுமன் (3) சப்தா அதாவது வாய்மொழி சாட்சி.அதாவது, நாம் எதைப் பார்க்கிறோம், அறிவோம் என்பது பிரத்யக்ஷா எனப்படும். சமையலுக்கு விறகு பயன்படுத்தும் சமையலறையில், விறகு ஈரமாக இருந்தால் புகை வரும். எனவே நாம் புகையையும் நெருப்பையும் ஒன்றாகப் பார்க்கிறோம்.

தொலைதூரத்தில் புகையைக் கண்டால், நெருப்பு இருப்பதாக அனுமானிக்கிறோம். இதை அனுமன பிரமாணம் என்பர். நாம் முழு நம்பிக்கை கொண்ட ஒரு நபர் ஒரு அறிக்கையை வெளியிட்டால் அதை நாம் வெறுமனே நம்புகிறோம், இது சப்த பிராமணம் என்று அழைக்கப்படுகிறது. உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்கள் எவராலும் இயற்றப்படாததால் அவை உச்ச அதிகாரம் பெற்றவை. அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் நமக்கு உண்மையாகவும் செல்லுபடியாகவும் இருக்கிறது.

நமது புலன்களால் உணர முடியாத பிரம்மனை அனுமனாலோ அனுமானினாலோ உணர முடியும் என்கிறது இந்த அதிகாரத்தின் எதிரி அல்லது பூர்வபக்ஷி. அனுமனாலேயே அவரை ஸ்தாபிக்க முடிந்தால், உபநிடதங்களிலிருந்து அவரை அறிய வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட பிரம்மத்தின் பிரத்தியேக பண்பைக் குறிப்பிட்ட தைத்தரிய உபநிடதம் பிரம்மத்தை நிலைநாட்டுவதற்கான அதிகாரமாக இருக்க முடியாது.

இந்த வாதத்தை மறுப்பதற்காக பதராய முனிவர் இந்த அதிகாரத்தின் சூத்திரத்தை மேலே கூறியவாறு இயற்றினார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

சாஸ்த்ர யோனி – பிராமணன் இருப்பதை வேறு எந்த பிரமாணத்தாலும் உணர முடியாது என்பதால் சாஸ்திரம் மட்டுமே பிரமாணம் அல்லது அதிகாரம்.

எனவே பிரம்மம் உபநிடதங்களின் உதவியுடன் விவாதிக்கத் தகுந்தது. எனவே பிரம்மன் சாஸ்திரிக சமாதிகம்யா என்று அழைக்கப்படுகிறார், அதாவது அவர் வேத சாஸ்திரத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

நான்காவது அதிகாரம் சமன்வயாதிகாரணம் எனப்படும். சூத்திரம் “தத்து சமன்வயத்“.

இந்த அதிகாரத்தில் உள்ள பூர்வபக்ஷி அல்லது எதிரி நிரீஷ்வர மீமாம்சகா.

மீமாம்சகா என்பது யாகங்கள் அல்லது சடங்குகள் தொடர்பான வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர். நெருப்புக்கு அளிக்கப்படும் எந்தப் பிரசாதமும் தகுந்த பலனைத் தரும் ஆனால் அதே சமயம் அவர் பிராமணத்தை ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

நிரீஷ்வரா என்றால் ஈஸ்வரன் அல்லது பிரம்மன் இல்லாதது என்று பொருள்.

கடைசியாக அவர் பிராமணத்தைப் பற்றிய விவாதம் பயனற்றது, நோக்கமற்றது அல்லது தனிப்பட்ட ஒருவருக்கு எந்தப் பலனையும் அளிக்காதபோது, ​​பிராமணத்தைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை என்று பிராமணப் படிப்பைத் தொடங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்.

அதனால் பிரம்மன் படிக்கும் திட்டத்தை கைவிடலாம் என்கிறார்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனைப் பற்றிய ஆய்வு அல்லது விவாதம் நோக்கமற்றது அல்ல, ஏனென்றால் பிரம்மமே நித்தியமானது மற்றும் எல்லையற்ற ஆனந்த வடிவமானது நிரதிசய ஆனந்தம்.

எனவே பிரம்மன் இயற்கையாகவே இந்த நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை பிரம்மனின் இயல்பை முழுமையாகவும் முழுமையாகவும் ஆராய்ந்து பின்னர் தியானம் செய்பவருக்கு வழங்குகிறார்.

பக்தி யோகா அல்லது அவரது தாமரை பாதத்தில் பிரபத்தி செய்கிறார்.

சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

தத் – பிராமணனுக்கு அந்த வேத அதிகாரம் (சாஸ்திரப் பிரமாணம்) உறுதி செய்யப்படுகிறது.

து – மேற்கூறியவை தொடர்பாக எழுந்த சந்தேகம் நீங்கியது.

சமன்வயாத் – ஏனெனில் அடையும் உயர்ந்த குறிக்கோளான நித்திய பேரின்பத்திற்கும் பிரம்மத்திற்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மேற்கூறிய நான்கு அதிகாரங்களும் இயல்பில் அறிமுகமானவை மற்றும் பிரம்மனின் தன்மை பற்றிய விசாரணையைத் தொடங்குவதற்கு எழுப்பப்பட்ட நான்கு ஆட்சேபனைகளை மீறுகின்றன.

மேற்கண்ட அதிகாரங்கள் ஒரு பீடிகையைச் சேர்ந்தவை. இப்போது பிரம்மனைப் பற்றிய ஆய்வு சரியான ஆர்வத்துடன் தொடங்குகிறது.

பிரம்மன் என்றால் யார் என்பதுதான் இப்போது எழும் கேள்வி. அதாவது, பிரம்மம் என்பது உணர்ச்சியற்ற ஒரு பொருளா, அல்லது ஒரு உணர்வுள்ள உயிரினமா (ஜீவா) அல்லது அது மேற்கூறிய இரண்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டதா.

இந்தக் கேள்விக்கு அடுத்தடுத்து வரும் அதிகாரங்களில் பதில் இருக்கிறது. ஐந்தாவது அதிகாரம் இக்ஷ்த்யாதிகாரணம் எனப்படும். இது எட்டு சூத்திரங்களைக் கொண்டுள்ளது மற்றும் முதல் சூத்திரம் “இக்ஷதே: ந அசப்தம்” ஆகும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு சத்வித்யா எனப்படும் சந்தோக்யோபநிஷத்தின் 6வது அத்தியாயம்.

இந்த உபநிடதத்தில் உத்தாலக முனிவர் தனது மகன் ஸ்வேதகேதுவை பிரம்மனைப் பற்றிய அறிவைத் தொடங்குகிறார்.

ஸ்வேதகேது, குருகுலத்தில் 12 வருடங்கள் தங்கியிருந்து, அங்கு அவருக்கு அனைத்து வேதங்களையும் ஆறு வேதங்களையும் கற்பித்த பிறகு, மீண்டும் தனது வீட்டிற்கு வருகிறார். அவர் தனது குருவின் கீழ் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார் என்று உணர்ந்ததால், அவர் யாருடன் உரையாட முடியுமோ அவருக்கு எந்த உடலும் சமமாக இல்லை, எனவே அவர் அமைதியாக இருந்தார்.

பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அந்த குறிப்பிட்ட பொருளைப் பற்றிய அறிவையும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் யாரைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதையும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் யாரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதையும் அவரது குரு அவருக்குத் தந்தாரா என்று அவரது தந்தை கேட்டார். சிந்திக்கப்படும் மற்றும் யாரை அறிவதன் மூலம் மற்ற அனைத்தும் அறியப்படும். ஸ்வேதகேது தன் தந்தையிடம் இப்படி ஒரு பொருள் எப்படி இருக்கும் என்று கேட்டான்.

உத்தாலக முனிவர் அவருக்கு களிமண், தங்கம் மற்றும் இரும்பு ஆகிய மூன்று எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார். பல களிமண் பொருட்களுக்கு அடிப்படையான களிமண்ணைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் அனைத்து களிமண் பொருட்களும் அறியப்படும் என்கிறார். இரும்பு மற்றும் தங்கம் பற்றிய வழக்கு இதுதான். அதுபோலவே பிரபஞ்சம் முழுவதற்கும் ஸ்தூலமாகவும், இயக்கமாகவும், கருவியாகவும் விளங்கும் பிரம்மனை அறிவதன் மூலம் ஒவ்வொரு விஷயமும் அறியப்படும். இதற்கு ஏகவிஜ்ஞாநேன ஸர்வ விஜ்ஞானம் என்று பெயர். ஸ்வேதகேது தனது குருவால் தனக்கு பிராமண அறிவில் தீட்சை அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, தந்தையிடம் தனக்கு பிரம்மனைப் பற்றிக் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

படைப்பிற்கு முன், இந்த உபநிடதத்தில் சத் என்று அழைக்கப்படும் பிரம்மன் மட்டுமே இருந்ததாக தந்தை கூறுகிறார். – மகாலட்சுமி மற்றும் ஸ்ரீமன் நாராயணன் இருவரையும் உள்ளடக்கியது. இந்த சத் விரும்பி பிரபஞ்சத்தை உருவாக்கியது. இங்கே பூர்வபக்ஷி அல்லது ஒரு சாங்கிய தத்துவவாதியான எதிரி, சத் என்பது பிரபஞ்சத்தின் காரணமான பிரக்ருதியை மட்டுமே குறிக்கிறது என்று கூறுகிறார். இந்தப் பிரகிருதியை அசப்தம், பிரதானம் அல்லது அனுமாணிக்கம் என்பர்.

இந்த அதிகாரத்தின் இந்த முதல் சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுத்து, பிரகிருதி, உணர்வற்ற பொருள் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது, ஏனெனில் அது உயிரற்றதாக இருக்க முடியாது. எனவே சத் என்றால் பிரம்மம் மட்டுமே.

எனவே இந்த அதிகாரம் பிராமணன் உணர்வற்ற பொருளாக இருக்க முடியாது என்ற உண்மையை நிறுவுகிறது.

அடுத்த அதிகாரம் ஆனந்தமயதிகரணமாகும், இது பிரம்மன் ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று கூறுகிறது. இந்த அதிகாரத்தில் 8 சூத்திரங்கள் உள்ளன.-இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை தைத்தரிய உபநிடதத்தின் ஆனந்தவல்லியிலிருந்து. பிரம்மனை தியானிப்பவன் மோட்சத்தை அடைகிறான் என்று ஆனந்தவல்லி தொடங்குகிறது.

அந்த பிரம்மம் சத்யம், அதாவது அது எந்த மாற்றத்தையும் அடையாது, எனவே தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகும் மனித உடலிலிருந்து வேறுபட்டது மற்றும் உடலில் வசிக்கும் விடுதலையற்ற ஜீவாவிலிருந்து வேறுபட்டது.

இந்த பிரம்மம் ஞானம், அதாவது அவர் எப்போதும் எல்லாம் அறிந்தவர் (எல்லாவற்றையும் அறிந்தவர் அல்லது சர்வஜ்ஞர்) எனவே முக்தாத்மா அல்லது முக்தி பெற்ற ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர். இந்த பிரம்மம் அனந்தம், அதாவது அவர் ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமியாக (உள் ஆத்மாவாக) வசிக்கிறார், எனவே அவர் அனந்தம், கருடன், விஷ்வக்சேனர் மற்றும் பிற நித்யசூரிகளிடமிருந்து வேறுபட்டவர்.

பிரம்மன் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கிறார், மேலும் அவரது இருப்பிடம் வைகுண்டம். இதை அறிந்தவன், பரமவ்யோமத்தில் அல்லது பரமபதத்தில் இந்த பிரம்மத்தையும் அவனது அருட் பண்புகளையும் அனுபவிக்கிறான்.

இந்த பிரம்மன் அல்லது பரமாத்மாவிலிருந்து ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பஞ்ச பூதங்கள் உருவாக்கப்படுகின்றன. அன்னமயம், பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமயகோசங்களுக்கு மீண்டும் அந்தர்யமின்மை பிரம்மன். ஜீவனாகிய விக்ஞானமயத்திலிருந்து வேறுபட்ட ஆனந்தமயனாகிய பிரம்மன் தானே. ஆனந்தமயமாகிய இந்த பிரம்மமே பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று உபநிடதம் மேலும் கூறுகிறது.

இந்த உபநிடதம் ஜீவாக்களின் பல வகைகளை அடையாளம் கண்டு அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தின் அளவைப் பற்றி பேசுகிறது மற்றும் இறுதியாக பிரம்மானந்தத்தைப் பற்றி பின்வருமாறு வெளிப்படுத்துகிறது.

பிரம்மானந்தா – பிரஜாபதி ஆனந்தனின் 100 முறை

பிரஜாபதி ஆனந்தா – பிருஹஸ்பதி ஆனந்தனின் 100 முறை.

பிருஹஸ்பதி ஆனந்தா. – 100 முறை இந்திரன் ஆனந்தன்

இந்திரனின் ஆனந்தா – தேவானந்தாவின் 100 முறை

தேவானந்தா – கர்ம தேவதைகளின் ஆனந்தாவின் 100 மடங்கு

கர்ம தேவதாக்களின் ஆனந்தம் – அஜனாஜன தேவதாக்களின் 100 மடங்கு ஆனந்தம்

அஜனாஜன தேவதைகள் – பித்ரிகள் அல்லது மேனிகளின் 100 மடங்கு ஆனந்தம்

பித்ரிகளின் ஆனந்தம் – தேவ கந்தர்வர்களின் ஆனந்தத்தின் 100 மடங்கு

தேவ கந்தர்வ ஆனந்தா – மனுஷ்ய கந்தர்வத்தின் 100 முறை

மனுஷ்ய கந்தர்வ ஆனந்த – மனுஷ்ய ஆனந்தத்தின் 100 முறை

ஆக பிரம்மானந்தம் என்பது மனுஷ்ய ஆனந்தத்தின் 10010 = 1020 மடங்கு

இந்த பிரம்மானந்தமே நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பம், இது முக்தி அல்லது மோட்சமாகும்.

இந்த பிரம்மானந்தத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் எல்லா முக்தர்களும் நித்யங்களும் என்றென்றும் அனுபவிக்கிறார்கள். இந்த முக்தாக்கள் சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆத்மாக்கள் மற்றும் பக்தி யோகம் அல்லது சரணாகதி செய்தவர்கள் மகாலட்சுமி தேவி மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதங்களில் பிரபத்தி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பூர்வபக்ஷி அல்லது எதிரி ஜீவாவில் இந்த ஆனந்தமயம் என்று கூறுகிறார், ஏனெனில் உபநிஷத்தில் இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஆனந்தமாயா “உடல்” உடையவர் என்று கூறப்படுகிறது. ஜீவா மட்டுமே உடலைப் பெற்றிருக்கிறதே தவிர பரமாத்மாவை அல்ல என்று அவர் கருத்து கூறுகிறார்.

“ஆனந்தமய அபயாசாத்” என்ற முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த பார்வையை சூத்திரகாரர் மறுத்தார்.

சூத்திரத்தின் பொருள் ஆனந்தமயம் – ஆனந்தமயம் என்பது பிரம்மம் மற்றும் ஜீவன் அல்ல, ஏனெனில்

அப்யாசாத் – அதாவது இந்த உபநிஷத்தின் பிற்பகுதியில் பிரம்மானந்தம் 100 மடங்கு பிரஜாபதி ஆனந்தம் மற்றும் பல என்று கூறப்பட்டுள்ளது. மனுஷ்ய ஆனந்தத்தில் தொடங்கி, மேலே விவரித்தபடி பிரம்மானந்தம் வரை இது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. அப்யாச என்றால் மறுமொழி.

விஸ்வாமித்திர முனிவர் போன்ற ஆன்மீக மற்றும் யோக சக்திகளைப் பெற்ற ஜீவனிலிருந்து பிரம்மன் வேறுபட்டவன் என்ற உண்மையை மீண்டும் நிறுவும் அடுத்த அதிகாரம் அந்தர அதிகாரம்.

இந்த அதிகாரத்தில் இரண்டு சூத்திரங்கள் உள்ளன மற்றும் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சந்தோக்யோபனிஷத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ளது.

சூரிய மண்டலம் அல்லது ஆதித்ய மண்டலத்தின் மையத்தில் காணப்படுபவர் பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று இந்த உபநிடதம் கூறுகிறது. அவர் தங்க முடிகள் மற்றும் மீசைகள் மற்றும் தாமரை கண்களுடன் மிகவும் வசீகரமான மற்றும் அழகான உடலைக் கொண்டிருக்கிறார். அவர் களங்கமற்றவர்.

சூரிய மண்டலத்தின் மையத்தில் இருப்பவர் யோக, ஆன்மிக ஆற்றல் கொண்ட ஜீவன் என்பது பூர்வபக்ஷினின் கருத்து, ஏனென்றால் முந்தைய அதிகாரத்தில் ஆனந்தமயனுக்கு உடல் இருக்கிறது, அவரும் சூரிய மண்டலத்தில் இருக்கிறார், அவர் ஜீவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. .

இந்தக் கருத்து ஏற்கப்படவில்லை, ஏனெனில் இந்த அதிகாரத்தில் முதல் சூத்திரம் “அந்த: தத் தர்மோபதேசாத்” என்று கூறுகிறது.

அந்தா:- சூரியக் குடும்பத்தின் உட்புறத்தில் இருப்பது பிரம்மம், ஜீவன் அல்ல. ஏனெனில் தத் தர்மோபதேசத் – இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள சூரிய மண்டலத்தில் உள்ளவரின் பண்புகள் ஜீவாவுக்கு ஒருபோதும் பொருந்தாது. குணங்கள் தாமரை கண்கள் மற்றும் கறையற்ற தன்மை.

அடுத்து ஒரே ஒரு சூத்திரம் கொண்ட ஆகாஷ அதிகாரம் வருகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள விவாதம் சாந்தோக்யோபனிஷ்கத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ள ஒரு கூற்றில் உள்ளது, இந்த உலகில் உள்ள அனைத்து பூதங்களும் ஆகாசத்தால் உருவாக்கப்பட்டவை, அவை பிரளய காலத்தில் ஆகாசத்திலேயே மறைந்துவிடும்; ஆகாஷம் என்பது அனைவரும் அடைய வேண்டிய விஷயம், ஆகாசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இந்த ஆகாசம் நாம் எங்கும் காணும் வானமாகிய புகழ்பெற்ற ஆகாஷைக் குறிக்கிறது என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். சூத்ரம் ஆகாஷா: தத் லிங்கத் -மேற் கூறிய கருத்தை மறுத்து, ஆகாஷம் என்பது ப்ரம்மம் மட்டுமே அன்றி நாம் காணும் ஆகாயம் அல்ல.

ஆகாஷம் என்றால் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாக ஒளிர்வது என்று பொருள், இந்த அம்சம் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும். சூத்திரத்தின் பொருள் “ஆகாசம் – பரமாத்மா அல்லது பிரம்மன் ஏனெனில்,

தல்லிங்கா – உபநிஷத்தில் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரத்தியேக பண்புகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், நாம் பார்க்கும் புகழ்பெற்ற வானத்திற்கு அல்ல.

அடுத்த அதிகாரம் பிராண அதிகாரம், இது ஒரே ஒரு சூத்திரத்தைக் கொண்டுள்ளது.

விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சந்தோக்யோபநிஷத்தில் இருந்து மட்டுமே. பிரளயம் அல்லது பிரளயத்தின் போது அனைத்து உயிரினங்களும் பிராணனுடன் ஒன்றிணைந்து மீண்டும் இந்த உலகில் பிராணனிலிருந்து மட்டுமே தோன்றுகின்றன என்று இந்த உரை கூறுகிறது.

இந்த பிராணன் ஒவ்வொரு உயிரையும் சுவாசிக்க வைக்கும் மூச்சு என்று எதிரி கூறுகிறார். சூத்ரகாரர் இந்தக் கருத்தை எதிர்க்கிறார், பிராணன் பரமாத்மா மட்டுமே, மூச்சு அல்ல.

பரமாத்மா இங்கே பிராணன் என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே இந்த உலகில் அனைவரும் வாழ்கிறார்கள். சூத்ரம் என்பது அத ஏவ பிராண: அதாவது

பிராண: பரமாத்மா என்பது மூச்சு அல்ல, ஏனெனில்

அத ஏவ – ஆகாஷ விஷயத்திலும் அதே காரணத்திற்காக.

அடுத்து ஜோதிராதிகரணம் மற்றும் முந்தைய பிராண அதிகாரத்திற்கு இடையேயான சங்கதி வருகிறது, இது பிரத்யுதாஹ்ரிதி. பிரத்யுதாஹரணம் என்றால் எதிர் விளக்கம் என்று பொருள். இதற்கு ஒரு விரிவுரை தேவை.

முந்தைய அதிகாரத்தில் (பிராண அதிகாரம்) சந்தோக்யோபனிஷத்தின்படி பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பிராணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராணன் என்றால் பொதுவாக மூச்சு (சுவாசம்) என்று பொருள். சுவாசம் காற்றின் ஒரு வடிவம் என்பதால், அது படைப்பாளராக இருக்க முடியாது. எனவே பிராணன் என்பது பிரம்மனை மட்டுமே குறிக்க வேண்டும்.

இந்த ஜோதிராதிகரணத்தில் விவாதத்திற்குரிய குறிப்பிட்ட உபநிடத உரை சாந்தோக்யோபநிஷத்தில் உள்ளது, அதில் ஸ்ரீ வைகுந்தத்தில் ஜொலிக்கும் பிரகாசம் (வரம்பற்ற பிரகாசத்துடன் கூடிய ஒளி) கூறப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு உடலின் கல்லீரலில் சுரக்கும் ஜாமீன் சாறு போன்றது. நாம் உண்ணும் உணவின் செரிமானம். இதற்கு ஜடராக்னி என்று பெயர். இந்த உபநிடதக் கூற்றில், முதல் வாக்கியத்தில் பிரம்மம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, மேலும் ஜடராக்னியைப் போலவே ஜொலிக்கும் என்று கூறப்படும்போதும். இது ஒரு எதிர் விளக்கமாக மாறும்.

எனவே பிரகாசம் என்று பொருள்படும் ஜோதி என்பது பிரம்மனையே குறிப்பதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஜோதி என்பது சாதாரண சூரிய ஒளி அல்லது வேறு எந்த ஒளியையும் குறிக்கிறது என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

ஜோதி என்ற சொல்லுக்கு பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று சூத்ரகாரர் தீர்ப்பு வழங்குகிறார், ஏனெனில் இந்த உபநிடத உரையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உணர்ச்சியற்ற உடல்களில் (ஜீவாக்கள்) வசிக்கும் அனைத்து உணர்ச்சிகளும் (ஜீவாக்கள்) ஒரு எல்லையற்ற பிரம்மத்தின் கால் பகுதியும் முக்கால் பகுதியும் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளன.

இது சாதாரண சூரிய ஒளிக்கு பொருந்தாது, ஜோதி என்ற சொல்லுக்கு பரமாத்மா (உயர்ந்த ஆன்மா) என்று பொருள், மேலும் ஜடராக்னியைப் போலவே அவர் இருப்பதாலும் அவர் ஜடராக்னியின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி என்று பொருள். “பிரம்மன்” எல்லையற்ற பிரகாசத்தின் பிரகாசமாக இல்லாவிட்டால், அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளராக முடியாது.

அடுத்த அதிகாரம் இந்திரன் பிரணாதிகரணம் இதில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌஷிதகி உபநிஷத்தில் இருந்து.

முந்தைய ஜோதிர் அதிகாரத்துடன் இணைப்பு அல்லது சங்கதி பின்வருமாறு. ஜோதிர் அதிகாரத்தில் ஜோதிர் என்ற சொல்லுக்கு பரமபுருஷன் அல்லது பரமாத்மா என்று பொருள் என்று நிரூபிக்கப்பட்டது. கௌசிதகி உபநிடதத்தில் இந்திரன் உச்சமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அது சரியல்ல என்று பூர்வபக்ஷினம் கூறுகிறது.

சந்தேகத்தை நீக்க இந்த அதிகாரம் பொருந்துகிறது. எனவே ஜோதிர் அதிகாரத்தின் கூற்று வேறுவிதமாகத் தோன்றுவதால் சங்கதி அபவாதமாகிறது. தனது வீரத்திற்கு பெயர் பெற்ற திவோதாசியின் மகன் பிரதர்தனன் இந்திரனைச் சந்திக்க ஸ்வர்க லோகத்திற்குச் சென்றதாக உபநிஷத உரை கூறுகிறது.

அவரைப் பார்த்து மகிழ்ந்த இந்திரன், அவரிடம் வரம் கேட்கச் சொன்னான். பிரதர்தனன் இந்திரனிடம், “உனக்கு எல்லாம் தெரியும், எனவே மனிதர்களின் நலனுக்காக ஒரு வரம் கொடு. இந்திரன் பிரதர்தனனை பிராணனும் அமிர்தமும் ஆனதால் அவனைத் தியானிக்கச் சொன்னான். மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதே ஹிட்டாமமான மனிதர்களுக்கு சிறந்த ஆர்வம். அப்படியானால் நம்மைப் போல் சம்சார பந்தத்தில் இருக்கும் இந்திரனையும் தியானிப்பதன் மூலம் ஒருவருக்கு மோட்சம் கிடைக்குமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

இந்த உபநிஷத உரையின் உண்மையான பொருள் என்னவென்றால், இந்திரன் பிரதர்தனனை அந்தர்யமின் அல்லது இந்திரனின் உள் ஆன்மாவை தியானிக்கச் சொன்னான். அந்த அந்தர்யமின் தான் மோட்சத்தை அளிக்கும் சக்தி கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணன். எனவே இந்த உபநிடதத்தில் இந்திரன் என்பது ஜீவாத்மாவாகிய இந்திரனைத் தன் உடலாகக் கொண்ட பரமாத்மா.

எனவே ஸ்ரீமன் நாராயணன் பிராணனுக்கும் இந்திரனுக்கும் அந்தர்யமின்மை என்றும், அவர் ஆனந்த, அஜரா (அவருக்கு முதுமை இல்லை என்று அர்த்தம்) மற்றும் அமிர்தம் (அவரது இயல்பிலும் அல்லது வடிவத்திலும் எந்த மாற்றமும் இல்லை) என்றும் சூத்ரகாரர் தீர்ப்பு வழங்குகிறார்.

எனவே முதல் பாதம் இந்த அதிகாரத்துடன் முடிவடைகிறது மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது புகழ்பெற்ற படைப்பான அதிகார சாராவளியில் 11 அதிகாரங்களில் உள்ள அல்லது பொதிந்துள்ள பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளும் பண்புகளின் பட்டியலை அழகாகத் தருகிறார். சுப குணங்கள் ஆகும்

அக்ரிதா – அவர் வைகுண்ட திவ்ய லோகத்தில் நிரந்தரமாக இருக்கிறார்.

விஸ்வஹேது – அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளர் அல்லது காரணம், இது அவரது தனித்துவமான அம்சமாகும்.

சாஸ்திரிக ஸ்தாபனியா – அவர் வேத சாஸ்திரங்களால் மட்டுமே நிறுவப்பட வேண்டும்.

நிருபாதிபரமா ப்ரேம யோக்யா – அவர் எல்லையற்ற மற்றும் நித்திய ஆனந்தம்.

ஸ்வேச்சத: ஸர்வஹேது:- தன் விருப்பத்தினாலேயே முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானான்.

சுபகுண விபவ அனந்த நிஸ்ஸேம ஹர்ஷா – அனைத்து எல்லையற்ற மற்றும் மங்களகரமான பண்புகளின் களஞ்சியம்.

சுத்த அகர்ம உத்த திவ்யகிருதி: – அவர் அழகான மற்றும் பைன் வடிவம் அல்லது அப்ரகிருத மற்றும் ரஜோகுணம் மற்றும் தமோ குணம் இல்லாத உடலைக் கொண்டவர்.

அநுபாதிகா ஆகாசநாதி ஸ்வபாவா:- இடம், காலம், பொருள் ஆகியவற்றில் வரம்பற்றவர், சுற்றிலும் ஒளிர்கிறார்.

சப்ராண அப்ராண பேத வ்யதிபிதுர ஜகத் ப்ராணன:- உயிரற்ற மற்றும் உயிரற்ற பொருட்களை வாழ வைக்கிறார்.

திவ்யதீப்தி:- அவர் அளவற்ற பிரகாசம் கொண்ட பிரகாசம்.

பிராணேந்திராதி அந்தராத்மா:- அவர் பிராணனுக்கும் இந்திரனுக்கும் உள்ளான ஆத்மா அல்லது அந்தர்யாமி.

அயோக வ்யவச்சேத பாதம் எனப்படும் முதல் பாதத்தின் 11 அதிகாரங்களில் ஸ்ரீமன் நாராயணனுடன் பிரபஞ்சத்தை உருவாக்குவது தொடர்பான உபநிடத வாக்கியங்களின் தொடர்பற்ற தன்மை நீக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணனின் 11 அருளும் பண்புகளும் மேலே உள்ளன.

யோகா என்றால் இணைப்பு என்று பொருள்.

முதல் மலிவான இரண்டாவது பாதத்தில் 6 அதிகாரங்கள் உள்ளன, மேலும் அவை உபநிடத நூல்களைக் கையாளும், அதில் ஜீவா மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணம் என்று நிராகரிக்கப்படுகின்றன. எனவே இந்த பாதம் அன்ய யோக வ்யவச்சேதா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதத்தில் முழுப் பிரபஞ்சமும் பரமாத்மாவின் உடல் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் “சர்வத்ர பிரசித்தி அதிகாரம்” ஆகும், இது சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து ஒரு உரையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறது, அதில் நாம் சுற்றிலும் பார்ப்பது பிரம்மம் என்றும், அவர் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் என்றும் அவர் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அமைதியான மனதுடன் தியானித்தார். முந்தைய அதிகாரத்தில், அதாவது இந்திரபிராண அதிகாரத்தில், இந்திரனும் பிராணனும் உடலாகிய பரமாத்மாவே பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தில் ஜகத்காரண வஸ்து என்று ஜீவா குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் விலகுகிறது. மேற்கூறிய சந்தேகத்திற்குக் காரணம், எண்ணற்ற பிறவிகளில் பல உடல்களை எடுத்துக்கொண்ட ஒருவர், நாம் சுற்றிலும் பார்க்கும் பொருளாக இருக்கத் தகுதியானவர் என்பதும், அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும் என்பதும் ஆகும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள் ஆன்மாவாகவும் இருப்பதில் பிரம்மன் பிரபலமானவர் மற்றும் பிரபலமானவர் என்றும் அவர் மட்டுமே படைப்பவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவராக இருக்கத் தகுதியானவர் என்றும் இந்த உபநிடத உரை குறிப்பிட்டுச் சொல்வதால், ஜீவா பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது என்று சூத்ரகாரர் கூறுகிறார். பிரம்மன், பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று ஒரே குரலில் கூறும் மற்ற உபநிடத வாசகங்களுக்கு இசைவாக அல்லது உடன்படுவதால் பிரபஞ்சம். “சர்வத்ர பிரசித்த உபதேசத்” என்பது சூத்திரம்.

சர்வத்ர பிரசித்தம் என்றால் பரமாத்மா எங்கும் அந்தர்யாமினியாகவும் அதே சமயம் பிரபஞ்சத்துக்கும் காரணமானவராகவும் இருக்கிறார். மேலே உள்ள உபநிடத கூற்று, நாம் சுற்றிலும் பார்ப்பது பிரம்மம் என்று சொல்லத் தொடங்கியது, அதாவது எல்லாமே அல்லது பொருளும் பிரம்மத்தை அதன் உள் ஆத்மாவாகக் கொண்டுள்ளது மற்றும் மேலும் பிரம்மனின் பன்னிரண்டு மங்கள குணங்களை (கல்யாண குணங்கள்) பட்டியலிடுகிறது.

அவையாவன – பிரம்மனை தூய்மையான மனத்தால் மட்டுமே உணர முடியும், அவன் மூச்சை (பிராணனை) அவனுடைய உடலாகக் கொண்டிருக்கிறான், அவனுக்கு மிக அழகான வடிவம் அல்லது உடல் இருக்கிறது, அவனுக்கு சித்தம் அல்லது சங்கல்பம் உள்ளது, அதை மாற்ற முடியாது, அவன் ஆகாசம், ஆத்மா, அவர் ஆகாசம் அல்லது வானத்திற்கு உள்ளார்ந்த ஆன்மாவா, அவர் முழு பிரபஞ்சத்தையும் தனது உடலாகக் கொண்டிருக்கிறார், ஏனெனில் அது அவரால் படைக்கப்பட்டது, அவர் அனைத்து தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான பொருட்களைக் கொண்டிருக்கிறார், அவரது உடல் அனைத்து சிறந்த நறுமணத்தையும் கொண்டுள்ளது, அவர் அனைத்து நல்ல சுவைகளையும் ஏற்றுக்கொண்டார், அவர் எந்த உடலுடனும் பேசுவதில்லை, ஏனென்றால் அவர் மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை, மேலும் அவர் விரும்பியதை அவருடன் பெற்றுள்ளார்.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “அட்ர் அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது, இது கத்தோ உபநிடதத்தின் ஒரு அறிக்கையை விவாதத்திற்கான தலைப்பாகக் கொண்டுள்ளது. முந்தைய அதிகாரத்தின் இறுதிப் பகுதியில், பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் ஜீவனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும், ஜீவன் அனுபவிக்கும் எந்த துன்பத்திற்கும் இன்பத்திற்கும் ஆளாகவில்லை, அதாவது, ஜீவன் தனது பலனை உண்பதாகக் கூறப்பட்டது. கடந்த கால செயல்கள். எனவே உபநிடதத்தில் உண்பவன் எங்கு உண்பவன் ஜீவாத்மாவாக இருக்க வேண்டுமோ, பரமாத்மாவாக இருக்க வேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது. இந்த சந்தேகத்தைப் போக்க இந்த அதிகாரம் பரிசீலனைக்கு வந்தது.

கடோபநிஷத் என்பது நச்சிகேதஸ் மற்றும் மிருத்யு என்று அழைக்கப்படும் யமனுக்கு இடையேயான ஒரு உரையாடல் அல்லது உரையாடலாகும். நச்சிகேதஸ் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் யமன் பதிலளித்தான். கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ​​யமன் நசிகேதாவிடம், இந்த உலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத அனைத்து பொருட்களையும் (உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் அல்லது உயிருள்ள மற்றும் உயிருள்ளவை ஆகிய இரண்டையும்) உணவைப் போல உண்ணும் ஒரு நபரை அந்த நேரத்தில் உணர முடியும் என்று கூறுகிறார். இந்த குறிப்பிட்ட சூழலில் மிருத்யு என்று அழைக்கப்படும் பகவான் ருத்ரனின் உதவியுடன் பிரபஞ்சத்தின் பிரளயம், அவரை கான்டிமென்ட் (உபசேச்சனா) என்று பயன்படுத்துவது இந்த சூழலில் குறிப்பிடப்படுகிறது. உபசேசனம் என்பது உண்ணக்கூடிய பொருளாகும், இது மோர் பாலுடன் கலந்த சாதத்தை உட்கொள்ள உதவுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபசேசனம் என்பது உண்பதற்கு மட்டுமல்ல, மற்றவற்றை சாப்பிடுவதற்கும் உதவும் ஒரு பொருள்.

எனவே உண்பவன் ஜீவா அல்லது பரமாத்மா என்ற கேள்வி இங்கு எழுகிறது, ஏனெனில் முன்னவர் தன்னை உடம்பில் வாழ வைப்பதற்காக உணவை உண்பவர் மட்டுமல்ல, முன்பு கூறியது போல் கர்மபலத்தையும் உண்பவர்.

இந்த ஐயத்தைப் போக்க சூத்ரகாரர் “அட்ட சராச்சர கிரஹணாத்” என்ற சூத்திரத்தில் சொன்னார், அதாவது, அட்டா, சார-ஆசார (உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள்) அடங்கிய பிரபஞ்சம் முழுவதும் அவரால் நுகரப்படுவதால், உண்பவர் பரமாத்மா ஸ்ரீமன் நாராயணர். பிரளயம். உண்மையில் புராணங்களும் ஆழ்வார்களும் பிரளயத்தின் போது முழு பிரபஞ்சத்தையும் தனது வயிற்றில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், படைப்பின் போது அதை வெளியேற்றுவதாகவும் கூறுகின்றன.

இந்த இரண்டாவது பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரத்திற்கு அந்தரா அதிகாரன் என்று பெயர். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, சந்தோக்யோபநிஷத்தில் உள்ள ஒரு பகுதி, அதில் சத்தியகாமா என்று அழைக்கப்படும் ஒரு குரு, உபகோசலை என்ற மாணவனுக்கு பிரம்மனைப் பற்றிய அறிவைப் போதித்தார். போதனை செய்வதற்கு முன், உபகோசலை ஆஹாவனீய, கர்ஹபத்ய மற்றும் தக்ஷிணை எனப்படும் மூன்று அக்னிகளால் (அக்கினிகள்) பிரம்மனின் ஞானத்திற்குத் தீட்சை பெற்றார், அவை அக்னிஹோத்ரத்தின் தினசரி சடங்குகளைச் செய்ய குருவால் பயன்படுத்தப்பட்டன. ஏறக்குறைய ஒரு வருடம் குரு.

முந்திய அதிகாரத்தில் ஒருவன் பிரபஞ்சத்தை உண்ணும் பரமாத்மாவை உணரக்கூடியவன் என்றும் அவனைக் காண முடியாது என்றும் கூறப்பட்டது. எனவே பார்க்க முடியாதது பரமாத்மாவாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரசபையில் தீர்ந்தது.

தியானம் செய்பவரின் கண்களில் காணப்படுபவன் அல்லது தோன்றுபவனே முழுப் பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்தும் பரமாத்மா என்றும், எந்த ஒரு துக்கத்திலும் சிறிதளவு கூட கலக்காமல் அளவற்ற இன்பமுடையவனாக இருப்பான் என்கிறது இந்த அதிகார உபநிஷத நூல். மற்றும் அவரது இயல்பு (ஸ்வரூபம்) மற்றும் மங்கள குணங்கள் (கல்யாண குணங்கள்) இரண்டிலும் எல்லையற்றவர். மேலும் அவர் அனைத்து கல்யாண குணங்களின் களஞ்சியமாகவும் திவ்ய மங்கள விக்ரஹ வடிவில் வரம்பற்ற பிரகாசம் கொண்டவராகவும் இருக்கிறார்.

தியானம் செய்பவரின் கண்களில் தோன்றும் நபர் கண்ணில் பிரதிபலிக்கும் உருவமாக இருக்க முடியுமா, ஜீவா அல்லது வான கடவுளாக (தேவதாவிஷேஷா) இருக்க முடியுமா என்ற சந்தேகம் இங்கே எழுகிறது, ஏனெனில் அவர் உண்மையில் கண்ணில் இருக்கிறார், ஆனால் பிரம்மனையோ அல்லது ஸ்ரீமன் நாராயணனையோ வெறும் கண்களால் பார்க்க முடியாது. .

இந்த சந்தேகத்தை போக்க பதராயண முனிவர் “அந்தர உபபத்தே:” என்ற சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார், அதாவது கண்களில் தோன்றுபவர் பரமாத்மா அல்லது பிரம்மன் மட்டுமே, அவர் மட்டுமே அமிர்தத்வ (இன்பம்), அபயத்வா (அபயத்வா) என்ற உயர்ந்த நற்குணங்களை உடையவர். துக்கத்துடன் கலக்காதது), பிரம்மத்வா (எல்லையற்ற தன்மை), சம்யத்வமத்வா (கல்யாண குணங்களின் களஞ்சியம்), பாமணித்வா (எல்லையற்ற பிரகாசத்தின் திவ்ய மங்கள விக்ரஹம்) இவை பிரம்மனின் தனித்துவமான மற்றும் பிரத்தியேகமான பண்புகள் மற்றும் அவை ஜீவாக்கள், உருவங்கள் அல்லது பிற வான கடவுள்களுக்கு பொருந்தாது. .

இந்த பாதத்தில் உள்ள நான்காவது அதிகாரத்திற்கு அந்தர்யாமி அதிகாரன் என்று பெயர். இந்த அதிகாரம் முந்தைய அதிகாரத்திற்கு அடுத்தபடியாக உள்ளது, ஏனெனில் முந்தைய அதிகாரத்தில் உள்ள தீர்ப்பு எப்பொழுதும் கண்களில் தோன்றுகிறதோ அவர் பரமாத்மாவாக இருக்கிறார். இந்த அதிகாரம் மேற்கண்ட உண்மையை வலுப்படுத்துகிறது.

விவாதத்திற்கான தலைப்பை உருவாக்கும் மற்றும் விஷயவாக்கியஸ் என்று அழைக்கப்படும் உபநிஷத உரை பிருஹத்ரண்யக உபநிஷத்தின் அந்தர்யாமி பிராமணத்தில் காணப்படுகிறது. அந்தர்யாமி பிராமணம் என்பது விசிஷ்டாத்வைத தத்துவத்தின் அடித்தளமாகும், இது இல்லாமல் ஸ்ரீ பகவத் ராமானுஜரால் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிறுவ முடியாது. அந்தர்யாமி பிராமணம் கடக ஸ்ருதி என்றும் அழைக்கப்படுகிறது. கட்டகா என்பது அபேதா மற்றும் பேதா ஆகிய உபநிஷத்தின் இரண்டு போட்டி அல்லது முற்றிலும் எதிர்நிலை அறிக்கைகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தம் என்று பொருள். அத்வைதம் என்பது தனித்துவம், த்வைதம் என்பது இருமைவாதம், விசிஷ்டாத்வைதம் என்பது தகுதியான ஏகத்துவம். அத்வைத முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரால் நிறுவப்பட்டது மற்றும் த்வைத முறை ஸ்ரீ மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது.

அத்வைதமானது அபேத ஸ்ருதிகள் எனப்படும் உபநிடத நூல்களை அடிப்படையாகக் கொண்டது, அதாவது “நீ பிரம்மன்” மற்றும் “நான் பிரம்மன், உன்னதமானவன்”. ‘நீ’ மற்றும் ‘நான்’ என்ற வார்த்தைகள் ஜீவாக்களை மட்டுமே குறிக்கின்றன. ஆக ஸ்ரீ சங்கரர் பிரம்மமே ஜீவன் என்றும், ஜீவன் பிரம்மத்திலிருந்து வேறுபட்டதல்ல என்றும் கூறுகிறார், ஏனென்றால் பிரம்மமே மாயையான ஜீவாவின் வடிவத்தை அல்லது அவித்யாவின் காரணமாக, அதாவது அறியாமை. ஒரு ஆச்சார்யாவின் உபதேசத்திலிருந்து ஜீவா தான் பிரம்மனைப் போன்றே என்பதை உணர்ந்தால், அவன் பிரம்மன் அல்லது பிரம்மனுடன் ஒன்றாகிறான். சமஸ்கிருதத்தில் நான்கெழுத்துக்களைக் கொண்ட தத்வமசி என்பது “அபேத” என்று கூறும் உபநிடத கூற்று. இந்த கூற்றிலிருந்து பெறப்படும் “அபேத” (ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே வேறுபாடு இல்லை) பற்றிய அறிவு “வாக்யஜன்ய ஞானம்” என்று அழைக்கப்படுகிறது. அத்வைதிகளுக்கு இந்த “வாக்ய ஜன்ய ஞானம்” தான் முக்திக்கான வழிமுறையாகும்.

ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அவற்றுக்கிடையே முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஸ்ரீ மத்வாச்சாரியார் கூறுகிறார். அவரது கூற்றுப்படி பேதஸ்ருதியில் போக்தா என்று அழைக்கப்படும் ஜீவாத்மா, அதே பேத ஸ்ருதியில் போக்யம் என்று அழைக்கப்படும் பிரகிருதி மற்றும் அதே பேத ஸ்ருதியில் பிரேரிதா (கட்டுப்படுத்துபவர்) என்று அழைக்கப்படும் பரமாத்மா ஆகியவை ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவை, இதைப் பெற்றவர். பேத அறிவு, அதாவது வேறுபாடு பற்றிய அறிவு, மோட்சத்தை அடைகிறது.

எனவே அபேத ஸ்ருதியும் பேத ஸ்ருதியும் முற்றிலும் எதிர் மற்றும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் வேதங்களில் ஒவ்வொரு எழுத்தும் நமக்கு ஒரு அதிகாரம் அல்லது பிரமாணம் மற்றும் இந்த கோட்பாடு “சர்வஷாக பிரத்யாயந்யாயா” என்று அழைக்கப்படுகிறது. எனவே அபேத ஸ்ருதியை ஏற்றுக்கொண்டால், பேத ஸ்ருதியை நிராகரிக்க வேண்டும், அதாவது அதன் அதிகாரம் இழக்கப்படும் என்று சிக்கல் எழுகிறது. பேத ஸ்ருதியை ஏற்றுக்கொண்டால், அபேத ஸ்ருதி நிராகரிக்கப்பட வேண்டும், அது அதன் அதிகாரத்தை இழக்கிறது. மேற்கூறிய இரண்டுமே மேற்கண்ட நியாயத்திற்கு எதிரானது.

எனவே ஸ்ரீ பகவத் ராமானுஜர் அந்தர்யாமி பிராமணத்தில் கடக ஸ்ருதியைக் கண்டுபிடித்து, மேற்கூறிய இரண்டு முரண்பட்ட ஸ்ருதிகளுக்கு இடையே சமரசம் செய்து, “சர்வஷாக பிரத்யாயந்யாய” என்பதன் பொருத்தத்தை மீட்டெடுத்தார். இந்த நியாயத்தின் பொருள் என்னவென்றால், உபநிடதங்கள் உட்பட அனைத்து வேத நூல்களும் நமக்கு மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவை. ஒவ்வொரு அசையும் உண்மை, ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் அறிக்கைகளுக்கு சரியான விளக்கம் மட்டுமே தேவை. இந்த கடக ஸ்ருதி சுருக்கமாக, உணர்வுள்ள உயிரினங்கள் (ஜீவாக்கள்) மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் (உயிருள்ள பொருட்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்) பரமாத்மாவின் உடல்கள் என்று கூறுகிறது, மேலும் இது “சரீர ஆத்மா பவ” அல்லது “உடல் மற்றும் ஆன்மா” உறவு என்று அழைக்கப்படுகிறது. எனவே உடலும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத இரண்டு தனித்தனி நிறுவனங்களாகும். இதன் பொருள் ஆன்மா இல்லாமல் உடல் இல்லை மற்றும் உடல் இல்லாமல் ஆன்மா இல்லை. உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் இருவரும் பரமாத்மாவின் சரீரமாக மாறும்போது, ​​சுபலோபநிஷத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணராக அடையாளம் காணப்பட்ட பரமாத்மாவாகும், ஸ்ரீமன் நாராயணனை உச்ச ஆத்மாவாகவோ அல்லது அந்தர்யாமியாகவோ ஜீவர்கள் மற்றும் அச்சேதன பொருட்களுடன் எப்போதும் இணைந்து இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து பிரிக்க முடியாததாகிறது. எனவே இது அபேத மற்றும் பேத ஸ்ருதிகளின் செல்லுபடியை நிறுவுகிறது.

அந்தர்யாமி பிராமணத்தின் பொருள் பின்வருமாறு. “பூமியில் வசிப்பவர், பூமியில் இருந்து வேறுபட்டவர், பூமி யாரை அறியவில்லை, பூமி யாருக்கு உடல், பூமியின் செயல்களை உள்ளிருந்து கட்டுப்படுத்துகிறதோ அவரே உன்னதமான ஆத்மா, உங்களுக்கும் அந்தர்யாமி” மேலும் அவர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறார்.

அந்தர்யாமி பிராமணம் என்பது யாக்ஞவல்கிய முனிவர் மற்றும் அருணியின் மகனான உத்தாலக முனிவர் ஆகியோரின் உரையாடல் ஆகும். மேலே உள்ள உரையில் ‘நீ’ என்ற சொல் யாக்ஞவல்கியரிடம் ஒரு கேள்வியை எழுப்பி அவரிடமிருந்து பதிலைப் பெற்ற உத்தாலகாவைக் குறிக்கிறது. யாக்ஞவல்கியர் 21 பொருட்களைக் கண்டறிந்து மேலே குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் கூறுகிறார். பூமி, நீர், நெருப்பு, வானம் (அந்தரிக்ஷா), காற்று, சொர்க்கம், சூரியன் (சூரியன்), திசை (திக்), சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், தேஜஸ், அனைத்து பூதங்கள், பிராணன் (மூச்சு), பேச்சு, கண்கள் ஆகிய 21 பொருள்கள். , காதுகள், மனம், தோல், ஜீவாத்மா மற்றும் விந்து.

பூமியைப் பற்றி அவர் கூறியது போல், “ஜீவாவுடன் வசிப்பவர், ஜீவாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவா அறியாதவர் மற்றும் ஜீவா உடலானது மற்றும் ஜீவாவின் செயல்களை உள்ளிருந்து கட்டுப்படுத்துகிறவனும் உயர்ந்த ஆன்மா என்று கூறுகிறார். அல்லது அந்தர்யாமி” யார் கண்கள், காதுகள் போன்ற புலன்கள் இல்லாமல் விஷயங்களை உணரக்கூடிய பகவான் ஸ்ரீமன் நாராயணராக இருக்கிறார், அதேசமயம் ஜீவாவில், அவர் தனது புலன்களால் மட்டுமே விஷயங்களை உணர முடியும். பரமாத்மா, ஜீவாத்மா வேறு என்ற உண்மையை இது தெளிவாக நிறுவுகிறது.

மேற்கூறியவை இருந்தபோதிலும், பூர்வபக்ஷி (எதிர்ப்பவர்) இந்த அந்தர்யாமி ஜீவா என்று கூறுகிறார், ஏனென்றால் இந்த சிற்றின்ப உணர்வு ஜீவாவுக்கு மட்டுமே பொருந்தும், பரமாத்மாவுக்கு அல்ல; ஜீவாத்மாவைத் தவிர வேறு பார்ப்பனர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூத்ரகாரர் இந்த வாதத்தை மறுத்து, “அந்தர்யாமி அதிதைவாதி லோகாதிஷு தத்தர்மவ்யபதேசாத் என்ற சூத்திரத்தில் மட்டுமே அந்தர்யாமி பரமாத்மா என்று கூறுகிறார். “அந்தர்யாமி பரமாத்மா என்று அர்த்தம், அந்தர்யாமி பிராமணத்தில் களங்கமில்லாதவன் அந்தர்யாமி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

2வது பாதத்தில் ஐந்தாவது அதிகாரம் அத்ரிஸ்யத்வாதி குணகாதிகாரன். பிராமணன் புலன்கள் இல்லாவிட்டாலும் பார்க்க முடியும் என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டதை அடுத்து இந்த அதிகாரம் வருகிறது. ஆதலால் பார்க்கும் செயல் கேட்காத இடத்தில் அந்த பொருள் பிரம்மம் அல்லாததாக இருக்க வேண்டும். அது பிரகிருதியாகவோ அல்லது பிரதாபனாகவோ கூட இருக்கலாம், இது முதன்மையான பொருளாகும். இந்த அதிகாரத்தில் மேற்கூறிய கருத்து மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில் உள்ள ஒரு உரை. இதில் சன்னக முனிவர் அங்கீராச முனிவரை அணுகி, “உலகில் உள்ள மற்ற எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்வதன் மூலம் பொருள் எது?” என்று கேட்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் யாரை அறிந்து கொள்ள முடியும் என்பதை அறிவதன் மூலம் பிரபஞ்சத்திற்கு காரணமான நபரைப் பற்றிய கேள்வி. அங்கிராச முனிவர் சன்னகத்திற்குப் பதிலளித்தார், அறியப்பட வேண்டிய இரண்டு பிரிவுகள் உள்ளன, அவை அபரவித்யா மற்றும் பரவித்யா என்று அழைக்கப்படுகின்றன. அபரவித்யா என்பது ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம் மற்றும் அதர்வ வேதம் மற்றும் இந்த நான்கு வேதங்களின் ஆறு துணைகளைக் குறிக்கிறது. சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம் மற்றும் கல்பம் ஆகியவை இந்த ஆறு துணை. இவை ஏற்கனவே விரிவாகக் கூறப்பட்டுள்ளன, இங்கு மீண்டும் கூறத் தேவையில்லை. மேலே உள்ளவற்றில் ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் அடங்கும்.

இந்த உபநிடதத்தில் அக்ஷரா என்று பெயரிடப்பட்ட பிரம்மனைப் பற்றியது பரவித்யா. இந்த அக்ஷரத்தைப் பற்றி இந்த உபநிடதம் கூறுகிறது, அக்ஷரமாகிய பரமபிதாவானது கண், காது, மூக்கு, தோல், நாக்கு ஆகிய ஐந்து புலன்களிலிருந்து எழும் அறிவாலும், கைகள், பேச்சு, கால்கள், கழிச்சல் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களின் செயல்களாலும் உணர முடியாது. பிறப்பு உறுப்புகள். அவர் எந்த கோத்திரத்தையும், இனத்தையும் சார்ந்தவர் அல்ல. அதற்கு பிராமணர், க்ஷத்ரியர் போன்ற எந்த ஜாதியும் கிடையாது.அவருக்கு புலன்கள் கிடையாது. அவர் நித்தியமானவர் மற்றும் எங்கும் நிறைந்தவர். அந்தர்யாமியாக அவர் எந்த உயிரினத்திலும் நுழையும் திறன் கொண்டவர் – அவரது அணுவின் அளவு காரணமாக அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்றவர் மற்றும் ஞானிகளால் முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானவர். அதே உபநிடதத்தில் மற்றொரு கூற்று உள்ளது, இது ஜீவனை விட பிரம்மம் உயர்ந்தது என்றும், அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் பிரகிருதியை விட ஜீவன் உயர்ந்தது என்றும் கூறுகிறது. எனவே இந்த உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்ஷரா என்ற வார்த்தை உண்மையில் பிரம்மனை (பரமாத்மா) குறிக்கிறதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. இந்தச் சூழலில் ஜீவனும் பிரகிருதியும் மட்டுமே பொருத்தமானவை என்று பூர்வபக்ஷி கூறுகிறது. இந்த வாதத்தை மறுப்பதற்காக சூத்திரம் இங்கே வருகிறது, அது “அத்ரிஷ்யத்வாதி குணக தர்மோக்தே:”. பராவித்யாவில் புலன்களால் உணர முடியாதவர் என்று குறிப்பிடப்பட்டவர், அனைத்தையும் அறிந்தவராகவும், பிற குணங்களை உடையவராகவும் குறிப்பிடப்படுவதால், அவர் பரமாத்மா என்று பொருள்.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அல்லது கடைசி அதிகாரத்திற்கு “வைஷ்வாணரா” என்று பெயர். முந்தைய அதிகாரத்தில் அக்ஷரர் என்று பெயர் பெற்ற பகவான் ஸ்ரீமன் நாராயணன் மூன்று உலகங்களையும் தனது உடலாகக் கொண்டவர் என்றும் அவர் ட்ரைலோக்ய சாரிரகன் என்றும் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முண்டக உபநிடதம் இந்த ட்ரைலோக்ய சாரிரக பரமாத்மாவிற்கு, அக்னி அல்லது நெருப்பு தலை, சூரியன் மற்றும் சந்திரன் அவரது கண்கள் என்று கூறுகிறது; திசைகள் அவன் காதுகள்; வேதங்கள் அவன் பேச்சு; காற்று அவன் மூச்சு; பிரபஞ்சம் அவரது இதயம் மற்றும் பூமி, அவரது கால்கள். இறுதியாக அவர் சர்வபூத அந்தராத்மா என்று வர்ணிக்கப்பட்டார், அவர் அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளார்ந்த ஆன்மா அல்லது அந்தர்யாமி. ட்ரைலோக்ய சரீரகத்வம் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்காக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது வேறு சில உடல்கள் சம்பந்தமாகவும் இருக்கலாம் என்றும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்பட்டது. எனவே இது ஸ்ரீமன் நாராயணனுக்குப் பொருந்தும் என்பதை மீண்டும் நிலைநாட்ட இந்த அதிகாரம் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் உபநிஷத உரை சாந்தோக்யோபநிஷத்தில் 5வது அத்தியாயத்தில் உள்ளது.

பிரச்சீன சால, சத்ய யாகு, இந்திரத்யும்ன, ஜனா, புடில என்ற ஐந்து பெரிய முனிவர்கள் நன்கு படித்தவர்கள், பரம ஆன்மாவைப் பற்றி தங்களுக்குள் விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வைஸ்வாணரைத் தியானித்துக் கொண்டிருந்த உத்தாலக முனிவரிடம் சென்றனர். ஆனால் உத்தாலகா அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க இயலாமையை ஒப்புக்கொண்டார், அதன் பிறகு ஆறு முனிவர்களும் கேகய ராஜ்யத்தின் மன்னன் அஸ்வபதியிடம் சென்றனர்.

அரசர் முனிவர்களை வரவேற்று அவர்கள் வருகையின் நோக்கத்தைக் கேட்டார். முனிவர்கள் அவரிடம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, முக்தியை அடைவதற்கான வழிமுறையான வைஸ்வானர பிரமவித்யாவில் தீட்சை பெற வந்ததாகக் கூறினார்கள். ராஜா ஒவ்வொரு முனிவரையும் தனித்தனியாக அழைத்து, அவர்கள் தியானத்தில் ஈடுபடும் விதம் அல்லது விதம் குறித்து அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்றார்.

பின்னர் அவர் வைஸ்வானர புருஷரைப் பற்றிய ஒவ்வொரு முனிவரின் பார்வையையும் சரிசெய்து, வைஸ்வானர வடிவில் உள்ள ஆறு முனிவர்களையும் ஒருங்கிணைத்த கருத்து பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய இறுதி பதில் புருஷன் என்று அவர்களிடம் கூறினார்.

இங்கு வைஸ்வாணரா என்ற வார்த்தை ஜாமீன் சாறு, மூன்றாவது பூதமான அக்னி, விண்ணுலகக் கடவுள் வைஸ்வாநரம் மற்றும் பரமாத்மாவைக் குறிப்பதால் ஐயம் நான்கு மடங்கு. எனவே பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் மேற்கூறிய சந்தேகங்களால் வைஸ்வாணரை மட்டுமே பரமாத்மா என்றும் வேறு யாரும் இல்லை என்றும் நிறுவுவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்கள்.

எனவே மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில் சூத்திரகாரர் சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார். வைஸ்வாணரா: சதாரண சப்த விசேஷத், “இதன் பொருள் வைஸ்வானர: பரமாத்மா, ஏனெனில் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பண்புக்கூறுகள் அவருக்கு மட்டுமே பொருந்தும், வேறு யாருக்கும் பொருந்தாது.

இந்த அதிகார முனிவரான பதராயணன், விசிஷ்டாத்வைத தத்துவ முறைக்கு மிக முக்கியமான மற்றும் மிக முக்கியமான விளைவுகளைப் பற்றிய தனது கருத்தைத் தருகிறார். வேதங்களில் கூறப்பட்டுள்ள வான கடவுளின் ஒவ்வொரு நாமத்தின் மூலத்தையும், மூலப் பின்னொட்டையும் ஆராய்வதன் மூலம் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு நேரடியாகப் பொருந்தும் என்று அவர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அக்னி என்ற பெயர் பரமாத்மாவுக்கு நேரடியாகப் பொருந்தும், அதாவது அக்ரம் நயதி என்ற பெயரைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஸ்ரீமன் நாராயணன் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த அனைத்து ஜீவர்களையும் மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதே போல வைஸ்வாநரம் என்றால் விஸ்வேஷம் நரணம் நேதா என்பது மேலே சொன்ன அதே பொருள். அதுபோலவே ருத்ரா என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணரே மோட்சம் முதலியவற்றை வழங்குவதன் மூலம் சம்சார நோயை அவர் ஒருவரே கரைப்பதால்.

சமன்வய அத்யாயா முழுவதுமே பிரபஞ்சத்திற்கு காரணமான பிரம்மனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜீவாவையும் பிரகிருதியையும் (உணர்வற்ற விஷயம்) பிரபஞ்சத்தின் காரணத்திலிருந்து விலக்குவதைக் குறிக்கும் உபநிடத நூல்களைக் கையாள்கிறது.

மூன்றாவது பாதத்தில் பத்து அதிகாரங்கள் உள்ளன, அவற்றில் ஏழு அதிகாரங்கள் சூழலுக்குள் உள்ளன மற்றும் மூன்று அதிகாரங்கள் சூழலுக்கு வெளியே உள்ளன. சூழலில் உள்ள அதிகாரங்கள் “சாக்ஷாத் சங்கதி” என்று கூறப்படுகிறது, அதாவது ஒன்றோடொன்று “நேரடி இணைப்பு” என்று பொருள்படும் மற்றும் சூழலுக்கு வெளியே உள்ள மூன்று அதிகாரங்கள் “பிரசங்கிகம்” (சூழல்) என்று அழைக்கப்படுகின்றன.

முதல் அத்தியாயத்தின் மூன்றாவது பாதம் “ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க” பாதம், ஏனென்றால் விவாதத்திற்கு வரும் உபநிஷத நூல்கள் ஜீவா அல்லது பிரகிருதியை நோக்கி தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன, அவை பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. ஏழு அதிகாரங்களிலும் சூத்ரகாரரால் இது மறுக்கப்படுகிறது.

1. முதல் அதிகாரம் தியுபவாதி அதிகாரம் எனப்படும். இது ஆறு சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

முந்தைய பாடலுடன் இந்த அதிகாரத்திற்கான இணைப்பு, வரிசை அல்லது சங்கதி பின்வருமாறு.

அத்ரிஷ்யத்வாதி குணகாதிகாரணமான முந்தைய பாதத்தின் ஐந்தாவது அதிகாரத்தில், அந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவுக்கு மட்டுமே உரியது, ஜீவா அல்லது ஆதிப் பொருளான பிரகிருதிக்கு அல்ல என்று நிறுவப்பட்டது. அதே முண்டக உபநிடதத்தில் ஜீவாவை நோக்கிய தெளிவான சுட்டியைக் கொண்டுள்ள அடுத்தடுத்த உச்சரிப்புகள் காரணமாக அது ஜீவாவாக இருக்கலாம் என்று சிலர் மீண்டும் சந்தேகிக்கிறார்கள். இது இங்கே மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை முண்டக உபநிடதத்திலிருந்து. இந்த உரை பின்வருமாறு கூறுகிறது.

பரமாத்மா (பிரம்மன்) பரமாத்மா (பிரம்மன்) பரலோகம், பூமி, ஆகாயம், மனம், மூச்சு மற்றும் அவருடன் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஆதரிக்கிறார், மேலும் அவர் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய உயர்ந்த கட்டுப்பாட்டாளராக அறியப்பட வேண்டும். எனவே பரமாத்மாவைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றிய பேச்சைக் கைவிட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் முக்திக்கான பாலம், அவர் சம்சாரம் அல்லது பிணைப்புக்கான பாலம், இதில் எதிர் கரை வைகுண்ட திவ்யலோகம் மற்றும் இந்த பாலம் நேரடியாக இந்த உபநிடதத்தில் அமிர்தம் என்று அழைக்கப்படும் மோட்சத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கிறார், மேலும் அவர் சக்கரத்தின் விளிம்புடன் ஸ்போக்களால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் மையத்தைப் போன்றவர். எனவே இங்கும் பரமாத்மா “நாடிகள்” எனப்படும் ஆயிரக்கணக்கான இரத்த நாளங்கள் மூலம் உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பல பிறவிகளை மேற்கொள்கிறார். அவர் அனைத்தையும் அறிந்தவர் மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் அறிந்திருக்கிறார். பிரணவத்தின் மூலம் அவரைத் தியானிக்க வேண்டும்.

பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் கூறுகையில், அக்ஷரா என்ற வார்த்தைக்கு பரமாத்மா என்று அர்த்தம் இல்லை, அது ஜீவா என்று தெளிவாகக் குறிக்கிறது, ஏனெனில் அவர் நாடியுடனான தொடர்பு மற்றும் இந்த உலகில் எண்ணற்ற பிறவிகளை எடுத்தார்.

த்யுப்வத்யதானம் ஸ்வஸப்தாத் என்று முதல் சூத்திரத்தில் கூறும் சூத்ரகாரரால் இதை மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

த்யுபவாத்யாயதனம் – சொர்க்கம், பூமி முதலியவற்றை ஆதரிப்பவர் பரமாத்மா, ஏனெனில்,

ஸ்வஸப்தாத் – ‘பரமாத்மா’வின் பிரத்தியேக பண்புகள் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரத்தியேக பண்புகள் பின்வருமாறு:

1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களின் ஆதரவாளர்

2. மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் சம்சாரப் பெருங்கடலுக்கு அவர் பாலம்.

3. இந்தச் சூழலில் உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆத்மா என்ற சொல் பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது.

4. எல்லாம் அறிந்தவராகவும், ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்தவராகவும் இருப்பது ஜீவாவுக்குப் பொருந்தாது, அது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.

5. பரமாத்மாவுக்கு கர்மா இல்லாததால் இவ்வுலகில் பிறக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், துன்மார்க்கரைத் தண்டித்து நல்லதைக் காக்க ராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் அல்லது அவதாரங்கள் வடிவில் தன் சொந்த விருப்பத்தின் பேரில் பல பிறவிகள் எடுக்கிறார். மக்கள். பக்தி யோகம் அல்லது சரணாகதி செய்த ஜீவன் தன் புண்ணியத்தையும், பாபத்தையும் துறந்து மோட்சத்தை அடைந்து, சம்சாரத்துடன் தொடர்பு கொண்டு மோட்சத்தை அடைந்து, திவ்யமங்கல விக்ரஹம் எனப்படும் பரமாத்மாவின் மிகவும் வசீகரமான மற்றும் அழகான பரமாத்மாவைக் கண்டு, பகவான் ஸ்ரீமனுக்குச் சமமாகிறான் என்றும் இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு சிலவற்றைத் தவிர அனைத்து அம்சங்களிலும் நாராயணனே.

எனவே இந்த உபநிடதத்தில் உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமதத்தை மட்டுமே குறிக்கிறது, ஜீவனை அல்ல என்பதை இது நிரூபிக்கிறது.

2.இந்தப் பாதத்தில் உள்ள இரண்டாம் அதிகாரம் பூம அதிகாரம் எனப்படும். முந்தைய அதிகாரத்துடனான தொடர்பு அல்லது சங்கதி என்னவென்றால், முந்தைய அதிகாரத்தில் பரமாத்மாவின் சூழலில் எந்த இடைவெளியும் இல்லை, எனவே அக்ஷரா பரமாத்மா என்று நிறுவப்பட்டது. இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் ஜீவாவின் சூழலில் எந்த இடைவெளியும் இல்லை, மேலும் இந்த உபநிடத உரை ஜீவாவை மட்டுமே குறிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரத்தில் களையப்படுகிறது.

விவாதத்திற்கு வரும் உபநிஷத உரை சாந்தோக்யோபநிஷத்தின் ஏழாவது அத்தியாயம். இந்த அத்தியாயம் “பூம வித்யா பிரகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உபநிஷத உரையின் சுருக்கமான சுருக்கம் பின்வருமாறு: நாரத முனிவர் சனத் குமார முனிவரை அணுகி, பிரம்மனைப் பற்றிய அறிவை அவருக்குத் தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வணவேதம், இதிகாசமான ஸ்ரீமத் ராமாயணம், புராணங்கள், ஐந்தாம் வேதம், ஸ்ரீ மகாபாரதம், இலக்கணம், சடங்குகள், கணிதம், பாடங்கள் போன்ற அனைத்துக் கல்விகளிலும் தேர்ச்சி பெற்றதாக நாரத முனிவர் சனத்குமாரவிடம் கூறுகிறார். இயற்கைப் பேரிடர்களின் முன்னறிவிப்பு, நிலத்தடியில் மறைந்துள்ள செல்வத்தைக் கண்டறியும் வழியைக் கையாள்வது, தர்க்கம், ஏகாயன சகா என்று அழைக்கப்படும் கோயில்களில் பூஜைகள் நடத்தப்படுவதைக் கையாளும் பொருள்.

நாரதர் மேலும் கூறும்போது, ​​மேற்கூறிய அனைத்துக் கல்விக் கிளைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், பிராமணத்தைப் பற்றிய ஞானம் பெறாததாலும், ஆத்மா வித்தாகாததாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆத்மா என்ற சொல் பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது. அவர் சனத்குமார முனிவரிடம் பிராமண அறிவைத் தொடங்குவதன் மூலம் துன்பத்திலிருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறார்.

சனத்குமார பாஹ்மனைப் பற்றி அவருக்குப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, பல பொருட்களைக் குறிப்பிட்டு, நாரதரிடம் ஒவ்வொரு பொருளையும் பிரம்மன் அல்லது பரமாத்மா என்று கருதி தியானிக்கச் சொல்கிறார். பொருள்கள் நாமம் (பெயர்), பேச்சு, மனம், சித்தம், உறுதி, வலிமை, உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், மன்மதம், திசைகள், பிராணன் அதாவது ஜீவா மற்றும் இறுதியாக இந்த உபநிஷத்தில் பரமாத்மா சத்யா.

நாரதர் நாமத்தில் தொடங்கி ஒவ்வொன்றையும் தியானம் செய்கிறார், அதை நம்பாமல் மீண்டும் சனத்குமாரனிடம் வந்து, தான் முன்பு தியானித்ததை விட உயர்ந்த பொருள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். பிராணனை (இந்தச் சூழலில் ஜீவா என்று பொருள்படும்) தியானம் செய்த பிறகு, பிராணனை விட உயர்ந்த பொருள் ஏதும் உண்டா என்று சனத்குமாரனிடம் கேட்கவில்லை. பிராணன் என்றால் சுவாசம் என்றாலும், இந்த சூழலில் அது ஜீவாவைக் குறிக்கிறது, ஏனென்றால் ஜீவா எப்போதும் பிராணனுடன் இருக்கும்.

இறுதியாக சனத்குமாரர் நாரதரிடம், ஒருவன் வேறு எதையும் பார்க்கவில்லை, வேறு எதையும் கேட்கவில்லை, வேறு எதையும் அறியவில்லை, அது எல்லையற்ற பேரின்பம் என்றும், வேறு ஏதாவது காணப்படுகிறதோ, கேட்கிறதோ அல்லது அறியப்படுகிறதோ அங்கு அற்பமானதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.

சனத்குமாரர் மேலும் நாரதரிடம், பரமாத்மாவான பரமாத்மாவை உச்சபட்ச சத்யாவை தியானிக்கச் சொல்கிறார்.

நாரதர் மேலும் சனத்குமாரனிடம் முழு பிரபஞ்சத்தின் ஆதரவாளர் யார் என்று கேட்கிறார். பரமாத்மா (பிரம்மன்) ஆதரவாளர் என்று சனத்குமார பதிலளிக்கிறார். நாரதர் மீண்டும் பரமாத்மாவை ஆதரிப்பவர் யார் என்று கேட்கிறார், இதற்குப் பதில் பரமாதா தன்னை ஆதரிக்கிறார், தனி ஆதரவாளர் இல்லை.

இங்கு பூமா என்ற வார்த்தையின் விளக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பூர்வபக்ஷி அல்லது எதிரி, பூமா ஜீவன் மட்டுமே, பரமாத்மா அல்ல என்று கூறுகிறார், ஏனென்றால் நாரதருக்கு சனத்குமாரர் செய்த உபதேசம் பிராணனில் நிறுத்தப்பட்டது, அதாவது இந்த சூழலில் ஜீவன். “பூமா சம்ப்ரசாதாத் அத்யுபதேசத்” என்று கூறும் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தின் மூலம் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

பூமா என்பது பரமாத்மா ஏனெனில், ஸம்ப்ரசாதாத் அத்யுபதேசத் – ஸம்ப்ரஸாதா ஜீவன், பரமாத்மா ஜீவாவை விட எல்லா அம்சங்களிலும் மேலானதாக இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பூமா என்பதன் பொருள் எல்லையற்ற ஆனந்தம். பரமாத்மாவின் சில பிரத்தியேக குணாதிசயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன, அவை பரமாத்மா என்பது அவரது உள்ளார்ந்த இயல்பினால் உயர்ந்த குறிக்கோள் ஆகும். பரமாத்மா தன்னை ஆதரிக்கிறார், மேலும் அவர் அனைத்து உயிரினங்களுக்கும் அந்தர்யாமி அல்லது உள் ஆத்மா.

3. இந்தப் பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரத்திற்கு அக்ஷராதிகாரன் என்று பெயர். இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் உள்ள இணைப்பு அல்லது ‘சங்கதி’ பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் பரமாத்மா தன்னை ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. பிரம்மன் (பரமாத்மா) அல்லாத பிற பொருளும் தன்னைத்தானே ஆதரிக்கும் ஐயத்தை நீக்கவே இந்த அதிகாரம் வருகிறது.

இந்த அதிகாரத்திற்குரிய விஷயவாக்கியமான உபநிஷத உரை பிருஹதாரண்யக உபநிஷத்தில் இருந்து வந்தது.

மிதிலா சாம்ராஜ்யத்தின் மன்னன் ஜனக, பிரம்மனைப் பற்றி ஆழ்ந்த ஞானம் உள்ள அனைத்து முனிவர்களின் மாநாட்டைக் கூட்டி, பிராமணத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்ற ஒருவருக்கு ஒவ்வொரு பசுவின் ஒவ்வொரு கொம்பிலும் தங்கம் வைக்கப்பட்ட கன்றுகளுடன் கூடிய 1000 பசுக்களை அற்புதமான பரிசாக அறிவிக்கிறார். . ஆரம்பத்தில் சில காலம் மாநாட்டில் யாரும் எழுந்து பரமாத்மாவைப் பற்றி தனக்கு ஆழ்ந்த அறிவு இருப்பதாகக் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து யாக்ஞவல்கிய முனிவர் எழுந்து தனது மாணவனை அழைத்து, கன்றுகளுடன் கூடிய அனைத்து பசுக்களையும் தனது ஆசிரமத்திற்கு ஓட்டச் சொன்னார். இதைப் பார்த்த மற்றவர்கள், யாக்ஞவல்கியர் தான் பிராமணீஷ்டா என்று நிரூபிக்காமல், எப்படி அந்த அற்புதமான பரிசைப் பெற முடியும் என்று எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். சத்தம் தணிந்ததும் அங்கு கூடியிருந்த முனிவர்கள் யாக்ஞவல்கியரிடம் பிரம்மனைப் பற்றிய கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்பத் தொடங்கினர், அதற்கு யாக்ஞவல்கியர் நிதானமாகவும் உறுதியாகவும் பதிலளித்தார். கார்கி என்று பெயர் கொண்ட ஒரு பெண் யாக்ஞவல்கியரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறாள். அக்காலத்தில் பெண்களுக்கும் பிராமணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆண்களுக்கு நிகரான உரிமை இருந்தது.

அவளது முதல் கேள்வி, ஓ யாக்ஞவல்கியா, இதில் பூமிக்குக் கீழே உள்ள லோகங்கள் அல்லது உலகங்கள் (பூலோகம்), வானத்துக்கும் மேலே உள்ள லோகங்களும், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள லோகங்களும் நூல்கள் இருக்கும் துணியைப் போலவே நீளமாகவும் அகலமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. நீளமாகவும் அகலமாகவும் பிணைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றிற்கு யாக்ஞவல்கியரின் பதில் ஆகாசம் என்பது அனைத்து உலகங்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பொருளாகும். இந்த பதிலில் மகிழ்ச்சியடைந்த கார்கி அவருக்கு வணக்கம் செலுத்தினார். ஆகாசா எந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ளது அல்லது ஆதரிக்கப்படுகிறது என்பது அவளுடைய இரண்டாவது கேள்வி. யாக்ஞவல்கியாவின் பதில் என்னவென்றால், அக்ஷரா என்பது ஆகாஷாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது அக்ஷரா ஆகாஷாவை ஆதரிக்கும் பொருளாகும்.

மேலும், இந்த அக்ஷரா பருமனானதல்ல, மெலிதானது, உயரமானது அல்ல, குட்டையானதும் இல்லை, சிவந்திருப்பதும் இல்லை, அல்லது உருவம் இல்லாதது, பாவமற்றது, எண்ணெய் இல்லை, கருமை இல்லை, காற்று இல்லை, வானமும் இல்லை, சுவையும் இல்லை, கண்களும் இல்லை என்று கூறுகிறார். காது அல்ல, பேச்சு அல்ல, மனம் அல்ல, நெருப்பு அல்ல, மூச்சு இல்லை, முகம் இல்லை, புலன்கள் இல்லை, அது உள்ளும் இல்லை, புறமும் இல்லை, எதையும் உண்பதில்லை. இந்த அக்ஷரா சூரியன் மற்றும் சந்திரன் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இங்கு அக்ஷரா என்ற வார்த்தையின் விளக்கம் கேள்விக்கு உட்பட்டது. இந்த அக்ஷரம் பிரகிருதியாகவோ அல்லது ஜீவாவாகவோ இருக்க வேண்டும் என்றும் அது பரமாத்மாவாக இருக்க முடியாது என்றும் எதிரி கூறுகிறார். அவரது வாதம் கார்கியின் கேள்வியில் உள்ளது, அதில் ஆகாஷாவின் ஆதரவு என்ன என்று கேட்கப்பட்டது. ஆகாஷாவை பிரகிருதி அல்லது பிரதானம் மட்டுமே ஆதரிக்கிறது, எனவே அக்ஷரா பிரகிருதி மட்டுமே. எந்த உயிரற்ற பொருளும் ஜீவாவால் ஆதரிக்கப்படுவதால் இந்த அக்ஷரா ஜீவாவாக கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் தனது “அக்ஷரம் அம்பராந்தத்ருதே:” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார். இதன் பொருள் பின்வருமாறு.

அக்ஷரம் – பரமாத்மா ஏனெனில், அம்பராந்தேத்ருதே: – இந்த பரமாத்மா நாம் பார்க்கும் அம்பரம் அல்லது வானத்திற்கு காரணமான அவ்யாகிருதம் அல்லது பிரகிருதியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாவது சூத்திரத்தில் அக்ஷரா ஜீவா என்பது நிராகரிக்கப்பட்டது. ஆக அக்ஷரா பரமாத்மா.

4. இந்த பாதத்தில் 4வது அதிகாரத்திற்கு ஈக்ஷதி கர்மாதிகாரணம் என்று பெயர். இதற்கு ஒரே ஒரு சூத்திரம் உள்ளது.

இந்த அதிகாரம் அல்லது சங்கதிக்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தின் உபநிடத உரையின் இறுதிப் பகுதியில், பரமாத்மாவை நமது நிர்வாணக் கண்களால் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் காணக்கூடிய அவரது திவ்யத்மா ஸ்வரூபம்.

எனவே இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் சொல்லப்பட்ட புருஷன் பரமாத்மாவாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரத்தில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் விஷயவாக்கியம் (உபநிஷத உரை) பிரஸ்னோபநிஷத்தில் இருந்து வந்தது.

இந்த பிரஸ்னோபநிஷத்தில் சுகேஷா, சத்யகாமா, கார்க்யா, கௌசல்யா, பார்கவ மற்றும் கபந்தி ஆகிய ஆறு முனிவர்கள் பிரம்ம ஞானத்தில் தீட்சை பெறுவதற்காக பிப்பலத முனிவரை அணுகுகிறார்கள். பிப்பலாதா அவர்களிடம் ஒரு வருடம் கண்டிப்பான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்குமாறும், பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்கவும் பதில்களைப் பெறவும் கூறுகிறார். அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் தனக்குத் தெரிந்தால் தான் பதிலளிப்பேன் என்று பணிவுடன் பிப்பலாதா முனிவர் அவர்களிடம் கூறுகிறார்.

மேலே உள்ள ஒவ்வொரு ஞானிகளும் அவரிடமிருந்து கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறுகிறார்கள். எனவே இந்த பிரஸ்னோபநிஷத்தில் ஆறு கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் உள்ளன.

சத்யகாம முனிவரின் கேள்வி என்னவென்றால், ஒருவர் இறக்கும் வரை பிரணவத்தில் தியானம் செய்தால் அவர் எந்த உலகத்திற்கு செல்கிறார்.

பிரணவ தியானம் பிரணவ உபாசனை எனப்படும். பிரணவ உபாசனையில் மூன்று வகை உண்டு.

1. ஏகமாத்ரா பிரணவ உபாசனா

2. த்விமாத்ரா பிரணவ உபாசனா

3. திரிமாத்ரா பிரணவ உபாசனா

மாத்ரா என்பது ஒரு நொடி அல்லது தருணத்தைக் குறிக்கிறது.

எனவே ‘ஏக மாத்ரா’ என்பது பிரணவ மந்திரத்தை உச்சரிக்க எடுக்கும் சாதாரண நேரத்தை குறிக்கிறது. த்விமாத்ரா என்பது ஒரே பிரணவத்தை உச்சரிக்க எடுக்கும் நேரத்தின் இரட்டிப்பாகும், அதாவது ஏகாமாத்ரா பிரணவத்தை விட மெதுவாகவும், திரிமாத்ரா பிரணவ உபாசனையில் எடுக்கும் நேரத்தை விட மூன்று முறையும் ஆகும்.

மேற்கூறிய உபாசனைகளின் பலன்கள் (1) ஏகாமாத்ரா பிரணவத்திற்காக தியானம் செய்பவர் மனுஷ்ய லோகத்தை அடைகிறார், அதாவது ரிக்வேத மந்திரங்கள் அவருக்கு மனுஷ்ய லோகத்தை வழங்குகின்றன, அதாவது அவர் இந்த உலகில் மரியாதையையும் பதவியையும் கட்டளையிடுகிறார், பின்னர் பரமாத்மாவை தியானிக்கத் தொடங்குகிறார். த்விமாத்ரா பிரணவத்தின் தியானம் செய்பவன் சொர்க்கத்தை அடைகிறான், அவன் யஜுர் வேதத்தில் உள்ள மந்திரங்களால் இந்த லோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இன்பங்களை அனுபவித்த பிறகு மீண்டும் இந்த உலகில் பிறக்கிறான்.

3. திரிமாத்ரா பிரணவ தியானம் செய்பவர் ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்தை அடைந்து சாமவேதத்தில் உள்ள மந்திரங்களால் இந்த லோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தியானத்தின் போது அவர் பரமாத்மாவைத் தன் சுயத்தில் காண்கிறார். இந்த பரமாத்மா, தியானம் செய்பவரின் இதயத்தில் அந்தர்யாமியாக வசிப்பதால், “பரத் பரம் புரிஷயம் புருஷம்” என்று அழைக்கப்படுகிறார். இந்த அந்தர்யாமி 4 தலை பிரம்மாவாகிய ஜீவ கானாவை விட உயர்ந்தது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், இந்த “பரத் பரம்புருஷர்” ஹிரண்யகர்ப்பா, இல்லையெனில் சதுர்முக பிரம்மா அல்லது பரமாத்மா என்று அழைக்கப்படுகிறாரா என்பதுதான்.

பூர்வபக்ஷி, மனுஷ்ய லோகத்திற்கு மேலான சொர்க்கத்திற்கு தர்க்கரீதியாக லோகம் இருப்பதால் தான் ஹிரண்யகர்பா என்றும், தியானத்தின் பொருளான இந்த பரத் பரம்புருஷன் ஹிராயண கர்பா என்றும் கூறுகிறார்.

இந்த வாதம் “ஈக்ஷாதிகர்ம வ்யாபதேஷாத் ச:” என்ற சூத்திரத்தில் மறுக்கப்படுகிறது, அதாவது ச : பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரமாத்மா, ஏனெனில் “ஈக்ஷதி கர்மா” – தியானத்தின் பொருள் மற்றும் தியானத்தின் போது பார்க்கப்படும் பொருள்.

வியாபதேசத் – பரமாத்மாவுக்கு மட்டுமே உபநிடதத்தில் சில பிரத்தியேக குணாதிசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அவர் பசி, தாகம், துக்கம், மாயை, முதுமை மற்றும் மரணம் ஆகிய ஊர்மிஷட்கங்கள் இல்லாதவர், பயம் இல்லாதவர் மற்றும் அவர் முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானவர் என்பதால் உயர்ந்தவர். .

5. மூன்றாவது பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரத்திற்கு தஹராதிகாரன் என்று பெயர். இது பத்து சூத்திரங்களைக் கொண்டது.

முந்தைய அதிகாரத்துடனான இணைப்பு அல்லது ‘சங்கதி’ பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் ஒவ்வொரு உடலின் இதயத்திலும் வசிப்பவர் பரமாத்மா என்று நிரூபிக்கப்பட்டது. அதே பிரமாத்மா தான் பிரசித்தி பெற்ற மற்றும் நாம் பார்க்கும் ஆகாசம் என்று கூறப்படுகிறது. எனவே அந்தர்யாமியாக இதயத்தில் வசிப்பவர் பரமாத்மாவாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரசபையில் தீர்ந்தது.

தர்க்கரீதியாக விவாதத்திற்கு வரும் உபநிஷத உரையானது சந்தோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயமான தஹரவித்யாவைக் கையாளும் கடைசி அத்தியாயமாகும், இது மோட்சத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும்.

2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குகள், வாய் மற்றும் இரண்டு கழிவறைகள் ஆகிய ஒன்பது திறப்புகள் அல்லது வெளியேறும் புள்ளிகளைக் கொண்ட மனித உடல் & பகவான் ஸ்ரீமன் நாராயணன் வசிக்கும் இடம் என்று இந்த உபநிடத உரை கூறுகிறது. இந்த உடல் பிரம்மபுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த இறைவனை தியானிக்க வேண்டும் என்றும், பகவான் ஸ்ரீமத் நாராயணனுக்குள் இருக்கும் எட்டு அருளும் பண்புகளையும் தியானிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மனித உடலின் இதயத்தில் அவர் வசிக்கும் இடம் சிறியதாகவும் தாமரை வடிவமாகவும் இருப்பதால் அவர் தஹராகாஷா அல்லது வெறுமனே தஹாரா என்று அழைக்கப்படுகிறார். தஹரா என்றால் மிகவும் சிறியது. எட்டு சுப குணங்கள்.

1. அபஹதபாப்மா – பாவமற்ற அல்லது களங்கமற்ற

2. விஜரா: – முதுமை இல்லாதது அல்லது முதுமையால் துன்பப்படாமல் இருப்பது.

3. விம்ருத்யு: – மரணத்திற்கு உட்பட்டது அல்ல.

4. விசோகா:- எந்த விதமான துக்கத்திற்கும் ஆளாகாதவர்.

5. விஜித்சா:- பசி இல்லை

6. அபிபாச:- தாகம் இல்லை.

7. சத்யகாமா:- ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்றும் திறன் கொண்டது.

8. சத்ய சங்கல்பம்: தான் விரும்பிய அனைத்தையும் செய்யும் திறன் கொண்டவர்.

இந்த எட்டு குணாதிசயங்கள் “குணாஷ்டகம்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த தஹர ஆகாஷம் நாம் காணும் வானத்தைப் போல ஏராளமாக உள்ளது என்றும் அவர் போக்யம், போகஸ்தானம், போகோபகரணம் மற்றும் போக்தா போன்றவற்றிற்கு துணை என்றும் உபநிஷதம் மேலும் கூறுகிறது.

இங்கே போக்தா என்பது ஜீவாவாக இருக்கும் அனுபவிப்பவர்,

போக்யா என்பது இன்பத்தின் பொருள்

போகஸ்தானம் இன்பம் தரும் இடம்

போகோபகரணம் – இன்பத்திற்குப் பயன்படும் விஷயங்கள்.

இவ்வுலகில் மனிதன் எதை விரும்புகிறானோ அது தஹரா அக்ஷனுக்குள் இருக்கிறது, அதாவது ‘பரமாத்மா’வாக இருக்கும் “தஹராகாஷா” இன்பத்தின் உச்சப் பொருள்.

இந்த உபநிடதம் மேலும் கூறுகிறது, தஹராகாசத்திலும், எட்டு குணங்களிலும் தியானம் செய்பவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தியை அடைகிறார். ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்தை அடைந்த பிறகு, ‘முக்தாத்மா’ க்காக, புண்ய மற்றும் பாபாவை உள்ளடக்கிய கர்மாவின் காரணமாக சம்சார பந்தத்தில் இருக்கும் போது செயலற்ற நிலையில் இருக்கும் மேற்கண்ட எட்டு “குணங்கள்” மலரும், அதாவது முக்தாத்மா இந்த 8 குணங்களையும் உடையவர் என்று அர்த்தம். பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சமமாகிறார். முக்தாத்மா எங்கும் எங்கும் பயணம் செய்ய சுதந்திரமாகி, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் உடலாகவும், பரமாத்மாவுக்குக் கீழ்ப்பட்டதாகவும் பார்க்கிறது. முக்தி பெற்ற ஆன்மாவாகிய முக்தாத்மாவுக்குத் தன் தாய், தந்தையர்களைப் பார்க்கும் சுதந்திரம் உண்டு. நான்கு தலை பிரம்மாவின் இருப்பிடமான சத்யலோகத்தில் தொடங்கி “பாதாலா” வரை 14 உலகங்களை உள்ளடக்கிய இந்த சம்சாரத்தில் அவரது முந்தைய எண்ணற்ற பிறவிகளின் சகோதரர்கள் மற்றும் பிற உறவினர்கள். 14 உலகங்களின் கொத்து ஒரு பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஸ்ரீமன் நாராயணனின் லீலா விபூதியில் எண்ணற்ற பிரம்மாண்டங்கள் உள்ளன. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை.

இங்கு “தஹராகாஷா” என்பது ஜீவா, வானமா அல்லது பரமாத்மா என்ற சந்தேகம் எழுகிறது. வானம் பூத ஆகாஷா என்று அழைக்கப்படுகிறது. பூர்வபக்ஷி தஹராகாஷம் பூதாகாஷம் என்று கூறுகிறது, ஏனெனில் இரண்டும் ஆகாஷாவின் பெயரைக் கொண்டுள்ளன, மேலும் ஆகாஷா என்ற சொல் பூத ஆகாஷத்தில் மட்டுமே பிரபலமானது மற்றும் பிரபலமானது. மேற்கூறிய போக்யம், போகோபகரணம், போகஸ்தானம் மற்றும் போக்த்ரியுவர்காவை உள்ளடக்கிய பிரபஞ்சம் முழுவதையும் ஆதரிப்பதே தஹர ஆகாஷம் என்று உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளதால், ‘தஹர ஆகாஷா’ பூத ஆகாஷமாக இருக்க முடியாது என்று சூத்ரகாரர் இந்த வாதத்தை நிராகரிக்கிறார். ‘பூத ஆகாஷா’ விஷயத்தில் சாத்தியம்.

பிற்பகுதியில் இந்திரனிடம் கூறப்படும் பிரஜாபதியின் (சதுர்முக) வார்த்தைகளின்படி, ஏற்கனவே செயலற்ற நிலையில் இருந்த எட்டு குணங்கள் மலரும் இடத்தில் சம்ப்ரசாதா என்று அழைக்கப்படும் ஜீவன் மோட்சத்தை அடைகிறான் என்று கூறப்படுவதால், ‘தஹரா ஆகாஷா’ ஜீவாவாக இருக்கலாம் என்று எதிரியும் உணர்கிறான். இந்த உபநிடதமும் இந்தப் பகுதியும் ‘பிரஜாபதி வாக்யா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “தஹரா உத்தரேப்யா” என்று படிக்கும் சாத்தியத்தை சூத்ரகாரம் நிராகரிக்கிறது. இந்த சூத்திரத்தின் பொருள் “தஹரா:” அதாவது தஹரா ஆகாஷா என்பது ‘பரப்ரஹ்மன்’ அல்லது ‘பரமாத்மா’ என்பதால்,

உத்தரேப்யா: இந்த உபநிடதத்தின் அடுத்த பகுதி, தஹரா அக்ஷே முழு பிரபஞ்சத்திற்கும் ஆதரவாகவும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மேலான கட்டுப்பாட்டாளராகவும் உள்ளது என்றும் இந்த அம்சங்கள் ஜீவாவின் விஷயத்தில் நிராகரிக்கப்படுகின்றன என்றும் கூறுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ‘முக்தாத்மா’வில் எட்டு குணங்கள் மலர்வது கூட பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளாலும் விருப்பத்தாலும் மட்டுமே அதுவும் சாத்தியமில்லை.

6. இந்த 3வது பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் “பிரமிதா அதிகாரம்” எனப்படும். இந்த அதிகாரத்தில் 4 சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் தர்க்கரீதியான தொடர் இணைப்பு விளக்கப்பட்டுள்ளது. தஹரா அதிகாரத்தில், உபாசகர் அல்லது தியானியின் இதயத்தில் வசிக்கும் பரமாத்மாவான தஹராகாஷா மிகவும் சிறியவர் என்றும், இது தியானத்திற்காக சொல்லப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்த மிகச் சிறிய அளவு ஜீவாவுக்கும் பொருந்தும், எனவே இதயத்தில் வசிப்பவர் ஜீவாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இந்த சந்தேகத்தை நீக்க இந்த அதிகாரம் அவசியமாகிறது அல்லது பொருத்தமானதாகிறது. இந்தச் சங்கதியை வேறொரு வகையிலும் விளக்கலாம். முந்தைய தஹராதி கரணத்தில் ‘பரமாத்மா’ மிகவும் சிறியது என்று கூறப்பட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும் மற்றும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து வடிவங்கள் உள்ளன, அவை பின்வருமாறு.

(அ) ​​பரா – இந்த வடிவம் ஸ்ரீவைகுண்ட திவ்யலோகத்தில் அல்லது பரமபதத்தில் உள்ளது, இது ஆதிசேஷா, கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யாக்களால் மற்றும் முக்தி பெற்ற ஆத்மாக்களால் அனுபவிக்கப்படுகிறது. இந்த பாரா வடிவத்திற்கு ‘பரவாசுதேவா’ என்று பெயர். அஷ்டாக்ஷர ஜபம் செய்யும் போது இந்த வடிவத்தை தியானிக்க வேண்டும். பரவாசுதேவர் தனது மனைவியான மகாலட்சுமியுடன் எப்போதும் இருக்கிறார்.

(ஆ) வியூஹா – இந்த வடிவம் பாற்கடலான க்ஷீரப்தியில் உள்ளது. வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னா, அநிருத்தன் என்று நான்கு வ்யூஹ வடிவங்கள் உள்ளன. பரவாசுதேவா மற்றும் வ்யூஹ, வாசுதேவா இடையே உள்ள வேறுபாடு நடைமுறையில் பூஜ்யமாக உள்ளது. பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழிந்ததற்கு சங்கர்சன வடிவில் உள்ள பரமாத்மாவே காரணம்.

பிரத்யும்ன வ்யூஹ வடிவில் உள்ள பரமாத்மா பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக உள்ளார். அநிருத்த வியூஹ வடிவில் உள்ள பரமாத்மா பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்.

(c) விபவ – பகவான் ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் விபவ வடிவங்கள்.

(ஈ) அர்ச்சா – ஸ்ரீமன் நாராயண பகவான் அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் விக்ரஹ வடிவில் அல்லது சாலிகிராம வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், மேலும் இந்த வடிவம் அர்ச்ச வடிவம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒருவரால் வணங்கப்படுகிறது.

(இ) அந்தர்யாமி – அந்தர்யாமியின் வடிவில் உணர்வுள்ளவராகவோ அல்லது உணராதவராகவோ இருந்தாலும், இறைவன் ஒவ்வொரு உயிரினத்திலும் வசிக்கிறார், அவர் ‘உள் ஆத்மா’ அல்லது ‘உயர்ந்த ஆன்மா’ அல்லது ‘உள் கட்டுப்பாட்டாளர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த அந்தர்யாமி வடிவம் இரண்டு வகைப்படும். முதல் வகை ஸ்வரூப அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது, இது எறும்புகள், கொசுக்கள், ஈக்கள், பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் உள்ளது. “ஸ்வரூபம்” என்பது உள்ளார்ந்த இயல்பு.

இரண்டாவதாக விக்ரஹ அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது, இதில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் உபாசகர்களின் இதயத்தில் ஒரு திட்டவட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் இந்த வடிவம் உபாசகர்களின் கட்டைவிரல் அளவில் உள்ளது, ஏனெனில் ‘உபாசகர்’ பரமாத்மாவின் திட்டவட்டமான மற்றும் மங்களகரமான வடிவத்தில் தியானிக்க வேண்டும். தியானம் எல்லாம் சாத்தியமில்லை. ஸ்வரூப அந்தர்யாமி மற்றும் விக்ரஹ அந்தர்யாமி உட்பட மேலே உள்ள அனைத்து வடிவங்களிலும், பகவான் ஸ்ரீமன் நாராயணர் எப்போதும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் இருக்கிறார். இந்த அதிகாரத்திற்கு வரும்போது, ​​விஷயவாக்கியம் கடோபநிஷத்தில் இருந்து வருகிறது, இதில் யம பகவான் நாச்சி கேடங்களை பின்வருமாறு கற்பிக்கிறார்.

உபாசகரின் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மா, உபாசகரின் கட்டை விரலின் அளவு கொண்டவர். நேற்று இருந்த, இன்று இங்கு இருக்கும், நாளை இருக்கப்போகும் அனைத்து உயிர்களுக்கும் அவன் தலைவன். பரமாத்மா உபாசகர் மீது கொண்ட ஆழ்ந்த பாசத்தின் காரணமாக உடலின் குறைபாடுகள் அல்லது குறைபாடுகளை புறக்கணிக்கிறார் மற்றும் வெறுப்பை உணரவில்லை.

உபாசகரின் உடலில் வசிப்பவர் ஜீவா அல்லது பரமாத்மா என்ற கேள்வி இங்கு எழுகிறது. மற்றோர் உபநிடதத்தில் அனைத்து புலன்கள் அல்லது இந்திரியங்களின் தலையாயிருக்கும் ஜீவன் கட்டைவிரல் அளவு மற்றும் உடல் முழுவதும் நகர்கிறது என்று கூறப்படுவதால் மட்டுமே அது ஜீவா என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

சூத்ரகாரர் இந்த வாதத்தை ஏற்கவில்லை, அவர் பரமாத்மா மட்டுமே என்று கூறி, “சப்தாதேவ ப்ரமிதஹ்” என்ற சூத்திரத்தை வழங்குகிறார்.

பிரமிதா: கட்டைவிரல் அளவுள்ள பொருள் ‘பரமாத்மா’ ஏனெனில் ‘சப்தாதேவா’ – இந்த உபநிடதத்தில் இறைவன் கடந்த காலத்தில் இருந்த அனைத்து உயிரினங்களுக்கும் எஜமானர் என்று கூறப்பட்டுள்ளது, அவை தற்போது உள்ளன மற்றும் எதிர்காலத்தில் உள்ளன.

இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரம் “ஹ்ருத்யபேக்ஷயதௌ மனுஷ்யாதிகாரத்வாத்”. உபாசகரின் உடலில் பரமாத்மா கட்டைவிரல் அளவில் இருக்கிறார் என்று கூறுகிறது, ஏனெனில் அவரது உடலில் அவ்வளவு இடம் மட்டுமே உள்ளது. இந்த குறிப்பிட்ட உண்மை சில சந்தேகங்களுக்கு இடமளித்தது, இது சூத்ரகாரரால் நீக்கப்பட்டது. எனவே சூழலுக்கு அப்பாற்பட்ட பதராய முனிவரான சூத்ரகாரரால் மூன்று ‘அதிகாரங்கள்’ அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது.

இதில் முதல் அதிகாரம் “தேவதாதிகாரணம்” இது இந்திரன் உட்பட தேவதைகள் என்று அழைக்கப்படும் வானவர்கள் உபாசனை அல்லது தியானம் செய்து மோட்சத்தை அடைய தகுதியுடையவர்கள் என்பதை நிறுவுகிறது.

இதற்கு ஐந்து சூத்திரங்கள் உள்ளன. நிரீஷ்வர மீமாம்சகனாகிய இந்த அதிகரனுக்கு பூர்வபக்ஷி கூறுகிறாள், வானவர்களான தேவதைகள் சரீரம் இல்லாததால் உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள்.

தேவதைகளுக்கு ஐந்து விஷயங்கள் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் – உடல், யாகங்களில் செய்யப்படும் சலுகைகளை ஏற்றுக்கொள்வது, ஒரே நேரத்தில் பல யாகங்களில் தங்கள் இருப்பை உருவாக்குவது, பிரசாதங்களில் மகிழ்ச்சி அடைவது மற்றும் பலன்களை வழங்குவது.

உபாசனைக்கு தேவையான இரண்டு அடிப்படை முன்நிபந்தனைகள் – ‘ஆர்த்தித்வம்’ மற்றும் ‘சாமர்த்தியம்’ என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். சாமர்த்தியம் என்பது உபாசனை செய்வதற்கு பௌதிக உடலின் இருப்பு. ஆர்த்தித்வம் என்பது மோட்சத்தை அடைவதற்கான அடிப்படை ஆசை. அவர்களுக்கென்று ஸ்தூல சரீரம் இல்லாததால், அவர்களுக்கு ‘ஆர்த்தித்வம்’, ‘சாமர்த்தியம்’ கிடையாது. அதனால் அவர்கள் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் தனது இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ததுபர்யாபி பத்ராயணஹ் ஸம்பவாத்”. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய உபாசனை அல்லது தியானம் மற்றும் தகுதியான உபர்யாபி – மனிதர்களை விட மேலான ‘தேவதாக்களுக்கு’ கூட உண்டு என்கிறார் பாதராயணன். ஏனெனில், ‘சம்பவத்’ – தேவதாக்களிலும் ‘அத்தித்வா’ மற்றும் ‘சாமர்த்தியம்’ ஆகிய இரண்டு அடிப்படை முன்நிபந்தனைகள் சாத்தியமாகும். பல வேத நூல்களில், தேவதாக்கள் பௌதிக உடல்களைக் கொண்டிருப்பதாகவும், அதனால் ‘சாமர்த்தியம்’ இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திரனின் கையில் வஜ்ராயுதம் (இடிமுழக்கம், ஆயுதம்) இருப்பதாக ஒரு நூல் கூறுகிறது. உடல் இல்லாமல் கை இருக்க முடியாது.

‘தேவதாக்களும்’ ‘தபத்ரயாஸால்’ பாதிக்கப்பட்டுள்ளனர். தபத்ரயங்கள் ‘ஆத்யாத்மிகா’, ‘ஆதிபௌதிகா’ மற்றும் ‘ஆதிதைவிகா’.

அத்யாத்மிகா என்பது நோய்களால் உடலில் ஏற்படும் துன்பம் மற்றும் பல காரணிகளால் மனதில் ஏற்படும் துன்பம். ஆதிதைவிகா என்பது பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் துன்பம் ஆகும். ஆதிபௌதிகா என்பது சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் துன்பம். மோகத்தை அடைந்தால் இந்த தாபத்ரயங்கள் தானாகவே மறைந்துவிடும். எனவே தேவதைகள் இயல்பாகவே மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் அதாவது அவர்களுக்கு ‘ஆர்த்தித்வம்’ உள்ளது. எனவே அவர்கள் உபாசனை செய்ய தகுதியுடையவர்கள்.

சில சுவாரசியமான கேள்விகள் இங்கே எழுப்பப்படுகின்றன, அவை சூத்திரகாரரால் பதிலளிக்கப்படுகின்றன.

‘தேவதைகள்’ உடல்களைக் கொண்டிருந்தால், ஒரே உடலுடன் ஒரு தேவதை ஒரே நேரத்தில் பல யாகங்களில் எப்படி இருக்க முடியும். ஆன்மீக மற்றும் யோக சக்திகளைக் கொண்ட தேவதைகள் ஒரே நேரத்தில் பல உடல்களைக் கொண்டிருக்கலாம் என்று சூத்ரகாரர் இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார். சௌபரி முனிவரின் உதாரணம் இந்தச் சூழலில் கூறப்படுகிறது. இந்த முனிவர், தனது தவம் அல்லது தபஸ் மூலம் தனது ஆன்மீக மற்றும் யோக சக்திகளின் காரணமாக, மன்னன் மன்னனின் 50 மகள்களை மணந்து அவர்களுடன் வாழ ஒரே நேரத்தில் 50 உடல்களை ஏற்றுக்கொண்டார்.

அடுத்த கேள்வி என்னவென்றால், ஒரு தேவதை உடலை வைத்திருந்தால், அது மரணத்திற்குரியது, அது ஒரு காலத்தில் அல்லது வேறு நேரத்தில் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்திரன் இறந்துவிட்டால், இந்திரனைக் கையாளும் வேத நூல்கள் அர்த்தமற்றதாகிவிடும், இதில் வேத நூல்களின் நித்தியம் இழக்கப்படுகிறது. பதில் “இந்திரன்” என்ற சொல் தனிப்பட்ட நபரைக் குறிக்கவில்லை, ஆனால் அது பதவி அல்லது பதவியைக் குறிக்கிறது. இது அக்ரிதிவாச்சகம் எனப்படும். எனவே இந்திரன் பதவியில் ஒருவர் போனால் இன்னொரு தனிமனிதன் உடனே இந்திரன் ஆவான். இது “ராஜா இறந்துவிட்டார், ராஜா வாழ்க” என்ற புகழ்பெற்ற பழமொழியைப் போன்றது. எனவே வேதங்களின் நித்தியமும் அர்த்தமும் அப்படியே உள்ளது.

மூன்றாவது கேள்வி என்னவென்றால், வேதங்கள் அபௌருஷேயமாக இருக்கும்போது (ஸ்ரீமன் நாராயணன் உட்பட எந்த உடலாலும் இயற்றப்படவில்லை) வேதங்களின் சில பகுதிகளை எப்படி ‘வசிஷ்டஹஸுக்தம்’ மற்றும் ‘விஸ்வாமித்ர சூக்தம்’ என்று அழைக்க முடியும்?.

பதில் என்னவென்றால், வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் அவர்களின் ஆன்மீக சக்திகளின் காரணமாக வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளைப் பார்ப்பவர்கள், எனவே அந்த பகுதிகள் அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. இது நியூட்டனின் இயக்க விதிகள், ஆர்க்கிமிடீஸின் கோட்பாடு போன்றது. நியூட்டன் கண்டுபிடித்து, முன்வைத்து, உலகுக்கு அறிவிப்பதற்கு முன்பே இயக்க விதிகள் இருந்தன.

எனவே வேதங்கள் நித்தியமானவை, ஆரம்பம் இல்லாதவை; அவை பழுதற்றவை, ஒவ்வொரு எழுத்தும் நமக்கு அதிகாரம். படைப்பின் போது பகவான் ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை நினைவு கூர்ந்து, பிரபஞ்சத்தைப் படைத்து, சதுர்முகப் பிரம்மாவைத் தனது ‘நாபிகமலா’வில் இருந்து படைத்து அதையே உபதேசிக்கிறார்.

தேவதா அதிகாரத்திற்கு அடுத்ததாக, மூன்று சூத்திரங்களைக் கொண்ட மத்வாதிகரணம் வருகிறது. தேவதாக்களில் வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள் என்று ஒரு சிறப்புப் பிரிவு உள்ளது. வசுக்கள் ஏற்கனவே பிரம்மன் வடிவில் உள்ளனர், அவர்களும் உபாசனை அல்லது தியானம் செய்து மோட்சத்தை அடைவது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மதுவித்யா என்று பெயர். முதல் இரண்டு சூத்திரங்களில் ஜைமினி முனிவர் அவர்கள் ஏற்கனவே பிராமண வடிவில் இருப்பதால் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறுகிறார். முனிவர் பதராயண மேற்கண்ட கருத்தை மறுத்து, பல கல்பங்கள் கழிந்த பிறகு படிப்படியாக மோட்சத்தை அடைய உபாசனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவர்களின் முக்தி ‘க்ரமமுக்தி’ என்று அழைக்கப்படுகிறது, அதாவது “மோட்சத்தின் படி நிலை”. முதல் இரண்டு சூத்திரங்கள் “பூர்வபக்ஷ சூத்திரங்கள்” என்றும் மூன்றாவது சூத்திரம் “சித்தாந்த சூத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

சித்தாந்த சூத்திரம் “பவந்து பதராயண அஸ்திஹி” அதாவது பதராயண முனிவர் வசுக்களும் உபாசனை செய்ய தகுதியானவர்கள் என்று கூறுகிறார்.

அடுத்த அதிகாரம் ‘அபசுத்ராதிகரணம்‘ எனப்படும். இதற்கு ஏழு சூத்திரங்கள் உள்ளன.

இந்த அதிகாரத்தில் ‘உபநயன சம்ஸ்காரம்’ செய்யத் தகுதியில்லாதவர்கள் வேதம் கற்கத் தகுதியற்றவர்களென்றும், அதனால் அவர்கள் இம்மாதிரியான உபாசனைகளைச் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

32 பிரம்ம வித்யாக்களில் ஒன்றான ‘சம்வர்க வித்யா‘வைப் போதித்த ரைக்வா முனிவரால், மிகவும் தொண்டு செய்யும் குணம் கொண்ட ஜனாஸ்ருதி என்ற மன்னன் “சூத்திரன்” என்று அழைக்கப்பட்டதால் சந்தேகம் எழுந்தது. இந்த ஆதிகர்ணத்திற்கான உபநிடத உரை சாந்தோக்யோபநிஷத்தில் இருந்து வந்தது. ஜனஸ்ருதி ஒரு குறிப்பிட்ட இரவில் தனது அரண்மனையின் திறந்த மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். (ஹம்சவ்ஸ்) என்று அழைக்கப்படும் இரண்டு அன்னங்கள் அவர் மீது பறந்தன, ஒரு அன்னம் மற்றொன்றிடம் கேட்கிறது, மன்னன் ஜனஸ்ருதி அங்கே ஓய்வெடுப்பதால் அங்கு சத்தம் போட வேண்டாம். மற்ற அன்னம், ஜனாஸ்ருதி ரைக்வா முனிவரா என்று கேட்கிறது, அவர் பிரம்மத்தைப் பற்றி ஆழமான அறிவைக் கொண்டவர். உலகில் உள்ள மக்களிடம் உள்ள அறிவின் கூட்டுத்தொகை ரைக்வாவின் அறிவின் ஒரு துளி மட்டுமே என்று கூறப்படுகிறது. ஜனஸ்ருதி உடனே எழுந்து ரைக்வா முனிவர் எங்கே இருக்கிறார் என்று அறிய தன் வேலைக்காரனை அனுப்பினார். வேலைக்காரன் அவனைக் கண்டுபிடித்து அரசனிடம் சொன்னான். பின்னர் மன்னன் ரைக்வாவை ஏராளமான பரிசுகளுடன் அணுகி, பிரம்மனைப் பற்றிய அறிவை அவருக்குத் தரும்படி வேண்டினான். ரைக்வா முதலில் மறுத்து பின்னர் ஜனஸ்ருதி தனது மகளை ரைக்வாவுக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரை ஏற்றுக்கொண்டார். ரைக்வா ஜனாஸ்ருதியை ‘சூத்ரா’ என்று அழைத்தார், ஏனென்றால் ஜனாஸ்ருதிக்கு பிரம்மஞானம் இல்லாததால் மிகவும் வருத்தப்பட்டார். சமஸ்கிருத இலக்கணப்படி ‘சூத்ரா’ என்றால் “மிகவும் துன்பத்தில் இருப்பவன்” என்று பொருள். எனவே ஜனஸ்ருதி உண்மையில் பிறப்பால் ஒரு க்ஷத்ரியர் என்பதையும், அவர் 4வது ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும் இது நிறுவுகிறது. எனவே, 4வது குலத்தில் பிறந்தவர்கள் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள். முதல் சூத்ரம் “சுகஸ்ய ததநாதரஸ்ரவநாத் தத் அதத்ரவநாத் சூச்யதே ஹி.

இந்தப் பாதத்தில் உள்ள அடுத்த அதிகாரமும் கடைசி அதிகாரமும் அர்த்தாந்தர வியாபதேசாதிகரணம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு சந்தோக்யோபநிஷத்தின் எட்டாவது அத்தியாயத்தில் உள்ள ஒரு பகுதி. இந்த பத்தி கீழே உள்ளது:

ஆகாஷ:ஹவை நாம ரூபயோ: நிர்வஹித தே யதாந்தர தத் ப்ரஹ்மதத் அம்ருதம் ச: ஆத்மா”.

ஆகாஷா என்ற சொல் மக்தாத்மாவை (முக்தி பெற்ற ஆன்மாவை) குறிக்கிறது என்றும் பரமாத்மாவை அல்ல என்றும் பூர்வபக்ஷி வாதிடுகிறார், ஏனெனில் அவர் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் நாம ரூப வியாகரணத்தை (பெயர் மற்றும் வடிவத்தை வழங்குதல்) செய்ய வல்லவர். “ஆகாஷ: அர்த்தாந்தர வியாபதேசத்” என்ற சூத்திரத்தில் இந்த சர்ச்சை சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. ஆகாஷ என்ற சொல் பரமாத்மா ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது, ஏனெனில் அவர் ஒருவரே நாமரூப வ்யாகரணத்தைச் செய்யக்கூடியவர்.

இந்த அதிகாரத்தில் எஞ்சியிருக்கும் சூத்திரங்கள் மேற்கண்ட கருத்தை வலுப்படுத்துகின்றன. மூன்றாவது பாதம் முடிவுக்கு வருகிறது.

முதல் அத்தியாயம் ‘சமன்வய அத்யாயா‘ என்றும் நான்காவது பாதம் ‘ஸ்பஷ்ட தர ஜிவாதிலிங்க பாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் முனிவர் பதராயண உபநிடதப் பகுதிகளைக் கையாள்கிறார், இது பிரபஞ்சத்திற்கு யார் காரணம் என்பதை விவாதித்து தீர்மானிக்கிறது. உபநிடதப் பகுதிகள் அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன, அவர் உபதானகரனாகவும் (பொருள் காரணமாகவும்), நிமித்தகரனாகவும் (செயல்காரணமாகவும்) இருக்கிறார், மேலும் அவர் சககாரிகரன் (இன்ஸ்ட்மென்ட் காரணம்) என்றும் சொல்லத் தேவையில்லை.

இதைப் பற்றி குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை என்றாலும், ‘ஸ்பஷ்ட தரா’ என்ற வார்த்தை மிகவும் தெளிவானது. பிரகிருதி, பிரதாபம், அனுமானிகா மற்றும் அஷப்தா போன்ற பல பெயர்களைக் கொண்ட ஆதிப் பொருள்தான் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று கூறும் சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் உபநிடதப் பகுதிகளை இந்த பாதம் கையாள்கிறது என்றும் கூறப்படுகிறது. சாங்கிய அமைப்பைப் பிரதிபலிக்கும் இந்த உபநிசதப் பகுதிகள் சாயனுசாரி வாக்கியங்கள் அல்லது நிழல் வாக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வாக்யா என்றால் உபநிடதத்தின் உரை அல்லது பகுதி என்று பொருள். இந்தப் பாதத்தில் எட்டு அதிகாரங்கள் உள்ளன.

முதல் இரண்டு அதிகாரங்கள் கபிலரால் நிறுவப்பட்ட நிரீஷ்வர சாங்கிய அமைப்பை மறுக்கின்றன. இந்த அமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தத்வாக்கள் அல்லது வகைகளின் எண்ணிக்கையை மூன்றாம் அதிகாரம் மறுக்கிறது. நான்காவது அதிகாரம், “அவ்யகிருத” என்ற சொல் பொதுவாக ஆதிப்பொருள் என்று பொருள்படும், அது பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது என்ற உண்மையை நிறுவுகிறது.

தொடக்கத்தில் இருந்து 5வது மற்றும் 6வது இடத்தில் இருக்கும் அடுத்த இரண்டு அதிகாரங்கள், பத்தஜீவா எனப்படும் சம்சாரத்தின் எல்லையில் உள்ள ஜீவா அல்லது ஆத்மா என்ற வாதத்தை மறுக்கின்றன. பிரபஞ்சம். பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது பிரபஞ்சத்திற்கு நிமித்தகரணமே தவிர உபதான கரணமல்ல என்று கூறும் கடைசி இரண்டு அதிகாரங்கள், அதாவது சேஷ்வர சாங்கிய தத்துவத்தின் 7வது மற்றும் 8வது மறுப்பு.

முதல் அதிகாரம் ‘அனுமானிகாதிகாரணம்’ எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடத உரை, கடோபநிஷத்தில் யமனுக்கும் நச்சிகேதாவுக்கும் இடையிலான உரையாடலாகும். யம பகவான் நசிகேத பிரம்மனைப் பற்றிய அறிவை விரிவாகக் கற்பிக்கிறார்.

தனது போதனைகளில் ஒரு கட்டத்தில், இந்த மனித உடல் ஒரு ‘ரதா’ அல்லது தேர் என்று யமன் கூறுகிறார். சாரதி புத்தி (புத்தி.) பயணிப்பவர், இந்த ரதத்தில் ஜீவன், அதாவது புலன்கள். இந்திரியங்கள் என்பது தேர் இழுக்கும் குதிரைகள். குதிரைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஓட்டுநரின் கையில் உள்ள கடிவாளமே மனம். விஷயங்களான இன்பப் பொருள்கள் குதிரைகள் குதிக்க விரும்பும் திசைகளாகும். ஞானேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்கள் உள்ளன. காதுகளுக்கு ஒலி, தோலுக்குத் தொடு, கண்களுக்கு நிறம், நாவுக்குச் சுவை, மூக்குக்கு மணம் ஆகியவையே விசயங்கள் அல்லது இன்பப் பொருள்கள்.

மனித உடலை ஒரு தேருடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு (இந்த ஒப்பீடு ரூபகா என்று அழைக்கப்படுகிறது), யமன் நசிகேதனிடம் ஒன்றன் பின் ஒன்றாக அல்லது ஒன்றுக்கு மேலான ஒன்றைக் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களை ஒரு உபாசகர் (தியானம்) சொல்கிறான். மோட்சத்தை அடைய பக்தியோகம். கட்டுப்படுத்தப்பட வேண்டிய புலன்களைக் காட்டிலும், முதலில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய விஷயம், விசயங்கள் மிக முக்கியமானவை. விஷயங்களுக்கு மிகவும் முக்கியமானது, கட்டுப்படுத்தப்பட வேண்டிய மனது, ஏனென்றால் விஷயங்கள் தனிப்பட்டவற்றிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், மனம் அவற்றைப் பற்றி சிந்திக்கக்கூடும். எனவே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்ததாக கட்டுப்படுத்த வேண்டியது புத்தி அல்லது புத்தி. புத்திக்கு மிகவும் முக்கியமானது ஜீவா, சுயம். ஜீவாவுக்கு அடுத்தபடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியது உடலாகும், ஏனென்றால் உடல் முழுமையான ஆரோக்கியத்துடன் இருந்தால் உபாசனா அல்லது ஆழ்ந்த தியானம் மட்டுமே சாத்தியமாகும். இந்த உபநிடதத்தில் இந்த உடல் அவ்யக்தா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த முக்கியமானவர் உச்ச ஜீவியம். பரமாத்மாவைக் கட்டுப்படுத்துவது என்பது அவரது தாமரை பாதங்களில் சரணாகதி செய்வதன் மூலம் அவரது அருளைப் பெறுவதாகும், ஆனால் அவரது அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவருடைய அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவருடைய அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கிய நிரீஷ்வர சாங்கியம் என்ற எதிரி அல்லது பூர்வபக்ஷியின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கருத்தை சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் மறுத்துள்ளார், இது “அனுமானிகாமபி ஏகேஷாம் ஏதிச்சேத் ந சரிரரூபகாவிந்யஸ்த க்ரிஹிதே: தர்ஷயதிச்ச” என்று வாசிக்கிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஏகேஷம் என்றால் கடோபநிஷத்தில், அனுமாணிக்கம் என்றால் ப்ரதானம் அல்லது பிரகிருதி, அபி என்பது பிரபஞ்சத்தின் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ந என்றால் இந்த பார்வை சரியல்ல, ஏனெனில் சரீர ரூபகா விந்யஸ்த க்ரிஹிதே: அதாவது மனித உடலை இந்த சூழலில் தேருடன் ஒப்பிடப்படுகிறது, க்ரிஹிதே: இந்த சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள வசீகர்ய பரம்பரையில் அவ்யக்தா என்றால் உடல், தர்ஷயதிச்சா என்றால் இந்த சூழலில் உபநிடதம் என்பது கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களின் வரிசையைக் குறிக்கிறது.

அவ்யக்தா என்றால் தெளிவாக இல்லை அல்லது பார்க்க முடியாத பொருளைக் குறிக்கிறது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், உடல் நமக்குத் தெளிவாகத் தெரியும் போது அதை எப்படி அவ்யக்தா என்று அழைக்க முடியும். உருமாற்றத்திற்கு முன் நிமிட வடிவில் இருக்கும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளின் மாற்றமே உடல் என்று கூறுவதன் மூலம் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

எனவே அவ்யக்தம் என்பது உடல் என்பதை நிறுவும் இந்த அதிகாரத்தின் முக்கிய நோக்கம் அடையப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் சாமசாதிகாரணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் (சங்கதி) தருக்க வரிசை அல்லது இணைப்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில், பிராதானம் அல்லது பிரகிருதி என்பது சுயாதீனமானது என்பதை நிரூபித்து, அவ்யக்தம் பிரதாபனை அல்லது அனுமானிகத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் அது உடலை மட்டுமே குறிக்கிறது. ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் பிரகிருதி முற்றிலும் சுதந்திரமானது என்று கூறப்படுகிறது. எனவே முந்தைய அதிகாரசபையின் தீர்ப்பு சரியாக இருக்காது என்பது சந்தேகம். இந்த சந்தேகத்தை நீக்கி, முந்தைய அதிகாரத்தின் தீர்ப்பை மீட்டெடுக்க இந்த அதிகாரம் படம் வருகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை ஸ்வேதாஷ்வதார உபநிஷத்தில் இருந்து வருகிறது. மேற்கூறிய உபநிடதத்தின் ஒரு பத்தியில், முதன்மையான பொருளான பிரகிருதி முற்றிலும் சுதந்திரமானது என்று கூறப்படுகிறது, இது நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது, அவை முறையே சிவப்பு, வெண்மை மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன. தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலியன. அஜ என்றால் பிறக்காதது என்று பொருள். எனவே அஜா அல்லது பிரகிருதி இங்கே பிரபஞ்சத்தின் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

எனவே மீண்டும் நிரீஷ்வர சாங்கிய பூர்வபக்ஷி, பிரகிருதி மட்டுமே ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்று கூறுகிறார். சாமஸவத் அவிசேஷத் என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் இந்த புள்ளி சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. சாமசா என்பது ஒரு யாகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரமாகும், அதில் ‘சோம லதா’ சாறு வைக்கப்பட்டு, இந்த சாற்றை யாகத்துடன் தொடர்புடைய அனைத்து ரித்விக்களும் குடிக்கிறார்கள்.

எனவே சாமசா என்பது யாகத்தில் பயன்படுத்தப்படும் மரத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை மட்டுமே குறிக்கிறது. மற்றொரு சூழலில் சமாசா என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஆனால் சாமசா என்பது பொதுவாக ஒரு பாத்திரம். எனவே சூத்திரத்தின் துல்லியமான பொருள் என்னவென்றால், சாமசா என்பது பொதுவாக ஒரு யாகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தை குறிக்கிறது, அதே போல் இங்கும் அஜா என்பது பிறக்காதது என்று அர்த்தம், மேலும் இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் இது சுயாதீனமானது என்று பரிந்துரைக்க எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை தானே உருவாக்கும் திறன் கொண்டது.

இரண்டாவது சூத்திரத்தில், தைத்திரீய உபநிஷத்தின் கூற்றை மேற்கோள்காட்டி, அஜா, பரமாத்மாவை அதன் காரணமாகக் கொண்டுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தில் பரமாத்மாவை அந்தர்யாமியாகவோ அல்லது அதன் உள் ஆத்மாவாகவோ இல்லாத எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை என்பது முன்னரே நிறுவப்பட்டுள்ளது. எனவே, பிரகிருதியும் கூட, பரமாத்மாவையே அந்தர்யாமியாகக் கொண்டுள்ளது. எனவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மத்மகம் அதாவது பரமாத்மா ஒரு ஆத்மா மற்றும் பொருள் உடலாகும்.

இந்த காலாண்டில் 3 வது அதிகாரம் சாங்க்யோப-சங்கிரஹாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் தர்க்கரீதியான தொடர்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில், பிரகிருதி அப்ரஹ்மாத்மகம் அல்ல, அது பிரம்மத்மகம் என்று நிறுவப்பட்டது. பிரம்மத்மக என்றால் பரமாத்மாவை அந்தர்யாமியாகவும், அப்ரஹ்மாத்மக என்றால் அந்தர்யாமியாக பரமாத்மா இல்லாததையும் குறிக்கிறது. எனவே அப்ரஹ்மாத்மக தத்துவங்கள் விலக்கப்பட்டு அனைத்து தத்துவங்களும் சப்ரஹ்மாத்மகமாகும்.

ஆனால் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள ஒரு கூற்று காரணமாக இது எதிர்க்கப்படுகிறது. இந்த ஆட்சேபனை இந்த அதிகாரத்தில் ஆளப்பட்டது. பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள உபநிடதப் பகுதி இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு உட்பட்டது.

பரமாத்மா என்பது ஐந்து உறுப்புகளுக்கும் ஐந்து அறிவு தரும் புலன்களுக்கும் துணையாக இருக்கிறது. இந்த புலன்களுக்கு இந்த உபநிடதத்தில் பஞ்சஜனம் என்று ஒரு சிறப்புப் பெயர் வழங்கப்படுகிறது. ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவு தரும் புலன்கள்) இருப்பதால், இவை ‘பஞ்ச பஞ்சஜனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அமிர்தம் என்று அழைக்கப்படும் இந்த பரமாத்மாவை அறிந்த ஒரு தனிமனிதனால் இந்த உண்மை தெரிந்தால், அறிபவனும் அமிர்தமாகிறான், அதாவது மோட்சத்தை அடைகிறான். இந்தச் சூழலில் பஞ்சஜனம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும் இந்திரியங்கள் (புலன்கள்) எவை என்ற கேள்வி வரும்போது உபநிடதமே பிராணன், கண்கள், காதுகள் மற்றும் மனம் என்று கூறுகிறது. இங்கே பிராணன் என்றால் தோல் என்று பொருள், பிராணன் என்பது மூச்சு அல்லது முக்ய பிராணன் என்று பொருள்படாது.

பிருஹதாரண்யக உபநிஷத்தின் மத்யந்தியான சகா என்று அழைக்கப்படும் மற்றொரு கிளையில், அதே சூழலில் மூக்கு பற்றிய குறிப்பு உள்ளது, இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் இது நாக்கு மற்றும் மூக்கு இரண்டையும் குறிக்கும் இந்த சூழலில் அண்ணா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரீஷ்வர சாங்க்யனாகிய எதிராளி, பஞ்ச பஞ்சஜனம் என்று கூறப்படுவதால், பஞ்ச பஞ்சம் என்றால் 5 x 5 என்று 25 என்றும், அவர் முன்வைத்த 25 தத்துவங்களின் எண்ணிக்கைக்கு இது பொருந்தும், பரமாத்மா யார் என்று 26வது தத்துவம் குறிப்பிடப்படவில்லை. இருபத்தி நான்கு தத்துவங்களைக் கொண்ட பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க வேண்டும் என்றும் புருஷன் அல்லது ஜீவா என்று அழைக்கப்படும் 25 வது தத்துவத்தின் முன்னிலையில் படைப்பு நடைபெறுகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

நிரீஷ்வர சாங்க்யாவின் படி, 25 தடவைகள்.

1) பிரகிருதி, மஹத், அஹங்காரா – 3

2) ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பூதங்கள் – 5 (வானம் ஆகாஷம்)

3) சப தன்மாத்ரா, ஸ்பர்ஷ தன்மாத்ரா, ரூபா தன்மாத்ரா, ரஸ தன்மாத்ரா, கந்த தன்மாத்ரா என அழைக்கப்படும் ஐந்து தன்மாத்ராக்கள் (நுட்பமான வடிவங்கள்)

தன்மாத்ரா என்பது முந்தைய பூதத்திற்கும் பின் வரும் பூதத்திற்கும் இடையில் உள்ள ஒரு நிலை. பால் மற்றும் தயிர் இடையே உள்ள மேடை போல.

4) இந்திரியங்கள் அல்லது புலன்கள் – 11

5) நிரீஷ்வர சாங்கியத்தால் புருஷன் என்று அழைக்கப்படும் ஜீவாத்மா- 1

மொத்தம் – 25

நாமும் (விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைச் சேர்ந்த) மேற்கூறிய இருபத்தைந்து தத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் மேற்கூறியவற்றைத் தவிர 26வது தத்துவமாகிய பரமாத்மாவை ஏற்றுக்கொள்கிறோம். எனவே பரமாத்மா 26வது தத்துவமாக இருப்பதால் ஷத்விம்சகர் என்றும், ஜீவாத்மா 25வது தத்வமாக இருப்பதால் பஞ்சவிம்சகர் என்றும் அழைக்கப்படுகிறது.

பதினொரு புலன்கள் ஆகும்

1) மனம் – 1

2) அறிவு தரும் புலன்கள்- 5 அவை காதுகள், கண்கள், மூக்கு, தோல் மற்றும் நாக்கு (ஞானேந்திரியங்கள்)

3) செயல் சார்ந்த புலன்கள் (கர்மேந்திரியங்கள்) கைகள், கால்கள், பேச்சு, பிறப்பு உறுப்பு மற்றும் வெளியேற்ற உறுப்பு – 5

மொத்தம்: 11

இந்த சூழலில் படைப்பின் வரிசையை நாம் அறிவது நல்லது.

பிரகிருதி, மஹத், அஹங்காரா, சப்ததன்மாத்ரா, ஆகாச ஸ்பர்ஷதன்மாத்ரா, வாயு ரூபதன்மாத்ரா, தேஜஸ், ரஸ தன்மாத்ரா, நீர், கந்த தன்மாத்ரா, பூமி.

மேற்கூறிய ஒவ்வொன்றிலும், பகவான் ஸ்ரீமன் நாராயணனே அந்தர்யாமியாக இருக்கிறார், அவர் சித்தமாக இருக்கிறார், அதைத் தொடர்ந்து தத்துவம் உருவாக்கப்படுகிறது. அஹங்காரா என்பது மூன்று வகையானது, சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவாகின்றன.

தாமஸ அஹங்காரத்திலிருந்து ஐந்து பூதங்கள் உருவாகின்றன. மேற்கண்ட இரண்டிற்கும் ராஜஸ அஹங்காரம் உதவுகிறது.

இந்த உபநிடதப் பகுதியானது, பரமாத்மாவின் இருப்பை ஏற்காமல், 25 தத்துவங்களின் கோட்பாட்டுடன் சிறந்த உடன்பாட்டில் இருப்பதாகவும், மேலே உள்ள ஒவ்வொன்றிலும் பரமாத்மா அந்தர்யாமியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதாகவும் எதிர்ப்பாளர் கருதுகிறார்.

என குறிப்பிடும் முதல் சூத்திரத்தில் இந்த கருத்தை சூத்திரகாரர் மறுத்துள்ளார்

“நாஸங்க்யோபஸங்க்ரஹதாபி நானாபவத் அதிரேகாச்ச”. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. 25 தத்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவை நிரீஷ்வர சாங்கியம் சொல்வதிலிருந்து வேறுபட்டவை, ஏனென்றால் இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளபடி இருபத்தைந்திற்குள் இருக்கும் ஆகாசமும் ஜீவாத்மாவும் இருபத்தைந்திற்கு வெளியே இருப்பது சரியல்ல. எனவே பஞ்ச பஞ்சாங்கம் என்ற சொல் 25 தத்துவங்களைக் குறிக்கவில்லை. “பிராணதாயா: வாக்ய சேஷாத்” என்று கூறும் இரண்டாவது சூத்திரத்தில் பஞ்ச பஞ்ச ஜனம் என்பது ஐந்தாக உள்ள கணேந்திரியங்களை மட்டுமே குறிக்கிறது என்று நிறுவப்பட்டுள்ளது. எனவே அப்ரஹ்மாத்மக தத்வத்திற்கு நிகராக எதுவும் இல்லை.

4வது அதிகாரம் கரணத்வாதிகாரணம் எனப்படும். இது இரண்டு சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

இந்த அதிகாரத்திற்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தர்க்கரீதியான தொடர்பு பின்வருமாறு. ஆகாசமும் இந்திரியங்களும் பிரம்மன் அல்லது பரமாத்மாவால் ஆதரிக்கப்படுவதால், பிரதாபமோ அல்லது ஆதிப்பொருளோ உலகத்திற்குக் காரணமாக இருக்க முடியாது என்று முந்தைய அதிகாரத்தில் நிறுவப்பட்டது. இப்போது நிரீஷ்வர சாங்கியமான அதே பூர்வபக்ஷி மீண்டும் எழுந்து, பிரபஞ்சத்திற்குக் காரணமான பொருள் குறித்து உபநிடதங்களில் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறுகிறார். பிரபஞ்சத்திற்குக் காரணமான பிராதானம் (பிரகிருதி) என்பதில் சில ஒருமைப்பாடு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த வாக்குவாதம் இந்த அதிகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பான பல்வேறு உபநிடத நூல்களில், உபநிடதங்கள் பிரபஞ்சத்தின் காரணங்களாக பல நிறுவனங்களை அடையாளம் காட்டுகின்றன. அசத் தான் காரணம் என்று ஒரு உபநிடதம் கூறுகிறது. மற்றொரு உபநிடதம் சத் தான் காரணம் என்கிறது. மூன்றாவது உபநிடதம் அவ்யாகிருதமே காரணம் என்கிறது. மேற்கூறியவற்றால் அந்த பிரம்மத்தை பிரபஞ்சத்தின் காரணமாக நிறுவுவது மிகவும் கடினம் என்று எதிரி கூறுகிறார். எக்ஷனா அல்லது உருவாக்க விருப்பம் அல்லது உறுதிப்பாடு ஆகியவை பிராதானத்திற்கும் பொருந்தும், எனவே அது ஜகத்தின் காரணமாகும். இதுதான் எதிரணியின் வாதம்.

“காரணத்வேன ஆகாஸாதிஷு யதா வ்யாபதிஷ்டா உக்தே:” – சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு படிக்கும் முதல் சூத்திரத்தில் சூத்ரகாரரால் இது மறுக்கப்படுகிறது.

ஆகாஷா திஷு காரணாத்வேன யதா வ்யாபதிஷ்டா உக்தே: – பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சர்வ அறிவாற்றல் (ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்தவர்), அனைத்து சக்திகள், எதையும் மற்றும் எதையும் செயல்படுத்தும் திறன் போன்றவற்றால் ஆகாசம் மற்றும் நெருப்பு போன்றவற்றுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகாசமும் பிற கூறுகளும் பிரம்மனால் படைக்கப்பட்டவை என்று தைத்தரிய உபநிடதம் தெளிவாகச் சொல்வதே இதற்குக் காரணம்.

சமகர்ஷத் என்று படிக்கும் இரண்டாவது சூத்திரத்தில் – ஸத், அஸத், அவ்யகிருதி என்ற சொற்களுக்குப் பிராமணன் என்று பொருள்படுவதற்குச் சரியான மற்றும் உறுதியான காரணங்களைச் சூத்ரகாரம் தருகிறது.

இந்த காலாண்டில் ஐந்தாவது அதிகாரம் ஜகத் வச்சித்வாதிகாரணம் எனப்படும். இது மூன்று சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முந்தைய அதிகாரத்துடன் இணைப்பு பின்வருமாறு.

முந்திய அதிகாரத்தில் ஒரு உணர்வு ஜீவிதான் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று நிறுவப்பட்டது. நிரீஷ்வர சாங்கியம் பரமாத்மாவின் இருப்பை ஏற்காததால், முக்தி பெறாத ஆன்மா மட்டுமே காரணமாக இருக்க முடியும். முக்தி பெறாத ஜீவா என்ற உணர்வு ஜீவன் பிரகிருதி தத்வத்தின் உட்பொருட்களைக் கொண்ட ஒரு மரண உடலுடன் மட்டுமே இருக்க முடியும். எனவே இந்த பிரகிருதி அல்லது பிராதானம் மறைமுக காரணமாகவும் இருக்கலாம்.

விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌசிதகி உபநிஷத்தில் இருந்து ஒரு பகுதி. தொடர்புடைய பத்தியின் சுருக்கத்தைக் குறிப்பிடுவதற்கு முன், அந்த பத்திக்கு வழிவகுக்கும் ஒரு கதை இங்கே உச்சரிக்கப்படுகிறது. கதை என்னவென்றால், கார்க்யா கோத்ராவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாலகி என்ற பெயர் கொண்ட காசியில் வசிப்பவர், இது இப்போது பெனாரிஸ் அல்லது வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. அவர் நன்றாகப் படிப்பவராக இருந்தார். அவர் காசியின் அரசனாக இருந்த அஜாதசத்ருவைச் சந்தித்து, அஜாதசத்ருவாகிய அவருக்கு பிரம்மனின் அறிவில் தீட்சை கொடுப்பதாகக் கூறினார்.

அஜாதசத்ரு அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் ஒவ்வொரு உடலும் ஜனக மன்னனிடம் செல்ல விரும்புகிறது, ஏனென்றால் அவர் பிரம்மனைப் பற்றி கற்பிப்பவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்குகிறார், மேலும் அஜாத சத்ரு மேலும் பாலகி ஜனகரிடம் செல்லாமல் தன்னிடம் வந்ததைக் கவனித்தார். பாராட்டத்தக்கது. ஜனகன் வழங்கும் அதே பரிசை பாலகிக்கும் கொடுப்பான் என்பது மறைமுகமாக உள்ளது.

பின்னர் பாலாகி அஜாதசத்ருவை பிரம்மனைப் பற்றிய அறிவைத் தொடங்கத் தொடங்கினார், அவர் சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள புருஷரை பிரம்மனாக தியானிக்கப் பழகியதாகக் கூறி, அஜாத சத்ருவையும் அதைச் செய்யும்படி கேட்டார். அஜாதசத்ரு தனக்கும் அது பற்றி தெரியும் என்றும் பாலகியிடம் இருந்து அதைப் பற்றி பிரசங்கம் தேவையில்லை என்றும் கூறுகிறார். சந்திரன், மின்னல், மேகம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், உருவம், எதிரொலி, சாயல், நிழல், ஜீவா, நல்ல உறக்கத்தில் ஜீவன், கனவு காணும் ஜீவன், வலது கண்ணில் உருவம் என்று தியானம் செய்கிறேன் என்று ஞானியான பாலகி சொல்லிக்கொண்டே போனார். , இடது கண்ணில் உள்ள உருவம் மற்றும் அஜாத சத்ரு தனக்கும் மேற்கூறிய அனைத்தும் தெரியும் என்றும் பாலகியின் தீட்சை தேவையில்லை என்றும் கூறுகிறார். பாலாகி பின்னர் அமைதியாகிவிட்டார். அஜாதசத்ரு பாலாகியிடம், பாலாகி உறுதிமொழியாக பதிலளிக்கும் அளவுக்கு மட்டும் தெரியுமா என்று கேட்கிறார். பிறகு அஜாதசத்ரு பாலகியிடம் பிரம்மன் அல்லாத பொருட்களை மட்டுமே விவரித்தார், மேலும் அவர் பாலகியை பிரம்மனின் அறிவில் தொடங்குவார். அஜாதசத்ரு, பாலாகி சொன்ன அனைத்துப் பொருட்களையும் படைத்தவனும், இந்த உலகத்தைப் படைத்தவனும், புலன்கள் மற்றும் உணர்வற்ற உயிரினங்கள் இரண்டையும் கொண்டவன், தியானிக்கப்பட வேண்டியவன் பிரம்மன் என்று தொடர்ந்து கூறுகிறார். பிறகு பாலாகி அஜாதசத்ருவின் சீடரானார். அப்போது அஜாதசத்ரு பாலகியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியே வர இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரின் அருகில் சென்றனர். அப்போது அஜாதசத்ரு உறங்கிக் கொண்டிருந்தவரின் அகலத்தை நிவர்த்தி செய்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அஜாதசத்ரு அவரை ஒரு தடியால் அடிக்க, அந்த நபர் உடனடியாக எழுந்தார். இந்த செயலின் மூலம் ஜீவா பிராணனில் இருந்து வேறுபட்டது, இல்லையெனில் சுவாசம் என்று அவர் விளக்கினார். ஜீவா பரமாத்மாவின் மீது உறங்கிக் கொண்டிருந்ததாக பாலகியிடம் கூறுகிறார், அவரிடமிருந்து ஜீவா வெளியே வந்து எழுந்தார். ஜீவா பரமாத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை இது மேலும் விளக்குகிறது.

இதில் பாலாகி குறிப்பிடும் பொருள்கள் ஒருவரால் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உருவாக்கப்படும் இன்பப் பொருள்கள், இன்பத்தின் துணைகள் என்றும், கர்மா என்ற சொல் தனிமனிதனின் புண்ணியத்தையும் பாபாவையும் குறிப்பதாகக் கூறுகிறது. புண்ணியத்தை உடையவர் மற்றும் பாப்பா பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும், மேலும் அவர் உடலில் இருந்து வேறுபட்டவராகவோ அல்லது தனித்தவராகவோ தியானிக்கப்பட வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், ஜீவா அல்லது புருஷனால் ஆதரிக்கப்படும் பிராதானம் அல்லது பிரகிருதி பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும் என்பதே நிரீஷ்வர சாங்க்யாவின் வாதம்.

ஜகத்வசித்வாத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுத்துள்ளார் – இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உபநிடத உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்மா என்ற சொல் பிரபஞ்சத்தை மட்டுமே குறிக்கிறது, புண்ணியத்தையும் பாபாவையும் அல்ல, அங்கு முன் விவாதம். பிரபஞ்சத்தின் காரணமான புருஷன் அல்லது ஜீவாவால் ஆதரிக்கப்படும் உடல் அல்லது பிரகிருதி சரியானது அல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரம்மம் மட்டுமே பிரபஞ்சத்திற்கு காரணம்.

இந்த காலாண்டில் உள்ள ஆறாவது அதிகாரம் வாக்கியன்வாதிகாரன் என்று அழைக்கப்படுகிறது. முந்தைய அதிகாரத்துடன் உள்ள இணைப்பு பின்வருமாறு:- முந்தைய அதிகாரத்தில் கர்மா என்ற சொல் உலகம் என்று விளக்கப்பட்டது, அதன் விளைவாக உபநிடத உரையின் குறிப்பிட்ட பகுதி ஜீவாவுக்கு பொருந்தாது என்று நிரூபிக்கப்பட்டது. இந்த அதிகாரத்தைப் பற்றிய உபநிடத உரை, புண்ய பாபாவின் பலன்களை அனுபவிக்கும் ஜீவாவைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது என்று எதிரி கூறுகிறார். இந்தக் கண்ணோட்டம் இங்கே மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள மைத்ரேயி பிராமணம். இது அந்த உபநிடதத்தில் 4வது அத்தியாயத்தின் 5வது உட்பிரிவு.

இந்த உரையின் சுருக்கமான சுருக்கம் பின்வருமாறு. யாக்ஞவல்கிய முனிவருக்கு காத்யாயனி, மைத்ரேயி என இரண்டு மனைவிகள் இருந்தனர். காத்யாயனிக்கு மைத்ரேயியின் வெளித்தோற்றம் ஆன்மிகமாக இருந்ததைப் போன்ற தோற்றம் இருந்தது. யாக்ஞவல்கியர் சன்யாசத்திற்கு செல்ல முடிவு செய்தார், மேலும் தனது சொத்துக்களை இரண்டு மனைவிகளுக்கு இடையே ஒரு உயிலை நிறைவேற்ற விரும்பினார். மைத்ரேயி யாக்ஞவல்கியரிடம் யாக்ஞவல்கியரிடமிருந்து பெறப் போகும் செல்வம் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைய உதவுமா என்று கேட்டாள். யாக்ஞவல்கியர் எதிர்மறையாக பதிலளித்தார். பின்னர் மைத்ரேயி யாக்ஞவல்கியரிடம் மாவோக்ஷத்தை அடைவதற்கான வழிமுறைகளை உபதேசிக்குமாறு வேண்டுகிறாள்.

யாக்ஞவல்கியரின் உபதேசம் பின்வருமாறு. ஒரு கணவன் தன் சொந்த விருப்பத்தின் காரணமாக மனைவிக்கு அன்பாக மாறுவதில்லை, ஆனால் பரமாத்மாவின் விருப்பத்தின் காரணமாக கணவன் தன் மனைவியை நேசிக்கிறான். அதுபோலவே ஒரு மனைவியும் தன் கணவனுக்கு அன்பானவளாக மாறாமல் தன் சொந்த விருப்பத்தின் காரணமாகவும், பரமாத்மாவின் விருப்பத்தின் காரணமாகவும் தன் கணவனை நேசிக்கிறாள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற பழமொழியின் உண்மையை இது நிறுவுகிறது. அதேபோல, குழந்தைகள் பெற்றோரிடம் பாசமாக மாறாமல், தங்கள் சொந்தக் காரணத்தால், பரமாத்மாவின் விருப்பத்தால், பெற்றோரிடம் பாசமாக மாறுகிறார்கள். அதுபோலவே செல்வம், ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியன், ஸ்வர்கலோகம், இந்திரன் முதலிய வான தெய்வங்கள், ஜீவராசிகள் மற்றும் பிற எல்லாப் பொருட்களும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் விருப்பத்தால் ஒருவருக்குப் பிடிக்கும்.

பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி ஒரு ஆச்சார்யா அல்லது ஆசானின் காலடியில் கேட்பதன் மூலம் அறியப்பட வேண்டும். அவரைப் பற்றி பெற்ற அறிவை ஒருங்கிணைக்க அவர் மனதிற்குள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும், அவர் பரமாத்மாவைக் கண்ட பிறகு தியானிக்க வேண்டும்.

பரமாத்மாவைப் பற்றிய முழு அறிவைப் பெறுவதன் மூலம் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு விஷயமும் அறியப்படும். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் (உயிருள்ள மற்றும் உயிருள்ள பொருட்களில்) பரமாத்மாவுக்கு வெளியே இருப்பதாகவும், பரமாத்மாவிற்குள் இல்லை என்றும் நினைப்பவர் மோட்சத்தை அடைய மாட்டார், மேலும் அவர் இந்த சம்சாரத்தில் அல்லது உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளை அனுபவிக்க வேண்டும். . பறையை ஒரு குச்சியால் அடிக்காதபோது, ​​​​ஒலி உருவாகாது அல்லது மேளம் இல்லாதபோதும் அல்லது அடிப்பவர் இல்லாதபோதும் இந்திரியங்கள் அல்லது புலன்கள் அந்தந்தத்தைப் பற்றி சிந்திக்காதபோது ஞானம் போல் ஒலி உருவாகாது. பொருள்கள் அல்லது புலன்கள் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மனம் வெளிப் பொருட்களை உணராது, பரமாத்மாவில் கவனம் செலுத்தும். மேலே விவரிக்கப்பட்ட டிரம் விளக்கப்படத்தைப் போலவே,

வெறும் ஈரமான நெருப்பு விறகு, நெருப்புடன் இணைந்து புகையை உண்டாக்குகிறது, அதுபோல் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் பிரபஞ்சத்தின் ஸ்தூல மற்றும் செயல்பாட்டுக் காரணங்களாக இருக்கிறார். இங்கே புகையை உண்டாக்குவதற்கு, நெருப்பு நிமித்த கரணம் (செயல்படுத்தும் காரணம்) மற்றும் ஈரமான நெருப்பு மரம் உபாதான காரணம் (பொருள் காரணம்).

மேற்கூறியவற்றைத் தவிர, நான்கு வேதங்கள், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாசங்கள், ஸ்ரீ விஷ்ணுபுராணம் போன்ற புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் பரமாத்மாவிலிருந்து தோன்றியதாக இங்கு கூறப்பட்டுள்ளது.

இந்த உபநிடதப் பத்தியின் முதல் வாக்கியத்தில் “ஆத்மா” என்ற வார்த்தை உள்ளது, அதில் கணவன் மனைவியிடம் அன்பாக மாறுவதில்லை என்றும், இந்த பத்தியில் ஆத்மா என்று சொல்லப்படும் பரமாத்மா கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறான் என்றும் கூறப்படுகிறது. நிரீஷ்வர சாங்கிய எதிரி, ஆத்மா என்பது கணவன் என்ற சொல்லுக்கு எதிரிடையான நபரைக் குறிக்க வேண்டும் என்கிறார். ஆத்மா என்பது ஜீவா என்ற மனைவியைக் குறிக்கிறது. அடுத்த பத்தியில் உள்ள “ஆத்மா” என்ற வார்த்தை ஜீவனை மட்டுமே குறிக்கிறது, பரமாத்மா அல்ல, இந்த ஜீவாவை மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தில், புருஷன் (ஜீவா) உடலிலிருந்து பிரிந்து தியானம் செய்தால் அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. SO இந்த பத்திக்கும் பரமாத்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிராளி கூறுகிறார். எனவே அவர் புருஷன் அல்லது ஜீவா முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற உண்மையை அவர் உறுதிப்படுத்துகிறார்.

“வாக்ய அன்வயத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த பார்வையை சூத்திரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. இந்த உபநிடதப் பகுதி முழுக்க முழுக்க பரமாத்மாவைப் பற்றியது, ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்த பத்தியில் உள்ள வாக்கியங்கள் பரமாத்மாவைக் குறிக்கின்றன, ஏனென்றால் மைத்ரயி ஆதியில் யாக்ஞவல்கியாவிடம் நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கேட்டாள், இது தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும். பரமாத்மா மீது அல்ல ஜீவாத்மா மீது.

இந்த அதிகாரத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு சூத்ரகாரரால் நிறுவப்பட்டுள்ளது. வேதவியாச முனிவரின் சீடர்களான அஷ்மரத்யா, அவுதுலோமி மற்றும் கசக்ரித்ஸ்னா ஆகிய முனிவர்களின் மூன்று சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி சூத்ரகாரம் குறிப்பிடுகிறது. விசிஷ்டாத்வைத அமைப்பின் அடிப்படைக் கோட்பாடான ஜீவா என்பது பரமாத்மாவின் சரீரம் என்று கூறும் கசக்ருத்சனின் வாதத்தை வேதவியாச முனிவர் இறுதியாக ஏற்றுக்கொள்கிறார். எனவே இந்த அதிகாரம் மிக முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும்.

இந்த அத்தியாயத்தில் ஏழாவது அதிகாரம் பிரகிருதி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆறு சூத்திரங்கள் உள்ளன. முந்தைய ஆறு அதிகாரங்களில், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான கபிலரால் நிறுவப்பட்டு பரப்பப்பட்ட நிரீஷ்வர சாங்கிய தத்துவம் முற்றிலும் மறுக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி பரமாத்மாவின் இருப்பு ஏற்கப்படவில்லை. பிரக்ருதி என்று அழைக்கப்படும் பிரதானம் அல்லது ஆதிப் பொருள்தான் ஸ்தூலமான காரணம் மற்றும் இந்த பிரகிருதி புருஷன் அல்லது ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குவதால், புருஷன் நிமித்த கரணமாகிறான்.

இந்த அதிகாரத்தில், சேஷ்வர சாங்கிய தத்துவ முறையை நிறுவிய நான்கு தலை பிரம்மா பரமாத்மாவின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் அவர் நிமித்தகர்ணன் மட்டுமே (செயல்பாட்டுக் காரணம்) என்றும், ஆதிப்பொருள் ஜடக் காரணம் அல்லது உபாதான கரணமாகத் தொடர்கிறது என்றும் கூறுகிறார்.

மேற்கூறிய இரண்டு தத்துவ அமைப்புகளும் வேதங்களில் உள்ள கோட்பாட்டிற்கு எதிரானது, இது பகவான் ஸ்ரீமன் நாராயணனே ஜடக் காரணமும், செயல் காரணமும் என்று ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கும் அபின்ன நிமித்த உபாதான கரணமானது இந்த அதிகாரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

எனவே முந்தைய அதிகாரத்துடன் இந்த அதிகாரத்தின் இணைப்பு என்னவென்றால், முந்தைய அதிகாரத்தில் நிரீஷ்வர சாங்கிய முறை மறுக்கப்பட்டது, இந்த அதிகாரத்தில் சேஷ்வர சாங்கிய முறை மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் எதிராளி அல்லது பூர்வபக்ஷி எழுந்து, உபநிடதங்கள் பொதுவாக பிரம்மம் என்பது நிமித்த கரணமே தவிர இந்த பிரபஞ்சத்திற்கு உபாதன கரணமல்ல என்று கூறுகிறது. ஸ்வேதாஷ்வர உபநிஷத்தில் உள்ள சில இரண்டு பத்திகள் தான் அவர் மேற்கூறிய வாதத்திற்குக் குறிப்பிடுகிறார். பிரம்மனாகிய மயி பிரகிருதியை பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்று அது எப்போதும் கூறுகிறது. பிரகிருதி என்பது மாயா, மயி என்பது பரமாத்மா.

ஸ்ரீ பகவத்கீதையிலும் பகவான் கிருஷ்ணர் தனது முன்னிலையில் அல்லது மேற்பார்வையில் பிரகிருதி பிரபஞ்சத்தை வழங்குகிறது என்று கூறுகிறார். ஜீவாத்மா பரமாத்மாவால் உருவாக்கப்பட்ட மாயாவிற்கு உட்பட்டது.

எந்த ஒரு பொருளுக்கும் உபாதன கரணமும் நிமித்த கரணமும் வேறுபடும் என்பது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உடலுக்கும் பொதுவான அறிவு. உதாரணமாக, ஒரு தங்க நகையில் தங்கத்தை உபாதான கரணமாகவும், பொற்கொல்லரை நிமித்த கரணமாகவும் கொண்டுள்ளது. அதுபோலவே இந்த பிரபஞ்சத்திற்கும் பிரகிருதியே உபதான கரணமாகவும், பிரம்மன் அல்லது பரமாத்மா நிமித்த காரனாகவும் இருக்கிறது.

இந்த வாதத்தை சூத்ரகாரர் “பிரகிருதிஷா ப்ரதிஜ்னா த்ரிஷ்டாந்த அனுபரோதாத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பிரகிருதிஷா என்றால் உபாதானம் (பொருள் காரணம்) என்பதும், அதாவது பிரம்மம் உபாதான கரணம் என்பதும் (அவர் நிமித்த கரணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) ஏனெனில் அடிப்படைக் காரணத்தைத் தெரிந்துகொள்வதன் மூலம் எல்லாப் பொருட்களும் உற்பத்தியாகும் என்று உபநிடதங்கள் உறுதியளித்தன. களிமண், தங்கம் மற்றும் இரும்பு ஆகிய மூன்று உவமைகளும் ஸ்வேத கேதுவுக்கு உத்தாலகாவால் மேற்கோள் காட்டப்பட்டன. களிமண்ணை அறிவதன் மூலம் அனைத்து களிமண் பொருட்களும் அறியப்படுகின்றன, தங்கத்தை அறிந்தால் தங்கத்தால் செய்யக்கூடிய அனைத்து ஆபரணங்களும் அறியப்படுகின்றன மற்றும் இரும்பினால் அனைத்து இரும்பு பொருட்கள் தெரியும். உறுதிமொழிக்கும் விளக்கப்படங்களுக்கும் இடையே மிக நெருக்கமான உடன்பாடு உள்ளது.

எனவே காரண நிலையில் உள்ள பிரம்மம் அண்ட வடிவில் உள்ள உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுடன் தொடர்புடையது. அவர் இந்த உயிரினங்களுக்கு அந்தர்யாமியாக இருப்பதால், ஒவ்வொரு உயிரினத்திற்கும் பெயரையும் வடிவத்தையும் கொடுத்து உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களை ஒரு பெரிய வடிவத்திற்கு மாற்ற விரும்புகிறார், அதாவது அவர் அனைத்து ஜீவாக்களுக்கும் உடல்களையும் புலன்களையும் வழங்குகிறார்.

அவர் உள் ஆன்மா மற்றும் விருப்பமாக இல்லாமல், மாற்றம் நிகழ்ந்திருக்காது. எனவே அவர் உபாதான கரணன். சிலந்தியின் உதாரணம் உள்ளது. சிலந்தி என்பது புழுவாகும், இது தானாக நூலை உருவாக்குகிறது மற்றும் அது உபாதான கரணமாகவும் நிமித்தமாகவும் இருக்கிறது என்பதை விளக்குகிறது. ஒரு சிலந்தி இரண்டு கரணங்களாக இருக்க முடியும் என்றால், பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஏன் உபாதான கரணமாகவும் நிமித்த காரனாகவும் இருக்கக்கூடாது.

8வது மற்றும் கடைசி அதிகாரம் சர்வ வியாக்யான அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரே ஒரு சூத்திரம் உள்ளது.

முந்தைய அதிகாரத்துடன் இணைப்பு பின்வருமாறு. சமன்வய அத்யாயா என்று அழைக்கப்படும் முதல் அத்தியாயத்தில் தற்போதுள்ள 35வது அதிகாரம் உட்பட 35 அதிகாரங்கள் உள்ளன.

முந்தைய 34 அதிகாரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக இருக்கிறார். ஆனால் பல்வேறு உபநிடதங்களில் ருத்ரா, ஹிரண்ய கர்பா, இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் பிரபஞ்சத்தின் காரணம் என்று குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் உள்ளன, இது பிரபஞ்சத்தின் உண்மையான காரணம் யார் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. எனவே இந்த சந்தேகத்தைப் போக்கவே இந்த அதிகாரம் சூத்ரகாரரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் ருத்ரனே பிரபஞ்சத்திற்குக் காரணமானவர் என்றும், மோட்சத்தை அடைய அவரை தியானிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்று எதிர்ப்பாளர் கூறுகிறார்.

“ஏதேன ஸர்வே வ்யாக்யதா வ்யாக்யத:” என்ற சூத்திரத்தில் ஸ்சூத்ரகாரரால் இதை மறுக்கப்படுகிறது.

இந்த அத்தியாயம் இந்த சூத்திரத்துடன் முடிவடைகிறது என்பதைக் குறிக்க உலகம் “வியாகாயத:” இரண்டு முறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள்

முந்தைய 34 அதிகாரங்களில் நிறுவப்பட்ட விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம், ருத்திரன், இந்திரன், ஹிரண்ய கர்ப்பம் போன்ற பல வான கடவுள்கள் பிரபஞ்சத்தின் காரணமாகக் குறிப்பிடப்பட்ட பல்வேறு உபநிடதங்களில் மீதமுள்ள கூற்றுகள் மற்றும் மோட்சத்தை அடைய தியானிக்கப்படும். அவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிப்பிடுகிறார்கள் என்பதும், ஜடப்பொருள் மற்றும் இயக்கம் ஆகிய இரண்டிற்கும் அவர் ஒருவரே காரணம் என்பதை நிரூபிக்க வேண்டும். பிரபஞ்சத்திற்கு அணுக்கள் தான் காரணம் என்ற வாதத்தையும் இந்த சூத்திரம் தற்செயலாக மறுக்கிறது.

ஸ்ரீ பாஷ்யத்தின் அழகிய வர்ணனையான ஸ்ருதப்ரகாசிகாவில், வர்ணனையாளர் ஸ்ரீ சுதர்சன சூரி, பிரபஞ்சத்தின் காரணத்தைப் பற்றி சந்தேகத்திற்குரிய பல உபநிடத நூல்களை மேற்கோள் காட்டுகிறார். அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பெயர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன, வேறு எதுவும் இல்லை என்று தீர்மானிப்பதற்கான உறுதியான காரணங்களை உரையாசிரியர் அழகாக கூறுகிறார். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உபநிஷத்

காரணம் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

சந்தேகத்திற்கு இடம்

பெயர் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது என்று வலியுறுத்துவதற்கான காரணம்.

பிருஹதாரண்யக உபநிஷத்

பிரம்மன்

பிரம்மா என்பது பிராமண ஜாதி அல்லது அக்னி தேவதா அல்லது நான்கு தலை பிரம்மா என்று பொருள் கொள்ளலாம்.

இங்கு ஸ்ரீமன் நாராயணனே சதுர்முகனைப் படைக்கிறார் என்று கூறுகிறார். எனவே பிரம்மா என்றால் நாராயணன்.

பிருஹதாரண்யக உபநிஷத்

மிருத்யு

முழு விஷயமும் மிருத்யுவால் சூழப்பட்டது.

மிருத்யு என்பது ஸ்ரீ நாராயணனை மட்டுமே குறிக்கிறது, சுபலோபநிஷத்தில் மிருத்யு பரமாத்மாவின் உடல் என்று கூறப்படுகிறது.

சுபலோபநிஷத்

அது சத் அல்ல, அஸத் அல்ல, சத் அல்லது அஸத் அல்ல.

இதிலிருந்து தமஸ் உண்டாகிறது.

இந்த உபநிடதத்தில் அவ்வப்போது நாராயணன் குறிப்பிடப்படுகிறார். எனவே சத் அல்லது அசத் என்பது நாராயணனை மட்டுமே குறிக்கிறது.

யஜுர்வேத ஆரண்யகம்

ஆதித்யா அல்லது சூர்யா

சூர்யா உலகத்திற்கு ஆத்மா என்று குறிப்பிடப்படுகிறார்.

சூரியன் அல்லது ஆதித்யா என்பது அந்தர்யாமியான ஸ்ரீமன் நாராயணனாகிய அவனது உள் ஆன்மாவைக் குறிக்கிறது.

பிரஸ்னோபநிஷத்

பிரஜாபதி

பிரஜாபதி விரும்பி பிரபஞ்சத்தைப் படைத்தார்

பிரஜாபதி என்றால் அவனது உள் ஆன்மா, ஸ்ரீமன் நாராயணன். பிற்பகுதியில் பரமபுருஷர் பற்றிய குறிப்பு உள்ளது

பிருஹதாரண்யக உபநிஷத்.

ஹிரண்ய கர்பா.

பிரளயம் அல்லது பிரளயத்தின் போது ஹிரண்யகர்பா தனியாக இருந்ததாகவும், அவர் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் உள்ள ஆயிரம் பெயர்களில் ஹிரண்யகர்பாவும் ஒன்று என்பதால் ஹிரண்யகர்பா என்ற சொல் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது.

தைத்தரிய உபநிடதம்

தாதா

தாதா சூரியனையும் சந்திரனையும் படைத்தார்

பாற்கடலின் மையத்தில் பரமாத்மா உறங்குகிறார் என்று ஆதியில் கூறப்பட்டிருப்பதால் ததா என்றால் ஸ்ரீமன் நாராயணன் என்று பொருள்.

ஸ்வேதாஷ்வதரா உபநிஷத்

ருத்ரா

ருத்திரன் ஹிரண்யகர்ப்பனை உருவாக்கியதாக கூறப்படுகிறது

ஸ்ரீமன் நாராயணனால் தன் நாபியிலிருந்து உருவான நான்கு தலை பிரம்மாவிடமிருந்து ருத்ரர் பிறந்தார், எனவே ருத்திரன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. மேலும் ஸ்ரீமன் நாராயணனின் ஆயிரம் நாமங்களில் ருத்ரனும் ஒன்று. எனவே ருத்ரா நேரடியாக ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது. மேலும் ருக் என்றால் இந்த நோயை கரைக்கும் சம்சார ஸ்ரீமன் நாராயண திரவயாதியின் நோயாகும், எனவே அவர் ருத்ரா என்று அழைக்கப்படுகிறார்.

இதேபோல் உபநிடதங்களில் பல்வேறு சூழல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவசம்பு என்ற வார்த்தைகள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன.

மேற்கூறியவற்றைச் சுருக்கி, முடிவாகப் பின்வரும் இரண்டு ஸ்லோகங்களும் மிகவும் பொருத்தமானதாகி, இந்த முதல் அத்தியாயத்தின் சாராம்சத்தை ஒரு கொட்டை ஓடுக்குள் வைக்கிறது.

“தத்வம் ஜிஜ்ஞாஸமானாம் ஹேதுபிஹ் ஸர்வதோ முகை:

தத்வமேகோ மஹாயோகி ஹரி: நாராயண: பர:

பல காரணங்களைச் சொல்லி உண்மையான உண்மையைக் கண்டறிய ஒரு விவாதம் நடத்தப்பட்டால், இறுதி முடிவு என்னவென்றால், ஹரி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனே பரதத்வா அல்லது உன்னதமான உண்மை அல்லது யதார்த்தம்.

“ஆலோத்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யாச்ச புன: புன:

இடம் ஏகம் ஸுநிஷ்பானந்நம், த்யேயோ நாராயண: ஸதா”.

இதன் பொருள் என்னவென்றால், அனைத்து சாஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் ஆழமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் விவாதித்து, இறுதி முடிவு என்னவென்றால், ஸ்ரீமன் நாராயணனே தியானிக்கப்பட வேண்டிய உயர்ந்தவர், இந்த உண்மையை தத்துவங்களைச் சேர்ந்தவர்களால் அசைக்க முடியாது. வேதங்களுக்குப் புறம்பானவை (வேதங்களை உச்ச அதிகாரமாக ஏற்கவில்லை) மற்றும் உபநிடதங்கள் மற்றும் வேதங்களுக்கு தவறான மற்றும் அபத்தமான விளக்கங்களை அளிக்கும் தத்துவங்களுக்கு. இத்துடன் முதல் அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

வேதங்களை அதிகாரங்களாக ஏற்றுக்கொள்ளாத தத்துவ அமைப்புகள் பாஹ்யமதாக்கள் எனப்படும். பாஹ்யா என்றால் வெளியே என்று அர்த்தம், அவை அனைத்தும் வேதங்களின் தத்துவத்திற்குப் புறம்பானவை, அவை பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே உபாதான கரணமும் நிமித்த கரணமும் என்று ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. வேதங்களை அதிகாரமாக ஏற்று அதற்கு தவறான விளக்கங்களை அளிக்கும் சில தத்துவ அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் குத்ரிஷ்டிமதாஸ் என்று அழைக்கப்படுகின்றன.

முதல் அத்தியாயம் சமன்வய அத்யாயா என்று அழைக்கப்பட்டது, ஏனென்றால் பிரபஞ்சத்தின் படைப்பாளர் மற்றும் படைப்பைப் பற்றிய அனைத்து உபநிடத நூல்களும் வேறுவிதமாகக் கூறினால் பிரபஞ்சத்தின் காரணமான ஸ்ரீமன் நாராயணனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளன, அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்திற்கும் காரணம். பொருள் (உபாதன கரண) மற்றும் திறமையான (நிமித்த கரண).

இது கருவி காரணம் அல்லது சககாரிகரணத்தையும் குறிக்கிறது அல்லது உள்ளடக்கியது.

இரண்டாவது அத்தியாயம் அவிரோத அத்யாயா என்று அழைக்கப்படுகிறது. அவிரோதா என்றால் எதிர்ப்பு இல்லை அல்லது எதிர்ப்பு இல்லை. பிரபஞ்சத்திற்குக் காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எதிரான அனைத்து ஆட்சேபனைகளும் அல்லது எதிர்ப்புகளும் ஆளப்பட்டு, அவர் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று மீண்டும் நிறுவப்பட்டது. வேறுவிதமாகக் கூறினால், இது முதல் அத்தியாயத்தின் இறுதி முடிவை வலுப்படுத்துகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் அல்லது காலாண்டுகள் உள்ளன. முதல் பாதம் ஸ்மிருதி பாதம் எனப்படும். இரண்டாவது பாதம் தர்கா பாதம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது பாதம் வியாத் பாதம் எனப்படும். நான்காவது பாதம் இந்திரிய பாதம் அல்லது பிராண பாதம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்பதை முதல் இரண்டு பாதங்கள் வலுப்படுத்துகின்றன. மூன்றாவது மற்றும் நான்காவது பாதங்கள் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கையாள்கின்றன. மற்றொரு அம்சத்திலிருந்து, முதல் இரண்டு பாதங்கள் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று எதிரிகள் எழுப்பிய ஆட்சேபனைகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இரண்டு பாதங்கள் உபநிடதங்கள் உட்பட வேதங்களில் உள்ள உள் தகராறு அல்லது வீட்டுச் சண்டையைத் தீர்க்கின்றன. எங்களுக்கு உச்ச அதிகாரம். இயல்பிலேயே ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் சில நூல்கள் உள்ளன. ஆகாசம் அல்லது ஆகாஷா நித்தியமானது என்றும் உருவாக்கப்படவில்லை என்றும் ஒரு உரை கூறும்போது, ​​மற்றொரு உரை ஆகாஷா உருவாக்கப்பட்டது என்று கூறுவது முரண்பாடானது.

இதேபோல் ஜீவாக்கள் அல்லது உணர்வுகள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன, அதே நேரத்தில் ஜீவாக்கள் உருவாக்கப்படவில்லை, அவை நித்தியமானவை என்று கூறும் நூல்கள் உள்ளன. அதேபோல் இந்திரியங்கள் என்று அழைக்கப்படும் புலன்கள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன, அவை உருவாக்கப்படவில்லை என்று உபநிடதங்கள் உள்ளன. உபநிடதங்கள் உட்பட வேதங்களின் ஒவ்வொரு எழுத்தும் நமக்கு அதிகாரமாக இருப்பதால், இயற்கையில் மேலோட்டமான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நியாயமான மற்றும் விவேகமான தர்க்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சமரசம் செய்ய வேண்டும்.

முனிவர் பாதராயணன் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வேதவ்யாசரான ஸ்ரீ வேதவ்யாஸர் முதல் பாதத்தில், பிரபஞ்சத்திற்குக் காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எதிராக நிரீஷ்வர சாங்கியர்கள் மற்றும் சேஷ்வர சாங்கியர்கள் இருவரும் எழுப்பிய தர்க்கரீதியான ஆட்சேபனைகளை முறியடித்து தற்காப்புக்காக நிற்கிறார்.

இரண்டாவது பாதத்தில் சூத்ரகாரர் தாக்குதலைத் தொடர்கிறார் மற்றும் சாங்கிய தத்துவம், வைசேஷிக தத்துவம், பௌத்தம், சமணம் மற்றும் பசுபத தத்துவ முறைகளை அவற்றுள் பிளவுகளை சுட்டிக்காட்டி மறுக்கிறார். இறுதியாக இரண்டாவது பாதத்தில் பகவத் சாஸ்திரம் எனப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை சூத்திரகாரர் நிறுவுகிறார்.

இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள முதல் பாதம் ஸ்மிருதி பாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நிரீஸ்வர சாங்கிய தத்துவத்தின் அடிப்படை உரையான கபில ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட நிரீஷ்வர சாங்க்யா எழுப்பிய ஆட்சேபனைகளால் முழு பாதமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த பாதத்தில் பத்து அதிகாரங்கள் உள்ளன. இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் ஸ்மிருதி அதிகாரம் ஆகும். ஏற்கனவே கூறியது போல் அனைத்து பத்து அதிகாரங்களிலும் பூர்வபக்ஷி அல்லது எதிரி நிரீஸ்வர சாங்க்யா. நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தின் நிறுவனர் மற்றும் பிரச்சாரகர் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான கபில முனிவர் ஆவார். கபில முனிவரால் இயற்றப்பட்ட படைப்பு கபில ஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது.

சாங்க்யா என்ற சொல்லுக்கு எண் என்று பொருள். இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் சாங்கிய அமைப்பு. பிரம்மன் அல்லது ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இருப்பை நம்பாத இந்த சாங்கிய அமைப்பு நிரீஸ்வர சாங்க்ய அமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது பிரக்ருதியின் 24 தத்வங்கள் இருப்பதாகக் கூறுகிறது, இது பிரதாபனம், அனுமானிகா அல்லது அசப்தா என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவா என்பது 25வது தத்துவம். இந்த தத்துவம் இந்த 25 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இது நிரீஷ்வர சாங்கிய அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தத்துவத்தில் பிரகிருதி என்பது பிரபஞ்சத்திற்கு ஜடக் காரணம் மற்றும் அது ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது.

சாங்க்ய அமைப்பின் மற்ற கிளை ஹிரண்ய கர்பா அல்லது நான்கு தலை பிரம்மாவால் நிறுவப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட சேஷ்வர சங்கியா ஆகும். இந்த அமைப்பு 26 வது தத்துவமான ஈஸ்வர அல்லது பிரம்மனின் இருப்பை நம்புகிறது. இந்த அமைப்பில் பிரகிருதியை உபதான கரணமாகவும், ஈஸ்வர (நாராயணன்) நிமித்த கரணமாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு அமைப்புகளும் பிரம்மமே ஜடக் காரணம் மற்றும் செயல்பாட்டுக் காரணம் (உபாதான கர்ணம் மற்றும் நிமித்த காரணம்) என்று கூறும் வேத தத்துவத்திற்கு எதிரானது.

நமது விசிஷ்டாத்வைத தத்துவம் முழுக்க முழுக்க வேத தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. 26 எண்ணிக்கையில் உள்ள தத்வாக்களின் எண்ணிக்கையைப்பற்றிய sankhya உடன் நாங்கள் உடன்படுகிறோம்.

எனவே முதல் அதிகாரத்தில், ஸ்மிருதிகளின் உதவியின்றி வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கம் சாத்தியமற்றது என்று நிரீஷ்வர சாங்கியம் கூறுகிறது. வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கங்களைச் செய்ய வேண்டிய பல ஸ்மிருதிகள் இருந்தாலும், கபில ஸ்மிருதி மிகவும் பொருத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனெனில் இது தத்துவத்தின் தத்துவங்களை மட்டுமே கையாள்கிறது, எனவே இது மிகவும் சக்தி வாய்ந்தது. மனு ஸ்மிருதி போன்ற பிற ஸ்மிருதிகள், ஏனெனில் இந்த ஸ்மிருதிகள் கோட்பாடுகள் மற்றும் தினசரி சடங்குகளின் செயல்திறன் இரண்டையும் கையாள்கின்றன. வேதங்களின் விளக்கத்திற்கு கபில ஸ்மிருதியைக் கருத்தில் கொள்ளாவிட்டால் அது அர்த்தமற்றதாகவும் நோக்கமற்றதாகவும் மாறும் என்று அவர் மேலும் வாதிடுகிறார். இது நடக்கக்கூடாது. சூத்திரத்தில், சூத்ரகாரர் அனவகாஷா எனப்படும் தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அனவகாஷ என்றால் குறைவான அல்லது நோக்கமற்ற பொருள். உபநிடதங்கள் மற்றும் ஸ்மிருதிகள் உள்ளிட்ட வேதங்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும்போது, ​​ஸ்மிருதிகளை விட வேதங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்று கூறப்படும் ஒரு மாக்சிம் இங்கே உண்ணப்படுகிறது. பூர்வபக்ஷி மேலும் கருத்துப்படி வேதங்களே கபில முனிவரின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன; பிறகு வேதங்களை கபில ஸ்மிருதியின் துணை கொண்டுதான் விளக்க வேண்டும்.

நிரீஷ்வர சாங்கிய பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை “ஸ்மிருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத் இதி சேத் நாண்யஸ்மிருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்” என்று சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு:

வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கத்திற்கு கபில ஸ்மிருதியைப் பயன்படுத்தாவிட்டால், அது அர்த்தமற்றதாகவும், நோக்கமற்றதாகவும் மாறும், இது ஒரு கடுமையான குறைபாடாகும். நோக்கமற்ற.

பிரபஞ்சத்திற்குக் காரணம் பகவான் ஸ்ரீமன் நாராயணனே என்று கூறும் வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் கபில ஸ்மிருதி எதிரானது என்பதும் இந்த உண்மையை மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்ற மற்ற எல்லா ஸ்மிருதிகளும் முழு மனதுடன் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றன என்பதும் இந்த சூத்திரத்திலிருந்து மறைமுகமாகத் தெரிகிறது.

மனு ஸ்மிருதி கூறுகிறது, “அபோநரா இதி ப்ரோக்தா: அபோவை நர சுனவ:தா யதஸ்ய அயனம் பூர்வம்: தேன நாராயண ஸ்ம்ருதி: ||”

இந்த ஸ்லோகம் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று தெளிவாகக் கூறுகிறது. மனு எதைச் சொல்கிறதோ அதுவே சம்சார நோய்க்கு மருந்து என்று வேதமும் கூறுகிறது. எனவே மனுவின் வாசகங்கள் வேதங்களைப் போல நமக்கு அதிகாரம்.

பூர்வபக்ஷி மேலும் கூறும்போது, ​​கபில முனிவர் தனது யோக சக்தியால் மனிதனின் அனைத்து அதீதமான விஷயங்களையும் தன்னால் பார்க்க முடிந்தது என்றும், அவருடைய கூற்றுகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியபோது, ​​சூத்ரகாரர் இதை மறுத்து, மனு மற்றும் பிற முனிவர்களும் கூட கூறினார். யோக சக்திகள் கபிலனைப் பார்த்த விதத்தில் சூப்பர் மனித விஷயங்களைப் பார்க்கவில்லை.

எனவே கபில ஸ்மிருதியை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது முடிவு.

இரண்டாவது அதிகாரம் யோகா பிரதுக்தி அதிகாரம். இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர் முந்தைய அதிகாரத்தில் இருந்த அதே வாதத்தைப் பயன்படுத்தி ஹிரண்யகர்பாவால் நிறுவப்பட்ட சேஷ்வர சாங்கிய தத்துவ அமைப்பைக் கண்டிக்கிறார். இந்த சேஷ்வர சாங்கிய அமைப்பு யோக முறை தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தத்துவ முறைப்படி, பகவான் ஸ்ரீமன் நாராயணன் பிரபஞ்சத்திற்கு உபாதன கர்ணன் அல்ல, ஆனால் அவனுடைய ஒரே நிமித்த கரண உபாதன கரேனா பிரகிருதியே.

ஸூத்ரம் ஏர்தேந யோக ப்ரத்யுக்தா:

சதுர்முக பிரம்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் இருந்து பிறந்தாலும், ராஜஸ மற்றும் தாமஸ குணங்களால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அதே வாதத்தால் யோக முறை மறுக்கப்படுகிறது. எனவே அவருடைய வார்த்தைகளை அதிகாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மூன்றாவது அதிகாரம் விலக்ஷணத்வாதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரம் முதல் நிரீஷ்வர சாங்கியம் கபில ஸ்மிருதியின் அடிப்படையில் பொது அறிவுக் கண்ணோட்டத்தில் எதிர்ப்புகளை எழுப்புகிறது மற்றும் உபாதான கர்ணம் மற்றும் நிமித்த கரணமாகிய பிரபஞ்சத்திற்கு காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்ற நமது கட்டிடத்தை அழிக்க முயற்சிக்கிறது. சூத்திரகாரர் அவருக்கு மிகவும் பொருத்தமான பதில்களை அளித்து, அவரது ஆட்சேபனைகளை நிராகரித்து, கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை நிறுவுகிறார்.

முதல் ஆட்சேபனை இந்த அதிகாரத்தில் உள்ளது. இந்த அதிகாரத்தில் ஒன்பது சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் முதல் இரண்டு சூத்திரங்கள் பூர்வபக்ஷ சூத்திரங்கள் ஆகும், அவை எதிராளியின் பார்வை அல்லது ஆட்சேபனையை எதிரொலிக்கின்றன, மீதமுள்ள ஏழு சூத்திரங்கள் எதிரியின் ஆட்சேபனைக்கு பதிலளிக்கும் சித்தாந்த சூத்திரங்கள்.

முதல் சூத்ரம் “ந விலக்ஷணத்வாத் அஸ்யதத்தத்வம்ச சப்தாத்”.

அதன் பொருள் என்னவென்றால், “சத்வ, ரஜஸ, தாமஸம் என்ற மூன்று குணங்களைக் கொண்ட இந்த பிரபஞ்சத்திற்குப் பிரபஞ்சத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், பிரம்மம் ஜடக் காரணமோ, உபாதனக் காரணமோ ஆகாது. உண்மையில் பிரபஞ்சத்தின் பொருள் பிரம்மத்தில் இருந்து வேறுபட்டது என்பது உபநிடதங்களில் தெளிவாக உள்ளது.

மேற்கூறிய ஆட்சேபனை மிகவும் பொதுவான ஒன்று, ஏனென்றால் மண் பானையின் பொருள் களிமண்ணைப் போலவே உபதான கரணமாக இருப்பதை நாம் பார்த்தோம். இதேபோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் தங்கம் பல ஆபரணங்களுக்குப் பொருள் காரணமாகும். இந்த ஆபரணங்களும் மஞ்சள் நிறத்தில் உள்ளன மற்றும் பொருள் தங்கம் போன்றது. உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் இரண்டையும் உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்திற்கு பிரகிருதியாகிய மூலப்பொருள் உபதான கரணமாகும்.

பிராமணன் எங்கும் நிறைந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் மற்றும் எல்லாம் அறிந்தவர், ஜீவா அறியாமை மற்றும் குற்றமற்றவர். பூமி பேசியது மற்றும் நீர் விரும்பியது போன்ற உபநிடதங்களில் உள்ள சில கூற்றுகள் உண்மையில் எந்த அறிவும் இல்லாத உயிரற்ற பொருட்களைக் குறிக்கவில்லை, அது அந்தந்த பேச்சாளர்களைக் குறிக்கிறது. இந்தியா பாகிஸ்தானிடம் சொல்கிறது, அதில் அந்தந்த பேச்சாளர்களைக் குறிப்பிடுவது போன்ற ஒரு விஷயம் இது. ஜீவா பிரம்மத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், உயிரற்ற பொருட்களும் பிரம்மத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் இருக்கும் போது, ​​அறிவுள்ள மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு பிரம்மம் எப்படி ஜடக் காரணியாக இருக்கும் என்று எதிரி கேட்கிறார்.

எதிரணியின் இந்த ஆட்சேபனைக்கு சூத்திரகாரர் பின்வருமாறு பதிலளிக்கிறார். அவரது பதிலில் முதல் சூத்திரம் “த்ரிஷ்யதேது“. இதன் பொருள், இந்த உலகில், பொருள் மற்றும் நிறத்தில் காரணமும் விளைவும் முற்றிலும் வேறுபட்ட சில நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம்.

தேள் பசுவின் சாணத்தால் உருவாக்கப்படுகிறது. இரண்டுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி. பசுவின் சாணம் காரணம், தேள் விளைவு. எனவே கரணமும் காரியமும் என்ற காரணத்திற்கும் விளைவுக்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும் கண்டிப்பாகத் தேவையில்லை. காரணம் மற்றும் விளைவின் பொருள் ஒன்று மற்றும் ஒன்று இல்லை என்றால், எந்தவொரு பொருளும் எதிலிருந்தும் அல்லது ஒன்றுமில்லாததிலிருந்தும் கூட உருவாக்கப்படலாம் என்று வாதிடலாம். அது அப்படியல்ல. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் காரணம் மற்றும் விளைவு அதாவது கரண மற்றும் காரியத்தின் கொள்கையை விளக்குவதற்கும் குறியிடுவதற்கும் ஒரு அழகான விளக்கத்தைத் தருகிறார். உவமை என்னவென்றால், ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்தே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கிறது. மாற்றங்கள் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், இளமைப் பருவம், பின்னர் முதுமைப் பருவம். குழந்தை முழுவதும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே இந்த மாற்றங்கள் சாத்தியமாகும், அதாவது ஆன்மா உடலுக்குள் இருக்கும். இந்த மாற்றங்கள் உடலுக்கு மட்டுமே அன்றி உடலில் வாழும் ஜீவா அல்லது ஆன்மாவிற்கு அல்ல. பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரம்மன் என்ற விஷயத்திலும் இதே உதாரணம் நன்றாக இருக்கிறது. பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி ஆகும், அவை வேறுவிதமாகக் கூறினால் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள்.

‘காரநாதவா’ கட்டத்தில் அல்லது காரண நிலையில் அவர் சூக்ஷ்ம (அணு) வடிவில் உள்ள அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கும் அந்தர்யாமியாக இருக்கிறார், இந்த நிலை பிரளய காலத்தில் உள்ளது. பரமாத்மா உலகைப் படைக்க விரும்பினால், சூக்ஷ்ம வடிவில் இருந்த உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் திட்டவட்டமான வடிவத்தையும் பெயரையும் எடுத்துக் கொண்டு பெரியதாக மாறும். எனவே கரண மற்றும் காரிய பாவத்தின் குறியிடப்பட்ட பதிப்பு பின்வருமாறு.

‘காரணவஸ்தா’வில் பரமாத்மா சூக்ஷ்ம சேதன அசேதன விசிஷ்டா (சூக்ஷ்மம் என்றால் நுட்பமானது, சேத்தனா என்பது உணர்வு மற்றும் அசேதனம் என்பது உணர்ச்சியற்றது, மற்றும் விசிஷ்டம் என்றால் இணைவு). விளைவின் கட்டத்தில் இருக்கும் காரிய வஸ்தாவில் பரமாத்மா ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா (ஸ்தூல என்றால் பெரியது).

எனவே மாற்றம் என்பது அந்தர்யாமிக்கோ அல்லது பரமாத்மாவுக்கோ அல்ல, மாறாக சேதன மற்றும் அசேதனான அவனது உடல்களுக்கு. காரண கட்டத்தில் உடல்கள் சூக்ஷ்மா (அணு) மற்றும் விளைவு கட்டத்தில் அவை திட்டவட்டமான வடிவம் மற்றும் பெயரைப் பெறுகின்றன. இது மேலே குறிப்பிடப்பட்ட விளக்கத்தின் படி உள்ளது. எனவே அணு நிலை மற்றும் திட்டவட்டமான நிலை ஆகியவற்றின் பொருளில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் எதிரணியின் ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் மரண சரீரத்திற்கு அழகான விளக்கம் தருகிறார். இது உடலுக்கு மிகவும் பொருத்தமான வரையறை. வரையறை பின்வருமாறு.

ஒரு தனி ஆன்மாவால் ஆதரிக்கப்படும், ஆன்மாவால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் ஆன்மாவுக்குக் கீழ்ப்பட்ட பொருள் அல்லது பொருள் ஆன்மாவின் உடல். பரமாத்மாவின் உடலாகிய ஜீவா அல்லது ஆன்மாவிற்கும் அதே வரையறை நல்லது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் சிஷ்ட அபரிகிரஹாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில், நிரீஷ்வர சாங்கியத்திற்குக் கொடுக்கப்பட்ட பதிலைப் பிரயோகித்து, அவருடைய ஆட்சேபனையைத் தீர்ப்பதன் மூலம், வேதத்தின் அதிகாரத்தை ஏற்காத மற்ற தத்துவ அமைப்புகள் தானாகவே அழிந்துவிடும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அமைப்புகள் கனட முனிவரால் நிறுவப்பட்ட வைசேஷிக அமைப்பு, அக்ஷபாதா என்று அழைக்கப்படும் கௌதம முனிவரால் நிறுவப்பட்ட நியாய அமைப்பு. பௌத்தமும் சமணமும். இந்த அமைப்புகள் பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் அல்ல, பிராதானம் அல்லது பிரகிருதி அல்ல, ஆனால் அணுக்கள் என்று கூறுகின்றன. இந்த அமைப்புகள் பரமானுகார வடிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஐந்தாவது அதிகாரம் போக்திரப்பட்டி அதிகாரம் எனப்படும். இந்த அதிகரணம் விலக்ஷனாத்வாதிகாரனுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது, இதில் சேதனம் மற்றும் அசேதனப் பொருள்கள் பரமாத்மாவின் உடல்கள் என்று கூறப்படுகிறது.

எதிராளியான நிரீஷ்வர சங்கியா மீண்டும் எழுகிறார். உணர்வு மற்றும் உணர்வற்ற உயிரினங்கள் பரமாத்மாவின் உடல்களாக இருக்கும் போது அணு வடிவிலும் திட்டவட்டமான அல்லது பெரிய வடிவத்திலும் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று அவர் கூறுகிறார். ஜீவாத்மா உடலில் ஏற்படும் துன்பத்தையும் இன்பத்தையும் பெறுவது போல, பரமாத்மாவும் தனது உடலில் ஏற்படும் இந்த துன்பத்திற்கும் இன்பத்திற்கும் உட்பட வேண்டும்.

எனவே பிரபஞ்சம் முழுவதையும் தனது உடலாகக் கொண்டதன் மூலம் மீண்டும் பிரபஞ்சத்திற்குக் காரணமான பிரம்மன் தன் உடலில் ஏற்படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகிறான். பிரகிருதி அல்லது பிராதானம் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்ற நமது நிலைப்பாடு மிகவும் சிறந்தது என்று அவர் மேலும் கூறுகிறார். எனவே பிரபஞ்சத்தின் காரணமாக பிரம்மனைக் கருத முடியாது, ஏனென்றால் உடலின் உடைமையே அவனைத் துன்பத்திற்கு ஆளாக்குகிறது.

“போக்த்ரபத்தே: அவிபாக: சேத் ஸ்யாத் லோகவத்” என்ற சூத்திரத்தில் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்தியாசம் எப்போதும் உண்டு. உடல் உடைமை துன்பத்திற்குக் காரணம் அல்ல. துன்பம் அல்லது இன்பம் என்பது ஜீவாவின் கடந்தகால செயல்களான புண்யா மற்றும் பாபாவின் கணக்கில் உள்ளது.

மேற்கூறிய விஷயத்தை விளக்குவதற்கு சூத்ரகாரரே ஒரு நடைமுறை உதாரணத்தை தருகிறார்.

சிறை அல்லது சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளரும் குற்றவாளியும் அவரது குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள். சிறைக்காவலர் தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளியை மேற்பார்வையிடுகிறார். அதனால் சிறையில் ஏற்படும் துன்பங்கள் சிறை கண்காணிப்பாளரை பாதிக்காது. அவ்வாறே இங்கு அந்தர்யாமியாகிய பரமாத்மா எந்த துன்பத்திற்கும் ஆளாகவில்லை, ஜீவன் மட்டுமே துன்பத்திற்கு ஆளாகிறான். ஆக பிரம்மம் மட்டுமே பிரபஞ்சத்தின் காரணமாகும்.

அடுத்த அதிகாரம் ஆரம்பநாதிகரணம். இது விலக்ஷனாத்வாதிகாரத்தில் உள்ள சூத்திரங்களில் ஒன்றோடு தொடர்பு கொண்டுள்ளது, அதில் கரணத்திலும் காரியத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான் என்று கூறப்பட்டது. பின்வரும் காரணிகளால் கரணமானது காரியத்திலிருந்து வேறுபட்டது என்று எதிராளி கூறுகிறார்.

1) பெயர்கள் வேறு. உதாரணமாக, களிமண் மற்றும் பானை. களிமண் காரணம், பானை விளைவு.

2) வடிவங்கள் அல்லது வடிவங்கள் வேறுபட்டவை – பானையின் வடிவம் களிமண் குவியலில் இருந்து வேறுபட்டது.

3) களிமண்ணால் செய்யப்படும் வேலை பானையில் இருந்து வேறுபட்டது. களிமண்ணின் விஷயத்தில் அது சாத்தியமில்லாத போது பானை தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.

4) களிமண்ணிலிருந்து ஒரு பானை தயாரிப்பதில் நேரம் அடங்கும்.

5) களிமண்ணும் பானையும் ஒன்றானால் பானை செய்பவரின் முயற்சிக்கு அர்த்தம் குறையும்.

எனவே காரியம் கரணத்திலிருந்து வேறுபட்டது, அதே ஒப்புமையில் காரியமாகிய பிரபஞ்சம் பிரம்மமாகிய கரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டால், பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “தத் அநந்யத்வம் ஆரம்பனா சப்தாதிப்ய” என்று சூத்ரகாரர் மேற்கூறிய எதிராளியின் பார்வையை மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் கீழே விளக்கப்பட்டுள்ளது. உத்தாலக முனிவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்கு களிமண், பொன், இரும்பு ஆகிய மூன்று உவமைகளில், இந்த உலகம் சிருஷ்டிக்கு முன் சத்தாக இருந்தது என்று கூறுகிறார். இச்சூழலில் சத் என்று அழைக்கப்படும் பிரம்மன் பிரபஞ்சத்தை உருவாக்க விரும்பியபோது அவர் தன்னை பிரபஞ்சமாக மாற்றினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படைப்பிற்கு முன் ஏற்கனவே கூறியது போல், சத் பிராமணன் அணு வடிவில் உள்ள உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமியாக இருந்தான், மேலும் அவன் விரும்பிய போது மாற்றம் நிகழ்ந்தது, அதே சத் தான் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமியாகிறது. ஒரு திட்டவட்டமான மற்றும் பெரிய வடிவம். பிராமணன் கடந்த காலச் செயல்களின்படி ஜீவர்களுக்கு நான்கு விதமான உடல்களை அளித்தான் என்பது இதன் பொருள். நான்கு வெவ்வேறு வகையான உடல்கள் வான உயிரினங்கள் (தேவா), பூமிக்குரிய உயிரினங்கள் (மனித வடிவம்), விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்கள். எனவே பரமாத்மா ஜீவாக்களுடன் மேலே விவரிக்கப்பட்ட நான்கு வடிவங்களில் ஒவ்வொரு உடலுக்குள்ளும் நுழைந்து அவற்றிற்கு திட்டவட்டமான வடிவத்தையும் பெயரையும் கொடுத்தார்.

விளக்கப்படத்தில் காலையில் களிமண்ணாக இருந்த களிமண் குவியல் பிற்பகலில் கட்டா (பானை), தட்டுகள் அல்லது வட்டு (தட்டு அல்லது வட்டு) ஆனது. தட்டு அல்லது வட்டு ஷரவா எனப்படும். இந்த அனைத்து களிமண் பொருட்களிலும் ஒரே மாதிரியான பொருள் இருந்தாலும், அவை தேவைப்படும் நோக்கத்திற்கு ஏற்ப பெயர்கள் வேறுபடுகின்றன. கட்டா அல்லது பானை தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் தண்ணீரை அப்படியே வைத்திருப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு களிமண் பொருட்களின் பெயர்கள் மற்றும் நோக்கங்கள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டவை என்பது உண்மையாகவே உள்ளது. எனவே, காரியம் உருவாகும் மூலப்பொருளின் அம்சத்தில் கரணமும் காரியமும் ஒன்றே.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் பரமாத்மாவின் சரீரம் மற்றும் அவர் உயர்ந்த ஆத்மா அல்லது அந்தர்யாமி. உடலும் ஆன்மாவும் பிரிக்க முடியாதவை என்பதால் அவை அனன்யா என்று அழைக்கப்படுகின்றன, அதாவது பிரிக்க முடியாதவை.

சில உபநிஷத நூல்களில், அதே சத் அஸத் என்றும் அவ்யக்ருத என்றும் அழைக்கப்படுகிறது., இதன் பொருள் அசத் அல்லது அவ்யக்ருதம் என்பது மாற்றப்படாத நிலை அல்லது கரண நிலையைக் குறிக்கிறது. அதுவே பிரம்மன்.

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகாரம் இடரா வியாபதேசாதிகரணம் எனப்படும். பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று எதிராளி மீண்டும் எழுகிறார். அவர் பயன்படுத்திய தர்க்கம் அல்லது நியாயம் பின்வருமாறு.

கரணமும் காரியமும் வெவ்வேறாக இல்லாமல், இரண்டும் ஒன்றே, ஜீவனும் பரமாத்மாவின் காரியமாக இருக்கும் போது, ​​கரணமாக இருக்கும் போது, ​​இருவரும் அனன்யமாக இருக்கும் போது, ​​ஜீவனாகிய பிராமணன் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியாது. ஒவ்வொரு அம்சத்திலும் அவர். எனவே ஜீவாவாகிய பிரம்மனுக்கு இரண்டு குறைபாடுகள் உள்ளன. முதல் குறைபாடு தனக்கு மிகவும் பாதகமான உலகத்தை உருவாக்குவது இரண்டாவது குறைபாடு தனக்கு சாதகமான உலகத்தை உருவாக்கவில்லை. எனவே பிரபஞ்சத்தின் காரணமாக பிரம்மன் இருக்க முடியாது. இந்த வாதம் அல்லது பகுத்தறிவு ஸ்ரீ ஆதிசங்கரரால் முன்வைக்கப்பட்ட அட்வைத முறையை எதிரொலிக்கிறது. அத்வைத தத்துவ அமைப்பில் பிரம்மமும் ஜீவாவும் ஒன்றுதான். பிரம்மன் அவித்யா அல்லது அறியாமையின் காரணமாக ஜீவ வடிவத்தை எடுத்துக்கொள்கிறார், மேலும் இந்த ஜீவன் குருவிடம் இருந்து “தத்வமசி” கற்றுக் கொள்ளும்போது மீண்டும் பிரம்மனாக மாறுகிறான், அதாவது நீ பிரம்மன்.

இந்த அதிகாரத்தில் முதல் சூத்திரம் இதர வியாபதேசத்ஹித அகரானாதி தோஷ பிரசக்தி மற்றும் இது பூர்வபக்ஷ சூத்திரம் ஆகும், இதன் பொருள் மேலே விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சூத்திரம் சித்தாந்த சூத்திரம் ஆகும், இது மேற்கூறியவற்றை மறுக்கும் வடிவத்தில் மேற்கூறியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. இந்த சூத்திரம் “அதிகம்து பேத நிர்தேசத்” என்று படிக்கிறது. பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஜீவாவை விட மிகவும் மேலானவர் மற்றும் உயர்ந்தவர், எனவே பிரம்மன் ஜீவ வடிவத்தை ஏற்று சாதகமற்ற உலகத்தை உருவாக்குவது பற்றிய கேள்வி எழவே இல்லை.

இந்த பாதத்தில் உள்ள எட்டு அதிகாரங்கள் உபசம்ஹார அதிகாரம் ஆகும். இந்த அதிகாரம் பிரம்ம கரணத்துவத்தை மறுப்பதில் குறியாக இருக்கும் நிரீஷ்வர சாங்கிய வாதியும், பிரதான காரண வாதியுமானவர் மீண்டும் எழுந்து பிரம்மகாரணவாதத்திற்கு எதிராக மற்றொரு நியாயத்தைப் பயன்படுத்துகிறார். மண் பானை செய்வதற்கு சக்கரம் மற்றும் குச்சியைப் பயன்படுத்தி ஒரு பானை தயாரிப்பதை இந்த உலகில் நாம் பார்த்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். இதேபோல், ஒரு பொன் தொழிலாளி ஒரு ஆபரணத்தை உருவாக்க பல கருவிகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் பிரளய காலத்தில் பிரபஞ்சத்தைப் பொறுத்தமட்டில் பிரம்மம் மட்டுமே உள்ளது, வேறு எதுவும் இல்லை. நிச்சயமாக இங்கே பிரம்மன் என்பது மகாலட்சுமி தேவி மற்றும் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது. கருவி மற்றும் பிற கருவிகள் இல்லாத போது பரமாத்மா எவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்க முடியும் என்பது அவரது கேள்வி.

மேற்கண்ட கேள்விக்கு விடையாக சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “உபசம்ஹாரதர்ஷனாத் நைதிசேத் ந க்ஷீரவதி” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உலகில் உபாதான கரணம், நிமித்த கரணங்கள் தவிர எந்த ஒரு பொருளையும் உருவாக்க சககாரிகரணமும் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். சககாரிகரணம் இல்லாதபோது, ​​பிரம்மம் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. க்ஷீரவதி என்று கூறி இது மறுக்கப்படுகிறது. சூத்ரகாரர் இந்தச் சூழலில் ஒரு நடைமுறை உதாரணத்தைக் கூறுகிறார். பால் தயிராக மாறுவதற்கு கூடுதல் கருவியோ அல்லது கருவியோ தேவையில்லை. அதுபோலவே பிரம்மனுக்கு எந்த ஒரு கருவியோ, கருவியோ, கருவியோ தேவையில்லை. விஸ்வாமித்ர முனிவர் தனது யோக மற்றும் ஆன்மீக சக்திகளால் திரிசங்குவுக்காக சொர்க்கத்தை உருவாக்க விரும்புவதைப் போல. இந்திரன், சிவன், நான்கு தலை பிரம்மன் போன்ற தெய்வீகக் கடவுள்கள் எந்தப் பொருளின் உதவியும் இல்லாமல் பொருட்களைப் படைப்பது போல, ஞானமுள்ள பரமாத்மா எந்த உதவியும் இல்லாமல் பிரபஞ்சத்தைப் படைக்க வல்லவர்.

9வது அதிகாரம் கிருதஸ்ன பிரசக்தி அதிகாரம் என அழைக்கப்படுகிறது. இதில் பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று எதிர்ப்பவர் மற்றொரு நியாயத்தை அல்லது தர்க்கத்தை எடுக்கிறார்.

பிரபஞ்சம் பிரம்மத்தின் மாற்றம் என்று சொல்லப்பட்ட ஆரம்பநாதிகரணத்துடன் இந்த அதிகாரம் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. பிரம்மன் தன்னை பிரபஞ்ச வடிவத்திற்கு மாற்றும்போது. பிராமணன் என்பதே இல்லை. பிரம்மன் என்பது வெட்டப்படவோ அல்லது பிடுங்கவோ முடியாத ஒரு பொருள். பிரம்மம் இருந்தால் உலகமோ பிரபஞ்சமோ இல்லை என்கிறார். பிரபஞ்சம் இருந்தால் பிரம்மம் இல்லை.

இந்த அதிகாரத்தில் உள்ள முதல் சூத்திரம் “கிருத்ஸ்ன ப்ரசக்தி: நிரவயவத்வா சப்தகோபோவ”. இந்த சூத்திரத்தின் பொருள் மேலே குறிப்பிட்டது மற்றும் இது பூர்வபக்ஷ சூத்திரம். மேற்கூறியவற்றிற்குப் பதில் சூத்திரகாரர் “ஸ்ருதேஸ்து சப்த மூலத்வத்” என்று சித்தாந்த சூத்திரத்தைக் கூறுகிறார். இதன் பொருள் ஸ்ருதி அல்லது உபநிஷதம் பிரம்மன் நிரவயவ என்று கூறுகிறது, அதாவது அவருக்கு கைகால்கள், கைகள் போன்ற உறுப்புகள் இல்லை, அதனால்தான் அவரை பகுதிகளாக வெட்ட முடியாது. அதே சமயம் பரமாத்மா மகத்தான மனித சக்திகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அவர் விரும்பி பிரபஞ்சமாக மாறுகிறார், அதே நேரத்தில் பிரம்மனாக அப்படியே இருக்கிறார். நமது பொதுவான அனுபவத்தின் அடிப்படையில் நிரீஷ்வர சாங்க்யா எழுப்பிய ஆட்சேபனை பிரம்மனுக்குப் பொருந்தாது.

நிரீஷ்வர சாங்கிய அமைப்பில் உள்ள சில குறைபாடுகளை சூத்ரகாரரே சுட்டிக்காட்டுகிறார்.

பத்தாவது அல்லது கடைசி அதிகாரம் பிரயோஜனத்வாதிகாரம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில், பிரபஞ்சத்திற்குக் காரணமான பிராமணனை எதிர்ப்பவர் தனது கடைசி ஆட்சேபனையை எழுப்புகிறார். அவரது ஆட்சேபனை மிகவும் பொருத்தமானது மற்றும் தர்க்கரீதியானது. உன்னால் கூறப்படும் பிராமணனுக்கு நிறைவேறாத ஆசை இல்லை என்றும், அவப்த சமஸ்த காமம் என்றும் அவர் கூறுகிறார். அப்படி இருக்கும் போது அவன் படைப்பின் மூலம் பூமிக்குரிய பலன் என்ன. மேலும் பலன் இரண்டு வகைப்படும் என்கிறார். (1) தன் சுயத்திற்கு நன்மை. (2) மற்றவர்களுக்கு நன்மை.

அவர் அவப்த சமஸ்த காமாவாக இருப்பதால், அவருக்கு எந்த நன்மையும் இல்லை. அவர் உருவாக்கிய பிரபஞ்சம் பெரும்பான்மையான மனிதர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவதால், மற்றவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தனக்கோ அல்லது பிறருக்கோ எந்த நன்மையும் இல்லாதபோது, ​​அவனால் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு முட்டாள் கூட எதையும் செய்ய மாட்டான் என்று இந்த உலகில் ஒரு கோட்பாடு உள்ளது. எனவே மேற்கூறியவற்றின் அடிப்படையில் பிரம்மன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது என்று நிரீஸ்வர சாங்கிய வாதி கூறுகிறது.

முதல் சூத்ரம் “ந ப்ரயோஜனத்வாத்”. சூத்திரத்தின் பொருள் மேலே குறிப்பிட்டது. இதுவே பூர்வபக்ஷ சூத்திரம். இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரம் “லோகவத்து லீலாகைவல்யம்” என்று படிக்கும் சித்தாந்த சூத்திரம் ஆகும்.

இதன் பொருள் பிரபஞ்சத்தின் உருவாக்கம், காத்தல், அழித்தல் ஆகியவை பரமாத்மாவின் விளையாட்டு மற்றும் அது அவரது கடந்த காலம்.

மேலே சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டால், பிரம்மனுக்கு இரண்டு தோஷங்கள் ஏற்படும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார், ஏனென்றால் படைப்பு சமமாக இல்லை. குறைபாடுகள் பாரபட்சம் மற்றும் இரக்கமற்ற தன்மை. இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் அவர் ஒரு சார்புடையவர், இந்த உலகில் துன்பத்தில் இருப்பவர்களிடம் இரக்கமற்றவர்.

ஜீவர்களின் பூர்வ கிரியைகளின்படி சிருஷ்டியை உண்டாக்குவதால், மேற்கூறிய இரண்டு தோஷங்களும் பிரம்மனுக்குச் சொல்லக்கூடாது என்கிறார் சூத்ரகாரர்.

பிராமணன் பிரளயத்தின் போது அல்லது சிருஷ்டிக்கு முன் தனியாக இருந்தபோது, ​​ஜீவனோ அல்லது அவனது கடந்தகால செயல்களோ எங்கே இல்லை என்று கூறி எதிராளி மீண்டும் இந்தக் கருத்தை எதிர்க்கிறார்.

இந்த சூத்ரகாரரான வியாச முனிவரிடம், ஜீவாத்மாக்கள் நித்தியமானவை, அவை உடலால் உருவாக்கப்படவில்லை, எனவே அவர்களின் கடந்த கால செயல்களும் ஆரம்பம் இல்லாமல் உள்ளன என்று கூறுகிறார்.

எனவே இந்த பாதத்தில் நிரீஷ்வர சாங்கியம் எழுப்பிய அனைத்து ஆட்சேபனைகளும் முறியடிக்கப்பட்டன, எனவே பிரபஞ்சத்தின் பொருள், செயல்பாட்டு மற்றும் கருவியாக பிரம்மன் என்ற உண்மை நிறுவப்பட்டு வலுவடைந்தது.

இந்த இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டாவது காலாண்டு தர்கா பாதம் என்று அழைக்கப்படுகிறது, இதில் ஸ்ரீ விசிஷ்டாத்வைத முறைக்கு எதிரான தத்துவ அமைப்புகளைத் தாக்கும் வகையில் பதராயண முனிவரான சூத்திரகாரர் தாக்குதல் நடத்துகிறார்.

தாக்கப்படும் மற்றும் கண்டனம் செய்யப்படும் தத்துவ அமைப்புகள் பின்வருமாறு.

1) கபிலரின் நிரீஸ்வர சங்கிய அமைப்பு.

2) கனடாவின் வைஷேஷிகா அமைப்பு

3) பௌத்தத்தின் நான்கு வகைப்பாடுகள்.

4) ஜைன அமைப்பு.

5) பாசுபத அமைப்பு.

மேற்கூறியவற்றை மறுத்த பிறகு, சூத்திரகாரர் இறுதியாக பகவத் சாஸ்திரம் என்றும் அழைக்கப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார். மேலே குறிப்பிடப்பட்ட இந்த அமைப்புகளில், நிரீஷ்வர சாங்கிய அமைப்பு வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறது, மற்றவை வேதங்களின் அதிகாரத்தை ஏற்கவில்லை. இந்தப் பாதத்தில் எட்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் “இரச்சனா அனுபபத்தி அதிகாரம்” இதில் நிரீஷ்வர சங்க்ய அமைப்பு மறுக்கப்படுகிறது. அவர்களுக்கான அடிப்படை நூல் கபில ஸ்மிருதி, அது இப்போது இல்லை. கபிலரின் சீடரான ஈஸ்வர கிருஷ்ணர், இந்த முறைக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படை உரையான சங்கிய காரிகா என்ற படைப்பை இயற்றியுள்ளார்.

வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமநாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கபில பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம். அவரது முக்கிய விவாதம் பிரகிருதி, இது பிரபஞ்சத்தின் ஜடக் காரணம், பிரம்மம் அல்ல. பிரகிருதி என்பது பிரதானம், அனுமாணிக்கம் அல்லது அசப்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூழலில் புருஷன் என்று அழைக்கப்படும் ஜீவாவின் முன்னிலையில் இந்த பிரகிருதி பிரபஞ்சத்தை உருவாக்குகிறது.

இந்த அதிகாரத்தில் ஒன்பது சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு சூத்திரமும் சாங்க்யா அமைப்பின் கண்ணோட்டத்தை மறுப்பதாகும். இந்த பிரபஞ்சம் சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய பண்புகளை உள்ளடக்கிய ஒரு விசித்திரமான அமைப்பு என்பது முதல் பார்வை. சத்வா மகிழ்ச்சியையும், ரஜஸ் ஜட ஆசையையும், தமஸ் மாயையையும் உண்டாக்குகிறது. பிரகிருதியின் மாற்றத்தின் வரிசை மஹத், அஹங்காரா, தன்மாத்ராக்கள் மற்றும் பூதங்கள் ஆகும். பிரகிருதி பிரபஞ்சத்தை தானே உருவாக்குகிறது என்று இந்த அமைப்பு மேலும் கூறுகிறது.

1) இந்த பார்வையை சூத்ரகாரர் மறுத்துள்ளார், அவர் முதல் சூத்திரத்தில் “ரச்சனா அனுப்பத்தேஷாச்ச நானுமானம் ப்ரவ்ருத்தேஷச்சா” என்று கூறுகிறார்.

பிரக்ஞையின் அர்த்தம் என்னவென்றால், பிரக்ஞை அல்லது பரமாத்மாவை உள் ஆன்மாவாக (அந்தர்யாமி) கொண்டிருக்க முடியாது என்பது ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்ட பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. உள் ஆன்மா பரமாத்மா பிரகிருதியை பிரபஞ்சமாக மாற்ற விரும்புகிறது மற்றும் ஏற்படுத்துகிறது.

2) இரண்டாவது சூத்திரத்தில் எதிரி அல்லது பூர்வபக்ஷி (அ) பால் தானே தயிர் ஆகிறது என்று வாதிடுகிறார். (ஆ) ஒரு தென்னை மரத்தின் வேரில் ஊற்றப்படும் தண்ணீர், சுவையான நீரைக் கொண்ட இளந்தேங்காயாக மாறும். (இ) ஒரு மா மரத்தின் வேரில் ஊற்றப்படும் தண்ணீர், சுவையான சாறுடன் மாம்பழமாக மாறும். எனவே மேற்கூறிய எல்லா நிகழ்வுகளிலும், மேற்கூறியவைகள் நடக்க வேண்டும் என்று சித்தம் செய்ய பரமாத்மா உள் ஆன்மாவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மேற்கூறியவற்றிற்கு சூத்ரகாரரின் பதில் என்னவென்றால், மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும், சித்தங்களிலும், மேற்கூறியவைகள் நடக்கும்போதும் பிரம்மமே உள் ஆன்மாவாகும்.

3 வது சூத்திரத்தில் சூத்ரகாரர் கூறுகிறார், பிராமணன் உள்ளார்ந்த ஆன்மா மற்றும் சித்தம் இல்லை என்றால், எந்த உடலாலும் கட்டுப்படுத்த முடியாததால், படைப்பு மற்றும் பிரளயம் அடிக்கடி நடக்கும். எப்பொழுது பரமாத்மா உள்ளிருந்து விரும்புகிறாரோ அப்போதுதான் சீரான இடைவெளியில் சிருஷ்டியும் பிரளயமும் ஏற்படும்.

3) பூர்வபக்ஷியான சாங்க்யா மேலும் வாதிடுகிறார், புல்லை மேய்ந்த பிறகு ஒரு பசு எப்படி இயற்கையான செயல்முறையான பால் கொடுக்கிறது, அதே போல் பிரகிருதியும் தானே பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. புல்லை மேயும் காளையும் பால் கொடுக்காது, அதாவது பசு மேய்ந்த புல்லில் பரமாத்மா அந்தர்யாமியாக இருக்கிறார், இந்த அந்தர்யாமியே விரும்பி பசுவின் மூலம் பாலை உற்பத்தி செய்கிறார் என்பதே மேற்கூறிய வாதத்திற்கு சூத்ரகாரரின் பதில்.

4) ப்ரதானம் (பிரகிருதி) பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற தனது கண்ணோட்டத்தை வீட்டிற்கு ஓட்டுவதற்கு எதிராளி மற்றொரு உதாரணம் கொடுக்கிறார். ஒரு முடமானவன் பார்வையற்றவனைத் தன் முன்னிலையில் நடமாடச் செய்வது போலவும், காந்தம் இரும்புப் பொருட்களைக் கவர்ந்து இழுப்பது போலவும், ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தைப் படைக்கிறது. குருடனின் கழுத்தில் அமர்ந்திருக்கும் முடவன் பார்வையற்றவனுக்குச் செல்லும் பாதை குறித்து வழிகாட்டுவதால், பரமாத்மா சித்தமான அந்தர்யாமியின்றி பிரபஞ்சம் உண்டாவது சாத்தியமில்லை என்று மேற்கூறியவற்றுக்குப் பதிலளித்த சூத்ரகாரர் கூறுகிறார். அவர்கள் செல்ல வேண்டும் அதாவது முடவருக்கு பரமாத்மா அந்தர்யாமி. காந்தம் பரமாத்மா விஷயத்தில் இரும்பு பொருட்களை ஈர்க்கும் காந்தத்திற்கு அந்தர்யாமி.

5) சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் சம சதவீதமாக இருக்கும் நேரத்தில் பிரளயம் நிகழும் என்றும், அவை சமமற்ற சதவீதத்தில் இருக்கும்போது சிருஷ்டி வரும் என்றும் சாங்கியரின் அடுத்த வாதம். பிரளய காலத்தில் சமச்சீரற்ற சதவீதம் ஏற்படும் என்று வாதிட்டாலும், எப்போதும் படைப்பு இருக்க வேண்டும். எனவே, பரமாத்மா அந்தர்யாமியாக இல்லாமல் பிரபஞ்சத்தின் காரணமாக மாறுவது சாத்தியமில்லை.

6) ஜீவா முன்னிலையில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரபஞ்சம் என்பதை மிகவும் சிரமத்துடன் ஏற்றுக்கொண்டாலும், ஜீவாவால் ஒருபோதும் மோட்சத்தையோ அல்லது முக்தியையோ அடைய முடியாது என்று சூத்ரகாரம் மேலும் கூறுகிறது. ஜீவா மோட்சத்தை அடைய வேண்டும் என்பதால், பரமாத்மா அதன் அந்தர்யாமி வடிவத்தில் பிரபஞ்சத்தை உள்ளே இருந்து கட்டுப்படுத்தாமல் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது.

7) இறுதியாக சூத்ரகாரர் அந்த அமைப்பிலேயே பல உள்முரண்பாடுகள் இருப்பதால் சங்கிய முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் மஹத் தீர்கவாதத்வாதிகரண என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த அதிகாரமானது கனடாவால் நிறுவப்பட்ட வைஷேஷிக முறையை மறுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. நெல் தானியத்தையே உண்பதால் அவன் கனடா.

அணுக்கள்தான் பிரபஞ்சத்துக்குக் காரணம், பிராதானம் அல்ல என்பது அவருடைய முக்கியக் கருத்து. மேலும் இரண்டு அணுக்கள் டயட்டோமிக் ஆகின்றன என்றும், இரு அணுவிலிருந்து முக்கோண அணுக்கள் உருவாகின்றன என்றும் கூறுகிறார். டையடோமிக் என்பதன் தொழில்நுட்பச் சொல் ஹ்ரஸ்வா மற்றும் முக்கோணத்திற்கு பரிமண்டலம். இந்த சூழலில் உள்ள வாதம் என்னவென்றால், முக்கோணங்கள் ஆறு முகங்களிலும் ஒன்றுசேர்ந்து பெரிய பொருளாக மாறுகின்றன. இவ்வாறு முக்கோணங்கள் இணைவதே கடுகு போன்ற சிறிய பொருளாகவும், மலை போன்ற மிகப் பெரிய பொருளாகவும் மாறக் காரணமாகும்.

அவரது மேற்கூறிய வாதத்தின் பின்னணியில், சூத்ரகாரர் ஏழு சூத்திரங்களால் இந்த அமைப்பை மறுக்கிறார்.

1) முதல் சூத்திரத்தில் “மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலப்யம்”. இந்தப் பிரபஞ்சம் டையட்டம்களும், முக்கோணங்களும் ஒன்று சேர்ந்து பெரியதாகவும் நீளமாகவும் ஆனதால் ஆனது என்று கனடா சொல்வது சரியல்ல என்று பதராயண முனிவரான சூத்ரகாரர் கூறுகிறார். ஏனென்றால், துணியை உற்பத்தி செய்யும் இழைகளின் காரணமாக, ஒரு துணி போன்ற எந்தவொரு பொருளும் உருவாகி, ஆறு பக்கங்களிலும் நீள அகலத்தில் நெய்யப்பட்டு, பின்னர் துணியாக மாறுகிறது. ஒருவரோடு ஒருவர் இணைவதற்கான இந்த வடிவம் டையட்டோமிக்ஸ் விஷயத்தில் சாத்தியமில்லை, ஏனெனில் அவை கண்ணுக்கு தெரியாதவை. தெளிவின்மை நிரவயவ எனப்படும். பரமானுஸ் என்று அழைக்கப்படும் அணுக்கள் ஆறு முகங்களைக் கொண்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், இது அனவஸ்தா எனப்படும் முடிவின்றி சென்றால். எனவே பிரபஞ்சத்தை அணுக்களால் உருவாக்க முடியாது என்று சூத்ரகாரர் வாதிடுகிறார்.

2) இரண்டாவது சூத்திரத்தில், சூத்ரகாரர் வைஷேஷிகாமாதாவின் மற்றொரு வாதத்தை மறுக்கிறார்.

கர்மா அல்லது அத்ரிஷ்டம் எனப்படும் கடந்த கால செயல்களின் காரணமாக பரமானுஸின் இயக்கம் உள்ளது என்பது விவாதம். இந்த அத்ரிஷ்டம் பரமானுஸில் இருக்கிறதா அல்லது ஜீவத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த இரண்டும் இருக்க முடியாது, ஏனென்றால் அத்ரிஷ்டம் நித்தியமானது மற்றும் கர்மா அல்லது அத்ரிஷ்டம் நித்தியமானது என்றால், எப்போதும் படைப்பு இருக்க வேண்டும். எனவே அணுக்களிலிருந்து பிரபஞ்சம் தோன்ற முடியாது.

3) மூன்றாவது சூத்திரத்தில் வைஷேஷிகாவின் மற்றொரு கருத்து மறுக்கப்படுகிறது.

பொருள்களுக்கிடையேயான தொடர்பு சமவாய எனப்படும் என்பது விவாதம். குணி எனப்படும் பொருள் மற்றும் அதன் குணாதிசயமான குணா மற்றும் ஜாத்ன் எனப்படும் வகை மற்றும் வ்யக்தி எனப்படும் தனித்தன்மையின் விஷயத்தில் இது அப்ரிதக் சித்த சம்பந்தத்திலிருந்து வேறுபட்டது. சமவாய உறவை ஏற்றுக்கொண்டால், ஒரு சமவாயத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், எனவே முடிவில்லாமல் மற்றொரு சமவயத்தை உருவாக்க வேண்டும்.

4) 4 வது சூத்திரத்தில், மற்றொரு சர்ச்சை மறுக்கப்படுகிறது. சமவய உறவே நித்தியமானது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், பானையும் அதன் அடித்தளமும் நித்தியமாகிவிடும், எந்த உருவாக்கமும் அழிவும் இருக்காது. இது நடக்காது என்பதால் வைஷேஷிகா முறை சரியல்ல.

5) இந்த அதிகாரத்தின் 5வது சூத்திரத்தில் இவர்களின் மற்றொரு கருத்து மறுக்கப்படுகிறது. மண் பானைக்கு ஒரு திட்டவட்டமான நிறம் இருப்பதால், அதை உருவாக்கும் அணுக்களில் இந்த நிறம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அணுக்கள் நித்தியமானவை, மிக நுணுக்கமானவை மற்றும் கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் நிறத்தைக் கொண்டிருக்க முடியாது என்ற அவர்களின் அசல் நிலைப்பாட்டிற்கு இது முரணானது. எனவே வைசேஷிக முறை சரியல்ல.

6) 6 வது சூத்திரத்தில், சூத்ரகாரர் கூறுகிறார், கனடா அணுக்களுக்கு நிறத்தை ஏற்க மாட்டேன் என்று சொன்னாலும், கரணத்தில் நிறம் இல்லாதபோது (காரணம்) எதுவும் இருக்க முடியாது என்ற உண்மையின் காரணமாக அவனது முரண்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. கார்யாவில் வண்ணம் மற்றும் அவரது அமைப்பு சரியாக இல்லை, ஏனெனில் அது எந்த ஒலி தர்க்கத்தின் அடிப்படையிலும் இல்லை.

7) 7 வது சூத்திரத்தில், வேதங்களின் அதிகாரத்தை ஏற்கும் கபில அமைப்பைக் கருத்தில் கொள்ள முடியும் என்றாலும், எந்த சூழ்நிலையிலும் கனட முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சூத்திரகாரர் கூறுகிறார்.

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அதிகாரங்கள் சமுதாய அதிகாரம், உபலாப்தி அதிகாரம், சர்வத அனுபவத்தி ஆதிக்கம் எனப்படும். இந்த மூன்று அதிகாரங்களில், பௌத்த தத்துவ முறை மறுக்கப்படுகிறது.

பௌத்த அமைப்பில் கீழ்க்கண்டவாறு 4 துணை அமைப்புகள் உள்ளன.

(1) வைபாஷிகா அமைப்பு, இதில் நாம் சுற்றிப் பார்க்கும் பொருட்களைக் கண்களால் (பிரத்யக்ஷம்) உணர முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவை க்ஷனிகா என்று அழைக்கப்படுகின்றன. அவர்களின் அறிவும் கணநேரமானது.

(2) சௌத்ராந்திகா அமைப்பு, இதில் வெளிப் பொருள்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவை அனுமானால் உணர முடியும் (அனுமானம்) மற்றும் பிரத்யக்ஷ (உணர்ச்சி உணர்வு) மூலம் அல்ல. பொருள்கள் தற்காலிகமானவை, அவற்றின் அறிவு கணநேரம்.

(3) புறப் பொருள்கள் எல்லாம் இல்லை என்று கூறும் யோகச்சர அமைப்பு, ஆனால் அவற்றின் அறிவு அங்கேயே உள்ளது.

(4) இந்த உலகில் எதுவுமே இல்லை என்றும், எல்லாமே அர்த்தமற்றது என்றும் கூறும் மத்யமிக அமைப்பு. அவர் சர்வ சூன்ய வாதி என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கூறியவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் அணுக்களால் உருவாக்கப்பட்டது என்றும் அதனால் அவை பரமானுகார வாதிகள் என்றும் கூறுகின்றன.

வைபாஷிக அமைப்பில், பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றின் அணுக்கள் மற்றும் அறிவு மற்றும் ஆசைகளின் தொடர்ச்சி போன்ற உள் பொருட்களின் கலவையே வெளிப்புற பொருட்கள் என்று கூறப்படுகிறது. பூமிக்குரிய அணுக்கள் ஒரு வடிவம், சுவை, தொடுதல் மற்றும் வாசனை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன என்று மேலும் கூறப்படுகிறது. நீரின் அணுக்களுக்கு வடிவம், சுவை மற்றும் தொடுதல் உணர்வு உள்ளது.

நெருப்பின் அணுக்களுக்கு வடிவம் மற்றும் தொடு உணர்வு உள்ளது. காற்றின் அணுக்களுக்கு தொடு உணர்வு மட்டுமே உள்ளது. அவர்கள் வானத்தை உறுப்புகளில் ஒன்றாக ஏற்கவில்லை.

வைபாஷிகா மற்றும் சௌத்ராந்திகாவில் மறுப்பு புள்ளிகள்.

1) அணுக்கள் பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்றை உருவாக்குகின்றன, இந்த நான்கு கூறுகளும் நம் உடல் மற்றும் புலன்களுக்கு காரணம் என்று அவர்கள் கூறுவது சரியல்ல, ஏனென்றால் ஒவ்வொரு விஷயமும் கணம் அல்லது க்ஷனிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் உலகில் அவர்களைப் பற்றிய எந்தப் பேச்சும் குறிப்பும் இருக்காது, ஏனெனில் அவர்களின் இருப்பு தற்காலிகமானது. எழும் மற்றும் அவை நம்பத்தகுந்த வகையில் பதிலளிக்க முடியாத கேள்விகள் (1) அணுக்கள் எப்படி, எப்போது ஒன்றிணைகின்றன அல்லது ஒன்றிணைந்து அந்தந்த வேலைகளைச் செய்வதற்கான கூறுகளாக மாறும் போது (1)

(2) அவை உணர்வின் பொருளாக மாறும்போது (3) அவை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் பொருளாக மாறும் போது. (4) ஆன்மா யார் முதலியன.

2) அவித்யா (ஜீவாவின் அறியாமை) அல்லது ஜீவ மாயையின் காரணமாக பொருள்களும் அவற்றின் அறிவும் தற்காலிகமானதாக இருந்தாலும், அவை நித்தியமானவை என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியாததால் இதுவும் சரியல்ல என்கிறார் சூத்ரகாரர். இங்கே அவித்யா ஒரு கணப் பொருளை நித்தியமாக உணரும் முற்றிலும் எதிர் உணர்வை உருவாக்குகிறது.

3)முந்தைய மண் பானை மறைந்த பிறகு வரும் மண் பானை, அதன் தற்காலிக இருப்பு மற்றும் முந்தைய மண் பானை அடுத்தடுத்த மண் பானைக்கு காரணம் என்பது அவர்களின் கருத்து.

இது சரியல்ல, ஏனென்றால் முந்தைய மண் பானை மறைந்த பிறகுதான் வருகிறது. எனவே முந்தையது அடுத்தவருக்கு காரணமாக இருக்க முடியாது. அபவா அல்லது முட்டாள்தனம் காரணமாக இருந்தால், ஒவ்வொரு பொருளும் எப்போதும் ஒன்றுமில்லாதது. இது நடக்காது. மேலும் சில புள்ளிகளை மேற்கோள் காட்டி சூத்ரகாரம் வைபாஷிக முறையை மறுக்கிறது.

வானம் அல்லது ஆகாஷா என்பது அர்த்தமற்றது என்றும் அது இல்லை என்றும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள். பூமியைப் போலவே வானமும் மிகவும் அதிகமாக உள்ளது என்று இந்தச் சூழலில் இதுவும் மறுக்கப்படுகிறது.

துச்ச என்று அழைக்கப்படும் ஒன்றுமில்லாத (அபத்தம்) சில விஷயங்கள் வெளிவருகின்றன என்ற வைஷா ஷிகாவின் வாதமும் சரியல்ல. முட்டாள்தனத்தால் உருவாக்கப்பட்ட உலகம் முட்டாள்தனமாக மட்டுமே இருக்க வேண்டும். களிமண் ஒரு மண் பானையை உற்பத்தி செய்கிறது. தங்கம் ஒரு ஆபரணத்தை உருவாக்குகிறது. எனவே முட்டாள்தனம் எதையாவது உற்பத்தி செய்யாது அல்லது ஏதோ முட்டாள்தனத்தை உருவாக்குகிறது.

சில காலத்திற்கு முன்பு ஒரு பொருளைப் பார்த்த பிறகு, அந்த குறிப்பிட்ட பொருளை நாம் நினைவில் கொள்ள முடிகிறது. இது பொருளின் பிரத்ய பிக்னா எனப்படும். பிரத்யா பிக்னா இருக்கும் போது ஒரு பொருள் எப்படி தற்காலிகமாக இருக்கும் அல்லது அதன் அறிவும் கணமாக இருக்கும். ஒரு பொருளின் குணாதிசயங்கள் மற்றொரு பொருளுக்கு மாற்றப்படும் என்ற சௌத்ராந்திகாவின் மற்றொரு வாதமும் இந்தச் சூழலில் சூத்திரகாரரால் குறிப்பிடப்படுகிறது.

வைசி ஷிகா மற்றும் சௌத்திரன் திரிகா ஆகிய இரண்டும் சூத்ரகாரரால் மற்றொரு புள்ளியில் எதிர்க்கப்பட்டது.

ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உற்பத்தியாகி, நிரண்வய வினாசம் (ஒரு பொருள் அழிந்தால் எதுவும் மிச்சமில்லை) என்ற வாதம் உண்மையாக இருந்தால், அதை உற்பத்தி செய்வதற்கு எந்த உடலும் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. எந்தவொரு முயற்சியும் தீமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது அல்லது விரும்பிய நோக்கத்தை அடைவதற்காக இந்த உலகில் நாம் பார்த்தோம். ஒவ்வொரு பொருளும் ஒரு நொடியில் அழிந்தால் அல்லது அழிந்து போனால், முயற்சியால் சாதிக்க எதுவும் இல்லை. சுறுசுறுப்பாக இருக்கும் அல்லது எந்த முயற்சியும் செய்யாத நபர்களுக்கு ஒன்றும் செய்யாமல் அடையும் போது, ​​உலக ஆசை, பரலோக ஆசை அல்லது முக்தி போன்ற அனைத்தும் நிறைவேற வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி இல்லை.

எனவே வைசேஷிகா மற்றும் சௌத்ராந்திகா அமைப்புகள் எந்த காரணத்திற்காகவும் நிற்காது, எனவே அவை கண்டிக்கப்பட வேண்டியவை.

சூத்ரகாரர் வைஷேஷிகாவின் அமைப்புக்கு மறுப்பு தெரிவிக்கிறார், இப்போது நீங்கள் ஒன்றும் ஒன்றும் இல்லாதது என்று சொன்னாலும், இந்த அறிக்கை உங்கள் உறுதிமொழி அல்லது பிரதிக்ஞைக்கு எதிரானது, பொருளை உணரும் குறிப்பிட்ட புலன் அதிபதி என்று அழைக்கப்படுகிறது, இந்த உணர்வு எடுத்துக்காட்டாக கண். ஒரு பொருளைப் பார்க்கவும், பின் வார்த்தைகள் அதை உணரவும். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் நான்கு நிலைகள் உள்ளன. அவை உணர்வு, பார்த்தல், பொருள், உணர்தல். இதுவே பிரதிக்ஞை. மேற்கூறிய உறுதிமொழியை உண்மையாக்க, ஒரு பானை தருணம் இருக்கும் போது, ​​மற்றொரு பானை தருணமும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இங்கு பானை கணம் என்றால் பானை உணரப்பட்ட தருணம் என்று பொருள். முதல் பானை கணம் காரணம் என்றும், இரண்டாவது பானை கணம் எஃபெட் என்றும் சொல்ல வேண்டும். ஆனால் இரண்டு பானை தருணங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவு ஒரே நேரத்தில் எப்படி இருக்கும் என்பது கேள்வி. கருத்து அப்படி இல்லை. கணநேரம் என்ற உறுதிமொழியும் தோல்வியடைகிறது.

மேலும், வைபாஷிகாவின் கருத்து என்னவென்றால், ஒரு பொருள் அழிவுக்கு உள்ளாகும்போது எதுவும் மீதமில்லை என்பதும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கு நிரண்வய விநாசம் என்று பெயர். விளக்கின் சுடரை அணைத்தால் எதுவும் மிச்சமில்லை என்கிறார் வைபாஷிகா. விளக்கின் சுடரில் திரி, எண்ணெய் மற்றும் சுடர் இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். ஒவ்வொரு கணமும் எண்ணெயின் ஒரு புதிய சிறிய பகுதி எரிகிறது மற்றும் திரியும் படிப்படியாக எரிகிறது. எனவே எண்ணெய் மற்றும் திரியை எரிப்பதன் விளைவாக ஏற்படும் சுடர் ஒவ்வொரு கணமும் வேறுபட்டது. கண்ணின் (பிரத்யக்ஷ பிரமோனா) உணர்வின் மூலம் சுடர் சிலவாகத் தோன்றினாலும், ஒவ்வொரு கணமும் சுடர் வித்தியாசமாகிறது.

இச்சூழலில் இரண்டு விதமான அழிவுகளை வைஷாசிகா கூறுகிறது. சுடர் நம்மால் அணைக்கப்படும் போது. அழிவுக்கு அப்ரதி சங்கிய நிரோதா என்று பெயர். (வைஷா ஷிகாவால் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப சொல்) எண்ணெய் தீர்ந்துவிட்டதாலோ அல்லது திரி முழுவதுமாக எரிந்ததாலோ அல்லது இரண்டினாலோ தீப்பிழம்பு தானாகவே அணைந்துவிட்டால், அது ப்ரதி சங்கிய நிரோதா எனப்படும்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அழிவை நிரண்வய விநாசம் என்று கூறுகிறார்கள், ஏனென்றால் எதுவும் எஞ்சவில்லை. ஸ்தூல வினாஷம் என்பது ப்ரதி சாங்க்ய நிரோதா என்றும், அதில் அழிவுக்குப் பின் எச்சங்கள் தெரியும் என்றும் கூறப்படுகிறது. அப்ரதி சாங்க்ய நிரோதா என்பது சூக்ஷ்ம வினாஷமாகும், அதில் எச்சங்கள் தெரியவில்லை.

அழிவு எப்பொழுதும் சந்வயமாக இருக்கும் என்று கூறும் சூத்ரகாரரால் அவரது மேற்கூறிய வாதத்தை ஏற்கவில்லை, ஏனென்றால் அழிவு எப்போதும் ஒரு மாற்றம்தான். ஒரு பானையை ஒரு சுத்தியலால் அடித்தால், பானை அழிக்கப்பட்டு, பானை துண்டுகளாக உடைக்கப்படும், அவை கபாலா என்று அழைக்கப்படுகின்றன, மேலும் இந்த வினாஷம் (அழிவு) மட்டுமே சான்வயமாகும். சுடரை அணைக்கும் விஷயத்தில் கூட, அணு இயல்புடைய எச்சங்கள் காற்றில் கலக்கப்பட்டு, வினாஷம் மட்டுமே சான்வயமாகும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அதிகாரத்தில் உள்ள ஒரு சூத்திரத்தில் பௌத்த தத்துவத்தின் சௌத்திர திகா அமைப்பும் மறுக்கப்பட்டுள்ளது. சூத்திரம் “நாசதா அத்ரிஷ்டா த்வத்” என்று கூறுகிறது.

சௌத்ரங்கிகா பொதுவாக வெளியில் இருக்கும் பொருள்கள் அங்கே இருந்தாலும் அவை குறிப்பால் மட்டுமே உணரப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. மேலும் பொருள்கள் மற்றும் அவற்றின் அறிவு இரண்டும் தற்காலிக இயல்புடையவை.

2வது அத்தியாயத்தின் இந்த 2வது காலாண்டில் உள்ள 4வது அதிகாரம் “உபலாப்தி அதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆதிக்கரணத்தில் தேசத்தைக் கண்டிப்பதற்காக பௌத்த தத்துவத்தின் யோகாசார அமைப்பு வருகிறது.

இது மூன்று சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

யோகாச்சரத்தின் முக்கிய கருத்துக்கள்

1) பொருள்கள் பௌதீகமாக இல்லை ஆனால் அவற்றின் அறிவு இருக்கிறது. அந்த அறிவு கூட ஒரு கணம் நீடிக்கும்.

2) கனவில் நாம் காணும் பொருள்கள் கணநேரம் போல. எனவே விழிப்பு நிலையில் உள்ள பொருட்களும்.

அந்த வகையான அறிவில் அவர்கள் முன்வைக்கும் இந்த வாதம் பல்வேறு வகையான பொருட்களின் அடிப்படையில் இல்லை. பல்வேறு அறிவு என்பது வசனம் எனப்படும் கருத்தின் தொடர்ச்சியின் கணக்காகும்.

வசனத்தின் சரியான பொருள் வேறுபாடு உணர்வின் தொடர்ச்சி. ஒரு மண் பானை பற்றிய அறிவு இருக்கும் போது அது கப்லா (மண் பானையின் உடைந்த துண்டுகள்) பற்றிய அறிவுக்கு வழிவகுக்கிறது. மண் பானை பற்றிய கருத்து மீண்டும் முன்பு இருந்த மண் பானையின் உணர்விலிருந்து வருகிறது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு புலன் மறைந்து மற்றொரு புலன் அந்த இடத்தில் தோன்றும் மற்றும் பல.

கடுகு, மலை போன்ற வெளிப்புறப் பொருட்களின் வடிவம் உள்மனதில் இருக்கும் அறிவுக்கு எப்படி வருகிறது என்று யோகாச்சரரிடம் கேட்டபோது, ​​ஒரு பொருளைக் குறிப்பிடுவது கூட அதன் குரல் வெளிப்பாட்டால்தான் என்று பதிலளித்தார்.

“நபவ உபலப்தே:” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகார மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பொருள் உடல் ரீதியாக இருக்கும்போது அதன் இருப்பை நிறுவ முடியாது. அதாவது பொருளும் அதன் கருத்தும் இணைந்து இருப்பவை என்று வேறுவிதமாகக் கூறினால். புலனுணர்வும் பொருளும் இணைந்து இருக்கும் போது, ​​அது “சஹோபலம்ப” “உபலாம்பா” என்றால் உணர்தல் என்றும், “சஹா” என்றால் கூட்டல் என்றும் யோகச்சாரம் கூறுகிறது. “சஹோ பலம்ப” விஷயத்தில் அறிவும் பொருளும் ஒன்றே என்று கூறுகிறார்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் மேற்கூறிய வாதத்தை எதிர்கொண்டு சஹலாம்பா என்பது பொருளும் புலனும் ஒன்றே என்று அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். ஒரு நபர் “நான் இந்த பானையை உணர்கிறேன்” என்று சொன்னால். இந்த கூற்றில் “நான்” என்பது பொருள் (“கர்த்தா”) நபரைக் குறிக்கிறது, மண் பானை என்பது உணரப்பட்ட பொருளைக் குறிக்கிறது. பொருளுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இருக்கும்போது பொருளுக்கும் அதன் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.

இரண்டாவது சூத்திரகாரர் கனவுகளின் போது உணரப்பட்ட பொருட்களுக்கும் விழித்திருக்கும் நிலையில் உணரப்பட்ட பொருட்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார். கனவுகளின் போது உணரப்படும் பொருள்கள் தூக்கம் மற்றும் குறைபாடுள்ள மனம் மற்றும் பிற விஷயங்களால் ஏற்படும் குறைபாடுகளுக்கு உட்பட்டவை.

மேலும் பொருள் இல்லாமல் கருத்து இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அத்தகைய கருத்து இருக்க முடியாது. பொருளும் பொருளும் இன்றி அறிவு இருக்க முடியாது.

எனவே யோகாச்சர முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே இறுதி முடிவு.

ஐந்தாவது அதிகாரம் “சர்வத அனுபபத்தி” அதிகாரம். இந்த அதிகாரம் பௌத்த தத்துவத்தின் மத்யமிக அமைப்பை மறுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த மத்யமிகா “சர்வ சூன்யவாதி” என்று அழைக்கப்படுகிறார். பொருளோ அல்லது அதன் உணர்வோ இல்லை என்றும் அதுவே புத்தரின் இறுதி முடிவு என்றும் கூறுகிறார். உணர்வின்மை அவனது அமைப்பின் கோட்பாடு மற்றும் முட்டாள்தனம் அதுவே இரட்சிப்பு. ஒரு பொருள் இருப்பதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏதோவொன்றில் இருந்து சிலவற்றை உருவாக்குவதைக் காணவில்லை என்கிறார். களிமண் குவியல் இழக்கப்படும்போது முட்டாள்தனம் மட்டுமே இருக்கும், அதில் இருந்து முட்டாள்தனமான பானை உருவாகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் மாயையே.

“சர்வதா அனுபபத்தேஷ்ச” என்று படிக்கும் சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் இந்த சர்ச்சை மறுக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தின் அர்த்தம், கற்பனையின் எந்த நீளத்திலும், இந்த சூன்யத்வவாதத்திற்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு பொருளும் சத் (உண்மையான பொருள்) உண்மையில் இருக்கிறதா, அது இல்லாததா, மேற்கூறிய இரண்டைத் தவிர மற்றவையா என்று அவர் உறுதிமொழி கூறுகிறாரா என்று கேள்வி கேட்கப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது வாதத்தை நிறுவ முடியாது.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்ட “ஏகஸ்மிந் அஸம்பவாதிகரண” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரம் சமண தத்துவ முறையைக் கண்டிப்பதற்காகவே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஜைனர்களும் பரமனுக்கரணவாதிகள். அவர்களின் முக்கிய கோட்பாடுகள் பின்வருமாறு.

உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தில் ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் ஒரு உயர்ந்த உயிரினம் இல்லை. இந்த பிரபஞ்சம் திரவியங்கள் எனப்படும் ஆறு பொருட்களால் ஆனது. இந்த திரவியங்கள் ஜீவா, தர்மம், அதர்மம், புத்கலா, கலா மற்றும் ஆகாஷா. மேலே விவரிக்கப்பட்டவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ஜீவா என்பது தனிப்பட்ட ஆன்மா (உணர்வு உள்ளவர்) மூன்று வகைகளாகும். பத்தர்கள், யோகசித்தர்கள் மற்றும் முக்தாக்கள் என்பன பிரிவுகள். பத்தர்கள் சம்சாரத்தின் பந்தம் கொண்ட முக்தி பெறாத ஆத்மாக்கள். தியானத்தின் மூலம் பற்றின்மை உணர்வுடன் யோக சக்திகளைப் பெற்ற ஜீவர்கள் யோகசித்தர்கள். முக்தர்கள் முக்தி பெற்றவர்கள். தர்மம் என்பது ஒரு ஜீவனைப் பிரிந்து முக்தி அடையச் செய்யும் சக்தி (புண்யம்). அதர்மம் என்பது ஜீவாத்மாக்களை இந்தப் பிரபஞ்சத்திலேயே இருக்கச் செய்யும் பாவச் செயல்.

புட்கலா என்றால் நிறம், மணம், சுவை, தொடுதல் ஆகியவற்றைக் கொண்ட பொருட்கள். இந்த புட்கல மீண்டும் இரண்டு வகை. முதலாவது அணுக்களின் வடிவத்திலும், இரண்டாவது அவற்றின் சேர்க்கையிலும் உள்ளது. அணுக்களின் கலவையானது காற்று, நெருப்பு, நீர், பூமி, உடல், உலகம் போன்றவற்றை உருவாக்குகிறது.

காலா அல்லது காலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. காலம் அணுவானது. வானம் அல்லது ஆகாஷா என்பது எல்லையற்ற வெளி. அணுக்கள் தவிர மேலே உள்ள அனைத்து பொருட்களும் மீண்டும் ஐந்து அஸ்திகாயங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள் ஒரு பெரிய இடத்தைச் சூழ்ந்தால் அது அஸ்திகாயா எனப்படும். ஜீவஸ்திகாயா, தர்ம ஆஸ்திகாயா, அதர்ம அஸ்திகாயா, புத்கல ஆஸ்திகாயா, ஆகாஷ அஸ்திகாயா என்பவை ஐந்து ஆஸ்திகாயங்கள். இரட்சிப்புக்கான வழிமுறையானது, நல்ல அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் பின்னணியில் நேர்மையான நடத்தை ஆகும். முக்தி என்பது ஜீவாத்மாவாகிய ஒருவரின் சொந்த சுயத்தின் உள்ளார்ந்த மற்றும் உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்வதாகும்.

மேற்கூறியவற்றைத் தவிர, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏழு மடங்கு ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயங்களைக் கொண்டவை என்று கூறுகிறார்கள். ஏழு மடங்கு பண்புகள் (1) ஒரு பொருள் இருக்கலாம் (2) ஒரு பொருள் இல்லாமல் இருக்கலாம் (3) ஒரு பொருள் இருக்கலாம் மற்றும் இல்லாமல் இருக்கலாம். (4) ஒரு பொருள் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (5) ஒரு பொருள் உள்ளது மற்றும் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (6) ஒரு பொருள் இல்லை மற்றும் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (7) ஒரு பொருள் இருக்கலாம் & இல்லை மற்றும் விவரிக்க முடியாதது.

இந்த ஏழு மடங்கு பண்பு சப்தபங்கிவாதா என்று அழைக்கப்படுகிறது. “நைகஸ்மிந் அசம்பவாத்” என்று சூத்ர வாசிப்புடன் மேற்கூறிய ஜைன மதத்தை மறுதலிக்கத் தொடங்குகிறார் சூத்ரகாரர். இதன் பொருள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்புகள் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமில்லை. நிழலும் வெப்பமான சூரியனும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பதாகச் சொல்வது போலத்தான். இது சாத்தியமில்லாததால், ஒரே நேரத்தில் ஒரே பொருளில் உள்ள ஏழு மடங்கு பரஸ்பர முரண்பாடான பண்புகள் சாத்தியமில்லை. எனவே சமணத்தை ஏற்க முடியாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது சூத்திரங்களில், ஜைனர்களின் மற்றொரு பார்வையை சூத்திரகாரர் மறுக்கிறார். ஜீவாவின் தனிப்பட்ட ஆத்மாவுக்கு நிலையான அளவு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜீவாக்கள் ஒவ்வொரு பிறப்பின் போதும் அவர்கள் எடுக்கும் உடலின் அளவு என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பிறவியில் ஒரு ஜீவன் யானையாக மாறக்கூடும் என்பதாலும், அந்த பிறவியில் ஜீவாவின் அளவு யானையின் அளவாக இருக்கும் என்பதாலும், அடுத்த பிறவியில் ஜீவா இருந்தால், இந்த கூற்று முகத்தில் அபத்தமானது. எறும்பாக மாற, ஜீவாவின் அளவு எறும்பாக இருக்கும். யானை அளவு ஜீவா எப்படி தன்னை எறும்பாக குறைக்க முடியும். ஜீவா கண்ணுக்கு தெரியாதது என்பதால் இது நடக்காது.

எனவே ஜெயின் அமைப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகி விடுகிறது, எனவே கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தப் பாதத்தில் உள்ள ஏழாவது அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்ட பசுபதி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமான் நிறுவிய பசுபதி தத்துவ முறையை சூத்திரகாரர் கண்டிக்கிறார். அவரது போதனைகள், 1. பிரபஞ்சத்திற்கு நிமித்த கரணமானது சிவபெருமான் ஆகும், மேலும் உபதானகரனாகிய பிரகிருதி ஆதிப் பொருளாகும். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை மற்றும் மோசமானவை. அவர்களின் போதனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் வேதங்களுக்கு முற்றிலும் வெறுக்கத்தக்கவை. இந்த மதம் மற்றும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் நான்கு பிரிவுகளாக உள்ளனர்.

1) கபாலிகா – ஆறு முத்திரைகளின் பெயர்களை அறிந்து (உடலில் சில பொருட்களை அணிந்து) தன்னையே தியானம் செய்பவன் மோட்சத்தை அடைகிறான். முத்ரிகை என்பது கழுத்தணி, விரல் மோதிரம், காது வளையம், தலைமுடியில் அணியும் மணி, சாம்பல், புனித நூல் ஆகிய ஆறு முத்திரைகளாகும்.

2) காளாமுகர்கள் – இங்கும் பிற உலகங்களிலும் உள்ள அனைத்துப் பலன்களையும் அடைவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு கூறுகின்றனர். மனித மண்டை ஓட்டில் இருந்து உண்பது, தகன பூமியின் சாம்பலைக் கொண்டு குளித்து, அதை வாயில் போட்டுக் கொள்வது, குச்சியை ஏந்துவது, பானையில் கள் (மது) நிரப்பி வழிபடுவது என்பன வழிமுறைகள்.

இதேபோல் மற்ற இரண்டு பிரிவுகளான பாசுபதங்கள் மற்றும் சைவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரே மாதிரியான வழிகளில் கற்பிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை உயர்ந்த சாதியாக மாற்றலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “பத்யு: அஸமஞ்ச ஸ்யாத்” என்று படிக்கும் சூத்ரகாரரால் மேற்கண்ட பாசுபத தத்துவ முறை கண்டிக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பரஸ்பர உள் முரண்பாடுகளின் காரணமாக பசுபதரின் (சிவபெருமான்) தத்துவம் மற்றும் மதம் நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் அவருடைய போதனைகள் வேதங்களில் உள்ளவற்றுக்கு முற்றிலும் எதிரானவை. அனைத்து வேதங்களும் ஒரே குரலில் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் ஜட மற்றும் செயல்பாட்டுக் காரணம் என்று பறைசாற்றுகின்றன. சில வேத மற்றும் உபநிடத நூல்களில் நான்கு தலைகள் கொண்ட பிரம்மா மற்றும் சிவன் பற்றிய சில குறிப்புகள் முதல் காலாண்டு மற்றும் முதல் அத்தியாயத்தின் இந்திர பிராண அதிகாரத்தில் உள்ள சூத்திரத்தின்படி விளக்கப்பட வேண்டும். “சாஸ்த்ர த்ரிஷ்ட்யது உபதேச: வாமத்வ தத்” என்பது சூத்திரம், அதாவது தியானம் தொடர்பான உபநிடதச் சூழலில் வேறு ஏதேனும் தெய்வம் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தச் சூழல்களில் தியானத்தின் பொருள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே குறிப்பிடப்பட்ட தெய்வத்தின் உள் ஆன்மாவில் இருக்கிறார். அங்கு.

பாசுபத தத்துவத்தின் மற்ற ஆட்சேபனைகள் என்னவென்றால், இந்த தத்துவ அமைப்பில் வேதங்களுக்கு எதிரானது, மேலான இருப்பை செயல்பாட்டுக் காரணம் என்று மட்டுமே மேற்கோள் காட்டி, ஜடக் காரணமல்ல, அனுமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது (அனுமன பிரமனா). ஒரு மண் பானையின் செயல்பாட்டுக் காரணமான ஒரு பானை தயாரிப்பாளர் களிமண் குவியலைக் கையாளுகிறார் மற்றும் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறார். அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருப்பது அதிஷ்டானம் எனப்படும். பானை செய்பவன் உடல் உள்ளதால் அதிஷ்டானான். பகவான் பசுபதியிடம் ஒரு உடலை ஏற்றுக் கொண்டாலும், அந்த உடல் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது, அது ஒரு நாள் அல்லது இன்னொரு நாளில் அழிய வேண்டும். எனவே சிவபெருமான் நிமித்த கரணமாக இருக்க முடியாது.

உடலாக இல்லாமல் ஒரு தனி ஆன்மா தனது உடலுக்கும், புலன்களுக்கும் இன்பம் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் அதிஷ்டானம் என்று வாதிடப்படுகிறது. எனவே சிவபெருமான் பிரகிருதிக்கு அதிஷ்டானாகவும் நிமித்த கரணமாகவும் இருக்க முடியும். ஜீவா தனது புண்யா மற்றும் அப்பாவின் காரணமாக அதிஷ்டானாக இருக்கிறார். சிவபெருமானுக்கு புண்ணியமும் பாபாவும் இல்லாததால், அவர் அதிஷ்டனாக இருக்க முடியாது.

புண்ணிய, பாபா சிவபெருமானிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர் மற்ற சாதாரண ஆன்மாவைப் போல (ஜீவா) மற்றும் குறைந்த அறிவுடன் இருப்பார். எனவே அவர் நிமித்த காரனாக (செயல்பாட்டுக் காரணம்) இருக்க முடியாது. எனவே பாசுபத மடம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.

பௌத்தம் மற்றும் சமணத்தை நிராகரிக்கும் சூத்திரகாரரான பதராய முனிவர் விஷயத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

புத்தரும் ஜைனரும் கலியுகத்தில் இவ்வுலகில் தோன்றி அந்தந்த அமைப்புகளைப் பரப்பினார்கள். சூத்ரகாரர் துவாபர யுகத்தில் இருந்தார் மற்றும் சூத்திரங்களை இயற்றினார். கலியுகத்தில் மட்டும் பிரச்சாரம் செய்யப்பட்ட அமைப்புகளை சூத்திரகாரர்கள் எப்படிக் கண்டிக்க முடியும் என்பது சந்தேகம்.

இந்த சந்தேகம் பின்வருமாறு தீர்க்கப்படுகிறது:-

புத்தரும் ஜைனரும் ஏற்கனவே இருந்த அந்தந்த மதங்கள் மற்றும் தத்துவங்களைத் தங்களைப் பின்பற்றுபவர்களுக்குப் போதித்தார்கள். இந்த தத்துவங்கள் அனாதி அல்லது ஆரம்பம் இல்லாதவை. எனவே சூத்ரகாரர் அவர்களை நிராகரித்துள்ளார். மற்றொரு விளக்கம் என்னவென்றால், தற்போதைய கலியுகம் 71 சதுர் யுகங்களின் சுழற்சியில் 28 வது கலியுகமாகும் (கிருதம், திரேதா, துவாபர மற்றும் கலி ஆகியவை நான்கு யுகங்கள் மற்றும் அவை ஒன்றுகூடி ஒரு சதுர் யுகம்) வைவஸ்வத மன்வந்தரமாகும்.

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் 71 சதுர் யுகங்கள் உள்ளன. புத்தரும் ஜைனரும் 27வது கலியுகத்தில் பிறந்து அந்தந்த மதங்களைப் போதித்திருப்பார்கள். எனவே 28வது துவாபர யுகத்தில் பிறந்த பதராயண முனிவர் 27வது கலியுகத்தில் பிரசங்கிக்கப்பட்ட பௌத்தத்தையும் சமணத்தையும் கண்டித்திருப்பார்.

2வது அத்தியாயத்தின் இந்த 2வது பாதத்தில் 8வது அல்லது கடைசி அதிகாரம் “உத்பதி அசம்பாவாதிகாரனா”. இந்த அதிகாரத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் எதிர்ப்பாளர்கள் கண்டிக்கப்பட்டு பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீமன் நாராயணர் வேதங்களை இயற்றவில்லை, ஆனால் அவர் தனது நாபியில் உருவாக்கப்பட்ட நான்கு தலை பிரம்மாவுக்கு மட்டுமே வேதங்களைக் கற்பித்தார். ஆனால் அவர் பாஞ்சராத்ர சாஸ்திரம் முழுவதையும் எழுதியவர் என்றும் அதையே மற்றவர்களுக்குப் பரப்பினார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பாஞ்சராத்ர சாஸ்திரம் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் அனந்த, கருடன், விஷ்வக்சேனர், பிரம்மா மற்றும் இந்திரன் ஆகிய ஐந்து வான கடவுள்களுக்கு உபதேசிக்கப்பட்டது, மேலும் இந்த உபதேசம் ஐந்து இரவுகளில் செய்யப்பட்டது, எனவே இது “பாஞ்சராத்ரா” என்று அழைக்கப்படுகிறது. இதை பஞ்சராத்ரா என்று அழைப்பதற்கு மற்றொரு காரணம், இந்த சாஸ்திரம் ஒரு தனிப்பட்ட நபரால் அனுசரிக்கப்பட வேண்டிய அல்லது செய்ய வேண்டிய தினசரி வழக்கத்தைப் பற்றியது. இந்த தினசரி வழக்கம் அபிகமன, உபாதன, இஜ்யா, ஸ்வாத்யாயா மற்றும் யோகா என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ர சாஸ்திரம் 108 சம்ஹிதைகளை உள்ளடக்கியது, அவை நான்கு வகைகளாகும். (1) ஆகமசித்தாந்தம் (2) மந்திர சித்தாந்தம் (3) தந்திர சித்தாந்தம் (4) தந்திர சித்தாந்தம்.

இது ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதம் போன்ற பிஷனை போன்றது. ஒரு தனிமனிதன் ஒரு சம்ஹிதையில் உள்ள உபதேசங்களை கண்டிப்பாக கடைபிடித்தால், அவர் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைவார் என்று கூறப்படுகிறது. இது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாக உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள 32 பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றை பக்தியோகத்தில் கடைப்பிடிப்பதற்குச் சமம்.

ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரம் பற்றிய சந்தேகம் எழுந்தது, ஏனெனில் ஒரு சம்ஹிதையில் “சங்கரஷ்ணோ நாம ஜீவோ ஜாயதே” அதாவது சங்கர்ஷனா என்ற பெயரில் ஒரு ஜீவன் பிறந்தார். உபநிடதங்களின்படி ஜீவா என்ற தனி ஆன்மாவிற்கு பிறப்பு அல்லது இறப்பு இல்லை என்பதால் மேற்கண்ட கூற்று வேதங்களில் நிறுவப்பட்டதற்கு முரணானது. முரண்பாடு இருக்கும் போது மற்றும் வேதங்கள் உச்ச அதிகாரம் கொண்டவையாக இருக்கும்போது, ​​வேதங்களுக்கு முரணான பாஞ்சராத்ர சாஸ்திரம் ஒரு அதிகாரம் அல்ல என்று வாதிடப்பட்டது.

முதல் இரண்டு சூத்திரங்கள் பூர்வபக்ஷ சூத்திரங்கள் எதிரிகளின் பார்வையை குறிப்பிடுகின்றன. பிந்தைய இரண்டு சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள் எதிரி அல்லது பூர்வபக்ஷியின் பார்வையை மறுக்கின்றன.

முதல் சூத்திரம் “உத்பத்தி அசம்பவத்”. இந்த சூத்திரத்தின் பொருள் “ஜீவாவின் உருவாக்கம் இல்லாததால், ஜீவாவின் படைப்பைக் குறிப்பிடும் பஞ்சராத்ர சாஸ்திரம் ஒரு அதிகாரமாக இருக்க முடியாது. இந்த வாதத்தை சூத்திரகாரர் எதிர்த்தார், அவர் சூத்திரத்தில் விக்னானாதி பாவேவதத்த ப்ரதிஷேதா:” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், சங்கர்ஷணம், ப்ரத்யும்னா, அநிருத்தம் பகவான் ஸ்ரீ பரவாசுதேவரின் (ஸ்ரீமன் நாராயணனின்) வ்யூஹ வடிவங்கள் மற்றும் சங்கர்ஷனா என்ற பெயரில் ஜீவா இல்லை, எனவே வேதத்திற்கும் பஞ்சராத்ர சாஸ்திரத்திற்கும் முரண்பாடு இல்லை. எனவே பாஞ்சராத்திரம் முழுவதுமாக ஒரு அதிகாரம்.

சங்கர்ஷணம் என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வடிவம் மற்றும் பிரத்யும்னன் புலன்களைக் குறிக்கிறது. பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழிவதுதான் சங்கர்ஷணத்தின் போர்ட் ஃபோலியோ. பிரத்யும்னன் படைப்பாளி, அனிருத்தன் பாதுகாவலன்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் பல சம்ஹிதைகளில் இருந்து ஏராளமாக மேற்கோள் காட்டியுள்ளார், வேதங்களுடனான பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் முழு உடன்பாட்டை நிறுவினார். எனவே பாஞ்சராத்ர சாஸ்திரம் நமக்கு முழு அதிகாரம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, முந்தைய இரண்டாவது அத்தியாயம் “அவிரோத அத்யாயா” என்று அழைக்கப்படுகிறது. அவிரோதா என்ற சொல்லுக்கு “எதிர்ப்பு இல்லை அல்லது ஆட்சேபனை இல்லை” என்று பொருள். மேலும் இதன் பொருள் பரபிரம்மம் அல்லது பிரம்மன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணரே, பிரபஞ்சத்தின் மூன்று காரணங்களான உபாதான கரணம் (பொருள் காரணம்), நிமித்த காரணம் (செயல்பாட்டுக் காரணம்) மற்றும் சககாரிகரணம் (கருவி காரணம்). இந்த உண்மை சமன்வய அத்யாயா என்ற முதல் அத்தியாயத்தில் நிறுவப்பட்டது, இது இரண்டாவது அத்தியாயத்தில் மேலும் வலுப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. எனவே, பிரபஞ்சத்தின் மூன்று காரணகர்த்தாவாக இருப்பதில் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இரண்டாவது அத்தியாயம் உறுதியளிக்கிறது.

நிராகரிக்கப்பட்ட அமைப்புகள் (1) கபிலரின் நிரீஷ்வர சாங்கிய அமைப்பு (2) கானடாவின் வைஷேஷிக அமைப்பு, அதாவது பரமனுக்கரணவாதி, அதாவது அணுக்கள் பிரபஞ்சத்திற்கு காரணம் (3) பௌத்தத்தின் நான்கு துணை அமைப்புகளான வைபாஷிகா, சௌத்ராந்திகா, யோகச்சாரம் மற்றும் பரமனு கரண வாதிகள் எல்லாம் மத்யமிகா. (4) பரமனுக்கரணவாதியாகவும் இருக்கும் ஜைன அமைப்பு. (5) அவர்கள் கூறும் பரமசிவன் பசுபதியின் பாசுபத அமைப்பு நிமித்தக் கரணமே அன்றி உபாதனக் கரணமல்ல.

மேற்கூறிய தாக்குதலுக்குப் பிறகு, சூத்ரகாரர் இறுதியாக பகவத் சாஸ்திரம் என்றும் அழைக்கப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார். முன்பு கூறியது போல் முதல் பாதம் ஸ்மிருதி பாதம் என்றும் இரண்டாவது பாதம் தர்கா பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

முந்தைய ஆறு பாதங்களில் (முதல் அத்தியாயத்தின் நான்கு பாதங்கள், இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டு பாதங்கள்) பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று தீர்க்கமாக நிறுவிய பிறகு, இப்போது ஸ்ரீமனாகிய பிரம்மனால் உருவாக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய விவாதத்தை சூத்ரகாரர் தொடங்குகிறார். இரண்டாவது அத்தியாயத்தின் இந்த 3வது காலாண்டிலும் 4வது காலாண்டிலும் நாராயணா.

3வது காலாண்டு வியாத்பாதம் என்றும், 4வது காலாண்டு இந்திரிய பாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு காலாண்டுகளிலும் சூத்திரகாரர் உள் சண்டை அல்லது வீட்டுச் சண்டையைத் தீர்த்து வைக்கிறார். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி படைப்பின் பொருள்கள் தொடர்பாக வேதங்களில் உள்ள வெளிப்படையான உள் முரண்பாடுகளே உள்நாட்டு சண்டைக்கான காரணம்.

1)ஆகாயம் படைக்கப்படவில்லை என்றும் நித்தியமானது என்றும் வேதங்களில் சில நூல்கள் உள்ளன. அதே வேதங்களில் ஆகாசம் படைக்கப்பட்டது என்றும் நித்தியமானது அல்ல என்றும் கூறும் நூல்கள் உள்ளன.

2)வேதங்களில் ஜீவாக்கள் அல்லது தனிப்பட்ட ஆத்மாக்கள் உருவாக்கப்பட்டதாக சில குறிப்புகள் உள்ளன மற்றும் இந்த குறிப்புகளுக்கு முரணாக ஜீவாக்கள் உருவாக்கப்படவில்லை மற்றும் அவை நித்தியமானவை என்று உபநிடத வாசகங்கள் உள்ளன.

3) ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா உணர்வு உள்ளதா. இங்கே உணர்வு என்பது ஞானம் அல்லது அறிவு, அதாவது விஷயங்களை உணரும் திறன். ஜீவாவின் அளவும் விவாதிக்கப்படுகிறது.

4)வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் சில மேற்கோள்கள் உள்ளன, ஜீவாக்கள் எந்தச் செயலையும் செய்பவர்கள் அல்ல, அதாவது ஜீவன் ஒரு கர்த்தா அல்ல என்று அர்த்தம். ஜீவா ஒரு செய்பவர் (கர்த்தா) என்றும் மேற்கோள்கள் உள்ளன.

5) ஜீவா கர்த்தா என்று உண்ணப்பட்டால், ஒரு செயலைச் செய்வது சுதந்திரமானதா அல்லது இறைவன் அல்லது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டதா என்ற சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

6) ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வேதங்களில் மீண்டும் சில குறிப்புகள் உள்ளன. மேற்கூறியவற்றுக்கு முரணாக வேதங்களிலும் ஸ்ரீ பகவத்கீதையிலும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் உடல் என்று குறிப்புகள் உள்ளன.

7) சில உபநிடத நூல்கள் இந்திரியங்கள் அல்லது இந்திரியங்கள் உருவாக்கப்படவில்லை என்று கூறுகின்றன, மேலும் இந்திரியங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன. புலன்களின் எண்ணிக்கை குறித்து சில முரண்பட்ட அறிக்கைகள் உள்ளன.

8) முக்யபிரான் என்பது அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் காற்று. இந்த முக்யபிரான் படைக்கப்படவில்லை என்று ஒரு பழமொழி உண்டு ஆனால் இந்த முக்யபிரான் படைக்கப்பட்டது என்று இன்னொரு பழமொழி உண்டு.

9) புலன்கள் மற்றும் முக்யபிரானின் அளவு குறித்து சந்தேகம் எழுகிறது. சிலர் அவை பெரிய அளவில் இருப்பதாகவும் இன்னும் சிலர் அணு அளவு மிக அருகில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

10) படைப்பின் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் பணி நான்கு தலை பிரம்மாவின் பணியா அல்லது ஹிரண்யகர்ப்பா என்று அழைக்கப்படும் நான்கு தலை பிரம்மாவின் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பணியா? பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் இந்த செயல் நாமரூப வியாகரணம் என்று அழைக்கப்படுகிறது.

உள் அல்லது உள்நாட்டு சண்டைக்கு வழிவகுத்த மேற்கண்ட முரண்பாடுகள் 3 மற்றும் 4 வது காலாண்டுகளில் (இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாதங்கள்) தீர்க்கப்படுகின்றன.

3வது பாதத்தில் ஏழு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் வியாத் அதிகாரம் எனப்படும். வியாத் என்றால் வானம் அல்லது ஆகாசம்.

இந்த அதிகாரத்தில் ஆகாசம் உண்டா அல்லது ஆகாயத்துக்குப் படைப்பு உண்டா என்பதுதான் விவாதத்திற்குரிய தலைப்பு. ஆகாசத்தின் உருவாக்கம் கேட்கப்படாததால் உருவாக்கப்படவில்லை என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். அவரது பார்வையை ஆதரிக்க இரண்டு காரணங்கள் உள்ளன.

(அ) ​​ஆகாசமாகவும் வாயுவாகிய அந்தரிக்ஷமும் நித்தியமானவை என்று உபநிடத நூல்களில் ஒன்று கூறுகிறது.

(ஆ) சந்தோக்யோபநிஷத்தில், சத்வித்யாவைப் பற்றிக் கூறும் 6வது அத்தியாயத்தில், பிரபஞ்சம் உருவாவதற்கு முன், “சத்” என்ற ஒரு பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சத் என்பது பரமாத்மா அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் அவரது மனைவியான மகாலட்சுமியை குறிக்கிறது. நமது விசிஷ்டாத்வைத அமைப்பில் மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணா ஆகிய இரு தேவிகளும் எப்போதும் ஒன்றாகவும், பிரிக்க முடியாதவர்களாகவும், இருவருமே பிரம்மன் எனப்படும் ஒரு தனித்துவத்தை உருவாக்குகிறார்கள். எனவே பிரபஞ்சத்தின் படைப்பில் மகாலட்சுமிக்கும் ஈடுபாடு உண்டு.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய இந்த “சத்” சித்தம் செய்து, நெருப்பையும், பிறகு தண்ணீரையும், பூமிக்குப் பின் பூமியையும் உருவாக்கினார். படைப்பின் இந்த வரிசையில் ஆகாசம் (வானம்) மற்றும் வாயு (காற்று) ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளன. எனவே இது ஆகாசம் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த அதிகாரத்தில், சூத்ரகாரர் எதிராளியின் மேற்கூறிய கண்ணோட்டத்தை எதிர்த்து, ஆகாசத்திற்கு உருவாக்கம் உள்ளது என்பதை நிறுவ பல காரணங்களைக் கூறுகிறார்.

வானத்தை உருவாக்குவதற்கான மேற்கூறிய உண்மையை நிறுவ சூத்ரகாரர் மேற்கோள் காட்டிய காரணங்கள் பின்வருமாறு.

(அ) ​​தைத்தரிய உபநிடதத்தில் ஆகாசத்தை உருவாக்குவது பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது. இந்த உபநிடதம் பரமாத்மாவிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர் (ஏபி), பூமி (பிருதிவி) எனப் படைப்பின் வரிசையை தெளிவாக வகுத்தது.

(ஆ) முண்டக உபநிடதத்தில், முண்டக உபநிடதத்தில், பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து, முக்ய பிராணன் சுவாசம், மனம், மற்ற பத்து இந்திரியங்கள் ஆகாசம், வாயு, நெருப்பு, நீர் மற்றும் பூமி பிறந்தன, அதாவது அவை உருவாக்கப்பட்டன என்று ஒரு தெளிவற்ற வாசகம் உள்ளது.

(இ) ஆகாசத்திற்கு சிருஷ்டி இல்லை என்ற கருத்தை இன்னும் வைத்திருக்கும் எதிர்ப்பாளர் கூறுகிறார், சாண்டோக்ய உபநிடதத்தில் ஆகாசம் மற்றும் வாயுவை சிருஷ்டி வரிசையில் குறிப்பிடாமல் விட்டபோது, ​​அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகாயம் மற்றும் வாயுவை உருவாக்குவதற்கு நேரடியான அர்த்தம் எதுவும் இணைக்கப்பட வேண்டியதில்லை. தைத்தரிய உபநிடதம்.

(ஈ) ஒரே உபநிடதத்தில் நெருப்பு, நீர் மற்றும் பூமிக்கு நேரடி அர்த்தம் இருக்கும் போது, ​​வானம் மற்றும் வாயு உருவாக்கம் என்ற வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. முண்டக உபநிடதத்தில் பிராமணன் என்ற சொல்லுக்கு ஒரு சூழலில் நேரடிப் பொருள் உண்டு என்றும், தைத்தரிய உபநிடதத்திலும் சொல்லும்போது இன்னொரு சூழலில் பிராமணனுக்கு நேரடிப் பொருள் இல்லை என்றும் இந்த எதிர்ப்பாளர் பதிலளிக்கிறார்.

(இ) சாண்டோக்யோ உபநிடதத்தின் 6 வது அத்தியாயத்தில் (சத்வித்யா) மேற்கூறிய உறுதிமொழி பின்வருமாறு கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கு விதிவிலக்கு இல்லை என்று கூறும் சூத்ரகாரரால் எதிராளியின் இந்த வாதம் நிராகரிக்கப்பட்டது:

அடிப்படை மூலப்பொருள் அறியப்பட்டால், இந்த பொருளிலிருந்து தயாரிக்கப்படும் பல பொருட்கள் அறியப்படுகின்றன. இந்த உறுதிமொழியின்படி பிரம்மன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்கும்போது பிரம்மத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் படைக்கப்படுகின்றன, மேலும் இந்த உறுதிமொழிக்கு விதிவிலக்கு இல்லை. வானமும் வாயுவும் உருவாக்கப்படாவிட்டால், மேலே உள்ள உறுதிமொழி அதன் முக்கியத்துவத்தை அல்லது செல்லுபடியை இழக்கிறது.

ஆக ஆகாசம் சிருஷ்டிக்கு உட்பட்டது, நித்தியமானது அல்ல என்ற உண்மையை சூத்ரகாரம் இறுதியாக நிறுவுகிறது.

இந்த காலாண்டில் உள்ள இரண்டாவது அதிகாரம் தேஜோதிகரண எனப்படும்.

இங்கு ஐந்து பூதங்களும் அவற்றுக்கிடையே உள்ள தன்மாத்ரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிகழ்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. பிரகிருதியிலிருந்து மஹத், மஹத்திலிருந்து அஹம்காரம், அஹம்காரத்திலிருந்து சப்ததன்மாத்ரா, சப்ததன்மாத்ராவிலிருந்து ஆகாயம், வானத்திலிருந்து ஸ்பர்ஷ தன்மாத்ரா, ஸ்பர்ஷதன்மாத்ராவிலிருந்து ரூபதன்மாத்ரா, காற்றிலிருந்து ரூபதன்மாத்ரா, ரூபதன்மாத்ராவிலிருந்து தேஜஸ் அல்லது தீ, தேஜஸிலிருந்து ரஸதன்மாத்ரா மற்றும் ரசகன்மாத்ராவிலிருந்து நீர். காந்தா தன்மாத்ராவிலிருந்து நீர் மற்றும் இறுதியாக பூமி.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடுத்து வரும் தத்வா அல்லது உறுப்பு முந்தைய மூலகத்திலிருந்து நேரடியாக உருவாக்கப்பட்டதா அல்லது அதற்குப் பின் வரும் உறுப்பு அல்லது தத்வா என்பது பரமாத்மாவின் விருப்பத்திலிருந்து உருவாக்கப்பட்டதா என்பது சந்தேகம்.

ஐந்து பூதங்களின் சிருஷ்டி தன்மாத்ராவைப் பற்றிக் குறிப்பிடாமல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவதாக தைத்தரிய உபநிடதம் கூறுகிறது. சாந்தோக்ய உபநிடதத்தில் அந்தர்யாமி (உள் ஆன்மா) விருப்பப்பட்டு அடுத்த உறுப்பு அல்லது தத்வாவை உருவாக்குவது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. உபஹோபநிஷத்தில், தத்மந்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. தன்மாத்ரா என்பது இரண்டு தொடர்ச்சியான பூதங்களுக்கு இடையிலான ஒரு நிலை. இது பால் மற்றும் தயிர் இடையே உள்ள நிலை போன்றது. சாந்தோக்யோபனிஷத் தேஜஸ் அல்லது நெருப்பின் சித்தம், நீர் படைக்கப்பட்டது, ஜலத்தால் பூமி படைக்கப்படுகிறது என்று கூறுகிறது. நெருப்புக்கும் நீருக்கும் உணர்வு அல்லது ஞானம் இல்லாததால், அவைகளால் சித்தம் முடியாது, அதாவது உயிரற்ற பொருட்களால் விரும்பவே முடியாது. எனவே ஒவ்வொரு உறுப்பு அல்லது தத்வ விருப்பத்தின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி மற்றும் முந்தைய பாராவில் குறிப்பிடப்பட்ட வரிசையில் அடுத்த உறுப்பு உருவாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா அடுத்த தத்வத்தை அல்லது அங்கத்தை விரும்பி உருவாக்குகிறார் என்ற மேற்கண்ட உண்மையை முண்டகோபநிஷத் தெளிவாகக் கூறுகிறது. பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து முக்ய பிராணன், மனம், பத்து புலன்கள் (இந்திரியங்கள்) என்று அழைக்கப்படும் சுவாசம், ஐந்து பூதங்கள் உருவாக்கப்படுகின்றன என்று உபநிடதம் கூறுகிறது.

எனவே தைத்தரிய உபநிடதம், சந்தோக்யோபநிஷத், சுபாலோபநிஷத், முண்டக உபநிஷத் ஆகியவற்றின் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு, படைப்பு மற்றும் அதன் வரிசையைப் பற்றிய இறுதி முடிவு பின்வருமாறு.

பரமாத்மா (ஸ்ரீமன் நாராயணனை பிரம்மன் என்றும் அழைப்பர்)

பிரகிருதி (பிரகிருதியில் அந்தர்யாமியாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன்)

மகான் படைக்கப்பட்டார் (மஹான் விருப்பத்தின் அந்தர்யாமி)

அஹம்காரம் உருவாக்கப்பட்டது (இந்த அஹம்காரம் மூன்று வகைப்படும்)

1) சாத்விக அஹம்காரம் – சாத்விக அஹம்கார சித்தங்களின் அந்தர்யாமியாகிய பகவான் ஸ்ரீமன் நாராயணன் பின்னர் பதினொரு புலன்கள் உருவாக்கப்படுகின்றன. புலன்களின் விவரங்கள் 2 வது அத்தியாயத்தின் 4 வது பாதத்தில் கையாளப்படும்.

2) ராஜஸ அஹம்கார – இந்த அஹங்காரத்தின் அந்தர்யாமி முறையே சாத்விக அஹம்காரம் மற்றும் தாமச க்ரரா ஆகிய இரண்டிற்கும் இந்திரியங்களை உருவாக்குவதற்கும் தன்மாத்ராக்கள் மற்றும் பூதங்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

தாமஸ அஹங்காரா (இந்த அஹம்கார பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அந்தர்யாமி)

சப்ததன்மாத்ரா உருவாக்கப்பட்டது (சப்ததாப்மாத்ரா விருப்பத்தின் அந்தர்யாமி)

ஆகாஷா அல்லது ஆகாயம் உருவாக்கப்பட்டது (ஆகாச சித்தத்தின் அந்தர்யாமி)

ஸ்பர்ச தன்மாத்ரா உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

வாயு அல்லது காற்று உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

ரூபா தன்மாத்ரா உருவாக்கப்பட்டது. ரூபா என்றால் நிறம் அல்லது வடிவம் (அதன் அந்தர்யாமி விருப்பம்)

தேஜஸ், அக்னி அல்லது நெருப்பு உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

ராசா தன்மாத்ரா (அதன் அந்தர்யாமி விருப்பம்)

Ap அல்லது தண்ணீர் உருவாக்கப்பட்டது (அவர்களின் அந்தர்யாமி விருப்பம்)

காந்தா தன்மாத்ரா உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

பூமி அல்லது பூமி உருவாக்கப்பட்டது.

சமஸ்கிருத இலக்கணப்படி அபா அல்லது நீர் எப்போதும் பன்மை என்று மேலே குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும், எனவே அது அவர்களின் அந்தர்யாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சப்தம் அல்லது ஒலி என்பது ஆகாசத்தின் பண்பு, ஸ்பர்ஷம் அல்லது ஸ்பரிசம் வாயுவின் பண்பு, ரூபம் அல்லது நிறம் தேஜஸின் பண்பு, ரஸம் அல்லது சுவை என்பது நீரின் பண்பு, கந்தம் அல்லது மணம் என்பது அதன் பண்பு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பூமி.

தற்செயலாக சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரஸம் மற்றும் கந்தா ஆகியவை இன்பத்தின் பொருள்கள் என்பதைக் குறிப்பிடலாம். அவை விசயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சப்தா என்பது செவிகளை அனுபவிக்கும் பொருள், ஸ்பர்ஷம் தோல் அனுபவிக்கும் பொருள், ரூபா கண்களை அனுபவிக்கும் பொருள், ரஸம் என்பது நாக்கின் இன்பம், காந்தா என்பது மூக்கை அனுபவிக்கும் பொருள்.

இறுதியாக இந்த அதிகாரத்தில் எதிராளியின் (பூர்வ பக்ஷி) கருத்து என்னவென்றால், படைப்பானது வரிசைமுறையானது மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொன்றிலும் அந்தர்யாமியாக இருப்பதில் எந்த கேள்வியும் இல்லை. பாதராயண முனிவரான சூத்ரகாரர், எதிராளியின் கருத்தை மறுத்து, பூதங்களை விரும்பி உருவாக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பரமாத்மா அந்தர்யாமி என்று கூறுகிறார். விருப்பத்திற்கு சமஸ்கிருதத்தில் சங்கல்பம் என்று பெயர்.

இந்த அதிகாரத்தில் 8 சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் நான்கு சூத்திரங்கள் பூர்வபக்ஷியின் காட்சிப் புள்ளிகளை விவரிக்கின்றன மற்றும் பிந்தைய நான்கு சூத்திரங்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி சூத்திரகாரத்தின் பார்வை புள்ளிகளாகும்.

இந்த அதிகாரத்தின் கடைசி சூத்திரத்தில் சூத்ரகாரர் “அபர்யவசன விருத்தி” என்று அழைக்கப்படும் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மிக முக்கியமான கொள்கையை நிறுவுகிறார். இதன் பொருள் இந்த உலகில் உள்ள எந்தவொரு பொருளின் பெயரும் இறுதியாக அந்தர்யாமியான பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் அவரது உடல் மற்றும் உடலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இறுதியாக ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களைக் குறிக்கும் இரண்டு சொற்களும் இறுதியாக பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன.

இந்த பாதத்தில் மூன்றாவது அதிகாரம் ஆத்மதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் ஜீவாத்மாவாக இருக்கும் அந்தரங்க ஆத்மா சிருஷ்டிக்கு உட்பட்டதா இல்லையா என்ற சந்தேகம். பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தில் உள்ள உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களை உருவாக்கியவர் என்பதால், பிரம்மத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் படைப்புக்கு உட்பட்டதால், ஜீவாவும் உருவாக்கப்படுகிறது என்பது எதிரியின் கருத்து. தைத்தரிய உபநிடதத்திலும் மற்றொன்று யஜுர்வேத சம்ஹிதையிலும் இரண்டு கூற்றுகள் உள்ளன, அவை பிரபஞ்சம் முழுவதற்கும் காரணமானவர் என்பதால் தனிப்பட்ட ஆன்மாக்கள் பிரம்மனால் உருவாக்கப்பட்டன என்ற எதிர்ப்பாளரின் பார்வையை ஆதரிக்கிறது. மேலும் உபநிடதங்களில் ஜீவாத்மாக்கள் உருவாக்கப்பட்டதாக இன்னும் இரண்டு கூற்றுகள் உள்ளன.

தைத்தரிய உபநிடதத்தில் பிரம்மன் (பகவான் ஸ்ரீமன் நாராயணன்) பிரபஞ்சம் யாரிடமிருந்து பிறந்ததோ, யார் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறார் அல்லது பாதுகாக்கிறார் மற்றும் பிரளய காலத்தில் பிரபஞ்சத்தின் அழிவுக்கு காரணமானவர் என்று கூறப்படுகிறது. அதே உபநிடதத்தில் மற்றொரு சூழலில், பிரபஞ்சம் தண்ணீருடன் சேர்ந்து ஜீவாத்மாக்களை உருவாக்கிய பிரம்மனிடமிருந்து பிறந்தது என்று கூறப்படுகிறது. யஜுர்வேத சம்ஹிதையில் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரஜாபதியே ஜீவாத்மாக்களாகிய பிரஜைகளைப் படைத்தார். சாந்தோக்யோபநிஷத்தில், இந்த பிரஜாக்கள் அல்லது தனிப்பட்ட ஆன்மாக்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய சத்திலிருந்து பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதே சாண்டோக்யோபனிஷத் “தத்வமசி” என்று சொல்கிறது, அதாவது ஜீவமே பிரம்மம், ஜீவமே பிரம்மமாக இருக்கும்போது, ​​அவர் நித்தியமானவர். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மம் என்று அதே சாண்டோக்யோபநிஷத் கூறுகிறது என்று கூறி இந்தக் கருத்து எதிர்க்கப்படுகிறது. அப்படியானால் பிரம்மமாகிய ஆகாயம் நித்தியமாகிறது ஆனால் ஆகாயம் படைப்பிற்கு உட்பட்டது என்று நிறுவப்பட்டது. எனவே அதே ஒப்புமையில் ஜீவாவும் நித்தியமாக இருக்க முடியாது.

நாத்மாஸ்ருதே: நித்யத்வச்சச்சதாப்ய:” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் எதிராளியின் இந்தக் கண்ணோட்டம் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவாத்மா அல்லது வெறுமனே ஆத்மா இரண்டு காரணங்களால் படைப்புக்கு உட்பட்டது அல்ல.

i) கடோபநிஷத் தெளிவாக ஜீவா உருவாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. மேலும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் முறையே பரம ஆன்மாவாகவும், தனி ஆன்மாவாகவும் இருப்பவை நித்தியமானவை மற்றும் படைப்பிற்கு உட்பட்டவை அல்ல என்று கூறப்படுகிறது.

ii) மேலும் அதே கதூபநிஷத், எண்ணிக்கையில் எல்லையற்ற தனிமனித ஆத்மாக்கள் நித்தியமானவை என்றும், நித்தியமான உயர்ந்த ஆத்மா மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகவும் கூறுகிறது.

ஜீவன் எந்தப் படைப்புக்கும் ஆட்படாதபோது, ​​ஏகவிஜ்ஞான சர்வவிஜ்ஞானம் (காரணத்தை அறிந்து, படைக்கப்பட்ட அனைத்தையும் அறிந்துகொள்வதன் மூலம்) உறுதிமொழி அல்லது வாக்கு எப்படிச் செல்லுபடியாகும், உண்மையாக இருக்கும் என்ற கேள்வி இப்போது எழுகிறது. இந்த கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மன் அல்லது பரமாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர, அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் உருவாக்கப்பட்டன. படைப்பு இரண்டு வகைப்படும்.

1) உணர்ச்சியற்ற உயிரினங்களில் ஏற்படும் உடல் மாற்றம், இது ஸ்வரூப அன்யதா பாவம் என்று அழைக்கப்படுகிறது. அன்யதா பாவம் என்பது உடல் மாற்றம். களிமண் பானையாக மாறுகிறது, பானை துண்டுகளாக உடைக்கப்பட்ட பானை கபாலமாக மாறுகிறது மற்றும் பல. இதுவே உடல் மாற்றம்.

2) இயல்பு அல்லது பண்புகளில் மாற்றம் மற்றும் இந்த மாற்றம் ஜீவாக்களான உணர்வுள்ள உயிரினங்களில் நடைபெறுகிறது. ஜீவாவுக்கு உணர்வு அல்லது அறிவு உள்ளது. இந்த உணர்வு தர்ம பூத ஞானம் என்று அழைக்கப்படுகிறது, இதன் மூலம் ஒரு ஜீவா பொருட்களை உணர முடியும். இந்த அறிவு ஒரு மாற்றத்திற்கு செல்கிறது (சுருங்குதல் அல்லது விரிவாக்கம் மூலம்) சுருக்கம் என்றால் சங்கோச்சா மற்றும் விரிவாக்கம் என்றால் விகாசா. தர்மபூத ஞானத்தின் இந்த அளவு ஒரு ஜீவனிலிருந்து மற்றொரு ஜீவனுக்கு அவனுடைய கடந்தகால செயல்களைப் பொறுத்து மாறுபடும். இந்த தர்ம பூத ஞானமானது உயிரற்ற பொருளின் விஷயத்தில் பூஜ்ஜியத்திலிருந்து பரமாத்மா, நித்யசூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் (முக்தி பெற்ற ஆத்மாக்கள்) விஷயத்தில் முடிவிலி வரை மாறுபடும். ஜீவாவின் தர்மபூத ஞானத்தில் ஏற்படும் இந்த மாற்றம் ஸ்வபாவ அன்யதாபவ எனப்படும். இந்த மாற்றத்தின் காரணமாக, ஜீவாவும் படைப்பின் பிரிவில் சேர்க்கப்படுகிறார், இருப்பினும் அவரது உள்ளார்ந்த இயல்பு படைப்பு மற்றும் அழிவுக்கு உட்பட்டது அல்ல. எனவே ஏகவிஞானம், சர்வ விஞ்ஞானம் என்ற உறுதிமொழி செல்லுபடியாகவும் உண்மையாகவும் தொடர்கிறது.

மேலே கூறப்பட்ட சில உபநிடத நூல்களின் அடிப்படையில் ஜீவாவுக்கு ஆக்கமும் அழிவும் உண்டு என்ற எதிராளியின் கருத்து, ஜீவா நித்தியமானது என்றாலும், ஒவ்வொரு பிறப்பிலும் அவர் எடுக்கும் உடலே பிறந்து இறக்கும், இது ஜீவாவுக்குப் பொருந்தாது என்று பதிலளித்தார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் ஞானாதிகாரன் எனப்படும். இந்த அதிகாரத்திலிருந்து இந்த பாதத்தின் மீதமுள்ள நான்கு அதிகாரங்கள் அடிப்படையில் ஜீவாவின் தன்மை, அளவு மற்றும் பண்புக்கூறுகள் மற்றும் பரமாத்மாவிற்கும் ஜீவாவிற்கும் இடையிலான உறவைக் கையாளுகின்றன.

இந்த அதிகாரத்தில் ஜீவன் சுயமாக ஒளிர்கிறது என்பதும், தன் சுயத்தை அறிய வேறு எதன் உதவியும் தேவையில்லை என்பதும் நிறுவப்படும். சுய ஒளிர்வு என்பதும் உணர்வின் ஒரு வடிவம், இது தர்மிஞானம் என்று அழைக்கப்படுகிறது. தர்மி என்பது ஜீவா மற்றும் அவரது ஒளிர்வு ஞானம் என்று அழைக்கப்படுகிறது. ஜீவனுக்கு தர்மபூத ஞானம் தன் சுயத்தைத் தவிர மற்ற பொருட்களை உணர வேண்டும். எனவே ஜீவனுக்கு இரண்டு குணங்கள் ஒன்று தர்மஞானம் மற்றொன்று தர்ம பூதை ஞானம். “நான்” அது ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா மற்றும் அவரை “நான்” என்று அறிவது தர்மி ஞானம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருளிலும், கனவிலும் கூட இந்த தர்மி ஞானம் இருக்கிறது. ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தின் விஷயத்தில் கூட அவரது சுயத்தை உணர்ந்து கொள்ள முடியும், ஏனென்றால் எழுந்த பிறகு எனக்கு ஒரு நல்ல தூக்கம் இருந்தது என்று அவர் கூறுகிறார். தன்னை அறியவில்லை என்றும் கூறுவர்.

பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டிற்கும் “நான்” என்ற சுய ஒளிமயமான மனசாட்சி இருப்பதால் தர்மி ஞானம் ஒன்றுதான். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு தர்மபூத ஞானத்தைப் பொறுத்தவரை மட்டுமே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பரமாத்மா விஷயத்தில் அது எல்லையற்றது மற்றும் நம்மைப் போன்ற முக்தி பெறாத ஆத்மாக்களின் விஷயத்தில் இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும், மேலும் புண்ணிய மற்றும் பாப கர்மாவாகிய நமது கடந்தகால செயல்களுக்கு ஏற்ப அதன் அளவு மாறுபடும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் புள்ளிகள் (1) பௌத்தத்தின்படி ஜீவன் சுயமாக ஒளிர்கிறதா மற்றும் சங்கியா (2) கனட முனிவரின் கூற்றுப்படி ஜீவன் எந்த உணர்வும் இல்லாமல் ஒரு கல்லைப் போன்றதா (3) ஜீவனில் உள்ள உணர்வு என்பது. எப்போதும் இல்லை மற்றும் உணர்வு அவருக்கு அவ்வப்போது வருகிறது. மற்றொரு சிந்தனைப் பள்ளி, ஜீவா ஞானா மற்றும் அவரால் விஷயங்களை உணர முடியுமா என்பது. மேலும் ஒரு சிந்தனைப் பள்ளி உள்ளது, அதில் ஜீவாவின் சுய ஒளிரும் தன்மையும் உணர்வும் இயற்கையானது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்று கூறப்பட்டால், ஜீவாத்மா எங்கும் உள்ளது மற்றும் அவரது உணர்வு எப்போதும் உள்ளது. அப்படியானால், அவருக்கு புலன்கள் அல்லது இந்திரியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நல்ல உறக்கம் மற்றும் கோமா நிலையில் உள்ள நேரத்தில் உணர்வு இல்லை, எனவே அது எப்போதும் இருக்க முடியாது. விழிப்பு நிலையில், ஜீவாவுக்கு ஒளி, பொருள் மற்றும் தர்ம பூத ஞானம் போன்ற தேவையான அனைத்து உதவிகளும் இருந்தால், அவர் உணர்வுடன் இருக்கிறார். எனவே, மேற்கண்ட சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த எதிரி, ஜீவாவுக்கு சுய ஒளியும் இல்லை அல்லது தர்ம பூத ஞானமும் இல்லை என்று வாதிடுகிறார். எனவே ஜீவாவின் உணர்வு காலப்போக்கில் மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் எல்லா இடங்களிலும் வேலை மாறியதால் ஜீவா எல்லா இடங்களிலும் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜீவா தனது உடலின் இயக்கத்தால் மட்டுமே வேலை செய்கிறது என்பதை நிரூபிக்க எந்த அதிகாரமும் சாட்சியும் இல்லை.

நல்ல உறக்கத்தின் போது உணர்வு இல்லாமை மற்றும் மோட்சம் அல்லது விடுதலை நிலை போன்றவற்றின் போது உபநிடத நூல்கள் உள்ளன.

ஜீவாவின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் பண்பு பற்றிய மேற்கூறிய பெர்ஜென்ட் பார்வைகளின் வெளிச்சத்தில் சூத்திரகாரர் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ஞான ஏவா” என்று கூறுகிறார். இந்த அதிகாரம் 14 சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா சுய ஒளியுடன் இருப்பதோடு, தர்ம பூத ஞானத்தையும் கொண்டிருக்கிறார், அதாவது அவர் ஞானம், அதாவது அவர் ஞானத்தின் உள்ளார்ந்த தன்மையைக் கொண்டவர். பல உபநிடத நூல்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. பார்ப்பவர், கேட்பவர், மணம் புரிபவர், சுவைப்பவர், சிந்திப்பவர், அறிபவர், செய்பவர், உணர்வுள்ளவர் என்று ஒரு உபநிடதம் கூறுகிறது. இதன் பொருள் அவர் தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் தனது புலன்கள் மூலம் பொருட்களை உணர முடியும். மீதமுள்ள 13 சூத்திரங்களின் கூட்டுத்தொகை மற்றும் பொருள் பின்வருமாறு.

(1) இந்த ஜீவாத்மா, மரணத்தின் போது இந்த சரீரத்திலிருந்து வெளியேறி, அதன் பிறப்பில் மற்றொரு உடலுக்குள் நுழைவதால் அணு அளவு உள்ளது.

(2) எனவே வெளியே செல்வதும் திரும்பி வருவதும் ஜீவாவின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் (புண்யா மற்றும் பாப்பா) காரணமாக உடல் ரீதியாக செய்யப்பட வேண்டும் மற்றும் இறந்த பிறகு விரைவில் அழிந்துவிடும் மரண சரீரத்தால் வெளியே செல்வதும் திரும்பி வருவதும் சாத்தியமில்லை.

(3) ஜீவாத்மாவின் அளவைப் பற்றி உபநிடத உரை தெளிவாகக் கூறுகிறது. இந்த சூழலில் ஸ்வேதாஷ்வதரா உபநிஷத் குறிப்பாக ஜீவாவின் அளவை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஜீவாவின் அளவு குதிரையின் வாலில் உள்ள முடிகளில் ஒன்றின் 1/100 வது பிஷனில் 1/100 வது பிஷன் ஆகும். இந்த ஜீவனின் தர்மபூத ஞானம் அவன் முக்தி அடைந்த பிறகு எல்லையற்றதாகிறது. மற்றொரு உபநிஷத உரை ஜீவாவின் அளவு தோல் பை அல்லது காலணிகளை தைக்கப் பயன்படும் ஊசியின் நுனியின் அளவு என்று கூறுகிறது. இது அவர் மைக்ரோ சைஸ் என்று கூறுகிறது.

(4) இப்போது ஜீவா ஒரு சிறிய அளவு மற்றும் உடலின் இதயத்தின் மூலையில் இருக்கும்போது, ​​​​உடலில் மற்றொரு இடத்தில் ஏற்படும் வலி அல்லது இன்பத்தை எப்படி உணர முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் ஒரு உவமையின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. உவமை என்னவென்றால், ஈரமான செருப்பை உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூசும்போது இதயத்தில் உள்ள ஜீவா குளிர்ச்சியின் இன்பத்தை உணர்கிறது. அதே வழியில் ஜீவா உணர்வை உணர்கிறார்.

(5) ஜீவாத்மா ஒரு மனிதனின் உடலின் இதயத்தில் இருந்தாலும், தர்ம பூத ஞானத்தின் காரணமாக உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் உணர்வுகளை அவரால் உணர முடிகிறது, மேலும் இந்த விஷயத்தை விளக்குவதற்கு சூத்திரகாரம் மற்றொரு உதாரணத்தை அளிக்கிறது. விளக்கு அல்லது விளக்கு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எரிந்தாலும் அதன் ஒளி அது வைக்கப்பட்டுள்ள இடம் முழுவதும் பரவுகிறது என்று அவர் கூறுகிறார்.

(6) ஒரு சூத்திரத்தில், “நான்” மற்றும் தர்ம பூத ஞானம் ஆகிய தர்மி ஞானத்திற்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை சூத்திரகாரர் வரைகிறார். இங்கே தர்ம பூத ஞானம் என்பது தெளிவாக ஜீவாவின் பண்பாகும், ஜீவன் அல்ல. இந்த விஷயத்தை விளக்க மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், வாசனை என்பது பூமியின் பண்பு மற்றும் பூமியின் பண்பு அல்ல. அவர்களுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது.

(7) இச்சூழலில் எழும் மற்றொரு சந்தேகம், தர்ம பூத ஞானமாகிய விக்ஞானம் அல்லது உணர்வு ஜீவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணன் எப்போதும் விகுவானின் பக்கம் நிற்கிறார் என்று இரண்டு வெவ்வேறு உபநிஷத நூல்களில் ஜீவாவை எவ்வாறு விஜ்ஞானம் என்று அழைக்க முடியும். (ஜீவா) மற்றும் விக்னானா யாகம் செய்கிறது (ஜீவா யாகம் செய்கிறது). சூத்ரகாரர் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார், பெயர்ச்சொல்லை அதன் பண்பின் மூலம் அழைக்கும் வழக்கம் எப்போதும் உள்ளது. ஆனந்தம் என்பது ஸ்ரீமன் நாராயணனின் பண்பாக இருந்தாலும், எல்லையற்ற பேரின்பத்தின் பொருள் “ஆனந்தா” என்பது பரமாத்மாவின் பெயரே என்று இந்தச் சூழலில் ஒரு இணையான உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் தர்ம பூத ஞானம், இது ஜீவாவின் நிரந்தர மற்றும் நித்திய பண்பாகும், எனவே அவரை “விஜ்ஞானம்” என்று அழைக்கலாம்.

(8) தர்ம பூத ஞானம் ஜீவாவின் நிரந்தரமான மற்றும் எப்போதும் பண்பாக இருக்கும் போது, ​​நல்ல தூக்க நிலையில் அதன் இருப்பை ஏன் உணரவில்லை என்ற சந்தேகம் இந்தச் சூழலில் எழுகிறது. ஒரு குழந்தையின் விஷயத்தில் தர்மபூத ஞானமும் மிகவும் சுருங்குகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் குழந்தை வளரும்போது அது விரிவடைகிறது. இந்த ஐயத்தை சூத்ரகாரர் மற்றொரு உவமையின் மூலம் தெளிவுபடுத்துகிறார். ஒரு ஆண் குழந்தையில் ஆண்மை அல்லது ஆற்றல் குழந்தை பேட்டையில் செயலற்ற நிலையில் உள்ளது மற்றும் குழந்தை இளமை பருவத்தை அடையும் நேரத்தில் அது மலரும். அதுபோலவே தர்ம பூத ஞானமும் சுகமான உறக்க நிலையில் உறங்கி, விழிப்பு நிலையில் மலரும்.

(9) இறுதியாக சூத்ரகாரர் ஜீவா சர்வ பிரசன்னம் மற்றும் ஜீவா சுயமாக ஒளிர்கிறது என்ற வாதத்தை மறுக்கிறார். அவர் சர்வ சாதாரணமாக இருந்தால் தர்மபூத ஞானம் என்றென்றும் மலர வேண்டும் அல்லது மலரவே கூடாது என்கிறார். ஜீவா சுயமாக ஒளிரும் என்றால் இதே நிலைதான். எனவே ஜீவனுக்கு தர்மி ஞானம் மற்றும் தர்மபூத ஞானம் இரண்டும் உண்டு என்பது இறுதி முடிவு.

ஐந்தாவது அதிகாரம் கர்த்ரு அதிகாரம். ஜீவன் கர்த்தா அல்லது செய்பவன் என்பது இங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைப் பற்றிய சந்தேகம் ஒன்று கடோபநிஷத்திலும் மற்றொன்று பகவத்கீதையிலும் உள்ள இரண்டு கூற்றுகளின் காரணமாக எழுகிறது. கடோபநிஷத்தில் உள்ள அறிக்கை, ஒருவரைக் கொன்றவர் தான் ஒருவரைக் கொன்றதாகக் கூறுகிறார் என்றும், கொலையாளி மற்றும் கொல்லப்பட்ட இருவருக்கும் ஒருவர் கொலையாளியாகவும் மற்றவரைக் கொல்லலாம் என்றும் தெரியாது. அதுபோலவே பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனன் கூறுகிறார், உண்மையில் பிரகிருதியின் குணாதிசயங்களைப் போலவே ஜீவன் செய்பவன் என்பது ஒரு மாயை. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை செய்பவர்கள். எனவே ஜீவா செய்பவர் அல்ல என்பது எதிரணியின் வாதம்.

எதிரியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுத்துள்ளார், அவர் முதல் சூத்திரத்தில் “கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வத்” என்று கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவாத்மா தான் செய்பவன் அல்லது கர்த்தா, ஏனென்றால் ஜீவன் தான் செய்த பலனை அனுபவிப்பவன்.

ஸ்வர்கலோகம் அல்லது சொர்க்கத்தை விரும்புபவர் ஜோதிஷ்டம யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதுபோல மோட்சம் அல்லது முக்தியை அடைய விரும்புபவர் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிக்க வேண்டும். எனவே தனி ஆன்மா யாகம் செய்தால் யாகத்தின் பலனை ஸ்வர்கலோகமாக அனுபவிப்பவராக இருப்பார். அதுபோல ஒரு ஜீவன் பரமாத்மாவை தியானித்தால் மோட்சமாகிய தியானத்தின் பலனை அனுபவிப்பான். அப்படி இருக்கும் போது பிரகிருதியின் மூன்று பண்புகளும் (முதன்மைப் பொருள்) எவ்வாறு செய்பவர்களாக இருக்க முடியும். இந்த அதிகாரத்தில் மேலும் ஆறு சூத்திரங்கள் உள்ளன, அதில் ஜீவா தான் செய்பவன் என்ற உண்மையை நிறுவ சூத்ரகாரர் பல உபநிடத நூல்களை மேற்கோள் காட்டுகிறார். தைத்திரிய உபநிடதத்தின் கூற்று ஒன்றில், விகுவானம் யாகம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எதிராளியின் கூற்றுப்படி விகுவானம் என்பது புத்தி என்பது ஒரு நிலையான மனநிலை என்று அழைக்கப்படலாம். ஆனால் விகுவானம் புத்தி அல்ல ஜீவா என்று சூத்ரகாரர் கூறுகிறார். அது புத்தியாக இருந்தால் உபநிடதம் விக்னனேனா என்று கூறியிருக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் மூன்றாவது வழக்கு திரிதீய விபக்தி என்று அழைக்கப்படுகிறது. அதனால் ஜீவன் பலனை அனுபவிப்பவன் போல செய்பவன்.

அடுத்த அதிகாரம் “பராயட்டாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் ஜீவாவின் செயல்கள் அல்லது செயல்கள் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது நிறுவப்பட்டுள்ளது.

ஒரு தனி ஆன்மாவின் ஒவ்வொரு செயலும் பரமாத்மா அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனால் கட்டுப்படுத்தப்பட்டால், “இதைச் செய்” மற்றும் “அதைச் செய்யாதே” என்று சொல்லும் வேதங்கள் அர்த்தத்தை குறைக்கின்றன என்று எதிரி கூறுகிறார். “இதைச் செய்” என்று சொல்லும் சாஸ்திரம் விதிசாஸ்திரம் என்றும், அதைச் செய்யாதே என்று சொல்லும் சாஸ்திரம் நிஷேதசாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்றால் வேதம். உபநிடதங்களில் உள்ள சில கூற்றுகளால் செயல்களும் செயல்களும் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று சூத்திரகாரர் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் கூறுகிறார். உபநிடதத்தின் முதல் கூற்று என்னவென்றால், அந்தர்யாமி அல்லது ஒவ்வொரு உயிரினத்தின் உள் ஆத்மாவாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு உயிரினத்தின் அல்லது தனிப்பட்ட ஆத்மாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார். பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் ஜீவாவின் பக்கத்தில் இருக்கிறார், அவர் ஜீவாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவா அவரது உடலாகும், மேலும் அவர் ஜீவாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார்.

பகவத்கீதையிலும் பகவான் கிருஷ்ணர், ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பதாகவும், ஜீவாவின் செயல்களை இயக்குவதாகவும் கூறுகிறார். மற்றொரு ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஈஸ்வரன் அல்லது பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் இருப்பதாகவும், ஒவ்வொரு பூதத்தையும் அல்லது ஜீவனையும் இயந்திரம் போன்ற சக்கரத்தில் சுழற்றச் செய்கிறார் என்றும் கூறுகிறார். முதல் சூத்திரம் “பரத்து தத் ஸ்ருதே:”

இரண்டாவது சூத்திரத்தில், ஜீவாத்மா தனது செயலுக்கு சுதந்திரம் இல்லாவிட்டால், உடல் மற்றும் உணர்வுகள் இல்லாமல் ஒரு ஜீவாவை தன்னால் செய்ய முடியாது என்றால் விதி நிஷேத சாஸ்திரம் அர்த்தமற்றதாக மாறும் என்று சூத்திரகாரர் எதிரியின் பார்வைக்கு பதிலளிக்கிறார். ஜீவாவின் புண்ய பாபா கர்மாவைப் பொறுத்து, பரமாத்மா ஜீவாவுக்கு ஒரு உடலையும் புலன்களையும் தருகிறார். ஜீவாவின் செயல்கள் மற்றும் செயல்கள் உடல் மற்றும் புலன்கள் மூலம் மட்டுமே. ஒரு ஜீவா ஒரு குறிப்பிட்ட காரியத்தை நல்லது அல்லது கெட்டது செய்ய முயலும் போது, ​​பரமாத்மா அதற்கு அவர் சம்மதம் தருகிறார். பரமாத்மா சம்மதம் தெரிவித்த பிறகு, ஜீவன் தானே தீய செயல்களையோ பாவங்களையோ செய்ய முனைந்தால், பரமாத்மா இரக்கமற்றவர் என்றும், தனிமனிதனின் கெட்ட மற்றும் நல்ல செயல்களுக்கு அவரே பொறுப்பு என்றும் கூற முடியாது. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஒரு அழகான உதாரணம் தருகிறார். பரமாத்மாவால் கொடுக்கப்பட்ட உடலும் புலன்களும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டிற்கும் சொந்தமானதாக இருக்கும் போது ஒருவர் மற்றவரின் அனுமதியின்றி ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய முயற்சிக்க முடியாது. ஒரு தந்தை ஒரு வெற்று காசோலையில் கையெழுத்திட்டு, அதைத் தனது மகனுக்குத் தொகையை எடுப்பதற்காகக் கொடுப்பது போலவும், அதை அவர் விரும்பும் விதத்தில் பயன்படுத்தவும். அவர் அதை ஒரு நல்ல காரணத்திற்காகவோ அல்லது கெட்ட காரியத்திற்காகவோ பயன்படுத்தலாம். இரண்டிலும் அவன் தன் செயலின் பலனை அனுபவிக்க வேண்டும். நல்ல காரியத்துக்குப் பயன்படுத்திப் புண்ணியத்தைப் பெற்றிருந்தால் சந்தோஷப்படுவார், கெட்ட காரியத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு பாப்பாவைப் பெற்றிருந்தால் வருந்துவார். ஆகவே, தொடர்ந்து நற்செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மோட்சம் வரையிலும் மேல்நோக்கி உயர்த்தப்படுபவருக்கு பரமாத்மாவின் அருள் இருக்கும். தொடர்ந்து தீய செயல்களைச் செய்து மண்டபத்திற்குக் கீழே தள்ளப்படுபவனுக்குப் பரமாத்மாவின் அவமானம் உண்டு.

இந்த 3வது பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் அம்சாதிகரணம் எனப்படும். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் இங்கு எழும் கேள்வி. இந்த இரண்டும் முற்றிலும் வேறுபட்ட அடையாளங்கள்தானா? அல்லது அவித்யா எனப்படும் மாயையின் காரணமாக பரமாத்மாவே ஜீவ ரூபம் எடுக்கிறாரா? பரமாத்மா உபாதியால் பாதிக்கப்பட்ட பிறகு ஜீவாவாக மாறுமா அல்லது அது ஜீவா பரமாத்மாவின் ஒரு பகுதியாகும். உபாதி என்றால் பரமாத்மா அல்லது பிரம்மன் பல மரண உடல்களுக்குள் நுழைந்த பிறகு ஜீவ வடிவத்தை எடுப்பதற்கு காரணம்.

ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையேயான சரியான தொடர்பைப் பற்றிய தெளிவான கருத்துக்களை மேலோட்டமாக வெளிப்படுத்தும் சில உபநிடத நூல்களின் காரணமாக இந்த நான்கு மடங்கு சந்தேகம் எழுகிறது. ஒரு உபநிஷத உரை, பரமாத்மா சர்வஞானம் என்றும், ஜீவன் அறியாமை என்றும் கூறுகிறது. இதன் பொருள் ஜீவா மற்றும் பரமாத்மா இரண்டு தனித்தனி நிறுவனங்கள். மற்றொரு உபநிஷதக் கூற்றில் பிரம்மம் ஜீவா, இந்த ஜீவா பிரம்மம். இந்த கூற்றுகளின்படி பிரம்மன் அவித்யா அல்லது மாயையின் காரணமாக ஜீவாவாக முடியும்.

மேற்கூறிய சந்தேகங்களின் பின்னணியில் பதராயண முனிவரான சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “அம்சோனன வ்யாபதேஷாத் அன்யத சாபி தசகித வாதித்வம் அதீயத ஏகே” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரம் என்றால் ஜீவா என்பது பிரம்மத்தின் ஒரு பகுதி. அம்சா ஒரு பகுதி. பிரம்மன் அம்சி என்றும், ஜீவா அம்சம் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே இந்த உறவு அம்சம்சி பவ என்று அழைக்கப்படுகிறது, இது சரிரா ஆத்ம பவ போன்றது. அதாவது பரமாத்மா ஆன்மா, ஜீவாத்மா என்பது உடல். அதர்வ வேதத்தில் பிரம்மன் அல்லது பரமாத்மா ஒரு மீனவர் என்றும், அவர் ஒரு முரடர் என்றும் ஒரு கூற்று உள்ளது. மீனவர், முரடர் போன்றவர்களின் உடலில் உள்ள ஜீவாத்மாவுக்கு பிரம்மன் தான் ஆன்மா என்பது இதன் பொருள்.

எனவே ஒவ்வொரு உடலிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் உடலாகும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணரும் இதையே அர்ஜுனனிடம் கூறுகிறார். எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே மாதிரியாகவும், பரமாத்மாவின் உடல்களாகவும் இருக்கும்போது, ​​ஜாதி, மதம், நிறம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் ஒரு ஜீவனுக்கும் மற்ற ஜீவனுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும் என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. ஒரு ஜீவாவுக்கும் மற்றொரு ஜீவாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் அந்த வித்தியாசம் அடிப்படையில் ஜீவன் வசிக்கும் உடலில் உள்ளது என்று சூத்ரகாரர் கூறியதன் மூலம் இந்த சந்தேகம் தீர்க்கப்படுகிறது. எனவே சாதி, மதம், நிறம் அல்லது பாலினம் உடலுக்குப் பொருந்தும், உடலில் வசிக்கும் ஜீவாவுக்கு அல்ல. இந்தக் கண்ணோட்டத்தை விளக்க, சூத்ரகாரர் ஒரு அழகான உவமையைத் தருகிறார். நெருப்பு அல்லது அக்னி தானாகவே தூய்மையானது. ஆனால், தகனம் செய்யும் இடத்தில் ஏற்படும் தீ, நம் வீட்டின் சமையலறையில் எரியும் நெருப்புக்கு சமம் என்று சொல்ல முடியுமா? மேற்கூறிய இரண்டு இடங்களிலும் உள்ள நெருப்பு ஒன்றுதான் என்பதை எந்த உடலும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வேறுபாடு அடிப்படையில் நெருப்புடன் தொடர்பு கொள்ளும் பொருளில் உள்ளது.

தகனம் செய்யும் இடத்தில், இறந்த உடலுடன் தீ எரிகிறது. வீட்டில் நெருப்பு அடுப்புடன் தொடர்பு கொண்டு எரிகிறது. ஒரு ஜீவாவிற்கும் மற்ற ஜீவாவிற்கும் உள்ள வித்தியாசம் ஒரு ஜீவாவின் உடலிலும் மற்ற ஜீவாவின் உடலிலும் உள்ளது. ஒரு உடல் உயர்ந்த சாதியைச் சேர்ந்ததாக இருக்கலாம், மற்றொரு உடல் தாழ்ந்த சாதியைச் சேர்ந்ததாக இருக்கலாம். எனவே, பிராமணனின் உடலிலுள்ள ஜீவன், வேதத்தில் கூறப்பட்டுள்ள சந்த்யாவந்தனம் போன்ற அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும், அங்கு தாழ்த்தப்பட்ட சாதியின் உடலில் உள்ள ஜீவன் நான்காவது ஜாதியில் உபநயன சம்ஸ்காரம் இல்லாததால் சடங்குகளைச் செய்ய எதிர்பார்க்கப்படுவதில்லை.

இந்த அதிகாரம் பதினொரு சூத்திரங்களைக் கொண்டது. மீதமுள்ள சூத்திரங்களில் அத்வைத முறை, பாஸ்கர முறை, த்வைத முறை தத்துவங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தின் 3வது காலாண்டு இந்த அதிகாரத்துடன் முடிகிறது.

*********

2 வது அத்தியாயத்தின் 4 வது காலாண்டு இந்திரிய பாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இந்திரியங்களின் உருவாக்கம், இந்திரியங்களின் எண்ணிக்கை, முக்ய பிராணனின் உருவாக்கம் (நாம் சுவாசிக்கும் காற்று) மற்றும் சில தொடர்புடைய தலைப்புகளைக் கையாள்கிறது.

இந்திரியங்களின் உருவாக்கம் இல்லை என்று உபநிடத நூல்களும் மேற்கூறியவற்றுக்கு முரணாக இந்திரியங்களின் உருவாக்கம் இருப்பதாகக் கூறும் வேறு சில உபநிடத நூல்களும் இருப்பதால் எழுந்த உள்நாட்டு சண்டையை இந்த இந்திரிய பாதம் தீர்க்கிறது.

புலன்கள் என்று அழைக்கப்படும் இந்திரியங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவு குறித்தும் சர்ச்சை உள்ளது. மேலும் முக்ய பிராணனை உருவாக்குவது பற்றிய சந்தேகம் இந்தப் பாதத்தில் நிவர்த்தி செய்யப்பட்டு, இறுதியாகப் பஞ்சீகரணம் என்று அழைக்கப்படும் ஐந்து பூதங்களைக் கலந்து படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் பணியை பகவான் ஸ்ரீமன் நாராயணரே செய்கிறார் என்பதை சூத்திரகாரர் நிறுவுகிறார். நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவை அவரது தொப்புளில் இருந்து படைத்த பிறகு அந்தர்யாமியாக இருந்தார்.

முதல் அதிகாரம் “பிராண உத்பத்தி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. பிராணன் என்றால் இந்திரியம். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, உபநிடதத்தில் உள்ள ஒரு வாசகம், படைப்பிற்கு முன், ரிஷிகள் மட்டுமே இருந்தனர் என்றும், ரிஷிகள் யார் என்ற கேள்விக்கு, ரிஷிகள் பிராணன் அல்லது இந்திரியங்கள் என்று உபநிடதம் கூறுகிறது.

இந்த உபநிடத கூற்று இந்திரியங்கள் உருவாக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “ததா பிராண:” என்று கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் ஆகாயம் மற்றும் பிற கூறுகள் உருவாக்கப்படுவது போல் புலன்களும் உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால், சிருஷ்டிப்பதற்கு முன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது மனைவியான மஹாலக்ஷ்மி மற்றும் இந்த இருவரையும் “சத்” என்று அழைக்கும் ஒரே ஒரு பொருள் மட்டுமே இருந்தது. முண்டக உபநிஷத் பிராமணன் அல்லது பரமாத்மாவிடமிருந்து முக்ய பிராணன், இந்திரியங்கள் மற்றும் ஐந்து பூதங்கள் பிறக்கின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறது.

ஆனால், பிராணன்கள் அல்லது இந்திரியங்களான ரிஷிகள் சிருஷ்டிக்கு முன் இருந்ததாகக் கூறப்பட்ட உபநிடதக் கூற்றின் பொருள் வைட் என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. ரிஷிகள் என்பது பரமாத்மாவை மட்டுமே குறிக்கும் என்றும் அவை இந்திரியங்களைக் குறிக்கவில்லை என்றும் சூத்ரகாரர் கூறுகிறார். பன்மையில் இருக்கும் ரிஷிகள் என்ற சொல்லுக்கு ஒருமையில் இருக்கும் பரமாத்மா என்று எப்படி அர்த்தம் என்று மீண்டும் கேள்வி எழுகிறது. இரண்டாவது சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரம், ரிஷிகள் மற்றும் பிராணன்கள் என்ற வார்த்தைகளுக்கு எந்த நேரடி அர்த்தமும் இணைக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவை பரமாத்மாவை மட்டுமே குறிக்கின்றன என்றும் கூறுகிறது.

மேலும் பிராணன் என்ற சொல்லுக்கு பரமாத்மா என்று பொருள் என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார், ஏனென்றால் பரமாத்மாவைத் தவிர மற்ற அனைத்து பொருட்களும் அவற்றின் உருவாக்கத்தால் மட்டுமே அவற்றின் பெயர்களைப் பெறுகின்றன. மேலும் படைப்பிற்கு முன் எந்த ஒரு பொருளுக்கும் அல்லது பொருளுக்கும் வடிவமும் பெயரும் இல்லை. அதனால் புலன்கள் உருவாகின்றன.

இந்தப் பாடலில் உள்ள இரண்டாவது அதிகாரம் “சப்தகதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் இந்திரியங்களின் எண்ணிக்கை பற்றிய விவாதம் நடைபெறுகிறது. இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழா அல்லது பதினொன்றா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு மட்டுமே என்று எதிராளி அல்லது பூர்வபக்ஷி கூறுகிறது. தைத்தரிய உபநிடதத்தில் உள்ள ஒரு ஸ்ருதியின் படி, ஜீவா ஏழு இந்திரியங்களுடன் ஒரு உடலிலிருந்து மற்றொன்றுக்கு நகர்கிறது என்று கூறுகிறது. மனம், புத்தி, கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஏழு இந்திரியங்கள்.

எதிரியின் இந்த பார்வை இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் உள்ளது மற்றும் சூத்திரம் “சப்த கதே: விசேஷிதத்வாச்ச” என்று படிக்கிறது. இந்த சூத்திரம் பூர்வபக்ஷ சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா பிறக்கும் போது ஒரு உடலுக்குள் நுழைந்து இறக்கும் போது உடலை விட்டு வெளியேறும்போது, ​​அவர் எப்போதும் ஏழு புலன்களுடன் தொடர்புடையவர்.

சித்தாந்த சூத்திரம் என்று அழைக்கப்படும் இரண்டாவது சூத்திரத்தில் எதிரியின் இந்த வாதத்தை சூத்திரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரம் “ஹஸ்த தயாஸ்து ஸ்திதே அதோனைவம்” என்று படிக்கிறது. கை முதலிய இந்திரியங்கள் இருக்கும் போது இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு மட்டுமல்ல பதினொன்றாகும் என்பது இந்த சூத்திரத்தின் பொருள். எனவே இந்திரியங்கள் பின்வருமாறு.

மனம் – (இந்திரியங்களைக் கொடுக்கும் அறிவு):

1. கண்கள்

2. காதுகள்

3. மூக்கு

4. நாக்கு

5. தோல்

செயல் சார்ந்த இந்திரியங்கள்:

6. கைகள்

7. கால்கள்

8. பேச்சு

9. பிறப்பு உறுப்பு (பாலியல் உறுப்பு)

10. வெளியேற்ற உறுப்பு.

புத்தி என்பது ஒரு இந்திரியமாக கருதப்படுவதில்லை, ஏனெனில் புத்தி என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது நிலைபெற்ற மன நிலை.

இந்த பாதத்தில் மூன்றாவது அதிகாரம் “பிராண அனுத்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த அதிகாரத்தில் இந்திரியங்களின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

அனைத்து புலன்களும் சமமானவை, முடிவில்லாதவை என்று பிருஹதாரண்யக உபநிடதத்தில் ஒரு மேற்கோள் இருப்பதால், அளவு பற்றிய சந்தேகம் எழுகிறது. முடிவில்லாத வார்த்தை, புலன்கள் எல்லா இடங்களிலும் இருப்பதைக் குறிக்கலாம், அதாவது அவை பரமாத்மாவைப் போலவே விபு.

இந்த சந்தேகத்தின் காரணமாக சூத்ரகாரர் “அனுவாஷா” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது அனைத்து புலன்களும் மிகக் குறைந்த அளவிலானவை. சூத்ரம் அளவு “அனு” (அணு) என்று சொன்னாலும், உடலின் வெளியே இருக்கும் தோலின் விஷயத்தில் இந்திரியங்களின் அளவு அணு அளவு இருக்க முடியாது, தோல் என்று சொல்ல முடியாது. அணு அளவு. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் கூறுகிறார், புலன்கள் மிகக் குறைந்த அளவைக் கொண்டுள்ளன, அதாவது அவை வெளியேறும் அல்லது உடலை விட்டு வெளியேறும் போது, ​​​​உடலுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களால் மறுபரிசீலனை செய்ய முடியாது. உடலில் இருந்து ஆன்மா.

“அனவஷ்சா” என்ற சூத்திரம், ஜீவா உடலை விட்டு வெளியேறும்போது, ​​​​அவரது சுவாசம் நிறுத்தப்படும் என்று கூறும் உபநிடதத்தின் அடிப்படையில் அமைந்தது, அதாவது முக்ய பிராணன் என்று அழைக்கப்படும் சுவாசமும் உடலை விட்டு வெளியேறி, பின்தொடர்கிறது. முக்ய பிராணன் வெளியேறியதும் பதினொரு புலன்களும் விலகின. புலன்கள் மிகக்குறைந்த அளவில் இருக்கும்போதுதான் வெளியேறுவதும் நுழைவதும் சாத்தியமாகும்.

இந்த அதிகாரணத்திலேயே முக்ய பிராணன் அல்லது மூச்சு கூட படைக்கப்படுகிறது என்று சூத்ரகாரம் கூறுகிறது. மகா பிரளய (மஹா பிரளய) காலத்திலும் காற்று வடிவில் உள்ள முக்ய பிராணன் இருந்ததாக உபநிடத வாசகத்தில் எழுந்த சந்தேகம் காரணமாக அதன் உருவாக்கம் பற்றி குறிப்பாக குறிப்பிட வேண்டியிருந்தது. நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு மகாபிரளயம் நடைபெறுகிறது. நான்கு தலை பிரம்மாவின் பதவிக் காலம் 2 x 1017 ஆண்டுகள் (இரண்டு பரார்தாக்கள்). ஒரு பரார்தா என்பது நமது ஆண்டு கணக்கின்படி 1017 ஆண்டுகள்.

ரிக்வேதத்தில் உள்ள மேற்கூறிய உபநிடத வாசகம் பிரளய காலத்தில் முக்ய பிராணன் இருந்ததைக் குறிப்பிடவில்லை, ஆனால் அதில் ஸ்வதா என்ற வார்த்தை இருப்பதால் மகாலட்சுமி தேவியுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே இருந்ததாகக் கூறுகிறது என்பது சூத்ரகாரரின் வாதம். உபநிடதச் சொல் மகாலட்சுமியைக் குறிக்கிறது. நமது சித்தாந்தத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் அவரது துணைவியான மஹாலக்ஷ்மியும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவர்கள் என்பதால் ஒரே உருவமாக இருக்கிறார்கள். பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இந்த ஒற்றைப் பொருள் மட்டுமே இருந்தது. முண்டக உபநிடதம் முக்ய பிராணன் (மூச்சு) உருவாக்கம் பற்றி தெளிவற்ற முறையில் குறிப்பிடுகிறது, எனவே அது படைப்பு இல்லாமல் இல்லை.

எனவே “ஸ்ரேஷ்டஷாச்சா” சூத்திரத்தில் முக்ய பிராணன் படைப்பிற்கு உட்பட்டது என்று சூத்ரகாரம் தெளிவாகக் கூறுகிறது. முக்ய பிராணன் “ஸ்ரேஷ்ட பிராணன்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “வாயுக்ரியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் முக்ய பிராணனின் சரியான தன்மையும் அதன் செயல்பாடும் கையாளப்படுகிறது. இந்த அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முக்ய பிராணனின் தன்மை குறித்து மூன்று மடங்கு சந்தேகங்கள் உள்ளன. அவை 1) முக்ய பிராணன் வாயுவான இரண்டாவது பூதமா 2) வாயுவின் இயக்கம் அல்லது செயலா 3) அது ஒரு சிறப்பு வகை வாயு அல்லது காற்று.

சூத்ரகாரர் முதல் இரண்டு பார்வைகளை நிராகரித்து, “நவயுக்ரியே பிருதக் உபதேசத்” என்று கூறும் முதல் சூத்திரத்தில் மூன்றாவது பார்வை சரியானது என்று கூறுகிறார். முக்ய பிராணன் என்பது வாயுவின் செயல்பாடு அல்லது செயல் அல்ல, அது ஒரு சிறப்பு வகை வாயுவாகும், ஏனெனில் முண்டக உபநிடதம் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து, முக்ய பிராணன், மனம், பத்து புலன்கள் மற்றும் ஐந்து பூதங்கள் அல்லது உறுப்புகள் பிறக்கின்றன என்று கூறுகிறது. இந்தச் சொல்லில் 2வது பூதமான வாயு முக்ய பிராணனிலிருந்து வேறுபட்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரமானது, முக்ய பிராணன் வாயு அல்லது காற்றின் மாற்றப்பட்ட வடிவம் மற்றும் அது நெருப்பைப் போன்ற மற்றொரு பூதமாகும் என்ற கருத்தை நிராகரிக்கிறது. இந்த முக்ய பிராணன் கண்களைப் போலவே ஜீவாவுக்கு ஒரு உதவி என்று மேலும் கூறப்படுகிறது. பிராணனின் செயல்பாடு கண்கள் மற்றும் பிற புலன்களைப் போல் சரியாக இல்லாவிட்டாலும் அது ஜீவா உடலையும் இந்திரியங்களையும் ஆதரிக்க உதவுகிறது.

சாந்தோக்யோபநிஷத்தில் முக்ய பிராணன் பற்றி ஒரு கதை உள்ளது. ஜீவாவின் உடலில் அந்தர்யாமி, ஜீவாத்மா, முக்ய பிராணன், மனம் மற்றும் பத்து புலன்கள் என பரமாத்மா உள்ளன. புலன்களுக்கிடையே ஒரு சண்டை எழுந்தது, அதில் ஒவ்வொரு புலனும் மற்றவர்களை விட மேன்மை எனக் கூறி, அனைத்து புலன்களும் நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவிடம் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு ஒரு இணக்கமான தீர்வை ஏற்பாடு செய்யச் சென்றன. பிரம்மா ஒவ்வொரு புலனையும் உடலை விட்டு வெளியேறி ஒரு வருடம் வெளியில் இருக்கவும், உடலின் செயல்பாட்டை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவும் கூறினார். முதலில் பேச்சு உடலை விட்டு வெளியேறி வேறு இடத்தில் இருந்தது, அந்த நபர் ஊமை ஆனார், இது உடலின் செயல்பாட்டைத் தடுக்கவில்லை, பின்னர் பேச்சு திரும்பியது. பின்னர் கண்கள் உடலை விட்டு வெளியேறி பக்கவாட்டில் இருந்ததால் அந்த நபர் பார்வையற்றவரானார்.

பார்வையற்றவராக மாறினாலும் அவரது உடல் செயல்பாடு இயல்பாகவே இருந்தது. பிறகு கண்கள் திரும்பின. பின்னர், காதுகளும் மனமும் உடலை விட்டு வெளியேறியது, உடலின் செயல்பாடுகள் அதிகம் பாதிக்கப்படவில்லை, பின்னர் முக்ய பிராணன் உடலை விட்டு வெளியேறியது, மற்ற இந்திரியங்கள் அதைப் பின்பற்றின. பின்னர் உடல் இறந்து அழுக ஆரம்பித்தது. எனவே முக்ய பிராணன் எல்லா புலன்களையும் விட மேலானவன் என்றும், புலன்களுக்கெல்லாம் தலைவன் என்றும் புலன்களுக்குக் கூறினார். இதற்கு சாந்தோக்யோபநிஷத்தில் பிராண சம்வாதம் என்று பெயர். இதன்படி முக்ய பிராணன் ஜீவா உடலையும் புலன்களையும் ஆதரிக்க உதவுகிறது.

இந்த முக்ய பிராணன் உடல் முழுவதும் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் செயல்படுகிறது. இதயத்தில் பிராணன், வெளியேற்றும் உறுப்பில் அபானன், தொப்புளில் சமணன், கழுத்தில் உதனா மற்றும் வைகனா உடல் முழுவதும் இயங்குகிறது. ஆசை, விருப்பம், சந்தேகம், நேர்மை, நேர்மையில் நேர்மை இல்லாதது, தைரியம், பயம், கூச்சம் போன்ற மனதின் பல நிலைகளைப் போலவே இதுவும் உள்ளது. மேலும் மேற்கண்ட ஐந்து பெயர்களைக் கொண்ட முக்ய பிராணனும் உடலில் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு, உதவி செய்கிறது. தனிப்பட்ட ஆன்மா உடலில் இருக்க வேண்டும். இந்த நான்காவது பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம் “ஸ்ரேஷ்ட அனுத்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, அதில் இந்த ஷ்ரேஷ்ட பிராணன் அல்லது முக்ய பிராணன் மிகக் குறைந்த அளவுடையது என்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த சூழலில் எழும் சந்தேகம் என்னவென்றால், இந்த பிராணன் எல்லா இடங்களிலும் உள்ளது, அதாவது விபு அல்லது முடிவில்லாத ஆனந்தம் என்று உபநிடதங்களில் சில கூற்றுகள் உள்ளன. ஒரு அறிக்கையில், ஒவ்வொரு பொருளும் பிராணனுக்குள் இருப்பதாகவும், முழு விஷயமும் பிராணனால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேற்கூறிய சந்தேகம் “அனுஷ்சா” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் தீர்க்கப்பட்டது, அதாவது இந்த முக்ய பிராணன் (மூச்சு) மிகக் குறைந்த அளவு அல்லது பிரபஞ்ச அளவிலானது, ஏனெனில் அது ஜீவாவுடன் சேர்ந்து உடலை விட்டு வெளியேறுகிறது. ஷ்ரேஷ்ட பிராணன் எல்லா இடங்களிலும் அல்லது விபு இருந்தால் உடலை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை. ஜீவாவுடன் இந்த பிராணன் உடலிலிருந்து வெளியேறுவதைக் கூறும் தெளிவான உபநிடத உரை உள்ளது.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் “ஜோதிராதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்திரியங்களும், முக்ய பிராணனும் பிரம்மன் (பகவான் ஸ்ரீமன் நாராயணன்) என்ற பரமாத்மாவிடமிருந்து படைக்கப்பட்டதாகவும், அவை மிகக் குறைந்த அளவுடையதாகவும், புலன்களின் எண்ணிக்கை பதினொன்றாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் இதுவரை சூத்ரகாரர் நிறுவினார்.

இரண்டாவது அத்தியாயத்தின் முதல் பாதத்தில் அபிமானி வ்யாபதேசஸ்து விஷேஷ அனு கதிப்யம் என்று ஒரு சூத்திரம் உள்ளது” என்று சூத்ரகாரர், அறிவோ உணர்வோ இல்லாத ஒவ்வொரு உயிரற்ற பொருளும் தேவதா என்ற வானக் கடவுளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை நிறுவினார்.

இந்த வான கடவுள் ஒரு குறிப்பிட்ட பொருளின் அபிமானிதேவதா அல்லது அதிஷ்டானதேவதா என்று அழைக்கப்படுகிறார். எல்லாப் புலன்களும் தங்களில் யார் மேலானவர் என்பதைத் தீர்மானிக்க நான்கு தலை பிரம்மாவிடம் சென்றது என்று முன்பு குறிப்பிடப்பட்ட பிராணசம்வாதத்தில் கூட, பிரம்மாவுடன் புலன்களைப் பேசுவது அந்தந்த அபிமான தேவதைகள் அல்லது அதிஷ்டான தேவதைகளால் மட்டுமே செய்யப்பட்டது. இது, இந்தியா பாகிஸ்தானைச் சொல்கிறது, அதாவது இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளரிடம் சொல்வது போன்றது. எனவே அபிமான தேவதா என்றால் பேச்சாளர் என்றும் பொருள்.

தெய்வங்களின் தூதராக இருக்கும் அக்னி தேவதை (அக்கினி தேவன்) அபிமானி தேவதை அல்லது உணர்வைக் கட்டுப்படுத்தும் நபர் என்று தெளிவாகக் கூறும் உபநிடத உரை உள்ளது “”பேச்சு மற்றும் ஒரு நபரின் நாவில் நுழைந்தது. அதே சமயம் சூரிய கடவுள் (சூர்யா) என்பது அபிமானி தேவதை அல்லது ஒரு நபரின் உடலில் உள்ள கண்களுக்குள் நுழைந்த “கண்கள்” என்ற உணர்வின் கட்டுப்படுத்தும் தெய்வம். அபிமானி தேவதை அல்லது முக்ய பிராணனைக் கட்டுப்படுத்தும் கடவுளான வாயு தேவதையும் சுவாசிப்பதற்காக ஒரு தனிப்பட்ட நபரின் மூக்கில் நுழைந்தார்.

அதே ஒப்புமையில், ஜீவா என்பது அதிஷ்டான தேவதா அல்லது உடலில் உள்ள அனைத்து இந்திரியங்களையும் தனது இன்பத்திற்காகக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். ஜீவா தனது காதுகள் மூலம் ஒலி அல்லது இசையை அதன் கட்டுப்பாட்டாளராக இருந்து அனுபவிக்கிறார். அவற்றின் கட்டுப்பாட்டாளராக இருப்பதன் மூலம் அவர் தனது கண்களால் வண்ணம் அல்லது ரூபாவை அனுபவிக்கிறார். அவர் தனது தோல் உணர்வின் மூலம் தொடுதலின் இன்பத்தை அதன் கட்டுப்படுத்தியாக அனுபவிக்கிறார். அவனால் கட்டுப்படுத்தப்படும் நாக்கின் மூலம் உண்ணக்கூடிய உணவின் சுவையை அவன் அனுபவிக்கிறான். அவன் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மூக்கு வழியாக ஒரு பொருளின் இனிமையான வாசனையை அனுபவிக்கிறான்.

எனவே முக்ய பிராணனும் மற்ற புலன்களும் அந்தந்த வான தெய்வங்களாலும் ஜீவாவாலும் அபிமான தேவதைகளாகவோ அல்லது அதிஷ்டான தேவதைகளாகவோ இருப்பதன் மூலம் அவனுடைய அல்லது அவள் இன்பத்திற்காக சேர்க்கப்படுகின்றன என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது.

இச்சூழலில், இந்தச் செயலை கட்டுப்படுத்துவது அல்லது அதிஷ்டனாக இருப்பது ஒரு ஜீவாவின் (வானக் கடவுளின் விருப்பமும்) அவரது சொந்த விருப்பத்தினாலா அல்லது ஸ்ரீமனாகிய பரமாத்மாவின் விருப்பம் அல்லது சங்கல்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. நாராயணா. தியானிக்கப்படும் அல்லது வழிபடப்படும் பட்டியலில் உள்ள அந்த ஜீவனும் பலன்களை வழங்க முடியும் என்பதால், ஜீவாவின் சொந்த விருப்பத்தின் பேரில் கட்டுப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்திற்கு இடம் உள்ளது.

இந்த பார்வையை சூத்ரகாரர் “ஜோதிராதி அதிஷ்டானம் து ததமானநாத் ப்ரணவதா ஷப்தாத்” என்ற சூத்திரத்தில் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஜோதிராதி அதிஷ்டானம் பிரணவதா என்பது முக்ய பிராணன் மற்றும் பிற புலன்களை அக்னி தேவதை போன்ற பரலோக கடவுள்களால் கட்டுப்படுத்துவது மற்றும் ஜீவாவுடன் சேர்த்து பரமாத்மாவின் சித்தம் அல்லது சங்கல்பத்தின் காரணமாகும். இங்கு பிரணவதம் என்றால் ஜீவா என்று பொருள். தண்டமானநாத் என்றால்

பரமாத்மாவின் விருப்பம். தத்மேஸ் பரமாத்மா, அமனானம் என்றால் அவருடைய விருப்பம் அல்லது சங்கல்பம்.

மேலே கூறப்பட்ட முடிவுக்கான காரணம் “சப்தாத்”, இங்கு சப்தா என்றால் “உபநிஷத மேற்கோள்” என்று பொருள். பிருஹதாரண்யக உபநிடதத்தின் மூன்றாம் அத்தியாயத்தின் அந்தர்யாமி பிராமணத்தில், உத்தாலக முனிவருக்குப் பதிலளித்த யாக்ஞவல்கிய முனிவர் இருபத்தி ஒரு பொருளைக் கண்டறிந்து, ஒவ்வொரு பொருளிலும் அல்லது பொருளிலும் பரமாத்மா இருக்கிறார், அவர் அந்த பொருளிலிருந்து வேறுபட்டவர், இந்த பொருள் பரமாத்மாவையும் இந்த பொருளையும் அறியாது. என்பது பரமாத்மாவின் உடல் மற்றும் பரமாத்மா என்பது அந்த பொருளின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி மற்றும் அதன் செயல்பாடுகளை உள்ளே இருந்து கட்டுப்படுத்துகிறது, மேலும் அவர் கேள்வி கேட்பவரின் அந்தர்யாமியாகவும் இருக்கிறார், அது உத்தாலகாகும்.

இந்த பொருள்கள் ஐந்து கூறுகள், புலன்கள், ஜீவன், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், உயிரினங்கள் என்று அனைத்து பூதங்கள், இருள், ஒளி, திசைகள் போன்றவை. இந்த அந்தர்யாமி பிராமணத்தின்படி, ஜீவாக்கள், வான தெய்வங்கள் மற்றும் ஒவ்வொரு பொருளும் உட்பட ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு செயல்பாடும். பிரபஞ்சம் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இந்த அந்தர்யாமி ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்தில் வசிப்பவர் ஸ்ரீமன் நாராயண பகவான் என்று சுபலோபநிஷத் கூறுகிறது. அவர் முழு பிரபஞ்சத்தையும் உள்நோக்கியும் வெளியேயும் சூழ்ந்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் அந்தர்யாமியாக இருந்து அதன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பரமாத்மாவின் இந்த இயல்பு நிரந்தரமானது.

இந்த பாதத்தில் ஏழாவது அதிகாரம் “இந்திரயாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் எழும் சந்தேகம் என்னவென்றால், முக்ய பிராணன் இந்திரியங்கள் அல்லது இந்திரியங்களின் பிரிவில் உள்ளதா அல்லது இந்த வகைக்கு வெளியே உள்ளதா என்பதுதான். மூச்சாகிய முக்ய பிராணனை பிராணன் என்றும், இந்திரியங்கள் பிராணன் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவின் உதவிகள் என்பது இந்த சந்தேகத்திற்கு இடம்.

இந்த சந்தேகத்தைப் போக்க சூத்ரகாரர் “தா இந்திரியானிதாத் வ்யாபதேசத் அன்யத்ர ஷ்ரேஷ்டாத்” என்ற சூத்திரத்தை இயற்றுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பதினொரு இந்திரியங்களும் புலன்கள் மற்றும் முக்ய பிராணன் ஒரு இந்திரியம் அல்ல.

சூத்ரகாரர் இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரத்தில் “பேத ஸ்ருதே: வைலக்ஷ்ண்யச்ச” என்று படிக்கும் மற்றொரு உபநிடத உரையை மேற்கோள் காட்டுகிறார். இதன் பொருள், சூத்ரகாரர் மேற்கோள் காட்டிய உபநிடத உரையில், பரமாத்மாவிடமிருந்து முக்ய பிராணனும் பதினொரு புலன்களும் பிறந்தன என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ஸ்ருதி அல்லது உபநிடதச் சொல் முக்ய பிராணனுக்கும் புலன்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த பாதத்தில் உள்ள கடைசி மற்றும் எட்டாவது அதிகாரம் சம்ஞான மூர்த்தி கிளிப்தி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. சம்ஞா என்றால் பெயர், மூர்த்தி என்பது வடிவம். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது பொருளுக்கும் ஒரு திட்டவட்டமான பெயர் மற்றும் வடிவம் உள்ளது. இந்த திட்டவட்டமான பெயர் மற்றும் வடிவம் ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகிறது.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தின் உருவாக்கம் நடைபெறுகிறது. பிரளயம் நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு நடைபெறுகிறது, மனித ஆண்டுகளின் கணக்கீட்டின்படி, நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் 2 x 1017 ஆண்டுகள் ஆகும், அதாவது இரண்டு பரார்த்தங்களின் முடிவில். ஒரு பரார்தா என்பது 1 x 1017 ஆண்டுகள். தற்செயலாக சதுர்மோக பிரம்மாவிற்கு ஒரு கல்பம் பகல் ஆகும், இது ஸ்வேத வராஹ கல்பம் என்றும் மற்றொரு கல்பம் இரவு என்றும் இது பத்மகல்பம். ஒரு கல்பம் என்பது 1000 சதுர் யுகங்கள். ஒரு கல்பா என்பது 4320000000 ஆரம்பத்தின்_ஸ்கைப்_ஹைலைட்டிங் 4320000000 மனித ஆண்டுகளின்_ஸ்கைப்_ஹைலைட்_முடிவு. ஒரு சதுர் யுகத்தின் காலம் 4320000 மனித ஆண்டுகள்.

கலியுகத்தின் காலம் 432000 ஆண்டுகள். துவாபர யுகத்தின் காலம் 864000, திரேதா யுகத்தின் காலம் 1296000 ஆண்டுகள், கிருத யுகத்தின் காலம் 1728000 ஆண்டுகள். பிரளய காலமும் இரண்டு பரார்தாக்கள் அதாவது 2 x 1017 ஆண்டுகள்.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் பின்வரும் நிலைகளைக் கொண்டுள்ளது.

அ) சமசுதிஸ்ருஷ்டி – பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஐந்து பூதங்கள் அல்லது கூறுகளை உருவாக்குகிறார்.

ஆ) திரி வ்ருத்கரணம் பஞ்சீகரணம் என்றும் அழைக்கப்படுகிறது

c) அந்த ஸ்ருஷ்டி – ஆண்டை உருவாக்குதல். அண்டா முட்டை வடிவில் உள்ளது மற்றும் அது சதுர் தசா புவனா எனப்படும் பதினான்கு உலகங்கள் அல்லது லோகங்களை உள்ளடக்கியது. பதினான்கு லோகங்களின் பெயர்கள் 1) பூலோகம் 2) புவர்லோகம் 3) சுவர்லோகம் 4) மஹர்லோகம் 5) ஜனோலோகம் 6) தபோலோகம் 7) சத்ய லோகம்.

நாம் இப்போது வாழும் உலகம் பூலோகம். பூலோகத்திற்கு கீழே, 1) அத்தலம் 2) வித்தலம் 3) சுதலம் 4) தலத்தலம் 5) மகாதலம் 6) ரசாதலம் 7) பாதாளம் என ஏழு லோகங்கள் உள்ளன.

பதினான்கு லோகங்களிலும், ஒவ்வொரு ஆண்டாவின் தலையும் நான்கு தலை பிரம்மாவாகிய அந்தாதிபதி என்று அழைக்கப்படுகிறார். எண்ணிலடங்கா அந்தாக்கள் இருப்பதால் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அனந்தகோடி பிரம்மாண்ட நாயகர். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சதுர்முக பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

ஈ) ஆண்ட சிருஷ்டி (சிருஷ்டி என்றால் படைப்பு என்று பொருள்) செய்த பிறகு ஒவ்வொரு ஆண்டாவின் சதுர் முக பிரம்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தொப்புளிலிருந்து பிறக்கிறார்.

இ) பகவான் ஸ்ரீமன் நாராயணன் சதுர்முக பிரம்மாவின் அந்தர்யாமியாக இருப்பதால் வ்யஷ்டி சிருஷ்டி என்று அழைக்கப்படும் நாம ரூப வியாகரணம் செய்கிறார். இந்தச் சூழலில் சதுர்முக பிரம்மா சமஷ்டி புருஷன் என்று அழைக்கப்படுகிறார். பஞ்சுகரணம் என்று அழைக்கப்படும் திரிவ்ருத்கரணம் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

ஊ) சமஷ்டி சிருஷ்டி பரமாத்மா செய்த பிறகு, எந்த வேலையும் நடக்கவில்லை. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஒரு வாசகம் உள்ளது, அதில் உருவாக்கப்பட்ட ஐந்து பூதங்களும் திறன் கொண்டவை என்றாலும், எந்த வேலையும் செய்ய முடியாது, தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களின் உருவாக்கம் நடக்காது என்று தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கப்படவில்லை. பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பது பஞ்சீகரணம் எனப்படும்.

சிமென்ட் இருக்கிறது, மணல் இருக்கிறது, தண்ணீர் இருக்கிறது, ஜெல்லி இருக்கிறது, எஃகு இருக்கிறது என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும் இன்னும் கட்டுமானம் இல்லை. எனவே வெறும் பொருட்களைக் கொள்முதல் செய்வதால் எந்தக் கட்டுமானமும் ஏற்படாது என்பது தெளிவாகிறது. வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்பானது சிமென்ட், மணல், ஜெல்லி ஆகியவற்றை தண்ணீருடன் கலப்பதன் மூலம் உருவாகலாம். எனவே, எந்த ஒரு வேலையும் முடிவடைய, அங்கப் பொருட்களைக் கலக்க வேண்டியது அவசியம். அதுபோலவே பிரபஞ்சத்தின் விஷயத்திலும் பூதங்கள் (உறுப்புகள்) ஒன்றோடு ஒன்று கலந்தால் மட்டுமே மேலும் உருவாக்கம் முடியும்.

ஆண்டாள் மற்றும் அந்தாதிபதி சதுர் முக பிரம்மாவை உருவாக்குவதற்கு முன்பே பகவான் ஸ்ரீமன் நாராயணன் பஞ்சீகரணம் செய்கிறார். பஞ்சீகரணம் செய்யப்படும் முறை பின்வருமாறு. ஏற்கனவே சொன்னது போல் பஞ்சீகரணம் என்றால் பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பது.

ஆகாஷாவின் பஞ்சீகரணம் (வானம்)

ஆகாஷா – 50 %

வாயு (காற்று) – 12.5 %

தேஜஸ் (தீ) – 12.5%

நீர் – 12.5 %

பூமி – 12.5 %

அதாவது, 50 % ஆகாஷம் மீதமுள்ள நான்கு பூதங்களில் ஒவ்வொன்றிலும் 12.5% ​​உடன் கலக்கப்படுகிறது மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள சதவீதத்தின்படி ஐந்து பூதங்களின் கலவையே இப்போது நாம் காணும் வானம். மற்ற பூதங்களின் பஞ்சீகரணம் பின்வருமாறு உள்ளது.

அ) வாயு (காற்று)

வாயு – 50%, ஆகாஷா – 12.5%, நெருப்பு – 12.5%, நீர் – 12.5%, பூமி – 12.5%

b) தேஜஸ் (தீ)

தேஜஸ் – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நீர் – 12.5%, பூமி – 12.5%

c) தண்ணீர்

நீர் – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நெருப்பு – 12.5%, பூமி – 12.5%

ஈ) பூமி

பூமி – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நெருப்பு – 12.5%, நீர் – 12.5%

எனவே பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளின் அல்லது பொருளின் உட்பொருட்கள் ஐந்து பூதங்கள். அதுபோலவே மனித உடலும் ஐந்து பூதங்களைக் கொண்டது எனவே இது பஞ்ச பூதிகா சரிரம் எனப்படுகிறது.

சாந்தோக்யோபநிஷத்தில், நெருப்பு, நீர், பூமி ஆகிய மூன்று பூதங்களை மட்டுமே உருவாக்குவதைக் குறிப்பிடுவதால் மட்டுமே இது திரிவ்ருத்கரணம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த 3 பூதங்களின் கலவையே திரிவிருத்கரணம் எனப்படும். உத்தாலக முனிவர் இந்த திரிவிருத்திகரணம் பற்றி தனது மகன் சுவேதகேதுவிடம் ஒரு உவமை மூலம் கூறுகிறார். உத்தாலகா ஸ்வேதகேதுவிடம், அந்தச் சுடர் சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது என்று கூறுகிறார்.

சிகப்பு நிறம் சுடரில் பூத தேஜஸ் இருப்பதையும், வெள்ளை நிறம் சுடரில் உள்ள நீரின் மூலப்பொருளையும், கருப்பு நிறம் சுடரில் பூமி இருப்பதையும் உறுதி செய்கிறது.

ஆனால் தைத்தரிய உபநிடதத்தில், ஐந்து பூதங்களின் உருவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே பஞ்சீகரணம். பஞ்ச ஐந்து. இந்த உபநிடதத்தில் சத் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஹிரண்ய கர்ப்பமாகிய (சதுர்முக பிரம்மா) சமஷ்டிஜீவாவின் உடலில் நுழைந்து பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களுக்கு பெயர்களையும் வடிவங்களையும் வழங்கினார் என்று சாண்டோக்யோபனிஷத் கூறுகிறது.

பரமாத்மா ஜீவாவுடன் சேர்ந்து ஒவ்வொரு பொருளிலும் நுழைவதால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லது பொருளும் ஒரு பெயரையும் வடிவத்தையும் பெறுகின்றன. எனவே ஜீவனும் அவனது அந்தர்யாமியான பரமாத்மாவும் இல்லாத எந்தப் பொருளும் இல்லை.

உயிரற்ற பொருட்களின் விஷயத்தில் ஜீவா மற்றும் அதன் அந்தர்யாமி செயலற்ற நிலையில் உள்ளது, உயிருள்ள பொருட்களின் விஷயத்தில் ஜீவா மற்றும் பரமாத்மாவின் இருப்பு தெளிவாக உள்ளது.

எனவே உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்தும் பரமாத்மாவின் உடல்கள் என்பது மேலே உள்ளவற்றிலிருந்து தெளிவாகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள முதல் சூத்திரம் “சம்ஜ்ஞ மூர்த்தி க்லிப்திஸ்து த்ரிவ்ருத் குர்வத உபதேசத்”.

முன்னதாக த்ரிவ்ருத் கரணத்தைச் செய்யும் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் நாமரூப வ்யாகரணம் செய்கிறார் என்பதுதான் இந்த ஸூத்ரம்.

இத்துடன் இரண்டாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

******

மூன்றாவது அத்தியாயம் “சாதனா” அத்யாயா மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளை (உபயம்) கையாள்கிறது.

முதல் இரண்டு அத்தியாயங்கள் பிரபஞ்சத்திற்குக் காரணமான (பொருள் காரணம், செயல்பாட்டுக் காரணம் மற்றும் கருவிக் காரணம்) மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கையாள்வதில் பிரத்தியேகமாக உள்ளன. சமன்வய அத்யாய எனப்படும் முதல் அத்தியாயத்திலும், “அவிரோத அத்யாய” எனப்படும் இரண்டாவது அத்தியாயத்தின் முதல் இரண்டு பாதங்களிலும் பிரம்மன் அல்லது பர பிரம்மன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக இருக்கிறார் என்பது உறுதியாகவும், மாற்ற முடியாததாகவும் நிறுவப்பட்டது. . 2வது அத்யயத்தில் 3வது மற்றும் 4வது காலாண்டுகளில் பிராமணனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இந்த அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன, அவை (1) வைராக்ய பாதம் (2) உபய லிங்க பாதம் (3) குணோபசம்ஹார பாதம் (4) அங்க பாதம்.

மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை ஒருவர் பின்பற்றுவதற்கு இரண்டு அத்தியாவசிய முன்நிபந்தனைகள் உள்ளன. முன்நிபந்தனைகள் (1) வைராக்கியம் என்று அழைக்கப்படும் உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வு (2) ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகம் எனப்படும் சூப்பர் உலகில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளை அடைய தீவிர அல்லது தீவிர ஆசை.

இந்த இரண்டு முன்நிபந்தனைகள் இருந்தால், ஒரு நபர் மட்டுமே பக்தி யோகத்தை நாடுகிறார், இது எட்டு துணைகளைக் கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனை ஆழ்ந்த தியானம், இந்த பக்தி யோகம் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது.

சம்சாரத்தின் பந்தத்தில் இருக்கும் ஒரு தனி ஆன்மாவிற்கு நான்கு நிலைகள் அல்லது மரண உடலில் எஞ்சியிருக்கும் நிலைகள் உள்ளன. நான்கு கட்டங்கள் ஆகும்

1) விழிப்பு நிலை: இது ஜாக்ரத் அவஸ்தா எனப்படும். அவஸ்தா என்றால் நிலை அல்லது நிலை, ஜாக்ரத் என்றால் விழிப்பு என்று பொருள்.

2) ஒலி நிலை அல்லது ஆழ்ந்த உறக்கம்: இது சுஷுப்தி அவஸ்தா எனப்படும். சுஷுப்தி என்றால் நல்ல தூக்கம்.

3) கனவுகள் காணும் நிலை: இது ஸ்வப்னா அவஸ்தா எனப்படும். ஸ்வப்னா என்றால் கனவுகள்.

4) மயக்க நிலை அல்லது கோமா நிலை: இது மூர்ச்சாவஸ்தா எனப்படும். மூர்ச்சா என்றால் மயக்கம்.

எனவே, பாதராயண முனிவரான சூத்ரகாரர், மேற்கூறிய நான்கு நிலைகளிலும் உள்ள குறைகள் அல்லது குறைபாடுகளை முதல் பாதத்தில் எடுத்துக்காட்டினால், இவற்றைக் கேட்கும் நபருக்கு உலக இன்பங்களில் வைராக்கியம் அல்லது பற்றின்மை உணர்வு உருவாகி பின்னர் தியானம் செய்யத் தொடங்கும். அல்லது மோட்சத்தை அடைய பக்தி யோகா. இந்த முதல் பாதத்தில் விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்படுகின்றன, இரண்டாவது பாதத்தில் மற்ற மூன்று நிலைகளான நல்ல தூக்க நிலை, கனவுகள் காணும் நிலை மற்றும் கோமா நிலை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் கையாளப்படுகின்றன. இதற்குக் காரணம், இந்த மூன்று நிலைகளிலும் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் என்று சில மங்கள குணங்கள் நிறுவப்பட்டுள்ளன. கனவுகள் காணும் நிலையில் உள்ள கல்யாண குணம், கனவில் நாம் காணும் பொருட்களைப் படைத்தவர் பகவான் ஸ்ரீமன் நாராயணரே. ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள கல்யாண குணம் என்னவென்றால், பகவான் ஸ்ரீமன் நாராயணன் அந்தர்யாமியாக இருப்பதால், ஒவ்வொரு உடலின் இதயத்திலும் வசிப்பதால், தனிப்பட்ட ஆன்மாவைத் தன் மீது தூங்க அனுமதிக்கிறார். கோமா நிலையில் உள்ள கல்யாண குணம், பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனிமனித ஆன்மாவை உடலை விட்டுப் பிரிந்து செல்லாமல் காப்பதாகும்.

உபய லிங்க பாதம் என்று அழைக்கப்படும் இரண்டாவது பாதத்தில், சூத்ரகாரர் பகவான் ஸ்ரீமோன் நாராயணனின் இரண்டு அடிப்படை பண்புகளை நிறுவுகிறார், அவை (1) களங்கமற்றவை மற்றும் (2) எண்ணற்ற கல்யாண குணங்களின் களஞ்சியமாகும். இந்த இரண்டு குணாதிசயங்களும் உபய லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. உபயா என்றால் இரண்டு மற்றும் லிங்கம் என்றால் அடிப்படை பண்பு அல்லது வேறுபாடு. ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் பக்தி யோகம் அல்லது பிரபத்தி (சரணாகதி என்றும் அழைக்கப்படுகிறது.) செய்வதன் மூலம் ஜீவன் அடைய வேண்டிய பொருள் அவரை விட மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதாலேயே ஸ்ரீமோன் நாராயணனின் இந்த உபய லிங்க ஸ்தாபனம் அவசியமானது. எல்லா வகையிலும்.

குண உபசம்ஹார பாதம் என்று அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் மூன்றாவது பாதத்தில் உபநிடதங்களில் உள்ள பல்வேறு பிரம்ம வித்யாக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வித்யா என்பது தியானம் பற்றிய அறிவு மற்றும் பிரம்ம வித்யா என்றால் பகவான் ஸ்ரீமோன் நாராயணனாகிய பிரம்மனை தியானம் செய்யும் அறிவு. தியானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மன செயல்பாடு. இந்த பிரம்ம வித்யா நித்திய ஆனந்தத்தை அடைவதற்கான பக்தி யோகமே தவிர வேறில்லை.

இந்த மூன்றாவது அத்தியாயத்தின் கடைசி பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. அங்க என்பது துணை என்று பொருள்படும் இந்த பாதம் பக்தி யோகம் செய்வதற்கு தேவையான அத்தியாவசிய துணைப்பொருட்களைக் குறிக்கிறது.

எனவே இந்த மூன்றாவது அத்தியாயத்தை சுருக்கமாகச் சொல்வது முக்கியமாக சாதனா அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் குறிக்கிறது. ஏற்கனவே கூறியது போல் வைராக்ய பாதம் என்று அழைக்கப்படும் முதல் பாதம் இந்த சம்சாரத்தில் போராடும் ஜீவாவின் விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. பரலோகத்தில் அல்லது ஸ்வர்க லோகத்தில் அனுபவித்த பிறகு அல்லது நரக லோகம் என்று அழைக்கப்படும் நரகத்தில் அவர் துன்பத்திற்குப் பிறகு இந்த உலகில் ஜீவா மீண்டும் தோன்றும் செயல்முறையை இது கையாள்கிறது. இந்த செயல்முறையை விளக்குவதற்கு சாண்டோக்யோபனிஷத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி கருதப்படுகிறது. இந்த பாடத்தில் விவாதிக்கப்படும் அடிப்படை உபநிடத உரையாக இருப்பதால், இந்த பகுதி இங்கே சுருக்கமாக கையாளப்படுகிறது.

அருணி முனிவரின் மகனான ஸ்வேதகேது, ஜிபிலாவின் மகனான பிரவாஹனா என்ற அரசனிடம் அனுப்பப்பட்டார். இந்த மன்னன் ஸ்வேதுகேதுவிடம் யாருடைய கீழ் அறிவுரைகள் பெற்றிருக்கிறாய் என்று கேட்கிறான் அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவன் கற்பிக்கப்பட்டுள்ளான் என்று கேட்கிறான். அரசர் அவரிடம் பின்வரும் ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

1) யாகங்களைச் செய்த ஜீவன், இந்த உலகில் உள்ள சரீரத்தை விட்டுப் பிரிந்த பிறகு செல்லும் இடம் அல்லது இலக்கு.

2) ஜீவா ஸ்வர்க லோகத்தில் அனுபவித்த பிறகு மறுபிறப்புக்காக இந்த உலகத்திற்கு வரும் பாதை.

3) தேவ யான வழிக்கும் பித்ரு யான வழிக்கும் உள்ள வேறுபாடு.

இவ்வுலகில் ஒரு ஜீவாத்மா மரண சரீரத்திலிருந்து புறப்படுவதற்கு மூன்று இடங்கள் இருப்பதை இந்தச் சூழலில் குறிப்பிடலாம். சேருமிடங்கள் (அ) ஸ்ரீ வைகுண்ட பை லோகம் மற்றும் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த ஜீவா இந்த இலக்கை அடைய முடியும். இந்த இடத்திற்கான பாதை தேவ யான மார்கா என்றும், அர்ச்சிராதி கதி என்றும் அழைக்கப்படுகிறது.

b) ஜோதிஷ்டோம யாகம் போன்ற யாகங்களைச் செய்யும் ஜீவனால் அடையக்கூடிய ஸ்வர்க லோகம் அல்லது சொர்க்கம். இந்த லோகத்திற்கான பாதை பித்ரு யான மார்கா என்றும் தூமாதி மார்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜீவா இஷ்டாதிகாரி என்று அழைக்கப்படுகிறது, இது பின்னர் விரிவாக விவரிக்கப்படும்.

c) மூன்றாவது இலக்கு நரக லோகம் அல்லது இந்த உலகில் கொடூரமான குற்றங்கள் மற்றும் பாவங்களைச் செய்யும் ஜீவாவால் அடையப்படும் நரகம். அவர் அனிஷ்டாதிகாரி என்று அழைக்கப்படுகிறார். இந்த நரகா லோகத்திற்கு செல்லும் பாதை மிகவும் கடினமான நிலப்பரப்பு மற்றும் இந்த பாதை கஷ்ட மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

4) 4வது கேள்வி – சொர்க்கம் அல்லது ஸ்வர்க லோகம் ஏன் ஜீவாஸால் நிரப்பப்படவில்லை.

5) வானத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ஜீவா நான்கு அக்னிகள் அல்லது நெருப்புகளுக்குப் பிறகு ஒரு தாயின் வயிற்றில் உடலை எப்படி எடுத்துக்கொள்கிறார்.

இந்தச் சூழலில், ஒரு ஜீவன் தாயின் வயிற்றில் நுழைவதற்கு முன், தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, தன் புண்ணியத்தின் பலன்களை மீண்டும் அனுபவிக்க இந்த உலகில் மறுபிறப்புடன் வரும் ஐந்து அக்னிகள் அல்லது நெருப்புகளைக் குறிப்பிட வேண்டும். இந்த உலகில் அப்பா.

ஐந்து அக்னிகள் சொர்க்கம், மழை, பூமி, ஆண் மற்றும் பெண். ஜீவன் ஸ்வர்க லோகத்தில் புண்ணியத்தை அனுபவித்த பிறகு, யாக நெருப்பில் நெய் ஊற்றப்படுவது போல சொர்க்கத்தின் நெருப்பில் ஊற்றப்படுகிறது. வானத்திலிருந்து ஜீவா பூமியில் பெய்யும் மழைக்கு வருகிறார். பூமியில் மழை பெய்யும் போது பயிர்கள் வளர்ந்து, நெல் கோதுமை அல்லது வேறு ஏதேனும் உண்ணக்கூடிய பயிர்கள் போன்ற பயிர்களின் தானியங்களில் ஜீவா நுழைகிறது. பின்னர் ஜீவா ஒரு ஆணின் உடலுக்குள் நுழைந்து அந்த ஆண் உண்ணும் உணவின் மூலம் அவனது விந்துக்குள் கிடக்கிறான், அவன் தந்தையாகிறான். தந்தை மற்றும் தாயின் இனச்சேர்க்கையின் போது ஜீவா விந்து மூலம் தாயின் கருப்பையில் நுழைகிறது. பின்னர் ஜீவா தாயின் வயிற்றில் ஒரு உடலை ஏற்றுக்கொண்டு பத்து மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாகவோ அல்லது குறைவாகவோ தங்கி, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, மறுபிறவி எடுக்கிறது. குழந்தை வளர்ந்து, புண்ணிய மற்றும் பாப்பாவின் சமநிலையின் பலனை அனுபவித்து, மீண்டும் தனது வாழ்நாளில் புண்ணியத்தையும் பாபாவையும் செய்து, மீண்டும் மற்ற உலக சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் சென்று, மீண்டும் மீண்டும் வருகிறது, மேலே விவரிக்கப்பட்ட செயல்பாட்டில், இந்த பிறப்பு சுழற்சி மற்றும் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்து மோட்சம் அல்லது முக்தி அடையும் வரை மரணம் தொடரும். மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அக்னிகள் உண்மையான நெருப்பு அல்ல, அவை ஜீவா இந்த உலகில் மறுபிறவி எடுப்பதில் ஈடுபட்டுள்ள புள்ளியை வீட்டிற்கு ஓட்டுவதற்காக மட்டுமே அக்னிகளுடன் ஒப்பிடப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து அக்னிகளின் சமஸ்கிருத பெயர்கள் தியு.(சொர்க்கம்) பர்ஜன்யா (மழை), பிருதிவி (பூமி) , புருஷா (ஆண் நபர்) மற்றும் யோஷித் (பெண் நபர்). இந்த அக்னிகளில் ஊற்றப்படும் பொருட்கள் ஸ்ரத்தா, சோமராஜா, வர்ஷம், அன்னம் மற்றும் ரேதங்கள். ஸ்ரத்தா திரவ வடிவில் உள்ளது. சொர்க்கத்தில் இருக்கும் ஜீவாவின் அழகிய உடலே சோமராஜா. வர்ஷா என்றால் மழை. அன்னம் என்றால் உணவு, ரேதஸ் என்றால் விந்து.

மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில் இப்போது இந்த பாடலில் உள்ள அதிகாரங்களை விவாதம் மற்றும் முடிவுக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாதத்தில் ஆறு அதிகாரங்கள் உள்ளன.

முதல் அதிகாரம் “தடந்தர பிரதிபத்தி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு, மேலே கையாளப்பட்ட சாண்டோக்ய உபநிடதத்தில் உள்ள உபநிடத உரையின் குறிப்பிட்ட பகுதி. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்குச் செல்லும் ஜீவா, வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளுடன் அவற்றின் நகைச்சுவை வடிவத்தில் எப்போதும் தொடர்புடையதா என்பதுதான். பிரபஞ்ச வடிவில் உள்ள இந்த ஐந்து பூதங்கள் “பூத சூக்ஷ்மஸ்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த மரண சரீரம் ஐந்து பூதங்களால் ஆனது, எனவே இந்த உடல் பஞ்ச பூதிக சரிரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூத சூக்ஷ்மங்கள், ஜீவாவுடன் எப்போதும் இணைந்து செல்ல வேண்டும், அவருக்கு மறுபிறப்புக்காக தாயின் வயிற்றில் ஒரு உடலை எடுக்க உதவுகிறது.

எதிரி அல்லது பூர்வபக்ஷி, ஜீவா எங்கு சென்றாலும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையவர் என்று வாதிடுகிறார், ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன. இந்த வாக்குவாதத்தை, இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ததந்தர ப்ரதி பத்தன் ரம்ஹதி ஸம்பரிஷ்வக்த: ப்ரஸ்னா நிரூ பாணாப்யம்” என்று படிக்கும் சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா ஒரு உலகத்திலிருந்து மற்றொன்றுக்கு (ஒரு உடலிலிருந்து மற்ற உடலுக்கு) செல்லும் போது, ​​அவர் எப்போதும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையவர், ஏனெனில் இந்த உண்மை அரசன் பிரவாஹனன் கேட்கும் கேள்விகளிலும் அவரே பதில்களிலும் வெளிப்படுகிறது. கொடுத்தார். ஜீவா ஸ்வர்க லோகத்தில் இன்பத்திற்காக நுழைந்தவுடன், அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒரு அழகான உடலை எடுத்துக்கொள்கிறார், மேலும் இந்த உடலை அவர் தேவர்கள் சொர்க்கத்தின் நெருப்பில் ஊற்றிய “ஸ்ரத்தா”விலிருந்து வெளியேறுகிறார். இந்திரியஸ். இந்த “ஸ்ரத்தா” திரவ வடிவில் உள்ளது, இதில் ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் உள்ளன. இந்த அதிகாரத்தில் ஏழு சூத்திரங்கள் உள்ளன. இந்த சூத்திரங்கள் அனைத்திலும் சூத்ரகாரர் இந்த சூழலில் சில உபநிடத சொற்களின் அடிப்படையில் பூர்வபக்ஷியின் வாதத்தை மறுத்து, ஜீவா ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு எப்போதும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையது என்ற உண்மையை நிறுவுகிறார். ஜீவாவுடன் இந்திரியங்களும் செல்வதாக கூறப்படுகிறது. மற்ற சூத்திரங்களில் உள்ள புள்ளிகள் சுருக்கமாக பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன.

அ) தந்தையின் உடலில் இருந்து தாயின் வயிற்றில் பாயும் விந்து மனித உடலைப் பெறுகிறது என்று உபநிடத உரையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜீவா திரவ வடிவில் விந்துவுடன் தொடர்பு கொண்டு தாயின் கருப்பையில் நுழையும் போது ஜீவா நீரின் பூத (உறுப்பு) க்கு சொந்தமான திரவத்துடன் தொடர்பு கொள்கிறது என்று கூற வேண்டும். அப்போது ஜீவா மற்ற பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. முன்பு விளக்கப்பட்ட பஞ்சீகரணம் (சாந்தோக்யோ உபநிடதத்தில் பஞ்சீகரணம் த்ரிவிருத்கரணம் என்று அழைக்கப்படுகிறது) திரவ வடிவில் இருக்கும் விந்து ஐந்து பூதங்களையும் நிமிட வடிவில் கொண்டுள்ளது என்றும் இந்த திரவத்தில் தண்ணீருக்கு முக்கிய அங்கம் இருப்பதாகவும் சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார்.

ஆ) ஜீவா மரணத்தின் போது மரண உடலை விட்டு வெளியேறும் போது, ​​முக்ய பிராணன் மற்றும் அனைத்து பதினொரு புலன்களும் ஜீவாவுடன் செல்கிறது என்றும் கூறப்படுகிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், ஜீவன் எப்பொழுதெல்லாம் ஒரு உடலை விட்டுப் பிரிந்து மற்றொரு உடலுக்குள் நுழைகிறானோ, அந்த நேரத்தில் அவன் சொர்க்கத்தில் வசித்த பிறகு அவன் எப்போதும் இந்திரியங்கள் மற்றும் பூத சூக்ஷ்மங்களுடன் இணைந்தே இருப்பான்.

இ) மீண்டும் உபநிஷதத்தின் இந்தப் பகுதியில் ஜீவா உடலை விட்டு வெளியேறும் போது இந்திரியமான அவனது பேச்சு அக்னியில் (அக்கினி) உறிஞ்சப்படுகிறது, முக்ய பிராணன் காற்றில் உறிஞ்சப்பட்டு கண்கள் சூரியனில் உறிஞ்சப்படுகிறது. (சூரியக் கடவுள்). இந்தச் சூழலில் புலன்கள் உள்வாங்கப்படும்போது, ​​இந்த புலன்கள் ஜீவாவுடன் இணைந்து செல்வது எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகம் எழுகிறது. மேற்கூறியவற்றின் தொடர்ச்சியாக, உடலில் உள்ள முடிகள் தாவரங்களில் உறிஞ்சப்பட்டு, தலையில் உள்ள முடிகள் உறிஞ்சப்படும் என்று கூறப்படுவதால், இந்த உபநிடத வாசகத்திற்கு நேரடி அர்த்தம் இணைக்கப்பட வேண்டியதில்லை என்று சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார். மரங்கள் மற்றும் இந்த உறிஞ்சுதல் உண்மையல்ல, ஏனென்றால் இறந்த உடலில் உள்ள முடிகளை நாம் உடல் ரீதியாக பார்க்கிறோம், எனவே அவை மறைந்துவிடாது. எனவே மேற்கூறியவற்றுடன் நேரடி அர்த்தம் இணைக்கப்படக்கூடாது.

ஈ) மீண்டும் எதிராளி வாதிடுகிறார், இது பரலோகத்தில் முதல் நெருப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஸ்ராத்தம் ஊற்றப்படுகிறது, விந்து என்ற ஜலப் பொருள் அல்ல, பூத சூக்ஷ்மங்களுடன் ஜீவா எப்படிச் செல்ல முடியும். ஸ்ரத்தா என்றால் நீர் அல்லது நீர் நிறைந்த பொருள் என்று சூத்ரகாரம் கூறுகிறது, எனவே உபநிடதக் கூற்றில் எந்த முரண்பாடும் இல்லை.

இ) இந்த உபநிடத அறிக்கையில் ஜீவா பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை என்றும், அதனால் அவர் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எதிர்ப்பாளர் மீண்டும் ஒருமுறை வாதிடுகிறார். இதற்குப் பதிலளித்த சூத்ரகாரர், அடுத்த உபநிடதத்தில் ஜீவனாகவும், யாகம் செய்தவனுமான இஷ்டதிகாரி சொர்க்கத்திற்குச் சென்று, அங்குள்ள இன்பங்களை அனுபவித்து, அங்கேயே இன்பத்தை அனுபவிக்கும் பொருட்டு, அழகிய உடலை ஏற்று, அங்கேயே இன்பத்தின் முடிவில் சொர்க்கத்திற்குச் செல்கிறாள் என்று கூறுகிறார். அவர் மறுபிறவிக்காக இந்த உலகத்திற்கு வருகிறார். அங்கு அவர் கருதும் அழகிய உடல் சோமராஜா என்று அழைக்கப்படுகிறது. சோமராஜா என்று அழைக்கப்படும் இந்த உடலை அவர் முதல் அக்னி அல்லது சொர்க்கம் என்று அழைக்கப்படும் நெருப்பில் ஸ்ராத்தத்தை ஊற்றிய பிறகு கருதுகிறார், கடைசியாக ஜீவா மீண்டும் பூமிக்கு வந்து அதே “ஸ்னாதா” திரவ வடிவிலோ அல்லது நீர்ப் பொருளிலோ மற்றும் வேறு வார்த்தைகளில் “” என்று அழைக்கப்படுகிறது. விந்து” தாயின் கருப்பையில் நுழைகிறது.

f) ஜீவா பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையதாக இல்லை என்ற தனது கருத்தை மீண்டும் வலியுறுத்த, இந்தச் சூழலுடன் தொடர்புடைய உபநிடதத்தில் உள்ள மற்றொரு வாசகத்தை எதிராளி பயன்படுத்திக் கொண்டார். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் அல்லது வானவர்கள் அங்கு செல்லும்போது ஜீவா என்பது உண்ணக்கூடிய பொருளாகும் என்பது பழமொழி. ஜீவாவை உண்ண முடியாது என்பதால், ஜீவாவுக்கு வழங்கப்பட்ட சோமராஜா மற்றும் ஸ்வர்க லோகத்தில் உள்ள அவரது அழகான உடலும் ஜீவாவாக இருக்க முடியாது என்று எதிரி கூறுகிறார். எதிரியின் இந்த பார்வையை சூத்ரகாரர் எதிர்க்கிறார், ஜீவா அங்கு உண்ணப்படுவதில்லை, ஆனால் அங்கு அவர் அனுபவிக்கும் இன்பம் தேவர்களுக்குச் சமமானது, மேலும் அவர் அங்கு அவர்களுக்கு உதவியாளராகவும் மாறுகிறார். எனவே அவர் தேவர்களால் அங்கு உண்ணப்படுகிறார் என்ற கூற்றுக்கு நேரடி அர்த்தம் இல்லை.

எனவே ஜீவா “பூத சூக்ஷ்மஸ்” உடன் சொர்க்கத்திற்கு செல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் இரண்டாவது அதிகாரம் “கிருதத்யாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஸ்வர்க லோகத்தில் இன்பங்களை அனுபவித்த ஜீவன் இந்த உலகில் புண்ணிய மற்றும் பாபா சமநிலையுடன் அல்லது கர்மாவின் சமநிலை இல்லாமல் இந்த உலகில் மீண்டும் பிறப்பாரா என்பது இங்கே விவாதத்திற்குரிய தலைப்பு. எதிரி அல்லது பூர்வபக்ஷி, புண்ணிய மற்றும் பாபா இரண்டையும் உள்ளடக்கிய கர்மாவின் பூஜ்ய சமநிலையுடன் ஜீவா பூமிக்குத் திரும்புகிறார் என்று கருதுகிறார். அவரது வாதத்திற்கு ஆதரவாக அவர் ஒரு உபநிடத உரையை மேற்கோள் காட்டுகிறார், அதில் ஜீவா தனது புண்ணிய கர்மா தீரும் வரை ஸ்வர்க லோகத்தில் இருப்பார், பின்னர் அவர் கர்மாவின் சமநிலை இல்லாமல் இந்த உலகத்திற்குத் திரும்புவார் என்று கூறுகிறார். மற்றொரு உபநிடதக் கூற்றும் அவருடைய மேற்கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.

“கிருதத்யயே அனுசயவான் ரிஷ்டஸ்மிருதிப்யம் யதேதம் அனேவம்ச” என்று சூத்திரத்தில் உள்ள பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார்.

மேற்கூறிய சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா புண்ய மற்றும் பாப கர்மாவின் சமநிலையுடன் மீண்டும் இந்த காதுக்கு திரும்புகிறார் மற்றும் உபநிடதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சில சிறப்பு அறிக்கைகள் காரணமாக மறுபிறப்பு எடுக்கிறார், மேலும் அவர் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் போது சிறிது மாற்றப்பட்ட பாதையில் செல்கிறார். புண்ணியம் செய்து புண்ணியத்தைப் பெற்றவர்கள் இங்கு உயர்ந்த ஜாதியிலும், தீய செயல் செய்தவர்கள் அல்லது பாவம் செய்து பாபம் செய்தவர்கள் தாழ்ந்த ஜாதியிலும் மிருகங்களாகவும் பிறப்பார்கள் என்பது உபநிஷத வாக்கியம். அறம் செய்தவர்கள் ரமணீய சரணர் என்றும், பாவம் செய்தவர்கள் கபுய சரணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சரண என்றால் செயல்.

ஒரு ஜீவன் சொர்க்கத்திற்கு ஏறும் போது தூமாதி மார்கா என்று அழைக்கப்படும் பாதை பின்வருமாறு. இந்த பாதை பித்ரு யனமார்கா என்றும் அழைக்கப்படுகிறது. தூமம் (புகை), ராத்திரி (இரவு), அபரபக்ஷம் (கிருஷ்ண பக்ஷம் அல்லது அமாவாசையில் முடிவடையும் பதினைந்து நாட்கள்), தக்ஷிணாயனம் மற்றும் பின்னர் பித்ருலோகம், ஆகாசம், சந்திரன் மற்றும் பிறகு சொர்க்கம். கீழே இறங்கும் பாதை சந்திரன், ஆகாசம், வாயு, தூமம், அபிராம், மேகா. அபிராமி என்றால் நீரால் பரவும் மேகம், மேகமும் மழை பெய்யும் மேகம்.

மேலே கூறப்பட்ட இரண்டு வழிகளிலும் உள்ள வித்தியாசம், ஏறுமுகத்தில் பித்ரு லோகமும் வாயு லோகமும் இல்லை, இறங்குவதில் வாயு லோகமும் பித்ரு லோகமும் இல்லை.

பாதையில் உள்ள மேலே குறிப்பிடப்பட்ட பெயர்கள் அனைத்தும் லோகங்கள் மற்றும் வான கடவுள்களின் பெயர்கள் மற்றும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பிரதேசத்தின் வழியாக ஜீவாவை நடத்துகின்றன, மேலும் வரிசையில் அடுத்தவர் ஜீவாவைப் பொறுப்பேற்கிறார்.

சூத்ரகாரரின் மேற்கூறிய கூற்றை எதிர்க்கும் பூர்வபக்ஷியின் பார்வை என்னவென்றால், உபநிடத உரையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சரணம் என்பது நீதியான நடத்தை அல்லது ஆச்சாரம் என்று பொருள்படும், இது சீலம் மற்றும் விருத்தம் போன்ற சொற்களுக்கு ஒத்ததாக இருக்கிறது, ஏனெனில் இது தைத்தரிய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. குறைபாடுகள் குறைவாக இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும், மேலும் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் பதராயண முனிவரின் இரு சீடர்களின் பார்வைப் புள்ளிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. சீடர்களின் பெயர்கள் கர்ஷ்ணாஜினி முனிவர் மற்றும் பதரி முனிவர். ஆகவே, ஜீவா உயர்ந்த சாதிகளில் மறுபிறவி எடுக்க நீதியான நடத்தை மட்டுமே காரணம் என்றும், புண்ய மற்றும் பாப கர்மாவின் சமநிலையைக் குறிக்கும் அனுஷயா அல்ல என்றும் மேற்கண்ட முனிவர் கர்ஷ்ண ஜினி வாதிடுகிறார்.

இந்தச் சூழலில், ஸ்மிருதிகள் மற்றும் வேதங்களில் உள்ள நமது பண்டைய ரிஷிகளின் பிரசங்கங்களுக்கு ஏற்ப நாம் தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

நாம் தினமும் செய்ய வேண்டியது (1) நித்யகர்மானுஷ்டானம் மற்றும் (2) நைமித்திக கர்மானுஷ்டானம் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது.

I. நித்ய கர்மானுஷ்டானம்(கட்டாய சடங்குகள்)

நித்யகர்மானுஷ்டானம் என்பது நாம் தினமும் செய்ய வேண்டியதைக் குறிக்கிறது, இது ஒன்றன் பின் ஒன்றாக வரிசை வாரியாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

(அ) ​​சங்கல்பம் செய்த பிறகு குளித்தல். ஆசமனம், பிராணாயாமம் செய்தபின் இந்த சங்கல்பம் செய்ய வேண்டும்.

(ஆ) குளித்த பிறகு தோசை அணிய வேண்டும். திருமணமான ஒருவர் கச்சத்துடன் கூடிய வேட்டியை அணிய வேண்டும், அது மிக முக்கியமானது. கச்சா என்றால் இடுப்புப் பட்டையுடன் ஒட்டிய கீழ் ஆடையின் ஓரம் என்று பொருள். கச்ச இல்லாமல், திருமணமானவர் சந்தியாவந்தனம் போன்ற வைதீக கர்மாவைச் செய்யத் தகுதியற்றவர். இளங்கலை கச்சா அணியக்கூடாது.

(இ) பஞ்ச சம்ஸ்காரம் செய்திருந்தால் உடலில் 12 இடங்களில் ஊர்த்துவபுண்டரங்கள் இருப்பது. இல்லையெனில் நெற்றியில் (முகத்தில்) ஒற்றை ஊர்த்துவபுந்திரம் செய்யும்.

(ஈ) ஸ்நானங்க தேவர்ஷி தர்ப்பணம் செய்தல்.

(இ) காயத்திரி ஜபத்துடன் 10 முறையாவது பிரத சந்தியாவந்தனம் செய்தல்.

(ஊ) பஞ்சசம்ஸ்காரம் செய்தவர்கள், அஷ்டாக்ஷர மந்திர ஜபம் செய்ய வேண்டும்.

(g) ஆதார சக்தி தர்ப்பணம்.

(h) தேவர்ஷி கந்தர்ஷி தர்ப்பணம்

(i) பிரம்ம யக்ஞம்.

(j) குறைந்தது 10 முறை காயத்திரி ஜபம் கொண்ட மத்யான்ஹிகம்.

(k) சாளக்கிராம மூர்த்திக்கு திருவாராதனம் செய்தல் அல்லது வைஸ்வதேவர் மற்றும் பஞ்ச மகா யக்ஞம் செய்தல்.

(எல்) மாலையில் குறைந்தது 10 முறை காயத்திரி ஜபம் மற்றும் மாலையில் வைஷ்வதேவத்துடன் சந்தியாவந்தம் செய்தல்.

முக்கிய குறிப்பு:- எந்த ஒரு வைதிக கர்மத்தையும் செய்வதற்கு ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தம் செய்வது மிகவும் இன்றியமையாத முன்நிபந்தனையாகும். சந்தியாவந்தனம் இல்லாமல் பொதுவாக எந்த பிராமணருக்கும் குறிப்பாக ஸ்ரீ வைஷ்ணருக்கும் வேறு எந்த கர்மாவும் செய்ய அடிப்படைத் தகுதி இல்லை. “சந்தியாஹீனா: அசுசி: நித்யம் என்று கூறப்படுகிறது. அனார்ஹ : சர்வ கர்மசு. சந்தியாவந்தனம் செய்யாதவரின் உடல் எப்பொழுதும் அசுத்தமாக (தூய்மையற்றதாக) வேறு எந்த கர்மாவையும் செய்யத் தகுதியற்றதாக இருக்கும்.

II. நைமித்திக கர்மானுஷ்டானம் (அவ்வப்போது நடக்கும் சடங்குகள்)

நைமித்திக கர்மாக்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி விசேஷ நாட்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

(அ) ​​சிராவண மாதம் பௌர்ணமி நாளில் உபகர்மா.

(ஆ) உபாகர்மாவின் மறுநாள் காயத்திரி ஜபம்

(இ) ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி மற்றும் ந்ரிசிம்ம ஜெயந்தி மற்றும் திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள்.

(ஈ) தந்தை விழா மற்றும் தாய் விழாவை பெற்றோர்கள் உயிருடன் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் பின்வரும் தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அமாவாசை தர்ப்பணம், சங்கராமண நாட்களில் தர்ப்பணம் (சூரிய மாதத்தின் ஆரம்பம்), மஹாளய தர்ப்பணம், அஷ்டக நாட்களில் தர்ப்பணம் மற்றும் “மாசி” (கும்ப மாதம்) மாதத்தில் அன்வாஷ்டகம். சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது தர்ப்பணம்.

மேற்கூறிய காரியங்கள் தவறாமல் நிறைவேற்றப்பட்டால், ஒருவருக்கு மட்டுமே அச்சாரம் என்று கூறப்படுகிறது. வேதங்கள் ஆச்சாரம் இல்லாமல் ஒருவரைத் தூய்மைப்படுத்தாது என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கர்ஷ்ணாஜினி முனிவரின் கருத்து என்னவெனில், உபநிஷத உரையான ரமணீய சரணமானது, மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு தனிப்பட்ட ஆத்மாவால் செய்யப்படும் நித்யா மற்றும் நைமித்திக கர்மாவாக கருதப்பட வேண்டும், மேலும் அவர் ஆச்சாரம் அல்லது நீதியான நடத்தையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

புண்ணிய கர்மா என்பது யாகம் மற்றும் மேலே விளக்கப்பட்ட ஆச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் யாகம் செய்யலாம். உபநிடதத்தில் உள்ள கபுயா சரணம் என்பது பாபகர்மா அல்லது பாவச் செயல்களைக் குறிக்கிறது மற்றும் ஆச்சாராவின் மேற்கூறிய அடிப்படைக் கொள்கைகள் வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டுள்ளன. சுகத்தின் இன்பம் புண்ணிய கர்மாவின் விளைவு மற்றும் துன்பம் பாபா கர்மாவின் விளைவு.

பூர்வபக்ஷி, வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ள சன்மார்க்க நடத்தை அல்லது ஆச்சாரம் ஆகியவை ஜீவனுக்குப் பயன்படாத பட்சத்தில் நோக்கமற்றதாகிவிடும் என்ற ஐயத்தை எழுப்புகிறார், இந்த சந்தேகத்தை கர்ஷ்ணாஜினி முனிவர் தீர்த்து, ஒருவருக்கு ஆச்சாரம் இல்லை என்றால் அவர் என்று கூறுகிறார். புண்ணிய கர்மா செய்வதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறவில்லை.

ஸ்ருதி அல்லது உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரணம் என்பது நல்ல அல்லது கெட்ட செயல்களான புண்யா அல்லது பாபா கர்மாவை மட்டுமே செய்வதாகும் என்று பதரி முனிவர் இந்த சூழலில் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். எனவே உபநிஷத வாசகமான ரமணீய சரண: மற்றும் கபுய சரணம் என்றால் புண்ய, பாபா கர்மா மற்றும் ஒரு ஜீவன் புண்ணியத்தின் சமநிலையுடன் மறுபிறப்பிற்காக பூமிக்கு இறங்குகிறான். சந்தியா வந்தனா செய்வது அவசியம், இதில் எந்த தளர்வும் இல்லை.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரணம் “அனிஷ்ட திகார்ய திகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகில் மனிதர்களில் மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன. அவர்கள்

(1) இஷ்டதிகாரி – வேதத்தின்படி நற்செயல்கள் அல்லது புண்ய காரியங்களை மட்டுமே செய்பவர். இதில் நித்யா, நைமித்திகா, கர்மானுஷ்டானங்கள் தவிர யாகங்கள் நடத்துதல் ஆகியவை அடங்கும். இந்த இஷ்டதிகாரிகள் சொர்க்கம் செல்கின்றனர்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் சரணாகதிகாத்யாவில் ஐந்து வகையான பாவச் செயல்களைக் குறிப்பிடுகிறார். அவை (அ) அக்ரித்ய கரணம் அதாவது செய்யக்கூடாத காரியத்தைச் செய்தல்.

(ஆ) கிருத்ய அகரணம் – செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் இருப்பது.

(இ) பகவதா அபச்சாரா – அபச்சாரா என்றால் தவறான நடத்தை என்று பொருள். பகவதாபாச்சாரம் என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் தவறான நடத்தை என்று பொருள். ஸ்ரீமன் நாராயணனிடம் பக்தி செலுத்தாமல் இருப்பதும், அதே சமயம் அவரை மதிக்காமல் இருப்பதும் இதன் பொருள்.

(ஈ) பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் அதீத பக்தி கொண்ட பகவதர்களுக்கு அவமரியாதையாக இருப்பது.

(இ) கொடூரமான குற்றங்களைச் செய்தல். இதற்கு அசஹ்ய அபச்சாரா என்று பெயர்.

எனவே இஷ்டதி காரிகள் என்பவர்கள் செய்ய வேண்டியதைச் செய்பவர்கள் (கிருத்ய கரணம்) மற்றும் செய்யக்கூடாததைச் செய்யாதவர்கள் (அக்ரித்ய அகரணம்) மற்றும் பகவதாபாச்சாரம், பகவதி அபச்சாரம் மற்றும் அசஹ்ய பச்சாரம் செய்யாதவர்கள். இந்த இஷ்டதிகாரிகள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி தூமாதி மார்கா எனப்படும் பாதையின் மூலம் சொர்க்கத்தை அடைகிறார்கள்.

இரண்டாவது வகை

2) அனிஷ்டா திகாரிகள் – செய்யக்கூடாததைச் செய்பவர்கள் ( அக்ரித்திய கரணம்), செய்ய வேண்டியதைச் செய்யாதவர்கள், பகவதாபாச்சாரம், பகவதாபாச்சாரம் மற்றும் அஷ்யபச்சாரம் செய்தவர்கள் அனிஷ்டாதி காரியங்கள். கஷ்ட மார்கா என்று அழைக்கப்படும் கடினமான நிலப்பரப்பின் வழியாக அவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.

3) மூன்றாவது வகை மோக்ஷாதிகாரிகள் – வார்த்தை இன்பங்களிலிருந்தும், நீண்ட காலம் நீடிக்காத பரலோக இன்பங்களிலிருந்தும் பற்றின்மையை வளர்த்துக் கொண்டு நித்திய பேரின்பத்தை அடைய விரும்புபவர்கள் மோக்ஷாதிகாரிகள். அவர்கள் பக்தி யோகம் செய்கிறார்கள் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணாகதி செய்கிறார்கள் மற்றும் அர்ச்சிராதி மார்கா அல்லது தேவயான மார்கா என்று அழைக்கப்படும் பாதையின் மூலம் மோட்சத்தை (ஸ்ரீ வைகுண்ட பை லோகம்) அடைகிறார்கள்.

இந்த அனிஷ்டாதிகாரிகள் நரகத்திற்குச் செல்வதற்கு முன் சந்திரனுக்குச் செல்கிறார்களா என்பது இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு. இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்கள் தவறாமல் சந்திரனுக்குச் சென்று அவருடன் உரையாடுவார்கள் என்று கௌஷிதகி உபநிடதத்தின் கூற்றில் இருந்து இந்த சந்தேகம் எழுகிறது.

இந்த அறிக்கையின்படி, மூன்று வகை மனிதர்களும் அந்தந்த இடங்களை அடைவதற்கு முன்பே சந்திரனுக்குச் செல்கிறார்கள். இந்த அறிக்கை மிகவும் பொதுவான அறிக்கை.

இந்த அதிகரணம் பத்து சூத்திரங்களைக் கொண்டுள்ளது, அதில் ஐந்து சூத்திரங்கள் பூர்வ பக்ஷ சூத்திரங்கள் மற்றும் மீதமுள்ள ஐந்து சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள்.

முதல் ஐந்து சூத்திரங்களில், எதிரி அல்லது பூர்வபக்ஷி, அனிஷ்டாதிகாரிகளும் கூட நரகா அல்லது நரகத்தில் செய்த பாவச் செயல்களுக்காகத் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்குப் பிறகு சந்திரனுக்குச் செல்கிறார்கள் என்ற உண்மையை உறுதியாகக் கூறுகிறார்.

முதல் சூத்திரம் “அனிஷ்டாதிகாரினாமபிச்ச ஸ்ருதம்” என்று கூறுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், கௌசிதகி உபநிடதத்தில் மேலே விவரிக்கப்பட்ட அனிஷ்டாதிகாரிகள் கூட சந்திரனுக்குச் செல்கிறார்கள் என்று நாம் கேட்கிறோம், ஏனென்றால் இந்த உலகத்தை விட்டு வெளியேறுபவர்கள் அனைவரும் சந்திரனுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் செல்கிறார்கள் என்று உபநிடத வாக்கியம் பொதுவாக உள்ளது.

இரண்டாவது சூத்திரத்தில், இஷ்டாதிகாரிகளும் அனிஷ்டாதி காரிகளும் ஒரே பாதையில் சந்திரனுக்குச் செல்வதா என்ற சந்தேகத்தை சூத்ரகாரருக்கு நிவர்த்தி செய்து, அனிஷ்டாதிகாரிகளால் சந்திரனுக்குச் செல்வது யமனின் கட்டுப்பாட்டில் உள்ள நரகத்தில் தண்டனைக்குப் பிறகு ஆகும்.

அடுத்த சூத்திரத்தில், சூத்ரகாரர் விஷ்ணு புராணத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தை நினைவுபடுத்துகிறார், அதில் பராசர முனிவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறுபவர்கள் அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்று கூறுகிறார்.

மேலே உள்ள சூத்திரத்தில் ஏழு நரகம் அல்லது நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது, அவை பாவச் செயல்களைச் செய்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏழு நரகங்களின் பெயர்கள் ரௌரவ, சுகர, ரோத, தல, விஷசனா, மஹாஜ்வாலா, தப்த கும்பம்.

உண்மையில் விஷ்ணுபுராணத்தில், பராசர முனிவர் இருபத்தெட்டு நரகங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான பெயர்களைக் கொடுத்துள்ளார். பராசர முனிவர் மனிதர்களால் செய்யக்கூடிய பல்வேறு பாவங்களையும், ஒரு குறிப்பிட்ட ஜீவன் ஒரு குறிப்பிட்ட பாவச் செயலைச் செய்துவிட்டு எந்த நரகத்திற்குச் செல்கிறான் என்பதையும் விரிவாகக் கூறுகிறார்.

அடுத்த சூத்திரத்தில், அனைத்து நரகங்களும் யமனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எனவே ஒரு பாவி எந்த நரகத்திற்குச் சென்றாலும், அவர் யமசாதனம் அல்லது யமனின் வீட்டிற்குச் செல்கிறார், ஏனெனில் அனைத்து நரகங்களும் அதிகார வரம்பிற்குள் உள்ளன அல்லது யமாவின் கட்டுப்பாடு. ஒரு குற்றவாளியை நீதிபதி சிறைக்கு அனுப்புவது போலத்தான் யமனின் கட்டளைப்படி பாவி நரகத்திற்குச் செல்கிறான்.

பூர்வபக்ஷியின் கருத்துக்களை ஐந்து சூத்திரங்கள் மூலம் வெளிப்படுத்திய பிறகு, ஒரு அனிஷ்டாதிகாரி கூட நரகத்தில் தண்டனை பெற்ற பிறகு சந்திரனுக்குச் செல்கிறார் என்று வாதிட்ட பிறகு, அடுத்த ஐந்து சூத்திரங்களில் உள்ள சூத்திரகாரர் மேற்கண்ட கருத்தை மறுத்து, இந்த சூழலில் சில கூடுதல் தகவல்களைத் தருகிறார்.

இந்த ஐந்து சூத்திரங்களில் முதலாவது “வித்யகர்மநோரிதி து ப்ரக்ரதத்வத்” என்று கூறுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அனிஷ்டாதிகாரிகள் சந்திரனுக்குச் செல்வதில்லை, சந்திரனுக்குச் செல்வது இஷ்டாதிகாரிகளுக்கும் மோக்ஷாதிகாரிகளுக்கும் மட்டுமே. சூத்திரத்தில் உள்ள “து” என்ற வார்த்தைக்கு எதிராளியின் பார்வை மறுக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று பொருள். இது பிரம்ம சூத்திரங்களில் உள்ள ஒரு மரபு, எந்த ஒரு பிரம்ம சூத்திரத்திலும் “து” என்ற சொல் எங்கிருந்தாலும் எதிராளியின் பார்வை நிராகரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

சூத்திரத்தில் உள்ள “வித்யா” என்ற சொல் பக்தி யோகமாகிய பிரம்மவித்யாவைப் பயிற்சி செய்யும் மோக்ஷாதிகாரிகளைக் குறிக்கிறது. பக்தி யோகத்திற்கு பதிலாக இறைவனின் பாதத்தில் செய்யப்படும் சரணாகதி அல்லது பிரபத்தி கூட நியாசவித்யா எனப்படும்.

சூத்திரத்தில் குறிப்பிடப்படும் “கர்மா” என்ற வார்த்தைக்கு இஷ்டாதிகாரிஸ் என்று பொருள். சூத்ரகாரர் கூறும் காரணம் என்னவென்றால், மன்னன் பிரவாஹனன் சாண்டோக்யோபநிஷத்தில் அருணி முனிவரிடம் தேவயான மார்கத்திலோ அல்லது மோட்சதிகாரிகள் ஸ்ரீ வைகுண்டம் செல்லும் பாதையிலோ சந்திரனைச் சந்தித்து அவருடன் உரையாடுவதாகக் கூறுகிறார். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி தேவயானை மார்கத்தை அர்ச்சிராதிமார்கா என்றும் அழைப்பர்.

அவர் மேலும் பித்ரு யான மார்க்கத்தில் இஷ்டதிகாரிகள் சொர்க்கத்திற்குச் செல்லும் போது, ​​அவர்கள் சந்திரனைச் சந்தித்து அவருடன் உரையாடுகிறார்கள். இந்த பித்ரு யான மார்க்கம் ஏற்கனவே குறிப்பிட்டபடி தூமாதி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளிலும் சந்திரனின் நிலை ஒரு சந்திப்பு புள்ளியாகும். எனவே மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு தனித்தனி பாதைகள் தேவயான மார்க்கத்தில் உள்ள அக்னிலோகத்திலிருந்து தொடங்கி பித்ரு யான மார்க்கத்தில் உள்ள தூமலோகத்திலிருந்து தொடங்கி சந்திரனின் ஸ்தானத்தில் சங்கமித்து மீண்டும் ஒன்று ஸ்ரீ வைகுண்டத்திற்கும் மற்றொன்று சொர்க்கத்திற்கும் செல்லும்.

நரகங்கள் (நரகங்கள்) பூலோகம் அல்லது பூமிக்கு கீழே அமைந்துள்ளன என்பதை இங்கே கவனிக்க வேண்டும், அங்கு சொர்க்கம் மற்றும் வைகுண்ட பை லோகம் பூமிக்கு மேலே உள்ளன. சந்திரன் பூமிக்கு மேலே உள்ளது. எனவே பூமிக்குக் கீழே நரகத்திற்குச் செல்லும் அனிஷ்டாதிகாரிகள் சந்திரனைச் சந்திக்கும் சாத்தியக்கூறுகள் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன.

மேற்கூறிய சூத்திரத்தில் மற்றொரு சந்தேகமும் நிவர்த்தி செய்யப்படுகிறது. அனிஷ்டாதிகாரி சந்திரனுக்குப் போகிறார் என்ற கேள்வியே இல்லாதபோது, ​​அப்பாவின் உடலிலிருந்து தாயின் வயிற்றில் ஜீவா நுழையாமல், பாப்பா கர்மி என்றும் அழைக்கப்படும் இந்த அனிஷ்டாதிகாரியின் ஜீவன் எப்படி இந்த உலகில் மறுபிறவி எடுக்க முடியும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். தந்தையின் உடலில் இருந்து தாயின் கருப்பைக்குள் ஜீவா நுழையும் இந்த செயல்முறை “பஞ்சம ஆஹுதி” என்று அழைக்கப்படுகிறது. பஞ்சமஹுதிக்குப் பிறகு ஒரு ஜீவன் தாயின் வயிற்றில் எப்படி சரீரத்தை எடுக்கிறது என்று தெரியுமா என்று ஆதியில் சொன்னபடி ஸ்வேதகேதுவிடம் மன்னன் பிரவாஹனன் கேட்டான்.

அனிஷ்டாதிகாரிகளில் மூன்றாவது வகையினருக்கு (முதல் இரண்டு வகை இஷ்டாதிகாரிகளும் மோக்ஷாதிகாரிகளும்) அந்த ஜீவாத்மாக்கள் இவ்வுலகில் மறுபிறவி எடுக்க பஞ்சமஹுதி தேவையில்லை என்று சூத்ரகாரரால் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அங்கே தண்டனையை அனுபவித்து நரகத்திலிருந்து திரும்பும் அனிஷ்டாதிகாரிகளின் இந்த ஜீவர்கள் உயிரினங்களாகவும் பூச்சிகளாகவும் பிறக்கிறார்கள். இந்த உயிரினங்கள் மற்றும் பூச்சிகள் மிகவும் அடிக்கடி இடைவெளியில் பிறந்து இறக்கின்றன. இந்த பூச்சிகள் மற்றும் உயிரினங்கள் எண்ணற்ற முந்தைய பிறவிகளில் ஏதேனும் ஒரு புண்ணியத்தை செய்திருந்தால் மனிதனாக பிறக்க முடியும். புண்ணிய, பாப கர்மாக்களுக்குப் பலன்களைத் தருபவனும், மனிதனாகப் பிறப்பதற்காகப் புண்ணிய கர்மா செய்தவனுமான ஸ்ரீமந் நாராயணன் ஒருவரே அறிவார்.

மேலும் சூத்திரங்களில் உள்ள சூத்ரகாரர் கூறுகிறது, சாதாரண புண்ணிய கர்மாக்கள் செய்த ஜீவர்களின் விஷயத்தில், தியாக நெருப்பு அல்லது அக்னி குண்டத்தில் இருந்து இந்த உலகில் தோன்றிய பாண்டவர்களின் மனைவி திரௌபதியைப் போல பஞ்சமஹுதி இல்லாமல் இந்த உலகில் பிறக்க முடியும். இந்த உலகில் வாழும் உயிரினங்கள் அல்லது உயிரினங்கள் மூன்று வகைகளாக இருப்பதாக உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார். நான்காவது வகையும் உள்ளது. இந்த வகைகள்,

(1) ஜீவஜம் ஜராயுஜம் என்றும் அழைக்கப்படுகிறது – இவை ஆண் மற்றும் பெண் கூட்டாளிகளின் புணர்ச்சியால் பிறந்த உயிரினங்கள். அவர்கள் மனிதர்கள், மாடு, ஆடு, நாய் போன்ற விலங்குகள் இவை அனைத்திற்கும் பஞ்சமஹுதி தேவை.

(2) அண்டஜம் – இவை முட்டையிலிருந்து இவ்வுலகில் தோன்றும் உயிரினங்கள். அவை பாம்புகள், பறவைகள் போன்றவை.பஞ்சமஹுதி தேவை.

(3) ஸ்வேதாஜம் – வெப்பத்தின் காரணமாக தோன்றும் பூச்சிகள் அல்லது உயிரினங்கள். உதாரணமாக அரிசி அல்லது வேறு ஏதேனும் உணவு தானியங்களை காற்று அல்லது சூரிய ஒளியில் படாமல் வைத்திருந்தால், அவற்றில் சில பூச்சிகள் தோன்றும். இவை ஸ்வேதாஜஸ் என்று அழைக்கப்படுகின்றன.

(4) உத்பிஜ்ஜம் – இவை அந்தந்த விதைகளை விதைப்பதன் மூலம் நிலத்திற்கு மேலே வளரும் தாவரங்கள்.

மேற்கண்ட வகைகளில், ஸ்வேதஜம் மற்றும் உத்பிஜ்ஜம் வகைகளில் பஞ்சமஹுதி தேவையில்லை. எனவே பாவங்களை மட்டுமே செய்த ஜீவர்கள் சந்திரனுக்கு செல்ல மாட்டார்கள்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் அந்த ஸ்வபவ்யபத்தி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனைச் சந்தித்த பிறகு புண்ணிய மற்றும் பாப கர்மா சமநிலையுடன் இஷ்டதிகாரிகள் இந்த பூமிக்குத் திரும்புகிறார்கள் என்பது இப்போது உண்ணப்படுகிறது. சொர்க்கத்தில் இருந்து இறங்கும் போது ஜீவாக்கள் ஆகாஷா (ஆகாயம்), வாயு (காற்று), தூமம் (புகை), அப்ரம் (நீரைத் தாங்கும் மேகம்), மேகா (மழை பொழியும் மேகம்) ஆகியவற்றுடன் தொடர்பு கொள்கின்றன என்றும் அவை மழைநீரின் மூலம் பூமியில் விழுகின்றன என்றும் கூறப்படுகிறது. .

ஜீவாத்மாக்கள் பூமிக்குத் திரும்பும்போது மேற்கூறியவற்றுடன் தொடர்பு கொள்கிறார்களா அல்லது சொர்க்கத்தில் சோமபாவம் அல்லது இந்த உலகில் மனித பாவம் போன்ற எதையும் அவர்கள் அனுபவிக்கிறார்களா என்ற சந்தேகம் இங்கே எழுகிறது.

இந்த சந்தேகத்தை சூத்ரகாரர் “தத் ஸ்வபவ்யபத்தி: உபபத்தே:” என்ற சூத்திரத்தில் தீர்த்து வைத்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ஜீவாக்கள் மேற்கூறியதைப் போலவே மாறுகின்றன, மேலும் அங்கு எந்த அனுபவமும் இல்லை. சொர்க்கத்தில் சோம பாவமும், இவ்வுலகில் மனுஷ்ய பாவமும் மட்டுமே இன்பம்.

ஐந்தாவது அதிகாரம் “நதிசிராதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஜீவாத்மாக்கள் ஆகாசம், வாயு போன்ற லோகங்களில் தங்கி, நெல் போன்ற உணவு தானியங்களுக்குள் நுழைவது வரை நீண்ட காலமா அல்லது குறுகிய காலமா என்பதுதான். உணவு தானியங்களில் இருந்து ஜீவாக்கள் வெளியேறுவதும், ஆண் உயிரினங்களின் உடலில் நுழைவதும் மிகவும் கடினம் என்று உபநிஷதம் கூறுகிறது. குறிப்பாக உணவு தானியங்களான நெல் போன்றவற்றில் உள்ள ஜீவாத்மாக்களைப் பற்றி உபநிஷதம் கூறும்போது, ​​ஆகாஷம், வாயு, தூமம், அபிராமி, மேகம் போன்றவற்றில் ஜீவாத்மாக்கள் நீண்ட காலம் தங்காது, அவை விரைவாக வெளியேறுகின்றன என்று கருத வேண்டும். மேலே.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “அன்யாதிஷ்டித அதிகாரன்” என்று அழைக்கப்படுகிறது. மறுபிறப்பிற்காக சொர்க்கத்திலிருந்து இறங்கி, நெல் போன்ற உணவு தானியத்தில் நுழைந்த ஜீவன், நெல் தானியத்தை தன் உடலாகக் கருதுகிறானா அல்லது வெறுமனே அதனுடன் தொடர்புடையதா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு.

மழையின் மூலம் பூமியில் விழும் ஜீவாத்மாக்கள் நெல் மற்றும் பிற உணவு தானியங்களாகப் பிறக்கின்றன என்று கூறும் உபநிடதக் கூற்று இந்த ஐயத்திற்கு அறை. பிறந்தது எனச் சொல்லப்படுவதால் மேற்கண்ட ஐயம் எழுந்தது. “பிறப்பு” என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இணைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார், மேலும் மனிதன் பிறந்தான் என்று நாம் சொல்வது போல் நெல் தானியத்தின் உடலைக் கருதி ஜீவா பிறந்தது என்று சொல்ல வேண்டும்.

பூர்வபக்ஷியின் இந்த விவாதம் சூத்ரகாரரால் எதிர்க்கப்படுகிறது, அவர் “அன்யாதிஷ்டிதே பூர்வவத் அபிலாபத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. நெல் தானியம் என்பது மற்றொரு ஜீவாவின் உடலாகும், அவர் தனது பாபா கர்மாவின் காரணமாக அதை குறிப்பாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் இந்த உலகில் மறுபிறப்புக்காக சொர்க்கத்திலிருந்து இறங்கிய ஜீவாவாக உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி அல்லது எந்த ஒரு பிராணியும் அல்லது உயிரினமும் அவனது புண்ணியத்தின் சமநிலையான அனுசயாவின் படி, ஆகாஷா, வாயு, தூமம் போன்றவற்றைப் போலவே, பாப கர்மாவும் நெல் தானியத்துடன் தொடர்புடையது.

யாகத்தில் ஒரு மிருகத்தைக் கொன்று, அதையே யாகத்தில் தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்த பாவத்தின் நிமித்தம், ஜீவன் நெல் தானியத்தை எடுத்துக்கொண்டு துன்பத்திற்கு ஆளாகிறான் என்று பூர்வபக்ஷி மேற்கூறிய விவாதத்தை எதிர்க்கிறார்.

விலங்குகள் மற்றும் உயிரினங்களைத் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ கூடாது என்று கூறப்படுகிறது. மிருகம் கொல்லப்பட்டால் அது பாவச் செயல். ஆனால் அதே நேரத்தில் மிருகத்தைக் கொன்று யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இது ஒரு பாவச் செயலாக இருப்பதால், இதற்கு முன் ஜீவன் சொர்க்கத்தை அடைந்து, அங்குள்ள அனைத்து சுகங்களையும் அனுபவித்தாலும், ஒரு நெல்மணியின் உடலை எடுத்துக்கொண்டு தண்டிக்கப்படுகிறான்.

பூர்வபக்ஷியின் இந்த வாதம், “அசுத்த மிச்சென்ன சப்தத்” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. “அசுத்தமிதி சேத்” என்றால் மிருகத்தைக் கொல்வது பாவச் செயல் என்று எதிராளி சொல்லுகிறார். சூத்ரகாரர் “நசப்தத்” என்ற வார்த்தைகளால் மேற்கூறியவற்றை மறுத்து, மிருகவதை ஒரு பாவச் செயல் அல்ல என்று உறுதியாகக் கூறுகிறார், ஏனெனில் யாகத்தின் போது கொல்லப்பட்ட விலங்கில் உள்ள ஜீவா ஸ்வர்கத்திற்குச் சென்று அங்கு அழகான உடலை ஏற்று அங்குள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறது. .

ஜீவா உண்ணும் உணவின் மூலம் ஒரு ஆண் உறுப்பின் உடலுக்குள் நுழைந்து, தந்தையின் உடலில் இருந்து தாயின் உடலில் நுழைந்த பிறகு தாயின் வயிற்றில் ஒரு உடலைப் பெறுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தின் முதல் பாதம் இந்த அதிகாரத்துடன் முடிகிறது.

3 வது அத்தியாயம் “சாதன அத்யாயா” என்றும் இந்த இரண்டாவது பாதம் உபயலிங்க பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே விளக்கியபடி, உபய லிங்கமானது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இரண்டு அடிப்படை குணாதிசயங்களைக் குறிக்கிறது, அவை (1) களங்கமின்மை (2) எண்ணற்ற அருள் பண்புகளின் களஞ்சியம்.

களங்கமற்ற தன்மை “ஹேய ப்ரத்யநிகத்வம்” என்றும், இரண்டாவது குணம் “அசாங்க்யேய கல்யாண குண மஹோதாதி” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் மேற்கூறிய இரண்டு குணாதிசயங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் போன்ற மற்ற கடவுள்களின் மேல் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேலாதிக்கம் இருக்க முடியாது. நிறுவப்பட்டது. இந்த மற்ற கடவுள்களை தேவதந்திரர்கள் என்றும், பகவான் ஸ்ரீமன் நாராயணன் பரதேவதை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

நான்கு தலைகள் கொண்ட பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் நம்மைப் போன்ற புண்ய மற்றும் பாப கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் அசுப கர்த்தாக்கள் அல்லது அமங்கல தேவதைகள் என்றும் கூறப்படுகிறது. திருமழிசை ஆழ்வார் மேற்கூறிய அசுப கர்த்தாக்கள் அல்லது தேவதைகள் எச்சில் தேவர்கள் மற்றும் திருஇல்லா தேவர்கள் என்று அறிவிக்கிறார் அல்லது சத்தியம் செய்கிறார்.

எச்சில் தேவர்கள் என்பதன் பொருள் என்னவென்றால், பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பவராக விளங்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன், இந்தப் பிரபஞ்சத்தின் பிரளயத்தின் போது அதை விழுங்கித் தன் வயிற்றில் பத்திரமாக வைத்துக் கொண்டார். படைப்பின் போது அவர் தனது வாயிலிருந்து பிரபஞ்சத்தை உமிழ்ந்தார், அப்போது நான்கு தலை பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் போன்ற தேவதாந்திரர்கள் இந்த உலகில் தோன்றினர். அதனால் எச்சில் தேவர்கள் ஆனார்கள். பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு மட்டுமே தமிழில் திரு என்றும் சமஸ்கிருதத்தில் “ஸ்ரீ” என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமி தேவியை அவரது மனைவியாகக் கொண்டுள்ளார். மற்ற ஸ்வாமிகள் மகாலக்ஷ்மியை மனைவியாகக் கொள்ள முடியாது, எனவே அவர்கள் திரு இல்லா தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

எனவே மோட்சத்தை விரும்புபவர்கள் இந்த தேவதந்திரர்களிடம் எந்த விதமான பக்தியும் கொண்டிருக்கக் கூடாது என்று தீர்க்கமாகச் சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர்களால் வழங்கப்படும் பலன்கள் மிகவும் குறைவாகவும் முடிவடைகின்றன. அவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. பகவான் ஸ்ரீமன் நாராயணனால் வழங்கப்பட்ட மோட்சத்தின் பலன் எல்லையற்றது மற்றும் முடிவில்லாத நித்திய பேரின்பம், அதாவது ஸ்ரீ வைகுண்ட பையலோகத்தில் உள்ள மகாலட்சுமிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் என்றென்றும், எங்கும், எல்லா நிலைகளிலும் சேவை அல்லது கைங்கர்யம் செய்வது. சமஸ்கிருதத்தில் இந்த கைங்கர்யத்திற்கான சொற்றொடர் சர்வதேசம், சர்வகலா, சர்வ அவஸ்தா உசித சர்வ வித கைங்கர்யம்.

எனவே மேற்கூறியவற்றின் பொருட்டு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேன்மை நிலைநாட்டப்பட வேண்டும். இந்தப் பாடலின் முக்கிய நோக்கம் மேற்கூறியவை மட்டுமே.

முன்பு கூறியது போல், விடுதலை பெறாத தனி ஆன்மா அல்லது சம்சாரி ஜீவனின் கனவுகள், நல்ல தூக்கம் மற்றும் கோமா நிலை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் இந்த பாதத்தில் தீர்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜீவாவுக்கு உதவும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மங்களகரமான அஞ்சலிகள். மேலே உள்ள மூன்று கட்டங்களும் உய்த்துணரப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் வைராக்ய பாதம் எனப்படும் முந்தைய பாதத்தில் தீர்க்கப்பட்டன.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் “சந்தியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்வப்னா-அவஸ்தா அல்லது கனவுகள் காணும் நிலை (கட்டம்) பற்றியது. சந்தியா என்றால் ஸ்வப்ன ஸ்தானம் என்பது கனவுகளைக் காணும் நிலை. இது விழிப்பு நிலைக்கும் நல்ல உறக்க நிலைக்கும் இடையே உள்ள நிலை. விவாதத்திற்கான தலைப்பு பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதில் யாக்ஞவல்கிய முனிவர் ஸ்வப்னவஸ்தாவின் தன்மையைப் பற்றி விவாதிக்கிறார்.

இங்கு யாக்ஞவல்கிய முனிவர் கனவு நிலையில் தேர்கள் இல்லை, குதிரைகள் இல்லை, சாலைகள் இல்லை என்று கூறுகிறார். பின்னர் தேர்கள், குதிரைகள் மற்றும் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. அதுபோலவே சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சிகள் இல்லை, ஆனால் மகிழ்ச்சிகள், மகிழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் யாக்ஞவல்கியர் குளங்கள், தாமரைக் குளங்கள் அல்லது ஆறுகள் எதுவும் இல்லை ஆனால் அவை உருவாக்கப்பட்டவை என்கிறார். அவனே படைப்பவன். உபநிடத உரையில் அந்த “அவர்” அல்லது ச: ஜீவா அல்லது பரமாத்மாவா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அதே போல் கடோபநிஷத்தில் ஒரு கூற்று உள்ளது, அது தூக்கத்தின் போது கனவு நிலையில் இருக்கும், விரும்பியவை அனைத்தும் உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறது. கனவில் வரும் பொருட்களைப் படைத்தவர் ஜீவா அல்லது பரமாத்மா என்ற சந்தேகம் இங்கும் எழுகிறது.

ஜீவா தான் கனவில் அனுபவிக்கும் பொருட்களை உருவாக்குபவன் என்பது எதிராளியின் பார்வை. இந்த எதிர்ப்பின் கருத்து இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு சூத்திரங்களில் உள்ளது. ஸந்த்யே ஸ்ருஷ்டிர் அஹஹி மற்றும் நிர்மாதரம் ச ஏகே புத்ரதய ஷா என்பது சூத்திரங்கள்.

முதல் இரண்டு சூத்திரங்களின் பொருள் பின்வருமாறு.

சந்தியா என்று அழைக்கப்படும் கனவுகளைக் காணும் நிலையில், கனவில் காணப்படும் பொருள்கள் கனவுகளைக் காணும் ஜீவா அல்லது தனிப்பட்ட ஆத்மாவால் உருவாக்கப்படுகின்றன. இரண்டாவது சூத்திரத்தில் கண்ணோட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் என்னவென்றால், கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளபடி, கனவுகளின் நிலையில் ஜீவா மகன்கள் போன்ற பொருட்களை உருவாக்குகிறது.

சித்தாந்த சூத்திரங்கள் என்று அழைக்கப்படும் இந்த அதிகாரத்தின் மீதமுள்ள நான்கு சூத்திரங்களில், சூத்திரகாரர் எதிரியின் மேற்கூறிய கருத்தை மறுத்து, பார்ப்பவரின் புண்ணிய பாப கர்மாவின்படி கனவில் வரும் பொருட்களை உருவாக்கியவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று கூறுகிறார். ஜீவா என்று கனவு காண்கிறான்.

முதல் சித்தாந்த சூத்திரம் “மாயாமாத்ரம் து கார்ட்ஸ்ந்யேன அநபிவ்யக்த ஸ்வரூபத்வாத்”. இதன் பொருள் எதிராளியின் பார்வை நிராகரிக்கப்படுகிறது.

மாயாமாத்ரம் என்றால் கனவில் வரும் பொருள்களின் முழுப் படைப்பும் உண்மையிலேயே அற்புதமானது. கர்ஷ்ண்யேன அனாபிவ்யக்தி என்றால், தனிப்பட்ட ஆன்மா அல்லது ஜீவா கனவில் உள்ள பொருட்களை உருவாக்கும் திறன் கொண்டது என்று அர்த்தம், ஏனெனில் அவர் சத்ய சங்கல்பமாக இருந்தாலும் (விருப்பம் மற்றும் உருவாக்கும் திறன் கொண்டவர்) இந்த குறிப்பிட்ட பண்பு அவர் சம்சாரத்தில் இருக்கும்போது மலரவோ அல்லது பிரகாசிக்கவோ இல்லை. எனவே கனவில் உள்ள பொருள்கள் பரம புருஷன் அல்லது பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட கடோபநிஷத்தில் உள்ள வாசகம் கூட ஜீவனைக் குறிக்கவில்லை, ஆனால் அது பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது.

பிருஹதாரண்யக உபநிடதத்தின் சொப்பன நிலை தொடர்பான ச: என்ற வார்த்தை பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது, ஜீவனை அல்ல.

ஜீவா அல்லது ஜீவ ஸ்வரூபத்தின் உள்ளார்ந்த இயல்பில் சத்ய சங்கல்பத்வ குணம் இயல்பாக இருக்கும்போது, ​​சத்ய சங்கல்பத்வம் ஏன் மலரவில்லை, செயலற்ற நிலையில் இருந்தது என்ற அடுத்த கேள்வி எழுகிறது. மேற்கண்ட கேள்விக்கான பதில், பரமாத்மா தனது புண்ணிய பாப கர்மாவின் காரணமாக மேற்கண்ட பண்பு முக்தி பெறாத ஆத்மாவில் செயலற்ற நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே ஒரு ஜீவன் தனது புண்ணிய பாபா கர்மாவின் காரணமாக சம்சாரத்தில் நிலைத்திருக்கிறான், அவன் அனுபவிக்கும் பலன்கள் பரமாத்மாவால் வழங்கப்படுகின்றன, மேலும் ஜீவனுக்கு மோட்சத்தின் பலனைத் தரும் பரம புருஷனின் விருப்பத்தால் ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுகிறான். பக்தி யோகம் (தியானம்) அல்லது சரணாகதி அல்லது சரணாகதி என்ற பிரபத்தி யோகம்.

இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் தைத்தரிய உபநிடதத்திலிருந்து சில மேற்கோள்களை மேற்கோள் காட்டுகிறார். ஜீவாவில் உள்ள சத்திய சங்கல்பத்தின் பண்பின் செயலற்ற தன்மை, அவர் சிருஷ்டியின் போது ஒரு மரண உடலுக்குள் நுழைவதன் மூலமும், பிரளயத்தின் போது அணு (சூக்ஷ்மா) வடிவத்தில் இருக்கும் உணர்ச்சியற்ற உயிரினத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் நடைபெறுகிறது. மேற்கூறிய பொருளைத் தரும் சூத்திரம் “தேஹயோகத்வா சோபி” என்று வாசிக்கிறது. இந்த அதிகாரத்தில் உள்ள 4 வது சித்தாந்த சூத்திரத்தில், ஒரு தனிப்பட்ட நபர் கெட்ட கனவுகள் மற்றும் நல்ல கனவுகள் இரண்டையும் பார்க்கிறார் என்று சூத்திரகாரர் கூறுகிறார். இந்த கெட்ட கனவுகள் கெட்ட சகுனத்தையும், நல்ல கனவுகள் நல்ல சகுனத்தையும் குறிக்கும். நல்ல சகுனம் நல்ல கனவுகளைக் காணும் நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. கெட்ட சகுனம் மகிழ்ச்சியற்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.

இந்தச் சூழலில், ஜீவாவின் ‘புண்ய’, ‘பாபா’ கர்மாவின் பலன்கள் பின்வரும் வழிகளில் அனுபவிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அ) ​​புண்ணிய மற்றும் பாப கர்மாவின் ஒரு பகுதியின் பலன்கள் ஒரு ஜீவாவின் விழிப்பு நிலையின் போது அனுபவிக்கப்படுகின்றன.

(ஆ) இரண்டாவது பகுதியின் பழங்கள் கனவு நிலையில் அனுபவிக்கப்படுகின்றன.

(இ) மூன்றாவது பகுதியின் பழங்கள் சொர்க்கம் அல்லது ஸ்வர்க லோகத்தில் அனுபவிக்கப்படுகின்றன. பிரத்தியேகமான புண்ணிய கர்மாவின் பலன்கள் ஸ்வர்கலோகத்தில் அனுபவிக்கப்படுகின்றன. பிரத்தியேகமாக பாபா கர்மாவின் பலன்கள் நரகத்தில் அல்லது நரகத்தில் அனுபவிக்கப்படுகின்றன.

(ஈ) எஞ்சியிருக்கும் புண்ணியமும், பாப கர்மாவும் ஜீவனுக்கு இவ்வுலகில் மறுபிறவி எடுக்கவும், மரண சரீரத்தை எடுக்கவும் உதவுகின்றன, மேலும் புண்ணிய மற்றும் பாபாவின் பலனை இந்த உலகில் தொடர்ந்து அனுபவித்து மீண்டும் வாழ்நாளில் புண்ணியத்தையும் பாபாவையும் செய்ய உதவுகின்றன. ஜீவா மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையை நாடும் வரை இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “ததாபாவாதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் ஜீவாவின் நல்ல தூக்கத்தின் நிலை விவாதிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு சூத்திரங்கள் உள்ளன. மூன்று உபநிடத நூல்கள் விவாதத்திற்கு வருகின்றன. இம்மூன்று நூல்களும் நல்ல உறக்க நிலையைப் பற்றியது.

முதல் வாசகம் சாண்டோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயத்தில் இருந்து, தனிப்பட்ட ஆன்மா நாடிகளில் (துடிப்புகள் அல்லது இதயத்தில் உள்ள குழாய் உறுப்புகள்) நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இரண்டாவது வாசகம் பிருஹதாரண்யக உபநிடதத்தின் 4 வது அத்தியாயத்திலிருந்து ஜீவா பூரிதத்தில் (இதயத்தில் ஒரு சிவப்பு நிற சதைப்பகுதி) தூங்குகிறது என்று கூறுகிறது, மேலும் 72000 நாடிகள் “ஹிதா” என்று அழைக்கப்படுகின்றன, அவை பூரிதத்தை நோக்கி செல்கின்றன.

மூன்றாவது வாசகம் சந்தோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் உள்ளது, இது சாந்தோக்யோபனிஷத்தின் இந்த அத்தியாயத்தில் “சத்” என்று அழைக்கப்படும் பரமாத்மாவின் மீது ஜீவன் தூங்குகிறது என்று கூறுகிறது.

மேற்கூறிய உபநிடத வாசகங்களில் இருந்து ஜீவன் தன் வசதிக்கேற்ப தன்னிச்சையாக நாடிகளா, பூரிதாதா அல்லது பரமாத்மாவா அல்லது மேலே உள்ள அனைத்தின் மீதும் உறங்குகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. முதலாவது விகல்பா (மேலே உள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றில்) மற்றும் இரண்டாவது சமுச்சயா (மேலே உள்ள மூன்றிலும்) என்று அழைக்கப்படுகிறது.

எதிரி அல்லது பூர்வபக்ஷி இது விகல்பம் மட்டுமே, சமுச்சயா அல்ல என்று கூறுகிறார். ஜீவா உறங்க முடியும் என்று சொல்லப்பட்ட மேற்படி மூன்று இடங்களிலும் ஒன்று மற்றொன்றிலிருந்து சாராதது, ஜீவா மூன்றிலும் ஒரே நேரத்தில் தூங்க முடியாது என்பதே அவரது வாதத்தின் அடிப்படை. இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ததாபவ நதீஷு தத் ஸ்ருதே: அத்னானிச்ச” என்று படிக்கும் சூத்திரகாரர் எதிரியின் மேற்கூறிய பார்வையை மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ததாபவ:- ஸ்வப்னா அல்லது கனவுகள் இல்லாத நிலையில், நல்ல தூக்க நிலையில் இருக்கும்.

நதீஷு ஆத்மானிச்சா – ஜீவாவின் நல்ல தூக்க நிலை நாடிகள், பூரிததா மற்றும் பரமாத்மாவில் நடைபெறுகிறது. இங்கே சா என்பது பூரிதத்தை குறிக்கிறது ஏனெனில்,

தத் ஸ்ருதே:- மேற்கூறிய ஸ்ருதிகள் அல்லது உபநிடதங்களில் மேற்கண்ட மூன்று உறக்க இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கே ஸ்ரீ பகவத் ராமானுஜர் பிரசாதம், கட்வாங்க, பர்யங்க நியாயம் என்று ஒரு உச்சரிப்பைக் குறிப்பிடுகிறார்.

பிரசாதம் என்றால் அரண்மனை. கட்வாங்கா என்றால் கட்டில். பர்யங்கா என்றால் படுக்கை. இங்கு நாடிகள் பிரசாத இடத்தில் உள்ளனர். பூரிதத்தம் கட்வாங்க இடத்தில் உள்ளது. பரமாத்மா படுக்கையில் இருக்கிறார்.

இறுதியாக, தனிப்பட்ட ஆன்மா படுக்கையாகிய பரமாத்மாவின் மீது நல்ல உறக்கத்தை அனுபவிக்கிறது என்றும், பரமாத்மா கட்டிலாகிய பூரிதத்தில் இருப்பதாகவும், இந்த கட்டிலில் நாடிகள் என்று கூறப்படும் அரண்மனையின் தரையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணம் அரண்மனை, கட்டில் மற்றும் படுக்கையில் வேறுபாடு இருப்பதைப் போலவே, நாடிகளின் செயல்பாடுகளிலும், புரிதாத்தா மற்றும் பரமாத்மாவின் செயல்பாடுகளிலும் வேறுபாடு உள்ளது. இதில் ஒன்று மட்டுமே மற்றொன்றுக்கு மேல் இருக்க வேண்டும். எனவே நாடிகள் அல்லது பூரிததா அல்லது பரமாத்மா உறங்கும் இடமாக இருக்கும் விகல்பா (மாற்று) மற்றும் ஒவ்வொரு இடமும் மற்றொன்றை விட சரியானது. விகல்ப வாதத்தில் பல குறைபாடுகள் உள்ளன, எனவே சமுச்சய வாதமே சரியானது. விகல்ப என்றால் ஒன்று அல்லது (மாற்று) மற்றும் சமுச்சயா என்றால் ஒருங்கிணைந்த (அனைத்தும் ஒன்றாக).

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம் பரமாத்மாவின் மீது நல்ல உறக்கத்தை அனுபவித்த பிறகு ஜீவா பரமாத்மாவால் மட்டுமே எழுப்பப்படுகிறது என்று கூறுகிறது.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் கர்மானுஸ்மிருதி அதிகாரம் எனப்படும். இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், முந்தைய நாள் இரவு பரமாத்மா மீது உறங்கியவர் மறுநாள் காலையில் எழுந்திருப்பாரா அல்லது வேறு ஒருவர் எழுந்து தோன்றுகிறாரா என்பதுதான். இந்த சந்தேகம் முட்டாள்தனமானதாக இருந்தாலும் அல்லது முட்டாள்தனமாக இருந்தாலும், பூர்வபக்ஷி மேற்கண்ட சந்தேகத்தை நியாயப்படுத்த சரியான கருத்தை எழுப்புகிறார். மோட்சம் அல்லது முக்தி என்பது ஜீவா பரமாத்மாவுடன் இணைவது என்பது அவரது சரியான கருத்து. நல்ல தூக்கத்தின் போது இந்த தொழிற்சங்கம் நடந்தவுடன், அந்த நபர் மீண்டும் எங்கே வருகிறார் என்ற கேள்வியை அவர் கேட்கிறார், எனவே மற்றொரு நபர் தனியாக எழுந்து தோன்ற வேண்டும்.

மேற்கூறிய வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, சூத்திரகாரர் சூத்திரத்தில் தனது கருத்தை மறுக்கிறார். “ஸ ஏவ, கர்ம, அனுஸ்மிருதி சபல விதிப்ய:” – இந்த சூத்ரத்தின் அர்த்தம், காலையில் எழுந்தவர், முந்தைய நாள் இரவு உறங்கச் சென்றவர்தான். சூத்திரத்தில் ச ஏவா என்ற வார்த்தைகளின் அர்த்தம் இதுதான். சூத்ரகாரர் அதற்கு நான்கு காரணங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

(1) முதலாவது கர்மா. இங்கு கர்மா என்றால் புண்ய பாப கர்மா. புண்ணிய பாப கர்மாவின் சமநிலையின் பலன்களை முந்தைய நாள் இரவு தூங்கச் சென்றவர் காலையில் எழுந்தவுடன் அனுபவிக்க வேண்டும். இங்கே ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் “தத்வஞானத் ப்ராக் தேனைவ போக்தவ்யம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, முந்தைய இரவில் தூங்கி காலையில் எழுந்தவர், பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்யும் வரை, பிரம்மன் அல்லது பரமாத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முன்பு அவர் செய்த புண்ணிய பாப கர்மாவின் சமநிலையின் பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும். . ஒருவர் பக்தி யோகத்தைத் தொடங்கும் அல்லது பிரபத்தி செய்யும் தருணத்தில், மேற்கூறிய தருணத்தில் தனிப்பட்ட ஒருவரால் அனுபவிக்கப்படாத புண்ணிய பாப கர்மாவின் பலன்கள் உறைந்து, அதன் பலனை அந்த நபர் அனுபவிக்கத் தேவையில்லை என்று பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்புகிறார். பக்தி யோகம் தொடங்கிய பிறகு அல்லது பிரபத்தி செய்த பிறகு அவர் தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ பாவங்களைச் செய்ய மாட்டார். தற்செயலாக பாவங்களைச் செய்வது அவரை எந்த வகையிலும் பாதிக்காது, பரமாத்மா தானாகவே மன்னிக்கிறார்.

(2) அனுஸ்மிருதி – இந்த அனுஸ்மிருதி என்றால் மறு சேகரிப்பு அல்லது மீண்டும் எண்ணுதல். முந்தைய நாள் இரவு தூங்கச் சென்றவர் மறுநாள் காலையில் எழுந்ததாகக் கூறுகிறார்.

(3) சப்தா – சப்தா என்றால் உபநிடதச் சொல். மேற்கூறிய வாதத்திற்கு ஆதரவாக உபநிடதச் சொல் இருப்பதாக சூத்திரகாரர் கூறுகிறார்.

சாந்தோக்யோபநிஷத்தில் புலி, சிங்கம், நரி அல்லது பன்றி பூச்சி பறவை, ஈ அல்லது கொசு தூங்கும் அதே வடிவத்தில் எழும் என்று ஒரு பழமொழி உள்ளது. அதனால் தூங்கிய அதே ஜீவா எழுந்து நிற்கிறார்.

(4) விதிப்ய:- விதி என்பது ஒரு கட்டளை அல்லது ஒழுங்கு. பரமாத்மாவின் மீது சயனித்தவர் மகோஷத்திற்குச் சென்றாலோ அல்லது முக்தி அடைந்தாலோ, பக்தி யோகம் அல்லது பிரபத்தியை முக்திக்கான வழிமுறையாகக் கூறும் உபநிடத நூல்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகவோ அல்லது நோக்கம் குறைவாகவோ மாறும்.

பரமாத்மாவின் மீது உறங்கும் நபர் இன்னும் சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை, எனவே அவர் பரமாத்மாவின் மீது உறங்குவதால் மோட்சத்திற்குச் செல்வது அபத்தமானது அல்லது அர்த்தமற்றது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் முக்தாதிகாரனா என்று அழைக்கப்படுகிறது, இதில் ஒரு ஜீவாவின் மயக்க நிலை அல்லது கோமா நிலை விவாதிக்கப்படுகிறது.

இங்கே எழும் சந்தேகம் என்னவென்றால், கோமா நிலை என்பது அமைதியான தூக்கத்தின் மற்றொரு வடிவமா அல்லது அது முற்றிலும் வேறுபட்ட அல்லது தனியான அவஸ்தா அல்லது நிலையா என்பதுதான்.

மூர்ச்சாவஸ்தாவை (கோமா நிலை) சுஷுப்தி அவஸ்தாவின் மற்றொரு வடிவமாக அழைக்கும் வழக்கம் இருப்பதால், இந்த கோமா நிலை சுஷுப்தி அவஸ்தாவின் மற்றொரு வடிவம் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

முகதே அர்த்த சம்பத்தி:: பரிஷேஷாத்” என்று படிக்கும் சூத்திரத்தில் சூத்ரகாரர் மேற்கண்ட சந்தேகத்தை நீக்குகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. முகதே என்றால் கோமா நிலையில் இருப்பவர் என்று பொருள். அர்த்த சம்பத்தி: – பாதி மரணம். ஏனெனில் பரிஷேஷாத் – சிற்றின்ப உணர்வு இல்லாததால் அது விழிப்பு நிலை அல்ல. மன செயல்பாடு இல்லாததால் அது கனவுகளின் நிலை அல்ல. ஒரு நபரை எழுப்ப முடியாது என்பதால், அது நல்ல தூக்கத்தின் நிலை அல்ல. சுவாசம் நிற்காததால் அது மரணம் அல்ல. சுவாசம் இருப்பதால், அது பாதி மரணம்.

எனவே கோமா நிலை பாதி மரணம் என்பது முடிவு.

எனவே மேற்கண்ட நான்கு அதிகாரங்களில், சம்சாரத்தில் ஒரு ஜீவாவின் கனவுகள், நல்ல தூக்கம் மற்றும் சுயநினைவின்மை போன்ற நிலைகள் மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு வைராக்கியம் அல்லது பற்றின்மை உணர்வை உருவாக்க கையாளப்பட்டன.

ஸ்ரீமன் நாராயணனின் மேற்கண்ட மூன்று மங்கள குணங்களும் (கல்யாண குணங்கள்) நிறுவப்பட்டுள்ளன, அவை ஒவ்வொரு நபரின் கனவிலும் பொருட்களை உருவாக்குகின்றன, அவை நல்ல தூக்கத்தின் போது ஒவ்வொரு ஜீவனையும் தானே உறங்க அனுமதிக்கின்றன மற்றும் ஜீவன் வெளியேறுவதைத் தடுக்கின்றன. அல்லது கோமா நிலையில் உள்ள உடலில் இருந்து ஆன்மா உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் வைராக்ய பாதம் எனப்படும் முந்தைய பாதத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.

எனவே, ஒரு நபர் தனது நான்கு நிலைகளிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த பிறகு, உலக இன்பத்திலிருந்து முற்றிலும் பற்றின்மை உணர்வை வளர்த்துக் கொள்வார், இது பக்தி யோகத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராகிறது, இது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாகும்.

இந்த முழுமையான பற்றின்மை பக்தி யோகம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனையாகும். மற்ற இன்றியமையாத முன்நிபந்தனை, ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளை அடையவும், அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்யவும் அசைக்க முடியாத தீவிர ஆசை. இது மோட்சம், முக்தி அல்லது நித்திய பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூழலில் ஒரு சந்தேகம் எழலாம். சரணாகதி என்று அழைக்கப்படும் பிரபத்தியை நாடிய ஒருவருக்குப் பிரபத்தி செய்வதற்கு முழுமையான பற்றின்மை ஏற்படுவது அவசியமா. பிரபத்தி செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனைகள் அவனுடைய முழுமையையும் பக்தி யோகத்தைச் செய்ய இயலாமையையும் முழுமையாக உணர்தல் ஆகும் ஸ்ரீவைகுண்ட பய லோகத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளைத் தவிர வேறு எதையும் அடைய முடியாது.

பக்தி யோகாவின் எட்டு துணைகளும், பிரபத்தியின் ஐந்து துணைகளும் பின்னர் கையாளப்படும்.

மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை நாடுவதற்கு முன், ஒரு நபர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த பிறகு அடையப் போகும் பொருள் அனைத்து அம்சங்களிலும் தன்னை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று திட்டவட்டமான முடிவுக்கு வர வேண்டும்.

எல்லா அம்சங்களிலும் இந்த மேன்மையான பொருள், பகவான் ஸ்ரீமன் நாராயணனாக எப்போதும் தனது மனைவியான மஹாலக்ஷ்மி தேவியுடன் இணைந்திருக்கும் உயர்ந்தவர். நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில், “மிதுனம்” (எப்போதும் ஒன்றாக) என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மி தேவியுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தெய்வீக தம்பதிகள் என்று அழைக்கப்படுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி எந்தச் சூழலிலும் அல்லது சந்தர்ப்பத்திலும் குறிப்பிடப்பட்டாலும், அவர் மகாலட்சுமியுடன் தொடர்புடையவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மியின் மேற்கூறிய நித்திய இணைப்பின் காரணமாக, நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் தானாக நிராகரிக்கப்படுகிறார்கள் அல்லது உயர்ந்த நிலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட விண்ணுலகக் கடவுள்களும் நம்மைப் போலவே புண்ணிய, பாபாவின் புண்ணியங்களை அனுபவிக்கிறார்கள். எனவே அவை கர்ம வாஸ்யங்கள் அதாவது புண்யா மற்றும் பாபாவால் துன்புறுத்தப்படுகின்றன. பல கோடி பிரம்மாண்டங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் முழுவதிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனையும் மஹாலக்ஷ்மியையும் தவிர அனைத்து ஜீவராசிகளும் கர்ம வாஸ்யர்களே. ஒரு பிரம்மாண்டமானது சத்யலோகத்திலிருந்து பாதாள லோகம் வரை 14 லோகங்களை (உலகங்கள்) கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் தனித்தனி நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் உள்ளனர்.

இப்போது சரியான விஷயத்திற்கு வருகிறேன், உபாய லிங்கம் என்று அழைக்கப்படும் இரண்டு பண்புகள் (மகாலட்சுமியுடன் தொடர்புடைய பகவான் ஸ்ரீமன் நாராயணன்) உள்ளன. உபய என்றால் இரண்டு என்றும் லிங்கம் என்றால் பண்பு என்றும் பொருள்.

இரண்டு குணாதிசயங்கள் (1) களங்கமின்மை (2) எண்ணற்ற மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக இருப்பது. சமஸ்கிருதத்தில் அவை ஹேயபிரத்யாநிகத்வா மற்றும் கல்யாண குண கரத்வா என்று அழைக்கப்படுகின்றன. எனவே இந்த இரண்டு குணாதிசயங்களால் ஒரு உன்னதமானவர் அடையாளம் காணப்படுகிறார்.

இச்சூழலில்தான் இந்தப் பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம், உபய லிங்கதிகரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த உபய லிங்காதிகரணம் 15 சூத்திரங்களைக் கொண்டது. பூர்வபக்ஷி, பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரபிரம்மம் ஒவ்வொரு உயிரிலும் அல்லது உயிரற்ற பொருளிலும் அந்தர்யாமியாக (உள் ஆன்மாவாக) இருக்கும்போது, ​​ஜீவனைப் போல துன்பத்திலிருந்தும் இன்பத்திலிருந்தும் தப்பிக்க முடியாது என்று வாதிடுகிறார்.

முந்தைய அதிகாரங்கள் சிலவற்றில், பரமாத்மா என்பது அபஹதபாப்மம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஜீவனின் புண்ணிய பாப கர்மா அவருக்கு ஒரு உடலை அளிக்கிறது மற்றும் பரமாத்மா ஜீவன் மற்றும் உடல் இரண்டையும் கட்டுப்படுத்தும் அந்தர்யாமியாக மாறுகிறார். ஜீவன் தனது பாபா கர்மாவின் பலனாக துன்பங்களை அனுபவிக்கும் போது, ​​ஜீவனுடன் எப்போதும் இருக்கும் பரமாத்மாவும் மேற்கூறியவற்றிற்கு உட்பட்டவர். உடலில் சீழ், ​​இரத்தம், சிறுநீர், மலம் போன்ற மோசமான பொருட்கள் உள்ளன, இவற்றுடன் தொடர்பு கொண்ட பரமாத்மா நிச்சயமாக அதைப் பற்றி மோசமாக உணர்கிறார், அதுவே அவருக்கு ஒரு களங்கம். உதாரணமாக, ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ சாக்கடை அல்லது அழுக்குத் தண்ணீரைச் சுமந்து செல்லும் சாக்கடையில் விழுந்தாலும், அவர் அதைப் பற்றி மிகவும் மோசமாக உணர்கிறார், மேலும் உடலை சுத்தம் செய்கிறார். பரமாத்மா விஷயத்திலும் அப்படித்தான். எனவே பூர்வபக்ஷி பரமாத்மா என்பது பழுதற்றது அல்ல.

மேற்கூறியவற்றிற்குப் பதிலளிக்கும் வகையில் அல்லது மேற்கூறியவற்றை மறுத்து சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “ந ஸ்தானதோபி பரஸ்ய உபயலிங்கம் சர்வத்ர ஹி” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பரமாத்மா எப்பொழுதும் உபாய லிங்கத்தை வைத்திருக்கிறார் என்பதும், மேலே குறிப்பிட்டுள்ள கேவலமான பொருட்களுடன் அவர் தொடர்பு கொள்வதும் அவருக்கு எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எப்பவும் அபஹத பாப்மா. அவருடைய உபாய லிங்கத்வம், கறையற்ற தன்மை மற்றும் அனைத்து மங்களகரமான அஞ்சலிகளின் களஞ்சியமாக உள்ளது அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், “ஹேய பரத்யநீகத்வம்” மற்றும் “கல்யாண குணகரத்வம்” எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் எல்லா இடங்களிலும் பராமரிக்கப்படுகிறது.

மேற்கூறிய சூத்திரத்தை சூத்ரகாரர் உருவாக்கிய உபநிடத அதிகாரம் மற்றும் பிற வேத அதிகாரங்கள் பின்வருமாறு.

(1) சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் பரமாத்மா அபஹதபாப்மா (கறையற்றவர், அல்லது எல்லா வகையான குறைபாடுகள் மற்றும் குறைபாடுகள் இல்லாதவர்), விஜரா (முதுமையின் குறைபாடுகள் இல்லாதவர்), விம்ருத்யு (மரணத்திலிருந்து விடுபட்டவர்) என்று கூறப்படுகிறது. விசோகா (துக்கத்திலிருந்து விடுபடுதல்), விஜிகட்சா (பசியிலிருந்து விடுபடுதல்) , அபிபாசா (தாகத்திலிருந்து விடுபடுதல்).

சத்யகாமா (அவரது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்) மற்றும் சத்ய சங்கல்பம் (அவர் விரும்பும் எதையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்).

மேலே உள்ள முதல் ஆறுகளில், பரமாத்மா குறைபாடற்றவர் (கறையற்றவர்) அதாவது ஹேயபிரத்யானிகா என்றும், கடைசி இரண்டு அவர் அனைத்து மங்களகரமான அஞ்சலிகளின் களஞ்சியமாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

(2) ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவர், பகவான் ஸ்ரீமன் நாராயணன் அல்லது பரமாத்மா அனைத்து மங்களகரமான காணிக்கைகளின் களஞ்சியமாக இருக்கிறார், மேலும் அவர் தனது எல்லையற்ற வலிமை அல்லது சக்தியின் எல்லையற்ற அளவைப் பயன்படுத்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார்.

பரமாத்மா அனைத்து கல்யாண குணங்களின் பொக்கிஷம் அல்லது சுரங்கம், அவருக்கு எந்த துக்கமும் ஜீவத் துன்பங்களும் இல்லை.

உன்னதமான இருப்பிடம் அனைத்து குறைபாடுகள் அல்லது குறைபாடுகளிலிருந்து விடுபட்டது, மேலும் பரமாத்மாவும் மேலே உள்ள எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும்.

மீதமுள்ள 14 சூத்திரங்களில் சூத்ரகாரர் தெரிந்து கொள்ள வேண்டிய பல சுவாரஸ்யமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார், அவை பின்வருமாறு.

(அ) ​​சாண்டோக்யோபநிஷத்தின் அதே 8வது அத்தியாயத்தில், பிரஜாபதி என்ற நான்கு தலை பிராமணன் இந்திரனுக்கு பிரம்ம வித்யா உபதேசம் செய்யும் அபஹத பாப்மாவில் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள 8 குணாதிசயங்கள் ஜீவனுக்கும் உண்டு என்று கூறும்போது, ​​பூர்வபக்ஷியின் வினாவிற்கு. அந்தர்யாமியாக இருக்கும்போது பரமாத்மாவும் ஏன் மேற்கூறியவற்றிற்கு உட்பட்டு இருக்கக்கூடாது என்று அவர் உடலில் இருக்கும் போது ஏற்படும் துன்பங்களுக்கு, சூத்ரகாரர் பதிலளிக்கிறார், பிருஹதராயக உபநிஷத்தின் அந்தர்யாமி பிராமணத்தில், யாக்ஞவல்கிய முனிவர், பரமாத்மா அந்தர்யாமியாக இருக்கும் 21 பொருட்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு பொருளிலும் பரமாத்மா என்று கூறுகிறார். அந்தர்யாமி மற்றும் அமிர்தா. இந்த அமிர்தம் என்பது ஜீவாஸ் மற்றும் அவரது உடல்களின் அனைத்து செயல்களையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடல்கள் மற்றும் ஜீவாக்களின் குறைபாடுகளிலிருந்து விடுபடுகிறது. ஜீவனைப் பொறுத்தவரை, அவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபடும் வரை மேற்கண்ட 8 பண்புகளும் செயலற்ற நிலையில் இருக்கும்.

பரமாத்மா தன் விருப்பப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்தாலும், உடலில் உள்ள அசுத்தமான பொருட்களுடனான தொடர்பிலிருந்து அவனால் தப்ப முடியாது. இந்த ஆட்சேபனை சூத்திரத்தில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், சூத்ரகாரரால் நிராகரிக்கப்பட்டது, ஆனால் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் பல மேற்கோள்களை மேற்கோள் காட்டி மேற்கண்ட விஷயத்திற்கு அழகான விளக்கத்தை அளிக்கிறார். ஒரு பொருள் அல்லது பொருள் ஒருவருக்குப் பிடிக்கும், மற்றொன்று விரும்பாதது என்பது விளக்கம். உதாரணமாக, ஒரு இனிப்பு சிலரால் விரும்பப்படுகிறது, அதே இனிப்பு வெவ்வேறு நபர்களால் விரும்பப்படுவதில்லை. இதற்குக் காரணம், தவறு பொருளில் இல்லை, ஆனால் அது விரும்பும் அல்லது பிடிக்காத தனிப்பட்ட நபரிடம் உள்ளது. ஒரு பொருளின் மீது விருப்பம் அல்லது வெறுப்பு என்பது அந்த நபரின் கர்மாவைப் பொறுத்தது.

ஒருவரின் புண்ணிய பாபா கர்மா அவரை இனிமையாக விரும்ப வைக்கும்.

வேறொரு நபரின் ‘புண்ய பாப கர்மா’ அவரை இனிமையின் மீது வெறுப்பை வளர்க்கிறது. அதேபோன்று, அதே நபருக்கு இனிப்பு ஒரு கணத்தில் பிடிக்கலாம், அதே போல் மற்றொரு தருணத்தில் அவருக்கு பிடிக்காமல் போகலாம். இதுவும் அவனது புண்ணிய பாப கர்மாவின் தெளிவின்மையின்படி. பரமாத்மா கர்மாவிலிருந்து விடுபட்டிருப்பதால், அவருக்குப் பிடிக்கும் அல்லது அவருக்குப் பிடிக்காத பொருள் என்ற கேள்வியே இல்லை. அதனால் உடலில் உள்ள கேவலமான பொருட்கள் அவனது உபாய லிங்கத்வத்தை பாதிக்காது.

(ஆ) முண்டக மற்றும் ஸ்வேதாஷ்வதார உபநிடதங்களில், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒரு மரத்தின் ஒரே கிளையில் (இங்கே உடல் மரம், இதயம் கிளை) இரண்டு பறவைகள் என்று கூறப்பட்டுள்ளது, அதில் ஜீவாத்மா தனது புண்ய மற்றும் பாபாவின் பலனை அனுபவிக்கிறார். புண்ணிய பாப கர்மாவின் பலன்களை அனுபவிக்காமல் கர்மமும் பரமாத்மாவும் பிரகாசிக்கின்றன. எனவே பரமாத்மா என்பது உபாய லிங்கம்.

(இ) இங்கும் சூத்ரகாரர் ஒரு சந்தேகத்தை எழுப்பி அதையே தெளிவுபடுத்துகிறார். ஜீவாவுக்கு ஆத்மாவாக இருக்கும் ஸ்ரீமன் நாராயண பகவான் ஜீவாவுடன் சேர்ந்து உடலுக்குள் பிரவேசித்து, நாம ரூப வ்யாகரணம் என்று பொருள்படும் சரீரம் அல்லது ரூபம் மற்றும் நாமம் இரண்டையும் செய்கிறார் என்று சாண்டோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஜீவா தனது புண்ணிய பாபா கர்மாவின் படி நான்கு வகையான உடல்களை எடுத்துக்கொள்ளலாம். அவை வான உடல் (தேவா என்று அழைக்கப்படும்), மனித உடல் (மனுஷ்யா), விலங்கு உடல் (திரியக் என்று அழைக்கப்படும்) மற்றும் உயிரற்ற பொருள் (ஸ்தாவர என்று அழைக்கப்படும்). எனவே உள் ஆன்மா அல்லது பரமாத்மா தனக்கும் பொருந்தக்கூடிய விதிநிஷேத சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாது. விதிநிஷேத சாஸ்திரம் என்பது ஜீவாவை கட்டாயப்படுத்தும் வேதம் இதை (விதி சாஸ்திரம்), அதை செய்யாதே (நிஷேத சாஸ்திரம்).

இந்தச் சந்தேகத்திற்குப் பதில், பரமாத்மா ஜீவாத்மாவுடன் சேர்ந்து ஒரு உடலுக்குள் வசித்தாலும், அவர் எந்த வடிவமும் இல்லாமல் இருக்கிறார், அதாவது அவரது புண்ணிய பாப கர்மாவின்படி ஜீவாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான உடல்களும் நேரடியாக பரமாத்மாவை அல்ல. கர்மாவிலிருந்து விடுபட்டவர். மேலும் பரமாத்மா நாம ரூப வ்யாகரணத்தைச் செய்பவர் என்றும், இந்த தனித்தன்மை இருக்கும் போது அவர் அந்தர்யாமியாக இருந்தாலும் உபாய லிங்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

(ஈ) இங்கு எதிராளி பரமாத்மா எந்தப் பண்பும் இல்லாதவர் என்றும், சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மா என்ற உபநிஷத உரையின்படி நிரிவிஷேஷம் (விஷேஷ என்றால் பண்பு அல்லது நல்லொழுக்க குணம்) என்றும் வாதிடுகிறார். அவர்களின் கருத்துப்படி சத்யத்வம் என்றால் சத்தியம் அல்ல, ஞானம் என்றால் அப்பாவி அல்லது அறியாமை. அனந்தம் என்றால் வரம்பு இல்லை. எனவே இவை மூன்றும் பண்புக்கூறுகள் அல்ல, அவை பிரம்மனின் உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபத்தில் உள்ளன. பரமாத்மாவுக்கு நேத்தி நேத்தி (இல்லை, இல்லை) என்றும், அதனால் அனைத்தையும் அறிந்தவனாகவும், மாற்ற முடியாத சித்தத்தை உடையவனாகவும், பிரபஞ்சத்தின் காரணமானவனாகவும், ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாகவும், அவனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவனாகவும் இருக்க வேண்டும் என்று மற்றொரு உரை கூறுகிறது. பொய்யும் அப்படி இருக்கும்போது அவர் எப்படி உபயலிங்கமாக இருக்க முடியும். சத்யம் என்ற வாசகத்தின் மூலம் எதிராளியின் இந்தக் கருத்து மறுக்கப்படுகிறது. ஞானம் மற்றும் அனந்தம் பிரம்மம் பரமாத்மா நிர்விசேஷம் (பண்பு இல்லாதது) என்று கூறவில்லை, மறுபுறம் பரமாத்மா சத்யத்வம், ஞானத்வம் மற்றும் அனந்தத்வ குணங்களால் பிரகாசிக்கிறார் என்று அர்த்தம். சத்யத்வா என்பது அவரது ஸ்வரூபத்தில் அல்லது உள்ளார்ந்த இயல்பில் எந்த மாற்றமும் இல்லை, எனவே அவர் உணர்ச்சியற்ற உடலிலிருந்தும், உடலுக்குள் இருக்கும் விடுவிக்கப்படாத ஆன்மாவிலிருந்தும் வேறுபட்டவர் (உணர்வற்ற உடல் தொடர்ச்சியான மாற்றத்திற்கு கீழ் செல்கிறது). ஞானத்வா என்றால் உணர்வு அல்லது தர்ம பூத ஞானம் என்பது எப்போதும் வரம்பற்றதாகவோ அல்லது எல்லையற்றதாகவோ இருக்க உதவுகிறது. எனவே அவர் முக்தாத்மா அல்லது முக்தி பெற்ற ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர், ஏனென்றால் அவர் முக்தியற்ற நிலையில் அல்லது சம்சாரத்தில் இருந்தபோது அவரது தர்ம பூத ஞானம் குறைவாக இருந்தது. அனந்தத்வா என்றால் பரமாத்மா என்பது இடம், நேரம் மற்றும் பொருள் ஆகியவற்றில் வரம்பற்றது. எனவே அவர் நித்யசூரிகளிடமிருந்து வேறுபட்டவர். பரமாத்மா விண்வெளியைப் பொறுத்தவரை எல்லையற்றவர் என்றால் அவர் எங்கும் இருக்கிறார். நேரத்தைப் பொறுத்தவரை அவர் வரம்பற்றவர் என்றால் அவர் எப்போதும் இருக்கிறார். பொருளைப் பொறுத்தவரை அவர் வரம்பற்றவர் என்றால், அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களில் அந்தர்யாமியாக இருக்கிறார், மேலும் ஒவ்வொரு பொருளும் அவருக்கு உடல். அவ்வாறே மேலே கூறப்பட்ட சர்வ அறிவாற்றல் போன்ற மற்ற குணங்களும் உள்ளன. எனவே பரமாத்மா என்பது உபாய லிங்கம். நேத்தி, நேத்தி என்ற வார்த்தைகளின் பொருள் வேறு, அது பின்னர் கையாளப்படும்.

(இ) உபநிடத நூல்கள், பகவத் கீதை மற்றும் புராணங்களில் பரமாத்மா உபாய லிங்கம் என்று ஏராளமான நூல்கள் உள்ளன.

(ஊ) சூரியன் (சூர்யா) மற்றும் ஆகாஷாவின் உவமைகள் சூத்ரகாரரால் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமியாக வாழ்ந்தாலும் களங்கமற்றவர் என்பதை நிறுவுவதற்காக. ஆகாசம் ஒவ்வொரு பொருளோடும் தொடர்பு கொள்கிறது, ஏனெனில் அது ஒவ்வொரு பொருளுக்கும் மேலானது மற்றும் குறைபாடற்றது. தண்ணீரின் ஒவ்வொரு அடுக்கிலும் சூரியனின் படங்கள் காணப்படுகின்றன மற்றும் கண்ணாடியில் பொருட்களின் படங்கள் காணப்படுகின்றன. சூரியன் குறைபாடுகளிலிருந்து விடுபட்டது, மேலும் பிரம்மம் அல்லது பரமாத்மாவும் குறையற்றது மற்றும் உபய லிங்கம்.

(g) இந்தச் சூழலில், ஒவ்வொரு உயிரினத்திலும் பரமாத்மாவின் இருப்பு உண்மையாக இருப்பதால், மேலே கூறப்பட்ட உவமை நல்லதல்ல என்ற கருத்தை எதிராளி எழுப்புகிறார். மேற்கூறிய கருத்துக்கு சூத்திரகாரர் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

ஆகாஷா அல்லது ஆகாயம் ஒவ்வொரு பொருளுடனும் தொடர்பு கொண்டாலும் பொருளின் அளவு மாறுபாடுகளுக்கு உட்பட்டது அல்ல. ஒரு பொருள் பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருக்கலாம். அதே போல் தண்ணீரில் சூரியனின் உருவம் உண்மையில் இல்லை என்றாலும். ஆனால் புள்ளி என்னவென்றால், சூரியனின் படம் தண்ணீரின் கொள்கலனின் அளவிற்கு உட்பட்டது அல்ல. உதாரணத்திற்கு,. படம் ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது ஒரு பெரிய தொட்டி அல்லது ஏரியில் உள்ள தண்ணீரில் இருக்கலாம். அதுபோலவே அனைத்துப் பொருட்களிலும் பரமாத்மா வசிப்பது, உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் களங்கமற்றது மற்றும் மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாகும்.

(h) பூர்வபக்ஷி மற்றொரு கருத்தை எழுப்புகிறது, இது பிரம்ம சூத்திரங்களை இயற்றிய முனிவரான பதராயணன் (வேதவியாச பகவான்) பதிலளித்தார். புள்ளி பின்வருமாறு.

பிருஹதாரண்யக உபநிடதத்தில் (4 வது அத்தியாயம் 3 வது உப பீஷன்) பிரம்மன் அல்லது பரமாத்மாவுக்கு இரண்டு வடிவங்கள் அல்லது உடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று உணரக்கூடியது மூர்த்தம் என்றும் மற்றொன்று உணர முடியாதது அமூர்தம் என்றும். மூர்த்தம் என்றால் கடினமானது, அமூர்தம் என்றால் மென்மையானது.

பூமி, நீர் மற்றும் நெருப்பு ஆகிய கூறுகள் மூர்த்தத்தை உருவாக்குகின்றன; அவை கடினமானவை, அழியக்கூடியவை அல்ல, அவை நம் புலன்களால் உணரப்படுகின்றன. சூரிய மண்டலம் என்றும் அழைக்கப்படும் சூரிய வட்டு இந்த மூன்று கூறுகளின் சாராம்சமாகும். இந்த சோலார் டிஸ்க்கை நம் கண்களால் பார்க்க முடியும் மற்றும் மேலே விவரிக்கப்பட்ட முறையில் தியானம் செய்ய வேண்டும்.

ஆகாயம் மற்றும் காற்று ஆகிய கூறுகள் அமுர்த்தம் ஆகும், அவை மென்மையானவை, அழியாதவை. இந்த இரண்டு கூறுகளின் சாராம்சம் சூரிய வட்டின் மையத்தில் இருக்கும் புருஷா அல்லது பரமாத்மாவில் உள்ளது. அவரை அப்படியே தியானிக்க வேண்டும். இந்த புருஷன் மஞ்சள் நிற வேட்டியையும், சிவப்பு நிற பூச்சியைப் போன்ற நிறமுள்ள போர்வையையும் அணிந்துள்ளார், மேலும் அவரது உடல் சிவப்பு நிற தாமரை மலர் போன்றது (நெருப்பின் சுடரைப் போன்ற சிவப்பு நிறம்) மற்றும் பல மின்னல்கள் ஒரே நேரத்தில் நிகழும். சூரிய வட்டில் அல்லது சூரிய மண்டலத்தில் மேற்குறிப்பிட்ட புருஷரை தியானிப்பவர், ஒரே நேரத்தில் நிகழும் பல மின்னல்களைப் போல பிரகாசிக்கிறார்.

மேற்கூறியவற்றைத் தவிர, சூரிய வட்டின் மையத்தில் இருக்கும் பிரம்மன் அல்லது ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி மேற்கூறியவற்றைப் பிரசங்கித்த பிறகு, பிரம்மனின் மகத்துவம் மேலே விவரிக்கப்படவில்லை என்று உபநிடதம் கூறுகிறது. உண்மையில் அவரது மகத்துவம் வரம்பற்றது மற்றும் மேலே கூறப்பட்டதை விட எந்த பொருளும் அல்லது உயர்ந்ததாக இருப்பதும் இல்லை. உணர்வற்ற உயிரினமான பிரகிருதியிலிருந்தும், அனைத்து அம்சங்களிலும் உணர்வுள்ள ஜீவாவிலிருந்தும் அவர் வேறுபட்டவர்.

ஆனால் உபநிடதம் மேற்கூறியவற்றைக் கூறும்போது “நேதி நேதி” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

ஒரு அத்வைதினாக இருக்கக்கூடிய பூர்வபக்ஷி நேத்தி நேத்தி (இல்லை, இல்லை என்று பொருள்) என்ற வார்த்தைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேலே சொன்ன உபநிடதம் பிரம்மனின் மகத்துவத்தை விளக்கியது, அதன் பிறகு திடீரென்று பிரம்மன் நிர்குணன் அல்லது நிர்விஷேஷம் என்று எந்த அர்த்தமும் இல்லாமல் சொன்னது. .

இந்த சூழலில் சூத்ரகாரர் பூர்வபக்ஷியின் மேற்கண்ட வாதத்தை “ப்ரக்ருத ஏதவத்வம் ப்ரதிஷேததி ததோ ப்ரவீதிச்ச பூய:” என்ற சூத்திரத்தில் மறுத்தார்.

இதன் பொருள் என்னவென்றால், உபநிடதம் பிரம்மத்தின் மகத்துவத்தின் எல்லையை மறுத்து, மேலும் அதன் தன்மை மற்றும் பண்புகளில் மேற்கூறிய பிரம்மத்தை விட உயர்ந்த பொருள் எதுவும் இல்லை என்று கூறியது. எனவே ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே உயர்ந்தவர் மற்றும் உபய லிங்கம்.

(i) பிரத்யக்ஷ மற்றும் அனுமன் போன்ற வேறு எந்த அதிகாரத்தினாலும் பிரம்மனை உணர முடியாது. (பிரத்யக்ஷ என்பது சிற்றின்ப உணர்வு மற்றும் அனுமன் அனுமானம்) மேலும் அவர் வேதங்களால் மட்டுமே உணரப்பட வேண்டும். பக்தி யோகம் எனப்படும் தீவிர தியானத்தால் அவரை உணர முடியும். முனிவர் வாமதேவர் பக்தி யோகம் செய்ததன் மூலம் பரமாத்மாவை அவரது உடல் வடிவில் உணர்ந்தார்.

இறுதியாக, சூத்ரகாரர் மேலே விவரிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பரமாத்மா உபய லிங்கம் என்றும், அவர் அனைத்து எல்லையற்ற மங்கள குணங்கள் அல்லது கல்யாண குணங்களின் களஞ்சியமாக இருக்கிறார் என்றும் முடிவு செய்கிறார்.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் அஹிகுண்டலாதிகரணம் எனப்படும். இது நான்கு சூத்திரங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் முதல் இரண்டு பூர்வபக்ஷ சூத்திரங்கள் மற்றும் பிந்தைய இரண்டு சித்தாந்த சூத்திரங்கள்.

இந்த அதிகாரத்தில் பிராமணனுக்கும் உணர்வற்ற உயிரினத்துக்கும் இடையே சரியான உறவு நிலைநாட்டப்படுகிறது. அந்தர்யாமியாகவும் ஆத்மாவாகவும் இருக்கும் பிரம்மன் (ஸ்ரீமன் நாராயணன்) தனது உடல்களாகிய அணு வடிவில் (சூக்ஷ்ம வடிவம்) உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமி மற்றும் ஆத்மா என்று முன்பே நிரூபிக்கப்பட்டது. அவர் பிரபஞ்சத்திற்கு உபாதானகரனாகவும், நிமித்த காரனாகவும் மாற விரும்புகிறார் (உபாதானகாரணம் ஜடக் காரணம் மற்றும் நிமித்த கரணமே செயல்பாட்டுக் காரணமாகும்) பின்னர் அந்தர்யாமி அல்லது ஆத்மாவாக மாறி உணர்வுள்ள உயிரினங்கள் மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களாக மாறுகிறார். ஜீவா என்றாலும் உணர்வுப்பூர்வமான உயிரினம் அணு அளவுள்ளது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

அவரது புண்ணிய பாப கர்மாவின் படி அவரது உடல் தேவ சரீர (வான) மனுஷ்ய சரீர (மனித உடல்), திரியாக்ஷரீரா (விலங்கு உடல்) அல்லது ஸ்தாவர (உயிரற்ற) வடிவத்தில் இருக்கலாம். மனித உடலிலும் கூட அது ஆண் உடலாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு பொருளும் பிரம்மம், ஒவ்வொன்றும் ஆத்மா என்று சில உபநிடத நூல்கள் உள்ளன. இங்கு ஆத்மா என்பது பரமாத்மா. இந்த இரண்டு நூல்களும் பிரம்மன் தன்னை ஒரு உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினம் என்று கருதுகின்றன. இது அபேத ஸ்ருதி என்று அழைக்கப்படுகிறது, பிரம்மன் தாமே சேதனா (உணர்வு) மற்றும் அசேதன (உணர்வற்றவர்) மற்றும் வேறுபாடு இல்லை. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நாமமும் வடிவமும் அளித்து நாம ரூப வியாகாரம் செய்ய ஜீவனைத் தன் உடலாகக் கொண்ட ஜீவாவுடன் சேர்ந்து ஒவ்வொரு உடலுக்குள்ளும் பிரம்மன் அல்லது பரமாத்மா பிரவேசிக்கிறார் என்று சாந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது, இந்த உரையில் தெளிவாகிறது. பிரம்மன் ஜீவனிலிருந்து வேறுபட்டது, ஜீவா என்பது உயிரற்ற அவனது உடலிலிருந்து வேறுபட்டது. இந்தப் பின்னணியில்தான், இந்த அதிகாரத்தில் பூர்வ பக்ஷ சூத்திரமான முதல் சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் “உபய வ்யாபதேசத் அஹிகுண்டலவத்” என்று வாசிக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது சிருஷ்டிக்கு முன் ஒரே ஒரு பொருளாகும், அது சிருஷ்டியின் போது உணர்வு மற்றும் உணர்வு இல்லாத இரு பொருள்களின் வடிவங்களை எடுத்துக்கொள்கிறது.

இது படைப்பிற்கு முன் ஏகா (ஒன்று) என்றும், படைப்பின் போது நானா (பல) என்றும் கூறப்படுகிறது. பூர்வபக்ஷி, பரமாத்மா ஏகா (ஒன்று) அல்லது நானா (சேதனா மற்றும் அச்சேதனா போன்ற பலர்) இரண்டு வெவ்வேறு வடிவங்களில் ஒன்று ருஜுபவம் (உண்மையான வடிவம் அல்லது நேரான வடிவம்) மற்றும் மற்றொன்று குண்டல பாவம் (சுருண்ட வடிவம்) ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாம்பாக இருக்கலாம் என்று வாதிடுகிறார். உண்மையான வடிவத்தில் அல்லது நேரான வடிவத்தில் அது ஏகா (ஒன்று) மற்றும் சுருள் வடிவத்தில் அது நானா (பல) ஆகும்.

எனவே இந்த சூத்திரத்தின்படி பிராமணனே உயிருள்ள பொருட்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறார்.

இரண்டாவது பூர்வ பக்ஷ சூத்திரத்தில், பிராமணனும், உணர்வற்ற உயிரினமும் (அச்சேதனா அல்லது உயிருள்ளவை) எரியும் விளக்கு மற்றும் அது வெளியிடும் ஒளி போன்ற ஒரே வகையைச் சேர்ந்தவை என்று வாதிடப்படுகிறது. விளக்கு ஒளியிலிருந்து வேறுபட்டது. பிரம்மன் இரண்டு வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறார் என்ற முந்தைய பார்வைக்கு மாறாக இது உள்ளது.

“பூர்வவத்வா” என்று படிக்கும் மூன்றாவது சூத்திரத்தில், முந்தைய இரண்டு வெவ்வேறு வாதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, அதே போல் ஜீவா என்பது 3 ஆம் அதிகாரத்தில் கடைசி அதிகாரத்தில் நிறுவப்பட்ட ஒரு உடல் என்பது போல உணர்ச்சியற்ற உயிரினமும் பரமாத்மாவின் உடல் என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. 2வது அத்தியாயத்தின் பதம். பூர்வவத் என்றால் முன்பு போல் என்றும், “வா” என்றால் முந்தைய இரண்டு சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை நிராகரித்தல் அல்லது மறுத்தல் என்றும் பொருள்.

கடைசி சூத்திரத்தில் “பிரதிஷேதச்சா” என்று வாசிக்கப்படுகிறது. இரண்டு உபநிடத நூல்களை மேற்கோள் காட்டி பிரம்மன், உணர்வற்ற உயிரினங்களின் கறைகள் அல்லது குறைபாடுகளுக்கு உட்பட்டது அல்ல, அவை உடல்களுக்கு முதுமை மற்றும் பிற உயிரற்ற பொருட்களுக்கு அழுகும். எனவே பிரம்மம் தனது உடலாகிய உயிரற்ற பொருட்களுக்கு மட்டுமே ஆத்மாவாகவோ அல்லது ஆத்மாவாகவோ இருக்க முடியும். உடல் மற்றும் ஆன்மா வடிவம் விஷேஷனை என்றும் அழைக்கப்படுகிறது. இது அம்சம்சிபவ (அம்சா என்பது விஷேஷணம் அல்லது உடல் மற்றும் அம்சம் விசேஷம் அல்லது ஆத்மா) மற்றும் பிரகார பிரகாரி பாவம் (பிரகாரம் உடல் மற்றும் பிரகாரி ஆத்மா) என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த அதிகாரமானது பரமாத்மாவின் உபாய லிங்கத்தையும், அவர் பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் செயல்பாட்டுக் காரணத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது அல்லது பலப்படுத்துகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஏழாவது அதிகாரம் “பராதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேன்மை சந்தேகத்திற்கு இடமின்றி உண்ணப்படுகிறது, மேலும் அவர் சித்தோபாய (தயாரான பொருள்) மற்றும் அவர் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்தில் அடையும் பொருள் என்பதை நிரூபிக்க. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிராப்யா (அடையக்கூடிய பொருள்) மற்றும் பிரபகா ஆகியவை ஒன்றுதான். பிரபகா என்பது உபய என்றும், ப்ராப்யா என்பது உபேய என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் பக்தியோகம் அல்லது பிரபத்தியோகம் (சரணாகதி) செய்யக்கூடிய சத்தியோபாயத்தின் மூலம் மகிழ்ச்சியடைந்த பிறகு, சித்தோபாயரான ஸ்ரீமன் நாராயண பகவான் மோட்சத்தை வழங்குகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் பக்தி அல்லது சத்யோபாயமாகிய பிரபத்தி செய்யாமல் வெறுமனே சித்தோபாயத்தை விட்டுவிட்டு மோட்சத்தை வழங்குகிறார் என்ற வாதம் சரியல்ல. எனவே “நிர்ஹேலுத்க கிருபா” என்ற கோட்பாடு குறைவான அருள் முற்றிலும் விலக்கப்பட்டதாகும். இந்த அதிகாரத்தில் ஏழு சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பூர்வபக்ஷ சூத்திரம் மற்றும் மீதமுள்ள ஆறு சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள். முதல் சூத்திரம் “பரமத: சேது-உன்மன, சம்பந்த-பேத வ்யாபதேஸ்ப்ய:” என்று கூறுகிறது.

இந்த சூத்திரத்தில் பின்வரும் நான்கு காரணங்களுக்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட உயர்ந்த ஒரு நிறுவனம் இருப்பதாக வாதிடப்படுகிறது.

(1) சேது – இதன் பொருள் பாலம். சம்சாரப் பெருங்கடலைக் கடப்பதற்கான பாலம் பரமாத்மா என்று இரண்டு உபநிடத நூல்கள் கூறுகின்றன. பாலம் என்ற சொல் பொதுவாக ஒரு கரையிலிருந்து எதிர்க் கரைக்குச் செல்வதற்கான பொருளைக் குறிக்கிறது. எனவே, எதிர்க் கரையை அடைந்த பிறகு அடையும் பொருள் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்லும் பாலத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். பரமாத்மா பாலமாக இருக்கும்போது, ​​எதிர்க் கரையை அடைந்த பிறகு பரமாத்மாவை விட மேலான ஒருவர் இருக்க வேண்டும் என்ற பார்வைக்கு அது வழிவகுக்கிறது. சேது என்பது பிரபகா மற்றும் மறு கரையில் உள்ள பொருள் பிராப்யா.

(2) உன்மன – இதன் பொருள் வரையறுக்கப்பட்ட அளவு. பரமாத்மாவுக்கு நான்கு கால்களும் பதினாறு உறுப்புகளும் இருப்பதாக சாண்டோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. உபநிடதத்தில் பாதம் கால் என்றும், காலா உறுப்பு என்றும் கூறப்படுகிறது. உன்னதமான உயிரினம் எல்லையற்ற அளவு என்று கூறப்படும்போது, ​​மேலே குறிப்பிட்டுள்ளபடி வரையறுக்கப்பட்ட அளவு கொண்ட பரமாத்மாவைத் தவிர வேறொரு உன்னதமான உயிரினம் இருக்க வேண்டும் என்ற பார்வைக்கு வழிவகுக்கிறது.

(3) சம்பந்த – இதன் பொருள் உறவு. ப்ராப்யாவிற்கும் பிரபகாவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும்போது அவை வேறுபட்டதாக இருக்க வேண்டும், அதாவது வேறுவிதமாகக் கூறினால், பிராப்யா என்பது பிரபாகத்திலிருந்து வேறுபட்டது.

(4) பேடா – இதன் பொருள் வேறு. முண்டக உபநிடதத்தில் ஜீவன் உன்னதமான ஒரு பொருளை அடைகிறான் என்று கூறப்படுகிறது. தைத்தரிய உபநிடதத்தில் உயர்ந்ததை விட உயர்ந்தது பெரியதை விட பெரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவர் என்றும் அவரை விட மேலான அல்லது பெரிய உடல் வேறு இருப்பதாகவும் இது வாதிடுகிறது.

மேலும் ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய புருஷரே பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளார் என்றும், ஸ்ரீமன் நாராயணனை விட மேலான (உத்தரதாரம்) ஒரு பொருள் பழுதற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய நான்கு காரணங்களால் பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட மேலான ஒருவர் இருக்கிறார் என்பது முடிவு.

மேற்கூறிய சூத்திரத்தைப் பின்பற்றும் ஆறு சூத்திரங்களில் உள்ள சூத்ரகாரமானது, மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிகளுக்கு திருப்திகரமான மற்றும் உறுதியான பதில்களை அளித்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவர், அவருக்கு மேல் வேறு எந்த உடலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

(அ) ​​பரமாத்மா என்பது சேது அல்லது பாலம், அவருக்கு மேலே ஒருவர் எதிர்க் கரையில் இருக்கிறார் என்பதற்கு “சாமான்யத்து” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர், சேது என்ற சொல் வேறு ஏதோ உடல் இருக்கிறது என்று பொருள் கொடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார். அடைய வேண்டும். சேது என்ற வார்த்தையின் அர்த்தம், பகவான் ஸ்ரீமன் நாராயணன் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் வைத்திருக்கிறார், உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்த கலவையும் அல்லது இணைப்பும் இல்லாமல். சேது என்ற வார்த்தை “சினோதி” என்ற வார்த்தையிலிருந்து உருவாகிறது, அதாவது பிணைத்தல் அல்லது ஒன்றாக இணைத்தல். மேலும் சேது என்பது பொதுவாக கடப்பது என்பது இந்த சூழலில் அடைவது என்று பொருள்.

எந்த கலவையும் அல்லது இணைப்பும் இல்லாமல் உண்மையில் ஜீவாக்களான உணர்வுள்ள உயிரினங்களின் குணாதிசயங்கள் பிரத்தியேகமாக வேறுபட்டவை அல்லது உணர்ச்சியற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டவை என்று அர்த்தம். ஜீவாக்களாகிய உணர்வுள்ள உயிரினங்கள் அழியும் உடல்களான உணர்வற்ற உயிரினங்களுக்குள் வசித்தாலும், அவற்றின் பிரத்தியேகமான மற்றும் உள்ளார்ந்த குணாதிசயங்களைக் கலப்பது அல்லது இணைப்பது பற்றிய கேள்வியே இல்லை. ஜீவாவின் பிரத்தியேக குணாதிசயங்கள் i) மைக்ரோ அணு அளவு (அனுத்வா) ii) எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் தன் சுயத்தை உணர்ந்து கொள்வது. இது பிரத்யக்த்வா எனப்படும். அவரது உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபத்தில் உணர்வுடன் இருப்பது. iii) தர்மபூத ஞானத்தை உடையவர், இதன் மூலம் பொருள்கள் உணரப்படுகின்றன (iv) புண்ணிய மற்றும் பாவச் செயல்களைச் செய்பவர் (v) பரமாத்மாவின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இந்தச் செயல்கள். (vi) ஒரு ஆச்சார்யா மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் பிரபத்தி செய்து மோட்சத்தை அடைதல். இந்த பண்புகள் உணர்வு இல்லாத உயிரினங்களில் இல்லை.

ஆ) பரமாத்மாவின் வரையறுக்கப்பட்ட அளவைப் பற்றி, தியானத்திற்காக உபநிடதங்களில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று சூத்திரகாரர் கூறுகிறார். இருப்பினும், பரமாத்மாவின் ஸ்வரூபத்திலும் (உள்ளார்ந்த இயல்பு) அவரது கல்யாண குணங்களிலும் எல்லையற்றவராக இருப்பதன் பண்பை இது பாதிக்காது.

c) தியானத்திற்காக எல்லையற்ற பரமாத்மா எவ்வாறு வரையறுக்கப்பட்டவராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு, கிடைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமிக்க பரமாத்மா வரையறுக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இது ஒரு எல்லையற்ற வானம் ஒரு சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதைப் போன்றது. ஆக்கிரமிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இடம் உபாதி என்று அழைக்கப்படுகிறது.

ஈ) தொடர்புடைய உபநிடத உரையில் அமிர்தம் என்று அழைக்கப்படும் அடையும் பொருள், அதே உபநிஷத உரையில் சேது அல்லது பாலம் என்று அழைக்கப்படும் பரமாத்மாவிலிருந்து வேறுபட்டது அல்லது உயர்ந்தது என்று சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் கூறுகிறார். அடையும் பொருள் பிராப்யா என்று அழைக்கப்படுவதும், இந்த சூழலில் சேது என்று குறிப்பிடப்படுவதும் மட்டுமே பொருத்தமானது. எனவே இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது துணைவியான மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து சித்தோபாய (தயாரான பொருள்) அல்லது பிரபாக மற்றும் மகாலட்சுமியுடன் அவரே உபேயா அல்லது பிராப்யா ஆவார். மோட்சம் அல்லது நித்திய பேரின்பம் இருவராலும் (தெய்வீக தம்பதிகள்) தங்கள் தாமரை பாதங்களில் பிரபத்தி (சரணாகதி) செய்யும் நபர் அல்லது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைந்த பிறகு வழங்கப்படுகிறது. மோட்சத்தில் அல்லது ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில், இரண்டும் அடையப்பட வேண்டும் மற்றும் நித்திய சேவை இருவருக்கும் (தெய்வீக ஜோடி) செய்யப்பட வேண்டும். எனவே நமது ஸ்வாமி தேசிக சம்பிரதாயத்தில் சித்தோபயத்வம் என்பது மோட்சத்திற்கான பொருள் மற்றும் உபயத்வம் இரண்டிலும் உள்ளது.

மகாலட்சுமியின் தாமரை பாதத்தில் செய்யப்படும் சரணாகதி “புருஷகர” பிரபத்தி எனப்படும். புருஷகர் என்றால் சிபாரிசு செய்பவர் (மத்தியஸ்தம் செய்பவர்) தேவி மஹாலக்ஷ்மி பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் ஒரு நபர் (ஜீவா அல்லது தனிப்பட்டவர்) தனது தாமரை பாதத்தில் செய்யப்படும் பிரபத்தியை ஏற்கும்படி பரிந்துரைக்கவில்லை என்றால். பகவான் ஸ்ரீமன் நாராயணன் மோட்சத்தை வழங்குவதில்லை, ஏனென்றால் அவர் செய்த பாவங்களுக்காக ஒருவரை தண்டிப்பதற்காக அவர் கோலை (தண்டதாரா – தண்டா என்பது குச்சி) வைத்திருப்பவர். எனவே மனைவி மகாலட்சுமி புருஷராக இருப்பதால் இறைவனிடம் உள்ள தண்ட தாரத்வத்தின் அம்சம் மாறுகிறது.

எனவே பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு தண்ட தாரத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் என்ற மூன்று அம்சங்களும், மனைவியான மஹாலக்ஷ்மி புருஷகரத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் ஆகிய மூன்று அம்சங்களும் உடையவர். இது “அகரத்ரயா” என்று அழைக்கப்படுகிறது.

இதனாலேயே மகாலட்சுமியைப் பற்றி அகராத்ரய சம்பந்தம் அரவிந்தநிவாஸினீம் அஷ்ஷேஷ ஜகத் இஷாத்ரம் வந்தே வரத வல்லபம் என்று கூறப்படுகிறது. தற்செயலாக, மஹாலக்ஷ்மி தேவி, ஸ்ரீமன் நாராயணனைப் போலவே, பிரபஞ்சம் முழுவதையும் தன் ஸ்வரூபத்தால் வியாபிப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இது ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரின் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது, இது “யதா சர்வகதோ விஷ்ணு: ததைவ ஏயம் த்விஜோததேமா” என்று கூறப்பட்டுள்ளது. எனவே மஹாலக்ஷ்மியும் விபு அல்லது சர்வ பிரசன்னமாக இருக்கிறாள் அதாவது ஸ்ரீமன் நாராயணனுடன் எல்லா இடங்களிலும் இருக்கிறாள். ஒரு சிலரின் கருத்துப்படி அவள் அணு அளவு அல்லது அனு அல்ல.

(இ) ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் (ததா: யதுத்தர தாரம்) உள்ள ஒரு வாசகத்தின் அடிப்படையில் பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட மேலானவர் அல்லது உயர்ந்தவர் ஒருவர் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட விஷயத்தைப் பொறுத்தவரை, சூத்ரகாரர் “ததா அன்ய ப்ரதிஷேதத்” என்ற சூத்திரத்தில் பல உபநிஷத நூல்கள் இருப்பதாகக் கூறுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணரே உயர்ந்தவர் என்றும் அவருக்கு உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்றும் பறைசாற்றுங்கள்.

அனேன ஸர்வகத்தத்வம் அயமா சப்தாதிப்ய:” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் கூறுவதுடன் இந்த அதிகாரம் முடிவடைகிறது. உபநிடதங்களில் உள்ள பல மேற்கோள்களின்படி பகவான் ஸ்ரீமன் நாராயணன் எல்லாவற்றிலும் வியாபித்து சர்வ வியாபித்திருக்கிறார், எனவே அவர் மிக உயர்ந்தவர்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “பலாதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. மோட்சம் உட்பட மனிதர்கள் செய்யும் அனைத்து கர்மாக்களுக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பலன்களை வழங்குகிறார் என்பது இதில் உண்ணப்படுகிறது. இவ்வுலகில் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

I) ஐஸ்வர்யாரதி – குழந்தைகளைப் பெறுதல், செல்வம் மற்றும் தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகளைப் பெறுதல் போன்ற உலக இன்பங்களை அடைவதிலும், ஸ்வர்க லோகத்தில் இன்பங்களை அடைவதிலும் விருப்பம் கொண்டவர்.

வேதங்களில் வார்த்தை இன்பங்களையும் சொர்க்க இன்பங்களையும் பெறுவதற்குப் பல வழிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

(அ) ​​புத்திரகாமேஷ்டியாக – குழந்தைகளைப் பெறுவதற்காக

(ஆ) வயவ்ய இஷ்டி – செல்வத்தைப் பெறுவதற்கு

(c) ராஜசூய யாகம் – ராஜா அல்லது மன்னராக ஆவதற்கு

(ஈ) கரீரி இஷ்டி – அல்பவிருஷ்டி என்றழைக்கப்படும் மழையின் கீழ் அல்லாமல் அதி விருஷ்டி எனப்படும் சுவிஷ்டி என்று அழைக்கப்படும் நல்ல மழையைப் பெறுவதற்கு.

(இ) ஜோதிஷ்டோம யாகம் மற்றும் பிற யாகங்கள் – பரலோக இன்பங்களைப் பெறுவதற்காக

(ஊ) நூறு அஸ்வமேத யாகங்கள் – இந்திரன் அல்லது திரிலோகாதிபதி ஆக

மற்றும் பல.

II) கைவல்யார்த்தி – தனது சொந்த ஆன்மா அல்லது ஆத்மாவை அனுபவிக்க ஆசை.

பரமாத்மாவின் அருளுக்கு உட்பட்டு தன்னையே தியானிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

III) மோக்ஷார்த்தி – மோட்சத்தை அடைய (சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுதல்) ஆசை, அது அர்ச்சிராதி மார்கா வழியாக ஸ்ரீ வைகுண்ட பையலோகத்தை அடைகிறது (திவ்ய பர்யங்கா) அங்கு பைன் தம்பதிகள் அமர்ந்து அங்கு நித்திய சேவை செய்கிறார்கள். பக்தி யோகா அல்லது பிரபத்தி செய்வதன் மூலம் இதை அடையலாம்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம், மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு வழிகளுக்கு யார் பலன்களை வழங்குவது என்பதுதான்.

இந்த அதிகாரத்தில் நான்கு சூத்திரங்கள் உள்ளன, அதில் முதல் இரண்டு சித்தாந்த சூத்திரங்கள், மூன்றாவது பூர்வபக்ஷ சூத்திரம் மற்றும் 4வது சித்தாந்த சூத்திரம் பூர்வபக்ஷியின் வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. இந்த அதிகார முனிவர் ஜைம்னின் பூர்வபக்ஷி ஆவார், அவர் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டத்திற்கான சூத்திரங்களை இயற்றினார்.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதினான்கு கற்றல் பிரிவுகளில் ஒன்றான மீமாம்ச சாத்திரம் மூன்று பிசிஷன்களைக் கொண்ட ஒரே சாத்திரம் என்பதை இந்தச் சூழலில் நினைவுபடுத்துகிறோம். மீமாம்ச சாஸ்திரம் அடிப்படையில் வேத நூல்களை சரியான முறையில் விளக்குவதற்கும் அவற்றின் அர்த்தங்களை தீர்மானிப்பதற்கும் ஆகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

யாகங்கள் மற்றும் பிற கர்மாக்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவது மற்றும் பலன்களை வழங்க அவரைப் பிரியப்படுத்துவது போன்றவற்றைக் கையாளும் வேத நூல்களைக் கொண்ட வேதங்களின் முதல் பீஷன் கர்மகாண்டம் என்று அழைக்கப்படுகிறது.

பதராயண முனிவர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வேதவியாச பகவானின் சீடரான ஜைமினி முனிவர், கர்ம காண்டத்தின் வேத நூல்களின் சரியான விளக்கத்திற்காக சூத்திரங்களை இயற்றும்படி ஜைமினியை வழிநடத்தினார். அதன்படி அவர் 12 அத்தியாயங்கள், 60 பதங்கள் மற்றும் 907 அதிகாரங்கள் என தொகுக்கப்பட்ட சூத்திரங்களை இயற்றினார். இவை கர்மகாண்ட சூத்திரங்கள் அல்லது பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பிரஜாபதி (நான்கு தலை பிரம்மா) பசுபதி (ருத்ரா அல்லது சிவன்), சச்சிபதி (இந்திரன்), சூரியன், சோமா (சந்திரன்), வாயு, அக்னி போன்ற பல்வேறு வானக் கடவுள்களின் இயல்பு மற்றும் வடிவத்தைக் கையாளும் தேவதா காண்டம் வேதங்களின் இரண்டாவது கோட்பாடு ஆகும். , வருணா மற்றும் பலர். இந்த வேத நூல்களின் விளக்கத்திற்காக பதராயண முனிவர் தனது சீடரான காசகிருத முனிவரை சூத்திரங்களை இயற்றும்படி பணித்தார். இந்த சூத்திரங்கள் மீண்டும் 4 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த சூத்திரங்களின் படைப்பாற்றலில் சில சந்தேகங்கள் உள்ளன, மேலும் ஒரு சிந்தனைப் பள்ளி எழுதியவர் ஜைமினி என்றும் மற்றொரு சிந்தனைப் பள்ளி ஆசிரியர் கசகிருதஸ்னா என்றும் கூறுகிறது. ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், ஜைமினி ஆசிரியராக இருந்திருந்தால், காசகிறிஸ்தர் விருத்தியை இயற்றியிருப்பார் என்று ஸ்ரீ அதிகார சரவலியில் கூறுகிறார். ஜைமினியை விட கசகிருதஸ்னா ஆசிரியராக இருந்தால் விருத்தி இயற்றியிருப்பார்.

மூன்றாவது தத்துவம் பிரம்மகாண்டத்தை உருவாக்கும் உபநிடதங்கள். இது வேதங்களின் தலைப்பகுதி அல்லது கடைசிப் பகுதி, எனவே ஸ்ருதிசிரஸ், வேதாந்தம், த்ரய்யந்த நிகமந்தம் என்று அழைக்கப்படுகிறது. பதராயண முனிவர் 545 எண்களைக் கொண்ட பிரம்ம சூத்திரங்களை இயற்றியவர் என்பதையும், 4 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்த பிரம்ம சூத்திரங்கள் இப்போது கையாளப்படுகின்றன என்பதையும் இங்கே மீண்டும் சொல்லத் தேவையில்லை. இந்த பிரம்ம சூத்திரங்களுக்கு போதாயன முனிவர் ஒரு விரிவான விருத்தியை எழுதினார்.

விருத்தி என்பது சூத்திரங்களின் அர்த்தங்களை சுருக்கமாக அல்லது விரிவாக விளக்கும் ஒரு படைப்பு. இப்போது இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில், முனிவரான பதராயணரான சூத்ரகாரர், எந்தவொரு கர்மத்திற்கும் (யாகங்களுக்கும்) உபாசனத்திற்கும் (பக்தி அல்லது தியானம்) பலன்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் வழங்கப்படுவதாகக் கூறுகிறார், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி உயர்ந்தவர் என்று நிரூபிக்கப்பட்டார். முந்தைய அதிகாரம். முதல் சூத்திரம் “பழமத: உப்பத்தே:” பழம் என்பது பழம், அத்த என்றால் ஸ்ரீமன் நாராயண உபபத்தே: அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், தாராள மனப்பான்மை கொண்டவர், எனவே அவர் யாகங்கள், தானங்கள் போன்றவற்றுக்கு பலன்களை வழங்குவது மட்டுமே பொருத்தமானது. , ஹோமங்கள் மற்றும் உபாசனைகள். இரண்டாவது சூத்திரத்தில் மேற்கூறியவற்றை நிறுவுவதற்கு உபநிடத நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பூர்வபக்ஷ சூத்திரமான மூன்றாவது சூத்திரத்தில், கர்மாக்கள் நேரடியாக பலன்களைத் தருகின்றன, ஆனால் உபாஸனைகள் அல்ல என்று ஜுவைமினி முனிவர் கூறுகிறார். ஜைமினி யாகங்களுக்குப் பலன் அளிக்கும் ஒரு கற்பனையான அபூர்வா இருப்பதாக கூறுகிறார்.

புண்ணிய செயல்கள் அல்லது புண்ய கர்மாக்கள் யாகங்கள், தானங்கள் மற்றும் ஹோமங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். யாகங்கள் என்பது ஒரு மிருகத்தை (ஆடு) பலியிடப்பட்டு, சோம லதாவின் சாறு (லதா என்றால் கொடி) குடிக்கப்படுகிறது. யாகங்களில் தக்ஷ்ணாகி, ஆஹவனியாக்னி, கர்ஹபத்யாக்னி என மூன்று பெயர்களைக் கொண்ட யாகத் தீகளுக்குப் பலவிதமான பொருள்களைச் செலுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவர் யஜ, அவர் யஜாமஹே, அஸ்து வோஷட், அஷ்ரவய மற்றும் வௌஷத்.

தானங்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம். ஹோமங்கள் என்பது மிருக பலி இல்லாமல் அக்னிக்கு செய்யப்படும் பிரசாதம் ஆகும்.

பூர்வந்து பாதராயண ஹேது வ்யாபதேசத் என்று கூறப்படும் கடைசி சூத்திரத்தில், ஜைமினி முனிவரின் வாதத்தை மறுத்து, ஸ்ரீமந்நாராயணன் யாகங்கள் செய்யும் கர்மங்களுக்கு பலன்களை வழங்குகிறார் என்ற உண்மையை நிறுவுகிறார். உபாசனை அல்லது பக்தியோகத்திற்கு பதிலாக பிரபத்தி செய்தவருக்கு அவர் மோட்சத்தை வழங்குகிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் கூறுகிறார் மற்றும் உபாசனைகள்.

பக்தி யோகமே மோட்சத்தை அடைவதற்கான வழி என்று அனைத்து உபநிடதங்களும் ஒரே குரலில் கூறுகின்றன. பக்தி என்பது அடிப்படையில் பெரியவர்களிடம் பக்தி என்று பொருள். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மீது ஏக மனதுடன் தீவிர தியானம் செய்வது பக்தி யோகமாகும்.

பக்தி யோகாவின் எட்டு பொருட்களைக் கையாள்வதற்கு முன், அதன் துணைப் பொருட்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இரண்டு அடிப்படை துணைகள் (1) கர்ம யோகா மற்றும் (2) ஞான யோகா.

ஸ்ரீ பகவத் கீதையில் கர்ம யோகம் மற்றும் ஞான யோகாவின் தன்மைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

இந்த கர்ம யோகமானது சமாதி எனப்படும் ஆழ்ந்த தியானத்திற்கு இன்றியமையாத முன்நிபந்தனையான பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் மனதை ஒருமுகப்படுத்த உதவும் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே உள்ளது.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசரத்தின் 9வது அத்தியாயத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர் (ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் எனப் போற்றப்படுகிறார்) கர்மா மற்றும் ஞான யோகத்தின் இயல்பை மிகவும் விரிவுபடுத்தாமலோ அல்லது விரிவுபடுத்தாமலோ துல்லியமாக பின்வருமாறு விளக்குகிறார்.

கர்மயோகம்:- ஜீவா (தன் சுயம்) மற்றும் பரமாத்மாவான பரமாத்மாவின் உண்மையான இயல்பைப் பற்றிய அறிவைப் பெற்ற பிறகு, ஒருவர் தன்னால் (ஜீவா) செய்யக்கூடிய கர்ம யோகத்தை நாட வேண்டும். இந்த கர்மயோகம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

கர்ம யோகாவின் பல்வேறு வகைப்பாடுகள்

(அ) ​​தேவர்ச்சன ரூப – நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுதல்.

(ஆ) ஜோதிஷ்டோம யாகம், வாஜபேய யாகம் போன்ற யாகம் அல்லது யாகம் செய்தல், அதில் ஆடு போன்ற விலங்குகள் பலியிடப்படும்.

(இ) சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ மற்றும் காந்தா போன்ற சிற்றின்ப இன்பங்களின் பொருள்களிலிருந்து நமது புலன்களைக் கட்டுப்படுத்தி, அவற்றை பகவான் பரமாத்மாவை நோக்கிச் செலுத்துதல்.

(ஈ) பிராணாயாமம் செய்வதன் மூலம் நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல்

(இ) தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் வழங்குதல்.

(ஊ) உபாசினம், அக்னிஹோத்ரா மற்றும் பஞ்சமஹா யாகங்களின் தினசரி சடங்குகளைச் செய்தல்.

(g) தபஸ் செய்தல். தபஸ் என்றால் தவம்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் தவங்களை கிருச்ச்ரா, சந்திராயணம் போன்றவற்றை விளக்குகிறார். சிரமப்பட்டு சபதத்துடன் செய்யப்படும் செயலே கிரிச்சரம் எனப்படும். அதில் உண்ணாவிரதமும் அடங்கும். எந்த ஒரு சபதத்துடன் செய்யப்படுகிறதோ அதுவே விரதம் எனப்படும்.

சந்திராயண விரதத்தில் உணவு உட்கொள்வதை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு வாய் நிறைய உணவு கிராசா. உணவு உட்கொள்வதற்கான கட்டுப்பாடு பின்வருமாறு.

சுக்ல பக்ஷத்தின் ஆரம்பம் (பௌர்ணமி அல்லது பூர்ணிமாவுடன் முடிவடையும் பதினைந்து நாட்கள்) பௌர்ணமி நாள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கிராஸால் உணவின் அளவை அதிகரிக்க வேண்டும் மற்றும் பௌர்ணமி நாளில் முழு சதுரம் இருக்கும். உணவுகள். அமாவாசை நாளில் முடிவடையும் கிருஷ்ண பக்ஷத்தின் தொடக்கத்தில் இருந்து, அமாவாசை நாளில் (அமாவாசை) கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக மாறும் வகையில், ஒவ்வொரு நாளும் கிராஸால் உணவின் அளவைக் குறைக்க வேண்டும், அன்று விரதம் இருக்க வேண்டும். நாள்.

மேற்கூறியவை தபஸ் எனப்படும்.

h) புனித நீரில் புனித நீராடுவதும் கர்ம யோகத்தின் ஒரு வடிவமாகும்.

i) வேதங்களைக் கற்றல்

j) வேத நூல்களின் பொருளை அறிவது

மேலே உள்ள அனைத்தும் கர்ம யோகாவின் கடினமான வடிவங்கள் மற்றும் ஒரு நபர் அவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கர்ம யோகத்தைச் செய்வதன் மூலம், ஒருவரின் சுயத்தை உணர்ந்து மனம் தூய்மையடைகிறது.

இந்த கர்ம யோகம் தினசரி மூன்று முறை சந்தியா வந்தனம் மற்றும் நித்ய நைமித்திக கர்மாக்கள் என்று அழைக்கப்படும் பிற தொடர்புடைய கர்மாக்களை செய்வதைத் தவிர என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஞானயோகம்:- மேலே விளக்கியபடி கர்மயோகம் செய்து மனதைத் தூய்மைப்படுத்தி, மனதை வென்ற பிறகு, உடலிலிருந்து வேறுபட்டு, ஜீவா என்பது பரமாத்மாவால் ஆதரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு தனக்குக் கீழ்ப்பட்டதாக உணர்ந்த பிறகு, ஜீவாத்மாவாகும். . ஒரு நபர் இடைவேளையின்றி எப்போதும் தன்னைப் பற்றியே தியானிக்க வேண்டும். கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றால் ஒருவன் தன் சுயத்தை உணர்ந்து, தன் சுய இன்பத்தின் இன்பத்தில் அகப்படாமல் இருந்தால், அவன் பக்தி யோகத்தில் இறங்குகிறான், அதுவே உயர்ந்த இலக்கை அடைவதற்கான நேரடி வழிமுறையாகும். ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில் பரமாத்மாவின் இன்பம். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஒரு அழகான உதாரணத்தைக் கூறுகிறார். நகைகள் அடங்கிய நகை மற்றும் நகை பெட்டி உள்ளது. நகைப் பெட்டிக்குள் இருக்கும் நகையைப் பார்க்க, முதலில் நகைப் பெட்டியைப் பார்க்க வேண்டும். அதுபோலவே இங்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தர்யாமி அல்லது உள் ஆன்மாவாக இருக்கும் பரமாத்மா ரத்தினமாகவும், ஜீவாத்மாவாகிய அந்தரங்க ஆத்மாவும் நகைப் பெட்டியாகவும் இருக்கிறது. ஆத்மவலோகனம் எனப்படும் தன் சுயத்தை உணர்ந்த பிறகு இருக்கும் நகைப்பெட்டியைப் பார்த்த பிறகு, ஜீவாத்மாவே அவருக்கு உயர்ந்த ஆத்மாவாகிய அந்தர்யாமியைக் காண ஆசைப்படுவது இயற்கையாகவோ அல்லது வெளிப்படையாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இருக்கிறது. எனவே இந்த ஆத்மவலோகனம் பக்தி யோகத்தை நாட விரும்பும் ஒருவருக்கு நித்திய பேரின்பம் அல்லது மோட்சத்தை அடைய அடிப்படை தகுதியை வழங்குகிறது.

பக்தி யோகா பற்றிய விவரங்கள் பின்னர் கையாளப்படும்.

கர்ம யோகா மற்றும் ஞான யோகா பயிற்சியில் பின்வரும் ஏழு பொருட்களும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த ஏழு பொருட்கள் சாதனாசப்தகம் என்று அழைக்கப்படுகின்றன, ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்தில் லகு சித்தாந்தத்தில் குறிப்பிடுகிறார்.

சாதனா சப்தகா அல்லது ஏழு பொருட்கள் பின்வருமாறு.

இந்தச் சூழலில் பக்தி யோகம் துருவ ஸ்மிருதி அல்லது துருவனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது. ஸ்மிருதி அல்லது அனுஸ்மிருதி என்பது அந்தர்யாமி அல்லது தியானம் செய்பவரின் உள் ஆன்மாவாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிப்பதாகும். துருவா என்பது மனதின் ஆழ்ந்த செறிவு என்று பொருள்படும், அதாவது தியானத்தின் போது இடையில் வேறு எந்த சிந்தனையும் வர அனுமதிக்காது. மேலே குறிப்பிடப்பட்ட சாதனா சப்தகத்தால் மட்டுமே இந்த மனநிலை சாத்தியமாகும்.

சாதனா சப்தகத்தின் விவரங்கள் பின்வருமாறு.

1) விவேகா – நாம் உண்ணும் உணவு மூன்று குறைபாடுகள் இல்லாததாக இருக்க வேண்டும். ஜாதிதுஷ்டம், ஆஷ்ரய துஷ்டம், நிமித்த துஷ்டம் ஆகிய மூன்று தோஷங்கள்.

ஜாதிதுஷ்டம் – வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முருங்கைக்காய் போன்ற தடைசெய்யப்பட்ட வகைகளில் இருந்து எழும் குறைபாடுகள்.

ஆஷ்ரய துஷ்டம் – முடி போன்ற சில புனிதமற்ற பொருட்களுடன் உணவின் இணைப்பில் ஏற்படும் குறைபாடுகள். பித்தளை அல்லது வெண்கல பாத்திரத்தில் தேங்காய், செம்பு பாத்திரத்தில் தேன், நெய் மற்றும் பால் இரும்பு பாத்திரத்தில் பரிமாறப்படுகிறது.

நிமித்த துஷ்டம் – சில விசேஷமான அல்லது வித்தியாசமான சூழ்நிலைகளில் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த சூழ்நிலைகள் நிமித்தம் என்று அழைக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தொடும் உணவு. பிராமணர்களால் விற்கப்படும் பால், நாய்கள், காக்கைகள், சேவல்கள், எலிகள், பூனைகள் மற்றும் சிறு குழந்தைகள் தொடும் உணவு. மனிதர்கள் மற்றும் கால்நடைகளால் உணவு மணம். நம் கால்களை கழுவிய பின் பாத்திரத்தில் உள்ள நீர் சமநிலை போன்றவை.

சாண்டோக்யோபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, நாம் உண்ணும் உணவு தூய்மையாக இருந்தால், பக்தி யோகத்தில் தியானம் செய்ய உதவும் சத்வ குணம் நம் மனதில் அதிகரிக்கும்.

2) விமோகா – ஆசைகள் குறிப்பாக பாலுறவில் இருந்து விடுபட்டது. அமைதியான மனதுடன் தியானம் செய்ய வேண்டும். ஒலி, தொடுதல், அழகு, சுவை, மணம் போன்ற பொருட்களை ரசிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கக்கூடாது. ஆசை நிறைவேறவில்லை என்றால் அது கோபத்திற்கு வழிவகுக்கும். கோபம் இருந்தால் நிம்மதி இருக்காது.

3) அபியாசா – இதன் பொருள் மீண்டும் மீண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருள் வடிவத்தை மனம் தியானிக்க வேண்டும். தியானத்திற்கு பொருத்தமான இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுப்பதையும் இது குறிக்கிறது, இதனால் கவனம் செலுத்துவது சாத்தியமாகும்.

4) க்ரியா – க்ரியா என்பது தினசரி சடங்குகளை முடிந்தவரை நிறைவேற்றுவதாகும், குறிப்பாக தேவயக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம், மோனுஷ்ய யாகம் மற்றும் பிரம்ம யக்ஞம் போன்ற பஞ்சமஹாயக்ஞங்கள். மேற்குறிப்பிட்ட பஞ்ச மகா யக்ஞம் உள்ளிட்ட அன்றாடச் சடங்குகளைச் செய்பவர்கள் பிரம்ம வித்தாகங்களில் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பிரம்ம வித் என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய முழுமையான ஞானம் கொண்டவர்.

5) கல்யாணம் – சத்ய, அர்ஜவ, தயா, தான, அஹிம்சை மற்றும் அனாபித்யா ஆகிய நற்குணங்களைக் கொண்டிருத்தல்.

சத்யம் என்றால் ஜீவராசிகளிடம் கருணை காட்டுவது, ஆர்ஜவம் என்றால் மனம், பேச்சு மற்றும் செயலை முழுமையாக ஒருங்கிணைத்தல் என்று நாம் நினைப்பதையே பேச வேண்டும், பேசுவதை செயலில் வைக்க வேண்டும்.

தயா என்பது கருணை அல்லது இரக்கம் என்று பொருள்படும், வேறுவிதமாகக் கூறினால், பிறரின் துன்பத்தை அதிலிருந்து எந்தப் பிரதிபலனையோ அல்லது வெகுமதியையோ எதிர்பார்க்காமல் அதை அகற்றுவதற்கான உண்மையான விருப்பம்.

அஹிம்சை என்பது மற்றவர்களுக்கு மனம், பேச்சு மற்றும் செயலால் துன்பம் தராத முழுமையான அகிம்சை.

தானம் என்றால் பேராசை அல்லது பேராசை இல்லாதது என்று பொருள். தகுதியான மற்றும் தேவையுள்ள நபருக்கு அவர் நேர்மையான வழிகளில் பெற்ற எந்தவொரு பொருளையும் வழங்குவதும் இதன் பொருள்.

அனாபித்யா என்றால் மற்றொரு மனிதனின் சொத்து மற்றும் செல்வத்தை தன்வசப்படுத்த ஆசைப்படாமல் இருப்பது.

மற்றவர்களுக்குத் தீங்கிழைக்க நினைக்காதது என்றும் பொருள். மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இருக்கக்கூடாது. பகவத் கீதையின் 13 வது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட குணங்கள் மற்றும் கௌதம தர்ம சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட ஆன்மாவின் எட்டு குணங்களையும் இது குறிக்கிறது.

6) அவவசதா – அவசாதா என்றால் துன்பம், துக்கம் அல்லது துக்கம். அனவசாதா என்றால், துன்பம் இல்லாமல் இருப்பது அதற்கு நேர் எதிரானது. பக்தி யோகத்தை நாடுபவர் மன வருத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

7) அனுதர்ஷா – உத்தர்ஷா என்றால் அதிகப்படியான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி. அனுத்தர்சா என்றால் அதற்கு நேர் எதிரானது, அதிக மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது. பக்தி யோகம் செய்ய ஒருவருக்கு இதுவும் இருக்கக்கூடாது.

மேலே விவரிக்கப்பட்ட சாதனா சப்தகம் (ஏழு புள்ளிகள்) கர்ம யோகத்துடன் இருக்க வேண்டும் அல்லது மேலே விளக்கப்பட்டுள்ளபடி கர்ம யோகம் மற்றும் ஞான யோகம் இரண்டையும் சேர்த்து இருக்க வேண்டும், மேலும் இவை ஒரு நபர் பக்தி யோகம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனைகள் ஆகும்.

பக்தி யோகம்:- மீண்டும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாராவின் உபய விபாக அதிகாரத்தில் பக்தி யோகத்தின் தன்மையை அழகாக விளக்குகிறார் அது பின்வருமாறு.

பக்தி யோகம் என்பது தியானத்தின் ஆதரவாளரான, வேறு எந்த உடலின் கட்டுப்பாட்டிலும் இல்லாத, வேறு எந்த உடலுக்கும் அடிபணியாத பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மீது அதீத பக்தியுடன் ஆழ்ந்த தியானம் ஆகும். இந்த தியானம் என்பது எண்ண ஓட்டம் போன்ற எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம், இது மனதில் இறைவனை உணரும் நிலைக்கு வழிவகுக்கும், இது வெளிப்புற மற்றும் முழு உணர்தலுக்கு கிட்டத்தட்ட சமமானது. பரம ஸ்தலமான ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்திற்கு அவர் பயணம் செய்யும் நாள் வரை ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டும், மேலும் இந்த ஆன்மா இந்த சரீரத்தை விட்டு வெளியேறும் முன் இறைவனை நினைவு கூர்ந்து முடிவடையும். இதற்கு ஆன்டிமாஸ்மிருதி என்று பெயர். கர்ம யோகத்துடன் ஒருவரின் வர்ணம் (சாதி) மற்றும் ஆசிரமம் (வாழ்க்கை நிலை) ஆகியவற்றின் படி தினசரி சடங்குகளின் செயல்திறன் ஏற்கனவே கூறியது போல். சாதனா சப்தகா மற்றும் ஆத்மா அல்லது கர்ம யோகத்துடன் ஒரு சுயத்தை உணர்தல்,

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சாதிகள். வாழ்க்கையின் நான்கு நிலைகள் அல்லது நான்கு ஆசிரமங்கள் பிரமச்சார்யா, க்ரிஹஸ்தா, வானபிரஸ்தம் மற்றும் சம்யாசம் (இளங்கலை, திருமணம், காட்டில் வாழ்வது மற்றும் துறவி).

பக்தி யோகத்தை பிராமண, க்ஷத்திரிய, வைசிய சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். (இந்த பக்தி யோகம் திரிவர்ணிகாதிகாரம் அல்லது மூன்று வர்ணங்களுக்குள் மட்டுமே உள்ளது). பெண்களும் பக்தி யோகம் செய்யத் தகுதியற்றவர்கள், ஏனென்றால் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேதம் ஓதத் தகுதியற்றவர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதங்கள் அவர்களுக்கு அணுகப்படவில்லை.

மோட்சம் அல்லது முக்திக்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படும் இந்த பக்தி யோகம் பரபக்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த பரபக்தியானது பகவான் ஸ்ரீமன் நாராயணனை உணரும் ஆழ்ந்த விருப்பத்தை உருவாக்குகிறது. தியானத்தின் போது இந்த உணர்தல் அடையப்படும் போது இந்த நிலை பரஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பரஞானம் பரம பக்தி எனப்படும் பரம பக்தி என்று அழைக்கப்படுகிறது. பரபக்தி, பரஞானம், பரம பக்தி ஆகிய மூன்று நிலைகளைக் (நிலைகள்) கடந்த சம்பந்தப்பட்ட நபருக்கு மோக்ஷம் வழங்குவதை விரைவுபடுத்த இந்த பரம பக்தி ஸ்ரீமன் நாராயணனைச் செய்கிறது.

“சமாதி” என்று அழைக்கப்படும் ஆழ்ந்த தியான நிலையை அடைய ஏழு கீழ் படிகள் உள்ளன, மேலும் இந்த ஏழு படிகள் சமாதி நிலையுடன் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது.

பக்தி யோகாவின் எட்டு அங்கங்கள் அல்லது துணை (கூறுகள்) ஆகும்

1) யமம் – இது புலன்களைக் கட்டுப்படுத்தும் பொருள். இதில் ஐந்து துணைத் துணைகளை மட்டும் பயிற்சி செய்து சாதித்தால் இது சாத்தியமாகும். ஐந்து துணை துணைகள் ஆகும்

(அ) ​​பிரம்மச்சரியம் அல்லது பிரம்மச்சரியம் – ஒருவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை விரும்பக் கூடாது. அவன் தன் மனைவிக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.

(ஆ) அஹிம்சை – ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யவோ, பேசவோ, சிந்திக்கவோ கூடாது.

(இ) அஸ்தேயா – ஒருவர் மற்றவரின் உடைமைகளையோ அல்லது சொத்தையோ திருடக்கூடாது. பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்த மற்றும் பிரத்தியேகமான சொத்தாக இருக்கும் அவரது ஆன்மா முற்றிலும் சுதந்திரமானது மற்றும் கீழ்ப்படிந்தது இல்லை என்று ஒருவர் நினைக்கக்கூடாது. மேற்கூறியவாறு அவர் நினைத்தால் அவர் ஆத்மபஹாரி (ஆன்மாவைத் திருடியவர்) என்று குற்றம் சாட்டப்படுவார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பொருளை மற்றொன்றைச் சொந்தமாக நினைப்பதே திருடுதல். ஆத்ம பஹாரா இந்த உலகிலேயே மிகப் பெரிய குற்றம்.

(ஈ) அபரிகிரஹா – தன் சுயநலத்திற்காக எந்தப் பரிசையும் ஏற்காதது.

(இ) சத்தியம் – ஒருவன் மற்றவர்களுக்குச் சுவையாக இருக்கும், அவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ளப்படும் உண்மையைப் பேச வேண்டும். விரும்பத்தகாத விஷயம் என்றாலும் உண்மை அல்லது உண்மை பேசக்கூடாது.

2) நியமா – அனைத்து புலன்களையும் ஒருவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் மற்றும் எந்த ஒரு பொருள் இன்பம் தரும் பொருளின் பின்னால் ஓட அனுமதிக்காது. இது மீண்டும் ஐந்து துணை துணைகளைக் கொண்டுள்ளது, அவை பின்வருமாறு.

(அ) ​​சந்தோஷம்:- தனக்குக் கிடைத்ததில் திருப்தியடைதல் மற்றும் பொருள் இன்பப் பொருட்களைத் தவிர்ப்பது.

(ஆ) சௌசம் – சௌசம் என்றால் சுத்திகரிப்பு என்று பொருள். இந்த சுத்திகரிப்பு இரண்டு வகைப்படும். முதலாவது வெளிப்புற சுத்திகரிப்பு, இது சேறு மற்றும் நீரைக் கொண்டு உடலை சுத்தப்படுத்துதல் மற்றும் இரண்டாவது வகை மனதை தூய்மைப்படுத்துவதாகும். உண்ணும் உணவில் தூய்மை இருக்க வேண்டும்.

ஜாதி துஷ்டம், ஆஷ்ரய துஷ்டம் மற்றும் நிமித்ததுஷ்டம் கூடாது என்றால், சாதனா சப்தகத்தின் கீழ் முன்பு விளக்கப்பட்டது.

ஒருவர் எடுக்கும் எந்த உணவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ச்சனை வடிவில் அர்ச்சனை செய்த பிறகு, சாளக்கிராமம் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹம் அல்லது இரண்டும் செய்திருக்க வேண்டும்.

(இ) தபஸ் – இது ஏகாதசி, ஸ்ரவண துவாதசி, ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருக்க வேண்டும். தபஸ் என்றால் சாப்பிடுவதற்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அல்லது சாப்பிடாமல் இருப்பது எப்போதும் தியானத்திற்கு எதிரி.

(ஈ) ஸ்வாத்யாயா – ஒரு போதகரின் காலடியில் சாய்ந்தபின் வேதங்களை ஓதுதல். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நாமங்களை உச்சரிப்பது என்றும் பொருள்.

(இ) ப்ரணிதானம் (பிரம்ம பிரவண்யம்) – மனதை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் தங்க வைப்பது.

(3) ஆசனம் – அமர்ந்திருப்பது. தியானம் செய்பவர் சுத்திகரிக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். இந்த தர்பம் (குசா புல்) மீது கோமயம் (மாட்டு சாணம்) சேர்த்து தண்ணீர் தடவி அந்த இடத்தை சுத்திகரிக்க வேண்டும். இதற்கு மேல் அகினம் (மான் தோல்) வைக்க வேண்டும். மேலே உள்ள துணியை மேலே வைக்க வேண்டும் மற்றும் இந்த ஏற்பாடு ஒரு குஷனிங் விளைவை அளிக்கிறது. மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு வடிவில் ஒரு மரப் பலகை. சக்கரம், பத்மம், கூர்மம், மயூரம், குக்குதம், வீரம், ஸ்வஸ்திகா, பத்ரா, சிம்ஹாசனம், முக்தாசனம், கோமுகம் ஆகியவற்றை வைத்து தியானம் செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்.

(4) பிராணயாமம் – இதன் பொருள் மூச்சைக் கட்டுப்படுத்துவது. இது செயல்பாட்டின் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் ரேசகா என்று அழைக்கப்படுகிறது, இதில் இடது மூக்கை மிகக் குறுகிய விரலால் மூடி, அதற்கு அடுத்ததாக, கண்களை மூடிக்கொண்டு வலது மூக்கிலிருந்து காற்றை வெளியேற்றும். இரண்டாவது கட்டம் பூராகா என்று அழைக்கப்படுகிறது, இதில் வலது மூக்கை கட்டைவிரலால் மூடி, இடதுபுறத்தில் உள்ள காற்றை இடது மூக்கின் வழியாக உள்ளிழுக்க வேண்டும். மூன்றாவது நிலை கும்பகா என்று அழைக்கப்படுகிறது, இதில் இரண்டு மூக்குகளும் மேலே குறிப்பிட்டபடி மூன்று விரல்களால் மூடப்பட்டு, மூச்சைக் கட்டுப்படுத்தி அந்த மட்டத்தில் சுமார் 36 வினாடிகள் பராமரிக்கப்படுகிறது, இது சிறந்த காலம், 24 வினாடிகள் அடுத்தது சிறந்தது அல்லது குறைந்தபட்சம். 12 வினாடிகள். முதல் எழுத்து Aa போன்ற ஒரு குறுகிய எழுத்துக்களை உச்சரிக்க தேவையான ஒரு வினாடியை மாத்ரா என்று கருதலாம். மூச்சை அடக்கும் போது அஷ்டாக்ஷர மந்திரம் அல்லது த்வய மந்திரத்தை மனதிற்குள் 25 முறை சொல்ல வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பிராணாயாமம் அவசியம்.

(5) ப்ரத்யாஹார – இதன் பொருள், இந்திரியங்களுக்கும் புலன்களுக்கும் பின்னால் இருக்கும் மனதை, பற்றின்மை உணர்வை வளர்த்து, சிற்றின்ப இன்பங்களில் உள்ள குறைபாடுகளை உணர்ந்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி இழுப்பது.

(6) தாரணை – சிற்றின்ப இன்பங்களில் பற்றின்மை அடைந்த பிறகு, திவ்ய மங்கள விக்ரஹம் (சுபமானது சுபாஷ்ரயா) என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனின் மங்களகரமான மற்றும் அழகான வடிவத்தின் மீது அன்பு அல்லது பக்தியை வளர்த்துக் கொண்ட பிறகு, தியானம் அவரது மனதை தொடர்ந்து மற்றும் தொடர்ந்து பெற வேண்டும். உன்னதமானவரின் தாமரை பாதங்களில் மற்றும் மனம் மேலே இருந்து நகராமல் இருப்பதைப் பார்த்து.

(7) தியானம் – பல்வேறு பிரம்ம வித்யாக்களின் பின்னணியில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள மங்களகரமான பண்புகளுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணனை ஆழ்ந்த தியானம் செய்வதாகும், இதன் விவரங்கள் இதற்குப் பிறகு கையாளப்படும். இந்த தியானம் எப்போதும் எண்ணெய் ஓட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது, இது இடைவெளி இல்லை என்பதைக் குறிக்கிறது. எனவே இந்த தியானம் ஒரு தொடர்ச்சியான சிந்தனையாகும், இது வேறு எந்த சிந்தனைக்கும் இடையூறு ஏற்படாது. இந்த தியானத்தை மேற்கொள்ளும் போது, ​​ஐந்து ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பரமபிதாவின் திவ்ய மங்கள விக்ரஹத்தை மனம் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதங்கள் ஆகும்

சுதர்சன சக்கரம் – இது ஒரு மனிதனின் மனதைக் குறிக்கிறது.

பாஞ்சஜன்யா – சங்கு- சங்கு – இது 24 கோட்பாடுகளில் ஒன்றான சாத்விகா அஹம்காரத்தைக் குறிக்கிறது.

கௌமோதகி – கடா – சூலாயுதம் – இது மகானைக் குறிக்கிறது.

சார்ங்கம் – வில் – இது அஹம்காரத்தைக் குறிக்கிறது

அம்புகள் – இவை பத்து புலன்களைக் குறிக்கும்.

கட்கா – வாள். இது ஞானம் அல்லது நனவைக் குறிக்கிறது.

ஆபரணங்கள் ஆகும்

கிரீட்டா – கிரீடம்

மகுடா – தலையின் ஆபரணம்

சூடாவதம்சம் – தலையில் அணியும் மாலை.

மகர குண்டலம் – காது வளையங்கள் முதலை வடிவில் உள்ளன.

கிரைவயகஹாரா – கழுத்து சரிகை

கேயுரா – ஆர்ம் லெட்

கடக – வளையல்

ஸ்ரீவத்சா – இறைவனின் மார்பில் முடி

கௌஸ்துபா – இறைவனின் மார்பில் உள்ள ரத்தினம். இந்தக் கௌஸ்துபா ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

முக்தா – முத்துக்களின் ஒற்றை சரம்.

பீதாம்பர – மஞ்சள் ஆடை

காஞ்சி குணா – தங்க இடுப்பு பெல்ட்.

நுபுரா – ஒரு கணுக்கால்.

(8) சமாதி – தியானாவின் தினசரி பயிற்சிக்குப் பிறகு அடையும் ஒரு நிலை, இதில் உயர்ந்த உயிரினத்தின் உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபம் தியானிக்கப்படுகிறது. சமாதி என்பது தியானத்தில் இருந்து எழுந்த பிறகும் இறைவனை முழுமையாக உணர்ந்து கொள்வதைக் குறிக்கிறது.

முப்பத்திரண்டு பிரம்மவித்யா:

வித்யா என்றால் அறிவு. இந்த வார்த்தையின் அடிப்படை வேர் “வித் ஞானே”. இந்த அறிவு (1) சாதாரண அறிவு (2) தியான அறிவு என இரண்டு வகைப்படும். பிரம்மா என்றால் உயர்ந்த கடவுள் ஸ்ரீமன் நாராயணன் என்று பொருள். ஆக பிரம்ம வித்யா என்றால் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறவும் நித்திய ஆனந்தத்தை அடையவும் பிரம்மனை தியானம் செய்வதாகும். எனவே இந்த பிரம்ம வித்யா பக்தி யோகமாகும், அதன் விவரங்கள் முந்தைய பத்திகளில் கையாளப்பட்டன.

இந்த பிரம்மவித்யாக்கள், ஒவ்வொன்றும் மோட்சத்தை அடைவதற்கான ஒரு சுயாதீனமான வழிமுறையாகும், அவை ஒவ்வொன்றும் முப்பத்திரண்டு எண்ணிக்கையில் உள்ளன, மேலும் அவை ஒவ்வொன்றும் பக்தி யோகத்தின் ஒரு வடிவமாகும், இது சரணாகதி அல்லது பிரப்பத்தி, இது மோட்சத்தை அடைவதற்கான சுயாதீனமான வழிமுறையாகும்.

முன்பு விளக்கியபடி கர்ம யோகமும் ஞான யோகமும் பக்தி யோகத்திற்கு (பிரம்மவித்யா) துணையாக உள்ளன. இத்துடன் ப்ரபத்தி அல்லது சரணாகதியை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் செய்ய வேண்டும், இது ஒரு திரிவர்ணிக மனிதனை பக்தி யோகம் செய்ய விடாமல் தடுக்கும் பாவங்களை (புண்ணிய மற்றும் பாபா) கழுவ வேண்டும் அல்லது வைசிய சாதிகள்). பக்தி யோகத்தைத் தொடங்குவதற்கான இடையூறுகளை நீக்கும் இந்தப் பிரபத்தியை அங்க பிரபத்தி என்று அழைக்கப்படுகிறது. அங்க என்றால் துணை. பக்தி யோகம் அல்லது பிரம்ம வித்யா தொடங்கும் வரிசை பின்வருமாறு. இரண்டு மாற்று வரிசைகள் உள்ளன.

நான் – முதல் வரிசை:

(அ) ​​கர்ம யோகம் மற்றும் சாதனா சப்தக பயிற்சி

(ஆ) ஒரு சுயத்தை உணர்ந்து கொள்ளுதல் (ஆத்மசக்ஷத்கரா அல்லது ஆத்மவலோகனா)

(இ) அங்க பிரபத்தி

(ஈ) பக்தி யோகம் – அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றி கீழே குறிப்பிடப்படும் பிரம்மவித்யாக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது.

II-இரண்டாம் வரிசை:

(அ) ​​கர்ம யோகம் மற்றும் சாதனா சப்தக பயிற்சி

(ஆ) ஞான யோகா

(இ) ஆத்மவலோகனா

(ஈ) அங்கபிரப்பட்டி

(இ) பக்தி யோகம், அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றும் பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது

பக்தி யோகம் செய்யும் போது அஷ்டாங்க யோகத்தை கடைபிடிக்கும்போது மூன்று விஷயங்களை முக்கியமாக தியானிக்க வேண்டும்

(அ) ​​திவ்ய மங்கள விக்ரஹம் கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனைத் தியானிப்பதும், அவரது மனைவியான மகாலட்சுமியுடன் எப்போதும் இணைந்திருப்பதும், தியானம் செய்பவரின் உடலாகிய தியானம் அல்லது ஜீவாத்மா ஆகிய இருவருமே ஒரே ஆன்மாவாகவோ அல்லது அந்தர்யாமியாகவோ ஆகிறது. பரமாத்மா அல்லது பரமாத்மாவின் உடல் ஜீவாத்மாவின் ஆன்மா.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பரமாத்மா அல்லது பரமாத்மாவைப் பற்றி தியானிக்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருள் பண்புகளில் இரண்டு வகைகளையும் தியானிக்க வேண்டும். அவை (I) ஸ்வரூப நிருபக தர்மங்கள் (இங்கு தர்மம் என்பது கல்யாண குணம்) மற்றும் (ii) தியானம் செய்பவர் தியானம் செய்யத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பிரம்ம வித்யாவுடன் மட்டுமே தொடர்புடைய மங்களகரமான பண்புக்கூறுகள் என்று அழைக்கப்படும் ஆறு அடிப்படை மங்களகரமான பண்புகளாகும்.

(ஆ) தன்னை அறிந்தவன், செய்பவன், அனுபவிப்பவன், எப்பொழுதும் ஸ்ரீமன் நாராயணனுக்கு அடிபணிந்தவன், அணுவைப் பற்றி, தன் சுயத்தை அறிந்துகொள்வது (பிரத்யக்த்வா எனப்படும்)

(இ) முக்தியை அடைவதற்காக ஒருவர் கடைப்பிடித்த பிரம்மவித்யாவைப் பற்றி சிந்திப்பது.

(ஈ) பிரம்ம வித்யாவின் முடிவில் ஒருவர் அனுபவிக்கப் போகும் பலன்களின் வரிசை, அதாவது ஆன்டிமா ஸ்மிருதி (கடைசி நினைவகம்), ஒரு சிறிய உடலுடன் ஆன்மா வெளியேறுவது அல்லது மரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரிரா, விரஜா நதிக் கரையை அடைவது, அர்ச்சிராடி மார்கா அல்லது வழித்தடத்தில் சூக்ஷ்ம சரிராவை விட்டு வெளியேறி, விரஜா நதியைக் கடந்து எதிர் கரையை அடைந்து, ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் எல்லைக்குள் நுழைந்து, பிரம்மலங்காரத்தைப் பெற்று, பைன் தம்பதிகள் அமர்ந்திருக்கும் பியா பர்யநாக அல்லது சிம்மாசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். , சிம்மாசனத்தில் ஏறி தெய்வீக தம்பதியருக்கு அறிக்கை செய்தல், குணாஷ்டகம் எனப்படும் எட்டு பண்புகளை மலரச் செய்தல், மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவதன் மூலம் பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவையில் அர்ச்சனை செய்யப்படுதல் அல்லது தீட்சை பெறுதல்.

முப்பத்திரண்டு பிரம்ம வித்யாக்கள் பின்வருமாறு. இது ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள அதிகாரங்களின் வரிசையில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

(1) சத்வித்யா: இந்த பிரம்மவித்யா ஸ்வேதகேதுவிற்கு சாந்தோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் அவரது தந்தை உத்தாலக முனிவரால் கற்பிக்கப்படுகிறது.

(அ) ​​ஸ்வரூப நிருபக தர்மங்கள் எனப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஆறு குணங்கள் தியானிக்கப்பட வேண்டியவை,

i) சத்யத்வா – இந்த பண்பின் மூலம் உயர்ந்த ஜீவன் பத்த ஜீவா என்று அழைக்கப்படும் விடுவிக்கப்படாத ஆன்மாவிலிருந்து வேறுபட்டது, மேலும் பத்த ஜீவன் வசிக்கும் மரண உடலிலிருந்து வேறுபட்டது.

சத்யத்வா என்பது ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உள்ளார்ந்த இயல்பு மற்றும் ஸ்வபாவா என்று அழைக்கப்படும் சாதாரண இயல்பு ஆகிய இரண்டிலும் மாற்றத்திலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது.

ii) ஞானத்வா- எப்போதும் எல்லாம் அறிந்தவர். இந்த பண்பின் மூலம் பரமாத்மா முக்தாத்மாவிலிருந்து வேறுபட்டது (முக்தி பெற்ற ஆன்மா)

iii) அனந்தத்வா- பரமாத்மா வெளி, நேரம் மற்றும் பொருள் ஆகியவற்றில் வரம்பு குறைவாகவோ அல்லது எல்லையற்றவராகவோ இருக்கிறார், வேறுவிதமாகக் கூறினால், அவர் முழு பிரபஞ்சத்தையும் வெளிப்புறமாகவும் அகமாகவும் சூழ்ந்துள்ளார், அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு அந்தர்யாமி ஆவார். இந்த அம்சம் அவரை நித்யா சூரியிலிருந்து வேறுபடுத்துகிறது.

iv) ஆனந்தத்வா – எப்போதும் எல்லையற்ற ஆனந்தத்துடன்.

v) அமலாத்வா – களங்கமற்ற தன்மை

vi) ஸ்ரீயாபதிவா – மகாலட்சுமி தேவியின் மனைவி.

பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஸ்வரூபம் அல்லது உள்ளார்ந்த இயல்பை நிலைநாட்டும் மேற்கண்ட ஆறு குணாதிசயங்கள் ந்யாசவித்யா உட்பட விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு பிரம்மவித்யாவிலும் தியானிக்கப்பட வேண்டும்.

(ஆ) இந்த வித்யாவில் மட்டுமே தியானிக்கப்பட வேண்டிய பிரத்தியேக குணங்கள் அல்லது கல்யாண குணங்கள் பின்வருமாறு:

i) ஜகதுபாதனத்வம் – இந்த பிரபஞ்சத்திற்கான பொருள் காரணம்

ii) ஜகந்நிமிதத்வம் – இந்த பிரபஞ்சத்திற்கான செயல்பாட்டுக் காரணம்.

iii) சர்வஜ்ஞாத்வா – சர்வ அறிவாளி

iv) சர்வ சக்தி யோகம் – சர்வ சக்தி

v) சத்ய சங்கல்பத்வம் – அசைக்க முடியாத விருப்பத்தை உடையது.

vi) சர்வாந்தரத்வம் – எல்லாவற்றிலும் உள்ளான ஆத்மா அல்லது அந்தர்யாமி.

vii) சர்வதாரத்வம் – முழு பிரபஞ்சத்தையும் ஆதரிக்கிறது.

viii) சர்வ நியந்த்ருத்வம் – ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.

(இ) இந்த வித்யாவில் மோட்ச பலனைப் பற்றிய குறிப்பிட்ட குறிப்பு: சாண்டோக்யோபனிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில், இந்த பிரம்ம வித்யாவை (சத் வித்யா) பயிற்சி செய்து, தியானம் செய்பவர் பிராரப கர்மாவின் காலாவதியில் மோட்சத்தை அடைவார் என்று கூறப்படுகிறது.

2) ஆனந்தமய வித்யா:- இந்த பிரம்மவித்யா தைத்தரிய உபநிஷத்தின் ஆனந்தவல்லியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அ) ​​மேலே குறிப்பிட்டுள்ள ஆறு ஸ்வரூப நிருபக தர்மங்களையும், ஆனந்தமயமான பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிக்கும்போது தியானிக்க வேண்டும்.

(ஆ) இந்த வித்யாவில் தியானிக்கப்பட வேண்டிய பிரத்தியேகமான பண்புகள்

i) ஆகாசம், வாயு, தேஜஸ், நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பூதங்களை உருவாக்கியவர்

ii) அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் ஆகியவற்றுக்கு அவர் அந்தர்யாமி

iii) அவர் பிரபஞ்சத்தை விரும்பி உருவாக்குகிறார்

iv) அவர் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்து உயிரினங்களிலும் அந்தர்யாமியாக நுழைந்தார், மேலும் அவை அவருக்கு உடல்களாக மாறிவிட்டன.

v) அவர் அனைத்து ஜீவாக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறார், அவருடைய கிருபை இல்லாமல் யாரும் வாழ முடியாது.

vi) சூரியன், சந்திரன், வாயு, இந்திரன், அக்னி, யமன் மற்றும் பிற விண்ணுலகக் கடவுள்களுக்கு அவர் பயங்கரமானவர், அவர்கள் ஆனந்தமயமான ஸ்ரீமன் நாராயணனிடம் பயத்தின் காரணமாக தங்கள் கடமைகளைச் சரியாகவும் உடனடியாகவும் செய்கிறார்கள்.

(இ) இந்த பிரம்ம வித்யாவை நாடுபவருக்கு மோக்ஷ பலனைக் குறிப்பிடவும்

இந்த ஆனந்தவல்லியின் முடிவில் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் நித்தியமான மற்றும் எல்லையற்ற ஆனந்தமாக இருக்கும் பிரம்மானந்தம் அகமோஹத ஸ்ராத்ரியத்தால் அடையப்படுகிறது, அதாவது வைராக்கியம் உள்ளவர், பரமாத்மாவான ஆனந்தமயனை தியானம் செய்தவர்.

குறிப்பு: தியானிக்கப்படும் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிற்கும் தொடர்புடைய அனைத்து பிரம்ம வித்யாக்களின் பெயர்கள் மற்றும் பிரத்தியேகமான மங்களகரமான பண்புகளை அறிவது கல்விசார் ஆர்வமாக உள்ளது மற்றும் இது மிகவும் விரிவான மற்றும் நீண்ட விவகாரமாக இருக்கும். இந்த கலியுகத்தில் எந்த உடலும் பக்தி யோகத்தை நாடுவதில்லை, இது பயிற்சி செய்வது மிகவும் கடினம். நம்மாழ்வாரைப் போற்றிப் புகழ்ந்து மதுரகவி ஆழ்வார் இயற்றிய “கண்ணினுன் சிறுத்தம்பு” என்ற தமிழ்த் தெய்வத்தமிழ் 12000 முறை பாடிய யோகநிஷ்டரான நாதமுனி முனிவர் கூட நம்மாழ்வாரைக் கண்டு உணர்ந்து 4000 திவ்யப் பாசுரங்களின் உபதேசத்தைப் பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பக்தி யோகா பயிற்சி செய்யவில்லை. பக்தி யோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அந்த பிறவி அல்லது ஜென்மத்தின் முடிவில் மோட்சத்தை வழங்குவார் என்று துல்லியமாக கூற முடியாது, அதில் ஒருவர் பக்தி யோகத்தை நாடலாம்.

எனவே இந்த கலியுகத்தில் பக்தி யோகம் செய்ய எந்த உடலும் துணிவதில்லை.

எனவே இந்த விரிவுரையில் நான் 32 பிரம்ம வித்யாக்களின் பெயர்களையும் அது குறிப்பிடப்பட்டுள்ள உபநிடதத்தின் பெயரையும் மட்டுமே குறிப்பிடுகிறேன். இந்த தகவல் போதுமானதாக இருக்கும்.

நான் ஏற்கனவே சத்வித்யா மற்றும் ஆனந்தமய வித்யாவை கையாண்டுள்ளேன். பட்டியலின் முழுமைக்காக நான் அவர்களின் பெயர்களை இங்கே மீண்டும் சொல்கிறேன் மற்றும் முடிவில் நயாச வித்யாவின் சில விவரங்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.

பிரம்ம வித்யாவின் பெயர்

அது குறிப்பிடப்பட்டுள்ள உபநிடதத்தின் பெயர்

இந்த வித்யா விவாதிக்கப்படும் அல்லது கையாளப்படும் ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள அதிகாரத்தின் பெயருக்கான பலா அல்லது பழம்.

சத்வித்யா. உத்தாலக ஸ்வேதகேதுவிற்கு உபதேசம் செய்கிறார்

சாந்தோக்யா – 6 வது அத்தியாயம்

மோட்ச பலம்

இக்ஷத்யாதிகாரணா

ஆனந்த வித்யா அல்லது ஆனந்தமய வித்யா. இது எந்த உடலுக்கும் உபதேசிக்கப்படவில்லை.

தைத்தரிய உபநிடதம். ஆனந்தவல்லி

மோட்ச பலம்

ஆனந்தமயதிகரண

அந்தராதித்ய வித்யா

சந்தோக்ய இஸ்த் அத்தியாயம், 6வது காண்டம், 6வது மந்திரம்

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

அந்தராதிகாரனா

ஆகாஷ வித்யா

சந்தோக்யா இஸ்த் அத்தியாயம், 9வது காண்டா

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

ஆகாச அதிகாரம்

பிராண வித்யா

சாந்தோக்யா 1-11-5

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

பிராணாதிகரணம்

காயத்ரி ஜோதிர் வித்யா

சாந்தோக்யா 3-12

மோட்ச பலம். இங்கே ஸ்வர்க லோகத்தை அடைவது என்பது மோட்சத்தைக் குறிக்கிறது

ஜோதிராதிகரணம்

பிரதர்தன வித்யா

கௌசிதகி உபநிஷத் 3 வது அத்தியாயம்

மோட்ச பலம். இந்த வித்யாவை நாடுபவர் முதலில் இந்திரனின் ஸ்வர்க லோகத்தை அடைந்து அங்கு கணிசமான காலம் தங்கி ஸ்ரீ வைகுண்டத்திற்கு செல்கிறார்.

இந்திர பிராணாதிகரணம்.

சாண்டில்யா வித்யா

சாந்தோக்யா 3-14

அக்னிரஹஸ்யம் பிருஹதராயனக உபநிஷத் 7-6-1

மோட்ச பலம்

ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்

நசிகேத வித்யா. யம பகவான் இந்த வித்யாவை நாச்சி கேதாக்களுக்கு உபதேசிக்கிறார்

கடோபநிஷத்

மோட்ச பலம்

அத்ராதிகரணம்

உபகோசலா வித்யா. சத்யகாம முனிவர் உபகோசலைக்கு இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சந்தோக்யா 4வது அத்தியாயம். 10 முதல் 15 கந்தாக்கள்

மோட்ச பலம்

அந்தர அதிகாரம்

அந்தர்யாமி வித்யா

பிருஹதாரண்யகம் 5 வது அத்தியாயம் மற்றும் 7 வது பிராமணம் சுபலோபநிஷத்

மோட்ச பலம்

அந்தர்யாமி அதிகாரம்

அக்ஷரா பரா வித்யா

முண்டக உபநிடதம்

மோட்ச பலம்

அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

விஸ்வாணர வித்யா. அஸ்வபதி மன்னன் இந்த வித்யாவை ஆறு முனிவர்களுக்கு கற்பிக்கிறான்

சாந்தோக்யா – 5-11-24

மோட்ச பலம்

விஸ்வநாதிகரணம்

பூம வித்யா. சனத்குமார முனிவர் நாரத முனிவருக்கு இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சாந்தோக்யா 7வது அத்தியாயம்

மோட்ச பலம்

பூமதிகரணம்

கார்கி அக்சரா வித்யா

பிருஹதாரண்யகம் 5-8-8

மோட்ச பலம்

த்ரிமாத்ரா பிரணவ வித்யா

பிரஸ்னோபநிஷத் 5-5

மோட்ச பலம்

ஏக்ஷதிகர்மாதிகரணம்

தஹரா வித்யா

சாந்தோக்யா 8வது அத்தியாயம்

மோட்ச பலம்

தஹராதிகரணம்

அங்குஷ்டா ப்ரமிதா வித்யா

கடோபநிஷத்

மோட்ச பலம்

பிரமிதாதிகாரணம்

ஜோதிஷம் ஜோதிர் வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 6-4-16

மோட்ச பலம்

மத்வாதிகாரணம்

மது வித்யா

சாந்தோக்யா 3-1

மோட்ச பலம்

மத்வாதிகாரணம்

சம்வர்க வித்யா. ராஜா ஜனஸ்ருதிக்கு ரைக்வா முனிவர் இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சாந்தோக்யா 4-3

மோட்ச பலம்

அப சூத்ராதிகரணம்

ஆகாச வித்யா

சாந்தோக்யா 8வது அத்தியாயம்

மோட்ச பலம்

அர்த்தாந்தர வ்யாபதேசாதிகரணம்

பாலகி வித்யா

கௌசிதகி உபநிடதம். பிருஹதாரண்யக உபநிஷத்

மோட்ச பலம்

ஜகத்வா சித்வாதிகாரணம்

மைத்ரேயி வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 4-4

மோட்ச பலம்

வாக்ய அன்வயாதிகாரணம்

பஞ்சாக்னி வித்யா. மன்னன் பிரவாஹனா இந்த வித்யாவை அருணி முனிவருக்கு உபதேசிக்கிறார்.

சாந்தோக்ய உபநிடதம் 5-3

மோட்ச பலம் முதலில் தன்னை மகிழ்வித்து பின்னர் ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில் பைன் தம்பதிகளுக்கு சேவை செய்கிறார்.

தடந்தரா பிரதிபத்தி அதிகாரம்

புருஷ வித்யா

தைத்திரீய உபநிஷதம்

மோட்ச பலம்

புருஷ வித்யாதிகாரனா

அக்ஷிஷ்டா ஸத்ய பிரம்ம வித்யா

பிருஹதாரண்யகம் உபநிஷத் 5-7

மோட்ச பலம்

இஸவாஸ்ய வித்யா

இஸவாஸ்ய உபநிஷத்

மோட்ச பலம்

உஷஸ்திகஹோலா வித்யா. யக்ஞ வல்கிய முனிவர் இந்த வித்யாவை உஷஸ்தருக்கும் கஹோலாவுக்கும் உபதேசிக்கிறார்.

பிருஹதாரண்யகா 5-4 மற்றும் 5-5

மோட்ச பலம்

அந்தரத்வாதிகாரணம்

பர்யங்கா வித்யா

கௌஷிதகி 1வது அத்தியாயம்

மோட்ச பலம்

வ்யாஹ்ரிதி வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 7-5-1

மோட்ச பலம்

நியாச வித்யா

தைத்தரிய உபநிஷத், ஸ்வேதஸ்வர உபநிஷத்

மோட்ச பலம்

நியாசவித்யாவின் விவரங்கள்:

மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பிரம்ம வித்யாக்களிலும், ஸ்ரீ ந்யாச வித்யா மிக உயர்ந்தது மற்றும் ரஹஸ்யத்ரயசாரத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் பக்தி யோகம் 1/107 நியாச வித்யாவுக்கு சமமாக இருக்க முடியாது என்றும் இந்த நியாச வித்யா பிரபத்தி அல்லது சரணாகதி என்றும் கூறுகிறார்.

தைத்திரீய உபநிஷதம், இந்த ந்யாஸ வித்யா எல்லாவிதமான தவங்களையும் விட மேலானது என்று கூறுகிறது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களை உபதேசித்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளில் நான் சரணடைவேன் என்று ஸ்வேதஸ்வர உபநிஷதம் கூறுகிறது. இங்கு சரணாகதி என்பது பிரபத்தி செய்யும் ஒருவரின் ஆன்மாவைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லது சுமையை ஒப்படைப்பதாகும். இது பர சமர்ப்பணம் எனப்படும். ஆன்மாவைப் பாதுகாப்பது என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு மோட்சத்தை அளித்து, அவருக்கும் அவரது மனைவியான மகாலட்சுமிக்கும் எல்லாச் சேவைகளையும், எல்லா நேரங்களிலும் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கீதாச்சார்யா, அர்ஜுனன் மோட்சத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் அவனது பாவங்கள் அனைத்தையும் (புண்யா மற்றும் பாபா) கழுவ அவனது பாதத்தில் பிரபத்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அர்ஜுனன் பிரபத்தி செய்து மோட்சத்தை அடையாத போது இது நம் அனைவருக்கும் பொருந்தும். ஸ்ரீ பகவத் கீதையில் மேற்கண்ட நிபந்தனை சரமஸ்லோகம் என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் மேற்கூறிய நியதியின் பலனைப் பெற்று, ஒரு ஆச்சார்யா மூலம் பிரபத்தி செய்து வருகிறோம், நிச்சயமாக நாம் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைவோம்.

பரத முனியின் கூற்றுப்படி, பிரபத்தியின் அடிப்படை வரையறை என்னவென்றால், எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளையும் அடைய விரும்பினால், அது வேறு எந்த வகையிலும் சாத்தியமில்லாதபோது, ​​​​அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்தனை செய்து, அதை அடையச் செய்கிறார். விஷயம்.

பக்தியோகம் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுவது போல, இந்த பிரபத்தி ஐந்து துணைகளைக் கொண்டுள்ளது, இது பஞ்சாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபத்தி செய்வதற்கான அடிப்படை தகுதி காரணிகள் அகிஞ்சன்யா மற்றும் அனன்யா கதிகத்வா ஆகும். அகிஞ்சன்யா பக்தி யோகம் செய்யும் திறனில் முழுமையடைந்து, இந்த இயலாமையின் காரணமாக பரிதாபமாக மாறுகிறார். அனன்யா கதிகத்வா என்றால், பைன் தம்பதிகளான பகவான் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மி (இருவரும் ஒரு தனித்துவம்) அடைய வேறு எந்த பொருளும் இல்லை.

ஜாதி, மத, நிற, பாலின வேறுபாடு இல்லாமல் இந்த பிரபத்தியை அனைவரும் செய்யலாம். பிராபத்தியை விலங்குகள், மரங்கள் மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு கூட செய்யலாம், ஏனெனில் இவை அனைத்திலும் ஜீவாக்கள் (ஆன்மாக்கள்) உள்ளன.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ராய சாரா ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் பிரபத்தி யோக்யாதிகாரத்தில், பிரபத்தி அல்லது நியாசவித்யா செய்யத் தகுதி பெறுவதற்கு பின்வரும் நான்கு காரணிகளைக் குறிப்பிடுகிறார். அவர்கள்

i) பக்தி யோகா செய்ய உத்திர உடல் இயலாமை. இது பக்தி யோகத்திற்கு முன்நிபந்தனையான கர்ம யோகத்தைச் செய்ய இயலாமையைக் கூறுகிறது.

ii) பக்தி யோகம் செய்வதற்குத் தேவையான அளவு அறிவு இல்லை. பக்தி யோகத்திற்கு முன்நிபந்தனையான ஞான யோகம் செய்யும் திறனை இது கூறுகிறது. இது அறிவின் ஒரு வடிவமான தியானத்திற்குத் தேவையான மனதை ஒருமுகப்படுத்த இயலாமையைக் குறிக்கலாம்.

iii) பிராமணர், க்ஷத்திரியர் அல்லது வைசியரை விட தாழ்ந்த சாதியில் பிறந்தவர் அல்லது நியாயமான பாலினத்தைச் சேர்ந்தவர்.

iv) மோட்சத்தை அடைவதில் தாமதம் ஏற்படுவதைத் தாங்க முடியாது, ஏனென்றால் பக்தி யோகத்தில் பக்தி யோகம் செய்யும் நபர் அந்த ஜென்மத்தின் அல்லது பிறப்பின் முடிவில் மோட்சத்தை அடைவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் பிரபத்தியில் அந்த பிறப்பின் முடிவில் மோட்சத்தை அடைவது உறுதி அல்லது அது நிச்சயமாக நூறு சதவீதம்.

பிரபத்தி செய்ய தகுதியுடையவர்களில் பதினைந்து வகையினர் உள்ளனர்.

i) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்ட நான்கு வகை நபர்கள்.

ii) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் இரண்டைக் கொண்ட ஆறு வகை நபர்கள்.

iii) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் மூன்றைக் கொண்ட நான்கு வகை நபர்கள்.

iv) மேற்கூறிய அனைத்து காரணிகளையும் கொண்ட ஒரு வகை நபர்கள்.

பிரபத்தி செய்வது மிகவும் எளிமையான காரியம், அது 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது மற்றும் பக்தி யோகத்தை பல வருடங்கள் மற்றும் பல பிறவிகளில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒரு முறை. பல ஆண்டுகளாக பக்தி யோகத்தை நாடிய ஒருவருக்கு குறுகிய கால பிரபத்தி எப்படி அதே மோட்சத்தை அளிக்கும் என்று பிரபத்தியின் பலன் குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன. ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஐந்து சந்தேகங்களை எழுப்பி, உறுதியான விளக்கங்கள் அல்லது பதில்களைத் தருகிறார். இதுவே சங்கபஞ்சகம் எனப்படும்.

சந்தேகம் நான்:

சிவன், இந்திரன், நான்கு தலை பிரம்மா, அய்யப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள் விரைவில் பிரார்த்தனை செய்யும் நபர்களுக்கு பலன்களை வழங்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணன் கணிசமான தாமதத்திற்குப் பிறகு பலன்களை வழங்கும்போது, ​​​​அவர் எப்படி பலனை அல்லது மோட்சத்தைத் தருவார்? பிரபத்தி செய்யும் நேரத்தில் ஒரு நபர் பிரார்த்தனை செய்யும் நேரத்திற்குள் பிரபத்தி செய்வது மற்றும் பிரபத்தி செய்பவர் எண்ணற்ற பாவங்களைச் செய்தபோது. இதனுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் எல்லாம் அறிந்தவர் மற்றும் மனிதர்கள் செய்யும் பாவங்களை அறிந்தவர் மற்றும் அவர் எப்போதும் தடியை பிடித்தபடி தண்டதாரராக இருப்பதால் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வல்லவர். மேலும் அவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப (பாபா மற்றும் புண்ணிய கர்மாக்கள்) துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் பலன்களைத் தருகிறார்.

பதில்: பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனக்கு நிகராகவோ அல்லது உயர்ந்தவராகவோ இல்லாதவர், அந்த நபர்களின் அனைத்து பாவங்களையும் புறக்கணித்து, அனைத்து பாவங்களையும் மன்னிப்பதற்காக ஒரு நபரின் புருஷகர் அல்லது பரிந்துரையின் காரணமாக அந்த நபர்களை கருணையுடன் பார்க்கிறார். மோட்சத்திற்காக செய்யப்படும் பிரபத்தியின் விஷயத்தில், மகாலக்ஷ்மி தேவி புருஷராக மாறி, பாவங்களை மன்னித்து, கருணையுள்ள தோற்றத்தை நீட்டிக்க இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

சந்தேகம் II: தனது குறுகிய காலப் பிரபத்திக்காக எண்ணற்ற பாவங்களைச் செய்த ஒரு மனிதனுக்கு எல்லையற்ற ஆனந்தமான மோட்ச பலனை பகவான் ஸ்ரீமன் நாராயணனால் எப்படி வழங்க முடியும்?

பதில்: பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கும் தனி ஆன்மாவுக்கும் இடையே “சேஷி சேஷ” உறவு இருக்கிறது. “சேஷி” என்பது சேஷா அல்லது வேலைக்காரனிடம் சேவையை எதிர்பார்க்கும் ஸ்வாமி அல்லது மாஸ்டர். ஆகவே, தனக்கும் மகாலட்சுமிக்கும் என்றென்றும் சேவை செய்ய ஆட்கள் தம்மிடம் வர வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். இந்த அம்சம், பிரபத்தி செய்பவருக்கு எல்லையற்ற நித்திய பேரின்பத்தை அளிக்கச் செய்கிறது.

சந்தேகம் III: மிகச்சிறிய மற்றும் அற்பமான பிரபத்தியின் செயலுக்கு உச்ச பகவான் எவ்வாறு மோட்சத்தை வழங்குகிறார் என்ற சந்தேகம் இன்னும் எழுகிறது?

பதில்: இறைவன் தயா மற்றும் வாத்சல்யா போன்ற நல்ல குணங்கள் கொண்டவர். வாத்சல்யா என்றால், புதிதாகப் பிறந்த கன்றின் மீது பசுவைப் போன்ற ஒரு தனிமனிதரிடம் காட்டப்படும் அளவற்ற பாசம். தயா அல்லது காருண்யா என்பது ஒரு குணத்தால் இறைவன் ஒரு நபரின் துயரத்தில் வரம்பற்ற இரக்கத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் அதில் இருந்து எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் துயரத்திலிருந்து விடுபட விரும்புவார். வாத்சல்யா என்றால் ஒரு தனிமனிதனின் குறைபாடுகளை புறக்கணிப்பது என்றும் பொருள். இந்த குணங்கள் பிரபத்தியின் சிறிய செயலுக்கு மோட்சத்தை வழங்க இறைவனை செய்கிறது.

சந்தேகம் IV: இறைவன் எவ்வாறு தாமதமின்றி மோட்சத்தை வழங்க முடியும்?

பதில்: உன்னதமான உயிரினம் விருப்பத்தின் வியாபர அல்லது செயலை (வியாபாரம்) கொண்டுள்ளது மற்றும் அவரது வலுவான மற்றும் அசைக்க முடியாத விருப்பத்தை எந்த உடலாலும் மாற்ற முடியாது. இது சத்ய சங்கல்பம் எனப்படும். இது பிரபத்தி செய்யும் போது ஒரு தனி ஆன்மாவால் ஜெபிக்கப்படும் நேரத்தில் தாமதமின்றி மோக்ஷத்தை வழங்குகிறது. இச்சூழலில் பிரப்பன்னங்களில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (பிரபத்தி செய்பவர் பிரப்பண்ணா என்று அழைக்கப்படுகிறார்). டிரிப்த பிரபன்னங்கள் மற்றும் ஆர்த்தி பிரப்பன்னங்கள் ஆகியவை பிரிவுகள். ஒரு துளிர் பிரப்பண்ணன் தனது வாழ்க்கை அல்லது ஜென்மத்தின் முடிவில் மோட்சத்தை விரும்புகிறான். சம்சாரத்தில் வெறுப்பு அல்லது கோபம் கொண்ட ஆர்த்தி பிரப்பண்ணா, பிரபத்தி செய்தவுடன் மோட்சத்தை விரும்புகிறார். பிரபத்தியின் போது ஜெபிக்கும் நேரத்தில் த்ருப்தப் பிராபத்தி மற்றும் அர்த்தப் பிராபத்தி மற்றும் மோட்சத்தை எந்த தாமதமும் இல்லாமல் பகவான் ஏற்றுக்கொள்கிறார்.

சந்தேகம் V: பிரபத்தி செய்பவர்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் இறைவன் எப்படி மோட்சத்தை வழங்க முடியும்?

பதில்: பிரபத்தியை ஏற்றுக்கொள்வதில் இறைவனால் பெறப்பட்ட ஒரு நோக்கம் அல்லது பிரயோஜனம் உள்ளது. அவருக்குக் கீழ் அடைக்கலம் புகும் எந்தவொரு நபரும் உண்மையான பக்தன் அல்லது அஷ்ரிதமாக மாறுகிறார். உண்மையான பக்தனாக வரும் தனிமனிதனைப் பாதுகாப்பதே அவனது முக்கிய நோக்கம். எனவே பிரபத்தி செய்பவர்களுக்கு மோட்சம் வழங்குவதில் எந்த பாகுபாடும் இல்லை.

பிரபத்தி யோகத்தின் ஐந்து துணைகள்

ஏற்கனவே சொன்னது போல் பிரபத்தி ஒரு பஞ்சாங்க யோகம். அங்கங்கள் அல்லது துணைகள் ஆகும்

i)அனுகுலஸ்ய சங்கல்பம்:- இறைவனின் பாதத்தில் பிரபத்தி செய்பவன் எப்பொழுதும் இறைவனுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எப்போதும் இறைவனின் கட்டளைகளைக் கொண்ட சாஸ்திரங்களின்படி செயல்பட வேண்டும் என்று அர்த்தம். நித்ய நைநித்திக கர்மானுஷ்டானத்தைச் செய்வதே கிருத்ய கரணம் என்றும் பொருள்படும்.

மேலும் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் பரமாத்மாவின் உடல்கள். அவர்களுக்கு சாதகமாக செயல்படும்

ii) ப்ரதிகுலஸ்ய வர்ஜனம்:- பரமாத்மாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்வதைத் தவிர்த்தல். தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்யாத அக்ரித்ய அகரணம் என்றும் இதற்குப் பொருள். பரமாத்மாவின் ஆணைகள் அல்லது கட்டளைகளில் கல்வெட்டுகள் அல்லது சாத்திரங்கள் உள்ளன, அவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. மேலும் ஒருவன் தன் சுயத்தின் தலைவன் என்று நினைப்பதைத் தவிர்ப்பதும் ப்ரதிகுலஸ்ய வர்ஜனம் ஆகும். உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு ஒருவர் தீங்கு செய்யக்கூடாது என்பதையும் இது குறிக்கிறது.

iii)ரக்ஷிஷ்யதி இதி விஸ்வாச:- இது பிரபத்தியின் மிக முக்கியமான அங்கமான மகாவிஸ்வாசம் என்றும் அழைக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது நம்பிக்கை. நமது பிரபத்தியை ஏற்றுக்கொண்ட பிறகு, உன்னதமானவர் மீதும், அவர் பலனை வழங்குவதிலும் ஒருவருக்கு முழுமையான மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

iv) கோப்த்ரித்வா வாரணம்:- இதன் பொருள் பரமாத்மாவை நமது பிராபத்திக்கு பதில் மோட்சம் அளித்து நமது ஆன்மாக்களுக்கு (ஜீவாக்களின்) பாதுகாவலராக இருக்குமாறு வேண்டுதல். நாம் உண்மையில் விரும்புவதை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் பணிவான சமர்ப்பணம் செய்வதும் இதன் பொருள்.

v) கர்பண்யா:- இது நமது அடக்கத்தை குறிக்கிறது. அதுவே உபயந்தரம் எனப்படும் பக்தி யோகத்தைச் செய்ய இயலாது, அடைய வேண்டிய பொருள் பகவான் ஸ்ரீமன் நாராயணனையும் அவரது துணைவியான மஹாலக்ஷ்மியையும் தவிர வேறெதுவும் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. பிரபத்தியைத் தவிர வேறு வழிகள் இல்லாதது அகிஞ்சன்யா எனப்படும் உபயந்தர சூன்யத்வா எனப்படும். பைன் ஜோடியைத் தவிர மற்ற மோட்சத்தில் அடைய வேண்டிய பொருள் இல்லாதது ப்ராப்யந்தர சூன்யத்வா என்று அழைக்கப்படுகிறது, இது அனன்யகாதி கத்வம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கார்பண்யம் மேற்கூறியதைக் குறிக்கிறது.

மேற்கூறிய ஐந்து துணைகளையும் சிந்தித்த பின் மனச் செயலாகிய சமர்ப்பணம் என்ற அங்கியைச் செய்ய வேண்டும். மூன்று சமர்ப்பணங்கள் உள்ளன

i) ஸ்வரூப சமர்ப்பணம் – ஜீவாத்மாவின் உள்ளார்ந்த தன்மை பரமாத்மாவால் கொடுக்கப்பட்டது, அது அவருக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

ii) பர சமர்ப்பணம் – ஜீவாத்மாவை (ஆன்மாவை) காக்கும் பொறுப்பை அல்லது சுமையை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதத்தில் வைப்பது.

iii) பல சமர்ப்பணம் – ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்த பிறகு முக்தாத்மா அங்குள்ள தெய்வீக தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்கிறார், பைன் தம்பதியினர் இந்த சேவையால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மோட்ச பலத்தின் உண்மையான அனுபவிப்பவர்கள் பைன் தம்பதிகள் மற்றும் இந்த இன்பம் முக்தாத்மாவை நித்திய பேரின்பத்தை அடையச் செய்கிறது. எனவே மோட்சத்தின் பலனை பைன் தம்பதியினருக்கும் வழங்க வேண்டும், இது பல சமர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரபத்தியில் சில முக்கிய புள்ளிகள் உள்ளன

i) பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்பது சுத்தோ பய அல்லது தயாராக உள்ளது. எனவே, ஒருவரின் காலடியில் செய்யப்படும் பிரபத்தியால் மகிழ்ந்த பிறகு, அவர் மோட்சத்தை வழங்குபவர்.

ii) உபநிடதங்களில் நிறுவப்பட்டுள்ள பக்தி யோகத்தை ஒருவரால் செய்ய முடியாது என்பதால், பிரபத்தி செய்பவர் பக்தி யோகத்தின் இடத்தில் பரமாத்மாவை வைத்து பர சமர்ப்பணம் செய்கிறார். பக்தியோக ஸ்தானத்தில் பரமாத்மாவைக் கோரும் உபயந்தர ஸ்தான நிவேஷம் என்று அழைக்கப்படுகிறது.

iii) பிரபத்தி செய்யும் போது சிந்திக்க வேண்டிய நல்ல குணங்கள். முதலில் புருஷகர (பரிந்துரை செய்பவர்) பிரபத்தி, அந்த நபரை நோக்கி ஸ்ரீமன் நாராயணனின் கவனத்தை ஈர்ப்பதற்காக மகாலட்சுமி தேவியின் பாதத்தில் செய்யப்படுகிறது.

புருஷகர பிரபத்தி செய்வதற்கு, மகாலட்சுமி தேவியின் குணங்கள்

(அ) ​​சத்யத்வா, ஞானத்வா, அனந்தத்வா, ஆனந்தத்வா, அமலாத்வா மற்றும் விஷ்ணு பத்னித்வா. இவை மஹாலக்ஷ்மியின் ஸ்வரூப நிருபக தர்மங்கள் (பண்புகள்).

(ஆ) பிரபத்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் பண்புக்கூறுகள். இவை உபயத்வ உபயுக்த குணம் எனப்படும்: இது இல்லாமல் மஹாலக்ஷ்மியோ அல்லது பரமாத்மாவோ சித்தோபாயாகவோ அல்லது தயாராகவோ இருக்க முடியாது. அவர்கள் எண்ணிக்கையில் பன்னிரண்டு பேர்.

வாத்சல்யா – பிரபத்தி செய்யும் தனிமனிதனின் கறையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்காமல் இருப்பது.

ஸ்வாமித்வா – மாஸ்டர்

சௌசில்யா – பக்தர்களுடன் இலவச மிங்லிங்.

சௌலப்யா – எளிதில் அணுகக்கூடியது

சர்வஜ்ஞாத்வா – எல்லா விஷயத்தையும் அறிவது.

சத்ய சங்கல்பத்வா – வலுவான மற்றும் அசைக்க முடியாத விருப்பம்.

பரமகாருணிகத்வா – எந்த ஒரு பிரதிபலனையோ அல்லது பலனையோ எதிர்பார்க்காமல் பக்தர்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்த கருணை கொண்டவர்.

கிருதக்னத்வா – நன்றியுணர்வைக் கொண்டிருத்தல்.

ஸ்திரத்வா – பக்தர்களைப் பாதுகாப்பதில் வலுவான விருப்பம்.

பரிபூர்ணத்வா – அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்தல்.

ஸர்வசக்தித்வா – சர்வ வல்லமையுள்ளவர்.

பரமோதரத்வா – எந்த ஒரு பொருளையும், ஒவ்வொரு பொருளையும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம்.

மேற்கண்ட பண்புகள் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கும் பொருந்தும், அவருடைய தாமரை பாதத்தில் பிரபத்தி செய்யும் போது சிந்திக்க வேண்டும். பரமாத்மா விஷயத்தில் விஷ்ணு பத்னித்வத்திற்குப் பதிலாக ஸ்ரீயாபதித்வம் கருதப்பட வேண்டும். சிவன், முருகன், விநாயகர், அய்யப்பன் போன்ற தேவதாந்திரர்களுக்குத் தொடர்ந்து அர்ப்பணம் செய்தாலும், பிரம்மவித்துகளுடன் பாவம் செய்தாலோ, அபசாரம் செய்தாலோ, பகவான் ஸ்ரீமன் நாராயணர் செய்யும் பிரபத்தியை ரத்து செய்வார் என்பது இந்தச் சூழலில் குறிப்பிடத்தக்கது. மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் அதீத பக்தி கொண்டவர்கள்.

மூன்றாம் அத்தியாயத்தில் மூன்றாம் காலாண்டாகிய குணோபசம்ஹார பாதம்.

மேலே உள்ள பக்தி யோகம் மற்றும் நியாசவித்யா (பிரபத்தி யோகம்) ஆகியவற்றின் வெளிச்சத்தில் இந்த பாதம் இப்போது கையாளப்படும். இந்த பாதத்தில் முன்பு குறிப்பிடப்பட்ட பிராண வித்யா மற்றும் உத்கீத வித்யாவுடன் பிரம்ம வித்யாக்களும் கருதப்படுகின்றன. பிராண வித்யா என்பது முக்ய பிராணன் அல்லது நாம் சுவாசிக்கும் காற்றின் தியானம். உத்கீதா என்பது பல வழிகளில் தியானிக்கப்படும் பிரணவமாகும். இந்த இரண்டு வித்யாக்களும் உபநிடதங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதால், வேறு எங்கும் இல்லாததால், உபநிடதங்களின் விளக்கமான பிரம்ம சூத்திரங்களில் அவற்றைக் கையாள்வது பொருத்தமானது என்று சூத்ரகாரர் கருதினார். உபசம்ஹாரம் என்றால் பண்புகளை ஒருங்கிணைத்தல் அல்லது இணைத்தல்.

அதாவது வைஸ்வானர வித்யா, தஹர வித்யா என ஒன்றுக்கு மேற்பட்ட உபநிடதங்களில் குறிப்பிட்ட பிரம்மா வித்யாவைக் குறிப்பிட்டு, அதே மோக்ஷ பலத்திற்கு இரண்டு அல்லது மூன்று உபநிடதங்களில் ஒரே பெயரில் வித்யா இருப்பதாக நிறுவப்பட்டால், ஒன்றில் கல்யாண குணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மற்றொன்றில் குறிப்பிடப்படாதவை மற்றொன்றில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண குணங்களுடன் சேர்த்து அவைகளை கூட்டாக தியானிக்க வேண்டும்.

இந்த பாதத்தில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரங்கள் உள்ளன, அதாவது 26. ஒவ்வொரு அதிகாரத்திலும் வந்த முடிவு சுருக்கமாக தெரிந்தால் போதும். இப்போது அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் கருதலாம்.

1) முதல் அதிகாரம் சர்வ வேதாந்த பிரத்யய அதிகாரம்.

இந்த முதல் அதிகாரத்தில் பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஸ்வாணர வித்யா ஒன்றா என்பதுதான் விவாதத்திற்குரிய தலைப்பு.

மற்ற உபநிடதங்களில் மேற்கூறிய வித்யா முற்றிலும் வேறொரு சூழலில் சொல்லப்பட்டால் அவை வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

சர்வவேதாந்த ப்ரத்யாயம் சோதனாதி அவிசேஷத்” என்ற முதல் சூத்திரத்தில் சூத்ரகாரர் மேற்கண்ட வித்யா ஒன்றே என்கிறார்.

சூத்திரத்தின் பொருள்,

சர்வ வேதாந்த ப்ரத்யம் – பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வித்யா ஒன்றுதான் காரணம்

சோதனாதி அவிஷேஷாத் – அவிஷேஷத் என்றால் ஒன்று மற்றும் அதே சோதனாதி என்றால் உந்துதல், பழம், தியானப் பொருளின் தன்மை மற்றும் பெயர்.

ஒவ்வொரு வித்யாவிலும் பக்தி யோகா அல்லது தியானம் செய்வதற்கு ஒரு கட்டளை அல்லது உந்துதல் இருக்க வேண்டும். பழம் அல்லது மோக்ஷ பலன் ஒன்றுதான் இருக்க வேண்டும். பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய தியானப் பொருளின் தன்மையும் பண்புகளும் ஒன்றாக இருக்க வேண்டும். வித்யாவின் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட வித்யா ஒன்றே ஒன்று எனும்போது, ​​உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தியானப் பொருளின் பண்புகளைச் சேர்ப்பதாக இருக்கும் உபசம்ஹாரம் எழுகிறது. வித்யாவை நிரூபிப்பதற்காக எதிராளியின் வித்யாவை மறுபரிசீலனை செய்வதற்கான காரணம், வித்யாவைக் கற்கும் மாணவர் வேறுபட்டால், அதே வித்யாவை இயற்கையாகவே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். ஒரே கணிதப் பாடம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு தொகுதி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதைப் போன்றது இது.

சாந்தோக்ய, தைத்தரியா மற்றும் பிருஹதாரண்யகாவில் குறிப்பிடப்பட்டுள்ள தஹராதிகரணம் கூட ஒன்றே.

2) இரண்டாவது அதிகாரம் அன்யதத்வாதிகரணம் எனப்படும்.

விவாதத்திற்கான தலைப்பு உத்கீத வித்யா. உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உத்கீத வித்யா மற்றும் பிராண வித்யா பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி இங்கு மட்டுமே விவாதிக்கப்பட்டு விளக்கப்பட வேண்டும்.

இந்த உத்கீத வித்யா சாண்டோக்ய மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உபநிடதங்களில் சொல்லப்பட்ட இந்த உத்கீத வித்யா ஒன்றா என்பது சந்தேகம்.

சாந்தோக்யாவில், தியானத்தின் பொருள் உத்கீதத்தின் ஒரு உறுப்பு ஆகும், இது முக்ய பிராணன் (நாம் சுவாசிக்கும் காற்று) என்று கருதப்பட வேண்டும், மேலும் பிருஹதாரண்யகத்தைப் போலவே தியானம் முழு உத்கீதத்தின் மீதும் முக்ய பிராணாகக் கருதப்படுகிறது. தியானத்தின் பொருள்களில் வேறுபாடு இருப்பதால் சாண்டோக்யத்தில் உள்ள உத்கீத வித்யா பிருஹதாரண்யத்தில் இருந்து வேறுபட்டது.

3) மூன்றாவது அதிகாரம் சர்வ அபேதாதிகரணம்.

இந்த அதிகாரத்தில் பிராண வித்யா விவாதிக்கப்படுகிறது. பிராண வித்யா சாந்தோக்யா, பிருஹதாரண்யகா மற்றும் கௌஷிதகி உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. பிருஹதாரண்யகா மற்றும் சாந்தோக்யாவில் பிராண வித்யா ஒரே மாதிரியாக உள்ளது மற்றும் கௌஷிதகி உபநிடதத்தில் சிறிய வேறுபாடு உள்ளது.

எனவே கௌஷ்டகியில் பிராண வித்யா சாண்டோக்யத்திலும் பிருஹதாரண்யத்திலும் உள்ளதா இல்லையா என்பது சந்தேகம்.

கௌஷிதகியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்ய பிராணனின் குணங்கள் அல்லது பண்புக்கூறுகள் மற்ற இரண்டில் இருந்து வேறுபட்டிருப்பதால் அல்ல என்கிறார் பூர்வபக்ஷி.

சித்தாந்தம் என்னவென்றால், மூன்றிலும் கூறப்பட்ட பிராணவித்யா ஒன்றே, கௌஷிதகியில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் மற்ற இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு முரணானவை அல்ல.

ஸர்வ அபேதாத் அந்யத்ர இமே ஸூத்ரம். அதாவது குணங்களில் வேறுபாடு இல்லாத அபேதத்தால் பிராண வித்யா ஒன்றே, கௌஷிதகியில் சொல்லப்பட்ட குணங்கள் சாண்டோக்யத்திலும் பிருஹதாரண்யத்திலும் சேர்த்து (உபசம்ஹாரம்) தியானம் செய்ய வேண்டும்.

இங்கே உபநிடதம் ஒரு கதையைக் கூறுகிறது. பிராணன் அல்லது இந்திரியங்கள் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறிய விரும்பினர். மேற்கூறியவற்றைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் தங்கள் பேச்சாளர்களை பிரம்மாவிடம் (நான்கு தலை பிரம்மா) அனுப்பினார்கள். பிரம்மா அவர்களை ஒவ்வொன்றாக உடலை விட்டு ஒரு வருடம் வெளியே இருக்கவும், உடலின் செயல்பாட்டைப் பார்க்கவும் கூறினார். முதலில் பேச்சு என்ற வஜிந்த்ரியம் ஒரு வருடம் உடலை விட்டு வெளியேறி அந்த நபர் ஊமையாக மாறினார். உடலின் மற்ற உறுப்புகள் சாதாரணமாக இயங்கின.

பின்னர் கண்கள் உடலை விட்டு வெளியேறின, நபர் குருடனாகிவிட்டார், மற்றபடி உடலின் செயல்பாடு சாதாரணமானது மற்றும் பார்வையைத் தவிர அனைத்து அளவுருக்களும் சாதாரணமாக செயல்பட்டன. பிறகு கண்கள் திரும்பின. பின்னர் காதுகள் விட்டு, நபர் காது கேளாதவராக மாறினார், மற்ற அளவுருக்கள் சாதாரணமாக செயல்பட்டன. பின்னர் காதுகள் திரும்பின. பிறகு மனம் விட்டுப் போனது அப்படியே நடந்தது.

ஆனால் மனம் இல்லாமல் உடல் எப்படி இயங்கும் என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதால் மனதை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதே பதில். புத்திசாலி போல் உடல் செயல்பட்டது. மனம் திரும்பியது. நாம் சுவாசிக்கும் காற்றாகிய முக்ய பிராணன் உடலை விட்டு வெளியேறியதும், மற்ற எல்லா புலன்களையும் தன்னுடன் சேர்த்து உடலை விட்டு வெளியேறச் செய்தது. மூச்சு நின்று உடல் சிதைய ஆரம்பித்தது.

பின்னர் அனைத்து இந்திரியர்கள் மற்றும் முக்ய பிராணன் திரும்பி வந்தனர், மேலும் அனைத்து இந்திரியங்களும் முக்ய பிராணனை தங்கள் தலைவனாக அல்லது தலைவராக ஏற்றுக்கொண்டனர். பிறகு வகிந்த்ரியா முக்ய பிராணனிடம் வசிஷ்டனாக இருப்பதால் தான் முக்ய பிராணனும் வசிஷ்டனாக இருக்கிறான் என்று சொன்னாள். கண்கள் முக்ய பிராணனை பிரதிஷ்டை என்று சொன்னது, காதுகள் சம்பத் என்று சொன்னது. ஆயத்தனம் என்று மனம் சொன்னது. பிராண வித்யாவில் தியானிக்க வேண்டிய குணங்கள்

ஜ்யேஷ்டாதவம் – முதுமை

ஷ்ரேஷத்வம் – மேன்மை

வசிஷ்டத்வம் – பேச்சுத்திறன் அல்லது பேச்சுத்திறன் காரணமாக மேன்மை அடையப்படுகிறது.

ப்ரதிஷ்டத்வம் – கூட மனது

சம்பத்வம் – கற்றறிந்தவராக மாறுதல்

ஆயதனத்வம் – அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் உடல்.

மேற்கூறிய கதை உபநிடதங்களில் பிராண சம்வதா என்று அழைக்கப்படுகிறது.

உத்கீதா மற்றும் பிராண வித்யாக்கள் பிரம்ம வித்யாக்கள் அல்ல, எனவே இந்த இரண்டு வித்யாக்களுக்கும் மோட்ச பலம் உள்ளது.

4) அடுத்த அதிகாரம் ஆனந்தாதிகரணம்.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் கட்டாயமாக தியானிக்க வேண்டிய கல்யாண குணங்கள் விவாதத்திற்குரிய தலைப்பு. இந்த கல்யாண குணங்கள் ஸ்வரூப நிருபக தர்மம் எனப்படும். பூர்வபக்ஷி கூறுகிறது, இந்தக் கல்யாண கினாக்கள் எந்த பிரம்ம வித்யாவுடனும் இணைக்கப்படாதபோது அவற்றைத் தியானிக்க வேண்டிய அவசியமில்லை.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் உபஸ்யாவாக (தியானத்தின் பொருள்) இருக்கும் போது மற்றும் சில குணங்களை நினைக்காமல் அவரது உள்ளார்ந்த இயல்பை உணர முடியாதபோது, ​​​​இந்த குணங்கள் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் முக்கியமாக தியானிக்கப்பட வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த கல்யாண குணங்கள் ஸ்வரூப நிருபக குணங்கள் அல்லது தர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சத்யத்வா, ஞானத்வா, அனந்தத்வா, ஆனந்தத்வா, அமலாத்வா மற்றும் ஸ்ரீயா:பதித்வா ஆகிய ஆறு. அமலாத்வா மற்றொரு அதிகாரத்தில் கையாளப்படும். ஸ்ரீயா:பதித்வா இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது மறைமுகமாக உள்ளது.

5) அடுத்த அதிகாரம் கார்யாக்யனாதிகரணம் எனப்படும்.

இது பிராண வித்யா கையாளப்பட்ட சர்வபேதாதிகாரணத்தின் தொடர்ச்சியாகும்.

இந்திரியர்கள் முக்ய பிராணனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டபோது, ​​முக்ய பிராணன் அவர்களிடம் என் ஆடை என்ன என்று கேட்கிறான். தண்ணீர்தான் அதன் ஆடை என்றும், அதனால்தான் உணவு உண்ணும் போது உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் அச்சமனம் செய்வார்கள் என்றும் பதிலளித்தனர். எனவே பிராண வித்யா பயிற்சி செய்பவர்கள் உணவுக்கு முன், உணவுக்குப் பின் செய்யும் ஆச்சமனத்தை முக்ய பிராணனின் ஆடையாகக் கருத வேண்டும். இந்த பிராண வித்யா பிரம்ம வித்யாவுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை.

6) ஆறாவது அதிகாரம் சமனாதிகரணம் எனப்படும்.

இது அக்னிரஹஸ்யத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாண்டிலய வித்யாவைப் பற்றியது. இது மீண்டும் பிருஹதாரண்யக உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண குணங்களில் ஓரளவு வேறுபடுகின்றன. எனவே மேற்கூறிய இரண்டு உபநிடதங்களில் உள்ள இந்த சாண்டில்ய வித்யா ஒன்றே ஒன்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்றில் உள்ள இந்த வித்யாவின் அமைப்பு மற்றொன்றிலிருந்து வேறுபட்டது என்பதால் எதிராளி இது வேறு என்கிறார். இந்த சாண்டில்ய வித்யா இரண்டிலும் ஒன்றே என்று சூத்ரகாரர் தனது தீர்ப்பில் கூறுகிறார்.

7) அடுத்த அதிகாரம் சம்பந்தாதிகாரணம் எனப்படும்.

பிருஹதாரண்யகத்தில் சூரிய மண்டலத்தில் (ஆதித்ய மண்டலம்) பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உபாசனை (தியானம்) மற்றும் வலது கண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராமணன் அல்லது பரமாத்மா வ்யாஹ்ருதி சரிராக (பு, புவ, சுவ, மஹர், ஜன, தப மற்றும் சத்ய லோகங்களைத் தன் சரீரங்களாகக் கொண்ட வ்யாஹ்ருதிகளைக் கொண்டவர்) என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் அவருக்கு சத்யா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஆதித்யத்தில் இறைவனைத் தியானிப்பதும், வலது கண்ணில் உள்ள இறைவனைத் தியானிப்பதும் வேறு ஒன்றா என்பது சந்தேகமே.

பூர்வபக்ஷ சூத்திரம் “சம்பந்ததேவம் அன்யத்ராபிக்” ஒன்றுதான் என்று கூறுகிறது, அதே சமயம் சித்தாந்த சூத்திரம் “நவ விசேஷத்” இரண்டும் வெவ்வேறு குணாதிசயங்கள் (ரூபம்) வேறுபட்டவை என்று கூறுகிறது.

8) அடுத்த அதிகாரம் சம்ப்ருதி அதிகாரம்.

ரணயானி சகா மற்றும் சில கிலா ஸ்ருதிகளில் உபாசனா குறிப்பிடப்பட்டுள்ளது. கிலா ஸ்ருதி என்பது உபநிடதத்தின் ஒரு பகுதியாகும், அதில் அதன் முந்தைய பகுதி மற்றும் அடுத்தடுத்த ப்ரோஷன்கள் காணவில்லை மற்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரம்மன் (பரமாத்மா) மேன்மையானவர் என்றும், அவரது வீரத்திற்கு பெயர் பெற்றவர் என்றும், அவர் முழு பிரபஞ்சத்தையும் ஆதரிப்பவர் என்றும் இங்கு கூறப்படுகிறது. இந்த உயர்ந்த பிரம்மன் முழு ஸ்வர்கலோகத்தையும் (தயுலோகம் என்றும் அழைக்கப்படும்) சூழ்ந்துள்ளது.

ஒவ்வொரு வித்யாவிலும் பிரம்மனின் மேற்கண்ட அம்சங்கள் (பண்புகள்) தியானிக்கப்பட வேண்டுமா என்பது இங்கு சந்தேகம். பூர்வபக்ஷி அவர்கள் எந்த குறிப்பிட்ட பிரம்ம வித்யாவிலும் இணைக்கப்படாததால் அவர்கள் தியானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

“சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அதா” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் தனது தீர்ப்பில், மேற்கூறிய குணங்கள் அல்லது பண்புகளை அல்பஸ்தானிய வித்யாக்கள் எனப்படும் வித்யாக்களில் தியானிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார், அதில் பரமாத்மா உபாசகரின் அந்தர்யாமியாக தியானிக்கிறார். அந்தர்யாமி இதயத்தில் மிகச் சிறிய இடத்தில் வசிக்கிறார், அங்கு மேலே குறிப்பிடப்பட்ட அம்சம் அல்லது பண்பு என்னவென்றால், பரமாத்மா முழு ஸ்வர்க லோகத்தையும் உள்ளடக்கியது அல்லது அதை ஆகாசம் என்று கூட சொல்லலாம். இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. அல்பஸ்தான வித்யாக்கள் சாண்டில்ய வித்யா, தஹர வித்யா போன்றவை. எனவே இந்த வித்யாக்களில் மேலே கூறப்பட்ட தியு வியாப்தி (சொர்க்கத்தை சூழ்ந்துள்ள) அம்சத்தை தியானிக்கக் கூடாது.

9) அடுத்த அதிகாரம் புருஷ வித்யாதிகரணமாகும், இது தைத்திரிய உபநிடதத்திலும் சாந்தோக்யோபநிஷத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைத்திரீய உபநிடதத்தில் உள்ள புருஷ வித்யா நியாச வித்யாவிற்குக் கீழானது மற்றும் பலம் மோட்சமாகும்.

சந்தோக்யாவில் உள்ள புருஷ வித்யா தியானம் செய்பவரின் நீண்ட ஆயுளை நீட்டிப்பதாகும்.

மேற்கூறிய இரண்டு உபநிடதங்களிலும் உள்ள வித்யா ஒரே பெயரைக் கொண்டிருப்பதால் அவை ஒன்றாக இருக்க வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுகிறது. சூத்ரகாரர் “புருஷ வித்யாயம் அபிச்ச இடரேஷம் அனாம்நாந்த்” என்ற சூத்திரத்தில் தனது தீர்ப்பை வழங்குகிறார், மேலும் தைத்தரிய உபநிடதத்தில் உள்ள மேற்கூறிய புருஷ வித்யா சாண்டோக்யத்தில் உள்ள புருஷ வித்யாவிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் பலாக்கள் வேறுபட்டவை என்று கூறுகிறார்.

10) அடுத்த அதிகாரம் வேதாத்யாதிகாரணம்.

வேதத்தின் ஒரு குறிப்பிட்ட கிளையின் பாராயணத்தின் தொடக்கத்தில், அந்த கிளையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஒரு சாந்தி பாதத்தை பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் கூற வேண்டும். அந்த கிளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்ம வித்யாவிற்கு மிக அருகில் இந்த சாந்தி பாதம் உள்ளது. இந்த சாந்தி பாதை கிளைக்கு கிளை மாறுபடும். எந்த ஒரு குறிப்பிட்ட சகா அல்லது கிளையின் சாந்தி பாதம் பிரம்ம வித்யாவின் துணை அல்லது அங்கமா இல்லையா என்பது சந்தேகம்.

பூர்வபக்ஷி சாந்தி படா என்பது பிரம்ம வித்யாவின் ஒரு பகுதி மற்றும் துணை அல்லது துணை என்று வாதிடுகிறது. அவர் மேலும் கூறுகையில், சில சாந்தி பதங்கள் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது, ​​சன்னோ மித்ர சம் விருணா போன்ற மந்திரங்கள்; மற்றும் sahanava vathu வேறு எந்த பயனும் இல்லை எனவே அவர்கள் வித்யா பகுதியாக இருக்க வேண்டும்.

இந்த சாந்தி பதங்கள் பிரம்ம வித்யாக்களுக்கு துணை (அங்கா) இல்லை என்று சித்தாந்த சூத்ரகாரரின் வாதம் அவரது சூத்திரமான ”வேதாதி அர்த்த பேதத்தில்” கூறுகிறது.

11) அடுத்த அதிகாரம் ஹனி அதிகாரம்”

இந்த அதிகாரத்தில் ஒரு பக்தி யோக நிஷ்டை அல்லது பிரபன்னனின் ‘புண்யா’ மற்றும் ‘பாப கர்மா’ ஆகியவை இந்த மரண உடலை விட்டு வெளியேறி மோட்சத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு விவாதிக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக பல உபநிடத நூல்கள் உள்ளன.

(அ) ​​ஒரு நபர் (பக்தியோகநிஷ்டை அல்லது பிரபன்னா) தனது கர்மா அல்லது பாவங்களை (பாவங்களில் புண்ணியங்களும் அடங்கும், ஏனெனில் அவை மோட்சத்தை அடைவதையும் தடுக்கின்றன) குதிரை முடிகளை உதிர்வது போலவும், சந்திரனைப் போல அவர் தனது மரண சரீரத்திலிருந்து வெளியே வருவார் என்றும் சாந்தோக்கியம் கூறுகிறது. கிரகணத்திற்குப் பிறகு ராகுவின் பிடியில் இருந்து வெளியே வந்து, அக்ரிதம் (உருவாக்கப்படவில்லை) எனப்படும் வைகுண்ட பய லோகத்தில் நுழைகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நித்ய விபூதி எனப்படும் வைகுண்ட பைய லோகத்திற்கு ஆக்கமோ அழிவோ இல்லை.

நாம் வாழும் ஒரு பிரம்மாண்டமான உலகங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம் லீலா விபூதி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த விபூதி பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கம் மற்றும் அழிவுக்கு உட்பட்டது. விபூதி என்றால் செல்வம் அல்லது ஐஸ்வர்யம். ஸ்ரீமன் நாராயண பகவான் உபய விபூதி நாதா என்று அழைக்கப்படுகிறார்.

(ஆ) முண்டக உபநிடதத்தில், பக்தி நிஷ்டையாகவோ அல்லது புண்ணியத்தை விட்டு பிரப்பன்னனாகவோ இருக்கும் வித்வான், ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடைந்த பிறகு, பாப்பா பரமாத்மாவுடன் சமத்துவத்தை அடைகிறார் என்று கூறப்படுகிறது.

(இ) ஒரு வித்வானின் மகன்கள் (பக்தி நிஷ்டா அல்லது பிரபன்னர்கள்) தங்கள் தந்தையின் சொத்துக்களும், அவருடைய கர்மாவின் புண்ணியப் பகுதியும் வித்வானின் நண்பர்களுக்கு மாற்றப்பட்டு, அப்பாவின் பங்கு எதிரிகளுக்கு மாற்றப்படும் என்று வேதத்தின் சத்யயானி கிளை கூறுகிறது. வித்வானின் எதிரிகள்.

(ஈ) கௌஷிதகி உபநிடதம், வித்வான் சுக்ருத (புண்யா) மற்றும் துஷ்க்ருத (பாபா) ஆகியவற்றைக் கொட்டுவதாகவும், அவனது நட்பு உறவினர்கள் புண்யத்தைப் பெறும்போது அவனது எதிரிகளான அவனது உறவினர்கள் பாபாவைப் பெறுவதாகவும் கூறுகிறது.

இங்கே புண்யாவையும் பாப்பாவையும் சிந்துவது ஹனி என்றும், அதைத் தனது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மாற்றுவது உபயனா என்றும் அழைக்கப்படுகிறது.

முன்பு குறிப்பிட்டுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் பிரம்ம வித்யாவைப் பின்பற்றி பக்தி யோகம் செய்யும் போது, ​​தியானம் செய்யும் போது இந்த ஹனி மற்றும் உபயனாவை சிந்திக்க வேண்டும். ந்யாச வித்யாவைத் தவிர அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் இந்த சிந்தனை உபாசனா அல்லது தியானத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த சிந்தனை பக்தி யோகத்தின் துணை.

மேலே கூறப்பட்டுள்ளபடி, சில உபநிடத நூல்கள் புண்ய பாப கர்மாவை நீக்கும் ஹனியை மட்டுமே குறிப்பிட்டுள்ளன, மேலும் சில உபநிடதங்கள் புண்ய மற்றும் அப்பாவை முறையே நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மாற்றும் உபயனை மட்டுமே குறிப்பிட்டுள்ளன, சில உபநிடதங்கள் ஹனி மற்றும் உபயனம் இரண்டையும் குறிப்பிட்டுள்ளன.

ஹனி மட்டும் நினைத்தால் போதுமா, அல்லது உபயனம் மட்டும் நினைத்தால் போதுமா அல்லது தியானத்தின் போது இரண்டையும் யோசிக்க வேண்டுமா என்பது இங்கு எழும் சந்தேகம்.

ஹனி அல்லது உபயனம் விகல்பம் என்றும் இரண்டும் சமுச்சயம் என்றும் அழைக்கப்படுகிறது.

உபநிடதத்தின் கட்டளைப்படி அது விகல்பமாகவோ அல்லது சமுச்சயமாகவோ இருக்கலாம் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

ஹனி எப்பொழுதும் உபாயணத்திற்கு உட்பட்டவர் அல்லது உபயனத்திற்கு துணையாக இருப்பதால், அது சமுச்சயம் மட்டுமே என்றும் விகல்பம் அல்ல என்றும் சூத்ரகாரம் தீர்ப்பை வழங்குகிறது.

சூத்ரம் “ஹநௌது உபயன சப்த சேஷத்வத் குஷ ச்சந்தா, ஸ்துதி உபகனவத் ததுக்தம்”.

இந்த சூத்திரத்தில் பூர்வ மீமாம்சத்தின் நான்கு மாக்சிம்களை சூத்திரகாரர் மேற்கோள் காட்டுகிறார், அவற்றின் விவரங்கள் தேவையில்லை.

12) அடுத்த அதிகாரம் சாம்பராயதிகாரணம்.

மோட்சத்திற்குச் செல்லும் பக்தி நிஷ்டா அல்லது பிரபன்னன் புண்ணிய பாப கர்மாவை மரண உடலை விட்டு வெளியேறுகிறாரா அல்லது பிரகிருதி மண்டாவிற்கும் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கும் இடையில் உள்ள விரஜா நதிக்கரையில் துளிர்விடுகிறாரா என்பது இங்கே விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. கௌஷிதகி உபநிடதத்தில் ஒரு கூற்றின் காரணமாக இந்த சந்தேகம் எழுந்தது, அங்கு முக்தாவாக மாறப்போகும் ஜீவன் விரஜாவின் அருகில் வந்து புண்ய மற்றும் பாப கர்மாவை விட்டுவிடுகிறான் என்று கூறப்படுகிறது. பிறிதொரு உரையில் இறப்பின் போது என்று கூறப்பட்டுள்ளது.

சூத்ரகாரர் “சம்பாரயே தார்த்தவ்ய பவத் ததாஹி அந்யே” என்று படிக்கும் சூத்திரத்தில் கூறுகிறார்.

சாம்பரே என்றால் சாவு சரீரத்திலிருந்து புறப்படும் நேரத்தில் என்று பொருள். எனவே முக்தாத்மாவாக மாறப்போகும் வித்வான் மரணத்திற்குப் பிறகு புண்ணிய பாப கர்மாவை அனுபவிக்க எதுவும் இல்லை என்பதாலேயே அந்த கர்மாவை மரண நேரத்தில் விட்டுவிடுகிறார் என்பது முடிவு. மரணத்திற்குப் பிறகு, அவர் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியே ஸ்ரீ வைகுண்டத்திற்குச் செல்வது, சூக்ஷ்ம சரீரத்தை (எந்த உடலுக்கும் தெரியாத சிறிய உடல்) எடுத்துக்கொள்வது என்பது அவர் செய்த பக்தி யோகம் அல்லது பிரபத்தியின் பலன் காரணமாகும். மோட்சத்திற்கு செல்லும் வழியில் சந்திரனுடன் உரையாடுவதற்கு வித்வானுக்கு சூக்ஷ்ம சரிரா தேவைப்படுகிறது.

13) அடுத்த அதிகாரம் அணியமதிகரணம்.

இந்த அதிகாரத்தில் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த வித்வான்கள் அனைவரும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியே மோட்சத்திற்கு செல்கிறார்களா அல்லது உபகோசல வித்யா அல்லது பஞ்சாக்னி வித்யாவின்படி பக்தி யோகம் செய்தவர்கள் மட்டும் மோட்சத்திற்கு செல்கிறார்களா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அர்ச்சிராடி மார்க்கம்.

உபகோசல வித்யா மற்றும் பஞ்சாக்னி வித்யாவில் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த ஐயம் எழுகிறது.

மோட்சத்திற்கு வேறு வழியில்லாததால் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்தவர்கள் அனைத்து பிரம்ம வித்யா நிஷ்டைகளும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாகத்தான் மோட்சத்திற்குச் செல்கின்றனர் என்று சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார். வித்வான் அர்ச்சிராதி கதி மூலம் மட்டுமே மோட்சத்திற்குச் சென்றால் மறுபிறவி இல்லை.

“அனியம்: சர்வேஷாம், அவிரோதா: சப்த அனுமனாப்யம்” என்பது சூத்ரம். பக்தி யோகம் செய்து உபகோசல வித்யா அல்லது பஞ்சாக்னி வித்யாவைச் செய்தவர்கள் மட்டுமே அர்ச்சிராதி மார்கத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என்பதே இதன் பொருள்.

14) அடுத்த அதிகாரம் அக்ஷராத்யா திகரணமாகும்.

இந்த அதிகாரத்தில் அமலா என்ற ஸ்வரூப நிருபக கல்யாண குணம் அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் தியானிக்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

அமலா என்றால் களங்கமற்ற தன்மை அல்லது ஹேய பிரதி பாதத்வம். ஹேய என்றால் களங்கம்.

இந்த குணம் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள உபநிடத உரையின் சாராம்சமாகும், அதில் யாக்ஞவல்கியர் முனிவர் கார்கி ஒரு பெண்ணுக்கு தனது கேள்விக்கு பதிலளித்தார்.

பதில்களில் ஒன்று பின்வருமாறு.

இந்தச் சூழலில் அக்ஷரம் எனப்படும் பரமாத்மாவைப் புரிந்து கொண்ட அல்லது உணர்ந்த பிராமணர்கள், திவ்யாத்மா ஸ்வரூபம் எனப்படும் பரமாத்மாவின் உள்ளார்ந்த தன்மையைப் பின்வருமாறு கூறுகிறார்கள் அல்லது அறிவிக்கிறார்கள்.

அஸ்துலம் – பெரிய அல்லது பெரிய அளவில் இல்லை

அனனு – அளவில் அணு இல்லை

அஹ்ரஸ்வம் – குறுகியதல்ல

அதிர்கம் – நீண்ட நேரம் இல்லை

அலோஹிதம் – சிவப்பு நிறத்தில் இல்லை

ஆஸ்நேஹம் – எண்ணெய் இல்லை

அச்சயம் – நிழல் அல்ல

அத்தமா – இருள் அல்ல

அவாயு – காற்று அல்ல

அனகாசம் – ஈதர் அல்ல

அசங்கம் – பற்றுதல் இல்லாமல்

அரசம் – சுவை இல்லாதது

அகந்தம் – வாசனை இல்லாதது

அச்சக்ஷுஷம் – கண்கள் இல்லாமல் அஸ்ரோத்ரம் – காதுகள் இல்லாமல் அவக் – பேச்சு உறுப்பு இல்லாமல்

அமானா – மனம் இல்லாமல் அதேஜஸ்கம் – ஒளி இல்லாமல் அப்ரணம் – மூச்சு இல்லாமல்

முகம் – வாய் இல்லாமல் அனந்தரம் – அகம் அல்ல (உள்ளே இல்லை)

அபஹ்யம் – வெளியில் இல்லை அந்த நகிஞ்சனா அஸ்னாதி – எதையும் சாப்பிடுவதில்லை

நாதத் அஷ்நாதா கச்சனா – எந்த உடலும் அதை உண்ண முடியாது.

ப்யாத்ம ஸ்வரூபத்தில் எந்தக் களங்கமும் இல்லை என்பதே மேற்கூறிய உரையின் தொகையும் பொருளும் ஆகும்.

“அக்ஷராதியம் து அவரோத சமன்யா தத் பாவாப்யாம் ஔபஸாதவத் தாதுக்தி” என்பது சூத்ரம். அக்ஷர தியம் என்பது அனைத்து வித்யாக்களிலும் தியானிக்கப்பட வேண்டிய மேற்கூறியதாகும்.

15) அடுத்த அதிகாரம் அந்தரத்வாதிகாரணம்.

விவாதத்திற்கான தலைப்பு பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதில் உஷஸ்த முனிவர் யாக்ஞவல்கிய முனிவரிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார், கோஹோல முனிவர் ஒரே மாதிரியான கேள்வியை எழுப்புகிறார் மற்றும் முனிவர் யஞான வல்கியர் பதிலளிக்கிறார். உஷஸ்தியின் கேள்வி பின்வருமாறு. தயவு செய்து சொல்லுங்கள், நேரடியான மற்றும் உணரக்கூடிய பிரம்மன் யார், எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்மா யார்?.

அதேபோல் கஹோலாவும் அதே கேள்வியை வைக்கிறார். ஆனால் யாக்ஞவல்கியரின் பதில்கள் வேறுவிதமாக இருந்தன. இந்த சூழலில் இரண்டு பிரம்ம வித்யாக்கள் உள்ளன. ஒன்று உஷாதஸ்தாவின் மற்றொன்று கஹோலா. இந்த இரண்டு வித்யாக்களும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பது கேள்வி.

பூர்வபக்ஷி இந்த இரண்டு வித்யாக்களும் வெவ்வேறு பதில்கள் வேறு என்று கூறுகிறார்.

இரண்டு விடைகளும் ஒரே பரமாத்மாவைக் குறிப்பதால் இந்த இரண்டு வித்யாக்களும் ஒன்றே என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

16) அடுத்த அதிகாரம் காமாதிகரணம்.

விவாதத்திற்கான தலைப்பு தஹர வித்யா ஆகும், இது சாந்தோக்யா மற்றும் பிருஹதாரண்யகா ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உபநிடதங்களில் இந்த தஹர வித்யா வேறுபட்டதா அல்லது இரண்டிலும் ஒன்றா என்பது சந்தேகம். சாண்டோக்யத்தில் ஆகாசம் என்று அழைக்கப்படும் பரமாத்மா எட்டு கல்யான குணங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், பிருஹதாரண்யகத்தில் பரமாத்மா ஆகாசத்தின் மீது உறங்குவதாகவும், கல்யாண குண வசிஷ்வாவுடன் தொடர்புடையதாகவும் இருப்பதால், இது வேறுபட்டது என்று பூர்வபக்ஷி கூறுகிறார். வசித்வா என்றால் கட்டுப்படுத்தப்பட்டது.

இரண்டு உபநிடதங்களிலும் தஹர வித்யா ஒன்றே என்று சூத்ரகாரர் தீர்ப்பை வழங்குகிறார். எனவே சாண்டோக்யத்தில் கூறப்பட்டுள்ள 8 பண்புகளுடன் வசித்வா போன்ற பண்புகளைச் சேர்த்து பின்னர் தியானம் செய்ய வேண்டும்.

17) அடுத்த அதிகாரம் தண்ணிர்தனாதிகாரம்.

இது உத்கீத வித்யாவைப் பற்றியது. இந்த வித்யா பிரணவ தியானம். மேன்மையான அல்லது மேன்மையான பலன்களைப் பெறவும், விரைவான பலன்களைப் பெறுவதற்கான தடைகளை நீக்கவும் இந்த வித்யா யாகத்தின் துணையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உத்கீத வித்யா செய்வது கட்டாயமா அல்லது விருப்பமா என்பது இங்கு எழும் சந்தேகம்.

பூர்வ மீமாம்சத்தில் இரண்டு மாக்சிம்கள் உள்ளன. முதலாவது “கோதநேன பசுகம: ப்ரணயேத்” எனப்படும். ஒருவருக்கு பசுக்களை பரிசாக அளிக்க விரும்பினால், அவர் அரிசி மாவு அல்லது கோதுமை மாவின் பச்சரிசியான புரோடாஷத்தை தயார் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பால் கறக்க பயன்படும் பாத்திரத்தில் இருந்து மாவு. மாவில் தண்ணீர் ஊற்றி பச்சரிசி தயாரிப்பது பிராணயாணம் எனப்படும். விருப்பமான ஒரு காரியத்தைச் செய்யும் சூழலில் இந்த மாக்சிம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பர்ணமாயீ ஜுஹூ” என்று மற்றொரு கோட்பாடு உள்ளது. ஜுஹு என்பது ஒரு யாகத்தில் பலி நெருப்புக்கு நெய் வழங்கப் பயன்படும் நீண்ட கை கொண்ட கரண்டி போன்றது. இது ஒரு குறிப்பிட்ட வகை மரத்தால் ஆனது. இது கட்டாயமானது மற்றும் விருப்பமானது அல்ல.

இந்த அதிகாரத்தில் உள்ள முடிவு என்னவென்றால், உத்கீத வித்யாவை ஒரு யாகத்தின் துணை அல்லது துணையாக செய்வது கோதோஹன நியாயம் அல்லது மாக்சிம் போன்ற விருப்பமானது.

18) அடுத்த அதிகாரம் பிரதான அதிகாரம் எனப்படும்.

தஹர வித்யாவில் ஸ்வரூப நிருபக குணங்கள் அல்லது தர்மங்களுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிப்பதோடு, அவருடைய எட்டு குணங்களையும் தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எட்டு குணங்கள்,

அபஹத பாப்மா – பரமாத்மா எந்த பாவமும் கறையும் இல்லாதவர்.

விஜரா – அவருக்கு முதுமை இல்லை. விம்ருத்யு – அவனுக்கு மரணம் இல்லை.

விசோகா – அவருக்கு எந்த வருத்தமும் வருத்தமும் இல்லை. விஜிகிட்சா – அவருக்கு பசி இல்லை. அபிபாசா – அவருக்கு தாகம் இல்லை

சத்யகாமா – அவர் விரும்பும் எதையும் அடைய அல்லது அடையும் திறன் கொண்டவர்.

சத்யசங்கல்பம் – தான் விரும்பிய எதையும் செய்யும் திறன்.

இறைவனை தியானித்த பின் மேற்கண்ட 8 குணங்களை மட்டும் தியானம் செய்தால் போதுமா, மீண்டும் இந்த 8 குணங்களோடு இணைந்திருப்பதை நினைப்பது அவசியமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

8 குணங்களை மட்டும் நினைத்தால் போதும் என்கிறது பூர்வபக்ஷி. மேற்கூறிய 8 குணங்களுடன் மீண்டும் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும் என்று தனது சித்தாந்தத்தில் சூத்ரகாரர் கூறுகிறார்.

19) அடுத்த அதிகாரம் லிங்கபூயஸ்தவத் அதிகாரம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில் ஒரு நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகுதான், தியானிக்கப்பட வேண்டிய உயர்ந்தவர் யார் என்று சூத்ரகாரர் கூறுகிறார். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி தைத்தரிய உபநிடதத்தில் உள்ள நாராயண அனுவாகம். தஹர வித்யா சொல்லிய உடனேயே இந்த அனுவாகம் உபநிடதத்தில் வருகிறது. பூர்வபக்ஷி இந்த நாராயண அனுவாகம் தஹர வித்யாவிற்கு அடிபணிந்தவர் என்றும், ஸ்ரீமன் நாராயணனை தஹர வித்யாவில் மட்டுமே தியானிக்க வேண்டும் என்றும் வாதிடுகிறது. சூத்ரகாரர் தனது முடிவை “லிங்க பூயஸ்த்வத் தத் ஹி பத்லியாஸ் ததாபி” என்ற சூத்திரத்தில் கொடுக்கிறார்.

லிங்கம் என்றால் அறிகுறி அல்லது சின்னம். இந்த அனுவகத்தில் அக்ஷரம், சம்பு, இந்திரன், பிரம்மா போன்ற சொற்கள் குறிப்பிடப்பட்டு அவை ஸ்ரீமன் நாராயணன் என்று கூறப்படுகிறது. இந்திரன், சிவன் மற்றும் நான்கு தலை பிரம்மன் மற்றும் பிறர் போன்ற அனைவருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணரே அந்தர்யாமி என்று அர்த்தம். ஆகாஷா, பரஜ்யோதி போன்ற சில சொற்கள் நேரடியாக ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கின்றன.

எனவே அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

20) அடுத்த அதிகாரம் பூர்வ விகல்பாதிகரணம்.

இந்த அதிகாரம் சூழலுக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் இந்த குணோபசம்ஹார பாதத்தின் கருப்பொருளுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் பொருத்தம் இல்லாத அக்னிரஹஸ்யத்தில் உள்ள ஒரு பகுதியை சூத்ரகார விவாதிக்கிறது. எனவே இந்த அதிகாரத்தின் விவரங்கள் தவிர்க்கப்படலாம்.

21) அடுத்த அதிகாரம் சரிரே பவதிகாரணம்.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் பின்வரும் மூன்று விஷயங்களைக் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(அ) ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனுடைய உபஸ்யத்தின் தன்மை

(ஆ) உபாசனா அல்லது பிரம்ம வித்யாவின் தன்மை

(இ) உபாசகரின் இயல்பு அல்லது உபாசனை செய்யும் நபரின் (ஜீவா) இயல்பு.

இது அனுமானிகாதிகாரணத்தில் உள்ள ஒரு சூத்திரத்தின்படி “த்ராயணம் ஏவச்ச உபன்யாசஹ ப்ரஸ்ன:ச”. த்ராயணம் என்றால் மேலே சொன்ன மூன்று புள்ளிகள். இறைவன் தன் உடலாகிய ஜீவாவின் ஆன்மா என்று கூறப்படுவதால், தனிப்பட்ட ஆன்மாவின் தன்மையும் அறியப்பட வேண்டும். ஜீவனின் குணாதிசயங்களில் இரண்டு தொகுப்புகள் உள்ளன, அவர் சம்சாரத்தில் இருக்கும்போது ஒரு தொகுப்பு மற்றும் அவர் வைகுண்ட ப்ய லோகத்தில் இருக்கும் போது மற்றொரு தொகுப்பு.

அவன் இவ்வுலகில் அல்லது சம்சாரத்தில் இருக்கும் போது உள்ள குணாதிசயங்களின் தொகுப்பு (அ) அறிவது (ஆ) செய்வது (இ) அனுபவிப்பது.

மோட்சத்தில் இருக்கும் போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனின் எட்டு குணங்கள் அவர் திவ்ய பர்யங்கா அல்லது சிம்ஹாசனத்தில் ஏறியவுடன் மலரும், அதில் பைன் தம்பதிகள் அமர்ந்துள்ளனர். அபஹதபாப்மா, விஜரா, விம்ருத்யு, விசோக:, விஜிகிட்ச, அபிபாச, சத்ய காமம், சத்ய சங்கல்பம் ஆகிய எட்டு குணங்களாகும்.

உபாசனை அல்லது தியானத்தின் போது தியானம் செய்பவர் தன்னை அறிபவராகவும், செய்பவராகவும், அனுபவிப்பவராகவும் நினைக்க வேண்டுமா அல்லது மேற்கூறிய எட்டு குணங்களை உடையவராக தன்னை நினைத்துக் கொள்வதா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. பூர்வபக்ஷி ஜீவா என்பது முதல் குணாதிசயங்களுடன் சிந்திக்கப்பட வேண்டும் என்று கூறும்போது, ​​சூத்ரகாரர் “வியாதிரேகா: தத்பவ பவித்வாத் நது உபலப்திவத்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார்.

வியாதிரேகா என்றால் வேறுபட்டது, அதாவது ஜீவா என்பது தியானத்தின் போது அவர் இருக்கும் குணாதிசயங்களிலிருந்து வேறுபட்ட பண்புகளுடன் சிந்திக்கப்பட வேண்டும். எனவே மோட்சத்தில் மலரும் எட்டு குணங்களோடுதான் அவர் நினைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

22) அடுத்த அதிகாரம் அங்கவபத்தாதிகாரணம்.

இது மீண்டும் உத்கீத வித்யாவுடன் தொடர்புடையது மற்றும் பிரம்ம வித்யாவுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை. எனவே இந்த அதிகாரத்தின் விவரங்கள் தவிர்க்கப்படலாம்.

23) அடுத்த அதிகாரம் பூமாஜ்யாயஸ்த்வாதிகாரன்.

இது வைஸ்வானர வித்யாவைக் குறிக்கிறது. வைஸ்வானர வித்யாவில் இரண்டு வகையான உபாசனைகள் உள்ளன.

(1) வைஸ்வானர புருஷனின் ஒவ்வொரு உறுப்பின் உபாசனா, இது வ்யஸ்த உபாசனா என்று அழைக்கப்படுகிறது.

(2) சமஸ்தோபாசனம் எனப்படும் முழு வைஸ்வாநர புருஷரின் உபாசனா.

வியஸ்தா உபாசனம் செய்ய வேண்டுமா அல்லது சமஸ்தோப் ஆசனம் மட்டும் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. வியாஸ்தோ பாசானம் செய்ய வேண்டும் என்று பூர்வபக்ஷி கருத்து தெரிவிக்கிறார். வ்யஸ்தா உபாஸனத்தை விடச் சிறந்த சமஸ்தா பாசனம் செய்ய வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். உண்மையில் வ்யஸ்தா உபாஸனத்தின் பலன்கள் உபாசகர்களின் ஆன்மாக்களுக்கு மிகவும் ஆபத்தானவை மற்றும் மோட்சத்தின் பலனை அல்லது நித்திய பேரின்பத்தை அவர்களால் ஒருபோதும் அடைய முடியாது.

24) அடுத்த அதிகாரம் சப்தாத்பேதாதி கரணம் எனப்படும்.

இங்கு முன்னர் பட்டியலிடப்பட்ட 32 பிரம்ம வித்யாக்கள் ஒன்றா அல்லது அவை வேறுபட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

பூர்வபக்ஷி, பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய தியானத்தின் பொருளால் எல்லா வித்யாக்களும் ஒன்றே என்று வாதிடுகிறது.

சூத்ரகாரரின் முடிவு அனைத்து வித்யாக்களும் வேறுபட்டவை, ஏனென்றால் தியானம் செய்ய வேண்டிய பண்புகள் அல்லது கல்யாண குணங்கள் வித்யாவிற்கு வித்யாவிற்கு மாறுபடும்.

25) அடுத்த அதிகாரம் விகல்ப திகரணம் எனப்படும்.

மோட்சத்தை அடைய விரும்பும் ஒருவர் 32 பிரம்ம வித்யாக்களையும் ஏற்று உபாசனை செய்ய வேண்டுமா அல்லது தியானம் செய்ய வேண்டுமா அல்லது ஏதாவது ஒரு வித்யாவை ஏற்று உபாசனை செய்தால் போதுமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் மோட்சத்தின் பலன் அல்லது நித்திய ஆனந்தத்தின் பலன் ஒன்றே என்பதால் உபாசகர் தியானத்திற்கு ஏதேனும் ஒரு வித்யாவை ஏற்றுக்கொண்டால் போதும் என்று சூத்ரகாரர் “விகல்ப: ஒரு விசிஷ்டா பலத் வத்” என்ற சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார். அனைத்து வித்யாக்களும் உபாசனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒரு நபர் அனைத்து வித்யாக்களையும் ஏற்று உபாசனை செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்றால் சிறப்பு சாதனை எதுவும் இல்லை.

26) இந்தப் பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் யதாஸ்ரயபாவாதிகாரணம் எனப்படும்.

இந்த அதிகாரம் நடைமுறையில் இந்த பாதத்தில் உள்ள தன்னிர்தனா நியமதிகாரனா 17 வது ஒரு யாகத்தில் உத்கீத வித்யா செய்வது கோதோஹன நியாயத்தின் படி விருப்பமானது என்று கூறப்பட்டது. ஒவ்வொரு யாகத்திலும் உத்கீத வித்யா கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த பூர்வபக்ஷி தனக்கு ஆதரவாக மேலும் சில புள்ளிகளை எழுப்பியதால் மறுமொழி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சூத்ரகரா அனைத்து புள்ளிகளுக்கும் பொருத்தமான பதில்களை அளிக்கிறது மற்றும் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது.

3 வது அத்தியாயம் சாதனா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது, அதாவது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளும் அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் 3 வது காலாண்டில் மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாக பக்தி யோகம் நிறுவப்பட்டது, இது பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய தீவிர தியானமாகும், இது அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படும் எட்டு நிலை பயிற்சியாகும். இந்த பக்தி யோகம் பிரம்ம வித்யா என்றும் அழைக்கப்படுகிறது, இது உபநிடதங்களில் 32 வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. பிரம்ம வித்யாவின் 32 வடிவங்களில் 31 பிரம்ம வித்யாக்கள் பக்தி யோகாவுடன் நேரடியாக தொடர்புடையவை, இல்லையெனில் அஷ்டாங்க யோகா என்று அழைக்கப்படுகிறது. 32 வது பிரம்ம வித்யா நியாசவித்யா என்று அழைக்கப்படுகிறது, இது பிரபத்தி அல்லது சரணாகதி என்று அழைக்கப்படுகிறது, இது ஐந்து துணை அல்லது அங்கங்களைக் கொண்டுள்ளது.

31 பிரம்ம வித்யாக்களில் கூட பஞ்சாக்னி வித்யா என்று ஒரு பிரம்ம வித்யா உள்ளது.

பஞ்சாக்னி வித்யாவில் தியானத்தின் பொருள் அவனது சுயமே, அவர் பிரம்மனை (ஸ்ரீமன் நாராயணனை) தனது ஆத்மாவாகக் கொண்டவராக தியானிக்கப்பட வேண்டும். இது பிரம்மத்மக ஸ்வாத்ம உபாஸனம் எனப்படும். பரமாத்மா ஆத்மா அல்லது ஆத்மா என்றும் ஜீவாத்மா அவரது உடல் என்றும் இதன் பொருள். மற்ற 30 பிரம்ம வித்யாக்களில், தியானத்தின் பொருள் பகவான் ஸ்ரீமன்நாராயணன் தியானம் செய்பவர் அல்லது தனிப்பட்ட ஆன்மாவைத் தனது உடலாகக் கொண்டவர். இதுவே ஸ்வாத்மா சரிரக பரமாத்ம உபாஸனம் எனப்படும். எனவே பஞ்சாக்னி வித்யாவிற்கும் மற்ற 30 பிரம்ம வித்யாக்களுக்கும் தியான முறையில் வித்தியாசம் உள்ளது என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது. நியாசவித்யா அல்லது பிரபத்தியில் ஆன்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணடையும் தியானம் இல்லை, இந்த பிரபத்தியில் ஸ்வரூப சமர்ப்பணம், பர சமர்ப்பணம், பல சமர்ப்பணம் ஆகிய மூன்று சமர்ப்பணங்கள் உள்ளன. தன் சுயத்தின் அடிப்படை மற்றும் உள்ளார்ந்த தன்மையை பரமாத்மாவுக்கு வழங்குவது ஸ்வரூப சமர்ப்பணம் எனப்படும். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் தனது சொந்த ஆன்மாவைப் பாதுகாக்கும் பொறுப்பை பாரத சமர்ப்பணம் ஒப்படைக்கிறது.

பல சமர்ப்பணம் என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குப் பலத்தை சமர்ப்பணம் செய்வதாகும். மோட்சத்தை அடைந்த பிறகு முக்தி பெற்ற ஆன்மா அல்லது முக்தாத்மா ஸ்ரீ வைகுண்ட பியாநகரில் உள்ள பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்கிறார். பைன் தம்பதியினர் இந்த சேவையில் மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் அவர்கள் மோட்சத்தை அடையும் தனிப்பட்ட ஆத்மாவின் பலனை அனுபவிப்பவர்களாக மாறுகிறார்கள். முக்தாத்மாவும் சேவை செய்வதன் மூலம் இந்த நித்திய சுகத்தை அனுபவிக்கிறார். தனிப்பட்ட ஆன்மாவின் உள்ளார்ந்த மற்றும் இயற்கையான பண்புகள் (அ) அறிதல் (ஆ) செய்தல் (இ) அனுபவிப்பது (ஈ) சுயமாக ஒளிர்வது (இ) எந்த உதவியும் இல்லாமல் தன் சுயத்தை அறிவது (எஃப்) அணு அளவில் இருப்பது (ஜி) நித்தியமானது ( h) inpisible (I) உடலிலிருந்து வேறுபட்டது (j) புலன்களிலிருந்து வேறுபட்டது.

மேற்கூறியவற்றின் பின்னணியில் மற்றும் முந்தைய குண உபசம்ஹார பாதத்திலிருந்து நூலை எடுத்து இந்த அத்தியாயத்தின் கடைசி பாதம் தொடங்குகிறது. பக்தி யோகாவுக்குத் தேவையான துணைப் பொருட்களைக் கையாளும் இந்த பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் 15 அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் 20 சூத்திரங்களைக் கொண்ட புருஷார்த்த அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள 156 அதிகாரங்களில் இந்த அதிகாரத்தில் அதிக எண்ணிக்கையிலான சூத்திரங்கள் உள்ளன, அதாவது 20. ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள வேறு எந்த அதிகாரத்திலும் இந்த எண்ணிக்கையில் இல்லை.

புருஷார்த்தம் என்றால் உச்ச இலக்கு அல்லது மோட்சம். புருஷார்த்தத்தை அடைவதற்கு கர்மா அல்லது பிரம்ம வித்யா புருஷார்த்தத்திற்கான வழிமுறையா என்பது இந்த அதிகாரத்தில் உள்ள விவாதம்.

பிரம்ம சூத்திரங்களின் ஆசிரியர் அல்லது இயற்றிய முனிவர் பதராயணன் இந்த அதிகாரத்தைத் தொடங்குகிறார். புருஷார்த்த அதா: சப்தாதிதி பாதராயண என்று சித்தாந்த சூத்திரத்துடன்.

பக்தி யோகமாகவோ அல்லது பிரபத்தியாகவோ இருக்கும் பிரம்ம வித்யாவின் மூலம் புருஷார்த்தம் அல்லது உயர்ந்த இலக்கு அடையப்படுகிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள்.

இங்கு ஜைமினி முனிவர் வருகிறார், அவர் இந்த அதிகாரத்திற்கு எதிரி அல்லது பூர்வபக்ஷி ஜைமினி முனிவர் பாதராயனின் சீடர் என்று கூறப்படுகிறது. ஜைமினி ஒரு நாத்திகர் என்றும் கடவுள் மற்றும் பிற வான கடவுள்கள் இருப்பதை நம்பவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது. இந்தக் கருத்து வலுவாக மறுக்கப்பட்டு, ஜைமினி முனிவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்று நிறுவப்பட்டது, ஏனெனில் ஜைமினி முனிவர் பிரம்ம சூத்திரங்களின் பல இடங்களில் பத்ராயனால் மேற்கோள் காட்டப்பட்டதால், ஜைமினி முனிவர் பிரம்மன் பற்றிய பதராயனின் கருத்துக்களை ஆதரிக்கிறார்.

இங்கு ஜைமினி ஆறு சூத்திரங்களில் பிரம்ம வித்யா கர்மாவிற்கு துணை/அடிப்படையானது என்றும் கர்மா வித்யாவிற்கு துணை இல்லை என்றும் கூறுகிறது. இங்கு கர்மா என்றால் தினசரி சடங்குகள் மற்றும் யாகங்கள் என்று பொருள்.

ஜைமினி முன்வைத்த காரணங்கள்

i) அஸ்வபதி மன்னனும், ஜனகச் சக்கரவர்த்தியும் பிராமணீஷ்டர்களாக இருந்தாலும் புகழ்பெற்ற கர்மநிஷ்டர்கள். பிரம்ம வித்யை செய்பவன் பிரம்மநிஷ்டா, கர்ம யோகம் செய்பவன் கர்மநிஷ்டம்.

ii) உத்கீத வித்யாவில், உத்கீத வித்யாவைப் பயிற்சி செய்வதோடு கர்மாவாகிய யாகத்தைச் செய்பவர் சிறந்த மற்றும் அதிக திறன் அல்லது சக்திவாய்ந்த பலன்களை அடைவார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யா கர்மாவின் துணை.

iii) வித்யாவும் கர்மாவும் எப்பொழுதும் ஒன்றாகச் செல்வதாகவும், தர்க்கரீதியான பகுத்தறிவின் மூலம் வித்யா கர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

iv) சந்தோக்யோபநிஷத்தின் கடைசி பத்தியில் பிரம்ம வித்யா பயிற்சி செய்பவர் கர்மா செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யா கர்மாவின் துணையாகத் தோன்றுகிறது.

v) ஈஷாவாஸ்ய உபநிடதத்தில் ஒரு மனிதன் கர்மாவை மட்டுமே செய்து 100 வருடங்கள் இவ்வுலகில் வாழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யாவால் உயர்ந்த இலக்கை அடைய முடியாது. எனவே வித்யா கர்மாவின் துணை.

இப்போது சூத்ரகார முனிவர் பாதராயணன் மேற்கூறிய விஷயங்களை மறுத்து, கர்மா வித்யாவுக்குத் துணை என்றும், பிரம்ம வித்யாவினால்தான் முக்தி அடையும் என்றும் நிறுவத் தொடங்குகிறார். மறுப்பு புள்ளிகள் பின்வருமாறு.

i) பரமாத்மா அனைத்து அம்சங்களிலும் ஜீவாத்மாவை விட உயர்ந்தவர், மேலும் ஜீவன் பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி பரமாத்மாவை தியானிக்காத வரை அவன் முக்தியை அடைய மாட்டான். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள முறைப்படி கர்மயோகம் செய்தால் மட்டுமே பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்ய முடியும்.

ii) பிரம்ம வித்யாவால் செய்யப்படும் கர்மா பல நோக்கங்களைக் கொண்டது மற்றும் கர்மா எப்போதும் பிரம்ம வித்யாவிற்கு துணையாக இருக்க வேண்டியதில்லை. நாம் எந்த நோக்கத்திற்காக வேதங்களைக் கற்றுக்கொள்கிறோம், எந்த நோக்கத்திற்காக கர்மா செய்கிறோம் என்று கவஷேயர்கள் போன்ற முனிவர்கள் கூறுகிறார்கள் என்று சில உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. கர்மா என்பது பிரம்மவித்யாவின் இன்றியமையாத துணை அல்ல என்பதை இது குறிக்கிறது.

iii) மேலும் கர்மத்தை அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்வது பிரம்ம வித்யாவுக்கு துணை என்றும் அந்த கர்மாவை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கர்மா பிரம்ம வித்யாவிற்கு எதிரானது, அதன் பலன் மோட்சம் (நித்திய ஆனந்தம்).

எனவே பிரம்ம வித்யா கர்மாவுக்கு துணையாக இருக்க முடியாது.

iv) உத்கீத வித்யா கர்மாவின் துணை என்ற உபநிஷத வாக்கியத்தை பிரம்ம வித்யாவிற்குப் பயன்படுத்த முடியாது. உத்கீத வித்யா பிரம்ம வித்யா அல்ல.

v) வித்யாவும் கர்மாவும் எப்பொழுதும் ஒன்றாகச் செல்கின்றன என்ற உபநிடதக் கூற்று, வித்யா கர்மாவுக்கு அங்கம் என்று குறிப்பாகக் கூறவில்லை. அங்க என்றால் துணை, துணை அல்லது கீழ்நிலை என்று பொருள். பிரம்ம வித்யா மோட்சத்தின் சொந்த பலனுக்காக உள்ளது, அதே நேரத்தில் கர்மா அதன் சொந்த பலனுக்காக உள்ளது. ஜோதிஷ்டோம யாகம் ஸ்வர்க லோகத்தை அடைவதற்கானது. புத்திர காமேஷ்டியாக என்பது ஒரு மகனைப் பெறுவதற்காக. கரீரீஷ்டி என்பது மழையைப் பெறுவதற்காக.

இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர், யாகங்கள் போன்ற எந்த கர்மாவையும் அணுகாத சந்நியாசிகள் அல்லது காவி அங்கி அணிந்த சந்நியாசிகளும் கூட பக்தி யோகம் அல்லது பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்யத் தகுதியுடையவர்கள் என்று கூறுகிறார்.

எனவே பிரம்ம வித்யா ஒருபோதும் கர்மத்திற்கு அங்கமாக இருக்க முடியாது என்பது முடிவு.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “ஸ்துதிமாத்ரா அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரமும் அடுத்த அதிகாரமும் சூழலுக்கு அப்பாற்பட்டவை மற்றும் இந்த பாதத்தின் கருப்பொருளுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை. இந்த பாதத்தின் கருப்பொருள் பிரம்ம வித்யாவின் அத்தியாவசிய துணைகளை கருத்தில் கொள்வதாகும்.

இந்த அதிகாரத்திற்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு எழுதலாம்.

முந்தைய அதிகாரத்தில் சந்தோக்யோபநிஷத் பிரம்மா சம்ஸ்தாவின்படி பிரம்மநிஷ்டா என்று அழைக்கப்படும் ஒருவர் மோட்சத்தை அடைவார் என்று கூறப்பட்டது. பிரம்மநிஷ்டா என்றால் பிரம்ம வித்யா அல்லது பக்தி யோகம் செய்பவர் என்று பொருள். மேற்குறிப்பிட்ட வாசகம் பிரம்மநிஷ்டையைப் போற்றும் விதமாகவும், பிரம்மச்சாரி (இளங்கலை), கிருஹஸ்தா (திருமணமானவர்), வானபிரஸ்தம் (வீடு அந்தஸ்தைத் துறந்து காட்டில் வசிப்பவர்) ஆகிய நான்கு ஆசிரமங்களில் இருப்பவர்கள் என்ற உண்மையை நினைவுபடுத்துவதற்காக இது செய்யப்பட்டது. மற்றும் காவி அங்கி அணிந்த சந்நியாசிகள் பக்தி யோகா அல்லது பிரபத்திக்கு தகுதியுடையவர்கள். ஆசிரமங்களைக் குறிப்பிடுவது பிரம்மனைப் போற்றுவதற்காகத்தான்.

அதேபோல் உத்கீத வித்யாவில் சாரங்களுக்கிடையில் சாரமாக இருக்க பிரணவத்தை போற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வெறும் பிரணவத்தின் துதியா அல்லது சாரங்களுக்கிடையில் சாரமான மேற்கூறிய அம்சத்தைக் கருத்தில் கொண்டு பிரணவத்தை தியானிக்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. உபநிஷத வேதம் எப்பொழுதும் சில புதிய அல்லது புதுமையான விஷயங்களைச் சொல்வது போல், பிரத்யக்ஷ அல்லது அனுமன பிரமாணத்தால் நிறுவப்படாத, மேற்கூறிய அம்சத்துடன் பிரணவத்தை தியானிக்க வேண்டும் என்று சூத்ரகாரம் தீர்ப்பை வழங்குகிறது. இந்த அதிகரணம் இரண்டு சூத்திரங்களைக் கொண்டது.

மூன்றாவது அதிகாரத்திற்கு பரிப்லவர்தாதிகாரன் என்று பெயர். முன்பு குறிப்பிட்டது போல் தின்னங்களும் சூழலுக்கு அப்பாற்பட்டவை. பரிப்லவம் என்றால் முகஸ்துதி அல்லது புகழ்ச்சி என்று பொருள்.

உபநிடதங்களில் எப்போதும் ஒரு பிரம்ம வித்யாவுடன் ஒரு கதை மாறாமல் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரன் பிரதர்தனனுக்கு உபதேசித்த பிரதர்தன வித்யாவில், ஒரு மனிதன் இந்திரனைச் சந்திக்க சொர்க்கத்திற்குச் செல்கிறான் என்று ஒரு கதை உள்ளது. இந்திரன் தன்னிடம் இருந்து உதவி பெற்றதன் மூலம் பரஸ்பர சைகையாக பிரதர்தனிடம் ஒரு வரம் கேட்கிறான். அதே போல சத்வித்யாவில் ஸ்வேதகேதுவின் கதை சொல்லப்படுகிறது. பிரம்ம வித்யாக்களுடன் இணைக்கப்பட்ட இந்தக் கதைகள் வெறும் கதை மதிப்பைக் கொண்டிருக்கின்றனவா அல்லது பிரம்ம வித்யாக்களின் ஒருங்கிணைந்த பகுதியா மற்றும் பிரம்மவித்யாக்களைப் பயில்பவர்களைப் புகழ்வதற்காகவே உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. அஸ்வமேத யாகத்தில் ஒவ்வொரு நாளும் சில வேத மந்திரங்களைச் சொல்லி மன்னன் முகஸ்துதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கதைகள் பிரம்ம வித்யாக்களைப் போற்றுவதாகவும், மோட்சத்தை அடைய இந்த பிரம்ம வித்யாக்களை நாடுவதற்கு அவை மக்களைத் தூண்டுவதாகவும் இந்தச் சூழலில் சூத்ரகாரர் தெளிவாகக் கூறுகிறார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “அக்னிந்தனாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இது முதல் அதிகாரத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது.

நான்காவது ஆசிரமத்தைச் சேர்ந்த காவி வஸ்திரம் தரித்த துறவிகளும் மோட்சம் பெற உபாசனை அல்லது பக்தி யோகம் செய்யத் தகுதியுடையவர்கள் என்று முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஒரு துறவி அல்லது சன்யாசி அக்னி அல்லது நெருப்புடன் தொடர்புடைய எந்த கர்மாவையும் செய்ய தகுதியற்றவராக இருக்கும்போது, ​​கர்மாவை பக்தி யோகம் செய்வதற்கு நேரடி மற்றும் தொடர்ச்சியான முன்நிபந்தனையாக இருக்கும்போது, ​​மோட்சத்தை அடைவதற்கு ஒரு சன்யாசி எப்படி பக்தி யோகம் செய்ய தகுதியுடையவராவார்? .

சன்யாசிகள் உபாசனம் அல்லது பக்தி யோகம் செய்யத் தகுதியுடையவர்கள் என்று உபநிடதம் தெளிவாகக் கூறும்போது, ​​அக்னியுடன் தொடர்புடைய கர்மா அவர்களுக்குப் பொருந்தாது, அது கிருஹஸ்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். எனவே சன்யாசிகள் அக்னியுடன் தொடர்புடைய கர்மாவைச் செய்யாமல் பக்தி யோகத்தைச் செய்யலாம்.

தற்செயலாக, சன்யாசிகள் கர்மா செய்வதிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பதை இந்தச் சூழலில் கவனிக்க வேண்டும். நமது விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தில் (ஸ்ரீ பகவத் ராமானுஜ தரிசனம்) சன்யாசிகளுக்கு புனித நூல் (யஜ்ஞோ பவிதா), டஃப்ட் (சீகா), ஊர்த்வபுந்த்ரா, புண்ட்ரா என்பது நெற்றியில் ஒரு குறி. மேல்நோக்கிய திசையில் இருந்தால் அது ஊர்த்வபுந்த்ரா (ஊர்த்வா என்றால் மேல்நோக்கி) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர்த்வ புண்ட்ரா விஷ்ணு பாத வடிவத்தில் இருக்க வேண்டும் (ஸ்ரீமன் நாராயணனின் பாதங்கள்). எனவே ஊர்த்வ புண்ட்ரா என்பது திருமனை (புனித பூமி) பயன்படுத்தி வெள்ளை நிறத்தில் இரண்டு வெளிப்புற மேல்நோக்கி அடையாளங்களைக் கொண்டுள்ளது மற்றும் இடையில் ஸ்ரீ சொர்ணம் என்று அழைக்கப்படும் மஞ்சள் அல்லது சிவப்பு குறி உள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ சன்யாசிகளுக்கு திரிதாண்டா என்ற மூன்று குச்சிகள் உண்டு. இது அத்வைதி சந்நியாசிகளுக்கு நேர் எதிரானது. அவர்களிடம் புனித நூல் மற்றும் கட்டி இல்லை,

அவர்கள் பாஸ்மா (சாம்பல்) அணிந்திருக்கிறார்கள், அவர்களிடம் ஏகதண்டா என்ற ஒரே ஒரு குச்சி மட்டுமே உள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகள் தினமும் மூன்று முறை சந்தியாவந்தனம் மற்றும் அஷ்டாக்ஷர ஜபம் செய்வது வழக்கம். அர்ச்ச வடிவில் அல்லது சாளக்கிராமத்தில் இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுகிறார்கள்.

அத்வைதி சந்நியாசிகள் சந்தியாவந்தனம் செய்வதில்லை. எனவே சன்யாசிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவைச் செய்த பிறகு பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்யலாம்.

ஐந்தாவது அதிகாரம் சர்வபேக்ஷாதிகாரணம் எனப்படும். பக்தி யோகம் செய்வதற்கு சன்யாசிகள் அக்னியுடன் தொடர்புடைய கர்மாவைச் செய்யத் தேவையில்லை என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டபோது, ​​கிரிஹஸ்தனுக்கு (வீடு வைத்திருப்பவருக்கு) மேற்கூறியவை தேவையா என்ற கேள்வி எழுகிறது. அக்னிஹோத்ரா மற்றும் யாகங்கள் போன்றவை.

பிராமணர்கள் (பிராமணர்களில் க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களும் அடக்கம்) பிரம்மனை (ஸ்ரீமன் நாராயண பகவான்) அறிந்துகொள்ளும் ஆசையைப் பெறுகிறார்கள், பின்னர் அவர்கள் வேதம் ஓதும்போதும், யாகங்கள் செய்யும்போதும், தகுதியானவர்களுக்கு அர்ப்பணம் செய்யும்போதும், தியானிப்பார்கள் என்றும் பிருஹதாரண்யக உபநிஷதம் தெளிவாகக் கூறுகிறது. மற்றும் உண்ணாவிரதம். இந்த விஷயங்கள் தியானம் செய்பவர்களின் மனதைத் தூய்மைப்படுத்துகின்றன, இது தியானத்திற்குத் தேவையான ஒருமுகத்தை அடையத் தேவையானது. எனவே மேற்கண்டவை தியான அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள். எனவே பக்தி யோகத்தை நாடுவதற்கு க்ரஹஸ்தர்களுக்கு யாகங்களின் வடிவில் கர்மங்களைச் செய்வது அவசியம்.

எனவே மேற்கூறிய உபநிடதக் கூற்றின் அடிப்படையிலான சூத்ரகாரம் மேற்கூறிய உண்மையை மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் மேற்கூறியவற்றிற்கு அழகான உதாரணத்தையும் தருகிறது. குதிரை சவாரி செய்யும் ஒரு நபர் பயணிப்பதற்கான ஒரு வழியாக இருந்தாலும், அதற்கு சில கூடுதல் பொருத்துதல்கள் அல்லது ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு பிரேக்கைப் பயன்படுத்துவதற்கும் அதை வேகப்படுத்துவதற்கும். இங்கும் பக்தி யோகம் என்பது மோட்சத்திற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் பக்தி யோகத்தைப் பெறுவதற்கு கூடுதல் துணை அல்லது அங்கம் தேவைப்படுகிறது.

வாக்யார்த்த ஞானம் எனப்படும் தத்வமசி என்ற உபநிடத வாக்கியத்தின் அறிவு மோட்சத்திற்கான வழிமுறையாக இருக்க முடியாது என்றும், உபாசனாத்மக ஞானம் என்று அழைக்கப்படும் தியானத்தின் அறிவு மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாகும் என்றும் ஸ்ரீ பகவத் ராமானுஜம் இந்தச் சூழலில் தெளிவாகக் கூறுகிறார். பிரபத்தி கூட அறிவின் வடிவில் உள்ளது.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் ஷமடமாதி அதிகாரம் எனப்படும். ஷமம் என்றால் கண்கள், காதுகள், மூக்கு, தோல், நாக்கு, பிறப்புறுப்பு, பேச்சு போன்ற வெளிப்புற புலன்களை அல்லது இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவது என்று பொருள். தமம் என்றால் மனதைக் கட்டுப்படுத்துவது. வேறு சில சூழல்களில், தமா என்றால் வெளிப்புற புலன்களின் கட்டுப்பாடு மற்றும் ஷமா என்றால் மனதைக் கட்டுப்படுத்துதல். பக்தி யோகப் பயிற்சிக்கு புலன்களைக் கட்டுப்படுத்துவது அவசியமா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, அதே சமயம் புலன்களைக் கட்டுப்படுத்துவது சந்நியாசிகளால் எளிதில் சாத்தியமாகும், ஏனெனில் அவர்களுக்கு சந்தியா வந்தனங்கள் மற்றும் இறைவனை வணங்குவதைத் தவிர அதிக கர்மாக்கள் இல்லை. க்ரிஹஸ்தர்களின் விஷயத்தில் அது கடினமானது, ஏனென்றால் அவர்களின் புலன்கள் யாகங்கள் போன்ற கர்மாக்களை செய்வதில் ஈடுபட்டுள்ளன.

பிருஹதாரண்யக உபநிடதம் கூறுகிறது “எனவே, மேற்கூறியவாறு அறிவைப் பெற்றவர், தனது மனதைக் கட்டுப்படுத்தியவர், தனது வெளிப்புற புலன்களைக் கட்டுப்படுத்தியவர், அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபட்டவர் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்யாமல்), சகிப்புத்தன்மை அல்லது பொறுமையுடன், இணக்கமான அல்லது அமைதியானவர். மனம், தன் சுயத்தின் (ஜீவாத்மா) பரமாத்மா அல்லது உள் ஆன்மாவை (அந்தர்யாமி) காண்கிறது. இந்த தரிசனமே தியானம்.”

இந்த அதிகாரத்தில் உள்ள சூத்ரகாரரின் வாதம் என்னவென்றால், உபாசனை (தியானம்) செய்யும் போது ஒரு நபர் மனம் உட்பட தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடியும், இருப்பினும் நிச்சயமாக அவரது புலன்கள் கர்மாவின் செயல்பாட்டின் போது ஈடுபட்டுள்ளன. எனவே முடிவு ஷமா மற்றும் தமா என்பது பக்தி யோகாவின் அங்கங்கள் (துணை அல்லது துணை பொருட்கள் அல்லது பொருட்கள்).

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகாரம் சர்வண்ண அனுமதி அதிகாரம்.

இங்கு அன்ன என்றால் உணவு. பிரம்ம வித்யா அல்லது பக்தி யோகம் செய்யும் பிராமணீஷ்டா சாப்பிடும் உணவின் மீது இந்த அதிகாரம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

சாந்தோக்யோபநிஷத் கூறுகிறது “உணவு தூய்மையாகவும் குறைபாடுகளற்றதாகவும் இருந்தால், சத்வ குணம் அதிகரிக்கும். சத்வ குணம் அதிகரித்தால் துருவனு ஸ்மிருதி உண்டாகும். இந்த துருவனு ஸ்மிருதியே பக்தி யோகம்”.

பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒருவர் உண்ணும் உணவு சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம் என மூன்று வகைப்படும் என்று கூறுகிறார்.

சாத்விக உணவு பின்வருமாறு. நீண்ட ஆயுளையும், புத்திசாலித்தனத்தையும், வீரியமுள்ள ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும் உணவு, இனிப்பானது, சாதுவானது, நீடித்தது, இயற்கையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது, உண்ணக்கூடியது.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கிக் கூறும் ஸ்லோகத்தில், பின்வரும் தொழில்நுட்பச் சொற்கள் உள்ளன.

ரஸ்ய:, ஸ்நிக்தா:, ஸ்திர:, ஹৃத்யா:

(அ) ​​பால், சர்க்கரை மற்றும் இனிப்பு சுவை கொண்ட பிற பொருட்கள் ரஸ்யா வகையின் கீழ் வருகின்றன:

(ஆ) வெண்ணெய், சாத்விக் பொருட்கள் மற்றும் பிற கொழுப்புப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் ஸ்நிக்தா வகையின் கீழ் வருகின்றன:

(இ) நீண்ட காலம் உடலைத் தாங்கி வலிமையைத் தரும் உணவுகள் ஸ்திரம் எனப்படும்.

(ஈ) கெட்ட அல்லது தூய்மையற்ற உணவுகள் “ஹ்ருத்யா:” வகைக்குள் அடங்கும்

உண்ணக்கூடியவை நான்கு வகைப்படும்

(அ) ​​பக்ஷ்யா – விழுங்குவதற்கு முன் மெல்லப்பட வேண்டியவை.

(ஆ) போஜ்யா – நேரடியாக விழுங்கப்பட்டவை.

(இ) லேஹ்யா – நக்கப்பட்டவை

(ஈ) சோஸ்யா – உறிஞ்சப்பட்டவை.

(இ) ஜாதரங்கனிக்கு (ஜாமீன் சாறு) அந்தர்யாமியாக நான்கு விதங்களில் உணவை ஜீரணிக்க ஏற்பாடு செய்வதாக கீதாச்சாரியார் (கிருஷ்ணர்) கூறுகிறார்.

ராஜசா உணவு விவரம் வருமாறு..

கசப்பான, அமிலம், உப்பு, அதிக சூடான, கடுமையான, உலர்ந்த மற்றும் எரியும் உணவுகள் துன்பம், துக்கம் மற்றும் நோய்

தாமச உணவு விவரம் வருமாறு..

பாதி சமைக்கப்பட்ட, சுவை இழந்த, அழுகிய, பழுதடைந்த, மாசுபட்ட மற்றும் தூய்மையற்ற உணவுகள்.

ஒரு பிராமணிஷ்டா சாத்விக உணவை மட்டுமே எடுக்க வேண்டும், ராஜஸம் அல்லது தாமஸம் அல்ல.

நாம் உண்ணும் உணவு ஜாதி துஷ்டம், ஆஷ்ரய துஷ்டம், நிமித்ததுஷ்டம் ஆகிய மூன்று தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்ய லகுசித்தாந்தத்தில் கூறுகிறார்.

ஜாதிதுஷ்டா என்றால் சில வகையான தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடக்கூடாது.

உதாரணமாக ராகி, வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சுரைக்காய், முட்டைக்கோஸ், முருங்கை, தக்காளி, விலங்குகள் மற்றும் பறவைகளின் இறைச்சி. இவற்றை உண்ணக் கூடாது.

ஆஷ்ரய துஷ்டம் என்றால் உடைமையில் உள்ள உணவு அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சொந்தமானது.

நிமித்த துஷ்டம் என்றால் முடியுடன் தொடர்புடைய உணவு, பிறர் உண்ணும் உணவு போன்றவை.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆஹாரணியம் எனும் புகழ்பெற்ற தெய்வத்தமிழில் அருமையாகக் கூறியுள்ளபடி உண்ண வேண்டிய மற்றும் உண்ணக் கூடாத பொருட்களின் முழுமையான பட்டியல் வாசகர்களின் தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நேரம் இல்லாததால், இந்த பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக செயல்படுகிறது.

இந்த அதிகாரத்தில், பிராண வித்யா நிஷ்டை (முக்கிய பிராணனை தியானம் செய்பவர் பிராண வித்யாநிஷ்டா என்று அழைக்கப்படுகிறார்) எதையும் சாப்பிட முடியுமா அல்லது அதில் ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா என்பதுதான் விவாதத்திற்குரிய முக்கிய அம்சம். அல்லது முக்கியமான சூழ்நிலையில் மட்டுமே எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.

பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் சாண்டோக்யோபநிஷத்தில் பிராண வித்யானிஷ்டம் எந்தப் பொருளையும் உண்ணலாம் என்று கூறப்பட்டுள்ளது, அதற்கு ஒரு போர்வை அனுமதி உள்ளது.

கடுமையான பட்டினி அல்லது பட்டினியால் ஒரு நபர் சரியான உணவு கிடைக்காமல் மரணத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு வருவதே முக்கியமான சூழ்நிலை.

உஷஸ்தி முனிவர் ஒரு பிராமணிஷ்டா குருதேசத்தில் கடுமையான பஞ்சத்தின் காரணமாக உணவு எதுவும் கிடைக்காமல், தனது மனைவியுடன் மக்கள் யானைகளின் மீது ஏறிக்கொண்டிருந்த ஒரு கிராமத்திற்கு வந்தபோது சூத்திரகாரர் கூறுகிறார். அவர் கடும் பசியால் அவதிப்பட்டதால், நிலைமை மோசமாகியது. அவர் மஹவுட்டாக இருந்த ஒருவரை அணுகி, தான் சாப்பிடும் சமைத்த தரம் குறைந்த உளுந்து வகையைத் தனக்குத் தருமாறு கெஞ்சினார். உஷஸ்தி தன் உயிரைக் காப்பாற்ற அதை சாப்பிட்டாள். ஆனால் மேற்படி நபர் உஷஸ்தி கொடுத்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னபோது. உஷஸ்தி தண்ணீர் எடுக்க மறுத்துவிட்டார், ஏனென்றால் அது அந்த மகான் ஏற்கனவே குடித்த தண்ணீரின் மீதமுள்ள பகுதி. மேற்கூறியவற்றை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்று அந்த மகான் உஷஸ்தியிடம் கேட்டபோது, ​​உஷாஸ்தி சாப்பிடாமல் இருந்திருந்தால் இறந்துவிடுவேன் என்று பதிலளித்தார். மறுநாளும் அதே நெருக்கடியான சூழ்நிலை உருவானது, முந்தைய நாள் சாப்பிடாத பகுதியை மனைவி சேமித்து வைத்திருந்த கோதுமையை அவர் சாப்பிட்டார். இந்தக் கதை சாந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பிராண வித்யாநிஷ்டத்தை விட உயர்ந்த உஷஸ்தி ஒரு பிராமணீஷ்டா சாப்பிடக்கூடாததை உண்ணும் போது, ​​இக்கட்டான சூழ்நிலையில், பிராணவித்யாநிஷ்டை எதையும் சாப்பிட முடியாது என்று சூத்ரகாரம் முடிவு செய்கிறது.

எனவே சிக்கலான சூழ்நிலையில் தனியாக எதையும் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது மற்றும் சாதாரண காலங்களில், மேலே விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி உணவில் முழுமையான கட்டுப்பாடு உள்ளது.

இந்தப் பாதத்தில் எட்டாவது அதிகாரம் விஹிதத்வாதிகரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் எழும் சந்தேகம் என்னவென்றால், பக்தி யோகத்தை நாடாத ஒரு எளிய ஆசிரமம், பக்தி யோகத்திற்கு துணை, துணை அல்லது துணை என்று சொல்லப்பட்டிருக்கும் போது சந்தியாவந்தனம் மற்றும் யாகங்கள் உள்ளிட்ட பிற சடங்குகளைச் செய்ய வேண்டுமா என்பதுதான். இவற்றை ஒரு சாதாரண ஆசிரமம் செய்ய வேண்டுமென்றால் நித்ய அனித்ய சம்யோக விரோதம் என்ற தோஷம் உண்டாகிறது என்று கூறப்படுகிறது.

இதன் பொருள் என்னவென்றால், மேற்கூறிய கர்மாக்கள் ஆசிரமத்திற்காக இருந்தால், அவை மரணம் வரை எப்போதும் செய்ய வேண்டும். பின்னர் அது “நித்யம்” (என்றென்றும்) ஆகிறது. மோட்சத்தின் பலனை விரும்பும் வித்யாவிற்காக அவை செய்யப்பட்டால் அது அனித்யாவாக மாறும், ஏனென்றால் தனிப்பட்டவர் மோட்சத்தின் பலனை விரும்பாவிட்டால், அவர் இந்த கர்மாவைச் செய்ய வேண்டியதில்லை. எனவே அதே கர்மா ஒரு வகை நபர்களுக்கு நித்யாவாகவும் மற்றொரு வகை நபர்களுக்கு அனித்யாவாகவும் மாறும். எனவே ஒரே கர்மா நித்யா மற்றும் அனித்யா என்ற இரண்டு முற்றிலும் எதிர் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது நித்ய அனித்ய சம்யோகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு குறைபாடாகும். எனவே பூர்வபக்ஷி இந்த குறையை போக்க மேற்கண்ட கர்மாக்களை கேவல ஆசிரமம் (பிரம்மவித்யா அல்லது பக்தி யோகத்தை நாடாத எளிய ஆசிரமம்) செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறார்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “விஹிதத்வாச்ச ஆஸ்ரம கர்மபி” என்று சூத்ரகாரர் கூறுகிறார், அதாவது ஒருவர் பிரம்ம வித்யாவை நாடுகிறாரா இல்லையா என்பதை அவர் தனது ஆசிரமத்தின் ஒருங்கிணைந்த பகுதியான மேற்கண்ட கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் (மீதமுள்ள இளங்கலை) கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது, க்ரிஹஸ்தா (திருமணமான பின் இல்லறம், வன பிரஸ்தா (காட்டில் வசிப்பது) என நான்கு நிலைகள் உள்ளன. சன்யாசி அல்லது காவி அங்கி அணிந்த துறவி. ஆசிரமத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், வேதம். கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில கர்மாக்களை நியமித்தல்.ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் விதிக்கப்பட்ட கர்மாக்கள் ஆஷ்ரமகர்மா எனப்படும்.எனவே அதே கர்மங்கள் ஒரு பிரம்ம வித்யாநிஷ்டத்திற்கு பிரம்ம வித்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.அதனால் “வினியோக பிருதக்த்வம்” என்று ஒன்று உள்ளது.வினியோகம் என்றால் பயன்பாடு அல்லது பயன்பாடு.

ஆனால் ஆசிரமத்தில் இல்லாமல் ஒருவர் பிரம்ம வித்யானிஷ்டா ஆக முடியாது.

ஒரு ஆசிரமம் ஒரு பிரம்ம வித்யானிஷ்டாவாக இருந்தால், இருவருக்கும் ஒரே மாதிரியான கர்மாக்கள் போதுமானதாக இருக்கும், மேலும் அவர் அதை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார். இந்த நித்ய நைமித்திக கர்மாக்கள் பாவங்களைக் கழுவி, தியானம் செய்வதற்கு மிகவும் அவசியமான மனத்தூய்மையை அளிக்கும்.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் “விதுராதிகரணம்” எனப்படும். விதுர என்றால் விதவை. அவர் மனைவி இறந்து போனவர். அவர் தனது மனைவியை இழந்ததால், யாகங்கள் மற்றும் பிற யாகங்கள் செய்ய தகுதியற்றவர் என்பதால் அவரை க்ரிஹஸ்தா ஆசிரமம் என்று அழைக்க முடியாது. எப்படியிருந்தாலும், அவர் சந்தியா வந்தனம் மற்றும் பிற நித்ய நைமித்திக கர்மாக்களை செய்ய வேண்டும். மூன்று முறை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் தவிர, மற்ற நித்ய கர்மாக்கள் ஸ்னானங்க தர்ப்பணம், தேவர்ஷி கந்தர்ஷி தர்ப்பணம், பகவான் ஸ்ரீமன் நாராயணனை (திருவாராதனம்) வழிபடுதல்.

நைமித்திக கர்மாக்கள் என்பது தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் நடைபெறும் சடங்குகள், அமாவாசை தர்ப்பணம், சங்கரமண தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம், ஏகாதசி உபவாசம், துவாதசி பரணம், ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ ந்ரிசிம்ம ஜெயந்தி, ஆச்சார்யர்களின் பிறந்தநாள், கிருத்பகார தீபத்மாவாபகாரம், உத்ஸர்யக் கிருத்திகை, உத்ஸவ கர்மங்கள். , அஷ்டக மற்றும் அன்வாஷ்டக தர்ப்பணங்கள். விதுரர்கள் (விதவைகள்) வைஸ்வதேவா மற்றும் பஞ்சமஹா யக்ஞோபாஸனோ செய்ய தகுதியற்றவர்கள். இவை அனாஷ்ரமிகள். அதேபோல பிரம்மச்சரிய ஆசிரமத்தை கைவிட்டவர், ஆனால் திருமணம் செய்து கொள்ள மணமகள் கிடைக்காததால் க்ரிஹஸ்தா ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர் அனாஷ்டிரா. அதேபோல் க்ரிஹஸ்தா ஆசிரமத்தை விட்டு வெளியேறி, பல்வேறு காரணங்களால் வானபிரஸ்த ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர்களும் அனாசிரமங்கள்தான்.

கலியுகத்தில் வனபிரஷ்ட ஆசிரமத்தில் இருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள் மற்றும் உண்மை இல்லை. சன்யாச ஆசிரமத்தை எடுக்க முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறியவர்களும் சன்யாச ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர்களும் அனாசிரமங்கள்தான்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி, மேலே குறிப்பிட்டுள்ள அனாசிரமங்கள் பக்தி யோகம் செய்ய தகுதியுடையதா என்பதுதான். இந்த சந்தேகத்திற்கு காரணம், எந்த ஆசிரமத்திற்கும் விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்ய அனாசிரமங்கள் தகுதியற்றவர்கள் என்றால் அவர்கள் பக்தி யோகம் செய்வதற்கு தகுதியானவர்கள் என்று கருத முடியாது.

அந்தரா ச அபிது தத் த்ருஷ்டே:” என்ற சூத்திரத்தில், அனாசிரமங்களும் பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்து மோட்சத்தை அடையத் தகுதியானவர்கள் என்று சூத்ரகாரர் கூறுகிறார். அந்தரம் என்றால் இடையில் என்று பொருள். இரண்டு ஆசிரமங்களுக்கு இடையில் இருப்பவர்கள் அனாசிரமங்கள் மற்றும் அவர்களும் தியானம் செய்ய தகுதியுடையவர்கள். ஆனால், இந்த அனாசிரமங்கள் கர்மங்களைச் செய்யத் தகுதியில்லாதபோது, ​​உபாஸனம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனையான பாவங்களைக் கழுவி, மனத்தூய்மையை எவ்வாறு அடைவது என்பது இன்னும் சந்தேகம். மேற்கூறிய விஷயத்திற்கு சூத்ரகாரர் பதிலளிக்கிறார், இந்த அனாஷமிகள் காயத்ரி மந்திர ஜபம், அஷ்டாக்ஷர மந்திர ஜபம் போன்றவற்றைச் செய்து, உபாசனை செய்வதற்கு முன்னோடியாக இருக்கும் மனதைத் தூய்மைப்படுத்தலாம்.

இந்தச் சூழலில் நீண்ட காலம் அனாஸ்ரமியாக இருப்பது புத்திசாலித்தனமோ நியாயமோ இல்லை என்றும், முடிந்தவரை சீக்கிரம் ஆசிரமமாக மாற முயற்சிப்பது நல்லது என்றும் சூத்ரகாரா கவனிக்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் “தத் பூதாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. “ஆஷ்ரம பிரஷ்தா” என்று அழைக்கப்படும் மற்றொரு வகை நபர்கள் உள்ளனர். ஒரு நபர் தனது ஆசிரமத்திலிருந்து வழுக்கினாலோ அல்லது விலகினாலோ “ஆஷ்ரம பிரஷ்டா” என்று அழைக்கப்படுகிறார்.

“ஆசிரம பிரஷ்டங்கள்” என்ற மூன்று துணைப் பிரிவுகள் இருக்கலாம். முதல் பிரிவில் பிரம்மச்சரிய ஆசிரமத்தில் இருந்து தவறி விழுந்தவர்கள் உள்ளனர். அதாவது ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாக சபதம் செய்கிறார். அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று அழைக்கப்படுகிறார். சில காலத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வளர்த்து, ஒரு திருமணத்தில் நுழைந்தால், அவர் ஒரு “ஆசிரம பிரஷ்டர்”.

ஒரு கிருஹஸ்தா சபதம் செய்து வன பிரஸ்தாவாக காட்டிற்கு செல்கிறார். சிறிது நேரம் கழித்து அவர் தனது வீட்டிற்கு திரும்பி வந்தால் “ஆசிரம பிரஷ்டர்” ஆகிறார், அதே போல் காவி வஸ்திரம் அணிந்த சன்யாசி மீண்டும் க்ரிஹஸ்தா ஆசிரமத்திற்கு வந்தால் அவரும் ‘ஆசிரம பிரஷ்டர்’ ஆவார்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், மேற்கண்ட மூன்று வகை ஆசிரம பிரஷ்டங்களும் பிரம்மோபாசனம் (பக்தி யோகம்) செய்ய தகுதியானவர்களா என்பதுதான். இந்த ஆசிரம பிரஷ்டர்கள் உபாசனை செய்ய தகுதியுடையவர்கள் என்று பூர்வபக்ஷி கூறுகிறது, ஏனென்றால் அவர்கள் தானங்கள் (பிரசாதங்கள்) செய்து உபாசனை செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் ஆசிரமப் பிரஷ்டர்கள் உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள் என்று சூத்ரகாரர் கூறுகிறார், ஏனென்றால் அவர்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு எந்தப் பிராயச்சித்தத்தையும் வேதங்கள் குறிப்பிடவில்லை. அவர்கள் ஆத்மஹாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது அவர்கள் தங்கள் ஆத்மாக்களை மீட்பதற்கு அப்பால் கெடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்.

மோட்சத்தை அடைவதற்கு ஒரு ஆச்சார்யா மூலம் பிரபத்தி செய்யத் தகுதியுடையவர்களா என்ற சந்தேகம் இந்தச் சூழலில் எழுகிறது. இது விவாதத்திற்குரிய விஷயம். பிரபத்தியை ஒருவராலும், எந்தப் பாகுபாடுமின்றிச் செய்ய முடிந்தால், ஆசிரமப் பிரஷ்டர்களும் பிரபத்தியைச் செய்யத் தகுதியுடையவர்கள் என்று சிலர் கருதுகின்றனர்.

இந்த பாதத்தில் பதினோராவது அதிகாரம் “சுவாமி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரம் சூழலுக்கு அப்பாற்பட்டது. முந்தைய இரண்டு அதிகாரங்களில் உபாசனை செய்யத் தகுதியானவர்கள் யார், உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள் யார் என்று விவாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் யார் உத்கீத வித்யா உபாசனை செய்ய வேண்டும், யார் உத்கீத உபாசனை செய்யக்கூடாது என்று முடிவு செய்வது பொருத்தமாக இருந்தால், சூத்ரகாரர் நினைத்தார். உத்கீத உபாசனா என்பது பிரணவத்தின் தியானமாகும், மேலும் இது சிறந்த மற்றும் விரைவான பலன்களைப் பெறுவதற்காக யாகத்திற்கு ஒரு துணையாக செய்யப்படுகிறது.

ஒரு யாகத்தில் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கு யஜமானா அல்லது யாகத்தை ஊக்குவிப்பவர் இருக்கிறார். வேதங்களிலும் உண்மையில் யாகம் செய்வதிலும் புலமை பெற்ற ரித்விக்களின் உதவியுடன் யாகம் செய்கிறார். ஹோதா, அத்வர்யு, உத்கதா, பிரஸ்தோதா, ப்ரதிஹார்த்தா, பிரம்மா ஆகிய ரித்விக்களின் பெயர்கள் யாகத்தில் பல்வேறு குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளன.

யஜமானா ரித்விக்களுக்கு அவர்கள் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு ஊதியமாக பணம் கொடுக்கிறார். இந்தப் பணம் யஜமானுக்கும் ரித்விக்களுக்கும் இடையிலான முந்தைய புரிதலின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உத்கீத வித்யாவை உத்கதா செய்ய வேண்டும்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், உத்கீத உபாசனையை யார் செய்ய வேண்டும், அதாவது யஜமானா அல்லது ரித்விக் குறிப்பாக உத்கதா.

பதராயண முனிவரின் சீடரான ஆத்ரேய முனிவர், யாகத்தின் பலனை அனுபவிப்பவராக இருப்பதால், யஜமானன் உத்கீத வித்யா உபாசனை செய்ய வேண்டும் என்று கருத்து கூறுகிறார். தஹர வித்யா போன்ற பிரம்ம வித்யா உபாசனைகளில் மோட்ச பலனை விழைபவர் மோட்சத்தை அடையப் போவதால் உபாசனை செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அதே போல யாகத்தின் பலனை விரும்பும் யஜமானும் உத்கீத வித்யா செய்ய வேண்டும்.

ஆத்ரேய முனிவரின் இந்த விவாதம் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ஸ்வாமின: பல ஸ்ருதே: ஏதி ஆத்ரேய:” என்று வாசிக்கிறது.

ஸ்வாமி என்றால் யஜமானன். சூத்ரகாரரின் மற்றொரு சீடரான ஆடுலோமி முனிவர், ஆத்ரேயாவின் கருத்துடன் அவர் உடன்படவில்லை என்று கூறுகிறார், மேலும் ரித்விக் ஆன உத்கதா இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக பணம் செலுத்தப்படுவதால் யஜமானாவின் சார்பாக உத்கீத உபாசனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். மோட்ச பலனை விரும்புபவரே பிரம்மோபாசனம் செய்கிறார் என்ற வாதம் சரியல்ல, ஏனென்றால் மற்றவருக்காக மற்றொருவர் பிரம்ம வித்யா செய்யலாம் என்று சாஸ்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை.

சூத்ரகாரம் ஆடுதோமி வெளிப்படுத்திய கருத்துடன் ஒத்துப்போகிறது, அது சித்தாந்தம்.

இந்த பாதத்தில் உள்ள பன்னிரண்டாவது அதிகாரம் “சஹகாரி அந்தரவிதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது சககாரி என்றால் உதவி அல்லது அங்கம்.

பிருஹதாரண்யக உபநிடதத்தில், பிரம்மோபாஸனையை நாடுபவன் ஒரு புலமை வாய்ந்த பண்டிதனாக (பண்டிதனாக) இருக்க வேண்டும் என்றும், அவனுடைய ஆழ்ந்த புலமையை வெளிக்காட்டவோ, வெளிப்படுத்தவோ கூடாது, சிறுவனைப் போல நடந்து கொள்ள வேண்டும், பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திவ்ய மங்கள விக்ரஹம் என்று அழைக்கப்படும் அவரது அசாதாரணமான அழகான வடிவம். திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பற்றிய இந்த எண்ணம் மௌன என்று அழைக்கப்படுகிறது, அதாவது மனன சீலத்வம்:. எனவே இந்த மௌனா பக்தி யோகத்திற்கான மற்றொரு அங்கமாகும்.

இந்த பாதத்தில் உள்ள பதின்மூன்றாவது அதிகாரம் அனவிஷ்கராதிகாரணம் எனப்படும். பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் பிரம்ம வித்யாவைச் செய்பவர் முதலில் வேதத்தில் ஆழ்ந்த புலமையைப் பெற்று ஒரு சிறுவனைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தவோ, வெளிப்படுத்தவோ அல்லது காட்டவோ கூடாது, மேலும் அவர் மற்றவர்களுடன் சுதந்திரமாக கலக்க வேண்டும். இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், இளமைப் பையனைப் போல நடந்துகொள்ள வேண்டிய ஒரு பிராமணீஷ்டா சீரியஸ் இல்லாமல் விளையாட்டுத்தனமாக, தனக்கு நேர்ந்த எதையும் தின்றுவிட முடியுமா அல்லது தன் மகத்துவத்தை வெளிக்காட்டாமல் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பதுதான்.

பூர்வபக்ஷி விளையாட்டாகவும் எதையும் உண்ணவும் முடியும் என்று வாதிட்டாலும், பிரம்மவித் தன் மகத்துவத்தை வெளிப்படுத்தாமல், ஆடம்பரத்தை கவனமாக தவிர்க்க வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

இந்த பாதத்தில் பதினான்காவது அதிகாரம் “ஐஹிகதிகரணம்” ஆகும். உபாசனையின் பலனைப் பெறுவதற்கான இந்த நேரத்துக்கு அடுத்ததாக இந்த அதிகாரத்திலும் அதிகாரத்திலும் விவாதிக்கப்படுகிறது.

இச்சூழலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரம்மோபாசனம் இரண்டு வகைப்படும். ஒன்று மோட்சத்தை அடைவதற்காக மற்றொன்று வார்த்தை சுகத்தைப் பெறுவதற்காக. பிந்தையது ஐஹிகா ஃபாலா.

பகவத் கீதையில் பகவான் கீதாச்சாரியார் தன்னை தியானிப்பவர்களில் நான்கு வகையினர் இருப்பதாக கூறுகிறார். அவர்கள்

(1) தங்கள் உடமைகளை இழந்ததால் ஆழ்ந்த துயரத்தில் இருப்பவர்கள் மற்றும் அவற்றை மீண்டும் பெற விரும்புபவர்கள்.

(2) இதுவரை அனுபவிக்காத புதிய பொருள் பலன்களைப் பெற விரும்புபவர்கள்.

(3) தங்கள் சொந்த ஆத்மா அல்லது ஆன்மாவை அனுபவிக்க விரும்புபவர்கள்.

(4) மோட்சத்தை அடைய விரும்புபவர்கள்.

மேற்கூறிய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற பிரம்மோபாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பிரம்மோபாசனம் முதல் மூவருக்கும் இருக்கும் போது அது எய்ஹிக பலனுக்கு உபாசனம் எனப்படும்.

எய்ஹிக பலனைப் பெற, தனது உபாசனாவிற்கு எப்போது பலன் கிடைக்கப் போகிறது என்பதுதான் இப்போது விவாதத்திற்கான தலைப்பு. இந்த விஷயத்தில் மூன்று கருத்துக்கள் உள்ளன.

(1) உபாசனை முடிந்த உடனேயே.

(2) இந்த ஜென்மத்தில் அல்லது பிறப்பிலேயே

(3) அடுத்த பிறவியில்

எனவே உபாசனை முடிந்தவுடன் அந்த பலனை விரைவில் பெற வேண்டும் என்கிறது பூர்வபக்ஷி. மேற்கூறியவற்றிற்கு பிரம்மோபாசனம் செய்பவருக்கு ஐஹிக பலன் கிடைக்கும் என்று சூத்ரகாரம் கூறுகிறது. உபாசனை முடிந்த உடனேயே, அவரது தொகுதிகளின் பாபா கர்மாவான வேறு எந்த வலுவான கர்மாவையும் வழங்கவில்லை. ஒரு தொகுதி இருந்தால், அந்தத் தொகுதி அழிக்கப்பட்ட பிறகு அந்த நபர் அய்ஹிகா பலாவைப் பெறுவார்.

ஒரு யாகத்தில் உத்கீத வித்யா செய்தால், தடை நீங்கி, தாமதமின்றி பலன் கிடைக்கச் செய்யும் என்பதால், அந்தத் தொகுதியின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் முக்தி பலாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. மோட்சத்திற்காக பிரம்மோபாசனம் செய்யும் ஒருவருக்கு மோட்ச பலன் கிடைக்கும் நேரம் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் மோட்ச பலனை பெறுவது கூட தாமதமாகலாம் அல்லது அவர் செய்த வலுவான “அப்பா” காரணமாக தடைபடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வலிமையான பாபா “பிரம்மவித் அபச்சாரா” அதாவது உபாசனை செய்பவர் பிரம்ம வித்தை மதிக்காதவராக இருக்கலாம் மற்றும் இந்த பிரம்ம விடாபச்சாரம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அது மோட்ச பலனை கூட ரத்து செய்யலாம். எனவே மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகம் மற்றும் பிரபத்தியை நாடுபவர்கள் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் பிரம்மவிதபாசாரத்தை கவனமாக தவிர்க்க வேண்டும்.

இந்த மூன்றாவது அத்தியாயம் முடிவடைகிறது என்பதைக் குறிக்க, சூத்திரத்தில் உள்ள ததவஸ்தா த்ருதே: என்ற வார்த்தை இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

நான்கு அத்தியாயங்களில் இதுவரை மூன்று அத்தியாயங்கள் மூடப்பட்டு, கடைசி அத்தியாயம் இப்போது விவாதிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயம் “பல அத்யாய” என்று அழைக்கப்படுகிறது, அதாவது முமுக்ஷு என்று அழைக்கப்படும் ஒரு நபர் (சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மக்ஷத்தை அடைய விரும்புபவர் மற்றும் பக்தி யோகம் அல்லது பக்தி யோகம் செய்தவர்) அனுபவிக்கப் போகும் பலன்கள். பிரபத்தி.

ஏற்கனவே கூறியது போல் பக்தி யோகம் என்பது மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் விவரிக்கப்பட்டுள்ளபடி சாதனா சப்தக எனப்படும் ஏழு துணைகளுடன் கர்ம யோகம் மற்றும் ஞான யோகம் செய்தபின் அஷ்டாங்க யோகம். இந்த கலியுகத்தில் பக்தி யோகத்தை அதன் கடினத்தன்மை மற்றும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுத்தும் திறனின் காரணமாக யாரும் அதை நாடவில்லை என்றும் கூறப்பட்டது.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யாவில் மோட்சத்தை அடைய ஆயிரம் கோடி கல்பங்களுக்குப் பிறகும் பிரபத்தியைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் அது ஆத்மார்த்தமாக கருதப்படக்கூடாது, பக்தி யோகமானது முந்தைய யோகங்களான துவாபர யுகம், திரேதா யுகம் மற்றும் கிருத யுகம் ஆகியவற்றில் எந்த உடலாலும் செய்யப்படவில்லை. இந்த மூன்று யுகங்களிலும் பக்தி யோகம் செய்வதற்கு ஏற்ற சூழல் இருந்தது. திரேதா யுகத்தில் தண்டகாரண்யத்தில் (வனத்தில்) இருந்த முனிவர்கள் துவாபர யுகத்தில் கோபியராகப் பிறந்த பிறகுதான் பக்தி யோகத்தால் மோட்சத்தை அடைந்தார்கள். இதேபோல் தர்ம வியாதாவும் (வேட்டையாடும்) சபரியும் பக்தி யோகத்தால் மோட்சத்தை அடைந்தனர், இது அவர்கள் முந்தைய பிறவிகளில் பிராமண, க்ஷத்திரியர் அல்லது வைசியர் ஆகிய மூன்று சாதிகளில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பார்கள்.

அர்ச்ச வடிவில் (அர்ச்ச வடிவம் என்பது ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள தெய்வ வடிவிலோ அல்லது சால கிராம வடிவிலோ இருக்கும் வழிபாட்டிற்குரிய வடிவம் என்று பொருள்படும்) பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் உள்ள பிரபத்தியை மட்டுமே நாம் அனைவரும் மோட்சத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் வீடுகளில் சிலை வடிவம்) ஒரு ஆச்சார்யா மூலம்.

இந்த 4வது அத்தியாயத்தில் அவ்ரித்தி பாதம், உத்க்ராந்த பாதம், கதி பாதம் மற்றும் பல பாதங்கள் என நான்கு பாதங்கள் உள்ளன.

அவ்ரித்தி பாதத்தில் பக்தி யோகா செய்யும் முறை கையாளப்படுகிறது. அவ்ரித்தி என்றால் பக்தி யோகம் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும், பிரபத்தியைப் போல இது ஒரு முறை அல்ல.

மோட்சத்தை அடைவதற்கான பக்தி யோகமான பக்தி யோகத்தை சாதனா அத்யாயா என்ற 3 வது அத்தியாயத்தில் கையாள வேண்டியிருக்கும் போது, ​​அதைச் சமாளிக்க இந்த அத்தியாயத்தில் முதல் பாதத்தை சூத்ரகாரர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பதிலுக்கு பக்தி யோகம் செய்வது என்பது திவ்ய மங்கள விக்ரஹம் என்றும், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மங்கள குணங்கள் (கல்யாண குணங்கள்) என்றும் அழைக்கப்படும் மங்களகரமான வடிவத்தை தியானிப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகவான் ஸ்ரீமன் நாராயணனை அவரது ஸ்வரூப (உள்ளார்ந்த இயல்பு) ரூபம் (திவ்ய மங்கள விக்ரஹம்), குண (மங்கள குணங்கள்) விபூதி (முழு பிரபஞ்சத்தின் லீலா விபூதியின் உரிமை) மற்றும் நித்ய விபூதி (ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்) ஆகியவற்றைக் கொண்டு மகிழ்வதாகும். ) மற்றும் ஈஸ்வர்யா (இரண்டு விபூதிகளையும் கட்டுப்படுத்துதல்). மனதிலுள்ள இந்த இன்பமே தியானத்தின் பலன்களில் ஒன்றாகும்.

இந்த அவ்ரித்தி பாதத்தில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் அவ்ரித்தி அதிகாரம் எனப்படும். இந்த அதிகாரத்தில் பரமாத்மா தியானம் ஒரு முறை செய்ய வேண்டுமா அல்லது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. இந்த விவாதத்தின் முன்னோடியாக, தியானம் செய்பவருக்கு மோட்சத்தின் பலனைத் தியானம் அளிக்கிறது என்ற உண்மையை நிறுவ மூன்று உபநிடத கூற்றுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பூர்வபக்ஷி என்றும் அழைக்கப்படும் எதிரி, தியானம் ஒரு முறை செய்யக்கூடியது என்று கூறுகிறார், ஏனெனில் எந்த உபநிடத அறிக்கைகளிலும் இது மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. பழங்கள் இரண்டு வகை என்று கூறுகிறார். முதலாவது காணக்கூடிய பழம் என்றும் இரண்டாவது கண்ணுக்கு தெரியாத பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்வர்கலோகம் அல்லது மோட்சத்தை அடைவது கண்ணுக்குத் தெரியாத பலன், வார்த்தை இன்பத்தை அடைவது புலப்படும் பலன். கண்ணுக்குப் புலப்படும் பலனை அடைவதற்கான வழிமுறைகள், அத்ரிஷ்ட பலம் என்று அழைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத பலன் விஷயத்தில் அவ்வாறு இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும். எனவே மோட்ச தியானத்தின் கண்ணுக்கு தெரியாத பலனுக்காக ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் என்று பூர்வபக்ஷி தனது வாதத்தை முடிக்கிறார். [பூர்வபக்ஷி அரிசி பெறுவதற்கு உமியை அகற்றுவதற்காக மீண்டும் மீண்டும் செய்யப்படும் நெல் உமியை உதாரணம் காட்டுகிறது. இது தெரியும் பழம் அல்லது த்ரிஷ்ட பலா.]

சூத்ரகார முனிவர் பதராயணன் “அவ்ரித்தி அசக்ரித் உபதேசத்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார். பிரம்ம வித்யா என்றும் அழைக்கப்படும் பக்தி யோகத்தை உபநிடதத்தைப் பிரசங்கிப்பதால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். இதற்கு பின்வருமாறு விரிவுபடுத்தல் தேவைப்படுகிறது. தைத்தரிய உபநிடதம் “பிரம்மவித் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் பிரம்மத்தை அடைகிறது” என்று கூறுகிறது. வித் என்றால் அறிதல். இந்த அறிதல் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் பக்தி உணர்வுடன் உள்ளது. பக்தி உணர்வுடன் பிரமனை அறிவது வேதனம் எனப்படும். இந்த வேதம் உபாசனா அல்லது தயானா என்ற வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருக்கும் என்று உபநிடதப் பகுதிகள் உள்ளன. தயானம் என்ற சொல் “தியே சிந்தயம்” என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது தியானம் சிந்தனை என்று பொருள்படும் இந்த சிந்தனை ஒரு தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் ஒரு முறை செயல்பாடு அல்ல.

சூத்ரத்தில் அவ்ரித்திஹ் அசக்ரித் என்பதை அஸக்ருத் அவ்ரித்தி என்று கருத வேண்டும். சக்ரித் என்றால் ஒரு முறை. அசக்ரித் என்றால் தொடர்ச்சியாக அல்லது மீண்டும் மீண்டும் என்று பொருள். எனவே வேதனம் என்பது தியானம், ஸ்ரீமன் நாராயணனைத் தியானம் என்ற பக்தி யோகம் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

இந்த பாதத்தில் உள்ள அடுத்த அதிகாரம் ஆத்மத்வ உபாசனாதிகரணம் எனப்படும். இதில், தியானத்தின் பொருளான பரமாத்மாவை உபாசகராகிய ஜீவா (ஆன்மா) விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தியானிக்க வேண்டுமா அல்லது பரமாத்மா ஆன்மா மற்றும் ஜீவன் அவரது உடல் என்ற உறவுமுறையாக இருக்க வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. தியானம் செய்தார்.

பூர்வபக்ஷி, தியானம் செய்பவர் அல்லது உபாசகராக இருக்கும் ஜீவாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக பரமாத்மாவை தியானிக்க வேண்டும் என்று வாதிடுகிறது. பரமாத்மா ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது அவருடைய நியாயம். பரமாத்மா ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று கூறும் பல பிரம்மசூத்திரங்கள் உள்ளன.

பூர்வபக்ஷியின் வாதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, சூத்ரகாரர் “ஆத்மேதிது உபகச்சந்தி கிரஹயந்திச்சா” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது உபாசகர் அல்லது தியானம் செய்பவர் எப்போதும் பரமாத்மாவைத் தனது ஆத்மாவாகத் தியானிக்க வேண்டும், ஏனெனில் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள அந்தர்யாமி பிராமணம் உள்ளிட்ட உபநிஷத நூல்கள் அவ்வாறு கூறுகின்றன. அந்தர்யாமி பிராமணத்தில் ஜீவா உடல் என்றும் பரமாத்மா ஆத்மா என்றும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் பிரதீகாதிகாரணம் எனப்படும். இதுவும் இதற்கு அடுத்துள்ள அதிகாரமும் சூழலுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் இந்த இரண்டு அதிகாரங்களும் முந்தைய அதிகாரங்களில் இருந்து எழுந்த சில சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக உண்டானது.

மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் பிரதீகா உபாசனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதீகா என்றால் உடலின் உறுப்பு அல்லது அவயவ என்று பொருள். மனதை நினைத்து அல்லது பிரம்மமாக கருதி தியானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது பிரதீகா உபாசனை எனப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பொருளை பிரம்மமாக நினைத்து தியானம் செய்வது ப்ரதீக உபாசனை என்றும் அது த்ரிஷ்டிவிதி என்றும் அழைக்கப்படுகிறது (பிரம்மனாக ஒரு பொருளைப் பார்ப்பது). இந்த உபாசனை பிரம்ம வித்யா அல்ல, இந்த உபாசனையால் மோட்சத்தை அடைய முடியாது. இந்த உபாசனையின் பலன் வார்த்தையால் மட்டுமே உள்ளது, அது இந்த உலகத்திலேயே அனுபவிக்கக்கூடிய ஒரு கனியாகும். முக்யபிரான் அல்லது மூச்சு தியானம் கூட ப்ரதீக உபாசனை. இப்போது இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், பிரம்ம வித்யாவில் பரமாத்மாவை ஆத்மாவாகவும், உபாசகரை ஜீவனாகவும் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

பூர்வபக்ஷி (எதிர்ப்பவர்) ப்ரதீக உபாசனையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு உபாசனா என்று வாதிடுகிறார், மேலும் தியானத்தின் பொருளை ஆத்மா அல்லது ஆத்மாவாகக் கருதும் அதே விதி இங்கேயும் பொருந்தும். இதை சூத்ரகாரர் தனது “ந ப்ரதீகே ந ஹி ச:” என்ற சூத்திரத்தில் மறுத்துள்ளார், அதாவது ப்ரதீக உபாசனத்தில் மேற்கண்ட விதி பொருந்தாது, ஏனென்றால் தியானம் செய்பவருக்கு பிராதீகம் ஆத்மாவாகவோ அல்லது ஆத்மாவாகவோ இருக்க முடியாது. இருப்பினும் ஒரு பொருளை பிராமணனாக நினைப்பது எப்போதும் மேலானது என்று சூத்ரகாரர் கூறுகிறார். அன்றாட வாழ்வில், தாழ்வான பொருளை உயர்ந்ததாகக் கருதுவது எப்போதும் நல்ல பலனைத் தரும், மேலும் உயர்ந்த பொருளை உட்புறமாகக் கருதுவது விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்தும். இதற்கான நடைமுறை உதாரணம், வேலைக்காரனை எஜமானாக நினைப்பது சில நேரங்களில் நல்ல பலனைத் தருகிறது, அதே நேரத்தில் ஒரு எஜமானனை வேலைக்காரனாக நினைப்பது பேரழிவு தரும்.

அடுத்த அதிகாரம் ஆதித்யாதிமதி அதிகாரம். மேற்கூறியவாறு இதுவும் சூழலுக்குப் புறம்பானது என்றாலும், முந்தைய அதிகாரத்தின் முடிவில் இருந்து எழும் தெளிவான புள்ளிக்கு இந்த அதிகாரத்தை சூத்திரகாரர் உள்ளடக்கியுள்ளார். உட்புறப் பொருளை உயர்ந்த பொருளாகக் கருதி தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இங்கே விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சாண்டோக்யோபநிஷத்தின் முதல் அத்தியாயத்தின் 3வது துணைப்பிரிவில் பிரகாசிப்பவனை உத்கீதாவாக தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரகாசிப்பவர் சூரியன் உத்கீதை பிரணவம் மற்றும் உத்கீத வித்யா என்பது பிரணவத்தை பல வழிகளில் தியானிப்பதாகும், இது சந்தோக்யோபநிஷத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. உத்கீத வித்யாவுடன் ஒரு யாகம் (யாகம்) செய்தால், அது யாகத்திற்கு விரைவான மற்றும் சிறந்த பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

இப்போது கேள்வி ஆதித்யா (சூரியன்) மற்றும் உத்கீத வித்யா ஆகியவற்றுக்கு இடையே உயர்ந்தது. பூர்வபக்ஷி, உத்கீத வித்யா ஆதித்யாவை விட மேலானது என்று வாதிடுகிறார், ஏனெனில் இது ஒரு யாகத்தில் விரைவான மற்றும் சிறந்த பலன்களை அடைவதற்கான வழிமுறையாகும், மேலும் ஆதித்யாவிலிருந்து எந்த பலனும் இல்லை. எனவே ஆதித்யாவை உத்கீதராகக் கருதி தியானிக்க வேண்டும். இதை சூத்ரகாரர் “ஆதித்யாதிமதா ய:ச அங்க உபபத்தே:” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார், அதாவது உத்கீதையை விட ஆதித்யன் ஒருவரே உயர்ந்தவர், ஏனென்றால் ஆதித்யாவை (சூரிய பகவானை) வழிபடுவதன் மூலம் நாம் விரும்பும் பலன்கள் செய்யப்படும் யாகங்களுக்கு கிடைக்கும். எனவே உத்கீதையை ஆதித்யமாகக் கருதி தியானிக்க வேண்டும்.

ஐந்தாவது அதிகாரம் அசீனாதிகரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் எந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும் என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. தோரணை உட்கார்ந்து, நின்று, நடைபயிற்சி அல்லது தூங்கும். இந்த அதிகாரம் இரண்டாம் அதிகாரத்துடன் மற்றும் அதன் தொடர்ச்சியாக நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட தோரணையில் மட்டுமே தியானம் செய்ய வேண்டும் என்று உபநிடத நூல்களில் குறிப்பிட்ட எதுவும் கூறப்படவில்லை என்று பூர்வபக்ஷி கூறுகிறார். “ஆசீனா: சம்பவத்” என்ற சூத்திரத்தில், உட்கார்ந்த நிலையில் மட்டுமே மனச் செறிவு சாத்தியமாகும் என்றும், தியானத்திற்கு இந்த மனச் செறிவு மிகவும் அவசியம் என்றும் சூத்ரகாரர் கூறுகிறார். நிற்கும் மற்றும் நடக்கும் தோரணைகளில், தனி நபர் கவனம் செலுத்தப்படுகிறது. தூங்கும் நிலையில் தியானம் செய்பவர் தூங்கச் சென்றால் தியானம் தடைபடுகிறது.

இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் ஆழ்ந்த தியானத்திற்கு உடலை அசைக்கவோ அசைக்கவோ கூடாது என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அதிகாரத்தின் நான்காவது அல்லது ஐந்தாவது சூத்திரங்களில் ஸ்ரீ பகவத் கீதையில் உள்ள சில ஸ்லோகங்களையும், தியானம் செய்யும் இடம் மற்றும் இருக்கைக்கான விவரக்குறிப்புகளைக் கொண்ட ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் உள்ள ஒரு வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, அந்த இடம் அலைகள் இல்லாமல் சமன் செய்யப்பட வேண்டும். இது விரும்பத்தகாதவர்கள் தொடாத மிகவும் தூய்மையான இடமாக இருக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட மர இருக்கையில் தியானம் செய்ய வேண்டும். கூர்மா ஆசனம் என்று அழைக்கப்படும் மர இருக்கை மிகவும் உயரமாகவும் அதே சமயம் மிகவும் தாழ்வாகவும் இருக்கக்கூடாது. மர இருக்கையின் மேல் தர்பா புல் பரப்பப்பட வேண்டும், மானின் தோலை அதன் மேல் ஒரு துணியை வைக்க வேண்டும். முழு விஷயமும் தியானிப்பவருக்கு குஷனிங் விளைவை அளிக்கிறது.

தியானம் செய்யும் இடம் நெருப்பு, நீர் அருகில் இருக்கக் கூடாது. இது மணலாக இருக்கக்கூடாது மற்றும் கூழாங்கற்கள் (சிறிய கல் துண்டுகள்) இருக்கக்கூடாது. செறிவைத் தொந்தரவு செய்யும் எந்த ஒலியும் இருக்கக்கூடாது. தியானம் செய்யும் நேரமும் இடமும் மனச் செறிவுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

ஆறாவது அதிகாரம் அப்ராயண அதிகாரம் எனப்படும். தியானம் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் அல்லது எந்த நாள் வரை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இந்த அதிகாரம் பதில் அளிக்கிறது.

பூர்வபக்ஷி தியானத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றாலும், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதங்களில் இடைவிடாமல் சிந்தனை ஓட்டம் ஒரு நாள் செய்தால் போதும். பூர்வபக்ஷியின் சதத்தை மறுப்பதற்காக சூத்ரகாரர் “அப்ராயநாத் தத்ரபிஹி த்ரிஷ்டம்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது தியான வடிவில் இருக்கும் இந்த பக்தி யோகத்தை ஜீவா மரண சரீரத்திலிருந்து பயணம் செய்யும் நாள் அல்லது புறப்படும் நாள் வரை செய்ய வேண்டும்.

எனவே அப்ரயநாத் என்றால் சாகும் வரை. பிரயானம் என்றால் கடைசி பயணம். இந்த பக்தி யோகத்தை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்று சந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கே ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஸ்ரீ பாஷ்யத்தில் சாகும் வரை பக்தி யோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பக்தி யோகத்தில் பக்தி யோகநிஷ்டை (மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகத்தை நாடுபவர்) மோட்சத்தை அடைவதற்கு முன்பு பக்தி யோகத்தைத் தொடங்கிய பிறகு எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பதை விலையாகக் கூற முடியாது. ஸ்ரீ பாஷ்யத்தில் மரணம் வரை என்ற சொல், பக்தி யோகநிஷ்டை மோட்சத்தை அடைந்த உடனேயே மரணத்தைக் குறிக்க வேண்டும். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சாராவின் உபய விபாக அதிகாரத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர், அப்ராயணத்தில் உள்ள வார்த்தை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு பயணம் செய்யும் நாள் வரை என்று தெளிவாகக் கூறுகிறார்.

இந்த பாதத்தில் ஏழாவது அதிகாரம் ததாதிகமதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் இருந்து இந்த பாதத்தின் இறுதி வரை, இந்த உலகத்திலேயே பக்தி யோகநிஷ்டையால் அனுபவிக்கப்படும் பலன்கள். பக்தி யோகம் தொடங்கும் தருணம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மன உணர்வாகும். இது தர்சன சமன அகரா எனப்படும். அதாவது ஸ்ரீமன் நாராயணனை நிஜமாகவே தன் நிர்வாணக் கண்களால் தரிசிக்கும் போது ஒருவருக்கு ஏற்படும் அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தை ஒருவர் மனதில் பெறுகிறார்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு பின்வருமாறு. பக்தி யோகத்தை ஆரம்பிக்கும் முன் பக்தி யோகநிஷ்டை செய்த பாவங்களையும், பக்தி யோகம் தொடங்கிய பிறகு அவன் செய்த தற்செயலான பாவங்களையும் அவனைத் தொடாதது பற்றி சில உபநிஷத கூற்றுகள் உள்ளன.

ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் உபநிடதங்களில் முந்தையதற்கு இரண்டு கூற்றுகளையும் பிந்தையதற்கு இரண்டு கூற்றுகளையும் மேற்கோள் காட்டுகிறார்.

இந்த பாதத்தில் உள்ள எட்டாவது அதிகாரம் இடராதிகாரன் எனப்படும்.

பக்தி யோகத்திற்கான முதல் வெகுமதியாக நித்திய பேரின்பமாகிய மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகத்தைத் தொடங்குபவருக்கு, உபாசகர் (தியானம் செய்பவர் அல்லது பக்தி யோகம் செய்பவர்) செய்த பாவங்களை பகவான் ஸ்ரீமன் நாராயணன் சித்தரிக்கிறார் என்று முந்தைய அதிகாரத்தில் நிறுவப்பட்டது. உபாசனையின் ஆரம்பம் மறைந்துவிடும், அவர் செய்த கவனக்குறைவான பாவங்கள் அவரைத் தொடாது. அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணன் உபாசகருக்கு தற்செயலான பாவங்கள் செய்ததற்காக எந்த தண்டனையும் கொடுக்க மாட்டார்.

பக்தி யோகத்தைத் தொடங்குவதற்கு முன்பு உபாசகர் செய்த அதே ஒப்புமை புண்ணியத்தை (நற்செயல்கள்) சூத்ரகாரர் கூறுகிறார், மேலும் தொடங்கிய பிறகு அதுவும் மறைந்துவிடும், ஏனெனில் புண்ணியமும் மோட்சத்தை அடைவதற்கு ஒரு தடையாக உள்ளது. மோட்சத்தை அடைய வேண்டுமானால் புண்ணியமோ, பாபாவோ இருக்கக்கூடாது. புண்ணியத்திற்கும் பாபாவிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், உபாசகர் உபாசனையின் முடிவில் தனது மரண உடலை விட்டு வெளியேறிய பிறகு புண்யம் மறைந்துவிடும். இதற்குக் காரணம், உபாசகருக்குப் புண்ணியத் தேவை, ஏனெனில் அவருடைய புண்ணியத்தால் மட்டுமே மழை பெய்யும், மேலும் இந்த மழையானது உபாசகருக்கு உபாசனையின் போது அவரது உடலைத் தக்கவைக்க உணவு அளிக்கும் பயிர் சாகுபடிக்காகும்.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் “அனாரப்த காரியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. உபாசனை தொடங்குவதற்கு முன் செய்த புண்ணியமும், பாபாவும் முழுவதுமாக மறைந்து விடுகிறதா இல்லையா என்பதுதான் விவாதத்திற்கான தலைப்பு. இந்த விஷயத்தில் சந்தேகத்திற்கு இடமுள்ளது, ஏனெனில் பாபா முற்றிலும் மறைந்து விடுகிறார் என்று உபநிடதப் பகுதி கூறுகிறது. புண்யா மோட்சத்தை அடைவதற்கான ஒரு தடையாக இருப்பதால் பாபா என்றும் கணக்கிடப்படுகிறது. புண்ணியமும், பாபாவும் முற்றாக அழிந்தால் உபாசகர் ஒரு கணம் கூட இவ்வுலகில் இருக்க முடியாது. எனவே பாப்பா மற்றும் புண்யாவின் எந்த பகுதி மறைந்துவிடும், எந்த பகுதியை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு ஜென்மத்திலும் அல்லது பிறப்பிலும் ஒரு தனிமனிதன் பெறுகின்ற புண்ணியமும், பாபமும், அவை குவிந்து அல்லது மலையாகக் கட்டப்படும் சஞ்சிதா எனப்படும், இது இன்னும் பலன்களைத் தரத் தொடங்காத பலன் என்று அழைக்கப்படுகிறது. புன்யாவின் ஃபாலா மகிழ்ச்சியாக இருக்கிறது, அங்கு அப்பாவின் பலா துன்பம் அல்லது மன மற்றும் உடல் இரண்டிலும் துன்பம். சஞ்சிதா என்றால் சேமிக்கப்பட்ட அல்லது குவிக்கப்பட்ட. இது அனரப்த காரியம் எனப்படும். இந்த சஞ்சிதத்திலிருந்து புண்யா மற்றும் பாப்பாவின் ஒரு பகுதி பலா கொடுக்க ஆரம்பித்தால், இந்த பகுதி ஆரப்தகார்யா அல்லது பிராரப்தா என்று அழைக்கப்படுகிறது. இது சஞ்சிதாவைப் போன்ற ஒரு கிரான்ரியில் பல ஆண்டுகளாக நெல் சேமித்து வைப்பது போன்றது, அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து, அன்றாடப் பயன்பாட்டிற்கு அரிசியாகக் கொட்டுகிறது. இது பிராரப்தத்தைப் போன்றது.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்பும் பாபாவின் மறைவு சஞ்சித பாபா என்ற அனரப்த காரியத்திற்கு மட்டுமே பொருந்தும், ஆரப்த காரியம் (பிராரப்தம்) அல்ல என்பதை இந்த அதிகாரத்தில் உள்ள சூத்ரகாரம் தெளிவாகக் கூறுகிறது. மேற்கூறியவற்றிற்கு சூத்ரகாரரால் குறிப்பிடப்பட்ட காரணம், சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில் உள்ள ஒரு பகுதி, அதில் ஒரு உபாசகர் புண்ணிய பந்தத்திலிருந்து விடுவிக்கப்படும் வரை மோட்சத்தை அடைய முடியாது என்று கூறப்பட்டுள்ளது, பாபா. தடாதிகமாதிகாரணத்தில் சாந்தோக்யோபநிஷத்தில் உள்ள உபநிஷதப் பகுதியின்படி, உபாசனை (பக்தி யோகம்) தொடங்குவதற்கு முன்பு உபாசகர் செய்த பாவங்கள் (புண்ய மற்றும் பாபா) பஞ்சு மூட்டைகள் நெருப்பில் அழிந்து போவது போல் அழிந்துவிடும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் அக்னிஹோத்ர த்யாதிகரணம் எனப்படும். இதில் ஒரு உபாசகரின் புண்ய மற்றும் பாப கர்மாவை அகற்றுவதால் எழும் மற்றொரு விஷயமும் விவாதிக்கப்படுகிறது.

8வது அதிகாரத்தில் பக்தி யோகம் தொடங்கிய பிறகு உபாசகர் செய்யும் புண்ணிய கர்மா உபாசகரைத் தொடாது, அது உபாசகருக்கு எந்தப் பலனையும் தராது, ஏனெனில் புண்ணியமும் உபாசகர் மோட்சத்தை அடைவதற்குத் தடையாக உள்ளது. பக்தி யோகம் தொடங்கிய பிறகு செய்யப்படும் இந்த புண்ணிய கர்மா உபாசகருக்கு எந்தப் பயனும் இல்லாதபோது இந்த புண்ணிய கர்மாவை ஏன் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. இந்த புண்ணிய கர்மா நித்ய நைமித்திக கர்மாவின் வடிவத்தில் உள்ளது (நித்யா என்றால் தினசரி செய்யப்படும் மற்றும் நைமித்திகை என்பது ஏகாதசி, மாமனார் மற்றும் தாயாரின் அமாவாசை விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் செய்யப்படுகிறது). உபாசனை செய்வதற்கு ஒவ்வொரு நாளும் எழும் தடையை போக்க கல்ப சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அக்னி ஹோத்ரா தினமும் செய்ய வேண்டும்.

புண்ணிய கர்மா உபாசகருக்கு எந்த பலனையும் கொடுக்காதபோது பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் தக்த் என்று வாதிட்டார், அதைச் செய்யவே தேவையில்லை. எனவே “அக்னிஹோத்ராதிது தத் காரியய ஏவ தத் தர்சநாத்” என்ற சூத்திரம் மேற்கூறியவற்றுக்குப் பதிலளிக்கிறது. உபாசனை செய்வதற்கு தினமும் ஏற்படக்கூடிய தடைகளை போக்க அக்னிஹோத்ரம் முதலியவற்றை தினமும் செய்ய வேண்டும். முதலியன வர்ண அத்ரம தர்மம் இரண்டும் நித்ய நைமித்திக கர்மாவைக் குறிக்கும்.

இந்த அக்னிஹோத்ரா தினமும் (ஒரு நாளைக்கு இரண்டு முறை) செய்ய வேண்டிய உபாசனை போன்றது. இந்த அக்னிஹோத்ரா எந்த யாகம் மற்றும் பிற நித்ய நைமித்திக கர்மாக்கள் செய்ய முன் தேவை. எனவே உபாசனை தடையின்றி தொடர அக்னிஹோத்ரத்தை தினமும் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

இந்தச் சூழலில் ஒரு கேள்வி எழுகிறது, அக்னிஹோத்ரா போன்ற புண்ணிய கர்மாக்கள் இடையூறு இல்லாத உபாசனை (தியானம் அல்லது பக்தி யோகம்) ஏற்படுத்தும் வடிவத்தில் பலா (பழங்களை) கொடுக்கும்போது, ​​உபாசகரின் எந்த புண்ணியமானது உபாசகரின் நண்பர்களுக்கு மாற்றப்படுகிறது. உபாசகர் (உபாசகர் வித்வான் என்றும் அழைக்கப்படுகிறார்) மரணத்தின் போது அவரது புண்ணியமானது அவரது நண்பர்களுக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்ட உபநிடதப் பகுதியின் (ஷத்யான உபநிஷத்) இந்தச் சூழலில் இந்தக் கேள்வி பொருத்தமானதாகிறது. மற்றும் அவரது அப்பா தனது எதிரிகளுக்கு (எதிரிகளுக்கு) மாற்றப்படுகிறார்.

இந்த அதிகாரத்தின் இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரரே மேற்கண்ட சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறார். இந்த சூத்திரத்தில், உபாசகரின் புண்ணிய கணக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது, அதன் பலனை உபாசகர் அனுபவிக்கவில்லை, ஏனெனில் புண்யத்தின் ஒரு பகுதி உபாசகருக்கு பலன்களை வழங்கத் தவறியது. அதே. உபாசகர் செய்த கடுமையான பாவத்தின் அடிப்படையில் பகவான் பரமாத்மாவின் விருப்பத்தால் இந்தத் தடை ஏற்படுகிறது. உபாசகர் இறக்கும் நேரத்தில் இந்த மகிழ்ச்சியற்ற மற்றும் தடுக்கப்பட்ட புண்ணியமானது உபாசகரின் நண்பருக்கு மாற்றப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “இதர க்ஷபநாதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. உபாசகர் எப்போது மோட்சத்தை அடைகிறார் என்பதுதான் இங்கு விவாதிக்கப்படும் தலைப்பு. அதாவது, உபாசகர் எந்தப் பிறவியில் உபாசனை (தியானம்) செய்தாரோ அதே பிறவியில் (ஜன்மா) மோட்சத்தை அடைகிறாரா அல்லது அவர் பக்தி யோகம் அல்லது உபாசனையைத் தொடங்கிய பிறப்பிலிருந்து பல பிறவிகள் (ஜன்மாக்கள்) எடுத்த பிறகு அதுதான். இந்தச் சூழலில் மூன்றாவது சந்தேகமும் உள்ளது. புண்ணிய பாப கர்மா பலன்களைத் தரத் தொடங்கிய பிறவியின் முடிவில் மோட்சத்தை அடைவாரா என்பதுதான் அது.

மேற்கூறிய ஐயங்களைத் தோற்றுவிக்கும் உபநிடத உரை, சந்தோக்யோபநிஷத்தின் 6வது அத்தியாயத்திலும், சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்திலும் உள்ள ஒரு பகுதி. 6வது அத்தியாயத்தில், உபாசகர் மோட்சம் பெறுவதில் தாமதம், புண்ய மற்றும் பாபா இரண்டையும் உள்ளடக்கிய பிராரப்த கர்மாவின் பிடியில் இருந்து விடுபடாதது என்று கூறப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபாசகர் தனது பிராரப்த கர்மா முடிவடையும் தருணத்தில் மோட்சத்தை அடைகிறார் அல்லது புண்யா மற்றும் பாபாவின் பலனை அனுபவித்து சோர்வடைகிறார். புண்ணியத்தின் பலன் மகிழ்ச்சியின் இன்பம் மற்றும் பாபாவின் பலன் துன்பம் என்பதை இந்த சூழலில் கவனிக்க வேண்டும். இந்த துன்பம் தாபத்ரய எனப்படும் மூன்று வகையாகும்.

முதலாவதாக உடல் மற்றும் மனது தொடர்பான ஆத்யாத்மிகா என்று அழைக்கப்படுகிறது. உடம்பின் துன்பம் நோய்களால் தான். மனத் துன்பம், மன அழுத்தம், வேதனை அல்லது பதற்றம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

இரண்டாவது ஆதிபௌதிகா என்பது அவரது உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள் மற்றும் சுற்றுப்புறங்களால் ஏற்படும் உடல் மற்றும் மன துன்பங்கள் ஆகும்.

மூன்றாவதாக, பொல்லாத மழை, வெள்ளம், கடும் வறட்சி, சூறாவளி புயல், நில நடுக்கம், கடல் அலைகள் போன்ற இயற்கைச் சீற்றங்களை உண்டாக்கும் பரமாத்மாவின் சித்தமாகிய உடலும் மனமும் துன்பம் அடைவதே ஆதிதைவிகா எனப்படும். பேரழிவுகள்.

ஒருவரின் பிராரப்தம் முடிவுக்கு வந்துவிட்டால் அல்லது சோர்வடைந்துவிட்டால், அவர் இந்த உலகில் ஒரு கணம் கூட இருக்க முடியாது.

மேலே கூறப்பட்ட சாண்டோக்யோபநிஷத்தின் இரண்டாவது பகுதி, குதிரை வெளிவரும் சந்திரனைப் போல, பாபாவை உதிர்த்துவிட்டு, பிரம்மலோகம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வைகுண்டப்ய லோகத்தில் பரமாத்மாவை அடைவேன் என்று உபாசகர் கூறியதைக் குறிக்கிறது. கிரகணத்தின் போது ராகுவின் பிடிகள் மற்றும் இந்த மரண உடலை உதிர்த்த பிறகு.

பூர்வபக்ஷி, உபாசகர் அங்கு உபாசனையைத் தொடங்கிய பிறப்பின் (ஜென்மா) முடிவில் மோட்சத்தை அடைகிறார் என்று வாதிடுகிறார், இதன் பொருள் மேலே குறிப்பிடப்பட்ட சாண்டோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் உள்ள பகுதி அவர் உபாசனையைத் தொடங்கிய பிறப்பின் முடிவைக் குறிக்கிறது.

“போகேன து இதரே க்ஷபயித்வா அத ஸம்பத்யதே” என்ற சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உபாசகர் (போகேன) பிராரப்தத்தின் பலன்களை அனுபவித்த பிறகு (அத ஸம்பத்யதே) மோட்சத்தை அடைகிறார் (எதரே அதாவது ஆரப்தா, அதாவது பலன்களைத் தரத் தொடங்கிய திரண்ட புண்ணிய பாப கர்மாவின் பகுதி) பின்னர் சோர்வடைகிறார். இந்த பிராரப்த (க்ஷபயித்வா).

இந்த சூத்திரத்தின்படி உபாசகர் உபாசனை (தியானம் அல்லது பக்தி யோகம்) செய்ய ஆரம்பித்த ஒரு பிறவியிலேயே தனது பிராரப்தத்தை தீர்ந்துவிடலாம் அல்லது பல பிறவிகள் எடுத்து புண்ணிய மற்றும் பாபாவின் புண்ணியங்களை அனுபவித்து பிராரப்தத்தை கழிக்க வேண்டும். பிராரப்தம் தீர்ந்து மோட்சத்தை அடைவதற்கு முன் அவர் எத்தனை பிறவிகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை.

முந்தைய ஐந்து அதிகாரங்களில் வந்த முடிவுகளைக் கீழே சுருக்கமாகக் கூறலாம்.

உபாசகர் அல்லது பக்தி நிஷ்டையில் புண்ய பக கர்மாவை அகற்றும் முறை.

முதல் வகைப்பாடு: புண்ய பாபா கர்மா பின்வரும் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

(அ) ​​புண்ய மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றன.

(ஆ) புண்ய மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.

(இ) புண்யா மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் அனுபவிக்கப் போகின்றன.

(ஈ) புன்யா மற்றும் பாப்பா கர்மாவின் பலன்கள் தடையின் காரணமாக அனுபவிக்க முடியாது. உபாசகர் இறக்கும் போது இந்த வகையில் உள்ள புண்யா நண்பர்களுக்கும், அப்பா எதிரிகளுக்கும் மாற்றப்படுகிறார்.

இரண்டாவது வகைப்பாடு: உபாசனை தொடங்குவதற்கு முன் செய்யப்படும் புண்யா மற்றும் பாபாவை பூர்வாகா என்று அழைக்கப்படுகிறது. இந்த பூர்வகா மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது (1) தத்தா பலம்- பழங்கள் ஆல்ரடி வழங்கப்பட்டு அனுபவித்தது. (2) அடட்டா பலம் – புன்யா மற்றும் பாப்பா இன்னும் பழங்களை கொடுக்கத் தொடங்கவில்லை.

அடாத்த பலம் (1) தகுந்த பிராயச்சித்தம் அல்லது பிராயச்சித்தம் செய்வதன் மூலம் மறைந்தது என மேலும் வகைப்படுத்தப்படுகிறது.

(2) மறைந்து போகாதது. இதற்கு அவினாஷ்ட பலம் என்று பெயர். இந்த அவினாஷ்ட பலம் மீண்டும் (1) பிராரப்த பலம் – பலன் கொடுக்க ஆரம்பித்தது என வகைப்படுத்தப்படுகிறது. (2) அப்ரஆரப்த பலம் – இன்னும் பலன் கொடுக்கத் தொடங்காதது.

உபாசகர் உபாசனை (பக்தி யோகா) தொடங்கும் போது இது மறைந்துவிடும், வேறுவிதமாகக் கூறினால் அது உறைந்துவிடும். உபாசகருக்கு இந்த வகை புண்ணியமும், பாபாவும் பலன் கொடுக்கக் கூடாது என்று பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்புகிறார் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

பிராரப்த பலா மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது

(1) வித்யானுகுலம் – உபாசனைக்கு சாதகமானது மற்றும் அதை ஊக்குவிக்கிறது.

(2) அனனுகுலம் – உபாசனைக்கு சாதகமாக இல்லாதது.

இந்த அனனுகுலம் மேலும் (1) புத்திபூர்வம் – தெரிந்தே செய்யப்படுகிறது. (2) அபுத்தி பூர்வம் – தெரியாமல் செய்யப்பட்டது.

தற்செயலாக செய்யப்படும் இந்த குறிப்பிட்ட வகையின் இந்த பாப்பா பகுதி உபாசகரைத் தொடாது, அதாவது அவர் அறியாமல் செய்யப்படும் பாபாவின் பலனை அனுபவிக்க வேண்டியதில்லை. உபாசகருக்கு அனுகூலமான உபாசனை தொடங்கிய பின் அறிந்தும் அறியாமலும் செய்த புண்ணியமானது, பயிர் சாகுபடிக்குத் தேவையான மழையை உண்டாக்குவதன் மூலம் அவருக்குப் பலன்களைத் தரும்.

மோட்சத்தை அடைவதற்கு உபாசனம், தியானம் அல்லது தியானம் என்று அழைக்கப்படும் பக்தி யோகம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதைக் கையாளும் முதல் காலாண்டு அவ்ரித்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தின் பதினொரு அதிகாரங்களில் கடைசியாக, தியானம் செய்பவர் என்று அழைக்கப்படும் உபாசகர் ஒரு பிறவியில் அல்லது பல பிறவிகளில் வெற்றிகரமாக உபாசனையை முடித்துவிடுகிறார், அந்த காலகட்டத்தில் அவர் பிராரப்த கர்மாவின் பலனை அனுபவிக்கிறார். பிராரப்த கர்மா முடிவடையும் தருணத்தில், உபாசனை முடிவடைகிறது மற்றும் உபாசகர் தியானம் செய்பவர் மரண உடலை விட்டு வெளியேறி, அர்ச்சிராதி மார்கா என்ற பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடையத் தயாராகிறார்.

அபியுபகத பிராரப்தம் முடிவடையும் போது, ​​பிரபஞ்சனின் விஷயத்தில் கூட, அவரும் மரண உடலை விட்டு வெளியேறி, அர்ச்சராதி மார்க்கத்தின் மூலம் ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடையத் தயாராகிறார்.

ஜீவாத்மா உடலில் இருந்து வெளியேறுவது உத்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த உத்கிராந்தி ஒரு பேக்கிங் செயல்முறைக்கு முன்னதாகவே உள்ளது. இந்த பேக்கிங் செயல்முறை இந்த இரண்டாவது பாதத்தில் விரிவாகக் கையாளப்படுகிறது, இது உத்கிராந்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது.

வெளியில் எதுவும் தெரியாததால் உடலுக்குள் நடக்கும் பேக்கிங் செயல்முறையை விரிவாகக் கையாள்வது அவசியமா என்ற கேள்வி எழலாம். பதில் என்னவென்றால், சந்தோக்யோபனிஷத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி இதைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிடுகிறது மற்றும் பிரம்மசூத்திரங்கள் உபநிடத பத்திகளின் சரியான விளக்கத்திற்காகக் குறிக்கப்பட்டவை என்பதால், சூத்ரகார முனிவர் பதராயணன் முறையான பேக்கிங் வரிசைக்கு சூத்திரங்களை இயற்ற முடிவு செய்தார்.

இந்த பாதம் விசிஷ்டாத்வைதத்திற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் சூத்ரகாரரே அத்வைதின்களின் ஜீவன் முக்த வாத (வாத என்றால் மூலோபாய அறிக்கை) தெளிவான சொற்களில் கண்டனம் செய்கிறார்.

இந்த பாதத்தில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் வகாதிகரணம் எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி சாந்தோக்யோபனிஷத்தில் உள்ள சத்வித்யாவில் (6வது அத்தியாயம்) இருந்து வருகிறது. இந்த பத்தியின் பொருள் என்னவென்றால், ஜீவா உடலை விட்டு வெளியேற (புறப்படுவதற்கு) தயாராகும் போது அவரது பேச்சு உணர்வு உறுப்பு மனத்துடன் இணைந்து கொள்கிறது. பிறகு மனம் முக்ய பிராணன் அல்லது மூச்சுடன் இணைந்து வருகிறது, பின்னர் முக்ய பிராணன் ஜீவனுடன் இணைந்து வருகிறது, பிறகு இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவன், தேஜஸ் சேருங்கள், இவை ஜீவனுடன் இதயத்தில் வசிக்கும் அந்தர்யாமியாகிய பரமாத்மாவுடன் இணைந்து வரும். . இங்கு இணைதல் என்றால் இணைப்பு அல்லது ஒன்றியம். இங்கே மேலே மேற்கோள் காட்டப்பட்ட உபநிடத உரையில் சம்பத்தி என்ற வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு இணைதல் என்று பொருள்.

இங்கு எழும் சந்தேகம், பேச்சு தானே மனத்துடன் இணைகிறதா அல்லது பேச்சு உறுப்புடன் இணைகிறதா என்பதுதான். பேச்சானது மனத்தால் கட்டுப்படுத்தப்படுவதால், பேச்சு மட்டும் மனத்துடன் இணைக்கப்படுகிறது என்று எதிர்ப்பாளர் வாதிடுகிறார். பூர்வபக்ஷி என்ற எதிரியானவர், இணைதல் என்றால் இணைதல் என்றும், இந்த இணைவு இணைவதற்குக் காரணமான காரியத்துடன் நடைபெற வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார். காரண காரியக் கோட்பாடாக இருக்கும் கரண மற்றும் காரியக் கோட்பாட்டில் காரியம் மறைந்து விடுகிறது அல்லது காரத்தில் கரைந்து விடுகிறது. இங்கே பேச்சு உறுப்புக்கு மனம் காரணமல்ல, அதற்கு முன் பூர்வபக்ஷி, பேச்சு உறுப்பு மனத்துடன் இணையவில்லை, எனவே பேச்சு மட்டுமே மனத்துடன் இணைகிறது என்று வாதிடுகிறது.

இதை “வாக் மனஸி தர்சநாத் சப்தச்ச” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், சூத்திரத்தில் உள்ள “வாக்” என்ற வார்த்தை வஜிந்த்ரியாவைக் குறிக்கிறது, அதாவது வாஜிந்த்ரியம் ஆகும். மேற்கூறியவற்றை ஆதரிக்கும் உபநிடத பத்தியில் “சம்பத்யதே” என்ற வார்த்தை உள்ளது, எனவே முழு அர்த்தத்தைப் பெற இந்த வார்த்தையை சூத்திரத்தில் சேர்க்க வேண்டும். எனவே முழு அர்த்தம் என்னவென்றால், சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு காரணங்களால் பேச்சு உறுப்பு மனத்துடன் இணைக்கப்படுகிறது.

முதல் காரணம் தர்சனம், இரண்டாவது காரணம் சப்தாச்சா. இந்த இரண்டு காரணங்களின் பொருள் என்னவென்றால், பேச்சு உறுப்பு மனத்துடன் இணைந்தாலும், மரண உடலை விட்டு வெளியேறப் போகிறவர் பேச்சு குறைவாக இருந்தாலும், அந்த நபரில் சில மன செயல்பாடுகள் தெரியும். சப்தச்சா என்பது மேலே குறிப்பிடப்பட்ட உபநிடதப் பகுதி, அதில் பேச்சு உறுப்பு மனத்துடன் தொடர்பு கொள்கிறது என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம், பேச்சு உறுப்பைப் போலவே மற்ற இந்திரியங்களும் (இந்திரியங்களும்) மனதில் வந்து சேர்வதால், பத்து இந்திரியங்களும் மனத்துடன் இணைந்துள்ளன என்று கூறுகிறது. ஞான இந்திரியங்கள் (அறிவு அல்லது உணர்வைக் கொடுக்கும் புலன்கள்) கண்கள், காதுகள், மூக்கு தோல் மற்றும் நாக்கு. கர்ம இந்திரியங்கள் (செயல் சார்ந்த) கைகள், கால்கள், பேச்சு உறுப்பு, பிறப்பு உறுப்பு மற்றும் வெளியேற்ற உறுப்பு ஆகும்.

இந்தப் பாடலில் இரண்டாவது அதிகாரம் மனோதிகரணம்.

எல்லா இந்திரியங்களும் சென்று மனதைச் சேர்ந்த பிறகு, மனமும் அனைத்து இந்திரியங்களோடு சேர்ந்து முக்ய பிராணனுடன் (மூச்சு) சேருகிறது என்று இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. “தன்மன பிராண உத்தராத்” என்பது சூத்திரம். அதாவது “உத்தரத்” என்ற காரணத்தால் அனைத்து இந்திரியங்களுடனும் மனம் பிராணனுடன் இணைகிறது, அதாவது “வாக்மனசி ஸம்பத்யதி” என்ற உபநிடதப் பகுதிக்கு அடுத்ததாக மன: பிராணே என்ற உரை உள்ளது. எனவே உத்தரம் என்றால் அடுத்தது.

இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு சந்தேகம் தீர்ந்தது. “அன்னமயம் ஹி சௌம்ய மன” என்ற உபநிடத உரையில் மனதிற்கு உணவே காரணம் என்று தோன்றுகிறது என்பது சந்தேகம். “தா அன்னம் அஸ்ருஜந்தா” என்ற உரையிலிருந்து உணவுக்கு நீர் காரணம். மேலும் “அபோமய பிராணன்” என்ற உரை பிராணனுக்கு நீர்தான் காரணம் என்று கூறுகிறது. எனவே, இந்த நூல்களிலிருந்து, மனம் தண்ணீருடன் இணைகிறது என்று சொல்வது இயற்கையானது, ஏனென்றால் தண்ணீரே மனதிற்கு இறுதிக் காரணம், எந்தவொரு விஷயமும் அதன் காரணத்தில் ஒன்றிணைந்து அல்லது கரைந்துவிடும் என்று முன்பே கூறப்பட்டது. அதனால் புலன்களுடன் மனமும் தண்ணீருடன் இணையும். இந்த சந்தேகம் எதிராளியின் வாதமாக மாறுகிறது. “அன்னமயம் ஹி சௌம்ய மன:” என்ற உரைகளால் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது அல்லது எதிராளியின் வாதம் மறுக்கப்படுகிறது. மற்றும் அபோமய பிராணன்” உணவு மனதிற்கு காரணம் என்றும் நீர் பிராணனுக்கு காரணம் என்றும் கூறாதீர்கள் ஆனால் உணவு மனதின் திருப்திகரமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்றும் நீர் முக்ய பிராணன் அல்லது சுவாசத்தின் திருப்திகரமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்றும் கூறுகின்றனர். எனவே இந்திரியங்களும் மனமும் உடலிலிருந்து ஜீவா வெளியேறும் முன் முக்ய பிராணனுடன் இணைகின்றன.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் அதியக்ஷாதி கரணமாக அழைக்கப்படுகிறது. பேக்கிங் செயல்பாட்டின் அடுத்த படி, இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் ஆகியவை ஜீவாவுடன் இணைந்து பெறுகின்றன. இது சம்பந்தமாக சந்தேகத்திற்கு இடமான சாண்டோக்யோபநிஷத்தில் “ப்ராண: தேஜசி, தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பத்தியில் ஜீவாவைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். எனவே, இந்திரியங்கள் மற்றும் மனதுடன் பிராணன் (முக்ய பிராணன்) நேரடியாக தேஜஸ் அல்லது வேறுவிதமாகக் கூறினால் ஐந்து பூதங்களுடன் (கூறுகள்) இணைகிறது என்று எதிர்ப்பாளர் வாதிடுகிறார்.

பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை மறுப்பதில் சூத்ரகாரர் சூத்திரத்தில், “சோத்யக்ஷே ததுபகமா திப்ய:” என்று கூறுகிறார், முக்ய பிராணன் இந்திரியங்களின் அதிக்ஷா அல்லது தலைவனான ஜீவாவுடன் ஐக்கியமாகிறது. உபகம என்றால் தொடர்பு. அனைத்து இந்திரியங்களும் ஜீவாவுடன் இணைந்ததாக அறிவிக்கும் உபநிடதப் பகுதி உள்ளது. மற்ற இரண்டு உபநிடத கூற்றுகளின்படி ஜீவாவுடன் சேர்ந்து முக்ய பிராணன் உடலிலிருந்து வெளியேறுகிறது என்பதை இந்தச் சூழலில் குறிப்பிடுகிறது. எனவே இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் ஆகியவை தேஜஸுடன் இணைவது ஜீவா மூலம். இது யமுனா நதி கடலில் கலக்கிறது என்ற கூற்றுக்கு ஒப்பானது. ஆனால் உண்மையில் யமுனா கடலில் கலக்கும் கங்கை நதியில் கலக்கிறது.

நான்காவது அதிகாரம் பூதோதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் முக்ய பிராணன் பூத தேஜஸ் தனியே இணைகிறதா அல்லது ஈதர் (ஆகாயம்), காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய அனைத்து பூதங்களுடனும் இணைகிறதா என்ற சந்தேகம் நீங்குகிறது. பூர்வபக்ஷி வாதிடுகையில், முக்ய பிராணன் தேஜஸைத் தனியாகச் சேர்கிறது, மற்ற எல்லா பூதங்களுடனும் சேர்வதில்லை, ஏனென்றால் சாண்டோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயம் “ப்ராண: தேஜசி” என்று குறிப்பிடுகிறது, அதாவது முக்ய பிராணன் தேஜஸை (நெருப்பை) மட்டுமே இணைக்கிறது, மற்ற பூதங்களுடன் அல்ல. சூத்ரகாரர் “பூதேஷு தச்ச்ருதே:” என்று சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அனைத்து இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன் மற்றும் ஜீவன் அனைத்து பூதங்களுடனும் இணைகின்றன, ஏனெனில் மேலே கூறப்பட்ட பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு குறிப்பிட்ட உபநிடத பகுதி உள்ளது. இந்த பத்தியில் ஜீவா அனைத்து பூதங்களுடனும் தொடர்பு கொண்டு உடலுக்குள் நகர்கிறது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு பூதத்துடனும் ஒன்றன் பின் ஒன்றாக ஜீவா தொடர்பு கொள்ள முடியும், மேலும் அவர் அனைத்து பூதங்களுடனும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எதிராளி மீண்டும் மற்றொரு கருத்தை எழுப்புகிறார். “நைகஸ்மின் தர்ஷா யதோஹி” என்று படிக்கும் இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் இந்தக் கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. ஒவ்வொரு பூதமும் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த வேலையும் செய்ய முடியும் என்பதற்காக மற்ற நான்கு பூதங்களுடன் கலக்க வேண்டும். இது பஞ்சீகரணம் என்று அழைக்கப்படுகிறது பஞ்சீகரணாவில் என்ன நடக்கிறது என்றால், ஒவ்வொரு பூதத்திலும் அந்த பூதத்தில் 50% உள்ளது, மீதமுள்ள 50% மற்ற நான்கு பூதங்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் 12.5% ​​பங்களிக்கின்றன. இதுவே பஞ்சீகரணத்தின் கொள்கை. சாண்டோக்யோபனிஷத்தில் இது திரிவ்ரித் கரணம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று பூதங்களை மட்டுமே குறிப்பிடுகிறது, அதில் இந்த உறுப்புகள் (பூதங்கள்) ஒவ்வொன்றும் 50% சொந்தமாக இருக்கும், மீதமுள்ள 50% மற்ற இரண்டு பூதங்களை 25 இல் கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் %. எனவே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பூதங்களின் கலவையாகும். எனவே உபநிடத உரையில் “பிராண:

எனவே, இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன் மற்றும் ஜீவா ஆகிய ஐந்து பூதங்களோடும் ஒரே பொதியில் வருகிறது.

இந்த பாதத்தில் ஐந்தாவது அதிகாரம் அஸ்ருத்யுப க்ரமதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தின் முக்கிய நோக்கம் ஜீவன் முக்தி (இந்த உலகில் வாழும் போது விடுதலை) வாதத்தை கண்டிப்பதாகும். இந்த ஜீவன் முக்திவாதம் அத்வைதின்களால் முன்வைக்கப்பட்டது. நபர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

முதல் வகை உபாசகர், வித்வான் அல்லது தியானம் செய்பவர், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் மோட்சம் (முக்தி) அடைவதற்காக உபாசனை அல்லது சரணாகதி செய்தவர். இரண்டாவது பிரிவினர் மோட்சத்தை விரும்பாத அவித்வான் என்று அழைக்கப்படுகிறார்கள், எனவே உபாசனை அல்லது சரணாகதி செய்யவில்லை.

இங்கு எழும் கேள்வி என்னவென்றால், ஜீவா மரண உடலில் இருந்து வெளியேறும் முன் மேலே விவரிக்கப்பட்ட பேக்கிங் செயல்முறை வித்வானுக்கும் அவித்வானுக்கும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பதுதான்.

பூர்வபக்ஷி மேலே உள்ள பேக்கிங் செயல்முறை அவித்வானுக்கு மட்டுமே (உபாசகர் அல்ல) என்று கூறுகிறார், மேலும் வித்வான் இங்கேயே மோட்சத்தை அடைகிறார், அதுவே ஜீவன் முக்தியாகும்.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை, இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “சமனாச்ச அஸ்ருத்யு பக்ரமாத் அமிர்தத்வம் ச அனுபோஷ்ய” என்று சூத்ரகாரர் மறுத்துள்ளார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. சமணனும் ஒன்றே. அதுவே இந்திரியங்கள் மனதையும், மனம் முக்ய பிராணன், முக்ய பிராண ஜீவாத்மாவையும், பிறகு பூத சூக்ஷ்மங்களையும் (சூக்ஷ்மம் என்றால் அணு அளவு) சேர்வதும், இறுதியாக பரமாத்மாவைச் சேர்வதும் வித்வான்களுக்கும் அவித்வான்களுக்கும் ஒன்றுதான்.

இந்த அதிகாரம் அடுத்த அதிகாரத்திற்குப் பிறகு வந்திருக்க வேண்டும், அதில் ஜீவனும் மற்ற விஷயங்களுடன் சென்று வித்வானின் (உபாசகர்) உடலின் இதயத்தில் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவிடம் சென்று சேரும். இதேபோல் அவித்வான் விஷயத்திலும். சூத்ரகாரர் இந்த அதிகாரத்தை முன்னரே கையாண்ட ஜீவன் முக்தி வேதத்தை மறுதலிக்கும் அவசரத்தில் இருந்ததால்.

அஸ்ருத்யு பக்ரமத் என்றால் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்லும் பாதை தொடங்கும் வரை. இந்த பாதை அர்ச்சிரடி மார்கா என்று அழைக்கப்படுகிறது. ஜீவா மூர்த்தன்யனாடி சுஷும்னா நாடி அல்லது பிரம்ம நாடி என்று அழைக்கப்படும் நாடிக்குள் நுழைவதன் மூலம் இந்த பாதைக்கு வருகிறார். நாடி என்றால் நாடித்துடிப்பு அல்லது உடலில் உள்ள எந்த ஒரு குழாய் உறுப்பு. இதயத்தில் 101 நாடிகள் உள்ளன. நாபி (தொப்புள்) முதல் தலை வரை செல்லும் அந்த 101வது நாடி மேலே குறிப்பிட்டபடி மூர்த்தன்ய நாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடி அர்ச்சிராடி மார்க்கத்திற்கு வழிவகுக்கிறது. எனவே ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்திற்கு செல்லும் வித்வான் முதலில் மூர்தான்ய நாடிக்குள் நுழைய வேண்டும், அந்த நாடியின் வழியே தான் ஜடத்திலிருந்து வெளியேறி அர்ச்சிராதி மார்க்கத்தின் தொடக்கப் புள்ளிக்கு வர வேண்டும். எனவே “அஸ்ருத்யு பக்ரமதி” என்ற வார்த்தையின் ஒட்டுமொத்த அர்த்தம் வித்வான் (ஜீவா) மூர்த்தன்யனாதிக்குள் நுழைவது வரை.

சொர்க்கம் அல்லது நரகத்தை இலக்காகக் கொண்ட அவித்வான் உடலில் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள 100 நாடிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாகப் புறப்படுகிறார்.

ஆகவே, மேலே கூறப்பட்டவற்றின் கூட்டுத்தொகை மற்றும் பொருள் என்னவென்றால், உடலுக்குள் நடக்கும் நிகழ்வுகளின் வரிசை (பேக்கிங் செயல்முறை) நாடிகளுக்குள் நுழையும் வரை வித்வானுக்கும் அவித்வானுக்கும் ஒன்றே.

சூத்திரத்தில் இன்னும் மூன்று வார்த்தைகள் உள்ளன, அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். வார்த்தைகள் அம்ருʼதத்வம் ச அநுபோஷ்ய । இச்சொற்களின் பொருளை விளக்குவதற்கு கடோபநிஷத்தில் உள்ள மற்றொரு பகுதியை ஆராய வேண்டும். பத்தி உள்ளது

“யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காம:

யேஸ்ய ஹ்ருதி ஸ்ரீத:| அத மர்த்யா:

அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஷ்ணுதே||”.

இந்த பத்தியின் பொருள் என்னவென்றால், ஒரு உபாசகர் (வித்வான்) தனது இதயத்திலிருந்து தனது ஆசைகளை உதிர்த்தால், அவர் இங்கேயே ஒரு முக்தா (முக்தா) போல் ஆகிறார், உண்மையில் முக்தா அல்ல. எனவே அம்ருதத்வத்தின் உண்மையான பொருள் என்னவென்றால், உபாசகருக்கு பக்தி யோகம் தொடங்கிய பிறகு அவர் செய்த அஜாக்கிரதையான பாவங்கள் தீண்டாது, பக்தி யோகம் தொடங்குவதற்கு முன்பு அவர் செய்த பாவங்கள் அழிந்துவிடும். உபாசனையின் பலன்களில் இதுவும் ஒன்று.

அநுபஷ்ய என்றால் அவன் உடல் எரிவதற்கு முன் மேற்கூறிய அம்ருதத்வத்தை அடைகிறான், அதாவது அவன் இறப்பதற்கு முன். இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர் கூறும் வேறு சில முக்கிய குறிப்புகளும் உள்ளன. அவர்கள்

(அ) ​​வித்வான் அல்லது உபாசகரின் பிராரப்த கர்மா மரண சரீரத்தை விட்டு வெளியேறும் நேரத்தில் முடிவுக்கு வந்தாலும், ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தில் அவர் பரமாத்மாவை அடையும் வரை சம்சாரத்தின் பந்தம் தொடர்கிறது.

இது, இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அழைப்பது போலத்தான், அவர் பதவியேற்கும் வரை ஜனாதிபதியாக அல்ல. எனவே ஜீவன் முக்தா என்ற கருத்து முற்றிலும் தவறானது.

(ஆ) வித்வான் மரண உடலை விட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீக்கு இடையே உள்ள விரஜா நதி வரை தனது பயணத்திற்காக ஒரு சூக்ஷ்ம சாரிராவை (மற்றவர்களால் பார்க்க முடியாத மற்றும் மிக நிமிட அளவிலும் அணு அளவிலும் சொல்லலாம்) எடுத்துக்கொள்கிறார். வைகுண்ட பை லோகம் மற்றும் பிரகிருதி மண்டலம் என்று அழைக்கப்படும் பிரபஞ்சம். ஜீவாவாகிய வித்வான் தனது அணு அளவு கொண்ட அர்ச்சிராதி மார்க்கத்தில் (ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும் பாதை) சூட்சம சரித்திரம் இல்லாமல் பயணிக்க முடியும் என்றாலும், வழியில் சந்திரனுடன் உரையாடுவதற்கு அவருக்கு அதுவே தேவைப்படுகிறது. இந்த உரையாடல் கௌஷிதகி உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இ) மேலே குறிப்பிடப்பட்ட உபநிஷதப் பகுதியான “யதா ஸர்வே ப்ரமுச்யந்தே” என்பது மரணத்திற்குப் பின் “அம்ருதத்வம்” என்பதைக் குறிக்கவில்லை, ஆனால் அது வித்வான் உயிருடன் இருக்கும்போதே குறிக்கிறது.

(ஈ) வித்வான் மரண உடலை விட்டு சூக்ஷ்ம சரீரத்துடன் வெளியேறியதற்கான காரணத்தை சூத்ரகாரர் கூறுகிறார். ஜீவா உடலில் இருக்கும் போது உடல் முழுவதும் சூடாக இருக்கும். ஜீவா உடலை விட்டு வெளியேறும்போது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சூடாகவும், மீதமுள்ள பகுதி குளிர்ச்சியாகவும் இருக்கும். எனவே இது சூக்ஷ்ம சரீரத்தின் இருப்புக்கான தெளிவான அறிகுறியாகும்.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் பரசம்பத்தி அதிகாரம் எனப்படும்.

இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் அடங்கிய பொதியானது, உடலுக்குள் அந்தர்யமின் (உள் ஆன்மா) வடிவில் இருக்கும் பரமாத்மாவுடன் இணைந்து வருகிறதா அல்லது அவை வெவ்வேறு லோகங்களுக்கு அல்லது உலகங்களுக்குச் செல்கிறதா என்பதுதான் விவாதத்திற்கான தலைப்பு. யாகங்களின் வடிவத்தில் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப அல்லது ஸ்ரீமன் நாராயணனைத் தவிர (உயர்ந்த உயிரினம்) மற்ற பொருட்களின் மீது அவர்களின் தியானத்தின் படி. உதாரணமாக ஜோதிஷ்டோம யாகம் செய்த ஒருவர் ஸ்வர்க லோகத்திற்குச் சென்று அங்குள்ள இன்பங்களை அனுபவிக்கிறார். அதேபோல, பூம வித்யாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாம, வாக் போன்றவற்றை ஒருவர் தியானித்தால், அத்தகைய தியானங்களுக்கு விதிக்கப்பட்ட லோகங்களுக்குச் செல்வார். விஷயம் என்னவென்றால், அந்த லோகங்களும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளன, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒரு நபர் தனது செயல்கள் மற்றும் தியானத்தின்படி அந்த லோகங்களுக்குச் சென்றால்,

எனவே இந்த அதிகாரத்தின் பூர்வபக்ஷி, “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்ற உபநிடதப் பகுதி, இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் போன்ற பிற விஷயங்களுடன் ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்களைக் குறிக்கிறது என்று வாதிடுகிறது.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் “தானி பரே ததா ஹி ஆஹா” என்ற சூத்திரத்தில் மறுத்தார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. தனி என்றால் இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூட்சுமங்கள். பரே என்றால் பரமாத்மா. “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்ற உபநிடத உரையின்படி மேலே கூறப்பட்டவை பரமாத்மாவுடன் இணைந்து வருகின்றன, இது ஜீவா மற்றும் பிறருடன் அந்தர்யாமி பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ளும் பூத சூக்ஷ்மங்களைக் குறிப்பிடுகிறது.

பரமாத்மாவுடன் ஜீவாவின் இந்த இணைவு அல்லது சங்கமம், அவர் கடைசியாக இருக்கும் இந்த மரண சரீரத்தில் தங்கியிருந்த காலத்தில் முறையே தனது அப்பா மற்றும் புண்ணியத்தின்படி துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவித்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவன் மோட்சத்தை அடைகிறான். ஒரு அவித்வானுக்கும் (உபாசகர் அல்ல) பரமாத்மாவுடன் இணைவது இந்த பிறவியில் கடுமையான துன்பங்கள் மற்றும் இன்பங்களை அனுபவித்து ஓய்வெடுப்பதற்கும், அதன் பிறகு அவர் நல்ல செயல்களைச் செய்திருந்தால் சொர்க்கத்திற்குச் செல்கிறார் அல்லது அவர் கொடூரமான செயல்களைச் செய்தால் நரகத்திற்குச் செல்கிறார். பாவங்கள்.

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகரணம் அவிபாகாதிகரணம் எனப்படும்.

ஜீவா மற்றும் பரமாத்மாவுடன் இணைந்த பிற விஷயங்கள் பரமாத்மாவில் இணைவதா அல்லது வெறும் ஐக்கியமா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு. தொழிற்சங்கத்தின் இந்த விஷயத்தில், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டு வேறுபட்ட நிறுவனங்கள் மற்றும் பிரிக்கக்கூடியவை. இணையும் விஷயத்தில் ஜீவாத்மாவும் மற்றவைகளும் பரமாத்மாவுக்குள் இணையும், ஏனென்றால் அவை அனைத்திற்கும் பரமாத்மாவே காரணம். பூர்வபக்ஷி, பரமாத்மாவில் உள்ள அனைத்து விஷயங்களின் கலவையாகும், காரணத்தில் விளைவு இணைவது என்று வாதிடுகிறது.

சூத்ரகாரர் “அவிபாகோ வசனத்” என்ற சூத்திரத்தில் இந்த வாதத்தை மறுக்கிறார், அவிபாகா என்றால் இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் பரமாத்மாவுடன் ஒன்றிணைவது, இவை பரமாத்மாவுடன் தொடர்பு கொள்கின்றன, அதாவது அவை அந்தந்த அடையாளங்களை இழக்காமல் பிரிக்க முடியாதவை.

வச்சநாத் என்பது உபநிடதப் பகுதியான “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்பது சூத்ரகாரரின் மேற்கூறிய முடிவிற்கான காரணத்தைத் தருகிறது.

மேற்கண்ட உபநிடதப் பகுதி வாங்மனசி ஸம்பத்யதே என்று தொடங்குகிறது. சம்பத்யதே என்ற சொல்லில் உள்ள “சம்பத்தி” என்றால் சங்கமம் என்று பொருள். “மன:ப்ராணே” என்ற பத்தியின் அடுத்த பகுதியில் இந்த வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது, இது “மனா: ப்ராணே ஸம்பத்யதே” என்று தெளிவாக விரிவுபடுத்தப்படுகிறது, மேலும் “ப்ராண: தேஜசி” “ப்ராண: தேஜசி ஸம்பத்யதே” என்று விரிவுபடுத்தப்படுகிறது. எனவே அடுத்த பகுதியில் “தேஜ பரஸ்யம் தேவதாயம்” தேஜ:பரஸ்யம் தேவதாயம் ஸம்பத்யதே என தானாகவே விரிவடைகிறது. எனவே, “சம்பத்தி” என்ற வார்த்தையானது, வேறுபட்ட தனித்துவங்களின் பிரிக்க முடியாத ஐக்கியத்தை தெளிவாகக் குறிக்கிறது.

இந்தப் பாதத்தில் உள்ள எட்டாவது அதிகாரம் “தாடோகோதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது.

பரமாத்மாவுடன் இதுவரை கூறப்பட்ட நிறுவனங்களின் சேர்க்கை வரை மற்றும் உள்ளடக்கியது வித்வான்கள் மற்றும் அவித்வான்கள் இருவருக்கும் பொதுவானது. இந்த அதிகாரத்தில் இருந்து வார்டுகளுக்கு இடையே வேறுபாடு தொடங்குகிறது.

ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் இதயத்தில் 101 நாடிகள் (துடிப்புகள் அல்லது குழாய் உறுப்புகள்) உள்ளன. 101வது நாடி சுஷும்னா நாடி, மூர்த்தன்ய நாடி அல்லது பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகிறது. வித்வான் (ஜீவா) இந்த நாடி வழியாக தனது மரண சரீரத்திலிருந்து வெளியே வந்து ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தின் தொடக்கப் புள்ளிக்கு வருகிறார்.

வித்வான் பிரம்ம நாடியிலும், அவித்வான்கள் மற்ற நாடிகளிலும் பிரவேசிக்க வேண்டும் என்று ஏதேனும் நிபந்தனையோ அல்லது நிபந்தனையோ உள்ளதா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. பூர்வபக்ஷி அப்படியொரு நிலை இல்லை என்று கூறுகிறது, ஏனென்றால் அந்த நேரத்தில் 101 நாடிகளில் குறிப்பிட்ட பிரம்ம நாடியை உடலில் இருந்து ஜீவா கண்டறிவது மிகவும் கடினம், ஏனென்றால் நாடிகள் பல மற்றும் மிக நிமிடம் மற்றும் அது போன்ற எந்த நிலையும் இல்லை. மேலே. மேலும் உபநிஷதப் பகுதியில் “ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாத்யா: தாஸம் மூர்தனம் அபி நிஸ்ஸ்ருதைகா, தயா ஊர்த்வமயன் அம்ருதத்வமேதி விஸ்வாங்கண்ய உத்க்ரமணே பவந்தி” என்று கூறுகிறார்.

வித்வான் மூர்தான்ய நாடியில் (பிரம்ம நாடி) நுழைவது முற்றிலும் தற்செயலானது.

பூர்வபக்ஷியின் இந்த பார்வையை சூத்ரகாரர் “தாடோகோக்ரஜ்வலனம் தத் ப்ரகாஷித துவார: வித்யா சாமர்த்யாத் தத் சேஷகதி அனுஸ்மிருதி யோகச்ச ஹர்தனு க்ரிஹித ஷதாதிகாயா” என்ற சூத்திரத்தில் ஏற்கவில்லை. 545 பிரம்ம சூத்திரங்களில் மேலே உள்ள சூத்திரம் மிக நீளமானது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

வித்யாஸமர்த்யாத் – பரமாத்மாவின் மீது ஆழ்ந்த தியானத்தின் மூலம் சக்தி பெறப்பட்டது.

தத் ஷேஷா கதி (அனுஸ்மிருதி யோகச்சா) – வித்வான் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்குச் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தின் தியானத்தில் மகிழ்ச்சியடைந்த பிறகு, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் முக்கிய தியானத்திற்குக் கீழ்ப்பட்டதாக தியானம் செய்யப்பட்டது.

ஹர்தனா – ஹர்தா என்பது தியானம் செய்பவரின் இதயத்திலும் அவராலும் வசிக்கும் பரமாத்மா.

அனுக்ரிஹித:- வித்வான் (ஜீவா) அருளப்பட்டவர்.

ஓகா: ஆக்ரே – ஜீவா வசிக்கும் இதயத்தின் மேல்நோக்கிய திசையில்.

ஜ்வலனம் ப்ரகாசித துவார: ஷதாதி காய – பரமாத்மாவான தீபம் மூர்தான்ய நாடியாகிய 101வது நாடிக்கு செல்லும் பாதையில் ஜீவா சிரமமின்றி பிரவேசிக்க உதவும்.

வித்வானின் உடலில் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா உபாசனை அல்லது தியானத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார், இதில் அர்ச்சிராதி மார்காவும் முக்கிய தியானத்திற்குக் கீழ்ப்பட்டதாக தியானம் செய்யப்பட்ட வித்வானை (உபாசகர் அல்லது தியானம் செய்பவர்) அருளுகிறார். இதயத்தின் உச்சியில் இருந்து 101வது நாடிக்கு செல்லும் பாதையை ஒளிரச் செய்து, ஜீவா எந்த சிரமமும் இன்றி அதற்குள் நுழைய உதவுகிறது. பக்தி யோகத்திற்குப் பதிலாக பிரபத்தி செய்த பிரபன்னருக்கும் இது பொருந்தும்.

எனவே இந்த சூத்திரம் பூர்வபக்ஷி உருவாக்கிய குழப்பத்தை நீக்குகிறது மற்றும் வித்வான் 101 வது நாடி வழியாக மட்டுமே உடலை விட்டு வெளியேறுகிறது என்று வலியுறுத்துகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் ராஷ்மி அதிகாரம் எனப்படும்.

சாந்த சரீரத்திலிருந்து 101 வது நாடி வழியாக வெளிவரும் வித்வான் (ஜீவா) அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று சூரியக் கதிர்களைத் தொடர்ந்து ஆதித்ய மண்டலத்திற்கு (சூரிய மண்டலம்) வருவதாக ஒரு உபநிஷதப் பகுதியின் (சாந்தோக்யோபனிஷத்) படி, “அத யாத்ர ஏதஸ்மாத்” என்று வாசிக்கப்படுகிறது. சரீரத் உத்க்ரமதி அத ஏதைரேவ ரஷ்மிபி: ஊர்த்வம் ஏ க்ரமதே”.

பூர்வபக்ஷி, இரவில் சூரியக் கதிர்கள் இல்லாதபோது, ​​உடலை விட்டுப் பிரிந்த ஒரு வித்வான் எப்படி சூரியக் கதிர்களுடன் செல்வார் என்று ஆச்சரியப்படுகிறார், எனவே அவர் சூரியக் கதிர்களுடன் செல்ல வேண்டும் என்று கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை என்று கூறுகிறார். ஆதித்ய மண்டலத்தை அடைகிறது.

மேற்கூறிய உபநிடத உரையின்படி வித்வானின் பிரிந்த ஆன்மா சூரியக் கதிர்களுடன் செல்கிறது என்று பொருள்படும் “ரஷ்மி அனுசாரி” சூத்திரத்தில் பதராய முனிவரான சூத்ரகாரர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இரவில் சூரியக் கதிர்கள் இல்லை என்று பூர்வபக்ஷி வெளிப்படுத்திய கருத்தைப் பற்றி, சூத்ர காரர் இரவில் சூரியக் கதிர்கள் இருப்பதாக சூத்திரத்தில் தெளிவாக இல்லாவிட்டாலும் கூறுகிறார். இந்த சூரியக் கதிர்களின் காரணமாக, கடுமையான கோடையில் மட்டுமே வெப்பம் காரணமாக நாம் வீக்கம் அல்லது வியர்வையை அனுபவிக்கிறோம். குளிர்காலத்தில் இந்த சூரியக் கதிர்களின் தாக்கம் மேகமூட்டமான அல்லது சீரற்ற காலநிலையின் போது சூரியனைப் பார்க்காதது போல் தடுக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சாண்டோக்யோபனிஷத்தின் பத்தியால்தான் வித்வான் (ஜீவா) சூரியக் கதிர்களுடன் செல்கிறது என்பது தெளிவாகிறது.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் “நிஷாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு வித்வான் இரவில் இறந்தால் அவன் சூரியனின் கதிர்களுடன் மட்டுமே செல்வான் என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் மீறி பூர்வபக்ஷி மற்றொரு கருத்தை எழுப்புகிறார், எனவே இந்த தனி அதிகாரம்.

மரணத்திற்கு உகந்த நேரம் பகல் நேரம், பிரகாசமான பதினைந்து நாட்கள் (சுக்ல பக்ஷம்) உத்தராயணம் (சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்கள்) மற்றும் மேலே குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் இறந்தால் அவர் சொர்க்கம் செல்வார் என்றும் மரணத்தின் நேரம் இரவு, இருண்ட பதினைந்து நாட்கள் (கிருஷ்ண பக்ஷம்) மற்றும் தட்சிணாயனம் (சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்கள்) நபர் நரகத்திற்குச் செல்கிறார். எனவே ஒரு வித்வான் இரவில் இறந்தால் அவர் மோட்சத்தை அடைய மாட்டார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார்.

“நிஷிநேதி சேத்ந சம்பந்தஸ்ய யாவத் தேஹபவித்வாத் தர்சயதிச்ச” என்ற சூத்திரத்தில் இந்தக் கண்ணோட்டத்தை சூத்ரகாரர் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

நிஷி – வித்வானின் மரணம் இரவில் நிகழ்ந்தால், அதைச் சொன்னால் மேலும்

நேத்தி சேத் – அவனால் முக்தி அடைய முடியாது

நா – அப்படியல்ல வித்வான் மோட்சத்தை அடைவான்.

யாவத் தேஹபவித்வாத் – உடல் இருக்கும் வரை பிராரப்த கர்மா உள்ளது, அதாவது பிராரப்த கர்மாவின் முடிவும் உடலின் வீழ்ச்சியும் எப்போதும் ஒத்துப்போகின்றன. உபாசனை அல்லது சரணாகதி செய்த வித்வானின் கடைசிப் பிறவி இதுவாக இருப்பதால், இந்த ஜென்மம் அல்லது பிறப்பின் முடிவு பிராரப்த கர்மாவின் முடிவோடு ஒத்துப்போகிறது.

இச்சூழலில் ஸ்ரீ ஸ்வாமி பாஷ்யகாரர் (முனிவர் ஸ்ரீ பகவத் ராமானுஜ) உபாசகர் விஷயத்தில் உபாசனை (பக்தி யோகா என்றால் தியானம்) தொடங்கும் வரை பிராரப்தத்தைத் தவிர மற்ற புண்ய பாப கர்மாக்கள் திரட்டப்பட்டதாக விளக்குகிறார். அல்லது பரமாத்மாவின் விருப்பப்படி சொர்க்கம் அழிந்தது. உபாசனை தொடங்கிய பிறகு செய்யும் கவனக்குறைவான “புண்ய-பாபா” உபாசகரை அவர்கள் தொடாததால் அவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உபாசனையின் போது பிராரப்த கர்மா மட்டுமே எஞ்சியிருக்கும், அது எப்போது முடிவடைகிறது என்பதை பரமாத்மாவைத் தவிர வேறு எந்த உடலுக்கும் தெரியாது. இரவில் அது முடிந்தாலும், வித்வான் நரகத்திற்குச் செல்வதில்லை, ஏனெனில் அவர் நரகம் செல்ல வைக்கும் பாவங்கள் மேலே குறிப்பிட்டபடி அழிக்கப்படுகின்றன.

ஒரு ஆச்சார்யா மூலம் சரணாகதி அல்லது பிரபத்தி செய்த பிரப்பண்ணனுக்கு அபியுபகத பிராரப்தத்தைத் தவிர மற்ற புண்ணிய பாப கர்மாக்கள் அனைத்தும் சரணாகதி செய்யும் போது அழிந்து விடும் .

இந்த பிறவி அல்லது ஜென்மத்தில் துன்பம் மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக எஞ்சியிருக்கும் அபியுபகதா. இந்த அபியுபகதா பிராரப்தம் எப்போது முடிவடைகிறது, மேலும் வித்வானாகிய பிரபன்னனின் மரணத்துடன் மரண சரீரம் எப்போது விழுகிறது என்பது பரமாத்மாவைத் தவிர வேறு எந்த உடலுக்கும் தெரியாது.

தர்ஷயதிச்சா – “தஸ்ய தவதேவாச்சிரம் யவத்ந விமுக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்று சந்தோக்யோபநிஷத்தின் கூற்றுகளில் மேற்கண்ட உண்மை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், மோட்சத்தை அடைவதில் தாமதம் என்பது பிராரப்த கர்மாவின் முடிவில்லாததால் ஏற்படுகிறது, அது முடிந்தவுடன் வித்வான் மோட்சத்திற்கு (நித்திய ஆனந்தம்) செல்கிறார்.

அதனால் வித்வான் இரவில் இறந்தாலும் மோட்சத்தை அடைகிறான்.

இந்த பாதத்தில் (11வது) கடைசி அதிகாரம் “தக்ஷிண யாந்திகரணம்” என்று அழைக்கப்படுகிறது. தக்ஷ்ணாயனத்தில் இறக்கும் வித்வானுக்கு இரவில் மரணம் நேர்ந்தால் மோட்சம் அடைவது என்ற மேற்கூறிய உச்சரிப்பு நல்லதாக இருந்தாலும், இந்த அதிகாரத்தில் தெளிவுபடுத்தப்பட்ட தைத்தரிய உபநிஷத்தின் கடைசி அனுவகத்தின் ஒரு பகுதியால் கூடுதலாக ஒரு சந்தேகம் இருக்கிறது. . “அத்தயா : தக்ஷிணா ப்ரமியதே பித்ருணாம் ஏவ மஹிமானம் கத்வா சந்த்ர மாஸ: சாயுஜ்யம் கச்சதி” என்பது அந்த பகுதி. தக்ஷ்ணாயனத்தில் இறந்த வித்வான் பித்ரு லோகத்திற்குச் சென்று சந்திரனை அடைகிறார் என்பது இப்பகுதியின் பொருள். சந்திரனை அடைபவன் மீண்டும் இவ்வுலகில் பிறப்பான், அவன் மோட்சத்திற்குச் செல்லமாட்டான் என்றும் மற்றொரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாதத்தை சூத்ரகாரர் “அதாஷ அயநேபி தக்ஷிணே” என்ற சூத்திரத்தில் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் மிகவும் எளிமையானது, இது பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் விளக்கப்பட்ட அதே காரணத்திற்காக, வித்வான் தட்சிணாயனத்தில் இறந்தாலும் மோட்சம் அடைவார். இவ்வுலகில் மறு பிறவி எடுப்பது உபாசனையோ சரணாகதியோ செய்யாதவர்களுக்குப் பொருந்தும். தைத்தரிய உபநிஷத்தின் மேற்கூறிய பகுதி “தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமானம் அப்னோதி” என்று தெளிவாக உச்சரிக்கிறது. சந்திரனுக்குச் செல்லும் தக்ஷ்ணாயனத்தில் இறக்கும் வித்வான் இறுதியில் பிரம்மத்தை (மோட்சம்) அடைகிறார் என்பது இதன் பொருள். அவர் சந்திரனை அடைவது சிறிது காலத்திற்கு மட்டுமே, அது ஓய்வெடுக்க மட்டுமே. உத்தராயணத்திற்காக காத்திருந்த பீஷ்மர் மோட்சத்திற்கு செல்லவில்லை. அவர் தேவலோகத்தில் (சொர்க்கத்தில்) ஒரு “வாசு” ஆக இருந்தார், அங்கு அவர் ஒரு சாபத்தின் காரணமாக இங்கு பிறந்தார். அவர் இறந்தவுடன், தேவலோகத்தில் வசு என்ற தனது அசல் நிலைக்குத் திரும்பினார். உத்தராயணம் மரணத்திற்கு உகந்த நேரம் என்பதைக் குறிக்க அவர் உத்தராயணத்திற்காக காத்திருந்தார்.

பகவத் கீதையின் 8 வது அத்தியாயத்தில் ஒரு வித்வான் பகலில் இறந்தால், சுக்லபக்ஷம் மற்றும் உத்தராயணத்தில் அவர் மோட்சத்திற்கு செல்கிறார், இரவில் இறந்தால், கிருஷ்ண பக்ஷம் மற்றும் தக்ஷிணாயனம் என்று அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் என்று மற்றொரு சந்தேகம் எழுகிறது. இன்னொரு பிறவி எடுக்க மீண்டும் இங்கு வருகிறார்.

“யோகினா: ப்ரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே” என்ற சூத்திரத்தில் இந்த சந்தேகத்தை சூத்ரகாரர் தீர்த்து வைத்துள்ளார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பகவான் கிருஷ்ணர் இறந்த நேரத்தைக் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ஜுனனிடம் இரண்டு வழிகள் இருப்பதைக் குறிப்பிட்டார், ஒன்று தூமாதி மார்கா அல்லது பித்ரு யான மார்கா சொர்க்கத்திற்கு செல்லும், மற்றொன்று அர்ச்சிராதிமார்கா அல்லது தேவயான மார்கா ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும். .

எனவே தூமாதி மார்க்கத்தின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் நபர், ஸ்வர்க லோகத்தில் உள்ள இன்பங்களை அனுபவித்துவிட்டு இன்னொரு பிறவி எடுக்க மீண்டும் இங்கு வருகிறார்.

அர்ச்சிராதி மார்கமாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் செல்லும் வித்வான் மீண்டும் இங்கு வரமாட்டார், அவர் பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்து அங்கே நித்திய ஆனந்தத்தை அனுபவிப்பார்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த கடைசி அத்தியாயம் பல அத்யாயா என்று அழைக்கப்படுகிறது, இது உபாசனையின் போது (தீவிர தியானம் அல்லது பக்தி யோகா) மற்றும் வைகுண்ட திவ்ய லோகத்தை அடைந்த பிறகு உபாசகர் அனுபவிக்கும் பலன்களைக் குறிக்கிறது.

உபாசகர் (தியானம் செய்பவர்) மற்றும் பிரப்பண்ணா (ஆச்சாரியார் மூலம் மகாலட்சுமி தேவியின் தாமரை பாதங்களில் புருஷகர பிரபத்தி செய்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணாகதி செய்தவர்) அர்ச்சிராதி கதி எனப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை அடைகிறார்கள். இந்த அர்ச்சிராதி கதி தேவயான மார்கா என்றும் அழைக்கப்படுகிறது. அர்ச்சிராதி கதி பற்றிய விவரங்கள் இந்த பாதத்தில் கையாளப்பட்டதால் இந்த பாதம் கதி பாதம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் ஐந்து அதிகாரங்கள் உள்ளன. கதி என்றால் பயணம். பாதை என்றும் பொருள்படும். பிரகிருதி மண்டலம் (நாம் வாழும் லீலா விபூதி) மற்றும் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகமாகிய நித்ய விபூதி ஆகியவற்றைக் குறிக்கும் விரஜா நதிக்கரை வரை முக்தி பெற்ற ஆத்மாவை (முக்தா ஆத்மா) நடத்துவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் அதிவாஹிகங்கள் எனப்படும் பன்னிரண்டு வான தெய்வங்களை நியமித்துள்ளார்.

பன்னிரண்டு வான தெய்வங்கள்,

1. நெருப்பின் கடவுள் அர்ச்சிஸ் அல்லது ஜ்வலனா என்று அழைக்கப்படுகிறார்.

2. பகலின் கடவுள் (இரவு அல்ல) ஆஹா: அல்லது திவாசா என்று அழைக்கப்படுகிறார்

3. பௌர்ணமி (முழு நிலவு) அல்லது ஜ்யோத்ஸ்ன பக்ஷத்துடன் முடிவடையும் சுக்ல பக்ஷம் என்றும் அழைக்கப்படும் அபூர்ய மன பக்ஷா என அழைக்கப்படும் பிரகாசமான பதினைந்து நாட்களின் கடவுள்.

4. சூரியன் தெற்கிலிருந்து வடக்கே பயணிக்கும் ஆறு மாதங்களின் கடவுள் உத்தராயணம் அல்லது ஷட்டாங்கேதி மாசம் என்று அழைக்கப்படுகிறது.

5. ஆண்டின் கடவுள் (12 மாதங்கள்) சம்வத்சரா அல்லது வெறும் வட்சரா என்று அழைக்கப்படுகிறார்.

6. வாயு அல்லது பாவனா என அழைக்கப்படும் காற்றின் (காற்று) கடவுள்.

7. சூரிய கடவுள் சூரியன், ஆதித்யா அல்லது தபனா என்று அழைக்கப்படுகிறார்.

8. சந்திரமாசா என்று அழைக்கப்படும் சந்திரன் கடவுள், வெறும் சந்திரா அல்லது பிரலேயம்சு

மேலே உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் அவரவர் பிரதேசம் உள்ளது மற்றும் விடுவிக்கப்பட்ட ஆன்மா ஒவ்வொரு பிரதேசத்திலும் அவருக்கு ஒரு சடங்கு வரவேற்பு, ஓய்வு மற்றும் அவர்களின் விருந்தோம்பலை அனுபவித்த பிறகு அந்தந்த கடவுளால் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொன்றுக்கு நடத்தப்படுகிறது.

9. மின்னலின் கடவுள் மற்றும் அவர் வித்யுத் புருஷன் அல்லது அமனவ புருஷன் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் விரஜா நதிக்கரையின் பிரகிருதி மண்டலம் வரை முக்தாத்மாவை வழிநடத்துகிறார்.

10. நீரின் வருண கடவுள்

11. தேவர்களின் அரசன் இந்திரன்.

12. நான்கு தலை பிரம்மன் பிரஜாபதி

வருணன், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய கடவுள்கள் அமானவ புருஷருடன் அந்தந்த பிரதேசங்களின் இறுதி வரை மட்டுமே செல்கிறார்கள், அவர்கள் மேலே குறிப்பிட்டபடி விரஜா நதி வரை முக்த ஆத்மாவை அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த பன்னிரண்டு அதிவாஹிகங்கள் தவிர, பகவான் ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ வைக்கும்டத்திற்கு முக்த ஆத்மாவை நடத்துகிறார். அதிவாஹிகர்களின் பட்டியலில் நெருப்புக் கடவுள் முதன்மையானவர், அதனால்தான் இந்த பாதை அர்ச்சிராதி கதி என்று அழைக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் எண்ணற்ற பிரம்மாண்டங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு பிரம்மாண்டத்திற்கும் நான்கு தலை பிரம்மன் தலைமையில் பதினான்கு லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரம்மாண்டத்திற்கும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்லும் அர்ச்சிராதி கதி உள்ளது.

பரமபத சோபனத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், வான தெய்வங்களான பன்னிரண்டு அதிவாஹிக புருஷர்களைப் பற்றி இரண்டு கருத்துகள் இருப்பதாகக் கூறுகிறார். முதல் பார்வை அவர்கள் புண்ய மற்றும் பாப கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்கள் கர்ம வஷ்யர்கள். இரண்டாவது கருத்து என்னவென்றால், இவை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தைச் சேர்ந்தவை மற்றும் அனந்தம், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகளின் குழுவின் ஒரு பகுதியாகும்.

அமானவ புருஷர் மின்னல் கடவுளிலிருந்து (வித்யாத் புருஷர்) வேறுபட்டவர் என்றும், இந்த அமானவ புருஷர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் முக்த ஆத்மாவைக் கொண்டு வர பகவான் ஸ்ரீமன் நாராயணனால் அனுப்பப்படுகிறார் என்றும் ஒரு கருத்து உள்ளது.

ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் அல்லது நித்ய விபூதியில் உள்ள ஒவ்வொரு பொருளும் அப்ரக்ருதம் என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அது நூறு சதவிகிதம் சத்வ குணத்தால் ஆனது, எனவே இது சுத்த சத்வம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் அல்லது பிரகிருதி மண்டலத்தில் உள்ள அனைத்தும் சாத்விக குணம், ராஜச குணம் மற்றும் தாமச குணம் ஆகியவற்றின் கலவையால் ஆனது என்பதால் பிரக்ருதமாகும். இப்போது இந்த பாதத்தில் உள்ள அதிகாரங்கள் கையாளப்படுகின்றன.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் அர்ச்சிராதி அதிகாரம் எனப்படும். இந்த அதிகாரத்தில் பல உபநிடத நூல்கள் விவாதத்திற்கு வருகின்றன. அர்ச்சிராதி கதியைக் குறிப்பிடும் உபநிடதங்கள் சாந்தோக்ய, கௌஷிதகி மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்கள்.

சாந்தோக்ய உபநிடதத்தில் இந்த அர்ச்சிராதி கதி நான்காவது அத்தியாயத்தின் 14 வது உப பீஷனில் உபகோசல வித்யாவின் முடிவில் மீண்டும் ஐந்தாவது அத்தியாயத்தில் பஞ்சாக்னி வித்யாவின் முடிவில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் எட்டாவது அத்தியாயத்தின் ஆறாவது உபபீடத்தில் அர்ச்சிராதி கதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌஷிதகி உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் அர்ச்சிராதி கதி கூறப்பட்டுள்ளது. பிருஹதாரண்யக உபநிடதத்தின் இரண்டு இடங்களில் அர்ச்சிராதி கதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள அர்ச்சிராதி கதியின் வரிசையிலும் வடிவத்திலும் உபநிடதத்திலிருந்து உபநிடதத்திற்கு சில மாறுபாடுகள் உள்ளன. அர்ச்சுனன் கதியின் வரிசையும் வடிவமும் ஒன்றா அல்லது மாறுபடுகிறதா என்பதுதான் இங்கு எழும் சந்தேகம். எதிரி (பூர்வபக்ஷி) பல்வேறு உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி கதி வெவ்வேறு வரிசை மற்றும் வடிவங்களைக் கொண்டிருப்பதாக வாதிடுகிறார், எனவே விடுவிக்கப்பட்ட ஆத்மா ஒரே ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர் தனது விருப்பத்தின்படி எந்த வழியையும் தேர்வு செய்யலாம்.

வரிசை மற்றும் வடிவத்தின் மாறுபாடுகள் சுருக்கமாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

உபகோசல வித்யா மற்றும் பஞ்சாக்னிவித்யா முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி கதி ஒரே மாதிரியாக உள்ளது. சாந்தோக்யத்தின் எட்டாவது அத்தியாயத்தில், முந்திய பாதத்தில் ராஷ்மி அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி, முக்தியடைந்த ஆன்மா சூரியக் கதிர்களைத் தொடர்ந்து மேல்நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

கௌஷிடகி உபநிடதத்தில் அர்ச்சிராதி கதி பின்வரும் வரிசை மற்றும் வடிவத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

விடுதலை பெற்ற ஆன்மா, பிரம்ம நாடி (சுஷும்னா நாடி அல்லது மூர்தான்ய நாடி) வழியாக மரண சரீரத்திலிருந்து வெளியேறிய பிறகு தேவயான மார்காவிற்கு வந்து, பின்னர் அக்னி லோகத்திற்கும் பின்னர் வாயு லோகத்திற்கும் நுழைகிறது. வாயு லோகத்திலிருந்து வருண லோகத்துக்கும் பிறகு ஆதித்ய லோகத்துக்கும் வருகிறார். ஆதித்ய லோகத்திலிருந்து இந்திர லோகத்துக்கும், பிறகு பிரஜாபத்து லோகத்துக்கும் வருகிறார். பிரஜாபதி லோகத்திலிருந்து கடைசியாக ஸ்ரீ வைகுண்ட பய லோகமான பிரம்மலோகத்தில் பிரவேசிக்கிறார்.

பிருஹதாரண்யக உபநிடதத்தின் இரண்டாவது உபநூல் பஞ்சாக்னி வித்யாவைக் கையாள்கிறது, அதன் முடிவில் அர்ச்சிராதி கதி பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.

நெருப்புக் கடவுள், பகலின் கடவுள், பிரகாசமான பதினைந்து நாட்களின் கடவுள், உத்தராயண கடவுள், தேவலோகம் (இங்கு தேவலோகம் என்றால் வாயு, காற்றின் கடவுள், ஏனெனில் வீசும் காற்று தேவர்களின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது), சூரிய கடவுள், மின்னல் கடவுள். மானஸ புருஷா. இந்த மானஸ புருஷன் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனுக்கு முக்தாத்மாவை நடத்துகிறார். இந்த மானச புருஷன் பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஒருவன், அவனே அமனவ புருஷன். அதே பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஏழாவது அத்தியாயத்தில், முந்தையதை விட வடிவ மாற்றத்துடன் அர்ச்சிராதி கூறப்பட்டுள்ளது.

இதன்படி முக்தியடைந்த ஆன்மாவாகிய உபாசகர் இவ்வுலகை விட்டுச் சென்று பிறகு காற்றின் கடவுளிடம் செல்கிறார். அப்போது இந்த காற்றின் கடவுள் சக்கர ரதத்தின் துளை போன்ற ஒரு சிறிய திறப்பை ஏற்படுத்துகிறார், மேலும் முக்த ஆத்மா இந்த திறப்பிலிருந்து வெளியே வந்து சூரிய கடவுளை அடைய மேலே செல்கிறது. இசைக்கருவியான ஆடம்பரத்தில் உள்ள துளையைப் போன்ற ஒரு திறப்பை சூரியன் ஏற்படுத்துகிறது. அந்த துளை வழியாக அவர் வெளியே வந்து சந்திரனை (சந்திரமாஸ்) அடைய மேலே செல்கிறார். சந்திரன் ஒரு டிரம்மில் (துண்டுபி) ஒரு துளை போன்ற ஒரு திறப்பை உருவாக்குகிறது. அவர் இந்த திறப்பிலிருந்து வெளியே வந்து ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தை அடைய மேலே செல்கிறார். ஸ்ரீ வைகுண்ட பய லோகம் குளிர் இல்லை அல்லது அதிக வெப்பம் இல்லை என்று இந்த சூழலில் கூறப்படுகிறது. உபநிடதத்தில் அஹிமம் (பனி அல்ல) என்று கூறப்படுகிறது. துக்கம் இல்லை.

மேலே குறிப்பிட்டுள்ளபடி வரிசையிலும் வடிவத்திலும் மாறுபாடுகள் இருக்கும் போது பூர்வபக்ஷி, முக்தி பெற்ற ஆன்மா தானாக எந்த மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்து ஸ்ரீ வைகுந்தத்தை அடையலாம் என்று வாதிடுகிறார்.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை மறுத்து பாதராயண முனிவரான சூத்ரகாரர் “அர்ச்சிராதின தத் ப்ரதிதே:” என்ற சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அர்ச்சிராதி மார்கா என்பது உபநிடதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரே ஒரு மார்கா ஆகும், மேலும் முக்தாத்மா இந்த வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்கிறது, மேலே விவரிக்கப்பட்ட வரிசை மற்றும் வடிவங்களில் உள்ள மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், உச்சரிக்கப்படுகிறது. குணோபசம்ஹார பாதம் மூன்றாவது அத்தியாயத்தில் மூன்றாவது பாதம்.

குண உபசம்ஹார பாதத்தின் பொருள் என்னவென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள ஒரு பிரம்ம வித்யாவை ஒன்றாக உண்ணும் போது, ​​ஒரு உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள பகவான் ஸ்ரீமன் நாராயணனின் குணங்கள் அல்லது குணங்கள் மற்றொன்றில் குறிப்பிடப்பட்டவைகளுடன் சேர்க்கப்பட வேண்டும். தியானம் செய்தார். அதுபோலவே இங்கும் அர்ச்சிராதி கதி ஒன்றே என்று நிலைநிறுத்தப்படும்போது, ​​ஒன்றில் விடுபட்ட ஆதிவாசிகளையும் மற்றொன்றில் குறிப்பிடப்பட்ட மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உபசம்ஹாரம் என்றால் சேர்த்தல்.

இப்படிச் செய்தால் பன்னிரண்டு அதிவாஹிகங்கள் அடங்கிய அர்ச்சிராதி கதியின் வரிசையும் வடிவமும் இந்தப் பாதத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இருக்கும்.

இரண்டாவது அதிகாரம் “வாய்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் சாண்டோக்ய மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுபாடுகள் காரணமாக வரிசை தீர்மானிக்கப்படுகிறது.

சாந்தோக்யோபனிஷத்தில் சூரியக் கடவுள் ஆண்டின் கடவுளுக்குப் பிறகு குறிப்பிடப்பட்டுள்ளது. பிருஹதாரண்யகத்தில் வாயுவான தேவலோகம் வருடத்தின் கடவுளுக்கும் சூரியக் கடவுளுக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சிராதி கதியில் அதிவாஹிகங்களின் ஒரு குறிப்பிட்ட வரிசையை அல்லது வரிசையை சரிசெய்ய கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை என்று பூர்வபக்ஷி கருத்து தெரிவிக்கிறார், ஏனெனில் மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு உபநிடதமும் அதன் சொந்த ஒழுங்கைப் பின்பற்றுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்ம வித்யாவை ஏற்றுக்கொண்ட உபாசகர் தேர்ந்தெடுக்கிறார். அந்த உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி மார்க்கம்.

மேலும் தேவலோகமும் வாயுவும் வேறு வேறு என்கிறார். சூத்ரகாரர் “வாயும் அப்தத் அவிஷேஷவிஷே ஷப்யம்” என்ற சூத்திரத்தில் பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை நிராகரிக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், இரண்டு காரணங்களால் காற்றின் கடவுளான வாயுவை ஆண்டின் கடவுளுக்கு மேலேயும் சூரிய கடவுளுக்குக் கீழேயும் வைக்க வேண்டும்.

முதல் காரணம் அவிசேஷம் அதாவது பொது. அதாவது பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள தேவ லோகம் என்றால் தேவர்களின் லோகம் என்று பொருள். தேவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் (ஸ்வர்க லோகம்). எனவே இந்த தேவ லோகம் பொதுவாக வாயு என்று பொருள்படும். இரண்டாவது காரணம் விசேஷம் அதாவது குறிப்பிட்டது. தேவ லோகத்தின் இடத்தில் வாயு பற்றிய குறிப்பிட்ட குறிப்பு உள்ளது. எனவே தேவ லோகம் என்றால் வாயு என்பது தெளிவாகிறது.

மேலும் வருடத்தின் கடவுள் உத்தராயணக் கடவுளுக்கு மேலே இருக்க வேண்டும். ஏனென்றால், அதிக காலம் கொண்ட வருடம் உத்தராயணத்திற்குப் பிறகு வர வேண்டும், அது ஒரு குறுகிய காலமாகும். பிருஹதாரண்யக உபநிடதத்தில் தேவலோகம் உத்தராயணக் கடவுளுக்குப் பிறகு வருகிறது. இப்போது உபநிடதத்தின்படி இரண்டு ஆணைகள் உள்ளன, ஒன்று “பதாக்ரமம்” என்று அழைக்கப்படுகிறது, மற்றொன்று “அர்த்தக்ரம்” எனப்படும் தர்க்க வரிசை, இது பகுத்தறிவின் படி உள்ளது. எனவே, தர்க்க வரிசை (அர்த்த க்ரமம்) பட க்ரமாவை விட சக்தி வாய்ந்தது என்று ஒரு மாக்சிம் இங்கே வருகிறது. எனவே வருடத்தின் கடவுளுக்கும் சூரியனுக்கும் இடையில் வாயு வருகிறது. படக்ரமா என்பது உபநிடதத்தின் கூற்றில் உள்ள வார்த்தைகளின் வரிசை அல்லது வரிசையைக் குறிக்கிறது.

இந்தப் பாதத்தில் மூன்றாவது அதிகாரம் வருண அதிகாரம் எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌஷிதகி உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதன் படி விடுவிக்கப்பட்ட ஆன்மா தேவயானை பாதையில் (மார்கா) வந்து அக்னி லோகத்தில் நுழைகிறது. அக்னி லோகத்திலிருந்து வாயு லோகத்துக்குச் செல்கிறார், பிறகு வாயு லோகத்திலிருந்து வருண லோகத்துக்குச் செல்கிறார், அங்கிருந்து சூரியக் கடவுளுக்கும், பிறகு இந்திர லோகத்துக்கும், பிறகு பிரஜாபதி லோகத்துக்கும் செல்கிறார். பிரஜாபதி லோகத்திலிருந்து பிரம்ம லோகம் எனப்படும் ஸ்ரீ வைகுண்டத்திற்குச் செல்கிறார்.

முந்தைய அதிகாரத்தில் தேவ லோகம் வாயு என்றும், அவர் வருடத்தின் கடவுளுக்கும் சூரிய கடவுளுக்கும் இடையில் வருகிறார் என்றும் நிறுவப்பட்டது. மேற்கூறிய கௌஷிதகி உபநிடதத்தில் அதிவாஹிகர்களான வருணன், இந்திரன், பிரஜாபதி என்று குறிப்பிடும் போது இந்த மூன்றையும் அர்ச்சிராதி கதியின் வரிசையில் அல்லது வரிசையில் எங்கு வைப்பது என்ற கேள்வி எழுகிறது.

பூர்வபக்ஷியின் முடிவில் மின்னலின் கடவுள் வரும்போது அவர் வித்யுத் புருஷன் என்று அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறார். இந்த வித்யுத் புருஷரும் அமானவ புருஷரே ஆவார், அவர் முக்த ஆத்மாவை பிரம்மனுக்கு (பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு) நடத்துகிறார். எனவே இந்த வரிசையில் வருணன் மற்றும் இந்திரன் மற்றும் பிரஜாபதியை வைப்பதற்கு இடைவெளி இல்லை. ஆனால் உபநிடத அறிக்கையை புறக்கணிக்கக்கூடாது, இல்லையெனில் அது அர்த்தமற்றதாகிவிடும். உபநிடதங்கள் உட்பட வேதங்களில் குறைவான அர்த்தம் கொண்ட ஒரு எழுத்து கூட இல்லை, எனவே அதை புறக்கணிக்கவோ நிராகரிக்கவோ கூடாது.

பூர்வபக்ஷி மேலும் வாதிடுகையில், வாயு லோகத்திற்கு அடுத்ததாக வருண லோகம் என்று கௌஷிதகி கூறுவதால், ஏற்கனவே நிறுவப்பட்ட ஒழுங்கை மீறி வருண இந்திரனையும் பிரஜாபதியையும் வாயுவுக்கு அடுத்ததாக வைப்பது மட்டுமே சரியானது (பொருத்தமானது).

பூர்வபக்ஷியின் இந்த பார்வையை சூத்ரகாரர் “ததித: ஆதி வருண: சம்பந்தாத்” என்ற சூத்திரத்தில் மறுத்துள்ளார். இதன் பொருள், வருணனை வித்யுத் புருஷனுக்கு (மின்னல் கடவுள்) மேலே வைக்க வேண்டும், ஏனென்றால் மழையின் கடவுளான வருணனுக்கும் நீர் தாங்கும் மேகத்தின் காரணமாக ஏற்படும் மின்னலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ததீத் என்றால் மின்னல். வருணனை “வித்யுத் புருஷனுக்கு” மேல் வைக்கும்போது இயற்கையாகவே இந்திரன் மற்றும் பிரஜாபதியும் வருணனுடன் மற்றும் அவனுக்கு மேலே இருக்கிறார்கள்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் அதிவஹிகதிகரணம் எனப்படும். அர்ச்சிராதி மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு ஸ்தானங்களும் அந்த வழித்தடத்தில் உள்ள இடங்களா அல்லது நிலையங்களா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. அதுவே பாதை அல்லது இன்பம் தரும் இடங்களின் குறிகாட்டிகள் அல்லது ஸ்ரீ வைகுந்தத்திற்கு முக்த ஆத்மாவை நடத்தும் அதிவாஹிகர்கள். ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் வழியைக் கேட்டால், அந்த நபருக்கு அவர் செல்ல வேண்டிய பாதை மற்றும் பாதையில் நிரந்தர அடையாளங்கள் கூறப்படுவது வழக்கம். மற்றொரு பார்வை என்னவென்றால், அவை மகிழ்ச்சிக்கான இடங்களாக இருக்கலாம். மேற்கூறிய நிறுவனங்களில் உள்ள முக்கிய ஆட்சேபனைகள் பாதையின் குறிகாட்டிகளாக பகல் (ஆஹாஸ்), பிரகாசமான கோட்டை இரவு (சுக்ல பக்ஷா), உத்தராயணம் (ஆறு மாதங்கள்) மற்றும் ஆண்டு ஆகியவை நேரத்தின் அலகுகள் மற்றும் அவை வெளிப்படையாக பாதையின் குறிகாட்டிகளாக இருக்க முடியாது. . இந்த நாட்கள், இரவுகள், பதினைந்து நாட்கள், இரட்டை மாதங்கள் (ருதவா), ஆண்டுகள் லோகங்கள் அல்லது உலகங்கள் என்று கூறப்படுவதால் அவை இன்பமான இடங்களாக இருக்கலாம். அதனால்தான் கௌஷிதகி உபநிடதம் அக்னிலோகம், வாயு லோகம் போன்றவற்றைக் கூறுகிறது.

எனவே பூர்வபக்ஷி பன்னிரண்டு நிறுவனங்களை லோகங்கள் என்று குறிப்பிடுகிறது, அவை இன்பம் தரும் இடங்களாகும்.

“அதிவாஹிகா: தல்லிங்காத்” என்ற சூத்திரத்தில் கூறும் சித்ரகாரர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், இந்த 12 நிறுவனங்களும் “தல்லிங்கத்” என்ற காரணத்தால் அதிவாஹிகங்கள். முக்தி பெற்ற ஆன்மாக்கள் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதிவாஹிகர்கள் முக்தியடைந்த ஆத்மாக்களைப் பெறுவதற்கும், விராஜ நதி வரை நடத்துவதற்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் நியமிக்கப்பட்டார்கள் என்பது இந்த வார்த்தையின் பொருள். வித்யுத் புருஷரைப் பற்றி உபநிடதம் கூறுகிறது “ச ஏனன் பிரம்ம கமாயதி” அதாவது வித்யுத் புருஷன் முக்தியடைந்த ஆத்மாவை பிரம்மன் வரை நடத்துகிறான். “நடத்துகிறது” என்ற இந்த வார்த்தை மற்ற பதினொரு அதிவாஹிகர்களுக்கும் நன்றாகப் பொருந்தும்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி மற்றும் ஐந்தாவது அதிகாரம் சில முக்கிய புள்ளிகளைக் கொண்ட காரியாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இது வரை ஆதிவாஹிகர்கள் குழு வித்வான் (முக்தி பெற்ற ஆன்மா) உபாசகர் (பக்தி யோகம் செய்தவர்) மற்றும் பிரபன்னை (ஸ்ரீ வைகுண்ட மோட்சத்திற்கு ஒரு ஆச்சார்யர் மூலம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் பிரபத்தி செய்தவர்) நடத்துகிறது. திவ்ய லோகம்.முக்தாத்மா ஸ்ரீ வைகுண்டத்திற்கு மட்டுமே செல்கிறது என்ற உண்மையையும் இந்த அதிகாரம் நிறுவுகிறது.இப்போது ஒரு சந்தேகம் எழுகிறது 1. ஹிரண்ய கர்பா என்றும் அழைக்கப்படும் சதுர் முக லோகத்திற்கு அதிவாஹிகர்கள் குழு வித்வானை நடத்துகிறார்களா (2) வித்வான் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு நடத்தப்படுகிறார் (3) பரமாத்மா யாரை ஆத்மா அல்லது ஆத்மாவாக இருக்கிறாரோ அவரைப் பற்றி தியானம் செய்த பிரத்யகாத்மா (ஜீவா) அருகில் அவர்கள் அவரை நடத்துகிறார்கள்.

முதல் சூத்திரம் “கார்யம் பதரி அஸ்ய கதி உப்பத்தே:” என்பது பூர்வபக்ஷியின் பார்வையை உள்ளடக்கிய பூர்வபக்ஷ சூத்திரம், இந்த அதிகாரத்தில் பதராய முனிவரின் சீடர்களில் ஒருவரான பதரி முனிவர் (வேதவியாசர் என்றும் அழைக்கப்படுகிறார்). பாதராயணன் இந்த அதிகாரத்தின் சூத்திரங்களை இயற்றியபோது பதரி மற்றும் ஜைமினி முனிவர்கள் அவர் பக்கம் இருந்தனர். பதராயணன் மரியாதை நிமித்தமாக, சித்தாந்த சூத்திரங்களின் வடிவத்தில் தனது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் முன் மற்றவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.

இங்கு காரியம் என்ற வார்த்தைக்கு ஹிரண்யகர்பா (நான்கு தலை பிரம்மா) என்று பொருள், ஏனெனில் அவர் தனது தொப்புளில் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கப்பட்டவர். கரணம் படைப்பவன், காரியம் என்பது படைக்கப்பட்டது.

பர பிராமணன் அல்லது வெறும் பிராமணன் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் எப்பொழுதும் அடையக்கூடியதாகவோ அல்லது அடையக்கூடியதாகவோ இருக்கும் போது, ​​ஆதிவாஹிகவாதிகள் முக்தியடைந்த ஆத்மாவை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது பதரியின் பார்வை உள்ளது. மறுபுறம் அதிவாஹிகர்கள் வித்வானை ஹிரண்ய கர்ப லோகத்திற்கு நடத்துகிறார்கள், இது சத்ய லோகம் என்றும் அழைக்கப்படுகிறது. பதரி முனிவர் தனது கருத்துக்கு ஆதரவாக மற்றொரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார். “புருஷ அமன்வ: எத்ய பிரம்ம லோகான் கமாயதி” என்ற உபநிடதப் பகுதியில், பன்மை லோகம் ஹிரண்யகர்ப லோகங்களைக் குறிக்கிறது, ஏனென்றால் எண்ணற்ற அந்தஸ்கள் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சத்ய லோகம் உள்ளது, இது ஹிரண்ய கர்ப லோகம். மேலும் உபநிடதத்தின் “பிரஜாபதே: சபாம் வேஷ்ம ப்ரபத்யே”, அதாவது, ஹிரண்ய கர்பாவாகிய பிரஜாபதியின் வாசஸ்தலத்தில் முக்தி பெற்ற ஆத்மா நுழைகிறது.

அப்போது பதரியிடம் ஒரு கேள்வியை வைக்கிறோம். வித்வான் பிரம்மனிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறார் என்று உபநிடதம் தெளிவாகக் கூறும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனை எப்படி ஹிரண்ய கர்பா என்று அழைக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு ஹிரண்ய கர்ப லோகம் அருகாமையில் இருப்பதால், பிரம்மனை ஹிரண்ய கர்பா என்று அழைக்கலாம் என்று பதரி பதிலளிக்கிறார். மீண்டும் பதாரி தனது வாதத்திற்கு ஆதரவாக மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறார். கார்யம் என்று அழைக்கப்படும் அல்லது உருவாக்கப்பட்ட ஹிரண்ய கர்பத்தை தியானிப்பவர்கள் அனைவரும் ஹிரண்ய கர்ப லோகத்தை (சத்ய லோகம்) அடைந்து நான்கு தலை பிராமணரின் (ஹிரண்ய கர்பா) பதவிக்காலம் முடியும் வரை அங்கேயே இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவின் பதவிக் காலம் 2×1017 ஆண்டுகள் ஆகும், இது “த்விபரார்தா” (இரண்டு பரார்தாக்கள்) என்று அழைக்கப்படுகிறது. ஒரு பரார்டா என்பது 1×1017 ஆண்டுகள். பிரம்மாவின் ஆயுட்காலம் (பதவியின் காலம்) அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள் ஆகும், இது நமது காலண்டரின்படி 2×1017 ஆண்டுகள் ஆகும். நமது ஆண்டாவில் இருக்கும் பிரம்மா தனது நாட்காட்டியின்படி 50 வயதைத் தாண்டிவிட்டார், அதாவது ஒரு பரார்தா, அவர் இரண்டாவது பரார்தாவில் இருக்கிறார். அவர் தனது 51வது ஆண்டு முதல் மாதம், 26வது நாள் காலை என்று துல்லியமாகச் சொல்கிறது. எனவே சதுர் முக பிரம்மத்தின் ஒரு வினாடி நமது 63419583 ஆண்டுகளுக்கு (6 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 583 ஆண்டுகள்) சமம்.

அவரது பதவிக்காலத்தின் முடிவில் இங்கு பிரளயம் ஏற்படும், மேலும் பிரளயத்தின் காலம் 2×1017 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் சங்கல்பத்தில் “ஆத்ய பிராமண: த்விதிய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே முதலியவை” என்று சொல்கிறோம்.

எனவே அவரது லோகத்தில் கூடியிருக்கும் ஹிரண்ய கர்ப தியானம் செய்பவர்கள் ஹிரண்ய கர்பத்துடன் ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்கள்.

பதரி முனிவரின் கருத்துக்கு ஆதரவாக கூர்ம புராணத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது, இது பிரளய காலத்தில் சத்ய லோகத்தில் கூடியிருக்கும் அனைவரும் ஹிரண்ய கர்பத்துடன் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆக முடிவாக, அதிவாஹிகர்களின் குழு வித்வானை (விமோசனமான ஆன்மா) ஹிரண்ய கர்ப லோகத்திற்கு நடத்துகிறது, ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்பது பதரியின் வாதம்.

இப்போது பதராயனின் சீடரான ஜைமினி முனிவர் பதரியின் கருத்தை மறுத்து இது சம்பந்தமாக தனது கருத்தை முன்வைக்க எழுந்தார்.

பதாரி தனது பார்வையை ஐந்து சூத்திரங்களின் மூலம் முன்வைத்தார், அதன் சுருக்கத்தை முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜைமினியின் பார்வை மூன்று சூத்திரங்களில் அடங்கியுள்ளது.

முதல் சூத்திரம் “பரம் ஜைமினி: முக்யத்வாத்”. பிரம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது மற்றும் அது ஹிரண்ய கர்பத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் பிரம்மா என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் உயர்ந்த உயிரினம். பகவான் ஸ்ரீமன் நாராயணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றாலும், மோட்சம் அல்லது முக்தியின் உண்மையான அர்த்தம், முக்தி பெற்ற ஆன்மா (அ) இந்த மரண சரீரத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் (ஆ) சூக்ஷ்ம சரீரத்தை (எவருக்கும் காண முடியாத ஒரு நிமிட உடல்) சந்திரனுடன் உரையாடுவதற்குத் தேவையானது (இ) அர்ச்சிரடி மார்கா வழியாக விரஜா நதியின் இந்தப் பக்கத்தை அடைதல் (ஈ) சூக்ஷ்ம சரிராவைக் கொட்டவும் (இ) விரஜா நதியைத் தன் விருப்பத்தால் கடக்கவும் (இ) விரஜாவின் எதிர்க் கரையை அடையவும் (ஊ) ஸ்ரீ வைகுண்ட பியா நகரில் உள்ள பைன் தம்பதியினரின் அருகில் சென்று அவர்களுக்கு நித்திய சேவை செய்யுங்கள்.

ஆக பிரம்ம லோகம் என்றால் பிரம்மன் தானே லோகம் அதாவது ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் முழுவதும் பிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது. மீமாம்ச சாஸ்திரத்தில் உள்ள ஒரு மாக்சிம் படி முன்பு குறிப்பிடப்பட்ட “பிரம்ம லோகன்” என்ற பன்மை உலகத்திற்கு இந்த சூழலில் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜைமினி மேலும் கூறுகிறார், சாண்டோக்ய உபநிஷத்தின் 8 வது அத்தியாயத்தில் உள்ள உபநிடதப் பகுதி, வித்வானான (முக்தி பெற்ற ஆத்மா) தனிப்பட்ட ஆன்மா (சம்ப்ரசாதா என்று அழைக்கப்படுகிறது) மரண உடலை விட்டு வெளியேறி, இந்த சூழலில் பரம்ஜோதி என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனை அடைகிறது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே விடுதலை பெற்ற ஆன்மா ஹிரண்ய கர்ப லோகத்திற்குச் செல்லும் கேள்வியே இல்லை.

மேற்கூறிய ஜைமினிக்கு கூடுதலாக, பதரி தனது வாதத்தில் மேற்கோள் காட்டிய “பிரஜாபதே: சபம் வேஷ்ம ப்ரபத்யே” என்ற உபநிடத கூற்று ஒருபோதும் ஹிரண்ய கர்ப லோகத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் மேலே உள்ள உபநிடத நூல்கள் ஸ்ரீ வைகுண்டப்ய லோகத்தை மட்டுமே குறிக்கின்றன.

ஜைமினியின் மேலும் இரண்டு சூத்திரங்கள் அவரது மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டவை “தர்சன ச்சா மற்றும் நச்ச காரியே பிரத்யபிசந்தி:”.

பதரி மற்றும் ஜைமினி ஆகிய இருவரின் வாதங்களையும் கேட்டபின், பதராய முனிவர், பதரி மற்றும் ஜைமினி இருவரின் கருத்துக்களையும் நிராகரித்து இரண்டு சூத்திரங்களில் தனது சொந்த தீர்ப்பை வழங்குகிறார்.

பதரியின் பார்வை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது மற்றும் ஜைமினியின் பார்வை ஓரளவு நிராகரிக்கப்பட்டது.

பாதராயனின் முதல் சூத்திரம் “அப்ரதி கலம்பனான் நயதீதி பாதராயண: உப்யதாச்ச தோஷத் தத் க்ரதுஷா”. மேற்கண்ட சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தியானம் செய்பவர்கள் பின்வரும் இரண்டு வகைகளில் உள்ளனர்.

(1) பிரதிகலம்பனங்கள்

(2) அப்ரதிகலம்பனங்கள்

பிராத்திகா என்றால் உறுப்பு அல்லது அவயவ என்று பொருள். இது எந்த உயிரற்ற பொருளையும் குறிக்கிறது. பிராத்திகாவை பிரம்மனாக (பரமாத்மா) கருதி தியானம் செய்யலாம். இது த்ரிஷ்டிவிதி (திரிஷ்டி என்றால் பார்வை) அல்லது பிரம்ம திருஷ்டி உபாஸனம் என்று அழைக்கப்படுகிறது.

பிராட்டிகாவை பிராமணமாக பார்க்காமல் தியானம் செய்யலாம். இதற்கு கேவல உபாசனம் என்று பெயர். ப்ரஹ்மத்ருஷ்டியுடன் அல்லது ப்ரஹ்மத்ருஷ்டி இல்லாமல் பிராத்திகா தியானம் செய்பவர்கள் பிரதிகலம்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பிரதிகலம்பனங்களுக்கு மோட்ச பலம் இல்லை, ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் செல்ல மாட்டார்கள். எனவே ஆதிவாஹிகர்கள் அவர்களை அர்ச்சிராதி வழித்தடத்தில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு நடத்துவதில்லை.

சந்தோக்யோபநிஷத்தின் ஏழாவது அத்தியாயத்தில் சனத்குமார முனிவர் நாரத முனிவருக்குப் பதினைந்து உள்ள பிராத்திகா பொருட்களைக் கூறுகிறார். அவை நாம (பெயர்), வாக் (பேச்சு), மன (மனம்), சங்கல்பம் (உறுதி), சித்தம் (ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனதை ஒருமுகப்படுத்துதல்), தியானம் (தியானம்), விக்னனம் (புலன்களால் உணரப்படும் ஒரு பொருளைப் பற்றிய அறிவு, அனுமானம் அல்லது வேதங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெறப்பட்டது). பலம் (தசை சக்தி) அதாவது ஒருவர் தனது குரு அல்லது ஆச்சார்யாவைக் காணும் போது திடீரென எழுந்து அவரது பாதங்களில் பணிந்து வணங்குகிறார்., அன்னம் (உணவு), ஆப: (நீர்), தேஜ: (தீ அல்லது வெப்பமான சூரியன்), ஆகாச: ( வானம்), ஸ்மர: (நினைவு அல்லது நினைவு), ஆஷா (ஆசை), பிராண: (மூச்சு).

மேற்கூறிய பதினைந்து பொருட்களையும் பிரம்மதருஷ்டியுடன் அல்லது அவை இல்லாமல் தியானம் செய்தால், அவர்கள் உலகப் பலன்களைப் பெறுகிறார்கள், எனவே மேற்கண்ட தியானம் பிரம்ம உபாசனை அல்ல, அவர்கள் மோட்சத்தை அடைய மாட்டார்கள். மேற்கண்ட வகையைச் சேர்ந்தவர்கள் பிரதிகலம்பனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மோட்சத்தை அடைவதற்காக தியானம் செய்பவர்கள் அப்ரதிகலம்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள். முதல் வகையானது பிரம்மனை (பகவான் ஸ்ரீமன் நாராயணனை) நேரடியாக தியானிப்பவர்களை உள்ளடக்கியது, இதில் உபாசகர் (தியானம் செய்பவர்) பரமாத்மா அல்லது பிரம்மனின் உடலாகும். மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் விவரிக்கப்பட்டுள்ள 30 வகையான பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டு அவை “ஸ்வாத்மா சாரிரக பரமாத்ம உபாசக:” என்று அழைக்கப்படுகின்றன. 31வது பிரம்மவித்யா நியாச வித்யா இது பிரபத்தி அல்லது சரணாகதி. இந்த நியாச வித்யா நிஷ்டைகள் இந்த வகையின் கீழ் வருகின்றன. “ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மத் ஸரீரத் உதாய பரம்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேன ரூபேண அபிநிஷ் பத்யதே” என்ற உபநிஷத உரையின்படி ஆதிவாஹிகர்களின் குழுவால் நடத்தப்படும் அர்ச்சிராதி மார்கத்தின் மூலம் இவை மோட்சத்தை அடைகின்றன.

பதரியின்படி மேற்கூறிய வகை உபாசகர்கள் மோட்சத்திற்குச் செல்லவில்லை என்றால், மேற்கூறிய உபநிடத உரையின் அர்த்தம் குறைகிறது.

இரண்டாவது பிரிவினர் தங்கள் தனிப்பட்ட ஆன்மாக்களைப் பற்றி தியானிப்பவர்கள், யாருக்காக பிராமணன் உயர்ந்த ஆன்மாவாக இருக்கிறான். இவை “பிரம்மாத்மா கா ஸ்வாத்மா உபாசக:” அல்லது “பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள்” என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகளும் “தத் ய ஏத்தம் விது: யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாஸதே தி அர்ச்சிஷம் அபிஸம்பவந்தி” என்ற உபநிஷத உரையின்படி மோட்சத்தை அடைகின்றன.

மேற்கூறியவற்றின் பொருள்

தேத்ய எத்தம் விடு:- தங்களின் மரண சரீரத்துடன் தொடர்பில்லாத அந்தரங்க ஆன்மாக்களைப் பற்றி தியானிப்பவர்கள், பகவான் ஸ்ரீமன் நாராயணனையே பரமாத்மாவாகக் கொண்டவர்கள், பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள் மற்றும் யேச்சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப ஏதி உபாசதே – “ஸ்வாத்மா சரீரக பரமாத்ம உபாசனா நிஷ்டா:”. ,

மேலே உள்ள அர்ச்சிஷம் அபிசம்பவந்த் – மோட்சத்திற்கு (ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்) செல்ல அர்ச்சிராதி மார்க்கத்திற்கு வாருங்கள்.

ஜைமினியின் படி இந்த பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள் மோட்சத்திற்கு செல்லவில்லை என்றால் மேற்கூறிய உபநிடத உரையின் அர்த்தம் குறைவாக இருக்கும்.

பாதராயனின் சூத்திரத்தில் கடைசி வார்த்தை “தத்க்ரதுஷா”. அதாவது பரமாத்மாவின் வடிவம் மற்றும் தன்னை ஒரு உபாசகர் தியானிக்கிறார், அவர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் இருவரையும் ஒரே வடிவத்தில் காண்பார்.

எனவே அப்ரதிகலம்பனர்கள் அர்ச்சிராதி மார்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

கடந்த அத்தியாயத்தின் கடைசி பாதத்தை எடுத்துக்கொள்வதற்கு முன், ஸ்ரீ வேதாந்த தேசிகத்தின் அதிகார சரவலியில் 3 வது பாதத்தைப் பற்றிய பின்வரும் முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்.

1) அதிகார சாராவளியின் 496வது ஸ்லோகத்தின் சிந்தாமணி விளக்கத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகரின் புகழ்பெற்ற மகனான ஸ்ரீ குமார வரதாச்சார்யா பின்வரும் அவதானிப்பைக் கூறுகிறார். வித்வான்களின் ஆன்மாக்களைப் பற்றிய சடங்குகள் மற்றும் பிற தொடர்புடைய சடங்குகள் (வித்வான்களில் மோட்சத்தை அடைய பக்தி யோகம் செய்தவர்கள் மற்றும் மோட்சத்தை அடைய பிரபத்தி அல்லது சரணாகதி செய்தவர்கள்) உடலை விட்டு வெளியேறிச் செல்வது. மோட்சத்திற்கு இன்னும் அவசியமில்லை, மேற்கூறியவற்றைப் பொறுத்தமட்டில் சடங்குகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட விழாக்கள் வித்வான்களின் மகன்களால் மிகவும் அவசியம். (வித்வான்களை சார்ந்தவர்களோ அல்லது உயிர் பிழைத்தவர்களோ மகன்கள் இல்லையென்றால்) ஏனெனில் அது அவர்களின் புனிதக் கடமையின் ஒரு பகுதியாகும். அவர்கள் துறவறம் செய்யாவிட்டால், அது அவர்களின் பங்கில் ஒரு பெரிய குறைபாடாக இருக்கும், மேலும் அவர்கள் கர்ம பிரஷ்டர்களாக (விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்வதிலிருந்து விலகல்) மற்றும் பாவங்களைச் சந்திக்க நேரிடும். மேலும் மேற்கண்ட செயல்கள் மகன்கள் மற்றும் பிற உயிர் பிழைத்தவர்களின் நலனுக்காக உள்ளது.

2) தன் சொந்த விருப்பத்திலோ அல்லது விருப்பத்திலோ இறக்கும் பாக்கியத்தைப் பெற்ற பீஷ்மர் இறப்பதற்காக உத்தராயணம் தொடங்கும் வரை காத்திருந்தார். தேவலோகத்தில் உள்ள எட்டு வசுகளில் ஒருவரான பீஷ்மர் சாபத்தின் காரணமாக இவ்வுலகில் பிறந்தார். எனவே மரணத்திற்குப் பிறகு அவர் வசுவின் அசல் நிலைக்குத் திரும்பினார், அவர் உடனடியாக மோட்சத்திற்குச் செல்லவில்லை. ஸ்ரீ வேதாந்த தேசிகர், அவர் மது வித்யா உபாசனை செய்துவிட்டு மோட்சத்திற்குச் சென்றதாகக் கூறுகிறார் (அதிகாரண சாராவளியில் உள்ள 32 பிரம்ம வித்யாக்களின் 498 மற்றும் 502 ஸ்லோகங்களில் மது வித்யாவும் ஒன்று).

3) ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்ட சிசுபாலனின் ஆன்மா, அவர் இறந்த உடனேயே ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் நுழைந்தது. அவர் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக செல்லவில்லை. சிசுபாலனும் தண்ட வக்த்ராவும் தங்கள் முந்தைய பிறவியில் ராவணன் மற்றும் கும்பகர்ணன் மற்றும் அவர்கள் பகவான் ஸ்ரீராமனால் கொல்லப்பட்டனர். மீண்டும் ராவணனும் கும்பகர்ணனும் ஹிரண்ய கசிபு மற்றும் ஹிரண்யாக்ஷனாக இருந்தனர், இதில் ஹிரண்யாக்ஷ பகவான் ஸ்ரீ வராஹாவால் கொல்லப்பட்டார் மற்றும் ஹிரண்ய கசிபு பகவான் ஸ்ரீ நரசிம்மனால் கொல்லப்பட்டார். இந்த மூன்று தொடர்ச்சியான பிறவிகளிலும் அவர்கள் காரிய வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் விஷ்ணு லோகத்தின் வாசலில் பாதுகாவலர்களாக இருந்தபோது சனக, சனந்தனா முனிவர்கள் அளித்த சாபத்தின் காரணமாக பகவான் ஸ்ரீமன் நாராயணனை வெறுப்பவர்களாக ஆனார்கள். . ஸ்ரீமன் நாராயணனை தரிசனம் செய்ய தாங்கள் வந்த வாயிலில் மேற்கண்ட முனிவர்களை அனுமதிக்காததால் சாபம் பெற்றனர். அதனால் தொடர்ந்து மூன்று பிறவிகளின் முடிவில் தானாக மோட்சம் அடைந்தனர்.

4) பகவான் ஸ்ரீராமர் ஸ்ரீ வைகுண்டம் செல்லும் நேரத்தில் அயோத்தியில் வசிப்பவர்கள் அனைவரையும் சாந்தானிக லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் அவரது சகோதரர்களுடன் சரயு நதியில் நீராடி, பின்னர் உண்மையான அர்த்தத்தில் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் அல்லாத சாந்தானிக லோகத்திற்குச் சென்றனர். இந்த சந்தானிகா லோகம் சதுர் முக (நான்கு தலை பிராமணன்) எல்லைக்குள் உள்ளது. சந்தானிகா லோகத்திலிருந்து அவர்கள் சிறிது காலம் கழித்து ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் சென்றிருக்கலாம். அயோத்தியில் வசிப்பவர்கள் என்றால் உயிருள்ள மற்றும் உயிருள்ள பொருட்களில் உள்ள உயிர்கள் என்று பொருள். பகவான் ஸ்ரீராமரின் பாதத்தில் ஸ்ரீ பரதன் செய்த பிரபத்தியின் பிரதிபலிப்பாக பகவான் ஸ்ரீராமர் அவர்களை மேற்கண்ட லோகத்திற்கு அழைத்துச் சென்றார். எனவே அயோத்தியில் வசிப்பவர்கள் அர்ச்சிராதி கதி வழியாகச் செல்வது ஒருபோதும் எழவில்லை.

5) புண்டரீகர் ஒரு நல்லொழுக்கமுள்ள நபராக இருந்தபோது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனே நேரில் வந்து அவரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

6) பாஞ்சராத்ர சம்ஹிதைகளில் பிரம்மாண்டத்திற்குள் பல விபவ லோகங்களும், வியூஹ லோகங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு வாழ்ந்து உபாசனை செய்பவர்கள் (பக்தி யோகம்) நேரடியாக மோட்சத்திற்கு (வைகுண்ட லோகம்) செல்வார்கள். அவர்கள் அர்ச்சிராதி மார்க்கம் வழியாக செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. வியூஹ லோகங்கள் ஸ்வேதத்வீபங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை பாற்கடலில் உள்ள தீவுகளாகும்.

7) ஸ்ரீ வேதாந்த தேசிகர் பரம பாத சோபனத்தில் அர்ச்சிராதி கதி பற்றிய மற்றொரு கருத்தைக் குறிப்பிடுகிறார். துவாரகை நகரில் கிருஷ்ணர் இருந்தபோது ஒரு பிராமணர் இருந்தார். பிராமணனுக்கு 10 குழந்தைகள் கிடைத்தன, அவர்கள் பிறந்த உடனேயே தரையில் தொட்டவுடன் திடீரென காணாமல் போனார்கள். ஒன்பதாவது குழந்தையும் காணாமல் போனபோது, ​​அந்த பிராமணர் கிருஷ்ணரைச் சந்திக்க வந்து, அவருடைய அவல நிலையை எடுத்துரைத்தார். அப்போது அர்ஜுனன், மேற்கூறியதைக் கேட்டு பிராமணனிடம் 10வது குழந்தையைக் காப்பாற்றுவதாகவும், காப்பாற்றத் தவறினால் அக்னி பிரவேசம் செய்வதாகவும் கூறினார். 10வது குழந்தை பிறக்கும் போது, ​​குழந்தை பிறந்த உடனேயே தப்பித்து விடக்கூடாது என்பதற்காக, தாயைச் சுற்றி தனது அம்புகளால் ஒரு கூண்டை மேம்படுத்தினார். ஆனால் குழந்தை பிறந்து தரையைத் தொட்ட உடனேயே காணாமல் போனது. அர்ஜுனனால் குழந்தையைக் காப்பாற்ற முடியாததால் அக்னி பிரவேசம் செய்ய முடிவு செய்தார். இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி.

8) உபாஸனை செய்த சதுர்முகப் பிரம்மாவும், இந்திரனும் அந்தந்த இடங்களிலிருந்து அர்ச்சுனன் மார்க்கத்தில் சேர்ந்து அந்தந்த பதவிக் காலம் முடிந்து மோட்சம் செல்வார்கள்.

இந்த பாதத்தின் அதிகாரங்களை எடுத்துக்கொள்வதற்கு முன், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் மற்றும் திவ்ய நகரத்தின் முழு அமைப்பையும் விளக்குவது அவசியம்.

கௌஷிதகி உபநிடதம், ஸ்ரீ மஹாபாரதத்தின் சாந்தி பர்வம், பஞ்சராத்ர சம்ஹிதைகள், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீமத்ராஷ்ய பகவதியின் ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகியவை மேற்கூறியவற்றுக்கான ஆதாரங்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சாரா மற்றும் ஸ்ரீ பரமபத சோபனம்.

கௌஷிதகி உபநிஷத்தின்படி ஸ்ரீ வைகுந்தத்தின் விளக்கம் பின்வருமாறு.

பரம பாதத்தின் (ஸ்ரீ வைகுண்டம்) விளக்கத்தைக் கையாளும் முன் உபநிடதம், ஜட உடலை விட்டு வெளியேறுபவர்கள் சந்திரனுக்கு வருகிறார்கள் என்று கூறுகிறது. மூம் வரும் ஜீவாக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் பக்தி யோகமோ அல்லது சரணாகதியோ செய்யாத ஜீவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். இந்த ஜீவர்கள் ஸ்வர்க லோகத்திற்குச் செல்கிறார்கள், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகமான மோட்சத்திற்கு அல்ல. இந்த ஜீவாக்கள் அவித்வான்கள் அல்லது இஷ்டதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பக்தி யோகம் அல்லது பிரபத்தி (சரணாகதி) செய்த இரண்டாவது வகை ஜீவர்கள் மோட்சத்திற்குச் செல்கிறார்கள். இந்த ஜீவர்கள் வித்வான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் சந்திரனுடன் உரையாடிய பிறகு அர்ச்சிராதி மார்க்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள். இவர்களை மோட்சதிகாரிகள் என்றும் அழைப்பர். இந்த சூழலில் அனைத்து ஜீவாக்களும் மூன்று வகைகளின் கீழ் வருகின்றன என்பதை நினைவூட்டுகிறது.

(அ) ​​அனிஷ்டாதிகாரி – பாவச் செயல்களை மட்டுமே செய்பவர்கள் – சந்திரனை அடையாமல் நரகத்திற்குச் செல்கிறார்கள் (நரகா)

(ஆ) யாகங்கள் உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்யும் இஷ்டதிகாரிகள் – அவர்கள் சந்திரனை அடைந்து பின்னர் பித்ருயானம் என்றும் அழைக்கப்படும் தூமாதி மார்க்கத்தின் மூலம் சொர்க்கம் (ஸ்வர்கம்) செல்கின்றனர்.

(இ) மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பக்தி அல்லது பிரபத்தி செய்தவர்கள் சந்திரனுடன் உரையாடிய பிறகு அர்ச்சிராதி மார்க்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள்.

சந்திரனுடனான உரையாடல் பின்வருமாறு. ஐயம் காலத்தை உண்டாக்கும் மாதம், ருது, வருடம் மற்றும் யுகம் என அழைக்கப்படும் இருமாதம் என்று ஜீவா கூறுகிறது. ஒவ்வொரு ருதுவின் போதும் உருவாகும் பொருட்கள் அல்லது பொருட்களும் நான் தான். நானும் சதுர் முக தான். நீயும் நானே, இந்தச் சூழலில் “நான்” என்று சொல்லும் ஜீவாவுக்கு ஆத்மா அல்லது ஆன்மாவாகிய பரமாத்மாவையே இங்கு நான் குறிக்கிறேன். இங்கு இருக்கும் ஜீவாவின் இந்த பதிலால் சந்திரன் சமாதானம் அடைந்து, அவரை அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்ல அனுமதிக்கிறார் மோக்ஷாதிகாரி. ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் நுழையும் போது “அவா” என்ற ஏரி உள்ளது. சாந்தோக்யோ உபநிடதத்தில் “அவா, நியா மற்றும் ஐரம்மதீயம்” என்று அழைக்கப்படும் மூன்று ஏரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகளுக்கு வெகு தொலைவில் வித்வான்கள் அல்லது பிரம்மவித்தாக இல்லாதவர்களை விரட்டுவதற்காக லத்திகளை (தடிகள்) பிடித்தபடி பாதுகாவலர்கள் உள்ளனர். பக்தி யோகம் செய்தவர் பிரம்மவித். இந்த பாதுகாப்பு காவலர்கள் “முஹூர்தா” என்று அழைக்கப்படுகிறார்கள். லத்திகள் யாஷ்டீஸ் என்று அழைக்கப்படுகின்றன. அடுத்து “விராஜா” அல்லது “விஜரா” என்ற நதி உள்ளது. இது முதுமை (ஜரா) மற்றும் ஆசை (ராஜா) ஆகியவற்றிற்கு எதிரானது என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

இந்த விரஜா நதி பிரகிருதி மண்டலம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வரையறுக்கிறது. பிரகிருதி மண்டலம் என்பது நாம் வாழும் பிரம்மாண்டம். பிரகிருதி மண்டலத்திற்கு விரஜா நதியின் எதிர்க்கரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்.

உபநிடதம் மேலே குறிப்பிடப்பட்ட ஏரிகளுக்குப் பிறகு விரஜா நதி என்று சொன்னாலும், ஏரிகள் விரஜ நதிக்குப் பிறகு என்று அர்த்தம். இது ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ திவ்ய சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் ஸ்ரீமத் ரஹஸ்யசாரத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விரஜா நதிக்கரையில் சூக்ஷ்ம சரீரத்தை உதிர்த்த பிறகு, விடுதலை பெற்ற ஆத்மா (முக்தாத்மா) விரஜா நதியைக் கடந்து வைகுண்ட திவ்ய லோகத்தில் தனது சொந்த விருப்பத்திலோ அல்லது விருப்பத்திலோ நுழைகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், விடுதலை பெற்ற ஆன்மா விரஜா நதியில் நீராடுகிறது என்பது மற்றொரு கருத்து. பரமபத சோபனத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் அவர்கள் “அர்ச்சிராதி” என்ற தனது ரஹஸ்யத்தில், விரஜா நதியில் தண்ணீரைத் தொட்ட பிறகு, அந்த முக்தாத்மா சூக்ஷ்ம சரீரத்தை வெளியேற்றுவதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் எல்லைக்குள் நுழைந்த பிறகு, முக்தாத்மா அப்ரகிருத சரீரத்தை (உடல்) பெறுகிறார், இது சத சதவீதம் சத்வ குணம் (சுத்த சத்வா) கொண்டது.

பின்னர் முக்தியடைந்த ஆன்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உயிரற்ற அவதாரம் என்று சொல்லக்கூடிய புனிதமான அத்தி மரமான சோமசவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. முக்தியடைந்த ஆன்மாவை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் ஐந்நூறு அன்னைகள் பிரம்ம அலங்காரத்தால் அலங்கரிக்கிறார்கள், அதில் 100 அன்னைகள் தங்கள் கைகளில் முக்தாத்மாவை அணிவதற்காக மாலைகளை வைத்திருக்கிறார்கள், இரண்டாவது நூறு நிரம்பியவர்கள் கண்களில் பூசுவதற்கு அஞ்சனம் என்ற கருப்பு பசையை வைத்திருக்கிறார்கள். முக்தாத்மா, முக்தாத்மாவின் உடலில் பூசப்படும் பொடியை கையில் ஏந்தியிருக்கும் மூன்றாவது 100 நிம்ஃப்கள், முக்தாத்மாவுக்கு அதையே காணிக்கையாகக் கொடுப்பதற்காக நான்காவது 100 நிம்ஃப்கள் தங்கள் கைகளில் தோட்டிகளைப் பிடித்துள்ளனர் மற்றும் ஐந்தாவது 100 நிம்ஃப்கள் அவரை அலங்கரிக்க நகைகளை ஏந்தியிருக்கிறார்கள்.

எனவே 500 நின்மார்களும் முக்தாத்மாவுக்கு பிரம்ம அலங்காரம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவருக்கு அங்குள்ள அனைவராலும் வரவேற்பு அளிக்கப்பட்டது மற்றும் அவருக்கு பெரிய சடங்கு வரவேற்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் முக்தாத்மா “தில்யா” என்று அழைக்கப்படும் ஒரு மரத்தின் அருகே கொண்டு வரப்படுகிறார். ஸ்ரீ ரங்க ராமானுஜ ஸ்வாமிகள் கௌஷிதகி உபநிடதத்தின் வர்ணனையில், சோமவாசனம் என்று அழைக்கப்படும் புனித அத்தி மரம் (அஸ்வததா மரம்) சாந்தோக்யோபனிஷத்தில் உள்ள கூற்றுப்படி தில்ய விருட்சம் அல்லது மரம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் பரமபத சோபனாவில் தில்ய விருட்சம் (விருக்ஷம் என்றால் மரம்) சோமசவன அஸ்வத்த விருட்சத்திலிருந்து வேறுபட்டது என்று கூறுகிறார்.

பின்னர் முக்தாத்மா சலஜ்ய சம்ஸ்தானத்திற்கு வருகிறார். இந்த சலஜ்ய சம்ஸ்தானம் பிரகாரங்கள் என்றும் அழைக்கப்படும் சுவர்களைக் கொண்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரகாரங்களைப் போலவே உள்ளது, இது ஸ்ரீ வைகுண்டத்தின் பிரதி என்பதால் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. சலாஜ்யா என்ற சொல் சலா மற்றும் ஜியா என பிரிக்கப்பட்டுள்ளது. சாலா என்பது பிராகாரம் மற்றும் ஜ்யா என்பது சண்டைக் கருவி.

பிரகாரத்தில் போர்க்கருவி வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு சலாஜ்யா என்று பெயர். ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு அருகில் வரும் எதிரிகளை விரட்ட இந்த போர் கருவி தேவை.

மேற்கூறிய சாலஜ்யத்தைக் கடந்ததும் முக்தாத்மா அபராஜிதா என்ற ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகருக்குள் நுழைகிறார். பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்யாதவர்களான அப்ரஹ்ம வித்யைகள் அணுகக்கூடியதாக இருப்பதால் இது அபராஜிதா என்று அழைக்கப்படுகிறது. அதை யாராலும் வெல்ல முடியாது என்றும் அர்த்தம்.

பின்னர் அவர் பிரம்மகந்தா, பிரம்மராசம் மற்றும் பிரம்மதேஜஸில் நுழைகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பை மங்கள விக்ரஹத்தில் (உடலில்) உள்ள இனிமையான மணம் (பாரிஜாத மலரின் வாசனை), அதே சுவை மற்றும் ஒளி போன்ற அமிர்தமானது பையநகரம் (வைகுண்ட நகரம்) முழுவதும் பரவுகிறது என்பதே இதன் பொருள். பை மங்கள விக்ரஹத்தில் உள்ள ஒளியின் அளவு 10000 சூரியன்கள் ஒரே நேரத்தில் உதிக்கும் அளவிற்கு சமம் என்று கூறப்படுகிறது. எனவே முழு பியா நகரமும் நறுமணம், அமிர்தம் மற்றும் ஒளி ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எனவே பிரமலங்காரத்துடன் அப்ரகிருத சரீரத்துடன் பையநகரில் பிரவேசிக்கும் முக்தாத்மா மேற்கூறிய நறுமணமும், சுவையும், ஒளியும் உடையவராக இருப்பார்.

முக்தாத்மா பின்னர் இந்திரன் மற்றும் பிரஜாபதி என்ற இரண்டு காவலர்களால் பாதுகாக்கப்பட்ட பியா நகரின் பிரதான வாயிலுக்குள் நுழைகிறார். பின்னர் அவர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரின் பரந்த வீதிகள் வழியாக பெரிய ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார், அங்குள்ள ஒவ்வொரு உடலும் அவரை வரவேற்கிறது. அதன்பிறகு கோபுரம் போன்ற அமைப்பில் உள்ள தங்க விமானத்தின் அருகே வருகிறார். பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மகிமைக்குள் நுழையுங்கள். இந்த மகிமையே பிரம்ம யஷஸ் எனப்படும். இதன் உண்மையான பொருள் என்னவென்றால், இறைவனின் மகிமை பைநகரம் முழுவதும் பரவியுள்ளது, மேலும் அங்குள்ள ஒவ்வொரு உடலும் இறைவனின் மகிமையைத் துதிக்கிறது மற்றும் முக்தாத்மாவும் இறைவனின் மகிமையைப் பாடத் தொடங்குகிறது. இறைவனைத் துதிப்பவர்கள் விபன்யவா என்று அழைக்கப்படுகின்றனர்.கௌஷிதகி உபநிஷத் யஷஸ் என்றால் இறைவனின் அருள் என்று பொருள்.

பின்னர் முக்தாத்மா ஆனந்தமய மண்டபத்தை அடைகிறது. இது கௌஷிதகி உபநிஷத்தில் “விபு பிரமிதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. இது ஸ்ரீரங்கத்தில் உள்ள 1000 தூண்கள் கொண்ட மண்டபத்தைப் போன்றது. துவார பாலகர்களான வாயில் காவலர்கள் எண்ணிக்கையில் எட்டு பேர் மற்றும் பரிசாரகர்கள் எட்டு பேர். இந்த உதவியாளர்கள் பர்ஷதாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த துவார பாலகர்களும் பர்ஷதாக்களும் முக்தாத்மாவை ஆனந்தமய மண்டபத்திற்குள் நுழையும் போது மிகவும் கருணையுடன் காட்சியளிக்கின்றனர். துவார பாலகர்கள் மற்றும் பர்ஷதாக்களின் பெயர்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ வைகுந்தத்தின் தளபதியான ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருத்மனுக்கு வணக்கம் செலுத்திய பிறகு, அங்கும் அங்கும் புதிதாக நுழையும் முக்தாத்மாவின் வருகையை அறிவிக்குமாறு ஆனந்தமய மண்டபத்தின் மேலாளர்களை வழிநடத்துகிறார். அப்போது அவன் நித்யசூரிகளின் நடுவே இருப்பான். நித்யா சூரிகள் சம்சாரத்தின் அடிமைத்தனத்தால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஜீவாக்களின் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் அவர் பைன் மனிதர்கள், குடைகள் போன்ற சாதனங்கள், பைன் ஆயுதங்கள், பைன் நகைகள் போன்றவை ஆளுமைப்படுத்தப்பட்டு நிற்பதைக் காண்பார். அவர்களைப் பார்த்த பிறகு, அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு எல்லா வகையான நித்திய சேவைகளையும் செய்ய வேண்டும் என்ற வலுவான மற்றும் அசைக்க முடியாத ஆசையை அவர் பெறுகிறார், பின்னர் அவர் பைன் பர்யங்கா (சிம்மாசனம்) அருகே வந்து, பகவான் செய்த முயற்சியில் திருப்தி அடைந்த அனைத்து பூர்வாச்சாரியர்களையும் பார்க்கிறார். ஸ்ரீமன் நாராயணனை அவர்கள் மூலம் இவ்வுலகில் இருந்து ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்து வருவதில் வெற்றியடைந்தார்.

கௌஷிதகி உபநிஷத் இந்த பர்யங்கா அல்லது சிம்ஹாசனத்தின் பெயரை “அமி தூஜா” என்று வழங்குகிறது. இந்த சிம்ஹாசனத்திற்கு நான்கு கால்கள் உள்ளன. மேற்கூறிய உபநிடதம் முன் உள்ள இரண்டு கால்கள் பூத மற்றும் பவிப்யாத் (கடந்த மற்றும் எதிர்காலம்) என்று கூறுகிறது. பின்புறத்தில் உள்ள இரண்டு கால்களுக்கு ஸ்ரீ மற்றும் இரா என பெயரிடப்பட்டுள்ளது. பாஞ்சராத்ர சம்ஹிதை இந்த நான்கு கால்களுக்கும் தர்ம பீடம், ஞான பீடம், வைராக்ய பீடம், ஐஸ்வர்ய பீடம் என்று பெயர்களை வழங்குகிறது.

இந்த சிம்ஹாசனத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணர் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அமர்ந்திருக்கிறார். சிம்ஹாசனத்தின் கால்கள் மற்றும் பிற பகுதிகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றும் முக்தாத்மா இந்த ஆளுமைப்படுத்தப்பட்ட பைன் நிறுவனங்களைப் பார்க்கிறது.

பைன் சிம்ஹாசனத்தில் ஆயிரம் கோடி சூரியன் உதிக்கும் ஒளிக்கு சமமான ஒளியை உமிழும் தாமரை மலர் உள்ளது. எட்டு பக்கங்களிலும் தாமரை மலரின் எட்டு இதழ்கள் உள்ளன. இதழ்களின் பக்கவாட்டில் நிற்கும் எட்டு பைன் டாம்சல்கள் சௌரிகளை (சாமரஸ்) அசைக்கின்றன. அதே தாமரையின் கர்னிகையின் கிழக்குப் பகுதியில் அனுகிரஹா என்ற பெண் சாமரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறாள். சாமரங்களை அசைக்கும் எட்டு பெண்களின் பெயர்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட தாமரையின் மையத்தில் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கர்ணிகா எனப்படும் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான தாமரையில் ஒரு இலட்சம் தங்க மலைகள் கூட ஒரு அணு இடத்தை ஆக்கிரமிக்கும். இதன் மீது ஆதிசேஷா எனப்படும் ஆயிரம் தொப்பிகள் கொண்ட பாம்பின் சதுப்பு (நிர்மோகா எனப்படும்) அடங்கிய திவ்யயோகபர்யங்கா உள்ளது. ஹூட் ஃபானா என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஆதிசேஷனை பல ஆயிரம் பாற்கடல்களின் மடிப்பின் விரிவாக்கம் (ஸ்ட்ரெட்ச்சிங்) என்று கருதலாம். (ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் ஒரு பாற்கடல் உள்ளது. பல ஆயிரம் பிரம்மாண்டங்கள் இருப்பதால் பல ஆயிரம் பாற்கடல்கள் உள்ளன). மேலே சொன்னது மீண்டும் ஒவ்வொரு பாற்கடலிலும் ஒரு ஆதிசேஷ பர்யங்கா என்று அர்த்தம். எனவே ஸ்ரீ வைகுண்ட பையநகரில் உள்ள திவ்ய யோகப் பர்யங்கம் பல ஆயிரம் ஆதிசேஷ பர்யங்கங்களை இணைத்துள்ளது. இது திவ்ய யோக பர்யங்கா அல்லது ஆதிசேஷ பிரயானகத்தின் அடிப்படை பகுதி எல்லையற்றது அல்லது அளவிட முடியாதது என்று கூறுகிறது.

நித்யசூரிகளில் ஒருவரான இந்த ஆதிசேஷர், முதல் திருவந்தாதியில் உள்ள ஒரு பாசுரத்தின்படியும், ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தின்படியும் அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு பல வகையான கைங்கர்யங்களைச் செய்ய பல வடிவங்களை எடுத்துக்கொள்கிறார். ஆதிசேஷ பர்யங்கத்தின் பரப்பளவு மிகப் பெரியது என்றும், திவ்ய யோகப் பர்யங்கத்தில் அமர்ந்திருக்கும் திருவித பரிசேத ரஹித பகவான் ஸ்ரீமன் நாராயணனும் மிகக் குறுகிய இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்பை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, மோட்சம் அடைந்த பிறகு அதையே பார்க்கிறோம்.

“திரிவிதா பரிச்சேத ரஹித” என்ற வார்த்தையின் அர்த்தம் பின்வருமாறு.

பரிச்சேதா என்றால் எல்லை. பரிச்சேத ரஹிதா என்றால் வரம்பு இல்லாமல் அல்லது வேறு வார்த்தைகளில் வரம்பற்றது. திரிவிதம் என்றால் இடம், நேரம், வாஸ்து என மூன்று வகைப்படும்.

எனவே பகவான் ஸ்ரீமன் நாராயணனும் அவரது மனைவி மகாலட்சுமியும் இடம், நேரம் மற்றும் வாஸ்து தொடர்பாக வரம்பற்றவர்கள். வாஸ்து என்றால் இருப்பது அல்லது பொருள். ஸ்ரீமன் நாராயணா மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் மற்றும் எல்லையற்ற பிரம்மாண்டங்களைக் கொண்ட லீலா விபூதி ஆகிய இரண்டிலும் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமிகள் (உள் ஆத்மாக்கள்). ஒவ்வொரு பிரம்மாண்டமும் நாம் வாழும் பூலோகம் உட்பட பதினான்கு உலகங்களைக் கொண்டுள்ளது.

இப்போது முக்தாத்மா ஆனந்தா அல்லது திரு ஆனந்தாள்வான் என்று அழைக்கப்படும் ஆதிசேஷ பராயங்கரிடம் வருகிறார். ஆதிசேஷனுக்கு ஆயிரம் பேட்டைகள் உள்ளன, ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு ரத்தினம் அல்லது ரத்தினம் உள்ளது. ஒவ்வொரு ரத்தினமும் உமிழும் ஒளியால். புண்டரிகா அல்லது பரமபத அல்லது அயோத்தியாகிய வைகுண்ட திவ்யநகரம் முழுவதையும் ஆதிசேஷன் ஒளிரச் செய்கிறான். இந்த ஆதிசேஷ பர்யங்காவை அனந்த போகின் என்பார்கள்.

இந்த முக்தாத்மா ஆதிசேஷனின் இரண்டாயிரம் கண்களுக்கு இலக்காகிறது (ஒவ்வொரு பேட்டையிலும் இரண்டு கண்கள் மற்றும் 1000 பேட்டைகள் உள்ளன).

இப்போது முக்தாத்மா, ஆனந்த போக பர்யங்கா என்றும் அழைக்கப்படும் பய யோக பர்யங்கத்தில் அமர்ந்திருக்கும் பைன் தம்பதியினரின் அருகில் வருகிறார். ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவர் ஸ்ரீமன் நாராயணரே. அகுமார யுவா என்று சொல்லக்கூடிய அவர் எப்போதும் 25 வயதுடையவர். இலட்சம் சூரியன்களுக்கு இணையான அளவற்ற ஒளியை உடையவன். ஸ்ரீமன் நாராயணனுக்கு நிகரான அனைத்து சிறப்பையும் உடைய மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீமன் நாராயணன் அமர்ந்திருக்கிறாள், அவள் எல்லா அம்சங்களிலும் இறைவனுடன் ஐக்கியமாக இருக்கிறாள். எல்லையற்ற அருளின் திருவுருவம் மற்றும் இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்தவள்.

அதுபோலவே பூதேவியும், நீலாதேவியும் இறைவனுக்கு இன்பம் தந்து அவர்களுக்கு சேவை செய்கிறார்கள்.

இப்போது முக்தாத்மா பைன் தம்பதிகளான பூதேவி மற்றும் நீலா தேவியின் முன் நிற்கிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும் இன்பத்தையும் தருகிறார். முக்தாத்மாவின் அறிவு எல்லையற்றதாக மாறும், இது தர்ம பூத ஞான விகாசம் என்று அழைக்கப்படுகிறது. அவர் இறைவனின் திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகையும் (பைன் மற்றும் இறைவனின் புனித உடல்) மற்றும் அதே அனைத்து உறுப்புகளையும் முழுமையாக அனுபவிக்கிறார். திவ்ய மங்கள விக்ரஹத்தின் பல்வேறு பாகங்களை அலங்கரிக்கும் ஆபரணங்களையும் அவர் அனுபவிக்கிறார்.

முக்தாத்மா உண்மையில் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மியின் எல்லையற்ற கல்யாண குணங்களை (மங்கள குணங்கள்) தன் கண்களால் பார்க்கிறார்.

அப்போது முக்தாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது தாமரை பாதங்களை வைக்கும் ஸ்டாண்டிற்கு அருகில் வருகிறார். பின்னர் இறைவன் முக்தாத்மாவின் தலையில் தனது தாமரை பாதங்களை வைத்து, அவனால் மிகவும் விரும்பப்பட்ட அவருக்கு நித்திய சேவை (கைங்கர்யம்) செய்ய தகுதியுடையவராக ஆக்குகிறார்.

பிறகு திவ்ய யோக பர்யங்கத்தில் ஏறி மிதிக்கிறார். பின்னர் பைன் தம்பதியினர் அவர் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தால் அவரைத் தங்கள் மடியில் உட்கார வைத்து, ஸ்ரீ வைகுந்தம் வந்து அவர் அனுபவித்த சிறந்த செழுமையான பாக்கியத்தைப் பற்றிப் பேச வைக்கின்றனர். நீ யார் என்று இறைவன் கேட்கிறான். பின்னர் முக்தாத்மா பதிலளித்து, அவரை நித்ய சம்சாரியாக (என்றென்றும் சம்சார பந்தத்தில் இருக்கும்) அனுமதிக்காமல், அவரை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்து வந்து நித்ய சூரிகளில் ஒருவராக ஆக்கி, பைன் தம்பதிகள் அவருக்கு செய்த மிகப்பெரிய உதவியை ஒப்புக்கொள்கிறார்.

முக்தாத்மா மேலும் கூறுகிறார், அவர் காலங்காலமாக சம்சாரக் கடலில் மூழ்கினார். பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பயத்ம ஸ்வரூபத்தின் அமிர்தக் கடலில் மூழ்கி, அவரிடமிருந்து பிரிக்க முடியாதவராக ஆனார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆன்மாவையும் உடலையும் பிரிக்க முடியாததால் அவர் உடலாகவும், இறைவன் ஆத்மாவாகவும் மாறினார். இறைவனின் உள்ளார்ந்த தன்மையை (திவ்யாத்மா ஸ்வரூபத்தை) உணர்ந்ததன் மூலம் அவர் தனது சொந்த உள்ளார்ந்த இயல்பை உணர்ந்தார். இறைவனின் விருப்பத்தால் அவர் செயல்களில் (பிரவிருத்தி மற்றும் நிவ்ருத்தி) தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இறைவன் தன் மீது பொழிந்த பாசத்தை அனுபவித்தான். இப்போது தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் மோட்ச ஆனந்தக் கடலில் ஐஸ்வர்ய இன்பமும் (இவ்வுலகில் ஜடப்பொருள் மற்றும் ஸ்வர்க லோகத்தில் அடையும்) இன்பமும், தன் சுயத்தை (கைவல்ய) அனுபவிக்கும் இன்பமும் அப்படியே இருக்கிறது என்கிறார். கைவிட.

மேற்கூறியவற்றைச் சொன்ன பிறகு, முக்தாத்மா பைன் தம்பதியரிடம், தான் அங்கு வந்த இடத்திலிருந்து மீண்டும் இந்த உலகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

மேற்கண்ட முக்தாத்மாவின் சமர்ப்பணத்தால் தெய்வீக தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். தாயும் தந்தையும் தங்கள் குழந்தையின் பேச்சில் மகிழ்ச்சி அடைவது போல. பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணன் மஹாலக்ஷ்மியை நோக்கி, இருவரும் ஒரே தோற்றத்துடன் முக்தாத்மாவை அருளுகிறார்.

பின்னர் அபஹத பாப்மம் (குறைபாடு இல்லாதது), விஜரா (முதுமையால் துன்புறுத்தப்படாமல்), விம்ருத்யு (மரணத்தால் துன்புறுத்தப்படாமல்), விசோகா (துக்கம் இல்லாமல் இருப்பது), விஜிகிட்சா (பசி இல்லாமல் இருப்பது), அபிபாஸ (இல்லாதது) என்ற எட்டு குணங்கள். தாகம்), சத்ய காமம் (அவர் விரும்பியதை அடையும் திறன் கொண்டவராக) மற்றும் சத்ய சங்கல்பம் (அங்கு இறைவனின் விருப்பத்திற்கு உட்பட்டு தான் செய்ய விரும்புவதைச் செய்யும் திறன்) அங்கு மலரும். இது குணாஷ்டக அவிர்பவ எனப்படும். அவர் சர்வஜ்ஞராகவும் (சர்வஞானமாக) மாறுகிறார், இது வேறுவிதமாகக் கூறினால் தர்ம பூத குணவிகாசம்.

பின்னர் அவர் பைன் ஜோடியின் தொடர்ச்சியான இன்பத்தால் பரபக்தி என்ற தெய்வீக தம்பதியினரின் மீது தீவிர அன்பை வளர்த்துக் கொள்கிறார், மேலும் இந்த பரபக்தி பர ஞானத்திற்கு வழிவகுக்கிறது, இது அவர் பெறும் ஆழ்ந்த அறிவாகும், இது பரம பக்திக்கு வழிவகுக்கிறது, இது மோட்சத்தின் முடிவில்லாத மற்றும் நித்திய இன்பமாக மாறும். பிரம்மாண்டா என்றும் அழைக்கப்படும் ஆனந்தா, அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு தொடர்ந்து சேவை செய்வதன் மூலம் அவர் அடையும் எல்லையற்ற ஆனந்தம் அல்லது இன்பம். இவ்வாறு அவர் பிரணவத்தின் மூன்றாவது எழுத்தான “மா” இல் சித்தரிக்கப்பட்டுள்ளபடி பைன் தம்பதியினருக்கு ஷேஷத்வா (அடிபணிதல்) மற்றும் தசாத்வா (கீழ்ப்படிதல் மற்றும் அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன்) ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றும் உள்ளார்ந்த தன்மையை செயல்படுத்துகிறார்.

பின்னர் முக்தாத்மா தனது சொந்த விருப்பத்தால் பல உடல்கள் அல்லது வடிவங்களை இறைவன் அல்லது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டு பைன் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்கிறார்.

எனவே அவரது நித்திய பேரின்பம் பைன் தம்பதியினருக்கு எல்லா இடங்களிலும் (சர்வதேசம்), எல்லா நேரங்களிலும் (சர்வகலா), மற்றும் அனைத்து நிலைகளிலும் (சர்வஸ்தௌசிதா) மற்றும் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் (சர்வவித கைங்கர்யா) செய்து வருகிறது.

ஆதார சக்தி க்ரம:

ஸ்ரீ பகவத் ராமானுஜரால் நித்ய கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார சக்தி க்ரமத்தில் உள்ளபடி, ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் முழு அமைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) ஆதார சக்தி (ஆதரவு சக்தி)

2) மூல பிரகிருதி (முதற்பொருள்)

3) அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி

நாராயணா (ஆமை வடிவில் உள்ள ஸ்ரீமன் நாராயணன் பிரபஞ்சம் முழுவதையும் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. எல்லையற்ற பிரம்மாண்டங்கள் மற்றும் வைகுண்டப்ய லோகத்தை உள்ளடக்கிய நித்ய விபூதிகளை உள்ளடக்கிய பிரபஞ்சமான லீலா விபூதி இரண்டிற்கும் இந்த ஆதரவு பொதுவானதாகத் தோன்றுகிறது.

4) அனந்த நாகராஜா – ஆதிசேஷன் முழு பிரபஞ்சத்தையும் ஆதரிக்கிறார் என்று கூறப்படுகிறது.

5) பூமி (பூலோகம்) மேற்கூறியவை ஒன்றின் மேல் ஒன்றாகக் கற்பனை செய்ய வேண்டும்.

6) ஒரு கண்டத்திற்கு சமமான ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்

7) ஸ்ரீ வைகுண்ட திவ்ய ஜன பாதம் – ஒரு நாட்டிற்கு சமமானது.

8) ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரம் – ஒரு நகரத்திற்குச் சமம்.

9) ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம்

10) ஆனந்த மாயா மண்டபரத்னா

11) மண்டபத்திற்குள் அனந்த நாகராஜா (ஆதிசேஷா).

12) தென்கிழக்கில் உள்ள திவ்ய சிம்ஹாசனின் காலின் தர்ம பீட பாத பெயர் (அக்னேயா)

13) தென்மேற்கில் உள்ள காலின் ஞான பீடப் பெயர் (நிரு ருத்தி)

14) வைராக்ய பீட பாத – வடமேற்கில் உள்ள காலின் பெயர் (வயவ்யா).

15) ஈஸ்வர்ய பீட பாத – வடகிழக்கில் உள்ள காலின் பெயர் (ஈசன்யா).

16) அதர்மம் – இது கிழக்குப் பக்கத்தில் உள்ள திவ்ய சிம்ஹாசனத்தின் தடிமனின் பெயராகத் தோன்றுகிறது.

17) அஜ்னானா – தெற்குப் பக்கத்தில் உள்ள பெயர்

18) அவைராக்யா – மேற்குப் பக்கத்தில் உள்ள பெயர்

19) அனீஸ்வர்யா – வடக்குப் பக்கத்தில் பெயர்

20) இறைவனுக்கு அனைத்து வகையான சேவைகளையும் செய்வதில் ஆர்வமுள்ளவர் அனந்தம்.

21) மேலே தாமரை மலர். (குறிப்பு: – பரம பாத சோபனத்தில் சிறிது மாறுபாடு தெரிகிறது, ஆதிசேஷனுக்கு மேல் பத்மம் என்று சொல்லப்பட்டது. இந்த வரிசையில் ஆதிசேஷனுக்கு மேல் என்று தோன்றுகிறது).

22) விமலச்சமர ஹஸ்தா – தாமரையின் கிழக்கு இதழில் உள்ள சாமர அலைவரிசையின் பெயர்.

23) உட்கர்ஷினை சாமர ஹஸ்தா – தென்கிழக்கு இதழில் உள்ள சாமர அலைவரிசையின் பெயர்.

24) ஞான சாமரஹஸ்தா – தெற்குப் பக்க இதழில்.

25) கிரியா சாமர ஹஸ்த – தென் மேற்கு இதழில்

26) யோக சாமர ஹஸ்த – மேற்கு இதழில்

27) பிரஹ்வ சாமர ஹஸ்த – வடமேற்கு இதழில்

28) சத்திய சாமர ஹஸ்த – வடக்கு இதழில்.

29) ஈசன சாமர ஹஸ்த – வடகிழக்கு இதழில்.

30) அனுகிரஹா சாமர ஹஸ்தா – கர்ணிகாவின் கிழக்குப் பகுதியில் தாமரையின் அடிப்பகுதி.

31) ஜகத் பிரகிருதி யோக பீட – இதுவே பாற்கடல் உட்பட அனைத்து பிரம்மாண்டங்களுக்கும் காரணம் என்று தோன்றுகிறது.

32) திவ்ய யோகா பீட பர்யங்கா – ஒரு சோபா

33) சஹஸ்ர பாண மண்டித அனந்த நாகராஜர் – இதிலிருந்து 1000 முகடு கொண்ட ஆதிசேஷர் மேற்கண்ட யோக பீடத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

34) பாத பீட அனந்த நாகராஜ் – இறைவன் தனது பாதங்களை வைக்கும் பீடம். ஆதிசேஷனின் ரூபங்களில் இதுவும் ஒன்று.

35) அனந்த, கருடன், விஷ்வக்சேனர் – நித்ய சூரிகள் பத்மாசனங்களில் அமர்ந்துள்ளனர்.

36) அஸ்மத் குரவ: – மோட்சம் பெற்ற நமது பூர்வாச்சார்யர்கள் அனைவரும். அவர்கள் யோக பீடத்தின் வடமேற்குப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.

37) பகவான் ஸ்ரீமன் நாராயண யோக பீட பர்யங்கத்தில் அமர்ந்துள்ளார்

38) மஹாலக்ஷ்மி இறைவனின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பாள்.

39) பூமி – இறைவனின் இடது பக்கம் பூதேவி.

40) நீலா – இறைவனின் இடது பக்கத்தில் நீலாதேவி.

41) கிரீட மகுடாதி பதி – இறைவன் தலையில் அணிந்திருக்கும் கிரீடம்.

42) கிரீட மாலா அபீடகாத்மா – இறைவன் எப்போதும் கிரீடத்தையும் மாலைகளையும் அணிந்திருப்பான். அவர்களால் இறைவனுக்கு சில வலிகள் அல்லது பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வலியை ஏற்படுத்தாத அப்பேடகாத்மா என்று ஒரு பைன் நபர் இருக்கிறார்.

43) தட்சிண குண்டல மகர – முதலை வடிவில் இருக்கும் இறைவனின் வலது காது வளையம்.

44) வாம குண்டல மகர – இறைவனின் இடது காது வளையம்.

45) வைஜயந்தி வனமாலா – இறைவன் அணிந்திருக்கும் மாலை அல்லது வான மாலை வைஜயந்தி எனப்படும்.

46) துளசி – இறைவனும் துளசி மாலையை அணிந்துள்ளார்.

47) ஸ்ரீ வத்ச ஸ்ரீநிவாசா – மகாலட்சுமி அமர்ந்திருக்கும் இறைவனின் மார்பில் வெள்ளை முடிகள்.

48) ஸ்ரீ கௌஸ்துப சர்வ ரத்னாதி பதி – கௌஸ்துப என்பது இறைவனின் மார்பில் உள்ள ரத்தினம் அல்லது ரத்னா. இது மிக முக்கியமான மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினம்.

49) காஞ்சி குணோஜ்வல பீதாம்பர – இடுப்பிற்குக் கீழே இறைவன் அணிந்திருக்கும் மஞ்சள் நிற தூய பட்டு வஸ்திரம் மற்றும் இடுப்புப் பட்டை தங்கத்தால் ஆனது.

50) சுதர்சன ஹெத்திராஜா – இறைவன் தனது வலதுபுறத்தில் வைத்திருக்கும் ஆயுத வட்டு.

51) நந்தக க்ஷத்காதிபதி – இறைவன் தாங்கிய நந்தக எனப்படும் ஆயுதம்.

52) பத்மா – இந்த தாமரை ஆயுதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

53) பாஞ்ச ஜன்ய சங்கதி பதி – பாஞ்சஜன்யம் என்பது இறைவன் இடது கையில் வைத்திருக்கும் சங்கு.

54) கௌமோதகி கடாதிபதி – இறைவன் வைத்திருக்கும் கௌமோதகி என்ற ஆயுதம்.

55) சர்ங்காய சப்பாத்தி பதி – சர்ங்கா என்ற ஆயுத வில்.

56) பகவத் பதரா விந்த சம்வாஹினி – இறைவனின் பாதங்களை மசாஜ் செய்யும் அல்லது ஷாம்பு செய்யும் பெண் பணிப்பெண்கள்.

57) அனந்த நாகராஜா – மீண்டும் ஆதிசேஷர் மற்றொரு வடிவில் இறைவனின் பின்புறம் இருக்கிறார்.

58) பகவத் பரிஜனங்கள் – இறைவனுக்கு சேவை செய்யும் மற்ற பணியாளர்கள்.

59) பகவத் பாதுகா – இறைவனின் புனித செருப்பு.

60) பகவத் பரிச்சதாஸ் – குடை போன்ற பிற சாதனங்கள்.

61) வைனதேய – கருத்மன் முன் அமர்ந்து.

62) பகவத் விஷ்வக்சேனர் – இறைவனின் வடகிழக்கு திசையில் அமர்ந்து தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

63) கஜானனா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

64) ஜயத்சேனா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

65) ஹரிவக்த்ரா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

66) கால பிரகிருதி சம்ஞா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

67) சந்தா மற்றும் பிரசாந்த் – கிழக்குப் பகுதியில் கேட் கீப்பர்கள்.

68) பத்ரா மற்றும் சுபத்ரா – தெற்கு பக்கத்தில் வாயில் காவலர்கள்.

69) ஜெய விஜய – மேற்குப் பகுதியில் வாயில் காவலர்கள்.

70) தத்ரா மற்றும் விதத்ரா – வடக்குப் பக்கத்தில் வாயில் காவலர்கள்.

மேற்கூறிய காவலர்கள் அனைவரும் சங்கம், சக்கரம் மற்றும் கடம் ஆகியவற்றைப் பிடித்திருக்கும் நான்கு கைகளைக் கொண்ட துவார பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

71) குமுதா கணாதி பதி சவாஹன பரிவார பிரஹரண – கிழக்குப் பகுதியில் பரிஷதா.

72) குமுதாக்ஷ கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – தென்கிழக்கு பக்கத்தில்.

73) புண்டரிகாக்ஷ கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – தெற்கு பக்கத்தில்.

74) வாமன கணாதி பதி – சவாஹன பரிவார பிரஹரண – தென் மேற்குப் பகுதியில்.

75) சங்குகர்ண கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – மேற்குப் பக்கத்தில்.

76) சர்பநேத்ர கணாதிபதி – சவஹான பரிஹார பிரஹரண – வடமேற்கு பகுதியில்.

77) சுமுக கணாதிபதி – சவாஹன பரிஹார பிரஹரணம் – வடக்குப் பக்கத்தில்.

78) சுப்ரதிஷ்டய காந்திபதி – சவஹான பரிவார பிரஹரண – வடகிழக்கு பக்கத்தில்.

மேற்கூறிய எட்டு பேரும் பரிஷதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், மேலும் அவை இறைவனின் படைவீரர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகத் தோன்றுகின்றன. அவர்கள் வாகனங்களுடன் (வாகன அமைப்பு) மற்றும் பரிவாரத்துடன் (தங்கள் சொந்த மக்களைக் கொண்டவர்கள்) உள்ளனர். பிரஹரணம் என்றால் ஆயுதங்கள். மேற்கூறிய அனைத்து பரிஷத்களும் ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியிருப்பதால், இந்த ஏற்பாடு ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகத் தெரிகிறது.

ஸ்ரீ ராமானுஜர் நித்ய கிரந்தத்தில், வைகுண்ட பை லோகம் மற்றும் பையநகரில் உள்ள அனைத்து 78 பைன்களும் மற்றும் பொருட்களும் ஸ்ரீமன் நாராயணனின் தினசரி வழிபாட்டின் போது (திருவாராதனம்) வீடுகளில் செய்யப்படும் போது சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார். ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ வைகுண்ட காத்யா மேற்கூறியவற்றின் விரிவான விளக்கமாகும்.

ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் விளக்கத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் மற்றொரு பெயரான பரம வ்யோமத்தின் இருப்பிடம் பின்வருமாறு கூறுகிறார்.

14 லோகங்கள் அல்லது உலகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம் உள்ளது. பிரம்மாண்டத்தின் மேல் பிரம்மாண்டத்தைப் போல் பத்து மடங்கு பெரிய (பெரிய) உறை உள்ளது. இதுபோன்ற ஏழு அட்டைகள் ஒவ்வொன்றும் முந்தையதை விட 10 மடங்கு பெரியதாகவும் மற்றொன்றுக்கு மேலேயும் உள்ளன. மேலே விரஜா நதி உள்ளது மற்றும் விரஜா நதியின் மறுகரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ஆகும், இதன் விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைகுண்டத்தின் இந்த அமைப்பு நான்கு தலை பிரம்மா மற்றும் மற்றவர்களால் மனத்தாலோ அல்லது வார்த்தைகளாலோ கூட அணுக முடியாது. ஏற்கனவே இருக்கும் நித்ய சூரிகள் மற்றும் முக்தர்களின் இயல்பை பிரம்மா, ருத்திரன், சனகன், சனந்தனா போன்றவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஸ்ரீ ஆளவந்தார் கூட ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தைப் பற்றி ஸ்த்ர ரத்னத்தில் அழகாகவும் சுருக்கமாகவும் விளக்குகிறார்.

ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தின் மேற்கூறிய விளக்கத்தின் வெளிச்சத்தில், கடைசி பாதத்தில் ஆறு அதிகாரங்களை கையாள்வோம்.

முதல் அதிகாரத்திற்கு சம்பத்யவிர்பவதி கரணம் என்று பெயர். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் உள்ளது.

இறவா உடலை விட்டு உபாசனை அல்லது பிரபத்தி செய்த ஜீவன் வைகுண்ட பய லோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடைகிறான், முன்பு செயலற்ற நிலையில் இருந்த அவனது உள்ளார்ந்த தன்மை மலர்கிறது என்று இந்த பகுதி கூறுகிறது.

அபஹத பாப்ம, விஜர:, விம்ருத்யு’ விசோகா, அவிஜிகத்ஸ:, அபிபாச, சத்ய காம:, சத்ய சங்கல்பம் ஆகிய எட்டு குணாதிசயங்களே அவனது உள்ளார்ந்த இயல்பு. (குறிப்பு: மேலே உள்ள எட்டு பண்புகளின் பொருள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது).

மேற்கூறியவற்றைத் தவிர தர்ம பூத ஞான விகாசம் இருக்கும், அதாவது சர்வ ஞானம் (சர்வ ஞானம்) என்று பொருள். அவனது பேரின்பம் எல்லையற்றதாகவும் நித்தியமாகவும் மாறும் என்று கூறுவதற்கு இது சமம்.

ஒரு முக்தாத்மாவுக்குப் புதிதாக ஏதாவது கிடைக்காவிட்டால், புண்ணிய பாப கர்மா மலரினால் ஏற்கனவே இருந்த மற்றும் செயலற்ற நிலையில் உள்ள அம்சங்கள் மட்டுமே, மோட்ச சாஸ்திரம் (மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளும் வேதங்கள்) அர்த்தத்தை குறைக்கிறது என்று எதிரி (பூர்வபக்ஷி) வாதிடுகிறார். அல்லது நோக்கம் குறைவாக உள்ளது மற்றும் ஜீவாவின் தன்மை (ஆத்மஸ்வரூபம்) இலக்கு குறைவாகிறது. ஒரு நபர் அடைய விரும்பும் புருஷார்த்தம் இலக்கு

அவர் மேலும் கூறுகிறார், உடல் மற்றும் புலன்களின் செயல்பாடுகள் செயலற்ற நிலையில் இருக்கும்போது நல்ல தூக்க நிலையில் ஆத்மா (ஜீவா) அடையும் இலக்கை (புருஷார்த்தம்) காண முடியாது. துக்கத்தின் முடிவு மட்டும் புருஷார்த்தம் என்று சொல்ல முடியாது. ஜீவாவின் உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்வதை மோட்சம் என்று அழைக்க முடியாது என்று அவர் மேலும் வாதிடுகிறார். மோட்சத்தில் முக்தாத்மா நித்தியமான மற்றும் எல்லையற்ற பிரம்ம ஆனந்தத்தை அடைகிறது என்று கூறப்படுகிறது. எனவே பூர்வபக்ஷி மோட்சத்தில் சில புதியது அடையப்படுகிறது என்று கூறி முடிக்கிறார்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “சம்பத்ய அவிர்பவ: ஸ்வேன சப்தாத்” என்று பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. அர்ச்சிராதி கதியின் மூலம் மோட்சத்திற்குச் சென்று, பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடையும் பிரத்யகாத்மா, “ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மத் சரிராத்” என்ற உபநிஷத வாக்கியத்தால், எந்தப் புதிய வடிவமும் (அம்சம்) இல்லாமல், தன் உள்ளார்ந்த இயல்பு (ஸ்வஸ்வரூப அவிர்பவ) மலர்வதைப் பெறுவார். ஸமுத்தாய பரம்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே.”

மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வார்த்தைகள், புதிய வடிவமோ அம்சமோ உருவாகவில்லை என்றும், இந்தக் காலங்களிலெல்லாம் செயலற்ற நிலையில் இருந்த இயல்புதான் மலரும் என்றும் கூறுகிறது. அங்கு ஒரு புதிய அம்சம் உருவாகிறது என்ற வாதம், உபநிடதப் பகுதியில் உள்ள “ஸ்வேனா” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிவிடும். புதிய அம்சம் எதுவும் இல்லாவிட்டாலும், செயலற்ற நிலையில் இருந்த அவரது உள்ளார்ந்த அல்லது உள்ளார்ந்த இயல்பை மட்டுமே அவர் பெறுகிறார்.

பூர்வபக்ஷியின் வாதத்திற்கு, உள்ளார்ந்த இயல்பு எப்போதும் இருந்தது, “உபசம்பத்யா” என்ற இந்த வார்த்தை அர்த்தமற்றதாகிறது, அதாவது “முக்தா: ப்ரதிக்னாநாத்” என்று இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் பதிலளிக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா புண்ணிய பாபா கர்மாவின் காரணமாக அவர் பெற்ற உடலில் இருந்து விடுதலை பெறுகிறார். உள்ளார்ந்த குணம் என்றென்றும் இருந்தபோதிலும், அது கர்ம ரூப அவித்யாவின் கணக்கில் செயலற்றதாக இருந்தது, அது புண்ய பாப கர்மா ஆகும். இந்த கர்மா முடிவடைந்ததும், செயலற்ற நிலையானது உள்ளார்ந்த அல்லது உள்ளார்ந்த ஸ்வரூபத்தின் (இயற்கையின்) தானாகவே பிரகாசிக்க வழிவகுக்கிறது. சூத்திரத்தில் உள்ள “பிரதி ஞானத்” என்ற வார்த்தை குறிப்பாக இந்திரனுக்கும் பிரஜாபதிக்கும் இடையேயான உரையாடலைக் குறிக்கிறது (சந்தோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயத்தில் நான்கு தலை பிராமணன்.

இந்திரன் ஆன்மீக அறிவைப் பெறுவதற்காக பிரஜாபதியிடம் செல்கிறான். பூயா: (திரும்பத் திரும்ப) வியாக்யாஸ்யாமி (நான் விரிவாகக் கூறுகிறேன்) என்று கூறி பிரஜாபதி இந்திரனிடம் உண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இந்த பிரத்யகாத்மா (ஜீவா) விழிப்பு நிலை, கனவுகளைக் கண்டறிவதற்கான கட்டம் மற்றும் நல்ல தூக்கத்தின் கட்டம் (கோமா நிலை) ஆகிய மூன்று கட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டது, வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும். மேலும் புண்ணியத்தாலும், பாப கர்மாவாலும் பாதிக்கப்பட்ட இந்த உடலிலிருந்து விடுபடுவது, இவ்வுலகில் உள்ள பொருள்கள் மற்றும் ஆளுமைகளின் மீது அன்பு மற்றும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த விடுதலைக்குப் பிறகு, பிரத்ய காத்மா மோட்சத்தில் பரமாத்மாவை அடைகிறது, இது ஸ்வரூப அவிர்ப்பத்திற்கு (அவரது உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்யும்) வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் “ஆத்மபிரகாரநாத்” என்று கூறுகிறார், அதாவது இந்த ஆத்மா (பிரத்ய காத்மா அல்லது ஜீவா) ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி எட்டு பண்புகளை (குணங்கள்) உடையவர். இந்த எட்டு குணங்களும் குணாஷ்டகம் எனப்படும். பிரஜாபதி இந்திரனுக்கு உபதேசித்ததிலும் இது தெளிவாகிறது.

ஜீவன் சம்சார பந்தத்தில் இருந்தபோது இந்த எட்டு குணங்களும் செயலற்று இருந்தன, ஜீவன் பரமாத்மாவை மோட்சத்தில் அடைந்தவுடன் அவை பிரகாசிக்கின்றன. எனவே இந்த எட்டு குணங்களும் புதியவை அல்ல, அவை எப்போதும் இருந்தன. இந்த விடயத்தை பகவான் சௌனகா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

(அ) ​​ரத்தினம் அல்லது ரத்னாவில் பளபளப்பு எப்போதும் இருக்கும் மற்றும் அதன் உள்ளார்ந்த இயல்பு. அழுக்கு அல்லது தூசியால் மூடப்பட்டிருக்கும் போது அந்த பளபளப்பு அல்லது பிரகாசம் இருக்காது. அதை சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றினால் அதன் பளபளப்பு தானாகவே மாறும். அதே போல ஆத்மாவின் விஷயத்தில் அழுக்கு புண்ணிய பாப கர்மா ஆகும், இது எட்டு குணங்களின் பிரகாசத்தை பாதிக்கிறது. இந்த கர்மா மோட்சத்திற்கு செல்லும் போது இந்த குணங்கள் தானாகவே பிரகாசிக்கும்.

(ஆ) கிணறு தோண்டும்போது, ​​சூரிய ஒளியை நீர் பார்ப்பதைத் தடுக்கும் பூமியின் அடுக்குகள் அகற்றப்படும். ஆனால் நிலத்தடி நீர் புதிதாக உருவாக்கப்படவில்லை, அது எப்போதும் உள்ளது. ஜீவா விஷயத்திலும், பூமியின் அடுக்குகள் கர்மாவைப் போலவே இருக்கின்றன.

(இ) மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளைப் போலவே, ஆத்மாவின் (புண்ய பாப கர்மா) ஹேய குணங்களின் முடிவுக்குப் பிறகு, எட்டு குணங்களும் தானாகவே பிரகாசிக்கின்றன, அவை புதிதாக உருவாக்கப்படவில்லை.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “அவிபாகேன த்ருஷ்டதவதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. முக்தாத்மா பரமாத்மாவை (பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரம் ஜோதி என்றும் அழைக்கப்படுகிறார்) தனித்தனியாக அனுபவிக்கிறதா அல்லது பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறதா என்பதுதான் எழும் கேள்வி.

பூர்வபக்ஷி தனது வாதத்திற்கு ஆதரவாக தோன்றும் சில உபநிடத நூல்களை மேற்கோள் காட்டி பரமாத்மாவை வேறுபட்ட அல்லது தனித்தனியாக அனுபவிக்கிறார் என்று கூறுகிறார். உபநிடத நூல்கள் அவருடைய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

(அ) ​​முக்தாத்மா பிரம்மனை (ஸ்ரீமன் நாராயணனை) அடைந்த பிறகு, மங்களகரமான பண்புகளுடன் அவரை அனுபவிக்கிறது என்று தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது.

(ஆ) முக்தாத்மா மோட்சத்தை அடைந்து, பிரபஞ்சத்திற்கு காரணமான இறைவனின் அற்புதமான பிரகாசத்தை அங்கு காணும்போது அவருக்கு சமமானதாக முண்டக உபநிடதமும் கூறுகிறது.

(இ) பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் முக்தாத்மாவை அடைந்த பிறகு இறைவனிடம் உள்ள எட்டு குணங்களும் மலரும் என்று கூறுகிறார்.

மேற்கூறிய அனைத்து கூற்றுகளிலும் முக்தாத்மா இறைவனை பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறது என்று குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. எனவே முக்தாத்மா இறைவனை தனித்தனியாக அனுபவிக்கிறது என்கிறது பூர்வபக்ஷி.

இதை “அவிபாகேன த்ரிஷ்டத்வாத்” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் மறுக்கிறார்.

முக்தாத்மா பரமாத்மாவைப் பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். பரமாத்மா ஆத்மா மற்றும் ஜீவாத்மா அவரது உடல் என்ற பொருளில் பிரிக்கலாம். உடலும் உள்ளமும் பிரிக்க முடியாதவை. முக்தாத்மா உண்மையில் பரமாத்மாவைத் தன் ஆத்மாவாகவும், அவனைத் தன் உடலாகவும் பார்க்கிறார். முக்தாத்மா மோட்சத்திற்கு வருவதற்கு முன், அதாவது சம்சாரத்தில் இருக்கும் போது தான் உபநிஷத வாக்கியங்களின்படி பரமாத்மாவின் சரீரம் என்று அறிகிறான். ஆனால் மோட்சத்தை அடைந்த பிறகு அவர் உண்மையில் இதைப் பார்க்கிறார். அதுதான் தனக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள உடல் மற்றும் ஆன்மா உறவு. மேற்கூறியவற்றைப் பறைசாற்றும் உபநிடத வாக்கியங்கள்

(அ) ​​தத்வமசி என்றால் மேலே சொன்ன ஸ்வேதகேதுவான “த்வம்” பரமாத்மாவாகிய “தத்”வை ஆன்மாவாகக் கொண்டுள்ளது.

(ஆ) அயம் ஆத்மா பிரம்மம் அதாவது பரமாத்மாவாகிய இந்த பிரம்மன் ஒவ்வொரு பொருளுக்கும் ஆத்மாவாக இருக்கிறார்.

(இ) ஐததாத்ம்யம் ஏதம் ஸர்வம் – லீலா விபூதியில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் (ஜீவா) மற்றும் நித்ய விபூதி பரமாத்மா ஆன்மாவாகும்.

(ஈ) சர்வம் கலு ஏதம் பிரம்மம் – ஒவ்வொரு உணர்வும் மற்றும் உணர்வு இல்லாத உயிரினமும் பிரம்மம், அதாவது பிரம்மத்தை ஆத்மா அல்லது ஆத்மாவாக கொண்ட பிரம்மத்மகம்.

மேற்கண்ட கூற்றுகளில் பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையே உள்ள ஆன்மா மற்றும் உடல் உறவு பற்றி குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் அவை சமாநிதிகாரண்ய அறிக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அபேத ஸ்ருதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சமனாதிகரணத்தின் பொருள் பின்வருமாறு.

இரண்டு வார்த்தைகள் டூ-கெதர் என்று குறிப்பிடப்பட்டு அவை வழக்கில் இருக்கும் போது (சமஸ்கிருதத்தில் விபக்தி என்று அழைக்கப்படுகிறது) பிறகு ஒரு சொல் உரிச்சொல் மற்றும் மற்றொரு சொல் பெயர்ச்சொல் என்று பெயரடை தகுதி பெறுகிறது. ஆன்மா மற்றும் உடல் கோட்பாட்டில் ஆன்மா என்பது பெயர்ச்சொல் மற்றும் உடல் என்பது பெயரடை. பின்னர் அந்த இரண்டு சொற்கள் சமனாதிகாரண்ய சொற்கள் எனப்படும். எனவே மேலே உள்ள உபநிடத கூற்றுகள் ஆன்மா மற்றும் உடல் உறவு மறைமுகமாக உள்ளது.

ஆன்மாவையும் உடலையும் வெளிப்படையாகக் குறிப்பிடும் வேறு சில உபநிடத நூல்களும் உள்ளன. அவர்கள்

(அ)ய: ஆத்மநிதிஷ்டான் ஆத்மந: அந்தர:யம் ஆத்மா நவேதா யஸ்ய ஆத்மா சரீரம்  ய: ஆத்மாநாம் அந்தர: யமயதி சதே ஆத்மா அந்தர்யாமி அம்ருதா:

(பரமாத்மாவைக் குறிப்பிடுவது) ஆத்மாவுடன் (ஜீவாத்மா) வசிப்பவர் மற்றும் ஜீவாத்மா அறியாத ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவாத்மா என்பது உடல் யாருக்கு அந்தர்யாமி (உள் ஆத்மா) என்பது இதன் பொருள்.

(ஆ) அந்த: ப்ரவிஷ்டா: சாஸ்தா ஜனனம் சர்வாத்மா – பரமாத்மாவாகிய ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு விஷயத்திலும் அந்தர்யாமியாக நுழைந்து ஜீவாத்மாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறார். அவர் அனைவருக்கும் ஆத்மா அல்லது ஆன்மா.

மேற்கூறியவற்றைத் தவிர, பரமாத்மா என்பது ஜீவாத்மாவின் அந்தர்யாமி என்று பொருள்படும் வாக்யான வாயாதிகரணத்தின் “அவஸ்திதே: ஏதி காஷா கிருத்ஸ்னா” என்று வாசிக்கப்படும் பிரம்ம சூத்திரம் உள்ளது. எனவே மேற்கூறியவற்றிலிருந்து முக்தாத்மா பரமாத்மாவைப் பிரிக்க முடியாமல் அனுபவிக்கிறது என்பது உறுதியாகிறது.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் “பிரம்ம அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரத்துடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. குணாஷ்டக அவிர்பவம் எனப்படும் பரமாத்மாவை அடைந்தவுடன் முக்தாத்மாவுக்கு எட்டு குணங்கள் மலரும் என்று முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த குணாஷ்டக அவிர்பவம் மட்டுமே மோட்சத்தின் முக்கிய அம்சமா அல்லது தர்மபூத ஞானம் எல்லையற்றதாக மாறுமா அல்லது இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லையா என்பது கேள்வி.

சூத்ரகார முனிவர் பதராயணன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது அவருடைய சீடர்களில் ஜைமினி மற்றும் ஓதுலோமி என்று இரண்டு பேர் அவருக்கு அருகில் இருந்தனர். இறுதித் தீர்ப்பான தனது சொந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்கு முன், மேற்கூறிய இரண்டின் பார்வைப் புள்ளிகளையும் சூத்ரகாரர் வெளிப்படுத்தினார்.

அவர் ஜைமினியிடம் தனது பார்வையை சொல்லும்படி கேட்டபோது, ​​அவர் தனது கருத்தைச் சொன்னார், சூத்திரகாரர் அதை சூத்திர வடிவில் வைத்தார். ஸூத்ரம் “பிரம்மேண ஜைமினி உபன்யாஸாதிப்ய:”. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மாவிற்கு குணாஷ்டக அவிர்பவம் மட்டுமே முக்கிய அம்சம், ஏனென்றால் தஹர வித்யாவில் பிரஜாபதி இந்திரனுக்கு ஆன்மீக அறிவை அளிக்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும்போது குணாஷ்டக அவிர்பவம் இருப்பதாகவும், சத்ய சங்கல்பத்தின் தொடர்ச்சியாக அவர் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. அங்குள்ள பைன் தம்பதிக்கு கைங்கர்யா.

ஔதுலோமி வெளிப்படுத்திய பார்வையானது “சிதி தன்மாத்ரேண ததக்த்மத்வாத் ஏதி ஔதுலோமி:” என்று படிக்கும் ஒரு சூத்திரமாக உருவாக்கப்பட்டது.

முக்தாத்மாவிற்கு அவனது தர்ம பூத ஞானம் விரிவடைந்து எல்லையற்றதாகிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். அவரது வாதத்திற்கு ஆதரவாக அவர் பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“ஸ யதா சைந்தவ கானா அனந்தர: அபாஹ்ய:

கৃத்ஸ்நாஹ்ரஸா ஜ்ஞாந ஏவঃ ஏவம்வே அரே

அயம் ஆத்மா அநந்தர: அபஹ்ய: கৃத்ஸ்ந:

ப்ரஜ்ஞானகானா ஏவா, விஜ்ஞான கானா ஏவ”

மேற்கூறியவற்றின் பொருள் என்னவென்றால், உப்புக் குவியலில் உள்ளும், புறமும், எல்லாப் பக்கமும் ஒரே சுவை இருப்பது போல, ஜீவாத்மாவின் விஷயத்திலும் அவன் ஞான குணகனாக இருக்கிறான், அதாவது உள்ளேயும், வெளியேயும், புறமும் தர்ம பூத ஞானம் கொண்டவன். அனைத்து பக்கங்களிலும். எனவே இந்தப் பகுதி, தர்ம பூத ஞானத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கிறது. “விஜ்ஞான கானா ஏவ” என்று கூறப்படுவதால், தர்ம பூத ஞானத்தின் எல்லையற்ற தன்மையைத் தவிர வேறு எந்த அம்சமும் முக்தாத்மாவில் இல்லை என்று ஓதுலோமி கூறுகிறார்.

இந்தச் சூழலில் ஜீவாத்மாவுக்கு இரண்டு ஞானங்கள் (அறிவு) இருப்பதைக் கவனிக்க வேண்டும். முதலாவது தாமி ஞானம் என்று அழைக்கப்படுகிறது, அது “நான்”. ஜீவாத்மா வேறு எந்த உதவியும் இல்லாமல் தன்னை உணர்ந்து கொள்கிறது என்பதே இதன் பொருள். பரமாத்மாவின் தர்மம் ஜீவாத்மாவின் தர்மிஜ்ஞானம். இந்த அம்சத்தில் மட்டும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் சமம்.

தர்ம புத்க ஞானம் என்பது ஜீவாத்மா, சம்சாரத்தில் இருக்கும் போது பொருட்களை தனது புலன்களின் மூலம் மட்டுமே உணரும் அறிவாகும், மேலும் இது தனது கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் மூலம் புலன் உணர்வு (கரண ஜன்ய ஞானம்) என்று அழைக்கப்படுகிறது. சம்சாரத்தில் ஜீவாத்மாவின் தர்ம பூத ஞானத்தின் இந்த அளவு அவரவர் புண்ணிய பாபா கர்மாவைப் பொறுத்து தனிமனிதனுக்கு மாறுபடும். யோகிகளுக்கு, இந்த தர்ம பூத ஞானமானது யோகஜன்ய ஞானம் அல்லது ட்ரை கலிகா ஞானம் (திரைகால என்றால் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்) என்று அழைக்கப்படும்.

பரமாத்மா மற்றும் நித்ய சூரிகளுக்கு இந்த தர்ம பூத ஞானம் எப்போதும் எல்லையற்றது. ஜீவாத்மாவிற்கு அது ஓதுலோமி கூறியது போல் மோட்சத்தில் மட்டுமே எல்லையற்றதாகிறது.

ஜைமினி மற்றும் ஔதுலோமி ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டபின், சூத்ரகாரர் இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் “ஏவமபி உபன்யாஸத் பூர்வபாவத் அவிரோதம் பாதராயண:” என்று தனது தீர்ப்பை வழங்குகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜைமினி மற்றும் ஔதுலோமி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை, எனவே ஒரு முக்தாத்மா பிரம்ம குணங்கள் எனப்படும் எட்டு குணங்களைக் கொண்டிருக்க முடியும், அவை பைன் தம்பதிகள் அமர்ந்திருக்கும் முக்தாத்மாவால் ப்ய பர்யங்கா ஏறிய பிறகு மலர்கின்றன. அதே நேரத்தில் அவரது தர்ம பூத ஞானம் (கருத்துணர்வின் அறிவு) எல்லையற்றதாகிறது. எனவே ஒரு முக்தாத்மாவுக்கான மோட்சத்தில் உள்ள தர்ம பூத ஞானம் கரண ஜன்ய ஞானமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர் புலன்கள் இல்லாமல் கூட விஷயங்களை அறிய முடியும். “விஞ்ஞான ஞானேவ” (தர்மபூத ஞானம் மட்டுமே எல்லையற்றதாக மாறும், எட்டு குணங்கள் அல்ல) என்பதை வலியுறுத்துவது ஜீவாத்மா ஜடா அல்ல என்று மட்டுமே அர்த்தம். ஜடா என்றால் உணர்வு இல்லாதது. ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் மோட்சத்தில் முக்தாத்மாவின் தர்மி ஞானமும் விரிவடைகிறது என்று கூறுகிறார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “சங்கல்பாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. முக்தாத்மாவைப் பற்றி சாண்டோக்யோபநிஷத் பின்வருமாறு கூறுகிறது.

1) “ஸ: உத்தம புருஷ:- ஸதத்ர பர்யேதி ஜக்ஷாத் க்ரீடன் ராமமான ஸ்த்ரீபிர்வா யனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் ஏதம் சரீரம்”.

மேற்கூறியவற்றின் பொருள் பின்வருமாறு. முக்தாத்மா ஒரு உயர்ந்த நபராக (உத்தம புருஷன்) மாறுகிறார். அவர் எல்லா பக்கங்களிலும் இருந்து பரமாத்மாவை அனுபவிக்கிறார், அவர் பைன் ஜோடியை சுற்றி வருகிறார், அதாவது அவர் பிரதக்ஷிணம் செய்கிறார். ஜக்ஷத் என்றால் சாப்பிடுவது அல்லது சிரிப்பது. ஜக்ஷா (பக்ஷா ஹஸனயோ:) என்பது வேர். இங்கு உண்ணுதல் என்பது பொருத்தமாக இல்லை என்று அர்த்தம் பொருந்தாது. சிரிப்பதற்குப் பதிலாக புன்னகை என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் ரசிக்கும் பிரம்மானந்தம் இதன் வெளிப்பாடாகவே அவர் புன்னகைக்கிறார் என்று சொல்லலாம். கிரீடான் என்றால் விளையாடுதல் அல்லது நடனமாடுதல் என்று பொருள். இவையும் மேற்கண்ட ஆனந்தத்தின் வெளிப்பாடுகளே. ராமமண: என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி என்று பொருள். மேலே உள்ள மற்ற சொற்களுக்கு நேரடி அர்த்தம் இருக்க முடியாது. முக்தாத்மா பைன் தம்பதிகளுக்கு எப்பொழுதும் மற்றும் எல்லா நேரங்களிலும் எல்லா வகையான சேவைகளையும் செய்கிறார் என்பதே மேற்கண்ட பத்தியின் கூட்டுத்தொகை மற்றும் பொருள்.

 

2)“ஸ: யதி பித்ரி லோக காமோ பவதி

ஸங்கல்பா தே3வ பிதர: ஸுமுத்3ஷ்டந்தி

தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ ভவதி ॥

ஸ: யதி மாத்ரு லோக காமோ பவதி

ஸங்கல்ப தேவ மாதர: ஸமுத்திஷ்டேந்தி” இத்யாதி.

முக்தாத்மா தனது தந்தையர், தாய்மார்கள் மற்றும் தனது முந்தைய பிறவிகளின் மற்ற உறவினர்களைப் பார்க்க விரும்பினால் மற்றும் விரும்பினால், அவர்கள் அவர் முன் தோன்றுவார்கள். ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்தின் போது பகவான் ஸ்ரீமன் நாராயணன் தசரதர், வாசுதேவர் மற்றும் பிறரைத் தனது தந்தையாகத் தேர்ந்தெடுத்தது போல், முக்தாத்மாக்களும் இந்த உலகில் ஸ்ரீமன் நாராயணனின் ஒப்புதலுடன் அவதாரங்கள் அல்லது அவதாரங்களை எடுக்கலாம். பின்னர் அவர்கள் தங்கள் சங்கல்பம் அல்லது விருப்பத்திலிருந்து தாய் மற்றும் தந்தையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அதிகாரத்தில் ஒரு முக்தாத்மாவின் முந்தைய பிறவிகளின் தந்தை மற்றும் தாய் போன்றவர்களின் தோற்றம் அவரது சொந்த விருப்பத்திற்கு புறம்பாக உள்ளதா அல்லது அதற்கு சிறப்பு உடல் உழைப்பு தேவையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. பூர்வபக்ஷி கூறுகிறது இந்த உலகில் நாம் பார்ப்பது போல் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு அரசன் உடல் உழைப்பைச் செய்கிறான்.

“சங்கல்ப தேவா தத் ஸ்ருதே:” என்ற சூத்திரத்தில் பூர்வபக்ஷியின் மேற்கண்ட வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா தனது சொந்த விருப்பத்தின் மூலம் சங்கல்பம் செய்கிறார், ஏனெனில் உபநிடதமே “சங்கல்பதேவ பிதர: ஸமுத் திஷ்தந்தி” என்ற பத்தியில் கூறுகிறது மற்றும் கூடுதலாக உடல் முயற்சிகள் தேவை என்று எந்த உபநிடத உரையும் இல்லை. ஒரு காரியத்தை செய்து முடிக்க சங்கல்பத்திற்கு.

இந்த அதிகாரணத்தில் “அத: ஏவ ச அனந்யாதிபதி:” என்று மற்றொரு சூத்திரம் உள்ளது. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா தனது சொந்த விருப்பப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் போது அவர் இனி விதிநிஷேதத்திற்கு ஆளாகமாட்டார். விதி என்பது ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி கட்டளையிடுவது. நிஷேதா என்பது ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டாம் என்று கட்டளையிடுவது. முக்தாத்மா விதி நிஷேதத்திற்கு உட்பட்டால், அவனால் செயல்பட முடியாது, சித்தம் வீணாகிவிடும். சித்தம் என்பது சத்ய சங்கல்பம். அவருடைய சத்ய சங்கல்பம் செயல்படத் தவறினால் அவர் முக்தாத்மாவாக இருக்க மாட்டார். எனவே அனன்யாதி பதி என்றால் சத்ய சங்கல்பம். ஒரு முக்தாத்மாவின் சத்ய சங்கல்பம் அவருக்கு முழுமையான சுதந்திரம் இல்லாததால் பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டது. இந்தச் சூழலில் ஒரு முக்தாத்மா ஸ்வராத் ஆகிறது என்று சாண்டோக்யோபநிஷத் கூறுகிறது. ஸ்வராத் என்றால் முக்தாத்மா புண்ய, பாப கர்மாவிலிருந்து விடுபடுகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம் “அபவ அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு முக்தாத்மாவுக்கு உடல் இருக்கிறதா இல்லையா அல்லது அவர் உடலுடன் இருக்க முடியுமா அல்லது உடல் இல்லாமல் இருக்க முடியுமா என்பது விவாதத்திற்கான தலைப்பு. பலவிதமான கைங்கர்யங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கு பல உடல்கள் தேவை. சூத்ரகாரர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் தன் சீடர்கள் இருவரின் கருத்துக்களைப் பெறுகிறார்.

முதலாவதாக, பதரி, உடல் முக்தாத்மாவுக்காக இல்லை என்று கூறுகிறார், ஏனென்றால் உடல் இன்பத்தையும் துக்கத்தையும் அனுபவிக்க வேண்டும், அதாவது புண்ணிய பாப கர்மாவின் பலனை அனுபவிப்பதற்காக. மோட்சத்தில் புண்ய பாப கர்மா இல்லை.

எனவே முக்தாத்மாவிற்கு உடல் இல்லை என்கிறார் பதரி.

பதரியின் பார்வையைக் கொண்ட சூத்திரம் “அபாவம் பதரி: அஹஹி ஏவம்”. அபவம் என்றால் உடல் இல்லை. இரண்டாவது பார்வை ஜைமினியின் கருத்து, முக்தாத்மா பைன் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் பல வடிவங்களில் கைங்கர்யம் செய்ய எத்தனை உடல்களை எடுத்துக்கொள்கிறது என்று கூறுகிறார்.

இது சாண்டோக்யாவின் உபநிடத உரையின்படி, “ச: ஏகத பவதி, த்ரிதா பவதி, பஞ்சத பவதி, சப்ததா பவதி போன்றவை. அதாவது முக்தாத்மா பகவான் ஸ்ரீமனுக்கு பல வகையான சேவை செய்ய ஒரு உடல், மூன்று உடல்கள், ஐந்து உடல்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அங்கே நாராயணனும் மகாலட்சுமியும். மேலே உள்ள ஸ்ருதியின் (உபநிஷத உரை) ஜீவாவை துண்டு துண்டாக வெட்ட முடியாது என்பதால், இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஜைமினியின் பார்வையைக் கொண்ட சூத்திரம் “பாவம் ஜைமினி: விகல்ப அமநாத்”. பாவம் என்றால் உடல் இருக்கிறது அல்லது முக்தாத்மாவிற்கு உடல்கள் உள்ளன, ஏனெனில் மேற்கண்ட ஸ்ருதி அப்படிச் சொல்கிறது.

மேற்கூறியவர்களின் கருத்துக்களைக் கேட்டபின், சூத்ரகாரர் தனது தீர்ப்பில் “த்வாதஷாஹ வத் உபாய விதம் பாதராயண: அத:” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா உடலுடன் இருக்க முடியும் என்றும், சத்யாகாவின் உச்சரிப்பைக் காட்டி உடல் இல்லாமல் இருக்கலாம் என்று பதராயணன் கூறுகிறார். சத்ர யாகம் என்று அழைக்கப்படும் ஒரு யாகம் உள்ளது, இது பன்னிரண்டு நாட்கள் செய்யப்படுகிறது, எனவே இது துவாதஷா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யாகம் பல நபர்களால் அல்லது ஒரு நபரால் செய்யப்படலாம். மனித குலத்தின் நலனுக்காக பலரால் நடத்தப்பட்டால் அது சாத்திரம் எனப்படும். சந்ததியைப் பெறுவதற்காக ஒரு தனி நபரால் நடத்தப்பட்டால் அது அஹீனம் எனப்படும். ஒரே யாகம் மனிதகுலத்தின் நலனுக்காக அல்லது சந்ததியைப் பெறுவதற்கான சங்கல்பத்தில் உள்ள வேறுபாட்டின் காரணமாக இரண்டு பெயர்களைப் பெறுவது போல, ஒரு முக்தாத்மா கைங்கர்யம் செய்வதற்கு உடலையோ அல்லது உடல்களையோ சொந்தமாக வைத்திருக்க விரும்புகிறது அல்லது உடல் இல்லாமல் இருக்க விரும்புகிறது. பைன் தம்பதியினரின் மங்களகரமான பண்புகளை (கல்யாண குணங்கள்) அனுபவிப்பது. இறைவன் மற்றும் அவரது துணைவியின் கல்யாண குணங்களை அனுபவிக்க உடல் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்தாத்மா கைங்கர்யம் செய்ய முடிவு செய்தால், ஒரு குறிப்பிட்ட கைங்கர்யம் அல்லது பல கைங்கர்யங்களை ஒரே நேரத்தில் செய்வதைப் பொறுத்து அவர் உடல் அல்லது உடல்களை எடுத்துக் கொள்வார்.

அடுத்த சூத்ரம் “தன்வபாவே சந்தியாவத் உபபத்தே:”. இதன் பொருள் ஒரு குறிப்பிட்ட நாளில் முக்தாத்மா உடல் இல்லாமல் கல்யாண குணங்களை அனுபவிக்க முடிவு செய்தால், பரமாத்மாவுக்கு அவரது சேவை தேவைப்பட்டால், பரமாத்மா தனது விருப்பப்படி உடலை அல்லது உடல்களை உருவாக்கி அவரை நினைவுபடுத்துகிறார். இது பரமாத்மா தனது கனவில் ஜீவா அனுபவிக்கும் பொருட்களை உருவாக்குவதைப் போன்றது. பிறகு முக்தாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கப்பட்ட அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறார்.

அடுத்த சூத்திரம் “பாவே ஜாக்ரத்வத்”. முக்தாத்மா கைங்கர்யம் செய்வதற்காக தனது உடலையோ அல்லது உடலையோ உருவாக்கும் போது, ​​இந்த உலகில் ஒரு நபர் தனது விழித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு பொருளையும் அனுபவிப்பது போல அவர் மோட்ச ஆனந்தத்தை அல்லது பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறார். ஏற்கனவே கூறியது போல், பரமாத்மா தசரதனையும், வாசுதேவரையும் அவதாரங்களின் போது தந்தையாக உருவாக்குவது போல, முக்தாத்மா பரமாத்மாவின் சங்கல்பத்திற்குள் இருக்கும் அவதாரங்களை எடுப்பதற்காக தந்தையையும் தாயையும் உருவாக்குகிறார்.

அடுத்த சூத்திரம் “பிரதீபாவத் அவேஷ: ததேஹி தர்ஷயதி”. அணு அளவுள்ள ஜீவா எப்படி மோட்சத்தில் பல உடல்களை ஏற்று கைங்கர்யம் செய்ய முடியும் என்ற சந்தேகத்தை போக்கவே இந்த சூத்திரம். ஒரு இடத்தின் ஒரு மூலையில் எரியும் ஒளியானது முழுப் பகுதியையும் ஒளிரச் செய்வது போல ஜீவா (முக்தாத்மா) தனது எல்லையற்ற தர்ம பூத ஞானத்தால் பல உடல்களை ஏற்று கைங்கர்யம் செய்ய முடியும் என்று கூறும் சூத்ரகாரரால் இந்த சந்தேகம் தீர்க்கப்படுகிறது. இதயத்தில் இருக்கும் ஜீவா தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் முழு உடலின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. அதுபோலவே பல உடல்களின் செயல்பாடுகளையும் அவர் தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறார்.

அடுத்து இன்னொரு கேள்வி எழுகிறது. பரமாத்மாவை அடைந்த பிறகு ஜீவாவுக்கு எந்த உணர்வும் இல்லை என்று ஒரு உபநிடதப் பகுதி கூறுகிறது. அப்படியானால், முக்தாத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு மோட்சத்தில் எப்படி சர்வஞானமாக (சர்வஞானம் அதாவது தர்ம பூத ஞானம் எல்லையற்றதாக) ஆக முடியும். “ஸ்வப்யாய ஸம்பத்யோ: அன்யதரபேக்ஷம் அவிஷ்கிருதம் ஹி” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர், மேற்கூறிய உபநிடதப் பகுதி முக்தாத்மாவைக் குறிக்கவில்லை, ஆனால் அது நல்ல தூக்கத்தில் இருக்கும் ஜீவா நிலை அல்லது அவர் இறக்கும் போது இந்த மரண உடலை விட்டு வெளியேறும் நிலையைக் குறிக்கிறது. சுகமான உறக்கத்தின் போது ஜீவன் பரமாத்மாவுடன் மட்டுமே இருப்பான் என்பதும், இறக்கும் போது பரமாத்மா பிரம்ம நாடி மூலம் ஜீவனை நடத்துவதும், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜீவன் எந்த அறிவும், உணர்வும் இல்லாமல் இருப்பான் என்பதும் இந்தச் சூழலில் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் மற்றும் ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள கடைசி அதிகாரம் “ஜகத் வியாபர வர்ஜாதிகர்ணம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரணத்தில், பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் நித்ய சூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் எந்தப் பங்கையும் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூத்ரகாரம் முற்றிலும் நிராகரிக்கிறது. இது பரமாத்மா அல்லது பரபிரம்மன் அல்லது வெறும் பிரம்மா என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் (அவரது மனைவிக்கும் படைப்பில் பங்கு உண்டு) பிரத்தியேகமான பண்பு. தைத்தரிய உபநிடதம் பிரம்மனை பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் என்று தெளிவாக வரையறுக்கிறது. இந்த வரையறை அல்லது பிரத்தியேகப் பண்பு வேறு யாருக்கும் பொருந்தாது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்கு ஜகத் வியாபரம் என்று பெயர்.

ஸ்ரீ வேதாந்த தேசிகா ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசரரின் பரிபூர்ண ப்ராஹ்மனு பவதி காரத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனுடைய பிரத்தியேகமான பதினான்கு பண்புகளை அடையாளம் காட்டுகிறார். ஸ்ரீமன் நாராயணன் மஹாலக்ஷ்மியையும் உள்ளடக்குகிறார். பதினான்கு குணாதிசயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை நித்யா சூரிகள், முக்தாத்மாக்கள் மற்றும் சம்சாரத்தின் அடிமைத்தனத்தில் உள்ள ஜீவர்களுக்கு பொருந்தாது.

1) ஜகத் காரணத்வா – பிரபஞ்சத்தின் காரணம்

2) மோட்ச பிரதத்வா – மோட்சத்தை வழங்குபவர்

3) சர்வ தாரத்வா – லீலா விபூதி மற்றும் நித்ய விபூதி இரண்டையும் ஆதரிப்பவர்.

4) சர்வ நியந்திரத்வா – ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துபவர்.

5) சர்வ ஷேஷித்வா – அனைவருக்கும் எஜமானர்

6) சர்வ சரிரித்வா – உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்து உயிரினங்களையும் தனது உடல்களாகக் கொண்டிருப்பதுடன், அவர் அனைத்திற்கும் ஆத்மாவாக இருக்கிறார்.

7) சர்வ சப்தவாச்யத்வா – அனைத்து வார்த்தைகளும் (சப்தாஸ்) அவருடைய பெயர்கள் மட்டுமே.

8) சர்வ வேத வேத்யத்வா – அவர் அனைத்து வேதங்களின் மூலமாகவும் அறியப்படுகிறார் அல்லது அனைத்து வேதங்களும் அவரை மட்டுமே குறிப்பிடுகின்றன.

9) சர்வ லோக சரண்யத்வா – அவர் அனைத்து லோகங்களின் பாதுகாவலர் அல்லது அவர் அனைத்து லோகங்களுக்கும் அடைக்கலம்.

10) சர்வ முமுக்ஷு உபஸ்யத்வா – மோட்சத்தை அடைய விரும்பும் அனைவராலும் தியானிக்கப்படுகிறார்.

11) சர்வ பல பிரதாத்ரித்வம் – தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்குபவர்.

12) சர்வ வியாப்தத்வா – ஒவ்வொரு பொருளையும் வியாபித்திருப்பது அல்லது உள்ளடக்கியது.

13) ஞானம், ஆனந்த ஸ்வரூபத்வா – அவரது உள்ளார்ந்த இயல்பு எல்லையற்ற அறிவு மற்றும் எல்லையற்ற பேரின்பம்.

14) லட்சுமி சகாயத்வா – மகாலட்சுமியின் மனைவி.

பூமி நீல நாயகத்வா, ஆதிசேஷ பர்யங்கத்வா, கருட த்வஜத்வா, புண்டரீக க்ஷத்வா, சில கூடுதல் பண்புகள் உள்ளன.

“நிரஞ்சன: பரமம் ஸம்ய முபைத்” (இந்த உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத முக்தாத்மா எல்லா வகையிலும் பரமாத்மாவுடன் சமத்துவம் அடைகிறான்) என்று முண்டக உபநிஷத்தின்படி முக்தாத்மா எல்லா வகையிலும் பரமாத்மாவுடன் சமமாகிறது என்று இந்த அதிகாரத்தின் பூர்வபக்ஷி கூறுகிறது. ஜகத் வியாபாரத்தில் சங்கல்பத்தின் பங்கு இருக்கும். பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் “ஜகத் வியாபர வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வச்ச” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபாரம் இல்லை. ஜகத் வியாபர என்பது அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களின் உள்ளார்ந்த இயல்பு (ஸ்வரூப) தொடர்ச்சியான இருப்பு (ஸ்திதி) மற்றும் செயல்பாடுகளை (பிரவிருத்தி) கட்டுப்படுத்துவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவு.

தத்வர்ஜம் என்றால் முக்தாத்மாவை மறைத்து சம்சாரத்தை உண்டாக்கிய புண்ணிய, பாப கர்மங்களில் இருந்து விடுபட்டு, ஜகத் வியாபரத்தில் பங்கு இல்லாமல் தனக்கு முக்த ஐஸ்வர்யமான ஸ்ரீ வைகுண்டத்தில் பரமாத்மாவை அனுபவிக்கிறார்.

ஜகத் வியாபரத்தில் அவருக்குப் பங்கு இல்லாததற்குக் காரணம் பிரகாரநாத், அதாவது பிரபஞ்சத்தின் காரணமான பர பிரம்மத்தைக் கையாளும் உபநிடதப் பகுதிகளின் சூழல். பத்திகள் ஆகும்

(அ)யதோவ ஏமாநி ভூதாநி ஜயந்தே, யேந

ஜதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்தி அபி

சம்வி சாந்தி, தத் விஜிஜ்ஞாஸக்வ தத் ப்ரம்மம்.

பிரபஞ்சத்தைப் படைத்து, அழித்து, மோட்சத்தைத் தருபவன் பிரம்மம், அது அறியப்பட வேண்டியது. இது முக்தாத்மாவிற்கு ஒருபோதும் பொருந்தாத பிரம்மத்தின் பிரத்தியேக வரையறையாகும்.

(ஆ)ஸதேவ ஸௌம்ய ஏதம் அக்ரே ஆஸீத்

ஏகமேவ, அத்விதீயம், ததைக்ஷதா பஹுஸ்யம்.

ப்ரஜா யேயேதி தத் தேஜோ அஸ்ருஜாத்

சிருஷ்டிக்கு முன், சத் என்று அழைக்கப்படும் மனைவி மகாலட்சுமியுடன் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே இருந்தான். கூடவிருந்த ஸ்ரீமன் நாராயணா மற்றும் மகாலட்சுமி இருவருமே தனி ஒருவராகவே இருந்தார்கள், இரண்டாவதாக இல்லை. இந்த நிறுவனம் விரும்பி பூதங்களை உருவாக்கியது.

(இ) ப்ரஹ்மவ ஏதம் அக்ரே ஆசீத் – சிருஷ்டிக்கு முன் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மன் இருந்தான்.

(ஈ) ஆத்மவ ஏதம் ஒப்புக்கொள் ஆசீத் – ஆத்மா சிருஷ்டிக்கு முன் இருந்த ஸ்ரீமன் நாராயணன்.

(இ) ஏகோ ஹவை நாராயண ஆசீத் – சிருஷ்டிக்கு முன் நாராயணன் மட்டுமே இருந்தான் (நாராயணன் மகாலட்சுமியையும் உள்ளடக்கியது).

மேற்கூறிய பகுதிகள் ஸ்ரீமன் நாராயணனையே பிரபஞ்சத்தின் ஒரே காரணமாகக் கூறுகின்றன. அவர் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது உபநிடதப் பகுதியில் “யா: ஆத்மனி திஷ்டன்” முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது. (குறிப்பு: இதன் பொருள் முன்பு விளக்கப்பட்டது).

அஸந்நிஹிதத்வாச்ச – மேற்கூறிய எல்லா உபநிஷதப் பகுதிகளிலும் முக்தாத்மாவைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம் “பிரத்யக்ஷா உபதேசத் ந ஏதி சேத் ந அதிகாரிக மண்டலஸ்த உக்தே:” என்று கூறுகிறது.

ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு உள்ளது என்று கூறுவதற்கு இரண்டு உபநிடதப் பகுதிகள் இருப்பதாக பூர்வபக்ஷி இன்னும் கூறுகிறது. இது மேலே உள்ள சூத்திரத்தில் எதிர்க்கப்படுகிறது.

அவருடைய கருத்து உபநிடதப் பகுதி

(அ) ​​ஸ: ஸ்வரத் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமாச்சரே பவதி.

(முக்தாத்மா முழுமையான சுதந்திரத்தைப் பெறுகிறார், மேலும் அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்).

(ஆ) எமன் லோகன்னி காமருப்யனு சஞ்சரன்

முக்தாத்மா அனைத்து லோகங்களிலும் சுதந்திரமாக பயணிக்கிறது, மேலே குறிப்பிட்டுள்ள லோகங்களின் மீதான அவரது முழுமையான கட்டுப்பாட்டின் காரணமாக ஜகத் வியாபத்தில் முக்தாத்மாவின் பங்கைக் குறிக்கிறது.

மேலே உள்ள சூத்திரத்தில், பிரத்யக்ஷ உபதேசத்ன எதிச்சேத் என்ற வார்த்தைகள் ஜகத் வியாபரத்தில் உள்ள முக்தாத்மாவை நேரடியாகக் குறிப்பிடுகின்றன, மேலும் முக்தாத்மாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது.

இது “ந அதிகாரிகா மண்டலஸ்தா உக்தே:” என்ற வார்த்தையில் மறுக்கப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் சரியல்ல, ஏனென்றால் ஆதிகாரிக மண்டலத்தில் (ஹிரண்ய கர்ப லோகங்கள், பரமாத்மாவால் இயக்கப்பட்ட பதவிகளை வகிக்கும் நான்கு தலை பிராமணன், எனவே ஆதிகாரிகா என்று அழைக்கப்படும்) முக்தாத்மா அந்த லோகங்களில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கட்டுப்பாடு அல்லது அதிகார எல்லைக்குள். இந்த கட்டுப்பாடு பரமாத்மாவின் விபூதி என்று அழைக்கப்படுகிறது. (குறிப்பு: நம் கருத்துப்படி ஸ்வராத் என்றால் புண்ய பாப கர்மாவிற்கு கட்டுப்படாதது).

இந்த அதிகாரத்தில் மூன்றாவது சூத்திரம் “விகாரவர்த்திச்ச ததாஹி ஸ்திதிம் ஆஹா”. ஹிரண்ய கர்ப்ப லோகங்கள் போன்றவற்றில் முக்தாத்மா இன்பங்களை அனுபவிக்கும் பட்சத்தில் சம்சாரத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் போல் இன்பம் வரம்பிட வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுவதே மேற்கண்ட சூத்திரத்திற்குக் காரணம். பூர்வபக்ஷியின் இந்த வாதம் மேலே உள்ள சூத்திரத்தில் மறுக்கப்படுகிறது.

விகார ஆவர்த்தி என்றால் பிறப்பு இறப்பு இல்லாதது. எனவே பரமாத்மா தானே விகாரவர்த்தி. அவர் அனைத்து விகாரங்களும் (மாற்றங்கள்) இல்லாதவர் மற்றும் களங்கமற்றவர். அவர் அனைத்து கல்யாண குணங்களின் களஞ்சியமாக இருக்கிறார். அவர் சவிபூதி ஆவார், இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களும் படைப்பு மற்றும் அழிவின் விகாரத்திற்கு உட்பட்டது, அவருடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளது. முக்தாத்மாவுக்கு மேற்கூறிய லோகங்களின் மீது கட்டுப்பாடு இல்லை ஆனால் பரமாத்மாவின் விபூதிக்குள் அவற்றைப் பார்ப்பதால் அங்குள்ள சுகங்களை மட்டுமே அனுபவிக்கிறான். இது உபநிடதப் பகுதிகளிலிருந்து தெளிவாகிறது

(அ) ​​யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந்

அத்ருஷ்யே, அனந்த்ம்யே, அனிருக்தே

அநிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே.

அத்ரிஷ்யே – பரமாத்மாவின் பயத்ம ஸ்வரூபத்தை நமது நிர்வாணக் கண்களால் உணர முடியாது. இதன் மூலம் அவர் உணர்ச்சியற்ற பொருள் அல்ல.

அநாத்மியே – பரமாத்மா தனது பயத்ம ஸ்வரூபத்தில் சரீர பிரகாரம் இல்லாமல் இருக்கிறார்.

அனிருக்தே – பயத்ம ஸ்வரூபத்திற்கு ஜாதி, மதம் அல்லது நிறம் இல்லை, எனவே அவரை தேவ, மனுஷ்ய, திரியாக் (விலங்கு) அல்லது ஸ்தாவர (உணர்வற்ற பொருள்) என்று அழைக்க முடியாது. இதன் மூலம் அவர் முக்தாத்மா இல்லை.

அணிலயனே – அவன் ஆதரவில்லாமல் இருக்கிறான், அதாவது எல்லா விஷயத்தையும் ஆதரிக்கிறான், தன்னையும் ஆதரிக்கிறான். இதன் மூலம் அவர் நித்யா சூரி இல்லை.

ப்ரதிஷ்டம் – மேற்கண்ட குணாதிசயங்களைக் கொண்ட பரமாத்மாவைத் தொடர்ந்து தியானிக்கத் தகுதியானவர்.

மேலே விளக்கப்பட்ட பரமாத்மாவை தியானிப்பவர் தியானிக்கும்போது, ​​அவரை அடைந்து மீண்டும் சம்சார பயம் இல்லாமல் இருப்பார்.

(இ) ரஸம்ஹி ஏவ அயம் லப்த்வா ஆநந்தி பவதி.

– ரசம் என்றால் பரமாத்மா தானே. முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து ஆனந்தி எனும் நித்திய ஆனந்தத்துடன் ஆகிறது.

(ஈ) தஸ்மின் லோக: ஸ்ரீத: ஸர்வே – பரமாத்மாவில் எல்லா லோகங்களும் உள்ளன.

ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு இருப்பதற்கான சாத்தியத்தை மேற்கண்ட பகுதிகள் தெளிவாக நிராகரிக்கின்றன.

இந்த அதிகாரத்தில் நான்காவது சூத்திரம் “தர்ஷயதாஷ ஏவம் ப்ரத்யக்ஷ அனுமனே”.

இந்த சூத்திரத்தில், ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு இருப்பதை நிராகரித்த சூத்ரகாரர், பகவத் கீதையில் உள்ள பல உபநிடதப் பகுதிகளையும் ஸ்லோகங்களையும் மேற்கோள் காட்டி, ஜகத் வியாபரத்தில் பரமாத்மாவுக்கு மட்டுமே முழுமையான மற்றும் தீர்க்கமான பங்கு உண்டு என்பதை தெளிவாகவும் பிரத்தியேகமாகவும் நிறுவுகிறார் (சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்). .

சூத்திரத்தில் உள்ள தர்ஷயதா என்ற வார்த்தையின் அர்த்தம் நிறுவுகிறது அல்லது காட்டுகிறது.

பிரத்யக்ஷா என்பது உபநிடதப் பகுதிகள் அல்லது ஸ்ருதியின் நூல்கள்.

அனுமனே என்றால் ஸ்மிருதியில் இருந்து வரும் ஸ்லோகங்கள், இந்த விஷயத்தில் ஸ்ரீ பகவத் கீதை. ஸ்ருதி நூல்கள் ஆகும்

(அ) ​​பீஷ ஸ்மாத் வத: பவதே, பீஷோ தேதி சூர்யா: பிஷா ஸ்மத் அக்னி ஷ இந்த்ராஷ- மிருத்யு: தவதி பஞ்சம:” – பரமாத்மாவை நோக்கிய பயத்தின் காரணமாக, காற்று வீசும் கடவுள், சூரியன் பிரகாசிக்கிறார், சந்திரன், அக்னி மற்றும் யமா தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தந்த கடமைகளை செய்கிறார்கள்.

(ஆ) ஏதஸ்யவ அக்ஷரஸ்ய ப்ரஷாஸனே கர்கி ஸூர்ய சந்த்ரமாஸ வித்ரு தௌ திஷ்டதா:- சூரியனும் சந்திரனும் அந்தந்த நிலையில் உள்ளன, ஏனென்றால் அவை பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய அக்ஷரனின் கட்டளைக்குள் உள்ளன.

(இ) ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூதாதி பதி: ஏஷ பூத பல: ஏஷசேது: விதாரண: ஏஷாம் லோகனம் ஆசம் பேதயா. (ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துபவர், எல்லா உயிரினங்களையும் காப்பவர், சம்சாரத்திற்கும் மோட்சத்திற்கும் பாலமாக இருக்கிறார், ஒன்று மற்றொன்றுடன் கலக்காதபடி அனைத்து லோகங்களையும் ஆதரிப்பவர் அவர் உயர்ந்தவர்).

ஸ்மிருதிகள் (பகவத் கீதையின் ஸ்லோகங்கள்).

அ) மாயாதக்ஷேண ப்ரகிருதி: ஸுயதே சசராச்சரம்.

(கீதா சார்யா கூறுகிறார்: “என் விருப்பத்தாலும், நான் பிராகிருதத்தின் அந்தர்யாமியாக இருப்பதாலும், ஜீவாத்மாக்களின் புண்ணிய பக்க கர்மாவைப் பொறுத்தும் இந்த உலகம் உருவாகிறது.

b)விஷ்டப்யஹம் இদம் கৃத்ஸ்னம் ஏகாம்ஷேண ஸ்திதோ ஜகத்.

கீதாச்சார்யா கூறுகையில், என்னுடைய மகத்துவத்தின் ஒரு அணுவானது முழு பிரபஞ்சத்தையும் தாங்கி நிற்கிறது.

முக்தாத்மாவின் குணாஷ்டகம் அவரது உள்ளார்ந்த இயல்பு (ஸ்வபாவிகா குணம்) என்றாலும், அது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஜீவன் பிறப்பு இறப்புக்கு உட்படாமல் நித்தியமாக இருப்பது பரமாத்மாவின் நிரந்தர சித்தத்திற்கு உட்பட்டது.

இந்த அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது சூத்திரம் “போக மாத்ரா சாம்ய லில்ங்கச்சா”.

இந்த சூத்திரத்தில், பரமாத்மா மற்றும் முக்தாத்மாவைப் பொறுத்தமட்டில் சமத்துவம் இன்பத்தின் அம்சத்தில் மட்டுமே உள்ளது என்றும் பரமாத்மாவின் பிரத்யேக செயல்பாடாக இருக்கும் ஜகத் வியாபரத்தில் இல்லை என்றும் சூத்ரகாரர் கூறுகிறார்.

முக்தாத்மா பரமாத்மாவின் உண்மையான மற்றும் உள்ளார்ந்த தன்மையை அனுபவிக்கிறது. “ச: அஷ்னுதே ஸர்வான் கமான் ஸஹ பிராமண விபச்சிதா” என்ற உபநிடத உரையிலிருந்து இந்தக் கருத்து தெளிவாகிறது. ஸ்ரீ வைகுந்தத்தில் பரமாத்மாவை அடையும் உபாசகர் அல்லது பிரபன்னா இறைவனையும் அவருடைய அருளும் பண்புகளையும் அனுபவிக்கிறார் என்பது இதன் பொருள்.

எனவே முக்தாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள பரம சம்யம் (சமத்துவம்) என்று கூறும் ஸ்ருதி உரை முக்தாத்மாவுக்கும் ஜகத் வியாபரத்துக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் விளங்க வேண்டும்.

545 வது பிரம்ம சூத்திரம் மற்றும் கடைசி பிரம்மா சூத்திரம் இந்த அதிகாரத்தில் உள்ள கடைசி சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது.

“அனவிருத்தி: சப்தத் அனவ்ரித்தி சப்தத்”.

சாரிரக மீமாம்ச சாஸ்திரம் அல்லது பிரம்ம மீமாம்ச சாஸ்திரத்தின் முடிவைக் குறிக்க சூத்திரம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. மீமாம்ச சாஸ்திரத்தில் ஒரு சூத்திரத்தில் ஒரு வார்த்தையை இரண்டு முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது ஒரு அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது என்று ஒரு மரபு உள்ளது. சூத்திரமே திரும்பத் திரும்பச் சொன்னால் அது சாஸ்திரத்தின் முடிவு.

சூத்ரகாரர் ஒரு சந்தேகத்தைத் தீர்க்க இந்த சூத்திரத்தை உருவாக்கினார்.

சந்தேகம் வருமாறு:-

ஒரு முக்தாத்மாவால் ஸ்ரீ வைகுண்டத்தில் எல்லையற்ற மற்றும் நித்திய ஆனந்தத்தை அடையும் முக்த ஐஸ்வர்யம் பரம புருஷரின் (பகவான் ஸ்ரீமன் நாராயணனின்) விருப்பத்திற்கு உட்பட்டால், பரம புருஷர் முக்தாத்மாவை எங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்க வாய்ப்பு அல்லது சாத்தியம் உள்ளது. அவர் அங்கு வந்தார். அதாவது சம்சாரத்தில் மீண்டும் ஒரு பிறவி எடுத்து துன்பம் அடைவது. இது மீண்டும் சம்சாரத்திற்கு வருவது அவ்ரித்தி அல்லது புனரவிருத்தி எனப்படும்.

இந்த சந்தேகம் இந்த சூத்திரத்தில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. அனவிருத்தி – திரும்பி வராததால்

சப்தாத் – சாண்டோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் உள்ள இறுதிப் பகுதி, முக்தாத்மா சம்சாரத்திற்கு திரும்ப வராது என்று கூறுகிறது. இந்த சூத்திரத்திற்கு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் விளக்கம் பின்வருமாறு:-

பகவான் ஸ்ரீமன் நாராயணன் மாசற்ற (நிகில ஹேய பிரத்யானிகா) மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக (கல்யாணீகதனம்), பிரபஞ்சத்தின் காரணத்தைப் போலவே (ஜகத் ஜென்மதி கரணம்) அவர் அனைத்து உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களிலிருந்து (சம்ஸ்தா வஸ்து விலக்ஷணம்) எல்லையற்ற பரிவு கொண்டவர். தனக்குச் சமமானவர்களோ அல்லது அவருக்கு உயர்ந்தவர்களோ இல்லாத (நிரஷ்ட சாம பயதிக சம்பவனா) தனக்குக் கீழ் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு (அஷ்ரித வாத்சல்ய ஏகஜலதி) கருணையின் (பரம கருணிகா) அவதாரம், பர பிராமணர் என்றும் பரம புருஷர் என்றும் அழைக்கப்படும் (நிரஸ்த சம பயதிக சம்பவனா) உபநிடதங்களில் உண்ணப்படுகிறது. பிரம்ம பிதான: பரம புருஷ, அஸ்தீதி சப்தாத் அவகம்யதே).

அதுபோலவே வர்ண ஷ்ரம தர்மம் எனப்படும் அறக்கடமைகளை அனுதினமும் செய்துவிட்டு, தியானத்துடன் இறைவனை வழிபட்டவர்களிடம் மகிழ்ந்து பகவான் ஸ்ரீமந் நாராயணர் இருக்கிறார் என்பதும் உண்மை.

(ஏவம் ஆஹ: ஆஹ: அனுஷ்டியமான வர்ணாஷ்ரம தர்மானு க்ரிஹித தது பாசனரூப தத் ஸமாராதன ப்ரீத) பழங்காலத்திலிருந்தோ அல்லது ஆரம்பிக்காமலோ திரட்டப்பட்ட வரம்பற்ற புண்ணிய மற்றும் பாப கர்மாவின் பிடியில் இருந்து அவர்களை விடுவித்து, முடிவில்லாத மற்றும் முடிவில்லாத பேரின்பத்தை அடையச் செய்தல். ) ஸ்ரீ வைகுந்தத்தில் உள்ள உள்ளார்ந்த இயல்பு அவர்களை மீண்டும் சம்சாரத்திற்கு வர அனுமதிக்காது என்பது உபநிடதப் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

(உபாஸநேன அநாதிகால ப்ரவ்ரித்த அனந்த துஷ்க்ருத கர்ம சஞ்சய ரூப அவித்யம் வினிவர்த்ய ஸ்வ யதாத்ம்ய அனுபவ ரூப அநவாதிக அதிஷய ஆனந்தம் ப்ரபய்ய புனர்ண வர்த யதி இதி சப்தத் அவகம்யதே).

தியானம் செய்பவர் அல்லது பிரபன்னன் இறக்கும் வரை இவ்வுலகில் தங்கியிருப்பவர் பிரம்ம லோகத்தை (வைகுண்டத்தை) அடைவார், திரும்ப வரமாட்டார், திரும்பி வரமாட்டார் என்பது உபநிஷத வாசகத்தின் பொருள். புனர வர்த தி எத்யாதிகா). (குறிப்பு: வார்த்தை இரண்டு முறை திரும்ப வராது என்பது பிரம்ம வித்யா அல்லது உபநிடதத்தின் முடிவைக் குறிக்கிறது.)

பகவான் கீதாச்சாரியார் அதே வரியில் கூறுகிறார், உபாசனையோ, பிரபத்தியோ செய்த மகாத்மாக்கள், உன்னதமான என்னை அடைந்த பிறகு, இந்த சம்சாரத்திற்கு மீண்டும் வரமாட்டார்கள்.

சதுர்முக பிரம்ம லோகத்திலிருந்து லோகங்களில் உள்ள ஜீவாத்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு உட்பட்டவை. ஓ! அர்ஜுனா அவர்கள் என்னை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைந்த பிறகு மீண்டும் இங்கு பிறக்க மாட்டார்கள்.

(பகவத ஸ்வயமேவ உக்தம் – மாமுபேத்ய புனர்ஜன்ம துகாலயம் ஆஷாஷ்வதம், நாப்நுவந்தி மஹாத்மனா: ஸம்ஸித்திம் பரமாம் கதா:

ஆப்ரஹ்மபுவநாத் லோகஹ் புனரவர்த்தின: அர்ஜுனா – மாமுபேத்ய து கவுந்தேய புனர்ஜனம நவித்யதே ஏதி).

மேலும், புண்ய பாப கர்மாவிலிருந்து விடுபட்டு, தர்ம பூத ஞானம் என்ற எல்லையற்ற அறிவைப் பெற்ற முக்தாத்மா, தனது ஒரே நிலையான விருப்பமாகிய பரபிரம்ம பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இன்பத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பவர். பரமாத்மாவின் எல்லையற்ற இன்பத்தைத் தவிர வேறெந்த ஆசையும், வேறு எந்த ஆசையையும் நிறைவேற்றுவதற்கு அவன் எந்த முயற்சியும் எடுக்காதபோது, ​​அவன் இந்த சம்சாரத்தில் மறுபிறவி எடுப்பதில் சந்தேகம் எழவே இல்லை.

(நச்ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சம்குச்சித ஞானஸ்ய பரப்ரஹ்மனே பவ ஸ்வபாவைகஸ்ய ததேக ப்ரியஸ்ய அநவாதிகதி சயானந்தம் ப்ராஹ்மனு பவதா: அன்யா அபேக்ஷா த தர்தா அ ஸம்பவத் புனர் அவ்ரித்தி சங்கா).

அதே சமயம் தனக்கு மிகவும் பிரியமான ஞானியான முக்தாத்மாவைப் பெற்ற பிறகு அசைக்க முடியாத சித்தம் கொண்ட பரம புருஷரான ஸ்ரீமன் நாராயணனை மீண்டும் சம்சாரத்திற்கு அனுப்ப நினைக்க மாட்டார்.

(குறிப்பு: இங்கு மிகவும் அன்பான ஞானி என்பது பரமாத்மாவை எப்போதும் தனக்கு ஆதரவாகவும், ஊட்டமளிப்பவராகவும், ஆழ்ந்த இன்பப் பொருளாகவும் கருதுபவர் என்று பொருள்).

(நச்ச பரம புருஷ சத்ய சங்கல்ப: அத்யர்த ப்ரியம் ஞானினம் லப்த்வா கதாசித் அவர்த யிஷ்யதி).

பகவான் கீதாச்சார்யா ஒரு ஞானியிடம் நான் மிகவும் பிரியமானவன், ஞானியும் எனக்கு மிகவும் பிரியமானவர் என்று கூறுகிறார். என்னிடம் பக்தி செய்பவர்கள் மிகவும் தாராளமானவர்கள். ஆனால் ஞாநியை எனது ஆதரவாளராகவே கருதுகிறேன். நான் இல்லாமல் ஞானி இருக்க முடியாது என்பதால் அவர் என்னை அடையும் உயர்ந்த பொருளாக கருதுகிறார். ஞானி பல பிறவிகளுக்குப் பிறகு என்னை அடைந்து ஒவ்வொரு பொருளையும் வாசுதேவாக நினைக்கிறார்.

(ப்ரியோஹி ஜ்ஞாநிந அத்யர்தம், அஹம் மம சச்ச ப்ரிய:

உதாரா: ஸர்வ ஏவைத் கணீது ஆத்மாவ மேமதம்

அஸ்থிதঃ ஸஹி யுக்தம மாமேவ அநுத்தமம் গதிம் ॥

বஹூநாம் ஜன்மனம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபদ்யதே

வாசுதேவ: ஸர்வம் ஏதி ஸமாஹாத்மா ஸுதர்லப: ஏதி).

சூத்திரத்தின் மறுபிரவேசம் இந்த சாரிரக மீமாம்ச சாஸ்திரத்தின் முடிவைக் குறிக்கிறது மற்றும் இந்த சாஸ்திரத்தில் உள்ள ஒவ்வொரு விஷயமும் பொருத்தமானது அல்லது சரியானது.

எனவே மிகவும் புனிதமான உரை ஸ்ரீ பாஷ்ய மேற்கூறியவற்றுடன் முடிவடைகிறது.

ஏற்கனவே கூறியது போல், ஸ்ரீ பாஷ்யம் சமன்வய அத்யாயா, அவிரோதா அத்யாயா, சாதனா அத்யாயா மற்றும் பலா அத்யாயா என்று நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இந்த நான்கு அத்தியாயங்களும் ஸ்ரீமன் நாராயணனின் நான்கு கல்யாண குணங்களைக் குறிப்பிடுகின்றன, அவை கீழே உள்ளன.

காரணத்வம் – பிரபஞ்சத்தின் காரணம்.

அபத்யத்வம் – அவர் பிரபஞ்சத்தின் காரணமாக இருப்பதில் பொருத்தமற்ற அல்லது ஆட்சேபனைக்குரிய எதுவும் இல்லை.

உபயத்வம் – அடையும் பொருள்

உபேயத்வா – அடையும் பொருள்.

பதினாறு பாதங்களில் குறிப்பிடப்பட்ட கல்யாண குணங்களும் முன்பு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் அதிகார சாராவளியில் இந்த அதிகாரங்களில் உள்ள ஸ்ரீமன் நாராயணனின் 156 அதிகாரங்களும் கல்யாண குணங்களும் உள்ளன.

ஸர்வேஷாம் ஸமஸ்தா ஸந் மங்গலாநி ভவந்து ।

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியா

 

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்-ஸ்ரீ பாஷ்ய கட்டமைப்பு –அதிகார பாத அதிகாரண விவரம் -உபோத்காத சதுர் அதிகரணம் —

May 27, 2023

ஶ்ரீராமானுஜர் காயத்ரி

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)

ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).

ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)

ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)

நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)

மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்

ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு

இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –

உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது

பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-

பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்

அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –

2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –

கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –

3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன

4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன

அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்

இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு

1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்

1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்

1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்

1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்

————

இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –

ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-

2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –

2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –

2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –

————–

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –

1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –

1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்

1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –

1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்

1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

——-

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்

1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்

———

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்

2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்

2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்

2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்

————–

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்

2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்

2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்

2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்

2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –

2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –

ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –

3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –

———

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –

கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்

3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

———–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –

பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்

3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

 

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-

————

நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்

3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்

3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

———-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–

4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—

4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–

4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-

4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –

4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –

4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–

4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–

4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-

4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-

4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–

———–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-

————–

நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-

——–

அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-

அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு

ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்

ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷

மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்

————–

அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி

இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –

ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து

என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்

பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன

இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே

2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது

இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-

ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்

ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்

ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே

குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை

ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே

2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே

2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி

ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்

பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்

ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்

ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –

ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன

2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன

2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்

ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்

ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்

இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்

சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா

ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை

சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை

ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்

தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-

சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்

——–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது

———-

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

February 28, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதி ஶத சஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி பிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ் ஸர்வாந் வ்யாஸ ரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணி யருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில்

இதனை *ஆதௌ ஶாரீரகார்த்த க்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டி யருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐக கண்ட்யத்தில் வாதி கேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டி யருளி யுள்ளார்.

இவை யனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வ பரமாயும், உபாஸந பரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம் தான் இருப்பது; அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸந பரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-

இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

—————

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்த மய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –

பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –

அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ் யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும் கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-

ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-

அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-

கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ர ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது எழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரண அர்த்தம்

இப் பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ–கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலே லக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவ ஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந் யதிகரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது எழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீயம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது எழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

—————–

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகரணங்களில் –ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தோற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்

ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ் வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவ வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –

சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்ம வஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்ம க்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்ம க்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில் –

சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அசித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் உடையன் அல்லன் என்றும்
நிஸ்ஸமாப்யதிகன் என்றும் அருளிச் செய்கையாலே

புண்டரீகாக்ஷத்வ அபஹத பாப்மத்வாதி தர்ம யோகத்தால் நிஸ்சமாப்யதிகனான ஆதித்ய மண்டல அந்தரவர்த்தியான
புருஷன் விலக்ஷண ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்தித்த அந்தராதிகரணார்த்தம் இச்சந்தையிலே ஸூசிதம் –

ஆனால் ஈஷத் யதிகரண ப்ரமேயமான அசித் வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்யாதே ஆனந்த மயாதிகாரண ப்ரமேயமான
ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்கைக்கு அடி என் என்னில் –

பிரதான ஜீவா வ்யாவ்ருத்திகளில் பிரதான வ்யாவ்ருத்தி ஸூஷ்ம புத்திகளுக்கு எளிதாய்
அறியப்படும் ஆகையால் அவர்களுக்கு அறிக்கைக்கு அரிதான ஜீவ வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்தார் –

ஆனால் ஸூத்ர காரர் பிரதான வ்யாவ்ருத்தியை முந்துறச் சொல்லுவான் என் என்னில்

அசித் வ்யாவ்ருத்தியையும் அறிய மாட்டாத எளியரானவர்களுக்கு முந்துற தத் வ்யாவ்ருத்தியைக் காட்டி அவ்வளவு தெளிவு பிறந்தவனுக்கு அநந்தரம் அதிலும் ஸூஷ்மான சேதன வ்யாவ்ருத்தியைக் காட்டினார் –
ஆகையால் ஆழ்வார் அருளிச் செய்கைக்கு ஒரு க்ரமமும் ஸூத்ரகாரருக்கு மற்றப்படி ஒரு க்ரமமும் விவஷிதம் ஆகையால் இவ்விரண்டுக்கும் விரோதம் இல்லை –

ஆனால் அசித் வ்யாவ்ருத்தி ஸ்புடமாய் இருந்ததாகில் பொறி யுணர்வு அவையிலன் -என்று ஆழ்வார் அசித் வ்யாவ்ருத்தியை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஷ்டாந்த ரூபேண அருளிச் செய்தாராம் அத்தனை –
ஆகையால் இறே பிள்ளை -அசேதன வ்யாவிருத்தியோ பாதியும் சேதன வ்யாவ்ருத்தி என்கைக்காக பொறி  யுணர்வு அவையிலன் -என்று அருளிச் செய்தார் என்று த்ருஷ்டாந்த பரமாக வ்யாக்யானம் செய்து அருளினார் –
ஆகையால் மனனகம் என்கிற பாட்டும் இவ்வதிகரண த்வயமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

இலனது உடையனிது என்கிற மூன்றாம் பாட்டு ஆகாசாதிகரணம் தொடங்கி அதிகரண சதுஷ்டய சமாநார்த்தம் என்னுமிடத்தை தெளிய அறிவிக்கிறோம் –
ஆகாசாதிகரணத்தில்-சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஆகாச சப்தமாய்த் தோற்றுகிற
ஜகத் காரண வஸ்து பிரசித்த ஆகாசமேயாக வேணும் –

ஆகாச சப்தம் பிரசித்த ஆகாசத்தில் ரூடமாகையாலும் பரமாத்மாவினிடத்தில் ஆகாச சப்த வாச்யத்வம் அப்ரஸித்தமாகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்-

சர்வ சப்தத்தால் சொல்லப் படுகிற சேதன அசேதன க்ருத்ஸ்ன பிரபஞ்ச காரணத்வம் என்ன -பராயணம் என்று சொல்லப்படுகிற ப்ராப்யத்வ ப்ராபகங்கள் என்ன – இவை இத்தனையும் பிரசித்த ஆகாசத்துக்கு கூடாமையாலும் பரமாத்மாவுக்கே இது உள்ளது ஓன்று ஆகையால் ஆகாசதே ஆகாசயதி-என்கிற வ்யுத்பத்தியாலே ஆகாச சப்தம் பரமாத்மாவினிடத்திலும் கூடுகையாலும் ஆகாச சப்த வாஸ்யம் பிரசித்த ஆகாசம் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பிராணாதிகரணத்திலே-சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -இத்யாதி வாக்கியத்தில் பிராண சப்த வாஸ்யமான
ஜகத் காரண வஸ்து பிரசித்த பிராணனாக வேணும் -சர்வ வஸ்துவும் பிராணாதி நஸ்திதிகமாககே காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –

சிலாகாஷ்டாத்ய சேதனங்களிலும் சேதன ஸ்வரூபத்திலும் பிராணாதி நஸ்திதிகத்வம் கூடாமையாலே சர்வ ஜகத் காரணத்தையா நிர்திஷ்டமான பிராணன்
பிரசித்த பிராணன் அல்லன் -பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஜ்யோதிர் அதிகரணத்தில் -அத யதத பரோதிவோ ஜ்யோதிர் தீப்யதே -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாக வேணும்
ஸ்வ வாக்கியத்தில் பரமாத்மா வ்யாப்த லிங்க விசேஷம் காணாமையாலும் கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசத்தாலும்-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

சர்வ பூதங்களும் த்யுசம்பந்தியான ஜ்யோதிஸ் ஸூக்குப் பாதமாக வ்யபதேசிக்கையாலும் -கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசம் பளார்த்தமாக தாதாத்மகத்வ அநுசந்தான விதி பரமாகையாலும் நிரதிசய தீப்தி யுக்தமான ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்த ஜ்யோதிஸ் ஸூ அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

இந்த்ர பிராணாதிகரணத்தில் –பிரானோஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாமாயுரம் ருதமித்யுபாஸ்வ-இத்யாதி வாக்கியங்களில் ஹித தமோபாசன கர்மதயா நிர்திஷ்டனான இந்திரன் ஜீவனாக வேணும் –

இந்த்ர பதம் ஜீவ விசேஷத்திலே ரூடமாகையாலும் மாம் உபாஸ்வ என்று ஸ்வ ஆத்ம உபாசனத்தை அம்ருதத்வ பிராப்தி சாதனமாக
உபதேசிக்கையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –

ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டன் இடத்தில்
ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யம் அந்வயிக்க வேண்டுகையாலும் –
மாம் உபாஸ்வ என்று ஸ்வ சரீரக பரமாத்மா உபாசனத்தை விதித்தது ஒழிய கேவல ஜீவ உபாசனை விதி இல்லாமையாலும் ஹித தம உபாசன கர்மத்தயா
நிர்திஷ்டனான சேதனன் இந்திரன் அல்லன் – ஜகத்காரண பூதனான பரமாத்மா என்று நிர்ணயிக்கப் பட்டது –

இனி இலனது உடையனது என நினைவரியவன் -என்று தூரஸ்தமாய் இருப்பது ஒன்றைக் காட்டி
அத்தை உடையன் அல்லன் -சன்னிஹிதமாய் இருப்பது ஒன்றைக் காட்டி இத்தை யுடையவன் என்று நினைக்கவும் கூட அரியன் என்று சொல்லி –
நிலனிடை விசும்பிடை உருவினன் -என்று பூமி அந்தரிஷாதி சர்வ தேச வர்த்திகளான சர்வ சேதன அசேதனங்களையும் உடையவன் என்று அருளிச் செய்கையாலே
சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி –என்றும்
சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -என்றும்
பாதோஸ்ய சர்வா பூதாநி -இத்யாதி வாக்கியங்களில் உள்ள பிரசித்த ஆகாச பிராண ஜ்யோதிஸ் ஸூக்களுக்கு கடியாதபடியான
நிகில சேதன அசேதன காரணத்வ பிரகாரித்தவாதிகளை இவரும் வெளியிட்டு அருளினார் –

உருவினன் அருவினன் -என்று சித் அசித்துக்களுக்கு சேஷி என்று அர்த்தம் ஒழிய பிரபஞ்ச காரகத்வம் அர்த்தம் அன்றே என்னில்-
கார்யத்வமும் தத் சேஷத்வ பிரகாரமாகையாலே சேஷத்வ கதனத்தாலே ஜகத்துக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சித்திக்கும் என்று உபஸர்ஜனத்வ ரூப சேஷத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனால் கார்ய காரண பாவேந சொல்லாமல் சம்பந்த சாமான்யாவ லம்பனம் பண்ணுவான் என் என்னில்
பாதோஸ்ய சர்வா பூதாநி -என்று ஜ்யோதிரதிகரண யுக்தமான ஜகத் சேஷித்வமும் சங்க்ருஹீதமாக வேணும் என்னும் கருத்தாலே அருளிச் செய்தார் –

ஆகையால் இவ்வதிகரண த்ரயத்துக்கும் இச்சந்தைக்கும் சமா நார்த்தவம் சித்தம்

அந் நலனுடை ஒருவனை -என்று அந்த ஆனந்த குணத்தையுடைய அத்விதீயன் என்கையாலே ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டனுக்கு ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யத்தாலே பரமாத்மாவை சாதித்த அர்த்தம் இச்சந்தையிலே ஸூசிதமாகையாலே இச்சந்தை இந்த்ர பிராணாதிகரண அர்த்தம் ஆகலாம் –

கிஞ்ச–நணுகினம் நாமே -நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று உபாசன பலமான ப்ராப்யத்வ கதந முகேந பரமாத்மாவினுடைய உபாஸ்யத்வத்தை ஸூசிப்பிக்கையாலே –
தம்மாமாயுர அம்ருதம் இத்யுபாஸ்வ-என்கிற இந்த்ர பிராண சப்த வாச்யனுக்குப் பரமாத்மத்வ சாதகமான உபாஸ்யத்வ ப்ரதிபாதக வாக்ய சமா நார்த்தகம்
இச்சந்தை என்று அறியலாம் -இப்படி மூன்று பாட்டும் அந்நாலதி கரணமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

ஆம்னாய மௌளி யுகளீ விஹாராணாம் சதாம் முதே நிரூபிதாஸ் அத்ய பாதஸ்ய காதாத்ரய சாமார்த்ததா —

இதி ஆத்யபாதகா தாத்ராயைக கண்ட்யம்-

நாலாம் பாட்டு தொடங்கி மேல் மூன்று பாட்டுக்களுக்கும் த்ரிபாதிக்கும் ஐகார்த்யம் உபபாதிக்கப் படுகிறது –
அதில் முதலிலே த்வதீய பாதமும் நாலாம் பாட்டும் ஏக கண்டமான படியை உபபாதிக்கப் படுகிறது –
த்வதீய பாதத்துக்குப் பொருளான ஜகத் சரீரத்வத்தை இப்பாட்டிலும் ஆழ்வார் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் உண்டு –
த்வதீய பதார்த்தம் ஜகத் சரீரகத்வம் என்னும் இடத்தை -த்வதீயே ஜகத் சரீரகத்வம் என்று ஸ்ருத பிரகாசிகையிலும் –
ஸ்ரஷ்டா தேஹி ஸ்வ நிஷ்டோ நிரவதி மஹிமா -என்று பிரதம அத்யாய பாத சதுஷ்ட்யத்துக்கும் அடைவே பொருள் சொல்லும் இடத்தில்
த்வதீய பாதத்தின் பொருளை தேஹீ என்று சாராவளியிலும் ஸ்ரீ மத் ஸூதர்சன பட்டரும் ஸ்ரீ மத் வேங்கட நாதரும் அருளிச் செய்தார்கள் –

இனி த்வதீய பாத பிரதம அதிகரணத்திலே –
சர்வம் கல்விதம் பிரம்மா தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -என்கிற சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் உபதிஷ்டமான
ப்ரஹ்மம் ஜீவனாக வேணும் –

நிர்துஷ்டனான பரமாத்மாவுக்கு ஹேயாகரமான சித்த அசித் ரூப சர்வ பாவம் கூடாமையாலும் தேவ மனுஷ்யாதி ரூபேண
கர்மக்ருதமாக ஜீவனுக்கு சர்வாத்ம பாவம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வருமளவில் –

சர்வ வேதாந்த பிரசித்தமான சர்வ ஜகத் காரணத்வத்தை உபதேசிக்கையாலும் –
தஜ்ஜத்வ தல்லத்வ ததன்வங்களாலே ப்ரஹ்மத்துக்கே தாதாம்யம் உபபன்னம் ஆகையால் -தேவ மனுஷ்யாதி பாவேந ஜீவனுக்குத் தாதாம்யம் உண்டானாலும் அவனுக்கு ஜகத் காரணத்வம் கூடாமையாலும்–ப்ரஹ்ம சப்த வாச்யன் ஜீவன் அல்லன்-சர்வ ஜகத் சரீரதயா சர்வ சப்த வாச்யனான பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்வதீய அதி கரணத்திலே —
ஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந –ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஓதந உபசேசன ஸூ சிதனான அத்தா ஜீவனாக வேணும் –
போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் ஆகையாலும்-ஜீவனுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும் என்று பூர்வபக்ஷம் வருமளவில் –

சராசர ரூப க்ருத்ஸ்ன ஜகதத்ருத்வம் ஜகத் சம்ஹார கர்த்ருத்வம் ஒழிய கர்ம நிமித்த போக்த்ருத்வம் அல்லாமையாலும்

தாதருச சம்ஹார கர்த்ருத்வம் பரமாத்மா தர்மமாகையாலும்
இவ்வாக்கிய ப்ரதிபாத்யன் ஜீவன் அல்லன் –பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில்–
ய ஏஷோ அந்தரஷிணி புருஷ த்ருஸ்யதே-என்கிற சாந்தோக்யத்தில் அக்ஷய ஆதாரதயா நிர்திஷ்டனான புருஷன் ப்ரதிபிம்ப ஜீவா தேவதா விசேஷங்களில் அந்நிய தமனாக வேணும் –
ப்ரஸித்தவ நிர்தேசத்தாலும்-த்ருஸ்யதே -இதய ப்ரோஷ அபிதானத்தாலும் பிரதிபிம்பம் ஆகலாம் –
ஜீவனுக்குச் சஷூஸ்சிலே விசேஷ ஸந்நிதானம் உண்டாகையாலே ஜீவன் தான் ஆகலாம் – ரஸ்மிபி ரேஷோ அஸ்மின் ப்ரதிஷ்டித என்கிற ஸ்ருதி பிரசித்தியாலே
சஷூஸ் ப்ரதிஷ்டித தேவதா விசேஷம் தானாகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹமேத்யாசஷதே -இத்யாதி வாக்யத்தால் ப்ரதிபன்னமான கல்யாண குணங்கள் பரமாத்மாவுக்கே யுள்ளது ஒன்றாகையாலும்
யஸ் சஷூஷி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதி பிரசித்தமான சஷூர் வர்த்தித்வத்தை -ஏஷோ அஷிணி என்று பிரசித்தவந் நிர்தேசிக்கையாலும் –
த்ருஸ்யதே இத்ய அபரோக்ஷ அபிதானம் யோகி த்ருஸ்யத்வ அபிப்பிராயம் ஆகையாலும் ப்ரதிபிம்பாதிகளுக்கு நியமேந சஷூர் வர்த்தித்தவம் இல்லாமையாலும்
அஷி புருஷன் ப்ரதிபிம்பத்திகளில் அந்நிய தமன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருதிவீ சரீரம் -இத்யாதி வாஜசநேயக வாக்ய ச்ருதனான அந்தர்யாமி ஜீவனாக வேணும் –
வாக்ய சேஷத்திலே கரணாயத்த ஞானம் அந்தர்யாமிக்கு ச்ருதமாகையாலே -என்று பூர்வபக்ஷம் வருமளவில்

ஒருவனே சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் நியமிக்கிறார் என்கிற இது பரமாத்மா அசாதாரண தர்மமாகையாலும் -த்ரஷ்டா ஸ்ரோதா என்று ரூபாதி சாஷாத்காரத்தைச் சொல்லுகிறது ஒழிய கரணாயத்த ஞானவத்தைச் சொன்னது அல்லாமையாலும் அந்தர்யாமி ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஐந்தாம் அதிகரணத்தில் –
யத்த தத் ரேஸ்யமக்ராஹ்யம் -இத்யாதி வாக்யத்திலும் -அஷராத் பரத பர-என்கிற வாக்யத்திலும் ப்ரதிபன்னமான அத்ருஸ்யத்வாதி குணகமும் அஷராத் பரத பரனும் பிரகிருதி புருஷர்கள் ஆக வேணும் -அசேதன ப்ருதிவ்யாதிகதமான த்ருஸ்யத்வாதி ப்ரதிஷேதம் தத் சஜாதீய பிரதானத்தில் உசிதம் ஆகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு உசிதம் ஆகையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதி வாக்கியங்களில் அத்ருஸ்யத்வாதி குணக வஸ்துவுக்கு சர்வஞ்ஞத்வாதி குணங்கள் ஸ்ருதமாகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு கடியாமையாலும் இவ்விரண்டு வாக்யத்திலும் ப்ரக்ருதி புருஷர்கள் ப்ரதிபாத்யர் அல்லர் பரமாத்மாவே ப்ரதிபாத்யன் என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் —
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் யேஷி -இத்யாதி வாக்கியத்தில் ச்ருதனான வைச்வா நரன் பரமாத்மா என்று நிர்ணயிக்க ஒண்ணாது –
வைச்வா நர சப்தத்தை ஜாடராக்னி என்ன பூத த்ருதீயம் என்ன தேவதா விசேஷம் என்ன இவைகளில் பரமாத்மாவிலும் வேதம் பிரயோகிக்கையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்று உபக்ரமத்திலே சர்வாத்ம பூத பர ப்ரஹ்ம ஜிஜ்ஞாசயா உபசன்னரான ஓவ்ப மன்யவாதி முமுஷூக்களைக் குறித்து உபதேசிக்கப் படுகையாலும்
பரமாத்ம தர்மமான த்யுப்ரப்ருதி ப்ருதிவ்யந்த ஜகச் சரீரத்வம் ஸ்ருதம் ஆகையாலும் ஜாடராக்னியாதிகளில்
இஸ் சப்த பிரயோகம் உண்டானாலும் இவ்விடத்தில் வைச்வா நரன் பரமாத்மாவே என்று நிர்ணயிக்கப் பட்டது –

இப்பாத அர்த்தமான ஜகச் சரீரத்வம் பிரதம அதிகரணத்திலே -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்கிற விஷய வாக்யத்திலே காணலாம் –

த்வதீய அதிகரணத்தில் -குஹாம் ப்ரவிஷ்டவ் -இத்யாதி ஸூத்ர விஷயமான -தம் துர்தர்சம் கூடமநு ப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் இத்யாதி வாக்யத்திலே ஸுபரியைப் போலே ஜகத்து ஞானா திஷ்டித சரீரம் அன்று -ஸ்வரூபத்தாலே சர்வ சரீரங்களிலே ஹ்ருதய குஹ ப்ரவிஷ்டனான பரமாத்மாவுக்கு சரீரம் என்று சொல்லப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் -ய ஏஷோ அஷிணி புருஷ த்ருஸ்யதே -என்கிற விஷய வாக்யத்திலே இந்திரியங்களுக்கும் பரமாத்மா சரீரத்வம் சொல்லப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் -கேவலம் இந்த்ரியங்களே அல்ல ப்ரத்யேகம் சர்வ தத்துவங்களும் பரமாத்மா சரீரம் என்று சொல்லப் பட்டது

பஞ்சம அதிகரணத்தில் சர்வ தத்துவங்களும் சமுதாய ரூபத்தாலும் ப்ரஹ்ம சரீரம் என்று ரூபோபந் யாசாத் -என்கிற ஸூத்ரத்திலே சொல்லப் பட்டது

ஷஷ்ட்டி அதிகரணத்தில் ஜகச் சரீரத்வம் முமுஷூ உபாஸ்யம் என்று பிரபஞ்சிதம் –

இப்படி ஷட் அதிகரணியான இப்பாதத்தில் சொல்லப்பட்ட ஜகச் சரீரத்வத்தை ஆழ்வாரும்
நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் அவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது எது வீமவை இவை யுவை
அவை நலம் தீங்கவை ஆமவையாயவை ஆய் நின்ற அவரே -என்று -தம்தாமாயும்-அஸந்நிஹிதனாயும்-சந்நிஹிதனாயும்-அதூர-விப்ர க்ருஷ்டனாயும் இருந்துள்ள புருஷன் என்ன –
தூர வர்த்திநியாயும்-சந்நிஹிதையாயும்-அதூர-விப்ர க்ருஷ்டையாயும் -வினவப் படுகிறவளாயும் இருந்துள்ள ஸ்த்ரீ ஜாதி என்ன –
பஹுமந்தவ்யரில்-அவர் என்றும் இவர் என்றும் உவர் என்றும் சொல்லப் போடுகிறவர்கள் என்ன அது இது உத்து எது என்று நபும்சக லிங்க நிர்திஷ்டமான வஸ்துக்கள் என்ன –
நச்வர பதார்த்தங்கள் என்ன -நல்லதாயும் தீயதாயும் இருந்துள்ள வஸ்துக்கள் என்ன இவை இத்தனையுமாய்
காலத்ரய வர்த்தியான பதார்த்தங்களுமாய் இருக்கிற பூர்வோக்தரானவர் -என்று சாமாநாதி கரண்யத்தாலே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் யுண்டான சரீராத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே இப்பாட்டுக்கு த்விதீய பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம் –
————-
அவரவர் தமதமது -என்கிற ஐந்தாம் பாட்டுக்கு த்ருதீய பதைகார்த்யம் உண்டான படி என் என்னில்
த்ருதீய பாதத்தில் ப்ரதிபாத்யமான சர்வாத்மத்வ பிரகாரத்தை இதிலும் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு –

இப்பாதார்த்தம் சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடத்தை –த்ருதீயே சர்வாத்மத்வ பிரகார -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –

இப்பாதத்தில் பிரதம அதிகரணத்திலே —
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனாஸ் சக பிராணைஸ் ச சர்வை -இத்யாதி அதர்வணிக வாக்கியத்தில் ஸ்ருதனான த்யுப்வாத்யாயதநன் ஜீவனாக வேணும்
மன பிராண சம்பந்த நாட்ய ஆதாரத்வ பஹுதா ஜாயமானத்வாதிகளாலே -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

அம்ருத ஹேதுத்வ ஆத்மத்வ சர்வஞ்ஞத்வாதி தர்ம வாசக பரமாத்மா அசாதாரண சப்தங்களாலே நிர்தேசிக்கையாலும்
சர்வ ஆதாரனுக்கு மன பிராண நாட்ய ஆதாரத்வம் கூடுகையாலும்
ஜச்சமான பஹுதா ஜாயமானத்வம் இவனுக்கும் உண்டாகையாலும் த்யுதிவாத்யாயதனன் ஜீவன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்விதீய அதிகரணத்தில் –
யத்ர நான்யத் பஸ்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான பூம குண விசிஷ்டன் ஜீவனாக வேணும்
தரதி சோகமாத்மவித் -என்று ஆத்ம ஜிஜ்ஞாசயா உபசன்னனான முமுஷூவுக்கு பிராண ஸஹ சாரித்த்வ நிபந்த நேந பிராண சப்த நிரதிஷ்டனான ஜீவனிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தமாகையாலும்
அந்த ஜீவனுடைய முக்த அவஸ்தையில் ஆனந்த வைப்புலயத்தை பூமா சப்தத்தால் நிர்தேசிக்கையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யஸ் சத்யே நாதிவததி -என்கிற வாக்கியத்தில் சத்யா சப்தத்தாலே ஸ்ருதனான பரமாத்மாவினிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தம் ஒழிய
பிராண சப்த வாஸ்ய ஜீவ உபதேசத்தில் ஸமாப்த்தம் இல்லாமையாலும் -பரமாத்மாவினுடைய ஆனந்த வைபுல்யத்தை பூம சப்தத்தால் சொல்லுகையாலும்
பூம குண விசிஷ்டன் ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் —
ஏதத் வை ததஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி –இத்யாதி வாஜசநேய வாக்கியத்தில் ச்ருதமான அக்ஷரம் பிரதான ஜீவர்களாக வேணும்
அஷராத் தமஸி லீயதே –இத்யாதி ஸ்ருதிகளிலே பிரதான ஜீவர்களிலும் அக்ஷர சப்த பிரயோகம் காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

த்ரை கால்ய வர்த்தி விகார ஜாதாத ஆதார பூத ஆகாச சப்த வாஸ்ய பிரதான ஆதாரத்வத்தாலும்
பிரசாசன ஸ்ரவணத்தாலும் அக்ஷர சப்த நிர்திஷ்டம் பிரதானமும் அன்று ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் –
பரம் புருஷன் அபித்யாயீத-என்று தொடங்கி -புரிசயம் புருஷம் ஈஷதே-என்கிற வாக்கியத்தில் த்யாய ஈஷதி கர்மதயா நிரதிஷ்டனான பரம புருஷன் சதுர்முகனாக வேணும் –
மனுஷ்ய லோகத்துக்கும் அந்தரிக்ஷத லோகத்துக்கும் உபரிதனமான ப்ரஹ்ம லோகத்தில் -ஈஷணீ யத்வாதி லிங்கத்தாலே என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்

யத்தச்சாந்தம் அஜ்ரமம் அம்ருதம் அபயம் –இத்யாதி வாக்கியத்தில் சாந்தத்வ அஜரத்வ அம்ருதத்வாதி தர்மங்கள் ச்ருதமாகையாலும்
சர்வ பாப நிர்முக்தனான முக்தனுக்கு ப்ராப்யதயா யுக்தமான ப்ரஹ்ம லோகம் சதுர்முக ஸ்தானம் இல்லாமையாலும்
யத்தத் கவயோ வேத யந்தே-என்று கவி சப்த வாஸ்யரான நித்ய ஸூரி களாலே துருஸ்யமான வைஷ்ணவ பதத்தை ப்ரஹ்ம லோக சப்தத்தாலே நிர்தேசிக்கையாலும்
தத்ரயனானவன் சதுர்முகன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பஞ்சம அதிகரணத்தில் –
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச -இத்யாதி சாந்தோக்ய வாக்ய ஸ்ருதமான ஹ்ருதய புண்டரீக மத்திய வர்த்தி தகர ஆகாசம் பூத ஆகாசமாதல் ஜீவன் ஆதலாக வேணும்
பூத ஆகாசத்தில் ஆகாச சப்த பிரசித்தி பிராஸுர்யத்தாலே பூத ஆகாசம் ஆகலாம் -பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்ருதமாகையாலும்
ப்ரகாசாதி யோகத்தால் ஆகாச சப்தம் ஜீவன் இடத்தில் கூடுகையாலும் ஜீவன் தான் ஆகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

அபஹத பாப்மாத்வாதிகள் பூத ஆகாசத்துக்கு கடியாமையாலும் -பிரஜாபதி வாக்கியத்தில் ஸ்ருதமான பரமாத்ம சம்பத்தி லப்த அபஹத பாப்மத்வாதிகள் ஜீவனுக்கு உண்டானாலும்
தஹர வாக்ய யுக்த அதிரோஹித நித்ய சித்த அபஹத பாப்மத்வாதி வைசிஷ்ட்யம் ஜீவனுக்கு கூடாமையாலும்
பரமாத்மாவினிடத்திலும் ஆகாச சப்த பிரயோகம் சுருதியந்தர சித்தமாகையாலும் தஹர ஆகாசம் பிரசித்த ஆகாசமும் அன்று -ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட அதிகரணத்தில் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்திய ஆத்மநி திஷ்டதி -இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஸ்ருதனான அங்குஷ்ட பிரமித்தான் ஜீவனாக வேணும் –
அங்குஷ்ட ப்ரமிதத்வம் ஜீவனுக்கு சுருதியந்தர சித்தமாகையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

பூத பவ்ய ஈஸா நத்வம் ஜீவனுக்கு அநு பன்னம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கே உள்ளது ஓன்று ஆகையாலும் அங்குஷ்ட பிரமிதன்
ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது

சப்தம அஷ்டம நவம அதிகரணங்களில் –
ப்ரஹ்ம வித்யையிலே அதிகார அநதிகார விசாரம் ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தம் ஆயிற்று –

தசம அதிகரணத்தில் –
ஆகாசோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான ஆகாச சப்த வாச்யன் முக்தாத்மாவாக வேணும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்-இத்யாத்ய அனந்தர வாக்யத்திலே முக்தன் ப்ரக்ருதன் ஆகையாலும்
முக்தனுக்கும் பூர்வ அவஸ்தையில் கர்மக்ருதமாக நாம ரூப நிர்வாஹம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்

சகல ஜெகன் நிர்மாண துரந்தரனான பரமாத்மாவுக்கே நாம ரூப நிர்வோ ட்ருத்வம் ஸ்ருதி சத சமதிகதம் ஆகையாலும்
ப்ரஹ்ம லோக சப்த வாச்யனான பரமாத்மாவும் அனந்தர ப்ராக்ருதன் ஆகையாலும் ஆகாச சப்த நிரதிஷ்டன் முக்தன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சர்வாத்மத்வ பிரகாரத்தில் ஹேய அஸ்ப்ருஷ்டத்துவம் பிரதம அதிகரண யுக்தம் –
த்வதீய அதிகரணத்தில் நிரதிசய ஆனந்த யோகம் சொல்லப்பட்டது -இதுவும் சர்வாத்மத்வ பிரகாரம் இறே-
த்ருதீய அதிகரணத்தில் பிரசாசித்ருத்வம் பிரபஞ்சிதம் -இது சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடம் ஸ்புடம் இறே –
சதுர்த்த அதிகரணத்தில் முக்த ப்ராப்யத்வம் நிரூபிதம்-இதுவும் சர்வம் ஹா பஸ்ய பஸ்யதி–இத்யாதி படியே
சர்வ சரீரியான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே சர்வாத்மத்வ பிரகாரம் என்னகே குறையில்லை –
பஞ்சம அதிகரணத்தில் நிரதிசய பாக்ய குணத்வம் நிரூபிதம் -இதுவும் அபஹத பாப்மாத்வாதி குணவத்தம் ஆகையால் சர்வாத்மத்வ பிரகாரம் என்னலாம் –
ஷஷ்ட அதிகரணத்திலே மாதாவைப் போலே அந்தரவர்த்தியான எம்பெருமானுக்கு ஜூகுப்சை இல்லாமையும் பிதாவைப் போலே சிஷகத்வேந பய ஹேதுத்வமும் சொல்லிற்று –இதுவும் அந்தர்யாமித்வ பிரகாரம் என்னுமிடம் சித்தம் –
அதிகார அநாதிகார விசாராத்மக அதிகரண த்ரயமும் ப்ராசங்கிகம் ஆகையால் இதில் சர்வாத்மத்வ பிரகார ப்ரதிபாதனம் பண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சரம அதிகரணத்தில் ஸூ ஷூப்த்யாதி சர்வ அவஸ்தைகளிலும் பரமாத்மா சம்பந்தம் ப்ரோக்தம் -இதுவும் சர்வாத்ம பிரகாரம் என்னுமிடம் ஸ்பஷ்டம் இறே –

இப்படி த்ருதீய பாதத்தால் நிரூபிதமான சர்வாத்மத்வ பிரகாரத்தை –
அவரவர் தமதமது அறிவகை வகை அவரவர் இறையவர் என அடி யடைவர்கள் -அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-
தத்தத் அதிகாரிகள் தந்தாமுடைய ருசி பேதத்தாலே ராஜசராயும் தாமஸராயும் மிஸ்ர ஸத்வராயும் இருந்துள்ள தேவதைகளை ஆஸ்ரயிப்பார்கள் –
அந்தந்த தேவதைகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு அத்தேவதைகள் தத் தத் பல பிரதானத்தில் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி சர்வ சரீரியான சர்வேஸ்வரன் தத் தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் ஆஸ்ரயித்த மனுஷ்யர்க்கு
தத் தத் பலம் பெறும்படி இருக்கையாலே என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

அதில் பாதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தில் -பிரதம அதிகரண ப்ரமேயமான
ஹேய அஸ்ப்ருஷ்டத்வ ரூப பிரகாரத்தை இறையவர் என்கிற பதத்தாலே பிரகாசிப்பித்து அருளினார் -அது எங்கனே என்னில்
இறையவர் என்று ஈஸ்வரத்வம் சொல்லுகையாலே சகல ஹேய அஸ்ப்ருஷ்டன் என்று சித்திக்கும் –

த்வதீய அதிகரண ப்ரமேயமான
நிரதிசய ஆனந்தயோகம் சேஷித்வ வாசியான அந்தப்பதத்தாலே தானே ஸூசிதம் -சர்வ சேஷிக்கு இறே நிரதிசய ஆனந்தத்வம் உள்ளது -ஆகையால் இறே ஆனந்த வல்லியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் -இத்யாராப்ய வித்த பூர்ணையான சர்வ பிருத்வியுமுடையனாய் இருக்கையை மனுஷ்ய ஆனந்தமாகச் சொல்லிற்று –
இனி சர்வத்தையும் உடையவன் என்று சொல்லவே சர்வ சேஷித்வ ப்ரயுக்த நிரதிசய ஆனந்த யோகமும் தன்னடையே வரும் –

த்ருதீய அதிகரண பிரமேயமான பிரசாசித்ருத்வமும்
நியந்த்ரு ரூப சேஷிவாசி யாகையாலே அப் பதத்தாலே தானே ஸூசிதம் -இன்னமும் –அவரவர் விதிவழி யடைய நின்றனர் -என்று
தேவதை அந்தர்யாமித்வ கதந முகத்தாலும் பிரசாசிச்ருத்வம் யுக்தமாகலாம் –

சதுர்த்த அதிகரண ப்ரமேயமான முக்த ப்ராப்யத்வமும் –
இறையவர் -என்று -இன்னானுக்கு இறையவர் என்று விசேஷியாதே சாமாந்யேன சர்வ சேஷி என்று சொல்லுகையாலே –
இப் பதத்தாலே சொல்லப் பட்டது என்று அறியலாம் -ஆகையால் இறே ப்ராப்ய பரமான உத்தர வாக்கியத்தில் நாராயண பதத்துக்கு
சேஷித்வத்திலே நோக்கு என்று முன்புள்ள முதலிகள் வ்யாக்யானம் செய்து அருளிற்று –
இந்த இறையவர் என்கிற பதம் சாமாந்யேன சர்வ சேஷித்வ வாசி என்னும் இடத்தை கலிவைரி தேசிகர் -பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடு அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு தம்மோடு வாசியற எல்லார்க்கும் ஓக்க இறையவர் ஆகையால் -என்று பகவத் விஷயத்திலே வெளியிட்டு அருளினார் –

பஞ்சம அதிகரண ப்ரமேயமான நிரதிசய போக்ய குணத்வமும்
தேவதை அந்தர்யாமித்வ கதனத்தாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -யாவாந் வா அயம் ஆகாசா -என்றும் -உப்பிய அஸ்மின் த்யாவா ப்ருதிவீ –
உபாவக் நிஸ்ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம சாவுபவ் வித்யுந் நக்ஷத்ராணி -என்கிற வாக்யத்திலே
பிரக்ருத தஹர ஆகாசத்தை -அஸ்மின் -என்று பராமர்சித்து அந்த பிரம்மா உபாசனம் பண்ணுகிறவனுக்கு இஹ லோக லப்யமாயும் பரலோக லப்யமாயும்
மநோரத மாத்ர வர்த்தியாயும் இருந்துள்ள சர்வ போக்ய ஜாதமும் இந்த தஹர ஆகாசத்தில் உண்டாய் இருக்கும் என்று சொல்லிற்று –

இவ்விரண்டு வாக்யத்திலும் பூர்வ வாக்கியத்தில் சொன்ன அக்னி வாயு ஸூர்ய சந்த்ர ப்ரப்ருதி சர்வ ஆதாரத்வ ரூபமான சர்வ சரீரத்வத்தை –
இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனர் -என்று அருளிச் செய்கையாலே
தத் வ்யவஹிதாநந்தர த்விதீய வாக்கியத்தில் சொன்ன சர்வ ஆதார வஸ்துவினுடைய நிரதிசய போக்யத்வம் இச்சந்தையிலே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான மாத்ருத்வத் ஜூகுப்சா ராஹித்யமும் பித்ருவத் சிக்ஷகத்வேந பய ஹேதுத்வமும்
அந்தர்யாமித்வ கதனத்தாலே தானே சித்திக்கும் -கிஞ்ச -தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின அதி ஹீநரையும் விட மாட்டாதே ஜூகுப்ஸை யற்று
தத் தத் தேவதா முகேந ரஷிப்பான் என்று இச்சந்தையால் அருளிச் செய்கையாலும் ஷஷ்ட்டி அதிகரண பிரமேயம் இது என்று அறியலாம் –

அதிகார அநதிகார விசாராத்மகமான சப்தம அஷ்டம நவம அதிகரண ப்ரமேயமும் –
அவரவர் தமதமது -இத்யாதியாலே அதிகாரி வைவித்ய கதனத்தாலே ஸூசிதம் –

தசம அதிகாரண ப்ரமேயமான ஸூஷூப்த் யாதி சர்வ அவஸ்தாஸூ அப்ரஹாணமும்
ஸ்வேந ரூபேண நின்று ரசிக்கும் அளவன்றிக்கே தேவதாந்த்ர முகேநவும் ரஷித்து அருளும் என்கிற இப்பாட்டாலே ஸூசிதமாகலாம் –

இப்படி த்ருதீய பதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தை
இப்பாட்டாலே வெளியிட்டு அருளுகையாலே இப்பாட்டுக்கும் த்ருதீய பாதத்துக்கு ஐகமத்யம் சித்தம்
———————————
சதுர்த்த பாதத்துக்கும் -நின்றனர் இருந்தனர் -என்கிற ஆறாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில்
சர்வ வஸ்துவும் ப்ரஹ்ம கார்யமுமாய் -ப்ரஹ்ம சரீரமுமாய் -ப்ரஹ்ம ஆத்மகமுமாய் இருக்கையாலே
தத் கார்யமும் அன்றிக்கே தத் சரீரமும் அன்றிக்கே தத் ஆத்மகமும் அன்றிக்கே இருக்கிற வஸ்து இல்லை என்று
அப்ரஹ்மாத்மக வஸ்து நிஷேதம் இப்பாத ப்ரதிபாத்யர்த்தமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தையே இப்பாட்டில் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு -இப்பதார்த்தம் இது என்னும் இடத்தை
அதத் கார்ய -அதச் சரீர -அததாத்மக வஸ்த்வ சம்பவ ப்ரதிபாத்யதே -என்று ஸ்ருதி பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –
இத்தை முகாந்தரேண-நிரவதி மஹிமா -என்று சாரா வழியிலே வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இதில் பிரதம அதிகரணத்திலே
ஜகத்தினுடைய அதததீ நத்வம் -தததீ நத்வாதர்த்த வத் -என்கிற ஸூத்ரத்திலே ப்ரஹ்மாத்மகத்வம் ஜகத்துக்கு சாதிக்கையாலே நிரஸ்தமாயிற்று –

த்வதீய அதிகரணத்தில் –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் -இத்யாதி ஸ்வதாஸ்வதர மந்திரத்தில் ஜகத்தினுடைய அப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகிறது என்று சங்கித்து
தைத்ரீயத்தில் -அஜா மேகாம் -இத்யாதி வாக்ய அநுகுண்யேந ப்ரஹ்ம கார்யத்வத்தை சாதித்து அதத்கார்யத்வத்தை நிரசித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா -இத்யாதி வாக்கியங்களில் சொல்லுகிற படியே சாங்க்ய ப்ரக்ரியையாலே ஜகத்து அப்ரஹ்மாத்மகம் என்று சங்கித்து
ப்ரஹ்மாத் மகத்வத்தை ஜகத்துக்கு சாதித்து அததாத் மகத்வத்தை நிரசித்தார் –
தமேவம் மந்ய ஆத்மாநம் -என்று இறே அந்தப் பிரகரணத்திலே வாக்யம்-

சதுர்த்த அதிகரணத்தில் -சதவ்யா க்ருதாதி சப்தத்தால் பிரதிபன்னமான வஸ்துவுக்கு அத தாத் மகத்வத்தை சங்கித்து அதுவும் ப்ரஹ்மாத்மகம் என்று பரிஹரித்து ஜகத்தினுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார்

பஞ்சம ஷஷ்ட அதிகரணங்களில்
விசேஷித்து சேதனன் அத தாத்மகன் என்று சங்கித்து ப்ரஹ்மாதிமகத்வத்தை சாதித்து ஜீவனுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார் –

சப்தம அதிகரணத்திலே சேஸ்வர சாங்க்ய யுக்தமான ஜகத்தினுடைய அப்ரஹ்மாத் மகத்வத்தை சங்கித்து ப்ரஹ்ம உபாதாநத்வ சமர்த்தந முகேந
ப்ரஹ்மாதி மகத்வத்தை சமர்த்தித்து அப்ரஹ்மாத் மகத்வத்தை நிரசித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
சமர்த்தித்த அர்த்தத்துக்கு சார்வத்ரிகத்வம் சொல்லப் பட்டது –

இப்படி ஸூத்ரகாரர் ஜகத்தினுடைய ப்ரஹ்ம அதீ நத்வ ப்ரஹ்ம கார்யத்வ ப்ரஹ்ம ஆத்மதத்வ பிரசாதந முகேந
அதாத் அதீந்ய -அதத் காரயத்வாதி நிராசனம் பண்ணி -ப்ரஹ்ம காரணத்வ ஸ்திரீ கரணம் பண்ணின அர்த்தத்தை ஆழ்வார் –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற வெந்திடரே-என்று
நிற்றலை யுடையவர் -இருத்தலை யுடையவர் -கிடைத்தலை யுடையவர் -திரிதலை யுடையவர்கள் இவை இல்லாதவர்கள் என்று சொல்லப் படுகிற
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் வஸ்துக்களையும் ஸ்வ அதீனமாக உடையவராய் என்றும் ஒரு படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று
நினைக்கவும் கூட அரியராய் இப்படி துர்ஜ்ஜேயராய் இருக்கும் இருப்பு என்றும் ஒருபடிப் பட்ட ஸ்வ பாவமாக யுடையராய் இருக்கிற என்னுடைய ஸ்வாமியாய்
த்ருட பிரமாணமாக வேதைக சமதிகம்யரானவரே -என்று
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் சர்வ வஸ்துக்களினுடையவும் ப்ரஹ்ம அதீனத்தவ ப்ரஹ்ம காரியத்த வாதிகளை சாமாநாதி கரண்யேந அருளிச் செய்கையாலே
இப்பாட்டுக்கும் சதுர்த்த பாதத்துக்கு ஐக மத்யம் ஸ்புடம் –

இங்கே எந்திடரே-என்று சாமாநாதி கரண ஸித்தமான பிராமண-தார்ட் யத்தோடே பிரதம அத்யாய அர்த்தத்தை நிகமித்தார் ஆயிற்று –

இப்படி முதல் ஆறு பாட்டுக்கும் பிரதம அத்யாயத்துக்கும் ஐகமத்யம் வேதாந்தத்வயா சம்ப்ரதாயம் யுடையவர்களுக்கு திக் பிரதர்சனம் பண்ணப் பட்டது
அநேக உபபத்திகளை உபபாதிக்கும் அளவில் கிரந்தம் விஸ்திருமாம் என்று ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

சாரீரக அத்யாயேந காதா ஷட்க சாமார்த்ததா
யதிராண் மத நிஷ்டாநாம் திங்மாத்ரம் தர்சிதா முதே-

இதி சாரீரக அத்யாத்யாய பிரதம காதா ஷட்கைக கண்ட்யம்-

———————————–

த்வதீய அத்யாய பிரதம பாதத்துக்கும் –ஏழாம் பாட்டுக்கும் ஐக மத்யம் உண்டாம் படி எங்கனே என்னில்
பிரதம பாதார்த்தமான பரோத்பாவித தோஷ பரிஹாரத்தை இப்பாட்டில் சொல்லுகையாலே ஐகமத்யம் உண்டு –
பரோத்பாவித தோஷ பரிஹாரம் இப்பாதார்தம் என்னும் இடத்தை –தத்ர பரை ருத்பாவி தாஸ்ச தோஷா பரிஹ்ருதா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் –

இப்பாதம் தான் தச அதிகரணாத்மகமாய் இருக்கும் -இப்பத்து அதிகரணங்களிலும் பிரதம அதிகாரணம் தொடங்கி அடைவே –
1-சாங்க்ய ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
2–சதுர்முக வக்த்ருகமான யோக ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
3–கார்ய காரணங்களான ஜகத் ப்ரஹ்மங்களுக்கு ம்ருத் கடாதிகளைப் போலெ சா லக்ஷண்யம் இல்லாமையாலும் –
4–அநேக தந்த்ர யுக்தமான பரமாணு ஜகத் காரணத்வ நிரூபணத்துக்கு ப்ராபல்யம் சொல்ல வேண்டுகையாலும் –
5–சித் அசித் ரூப கார்யகதமான பரிணாமித்வ-ஸூகித்வ -துக்கித்வாதி தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு பிரசங்கிக்கையாலும் –
6–கார்ய உபாதானங்களுக்கு நையாயிக மதரீத்யா பேதம் சொல்ல வேண்டுகையாலே நிமித்த உபாதான ஐக்யம் கூடாமையாலும் –
7–ஜீவன் ஸ்வ அபின்நனாகில் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கிக்கையாலும் –
8–லோகத்தில் தத் தத் கார்ய ஜனக சக்தி யுக்தனுக்கும் உபகரண அபேக்ஷை காண்கையாலே சர்வ சக்தி யுக்தமான பர ப்ரஹ்மமும் உபகரணம் இல்லாத போது காரணமாக மாட்டாமையாலும் –
9–ப்ரஹ்மம் கார்யமாகப் பரிணமிக்கும் போது நிரவயமான க்ருத்ஸ்ந ப்ரஹ்மமும் கார்யமாய் பிரசங்கிக்கையாலும்
10–பரிபூர்ண ப்ரஹ்மத்துக்கு -ஸ்ருஷ்டியாலே பிரயோஜனம் இல்லாமையாலும்
ஜகத் காரணத்வம் கூடாது என்று பூர்வ பக்ஷம் -ப்ராப்தமாம் அளவில் –

1–வேத விருத்த சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் பாதகம் இல்லாமையாலும்
2–யோக ஸ்ம்ருதியும் விலஷணனான சதுர்முக வக்த்ருகமாகிலும் வேத விருத்ததயா பிரமாணம் இல்லாமையாலும் –
3—கோமய வ்ருஸ்ஸிகாதி விலக்ஷண வஸ்துக்களுக்கும் கார்ய காரண பாவம் காண்கையாலே ச லக்ஷண நியமம் இல்லாமையாலும் –
4–அநேந மத நிரூபித பரமாணு காரணத்வம் கேவல தர்க்க மூலமாகையாலே வேத ப்ரதிபாத்ய ப்ரஹ்ம காரணத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் –
5–பிரளய காலத்தில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரணமாய் ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரியமாய் இருக்கையாலே
சித் அசித் ரூப கார்யகத தோஷங்கள் விசேஷ்யமான ப்ரஹ்மத்தில் பிரசங்கியாமையாலும்
6—கார்ய உபபாதன ஐக்யம் சுருதி சத சமதிகதமாகையாலும்-
7–ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் விஸிஷ்ட ஐக்யம் ஒழிய ஸ்வரூப ஐக்யம் இல்லாமையால் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கியாமையாலும் –
8–ஷீராதிகளில் உபகரண நிரபேஷமாக தத் யாதி பாவேந பரிணாமம் காண்கையாலே பர ப்ரஹ்மத்துக்கு உபகரண நைரபேஷ்யேண காரணத்வம் கூடுகையாலும்
9—ஸ்ருதி சித்த அர்த்தத்திலே லௌகிக பிராமண ஸித்தார்த்த சாம்யம் பிரசங்கியாமையாலும்
10–பரிபூரணமான ஜகத் ஸ்ருஷ்ட்டி கேவல லீலார்த்தமாக கூடுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தில் பரோத்பாவித தோஷங்கள் பிரசரிக்காமையாலே ஜகத்துக்கு ப்ரஹ்மம் காரணம் ஆகலாம் என்று சித்தாந்திக்கப் பட்டது –

இப்பாதத்தில் பத்து அதிகரணத்திலும் சொன்ன பரோத்பாவித தோஷங்களையும் தந்நிரசனத்தையும்-
சாங்க்ய ஸ்ம்ருதயா விரோதாத் விதிமத விஹதே கார்ய வைரூப்யதோ அஸ்மின் நேகார்த்தே அநேக தந்த்ரோதித விஹதிதயா தேஹ போகா வியுக்த்யா –
கார்ய உபாதான பேதாத் ஸ்வஹித விஹிதிதி காரகஸ்தோம ஹாநே க்ருத்ஸ் நாம் சாத்யூஹ பாதாத் க்ருதி விபலதயா வ்யர்த்திதம் ப்ரத்யவித்யத் –என்கிற
ஸ்ரக்தரையாலே சாராவளியிலே வேதாந்தச்சார்யார் ஸங்க்ரஹித்து அருளினார் –

இப்பாத அர்த்தமான பரோத் பாவித தோஷ பரிகாரத்தை –
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்று த்ருடமான ஆகாசம் தேஜஸ் ஸூ வாயு ஜலம் பிருத்வி தொடக்கமாய் விஸ்திருதமாய் இருந்துள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் காரணமாய் -அந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் சரீரங்கள் தோறும் ஆத்மா பிரவேசித்து இருக்குமா போலே அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் –
அவைகளால் தர்சிக்கப் படாதவனுமாய் -சர்வ பதார்த்தங்களில் பிரத்யேக ப்ரத்யேகம் பரிபூர்ண வர்த்தியாய்-அபவ்ருஷேயத்வ நித்ய நிர்தோஷத்வாதி குணங்களால் உஜ்ஜ்வல்யத்தை யுடைய வேதைக சமதி கம்யனாய் சராசராத்மக க்ருத்ஸ்ன பிரபஞ்ச ஸம்ஹாரியான தேவன் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

இதில் பிரதம த்விதீய சதுர்த்த அதிகரண யுக்தமான
சாங்க்ய யோக ஸ்ம்ருதயாத் அநு ரோதம் பண்ணி பிரம்மா காரணத்வத்தைச் சலிப்பிக்க ஒண்ணாது என்கிற அர்த்தத்தை
சுடர் மிகு சுருதியுள் உளன் -அப்ருஷேயத்வாதி உஜ்ஜவல்யாதிக்யத்தை யுடைய வேத ப்ரதிபாத்யன் -என்கிற இச்சந்தையாலே வெளியிட்டு அருளினார் –

த்ருதீய அதிகரண சா லாஷ்ண்ய நியமா பாவமும் –
திட விசும்பு எரி வளி- என்று தொடங்கி-விலக்ஷணமான ஆகாச வாயு வாதிகளுக்கும்
ப்ரஹ்ம காரணத்வம் ப்ரதிபாதிதம் ஆகையால் சித்திக்கிறது -கிஞ்ச -திட விசும்பு என்று காரணத்தவத்தால் வந்த தார்டயத்தை ஆகாசத்துக்கு அருளிச் செய்தார் –
ஆகாசாத் வாயு -என்று வாயு வாதி காரணத்வம் ஆகாசத்துக்குச் சொல்லப் பட்டது –
சாங்க்யாதிகளும்-ஆகாச வாயுக்களுக்கு சாரூப்பியம் இன்றிக்கே ஒழிந்தாலும் கார்ய காரண பாவத்தை அங்கீ கரித்தார்கள் –

அப்படியே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ச லக்ஷணம் இல்லாவிடிலும் கார்ய காரண பாவம் கூடும் என்று ஸூ சிப்பித்து அருளினார் -திட விசும்பு -என்கிற இச்சந்தையாலே –

ஆனால் ஸ்ரீ பாஷ்யகாரர் சா லக்ஷண்ய நியமாபாவத்துக்கு கோமய வ்ருஸ்ஸிகாதி திருஷ்டாந்தத்தை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஸ்யதே என்கிற சவ்த்ரபாதம் சாஸ்த்ர ப்ரத்யக்ஷ சித்தார்த்தங்களுக்குப் பொதுவாய் இருக்கிறது –

தர்சநாத் ஸ்ம்ருத்ஸ் ச -என்றும் -த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் -இத்யாதி ஸூத்ரங்களில் தர்சன த்ருஷ்ட சப்தங்கள் சுருதி பரமாகக் காண்கையாலே
த்ருஸ்யதே என்கிற இப்பதான் சுருதி சித்தார்த்தத்தைக் காட்டுகிறது –
அதிகரணாந்தரே —
உப சம்ஹார தர்சனான் நேதி சேந்ந ஷீரவத்தி –என்றும் -தேவாதிவதபி லோகெ -என்கிற ஸூத்ர த்வயத்தாலே லௌகிகமான
ஷீரத்வத்தையும் வைதிகரான தேவர்களையும் ப்ரஹ்மத்துக்கு சாமக்ரீ நைரபேஷயேண காரணத்வம் கூடும் என்னும் இடத்தை த்ருஷ்டாந்தமாக ஸூத்ரகாரர் உதாஹரித்தார் –
லௌகிக த்ருஷ்டாந்தத்தில் வைதிக த்ருஷ்டாந்தம் மிகவும் அலௌகிகமான ப்ரஹ்ம விஷயத்தில் பரிக்ராஹ்யம் என்னும் இடத்தை –
தேவாதீநாம் வேதாவகத சக்தீ நாம் த்ருஷ்டாந்த தயா உபாதா நாம் ப்ரஹ்மணோ வேதாவகத ஸக்தேஸ் ஸூக க்ரஹணாயேதி பிரதிபத்தவ்யம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப்படி லோக வேத சித்தங்களில் த்ருஷ்டாந்த கதநம் காண்கையாலே -திட விசும்பு -என்கிற இச் சந்தைக்கு கார்ய காரண சா லக்ஷண்ய நியமாபாவ ஸூசகத்வம் சித்தம்

பஞ்சம அதிகரண யுக்தமான சித் அசித் ரூப ஜகத்கத தோஷம் ப்ரஹ்மத்தில் பிரசங்கியாது என்கிற அர்த்தமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற சந்தையிலே சரீரங்களில் ஜீவாத்மாவைப் போலே சகல பாதாரத்திலும் வியாபித்து
அந்யைர த்ருஸ்யனாய் இருப்பன் என்று ஸ்புடமாகச் சொல்லப் பட்டது –

ஷஷ்டி அதிகரண யுக்தமான கார்ய உபாதான ஐக்யம் –
திட விசும்பு எரி வளி நீர் நிலமிவை மிசை படர் பொருள் முழுவதுமாய் -என்று ஜகத் ப்ரஹ்மணோஸ் சாமாநாதி காரண்ய கதநத்தாலே அதி ஸ்புடமாக அறியலாம் –

சப்தம அதிகரண யுக்தமான ஹிதா கரண -அஹித கரணாதி தோஷ பிரசங்க பரிஹாரமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து -என்று ஜீவ ஈஸ்வரர்களுக்கு சரீராத்ம பாவேந பேதத்தைச் சொல்லுகையாலே ஸ்புடமாக அறியலாம் –

அஷ்டம அதிகரண ப்ரமேயமான சாமக்ரீ நைர பேஷ்யமான ப்ரஹ்ம காரணத்வம் கூடும் என்கிற இதுவும்
இவை யுண்ட சுரனே -என்கிற இடத்தால் ஸூசிதம் –அது எங்கனே என்னில் -சுரனே -என்று ஆச்சர்ய சக்தி யோகம் சொல்லப்பட்டது –
சுரருக்கு இறே காரகா பேஷை இன்றிக்கே சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்ட்டி கூடுவது –
யதா தேவா தய ஸ்வே லோகே சங்கல்ப மாத்ரேண ஸ்வ அபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி ததா அசவ் புருஷோத்தம க்ருத்ஸ்னம் ஜகத் சங்கல்ப மாத்ரேண ஸ்ருஜதி -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் தேவாதி வதபி லோகே -என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே அருளிச் செய்தது –

ஆக -சுரர் -என்கிற இப் பதத்தாலே சாமக்ரீ நைரபேஷ்யேண காரணத்வ ப்ரசாதனம் பண்ணின அஷ்டம அதிகாரண ப்ரமேய ஸூசகம் சித்தம் –

எங்கும் பரந்து –சுடர் மிகு சுருதியுள் உளன் -என்கிற இவ்வளவாலே நவம அதிகரண யுக்தமான
யதா சுருதி அ லௌகிக அர்த்த ஸ்வீகாரம் பண்ண வேணும் -என்கிற அர்த்தம் சொல்லப் பட்டது –

இவையுண்டா சுரனே -என்கிற இச்சந்தையாலே
பரிபூர்ணனுக்கும் லீலா ரஸா நிஷ்பாதந அர்த்தமாக ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்தார் -அது எங்கனே என்னில்

அமரா நிர்ஜரா தேவாஸ் த்ரிதசா விபுதாஸ் ஸூ ரா -என்று ஸூரா சப்தத்துக்கு தேவ சப்தம் பர்யாயமாக நாம அநு சாணம் இருக்கையாலே ஸூரன்-என்றால் தேவன் என்று சொல்லிற்றாம் –

தேவ சப்தத்துக்கு -தீவு கிரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷூ -என்று தாது பாடம் உண்டாகையாலே
க்ரீடாவத்தவமும் தேவ சப்தார்த்தம் என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆகையால் இறே வேத புருஷன் ஜகத் சம்ஹாராதிகள்
கேவல லீலா ரூபம் என்கிற கருத்தால் ஸூபால உபநிஷத்தில் -தம பரே தேவ ஏகி பவதி -என்று காரண வஸ்துவில் தேவ சப்த பிரயோகம் பண்ணினான் –

ஆகையால் இச்சந்தை பரிபூர்ணனுக்கு லீலா ரூபேண ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்று சொல்லுகிற தசம அதிகரண அர்த்தம் என்னக் குறையில்லை –

இப்படி த்வதீய லக்ஷண பிரதம பாதத்துக்கு ஏழாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம்
————————–

தர்க்க பாதத்துக்கும் அஷ்டம நவம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில் –
தர்க்க பாதத்தில் பரபஷ ப்ரதிஷேபம் பண்ணப் படுகிறது –ஸ்வ பஷ ரக்ஷணாய பரபஷா பிரதி ஷிப்யந்தே -என்று இறே இப் பாத அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையால் பரபஷ ப்ரதிஷேப பரமான இவ் விரண்டு பாட்டுக்கும் தர்க்க பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு –

அதிகரண அஷ்டகாத்மகமாய் இருக்கிற இப் பாதத்தில்
பிரதம அதிகரணம் தொடங்கி -க்ரமமாக அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதிகளான சாங்க்யர்களுடைய
மத ப்ரக்ரியையையும் பரம அணு காரண வாதிகளான வைபாஷிகருடைய மத ரீதியையும்
புத்த மதஸ்தர்களில் வைத்துக் கொண்டு பாஹ்யார்த்தா ஸ்தித்வ வாதிகளான வைபாஷிக சவ்த்ராந்திகர்களுடைய ஜகத்தினுடைய
க்ஷணிகத்தவ வாதத்தையும் ஞான மாத்ரா ஸ்திதவ வாதியான யோகாசாரனுடைய ஞானாகார வ்யதிரிக்தமான அர்த்தாகாராபாவ ப்ரதிபாதனத்தையும்
மாத்யமிகனுடைய சர்வ ஸூந்ய உபபாதன பங்கியையும் -ஜைனர்களுடைய அநைகாந்திகத்வ ப்ரதிபாதன பிரகாரத்தையும்
பாஸூபதர்களுடைய வேத விருத்தச்சார தத்வ உபபாதனத்தையும் பல படிகளாலே நிரசித்து

பஞ்சம வேத பாராதாதி ப்ராசஸ்தமாய்
பரம புருஷ பிரணீதமாய் இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தினுடைய நிரங்குச ப்ராமாண்யத்தையும் ஸூத்ரகாரர் சாதித்தார்

இப்பாத அர்த்தத்தை –
பாதே அஸ்மின் காபிலஸ்தை கணபு கபி மதைர் புத்த வைபாஷிகாத் யைர் யோகாசாராபிதா நைஸ் ஸூகத மத ரஹஸ் ஸூந்யா வாத ப்ரசக்தை அர்ஹத்சித் தாந்த பக்தை பஸூபதி சமயஸ்தாயிபிஸ் சாவரோதம் ஷிப்த்வா அதோ பஞ்ச ராத்ரம் சுருதி பதமவதத் பஞ்சமாம் நாய தர்சீ -என்று ஸ்ரீ சாராவளியிலே ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இம்மதங்களில் சாங்க்ய வைசேஷிக பாஸூ பதர்கள்-
கபிலாகம அநுமாந பாஸூபாத சாஸ்திரங்களை வேதங்கள் அநுக் ராஹாகங்கள்-என்று அப்ரதானம் ஆகிலும் வேதத்தையும் அங்கீ கரித்தார்கள் –
தத் வ்யதிரிக்த மதஸ்தர்கள் வேதத்தை உபஸர்ஜன ப்ரமாணமாகவும் அங்கீ கரியாதே வேத அப்ராமாண்ய ப்ரசாதன பூர்வகமாக ஸ்வ மத உபாதானம் பண்ணுவார்கள் –

இப்படி இரண்டு வர்க்கமாய் இருந்துள்ள பாஹ்ய மாதங்களில் பிரதம வர்க்கத்தை நிரசித்தமையை எட்டாம் பாட்டாலே ஸூசிப் பிக்கிறார் –

த்வதீய வர்க்கத்தை நிரசித்தமையை ஒன்பதாம் பாட்டாலே ஸூசிப் பித்து அருளுகிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அளித்து அமைத்து உளனே -என்று ப்ரஹ்மாதி களாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவத்தை யுடைய மூல ப்ரக்ருதி தொடக்கமான
சகல ஜகத்துக்கும் வரிஷ்ட காரணமாய் –அவற்றை எல்லாம் சம்ஹரித்து அருளின பராத்பரனான ஈஸ்வரன் ருத்ரன் அந்தர்யாமியாய்க் கொண்டு
திரிபுரத்தை சம்ஹரித்து ஜகத் சம்ஹாரமும் பண்ணுகிறான் -சதுர்முக அந்தர்யாமியாய்க் கொண்டு இவ்வருகு உள்ள ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து
தேவர்களுக்கு ஞான பிரதானத்தையும் பண்ணுகிறான் -என்று இப்பாட்டாலே

ஜகத்தினுடைய ப்ரஹ்மாத் மகத்துவத்தையும் ஷேத்ரஞ்ஞர்களான ப்ரஹ்ம ருத்ரர்களுடைய
ஸ்ருஷ்ட்ருத்வ ஸம்ஹ்ருத் வாதிகள் பகவத் அதீனம் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்கையாலே அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதியான சாங்க்ய மத ப்ரக்ரியையும்–ருத்ர பாரம்யா உப பாதகம் பண்ணுகிற பாஸூபத ப்ரக்ரியையும் –பரம அணு காரண விதியையும் நிரசித்து அருளினமை ஸூசிதம் –

அது எங்கனே என்னில்
சாங்க்ய யுக்தமான அப்ரஹ்மாத்மக பிரதான நிரசனம் –சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் -என்று –
பிரகிருதி மஹத் அஹங்காராதி தத்துவங்களுக்கும் பரமாத்மாவே காரணம்-என்று அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

அவை முழுதுண்ட பரபரன்-என்று சர்வ ஜகத் ஸம்ஹாரி என்கையாலே சாங்க்ய மாதத்தில் ஈஸ்வரனை
அங்கீகரியா விடில் கேவல பிரதானம் ஸ்வ தந்திரமாய்ப் பரிணமிக்கும் போது ஸ்வர்க்க வ்யதிரேகேண ப்ரதிஸர்க்க அவஸ்தை இன்றிக்கே ஒழிய
வேணும் என்று உபபாதனம் பண்ணுகிற -வ்யதிரேகாந அவஸ்தி தேஸ்சாந பேக்ஷத்வாத்-என்கிற ஸூத்ரா யுக்த தூஷணம் ஸூசிதம் –

நிரவயவமான பரம அணுக்களுக்கு ஜகத் காரகத்வம் கூடாது என்கிற நையாயிக தூஷணமும்
ப்ரக்ருதி மஹத் அஹங்காராதிகளுக்கும் ஈஸ்வரனே வரிஷ்ட காரணம் என்று அருளிச் செய்த இச்சந்தையாலே தானே ஸூசிதம் –

பாஸூபத யுக்தமான ருத்ர பாரம்ய ப்ரதிஷேதமும்-ருத்ரனுடைய சம்ஹர்த்ருத்வ திரிபுர தஹநாதிகளும்-அரன் எனப் புரமொரு மூன்று எரித்து உலகு அழித்து உளன் -என்று
பகவத் அந்தர்யாமித்வ க்ருதமாக அருளிச் செய்கையாலே வ்யக்தமாகச் சொல்லப் பட்டது –

ஸூத்ரகாரர் பண்ணின ருத்ர பாரம்ய நிஷேததக்கும் உப லக்ஷணம் என்னும் கருத்தாலே
சதுர்முகனுடைய ஸ்ரஷ்ட்ருத்வ ஞான ப்ரதத்வாதிகளும்பகவத் அனுபிரவேச க்ருதம் என்று ஆழ்வார் சதுர்முக பாரம்யத்தையும் நிஷேதித்தார் –
ஸூத்ரகாரர் சதுர்முக பாரம்ய நிஷேதம் பண்ணாமைக்கு அடி மஹா மல்ல நிராசன ந்யாயேன ருத்ர பாரம்ய நிஷேதம் பண்ணவே
சதுர்முக பாரம்ய நிஷேதமும் தன்னடையே வரும் என்று கருத்து -ஆழ்வார் மந்த விஷ ந்யாயேன சதுர்முக பாரம்யத்தையும் எடுத்து நிஷேதித்தார் –
———————————–
இனி இரண்டாம் வர்க்கத்தை
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குணமுடைமையில் உளன்
இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே -என்று ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ உளன் என்கிற சொல்லாலே சாதித்தாயாகில் உண்மையே சித்திக்குமது ஒழிய
உன்னுடைய மதமான இல்லாமை சித்தியாது –

உளன் அலன் என்கிற சொல்லாலே இல்லாமையை சாதித்தாயாகில் லோகத்தில் இல்லை என்கிற சொல்லுக்கு ஸ்தூல அவஸ்தை போய் ஸூஷ்ம அவஸ்தா பன்னமாய்
இருக்கின்றமை அர்த்தமாம் ஒழிய உன்னபிமதமான ஸூந்யத்வம் சித்தியாது –

இப்படி உண்மையும் இன்மையும் ஆகிற குண த்வய யுக்தமாக ஸ்வ பக்ஷ பர பக்ஷ ரீத்யா
சித்திக்கையாலே அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப குண விசிஷ்டமாக பர ப்ரஹ்மம் சித்திக்கும்

இப்படி அநபிமதமான அர்த்தம் அங்கீ கரிக்க வேண்டுகையாலே அனந்த குண விபூதிமானாகவும் எம்பெருமானையும் அங்கீ கரிக்கலாம் என்று நிரசித்து அருளினார் –

அதில் இந்த மதங்களில்
புத்த மதத்தில் ஜகத் க்ஷணிக வாதிகளான வைபாஷிக மதஸ்தர்கள் -பார்த்திப ஆப்ய தைஜஸ வாயவீய பரம அணுக்கள்
பிருதிவி அப் தேஜோ வாயு ரூபேண சம்ஹதங்களாகும் -அதில் நின்றும் சரீர இந்த்ரிய விஷய சங்காதங்கள் உண்டாம் -அதிலே
சரீர அந்தர்வர்த்தியாய் க்ராஹகாபிமாநா ரூடமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மா வென்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று உபபாதித்த அர்த்தத்தை

சமுதாய உபய ஹேதுகே அபி தத பிராப்தி -என்கிற ஸூத்ரத்திலே யாதொரு பரம அணு ஹேதுக ப்ருதிவ்யாதி பூத சமுதாயம் யுண்டு
யாதொரு ப்ருதிவ்யாதி ஹேதுக பூத இந்திரியாதி ரூப சமுதாயம் யுண்டு இவ்விரண்டு சமுதாயத்தின் நின்றும் ஜகத் ஆத்மக சமுதாய உத்பத்தி கூடாது
பரம அணுக்களும் ப்ருதிவ்யாதி பூதங்களும் க்ஷணிகம் என்று அங்கீ கரிக்கையாலே ஷணத்வம் சிகளான பரம அணுக்களும் பூதங்களும் எப்போதான் சம்ஹதங்களாகப் போகிறது –
எப்போதான் ஞான விஷயீ பூதங்களாய் ஹாந உபாதா நாதி வ்யவஹாராஸ் பதமாகப் போகிறது என்று இத்யாதி யுக்தியாதிகளாலே சாரீரகத்தில் சொன்ன க்ஷணிகத்தவ வாத நிரசன க்ரமத்தை-

ஆழ்வாரும் அஸ்தி நாஸ்த்ய உபய வ்யவஹார தசையிலும் ஸ்தூல ஸூஷ்ம உபய அவஸ்தா விசிஷ்டமாக வஸ்துவினுடைய ஸ்திரத்தவ ப்ரதிபாதகமாய் இருக்கிற
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்கிற இச்சந்தையாலே ஸூசிப்பித்து அருளினார் –

பிரதி சங்க்யா அபிரதி சங்க்யா நிரோத அப்ராப்திர விச்சேதாத் -என்கிற ஸூத்ர ஸ்ரீ பாஷ்யத்திலே
சத உத்பத்தி விநாசவ் நாம அவஸ்தாந்தராபத்திரேவ அவஸ்தாயோகி து த்ரவ்யமேகமேவ ஸ்திரமிதி காரணாத நந்யத்வம் கார்யஸ்யோப பாத யத்யபி ரஸ்மாபி –
தத் அந்நயத்வம் இத்யத்ர ப்ரதிபாதிநம் நிர்வாணஸ்ய தீபஸ்ய நிரன்வய விநாச தர்சநாத் அந்யத்ர அபி விநாசோ நிரன்வய அநுமீயத இதி சேந்ந –
கட சரவாதவ் ம்ருதாதி த்ரவ்ய அநு வ்ருத்தியுபா லப்தயா சதோ த்ரவ்யஸ்ய அவஸ்தாந்தரா பத்திரேவ விநாச இதி நிஸ்சிதே சாதி ப்ரதீபாதவ்
ஸூஷ்மத சாபத்த்யாப் யநுபலம் போப்பத்தேஸ் தத்ராபிய வஸ்தாந்தரா பத்தி கல்ப நஸ்யைவ யுக்தத்வாத் -என்று
உளன் எனில் உளன் -என்கிற இப்பாட்டுப் பாதியை உட்க்கொண்டு வ்யாக்யானம் செய்தமை ஸ்பஷ்டமாய் இருக்கையாலே இவ்வதிகரண பிரமேயம் இதிலே உண்டு என்னும் இடம் சித்தம் –

இனி சவ்ராந்திக மதத்தில் ஞான உத்பத்தி காலத்திலேயே அர்த்தம் இல்லாமையால் ஞான விஷயத்வம் இல்லை என்ன ஒண்ணாது
ஞான விஷயத்துவமாவது -ஞான உத்பத்தி ஹேதுத்வம் இறே-ஆனால் சஷூராதிகளுக்கும் ஞான விஷயத்வம் வாராதோ என்னில் ஸ்வாகார சமர்ப்பணேன ஞான ஹேதுவுக்கே ஞான விஷயத்வம் ஆகையாலே வாராது -அர்த்தமானது ஞானத்திலே ஸ்வாகாரத்தை சமர்ப்பித்து நஷ்டமாய்ப் போனாலும் ஞானகதமான நீலாத்யாகாரத்தாலே அநு மிக்கப் படும் –
ஆகையால் அர்த்த க்ருதமே ஞான வைச்சித்ர்யம் என்று உபபாதித்த பிரமேயத்திலே தர்மி நஷ்டமானால் தத் தர்மங்களுக்கு அந்யத்ர ஸங்க்ரமணம் கண்டது இல்லை –
அப்படியே அர்த்தம் நஷ்டமாய் தத் ஆகாரம் ஞானத்திலே ஸங்க்ரமிக்கிறது என்ன ஒண்ணாமையாலே ஞானத்தாலே அர்த்தம் அநு மிக்கப் படுகிறது என்ன ஒண்ணாது
என்று சாரீரிகத்திலே சொன்ன தூஷணமும்
அவனுருவம் இவ்வுருவுகள் என்று ஐந்த்ரியிகத்வத்தை விஷயங்களுக்கு அருளிச் செய்கையாலே விஷயங்கள் அநு மேயங்கள் என்று புலிக்கையாலே ஸூசிதமாயிற்று –

யோகாசார மதஸ்தர்கள் -விஞ்ஞான மாத்திரமே யுள்ளது -அர்த்தத்வம் இல்லை -அர்த்தத்துக்கும் வ்யவஹார யோக்யத்வம் ஞான ப்ரகாசாயத்தம் என்று கொள்ள வேணும் –
அந்யதா ஸ்வ பர வேத்யங்களுக்கு அதிசயம் அற்றுப் போம் -பிரகாசமான ஞானத்துக்கு நிராகாரத்துக்கு பிரகாசம் கூடாமையாலே சா காரத்வம் அங்கீ கரிக்க வேணும் –
இனி தோற்றுகிற ஆகாரம் என்று ஞானத்தினுடையது ஒழிய அர்த்தத்தினுடையது அன்று -இந்த ஆகாரத்துக்கு பஹிரவபாசம் பிரமக்ருதம் -இத்யாதி யுக்திகளாலே
அர்த்த ஸூந்யத்வ உபபாதனம் பண்ணினத்தை

ஞாதாவுக்கு விஷய வ்யவஹார ஹேதுவான ஞானத்தவம் முதலிலே நிர்விஷயமாகில் இல்லையாயே விடும் -இத்யாதி யுக்திகளாலே சாரீரகத்திலே நிரசித்தமையை –
அவனுருவம் -அவனருவம்- பரந்தே ஒழிவிலன்-என்கிற சந்தைகளாலே அர்த்த தத்வ அங்கீகார முகேன ஸூ சிப்பித்து அருளினார் –

இன்னமும் -நா பாவ உப லப்தே -என்கிற ஸூத்ரத்தில் -அர்த்த தத்வம் இன்றிக்கே ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாதந ஸ்வபாவமான ஞான தத்துவமும் சித்தியாது
என்று சொன்ன யுக்தியும் – உருவம் -என்கிற பதத்தால் சித்திக்கிறது -அது எங்கனே என்னில் –

உருவம் -என்கிற சப்தம் -ஸ்தூல பதார்த்த வாசி என்னும் இடம் சம்பிரதிபன்னம்
ஐந்த்ரியிகத்தவம் உள்ளதுக்கு இறே ஸ்தூலத்வம் உள்ளது -இந்த ஐந்த்ரியிகத்வ ப்ரதிபாதனத்தாலே -அது ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாவந
ஸ்வபாவமான ஞானத்தவம் இல்லாதே ஒழியும் என்கிற யுக்தியை ஸூசிப்பிக்கையாலே அது சித்திக்கிறது –

மாத்யமிக பஷ நிரஸா க்ரமம் இப்பாட்டு என்னும் இடம் சர்வ ஸம்ப்ரதிபன்னம் ஆகையாலே அதி ஸ்புடமாய் இருக்கும் –

ஜைன மதஸ்தர்கள் சொல்லுகிற ஜகத் அநைகாந்திகதவை நிராசமும் சத்தாயாகிலும் அசத்தாயாகிலும் இருக்கும் ஒழிய சத் அசத்தாய் இராது என்று –
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள் -என்கிற பாட்டுப் பாதியாலே அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

ஆனால் பிள்ளை -சர்வ ஸூந்யவாதியை நிரசிக்கிறார் இப்பாட்டாலே என்றும் -ஸர்வதா அநு பபத்தே என்கிற ஸூத்ர பாஷ்யம் இப்பாட்டை யுட் கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று என்றும்
மாத்யமிக மத மாத்ர நிராச பரமாக வ்யாக்யானம் செய்து அருளுகையாலே இது அவருக்கு அநபிமதம் அன்றோ என்னில்-இப்பாட்டில் பாதங்களில் மாத்யமிக நிரசனம்
நேரே தோற்றுகையாலே தாமத நிராச பரமாக யோஜித்து அருளினார்

வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே -முதல் திருவாய்மொழி பூர்வத்விக அர்த்தம் -என்று அவர் தாமே அருளிச் செய்கையாலே இந்த பிரதம தசகத்திலே தத் ஸூசநம் ஆவஸ்யகம்
காதாந்தரத்திலே வைபாஷிகாதி மத நிராசம் அநவசரக்ரஸ்தமாய் இருக்கும்

இப்பாட்டில் பாதங்களும் பூர்வ யுக்த ப்ரக்ரியை யாலே வைபாஷிகாதி மத நிராச ஸூ சகங்கள் என்னும் இடம் ஸ்வரசதா ஸம்ப்ரதிபன்னம்
வைபாஷிக மத நிராச ஸூத்ர பாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளை உட் கொண்டு ப்ரவ்ருத்தம் என்னும் இடம்
பூர்வமேவ உபபாதிதம் ஆகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை –

பாஞ்ச ராத்ர ப்ராமாண்ய சமர்த்தந சாரீரக அம்சம் ப்ராசங்கிகம் ஆகையாலும்-வேத பாஞ்சராத்ரங்களுக்கு அபவ் ருஷேயத்வ நித்ய நிர்துஷ்டத்வ பரம புருஷ வக்த்ருகத்வங்கள்
நிரங்குச ப்ராமாண்ய ஹேதுக்களாய் இரண்டுக்கும் பாத்தாலே வந்த பேதம் ஒழிய பாஞ்சராத்ரத்துக்கும் வேத துல்ய ப்ராமாண்யத்தில் தட்டில்லாமை யாலே –
சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -என்று அபவ் ருஷேயத்வாதி உஜ்ஜ்வல்யவத் வேத ப்ராமாண்ய ப்ரதிபாதனத்தாலே தந் ந்யாயேந
பாஞ்சராத்ர ப்ராமாண்யம் சித்திக்கும் என்கிற கருத்தாலும் ஆழ்வார் உபேக்ஷித்து அருளினார்

ஸூத்ரகாரர் தந்த்ர சாமான்ய ப்ரயுக்தமான ம்ருது ப்ரபஞ்சர்களுக்கு உள்ள காலுஷ்ய சாந்த்யர்த்தமாக வேத துல்ய ப்ராமாண்யம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
தத் ப்ராமாண்ய சமர்த்தனம் பண்ணினார் -ஆக அஷ்டம நவம காதைகளுக்கும் தர்க்க பாதத்துக்கு ம் ஐகமத்யம் சித்தம் –

பத்தாம் பாட்டுக்கும் நிகமனப் பாட்டுக்கும் த்ருதீய துரீய பாதங்களுக்கு ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில் –
ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை இப்பாட்டுக்களாலே அருளிச் செய்கையாலே ஐக்யம் உண்டு –

வியத்பாத பிரதம அதிகரணத்திலே –
சாந்தோக்யத்தில் வியதுத்பத்த்ய ஸ்ரவணத்தாலே வியத்து ப்ரஹ்ம கார்யம் அன்று என்று சங்கித்து
தைத்ரீயத்தில் வியதுத் பத்தி ஸ்ருதமாகையாலும் சாந்தோக்யத்திலும் சர்வ சாகா ப்ரத்யய ந்யாயேந வியதுத் பத்தி வருகையாலும் வியத்து ப்ரஹ்ம கார்யம் என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யவிஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகிறது என்று சங்கித்து
ஆகாசாதி சரீரக பரமாத்மாவின் இடத்தில் நின்றும் வாயுவாதி உத்பத்தி ஒழிய கேவல பூர்வ தத்துவத்தில் நின்றும் வாயுவாதி யுத்பத்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
தோயேந ஜீவான் வ்யஸஸர்ஜ -இத்யாதி ஸ்ருதிகளாலே ஜீவனுக்கும் உத்பத்தி யுண்டு என்று சங்கித்து
ந ஜாயதே ம்ரியதே-இத்யாதி ஸ்ருதிகளாலே நித்யத்வம் ஸ்ருதமாகையாலும் உத்பத்தி சுருதி ஞான சங்கோச விகாசத்தைச் சொல்லுகிறது ஒழிய
ஸ்வரூப அநித்யத்தைச் சொல்லாமையாலும் -ஜீவனுக்கு உத்பத்தியில்லை என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் —
ப்ராசங்கிகமாக– யோ விஞ்ஞாநே திஷ்டன் -இத்யாதி ஸ்ருதிகளாலே ஆத்மா கேவல ஞான ஸ்வரூபன் என்று சங்கித்து –
விஞ்ஞா தாரம் இத்யாதி ஸ்ருதிகள் ஜீவனை ஞாதா வென்று ப்ரதிபாதிக்கையாலும் ஸ்வரூபத்தை ஞானம் என்கிறது ஸ்வயம் பிரகாச த்ரவ்யத்வ ப்ரயுக்தமாய்
ஞாத்ருத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் ஆத்மா ஞாதாவே என்று பரிஹரித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் -ஹந்தா சேத் -இத்யாதி ஸ்ருதிகளாலே நிஷித்தமாகையாலே ஸ்வரூபம் அன்று என்று சங்கித்து
ஸ்வர்க்க மோஷாதி பல சாதன போதக சாஸ்த்ர ப்ரயோஜன சித்த்யர்த்தமாக கர்த்ருத்வம் அங்கீ கரிக்க வேண்டுகையாலும்
கர்த்ருத்வ நிஷேத சுருதி சாம்சாரிக கிரியைகள் சத்வ ரஜஸ் தமோ குண சம்சர்க்க க்ருதங்கள்-ஸ்வரூப ப்ரயுக்தங்கள் அன்று என்று
சொல்ல வந்தது ஆகையாலும் கர்த்ருத்வம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
பூர்வ அதிகரண சித்த கர்த்ருத்வம் பராதீனம் என்று நிர்ணயித்தார்

சப்தம அதிகரணத்தில் –
ஜீவன் ப்ரஹ்மத்தோடு அத்யந்த பின்னனும் அன்று –ப்ராந்தப் ப்ரஹ்மமே ஜீவனாய் நிற்கிறதும் அன்று -சத்யோ பாத்யவச் சின்ன ப்ரஹ்மமே ஜீவனாய் இருக்கிறதும் அன்று –
வஸ்துதோ ப்ரஹ்ம அபின்னமாய் ப்ரஹ்மாம்சம் ஆகையாலே அத்யந்த பேதம் இன்றிக்கே இருக்கிறான் ஜீவன் என்று ஜீவ ஸ்வரூபத்தை நிர்ணயித்தார் –

துரீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவ உபகரணங்களான இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந பிரதி பாதந ஸ்ருதியாலே சித்தம் என்று சங்கித்து –
அந்த சுருதி சர்வஞ்ஞனான ஜகத் காரண ப்ரஹ்மத்தை ப்ரதிபாதிக்கிறது ஒழிய இந்திரியங்களை சொன்னது அல்லாமையாலும்
சுருதியந்தரத்தில் இந்திரிய உத்பத்தி கண்ட யுக்தமாகையாலும் நித்யத்வம் கூடாது என்று பரிஹரித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
ப்ராசங்கிக்கமாக இந்த்ரியங்களினுடைய சங்க்யா நிர்ணயம் பண்ணினார் –

த்ருதீய அதிகரணத்தில் –
இந்திரியங்கள் விபுக்களாக சுருதி பிரபன்னங்கள் என்று சங்கித்து உத்க்ரந்தி ஸ்ரவணத்தாலே-விபுக்கள் அல்ல அணு பரிமாணங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
ப்ராசங்கிகமாகவே முக்கிய பிராணன் கேவல வாயு மாத்ரமும் உசுவாச நிச்வாசாதி கிரியையும் அன்று -வாயுவே அவஸ்தாந்த்ர பன்னமாய்
பிராணன் என்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உதக்ரந்யாதி ஸ்ரவணத்தாலே பிராணனுக்கும் விபுத்வம் கூடாது -அணுத்துவமே முக்கிய பிராண பரிமாணம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஜீவனுக்கும் அக்னியாதி தேவதைகளுக்கும் இந்த்ரியாத் யதிஷ்டானம் ஸ்வா தந்தர்யேண உண்டு என்று சங்கித்து
பரமாத்மா அதீன அதிஷ்டானமே அவர்களுக்கு உள்ளது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பிராண சப்த நிர்திஷ்டங்கள் எல்லாம் இந்திரியங்கள் என்று சங்கித்து ஸ்ரேஷ்ட பிராண வ்யதிரிக்த ப்ராணன்கள் இந்திரியங்கள் என்று நிர்ணயித்தார்

அஷ்டம அதிகரணத்தில் –
பிரபஞ்ச வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகமாக வேணும் என்று சங்கித்து அதுவும் தச் சரீரக பரமாத்ம கர்த்ருகம் என்று நிர்ணயித்தார் –

இப்படி பாத த்வயத்தாலே நிர்ணயித்த அர்த்தத்தை
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த வண்டம் இது என நில விசும்பு ஒழிவறக் கரந்த சில இடம்தோறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -என்று -விஸ்திருதமாய் சைத்திய ஸ்வபாவமான சமுத்திர ஜல பரமாணுக்கள் தோறும் பரிசமாப்ய வர்த்தியாய்
விஸ்திருதமான அண்டம் என்னும்படியாய் பூமியாகாச விபாகம் இன்றிக்கே அத்யல்ப சரீரங்களிலும் அந்த அந்த சரீரங்களில் ஸ்வயம் ப்ரகாசத்வேந மிளிர்ந்து கொண்டு
இரா நின்றுள்ள ஆத்ம வஸ்துக்களிலும் அந்யைர த்ருஷ்யனாய் சர்வ பதார்த்தங்களில் ப்ரத்யேகம் பரிசமாப்ய வர்த்தியாய்
இந்த ஜகத்தை ஸ்வோதரஸ்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறான் த்ருட பிராமண வேதைக சமதி கம்யனே -என்றும் –

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிர நிறை யாயிரத்து இவை பத்தும் வீடே
என்று -த்ருடமான ஆகாச தேஜோ வாயு ஜல ப்ருத்வீ கதமான வரிஷ்ட சப்த தாஹ கத்வ கமன சாமர்த்திய சைத்திய ஷமா ரூப ஜெகதாகாரனாய் இருக்கிற
சர்வ ஸ்மாத் பரனுடைய திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த சப்தார்த்த புஷ்கல்யத்தை யுடைய ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இத்திருவாய் மொழி மோக்ஷ ப்ரதம்-என்றும்

ஆழ்வார் இதில் ஒன்றரைப் பாட்டாலே ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை வெளியிட்டு அருளி மேல் பாட்டுப் பாதியாலே –

வீடுமின் முற்றத்தாலே வெளியிடப்படுகிற உத்தர தவிகார்த்தமான பரத்வ ஞானத்தினுடைய மோக்ஷ சாதனத்வத்தையும் உப ஷேபித்து அருளுகிறார் ஆதல் –
பூர்வ த்விக ப்ரதிபாத்யமான பரத்வ விஷயம் இத்திருவாய் மொழி என்று பிரதிபத் யார்த்தத்தை புத்தி சவ்கர்ய அர்த்தமாக ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் ஆதல் –

இனி வியத்பாத பிரதம அதிகரண நிர்ணீதாகா சோத்பத்தி –
நில விசும்பு ஒழிவற என்று பிருதிவ்யாதிகள் போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று அருளிச் செய்கையாலே சித்திக்கிறது –

இன்னமும் -ஆகாசஸ் ஸம்பூத என்கிற தைத்த்ரீய ஸ்ருதியிலே ஆகாச உத்பத்தி சொல்லி இருக்கையாலே
சாந்தோக்யத்திலும் வியதுத்பத்தி சர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே வரும் என்கிற அர்த்தமும்
பூமி ஆகாசம் என்கிற விசேஷம் இன்றிக்கே பூமி போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று சொல்லுகிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது –

அது எங்கனே என்னில்-ஆகாச உத்பத்தி கதனத்தாலே தைத்ரீய ஸ்ருத்யர்த்தம் தோற்றி அம்முகேந வியதுத் உத்பத்திய வசன சுருதி நிர்வாகமும் தோற்றுகையாலே ஸூசிதம் –

ஆக இவை எல்லாவற்றாலும் இச்சந்தை பிரதம அதிகரணார்த்தம் என்னக் குறையில்லை –

த்விதீய அதிகரண யுக்தமான
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகமாட்டாது என்று நிர்ணயித்த அர்த்தமும்
சர்வ தத்துவங்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வ ப்ரதிபாதனம் பண்ணுகிற -பரந்த தண் பரவையுள் -என்று தொடங்கி முழுக்க இப்பாட்டாலே அறிவிப்பித்தமை அதி ஸ்புடமாய் இருக்கிறது –

த்ருதீய அதிகரண யுக்தமான ஜீவ உத்பத்தி நிஷேதமும் –
இடம் திகழ் பொருள்தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -இடம் திகழ் -என்று ஆத்ம தத்துவத்துக்கு வ்யாபகத்வம் சொல்லுகையாலே
வியாப்பிய பதார்த்தங்களினாலே நசிப்பிக்கப் படாது என்று சித்திக்கும் –

இவ்வர்த்தத்தைப் பரமபுருஷன் தானே –
அவிநாசிது தத் வித்தி யேந ஸர்வமிதம் தத்தம் -விநாசமவ்ய யஸ்யாஸ்ய ந கஸ்ச்சித் கர்த்துமர்ஹதி-என்று வெளியிட்டு அருளினான் –
இந்த ஸ்லோகத்தை –ஆத்ம நஸ்த்வ விநாசித்வம் கதமித்ய த்ராஹ– அவிநாசிது-இதி–தத் ஆத்ம தத்வம் அவிநாசீதி வித்தி –
யேந -ஆத்ம தத்வேந சேதநேந தத் வ்யதிரிக்தமித்தம் அசேதன தத்வம் சர்வம் தத்தம் வ்யாப்தம் -வ்யாபகத் வேந நிரதிசய ஸூஷ்மதவாத்
ஆத்மநோ விநாசா நர்ஹஸ்ய தத் வ்யதிரிக்தோ ந கஸ்ச்சித் பதார்த்தோ விநாசம் கர்த்துமர்ஹதி -தத் வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூலத்வாத்
நாஸகம் ஹி சஸ்த்ர ஜலாக்னி வாய்வாதிகம் நாஸ்யம் வ்யாப்ய சிதிலீ கரோதி முத் கராதயோ அபி ஹி வேக வத் சம்யோகேந
வாயுமுத்பாத்ய தத் த்வாரேண நாசாயந்தி அத ஆத்ம தத்வம் அவிநாசி -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் வ்யாக்யானம் செய்து அருளினார்

இப்படி ஜீவனுடைய வ்யாபகத்வ கதனத்தாலே ஜீவனுடைய நித்யத்வம் சித்திக்கையால் த்ருதீய அதிகரண ப்ரமேயம் இச்சந்தை என்னக் குறையில்லை –

சதுர்த்த அதிகரண நிர்ணீதமான ஜீவனுடைய ஞாத்ருத்வமும் –
திகழ் பொருள் தொறும்-என்கிற சந்தையாலே தானே ஸூசிதம் ஆகலாம் -அது எங்கனே என்னில் -திகழ் பொருள் -என்கிற இதுக்கு -ஞானத்தவ ஆஸ்ரயமான வஸ்து என்று
இறே அர்த்தம் -இனி சாஷாத் பரம்பரவ் தாஸீந்யேந ஞானத்தவ ஆஸ்ரயம் என்னும் போது-ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சித்திக்கும் –

ஆனால் ஞாதா என்று அருளிச் செய்யாதே திகழ் பொருள் -என்று ஞான த்ரவ்யம் என்று அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
ஞாதா என்றால் ஞான குணகத்வ மாத்ரம் தோற்றும் ஒழிய ஞான ஸ்வரூபத்வம் தோற்றாமையாலே -உபயமும் தோற்றுகைக்காக இங்கனே அருளிச் செய்தாராம் அத்தனை –

ஞான பதத்துக்கு உபய பரத்வம் உண்டு என்னும் இடம் ஜென்மாதி கரணத்தில்-சத்யம் ஞானம் -என்கிற சுருதி வ்யாக்யான ஸ்ருத பிரகாசிகையிலே
ஸூதீக்களுக்கு ஸூ வ்யக்தமாக அறியலாம் -ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னும் இடம் சித்தம்

தத்வ த்ரயம் -29-என்று ஜகத் குருவான பிள்ளை அருளிச் செய்த க்ரமத்திலே ஞாத்ருத்வ கதனத்தாலே கர்த்ருத்வமும் ஸூசிதம் ஆகையால்
ஜீவ கர்த்ருத்வ ப்ரசாதனம் பண்ணின பஞ்சம அதிகரண பிரமேயமும் –
திகழ் பொருள் தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான ஜீவனுடைய பகவத் அதீன கர்த்ருத்வ ப்ரசாதனமும்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்று ஜீவனுடைய பர அதீன உபயுக்த -அந்த பிரவேச உப லஷிதா நியமன கதனத்தாலே ஸூசிதமாகிறது –
ஜீவனுடைய கர்த்ருத்வம் பர அதீனம் ஆகிறது -பரமாத்மாவினுடைய அந்த ப்ரவிஸ்ய நியமனத்தாலே என்று ஹ்ருதீ கரித்து
பராத்து தச் ஸ்ருதே -என்கிற ஸூத்ரத்தத்தில் உள்ள சுருதி பதத்துக்கு அந்த ப்ரவிஷ்டா இத்யாதி ஸ்ருதிகளை ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக உதாஹரித்து அருளினார் –

சப்தம அதிகரண யுக்தமான
ஜீவ வஸ்து ப்ரஹ்ம விசேஷண த்வேந ப்ரஹ்ம பின்னமுமாய் ஸ்வ நிஷ்டம் இன்றிக்கே ஒழிகையாலே அத்யந்த பின்னமும் அன்றிக்கே இருக்கும் என்கிற பொருள்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் என்று வ்யாப்ய வியாபக பாவ ரூப சரீராத்மா பாவ ப்ரதிபாதநத்தினாலே ஸ்புடமாக அறியலாம்-

துரீய பாத த்ருதீய சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்த அதிகரணங்களில் இந்திரிய சங்க்யாதி நிரூபணம் ப்ரசக்த அநு பிரசக்தமாகையாலே அத்தை உபேக்ஷித்து
அவசிஷ்ட பிரதம அஷ்டம அதிகரண நிரூபிதார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார் –

பிரதம அதிகரணத்தில் –
இந்த்ரியங்களுடைய நித்யத்வம் இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந ப்ரதிபாதந ஸ்ருதியாலே என்று சங்கித்து அந்த சுருதி பரமாத்மாவினுடைய
பிரளய கால அவஸ்தையைச் சொல்ல வந்தது ஒழிய இந்த்ரியங்களுடைய நித்யத்வத்தைச் சொல்ல வந்தது அன்று -என்று நிர்ணயித்த அர்த்தம் –
பரமாத்மாவினுடைய பிரளய கால ஸ்திதியை ப்ரதிபாதிக்கிற -இவையுண்ட கரனே –என்கிற சந்தையாலே சொல்லப்பட்டது என்று அறியலாம் –

அஷ்டம அதிகரணத்தில் –
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தா சதுர்முகன் அல்லன்-சமஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான பரமாத்மாவே என்று நிர்ணயித்த அர்த்தமும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரன்-என்று வ்யஷ்டி சமஷ்டி ஸாதாரணயேந
சர்வ ஜகத்தும் ப்ரஹ்ம கார்யம் என்கிற இச்சந்தையாலே அதி ஸ்புடமாக அறியலாம்

ஆனால் இச்சந்தைகளில் அநு ப்ரவேச கதனத்தாலும் சாமாநாதி கரண்ய நிர்தேசத்தாலும் சரீராத்மா பாவம் தோற்றும் ஒழிய கார்ய காரண பாவம்
தோற்றாமையால் இச்சந்தைகள் வியதாதிகளினுடைய ப்ரஹ்ம கார்யதா பிரகார சோதந பர அதிகரணங்களுக்கு ஸங்க்ராஹங்கள் ஆனபடி எங்கனே என்னில்-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய -என்றும் -தத் ஸ்ருஷ்வா ததேவ அநு ப்ராவிஸத்-இத்யாதி ஸ்ருதிகளில் அநு பிரவேச பூர்வகமாக ஸ்ருஷ்ட்டி உக்தையாகையாலே
கேவல ஸ்ருஷ்ட்டி ப்ரதிபாதந ஸ்தலங்களில் அநு பிரவேசமும் கேவல அநு பிரவேச ப்ரதிபாதன ஸ்தலங்களில் ஸ்ருஷ்டியும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலே
விவஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யாதிகளில் நீர்ணீதம் ஆகையாலே அநு பிரவேச உக்தயா ஸ்ருஷ்டியும் சித்தம் என்று இச்சந்தைகள் ஸங்க்ராஹகங்கள் ஆகலாம் –
ஆகையாலே பத்தாம் பாட்டுக்கும் நிகமன பாட்டுக்கும் த்வதீய லேசான த்ருதீய துரிய பாதங்களோடே ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

இப்படி பூர்வ த்விக ப்ரதிபாத்யமான ப்ரஹ்ம காரணத்வ –அபாத்யத்வங்களை –
ஆழ்வாரும் முதல் திருவாய் மொழியாலே வெளியிட்டு அருளினமை வேதாந்த த்வய சம்ப்ரதாயம் யுடையவர்க்குத் தெளியலாம் படி திங்மாத்ரேண தர்சித்தம் ஆயிற்று –

—————————–

சாரீரக உத்தர த்விகத்துக்கும் வீடுமின் முற்றத்துக்கும் ஐகமதியம் உண்டாம் படி எங்கனே என்னில்
உத்தர த்விக்கத்தில் ப்ரதிபாத்யமான சாதன தத் பலங்களை இத்திருவாய் மொழியிலும் பர உபதேச முகேந வெளியிட்டு அருளுகையாலே ஐகமத்யம் உண்டு –
ஆனால் நம்பிள்ளை இத்திருவாய் மொழி த்ருதீய அத்யாய ப்ரதிபாத்யமான உபாசன பரம் என்று அருளிச் செய்தாரே ஒழிய -த்ருதீய துர்ய அத்யாய ப்ரதிபாத்யமான
உபாய உபேய பரம் என்று அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில் -உபாசன சப்தம் பலத்துக்கும் பர தரிசன அர்த்தம் என்று அருளிச் செய்தார் –

யத்வா-இந்த உபாசன சப்தம் லக்ஷணையாலே ஞான சாமான்யத்தைச் சொல்லுகிறது – மோக்ஷ சாதநீ பூத உபாயமும் பல ரூப ப்ரஹ்ம அனுபவமும்
ஞான அவஸ்தா விசேஷம் ஆகையாலே இரண்டையும் இச்சப்தத்தாலே ஸங்க்ரஹித்து அருளினார் என்றும் காணலாம் –

இவ்விரண்டும் ஞான அவஸ்தா விசேஷம் என்னும் இடத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்திலே-இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது -ஒரு ஞான விகாச விசேஷம் -இத்தாலே
சாத்யமாய் பிராப்தி ரூபமான உபேயமாவதும் ஒரு ஞான விகாச விசேஷம் -இவற்றில் உபாயமாகிற ஞான விகாச விசேஷம் -கரண சாபேஷமாய் -சாஸ்த்ர விஹிதமுமாய் –
ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூபக தர்மங்களோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ பிரதிநியத குணாதிகளினாலே நித்ய ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயமாகிற ஞான விகாச விஷயம் கரண நிரபேஷமுமாய்-ஸ்வபாவ பிராப்தமுமாய் குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
என்று உபாய விபாக அதிகாரத்தில் ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

அதவா -வீடு செய்ம்மினே -என்று தொடங்கி-திண் கழல் சசேரே -என்னும் அளவும் மோக்ஷ உபாயத்தை பாட்டுக்கள் தோறும் வாக்யார்த்த தயா பிரதானமாகவும்
ததங்க தத் பலங்களை பதார்த்த தயா அப்ரதானமாகவும் ஆழ்வாரும் அருளிச் செய்கையாலே -ஸ்வர்க்க காமோ யஜேத-என்கிற விதத்தில் ஸ்வர்க்க சாதனம்
வாக்யார்த்த தயா பிரதானமாய் சுவர்க்கம் பதார்த்த தயா அப்ரதானமாய் இருக்கிறதைப் பற்ற இவ்வாக்கியத்தை ஜ்யோதிஷ்டோம ரூப சாதன பரம் என்று
அபியுக்தர்கள் வ்யவஹாரிக்கும் க்ரமத்திலே ஸ்ரீ நம்பிள்ளையும் வ்யவஹாரித்து அருளினார் –

ஆகையாலே பல ப்ரதிபாதனம் உபஸர்ஜனதயா ஆழ்வார் அருளிச் செய்தமை நம்பிள்ளைக்கும் விவஷிதமாகையாலே உபாசன பரம் வீடுமின் முற்றவும் -என்கிற ஸ்ரீ ஸூக்தி யோடு உபாய உபேய ப்ரதிபாதக சாரீரக உத்தர த்விக சமா நார்த்தம் இத்திருவாய் மொழி என்கிற பிரமேயத்துக்கு விரோதம் இல்லை –

இதில் முதல் பாட்டு -த்ருதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
இரண்டாம் பாட்டும் மூன்றாம் பாட்டும் -த்வதீய பாதார்த்தமாகவும்
நாலாம் பாட்டு தொடங்கி மேல் நாலு பாட்டுக்களும் -3-3-குண உப சம்ஹார பாதார்த்தமாகவும்
எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்

ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் சதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

இதில் வைராக்ய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவன் ஸூக்ருத கர்மா பல அனுபவார்த்தம் தேஹாத் தேஹாந்த்ர பிரவேசம் பண்ணும் போது அவ்விடங்களில் தேஹாரம்பக பூத ஸூஷ்மங்கள் லபிக்கையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ் வக்தனாய் போக வேண்டினமை இல்லையென்று சங்கித்து பஞ்சாக்கினி வித்யோக்த ப்ரக்ரியையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ் வக்தனாய் தேஹாத் தேஹாந்தர பிரவேசம் பண்ணுகிறான் என்று நிர்ணயித்தார் –

இந்த அதிகரணத்தில் காதா சித்கமாயாகிலும் பூத ஸூஷ்ம பரிஷ்வங்கம் இன்றிக்கே நிர்த்துக்கனாய் இருக்கைக்கும் அவகாசம் இல்லை என்று
வைராக்ய ஜனன அர்த்தமாக யாவன் மோக்ஷம் ப்ரக்ருதி சம்பந்தம் அவர்ஜனீயம் என்று நிஷ்க்ருஷ்டமாயிற்று –

கிஞ்ச -பாக்தம் வா அனாத்மா வித்த்வாத்-என்கிற ஸூத் ரத்தாலே தேவ ப்ருத்ய பாவத்தை அவலம்பித்து தத் ப்ரயுக்த கிலேச கரம்பிதமாய் இருக்கிற
ஸ்வர்க்க போக அனுபவத்தினுடைய ஷயிஷ்ணுத்வம் சாதிசயத்வமும் ஆவிஷ்க்ருதம்-

த்விதீய அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அனுபவ அனந்தரம் ஜீவனானவன் க்ருத்ஸ்ன கர்ம பலமும் புக்தமாகையாலே கர்ம சம்பந்தம் அற்றே இழிகிறான் என்று சங்கித்து –
ரமணீய சரணர்கள் ரமணீய யோனியை அடைவர்கள் -கபூய சரணர்கள் குத்ஸித யோனியை அடைவார்கள் என்று சுருதி சொல்லுகையாலே
கர்ம சம்பந்தம் உடையனாயே இழிகிறான் என்று நிர்ணயித்தார் –

இதிலும் ஸூஷ்ம தேஹத்துக்கும் காரணதயா சகல சம்சார நிதான கர்ம சம்பந்தம்
முக்தி பர்யந்தம் அனுவ்ருத்தமாய் இருக்கிறது என்று சம்சார தோஷம் யுக்தமாயிற்று –

த்ருதீய அதிகரணத்தில் –
அநிஷ்ட அதிகாரிகளான பாப கர்மாக்களுக்கும் சந்த்ர பிராப்தி உண்டு என்று சங்கித்து இஷ்டா பூர்த்தாதி சத் கர்ம ரஹிதர்களுக்கு
பித்ருயான மார்க்கத்தாலே கமனம் இல்லாமையால் சந்த்ர பிராப்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

இதிலும் -க்ராமம் கச்சன் வ்ருஷ மூலான் யுபசர்ப்பதி-என்ற
நியாயத்தாலே யாகிலும் ஸ்வர்க்க பிராப்தி இல்லை -யமசத நத்திலேயும் ரவ்ரவாதி நரகங்களிலும் மிகவும் யாதநாநுபவமும் கீடாதி ஜென்ம பிராப்தியும் யுண்டு என்று சம்சார தோஷம் வ்யக்தமாகக் கீர்த்திதமாயிற்று –

சதுர்த்த அதிகரணத்தில் –
சுருதி ஸித்தமான ஆகாசாதி பாவம் ஜீவனுக்கு தேவ மனுஷ்யாதி பாவம் போலே தச் சரீரத்வ ரூபம் என்று சங்கித்து
ஆகாசாதி ப்ராப்தியிலே ஸூக துக்க அனுபவம் இல்லாமையால் தத் சாம்யா பத்தி ஒழிய தச் சரீரத்வம் இல்லை என்று நிர்ணயித்தார் –

இதிலும் ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுமவர்களுக்கு ஆகாசாதி பாவ ஸ்ரவணத்தாலே தத் அபிமானி தேவதைகளை போலே ஆகாசாதி சரீரத்வ ப்ரயுக்தமான-சில திவ்ய போகங்கள் உண்டு என்கிற சங்கா நிவ்ருத்தி யர்த்தமாக ஆகாசாதி சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று சொல்லுகையாலே தோஷ கீர்த்தனம் ஸ்புடம் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆகாச வாயு தூமா பிரமேக வர்ஷா பிராப்தி யுண்டாம் போது அவ்வோ இடங்களிலே அதி சீக்கிரமாக ஜீவனுக்கு கமனம் உண்டு என்கிற நியமம் இல்லை –
தத் தேது இல்லாமையாலே என்று சங்கித்து உத்தர த்ர வ்ரீஹ்யாதி ப்ராப்தியிலே -அதோ வை துர் நிஷ் ப்ரபதரம் -என்று விசேஷித்து க்ருச்ச்ரா நிஷ் க்ரமணம் சொல்லுகையாலே ஆகாசாதி ப்ராப்தியிலே அசிர நிஷ் க்ரமணமே உள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஆகாசாத் யவஸ்தாந விளம்ப நியம நிரசன வ்யாஜேந வ்ரீஹ் யாதிகளில் ஸூக போகம் அற்று அசிராவஸ்தாந ரூப தோஷம் த்ருடமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுகிற ஜீவர்கள் வ்ரீஹ்யாதி சரீரதயா ஜனிக்கிறார்கள் என்று சங்கித்து வ்ரீஹ்யாதி ஜென்ம ஹேது பூத கர்ம விசேஷம்
அஸ்ருதமாகையாலே அந்நிய ஜீவ அதிஷ்டித வ்ரீஹ்யாதிகளில் சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் வ்ரீஹ் யாதி பாவேந ஜனனம் என்னும் போது தல்லவந பயந்த மாத்திரமே துக்கம் யுக்தமாம் -அங்கன் அன்றிக்கே சம்ச்லேஷ மாத்திரம் என்று நிர்ணயித்த இத்தாலே
சோஷன குஸூலா வஸ்தாபந அவஹநந பலீ கரண பாக்க பஷணாதி தசைகளிலும் அனுவ்ருத்தி சித்திக்கையாலும் பஷண விஷயம் அன்றிக்கே இருக்கிற
வ்ரீஹ் யாதிகளிலும் பரிணாம பரம்பரையா சம்ச்லேஷம் சித்திக்கையாலும் தோஷ கீர்த்தனம் அதி ஸ்புடம் –

இப்படி சாரீரகத்தில் ஷட் அதிகரணியான இப்பாதத்தாலே பகவத் ஆஸ்ரயண உபயுக்த வைராக்ய சித்த்யர்த்தமாக நிரூபித்த அர்த்தத்தை -ஆழ்வார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்று ஐஹிக ஆமுஷ்மிக சகல விஷயங்களையும் அதி ஹேயம் என்று
அத்யவசித்து அதில் போக்யதா புத்தியை விடுங்கோள்-
இப்படி விட்டுப் பரமபத நிலயனான சர்வேஸ்வரன் விஷயத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுங்கோள் -என்று பரப்பற்று ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் மந்த மதிகளுக்கும் தெளியலாம்படி ஒரு சொல்லாலே அருளிச் செய்தார் –

இனி ஸூத்ரகாரர் பரக்கத் சொன்னத்தை இவர் ஒரு சொல்லாலே அருளிச் செய்வான் என் என்னில்-ஏ பாவம் பரமே -என்கிறபடி
நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிற இவருக்குப் பரக்க சம்சார தோஷ கீர்த்தனமும் அஸஹ்யமாய்த் தோற்றுகையாலும்
நல்குரவும் செல்வமும் என்கிற திருவாய் மொழிப்படி சர்வ பதார்த்தங்களும் ப்ரஹ்மாத்மகதயா போக்யமாய்த் தோற்றச் செய்தேயும் சம்சாரிகள் பக்கல் கிருபையால் அவர்கள் பாக அனுகுணமாகத் தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையாலும் –முற்றவும் விடுமின் -என்று அக்ராமயமாக
பஹ்வதி கரண சித்தார்த்தையும் சாதுர்யத்தாலே அருளிச் செய்ய வந்தவராகையாலும் இப்படி ஒரு சொல்லாலே வெளியிட்டு அருளினார் –

ஆனால் இப்பாத அர்த்தமான வைராக்ய மாத்ரத்தை விதிக்க வேணும் ஒழிய பாதாந்த்ர அர்த்தமான உபாய ஸ்வீகாரத்தை விதிப்பான் என் என்னில்
பக்தி உபாயத்துக்கு விஷய வைராக்கியமும் பிரபத்தி யுபாயத்துக்கு உபாயாந்தர வைராக்கியமும் அங்கம் இறே –
இதுக்கு உள்ள அங்க அங்கி பாவத்தை வீடு செய்து -என்று ல்யப்பாலே அருளிச் செய்தார் –
ஆகையால் இப்பாட்டுக்கும் இப்பாதத்துக்கும் ஐகமத்யம் சித்தம் –

த்விதீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் ஜீவன் ஸந்நிஹிதன் ஆகையாலே-தத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று சங்கித்து சம்சார தசையில் ஸ்ரஷ்ட்ருத்வ உபயுக்த சத்ய சங்கல்பாதிகள் கர்ம திரோஹித்த ஸ்வரூபனான ஜீவனுக்கு கூடாமையாலே ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று பரமாத்மா கர்த்ருகை என்று நிர்ணயித்தார்

த்வதீய அதிகரணத்தில் –
நாடிகள் என்ன புரீதத் பிரதேசம் என்ன ப்ரஹ்மம் என்ன இவை மூன்றும் நைரபேஷ்யேண ஸூஷூப்தி ஸ்தானத்வேண ஸ்ருதமாகையாலே தத் ஸ்தானத்வம்
விகல்பேந வருகிறது என்று சங்கித்து பிராசாத கட்வா பர்யங்கங்கள் போலே கார்ய பேதேந சமுச்சயமே கூடும்படியாய் இருக்க
பாஷிக பாத கர்ப்ப விகற்பம் அயுக்தமாகையாலே சமுச்சயமே யுக்தம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
ஸூப்தனே ப்ரபோத காலத்திலே உத்திதனாகிறான் என்ன ஒண்ணாது -ஸூஷூப்தனுக்கு சர்வோபாதி விநிர்மோக பூர்வக ப்ரஹ்ம ஸம்பத்தி வருகையாலே- என்று சங்கித்து ஸூஷூப் திக்கு முன்னே ஆரப்தமான கர்மம் உத்திதனாலே சமாபனம் பண்ணப் படுக்கையாலும் ஸோ அஹம் என்று
ஸூப்தனே உத்திதன் என்று ப்ரத்யபிஜ்ஜை வருகையாலும் — இத்யாதி உக்திகளாலே ஸூப்தனுக்கே உத்திதத்வம் சமர்த்தித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
மூர்ச்சை சர்வ இந்திரிய பிராண வ்யாபாரோ பரதி தசையாய் இருக்கையாலே மரணம் என்று சங்கித்து ஆகார வைரூப்யத்தாலே
ஸூஷ்ம பிராணா ஸ்தித்வம் அவகதம் ஆகையாலே மரணாய அர்த்த ஸம்பத்தி -மூர்ச்சை என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
ஜீவனுக்குப் போலே பரமாத்மாவுக்கு ஜாகராதி சர்வ அவஸ்தைகளிலும் அவஸ்தானம் யுக்தமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவிக்கும் என்று சங்கித்து சர்வ அவஸ்தா வஸ்திதமான ப்ரஹ்மத்துக்கு அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வமாகிற உபய லிங்கம் சுருதி சமதி கதமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவியாது என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
அசித் வஸ்து ரூபேண பரிணதம் ப்ரஹ்மம் தானாக வேணும் -அன்றிக்கே -ப்ரஹ்மத்திலும் அசித் வஸ்துவிலும் ஏக ஜாதி யோகத்தாலே ஐக ஜாதிக வாஸ்து தானாக வேணும் – பின்ன அபின்னத்வ உபய வ்யபதேசம் கூட வேண்டுகையாலே என்று சங்கித்து அம்சோ நாநா வ்யபதேசாத்-என்கிற அதிகரண ந்யாயேந
ஜீவனுக்குப் போலே சரீராத்மா பாவம் யுண்டாய் பாத்தாலே பின்ன அபின்னத்வ வ்யபதேசம் கூடுகையாலே அசித் வஸ்து பிரம்மா சரீரம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
ஜகஜ் ஜென்மாதி காரண தயா த்ருஷ்ட பர ப்ரஹ்ம வஸ்துவிலும் பர வஸ்து சேதூந்மான சம்பந்த பேத வ்யபதேசங்களாலே உண்டு என்று
சங்கித்து காரண வஸ்துவில் காட்டில் வஸ்வந்தரத்துக்குப் பரத்வம்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -இத்யாதி சுருதி நிஷித்தம் ஆகையால் சேது த்வயபதேசம் சர்வ லோகா அசங்கர்ய ஹேதுத்வ ப்ரயுக்தமாகையாலும்
அபரிச்சின்ன வஸ்துவுக்கு உன்மான வ்யபதேசம் உபாசன அர்த்தமாகையாலும் சம்பந்த வ்யபதேசம் தனக்கே ப்ராப்யத்வ ப்ராபகத்வ ப்ரயுக்தமாகையாலும்
ததோ யதுத்தர தரம் -என்கிற ஸ்ருதிக்கு பேத வ்யபதேசம் அர்த்தம் இல்லாமையாலும் ஜகத் காரண வஸ்துவிலும் பர வஸ்து இல்லை என்று நிர்ணயித்தார் –

சரம அஷ்டம அதிகரணத்தில் –
யாக தான ஹோம உபாசனாதி வைதிக கர்மங்கள் ஷணத்வம்ஸிகள் ஆகிலும் தஜ் ஜன்யா பூர்வ த்வாரா போக அபவர்க்க ரூப சர்வ பல சாதனங்கள் என்று சங்கித்து-கர்தவ்யதயா அவகதயா கோபாசனாதிகளுக்கும் பலப்ரதன் பரம புருஷனே என்று சுருதி ஸ்ம்ருதி சித்தமாகையாலே பரம புருஷனே பல ப்ரதன் என்று நிர்ணயித்தார்

இப்பாதத்தில் முந்துற அதிகரண சதுஷ்டயத்தாலே-
ஏதத் தேஹ மாத்ர அநுபத்த ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வ ஸூஷூப்தி ஸ்தாநாதி நிரூபண முகேந பிரதம பாத நிரூபித்த இஹா முத்ர சஞ்சார
தச அநு வ்ருத்த தோஷ வ்யதிரிக்த தோஷங்கள் வைராக்ய சித்த்யர்த்தம் யுக்தமாயிற்று –

உத்தர அதிகரண சதுஷ்டயத்திலும் –
பரமாத்மரக்தி ஜனன அர்த்தம் பகவத் கல்யாண குணங்கள் ப்ரதிபாதிதமாயிற்று-ஆனால் கல்யாண குண ப்ரதிபாதகமான இப்பாதத்தில்
நிரூபிக்க வேண்டிய தோஷங்கள் சங்கதமானபடி எங்கனே என்னில்-தோஷ கீர்த்தன பரமான இவ்வதிகரண சதுஷ்டயமும் பூர்வபாதம் போலே
நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரம் அன்றிக்கே கல்யாண குண ப்ரதிபாதகமும் ஆகையால் இப்பாதத்தில் சங்கதமாயிற்று

ஆகையால் இறே அதிகரண சாராவளியிலே –
பூர்வபாதம் நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரமாகவும் இப்பாதம் கல்யாண குண ப்ரதிபாதன பரமாகவும்
பாதே த்வர்த்தாஷ் ஷடஸ்மிந் வபுரிஹ விஜஹத் பூத ஸூஷ்மைஸ் சஹேயாத் புக்த ஸ்வர்க்க அவரோஹ அப்யநுசய சஹிதோ மாத்ரயா பின்ன மார்க்க
சந்த்ர ப்ராப்த்யாதி ந ஸ்யாந் நிரயபத ஜூஷாமம் பராதவ் சத்ருக்த்வம் தஸ்மாச் சீகே ராவரோஹ பரவபுஷி சிரம் வ்ரீஹாய் பூர்வே அபி யோக -என்றும் –
பாதே ஸ்வப்ன அர்த்த ஹேதுஸ் ததயமிஹ ஸூஷூப்த்யாத் ருதிஸ் ஸூப்த கோப்தா முக்தே போதாதிகர்த்தா த்வநக ஸூய குணோஸ் சித்பி ரம்சீ சதேஹ
பாரம்யஸ்யைக சீமா சகல பலத இத்ச்யுயதே பக்தி பூம்நே சத்யே ஹ்யேவம் குணா தாவத பர பஜநே ரூப பேதாதி சிந்த்யம் -என்றும்
இரண்டு ஸ்ரக்தரையாலே ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் வகுத்து அருளிச் செய்தார் –

இனி இரண்டாம் பாட்டு பூர்வ அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும் மூன்றாம் பாட்டு உத்தர அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும்இருக்கும் –
இதில் பூர்வ அதிகரண சதுஷ்டய நிரூபித வர்த்தமான தேஹ மாத்ர அநு பத்த ஸ்வப்னாத் யவஸ்தா அநு வ்ருத்த தோஷங்களை ஆழ்வாரும்
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே -என்று மின்னொடு ஒத்த ஸ்வபாவத்தையும் யுடையது அல்ல -ஆத்மவஸ்து பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்கிற இடத்தில் நீங்களே அல்பம் சிந்தியுங்கோள்-என்று
ஸ்வப்ன கல்ப தடிச் சஞ்சலமாய் இருந்துள்ள வர்த்தமான தேஹ தோஷ கீர்த்தன முகேந ஸூசிப்பித்து அருளினார் –

சரீராதி பதார்த்தங்களுக்கும்-ஸ்வப்நாத்ய அநு பூத பதார்த்தங்களுக்கும் ப்ரமக்ருத வைலக்ஷண்யம் ஒழிய நிரூபகர்க்கு வைலக்ஷண்யம் தோற்றாது இறே –
இன்னமும் ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாமைக்கு ஹேது -ஸத்ய ஸங்கல்பத்வ திரோதானம் -அதுக்கும் ஹேது பரமாத்மா நிக்ரஹம் –
அது தானும் தேஹத்தோடே சம்பந்திப்பித்து விட்டுத் திரோதானத்தைப் பண்ணும் -ஆகையால் ஸ்வப்ன கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாது என்கிற
பிரதம அதிகரண அர்த்தம் –மன்னுயிர் ஆக்கைகள் -என்று ஸத்ய ஸங்கல்பத்வ திரோதி ஹேது பூத தேஹ சம்பந்த ப்ரதிபாதனத்தாலே விசேஷித்து ஸூசிதமாயிற்று –

சதுர்த்த அதிகரண யுக்தமான ஸூப்தஸ்யைவ உத்திதத்வ நிரூபண முகேந நித்யத்வ சாதனமும் –மன்னுயிர் -என்கிற சந்தைக்கு நித்தியமான ஆத்மவஸ்து -என்று
வ்யாக்யாதாக்கள் ஒருபடி வ்யாக்யானம் பண்ணி இருக்கையாலே இச்சந்தையாலே யுக்தமாயிற்று –

இவ்வதிகரண சதுஷ்டயத்துக்கும் பகவன் மஹிம ப்ரதிபாதகத்வ ஆகாரமும் உண்டாகையாலே
அவ்வம்சத்தையும் நியந்த்ருத்வ ரூப மஹிமவாசியான இறை என்கிற பதத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –

முன்புள்ள முதலிகள் அனைவரும் இறை உன்னுமின் என்கிற சந்தைக்கு அல்பம் விசாரியுங்கோள் என்று அர்த்தம் விட்டார்களே யாகிலும் உரையில்
ஜீயர் ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் என்று ஒரு பொருள் இடுகையாலே
முன்புள்ள முதலிகளுக்கு அவிருத்த அர்த்தாந்தர கதனம் அபிமதம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-

இனி இப்பதத்துக்கு ஸ்வாமித்வ நியந்த்ருத்வங்கள் இரண்டும் அர்த்தம் என்னும் இடம் வ்யுத்பத்தி சித்தமாகையாலே இப்படியும் ஓர் அர்த்தம் சொல்லத் தட்டில்லை-

இனி உத்தர அதிகரண சதுஷ்டயர்த்தத்தையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை-என்று நீங்கள் என்றும் உங்களது என்றும் சொல்லுகிற அஹங்கார மமகாரங்களை–ச வாசனமாகப் போக்கி ஈஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு இத்தோடு ஒத்த அதிசயம் இல்லை என்று வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில்

பஞ்சம அதிகரண யுக்தமான
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வ ரூப உபய லிங்கத்தை –இறை என்று சித் அசித் வ்யாவ்ருத்த ஈஸ்வர ப்ரதிபாதனத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
பரமாத்மாவினுடைய சித் அசித் வ்யாவ்ருத்தி உபய லிங்கத்தாலே இறே -ஈஸ்வரனுக்கே இறே உபய லிங்கத்தவம் உள்ளது –

ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான –
அசித் த்ரவ்யம் ப்ரஹ்ம பரிணாமம் அன்று — ப்ரஹ்ம சஜாதீய த்ரவ்யமும் அன்று –ஜீவனைப் போலே ப்ரஹ்ம பிரகாரம் என்கிற அர்த்தமும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை -என்கிற அளவாலே ஸூசிதம் -எங்கனே என்னில்
ப்ரக்ருதி சம்சரக்க க்ருத அஹங்கார மமகாரங்களினுடைய த்யாஜ்யத்வ உக்தியாலே ப்ரக்ருதியும் த்யாஜ்யம் என்றதாய் அத்தாலே அசித் த்ரவ்யம்
உபாதேயமான ப்ரஹ்ம பரிணாமம் அன்று ப்ரஹ்ம சஜாதீயமும் அன்று என்கிற அம்சம் ஸூசிதமாகையாலும்
சித் அசித் நியந்த்ருத்வ வாசியான இறை என்கிற பதத்தாலே அசித்துக்கும் நியாம்யத்வ ரூப சரீரத்வ அபர பர்யாய அம்சத்வமே யுள்ளது என்கிற அர்த்தமும் ஸூசிதமாகையாலும்-ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான அசித் த்ரவ்ய ஸ்வரூப நிரூபணமும் ஸூசிதமாயிற்று –

சப்தம அதிகரண யுக்தமான
ஜகத் காரண வஸ்து உத்தீர்ண தத்வ ஸத்பாவ நிஷேத நிர்ணயமும் –இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை -என்று
ஜகத் காரண பூத ஈஸ்வர ஸமாச்ரயண உத்கர்ஷ ப்ரதிபாதனத்தாலே ஆஸ்ரணீய ஜகத் காரண வஸ்துவினுடைய நிஸ் சமாப்யதிகத்வம் யுக்தமாய்
அத்தாலே தத்வாந்தர நிஷேதம் பலிக்கையாலே ஸூசிதம் –

கிஞ்ச-இறை -என்கிற பதம் ஈசான சப்த பர்யாயம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் -ஜகத் காரண வஸ்து உத்தீர்ணத்வேந சங்க்யமான தத்வ வாசக சப்தத்தை
ஜகத் காரண வஸ்துவில் இறை என்று இவர் நிர்தேசிக்கையாலே தத் உத்தீர்ண வஸ்து நிஷேதமும் ஸூசிதமாகலாம்

அஷ்டம அதிகரண யுக்தமான
தேவதா ஆராதன ரூப யாக தான ஹோம உபாஸநாதிகளுக்கு பகவத் பிரசாத த்வாரா பலசாதனத்வம் ஒழிய அபூர்வத்வாரா பலசாதனம் இல்லை என்கிற அர்த்தமும்
இறை சேர்மினே -என்று பகவத் ஆராதனை ரூபமான ஆஸ்ரயணத்தை விதிக்கையாலே ஆராத்யனுடைய ப்ரீதியே பலப்ரதம் –
மற்றொரு அபூர்வாதிகள் பலப்ரதம் அன்று என்று சித்திக்கையாலே ஸூசிதமாகலாம்-

ஆகையால் த்ருதீய லக்ஷண த்வதீய பாதத்துக்கும் த்விதீய த்விதீய த்ருதீய காதைகளுக்கும் ஐகமத்யம் சித்தம் –

குண உபஸம்ஹார பாதத்துக்கும் சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில்
இப்பாதத்தில் நிரூபித்த உப சம்ஹார அநுப சம்ஹாரங்களை இவர் இப்பாட்டுக்களாலே ஸூசிப்பிக்கையாலே ஐகமத்யம் உண்டு –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
அநேக சாகாதீத வைச்வாநர வித்யாதிகள் சோதநாத்யா விசேஷத்தாலே ஏகம் என்று சாகாந்த்ர அதிகரண நியாயத்தை
வஹ்ய மாணார்த்த உபயுக்தமாக வித்யையிலும் காட்டினார் –

த்விதீய அதிகரணத்தில்
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான உத்கீதா வித்யையில் பிராண த்ருஷ்ட்யுபாஸ்தி சோதணாத்ய விசேஷத்தாலே ஏகம் என்று சங்கித்து ஒரு ஸ்தலத்தில்
உத்கீத அவயவமான ப்ரணவத்தில் ப்ராண திருஷ்டியும் ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்ன உத்கீதத்தில் பிராணாதிருஷ்டியுமாய் இருக்கையாலே
ரூப பேதாத் வித்யா பேதம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வாஜச நேய சாந்தோக்யங்களிலும் கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலும் ச்ருதமான பிராண உபாசனம் ரூப பேதத்தாலே பின்னமாக வேணும் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்ய குணகமான பிராணனுக்கு வாகாதி கத வசிஷ்டாத்வாதி குண சம்பந்தித்தவம் ச்ருதமாகையாலும்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் அது ஸ்ருதம் இல்லாமையாலும் என்று சங்கித்து கௌஷீதகியில் ச்ருதமான ப்ராணனுடைய ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்யங்கள்
வாகாதி கத வசிஷ்டத்வாதி குண அனுசந்தானத்துக்கும் ஸூசகமாகையாலே அதிலும் வாகாதி கத வசிஷ்டத்வாதி குண சம்பந்தம்
ப்ராணனுக்கு சித்திக்கையாலே ரூப ஐக்யம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகையாலே சர்வ வித்யையிலும் அநுப சம்ஹார்யங்கள்-என்று சங்கித்து
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகிலும் சர்வ வித்ய அநுயாயிகள் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ச்ருதமான பிராண வித்யையில் ஸ்ம்ருதி யாசார ப்ராப்தா சமனத்தில் காட்டிலும் வித்ய அங்கதயா ஆசமனாந்தரம்
விதிக்கப்படுகிறது என்று சங்கித்து ஆசமநீயாப்புக்களில் பிராண வாசஸ்த்வ அநு சந்தானம் அங்கதயா விதிக்கப் படுகிறது ஒழிய
ஆசமனாந்தர விதாந பரம் அன்று என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
வாஜச நேய அக்னி ரஹஸ்யத்திலும் ப்ருஹதாரண்யத்திலும் ஸ்ருதையான சாண்டில்ய வித்யை ஒரு ஸ்தலத்தில் ஸத்ய ஸங்கல்பம் ஸ்ருதமாய்
ஸ்தலாந்தரத்தில் வசித்வாதிகள் ஸ்ருதமாகையாலே ரூப பேதாத் பின்னை என்று சங்கித்து வசித்வாதிகள் ஸத்ய ஸங்கல்பத்வ விச்சித்தியாய்
ரூப பேதம் அல்லாமையாலே வித்யைக்யம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
ஆதித்ய மண்டலத்திலும் அஷியிலும் ச்ருதமான ஸத்ய ஸப்த வாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி சரீரத்வ உபாசனம் துல்யமாகையாலே
அஹம்-ஆஹா -என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேந அணிவித்தனர் ஆகின்றன என்று சங்கித்து
அஷ்ய ஆதித்ய ஸ்தான சம்பந்தித் வாகர பேதத்தால் ரூபம் பின்னமாய் வித்யை பேதிக்கையாலே இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்-
தைத்ரீயத்தில் அநாரப்ய அதீதங்களான சம்ப்ருதி த்யுவ்யாப்த்யாதி குணங்கள் சர்வ வித்யைகளிலும் உப சம்ஹார்யங்கள் என்று சங்கித்து
அல்ப ஸ்தான கோசாரங்களான வித்யைகளில் த்யுவ்யாப்த்யாதி குணங்கள் உபசம்ஹரித்தும் அஸக்யங்கள் ஆகையாலே அல்ப ஸ்தான விஷயங்களான
தஹராதி வித்யைகளில் அநுப சம்ஹார்யங்கள் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில் –
தைத்திரீயத்திலும் சாந்தோக்யத்திலும் ஸ்ருதையான புருஷ வித்யை சம்ஞ்ஞ ஐக்யத்தாலே ஏகை என்று சங்கித்து
ஸ்வதந்த்ர யஜமான பத்ந்யாதி கல்பன பிரகார பேத ப்ரயுக்த ரூப பேதத்தாலும் சதாயுஷ்ட்வ மோக்ஷ பிராப்தி ரூப பல பேதத்தாலும் பின்னை என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில் –
உபநிஷத் ஆரம்பத்திலே அதீதங்களான -சன்னோ மித்ரா -இத்யாதி மந்திரங்களும் ப்ரவரக்யாதி கர்மங்களும் வித்யா சந்நிதி சமாம்நாநத்தாலே
வித்யா அங்கங்கள் என்று சங்கித்து -அர்த்த சாமர்த்தத்தாலே அபிசாராத்யயநாதிகளில் விநியுக்தங்கள் ஆகையாலே வித்யா அங்கங்கள் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில் –
புண்ய பாபங்களினுடைய ஹானி சிந்தனமும் உபாயந சிந்தனமும் வித்யா அங்கத்வேந அந்வயிக்கும் போது விகல்பேந அந்வயிக்க வேணும் என்று சங்கித்து –
ஹானி உபாயங்கள் இரண்டும் ஏக விஷயங்கள் ஆகையாலே சமுச்சயிக்க வேணும் என்று நிர்ணயித்தார்

த்ரயோதச அதிகரணத்தில் –
எந்த உபாசன சந்நிதானத்திலே அர்ச்சிராதி கதி ஸ்ருதையாய் இருக்கிறதோ தன் நிஷ்டனுக்கே அர்ச்சிராதி மார்க்கம் நியதம் என்று சங்கித்து –
சர்வ உபாசன நிஷ்டர்களுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் சாதாரண தயா ஸ்ருதி விஹிதம் ஆகையாலே சர்வர்க்கும் நியதம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில் –
பிரபஞ்ச ப்ரத்யநீகதா ரூபங்களான அஸ்தூலத் வாதி தர்மங்கள் வித்யாந்தர ரூப பூத குணங்களுக்கு வித்யாந்தர ரூபத்வே பிரமாணம் இல்லாமையாலும்
ஆனந்தத்தவாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகங்கள் இல்லாமையாலும் சர்வ வித்யா அநுயாயி ரூபம் அன்று -அக்ஷர வித்யா ரூப மாத்ரமாக வேணும் என்று சங்கித்து
ஆனந்தத்தவாதிகள் போலே சித்த அசிதாத்மகா பிரபஞ்ச தர்மபூத ஸ்தூலாத்வாதி விபரீதமான அஸ்தூலத் வாதிகளும்
ஸ்வரூப நிரூபனம் ஆகையாலே சர்வ வித்யா அநு யாயிகள் என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில் –
உஷஸ்திக ஹோள ப்ரஸ்ன பிரதி வசனங்களில் பிராணநாதி ஹேதுத்வ அசனா யாத்யதீதத்வ ரூப உபாஸ்ய ஆகார பேதத்தாலே வித்யா பேதம் என்று சங்கித்து
உபய ப்ரஸ்னத்துக்கும் பரமாத்ம விஷயத்தில் பேதம் இல்லாமையாலும் பிரதி வசன த்வயகதமான ஆகார த்வயமும் பரமாத்மாவினிடத்தில் உபபன்னம் ஆகையாலும் வித்யா பேதம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஷோடச அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான தஹர வித்யை அபஹத பாப்மத்வ வசித்வாத் யுபாஸ்யாகார பேதத்தாலே பின்னை என்று சங்கித்து
வசித்வாதி குணங்கள் ஸத்ய ஸங்கல்ப த்வாந்தர்கதமாகையாலே உபாஸ்ய ஆகார பேதம் இல்லாமையாலே வித்யை அபின்னை என்று நிர்ணயித்தார் –

சப்த தச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாஸ்யங்கள் கர்மாங்க பூதோத் கீதாத் யாஸ்ரயங்கள் ஆகையாலே கர்மங்களிலே நியமேந உபஸம்ஹார்யங்கள் என்று சங்கித்து
கோதோஹ நாதிகளைப் போலே காம்யங்கள் ஆகையாலே நியமேந அனுப சம்ஹாரயங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டாதச அதிகரணத்தில் –
தஹர வித்யையில் குண சிந்த நத்திலே குணி சிந்தனா வ்ருத்தி வேண்டா -குணி சிந்தனம் ஸ்ருதம் ஆகையாலே என்று சங்கித்து
குணார்த்தமும் பிரதான ந்யாயேந குண்யா வ்ருத்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகோந விம்ச அதிகரணத்தில் –
நாராயண அணுவாகம் பூர்வ ஸ்ருத தகர வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம் என்று சங்கித்து
பிரகரணாத் பலவத்தான லிங்க பூயஸ் த்வத்தாலே சர்வ வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாராம் என்று நிர்ணயித்தார் –

விம்ச அதிகரணத்தில் –
மனஸ் சிதாதிகளான சாம்பாதி காக்நிகள் க்ரியாமயக்ரது ப்ரக்ருதமாகையாலே தத் அந்வயிகளாய் கிரியாமயங்கள் என்று சங்கித்து
வித்யா மயக்ரதுவும் ப்ராக்ருதமாகையாலே வித்யாமயக்ர த்வன்வயித்வேந வித்யா மயங்கள் என்று நிர்ணயித்தார் –

ஏக விம்ச அதிகரணத்தில் –
பரவித்யைகளிலும் உபாஸ்ய கோட்யநு ப்ரவிஷ்டமான ஜீவ ஸ்வரூபத்தில் ஞாத்ருத்வ கர்த்ருத்வ அம்சம் உபாஸ்ய ஆகாரம் என்று சங்கித்து
ப்ராப்ய தசையிலுள்ளவை எல்லாம் அநு சந்தேயம் ஆகையாலே அபஹத பாப்மத்வாதிகளும் உபாஸ்ய ஆகாரம் என்று நிர்ணயித்தார் –

துவாதச அதிகரணத்தில் –
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
தேஹ வியோகாந்தர அநு பாவ்ய ஸூக துக்கங்கள் இல்லாமையாலே தேஹ வியோக காலத்திலேயே நியமேந வருகிறது என்று நிர்ணயித்தார் –

த்வா விம்ச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாசனங்கள் ஸ்வர பேதத்தாலே உத்கீதாதிகள் ப்ரதிவேதம் பின்னங்களாய் இருக்கையாலே வ்யவஸ்திதங்கள் என்று சங்கித்து
பின்ன ஸ்வர வத்துக்களான சர்வ உத்கீதங்களும் -உத்கீதம் உபாஸீத -என்கிற இடத்தில் சாமான்யாத உபாசன விஷயங்களாகச் சொல்லப் படுக்கையாலே
உபாசனங்களுக்கு வ்யவஸ்தை இன்றிக்கே சர்வ உத்கீதா சம்பந்தம் உண்டு என்று நிர்ணயித்தார் –

த்ரயோ விம்ச அதிகரணத்தில் –
வைச்வா நர உபாசனத்தில் ஸ்வர்லோகாதித்ய வாயு வாகாச பிருதிவி அவயவனான வைஸ்வாநரன் உபாஸ்யதயா ச்ருதனாய் இருக்கிறான் –
அவ்விடத்தில் ஒவ்பமந்யா வாதிகளைக் குறித்து கேகயன் ஸ்வர்லோகாதிகளில் ஏகை கத்தையே உபாஸ்யமாகச் சொல்லுகையாலே வ்யஸ்தமே உபாஸ்யம் என்றும்
ஸமஸ்த உபாசனத்துக்கும் சர்வாத்ம வர்த்தியான ப்ரஹ்ம அநு பவத்தைப் பலமாகச் சொல்லுகையாலே ஸமஸ்த வ்யஸ்தங்கள் இரண்டும் தான் உபாஸ்யங்கள் என்றும் சங்கித்து
உபக்ரம உபஸம்ஹாரங்களில் ஸமஸ்த உபாசனத்தை விதிக்கையாலும் வ்யஸ்த உபாசனத்தில் தத் விதிக்குத் தாத்பர்யம் இல்லாமையாலும் சமஸ்தமே உபாஸ்யம் என்று நிர்ணயித்தார் –

சதுர் விம்ச அதிகரணத்தில் –
தஹர சாண்டில்யாதி வித்யைகளுக்கு பேதம் இல்லை -உபாஸ்ய ப்ரஹ்மமும் தத் பிராப்தி பலமும் ஏக ரூபம் ஆகையாலே என்று சங்கித்து
ஜகத் ஏக காரணத்வா அபஹத பாப்மத்வாத் யநு பந்த பேதங்களாலே வித்யை நாநா என்று நிர்ணயித்தார் –

பஞ்ச விம்ச அதிகரணத்தில் –
அக்னி ஹோத்ர தர்ச பூர்ணமா சாதிகள் ஸ்வர்க்க ஏகைக பலங்களாய் இருந்தாலும் தத் பூயஸ்த்தவ அபேக்ஷை யுள்ள புருஷன் இடத்தில் சமுச்சயம் உண்டாய் இருக்கிறாப் போலே
ப்ரஹ்ம அனுபவ பூயஸ்த அபேக்ஷை யுள்ள புருஷர் இடத்திலே ப்ரஹ்ம வித்யைகளுக்கு சமுச்சயம் கூடும் என்று சங்கித்து
ப்ரஹ்ம அனுபவித்திலே தாரதம்யம் இல்லாமையாலே தாரதம்யம் யுடைய ஸ்வர்க்க சாதனா பூத ஜ்யோதிஷ்டோம நியாயம்
இங்கே ப்ரசரியாமையாலே சமுச்சயம் கூடாது என்று பரிஹரித்தார் –

ஷட் விம்ச அதிகரணத்தில் –
சப்த தச அதிகரணத்தில் நிரூபித்த உத்கீதாத் யுபாசனங்களினுடைய காம்யதயா அநியதிக்கு அடியான பல சாதனத்வத்தை நிரூபித்தார் –

இப்படி ஷட் விம்சத்யதி கரணாத்மகமான இப்பாதத்தில்
1-த்விதீய த்ருதீய பஞ்சம சப்ததச விம்ச ஷட் விம்ச அதிகரணங்களிலே சங்கதி விசேஷத்தாலே ஷூத்ர உபாசனங்களை நிரூபித்தார் –
2-அவசிஷ்ட அதிகரண விம்சதியிலும் ப்ரஹ்ம உபாசன பிரகாரத்தை நிரூபித்தார் -இதிலும் தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபகங்களான
ஞானத்தவ ஆனந்த் வாதிகளும் பிரபஞ்ச ப்ரத்யநீ கதா ரூபமான அஸ்தூலத்வாதி குணங்களும் சர்வ வித்யா அநு யாயிகள் என்று சதுர்த்தத சதுர்த்த சாதி கரணங்களில் நிர்ணயித்தார் –
3-ஏகோந விம்சத்தில் லிங்க பூயஸ்த்வத்தாலே நாராயண அனுவாக ப்ரதிபாத்யனான தேவதா விசேஷமே தத் தத் வித்யா பிரதி நியதி குண விசிஷ்டானாய்க் கொண்டு சர்வ வித்யா வேத்யனாகிறான் என்று நிர்ணயித்தார் –
4-அவசிஷ்ட சப்த ராசாத்தி கரணங்களிலும் குண உப சம்ஹார அனுப சம்ஹார பலக வித்யா பேதங்களை நிரூபித்தார் –

இப்படி நாலுவகையாக ஸூத்ரகாரர் நிரூபித்த அர்த்தத்தை ஆழ்வாரும் -நாலாம் பாட்டுத் தொடங்கி மேல் நாலு பாட்டாலே வெளியிட்டு அருளுகிறார் –
இந்நாலு பாட்டிலே நாலாம் பாட்டாலே தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபக தர்மம் சர்வ வித்யா அநு யாயி என்கிற அம்சத்தை வெளியிடுகிறார் –
அஞ்சாம் பாட்டாலே ஷூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஆறாம் பாட்டாலே வித்யா பேத அபேத நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஏழாம் பாட்டாலே தேவதா விசேஷ நிர்த்தாரண பரமான அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் -அது எங்கனே என்னில்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்று அசித்தின் படியும் சித்தின் படியும் அல்ல அவன் ஸ்வரூபம் –
அபரிச்சின்ன ஆனந்த ரூபமாய் இருக்கும் அத்தை விஷய சங்கம் அற்று ஆஸ்ரயி -என்று ஆனந்தவல்லியிலும் ஆதர்வணிகத்திலும் யுக்தமான
ஆனந்தத்தவா ஸ்தூலத்வாதி தர்மங்களை தத் ப்ரகரணா சந்நிஹிதமான ந்யாஸ வித்யையிலும் வித்யா ஆகாரமாக அருளிச் செய்கையாலே
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யா அநு யாயிகள் என்கிற அர்த்த பிரகாசம் இப்பாட்டு என்னும் இடம் அதி ஸ்புடமாய் இருக்கிறது –

ஸூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சம் –
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே-என்று இதர விஷய சங்கம் அற்றது என்றால் ஆத்மா மோக்ஷ உன்முகமாய் இருக்கும் –
அத்யல்ப ஆனந்த ரூபமான ஆத்ம அனுபவ ரூப மோக்ஷத்தை ஹேயம் என்று அத்யவசித்து நிரதிசய புருஷார்த்த லாபத்தாலே புருஷாந்தர ருசி அற்று
நிலை யுண்டாக வேண்டில் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள்-என்று ஆத்ம உபாசன பலமான ஆத்ம அனுபவத்தை த்யாஜ்யமாக அருளிச் செய்கையாலே ஆத்ம உபாசன உபலஷித்தமாய் அப்ரஹ்ம உபாசனமாய் இருந்துள்ள உத்கீதாத் யுபாசனங்களுடைய ஸ்வரூப பலங்களும் த்யாஜ்யத்வேந யுக்தமாகையாலே ஸூசிதமாயிற்று –

அப்ரஹ்ம உபாசனங்களும் ஸ்ரீ கீதா பாஷ்யாதி யுக்த ரீதியா ப்ரஹ்ம உபாசன நிர்வ்ருத்த யுபயுக்த தேஹ தாரண த்வாரா மோக்ஷ பலத்தில் அந்தரபாவிக்கையாலே
உபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும் ஸ்வாதந்தர்யேண தூஷகர்மம் போலே த்யாஜ்யமாகையாலே அனுபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும்
ஸூத்ராகாரர் இப்பாதத்தில் நிரூபித்தார்

ஆழ்வாரும் இப்பாட்டால் அப்ரஹ்ம உபாசனங்கள் ஸ்வாதந்தர்யேண பரித்யாஜ்யங்கள் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார்
இறை பற்று -என்று ஆஸ்ரயண விதானத்தாலே உபாசன நிர்வர்த்த கதயா உபாதேயம் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார் –

பரவித்யா பேத அபேத நிரூபணம் –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே-என்று சங்கை காஸ்ரயனாய் ஈஸ்வரனுமான எம்பெருமான்
ஆஸ்ரயணீயத்வே சர்வசமனாகிறான் -நீயும் தத் விஷய சங்காதிக்யத்தை யுடையனாய் அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலேயும் அன்வயி -என்று
ந்யாஸ வித்யா வித்யாகாரமான வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்யங்களையும் ஸ்வாமித்வத்தையும் சங்க ஸ்வ பாவந் என்கிற பற்றிலன் -என்கிற பதத்தாலும் –
ஸ்வாமித்வ வாசியான –ஈசன் -என்கிற பதத்தாலும் அருளிச் செய்கையாலே ந்யாஸ வித்யை வித்யாந்தரத்தில் காட்டில் பின்னை என்கிற அர்த்தம் ஸூசிதமாய்
மற்றும் உள்ள தஹர சாண்டில்ய உபகோஸல வித்யாதிகளிலும் இந்த ந்யாயத்தாலே பேதம் யுண்டு என்று ஸூசிதமாகையாலும்
தைத்ரீய ஸ்வேதாஸ்வதராத்ய நேகோபநிஷச் ஸ்ருதையான ந்யாஸ வித்யை ரூப ஐக்யத்தால் ஏகை என்று சித்திக்கையால் மற்றும் உள்ள வித்யைகளிலும்
ரூப ஐக்யம் உண்டானால் வித்யை ஐக்யமே உள்ளது என்று பலிக்கையாலும் ஸூசிதமாயிற்று –

அவன் முற்றில் அடங்கே -என்று சர்வ கைங்கர்யத்தையும் தாம் விதித்த ந்யாஸ வித்யைக்குப் பலமாக அருளிச் செய்கையாலே
வித்யாந்தர ஸாத்ய பலா அவிசிஷ்ட பலத்வாத் விகல்ப-என்கிற விகல்ப அதிகரணார்த்தம் யுக்தமாகிறது –

ஸூத்ராகாரர் அனந்த சாகா ஸ்ருத்தங்களான அநேக வித்யைகளில் பேத அபேத நிரூபணம் பண்ண வேண்டி இருக்கப் பண்ணாது ஒழிந்தது நியாய பிரதர்சன த்ருஷ்டியாலேயாமா போலே இவரும் ந்யாஸ வித்யைக்கு வித்யாந்தரத்தில் காட்டில் பேதத்தையும் தன்னில் பேதம் இல்லாமையையும் அருளிச் செய்து
ஏதந் ந்யாயேந வித்யாந்தரங்களிலும் பேத அபேதம் தன்னடையே சித்திக்கும் என்று திங்மாத்ர பிரதர்சனம் பண்ணினார் –

மயர்வற மதிநலம் அருள பெற்ற இவ்வாழ்வாருக்கு அநிதர லப்யமாய் ஒரு சாதுர்யம் யுண்டு -வேதாச்சார்யரான பாதராயணர் வேதார்த்தங்களை விசாரித்து
அடைவே தாமும் ஸூசிப் பித்துக் கொண்டு வருகிற இடங்களில் அவர் விஸ்தரித்த இடங்களிலே தாம் ஸங்க்ரஹித்து அருளுகையும் –
அவர் ஸங்க்ரஹித்த இடங்களில் ஈஷத் விஸ்தரிக்கையும் -அது எங்கனே என்னில்
ஸ்வர்க்க ஆரோஹ அவரோஹ மாத்ரு பித்ரு கர்ப்ப அந்வய ரௌரவாதி நன்றாக அனுபவ வாதிகளான சம்சார தோஷங்களை ஸூத்ராகாரர் பரக்கச் சொன்னத்தை –
வீடுமின் முற்றவும் -என்று ப்ரயோஜகத்திலே அக்ராம்யமாக அருளிச் செய்கையாலும்

பாஸூபாதாதிகரணத்தில் பஸூபத்தி பாரம்ய நிஷேதம் பண்ணினத்தை உப லக்ஷணம் ஆக்கி –புரமொரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் -என்று பஸூபத்தி ஹிரண்ய கர்ப்பர்களுடைய பாரம்யத்தை நிஷேதிக்கையாலும்
ஸூத்ராகாரர் விஸ்தரித்த அர்த்தத்தை ஸங்க்ரஹிக்கையும் தத் சங்கரஹீத அர்த்தத்தை விஸ்தரிக்கையும் இவருக்கு நியாமாய் இருக்கும் –
இதுக்கு அடி இவருக்கும் அவருக்கும் உள்ள ஐகமத்யம் –

சர்வ வித்யா வேத்யன் ஸ்ரீ மன் நாராயணாய தேவதா விசேஷம் என்று நிர்ணயித்த அர்த்தம் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக யுள்ளே -என்று கார்த்ஸ்ந்யேந நன்றான விபூதி விஸ்தாரத்தைக் கண்டு
அவை எல்லாம் சர்வேஸ்வரனுடைய கட்டடங்க நன்றான சம்பத்து என்று அத்யவசித்து நீயும் தத் ஐஸ்வர்ய அந்தர்பூதனாய் அடங்கு -என்று
ப்ரஹ்ம ருத்ர இந்திராதி ஸமஸ்த விலக்ஷண புருஷர்களும் பகவத் விபூதியாகவும் எம்பெருமான் விபூதிமானாகவும் இருக்கையாலே
வித்யாந்தரங்களிலே ஸ்ருதமான சம்பு சிவாதி சப்தங்கள் அபர்யவசான வ்ருத்த்யா நாராயண பர்யந்தமாக -ச ப்ரஹ்மா இத்யாதி வாக்கியத்தில் சொன்ன
அர்த்தம் ஸூசிதமாய் இத்தாலே சர்வ வித்யைகளிலும் நாராயண ரூப தேவதா விசேஷம் உபாஸ்யமாய் சொல்லிற்றாய் இருக்கையாலே ஸூசிதமாயிற்று –

இப்படி நாலு பாட்டுக்கும் குண உப சம்ஹார பாதத்துக்கும் ஐகமத்யம் கண்டு கொள்வது –

எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் வதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

————————

எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் உண்டான படி –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
வித்யை கர்ம கர்த்ரு பூதாத்ம ஞான ரூபதயா கர்மாங்கம்-கர்ம மோக்ஷ சாதனம் என்று சங்கித்து

கர்த்ரு பூதாத்மா ஞானம் கர்மாங்கமே ஆகிலும் தத் விலக்ஷண பரமாத்மா ஞான ரூப வித்யை கர்ம அங்கம் இல்லாமையாலும்

யஞ்ஞ தாநாதி கர்மங்கள் வித்யா அங்கதயா ஸ்ருதி சித்தமாகையாலும் வித்யை கர்ம அங்கம் அன்று –
கர்மமே வித்ய அங்கமாகையால் வித்யை மோக்ஷ சாதனம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
கர்ம அங்க உத்கீதாதிகளில் ரசதமத்வாதி ப்ரதிபாதக வாக்கியங்கள் ஜூஹ்வாதிகளை ப்ருத்வீத்வாதிநா ஸ்துதிக்கும் கணக்கிலே உத்கீத ஸ்துதி பரங்கள் என்று சங்கித்து –
ஜூஹ்வாதி விதி போலே உத்கீதாதி விதி சந்நிஹிதம் இல்லாமையாலும் –

உத்கீதாதி களுக்கு ரசதமத் வாதிகள் பிரமணாந்தரா ப்ராப்தங்கள் ஆகையாலும்
ஸ்துதி பரங்கள் அன்று –ரசதமத்வாதி த்ருஷ்ட்டி விதாயங்கள் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வேதாந்தங்களில் ஸ்ருதமான ஆக்யாநங்கள் பாரிப்லவே விநி யுக்தங்கள் என்று சங்கித்து –

சில ஆக்யா நங்களை பாரிப் லவத்திலே விசேஷிக்கையாலே
வேதாந்த சித்த ஆக்யானங்கள் வித்யா விசேஷ ப்ரதிபாதநார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
க்ருஹிவ்யதிரிக்தாஸ்ரமிகளில் யஜ்ஞ தாநாதிகள் இல்லாமையாலே தத் அங்க வித்யா அனுஷ்டானம் அவர்களுக்கு கூடாது என்று சங்கித்து
யஜ்ஞ தாநாதி ரூப அங்கங்கள் இல்லா விடிலும் தத் தத் ஆஸ்ரம உசித கர்மங்கள் அங்கமாய் தத் ஸாத்ய வித்யை கூடும் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
க்ருஹிகளுக்கும் யஞ்ஞாதி நிரபேஷமாகவே வித்யா அனுஷ்டானம் என்று சங்கித்து –

யஞ்ஞாத் யங்கத்வம் ஸ்ருதி சித்தமாகையாலே யஞ்ஞாத் அபேக்ஷம் வித்யா அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
க்ருஹி களுக்கு கரண வியாபார ரூபமான கர்ம அனுஷ்டானமும் தத் உபரதி ரூபமான சமதாதிகளும் விருத்தமாகையாலே
அவர்களுக்கு சமதாதிகள் வித்யா அங்கதயா அனுபாதேயங்கள் என்று சங்கித்து –

நிஷித்த விஷய நிவ்ருத்தி ரூபமான ஸமதாதிகளுக்கும் விகித விஷய ப்ரவ்ருத்தி ரூபமான கர்மங்களுக்கும் விரோதம் இல்லாமையாலே

சமதாதிகள் வித்யா அங்கதயா உபாதேயங்கள் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
பிராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வதா சர்வாந் நாநுமதி என்று சங்கித்து

சர்வாந்நாநுமதி ப்ராணாத்ய யாபத்தியிலே ஒழிய ஸர்வதா கூடாது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில் –
வித்யா அங்கங்களான கர்மங்கள் கேவல ஆஸ்ரம அங்கங்கள் அன்று -நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கையாலே -என்று சங்கித்து –
ஏக விநியோகத்தாலே உபய அங்கத்வம் உண்டாகில் நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கும் –

இவ்விடத்தில் விநியோக ப்ருதக்த்வேந ஜீவனாதிகார காமனாதிகாரம் போலே விரோதம் இல்லாமையாலே கேவல ஆஸ்ரம அங்கமும் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு ஆஸ்ரம தர்மேதி கர்த்த வ்யதாகமான ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அநாஸ்ரமிகளான ரைக்வ பீஷ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் காண்கையாலும் விதுராதிகளுக்கு தானாதிகளான
வித்யா சாதனங்களாக சில கர்மங்கள் உண்டாகையாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில் –நைஷ்டிக வைகானச பரிவ்ராஜ காத்ய ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கும் விதுராதி ந்யாயேந ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று சங்கித்து
ஆஸ்ரம தர்ம பஹிஷ்க்ருதர்களுக்கு பிராயச் சித்தா பாவ ஸ்ரவணத்தாலும் சிஷ்டப் பஹிஷ்காரத்தாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
உத்கீதாத் யுபாசனம் வீர்ய வத்தரத்வ பல காமனான யஜமானனாலே தஹராத் யுபாசனம் போலே அநுஷ்டேயம் என்று சங்கித்து
கோதோஹநாதி களைப் போலே இந்த உபாசனம் கர்ம அங்க ஆச்ரயமாகையாலே கர்மங்களை போலே ருத்விக் கர்த்ருகம் என்று நிர்ணயித்தார்

துவாதச அதிகரணத்தில்
பால்யங்க பாண்டி த்யஞ்ச நிர்வித்யாத முநி -என்கிற இடத்தில் முநி சப்த யுக்தமான மௌனம் மனன ரூபம் ஆகையாலே

மந்தவ்ய என்கிற இடத்தில் போலே மனனம் அநு வதிக்கப் படுகிறது என்று சங்கித்து

ஸ்ரவண ப்ரதிஷ்டார்த்தமான மனனம் ப்ராப்தமானாலும் ஸூபாஸ்ரய சமசீலந ரூப மனனம் பிராப்தம் இல்லாமையால்
ஏவம் வித மனனம் வித்யா சஹகாரித்வேந விதிக்கப் படுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ரயோதச அதிகரணத்தில்
பால்யேந திஷ்டா சேத்-என்கிற இடத்திலும் உபாசகனுக்கு விதிக்கப் படுகிற பால கர்மம் காமசாராதிகள் ஆகையால் அவைகளும் வித்யா மஹாத்ம்யத்தாலே உபாதேயம் என்று சங்கித்து –

துஸ்சரிதம் வித்யோத்பத்தி விரோதி த்வேந ஸ்ருதமாகையாலும் பாண்டித்ய ப்ரயுக்த ஸ்வ மஹாத்ம்யா அநா விஷ்கரணம்
பால்ய சப்தார்த்தம் ஆகையாலும் கர்மசாராதிகள் அனுபாதேயம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில்
அநாமுஷ்மிக பல உபாசனங்கள் ஸ்வ சாதன பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியதி உத்பன்னங்கள் ஆகின்றன வென்று சங்கித்து

பிரதிபந்தகம் உண்டாகில் -விளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன பிரதிபந்தகம் இல்லையாகில் அவிளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யைகள் மஹாதிசய சாலிகளாகையாலே ஸ்வ சாதநீ பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியம உத்பன்னங்கள் ஆகின்றன என்று சங்கித்து அவைகளுக்கும் ப்ரஹ்ம விதபஸாராதி களான அதி க்ரூரமான பிரதிபந்தகங்கள் சம்பாவிதங்கள் ஆகையாலே அநியமேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

இதில் த்விதீய –த்ருதீய ஏகாதச அதிகாரணங்கள் ப்ராசங்கிகங்கள்

அவசிஷ்ட துவாதச அதிகாரணந்த்தில் –பத்து அதிகாரணத்தாலே
வித்யையே மோக்ஷ சாதனம் என்றும் –

தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்களே தத் தத் ஆஸ்ரமிகளுடைய வித்யைகளுக்கு நியதி அங்கங்கள் என்றும்

அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு தபோ தாநாதிகளான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் –

சமதாதிகள் வித்யா அங்கங்கள் என்றும் –

சம விசேஷ ரூபமான துஷ்ட அன்ன பரிஹாரமும் வித்யா அங்கம் என்றும் –

வித்யா அங்கங்களுக்கே ஆஸ்ரம அங்கத்துவம் உண்டு என்றும்

ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்குக் கேவல தபோ தாநாதிகள் வித்யா அங்கம் இல்லாமையால் வித்யையில் அன்வயம் இல்லை என்றும் –

ஸூபாஸ்ரய சமசீலந ரூபமான மனனம் என்ன பாண்டித்யா அநாவிஷ்கரண ரூபமான பால்யம் என்ன இவைகள் அங்கம் என்றும் அங்கங்களை நிரூபித்து –

அவசிஷ்ட சதுர்த்தச பஞ்ச தச அதிகரணங்களால் பிரதிபந்தகம் அற்ற தசையில் அங்கங்களால் அங்கியான உபாசன நிஷ்பத்தி என்று நிர்ணயித்தார் –

இப்படி நிரூபித்த அர்த்தத்தில் ப்ராசங்கிகமான அதிகரண த்ரயத்தையும் உபேக்ஷித்து அவசிஷ்ட துவாதச அதிகரண அர்த்தத்தை
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே–என்று மனனாதி ஹேதுவான மனஸ்ஸூம்
ஸ்துத்யாதி ஹேதுவான வாக்கும் -பிரணாமாதி கரணமான கார்யமுமாய் இருந்துள்ள இம்மூன்றையும் இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தையும் நிரூபித்து
இதர விஷய அன்வயத்தை தவிர்த்து ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே ஒதுக்கு -என்று அங்க ஸ்வரூபத்தையும்
அங்கங்களாலே அங்கி சித்தி தசையையும் அருளிச் செய்து இப்பாட்டாலே வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில் –

வித்யையே மோக்ஷ சாதனம் என்று பிரதம அதிகரணத்தில் நிரூபித்த அர்த்தம் -இறை யுள்ளில் ஒடுங்கே-என்று அவன் விஷயத்தில் ந்யஸ்த பரனாய் இரு என்று சித்த உபாய சுவீகார ரூபமான ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கையாலே யுக்தமாயிற்று –

சதுர்த்த பஞ்சம நவம அதிகரணங்களில்
வானப்ரஸ்த பரிவ்ராஜகர்களுக்கு தத் தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும்

க்ருஹிகளுக்கு ஸ்வ ஆஸ்ரம உசிதமான யஞ்ஞாதிகள் அங்கம் என்றும்
விதுராதிகளுக்கு தாநாதிகம் வித்யா அங்கம் என்றும் -நிர்ணயித்த அர்த்தம் –

அகிஞ்சனான ந்யாஸ வித்யா நிஷ்டனுக்கு ப்ரயோஜனாந்தர சாதனாந்தர வைமுக்யத்தை –
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று அங்கமாக விதிக்கையாலே தன் முகேந தத் தத் அதிகார அநு குண அங்க அனுஷ்டானத்தாலே வித்யா நிஷ்பத்தி வரும் என்று சொல்லிற்றாய் அத்தாலே ஸூசிதமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான கர்ம சமாதிகளுக்கு விஹித நிஷித்த பேதேந விரோதம் இல்லை என்று நிர்ணயித்த அர்த்தமும் –
உள்ளம் உரை செயல் -இத்யாதியாலே பிரதிகூல விஷய நிவ்ருத்தியையும் அனுகூல விஷய ப்ரவ்ருத்தியையும் விதிக்கையாலே வ்யக்தமாக ஸூசிதம் –

மநோ வாக் காயங்களை அனுஷிதா விஷயங்களில் நின்றும் மீட்க வேணும் என்று விதிக்கிற இச்சந்தையாலே தானே
சப்தமாதி கரண யுக்தமான நிஷித்த பாஷாணம் பரிஹார்யம் என்கிற அர்த்தமும் ஸூசிதமாயிற்று –

அஷ்டம அதிகரணத்தில்
ஒரு தர்மத்துக்கே வித்யா அங்கத்தவமும் ஆஸ்ரம அங்கத்தவமும் கூடும் என்று நிரூபித்த அர்த்தம் -இதர விஷயங்களில் உள்ள
மநோ வாக் வ்ருத்திகளையே பகவத் விஷயத்திலும் ஒடுக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதமாகலாம்-

தசம அதிகரணத்தில்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கு வித்யா அதிகாரம் இல்லை என்று நிரூபித்த அர்த்தம் –உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று
நிஷித்த விஷயங்களை அவஸ்ய பரிஹரணீயன்கள் என்று தத் க்ரூர்யம் யுக்தமாய் அத்தாலே ஸூசிதம் –

துவாதச அதிகரணத்தில்
நிர்ணீதமான ஸூபாஸ்ரய சம்சீல நத்தினுடைய கர்த்தவ்யத்வமும்-இதர விஷய நிஷ்டமான
மநோ விருத்தியை பகவத் விஷயம் ஆக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதம் என்று காணலாம் –

த்ரயோதச அதிகரணத்தில் –
காமசாரம் பால்ய சப்தார்த்தம் அன்று -ஸ்வ மஹாத்ம்யா நாவிஷ்கரணமே பால்ய சப்தார்த்தம் என்று நிரூபித்த அர்த்தமும் கை வந்த படி செய்ய ஒண்ணாது
என்று நிஷித்த நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகலாம் –

சதுர்தச பஞ்ச தசங்களில் நிரூபித்தமான அங்க நிஷ்பத்த்ய நந்தரமே பிரதிபந்தகம் உண்டாகில் அங்கி நிஷ்பன்னமாக மாட்டாது –
பிரதிபந்தகம் அற்றால் அங்கி நிஷ்பன்னமாம்-என்கிற அர்த்தமும் -நிஷித்த விஷய நிஷ்ட மநோ வாக் வ்ருத்தி ரூப பிரதிபந்தகம் அற்றே
பகவத் ஆஸ்ரயணம் பண்ண வேணும் என்று சொல்லுகையாலே ஸூசிதம் –

ஆக இப்படி எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் யுண்டு என்று ஸூஷ்ம தர்சிகளுக்கு ஸூக்ரகமாக அறியலாம் படி ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

———————-

இனி மேல் சதுர்த்த அத்யாயத்துக்கும் மேல் இரண்டு பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டான படி –
இதில் ஒன்பதாம் பாட்டு பிரதம த்விதீய பாதார்த்தமாகவும்
பத்தாம் பாட்டு த்ருதீய சதுர்த்த பாதார்த்தமாகவும் இருக்கும் –

இதில் பிரதம பாத பிரதம அதிகரணத்தில்
மோக்ஷ சாதநீ பூத ஞானம் சக்ருதா வ்ருத்தம் என்று சங்கித்து நிரந்தர த்யான ரூபமான ஞானமே மோக்ஷ சாதனம் என்று
ஸ்ருதி சித்தமாகையால் அஸக்ருத் கர்த்தவ்யம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
ஆத்மேத்யேவோபாஸீத-இதி வாக்ய விசேஷ பிரதிபன்னமான உபாசன விசேஷத்திலே அந்யத்வேண ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அவ்விடத்திலும் ஆத்மத்வேந உபாஸ்யம் என்று நிர்ணயித்தார்

த்ருதீய அதிகரணத்தில்
மநோ ப்ரஹமேத் யுபாஸீத -இத்யாதி ப்ரதிகோபாசனங்களில் ப்ரஹ்ம உபாசனத்தவ சமயத்தாலே உபாசித்துராத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அந்த உபாசனங்களில் ப்ரதீகமான மந ப்ரப்ருதிகள் உபாஸ்யமாகையாலும் ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லாமையாலும்
இவ்விடங்களில் ஆத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் அன்று என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
பல சாதனத்வேந உத்க்ருஷ்டமான உத்கீதாதி த்ருஷ்ட்டி ஆதித்யாதிகள் என்று சங்கித்து ஆதித்யாதிகளே பல ப்ரததயா உத்க்ருஷ்டங்கள் ஆகையாலே
உத்கீதாதிகளிலே ஆதித்யாதி த்ருஷ்டியே உள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உபாசனை அனுஷ்டானம் ஆஸீ நத்வ சாயா நத்வ ஸ்திதி கமணாத்ய வஸ்தைகளிலும் விசேஷா பாவாத் உபபன்னம் என்று சங்கித்து
சயா நாத்ய வஸ்தைகளில் ஏகாக்ரத்வ சம்பவம் அனுபன்னம் ஆகையால் ஆஸீநத்வ அவஸ்தையில் ஒன்றிலுமே கடிக்கும் ஒன்றாகையாலும்
தத் அவஸ்தையிலேயே உபாசன அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பூர்வம் நிர்ணீத உபாசனம் ஏகாஹ மாத்ர சம்பாத்தியம் என்று சங்கித்து –
ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் -என்கிற ஸ்ருதியின் படியே –ஆப்ரயாணம் அனுவர்த்த நீயம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
வித்யா பலத்வேந ச்ருதங்களான பூர்வ உத்தராகங்களினுடைய அஸ்லேஷ விநாசங்கள் -ந புக்தம் -இத்யாதி வசன விரோதத்தாலே
வித்யா ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று சங்கித்து -அஸ்லேஷ விநாசங்கள் வித்யா பலத்வேந சுருதி பிரதிபன்னங்கள் ஆகையாலும்-
ந புக்தம் -இத்யாதி வசனங்கள் பல ஜனன சக்தி த்ரடிம ப்ரதிபாதன பரங்கள் ஆகையாலும் ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸூக்ருதம் சாஸ்த்ர சித்தமாகையாலே வித்யா விரோதி அன்று என்று சங்கித்து ஸூக்ருதமும் அதிகாரி பேதேந வித்யா விரோதி என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
சர்வ பூர்வாகங்களும் வித்யா மஹாத்ம்யத்தாலே வினாசயங்கள் என்று சங்கித்து அநாரப்த கார்யங்களுக்கே அது உள்ளது என்று என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில்
அக்னி ஹோத்ராதி நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம தர்மங்களும் தத் பலன்களும் அஸ்லேஷோக்த்யா அனுஷ்டானம் அப்ராப்தம் என்று சங்கித்து
வித்யா உத்பாதகங்களான ஸ்வ வர்ணாஸ்ரம உசித கர்மங்களுக்கு பாலாஸ்லேஷம் இல்லாமையால் அனுஷ்டானம் பிராப்தம் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
பிராரப்த கர்ம விநாசம் வித்யா யோனி சரீராவஸாநத்திலே நியமேந வருகிறது என்று சங்கித்து தச் சரீர அவசானத்திலே யாகிலும்
சரீராந்தர அவசானத்திலே யாகிலும் அநியமேந வரும் என்று நிர்ணயித்தார் –

த்வதீய பாத -பிரதம அதிகரணத்தில்
வாங்மனசி சம்பத்யதே -என்று வாக்குக்கு மனஸ் சம்பத்தியை ப்ரதிபாதிக்கிற சுருதி வாக்கு மனா உபாதாநகம் அல்லாமையாலே மனசிலே
வாக் ஸ்வரூப சம்பத்தியைச் சொல்லுகிறது அன்று -வாக் வ்ருத்தி மநோதீநை யாகையாலே தத் வ்ருத்தி சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து –
மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தில் ப்ரதிபாதனமானாலே ஸம்பத்தி சுருதி ஸ்வாரஸ்யம் சித்திக்கையாலும்

வாக்குக்கு மனஸ் ஸூ உபாதானம் அல்லாமையாலே லயம் கூடாதே இருந்தாலும் மனஸோடு வாக் சம்யோகத்தைச் சொல்ல வந்தது ஆகையாலும் மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தியை ப்ரதிபாதிக்கிறது என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில்
மன ப்ராணே-என்கிற இடத்தில் அன்ன ப்ராக்ருதமாகச் சொல்லப் படுகிற மனஸூக்கு அன்ன ப்ரக்ருதிக பூதாப் ப்ரக்ருதிகமான பிராணன் காரணமாக் கூடுகையாலே பரம்பரையா ஸ்வ காரணே லயரூப சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து
மன ப்ராணன்கள் அகங்கார ஆகாச விகாரங்கள் ஆகையாலும் அந்நாப் விகாரங்கள் இல்லாமையாலும் பரம்பரையா காரண லய ஸம்பத்தி ப்ரதிபதன பரம் அன்று –பூர்வ உக்தரீத்யா சம்யோக மாத்ரத்தைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
பிராணாஸ் தேஜஸி -என்கிற இடத்தில் கேவல தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று சங்கித்து ஜீவனோடே கூட தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தி அதிகரணத்தில் –
தேஜஸ் சப்த மாத்ர ஸ்ரவணத்தாலே ஜீவ சம்யுக்த ப்ராணனுக்கு கேவல தேஜஸ் ஸம்பத்தி என்று சங்கித்து தேஜ உபலஷித சர்வ பூதங்களிலும் ஸம்பத்தி என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அத்ரைவ அம்ருதத்வ வசனத்தாலே உத்க்ராந்தி இல்லாமையால் அப்ரஹ்ம நிஷ்டனுக்கே உதக்ராந்தி என்று சங்கித்து

ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் நாடீ விசேஷத்தாலே உத்க்ரமணம் சுருதி சித்தமாகையாலே அவனுக்கும் அது உண்டு என்று நிர்ணயித்தார் –

ஷஷ்டா அதிகரணத்தில்
ஜீவ பரிஷ்வக்தங்களான பூத ஸூஷ்மங்களில் ஸூக துக்க உபபோக ரூப கார்யம் காணாமையாலே அவற்றுக்குப் பரமாத்மா ஸம்பத்தி இல்லையென்று சங்கித்து
ஸூஷூப்தி பிரளய தசைகளில் போலே பரமாத்மா சம்பத்தியால் ஸூக துக்க உபபோக ஆயாச விஸ்ரம ரூப கார்யம் உதக்ரமண தசையிலும் உண்டாகையாலே
தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -என்று சுருதி ப்ரதிபன்னமான ஜீவ சம்யுக்த பூத ஸூஷ்மங்களுக்கு உள்ள பரமாத்மா சம்பத்தியை இல்லை செய்ய ஒண்ணாது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பூர்வ யுக்தமான பரமாத்மா ஸம்பத்தி காரணா பத்தி ரூபை என்று சங்கித்து
வாங்மனசி சம்பத்யதே -என்கிற இடத்தில் சம்பத்யதே -என்கிற பதம் சம்சாரக்க விசேஷ வாசியாகையாலும்

அநு ஷக்தமான அந்தப் பதத்துக்கு அபிதான வை ரூப்யத்தில் பிரமாணம் இல்லாமையாலும் சம்சர்க்க விசேஷாபத்தியைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸதாதிகையான மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்கிற நியமம் இல்லை -தோன்றிற்று ஒரு நாடியாலே நிஷ் க்ரமணம் உள்ளது என்று சங்கித்து
தயோர்த்வ மாயன்னம்ருதத்வமேதி -என்று மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று சுருதி சொல்லுகையாலே நியமேந மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
உத்க்ரமண அனந்தரம் ரஸ்ம்யநு சாரேண கதி என்கிற நியமம் இல்லை -நிசிம்ருதனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அது கிடையாமையாலே என்று சங்கித்து
நிசியிலும் ரஸ்மி சம்பவ ப்ரதிபாதக சுருதி இருக்கையாலே நிசிம்ருதனாகிலும் ப்ரஹ்ம நிஷ்டனுக்கு ரஸ்ம்யநு சாரேண கமனம் நியதம் என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில்
நிசா மரணம் சாஸ்த்ர கர்ஹிதம் ஆகையால் அப்போது ம்ருதனுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

கர்ம சம்பந்தம் யாவது தேஹ பாவியாகையாலே கர்ம விநாச அனந்தரம் சம்சாரம் கூடாமையாலும்

நிசா மரண க்ரஹை அவித்வத் விஷயை யாகையாலும்

நிசா ம்ருதனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
தஷிணாயன ம்ருதனுக்கு சந்த்ர பிராப்தி ஸ்ரவணத்தாலும்-சந்த்ர பிராப்தி யுடையவர்களுக்குப் புநரா வ்ருத்தி ஸ்ருதை யாகையாலும் அக்காலத்தில்
ம்ருதர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

பித்ருயாண பதத்தால் சந்த்ர பிராப்தி உடையவர்களுக்கே புநரா வ்ருத்தி ஒழிய சந்த்ர பிராப்தி
உடையவர்களுக்கு எல்லாம் புநரா வ்ருத்தி உண்டு என்கிற நியமம் இல்லாமையால் ப்ரஹ்ம பிராப்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

இதில் பிரதம பாதத்தில்
முதல் அதிகரண ஷட்கத்தாலே உபாசன ஸ்வரூப சோதனத்தைப் பண்ணி

ஏழாம் அதிகரணம் தொடங்கி மேல் உள்ள அதிகரண பஞ்சகத்தாலே -ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலத்தை நிரூபித்தார்

த்வதீய பாதத்தில் –
உத்க்ராந்தி நிரூபணம் பண்ணினார்

இப்படி பாத த்வயத்தாலே நிரூபித்த அர்த்தத்தை –
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்று ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தர்பவிக்கவே
ஆத்மாவினுடைய அஞ்ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும் தத் தேதுவான அவித்யாதிகளும் எல்லாம் விட்டுக் கழியும் –
பின்னையும் ஆரப்த சரீர விசேஷத்தினுடைய முடிவைப் பார்த்து அத்தை விடும் பொழுது எண்ண வேணும் -என்று ஆழ்வாரும் வெளியிட்டு அருளினார் –

அது எங்கனே என்னில்
ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகார தயா அந்தர்பவித்து பஜிக்கவே என்று சொல்லுகிற –ஒடுங்க அவன் கண் -என்கிற முதல் அடியாலே
பிரதம பாத அதிகரண ஷட்க நிரூபிதமான உபாசன ஸ்வரூப சாதனம் பண்ணின அம்சம் ஸூசிதமாயிற்று –
ஒடுங்கே -என்கிற அம்சத்தை உரையில் பஜன பரமாகவும் யோஜித்தமை ஸ்பஷ்டமாய் இருக்கும் –

ஈடு -சதுர் விம்சதி சஹஸ்ரம் முதலான வியாக்யானங்களிலும் –
பஜநம் எளிதானாலும் -என்றும் –

பஜனமாவது தான் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு கொடுக்கை -என்றும் யுக்தமாகையாலே

இச்சந்தை பஜன பரமாகவே முன்புள்ள முதலிகளும் வ்யாக்யானம் பண்ணினமை ஸித்தமாய் இருக்கும்

வீடுமின் முற்றவும் -பிரபத்தி பரம் -பத்துடையடியவர் -பக்தி பரம் என்கிற வ்யவஸ்தைக்கு இது விருத்தம் அன்றோ என்னில்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு முன்புள்ள முதலிகள் இப்படி நிர்வகித்தார்களே யாகிலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு இவ்வருகுள்ள முதலிகள் இரண்டும் பக்தி பரம் என்று
நிர்வஹிக்கையாலும் வ்யாக்யாதாக்கள் அனைவரும் பஜன பரம் என்று தோற்றும்படியே வ்யாக்யானம் பண்ணுகையாலும் விரோதம் இல்லை –

ஆனால் வீடுமின் முற்றவும் -பக்தி பரமாயும் இச்சந்தை பஜன பிரகார ப்ரதிபாதன பரமாயும் இருந்ததே யாகிலும் ஸாத்ய பக்தி ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி என்று வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே க்ரந்தக்காரர் தாமே நிர்ணயம் பண்ணுகையாலே இச்சந்தை
சாதன பக்தி பிரகார ப்ரதிபாதன பர அதிகரண ஷட்க அர்த்த ஸூசகமான படி எங்கனே என்னில் –

நாதமுனி ப்ரப்ருதிகளான நம் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டித்த ஸாத்ய பக்திக்கும் உபாசகன் அனுஷ்டிக்கிற சாதன பக்திக்கும் சாதனத்வ புத்தி ராஹித்ய சாஹித்யங்களால்
வந்த பேதம் ஒழிய ஸ்வரூப வைலக்ஷண்யம் இல்லாமையாலும் யம நியம பிராணா யாமாதிகள் என்ன-கீர்த்தன யஜன நமஸ்காராதிகள் என்ன –
ஸூ சிதேசா வஸ்தாபித சேலா ஜின குசோத்தர ரூப ஆசனம் என்ன -ஏகாக்ர சித்ததா வஸ்தானம் என்ன -இவை முதலான அனுஷ்டானமும்
இரண்டுக்கும் ஒத்து இருக்கையாலும் இச்சந்தை ஸாத்ய பஜனத்தைச் சொன்னாலும் சாதன பஜன பிரகார ஸூசகத்வம் யுண்டாகத் தட்டில்லை-

இனி ஏழாம் அதிகரணம் தொடங்கி மேலுள்ள அதிகரண பஞ்சகத்தாலே நிரூபித்த ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலாம்சமும்
ஒடுங்கலும் எல்லாம் விடும் -ஆகந்துகங்களாய் ஸ்வரூப ப்ரயுக்தம் அன்றிக்கே இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்கள் எல்லாம் விட்டுப் போம் -என்று
வித்யா பலமான சகல விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ப்ரகாசிதம் என்னும் இடம் ஸ்புடமாக அறியலாம் –

சரீர விஸ்லேஷ தசையை எண்ணுங்கோள்-என்று விதிக்கிற –ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்கிற சந்தையாலே உத்க்ராந்தி பாதார்த்தம் கார்த்ஸ்ந்யேந ஸூசிதமாயிற்று –

இதில் பிரதம அதிகாரணம் தொடங்கி அஷ்டம அதிகரண பர்யந்தம் நிரூபித்த
சர்வ இந்திரிய பூத ஸம்பத்தி ரூப உத்க்ரண அம்சம் -ஆக்கை விடும் -என்கிற அளவால் யுக்தமாயிற்று –

நவம அதிகரணம் தொடங்கி மேல் மூன்று அதிகரணத்தால் பிராரப்த கர்ம அவசான காலமே மோக்ஷ காலம் என்று நிர்ணயித்த அம்சமும்
க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு சரீர விஸ்லேஷ காலத்தை விசேஷம் இன்றிக்கே எப்போது வருகிறதோ என்று சிந்தி -என்கிற
விடும் பொழுது எண்ணே -என்கிற அளவால் ஸூசிதமாயிற்று –

இப்படி ஒன்பதாம் பாட்டுக்கும் சதுர்த்த அத்யாய பிரதம த்விதீய பாதங்களுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடத்தை உபபாதித்தோம் –

——————————-

இனிமேல் த்ருதீய துரீய பாதங்களுக்கு பத்தாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படியை -தெரிவிக்கிறோம் –

த்ருதீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம பிராப்தியில் அர்ச்சிராதி மார்க்கமும் -பின்னையும் சில மார்க்காந்தரங்களும் நைரபேஷ்யேண சாந்தோக்ய வாஜசநே யாதிகளிலே ச்ருதங்களாகையாலே -மார்க்கங்கள் விகல்பேந வருகிறது என்று சங்கித்து –

சர்வ அவஸ்தலங்களிலும் அர்ச்சிராதி பூதங்களான ஆதித்யாதி புருஷர்கள் வழி நடத்துகிறவர்களாகக் காண்கையாலே
அர்ச்சிராதி மார்க்கமே ப்ரத்யபிஞ்ஞாதம் ஆகையால் மார்க்கம் ஏகம் என்று சித்திக்கையாலும்

அத்தால் அந்நியத்ர உக்தங்களுக்கு அந்நியத்ர உபஸம்ஹாரம் ப்ரமாணிகம் ஆகையாலும்

அர்ச்சிராதி மார்க்க ஏணைவ முக்தஸ்ய ப்ரஹ்ம ப்ராப்யர்த்த கமனம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
பாட க்ரமத்தாலே வருண இந்திர ப்ரஜாபதிகளுக்கு வாயு வனந்தரம் நிவேசம் யுக்தம் என்று சங்கித்து பாட க்ரம அபேக்ஷயா அர்த்த க்ரமம் பலிஷ்டமாகையாலே மேகோதா வர்த்தித்தவ ரூப சம்பந்தத்தால் வித்யுத் உபரி வர்ண இந்த்ராதிகளுக்கு நிவேசம் யுக்தம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
அர்ச்சிராதிகள் மார்க்க சிஹ்னங்கள் என்று சங்கித்து கமயித்ருத்வம் ச்ருதமாகையாலே அர்ச்சிராதிகள் ஆதி வாஹிக புருஷர்கள் என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம உபாசகனுக்குப் பரிபூர்ண ப்ரஹ்ம ப்ராப்த்யர்த்தம் தேசாந்தர கமனம் அநபேஷிதம் ஆகையால் ப்ரஹ்ம உபாசகர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை –ப்ரதீக உபாசகர்களுக்கே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று சங்கித்து
தேச விசேஷ அவச்சின்ன ப்ரஹ்ம பிராப்தி யுடையவனுக்கே அவித்யா நிவ்ருத்தி சுருதையாகையாலே

நிஷ்க்ருஷ்ட ப்ரஹ்ம சரீர ஜீவ உபாசகர்களுக்கும்
ஜீவ சரீர ப்ரஹ்ம உபாசகர்களுக்குமே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று நிர்ணயித்தார் –

முக்த ஐஸ்வர்ய பிரகார சிந்தனம் பண்ணுகிற துரீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம ஸம்பத்தி யுடையவனுக்கு ஸ்வரூபம் நித்யாவிர்பூதமாய் இருக்கையால் அதுக்கு ஆவிர்பாவம் சொல்ல ஒண்ணாது –
அபூர்வமாய் இருபத்தொரு ஆகார நிஷ்பத்தியே உள்ளது என்று சங்கித்து -அபஹத பாப்மத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபம் அவித்யா திரோஹிதமாகையால்
தந் நிவ்ருத்தயா எப்போதும் உள்ள ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
முக்தன் ப்ரஹ்ம அனுபவ தசையில் ப்ரஹ்மத்தை விபக்தமாக அனுபவிக்கிறான் என்ன வேணும் -சுருதி சதங்களாலே தத் திசையிலும் பேதம் காண்கையாலே -என்று சங்கித்து -பிரகார பிரகாரி பேதத்தால் வந்த பேதத்தை சுருதி சதங்கள் சொல்ல வந்தது ஒழிய –

தத்வம்ஸயாதி சுருதி சித்த விஸிஷ்ட ஐக்யத்தை பாதிக்க வந்தது அல்லாமையாலே
தத் பிரகார தயா அவிபக்தமாயே அனுபவிக்கிறான் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
முக்தனுக்கு அபஹத பாப்மாத்வாதி குணவத்த்வந்தான் ஞானத்வந்தான் ஸ்வரூபம் என்று மத பேதத்தாலே சங்கித்து
உபயமும் சுருதி சித்தமாகையால் உபயமும் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
முக்தனுக்கு ஸ்ருதையான ஞாத்யாதி ப்ராப்தியில் ப்ரயத்தனாந்தர சாபேஷதை உண்டு என்று சங்கித்து
ஈஸ்வரனைப் போலே பிரயத்தன நிரபேஷமாகவே-ஞாத்யாதி பிராப்தி யுள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
கர்ம சம்பந்தம் இல்லாமையால் முக்தன் அசரீரனாய் இருப்பன் என்றும் -கர்ம சம்பந்தம் இல்லாவிடிலும் கேவல இச்சையா சரீரனாயே இருப்பன் என்றும் சங்கித்து –
சங்கல்பம் யுண்டாகில் ச சரீரனாய் இருக்கிறான் -அது இல்லையாகில் அசரீரனாய் இருக்கிறான் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பரம சாம்யா பத்தி ஸ்ருதியாலே ஜகத் ஈஸ்வரத்வமும் முக்தனுக்கு யுண்டு என்று சங்கித்து -அது உள்ளது ஜகத் காரண பூத ப்ரஹ்ம மாத்ரத்துக்கே யாகையாலே-போக மாத்ர ஸாம்யமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

சரம ஸூத்ரம் -அதிகரண அந்தரமான பக்ஷத்தில் சப்தம அதிகரணமான அதில் –
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் கதாசித் புநரா வ்ருத்தியையும் பண்ணக் கூடும் என்று சங்கித்து –

அநா வ்ருத்தி சுருதி சித்த மாகையாலும் ஸத்யஸங்கல்பனான ஈஸ்வரன்
ஸ்வ சங்கல்ப விருத்தமாகப் புநரா வ்ருத்தியைப் பண்ணாமையாலும் புநரா வ்ருத்தி வாராது என்று நிர்ணயித்தார் –

இப்படி இவ்விரண்டு பாதத்தாலேயும் நிஷ்கர்ஷித்த
அர்ச்சிராதி மார்க்கம் தொடங்கி பரம வ்யோம பிரவேசாநந்தரபாவி ப்ரஹ்ம அனுபவ பர்யந்தமாய் யுள்ள பலத்தை -ஆழ்வாரும் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே  -என்று ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே
எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருப்பதாய்

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய அகாமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய்
ஆவீர்பூத ஸ்வ ரூபமான விலக்ஷண ஆத்மவர்க்கம் என்ன –

அஸங்க்யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையவனாகையாலே
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய ஆஸ்ரிதரைக் கைவிடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி -என்று வெளியிட்டு அருளினார் –

இதில் நலம் என்று ஈஸ்வரனோடு ஒத்த ஆனந்தத்தை யுடையனாக முக்தனைச் சொல்லுகையாலே

சர்வ ஸத்காரத்தால் வந்த ஈஸ்வர ஆனந்த சாம்யம் யுக்தமாய் –
அத்தாலே அர்ச்சிராதி புருஷ சதிகார ப்ரயுக்த ஆனந்தமும் சொல்லிற்றாக லபிக்கையாலே இச்சந்தையாலே அர்ச்சிராதி பாதார்த்தமும் ஸூசிதமாகலாம்

சரம பாத பிரதம அதிகரணத்தில்
ஸ்வரூப ஆவிர்பாவமே முக்த தசையில் உள்ளது என்று நிர்ணயித்த அர்த்தம் –

ஆவிர்பூத அபஹத பாப்மாத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிற
ஒண் பொருள் -என்கிற சந்தையாலே ஸ்புடமாக ஸூசிதமாயிற்று-

நாரணன் -என்கிற சப்தம் -சர்வ காலத்திலும் சேதன ஈஸ்வரர்களுக்குள்ள அப்ருதக் சித்த சம்பந்தத்தைக் காட்டுகையாலே
முக்த தசையில் அவிபாகேந ப்ரஹ்ம அனுபவமே உள்ளது என்று நிர்ணயித்த த்வதீய அதிகரண அர்த்தம் ஸூசிதமாயிற்று –

ஒண் பொருள் -என்கிற இடத்தில் ஆத்ம வஸ்துவுக்கு ஒண்மையாவது

அசங்கோசாத் அபஹத பாப்மத்வாதிகளும் ஞான ஸ்வரூபத்வமும் ஆகையால் உபயம் ஸ்வரூபம்
என்கிற த்ருதீய அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம்

இது உரையில் சப்தார்த்த நிர்வாஹ பிரகாரத்தில் கண்டு கொள்வது –

ஈடு முதலான வ்யாக்யானங்களில் –நலத்து ஒண் பொருள் -என்கிற பதங்களுக்கு ஞானாதி குணகத்வமும் ஞான ஸ்வரூபமும் அர்த்தம் என்று வ்யாக்யானம்
பண்ணுகையாலே இப்பத த்வயத்தாலும் உபயமும் ஸ்வரூபம் என்கிற அதிகாரண அர்த்தம் சொல்லப் பட்டது என்று ஸ்புடமாக அறியலாம் –

ஒண்மைக்கு அபஹத பாப்மாத்வாதி குண அஷ்டக அந்தரகதமான ஸத்ய ண் அர்த்தமாகையாலே
சங்கல்பாதேவ ஞாத்யாதி பிராப்தி என்கிற சதுர்த்த அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம் –

ஒண் பொருள் –என்கிற சப்தத்தாலே அபஹத பாப்மாத்வாத் யந்தரகதமான சத்ய காமத்வம் யுக்தமாயிற்று –
சத்யகாமத்துவமாவது -இச்சை யுண்டாகில் அவ்ப்ரதிஹதமாய் இருக்கை-

இப்படி சத்ய காமத்வ உக்த்யா ஐச்சமாக சரீரத்வ அசரீரத்வங்கள் முக்தனுக்கு கூடும் என்கிற பஞ்சம அதிகாரண அர்த்தமும் –
ஒண் பொருள் –என்கிற சந்தையாலே தானே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட அதிகரண நிரூபிதமான ஜகத் வியாபாரம் இன்றிக்கே போக மாத்ர ஸாம்யமே உள்ளது -என்கிற அர்த்தம் –

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு ஒத்த ஆனந்தத்தை உடையவன் என்று ஆனந்த மாத்ர சாம்யத்தைக் காட்டுகிற –அந்நலம்-என்கிற பதத்தால் ஸூசிதம் –

சரம ஸூத்ரம் அதிகாரணாந்தரம் என்கிற பக்ஷத்தில் ஆஸ்ரிதரை ஒரு நாளும்  விடாத திண்மையை யுடைய திருவடிகள் என்று சொல்லுகிற –
திண் கழல் -என்கிற பதத்தாலே -ஈஸ்வர ஸ்வா தந்தர்ய சங்கீத புநரா வ்ருத்தியை
ஸத்ய ஸங்கல்ப காருண்யாதி குணவதீஸ்வர ஸ்வ பாவத்தாலே இவ்வதிகரண அர்த்தம் ஸூசிதம்

இப்படி பத்தாம் பாட்டுக்கும் இப்பாத த்வயத்துக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

——————————————–

இனி நிகமத்தில்
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த இப்பத்தே -என்று தடாகங்கள் சேர்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ உபயோகங்களான கல்யாண குணங்களால் தொடுக்கப் பட்டு இருந்துள்ள
ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு இப்பத்தை நிரூபியுங்கோள் -என்று
உத்தர த்விக ப்ரதிபாத்யமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ ப்ரதிபாதனம் இத் திருவாய் மொழி என்று தலைக்கட்டி அருளினார் –

ஈட்டிலே உபாஸக அனுக்ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த என்று இறே-
சீர்த் தொடை -என்கிற சந்தைக்கு வ்யாக்யானம் செய்து அருளினது –

இப்படி வீடுமின் முற்றத்துக்கு உத்தர த்விகத்துக்கும் ஐகமத்யம் யுண்டு என்னும் இடம் சித்தம்

ஆக அத்யாய சதுஷ்ட்யாத்மகமாய் –
ஷோடச பாதாத்மகமாய் –
ஷாட் பஞ்சாசததிகசத அதிகரணாத் மகமாய்
இருந்துள்ள சாரீகாதாத்மகமாய் இருந்துள்ள பிரதம த்விதீய தசகங்களுக்கும் –
கலிவைரி நிகமாந்த தேசிக ப்ரப்ருதிகளான பூர்வாச்சார்யர்களுடைய ப்ரதிஞ்ஞா வாக்கியங்களின் படியே ஐகமத்யம் அநதி ஸங்க்ரஹ விஸ்தரேண உபபாதிதம் ஆயிற்று –

இனி பத்துடை அடியவர் -தொடங்கி -முனியே நான்முகன் அளவும் -இவ்விரண்டு திருவாய் மொழிக்கும் விவரணம் என்னும் இடம் ஸூதீக்களுக்கு ஸூவ்யக்தமாக அறியலாம்

—————————————————————————-——————————-

பாரம்பரீ பவபயோ நிதி பாத்ர பாத்ர சிஷ்டேதரேஷ்வ ஸூலபம் மம தேசிகா நாம்
தே யாத தயா நிதி ரமாசக பாத யுக்ம ருக்மாதி பாவந வி ஸூத்த ஸமஸ்த போதம்
ஜெயது வகுளதாரீ தேசிகோ தேசிகா நாம் ஜெயது யதி வரார்யோ மாயி மத்தேப சிம்ஹா
ஜெயது கலி ஜீதார்யோ வ்யாஸ சம்ஜ்ஜோ விபஸித் ஜெயது ஜெயது நித்யம் வேங்கடாசார்ய யுக்மம்

இதி-ஸ்ரீ மத் வாதூல குல திலகயோ காஞ்சீயதீசஜநீ பூமி க்ருதாவதாரயோ
ஸ்ரீ மத் வேங்கட தேசிகயோ அஹேதுக க்ருபாலப்தோபய வேதாந்த ஹ்ருதயேந ஸ்ரீ காஞ்சீ வர வர யோகிநா
ஸ்ரீ ராமாநுஜா தாஸேந விலிகிதம் சாரீரக த்ரமிடோபநிஷதைக கண்ட்யம் –

———————–

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் திரண்ட கருத்துக்கள் !!–

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||


'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, அய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷபூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவார்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத்தொடர்பு  எக்காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளி  யிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

----------------
1. அவதாரிகை

“ஆரண நூல் வழிச் செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணி கீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே”
– (அதிகார ஸங்க்ரஹம் 4)-என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.

தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். “பகவத் ராமானுஜ தர்ஶனம்” என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள்.

பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும் புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப் படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதி தேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர் ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தி யிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யா மூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவ மூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞான புத்ரரான திருக் குருகைப் பிரான் பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்ற தாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.

2 – பர ப்ரஹ்மம்

ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகு ஶ்ரேஷ்டம்.
“பவமரு பரிகிந்ந-……..நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் “பரப்ரஹ்மம்”.
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது.
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
“அண்டக்குலத்துக்கதிபதியாகி”–(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி “அசுரர்இராக்கதரை…இருடீகேசன்தன்னை”–(தடையற்ற பெருமை)
“தொண்டக்குலத்துள்ளீர்”—(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து”—(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
“பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித் தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப் பல்லாண்டிசையுடன் பாடுவமே” (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலம் உடையவன்”. உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குண கணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலமுடையவனும்”, “ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்”
“பகம்”என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை
தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை “நந்தா விளக்கே அளத்தற்கரியாய்” என திருவாய்மொழியும்,
“நந்துதலில்லா நல்விளக்காகி அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி”-என மும்மணிக்கோவை யும்  முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத் தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்.”ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்”—-
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
“கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே” (2-6-10) என்கிறார் நம்மாழ்வார்.ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின் ஒளிக்கும் உள்ள வித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம் போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளைக் குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தர பாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்து பலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை”— என்கிறார் கலியன்.
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆக ஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை “அத்வைதம்” என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை “த்வைதம்” என்பர். இவ் விரண்டுக்கும் நடுவே உள்ளது கடக ஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு ஆனால் அந்த ஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
“க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:”—(யதிராஜ ஸப் 36)
வேத மாதாவுக்கு உபநிஷத் சிரோ பாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகை யலங்காரத்தை ராமானுஜர் தன் விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குண ஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் “நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.”.
“காரணவாக்யங்கள்” என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்”
(திருவாய் 4-10-1)
ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப் படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக் கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.
“முனியே நான்முகனே முக்கணப்பா”–என்கிறார் நம்மாழ்வார்.
“சாமான்ய புத்தி ஜனகாச்ச”…(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே.
“தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே” என்கிறார் நம்மாழ்வார்.

எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.

4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும் வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.

“செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே” –என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
“இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன் நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்” தன் ஸ்தோத்ர ரத்னத்தில் “ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:” என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல.
முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல் போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
“திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்” (தி
ரு.மொழி3-6-5)இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
“பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்”–என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)
“கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி”: 
(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய் ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.
5 – உலகப் படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
“அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்”
(தயாஶதகம் 17) – என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

  • அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+)
  • ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்),
  • ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்),
  • மனஸ் (+1) உண்டாயின.
  • அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின.
  • ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே “மானாங்கார மனங்களே” என்கிறார் ஆழ்வார்.
  • 25 வது தத்வம் ஜீவன்.
  • எம்பெருமான் 26 வது தத்வம்.

இந்த 25 தத்வங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து ஆள்பவன். அதுவே அவனுக்கு 26 வது திருநாமம் ஆண்டவன் என்பது. இதுவே “ஶ்ருஷ்டிக்ரியா” என்பதாகும்.

இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்க வல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம். இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
“நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற” என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
“பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த காலிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை
யார் நினைக்க வல்வரே”— திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம் இது.இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.
6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
“நான்” என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல – “புஸ்தகம்” என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிக ஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞான ஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது.
இதனை “ஆத்ம யாத்ரை” என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் – எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட).தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை “ஸ்வப்னம்”. அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச் செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான்.
ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!

7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று.

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது.
(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
“பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை“(பெரிய திருமொழி)

“ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும் சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே”  (திருவாய்மொழி 6-9-3)

இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.-இவை தவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.

  1. பிராட்டியினால் வந்த பெருமை”ஶ்ரிய:பதி” என்பது.
  2. தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
  3. ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
  4. வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.

வ்யாசர் இப்பரமாத்மாவை “உபயலிங்கம்” என்கிறார். அதாவது இவன் இரட்டை அடையாளம் கொண்டவன் என்று பொருள். அவை சகல கல்யாண குணங்களை உடையவன் என்பதும், தோஷங்கள் எதுவும் துளியும் ஒட்டாதவன் என்பதுமாகும். (தாமரை இலை தண்ணீர் போல.) மரம் ஒன்றில் இரு பறவைகள் வசிக்கும்போது ஒன்று ஸம்ஸார பந்தத்தில் உழலும் ஜீவன் மற்றொன்று எதிலும் சம்பந்தப் படாமல் அதனை வழி நடத்தும் பரமாத்மா. இத்தகைய பரமாத்மாவையே உபாயமாகப் பற்றிக்கொண்டு அவனை நாமடைய வேணும்.

8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களை மிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்ய விஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
க்ரந்தம் “அ”வில் ஆரம்பித்து “ம”வில் முடிகிறது நடுவில் “உ”. இதுவே ப்ரணவ தத்வம்.

ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதி ஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய் கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம். அதுவே “ஸ்வரூப ப்ராப்தம்”.
“அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை”–ஶரணாகதி தீபிகை.அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே “ப்ரஹ்ம வித்யா” 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை “பூ:பாதௌயஸ்யநாபிர்…….”என்கிறது ஸஹஸ்ரநாமம்.ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். “வசீ” என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன……..’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் “ந்யாஸ வித்யா”. பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.

9. த்யான முறைகள்
“உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் 

ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்”— (யதிராஜ ஸப்ததி)

ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).

த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.

  1. ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
  2. மனனம் – கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
  3. த்யானம் – பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
  4. தர்ஶனம் – இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.

“எங்கும் பக்கம் நோக்கினான் என் பைந்தாமரை கண்ணனையே”–என்று திருக்குருகைக் காவலப்பன் த்யான யோகத்தால் கண்ணனயே காண, அவனும் பக்தனையே பார்த்து ஸந்தோஷிக்கிறான்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

யோகம் என்றால் ஒட்டுதல் -சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.
10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை “முக்தி தரும் யதிராசர்” என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார்.

இதில் 4 விஷயங்கள் உள்ளன.

1. புண்ய பாபத்தை விடுவது எப்படி?
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
“காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:” என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).
2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.
3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.
4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி “நீ யார்” என்பது. “தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்” என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்’ என்ற ‘குளம், ‘முஹுர்த்தர்’ என்ற காவல் தெய்வம் ‘தில்யம்’ என்ற மரம் ,’விரஜா’ என்ற நதி, ‘லாலஜ்யம்’ என்ற மாநிலம்  ‘அபராஜிதா’ என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே ‘விஸக்ஷணம் ‘ என்ற பீடத்தில் ‘அமிதௌஜஸ்’ என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்’ எனக் கேட்க “ஸ்வாமி !தேவரீர் தான் நான்” என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
“ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர்.
அந்த நீர்தான் நான்” என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். “ஏற்றிவைத்து ஏணி வாங்கி” என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹ சூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸாரம்!!–எளிய தமிழில் —

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

——–

'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, ஆய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷ பூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவர்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத் தொடர்பு  எக் காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

--------------
இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சான்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக் கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ . முதற்‌ பாதம்‌ 
வேதத்தின்‌ பூர்வ பாகம்‌, உத்தர பாகம்‌ இவற்றை நன்கு பயில்பவன்‌ கர்ம காண்டத்தில்‌ விவரிக்கப்படும்‌ தர்மங்கள்‌ அற்பம்‌, 
நிலையான பலனைத்‌ தரமாட்டா என்று தேறுகின்றான்‌. புண்ணிய கர்மாக்களால்‌ 
“பெறும்‌ பலன்களும்‌ அழியும்‌ இயல்புடையன, ஆதலால்‌ இவற்றால்‌ மோக்ஷம்‌ பெற இயலாது. 
பகவானை  நன்கு அறிபவன்‌ கார்மாக்களுக்கு வசமாகமாட்டான்‌? ஸம்ஸாரத்தில்‌ உழன்று துன்புறமாட்டான்‌. 
பகவானைப்‌ பற்றிய ஞானம்‌ நிலையான நற்பயனை அளிக்கும்‌ என்று ஒருவாறாக இவன்‌ அறித்து கொள்‌கிறான்‌. 
உறுதியான ஞானம்‌ பெறுவதற்கு வேதாந்த வாக்கியங்களை ஆராயக்‌ கருதுகிறான்‌. பகவானைப்‌ பற்றிச்‌ சரியான கருத்து எவர்க்கும்‌ 
ஏற்படாதென  'சிலர் கருத, இத்தகைய கருத்துடன்‌ பகவானைப்‌ பற்றிய  ஆய்வு தொடங்குகிறது. 
இது முதல்‌ அத்யாயம்‌; ஸமந்வயாத்யாயம்‌ எனப்படும்‌.
1. 1. பகவானைப்‌ பற்றி அறிய அவா 
எதிர்ப்பவர்களது கருத்து: பகவானைக்‌ கண்‌களால்‌ காண்பதற்கில்லை; இவனைப்‌ பற்றி அனுமானத்தைக்‌ கொண்டு அறியவும்‌ இயலாது. 
ஆதலால்‌ சொற்களின்‌ மூலம்‌ (வேதங்களைக்‌ கொண்டு) அறிய வேண்டும்‌. காரிய வாக்கியங்களாலேயே அறிவு நிகழ்கின்றது. 
ஒன்றும்‌ அறியாத குழந்தைக்கு முன்‌,“பசுவைக்‌ கொண்டு வா”, “பசுவைக்‌ கட்டு” என்றால்‌, அது பசு என்பதை அறிகின்றது. 
கொண்டு வருவது,  கட்டுவது என்ற செயல்களையும்‌ தெரிந்து கொள்கிறது. 
உலகிலுள்ள பொருள்களைப்‌ பற்றி அறிய இவ்வாறான  வாக்கியங்களே வேண்டுவன. 
பகவான்‌ ஸித்தமானவன்‌; காரிய வாக்கியத்தால்‌ அறிவதற்கில்லை. 
ஆதலால்‌ இவனைப்‌ பற்றி வேத வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வதற்கில்லை, 

விளக்கம்‌ : அறிவு பெறுவதற்குச்‌ செயல்கள்‌ பற்றிய வாக்கியங்கள்‌ அவசியமில்லை. குழந்தையிடம்‌, **இது மாமன்‌
*இது பாட்டி” என்றால்‌ மாமன்‌, பாட்டி யார்‌ யார்‌ என்று இது எளிதில்‌ புரிந்து கொள்கின்றது. 
ஆதலால்‌ ஸித்தமான பகவானைப்‌ பற்றி வேதாந்த வாக்கியங்களால்‌ தெரிந்து கொள்ளக்கூடும்‌.
முதல்‌ ஸூத்ரம்‌: அத அத: ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா- 
கர்மங்கள்‌ பற்றி ஆய்ந்தறிந்த பின்‌, இவற்றின்‌ பலன்‌  அற்பம்‌ என்று தேறுவதால்‌, 
பகவானை அறிய வேண்டமென்ற ஆவல்‌ ஏற்றதே என்பது இதன்‌ பொருள்‌, -ஆதலால்‌ பகவானைப்‌ பற்றிய ஆய்வு துவங்குகின்றது. 

(2) பகவானின்‌ லக்ஷணம்‌: ஓரு பொருளைப்‌ பற்றி அறிந்து கொள்ள விரும்பினால்‌, அதன்‌ லக்ஷணம்‌ முதலில்‌ 
தெரிந்து கொள்ள வேண்டும்‌. கண்ணால்‌ காணக் கூடாத பகவானைப்‌ பற்றி லகணம்‌ எங்ஙனம்‌ கூற முடியும்‌? 
இது எதிர்ப்போர்களது ஆஷேபம்‌. 

இந்த எதிர்ப்புக்கு விடை அளிக்கும்‌ ஸுித்ரம்‌, 
ஜந்மாதி அஸ்ய யத:--
கண்ணாற்‌ காணப்படும்‌ சேதன்‌  அசேதனங்களின்‌ சிருஷ்டி, ஸ்திதி, லயம்‌ இவை எவனிட  மிருந்து நிகழ்கின்றனவோ (அவனே பகவான்‌). 
௮ஸ்ய-  இந்த "உலகுக்கு. * 
தைத்திரீயத்தில்‌ ப்ருகுவல்லியில்‌ வந்துள்ள கருத்து: எதனிடமிருந்து இவ்வுலகங்கள்‌ உண்டாகின்றனவோ, 
பிறந்தவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, வாழ்வன எதை ப்ரளயத்தில்‌ அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம்‌ என்பது. 
இதுதான்‌ மேலுள்ள ஸுூத்ரத்தின்‌, விளக்கம்‌.  இதனால்‌ பகவானின்‌ இலக்கணம்‌ கூறியாயிற்று. 

எதிர்ப்பு: இந்த வாக்கியத்தைக்‌ கொண்டு பகவானை அறிவதற்கில்லை. 

ஒரு பொருளின்‌ லக்ஷண்த்தை இரண்டு வகைகளில்‌ வெளியிடலாம்‌: ஒன்று அடைமொழியாக. *'தொங்கும்‌ கரமுடையது யானை”:, 
மற்றது உப லக்ஷணமாக: “*மரம்‌ வாசலில்‌ நிற்கும்‌ வீடு என்னுடையது.
'* தொங்கும்‌  கரத்தைக்‌ கொண்டு யானையை அறிகிறோம்‌; மரத்தைக்‌ கொண்டு வீட்டை அறிகிறோம்‌. 

ஜந்மாதி அஸ்ய யத: என்ற வாக்கியத்தில்‌ 
படைப்புக்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்‌திற்குச்‌ காரணம்‌ மூவகைக்‌ கருத்துக்கள்‌ உள்ளன. 
“முழுக்‌ கொம்பும்‌ அரைக்‌ கொம்பும்‌ கொம்பில்லாததும்‌”” என்று பசுவைச்‌ சொன்னால்‌ பசுக்கள்‌ மூன்று என்பதே தேறும்‌. 
இதே போல்‌ படைக்கும்‌ பகவான்‌, காக்கும்‌ பகவான்‌, அழிக்கும்‌ பகவான்‌ என்று பகவான்‌ மூவர்‌  என்றே கருதப்படுவர்‌. 
ஆதலால்‌ இங்குக்‌ கூறிய இலக்கணம்‌ சரியன்று. இது எதிர்ப்பவர்‌ வாதம்‌. 

மறுப்பு: கேசவன்‌ கறுத்த நிறமுடையவன்‌, இளைஞன்‌, சிவந்த கண்ணினன்‌ என்றால்‌ இவை யாவும்‌ ஒருவனையே குறிப்பன, 
இது போல்‌ படைக்கும்‌ பரம்‌ பொருளே காப்பவனும்‌ அழிப்பவனுமாவான்‌ என்பது தேறுமன்றோ? 
விசேஷண முறையில்‌ பகவானைப்‌ பற்றிய விவரணம்‌ இது. 

தேர்வு : புருஷ ஸுக்தத்தில்‌ “*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்‌ ௪ த்ந்பெள””. பூதேவி, ஸ்ரீதேவி இவர்கள்‌ உன்‌ பத்நிகள்‌ 
என்பது காண்கிறோம்‌. இது உபலஷணமாக பகவானை அறிந்து கொள்ளலாம்‌. 
ஆக, படைப்பிற்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்திற்குக்‌ காரணம்‌ இவை மூன்றும்‌ தனித்தனி யாகவோ, 
சேர்ந்தோ பகவானுக்கு லஷணம்‌ என்றா யிற்று. படைப்பிற்குக்‌ காரணம்‌ நான்மூகன்‌ அல்லன்‌; 
அழிப்புக்குக்‌ காரணம்‌ பரம சிவன்‌ அல்லன்‌ என்பதும்‌ தேறுகின்றன. 

(3) சாஸ்த்ரம்‌ ஆதாரம்‌: ப்ரஹ்மத்தை அநுமானத்‌தாலேயே அறிந்து கொள்ளலாம்‌. 
குடத்திற்குக்‌ கர்த்தா  ஒருவன்‌ இருப்பது போல பூமிக்கும்‌ கர்த்தா ஒருவன்‌ இருக்க வேண்டும்‌ என்று அனுமானத்தால்‌ தேறலாகும்‌, 
ஆதலால்‌ முன்பு கூறிய வேத வாக்கியம்‌ அவசியமில்லை, சான்றாகாது--இது ஒரு கருத்து. 

மறுப்பு 2: ஆற்றல்‌ மிக்க பகவானே உலகைப்‌ படைக்‌கிறான்‌ என்பது ஏற்பதற்கன்று. 
விசுவாமித்ர முனிவன்‌  தனது தவத்தாலே ஓருலகைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌  பேராற்றல்‌ வாய்ந்த சிலர்‌ படைக்கக்கூடும்‌ என்பது ஊகிக்கலாம்‌. ஆதலால்‌ அனுமானத்தால்‌ இக் கருத்து நிறுவ இயலாது. 
வேறு எந்தச்‌ சான்றாலும்‌ அறிய  இயலாத போது சாஸ்த்ரமே ப்ரமாணம்‌ என்று அறக்‌ கற்றோர்‌ வெளியிட்டுள்ளனர்‌. 
இக் கருத்துடைய ஸூத்‌ரம்‌ சாஸ்த்ர யோநித்வாத்‌--
சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகத் தேர்வதாலே பகவானைப்‌ பற்றிய ஆய்வு செய்யத் தகும்‌ என்பது. 

(4) பரம புருஷார்த்தம்‌ : புருஷார்த்தம்‌ என்பது நாம்‌ பெற விரும்புவது. 
ஒரு பொருளைப்‌ பற்றி அறியும்‌ போது அதைப்‌ பெறுவதற்கு விருப்பம்‌ வேண்டும்‌. 
இந்த விருப்பம்‌ எவ்வாறு பெறுகிறோம்‌ எனில்‌, அனு கூலமாக நினைப்பன கை கூடும்‌, ப்ரதிகூலங்கள்‌ அகலும்‌ 'என்ற கருத்தாலே. 
இதனாலேயே அப்பொருளைப்‌ பெற மூயற்சி செய்கிறோம்‌. 
பகவானைப்‌ பற்றி  அறியாததால்‌ முயற்சிக்கு வாய்ப்பில்லை என்பது எதிர்ப்பவர்களது கருத்து, 

மறுப்பு : வேதாந்தங்கள்‌ பரம் பொருளான பகவான்‌ எல்லை யற்ற ஆனந்த ஸ்வரூபன்‌ என்கின்றன. 
இத்தகைய பகவானைப்‌ பெறுவது தான்‌ பரம புருஷார்த்தமாகும்‌. 
தெடுங்‌ காலமாகசக் காணாமற்‌ போன தன்‌ மகனைது தகப்பன்‌ கண்டும்‌, அவன்‌ மிகச்‌ சிறந்தவனாக அறிந்தும்‌ பரமானந்தங்‌ கொள்கிறான்‌. 
இங்கு விருப்பம்‌ முயற்சி போல்வன இல; பெறுவது ஆனந்தம்‌. இது போன்றதே பகவானே புருஷார்த்தம்‌ என்று அறிவது. 

“தத்‌ து ஸமந்வயாத்‌' என்பது ஸுத்ரம்‌. 
இதன்‌ பொருள்‌ : பசுவான் சாஸ்த்ரத்தால்‌ புருஷார்த்தம்‌ என்று தெளிவாகச்‌ சொல்லப் படுவதால்‌, சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகக்‌ கூடும்‌. 

இந்த நான்கு ஸுத்ரங்களும்‌ சேர்ந்து சதுஸ்‌ ஸுத்ரி என்ற பகுதி, பகவானைப்‌ பற்றி ஆராயக் கூடும்‌ என்ற கருத்துடையது,. 
ஆதலால்‌ ஆய்வு தொடங்குகின்றது. 

1. 2. ஸங்கல்பித்தது யார்‌? 

பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்ற பொருள்‌ முதலில்‌ விளக்கப் படுகின்றது: 
“*காரணந் து த்யேய?”  என்பதனால்‌ காரணம்‌ ஆராயப் படுகின்றது. 
மூல ப்ரக்‌ருதியே காரணம்‌, ஜீவர்கள்‌ காரணம்‌ என்ற வாதங்கள்‌  ஆராயப்பட்டு விலக்கப் பெறுகின்றன 
இந்த அத்யாயதின்‌ நான்கு பாதங்களிலும்‌. முன்பு விளக்கப்பெற்றது; 
ஜகத்‌ காரணமான ப்ரஹ்மமே புருஷார்த்தமென்று. சாந்தோக்யத்தில்‌ ஸத்வித்யையில்‌ அறிவற்ற மூலப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணம்‌ என வந்துள்ளது. 
மூலப்ரக்ருதியோ அறிவில்‌லாதது, தோஷங்களுக்கு இருப்பிடம்‌. இது எவ்வாறு காரணமாகக்‌ கூடும்‌ என்பது ஸத்வித்யையிலுள்ள 
வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வு நிகழ்கின்றது. 

மூலப்ரக்ருதியே காரணம்‌ என்று வாதஞ்‌ செய்வோர்‌ கூறுவது : 
“தத்‌ தேஜ ஐக்ஷ்த''--அந்த அக்நி ஸங்கல்‌பித்தது என்று தொடங்கி, நெருப்பு, நீர்‌ போல்வன: ஸங்கல்பித்தன என்ற வாக்கியங்கள்‌ வருகின்றன. 
இவ்வாறு உயிரில்லாத தேஜஸ்‌ முதலாவன ஸங்கல்‌பித்தன என்பது முக்கியமான கருத்து கொள்வதன்று என்றே கருத வேண்டும்‌. 
இதே போல்‌ *'தத்‌ ஐக்ஷத”” என்ற வாக்கியத்திலும்‌. 
அன்றியும்‌ இவ் வுலகம்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குண மயமானது; இம் மூன்றும்‌. கொண்டது மூல ப்ரக்ருதியே. 

மேலும்‌ இந்த ஸத் வித்யையில்‌ முதலில்‌ கூறியுள்ளது: 
ஐகத்‌ காரணமான ஸத்தை அறிந்தால்‌ யாவும்‌ அறிந்தன வாகும்‌ என்பது, உதாரணமாக: 
மண்ணிலிருந்து குடமும்‌, பொன்னிலிருந்து கிரீடமும்‌ உண்டாகின்றன. 
இந்த அனுமானத்தால்‌ ப்ரஹ்மம்‌ அறியப்படாதது?: 
சாஸ்த்ரம்‌ ஒன்றாலேயே ப்ரஹ்மம்‌ அறியப்படும்‌ என்பதால்‌ அனுமானத்தால்‌ அறிய இயலாது என்று தேறுகின்றது. 
ஆதலால்‌ அனுமானத்தால்‌ அறியப்படும்‌ மூல ப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணமாகும்‌. 

மறுப்பு: ஜகத்‌ காரணப்‌ பொருளுக்கு ஸங்கல்பம்‌. கூறுவதால்‌ அது அறிவில்லாத மூல ப்ரக்ருதி யாகாது. 
சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்டுள்ளது: நுண்ணிய நிலையிலுள்ள சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே காரணம்‌; 
ஸ்தூல நிலையில்‌  இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ இவனே காரியம்‌. 
இவ்வாறு ஆய்ந்தால்‌ காரண காரிய ஓற்றுமை வெளிப்‌ படுகின்றது. ஆதலால்‌ ஜகத் காரணம்‌ பரம புருஷனே.. 

நெருப்பு ஸங்கல்பித்தது என்பது போன்ற வாக்கியங்களில்‌ பகவானே அந்தர்யாமியாக ஸங்கல்பித்தான்‌ என்று தேறலாம்‌. 
'*ஐதத்‌ ஆத்ம்யகம்‌ இதம்‌ ஸர்வம்‌'”-- 
இவை ஸத்தை ஆத்மாவாகக்‌ கொள்வன என்பது இங்குச்‌ சான்று. 
ஆதலால்‌ பகவானே ஸத்வித்யையில்‌ போற்றப்‌ படும்‌ ஜகத்‌ காரணப்‌ பொருளாவான்‌. 

தேர்வு 1. முமுக்ஷாவான ச்வேதகேது பெற்ற உபதேசம்‌ : ஐகத்‌ காரணமான ஸத்தை உபாஸித்தால்‌ 
சரீர முடிவில்‌ அதனைப்‌ பெறுவதே மோக்ஷம்‌ என்று. மூல ப்ரக்ருதியை உபாஸித்து இதையே மோக்ஷமாகமப்‌ பெறுவது எவ்வாறு? 
அன்றியும்‌ ஒருவன்‌ எதை உபாஸிக்‌கின்றானோ, அப்படியே இறந்த பின்‌ ஆகிறான்‌ என்பதும்‌ கூறப்படுகிறது. 
ஆதலால்‌ ஸத்‌ என்பது மூல ப்ரக்ருதி எனில்‌ அறிவற்ற இதை உபாஸித்து அறிவற்றவனே ஆக வேண்டும்‌. 
இதனாலும்‌ விளங்குவது பகவானே உபாதாந காரணம்‌ என்பது. 

தேர்வு 2: மூல ப்ரக்ருதியோ மோக்ஷ விரோதி; இதனால்‌ இதன்‌ இழிவு வெளிப்படை. மோக்ஷ காரணம்‌ 
என்பது ஏற்றமேயாகும்‌; இழிவாகாது, ஆதலால்‌ ஸத் என்பது மூலப்ரகிருதி யாகாது.  

தேர்வு 3: ஜகத்‌ காரணம்‌ அறிந்தால்‌ யாவும்‌ அறியலாம்‌ என்பது முக்கியமான கருத்தாகும்‌. 
அறிவற்ற  மூல ப்ரகிருதியை அறிந்தால்‌, இது காரணம்‌ என்றால்‌, காரியப்‌ பொருளான ஜீவனும்‌ அறிவற்றவன்‌ என்பதே தேறும்‌. 

தேர்வு 4: ஒருவன்‌ தூங்கும்போது ஜீவன்‌ தனக்குக்‌ காரணமான ஸத்தில்‌ ஓடுங்குகிறான்‌ என்பது ஒரு வேத. வாக்கியம்‌, 
ப்ரதானமே ஸத்‌ எனில்‌ இந்தக்‌ கருத்து ஏற்றதாகாது. _ 

தேர்வு 5: பல உபதிஷத்துக்களின்‌ கருத்து : எவன்‌: எல்லாப்‌ பொருள்களின்‌ ஸ்வ -ஸ்வரூப ஸ்வபாவங்களை 
அறிகிறானோ, அவனிடமிருந்தே இந்த மூல ப்ரக்ருதி  ஜீவர்கள் உண்டாகின்றது; 
இவை யாவும்‌ பரம புருஷனே; அப்பரம புருஷ னிடமிருந்தேதே அண்டம்‌ உண்டாயிற்று. நாராயணன்‌ ஒருவனே மூதவில்‌ இருந்தான்‌. 
இவ்வாறான வாக்கியங்‌கள்‌ ஒரூமூகமாக பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்று முழங்குகின்றன  

தேர்வு 6: இதே உபதிஷத்தில்‌ ஓரிடத்தில்‌ வந்துள்ளது; ஆத்மாவிடமிகுத்து ப்ராணன்‌, ஆகாசம்‌ உண்டாகின்றன; 
உலகம்‌ யாவும்‌ பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றது என்பது. 

இவ்வகைகளில்‌ ஆராய்ந்தால்‌ யாவும்‌ அறிந்த பரம்‌ பொருளே உலகுக்கு உபாதான காரணம்‌ என்பது தேறுகின்‌றது. 

1. 3. ஆனந்த மயன்‌ - யார்‌? 

மூலப்ரக்ருதிக்கு ஸங்கல்பம்‌ நேராது, ஆதலால்‌ அது உலகுக்குக்‌ காரணமாகாது என்று விளக்கப்பட்டது. 
ஜீவனுக்கு முக்ய ஸங்கல்பம்‌ கூடும்‌, ஆதலால்‌ இவன்‌  காரணமாகலாம்‌ என்பது ஆராயப்படுகின்றது. 

ஜீவன்‌ காரணமாகலாம்‌ என்பதற்கு விளக்கம்‌: 

தைத்திரீயத்தில்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டியைப்‌ பற்றி விளக்கத்‌ தொடங்கிப்‌ பின்வரும்‌ விவரங்கள்‌ உள்ளன ; 

அன்னத்தால்‌ வளர்வது சரீரம்‌; சரீரத்தை தரிப்பது ஐம்பால்‌ ப்ராணன்‌; ப்ராணனில்‌ நுண்ணியது புத்தி, 
இவ்வாறு படிப்படியாகக்‌ கூறி இவற்றைத்‌ தரிப்பது ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது. 
விஜ்ஞான மயன்‌ என்ற புத்தியைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது நுண்ணியதான ஆனந்தமயன்‌ ஆத்மா என்றும்‌ வந்துள்ளது. 
இந்த  விஜ்ஞான மயமான புத்திக்‌குச்‌ சரீரத்‌ தொடர்புள்ளது 
ஆத்மா என்பதால்‌ இது ஜீவாத்மாக வேண்டும்‌. ஆதலால்‌ ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது தேறுகின்றது. 

மறுப்பு: இதே பகுதியில்‌ விஜ்ஞானம்‌ என்ற சொல்‌  பல இடங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே வருகிறது. 
அறிவே இயல்பாகவும்‌ குணமாகவும்‌ உள்ள ஜீவன்‌ ஜ்ஞானமாகவும்‌ ஜ்ஞான மயமாகவும்‌ சொல்லக்கூடும்‌. 
இவனினும்‌: நுண்ணியதாய்‌, இவனை தரிப்பவன்‌ பரமாத்மாவான: ஆனந்த மயன்‌. 
அன்றியும்‌ ஆனந்தத்தை அளவிடும்போது மனுஷ்ய ஆனந்தத்தை அளவுகோலாக்‌ கொண்டு, இதைப்‌ போல்‌ 
நூறுநூறு மடங்காக அடுக்கிக்கொண்டு அளவு காணாத தால்‌ சொற்கள்‌ மீண்டன.
'*யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”. இவ்வாறான பேரானந்தம்‌ உலக வாழ்க்கையில்‌ உழலும்‌ ஜீவனுக்கு இல்லை? 
பகவானுக்கே உண்டு. **சாரீர ஆத்மா” என்று சரீர ஸம்‌ பந்தம்‌ கூறும்‌ பகவானுக்கே இத்தகைய ஆனந்தம்‌ பொருந்தும்‌. 
பூமி, ஆத்மாக்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரமாகக்‌ கூறப்படுகின்றன. 

தேர்வு 1: '*ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அதந்தம்‌ ப்ரஹ்ம”  என்ற விவரத்தால்‌ ப்ரஹ்மம்‌ ஆனந்தமயம்‌ என்று சொல்லப்படுகிறது. 
இந்த ப்ரஹ்மத்தை அறிபவன்‌ மேம்பட்ட பலமான பரப்ரஹ்மத்தை அடைகிறான்‌ என்பதும்‌ அறிவோம்‌. 
ஜீவன்‌ அடைவது இந்த ப்ரஹ்மம்‌. ஆதலால்‌ இவனைக்‌ காட்டிலும்‌ சிறப்புடைய பகவானே ஆனந்த மயனாக வேண்டும்‌. 

தேர்வு 2: படைக்கும்போது பகவான்‌, :நான்‌ பலவாறாகக்‌ கடவேன்‌” என்று ஸங்கல்பிக்கிறான்‌. 
சரீரமில்லாமல்‌ ஜீவன்‌ ஒன்றையும்‌ படைக்க இயலாது, ஆதலால்‌ உலகைப்‌ படைக்கும்‌ ஆனத்தமயன்‌ ஜீவனாக முடியாது. 

தேர்வு 3: தைத்திரீயத்தில்‌ ஜீவன்‌ ரஸஸ்வரூபியை அடைந்து ஆனந்த மூடையவனாகிறான்‌ என்று வந்துள்ளது. 
ஆதலால்‌ ஆநந்தமயன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. ஆனந்தமயன்‌ என்பதன்‌ கருத்து; 
வேறு எதுவும்‌ கலவாது முற்றிலும்‌ ஆனந்தமாகவே இருத்தல்‌. இது: ஸர்வேச்வரனுக்கே உரியது, 

1. 4. ஆதித்ய புருஷன்‌ யார்‌? 

சாதாரணமான ஜீவர்களுக்கு ஐகக்‌ காரணமாயிருப்பது கூடாதெனில்‌, விசேஷ சக்தி வாய்ந்தவர்‌களுக்கு இது கூடும்‌ 
என்ற சங்கையினால்‌ ஆதித்ய புருஷன்‌, அக்ஷிபுருஷன்‌ இவர்களைப்‌ பற்றி இங்கு ஆராய்வு நிகழ்கின்றது. 

ஆதித்யனுக்குள்‌ பொன்‌ மயமான புருஷன்‌ இருக்‌கிறான்‌; இவனுக்கு மீசை பொன்‌ மயம்‌, கேசம்‌, நகம்‌ பொன்‌ மயம்‌; 
கண்கள்‌ தாமரை போல்வன என்று சாந்‌தோக்யத்தில்‌ வந்துள்ளது. மீசை, சேசம்‌, நகம்‌ போல்வன சரீரம்‌ உள்ள ஜீவார்களுக்கே உள்ளன. 
ஆதலால்‌ இங்கு விவரிக்கப்‌ பெறுவது சக்தி மிகுந்த ஒரு ஜீவன்‌; இவனே உலகப்‌ படைப்பு செய்ய வல்லவன்‌, இது ஒரு கருத்து. 

மறுப்பு: உபநிஷத்துக்கள்‌ விளக்கியுள்ளது; ஆதித்ய புருஷன்‌ பாவங்களுக்‌ கப்பாற்பட்டவன்‌? 
இவனுக்குப்‌ பாடகர்கள்‌ ரிக்வேதம்‌, ஸாம வேதம்‌. கண்ணிலிருப்பவன்‌ ரிக்‌ வேத மாவான்‌. ஸாம வேத மாவான்‌, 
ஆதலால்‌ இப்புருஷன்‌ ஜீவனாக முடியாது. அன்றியும்‌ வேத வாக்‌ யங்கள்‌ மூலமாகவும்‌ &தை மூலமாகவும்‌ அறிவது: 
திவ்ய மங்கள விக்ரஹம்‌ பரமாத்மாவுக்கே உண்டு. ஆதலால்‌ ஆதித்யனிலும்‌ அக்ஷிகளிலும்‌ உள்ளே இருப்பவன்‌ பரமாத்மாவே. 

அன்றியும்‌ ஆதித்யன்‌ முதலான தேவர்கள்‌ யாவரும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌, பகவான்‌ இவர்களுக்கு ஆத்மா என்று வேதங்கள்‌ ஓலிக்கன்றன, 
ஆதலால்‌ ஆதித்யனிலுள்ள புருஷன்‌ இவர்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவானே. 

1. 5. ஆகாசம்‌ ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ (1-9-1) பூதங்கள்‌ யாவும்‌ ஆகாசத்திலிருந்து உண்டாகின்றன, 

விளக்கம்‌  பின்வரும்‌ உபநிஷத்‌ வாக்கியங்களை ஆராய்வோம்‌. இவ்வுலகம்‌ ஆத்மாவாகவே இருந்தது? 
ஆத்மாவிலிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று; நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌; பிரமனும்‌ இல்லை, 
சிவனும்‌ இவ்லை. நாராயணனிடமிருந்து பிரமன்‌ உண்டானான்‌. 
இவை யாவும்‌ நாராயணனே ஐகத்‌ காரணம்‌ என்று காட்டுகின்றன. 
அசேதனமான ஆகாசம்‌ காரணமாக முடியாது. ஆகாசம்‌ என்பதன்‌ பொருள்‌; *ஆ ஸமந்தாத்‌ீ காசதேத'”- எங்கும்‌ ப்ராசிக்கிறது, 
ஆதலால்‌ ஆகாசம்‌ என்பது. இதனால்‌ ஆகாசம்‌ என்ற சொல்‌ எங்கும்‌ விளங்கும்‌ நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
ஆதலால்‌ பகவானான நாராயணனே ஜகத்‌ காரணம்‌. 

1. 6. வாயு ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌: பூதங்கள்‌" யாவும்‌ ப்ராணனில்‌ லயிக்கின்றன, ப்ராணனிடமிருத்து வெளிக்‌ கிளம்புகின்றன. 
ப்ராணன்‌ என்பது ஜீவராசிகள்‌ வாழ்‌வதற்குக்‌ காரணமான வாயுவே ஆகும்‌. 
ஆதலால்‌  ஆகாசத்தைக்‌ காட்டிலும்‌ ஐகத்‌ காரணமாகத்‌ தகுதி பெறுவது இந்த வாயுவே. இது சிலர்‌ கருத்து, 

தேர்வு : ப்ராணனால்‌ வாழ்வு பெறுவது சரீரமே? ப்ராணனாலே தான்‌ இது செயல்படுகின்றது. ஆனால்‌ 
நாராயணனே யாவற்றிற்கும்‌ காரணம்‌ என்கின்றன வேத வாக்கியங்கள்‌. 
ஆதலால்‌ இவனே ப்ராணன்‌ என்‌பதுவே தேறும்‌. 

1. 7. அக்நி ஜகத்‌ காரணமாகுமா? 

“*வாயோரக்நி.'”' *வாயுவிலிருந்து தோன்றியது ௮க்னி- மூன்றாவது பூதம்‌. இதுதான்‌ ஜகத்‌ காரணம்‌ என்பது ஓரு கருத்து. 
இதன்‌ விளக்கம்‌: வியஷ்டி பதார்த்தங்கள்‌ (பகுத்துப்‌ படைக்கப்பட்டவை), ஸமஷ்டி. பதார்தங்கள்‌ (ஒட்டு மொத்தமாகப்‌ படைக்கப்பட்டவை) 
இவற்றுக்கும்‌ அப்பால்‌ மேலே பரமபதம்‌. இதற்கும்‌ மேலே மிகச்‌ சிறந்த உலோகங்களிலே ஒளி பரப்பும்‌ சோதி இலங்குகின்றது. 
அதுவே இம்மனிதனுள்‌ விளங்‌குஞ்‌ சோதி - ஜாடராக்தியோடு ஒன்றாகும்‌. இது சாந்‌தோக்ய வாக்கியம்‌. 
ஜாடராக்நியோடு ஒன்றெனக்‌ கூறுவதால்‌ இது பஞ்ச பூதங்களுள்‌ ஒன்றான அக்நி, 
சூரியன்‌ போன்ற அசேதனங்களான சோதிகளுள்‌ ஓன்று  என்பதே தெளிவு. 

மறுப்பு: இதே பகுதியிலே காணும்‌ வாக்கியம்‌: இப்‌ பரம் பொருளுக்கு பூதங்கள்‌ யாவும்‌ ஒரு பாதம்‌? 
மற்றைய மூன்றும்‌ பரமபதத்தில்‌ உள்ளன என்பது. இங்குக் கூறும்‌ சோதி, இவ்வுலகில்‌ காணும்‌ பூதங்கள்‌ 
யாவற்றையும்‌ ஒரு பாதமாகக்‌ கொண்டுள்ளது என்பதால்‌ இது நாராயணனைப்‌ பற்றியேயாகும்‌. 
மேலும்‌ பகவானது திருமேனி சூரியனைப்‌ போலே ஒளியுடையது மின்னற்கொடி போன்றது; 
ஆயிரம்‌ ஆதித்யர்களது ஓளி ஒரே காலத்தில்‌ நேரும்‌ எனில்‌, அது அம் மஹா புருஷனின்‌ திருமேனி ஒளிக்கு ஒப்பாகும்‌ என்ற வாக்‌யங்கள்‌ உள்ளன. 
திருமேனி சோதி மயமானதாலே சோதிகளுக்கெல்லாம்‌ ஒளியை அளிக்கும்‌ பரஞ்சோதி என்பது பொருந்தும்‌. இப்பரஞ்சோதி ஸர்வேச்வரனே. 

பகவான்‌ ஜாடராக்நி ஸ்வரூபன்‌ என்பதன்‌ கருத்து: இவன்‌ இதற்கு அந்தர்யாமி என்பதே. 
கீதையில்‌ பகவான்‌, **நானே ஜாடராக்நியாகி ப்ராணிகளின்‌ உடலிலே இருக்கிறேன்‌” என்றது ஒப்பு நோக்கு. 
ஆதலால்‌ சோதி என்பது பரஞ்சோதியான நாராயணனே. 

1. 8. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா? 

சூர்யன்‌, அக்நி போல்வாருக்குத்‌ தலைவனான. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா என்ற விஷயம்‌ இப்போது. 
ஆராயப்படுகின்றது. 

தனக்கு. உபதேசிக்க வேண்டும்‌ என்று கேட்ட ஒருவனுக்கு. இத்திரன்‌ கூறியது: 
என்னையே உபாஸிப்பாய்‌; அறிவு  ரூபமான ஆத்மாவாக இருக்கும்‌ நானே ப்ராணன்‌? 
ப்ராணனான என்னை ஆயுளாகவும்‌ அம்ருதமாகவும்‌ உபாஸிக்கக் கடவாய்‌ என்று. 
ஆதலால்‌ மோக்ஷ ஸாதனதிற்கு உபாயமாகச்‌ சொல்லும்‌ இந்திரனே ஜகதி, காரணம்‌. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌  இப்பகுதியில்‌ முதலிலும்‌ நடுவிலும்‌ முடிவிலும்‌ பரமாத்மாவின்‌ பெருமையே அதிகமாக விளக்கப்‌ படுகின்றது. 
ரத சக்கரத்தின்‌ ஆரங்கள்‌ போல சேதன. அசேதனங்கள்‌ ப்ராணன்‌ எனப்பெறும்‌ பரமாத்மாவிடம்‌ கோர்க்கப்‌ பட்டுள்ளன. 
ப்ராணனுக்கு ஆதாரம்‌ பரமாத்மா. இப்பரமாத்மா நம்மை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறான்‌; 
நற்செயல்கள்‌ செய்விக்‌கிறான்‌ என்றும்‌ வந்துள்ளது. 
இவ் விவரங்கள்‌ பிறப்பு, இறப்பு இவையுடைய இந்திரனைப்‌ பற்றி அல்ல. 
**ஸேந்த்ர:'' என்று பகவான்‌ இந்திரனுக்கு அந்தர்யாமி யாகப்‌ புருஷ ஸூக்தத்தில்‌ காண்கிறோம்‌. 
ஆகையால்‌ இங்கு இந்திரன்‌ எனப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாரயணனே ஆவான்‌. 
“மாம்‌ உபாஸ்வ'” என்று இந்திரன்‌ கூறியதன்‌ கருத்து: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்‌ என்பது. 
ப்ரஹ்மத்தை உபாஸித்த வாமதேவர்‌, “நானே மனு, நானே ஸர்யன்‌”” என்றறிந்தார்‌. எவ்வாறெனில்‌, 
இதன்‌ பொருள்‌: தமக்கு அந்தர்யாமி யான பகவானே மனுவுக்கும்‌ ஸுர்யனுக்கும்‌ அத்தர்‌யாமி என்பது. 
ஈச்வரன்‌ யாவர்க்கும்‌ அந்தர்யாமி ஆதலால்‌ இந்திரன்‌ கூறியது: எனக்கு அந்தர்யாமியான 
பரமாத்மாவைக்‌ கருதி என்னையே உபாஸிப்பாய்‌ என்பது. 

பகவானை உபாஸிப்பது மூன்று வகை: அவனது ஸ்வரூபத்தை நேரே அனுஸந்திப்பது, 
ஜீவ ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது,அசேதன ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது, 
இந்திரன்‌ வெளி யிட்டது: இந்திரனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ ப்ராணனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ பற்றி, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸனையே கூறப்படுகிறது. இந்திர ப்ராண சப்தத்தால்‌ தெரிவிப்பது பரமாத்மாவே என்பது. 
ஸித்தமான பகவான்ப்‌ பற்றி வேத வாக்கியங்களால்‌ அறிந்து கொள்ள இயலும்‌. 
வேத வாக்கியங்கள்‌ இவனது லஷணங்களை உரைப்பன. இவ்விஷயத்தில்‌ சாஸ்த்ரம்‌ தக்க சான்றாகும்‌. 
பரம புருஷார்த்தமாகிய பகவானைப்‌ பற்றி சாஸ்த்ரங்கள்‌ அறிவிக்கக்கூடும்‌. 

ஸத்வித்யையில்‌ சொல்லப்படும்‌ பகவான்‌ உலகுக்குக்‌ காரணமாவான்‌, மூலப்ரக்ருதி யன்று. 
இவனே ஆனந்த மயன்‌, ஜீவன்‌ அல்லன்‌. ஸுர்யனிலும்‌ கண்ணிலும்‌ இருப்பதாகக்‌ கூறப்படுபவன்‌ இந்த பகவானே. 
ஆகாசம்‌, ப்ராணன்‌, சோதி இவை ஐகத்‌ காரணமல்ல; பகவானே காரணம்‌. 

இந்திரனென்றும்‌ ப்ராணனென்றும்‌ பெருமையுடன்‌ கூறப்படுவது பகவானே, இந்திரனு மல்லன்‌, ப்ராணனு மன்று, 
---------
2... இரண்டாவது பாதம்‌ 

முதற்‌, பாதத்தின்‌ பொருள்‌ : ப்ரஹ்மம்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலஷணமானது; 
உலகுக்குத்‌ தனிக்‌ காரணம்‌ விலக்ஷண புருஷன்‌. ஐக்ஷ்த என்ற ஸுத்ரத்தால்‌ இவன்‌ 
அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌, ஆனந்தமயன்‌ என்ற ஸுத்ரத்தால்‌ 
சேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌ வெளியிடப்பட்டது. 
இப்பாதத்தில்‌ இவன்‌ ஐகச் சரீரன்‌ என்பது அறுதியிடப்படுகிறது. 

2-1. அனைத்தும்‌ ப்ரஹ்மமே 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌ சாண்டில்ய வித்யையைப்‌ பற்றியது: 
*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம -தஜ்ஜலாநிதி சாந்த உபாஸஹீத”” இது எல்லாம்‌. ப்ரஹ்மமே. 
அதனால்‌ (இவை) தோன்றி, வாழ்ந்து, அதில்‌ மறைவதால்‌. இவ்வாறு சாந்தி யுடையவளாக 
உபாஸிக்க வேண்டும்‌ என்கிறது இந்த வாக்கியம்‌.” 
தன்னுடைய கர்மத்தின்‌ பலனாலே ஜீவனே ப்ரஹ்மா முதல்‌ புல்‌ வரையில்‌ எல்லாப்‌ பொருள்களும்‌ ஆக முடியும்‌. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை: தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமான எல்லாப்‌ பொருள்களுமாக, பகவான்‌ ஆகமுடியாது. 
ஜீவர்களின்‌ கர்ம மடியாகவே, உலகம்‌ தோன்றி, வாழ்ந்து, மறைகின்றது. 
**தஜ்ஜலாந்‌:' (தோன்றி வாழ்ந்து மறைவது) என்று சொல்‌ ஜீவனிடம்‌ பொருந்தும்‌. 
ஆதலால்‌ இந்த வாக்‌யத்தில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே... 

மறுப்பு : தைத்திரீயத்தில்‌ ஒரு வாக்கியம்‌:**யதோவா இமாநி பூதாறி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, 
ய்த் ப்ரயந்தயபிணம்விசந்தி, தத்‌ விஜிஜ்ஞாஸ்ஸ்‌வ கத்ப்ரஹ்மேதி'”--எவனிடமிகுந்து பொருள்கள்‌ யாவும்‌ 
தோன்றுகின்றனவோ. தோன்றியவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, ப்ரளய காலத்தில்‌ எதனுள்‌ ஒடுங்குகின்றனவோ, 
அதை நீ அறிவாபய் என்பது படைத்துக்‌ காத்து அழிப்பது மூன்றும்‌ பரம்‌ பொருளுக்கே உரியன, ஜீவனுக்கு அல்ல. 

சங்கை : தோஷமே இல்லாத பரமாத்மா, தோஷங்‌ களுக்கு இருப்பிடமான பொருள்கள்‌ யாவுமாவது: எவ்வாறு ஒட்டும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நுண்ணிய நிலையிலும்‌, ஸ்ருஷ்டியில்‌ ஸ்தூலமாகவும்‌ சேதன அசேதனங்‌கள்‌ உள்ளன. 
இவற்றை பகவான்‌ சரீரமாகக்‌ கொள்‌கிறான்‌. தோஷங்கள்‌ சரீரமான சேதனர்களிடமே உள்ளன, 
சரீரியான பகவானிடம்‌ இவை அணுகவும்‌ மாட்டா. ஆதலால்‌ இவனை எல்லாப்‌ பொருள்களுமாகக்‌ கூறலாம்‌. 
அன்றியும்‌ ஒரு சரீரத்திலுள்ள ஜீவன்‌ வேறொரு ஜீவனாக ஆகமுடியாது; ஜீவனை யாவுமாகச்‌ சொல்லுவது சரியன்று. 
ஆதலால்‌ ஐகத்‌ காரணமாகவும்‌ ஸர்வாத்மாவாகவும்‌ சொல்லப்படுவது பகவானே. 

அன்றியும்‌ பகவானைப்‌ பற்றி ஒரு வாக்கியம்‌: தூய மனத்தாலேயே அறியத்‌ தக்கவன்‌, ஒளி மயமானவன்‌, 
எல்லாச்‌ செயல்களையும்‌ ஆற்ற வல்லவன்‌; இவன்‌ எவனையும்‌ ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; 
ஆதலால்‌ எவனிடமும்‌ வாய்‌ பேசாதவன்‌. இவை யாவும்‌ பரமாத்‌மாவுக்கே பொருந்துவன. 

மேலும்‌ பகவான்‌ ஜீவனால்‌ அடையப்‌ பெறுபவன்‌ என்றும்‌, ஜீவன்‌ இதற்குக்‌ கர்த்தா என்றும்‌ வேதவாக்யங்கள்‌ உள்ளன, 
ஆதலால்‌ உபாஸிக்கப்படும்‌  பகவான்‌ உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனினும்‌ மாறுபட்ட.  பரம்பொருளே.

கீதையில்‌ வருவது (15-75) : பரம்‌ பொருளை உபாஸிப்பவன்‌ ஜீவன்‌, 
பரம புருஷன்‌ ஜீவனின்‌ இதயத்தில்‌  உறைபவன்‌ என்று. உபாஸநம்‌ செய்யப்படுவோன்‌ பகவானே. 

மறுப்பு : கட்டை விரல்‌ பருமனுள்ள இதயத்தில்‌ இருக்கும்‌ ஆத்மா நெல்லை விடக்‌ கோதுமையை விடக்‌ 
கடுகை விடச்‌ சிறியது என்கிறது உபநிஷத்‌. இதயத்தில்‌ இருக்கும்‌ என்னுடைய ஆத்மா என்று சொல்லுவதால்‌ 
இது ஜீவனைப்‌ பற்றியதே. பகவானைப்‌ பற்றியது எனில்‌ மிகச்‌ சிறிய இவன்‌ எவ்வாறு எங்கும்‌ வியாபிக்க இயலும்‌? 

விளக்கம்‌ : பரமாத்மாவை உபாஸிப்பதற்காகவே இதயத்தில்‌ ஏறிய நிலையை வெளியிட்டது. 
இவன்‌ பூமியை விடப்‌ பெரியவன்‌, அந்தரிக்ஷ்த்தை விடப்‌ பெரியவன்‌, தேவலோகத்தை விடப்‌ பெரியவன்‌ என்று இவ்‌வாறு 
வாக்‌யங்கள்‌ கூறுகின்றன. இந்தக்‌ காரணத்தாலும்‌ இந்த வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனாக முடியாது; 
பரமபுருஷனே என்பது திண்ணம்‌. 

மறுப்பு : பகவான்‌ இதயத்தில்‌ உறைவதால்‌ இவன்‌ அவனைப்‌ பேரலவே இன்ப துன்பங்கள்‌ அனுபவிக்க நேரிடும்‌. 
ஆதலால்‌ இவ் வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே என்று கருத வேண்டும்‌. 

விளக்கம்‌ : பகவான்‌ இழிவுகளுக்கெல்லாம்‌ எதிர்த்‌ தலை; கல்யாண குணங்கள்‌ பலபல வாய்ந்தவன்‌; 
கர்மத்‌திற்கு வசப்படாதவன்‌; தனது இச்சையாலே சரீரத்தில்‌ உறைகின்றான்‌ என்று வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவன்‌  ஜீவனோடு இணைந்திருந்தும்‌ கர்ம பலத்தைப்‌ புசிப்பவன்‌ ஜீவனே, இவனல்லன்‌ என்று மேலும்‌ கூறுகின்றன, 
ஆதலால்‌ எல்லாம்‌ ப்ரஹ்மமே என்ற வாக்கியத்தில்‌  கருதப்படுவது பகவானே. 

2. 2. உண்பவன்‌ : கடவல்லியில்‌ [7-2 45) **யஸ்ய பிரஹ்ம ச க்ஷத்ரம்‌.௪. உயே பவத ஓதத: மருத்து? 
 
யஸ்யோப 'ஸேசதம்‌''-- எவனுக்கு ப்ராஹ்‌மணரும்‌ க்ஷ்த்ரியர்‌களும்‌ உணவாகின்றனரோ, : எவனுக்கு எமன்‌: 
ஊறுகாயோ என்று உண்பவன்‌ ஒருவனாக வெளியிடப்‌பட்டுள்ளது. கர்ம பலனுடைய ஜீவனே உணவு போன்றவற்றை உண்ண இயலும்‌. 
ஆதலால்‌ இங்குச்‌ சொல்லப்‌படுபவன்‌. ஜீவனே என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஸம்ஹார காலத்தில்‌ பகவான்‌ செய்வது' இங்குக்‌ கூறப்படும்‌ பொருள்‌. ஸம்ஹாரம்‌ செய்வோன்‌ பகவான்‌; 
ப்ராண்மணர்‌, க்ஷத்ரியர்‌ என்பன உபலக்ஷணத்தால்‌ உலகங்களைக்‌ காட்டுவன. 
ஊறுகாயைக்‌ கொண்டு.  உணவு உண்பது போல பகவான்‌ யமனைத்‌ துணையாகக்‌ கொண்டு அழிக்கிறான்‌. 
உலகங்களை உண்பது என்பது ஜீவனால்‌ இயலாதது; ஆதலால்‌ "இங்குக்‌ கூறப்படுவது பகவானே..' 

இதய குகையில்‌ இருவர்‌ . ருதம்‌ பிபந்தெதெனெ ஸுஹ்ருதஸ்ய லோகே குஹாம்‌ ப்ரவிஷ்டென''(கடவல்லி 71-53-1312 
கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌; புண்ய லோகமான இவ்வுலகில்‌ இதய குகையில்‌ நுழைந்திருப்பவர்கள்‌ 
இவ்விருவர்‌ என்ற வாக்கியத்தில்‌ கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌ யார்‌ யார்‌? 
இவர்கள்‌ ஜீவனும்‌ ப்ராணனும்‌, அல்லது ஜீவனும்‌ புத்தியும்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஜீவனும்‌ பகவானுமே இதயத்தில்‌ இருப்பவர்கள்‌ என்பதே வேத வாக்கியங்களில்‌ கூறப்‌படுகிறது. 
ஆத்ம ஞானத்தாலே அறிபவனும்‌, எங்கும்‌ வியாபித்திருப்பவனும்‌ இன்ப துன்பங்கள்‌ இல்லாதவனுமான பகவான்‌ 
இதயத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, காம பலத்தை அனுபவிக்கும்‌ ஜீவன்‌ ப்ராணனோடு இதில்‌வாழ்கின்றான்‌ என்றும்‌ 
வேத வாக்கியங்கள்‌ கூறுன்றன: 
கர்ம பலன்‌ அனுபவிப்பது ஜீவன்‌; பகவானும்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பது எவ்வாறு? பகவான்‌ ஜீவனை அனுபவிக்கச்‌ செய்கிறான்‌; 
செய்விப்பவனையும்‌ செய்வதாகச்‌ சொல்லுவதுண்டு. ஆதலால்‌ உலகை உண்பவனாக ஓதப்படுவோன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

அன்றியும்‌ இதே பகுதியில்‌ வரும்‌ விஷயம்‌ ஒன்று; 
பகவான்‌ மிக மிகப்‌ பெரியவன்‌; இவன்‌ வரிக்கும்‌ ஜீவனே இவனை அடையத்‌ தக்கவன்‌. ஜீவன்‌ உபாஸிப்பவன்‌, 
பகவான்‌ உபாஸிக்கப்படுபவன்‌? ஜீவன்‌ பகவானை அடைபவன்‌ என்பது. 
ஆதலால் சராசரங்களை உண்பவன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

2. 3. கண்ணிலே காணப்படுவோன்‌ 
சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவனொரு புருஷன்‌ கண்ணிலே காணப்படுகிறானோ, இவனே 
ஆத்மா, அம்ருதம்‌, அபயம்‌, ப்ரஹ்மம்‌ என்பது, 
-இவன்‌”* என்று  .. சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவரும்‌ அறிந்ததாக ஓதியிருப்பதால்‌, 
இது ஜீவன்‌ அல்லது எதிரே நிற்பவரது ப்ரதிபிம்பம்‌, அல்லது கண்ணுக்கு அபிமான தேவதை. இது ஒரு கருத்து, 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ (4-75-3) வருவது* இவனே அனைவர்க்கும்‌ ஆத்மா, ஆராவமுது, 
பயமற்றவன்‌, ப்ரஹ்மம்‌, அழகான யாவும்‌ நிரம்பப்‌ பெற்றவன்‌, நல்லன யாவும்‌ வாய்ந்திருப்பவன்‌; 
இவனே அடியார்க்கு நல்லன தருபவன்‌; ஆதலால்‌ இவனே மிகச் சிறந்து விளங்குபவன்‌. 
இவ்வாறான பெருமை பரமாத்மாவுக்கே பொருந்தும்‌; ஜீவனுக்கும்‌ ப்ரதி பிம்பத்திற்கும்‌ அபிமான தேவதைக்கும்‌ பொருந்தாது. 

பரமாத்மாவை யோகிகள்‌ தமது கண்ணில்‌ தேக்க வல்லவார்‌. இதனாலும்‌ பகவான்‌ கண்ணில்‌ இருப்பதாகக் கொள்ளலாகும்‌. 
* பகவான்‌ சுகத்தோடு கூடியவன்‌ என்று வேத வாக்கியங்கள்‌ சொல்லுகின்றன. 
இவனை உபாஸிக்க வேண்டிய ஸ்தானத்தை ய ஏஷோசக்ஷிணி'' என்பதால்‌, கண்ணில்‌ உள்ள இவன்‌ பரமாத்மாவே ஆகவேண்டும்‌, 
மற்றவர்‌  அல்லர்‌. 

பரம புருஷனை உபாஸிப்பவர்களுக்கு அர்ச்சிராதி மார்கம்‌ உண்டு. 
அஷி புருஷனை அறிந்த உபகோஸலனுக்கு அர்ச்சிராதி உபதேசிக்கப்படுகிறது. ஆதலால்‌ அஷி புருஷன்‌ பரம புருஷனே. 

தேர்வு 1: சாந்தோக்யத்தில்‌ ஓரிடத்தில்‌ வரும்‌ விஷயம்‌: “ கம்‌ ப்ரஹ்ம கம்‌ ப்ரஹ்ம”'-
சுகமுள்ளது ப்ரஹ்மம்‌, மிகப்‌ பெரியது ப்ரஹ்மம்‌. இதனை உபாஸிக்‌கும்‌ ஸ்தானம்‌ கண்‌ என்பது. 
ஆதலால்‌ இவன்‌ பரமாத்‌மாவே; சுகமே காணாத மற்றையோர்‌ அல்லர்‌. 

தேர்வு 2: இந்த்ரியங்கள்‌ யாவற்றிற்கும்‌ வேர்ப்‌பற்றான ஜீவன்‌ இதயத்திலேயே இருக்கிறான்‌; 
ஆதலால்‌  கண்ணில்‌ இருப்பதற்கல்லை. எதிரில்‌ இருப்பவரது ப்ரதிபிம்பம்‌ எப்போதுமே கண்ணில்‌ இருக்க இயலாது? 
எதிரில்‌ இருக்கும்போதுதான்‌ ப்ரதிபிம்பம்‌ காணமுடியும்‌ * 
வெகு தொலைவிலுள்ள ஆதித்யன்‌ கண்ணில்‌ இருப்பதாகக்‌ கூறவில்லை; கிரணங்களாலே கண்ணில்‌ இருப்பதாகக்‌ கருதப்படுகிறது.
ஆதலால்‌ இம்மூன்றும்‌ குறிக்கும்‌ படவில்லை. அக்ஷி புருஷன்‌ பரமாத்மாவே.
 
2.4. அந்தர்யாமி பரம புருஷன்‌

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்‌: எவன்‌ பூமியில்‌ நிற்கிறானோ, பூமிக்குள்‌ இருக்கிறானோ, 
எவனை பூமி  ௮றியாதோ, எவனுக்கு பூமி சரீரமோ, எவன்‌ பூமியுள் நுழைந்து நியமிக்கின்றானோ அவனே உனக்கு ஆத்மா என்றறிவாய்‌; 
அவன்‌ மரணமில்லாத அந்தர்யாமி என்று தொடங்கி, நீர்‌, நெருப்பு, அந்தரிக்ஷம்‌, வாயு, தயு வோகம்‌, ஆதித்யன்‌, 
திசைகள்‌, சந்த்ர தாரகைகள்‌,  ஆகாசம்‌, _தமஸ்‌, தேஜஸ்‌ இவற்றிற்கு அந்தர்யாமியாகச்‌ சொல்லப்பட்டுள்ளது. 
பின்பு ப்ராணன்‌, வாக்கு, கண்‌, காது, மனம்‌, தோல்‌, விஜ்ஞானம்‌, ரேதஸ்‌ இவற்‌றிற்கும்‌ அத்தர்யாமியாவான்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ள . 
அன்றியும்‌ இந்த அந்தர்யாமி காண்பவன்‌, கேட்பவன்‌ என்பதும்‌, அன்றியும்‌ இவனைக்‌ காட்டிலும்‌ காண்பவன்‌ 
கேட்பவன்‌ வேறு எவனுமிலன்‌ என்றும்‌ விளக்கப்‌ பெற்றுள்ளது. அந்தர்யாமி என்று கூறிய பிறகு, 
இந்தரியங்களால்‌ வரும்‌ அறிவுடையவனாகக்‌ கூறுவதால்‌ இவன்‌ ஜீவன்‌ என்பதே தகும்‌. இது ஒரு கருத்து. 

தீர்வு : இங்கு விவரிக்கப்பெறும்‌ பண்புகள்‌ யாவும்‌ பரம்பொருளான நாராயணனுக்கே ஏற்றவை. 
**ஏஷ ஸர்வ பூதாத்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண;, அந்தர்பஹிச்ச தத்‌ ஸர்வம்‌ வயாப்ய 
நாராயணஸ்‌ ஸ்தித::” என்பன இதற்கு ஆதாரமாவன. 
காண்பவன்‌, கேட்பவன்‌ என்பன பற்றி, “இவன்‌ கண்‌ இல்லாமலே காண்கிறான்‌, காதில்லாமலே கேட்கிறான்‌”? 
என்று உபதிஷத்‌ இவனையே கூறுகிறது: “இவனைத்‌ தவிரக்‌ காண்பவன்‌ வேறிலன்‌'' என்றதும்‌ இவனைப்‌ பற்றியே. 

மேலும்‌ இப்பகுதியில்‌ பகவானைப்‌ பற்றி இயற்கையாகவே மரணமில்லாதவன்‌, யாவற்றுக்கும்‌ ஆத்மா, 
யாவற்றையும்‌ நியமிப்பவன்‌ என்று அந்தர்யாமியாகச்‌ சொல்லப்படுகிறது. இந்தப்‌ பண்புகள்‌ ஜீவர்களுக்கும்‌ பொருத்த மாட்டா. 

அன்றியும்‌, “எவன்‌ ஆத்மாவில்‌ நிற்கிறானோ, எவனை ஆத்மா அறியாதோ, எவனுக்கு ஆத்மா சரீரமோ அவனே ஆத்மா, அந்தர்யாமி” 
என்று காட்டப்‌  பெறுவதால்‌, நாராயணனே எல்லா பூதங்களுக்கும்‌  அந்தர்யாமி என்பது தெற்றென விளங்குகிறது. 

2-5. காணப்படாதவன்‌ 

முன்பு கூறியது, யாவும்‌ காண்பவனான அந்தர்யாமி  பரமாத்மா என்று. 
இங்குக்‌ காணப்படாததாகச்‌ சொல்லப்படும்‌ தத்வம்‌ ஒன்றை முண்டகோபதிஷத்‌ வெளியிட்டதைப்‌ பற்றி ஆராயப்படுகின்றது. 
பூதயோனி யான அக்ஷரத்திற்குப்‌ பண்புகள்‌: காணப்படாமை அறியப்படாமை, கோத்ரமின்மை, வர்ணமில்லாமை, 
கண்‌ காது கை கால்கள்‌ இல்லாமை, எங்கும்‌ வியாபித்‌து இருப்பது, தலைமை பெற்றது, அழிவின்மை, 
நுண்ணிய தாக இருப்பது, பூதங்களுக்குக்‌ காரணமாயிருப்பது.” 

அடுத்து: வரும்‌ கருத்து: மேலான அக்ஷரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பது. முதலில்‌ அக்ஷரம்‌: 
என்று சொல்லி, அக்ஷரத்திற்கு மேம்பட்டது என வந்துள்ளது. 

இவ்வாறான தத்வங்கள்‌ ப்ரகருதியும்‌ புருஷனுமாக வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
(பூதயோநி அக்ஷரம்‌--தங்களுக்குக்‌ காரணமாய்‌ அழிவில்லாதது). 

மறுப்பு: இதே உபநிஷத்தில்‌ குறிப்பிடப்படுவது* 
யஸ்‌ ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌''--எவன்‌ எல்லாப்‌ பொருள்‌களின்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவானோ. 
இதை ஆராய்ந்தால்‌ மேலே கூறியுள்ளது மூலப்ரக்ருதியாக முடியாது. 
“அக்ஷராத்‌ பரத: பர: மூலப்ரக்குதி' அழியாதது; இதைக் காட்டிலும்‌ மேலானது பரமாத்மாவுக்கே ஓக்கும்‌. 
“ததாகஷராத்‌ ஸம்பவதீஹ விச்வம்‌'”  இந்த அக்ஷரத்திலிருந்து சேதன அசேதனங்கள்‌ உண்டாகின்றன என்பதாலும்‌ இது மூலப்ரக்ருதி ஆகாது; 
பரமாத்மாவே யாகவேண்டும்‌. 

மேலும்‌ இந்த உபநிஷத்தில்‌ வெளியிட்டிருப்பது* 
இவனுக்கு அக்நி எனப்பெறும்‌ த்யுலோகம்‌ தலை, சூர்யர்‌கள்‌ கண்கள்‌, இசைகள்‌ காதுகள்‌, வேதங்கள்‌ மூச்சு, 
வாயு ப்ராணன்‌, உலகங்கள்‌ இதயம்‌, பூமி கால்கள்‌? 
இவன்‌ எல்லஈ. பூதங்களிலும்‌ அந்தராத்மாவாக இருப்‌பவன்‌: இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்கே ஏற்றவை. 
ஆதலால்‌ காணப்படாமை போன்ற பண்பு களால்‌ ஒதுவது பூதயோநி  எனப்பெறும்‌ பரமாத்‌ மாவையே 

2. 8... வைச்வாநரன்‌' 
முன்பு விளக்கியவாறு மூவுலகங்களும்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ மேன்மை பசுவானுக்கே, 
வேறு எதற்குமில்லை என்பது இங்கு நிருபிக்கப்படுகிறது. 
வைச்வாநர உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறுமிடத்தில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி வரும்‌ விவரம்‌: 
எங்குமிருப்பவன்‌,,  எல்லா லோகங்களிலுமுள்ள எல்லா ஆத்மாக்களிலும்‌. அன்னத்தை உண்பவன்‌ என்று, 
வைச்வாநரன்‌ என்ற சொல்‌ ஜாடராக்நியாகவும்‌, பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான அக்நியாகவும்‌, 
ஒரு தேவதையாகவும்‌, பரமாத்மாவாகவும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பரமாத்மாவே என்று தீர்மானிக்க இயவாது. (இது ஒரு கருத்து.) 

“மறுப்பு: இந்தப்‌ பகுதியில்‌ முதலில்‌ சொல்லப்‌ படுவது: ப்ரஹ்மம்‌ என்ற தத்வம்‌ யாவர்க்கும்‌ ஆத்மா' என்று. 
பின்பு இதனையே வைச்வாநரம்‌ என்றே காட்டி யுள்ளது. பல இடங்களிலும்‌ இவ்வாறே கூறப்படுகிறது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பகவானையே. 
அன்‌றியும்‌ மூதலிலே காட்டியுள்ள பகுதியில்‌ வரும்‌ விவரங்கள்‌ யாவும்‌ பகவானைப்‌ பற்றியே வேறோர்‌ உபநிஷத்தில்‌ 
வந்துள்ளன. 

சங்கை: வைச்வாநரம்‌ என்பது கார்ஷஹ்பத்யம்‌ முதலான மூவகை அக்நிகளாகச்‌ சொல்லப்படுகிறது.. 
அன்றியும்‌ முதலில்‌ செய்யும்‌ ஆஹுதி *ப்ராணாய ஸ்வாஹா”” என்பது ஜாடராக்நியைப்‌ பற்றியே. 
ஜாட ராக்நி புருஷசரீரத்தில்‌ இருப்பது. ஆதலால்‌ இது. பர மாத்மா என்று தீர்மானிப்பதற்கில்லை. 
விளக்கம்‌ : இப்பகுதியில்‌ உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறி இருப்பது: 
இது ஜாடராக்நியைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பரமாத்மாவை என்பது. வைச்வாநராத்மா” புருஷன்‌ என்றும்‌, 
இவனே **ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:”: என்று சொல்லப்படுபவன்‌ என்றும்‌, 
புருஷ சப்தம்‌ இயல்‌பாக வாஸுதேவனிடமே நிலைநிற்பதெதன்றும்‌ வந்துள்‌ளது. 
ஆதலால்‌ இங்குக்‌ குறிப்பது ஜாடராக்நியைச்‌ சரீரமாகவுள்ள பரம புருஷனையே. 

தேர்வு 1: முதலில்‌ குறிப்பிட்டுள்ள விவரங்கள்‌ மூன்றாவது பூதமான அக்நிக்கு ஒவ்வா. 
ஆதலால்‌ வைச்வாநரன்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: இப்பகுதியில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி இவன்‌ த்யுலோகம்‌ முதல்‌ பூமி வரையில்‌ (பூமியிலும்‌) 
எல்லாப்‌ பொருள்களிலும்‌, ஜீவர்களது அவயவங்களிலும்‌ உறைவதாக வேதத்தில்‌ வந்துள்ளது. 
இவ்வாறு விவரம்‌ பெற்றுள்ளவன்‌ பரம புருஷனே. 

தேர்வு 3: அக்நி;, வைச்வாநர: என்ற சொற்களின்‌ பொருள்‌: அக்ரம்‌ நயதீத்யக்நி: உயர்நிலைக்கு அழைத்து 
செல்பவன்‌ அக்நி. “*விச்வேஷாம்‌ நராணாம்‌ நேதா வைச்வாதர:--நரர்கள்‌ யாவரையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ வைச்வாதரன்‌. 
இவை நாராயணனையே குறிப்பன. 

*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம” என்று யாவும்‌ ப்ரஹ்மமே. சராசரங்களை உண்பவனாகக்‌ கூறப்பட்டவனும்‌, 
கண்ணில்‌ நிற்பவன்‌ என்பவனும்‌, அந்தர்யாமி யாகக்‌ கூறப்பட்டவனும்‌, அக்ஷரம்‌ என்ற மூலப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பவனும்‌ 
வைச்வாநர: என்பவனும்‌ பரமாத்மாவே.  
-----------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

பகவானுக்கு சேதனங்கள்‌, அசேதனங்கள்‌ விட விலக்ஷணன்  என்று நிறுவும்போது 
முதல்‌ பாதத்தில்‌ தெளி வின்மையே 'மிக்குள்ள வேத வாக்கியங்களை வ்யாசர்‌ ஆராய்ந்தார்‌; 
இரண்டாம்‌ பாதத்தில்‌ தெளிவின்மை யுள்ள வாக்கியங்களை ஆராய்ந்தார்‌. 
இந்த அடையாளங்கள்‌ தெளிவாக உள்ள இடங்கள்‌ இப்பாதத்தில்‌ ஆய்வுக்குப்‌ பயன்படுகின்றன. 

3.1. தேவலோகம்‌, பூமி யாருக்குச்‌ சரீரம்‌? 

தேவலோகம்‌, பூமி இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்‌ளும்‌ வைச்வாநரன்‌ பரமாத்மா என்று விளக்கப்பட்டது. 
தேவலோகம்‌ சரீரமாகக்‌ கொள்பவன்‌ யார்‌ என்று இப்போது ஆய்வு. 

முண்டக உபநிஷத்தில்‌, எவனிடம்‌ தேவலோகம்‌,பூமி, அந்தரிஷம்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ சேர்ந்துள்ளனவோ, 
அந்த ஆத்மா ஒருவனையே ஆதரிப்பீர்‌ என்று வந்துள்ளது. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனுடன்‌ இணைந்துள்ளன; பலவிதமாகப்‌ பிறக்கும்‌ இவன்‌ சரீரத்‌தினுள்‌ திரிகிறான்‌. 
தேரின்‌ நாபியிலுள்ள ஆரங்கள்‌ போல்‌ இவனிடம்‌ நாடிகள்‌ சேர்ந்துள்ளன என்று மேலும்‌ விவரம்‌ காண்கிறோம்‌. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனிடம்‌ சேர்ந்திருப்பதாகவும்‌ கூறப்படுகிறது. 
இவை யாவும்‌ ஜீவனுக்கே பொருந்துவன என்பது ஒரு கருத்து. 

மறுப்பு : இப்பகுதியில்‌ இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. இவனைப்‌ பற்றி மேலும்‌ கூறுவது. : 
இவன்‌ மோக்ஷத்திற்கு ஸாதனம்‌. இவனை அறிபவனே முக்தனாகிறான்‌, மோக்ஷத்திற்கு வேறு வழி யில்லை. 
மேலும்‌ நாராயண வல்லியில்‌, “தாமரை மலர்‌ போன்ற இதயத்தின்‌ நடுவில்‌ நுட்பமான துவாரம்‌ ஒன்றுள்ளது; 
இதில்‌ நாராயணன்‌ இருச்கிறான்‌ என்று வர்ணிக்கப்படுகிறது. கீதையிலும்‌, “*பிறப்பில்லாத பரம 
புருஷன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌'' என வந்துள்ளது. 
நம்‌ மனம்‌ முதலியவற்றிற்கு தாராயணனே ஆதாரம்‌: என்றறிகிறோம்‌. ஆதலால்‌ தேவலோகம்‌ முதலான  வற்றிற்கு ஆதாரமானவன்‌ பசுவானே. 

தேர்வு 1: ஆகாசம்‌, பூமி இவை இருப்பிடமாக உடையவன்‌, பொன்‌ நிறமானவன்‌, உலகைப்‌ படைப்பவன்‌, நியமிப்பவன்‌; 
உலகுக்குக்‌ காரணமானவன்‌.இதனால் தேறுவது: பகவானே எங்கும்‌ இருப்பிடமாக , பகவான்‌ உடையவன்‌ என்பது. 

தேர்வு 2: முண்டகோபநிஷத்தில்‌, ஜீவனும்‌ பகவானுமான இரண்டு பறவைகள்‌ இணைந்து ஒரே மரத்‌தில்‌ அமர்ந்துள்ளன;
ஒன்று கர்மமாகிய இனிய பழத்தைக்‌ தின்கின்றது, மற்றது இதைத்‌ தின்னாமல்‌ சிறப்புடன்‌ விளங்குகிறது என்றுள்ளது. 
கர்ம பலன்‌ இல்லாதவனும்‌, ஸா்வஜ்ஞனும்‌, மோக்ஷத்திற்கு உபாயமானவனும்‌ 
ஆகாசம்‌, பூமி போன்றவற்றை இருப்பிடமாக உடையவன்‌ பசுவானே என்பது தேறுகின்றது. 

-பூமா 
“பூமா” பெருமை உடையது என்ற தத்வத்தை அறிய நாரதர்‌ ஸநத்குமாரரிடம்‌ சென்றார்‌. ஸநத்குமாரர்‌ 

மூதலில்‌ நாமம்‌ பெரியது என்றார்‌. இதனிலும்‌ பெரியது வாக்கு என்றார்‌. இவ்வாறு படிப்படியாக உபதேதசித்து 
ஜீவன்தான்‌ ப்ரஹ்மம்‌ என்று உபதேசித்தார்‌. ப்ராணனோடு சேர்ந்திருப்பதாலே ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே ப்ரஹ்மம்‌ என்றார்‌. 
இதற்கு மேல்‌ பல. கண்டங்‌கள்‌ வரையில்‌ இது பற்றி யாதும்‌ சொன்னதாகக்‌ கூற வில்லை. 
ஆதலால்‌ பூமா என்பது ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே, இது ஒரு கருத்து. 

மறுப்பு: இதே பகுதியில்‌ ஒரு கண்டத்திற்குப்‌ பின்‌, *ஸத்யம்‌ என்ற ப்ரஹ்ம வித்யையில்‌ ஸத்யம்‌ என்பது 
பூமா” என்று விளக்கம்‌ பெற்றுள்ளது. ஸத்யம்‌ என்பது பகவான்‌; இதுவே, சுகமாகும்‌, மிகச்‌ சிறந்ததாகும்‌ என்று புகழ்‌ பெற்றுள்ளது. 
ப்ராணனைப்‌ பற்றிய பேச்சு இந்த பிரகரணத்தில் இல்லை; முன்னமே முடிந்து விட்டது. 

ஒரு ஸூத்ரத்தில்‌ பூமா என்பது ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலானது என வந்துள்ளது. 
அன்றியும்‌, “ஆத்மா வினிடமிருந்து ப்ராணன்‌ உண்டாகின்றது” என்று தொடங்கி, ஸர்வ காரணமாக இருப்பது பூமா என்பதாலே என்று முடிகின்றது. 
இவ்விதம்‌ விவரித்தனயாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. ஆதலால்‌ பூமா  என்றது பரமாத்மாவையே. 
ஆகாசம்‌ அக்ஷ்ரத்தை ௮ண்டியிருக்கிறது என்றார்‌ யாஜ்ஞவல்கீயர்‌. 
அக்ஷரம்‌ என்பது பருமனல்லாதது, அணுவல்லாதது, சிவப்பில்லாதது, பசையில்லாதது, நிழலற்றது என்று விவரிக்கப்படுகிறது. 
இங்கு ஆகாசத்‌திற்கு ஆதாரமாக இருப்பது மூலப்ரக்ருதி என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஆகாசம்‌ பற்றிய விளக்கம்‌ ஒன்று. தேவலோகத்திற்கு மேலும்‌, பூமிக்குக்‌ சீழும்‌, இடையிலுள்ள உலகங்களிலும்‌ உள்ள 
பொருள்கள்‌ யாவும்‌ ஆகாசத்தையே அண்டி உள்ளன. இதனால்‌ ஆகாசம்‌ என்பது அம்பரம்‌ எனப்படுவதற்கும்‌ காரணமான 
மூலப்ரக்ருதியேயாகும்‌, இதற்கு ஆதாரமாவது பரமாத்‌மாவே. ஆதலால்‌ அக்ஷரம்‌ என்பது பரமாத்மாவையே. சங்கை : 
**யஸ்ய அக்ஷரம்‌ சரீரம்‌''! மூதலான வாக்‌ கியங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே அக்ஷர சப்தம்‌ உள்ளது. ஆதலால்‌ ஜீவன்‌ அக்ஷரமாகக்‌ கூடும்‌. 
விளக்கம்‌: இந்த அஷரத்தின்‌ மேலான நியமனத்‌தாலே சூர்ய சந்திரர்‌ தரித்து திற்கிள்றனர்‌ என்பதுவும்‌ நாம்‌ அறிவோம்‌. 
இவ்வாறு நியமிப்பது ஜீவனுக்குப்‌ பொருந்தாது; பரமாத்மாவுக்கே உரியது. 

தேர்வு : அக்ஷரத்தைப்‌ பற்றி விளக்கப்பட்டுள்ளது 
வேறொன்றால்‌ காணப்படாதது, யாவற்றையும்‌ காண்‌பது; வேறொன்றால்‌ கேட்கப்படாதது, யாவற்றையும்‌ கேட்பது என்று 
காண முடியாததும்‌ கேட்க முடியாததுமான ௮சேதனம்‌ அக்ஷரமாவதற்‌ கில்லை. 
ஜீவன்‌ காண் முடியாதவன்‌, பரமாத்மாவால்‌ எப்போதும்‌ காணப்படுபவன்‌. ஆதலால்‌ இவனும்‌ அக்ஷரமாக முடியாது. 
ஆதலால்‌ தனது நியமனத்தாலேயே யாவற்றையும்‌ தரிக்கும்‌ பரம புருஷனே அக்ஷர புருஷன்‌ என்பது நிச்சயம்‌. 

3. 4, காணப்படுபவன்‌ ;: மூன்று மாத்திரையோடு: ப்ரணவத்தை உபாஸிப்பவன்‌ அந்தரிக்ஷத்திற்கும்‌ 
மேலான ப்ரஹ்மலோகம்‌ அடைகிறான்‌ என்று ப்ரச்‌நோ பநிஷத்தில்‌ உள்ளது. 
இவன்‌ தேஹ இந்த்ரியங்‌கனைக்‌ காட்டிலும்‌ மேலான ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலான ஹ்ருதய வாஸியான புருஷனை அடைகிறான்‌ 
என்பதும்‌ காண்கிறோம்‌. ப்ரஹ்ம லோகம்‌ என்பது சதுர்முகனுடைய உலகம்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இதே ,பகுதியில்‌ வந்துள்ளது; ஹ்ருதய வாஸி புருஷன்‌ ஸம்ஸாரி ஜீவார்களைக்‌ காட்டிலும்‌ 
மேலான நித்ய முக்தரைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்று குறித்துள்ளது, 
அன்றியும்‌ பசி, தாகம்‌ முதலான இல்லாதது; ஜரா மரண மில்லாதது, யாவரிலும்‌ மேம்‌ பட்டது என்றும்‌ காண்கிறோம்‌. 
இவ் விவரம்‌ கர்மத்‌திற்கு வசப்பட்ட சதுர்முகனுக்குப்‌ பொருந்தாது? பரமாத்மாவுக்கே பொருந்தும்‌. 
ப்ரஹ்மலோகம்‌ என்பது ப்ரஹ்மத்தின்‌ லோகம்‌, பரம பதம்‌; ப்ரஹ்மாவின்‌ லோகமன்று, 
**தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று பாராட்டப்பட்டது. அந்தரிஷத்திற்கு மேற்பட்ட லோகம்‌ நான்முகனின்‌ லோகம்‌ என்பதும்‌ சரியன்று, 
ஆதலால்‌ காணப்படுவது ஸாவேச்வரனாகிய ஸ்ரீமந்‌ நாராயணனே. 

3. 5. தஹராகாசம்‌ 

ஓர்‌ உபநிஷத்தில்‌ ஒரு வாக்கியம்‌, இதயத்தில்‌ வஸிப்பவன்‌ ஆகாசம்‌ என்கிறது. 
பரமன்‌ உறையுமிடமான உடலில்‌ தாமரை போன்ற சிறிய இடம்‌ உள்ளது; இது ப்ரஹ்மத்தின்‌ இருப்பிடம்‌, 
இதனுள்‌ நுண்ணிய நிலையில்‌ ஆகாசம்‌ இருக்கிறது; இதற்குள்‌ இருப்பது தேடத்தக்கது, அறியத்‌ தக்கது என்றும்‌, 
இது தஹராகாசம்‌ என்றும்‌ குறித்துள்ளது. இது பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான ஆகாசம்‌ என்பது ஒரு கருத்து. 

மறுப்பு: மேல்‌ வாக்கியத்தில்‌ வந்துள்ள கருத்து; 
இதயத்தில்‌ வஸிப்பவன்‌ எங்கும்‌ வியாபித்திருப்பவன்‌, பாவ மற்றவன்‌, மூப்பு மரண மில்லாதவன்‌, சோக மற்றவன்‌, 
பசி தாக மில்லாதவன்‌, தடைபடாத விருப்பமும்‌ ஸங்கல்பமும்‌ வாய்ந்தவன்‌ என்பது. ஆதலால்‌ தஹரா காசம்‌ பரமாத்மாவே. 
தஹராகாசத்தினுள்‌ இருப்பதை உபாஸிக்கும்போது இங்கு விவரிக்கப்படும்‌ கல்யாண குணங்களை உபாஸிக்க வேண்டும்‌ என்றும்‌ வந்துள்ளது. 
அன்றியும்‌ பூதாகாசம்‌ போல்‌ இதயத்திலுள்ள ஆகாசம்‌ பெரியது என்றும்‌ விளங்குகிறது. 
ஆதலால்‌ தஹராகாசம்‌ பூதாகாசத்தைக்‌ காட்டிலும்‌ மாறுபட்ட பரமாத்மாவே, 

தேர்வு 1 :: சேதனர்‌ தூங்குகின்ற போது தஹராகாசத்தை அடைகின்றனர்‌. இது ப்ரஹ்ம லோகம்‌ என்பது 
வேதத்தில்‌ ஒரு கருத்து. ப்ரஹ்ம லோகம்‌ அறியப்படும்‌ - ப்ரஹ்மத்தைச்‌ சொல்லும்‌. '*'லோக்யதே இதி லோக: 
அறியப்படுவதால்‌ லோகம்‌ எனப்பெறும்‌. ப்ரஹ்மம்‌ என்று வழங்குவது ஸதி என்று பரமாத்மாவையே, 
சேதனர்‌ தூங்கும் போது அடைவது பூதாகாசத்தை யன்று. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: தஹராகாசம்‌ பற்றி உபநிஷத்‌ வெனி யிடுவது: இவ்வாத்மா உலகங்கள்‌ ஒன்றோடொன்று 
கலவாமல்‌ அணையைப்‌ போலே பிரித்து தரித்து நிற்கிறான்‌; இவனே ஸர்வேச்வரன்‌: இவனே ஜீவரா்களுக்கு அதிபதி; 
ஜீவராசிகளைக்‌ காப்பாற்றுவோன்‌ என்று. இக்‌ காரணத்தாலும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே தஹராகாசம்‌ என்று நிச்சயிக்கலாம்‌. 

தேர்வு 3: சாந்தோக்யத்தில்‌ ஒருவாக்கியம்‌ (7-9-1)பூதங்கள்‌ எல்லாம்‌ ஆகாசம்‌ என்ற பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றன என்பது. 
பரமாத்மாவைப்‌ பற்றி ஆகாசம்‌ என்ற சொல்‌ பயன்படுகிறது. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

ஒரு சங்கை: தஹராகாசம்‌ சிறியதாக இருப்பதால்‌ அணுவான ஜீவன் தான்‌ இதில்‌ பொருந்தக்‌ கூடும்‌. விபுவான பரமாத்மா இதில்‌ இருக்க இயலாது. 

விளக்கம்‌ : முக்தனான ஜீவாத்மா பரமாத்மாவோடு  ஸாம்யம்‌ பெறுகிறான்‌; இது அநுகாரம்‌. இதனாலேயே 
மூக்தி தசையில்‌ பகவானுக்குள்ள குணங்கள்‌ இவனும்‌ பெறுகிறான்‌. தஹராகாசம்‌ அநுகாரத்தால்‌ இந்த 
குணங்கள்‌ படைக்கவில்லை; இயற்கையாகவே பெற்றுள்‌ளது. ஆதலால்‌ அநுகரிக்கும்‌ ஜீவனில்‌ வேறுபட்டது;
௮னுகரிக்கப்படுவதான தஹராகாசம்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

தேர்வு 4: கீதையிலும்‌, “பரமாத்மாவை ௨பாஸிப்‌பதால்‌ ஜீவன்‌ பரமாத்மாவை: அனுகரிக்கிறான்‌'' என்‌றுள்ளது (1484-2), 
ஆதலால்‌ தெற்றென விளங்குவது; அனுகரிக்கப்படும்‌ தஹராகாசம்‌ அனுகரிக்கும்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறான பரமாத்மாவே என்பது,
 
3. 6, ப்ரமிதன்‌. 

ப்ரமித: கட்டைவிரலளவுள்ளவன்‌. அங்குஷ்டம்‌-- கட்டைவிரல்‌. கட்டைவிரல்‌ அளவுள்ள புருஷன்‌ என்று தொடங்கும்‌ ரிக்குக்களில்‌ கூறியுள்ளது: 
அங்குஷ்ட மாத்‌ரம்‌ அளவுள்ள ஜீவன்‌ ப்ராணனை நியமிப்பவன்‌, தனது கர்மங்களால்‌ கட்டுண்டவன்‌; கட்டை விரல்‌ அளவுள்ளவன்‌ சஞ்சரிக்கிறான்‌ என்று. 
இங்குக்‌ குறிப்பது ஜீவனே என்பது ஒரு கருத்து, இவை யாவும்‌ ஜீவனுக்குப்‌. பொருந்துவன. 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ இந்தப்‌ புருஷன்‌ 'முக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ புருஷர்களுக்குங்‌ காரணம்‌ என்று 
சொல்லப்படுகிறது. ஆதலால்‌ அங்குஷ்ட மாத்ரன்‌ பரமாத்மாவே. 

சங்கை : அளவே காண முடியாத பரமாத்மா எப்‌படிக்‌ கட்டைவிரல்‌ அளவுள்ளவனாகக்‌ கூடும்‌?' 

விளக்கம்‌ : உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்காக  பரமாத்மா இவர்களது இதயத்தில்‌ கட்டைவிரல்‌ அள  விற்கு அமைந்திருக்கிறான்‌. 

சங்கை: குதிரை முதலானவற்றிற்குக்‌ கட்டை விரலே இல்லையே; இவற்றின்‌ இதயத்தில்‌ கட்டை வீரல்‌ 
அளவுக்கு இவன்‌ உறைகிறான்‌ என்பது எப்படிப்‌ பொருந்தும்‌? 

விளக்கம்‌ : மனிதர்கள்‌ உபாஸிப்பதற்காகக்‌ கூறுவதாலே கட்டைவிரல்‌ அளவு என்று குறிப்பிட்டுள்ளது. 

அங்குஷ்ட மாத்ரனைப்‌ பற்றி மேலும்‌ சில விவரங்கள்‌: 
'இவனிடம்‌ யாவரும்‌ நடுங்குகின்றனர்‌. இவனிடம்‌ பயத்‌தால்‌ அக்நி சுடுகிறது; ஸூர்யன்‌ காய்கிறான் இந்தரன்‌, 
வாயு, யமன்‌ தங்கள்‌ தங்கள்‌ செயல்களைச்‌ செய்‌கின்றனர்‌. இத்தகைய இயல்புடையவன்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

மேலும்‌ இந்தப்‌ புருஷனின்‌ ஒளியாலே எல்லா ஒளிகளும்‌ விளங்குகின்றன என்றும்‌ கூறுவதால்‌, இத்தகைய 
மேன்மை யுடையவன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே என்பது தெளிவு. 

3. 7. ஆகாசம்‌ பரமாத்மாவே. 

சாந்தோக்யதக்தில்‌ தஹர வித்யையில்‌ கடைசியில்‌ வரூ வது: நாம ரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே. இவை! 
இல்லாமலிருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும்‌.. அம்ருதமாகவும்‌, ஆத்மாவாகவும்‌ இருப்பது. 
ஆகாச மெனப்படுபவன்‌ முக்தி யடைந்த ஜீவன்‌ என்பது ஒரு, கருத்து. 

ஆதரவான விளக்கம்‌ : முக்த ஜீவன்‌ உலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, குதிரை தனது உடலிலுள்ளஉரோமங்களை உதிர்ப்பது போல்‌, 
சந்திரன்‌ ராகுவின்‌ வாயிலிருந்து விடுதலை பெறுவதுபோல்‌ என்று சாந்‌தோக்யம்‌ வரைகன்றது. 
இந்த விவரங்கள்‌ முக்த ஜீவ னுக்கு நன்கு பொருந்துவன. நாம ரூபம்‌ வஹிப்பது: என்பது இவனுக்கே பொருந்தும்‌. 

மறுப்பு : ஜீவன்‌ நாம ரூபம்‌ பெறுவது தனது கர்மத்‌தாலே, நாம ரூபங்களை நிர்வஹிப்பவனுக்கு நாமரூபங்‌- 
கள்‌ இல்லை என்பதால்‌, இவன்‌ ஜீவனினும்‌ சதாம்‌ பரமாத்மாவே, 

இதற்கு முன்னமேயே தஹராகாசமான பரமாத்‌மாவைப்‌ பற்றிக்‌ கூறியிருக்கிறது. 
இதனை உபா ஸிப்பவனது ஸ்வரூபம்‌ இங்குச்‌ சொல்லப்படுகிறது. நாம ரூப நிர்வாஹம்‌ புருஷனுக்குப்‌ பொருந்தாது. 
ஆதலால்‌ புருஷ ஸக்தம்‌ போன்றவற்றில்‌ நாம ரூப திர்வஹகனாகக்‌ கூறப்படும்‌ நாராயணனே இவ்விடத்தில்‌ சொல்‌லும்‌ ஆகாசம்‌ என்பது தெள்ளத்‌ தெளிவு. 

ஒரு சங்கை : **தத்வமஸி'', “அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி”” போன்ற வாக்கியங்களில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மத்தினின்றும்‌ 
வேறுபடாதவன்‌ என்று காட்டியுள்ளது. ஆதலால்‌ முக்தி நிலையிலுள்ள ஜீவனே பரமாத்மா என்று தேறுகின்றது . 
இதனாலும்‌ ஆகாசம்‌ என்பது ஜீவன்‌ என்று கருதுவதே.  ஏற்றது. 

விளக்கம்‌ : தூங்கும்போது ஜீவனைப்‌ பேரறிவாளனான பரமாத்மா அணைத்துக் கொள்வதால்‌ ஜீவன்‌ எதையும்‌ அறிவதில்லை. 
இதேபோல்‌ மரணத்தின்போது பரமாத்மாவோடு ஒரு வகைச்‌ சேர்த்தி ஏற்படுகிறது, 
பரமாத்மாவால்‌ அணைக்கப்பட்டு ஜீவன்‌ சரீரத்தை விடுகின்றான்‌ என்பது வேதத்தில்‌ வருவது. 
தன்னைத்‌ தானே தழுவிக்கொள்வதும்‌, தன்னோடே தான்‌ சேர்த்தி பெறுவதும்‌ நிகழமாட்டா. 
தூக்க நிலையிலும்‌ மரண நிலையிலும்‌.ஜீவன்‌ பரமாத்மாவைவிட வேறு. 
ஆதலால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ பரம புருஷன்‌ வேறு என்பது தேறுகின்றது. 
ஆதலால்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌. வேறுபட்ட பரமாத்மாவே. 

மேலும்‌ “ஸர்வஸ்ய: அதிப்தி:””, “ஸர்வஸ்ய *வ€*”) “ஸர்வஸ்ய ஈசாந:'” என்று இவ்விடத்தில்‌ வருவதால்‌ 
இவன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது தெளிவு. ஆதலால்‌ இப்பகுதியில்‌ கூறப்படுவது பர்மாத்‌மாவே. 

3, 8, ப்ரஹ்மாதிகளின் உபாஸனம் நிலை  

'ஒரு கருத்து; தேவர்களுக்குச்‌ சரீரம்‌ இருப்பதாக ப்ரமாணம்‌ எதுவுமில்லை. தேஹ மிருந்தால்கான்‌ உபாஸநம்‌ செய்ய இயலும்‌. 
சரீரத்தின்‌ தொடர்பால்‌ நிகழும்‌ இன்ப துன்பங்கள்‌ இவர்களுக்கு நேரமாட்டா. ஆதலால்‌ இவற்றிலிருந்து விடுதலை. பெற விருப்ப்மும்‌ இராது. 
ஆதலால்‌ இவார்கள்‌ உபாஸநம்‌ செய்வதில்லை. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டு, எவ்வாறெனில்‌: பகவான்‌ யாவர்க்கும்‌ நாம சூபங்கள்‌ அளிப்பதாக ஸங்கல்பித்தான்‌. 
தேஹ இந்தரியங்களைச்‌ செய்‌வதே நாம ரூபம்‌ என்பது. அன்றியும்‌ இந்திரன்‌, விரோசனன்‌ இவர்கள்‌ தங்கள்‌ கையில்‌ ஸமித்தை ஏற்றுக்‌ 
கொண்டே சதுர்முகனை அடைந்தனர்‌ என்பது ஒரு வரலாற்றில்‌ காண்கிறோம்‌. 
ஆதலால்‌ தேவர்களுக்கு அதிகாரம்‌ உண்டு, உபாஸநம்‌ செய்யத்‌ தகுதியும்‌ உண்டு. 

ஒரு சங்கை : யாகம்‌ செய்யும்போது தேவர்களை ஹவிஸ்‌ ஏற்பதற்காக அழைக்கிறோம்‌. யாகம்‌ பல இடங்களில்‌ நிகழலாம்‌. 
அப்போது ஒரே சரீரத்துடன்‌ எவ்‌வாறு சொல்லமுடியும்‌? ஆதலால்‌ சரீரம்‌ இல்லை என்பதே ஏற்கத்‌ தக்க கருத்து. 

விளக்கம்‌ : ஸெளபரி முனிவர்‌ ஒரே காலத்தில்‌ பல சரீரங்களோடு இன்பம்‌ துய்த்தார்‌. 
இதுபோல்‌  தேவர்‌களும்‌ பல சரீரங்கள்‌ ஏற்கக்‌ கூடியவர்களே. 

வேறொரு சங்கை : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டெனில்‌ உற்பத்தி விநாசங்கள்‌ உள்ளன. 
விநாசம்‌ ஏற்படும்‌ போது இவர்களது பேர்களும்‌ மறைந்துபோம்‌. இப் பேர்‌கள்‌ இந்த்ரன்‌, வருணன்‌ போன்றவை வேதங்களில்‌ வருவன. 
ஆதலால்‌ வேத சப்தங்களும்‌ நிலைநிற்க மாட்டா--ஆதலால்‌ இவ்வாறு ஆராய்ந்தால்‌ இவர்களுக்குச்‌ சரீரம்‌ இல்லை என்றுதான்‌ ஊகிக்கவேண்டும்‌. 

விளக்கம்‌: “*'வேதேத ரூபே வ்யாசுரோத்‌ ப்ரஹ்மா”” வேதத்தைக்‌ கொண்டே நான்முகன்‌ படைத்தான்‌ என்‌பது வேத்‌ வாக்கியம்‌. 
“ஸூர்ய சந்த்ரமளெள தாதா யதா பூர்வ மகல்பயத்‌'' என்பது தைத்திரீய வாக்‌யம்‌.. 
படைப்பின்போது நான்முகன்‌ பூர்வ கல்பத்தில்‌ இருந்தவாறே வேதத்தின்‌ மூலமாகப்‌ படைக்கின்றான்‌, 
வேத சப்தங்களைக்‌. கொண்டே தனித்தனியாகவும்‌ படைக்‌கின்றான்‌. 
ஆதலால்‌ இந்த்ரன்‌, வாயு, அக்நி போன்ற பூதங்கள்‌ எப்போது முள்ளவையே. 

வேறொரு சங்கை: மது வித்யை போல்வன வற்றில்‌ வஸூக்கள்‌, ஆதித்யர்‌ போன்ற தேவர்களை உபாஸனம்‌. 
செய்து வஸு பதவி, ஆதித்ய பதவி பெறக்கூடும்‌ என்று கூறியிருக்கறது. 
ஏற்கனவே இப்பதவியிலுள்ள தேவர்‌கள்‌ உபாஸநம்‌ எவ்வாறு செய்யக்‌ கூடும்‌? 

விளக்கம்‌ : இத்தகைய தேவர்கள்‌ பரமாத்மாவைப்‌ பெறுவதற்கு உபாஸநம்‌ செய்யலாம்‌. 
அன்றியும்‌ இந்தப்‌ பதம்‌ எப்போதும்‌ நிலைப்பதற்காகவும்‌ உபாஸநம்‌ செய்யக்‌ கூடும்‌. 
ஆதலால்‌ தேவர்கள்‌ நம்மைப்‌ போல்‌ இறைஞ்சித்‌ தமது பதம்‌ நிலைக்கப்‌ பெறுகின்றனர்‌; பகவானையும்‌ பெறுகின்றனர்‌. 

தெளிவான வேத வாக்கியங்களைக்‌ 'கொண்டு பகவான்‌ எங்கும்‌ உறைபவன்‌ என்று விவரிக்கப்படுகின்றது. 
த்யுலோகம்‌, பூமி போல்வனவற்றிற்கு இருப்‌பிடம்‌ பகவான்‌. பூமா எனப்படுவது ஸத்யம்‌ என்ற பரமாத்மா. 
மூலப்ரக்ருதிக்கும்‌ ஆதாரமான அஷரமும்‌ பகவானே, ஞானிகளால்‌ காணப்படுவோன்‌ பசுவானே. 
தஹராகாசமும்‌ பகவான்‌, கட்டை விரல்‌ அளவிற்கு இதயத்தில்‌ உறைபவன்‌ பகவான்‌. 
நாமரூபங்களைச்‌ செய்யும்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோனும்‌ பகவானே. 
தேவர்களும்‌ ௨பாஸநஞ்‌ செய்யத்‌ தக்கவர்களே. 

----------------

4. நாலாம்‌ பாதம்‌. 

மிகத்‌ தெளிவான வேத வாக்கியங்களைக்‌ கொண்டு பகவான்‌ சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொள்‌பவன்‌ 
என்று நிலைநாட்டுவதோடு இவனிலும்‌ வேறு பட்ட ஒருவன்‌ இல்லை யென்பது இந்தப்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிறது. 
4. 1, ஸாங்க்யர்‌ கொள்கை. 

கடோபநிஷத்தில்‌ (1-7-53-1-7-11) வந்துள்ள விஷயம்‌: இந்த்ரியங்களுக்கு மேற்பட்டவை அர்த்தங்கள்‌; 
அர்த்தங்‌களுக்கு மேற்பட்டது மனம்‌; மனத்திலும்‌ மேலானது அறிவு; அறிவைக்‌ காட்டிலும்‌ பெரியது ஆத்மாவான மஹான்‌; 
இதைக்‌ காட்டிலும்‌ மேலானது அவயக்தம்‌; இதனிலும்‌ புருஷன்‌ பெரியவன்‌; புருஷனைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ எவனுமிலன்‌; 
இப்புருஷனே எல்லை நிலம்‌, மேலான கதியு மாவான்‌. ஸாங்க்யார்களது கொள்கை இதனையே ஒட்டி யுள்ளது. 
இக்கருத்தின்படி இருபத்‌தைந்தாவது தத்வமான புரூஷனைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ இல்லை. 
ஆதலால்‌ ஈச்வர தத்வம்‌ இல்லை. அவ்யக்தம்‌, ப்ரதானம்‌, ஆனுமாநிதம்‌ எனப்‌  பெறும்‌ மூலப்ரக்ருதியே 
உலகுக்குக்‌ காரணம்‌ என்கின்றனர்‌ நிரீச்வர ஸாங்க்யர்‌. 

மறுப்பு: கடோப நிஷத்தில்‌ இதே பகுதியில்‌ (1-8-10,12) பகவானை அடைய விரும்பும்‌ உபாஸகன்‌ 
தேரில்‌ ஏறிச்‌ செல்வதாக உருவகப்‌ படுத்தியுள்ளது. 
ஜீவன்‌ ரதி (ரதத்தில்‌ ஊர்பவன்‌). இவனது சரீரம்‌ தேர்‌? புத்தி தேர்ப் பாகன்‌; மனம்‌ கடிவாளம்‌; இந்த்ரியங்கள்‌ குதிரைகள்‌; 
சிற்றின்ப. விஷயங்கள்‌ இக்குதிரைகள்‌ செல்‌ லும்‌ வழி. 
இந்தத்‌ தேர்‌ மூதலானவற்றை வசப்படுத்திக்‌ கொள்வோன்‌ ஸம்ஸார வழியின்‌ அக்கரையான பரம 
பதத்தை அடைகிறான்‌ என்பதும்‌ வந்துள்ளது. 
இவ்விவரங்களை ஆராய்ந்தால்‌ மனம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்‌றோடு கூடிய சரீரத்தைக்‌ தன்‌ வசப்படுத்திக்‌ கொண்டு 
இப்புருஷன்‌ சேர்வது பரம புருஷனை என்பது தெளிவு 

இதே கருத்து கடவல்லியில்‌ (7-3-73)ல்‌ உள்ளது? 
அறிவாளியானவன்‌ வாக்கு முதலான இந்தீரியங்களை மனத்தில்‌ அடக்கவேண்டும்‌, 
இந்த மனத்தை ஆத்மா விலுள்ள அறிவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த அறிவைப்‌ பெரியவனான ஜீவாத்மாவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த ஜீவாத்மா தாழ்வுகள்‌ இல்லாத பரமாத்மாவிடம்‌ அடங்க வேண்டும்‌ என்று, 
இங்கு உபகாரஞ்‌ செய்யும்‌ பரம்‌ பரையே உள்ளது; காரண பரம்பரை யன்று; 
ஆதலால்‌ அவ்யக்தம்‌ என்று சொல்லால்‌ மூலப்ரக்ருதியைச்‌ சொல்ல வில்லை; சரீரத்தையே சொல்லுகின்றது. 

தேர்வு 1: வ்யக்தம்‌ என்ற ஸ்தூலமான உலகம்‌, அவ்யக்தம்‌ என்ற மூலப்ரக்ருதி, புருஷன்‌ இம்மூன்றையும்‌ 
அறிவது மோக்ஷம்‌ என்கின்றனர்‌ ஸாங்கயர்‌, இவ்வாறு “வேதத்தில்‌ கூறப்படவில்லை. ஆதலால்‌ ஸாங்க்ய தத்வம்‌ கூறவில்லை. 

ஸாங்க்யர்களது மறுப்பு : ஒரு மந்த்ரம்‌: சப்தம்‌, ஸ்பர்‌ சம்‌, ரஸம்‌, ரூபம்‌, கந்தம்‌ இல்லாததும்‌, அழிவில்லாததும்‌, 
ஆதியந்த மில்லாததும்‌, மஹானுக்கு மேற்பட்டதும்‌, நிலையானதுமான தத்வத்தை த்யானஞ்‌ செய்து 
ஸம்ஸாரத்திலிருந்து ஜீவன்‌ விடுதலை பெறுகிறான்‌ என்பது, 
மஹத: பரம்‌- மஹானளைக்‌ காட்டிலும்‌ பெரியது என்பதால்‌ இது மூலப்ரக்ருதியே. 

விளக்கம்‌; இப்பகுதியிலேயே இரண்டு மந்தரங்கள்‌ உள்ளன. 
ஒன்று கூறுவது: அறிவு சாரதியாகவும்‌, மனம்‌ கடிவாளமாகவும்‌ கொள்ளும்‌ மனிதன்‌ உலக வாழ்க்‌கையை நீத்து 
விஷ்ணுவின்‌ பதத்தை அடைகிறான்‌ என்பது. 
மற்றது: எல்லாப்‌ பொருள்களிலும்‌ மறைந்‌துறையும்‌ இந்தப்‌ பரமாத்மா மேலான நுண்ணறிவினாலேயே காணப்பெறுகிறான்‌ என்பது, 
ஆதலால்‌ முமுஷு அறியத்‌ தக்கது மூலப்ரக்ருதி ஆகாது; 

தீர்வு : நூகேதஸ்‌ என்ற ரிஷி குமாரனுக்கு யமன்‌ ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்‌, ஜீவ ஸ்வரூபத்தையும்‌, 
செய்ய வேண்டிய உபாஸனத்தையும்‌ உபதேசித்தான்‌. ஆத்மா இது என்று .விளக்க, இது சேர்வது 
“*“தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று உபாஸனத்தால்‌ பெறும்‌ விஷ்ணுவின்‌ பதமாகிய மோக்ஷம்‌ என்றும்‌ வெளியிட்டான்‌. 
இங்கு அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ மூல ப்ரக்ரூதி சொல்லவில்லை. 
4, 2. அஜா என்னும்‌ மந்த்ரம்‌. 

ச்வேதாச்வதர உபநிஷத்தில்‌ அஜாம்‌ என்று தொடங்கும்  மந்த்ரம்‌: சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற நிறங்கள்‌ 
உடையதாய்‌, தன்னைப்‌ போன்ற ப்ரஜைகள்‌ பல உற்‌பத்தி செய்வதாய்‌, பிறப்பற்றதான ஒன்றோடு ஒருவன்‌ உகந்து கூடியிருக்கிறான்‌. 
அனுபவிக்கும்‌ இதைப்‌ பிறப்பற்ற மற்றொருவன்‌ விட்டுச்‌ செல்லுகிறான்‌.
ஸாங்க்‌: யரின்‌ கருத்து; அஜா (பிறப்பற்றது); என்பது மூலப்ரக்‌ரதி; பல பொருள்‌ இது உற்பத்தி செய்வதாகக்‌ கூறி யிருக்கிறது. 
ஆதலால்‌ ப்ரஹ்மாதீமகம்‌ அல்லாத ஸ்வ தந்த்ரமான ப்ரக்ருதியே காரணம்‌ என்பது விளங்கும்‌. 

மறுப்பு : அஜாம்‌ என்ற இம்மந்த்ரத்தில்‌ மூலப்ரக்ருதி' ப்ரஹ்மாத்மகம்‌ அன்று என்பது கூறப்பெறவில்லை... 
”பஹ்வீ; ப்ரஜா; ஸ்ருஜமாநாம்‌'' என்ற இடத்திலும்‌ மஹான்‌ முதலிய தத்வங்களை ப்ரக்ருதி படைக்‌கிறது என்பதே உள்ளது; 
ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்‌கிறது என்று கூறவில்லை. ஆதலால்‌ ப்ரம்ஹத்தின்‌ தொடர்பற்ற மூல பரக்ருதி ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்கிறது என்று 
ஏற்பதற்கில்லை.' 

தேர்வு: தைத்திரீயத்தில்‌ பரமாத்மா அணுவைக்‌ காட்‌டிலும்‌ அணு, பெரியதைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ என்று 
தொடங்கிக்‌ கடல்கள்‌, மலைகள்‌ இவனிடமிருந்து தோன்‌றின என்று கூறுகின்றது. இம்மந்த்ரங்களினிடையே 
**அஜாமேகாம்‌”'”' என்ற மந்த்ரமும்‌ அமைந்துள்ளது.. 
ஆதலால்‌ மூலப்ரக்ருதி பகவானை ஆத்மாவாகவும்‌ காரணமாகவும்‌ கொண்டது என்பது வெளிப்படை. 

சங்கை: பகவான்‌ இவ்வுலகைப்‌ படைத்தான்‌ என்ற வாக்கியத்தால்‌ மூலப்ரகிருதியைப்‌ படைத்தான்‌. 
என்பது தேறுகின்றது, “*“அஜாமேகாம்‌'' என்று மூல ப்ரக்ருதி பிறப்பற்றது என்று வந்துள்ளது. இவை எவ்வாறு பொருந்தும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நாம ரூப மில்லாமல்‌: மூலப்ரக்ருதி என்ற அசேதனப்‌ பொருள்‌ பகவானுக்கு சரீரமாக உள்ளது. 
அப்போது மஹான்‌ முதவியன பரிணாமம்‌ பெறவில்லை. ஆதலால்‌ ௮ஜா எனப்படுகிறது. 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அதே மூலப்ரக்ருதி தன்மாத்திரைகள்‌ இந்த்ரியங்கள்‌, ஐந்து பூதங்களாக நாம ரூபம்‌ பெறுகிறது. 
ப்ரளய காலத்தில்‌ சூர்யன்‌ உதய ௮ஸ்‌தமனங்கள்‌ பெறுவதில்லை; 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ கார்ய நிலையில்‌ ஸ்தூலமாகி தேவர்களுக்கு போக்யமான மது என்ற நிலையில்‌ இருக்கிறான்‌. 
இதேபோல்‌ மூலப்ரக்ருதிக்குப்‌ பிறப்பும்‌ பிறப்பற்ற நிலையும்‌. 

4, 3. தத்‌வங்கள்‌ இருபத்தைந்து. 

*“யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா : ஆகாசச்‌ ச ப்ரதிஷ்டித:-தமேவ மந்ய ஆத்மாநம்‌ வித்வாந்‌ ப்ரஹ்மாம்ருதோ? ம்‌ர௬ுதம்‌''--
ஐயைந்து தத்‌ வங்களும்‌ ஆகாசமும்‌ எந்த ஆத்மாவிடம்‌ நிலை நிற்கின்றனவோ, பெரியதாய்‌ அழிவற்றதாய்‌ விளங்கும்‌ 
அந்த ஆத்மாவை இவ்வாறு அறியும்‌ மனிதன்‌ முக்தி பெறுகிறான்‌ என்பது ஒரு மந்த்ரம்‌.. 
ஸாங்கயா்களது கருத்து; ஐயைந்து என்பது இருபத்‌தைத்து. இவை; (1) பூதங்கள்‌ ஐந்து, (4) தன்மாத்ரைகள்‌ ஐந்து, 
(3) ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, (4) கர்மேந்தரியங்கள்‌ ஐந்து, (5) மீதி ஐந்து ப்ரக்ருதி மஹான்‌, அஹங்காரம்‌, மனம்‌, ஆத்மா. 
பூதங்கள்‌ ஐந்தில்‌: ஆகாசம்‌ சொல்லப்படவில்லை. இந்த மந்த்ரம்‌ ப்ரஹ்‌மத்தை ஆத்மாவாகக்‌ கொள்ளாத ஸாங்க்ய தத்வங்களைக்‌ கூறுகின்றது. 

மறுப்பு : ஸாங்க்யர்‌ ப்ரஹ்மாத்மகமில்லாத இருபத்‌தைந்து தத்வங்களை ஓத்துக்கொள்கின்றனர்‌. 
அஜாம்‌ என்ற மந்தரத்தில்‌ இனவ பரமாத்மாவை அண்டியுள்‌ளன என்று விளங்குகிறது. 
“*யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா:;:* என்ற இடத்தில்‌, ''யஸ்மிந்‌'* என்று குறிப்பிடும்‌ தத்வம்‌ ஒன்றும்‌, விட்டுப்போன ஆகாசமும்‌ சேர்ந்து 
இருபத்‌தேழ தத்‌வங்கள்‌ என்பது தேறுகிறது. இது ஸாங்க்யர்‌களது கொள்கைக்குப்‌ புறம்பானது, 
ஆதலால்‌ ''பஞ்ச பஞ்சஜநா:'' என்பதன்‌ பொருள்‌ பஞ்ச ஜநங்கள்‌ என்ற பேருடைய ஐந்து பொருள்கள்‌ என்பதே தகும்‌. 
மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐந்துமே பஞ்சஜநங்கள்‌' எனப்‌ பெறுகின்றன, 
இவை பகவானால்‌ ஸத்தைப்‌ பெறுவனவாக விவரம்‌ பெறுவதால்‌, 
4, 4, ஐகத்துக்குக்‌ காரணம்‌. 

*ஸதேவஸோம்யே தமக்ரஆஸீத்‌'*, **அஸதேதவ இத்‌ மக்ர ஆஸித்‌'',*அஸத்வா இதமக்ர ஆஸீத்‌''என்ற வாக்கியங்கள்‌ வெளியிடுவது: 
ஜகத்‌ காரணமானது ஸத்‌ (நித்யமான இயல்புடையது); முதலில்‌ இது அஸத்தாகவே இருந்தது. ஆதலால்‌ ஐகத்‌ காரணம்‌ பரிணாமமுடையது- 
*-*தத்தேதேதம்‌ தர்ஹ்யவ்யாக்குத மாஸீத்‌'' அப்படிப்பட்ட இது அவ்யாக்ருதமாக இருந்தது என்றுள்ளது. 
அவ்யாக்‌ ருதம்‌: நாமரூபம்‌ என்ற லக்ஷணம்‌ கொள்ளாதது. அவ்‌ யாக்ருதம்‌ என்பது யாவரும்‌ அறிந்த ப்ரக்ருதியின்‌ பெயராகும்‌. 
நித்யமாயிருக்கும்‌ தன்மையும்‌ பரிணாமமுடைய தாக (அஸத்தாக) இருப்பதும்‌ பகவானிடம்‌ சேர்ந்‌திருக்க முடியாது. 
ஆதலால்‌ நித்யமான இயல்புடையதாயும்‌, படைப்பின்போது பரிணாமத்தை உடையதுமான மூலப்ரக்ருதயே ஜகத்‌ காரணமாகக்‌ கொள்ள 
வேண்டும்‌. அவ்யாக்ருதம்‌ என்று ப்ரஸித்து பெற்றது மூலப்ரக்ருதியே. இது ஸாங்கீயர்‌ கருத்து. 

மறுப்பு: தைத்திரீயத்தில்‌ வருவது: பகவான்‌, '*ஸத்‌யம்‌ ஜ்ஞானம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம” என்றவாறு வேறுபாடில்லாதவன்‌; 
தானே ப்ரகாசிப்பவன்‌; தேச கால வஸ்துக்களாலே அளவுபடாதவன்‌ என்பதும்‌, ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடே கூடி முக்தன்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பதும்‌. 
இதற்கு மேல்‌ இந்தப்‌ பரமாத்மாவிடமிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று என்று கூறி அதையே அஸத்‌ என்று குறிப்பிட்டது. 
இந்த ஜகத்‌ காரணப்‌ பொருளையே ஸத்‌ என்றும்‌ அஸத்‌ என்றும்‌ விவரித்தது- 
7*ஐந்மாத்யஸ்ய யத:*” என்றும்‌ அறிவோம்‌. பகவான்‌ ஆகாசம்‌ முதலான யாவற்றிற்கும்‌ காரணமாக வேதங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ இவனே ஜகத் ஏக காரணம்‌ அன்று தேறுகின்றது. 

தீர்வு: அஸத்‌ என்று தைத்திரீயத்தில்‌ வந்துள்ள சொல்லுக்குப்‌ பொருளாக ப்ருஹதாரண்யத்தில்‌ அவ்‌யாக்ருதம்‌ என்பது காண்கிறோம்‌. 
““ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய்‌:'” அப்படிப்பட்டவனே நகத்தின் நுனி முதல்‌ முழுவதும்‌ வியாபிகிறான்‌. 
அஸத்‌ என்‌றும்‌, அவ்யாக்ருதம்‌ என்றும்‌ நாமருபமில்லாத மூலப்ரக்‌ருதியை சரீரமாகக்‌ கொண்ட பகவானையே இங்குக்‌ கூறு 
வதா்கக்‌ கொள்ளவேண்டும்‌. மூலப்ரக்ருதி ஐகத்‌ காரணமாவதற்கு ஆதாரம்‌ ஒன்றுமில்லை, 
4. 5. ஐகத்‌ கர்த்தா. 

கெளஷீதச என்ற உபநிஷத்தில்‌ உபதேசிக்கப்‌ படுவது: “*“யோவை பாலாகே! ஏதேஷாம்‌ புருஷாணாம்‌ 
கர்த்தா, யஸ்ய வை தத்‌ கர்ம ஸலவை வேதிதவ்ய:.- 
பாலகியே! இப்புருஷர்களுக்கு எவன்‌ கர்த்தாவோ, எவனுக்கு இந்தப் புண்ய பாப கர்மம்‌ உள்ளதோ அவனே 
அறியத்‌ தக்கவன்‌ என்பது. கர்ம ஸம்பந்தம்‌ கூறப்படுவதால்‌, கர்மத்தின்‌ மூலம்‌ இவ்வுலகுக்குக்‌ காரணமாக 
இருக்கும்‌ ஜீவனே குறிப்பு. அவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்‌ய மதம்‌. 

மறுப்பு : இப்பகுதியில்‌ தொடக்கத்திலிருந்தே ப்ரஹ்‌ மத்தைப்‌ பற்றியே உபதேசம்‌. 
பாலாக, “*ஆதித்யன்‌ முதலானோர்‌ ஜகத்‌ காரணம்‌''என்றான்‌.இதற்கு அஜாத சத்ரு கூறியது: 
பாலாகியே! எவன்‌ ஆதித்யன்‌ முதலான கர்ம ஸம்பந்தமுள்ள புருஷார்களைப்‌ படைக்கிறானோ, 
எவனுக்கு இவ்வுலகம்‌ முழுதும்‌ கார்யமோ அவனே அறியத் தக்கவன்‌ என்பது, 
ஆதலால்‌ இவ்விடத்தில்‌ கர்ம ஸம்பந்தம்‌ குறிப்பன்று, “*க்ரியதே இதி கர்ம'”- செய்யப்‌ படுவது; 
இது உலகம்‌. ஜீவனது கர்மம்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணம்‌ என்பது ஏற்பதற்கான கருத்தன்று. 
ஆகையால்‌ இவ்வுலகம்‌ தனது காரியப்‌ பொருள்‌ என விளங்கும்‌ 
நாராயணனே அறியத் தக்கவன்‌ என்பது தேறுகின்றது.. 

அஜாதசத்ரு பாலாகிக்கு உபதேசஞ்‌ செய்வதற்‌தாகத்‌ தூங்கும்‌ ஒருவனிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌. 
அவனைப்‌ பலவாகப்‌ பேர்‌ சொல்லி அழைத்தும்‌ அவன்‌ எழுந்திருக்கவில்லை. 
அவனைத்‌ தடியால்‌ அடித்து எழுந்திருக்கச்‌ செய்தான்‌, அஜாதசத்ரு பாலாகியை மூன்று கேள்விகள்‌ கேட்டான்‌; 
ஜீவன்‌ கனவு காணும்போது எங்‌கிருக்கிறான்‌? தூங்கும்போது எங்கிருக்கிறான்‌? விழிக்‌கும்போது எங்கிருக்கறான்‌? 
பாலாகி விடை சொல்ல வில்லை. ஆதலால்‌ அஜாதசத்ரு வெளியிட்ட விடை: 

முதற்‌ கேள்விக்கு விடை : நாடிகளில்‌ இருக்கிறான்‌7 
இரண்டாவதற்கு விடை; ப்ராண சரீரமான ப்ரஹ்மத்‌தில்‌ இருக்கிறான்‌; 
மூன்றாவதற்கு விடை: ப்ரஹ்மத்தி லிருந்து கிளம்புகிறான்‌. 

ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவாளைப்‌ பற்றி அறிவிப்பதற்காகவே இந்தக்‌ கேள்விகள்‌ கேட்கப்‌ பட்டன. 
வேறொரு சாகையில்‌ இதே போன்ற கேள்‌விக்கு விடையாக வந்துள்ளது: 
தூங்குகிறவன்‌ தனது இதயத்திலுள்ள ஆகாச மென்னும்‌ பரமாத்மாவிடம்‌ படுத்திருக்கிறான்‌ என்பது. 
ஆதலால்‌ தூங்கும்‌ நிலையில்‌ ஆதாரமாக இருப்பவன்‌ பகவானே என்பது வெளிப்‌படை. 
இன்னும்‌ பல இடங்களில்‌ ஆகாச சப்தம்‌ பரமாத்‌மாவைக்‌ குறிக்கின்றது. 
ஆதலால்‌ இங்கு ஜீவளைப்‌ பற்றி வெளியிட்டிருப்பது இவனிலும்‌ வேறுபட்ட பரமாத்‌மாவை அறிவிப்பதற்காகவே, 
இவ்வாறு இப்பகுதி முழுதும்‌ ஆராய்ந்தால்‌, பரமாத்மாவே அறியத்‌ தக்கவனாகவும்‌, 
ஜகத்‌ காரணமாகவும்‌ கூறப்படுகிறான்‌ என்பது தேறுகிறது. 
புருஷன்‌ எனப்பெறும்‌ ஜீவன்‌ அறியத்‌ தக்கவன்‌ என்றும்‌, இவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானம்‌ ஜகத்‌ காரணம்‌ என்றும்‌ சொல்லவில்லை.
 
4. 6. த்ரஷ்டவ்ய:--யார்‌? 
ஜீவன்‌ ப்ரதானத்தோடு இணைந்து ஜகத்‌ காரணமாகமாட்டான்‌ என்பது விவரம்‌ பெறுகின்றது. 

“ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: சீரோதவ்ய: மந்த வய:--இந்த ஆத்மா காணத்‌ தக்கது, கேட்கத்‌ தக்கது, 
நினைக்கத்‌ தக்கது. நேரில்‌ காண்பது போல்‌ த்யானஞ்‌ செய்யத்‌ தக்கது என்ற வாக்கியத்தில்‌ ஆத்மா என்பது ஜிவன்‌. 
இந்தப்‌' புருஷனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்யரது மதம்‌.  

இவர்கள்‌ அளிக்கும்‌ விவரம்‌: இதே பகுதியில்‌ முதலில்‌ வருவது: பதியின்‌ காமத்திற்குப்‌ பதி ப்ரியனாவதில்லை, 
ஆத்மாவின்‌ காமத்திற்காகவே ப்ரியனாகிறான்‌ என்று தொடங்கி, பதி என்ற இடத்தில்‌ மனைவி, புத்ரர்‌, 
பொருள்‌, பசுக்கள்‌, ப்ராஹ்மணார்‌, க்ஷத்ரியர்‌, லோகங்கள்‌, தேவர்கள்‌, வேதங்கள்‌, பூதங்கள்‌, ஸர்வம்‌ என்று 
விவரித்த பின்பு ''ஆத்மாவா அரே'' என்று வந்துள்ளது. 
இப்பகுதியில்‌ முழுதும்‌ ஜீவனைப்‌ பற்றியே; பகவானைப்‌ பற்றி அன்று. ஆத்மா ஒருவனைப்‌ பற்றியதாயினும்‌ 
இது ஜீவ சமூகம்‌ என்பது தேறும்‌. ஒரு புருஷனே சொல்‌லப்படுவதால்‌ இவனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ 
காரணம்‌ என்பது தேதறும்‌. 

மறுப்பு : பதி முதலானோரார்‌ தங்கள்‌ தங்கள்‌ விருப்‌பம்‌ நிறை வேறும் பொருட்டு இனியவார்கள்‌ ஆவதில்லை. 
ஆத்மாவின்‌ விருப்பத்தின்‌ பொருட்டே என்று கூறியிருப்‌பதால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவைப்‌ பற்றியே கூறப்படுகிறது. 
மோக்ஷ உபாயத்தைப்‌ பற்றியதே இப்பகுதி. ஆகையாலே இங்குச்‌ சொல்லப்‌படுவது பகாவானே காணத்தக்கவன்‌ என்று. 

4, 7, பகவான்‌ உபாதான காரணம்‌, 

பகவான்‌ உலகுக்கு நிமித்த காரணமே ஆவான்‌; உபாதான காரணமாக முடியாது என்பது ஒரு கருத்து, 
இது ஸேச்வர ஸாங்க்யர்‌ மதக்‌ கொள்கை. 

இதற்கு விளக்கம்‌ : உலகில்‌ காண்பது, குடம்‌ முதலியவற்றிற்கு மண்‌ முதலியன உபாதான காரணம்‌, 
குலாலன்‌ முதலானோர்‌ நிமித்த காரணம்‌. நிமித்த காரணமும்‌ உபாதான காரணமும்‌ வேறுபட்டவை. 

“அஸ்மாந்‌ மாயி ஸ்ருலதே விச்வமேதத்‌''--இந்த ப்ரக்ருதியைக்‌ கொண்டே மாயப்பிரான்‌ இவ்வுலகைப்‌ 
படைக்கிறான்‌ என்பது போன்ற வாக்கியங்களில்‌ உபாதானமாகும்‌ மூலப்ரக்ருதிக்கும்‌ நிமித்த காரணமான 
பகவானுக்கும்‌ வேறுபாடு சொல்லப்படுகிறது. ப்ரஹ்மமே விகார மடைந்து உலகுக்கு உபாதான காரணமாகிறது: 
என்பதிற்கில்லை? ஏனெனில்‌ ப்ரஹ்மம்‌ விகாரமற்றது என்பதால்‌. 
ஆதலால்‌ மூல ப்ரக்ருதியே உபாகான காரணம்‌ என்பதே பொருந்தும்‌. 

மறுப்பு: ப்ரஹ்மம்‌ ஒன்றை அறிந்தால்‌ எல்லாவற்‌றையும்‌ அறிந்ததாகும்‌ என்பது வேத வாக்கியம்‌. 
உதாரணமாக: மண்‌ கட்டியை அறிந்தால்‌, மண்ணாலான பானைகள்‌ யாவற்றையும்‌ அறிந்ததாகும்‌. 
இதனால்‌ தேர்வது: சட்டி பானைகளுக்கு மண்‌ உபாதான காரணமாவது போல்‌ பகவானும்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ - என்பது. 
பகவான்‌ விசித்திரமான சக்தி வாய்ந்தவன்‌ -இவனது சக்தி போல்‌ வேறு எங்கும்‌ காணமுடியாது. 
ஆதலால்‌ இவன்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌. 
ப்ரளயத்தின்போது இவன்‌ நுண்ணிய சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகவுடையவன்‌; 
படைப்‌பின்போது இவனே ஸ்தால சேதன அசேதனங்களாகிறான்‌. 
உபாதான காரணமானால்‌ சேதன அசேதனங்‌களின்‌ தோஷம்‌ இவனிடம்‌ சேருமே என்பதில்லை. 
இதனாலேதான்‌ இவன்‌ ''மாயீ'' எனப்‌ பெறுகிறான்‌. 

தேர்வு: நான்‌ பலவாகக்‌ கடவேன்‌ என்று பகவான்‌ ஸங்கல்பித்ததாலே இவனே உபாதான காரணம்‌, நிமித்த காரணமும்‌. 

தேர்வு 2: யஜுர்‌ வேதத்தில்‌  வாக்கியங்கள்‌? 
**புவாநாநி தாரயந்‌''. நிமித்த காரணம்‌, ''ப்ரஹ்ம ஸவ்‌ ருக்க ஆஸீத்‌ - உபாதான காரணம்‌. 
ஆகையால்‌ பகவான்‌ இருவகைக்‌ காரணமுமாவான்‌. 

தேர்வு 3: ஓர்‌ உபநிஷத்‌ வாக்கியம்‌: . சிலந்தி தான்‌ வெளியிடும்‌ நூலைத்‌ தானே இழுத்துக்‌ கொள்கிறது? 
பூமியிலிருந்து பலவகைப்‌ பயிர்கள்‌ உண்டாகின்றன: 
உயிருடனிருக்கும்‌ புருஷனிடம்‌ உரோமங்கள்‌ உண்டாகின்றன; இதுபோல்‌ பரம்பொருளிடமிருத்து ' உலக மனைத்தும்‌ உண்டாகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌ என்று நிர்ணயிக்கப்படுகிறது. 
4.8. இதர தேவதைகள்‌ காரணமாக முடியாது. 

சிவனே ஜகத்‌ காரணம்‌ என்பது ஒரு கருத்து.இதற்கு ஆதாரங்கள்‌: (1) ச்வேதாச்வதரோபநிஷத்தில்‌, “*யதா 
தமஸ்‌ தந்‌ ந திவா ந ராத்ரி” என்ற ஸ்லோகத்தின்‌ கருத்து: எப்போது தமஸ்‌ மாத்திரம்‌ இருந்தது, பகல்‌, 
இரவு, ஸத்‌, அஸத்‌ ஒன்றுமில்லையோ, சிவன்‌ மட்டும்‌ இருந்தானோ அந்தப்‌ பரவஸ்துவே அழிவில்லாதது. 
(2) முதலில்‌ தமஸ்‌ ஒன்றே இருந்தது; அப்போது ஸத்து மில்லை, அஸத்து மில்லை; தமஸ்ஸைச்‌ சரீரமாசுக்‌ 
கொண்ட ப்ரஜாபதி ஒருவரே இருந்தார்‌. இங்கு ப்ரஜாபதி என்பது சிவனைக்‌ குறிக்கின்றது. 
இவற்றில்‌ சிவனே ஆகத்‌ காரணமாகக்‌ கூறப்படுகின்றான்‌. 

மறுப்பு : வேத வாக்கியங்கள்‌ பல நாராயணனே காரணம்‌ என்று முழக்குகின்றன. “ஸத்‌: என்பதன்‌ கருத்து வெளிப்படையாகச்‌ சொல்லவில்லை. 
இதை விளக்கும்‌ வாக்கியங்கள்‌; ஏகோஹவை நாராயண ஆஸீத், ந ப்ரஹ்மா, ந ஈசாத:- நாராயணன்‌ ஒருவனே முதலில்‌ இருந்தான்‌; 
'ப்ரஹ்மாவும்‌ இல்லை, சிவனுமில்லை; ,நாராயணன்‌ மனத்தால்‌ ஸங்கல்பித்தான்‌; 
'நாராயணமிட மிருந்து தோன்றிய அண்டத்தில் பிரமன்‌ பிறந்தான்‌; 
அவனிடம் இருந்து மூன்று கண்கள்‌ உடையவனும்‌, சூலம்‌ கையில்‌ ஏந்தியவனுமான புருஷன்‌ உண்டானான்‌,
நாராயணமிட மிருந்து எல்லாம்‌ உண்டாகின்றன; இவனிடமே எல்லாம்‌ லயிக்கின்றன. அதலால்‌ சிவன்‌ காரணமாக மாட்டான்‌. 

தேர்வு : உபநிஷத்துக்களில்‌ வந்துள்ள கருத்துக்கள்‌: 
(1) பரப்ரஹ்மம்‌ ஒன்றே ஈஸ்வரர்‌ பலர்‌ இருக்க முடியாது . நாராயணன்‌ படைப்பவன்‌; சிவன்‌ முதலோர்‌ படைக்கப்‌ பட்டவர் .
(2) உபதிஷத்துக்களில்‌ ஹரி, விஷ்ணு,அச்யுதன், புருஷன்‌, மஹாபுருஷன்‌, சிவன்‌, சம்பு, ,குத்ரன்‌ போன்ற ,சொற்கள்‌ வருகின்றன. 
ஐகத்‌ காரணமசக வரும்‌ இடங்களில்‌ சிவன்‌, ருத்ரன்‌ போன்ற பதங்கள்‌  நரராயணனாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
காரணத்வம்‌ நாராயணனுச்கே யாவதால்‌. 
(4) நாராயணன்‌ என்று சப்தம்‌ சிவனுக்குச்‌ சேராது என்பது பாணினி ஸூத்ரத்‌தால்‌ வெளிப்படை. 
நாராயணனைப்‌ பற்‌றிய திரு நாமங்கள் விஷ்ணுவையே சார்வன; வேறு தெய்வங்களைச்‌ சாரா; 
இவனுக்கே  என்று வாமன புராணம்‌ வெளியிட்டுள்ளது. 

சாச்வதம்‌ சிவம்‌ அச்யுதம்‌, ஸர்வ: சர்வ; சிவ: ஸ்தாணு:, அக்ஷரம்‌ பரமம்‌ ப்ரபும்‌, ஸூர்ய மண்டலத்‌தில்‌ உறைபவன்‌, 
**தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌” என்து பாராட்டப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே. 
ஆதலால்‌ நிச்சயிப்பது பகவான்‌ நாராயணனே யாவகைக்‌ காரணமும்‌, மற்றைய தேவர்கள்‌ அல்லர்‌ என்பதே. 

அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ குறிப்பது சரீரம்‌. ஆதலால்‌ ஜகத்துக்கு மூலப்ரக்ருதி காரணமன்று. 
அஜா சப்தத்தாற்‌ சொல்லப்படுவது, ப்ரஹ்மம்‌ அத்தர்யாமியாகவுள்ள மூலப்ரக்குதி, இந்த்ரியங்கள்‌, ஆகாசம் 
முதலியவை  பகவானை அந்தார்யாமியாகக்‌ 'கொண்ட ப்ரஹ்மம்‌ ஒன்றையே காரணமாக வேத வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவனே அடையத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌, காணத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌ .. 

பகவான்‌ உவகுக்கு நிமித்த காரணமாகவும் மட்டும் இன்றி உபாதான காரணமுமாகிறான்‌. 
உலகுக்குக்‌ காரணம்‌, ஆனவனே உபாசிக்கப்படுமவனும் ஆவான் 
எனவே உபாசிக்கப்படும் தெய்வம் நாராயணனே -வேறு தெய்வமில்லை.
முதற்‌ பாதத்தில்‌ சொல்லிய காரணத்வம்‌ முதலியன நாராயணனுக்கே, வேறு எதற்குமில்லை என்று நிலை நிறுத்துவது நாலாம்‌ பாதம்‌.
------------------------
இரண்டாம்‌ அத்யாயம்‌ 

முதல்‌ அத்யாயத்தில்‌ பகவானது மேன்மை விவரிக்கப் பட்டது. இவன்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌; 
உலகுக்குக்‌ காரணம்‌; சக்தி வாய்ந்தவன் ; ஆனந்த மயன்‌. 
இவனே மூவகைக்‌ காரணங்களும்‌  ஆவான்‌ என்பது இரண்டாம்‌ அத்யாயத்தில்‌ ஸ்தாபிக்கப்படுகிறது . 
முதற்‌ பாதத்தில்‌ இதற்கு மாறுபடக்‌ கூறும்‌ கருத்‌துக்களை ஆராய்ந்து வ்யாஸர்‌ இவற்றை ஸ்தாபிக்கப்படுகிறார்‌. 
தர்க்கமே ஆதாரமாக, பகவான்‌ ஜகத்‌ காரண மில்லை என்ற பிற மதத்தினரது கொள்கைகளை வெளியிட்டு 
நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார்  இந்தப்‌ பாதத்தில்‌. 
மூன்றாம்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ பசுவானின்‌ கார்யம்‌ என்றும்‌, 
நாலம்‌  பாதத்தில்‌ ஜீவனுக்கு உபகரணங்களான ப்ராணன்‌,இந்திரியங்கள் யாவையும் பகவானால் படைக்கப்பட்டவை 
என்றும்‌ தெள்ளத்‌ தெளிவாக விளக்குகிறார்‌ வ்யாஸ பகவான்‌. .   

1. முதற்‌ பாதம்‌ 
உபாதான காரணம்‌". 

உலகுக்குக்‌ '' காரணம்‌' மூலப்ரக்ருதியே'. அதாவது ப்ரதானமே என்பது ஸாங்க்யர்களது கொள்கை, 
இதற்கு ஆதாரமாக இவர்கள்‌ கபில ஸ்ம்ருதி, யோக ஸ்ம்ருதி இவற்றையும்‌ தர்க்க வகைகளையும்‌ பயன்படுத்தி வாதஞ்‌ செய்கின்றனர்‌: 
இக்‌. கொள்கையை எதிர்த்து பகவானே மூவகைக்‌ காரணம்‌' என்பதை வ்யாஸர்‌ நிலைநிறுத்துகிறார்‌.. 
இந்தப்‌ பாதம்‌ ஸ்ம்ருதி பாதம்‌ எனப்பெறும்‌. 
(1) கபிலர்‌: உபநிஷத்துக்களால்‌ புகழப்‌ பெற்றவர்‌” ஆப்தர்‌. இவரது ஸ்ம்ருதி ஜகத்‌ காரணப்‌ பொருளைப்‌ பற்றியே விளக்குகின்றது. 
இவர்‌ ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று அறுதியிட்டுள்ளார்‌. சதுர்முகன்‌ வேதங்களை ஓதி, யரவர்க்கும்‌ ஓதுவித்த தனிப்‌ பெருமை 
வாய்ந்தவன்‌; இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதி ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று கூறுகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ உலகங்களுக்கு உபாதான காரணமாக மாட்‌டான்‌ என்கின்‌றனர்‌ ஸாங்கீயர்‌. 

மறுப்பு : மனு, வ்யாளர்‌ போன்றவர்கள்‌ பலர்‌ வேதாந்த வல்லுநர்‌, புகம்‌ பெற்றவர்கள்‌. இவர்களது கருத்து: 
பகவானே உபாதான காரணம்‌ என்பது? இதையே தான்‌ ஆதரிக்கவேண்டும்‌. இவர்கள்‌ வேதக்‌ கருத்‌துக்களை உள்ளபடி உரைப்பவர்கள்‌ என்றும்‌, 
இவர்களது வார்த்தைகள்‌ சிறப்புடையன என்றும்‌ வெளியிடப்‌ பெற்‌றுள்ளது. 

சதுர்முகன்‌ எப்போதும்‌ ஸத்வ குணம்‌ வாய்ந்தவனல்லன்‌;கல்பங்களில்‌ ராஜஸ தாமஸ குணங்கள்‌ மேலிடப்‌ பெற்றவன்‌. 
ஆதலால்‌ இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதியின்‌ கருத்து மதி மயக்கத்தாலேயே வேதக்‌ கருத்துக்கு விபரீதம்‌. 
ஆதலால்‌ இவரது கருத்து அங்கீகரிப்பதற்‌கில்லை, 

(2) 'தர்க்கம்‌ (வாக்குவாத முறை) 
" பகவான்‌ ஆனந்தமயன்‌, பேரறிவாளன்‌, இன்ப துன்பங்கள் இல்லாதவன்‌. இந்த நிலைக்கு மாறுபட்டது உலகின்‌ நிலை. 
இவன்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ ஆனால்  இந்தக்‌ குறைகள்‌ இவனிடம்‌ இருக்க வேண்டும்‌, 
காரியமான பானையும்‌ காரணமான்‌ மண்ணும்‌! மண்‌ணுருவாக இருப்பது போல்‌. 
ஆதலால்‌ பகவான்‌. உபாதான காரணமாக மாட்டான்‌ என்பது ஒரு கருத்து. ,. 

மறுப்பு : சாஸ்த்ரங்களின்‌ மூலம்‌ தெளிவது: காரண நிலையில்‌ சேதன அசேதனங்கள்‌ பகவானோடு ஒன்றி விடுகின்றன; 
இது நுண்ணிய நிலை. பின்பு படைப்பின்‌ போது இவை ஸ்தூல நிலையில்‌ நாம ரூபங்கள்‌ பெறுகின்‌றன. 
இவ்விரண்டு நிலைகளிலும்‌ வேறுபாடு இல்வை. 
மனிதனுக்குப்‌ பிள்ளைமை, இளமை, முதுமை என்ற  நிலைகள்‌ போல்‌  இவ்விரண்டு நிலைகளும்‌. ஆத்லால்‌ இந்த தர்க்கம்‌ நிலை நிற்காது. 

(3) பிற மதத்தினரது முடிவு. 
வெறும்‌ தர்க்கத்தையே கொண்டு. வாதஞ்‌ செய்‌வோர்‌ பலர்‌, 
அணுகாரண வாதிகள்‌ கணாதருடைய வைசேஷிக மதம்‌, அஷய பாதருடைய நையாயிக மதம்‌:  சமண மதம்‌, 
பரமசிவன்‌ வெளியிட்ட சைவ மதம்‌ இவை ஒரே கருத்தை வெளியிட்டுள்ளன ப்ரதானமே உலகுக்குக்‌ காரணம்‌ என்று. 
இவை பல: ஓரே கருத்தைச்‌ சொல்லுவதால்‌ இக்கருத்தையே ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. 
ஆதலால்‌ பகவான்‌: .  உபாதன காரணமல்லன்‌ என்கின்றனர்‌ ஸாங்கியர்‌. 

மறுப்பு : இம்மதங்களை வெளியிட்டவர்களது தர்க்‌கம்‌ ஒருவகைப்‌ பட்டதன்று; ஏற்றவாறு இயங்கவில்லை? 
இவர்கள்‌ பரமாணுக்களைப்‌ பற்றி ஆராயவில்லை.  சிலர்‌ இவை சூன்யம்‌ என்‌கின்றனர்‌; 
ஒரே நிலையில்லாமல்‌ இக்‌ கீழே விழுவோரது கருத்துக்களை ஏற்பது எவ்வாறு இயலும்‌? 
உலகைச்‌ சரீரமாக பகவான்‌ கொண்டுள்ளான்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ மூலம்‌ கூறுகின்றனர்‌;. 
இவ்வாறு கருதினால்‌' சரீரத்தில்‌ இருக்கும்‌ அவனைப்‌ போவவே பகவானும்‌ இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும்‌, 
இதனால்‌ ஜீவனுக்கும்‌ பகவ௱னுக்‌கும்‌ வாசி ஒன்றுமில்லை-இந்த தோஷத்தால்‌ ப்ரஹ்ம காரண வாதம்‌ சரியன்‌று என்றனர்‌ ஸாங்க்யர்‌. 

மறுப்பு : ஜீவன்‌ இன்ப துன்பங்களை அனுபவிப்பது சரீரத்தோடு  இருப்பதால்‌ மாத்திரம்‌ அன்று; 
முக்‌யமாகாகக்‌ கர்‌மத்தாலேயே. ஜீவன்‌ முக்தனான பின்‌, விருப்‌பப்‌படி சரீரங்கள்‌ ஏற்றுக்கொண்டு பரமாத்மாவை அனுபவிக்கிறான் ; 
உண்பது, விளையாடுவது, இன்புறுவது போன்ற போகங்களையும்‌ பரமாத்மாவிடமே பெறுகிறான்‌. 
சாதாரண முக்தனுக்கே இப்பெருமை எனின்‌, பகவானது பெருமையைச்‌ சொல்லவேண்டுமோ? 
பகவானுக்கு ஜீவர்கள்‌ சரீரமாக இருப்பதால்‌ ஜீவர்கள்‌! ஸந்தோஷம்  இவனுக்கு நேராது, 
ஆதலால்‌ இவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌   வாசி யில்லை என்பது தகாது. 
அரசனது ஆணைப்படி இன்புறுகின்றனர்‌; மாறி நடப்‌பவர்‌ தண்டனை பெறுகின்றனர்‌. இத்த ஆணையால் 
அரசனுக்கு இன்ப துன்பங்கள்‌ இல, இதுபோல்‌ பகவான்‌ உலகை நியமிப்பவன் ; 
உலக அனுபவங்கள்‌ இவனைக் கிட்டாதே , இவன்‌ எவராலும் நிய மிக்கப்படாதவன்‌;
இன்ப துன்பங்கள்‌ இல்லாதவன்‌, ஆதலால்‌ இவன்‌ உபாதான காரணமாவதற்கு ஆஷேபம்‌ எதுவுமில்லை. 

(5) தர்க்க வாதம்‌ ஒன்று. 
உலகில்‌ காரணப்‌ பொருளுக்கும்‌ காரியப்‌ பொருளுக்‌கும்‌ காரணமான மண்ணுக்கும்‌ வேறுபாடுகள்‌ உள்ளன. 
காரணமான மண்ணுக்கும்‌ காரியமான குடத்திற்கும்‌ வேறுபாடுகள்‌ உள: நிலையால்‌ (மண்‌, குடம்‌), 
பெயரால்‌, வடிவால்‌, பயனால்‌ (குடம்‌ செய்ய, நீர்‌ முகக்க]). 
இதுபோல்‌ காரணமான பகவானுக்கும்‌ காரியமான உலகுக்கும்‌ மாறுபாடுகள்‌ உள்ளன. 
ஆதலால்‌ பகவானை உபாதான காரணமாகக்‌ கொள்ள இயலாது. இதுவும்‌ சாங்க்யர்களது  கருத்து. 

மறுப்பு : '*வாசாரம்பணம்‌'' என்ற உபநிஷத்‌ வாக்கியத்தில்‌ இதே கருத்து வந்துள்ளது, 
இவ் விடத்தில்‌**ம்ருத்திகா இதி ஏவ ஸத்யம்‌'”-- காரியமான குடம்‌ மண்‌ என்பதே உண்மை என்று காண்கிறோம்‌. 
ஆதலால்‌, மண்‌, குடம்‌ இவற்றிற்கு வேற்றுமை காண்பதற்கில்லை. 
அன்றியும்‌, *-இவ் வுலகம்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மமாகவே இருந்தது'* என்பது போன்ற வாக்கியங்கள்‌ வெளியிடும் கருத்து? 
காரணமான மண்ணும்‌ காரியமான குடமும்‌ மண்ணாக விளங்குவதுபோல்‌, 
காரணமான பகவானே காரியமான உலகமாக இலங்குகிறான்‌ என்று. 
மண்ணுக்கும்‌ குடத்துக்கும் வேறுபாடுகள்‌ நிலையினாலேயே. 
ஓரே மனிதன்‌ குழந்தை , இளைஞன்‌, கிழவன்‌ போன்ற நிலைகளை அடைகிறான்‌. இதுபோலே இங்கும்‌ கொள்ளவேண்டும்‌. 
இது போல்‌ பகவானின்‌ நிலையும்‌ ஆய்ந்து அறியலாம்‌. 
நாம ரூபங்கள்‌ இல்லாமல்‌ ஸூஷ்ம நிலையிலுள்ள சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொண்டிருப்பதே காரண நிலை; 
படைப்பித்குப்‌ பின்‌ ஸ்‌தூல 'நிலையில்‌ நாம ரூபங்கள்‌ கொண்டுள்ள சேதன அசேதனங்கள்‌ சரீரமாகதக் கொண்டிருப்பது க௱ரிய நிலை. 
இவ்வாறு இயங்குவதான்‌ சேதன அசேதனங்களின்‌ தோஷங்கள்‌ பகவானை அணுக” மாட்டா.

1. 2. நிமித்த காரணம்‌. 

பகவான்‌ நிமித்த காரணமாகிறான்‌ என்பது வேதாந்திகள் பக்ஷம்‌, 
“*ததி த்வமஸி'', “*அயமாத்மா ப்ரஹ்ம”. போன்ற வாக்கியங்களில்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவனாகத்‌ தோன்றும்‌ 
பகவானும்‌ ஜீவனும்‌ ஒன்று என்று இவர்கள்‌ ஒப்புக் கொள்கின்றனர்‌. 
பகவான்‌ ஸர்வஞ்ஞன் , பல நற்குணங்கள்‌ வாய்ந்தவன்‌ என்றும்‌ ஒப்‌புக் கொள்கின்றனர்‌, 
உலகமோ ஜீவர்களுக்கு கர்மங்களையே விளைவிப்பது. 
பகவானே ஜீவனாகில்‌ ஜீவனுடைய துன்பங்கள்‌ இவனைச்‌ சேரும்‌. 
ஆதலால்‌ இவன்‌ தனக்‌குத்‌ தானே தீமை தேடிக் கொள்ள மாட்டான்‌. 
தனக்கே விபரீதமான உலகை பகவான்‌ படைக்க மாட்டான்‌; அதாவது நிமித்த காரண மாகமாட்டான்‌. இது ஒரு கருத்து. ்‌ 
விளக்கம்‌ : உபநிஷத்துக்கள்‌ வெளியிட்டுள்ளது; 
பரமன்‌, ஜீவன்‌ இவர்களுள்‌ பரமன்‌ யாவும்‌ அறிந்தவன்‌, யாவையும்‌ நியமிப்பவன்‌; 
ஜீவன்‌ அறியாதவன்‌, நியமியாதவன்‌. 
பரமன்‌ ஆத்மாவினுள்‌ உறைகின்றான்‌, 
ஆத்மா இவனுக்குச்‌ சரீரம்‌; ஆதீமா இவனை அறிய மாட்டாது. 
ஆத்மாவையும்‌ இவனை நியமிக்கும்‌ பரம்‌ பொருளையும்‌ வேறாக அறிந்து, அப் பரம்பொருளின் அருளால்‌ இவன்‌ மோஷ்மடைகிறான்‌. 
இந்த,வாக்கியங்‌களால்‌ தேறுவது: ஜீவாத்மா பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது, 
ஆனால்‌, '**தத்த்வமஸி'* போன்ற வாக்கியங்களில்‌ இருவரையும்‌ ஓன்றென்று சொல்லுவது எவ்வாறு? 
இவ் வாக்கயங்கள்‌ ரூபத்தின்‌ ஒற்றுமை சொல்லவில்லை; ஸ்வரூப பேதம்‌ சொல்லுகின்றன. 
ஜீவனது கர்மங்களின்படியே துன்பங்கள்‌: விளைகின்றன; பகவானுக்குக்‌ கர்மங்கள்‌ இல்லை . 
ஆதலால்‌ உலகைப்‌ படைத்து பகவான்‌ தனக்கு துன்பம் விளைவித்துக்‌ கொள்கிறான்‌ எள்ற கருத்து சரியன்று. 
ஆதலால்‌ பகவான்‌ உலகத்திற்கு நிமித்த காரணமாவான்‌.
கல்‌,கட்டை போல்வன அசேதனப்‌ பொருள்கள்‌. இவை பகவானாக முடியாது என்பது ஒவ்வாது 
இதுபோல்‌ அற்ப ஞானம்‌ வாய்ந்து அற்ப சக்தி வுடையவனாய்த்‌ துன்பம்‌ அனுபவிக்கும்‌ ஆத்மா பகவானாக முடியாது. 
இங்ஙனம்‌ ஆராய்ந்தால்‌ பகவான்‌ நாராயணனே உலகுக்கு நிமித்த காரணம்‌ என்று தேறலாகும்‌.
1. 3. பகவானுக்கு உபகரணங்கள்‌ தேவையா? 

மண்ணிலிருந்து குடம்‌ செய்யும்போது செய்பவன்‌ ஆற்றல்‌ மிக்கவனாக இருந்தாலும்‌, 
சக்கரம்‌, தண்டம்‌. (கோல்‌) இவை யில்லாமல்‌ ஓன்றுஞ்‌ செய்ய இயலாது. 
இதுபோல்‌ பகவான்‌ ஸர்வ சக்தனாக இருந்தாலும்‌ உபகரணங்களின்‌ உதவியின்றி உலகைப்‌ படைக்க இயலாது என்பது ஒரு கருத்து. 
தீர்வு: உபகரணங்கள்‌ இல்லாமலே படைப்பு நேரக்‌ கூடும்‌. 
பாலைக்‌ கரய்ச்சிச்‌ சிறிது மோரைச்‌ சேர்த்தால்‌ பால்‌ தயிராகின்றது; மோரின்‌ உதவி யில்லாமலும்‌ திரிந்து மாறிவிடுகிறது; 
மோர்‌ சேர்ப்பது விரைவில்‌ தயிர்‌ பெறுவதற்காக. 
பகவான்‌ எல்லை கடந்த சக்தி வாய்ந்தவன்‌; ஆதலால்‌ உபகரணம்‌ வேண்டியதில்‌லை . 
இவன்‌ படைத்த தேவர்களும்‌, பிரமன்‌, சிவன்‌ போல்‌வார்‌களும் தங்களது விருப்பப்படி படைக்க வல்லவர்‌, 
ஆதலால்‌. பகவானது ஆற்றலைப் பற்றி சங்கை கொள்‌வதற்கில்லை.
 
1. 4. விசித்திரமான சக்தி. 

ப்ரஹ்மம்‌ செயலற்றது, அவயவமற்றது என்கின்றதும் -பரஹ்மம் வேராக இருந்தது!என்‌றும் சொல்லுகின்றன, 
ஆதலால்‌, ஒரு சங்கை --அவயவமில்லாத பகவான்‌ பரிணமித்‌தால்‌ ஒரே பொருளாகத் தான்‌ மாற வேண்டும்‌; 
இவன்‌ காரியப்‌ பொருள்களுக்குக்‌ காரணமாகக்‌ கருத இயலாது. 
தன்னோடு ஒன்றிய அசேதனத்தோடு இயங்குவதாகக்‌ கொண்டாலும்‌, தனக்குக்‌ காரியமான ஓரே பொருளாவான் , 
ஒரே பொருளுக்கே சரீரமாக இருக்க முடியும்‌. 
விளக்கம்‌ : உலகில்‌ காணும்‌ பொருள்கள்‌ போலன்று ப்ரஹ்மம்‌. 
இதைப்பற்றி நேரில்‌ கண்டோ, அனுமானத்‌தாலோ தெரிந்து கொள்ள இயலாது; 
சாஸ்த்ரங்‌களைக்‌ கொண்டே அறிய வேண்டும்‌. 
வேதங்கள்‌ வெளியிட்டுள்ளது: ப்ரஹ்மம்‌ விகாரமில்லாதது,விசித்திரமான। சக்தி வாய்ந்தது. 
இத்தகைய சக்தி இதற்கே உள்ளது. 
நீருக்கே உள்ள குளிர்ச்சி போலவும்‌, நெருப்புக்கே உள்ள வெப்பம்‌ போலவும்‌, 
இத்தகைய சக்தியாலே இவன்‌ அந்தார்யாமி ஆகிறான்‌, 
அவயவ மில்லாமை, எல்லாம்‌ பொருள்களுமாகப்‌ பரிணமிப்பது இவை பகவானுக்கே அசாதாரணம் 
ப்ரஹ்மம்‌ காரிய நிலையில்‌ சேதனங்களாகவும்‌ அசேதனங்களாகவும்‌ மாறுவது தோஷ மில்லையோ எனில்‌, இல்லை. 
இவன்‌ யாதொரு லிகாரமும்‌ இல்லாதவன்‌; தோஷங்கள்‌ இவனை அணுகவும்‌ மாட்டா.
1. 5. உலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌. 

ஒரு சங்கை : பகவான்‌ நலன்கள்‌ யாவும்‌ பூர்ணமாக வாய்ந்தவன்‌; தனக்கென எதுவும்‌ நாடாதவன்‌, 
இவன்‌ இவ் வுலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌ என்ன? 
பயன்‌ எதுவும் இல்லாததால்‌, இவன்‌ இதைப்‌ படைப்பதில்லை என்று தேறுகன்றது. 
தீர்வு : சாஸ்த்ரங்கள்‌ வெளியிடுவது: பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன் இவ்வுலகைப்‌ படைப்பது அப்போ தப்போது அனுபவிக்கும்‌ லீலைக்காகவே 
இத்தகைய வீலை இவனுக்கு ஏத்தலைய பலனை எதிர்பார்த்து இல்லை என்பதற்கு ஆசார்யர்கள்‌ வெளியிட்டுள்ள விளக்கம்‌; 
உயிர்கள்‌ உய்வதற்காசு இவன்‌ எவ்வளவு முயற்சிகள்‌ , செய்தும்‌, உலகில்‌ பிறந்து இவர்கன்‌ இவ்வாறு துன்புறுவதே என்று அனுதாபத்துடன்‌ நோக்‌குகிறான்‌ என்பதே 
வேறொரு சங்கை: பகவான்‌ உலகத்திற்குக்‌ காரணம்‌ எனில்‌ ஏற்றத் தாழ்வுடன்‌ ஏன்‌ படைக்கவேண்டும்‌? 
இவ்வாறு படைப்பதால்‌ பஷபாதம்‌ என்ற தோஷமும்‌, கருணை யின்மை என்ற குற்றமும்‌ நேராவோ? 
தீர்வு: உலகம்‌ படைக்கும்போது ஜீவர்கள்‌ முன்னமேய செய்த புண்ய பாவ கார்மங்களைப்‌ பற்றியே! தான்‌ படைப்பு நிகழ்கிறது. 
இதனாலேதான்‌ ஏற்றத்‌. தாழ்வுகள்‌. 
வேறொரு சங்கை: படைப்பிற்கு முன்‌ ப்ரஹ்மமே தான்‌ இருந்தது என்று வேதங்கள்‌ வெளியிடுகின்‌றன. 
அப்போது ஜீவர்கள்‌ இல்லை எனில்‌, இவர்களது கர்மங்களைப்‌ பற்றியே படைப்பு என்பது எவ்வாறு பொருந்தும் ? 
ஏற்றத்‌ தாழ்வுகள்‌ நினைப்பதற்கே இல்லையே... 
தீர்வு : ப்ரஹ்மமே இருந்தது என்பதன்‌ கருத்து: ஜீவர்கள்‌ நுண்ணிய நிலையில்‌ நாம ரூபங்கள்‌ இல்லாமல் ப்ரஹ்மத்தோடு ஒன்றியிருந்தனர்‌ என்பதே, 
இவர்சுள்‌ அநாதி;இவர்களது கர்மங்களும்‌ அநாதி; இவர்களோடே இணைந்திருப்பன. 
இந்தக்‌ கர்மங்களின்‌ தராதரத்திற்கு ஏற்கவே பிறப்பின் தாரதம்யமும் 
ஆக் ப்ரஹ்மத்திற்கு யாதொரு தோஷமும்‌ இல்லை. 
இவ் வகையில்‌ ஆராய்ந்தால்‌ ப்ரஹ்மமே' உலகைப்‌ படைக்கின்றது என்பது திண்ணம்‌. 
ஆதலால்‌: இப்பாதத்தின்‌ கருத்து, பகவானே மூவகைக்‌ காரணமும் ஆகிறான் என்பதே . , 
இதுவே ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் . 
அணு காரண வாதிகள்‌ பெரும்பாலோர்‌ ப்ரதானமே உபாதான சாரணம்‌ என்கின்றனர்‌. 
இவர்களது தா்க ரீதியில்‌ குறைகள்‌ உள்ளன. இவர்களது கருத்தும்‌ ஏற்‌பதற்கில்லை. 
உபாதான காரணமாவதற்குக்‌ காரணப்‌ பொகுள்‌: காரியப்‌ பொருள்‌ இவை சமமான இயல்பு பெற வேண்‌டியதில்லை. 
உதாரணம்‌: சாணத்திலிருந்து தேள்‌ தோன்றுகிற து. 
ஜீவர்கள்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌. ஆதலால்‌ ஜீவர்‌களது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேருமெனில்‌,
கர்ம வசப்‌ படாத பகவானுக்கு தோஷங்கள்‌ இல்லையே . 
காரணமான. பக வானும்‌ கார்யமான உலகும்‌ வேறுபடாதவை. 
' பகவான்‌ நிமித்த காரணம்‌ எனில்‌, துன்பமே இயல்‌பான் ஜீவர்களைப்‌ படைப்பதால்‌, சரீரியான தான்‌ தனக்கு தீமை 
தேடிக்கொள்வது ஓவ்வாதே 
வேறொரு துணையும்‌ எதிர்பாராமல்‌ பகவான்‌ உலகைப்‌ படைக்கின்றான்‌. 
அவயவமற்ற பகவான்‌ பல பொருள்களுக்கு உபாதான காரணமாக மாட்டான்‌ என்பதை எதிர்த்து 
பகவான்‌ விசித்திரமான சக்தி உள்ளவன்‌ என்று நிர்வகிக்கப்படுகிறது.
உலகைப்‌ படைப்பது பகவானுக்கு லீலையே; வேறே பயன்‌ எதுவுமில்லை.
---------------

2, இரண்டாம்‌ பாதம்‌ 

பகவான்‌ உலகுக்குக்‌ காரணமல்லன்‌? ப்ரதானமே என்ற பிற மதத்தினர்களது வாதங்களை மறுத்து 
வ்யாஸ பகவான்‌ தமத: மதத்தை இது வரையில்‌: 'நிலை நிறுத்தி அருளிச் செய்தார் -
இவர்களது மதக்‌ கோட்பாடுகளை ஆராய்ந்து- இவை ஏற்பதற்கில்லை என்பதைத்‌ தர்க்கத்‌தின்‌ மூலம்‌ வெளியிடுகிறார்‌; 
ஆதலால்‌ இந்தப்‌ பாதம் தர்க்க பாதம்‌ 'எனப்‌ பெற்றது.
 
2. 1. ஸாங்க்ய மதம்‌. 

பகவானது நிலை இல்லாமலே ப்ரதானமே உலகுக்‌குக்‌ காரணம்‌ என்பது ஸாங்க்யர்‌ மதம்‌. 
இம் மதத்தின்‌ படி ப்ரதானம்‌ என்பது ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ ஆகிய பொருள்களாக அமைந்துள்ளது; 
இவை குணங்கள்‌ அல்ல. இவை இயல்பாகச்‌ சமநிலையில்‌ உள்ளன. 
அறிவுடைய புருஷனது முன்னிலையில்‌ ப்ரதானம்‌ விகார மடைகிறது (மாறுதல்‌ பெறுகிறது). 
புருஷ தத்வமோ குணமில்லாதது, அறிவு வடிவமானது, நித்யமானது, எங்கு மிருப்பது, செயலற்றது; 
சரீரங்களில்‌ வெவ்வேறாக இருப்பது. இது கார்த்தாவாகவும்‌, போக்தாவாகவும்‌ இருக்க முடியாது. 
ப்ரக்ருதி புருஷர்‌ அணுகியிருப்‌பதால்‌, ப்ரக்ருதிக்கு அறிவும்‌, புருஷனுக்கு கர்க்ருத்‌வமும்‌ (செயல்படுவதும்‌) நிகழ்கின்றன. 
தான்‌ கர்த்தா, போக்தா என்று நினைப்பதால்‌ ஸம்ஸாரம்‌; முன்பு கூறிய ஞானத்தால்‌ மோக்ஷம்‌.

மறுப்பு : ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை குணங்கள்‌ என்றே வேதங்கள்‌ வெளியிட்டுள்ளன. 
ஆதலால்‌ இவை பிரதானமாக மாட்டா. 
மரத்தால்‌ தேரும்‌, கல்லால்‌ கட்டிட்மும்‌ நிருமிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள்‌ இருந்தாலும்‌ செய்வோர்‌ வேண்டும்‌. 
ஆதலால்‌ ப்ரக்குதி புருஷர்‌ அணுகியிருந்தும்‌ யாதொரு பயனுமில்லை. செய்‌பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌. 

ஸாங்க்யர்‌ அளிக்கும்‌ சமாதானங்கள்‌, 
(1) ஒருவனது உதவியே யில்லாமல்‌ பால்‌ தயிராகிறது; 
(2) மேகத்திலிருந்து விழும்‌ நீர்‌ இளநீராகிறது; மாம்பழத்தின்‌ ரசமாகிறது; 
(4) பசு புல்லை மேய்ந்து பால்‌ சுரக்கின்றது; 
(4) காந்தக்கல்லின்‌ அருகில் உள்ள இரும்பு இயங்குகிறது 
(5) தொண்டி, குருடவின்‌ தோள்‌ மேல்‌ ஏறிக் கொண்டு வழி நடக்க இயலுகின்றது 
ஆதலால்‌ சேதனன்‌ ஒருவனது உதவி இல்லாமலே உலகப்‌ படைப்பு இயலும்‌. 
விளக்கம்‌ : மண்‌ குடமாவதும்‌, மரம்‌ ரதமாவதும்‌ ஓகு சேதனனது முயற்சியாலேயே. 
இதை உதாரணமாகக்‌ கொண்டு ப்ரக்ருதி மாறுபடுவது யாவும்‌ பரம சேதனனாலே என்று அனுமானித்து அறியலாகும் . 
பால்‌ தவிராக மாறுவதும்‌,மழைநீர்‌ இள நீராவதும்‌,மாம்‌ பழ ரசமாக மாறுவதும்‌ அப் பரம சேதனனாலே என்‌பது அனுமானம்‌. 
ஆதலால்‌ பகவானது சங்கல்பமின்‌றி. ப்ரக்ருதி பரிணமிக்க இயலாது. 
இரும்பு காந்தக் கல்வின்‌ அருகில்‌ இருந்தால் தான்‌ இயங்கும் ;
அதை அருகில்‌ வைப்பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌, 
நொண்டி வழி தடப்பது தன்னுடைய முயற்சியாலும்‌, குருடனுடைய உதவியாலும்‌. 
குறைபாடுகள்‌ : ஸாங்க்ய மதத்தில்‌ வெளியிட்டு காட்டப்பட்டன ; 
ப்ரதான நிலையில்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை சமமாக உள்ளன; இவற்றில்‌ ஏற்றத்‌ தாழ்வால்‌ படைப்பு நிகழ்கின்றது என்பது, 
இவ்வாறான ஏற்றத்‌ தாழ்வு எங்‌கனம்‌ ஏற்படுகிறது என்பதை விளக்கவில்லை. 
ஆதலால்‌, ஸர்வஜ்ஞனாகிய ஸா்வேச்வரனோடு தொடர்பு இருந்தால் தான்‌ ப்ரக்குதி ஜகத்துக்குக்‌ காரணமாகும்‌. 
ஸாங்கயரின்‌ கொள்கைப்படி புருஷன்‌ மாறுபாடில்‌லாதவன்‌. 
இவனுக்கு போகம்‌ ப்ரக்ருதியைக்‌ காண்பது; மோக்ஷம்‌ ப்ரக்ருதியிலிருந்து விடுதலை பெறுவது. 
விகார மற்ற புருஷனுக்கு போகமும்‌ மோக்ஷமும்‌ எவ்வாறு ஒட்டும்‌? 
ப்ரக்ருதியின்‌ பரிணாமத்தால்‌ சு௧ துக்க ரூபமான போகம்‌ எனில்‌, சேதனன்‌ ப்ரக்ருதி ஸந்நிதியில் இருப்‌பதாலும்‌, 
ப்ரக்ருதி நித்யமாதலாலும்‌ இவனது போகம்‌ எப்போதுமே நிகழும்‌; மோஷம்‌ வாய்ப்பதில்லை . 
புருஷன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதியின்‌ அருகிலேயே இருக்கிறான்‌; இதனாலே படைப்பு என்கின்றனர்‌ சாங்க்யர் . 
நித்யமான புருஷன்‌ அருகில்‌ இருப்பதால்‌ ஸம்யோகம் எப்போதும் படைப்பே நடக்கும்‌. மோக்ஷம்‌ எவ்வாறு நடக்கும்‌? 
இவ்வாறான முரண்பாடுகள்‌ பல. ஆதலால்‌ ஸாங்க்ய மதம்‌ எவ் வகையிலும்‌ பொருந்தாது.
2. 2. அணு காரண வாதம்‌. 
நையாயிகரும்‌ வைசேஷிகரும்‌ பகவானை அதிஷ்டாதாவாக ஒப்புக் கொண்டு 
பரமாணுக்களே ஐகத்திற்குக்‌ ' காரணம்‌ என்‌கின்றனர்‌. (அதிஷ்டாதா: தலைவனாக தியமிப்பவன்‌ ). 
பரமாணுக்களின்‌ தன்மை என்ன? இவை நுண்ணியன, நித்யமாவன, அவயவமற்றவை. 
இவை பல சேர்ந்து அவயவி ஆகின்றன. இந்த அவயவியை அவயவங்களாகப்‌ பிரித்துக் கொண்டே யிருந்தால்‌, பிரிக்க இயலாத நிலை திகழும்‌. 
இந்த நிலையில்‌ காண்பது பரமாணு, பரமாணுக்கள்‌ இரண்டிரண்டாகவும்‌, இந்த இரட்டைகள் மூன்றாகவும்‌ இவ்வாறே பெருகுகின்றன. 
காற்று, தீ , தீர்‌, நிலம்‌ இவற்றிற்குத்‌ தனித் தனியாகப்‌ பரமாணுக்‌கள்‌ உள; 
இப் பரமாணுக்கள்‌ அந்த அந்த பூதத்தின்‌ குணங்கள்‌ வாய்ந்தவை.

விளக்கம்‌! பரமாணுக்களுக்குப்‌ பரிணாமமே இல்லை-
இவை இரண்டாகவும்‌, இந்த இரட்டைகள்‌ மூன்றாகவும்‌, இவ்வாறு இணைந்தாலும்‌ பரிமாணம்‌ இராது; 
பரிமாணம்‌ இருத்தால்‌ அடிப்படையான பரமாணு கொள்கை நிலைக்காது. 
இவர்களது மதத்தின்படி உலகம்‌ எவ்வாறு உண்டாகின்றது? 
உலகம்‌ உண்டாவதற்கு ஆதாரமாக வுள்ளது பரமாணுக்களின்‌ முதற்‌ செயல்‌--
அத்ருஷ்டம்‌ என்பது? இது புண்ய பாவத்தால்‌ ஏற்படும்‌. இந்த முதற்‌ செயல்‌ இயல்பான செயல்‌; 
நெருப்பு மேல்‌ தோக்கி எரிவது. போன்ற இயற்கைப்‌ பண்பு. 
மறுப்பு _இம்மதத்தினர்‌ கூறும்‌ அத்ருஷ்டம்‌ பரமா ணுக்களைச்‌ சார்ந்ததா? ஜீவனைச்‌ சார்ந்ததா? 
பரமாணுக்களுக்குப்‌ புண்ய பாவங்கள்‌ இல, ஆதலால்‌ ஜீவனைச்‌ சார்ந்ததாக வேண்டும்‌. 
ஜீவன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதிக்கு. அருகில்‌ இருப்பதால்‌, ஜீவன்‌ நித்யமாதலால்‌ 
படைப்பு எப்போதும்‌ நிகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும்‌. 
ஆதலால்‌ ஸா்வேச்வரனே உபாதான காரணம்‌ என்பது. தெளிவு 
அன்றியும்‌ காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றுக்கான குணங்கள்‌ இவற்றுக்குக்‌ காரணமான 
பரமாணுக்களில்‌ உள்ளன என்பது இம் மதத்தினரது கொள்கை. 
காரணப்‌ பொருளில்‌ இருந்தால் தான்‌ காரியப்‌ பொகுளில்‌ குணங்கள்‌ இருக்கும்‌ என்கிறார்கள்‌ இவா்சுள்‌. 
இந்த முறையில்‌ ஆய்ந்தால்‌, குடம்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ நிலை யின்மை, அவயவத்தோடு இருத்தல்‌, 
பருமன்‌ போல்வன பரமாணுக்களுக்கும் உள்ளன என்று இவர்கள்‌ ஒப்புக்‌ கொள்ளவேண்டும்‌. 
இது பரமாணுக்களைப்‌ பற்றிய. பண்புகளோடு மூரண்படும்‌. -ஆதலால்‌ இம் மதம்‌ ஆதரிப்பதற்‌கில்லை.
2. 3. வெளி உலகின்‌ நிலை. , 
பரமாணுக்களே உலகுக்கு உபாதான காரணம்‌. என்ற மதக்‌ கொள்கை முற்றிலும்‌ மறுக்கப்பட்டது. 
அணு காரண வாதத்தில்‌ பெளத்தர்களுக்கும்‌ ஒரளவு பங்குண்டு. 
இவர்களுள்‌ வைபாஷிகன்‌, ஸெளத்சாந்தி கன்‌ இவர்களது மதம்‌ வருமாறு; 
காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றிற்குக்‌ காரணம்‌ அத்த அந்த பூதத்தின்‌ பரமாணுக்கள்‌. 
இந்த நான்கு பூதங்கள்‌ இணைவதால்‌ உடல்‌,. ஸ்பர்சாதிகள் சத இந்த்ரியங்கள்‌, வெளிப்‌ பொருள்கள்‌ உண்டாகின்றன. 
சரீரத்திற்கு உள்ளே இருப்பது ஆத்மா; இது **நான்‌:* என்ற அறிவுக்கு விஷயமாகும்‌. 
வெளிப்‌ பொருள்கள்‌ யாவும்‌ க்ஷணம் மாத்ரமாகவே உள்ளன. 
இவை நிலையுள்ளன என்ற அறிவால்‌ உலக நடவடிக்கைகள்‌ 'நிகழ்கின்‌ றன. 
'ஆதலால்‌ உல்க உற்பத்திக்கும்‌ தடவடிக்கைகளுக்கும்‌ வேறு எதுவும்‌ காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டியாது இல்லை. 
ஒவ்வொரு ஷணந்தோறும் தோன்றும்‌ ஞானத்‌தின்‌ தொடர்பு தான்‌ ஆத்மா. 
தேர்வு 1 : பூதங்கள்‌ இணைந்து உலகமும்‌ உலகப்‌ பொருள்களும்‌ ' உண்டாக வேண்டும்‌; 
இவை க்ஷணிகம்‌ எனில்‌ இணைவதற்கு வாய்ப்பே இல்லை; ஆதலால்‌ உற்‌பத்தி இல்லை. 
இம் மதத்தின்படி பிறவி எப்படி நிகழ்கிறது? 
க்ஷணிகமான யொருள்கள்‌ நிலையாவன என்று நினைப்பது அறிவின்மை. 
அறிவின்மையால்‌ பிறவி; பின்பு சரீரத்‌திற்கு வேண்டிய வீர்யம்‌, ஸ்ம்ருதி, ப்ரீதி போல்வன பெற்று, 
பூமி முதலான தாதுக்கள்‌ பெற்று, இந்த்ரியங்‌கள்‌, ப்ராணன்கள்‌ உருவாகி 
யாவும்‌ சேர்ந்த சமுதாயம்‌ உடம்பாகிறது. 
மறுபடியும்‌ அவித்யையாலே இவை உருவாகிப்‌ பிறவிகள்‌ சுழன்று சுழன்று வருகின்றன. 
தேர்வு 2: அறிவு க்ஷணிகம்‌ என்பதாலே விபரீதமான அறிவு எவ்வாறு நிகழும்‌? 
அறிவின்மை வாய்ந்தவனின்‌ நிலைதான்‌ என்ன? 
ஆக இந்தக்‌ கருத்து ஆதரிப்பதற்‌ கன்று. 
தேர்வு 3: காலத்தையும்‌ பற்றி ஆராய்ந்தால்‌, இது ஷணிகம்‌ என்பதால்‌ ஒரு ஷணத்தில்‌ காணும்‌ பொருள்‌ அடுத்த க்ஷணத்தில்‌ இருக்க முடியாது. 
ஒரு குடத்தைக்‌ காணும்போது அது ஓவ்வொரு ஷணமூம்‌ புதிதாகவே இருக்கவேண்டும்‌. 
நாம்‌ குடம்‌ இல்லை என்று சொல்லும் போது குடம்‌ என்ற வடிவம்‌ இல்லை, அல்லது உடைந்து போயிற்று என்ற கருத்தே நிலவுகின்றது. 
இது, ஷணிகம்‌ என்பதற்கு வேறுபட்டது. ஆதலால்‌ ஷூணிகம்‌ என்ற கருத்து உலக தடவடிக்கைக்கு முரணானது. 
தேர்வு 4: காரியப்‌ பொருளான குடம்‌ மண்‌ மய மானது; பொன்‌ நகை பொன்‌ மயமானது, 
காரணமான மண்‌, பொன்‌ இவை சூன்யமாகக் கொண்டால்‌, குடம்‌, நகை இவை உருவம்‌ பெறுவது எவ்வாறு? ... 
தேர்வு 5: இம் மதக்‌ கொள்கைக்கு மாறாக நாம்‌ பூமியை நேரில்‌ காண்கிறோம்‌; 
ஆகாசம்‌ காண்பதற்‌ இல்லை எனினும்‌, பருந்து பறக்கிறது'” என்பது போன்ற அறிவால்‌ இது உண்டு என்று அறிகிறோம்‌ 
நேரில்‌ காண்பன சூன்யம்‌ என்ற கருத்து அபத்தமானது ... 
தேர்வு6: ஒரு பொருள்‌ க்ஷ்ணிகம்‌ எனில்‌ இதைப்‌ பற்றிய அறிவும்‌ ஷணிகமாக வேண்டும்‌. 
இம்மதத்தினர்‌ கூறும்‌ சமாதானம்‌: அறிவுக்குக்‌ காரணமாவது, அறிவை உண்டாக்கும்‌ பொருள்‌. 
ஆதலால்‌ அப் பொருளைக்‌ காணும்போது அறிவை உண்டாக்கி அது அழிந்து போகின்றது என்பது. 
அன்றியும்‌ பொருள்களின்‌ பண்பு நீலம்‌, மஞ்சள்‌, கறுப்பு போன்றவற்றை மனத்தில்‌ தேக்‌கிக் கொண்டு பின்பு அனுமானத்தால்‌ அறியக்கூடும்‌ என்கின்றனர்‌ இவர்கள்‌. 
இது உலகில்‌ நிகழ்வனவற்‌றுக்கு மாறுபாடானது. 
ஒரு பொருள்‌ அழிந்த பிறகு அதன்‌ அழிந்த வடிவையோ பண்பையோ வேறே ஓன்‌றில்‌ காண்பது என்பது நிகழாதது. 
தேர்வு 7: வருங்‌ காலத்திற்கான சில நன்மைகளைக்‌ கருதி நாம்‌ பல செய்கிறோம்‌. 
காலம்‌ க்ஷணிகம்‌ என்று கருதினால்‌ முயற்சிகள்‌ பயனற்றவையாகும்‌. 
ஆதலால்‌ பலவகையாலும்‌ இம் மதத்தின்‌ கொள்கைகள்‌ அனுபவத்திற்குப்‌ புறம்பாக வுள்ளன.

2.4. அறிவின்‌ நிலை. 

யோகாசாரர்களது மதம்‌: அறிவு ஒன்றே அடிப்‌ படை; இது ஷணிகம்‌. வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகங்‌ கூட இல்லை; 
இவை பற்றி அறிய வேண்டியதில்லை. 
அறியப்படும்‌ பொருளின்‌ வடிவத்தை அறிவினுடைய. தாகவே கருதினால்‌ போதும்‌; 
வெளிப்‌ பொருள்‌களை ஸ்மரிக்க வேண்டியதில்லை. 
அறிவினுள்‌ இருக்கும்‌ வடிவம்‌, வெளியிலிருப்பது போல்‌ தோன்றுவது மயக்கத்தினால்‌. 
அறிவும்‌ அறியப்படும்‌ பொருளும்‌ எப்போதும்‌ சேர்ந்தே. அறியப்படுகின்றன; 
ஆதலால்‌ அறியப்படும்‌ பொருள்‌ அறிவைக்‌ காட்டிலும்‌ வேறன்று. 
வெளிப்‌ பொருள்கள்‌ உள்ளன என்று கொண்டால்‌, அந்த அந்தப்‌ பொருளின்‌ வடிவம்‌ அறிவில்‌ உள்ளதாகக்‌ கொள்ளவேண்டும்‌; 
இல்‌லாவிடில்‌ கடத்தைப்‌ பற்றிய அறிவு, படத்தைப்‌ பற்றிய அறிவு என்று பல வகையான தனித் தனியான அறிவுகளை நிருபிக்க இயலாது.
வெளிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌ அறிவை மாத்‌திரஙம் கொண்டு இவை உள்ளன என்பதற்கில்லை. 
காணும்போது நேரும்‌ அறிவு மாத்திரம்‌ கொண்டால்‌, முத்துச்சிப்பி வெள்ளியே என்றும்‌, 
பழுதை பாம்புதான்‌ என்றும்‌ ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்‌. 
ஆதலால்‌ விழிப்பு நிலையில்‌ காணப்படும்‌ அறிவுகள்‌, உள்ள பொருள்களைப்‌ பற்றி யல்ல; 
கனவில்‌ காணும்‌ பொகுள்‌களைப்‌ போல்‌ இவை இல்பொருள்களே என்று கொள்‌வது தான்‌ பொருத்த முடையது.

மறுப்பு: குடம்‌ ஒன்றைப்‌ பார்க்கும்போது, பார்ப்‌பது நாம்‌, பார்க்கப்படுவது குடம்‌; இது அறிவினாவே. 
அறிவு ஒன்றே உள்ளது என்று ஒப்புக்கொண்டால்‌ நாமும்‌ இல்லை, குடமும்‌ இல்லை என்பதுதானே தேறும்‌? 
ஆதலால்‌ இக் கொள்கை ஏளனத்திற்காகும்‌. 
தேர்வு 1: இரண்டு பொருள்கள்‌ சேர்ந்து அனுப விக்கப்படுகின்றன என்றால்‌, இவை வெவ்வேறானவை என்பதுதானே தேறும்‌. 
இவ்விரண்டில்‌ ஒன்று தான்‌ உள்‌ளது என்பது எப்படிப்‌ பொகுந்தும்‌? 
தேர்வு 2. நாம்‌ பார்க்கும்‌ குடம்‌ அறிவினாலே மாத்திரம்‌ இருக்கிறது என்பது சிறிதும்‌ பொருந்தாது .. 
ஆக்கப்‌' பொருளான மண்‌ வேண்டும்‌; ஆக்கும்‌ திறமை உபகரணங்கள் வேண்டும்‌. 
குடம்‌, படம்‌ போல்வனவற்றை அறிவிப்பதாக அறிவு உள்ளது; 
அறிவு தவிர்ந்த இவை இல என்பது எவ்வாறு சொல்லக்‌ கூடும்‌ 
தேர்வு 3: விழிப்பிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ கனவிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ வித்தியாசமுண்டு. 
விழிப்பில் காண்பன பொய்யாக மாட்டா; கனவிற்‌ காண்பன விழித்தவுடன்‌ மறைந்து விடுகன்றன. 
ஆத லால்‌ விழிப்பிற்‌ காண்பவை இல்பொருள்களாக அனுமானித்தால்‌, உள்ளனவற்றை 'இல்லனவாகச்‌ சொல்லும்‌ தோஷம்‌ தவிர்க்க முடியாது. 
தேர்வு 4: அறிவு எங்கும்‌ நிலவுவது. அறி பவன்‌, அறியப்படும்‌ பொருள்கள்‌ இவை இல்லாத அறிவு எங்குமில்லை, 
ஆதலால்‌ எங்கும்‌ காணப்படும்‌ பொருள்‌களைப்‌ பற்றி விளங்காத அறிவு ஏற்பதற்கில்லை. 
இவ்‌வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ தேறுவது: இந்த மதம்‌ உலக நடவடிக்கைகளுக்கு முற்றிலும்‌ மாறானது என்பது.

2. 5. யாவும்‌ சூன்யம்‌ 

மாத்யமிகனது மதம்‌ ப்ரமாண்ம்‌ (அறிவதற்குச்‌ சான்று), ப்ரமாதா (அறிபவன்‌), ப்ரமேயம்‌ (அறியப்‌ படுவது) என்பது மதி மயக்கத்தாலே. 
யாவும்‌ சூன்யம்‌; இந்தச்‌ சூன்யத்தைச்‌ சூன்யமென்று அறிவதே மோக்ஷம்‌. 
அறிவும்‌, அறிவால்‌ காணும்‌ வெளிப்‌ பொருள்களும்‌ இல்பொருள்களே; யாவும்‌ சூன்யம்‌ என்பதே உண்மையான நிலை. 
காண்பனவாகத்‌ தோன்றுவன யாவும்‌ பொய்‌. இத்தகைய தோற்றம்‌ அழிவதே மோக்ஷம்‌. 
மாத்யமிகன்‌ சூன்யவா தி, இவனது விளக்கம்‌ - ஒரு பொருள்‌' உண்டெனில்‌ இதற்குச்‌ சான்று தேவை;-
இல்லைலை யெனில்‌ 'இது வேண்‌டியதில்லை. மேலும்‌ ஒரு பொருள்‌ உண்டு எனில் எப்படி உண்டாகிறது? 
உள்ள பொருள்களில் இருந்தா , இல்லாத பொருள்களிலிருந்தா என்று தெளிய வேண்டும்‌. 
உள்ள பொருள்‌ களில் இருந்தே என்று கருதினால்‌, 'குடமாக அமையும் போது காரணப்‌ பொருளான மண்‌
இல்லை; ஆதலால்‌. இந்த மண்‌ அழிந்து விடுகிறது. 
ஆதலால்‌ தேறுவது; இல்‌லாத பொருள்களிலிருந்தே பண்டங்கள்‌ அமைகின்‌றன என்‌பது. 
இல்லாத பொருள்களிலிருந்து பண்டங்கள்‌. உண்டாக் மாட்டா; ஆதலால்‌ யாவும்‌ சூன்யம்‌ என்பதே தேறும்‌.'

தீர்வு : குடம்‌ இருப்பதாகச் சொல்லும் போது குடம்‌ 'என்ற அமைப்புடன்‌ இருக்கிறது என்பது தான் தேறும்‌; 
இல்லை எனில்‌ ஒட்டின்‌ அமைப்பில்‌ இருக்கிறது என்பதே வெளிப்படை. .
ஒரு நிலையில்‌ உள்ள்‌ பொருள்‌ வேறொரு நிலையில்‌ அமைவதே இல்லை என்ற சொல்லுக்குப்‌ பொருளாகக்‌ காண்கிறோம்‌. 
மண்‌ கட்டியின்‌ நிலையின்‌ அழிவே” ' குடத்தின்‌ உற்பத்தி ' எனக் கொள்ள வேண்டும்‌. 
கட்டி நிலையில்‌ உள்ள மண்‌ என்ற் திரவியம்‌ காரணப்‌ பொருளாகவும்‌, 
குட நிலையில்‌ இருக்கும்‌ அந்த மண்ணே காரியமா்கவும்‌'' கொள்கிறோம்‌. 
ஆதலால்‌ சூன்யமான்‌ ஒரு பொருளிலிருந்து' ஓரு பொருள்‌ உண்டாவதில்லை. ்‌

யாவும்‌ சூன்யம்‌ என்பதை ஒரு சான்றின்‌ மூலமே நிலை நிறுத்த வேண்டும்‌; 
அந்தச்‌' சான்று. 'உண்மையே என்று ஒப்புக் கொள்ள வேண்டும்‌." 
“இவ்வாறு ஒப்புக்‌ கொண்டால்‌ இந்தச்‌ சான்று" 'உண்மையாகின்ற்து:" 
ஆதலால்‌ “சூன்யம்‌” என்ற கருத்து 'இல்லை.' '
இத்தால் பொய்‌ என்றால்‌ எல்லாம்‌ சூன்யம்‌ என்றும் சான்றும்‌' பொய்யாகும் 
ஆகவே இவை உண்மை: என்பதே தேறும்‌, 
பல வகையில்‌ ஆராய்ந்தால் 'யாவையும் 'சூன்யம்‌ என்ற கொள்கை பொருந்தாது என்பது வெளிப்படை 

2. 6, ஜைநர்‌. மதம்‌. 
இவர்கள்‌ . ஒப்புக் கொள்ளும்‌ தத்வங்கள்‌ ஜீவன்‌; தர்மம்‌, அதர்மம்‌, காலம்‌, ஆகாசம்‌ என்பன, 
காலம்‌ அணுவான ஒரு திரவ்யம்‌; ஆகாசம்‌ அளவற்ற: வெளியிடம்‌. 
'இவை யாவும்‌ ஸப்த பங்கி நியாயத்திற்‌கு உட்பட்டவை. பொருள்கள்‌ யாவும்‌ இவ்வாறே. இந்த தியாயமாவது: 
பொருள்களின்‌ நிலை, (1) உள்ளது... (2) இல்லது, (3) உள்ளதும்‌ இல்லதும்‌, (4) உள்ளது, இல்லது என்றே சொல்லமுடியாது, 
(5) இல்லது, உள்‌ னது என்றே சொல்ல முடியாது, (6) இல்லது, உள்ள தென்றோ இல்லதென்றோ சொல்ல முடியாமல்‌ இருக்க லாம்‌, 
(7). உள்ளதும்‌.இல்லதும்‌, உள்ளதென்றோ இல்லது . என்றோ சொல்ல முடியாமல்‌ இருக்கலாம்‌. . , 
மறுப்பு; இது தர்க்க முறைக்கே ஒவ்வாதது; பொருள்கள்‌ உள்ளனவாகவும்‌ இல்லனவாகவும்‌, நித்ய மாகவும்‌ அநித்யமாகவும்‌, 
பின்னமாகவும்‌ முழூவனவாகவும்‌ ஒருபடிப்பட்டு இருக்கமாட்டாத முரணான தன்மைகள்‌. 
ஒரே காலத்தில்‌ ஓரே பொருளில்‌ அமைவதற்கில்லை, 
சர்க்கரையின்‌ தித்திப்பும்‌ உப்பின்‌ உவர்ப்பும்‌ ஒன்றி எவ்வாறு அமையும்‌?
இம் மதத்தினர்‌ ஆத்மாவைப்‌ பற்றி விசித்திரமான கஞத்து கொண்டுள்ளனர்‌. 
ஒரு சரீரத்துலுள்ள ஆத்மாவின்‌ பரிமாணம்‌ அந்த சரீரத்தின்‌ அளவைப்‌ பற்றியது, 
இந்தக்‌ கருத்தின்படி யானையின்‌ ஆத்மா மறு பிறவியில்‌ பூனையின்‌.சரீரத்தில்‌ புக இயலாது; 
பூனையின்‌ ஆத்மா பானையாகப்‌ பிறந்தால்‌, பானையின்‌ உடலில்‌ சிறிதளவு தான்‌ ஏற்கும்‌, 
முழுதும்‌ வியாபித்து அனுபவிப்பதற்‌கு இல்லை, 
இவ்வாறு ஆத்மா குறுகுவதும்‌ விரிவதும்‌ நேர்ந்தால்‌, இது மாறுபாடுடையது என்ற தோஷம்‌ நிகழும்‌
இதனால்‌ நிலையில்லை என்ற தோஷமும்‌ காணலாம்‌. 
ஆத்மாவுக்கு முக்தி நிலையில்‌ உள்ள பரிமாணமே நிலையானது, இயல்பானது, 
முக்தி திலையில்‌ வேறு சரீரம்‌ இல்லை, ஆதலால்‌ ஆத்மாவுக்கு இயல்பான பரி மாணத்தையே ஒத்துக் கொள்ள வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்தால்‌ ஜைந மதக்‌ கோட்பாடுகள்‌ ஏற்கத்‌ 
தக்கனவல்ல என்பது தேறும்‌. 
 
2.7. பாசுபத மதம்‌. 

பாசுபதர்‌ சைவ ஆகமத்தை ஆதரிப்பவர்‌, இவர்‌களது மதக்‌ கொள்கை 
ஈசனை அனுமானத்தின்‌ மூலம்‌ அறியவேண்டும்‌, உபநிஷத்துக்களால்‌ இல்லை. . 
இவன்‌ உலகுக்கு நிமித்த காரணம்‌; 
ப்ரக்ருதிதான்‌ உபாதான காரணம்‌, குலாலன்‌ மண்ணைக்‌ கொண்டு குடம்‌ செய்‌வது போல்‌ 
இவன்‌ உலகைப்‌ படைக்கிறான்‌. இவன்‌ சரீரம்‌ இல்லாதவன்‌. 
மறுப்பு: இம் மதம்‌ வேதத்திற்குப்‌ புறம்பானது; வேதங்கள்‌ நாராயணனே மூவகைக்‌ காரணமுமாவான்‌, 
இவனை மனனஞ்‌ செய்வதே மோக்ஷத்திற்குக்‌ காரணம்‌ என்கின்றன.

சிவன்‌ நிமித்த காரணன்‌ என்றால்‌ சரீரம் கொண்டல்‌லவோ படைக்க வேண்டும்‌? 
இவன்‌ படைப்பவன்‌ என்று அனுமானத்தால்‌ ஓத்துக் கொள்ள வேண்டும்‌. 
சரீரமில்‌லாத ஜீவன்‌ இந்த்ரியங்களை இயக்குவது போல்‌ சிவனும்‌ இயக்குகிறான்‌ எனக்‌ கொண்டால்‌, 
ஜீவனுக்கு இந்த நிலை புண்ய பாவ கர்மாவினால்‌ ஏற்பட்டுள்ளது போல்‌ இவனுக்கும்‌ ஏற்படும்‌ என்பது தேறும்‌. 
இது சரியன்று ஆதலால்‌ சாஸ்த்ரங்களாலே பகவானை ஏற்றுக் கொள்‌வது தான்‌ குறையேது மில்லாதது,
2. 8. பாஞ்சராத்ர ஆகமம்‌. 

பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தின்‌ சிறப்பை விவரிப்பது இப்பகுதி, இது பகவான்‌ நாராயணன்‌ அருளியது; 
(வேதங்களின்‌ சாரமாக பக்தர்களுக்கு இரங்கி வெளி விடப்பட்டது. 
மஹாபாரதத்தில்‌ மோஷ தர்மம்‌ ஞான காண்டத்தில்‌ வெளியிட்டுள்ளது; 
தயிரிலிகுந்து வெண்‌ணெய்‌ எடுப்பது போல் மஹா பாரதமான கடலை மத்தால்‌ கடைந்து இந்த சாஸ்த்ரம்‌ எடுக்கப்‌ பட்டது; 
மாந்தருள்‌ அந்தணர்‌ போலும்‌, வேதங்களில்‌ ஆரண்யகம்‌ போலும்‌, ஓஷதகளில்‌ அமுதம்‌ போலும்‌ சாரமாக விளங்குவது இந்த ஆகமம்‌. 
இதைப்‌ பதரிகாச்‌ர மத்தில்‌ நாராயணன்‌ நாரதருக்கு வெளியிட்டான்‌. 
இதில்‌ இரண்டு குறைகள்‌ கூறுவார்‌ சிலர்‌, 
கருத்துக்‌களை ஏற்றவாறு ஆராமையாலே. இந்த சாஸ்த்ரத்தில்‌ வாஸுதேவனிடமிருந்து ஸ்ங்கர்ஷணன்‌ என்னும்‌ ஜீவனும்‌, 
ஸங்கர்ஷணனிடமிருந்து ப்ரத்யும்நன்‌ என்ற மனமும்‌, ப்ரத்யும்நனிடமிருந்து அநிருத்தன்‌ என்ற அஹங்‌காரமும்‌ உண்டாவதாகக்‌ கூறியிருக்கிறது. 
ஜீவனுக்கு உற்பத்தி கூறுவது வேத வாக்கியங்களுக்கு முரண்பாடாகும்‌. 
இது பற்றிய தீர்வு: பகவான்‌ தன்‌. அடியார்களை அநுக்ரஹிப்பதற்காக இந்த வடிவங்களைத்‌ தனது விருப்பத்தால்‌ ஏற்றுக் கொள்கிறான்‌; 
இவ்வாறு ஏற்றுக்‌ கொள்வது அவதாரம்‌ போன்றது, 
மனம்‌ பரமாத்மாவிட மிருந்து உண்டாவதாக சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகின்‌றன; 
ஸங்கர்ஷணன் இடமிருந்து மனம்‌ என்பது உண்டாகின்றது என்பது முரண்பாடு என்பது இரண்டாவது குறை. 
பகவானே ஸங்கர்ஷணனாவதால்‌ இக் கருத்து ஏற்றுக் கொள்ளத்‌ தக்கதே, 
பல இடங்களில்‌ ஸங்கர்‌ ஷணன்‌ முதலானோர்‌ அவதாரமாகவே விவரிக்கப்‌ பெற்றுள்ளது. 
ஸாங்க்ய மதத்‌ தத்துவங்கள்‌ இருபத்தைந்து, 
யோகத்தில்‌ சொல்லப்‌பட்ட அஷ்டாங்க யோக க்ரமம்‌, வேதத்தின்‌ பூர்வ பாகத்தில்‌ விவரிக்கப்பட்ட கர்மங்கள்‌ 
இவற்‌றைப்‌ பாஞ்சராத்ரம்‌ ஒத்துக் கொள்கின்றது 
அஷ்டாங்க யோகம் ப்ரஹ்மத்தின் உபாஸந மூலமாக என்றும்‌, 
கர்மங்கள்‌ ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம்‌ என்றும்‌ ஆரண்யகங்கள்‌ கூறுகின்றன. 
இவை யாவும்‌ பகவானான நாராயணனாலே என்று, பாஞ்சராத்ரம்‌ தெளிவு படுத்துதின்றது. 
இது வேதத்தை முற்றிலும்‌ ஓட்டியிருப்பதால்‌ மிகச்‌ சிறந்த ப்ரமாணமாகும்‌. 
சுருக்கம்‌ 
பிற மதத்தினரது கொள்கைகள்‌. 
ஸுங்க்யர்‌ பகவானது அதிஷ்டானம்‌ இல்லாமலே அசேதனமான ப்ரதானம்‌ உலகமாக மாறுகிறது. 
நையாயிகர்‌, வைசேஷிகர்‌ அதிஷ்டிக்கும்‌ ஈச்வரன்‌ இருந்த போதிலும்‌ பரமாணுக்களே காரணமாக உலகம்‌ தோன்றுகின்றது. 
வைபாஷிகள்‌, ஸெளத்ராந்திகள்‌ : வெளிப்‌ பொருள்‌களே இல்லை, ஞானம்‌ ஒன்றே உள்ளது: 
யோகாசாரன்‌: வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகம்‌ என்‌பது கூடப்‌ பொருந்தாது, ஞானமும்‌ க்ஷணிகம்‌. 
மாத்யமிகன்‌ : ஷணிகமாகக் கூட எப்பொருளும்‌ இல்லை; யாவும்‌ சூன்யம்‌. 
ஜைனர்‌ : காரிய காரண ரூபத்தால்‌ உலகம்‌ நித்யமாகவும் அநித்யமாயும்‌,பின்னமாயும்‌ அபின்னமாயும்‌, ஸத்யமாயும்‌ அஸத்யமாயும்‌ இருக்கும்‌. 
ஆத்மா தனது கர்மாநுகுணமாக ஏற்கும்‌ சரீரத்தனவு உள்ளது. 
பாசுபதன்‌। உலகுக்கு உபாதான காரணம்‌ பரமாணுக்கள்‌; ஆகமத்தால்‌ அறியப்படும்‌ ஈச்வரன்‌ நிமித்த காரணம்‌. 
ஸம்ஸரரம்‌ ஆகமத்தில்‌ கூறியவாறு கர்மானுஷ்டங்களாலே பசுபதி ஸாரூப்பம்‌, மோக்ஷம்‌. 
பாஞ்சராத்ரம்‌ வேதத்தை ஒட்டியிருப்பதால் , வேதத்தைப்‌ போல்‌ முற்றிலும் ப்ரமாணமாகும்‌. 
மற்‌ற சமய மதங்களிலுள்ள குறைகள்‌ யாதும் இதுக்கு இல்லை .
------------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

புறச்‌ சமயங்களான ஸாங்கீய மதம்‌, யோக மதம்‌ போல்வன யுக்திக்குப்‌ புறம்பானவை, 
இவற்றிற்குண்‌டான் தோஷங்கள்‌ வேதாந்த மதத்தில்‌ இல்லை என்று காட்டுவன மூன்றாம்‌ பாதமும்‌ நாலாம்‌ பாதமும்‌.. 
உலகுக்‌ கெல்லாம்‌ காரணமான ப்ரஹ்மத்
தின்‌ காரியப்‌ பொருள்களாவன சேதன அசேதனங்கள்‌, இவ்வாறு காரியமாகும்‌ வகை விசாரிக்கப் படுகிறது, 
ஆகாசம்‌, ஆத்மா, இந்த்ரியங்கள்‌ இவற்றிற்கு இயல்பான விகாரங்களை விளக்க வ்யாஸர்‌ 
இவை ப்ரஹ்மத்தாலே இயங்குகின்றன என்கிறார்‌ இந்தப்‌ பாதத்தில்‌. இது வியுத்‌ பாதம்‌.

3. 1. ஆகாசம்‌ : 
ஆகாசம்‌ அவயவ மில்லாதது; அவாயவமில்லாத ஆத்மாவைப்‌ போல்‌ இதுவும்‌ ஒரு காரியப்‌ பொருளாகாது. 
சாந்தோக்யத்தில்‌, '*'ததைகஷ்தபஹாுஸ்‌ யாம்‌ ப்ரஜாயேய”' (6-8-3) என்ற இடத்தில்‌ படைப்‌பைச்‌ சொல்லும் போது 
ஆகாயத்திலிருந்து உற்பத்தி கூறாமல்‌ தேஜஸ்‌ முதலாக உற்பத்தி கூறியிருக்கிறது. 
அன்றியும்‌ ப்ருஹதாரண்யத்தில்‌, '*வாயுச்‌ ச அந்தரிக்ஷம்‌: ச ஏததம்ருதம்‌''--வாயு, ஆகாசம்‌ இரண்டும்‌ விநாசமற்றவை என்று வந்துள்ளது; 
ஆகாசம்‌ அழிவில்லை எனில்‌ உற்பத்தியும்‌ இல்லை என்பது ஊகிக்கக்‌ கூடும்‌. இது ஒரு கருத்து. 
விளக்கம்‌ : 
தைத்‌ரயத்தில்‌, '*ஆத்மந ஆகாச: ஸம்‌: பூத (ஆந), ஆகாசம்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டா” யிற்று என்பது வந்துள்ளது. 
ஆகாசம்‌ அவயமற்றது என்‌பதைக்‌ கொண்டு உற்பத்தி இல்லை என்று தீர்மானிப்‌ பதற்கில்லை; 
ச்ருதி வாக்யமே ஆதாரம்‌. ஆதலால்‌ ஆகாசத்திற்கு உற்பத்தி உண்டு.
காரணமான மண் கட்டியைப்‌ பற்றிஅறித்தால்‌ காரியப்‌ பொருள்களைப்‌ பற்றி அறியக்கூடும்‌ என்ற இடத்‌தில்‌.
ப்ரஹ்மத்தை அறிந்தால்‌ அவனது காரியப்‌ பொருளான ஆகாசம்‌ முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்‌ என்றறிகிறோம்‌. 
ஆகாசம்‌ காரியப்‌ பொருளுக்கு உறுப்பாக காட்டிலும்‌ முன்பே பகவான்  இருக்க வேண்டும்‌, :
*அந்தரிஷம்‌ ச அம்ருதம்‌'” ஆகாசம்‌ (அழிவில்லாதது)என்பதன்‌ கருத்து, நீண்ட காலம்‌ இருப்‌பது என்பதே. 
அமரர்கள்‌ என்றால்‌ நெடுங்‌ காலம்‌ வாழ்வு என்பது போலே உற்பத்தி யின்மை பரம்பொருளுக்கே; 
மற்றவைகளுக்கு ஒருபடியாலும்‌ இது ஒவ்வாது.

3. 2. அக்நி, ஜலம்‌, பூமி. 

“வாயோ ரக்நி:'”, :*அக்நே ராப:'', '*அத்ப்ய: பருத்வீ'”“--வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்தியிலிருந்து ஜலமும்‌, 
ஜலத்திலிருந்து ப்ருத்வீ (பூமி)யும்‌ உண்டாயின என்பன உபதிஷத்‌ வாக்கியங்கள்‌. 
அன்றியும்‌ பரம்பொருளிலிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, ஆகாசம்‌ வாயு, தீ , நீர்‌ யாவும்‌ உண்டாகின்றன என்றும்‌ வந்துள்‌ளது. 
ஆகையால்‌ அக்நி, ஜலம்‌, பூமி இவற்றின்‌ படைப்பு: பரமாத்மாவிடமிருந்து நேராக அல்லாமல்‌ 
முப்பாட்‌டன்‌, பாட்டன்‌, அப்பன்‌ என்பது போல்‌ பரம்பரையா வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
சாந்தோக்யத்தில்‌ (6,2-2,4) "நான்‌ பலவாகக்‌ ௧டவேன்‌” என்று தேஜஸ்ஸும்‌, நாங்கள்‌ பலவாக ஆகக்‌ கடவோம்‌'” என்று அப்புகளும்‌ (நீர்‌) சங்கல்பித்ததாகவும்‌ காண்கிறோம்‌. 
அசேதனப்‌ பொருள்கள்‌ சங்கல்பிக்க இயலாது. ஆதலால்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே சங்கல்பித்ததாகக்‌ கருதவேண்டும்‌. 
**யஸ்ய ப்ரூத்வீ சரீரம்‌'' என்று தொடங்கிக்‌ காரியப்‌ பொருள்‌கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்குச்‌ சரீரம்‌ என்பதால்‌ இக்‌. கருத்து ஏற்கத்தக்கது. 
'*ததநுப்ரவிச்ய ஸச்ச தயச்சா பவத்‌” அதை வியாபித்து ப்ரஹ்மம்‌ சேதனங்களாகவும்‌. அசேதனங்களாகவும்‌' ஆயிற்று, இது தைத்திரியம் 
பொருள்கள்‌ இவற்தைச் சொல்லும்‌'பதங்கள்‌ தேஜஸ்‌, வாயு , அக்நி, போலக்‌ ப்ரகாரியான பகவாளையே குறிப்பன. 
ஆதலால்‌ ஆகாசம்‌, அக்நி , வாயு, ஜலம்‌, பூமி, யாவும்‌ பகவானாலேயே படைக்கப்‌ பெறுவன.
3, 3. ஜீவ உற்பத்தி உண்டா? 

ஆகாசம்‌, தேஜஸ்‌ போன்ற ௮சேதனப்‌ பொருள்கள்‌ தங்களது பரிமாணம்‌ மாறும்‌ இயல்புடையன; 
இவை பகவானாலே படைக்கப்பெறுவன என்பது விளக்கப்‌ பட்டது. 
இவை தனது போகத்திற்காக ஏற்ற ஜீவாத்மாவும்‌ பகவானுக்குக்‌ காரியப்‌ பொருளா? இதற்கு உத்பத்தி உண்டா? என்பது இப்போது ஆராயப்படுகிறது. 
“ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்‌'" என்ற ச்ருதியில்‌, ப்ரஹ்மம்‌ ஒன்றே முதலில்‌ இருத்தது என்றும்‌, 
“ தாயேத ஜீவாந்‌ வ்யஸஸர்ஐ பூம்யாம்‌''--பஞ்ச பூதங்களோடு ஜீவனைப்‌ படைத்தான்‌ என்றும்‌, 
*“யதோவா இமாநி தாதி ஜாயந்தே''-எவனிடமிருந்து இந்த பூதங்கள்‌ உண்டாகின்றனவோ என்றும்‌ ஜீவனுக்கு. உற்பத்தி கூறப்‌படுகிறது. 
ஆதலால்‌ அசேதனங்களைப்‌ போல்‌ ஜீவர்‌களும்‌ படைக்கப்பட்டவர்களே என்பது ஊூகிக்கலாம்‌.. 
இது இந்த சங்கைக்கு ஆதாரம்‌.

விளக்கம்‌ : ஜீவர்களைப்‌ பற்றிய ச்ருதி வாக்கியங்கள்‌ ; 
(ந ஜாயதே ம்ரிய்தே வா விபச்சித்‌”- அறிவுடைய ஜீவன்‌ பிறப்பதில்லை, இறப்பதில்லை. 
*அனைத்தும் அறித்த பகவானும்‌ அறிவிலியான ஜீவனும்‌ பிறப்பில்லாதவர்‌கள்‌!”, 
“*நித்யர்களான பல ஜீவர்களுக்கு பகவான்‌ விருப்‌பங்களை அளிக்கிறான்‌... .
இந்த ஜீவன்‌ சரீரம்‌ அழியும்‌ போது அழிவதில்லை,”” 
இவை ஜீவனுக்குப்‌ பிறப்பே இல்லை என்பதைத்‌ தெள்ளத்‌ தெளிவாகக்‌' கூறுகின்றன. _.. 
ஓரு சங்கை: 
உற்பத்தியே இல்லாத ஜீவன்‌ பகவானால் எவ்வாறு காரியப்‌ பொருள்‌ ஆவான்‌ 
விளக்கம்‌ : காரியமாகுந்‌ தன்மை என்பது-ஒரு பொருள்‌ வேறொரு நிலையில்‌ இருப்பது. 
அசேதனங்கள்‌ காரியமாகும் போது அவற்றின்‌ இயல்பான தன்மை மாறுகிறது. 
ஜீவனுக்கு 'இயல்பான தன்மைகள்‌ ஞானம்‌, ஆனந்தம்‌ போல்வன மாறுவதில்லை; 
இவை சுருங்குவதும்‌ விரிவதுமான தன்மையே 'ஏற்படுகிறது. _ 
ஒரு சங்கை : படைப்பிற்குமுன்‌ பகவான்‌ ஒருவனே இருந்ததாகப்‌ பல இடங்களில்‌ ச்ருதிகள்‌ கூறுகின்றனவே... ஜீவனது நிலை என்ன? 
சேதன அசேதனங்கள்‌ யாவும்‌. பகவானுக்குச்‌ சரீரம்‌. ப்ரளய காலத்தில்‌ இவை மிகவும்‌ நுண்ணிய நிலையில்‌ உள்ளன? 
படைப்பிற்குப்‌ பிறகு நாம ரூப முடையனவாக விளங்குகின்றன. 
ஜீவனுக்கு உற்பத்தியைக்‌ கூறும்‌ ச்ருதிகள்‌, இவனுக்குச்‌ சரீரத்தோடு உண்‌டாகும்‌ நிலையைப்‌ பிறப்பென்றும்‌, 
சரீரத்தை விட்டு நீங்குவது இறப்பென்றும்‌ கருத்துக்களாக வெளியிடுகின்‌றன. 
ஆதலால்‌ அசேதனப்‌ பொருள்கள்‌ போலே ஜீவனுக்கு உற்பத்தியில்லை; ஜீவன்‌ நித்தியமானவன்‌.
3. 4. ஜீவன்‌--ஞானம்‌. 

ஜீவனது ஞானத்தைப்‌ பற்றிச்‌ சிலர்‌ கருதுவன: 
(1) “விஜ்ஞானம்‌ யஜ்ஞம்‌ தநுதே''-ஞான ஸ்வபாவனான ஜீவன்‌ யாகம்‌ செய்கிறான்‌; 
“யோ விஜ்ஞாநே இஷ்ட்டந்‌"- எவன்‌ ஞான ஸ்வரூபத்தில்‌ நிற்கிறானோ என்று ஞானம்‌ ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகக்‌ கூறப்படுகிறது; 
ஆனால்‌ குணமாகக்‌ கூறப் பெறவில்லை. .... 
(2) தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலையில்‌ அறிவு காணப் படுவதில்லை; 
விழித்திருக்கும்போது அறிவு இத்த்ரியங்களுக்கு வசப்பட்டுள்ளது. ஆதலால்‌ ஜீவ னுக்கு இயற்கையாக அறிவில்லை. 
(3) உலகில்‌ ஜீவனுக்குக்‌ காரியம்‌ எங்கும்‌ உண்டு. ஆதலால்‌ இவன்‌ எல்லா இடங்களிலும்‌ எல்லாக்‌ காலத்‌திலும்‌ தோன்ற வேண்டும்‌: 
இந்த்ரியங்களையும்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. 
இதனால்‌ குறைகள்‌ நேராதவாறு அவன்‌ கல்லைப்‌ போல்‌ ஜடப்பொருள்‌ என்றும்‌, 
அறிவு தோன்றி மறையும்‌ இயல்புடையது என்றும்‌ கருத வேண்டும்‌.

மறுப்பு : ப்ரச்ந உபநிஷத்தில்‌ (6-5) ஞானஸ்வ ரூபனான ஜீவன்‌ காண்பவன்‌, கேட்பவன்‌, முகர்பவன்‌, சுவைப்பவன்‌, 
நினைப்பவன்‌, அறிபவன்‌, செய்பவன்‌ என்று விளக்கமாகக்‌ காட்டப்பெற்றுள்ளது. 
ஆதலால்‌ ஜீவன்‌ ஞானத்தை குணமாக உடையவன்‌ என்பது தேறுகின்றது. 
ஜீவன்‌ ஜட ஸ்வரூபன்‌ என்பது தவறு. பத்த நிலையிலும்‌ முக்தி நிலையிலும்‌ இவன்‌ அறிய வல்லவன்‌. 
இவ்வாறு அறிவுடைமையால்‌ இவன்‌ எங்கும்‌ வியாபித்து யாவும்‌ அறிந்துகொள்கிறான்‌. 
சங்கை 1: ஜீவன்‌ அணு மயம்‌, இவன்‌ சரீரத்தில்‌ ஒரிடத்தில்‌ இருந்து கொண்டு சரீரத்தின்‌ அனுபவங்கள்‌ யாவையும்‌ எப்படிப்‌ பெறமுடியும்‌? 
தீர்வு: உடம்பில்‌ ஓரிடத்தில்‌ பூசிக் கொள்ளும்‌ சந்தனம்‌ எங்கும்‌ மணத்தைப்‌ பரப்புகின்றது. 
இதே போல்‌ ஜீவன்‌ நிலை. இது இதயத்தில்‌ இருந்துகொண்டு சூரியனின்‌ கிரணங்கள்‌ போல்‌ எங்கும்‌ வியாபிக்கும்‌ இயல்புடையது. 
சங்கை 2: ச்ருதிகளில்‌ ஜ்ஞானம்‌ .ஜீவனுக்கு ஸ்வரூப மாகச்‌ சொல்லப்படுகிறது. இது குணம்‌ என்பது எவ்வாறு? 
தீர்வு. பூமி மணமுள்ளது; இந்த இயல்பைக்‌ குணமாகக்‌ கருதுகிறோம்‌; 
இந்தப்‌ பண்பை பூமியிலிருந்து பிரித்து அறிவதற்காக மணம்‌ என்றே கூறுகிறோம்‌, 
ஆனந்த மயனான பகவானை ஆநந்த்தன்‌ என்றே சொல்லுகிறோம்‌. ஆதலால்‌ ஜீவனுக்கு அறிவு குணமாகக்‌ கருதப்படும்‌, 
இதனாலேயே ஜீவனை ஜ்ஞாதா என்‌கிறோம் . 
தூக்க நிலையை ஆராய்வோம்‌. இந் நிலையில்‌ ஞானம்‌ வெளியில்‌ தோன்றுவதில்லை; விழித்த பின்‌ 'தோன்றுகிறது. 
புருஷனுக்கு இயற்கையாக வாய்த்த ஆண்மை முதலியன தக்க பருவத்திலே தான்‌ வெளிப்படுகின்றன. 
இது போலவே தூக்கத்திலும்‌ விழிப்பிலும்‌ ஞானத்தின்‌ நிலை. 
எங்கும்‌ எக்காலத்திலும்‌ அறிவு பயன்படாமைக்குக்‌ காரணம்‌ அறிவின்‌ குறைவன்று, இந்த்ரியங்களைக்‌ கொண்டே அறிவு இயங்குகிறது. 
இவை பயன்படும்‌ காலத்திலும்‌ இடங்களிலும்‌ ஆத்ம ஞானம்‌ பெறும்‌. 
ஆதலால்‌ ஆத்மா இயல்பான ஞானம்‌ வாய்ந்தது தன்னையும்‌ பகவானையும்‌ அறிய வல்லது, 
இந்த ஞானம்‌ குணமுமாகும்‌.
3.5. ஜீவன்‌ கர்த்தாவா? 
.கடவல்லியில்‌ (28-19) ஒரு கருத்து; ஒருவனைத்‌ துன்‌ புறுத்துபவன்‌ உண்மையில்‌ துன்புறுத்துபவன்‌ அல்லன்‌-
துன்பப்படுபவன்‌ துன்பமுறுபவன்‌ அல்லன்‌ என்று ஜீவாத்‌ மாவுக்கு உண்மையில்‌ ஒரு செயலால்‌ செயல்படுவது இல்லை என்று கூறியிருக்கிறது. 
கீதையில்‌ பகவான்‌ (4.27.]) அஹங்காரத்தால்‌ மறைக்கப்படும்‌ ஆத்ம ஸ்வருபமுடையவன்‌ செய்யப்படும்‌ செயலைக்‌ குறித்து, 
“நான்‌ செய்பவன்‌” என்று மயங்குகிறான்‌ என்று கூறியிருக்க இரான்‌, (
19-20) சரீர இந்த்ரியங்கள்‌ செயல்‌ புரிவதில்‌ ப்ரக்ருதியே காரணம்‌, ஆதலால்‌ செயல்படுவது ஜீவனுக்கு இல்லை, 
ப்ரக்ருதிக்கே என்பது ஒரு கருத்து. 
மறுப்பு : துன்புறுத்துபவன்‌ துன்புறுபவன்‌ என்ற சொற்கள் ஆத்மா நித்யம்‌ என்ற கருத்தைக்‌ கூறும் போது வத்துள்ளன. 
கீதையில்‌ கூறப்பட்ட ச்லோகத்தில்‌ வரும் கருத்து: ஜீவன்‌ செயல்படும்‌ முயற்சிகள்‌ சரீரத்திலுள்ள முக் குணங்களின்‌ சேர்க்கையாலே என்று. 
கீதையில்‌, 1*அதிஷ்டாநம்‌'” என்ற ச்லோகத்தில்‌ (18-14), சரீரம்‌, கர்த்தாவான ஜீவன்‌, 
மனத்துடன்‌ கூடிய இத்த்ரியங்கள்‌, ப்ராணன்கள்‌, பரமாத்மா என்ற ஐந்தும்‌. 
காரியங்களுக்குக்‌ காரணம்‌ என்று காண்கிறோம்‌. 
சாஸ்த்ரங்கள்‌ ஜீவனுக்கு உபாஸநம்‌ முதலான செயல்‌களை விதிக்கின்றன. 
அரசன்‌ தன்‌ குடிகளுடன்‌ காட்டில்‌ விருப்பப்படி சஞ்சரிப்பது போல்‌ ஜீவன்‌ இந்த்ரியங்களைப்‌ பற்றிக்கொண்டு 
சரீரத்தில்‌ சஞ்சரிக்கிறான்‌ என்பது ப்ரஹதாரண்யத்தில்‌ வந்துள்ளது (4-4-28]. 
இனி ப்ரக்ருதி கர்த்தாவாகாது என்பது எளிதில்‌ அறியக்கூடும்‌. 
ஒரு செயலைச்‌ செய்பவனே அதன்‌ பலனை அனுபவிப்பான்‌ என்பது சாஸ்த்ரம்‌. 
ப்ரக்ருதி செயல்படுமானால்‌ அது செயலின்‌ பயனை அனுபவிக்குமா?' புத்தியும்‌ கர்த்தாவாகாது. 
மர வேலைக்காரன்‌ தன்னிடம்‌ வேலைக்கான உபகரணங்கள்‌ வைத்துக்‌ கொண்டிருந்தாலும்‌ தான்‌ விரும்பும் போது தான்‌ வேலை செய்கிறான்‌. 
இது போல்‌ இந்த்ரியங்கள்‌ உபகரணங்க ளாயினும்‌,ஜீவன்‌ தான்‌ விரும்பும்போதுதான்‌ செயல்படு கிறான்‌. 
அசேதனமான புத்தி கர்த்தாவானால்‌ அதற்கு விருப்பம்‌, விரும்பாமை இவை வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்து ஜீவனே செயல்களுக்குக்‌ காரணம்‌, இவற்றின்‌ பயனை இவனே அனுபவிக்கிறான்‌ என்பது தேறுகின்றது.
5. 6. செய்விப்பவன்‌ பரமாத்மா. 

சாஸ்த்ரங்கள்‌, **இதைச் செய்‌'*, * இதைச்‌ செய்யாதே” என்று விதிக்கன்றன. 
இதனால்‌ ஜீவனே செய்பவன்‌ அவனது இச்சைப்படி செய்பவன்‌ என்பது ஒரு கருத்து. 
சாஸ்த்ரங்களை ஆராய்ந்தால்‌ ஜீவனுக்கு அத்தர்யாமியாகி பகவான்‌ செயல்கள்‌ செய்விக்கிறான்‌ என்று அறியலாகும்‌. 
இதே கருத்து கீதையில்‌ வந்துள்ளது:
தான்‌ அந்தர்‌ யாமியாகி அவரவர்களது குணத்திற்கேற்ப இயங்கச் செய்கிறான்‌ என்று. ஆதலால்‌ ஜீவன்‌ செய்வன யாவும்‌ பகவான்‌ செய்விப்பதாலே. 
சங்கை : செயல்சுளைச்‌ செய்விப்பவன்‌ பகவானே எனில்‌, யாவரும்‌ நல்ல செயல்களே செய்யுமாறு இவன்‌ ஏன்‌ விரும்பக்கூடாது? 
தீயன செய்வித்து இவன்‌ ஏன் துன்புறுத்த வேண்டும்‌? 
விளக்கம்‌ : கர்மங்களின்‌ பயன்‌ அனுபவித்தே தீரும்‌ என்கின்றன சாஸ்த்ரங்கள்‌. இந்த விதிக்கு லிலக்கே இல்லை. 
நாம்‌ செய்வன யாவும்‌ முன்னைப்‌ பிறவிகளில்‌ சேர்ந்த கர்ம பலனுக்குக்‌கு ஏற்கவே, நமக்கென நன்னெறியையும்‌ இவன்‌ அருளியிருக்கிறான்‌. 
ஆதலால்‌ ஜீவன்‌ கார்மாவைச்‌ செய்யும்போது முதற்‌ கணம் பகவான்‌ இதில்‌ சம்பந்தப்படுவதில்லை. 
இச் செயல்கள்‌ தொடரும் போது இவன்‌ செய்விக்கிறான்‌.
4. 7, ஜிவன்‌-- பகவான்‌ தொடர்பு. 

ஜீவன்‌ செய்வன பகவானுக்கு அதீனமென்று விளக்‌ கப்பட்டது. 
ஜீவன்‌ பகவானுக்கு அம்சம்‌ என்பது இப்‌போது நிர்வஹிக்கப் படுகறது' 
ஜீவன்‌--ப்ரஹ்மா இவர்‌களது தொடர்பு பற்றி மூன்று மதத்தினரது கருத்து: 
(1) த்வைதம்‌: :*ஜ்ஞாஜ்ஜெள தவாவஜாலீச நீசெள'' (ச்வேதா 7-9): ஈச்வரன்‌ ஸர்வஜ்ஞன்‌, நியமிப்‌ பவன்‌; 
ஜீவன்‌ அஜ்ஞன்‌, நியமிக்கப்படுபவன்‌. 
இதனால்‌ ஜீவன்‌ பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. 
(2) அத்வைதம்‌ : **ததீவமஸி', “அயமாத்மா ப்ரஹ்மா”” என்பன போன்ற ச்ருதிகளால்‌ தேறுவது? 
ஜீவனும்‌ ப்ரஹ்மமும்‌ ஒன்றே என்பது, 
(3) பேத--அபேதவாதிகள்‌. ச்ருதிகள்‌ சில ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேதம்‌ சொல்லுகின்றன இவை 
பேத ச்ருதிகள்‌; ஒற்றுமை சொல்லுகின்றன; 
இவை அபேத ச்ருதிகள்‌. அபேத ச்ருதிகளை ஆதாரமாகக்‌ கொண்டு 
உண்மையான உபாதியினாலே ப்ரஹ்மம்‌ ஜீவர்களாகத்‌ தோன்றுகின்றது என்பது தேறும்‌. 
உபாதி என்று கருதப்படுவது பேத ச்ருதிகளால்‌ ஒருவாறு தேறும்‌ என்றே கருத வேண்டும்‌. 
ஆத்மாவைப்‌ பற்றி இவர்கள்‌ கூறுவது: இது பகவா னின்‌ ௮ம்சமாகாது. 
அவயவம்‌ இல்லாத பகவானைப்‌ பகுதி பகுதிகளாகப்‌ பிரிக்க முடியாது. 
அன்றியும்‌ இவன்‌ பகவானின்‌ அம்சமானால்‌ இவனது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேரும்‌. 
விளக்கம்‌ : “யஸ்ய ஆத்மா சரீரம்‌'' என்று ச்ருதிகள்‌ சொல்லுகின்றன. 
சரீரம்‌ என்பது ஆத்மாவுக்கு நிரூபகமான அடைமொழி. 
இதுபோல்‌, ஜீவன்‌ பகவானை விட்டுப்‌ பிரியாதவனாகி, இத்தகைய அடைமொழியாகி அதன்‌ ௮ம்சமாகிறான்‌. 
ஜீவர்களுக்கும்‌ பகவானுக்கு முள்ள வித்தியாசங்கள்‌ யாவும்‌ பேத ச்ருதிகளில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. ஆதலால்‌ ஜீவன்‌ பகவானின்‌ அம்சம்‌. 
சரீரத்தின்‌ தோஷங்கள்‌ ஆத்மாவைச்‌ சாரா. இதுபோல்‌ ஜீவனின்‌ தோஷம்‌ பகவானிடம்‌ அணுகமாட்டா. 
ஜீவன்‌ பகவானுக்கு சரீரம்‌; பகவான்‌ சரீரி, 
அக்நிக்கு ஒளி போல்‌ பகவானின்‌ சக்தியே இவ்வுலகில்‌ எங்கும்‌ பரவுகின்றது என்று விஷ்ணு புராணம்‌ போன்ற புராணங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானுக்கு விசேஷணம்‌--அடை மொழி; ஆதலால்‌ பகவானை விட்டுப்‌ பிரிவதில்லை. 
சங்கை: ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ அம்சம்‌ எனில்‌ அந்தணர்‌, அல்லாதார்‌ என்ற வேறுபாடு எதற்கு? 
விளக்கம்‌ : இப் பாகுபாடு அவரவர்களது நிலையைப்‌ பற்றியது. 
அந்தணன்‌ வேதம்‌ ஒதுவதால்‌ ' தூயோன்‌; இதனால்‌ இவனுக்கு ஏற்றம்‌. 
நெருப்பு ஒன்றேயாயினும்‌ ஓமத்திற்கான நெருப்புக்கும்‌ இடுகாட்டில்‌ இருக்கும்‌. நெருப்புக்கும்‌ வித்தியாசம்‌ போல்‌ இதனையும்‌ கருத வேண்டும்‌. 
முதற்‌ பாதத்தின்‌ தொடர்பு மூன்றாம்‌ பாதம்‌. 
முதற்‌: பாதத்தில்‌ பகவான்‌ மூவகைக்‌ காரணமாவான்‌ என்பது நிரூபிக்கப்பட்டது. 
இந்தப்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப் பெறுவன என்‌பது விளக்கப்படுகின்றது. 
ஆகாசம்‌, வாயு, அக்நி, ஐலம்‌, பூமி இவை பகவானாலேயே படைக்சுப்படுகின்‌றன. 
ஆகாசத்திலிருந்து வாயுவும்‌, வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்நியிலிருந்து ஜலமும்‌, ஜலத்திலிருந்து பூமியும்‌, இவன்‌ படைத்தவை. 
காரியப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்கின்றன உபநிஷத்துக்கள்‌. 
இவற்றைச்‌, சரீரமாகக்‌ கொண்டு இவன்‌ அந்தர்யாமியாகி இவற்‌றுள்‌ உறைகன்றான்‌ என்கின்றன சில உபநிஷத்துக்கள்‌., 
ஆதலால்‌ காரியப்‌ பொருள்‌ யாவும்‌ பரமாத்மாவிட மிருந்தே உண்டாகின்றன. ஜீவன்‌ பரமாத்மாவின்‌ அம்சம்‌; 
இதனால்‌ பரமாத்மாவோடு ஒன்றிவிடுகிறான்‌ என்பது தவறு. 
இவன்‌ வேலைக்காரனைப்‌ போல என்ற கருத்தும்‌ ஏற்பதற்‌ கில்லை. 
பகவானுக்கு அதீனமான ஞானம்‌ ஜீவனுக்கும்‌ உண்டு; 
பகவானால்‌ இவன்‌ தன்‌ செயல்களைச்‌ செய்கிறான்‌, இவன்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌; நித்யமானவன்‌, 
இவனிடமுள்ள தோஷங்கள்‌ , பகவானிடம்‌, அணுக மாட்டா-
----------------
4. நாலாவது பாதம்‌ 

மூன்றாம்‌ பாதத்தின்‌ சுருக்கம்‌ : 
மாறுபாடே இயல்‌பான அசேதனங்கள்‌,' நித்யமான' சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப்பட்டன; 
பகவானா லேயே நியமிக்கப்‌ பெறுவன, 
ஜீவனுடைய போகத்திற்‌கான உபகரணங்கள்‌ ப்ராணனும்‌ இந்த்ரியங்களும்‌, 
இவையும்‌ பகவானாலே படைக்கப்‌ பெறுவன என்பது இந்தப் பாதத்தில்‌ விளக்கம்‌ பெறுகின்றது. 
முக்ய ப்ராணனைத்‌ தவிர மற்றைய நாலும்‌ இந்த்ரியங்கள்‌. 
ஆதலால்‌ இந்தப்‌ பாதத்தின்‌ தலைப்பு ப்ராண பாதம்‌ என்பது,
4, 1. இந்த்ரியங்கள்‌. 

வேத வாக்கியங்கள்‌ வெளியிடுவது: ப்ரளய காலத்தில்‌ பரமாத்மா ஒருவனே இருந்தான்‌ என்று. 
முண்டக உப திஷத்‌ கூறுவது (2-7-3); பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ உண்டாகின்றன. 
இவை நித்யம்‌ என்று ஒரு வேத வாச்கியமும்‌ இல்லை, 
அன்றியும்‌ பகவான்‌ உலகைப்‌ படைத்து நாம ரூபங்கள்‌ செய்வதாகக்‌ கருதுகிறோம்‌; 
இவனைத்‌ தவிர மற்றைப்‌ பொருள்களைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ படைப்பிற்குப்‌ பிறகே வழங்குகின்றன, 
ஆதலால்‌ ப்ராணன்‌, இத்த்ரியங்‌கள்‌ இவை நித்யமல்ல, ஈச்வரானாலே படைக்கப்‌ பெறுவன. 
இந்த்ரியங்கள்‌ பதினொன்று: ஐந்து ஞானேந்த்ரியங்‌கள்‌, ஐந்து கர்மேந்த்ரியங்கள்‌, மனம்‌ என்பன.
ஞானேந்த்‌ரியங்கள்‌: மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி; 
கர்மேந்த்ரியங்கள்‌. வாக்‌ (பேசுவதற்கு), கை, கால்‌, பாயு (மல மூத்ரங்கள்‌ கழிவதற்காக), ௨பஸ்தம்‌ (இனம் பெருக்க )

“ப்ராணா வாவ ௬ஷமய:'' என்ற வாக்கியத்தில்‌ ப்ராணா: என்ற பன்மை இந்த்ரியங்களைக்‌ குறிக்கும்‌ என்கின்றனர்‌ இவர்‌. 
எல்லாம்‌ அழிந்த பின்பு பகவானே இருப்பதால்‌ ப்ராணா: என்ற பதம்‌ குறிப்பது பகவானையே . 
'“ஸர்வாணி ஹவா இமாநி பூதாதி ப்ராணமே வாழி ஸம்‌ விசந்‌தி '” 
(ப்ரளய காலத்தி ல்‌) பூதங்கள்‌ யாவும்‌ பிராணன்‌ எனப்‌ பெறும்‌ பரமாத்மாவினுள்‌ லயிக்‌கின்றன. 
ஆதலால்‌ ஆகாசாதிகள்‌ போலே இத்த்ரியங்‌களும்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டாகின்றன என்பது திண்ணம்‌.
4, 2. இந்த்ரியங்களின்‌ பரிமாணம்‌. 

ஜீவனது மரண தசையில்‌ ப்ராணன்கள்‌ எனப்‌ பெறும்‌ இந்த்ரியங்கள்‌ வெளியேறுகின்றன. 
ஆதலால்‌ இவை விபுவாக இருக்க முடியாது. இவை அணு பரிமாண முள்ளவை.
4, 3; முக்ய ப்ராணன்‌. 

ப்ராணன்‌ ஐவகைத்‌ தொழில்‌ புரிகின்றது; 
இத்‌ தொழில்களுக்கேற்ப இது ப்ராணன்‌, அபானன்‌, வயா னன்‌, உதானன்‌, ஸமானன்‌ என்ற பேர்கள்‌ பெற்றுள்ளது. 
இதற்கு முகிய ப்ராணன்‌ என்று பெயர்‌. 
முண்டக உப நிஷத்‌ வாக்கியம்‌ ஒன்று: இந்த பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, 
ஆகாசம்‌ முதலான ஐந்து பூதங்கள்‌ உண்டாகின்றன என்பது. -ஆதலால்‌ ப்ராணன்‌ வாயுவாகாது. 
ஜீவனுக்குப்‌ பயன்படுவன கண்‌ முதலான இந்த்ரியங்கள்‌ உபகரணங்களாக, 
இவற்றுடன்‌. ப்ராணனும்‌ இணைந்து கூறப்படுகின்றது. 
முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரிக்கின்றது. 
ஆதலால்‌ இதுவும்‌ கண்‌ முதலியன போலே ஜீவனுக்கு உபகரணமாகும்‌. 
இதுவும்‌ பகவானாலேயே படைக்கப் பெறுவது,
4, 4. இந்த்ரியங்கள்‌-- தேவதைகள்‌. 

உபநிஷத்‌ ஒன்று வெளியிடுவது; அக்நி: தேவதை வாக்கை அதிஷ்டித்து (தலைமை ஏற்று) முகத்தில்‌ துழைகின்றது. 
வாயு தேவதை முக்ய ப்ராணனை அதிஷ்‌டிக்கின்றது; மூக்கில்‌ நுழைகின்றது. 
இவ்வாறு இந்த்ரியங்களை தேவதைகள்‌ : அதிஷ்டிக்கின்றன. 
இந்த தேவதைகள்‌ இவ்வாறு அதிஷ்டிப்பது - பகவானுடைய “சங்கல்பத்‌தாலேயே .-எவ்வாறெனில்‌, 
உபநிஷத்துக்கள்‌ 'கூறுவ்து:' பகவான்‌ அக்நிக்கு உள்ளும்‌ புறமுமாக நிற்‌கிறான்‌; இவனுக்கு அக்நி சரீரம்‌; 
எனினும்‌ அக்நி இவனை அறிவதில்லை; இவ்வாறே மற்றைய தேவதைகளும்‌. 
அன்றியும்‌ பகவானிடம்‌ பயந்து வாயு வீசுகின்றான்‌- சூரியன்‌ உதிக்கின்றான்‌; 
அக்நி, இந்த்ரன்‌, யமன்‌ ஆகி யோர்‌ செயல்‌ புரிகின்றனர்‌ என்பது ஓர்‌ உபறிஷத்‌ வாக்கியம்‌, 
பகவான்‌ இந்த தேவதைகளுக்கு அந்தர்‌யாமி யாகிறான்‌; நியமிக்கிறான்‌. 
ஆதலால்‌ இந்த்ரியங்‌கள்‌ செயல்படுவதும்‌, தேவதைகள்‌ இவற்றை அதிஷ்டிப்‌பதும்‌, 
ஜீவனும்‌ தரித்து நிற்பதும்‌ எல்லாம்‌ பகவானின்‌ சங்கல்பத்தாலே. , 
பசுவான்‌ உலகைப்‌ படைத்து அதனுள்‌ லகல சேதன அசேதனங்களாகிறான்‌ என்று தைத்திரீயம்‌ ஆநந்தவல்லியில்‌ காண்கிறோம்‌. 
கீதையிலும்‌ இவன்‌ கூறுவது: இவ்வுலகைத்‌ தான்‌ தாங்குவது தனது சக்தியின்‌ ஓர்‌ ௮ம்சத்தாலே; ஒரு திவலையாலே என்று. 
இதனாலும்‌ தேறுவது: அக்நி முதலான தேவதைகள்‌ இந்த்ரியங்களை தரித்து நிற்பது பகவானாலே என்று. 
தூங்கும்‌ நிலையில்‌ கண்‌ முதலியன செயல்படுவன வல்ல. 
எல்லா நிலையிலும்‌ முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரித்து நிற்கிறது. 
இவ்வாறு ப்ராணனால்‌ தரிக்கப் படுவதால்‌ இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ எனப்படுகின்‌றன.

4. 5. வ்யஷ்டி ஸ்ருஷ்டி. 

இது வரையில்‌ பூதங்கள்‌ ஐந்து, இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ போல்வன பகவானால்‌ படைக்கப் பட்டவை என்று நிர்ணயிக்கப்பட்டது. 
தேவர்‌, மனிதர்‌ முதலான ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ காரியப்‌ பொருள்கள்‌ என்பது விளக்கப்படுகன்றது. 
சாந்தோக்யத்தில்‌ பசுவான்‌ கூறியதாக ஒரு. வாக்கியமுள்ளது: 
இந்தச்‌ சதுர்முகனைக்‌ கொண்டு உள்‌ நுழைந்து நான்‌ நாம ரூபங்களை அளிக்கக்‌ கடவேன்‌ என்று. 
ச்ருதி 'வாக்கியம்‌ ஒன்று: (பகவான்‌ சொல்லியதாக) நான்‌ நாம ரூபங்களைச்‌ செய்வேவளாக, இவை எவ்வாறு பொருந்தும்‌? 
விளக்கம்‌ : சாந்தோக்யத்தில்‌ (6-8-8) தீ , நீர்‌, பூமி என்ற மூன்று பூதங்களையும்‌ ஒன்று சேர்ப்பதாகிய திரி வ்‌ருத் கரணம்‌ சொல்லப்படுகிறது. 
இவ்வாறு செய்யப்பட்ட பூதங்களிலிருந்து அண்டம்‌ உண்டாகிறது. அண்டத்தில்‌ நான்முகன்‌ தோன்றுகிறான்‌. 
இதுவரையில்‌ ஸமஷ்டி , ஸ்ருஷ்டி--ஒட்டு மொத்தமாகப்‌ படைத்தல்‌.
**அநேந ஜீவேந- என்றவாறு தனக்குச்‌ சரீரமான சதுர்முகனைக்‌ கொண்டு பகவான்‌ 
வ்யஷ்டி ஸ்ருஷ்டியை (பாகுபாடுள்ள படைப்பைச்‌) செய்கிறான்‌ என்று தேறுகின்றது. 
அக்நி சங்கல்பித்தது, ஜலம்‌ சங்கல்பித்தது என்ற இடங்களில்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ 
பகவான்‌ சங்கல்பித்ததாக் நிர்ணயம் செய்யப் பெற்றுள்ளது. 
ஆகையால்‌ உயிர்கள்‌ யாவையும்‌ படைப்பது பகவானே. 
ஜீவனுக்கு ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, கர்மேந்திரியங்‌கள்‌ ஐந்து; இவற்றோடு மனமும்‌ சேர்ந்து இந்த்ரியங்கள்‌ பதினொன்று. 
இவையும்‌ முக்ய ப்ராணனும்‌ அணுவானவை. இந்த்ரிய ப்ராணன்களை தரித்து நிற்பன அக்நி முதலான தேவதைகள் ; 
இவர்கள்‌ இவ்வாறு தரிப்பது பகவானுடைய சங்கல்பத்தாலே. 
தீ , நீர்‌, பூமி இவற்றைப்‌ படைத்து 0 சேர்த்து அண்டத்தைப்‌ படைத்தவன்‌ பகவான்‌. இது ஸ்மஷ்டி ஸ்ருஷ்டி. 
சதுர்முகனைக்‌ கொண்டு இவனுக்கு அந்தராத்மாவாகி பகவான்‌ சேதன ௮சேதனங்களைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌ எல்லா வகைப்‌ படைப்பும்‌ ஸா்வேச்வரனது செயல்‌,
-----------------
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

முதல்‌ இரண்டு: அத்யாயங்களில்‌ விவரித்தவாறு மேன்மை யுள்ள ஸர்வேஸ்வரனைப்‌ பரம பதத்தில்‌ அனுப விப்பதற்குப்‌ பரந்த ஞானம்‌ வேண்டும்‌. 
இயல்பாக இத்தகைய ஞானம்‌ வாய்ந்த ஆத்மா உடற்‌ பிறவியால்‌ வருந்துகிறது. 
பகவானது கல்யாண குணங்களை அனுபவிக்க வேட்கை நேர்ந்தால்‌ உலக வாழ்க்கையில்‌ வெறுப்பு ஏற்‌படும்‌; 
இந்த விருப்பின்மை வைராக்யம்‌, உலக வாழ்ககையின்‌ தோஷங்களை அறிந்தால்‌ வைராக்யம்‌ நேரும்‌. 
இவ்வுலகப்‌ பிறவியில்‌ இழிவு எவ்வாறு எனில்‌, தாய்‌ வயிற்றில்‌ தோன்றி வெளி வருவது,இளமை, மூப்பு, பிணி, 
இவற்றால்‌ துன்புறுவது, கர்மங்களால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ பிறப்பது போல்வனவற்றாலே, 
கர்மங்களின்‌ ்பயனாக ஜீவன்‌ மேல்‌ லோகங்களுக்குச்‌ சென்றால்‌ மீண்டு வரும் போது பலவகையாக இன்னலே அனுபவிக்கிறான்‌. 
மேலுலகங்களில்‌ வாழ்வு முடிந்த பிறகு ஜீவன்‌ ஆகாசம்‌, மேகம்‌, பூமி இவற்றோடு இணைந்து 
௮ன்னமாகி ரேதஸ்‌ஸாகி ஸ்த்ரீயின்‌ உடலில்‌ சேருகிறான்‌. 
இந்த விவரங்‌களை ஆய்ந்துணர்ந்தால்‌ வைராக்யம்‌ ஏற்படும்‌. 
இந்த வைராக்யத்திற்குக்‌ காரணமாகும்‌ இந்தப்‌ பாதம்‌ வைராக்ய பாதம்‌ எனப்படுகிறது.. 
புண்யங்களின்‌ பயனாக ஜீவன்‌ தேவலோகம்‌ செல்‌லும் போதும்‌ மீளும் போதும்‌ பூத ஸூஷ்மங்களான இந்த்ரியங்களுடன்‌ இயங்குகிறான்‌.
1. 1. ஜீவனின்‌ மீட்சி 

ஜீவன்‌ தேவலோகஞ்‌ சேர்ந்து பின்பு மீளும் போது ஆகாயமாகிய அக்நியில்‌ சேருகிறான்‌ (ஹோமம்‌ செய்‌ யப்படுகிறான்‌)
ஸோம ராஜா என்ற அழகிய சரீரம்‌ பெறுகிறான்‌. 
பின்பு பர்ஜந்யம்‌ (மேகம்‌) என்ற இரண்‌டாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறான்‌. 
இதற்‌குப்‌ பின்‌ மழையாகிறான்‌; இந்த மழை பூமியாகிய மூன்றாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது, 
௮மப் போது ஜீவன்‌ அன்னமாகிறான்‌, 
இந்த அன்னம்‌ புருஷ னாகிய நாலாவது ௮க்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது 
இது ரேதஸ்ஸாக மாறிப்‌ பெண்பாலிடம்‌ ஐந்தாவது ஆஹுதியாகச்‌ சேருகிறது. 
இந்த நிலைகள்‌ ஒவ்வொன்‌றும்‌ ஜீவன்‌ பூத ஸுக்ஷ்மங்களோடு கூடவே பெறுகின்‌றான்‌. 
இது பஞ்சாக்நி வித்யையின்படி. ஜீவன்‌ சேரும்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ இவன்‌ அக்நியிற்‌ செய்யும்‌ ஆஹுதி போல்‌ விளங்குகிறான்‌. 
இவ்வாறு இவன்‌ ஐந்து திலைகளில்‌ சேருவதை விவரிப்பது பஞ்‌சாக்நி வித்யை ஆகும்‌.
1. 2. கர்ம பந்தம்‌ 

யாகம்‌ முதலிய கர்மங்களைச்‌ செய்து ஜீவன்‌ ஸ்வர்கம்‌ போன்ற பலன்களை அனுபவிக்கிறான்‌. அனு பவம்‌ தீர்ந்து விடுகிறது. 
ஆதலால்‌ இவன்‌ மீளும்போது கர்மம்‌ விஞ்சி யிராது. அதாவது 
கர்ம பலன்‌ முழுதும்‌ அனுபவிக்கும்‌ வரையில்‌ இவ்வுலகங்களில்‌ இருக்கிறான்‌ என்பது ஓர்‌ அபிப்பிராயம்‌. 
விளக்கம்‌ : கெளதம தர்ம ஸூத்ரம்‌, ஆபஸ்தம்ப ஸு்த்ரம்‌ இவை வெளியிட்டுள்ள கருத்து: 
தேவ லோகத்‌ தில்‌ ஜீவன்‌ கர்ம பலன்களை முழுதும்‌ அனுபவிப்பதில்லை. 
விஞ்சியுள்ன கர்மத்தை அனுபவிப்பதற்காகவே மீண்டு சிறப்புடைய ஜன்மங்கள்‌ பெறுகிறான்‌. 
இவ்வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ ஜீவன்‌ விஞ்சிய கர்மத்துடன்‌ மீள்கிறான்‌ என்பது அறியலாகும்‌.
 
1. 3. பாவச்‌ செயல்களின்‌ பலன்‌. 

விதித்த கர்மங்களைச்‌ செய்யாதவர்களும்‌, செய்யத்‌ தகாதனவற்றைச்‌ செய்பவர்களும்‌ அநிஷ்டகாரிகள்‌ எனப் படுகின்றனார்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ அடைவ தில்லை? 
ஏழு வகையான நரகங்களில்‌ : பாவச்‌ செயல்‌களின்‌ பயனை அனுபலிக்கிறார்கள்‌. 
இந்த அனுபவத்‌திற்குப்‌ பிறகு பூமியில்‌ ஈ, கொசு, புழு போன்ற இழிவான பிறவிகள்‌ பிறக்கின்றனர்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ செல்வதில்லை; 
ஆதலால்‌ முன்பு கூறிய ஐந்தாவது ஆஹாுதி-அதாவது மனைவியின்‌ கா்ப்பத்தில்‌ சேருவது இவர்களுக்கில்லை.
1. 4, ஒவ்வோர்‌ இடத்திலும்‌ ஜீவன்‌ தங்கும்‌ காலம்‌. 

யாகம்‌ முதலான கர்மங்களின்‌ பயனாக ஜீவன்‌ மேலுலகங்கள்‌ சென்று மீள்கிறான்‌ என்று முன்பு: கூறி யிருக்கிறது. 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ எவ்வளவு காலம்‌ தங்கியிருப்பான்‌? 
பயிர்களோடு இணைந்த நிலையில்‌ ஜீவன்‌ மிகவும்‌ சிரமப்பட்டு வெளியேறுகிறான்‌ என்று அறிகிறோம்‌. 
ஆதலால்‌ அக்நி, மேகம்‌ இவற்றோடு இணையும்‌ காலம்‌ சொல்பமே என்பது தெளிவு. 
கர்மாக்களால்‌ ஜீவன்‌ படும்‌ துன்பங்கள்‌ இதுவரையில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. 
இவற்றிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவதே புருஷார்த்தம்‌ என்பது வலியுறுத்தப்படுகின்றது.
புண்ய கர்மாக்கள்‌ செய்யும்‌ ஜீவன்‌ இவற்றின்‌ பயனாக ஸ்வர்கம்‌ முதலியவற்றை அனுபவித்து 
எஞ்சிய கர்மாக்களோடு கீழே இறங்குகிறான்‌; 
ஐந்து நிலைகளை அடைகிறான்‌; ஐந்தாவது நிலை பெண்பாலிடம்‌ ரேதஸ்‌ஸாகச்‌ சேர்வது, 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌,அதிகம்‌ தங்குவதில்லை; 
தான்ய நிலையில்‌ தாமதம்‌ நிகழ்‌கின்றது. 
பாவம் செய்தவர்கள்‌ சந்த்ரனை அடைவதில்லை? 
ஏழு வகை நரகங்களில்‌ துன்பம்‌ அனுபவித்த பிறகு இழிவான பிறவி பிறக்கின்றனர்‌.

-----------------

2. இரண்டாம்‌ பாதம்‌. .. 

கர்மங்களிலிருந்து விடுபடும்‌ ஜீவன்‌ பகவானை அனுபவிக்கின்றது. 
இந்த பகவானுடைய மேன்மைக்குக்‌ காரணமான பண்புகள்‌ இரண்டு: 
இவனை இழிவுகள்‌ நாடாமலிருப்பது, இவனுக்கான தனிப்பட்ட குணங்கள்‌, இவை இரட்டைப்‌ பண்பு - உபய லிங்கமாகும்‌. 
இந்த: இரட்டைப்‌ பண்பு பற்றிய இந்தப்‌ பாதம்‌ உபய லிங்க பாதம்‌ எனப்பெறும்‌. 
அன்றியும்‌ ஜீவன்‌ கனவு, தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலைகளில்‌ படும்‌ துன்பங்கள்‌ விவரிக்கப்‌ படுகின்றன. 
ஜீவர்களைச்‌ சரீரமாக உடைய பகவானுக்கு இழிவு என்பதே இல்லை; 
சிறப்புற்ற குணங்கள்‌ வாய்ந்தவன்‌ இவன்‌ என்பதும்‌ விளக்கப்படுகிறது.
2. 1. கனவு: யார்‌ படைப்பு? 

ப்ருஹதாரண்ய உபநிஷத்தில்‌ (6-3-70) கனவு பற்றிக்‌ கூறியிருப்பது: 
கனவில்‌ ஜீவன்‌ காண்பன ரதம்‌, குதிரைகள்‌, இவை செல்லும்‌ பாதை, குளங்கள்‌, குட்டைகள்‌, ஆறுகள்‌ போல்வன, 
இவற்றை இவனே படைக்கிறான்‌. 
இவ் வுலகம்‌, பர லோகம்‌ இவற்றின்‌ சந்தியில்‌ ஏற்படுவது இந்த மூன்றாவது நிலை. 
இவற்றைப்‌ படைப்‌பவன்‌ ஜீவனே என்று வேதமும்‌ ஓதுகின்றது. 
அன்றியும்‌: கடவல்லியில்‌ (2-9-8) ஜீவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்‌களைப்‌ படைக்கின்றான்‌ என்றும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்‌ளது. 
ஆதலால்‌ கனவுகளைப்‌ படைப்பவன்‌ ஜீவனே. இது ஒரு கருத்து.

தேர்வு : “கனவில்‌ காண்பன விசித்திரமானவை, காண்‌: பவனே அனுபவிப்பவை; அருகிலுள்ளோர்‌ அனுபவிமப்‌ பதில்லை. 
இவ்வாறான விசித்திரங்கள்‌ செய்பவன்‌ பகவானேயாக வேண்டும்‌.
கனவு நிலையில்‌ ஞானம்‌ விளக்கம்‌- பெறுவதில்லை. 
ஆதலால்‌ ஜீவன்‌ கனவுகளைப்‌ படைக்‌க இயலாது. 
கனவில்‌ விரும்பாதவற்றையும்‌ காண்கிறோம்‌. 
ஜீவன்‌ படைப்பவனானால்‌ விரும்பாதவற்றைப்‌ படைத்து மனம் கலங்க மாட்டான்‌. 
ஆதலால்‌ கனவுகளுக்குக்‌ காரணம்‌ பகவானே. 
 
2. 2. தூக்க நிலை. 

தூக்க நிலையைப்‌ பற்றி மூன்று கருத்துக்கள்‌ வேதங்‌ களில்‌ உள்ளன. 
இந்த்ரியங்கள்‌ யாவும்‌ அடங்கி வெளி விஷயங்களை ௮னுபவிப்பதாகிய கலக்கமில்லாத நிலையில்‌ 
ஜீவன்‌ சரீரத்திலுள்ள நாடிகளில்‌ நுழைந்து இந்த நாடிகளின்‌ வழியாக இவற்றோடு தொடர்புள்ள 
இதயத்தில்‌ புரீதத்‌ என்ற மாமிச பிண்டத்தை அடைகிறான்‌; 
தூங்கும்‌ நிலையில்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மத்தோடு நன்கு இணைந்திருக்கிறான்‌. 
நாடிகள்‌, புரீதத்‌, ப்ரஹ்மம்‌ "இம்மூன்றும்‌ சேர்ந்தே தூக்கத்தின்‌ நிலை.
2. 3. தூக்கத்திற்குப்‌ பின்பு ஜீவனது நிலை. 

ஒரு கருத்து : தூக்கத்தில்‌ ஜீவன்‌ தன்னை அறிவ தில்லை, மற்றைப்‌ பொருள்களையும்‌ அறிவதில்லை; 
தூங்கும்போது ப்ரஹ்மத்தில்‌ ஒடுங்கி விடுகிறான்‌. முக்த னுக்கும்‌ இவனுக்கும்‌ வாசியில்லை. 
முக்தனுக்குப்‌ பழைய சரீரம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்றோடு தொடர்பில்லை. 
இதுபோல்‌ தூக்கத்திலிருந்து விழித்து எழுந்திருப்பவன்‌ வேறு ஜீவனாக வேண்டும்‌.

தேர்வு : கர்மம்‌, நினைவு, வேத வாக்கியம்‌, மோக்ஷ விதிகள்‌ இவற்றை ஆராய்ந்து பின்வருமாறு முடிவு அளிக்‌ கப்படுகிறது.
கர்மம்‌ என்பது தூங்குவோன்‌ தூங்குவதற்கு முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. இவை அனுபவித்தே தீரும்‌; 
ஆதலால்‌ விழித்து எழுவதற்கு முன்‌ இவன்‌ இவற்றை அனுபவிக்க வேண்டும்‌. 
இல்லையெனில்‌ ஒருவன்‌ செய்த தோஷத்தின்‌ பலன்‌ வேறொருவன்‌ அனு பவிக்கிறான்‌ என்ற தோஷம்‌ நேரும்‌. 
நினைவு என்பது? இரவில்‌ தாங்கியவன்‌ எழுந்திருக்கும் போது, '*தான்‌ தூங்கினேன்‌”? என்ற உணர்வு. 
ஆதலால்‌ துங்கி எழுந்‌திருப்பது வேறு ஜீவன்‌ என்ற கருத்து பொருந்தாது. 
மேலும்‌ சாந்தோக்யத்தில்‌ வரும்‌ கருத்து: ஒரு ஜீவன்‌ தூங்கும் போது எந்த சரீரத்தில்‌ 
(மனிதன்‌, சிங்கம்‌, புலி போன்‌ற) தூங்குகிறானோ அதே சரீரத்தில்‌ எழுந்‌திருக்‌கிறான்‌ என்பது. 

தூக்கத்தை முக்தி நிலையோடு ஓப்பிட இயலாது. 
முக்தன்‌ எல்லா அறிவும்‌ வாய்ந்தவன்‌, யாவும்‌ அறிபவன்‌, போகங்கள்‌ அனுபவிப்பவன்‌. 
தூக்க நிலையில்‌ இந்த்ரியங்கள்‌ களைப்பாறுகின்‌றன; 
ஜீவன்‌ பகவானை அனுபவித்து விஞ்சியுள்ள கர்மங்‌களை ௮னுபவிக்க எழுந்திருக்கிறான்‌. 
ஆதலால்‌ விழித்‌ தெழுந்தவன்‌ தூங்குபவனே ஆகிறான்‌. 
2. 4, மூர்ச்சை நிலை. 

மூர்ச்சை அடைந்தவன்‌ நிலை மரணத்தின்‌ பாதி நிலையேயாகும்‌. 
மூர்ச்சை நிலையில்‌ ஞானமில்லை- ஆனால்‌ இது ஞானமுள்ள விழிப்பு நிலையும்‌ கனவு நிலையும்‌ ஆகாது. 
தூக்க நிலை என்பது இந்திரியங்கள்‌ களைப்‌படைவதால்‌ ஏற்படும்‌; 
மூர்ச்சை நிலை மனக்‌ கலக்கத்‌தால்‌ ஏற்படுவது. இது தூக்க நிலையும்‌ ஆகாது. 
மரண நிலையில்‌ ப்ராணன்‌ அடியோடு இல்லை. ஆதலால்‌ மூர்ச்சை நிலை மரண நிலையின்‌ பாதி என்பது விளங்குகிறது.
 
2. 5. உபய லிங்கம்‌. 

ஜீவனுடைய தாழ்வு நிலை விவரிக்கப்பட்டது. 
ஏற்படுமோ என்ற ஐயம்‌ ஆராயப்படுகிறது. 
ஜீவனு டைய சரீர சம்பந்தத்தால்‌ பரமாத்மாவுக்குத்‌ தாழ்வு நேராது என்பதற்குக் காரணம்‌ 
ச்ருதிகள்‌ யாவும்‌ இரண்டு குணங்களைக்‌ குறிக்கின்‌றன; 
ஒன்று: இவன்‌ தாழ்வுகளுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலையாக இருப்பது; 
மற்றது: இவனுக்கே உரிய தனிப்பட்ட குணங்கள்‌--கல்யாண குணங்‌கள்‌. 
சாந்தோக்யத்தில்‌ (8-7-5) பரம் பொருள்‌ பாவமற்‌றது, மூப்பில்லாதது, மரணம்‌,. வருத்தம்‌, பசி, தாகம்‌ போன்றவை அற்றது; 
விரும்பப்படும்‌ நற்குணங்கள்‌ உடையது; தடையற்ற ஸங்கல்பம்‌ உடையது. 
விஷ்ணு புராணத்திலும்‌ (46-48) அவன்‌ தேஜஸ்‌, அளவற்ற ஞானம்‌, வீர்யம்‌, சக்தி முதலான ' நற்குணங்களுக்கு இருப்பிடம்‌; 
கிலேசம்‌ முதலான எந்த தோஷங்களும்‌ இலன்‌ என வந்துள்ளது.

அன்றியும்‌ - சேதன அசேதனங்களின்‌ அந்தர்யாமியாக பகவான்‌ உறைவது தனது விருப்பதாலேயே, இவற்றை நியமிப்பதற்காகவே. 
இதில் சங்கை : ஜீவன்‌ கர்ம வசப்பட்டவன்‌, ஆதலால்‌ இவன்‌ கொண்டுள்ள சரீரத்தோடு தொடர்பு தாழ்வைத்‌ தரக் கூடும்‌. 
பகவான்‌ இந்த சரீரத்தில்‌ உறைந்து இந்தத்‌ தொடர்பாலே லீலாரஸம்‌ அனுபவிக்கிறான்‌. 
முண்டக உபநிஷத்தில்‌ வரும்‌ விளக்கம்‌: பரமனாகிய பறவையும்‌, ஜீவனாகிய பறவையும்‌ இணைந்து ஓரே மரத்தில்‌ தங்குகின்றன; 
ஜீவனாகிய பறவை அதன்‌ இனிய பழத்தைப்‌ புசிக்கின்றது; 
பகவானாகிய மற்றது இதைப்‌ புசியாமல்‌ பெருமையுடன்‌ விளங்குகிறது. 
இப்‌ பறவைகள்‌ பிரியாமல்‌: இணைந்திருந்தும்‌ ஜீவனாகிய பறவை தான்‌ துன்பமுறுகிறது. 
ஆதலால்‌ பகவானுக்கு இழிவே யில்லை என்று தேறுகிறது. 
““பெருமையுடன்‌ விளங்குகிறது'' என்பது இதனோடு இணைந்து விளங்‌கும்‌ கல்யாண குணங்களைக்‌ காட்டுகிறது.
பகவான்‌ ஜீவ 'சரீரங்களைத்‌ தன்‌ சரீரமாகக்‌ கொண்டு வியாபிப்பது, 
அந்த ச்ரீரத்தோடு கூடிய ஜீவர்‌களையும்‌, அசேதனப்‌ பொருள்களையும்‌ நிர்வஹிப்‌பதற்கே, 
பகவானே நாம ரூபங்களைக்‌ கொடுக்கிறான்‌. 
ஆனால்‌ இந்த நாம ரூபங்களால்‌' இவன்‌ தீண்டப்படாதவன்‌ என்ற வேத வாக்யங்கள்‌ இக் கருத்தை வலியுறுத்துகின்றன. 
சங்கை : பகவான்‌ யாவும்‌ ௮றிந்தவன்‌, யாவற்றுக்‌கும்‌ அந்தராத்மா, ஐகத் காரணம்‌ என்று ஒவ்வொன்‌றாகக்‌ குணங்களைச்‌ சொல்லி 
வேத வாக்கியங்கள்‌, “தேதி?” எநேதி'* (இவ்வாறு இல்லை) என்று தள்ளுவ,தால்‌ இவன்‌ இழிவுக்கு எதிர்நிலை என்பது தேறும்‌. 
கல்யாண குணங்களுக்கு இருப்பிடம்‌ எனபது எவ்வாறு? 
பகவானது சக்தியோடு இயல்பான .ஞானம்‌, பலம்‌. முதலியனவும்‌ விவரிக்கின்றன வேத வாக்கியங்கள்‌, 
ஆதலால்‌ உபய லிங்கம்‌ நிலை நிறுத்தப் பெற்றது. 
சூரியன்‌ நீர்‌ நிலையில்‌ தோன்றுகின்றான்‌, நீரின்‌ குணம்‌ இவன்‌ பெறுவதில்லை; 
ஆகாசம்‌ குடம்‌ முதலிய வற்றில்‌ அடங்கியுள்ளது, எனினும்‌ குடம்‌ முதலியவற்‌,றில்‌ விரிவது, சுருங்குவது போன்ற குணம்‌ இதற்கில்லை. 
இது போல்‌ பகவான்‌ ஜீவனிடம்‌ நுழைவதால்‌, தோஷம்‌ எதுவும்‌ இவனைச்‌ சாராது. 
“நேதி நேதி: என்பதன்‌ கருந்து: பகவானுக்குச்‌ சில ரூபங்களை விவரித்த உபநிஷத்‌ இவ்வளவேயோ என்று 
நினைக்கச்கூடும்‌ என்பதற்காக இவ்வளவன்று, இவ்வள்வன்று என்று விளக்கியது. 
ஆதலால்‌ பகவான்‌ அழிவு 'களுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலை, 
கல்யாண குண கணங்கள்‌ எண்‌ணிறந்தன வாய்ந்தவன்‌ என்பது ஆஷேபமில்லாமல்‌ நிறுவப்பட்டது.

2, 6. ப்ரஹ்மமும்‌ அசேதனங்களும்‌. 

உருவமுள்ளனவும்‌ உருவமில்லாதனவுமான ௮சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ ப்ரஹ்ம ஸ்வரூபம்‌ என்று வேதங்கள்‌ வெளியிடுகின்றன. 
ப்ரஹ்மமும்‌ உலகமும்‌ வேறாவனவையே என்று ஓதுகின்றன சில வேத வர்க்கியங்கள்‌. 
இக் கருத்துக்‌கள்‌ ஒன்றுவதற்காக ப்ரஹ்மம்‌. ப்ரளய காலத்தில்‌ உலகைச்‌ சுருக்கிக் கொண்டும்‌ 
படைப்புக்‌ காலத்தில்‌ விரித்துக் கொண்டும்‌ உள்ளது என்று கருதலாம்‌. 
அன்றியும்‌ மணியும்‌ அதன்‌ ஒளியும்‌ 'வேறுபட்டிருந்தும்‌ ஓளி யுடைமை என்ற தர்மத்தாலும்‌ ஒளியாலும்‌ ஒன்றுவது போல்‌ 
அசித்தும்‌ பரமாத்மாவும்‌ என்று கருதத்‌தகும்‌. 
ஆகையால்‌ உலகம்‌ ப்ரஹ்ம ரூபமாக இருப்பது ஒளி சூர்ய ரூபமாக இருப்பது போல என்பது பொருத்தும்‌. 
இது ஒரு சாரார்‌ கருத்து.

தேர்வு : ஜீவன்‌ ப்ரஹ்மத்திற்கு அம்சமாகவும்‌, ப்ர 'காரமாகவும்‌, சரீரமாகவும்‌ நிரூபிக்கப்பட்டது. 
இதே போல அசேதனங்கள்‌ சரீரமாகவும்‌, பகவான்‌ சரீரியாக வும்‌ கொள்வதே சரி. 
அன்றியும்‌ வேத வாக்கியங்களால்‌ தெளிவது: அசேதனத்தின்‌ தன்மைகள்‌ பகவனுக்‌கில்‌லை என்பது. 
அசேதனங்கள்‌ பகவானின்‌ அம்சமாகவே விளங்‌குகின்றன. 
ஆதலால்‌ பகவானோடு ஒன்றியோ, இனம்‌- பண்பு என்ற முறைப்படியோ இல்லை என்பது தேறலாகும்‌ 

2. 7. அணை என்பதன்‌ விளக்கம்‌. 

வேத வாக்கியங்கள்‌ நான்கு கருத்துக்கள்‌ வெளியிடுகின்றன: 
(1) பகவான்‌ ௮ணை, 
(2) நான்கு பாதங்கள்‌ உடையவன்‌, பதினாறு கலைகள்‌ வாய்ந்தவன்‌, 
(8) மோஷத்தை அடைவிக்கும்‌ அணை, 
(4) அன்றியும்‌ பெரியவனான பரமாத்மாவை விட மேலான ஒரு பொருள்‌ உண்டு. 
அணை என்பதால்‌ ஒரு கரையிலிருந்து எதிர்க்‌ கரைக்குப்‌ போகும்‌ சாதனம்‌ என்பதாலே இதுவரையில்‌ கூறிவந்த பெருமையுடைய 
ப்ரஹ்மத்தைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுண்டு. இவ்வாறு சிலர்‌ கருதுகின்றனர்‌.

மறுப்பு: அணை(ஸேது) என்பதன்‌ பயன்‌ இரண்டு: பக்கங்களிலும் உள்ள பொருள்கள்‌ கலவாது பாதுகாப்பதே. 
பகவான்‌ ஸேது என்பதை ஒட்டி சாந்தோக்யத்தில்‌ வந்துள்ள கருத்து இதுவேயாகும்‌: 
'*ஏஷாம்‌ வோகாநாம்‌. அஸம்பேதாய”' (8-8- 1)

ப்ரஹ்மம்‌ நான்கு பாதங்கள்‌ உடையது, பதினாறு கலைகள்‌ உடையது என்று கூறியது எளிதில்‌ மனனஞ்‌ "செய்து உபாஸிப்பதற்கே யாகும்‌. 
ப்ரஹ்மம்‌ எங்கும்‌ வ்யாபித்துள்ளது, யாவருமாய்‌ யாவுமாக்‌ இருக்கிறது என்று பல வேத வாக்கியங்கள்‌ கூறுவதால்‌, 
இதைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுமில்லை என்பது நிச்சயம்‌. ஜகத்‌ காரணமான பகவானே பரம் பொருள்‌ 

2. 8. போக மோக்ஷங்கள்‌ . 

சேதனன்‌ உபாஸநஞ்‌ செய்வதற்காக பகவானது குணங்கள்‌ வெளியிடப்பட்டன. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை; கல்யாண குணங்களுக்குக் கொள்கலம்‌, 
யாவரையும்‌ காட்டிலும்‌ மேம்பட்டவன்‌. போக மோக்ஷங்களை அருளும்‌ மேன்மை இவனையே சாரும்‌ என்பது இனி விளக்கப் பெறும்‌.

ப்ருஹதாரண்யத்தில் பிறப்பிலியான பகவான்‌ அன்‌ னத்தையும்‌ தனத்தையும்‌ அளிப்பவன்‌; 
மோஷ ஆனந்தத்தையும்‌ அளிப்பவன்‌ என்று வந்துள்ளது. ்‌

யாகம்‌, தானம்‌, ஹோமம்‌, உபாஸநம்‌. இவற்றிற்கு அத்த அந்த தேவதைகள்‌ பலன்‌ அளிக்கின்றன. 
இந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான பரம புருஷனாலேயே இந்த பலன்கள்‌ கிடைக்கின்றன. 
இந்தக்‌ கருத்தே வேதங்‌களிலும்‌ கீதையிலும்‌ வெளியிடப் பட்டுள்ளது. 
உலகில்‌ குடி மக்கள்‌ பயிர்‌ செய்தல்‌ போன்ற பணிகளாலே பொருள்கள்‌ சேர்த்து 
அரசனது ஏவலாளர்கள்‌ மூலமாக வரி கட்டி அரசனது உகப்பைப்‌ பெறுவது போல்‌ 
தேவதைகளை ஆராதிக்கும்‌ வகையால்‌ பகவானைச்‌ சேர்த்து பகவானது அருளைப்‌ பெறுகிறோம்‌. பலன்‌ அளிப்பது பகவான்‌.

இவனது அனுபவங்கள்‌ இவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்கள்‌ பகவானால்‌ படைக்கப்‌ பெறுவன, 
இவன்‌ தூங்குமிடம்‌ ஹிதா, புரீதக்‌, பரமாத்மா ஆகிய மூன்று. 
தூங்கிய ஜீவனே தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறான்‌; வேறொருவன்‌ என்பதில்லை. 
மூர்ச்சை என்பது விழிப்பு, கனவு, தூக்கம்‌, மரணம்‌ ஆகிய நிலைகளைக் காட்டிலும்‌ வேறுபட்டது. 

பகவானை இரண்டு குணங்களாலே அறியலாம்‌. இழிவுகளுக்கு எதிர்நிலை, கணக்கற்ற கல்யாண குணங்‌ கள்‌ வாய்ந்தவன்‌. 
இக் கருத்து உபய லிங்கம்‌ எனப் பெறும்‌. உலகம்‌ பகவானுக்கு விசேஷணமாக இருந்து கொண்டு அம்சமுமாகிறது. 
பகவானைக்‌ காட்டிலும்‌ மேம்பட்ட தாகவோ அடையத்‌ தக்கதாகவோ வேறு எதுவுமில்லை. 
இவனே எல்லாக்‌ கர்மங்களுக்கும்‌ பலன்‌ அளிப்பவன்‌.

-----------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

3. 1. வித்யைகள்‌ --ஆய்வு. 

பகவானை உபாஸநம்‌ செய்யும்போது பயன்படும்‌ வித்யைகளில்‌ பகவானது குணங்கள்‌ பற்றி விசாரிப்பதால்‌ 
இப்பாதம்‌ குண-உபஸம்ஹார பாதம்‌ எனப்‌ பெறுகின்றது. 

ப்ரஹ்மத்தை அடைவதற்காக உபாஸதம்‌ செய்ய 'வித்யைகள்‌ விதிக்கப்பட்டுள்ளன. இந்த வித்யைகளுக்கு 
வேத சாகைகளில்‌ குணங்கள்‌ சில மாறுபட விவரிக்கப்‌பட்டுள்ளன. ஒரே பெயருள்ள வித்யைகளுக்கு மாறு 
பாடு கூறப்பட்டால்‌ எப்படி அநுஷ்டிப்பது என்ற சங்கை எழுகின்றது. வேதங்களிலும்‌ உபநிஷத்துக்களிலும்‌ வைச்‌ 
வாநர வித்யை, தகர வித்யை, அக்ஷர விதியை இவை இதே பெயர்களுடன்‌ வருகன்றன. ஆனால்‌ ப்ரகரண பேதம்‌ உள்ளது. 
இவைபற்றி ஒன்றில்‌ இல்லாத குணங்களை மற்றதில்‌ ,சேர்த்துக் கொள்ள வேண்டும்‌. 
இத்தகைய வித்யைகளில்‌ விதி வாக்யம்‌, பலன்‌, உபாஸிக்‌கும்‌ பரமாத்மா, பெயர்‌ யாவும்‌ ஒறுமைப்பட்டுள்‌ளன. 

 3. 4. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ இரண்டு வகையாகக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது. இந்த இரண்டு உபாஸநங்களிலும்‌ வித்யை, 
பலன்‌, ஆக்யா என்பன மூன்றும்‌ ஒன்றாக இருந்தாலும்‌, உபாஸிக்கும்‌ பொருளான ரூபம்‌ வேறுபட்டிருக்கிறது. 
ஒன்றில்‌ உத்கீதம்‌ செய்பவனிடம்‌ முக்ய ப்ராணன்‌ என்று எண்ணமும்‌, ஒன்றில்‌ கானம்‌ செய்யும்‌ உத்கீதத்திலேயே 
முக்ய ப்ராணன்‌ என்ற எண்ணமும்‌ வேண்டும்‌" என்று 'வரையிட்டிருக்கிறது. இவ்வாறு இன்னும்‌ சில இடங்‌களில்‌ உள்ளன. 
ரூபம்‌ வெவ்வேறாக இருப்பதால்‌ வித்யைகளும்‌ வெவ்வேறு என்று  காட்டப்‌ பெற்றுள்ளது
3. 3. முக்ய ப்ராணன்‌. 

முக்ய ப்ராணன்‌ மூத்தது, சிறந்தது; வாக்‌ இந்தரியத்தைச்‌ செல்வமாக உடையது (வஸிஷ்டம்‌), 
' கண்னில்‌ ப்ரதிஷ்டையாக உள்ளது (நிலைநிறுத்தப்பட்டது) காது என்ற இந்தரியத்தில்‌ ஸம்பத்தாவ்‌ உள்ளது என்று வேதங்களால்‌ சிறப்பிக்கப்படுகிறது. 
இதை' ௨பாஸிக்கும்‌ போது இது முக்ய மென்றே உபாஸிப்பதும்‌ வஸிஷ்டத்வம்‌ போன்ற குணமுடையதாகவும்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. 
இவ்வாறு மூன்று உபதிஷத்துக்களில்‌ மூவகை உபாஸநம்‌ கூறப்படுகிறது. எனினும்‌ இந்த வித்யைகள்‌ யாவும்‌ ஒன்றே. 
ஏனெனில்‌ இவை ப்ராணனின் அபிமான தேவதையாகக்‌ குறிக்கின்றன. 

3. 4. பகவானின்‌ குணங்கள்‌. 

பகவானின்‌ குணங்கள்‌ கணக்‌கில்லாதவை. இவை எல்‌லாவற்றையும்‌ வித்யைகளிலே ஓத இயலாது. 
எவற்றை எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டும்‌? பகவானின் குணங்களில்‌ சில இவனது இயல்பை நிரூபிக்கின்றன. 
இவனைப்‌ பற்றி அறிந்து கொள்ளப்‌ பயன்படுகின்‌றன-- 
ஆனந்தம்‌ முதலான குணங்கள்‌; எல்லா' வித்யைகளிலும்‌ இவை ஓத வேண்டும்‌ -இவை முக்கியமானவை யாகையாலே. 
முக்கியமான ஐந்து குணங்கள்‌: ஆனத்தமா யிகுப்‌பது, வேறுபாடின்றி இருப்பது, ஞானமயமா யிருப்பது 
'அளவற்றதா யிருப்பது, தோஷங்கள்‌ இல்லாமல்‌ இருப்‌பது 

3. 5. புண்ய பாவங்கள்‌. - 

பகவானை உபாஸநம்‌ செய்பவன்‌ பரமபதம்‌ அடையும்‌ சமயத்தில்‌ இவனது புண்ய பாவங்களைப்‌ பற்றி 
'இரண்டு கருத்துக்கள்‌ வெளிவந்துள்ளன. ஓன்று: பரமபதம்‌ அடையும்‌ உபாஸகனை விட்டு இவை நீங்குகின்‌றன. 
இது ஹாதி; மற்றது. இவை: வேறு சிலரை அடை இன்றன--இது உபாயநம்‌: அதாவது இவனது உற்றார்‌ 
அல்லது நண்பர்‌ புண்யங்களை அடைகின்றனர்‌; விரோதிகள்‌ பாவங்களை அடைகின்றனர்‌. இவை ஒவ்வொன்று 
ஒவ்வொரு சாகையில்‌ ஆதரிக்கப்படுகிறது--சிந்தனை செய்து. உபாஸதம்‌ செய்வதற்காக. 
இவற்றுள்‌ ஒன்று அங்கமாகவும்‌, மற்றது அங்கியாகவும்‌ அமைந்ததால்‌ இரண்டையும்‌ சிந்திக்கவேண்டும்‌. சில சாகைகளில்‌ 
இரண்டு கருத்துக்களும்‌ வந்துள்ளன. 

இந்தப்‌ புண்ய பாவங்கள்‌ எப்போது நீங்குகின்றன என்பதும்‌ சாஸ்த்ரங்களில்‌ ஆராயப்‌ பெற்றுள்ளது. 
முக்தன்‌ சரீரத்தை விட்டுக்‌ கிளம்பும்போதே கர்மங்கள்‌ யாவும்‌ அழிந்து விடுகின்றன. 
ப்ரஹ்மாநுபவத்தை. 'இவனுக்கு அளிப்பதற்காக அர்ச்சிராதியில்‌ ஸூக்ஷ்ம சரீரம்‌ ஏற்படுகிறது, . 
பயிர்‌ செய்வதற்காகத்‌ தேக்கிய ஏரிநீர்‌, பயிர்‌ விளைந்த பின்‌ குளிப்பது, பருகுவது போன்ற நலன்களுக்கு ஆவது போல்‌ 
கர்மங்களை அனு  பவிப்பதற்கான ஸ்தூல சரீரம்‌, கர்ம அனுபவத்திற்குப்‌ பிறகு ஸூக்ஷ்ம சரீரமகய்‌ அர்சிராதியில்‌ பயன்‌படுகிறது. 

வஸிஷ்டர்‌ முதலான அதிகாரி புருஷர்களுக்கு அவரவர்களது பதவி நீங்கும்வரையில்‌ அப்பதவிக்குக்‌ காரண 
“மான கர்மமும்‌ பதவியும்‌ தொடர்ந்து நிற்கும்‌; இப்பதவி: மூடியும்‌ வரையில்‌ அர்ச்சிராதிகதி இல்லை. 
சரீரத்தின்‌ முடிவில்‌ அர்ச்சிராதிகதி ஏற்படுவோர்க்கே கர்ம பலம்‌ அனைத்தும்‌ நீங்கும்‌. 
3. 6. வித்யைகள்‌--அர்ச்சிராதி. 
அர்ச்சிராதியைப்‌ பற்றியுள்ள வித்யைகளில்‌ உபாஸந வகையில்‌ மாறுபாடு உள்ளது. எல்லா வித்யைகளாலும்‌ 
பரம்பொருளை அடையக்‌ கூடுமாதலால்‌ அர்ச்சிராதி எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவானது. 

3. 7. உபாஸகம்‌- குணங்கள்‌. 

ஒரு வித்யையில்‌ உபாஸநத்திற்காக அஷர ப்ரஹ்மம்‌ விதிக்கப்பட்டுள்ளது. இத்த ப்ரஹ்மம்‌ மிகவும்‌ நுண்ணியது, 
எங்கும்‌ பரவியது; இந்த்ரியங்களாலே அறிய இயலாதது; வடிவாலும்‌, தேசத்தாலும்‌, காலத்தாலும்‌ 
அளவு படாதது என்று நினைக்கவேண்டும்‌ என்று, இது **அஸ்தூலத்வம்‌”' (ஸ்தூல மின்மை) என்ற குணம்‌. 
இது எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டுமா என்பது சங்கை. பகவான்‌ எல்லா குணங்களும்‌ வாய்ந்தவன்‌; 
இவை இவனது ஸ்வரூபத்தை அறியப்‌ பயன்படுவன. ஆதலால்‌ குணங்கள்‌ யாவும்‌ மளனஞ்‌ செய்தே உபாஸதம்‌ செய்ய வேண்டும்‌. 
பகவான்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பதை அறிவதற்கான குணங்கள்‌ 
எல்லா வித்யைகளிலும்‌ ஓதத்‌ தக்கவை. மற்றைய குணங்‌கள்‌ அந்த அந்த வித்யையில்‌ 'விதித்துள்ளபடி, ௮நுஸத்திக்‌க வேண்டும்‌.
3. 8. வித்யைகள்‌: பரமாத்மாவின்‌ ' சூபம்‌. 

உஷஸ்தார்‌ என்பவர்‌, “நேரே காணப்படும்‌ ப்ரஹ்ம்மாய்‌, அனைத்துயிர்களிலும்‌ அந்தர்யாமியாக இருப்பவன்‌ யார்‌??” 
என்று கேட்கப்‌ பின்‌ வருமாறு விடை கூறப்‌பட்டது: யாவர்க்கும்‌ ப்ராண வாயுவை இயங்கச்‌ செய்‌பவன்‌; 
எல்லா ஜீவர்களுக்கும்‌ அந்தராத்மா என்பது. ககோளர்‌ என்பவர்‌  விடை, 
பசி, தாகம்‌...வருத்தம்‌,மயக்கம்‌ ஆகியவற்றைக்‌, கடந்திருப்பவன்‌; மகப்‌ பேறு, செல்வப்‌ பேறு, 
உலக வாழ்க்கை இவற்றில்‌ பாசமற்றவன்‌ என்பது, இவ் விரண்டு வித்யைகளிலும்‌ ரூபம்‌ வேறுபடுகிறது; 
எனினும்‌ ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ பரமாத்மா வேறு ' என்ற ஒரே கருத்து இருப்பதால்‌,. இவற்றிற்குப்‌ பேத 
மில்லை என்பது தேறுகிறது. 

3. 9. உபாஸகம்‌-- குறிப்பு வேறுபாடு. 

சாந்தோக்‌யத்தில்‌ தகர. வித்யை பகவானுக்கு இருப்‌பிடம்‌ என்ற வித்யையும்‌, ப்ருஹதாரண்யகத்தில்‌ ஆகாசம்‌ 
இருப்பிடம்‌ என்ற வித்யையும்‌ உள்ளன. இவை வெவ்‌ வேறானவையா? ்‌ 

பிருஹதாரண்யகத்தில்‌ ஸத்ய ஸங்கல்பத்வம்‌ என்பதன்‌ விசேஷமான வசித்வம்‌ முதலானவை விவரிக்கப்‌ பெற்‌றுள்ளன; 
சாந்தோக்‌யத்தில்‌, வரும்‌ எட்டு குணங்களில்‌  ஒன்றான ஸத்ய ஸங்கல்பத்வத்தின்‌ விசேஷமே இது. 
அபஹதபாப்மத்வம்‌ போன்ற குணங்கள்‌ இங்கும்‌ காட்‌டப் பெற்‌றுள்ளன. ஆக இரண்டு வித்யைகளும்‌ ஒன்றே. 
3. 10. தஹர வித்யை, 

தஹர வித்யையில்‌ பரமாத்மாவையும்‌ அவனது கல்யாண குணங்களையும்‌ உபாஸிக்கலாம்‌ என்பது வந்துள்ளது
குணங்களை உபாஸநம்‌ செய்யும் போது தஹரஆகாசமாகிய பரமாத்மாவை மறுபடியும்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா? 
அபஹதபாப்மத்வம்‌ என்பது குணம்‌; இத்தகைய குணங்களோடு கூடியவன் பரமாத்மா? 
குணங்கள்‌ வேறு, .குணங்களை யுடையவன்‌ வேறு, ஆதலால்‌ 'இரண்டும்‌ செய்ய வேண்டியவை . 
. 
3. 11. வித்யைகள்‌ : உபாஸநம்‌ செய்யப்படும்‌ பொருள்‌. 

நாராயண அனுவாகத்திற்கு முந்திய அனுவாகத்தில்‌ தஹர வித்யை "வந்துள்ளது, இதில்‌ கூறியிருப்பது: 
பகவானுக்கு இருப்பிடம்‌ உபாஸகனது இதயத்தில்‌ இருக்கும்‌ சிறிய தாமரை. 
ஆகாசம்‌ போல்‌ அளவிட வொண்ணாததான பரம்பொருள்‌ இதனுள்‌ இருப்பவன்‌; இவனது குணங்கள்‌ உபாஸிக்க வேண்டுவன. 
நாராயண அனுவாகத்தில்‌ தாமரையின்‌ விவரம்‌ வந்துள்ளது. தலை கீழான தாமரை போன்ற இதயம்‌ கைபிடி அளவுள்ளது; 
கழுத்துக்குக்‌ ழே கொப்பூழுக்கு மேலே உள்ளது. இந்த விவரம்‌ தஹர வித்யையே விவரிப்பதா? எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவா? 
பகவான்‌ யாவரினும்‌ மேம்பட்ட வன்‌ என்ற அடையாளமே (லிங்கம்‌) எல்லா வித்யைகளின்‌ கருத்து; 
ஆகையால்‌ இவனது குணங்கள்‌ பல ஓதப்‌படுகின்றன. யாவும்‌ இவனைக்‌ குறிப்பதால்‌ வித்யைகள்‌ 
சூறிக்கும்‌ பொருள்‌ ஒன்றே என்பதே தேறும்‌, இப்‌பொருள்‌ நாராயணன்‌. 

3. 12. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ பற்றிச்‌ சல சாகைகளில்‌ வந்துள்‌ ளது--உத்கீதத்தின்‌ அவயவமான ஓம்‌ என்ற ப்ரணவத்தை உபாஸிக்கவேண்டும்‌ என்று. 
இந்த உபாஸநம்‌ எல்லா சாகைகளிலும்‌ அந்வயிக்கும்‌. மந்த்ரங்கள்‌ வேறு பட்டிருந்தாலும்‌ யாகம்‌ என்பது எல்லா சாகைகளிலும்‌ ஒன்றே. 
இதே போல்‌ உத்கீத ௨பாஸநமும்‌. 
3. 13. வைச்வாநர வித்யை--உபாஸநம்‌. 

ஒளபமந்யவர்‌ முதலான ஆறு மஹரிஷிகள்‌ கைகேய  தேசத்து அரசனிடம்‌,''வைச்வாநர ஆத்மாவை உபதேசிக்கவேண்டும்‌'” என்று கேட்டனர்‌. 
அவன்‌ உபதேசிப்பது; ஸ்வர்கம்‌ முதல்‌ பூமி ஈறாக உள்ளன தலை, கால்‌ முதலான அவயவங்களாகக்‌ கொண்ட 
வைச்வாநர ஆத்‌மாவே உபாஸிக்கத்‌ தக்கவன்‌; இதன்‌ பலன்‌ ஸர்வாத்‌மாக்களிலும்‌ இருப்பவனாய்‌ அன்னமான ப்ரஹ்மத்தின்‌ 
அனுபவமே என்றான்‌. இந்த வித்யையில்‌ உபாஸநம்‌ பூர்ணமான வைச்வாநராத்மாவா? , 
இந்த இடத்தில்‌ எல்லாம்‌ ஒரே வாக்கியமாக இருப்பதால்‌ பூர்ணமான உபாஸநமே முறை. 
இந்த வரலாற்றில்‌ மஹ ரிஷிகள்‌ முதலில்‌ உத்தாலகரைக்‌ கேட்டு அவரிடம்‌ அறிய முடியாமல்‌ அரசனை அடைந்தனர்‌ என்பது குறிப்பு. 
3. 14. மற்றைய கருத்துக்‌கள்‌. 

ப்ரஹ்ம வித்யைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றை அனுஷ்டித்‌தால்‌ போதும்‌. உத்கீதம்‌ எப்போதும்‌ யாகத்தில்‌ அங்கமாகும்‌; 
இது ப்ரணவத்தோடே கூடியிருப்பதால்‌ இத்த உபாஸநம்‌ கா்மங்களுக்கு அங்கம்‌. 
ப்ரஹ்மவித்யைகளில்‌ எதை உபாஸநம்‌ செய்தாலும்‌ மோக்ஷ பலன்‌ கிடைக்‌கும்‌. 
ப்ரஹ்மத்தை அடைவதற்குப்‌ பயன்‌படும்‌ கர்மாக்களைப்‌ பற்றிய விவரங்கள்‌ இந்தப்‌ பாதத்தில்‌ ஆராயப்‌பட்டுன்ளன. 

வெவ்வேறு சாகைகளில்‌ கூறப்படும்‌ வைச்வாநரவித்யை, தஹர வித்யை போல்வன ஒன்றே. 
கெளஷீதகி  சாந்தோக்யம்‌ இவற்றில்‌ சொல்லப்படும்‌ ப்ராண வித்யையில்‌ வேறுபாடு இல்லை; ஆகையால்‌ இந்த வித்யைகள்‌ ஒன்றே. 

பகவானுடைய குணங்களுள்‌ அடிப்படையானவை விகாரமற்‌ நிருப்பது, ஞான மயமாவது, அனந்தமாவது, 
தோஷமற்‌ நிருப்பது, ஆனந்தமா யிருப்பது--எல்லா வித்யைகளிலும்‌ அநுஸந்திக்க வேண்டும்‌. 

தைத்திரீயம்‌ நாராயணவல்லியில்‌ பதினோராவது அநுவாகம்‌--நாராயண அநுவாகம்‌ எல்லா வித்யைகளிலும்‌ உபாஸிக்க வேண்டியது. 

ப்ரஹ்ம உபாஸந வித்யையில்‌ ஸ்வரூபத்தை நிருபிக்‌கும்‌ அடிப்படை குணங்கள்‌ ஞானம்‌ ஆனந்தம்‌ போல்வன 
அனுஸந்திக்க வேண்டுவன. 
--------------

4. நாலாம்‌ பாதம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான காமத்தைப்‌ பற்றி இப்பாதத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது. 
வைராக்ய பாதத்தில்‌ மோக்ஷத்திற்குப்‌ புறம்பான பலன்களைக்‌ கருதிக் கர்மங்கள்‌ செய்யத்‌ தகாதன என்பது காட்டப்‌ பட்டது. 
இத்தகைய விருப்ப மில்லாமல்‌ செய்யும்‌ கர்மங்கள்‌ ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம்‌ என்று நிரூபிக்கப்‌ படுகிறது. 
இந்தப்‌ பாதம்‌ அங்க பாதம்‌ எனப்படுகிறது. 
4. 1. ப்ரஹ்ம வித்யையாலே மோக்ஷம்‌. 

மோக்ஷ பலன்‌ ப்ரஹ்ம வித்யையாலேயே, கர்மங்களால் அன்று  என்பது வ்யாஸரது திருவுள்ளம்‌, இதற்கு மாறான கருத்துகள்‌: 
(1) தத்வமஸி என்ற வேத வாக்கியத்தில்‌ கர்மங்கள்‌ செய்யும்‌ கர்த்தாவும்‌ ப்ரஹ்மமும்‌ ஒரே வேற்றுமையில்‌ அமைந்திருப்பதால்‌ கர்த்தாவே 
ப்ரஹ்மம்‌ எனப்படுகிறான்‌. “ஆத்மா வா அரே த்ரஷ்‌டவ்ய:”” என்பதில்‌ இந்த ஜீவாத்மாவின்‌ உண்மை ஸ்வரூபம்‌ அறிய வேண்டும்‌ என்பதால்‌ 
ப்ரஹ்ம வித்யை அறிவது கர்மத்தால்‌. 
(2) ஜநகர்‌ முதலானோர்‌ கர்மத்‌தாலேயே முக்தி அடைந்தனர்‌. 
(3) வித்யை கர்மத்திற்கு அங்கம்‌ என்று வேத வாக்கியம்‌ கூறுகிறது. 
(4) வேதங்‌களை அத்யயநம்‌ செய்த பின்பு இல்லற தர்மம்‌ என்று அறிகிறோம்‌. இல்லறத்தில்‌ இருப்பவனுக்கே கர்மங்கள்‌  உரியன. 
(5) மனிதன்‌ நூறாண்டு காலம்‌ கர்மங்களைச்‌ செய்து கொண்டே வாழ விரும்ப வேண்டும்‌. 
(6) பரம லோகம்‌ செல்பவனுடன்‌ வித்யை கர்மம்‌ இவை தொடா்‌கின்றன; ப்ரஹ்ம ஞானிகள்‌ கர்‌மமே முக்கியமாகக்‌ கொள்பவர்‌. 

விளக்கம்‌ : தத்வமஸி என்ற வாக்கியத்தில்‌ பரமாத்மா ஜீவனுக்கு ஆத்மா. ஆதலால்‌ ப்ரஹ்மோபாஸகத்தால் என்றே கருத்து; 
இது ப்ரஹ்ம வித்யையாலே, கர்மத்தாலன்று. 

காலஷேயர்களான ரிஷிகள்‌, ''வேதாத்யயநம்‌ ஏன்‌ செய்ய வேண்டும்‌?”” என்று கேட்டனர்‌. இதன்‌ கருத்து, 
ப்ரஹ்ம ஞானிகளுக்குக்‌ கர்மம்‌ அவச்யமில்லை, செய்யும்‌ கர்மம மெல்லாம்‌ வித்யையோடே என்றது விரைவில்‌ பயன்‌ கொடுப்பதாக; இத்தகைய வித்யை உத்ததமேயாகும்‌. 

கர்மங்கள்‌ செய்ய விரும்புவது வேதத்தின்‌ பூர்வ பாகத்தின்‌ அர்த்த ஞானத்தாலே; 
இது போல்‌ மோக்ஷம்‌ விரும்புவது ப்ரஹ்ம ஞானத்தைப்‌ பற்றி உத்தர பாகத்‌தின்‌ அர்த்த ஞானத்தாலே. 
ஜனகர்‌ முதலானோர் கர்மத்‌தாலே முக்தி பெற்றனர்‌ என்பதன்‌ கருத்து,முக்தி அடையும்‌ வரையில்‌ கர்மம்‌ அனுஷ்டிக்கவேண்டும்‌ என்பதே. 
கர்மம்‌ ஆயுள்‌ முழுதும்‌ செய்யவேண்டும்‌ என்ற விதி ஸந்யாஸ ஆச்ரமத்திற்கு இல்லை. 
ஆதலால்‌ மோஷ புருஷார்த்தம்‌ ப்ரஹ்ம வித்யையினாலேதான்‌, கர்மத்தாலன்று. 
4, 2. உத்கீதம்‌ - நிலை. 
உத்கீதம்‌ யாகத்திற்கு அங்கம்‌. உத்கீதத்தை ஸ்துதித்‌தால்‌ போதுமா? அது யாவற்றிலும்‌ மிக இனிமையானது 
என்ற கருத்துடன்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா?உபாஸநத்தால்‌ வீர்யமுடைய பலன்‌ ஏற்படுவதற்காகச்‌ 
சுவை யுடைமை தோக்காகக் கருதி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌ 
4. 3. உபாக்யானங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யை துதிக்கும்போது சில உபாக்யானங்‌கள்‌ ஓதப்படுகின்றன. 
*:மநுர்வை வைவஸ்வதோ ராஜா”, **“யமோ வைவவஸ்வத:'', வருண ஆதித்ய:”” என்று தொடங்குவன, 
இது மாதிரியானவை அந்த அந்த: வித்யையைத்‌ துதிப்பதற்காகவே. 
4. 4. ஸந்யாஸிகள்‌--கர்மாக்கள்‌. 
ப்ரஹ்ம லித்மையில்‌ ஸந்யாஸிகளுக்கு அதிகாரம்‌ உண்டு; யஜ்ஞம்‌ முதலியன இல்லை. 
இவர்களுக்கு ஆச்ரமத்திற்குரிய கர்மங்களே ப்ரஹ்ம வித்யையை அனுஷ்‌டிக்கப்‌ போதும்‌. 

4. 5. இல்லறம்‌-- கர்மாக்கள்‌. 

இல்லறத்திலுள்ளோர்‌ ஸந்யாஸிகளைப்‌ போலே கர்மங்கள்‌ இல்லாமல்‌ ப்ரஹ்ம வித்யை அநுஷ்டிக்கலாமா? 
வேதனம்‌ என்ற ஞானம்‌ மோக்ஷ ஸாதனமாக விதிக்கப்பட்டுள்ளது; இது த்யாநம்‌ முதலான சொற்களால்‌ சொல்லப்படும்‌ உபாஸநமே யாகும்‌. 
இது எம்‌பெருமானுக்கு உகப்பைத்‌ தரும்‌ யஜ்ஞம்‌ போல்வதால்‌ உண்டாகும்‌. ஆதலால்‌ அந்த அந்த ஆச்ரமத்திற்கான கர்மாக்கள்‌ செய்ய வேண்டும்‌. 

4.,6. இல்லறம்‌: சமதமம்‌. 
சமதமங்கள்‌ என்பது இந்த்ரியங்களை அடக்குவது. -இந்த்ரியங்களை ஒடுக்குவதால்‌ கர்மங்கள்‌ செய்ய இயலாதே என்பது சங்கை. 
“தஸ்மாத்‌ ஏவம்‌ வித்‌ சாந்தோ தாந்த: உபரத:'” என்ற வேத வாக்கியத்தில்‌ இந்த்ரியமான மனத்தை அடக்கினால்தான்‌ 
வெளி இந்த்ரியங்‌களையும்‌ அடக்கிக்‌ காம்ய கார்மங்களிலிருந்து நீங்கலாகுமே என்று வந்துள்ளது 
சமம்‌, தமம்‌ இவை மனத்தை ஒருமுகப்படுத்துகன்றன. ஆதலால்‌ இல்லறத்‌தனனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கும்‌ சமதமங்கள்‌ ஒடுக்க வேண்டும்‌. 

4. 7. அநாச்ரமிகள்‌--ப்ரஹ்ம வித்யை. 

ப்ரஹ்மசார்யம்‌, இல்லறம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌ ஆகிய இந்த நாலு ஆச்ரமங்களிலும்‌ இல்லாதவர்கள்‌ அநாச்ரமிகள்‌ 
இவர்களுக்கு ப்ரஹ்ம வித்வையில்‌ ௮திகாரம்‌ உண்டா? ரைக்வர்‌, பீஷ்மர்‌ இவர்கள்‌ அநாச்ரமிகளாகவே வாழ்ந்தனர்‌. ரைக்வரா்‌ ப்ரஹ்ம நிஷ்டராக 
இருந்தார்‌; பீஷ்மர்‌ வித்யா நிஷ்டராக இருந்தார்‌. ஐபம்‌ முதலானவை அநாச்ரமிகள்‌ விஷயத்தில்‌ அங்கமாகின்றன என்பது சாஸ்த்ரம்‌.
"**தபஸா ப்ரஹ்மசர்யேண”* என்ற இடத்தில்‌ பெண்பாலரோடு சேர்க்கை யில்லாத ஜீவாத்மாக்கள்‌ பரமாத்மாவை உபாஸித்து ஆதித்‌யனை அடைகிறார்கள்‌ என்பது காணலாம்‌. 

4, 8. ப்ரஹ்ம வித்யை : அங்கங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு ஆத்ம குணங்களாகிய சமமும்‌ தமமும்‌ அங்கங்கள்‌ என்று முன்பு கூறப்பட்டது. 
“அது முநி:*” என்ற இடத்தில்‌ முனிசப்தம்‌ வேறோர்‌ அங்கமாக விதித்துள்ளது. இது மெளனம்‌ என்ற கருத்துடையது. 
பால்யம்‌, பாண்டித்யம்‌ இவற்றோடு மூன்றாவதஈாகக கூறப்பட்ட இது பகவானுடைய திருமேனியை மனனஞ்‌ 
செய்வதற்கே. 
4. 9, ப்ரஹ்ம வித்யை--உற்பத்தி காலம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குக்‌ காரணம்‌ புண்ய கர்மங்கள்‌. -இக்கர்மங்கள்‌ செய்த உடனே ப்ரஹ்ம வித்யை உண்டாகிறதா? 
வேறே ஒரு  காலத்தில்‌ உண்டாகிறதா? அல்லது நிச்சயமில்லையா? என்பது சங்கை. 

புண்ய கர்மாக்கள்‌ செய்ததும்‌ வித்யைக்குத்‌ தடை யில்லாவிட்டால்‌ வித்யை உடனே உண்டாகும்‌; 
தடை  இருந்தால்‌ வேறொரு காலத்தில்‌ வித்யை ஏற்படும்‌. தடைகள்‌ ஏற்படுவது வலி மிக்க பூர்வ கர்மங்களாலே. 
மோக்ஷத்தைக்‌ குறிப்பாகக்‌ கொண்ட உபாஸனங்கள்‌ விஷயத்திலும்‌ தடை இல்லாமல்‌ இருந்தால்தான்‌ பலனை கைகூடும்‌. 

யாகம்‌ போன்ற கர்மாக்களோடு செய்யும்‌ பகவத் உபாஸநம்‌ மோக்ஷத்தை அளிக்கும்‌. 
இவ்வாறு பகவானுக்கு ஆராதனமான கர்மத்தில்‌  இதன்‌ ரஸத்‌துடன்‌ உபாஸிக்க வேண்டும்‌. 
ஸத்வித்யைகளில்‌ ச்வேத கேது முதலானோரது கதைகள்‌ அந்த வித்யைகளைப்‌  பு கழ்வத்ற்காக ஏற்பட்டவை. 

ஸந்யாஸிகள்‌ தங்களது கர்மங்களைச்‌ செய்யவேண்‌டும்‌, யாகம்‌ போன்றவை வேண்டியதில்லை. 
இல்லறத்திலிருக்கும்‌ முமுஷுக்கள்‌ தங்கள்‌ ஆச்ரமத்திற்கான தர்மங்களை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகச்‌ செய்யவேண்டும்‌. 

யஜ்ஞம்‌ முதலியன செய்யத்‌ தகுதியள்ளவர்களுக்கு சமம்‌, தமம்‌ இவை உபாஸநத்திற்கு அங்கம்‌. 
விதுரனுக்‌கும்‌ (மனைவி யில்லா தவனுக்கும்‌) ப்ரஹ்ம உபாஸநத்திற்கு தகுதி உண்டு. 

தங்களது ஆச்ரமத்திலிருந்து நழுவினால்  ப்ரஸ்ம உபாஸனத்திற்குத்‌ தகுதி இல்லை. , 
பசுவானது திவ்ய்  மங்களத்‌ திருமேனியைச்‌ சிந்திப்பதற்காக ப்ரஹ்ம உபாஸனத்திற்கு மெளனம்‌ அவசியம்‌
மோக்ஷத்தைக்‌ காட்டிலும்‌ வேறான பலன்களைக்‌ கருதிச்‌ செய்யும்‌ உபாஸனத்திற்குப்‌ பலன்‌ உடனே நேரும்‌ என்பதில்லை. 
 
----------------------
நாலாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

பகவானே உலகத்திற்குக்‌ காரணம்‌ என்பது முதல்‌ இரண்டு அத்யாயங்களில்‌ ஐயந்‌ திரிபற நிரூபிக்கப்‌ பட்டது. 
மூன்றாவது அத்யாயத்தில்‌ விளக்கப்பட்டது:-பகவானைப்‌ பெறுவதற்கு ஸாதனம்‌, வித்யா ரூபமான உபாஸநம்‌ என்பது. 
ஞானம்‌ மாத்திரம்‌ உபாயமன்று, இது உபாஸநத்திற்கு அங்கம்‌, பக்தி ரூபமானது, பகவானே விஷயமானது. 
இந்த வித்யையின்‌ இயல்பு, பயன்‌ இவை இந்த அத்யாயத்தில்‌ வரும்‌ விஷயமாகும்‌. 
இந்த  அத்யாயம்‌ ப்ரஹ்ம வித்யையின்‌ பலனை விளக்குகிறது, 
ஆதலால்‌ பல அத்யாயம்‌ என்பது 
இதில்‌ முதற்‌ பாதம்‌. கருமம்‌ தீரும்‌ வகையும்‌, இரண்டாம்‌ பாதம்‌ ஸ்தூல சரீரம்‌ தீரும்‌ வகையும்‌, 
மூன்றாம்‌ பாதம்‌ ஸுக்ம சரீரம்‌ தீரும்‌ வகையும்‌ கூறுவன. 
நாலாவது பாதம்‌ வெளியிடுவது? 
பகவானைப்‌ பெற்று இன்பமுறுவது, ஜீவனின்‌ இயல்பான ஸ்வரூபம்‌ முழுதும்‌ ஒளிர்வது, 
ஜீவன்‌ இவ்வுலகுக்கு மீளாமை. 
இந்த நான்கு பாதங்கள்‌ முறையே 
ஆவ்ருத்தி பாதம்‌, 
உத்கராந்தி பாதம்‌, 
கதி பாதம்‌, 
ப்ராப்தி பாதம்‌, 

ஆவ்ருத்தி பாதத்தில்‌ ப்ரஹ்ம வித்யையானது பலன்‌ கிடைக்கும்‌ வரையில்‌ ஆவ்ருத்தி செய்ய வேண்டும்‌ என்பது 
போன்ற விஷயங்கள்‌ ஆராயப்படுகின்‌றன. 

1. 1. ப்ரஹ்ம வித்யை--இதற்காகும்‌ காலம்‌. 

உபாஸநதம்‌, வேதனம்‌, த்யானம்‌ இலை ஓரே பொருளுடையன. த்யானம்‌ என்பது எண்ணெயின்‌ தாரை 
போல இடையறாமல்‌ நிகழவேண்டும்‌. இதுவே ஸ்ம்ருதி எனப்படுவது. 
இதற்கு அங்கங்கள்‌ யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, ப்ராணாயாமம்‌, ப்ரத்யாஹாரம்‌. தாரணம்‌. தேரே 
காணும்‌ நிலை வரையில்‌ உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 
1, 2. உபாஸிக்கும்‌ வகை. 

உபாஸநம்‌ செய்யும்‌ முறை, **ப்ரஹ்மம்‌ நானே?” என்று. ஐகத்‌ கர்ரணனான பகவான்‌ தனக்குச்‌ சரீர 
பூதனான ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌: 
இருளைக்‌ காட்டிலும்‌ ஒளிபோலும்‌, பாபத்தைக்‌ காட்டிலும்‌ புண்யம்‌ போலும்‌, சரீரத்தைக்‌ காட்டிலும்‌ 
ஆத்மா போலும்‌ இவ்வேறுபாடு. சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்‌டுள்ளது. பகவான்‌ ஆத்மாவுக்கு அந்தர்யாமி, 
ஆத்மாவின்‌ வெளியேயும்‌ உள்ளேயும்‌ வியாபித்திருக்கிறான்‌. ஆத்மாவை நியமிக்கிறான்‌. 
இவ்வாறு பகவானது குணங்‌களை நினைத்து இவன்‌ தனக்கு அந்தர்யாமியாக நினைத்து உபாஸிக்கவேண்டும்‌. 
ஜீவாத்மா சரீரத்திற்கு ஆத்மாவாக இருப்பதாலே '*நான்‌ மனிதன்‌''என்று கருதுகின்றது. 
இதுபோல்‌ ஜீவாத்மாவுக்கு ஆத்மாவான பரமாத்மாவை ஜீவாத்மா தான்‌ என்று கருதுவது தகும்‌. 
ஆதலால்‌ பகவானை ஆத்மா என்று உபாஸிக்கவேண்டும்‌' 

1. 3. ப்ரதீகங்கள்‌--உபாஸநம்‌, 
ப்ரஹ்மத்தின்‌ நாமம்‌, மனம்‌ போன்றவை ப்ரதீகங்‌கள்‌, இவை ப்ரஹ்மத்தைப் போல ௨பாஸகனுக்கு ஆத்மா அல்ல. 
ப்ரஹ்மம்‌ இவற்றைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தது, 
அரசனை வேலைக் காரனனாகக்‌ கருதிப்‌ பேசினால்‌ ஒன்‌றும்‌ நலம்‌ பெறுவதற்கில்லை--பெறுவது தண்டனையே 
ஆதலால்‌ ப்ரதீகங்கள்‌ ஆத்மா என்று உபாஸிக்கலாகாது. 

1. 4. உத்கீதம்‌, ஆதித்யன்‌. 
உபநிஷத்‌ வாக்கியங்களில்‌ யாகத்திற்கு அங்கமாக உத்கீத உபாஸநம்‌ சொல்லப்படுகிறது. 
உத்கீதத்தில்‌ ஆதித்யனை உபாஸிப்பதா? ஆதித்யனில்‌ உத்கீதம்‌ என்று உபாஸிப்பதா? 
உத்கீதத்தால்‌ ஆதித்யன்‌ முதலான  தேவர்களை ஆராதிப்பதால்‌ பலன்‌ கிடைக்கிறது 
அன்றியும்‌ இவர்கள்‌ உத்தீதத்தை விட உயர்ந்தவர்கள்‌. 
ஆதலால்‌ உத்கீதத்தில்‌ ஆதித்யன்‌ இருப்பதாக உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 

1, 5. உபாஸநம்‌: நிலை. 
உபாஸநம்‌ பல முறை செய்யவேண்டும்‌ என்று நிர்ணயிக்கப்பட்டது. உபாஸநம்‌ செய்பவன்‌ உட்கார்ந்தே செய்யவேண்டும்‌. 
அப்போதுதான்‌ மன ஒருமைப்பாடு தேரக்கூடும்‌; த்யானம்‌ செய்யமுடியும்‌. 
நடந்தோ நின்று கொண்டோ செய்தால்‌ ஆயாசம்‌ ஏற்படும்‌; மன ஒருமைப்‌ பாடு இராது, 

உபாஸநம்‌ த்யான ரூப மாகையாலே மன ஒருமைப்‌ பாடு இன்றியமையாதது. 
த்யானம்‌ எண்ணெயின்‌ தாரை போலே இடையறாமல்‌ தொடர்ந்து நிகழவேண்டும்‌; மன ஒருமைப்பாடின்றி இது சாத்யமாகாது. 
நினைவு வெள்ளம்‌ த்யானமாகும்‌. த்யானம்‌ செய்யும்‌ போது அசையாமல்‌ இருக்சுவேண்டும்‌. 
ஆதலால்‌ பரிசுத்தமான இடத்தில்‌ ஏகாந்தமாக உட்கார்ந்து த்யானம்‌ செய்ய வேண்டும்‌. 
மேடு பள்ளங்கள்‌ உள்ள இடமானானல் உடல்‌ அசைவும்‌, மனக்‌ கலக்கமும்‌ நேரும்‌.
1. 6. உபாஸநம்‌ தேசம்‌, காலம்‌. : 

மரணம்‌ வரையில்‌ உபாஸநம்‌ தினந்தோறும்‌ நடக்க வேண்டும்‌. சாந்தோக்யதீதில்‌ இவ்வாறே கூறியிருக்‌ கிறது: 
இவ்வாறு அனுஷ்டித்து, ஜீவன்‌ ப்ரஹ்மலோகம்‌. சேருகிறான்‌, இதினின்று மீட்சி இல்லை.

1. 7. சேர்ந்துள்ள பாவங்கள்‌. 

தாமரை இலையில்‌ ஜலம்‌ ஒட்டுவதில்லை; இதே போல்‌ ப்ரஹ்ம உயாஸகனிடம்‌ பாப கர்மம்‌ சேர மாட்டா. 
முன்னமே சேர்ந்துள்ள பாவங்கள்‌ நெருப்பி லிட்ட பஞ்சப்பொதி போல்‌ அழிந்துவிடும்‌. 
இனி வரும்‌ பாவங்கள்‌ கவனக்‌ குறைவால்‌ நிகழ்வன; அறிந்து செய்‌ வனவல்ல. 
இவை உபாஸகனிடம்‌ ஒட்டுவதில்லை. இது சாந்தோக்யத்தின்‌ கருத்து.
1. 8. புண்ணியத்தின்‌ பலன்‌. 

மோஷம்‌ பெறுவதற்குப்‌ புண்ய கர்மாக்களும்‌ தடையாவன; இவற்றின்‌ பயனை அனுபவித்தே மோக்ஷம்‌, 
ஆதலால்‌ இவையும்‌ பாவச்‌ செயல்கள்‌ போல்வன. 
சாந் தோக்யத்தில்‌: ஸர்வே பாப்மாநோ யதோ நிவர்த்தந்தே (8-41) என்ற இடத்தில்‌: புண்யமும்‌ பாப சப்தத்தால்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதலால்‌ முதலில்‌ சேர்ந்துள்ள புண்யங்கள்‌ அழிகின்றன; பின்பு நிகழ்வன ஒட்டாமல்‌ போகின்றன.
1. 9. முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு முன்‌ நேர்ந்த புண்ய பாவங்கள்‌ அழிகின்றன என்பது முன்பு கூறப்பட்டது. 
பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மம்‌--ப்ராப்த கர்மம்‌ என்பது அழியாது. 
சாந்தோக்யம்‌ (6-14-4) கூறுவது: உபாஸகனுக்கு ப்ராரப்த கார்மம்‌ மூடியும்‌ சரீரத்தின்‌ இறுதி வரை 
ப்ரஹ்மத்தை அடையக்‌ காலதாமதம்‌ ஏற்படுகிறது. அதற்குப்‌ பின்‌ ப்ரஹ்ம ப்ராப்தி . 
புண்ய பாவங்கள்‌ அழிந்தால்‌ சரீரம்‌ இல்லை. ஏனெனில்‌ சரீரம்‌ புண்ய பாவ அனுபவத்திற்கே. 
ஆதலால்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ அனுபவித்தே தீரவேண்டும்‌. 
“நூறு கோடி கல்பமானாலும்‌ பாவம்‌ அனுபவிக்காமல்‌ அழியாது” என்ற வாக்யம்‌ கர்மங்களின்‌ பலனைக் காட்டுவதற்காகவே .
ப்ரஹ்ம வித்யை யினால்‌ இவை தாமே அழியும்‌.
1. 10. நித்ய நைமித்திக கர்மாக்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ ஒட்டாமற்‌ போகின்றன என்று விளக்கப்பட்டது. 
இவை ஓட்டாவிடில்‌ நித்யமாகச்‌ செய்யும்‌ கர்மாக்களும்‌ நைமித்‌கிக கர்மாக்களும்‌ செய்யவேண்டியதில்லையே என்பு ஒரு சங்கை. 
வித்யை உண்டாவதற்காக இவை விடாமற்‌ செய்யவேணடுவன. 
வேத வாக்கியம்‌ ஓன்று: வேத அத்யனத்தாலும்‌, யஜ்ஞத்தாலும்‌, தானத்தாலும்‌, பலனைக்‌ கோராத தவத்தினாலும்‌ 
ப்ரஹ்ம ஞானிகள்‌ பரமாத்‌மாவை உபாஸிக்க விரும்புகிறார்கள்‌ என்று.
இவையாவும்‌ வித்யைக்கு அங்கங்கள்‌. வித்யை சரீரம்‌ முடியும்‌ வரையில்‌ செய்யவேண்டியது. 
இக் கர்மங்கள்‌ செய்யாவிடில்‌ இதனால்‌ விளையும்‌ பாவம்‌ மன நிலையைக்‌ குலைத்து விடும்‌. 
ஆதலால்‌ மனம்‌ தூயதாவதற்காக நித்ய நைமித்‌திகக் கர்மாக்களை எப்போதும்‌ செய்ய வேண்டும்‌.
1. 11. ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ சேரும்‌ கர்ம பலன்கள்‌. 

இவை ப்ராரப்தங்கள்‌ எனப்படும்‌. கர்மாக்களின்‌ பலன்‌ அனுபவித்தே இவை தீரும்‌; 
ஆதலால்‌ ஓர் சரீரத்‌தின்‌ முடிவில்‌ தீரும்‌ என்பதற்கல்லை; எந்த ஜன்மத்தில்‌ அழிகின்றன என்பதும்‌ சொல்ல முடியாது. 
இதுவரையில்‌ தேறிய கருத்துக்கள்‌: 
(1) ப்ரஹ்ம. வித்யைக்கு முன்‌ சேர்ந்த புண்ய பாவங்கள்‌ ஸஞ்சிதம்‌ எனப்படுவன -இவை 'வித்யையின்‌ மகிமையால்‌ அழிகின்‌றன. 
(2) ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ : கவனக்‌ குறைவால்‌ தேரும்‌ புண்ய பாவங்கள்‌ பகவானது கோபத்தை விளைவிப்பன அல்ல; 
ஆகையால்‌ ' இவை ஓட்டுவனவல்ல. 
(3) ஒரு பலனைக்‌ கருதி உபாஸகன்‌ செய்யும்‌ புண்ய கர்மாக்கள்‌ வலி மிக்க பாவ்ச்‌ செயல்களால்‌ தடைபட்‌.டால்‌, 
ப்ராரப்த கர்மங்கள்‌ முடியும்போது இவை நீங்‌ கும்‌. 
ஸஞ்சித புண்யங்களோடு இவை இவனுடைய அநுகூலரிடம்‌ சேரும்‌. 
(5) வித்யை உண்டான பின்‌ புத்தி பூர்வமாகச்‌ செய்யும்‌ பாவச்‌ செயல்களின்‌ பயன்‌, எஞ்சி யிருப்பனவாய்‌ முன்‌ சேர்ந்த 
பாவச்‌ செயல்களின்‌ பலனோடு இவனுடைய விரோதிகளிடம்‌ சேரும்‌ -இவ்வாறு பகவான்‌ சங்கல்பித்தது. 
மோஷம்‌ பெறுவதற்காகச்‌ செய்யும்‌' பகவத்‌ உபாஸநம்‌ ஆயுள் வரையில்‌ திரும்பாத திரும்பச்‌ செய்ய வேண்டும்‌. 
பகவானது ஸ்வரூபம்‌ தனக்கு ஆத்மா என்றே உபாஸிக்க வேண்டும்‌. 
மனம்‌ முதலான ப்ராக்ருதங்களை விட உயர்ந்‌தது ப்ரஹ்மம்‌, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸநங்களில்‌ மனம்‌ முதலியவற்றை ஆத்ம: எனக்‌ கருதி உபாஸிக்கக் கூடாது 
உத்தீதம்‌ முதலானவற்றில்‌ அவற்றின்‌ தேவதைகளை எண்ணி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌. 
உட்கார்த்தே உபாஸநம்‌ செய்யவேண்டும்‌; -மரணம்‌ வரையில்‌ அனுஷ்‌டிக்க வேண்டும்‌. _ 
உபாஸஷநத்தின்‌ பலனாக நேரே காணும்‌ காட்சி போன்ற நிலை அடையும்போது முன்னமே செய்த புண்ய பாவங்கள்‌ அழிந்து விடுகின்றன; 
பின்பு அறியாமல்‌ செய்யும்‌ பாவங்கள்‌ ஒட்டுவனவல்ல. பலன்‌ கொடுக்‌கத்‌ தொடங்காத புண்ய பாவங்கள்‌ கிரமமாகத் தாமே அழிந்து விடுகின்றன.

--------------------
2. இரண்டாம்‌ பாதம்‌ 

ப்ரஹ்ம உபாஸநம்‌ நிறைவடைந்த பின்‌ உபாஸகனது புண்ய பாவங்கள்‌ அழியும்‌ என்று முன்‌ பாதத்தில்‌ விளக்கி யுள்ளது. 
மரண மடையும்‌ ஜீவன்‌ மோக்ஷம்‌ பெற்ற பின்‌ அர்ச்சிராதி மார்கமாகப்‌ பரமபதம்‌ சேரும்‌ 
வகை மூன்றாம்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிதது. 
ப்ரஹ்ம வித்யையின்‌ பலனாக ஜீவன்‌ ஸுஷும்நா நாடி வழியாகச்‌ சரீரத்திலிருந்து கிளம்பும்‌ வகை (உத்க்ராத்தி) இப்‌ 
பாதத்தில்‌ ஆராயப்படுகிறது. 
2. 1. வாக்‌ இந்த்ரியம்‌. 

“வாங்‌ மநஸி ஸம்பத்யதே'” என்கிறது ஒரு வேத வாக்கியம்‌. மரணத்தின்போது வாக்‌ இந்த்ரியத்தின்‌ செயல்‌ குலைகிறது; 
இந்த இந்த்ரியம்‌ மனத்தோடு சேருகின்றது. மனத்தின்‌ செயல்‌ அடங்கவில்லை; ஆதலால்‌ செயல்‌ அடங்கிய வாக்கு இத்துடன்‌ சேருகிறது. 
வாக்‌கைப்‌ பின்பற்றி இந்த்ரியங்கள்‌ யாவும்‌ மனத்துடன்‌ சேருகின்றன. 

2. 2. மன இந்த்ரியம்‌., 

மனம்‌ அன்னமயம்‌, ப்ராணன்‌ ஜலமயம்‌ என்கிறது சாஸ்த்ரம்‌, அதாவது மனம்‌ அன்னத்தாலும்‌, ப்ராணன்‌ 
ஜலத்தாலும்‌ செயல்படுகின்றன என்பது கருத்து. 
மனம்‌ ஸாத்விக அஹங்காரத்தின்‌ விகாரம்‌, வாயு ரூபமான ப்ராணன்‌ ஆகாசத்தின்‌ விகாரம்‌, 
இந்தரியங்களோடு கூடிய மனம்‌ ப்ராணனோரடு சேர்ந்தடைகின்றது. 

2. 3. ப்ராணன்‌. 

இந்தரியங்களுடன்‌ சேர்த்த மனத்துடன்‌ இணைந்த ப்ராணன்‌ இந்த்ரியங்களுக்குத்‌ தலைவனான ஜீவாத்மாவிடம்‌ சேருகின்றது. 

ப்ராண: தேஜஸி”' என்பது சாந்தோக்ய வசனம்‌. 
யமூனை கங்கையோடு சேர்ந்ததே கடலை அடைகிறது. எனினும்‌ யமுனை கடலை அடைகிறது என்கிறோம்‌. 
இதைப்‌ போல இங்குக் கருத்து: ப்ராணன்‌ என்பது மனம்‌ இந்த்ரியங்கள்‌ இவற்றுடனேயே ஜீவாத்மாவைச்‌ சேருகிறது என்பதே. 

2. 4. பஞ்ச பூதங்கள்‌. 

“ப்ராண: தேஜஸி'' என்று முன்பு கூறப்பட்டது. 
அதாவது ப்ராணன்‌ என்பது மனம்‌, இந்தீரியங்கள்‌ இவற்றுடன்‌ தேஜஸ்ஸைச்‌ சேருகின்றது.
தேஜஸ்‌ என்பது பூதங்‌களின்‌ சேர்க்கையாலே ஏற்படுகிறது என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
தேஹத்திலிருந்து கிளம்பும்‌ ஜீவன்‌ பஞ்சபூத மயம்‌ என ப்ருஹதாரண்யகம்‌ வெளியிட்டுள்ளது (6-4-5) 
“-ப்ருத்வீமய: ஆயபோமய: தேஜோமய;”” என்று பூமி, ஜலம்‌, தேஜஸ்‌ இவற்றாலானது. 
அதாவது இவை மூன்றும்‌ சேர்ந்தது தேஜஸ்‌. ஆதலால்‌ ப்ராணன்‌ பூத் ஸுிஷ்மங்களோடு சேருகின்றது என்பது தெளிவு. 

2. 5. உத்க்ராந்தி. 

உத்க்ராந்தி என்பது. சரீரத்திலிருந்து ஜீவன்‌ பிரிந்து செல்லுதல்‌. இது ப்ரஹ்ம ஞானிகளுக்கு இல்லை, 
மற்றை யோர்க்கே என்பது சிலரது கருத்து. இதன்‌ காரணம்‌: 
ப்ரஹ்ம ஞானியின்‌ மனத்திலுள்ள விருப்பங்கள்‌ நீங்குகின்றன. அப்போதே இவனுக்கு மோக்ஷம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
இதை ஆராய்ந்தால்‌ இவனிடம்‌ புண்ய பாவங்கள்‌ ஓட்டமட்டா;ஆதலால்‌ இங்கு வாழும்போதே ப்ரஷ்ம அனுபவம்‌ பெறுகிறான்‌ என்பது தேறும்‌. 
இங்கு இவ்வாறானளோர்‌ வாழும்‌ நிலையே முக்தி என்கிறார்கள்‌ 
இக்கருத்துடையோர்‌. ஜீவித்தல்‌ முக்தி இவை மாறுபட்ட கருத்துக்கள்‌; இவை இணைந்து நிகழமாட்டா. 
ஆதலால்‌  ப்ரஹ்ம ஞானிகளுக்கும்‌ உத்க்ராந்தி உண்டு என்பது தீர்வு.  

கடவல்லியிலிருந்து தெரிந்துகொள்வது ((2-8-16]); 
உடலில்‌ பல. நாடிகள்‌. உள்ளன;. இவழ்றுள்‌, ,ஸுஷும்ந. என்று நாடியின்‌ வழியாகச்‌ செல்பவன்‌ (மோக்ஷ மடைகிறான்‌, 
மற்றை நாடிகள்‌ எம்ணார மார்கங்கள்‌ என்பது. 
முக்தி அடைபவன்‌ உபாஸகன்‌. ஆதலால்‌ இவனுக்கு உத்கராந்தி உண்டு என்பது தேறுகின்றது. 

மரண நிலையில்‌ சரீரத்தில்‌ உஷ்ணம்‌ ஒரிடத்திலேயே காணப்படுகிறது; இது ஸுஷ்ம தேஹத்தின்‌ வெப்பம்‌. 
இது யாவர்க்கும்‌ உண்டு. இதனாலும்‌ உபாஸகனுக்குக்‌ உத்க்ராந்தி உண்டு எள்றறியலாம்‌. 
அர்ச்சிராதி வழி யாக உபாஸகன்‌ ப்ரஹ்மத்தை அடையும்‌ வரையில்‌ ' ப்ராணன்‌ இவனுடனேயே இயங்குகிறது. 

ஞானியைப்‌ பற்றிச்‌ சொல்லும்போது இவன்‌ மேன்‌ தோக்கிச்‌ செல்லும்‌ நாடி வழியாக (ஸு ஷும்நா) சூர்ய 
மண்டலத்தைப்‌ பிளந்து கொண்டு நான்முகனின்‌ உலகம்‌ செல்லுகிறான்‌ என்பதும்‌ சாஸ்த்ரத்தில்‌ உள்ளது. 
ஆதலால்‌ ஞானிக்கும்‌ உத்க்ராந்தி உண்டு. மூர்த்ந்ய நாடியில்‌ புகுவதற்கு முன்‌ இந்த உத்க்ராந்தி இம்மூவகை 
யினர்க்கும்‌ உண்டு. 
2. 6. பூத ஸுக்ஷூமங்கள்‌. 

ப்ராணனோடு சேர்ந்த பூத ஸூக்ஷ்மங்கள்‌ எங்குச்‌ செல்கின்றன? ““தேஜ: பரஸ்யாம்‌ தேவதாயாம்‌'”' என்‌பது வேத வாக்கியம்‌. 
இதயத்திற்கு அந்தர்யாமியான பகவானிடம்‌ பூதங்கள்‌ சேருகின்றன என்பது கருத்து. 
விழிப்பு நிலையில்‌ அனுபவிக்கும்‌ இன்பங்களால்‌ விளையும்‌ களைப்பு ஆறுவதற்கே ஜீவன்‌ தூங்கும்‌ நிலையில்‌ 
பரமாத்மாவோடு சேருகிறான்‌. ஸ்ருஷ்டியில்‌ அனுபவிக்கும்‌ இன்ப துன்பங்களின்‌ களைப்பு ஆறுவதற்கு ப்ரளய 
காலத்தில்‌ ஜீவன்‌ பசகவானோடு சேருகிறான்‌. மரண காலத்தில்‌ பூத ஸுிஷ்மங்கள்‌ எடுக்கப்படும்போது 
(நேரும்‌ களைப்பு ஆறுவதற்கு ஜீவன்‌ பரமாத்மாவோடு சேருகிறான்‌. இதுபோல்‌ பூத ஸக்ஷ்மங்கள்‌ இதயத்தி 
லுள்ள பரமாத்மாவோடு சேருகின்றன. 'இவைகளோடு சேர்ந்த. ஜீவன்‌!.அந்தர்யரமியான பரமாத்மாவை 
விட்டுப்‌ பிரிய முடியாதவாறு.சேருகிறான்‌.. 

2. 7. ப்ரஹ்ம ஞானிக்கு உத்க்ராந்தி. 

ப்ரஹ்மஞானி ' உபாஸநம்‌, செய்யும் போது தான்‌ மூர்தந்யநாடி.வழியாகச்‌ சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி 
அர்ச்சிராதி மார்கத்தாலே: சென்று பரமாத்மாவை அடையப்‌ போவதாக தினந்தோறும்‌ இதையே சிந்தனை 
செய்வதால்‌ பகவான்‌ இதையே இவனுக்கு அருள்‌கிறான்‌. 
இவனது இதயத்தில்‌ இருள்‌ நீங்கி இந்த மூர்தந்ய நாடி யில்‌ ஒளி: சேருகிறது. 
இந்த ஒளியால்‌ இந்த நாடியின்‌  வ்ழியே ஜீவன்‌ கிளம்புகிறான்‌. . 

2. 8. ஜீவன்‌ மேலே செல்லும்‌ விதம்‌. 

சரீரத்தை விட்டு வெளிக்‌ இளம்பும்‌ ஜீவன்‌ சூர்ய கிரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
சூர்ய கிரணங்கள்‌. இரவில்‌ காண்பதில்லை; ஜீவனின்‌ நிலை என்ன? என்ற சங்கை எழுகின்றது. 
இரவு வேளையிலும்‌  சூரிய கிரணங்கள்‌ உள்ளன; கண்ணுக்குப்‌ புலனாவ தல்ல. 
இரண்டு கிராமங்களை இணைக்கும்‌ நெடுஞ்‌ சாலை போல்‌ சூரிய கரணங்கள்‌ மேலுலகையும்‌ பூமியையும்‌ இணைக்கின்றன. 
இவை. நாடிகளிலும்‌ ப்ரகாஸி க்‌கின்றன. ஆதலால்‌ ப்ரஹ்மஞானி இரவில்‌ மரணமடைந்தாலும்‌ 
சூரிய கரணங்களின்‌ வெளிச்சத்தாலே மேலே. சென்று பரமாத்மாவை அடைகிறான்‌, 
2. 9. இரவில்‌ ஜீவன்‌ மரண மடைந்தால்‌? 

மோக்ஷ மடையும்‌ ஞானிக்குச்‌ சரீரத்தோ டிருக்கும்‌ வரையில்‌ கார்மத்தோடு தொடர்புண்டு. 
சரீரத்திற்குக்‌ காரணமான ப்ராரப்த கர்மம்‌ இரவிலும்‌ முடிவடையும்‌ ; அப்போது மரணம்‌ நேரும்‌. 
இவ்வாறு மரணம்‌ நேரும்‌ போதே மோக்ஷமும்‌ நேரும்‌. 
இவனுக்குச்‌ சரீர சம்பந்தத்‌திற்குக்‌ காரணமில்லை; ஆதலால்‌ இரவில்‌ இறத்தாலும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு, 

2.10. தஷிணாயனத்தில்‌ மரணம்‌. 

தஷிணாயனத்தில்‌ மரணமடைந்தால்‌ ஜீவன்‌ சந்த்‌ரனை அடைகின்றான்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது, 
சந்த்ரனை அடைந்தால்‌ ஸம்ஸார மண்டலத்திற்கு மீட்சியும்‌. சொல்லப்படுகிறது. 
பீஷ்மர்‌ தஷிணாயனத்தில்‌ மரண மடைய விரும்பாதவராய்‌ உத்தரர்யணத்தை நோக்கிக் கொண்டிருந்தார்‌. 
ஆதலால்‌ தக்ஷிணாயனத்தில்‌ மரணமடையும்‌ உபாஸகனின்‌ நிலை என்ன? 

சந்த்ரனிடம்‌ சேர்ந்து பூமிக்கு மீள்வது என்று சொல்‌லியது ப்ரஹ்மஞான மில்லாதவனுச்கு: 
இரவில்‌: மரணம்‌  ஏற்பட்டால்‌ ப்ரஹ்மஞானி சந்த்ரனை அடைந்து சிறிது  தேரம்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்று 
மேலே செல்லுகிறான்‌ என்பதே ஊகிக்கவேண்டியது. 
பீஷ்மர்‌ தாம்‌ இஷ்டப்பட்ட காலத்தில்‌ மரண மடையக்கூடும்‌ என்ற வரம்‌ பெற்றிருந்தார்‌. 
உத்தராயண காலத்தின்‌ சிறப்‌பைக்‌ காட்டுவதற்கே அவர்‌ இதை அபேஷித்தார்‌. 

மரண மடையும்‌ ஜீவனுடைய வாக்‌ இந்த்ரியம்‌ மனத்‌துடன்‌ சேருகின்றது;மனம்‌ ப்ராணனோடு சேருகின்றது. 
ப்ராணன்‌ ஜீவனோடு சேருகின்றது. ஜீவனோடு கூடிய ப்ராணன்‌ மற்றைய பூதங்களோடு தேஜஸ்ஸோடு சேருகின்றது.
யாவும்‌ பரமாத்மாவோடு சேருகின்றன; லயமடையவில்லை. ஜீவன்‌ மூர்தந்ய நாடி வழியாக வெளி வருகின்றான்‌; 
இது உத்காந்தி ஆகும்‌. ஜீவன்‌ சூர்யனின்‌ கரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
இரவில்‌ மரண மடைந்தாலும்‌, தஷிணாயனத்தில்‌ மரண மடைந்தாலும்‌ உபாஸகனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு. 
----------

ப 3. மூன்றாம்‌ பாதம்‌ 

3.1. அர்ச்சிராதி. 
ஜீவன்‌ இதயத்தை விட்டு வெளி வந்ததும்‌ செல்லும்‌ மார்கம்‌ அர்ச்சிராதி என்பது. இந்த வழியில்‌ இவனை 
அழைத்துச்‌ செல்லும்‌ தேவர்கள்‌ அர்ச்சிஸ்‌ (அக்நி), அஹஸ்‌ (பகல்‌), சுக்லபக்ஷம்‌, உத்தராயணம்‌, ஸம்வத்‌ஸரம்‌ (ஆண்டு), 
ஆதித்யன்‌, சந்த்ரன்‌, வைத்யுதன்‌ (மின்‌னல்‌), வருணன்‌, இந்தீரன்‌,ப்ரஹ்மா. உபதிஷத்துக்களில்‌ சில வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ 
அர்ச்சிராதி மார்கம்‌ ஒன்றே வெவ்வேறல்ல. 

ஃ. ஆதிவாஹிகர்‌. 

ப்ரஹ்ம ஞானியை அர்ச்சிராதி கதியில்‌ அழைத்துசி செல்லும்‌ தேவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
"இவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ ஸ்தானம்‌ வரையில்‌ அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌. வித்வத்‌ புருஷன்‌ அமாநவன்‌ எனப்படும்‌ தேவன்‌? 
இவன்‌ முக்தனை பகவானிட்ம்‌ அழைத்துச்‌ செல்லுகிறான்‌. 
3. 9. அர்ச்சிராதி கதியில்‌ செல்வோர்‌ யார்‌? 

ப்ரஹ்ம உபாஸநம்‌ செய்தோர்‌ ப்ரஹ்மத்தை அடைகின்றனர்‌ அர்ச்சிராதி வழியாக. 
கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாஸிப்பவர்கள்‌ ப்ரஹ்ம லோகத்தை அடைகின்றனர்‌. 
ப்ரஹ்மாவின்‌ ஆயுட்காலம்‌ வரையில்‌ அங்குத்‌ தங்கி அவன்‌ பரமாத்மாவிடம்‌ போகும்போது உடன்‌ செல்லுகின்றனர்‌. 
இதுபாதரி என்பவரின்‌ கருத்து. 
தேவதாந்த்ர உபாஸனம்  செய்வோர்‌. அல்பமான, தாழ்‌வான பலனே பெறுவர்‌. 
கேவலம்‌ அத்மாவையே உபாஸனம் செய்வோர்க்கு நித்யமான பலன்‌ கிடைத்தாலும்‌, இவர்களது இன்பம்‌ அல்பமானது, ஓரளவு உடையது. 
பஞ்சாக்நி வித்யாநிஷ்டர்‌ ப்ரஹ்மத்தை அத்தர்யாமி யாகக்‌ கருதுவதால்‌ இவர்களுக்கும்‌ அர்ச்சிராதி உண்டு. 

சுருக்கம்‌ 
ப்ரஹ்ம வித்யைகளை உபாஸிப்பவர்கள்‌ எந்த வித்‌யையாயினும்‌ ஒரே அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்‌டம்‌ சேருகின்றனர்‌. 
முக்த் புருஷன்‌ ஸம்வத்ஸரத்‌தை அடைத்த பின்‌ வாயுவை அடைந்து ஆதித்யனை அடைகிறான்‌; 
தடித்‌ என்ற மின்னலுக்குப்‌ பின்பு வருணன்‌, இந்த்ரன்‌, பிரமன்‌ இவர்களை அடைகிறான்‌. 
அர்ச்சிஸ்‌ முதலான தேவர்கள்‌ முக்த்‌னை ஆங்காங்கு அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌; இவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
ப்ரஹ்ம உபாஸகர்களையும்‌, தம்‌ ஆத்மாவை உபாஸிக்கும்‌ கேவலர்களையுமே ஆதிவாஹிகர்‌ அழைத்துச்‌ “செல்கின்றனர்‌. 
--------------
4, நாலாம்‌ பாதம்‌ 
4. 1. ஜீவன்‌--ஸ்வரூபம்‌. 

அர்ச்சிராதி கதியில்‌ செல்லும்‌ ஜீவன்‌ பரமாத்மாவை  அடைத்து தனது இயல்பான ரூபத்துடன்‌ மின்னுறான்‌ என்று சாந்தோக்யம்‌ கூறுகிறது (8-12-2).
ரூபம்‌  என்பதற்குப்‌ புதிதாக ஒரு சரீரம்‌ என்பது கருத்தன்று, -இவனது ஸ்வரூபமும்‌ விரிவடைந்து விளங்குகிறான்‌. 
இவனுக்கு எப்போதும்‌ நிலையானது பூர்ணமான ஞானம்‌. சரீரத்தோடு இருக்கும்போது இந்த ஞானம்‌ மறைக்கப்படுகிறது. 
சரீரத்திலிருந்து விடுபட்டதும்‌  இது பூர்ணமாக விளங்குகிறது. 
ஜீவனது ஸ்வரூபம்‌?  பாவம்‌, மூப்பு, மரணம்‌, வருத்தம்‌, பசி, தாகம்‌ இவை யாவும்‌ அற்றது; 
தடைபடாத்‌ விருப்பங்களும்‌ சங்கல்பங்‌ களும்‌ வாய்ந்தது. 
இந்த எட்டு குணங்களும்‌ முக்தி  நிலையில்‌ முற்றிலும்‌ விளங்குகின்றன. 
ரத்னத்திலிருந்து  அமுக்கை அகற்றினால்‌ அது நன்றாக ஒனிர்கன்றது; புதிதாக ஓளி கொள்ளவில்லை. 
கிணற்றிலிருந்து மண்ணை  வெளியேற்றினால்‌ தண்ணீர்‌ தோன்றுகிறது; இதுமுன்பு இருந்ததே; புதிதாக ஊறவில்லை. 
இதுதான்‌ முக்தனுடைய ஸ்வகூபம்‌. 

4, 2, முக்தனின்‌ அனுபவம்‌. 
தத்வமஸீ”'--அந்தப்‌ பொருள்‌ நீ ஆகிறாய்‌, 
“அய காத்மா ப்ரஹ்மா''-- இந்த ஆத்மா பரஹ்மமே ஆகும்‌- 

இவைபோன்ற வாக்கியங்கள்‌ ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌. "ஒற்றுமையை வெளியிடுகின்றன. 
மேலும்‌ சில வாக்கி யங்கள்‌, பகவானுக்கு ஜீவன்‌ சரீரம்‌, பகவான்‌ ஜீவாத்மா வில்‌: உள்ளும்‌ புறமாகவும்‌ அடர்ந்திருக்கிறான்‌, 
இவனை ஜீவாத்மா அறியமாட்டான்‌ என்று வேற்றுமையைக்‌ 'குறிக்கின்றன. 
பகவானுக்கு உள்ள எட்டு குணங்கள்‌ முக்த ஜீவனுக்கும்‌ உள்ளன என்ற கருத்தும்‌ வந்துள்ளது. 
இவற்றை ஆராய்ந்தால்‌ தேறுவது: முக்தனது இயல்பு, இவனது குணங்களால்‌ பகவானோடு ஓத்தது என்பதே. 
இவனும்‌ பகவானும்‌ ஒன்றே என்பது பொருந்தாது. 
4. 3. முக்த ஜீவனின்‌ ஸ்வரூபம்‌. 
முக்தி அடையும்‌ ஜீவனைப்‌ பற்றி சாந்தோக்யம்‌ (4-7-1) வெளியிட்‌டுள்ளவாறு: 
பாவ மற்றவன்‌, யாவகை ஆனந்தமும்‌ போன்ற குணங்கள்‌ ஜீவன்‌ பெறுகிறான்‌ 
என்பதால்‌ இவனது ஞானமும்‌ சொல்லப்படுகிறது. 
உப்புக்கட்டியானநு உள்ளும்‌ புறமும்‌ நடுவும்‌ ஒரே உவர்ப்பு மயமாக இருப்பது போல்‌ முக்தனது ஞானமும்‌ 
முழுதாக எங்கும்‌ அடர்ந்துள்ளது. 

4. 4. ஜீவன்‌-- ஸத்ய ஸங்கல்பம்‌. 
முக்தி நிலையில்‌ ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பம்‌ என்ற குண  மூடையவன்‌ என்று அறிகிறோம்‌. 
“£ஸ தத்ர பர்யேதி ஐத்‌ இரீடந்‌ ரமமாண: ஸ்த்ரீ பிர்வா யாநைர்‌ லா  ஜ்ஞாதிபிர்‌ வா?” ஜீவன்விளையாடிக்கொண்டு களித்து, 
ஸ்த்ரீகளோடும்‌, வாகனங்களிலும்‌, உற்றாரோடும்‌ இன்ப முறுகிறான்‌ என்கிறது சாந்தோக்யம்‌ (9-72-22). 
இவ்வாறு முக்தன்‌ செயல்படுவது தனது ஸங்கல்பத்தா லேயே? வேறு முயற்சி எதுவும்‌ கொள்வதில்லை. 

சங்கை: முக்தன்‌ ஸ்த்ரீகள்‌ முதலோருடன்‌ களிப்பதாகக்‌ கூறுவதால்‌ இவனுக்குக்‌ கர்மத்தோடு தொடர்பு -திகழக்கூடும்‌.  

விளக்கம்‌ : ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பன்‌ என்பதால்‌  இவன்‌ பகவானைத்‌ தவிர வேறு எதற்கும்‌ வசப்பட்டவன்‌ அல்லன்‌; 
ஆதலால்‌ இவனுக்கு விதி, தடை என்பன இல- 
ஆக இவன்‌ கர்மம்‌ முதலான எதற்கும்‌ வசப்படுவதில்லை- இவன்‌ நிலையாக அனுபவிப்பவை 
பகவானது ஸெளந்தர்‌யம்‌, சல்யாண குணங்கள்‌, இருவடிகளில்‌ கைங்கர்யம்‌ செய்வது போல்வன. 
4. 5. முக்தன்‌ --சரீரம்‌, இந்த்ரியங்கள்‌. 

தனது ஸங்கல்பத்தாலே முக்தன்‌ பித்ருக்கள்‌ போல்‌வாரைப்‌ படைக்கிறான்‌ என்று முன்பு கூறப் பெற்றது. 
இவ்வாறு படைக்கும்போது இவனுக்குச்‌ சாரீரம்‌ உண்டா என்பது சங்கை.  

சரீரத்துடன்‌ இருந்தால்‌ இன்ப துன்பங்கள்‌ நீங்க மாட்டா என்பது ஒரு ச்ருதி வாக்யம்‌, அதே இடத்தில்‌ விளக்கம்‌ பெறுவது: 
இந்தச்‌ சரீரத்திலிருந்து கிளம்பி முக்தாத்மா பரஞ்சோதியான பரம புருஷனை அடைந்து இன்பமுறுகிறான்‌ என்பது. 
ஆகையால்‌ முக்தனுக்குச்‌ சரீரமில்லை என்பது ஒரு கருத்து.: 

*ஸ ஏகதா பவதி, த்ரிதா பவதி, பஞ்சதா பவதி”'-- இவன்‌ ஒரு படியாகிறான்‌, மூன்று படியாகிறான்‌, 
ஐந்துபடி யாகிறான்‌ என்பது சாந்தோக்ய வாக்கியம்‌ 
ஜீவாத்மா பல பகுதிகளாகப்‌ பிரிய இயலாது. ஆதலால்‌ பல சரீரங்கள்‌ கொள்கின்றது என்பது ஊகிக்கலாம்‌. 
இவ்‌ விரண்டு கருத்துக்களும்‌ ஏற்றுக் கொள்ள வேண்டும்‌ என்று  தீர்வு வரையப்பட்டுள்ளது.. 

ஒரு சங்கை: பரமபதத்தில்‌ முக்தன்‌ பெறுவது பரமாத்மாவை அனுபவிப்பது ஒன்றே. 
வேறு அனுபவத்‌திற்காக இவன்‌ சரீரங்களைப்‌ படைக்க எவ்வாறு விரும்புவான்‌? உலகில்‌ இருக்கும்போது ஜீவன்‌ கனவு நிலையில்‌ 
தேர்‌, அதில்‌ பூட்டப்பட்ட குதிரைகள்‌, குளங்கள்‌, ததி போன்றவற்றை அனுபவிக்கிறான்‌. 
இந்தப்‌ படைப்பு: பகவனாலே என்பது தாம்‌ அறிந்ததே, இதுபோல்‌ இவன்து அனுபவத்திற்காக பசுவான்‌ பித்ரு ஸமூகம்‌ முதிய 
வற்றைப்‌ படைக்கிறான்‌; இவ்வாறு படைப்பது முக்தனது போக ரஸத்திற்காக என்று ஊகிக்கலாம்‌. 

வேரு சங்கை : கர்ம வசப்படாத முக்தன்‌ பித்‌ருக்கள்‌ முதலோரை விரும்புவது எவ்வாறு? 

விளக்கம்‌ : பகவான்‌ தசரதன்‌, வஸுதேவன்‌ முதலோரைப்‌ படைத்து இவர்களுக்கு மகனாக லீலாரஸம்‌ அனுபவித்தான்‌. 
இதுபோல்‌ முக்கர்‌ அனுபவிப்பதற்‌கும்‌ படைக்கிறான்‌. 
அன்றியும்‌ தமது ஸங்கல்பத்தாலே முக்தர்கள்‌ இவ்வாறு படைக்கின்றனர்‌ லீலா ரஸம்‌ அனுபவிப்பதற்கு. 

வேதொரு சங்கை : முக்தன்‌ பல சரீரங்கள்‌ ஏற்றுக்‌ கொள்கிறான்‌ எனில்‌ ஒரே ஆத்மா பல சரீரங்களில்‌ எவ்‌வாறு இயங்கும்‌? 

விளக்கம்‌ : முக்தன்‌ அணு பரிமாண முள்ளவனானாலும்‌ தனது அறிவினாலேயே யாவற்றையும்‌ அறிந்து கொள்ளுமாறு பரவுகிறான்‌. 
ஓரிடத்திலுள்ள விளக்கின்‌ ஒளி எங்கும்‌ பரவுவது போன்றது இது, அன்றியும்‌ ஸெளபரீ பல வடிவங்கள்‌ எடுத்துக்கொண்டு அனுபவித்‌தார்‌ என்பது அறிவோம்‌. 
முக்தன்‌ ஓரே சமயத்தில் பல சரீரங்களையும்‌ வியாபித்து எல்லாவற்றையும்‌ அறிந்து நடத்துகிறான்‌ என்று வேதம்‌ வெளியிட்டுள்ளது. 
4. 6, முக்தனது ஐச்வர்யம்‌ : 

தனது அனுபவத்திற்காக முக்தன்‌ சரீரங்களைப்‌ படைக்கக்கூடும்‌ என்பது முன்பு கூறப்பட்டது. 
உலகங்‌களைப்‌ படைப்பதும்‌ நியமிப்பதும்‌ ஸார்வேச்வரனுக்கே உரியது என்பது விளக்கப்படுகிறது. 
உலகங்களைப்‌ படைப்பது முதலான செயல்கள்‌ ஜீவனுக்குக்‌ கூறப்பட வில்லை. 
பூதங்கள்‌ எல்லாம்‌ பரம்பொருளாலே உண்டாயின, அவனாலே வாழ்‌கின்றன, அவனிடத்தில்‌ லயமடைகின்‌றன என்றும்‌,
ப்ரஹ்மம்‌ ஒன்றாகவே இருந்தது,தான்‌ பலவாக இயங்கச்‌ சங்கல்பித்தது என்றும்‌, 
ப்ரளய காலத்‌தில்‌ நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌, பிரமனும்‌ சிவனுமில்லை என்றும்‌, 
இவன்‌ ஒருவனே யாவற்றையும்‌ நியமிக்‌கிறான்‌ என்றும்‌ வேத வாக்கியங்கள்‌ கூறுகின்றன. 
ஆதலால்‌ முக்தனது செல்வம்‌ உலகங்களைப்‌ படைப்பது, நியமிப்பது இவை நீங்கலாகவே. 

கர்மத்திற்கு வசப்படாத முக்தன்‌ எல்லா உலகங்களிலும்‌ தனது விருப்பத்திற்கேற்ப சஞ்சரிக்கிறான்‌ என்பது 
வேதத்தில்‌ வந்துள்ளது. இவ்வாறு அனுபவிப்பதால்‌ பெறும்‌ போகம்‌ அற்பமும்‌ நிலையற்றதுமாகும்‌ என்பது சங்கை
முக்தன்‌ அனுபவிப்பது வைகுந்தத்திலுள்ள போகங்களே. ப்ராக்ருதங்களான உலகங்களை இவன்‌ 
பகவானுடைய செல்வம்‌ என்றே நினைத்து அனுபவிக்கக்‌ கூடும்‌; இது விருப்பத்தால்‌, கர்மத்‌ தாலன்று. 
உலகைப்‌ படைப்பது,காப்பது, அழிப்பது போல்வன பகவானுக்கே உரியன என்று ச்ருதிகள்‌ கூறுகின்றன. 

ஒரு சங்கை: பகவான்‌ ஸ்வதந்த்ரன்‌; இவனது செயல்களைப்‌ பற்றி எவரும்‌ கேட்பற்தற்கில்லை. 
இவன்‌ ஜீவாத்மாவை இங்குத்‌ திருப்பி ௮னுப்புவானா? 

விளக்கம்‌: பகவான்‌ இவ்வாறு அனுப்பமாட்டான்‌ என்‌பதே சித்தாந்தம்‌, வேதங்கள்‌ வெளியிடுவது: 
யாவகையான குணங்களும்‌ வாய்ந்த பகவான்‌, “நான்‌ ஒரு சேதனனையாவது பெறமாட்டேனா?'' என்ற ஆவலுடன்‌ 
அவ்வப்போது உலகைப்‌ படைக்கிறான்‌. தன்னிடம்‌ பக்தி வாய்ந்தவர்களது அஜ்ஞானத்தைப்‌ போக்கித்‌ 
தன்னை அனுபவிப்பதாகிற ப்ரஹ்மானந்தத்தை அளிக்‌கிறான்‌, தன்னை விட்டுப்‌ பிரியாமல்‌ செய்து இன்புறுகிறான்‌. 

கீதையிலேயும்‌ பசுவான்‌ இதையே வெளியிடுகிறான்‌. 
மேலும்‌ “ந ௪ பரமபுருஷ: ஸத்யஸங்கல்ப:அத்யர்த்த ப்ரியம்‌ ஜ்ஞானிநம்‌ லப்த்வா,சுதர்சிதாவர்த்த யிஷ்பதி”
*பரம புருஷனும்‌ ஸத்ய ஸங்கல்பனுமாகிய பகவான்‌ தனக்கு மிகவும்‌ ப்ரியனான ஒரு ஞானியைப்‌ பெற்று ஒருபோதும்‌ 
மீண்டும்‌ கீழே செல்ல விரும்பவே மாட்டான்‌ என்று சுவைபட வாக்கியம்‌ அமைந்துள்ளது. 
பஹுூநாம்‌ ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்ப்ரபத்யதே! வாஸ தேவஸ்‌ ஸர்வ மிதிஸ மஹாத்மா ஸுதுர்லப:!-- 
ஞானி மிகச்‌ சிறந்தவன்‌; இவன்‌ துர்லபன்‌ என்றும்‌ கருதுகிறான்‌. பல  பிறவிகளுக்குப்‌ பின்‌ அறிவு முதிரப்‌ பெற்ற ஞானி, 
வாஸ தேவனே எனக்கு உபாயம்‌, என்னால்‌ பெறப்‌ பெறுபவன்‌, எனக்கு தாரகம்‌, போஷகம்‌, போக்யம்‌*
என்று பகவானைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறான்‌, இவன்‌ விசாலமான நெஞ்சுடையவன்‌ என்றும்‌,
தனக்குக்‌ கிடைத்‌தற்‌ கரியவன்‌ என்றும்‌ கண்ணன்‌ கூறுகிறான்‌. 
ஆதலால்‌ பகவான்‌ எவ்வகையாலும்‌ முக்தனை மீண்டும்‌ உலகிற்கு அனுப்பமாட்டான்‌; இது திண்ணம்‌. 

முக்தி நிலையில்‌ முக்தன்‌ தனது இயல்பான ஞானம்‌, பாவமின்மை முதலான எட்டு குணங்கள்‌. 
யாதொரு குறைவுமின்‌றி முற்றிலும்‌ விளங்கி பகவானை அனுபவிக்‌கின்றான்‌. இவன்‌ பகவானிடமிருந்து பிரிவதில்லை 
பகவானின்‌ கைங்கர்யத்தில்‌ தோய்ந்துள்ள முக்தன்‌ தனது சங்கல்பத்தாலேயே தான்‌ விரும்பும்‌ பொருள்களை அடைகிறான்‌. 
இவன்‌ சில சமயங்களில்‌ சரீரத்தோடு கூடியவனாகவும்‌, சில சமயங்கள்‌ சரீர மில்லாதவனாகவும்‌ அனுபவிக்கிறான்‌. 
இவனுக்கு உலகைப்‌ படைப்பது போன்ற தொழில்கள்‌ இல; இவை பகவானுக்கே உள. 
பகவானோடு போகம்‌ அனுபலிப்பதாலேயே இவன்‌ சாம்யம்‌ பெறுகிறான்‌. 
இவன்‌ எப்போதாயினும்‌ எவ்‌ விதத்திலாயினும்‌ ஸம்ஸாரத்திற்கு மீள மாட்டான்‌. 

--------------

அருஞ்‌ சொற்கள்‌ - விளக்கம்‌ 

அங்கம்‌ பிரிவு, உறுப்பு. 
அங்கை அங்கங்கள்‌ உடையவன்‌ (உடையது. 
அசேதனம்‌-- அறிவில்லாப்‌ பொருள்‌, சடப்பொருள்‌. 
அணுகாரண வாதி -உலகுக்குக்‌ காரணம்‌ பரமாணுக்‌கள்‌ என்ற கொள்கை உடையவன்‌. 
அத்வைகம்‌--லீவனும்‌ பரமனும்‌ ஒன்று என்றகொள்்‌ தை. 
அத்வைதி-- இக்கொள்கை உடையவன்‌ . 
அநாச்ரமி.-ப்ரஹ்மசரீயம்‌ முதலிய நான்கு வாழ்க்கை நிலைகளில்‌ ஒன்றிலும்‌ பொருத்தா தவன்‌. 
அதுகரணம்‌- முக்தி நிலையில்‌ பகவானைப்‌ போல்‌ குணங்கள்‌ ஜீவன்‌ பெற்று விளங்குவது. 
அரற்தராத்மா, அந்தர்யாமி-சரீரத்துள்‌ (ஆத்மாவில்‌ உறைழ்துள்ள பகவான்‌. ்‌ 
அபேத வாக்கியம்‌- ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேத மின்மையைக்‌ கூறும்‌ வேத வாக்கியம்‌. 
அமா. நவன்‌--ஆதிவா ஹிகருள்‌ ஒருவன்‌; வித்யுத்‌ புருஷன்‌? -பகவானிடம்‌ முக்தனை அழைத்துச்‌ செல்வோன்‌. 
அம்பரம்‌ --மேல்‌ ஆகாசம்‌: 
அம்ருதம்‌--அழிவில்லாமை,. 
அர்ச்சிஸ்‌ -- அக்நி; அர்ச்சிராதி மார்கத்தில்‌ மூதல்‌ தேவதை, 
அவ்யக்தம்‌ -- படைப்பின்போது பகவானிடமிருந்து தோன்றும்‌ முதல்‌ நிலை; பிரித்து, தெரியாத நிலை. 
அனுமானம்‌--இந்தீரியங்கள்‌ மூலம்‌ ஏற்கும்‌ அறிவு ஆதா. சமாக ஊளகித்தறிவது. 
அனுஷ்டானம்‌ - ஒழுக்கம்‌, பழக்கம்‌. 
௮ஸத்‌-இல்பொருள்‌; நிலை இல்லாதது. 
அஹண்‌.-பகல்‌. 
அக்ஷரம்‌-- அழிவில்லாதது. 
அக்ஷி-சுண்‌; அ௮க்ஷி புருஷன்‌ -- கண்ணினுள்‌ இருக்கும்‌. தேவதை. 
அஸ்தாலம்‌--பருமனில்லாமை (ஸ்தூலம்‌--பருமன்‌ ), 
ஆச்ரமம்‌--ஏற்கும்‌ வாழ்க்கை நிலை; ப்ரஹ்மசர்யம்‌, இல்‌லம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌. 

ஆத்மா. ஜீவன்‌. ஆத்ம குணங்கள்‌ ஆத்மாவுக்கு மேன்‌மையைக்‌ காட்டும்‌ குணங்கள்‌; சமம்‌ தமம்‌ போல்வன. 
ஆதிவாஹிகர்‌ -- முக்தனை அபர்ச்சிராதி மார்கத்தில்‌ அழைத்துச்‌ செல்வோர்‌. 
ஆதித்ய புருஷன்‌ சூரிய மண்டலத்திலுள்ள தேவதை. 
ஆனந்த மயன்‌-- கலப்பில்லாத ஆனந்தமே இயல்பாக உடையவன்‌; பகவான்‌. 
ஆனுமானிகம்‌--அனுமானத்தால்‌ தேறுவது, 

உத்க்ராந்தி--அத்மா உடலை விட்டு நீங்குவது. 
உத்ககம்‌--இசைக்கப்பெறும்‌ மந்த்ரம்‌, ப்ரணவம்‌. 
உத்தர காண்டம்‌- வேதத்தின்‌ இரண்டாம்‌ பகுதி. 
உபகரணம்‌--௨ தவிப்‌ பொருள்‌, துணைக்‌ கருவி, 
உபயலிங்கம்‌ -- இரட்டை அடையாளம்‌; பகவானது இயல்பு, குணங்கள்‌ இவை பற்றியது. 
உபாரக்யானம்‌--வேள்வியின்போது படிக்கும்‌ வரலாறு. 
உபாதானம்‌ -ஆக்கப்‌ பொருள்‌ (பானைக்கு மண்‌). 
உபாதான சாரணம்‌- - பகவானே உபாதானமாகிக்‌ காரணமாவது, 
உபாஸனை. பகவானை வழிபடும்‌ முறை; 
உபாஸகன்‌.- இவ்வாறு வழிபடுவோன்‌. 

கர்மா கா்மம்‌--செயல்‌; கா்ம--பலன்‌ செய்யும்‌ புண்ய பாவங்களின்‌ பயன்‌, 
கல்யாண குணங்கள்‌--பகவானுக்கே உரியனவான தனிப்‌ பட்ட சிறந்த பண்புகள்‌. 
காரணப்‌ பொருள்‌ பண்டம்‌ செய்வதற்குக்‌ காரணமான பொருள்‌ (பானைக்குக்‌ காரணப்‌ பொருள்‌ சுளிமண்‌ 
காரியப்‌ பொருள்‌--இவ்வகையால்‌ உருவாகும்‌ பொருள்‌ (குடம்‌ காரியப்‌ பொருள்‌). 
கார்ஹபத்யம்‌-- மூன்று வகை அக்நிகளுள்‌ வீட்டில்‌ வளர்ப்பது. 
கேவலார்‌ :- வாழ்க்கையிலிருந்து விடுபட்டுத்‌. தமது அத்மாவையே அனுபவிப்பவர்‌. 

சங்கல்பித்தல்‌-. எண்ணுவது: எண்ணுவதாலே செயல்‌ நிகழ்தல்‌. 
சங்கை--ஐயம்‌, சந்தேகம்‌. 
சரீரம்‌ -உடல்‌; சரீரி-உடலை இருப்பிடமாக உடையவன்‌. 

சாதனம்‌ - கருவி; முயற்சியால்‌ பெறுவது. 
சாரீரகம்‌- சரீரத்‌ கொடர்புடையது. 
சேதனன்‌-- அறிவுடையவன்‌, ஜீவன்‌, ஆத்மா. 

சேஷபூதன்‌-- தலைவனுக்கு அடிமையாக உரியவன்‌. 
சேஷி--தலைவன்‌ (சேஷபூதர்களுக்குர. 
சூன்யம்‌-- இல்லாமை? 
சூன்யவாதி யாவும்‌ சூன்யம்‌ என்ற கருத்துடையவன்‌. 

ச்ருதி-வேதம்‌. 

தடித்‌-- மின்னல்‌. 
தத்வம்‌--உண்மை? உள்ளதான நிலை. 
தஹரம்‌-- இதயத்தில்‌ உள்ளிடம்‌; தஹர வித்யை-இதயத்தில்‌ உறையும்‌ பகவானை வழிபடும்‌ வகை, 
தன்மாத்ரை-- பொறிகள்‌ ஒவ்வொன்றின்‌ மூலம்‌ 
தாமஸம்‌--தமோ குணத்‌ தொடர்புடையது, 
த்யுலோகம்‌-மேலுலகம்‌, ஆகாசம்‌: 

நித்யம்‌- நிலையாக வுள்ள. 
நிமித்த காரணம்‌ - -படைப்பைைச்‌ செய்பவன்‌. 
நியத்தா--ஆணையாளன்‌, நியமிப்பவன்‌, ஆள்பவன்‌. 
நிர்வஹித்தல்‌- பொறுப்புடன்‌ மேற்பார்வை யிடு தல்‌. 
நைமித்திகம்‌--சறப்பு வழிபாடு. 

பரமாணு---அணுவின்‌ பகுதி. 
பரிணாமம்‌ நிலையில்‌ மாறுபாடு. 
பரிமாணம்‌- அளவு. 
பஷ பாதம்‌-- ஓரம்‌, ஒருபக்கத்தையே ஆதரித்தல்‌. 
பாதம்‌--கால்‌ பங்கு 
பாஷ்ய- விரிவுரை, 
பாஷ்யகாரர்‌--ராமா நுஜர்‌. 
புருஷார்த்தம்‌ -பெற விரும்பும்‌ பொருள்‌. 

தம்‌ படைப்பில்‌ உண்டானது; நீர்‌, நெருப்பு, வாயு போல, 

பூத ஸுஷ்மம்‌--பதத்தின்‌ நுண்ணிய நிலை 
பூத யோநி-பூதங்களுக்குக்‌ காரணம்‌; பூத யோநி. 
அக்ஷரம்‌ -பூதங்களுக்குக்‌ காரணமான பரம்பொருள்‌ (அழிவில்லாத பகவான்‌]. 

பூமா-- பெருமை வாய்ந்தது. 

பேதம்‌--மாறுபாடு; 
பேத வாதி-ஜீவனும்‌ பகவானும்‌ : வேறு என்று கருதுவோன்‌; 
பேத வாக்கியம்‌.- இவ்வா றான பேதத்தைக்‌ காட்டும்‌ வேக வாக்கியம்‌, 

போகம்‌--இன்ப அனுபவம்‌ 
போக்தா--அனுபவிப்‌. பவன்‌. 

ப்ரக்ருதி -(மூல ப்ரக்ருதி)--படைப்பிற்கு மூல காரணமாக இகுப்பது; 
பராக்ருதம்‌-ப்ரக்ருதியில்‌ தொடா்‌ புடையது. 
ப்ரகாரம்‌--தானே ஆகும்‌ நிலை; 
ப்ரகாரி இவ்வாறு ப்ரகாரமாகுபவன்‌.  

ப்ரதிபிம்பம்‌ கண்ணாடியில்‌ (தண்ணிரில்‌ தோன்றுக, நிழல்‌. வு ர 
ப்ரமாணம்‌ சான்று. 
ப்ரமாதா- சான்றால்‌ அ௮.றிபவன்‌. 
ப்ரமிதன்‌-- கட்டைவிரல்‌ அளவுடையவன்‌. 
யப்ரமேயம்‌--சான்றால்‌ அறியப்படுவது. 
ப்ரளயம்‌--உலகங்கள்‌ யாவும்‌ பகவானிடம்‌ ஒடுங்கும்‌ நிலை, 
ப்ரஸ்மம்‌--தெய்வம்‌, பகவான்‌; 
ப்ரஹ்ம ஞானி-பக வானை நன்கறிந்தவன்‌; 
ப்ரஹ்ம காரணவாதி-- உல௫ற்குக்‌ காரணம்‌ பகவானே என்‌ கொள்கை யுடையவன்‌. 
ப்ரஹ்ம வித்யை-- பகவானை வழிபடும்‌ வகை. 
ப்ரஸித்தி--பரவிய புகழ்‌. 
ப்ராணன்‌ உயிர்‌; முக்கியமான வாயு மற்றவை அபா நன்‌, வ்யாதநன்‌, உதாறன்‌, ஸமா நண்‌. 
வ்ராப்தி- பெறுதல்‌? ப்ரஹ்ம ப்ராப்தி பகவானைப்‌ பெறுவது. 

முக்தன்‌- உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றவன்‌; 
மூக்தி-.. இவன்‌ பெற்ற விடுதலை. 

யக்ஞம்‌--யாகம்‌, வேள்வி. 
யோகம்‌--ஒன்‌ றியிருத்தல்‌;' யோகி--இவ்வா நிருப்பவன்‌. 
லயம்‌--ஓன்றுதல்‌. -ராஜஸம்‌ ரஜோ குணத்தின்‌ தன்மை. 

ரூபம்‌-- வடிவம்‌, உருவம்‌. 
விகாரம்‌ - வேறுபாடு. 
விதா நிஷ்டர்‌--வித்யையில்‌ ஊன்‌றி  நிற்பவர்‌, 
விக்யுத்‌--மின்னல்‌; விதியுத்‌ புருஷன்‌ -அமாநவன்‌ 
அிலகஷிணம்‌- தனிப்பட்ட மேன்மை. 

விஜ்ஞானம்‌--ஏறந்த அறிவு. மெய்யறிவு: 
விஜ்ஞான மயள்‌--அறிவே வடிவாக இருப்பவன்‌ (பகவான்‌). 
வைத்யுதன்‌--மின்னல்‌ வடிவமான அமான வன்‌. 
வைச்வாநரன்‌--அக்நி மயமான தேவதை? வைச்வாதர 
வித்யை-- இந்த தேவதையை வழிபடும்‌ வகை, 
வ்யக்தம்‌- தெளிவாக விளங்குகிற. 
வ்யஷ்டி ஸ்ருஷ்டி--பலபல வகையாகப்‌ படைத்தல்‌. 
ஸஞ்‌௫தம்‌-- திரண்டு ஒன்று சேர்ந்த. 
ஸத்‌-- உண்மைப்‌ பொருள்‌. 
ஸத்வம்‌- முக்குணங்களுள்‌ ஒன்று. 
ஸம்வத்ஸரம்‌--அர்ச்சிராதி மார்கத்தில்‌ ஒரு நிலை, ஆண்டு என்ற பொருளுடையது. 
ஸுஷும்நா--ஒரு நாடியின்‌ பெயா்‌; தலையின்‌ உச்சி வரையில்‌ செல்லும்‌ நாடி. 
ஸுக்ஷ்மம்‌ - நுண்ணியது. 
ஸ்வரூபம்‌ --இயல்பு. 
க்ஷ்ணம்‌ நொடிப்‌ போது. 
க்ணிகம்‌--நொடிப்‌ போதுன்ளது. 
ஜகச்சரீரன்‌--உலகு தனது சரீரமாக வுடையவள்‌, பக வான்‌. 
ஐ.டம்‌--அறிவில்லாதது. 
ஐடரம்‌--வயிறு. 
ஜாடராக்தி--வயிற்றிலுள்ள அக்நி. 
“ஜீவன்‌--ஆத்மா. 

ஸ்ரீ: ஸ்ரீம்தே ராமாநுஜாய நம:

—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் சாரம் —

January 27, 2023

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

ஸ்ரீ பாஷ்யம் அறிந்து கொண்ட பின்பே மற்ற பகவத் விஷயம் அறிந்து எடுத்து சொல்லணும்
ஸ்ரீ பாஷ்ய காரரின் ஆறு கட்டளைகளில் முதலில் இத்தையே அருளிச் செய்கிறார்
பாஷ்யத்தோன் ஈடேற பார்வை செய்தான் வாழியே-ஆள வந்தார் கடாஷித்து -இளைய ஆழ்வாரை ஆம் முதல்வன் ஆக்கி அருளினார்

ஸ்ரீ பிரணவ அர்த்தங்களை ப்ரத்யக்ஷமாக ஸ்ரீ ரெங்க விமானத்திலே தரிசித்து கொள்ளலாம்
ஸ்ரீ பாஷ்யம் மூலமும் அறியலாமே-ஜீவாத்மாக்களுடைய -அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வ ரூப ஆகார த்ரயம்

தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-

ஸ்ரீ வேத வியாசர் -ஆவேச அவதாரம் –அத்யாய சதுஷ்டயாத்மகமான சாரீரிக மீமாம்சக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மத்தை
ஜகத் ஏக காரணமாயும் -சேதன அசேதன விலக்ஷணமாயும் சர்வ சேஷியாகவும் அறுதி இட்டார் -இதுவே பிராணவார்த நிரூபணம்
மூன்றாம் அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் -என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ் சப்தார்த்த நிரூபணம் –
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் பிராப்யம் என்று அறுதி இட்டார் -இதுவே த்ருதீய பதார்த்த நிரூபணம்

காரணத்வமும் –அபாத்யத்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-இ றே அத்யாய சதுஷ்ட்யார்த்தம் –

நான்கு அத்தியாயங்களையும் –விஷய த்விகம் அல்லது சித்த த்விகம் -என்றும் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்றும் இரண்டு கூறாகப் பிரிப்பார்கள்
சித்த வஸ்துவைப் பற்றி பூர்வ த்விகமான முதல் இரண்டு அத்தியாயங்களும் விஷய த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் –
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான பக்தி ரூப ஞானமும் – நான்காவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான ப்ரஹ்ம அனுபவ ரூப ஞானமும்
விஷயியாயும் சேதன யத்ன சாத்யமாயும் உள்ள படியால் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்பர் –

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

—————–

இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சாரன்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக்கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

—————

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
7-காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
8-தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
12-ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
14-ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
16-சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

—————————–

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்

1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்

1-1-4-ஸமன்வய அதிகரணம்

1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்

1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்

1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –

1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா

1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-

இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –

அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –

சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -உத்தர மீமாம்சை -சாரீரக மீமாம்சை -நான்கு அத்யாயம் -நான்கு பாதங்கள் ஒவ் ஒன்றிலும் -ஆக 16 அத்யாயங்கள் –
156 அதிகரணங்கள்–545-ஸூ த்தரங்கள் –

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

—————

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

—————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாச அதிகரணம்
முதல் ஸூத்திரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
அத -கர்ம விசாரம் செய்து முடித்த பின்பு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது-

அத -அதற்குப் பிறகு -சங்கர பாஷ்யம் -சாதன சம்பந்தியின் ஆனந்தர்யமே -அது பொருந்தாது என்று மறுத்து-
ப்ரஹ்ம ஸ்வரூபம் பற்றி மற்றவர் தப்பாக கொள்வதை மறுத்து -லகு மகா பூர்வ பஷம் சித்தாந்தம்-

கர்ம மீமாம்சையில் அர்த்த வாத அதிகரணம் –
ஆம் நாயச்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தா நாம் தஸ்மாத நித்யமுச்யதே  -ஸூத்திரம்
கர்த்தவ்யார்த்தங்களை நியமேந போதிப்பதே வேதங்களின் க்ருத்யம்
அர்த்தவாத ரூபங்கள் -பிராமணியம் சம்பவிக்க மாட்டாது
வாயவ்யம் ச்வேதமால பேத பூதி காம -கர்மம் கர்தவ்யமாக விதிக்கப் பட்டது
அடுத்த வாக்கியம் -வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -வாயு  தேவதையின் பெருமை சொல்லும்
இது அர்த்தவாத வாக்கியம் –
கர்மம் விதிக்க வில்லை -விதி வாக்கியம் இல்லையே
விதி நாது ஏக வாக்யத்வாத் ச்துத்யர்த்தேன விதிநாம ஸ்யு-என்று முன் வாக்யத்துடன் சேர்த்து ஏக வாக்யமாக பிரமாண்யம் -ஜைமினி காட்டி அருளி
கார்யத்தில் அன்வயியாத ப்ரஹ்மம்-சித்த வஸ்துவை ஜிஜ்ஞாச்யமாக
ஸ்திரம் -அஸ்திரம் அறிந்து -அத -அத பதார்த்தம் –

———————————————————————————–

ஜன்மாத் யதிகரணம் –
ஜன்மாத்யஸ்ய யத -ஸூ த்த்ரம்
ஜந்மாதி -அஸ்ய -யத -மூன்று பதங்கள்
ஜந்மாதி -உத்பத்தி -ஸ்திதி -பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் சேதன மிஸ்ரமான பிரபஞ்சங்கள்
யத -எந்த வஸ்துவின் இடத்தின் நின்றும் ஆகின்றனவோ
அது தான் பர ப்ரஹ்மம்
தைத்ரிய உபநிஷத் ப்ருகு வல்லி-
யதோவா இமானி  பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்த்ய பி சம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ தத் ப்ரஹ்மேதி-

இங்கே பூர்வ பஷம் –
வ்யாவர்த்தகங்கள் பல -வ்யாவர்த்யமும் பலவாக வேணுமே
தேவ தத்தன் பருத்து கறுத்து யுவாவாய் செந்தாமரைக் கண்ணனாய் இருந்தான் –
அதோ பஷி இருப்பது தேவ தத்தன் கழனி-போலே மூன்றையும் ஜ்ஞாபக லஷணம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
அறிந்த தன்மை கொண்டு ப்ரஹ்மம் காட்டப் பட முடியாது -பூர்வ பஷம் –

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த -கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

——————————————————————————-

அடுத்து -சாஸ்திர யோநித்வாத் -அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் -ஸூத்த்ரம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாக கொண்டபடியால் –
அப்பஷோ வாயு பஷோ-தீர்த்தத்தை குடிப்பவன் -வாயுவை பஷிப்பவன் -சப்த்தார்த்தம்
தீர்த்தத்தை மட்டும் குடிப்பவன் -வாயுவை மட்டுமே பஷிப்பவன்-போல சாஸ்திரம் ஏவ யோனி-பிரமாணம்-

இங்குப் பூர்வ பஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு பிரமாணத்தால் ப்ரஹ்மம் சித்தித்து விட்டால் அங்கெ சாஸ்த்ரம் பிரவர்த்தியாது
பூம் யங்கு ராதிகம்   சகர்த்ருகம் –கார்த்யத்வாத் -கடவத் -அனுமான சரீரம்
வேதாந்த சாஸ்திர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் -செய்யத் தக்கது அன்று-

இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

——————————————————————————————

நான்காவது -அதிகரணம்
சமன்வயாதி கரணம்-
தத் து சமன்வயாத் -ஸூத்த்ரம்
தத் -கீழ் சொன்ன சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் -புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியால்-

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹஸ்வரூபம்-

—————————————————————————————-

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள் –
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

——————————————————————————————-

அடுத்து ஈஷத் அதிகரணம் -இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு சங்கல்ப விசேஷம் -முக்கியம்
அதேனமான பிரதானமாக இருக்க முடியாதே
ஜீவன் ஜகத் காரண வஸ்து இல்லை காட்ட -ஆனந்த மய அதிகரணம்
ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
ஆனந்தமய
அந்ய-சப்தம் மேல் உள்ள ஸூத்ரம் இருந்து வருவித்துக் கொண்டு
அப்யாசாத் -அளவு கடந்த
ஆனந்த வல்லி -துக்க மிஸ்ரமான ஜீவாத்மாவுக்கு சேராதே
தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
ச்ரோத்ரியச்ய சாகா மஹதச்ய-முக்த ஆத்மாவை சொல்லி -அகாமஹத -விஷய விரக்தன்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் செய்து ப்ரஹ்ம உபாசனம் மூலம் பெற்ற -சோபாதிகம் நிருபாதிகம் இல்லை
ச ஏகோப்ரஹ்மண ஆனந்த -இயற்கையான -ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கே-

கோஹ்யவான்யாத் க பிராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ் யேவா நந்தயாதி –
கோ வா அன்யாத்-கீழ் சொன்ன ஆகாசாதி -எந்த ஜந்து தான் ப்ராக்ருத மான ஆனந்தன் அடைய முடியும்
கோ வா பிராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
இப்படி அந்வய முகேன சொன்னதையே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய –
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் அடைகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்தம் பெற
அந்ய பந்தா ந வித்யதே -அந்த பரம புருஷனை தவிர வேறு உபாயம் இல்லை
வ்யதிரேக முகேன  சொல்லிற்று
ச யச்சாயாம் புருஷே யச்சா சா யாதித்யே  ச ஏக -அவனே ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷன்-

இதன் மேல் பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் -தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பத்வத்வம் சொல்லி
அகர்ம வச்யனுக்கு சம்பாவிகம் இல்லையே

இங்கு சித்தாந்தம்
சரீரமாக கொண்டவன் -வேத வாக்கியம் உண்டே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கைதான குணம் அவன் ஒருவனுக்கே
தயை குணத்தால் அடியார் துக்கம் கண்டு துக்கிப்பான்
இரண்டாவது ஸூத்த்ரம்
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோக –

—————————————————————————-

இரண்டாம் அத்யாயம் -சம்ருத்ய அத்யாயம்-
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத் –
கபில -சாங்க்ய மத நிரசனம் -மனு பராசர மக ரிஷிகள் வாக்யங்கள் விரோதிக்கும்

———————————————————————————-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் -க்ருத்ஸ ந ப்ரசக்தி-அதிகரணம்
பூர்வபஷ ஸூத்த்ரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வாதத்தில் ஜகத்தாக பரிணமிக்க  -ப்ரஹ்மமமோ நிர் வயவம் என்பதால்
ஏக தேச ந பரிணமிக்கிறது என்னும் பொது நிரவயவம் ஸ்ருதி விரோதிக்கும்
ப்ரஹ்மம் முழுவதுமே கார்யப் பொருளாக பரிணமிக்க வேண்டி வரும்
கீழே உபசம்ஹார அதிகரணத்தில் ஷீர திருஷ்டாந்தம் -பொருந்தாது -ஷீரம் சாவயவம் ஆகையாலே  –
மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து சப்தம் பூர்வபஷ வ்யாவர்த்திப்பிக்க வந்தது
ப்ரஹ்மம் நிரவயவம் -கார்யப் பொருளாக பரிணமிக்கும் -இரண்டும் ஸ்ருதி சித்தம்
லௌகிக பதார்த்த திருஷ்டியினால் கொள்ள முடியாது
சப்த பிரமாணம் ஒன்றாலே அறிய முடியும் -அநிர்வச நீயமான சக்தி விசேஷத்தை பொறுத்தது
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் ஆத்மநா பரிணாமம் போலே பிரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி சித்தம்-

—————————————————————————————

அடுத்த அதிகரணம் -பிரயோஜனவத்வ அதிகரணம் –
அவாப்த சமஸ்த காமன் –
இதில் முதல் ஸூத்ரம் -பூர்வபஷம்-( ஸ்ருஷ்டே ) ந பிரயோஜனவத்வாத்
மேல் சித்தாந்த ஸூத்திரம் -லோகவத் து லீலா கைவல்யம் –
மன் பல்லுயிர்களுமாய் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையான் -நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி காண்பதால் பஷபாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க –
சங்கை தீர -அடுத்த ஸூத்திரம்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் ததா ஹி தர்சயதி –
கருமங்களுக்குத் தக்கபடி -சிருஷ்டி-
இதன் மேலும் தோன்றும் சங்கைக்கு அடுத்த ஸூத்த்ரம்

——————————————————————————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
சர்வதா அநுபபத்தி அதிகரணம் –
சர்வ ஸூந்யவாதிகள் வாதம் நிரசிக்கப்படுகிறது
உத்பத்தி பாவத்தில் இருந்தா அபாவத்தில் இருந்தா
சர்வம் ஸூந்யம் என்பவர்கள் இந்த அர்த்தம் சாதிக்கும் பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பிரமாண சத்பாவத்தை இசைந்த போதே சர்வ ஸூந்ய  வாதம் தொலையுமே
அஸ்தி நாஸ்தி வாதங்கள் இங்கு இல்லை இப்பொழுது இல்லை
தேச காலங்களை சொல்லவே
சர்வதா -சர்வ பிரகாரத்தாலும்
அநுபபத்தே -சர்வ ஸூந்ய வாதம் உப பன்னம் ஆகாமையினாலே
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே-பாசுரம் ஆறாயிரப்படி  மொழி பெயர்ப்பே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்து உள்ளார்

———————————————————————————————

முதல் அத்யாயத்தினால்
ஜகஜ் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே என்றும்
நான்முகனாதிகள் லீலைக்காக சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள்
அவன் நித்ய விபூதியில் ஸ்வ இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து
நித்ய முக்தர்களினால் அனுபவிக்கப் பட்டு கொண்டு இரா நின்றான் என்கிற முகத்தால்
ஸ்வரூப ஸ்வ பாதிகள் நிரூபிக்கப் பட்டன-

இனி இரண்டாம் அத்யாயத்தில்
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக சாதித்து கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்று சாதிக்கப் பட்டது-

ஆக இரண்டாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
அடுத்து மிகுந்த ருசி உண்டாக்கி இதர விஷய வைராக்கியம் விளைவிக்க
பின்னிரண்டு அத்யாயங்கள்
ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலே அந்த அர்த்தம் சாதிக்கப் பட்டு விட்டதே
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் ஏற்படும் வைராக்கியம் கர்ம விசாரத்தினால் விளையாதே
அதனால் புன பிரயத்னம்
மூன்றாம் அத்யாயம் -கர்ம பலன்கள் நச்வரம் -நரக துல்யம் -பரமபுருஷ  பிராப்திக்கு உபாயம் தெரிவித்து
நான்காம் அத்யாயம் -உபாய பலமான உபேயத்தை தெரிவிக்கும் –

—————————————————————————————————–

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க அதிகரணம்
ஜீவாத்மா -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான
நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு
சுக துக்கங்களை அனுபவிக்கிறான் -என்று கீழே சொல்லி –
அப்படிப்பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தம் பட்டு இருந்தாலும் சுக துக்கங்கள் ஒட்டாமல்
கல்யாணக் குணக் கடலாய் இருப்பவன் என்று காட்ட இந்த அதிகரணம்
ந ஸ்தான தோபி பரஸ்யோபயலிங்கம் சர்வத்ர ஹி -தலையான ஸூத்த்ரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது
இதுக்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் -பரம புருஷன் சர்வ ஸ்ருதி ச்ம்ர்திகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாராண தர்மங்களோடு கூடியவன்
அவன் அபஹத பாப்மா   -ஆனந்தமய அதிகரணத்தில் பார்த்தோம்
அகர்மவச்யன் முதல் அத்யாயம் இரண்டாம் பாதம்
அங்கு பூர்வ பஷ சரீரம் வேறு
இவ்விடத்தில் பூர்வ பஷ சரீரம் வேறு -சூஷ்ம இஷிகையால் உணர வேணும்

———————————————————————————————

மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வ அன்ன அநு மதி அதிகரணம் –
முந்தின அதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவஸ்யகம் என்று சொல்லி
இதில் போஜன நியமம் ஆகிற நியம சம விசேஷம் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு உண்டா -விசாரம்
சர்வ அன்ன அநு மதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் -ஸூத்திரம்-

ப்ரஹ்ம வித்யா அதிகாரியின் பிராண ஆபத்து விஷயமாகையாலே -எனபது ஸூ த்ரார்த்தம்
இங்கு பூர்வ பஷம் -ப்ர்ஹ்ம வித்யா நிஷ்டனுக்கு நிஷித்த ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் என்பான்-
யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை பிராண ஆபத் தசையில்-உண்டு உயர் தரிக்கப் பெற்றான்
பிறகு அந்த யானைப் பாகன் கொடுத்த பானம் பருக வில்லை-ஆகார சுத்தி அவஸ்யகம்-

————————————————————————————

நான்காம், அத்யாயம்
மூன்றாம் அத்யாயம் உபாசன பரமாக பெரும்பாலும் செல்ல அதன் பலனை நிரூபிக்க நாலாம் அத்யாயம் அவதாரம் –
இதில் முதல் அதிகரணம் -ஆவ்ருத்த்ய அதிகரணம்
ஆவ்ருத்தி ரசக்ருதுபதேசாத் -முதல் ஸூ த்த்ரம்-

பூர்வ பஷம் -ஸ்வர்க்காதி-சக்ருத்-ஒரே தடவை போலே ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பகவத் சிந்தன ரூபமான வேதனமும் சக்ருத்
மேலே சித்தாந்தம்

தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
வேதனம்
உபாசனம்
த்ருவா ஸ்ம்ருதி
சாஷாத் காரம்
பக்தி–பர்யாய சப்த்தங்கள் –
பக்த்யா த்வ அந்யயயா சக்யா அஹமேவம் விதோர்ஜூனா-ஸ்ரீ கீதா ஸ்லோஹம் போலே
தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் என்று அறுதி இட்டு –
மேலே ஆறாவதாக -ஆப்ரயணாதி கரணம்
ஆப்ரயணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்திரம்
ப்ரஹ்ம உபாசனம் -மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் -என்கிறது –

————————————————————————————————

இனி ததிகமாதி கரணம்
தததிகம உத்தர பூர்வாகயோ ரச் லேஷ விநாசௌ தத் வ்யபதேசாத் -ஸூத்திரம்
பூர்வ பாபங்களுக்கு விநாசமமும் -நசிக்கும்
உத்தர   பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது
இங்கு பூர்வபஷம் –
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அனுபவித்தே கருமம் தொலைக்க வேணும்
சித்தாந்தம்
இது சாமான்ய விஷயம்
நெருப்பு சுடும்
தண்ணீர் நெருப்பை அணைக்கும் இரண்டும் உண்மையே-ப்ரஹ்ம வித்யை சக்தியால் கரும சக்தி பிரதிஹதமாய் விடும் –

—————————————————————————————————

நிசாதி கரணம்
நிசி மரணம் இரவில் மரணம் -அதம கதிக்கே ஹேது பூர்வ பஷம்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் யுள்ளவரைக்கும் மட்டுமே
அதனால் பாதகம் ஆகாது
திவா ச சுக்ல பஷச் ச -கீழே காட்டின வசனம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு சேராது

இனி தஷிணாயன அதி கரணம் –
ஒரே ஸூத்திரம்
தஷிணாயன மரணம் – சந்திர பிராப்தி பெற்று புநரா வ்ருத்தியும்
பீஷ்மர் ப்ரஹ்ம வித்து போல்வார் உத்தாராயண ப்ரதீஷை பண்ணினதாக சொல்லி
இதுவும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இல்லை –
ஆக நிசி மரணமோ கிருஷ்ண பஷ மரணமோ தஷிணாயன மரணமோ பரம புருஷார்த்த பிராப்தியில் குறை இல்லை –

———————————————————————————————–

முடிவான அதிகரணம்
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம்
முக்த பிரஜைக்கு ஜகத் சிருஷ்டிக்கு அதிகாரம் இல்லை
பரமபதத்தில் நின்றும் மீட்சி இல்லை -இரண்டையும் சொல்லும்
பூர்வ பஷம் முக்தனுக்கு பரம புருஷன் சாம்யம் கிட்டும்
சத்யசங்கல்பத்வமும் கிட்டும்
சர்வ லோக சஞ்சாரம் -காமாந்நித்வமும் -காம ரூபித்வமும் –
லோகங்கள் அவனுக்கு ஆதீனம்
மேல் சித்தாந்தம்
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -அசாதாரண தர்மம் லஷணம் ப்ரஹ்மத்துக்கு சொல்லி –
வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல்
பூர்த்தியாக அனுபவிப்பதே பலன்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் செய்யும் பொழுது ஆனந்த சாம்யம் இந்த ஸ்ருதியினால் சித்திக்கும்
ச ஸ்வராட் பவதி -என்பதும் கர்ம வஸ்யம்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி இத்யாதி மூலம் முக்தன் சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம்
பரம புருஷன் அதீநம் –

ஆனால் திரும்பி அவன் அனுப்புவானோ என்னில்
அநா வ்ருத்திச் சப்தாத் அநா வ்ருத்திச் சப்தாத் -சரம ஸூ த்திரம்
சாஸ்த்ரத்தை காட்டி ஸ்தாபித்தார் ஸூ த்த்ரகாரர்
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆனாலும்0
உந்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன் –
சத்யசங்கல்ப்பன் என்ற பேர் பெற்றவன்
கிருஷி பண்ணி பெற்ற சேத்னனை  விடுவானோ
பரமபுருஷம் ஜ்ஞாநினம்  லப்த்வா
யானொட்டி  என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று  என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும்
காட்கரையப்பன் கடியனே -என்றும்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக்   கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்- -முதல் நான்கு ஸூ த்திரங்கள் ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்–

December 25, 2022

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்-முதல் நான்கு ஸூ த்திரங்கள் 

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

முகவுரை
தத்துவம்
எந்த தத்தவமும் கீழ்கண்ட நான்கு விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

  1. Metaphysics (Ontology)
  2. Study of Knowledge (Etymology)
  3. Ethics
  4. Aesthetics

Meta physics (Ontology)  ஸத்தா விசாரம்
பொருளினுடைய இருப்பைப் பற்றிய விசாரம். மூன்று வகையான ஸத் இருக்கிறது. அவைகள் பாரமார்த்திக ஸத், வியாவகாரிக ஸத், பிராதிபாஸிக ஸத் ஆகியவைகளாகும். கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்தாகும்.
Study of Knowledged (Etymology) – ஞான விசாரம்; பிரமாண விசாரம்
நமக்கு அறிவு எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றிய விசாரம்.

Ethics – Study of Morality –  நீதிநெறி, ஒழுக்கவியல், நன்னெறி விசாரம்,  நல்லது-கெட்டது விசாரம்
தர்ஷணம்:

  1. நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், இறைவனைப்பற்றியும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள்.
  2. எதன் வழியாக இந்த நிச்சயத்தை அடைவோமோ அதையும் இவ்வாறாக அழைக்கப்படுகிறது.

 

மதம் வரையறை (Definition)
இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியிருப்பது. இறைவனைப் பற்றியும், இறை நம்பிக்கையை அடிப்படையில் சில மகான்களின் உபதேசத்தை மையமாகவும் கொண்டிருக்கும். இறைவனைப்பற்றிய நூல்களின் அடிப்படையில் பின்பற்றுகின்ற கருத்துக்கள். இதில் நம்பிக்கைதான் அச்சாணியாக இருக்கிறது. கடவுளைப் பற்றியும், தர்ம-அதர்மத்தைப் பற்றியும் பேசுவது. இதில் தத்துவத்தில் கூறப்படுகின்ற கருத்துக்களும் அடங்கியிருக்கிறது.
விசாரம்

*  மதத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்.

*  இதற்கெதிராக இருக்கின்ற கருத்துக்களை விசாரம் செய்தல்

*  இது அடிப்படைத்தேவைக்கு உருவாக்கப்பட்டதா அல்லது வசதிக்காக உருவாக்கப்பட்டதா?

*  மத நம்பிக்கை ஆன்மீக வளர்ச்சிக்கு, மனவளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறதா அல்லது தடையாக இருக்கிறதா என்ற ஆராய்ச்சியின் முடிவில் இரண்டும் சமவிகிதத்தில் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*  மத நம்பிக்கையினால் நல்லதை அடைவோமா அல்லது கெட்டதை அடைவோமா என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

*  மதம் மனிதனுக்கு அடிப்படைத் தேவையா அல்லது வசதிக்காக இருக்கிறதா என்று பார்க்கும் போது, அவசியமானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மனப்பக்குவத்துடன் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

*  சாத்விக நம்பிக்கையுடையவர்கள் நன்மையை அடைவார்கள். ராஜஸ, தாமஸ நம்பிக்கை உடையவர்கள் தீமையை அடைவார்கள். எனவே மனப்பக்குவத்தின் அடிப்படையில்தான் நன்மை, தீமை கிடைக்கின்றது.

மனிதர்களில் மூன்று வகையாக இருக்கிறார்கள். அவைகள்,

  1. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கையுடையவர்கள், சுயமாக சிந்திப்பவர்கள்.
  2. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கை மட்டும் உடையவர்கள்
  3. நன்னெறிவாதிகள் – மதநம்பிக்கையற்றவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள், நல்லொழுக்கமாக வாழ்பவர்கள்.

இவை மூன்றையும் சமமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்ததாகும்.

தத்துவம் என்று சொல்லும்போது அது ஆறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அவைகள்,

  1. ஜீவனுடைய தன்மை:
    2.    ஜகத் விசாரம்
    3.    ஈஸ்வரன்
    4.    பந்த ஸ்வரூபம்
    5.    மோட்ச ஸ்வரூபம்
    6.    சாதனங்கள்.-ஆகியவைகளாகும்.

————————–

ஜீவனுடைய தன்மை:

நாம் யார்? உடலழிந்துவிட்டால் ஜீவன் இருக்கின்றதா என்றெல்லாம் நம்மைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உடல் மட்டும்தான் ஜீவனாக இருக்கிறதா வேறெதாவது அதற்கப்பால் இருக்கின்றதா என்றும் விளக்கமாக பேசியிருக்க வேண்டும்.

ஜகத் விசாரம்
உலகத்தினுடைய தன்மையைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உலகத்திலுள்ள பொருட்களின் இருப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் இந்த உலகம் சத்தியமானது என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த உலகத்தை நாம் கண்ணால் பார்த்து அனுபவிக்கின்றோம். அத்வைதம் இந்த உலகம் பொய்யாக காட்சியளிக்கின்றது என்று உபதேசிக்கிறது. புத்தமதம் உலகம் சத்தியமென்றும், சூன்யமானதென்றும் கூறுகிறது.

3.   ஈஸ்வரன்
ஈஸ்வரன் என்கின்ற தத்துவத்தைப்பற்றி பேசியிருக்க வேண்டும். ஜீவ, ஜகத்திற்கு காரணமாக ஈஸ்வரன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஈஸ்வரனின் லட்சணங்களைக் கூறியிருக்க வேண்டும்.

  1.  பந்த ஸ்வரூவம்
    ஜீவன் மனநிறைவின்மையோடு இருப்பதைப் பார்க்கிறோம். சம்சாரத்திலிருப்பதைப் பார்க்கிறோம். எனவே பந்தத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும். பந்தத்தினால் சம்சாரத்தில் இருக்கின்றான். ஏன் இவ்வாறு பந்தப்படுகிறான் என்பதையும் பேசியிருக்க வேண்டும்.
  2. மோட்ச ஸ்வரூவம்
    எது மோட்ச நிலை என்பதைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் மரணமே மோட்சமென்றும், வேறுசிலர் உயர்ந்த லோகத்திற்கு செல்வதே மோட்சம் என்று கூறுகிறார்கள்.
  3. சாதனங்கள்
    ஜீவன் கடைபபிடிக்க வேண்டிய சாதனங்களைக் கூறியிருக்க வேண்டும். இவைகளை பயன்படுத்தி பந்தத்திலிருந்து விடுதலையடைந்து மோட்சத்தை அடைய முடிய வேண்டும்.

வேதாந்திகளின் தர்ஷணம் உத்தரமீமாம்ஸம் (அ) அத்வைதமாகும். இதன் மூலம் வேதாந்தம் (அ) உபநிஷத் ஆகும். அத்வைத தத்துவத்தை கற்க மூன்று நூல்களை படித்திருக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்படுகிறது. அந்த மூன்று நூல்களாவது, உபநிஷத், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவைகளாகும். இவை மூன்றையும் படித்து முடித்துவிட்டால் சாஸ்திரத்தை முழுவதுமாக படித்துவிட்டோம் என்றாகின்றது.

அத்வைத தத்துவத்தை புரிந்துக் கொள்வதற்கு மூன்று நூல்களின் வழியே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மூன்று நூல்கள் காட்டுகின்ற பாதையில் செல்ல வேண்டும்.
1வது பிரஸ்தானம்: உபநிஷத்- ஸ்ருதி பிரஸ்தானம், சப்தபிரமாணம், வேதாந்தம்

2வது பிரஸ்தானம்: பகவத்கீதை – ஸ்மிருதி பிரஸ்தானம் வேதத்தில் சொல்லப்பட்ட கருத்தை விளக்கியிருப்பது. உபநிஷத் மட்டும் போதாதா?  ஏன் ஸ்ம்ருதி பிரஸ்தானமான பகவத்கீதை படிக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே வரும். உபநிஷத்தில் முக்கியமான தத்துவத்தைப் பற்றிதான் விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். பகவத்கீதையில் இதையும் சேர்த்து அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கும்.

3வது பிரஸ்தானம்: பிரம்ம சூத்திரம் – இது நியாய பிரஸ்தானம். இதை வியாசபகவான் எழுதி இருக்கிறார். நியாயம் என்பது தர்க்கபிரதான பிரஸ்தானம். தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்காக தர்க்கமுறையை பயன்படுத்தியிருக்கிறார்.

முதலில் பிரம்ம சூத்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் பார்க்கப்படுகிறது. சூத்திரம் என்று சொல்லுக்கு நூல், புத்தகம், ரகசியம், உபாயம் மற்றும் தீர்ப்பு என்ற அர்த்தங்களும் உண்டு. இந்த இடத்தில் நூல் என்ற அர்த்தம் எடுத்துக் கொண்டால், எப்படி நூலானது மலர்களைச் சேர்த்து மாலைகளை உருவாக்க உதவுகிறதோ, அதுபோல பிரம்மத்தைப் பற்றிய விஷயங்களை மாலைப் போல் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார்.

 

  1. பிரஹ்ம பிரதிபாதகம் சூத்திரம் – பிரம்மத்தை விளக்குகின்ற புத்தகம்.
  2. பிரஹ்ம விஷயஹ சிந்தா சூத்ரியதே அனேன – பிரம்மத்தைப் பற்றிய கருத்துக்கள் கோர்வையாக தொகுக்கப்பட்ட நூலாகும்.

பிரம்ம சூத்திரத்தில் மூன்றுவகையான காரியங்கள் செய்துள்ளார். அவைகள்,

  1. ஸ்ருதி வாக்ய ஸமன்வயம் – ஸமன்வயம் என்ற சொல்லுக்கு ஒத்துப்போகுதல் என்ற அர்த்தம் உண்டு. உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப் போகின்றது என்பதை நிலைநாட்டியிருக்கின்றார். மேலும் சந்தேகத்தைக் கொடுக்கின்ற வாக்கியங்களையும், முரண்பாடுவது போல உள்ள வாக்கியங்களையும் எடுத்துக் கொண்டு அவைகளும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப்போகின்றது என்பதை  நிலைநாட்டுகின்றார். உதாரணமாக பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள வாக்கியமான ‘ஸத்யஸ்ய ஸத்யம்” என்ற வாக்கியம் சத்தியமான இந்த உலகத்திற்கு சமமாக பிரம்மம் இருக்கிறது என்று தப்பாக புரிந்து கொள்ளும் வாக்கியங்களுக்கு சரியான அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
  2. மற்ற மதங்களை நிராகரணம் செய்திருக்கிறார்.
  3. அத்வைத தத்துவத்தில் குறை சொல்பவர்களின் கருத்தை நீக்கி விடுகின்றார்.

அதிகாரி:

  1. வியாச பகவான் மீது முழு சிரத்தை வைத்திருப்பவர்கள், அடைந்த ஞானத்தில் நிலைப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இதுவொரு மனன கிரந்தமாகும். ஐந்தாவது சூத்திரத்தில் ஆரம்பித்து இறுதி சூத்திரம் வரை மனனத்திற்கு பயன்படும். முதல் நான்கு சூத்திரங்களும் அத்வைத தத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  2. உபநிஷத்தை முழுவதும் படித்திருப்பவர்கள்தான் அதிகாரி.  மனனம் செய்ய விரும்புவோர்களும் இதை படிக்கலாம்.

இனி விதவிதமான பூர்வபட்ச தர்ஷணங்கள் சிலவற்றை முகவுரையாக பார்க்கப்படுகிறது. இவைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் 1. நாஸ்திக தர்ஷணம், 2. ஆஸ்திக தர்ஷணம் ஆகும்.

நாஸ்திக தர்ஷணம்

  1. சார்வாக்க மதம் – சாரு – அழகான, வாக் – பேச்சு. இவர்களுக்கு பிரத்யக்ஷம்தான் பிரமாணம் வேறெதுவும் பிரமாணமல்ல. மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது இவர்கள் கொள்கை. இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால்தான் உருவாக்கப்பட்டது. ஆகாசம் என்றவொரு பூதமே கிடையாது. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை ஒன்று சேர்த்து சாப்பிடும் போது அந்தக் கலவை சிவப்பு வர்ணத்துடன் இருக்கிறது. இது எப்படியோ வந்திருக்கிறது. அதுபோல இந்த உடலுக்கு உணர்வு எப்படியோ வந்திருக்கிறது.

இவர்கள் ஆத்மாவை ஏற்றுக் கொள்வதில்லை. வேத சாஸ்திரத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்கள். கண்ணால் பார்த்து அனுபவிப்பதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். மூன்றுவிதமான சரீரங்கள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உணர்வு என்பது தற்காலிகமான விஷயம் என்பது இவர்கள் கொள்கை. உணர்வை மட்டும்தான் நம்புவார்கள்.

  1. ஜைனமதம்

இந்த மதத்தை தோற்றுவித்தவர் ரிஷபதேவர் ஆவார். மகாவீரர்தான் இரண்டாவது ஆச்சாரியாவார். இவர்களும் வேதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. குருதான் கடவுள் என்ற கொள்கையுடையவர்கள். ஈஸ்வரனின் லட்சணத்தையெல்லாம் குருவுக்கு கூறுவார்கள். ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்ற இரண்டு வகையினர் உள்ளார்கள். முதல்வகையினர் வெண்மை உடை அணிந்திருப்பார்கள். இரண்டாவது வகையினர் காட்டில் வசித்து கடுமையான தவம் செய்பவர்கள்.

இவர்களுடைய தத்துவத்திற்கு ஹயாத் என்று பெயர். இந்த உலகில் எந்த முடிவெடுத்தாலும் அவைகள் முழுவதுமாக இருப்பதில்லை. எல்லா முடிவுகளும் ஏதொவொரு கோணத்தில்தான் சரியாக இருக்கும். முடிவுகள் கால, தேசத்தால் வரையறைக்கபட்டவைகள். புத்தகம் இருக்கிறது என்ற வாக்கியத்தில் உள்ள இருக்கிறது என்பது தற்போது இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வேறொரு காலத்தில் அது இல்லாமல் போகலாம் என்பது அவர்களுடைய கொள்கையாகும். எல்லா உயிரினங்களையும் ஜீவன் என்று அழைக்கிறார்கள். இந்த ஜீவனை முக்தன், பத்தன் என்று மேலும் இரண்டாக பிரிக்கிறார்கள். அஜீவன் என்பது ஜடமானது என்பார்கள். அகிம்சையை முக்கியமாக பின்பற்றுபவர்கள். சிரத்தை, ஒழுக்கம் இவைகளை பின்பற்றுகிறார்கள். இவர்கள் 10 பண்புகளை பின்பற்றுகிறார்கள். அகிம்சையை பிரதானமாக பின்பற்றுகிறார்கள்.

2.1.        க்ஷமா – பொறுமையாக இருத்தல்

2.2.        வினய – பணிவு

2.3.        ஆர்ஜவம் – நேர்மை (சொல், செயல், மனம்)

2.4.        சத்யம் – உண்மை பேசுதல்

2.5.        சௌசம் – தூய்மை

2.6.        ஷம – மனக்கட்டுப்பாடு

2.7.        தப: – தவம், உபவாசம்

2.8.        த்யாக – விட்டுக் கொடுத்தல், தியாகம் செய்தல்

2.9.        வைராக்கியம் – போகப்பொருட்களுக்கு அடிமையாகமால் இருத்தல்

2.10.    ஷீலம் – ஒழுக்கமாக இருத்தல்

 

  1. புத்தமதம்

புத்தருடைய உபதேசத்தின் அடிப்படையில் பல பிரிவுகள் தோன்றியது. முதலில் 18 பிரிவுகள் இருந்தது. இறுதியில் இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கிறது. அவைகள் மஹாயானம், ஹீனயானம் ஆகும். ஹீனயான பிரிவினர் உலகத்தை சத்யம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாயான பிரிவினர் ஷணிகவாதியினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சூன்யம்தான் ஜகத் என்றும், மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் தோன்றி அழிவது போல இந்த உலகமும் தோன்றி, தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றது என்ற கொள்கை உடையவர்கள்.

நான்கு உண்மைகளை புத்தரின் உபதேசத்திலிருந்து பின்பற்றுகிறார்கள்.

3.1.     துக்கம் – இந்த உலகம் துக்கமயமானது. நாம் எப்போதும் துயரத்தில்தான் இருக்கிறோம்

3.2.     துக்க சமுதாயம் – இந்த துக்கத்திற்கு காரணம் இருக்கிறது.

3.3.     துக்க நிரோதஹ – துக்கத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

3.4.     துக்க நிரோத மார்க்கம் – துக்கத்தை நீக்கிக் கொள்ளும் வழி.

துக்கத்திற்கு காரணம் அறியாமைதான் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் வாசனைகள்தான் என்று கூறுகிறார்கள். உலகத்தோடு சம்பந்தம் வைப்பதாலும், ஆசைகளினாலும் துன்பத்தை அனுபவிக்கின்றோம். துயரத்திலிருந்து விடுதலை அடைவதுதான் மோட்சம் என்று கூறுகிறார்கள். 8 வகையான பண்புகளைக் கூறுகிறார்கள். அவைகள்,

  1. சம்யக் திருஷ்டி – சரியான கொள்கை, சரியான நோக்கு
  2. சம்யக் சங்கல்பம் – சரியான உறுதி, சரியான முடிவுகள்
  3. சம்யக் வாக் – சரியான பேச்சு
  4. சம்யக் கர்ம – சரியான நடத்தை
  5. சம்யக் ஜீவஹ – சரியான, சாமான்ய தர்மத்தை பின்பற்றி வாழ்தல்
  6. சம்யக் வ்யாயாபஹ – சரியான முயற்சி
  7. சம்யக் ஸ்ம்ருதி – நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருத்தல், கவனமாக இருத்தல்
  8. சம்யக் சமாதி – சரியான மனவொருமுகப்பாடு.

ஆஸ்திக தர்ஷணம்
ஆறுவகையான தர்ஷணங்கள் இருக்கிறது. அவைகள்,

  1. சாங்கிய மதம் – உருவாக்கியவர் கபில முனிவர்
  2. யோக மதம் – உருவாக்கியவர் பதஞ்சலி முனிவர்
    3.    நியாய மதம் – உருவாக்கியவர் கௌதம முனிவர்
    4.    வைஷேஷிக மதம் – உருவாக்கியவர் கனாத முனிவர்
    5.    பூர்வ மீமாம்ஸம் – வேதத்தின் முதல்பாகத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
    6.    உத்தர மீமாம்ஸம் – வேதத்தின் இறுதிபாகமான உபநிஷத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்

முதல் நான்கு வகையினர் வேதத்தை ஏற்றுக் கொண்டாலும் தர்க்கத்திற்குத்தான் அதிக முக்கியத்வம் கொடுக்கின்றனர்.

  1. சாங்கிய மதம்
    பிரகிருதி, புருஷன் என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றுக்கொன்று நிகராக இருக்கிறது. இவைகள் அறிவு ஸ்வரூமாக இருக்கின்றது. ஸ்ருஷ்டியைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஜகத்தும் உண்மை, புருஷனும் உண்மை என்று சொல்கிறார்கள்.
  2. யோக மதம்
    இதில் மனவொழுக்கத்தைப் பற்றி மிக நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. சித்திகள் மோட்சத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
  3. நியாய மதம்
    4.   வைஷேஷ மதம்
    இந்த இரண்டு மதங்களும் ஒன்றாகி தர்க்க சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனுமான பிராப்தி பற்றி நன்கு பேசியுள்ளார்கள்.
  4. பூர்வ மீமாம்ஸா பிரிவு
    ஜெய்மினி மகரிஷி பூர்வ மீமாம்ஸத்திற்கு சூத்திரங்கள் எழுதியிருக்கிறார்.
    அதா2தோ தர்ம ஜிக்ஞாஸா – கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள யாகங்களை, தர்ம-அதர்மத்தை சரியாக விசாரம் செய்துள்ளார்.
    குமாரபட்டர், பிரபாகர் என்பவர்கள் தனித்தனியாக இரண்டு மதங்களை தோற்றுவித்தனர். கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களை செய்து சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அடையலாம். இதுவே மோட்சமாகும் என்று கூறியுள்ளனர். இந்த மதங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. யாரும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
  5. உத்தர மீமாம்ஸா பிரிவு
    உபநிஷத் உபதேசங்களைக் கொண்டது. வியாகபகவான் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு சூத்திரங்களின் மூலம் விசாரம் செய்துள்ளார். இதற்கு பிரம்ம சூத்திரம் என்று பெயர். இதை ஶாரீர சூத்திரம் என்றும், வேதாந்த சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசபகவான் பாதராயனர் என்றும் அழைக்கப்படுவதால் அவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு பாதராயண சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.இதற்குள்ளேயே அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று மதங்கள் தோன்றி இருக்கிறது. சங்கரர் எழுதிய பாஷயத்திற்கு சங்கர பாஷ்யம் என்றும், ராமானுஜர் எழுதிய பாஷ்யத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறது. மாத்வர் என்பவரும் இதற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகளை அத்வைத தத்துவத்தை அடைவதற்கு படிகளாக எடுத்துக் கொள்ளலாம்.பிரம்ம சூத்திரத்தை படிப்பதற்கு முன்னே 10 சாந்தி பாடங்களை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்பட்டிருக்கிறது.
  6. ஷன் நோ மித்ர: ஷன் வருண:      – தைத்திரிய உபநிஷத்
    2.     ஸஹ நாவவது                   – தைத்திரிய உபநிஷத்
    3.     யஹ சந்தஸாம் ரிஷபோ          – தைத்திரிய உபநிஷத்
    4.     அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா       – தைத்திரிய உபநிஷத்
    5.     பூர்ணமத பூர்ணமிதம்              – ஈஸாவாஸ்ய உபநிஷத்
    6.     ஆப்யாந்து மமாங்கனி              – கேனோ உபநிஷத்
    7.     வாங்மே மனஸி பிரதிஷ்டா        – அய்தரேய உபநிஷத்
    8.     பத்ரங் கர்ணேபி                   – அதர்வன உபநிஷத்
    9.     பத்ரம் நோ அபிவாதய             – ரிக்வேதம்
    10.  யோ பிரஹாமானாம்              – யஜுர், ஸ்வேதாஸ்வர உபநிஷத்

மேலே கொடுத்துள்ள சாந்தி பாடங்களில் முதல் 8 சாந்தி பாடங்களின் விளக்கத்தை அந்தந்த உபநிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம். கடைசி இரண்டிற்கு மட்டும் இங்கே விளக்கம் காணலாம்.

சாந்தி பாடம் – 9
பத்ரம் நோ அபிவாதய மனஹ
இறைவா எங்களுடைய மனதை மோட்சத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்வீராக. இன்னொரு பொருள்: ஏ மனமே! எனக்காக மோட்சத்தில் நாட்டம் கொள்வாயாக என்பதாகும்.

சாந்தி பாடம் – 10
யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம்
யோ வை வேதாந்த ப்ரஹினோதி தஸ்மை
தம்ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாஸம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே.

யஹ                        – எந்த இறைவன்
ப்ரஹ்மானாம்      – ஹிரண்யகர்ப்பன்
பூர்வம்                      – முதன்முதலாக
வித3தா4தி                   – தோற்றி வைத்த
யோ வை                   – அந்த ஈஸ்வரன்
வேதாந்த                    – வேதாந்தத்தை
தஸ்மை                     – ஹிரண்யகர்ப்பனுக்கு
ப்ரஹினோதி       – உபதேசிக்கின்றாரோ
ஆத்மபுத்தி ப்ரகாஸம் – ஆத்மஞானத்தை எனக்கு அருள்கின்ற, பிரகாசிக்கும்படி செய்கின்ற
தம் தேவம்                 – அந்த இறைவனை
முமுக்ஷு: வை          – முமுக்ஷுவாக இருக்கின்ற
அஹம் சரணம் ப்ரபத்யே – நான் சரணடைகின்றேன்

இந்த பத்து சாந்திபாடத்தை படித்துவிட்டு இறுதியில் குரு சம்பிரதாய ஸ்துதி சம்பிரதாயத்தில்  படிக்கப்படுகின்றது.
நமோ ப்ரம்மாதி3ப்4யஹ – முதன்முதலில் பிரம்மவித்யாவை உபதேசித்த பிரம்மாவுக்கு நமஸ்காரம்.

ப்ரஹ்மவித்யா கர்த்ருப்4;யஹ –  இந்த பிரம்மவித்யாவை குரு-சிஷ்ய சம்பிதாயமாக வளர்த்து காத்த அனைவருக்கம் நமஸ்காரம்.
வம்ஸரிஷிப்4;யஹ – வம்சாவளியாக வருகின்ற அனைத்து ரிஷிகளுக்கும் நமஸ்காரம்.
மஹதப்4;யஹ           – ஞானநிஷ்டையடைந்த மகான்களுக்கு நமஸ்காரம்
நம: குருப்4;யஹ      – அனைத்து குருமார்களுக்கும் நமஸ்காரம்.
ப்ரக்ஞான கண        – பூரணமான அறிவு ஸ்வரூபமான
ப்ரத்யக் கர்த்தஹ     – என்னுடைய ஸ்வரூபமாக இருக்கின்ற
ப்ரஹ்ம ஏவ                – பிரம்மனாகவே
அஹம் அஸ்தி          – நான் இருக்கிறேன்.
ஸர்வ உபப்லவ ரஹித: – எந்தவிதமான துயரங்களும் இல்லாதவன்.

பிரம்ம சூத்திரம் தர்க்க பிரதானமான நூலாக இருப்பதால் இந்த நியாய பிரஸ்தானத்தை சுருக்கமாக பார்ப்போம். அனுமான பிரமாணத்தைத்தான் நியாய பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அனுமானம் இரண்டு வகையாக இருக்கின்றது. ஒன்று லௌகீக அனுமானம், மற்றொன்று வைதீக அனுமானமாகும்.

அந்த மலையில் நெருப்பு இருக்கிறது காரணம் அங்கிருந்து புகை வந்து கொண்டிருக்கிறது. நாம் சமையலறையில் நெருப்புடன் கூடிய புகையைப் பார்த்த அனுபவத்தினால் இவ்வாறு கூறுகிறோம்.
பக்ஷம்               – மலை
சாத்தியம்        – நெருப்பு
ஹேது               – புகை
வியாப்தி           – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் உள்ள மாறாத சம்பந்தம். அதாவது புகைக்கும், நெருப்புக்கும் சம்பந்தம் இருக்கின்றது.

லௌகீக அனுமானம் : நம் அனுபவத்திலிருந்து யூகிப்பது
வைதீக அனுமானம் : வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹேதுவை எடுத்துக் கொண்டு சொல்வது
பக்ஷம்      மகத்
சாத்தியம்    மாயை (வெறும் தோற்றம்)
ஹேது      இது வேதத்தினால் நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது. கயிற்றில் தோன்றும் பாம்பைப் போல இது நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது.
வேதத்தில் சிரத்தையற்றவர்கள் இந்த அனுமானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வியாசபகவான் இரண்டு அனுமானங்களையும் பிரம்ம சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த நூலை படிக்க வருபவர்களுக்கு வேதாந்தத்தின் மீதும், வியாசர் மீதும் சிரத்தை உடையவர்களாக இருப்பார்கள். வைதீக அனுமானத்தை பயன்படுத்தி உபநிஷத் உபதேசங்களான ஜகத் மித்யா, பிரம்ம சத்தியம் ஆகியவற்றை நிலைநாட்டியிருக்கின்றார். லௌகீக அனுமானத்தை பயன்படுத்தி அத்வைதத்தை நிராகரிப்பவர்களின் காரணத்தை நீக்குவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.

சூத்திரங்கள் பெரும்பாலும் ஹேதுவாக அமைந்திருக்கும். இந்த நூல் நான்கு அத்தியாயங்களை உடையது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிளும் அதிகரணங்களாக பிhpக்கப்பட்டிருக்கும். இந்த அதிகரணத்தில் சூத்திரங்கள் இருக்கும். முதல் அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகரணங்கள் இருக்கும். அந்த அதிகரணத்தை விளக்குவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேலாக பல சூத்திரங்கள் இருக்கலாம். மொத்தம் 555 சூத்திரங்கள் இருக்கிறது. இவைகள் நான்கு அத்தியாயங்களாக பிரித்து, 16 பகுதிகள், 192 அதிகரணங்கள் இருக்கின்றது.

முதல் நான்கு அத்தியாயங்களைப் படித்தாலே முழு பிரம்ம சூத்திரத்தை படித்ததைப் போலாகும் என்று சம்பிரதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நாம் முதல் நான்கு சூத்திரங்களை மட்டும்தான் பார்க்கப் போகிறோம்.

1.   ஸமன்வய அத்தியாயம் – ஒத்துப் போகுதல்
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரம்மன் அத்வைதம் என்ற விஷயத்தில் ஒத்துப் போகின்றன என்பதை உபதேசிக்கும்.

  1. அவிரோத அத்தியாயம் – விரோதமில்லைமுரண்பாடில்லை

*  உபநிஷத்துக்குள் பரஸ்பர வேற்றுமையுடன் இல்லை.
*  அத்வைத தத்துவத்திற்கு ஸ்ம்ருதியும் விரோதமில்லை.
*  யுக்தி விரோதமும் கிடையாது.
*  வேற்று மதங்களின் அத்வைதத்திற்கு எதிரான கருத்துக்களை நிராகரித்து விடுவது
*  வேற்று மதங்களின் கருத்துக்களும் தவறானது என்று நிலைநாட்டப்படுகிறது.

  1. சாதனா அத்தியாயம் – மோட்சத்தை அடைவதற்கான சாதனங்கள் பேசப்படுகிறது.

மோட்சம், சொர்க்கம், பிரம்மலோகம் இவைகளை அடைவதற்கான சாதனங்களை கூறியிருக்கிறார். அந்தரங்க, பகிரங்க சாதனம் என்று இரண்டாக பிரித்து விளக்கி இருக்கிறார். ஸர்வாபேக்ஷ நியாயம் என்ற நியாயத்தை பயன்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  1. பல அத்தியாயம் – பலனைப் பற்றி விளக்கப்படுகிறது.
    பிரம்ம வித்யாவினால் அடைகின்ற பலனை விளக்கியிருக்கிறார்.

*  ஜீவன் முக்தனாக எப்படி மனநிறைவுடன் இருக்கிறான்.
*  விதேக முக்தியைப் பற்றி விளக்கப்படுகிறது.
*  கிரம முக்தியைப் பற்றியும் விளக்கப்படுகிறது.
*  கர்மத்தினால் அடைகின்ற பலன்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
சூத்திர அமைப்பின் இலக்கணம்.
ஓரு வாக்கியம் சூத்திரமாக இருபபதற்கு 6 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவைகள்,

  1. அல்பாக்ஷரம் – குறைந்த எழுத்துக்கனோடு இருக்க வேண்டும். மிக மிக சுருக்கமாக இருக்க வேண்டும்.
  2. அஸந்திக்தம் – சந்தேகமில்லாமல் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும். தெளிவாக அர்த்தம் புhpயும்படி இருக்க வேண்டும்.
  3. ஸாரவத் – பிரயோஜனம் இருக்க வேண்டும். மையக் கருத்து இருக்க வேண்டும்.
  4. விஸ்வதோமுகம் – பல கோணங்களில் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும்.
  5. அஸ்தோபம் – அர்த்தமில்லா சொற்கள் இருக்கக்கூடாது. ஸ்துதி இருக்கக்கூடாது.
  6. அனவத்யம் – தெளிவாக இருக்க வேண்டும். பொருள் குற்றம் இருக்கக்கூடாது. உண்மைக்கு புறம்பாக இருக்கக்கூடாது.

அதிகரண லட்சணம்
ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
1.    விஷய: – எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
2.    ஸம்ஸய: – சந்தேகம்
3.    பூர்வபக்ஷம் – சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
4.    உத்தரம் – பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
5.    சங்கதி – சம்பந்தம் – அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.
இவைகள் சரியாக இருக்கின்றதா என்பதை சோதிக்க 5வது அதிகரணத்தை எடுத்து இந்த நிபந்தனைகள் பொருந்தி வருகின்றதா என்று பார்க்கலாம்.

விஷய:       ஸதேவ ஸோம்ய இதம் அக்ர: ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் (சா.உ). ஸத் தான் முதலில் இருந்தது.

ஸம்ஸய:     இது சேதனமான பிரம்மத்தைக் குறிக்கிறதா அல்லது அசேதனமான மாயையைக் குறிக்கிறதா என்பது சந்தேகம்.

பூர்வபக்ஷம்   சாங்கியர்கள் கொள்கை – இது அசேதனமான, ஜடமான பிரகிருதியைத்தான் குறிக்கிறது என்பதாகும்.

உத்தரம்      ஸத் என்பது பிரகிருதியும் அல்ல, பிரதானமும் அல்ல பிரம்மன்தான்.

சங்கதி        இந்த அதிகரணத்திற்கும் இதற்கு முன்னேயுள்ள அதிகரணத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம். நான்காவது சூத்தரத்தில் பிரம்மன்தான் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அதிகரணத்தில் அதை மறுப்பதால் அந்த மறுப்பை நீக்குவதற்காக இந்த அதிகரணம் எழுதப்பட்டிருக்கிறது.

பாஷ்யம் – உரைநடை விளக்கம்
உபநிஷத், பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநடை விளக்கங்களுக்கு பாஷ்யம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எதற்கு விளக்கம் எழுதப்படுகிறதோ அதற்கு மூலம் என்று பெயராகும். பாஷ்யத்திற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டீகா என்று பெயர். டீகாவிற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டிப்பனி என்று பெயர்.

பாஷ்யத்தின் லட்சணம்:
சூத்திரத்தினுடைய அர்த்தமானது சூத்திரத்தில் உள்ள சொற்கள் எந்த வரிசையில் உள்ளதோ அதே வரிசையில் இருக்க வேண்டும். விளக்கத்தில் உள்ள கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
வியாக்யானத்தின் லட்சணம்:

ஒரு ஸ்லோகத்தை எடுத்து விளக்கும் முறைக்கு வியாக்யானம் என்று பெயர். இதில் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும்.

  1. பதஸ்சேதம் – சேர்ந்துள்ள இரண்டு சொற்களை சரியாக பிரிக்க வேண்டும்.
  2. பதார்த்த உக்தி – ஒவ்வொரு சொல்லுக்கான அர்த்தத்தை சொல்ல வேண்டும்.
  3. விக்ரஹ – எந்த அர்த்தத்தோ சேர்ந்துள்ளதோ அதே அர்த்தத்தோடு பிரித்த சொற்களுக்கு பொருள் கொடுக்க வேண்டும்.
  4. வாக்ய யோஜனா – எந்தச்சொல்லை எதனோடு சேர்த்து பொருள் சொல்ல வேண்டும்.
  5. ஆக்ஷேப: – கொடுக்கப்பட்ட பொருளுக்கு எதிர்க்கருத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
  6. சமாதானம் – ஆட்சேபத்திற்கு பதில் கொடுக்க வேண்டும்.

சது சூத்ரி அமைப்பு

நான்கு சூத்திரங்களுடைய அமைப்பு. ஒவ்வொரு சூத்திரமும் ஒரேயொரு அதிகரணத்தை உடையதாக இருக்கும். முதல் சூத்திரம் பிரம்மத்தைப் பற்றிய விசாரம் செய்ய வேண்டுமா?  வேண்டாமா?  என்பதாகும்.

முதல் சூத்திரம்
இது அனுபந்த சதுஷ்டயத்தை பூர்த்தி செய்கிறது. இதற்கு விஷயாமாக இருப்பது பிரம்ம விசாரம். இதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பலனும் அடையப்படுகிறது. இவைகளை நிலைநாட்டி பிரம்ம விசாரம் செய்துதான் ஆக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.

2வது சூத்திரம் – பிரம்மத்தின் லட்சணம் கூறப்படுகிறது.
3வது சூத்திரம் – பிரம்மத்தை போதிக்கின்ற பிரமாணம் கூறப்படுகிறது
4வது சூத்திரம் – பிரம்ம விசாரம் – பிரம்மன்தான உபநிஷத்தின் மையக்கருத்து.

சது சூத்ரி ஒன்பது வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்பது முக்கிய கருத்துக்கள் இந்த நான்கு சூத்திரத்திற்குள் இருக்கிறது. வர்ணகம் (தலைப்பு) என்பது ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றது.

  1. அத்3யாஸ பாஷ்யம்
  2. அக3தார்த்த2 வர்ணகம் – முதல் சூத்திரம்
  3. அதி3காரி வர்ணகம்     – முதல் சூத்திரம்
  4. ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3த4 வர்ணகம் – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.        – முதல் சூத்திரம்
  5. ப்3ரஹ்ம லக்ஷண வர்ணகம் – 2வது சூத்திரம்
  6. ப்3ரஹ்மன: ஸர்வக3த வர்ணகம் – பிரம்மன் அனைத்தையும் அறிந்தவர்; – 3வது சூத்திரம்
  7. ப்3ரஹ்மன: வேத3 ஏக பிரமாண தத்துவ வர்ணகம் – இந்த பிரம்மத்தை வேதம் என்ற ஒரு பிரமாணத்தின் மூலம்தான் அறிந்துக் கொள்ள முடியும். ; – 3வது சூத்திரம்
  8. ப்3ரஹ்மன: சாஸ்திர தாத்பர்ய தத்துவ வர்ணகம் – உபநிஷத்தின் உபதேசம் ஆத்மஞானத்தை கொடுப்பதுதான் முக்கிய நோக்கம். பிரம்மம் என்ற ஒன்றை விளக்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ; – 4வது சூத்திரம்
  9. ப்3ரஹ்மன: ஞான கம்பியத்வ வர்ணகம் – பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும். ; – 4வது சூத்திரம்

1.அத்யாஸ பாஷ்ய வர்ணகம்

முகவுரை

  1. அத்யாஸம்(Illusion) என்ற சொல்லுக்கு காட்சிபிழை என்று பொருட்கொள்ளலாம். கயிற்றில் பாம்பைப் பார்ப்பதுதான் அத்யாஸமாகும்.
  2. அத்யாஸம் எப்போது ஏற்படும்?
    அத்யாஸம் அரைகுறைவான வெளிச்சத்திலோ, மங்கலான வெளிச்சத்திலோதான் ஏற்படும். இதில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று சாமான்ய அம்சம், மற்றொன்று விசேஷ அம்சமாகும். இந்த உதாரண வாக்கியத்தில் உள்ள கயிற்றைப் பார்க்கும் போது “இது” என்ற அறிவு சாமான்ய அம்சமாகும். ஏதோவொன்று இருக்கிறது என்பது சாமான்ய அம்சமாகும். இது என்ற அம்சத்தில் கயிறு இருக்கிறது என்பது விசேஷ அம்சமாகும். அத்யாஸத்தினால் சாமான்ய அம்சத்தின் மீது சரியான விசேஷ அம்சத்திற்கு பதிலாக, தவறான விசேஷ அம்சமான பாம்பைப் பார்த்து விடுகிறோம். சாமான்ய அம்சத்தில் தவறான விசேஷ அம்சத்தை பார்ப்பதைத்தான் அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. சாமான்ய அம்சத்தில் தவறே ஏற்படாது. எனவே சாமான்ய அம்சம் சத்யம், விசேஷ அம்சம் மித்யா. இதிலிருந்து அறிந்து கொள்வது, அத்யாஸம் நடக்க வேண்டுமென்றால் சாமான்ய அம்சத்தை பற்றிய சரியான அறிவும், அதேசமயம் விசேஷ அம்சத்தில் அக்ஞானமும் இருக்க வேண்டும். கயிறே இல்லாத இடத்தில் பாம்பைப் பார்ப்பதற்கு மாயத்தோற்றம் என்பதாகும். அத்யாஸம் நடந்த இடத்தில் சரியான விசேஷ அறிவு வந்துவிட்டால் விசேஷ அக்ஞானம் சென்றுவிடும். அதனால் பாம்பு மறைந்து கயிறு காட்சியளிக்கும்.அதேபோல நான் என்ற சொல்லில் சாமான்யமாக நமக்கு தெரிவது பிரம்மன்தான். நான் இருக்கின்றேன்,   நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்று சொல்லம்போது  நாம் நம்மை அறியாமல் எப்போதும் இருந்துக் கொண்டிருக்கின்ற பிரம்மத்தை  நம்மையறியாமல் குறிக்கின்றோம். ஆனால் நம்முடைய விசேஷ ஞானத்தில்தான் தவறு நடந்திருக்கிறது,  அத்யாஸம் ஏற்பட்டுள்ளது. நான் அறிவற்றவன்,  நான் நோயுற்றிருக்கிறேன் என்ற விசேஷ ஞானம் இருக்கின்றது. இது கயிற்றில் பாம்பைப் பார்ப்பது போல உள்ள தவறான விசேஷ ஞானம். நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்கின்றோமோ அவைகளெல்லாம் அத்யாஸம். நம் உண்மை ஸ்வரூபத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டதாகும். இவைகளெல்லாம் ஸ்தூல, சூட்சும, காரண சரீரத்தின் தர்மங்கள், அம்சங்கள் ஆகும். பாம்பை எப்படி தவறென்று நீக்குகின்றோமோ அதேபோல மூன்று சரீரங்களையும் நீக்கி உண்மையான விசேஷ ஞானமான பிரம்மன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.நான் சம்சாரி என்ற வாக்கியத்தில் நான் என்பது சாpயான சாமான்ய அம்சம், சம்சாரி என்பது தவறான விசேஷ ஞானம். சாpயான விசேஷ அம்சமான பிரம்மமாக தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கயிறு என்ற சரியான விசேஷஞானம் வருவதும், தவறான விசேஷஞானம் செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கும். அதேபோல பிரம்மன் என்ற சரியான விசேஷஞானம் வந்தவுடன் சம்சாரி என்ற தவறான விசேஷஞானம் அதே நேரத்தில் சென்றுவிடும். மூன்று சரீரங்களில் உள்ள அபிமானம் சென்றுவிடும்.

விசாரம்:
பகவான் சங்கரர் அத்யாஸத்தை ஏன் முகவுரையாக கொடுத்துள்ளார் என்பது விசாரம் செய்யப்படுகிறது.
கேள்வி பிரம்ம சூத்திரம் அவசியமில்லை. அதனால் எழுத வேண்டிய அவசியமில்லை.

பதில்   முதல் சூத்திரத்தின் விளக்கம்தான் இதற்கு பதிலாகும்.

கேள்வி விசாரம் செய்வதினால் எந்தப் பலனும் அடையப் போவதில்லை. மேலும் நிர்குண பிரம்மத்தைப்     பற்றிய அறிவைக் கொடுத்து சம்சாரத்தை நீக்குகிறேன் என்று சொன்னால் அந்த நிர்குண பிரம்மமே கிடையாது என்று நான் சொல்கிறேன். எனவே அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பதில்   இந்த நிர்குண பிரம்ம அறிவை அடைந்து மோட்சத்தை அடைய விரும்புகின்ற தகுதியுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதை முதல் சூத்திரத்திலேயே வியாச பகவான் நிலைநாட்டியிருக்கிறார்.

அத்யாஸ பாஷ்யமானது அத்யாஸத்தை நிலைநாட்டுவதால் பலனையும், அறிவையும் அடைவோம். அத்யாஸத்திற்கும் மோட்ச பலன் அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. அத்யாஸம் என்பது காரணத்தை நிலை நாட்டுகிறது. இது சாத்தியமான மோட்சத்தைக் கொடுக்கிறது.

பொதுவாக ஞானத்தினுடைய தன்மையானது இருப்பதைப் காட்டிக் கொடுப்பதாகும். ஞானம் எதையம் உற்பத்தி செய்யாது, எதையுமே அழித்தும் விடாது. உதாரணமாக அறையில் உள்ள பாம்பை பார்க்கும் போது பாம்பு இருக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த ஞானமே பாம்பை விரட்டாது. ஏதாவது செய்துதான் அதை விரட்ட முடியும். மங்கலான வெளிச்சத்தில் கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிறு என்ற ஞானம் வந்தவுடன் மறைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது பொய்யாக காட்சியளிக்கும் மித்யா வஸ்து ஞானம் வந்தவுடன் சென்றுவிடும் என்பதாகும். இங்கே ஞானம் கயிற்றில் விசேஷ அறியாமையினால் தோன்றிய பாம்பை நீக்குகிறது. அதேபோல பந்தம் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பந்தம் உண்மையாக இருந்துவிட்டால் அதை ஞானத்தால் நீக்க முடியாது. ஆனால் மித்யாவாக, பொய்யாக இருந்தால் ஞானத்தினாலே நீக்கிவிடலாம். இது தெரியாமல் இருப்பதால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே பந்தம் என்பது மித்யா என்று நிலைநாட்ட வேண்டிய அவசியமாகிறது. பந்தம் என்பது அத்யாஸம் என்று நிலைநாட்டினால் அதை ஞானத்தினால் நீக்கமுடியும்.

சம்சாரம் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். உடலுக்கு வரும் கஷ்டங்கள் உடலுக்குத்தான் துன்பத்தைத் தருகிறது. இது சம்சாரமல்ல. மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை, மனம் அனுபவிக்கின்ற வேதனைகள், பயம், க்ரோதம், பொறாமை போன்றவைகள்தான் சம்சாரம். இந்த சம்சாரம் யாவும் மித்யாவாகும். இது மித்யாவாக இருப்பதால் அதை ஞானத்தினாலேயே நீக்கமுடியும்.

 

கேள்வி பந்தம் இல்லையென்று சொல்கிறீர்கள். இல்லாததை நீக்குவதற்கு ஞானம் தேவையில்லை. அதனால் பொய்யான பந்தத்தினால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. எனவே எதற்கு பொய்யான பந்தத்தை போக்குவதற்கு முயற்சி எடுக்கிறீர்கள். பொய்யான கோபம் நம்மை பாதிக்காது. அதேபோல பொய்யான பந்தமும் நம்மை பாதிக்காத போது அதை நீக்குவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்.

பதில்   உண்மையான பாம்பைப் பார்த்தால் எந்தளவு பயம் ஏற்படுகிறதோ,  அதேயளவு பயம் பொய்யான பாம்பைக் கயிற்றில் பார்க்கும் போது ஏற்படுகிறது. கயிற்றின் இருப்பு பாம்புக்குப் போயிருக்கிறது. எனவே கயிறுதான் உண்மையில் பயத்தைக் கொடுக்கிறது. கயிற்றின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டால் பாம்பின் இருப்புக் கயிற்றுக்கு சென்றுவிடுவதால் பயம் சென்றுவிடுகிறது. அதேமாதிரி மித்யாவாக இருக்கின்ற ஜகத் நிமித்தமாக நமக்கு பயம் ஏற்படுகிறது. சம்சார தாபம் ஏற்படுகிறது. இந்த உலகத்தின் மித்யத்தன்மையை உணர்ந்துக் கொள்ளாததனால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் பொய் என்ற அறிவை அடைந்வுடன் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சம்சாரம் சென்றுவிடுகிறது. எனவே இந்த உலகம் மித்யா என்பதை நிலைநாட்டு வேண்டுமென்றால் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். ஞானத்தினால் ஒன்று செல்கின்றதென்றால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.

கேள்வி நிர்குண பிரம்மன் என்பதே கிடையாது. ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணம். காரண-காரிய தத்துவத்தில் காரணத்தின் குணம் காரியத்தில் இருக்கிறது. எனவே ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணமாக இருப்பதால் சகுண பிரம்மன்தான் இருக்கமுடியும்.

பதில்   இந்த உலகம் அத்யாஸத்தினால் தோன்றிக் கொண்டிருக்கின்றது. பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் தன்மைகளை பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்றோம். பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டு உலகம் சகுணமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த பிரம்மத்தின் மீது உலகம் ஏற்றி வைத்திருப்பதனால் பிரம்மன் சகுணத்திற்கு அதிஷ்டானமாக இருக்கிறது. எனவே நிர்குணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. எந்தவொரு அத்யாஸத்திலும் விசேஷ அக்ஞானம் இருக்க வேண்டும், சாமான்ய ஞானமும் இருக்க வேண்டும்.

கேள்வி தெரிகின்ற பிரம்மத்தைப் பற்றி எதற்கு விசாரம் செய்ய வேண்டும்?

பதில்   பிரம்மத்தைப் பற்றிய விசேஷ அக்ஞானம் இருப்பதனால்தான் விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது விசேஷ அக்ஞானத்தை நிலைநாட்ட வேண்டும். எனவே விசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

அத்யாஸ பாஷ்யத்தில் ஆறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்,

  1. அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
  2. சந்தேகத்திற்கான பதில்
  3. அத்யாஸ லட்சணம்
  4. அத்யாஸ நடப்பதற்கான வாய்ப்பு
  5. அத்யாஸம் நடந்திருக்கின்றது என்று அறிய உதவும் பிரமாணம்
  6. முடிவுரை

ஆகியவைகளாகும்.

 

  1. 1.அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்

ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் இடையே உள்ள அத்யாஸத்தைப் பற்றிய விளக்கம் கூறப்படுகிறது. ஆத்மாவென்ற கயிற்றில் அனாத்மா என்ற பாம்பை ஏற்றி வைத்திருப்பதைப் பற்றி விளக்கப்படுகிறது.

ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.

ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.

 

  1. விரோதாத்– ஆத்மா-அனாத்மாவிடையே இயல்பாகவே விரோதம் இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது. இருள், ஒளி இவையிரண்டுக்கும் இடையே அத்யாஸம் நடைபெற முடியாது. இருள் மீது ஒளியோ அல்லது ஒளி மீது இருளோ அத்யாஸம் நடக்காது. அதுபோல ஆத்மாவிடத்தில் அனாத்மா அத்யாஸம் செய்ய முடியாது. இரண்டும் சத்யமாக இருப்பதால் சேர்ந்தேயிருக்கிறது. இந்த விரோதம் மூன்று வகையாக இருக்கிறது.

1.1.     இயல்பாக விரோதமாக இருத்தல். (உ-ம்) எலி-பூனை, நான்,நீ.அது என்று சுட்டிக் காட்டுகின்ற பொருட்கள் சுபாவமாகவே விரோதமாக இருக்கிறது.

1.2.     ஆத்மா சாட்சி; அறிபவன், அனாத்மா அறியப்படுவது என்ற வேற்றுமை இருத்தல். ஆத்மாவால் பிரகாசப்படுத்துகின்ற அனாத்மா எப்படி என்னுள்ளே செல்லும். நான் என்ற சொல்லுக்குள் போக முடியும்?

1.3.     விவகாரத்தின் அடிப்படையிலும் விரோதம் இருக்கிறது. நான் கர்த்தா, நான் போக்தா என்ற விவகாரம் இருக்கிறது. நான் என்கின்ற பிரம்மன் வேறுபட்டிருக்கிறது. எனவே கர்த்தாவும், பிரம்மமும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது. கர்த்தாவான நான் ஏதாவது கர்மத்தை செய்துதான் பிரம்மனாக உயர முடியும்.

இந்த காரணங்களால் அத்யாஸம் என்பது நடக்கவே முடியாது.

  1. பிரத்யக்ஷ விஷயத்தில்தான் அத்யாஸம் நடைபெறும். பார்க்கப்படும் பொருட்களுக்குள்தான் அத்யாஸம் நடைபெறும். ஆத்மா அபிரத்யக்ஷமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறவே முடியாது.
  2. ஆத்மா ஸ்வயம் பிரகாசமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறாது. ஆத்மாவை எதுவும் மறைக்க முடியாது.
  3. ஸாத்3ருஷ்யம் அபா4வாத்

சாதிருஷ்யம் இல்லாததால் அத்யாஸம் நடைபெறாது. சாதிருஷ்யம் என்பது ஒன்றைப் போல் வேறொன்று இருப்பதாகும். கயிற்றில் பாம்பைப் பார்க்கக் காரணம் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. எனவே அங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது. ஆத்மாவும், அனாத்மாவும் ஒரேமாதிரியாக இல்லாததால் அத்யாஸம் நடக்காது.

அவயவ சாத்ருஷ்யம் – உடலுறுப்புக்கள் ஒரேமாதிரியாக இருத்தல். நாட்டெருமை, காட்டெருமை உடலமைப்பில் ஒரேமாதிரியாக இருப்பதால் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.

குண சாத்ருஷ்யம் – குணத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம். சிங்கத்தைப் போலிருக்கிறான் அவன் என்ற வாக்கியத்தில் குணத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது. ஆனால் ஆத்மா-அனாத்மாவிடத்தில் சாத்ருஷ்யமும் இல்லாததால் அத்யாஸமே நடைபெறாது. அனாத்மா அவயவங்களை உடையது, ஆத்மா அவயவங்களற்றது என்பதாலும், குணங்களுடன் கூடிய அனாத்மாவுக்கும், ஆத்மா நிர்குணமாக இருப்பதாலும் இவைகளிடத்தில் அத்யாஸம் நடைபெறாது.

  1. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ:

அத்யாஸம் நடைபெறுவதற்கு ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் மனதில் பதிந்திருக்கும். இந்த மனப்பதிவுகள் அத்யாஸத்திற்கு அவசியம். இந்த வகையான மனப்பதிவு ஆத்மா-அனாத்மா விஷயத்தில் கிடையாது. கயிற்றில் தோன்றிய பாம்பானது நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட மனப்பதிவினால் காட்சியளிக்கிறது. பாம்பைப் பார்க்காதவனால் கயிற்றைப் பாம்பாக பார்க்க முடியாது. அதேமாதிரி  உண்மையான அனாத்மாவை பார்த்திருந்தால்தான் ஆத்மா மீது அத்யாஸம் செய்ய முடியும். அனாத்மா மித்யாவென்று சொல்கின்ற உங்களால் எப்படி அத்யாஸம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?

 

மேற்கூறிய 5 காரணங்களால் அனாத்மாவான 3 சரீரங்களை ஆத்மா மீது ஏற்றி வைக்க முடியாது. இவையிரண்டுக்குமிடைய அத்யாஸம் நடைபெறவே முடியாது. உடலும், ஆத்மாவும் சத்யமாக இருப்பதால் ஏதாவது கர்மத்தை செய்துதான் உடலைவிட்டு வேறொரு உயர்ந்த நிலைக்கு சென்று மோட்சத்தை அடைய முடியும். அதாவது பிரம்மலோகத்தையோ, வைகுண்டத்தையோ, சிவலோகத்தையோ அடைந்து அங்கிருந்துதான் மோட்சத்தை அடைய முடியும். இவையிரண்டும் கர்ம சம்பந்தத்தினால் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே கர்மகாண்டம் மூலமாகவே மோட்சத்தை அடையலாம். ஞானகாண்டமே தேவையில்லை, அதை விசாரம் செய்யவும் தேவையில்லை.

  1. சந்தேகத்திற்கான பதில்
    இந்த அத்யாஸம் யுக்திக்கு பொருந்தி வரவில்லையே என்றால், நீ சொல்வது சரிதான். உதாரணமாக இந்த உலகத்தை எந்த தர்க்க தோஷம் இல்லாமல் விளக்க முடியாது. ஏனென்றால் அது அனிர்வசனீயம். இதை விளக்க முடிந்தால் அது சத்யமாகிவிடும். இதுவே அத்வைதத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த அத்யாஸம் தர்க்கத்திற்கப்பாற்பட்டு இருப்பதனால் அது அப்படி இருப்பதுதான் அதன் இயல்பான தன்மையாகும்.இந்த அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று கூறமுடியாது. இது அனுபவத்தில் இருக்கிறது. அக்ஞானியின் அனுபவத்தில் கர்த்தா, போக்தாவாகவும், ஞானி அகர்த்தா, அபோக்தாவாகவும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவனுக்குத்தான் இது அனுபவத்திற்கு வரும். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவத்தை அடைகிறோம். இந்த நிலையில் சரீர அபிமானம் இல்லாததால் துயரமில்லாமல் சுகத்துடன் இருக்கிறோம். எனவே அபாவாத் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக ஒரு பொருளை அது என்றும், இது என்றும் சொல்கிறோம். ஆனால் நாம் நான் என்ற சொல்லால் ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் மாற்றி, மாற்றி சொல்கிறோம். உண்மையில் நான் என்ற சொல் ஒன்றை மட்டும்தான் குறிக்க வேண்டும். இந்த உடல் விஷயத்தில் நமக்கு குழப்பம் இருக்கிறது. எனவே அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று சொல்வது தவறு. இதிலிருந்து அத்யாஸம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.

அத்யாஸம் நடைபெற காரணமில்லையே என்ற காரணத்தினால் இதை மறுக்கிறாய். அதற்கு நீ கூறிய 5 காரணங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது.

  1. விரோதத்துடன் இருக்கின்ற இரண்டு பொருட்களுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதுதான் இயல்பாகும். கயிறும், பாம்பும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதனால்தான் அத்யாஸம் நடக்கிறது.
  2. அத்யாஸம் நடைபெறுவதற்கு பிரத்யக்ஷம் தேவையில்லை. நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. அது விளங்கிக் கொண்டிருந்தால் போதும் என்று பதிலளிக்கப்படுகிறது.
  3. தெரியாத விஷயத்தில் தவறு நடைபெற முடியாது ஆனால் ஆத்மா எபிபொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்ல முடியாது. ஆத்மா தெரிந்தும், தெரியாமலும் இருக்கிறது. ஆத்ம விஷயத்தில் சாமான்ய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறேன்; எந்த தன்மையுடன் இருக்கிறது என்கின்ற விசேஷ ஞானம் இல்லாத காரணத்தால் ஆத்மாவின் மீது சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
  4. ஸாதிருஷ்யம் அபாவாத் என்ற காரணத்தால் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்கிறாய். கயிற்றை பாம்பாக நினைப்பதற்கு இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியான தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மாவும், அனாத்மாவும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் போது எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பார்க்கும் போது இது சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஆகாசத்தில் நீல வர்ணத்தை ஏற்றி வைத்துப் பார்க்கிறோம். உருவமில்லா பொருளில் எப்படி வர்ணத்தை ஏற்றி வைக்க முடியும்! இங்கு ஸாத்ருஷயம் இல்லை. அதேபோல ஆத்ம-அனாத்மா விஷயத்தில் இருக்கிறது. வறண்ட நிலத்தில் கானல் நீரை பார்ப்பது இன்னொரு உதாரணம். சாதிருஷ்யம் இல்லாத போதிலும் இங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது.
  5. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ: பொய்யான அனாத்மாவை உண்மையாக முன்பே பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதனால் ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உண்மையான பாம்பைப் பார்த்ததினால் கயிற்றில் பாம்பை பார்க்க முடிந்தது.  ஏற்கனவே பார்த்த பொய்யான ஒன்றின் ஸம்ஸ்காரம் நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக இருட்டில் பார்த்த வழிகாட்டி தூணை பேய் என்று பயந்த சூழ்நிலையில் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் பேய் வழிகாட்டிதூணில் ஏற்றி வைக்க முடிகிறது. இந்த அத்யாஸம் அனாதியானது. அக்ஞானம் அனாதியாக இருப்பதனால் இதிலிருந்து தோன்றிய அத்யாஸமும் அனாதியாக இருக்கிறது.

பூ.ப    இந்த உடலினுடைய தன்மையாவது ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாமல்லவா?
பதில் உடலையும், அதனுடைய தர்மங்களையும் சேர்த்துத்தான் ஏற்றி வைக்க முடியும்.

3.அத்யாஸ லட்சணம்
நான்கு லட்சணங்கள் கொடுக்கப்படுகிறது. அவைகள்,

  1. ஸ்மிருதி ரூபஹ – ஞாபகத்தைப் போல. கயிற்றில் தோன்றும் பாம்பு ஞாபகத்தில் உள்ளதை போன்றது.
  2. பரத்ர –  வேறிடத்தில் (கயிற்றில்)
  3. பூர்வ த்3ருஷ்டா – ஏற்கனவே பார்த்தது.  (பாம்பு)
  4. அவபா4ஸக – தோற்றம்; காட்சி

 

லட்சணம்-1 (ஸ்மிருதி ரூபஹ)

*   சம்ஸ்கார ஜன்யம் : ஏற்கனவே பார்த்தவொன்று மனதில் பதிவாகியிருந்தால்  தான் நினைவுக்கு கொண்டு வரமுடியும்.

*   பிரமாண அஜன்யம் : நாம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர எந்த பிரமாணத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கயிற்றில் தோன்றிய பாம்பு நம் நினைவகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

*   தோஷ ஜன்யவாத் : பாம்பைப் பார்க்கும்போது பிரமாணத்தை தவறாக பயன்படுத்தி இருப்போம். இது நம் சம்ஸகாரத்திலிருந்து வந்திருப்பது, அதிஷ்டானத்தைப் பற்றிய சாமான்ய ஞானத்தினால் வருவது, அது வெளியே இருப்பது போல தோன்றுவது.

லட்சணம்2 (பரத்ர)
அதஸ்மின் தத் புத்தி:
அதஸ்மின் – அதில்லாத இடத்தில்
தத் புத்தி – அது இருப்பதாக பார்ப்பது, நினைப்பது
நான் ஒன்றைப் பார்த்தேன் என்று சொல்லும் போது எதைப் பார்த்தேன்,  எங்குப் பார்த்தேன் என்ற கேள்வி எழுகின்றது. எதைப் பார்த்தாய் என்ற கேள்விக்கு பாம்பின் உருவத்தைப் பார்த்தேன் என்றும், எங்குப் பார்த்தாய் என்று கேட்டால் கயிற்றில் பார்த்தேன் என்று பதில் சொல்வோம். எனவே அதஸ்மின் – கயிற்றில், தத் புத்தி – பாம்பைப் பார்த்தல்.

லட்சணம்-3 (பூர்வ த்3ருஷ்டா)
ஸத்யாநிருத மிதுனீ கரணம்
ஸத்ய அநிருத – உண்மை, பொய்
மிதனீ கரணம் – ஒன்றோடொன்று கலத்தல்
உண்மையும், பொய்யும் கலந்து விட்டோமேயானால் அதுவே அத்யாஸம். உண்மையான கயிற்றையும், பொய்யான பாம்பையும் கலந்து பார்க்கின்றோம்.

லட்சணம்-4 (அவபா4ஸக)
மித்யா ப்ரத்யய ரூபஹ – பொய்யான அறிவு வடிவம்
ப்ரத்யயம் – மனதில் தோன்கின்ற எண்ணம், அறிவு
பாம்பு என்ற அறிவிருக்கிறது, ஆனால் உண்மையில் பாம்பில்லை. இல்லாதவொன்று இருப்பது போன்ற எண்ணம் மனதில் தோன்றுவது.
விதவிதமான அத்யாஸங்கள் (பகவான் சங்கரர் பாஷ்யத்தில் இது குறிப்பிடவில்லை)

  1. அனாதி அத்யாஸம் (அ) காரண அத்யாஸம்

பிரம்மம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அது அனாதி என்று பதில் சொல்லி விடுவோம். அதேபோல மாயையும் அனாதி என்று சொல்லி விடலாம். இந்த மாயையை பிரம்மத்தில் ஏற்றிவைத்து அதன் தன்மையை பிரம்மத்திற்கு கொடுத்துவிட்டோம். இந்த அத்யாஸமும் அனாதி என்றாகி விடுகிறது. இதையே அனாதி அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது.

  1. ஸாதி அத்யாஸம் (அ) காரிய அத்யாஸம்

இந்த அத்யாஸத்திற்கு தோற்றமுண்டு. இந்த நேரத்தில்தான் அத்யாஸம் ஏற்பட்டது என்றும், இந்தக் காலத்தில்தான் அத்யாஸம் நடைபெற்றது என்றும் கூறிவிடலாம். இந்த ஸ்தூல சரீரமும் இந்த வகையான அத்யாஸத்தில் சேர்த்துவிடலாம்.

  1. தாதா3த்மிய அத்யாஸம் (அ) த3ர்மி அத்யாஸம்

சத்யமாக இருக்கின்ற ஒன்றின் மீது வேறொன்றை பார்ப்பது. கயிறு என்றவொன்றில் பாம்பு என்ற வேறொன்றை பார்ப்பது இதற்கு உதாரணமாகும்.

  1. ஸம்ஸர்க3அத்யாஸம் (அ) த3ர்ம அத்யாஸம்

ஸபடிகத்தின் பக்கத்திலுள்ள சிவப்பு மலர், தனது சிவப்பு நிறத்தை பொய்யாக ஸ்படிகத்திற்கு கொடுத்துவிடுவதால் அதுவும் சிவப்பாக தோன்றுகிறது. இங்கே மலரின் ஒரு தன்மையை மட்டும் ஸ்படிகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

  1. அர்த்த அத்யாஸம்

கயிறு-பாம்பு அத்யாஸத்தில், வெளியே தெரிகின்ற பாம்பு அர்த்த அத்யாஸமாகும்.

  1. ஞான அத்யாஸம்

பாம்பைப் பற்றிய எண்ணத்திற்கு ஞானாத்யாஸம் என்று பெயர்.

  1. ஸோபாதீக அத்யாஸம்

இந்த அத்யாஸம் நடைபெறுவதற்கு பார்க்கின்ற பொருளுக்கு பக்கத்தில் வேறொரு பொருள் இருக்க வேண்டும். (உ-ம்) ஸ்படிகத்திற்கு பக்கத்தில் மலர் இருந்தால்தான் இந்த அத்யாஸம் ஏற்படும்

  1. நிரூபாதி33அத்யாஸம்

கயிற்றை பாம்பாக பார்ப்பதற்கு வேறொரு பொருளோ, வேறெந்த நிபந்தனைகள் இல்லாமல் ஏற்படுவதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 

சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் சென்றுவிடும். உதாரணம்: கயிறு-பாம்பு. சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் இருக்கும். ஆனால் உண்மையென்ற புத்தி சென்றுவிடும். உதாரணம் கானல் நீர். அதேபோல பிரம்மஞானம் வந்தாலும் உலகம் மறைந்து விடாது. ஆனால் அது பொய்யானது என்ற புத்தியுடன் இருப்போம்.

 

க்2யாதி வாதம்

நாம் செய்கின்ற தவறு எப்படிபட்டது என்பதை விளக்குகின்ற முறையே க்யாதிவாதமாகும். கயிற்றை பாம்பாக பார்ப்பதுதான் க்யாதி என்ற கூறலாம். இந்த தவறின் தன்மை என்ன என்பதில் பல கருத்துக்கள் வந்துவிட்டது. ஐந்துவிதமான க்யாதி வாதங்கள் உண்டு. இவைகளில் முதல்  நான்கு தவறான கருத்துக்களை உடையது. இறுதியான ஒன்றுதான் சரியானது. சரியான முறையில் தவறை விளக்கினால்தான் சரியான நீக்கும் முறையை கண்டுபிடிக்க முடியும்.

 

  1. க்ஷணிக விக்ஞானவாதியின் வாதம்:

இதை ஆத்மக்யாதி என்றும் அழைக்கப்படுகிறது. வெளியே காட்சியளிக்கின்ற பொருட்கள் யாவும் நம்முடைய எண்ணங்கள்தான். மனதில் உள்ள எண்ணங்கள்தான் சத்யமானது. க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி மறைகின்ற எண்ணங்கள்தான் சத்யமானது. கயிறு-பாம்பு தவற்றில் இரண்டுமே தவறு என்று கூறுகிறான். வெளியே பார்ப்பதாக சொல்வது தப்பு. எல்லாமே மனதில் எண்ணங்களாக இருக்கிறது.

  1. சூன்யவாதம்.

அஸத்க்யாதி என்பது மற்றொரு பெயர். இல்லாத கயிற்றில் இல்லாத பாம்பைப் பார்க்கிறாய். எல்லாம் சூன்யமாக இருப்பதால் இந்த தவறு நடக்கவில்லை. இல்லாததற்கு எப்படி கயிறு, பாம்பு என்ற அடைமொழி கூறமுடியும்.

  1. அக்யாதி

ஏற்கனவே பார்த்த பாம்பைத்தான் இப்பொழுது கயிற்றில் பார்க்கிறாய். எங்கே பார்த்தாயோ அந்த தேச, காலம் இப்போது மாறியிருப்பதால் தவறு நடந்திருக்கிறது. பாம்பு சத்யம் என்பதும் தவறானது.

  1. அன்யதா வாதம்

உண்மையான பாம்புதான் பார்க்கப்படுகிறது. ஸமிருதி அல்லது பிரத்யக்ஷம் எது என்பதில்தான் தவறு நடந்திருக்கிறது. ஏதோ விளக்க முடியாத பிரத்யக்ஷத்தினால் பாம்பு தோன்றியிருக்கிறது.

  1. அனிர்வசனீய வாதம் – சரியான க்யாதிவாதம்

அந்த இடத்தில் ஸத்திற்கும், அஸத்திற்கும் வேறானவொன்று காட்சியளிக்கிறது. இருக்கிறது என்றோ இல்லையென்றோ சொல்லா முடியாததாக இருப்பதனால் இதை அனிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. மித்யா ஸ்ருஷ்டிதான் கயிற்றில் தோன்றும் பாம்பு. இது நம்மால் உருவாக்கப்பட்டதாகும். நாம் உருவாக்கிய பாம்பை நம்மால்தான் நீக்கமுடியும். வேறு யாராலும் விரட்டியடிக்க முடியாது. மனதில் உருவாகி இருப்பதை நாம்தான் அழிக்க வேண்டும், வேறுயாரும் அதை செய்ய முடியாது.

 

4.ஸம்பாவனா: அத்யாஸ வாய்ப்பு

  1. அக்ஞானம்      – முழுமையாக ஒன்றும் தெரியாத நிலை
  2. விபரீத ஞானம் – அறியாமை நீக்கி தவறான அறிவை அடைந்திருத்தல்
  3. சம்யக் ஞானம்  – அறியாமை நீக்கி சரியான அறிவை அடைந்திருத்தல்
  4. ஸம்பாவனா     – இருப்பதற்கு வாய்ப்பு
  5. சரியான அறிவை அடைதல்

 

இதுவே ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடையும் வழிமுறை. இதை ஆத்மஞானத்தை அடையும் விஷயத்தில் பொருத்திப் பார்ப்போம்.

  1. ஆத்மாவைப் பற்றிய அறியாமை
  2. உடல்தான் ஆத்மா என்ற தவறான எண்ணத்தை அடைதல்
  3. ஆத்ம விசாரம் செய்யும்போது உடலுக்கப்பால் நான் என்கின்ற ஆத்மா இருக்கலாம் என்ற சந்தேகம் வருவது
  4. ஆத்மாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
  5. இறுதியில் நானே ஆத்மா என்ற சரியான அறிவை அடைதல்.

மேற்கூறிய விசாரத்தைப் பார்க்கும்போது ஆத்ம-அனாத்மாவுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை பகவான் சங்கரர் கொடுக்கிறார்.
5.அத்யாஸ பிரமாணம்

5.1.     ஆத்ம-அனாத்மா விஷயத்தில் ஏற்பட்ட அத்யாஸத்திற்கு ஸ்ருதிதான் பிரமாணம். ஆத்மாவின் ஸ்வரூபம் அஸங்கமாகும. அனாத்மா விஷயங்கள் நீக்கப்படுவதாக இருப்பதால், அது மித்யாவாகும். இந்த ஜகத்தும், சரீரங்களும் நீக்கப்படுவதாக இருப்பதால், இவைகளும் மித்யாவாகும். சாட்சி பிரத்யக்ஷம் நம்முடைய மனதிலுள்ள உணர்வுகளை சாட்சியே விளக்குகிறது. அத்யாஸம் அனுபவத்திலே ஏற்படுகிறது. வெளி விஷயத்தை என்னுடையது என்று நினைக்கும்போது அதற்கு வருகின்ற நலம், கேடு அனைத்தும் தனக்கு வந்ததாகவும், உடலை அபிமானிக்கும்போது அதற்கு வருகின்ற கஷ்டங்கள் தனக்கு வந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இவைகள் நம் அனுபவத்திலேயே புரிந்து கொள்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் எதன் மீதும் அபிமானம் இல்லாததால் விவகாரம் எதுவும் நடக்கவில்லை. எனவே அத்யாஸத்திற்கு அபிமானம்தான் காரணமாகும்.

5.2.    அத்யாஸ பிரகாரம்

அத்யாஸம் படிப்படியாக எப்படி நடக்கிறது. நம்முடைய தேக விவகாரம் நடக்க வேண்டும் என்றால் உடல் மீது அபிமானம் இருக்க வேண்டும். நான் அறிய விரும்புவன் என்ற அத்யாஸம் இல்லாமல் எந்த விவகாரமும் நடக்காது என்று பகவான் சங்கரர் கூறுகிறார். இது மிருகங்களுக்கும் பொருந்தும். நம் சொந்த-பந்தங்களிடத்தில் அபிமானம் இருப்பதால் அவர்களுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் நம்மையும் பாதிக்கின்றது.

 

6.அத்யாஸ உபஸம்ஹாரம் (முடிவுரை)

இந்த அத்யாஸம் நம்முடைய சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் அத்யாஸத்தை முகவுரையாக கொடுத்து விளக்கப்பட்டிருக்கிறது. அத்யாஸத்தை நீக்கி ஆத்மா ஒன்றுதான் என்ற அறிவின் மூலமாக சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஞானம் அக்ஞானத்தை நீக்கிவிடுகிறது. இந்த அக்ஞானத்தினால் எவைகளெல்லாம் இருக்கிறதோ அவைகளெல்லாம் நீங்கிவிடுகிறது. கயிறு என்ற அறிவு வந்தவுடன் பாம்பு என்ற அபிமானம் சென்றுவிடுவதால் பாம்பின் உருவமும் மறைந்துவிடுகிறது. அத்யாஸமும் சென்றுவிடுகிறது.

பிரம்ம சூத்திரம்-பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஜிக்ஞாஸா அதிகரணம்-01

சூத்திரம்-1
अथातो ब्रह्मजिज्ञासा ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।

இந்த சூத்திரம் பிரம்மசூத்திரம் என்கின்ற நூலுக்குள் நுழைகின்ற வாயிலாக இருக்கிறது. இதற்கு அனுபந்த3 சதுஷ்டயம் என்ற வேறொரு பெயரும் உண்டு. அனுபந்த சதுஷ்டயம் என்பது நான்கு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவைகள் விஷயம், அதிகாரி, பலன், சம்பந்தம் ஆகியவைகளாகும். புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு இந்த புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை கூற வேண்டும். யாருக்காக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், படிப்பதனால் என்ன பலனை அடையலாம் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

வியாச பகவான் தான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதைக் கூறிவிட்டு, யார் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் கூறியிருக்கிறார். எனவே முதல் சூத்திரம் அனுபந்த சதுஷ்டயமாக அமைந்திருக்கிறது.

அதிகரணத்தின் அங்கங்களாவது விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் ஆகியவைகளாகும். இந்த முதல் சூத்திரமே ஒரு அதிகரணமாக இருப்பதால், இதற்கு அனுபந்த சதுஷ்டயம் இருக்கிறது.

  1. விஷயம்        – முழு வேதாந்த சாஸ்;திரமாகும்.
    2.    சந்தேகம்        – வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
    3.    பூர்வபக்ஷம்      – அனுபந்த சதுஷ்டயமே இல்லாததால் விசாரம் தேவையில்லை
    4.    சித்தாந்தம்      – வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.

கேள்வி  பிரம்ம சூத்திரத்தில் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்?

பதில்    உபநிஷத் வாக்கியங்களை எடுத்து பிரம்ம நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  அதைத்தான் கர்ம காண்டத்திலே சகுண பிரம்மனை நிச்சயம் செய்து விட்டதால் திரும்பவும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு நிச்சயம் செய்யத் தேவையில்லை.

பதில்    இதில் நிர்குண பிரம்மத்தைத்தான் நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  நிர்குண பிரம்மன் என்றவொன்றே இல்லாதபோது அதை நிச்சயம் செய்யப் போகிறேன் என்று சொல்வது தேவையில்லாதது. மேலும் யாருக்காக இந்த விசாரம் செய்யப் போகிறீர்கள்?

பதில்    சாதன-சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்கள்தான் இதற்கு அதிகாரி.

கேள்வி  வைராக்கியம் என்பது அடையவே முடியாது. எனவே அதிகாரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் யாரும் இல்லை. அப்படியே ஒருசிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் அதனால் அடையும் பலன்தான் என்ன?

பதில்    இந்த மூன்று கருத்துக்களையும்தான் முதல் சூத்திரத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த உபநிஷத்துக்கம் நுழைவாயிலாக இருக்கிறது. இந்த சூத்திரத்தில் மூன்று வர்ணகங்கள் இருக்கிறது. அவைகள்,

 

2வது வர்ணகம் – அக3தார்த்த2 வர்ணகம்

அக3தார்த்த2ம் – பேசி முடிக்காத விஷயம். அதாவது நிர்குண பிரம்மன் கர்ம காண்டத்தில் பேசப்படவில்லை.

3வது வர்ணகம் – அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.

4வது வர்ணகம் – ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
சூத்திரத்தின் அர்த்தம்:
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।


வேதாந்தத்தின் அனுபந்த சதுஷ்டயம்:
1.   விஷயம்  – ஜீவ-பிரம்ம ஐக்கியம்
2.   அதிகாரி    – சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்தவர்கள்
3.   பலன்      – மோட்சம்; ஜீவன் முக்தி; விதேக முக்தி
4.   சம்பந்தம் – அதிகாரிக்கும் அவன் அடையப்போகும் பலனுக்கான சம்பந்தம்.
முதல் மூன்று கருத்துக்களையும் நிலை நாட்டுவதுதான் இந்த சூத்திரத்தின் நோக்கமாகும்.
அத2     – பிறகு (thereafter)
அத:  – ஆகவே (therefore)
ப்3ரஹ்ம – நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா – அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.

எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.

பிறகு    சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா – பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.

விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
பூ.ப   வேதாந்த சாஸ்திரத்தை விசாரம் செய்யக்கூடாது? எல்லா விஷயத்தையும் கர்மகாண்டத்தில் பேசியாகி விட்டது. மேலும் உபநிஷத்தை படித்து அறிவை அடைந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இதைப் படிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆகவே விசாரம் செய்யத் தேவையில்லை.

பதில் விஷயம் உண்டு. அதிகாரியும் உண்டு. பலனும் உண்டு. இதைத்தான் இந்த சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.

 

அத2” சப்த விசாரம்:

இந்த சொல்லுக்கு 7 அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றுள் இந்த இடத்திற்கு பொருத்தமான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏன் மற்ற அர்த்தங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

  1. மங்கலம் – தெய்வீகமானது
    2.    அனந்தரம் – பிறகு
    3.    ஆரம்பஹ – தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
    4.    ப்ரஶ்னஹ – கேள்வி
    5.    கார்க்ஸயம் – முழுமையான
    6.    அர்த்தாந்தரம் – பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா – புதிய தலைப்பு; அடுத்தது
    7.    க்ரமஹ – வாpசைக்கிரமம்

பூ.பக்ஷி மங்கலத்தை இந்த இடத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எதை தொடங்கினாலும் மங்கலத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு இறைவணக்கம் எதுவும் இல்லாததால் இதை இறைவணக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   அத2 என்ற சப்தமே மங்கலத்தைக் குறிக்கிறது. ‘பிறகு”  என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். சாஸ்திரத்தில் ஓம், அத2 என்கின்ற சொற்களின் உச்சரிப்பே மங்கலமானது. அத2 சொல்லானது சப்தமாகவும், அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அத2 என்ற சொல்லின் சப்தமே மங்கலத்தை குறிப்பதால், அதை விட்டுவிட்டு ‘பிறகு” என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பஹ என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் பிரம்ம ஞானத்தை அறிய விருப்பம் ஆரம்பமாகிறது என்றாகிவிடும்.  ப்ரஶ்னஹ என்ற அர்த்தத்தமும், கார்க்ஸயம் என்ற அர்த்தத்தமும் பொருந்தி வராது.

 

6.அர்த்தாந்தரம் – புதிய தலைப்பு; அடுத்தது

பூ.பக்ஷி கர்மகாண்ட விசாரம் முடிந்துவிட்டது எனவே அடுத்ததாக ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பது சரியாக பொருந்தி வருகிறது. இதுவே சரியான அர்த்தமாக இருக்கிறது.

பதில்   பிறகு என்ற அர்த்தத்திற்குள்ளே அடுத்தது என்ற அர்த்தம் வந்துவிடுவதால் இந்த அர்த்தம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. மேலும் அடுத்தது என்று சொல்லும் போது இதற்கு முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிறகு என்று சொல்லும்போது முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த அர்த்தம்தான் பொருத்தமாக இருக்கும். இந்த அர்த்தம் பிரம்ம ஞான விசாரத்திற்கு அவசியம என்ற உறுதி கூறுகிறது.

 

2.அனந்தரம் – பிறகு

பூ.பக்ஷி பிறகு என்பது சாதன சதுஷ்டய சம்பத்திக்கு பிறகு என்று எடுத்துக் கொள்ளமுடியாது. கர்ம காண்ட விசாரத்திற்கு பிறகு ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

பதில்   கர்ம காண்டத்திற்கு செல்வதற்கு முன்பே வைராக்கியம் இருந்துவிட்டால் கர்மகாண்ட விசாரம் தேவையில்லை. நேரிடையாக ஞானகாண்ட விசாரத்திற்கு வந்துவிடலாம். சுகர், நசிகேதன் போன்றவர்கள் கர்ம அனுஷ்டானம் செய்யாமலே பிரம்மஞானத்தை அடைந்தவர்கள். பகவான் கிருஷணர் பகவத்கீதையில் யோகபிரஷ்டன் என்பவனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவன் முற்பிறவியிலே விவேக, வைராக்கியத்தை அடைந்திருப்பான். இவன் இந்த பிறவியில் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று குறிபபிட்டிருக்கிறார்.

 

7.க்ரமஹ – வரிசைக்கிரமம்

பூ.பக்ஷி அத2 என்ற சொல்லுக்கு வரிசைப்படி என்ற முறையில் முதலில் தர்மத்தைக் கடைப்பிடித்து மனத்தூய்மையடைந்து அடுத்ததாக பிரம்ம விசாரம் என்ற வரிசையை எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   வரிசைப்படி இல்லாமலும் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வரலாம். ஒருவன் பல கர்மங்களை செய்ய வேண்டுமென்றால் இந்த கிரமத்தைப் பற்றி பேசலாம். உதாரணமாக ஒருவன் குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அலுவலகம் செல்கின்றான். இந்த இடத்தில் கிரமத்தை கடைப்பிடிக்கலாம். இந்த பிரம்ம விசாரம் வைராக்கியம் அடைந்திருப்பவன் செய்கின்றான். வைராக்கியம் இல்லாதவன் கர்மகாண்டத்திற்கு சென்று அதையடைந்து பிறகு பிரம்ம விசாரத்திற்கு வருவான். கர்ம காண்டத்தில் கிரமமாக சில யாகங்களை செய்ய வேண்டும் என்ற நியதியிருக்கிறது.

பூ.பக்ஷி ஞான-கர்ம சமுச்சயவாதி இரண்டு காண்டத்தையும் சேர்த்து செய்து கொண்டிருப்பான். இரண்டு காண்டங்களும் மோட்சம் என்கின்ற ஒரே பலனைத்தான் லட்சியமாக கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் மோட்சம் என்கின்ற பலனை மறைமுகமாக பேசுகிறது. ஞானகாண்டம் நேரிடையாக மோட்சத்தைப் பற்றி பேசுகிறது. பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போல மோட்சத்தை அடைவதற்கு இரண்டு காண்டங்களும் தேவைப்படுகிறது.

பதில்   ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டு பொருட்களை கலக்கமுடியாது. கர்ம காண்டத்தில் இருக்கும்போது சரீரமே நான் என்ற எண்ணத்தில் செயல் செய்து கொண்டிருப்பான். ஞானகாண்ட சாதகன் சரீர அபிமானத்தை நீக்க முயற்சி செய்து கொண்டிருப்பான். எனவே இரண்டும் ஒன்றக்கொன்று எதிராக இருப்பதால் சமுச்சயம் சம்பவிக்காது. இவையிரண்டையும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியாது. மேலும் இரண்டுக்கும் இடையே மூன்று வேற்றுமைகள் இருக்கிறது.

 

  1. விஷய பே4தஹ – இரண்டு காண்டங்களின் மையக்கருத்து வெவ்வேறாக இருக்கிறது. கர் காண்டம் புண்ணியங்களைத்தான் முக்கிய விஷயமாகக் கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டிருக்கின்ற கர்மங்களை முறைப்படி செய்தால் புண்ணியத்தை அடையலாம். இந்த புண்ணியத்தால் சுகத்தை அனுபவிக்கலாம். சுகத்தை துறந்தால் மனத்தூய்மை அடையலாம். ஆனால் ஞானகாண்ட விஷயமானது ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைத்தான் பேசுகிறது.
  2. 2ல பே4தஹ –  இரண்டு காண்டங்களின் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றது. கர்ம காண்டத்தினால் அடையப்படுகின்ற பலன்கள் நிலையற்றது. ஞானகாண்டத்தினால் அடைகின்ற பலன் நிலையானது.
  3. ப்ரவிருத்தி பே4தஹ – கர்மகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும், ஞானகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும் வெவ்வேறானது. கர்மத்தை செய்வதனால்தான் பலனை அடையமுடியும். யாகம் செய்யும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதை முறைப்படி செய்தால்தான் பலனை அடைவோம். ஆனால் ஞானகாண்டத்தில் ஞானத்தை அடைவதும், பலனை அடைவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது.

அத2” சப்த முடிவுரை:
சாதன சதுஷ்டய சம்பத்திக்குப் பிறகு பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது. பரீக்ஷய லோகான் கர்மசிதான் நிர்வேதம் ஆயாத் என்று தொடங்கும் முண்டக உபநிஷத் உபதேசம் உரைப்பது, இந்த உலகத்தில் அடைகின்ற அனுபவங்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து அடைவது வைராக்கியம், விவேகமாகும். பிறகு பிரம்மத்தை அறிவதற்கு தகுதி வாய்ந்த குருவிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஆத்மனஸ்ய காமாய… என்று தொடங்கும் பிருஹதாரண்க உபநிஷத் உபதேசமானது, இந்த உலகத்திலுள்ள பொருட்களின் மீது ஆசை கொள்வது அந்தப் பொருட்களின் நிமித்தமாக அல்லவென்றும், நம் மனதில் அடைகின்ற ஆனந்தமும்,  ஆசைதான் காரணம்.

மேற்கூறிய உபநிஷத் உபதேகங்களைப் பார்க்கும்போது சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று இருப்பதால் “அத2” என்ற சொல்லுக்கு பிறகு என்ற அர்த்தமே சரியாக இருக்கின்றது. ஆகவே உபநிஷத் சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ஆத்ம விசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பதால் பிறகு என்ற அர்த்தம்தான் சரியாக இருக்கும்.

அத: – ஆகவே. இந்தப் பொருளுக்கு பல காரணங்கள் உண்டு. அவைகளை பார்க்கலாம்.

  1. கர்மனா மோக்ஷ அபா4வாத் – கர்மத்தினால் மோட்சத்தை அடையமுடியாது.
  2. ஞானாதேவ மோக்ஷ ஸம்ப4வாத் –  பிரம்ம ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைய முடிவதனால் விசாரம் செய்யப்படவேண்டும்.
  3. ஸாதன சதுஷ்டய ஸம்ப4வாத் – சாதன சாதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்து விட்டதால் விசாரம் செய்ய வேண்டும்.
  4. ஸம்ஸாரஸ்ய அத்யாஸ பூர்வத்வாத் –  சம்சாரம் அத்யாஸமாக இருப்பதனால், விசாரம் செய்யப்பட வேண்டும்.

ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – இந்த சொல்லுக்குப் பிறகு கர்த்தவ்ய  என்ற வினைச் சொல்லை சேர்த்து பொருட்படுத்த வேண்டும். அப்போது பிரம்ம ஞானத்திற்காக விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற அர்த்தம் கிடைக்கும். ப்3ரஹ்மஜிக்ஞாஸா என்ற சொல்லை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் ப்ரஹ்மன:+ஜிக்+ஞாஸா – பிரம்மத்தைப் பற்றிய விசாரம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. ஜிக்ஞாஸா என்பது ஞாதும் இச்சா – அறிவதற்க விருப்பம்; அறிய ஆவல் என்ற அர்த்தம் கொடுக்கின்றது.

ஞானம் என்ற சொல் எதை அடைய ஞானம் தேவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதே பதிலாகும். எனவே பிரம்ம என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
ஸா – விருப்பம்- எதைப்பற்றிய ஆசை இருக்கிறது? எதையறிய விருப்பம் கொள்கிறாய் என்ற கேள்வியெழும்போது அதற்கான விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த விருப்பத்தினுடைய விஷயம் ஞானமாகும்.
பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லின் பொருள் பிரம்ம ஞானத்தில் விருப்பம் என்பதாகும். நாம் இதனுடன் கர்த்தவ்ய என்ற வினைச்சொல்லை பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் சரியாக இருக்காது. அதாவது பிரம்ம ஞானத்தில் விருப்பம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் தவறாக இருக்கிறது. விருப்பம் என்பது செயல் செய்து அடைவதில்லை. அதனால் இச்சா என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அது சம்பந்தமான வேறொரு சொல்லை பயன்படுத்தி வாக்கியத்தை பூர்த்தி செய்கிறோம். ஒரு பொருள் மீது ஆசை வந்தால் அதை அடைவதற்கான சாதனத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல் பிரம்மஞானத்தில் ஆசை வந்திருப்பதால் அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்கு வேதாந்த விசாரம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். எனவே இச்சா என்ற சொல்லை விட்டுவிட்டு, இச்சையை பூர்த்தி செய்கின்ற விசாரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறோம். இப்போது அந்த பிரம்ம ஞானத்தை அடைய விசாரம் செய்யப்படவேண்டும் என்ற சரியான வாக்கியமாக இருக்கிறது.

 

பிரம்மன் என்ற சொல்லுக்கான அர்த்தம் அடுத்த சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆறாவது வேற்றுமை உருபு உடைய என்பது ஒன்றினுடைய சம்பந்தத்தைக் குறிக்கும். இங்கே இது சரியாக பொருந்தி வராததால் இரண்டாவது வேற்றுமை உருபான ஐ எடுத்துக் கொண்டு பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பது சரியாக இருக்கும்.
பூ.பக்ஷி பிரம்ம சம்பந்தமான விசாரம் என்று பொருட்படுத்த வேண்டும்.

பதில்   பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பதுதான் சரியான அர்த்தம். ஏனென்றால் இதுவே பிரம்மத்திற்கு சம்பந்தபட்ட விஷயங்களும் விசாரம் செய்ய வேண்டும் என்பதே சேர்ந்திருப்பதால் நீ சொல்வது சரியல்ல. பிரம்மத்தை தனியாக சொல்வதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக ராஜா செல்கிறார் என்றால் அவர் பரிவாரங்களுடன் செல்கிறார் என்றுதான் புhpந்து கொள்வோம்.

ஞானம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.    விசாரம் செய்வதனால் அடையும் இறுதி பலன் ஞானமாகும்.
2.    ஞானத்தை அடைவதற்கான வழிமுறை, சாதனம்.

பிரம்ம ஞானத்தை அடைவதற்கு எத்தனை காலம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வினவினால் இதற்கு காலவரம்பெல்லாம் கிடையாது. முழுமையான ஞானத்தை அடையும்வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
4வது வர்ணகம்:

ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3தி4 – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.

 

பூ.பக்ஷி நிர்குண பிரம்மன் ஏற்கனவே தெரிந்ததா அல்லது தெரியாததா?

பதில்   நிர்குண பிரம்மன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. அதாவது சாமான்யமாக தெரிகிறது. விசேஷமாக தெரியவில்லை. எனவே இதை விசாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நிலை நாட்டுவதற்கு பகவான் சங்கரர் விசாரம் செய்கின்றார். இதை நிலைநாட்டிவிட்டால் முதல் சூத்திரம் நிலைநாட்டப்பட்டதாகிவிடும்.

பூ.பக்ஷி எந்த பிரமாணத்தின் மூலமாக பிரம்மம் சாமான்யமாக தெரிகிறது?

பதில்1  இது வேதப் பிரமாணம் மூலமாக அறியப்பட்டிருக்கிறது. அழியாதவொரு வஸ்து இருக்கிறது என்ற வேத வாக்கியம் இருக்கிறது. இதைக் கேட்பதன் மூலமாக பிரம்மன் இருக்கிறது என்ற சாமான்ய ஞானம் வந்துவிட்டது. ‘ப்ரஹ்மனேஹ ஆப்னோதி பரம்”, ‘ஸத்யம், அனந்தம், நித்யம் பிரம்மன்”, ‘பிரம்மன் நிரதிசயமானது ( எல்லையற்றது )” என்று படிக்கும் போது பொதுவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இது கர்மகாண்டத்திலே விசாரிக்கப்படாததால் இப்போது விசாரம் செய்யப்படுகிறது.

 

பதில்2     இந்த பிரம்ம விஷயத்தில் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதனாலே இது சாமான்யமாக அறியப்படுகிறது, விசேஷமாக அறியப்படவில்லை என்று தெரிகிறது. சார்வாக்கர்கள் தேகம்தான் ஆத்மா என்கின்றார்கள். கர்மகாண்டம் யாகத்தின் மூலமாக சொர்க்கத்தை அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது ஸ்தூல உடல் ஆத்மாவல்ல சூட்சும உடல்தான் ஆத்மா என்று நம்புகிறார்கள். ஷணிகவாதிகள் க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி தோன்றி; மறைந்து கொண்டிருப்பதால் இதுதான் ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரே ஆத்மாதான் இறந்து பிறக்கிறது. சூன்யவாதிகள் சூன்யம்தான் பிரம்மம் என்ற கொள்கையுடையவர்கள். இந்த சூன்யத்தை பார்ப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற வாதத்தினால் இந்தக் கொள்கை நீக்கப்படுகிறது. நியாய மதக்காரர்கள் ஆத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சாங்கிய மதக்காரர்கள் ஆத்மா போக்தாவாக மட்டும் இருக்கிறது என்கிறார்கள். யோக மதக்காரர்கள் ஈஸ்வரனே ஆத்மா என்கின்றார்கள். அத்வைதிகள் இந்த ஆத்மாதான் நிர்குண பிரம்மம் என்ற கொள்மையுடையவர்கள்.

பிரம்மத்தை விசேஷமாக புரிந்து கொள்ளாதவரை இந்த குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும். பிரம்மமே ஆத்மாவாக இருப்பதனால் நாம் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவை அடைந்திட வேண்டும். சாமான்ய ஞானம் இருந்தால்தான் விசேஷஞானத்தை அடைந்திட முடியும். எனவே இந்த விபரீதஞானத்தை நீக்கி விசேஷ ஞானத்தை அடைந்திட வேண்டும். அஹம் என்ற விஷயத்தில் சாமான்யமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விசேஷஞானம் அடைவதற்கு விசாரம் தேவைப்படுகிறது.
இத்துடன் முதல் சூத்திரம் முடிவடைந்தது.—

2வது சூத்திரம் – 2வது அதிகரணம் – ஜன்மாத்3யதி4கரணம்

जन्माद्यस्य यतः ||2 ||
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.

பொருள்:

யத:                     – எதனிடமிருந்து யாரிடமிருந்து
அஸ்ய              – இதனுடைய;  இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3      – பிறப்பு முதலியன
இந்த மூன்று சொற்களுடன் மேலும் மூன்று சொற்களை சேர்த்தால்தான் சரியான அர்த்தம் கிடைக்கும். அவைகள்,
ப4வதி                 – உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத்                   – அது
ப்3ரஹ்    – பிரம்மம்

பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
விசாரம்
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அடைய முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யபப்டுகின்றது.

ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.

ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:

  1. விஷயம் – பிரம்ம லட்சணமாகும்.
  2. சந்தேகம் – பிரம்மத்திற்கு லட்சணம் இருக்கிறதா, இல்லையா
  3. பூர்வ பக்ஷம் – பிரம்மன் நிர்குண,  நிர்விசேஷமாக இருப்பதால் அதற்கு லட்சணம் சொல்ல முடியாது என்று பூர்வ பக்ஷி கூறுவதால் இதை விசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
  4. சித்தாந்தம் – ஏற்றி வைக்கப்பட்ட சில குணங்களின் மூலமாக பிரம்மத்திற்கு லட்சணம் கொடுக்க முடியும்.
  5. சங்கதி – சென்ற சூத்திரத்திற்கும் இந்த சூத்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்க வேண்டும். இதற்கு ஆட்சேப சங்கதியாகும். முதல் சூத்திரத்தில் பிரம்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதற்கான லட்சணத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தம்.

சாஸ்தர உபதேசமானது மூன்று படிகளாக இருக்கிறது. அவைகள்,

  1. உத்தேசம் – நாம் எதைப்பற்றி விளக்கப்போகின்றோமோ அதை சுருக்கமாக முதலில் சொல்லிவிட வேண்டும்.
  2. லட்சணம் – பிரம்மத்திற்கு லட்சணம் கொடுத்துவிட்டு அதை நிச்சயம் செய்ய வேண்டும். இதைத்தான் இரண்டாவது சூத்தரத்தில் செய்துள்ளார். மூன்றாவது சூத்திரத்தில் பிரம்மத்தை அறிய உதவும் பிரமாணத்தை கூறியுள்ளார். இதன் மூலம் பிரம்மன் என்ற ஒன்றிருக்கிறது என்று நிச்சயம் செய்துள்ளார்.
  3. பரீக்ஷா – விசாரங்கள் செய்திருக்க வேண்டும். நான்காவது சூத்திரத்திலிருந்து இறுதி சூத்திரம் வரை இதைத்தான் வியாச பகவான் செய்திருக்கிறார்.

 

ஏதாவது ஒன்றிற்கு லட்சணம் கொடுக்கவேண்டுமென்றால் எப்படிபட்ட லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்றும், எந்த வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இனி விளக்கப்படுகிறது.

 

  1. சஜாதீய விஜாதீய வியாவர்த்தக லட்சணம்:
    வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
    சஜாதீய – ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
    விஜாதீய – மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
    அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
  1. தூ4ஷண த்ரய ரஹித தர்மஹ

எந்த லட்சணமும் மூன்று குறைகளற்றதாக இருக்கவேண்டும்.

2.1.   அதிவியாப்தி – லட்சியத்திற்கப்பால் சென்று விடக்கூடாது. உதாரணமாக காளை மாட்டின் சரியான லட்சணம் கழுத்தில் தசை தொங்கிக்கொண்டிருக்கும் என்பதாகும். நான்கு கால்களையுடையது என்பது தவறான லட்சணம். ஏனென்றால் இது மற்ற விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

2.2.   அவியாப்தி – கொடுக்கின்ற லட்சணம் லட்சியத்தை குறைவாகத்தான் வியாபிக்கிறது. இந்தியாவிற்கு லட்சணம் கொடுக்கும் போது தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடு என்பது தவறானதாகும். இது இந்தியாவின் ஒரு பகுதியைத்தான் குறிக்கிறது.

2.3.   அஸம்பவஹ – தலைகீழாக லட்சணையை கொடுப்பது. காளை மாட்டைக் குறிக்க பால் கொடுக்கும் மாடு என்பது முற்றிலும் தவறானதாகும்.

எதனால் லட்சியமானது அடையப்படுகிறதோ அதுவே சரியான லட்சணமாகும். சரியான லட்சணம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள்,
1.    ஸ்வரூப லட்சணம்
2.    தடஸ்த லட்சணம்
ஆகியவைகளாகும்.
ஸ்வரூப லட்சணம்
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.

தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.

பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.

பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.

இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
ஜன்மாதி3 என்ற சொல்லின் விசாரம்
ஜன்மாதி3 – ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம – பிறப்பு, தோற்றம்
ஆதி3 – முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி அனாதியாக இருக்கும்போது முதல் ஸ்ருஷ்டியை பேசவே முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் ஜன்மாதி என்று சொல்லியிருக்கிறார். லயத்தையோ அல்லது இருத்தலையோ முதலில் சொல்லியிருக்கலாமே?

பதில்1  ஸ்ருதி வாக்கியத்தின் அடிப்படையில்தான் விசாரம் செய்யப்படுகிறது. ஸ்ருதியில் வாக்கியத்தில் ஜன்மம் முதலில் சொல்லியிருப்பதால் அதையே முதலில் விசாரம் செய்யப்படுகிறது.

பதில்2  நம் அனுபவத்தில் எந்தவொரு பொருளும் பிறப்பைத்தான் முதலில் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் இருத்தல், லயம் என்ற வரிசை கிரமமாக அதன் நிலைமாறுகிறது.

 

பூ.பக்ஷி யாஸ்கர் என்ற முனிவர் ஆறுவிதமான விகாரங்களைக் கூறியிருக்கிறார். அவைகள் 1. பிறத்தல், 2.இருத்தல், 3.வளர்ச்சி, 4.மாற்றம், 5.தேய்தல், 6.இறத்தல் ஆகியவைகளாகும். இவரும் பிறப்பைத்தான் முதலில் சொல்லியிருககிறார். எனவே ஆதி என்ற சொல்லுக்கு பொருளாக மற்ற ஐந்து விகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

பதில்1  யாஸ்கர் ஸ்தூல பூதத்தினுடைய விகாரங்களைத்தான் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே சூட்சும பூதங்களுக்கும் முன்னாடி உள்ள நிலையைத்தான் பேசுகிறோம். உதாரணமாக ஆகாசத்திற்கு இந்த விகாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.

பதில்2  ஸ்ருதி இந்த ஆறு விகாரங்களைப் பற்றி பேசவில்லை. பிறப்பு, ஸ்திதி, லயம் என்கின்ற மூன்றைப் பற்றித்தான் பேசியிருக்கிறது. ஆகவே ஜன்மாதி என்ற சொல்லுக்கு பிறப்பு, இருத்தல், ஒடுங்குதல் என்பதுதான் சரியான பொருளாகும்.

அஸ்ய” என்ற சொல்லின் விசாரம்
அஸ்ய – இதனுடைய; இந்த உலகத்தினுடைய
இந்த உலகத்தை பகவான் சங்கரர் நான்கு விதமாக வர்ணிக்கிறார். இந்த வர்ணனையே சில தத்துவங்களை உணர்த்துகின்றது. இந்த வர்ணனை ஜகத்திற்கு லட்சணமாகவும் இருக்கிறது.

  1. நாம-ரூபாப்4யாம் வ்யாக்ருதஸ்ய

வ்யாக்ருதஸ்ய – வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது

நாம ரூபாப்யாம் – நாம் ரூபங்களாக

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது

1.1.     இந்த உலகம் நாம-ரூபங்களை உடையதாக அறிவுள்ள ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

1.2.     இந்த உலகம் நாம-ரூபமாக இருப்பதனால் மித்யா ஸ்வரூபமாக இருக்கிறது.

  1. அனேக3 கர்த்ருபோ4க்த்ரு ஸம்யுக்தஸ்ய

இந்த உலகம் பலவிதமான கர்த்தாக்களும், போக்தாக்களும் கூடியுள்ளவர்களாக இருக்கிறது. ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஆரம்பித்து அனைத்து தேவதைகளும் இந்த உலகத்தை படைத்தவர்கள் அல்ல. அவர்களும் தோற்றுவிக்கப்பட்டவர்கள்தான் என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களும் கர்த்தாவாக, போக்தாவாக இருக்கிறார்கள்.

  1. ப்ரதிநியதி தேஸகால நிமித்த க்ரியாபல ஆஸ்ரஸ்ய

ஆஸ்ரஸ்ய – இப்படிபட்ட தன்மையுடையது

ப்ரதிநியதி  – விதிமுறை

தேசம், காலம், நிமித்தம், க்ரியா, பலன் என்கின்ற ஐந்தும் இந்த இடத்தில், இந்த காலத்தில் இதன் காரணமாக, இந்த செயலுக்கு இந்தப்பலன் என்ற நியதியுடன் கூடிய தன்மையுடையது இந்த உலகம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு நாம்தான் காரணம் என்பதாகும். மேலும் அவரவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கக்கூடிய ஸர்வக்ஞன் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸர்வக்ஞன் ஈஸ்வரனே ஆவார்.

  1. மனஸா அபி4 அசிந்த்ய ரசனா ரூபஸ்ய

மனதினாலும் கூட, கூர்மையான புத்தியாலும் கூட எட்டாதபடி இந்த உலகத்தின் அமைப்பு இருக்கிறது. யாராலும் புரிந்து கொள்ள முடியாததாக இந்த உலகம் இருக்கிறது. ஈஸ்வரன் அனைத்து சக்தியுடையவராக இருப்பதால் அல்ப சக்தியடைய ஜீவர்களை இந்த உலகத்தில் படைத்திருக்கிறார்.

இத்துடன் இரண்டாவது சூத்திரத்தின் இரண்டாவது சொல்லின் விசாரம் முடிவடைகிறது.

யத” என்ற சொல்லின் விசாரம்
யத:- யாரிடமிருந்து
இது காரணத்தை விளக்குகின்ற சொல்லாகும். அதாவது இந்த உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் பிரம்மன். பிரம்மனே உலகத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார். இங்கு உபாதான காரணம்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமாக இருப்பது உபாதான காரணம். களிமண் பானைக்கு உபாதான காரணம். ஸ்ருஷ்டிக்கு மட்டும் காரணமாக இருப்பது நிமித்த காரணம். குயவன் பானைக்கு நிமித்தக் காரணம். ஜன்மாதி என்ற சொல் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறார் என்பது உணர்த்துகிறது.

ஜன்மாதி என்ற சொல் பிரம்ம லட்சணையைத்தான் குறிக்கிறது. பிரம்மன் காரணம் என்றால் ஜகத் காரியாமாகும். காரியத்திற்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவைகள்,
1.    காரணம் சத்யம், காரியம் மித்யா
2.    காரணம் சேதனம், காரியம் ஜடம்
3.    காரணம் வரையறுக்கப்படாதது, காரியம் வரையறுக்கப்பட்டது.
ஆகியவைகளாகும். இந்த மூன்று லட்சணங்களும் ஜகத்திற்கு பொருந்தி வருகின்றது.
கேள்வி மாயையினுடைய மாற்றமே சூட்சம பிரபஞ்சம். பிறகு ஸ்தூல பிரபஞ்சமாக மாறுகிறது. மாயை உபாதான காரணமா அல்லது பிரம்மன் உபாதான காரணமா? மாயையின் மூன்று குணங்களும் உலகத்தில் இருப்பதால் மாயைதான் உபாதான காரணமாக கூறமுடியும். ஏன் பிரம்மனை உபாதானமாக கூறப்படுகிறது?

பதில்   உபநிஷத் பிரம்மத்தை உபாதான காரணமாக சொல்லியிருப்பதால், வியாச பகவான் இங்கே பிரம்மத்தை உபாதானமாக கூறியிருக்கிறார். மாயை பரிணாமி உபாதானம், பிரம்மன் விவர்த்த உபாதானமாகும். மாற்றத்தை அடைந்து உபாதானமாக மாறுவது பரிணாமி உபாதானமாகும். ஸ்வரூப தியாகமில்லாமல் உபாதானமாக இருப்பது விவர்த்த உபாதானமாகும்.

மேற்சொன்ன கருத்துக்களினால் நாம் தெரிந்து கொள்வது பிரம்மத்தைத்தான் வியாச பகவான் உபாதான காரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். சாஸ்திரத்தின் மூலம் அடைகின்ற அறிவு சாஸ்திரம், யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது.
—இத்துடன் 2வது சூத்திரம் முடிவடைந்தது.—

3வது சூத்திரம் – 3வது அதிகரணம்

शास्त्रयोनित्वात्  || 3 ||
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
6வது அதிகரணம் – ப்3ரஹ்மன: ஸர்வக்3ஞத்வ
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர – வேதம்
யோனி – காரணம்

பொருள்:
வேதத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன். பிரம்மத்தினிடமிருந்து வேதம் தோன்றியது. எனவே இவர் அனைத்தையும் அறிபவர் என்று அறிய முடிந்தது. யார் எதை படைத்துள்ளாரோ அவருக்கு அதைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பார். பானையை உருவாக்கிய குயவனுக்கு அதைப்பற்றிய அறிவை உடையவராக இருப்பார். அதேபோல எல்லாவற்றையும் படைத்தவர் எல்லாவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பூ.பக்ஷி ஈஸ்வரன் எல்லாம் அறிந்தவர் அல்ல. எல்லாவற்றையும் படைத்தவர் அல்ல. வேதம் என்பது அனாதி. இது அனாதியாக இருப்பதாலே, ஈஸ்வரன் வேதத்தை உருவாக்கியவர் அல்ல. அதனால் அவர் எல்லாவற்றை’யும் அறிந்தவர் என்ற சொல்லமுடியாது.

பதில்   ஜகத்தும் அனாதிதான் என்ற சொல்கிறோம். ஸ்ருஷ்டியும் அனாதிதான். ஜகத்தையும், வேதத்தையும் பிரிக்க முடியாது. ஸ்ருஷ்டி என்பது வெளிப்படுத்துவது என்று பொருட் கொள்ள வேண்டும். அதேபோல அனாதியான வேதத்தை வெளிப்படுத்துவது ஸ்ருஷ்டி.

பிருஹதாரண்ய உபநிஷத் 2.4.10 – “அஸ்ய மஹதோ பூ4த3ஸ்ய…” என்ற வாக்கியத்தின் அடிப்படையில் இந்த சூத்திரத்தை எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தின் பொருள் பிரம்மத்தினுடைய மூச்சுக்காற்றிலிருந்து வெளிவந்ததுதான் வேதம் என்பதாகும். புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த புத்தகம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகம் அறிவை உடையவராக இருப்பார் என்பது நியதி. உதாரணமாக சமஸ்கிருத இலக்கணத்தை எழுதிய பாணினிக்கு அதைத்தவிர மேலும் அதிகமான அறிவை உடையவராக இருப்பார். அதேபோல வேதத்தை வழங்கிய ஈஸ்வரனுக்கு வேதம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகமான அறிவை உடையவராக இருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

  1. நன்மையை உபதேசிப்பதனால் அதை சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்பது வெளிச்சத்தைப் போன்றது. இது நம் வாழ்க்கையை சாpயான முறையில் நடத்தி செல்ல உதவியாக இருக்கிறது.
  2. வேதம் எல்லாவிதமான அறிவையும் கொடுக்கக்கூடிய சாஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. பத்துவிதமான சாஸ்திர ஞானம் இருந்தால்தான் வேதத்தை புhpந்து கொள்ள முடியும். அவைகள்,

2.1. புராணம்

2.2. நியாய

2.3. மீமாம்ஸ

2.4. தர்ம சாஸ்திரம்

2.5. சிக்ஷா

2.6. கல்ப

2.7. வியாக்ரணம்

2.8. நிருத்தம்

2.9. சந்தஹ

2.10. ஜோதிடம்

 

முடிவுரை

விஷயம்   பிரம்மம்

சந்தேகம்  பிரம்மம் சாஸ்திரத்திற்கு கர்த்தாவா, இல்லையா?

பூ.பக்ஷம்   வேதத்திற்கு ஈஸ்வரன் காரணமல்ல. ஏனென்றால் அது அனாதியாக இருக்கிறது.

பதில்       ஜகத்தும் அனாதியாக இருந்தாலும் ஈஸ்வரன் கர்த்தாவாக இருப்பது போல வேதம் அனாதியாக இருந்தாலும் அவரே கர்த்தாவாக இருக்கிறார்.

சங்கதி     பிரம்மன் அனைத்திற்கும் காரணமில்லை என்ற ஆட்சேபம் செய்வதால் அதற்கு வியாச பகவான் பதில் கூறியிருக்கிறார்.

—-ooo00ooo—-

7வது அதிகரணம் – ஶாஸ்த்ரயோனித்வாத் (3வது சூத்திரம்)

ஶாஸ்த்ர – வேதம்
யோனி   – பிரமாணம்

பொருள்: பிரம்மன் சாஸ்திரம் என்ற பிரமாணத்தின் மூலமாக அறியப்படுகிறது.
இந்த வர்ணகத்திற்கு ஸ்ருதி வாக்கியமானது பிரஹதாரண்ய உபநிஷத் 3.9.26 ஓளபநிஷத் புருஷம் ப்ருச்சாமி என்பதாகும். இதற்கு அர்த்தம் நான் அந்த உபநிஷத்தின் மூலமாக அடையக்கூடிய பிரம்மத்தினுடைய விளக்கத்தை கேட்கிறேன்.
பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற பொருளை சாஸ்திரத்தின் மூலமாகத்தான் அறிய வேண்டிய அவசியமில்லை. வேறொரு பிரமாணமாக மூலமாகவும் அடையலாம். இமயமலை எங்கே இருக்கிறது என்பதை புத்தகத்தின் மூலமாகவோ, நேரில் சென்றோ பார்க்கலாம். பிரம்மன் சித்த வஸ்துவாக இருக்கும்போது வேதத்தின் பிரமாணத்தை தவிர வேறொரு பிரமாணத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

பதில்   சாதரணமாக சித்த வஸ்துவாக இருந்தால் நீ சொல்வது சரிதான். ஆனால் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக சொர்க்கலோகம் இருக்கிறது என்பதற்கு சாஸ்திரம் மட்டும்தான் பிரமாணம். அதுபோல பிரம்மன் சித்த வஸ்துவாக இருந்தாலும் வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும். பிரம்மம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிவினால் நீக்க வேண்டும். இந்த அறிவை கொடுக்கும் பிரமாணம் வேதாந்தம் மட்டும்தான்.

 

முடிவுரை

விஷயம்   பிரம்மம்

சந்தேகம்  பிரம்மத்தை அனுமானம் முதலிய மற்ற பிரமாணத்தால் அறிந்து கொள்ள முடியுமா?

பூ.பக்ஷம்   வேறு பிரமாணத்தாலும் புரிந்து கொள்ள முடியும்.

சங்கதி    வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும்.

ஆட்சேபம் பிரம்மனை யூகத்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

பதில்      யூகத்தால் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தம் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.

—இத்துடன் 3வது சூத்திரம் முடிவடைந்தது.—

4வது சூத்திரம் – 4வது அதிகரணம் – ஸமன்வய அதிகரணம்
तत्तु समन्वयात् || 4 ||
தத்து ஸமன்வயாத் || 4 ||
இந்த சூத்திரம் 7வது வர்ணகம், 8வது வர்ணகம் என்று இரண்டு வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
7வது வர்ணகம்
முகவுரை
உபநிஷத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அது உபதேசிக்க விரும்பும் மையக்கருத்து பிரம்மன்தான். சிலர் வேதத்தின் முக்கிய கருத்து கர்மத்தை செய்து அடைகின்ற புண்ணியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த சூத்திரம் வேதத்தின் முக்கியமான அறிவைக் கொடுக்க விரும்பும் விஷயம் பிரம்மன்தான் என்பதை நிலைநாட்டுகிறார்.

பொருள்
தத் – பிரம்மன்; உபநிஷத்தின் மையக்கருத்து
ஸமன்வயாத் – சமன்வயப்படுவதனால்; உடன்பாடிருப்பதால்
ஸமன்வயம் உடன்பாடு; மையக்கருத்து மாறாமல் ஒத்திருத்தல்; எல்லா உபநிஷத்தும் தொடர்ந்து பிரம்மத்தை உபதேசிக்கம் விஷயத்தில் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

“து என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.    து – ஏவ – மட்டும்
2.    து – பூர்வ பக்ஷ நிராகரணம் (எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுவதனால்)
விஷயம்   வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்)

சந்தேகம்  பிரம்மத்தை தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா அல்லது ஸ்ருஷ்டி, கர்மம், தர்மம் போன்ற வேறெதையாவது தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா?

பூ.பக்ஷம்   உபநிஷத் எதாவதொரு கர்மத்தை செய்யத்தான் உபதேசிக்கிறது.

பதில்      பிரம்மத்தைத்தான் மையக்கருத்தாக உபதேசிக்கிறது.

ஹேது     ஸமன்வயாத் – மீமாம்ஸ மூலமாக நிச்சயம்

ஆட்சேபம்   பிரம்மன் மட்டும் சாஸ்திரத்தின் விஷயம் அல்ல. பல விஷயங்களும் பேசப்பட்டிருக்கிறது.

பதில்      பிரம்மன் மட்டும்தான் முக்கிய விஷயமாக பேசியிருக்கிறது.

பிரம்மத்தைப் பற்றி பேசகின்ற எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

விசாரம்:
வேதாந்த சாஸ்திரத்தின் முக்கியமான ஒரே விஷயமாக பிரம்மன் இருக்கிறது. எல்லா உபநிஷத்துக்களும் முரண்பாடில்லாமல் இதைத்தான் உபதேசிக்கிறது. கர்மகாண்டம் தர்மத்தை முரண்பாடில்லாமல் தொடர்ந்து உபதேசிக்கிறது.
ஹேது – ஸமன்வயாத் – ஸம்+அனு+வ்யாத்

ஸம்  – நன்கு; தெளிவாக; சந்தேகமில்லாமல்

அனு  – தொடர்ச்சி (உ-ம்) அனுகச்சதி – தொடர்ந்து செல்கின்றான்

வ்யாத் – சொல்கிறது.

சாத்தியம் – பிரம்மன்தான் சாஸ்திர தாத்பர்யம்

 

பூ.பக்ஷி சமன்வயம் இருக்கிறதா?

பதில்   மீமாம்ஸகர்கள் ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்கள்.

 

வேதாந்தம் பிரம்மத்தைத்தான் பேசுகிறதா என்பதை ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக உறுதி செய்யலாம். அவைகள்,

  1. உபக்ரம – உபஸம்ஹாரம் : தொடக்கத்திலும், முடிவிலும் உபநிஷத் உபதேசிக்க விரும்புகின்ற மையக்கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
  2. அப்யாஸம் – முக்கிய கருத்தை மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டிருக்கும்.
  3. அபூர்வதா – புதியதாக அந்த கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
  4. பலன் – சொல்லப்படுகின்ற கருத்தினால் அடைகின்ற பலனை கூறியிருக்கும்.
  5. அர்த்தவாதம் – மையக்கருத்தை புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கும். இந்த ஞானம் அடையவில்லையென்றால் அடைகின்ற தீமையையும் சொல்லப்பட்டிருக்கும்.
  6. உபபத்தி – தர்க்கரீயாக நிரூபிக்கப்பட்டிருக்கும்.

சாந்தோக்ய உபநிஷத் – 6வது அத்தியாயம்

  1. தொடக்கம்-ஸதேவ ஸோம்ய இதமேவ ஆஸீத் – பிரம்மத்தை பற்றி கூறுதல்.  முடிவுரை – ஐதாத்மியம் இதம் ஸர்வம் – இவைகள் அனைத்தும் பிரம்மன்தான் என்று சொல்லி முடிக்கிறது.
  2. அப்யாஸம் – பிரம்மத்தைப் பற்றித்தான் திரும்ப, திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. தத்வமஸி என்ற சொல் 9முறை கூறப்பட்டிருக்கிறது
  3. அபூர்வதா – பிரம்மத்தை உபநிஷத் தவிர வேறெதிலும் பேசப்பட்டிருக்கவில்லை. வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ள முடியாது.
  4. பலன் – பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலன் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலனாக மோட்சம் கூறப்பட்டிருக்கிறது.
  5. அர்த்தவாதம் – பிரம்ம ஞானத்தை புகழ்ந்து கூறுதல். இந்த ஞானம் இல்லாத நிலையை இகழ்ந்து பேசுதல். “யேன அஸ்ரும் ஸ்ருதம்” (எந்த ஞானத்தால் கேட்கபடாததையெல்லாம் அறியப்படுகின்றதோ ) என்ற வாக்கியம் அனைத்தும் அறிந்தவனாகின்றான் என்று பலனைக் கூறுகின்றது.
  6. உபபத்தி – இந்த அறிவானது தர்க்கத்திற்கு விரோதமாக இல்லையென்று புரியவைத்தல். (உ-ம்) ஏகேன ம்ருதிபிண்டேன – ஒரு களிமண் குவியலை அறிந்தவன் அதிலிருந்து உருவான அனைத்து பானைகளையும் அறிந்தவனாகின்றான். ஈஸ்வரன் உபாதான காரணமாக இருப்பதால், உலகத்தில் ஈஸ்வரனை பார்க்க முடியும்.

மேற்கூறிய அடையாளங்களைக் கொண்டு சாந்தோக்ய உபநிஷத்தின் மையக்கருத்து பிரம்மம்தான் என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது. எனவே பிரம்மன் விஷயத்தில் ஸமன்வயம் இருப்பதனால் அதுதான் தாத்பர்யம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்துடன் 4வது சூத்திரத்தின் சாமான்ய அர்த்த விளக்கம் முடிவடைகிறது.

து” என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தமான பூர்வ பக்ஷி நிராகரணம் என்பதை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மம்தான மையக்கருத்து என்பதை எதிர்ப்பவர்களை நிராகரணம் செய்துவிட்டால் பிரம்மம் மட்டும்தான் உபநிஷத்தின் தாத்பர்யம் என்பது நிலைநாட்டப்பட்டுவிடும்.
பூர்வ பக்ஷி நிராகரணம்
ஆஸ்திக தர்ஷணத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் இவர்கள்தான் இங்கே பூர்வ பக்ஷிகளாக இருக்கிறார்கள்.
*  சாங்கிய மதம், யோக மதம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
*  நியாய, வைஸேசிக மதம்
*  பூர்வ மீமாம்ஸகர்கள்
*  உத்தர மீமாம்ஸா – விருத்திகார மதம்
இவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வியாச பகவான் நிராகரித்து விடுகின்றார். முதல் அத்தியாயத்தில் சாங்கிய, யோக மதத்தை நீக்கப்பட்டுள்ளது.
பூர்வ மீமாம்ஸா – வேதத்தின் கர்மகாண்ட அர்த்தத்தை நிர்ணயம் செய்வதற்காக ஜெய்மினி மகரிஷி சூத்திரங்களை எழுதியுள்ளார். இந்த சூத்திரங்களுக்கு சபரஸ்வாமி என்பவர் விளக்கம் எழுதியுள்ளார். இதற்கு ஸபரபாஷ்யம் என்று பெயர். இந்த இரண்டு நூல்களும் வேதாந்தத்திற்கு எதிரானதல்ல. இவர்கள் எடுத்துக் கொண்ட மையக்கருத்து வேறாகும். ஆனால் பிற்காலத்தில் இந்த நூல்களின் அடிப்படையில் குமாரிலபட்டர் என்பவர் பாட்ட மதத்தை தோற்றுவித்தார். இவர் மோட்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும், கர்மத்தினால் மோட்சத்தை அடையலாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். உபநிஷத்துக்கு முரணான கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் பிரபாகரர் என்பவரால் பிராபகார மதம் உருவாகியது. இது பாட்ட மதத்திலுள்ள சில கருத்துக்கள் தவறு என்று நீக்கி புதியதாக இந்த மதமானது தோற்றுவிக்கப்பட்டது. இந்த இரண்டு மதக்கொள்கைகளை பகவான் சங்கரர் நீக்கியுள்ளார்.

விருத்திகார மதமானது உபநிஷத்தின் உபதேசத்தை தவறாகப் பொருட்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மாத்வாச்சாரியாரின் த்வைதமும் நீக்கப்படுகிறது. இரண்டுவிதமான விருத்திகாரர்கள் இருக்கிறார்கள்.

  1. ஸமுச்சயவாதி – ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் மோட்சத்தைக் கொடுக்கும்.
  2. உபாஸனவாதி – தியானத்தின் மூலமாகத்தான் மோட்சம் கிடைக்கும்.

 

8வது வர்ணகம் (பூர்வ மீமாம்ஸ நிராகரணம்)

பாட்ட மதம், பிராபகர மதம் இவையிரண்டு மதங்களின் கருத்துக்களை; பார்க்கப்படுகிறது. இரண்டு மதங்களின் ஒத்தக் கருத்துக்களை முதலில் பார்க்கப்போகிறோம்.

  1. வேத வாக்கியங்கள் அனைத்தையும் இரண்டாக பிரிக்கிறார்கள். அவைகள்,

1.1.   சித்த போத வாக்யாணி – ஏற்கனவே இருக்கின்றதைப் பற்றி அறிவைக் கொடுக்கின்ற வாக்கியங்கள்

1.2.   காரிய போதக வாக்யாணி –  இதை செய்,  இதைச் செய்யாதே என்று போதிக்கின்ற வாக்கியங்கள். கர்மத்தைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்கள். செயலில் ஈடுபடுத்துகின்ற வாக்கியங்கள். விதி வாக்கியம் என்பது செய் என்கின்றது. நிஷேத வாக்கியம் என்பது செய்யாதே என்கின்றது.

இந்த இரண்டு வகையான வாக்கியங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

  1. பிரமாண லட்சணம் – பிரமாணத்திற்கு இவர்கள் கொடுக்கின்ற லட்சணம். பிரமாணத்தில் இரண்டு முக்கிய பிhpவுகள் உண்டு. அவைகள் 1. அனதி3க3த,  2.அபா4திதம் ஆகும். இவைகள் இருந்தால்தான் அறிவைக் கொடுக்கும் கருவி என்று சொல்லமுடியும்.

2.1.   அனதி3க3த – வேறொன்றின் மூலமாக அறியப்படாததாக இருக்க வேண்டும். (உ-ம்) ஒரு பொருளின் வர்ணத்தை கண் என்கின்ற பிரமாணத்தின மூலமாக மட்டும்தான் அறிய முடியும். இதை வேறொரு பிரமாணத்தின் மூலமாக அறிய முடியாது.

2.2.   அபா4திதம் – வேறெந்த பிரமாணத்தாலும் நீக்க முடியாததாக இருக்க வேண்டும். உதாரணமாக கானல்நீரை கண்ணால் பார்த்தாலும், அனுபவ பிரமாணத்தால் நீக்கப்படும்.

பூர்வ மீமாம்ஸகர்கள் மூன்றாவது நிபந்தனையை சேர்த்துக் கொள்கிறார்கள். அது பிரமாணம் பயனைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் அதை பிரமாண வாக்கியம் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று நிபந்தனைகளற்ற வாக்கியங்களை அர்த்தவாதம் என்று கூறுகிறார்கள். அவைகள் முக்கியமான பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக வாயுதேவன் ஸ்துதி செய்கின்ற வாக்கியமான ‘வாயுதேவர் வேகமாக ஓடுபவர்” என்ற வாக்கியம் ஒரு பயனையும் தராது. ஆனால் தியானம் செய்யும்போது வாயுபகவானை இவ்வாறு தியானிக்க வேண்டும். இவ்வாறு இந்த வாக்கியத்தை பொருட்படுத்த வேண்டும்.

ஜெய்மினியின் ஒரு சூத்திரத்தை எடுத்து விசாரம் செய்வோம்.
சூத்திரம்1 – ஆம்னாயஸ்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தானாம்
ஆம்னாயஸ்ய      வேதமானது (கர்ம காண்டத்தை குறிப்பது)
க்ரியார்த்தத்வாத்   செயலையே தாத்பர்யமாக கொண்டிருக்கின்ற காரணத்தினால்
அதத் அர்த்தானாம் கர்மத்தைப் பற்றி பேசாத வாக்கியங்கள்
ஆனந்தக்யம்       பிரயோஜனமற்றது
பூர்வ மீமாம்ஸகர்கள் ஆம்னாயஸ்ய என்ற சொல்லுக்கு முழு வேதத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது வாதம்: ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை; தெரிந்துக் கொண்டிருக்கின்ற ஒன்றைப் பற்றி பேசுவது பயனற்றது. செயலைப் போதிக்கின்ற வாக்கியம்தான் பயனுள்ளது. ஏற்கனவே இருக்கின்றதை பேசுவது பிரமாணமல்ல. உபநிஷத்துக்கள் அறிவைக் கொடுக்கின்ற பிரமாணமல்ல. ஏனென்றால் இருக்கின்ற பிரம்மத்தைப் பற்றி உபநிஷத் வாக்கியங்கள் பேசுகின்றது. மேலும் ஏற்கனவே இருக்கின்றதை பேசுவதை வேறு பிரமாணத்தாலும் அறியப்பட முடியும்.

 

முழு வேதத்தை அத்யயனம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் வேதத்திலே இருக்கிறது. இதிலிருந்து தெரிவது கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களையும், கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுக்கு உதவி செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களை அர்த்தவாத வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உபநிஷத் பிரம்மத்தை போதிக்கின்ற வாக்கியங்களை தேவதைகளை புகழ்கின்ற செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது.

இதுவரை கூறியது பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்களாகும்.

சூத்திரம்-2 – வித்னாத்து ஏகவாக்யத்வாத் ஸ்துதியர்தேன விதினாமஸ்யும்.
கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களை சென்று சேர்வதனால் அவைகளை ஸ்துதி செய்கின்ற அர்த்தத்தை கொடுப்பதன் மூலம் விதி வாக்கியத்துடன் இணைந்துக் கொள்கின்றது. இதன் மூலம் அனைத்து வேத வாக்கியங்களும் பயனுள்ளதாகின்றது, பிரமாணத்தை அடைந்து விடுகிறது.

பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்கள்:

*   உபநிஷத் கூறுகின்ற நிர்குண பிரம்மன் என்றவொன்று கிடையாது

*   ஆத்ம அக்ஞானம் என்பதே கிடையாது.

*   ஆத்மாவைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்களனைத்தும் யாகம் செய்கின்ற எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பூஜையில் பூஜிக்கின்ற தேவதைகளை புகழ்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

*   உபநிஷத் வாக்கியங்களையெல்லாம் கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை பாட்ட மதக்காரர்களின் கருத்துக்களாகும்

*   பிராபகார மதத்தினர் இரண்டு காண்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஞான காண்டம் உபாஸனையை போதிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ம போதக வாக்கியங்களுடன் ஞான போதக வாக்கியங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. உபநிஷத் வாக்கியங்களை தியானத்தை உபதேசிக்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். அஹம் பிரம்மாஸ்மி என்பது ஒருவகையான தியானமாகும். அதனால் அடைகின்ற பலன் பிரம்மலோகத்தையோ, சொர்க்கலோத்தையோ அடைவதாகும்.

 

சங்கராச்சாரியார் பதில்

பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் பயனற்றது.

பதில்1  சாதாரணமாக இது சரிதான். ஆனால் விசேஷமான இடத்தில் இத்தகைய வாக்கியங்களும் பயனைக் கொடுக்கின்றது. ஏதோவொன்று அக்ஞானத்தினால் தோன்றியுள்ள இடத்தில் இத்தகைய வாக்கியம் பயனைத் தரும். இது பாம்பு அல்ல என்ற சித்த வாக்கியம் இதற்கு உதாரணம். அறியாமையினால் கயிற்றில் பார்க்கின்ற ஒருவனிடத்தில் பாம்பு இல்லை என்ற வாக்கியமே பயனைக் கொடுத்துவிடுகிறது. மேலும் நீதான் பத்தாவது மனிதன் என்ற வாக்கியமும் அந்த சூழ்நிiலையில் பயனைத் தரும். எனவே ஸித்த போதக வாக்கியமும் பயனைத் தரும் என்பது அவர்கள் கருத்தை நீக்கி விடுகிறது.

பதில்2  உபநிஷத்திலுள்ள வாக்கியங்கள் ஞானத்திற்கு நேரிடையான பலனைக் கொடுக்கிறது. எடுத்துக் காட்டிற்கு சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

*   யாரொருவன் பிரம்மத்தை அறிகின்றானோ அவனுக்கு சோகமும், மோகமும் கிடையாது.

*   ஞானத்தினாலே மரணமற்ற பலனை அடைகிறான்.

*   ஆத்மாவை அறிபவன் சோகத்தை கடந்துவிடுகிறான்

*   தன்னை ஆத்மாவாக அறிந்து கொண்டவன், யாருக்காக, எதற்காக தன் சரீரத்தை வருத்திக் கொள்வான்.

 

பூ.பக்ஷி சப்த பிரமாணம் பிரத்யக்ஷ விஷயம் அல்லது அனுவாதத்தைத் சொல்லும். இதன் மூலம் புதியதாக அறிவை கொடுக்காது.

பதில்   பல இடங்களில் உண்மைதான். இதிலும் விதிவிலக்கு இருக்கிறது. கர்மகாண்டத்தில் சொர்க்கலோகத்தை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இது சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அறியப்படும். வேறுபிரமாணத்தால் அறிய முடியாது. அதேபோல பிரம்மத்தை உபநிஷத் சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அடைய முடியும் என்பது தெளிவாகிறது.

 

பூ.பக்ஷி ஆத்ம ஞானமே அனர்த்தம். ஆத்ம அக்ஞானமே சம்பவிக்காது. நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் ஆத்ம விஷயத்தில் விசாரம் தேவையில்லை.

பதில்   ஆத்மா சம்சாரியாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரம்ம ஸ்வரூபம் என்பது எல்லோருக்கும் தெரியவில்லை. ஆகவே விசாரம் தேவைப்படுகிறது.

 

பூ.பக்ஷி பிரமாணம் மூன்று நிபந்தனைகளை உடையதாக இருக்க வேண்டும்.

பதில்   பிரமாணத்திற்கு பிரயோஜனம் என்ற நிபந்தனை கிடையாது. நாம் வாழ்க்கையில் எத்தனையோ பயனற்றதை பார்க்கிறோம். எனவே மூன்றாவது நிபந்தனை தேவையில்லை. இருந்தாலும் வேதாந்த வாக்கியங்களும் பிரயோஜனத்துடன் கூடியதுதான்.

 

பூ.பக்ஷி எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கவில்லையோ அந்த வாக்கியத்தை கர்மத்தை போதிக்கின்ற வாக்கியத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது. எனவே உபநிஷத் வாக்கியங்களை கர்ம வாக்கியங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பதில்   உபநிஷத்துக்கள் இயற்கையாகவே பிரமாணம் என்ற தகுதியுடன் இருக்கிறது. பிரமாணத்தினுடைய லட்சணங்கள் உபநிஷத்திற்கு பொருந்துகிறது. அது ஸ்வ பிரமாணமாகவே இருக்கிறது. உபநிஷத்துக்கள் பிரயோஜனத்தை கொடுக்கக்கூடியது. உதாரணமாக குந்திதேவ கர்ணனிடம் நான்தான் உன் தாய் என்று சொல்கின்ற வாக்கியம் ஸித்தபோதக வாக்கியம்தான், இருந்தாலும் அது கர்ணனுக்கு பலனைக் கொடுத்திருக்கிறது. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியமும் பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.

 

உபநிஷத் கர்மத்தை நிந்தனை செய்திருப்பதால், கர்மத்தை உபதேசிப்பது முழு வேதத்தின் தாத்பர்யம் அல்ல என்று தெரிகிறது. மேலும் நிந்தனை செய்யப்பட்டதுடன் எப்படி சேர்க்க முடியும். ஆத்ம ஞானத்திற்கும், கர்மத்திற்கும் இருளும்-ஒளியும் போல் விரோதம் இருப்பதால் இரண்டையும் சேர்க்கமுடியாது. இவையிரண்டும் இருளும், ஒளியும் போல எதிரெதிர் தன்மையுடையதாக இருக்கின்றது. கர்மம் நடக்கின்ற இடத்தில் கர்த்தா, போக்தாவாகத்தான் இருக்க முடியும். ஆனால் பிரம்மஞான விஷயத்தில் அகர்த்தா, அபோக்தாவாக இருப்பதால் இரண்டையும் சேர்க்க முடியாது.

 

கர்மத்தோடு உபநிஷத் வாக்கியங்களை சேர்த்தால் அதில் தோஷம் வந்துவிடும். அந்த தோஷத்திற்கு ‘ஸ்ருதஹான அஸ்ருதகல்பனா” என்று பெயர்.

ஸ்ருதஹானம் –  கேட்டதை விட்டுவிட்டு

அஸ்ருதகல்பனா –  கேட்காததை எடுத்துக் கொள்ளுதல்.

உபநிஷத் பிரம்மன் ஆத்மஸ்வரூபமாக இருக்கிறது என்றும் அதை அறிவதனால் பலனுண்டு என்ற உபதேசத்தை விட்டுவிட்டு கர்ம வாக்கியத்தோடு சேர்த்துவிட்டால் இந்த தோஷம் வந்துவிடும். இந்த தோஷம் நல்லதைக் கொடுக்காது. இந்த தோஷத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். சான்றோர்கள் வாக்கியங்களில்தான் இதை பயன்படுத்த வேண்டும். இதற்கு எதிரானது வாச்யார்த்தம், லட்சியார்த்தம். இதை இவர்கள் விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.

 

பூ.பக்ஷி கர்மகாண்டம் பிரயோஜனமற்றதா! இது சொர்க்கம் முதலிய பலன்களைக் கொடுப்பதற்கு பிரமாணமாக இருக்கிறது.

பதில்   அக்ஞானிகளுக்கு பிரயோஜனமாக இருக்கலாம். ஆனால் முமுக்ஷுக்களுக்கும், ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லை.

பூ.பக்ஷி ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லையா?

பதில்   ஞானிகளுக்கு ஞானகாண்டமும் பிரயோஜனமில்லை.

 

பூ.பக்ஷி ஒன்றை சேர்ப்பதன் மூலமாக அல்லது விடுவதன் மூலமாகத்தான் பலனை அடைகிறோம். மனிதனின் வாழ்க்கையே ஹேயம்(விட்டுவிடுதல்), உபாதேயம்(எடுத்துக் கொள்ளுதல்) வழியேதான் சென்று கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் இதை நடைமுறைப்படுத்தத்தான் வழிமுறைகளை காட்டிக் கொடுக்கிறது. இதன் மூலம் கர்மகாண்டம் ஹேயம்-உபாதேயமாக இருந்துக் கொண்டு நமக்கு உதவி செய்கிறது. ஆனால் பிரம்மன் இவையிரண்டையும் செய்வதில்லை. இதனால் பிரம்மத்தினால் ஒருபலனும் கிடையாது. எனவே பிரம்மனிடத்தில் உதாசீனனாகத்தான் இருக்க முடியும். பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அடைவதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏன் கஷ்டப்படுத்துகிறாய்?

பதில்   உன்னால் கூறப்பட்ட தோஷம் பிரம்மத்திற்கு அலங்காரம்தான். பிரம்மன் ஹேய-உபாதேஹ ரஹிதம் என்று நீ கொடுத்த லட்சணம், பிரம்மத்திற்கு அலங்காரமாகத்தான் இருக்கிறது. கர்மத்திற்கு நீ கொடுத்த ஹேய-உபாதேய லட்சணம்தான் சம்சாரம். எதுவரை நம் மனதில் இதை நீக்க வேண்டும், இதை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றதோ அதுவரை நாம் சம்சாரியாக இருப்போம்.

 

மோட்சம் என்பது என்னால் நீக்கப்படவேண்டியது எதுவும் இல்லை,  அடையப்பட வேண்டியது எதுவும் இல்லை, ஏற்றுக் கொள்ள வேண்டியதும் எதுவும் இல்லை என்ற எண்ணமே மனதில் இல்லாத நிலையாகும். எதனிடத்தில் எதையும் சேர்க்க முடியாதோ, எதையும் நீக்கமுடியாதோ அதுவே பிரம்மன். இப்படிபட்டவன் நான் என்ற அறிவை அடைவதே மோட்சமாகும்.

 

9வது வர்ணகம் (விருத்திக்கார மத நிராகரணம்)

விருத்திக்கார மதத்தின் ஒரு பிரிவினர் ஞான-கர்ம சமுச்சயம் மூலம்தான் பலனை அடையலாம் என்று கூறுகின்றனர். இதற்கு சங்கரர் பலவிடங்களில் சரியான பதில் கொடுத்து நிராகரணம் செய்திருக்கிறார்.
பூ.பக்ஷி பிரம்ம உபாசனையின் மூலம் மோட்சத்தை அடையலாம். பிரம்மத்தை தியானம் செய்வதன் மூலமும் அடைந்து விடலாம்.

*  இவர்கள் நிர்குண பிரம்மத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

*  சாஸ்திரத்தின் மூலமாகத்தான் பிரம்மத்தை அடைய முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

*  வேதாந்தத்தின் அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

*  ஆனால் ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைந்திட முடியாது. பிரம்ம ஞானத்தை அடைந்தபிறகு அதை தியானிப்பதிலேயே மோட்சம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

*  உபநிஷத் மோட்சத்தை அடைய உதவும் சாதனம் என்பதையும், பிரம்மன்தான் அதனுடைய தாத்பர்யம் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

*  உபநிஷத் தியானம், உபாசனம் ஆகியவைகள் உபதேசித்திருக்கிறது. ஞானத்தை அடைந்த பிறகு தியானம் என்ற கர்மத்தை செய்து மோட்சம் அடையப்படும்.

*  எந்தவொரு சப்தமும் செய் அல்லது செய்யாதே என்ற ஏதாவது ஒன்றை செயல்படுத்தும்.

*  பிரம்மன் இருக்கிறது என்று சொல்வதை கேட்டு அதை தியானித்தல் என்ற செயலோடு இணைத்திட வேண்டும்.

*  ஸ்ருதி வாக்கியம்: ‘ஆத்மா இத்யேவ உபாஸீத:” – ஆத்மா என்றவொன்றை தியானிக்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும பலவிடங்களில் வேத3 என்ற சொல்லுக்கு தியானித்தல் என்ற பொருள்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

*  பிரம்மத்தை அறிந்தவர்களும் சம்சாரிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்களும் சம்சாரிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் அறிவை அடைந்ததும் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

*  இதற்கு உபநிஷத் பிரமாணம் சிரவணத்திற்கு மனனம், நிதித்யாசனம் ஆகிய கர்மங்களை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறது.

*  ஆகவே வேதாந்தமும் பிரம்மத்தை தியானிக்க வேண்டும் என்ற கர்மத்தை போதிப்பதால் முழு வேதாந்தமே கர்ம சாதனம்தான் என்ற தெரிகிறது. பிரம்மத்தை தியானித்து இறுதியில் மோட்சம் அடையப்படுகிறது.

பதில்   வேதாந்தம் எந்த கர்மத்தையும் போதிக்கவில்லை. வேதாந்த வாக்கியத்திற்கு நேரிடையாக பலனை கொடுக்கும் சக்தியிருக்கிறது. வேதாந்தத்தின் மூலமாக அடைகின்ற ஞானம் நான் எதையும் செய்வதில்லை என்பதாகும். ஞானத்தை அடைந்தவன் எந்த கர்மத்தையும் செய்ய மாட்டான். எந்தவித விதியும் இவனைக் கட்டுப்படுத்தாது, செயலில் ஈடுபட வைக்க முடியாது.

 

கர்மத்தின் ஸ்வரூபம்: இது உற்பத்தியாகின்ற இடங்கள் உடல், மனம், வாக்கு ஆகியவைகளாகும். இவைகளை பிரதானமாக கொண்டு செய்கின்ற செயல்கள், திட்டமிட்டு உருவாகுகின்றதுதான் கர்மம். இந்த மூன்று இடத்திலிருந்து உருவாகின்ற செயல்கள் விதியினால்தான் செயலுக்கு வருகின்றது. ஏதொவொரு தூண்டுதலால்தான் கர்மங்கள் செயல்படுகின்றது. உற்பத்திக்கான காரணம் செய் என்கின்ற உத்தரவுதான். உத்தரவு வந்தாலும் அது தன்னை பார்த்துதான் சொன்னது என்று நினைத்தால்தான் செயலும் உருவாகும். ஞானியை நோக்கி உத்தரவு வரும்போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அநத உத்தரவு செயல்படாது.

 

ஜெய்மினி சூத்திரம்
அதத த4ர்ம ஜிக்ஞாஸா
அத – வேதத்தை அத்யயனம் செய்தபிறகு
அத – அது பலனைக் கொடுக்கின்றததனால்
த4ர்ம ஜிக்ஞாஸா – தர்மத்தை-அதர்மத்தை நிர்ணயம் செய்ய கர்மகாண்ட விசாரம் செய்ய வேண்டும்.
*   கர்மத்தினால் அடைகின்ற பலன் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். மோட்சம் என்பது குறிப்பிட்ட பலனல்ல.

*   கர்மபலனில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மோட்ச பலனில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

*   மோட்சம் தர்ம-அதர்மத்திற்கு அப்பாற்பட்டது.

*   கர்மத்தை செய்வதற்கு, அனுபவிப்பதற்கு உடல், புலன்கள் தேவைப்படுகிறது. மோட்சம் என்பது சரீரமற்றது.

*   மோட்சம் கர்மபலன்களை நாசம் செய்து விடுகிறது.

*   கர்மபலன்கள் நான்கு வகைகளாக இருக்கிறது. அவைகள், ஓரிடத்தை அடைதல், புதிதாக உருவாகுதல், மாற்றியமைத்தல், தூய்மைப்படுத்துதல் ஆகியவைகளாகும். மோட்சத்தினால் இந்த நான்கு வகையான பலன்களையும் அடைவதில்லை.

*   ஞானத்திற்கு பிறகு பிரம்ம உபாசனை செய்யமுடியாது. ஞானம் வந்தவுடன் இனி நான் எந்த கர்மமும் செய்யத் தேவையில்லை என்ற நிலையை அடையும்போது தியானம் என்ற செயல் நடக்கவே நடக்காது. எனவே மோட்சத்தை கர்மபலனாக கூறுவது தவறு என்று நிலைநாட்டப்படுகிறது.

 

பூ.பக்ஷி ஞானம் நேரிடையாக பலனைக் கொடுக்காது.

பதில்   மூலக்காரணம் அக்ஞானமாக இருந்தால் அந்த இடத்தில் ஞானம்தான் நேரிடையான பலனைக் கொடுக்கும்.

பூ.பக்ஷி செயலில் ஈடுபடுத்தாத வாக்கியத்தினால் என்ன பயன்?

பதில்   நிஷேத வாக்கியங்கள் நம்மை செயல் செய்ய தூண்டுவதில்லை. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லும் செயல் செய்ய தூண்டாது. ஆனால் பலனைக் கொடுக்கும்.

பூ.பக்ஷி வேதாந்தம் கேட்ட பிறகும் சம்சாரிகளாக இருப்பதால் சிரவணத்திற்கு பிறகு தியானம் என்ற கர்மம் செய்ய வேண்டும்.

பதில்   பிரம்மத்தை புரிந்து கொண்டவனுக்கு சம்சாரம் இல்லை. பிரம்மத்தைப் பற்றி கேட்டவனுக்கு சம்சாரம் இருக்கும். சாதன சதுஷ்டய சம்பத்தியை உடையவர்களுக்கு பிரம்மம் புரிந்திருக்கும்.

பூ.பக்ஷி சிரவணத்திற்கு பிறகு மனனம், நிதித்யாசனம் என்ற கர்மத்தை செய்ய வேண்டும் என்று கர்மத்தை செய்ய சொல்கிறது.

பதில்   சிரவணம் ஞானத்தை அடைவதற்கு கூறப்பட்டிருக்கிறது என்றும் மனனம், நிதித்யாசனம் மோட்சத்தை அடைவதற்குத்தான் என்று புரிந்து கொண்டிருக்கிறாய். ஞானத்தை அடைவதற்கான தடைகளை நீக்குவதற்குத்தான் மனனம், நிதித்யாசனம் ஆகியவைகள் உபதேசிக்கப்பட்டுள்ளது.

பூ.பக்ஷி ஞானமும் ஒரு கர்மம்தானே? ஞானம் மானசீகமான கர்மமாகும்.

பதில்   ஞானம் வேறு, கர்மம் வேறு. கர்மம் புருஷ தந்திரம், ஞானம் வஸ்து தந்திரம்.

*  கர்மத்தை செய்யப் போகும் போது அதை செய்யலாமா, வேண்டாமா என்ற தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. ஞானத்தில் இந்தமாதிரி வாய்ப்பு கிடையாது. அறிவு என்பது ஒன்று எப்படியிருக்கின்றதோ அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

*  கர்மம் உத்தரவிலிருந்து உருவாகின்றது. ஞானம் பிரமாணத்தை பயன்படுத்தி அடைவதாகும்.

இதிலிருந்து கர்மம் வேறு, ஞானம் வேறு என்று புரிந்து கொள்வாயாக.

 

பூ.பக்ஷி ஆத்மாதான் (கௌன ஆத்மா) நான் என்று தெரிந்தே இந்த உடலை நான் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.

பதில்   எப்போது நன்கு தெரிகின்ற விஷயத்தில் தெரிந்தே ஒன்றை வேறொன்றாக சொல்ல முடியும். வேற்றுமை தெரியாமல் மாறிக் கூறினால் அது மித்யா-ஆத்மாவாகும். ஆத்ம-அனாத்மா விஷயத்தில் வேற்றுமை தெரியாமல் இருப்பதால் கௌனாத்மா என்று சொல்ல முடியாது.  மூன்று சரீரங்களை நான் என்ற சொல்லும் போது அது மித்யாத்மாவை குறிக்கிறது. கௌனாத்மா சம்சாரத்தைக் கொடுக்கக்கூடாது. உடல், மனம், புலன்கள் நான் சொல்லும் போது அவைகள் மித்யாத்மாவையே குறிக்கிறது. நான் என்ற சொல்லினுடைய உண்மையான ஆத்மா பிரம்மமாகும்.

நான் என்ற சொல்லுக்கு ஞானி இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்துவான். உலக விவகாரத்தில் ஈடுபடும்போது கௌனாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான். தியானத்தின் போது முக்கிய ஆத்மாவான பரமாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான்
இத்துடன் பிரம்மசூத்திரம் முடிவடைந்தது.