Archive for the ‘Sri Baashyam’ Category

ஸ்ரீ பாஷ்யம் திரண்ட கருத்துக்கள் !!–

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||


'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, அய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷபூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவார்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத்தொடர்பு  எக்காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளி  யிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

----------------
1. அவதாரிகை

“ஆரண நூல் வழிச் செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணி கீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே”
– (அதிகார ஸங்க்ரஹம் 4)-என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.

தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். “பகவத் ராமானுஜ தர்ஶனம்” என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள்.

பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும் புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப் படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதி தேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர் ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தி யிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யா மூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவ மூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞான புத்ரரான திருக் குருகைப் பிரான் பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்ற தாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.

2 – பர ப்ரஹ்மம்

ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகு ஶ்ரேஷ்டம்.
“பவமரு பரிகிந்ந-……..நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் “பரப்ரஹ்மம்”.
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது.
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
“அண்டக்குலத்துக்கதிபதியாகி”–(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி “அசுரர்இராக்கதரை…இருடீகேசன்தன்னை”–(தடையற்ற பெருமை)
“தொண்டக்குலத்துள்ளீர்”—(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து”—(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
“பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித் தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப் பல்லாண்டிசையுடன் பாடுவமே” (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலம் உடையவன்”. உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குண கணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலமுடையவனும்”, “ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்”
“பகம்”என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை
தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை “நந்தா விளக்கே அளத்தற்கரியாய்” என திருவாய்மொழியும்,
“நந்துதலில்லா நல்விளக்காகி அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி”-என மும்மணிக்கோவை யும்  முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத் தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்.”ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்”—-
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
“கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே” (2-6-10) என்கிறார் நம்மாழ்வார்.ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின் ஒளிக்கும் உள்ள வித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம் போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளைக் குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தர பாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்து பலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை”— என்கிறார் கலியன்.
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆக ஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை “அத்வைதம்” என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை “த்வைதம்” என்பர். இவ் விரண்டுக்கும் நடுவே உள்ளது கடக ஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு ஆனால் அந்த ஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
“க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:”—(யதிராஜ ஸப் 36)
வேத மாதாவுக்கு உபநிஷத் சிரோ பாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகை யலங்காரத்தை ராமானுஜர் தன் விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குண ஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் “நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.”.
“காரணவாக்யங்கள்” என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்”
(திருவாய் 4-10-1)
ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப் படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக் கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.
“முனியே நான்முகனே முக்கணப்பா”–என்கிறார் நம்மாழ்வார்.
“சாமான்ய புத்தி ஜனகாச்ச”…(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே.
“தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே” என்கிறார் நம்மாழ்வார்.

எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.

4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும் வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.

“செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே” –என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
“இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன் நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்” தன் ஸ்தோத்ர ரத்னத்தில் “ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:” என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல.
முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல் போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
“திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்” (தி
ரு.மொழி3-6-5)இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
“பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்”–என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)
“கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி”: 
(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய் ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.
5 – உலகப் படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
“அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்”
(தயாஶதகம் 17) – என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

  • அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+)
  • ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்),
  • ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்),
  • மனஸ் (+1) உண்டாயின.
  • அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின.
  • ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே “மானாங்கார மனங்களே” என்கிறார் ஆழ்வார்.
  • 25 வது தத்வம் ஜீவன்.
  • எம்பெருமான் 26 வது தத்வம்.

இந்த 25 தத்வங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து ஆள்பவன். அதுவே அவனுக்கு 26 வது திருநாமம் ஆண்டவன் என்பது. இதுவே “ஶ்ருஷ்டிக்ரியா” என்பதாகும்.

இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்க வல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம். இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
“நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற” என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
“பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த காலிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை
யார் நினைக்க வல்வரே”— திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம் இது.இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.
6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
“நான்” என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல – “புஸ்தகம்” என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிக ஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞான ஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது.
இதனை “ஆத்ம யாத்ரை” என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் – எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட).தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை “ஸ்வப்னம்”. அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச் செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான்.
ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!

7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று.

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது.
(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
“பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை“(பெரிய திருமொழி)

“ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும் சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே”  (திருவாய்மொழி 6-9-3)

இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.-இவை தவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.

  1. பிராட்டியினால் வந்த பெருமை”ஶ்ரிய:பதி” என்பது.
  2. தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
  3. ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
  4. வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.

வ்யாசர் இப்பரமாத்மாவை “உபயலிங்கம்” என்கிறார். அதாவது இவன் இரட்டை அடையாளம் கொண்டவன் என்று பொருள். அவை சகல கல்யாண குணங்களை உடையவன் என்பதும், தோஷங்கள் எதுவும் துளியும் ஒட்டாதவன் என்பதுமாகும். (தாமரை இலை தண்ணீர் போல.) மரம் ஒன்றில் இரு பறவைகள் வசிக்கும்போது ஒன்று ஸம்ஸார பந்தத்தில் உழலும் ஜீவன் மற்றொன்று எதிலும் சம்பந்தப் படாமல் அதனை வழி நடத்தும் பரமாத்மா. இத்தகைய பரமாத்மாவையே உபாயமாகப் பற்றிக்கொண்டு அவனை நாமடைய வேணும்.

8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களை மிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்ய விஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
க்ரந்தம் “அ”வில் ஆரம்பித்து “ம”வில் முடிகிறது நடுவில் “உ”. இதுவே ப்ரணவ தத்வம்.

ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதி ஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய் கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம். அதுவே “ஸ்வரூப ப்ராப்தம்”.
“அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை”–ஶரணாகதி தீபிகை.அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே “ப்ரஹ்ம வித்யா” 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை “பூ:பாதௌயஸ்யநாபிர்…….”என்கிறது ஸஹஸ்ரநாமம்.ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். “வசீ” என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன……..’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் “ந்யாஸ வித்யா”. பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.

9. த்யான முறைகள்
“உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் 

ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்”— (யதிராஜ ஸப்ததி)

ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).

த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.

  1. ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
  2. மனனம் – கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
  3. த்யானம் – பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
  4. தர்ஶனம் – இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.

“எங்கும் பக்கம் நோக்கினான் என் பைந்தாமரை கண்ணனையே”–என்று திருக்குருகைக் காவலப்பன் த்யான யோகத்தால் கண்ணனயே காண, அவனும் பக்தனையே பார்த்து ஸந்தோஷிக்கிறான்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

யோகம் என்றால் ஒட்டுதல் -சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.
10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை “முக்தி தரும் யதிராசர்” என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார்.

இதில் 4 விஷயங்கள் உள்ளன.

1. புண்ய பாபத்தை விடுவது எப்படி?
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
“காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:” என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).
2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.
3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.
4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி “நீ யார்” என்பது. “தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்” என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்’ என்ற ‘குளம், ‘முஹுர்த்தர்’ என்ற காவல் தெய்வம் ‘தில்யம்’ என்ற மரம் ,’விரஜா’ என்ற நதி, ‘லாலஜ்யம்’ என்ற மாநிலம்  ‘அபராஜிதா’ என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே ‘விஸக்ஷணம் ‘ என்ற பீடத்தில் ‘அமிதௌஜஸ்’ என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்’ எனக் கேட்க “ஸ்வாமி !தேவரீர் தான் நான்” என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
“ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர்.
அந்த நீர்தான் நான்” என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். “ஏற்றிவைத்து ஏணி வாங்கி” என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹ சூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸாரம்!!–எளிய தமிழில் —

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

——–

'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, ஆய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷ பூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவர்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத் தொடர்பு  எக் காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

--------------
இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சான்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக் கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ . முதற்‌ பாதம்‌ 
வேதத்தின்‌ பூர்வ பாகம்‌, உத்தர பாகம்‌ இவற்றை நன்கு பயில்பவன்‌ கர்ம காண்டத்தில்‌ விவரிக்கப்படும்‌ தர்மங்கள்‌ அற்பம்‌, 
நிலையான பலனைத்‌ தரமாட்டா என்று தேறுகின்றான்‌. புண்ணிய கர்மாக்களால்‌ 
“பெறும்‌ பலன்களும்‌ அழியும்‌ இயல்புடையன, ஆதலால்‌ இவற்றால்‌ மோக்ஷம்‌ பெற இயலாது. 
பகவானை  நன்கு அறிபவன்‌ கார்மாக்களுக்கு வசமாகமாட்டான்‌? ஸம்ஸாரத்தில்‌ உழன்று துன்புறமாட்டான்‌. 
பகவானைப்‌ பற்றிய ஞானம்‌ நிலையான நற்பயனை அளிக்கும்‌ என்று ஒருவாறாக இவன்‌ அறித்து கொள்‌கிறான்‌. 
உறுதியான ஞானம்‌ பெறுவதற்கு வேதாந்த வாக்கியங்களை ஆராயக்‌ கருதுகிறான்‌. பகவானைப்‌ பற்றிச்‌ சரியான கருத்து எவர்க்கும்‌ 
ஏற்படாதென  'சிலர் கருத, இத்தகைய கருத்துடன்‌ பகவானைப்‌ பற்றிய  ஆய்வு தொடங்குகிறது. 
இது முதல்‌ அத்யாயம்‌; ஸமந்வயாத்யாயம்‌ எனப்படும்‌.
1. 1. பகவானைப்‌ பற்றி அறிய அவா 
எதிர்ப்பவர்களது கருத்து: பகவானைக்‌ கண்‌களால்‌ காண்பதற்கில்லை; இவனைப்‌ பற்றி அனுமானத்தைக்‌ கொண்டு அறியவும்‌ இயலாது. 
ஆதலால்‌ சொற்களின்‌ மூலம்‌ (வேதங்களைக்‌ கொண்டு) அறிய வேண்டும்‌. காரிய வாக்கியங்களாலேயே அறிவு நிகழ்கின்றது. 
ஒன்றும்‌ அறியாத குழந்தைக்கு முன்‌,“பசுவைக்‌ கொண்டு வா”, “பசுவைக்‌ கட்டு” என்றால்‌, அது பசு என்பதை அறிகின்றது. 
கொண்டு வருவது,  கட்டுவது என்ற செயல்களையும்‌ தெரிந்து கொள்கிறது. 
உலகிலுள்ள பொருள்களைப்‌ பற்றி அறிய இவ்வாறான  வாக்கியங்களே வேண்டுவன. 
பகவான்‌ ஸித்தமானவன்‌; காரிய வாக்கியத்தால்‌ அறிவதற்கில்லை. 
ஆதலால்‌ இவனைப்‌ பற்றி வேத வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வதற்கில்லை, 

விளக்கம்‌ : அறிவு பெறுவதற்குச்‌ செயல்கள்‌ பற்றிய வாக்கியங்கள்‌ அவசியமில்லை. குழந்தையிடம்‌, **இது மாமன்‌
*இது பாட்டி” என்றால்‌ மாமன்‌, பாட்டி யார்‌ யார்‌ என்று இது எளிதில்‌ புரிந்து கொள்கின்றது. 
ஆதலால்‌ ஸித்தமான பகவானைப்‌ பற்றி வேதாந்த வாக்கியங்களால்‌ தெரிந்து கொள்ளக்கூடும்‌.
முதல்‌ ஸூத்ரம்‌: அத அத: ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா- 
கர்மங்கள்‌ பற்றி ஆய்ந்தறிந்த பின்‌, இவற்றின்‌ பலன்‌  அற்பம்‌ என்று தேறுவதால்‌, 
பகவானை அறிய வேண்டமென்ற ஆவல்‌ ஏற்றதே என்பது இதன்‌ பொருள்‌, -ஆதலால்‌ பகவானைப்‌ பற்றிய ஆய்வு துவங்குகின்றது. 

(2) பகவானின்‌ லக்ஷணம்‌: ஓரு பொருளைப்‌ பற்றி அறிந்து கொள்ள விரும்பினால்‌, அதன்‌ லக்ஷணம்‌ முதலில்‌ 
தெரிந்து கொள்ள வேண்டும்‌. கண்ணால்‌ காணக் கூடாத பகவானைப்‌ பற்றி லகணம்‌ எங்ஙனம்‌ கூற முடியும்‌? 
இது எதிர்ப்போர்களது ஆஷேபம்‌. 

இந்த எதிர்ப்புக்கு விடை அளிக்கும்‌ ஸுித்ரம்‌, 
ஜந்மாதி அஸ்ய யத:--
கண்ணாற்‌ காணப்படும்‌ சேதன்‌  அசேதனங்களின்‌ சிருஷ்டி, ஸ்திதி, லயம்‌ இவை எவனிட  மிருந்து நிகழ்கின்றனவோ (அவனே பகவான்‌). 
௮ஸ்ய-  இந்த "உலகுக்கு. * 
தைத்திரீயத்தில்‌ ப்ருகுவல்லியில்‌ வந்துள்ள கருத்து: எதனிடமிருந்து இவ்வுலகங்கள்‌ உண்டாகின்றனவோ, 
பிறந்தவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, வாழ்வன எதை ப்ரளயத்தில்‌ அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம்‌ என்பது. 
இதுதான்‌ மேலுள்ள ஸுூத்ரத்தின்‌, விளக்கம்‌.  இதனால்‌ பகவானின்‌ இலக்கணம்‌ கூறியாயிற்று. 

எதிர்ப்பு: இந்த வாக்கியத்தைக்‌ கொண்டு பகவானை அறிவதற்கில்லை. 

ஒரு பொருளின்‌ லக்ஷண்த்தை இரண்டு வகைகளில்‌ வெளியிடலாம்‌: ஒன்று அடைமொழியாக. *'தொங்கும்‌ கரமுடையது யானை”:, 
மற்றது உப லக்ஷணமாக: “*மரம்‌ வாசலில்‌ நிற்கும்‌ வீடு என்னுடையது.
'* தொங்கும்‌  கரத்தைக்‌ கொண்டு யானையை அறிகிறோம்‌; மரத்தைக்‌ கொண்டு வீட்டை அறிகிறோம்‌. 

ஜந்மாதி அஸ்ய யத: என்ற வாக்கியத்தில்‌ 
படைப்புக்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்‌திற்குச்‌ காரணம்‌ மூவகைக்‌ கருத்துக்கள்‌ உள்ளன. 
“முழுக்‌ கொம்பும்‌ அரைக்‌ கொம்பும்‌ கொம்பில்லாததும்‌”” என்று பசுவைச்‌ சொன்னால்‌ பசுக்கள்‌ மூன்று என்பதே தேறும்‌. 
இதே போல்‌ படைக்கும்‌ பகவான்‌, காக்கும்‌ பகவான்‌, அழிக்கும்‌ பகவான்‌ என்று பகவான்‌ மூவர்‌  என்றே கருதப்படுவர்‌. 
ஆதலால்‌ இங்குக்‌ கூறிய இலக்கணம்‌ சரியன்று. இது எதிர்ப்பவர்‌ வாதம்‌. 

மறுப்பு: கேசவன்‌ கறுத்த நிறமுடையவன்‌, இளைஞன்‌, சிவந்த கண்ணினன்‌ என்றால்‌ இவை யாவும்‌ ஒருவனையே குறிப்பன, 
இது போல்‌ படைக்கும்‌ பரம்‌ பொருளே காப்பவனும்‌ அழிப்பவனுமாவான்‌ என்பது தேறுமன்றோ? 
விசேஷண முறையில்‌ பகவானைப்‌ பற்றிய விவரணம்‌ இது. 

தேர்வு : புருஷ ஸுக்தத்தில்‌ “*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்‌ ௪ த்ந்பெள””. பூதேவி, ஸ்ரீதேவி இவர்கள்‌ உன்‌ பத்நிகள்‌ 
என்பது காண்கிறோம்‌. இது உபலஷணமாக பகவானை அறிந்து கொள்ளலாம்‌. 
ஆக, படைப்பிற்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்திற்குக்‌ காரணம்‌ இவை மூன்றும்‌ தனித்தனி யாகவோ, 
சேர்ந்தோ பகவானுக்கு லஷணம்‌ என்றா யிற்று. படைப்பிற்குக்‌ காரணம்‌ நான்மூகன்‌ அல்லன்‌; 
அழிப்புக்குக்‌ காரணம்‌ பரம சிவன்‌ அல்லன்‌ என்பதும்‌ தேறுகின்றன. 

(3) சாஸ்த்ரம்‌ ஆதாரம்‌: ப்ரஹ்மத்தை அநுமானத்‌தாலேயே அறிந்து கொள்ளலாம்‌. 
குடத்திற்குக்‌ கர்த்தா  ஒருவன்‌ இருப்பது போல பூமிக்கும்‌ கர்த்தா ஒருவன்‌ இருக்க வேண்டும்‌ என்று அனுமானத்தால்‌ தேறலாகும்‌, 
ஆதலால்‌ முன்பு கூறிய வேத வாக்கியம்‌ அவசியமில்லை, சான்றாகாது--இது ஒரு கருத்து. 

மறுப்பு 2: ஆற்றல்‌ மிக்க பகவானே உலகைப்‌ படைக்‌கிறான்‌ என்பது ஏற்பதற்கன்று. 
விசுவாமித்ர முனிவன்‌  தனது தவத்தாலே ஓருலகைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌  பேராற்றல்‌ வாய்ந்த சிலர்‌ படைக்கக்கூடும்‌ என்பது ஊகிக்கலாம்‌. ஆதலால்‌ அனுமானத்தால்‌ இக் கருத்து நிறுவ இயலாது. 
வேறு எந்தச்‌ சான்றாலும்‌ அறிய  இயலாத போது சாஸ்த்ரமே ப்ரமாணம்‌ என்று அறக்‌ கற்றோர்‌ வெளியிட்டுள்ளனர்‌. 
இக் கருத்துடைய ஸூத்‌ரம்‌ சாஸ்த்ர யோநித்வாத்‌--
சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகத் தேர்வதாலே பகவானைப்‌ பற்றிய ஆய்வு செய்யத் தகும்‌ என்பது. 

(4) பரம புருஷார்த்தம்‌ : புருஷார்த்தம்‌ என்பது நாம்‌ பெற விரும்புவது. 
ஒரு பொருளைப்‌ பற்றி அறியும்‌ போது அதைப்‌ பெறுவதற்கு விருப்பம்‌ வேண்டும்‌. 
இந்த விருப்பம்‌ எவ்வாறு பெறுகிறோம்‌ எனில்‌, அனு கூலமாக நினைப்பன கை கூடும்‌, ப்ரதிகூலங்கள்‌ அகலும்‌ 'என்ற கருத்தாலே. 
இதனாலேயே அப்பொருளைப்‌ பெற மூயற்சி செய்கிறோம்‌. 
பகவானைப்‌ பற்றி  அறியாததால்‌ முயற்சிக்கு வாய்ப்பில்லை என்பது எதிர்ப்பவர்களது கருத்து, 

மறுப்பு : வேதாந்தங்கள்‌ பரம் பொருளான பகவான்‌ எல்லை யற்ற ஆனந்த ஸ்வரூபன்‌ என்கின்றன. 
இத்தகைய பகவானைப்‌ பெறுவது தான்‌ பரம புருஷார்த்தமாகும்‌. 
தெடுங்‌ காலமாகசக் காணாமற்‌ போன தன்‌ மகனைது தகப்பன்‌ கண்டும்‌, அவன்‌ மிகச்‌ சிறந்தவனாக அறிந்தும்‌ பரமானந்தங்‌ கொள்கிறான்‌. 
இங்கு விருப்பம்‌ முயற்சி போல்வன இல; பெறுவது ஆனந்தம்‌. இது போன்றதே பகவானே புருஷார்த்தம்‌ என்று அறிவது. 

“தத்‌ து ஸமந்வயாத்‌' என்பது ஸுத்ரம்‌. 
இதன்‌ பொருள்‌ : பசுவான் சாஸ்த்ரத்தால்‌ புருஷார்த்தம்‌ என்று தெளிவாகச்‌ சொல்லப் படுவதால்‌, சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகக்‌ கூடும்‌. 

இந்த நான்கு ஸுத்ரங்களும்‌ சேர்ந்து சதுஸ்‌ ஸுத்ரி என்ற பகுதி, பகவானைப்‌ பற்றி ஆராயக் கூடும்‌ என்ற கருத்துடையது,. 
ஆதலால்‌ ஆய்வு தொடங்குகின்றது. 

1. 2. ஸங்கல்பித்தது யார்‌? 

பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்ற பொருள்‌ முதலில்‌ விளக்கப் படுகின்றது: 
“*காரணந் து த்யேய?”  என்பதனால்‌ காரணம்‌ ஆராயப் படுகின்றது. 
மூல ப்ரக்‌ருதியே காரணம்‌, ஜீவர்கள்‌ காரணம்‌ என்ற வாதங்கள்‌  ஆராயப்பட்டு விலக்கப் பெறுகின்றன 
இந்த அத்யாயதின்‌ நான்கு பாதங்களிலும்‌. முன்பு விளக்கப்பெற்றது; 
ஜகத்‌ காரணமான ப்ரஹ்மமே புருஷார்த்தமென்று. சாந்தோக்யத்தில்‌ ஸத்வித்யையில்‌ அறிவற்ற மூலப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணம்‌ என வந்துள்ளது. 
மூலப்ரக்ருதியோ அறிவில்‌லாதது, தோஷங்களுக்கு இருப்பிடம்‌. இது எவ்வாறு காரணமாகக்‌ கூடும்‌ என்பது ஸத்வித்யையிலுள்ள 
வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வு நிகழ்கின்றது. 

மூலப்ரக்ருதியே காரணம்‌ என்று வாதஞ்‌ செய்வோர்‌ கூறுவது : 
“தத்‌ தேஜ ஐக்ஷ்த''--அந்த அக்நி ஸங்கல்‌பித்தது என்று தொடங்கி, நெருப்பு, நீர்‌ போல்வன: ஸங்கல்பித்தன என்ற வாக்கியங்கள்‌ வருகின்றன. 
இவ்வாறு உயிரில்லாத தேஜஸ்‌ முதலாவன ஸங்கல்‌பித்தன என்பது முக்கியமான கருத்து கொள்வதன்று என்றே கருத வேண்டும்‌. 
இதே போல்‌ *'தத்‌ ஐக்ஷத”” என்ற வாக்கியத்திலும்‌. 
அன்றியும்‌ இவ் வுலகம்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குண மயமானது; இம் மூன்றும்‌. கொண்டது மூல ப்ரக்ருதியே. 

மேலும்‌ இந்த ஸத் வித்யையில்‌ முதலில்‌ கூறியுள்ளது: 
ஐகத்‌ காரணமான ஸத்தை அறிந்தால்‌ யாவும்‌ அறிந்தன வாகும்‌ என்பது, உதாரணமாக: 
மண்ணிலிருந்து குடமும்‌, பொன்னிலிருந்து கிரீடமும்‌ உண்டாகின்றன. 
இந்த அனுமானத்தால்‌ ப்ரஹ்மம்‌ அறியப்படாதது?: 
சாஸ்த்ரம்‌ ஒன்றாலேயே ப்ரஹ்மம்‌ அறியப்படும்‌ என்பதால்‌ அனுமானத்தால்‌ அறிய இயலாது என்று தேறுகின்றது. 
ஆதலால்‌ அனுமானத்தால்‌ அறியப்படும்‌ மூல ப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணமாகும்‌. 

மறுப்பு: ஜகத்‌ காரணப்‌ பொருளுக்கு ஸங்கல்பம்‌. கூறுவதால்‌ அது அறிவில்லாத மூல ப்ரக்ருதி யாகாது. 
சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்டுள்ளது: நுண்ணிய நிலையிலுள்ள சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே காரணம்‌; 
ஸ்தூல நிலையில்‌  இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ இவனே காரியம்‌. 
இவ்வாறு ஆய்ந்தால்‌ காரண காரிய ஓற்றுமை வெளிப்‌ படுகின்றது. ஆதலால்‌ ஜகத் காரணம்‌ பரம புருஷனே.. 

நெருப்பு ஸங்கல்பித்தது என்பது போன்ற வாக்கியங்களில்‌ பகவானே அந்தர்யாமியாக ஸங்கல்பித்தான்‌ என்று தேறலாம்‌. 
'*ஐதத்‌ ஆத்ம்யகம்‌ இதம்‌ ஸர்வம்‌'”-- 
இவை ஸத்தை ஆத்மாவாகக்‌ கொள்வன என்பது இங்குச்‌ சான்று. 
ஆதலால்‌ பகவானே ஸத்வித்யையில்‌ போற்றப்‌ படும்‌ ஜகத்‌ காரணப்‌ பொருளாவான்‌. 

தேர்வு 1. முமுக்ஷாவான ச்வேதகேது பெற்ற உபதேசம்‌ : ஐகத்‌ காரணமான ஸத்தை உபாஸித்தால்‌ 
சரீர முடிவில்‌ அதனைப்‌ பெறுவதே மோக்ஷம்‌ என்று. மூல ப்ரக்ருதியை உபாஸித்து இதையே மோக்ஷமாகமப்‌ பெறுவது எவ்வாறு? 
அன்றியும்‌ ஒருவன்‌ எதை உபாஸிக்‌கின்றானோ, அப்படியே இறந்த பின்‌ ஆகிறான்‌ என்பதும்‌ கூறப்படுகிறது. 
ஆதலால்‌ ஸத்‌ என்பது மூல ப்ரக்ருதி எனில்‌ அறிவற்ற இதை உபாஸித்து அறிவற்றவனே ஆக வேண்டும்‌. 
இதனாலும்‌ விளங்குவது பகவானே உபாதாந காரணம்‌ என்பது. 

தேர்வு 2: மூல ப்ரக்ருதியோ மோக்ஷ விரோதி; இதனால்‌ இதன்‌ இழிவு வெளிப்படை. மோக்ஷ காரணம்‌ 
என்பது ஏற்றமேயாகும்‌; இழிவாகாது, ஆதலால்‌ ஸத் என்பது மூலப்ரகிருதி யாகாது.  

தேர்வு 3: ஜகத்‌ காரணம்‌ அறிந்தால்‌ யாவும்‌ அறியலாம்‌ என்பது முக்கியமான கருத்தாகும்‌. 
அறிவற்ற  மூல ப்ரகிருதியை அறிந்தால்‌, இது காரணம்‌ என்றால்‌, காரியப்‌ பொருளான ஜீவனும்‌ அறிவற்றவன்‌ என்பதே தேறும்‌. 

தேர்வு 4: ஒருவன்‌ தூங்கும்போது ஜீவன்‌ தனக்குக்‌ காரணமான ஸத்தில்‌ ஓடுங்குகிறான்‌ என்பது ஒரு வேத. வாக்கியம்‌, 
ப்ரதானமே ஸத்‌ எனில்‌ இந்தக்‌ கருத்து ஏற்றதாகாது. _ 

தேர்வு 5: பல உபதிஷத்துக்களின்‌ கருத்து : எவன்‌: எல்லாப்‌ பொருள்களின்‌ ஸ்வ -ஸ்வரூப ஸ்வபாவங்களை 
அறிகிறானோ, அவனிடமிருந்தே இந்த மூல ப்ரக்ருதி  ஜீவர்கள் உண்டாகின்றது; 
இவை யாவும்‌ பரம புருஷனே; அப்பரம புருஷ னிடமிருந்தேதே அண்டம்‌ உண்டாயிற்று. நாராயணன்‌ ஒருவனே மூதவில்‌ இருந்தான்‌. 
இவ்வாறான வாக்கியங்‌கள்‌ ஒரூமூகமாக பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்று முழங்குகின்றன  

தேர்வு 6: இதே உபதிஷத்தில்‌ ஓரிடத்தில்‌ வந்துள்ளது; ஆத்மாவிடமிகுத்து ப்ராணன்‌, ஆகாசம்‌ உண்டாகின்றன; 
உலகம்‌ யாவும்‌ பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றது என்பது. 

இவ்வகைகளில்‌ ஆராய்ந்தால்‌ யாவும்‌ அறிந்த பரம்‌ பொருளே உலகுக்கு உபாதான காரணம்‌ என்பது தேறுகின்‌றது. 

1. 3. ஆனந்த மயன்‌ - யார்‌? 

மூலப்ரக்ருதிக்கு ஸங்கல்பம்‌ நேராது, ஆதலால்‌ அது உலகுக்குக்‌ காரணமாகாது என்று விளக்கப்பட்டது. 
ஜீவனுக்கு முக்ய ஸங்கல்பம்‌ கூடும்‌, ஆதலால்‌ இவன்‌  காரணமாகலாம்‌ என்பது ஆராயப்படுகின்றது. 

ஜீவன்‌ காரணமாகலாம்‌ என்பதற்கு விளக்கம்‌: 

தைத்திரீயத்தில்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டியைப்‌ பற்றி விளக்கத்‌ தொடங்கிப்‌ பின்வரும்‌ விவரங்கள்‌ உள்ளன ; 

அன்னத்தால்‌ வளர்வது சரீரம்‌; சரீரத்தை தரிப்பது ஐம்பால்‌ ப்ராணன்‌; ப்ராணனில்‌ நுண்ணியது புத்தி, 
இவ்வாறு படிப்படியாகக்‌ கூறி இவற்றைத்‌ தரிப்பது ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது. 
விஜ்ஞான மயன்‌ என்ற புத்தியைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது நுண்ணியதான ஆனந்தமயன்‌ ஆத்மா என்றும்‌ வந்துள்ளது. 
இந்த  விஜ்ஞான மயமான புத்திக்‌குச்‌ சரீரத்‌ தொடர்புள்ளது 
ஆத்மா என்பதால்‌ இது ஜீவாத்மாக வேண்டும்‌. ஆதலால்‌ ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது தேறுகின்றது. 

மறுப்பு: இதே பகுதியில்‌ விஜ்ஞானம்‌ என்ற சொல்‌  பல இடங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே வருகிறது. 
அறிவே இயல்பாகவும்‌ குணமாகவும்‌ உள்ள ஜீவன்‌ ஜ்ஞானமாகவும்‌ ஜ்ஞான மயமாகவும்‌ சொல்லக்கூடும்‌. 
இவனினும்‌: நுண்ணியதாய்‌, இவனை தரிப்பவன்‌ பரமாத்மாவான: ஆனந்த மயன்‌. 
அன்றியும்‌ ஆனந்தத்தை அளவிடும்போது மனுஷ்ய ஆனந்தத்தை அளவுகோலாக்‌ கொண்டு, இதைப்‌ போல்‌ 
நூறுநூறு மடங்காக அடுக்கிக்கொண்டு அளவு காணாத தால்‌ சொற்கள்‌ மீண்டன.
'*யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”. இவ்வாறான பேரானந்தம்‌ உலக வாழ்க்கையில்‌ உழலும்‌ ஜீவனுக்கு இல்லை? 
பகவானுக்கே உண்டு. **சாரீர ஆத்மா” என்று சரீர ஸம்‌ பந்தம்‌ கூறும்‌ பகவானுக்கே இத்தகைய ஆனந்தம்‌ பொருந்தும்‌. 
பூமி, ஆத்மாக்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரமாகக்‌ கூறப்படுகின்றன. 

தேர்வு 1: '*ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அதந்தம்‌ ப்ரஹ்ம”  என்ற விவரத்தால்‌ ப்ரஹ்மம்‌ ஆனந்தமயம்‌ என்று சொல்லப்படுகிறது. 
இந்த ப்ரஹ்மத்தை அறிபவன்‌ மேம்பட்ட பலமான பரப்ரஹ்மத்தை அடைகிறான்‌ என்பதும்‌ அறிவோம்‌. 
ஜீவன்‌ அடைவது இந்த ப்ரஹ்மம்‌. ஆதலால்‌ இவனைக்‌ காட்டிலும்‌ சிறப்புடைய பகவானே ஆனந்த மயனாக வேண்டும்‌. 

தேர்வு 2: படைக்கும்போது பகவான்‌, :நான்‌ பலவாறாகக்‌ கடவேன்‌” என்று ஸங்கல்பிக்கிறான்‌. 
சரீரமில்லாமல்‌ ஜீவன்‌ ஒன்றையும்‌ படைக்க இயலாது, ஆதலால்‌ உலகைப்‌ படைக்கும்‌ ஆனத்தமயன்‌ ஜீவனாக முடியாது. 

தேர்வு 3: தைத்திரீயத்தில்‌ ஜீவன்‌ ரஸஸ்வரூபியை அடைந்து ஆனந்த மூடையவனாகிறான்‌ என்று வந்துள்ளது. 
ஆதலால்‌ ஆநந்தமயன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. ஆனந்தமயன்‌ என்பதன்‌ கருத்து; 
வேறு எதுவும்‌ கலவாது முற்றிலும்‌ ஆனந்தமாகவே இருத்தல்‌. இது: ஸர்வேச்வரனுக்கே உரியது, 

1. 4. ஆதித்ய புருஷன்‌ யார்‌? 

சாதாரணமான ஜீவர்களுக்கு ஐகக்‌ காரணமாயிருப்பது கூடாதெனில்‌, விசேஷ சக்தி வாய்ந்தவர்‌களுக்கு இது கூடும்‌ 
என்ற சங்கையினால்‌ ஆதித்ய புருஷன்‌, அக்ஷிபுருஷன்‌ இவர்களைப்‌ பற்றி இங்கு ஆராய்வு நிகழ்கின்றது. 

ஆதித்யனுக்குள்‌ பொன்‌ மயமான புருஷன்‌ இருக்‌கிறான்‌; இவனுக்கு மீசை பொன்‌ மயம்‌, கேசம்‌, நகம்‌ பொன்‌ மயம்‌; 
கண்கள்‌ தாமரை போல்வன என்று சாந்‌தோக்யத்தில்‌ வந்துள்ளது. மீசை, சேசம்‌, நகம்‌ போல்வன சரீரம்‌ உள்ள ஜீவார்களுக்கே உள்ளன. 
ஆதலால்‌ இங்கு விவரிக்கப்‌ பெறுவது சக்தி மிகுந்த ஒரு ஜீவன்‌; இவனே உலகப்‌ படைப்பு செய்ய வல்லவன்‌, இது ஒரு கருத்து. 

மறுப்பு: உபநிஷத்துக்கள்‌ விளக்கியுள்ளது; ஆதித்ய புருஷன்‌ பாவங்களுக்‌ கப்பாற்பட்டவன்‌? 
இவனுக்குப்‌ பாடகர்கள்‌ ரிக்வேதம்‌, ஸாம வேதம்‌. கண்ணிலிருப்பவன்‌ ரிக்‌ வேத மாவான்‌. ஸாம வேத மாவான்‌, 
ஆதலால்‌ இப்புருஷன்‌ ஜீவனாக முடியாது. அன்றியும்‌ வேத வாக்‌ யங்கள்‌ மூலமாகவும்‌ &தை மூலமாகவும்‌ அறிவது: 
திவ்ய மங்கள விக்ரஹம்‌ பரமாத்மாவுக்கே உண்டு. ஆதலால்‌ ஆதித்யனிலும்‌ அக்ஷிகளிலும்‌ உள்ளே இருப்பவன்‌ பரமாத்மாவே. 

அன்றியும்‌ ஆதித்யன்‌ முதலான தேவர்கள்‌ யாவரும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌, பகவான்‌ இவர்களுக்கு ஆத்மா என்று வேதங்கள்‌ ஓலிக்கன்றன, 
ஆதலால்‌ ஆதித்யனிலுள்ள புருஷன்‌ இவர்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவானே. 

1. 5. ஆகாசம்‌ ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ (1-9-1) பூதங்கள்‌ யாவும்‌ ஆகாசத்திலிருந்து உண்டாகின்றன, 

விளக்கம்‌  பின்வரும்‌ உபநிஷத்‌ வாக்கியங்களை ஆராய்வோம்‌. இவ்வுலகம்‌ ஆத்மாவாகவே இருந்தது? 
ஆத்மாவிலிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று; நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌; பிரமனும்‌ இல்லை, 
சிவனும்‌ இவ்லை. நாராயணனிடமிருந்து பிரமன்‌ உண்டானான்‌. 
இவை யாவும்‌ நாராயணனே ஐகத்‌ காரணம்‌ என்று காட்டுகின்றன. 
அசேதனமான ஆகாசம்‌ காரணமாக முடியாது. ஆகாசம்‌ என்பதன்‌ பொருள்‌; *ஆ ஸமந்தாத்‌ீ காசதேத'”- எங்கும்‌ ப்ராசிக்கிறது, 
ஆதலால்‌ ஆகாசம்‌ என்பது. இதனால்‌ ஆகாசம்‌ என்ற சொல்‌ எங்கும்‌ விளங்கும்‌ நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
ஆதலால்‌ பகவானான நாராயணனே ஜகத்‌ காரணம்‌. 

1. 6. வாயு ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌: பூதங்கள்‌" யாவும்‌ ப்ராணனில்‌ லயிக்கின்றன, ப்ராணனிடமிருத்து வெளிக்‌ கிளம்புகின்றன. 
ப்ராணன்‌ என்பது ஜீவராசிகள்‌ வாழ்‌வதற்குக்‌ காரணமான வாயுவே ஆகும்‌. 
ஆதலால்‌  ஆகாசத்தைக்‌ காட்டிலும்‌ ஐகத்‌ காரணமாகத்‌ தகுதி பெறுவது இந்த வாயுவே. இது சிலர்‌ கருத்து, 

தேர்வு : ப்ராணனால்‌ வாழ்வு பெறுவது சரீரமே? ப்ராணனாலே தான்‌ இது செயல்படுகின்றது. ஆனால்‌ 
நாராயணனே யாவற்றிற்கும்‌ காரணம்‌ என்கின்றன வேத வாக்கியங்கள்‌. 
ஆதலால்‌ இவனே ப்ராணன்‌ என்‌பதுவே தேறும்‌. 

1. 7. அக்நி ஜகத்‌ காரணமாகுமா? 

“*வாயோரக்நி.'”' *வாயுவிலிருந்து தோன்றியது ௮க்னி- மூன்றாவது பூதம்‌. இதுதான்‌ ஜகத்‌ காரணம்‌ என்பது ஓரு கருத்து. 
இதன்‌ விளக்கம்‌: வியஷ்டி பதார்த்தங்கள்‌ (பகுத்துப்‌ படைக்கப்பட்டவை), ஸமஷ்டி. பதார்தங்கள்‌ (ஒட்டு மொத்தமாகப்‌ படைக்கப்பட்டவை) 
இவற்றுக்கும்‌ அப்பால்‌ மேலே பரமபதம்‌. இதற்கும்‌ மேலே மிகச்‌ சிறந்த உலோகங்களிலே ஒளி பரப்பும்‌ சோதி இலங்குகின்றது. 
அதுவே இம்மனிதனுள்‌ விளங்‌குஞ்‌ சோதி - ஜாடராக்தியோடு ஒன்றாகும்‌. இது சாந்‌தோக்ய வாக்கியம்‌. 
ஜாடராக்நியோடு ஒன்றெனக்‌ கூறுவதால்‌ இது பஞ்ச பூதங்களுள்‌ ஒன்றான அக்நி, 
சூரியன்‌ போன்ற அசேதனங்களான சோதிகளுள்‌ ஓன்று  என்பதே தெளிவு. 

மறுப்பு: இதே பகுதியிலே காணும்‌ வாக்கியம்‌: இப்‌ பரம் பொருளுக்கு பூதங்கள்‌ யாவும்‌ ஒரு பாதம்‌? 
மற்றைய மூன்றும்‌ பரமபதத்தில்‌ உள்ளன என்பது. இங்குக் கூறும்‌ சோதி, இவ்வுலகில்‌ காணும்‌ பூதங்கள்‌ 
யாவற்றையும்‌ ஒரு பாதமாகக்‌ கொண்டுள்ளது என்பதால்‌ இது நாராயணனைப்‌ பற்றியேயாகும்‌. 
மேலும்‌ பகவானது திருமேனி சூரியனைப்‌ போலே ஒளியுடையது மின்னற்கொடி போன்றது; 
ஆயிரம்‌ ஆதித்யர்களது ஓளி ஒரே காலத்தில்‌ நேரும்‌ எனில்‌, அது அம் மஹா புருஷனின்‌ திருமேனி ஒளிக்கு ஒப்பாகும்‌ என்ற வாக்‌யங்கள்‌ உள்ளன. 
திருமேனி சோதி மயமானதாலே சோதிகளுக்கெல்லாம்‌ ஒளியை அளிக்கும்‌ பரஞ்சோதி என்பது பொருந்தும்‌. இப்பரஞ்சோதி ஸர்வேச்வரனே. 

பகவான்‌ ஜாடராக்நி ஸ்வரூபன்‌ என்பதன்‌ கருத்து: இவன்‌ இதற்கு அந்தர்யாமி என்பதே. 
கீதையில்‌ பகவான்‌, **நானே ஜாடராக்நியாகி ப்ராணிகளின்‌ உடலிலே இருக்கிறேன்‌” என்றது ஒப்பு நோக்கு. 
ஆதலால்‌ சோதி என்பது பரஞ்சோதியான நாராயணனே. 

1. 8. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா? 

சூர்யன்‌, அக்நி போல்வாருக்குத்‌ தலைவனான. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா என்ற விஷயம்‌ இப்போது. 
ஆராயப்படுகின்றது. 

தனக்கு. உபதேசிக்க வேண்டும்‌ என்று கேட்ட ஒருவனுக்கு. இத்திரன்‌ கூறியது: 
என்னையே உபாஸிப்பாய்‌; அறிவு  ரூபமான ஆத்மாவாக இருக்கும்‌ நானே ப்ராணன்‌? 
ப்ராணனான என்னை ஆயுளாகவும்‌ அம்ருதமாகவும்‌ உபாஸிக்கக் கடவாய்‌ என்று. 
ஆதலால்‌ மோக்ஷ ஸாதனதிற்கு உபாயமாகச்‌ சொல்லும்‌ இந்திரனே ஜகதி, காரணம்‌. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌  இப்பகுதியில்‌ முதலிலும்‌ நடுவிலும்‌ முடிவிலும்‌ பரமாத்மாவின்‌ பெருமையே அதிகமாக விளக்கப்‌ படுகின்றது. 
ரத சக்கரத்தின்‌ ஆரங்கள்‌ போல சேதன. அசேதனங்கள்‌ ப்ராணன்‌ எனப்பெறும்‌ பரமாத்மாவிடம்‌ கோர்க்கப்‌ பட்டுள்ளன. 
ப்ராணனுக்கு ஆதாரம்‌ பரமாத்மா. இப்பரமாத்மா நம்மை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறான்‌; 
நற்செயல்கள்‌ செய்விக்‌கிறான்‌ என்றும்‌ வந்துள்ளது. 
இவ் விவரங்கள்‌ பிறப்பு, இறப்பு இவையுடைய இந்திரனைப்‌ பற்றி அல்ல. 
**ஸேந்த்ர:'' என்று பகவான்‌ இந்திரனுக்கு அந்தர்யாமி யாகப்‌ புருஷ ஸூக்தத்தில்‌ காண்கிறோம்‌. 
ஆகையால்‌ இங்கு இந்திரன்‌ எனப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாரயணனே ஆவான்‌. 
“மாம்‌ உபாஸ்வ'” என்று இந்திரன்‌ கூறியதன்‌ கருத்து: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்‌ என்பது. 
ப்ரஹ்மத்தை உபாஸித்த வாமதேவர்‌, “நானே மனு, நானே ஸர்யன்‌”” என்றறிந்தார்‌. எவ்வாறெனில்‌, 
இதன்‌ பொருள்‌: தமக்கு அந்தர்யாமி யான பகவானே மனுவுக்கும்‌ ஸுர்யனுக்கும்‌ அத்தர்‌யாமி என்பது. 
ஈச்வரன்‌ யாவர்க்கும்‌ அந்தர்யாமி ஆதலால்‌ இந்திரன்‌ கூறியது: எனக்கு அந்தர்யாமியான 
பரமாத்மாவைக்‌ கருதி என்னையே உபாஸிப்பாய்‌ என்பது. 

பகவானை உபாஸிப்பது மூன்று வகை: அவனது ஸ்வரூபத்தை நேரே அனுஸந்திப்பது, 
ஜீவ ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது,அசேதன ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது, 
இந்திரன்‌ வெளி யிட்டது: இந்திரனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ ப்ராணனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ பற்றி, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸனையே கூறப்படுகிறது. இந்திர ப்ராண சப்தத்தால்‌ தெரிவிப்பது பரமாத்மாவே என்பது. 
ஸித்தமான பகவான்ப்‌ பற்றி வேத வாக்கியங்களால்‌ அறிந்து கொள்ள இயலும்‌. 
வேத வாக்கியங்கள்‌ இவனது லஷணங்களை உரைப்பன. இவ்விஷயத்தில்‌ சாஸ்த்ரம்‌ தக்க சான்றாகும்‌. 
பரம புருஷார்த்தமாகிய பகவானைப்‌ பற்றி சாஸ்த்ரங்கள்‌ அறிவிக்கக்கூடும்‌. 

ஸத்வித்யையில்‌ சொல்லப்படும்‌ பகவான்‌ உலகுக்குக்‌ காரணமாவான்‌, மூலப்ரக்ருதி யன்று. 
இவனே ஆனந்த மயன்‌, ஜீவன்‌ அல்லன்‌. ஸுர்யனிலும்‌ கண்ணிலும்‌ இருப்பதாகக்‌ கூறப்படுபவன்‌ இந்த பகவானே. 
ஆகாசம்‌, ப்ராணன்‌, சோதி இவை ஐகத்‌ காரணமல்ல; பகவானே காரணம்‌. 

இந்திரனென்றும்‌ ப்ராணனென்றும்‌ பெருமையுடன்‌ கூறப்படுவது பகவானே, இந்திரனு மல்லன்‌, ப்ராணனு மன்று, 
---------
2... இரண்டாவது பாதம்‌ 

முதற்‌, பாதத்தின்‌ பொருள்‌ : ப்ரஹ்மம்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலஷணமானது; 
உலகுக்குத்‌ தனிக்‌ காரணம்‌ விலக்ஷண புருஷன்‌. ஐக்ஷ்த என்ற ஸுத்ரத்தால்‌ இவன்‌ 
அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌, ஆனந்தமயன்‌ என்ற ஸுத்ரத்தால்‌ 
சேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌ வெளியிடப்பட்டது. 
இப்பாதத்தில்‌ இவன்‌ ஐகச் சரீரன்‌ என்பது அறுதியிடப்படுகிறது. 

2-1. அனைத்தும்‌ ப்ரஹ்மமே 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌ சாண்டில்ய வித்யையைப்‌ பற்றியது: 
*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம -தஜ்ஜலாநிதி சாந்த உபாஸஹீத”” இது எல்லாம்‌. ப்ரஹ்மமே. 
அதனால்‌ (இவை) தோன்றி, வாழ்ந்து, அதில்‌ மறைவதால்‌. இவ்வாறு சாந்தி யுடையவளாக 
உபாஸிக்க வேண்டும்‌ என்கிறது இந்த வாக்கியம்‌.” 
தன்னுடைய கர்மத்தின்‌ பலனாலே ஜீவனே ப்ரஹ்மா முதல்‌ புல்‌ வரையில்‌ எல்லாப்‌ பொருள்களும்‌ ஆக முடியும்‌. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை: தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமான எல்லாப்‌ பொருள்களுமாக, பகவான்‌ ஆகமுடியாது. 
ஜீவர்களின்‌ கர்ம மடியாகவே, உலகம்‌ தோன்றி, வாழ்ந்து, மறைகின்றது. 
**தஜ்ஜலாந்‌:' (தோன்றி வாழ்ந்து மறைவது) என்று சொல்‌ ஜீவனிடம்‌ பொருந்தும்‌. 
ஆதலால்‌ இந்த வாக்‌யத்தில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே... 

மறுப்பு : தைத்திரீயத்தில்‌ ஒரு வாக்கியம்‌:**யதோவா இமாநி பூதாறி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, 
ய்த் ப்ரயந்தயபிணம்விசந்தி, தத்‌ விஜிஜ்ஞாஸ்ஸ்‌வ கத்ப்ரஹ்மேதி'”--எவனிடமிகுந்து பொருள்கள்‌ யாவும்‌ 
தோன்றுகின்றனவோ. தோன்றியவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, ப்ரளய காலத்தில்‌ எதனுள்‌ ஒடுங்குகின்றனவோ, 
அதை நீ அறிவாபய் என்பது படைத்துக்‌ காத்து அழிப்பது மூன்றும்‌ பரம்‌ பொருளுக்கே உரியன, ஜீவனுக்கு அல்ல. 

சங்கை : தோஷமே இல்லாத பரமாத்மா, தோஷங்‌ களுக்கு இருப்பிடமான பொருள்கள்‌ யாவுமாவது: எவ்வாறு ஒட்டும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நுண்ணிய நிலையிலும்‌, ஸ்ருஷ்டியில்‌ ஸ்தூலமாகவும்‌ சேதன அசேதனங்‌கள்‌ உள்ளன. 
இவற்றை பகவான்‌ சரீரமாகக்‌ கொள்‌கிறான்‌. தோஷங்கள்‌ சரீரமான சேதனர்களிடமே உள்ளன, 
சரீரியான பகவானிடம்‌ இவை அணுகவும்‌ மாட்டா. ஆதலால்‌ இவனை எல்லாப்‌ பொருள்களுமாகக்‌ கூறலாம்‌. 
அன்றியும்‌ ஒரு சரீரத்திலுள்ள ஜீவன்‌ வேறொரு ஜீவனாக ஆகமுடியாது; ஜீவனை யாவுமாகச்‌ சொல்லுவது சரியன்று. 
ஆதலால்‌ ஐகத்‌ காரணமாகவும்‌ ஸர்வாத்மாவாகவும்‌ சொல்லப்படுவது பகவானே. 

அன்றியும்‌ பகவானைப்‌ பற்றி ஒரு வாக்கியம்‌: தூய மனத்தாலேயே அறியத்‌ தக்கவன்‌, ஒளி மயமானவன்‌, 
எல்லாச்‌ செயல்களையும்‌ ஆற்ற வல்லவன்‌; இவன்‌ எவனையும்‌ ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; 
ஆதலால்‌ எவனிடமும்‌ வாய்‌ பேசாதவன்‌. இவை யாவும்‌ பரமாத்‌மாவுக்கே பொருந்துவன. 

மேலும்‌ பகவான்‌ ஜீவனால்‌ அடையப்‌ பெறுபவன்‌ என்றும்‌, ஜீவன்‌ இதற்குக்‌ கர்த்தா என்றும்‌ வேதவாக்யங்கள்‌ உள்ளன, 
ஆதலால்‌ உபாஸிக்கப்படும்‌  பகவான்‌ உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனினும்‌ மாறுபட்ட.  பரம்பொருளே.

கீதையில்‌ வருவது (15-75) : பரம்‌ பொருளை உபாஸிப்பவன்‌ ஜீவன்‌, 
பரம புருஷன்‌ ஜீவனின்‌ இதயத்தில்‌  உறைபவன்‌ என்று. உபாஸநம்‌ செய்யப்படுவோன்‌ பகவானே. 

மறுப்பு : கட்டை விரல்‌ பருமனுள்ள இதயத்தில்‌ இருக்கும்‌ ஆத்மா நெல்லை விடக்‌ கோதுமையை விடக்‌ 
கடுகை விடச்‌ சிறியது என்கிறது உபநிஷத்‌. இதயத்தில்‌ இருக்கும்‌ என்னுடைய ஆத்மா என்று சொல்லுவதால்‌ 
இது ஜீவனைப்‌ பற்றியதே. பகவானைப்‌ பற்றியது எனில்‌ மிகச்‌ சிறிய இவன்‌ எவ்வாறு எங்கும்‌ வியாபிக்க இயலும்‌? 

விளக்கம்‌ : பரமாத்மாவை உபாஸிப்பதற்காகவே இதயத்தில்‌ ஏறிய நிலையை வெளியிட்டது. 
இவன்‌ பூமியை விடப்‌ பெரியவன்‌, அந்தரிக்ஷ்த்தை விடப்‌ பெரியவன்‌, தேவலோகத்தை விடப்‌ பெரியவன்‌ என்று இவ்‌வாறு 
வாக்‌யங்கள்‌ கூறுகின்றன. இந்தக்‌ காரணத்தாலும்‌ இந்த வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனாக முடியாது; 
பரமபுருஷனே என்பது திண்ணம்‌. 

மறுப்பு : பகவான்‌ இதயத்தில்‌ உறைவதால்‌ இவன்‌ அவனைப்‌ பேரலவே இன்ப துன்பங்கள்‌ அனுபவிக்க நேரிடும்‌. 
ஆதலால்‌ இவ் வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே என்று கருத வேண்டும்‌. 

விளக்கம்‌ : பகவான்‌ இழிவுகளுக்கெல்லாம்‌ எதிர்த்‌ தலை; கல்யாண குணங்கள்‌ பலபல வாய்ந்தவன்‌; 
கர்மத்‌திற்கு வசப்படாதவன்‌; தனது இச்சையாலே சரீரத்தில்‌ உறைகின்றான்‌ என்று வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவன்‌  ஜீவனோடு இணைந்திருந்தும்‌ கர்ம பலத்தைப்‌ புசிப்பவன்‌ ஜீவனே, இவனல்லன்‌ என்று மேலும்‌ கூறுகின்றன, 
ஆதலால்‌ எல்லாம்‌ ப்ரஹ்மமே என்ற வாக்கியத்தில்‌  கருதப்படுவது பகவானே. 

2. 2. உண்பவன்‌ : கடவல்லியில்‌ [7-2 45) **யஸ்ய பிரஹ்ம ச க்ஷத்ரம்‌.௪. உயே பவத ஓதத: மருத்து? 
 
யஸ்யோப 'ஸேசதம்‌''-- எவனுக்கு ப்ராஹ்‌மணரும்‌ க்ஷ்த்ரியர்‌களும்‌ உணவாகின்றனரோ, : எவனுக்கு எமன்‌: 
ஊறுகாயோ என்று உண்பவன்‌ ஒருவனாக வெளியிடப்‌பட்டுள்ளது. கர்ம பலனுடைய ஜீவனே உணவு போன்றவற்றை உண்ண இயலும்‌. 
ஆதலால்‌ இங்குச்‌ சொல்லப்‌படுபவன்‌. ஜீவனே என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஸம்ஹார காலத்தில்‌ பகவான்‌ செய்வது' இங்குக்‌ கூறப்படும்‌ பொருள்‌. ஸம்ஹாரம்‌ செய்வோன்‌ பகவான்‌; 
ப்ராண்மணர்‌, க்ஷத்ரியர்‌ என்பன உபலக்ஷணத்தால்‌ உலகங்களைக்‌ காட்டுவன. 
ஊறுகாயைக்‌ கொண்டு.  உணவு உண்பது போல பகவான்‌ யமனைத்‌ துணையாகக்‌ கொண்டு அழிக்கிறான்‌. 
உலகங்களை உண்பது என்பது ஜீவனால்‌ இயலாதது; ஆதலால்‌ "இங்குக்‌ கூறப்படுவது பகவானே..' 

இதய குகையில்‌ இருவர்‌ . ருதம்‌ பிபந்தெதெனெ ஸுஹ்ருதஸ்ய லோகே குஹாம்‌ ப்ரவிஷ்டென''(கடவல்லி 71-53-1312 
கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌; புண்ய லோகமான இவ்வுலகில்‌ இதய குகையில்‌ நுழைந்திருப்பவர்கள்‌ 
இவ்விருவர்‌ என்ற வாக்கியத்தில்‌ கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌ யார்‌ யார்‌? 
இவர்கள்‌ ஜீவனும்‌ ப்ராணனும்‌, அல்லது ஜீவனும்‌ புத்தியும்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஜீவனும்‌ பகவானுமே இதயத்தில்‌ இருப்பவர்கள்‌ என்பதே வேத வாக்கியங்களில்‌ கூறப்‌படுகிறது. 
ஆத்ம ஞானத்தாலே அறிபவனும்‌, எங்கும்‌ வியாபித்திருப்பவனும்‌ இன்ப துன்பங்கள்‌ இல்லாதவனுமான பகவான்‌ 
இதயத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, காம பலத்தை அனுபவிக்கும்‌ ஜீவன்‌ ப்ராணனோடு இதில்‌வாழ்கின்றான்‌ என்றும்‌ 
வேத வாக்கியங்கள்‌ கூறுன்றன: 
கர்ம பலன்‌ அனுபவிப்பது ஜீவன்‌; பகவானும்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பது எவ்வாறு? பகவான்‌ ஜீவனை அனுபவிக்கச்‌ செய்கிறான்‌; 
செய்விப்பவனையும்‌ செய்வதாகச்‌ சொல்லுவதுண்டு. ஆதலால்‌ உலகை உண்பவனாக ஓதப்படுவோன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

அன்றியும்‌ இதே பகுதியில்‌ வரும்‌ விஷயம்‌ ஒன்று; 
பகவான்‌ மிக மிகப்‌ பெரியவன்‌; இவன்‌ வரிக்கும்‌ ஜீவனே இவனை அடையத்‌ தக்கவன்‌. ஜீவன்‌ உபாஸிப்பவன்‌, 
பகவான்‌ உபாஸிக்கப்படுபவன்‌? ஜீவன்‌ பகவானை அடைபவன்‌ என்பது. 
ஆதலால் சராசரங்களை உண்பவன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

2. 3. கண்ணிலே காணப்படுவோன்‌ 
சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவனொரு புருஷன்‌ கண்ணிலே காணப்படுகிறானோ, இவனே 
ஆத்மா, அம்ருதம்‌, அபயம்‌, ப்ரஹ்மம்‌ என்பது, 
-இவன்‌”* என்று  .. சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவரும்‌ அறிந்ததாக ஓதியிருப்பதால்‌, 
இது ஜீவன்‌ அல்லது எதிரே நிற்பவரது ப்ரதிபிம்பம்‌, அல்லது கண்ணுக்கு அபிமான தேவதை. இது ஒரு கருத்து, 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ (4-75-3) வருவது* இவனே அனைவர்க்கும்‌ ஆத்மா, ஆராவமுது, 
பயமற்றவன்‌, ப்ரஹ்மம்‌, அழகான யாவும்‌ நிரம்பப்‌ பெற்றவன்‌, நல்லன யாவும்‌ வாய்ந்திருப்பவன்‌; 
இவனே அடியார்க்கு நல்லன தருபவன்‌; ஆதலால்‌ இவனே மிகச் சிறந்து விளங்குபவன்‌. 
இவ்வாறான பெருமை பரமாத்மாவுக்கே பொருந்தும்‌; ஜீவனுக்கும்‌ ப்ரதி பிம்பத்திற்கும்‌ அபிமான தேவதைக்கும்‌ பொருந்தாது. 

பரமாத்மாவை யோகிகள்‌ தமது கண்ணில்‌ தேக்க வல்லவார்‌. இதனாலும்‌ பகவான்‌ கண்ணில்‌ இருப்பதாகக் கொள்ளலாகும்‌. 
* பகவான்‌ சுகத்தோடு கூடியவன்‌ என்று வேத வாக்கியங்கள்‌ சொல்லுகின்றன. 
இவனை உபாஸிக்க வேண்டிய ஸ்தானத்தை ய ஏஷோசக்ஷிணி'' என்பதால்‌, கண்ணில்‌ உள்ள இவன்‌ பரமாத்மாவே ஆகவேண்டும்‌, 
மற்றவர்‌  அல்லர்‌. 

பரம புருஷனை உபாஸிப்பவர்களுக்கு அர்ச்சிராதி மார்கம்‌ உண்டு. 
அஷி புருஷனை அறிந்த உபகோஸலனுக்கு அர்ச்சிராதி உபதேசிக்கப்படுகிறது. ஆதலால்‌ அஷி புருஷன்‌ பரம புருஷனே. 

தேர்வு 1: சாந்தோக்யத்தில்‌ ஓரிடத்தில்‌ வரும்‌ விஷயம்‌: “ கம்‌ ப்ரஹ்ம கம்‌ ப்ரஹ்ம”'-
சுகமுள்ளது ப்ரஹ்மம்‌, மிகப்‌ பெரியது ப்ரஹ்மம்‌. இதனை உபாஸிக்‌கும்‌ ஸ்தானம்‌ கண்‌ என்பது. 
ஆதலால்‌ இவன்‌ பரமாத்‌மாவே; சுகமே காணாத மற்றையோர்‌ அல்லர்‌. 

தேர்வு 2: இந்த்ரியங்கள்‌ யாவற்றிற்கும்‌ வேர்ப்‌பற்றான ஜீவன்‌ இதயத்திலேயே இருக்கிறான்‌; 
ஆதலால்‌  கண்ணில்‌ இருப்பதற்கல்லை. எதிரில்‌ இருப்பவரது ப்ரதிபிம்பம்‌ எப்போதுமே கண்ணில்‌ இருக்க இயலாது? 
எதிரில்‌ இருக்கும்போதுதான்‌ ப்ரதிபிம்பம்‌ காணமுடியும்‌ * 
வெகு தொலைவிலுள்ள ஆதித்யன்‌ கண்ணில்‌ இருப்பதாகக்‌ கூறவில்லை; கிரணங்களாலே கண்ணில்‌ இருப்பதாகக்‌ கருதப்படுகிறது.
ஆதலால்‌ இம்மூன்றும்‌ குறிக்கும்‌ படவில்லை. அக்ஷி புருஷன்‌ பரமாத்மாவே.
 
2.4. அந்தர்யாமி பரம புருஷன்‌

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்‌: எவன்‌ பூமியில்‌ நிற்கிறானோ, பூமிக்குள்‌ இருக்கிறானோ, 
எவனை பூமி  ௮றியாதோ, எவனுக்கு பூமி சரீரமோ, எவன்‌ பூமியுள் நுழைந்து நியமிக்கின்றானோ அவனே உனக்கு ஆத்மா என்றறிவாய்‌; 
அவன்‌ மரணமில்லாத அந்தர்யாமி என்று தொடங்கி, நீர்‌, நெருப்பு, அந்தரிக்ஷம்‌, வாயு, தயு வோகம்‌, ஆதித்யன்‌, 
திசைகள்‌, சந்த்ர தாரகைகள்‌,  ஆகாசம்‌, _தமஸ்‌, தேஜஸ்‌ இவற்றிற்கு அந்தர்யாமியாகச்‌ சொல்லப்பட்டுள்ளது. 
பின்பு ப்ராணன்‌, வாக்கு, கண்‌, காது, மனம்‌, தோல்‌, விஜ்ஞானம்‌, ரேதஸ்‌ இவற்‌றிற்கும்‌ அத்தர்யாமியாவான்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ள . 
அன்றியும்‌ இந்த அந்தர்யாமி காண்பவன்‌, கேட்பவன்‌ என்பதும்‌, அன்றியும்‌ இவனைக்‌ காட்டிலும்‌ காண்பவன்‌ 
கேட்பவன்‌ வேறு எவனுமிலன்‌ என்றும்‌ விளக்கப்‌ பெற்றுள்ளது. அந்தர்யாமி என்று கூறிய பிறகு, 
இந்தரியங்களால்‌ வரும்‌ அறிவுடையவனாகக்‌ கூறுவதால்‌ இவன்‌ ஜீவன்‌ என்பதே தகும்‌. இது ஒரு கருத்து. 

தீர்வு : இங்கு விவரிக்கப்பெறும்‌ பண்புகள்‌ யாவும்‌ பரம்பொருளான நாராயணனுக்கே ஏற்றவை. 
**ஏஷ ஸர்வ பூதாத்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண;, அந்தர்பஹிச்ச தத்‌ ஸர்வம்‌ வயாப்ய 
நாராயணஸ்‌ ஸ்தித::” என்பன இதற்கு ஆதாரமாவன. 
காண்பவன்‌, கேட்பவன்‌ என்பன பற்றி, “இவன்‌ கண்‌ இல்லாமலே காண்கிறான்‌, காதில்லாமலே கேட்கிறான்‌”? 
என்று உபதிஷத்‌ இவனையே கூறுகிறது: “இவனைத்‌ தவிரக்‌ காண்பவன்‌ வேறிலன்‌'' என்றதும்‌ இவனைப்‌ பற்றியே. 

மேலும்‌ இப்பகுதியில்‌ பகவானைப்‌ பற்றி இயற்கையாகவே மரணமில்லாதவன்‌, யாவற்றுக்கும்‌ ஆத்மா, 
யாவற்றையும்‌ நியமிப்பவன்‌ என்று அந்தர்யாமியாகச்‌ சொல்லப்படுகிறது. இந்தப்‌ பண்புகள்‌ ஜீவர்களுக்கும்‌ பொருத்த மாட்டா. 

அன்றியும்‌, “எவன்‌ ஆத்மாவில்‌ நிற்கிறானோ, எவனை ஆத்மா அறியாதோ, எவனுக்கு ஆத்மா சரீரமோ அவனே ஆத்மா, அந்தர்யாமி” 
என்று காட்டப்‌  பெறுவதால்‌, நாராயணனே எல்லா பூதங்களுக்கும்‌  அந்தர்யாமி என்பது தெற்றென விளங்குகிறது. 

2-5. காணப்படாதவன்‌ 

முன்பு கூறியது, யாவும்‌ காண்பவனான அந்தர்யாமி  பரமாத்மா என்று. 
இங்குக்‌ காணப்படாததாகச்‌ சொல்லப்படும்‌ தத்வம்‌ ஒன்றை முண்டகோபதிஷத்‌ வெளியிட்டதைப்‌ பற்றி ஆராயப்படுகின்றது. 
பூதயோனி யான அக்ஷரத்திற்குப்‌ பண்புகள்‌: காணப்படாமை அறியப்படாமை, கோத்ரமின்மை, வர்ணமில்லாமை, 
கண்‌ காது கை கால்கள்‌ இல்லாமை, எங்கும்‌ வியாபித்‌து இருப்பது, தலைமை பெற்றது, அழிவின்மை, 
நுண்ணிய தாக இருப்பது, பூதங்களுக்குக்‌ காரணமாயிருப்பது.” 

அடுத்து: வரும்‌ கருத்து: மேலான அக்ஷரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பது. முதலில்‌ அக்ஷரம்‌: 
என்று சொல்லி, அக்ஷரத்திற்கு மேம்பட்டது என வந்துள்ளது. 

இவ்வாறான தத்வங்கள்‌ ப்ரகருதியும்‌ புருஷனுமாக வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
(பூதயோநி அக்ஷரம்‌--தங்களுக்குக்‌ காரணமாய்‌ அழிவில்லாதது). 

மறுப்பு: இதே உபநிஷத்தில்‌ குறிப்பிடப்படுவது* 
யஸ்‌ ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌''--எவன்‌ எல்லாப்‌ பொருள்‌களின்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவானோ. 
இதை ஆராய்ந்தால்‌ மேலே கூறியுள்ளது மூலப்ரக்ருதியாக முடியாது. 
“அக்ஷராத்‌ பரத: பர: மூலப்ரக்குதி' அழியாதது; இதைக் காட்டிலும்‌ மேலானது பரமாத்மாவுக்கே ஓக்கும்‌. 
“ததாகஷராத்‌ ஸம்பவதீஹ விச்வம்‌'”  இந்த அக்ஷரத்திலிருந்து சேதன அசேதனங்கள்‌ உண்டாகின்றன என்பதாலும்‌ இது மூலப்ரக்ருதி ஆகாது; 
பரமாத்மாவே யாகவேண்டும்‌. 

மேலும்‌ இந்த உபநிஷத்தில்‌ வெளியிட்டிருப்பது* 
இவனுக்கு அக்நி எனப்பெறும்‌ த்யுலோகம்‌ தலை, சூர்யர்‌கள்‌ கண்கள்‌, இசைகள்‌ காதுகள்‌, வேதங்கள்‌ மூச்சு, 
வாயு ப்ராணன்‌, உலகங்கள்‌ இதயம்‌, பூமி கால்கள்‌? 
இவன்‌ எல்லஈ. பூதங்களிலும்‌ அந்தராத்மாவாக இருப்‌பவன்‌: இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்கே ஏற்றவை. 
ஆதலால்‌ காணப்படாமை போன்ற பண்பு களால்‌ ஒதுவது பூதயோநி  எனப்பெறும்‌ பரமாத்‌ மாவையே 

2. 8... வைச்வாநரன்‌' 
முன்பு விளக்கியவாறு மூவுலகங்களும்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ மேன்மை பசுவானுக்கே, 
வேறு எதற்குமில்லை என்பது இங்கு நிருபிக்கப்படுகிறது. 
வைச்வாநர உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறுமிடத்தில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி வரும்‌ விவரம்‌: 
எங்குமிருப்பவன்‌,,  எல்லா லோகங்களிலுமுள்ள எல்லா ஆத்மாக்களிலும்‌. அன்னத்தை உண்பவன்‌ என்று, 
வைச்வாநரன்‌ என்ற சொல்‌ ஜாடராக்நியாகவும்‌, பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான அக்நியாகவும்‌, 
ஒரு தேவதையாகவும்‌, பரமாத்மாவாகவும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பரமாத்மாவே என்று தீர்மானிக்க இயவாது. (இது ஒரு கருத்து.) 

“மறுப்பு: இந்தப்‌ பகுதியில்‌ முதலில்‌ சொல்லப்‌ படுவது: ப்ரஹ்மம்‌ என்ற தத்வம்‌ யாவர்க்கும்‌ ஆத்மா' என்று. 
பின்பு இதனையே வைச்வாநரம்‌ என்றே காட்டி யுள்ளது. பல இடங்களிலும்‌ இவ்வாறே கூறப்படுகிறது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பகவானையே. 
அன்‌றியும்‌ மூதலிலே காட்டியுள்ள பகுதியில்‌ வரும்‌ விவரங்கள்‌ யாவும்‌ பகவானைப்‌ பற்றியே வேறோர்‌ உபநிஷத்தில்‌ 
வந்துள்ளன. 

சங்கை: வைச்வாநரம்‌ என்பது கார்ஷஹ்பத்யம்‌ முதலான மூவகை அக்நிகளாகச்‌ சொல்லப்படுகிறது.. 
அன்றியும்‌ முதலில்‌ செய்யும்‌ ஆஹுதி *ப்ராணாய ஸ்வாஹா”” என்பது ஜாடராக்நியைப்‌ பற்றியே. 
ஜாட ராக்நி புருஷசரீரத்தில்‌ இருப்பது. ஆதலால்‌ இது. பர மாத்மா என்று தீர்மானிப்பதற்கில்லை. 
விளக்கம்‌ : இப்பகுதியில்‌ உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறி இருப்பது: 
இது ஜாடராக்நியைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பரமாத்மாவை என்பது. வைச்வாநராத்மா” புருஷன்‌ என்றும்‌, 
இவனே **ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:”: என்று சொல்லப்படுபவன்‌ என்றும்‌, 
புருஷ சப்தம்‌ இயல்‌பாக வாஸுதேவனிடமே நிலைநிற்பதெதன்றும்‌ வந்துள்‌ளது. 
ஆதலால்‌ இங்குக்‌ குறிப்பது ஜாடராக்நியைச்‌ சரீரமாகவுள்ள பரம புருஷனையே. 

தேர்வு 1: முதலில்‌ குறிப்பிட்டுள்ள விவரங்கள்‌ மூன்றாவது பூதமான அக்நிக்கு ஒவ்வா. 
ஆதலால்‌ வைச்வாநரன்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: இப்பகுதியில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி இவன்‌ த்யுலோகம்‌ முதல்‌ பூமி வரையில்‌ (பூமியிலும்‌) 
எல்லாப்‌ பொருள்களிலும்‌, ஜீவர்களது அவயவங்களிலும்‌ உறைவதாக வேதத்தில்‌ வந்துள்ளது. 
இவ்வாறு விவரம்‌ பெற்றுள்ளவன்‌ பரம புருஷனே. 

தேர்வு 3: அக்நி;, வைச்வாநர: என்ற சொற்களின்‌ பொருள்‌: அக்ரம்‌ நயதீத்யக்நி: உயர்நிலைக்கு அழைத்து 
செல்பவன்‌ அக்நி. “*விச்வேஷாம்‌ நராணாம்‌ நேதா வைச்வாதர:--நரர்கள்‌ யாவரையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ வைச்வாதரன்‌. 
இவை நாராயணனையே குறிப்பன. 

*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம” என்று யாவும்‌ ப்ரஹ்மமே. சராசரங்களை உண்பவனாகக்‌ கூறப்பட்டவனும்‌, 
கண்ணில்‌ நிற்பவன்‌ என்பவனும்‌, அந்தர்யாமி யாகக்‌ கூறப்பட்டவனும்‌, அக்ஷரம்‌ என்ற மூலப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பவனும்‌ 
வைச்வாநர: என்பவனும்‌ பரமாத்மாவே.  
-----------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

பகவானுக்கு சேதனங்கள்‌, அசேதனங்கள்‌ விட விலக்ஷணன்  என்று நிறுவும்போது 
முதல்‌ பாதத்தில்‌ தெளி வின்மையே 'மிக்குள்ள வேத வாக்கியங்களை வ்யாசர்‌ ஆராய்ந்தார்‌; 
இரண்டாம்‌ பாதத்தில்‌ தெளிவின்மை யுள்ள வாக்கியங்களை ஆராய்ந்தார்‌. 
இந்த அடையாளங்கள்‌ தெளிவாக உள்ள இடங்கள்‌ இப்பாதத்தில்‌ ஆய்வுக்குப்‌ பயன்படுகின்றன. 

3.1. தேவலோகம்‌, பூமி யாருக்குச்‌ சரீரம்‌? 

தேவலோகம்‌, பூமி இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்‌ளும்‌ வைச்வாநரன்‌ பரமாத்மா என்று விளக்கப்பட்டது. 
தேவலோகம்‌ சரீரமாகக்‌ கொள்பவன்‌ யார்‌ என்று இப்போது ஆய்வு. 

முண்டக உபநிஷத்தில்‌, எவனிடம்‌ தேவலோகம்‌,பூமி, அந்தரிஷம்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ சேர்ந்துள்ளனவோ, 
அந்த ஆத்மா ஒருவனையே ஆதரிப்பீர்‌ என்று வந்துள்ளது. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனுடன்‌ இணைந்துள்ளன; பலவிதமாகப்‌ பிறக்கும்‌ இவன்‌ சரீரத்‌தினுள்‌ திரிகிறான்‌. 
தேரின்‌ நாபியிலுள்ள ஆரங்கள்‌ போல்‌ இவனிடம்‌ நாடிகள்‌ சேர்ந்துள்ளன என்று மேலும்‌ விவரம்‌ காண்கிறோம்‌. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனிடம்‌ சேர்ந்திருப்பதாகவும்‌ கூறப்படுகிறது. 
இவை யாவும்‌ ஜீவனுக்கே பொருந்துவன என்பது ஒரு கருத்து. 

மறுப்பு : இப்பகுதியில்‌ இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. இவனைப்‌ பற்றி மேலும்‌ கூறுவது. : 
இவன்‌ மோக்ஷத்திற்கு ஸாதனம்‌. இவனை அறிபவனே முக்தனாகிறான்‌, மோக்ஷத்திற்கு வேறு வழி யில்லை. 
மேலும்‌ நாராயண வல்லியில்‌, “தாமரை மலர்‌ போன்ற இதயத்தின்‌ நடுவில்‌ நுட்பமான துவாரம்‌ ஒன்றுள்ளது; 
இதில்‌ நாராயணன்‌ இருச்கிறான்‌ என்று வர்ணிக்கப்படுகிறது. கீதையிலும்‌, “*பிறப்பில்லாத பரம 
புருஷன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌'' என வந்துள்ளது. 
நம்‌ மனம்‌ முதலியவற்றிற்கு தாராயணனே ஆதாரம்‌: என்றறிகிறோம்‌. ஆதலால்‌ தேவலோகம்‌ முதலான  வற்றிற்கு ஆதாரமானவன்‌ பசுவானே. 

தேர்வு 1: ஆகாசம்‌, பூமி இவை இருப்பிடமாக உடையவன்‌, பொன்‌ நிறமானவன்‌, உலகைப்‌ படைப்பவன்‌, நியமிப்பவன்‌; 
உலகுக்குக்‌ காரணமானவன்‌.இதனால் தேறுவது: பகவானே எங்கும்‌ இருப்பிடமாக , பகவான்‌ உடையவன்‌ என்பது. 

தேர்வு 2: முண்டகோபநிஷத்தில்‌, ஜீவனும்‌ பகவானுமான இரண்டு பறவைகள்‌ இணைந்து ஒரே மரத்‌தில்‌ அமர்ந்துள்ளன;
ஒன்று கர்மமாகிய இனிய பழத்தைக்‌ தின்கின்றது, மற்றது இதைத்‌ தின்னாமல்‌ சிறப்புடன்‌ விளங்குகிறது என்றுள்ளது. 
கர்ம பலன்‌ இல்லாதவனும்‌, ஸா்வஜ்ஞனும்‌, மோக்ஷத்திற்கு உபாயமானவனும்‌ 
ஆகாசம்‌, பூமி போன்றவற்றை இருப்பிடமாக உடையவன்‌ பசுவானே என்பது தேறுகின்றது. 

-பூமா 
“பூமா” பெருமை உடையது என்ற தத்வத்தை அறிய நாரதர்‌ ஸநத்குமாரரிடம்‌ சென்றார்‌. ஸநத்குமாரர்‌ 

மூதலில்‌ நாமம்‌ பெரியது என்றார்‌. இதனிலும்‌ பெரியது வாக்கு என்றார்‌. இவ்வாறு படிப்படியாக உபதேதசித்து 
ஜீவன்தான்‌ ப்ரஹ்மம்‌ என்று உபதேசித்தார்‌. ப்ராணனோடு சேர்ந்திருப்பதாலே ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே ப்ரஹ்மம்‌ என்றார்‌. 
இதற்கு மேல்‌ பல. கண்டங்‌கள்‌ வரையில்‌ இது பற்றி யாதும்‌ சொன்னதாகக்‌ கூற வில்லை. 
ஆதலால்‌ பூமா என்பது ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே, இது ஒரு கருத்து. 

மறுப்பு: இதே பகுதியில்‌ ஒரு கண்டத்திற்குப்‌ பின்‌, *ஸத்யம்‌ என்ற ப்ரஹ்ம வித்யையில்‌ ஸத்யம்‌ என்பது 
பூமா” என்று விளக்கம்‌ பெற்றுள்ளது. ஸத்யம்‌ என்பது பகவான்‌; இதுவே, சுகமாகும்‌, மிகச்‌ சிறந்ததாகும்‌ என்று புகழ்‌ பெற்றுள்ளது. 
ப்ராணனைப்‌ பற்றிய பேச்சு இந்த பிரகரணத்தில் இல்லை; முன்னமே முடிந்து விட்டது. 

ஒரு ஸூத்ரத்தில்‌ பூமா என்பது ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலானது என வந்துள்ளது. 
அன்றியும்‌, “ஆத்மா வினிடமிருந்து ப்ராணன்‌ உண்டாகின்றது” என்று தொடங்கி, ஸர்வ காரணமாக இருப்பது பூமா என்பதாலே என்று முடிகின்றது. 
இவ்விதம்‌ விவரித்தனயாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. ஆதலால்‌ பூமா  என்றது பரமாத்மாவையே. 
ஆகாசம்‌ அக்ஷ்ரத்தை ௮ண்டியிருக்கிறது என்றார்‌ யாஜ்ஞவல்கீயர்‌. 
அக்ஷரம்‌ என்பது பருமனல்லாதது, அணுவல்லாதது, சிவப்பில்லாதது, பசையில்லாதது, நிழலற்றது என்று விவரிக்கப்படுகிறது. 
இங்கு ஆகாசத்‌திற்கு ஆதாரமாக இருப்பது மூலப்ரக்ருதி என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஆகாசம்‌ பற்றிய விளக்கம்‌ ஒன்று. தேவலோகத்திற்கு மேலும்‌, பூமிக்குக்‌ சீழும்‌, இடையிலுள்ள உலகங்களிலும்‌ உள்ள 
பொருள்கள்‌ யாவும்‌ ஆகாசத்தையே அண்டி உள்ளன. இதனால்‌ ஆகாசம்‌ என்பது அம்பரம்‌ எனப்படுவதற்கும்‌ காரணமான 
மூலப்ரக்ருதியேயாகும்‌, இதற்கு ஆதாரமாவது பரமாத்‌மாவே. ஆதலால்‌ அக்ஷரம்‌ என்பது பரமாத்மாவையே. சங்கை : 
**யஸ்ய அக்ஷரம்‌ சரீரம்‌''! மூதலான வாக்‌ கியங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே அக்ஷர சப்தம்‌ உள்ளது. ஆதலால்‌ ஜீவன்‌ அக்ஷரமாகக்‌ கூடும்‌. 
விளக்கம்‌: இந்த அஷரத்தின்‌ மேலான நியமனத்‌தாலே சூர்ய சந்திரர்‌ தரித்து திற்கிள்றனர்‌ என்பதுவும்‌ நாம்‌ அறிவோம்‌. 
இவ்வாறு நியமிப்பது ஜீவனுக்குப்‌ பொருந்தாது; பரமாத்மாவுக்கே உரியது. 

தேர்வு : அக்ஷரத்தைப்‌ பற்றி விளக்கப்பட்டுள்ளது 
வேறொன்றால்‌ காணப்படாதது, யாவற்றையும்‌ காண்‌பது; வேறொன்றால்‌ கேட்கப்படாதது, யாவற்றையும்‌ கேட்பது என்று 
காண முடியாததும்‌ கேட்க முடியாததுமான ௮சேதனம்‌ அக்ஷரமாவதற்‌ கில்லை. 
ஜீவன்‌ காண் முடியாதவன்‌, பரமாத்மாவால்‌ எப்போதும்‌ காணப்படுபவன்‌. ஆதலால்‌ இவனும்‌ அக்ஷரமாக முடியாது. 
ஆதலால்‌ தனது நியமனத்தாலேயே யாவற்றையும்‌ தரிக்கும்‌ பரம புருஷனே அக்ஷர புருஷன்‌ என்பது நிச்சயம்‌. 

3. 4, காணப்படுபவன்‌ ;: மூன்று மாத்திரையோடு: ப்ரணவத்தை உபாஸிப்பவன்‌ அந்தரிக்ஷத்திற்கும்‌ 
மேலான ப்ரஹ்மலோகம்‌ அடைகிறான்‌ என்று ப்ரச்‌நோ பநிஷத்தில்‌ உள்ளது. 
இவன்‌ தேஹ இந்த்ரியங்‌கனைக்‌ காட்டிலும்‌ மேலான ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலான ஹ்ருதய வாஸியான புருஷனை அடைகிறான்‌ 
என்பதும்‌ காண்கிறோம்‌. ப்ரஹ்ம லோகம்‌ என்பது சதுர்முகனுடைய உலகம்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இதே ,பகுதியில்‌ வந்துள்ளது; ஹ்ருதய வாஸி புருஷன்‌ ஸம்ஸாரி ஜீவார்களைக்‌ காட்டிலும்‌ 
மேலான நித்ய முக்தரைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்று குறித்துள்ளது, 
அன்றியும்‌ பசி, தாகம்‌ முதலான இல்லாதது; ஜரா மரண மில்லாதது, யாவரிலும்‌ மேம்‌ பட்டது என்றும்‌ காண்கிறோம்‌. 
இவ் விவரம்‌ கர்மத்‌திற்கு வசப்பட்ட சதுர்முகனுக்குப்‌ பொருந்தாது? பரமாத்மாவுக்கே பொருந்தும்‌. 
ப்ரஹ்மலோகம்‌ என்பது ப்ரஹ்மத்தின்‌ லோகம்‌, பரம பதம்‌; ப்ரஹ்மாவின்‌ லோகமன்று, 
**தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று பாராட்டப்பட்டது. அந்தரிஷத்திற்கு மேற்பட்ட லோகம்‌ நான்முகனின்‌ லோகம்‌ என்பதும்‌ சரியன்று, 
ஆதலால்‌ காணப்படுவது ஸாவேச்வரனாகிய ஸ்ரீமந்‌ நாராயணனே. 

3. 5. தஹராகாசம்‌ 

ஓர்‌ உபநிஷத்தில்‌ ஒரு வாக்கியம்‌, இதயத்தில்‌ வஸிப்பவன்‌ ஆகாசம்‌ என்கிறது. 
பரமன்‌ உறையுமிடமான உடலில்‌ தாமரை போன்ற சிறிய இடம்‌ உள்ளது; இது ப்ரஹ்மத்தின்‌ இருப்பிடம்‌, 
இதனுள்‌ நுண்ணிய நிலையில்‌ ஆகாசம்‌ இருக்கிறது; இதற்குள்‌ இருப்பது தேடத்தக்கது, அறியத்‌ தக்கது என்றும்‌, 
இது தஹராகாசம்‌ என்றும்‌ குறித்துள்ளது. இது பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான ஆகாசம்‌ என்பது ஒரு கருத்து. 

மறுப்பு: மேல்‌ வாக்கியத்தில்‌ வந்துள்ள கருத்து; 
இதயத்தில்‌ வஸிப்பவன்‌ எங்கும்‌ வியாபித்திருப்பவன்‌, பாவ மற்றவன்‌, மூப்பு மரண மில்லாதவன்‌, சோக மற்றவன்‌, 
பசி தாக மில்லாதவன்‌, தடைபடாத விருப்பமும்‌ ஸங்கல்பமும்‌ வாய்ந்தவன்‌ என்பது. ஆதலால்‌ தஹரா காசம்‌ பரமாத்மாவே. 
தஹராகாசத்தினுள்‌ இருப்பதை உபாஸிக்கும்போது இங்கு விவரிக்கப்படும்‌ கல்யாண குணங்களை உபாஸிக்க வேண்டும்‌ என்றும்‌ வந்துள்ளது. 
அன்றியும்‌ பூதாகாசம்‌ போல்‌ இதயத்திலுள்ள ஆகாசம்‌ பெரியது என்றும்‌ விளங்குகிறது. 
ஆதலால்‌ தஹராகாசம்‌ பூதாகாசத்தைக்‌ காட்டிலும்‌ மாறுபட்ட பரமாத்மாவே, 

தேர்வு 1 :: சேதனர்‌ தூங்குகின்ற போது தஹராகாசத்தை அடைகின்றனர்‌. இது ப்ரஹ்ம லோகம்‌ என்பது 
வேதத்தில்‌ ஒரு கருத்து. ப்ரஹ்ம லோகம்‌ அறியப்படும்‌ - ப்ரஹ்மத்தைச்‌ சொல்லும்‌. '*'லோக்யதே இதி லோக: 
அறியப்படுவதால்‌ லோகம்‌ எனப்பெறும்‌. ப்ரஹ்மம்‌ என்று வழங்குவது ஸதி என்று பரமாத்மாவையே, 
சேதனர்‌ தூங்கும் போது அடைவது பூதாகாசத்தை யன்று. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: தஹராகாசம்‌ பற்றி உபநிஷத்‌ வெனி யிடுவது: இவ்வாத்மா உலகங்கள்‌ ஒன்றோடொன்று 
கலவாமல்‌ அணையைப்‌ போலே பிரித்து தரித்து நிற்கிறான்‌; இவனே ஸர்வேச்வரன்‌: இவனே ஜீவரா்களுக்கு அதிபதி; 
ஜீவராசிகளைக்‌ காப்பாற்றுவோன்‌ என்று. இக்‌ காரணத்தாலும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே தஹராகாசம்‌ என்று நிச்சயிக்கலாம்‌. 

தேர்வு 3: சாந்தோக்யத்தில்‌ ஒருவாக்கியம்‌ (7-9-1)பூதங்கள்‌ எல்லாம்‌ ஆகாசம்‌ என்ற பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றன என்பது. 
பரமாத்மாவைப்‌ பற்றி ஆகாசம்‌ என்ற சொல்‌ பயன்படுகிறது. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

ஒரு சங்கை: தஹராகாசம்‌ சிறியதாக இருப்பதால்‌ அணுவான ஜீவன் தான்‌ இதில்‌ பொருந்தக்‌ கூடும்‌. விபுவான பரமாத்மா இதில்‌ இருக்க இயலாது. 

விளக்கம்‌ : முக்தனான ஜீவாத்மா பரமாத்மாவோடு  ஸாம்யம்‌ பெறுகிறான்‌; இது அநுகாரம்‌. இதனாலேயே 
மூக்தி தசையில்‌ பகவானுக்குள்ள குணங்கள்‌ இவனும்‌ பெறுகிறான்‌. தஹராகாசம்‌ அநுகாரத்தால்‌ இந்த 
குணங்கள்‌ படைக்கவில்லை; இயற்கையாகவே பெற்றுள்‌ளது. ஆதலால்‌ அநுகரிக்கும்‌ ஜீவனில்‌ வேறுபட்டது;
௮னுகரிக்கப்படுவதான தஹராகாசம்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

தேர்வு 4: கீதையிலும்‌, “பரமாத்மாவை ௨பாஸிப்‌பதால்‌ ஜீவன்‌ பரமாத்மாவை: அனுகரிக்கிறான்‌'' என்‌றுள்ளது (1484-2), 
ஆதலால்‌ தெற்றென விளங்குவது; அனுகரிக்கப்படும்‌ தஹராகாசம்‌ அனுகரிக்கும்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறான பரமாத்மாவே என்பது,
 
3. 6, ப்ரமிதன்‌. 

ப்ரமித: கட்டைவிரலளவுள்ளவன்‌. அங்குஷ்டம்‌-- கட்டைவிரல்‌. கட்டைவிரல்‌ அளவுள்ள புருஷன்‌ என்று தொடங்கும்‌ ரிக்குக்களில்‌ கூறியுள்ளது: 
அங்குஷ்ட மாத்‌ரம்‌ அளவுள்ள ஜீவன்‌ ப்ராணனை நியமிப்பவன்‌, தனது கர்மங்களால்‌ கட்டுண்டவன்‌; கட்டை விரல்‌ அளவுள்ளவன்‌ சஞ்சரிக்கிறான்‌ என்று. 
இங்குக்‌ குறிப்பது ஜீவனே என்பது ஒரு கருத்து, இவை யாவும்‌ ஜீவனுக்குப்‌. பொருந்துவன. 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ இந்தப்‌ புருஷன்‌ 'முக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ புருஷர்களுக்குங்‌ காரணம்‌ என்று 
சொல்லப்படுகிறது. ஆதலால்‌ அங்குஷ்ட மாத்ரன்‌ பரமாத்மாவே. 

சங்கை : அளவே காண முடியாத பரமாத்மா எப்‌படிக்‌ கட்டைவிரல்‌ அளவுள்ளவனாகக்‌ கூடும்‌?' 

விளக்கம்‌ : உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்காக  பரமாத்மா இவர்களது இதயத்தில்‌ கட்டைவிரல்‌ அள  விற்கு அமைந்திருக்கிறான்‌. 

சங்கை: குதிரை முதலானவற்றிற்குக்‌ கட்டை விரலே இல்லையே; இவற்றின்‌ இதயத்தில்‌ கட்டை வீரல்‌ 
அளவுக்கு இவன்‌ உறைகிறான்‌ என்பது எப்படிப்‌ பொருந்தும்‌? 

விளக்கம்‌ : மனிதர்கள்‌ உபாஸிப்பதற்காகக்‌ கூறுவதாலே கட்டைவிரல்‌ அளவு என்று குறிப்பிட்டுள்ளது. 

அங்குஷ்ட மாத்ரனைப்‌ பற்றி மேலும்‌ சில விவரங்கள்‌: 
'இவனிடம்‌ யாவரும்‌ நடுங்குகின்றனர்‌. இவனிடம்‌ பயத்‌தால்‌ அக்நி சுடுகிறது; ஸூர்யன்‌ காய்கிறான் இந்தரன்‌, 
வாயு, யமன்‌ தங்கள்‌ தங்கள்‌ செயல்களைச்‌ செய்‌கின்றனர்‌. இத்தகைய இயல்புடையவன்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

மேலும்‌ இந்தப்‌ புருஷனின்‌ ஒளியாலே எல்லா ஒளிகளும்‌ விளங்குகின்றன என்றும்‌ கூறுவதால்‌, இத்தகைய 
மேன்மை யுடையவன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே என்பது தெளிவு. 

3. 7. ஆகாசம்‌ பரமாத்மாவே. 

சாந்தோக்யதக்தில்‌ தஹர வித்யையில்‌ கடைசியில்‌ வரூ வது: நாம ரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே. இவை! 
இல்லாமலிருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும்‌.. அம்ருதமாகவும்‌, ஆத்மாவாகவும்‌ இருப்பது. 
ஆகாச மெனப்படுபவன்‌ முக்தி யடைந்த ஜீவன்‌ என்பது ஒரு, கருத்து. 

ஆதரவான விளக்கம்‌ : முக்த ஜீவன்‌ உலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, குதிரை தனது உடலிலுள்ளஉரோமங்களை உதிர்ப்பது போல்‌, 
சந்திரன்‌ ராகுவின்‌ வாயிலிருந்து விடுதலை பெறுவதுபோல்‌ என்று சாந்‌தோக்யம்‌ வரைகன்றது. 
இந்த விவரங்கள்‌ முக்த ஜீவ னுக்கு நன்கு பொருந்துவன. நாம ரூபம்‌ வஹிப்பது: என்பது இவனுக்கே பொருந்தும்‌. 

மறுப்பு : ஜீவன்‌ நாம ரூபம்‌ பெறுவது தனது கர்மத்‌தாலே, நாம ரூபங்களை நிர்வஹிப்பவனுக்கு நாமரூபங்‌- 
கள்‌ இல்லை என்பதால்‌, இவன்‌ ஜீவனினும்‌ சதாம்‌ பரமாத்மாவே, 

இதற்கு முன்னமேயே தஹராகாசமான பரமாத்‌மாவைப்‌ பற்றிக்‌ கூறியிருக்கிறது. 
இதனை உபா ஸிப்பவனது ஸ்வரூபம்‌ இங்குச்‌ சொல்லப்படுகிறது. நாம ரூப நிர்வாஹம்‌ புருஷனுக்குப்‌ பொருந்தாது. 
ஆதலால்‌ புருஷ ஸக்தம்‌ போன்றவற்றில்‌ நாம ரூப திர்வஹகனாகக்‌ கூறப்படும்‌ நாராயணனே இவ்விடத்தில்‌ சொல்‌லும்‌ ஆகாசம்‌ என்பது தெள்ளத்‌ தெளிவு. 

ஒரு சங்கை : **தத்வமஸி'', “அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி”” போன்ற வாக்கியங்களில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மத்தினின்றும்‌ 
வேறுபடாதவன்‌ என்று காட்டியுள்ளது. ஆதலால்‌ முக்தி நிலையிலுள்ள ஜீவனே பரமாத்மா என்று தேறுகின்றது . 
இதனாலும்‌ ஆகாசம்‌ என்பது ஜீவன்‌ என்று கருதுவதே.  ஏற்றது. 

விளக்கம்‌ : தூங்கும்போது ஜீவனைப்‌ பேரறிவாளனான பரமாத்மா அணைத்துக் கொள்வதால்‌ ஜீவன்‌ எதையும்‌ அறிவதில்லை. 
இதேபோல்‌ மரணத்தின்போது பரமாத்மாவோடு ஒரு வகைச்‌ சேர்த்தி ஏற்படுகிறது, 
பரமாத்மாவால்‌ அணைக்கப்பட்டு ஜீவன்‌ சரீரத்தை விடுகின்றான்‌ என்பது வேதத்தில்‌ வருவது. 
தன்னைத்‌ தானே தழுவிக்கொள்வதும்‌, தன்னோடே தான்‌ சேர்த்தி பெறுவதும்‌ நிகழமாட்டா. 
தூக்க நிலையிலும்‌ மரண நிலையிலும்‌.ஜீவன்‌ பரமாத்மாவைவிட வேறு. 
ஆதலால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ பரம புருஷன்‌ வேறு என்பது தேறுகின்றது. 
ஆதலால்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌. வேறுபட்ட பரமாத்மாவே. 

மேலும்‌ “ஸர்வஸ்ய: அதிப்தி:””, “ஸர்வஸ்ய *வ€*”) “ஸர்வஸ்ய ஈசாந:'” என்று இவ்விடத்தில்‌ வருவதால்‌ 
இவன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது தெளிவு. ஆதலால்‌ இப்பகுதியில்‌ கூறப்படுவது பர்மாத்‌மாவே. 

3, 8, ப்ரஹ்மாதிகளின் உபாஸனம் நிலை  

'ஒரு கருத்து; தேவர்களுக்குச்‌ சரீரம்‌ இருப்பதாக ப்ரமாணம்‌ எதுவுமில்லை. தேஹ மிருந்தால்கான்‌ உபாஸநம்‌ செய்ய இயலும்‌. 
சரீரத்தின்‌ தொடர்பால்‌ நிகழும்‌ இன்ப துன்பங்கள்‌ இவர்களுக்கு நேரமாட்டா. ஆதலால்‌ இவற்றிலிருந்து விடுதலை. பெற விருப்ப்மும்‌ இராது. 
ஆதலால்‌ இவார்கள்‌ உபாஸநம்‌ செய்வதில்லை. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டு, எவ்வாறெனில்‌: பகவான்‌ யாவர்க்கும்‌ நாம சூபங்கள்‌ அளிப்பதாக ஸங்கல்பித்தான்‌. 
தேஹ இந்தரியங்களைச்‌ செய்‌வதே நாம ரூபம்‌ என்பது. அன்றியும்‌ இந்திரன்‌, விரோசனன்‌ இவர்கள்‌ தங்கள்‌ கையில்‌ ஸமித்தை ஏற்றுக்‌ 
கொண்டே சதுர்முகனை அடைந்தனர்‌ என்பது ஒரு வரலாற்றில்‌ காண்கிறோம்‌. 
ஆதலால்‌ தேவர்களுக்கு அதிகாரம்‌ உண்டு, உபாஸநம்‌ செய்யத்‌ தகுதியும்‌ உண்டு. 

ஒரு சங்கை : யாகம்‌ செய்யும்போது தேவர்களை ஹவிஸ்‌ ஏற்பதற்காக அழைக்கிறோம்‌. யாகம்‌ பல இடங்களில்‌ நிகழலாம்‌. 
அப்போது ஒரே சரீரத்துடன்‌ எவ்‌வாறு சொல்லமுடியும்‌? ஆதலால்‌ சரீரம்‌ இல்லை என்பதே ஏற்கத்‌ தக்க கருத்து. 

விளக்கம்‌ : ஸெளபரி முனிவர்‌ ஒரே காலத்தில்‌ பல சரீரங்களோடு இன்பம்‌ துய்த்தார்‌. 
இதுபோல்‌  தேவர்‌களும்‌ பல சரீரங்கள்‌ ஏற்கக்‌ கூடியவர்களே. 

வேறொரு சங்கை : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டெனில்‌ உற்பத்தி விநாசங்கள்‌ உள்ளன. 
விநாசம்‌ ஏற்படும்‌ போது இவர்களது பேர்களும்‌ மறைந்துபோம்‌. இப் பேர்‌கள்‌ இந்த்ரன்‌, வருணன்‌ போன்றவை வேதங்களில்‌ வருவன. 
ஆதலால்‌ வேத சப்தங்களும்‌ நிலைநிற்க மாட்டா--ஆதலால்‌ இவ்வாறு ஆராய்ந்தால்‌ இவர்களுக்குச்‌ சரீரம்‌ இல்லை என்றுதான்‌ ஊகிக்கவேண்டும்‌. 

விளக்கம்‌: “*'வேதேத ரூபே வ்யாசுரோத்‌ ப்ரஹ்மா”” வேதத்தைக்‌ கொண்டே நான்முகன்‌ படைத்தான்‌ என்‌பது வேத்‌ வாக்கியம்‌. 
“ஸூர்ய சந்த்ரமளெள தாதா யதா பூர்வ மகல்பயத்‌'' என்பது தைத்திரீய வாக்‌யம்‌.. 
படைப்பின்போது நான்முகன்‌ பூர்வ கல்பத்தில்‌ இருந்தவாறே வேதத்தின்‌ மூலமாகப்‌ படைக்கின்றான்‌, 
வேத சப்தங்களைக்‌. கொண்டே தனித்தனியாகவும்‌ படைக்‌கின்றான்‌. 
ஆதலால்‌ இந்த்ரன்‌, வாயு, அக்நி போன்ற பூதங்கள்‌ எப்போது முள்ளவையே. 

வேறொரு சங்கை: மது வித்யை போல்வன வற்றில்‌ வஸூக்கள்‌, ஆதித்யர்‌ போன்ற தேவர்களை உபாஸனம்‌. 
செய்து வஸு பதவி, ஆதித்ய பதவி பெறக்கூடும்‌ என்று கூறியிருக்கறது. 
ஏற்கனவே இப்பதவியிலுள்ள தேவர்‌கள்‌ உபாஸநம்‌ எவ்வாறு செய்யக்‌ கூடும்‌? 

விளக்கம்‌ : இத்தகைய தேவர்கள்‌ பரமாத்மாவைப்‌ பெறுவதற்கு உபாஸநம்‌ செய்யலாம்‌. 
அன்றியும்‌ இந்தப்‌ பதம்‌ எப்போதும்‌ நிலைப்பதற்காகவும்‌ உபாஸநம்‌ செய்யக்‌ கூடும்‌. 
ஆதலால்‌ தேவர்கள்‌ நம்மைப்‌ போல்‌ இறைஞ்சித்‌ தமது பதம்‌ நிலைக்கப்‌ பெறுகின்றனர்‌; பகவானையும்‌ பெறுகின்றனர்‌. 

தெளிவான வேத வாக்கியங்களைக்‌ 'கொண்டு பகவான்‌ எங்கும்‌ உறைபவன்‌ என்று விவரிக்கப்படுகின்றது. 
த்யுலோகம்‌, பூமி போல்வனவற்றிற்கு இருப்‌பிடம்‌ பகவான்‌. பூமா எனப்படுவது ஸத்யம்‌ என்ற பரமாத்மா. 
மூலப்ரக்ருதிக்கும்‌ ஆதாரமான அஷரமும்‌ பகவானே, ஞானிகளால்‌ காணப்படுவோன்‌ பசுவானே. 
தஹராகாசமும்‌ பகவான்‌, கட்டை விரல்‌ அளவிற்கு இதயத்தில்‌ உறைபவன்‌ பகவான்‌. 
நாமரூபங்களைச்‌ செய்யும்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோனும்‌ பகவானே. 
தேவர்களும்‌ ௨பாஸநஞ்‌ செய்யத்‌ தக்கவர்களே. 

----------------

4. நாலாம்‌ பாதம்‌. 

மிகத்‌ தெளிவான வேத வாக்கியங்களைக்‌ கொண்டு பகவான்‌ சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொள்‌பவன்‌ 
என்று நிலைநாட்டுவதோடு இவனிலும்‌ வேறு பட்ட ஒருவன்‌ இல்லை யென்பது இந்தப்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிறது. 
4. 1, ஸாங்க்யர்‌ கொள்கை. 

கடோபநிஷத்தில்‌ (1-7-53-1-7-11) வந்துள்ள விஷயம்‌: இந்த்ரியங்களுக்கு மேற்பட்டவை அர்த்தங்கள்‌; 
அர்த்தங்‌களுக்கு மேற்பட்டது மனம்‌; மனத்திலும்‌ மேலானது அறிவு; அறிவைக்‌ காட்டிலும்‌ பெரியது ஆத்மாவான மஹான்‌; 
இதைக்‌ காட்டிலும்‌ மேலானது அவயக்தம்‌; இதனிலும்‌ புருஷன்‌ பெரியவன்‌; புருஷனைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ எவனுமிலன்‌; 
இப்புருஷனே எல்லை நிலம்‌, மேலான கதியு மாவான்‌. ஸாங்க்யார்களது கொள்கை இதனையே ஒட்டி யுள்ளது. 
இக்கருத்தின்படி இருபத்‌தைந்தாவது தத்வமான புரூஷனைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ இல்லை. 
ஆதலால்‌ ஈச்வர தத்வம்‌ இல்லை. அவ்யக்தம்‌, ப்ரதானம்‌, ஆனுமாநிதம்‌ எனப்‌  பெறும்‌ மூலப்ரக்ருதியே 
உலகுக்குக்‌ காரணம்‌ என்கின்றனர்‌ நிரீச்வர ஸாங்க்யர்‌. 

மறுப்பு: கடோப நிஷத்தில்‌ இதே பகுதியில்‌ (1-8-10,12) பகவானை அடைய விரும்பும்‌ உபாஸகன்‌ 
தேரில்‌ ஏறிச்‌ செல்வதாக உருவகப்‌ படுத்தியுள்ளது. 
ஜீவன்‌ ரதி (ரதத்தில்‌ ஊர்பவன்‌). இவனது சரீரம்‌ தேர்‌? புத்தி தேர்ப் பாகன்‌; மனம்‌ கடிவாளம்‌; இந்த்ரியங்கள்‌ குதிரைகள்‌; 
சிற்றின்ப. விஷயங்கள்‌ இக்குதிரைகள்‌ செல்‌ லும்‌ வழி. 
இந்தத்‌ தேர்‌ மூதலானவற்றை வசப்படுத்திக்‌ கொள்வோன்‌ ஸம்ஸார வழியின்‌ அக்கரையான பரம 
பதத்தை அடைகிறான்‌ என்பதும்‌ வந்துள்ளது. 
இவ்விவரங்களை ஆராய்ந்தால்‌ மனம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்‌றோடு கூடிய சரீரத்தைக்‌ தன்‌ வசப்படுத்திக்‌ கொண்டு 
இப்புருஷன்‌ சேர்வது பரம புருஷனை என்பது தெளிவு 

இதே கருத்து கடவல்லியில்‌ (7-3-73)ல்‌ உள்ளது? 
அறிவாளியானவன்‌ வாக்கு முதலான இந்தீரியங்களை மனத்தில்‌ அடக்கவேண்டும்‌, 
இந்த மனத்தை ஆத்மா விலுள்ள அறிவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த அறிவைப்‌ பெரியவனான ஜீவாத்மாவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த ஜீவாத்மா தாழ்வுகள்‌ இல்லாத பரமாத்மாவிடம்‌ அடங்க வேண்டும்‌ என்று, 
இங்கு உபகாரஞ்‌ செய்யும்‌ பரம்‌ பரையே உள்ளது; காரண பரம்பரை யன்று; 
ஆதலால்‌ அவ்யக்தம்‌ என்று சொல்லால்‌ மூலப்ரக்ருதியைச்‌ சொல்ல வில்லை; சரீரத்தையே சொல்லுகின்றது. 

தேர்வு 1: வ்யக்தம்‌ என்ற ஸ்தூலமான உலகம்‌, அவ்யக்தம்‌ என்ற மூலப்ரக்ருதி, புருஷன்‌ இம்மூன்றையும்‌ 
அறிவது மோக்ஷம்‌ என்கின்றனர்‌ ஸாங்கயர்‌, இவ்வாறு “வேதத்தில்‌ கூறப்படவில்லை. ஆதலால்‌ ஸாங்க்ய தத்வம்‌ கூறவில்லை. 

ஸாங்க்யர்களது மறுப்பு : ஒரு மந்த்ரம்‌: சப்தம்‌, ஸ்பர்‌ சம்‌, ரஸம்‌, ரூபம்‌, கந்தம்‌ இல்லாததும்‌, அழிவில்லாததும்‌, 
ஆதியந்த மில்லாததும்‌, மஹானுக்கு மேற்பட்டதும்‌, நிலையானதுமான தத்வத்தை த்யானஞ்‌ செய்து 
ஸம்ஸாரத்திலிருந்து ஜீவன்‌ விடுதலை பெறுகிறான்‌ என்பது, 
மஹத: பரம்‌- மஹானளைக்‌ காட்டிலும்‌ பெரியது என்பதால்‌ இது மூலப்ரக்ருதியே. 

விளக்கம்‌; இப்பகுதியிலேயே இரண்டு மந்தரங்கள்‌ உள்ளன. 
ஒன்று கூறுவது: அறிவு சாரதியாகவும்‌, மனம்‌ கடிவாளமாகவும்‌ கொள்ளும்‌ மனிதன்‌ உலக வாழ்க்‌கையை நீத்து 
விஷ்ணுவின்‌ பதத்தை அடைகிறான்‌ என்பது. 
மற்றது: எல்லாப்‌ பொருள்களிலும்‌ மறைந்‌துறையும்‌ இந்தப்‌ பரமாத்மா மேலான நுண்ணறிவினாலேயே காணப்பெறுகிறான்‌ என்பது, 
ஆதலால்‌ முமுஷு அறியத்‌ தக்கது மூலப்ரக்ருதி ஆகாது; 

தீர்வு : நூகேதஸ்‌ என்ற ரிஷி குமாரனுக்கு யமன்‌ ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்‌, ஜீவ ஸ்வரூபத்தையும்‌, 
செய்ய வேண்டிய உபாஸனத்தையும்‌ உபதேசித்தான்‌. ஆத்மா இது என்று .விளக்க, இது சேர்வது 
“*“தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று உபாஸனத்தால்‌ பெறும்‌ விஷ்ணுவின்‌ பதமாகிய மோக்ஷம்‌ என்றும்‌ வெளியிட்டான்‌. 
இங்கு அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ மூல ப்ரக்ரூதி சொல்லவில்லை. 
4, 2. அஜா என்னும்‌ மந்த்ரம்‌. 

ச்வேதாச்வதர உபநிஷத்தில்‌ அஜாம்‌ என்று தொடங்கும்  மந்த்ரம்‌: சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற நிறங்கள்‌ 
உடையதாய்‌, தன்னைப்‌ போன்ற ப்ரஜைகள்‌ பல உற்‌பத்தி செய்வதாய்‌, பிறப்பற்றதான ஒன்றோடு ஒருவன்‌ உகந்து கூடியிருக்கிறான்‌. 
அனுபவிக்கும்‌ இதைப்‌ பிறப்பற்ற மற்றொருவன்‌ விட்டுச்‌ செல்லுகிறான்‌.
ஸாங்க்‌: யரின்‌ கருத்து; அஜா (பிறப்பற்றது); என்பது மூலப்ரக்‌ரதி; பல பொருள்‌ இது உற்பத்தி செய்வதாகக்‌ கூறி யிருக்கிறது. 
ஆதலால்‌ ப்ரஹ்மாதீமகம்‌ அல்லாத ஸ்வ தந்த்ரமான ப்ரக்ருதியே காரணம்‌ என்பது விளங்கும்‌. 

மறுப்பு : அஜாம்‌ என்ற இம்மந்த்ரத்தில்‌ மூலப்ரக்ருதி' ப்ரஹ்மாத்மகம்‌ அன்று என்பது கூறப்பெறவில்லை... 
”பஹ்வீ; ப்ரஜா; ஸ்ருஜமாநாம்‌'' என்ற இடத்திலும்‌ மஹான்‌ முதலிய தத்வங்களை ப்ரக்ருதி படைக்‌கிறது என்பதே உள்ளது; 
ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்‌கிறது என்று கூறவில்லை. ஆதலால்‌ ப்ரம்ஹத்தின்‌ தொடர்பற்ற மூல பரக்ருதி ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்கிறது என்று 
ஏற்பதற்கில்லை.' 

தேர்வு: தைத்திரீயத்தில்‌ பரமாத்மா அணுவைக்‌ காட்‌டிலும்‌ அணு, பெரியதைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ என்று 
தொடங்கிக்‌ கடல்கள்‌, மலைகள்‌ இவனிடமிருந்து தோன்‌றின என்று கூறுகின்றது. இம்மந்த்ரங்களினிடையே 
**அஜாமேகாம்‌”'”' என்ற மந்த்ரமும்‌ அமைந்துள்ளது.. 
ஆதலால்‌ மூலப்ரக்ருதி பகவானை ஆத்மாவாகவும்‌ காரணமாகவும்‌ கொண்டது என்பது வெளிப்படை. 

சங்கை: பகவான்‌ இவ்வுலகைப்‌ படைத்தான்‌ என்ற வாக்கியத்தால்‌ மூலப்ரகிருதியைப்‌ படைத்தான்‌. 
என்பது தேறுகின்றது, “*“அஜாமேகாம்‌'' என்று மூல ப்ரக்ருதி பிறப்பற்றது என்று வந்துள்ளது. இவை எவ்வாறு பொருந்தும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நாம ரூப மில்லாமல்‌: மூலப்ரக்ருதி என்ற அசேதனப்‌ பொருள்‌ பகவானுக்கு சரீரமாக உள்ளது. 
அப்போது மஹான்‌ முதவியன பரிணாமம்‌ பெறவில்லை. ஆதலால்‌ ௮ஜா எனப்படுகிறது. 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அதே மூலப்ரக்ருதி தன்மாத்திரைகள்‌ இந்த்ரியங்கள்‌, ஐந்து பூதங்களாக நாம ரூபம்‌ பெறுகிறது. 
ப்ரளய காலத்தில்‌ சூர்யன்‌ உதய ௮ஸ்‌தமனங்கள்‌ பெறுவதில்லை; 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ கார்ய நிலையில்‌ ஸ்தூலமாகி தேவர்களுக்கு போக்யமான மது என்ற நிலையில்‌ இருக்கிறான்‌. 
இதேபோல்‌ மூலப்ரக்ருதிக்குப்‌ பிறப்பும்‌ பிறப்பற்ற நிலையும்‌. 

4, 3. தத்‌வங்கள்‌ இருபத்தைந்து. 

*“யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா : ஆகாசச்‌ ச ப்ரதிஷ்டித:-தமேவ மந்ய ஆத்மாநம்‌ வித்வாந்‌ ப்ரஹ்மாம்ருதோ? ம்‌ர௬ுதம்‌''--
ஐயைந்து தத்‌ வங்களும்‌ ஆகாசமும்‌ எந்த ஆத்மாவிடம்‌ நிலை நிற்கின்றனவோ, பெரியதாய்‌ அழிவற்றதாய்‌ விளங்கும்‌ 
அந்த ஆத்மாவை இவ்வாறு அறியும்‌ மனிதன்‌ முக்தி பெறுகிறான்‌ என்பது ஒரு மந்த்ரம்‌.. 
ஸாங்கயா்களது கருத்து; ஐயைந்து என்பது இருபத்‌தைத்து. இவை; (1) பூதங்கள்‌ ஐந்து, (4) தன்மாத்ரைகள்‌ ஐந்து, 
(3) ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, (4) கர்மேந்தரியங்கள்‌ ஐந்து, (5) மீதி ஐந்து ப்ரக்ருதி மஹான்‌, அஹங்காரம்‌, மனம்‌, ஆத்மா. 
பூதங்கள்‌ ஐந்தில்‌: ஆகாசம்‌ சொல்லப்படவில்லை. இந்த மந்த்ரம்‌ ப்ரஹ்‌மத்தை ஆத்மாவாகக்‌ கொள்ளாத ஸாங்க்ய தத்வங்களைக்‌ கூறுகின்றது. 

மறுப்பு : ஸாங்க்யர்‌ ப்ரஹ்மாத்மகமில்லாத இருபத்‌தைந்து தத்வங்களை ஓத்துக்கொள்கின்றனர்‌. 
அஜாம்‌ என்ற மந்தரத்தில்‌ இனவ பரமாத்மாவை அண்டியுள்‌ளன என்று விளங்குகிறது. 
“*யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா:;:* என்ற இடத்தில்‌, ''யஸ்மிந்‌'* என்று குறிப்பிடும்‌ தத்வம்‌ ஒன்றும்‌, விட்டுப்போன ஆகாசமும்‌ சேர்ந்து 
இருபத்‌தேழ தத்‌வங்கள்‌ என்பது தேறுகிறது. இது ஸாங்க்யர்‌களது கொள்கைக்குப்‌ புறம்பானது, 
ஆதலால்‌ ''பஞ்ச பஞ்சஜநா:'' என்பதன்‌ பொருள்‌ பஞ்ச ஜநங்கள்‌ என்ற பேருடைய ஐந்து பொருள்கள்‌ என்பதே தகும்‌. 
மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐந்துமே பஞ்சஜநங்கள்‌' எனப்‌ பெறுகின்றன, 
இவை பகவானால்‌ ஸத்தைப்‌ பெறுவனவாக விவரம்‌ பெறுவதால்‌, 
4, 4, ஐகத்துக்குக்‌ காரணம்‌. 

*ஸதேவஸோம்யே தமக்ரஆஸீத்‌'*, **அஸதேதவ இத்‌ மக்ர ஆஸித்‌'',*அஸத்வா இதமக்ர ஆஸீத்‌''என்ற வாக்கியங்கள்‌ வெளியிடுவது: 
ஜகத்‌ காரணமானது ஸத்‌ (நித்யமான இயல்புடையது); முதலில்‌ இது அஸத்தாகவே இருந்தது. ஆதலால்‌ ஐகத்‌ காரணம்‌ பரிணாமமுடையது- 
*-*தத்தேதேதம்‌ தர்ஹ்யவ்யாக்குத மாஸீத்‌'' அப்படிப்பட்ட இது அவ்யாக்ருதமாக இருந்தது என்றுள்ளது. 
அவ்யாக்‌ ருதம்‌: நாமரூபம்‌ என்ற லக்ஷணம்‌ கொள்ளாதது. அவ்‌ யாக்ருதம்‌ என்பது யாவரும்‌ அறிந்த ப்ரக்ருதியின்‌ பெயராகும்‌. 
நித்யமாயிருக்கும்‌ தன்மையும்‌ பரிணாமமுடைய தாக (அஸத்தாக) இருப்பதும்‌ பகவானிடம்‌ சேர்ந்‌திருக்க முடியாது. 
ஆதலால்‌ நித்யமான இயல்புடையதாயும்‌, படைப்பின்போது பரிணாமத்தை உடையதுமான மூலப்ரக்ருதயே ஜகத்‌ காரணமாகக்‌ கொள்ள 
வேண்டும்‌. அவ்யாக்ருதம்‌ என்று ப்ரஸித்து பெற்றது மூலப்ரக்ருதியே. இது ஸாங்கீயர்‌ கருத்து. 

மறுப்பு: தைத்திரீயத்தில்‌ வருவது: பகவான்‌, '*ஸத்‌யம்‌ ஜ்ஞானம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம” என்றவாறு வேறுபாடில்லாதவன்‌; 
தானே ப்ரகாசிப்பவன்‌; தேச கால வஸ்துக்களாலே அளவுபடாதவன்‌ என்பதும்‌, ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடே கூடி முக்தன்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பதும்‌. 
இதற்கு மேல்‌ இந்தப்‌ பரமாத்மாவிடமிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று என்று கூறி அதையே அஸத்‌ என்று குறிப்பிட்டது. 
இந்த ஜகத்‌ காரணப்‌ பொருளையே ஸத்‌ என்றும்‌ அஸத்‌ என்றும்‌ விவரித்தது- 
7*ஐந்மாத்யஸ்ய யத:*” என்றும்‌ அறிவோம்‌. பகவான்‌ ஆகாசம்‌ முதலான யாவற்றிற்கும்‌ காரணமாக வேதங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ இவனே ஜகத் ஏக காரணம்‌ அன்று தேறுகின்றது. 

தீர்வு: அஸத்‌ என்று தைத்திரீயத்தில்‌ வந்துள்ள சொல்லுக்குப்‌ பொருளாக ப்ருஹதாரண்யத்தில்‌ அவ்‌யாக்ருதம்‌ என்பது காண்கிறோம்‌. 
““ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய்‌:'” அப்படிப்பட்டவனே நகத்தின் நுனி முதல்‌ முழுவதும்‌ வியாபிகிறான்‌. 
அஸத்‌ என்‌றும்‌, அவ்யாக்ருதம்‌ என்றும்‌ நாமருபமில்லாத மூலப்ரக்‌ருதியை சரீரமாகக்‌ கொண்ட பகவானையே இங்குக்‌ கூறு 
வதா்கக்‌ கொள்ளவேண்டும்‌. மூலப்ரக்ருதி ஐகத்‌ காரணமாவதற்கு ஆதாரம்‌ ஒன்றுமில்லை, 
4. 5. ஐகத்‌ கர்த்தா. 

கெளஷீதச என்ற உபநிஷத்தில்‌ உபதேசிக்கப்‌ படுவது: “*“யோவை பாலாகே! ஏதேஷாம்‌ புருஷாணாம்‌ 
கர்த்தா, யஸ்ய வை தத்‌ கர்ம ஸலவை வேதிதவ்ய:.- 
பாலகியே! இப்புருஷர்களுக்கு எவன்‌ கர்த்தாவோ, எவனுக்கு இந்தப் புண்ய பாப கர்மம்‌ உள்ளதோ அவனே 
அறியத்‌ தக்கவன்‌ என்பது. கர்ம ஸம்பந்தம்‌ கூறப்படுவதால்‌, கர்மத்தின்‌ மூலம்‌ இவ்வுலகுக்குக்‌ காரணமாக 
இருக்கும்‌ ஜீவனே குறிப்பு. அவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்‌ய மதம்‌. 

மறுப்பு : இப்பகுதியில்‌ தொடக்கத்திலிருந்தே ப்ரஹ்‌ மத்தைப்‌ பற்றியே உபதேசம்‌. 
பாலாக, “*ஆதித்யன்‌ முதலானோர்‌ ஜகத்‌ காரணம்‌''என்றான்‌.இதற்கு அஜாத சத்ரு கூறியது: 
பாலாகியே! எவன்‌ ஆதித்யன்‌ முதலான கர்ம ஸம்பந்தமுள்ள புருஷார்களைப்‌ படைக்கிறானோ, 
எவனுக்கு இவ்வுலகம்‌ முழுதும்‌ கார்யமோ அவனே அறியத் தக்கவன்‌ என்பது, 
ஆதலால்‌ இவ்விடத்தில்‌ கர்ம ஸம்பந்தம்‌ குறிப்பன்று, “*க்ரியதே இதி கர்ம'”- செய்யப்‌ படுவது; 
இது உலகம்‌. ஜீவனது கர்மம்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணம்‌ என்பது ஏற்பதற்கான கருத்தன்று. 
ஆகையால்‌ இவ்வுலகம்‌ தனது காரியப்‌ பொருள்‌ என விளங்கும்‌ 
நாராயணனே அறியத் தக்கவன்‌ என்பது தேறுகின்றது.. 

அஜாதசத்ரு பாலாகிக்கு உபதேசஞ்‌ செய்வதற்‌தாகத்‌ தூங்கும்‌ ஒருவனிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌. 
அவனைப்‌ பலவாகப்‌ பேர்‌ சொல்லி அழைத்தும்‌ அவன்‌ எழுந்திருக்கவில்லை. 
அவனைத்‌ தடியால்‌ அடித்து எழுந்திருக்கச்‌ செய்தான்‌, அஜாதசத்ரு பாலாகியை மூன்று கேள்விகள்‌ கேட்டான்‌; 
ஜீவன்‌ கனவு காணும்போது எங்‌கிருக்கிறான்‌? தூங்கும்போது எங்கிருக்கிறான்‌? விழிக்‌கும்போது எங்கிருக்கறான்‌? 
பாலாகி விடை சொல்ல வில்லை. ஆதலால்‌ அஜாதசத்ரு வெளியிட்ட விடை: 

முதற்‌ கேள்விக்கு விடை : நாடிகளில்‌ இருக்கிறான்‌7 
இரண்டாவதற்கு விடை; ப்ராண சரீரமான ப்ரஹ்மத்‌தில்‌ இருக்கிறான்‌; 
மூன்றாவதற்கு விடை: ப்ரஹ்மத்தி லிருந்து கிளம்புகிறான்‌. 

ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவாளைப்‌ பற்றி அறிவிப்பதற்காகவே இந்தக்‌ கேள்விகள்‌ கேட்கப்‌ பட்டன. 
வேறொரு சாகையில்‌ இதே போன்ற கேள்‌விக்கு விடையாக வந்துள்ளது: 
தூங்குகிறவன்‌ தனது இதயத்திலுள்ள ஆகாச மென்னும்‌ பரமாத்மாவிடம்‌ படுத்திருக்கிறான்‌ என்பது. 
ஆதலால்‌ தூங்கும்‌ நிலையில்‌ ஆதாரமாக இருப்பவன்‌ பகவானே என்பது வெளிப்‌படை. 
இன்னும்‌ பல இடங்களில்‌ ஆகாச சப்தம்‌ பரமாத்‌மாவைக்‌ குறிக்கின்றது. 
ஆதலால்‌ இங்கு ஜீவளைப்‌ பற்றி வெளியிட்டிருப்பது இவனிலும்‌ வேறுபட்ட பரமாத்‌மாவை அறிவிப்பதற்காகவே, 
இவ்வாறு இப்பகுதி முழுதும்‌ ஆராய்ந்தால்‌, பரமாத்மாவே அறியத்‌ தக்கவனாகவும்‌, 
ஜகத்‌ காரணமாகவும்‌ கூறப்படுகிறான்‌ என்பது தேறுகிறது. 
புருஷன்‌ எனப்பெறும்‌ ஜீவன்‌ அறியத்‌ தக்கவன்‌ என்றும்‌, இவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானம்‌ ஜகத்‌ காரணம்‌ என்றும்‌ சொல்லவில்லை.
 
4. 6. த்ரஷ்டவ்ய:--யார்‌? 
ஜீவன்‌ ப்ரதானத்தோடு இணைந்து ஜகத்‌ காரணமாகமாட்டான்‌ என்பது விவரம்‌ பெறுகின்றது. 

“ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: சீரோதவ்ய: மந்த வய:--இந்த ஆத்மா காணத்‌ தக்கது, கேட்கத்‌ தக்கது, 
நினைக்கத்‌ தக்கது. நேரில்‌ காண்பது போல்‌ த்யானஞ்‌ செய்யத்‌ தக்கது என்ற வாக்கியத்தில்‌ ஆத்மா என்பது ஜிவன்‌. 
இந்தப்‌' புருஷனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்யரது மதம்‌.  

இவர்கள்‌ அளிக்கும்‌ விவரம்‌: இதே பகுதியில்‌ முதலில்‌ வருவது: பதியின்‌ காமத்திற்குப்‌ பதி ப்ரியனாவதில்லை, 
ஆத்மாவின்‌ காமத்திற்காகவே ப்ரியனாகிறான்‌ என்று தொடங்கி, பதி என்ற இடத்தில்‌ மனைவி, புத்ரர்‌, 
பொருள்‌, பசுக்கள்‌, ப்ராஹ்மணார்‌, க்ஷத்ரியர்‌, லோகங்கள்‌, தேவர்கள்‌, வேதங்கள்‌, பூதங்கள்‌, ஸர்வம்‌ என்று 
விவரித்த பின்பு ''ஆத்மாவா அரே'' என்று வந்துள்ளது. 
இப்பகுதியில்‌ முழுதும்‌ ஜீவனைப்‌ பற்றியே; பகவானைப்‌ பற்றி அன்று. ஆத்மா ஒருவனைப்‌ பற்றியதாயினும்‌ 
இது ஜீவ சமூகம்‌ என்பது தேறும்‌. ஒரு புருஷனே சொல்‌லப்படுவதால்‌ இவனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ 
காரணம்‌ என்பது தேதறும்‌. 

மறுப்பு : பதி முதலானோரார்‌ தங்கள்‌ தங்கள்‌ விருப்‌பம்‌ நிறை வேறும் பொருட்டு இனியவார்கள்‌ ஆவதில்லை. 
ஆத்மாவின்‌ விருப்பத்தின்‌ பொருட்டே என்று கூறியிருப்‌பதால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவைப்‌ பற்றியே கூறப்படுகிறது. 
மோக்ஷ உபாயத்தைப்‌ பற்றியதே இப்பகுதி. ஆகையாலே இங்குச்‌ சொல்லப்‌படுவது பகாவானே காணத்தக்கவன்‌ என்று. 

4, 7, பகவான்‌ உபாதான காரணம்‌, 

பகவான்‌ உலகுக்கு நிமித்த காரணமே ஆவான்‌; உபாதான காரணமாக முடியாது என்பது ஒரு கருத்து, 
இது ஸேச்வர ஸாங்க்யர்‌ மதக்‌ கொள்கை. 

இதற்கு விளக்கம்‌ : உலகில்‌ காண்பது, குடம்‌ முதலியவற்றிற்கு மண்‌ முதலியன உபாதான காரணம்‌, 
குலாலன்‌ முதலானோர்‌ நிமித்த காரணம்‌. நிமித்த காரணமும்‌ உபாதான காரணமும்‌ வேறுபட்டவை. 

“அஸ்மாந்‌ மாயி ஸ்ருலதே விச்வமேதத்‌''--இந்த ப்ரக்ருதியைக்‌ கொண்டே மாயப்பிரான்‌ இவ்வுலகைப்‌ 
படைக்கிறான்‌ என்பது போன்ற வாக்கியங்களில்‌ உபாதானமாகும்‌ மூலப்ரக்ருதிக்கும்‌ நிமித்த காரணமான 
பகவானுக்கும்‌ வேறுபாடு சொல்லப்படுகிறது. ப்ரஹ்மமே விகார மடைந்து உலகுக்கு உபாதான காரணமாகிறது: 
என்பதிற்கில்லை? ஏனெனில்‌ ப்ரஹ்மம்‌ விகாரமற்றது என்பதால்‌. 
ஆதலால்‌ மூல ப்ரக்ருதியே உபாகான காரணம்‌ என்பதே பொருந்தும்‌. 

மறுப்பு: ப்ரஹ்மம்‌ ஒன்றை அறிந்தால்‌ எல்லாவற்‌றையும்‌ அறிந்ததாகும்‌ என்பது வேத வாக்கியம்‌. 
உதாரணமாக: மண்‌ கட்டியை அறிந்தால்‌, மண்ணாலான பானைகள்‌ யாவற்றையும்‌ அறிந்ததாகும்‌. 
இதனால்‌ தேர்வது: சட்டி பானைகளுக்கு மண்‌ உபாதான காரணமாவது போல்‌ பகவானும்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ - என்பது. 
பகவான்‌ விசித்திரமான சக்தி வாய்ந்தவன்‌ -இவனது சக்தி போல்‌ வேறு எங்கும்‌ காணமுடியாது. 
ஆதலால்‌ இவன்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌. 
ப்ரளயத்தின்போது இவன்‌ நுண்ணிய சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகவுடையவன்‌; 
படைப்‌பின்போது இவனே ஸ்தால சேதன அசேதனங்களாகிறான்‌. 
உபாதான காரணமானால்‌ சேதன அசேதனங்‌களின்‌ தோஷம்‌ இவனிடம்‌ சேருமே என்பதில்லை. 
இதனாலேதான்‌ இவன்‌ ''மாயீ'' எனப்‌ பெறுகிறான்‌. 

தேர்வு: நான்‌ பலவாகக்‌ கடவேன்‌ என்று பகவான்‌ ஸங்கல்பித்ததாலே இவனே உபாதான காரணம்‌, நிமித்த காரணமும்‌. 

தேர்வு 2: யஜுர்‌ வேதத்தில்‌  வாக்கியங்கள்‌? 
**புவாநாநி தாரயந்‌''. நிமித்த காரணம்‌, ''ப்ரஹ்ம ஸவ்‌ ருக்க ஆஸீத்‌ - உபாதான காரணம்‌. 
ஆகையால்‌ பகவான்‌ இருவகைக்‌ காரணமுமாவான்‌. 

தேர்வு 3: ஓர்‌ உபநிஷத்‌ வாக்கியம்‌: . சிலந்தி தான்‌ வெளியிடும்‌ நூலைத்‌ தானே இழுத்துக்‌ கொள்கிறது? 
பூமியிலிருந்து பலவகைப்‌ பயிர்கள்‌ உண்டாகின்றன: 
உயிருடனிருக்கும்‌ புருஷனிடம்‌ உரோமங்கள்‌ உண்டாகின்றன; இதுபோல்‌ பரம்பொருளிடமிருத்து ' உலக மனைத்தும்‌ உண்டாகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌ என்று நிர்ணயிக்கப்படுகிறது. 
4.8. இதர தேவதைகள்‌ காரணமாக முடியாது. 

சிவனே ஜகத்‌ காரணம்‌ என்பது ஒரு கருத்து.இதற்கு ஆதாரங்கள்‌: (1) ச்வேதாச்வதரோபநிஷத்தில்‌, “*யதா 
தமஸ்‌ தந்‌ ந திவா ந ராத்ரி” என்ற ஸ்லோகத்தின்‌ கருத்து: எப்போது தமஸ்‌ மாத்திரம்‌ இருந்தது, பகல்‌, 
இரவு, ஸத்‌, அஸத்‌ ஒன்றுமில்லையோ, சிவன்‌ மட்டும்‌ இருந்தானோ அந்தப்‌ பரவஸ்துவே அழிவில்லாதது. 
(2) முதலில்‌ தமஸ்‌ ஒன்றே இருந்தது; அப்போது ஸத்து மில்லை, அஸத்து மில்லை; தமஸ்ஸைச்‌ சரீரமாசுக்‌ 
கொண்ட ப்ரஜாபதி ஒருவரே இருந்தார்‌. இங்கு ப்ரஜாபதி என்பது சிவனைக்‌ குறிக்கின்றது. 
இவற்றில்‌ சிவனே ஆகத்‌ காரணமாகக்‌ கூறப்படுகின்றான்‌. 

மறுப்பு : வேத வாக்கியங்கள்‌ பல நாராயணனே காரணம்‌ என்று முழக்குகின்றன. “ஸத்‌: என்பதன்‌ கருத்து வெளிப்படையாகச்‌ சொல்லவில்லை. 
இதை விளக்கும்‌ வாக்கியங்கள்‌; ஏகோஹவை நாராயண ஆஸீத், ந ப்ரஹ்மா, ந ஈசாத:- நாராயணன்‌ ஒருவனே முதலில்‌ இருந்தான்‌; 
'ப்ரஹ்மாவும்‌ இல்லை, சிவனுமில்லை; ,நாராயணன்‌ மனத்தால்‌ ஸங்கல்பித்தான்‌; 
'நாராயணமிட மிருந்து தோன்றிய அண்டத்தில் பிரமன்‌ பிறந்தான்‌; 
அவனிடம் இருந்து மூன்று கண்கள்‌ உடையவனும்‌, சூலம்‌ கையில்‌ ஏந்தியவனுமான புருஷன்‌ உண்டானான்‌,
நாராயணமிட மிருந்து எல்லாம்‌ உண்டாகின்றன; இவனிடமே எல்லாம்‌ லயிக்கின்றன. அதலால்‌ சிவன்‌ காரணமாக மாட்டான்‌. 

தேர்வு : உபநிஷத்துக்களில்‌ வந்துள்ள கருத்துக்கள்‌: 
(1) பரப்ரஹ்மம்‌ ஒன்றே ஈஸ்வரர்‌ பலர்‌ இருக்க முடியாது . நாராயணன்‌ படைப்பவன்‌; சிவன்‌ முதலோர்‌ படைக்கப்‌ பட்டவர் .
(2) உபதிஷத்துக்களில்‌ ஹரி, விஷ்ணு,அச்யுதன், புருஷன்‌, மஹாபுருஷன்‌, சிவன்‌, சம்பு, ,குத்ரன்‌ போன்ற ,சொற்கள்‌ வருகின்றன. 
ஐகத்‌ காரணமசக வரும்‌ இடங்களில்‌ சிவன்‌, ருத்ரன்‌ போன்ற பதங்கள்‌  நரராயணனாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
காரணத்வம்‌ நாராயணனுச்கே யாவதால்‌. 
(4) நாராயணன்‌ என்று சப்தம்‌ சிவனுக்குச்‌ சேராது என்பது பாணினி ஸூத்ரத்‌தால்‌ வெளிப்படை. 
நாராயணனைப்‌ பற்‌றிய திரு நாமங்கள் விஷ்ணுவையே சார்வன; வேறு தெய்வங்களைச்‌ சாரா; 
இவனுக்கே  என்று வாமன புராணம்‌ வெளியிட்டுள்ளது. 

சாச்வதம்‌ சிவம்‌ அச்யுதம்‌, ஸர்வ: சர்வ; சிவ: ஸ்தாணு:, அக்ஷரம்‌ பரமம்‌ ப்ரபும்‌, ஸூர்ய மண்டலத்‌தில்‌ உறைபவன்‌, 
**தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌” என்து பாராட்டப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே. 
ஆதலால்‌ நிச்சயிப்பது பகவான்‌ நாராயணனே யாவகைக்‌ காரணமும்‌, மற்றைய தேவர்கள்‌ அல்லர்‌ என்பதே. 

அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ குறிப்பது சரீரம்‌. ஆதலால்‌ ஜகத்துக்கு மூலப்ரக்ருதி காரணமன்று. 
அஜா சப்தத்தாற்‌ சொல்லப்படுவது, ப்ரஹ்மம்‌ அத்தர்யாமியாகவுள்ள மூலப்ரக்குதி, இந்த்ரியங்கள்‌, ஆகாசம் 
முதலியவை  பகவானை அந்தார்யாமியாகக்‌ 'கொண்ட ப்ரஹ்மம்‌ ஒன்றையே காரணமாக வேத வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவனே அடையத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌, காணத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌ .. 

பகவான்‌ உவகுக்கு நிமித்த காரணமாகவும் மட்டும் இன்றி உபாதான காரணமுமாகிறான்‌. 
உலகுக்குக்‌ காரணம்‌, ஆனவனே உபாசிக்கப்படுமவனும் ஆவான் 
எனவே உபாசிக்கப்படும் தெய்வம் நாராயணனே -வேறு தெய்வமில்லை.
முதற்‌ பாதத்தில்‌ சொல்லிய காரணத்வம்‌ முதலியன நாராயணனுக்கே, வேறு எதற்குமில்லை என்று நிலை நிறுத்துவது நாலாம்‌ பாதம்‌.
------------------------
இரண்டாம்‌ அத்யாயம்‌ 

முதல்‌ அத்யாயத்தில்‌ பகவானது மேன்மை விவரிக்கப் பட்டது. இவன்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌; 
உலகுக்குக்‌ காரணம்‌; சக்தி வாய்ந்தவன் ; ஆனந்த மயன்‌. 
இவனே மூவகைக்‌ காரணங்களும்‌  ஆவான்‌ என்பது இரண்டாம்‌ அத்யாயத்தில்‌ ஸ்தாபிக்கப்படுகிறது . 
முதற்‌ பாதத்தில்‌ இதற்கு மாறுபடக்‌ கூறும்‌ கருத்‌துக்களை ஆராய்ந்து வ்யாஸர்‌ இவற்றை ஸ்தாபிக்கப்படுகிறார்‌. 
தர்க்கமே ஆதாரமாக, பகவான்‌ ஜகத்‌ காரண மில்லை என்ற பிற மதத்தினரது கொள்கைகளை வெளியிட்டு 
நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார்  இந்தப்‌ பாதத்தில்‌. 
மூன்றாம்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ பசுவானின்‌ கார்யம்‌ என்றும்‌, 
நாலம்‌  பாதத்தில்‌ ஜீவனுக்கு உபகரணங்களான ப்ராணன்‌,இந்திரியங்கள் யாவையும் பகவானால் படைக்கப்பட்டவை 
என்றும்‌ தெள்ளத்‌ தெளிவாக விளக்குகிறார்‌ வ்யாஸ பகவான்‌. .   

1. முதற்‌ பாதம்‌ 
உபாதான காரணம்‌". 

உலகுக்குக்‌ '' காரணம்‌' மூலப்ரக்ருதியே'. அதாவது ப்ரதானமே என்பது ஸாங்க்யர்களது கொள்கை, 
இதற்கு ஆதாரமாக இவர்கள்‌ கபில ஸ்ம்ருதி, யோக ஸ்ம்ருதி இவற்றையும்‌ தர்க்க வகைகளையும்‌ பயன்படுத்தி வாதஞ்‌ செய்கின்றனர்‌: 
இக்‌. கொள்கையை எதிர்த்து பகவானே மூவகைக்‌ காரணம்‌' என்பதை வ்யாஸர்‌ நிலைநிறுத்துகிறார்‌.. 
இந்தப்‌ பாதம்‌ ஸ்ம்ருதி பாதம்‌ எனப்பெறும்‌. 
(1) கபிலர்‌: உபநிஷத்துக்களால்‌ புகழப்‌ பெற்றவர்‌” ஆப்தர்‌. இவரது ஸ்ம்ருதி ஜகத்‌ காரணப்‌ பொருளைப்‌ பற்றியே விளக்குகின்றது. 
இவர்‌ ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று அறுதியிட்டுள்ளார்‌. சதுர்முகன்‌ வேதங்களை ஓதி, யரவர்க்கும்‌ ஓதுவித்த தனிப்‌ பெருமை 
வாய்ந்தவன்‌; இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதி ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று கூறுகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ உலகங்களுக்கு உபாதான காரணமாக மாட்‌டான்‌ என்கின்‌றனர்‌ ஸாங்கீயர்‌. 

மறுப்பு : மனு, வ்யாளர்‌ போன்றவர்கள்‌ பலர்‌ வேதாந்த வல்லுநர்‌, புகம்‌ பெற்றவர்கள்‌. இவர்களது கருத்து: 
பகவானே உபாதான காரணம்‌ என்பது? இதையே தான்‌ ஆதரிக்கவேண்டும்‌. இவர்கள்‌ வேதக்‌ கருத்‌துக்களை உள்ளபடி உரைப்பவர்கள்‌ என்றும்‌, 
இவர்களது வார்த்தைகள்‌ சிறப்புடையன என்றும்‌ வெளியிடப்‌ பெற்‌றுள்ளது. 

சதுர்முகன்‌ எப்போதும்‌ ஸத்வ குணம்‌ வாய்ந்தவனல்லன்‌;கல்பங்களில்‌ ராஜஸ தாமஸ குணங்கள்‌ மேலிடப்‌ பெற்றவன்‌. 
ஆதலால்‌ இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதியின்‌ கருத்து மதி மயக்கத்தாலேயே வேதக்‌ கருத்துக்கு விபரீதம்‌. 
ஆதலால்‌ இவரது கருத்து அங்கீகரிப்பதற்‌கில்லை, 

(2) 'தர்க்கம்‌ (வாக்குவாத முறை) 
" பகவான்‌ ஆனந்தமயன்‌, பேரறிவாளன்‌, இன்ப துன்பங்கள் இல்லாதவன்‌. இந்த நிலைக்கு மாறுபட்டது உலகின்‌ நிலை. 
இவன்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ ஆனால்  இந்தக்‌ குறைகள்‌ இவனிடம்‌ இருக்க வேண்டும்‌, 
காரியமான பானையும்‌ காரணமான்‌ மண்ணும்‌! மண்‌ணுருவாக இருப்பது போல்‌. 
ஆதலால்‌ பகவான்‌. உபாதான காரணமாக மாட்டான்‌ என்பது ஒரு கருத்து. ,. 

மறுப்பு : சாஸ்த்ரங்களின்‌ மூலம்‌ தெளிவது: காரண நிலையில்‌ சேதன அசேதனங்கள்‌ பகவானோடு ஒன்றி விடுகின்றன; 
இது நுண்ணிய நிலை. பின்பு படைப்பின்‌ போது இவை ஸ்தூல நிலையில்‌ நாம ரூபங்கள்‌ பெறுகின்‌றன. 
இவ்விரண்டு நிலைகளிலும்‌ வேறுபாடு இல்வை. 
மனிதனுக்குப்‌ பிள்ளைமை, இளமை, முதுமை என்ற  நிலைகள்‌ போல்‌  இவ்விரண்டு நிலைகளும்‌. ஆத்லால்‌ இந்த தர்க்கம்‌ நிலை நிற்காது. 

(3) பிற மதத்தினரது முடிவு. 
வெறும்‌ தர்க்கத்தையே கொண்டு. வாதஞ்‌ செய்‌வோர்‌ பலர்‌, 
அணுகாரண வாதிகள்‌ கணாதருடைய வைசேஷிக மதம்‌, அஷய பாதருடைய நையாயிக மதம்‌:  சமண மதம்‌, 
பரமசிவன்‌ வெளியிட்ட சைவ மதம்‌ இவை ஒரே கருத்தை வெளியிட்டுள்ளன ப்ரதானமே உலகுக்குக்‌ காரணம்‌ என்று. 
இவை பல: ஓரே கருத்தைச்‌ சொல்லுவதால்‌ இக்கருத்தையே ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. 
ஆதலால்‌ பகவான்‌: .  உபாதன காரணமல்லன்‌ என்கின்றனர்‌ ஸாங்கியர்‌. 

மறுப்பு : இம்மதங்களை வெளியிட்டவர்களது தர்க்‌கம்‌ ஒருவகைப்‌ பட்டதன்று; ஏற்றவாறு இயங்கவில்லை? 
இவர்கள்‌ பரமாணுக்களைப்‌ பற்றி ஆராயவில்லை.  சிலர்‌ இவை சூன்யம்‌ என்‌கின்றனர்‌; 
ஒரே நிலையில்லாமல்‌ இக்‌ கீழே விழுவோரது கருத்துக்களை ஏற்பது எவ்வாறு இயலும்‌? 
உலகைச்‌ சரீரமாக பகவான்‌ கொண்டுள்ளான்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ மூலம்‌ கூறுகின்றனர்‌;. 
இவ்வாறு கருதினால்‌' சரீரத்தில்‌ இருக்கும்‌ அவனைப்‌ போவவே பகவானும்‌ இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும்‌, 
இதனால்‌ ஜீவனுக்கும்‌ பகவ௱னுக்‌கும்‌ வாசி ஒன்றுமில்லை-இந்த தோஷத்தால்‌ ப்ரஹ்ம காரண வாதம்‌ சரியன்‌று என்றனர்‌ ஸாங்க்யர்‌. 

மறுப்பு : ஜீவன்‌ இன்ப துன்பங்களை அனுபவிப்பது சரீரத்தோடு  இருப்பதால்‌ மாத்திரம்‌ அன்று; 
முக்‌யமாகாகக்‌ கர்‌மத்தாலேயே. ஜீவன்‌ முக்தனான பின்‌, விருப்‌பப்‌படி சரீரங்கள்‌ ஏற்றுக்கொண்டு பரமாத்மாவை அனுபவிக்கிறான் ; 
உண்பது, விளையாடுவது, இன்புறுவது போன்ற போகங்களையும்‌ பரமாத்மாவிடமே பெறுகிறான்‌. 
சாதாரண முக்தனுக்கே இப்பெருமை எனின்‌, பகவானது பெருமையைச்‌ சொல்லவேண்டுமோ? 
பகவானுக்கு ஜீவர்கள்‌ சரீரமாக இருப்பதால்‌ ஜீவர்கள்‌! ஸந்தோஷம்  இவனுக்கு நேராது, 
ஆதலால்‌ இவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌   வாசி யில்லை என்பது தகாது. 
அரசனது ஆணைப்படி இன்புறுகின்றனர்‌; மாறி நடப்‌பவர்‌ தண்டனை பெறுகின்றனர்‌. இத்த ஆணையால் 
அரசனுக்கு இன்ப துன்பங்கள்‌ இல, இதுபோல்‌ பகவான்‌ உலகை நியமிப்பவன் ; 
உலக அனுபவங்கள்‌ இவனைக் கிட்டாதே , இவன்‌ எவராலும் நிய மிக்கப்படாதவன்‌;
இன்ப துன்பங்கள்‌ இல்லாதவன்‌, ஆதலால்‌ இவன்‌ உபாதான காரணமாவதற்கு ஆஷேபம்‌ எதுவுமில்லை. 

(5) தர்க்க வாதம்‌ ஒன்று. 
உலகில்‌ காரணப்‌ பொருளுக்கும்‌ காரியப்‌ பொருளுக்‌கும்‌ காரணமான மண்ணுக்கும்‌ வேறுபாடுகள்‌ உள்ளன. 
காரணமான மண்ணுக்கும்‌ காரியமான குடத்திற்கும்‌ வேறுபாடுகள்‌ உள: நிலையால்‌ (மண்‌, குடம்‌), 
பெயரால்‌, வடிவால்‌, பயனால்‌ (குடம்‌ செய்ய, நீர்‌ முகக்க]). 
இதுபோல்‌ காரணமான பகவானுக்கும்‌ காரியமான உலகுக்கும்‌ மாறுபாடுகள்‌ உள்ளன. 
ஆதலால்‌ பகவானை உபாதான காரணமாகக்‌ கொள்ள இயலாது. இதுவும்‌ சாங்க்யர்களது  கருத்து. 

மறுப்பு : '*வாசாரம்பணம்‌'' என்ற உபநிஷத்‌ வாக்கியத்தில்‌ இதே கருத்து வந்துள்ளது, 
இவ் விடத்தில்‌**ம்ருத்திகா இதி ஏவ ஸத்யம்‌'”-- காரியமான குடம்‌ மண்‌ என்பதே உண்மை என்று காண்கிறோம்‌. 
ஆதலால்‌, மண்‌, குடம்‌ இவற்றிற்கு வேற்றுமை காண்பதற்கில்லை. 
அன்றியும்‌, *-இவ் வுலகம்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மமாகவே இருந்தது'* என்பது போன்ற வாக்கியங்கள்‌ வெளியிடும் கருத்து? 
காரணமான மண்ணும்‌ காரியமான குடமும்‌ மண்ணாக விளங்குவதுபோல்‌, 
காரணமான பகவானே காரியமான உலகமாக இலங்குகிறான்‌ என்று. 
மண்ணுக்கும்‌ குடத்துக்கும் வேறுபாடுகள்‌ நிலையினாலேயே. 
ஓரே மனிதன்‌ குழந்தை , இளைஞன்‌, கிழவன்‌ போன்ற நிலைகளை அடைகிறான்‌. இதுபோலே இங்கும்‌ கொள்ளவேண்டும்‌. 
இது போல்‌ பகவானின்‌ நிலையும்‌ ஆய்ந்து அறியலாம்‌. 
நாம ரூபங்கள்‌ இல்லாமல்‌ ஸூஷ்ம நிலையிலுள்ள சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொண்டிருப்பதே காரண நிலை; 
படைப்பித்குப்‌ பின்‌ ஸ்‌தூல 'நிலையில்‌ நாம ரூபங்கள்‌ கொண்டுள்ள சேதன அசேதனங்கள்‌ சரீரமாகதக் கொண்டிருப்பது க௱ரிய நிலை. 
இவ்வாறு இயங்குவதான்‌ சேதன அசேதனங்களின்‌ தோஷங்கள்‌ பகவானை அணுக” மாட்டா.

1. 2. நிமித்த காரணம்‌. 

பகவான்‌ நிமித்த காரணமாகிறான்‌ என்பது வேதாந்திகள் பக்ஷம்‌, 
“*ததி த்வமஸி'', “*அயமாத்மா ப்ரஹ்ம”. போன்ற வாக்கியங்களில்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவனாகத்‌ தோன்றும்‌ 
பகவானும்‌ ஜீவனும்‌ ஒன்று என்று இவர்கள்‌ ஒப்புக் கொள்கின்றனர்‌. 
பகவான்‌ ஸர்வஞ்ஞன் , பல நற்குணங்கள்‌ வாய்ந்தவன்‌ என்றும்‌ ஒப்‌புக் கொள்கின்றனர்‌, 
உலகமோ ஜீவர்களுக்கு கர்மங்களையே விளைவிப்பது. 
பகவானே ஜீவனாகில்‌ ஜீவனுடைய துன்பங்கள்‌ இவனைச்‌ சேரும்‌. 
ஆதலால்‌ இவன்‌ தனக்‌குத்‌ தானே தீமை தேடிக் கொள்ள மாட்டான்‌. 
தனக்கே விபரீதமான உலகை பகவான்‌ படைக்க மாட்டான்‌; அதாவது நிமித்த காரண மாகமாட்டான்‌. இது ஒரு கருத்து. ்‌ 
விளக்கம்‌ : உபநிஷத்துக்கள்‌ வெளியிட்டுள்ளது; 
பரமன்‌, ஜீவன்‌ இவர்களுள்‌ பரமன்‌ யாவும்‌ அறிந்தவன்‌, யாவையும்‌ நியமிப்பவன்‌; 
ஜீவன்‌ அறியாதவன்‌, நியமியாதவன்‌. 
பரமன்‌ ஆத்மாவினுள்‌ உறைகின்றான்‌, 
ஆத்மா இவனுக்குச்‌ சரீரம்‌; ஆதீமா இவனை அறிய மாட்டாது. 
ஆத்மாவையும்‌ இவனை நியமிக்கும்‌ பரம்‌ பொருளையும்‌ வேறாக அறிந்து, அப் பரம்பொருளின் அருளால்‌ இவன்‌ மோஷ்மடைகிறான்‌. 
இந்த,வாக்கியங்‌களால்‌ தேறுவது: ஜீவாத்மா பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது, 
ஆனால்‌, '**தத்த்வமஸி'* போன்ற வாக்கியங்களில்‌ இருவரையும்‌ ஓன்றென்று சொல்லுவது எவ்வாறு? 
இவ் வாக்கயங்கள்‌ ரூபத்தின்‌ ஒற்றுமை சொல்லவில்லை; ஸ்வரூப பேதம்‌ சொல்லுகின்றன. 
ஜீவனது கர்மங்களின்படியே துன்பங்கள்‌: விளைகின்றன; பகவானுக்குக்‌ கர்மங்கள்‌ இல்லை . 
ஆதலால்‌ உலகைப்‌ படைத்து பகவான்‌ தனக்கு துன்பம் விளைவித்துக்‌ கொள்கிறான்‌ எள்ற கருத்து சரியன்று. 
ஆதலால்‌ பகவான்‌ உலகத்திற்கு நிமித்த காரணமாவான்‌.
கல்‌,கட்டை போல்வன அசேதனப்‌ பொருள்கள்‌. இவை பகவானாக முடியாது என்பது ஒவ்வாது 
இதுபோல்‌ அற்ப ஞானம்‌ வாய்ந்து அற்ப சக்தி வுடையவனாய்த்‌ துன்பம்‌ அனுபவிக்கும்‌ ஆத்மா பகவானாக முடியாது. 
இங்ஙனம்‌ ஆராய்ந்தால்‌ பகவான்‌ நாராயணனே உலகுக்கு நிமித்த காரணம்‌ என்று தேறலாகும்‌.
1. 3. பகவானுக்கு உபகரணங்கள்‌ தேவையா? 

மண்ணிலிருந்து குடம்‌ செய்யும்போது செய்பவன்‌ ஆற்றல்‌ மிக்கவனாக இருந்தாலும்‌, 
சக்கரம்‌, தண்டம்‌. (கோல்‌) இவை யில்லாமல்‌ ஓன்றுஞ்‌ செய்ய இயலாது. 
இதுபோல்‌ பகவான்‌ ஸர்வ சக்தனாக இருந்தாலும்‌ உபகரணங்களின்‌ உதவியின்றி உலகைப்‌ படைக்க இயலாது என்பது ஒரு கருத்து. 
தீர்வு: உபகரணங்கள்‌ இல்லாமலே படைப்பு நேரக்‌ கூடும்‌. 
பாலைக்‌ கரய்ச்சிச்‌ சிறிது மோரைச்‌ சேர்த்தால்‌ பால்‌ தயிராகின்றது; மோரின்‌ உதவி யில்லாமலும்‌ திரிந்து மாறிவிடுகிறது; 
மோர்‌ சேர்ப்பது விரைவில்‌ தயிர்‌ பெறுவதற்காக. 
பகவான்‌ எல்லை கடந்த சக்தி வாய்ந்தவன்‌; ஆதலால்‌ உபகரணம்‌ வேண்டியதில்‌லை . 
இவன்‌ படைத்த தேவர்களும்‌, பிரமன்‌, சிவன்‌ போல்‌வார்‌களும் தங்களது விருப்பப்படி படைக்க வல்லவர்‌, 
ஆதலால்‌. பகவானது ஆற்றலைப் பற்றி சங்கை கொள்‌வதற்கில்லை.
 
1. 4. விசித்திரமான சக்தி. 

ப்ரஹ்மம்‌ செயலற்றது, அவயவமற்றது என்கின்றதும் -பரஹ்மம் வேராக இருந்தது!என்‌றும் சொல்லுகின்றன, 
ஆதலால்‌, ஒரு சங்கை --அவயவமில்லாத பகவான்‌ பரிணமித்‌தால்‌ ஒரே பொருளாகத் தான்‌ மாற வேண்டும்‌; 
இவன்‌ காரியப்‌ பொருள்களுக்குக்‌ காரணமாகக்‌ கருத இயலாது. 
தன்னோடு ஒன்றிய அசேதனத்தோடு இயங்குவதாகக்‌ கொண்டாலும்‌, தனக்குக்‌ காரியமான ஓரே பொருளாவான் , 
ஒரே பொருளுக்கே சரீரமாக இருக்க முடியும்‌. 
விளக்கம்‌ : உலகில்‌ காணும்‌ பொருள்கள்‌ போலன்று ப்ரஹ்மம்‌. 
இதைப்பற்றி நேரில்‌ கண்டோ, அனுமானத்‌தாலோ தெரிந்து கொள்ள இயலாது; 
சாஸ்த்ரங்‌களைக்‌ கொண்டே அறிய வேண்டும்‌. 
வேதங்கள்‌ வெளியிட்டுள்ளது: ப்ரஹ்மம்‌ விகாரமில்லாதது,விசித்திரமான। சக்தி வாய்ந்தது. 
இத்தகைய சக்தி இதற்கே உள்ளது. 
நீருக்கே உள்ள குளிர்ச்சி போலவும்‌, நெருப்புக்கே உள்ள வெப்பம்‌ போலவும்‌, 
இத்தகைய சக்தியாலே இவன்‌ அந்தார்யாமி ஆகிறான்‌, 
அவயவ மில்லாமை, எல்லாம்‌ பொருள்களுமாகப்‌ பரிணமிப்பது இவை பகவானுக்கே அசாதாரணம் 
ப்ரஹ்மம்‌ காரிய நிலையில்‌ சேதனங்களாகவும்‌ அசேதனங்களாகவும்‌ மாறுவது தோஷ மில்லையோ எனில்‌, இல்லை. 
இவன்‌ யாதொரு லிகாரமும்‌ இல்லாதவன்‌; தோஷங்கள்‌ இவனை அணுகவும்‌ மாட்டா.
1. 5. உலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌. 

ஒரு சங்கை : பகவான்‌ நலன்கள்‌ யாவும்‌ பூர்ணமாக வாய்ந்தவன்‌; தனக்கென எதுவும்‌ நாடாதவன்‌, 
இவன்‌ இவ் வுலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌ என்ன? 
பயன்‌ எதுவும் இல்லாததால்‌, இவன்‌ இதைப்‌ படைப்பதில்லை என்று தேறுகன்றது. 
தீர்வு : சாஸ்த்ரங்கள்‌ வெளியிடுவது: பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன் இவ்வுலகைப்‌ படைப்பது அப்போ தப்போது அனுபவிக்கும்‌ லீலைக்காகவே 
இத்தகைய வீலை இவனுக்கு ஏத்தலைய பலனை எதிர்பார்த்து இல்லை என்பதற்கு ஆசார்யர்கள்‌ வெளியிட்டுள்ள விளக்கம்‌; 
உயிர்கள்‌ உய்வதற்காசு இவன்‌ எவ்வளவு முயற்சிகள்‌ , செய்தும்‌, உலகில்‌ பிறந்து இவர்கன்‌ இவ்வாறு துன்புறுவதே என்று அனுதாபத்துடன்‌ நோக்‌குகிறான்‌ என்பதே 
வேறொரு சங்கை: பகவான்‌ உலகத்திற்குக்‌ காரணம்‌ எனில்‌ ஏற்றத் தாழ்வுடன்‌ ஏன்‌ படைக்கவேண்டும்‌? 
இவ்வாறு படைப்பதால்‌ பஷபாதம்‌ என்ற தோஷமும்‌, கருணை யின்மை என்ற குற்றமும்‌ நேராவோ? 
தீர்வு: உலகம்‌ படைக்கும்போது ஜீவர்கள்‌ முன்னமேய செய்த புண்ய பாவ கார்மங்களைப்‌ பற்றியே! தான்‌ படைப்பு நிகழ்கிறது. 
இதனாலேதான்‌ ஏற்றத்‌. தாழ்வுகள்‌. 
வேறொரு சங்கை: படைப்பிற்கு முன்‌ ப்ரஹ்மமே தான்‌ இருந்தது என்று வேதங்கள்‌ வெளியிடுகின்‌றன. 
அப்போது ஜீவர்கள்‌ இல்லை எனில்‌, இவர்களது கர்மங்களைப்‌ பற்றியே படைப்பு என்பது எவ்வாறு பொருந்தும் ? 
ஏற்றத்‌ தாழ்வுகள்‌ நினைப்பதற்கே இல்லையே... 
தீர்வு : ப்ரஹ்மமே இருந்தது என்பதன்‌ கருத்து: ஜீவர்கள்‌ நுண்ணிய நிலையில்‌ நாம ரூபங்கள்‌ இல்லாமல் ப்ரஹ்மத்தோடு ஒன்றியிருந்தனர்‌ என்பதே, 
இவர்சுள்‌ அநாதி;இவர்களது கர்மங்களும்‌ அநாதி; இவர்களோடே இணைந்திருப்பன. 
இந்தக்‌ கர்மங்களின்‌ தராதரத்திற்கு ஏற்கவே பிறப்பின் தாரதம்யமும் 
ஆக் ப்ரஹ்மத்திற்கு யாதொரு தோஷமும்‌ இல்லை. 
இவ் வகையில்‌ ஆராய்ந்தால்‌ ப்ரஹ்மமே' உலகைப்‌ படைக்கின்றது என்பது திண்ணம்‌. 
ஆதலால்‌: இப்பாதத்தின்‌ கருத்து, பகவானே மூவகைக்‌ காரணமும் ஆகிறான் என்பதே . , 
இதுவே ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் . 
அணு காரண வாதிகள்‌ பெரும்பாலோர்‌ ப்ரதானமே உபாதான சாரணம்‌ என்கின்றனர்‌. 
இவர்களது தா்க ரீதியில்‌ குறைகள்‌ உள்ளன. இவர்களது கருத்தும்‌ ஏற்‌பதற்கில்லை. 
உபாதான காரணமாவதற்குக்‌ காரணப்‌ பொகுள்‌: காரியப்‌ பொருள்‌ இவை சமமான இயல்பு பெற வேண்‌டியதில்லை. 
உதாரணம்‌: சாணத்திலிருந்து தேள்‌ தோன்றுகிற து. 
ஜீவர்கள்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌. ஆதலால்‌ ஜீவர்‌களது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேருமெனில்‌,
கர்ம வசப்‌ படாத பகவானுக்கு தோஷங்கள்‌ இல்லையே . 
காரணமான. பக வானும்‌ கார்யமான உலகும்‌ வேறுபடாதவை. 
' பகவான்‌ நிமித்த காரணம்‌ எனில்‌, துன்பமே இயல்‌பான் ஜீவர்களைப்‌ படைப்பதால்‌, சரீரியான தான்‌ தனக்கு தீமை 
தேடிக்கொள்வது ஓவ்வாதே 
வேறொரு துணையும்‌ எதிர்பாராமல்‌ பகவான்‌ உலகைப்‌ படைக்கின்றான்‌. 
அவயவமற்ற பகவான்‌ பல பொருள்களுக்கு உபாதான காரணமாக மாட்டான்‌ என்பதை எதிர்த்து 
பகவான்‌ விசித்திரமான சக்தி உள்ளவன்‌ என்று நிர்வகிக்கப்படுகிறது.
உலகைப்‌ படைப்பது பகவானுக்கு லீலையே; வேறே பயன்‌ எதுவுமில்லை.
---------------

2, இரண்டாம்‌ பாதம்‌ 

பகவான்‌ உலகுக்குக்‌ காரணமல்லன்‌? ப்ரதானமே என்ற பிற மதத்தினர்களது வாதங்களை மறுத்து 
வ்யாஸ பகவான்‌ தமத: மதத்தை இது வரையில்‌: 'நிலை நிறுத்தி அருளிச் செய்தார் -
இவர்களது மதக்‌ கோட்பாடுகளை ஆராய்ந்து- இவை ஏற்பதற்கில்லை என்பதைத்‌ தர்க்கத்‌தின்‌ மூலம்‌ வெளியிடுகிறார்‌; 
ஆதலால்‌ இந்தப்‌ பாதம் தர்க்க பாதம்‌ 'எனப்‌ பெற்றது.
 
2. 1. ஸாங்க்ய மதம்‌. 

பகவானது நிலை இல்லாமலே ப்ரதானமே உலகுக்‌குக்‌ காரணம்‌ என்பது ஸாங்க்யர்‌ மதம்‌. 
இம் மதத்தின்‌ படி ப்ரதானம்‌ என்பது ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ ஆகிய பொருள்களாக அமைந்துள்ளது; 
இவை குணங்கள்‌ அல்ல. இவை இயல்பாகச்‌ சமநிலையில்‌ உள்ளன. 
அறிவுடைய புருஷனது முன்னிலையில்‌ ப்ரதானம்‌ விகார மடைகிறது (மாறுதல்‌ பெறுகிறது). 
புருஷ தத்வமோ குணமில்லாதது, அறிவு வடிவமானது, நித்யமானது, எங்கு மிருப்பது, செயலற்றது; 
சரீரங்களில்‌ வெவ்வேறாக இருப்பது. இது கார்த்தாவாகவும்‌, போக்தாவாகவும்‌ இருக்க முடியாது. 
ப்ரக்ருதி புருஷர்‌ அணுகியிருப்‌பதால்‌, ப்ரக்ருதிக்கு அறிவும்‌, புருஷனுக்கு கர்க்ருத்‌வமும்‌ (செயல்படுவதும்‌) நிகழ்கின்றன. 
தான்‌ கர்த்தா, போக்தா என்று நினைப்பதால்‌ ஸம்ஸாரம்‌; முன்பு கூறிய ஞானத்தால்‌ மோக்ஷம்‌.

மறுப்பு : ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை குணங்கள்‌ என்றே வேதங்கள்‌ வெளியிட்டுள்ளன. 
ஆதலால்‌ இவை பிரதானமாக மாட்டா. 
மரத்தால்‌ தேரும்‌, கல்லால்‌ கட்டிட்மும்‌ நிருமிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள்‌ இருந்தாலும்‌ செய்வோர்‌ வேண்டும்‌. 
ஆதலால்‌ ப்ரக்குதி புருஷர்‌ அணுகியிருந்தும்‌ யாதொரு பயனுமில்லை. செய்‌பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌. 

ஸாங்க்யர்‌ அளிக்கும்‌ சமாதானங்கள்‌, 
(1) ஒருவனது உதவியே யில்லாமல்‌ பால்‌ தயிராகிறது; 
(2) மேகத்திலிருந்து விழும்‌ நீர்‌ இளநீராகிறது; மாம்பழத்தின்‌ ரசமாகிறது; 
(4) பசு புல்லை மேய்ந்து பால்‌ சுரக்கின்றது; 
(4) காந்தக்கல்லின்‌ அருகில் உள்ள இரும்பு இயங்குகிறது 
(5) தொண்டி, குருடவின்‌ தோள்‌ மேல்‌ ஏறிக் கொண்டு வழி நடக்க இயலுகின்றது 
ஆதலால்‌ சேதனன்‌ ஒருவனது உதவி இல்லாமலே உலகப்‌ படைப்பு இயலும்‌. 
விளக்கம்‌ : மண்‌ குடமாவதும்‌, மரம்‌ ரதமாவதும்‌ ஓகு சேதனனது முயற்சியாலேயே. 
இதை உதாரணமாகக்‌ கொண்டு ப்ரக்ருதி மாறுபடுவது யாவும்‌ பரம சேதனனாலே என்று அனுமானித்து அறியலாகும் . 
பால்‌ தவிராக மாறுவதும்‌,மழைநீர்‌ இள நீராவதும்‌,மாம்‌ பழ ரசமாக மாறுவதும்‌ அப் பரம சேதனனாலே என்‌பது அனுமானம்‌. 
ஆதலால்‌ பகவானது சங்கல்பமின்‌றி. ப்ரக்ருதி பரிணமிக்க இயலாது. 
இரும்பு காந்தக் கல்வின்‌ அருகில்‌ இருந்தால் தான்‌ இயங்கும் ;
அதை அருகில்‌ வைப்பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌, 
நொண்டி வழி தடப்பது தன்னுடைய முயற்சியாலும்‌, குருடனுடைய உதவியாலும்‌. 
குறைபாடுகள்‌ : ஸாங்க்ய மதத்தில்‌ வெளியிட்டு காட்டப்பட்டன ; 
ப்ரதான நிலையில்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை சமமாக உள்ளன; இவற்றில்‌ ஏற்றத்‌ தாழ்வால்‌ படைப்பு நிகழ்கின்றது என்பது, 
இவ்வாறான ஏற்றத்‌ தாழ்வு எங்‌கனம்‌ ஏற்படுகிறது என்பதை விளக்கவில்லை. 
ஆதலால்‌, ஸர்வஜ்ஞனாகிய ஸா்வேச்வரனோடு தொடர்பு இருந்தால் தான்‌ ப்ரக்குதி ஜகத்துக்குக்‌ காரணமாகும்‌. 
ஸாங்கயரின்‌ கொள்கைப்படி புருஷன்‌ மாறுபாடில்‌லாதவன்‌. 
இவனுக்கு போகம்‌ ப்ரக்ருதியைக்‌ காண்பது; மோக்ஷம்‌ ப்ரக்ருதியிலிருந்து விடுதலை பெறுவது. 
விகார மற்ற புருஷனுக்கு போகமும்‌ மோக்ஷமும்‌ எவ்வாறு ஒட்டும்‌? 
ப்ரக்ருதியின்‌ பரிணாமத்தால்‌ சு௧ துக்க ரூபமான போகம்‌ எனில்‌, சேதனன்‌ ப்ரக்ருதி ஸந்நிதியில் இருப்‌பதாலும்‌, 
ப்ரக்ருதி நித்யமாதலாலும்‌ இவனது போகம்‌ எப்போதுமே நிகழும்‌; மோஷம்‌ வாய்ப்பதில்லை . 
புருஷன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதியின்‌ அருகிலேயே இருக்கிறான்‌; இதனாலே படைப்பு என்கின்றனர்‌ சாங்க்யர் . 
நித்யமான புருஷன்‌ அருகில்‌ இருப்பதால்‌ ஸம்யோகம் எப்போதும் படைப்பே நடக்கும்‌. மோக்ஷம்‌ எவ்வாறு நடக்கும்‌? 
இவ்வாறான முரண்பாடுகள்‌ பல. ஆதலால்‌ ஸாங்க்ய மதம்‌ எவ் வகையிலும்‌ பொருந்தாது.
2. 2. அணு காரண வாதம்‌. 
நையாயிகரும்‌ வைசேஷிகரும்‌ பகவானை அதிஷ்டாதாவாக ஒப்புக் கொண்டு 
பரமாணுக்களே ஐகத்திற்குக்‌ ' காரணம்‌ என்‌கின்றனர்‌. (அதிஷ்டாதா: தலைவனாக தியமிப்பவன்‌ ). 
பரமாணுக்களின்‌ தன்மை என்ன? இவை நுண்ணியன, நித்யமாவன, அவயவமற்றவை. 
இவை பல சேர்ந்து அவயவி ஆகின்றன. இந்த அவயவியை அவயவங்களாகப்‌ பிரித்துக் கொண்டே யிருந்தால்‌, பிரிக்க இயலாத நிலை திகழும்‌. 
இந்த நிலையில்‌ காண்பது பரமாணு, பரமாணுக்கள்‌ இரண்டிரண்டாகவும்‌, இந்த இரட்டைகள் மூன்றாகவும்‌ இவ்வாறே பெருகுகின்றன. 
காற்று, தீ , தீர்‌, நிலம்‌ இவற்றிற்குத்‌ தனித் தனியாகப்‌ பரமாணுக்‌கள்‌ உள; 
இப் பரமாணுக்கள்‌ அந்த அந்த பூதத்தின்‌ குணங்கள்‌ வாய்ந்தவை.

விளக்கம்‌! பரமாணுக்களுக்குப்‌ பரிணாமமே இல்லை-
இவை இரண்டாகவும்‌, இந்த இரட்டைகள்‌ மூன்றாகவும்‌, இவ்வாறு இணைந்தாலும்‌ பரிமாணம்‌ இராது; 
பரிமாணம்‌ இருத்தால்‌ அடிப்படையான பரமாணு கொள்கை நிலைக்காது. 
இவர்களது மதத்தின்படி உலகம்‌ எவ்வாறு உண்டாகின்றது? 
உலகம்‌ உண்டாவதற்கு ஆதாரமாக வுள்ளது பரமாணுக்களின்‌ முதற்‌ செயல்‌--
அத்ருஷ்டம்‌ என்பது? இது புண்ய பாவத்தால்‌ ஏற்படும்‌. இந்த முதற்‌ செயல்‌ இயல்பான செயல்‌; 
நெருப்பு மேல்‌ தோக்கி எரிவது. போன்ற இயற்கைப்‌ பண்பு. 
மறுப்பு _இம்மதத்தினர்‌ கூறும்‌ அத்ருஷ்டம்‌ பரமா ணுக்களைச்‌ சார்ந்ததா? ஜீவனைச்‌ சார்ந்ததா? 
பரமாணுக்களுக்குப்‌ புண்ய பாவங்கள்‌ இல, ஆதலால்‌ ஜீவனைச்‌ சார்ந்ததாக வேண்டும்‌. 
ஜீவன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதிக்கு. அருகில்‌ இருப்பதால்‌, ஜீவன்‌ நித்யமாதலால்‌ 
படைப்பு எப்போதும்‌ நிகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும்‌. 
ஆதலால்‌ ஸா்வேச்வரனே உபாதான காரணம்‌ என்பது. தெளிவு 
அன்றியும்‌ காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றுக்கான குணங்கள்‌ இவற்றுக்குக்‌ காரணமான 
பரமாணுக்களில்‌ உள்ளன என்பது இம் மதத்தினரது கொள்கை. 
காரணப்‌ பொருளில்‌ இருந்தால் தான்‌ காரியப்‌ பொகுளில்‌ குணங்கள்‌ இருக்கும்‌ என்கிறார்கள்‌ இவா்சுள்‌. 
இந்த முறையில்‌ ஆய்ந்தால்‌, குடம்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ நிலை யின்மை, அவயவத்தோடு இருத்தல்‌, 
பருமன்‌ போல்வன பரமாணுக்களுக்கும் உள்ளன என்று இவர்கள்‌ ஒப்புக்‌ கொள்ளவேண்டும்‌. 
இது பரமாணுக்களைப்‌ பற்றிய. பண்புகளோடு மூரண்படும்‌. -ஆதலால்‌ இம் மதம்‌ ஆதரிப்பதற்‌கில்லை.
2. 3. வெளி உலகின்‌ நிலை. , 
பரமாணுக்களே உலகுக்கு உபாதான காரணம்‌. என்ற மதக்‌ கொள்கை முற்றிலும்‌ மறுக்கப்பட்டது. 
அணு காரண வாதத்தில்‌ பெளத்தர்களுக்கும்‌ ஒரளவு பங்குண்டு. 
இவர்களுள்‌ வைபாஷிகன்‌, ஸெளத்சாந்தி கன்‌ இவர்களது மதம்‌ வருமாறு; 
காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றிற்குக்‌ காரணம்‌ அத்த அந்த பூதத்தின்‌ பரமாணுக்கள்‌. 
இந்த நான்கு பூதங்கள்‌ இணைவதால்‌ உடல்‌,. ஸ்பர்சாதிகள் சத இந்த்ரியங்கள்‌, வெளிப்‌ பொருள்கள்‌ உண்டாகின்றன. 
சரீரத்திற்கு உள்ளே இருப்பது ஆத்மா; இது **நான்‌:* என்ற அறிவுக்கு விஷயமாகும்‌. 
வெளிப்‌ பொருள்கள்‌ யாவும்‌ க்ஷணம் மாத்ரமாகவே உள்ளன. 
இவை நிலையுள்ளன என்ற அறிவால்‌ உலக நடவடிக்கைகள்‌ 'நிகழ்கின்‌ றன. 
'ஆதலால்‌ உல்க உற்பத்திக்கும்‌ தடவடிக்கைகளுக்கும்‌ வேறு எதுவும்‌ காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டியாது இல்லை. 
ஒவ்வொரு ஷணந்தோறும் தோன்றும்‌ ஞானத்‌தின்‌ தொடர்பு தான்‌ ஆத்மா. 
தேர்வு 1 : பூதங்கள்‌ இணைந்து உலகமும்‌ உலகப்‌ பொருள்களும்‌ ' உண்டாக வேண்டும்‌; 
இவை க்ஷணிகம்‌ எனில்‌ இணைவதற்கு வாய்ப்பே இல்லை; ஆதலால்‌ உற்‌பத்தி இல்லை. 
இம் மதத்தின்படி பிறவி எப்படி நிகழ்கிறது? 
க்ஷணிகமான யொருள்கள்‌ நிலையாவன என்று நினைப்பது அறிவின்மை. 
அறிவின்மையால்‌ பிறவி; பின்பு சரீரத்‌திற்கு வேண்டிய வீர்யம்‌, ஸ்ம்ருதி, ப்ரீதி போல்வன பெற்று, 
பூமி முதலான தாதுக்கள்‌ பெற்று, இந்த்ரியங்‌கள்‌, ப்ராணன்கள்‌ உருவாகி 
யாவும்‌ சேர்ந்த சமுதாயம்‌ உடம்பாகிறது. 
மறுபடியும்‌ அவித்யையாலே இவை உருவாகிப்‌ பிறவிகள்‌ சுழன்று சுழன்று வருகின்றன. 
தேர்வு 2: அறிவு க்ஷணிகம்‌ என்பதாலே விபரீதமான அறிவு எவ்வாறு நிகழும்‌? 
அறிவின்மை வாய்ந்தவனின்‌ நிலைதான்‌ என்ன? 
ஆக இந்தக்‌ கருத்து ஆதரிப்பதற்‌ கன்று. 
தேர்வு 3: காலத்தையும்‌ பற்றி ஆராய்ந்தால்‌, இது ஷணிகம்‌ என்பதால்‌ ஒரு ஷணத்தில்‌ காணும்‌ பொருள்‌ அடுத்த க்ஷணத்தில்‌ இருக்க முடியாது. 
ஒரு குடத்தைக்‌ காணும்போது அது ஓவ்வொரு ஷணமூம்‌ புதிதாகவே இருக்கவேண்டும்‌. 
நாம்‌ குடம்‌ இல்லை என்று சொல்லும் போது குடம்‌ என்ற வடிவம்‌ இல்லை, அல்லது உடைந்து போயிற்று என்ற கருத்தே நிலவுகின்றது. 
இது, ஷணிகம்‌ என்பதற்கு வேறுபட்டது. ஆதலால்‌ ஷூணிகம்‌ என்ற கருத்து உலக தடவடிக்கைக்கு முரணானது. 
தேர்வு 4: காரியப்‌ பொருளான குடம்‌ மண்‌ மய மானது; பொன்‌ நகை பொன்‌ மயமானது, 
காரணமான மண்‌, பொன்‌ இவை சூன்யமாகக் கொண்டால்‌, குடம்‌, நகை இவை உருவம்‌ பெறுவது எவ்வாறு? ... 
தேர்வு 5: இம் மதக்‌ கொள்கைக்கு மாறாக நாம்‌ பூமியை நேரில்‌ காண்கிறோம்‌; 
ஆகாசம்‌ காண்பதற்‌ இல்லை எனினும்‌, பருந்து பறக்கிறது'” என்பது போன்ற அறிவால்‌ இது உண்டு என்று அறிகிறோம்‌ 
நேரில்‌ காண்பன சூன்யம்‌ என்ற கருத்து அபத்தமானது ... 
தேர்வு6: ஒரு பொருள்‌ க்ஷ்ணிகம்‌ எனில்‌ இதைப்‌ பற்றிய அறிவும்‌ ஷணிகமாக வேண்டும்‌. 
இம்மதத்தினர்‌ கூறும்‌ சமாதானம்‌: அறிவுக்குக்‌ காரணமாவது, அறிவை உண்டாக்கும்‌ பொருள்‌. 
ஆதலால்‌ அப் பொருளைக்‌ காணும்போது அறிவை உண்டாக்கி அது அழிந்து போகின்றது என்பது. 
அன்றியும்‌ பொருள்களின்‌ பண்பு நீலம்‌, மஞ்சள்‌, கறுப்பு போன்றவற்றை மனத்தில்‌ தேக்‌கிக் கொண்டு பின்பு அனுமானத்தால்‌ அறியக்கூடும்‌ என்கின்றனர்‌ இவர்கள்‌. 
இது உலகில்‌ நிகழ்வனவற்‌றுக்கு மாறுபாடானது. 
ஒரு பொருள்‌ அழிந்த பிறகு அதன்‌ அழிந்த வடிவையோ பண்பையோ வேறே ஓன்‌றில்‌ காண்பது என்பது நிகழாதது. 
தேர்வு 7: வருங்‌ காலத்திற்கான சில நன்மைகளைக்‌ கருதி நாம்‌ பல செய்கிறோம்‌. 
காலம்‌ க்ஷணிகம்‌ என்று கருதினால்‌ முயற்சிகள்‌ பயனற்றவையாகும்‌. 
ஆதலால்‌ பலவகையாலும்‌ இம் மதத்தின்‌ கொள்கைகள்‌ அனுபவத்திற்குப்‌ புறம்பாக வுள்ளன.

2.4. அறிவின்‌ நிலை. 

யோகாசாரர்களது மதம்‌: அறிவு ஒன்றே அடிப்‌ படை; இது ஷணிகம்‌. வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகங்‌ கூட இல்லை; 
இவை பற்றி அறிய வேண்டியதில்லை. 
அறியப்படும்‌ பொருளின்‌ வடிவத்தை அறிவினுடைய. தாகவே கருதினால்‌ போதும்‌; 
வெளிப்‌ பொருள்‌களை ஸ்மரிக்க வேண்டியதில்லை. 
அறிவினுள்‌ இருக்கும்‌ வடிவம்‌, வெளியிலிருப்பது போல்‌ தோன்றுவது மயக்கத்தினால்‌. 
அறிவும்‌ அறியப்படும்‌ பொருளும்‌ எப்போதும்‌ சேர்ந்தே. அறியப்படுகின்றன; 
ஆதலால்‌ அறியப்படும்‌ பொருள்‌ அறிவைக்‌ காட்டிலும்‌ வேறன்று. 
வெளிப்‌ பொருள்கள்‌ உள்ளன என்று கொண்டால்‌, அந்த அந்தப்‌ பொருளின்‌ வடிவம்‌ அறிவில்‌ உள்ளதாகக்‌ கொள்ளவேண்டும்‌; 
இல்‌லாவிடில்‌ கடத்தைப்‌ பற்றிய அறிவு, படத்தைப்‌ பற்றிய அறிவு என்று பல வகையான தனித் தனியான அறிவுகளை நிருபிக்க இயலாது.
வெளிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌ அறிவை மாத்‌திரஙம் கொண்டு இவை உள்ளன என்பதற்கில்லை. 
காணும்போது நேரும்‌ அறிவு மாத்திரம்‌ கொண்டால்‌, முத்துச்சிப்பி வெள்ளியே என்றும்‌, 
பழுதை பாம்புதான்‌ என்றும்‌ ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்‌. 
ஆதலால்‌ விழிப்பு நிலையில்‌ காணப்படும்‌ அறிவுகள்‌, உள்ள பொருள்களைப்‌ பற்றி யல்ல; 
கனவில்‌ காணும்‌ பொகுள்‌களைப்‌ போல்‌ இவை இல்பொருள்களே என்று கொள்‌வது தான்‌ பொருத்த முடையது.

மறுப்பு: குடம்‌ ஒன்றைப்‌ பார்க்கும்போது, பார்ப்‌பது நாம்‌, பார்க்கப்படுவது குடம்‌; இது அறிவினாவே. 
அறிவு ஒன்றே உள்ளது என்று ஒப்புக்கொண்டால்‌ நாமும்‌ இல்லை, குடமும்‌ இல்லை என்பதுதானே தேறும்‌? 
ஆதலால்‌ இக் கொள்கை ஏளனத்திற்காகும்‌. 
தேர்வு 1: இரண்டு பொருள்கள்‌ சேர்ந்து அனுப விக்கப்படுகின்றன என்றால்‌, இவை வெவ்வேறானவை என்பதுதானே தேறும்‌. 
இவ்விரண்டில்‌ ஒன்று தான்‌ உள்‌ளது என்பது எப்படிப்‌ பொகுந்தும்‌? 
தேர்வு 2. நாம்‌ பார்க்கும்‌ குடம்‌ அறிவினாலே மாத்திரம்‌ இருக்கிறது என்பது சிறிதும்‌ பொருந்தாது .. 
ஆக்கப்‌' பொருளான மண்‌ வேண்டும்‌; ஆக்கும்‌ திறமை உபகரணங்கள் வேண்டும்‌. 
குடம்‌, படம்‌ போல்வனவற்றை அறிவிப்பதாக அறிவு உள்ளது; 
அறிவு தவிர்ந்த இவை இல என்பது எவ்வாறு சொல்லக்‌ கூடும்‌ 
தேர்வு 3: விழிப்பிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ கனவிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ வித்தியாசமுண்டு. 
விழிப்பில் காண்பன பொய்யாக மாட்டா; கனவிற்‌ காண்பன விழித்தவுடன்‌ மறைந்து விடுகன்றன. 
ஆத லால்‌ விழிப்பிற்‌ காண்பவை இல்பொருள்களாக அனுமானித்தால்‌, உள்ளனவற்றை 'இல்லனவாகச்‌ சொல்லும்‌ தோஷம்‌ தவிர்க்க முடியாது. 
தேர்வு 4: அறிவு எங்கும்‌ நிலவுவது. அறி பவன்‌, அறியப்படும்‌ பொருள்கள்‌ இவை இல்லாத அறிவு எங்குமில்லை, 
ஆதலால்‌ எங்கும்‌ காணப்படும்‌ பொருள்‌களைப்‌ பற்றி விளங்காத அறிவு ஏற்பதற்கில்லை. 
இவ்‌வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ தேறுவது: இந்த மதம்‌ உலக நடவடிக்கைகளுக்கு முற்றிலும்‌ மாறானது என்பது.

2. 5. யாவும்‌ சூன்யம்‌ 

மாத்யமிகனது மதம்‌ ப்ரமாண்ம்‌ (அறிவதற்குச்‌ சான்று), ப்ரமாதா (அறிபவன்‌), ப்ரமேயம்‌ (அறியப்‌ படுவது) என்பது மதி மயக்கத்தாலே. 
யாவும்‌ சூன்யம்‌; இந்தச்‌ சூன்யத்தைச்‌ சூன்யமென்று அறிவதே மோக்ஷம்‌. 
அறிவும்‌, அறிவால்‌ காணும்‌ வெளிப்‌ பொருள்களும்‌ இல்பொருள்களே; யாவும்‌ சூன்யம்‌ என்பதே உண்மையான நிலை. 
காண்பனவாகத்‌ தோன்றுவன யாவும்‌ பொய்‌. இத்தகைய தோற்றம்‌ அழிவதே மோக்ஷம்‌. 
மாத்யமிகன்‌ சூன்யவா தி, இவனது விளக்கம்‌ - ஒரு பொருள்‌' உண்டெனில்‌ இதற்குச்‌ சான்று தேவை;-
இல்லைலை யெனில்‌ 'இது வேண்‌டியதில்லை. மேலும்‌ ஒரு பொருள்‌ உண்டு எனில் எப்படி உண்டாகிறது? 
உள்ள பொருள்களில் இருந்தா , இல்லாத பொருள்களிலிருந்தா என்று தெளிய வேண்டும்‌. 
உள்ள பொருள்‌ களில் இருந்தே என்று கருதினால்‌, 'குடமாக அமையும் போது காரணப்‌ பொருளான மண்‌
இல்லை; ஆதலால்‌. இந்த மண்‌ அழிந்து விடுகிறது. 
ஆதலால்‌ தேறுவது; இல்‌லாத பொருள்களிலிருந்தே பண்டங்கள்‌ அமைகின்‌றன என்‌பது. 
இல்லாத பொருள்களிலிருந்து பண்டங்கள்‌. உண்டாக் மாட்டா; ஆதலால்‌ யாவும்‌ சூன்யம்‌ என்பதே தேறும்‌.'

தீர்வு : குடம்‌ இருப்பதாகச் சொல்லும் போது குடம்‌ 'என்ற அமைப்புடன்‌ இருக்கிறது என்பது தான் தேறும்‌; 
இல்லை எனில்‌ ஒட்டின்‌ அமைப்பில்‌ இருக்கிறது என்பதே வெளிப்படை. .
ஒரு நிலையில்‌ உள்ள்‌ பொருள்‌ வேறொரு நிலையில்‌ அமைவதே இல்லை என்ற சொல்லுக்குப்‌ பொருளாகக்‌ காண்கிறோம்‌. 
மண்‌ கட்டியின்‌ நிலையின்‌ அழிவே” ' குடத்தின்‌ உற்பத்தி ' எனக் கொள்ள வேண்டும்‌. 
கட்டி நிலையில்‌ உள்ள மண்‌ என்ற் திரவியம்‌ காரணப்‌ பொருளாகவும்‌, 
குட நிலையில்‌ இருக்கும்‌ அந்த மண்ணே காரியமா்கவும்‌'' கொள்கிறோம்‌. 
ஆதலால்‌ சூன்யமான்‌ ஒரு பொருளிலிருந்து' ஓரு பொருள்‌ உண்டாவதில்லை. ்‌

யாவும்‌ சூன்யம்‌ என்பதை ஒரு சான்றின்‌ மூலமே நிலை நிறுத்த வேண்டும்‌; 
அந்தச்‌' சான்று. 'உண்மையே என்று ஒப்புக் கொள்ள வேண்டும்‌." 
“இவ்வாறு ஒப்புக்‌ கொண்டால்‌ இந்தச்‌ சான்று" 'உண்மையாகின்ற்து:" 
ஆதலால்‌ “சூன்யம்‌” என்ற கருத்து 'இல்லை.' '
இத்தால் பொய்‌ என்றால்‌ எல்லாம்‌ சூன்யம்‌ என்றும் சான்றும்‌' பொய்யாகும் 
ஆகவே இவை உண்மை: என்பதே தேறும்‌, 
பல வகையில்‌ ஆராய்ந்தால் 'யாவையும் 'சூன்யம்‌ என்ற கொள்கை பொருந்தாது என்பது வெளிப்படை 

2. 6, ஜைநர்‌. மதம்‌. 
இவர்கள்‌ . ஒப்புக் கொள்ளும்‌ தத்வங்கள்‌ ஜீவன்‌; தர்மம்‌, அதர்மம்‌, காலம்‌, ஆகாசம்‌ என்பன, 
காலம்‌ அணுவான ஒரு திரவ்யம்‌; ஆகாசம்‌ அளவற்ற: வெளியிடம்‌. 
'இவை யாவும்‌ ஸப்த பங்கி நியாயத்திற்‌கு உட்பட்டவை. பொருள்கள்‌ யாவும்‌ இவ்வாறே. இந்த தியாயமாவது: 
பொருள்களின்‌ நிலை, (1) உள்ளது... (2) இல்லது, (3) உள்ளதும்‌ இல்லதும்‌, (4) உள்ளது, இல்லது என்றே சொல்லமுடியாது, 
(5) இல்லது, உள்‌ னது என்றே சொல்ல முடியாது, (6) இல்லது, உள்ள தென்றோ இல்லதென்றோ சொல்ல முடியாமல்‌ இருக்க லாம்‌, 
(7). உள்ளதும்‌.இல்லதும்‌, உள்ளதென்றோ இல்லது . என்றோ சொல்ல முடியாமல்‌ இருக்கலாம்‌. . , 
மறுப்பு; இது தர்க்க முறைக்கே ஒவ்வாதது; பொருள்கள்‌ உள்ளனவாகவும்‌ இல்லனவாகவும்‌, நித்ய மாகவும்‌ அநித்யமாகவும்‌, 
பின்னமாகவும்‌ முழூவனவாகவும்‌ ஒருபடிப்பட்டு இருக்கமாட்டாத முரணான தன்மைகள்‌. 
ஒரே காலத்தில்‌ ஓரே பொருளில்‌ அமைவதற்கில்லை, 
சர்க்கரையின்‌ தித்திப்பும்‌ உப்பின்‌ உவர்ப்பும்‌ ஒன்றி எவ்வாறு அமையும்‌?
இம் மதத்தினர்‌ ஆத்மாவைப்‌ பற்றி விசித்திரமான கஞத்து கொண்டுள்ளனர்‌. 
ஒரு சரீரத்துலுள்ள ஆத்மாவின்‌ பரிமாணம்‌ அந்த சரீரத்தின்‌ அளவைப்‌ பற்றியது, 
இந்தக்‌ கருத்தின்படி யானையின்‌ ஆத்மா மறு பிறவியில்‌ பூனையின்‌.சரீரத்தில்‌ புக இயலாது; 
பூனையின்‌ ஆத்மா பானையாகப்‌ பிறந்தால்‌, பானையின்‌ உடலில்‌ சிறிதளவு தான்‌ ஏற்கும்‌, 
முழுதும்‌ வியாபித்து அனுபவிப்பதற்‌கு இல்லை, 
இவ்வாறு ஆத்மா குறுகுவதும்‌ விரிவதும்‌ நேர்ந்தால்‌, இது மாறுபாடுடையது என்ற தோஷம்‌ நிகழும்‌
இதனால்‌ நிலையில்லை என்ற தோஷமும்‌ காணலாம்‌. 
ஆத்மாவுக்கு முக்தி நிலையில்‌ உள்ள பரிமாணமே நிலையானது, இயல்பானது, 
முக்தி திலையில்‌ வேறு சரீரம்‌ இல்லை, ஆதலால்‌ ஆத்மாவுக்கு இயல்பான பரி மாணத்தையே ஒத்துக் கொள்ள வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்தால்‌ ஜைந மதக்‌ கோட்பாடுகள்‌ ஏற்கத்‌ 
தக்கனவல்ல என்பது தேறும்‌. 
 
2.7. பாசுபத மதம்‌. 

பாசுபதர்‌ சைவ ஆகமத்தை ஆதரிப்பவர்‌, இவர்‌களது மதக்‌ கொள்கை 
ஈசனை அனுமானத்தின்‌ மூலம்‌ அறியவேண்டும்‌, உபநிஷத்துக்களால்‌ இல்லை. . 
இவன்‌ உலகுக்கு நிமித்த காரணம்‌; 
ப்ரக்ருதிதான்‌ உபாதான காரணம்‌, குலாலன்‌ மண்ணைக்‌ கொண்டு குடம்‌ செய்‌வது போல்‌ 
இவன்‌ உலகைப்‌ படைக்கிறான்‌. இவன்‌ சரீரம்‌ இல்லாதவன்‌. 
மறுப்பு: இம் மதம்‌ வேதத்திற்குப்‌ புறம்பானது; வேதங்கள்‌ நாராயணனே மூவகைக்‌ காரணமுமாவான்‌, 
இவனை மனனஞ்‌ செய்வதே மோக்ஷத்திற்குக்‌ காரணம்‌ என்கின்றன.

சிவன்‌ நிமித்த காரணன்‌ என்றால்‌ சரீரம் கொண்டல்‌லவோ படைக்க வேண்டும்‌? 
இவன்‌ படைப்பவன்‌ என்று அனுமானத்தால்‌ ஓத்துக் கொள்ள வேண்டும்‌. 
சரீரமில்‌லாத ஜீவன்‌ இந்த்ரியங்களை இயக்குவது போல்‌ சிவனும்‌ இயக்குகிறான்‌ எனக்‌ கொண்டால்‌, 
ஜீவனுக்கு இந்த நிலை புண்ய பாவ கர்மாவினால்‌ ஏற்பட்டுள்ளது போல்‌ இவனுக்கும்‌ ஏற்படும்‌ என்பது தேறும்‌. 
இது சரியன்று ஆதலால்‌ சாஸ்த்ரங்களாலே பகவானை ஏற்றுக் கொள்‌வது தான்‌ குறையேது மில்லாதது,
2. 8. பாஞ்சராத்ர ஆகமம்‌. 

பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தின்‌ சிறப்பை விவரிப்பது இப்பகுதி, இது பகவான்‌ நாராயணன்‌ அருளியது; 
(வேதங்களின்‌ சாரமாக பக்தர்களுக்கு இரங்கி வெளி விடப்பட்டது. 
மஹாபாரதத்தில்‌ மோஷ தர்மம்‌ ஞான காண்டத்தில்‌ வெளியிட்டுள்ளது; 
தயிரிலிகுந்து வெண்‌ணெய்‌ எடுப்பது போல் மஹா பாரதமான கடலை மத்தால்‌ கடைந்து இந்த சாஸ்த்ரம்‌ எடுக்கப்‌ பட்டது; 
மாந்தருள்‌ அந்தணர்‌ போலும்‌, வேதங்களில்‌ ஆரண்யகம்‌ போலும்‌, ஓஷதகளில்‌ அமுதம்‌ போலும்‌ சாரமாக விளங்குவது இந்த ஆகமம்‌. 
இதைப்‌ பதரிகாச்‌ர மத்தில்‌ நாராயணன்‌ நாரதருக்கு வெளியிட்டான்‌. 
இதில்‌ இரண்டு குறைகள்‌ கூறுவார்‌ சிலர்‌, 
கருத்துக்‌களை ஏற்றவாறு ஆராமையாலே. இந்த சாஸ்த்ரத்தில்‌ வாஸுதேவனிடமிருந்து ஸ்ங்கர்ஷணன்‌ என்னும்‌ ஜீவனும்‌, 
ஸங்கர்ஷணனிடமிருந்து ப்ரத்யும்நன்‌ என்ற மனமும்‌, ப்ரத்யும்நனிடமிருந்து அநிருத்தன்‌ என்ற அஹங்‌காரமும்‌ உண்டாவதாகக்‌ கூறியிருக்கிறது. 
ஜீவனுக்கு உற்பத்தி கூறுவது வேத வாக்கியங்களுக்கு முரண்பாடாகும்‌. 
இது பற்றிய தீர்வு: பகவான்‌ தன்‌. அடியார்களை அநுக்ரஹிப்பதற்காக இந்த வடிவங்களைத்‌ தனது விருப்பத்தால்‌ ஏற்றுக் கொள்கிறான்‌; 
இவ்வாறு ஏற்றுக்‌ கொள்வது அவதாரம்‌ போன்றது, 
மனம்‌ பரமாத்மாவிட மிருந்து உண்டாவதாக சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகின்‌றன; 
ஸங்கர்ஷணன் இடமிருந்து மனம்‌ என்பது உண்டாகின்றது என்பது முரண்பாடு என்பது இரண்டாவது குறை. 
பகவானே ஸங்கர்ஷணனாவதால்‌ இக் கருத்து ஏற்றுக் கொள்ளத்‌ தக்கதே, 
பல இடங்களில்‌ ஸங்கர்‌ ஷணன்‌ முதலானோர்‌ அவதாரமாகவே விவரிக்கப்‌ பெற்றுள்ளது. 
ஸாங்க்ய மதத்‌ தத்துவங்கள்‌ இருபத்தைந்து, 
யோகத்தில்‌ சொல்லப்‌பட்ட அஷ்டாங்க யோக க்ரமம்‌, வேதத்தின்‌ பூர்வ பாகத்தில்‌ விவரிக்கப்பட்ட கர்மங்கள்‌ 
இவற்‌றைப்‌ பாஞ்சராத்ரம்‌ ஒத்துக் கொள்கின்றது 
அஷ்டாங்க யோகம் ப்ரஹ்மத்தின் உபாஸந மூலமாக என்றும்‌, 
கர்மங்கள்‌ ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம்‌ என்றும்‌ ஆரண்யகங்கள்‌ கூறுகின்றன. 
இவை யாவும்‌ பகவானான நாராயணனாலே என்று, பாஞ்சராத்ரம்‌ தெளிவு படுத்துதின்றது. 
இது வேதத்தை முற்றிலும்‌ ஓட்டியிருப்பதால்‌ மிகச்‌ சிறந்த ப்ரமாணமாகும்‌. 
சுருக்கம்‌ 
பிற மதத்தினரது கொள்கைகள்‌. 
ஸுங்க்யர்‌ பகவானது அதிஷ்டானம்‌ இல்லாமலே அசேதனமான ப்ரதானம்‌ உலகமாக மாறுகிறது. 
நையாயிகர்‌, வைசேஷிகர்‌ அதிஷ்டிக்கும்‌ ஈச்வரன்‌ இருந்த போதிலும்‌ பரமாணுக்களே காரணமாக உலகம்‌ தோன்றுகின்றது. 
வைபாஷிகள்‌, ஸெளத்ராந்திகள்‌ : வெளிப்‌ பொருள்‌களே இல்லை, ஞானம்‌ ஒன்றே உள்ளது: 
யோகாசாரன்‌: வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகம்‌ என்‌பது கூடப்‌ பொருந்தாது, ஞானமும்‌ க்ஷணிகம்‌. 
மாத்யமிகன்‌ : ஷணிகமாகக் கூட எப்பொருளும்‌ இல்லை; யாவும்‌ சூன்யம்‌. 
ஜைனர்‌ : காரிய காரண ரூபத்தால்‌ உலகம்‌ நித்யமாகவும் அநித்யமாயும்‌,பின்னமாயும்‌ அபின்னமாயும்‌, ஸத்யமாயும்‌ அஸத்யமாயும்‌ இருக்கும்‌. 
ஆத்மா தனது கர்மாநுகுணமாக ஏற்கும்‌ சரீரத்தனவு உள்ளது. 
பாசுபதன்‌। உலகுக்கு உபாதான காரணம்‌ பரமாணுக்கள்‌; ஆகமத்தால்‌ அறியப்படும்‌ ஈச்வரன்‌ நிமித்த காரணம்‌. 
ஸம்ஸரரம்‌ ஆகமத்தில்‌ கூறியவாறு கர்மானுஷ்டங்களாலே பசுபதி ஸாரூப்பம்‌, மோக்ஷம்‌. 
பாஞ்சராத்ரம்‌ வேதத்தை ஒட்டியிருப்பதால் , வேதத்தைப்‌ போல்‌ முற்றிலும் ப்ரமாணமாகும்‌. 
மற்‌ற சமய மதங்களிலுள்ள குறைகள்‌ யாதும் இதுக்கு இல்லை .
------------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

புறச்‌ சமயங்களான ஸாங்கீய மதம்‌, யோக மதம்‌ போல்வன யுக்திக்குப்‌ புறம்பானவை, 
இவற்றிற்குண்‌டான் தோஷங்கள்‌ வேதாந்த மதத்தில்‌ இல்லை என்று காட்டுவன மூன்றாம்‌ பாதமும்‌ நாலாம்‌ பாதமும்‌.. 
உலகுக்‌ கெல்லாம்‌ காரணமான ப்ரஹ்மத்
தின்‌ காரியப்‌ பொருள்களாவன சேதன அசேதனங்கள்‌, இவ்வாறு காரியமாகும்‌ வகை விசாரிக்கப் படுகிறது, 
ஆகாசம்‌, ஆத்மா, இந்த்ரியங்கள்‌ இவற்றிற்கு இயல்பான விகாரங்களை விளக்க வ்யாஸர்‌ 
இவை ப்ரஹ்மத்தாலே இயங்குகின்றன என்கிறார்‌ இந்தப்‌ பாதத்தில்‌. இது வியுத்‌ பாதம்‌.

3. 1. ஆகாசம்‌ : 
ஆகாசம்‌ அவயவ மில்லாதது; அவாயவமில்லாத ஆத்மாவைப்‌ போல்‌ இதுவும்‌ ஒரு காரியப்‌ பொருளாகாது. 
சாந்தோக்யத்தில்‌, '*'ததைகஷ்தபஹாுஸ்‌ யாம்‌ ப்ரஜாயேய”' (6-8-3) என்ற இடத்தில்‌ படைப்‌பைச்‌ சொல்லும் போது 
ஆகாயத்திலிருந்து உற்பத்தி கூறாமல்‌ தேஜஸ்‌ முதலாக உற்பத்தி கூறியிருக்கிறது. 
அன்றியும்‌ ப்ருஹதாரண்யத்தில்‌, '*வாயுச்‌ ச அந்தரிக்ஷம்‌: ச ஏததம்ருதம்‌''--வாயு, ஆகாசம்‌ இரண்டும்‌ விநாசமற்றவை என்று வந்துள்ளது; 
ஆகாசம்‌ அழிவில்லை எனில்‌ உற்பத்தியும்‌ இல்லை என்பது ஊகிக்கக்‌ கூடும்‌. இது ஒரு கருத்து. 
விளக்கம்‌ : 
தைத்‌ரயத்தில்‌, '*ஆத்மந ஆகாச: ஸம்‌: பூத (ஆந), ஆகாசம்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டா” யிற்று என்பது வந்துள்ளது. 
ஆகாசம்‌ அவயமற்றது என்‌பதைக்‌ கொண்டு உற்பத்தி இல்லை என்று தீர்மானிப்‌ பதற்கில்லை; 
ச்ருதி வாக்யமே ஆதாரம்‌. ஆதலால்‌ ஆகாசத்திற்கு உற்பத்தி உண்டு.
காரணமான மண் கட்டியைப்‌ பற்றிஅறித்தால்‌ காரியப்‌ பொருள்களைப்‌ பற்றி அறியக்கூடும்‌ என்ற இடத்‌தில்‌.
ப்ரஹ்மத்தை அறிந்தால்‌ அவனது காரியப்‌ பொருளான ஆகாசம்‌ முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்‌ என்றறிகிறோம்‌. 
ஆகாசம்‌ காரியப்‌ பொருளுக்கு உறுப்பாக காட்டிலும்‌ முன்பே பகவான்  இருக்க வேண்டும்‌, :
*அந்தரிஷம்‌ ச அம்ருதம்‌'” ஆகாசம்‌ (அழிவில்லாதது)என்பதன்‌ கருத்து, நீண்ட காலம்‌ இருப்‌பது என்பதே. 
அமரர்கள்‌ என்றால்‌ நெடுங்‌ காலம்‌ வாழ்வு என்பது போலே உற்பத்தி யின்மை பரம்பொருளுக்கே; 
மற்றவைகளுக்கு ஒருபடியாலும்‌ இது ஒவ்வாது.

3. 2. அக்நி, ஜலம்‌, பூமி. 

“வாயோ ரக்நி:'”, :*அக்நே ராப:'', '*அத்ப்ய: பருத்வீ'”“--வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்தியிலிருந்து ஜலமும்‌, 
ஜலத்திலிருந்து ப்ருத்வீ (பூமி)யும்‌ உண்டாயின என்பன உபதிஷத்‌ வாக்கியங்கள்‌. 
அன்றியும்‌ பரம்பொருளிலிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, ஆகாசம்‌ வாயு, தீ , நீர்‌ யாவும்‌ உண்டாகின்றன என்றும்‌ வந்துள்‌ளது. 
ஆகையால்‌ அக்நி, ஜலம்‌, பூமி இவற்றின்‌ படைப்பு: பரமாத்மாவிடமிருந்து நேராக அல்லாமல்‌ 
முப்பாட்‌டன்‌, பாட்டன்‌, அப்பன்‌ என்பது போல்‌ பரம்பரையா வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
சாந்தோக்யத்தில்‌ (6,2-2,4) "நான்‌ பலவாகக்‌ ௧டவேன்‌” என்று தேஜஸ்ஸும்‌, நாங்கள்‌ பலவாக ஆகக்‌ கடவோம்‌'” என்று அப்புகளும்‌ (நீர்‌) சங்கல்பித்ததாகவும்‌ காண்கிறோம்‌. 
அசேதனப்‌ பொருள்கள்‌ சங்கல்பிக்க இயலாது. ஆதலால்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே சங்கல்பித்ததாகக்‌ கருதவேண்டும்‌. 
**யஸ்ய ப்ரூத்வீ சரீரம்‌'' என்று தொடங்கிக்‌ காரியப்‌ பொருள்‌கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்குச்‌ சரீரம்‌ என்பதால்‌ இக்‌. கருத்து ஏற்கத்தக்கது. 
'*ததநுப்ரவிச்ய ஸச்ச தயச்சா பவத்‌” அதை வியாபித்து ப்ரஹ்மம்‌ சேதனங்களாகவும்‌. அசேதனங்களாகவும்‌' ஆயிற்று, இது தைத்திரியம் 
பொருள்கள்‌ இவற்தைச் சொல்லும்‌'பதங்கள்‌ தேஜஸ்‌, வாயு , அக்நி, போலக்‌ ப்ரகாரியான பகவாளையே குறிப்பன. 
ஆதலால்‌ ஆகாசம்‌, அக்நி , வாயு, ஜலம்‌, பூமி, யாவும்‌ பகவானாலேயே படைக்கப்‌ பெறுவன.
3, 3. ஜீவ உற்பத்தி உண்டா? 

ஆகாசம்‌, தேஜஸ்‌ போன்ற ௮சேதனப்‌ பொருள்கள்‌ தங்களது பரிமாணம்‌ மாறும்‌ இயல்புடையன; 
இவை பகவானாலே படைக்கப்பெறுவன என்பது விளக்கப்‌ பட்டது. 
இவை தனது போகத்திற்காக ஏற்ற ஜீவாத்மாவும்‌ பகவானுக்குக்‌ காரியப்‌ பொருளா? இதற்கு உத்பத்தி உண்டா? என்பது இப்போது ஆராயப்படுகிறது. 
“ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்‌'" என்ற ச்ருதியில்‌, ப்ரஹ்மம்‌ ஒன்றே முதலில்‌ இருத்தது என்றும்‌, 
“ தாயேத ஜீவாந்‌ வ்யஸஸர்ஐ பூம்யாம்‌''--பஞ்ச பூதங்களோடு ஜீவனைப்‌ படைத்தான்‌ என்றும்‌, 
*“யதோவா இமாநி தாதி ஜாயந்தே''-எவனிடமிருந்து இந்த பூதங்கள்‌ உண்டாகின்றனவோ என்றும்‌ ஜீவனுக்கு. உற்பத்தி கூறப்‌படுகிறது. 
ஆதலால்‌ அசேதனங்களைப்‌ போல்‌ ஜீவர்‌களும்‌ படைக்கப்பட்டவர்களே என்பது ஊூகிக்கலாம்‌.. 
இது இந்த சங்கைக்கு ஆதாரம்‌.

விளக்கம்‌ : ஜீவர்களைப்‌ பற்றிய ச்ருதி வாக்கியங்கள்‌ ; 
(ந ஜாயதே ம்ரிய்தே வா விபச்சித்‌”- அறிவுடைய ஜீவன்‌ பிறப்பதில்லை, இறப்பதில்லை. 
*அனைத்தும் அறித்த பகவானும்‌ அறிவிலியான ஜீவனும்‌ பிறப்பில்லாதவர்‌கள்‌!”, 
“*நித்யர்களான பல ஜீவர்களுக்கு பகவான்‌ விருப்‌பங்களை அளிக்கிறான்‌... .
இந்த ஜீவன்‌ சரீரம்‌ அழியும்‌ போது அழிவதில்லை,”” 
இவை ஜீவனுக்குப்‌ பிறப்பே இல்லை என்பதைத்‌ தெள்ளத்‌ தெளிவாகக்‌' கூறுகின்றன. _.. 
ஓரு சங்கை: 
உற்பத்தியே இல்லாத ஜீவன்‌ பகவானால் எவ்வாறு காரியப்‌ பொருள்‌ ஆவான்‌ 
விளக்கம்‌ : காரியமாகுந்‌ தன்மை என்பது-ஒரு பொருள்‌ வேறொரு நிலையில்‌ இருப்பது. 
அசேதனங்கள்‌ காரியமாகும் போது அவற்றின்‌ இயல்பான தன்மை மாறுகிறது. 
ஜீவனுக்கு 'இயல்பான தன்மைகள்‌ ஞானம்‌, ஆனந்தம்‌ போல்வன மாறுவதில்லை; 
இவை சுருங்குவதும்‌ விரிவதுமான தன்மையே 'ஏற்படுகிறது. _ 
ஒரு சங்கை : படைப்பிற்குமுன்‌ பகவான்‌ ஒருவனே இருந்ததாகப்‌ பல இடங்களில்‌ ச்ருதிகள்‌ கூறுகின்றனவே... ஜீவனது நிலை என்ன? 
சேதன அசேதனங்கள்‌ யாவும்‌. பகவானுக்குச்‌ சரீரம்‌. ப்ரளய காலத்தில்‌ இவை மிகவும்‌ நுண்ணிய நிலையில்‌ உள்ளன? 
படைப்பிற்குப்‌ பிறகு நாம ரூப முடையனவாக விளங்குகின்றன. 
ஜீவனுக்கு உற்பத்தியைக்‌ கூறும்‌ ச்ருதிகள்‌, இவனுக்குச்‌ சரீரத்தோடு உண்‌டாகும்‌ நிலையைப்‌ பிறப்பென்றும்‌, 
சரீரத்தை விட்டு நீங்குவது இறப்பென்றும்‌ கருத்துக்களாக வெளியிடுகின்‌றன. 
ஆதலால்‌ அசேதனப்‌ பொருள்கள்‌ போலே ஜீவனுக்கு உற்பத்தியில்லை; ஜீவன்‌ நித்தியமானவன்‌.
3. 4. ஜீவன்‌--ஞானம்‌. 

ஜீவனது ஞானத்தைப்‌ பற்றிச்‌ சிலர்‌ கருதுவன: 
(1) “விஜ்ஞானம்‌ யஜ்ஞம்‌ தநுதே''-ஞான ஸ்வபாவனான ஜீவன்‌ யாகம்‌ செய்கிறான்‌; 
“யோ விஜ்ஞாநே இஷ்ட்டந்‌"- எவன்‌ ஞான ஸ்வரூபத்தில்‌ நிற்கிறானோ என்று ஞானம்‌ ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகக்‌ கூறப்படுகிறது; 
ஆனால்‌ குணமாகக்‌ கூறப் பெறவில்லை. .... 
(2) தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலையில்‌ அறிவு காணப் படுவதில்லை; 
விழித்திருக்கும்போது அறிவு இத்த்ரியங்களுக்கு வசப்பட்டுள்ளது. ஆதலால்‌ ஜீவ னுக்கு இயற்கையாக அறிவில்லை. 
(3) உலகில்‌ ஜீவனுக்குக்‌ காரியம்‌ எங்கும்‌ உண்டு. ஆதலால்‌ இவன்‌ எல்லா இடங்களிலும்‌ எல்லாக்‌ காலத்‌திலும்‌ தோன்ற வேண்டும்‌: 
இந்த்ரியங்களையும்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. 
இதனால்‌ குறைகள்‌ நேராதவாறு அவன்‌ கல்லைப்‌ போல்‌ ஜடப்பொருள்‌ என்றும்‌, 
அறிவு தோன்றி மறையும்‌ இயல்புடையது என்றும்‌ கருத வேண்டும்‌.

மறுப்பு : ப்ரச்ந உபநிஷத்தில்‌ (6-5) ஞானஸ்வ ரூபனான ஜீவன்‌ காண்பவன்‌, கேட்பவன்‌, முகர்பவன்‌, சுவைப்பவன்‌, 
நினைப்பவன்‌, அறிபவன்‌, செய்பவன்‌ என்று விளக்கமாகக்‌ காட்டப்பெற்றுள்ளது. 
ஆதலால்‌ ஜீவன்‌ ஞானத்தை குணமாக உடையவன்‌ என்பது தேறுகின்றது. 
ஜீவன்‌ ஜட ஸ்வரூபன்‌ என்பது தவறு. பத்த நிலையிலும்‌ முக்தி நிலையிலும்‌ இவன்‌ அறிய வல்லவன்‌. 
இவ்வாறு அறிவுடைமையால்‌ இவன்‌ எங்கும்‌ வியாபித்து யாவும்‌ அறிந்துகொள்கிறான்‌. 
சங்கை 1: ஜீவன்‌ அணு மயம்‌, இவன்‌ சரீரத்தில்‌ ஒரிடத்தில்‌ இருந்து கொண்டு சரீரத்தின்‌ அனுபவங்கள்‌ யாவையும்‌ எப்படிப்‌ பெறமுடியும்‌? 
தீர்வு: உடம்பில்‌ ஓரிடத்தில்‌ பூசிக் கொள்ளும்‌ சந்தனம்‌ எங்கும்‌ மணத்தைப்‌ பரப்புகின்றது. 
இதே போல்‌ ஜீவன்‌ நிலை. இது இதயத்தில்‌ இருந்துகொண்டு சூரியனின்‌ கிரணங்கள்‌ போல்‌ எங்கும்‌ வியாபிக்கும்‌ இயல்புடையது. 
சங்கை 2: ச்ருதிகளில்‌ ஜ்ஞானம்‌ .ஜீவனுக்கு ஸ்வரூப மாகச்‌ சொல்லப்படுகிறது. இது குணம்‌ என்பது எவ்வாறு? 
தீர்வு. பூமி மணமுள்ளது; இந்த இயல்பைக்‌ குணமாகக்‌ கருதுகிறோம்‌; 
இந்தப்‌ பண்பை பூமியிலிருந்து பிரித்து அறிவதற்காக மணம்‌ என்றே கூறுகிறோம்‌, 
ஆனந்த மயனான பகவானை ஆநந்த்தன்‌ என்றே சொல்லுகிறோம்‌. ஆதலால்‌ ஜீவனுக்கு அறிவு குணமாகக்‌ கருதப்படும்‌, 
இதனாலேயே ஜீவனை ஜ்ஞாதா என்‌கிறோம் . 
தூக்க நிலையை ஆராய்வோம்‌. இந் நிலையில்‌ ஞானம்‌ வெளியில்‌ தோன்றுவதில்லை; விழித்த பின்‌ 'தோன்றுகிறது. 
புருஷனுக்கு இயற்கையாக வாய்த்த ஆண்மை முதலியன தக்க பருவத்திலே தான்‌ வெளிப்படுகின்றன. 
இது போலவே தூக்கத்திலும்‌ விழிப்பிலும்‌ ஞானத்தின்‌ நிலை. 
எங்கும்‌ எக்காலத்திலும்‌ அறிவு பயன்படாமைக்குக்‌ காரணம்‌ அறிவின்‌ குறைவன்று, இந்த்ரியங்களைக்‌ கொண்டே அறிவு இயங்குகிறது. 
இவை பயன்படும்‌ காலத்திலும்‌ இடங்களிலும்‌ ஆத்ம ஞானம்‌ பெறும்‌. 
ஆதலால்‌ ஆத்மா இயல்பான ஞானம்‌ வாய்ந்தது தன்னையும்‌ பகவானையும்‌ அறிய வல்லது, 
இந்த ஞானம்‌ குணமுமாகும்‌.
3.5. ஜீவன்‌ கர்த்தாவா? 
.கடவல்லியில்‌ (28-19) ஒரு கருத்து; ஒருவனைத்‌ துன்‌ புறுத்துபவன்‌ உண்மையில்‌ துன்புறுத்துபவன்‌ அல்லன்‌-
துன்பப்படுபவன்‌ துன்பமுறுபவன்‌ அல்லன்‌ என்று ஜீவாத்‌ மாவுக்கு உண்மையில்‌ ஒரு செயலால்‌ செயல்படுவது இல்லை என்று கூறியிருக்கிறது. 
கீதையில்‌ பகவான்‌ (4.27.]) அஹங்காரத்தால்‌ மறைக்கப்படும்‌ ஆத்ம ஸ்வருபமுடையவன்‌ செய்யப்படும்‌ செயலைக்‌ குறித்து, 
“நான்‌ செய்பவன்‌” என்று மயங்குகிறான்‌ என்று கூறியிருக்க இரான்‌, (
19-20) சரீர இந்த்ரியங்கள்‌ செயல்‌ புரிவதில்‌ ப்ரக்ருதியே காரணம்‌, ஆதலால்‌ செயல்படுவது ஜீவனுக்கு இல்லை, 
ப்ரக்ருதிக்கே என்பது ஒரு கருத்து. 
மறுப்பு : துன்புறுத்துபவன்‌ துன்புறுபவன்‌ என்ற சொற்கள் ஆத்மா நித்யம்‌ என்ற கருத்தைக்‌ கூறும் போது வத்துள்ளன. 
கீதையில்‌ கூறப்பட்ட ச்லோகத்தில்‌ வரும் கருத்து: ஜீவன்‌ செயல்படும்‌ முயற்சிகள்‌ சரீரத்திலுள்ள முக் குணங்களின்‌ சேர்க்கையாலே என்று. 
கீதையில்‌, 1*அதிஷ்டாநம்‌'” என்ற ச்லோகத்தில்‌ (18-14), சரீரம்‌, கர்த்தாவான ஜீவன்‌, 
மனத்துடன்‌ கூடிய இத்த்ரியங்கள்‌, ப்ராணன்கள்‌, பரமாத்மா என்ற ஐந்தும்‌. 
காரியங்களுக்குக்‌ காரணம்‌ என்று காண்கிறோம்‌. 
சாஸ்த்ரங்கள்‌ ஜீவனுக்கு உபாஸநம்‌ முதலான செயல்‌களை விதிக்கின்றன. 
அரசன்‌ தன்‌ குடிகளுடன்‌ காட்டில்‌ விருப்பப்படி சஞ்சரிப்பது போல்‌ ஜீவன்‌ இந்த்ரியங்களைப்‌ பற்றிக்கொண்டு 
சரீரத்தில்‌ சஞ்சரிக்கிறான்‌ என்பது ப்ரஹதாரண்யத்தில்‌ வந்துள்ளது (4-4-28]. 
இனி ப்ரக்ருதி கர்த்தாவாகாது என்பது எளிதில்‌ அறியக்கூடும்‌. 
ஒரு செயலைச்‌ செய்பவனே அதன்‌ பலனை அனுபவிப்பான்‌ என்பது சாஸ்த்ரம்‌. 
ப்ரக்ருதி செயல்படுமானால்‌ அது செயலின்‌ பயனை அனுபவிக்குமா?' புத்தியும்‌ கர்த்தாவாகாது. 
மர வேலைக்காரன்‌ தன்னிடம்‌ வேலைக்கான உபகரணங்கள்‌ வைத்துக்‌ கொண்டிருந்தாலும்‌ தான்‌ விரும்பும் போது தான்‌ வேலை செய்கிறான்‌. 
இது போல்‌ இந்த்ரியங்கள்‌ உபகரணங்க ளாயினும்‌,ஜீவன்‌ தான்‌ விரும்பும்போதுதான்‌ செயல்படு கிறான்‌. 
அசேதனமான புத்தி கர்த்தாவானால்‌ அதற்கு விருப்பம்‌, விரும்பாமை இவை வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்து ஜீவனே செயல்களுக்குக்‌ காரணம்‌, இவற்றின்‌ பயனை இவனே அனுபவிக்கிறான்‌ என்பது தேறுகின்றது.
5. 6. செய்விப்பவன்‌ பரமாத்மா. 

சாஸ்த்ரங்கள்‌, **இதைச் செய்‌'*, * இதைச்‌ செய்யாதே” என்று விதிக்கன்றன. 
இதனால்‌ ஜீவனே செய்பவன்‌ அவனது இச்சைப்படி செய்பவன்‌ என்பது ஒரு கருத்து. 
சாஸ்த்ரங்களை ஆராய்ந்தால்‌ ஜீவனுக்கு அத்தர்யாமியாகி பகவான்‌ செயல்கள்‌ செய்விக்கிறான்‌ என்று அறியலாகும்‌. 
இதே கருத்து கீதையில்‌ வந்துள்ளது:
தான்‌ அந்தர்‌ யாமியாகி அவரவர்களது குணத்திற்கேற்ப இயங்கச் செய்கிறான்‌ என்று. ஆதலால்‌ ஜீவன்‌ செய்வன யாவும்‌ பகவான்‌ செய்விப்பதாலே. 
சங்கை : செயல்சுளைச்‌ செய்விப்பவன்‌ பகவானே எனில்‌, யாவரும்‌ நல்ல செயல்களே செய்யுமாறு இவன்‌ ஏன்‌ விரும்பக்கூடாது? 
தீயன செய்வித்து இவன்‌ ஏன் துன்புறுத்த வேண்டும்‌? 
விளக்கம்‌ : கர்மங்களின்‌ பயன்‌ அனுபவித்தே தீரும்‌ என்கின்றன சாஸ்த்ரங்கள்‌. இந்த விதிக்கு லிலக்கே இல்லை. 
நாம்‌ செய்வன யாவும்‌ முன்னைப்‌ பிறவிகளில்‌ சேர்ந்த கர்ம பலனுக்குக்‌கு ஏற்கவே, நமக்கென நன்னெறியையும்‌ இவன்‌ அருளியிருக்கிறான்‌. 
ஆதலால்‌ ஜீவன்‌ கார்மாவைச்‌ செய்யும்போது முதற்‌ கணம் பகவான்‌ இதில்‌ சம்பந்தப்படுவதில்லை. 
இச் செயல்கள்‌ தொடரும் போது இவன்‌ செய்விக்கிறான்‌.
4. 7, ஜிவன்‌-- பகவான்‌ தொடர்பு. 

ஜீவன்‌ செய்வன பகவானுக்கு அதீனமென்று விளக்‌ கப்பட்டது. 
ஜீவன்‌ பகவானுக்கு அம்சம்‌ என்பது இப்‌போது நிர்வஹிக்கப் படுகறது' 
ஜீவன்‌--ப்ரஹ்மா இவர்‌களது தொடர்பு பற்றி மூன்று மதத்தினரது கருத்து: 
(1) த்வைதம்‌: :*ஜ்ஞாஜ்ஜெள தவாவஜாலீச நீசெள'' (ச்வேதா 7-9): ஈச்வரன்‌ ஸர்வஜ்ஞன்‌, நியமிப்‌ பவன்‌; 
ஜீவன்‌ அஜ்ஞன்‌, நியமிக்கப்படுபவன்‌. 
இதனால்‌ ஜீவன்‌ பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. 
(2) அத்வைதம்‌ : **ததீவமஸி', “அயமாத்மா ப்ரஹ்மா”” என்பன போன்ற ச்ருதிகளால்‌ தேறுவது? 
ஜீவனும்‌ ப்ரஹ்மமும்‌ ஒன்றே என்பது, 
(3) பேத--அபேதவாதிகள்‌. ச்ருதிகள்‌ சில ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேதம்‌ சொல்லுகின்றன இவை 
பேத ச்ருதிகள்‌; ஒற்றுமை சொல்லுகின்றன; 
இவை அபேத ச்ருதிகள்‌. அபேத ச்ருதிகளை ஆதாரமாகக்‌ கொண்டு 
உண்மையான உபாதியினாலே ப்ரஹ்மம்‌ ஜீவர்களாகத்‌ தோன்றுகின்றது என்பது தேறும்‌. 
உபாதி என்று கருதப்படுவது பேத ச்ருதிகளால்‌ ஒருவாறு தேறும்‌ என்றே கருத வேண்டும்‌. 
ஆத்மாவைப்‌ பற்றி இவர்கள்‌ கூறுவது: இது பகவா னின்‌ ௮ம்சமாகாது. 
அவயவம்‌ இல்லாத பகவானைப்‌ பகுதி பகுதிகளாகப்‌ பிரிக்க முடியாது. 
அன்றியும்‌ இவன்‌ பகவானின்‌ அம்சமானால்‌ இவனது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேரும்‌. 
விளக்கம்‌ : “யஸ்ய ஆத்மா சரீரம்‌'' என்று ச்ருதிகள்‌ சொல்லுகின்றன. 
சரீரம்‌ என்பது ஆத்மாவுக்கு நிரூபகமான அடைமொழி. 
இதுபோல்‌, ஜீவன்‌ பகவானை விட்டுப்‌ பிரியாதவனாகி, இத்தகைய அடைமொழியாகி அதன்‌ ௮ம்சமாகிறான்‌. 
ஜீவர்களுக்கும்‌ பகவானுக்கு முள்ள வித்தியாசங்கள்‌ யாவும்‌ பேத ச்ருதிகளில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. ஆதலால்‌ ஜீவன்‌ பகவானின்‌ அம்சம்‌. 
சரீரத்தின்‌ தோஷங்கள்‌ ஆத்மாவைச்‌ சாரா. இதுபோல்‌ ஜீவனின்‌ தோஷம்‌ பகவானிடம்‌ அணுகமாட்டா. 
ஜீவன்‌ பகவானுக்கு சரீரம்‌; பகவான்‌ சரீரி, 
அக்நிக்கு ஒளி போல்‌ பகவானின்‌ சக்தியே இவ்வுலகில்‌ எங்கும்‌ பரவுகின்றது என்று விஷ்ணு புராணம்‌ போன்ற புராணங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானுக்கு விசேஷணம்‌--அடை மொழி; ஆதலால்‌ பகவானை விட்டுப்‌ பிரிவதில்லை. 
சங்கை: ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ அம்சம்‌ எனில்‌ அந்தணர்‌, அல்லாதார்‌ என்ற வேறுபாடு எதற்கு? 
விளக்கம்‌ : இப் பாகுபாடு அவரவர்களது நிலையைப்‌ பற்றியது. 
அந்தணன்‌ வேதம்‌ ஒதுவதால்‌ ' தூயோன்‌; இதனால்‌ இவனுக்கு ஏற்றம்‌. 
நெருப்பு ஒன்றேயாயினும்‌ ஓமத்திற்கான நெருப்புக்கும்‌ இடுகாட்டில்‌ இருக்கும்‌. நெருப்புக்கும்‌ வித்தியாசம்‌ போல்‌ இதனையும்‌ கருத வேண்டும்‌. 
முதற்‌ பாதத்தின்‌ தொடர்பு மூன்றாம்‌ பாதம்‌. 
முதற்‌: பாதத்தில்‌ பகவான்‌ மூவகைக்‌ காரணமாவான்‌ என்பது நிரூபிக்கப்பட்டது. 
இந்தப்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப் பெறுவன என்‌பது விளக்கப்படுகின்றது. 
ஆகாசம்‌, வாயு, அக்நி, ஐலம்‌, பூமி இவை பகவானாலேயே படைக்சுப்படுகின்‌றன. 
ஆகாசத்திலிருந்து வாயுவும்‌, வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்நியிலிருந்து ஜலமும்‌, ஜலத்திலிருந்து பூமியும்‌, இவன்‌ படைத்தவை. 
காரியப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்கின்றன உபநிஷத்துக்கள்‌. 
இவற்றைச்‌, சரீரமாகக்‌ கொண்டு இவன்‌ அந்தர்யாமியாகி இவற்‌றுள்‌ உறைகன்றான்‌ என்கின்றன சில உபநிஷத்துக்கள்‌., 
ஆதலால்‌ காரியப்‌ பொருள்‌ யாவும்‌ பரமாத்மாவிட மிருந்தே உண்டாகின்றன. ஜீவன்‌ பரமாத்மாவின்‌ அம்சம்‌; 
இதனால்‌ பரமாத்மாவோடு ஒன்றிவிடுகிறான்‌ என்பது தவறு. 
இவன்‌ வேலைக்காரனைப்‌ போல என்ற கருத்தும்‌ ஏற்பதற்‌ கில்லை. 
பகவானுக்கு அதீனமான ஞானம்‌ ஜீவனுக்கும்‌ உண்டு; 
பகவானால்‌ இவன்‌ தன்‌ செயல்களைச்‌ செய்கிறான்‌, இவன்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌; நித்யமானவன்‌, 
இவனிடமுள்ள தோஷங்கள்‌ , பகவானிடம்‌, அணுக மாட்டா-
----------------
4. நாலாவது பாதம்‌ 

மூன்றாம்‌ பாதத்தின்‌ சுருக்கம்‌ : 
மாறுபாடே இயல்‌பான அசேதனங்கள்‌,' நித்யமான' சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப்பட்டன; 
பகவானா லேயே நியமிக்கப்‌ பெறுவன, 
ஜீவனுடைய போகத்திற்‌கான உபகரணங்கள்‌ ப்ராணனும்‌ இந்த்ரியங்களும்‌, 
இவையும்‌ பகவானாலே படைக்கப்‌ பெறுவன என்பது இந்தப் பாதத்தில்‌ விளக்கம்‌ பெறுகின்றது. 
முக்ய ப்ராணனைத்‌ தவிர மற்றைய நாலும்‌ இந்த்ரியங்கள்‌. 
ஆதலால்‌ இந்தப்‌ பாதத்தின்‌ தலைப்பு ப்ராண பாதம்‌ என்பது,
4, 1. இந்த்ரியங்கள்‌. 

வேத வாக்கியங்கள்‌ வெளியிடுவது: ப்ரளய காலத்தில்‌ பரமாத்மா ஒருவனே இருந்தான்‌ என்று. 
முண்டக உப திஷத்‌ கூறுவது (2-7-3); பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ உண்டாகின்றன. 
இவை நித்யம்‌ என்று ஒரு வேத வாச்கியமும்‌ இல்லை, 
அன்றியும்‌ பகவான்‌ உலகைப்‌ படைத்து நாம ரூபங்கள்‌ செய்வதாகக்‌ கருதுகிறோம்‌; 
இவனைத்‌ தவிர மற்றைப்‌ பொருள்களைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ படைப்பிற்குப்‌ பிறகே வழங்குகின்றன, 
ஆதலால்‌ ப்ராணன்‌, இத்த்ரியங்‌கள்‌ இவை நித்யமல்ல, ஈச்வரானாலே படைக்கப்‌ பெறுவன. 
இந்த்ரியங்கள்‌ பதினொன்று: ஐந்து ஞானேந்த்ரியங்‌கள்‌, ஐந்து கர்மேந்த்ரியங்கள்‌, மனம்‌ என்பன.
ஞானேந்த்‌ரியங்கள்‌: மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி; 
கர்மேந்த்ரியங்கள்‌. வாக்‌ (பேசுவதற்கு), கை, கால்‌, பாயு (மல மூத்ரங்கள்‌ கழிவதற்காக), ௨பஸ்தம்‌ (இனம் பெருக்க )

“ப்ராணா வாவ ௬ஷமய:'' என்ற வாக்கியத்தில்‌ ப்ராணா: என்ற பன்மை இந்த்ரியங்களைக்‌ குறிக்கும்‌ என்கின்றனர்‌ இவர்‌. 
எல்லாம்‌ அழிந்த பின்பு பகவானே இருப்பதால்‌ ப்ராணா: என்ற பதம்‌ குறிப்பது பகவானையே . 
'“ஸர்வாணி ஹவா இமாநி பூதாதி ப்ராணமே வாழி ஸம்‌ விசந்‌தி '” 
(ப்ரளய காலத்தி ல்‌) பூதங்கள்‌ யாவும்‌ பிராணன்‌ எனப்‌ பெறும்‌ பரமாத்மாவினுள்‌ லயிக்‌கின்றன. 
ஆதலால்‌ ஆகாசாதிகள்‌ போலே இத்த்ரியங்‌களும்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டாகின்றன என்பது திண்ணம்‌.
4, 2. இந்த்ரியங்களின்‌ பரிமாணம்‌. 

ஜீவனது மரண தசையில்‌ ப்ராணன்கள்‌ எனப்‌ பெறும்‌ இந்த்ரியங்கள்‌ வெளியேறுகின்றன. 
ஆதலால்‌ இவை விபுவாக இருக்க முடியாது. இவை அணு பரிமாண முள்ளவை.
4, 3; முக்ய ப்ராணன்‌. 

ப்ராணன்‌ ஐவகைத்‌ தொழில்‌ புரிகின்றது; 
இத்‌ தொழில்களுக்கேற்ப இது ப்ராணன்‌, அபானன்‌, வயா னன்‌, உதானன்‌, ஸமானன்‌ என்ற பேர்கள்‌ பெற்றுள்ளது. 
இதற்கு முகிய ப்ராணன்‌ என்று பெயர்‌. 
முண்டக உப நிஷத்‌ வாக்கியம்‌ ஒன்று: இந்த பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, 
ஆகாசம்‌ முதலான ஐந்து பூதங்கள்‌ உண்டாகின்றன என்பது. -ஆதலால்‌ ப்ராணன்‌ வாயுவாகாது. 
ஜீவனுக்குப்‌ பயன்படுவன கண்‌ முதலான இந்த்ரியங்கள்‌ உபகரணங்களாக, 
இவற்றுடன்‌. ப்ராணனும்‌ இணைந்து கூறப்படுகின்றது. 
முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரிக்கின்றது. 
ஆதலால்‌ இதுவும்‌ கண்‌ முதலியன போலே ஜீவனுக்கு உபகரணமாகும்‌. 
இதுவும்‌ பகவானாலேயே படைக்கப் பெறுவது,
4, 4. இந்த்ரியங்கள்‌-- தேவதைகள்‌. 

உபநிஷத்‌ ஒன்று வெளியிடுவது; அக்நி: தேவதை வாக்கை அதிஷ்டித்து (தலைமை ஏற்று) முகத்தில்‌ துழைகின்றது. 
வாயு தேவதை முக்ய ப்ராணனை அதிஷ்‌டிக்கின்றது; மூக்கில்‌ நுழைகின்றது. 
இவ்வாறு இந்த்ரியங்களை தேவதைகள்‌ : அதிஷ்டிக்கின்றன. 
இந்த தேவதைகள்‌ இவ்வாறு அதிஷ்டிப்பது - பகவானுடைய “சங்கல்பத்‌தாலேயே .-எவ்வாறெனில்‌, 
உபநிஷத்துக்கள்‌ 'கூறுவ்து:' பகவான்‌ அக்நிக்கு உள்ளும்‌ புறமுமாக நிற்‌கிறான்‌; இவனுக்கு அக்நி சரீரம்‌; 
எனினும்‌ அக்நி இவனை அறிவதில்லை; இவ்வாறே மற்றைய தேவதைகளும்‌. 
அன்றியும்‌ பகவானிடம்‌ பயந்து வாயு வீசுகின்றான்‌- சூரியன்‌ உதிக்கின்றான்‌; 
அக்நி, இந்த்ரன்‌, யமன்‌ ஆகி யோர்‌ செயல்‌ புரிகின்றனர்‌ என்பது ஓர்‌ உபறிஷத்‌ வாக்கியம்‌, 
பகவான்‌ இந்த தேவதைகளுக்கு அந்தர்‌யாமி யாகிறான்‌; நியமிக்கிறான்‌. 
ஆதலால்‌ இந்த்ரியங்‌கள்‌ செயல்படுவதும்‌, தேவதைகள்‌ இவற்றை அதிஷ்டிப்‌பதும்‌, 
ஜீவனும்‌ தரித்து நிற்பதும்‌ எல்லாம்‌ பகவானின்‌ சங்கல்பத்தாலே. , 
பசுவான்‌ உலகைப்‌ படைத்து அதனுள்‌ லகல சேதன அசேதனங்களாகிறான்‌ என்று தைத்திரீயம்‌ ஆநந்தவல்லியில்‌ காண்கிறோம்‌. 
கீதையிலும்‌ இவன்‌ கூறுவது: இவ்வுலகைத்‌ தான்‌ தாங்குவது தனது சக்தியின்‌ ஓர்‌ ௮ம்சத்தாலே; ஒரு திவலையாலே என்று. 
இதனாலும்‌ தேறுவது: அக்நி முதலான தேவதைகள்‌ இந்த்ரியங்களை தரித்து நிற்பது பகவானாலே என்று. 
தூங்கும்‌ நிலையில்‌ கண்‌ முதலியன செயல்படுவன வல்ல. 
எல்லா நிலையிலும்‌ முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரித்து நிற்கிறது. 
இவ்வாறு ப்ராணனால்‌ தரிக்கப் படுவதால்‌ இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ எனப்படுகின்‌றன.

4. 5. வ்யஷ்டி ஸ்ருஷ்டி. 

இது வரையில்‌ பூதங்கள்‌ ஐந்து, இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ போல்வன பகவானால்‌ படைக்கப் பட்டவை என்று நிர்ணயிக்கப்பட்டது. 
தேவர்‌, மனிதர்‌ முதலான ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ காரியப்‌ பொருள்கள்‌ என்பது விளக்கப்படுகன்றது. 
சாந்தோக்யத்தில்‌ பசுவான்‌ கூறியதாக ஒரு. வாக்கியமுள்ளது: 
இந்தச்‌ சதுர்முகனைக்‌ கொண்டு உள்‌ நுழைந்து நான்‌ நாம ரூபங்களை அளிக்கக்‌ கடவேன்‌ என்று. 
ச்ருதி 'வாக்கியம்‌ ஒன்று: (பகவான்‌ சொல்லியதாக) நான்‌ நாம ரூபங்களைச்‌ செய்வேவளாக, இவை எவ்வாறு பொருந்தும்‌? 
விளக்கம்‌ : சாந்தோக்யத்தில்‌ (6-8-8) தீ , நீர்‌, பூமி என்ற மூன்று பூதங்களையும்‌ ஒன்று சேர்ப்பதாகிய திரி வ்‌ருத் கரணம்‌ சொல்லப்படுகிறது. 
இவ்வாறு செய்யப்பட்ட பூதங்களிலிருந்து அண்டம்‌ உண்டாகிறது. அண்டத்தில்‌ நான்முகன்‌ தோன்றுகிறான்‌. 
இதுவரையில்‌ ஸமஷ்டி , ஸ்ருஷ்டி--ஒட்டு மொத்தமாகப்‌ படைத்தல்‌.
**அநேந ஜீவேந- என்றவாறு தனக்குச்‌ சரீரமான சதுர்முகனைக்‌ கொண்டு பகவான்‌ 
வ்யஷ்டி ஸ்ருஷ்டியை (பாகுபாடுள்ள படைப்பைச்‌) செய்கிறான்‌ என்று தேறுகின்றது. 
அக்நி சங்கல்பித்தது, ஜலம்‌ சங்கல்பித்தது என்ற இடங்களில்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ 
பகவான்‌ சங்கல்பித்ததாக் நிர்ணயம் செய்யப் பெற்றுள்ளது. 
ஆகையால்‌ உயிர்கள்‌ யாவையும்‌ படைப்பது பகவானே. 
ஜீவனுக்கு ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, கர்மேந்திரியங்‌கள்‌ ஐந்து; இவற்றோடு மனமும்‌ சேர்ந்து இந்த்ரியங்கள்‌ பதினொன்று. 
இவையும்‌ முக்ய ப்ராணனும்‌ அணுவானவை. இந்த்ரிய ப்ராணன்களை தரித்து நிற்பன அக்நி முதலான தேவதைகள் ; 
இவர்கள்‌ இவ்வாறு தரிப்பது பகவானுடைய சங்கல்பத்தாலே. 
தீ , நீர்‌, பூமி இவற்றைப்‌ படைத்து 0 சேர்த்து அண்டத்தைப்‌ படைத்தவன்‌ பகவான்‌. இது ஸ்மஷ்டி ஸ்ருஷ்டி. 
சதுர்முகனைக்‌ கொண்டு இவனுக்கு அந்தராத்மாவாகி பகவான்‌ சேதன ௮சேதனங்களைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌ எல்லா வகைப்‌ படைப்பும்‌ ஸா்வேச்வரனது செயல்‌,
-----------------
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

முதல்‌ இரண்டு: அத்யாயங்களில்‌ விவரித்தவாறு மேன்மை யுள்ள ஸர்வேஸ்வரனைப்‌ பரம பதத்தில்‌ அனுப விப்பதற்குப்‌ பரந்த ஞானம்‌ வேண்டும்‌. 
இயல்பாக இத்தகைய ஞானம்‌ வாய்ந்த ஆத்மா உடற்‌ பிறவியால்‌ வருந்துகிறது. 
பகவானது கல்யாண குணங்களை அனுபவிக்க வேட்கை நேர்ந்தால்‌ உலக வாழ்க்கையில்‌ வெறுப்பு ஏற்‌படும்‌; 
இந்த விருப்பின்மை வைராக்யம்‌, உலக வாழ்ககையின்‌ தோஷங்களை அறிந்தால்‌ வைராக்யம்‌ நேரும்‌. 
இவ்வுலகப்‌ பிறவியில்‌ இழிவு எவ்வாறு எனில்‌, தாய்‌ வயிற்றில்‌ தோன்றி வெளி வருவது,இளமை, மூப்பு, பிணி, 
இவற்றால்‌ துன்புறுவது, கர்மங்களால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ பிறப்பது போல்வனவற்றாலே, 
கர்மங்களின்‌ ்பயனாக ஜீவன்‌ மேல்‌ லோகங்களுக்குச்‌ சென்றால்‌ மீண்டு வரும் போது பலவகையாக இன்னலே அனுபவிக்கிறான்‌. 
மேலுலகங்களில்‌ வாழ்வு முடிந்த பிறகு ஜீவன்‌ ஆகாசம்‌, மேகம்‌, பூமி இவற்றோடு இணைந்து 
௮ன்னமாகி ரேதஸ்‌ஸாகி ஸ்த்ரீயின்‌ உடலில்‌ சேருகிறான்‌. 
இந்த விவரங்‌களை ஆய்ந்துணர்ந்தால்‌ வைராக்யம்‌ ஏற்படும்‌. 
இந்த வைராக்யத்திற்குக்‌ காரணமாகும்‌ இந்தப்‌ பாதம்‌ வைராக்ய பாதம்‌ எனப்படுகிறது.. 
புண்யங்களின்‌ பயனாக ஜீவன்‌ தேவலோகம்‌ செல்‌லும் போதும்‌ மீளும் போதும்‌ பூத ஸூஷ்மங்களான இந்த்ரியங்களுடன்‌ இயங்குகிறான்‌.
1. 1. ஜீவனின்‌ மீட்சி 

ஜீவன்‌ தேவலோகஞ்‌ சேர்ந்து பின்பு மீளும் போது ஆகாயமாகிய அக்நியில்‌ சேருகிறான்‌ (ஹோமம்‌ செய்‌ யப்படுகிறான்‌)
ஸோம ராஜா என்ற அழகிய சரீரம்‌ பெறுகிறான்‌. 
பின்பு பர்ஜந்யம்‌ (மேகம்‌) என்ற இரண்‌டாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறான்‌. 
இதற்‌குப்‌ பின்‌ மழையாகிறான்‌; இந்த மழை பூமியாகிய மூன்றாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது, 
௮மப் போது ஜீவன்‌ அன்னமாகிறான்‌, 
இந்த அன்னம்‌ புருஷ னாகிய நாலாவது ௮க்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது 
இது ரேதஸ்ஸாக மாறிப்‌ பெண்பாலிடம்‌ ஐந்தாவது ஆஹுதியாகச்‌ சேருகிறது. 
இந்த நிலைகள்‌ ஒவ்வொன்‌றும்‌ ஜீவன்‌ பூத ஸுக்ஷ்மங்களோடு கூடவே பெறுகின்‌றான்‌. 
இது பஞ்சாக்நி வித்யையின்படி. ஜீவன்‌ சேரும்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ இவன்‌ அக்நியிற்‌ செய்யும்‌ ஆஹுதி போல்‌ விளங்குகிறான்‌. 
இவ்வாறு இவன்‌ ஐந்து திலைகளில்‌ சேருவதை விவரிப்பது பஞ்‌சாக்நி வித்யை ஆகும்‌.
1. 2. கர்ம பந்தம்‌ 

யாகம்‌ முதலிய கர்மங்களைச்‌ செய்து ஜீவன்‌ ஸ்வர்கம்‌ போன்ற பலன்களை அனுபவிக்கிறான்‌. அனு பவம்‌ தீர்ந்து விடுகிறது. 
ஆதலால்‌ இவன்‌ மீளும்போது கர்மம்‌ விஞ்சி யிராது. அதாவது 
கர்ம பலன்‌ முழுதும்‌ அனுபவிக்கும்‌ வரையில்‌ இவ்வுலகங்களில்‌ இருக்கிறான்‌ என்பது ஓர்‌ அபிப்பிராயம்‌. 
விளக்கம்‌ : கெளதம தர்ம ஸூத்ரம்‌, ஆபஸ்தம்ப ஸு்த்ரம்‌ இவை வெளியிட்டுள்ள கருத்து: 
தேவ லோகத்‌ தில்‌ ஜீவன்‌ கர்ம பலன்களை முழுதும்‌ அனுபவிப்பதில்லை. 
விஞ்சியுள்ன கர்மத்தை அனுபவிப்பதற்காகவே மீண்டு சிறப்புடைய ஜன்மங்கள்‌ பெறுகிறான்‌. 
இவ்வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ ஜீவன்‌ விஞ்சிய கர்மத்துடன்‌ மீள்கிறான்‌ என்பது அறியலாகும்‌.
 
1. 3. பாவச்‌ செயல்களின்‌ பலன்‌. 

விதித்த கர்மங்களைச்‌ செய்யாதவர்களும்‌, செய்யத்‌ தகாதனவற்றைச்‌ செய்பவர்களும்‌ அநிஷ்டகாரிகள்‌ எனப் படுகின்றனார்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ அடைவ தில்லை? 
ஏழு வகையான நரகங்களில்‌ : பாவச்‌ செயல்‌களின்‌ பயனை அனுபலிக்கிறார்கள்‌. 
இந்த அனுபவத்‌திற்குப்‌ பிறகு பூமியில்‌ ஈ, கொசு, புழு போன்ற இழிவான பிறவிகள்‌ பிறக்கின்றனர்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ செல்வதில்லை; 
ஆதலால்‌ முன்பு கூறிய ஐந்தாவது ஆஹாுதி-அதாவது மனைவியின்‌ கா்ப்பத்தில்‌ சேருவது இவர்களுக்கில்லை.
1. 4, ஒவ்வோர்‌ இடத்திலும்‌ ஜீவன்‌ தங்கும்‌ காலம்‌. 

யாகம்‌ முதலான கர்மங்களின்‌ பயனாக ஜீவன்‌ மேலுலகங்கள்‌ சென்று மீள்கிறான்‌ என்று முன்பு: கூறி யிருக்கிறது. 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ எவ்வளவு காலம்‌ தங்கியிருப்பான்‌? 
பயிர்களோடு இணைந்த நிலையில்‌ ஜீவன்‌ மிகவும்‌ சிரமப்பட்டு வெளியேறுகிறான்‌ என்று அறிகிறோம்‌. 
ஆதலால்‌ அக்நி, மேகம்‌ இவற்றோடு இணையும்‌ காலம்‌ சொல்பமே என்பது தெளிவு. 
கர்மாக்களால்‌ ஜீவன்‌ படும்‌ துன்பங்கள்‌ இதுவரையில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. 
இவற்றிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவதே புருஷார்த்தம்‌ என்பது வலியுறுத்தப்படுகின்றது.
புண்ய கர்மாக்கள்‌ செய்யும்‌ ஜீவன்‌ இவற்றின்‌ பயனாக ஸ்வர்கம்‌ முதலியவற்றை அனுபவித்து 
எஞ்சிய கர்மாக்களோடு கீழே இறங்குகிறான்‌; 
ஐந்து நிலைகளை அடைகிறான்‌; ஐந்தாவது நிலை பெண்பாலிடம்‌ ரேதஸ்‌ஸாகச்‌ சேர்வது, 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌,அதிகம்‌ தங்குவதில்லை; 
தான்ய நிலையில்‌ தாமதம்‌ நிகழ்‌கின்றது. 
பாவம் செய்தவர்கள்‌ சந்த்ரனை அடைவதில்லை? 
ஏழு வகை நரகங்களில்‌ துன்பம்‌ அனுபவித்த பிறகு இழிவான பிறவி பிறக்கின்றனர்‌.

-----------------

2. இரண்டாம்‌ பாதம்‌. .. 

கர்மங்களிலிருந்து விடுபடும்‌ ஜீவன்‌ பகவானை அனுபவிக்கின்றது. 
இந்த பகவானுடைய மேன்மைக்குக்‌ காரணமான பண்புகள்‌ இரண்டு: 
இவனை இழிவுகள்‌ நாடாமலிருப்பது, இவனுக்கான தனிப்பட்ட குணங்கள்‌, இவை இரட்டைப்‌ பண்பு - உபய லிங்கமாகும்‌. 
இந்த: இரட்டைப்‌ பண்பு பற்றிய இந்தப்‌ பாதம்‌ உபய லிங்க பாதம்‌ எனப்பெறும்‌. 
அன்றியும்‌ ஜீவன்‌ கனவு, தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலைகளில்‌ படும்‌ துன்பங்கள்‌ விவரிக்கப்‌ படுகின்றன. 
ஜீவர்களைச்‌ சரீரமாக உடைய பகவானுக்கு இழிவு என்பதே இல்லை; 
சிறப்புற்ற குணங்கள்‌ வாய்ந்தவன்‌ இவன்‌ என்பதும்‌ விளக்கப்படுகிறது.
2. 1. கனவு: யார்‌ படைப்பு? 

ப்ருஹதாரண்ய உபநிஷத்தில்‌ (6-3-70) கனவு பற்றிக்‌ கூறியிருப்பது: 
கனவில்‌ ஜீவன்‌ காண்பன ரதம்‌, குதிரைகள்‌, இவை செல்லும்‌ பாதை, குளங்கள்‌, குட்டைகள்‌, ஆறுகள்‌ போல்வன, 
இவற்றை இவனே படைக்கிறான்‌. 
இவ் வுலகம்‌, பர லோகம்‌ இவற்றின்‌ சந்தியில்‌ ஏற்படுவது இந்த மூன்றாவது நிலை. 
இவற்றைப்‌ படைப்‌பவன்‌ ஜீவனே என்று வேதமும்‌ ஓதுகின்றது. 
அன்றியும்‌: கடவல்லியில்‌ (2-9-8) ஜீவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்‌களைப்‌ படைக்கின்றான்‌ என்றும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்‌ளது. 
ஆதலால்‌ கனவுகளைப்‌ படைப்பவன்‌ ஜீவனே. இது ஒரு கருத்து.

தேர்வு : “கனவில்‌ காண்பன விசித்திரமானவை, காண்‌: பவனே அனுபவிப்பவை; அருகிலுள்ளோர்‌ அனுபவிமப்‌ பதில்லை. 
இவ்வாறான விசித்திரங்கள்‌ செய்பவன்‌ பகவானேயாக வேண்டும்‌.
கனவு நிலையில்‌ ஞானம்‌ விளக்கம்‌- பெறுவதில்லை. 
ஆதலால்‌ ஜீவன்‌ கனவுகளைப்‌ படைக்‌க இயலாது. 
கனவில்‌ விரும்பாதவற்றையும்‌ காண்கிறோம்‌. 
ஜீவன்‌ படைப்பவனானால்‌ விரும்பாதவற்றைப்‌ படைத்து மனம் கலங்க மாட்டான்‌. 
ஆதலால்‌ கனவுகளுக்குக்‌ காரணம்‌ பகவானே. 
 
2. 2. தூக்க நிலை. 

தூக்க நிலையைப்‌ பற்றி மூன்று கருத்துக்கள்‌ வேதங்‌ களில்‌ உள்ளன. 
இந்த்ரியங்கள்‌ யாவும்‌ அடங்கி வெளி விஷயங்களை ௮னுபவிப்பதாகிய கலக்கமில்லாத நிலையில்‌ 
ஜீவன்‌ சரீரத்திலுள்ள நாடிகளில்‌ நுழைந்து இந்த நாடிகளின்‌ வழியாக இவற்றோடு தொடர்புள்ள 
இதயத்தில்‌ புரீதத்‌ என்ற மாமிச பிண்டத்தை அடைகிறான்‌; 
தூங்கும்‌ நிலையில்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மத்தோடு நன்கு இணைந்திருக்கிறான்‌. 
நாடிகள்‌, புரீதத்‌, ப்ரஹ்மம்‌ "இம்மூன்றும்‌ சேர்ந்தே தூக்கத்தின்‌ நிலை.
2. 3. தூக்கத்திற்குப்‌ பின்பு ஜீவனது நிலை. 

ஒரு கருத்து : தூக்கத்தில்‌ ஜீவன்‌ தன்னை அறிவ தில்லை, மற்றைப்‌ பொருள்களையும்‌ அறிவதில்லை; 
தூங்கும்போது ப்ரஹ்மத்தில்‌ ஒடுங்கி விடுகிறான்‌. முக்த னுக்கும்‌ இவனுக்கும்‌ வாசியில்லை. 
முக்தனுக்குப்‌ பழைய சரீரம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்றோடு தொடர்பில்லை. 
இதுபோல்‌ தூக்கத்திலிருந்து விழித்து எழுந்திருப்பவன்‌ வேறு ஜீவனாக வேண்டும்‌.

தேர்வு : கர்மம்‌, நினைவு, வேத வாக்கியம்‌, மோக்ஷ விதிகள்‌ இவற்றை ஆராய்ந்து பின்வருமாறு முடிவு அளிக்‌ கப்படுகிறது.
கர்மம்‌ என்பது தூங்குவோன்‌ தூங்குவதற்கு முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. இவை அனுபவித்தே தீரும்‌; 
ஆதலால்‌ விழித்து எழுவதற்கு முன்‌ இவன்‌ இவற்றை அனுபவிக்க வேண்டும்‌. 
இல்லையெனில்‌ ஒருவன்‌ செய்த தோஷத்தின்‌ பலன்‌ வேறொருவன்‌ அனு பவிக்கிறான்‌ என்ற தோஷம்‌ நேரும்‌. 
நினைவு என்பது? இரவில்‌ தாங்கியவன்‌ எழுந்திருக்கும் போது, '*தான்‌ தூங்கினேன்‌”? என்ற உணர்வு. 
ஆதலால்‌ துங்கி எழுந்‌திருப்பது வேறு ஜீவன்‌ என்ற கருத்து பொருந்தாது. 
மேலும்‌ சாந்தோக்யத்தில்‌ வரும்‌ கருத்து: ஒரு ஜீவன்‌ தூங்கும் போது எந்த சரீரத்தில்‌ 
(மனிதன்‌, சிங்கம்‌, புலி போன்‌ற) தூங்குகிறானோ அதே சரீரத்தில்‌ எழுந்‌திருக்‌கிறான்‌ என்பது. 

தூக்கத்தை முக்தி நிலையோடு ஓப்பிட இயலாது. 
முக்தன்‌ எல்லா அறிவும்‌ வாய்ந்தவன்‌, யாவும்‌ அறிபவன்‌, போகங்கள்‌ அனுபவிப்பவன்‌. 
தூக்க நிலையில்‌ இந்த்ரியங்கள்‌ களைப்பாறுகின்‌றன; 
ஜீவன்‌ பகவானை அனுபவித்து விஞ்சியுள்ள கர்மங்‌களை ௮னுபவிக்க எழுந்திருக்கிறான்‌. 
ஆதலால்‌ விழித்‌ தெழுந்தவன்‌ தூங்குபவனே ஆகிறான்‌. 
2. 4, மூர்ச்சை நிலை. 

மூர்ச்சை அடைந்தவன்‌ நிலை மரணத்தின்‌ பாதி நிலையேயாகும்‌. 
மூர்ச்சை நிலையில்‌ ஞானமில்லை- ஆனால்‌ இது ஞானமுள்ள விழிப்பு நிலையும்‌ கனவு நிலையும்‌ ஆகாது. 
தூக்க நிலை என்பது இந்திரியங்கள்‌ களைப்‌படைவதால்‌ ஏற்படும்‌; 
மூர்ச்சை நிலை மனக்‌ கலக்கத்‌தால்‌ ஏற்படுவது. இது தூக்க நிலையும்‌ ஆகாது. 
மரண நிலையில்‌ ப்ராணன்‌ அடியோடு இல்லை. ஆதலால்‌ மூர்ச்சை நிலை மரண நிலையின்‌ பாதி என்பது விளங்குகிறது.
 
2. 5. உபய லிங்கம்‌. 

ஜீவனுடைய தாழ்வு நிலை விவரிக்கப்பட்டது. 
ஏற்படுமோ என்ற ஐயம்‌ ஆராயப்படுகிறது. 
ஜீவனு டைய சரீர சம்பந்தத்தால்‌ பரமாத்மாவுக்குத்‌ தாழ்வு நேராது என்பதற்குக் காரணம்‌ 
ச்ருதிகள்‌ யாவும்‌ இரண்டு குணங்களைக்‌ குறிக்கின்‌றன; 
ஒன்று: இவன்‌ தாழ்வுகளுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலையாக இருப்பது; 
மற்றது: இவனுக்கே உரிய தனிப்பட்ட குணங்கள்‌--கல்யாண குணங்‌கள்‌. 
சாந்தோக்யத்தில்‌ (8-7-5) பரம் பொருள்‌ பாவமற்‌றது, மூப்பில்லாதது, மரணம்‌,. வருத்தம்‌, பசி, தாகம்‌ போன்றவை அற்றது; 
விரும்பப்படும்‌ நற்குணங்கள்‌ உடையது; தடையற்ற ஸங்கல்பம்‌ உடையது. 
விஷ்ணு புராணத்திலும்‌ (46-48) அவன்‌ தேஜஸ்‌, அளவற்ற ஞானம்‌, வீர்யம்‌, சக்தி முதலான ' நற்குணங்களுக்கு இருப்பிடம்‌; 
கிலேசம்‌ முதலான எந்த தோஷங்களும்‌ இலன்‌ என வந்துள்ளது.

அன்றியும்‌ - சேதன அசேதனங்களின்‌ அந்தர்யாமியாக பகவான்‌ உறைவது தனது விருப்பதாலேயே, இவற்றை நியமிப்பதற்காகவே. 
இதில் சங்கை : ஜீவன்‌ கர்ம வசப்பட்டவன்‌, ஆதலால்‌ இவன்‌ கொண்டுள்ள சரீரத்தோடு தொடர்பு தாழ்வைத்‌ தரக் கூடும்‌. 
பகவான்‌ இந்த சரீரத்தில்‌ உறைந்து இந்தத்‌ தொடர்பாலே லீலாரஸம்‌ அனுபவிக்கிறான்‌. 
முண்டக உபநிஷத்தில்‌ வரும்‌ விளக்கம்‌: பரமனாகிய பறவையும்‌, ஜீவனாகிய பறவையும்‌ இணைந்து ஓரே மரத்தில்‌ தங்குகின்றன; 
ஜீவனாகிய பறவை அதன்‌ இனிய பழத்தைப்‌ புசிக்கின்றது; 
பகவானாகிய மற்றது இதைப்‌ புசியாமல்‌ பெருமையுடன்‌ விளங்குகிறது. 
இப்‌ பறவைகள்‌ பிரியாமல்‌: இணைந்திருந்தும்‌ ஜீவனாகிய பறவை தான்‌ துன்பமுறுகிறது. 
ஆதலால்‌ பகவானுக்கு இழிவே யில்லை என்று தேறுகிறது. 
““பெருமையுடன்‌ விளங்குகிறது'' என்பது இதனோடு இணைந்து விளங்‌கும்‌ கல்யாண குணங்களைக்‌ காட்டுகிறது.
பகவான்‌ ஜீவ 'சரீரங்களைத்‌ தன்‌ சரீரமாகக்‌ கொண்டு வியாபிப்பது, 
அந்த ச்ரீரத்தோடு கூடிய ஜீவர்‌களையும்‌, அசேதனப்‌ பொருள்களையும்‌ நிர்வஹிப்‌பதற்கே, 
பகவானே நாம ரூபங்களைக்‌ கொடுக்கிறான்‌. 
ஆனால்‌ இந்த நாம ரூபங்களால்‌' இவன்‌ தீண்டப்படாதவன்‌ என்ற வேத வாக்யங்கள்‌ இக் கருத்தை வலியுறுத்துகின்றன. 
சங்கை : பகவான்‌ யாவும்‌ ௮றிந்தவன்‌, யாவற்றுக்‌கும்‌ அந்தராத்மா, ஐகத் காரணம்‌ என்று ஒவ்வொன்‌றாகக்‌ குணங்களைச்‌ சொல்லி 
வேத வாக்கியங்கள்‌, “தேதி?” எநேதி'* (இவ்வாறு இல்லை) என்று தள்ளுவ,தால்‌ இவன்‌ இழிவுக்கு எதிர்நிலை என்பது தேறும்‌. 
கல்யாண குணங்களுக்கு இருப்பிடம்‌ எனபது எவ்வாறு? 
பகவானது சக்தியோடு இயல்பான .ஞானம்‌, பலம்‌. முதலியனவும்‌ விவரிக்கின்றன வேத வாக்கியங்கள்‌, 
ஆதலால்‌ உபய லிங்கம்‌ நிலை நிறுத்தப் பெற்றது. 
சூரியன்‌ நீர்‌ நிலையில்‌ தோன்றுகின்றான்‌, நீரின்‌ குணம்‌ இவன்‌ பெறுவதில்லை; 
ஆகாசம்‌ குடம்‌ முதலிய வற்றில்‌ அடங்கியுள்ளது, எனினும்‌ குடம்‌ முதலியவற்‌,றில்‌ விரிவது, சுருங்குவது போன்ற குணம்‌ இதற்கில்லை. 
இது போல்‌ பகவான்‌ ஜீவனிடம்‌ நுழைவதால்‌, தோஷம்‌ எதுவும்‌ இவனைச்‌ சாராது. 
“நேதி நேதி: என்பதன்‌ கருந்து: பகவானுக்குச்‌ சில ரூபங்களை விவரித்த உபநிஷத்‌ இவ்வளவேயோ என்று 
நினைக்கச்கூடும்‌ என்பதற்காக இவ்வளவன்று, இவ்வள்வன்று என்று விளக்கியது. 
ஆதலால்‌ பகவான்‌ அழிவு 'களுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலை, 
கல்யாண குண கணங்கள்‌ எண்‌ணிறந்தன வாய்ந்தவன்‌ என்பது ஆஷேபமில்லாமல்‌ நிறுவப்பட்டது.

2, 6. ப்ரஹ்மமும்‌ அசேதனங்களும்‌. 

உருவமுள்ளனவும்‌ உருவமில்லாதனவுமான ௮சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ ப்ரஹ்ம ஸ்வரூபம்‌ என்று வேதங்கள்‌ வெளியிடுகின்றன. 
ப்ரஹ்மமும்‌ உலகமும்‌ வேறாவனவையே என்று ஓதுகின்றன சில வேத வர்க்கியங்கள்‌. 
இக் கருத்துக்‌கள்‌ ஒன்றுவதற்காக ப்ரஹ்மம்‌. ப்ரளய காலத்தில்‌ உலகைச்‌ சுருக்கிக் கொண்டும்‌ 
படைப்புக்‌ காலத்தில்‌ விரித்துக் கொண்டும்‌ உள்ளது என்று கருதலாம்‌. 
அன்றியும்‌ மணியும்‌ அதன்‌ ஒளியும்‌ 'வேறுபட்டிருந்தும்‌ ஓளி யுடைமை என்ற தர்மத்தாலும்‌ ஒளியாலும்‌ ஒன்றுவது போல்‌ 
அசித்தும்‌ பரமாத்மாவும்‌ என்று கருதத்‌தகும்‌. 
ஆகையால்‌ உலகம்‌ ப்ரஹ்ம ரூபமாக இருப்பது ஒளி சூர்ய ரூபமாக இருப்பது போல என்பது பொருத்தும்‌. 
இது ஒரு சாரார்‌ கருத்து.

தேர்வு : ஜீவன்‌ ப்ரஹ்மத்திற்கு அம்சமாகவும்‌, ப்ர 'காரமாகவும்‌, சரீரமாகவும்‌ நிரூபிக்கப்பட்டது. 
இதே போல அசேதனங்கள்‌ சரீரமாகவும்‌, பகவான்‌ சரீரியாக வும்‌ கொள்வதே சரி. 
அன்றியும்‌ வேத வாக்கியங்களால்‌ தெளிவது: அசேதனத்தின்‌ தன்மைகள்‌ பகவனுக்‌கில்‌லை என்பது. 
அசேதனங்கள்‌ பகவானின்‌ அம்சமாகவே விளங்‌குகின்றன. 
ஆதலால்‌ பகவானோடு ஒன்றியோ, இனம்‌- பண்பு என்ற முறைப்படியோ இல்லை என்பது தேறலாகும்‌ 

2. 7. அணை என்பதன்‌ விளக்கம்‌. 

வேத வாக்கியங்கள்‌ நான்கு கருத்துக்கள்‌ வெளியிடுகின்றன: 
(1) பகவான்‌ ௮ணை, 
(2) நான்கு பாதங்கள்‌ உடையவன்‌, பதினாறு கலைகள்‌ வாய்ந்தவன்‌, 
(8) மோஷத்தை அடைவிக்கும்‌ அணை, 
(4) அன்றியும்‌ பெரியவனான பரமாத்மாவை விட மேலான ஒரு பொருள்‌ உண்டு. 
அணை என்பதால்‌ ஒரு கரையிலிருந்து எதிர்க்‌ கரைக்குப்‌ போகும்‌ சாதனம்‌ என்பதாலே இதுவரையில்‌ கூறிவந்த பெருமையுடைய 
ப்ரஹ்மத்தைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுண்டு. இவ்வாறு சிலர்‌ கருதுகின்றனர்‌.

மறுப்பு: அணை(ஸேது) என்பதன்‌ பயன்‌ இரண்டு: பக்கங்களிலும் உள்ள பொருள்கள்‌ கலவாது பாதுகாப்பதே. 
பகவான்‌ ஸேது என்பதை ஒட்டி சாந்தோக்யத்தில்‌ வந்துள்ள கருத்து இதுவேயாகும்‌: 
'*ஏஷாம்‌ வோகாநாம்‌. அஸம்பேதாய”' (8-8- 1)

ப்ரஹ்மம்‌ நான்கு பாதங்கள்‌ உடையது, பதினாறு கலைகள்‌ உடையது என்று கூறியது எளிதில்‌ மனனஞ்‌ "செய்து உபாஸிப்பதற்கே யாகும்‌. 
ப்ரஹ்மம்‌ எங்கும்‌ வ்யாபித்துள்ளது, யாவருமாய்‌ யாவுமாக்‌ இருக்கிறது என்று பல வேத வாக்கியங்கள்‌ கூறுவதால்‌, 
இதைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுமில்லை என்பது நிச்சயம்‌. ஜகத்‌ காரணமான பகவானே பரம் பொருள்‌ 

2. 8. போக மோக்ஷங்கள்‌ . 

சேதனன்‌ உபாஸநஞ்‌ செய்வதற்காக பகவானது குணங்கள்‌ வெளியிடப்பட்டன. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை; கல்யாண குணங்களுக்குக் கொள்கலம்‌, 
யாவரையும்‌ காட்டிலும்‌ மேம்பட்டவன்‌. போக மோக்ஷங்களை அருளும்‌ மேன்மை இவனையே சாரும்‌ என்பது இனி விளக்கப் பெறும்‌.

ப்ருஹதாரண்யத்தில் பிறப்பிலியான பகவான்‌ அன்‌ னத்தையும்‌ தனத்தையும்‌ அளிப்பவன்‌; 
மோஷ ஆனந்தத்தையும்‌ அளிப்பவன்‌ என்று வந்துள்ளது. ்‌

யாகம்‌, தானம்‌, ஹோமம்‌, உபாஸநம்‌. இவற்றிற்கு அத்த அந்த தேவதைகள்‌ பலன்‌ அளிக்கின்றன. 
இந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான பரம புருஷனாலேயே இந்த பலன்கள்‌ கிடைக்கின்றன. 
இந்தக்‌ கருத்தே வேதங்‌களிலும்‌ கீதையிலும்‌ வெளியிடப் பட்டுள்ளது. 
உலகில்‌ குடி மக்கள்‌ பயிர்‌ செய்தல்‌ போன்ற பணிகளாலே பொருள்கள்‌ சேர்த்து 
அரசனது ஏவலாளர்கள்‌ மூலமாக வரி கட்டி அரசனது உகப்பைப்‌ பெறுவது போல்‌ 
தேவதைகளை ஆராதிக்கும்‌ வகையால்‌ பகவானைச்‌ சேர்த்து பகவானது அருளைப்‌ பெறுகிறோம்‌. பலன்‌ அளிப்பது பகவான்‌.

இவனது அனுபவங்கள்‌ இவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்கள்‌ பகவானால்‌ படைக்கப்‌ பெறுவன, 
இவன்‌ தூங்குமிடம்‌ ஹிதா, புரீதக்‌, பரமாத்மா ஆகிய மூன்று. 
தூங்கிய ஜீவனே தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறான்‌; வேறொருவன்‌ என்பதில்லை. 
மூர்ச்சை என்பது விழிப்பு, கனவு, தூக்கம்‌, மரணம்‌ ஆகிய நிலைகளைக் காட்டிலும்‌ வேறுபட்டது. 

பகவானை இரண்டு குணங்களாலே அறியலாம்‌. இழிவுகளுக்கு எதிர்நிலை, கணக்கற்ற கல்யாண குணங்‌ கள்‌ வாய்ந்தவன்‌. 
இக் கருத்து உபய லிங்கம்‌ எனப் பெறும்‌. உலகம்‌ பகவானுக்கு விசேஷணமாக இருந்து கொண்டு அம்சமுமாகிறது. 
பகவானைக்‌ காட்டிலும்‌ மேம்பட்ட தாகவோ அடையத்‌ தக்கதாகவோ வேறு எதுவுமில்லை. 
இவனே எல்லாக்‌ கர்மங்களுக்கும்‌ பலன்‌ அளிப்பவன்‌.

-----------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

3. 1. வித்யைகள்‌ --ஆய்வு. 

பகவானை உபாஸநம்‌ செய்யும்போது பயன்படும்‌ வித்யைகளில்‌ பகவானது குணங்கள்‌ பற்றி விசாரிப்பதால்‌ 
இப்பாதம்‌ குண-உபஸம்ஹார பாதம்‌ எனப்‌ பெறுகின்றது. 

ப்ரஹ்மத்தை அடைவதற்காக உபாஸதம்‌ செய்ய 'வித்யைகள்‌ விதிக்கப்பட்டுள்ளன. இந்த வித்யைகளுக்கு 
வேத சாகைகளில்‌ குணங்கள்‌ சில மாறுபட விவரிக்கப்‌பட்டுள்ளன. ஒரே பெயருள்ள வித்யைகளுக்கு மாறு 
பாடு கூறப்பட்டால்‌ எப்படி அநுஷ்டிப்பது என்ற சங்கை எழுகின்றது. வேதங்களிலும்‌ உபநிஷத்துக்களிலும்‌ வைச்‌ 
வாநர வித்யை, தகர வித்யை, அக்ஷர விதியை இவை இதே பெயர்களுடன்‌ வருகன்றன. ஆனால்‌ ப்ரகரண பேதம்‌ உள்ளது. 
இவைபற்றி ஒன்றில்‌ இல்லாத குணங்களை மற்றதில்‌ ,சேர்த்துக் கொள்ள வேண்டும்‌. 
இத்தகைய வித்யைகளில்‌ விதி வாக்யம்‌, பலன்‌, உபாஸிக்‌கும்‌ பரமாத்மா, பெயர்‌ யாவும்‌ ஒறுமைப்பட்டுள்‌ளன. 

 3. 4. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ இரண்டு வகையாகக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது. இந்த இரண்டு உபாஸநங்களிலும்‌ வித்யை, 
பலன்‌, ஆக்யா என்பன மூன்றும்‌ ஒன்றாக இருந்தாலும்‌, உபாஸிக்கும்‌ பொருளான ரூபம்‌ வேறுபட்டிருக்கிறது. 
ஒன்றில்‌ உத்கீதம்‌ செய்பவனிடம்‌ முக்ய ப்ராணன்‌ என்று எண்ணமும்‌, ஒன்றில்‌ கானம்‌ செய்யும்‌ உத்கீதத்திலேயே 
முக்ய ப்ராணன்‌ என்ற எண்ணமும்‌ வேண்டும்‌" என்று 'வரையிட்டிருக்கிறது. இவ்வாறு இன்னும்‌ சில இடங்‌களில்‌ உள்ளன. 
ரூபம்‌ வெவ்வேறாக இருப்பதால்‌ வித்யைகளும்‌ வெவ்வேறு என்று  காட்டப்‌ பெற்றுள்ளது
3. 3. முக்ய ப்ராணன்‌. 

முக்ய ப்ராணன்‌ மூத்தது, சிறந்தது; வாக்‌ இந்தரியத்தைச்‌ செல்வமாக உடையது (வஸிஷ்டம்‌), 
' கண்னில்‌ ப்ரதிஷ்டையாக உள்ளது (நிலைநிறுத்தப்பட்டது) காது என்ற இந்தரியத்தில்‌ ஸம்பத்தாவ்‌ உள்ளது என்று வேதங்களால்‌ சிறப்பிக்கப்படுகிறது. 
இதை' ௨பாஸிக்கும்‌ போது இது முக்ய மென்றே உபாஸிப்பதும்‌ வஸிஷ்டத்வம்‌ போன்ற குணமுடையதாகவும்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. 
இவ்வாறு மூன்று உபதிஷத்துக்களில்‌ மூவகை உபாஸநம்‌ கூறப்படுகிறது. எனினும்‌ இந்த வித்யைகள்‌ யாவும்‌ ஒன்றே. 
ஏனெனில்‌ இவை ப்ராணனின் அபிமான தேவதையாகக்‌ குறிக்கின்றன. 

3. 4. பகவானின்‌ குணங்கள்‌. 

பகவானின்‌ குணங்கள்‌ கணக்‌கில்லாதவை. இவை எல்‌லாவற்றையும்‌ வித்யைகளிலே ஓத இயலாது. 
எவற்றை எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டும்‌? பகவானின் குணங்களில்‌ சில இவனது இயல்பை நிரூபிக்கின்றன. 
இவனைப்‌ பற்றி அறிந்து கொள்ளப்‌ பயன்படுகின்‌றன-- 
ஆனந்தம்‌ முதலான குணங்கள்‌; எல்லா' வித்யைகளிலும்‌ இவை ஓத வேண்டும்‌ -இவை முக்கியமானவை யாகையாலே. 
முக்கியமான ஐந்து குணங்கள்‌: ஆனத்தமா யிகுப்‌பது, வேறுபாடின்றி இருப்பது, ஞானமயமா யிருப்பது 
'அளவற்றதா யிருப்பது, தோஷங்கள்‌ இல்லாமல்‌ இருப்‌பது 

3. 5. புண்ய பாவங்கள்‌. - 

பகவானை உபாஸநம்‌ செய்பவன்‌ பரமபதம்‌ அடையும்‌ சமயத்தில்‌ இவனது புண்ய பாவங்களைப்‌ பற்றி 
'இரண்டு கருத்துக்கள்‌ வெளிவந்துள்ளன. ஓன்று: பரமபதம்‌ அடையும்‌ உபாஸகனை விட்டு இவை நீங்குகின்‌றன. 
இது ஹாதி; மற்றது. இவை: வேறு சிலரை அடை இன்றன--இது உபாயநம்‌: அதாவது இவனது உற்றார்‌ 
அல்லது நண்பர்‌ புண்யங்களை அடைகின்றனர்‌; விரோதிகள்‌ பாவங்களை அடைகின்றனர்‌. இவை ஒவ்வொன்று 
ஒவ்வொரு சாகையில்‌ ஆதரிக்கப்படுகிறது--சிந்தனை செய்து. உபாஸதம்‌ செய்வதற்காக. 
இவற்றுள்‌ ஒன்று அங்கமாகவும்‌, மற்றது அங்கியாகவும்‌ அமைந்ததால்‌ இரண்டையும்‌ சிந்திக்கவேண்டும்‌. சில சாகைகளில்‌ 
இரண்டு கருத்துக்களும்‌ வந்துள்ளன. 

இந்தப்‌ புண்ய பாவங்கள்‌ எப்போது நீங்குகின்றன என்பதும்‌ சாஸ்த்ரங்களில்‌ ஆராயப்‌ பெற்றுள்ளது. 
முக்தன்‌ சரீரத்தை விட்டுக்‌ கிளம்பும்போதே கர்மங்கள்‌ யாவும்‌ அழிந்து விடுகின்றன. 
ப்ரஹ்மாநுபவத்தை. 'இவனுக்கு அளிப்பதற்காக அர்ச்சிராதியில்‌ ஸூக்ஷ்ம சரீரம்‌ ஏற்படுகிறது, . 
பயிர்‌ செய்வதற்காகத்‌ தேக்கிய ஏரிநீர்‌, பயிர்‌ விளைந்த பின்‌ குளிப்பது, பருகுவது போன்ற நலன்களுக்கு ஆவது போல்‌ 
கர்மங்களை அனு  பவிப்பதற்கான ஸ்தூல சரீரம்‌, கர்ம அனுபவத்திற்குப்‌ பிறகு ஸூக்ஷ்ம சரீரமகய்‌ அர்சிராதியில்‌ பயன்‌படுகிறது. 

வஸிஷ்டர்‌ முதலான அதிகாரி புருஷர்களுக்கு அவரவர்களது பதவி நீங்கும்வரையில்‌ அப்பதவிக்குக்‌ காரண 
“மான கர்மமும்‌ பதவியும்‌ தொடர்ந்து நிற்கும்‌; இப்பதவி: மூடியும்‌ வரையில்‌ அர்ச்சிராதிகதி இல்லை. 
சரீரத்தின்‌ முடிவில்‌ அர்ச்சிராதிகதி ஏற்படுவோர்க்கே கர்ம பலம்‌ அனைத்தும்‌ நீங்கும்‌. 
3. 6. வித்யைகள்‌--அர்ச்சிராதி. 
அர்ச்சிராதியைப்‌ பற்றியுள்ள வித்யைகளில்‌ உபாஸந வகையில்‌ மாறுபாடு உள்ளது. எல்லா வித்யைகளாலும்‌ 
பரம்பொருளை அடையக்‌ கூடுமாதலால்‌ அர்ச்சிராதி எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவானது. 

3. 7. உபாஸகம்‌- குணங்கள்‌. 

ஒரு வித்யையில்‌ உபாஸநத்திற்காக அஷர ப்ரஹ்மம்‌ விதிக்கப்பட்டுள்ளது. இத்த ப்ரஹ்மம்‌ மிகவும்‌ நுண்ணியது, 
எங்கும்‌ பரவியது; இந்த்ரியங்களாலே அறிய இயலாதது; வடிவாலும்‌, தேசத்தாலும்‌, காலத்தாலும்‌ 
அளவு படாதது என்று நினைக்கவேண்டும்‌ என்று, இது **அஸ்தூலத்வம்‌”' (ஸ்தூல மின்மை) என்ற குணம்‌. 
இது எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டுமா என்பது சங்கை. பகவான்‌ எல்லா குணங்களும்‌ வாய்ந்தவன்‌; 
இவை இவனது ஸ்வரூபத்தை அறியப்‌ பயன்படுவன. ஆதலால்‌ குணங்கள்‌ யாவும்‌ மளனஞ்‌ செய்தே உபாஸதம்‌ செய்ய வேண்டும்‌. 
பகவான்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பதை அறிவதற்கான குணங்கள்‌ 
எல்லா வித்யைகளிலும்‌ ஓதத்‌ தக்கவை. மற்றைய குணங்‌கள்‌ அந்த அந்த வித்யையில்‌ 'விதித்துள்ளபடி, ௮நுஸத்திக்‌க வேண்டும்‌.
3. 8. வித்யைகள்‌: பரமாத்மாவின்‌ ' சூபம்‌. 

உஷஸ்தார்‌ என்பவர்‌, “நேரே காணப்படும்‌ ப்ரஹ்ம்மாய்‌, அனைத்துயிர்களிலும்‌ அந்தர்யாமியாக இருப்பவன்‌ யார்‌??” 
என்று கேட்கப்‌ பின்‌ வருமாறு விடை கூறப்‌பட்டது: யாவர்க்கும்‌ ப்ராண வாயுவை இயங்கச்‌ செய்‌பவன்‌; 
எல்லா ஜீவர்களுக்கும்‌ அந்தராத்மா என்பது. ககோளர்‌ என்பவர்‌  விடை, 
பசி, தாகம்‌...வருத்தம்‌,மயக்கம்‌ ஆகியவற்றைக்‌, கடந்திருப்பவன்‌; மகப்‌ பேறு, செல்வப்‌ பேறு, 
உலக வாழ்க்கை இவற்றில்‌ பாசமற்றவன்‌ என்பது, இவ் விரண்டு வித்யைகளிலும்‌ ரூபம்‌ வேறுபடுகிறது; 
எனினும்‌ ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ பரமாத்மா வேறு ' என்ற ஒரே கருத்து இருப்பதால்‌,. இவற்றிற்குப்‌ பேத 
மில்லை என்பது தேறுகிறது. 

3. 9. உபாஸகம்‌-- குறிப்பு வேறுபாடு. 

சாந்தோக்‌யத்தில்‌ தகர. வித்யை பகவானுக்கு இருப்‌பிடம்‌ என்ற வித்யையும்‌, ப்ருஹதாரண்யகத்தில்‌ ஆகாசம்‌ 
இருப்பிடம்‌ என்ற வித்யையும்‌ உள்ளன. இவை வெவ்‌ வேறானவையா? ்‌ 

பிருஹதாரண்யகத்தில்‌ ஸத்ய ஸங்கல்பத்வம்‌ என்பதன்‌ விசேஷமான வசித்வம்‌ முதலானவை விவரிக்கப்‌ பெற்‌றுள்ளன; 
சாந்தோக்‌யத்தில்‌, வரும்‌ எட்டு குணங்களில்‌  ஒன்றான ஸத்ய ஸங்கல்பத்வத்தின்‌ விசேஷமே இது. 
அபஹதபாப்மத்வம்‌ போன்ற குணங்கள்‌ இங்கும்‌ காட்‌டப் பெற்‌றுள்ளன. ஆக இரண்டு வித்யைகளும்‌ ஒன்றே. 
3. 10. தஹர வித்யை, 

தஹர வித்யையில்‌ பரமாத்மாவையும்‌ அவனது கல்யாண குணங்களையும்‌ உபாஸிக்கலாம்‌ என்பது வந்துள்ளது
குணங்களை உபாஸநம்‌ செய்யும் போது தஹரஆகாசமாகிய பரமாத்மாவை மறுபடியும்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா? 
அபஹதபாப்மத்வம்‌ என்பது குணம்‌; இத்தகைய குணங்களோடு கூடியவன் பரமாத்மா? 
குணங்கள்‌ வேறு, .குணங்களை யுடையவன்‌ வேறு, ஆதலால்‌ 'இரண்டும்‌ செய்ய வேண்டியவை . 
. 
3. 11. வித்யைகள்‌ : உபாஸநம்‌ செய்யப்படும்‌ பொருள்‌. 

நாராயண அனுவாகத்திற்கு முந்திய அனுவாகத்தில்‌ தஹர வித்யை "வந்துள்ளது, இதில்‌ கூறியிருப்பது: 
பகவானுக்கு இருப்பிடம்‌ உபாஸகனது இதயத்தில்‌ இருக்கும்‌ சிறிய தாமரை. 
ஆகாசம்‌ போல்‌ அளவிட வொண்ணாததான பரம்பொருள்‌ இதனுள்‌ இருப்பவன்‌; இவனது குணங்கள்‌ உபாஸிக்க வேண்டுவன. 
நாராயண அனுவாகத்தில்‌ தாமரையின்‌ விவரம்‌ வந்துள்ளது. தலை கீழான தாமரை போன்ற இதயம்‌ கைபிடி அளவுள்ளது; 
கழுத்துக்குக்‌ ழே கொப்பூழுக்கு மேலே உள்ளது. இந்த விவரம்‌ தஹர வித்யையே விவரிப்பதா? எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவா? 
பகவான்‌ யாவரினும்‌ மேம்பட்ட வன்‌ என்ற அடையாளமே (லிங்கம்‌) எல்லா வித்யைகளின்‌ கருத்து; 
ஆகையால்‌ இவனது குணங்கள்‌ பல ஓதப்‌படுகின்றன. யாவும்‌ இவனைக்‌ குறிப்பதால்‌ வித்யைகள்‌ 
சூறிக்கும்‌ பொருள்‌ ஒன்றே என்பதே தேறும்‌, இப்‌பொருள்‌ நாராயணன்‌. 

3. 12. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ பற்றிச்‌ சல சாகைகளில்‌ வந்துள்‌ ளது--உத்கீதத்தின்‌ அவயவமான ஓம்‌ என்ற ப்ரணவத்தை உபாஸிக்கவேண்டும்‌ என்று. 
இந்த உபாஸநம்‌ எல்லா சாகைகளிலும்‌ அந்வயிக்கும்‌. மந்த்ரங்கள்‌ வேறு பட்டிருந்தாலும்‌ யாகம்‌ என்பது எல்லா சாகைகளிலும்‌ ஒன்றே. 
இதே போல்‌ உத்கீத ௨பாஸநமும்‌. 
3. 13. வைச்வாநர வித்யை--உபாஸநம்‌. 

ஒளபமந்யவர்‌ முதலான ஆறு மஹரிஷிகள்‌ கைகேய  தேசத்து அரசனிடம்‌,''வைச்வாநர ஆத்மாவை உபதேசிக்கவேண்டும்‌'” என்று கேட்டனர்‌. 
அவன்‌ உபதேசிப்பது; ஸ்வர்கம்‌ முதல்‌ பூமி ஈறாக உள்ளன தலை, கால்‌ முதலான அவயவங்களாகக்‌ கொண்ட 
வைச்வாநர ஆத்‌மாவே உபாஸிக்கத்‌ தக்கவன்‌; இதன்‌ பலன்‌ ஸர்வாத்‌மாக்களிலும்‌ இருப்பவனாய்‌ அன்னமான ப்ரஹ்மத்தின்‌ 
அனுபவமே என்றான்‌. இந்த வித்யையில்‌ உபாஸநம்‌ பூர்ணமான வைச்வாநராத்மாவா? , 
இந்த இடத்தில்‌ எல்லாம்‌ ஒரே வாக்கியமாக இருப்பதால்‌ பூர்ணமான உபாஸநமே முறை. 
இந்த வரலாற்றில்‌ மஹ ரிஷிகள்‌ முதலில்‌ உத்தாலகரைக்‌ கேட்டு அவரிடம்‌ அறிய முடியாமல்‌ அரசனை அடைந்தனர்‌ என்பது குறிப்பு. 
3. 14. மற்றைய கருத்துக்‌கள்‌. 

ப்ரஹ்ம வித்யைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றை அனுஷ்டித்‌தால்‌ போதும்‌. உத்கீதம்‌ எப்போதும்‌ யாகத்தில்‌ அங்கமாகும்‌; 
இது ப்ரணவத்தோடே கூடியிருப்பதால்‌ இத்த உபாஸநம்‌ கா்மங்களுக்கு அங்கம்‌. 
ப்ரஹ்மவித்யைகளில்‌ எதை உபாஸநம்‌ செய்தாலும்‌ மோக்ஷ பலன்‌ கிடைக்‌கும்‌. 
ப்ரஹ்மத்தை அடைவதற்குப்‌ பயன்‌படும்‌ கர்மாக்களைப்‌ பற்றிய விவரங்கள்‌ இந்தப்‌ பாதத்தில்‌ ஆராயப்‌பட்டுன்ளன. 

வெவ்வேறு சாகைகளில்‌ கூறப்படும்‌ வைச்வாநரவித்யை, தஹர வித்யை போல்வன ஒன்றே. 
கெளஷீதகி  சாந்தோக்யம்‌ இவற்றில்‌ சொல்லப்படும்‌ ப்ராண வித்யையில்‌ வேறுபாடு இல்லை; ஆகையால்‌ இந்த வித்யைகள்‌ ஒன்றே. 

பகவானுடைய குணங்களுள்‌ அடிப்படையானவை விகாரமற்‌ நிருப்பது, ஞான மயமாவது, அனந்தமாவது, 
தோஷமற்‌ நிருப்பது, ஆனந்தமா யிருப்பது--எல்லா வித்யைகளிலும்‌ அநுஸந்திக்க வேண்டும்‌. 

தைத்திரீயம்‌ நாராயணவல்லியில்‌ பதினோராவது அநுவாகம்‌--நாராயண அநுவாகம்‌ எல்லா வித்யைகளிலும்‌ உபாஸிக்க வேண்டியது. 

ப்ரஹ்ம உபாஸந வித்யையில்‌ ஸ்வரூபத்தை நிருபிக்‌கும்‌ அடிப்படை குணங்கள்‌ ஞானம்‌ ஆனந்தம்‌ போல்வன 
அனுஸந்திக்க வேண்டுவன. 
--------------

4. நாலாம்‌ பாதம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான காமத்தைப்‌ பற்றி இப்பாதத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது. 
வைராக்ய பாதத்தில்‌ மோக்ஷத்திற்குப்‌ புறம்பான பலன்களைக்‌ கருதிக் கர்மங்கள்‌ செய்யத்‌ தகாதன என்பது காட்டப்‌ பட்டது. 
இத்தகைய விருப்ப மில்லாமல்‌ செய்யும்‌ கர்மங்கள்‌ ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம்‌ என்று நிரூபிக்கப்‌ படுகிறது. 
இந்தப்‌ பாதம்‌ அங்க பாதம்‌ எனப்படுகிறது. 
4. 1. ப்ரஹ்ம வித்யையாலே மோக்ஷம்‌. 

மோக்ஷ பலன்‌ ப்ரஹ்ம வித்யையாலேயே, கர்மங்களால் அன்று  என்பது வ்யாஸரது திருவுள்ளம்‌, இதற்கு மாறான கருத்துகள்‌: 
(1) தத்வமஸி என்ற வேத வாக்கியத்தில்‌ கர்மங்கள்‌ செய்யும்‌ கர்த்தாவும்‌ ப்ரஹ்மமும்‌ ஒரே வேற்றுமையில்‌ அமைந்திருப்பதால்‌ கர்த்தாவே 
ப்ரஹ்மம்‌ எனப்படுகிறான்‌. “ஆத்மா வா அரே த்ரஷ்‌டவ்ய:”” என்பதில்‌ இந்த ஜீவாத்மாவின்‌ உண்மை ஸ்வரூபம்‌ அறிய வேண்டும்‌ என்பதால்‌ 
ப்ரஹ்ம வித்யை அறிவது கர்மத்தால்‌. 
(2) ஜநகர்‌ முதலானோர்‌ கர்மத்‌தாலேயே முக்தி அடைந்தனர்‌. 
(3) வித்யை கர்மத்திற்கு அங்கம்‌ என்று வேத வாக்கியம்‌ கூறுகிறது. 
(4) வேதங்‌களை அத்யயநம்‌ செய்த பின்பு இல்லற தர்மம்‌ என்று அறிகிறோம்‌. இல்லறத்தில்‌ இருப்பவனுக்கே கர்மங்கள்‌  உரியன. 
(5) மனிதன்‌ நூறாண்டு காலம்‌ கர்மங்களைச்‌ செய்து கொண்டே வாழ விரும்ப வேண்டும்‌. 
(6) பரம லோகம்‌ செல்பவனுடன்‌ வித்யை கர்மம்‌ இவை தொடா்‌கின்றன; ப்ரஹ்ம ஞானிகள்‌ கர்‌மமே முக்கியமாகக்‌ கொள்பவர்‌. 

விளக்கம்‌ : தத்வமஸி என்ற வாக்கியத்தில்‌ பரமாத்மா ஜீவனுக்கு ஆத்மா. ஆதலால்‌ ப்ரஹ்மோபாஸகத்தால் என்றே கருத்து; 
இது ப்ரஹ்ம வித்யையாலே, கர்மத்தாலன்று. 

காலஷேயர்களான ரிஷிகள்‌, ''வேதாத்யயநம்‌ ஏன்‌ செய்ய வேண்டும்‌?”” என்று கேட்டனர்‌. இதன்‌ கருத்து, 
ப்ரஹ்ம ஞானிகளுக்குக்‌ கர்மம்‌ அவச்யமில்லை, செய்யும்‌ கர்மம மெல்லாம்‌ வித்யையோடே என்றது விரைவில்‌ பயன்‌ கொடுப்பதாக; இத்தகைய வித்யை உத்ததமேயாகும்‌. 

கர்மங்கள்‌ செய்ய விரும்புவது வேதத்தின்‌ பூர்வ பாகத்தின்‌ அர்த்த ஞானத்தாலே; 
இது போல்‌ மோக்ஷம்‌ விரும்புவது ப்ரஹ்ம ஞானத்தைப்‌ பற்றி உத்தர பாகத்‌தின்‌ அர்த்த ஞானத்தாலே. 
ஜனகர்‌ முதலானோர் கர்மத்‌தாலே முக்தி பெற்றனர்‌ என்பதன்‌ கருத்து,முக்தி அடையும்‌ வரையில்‌ கர்மம்‌ அனுஷ்டிக்கவேண்டும்‌ என்பதே. 
கர்மம்‌ ஆயுள்‌ முழுதும்‌ செய்யவேண்டும்‌ என்ற விதி ஸந்யாஸ ஆச்ரமத்திற்கு இல்லை. 
ஆதலால்‌ மோஷ புருஷார்த்தம்‌ ப்ரஹ்ம வித்யையினாலேதான்‌, கர்மத்தாலன்று. 
4, 2. உத்கீதம்‌ - நிலை. 
உத்கீதம்‌ யாகத்திற்கு அங்கம்‌. உத்கீதத்தை ஸ்துதித்‌தால்‌ போதுமா? அது யாவற்றிலும்‌ மிக இனிமையானது 
என்ற கருத்துடன்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா?உபாஸநத்தால்‌ வீர்யமுடைய பலன்‌ ஏற்படுவதற்காகச்‌ 
சுவை யுடைமை தோக்காகக் கருதி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌ 
4. 3. உபாக்யானங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யை துதிக்கும்போது சில உபாக்யானங்‌கள்‌ ஓதப்படுகின்றன. 
*:மநுர்வை வைவஸ்வதோ ராஜா”, **“யமோ வைவவஸ்வத:'', வருண ஆதித்ய:”” என்று தொடங்குவன, 
இது மாதிரியானவை அந்த அந்த: வித்யையைத்‌ துதிப்பதற்காகவே. 
4. 4. ஸந்யாஸிகள்‌--கர்மாக்கள்‌. 
ப்ரஹ்ம லித்மையில்‌ ஸந்யாஸிகளுக்கு அதிகாரம்‌ உண்டு; யஜ்ஞம்‌ முதலியன இல்லை. 
இவர்களுக்கு ஆச்ரமத்திற்குரிய கர்மங்களே ப்ரஹ்ம வித்யையை அனுஷ்‌டிக்கப்‌ போதும்‌. 

4. 5. இல்லறம்‌-- கர்மாக்கள்‌. 

இல்லறத்திலுள்ளோர்‌ ஸந்யாஸிகளைப்‌ போலே கர்மங்கள்‌ இல்லாமல்‌ ப்ரஹ்ம வித்யை அநுஷ்டிக்கலாமா? 
வேதனம்‌ என்ற ஞானம்‌ மோக்ஷ ஸாதனமாக விதிக்கப்பட்டுள்ளது; இது த்யாநம்‌ முதலான சொற்களால்‌ சொல்லப்படும்‌ உபாஸநமே யாகும்‌. 
இது எம்‌பெருமானுக்கு உகப்பைத்‌ தரும்‌ யஜ்ஞம்‌ போல்வதால்‌ உண்டாகும்‌. ஆதலால்‌ அந்த அந்த ஆச்ரமத்திற்கான கர்மாக்கள்‌ செய்ய வேண்டும்‌. 

4.,6. இல்லறம்‌: சமதமம்‌. 
சமதமங்கள்‌ என்பது இந்த்ரியங்களை அடக்குவது. -இந்த்ரியங்களை ஒடுக்குவதால்‌ கர்மங்கள்‌ செய்ய இயலாதே என்பது சங்கை. 
“தஸ்மாத்‌ ஏவம்‌ வித்‌ சாந்தோ தாந்த: உபரத:'” என்ற வேத வாக்கியத்தில்‌ இந்த்ரியமான மனத்தை அடக்கினால்தான்‌ 
வெளி இந்த்ரியங்‌களையும்‌ அடக்கிக்‌ காம்ய கார்மங்களிலிருந்து நீங்கலாகுமே என்று வந்துள்ளது 
சமம்‌, தமம்‌ இவை மனத்தை ஒருமுகப்படுத்துகன்றன. ஆதலால்‌ இல்லறத்‌தனனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கும்‌ சமதமங்கள்‌ ஒடுக்க வேண்டும்‌. 

4. 7. அநாச்ரமிகள்‌--ப்ரஹ்ம வித்யை. 

ப்ரஹ்மசார்யம்‌, இல்லறம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌ ஆகிய இந்த நாலு ஆச்ரமங்களிலும்‌ இல்லாதவர்கள்‌ அநாச்ரமிகள்‌ 
இவர்களுக்கு ப்ரஹ்ம வித்வையில்‌ ௮திகாரம்‌ உண்டா? ரைக்வர்‌, பீஷ்மர்‌ இவர்கள்‌ அநாச்ரமிகளாகவே வாழ்ந்தனர்‌. ரைக்வரா்‌ ப்ரஹ்ம நிஷ்டராக 
இருந்தார்‌; பீஷ்மர்‌ வித்யா நிஷ்டராக இருந்தார்‌. ஐபம்‌ முதலானவை அநாச்ரமிகள்‌ விஷயத்தில்‌ அங்கமாகின்றன என்பது சாஸ்த்ரம்‌.
"**தபஸா ப்ரஹ்மசர்யேண”* என்ற இடத்தில்‌ பெண்பாலரோடு சேர்க்கை யில்லாத ஜீவாத்மாக்கள்‌ பரமாத்மாவை உபாஸித்து ஆதித்‌யனை அடைகிறார்கள்‌ என்பது காணலாம்‌. 

4, 8. ப்ரஹ்ம வித்யை : அங்கங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு ஆத்ம குணங்களாகிய சமமும்‌ தமமும்‌ அங்கங்கள்‌ என்று முன்பு கூறப்பட்டது. 
“அது முநி:*” என்ற இடத்தில்‌ முனிசப்தம்‌ வேறோர்‌ அங்கமாக விதித்துள்ளது. இது மெளனம்‌ என்ற கருத்துடையது. 
பால்யம்‌, பாண்டித்யம்‌ இவற்றோடு மூன்றாவதஈாகக கூறப்பட்ட இது பகவானுடைய திருமேனியை மனனஞ்‌ 
செய்வதற்கே. 
4. 9, ப்ரஹ்ம வித்யை--உற்பத்தி காலம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குக்‌ காரணம்‌ புண்ய கர்மங்கள்‌. -இக்கர்மங்கள்‌ செய்த உடனே ப்ரஹ்ம வித்யை உண்டாகிறதா? 
வேறே ஒரு  காலத்தில்‌ உண்டாகிறதா? அல்லது நிச்சயமில்லையா? என்பது சங்கை. 

புண்ய கர்மாக்கள்‌ செய்ததும்‌ வித்யைக்குத்‌ தடை யில்லாவிட்டால்‌ வித்யை உடனே உண்டாகும்‌; 
தடை  இருந்தால்‌ வேறொரு காலத்தில்‌ வித்யை ஏற்படும்‌. தடைகள்‌ ஏற்படுவது வலி மிக்க பூர்வ கர்மங்களாலே. 
மோக்ஷத்தைக்‌ குறிப்பாகக்‌ கொண்ட உபாஸனங்கள்‌ விஷயத்திலும்‌ தடை இல்லாமல்‌ இருந்தால்தான்‌ பலனை கைகூடும்‌. 

யாகம்‌ போன்ற கர்மாக்களோடு செய்யும்‌ பகவத் உபாஸநம்‌ மோக்ஷத்தை அளிக்கும்‌. 
இவ்வாறு பகவானுக்கு ஆராதனமான கர்மத்தில்‌  இதன்‌ ரஸத்‌துடன்‌ உபாஸிக்க வேண்டும்‌. 
ஸத்வித்யைகளில்‌ ச்வேத கேது முதலானோரது கதைகள்‌ அந்த வித்யைகளைப்‌  பு கழ்வத்ற்காக ஏற்பட்டவை. 

ஸந்யாஸிகள்‌ தங்களது கர்மங்களைச்‌ செய்யவேண்‌டும்‌, யாகம்‌ போன்றவை வேண்டியதில்லை. 
இல்லறத்திலிருக்கும்‌ முமுஷுக்கள்‌ தங்கள்‌ ஆச்ரமத்திற்கான தர்மங்களை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகச்‌ செய்யவேண்டும்‌. 

யஜ்ஞம்‌ முதலியன செய்யத்‌ தகுதியள்ளவர்களுக்கு சமம்‌, தமம்‌ இவை உபாஸநத்திற்கு அங்கம்‌. 
விதுரனுக்‌கும்‌ (மனைவி யில்லா தவனுக்கும்‌) ப்ரஹ்ம உபாஸநத்திற்கு தகுதி உண்டு. 

தங்களது ஆச்ரமத்திலிருந்து நழுவினால்  ப்ரஸ்ம உபாஸனத்திற்குத்‌ தகுதி இல்லை. , 
பசுவானது திவ்ய்  மங்களத்‌ திருமேனியைச்‌ சிந்திப்பதற்காக ப்ரஹ்ம உபாஸனத்திற்கு மெளனம்‌ அவசியம்‌
மோக்ஷத்தைக்‌ காட்டிலும்‌ வேறான பலன்களைக்‌ கருதிச்‌ செய்யும்‌ உபாஸனத்திற்குப்‌ பலன்‌ உடனே நேரும்‌ என்பதில்லை. 
 
----------------------
நாலாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

பகவானே உலகத்திற்குக்‌ காரணம்‌ என்பது முதல்‌ இரண்டு அத்யாயங்களில்‌ ஐயந்‌ திரிபற நிரூபிக்கப்‌ பட்டது. 
மூன்றாவது அத்யாயத்தில்‌ விளக்கப்பட்டது:-பகவானைப்‌ பெறுவதற்கு ஸாதனம்‌, வித்யா ரூபமான உபாஸநம்‌ என்பது. 
ஞானம்‌ மாத்திரம்‌ உபாயமன்று, இது உபாஸநத்திற்கு அங்கம்‌, பக்தி ரூபமானது, பகவானே விஷயமானது. 
இந்த வித்யையின்‌ இயல்பு, பயன்‌ இவை இந்த அத்யாயத்தில்‌ வரும்‌ விஷயமாகும்‌. 
இந்த  அத்யாயம்‌ ப்ரஹ்ம வித்யையின்‌ பலனை விளக்குகிறது, 
ஆதலால்‌ பல அத்யாயம்‌ என்பது 
இதில்‌ முதற்‌ பாதம்‌. கருமம்‌ தீரும்‌ வகையும்‌, இரண்டாம்‌ பாதம்‌ ஸ்தூல சரீரம்‌ தீரும்‌ வகையும்‌, 
மூன்றாம்‌ பாதம்‌ ஸுக்ம சரீரம்‌ தீரும்‌ வகையும்‌ கூறுவன. 
நாலாவது பாதம்‌ வெளியிடுவது? 
பகவானைப்‌ பெற்று இன்பமுறுவது, ஜீவனின்‌ இயல்பான ஸ்வரூபம்‌ முழுதும்‌ ஒளிர்வது, 
ஜீவன்‌ இவ்வுலகுக்கு மீளாமை. 
இந்த நான்கு பாதங்கள்‌ முறையே 
ஆவ்ருத்தி பாதம்‌, 
உத்கராந்தி பாதம்‌, 
கதி பாதம்‌, 
ப்ராப்தி பாதம்‌, 

ஆவ்ருத்தி பாதத்தில்‌ ப்ரஹ்ம வித்யையானது பலன்‌ கிடைக்கும்‌ வரையில்‌ ஆவ்ருத்தி செய்ய வேண்டும்‌ என்பது 
போன்ற விஷயங்கள்‌ ஆராயப்படுகின்‌றன. 

1. 1. ப்ரஹ்ம வித்யை--இதற்காகும்‌ காலம்‌. 

உபாஸநதம்‌, வேதனம்‌, த்யானம்‌ இலை ஓரே பொருளுடையன. த்யானம்‌ என்பது எண்ணெயின்‌ தாரை 
போல இடையறாமல்‌ நிகழவேண்டும்‌. இதுவே ஸ்ம்ருதி எனப்படுவது. 
இதற்கு அங்கங்கள்‌ யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, ப்ராணாயாமம்‌, ப்ரத்யாஹாரம்‌. தாரணம்‌. தேரே 
காணும்‌ நிலை வரையில்‌ உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 
1, 2. உபாஸிக்கும்‌ வகை. 

உபாஸநம்‌ செய்யும்‌ முறை, **ப்ரஹ்மம்‌ நானே?” என்று. ஐகத்‌ கர்ரணனான பகவான்‌ தனக்குச்‌ சரீர 
பூதனான ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌: 
இருளைக்‌ காட்டிலும்‌ ஒளிபோலும்‌, பாபத்தைக்‌ காட்டிலும்‌ புண்யம்‌ போலும்‌, சரீரத்தைக்‌ காட்டிலும்‌ 
ஆத்மா போலும்‌ இவ்வேறுபாடு. சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்‌டுள்ளது. பகவான்‌ ஆத்மாவுக்கு அந்தர்யாமி, 
ஆத்மாவின்‌ வெளியேயும்‌ உள்ளேயும்‌ வியாபித்திருக்கிறான்‌. ஆத்மாவை நியமிக்கிறான்‌. 
இவ்வாறு பகவானது குணங்‌களை நினைத்து இவன்‌ தனக்கு அந்தர்யாமியாக நினைத்து உபாஸிக்கவேண்டும்‌. 
ஜீவாத்மா சரீரத்திற்கு ஆத்மாவாக இருப்பதாலே '*நான்‌ மனிதன்‌''என்று கருதுகின்றது. 
இதுபோல்‌ ஜீவாத்மாவுக்கு ஆத்மாவான பரமாத்மாவை ஜீவாத்மா தான்‌ என்று கருதுவது தகும்‌. 
ஆதலால்‌ பகவானை ஆத்மா என்று உபாஸிக்கவேண்டும்‌' 

1. 3. ப்ரதீகங்கள்‌--உபாஸநம்‌, 
ப்ரஹ்மத்தின்‌ நாமம்‌, மனம்‌ போன்றவை ப்ரதீகங்‌கள்‌, இவை ப்ரஹ்மத்தைப் போல ௨பாஸகனுக்கு ஆத்மா அல்ல. 
ப்ரஹ்மம்‌ இவற்றைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தது, 
அரசனை வேலைக் காரனனாகக்‌ கருதிப்‌ பேசினால்‌ ஒன்‌றும்‌ நலம்‌ பெறுவதற்கில்லை--பெறுவது தண்டனையே 
ஆதலால்‌ ப்ரதீகங்கள்‌ ஆத்மா என்று உபாஸிக்கலாகாது. 

1. 4. உத்கீதம்‌, ஆதித்யன்‌. 
உபநிஷத்‌ வாக்கியங்களில்‌ யாகத்திற்கு அங்கமாக உத்கீத உபாஸநம்‌ சொல்லப்படுகிறது. 
உத்கீதத்தில்‌ ஆதித்யனை உபாஸிப்பதா? ஆதித்யனில்‌ உத்கீதம்‌ என்று உபாஸிப்பதா? 
உத்கீதத்தால்‌ ஆதித்யன்‌ முதலான  தேவர்களை ஆராதிப்பதால்‌ பலன்‌ கிடைக்கிறது 
அன்றியும்‌ இவர்கள்‌ உத்தீதத்தை விட உயர்ந்தவர்கள்‌. 
ஆதலால்‌ உத்கீதத்தில்‌ ஆதித்யன்‌ இருப்பதாக உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 

1, 5. உபாஸநம்‌: நிலை. 
உபாஸநம்‌ பல முறை செய்யவேண்டும்‌ என்று நிர்ணயிக்கப்பட்டது. உபாஸநம்‌ செய்பவன்‌ உட்கார்ந்தே செய்யவேண்டும்‌. 
அப்போதுதான்‌ மன ஒருமைப்பாடு தேரக்கூடும்‌; த்யானம்‌ செய்யமுடியும்‌. 
நடந்தோ நின்று கொண்டோ செய்தால்‌ ஆயாசம்‌ ஏற்படும்‌; மன ஒருமைப்‌ பாடு இராது, 

உபாஸநம்‌ த்யான ரூப மாகையாலே மன ஒருமைப்‌ பாடு இன்றியமையாதது. 
த்யானம்‌ எண்ணெயின்‌ தாரை போலே இடையறாமல்‌ தொடர்ந்து நிகழவேண்டும்‌; மன ஒருமைப்பாடின்றி இது சாத்யமாகாது. 
நினைவு வெள்ளம்‌ த்யானமாகும்‌. த்யானம்‌ செய்யும்‌ போது அசையாமல்‌ இருக்சுவேண்டும்‌. 
ஆதலால்‌ பரிசுத்தமான இடத்தில்‌ ஏகாந்தமாக உட்கார்ந்து த்யானம்‌ செய்ய வேண்டும்‌. 
மேடு பள்ளங்கள்‌ உள்ள இடமானானல் உடல்‌ அசைவும்‌, மனக்‌ கலக்கமும்‌ நேரும்‌.
1. 6. உபாஸநம்‌ தேசம்‌, காலம்‌. : 

மரணம்‌ வரையில்‌ உபாஸநம்‌ தினந்தோறும்‌ நடக்க வேண்டும்‌. சாந்தோக்யதீதில்‌ இவ்வாறே கூறியிருக்‌ கிறது: 
இவ்வாறு அனுஷ்டித்து, ஜீவன்‌ ப்ரஹ்மலோகம்‌. சேருகிறான்‌, இதினின்று மீட்சி இல்லை.

1. 7. சேர்ந்துள்ள பாவங்கள்‌. 

தாமரை இலையில்‌ ஜலம்‌ ஒட்டுவதில்லை; இதே போல்‌ ப்ரஹ்ம உயாஸகனிடம்‌ பாப கர்மம்‌ சேர மாட்டா. 
முன்னமே சேர்ந்துள்ள பாவங்கள்‌ நெருப்பி லிட்ட பஞ்சப்பொதி போல்‌ அழிந்துவிடும்‌. 
இனி வரும்‌ பாவங்கள்‌ கவனக்‌ குறைவால்‌ நிகழ்வன; அறிந்து செய்‌ வனவல்ல. 
இவை உபாஸகனிடம்‌ ஒட்டுவதில்லை. இது சாந்தோக்யத்தின்‌ கருத்து.
1. 8. புண்ணியத்தின்‌ பலன்‌. 

மோஷம்‌ பெறுவதற்குப்‌ புண்ய கர்மாக்களும்‌ தடையாவன; இவற்றின்‌ பயனை அனுபவித்தே மோக்ஷம்‌, 
ஆதலால்‌ இவையும்‌ பாவச்‌ செயல்கள்‌ போல்வன. 
சாந் தோக்யத்தில்‌: ஸர்வே பாப்மாநோ யதோ நிவர்த்தந்தே (8-41) என்ற இடத்தில்‌: புண்யமும்‌ பாப சப்தத்தால்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதலால்‌ முதலில்‌ சேர்ந்துள்ள புண்யங்கள்‌ அழிகின்றன; பின்பு நிகழ்வன ஒட்டாமல்‌ போகின்றன.
1. 9. முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு முன்‌ நேர்ந்த புண்ய பாவங்கள்‌ அழிகின்றன என்பது முன்பு கூறப்பட்டது. 
பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மம்‌--ப்ராப்த கர்மம்‌ என்பது அழியாது. 
சாந்தோக்யம்‌ (6-14-4) கூறுவது: உபாஸகனுக்கு ப்ராரப்த கார்மம்‌ மூடியும்‌ சரீரத்தின்‌ இறுதி வரை 
ப்ரஹ்மத்தை அடையக்‌ காலதாமதம்‌ ஏற்படுகிறது. அதற்குப்‌ பின்‌ ப்ரஹ்ம ப்ராப்தி . 
புண்ய பாவங்கள்‌ அழிந்தால்‌ சரீரம்‌ இல்லை. ஏனெனில்‌ சரீரம்‌ புண்ய பாவ அனுபவத்திற்கே. 
ஆதலால்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ அனுபவித்தே தீரவேண்டும்‌. 
“நூறு கோடி கல்பமானாலும்‌ பாவம்‌ அனுபவிக்காமல்‌ அழியாது” என்ற வாக்யம்‌ கர்மங்களின்‌ பலனைக் காட்டுவதற்காகவே .
ப்ரஹ்ம வித்யை யினால்‌ இவை தாமே அழியும்‌.
1. 10. நித்ய நைமித்திக கர்மாக்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ ஒட்டாமற்‌ போகின்றன என்று விளக்கப்பட்டது. 
இவை ஓட்டாவிடில்‌ நித்யமாகச்‌ செய்யும்‌ கர்மாக்களும்‌ நைமித்‌கிக கர்மாக்களும்‌ செய்யவேண்டியதில்லையே என்பு ஒரு சங்கை. 
வித்யை உண்டாவதற்காக இவை விடாமற்‌ செய்யவேணடுவன. 
வேத வாக்கியம்‌ ஓன்று: வேத அத்யனத்தாலும்‌, யஜ்ஞத்தாலும்‌, தானத்தாலும்‌, பலனைக்‌ கோராத தவத்தினாலும்‌ 
ப்ரஹ்ம ஞானிகள்‌ பரமாத்‌மாவை உபாஸிக்க விரும்புகிறார்கள்‌ என்று.
இவையாவும்‌ வித்யைக்கு அங்கங்கள்‌. வித்யை சரீரம்‌ முடியும்‌ வரையில்‌ செய்யவேண்டியது. 
இக் கர்மங்கள்‌ செய்யாவிடில்‌ இதனால்‌ விளையும்‌ பாவம்‌ மன நிலையைக்‌ குலைத்து விடும்‌. 
ஆதலால்‌ மனம்‌ தூயதாவதற்காக நித்ய நைமித்‌திகக் கர்மாக்களை எப்போதும்‌ செய்ய வேண்டும்‌.
1. 11. ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ சேரும்‌ கர்ம பலன்கள்‌. 

இவை ப்ராரப்தங்கள்‌ எனப்படும்‌. கர்மாக்களின்‌ பலன்‌ அனுபவித்தே இவை தீரும்‌; 
ஆதலால்‌ ஓர் சரீரத்‌தின்‌ முடிவில்‌ தீரும்‌ என்பதற்கல்லை; எந்த ஜன்மத்தில்‌ அழிகின்றன என்பதும்‌ சொல்ல முடியாது. 
இதுவரையில்‌ தேறிய கருத்துக்கள்‌: 
(1) ப்ரஹ்ம. வித்யைக்கு முன்‌ சேர்ந்த புண்ய பாவங்கள்‌ ஸஞ்சிதம்‌ எனப்படுவன -இவை 'வித்யையின்‌ மகிமையால்‌ அழிகின்‌றன. 
(2) ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ : கவனக்‌ குறைவால்‌ தேரும்‌ புண்ய பாவங்கள்‌ பகவானது கோபத்தை விளைவிப்பன அல்ல; 
ஆகையால்‌ ' இவை ஓட்டுவனவல்ல. 
(3) ஒரு பலனைக்‌ கருதி உபாஸகன்‌ செய்யும்‌ புண்ய கர்மாக்கள்‌ வலி மிக்க பாவ்ச்‌ செயல்களால்‌ தடைபட்‌.டால்‌, 
ப்ராரப்த கர்மங்கள்‌ முடியும்போது இவை நீங்‌ கும்‌. 
ஸஞ்சித புண்யங்களோடு இவை இவனுடைய அநுகூலரிடம்‌ சேரும்‌. 
(5) வித்யை உண்டான பின்‌ புத்தி பூர்வமாகச்‌ செய்யும்‌ பாவச்‌ செயல்களின்‌ பயன்‌, எஞ்சி யிருப்பனவாய்‌ முன்‌ சேர்ந்த 
பாவச்‌ செயல்களின்‌ பலனோடு இவனுடைய விரோதிகளிடம்‌ சேரும்‌ -இவ்வாறு பகவான்‌ சங்கல்பித்தது. 
மோஷம்‌ பெறுவதற்காகச்‌ செய்யும்‌' பகவத்‌ உபாஸநம்‌ ஆயுள் வரையில்‌ திரும்பாத திரும்பச்‌ செய்ய வேண்டும்‌. 
பகவானது ஸ்வரூபம்‌ தனக்கு ஆத்மா என்றே உபாஸிக்க வேண்டும்‌. 
மனம்‌ முதலான ப்ராக்ருதங்களை விட உயர்ந்‌தது ப்ரஹ்மம்‌, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸநங்களில்‌ மனம்‌ முதலியவற்றை ஆத்ம: எனக்‌ கருதி உபாஸிக்கக் கூடாது 
உத்தீதம்‌ முதலானவற்றில்‌ அவற்றின்‌ தேவதைகளை எண்ணி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌. 
உட்கார்த்தே உபாஸநம்‌ செய்யவேண்டும்‌; -மரணம்‌ வரையில்‌ அனுஷ்‌டிக்க வேண்டும்‌. _ 
உபாஸஷநத்தின்‌ பலனாக நேரே காணும்‌ காட்சி போன்ற நிலை அடையும்போது முன்னமே செய்த புண்ய பாவங்கள்‌ அழிந்து விடுகின்றன; 
பின்பு அறியாமல்‌ செய்யும்‌ பாவங்கள்‌ ஒட்டுவனவல்ல. பலன்‌ கொடுக்‌கத்‌ தொடங்காத புண்ய பாவங்கள்‌ கிரமமாகத் தாமே அழிந்து விடுகின்றன.

--------------------
2. இரண்டாம்‌ பாதம்‌ 

ப்ரஹ்ம உபாஸநம்‌ நிறைவடைந்த பின்‌ உபாஸகனது புண்ய பாவங்கள்‌ அழியும்‌ என்று முன்‌ பாதத்தில்‌ விளக்கி யுள்ளது. 
மரண மடையும்‌ ஜீவன்‌ மோக்ஷம்‌ பெற்ற பின்‌ அர்ச்சிராதி மார்கமாகப்‌ பரமபதம்‌ சேரும்‌ 
வகை மூன்றாம்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிதது. 
ப்ரஹ்ம வித்யையின்‌ பலனாக ஜீவன்‌ ஸுஷும்நா நாடி வழியாகச்‌ சரீரத்திலிருந்து கிளம்பும்‌ வகை (உத்க்ராத்தி) இப்‌ 
பாதத்தில்‌ ஆராயப்படுகிறது. 
2. 1. வாக்‌ இந்த்ரியம்‌. 

“வாங்‌ மநஸி ஸம்பத்யதே'” என்கிறது ஒரு வேத வாக்கியம்‌. மரணத்தின்போது வாக்‌ இந்த்ரியத்தின்‌ செயல்‌ குலைகிறது; 
இந்த இந்த்ரியம்‌ மனத்தோடு சேருகின்றது. மனத்தின்‌ செயல்‌ அடங்கவில்லை; ஆதலால்‌ செயல்‌ அடங்கிய வாக்கு இத்துடன்‌ சேருகிறது. 
வாக்‌கைப்‌ பின்பற்றி இந்த்ரியங்கள்‌ யாவும்‌ மனத்துடன்‌ சேருகின்றன. 

2. 2. மன இந்த்ரியம்‌., 

மனம்‌ அன்னமயம்‌, ப்ராணன்‌ ஜலமயம்‌ என்கிறது சாஸ்த்ரம்‌, அதாவது மனம்‌ அன்னத்தாலும்‌, ப்ராணன்‌ 
ஜலத்தாலும்‌ செயல்படுகின்றன என்பது கருத்து. 
மனம்‌ ஸாத்விக அஹங்காரத்தின்‌ விகாரம்‌, வாயு ரூபமான ப்ராணன்‌ ஆகாசத்தின்‌ விகாரம்‌, 
இந்தரியங்களோடு கூடிய மனம்‌ ப்ராணனோரடு சேர்ந்தடைகின்றது. 

2. 3. ப்ராணன்‌. 

இந்தரியங்களுடன்‌ சேர்த்த மனத்துடன்‌ இணைந்த ப்ராணன்‌ இந்த்ரியங்களுக்குத்‌ தலைவனான ஜீவாத்மாவிடம்‌ சேருகின்றது. 

ப்ராண: தேஜஸி”' என்பது சாந்தோக்ய வசனம்‌. 
யமூனை கங்கையோடு சேர்ந்ததே கடலை அடைகிறது. எனினும்‌ யமுனை கடலை அடைகிறது என்கிறோம்‌. 
இதைப்‌ போல இங்குக் கருத்து: ப்ராணன்‌ என்பது மனம்‌ இந்த்ரியங்கள்‌ இவற்றுடனேயே ஜீவாத்மாவைச்‌ சேருகிறது என்பதே. 

2. 4. பஞ்ச பூதங்கள்‌. 

“ப்ராண: தேஜஸி'' என்று முன்பு கூறப்பட்டது. 
அதாவது ப்ராணன்‌ என்பது மனம்‌, இந்தீரியங்கள்‌ இவற்றுடன்‌ தேஜஸ்ஸைச்‌ சேருகின்றது.
தேஜஸ்‌ என்பது பூதங்‌களின்‌ சேர்க்கையாலே ஏற்படுகிறது என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
தேஹத்திலிருந்து கிளம்பும்‌ ஜீவன்‌ பஞ்சபூத மயம்‌ என ப்ருஹதாரண்யகம்‌ வெளியிட்டுள்ளது (6-4-5) 
“-ப்ருத்வீமய: ஆயபோமய: தேஜோமய;”” என்று பூமி, ஜலம்‌, தேஜஸ்‌ இவற்றாலானது. 
அதாவது இவை மூன்றும்‌ சேர்ந்தது தேஜஸ்‌. ஆதலால்‌ ப்ராணன்‌ பூத் ஸுிஷ்மங்களோடு சேருகின்றது என்பது தெளிவு. 

2. 5. உத்க்ராந்தி. 

உத்க்ராந்தி என்பது. சரீரத்திலிருந்து ஜீவன்‌ பிரிந்து செல்லுதல்‌. இது ப்ரஹ்ம ஞானிகளுக்கு இல்லை, 
மற்றை யோர்க்கே என்பது சிலரது கருத்து. இதன்‌ காரணம்‌: 
ப்ரஹ்ம ஞானியின்‌ மனத்திலுள்ள விருப்பங்கள்‌ நீங்குகின்றன. அப்போதே இவனுக்கு மோக்ஷம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
இதை ஆராய்ந்தால்‌ இவனிடம்‌ புண்ய பாவங்கள்‌ ஓட்டமட்டா;ஆதலால்‌ இங்கு வாழும்போதே ப்ரஷ்ம அனுபவம்‌ பெறுகிறான்‌ என்பது தேறும்‌. 
இங்கு இவ்வாறானளோர்‌ வாழும்‌ நிலையே முக்தி என்கிறார்கள்‌ 
இக்கருத்துடையோர்‌. ஜீவித்தல்‌ முக்தி இவை மாறுபட்ட கருத்துக்கள்‌; இவை இணைந்து நிகழமாட்டா. 
ஆதலால்‌  ப்ரஹ்ம ஞானிகளுக்கும்‌ உத்க்ராந்தி உண்டு என்பது தீர்வு.  

கடவல்லியிலிருந்து தெரிந்துகொள்வது ((2-8-16]); 
உடலில்‌ பல. நாடிகள்‌. உள்ளன;. இவழ்றுள்‌, ,ஸுஷும்ந. என்று நாடியின்‌ வழியாகச்‌ செல்பவன்‌ (மோக்ஷ மடைகிறான்‌, 
மற்றை நாடிகள்‌ எம்ணார மார்கங்கள்‌ என்பது. 
முக்தி அடைபவன்‌ உபாஸகன்‌. ஆதலால்‌ இவனுக்கு உத்கராந்தி உண்டு என்பது தேறுகின்றது. 

மரண நிலையில்‌ சரீரத்தில்‌ உஷ்ணம்‌ ஒரிடத்திலேயே காணப்படுகிறது; இது ஸுஷ்ம தேஹத்தின்‌ வெப்பம்‌. 
இது யாவர்க்கும்‌ உண்டு. இதனாலும்‌ உபாஸகனுக்குக்‌ உத்க்ராந்தி உண்டு எள்றறியலாம்‌. 
அர்ச்சிராதி வழி யாக உபாஸகன்‌ ப்ரஹ்மத்தை அடையும்‌ வரையில்‌ ' ப்ராணன்‌ இவனுடனேயே இயங்குகிறது. 

ஞானியைப்‌ பற்றிச்‌ சொல்லும்போது இவன்‌ மேன்‌ தோக்கிச்‌ செல்லும்‌ நாடி வழியாக (ஸு ஷும்நா) சூர்ய 
மண்டலத்தைப்‌ பிளந்து கொண்டு நான்முகனின்‌ உலகம்‌ செல்லுகிறான்‌ என்பதும்‌ சாஸ்த்ரத்தில்‌ உள்ளது. 
ஆதலால்‌ ஞானிக்கும்‌ உத்க்ராந்தி உண்டு. மூர்த்ந்ய நாடியில்‌ புகுவதற்கு முன்‌ இந்த உத்க்ராந்தி இம்மூவகை 
யினர்க்கும்‌ உண்டு. 
2. 6. பூத ஸுக்ஷூமங்கள்‌. 

ப்ராணனோடு சேர்ந்த பூத ஸூக்ஷ்மங்கள்‌ எங்குச்‌ செல்கின்றன? ““தேஜ: பரஸ்யாம்‌ தேவதாயாம்‌'”' என்‌பது வேத வாக்கியம்‌. 
இதயத்திற்கு அந்தர்யாமியான பகவானிடம்‌ பூதங்கள்‌ சேருகின்றன என்பது கருத்து. 
விழிப்பு நிலையில்‌ அனுபவிக்கும்‌ இன்பங்களால்‌ விளையும்‌ களைப்பு ஆறுவதற்கே ஜீவன்‌ தூங்கும்‌ நிலையில்‌ 
பரமாத்மாவோடு சேருகிறான்‌. ஸ்ருஷ்டியில்‌ அனுபவிக்கும்‌ இன்ப துன்பங்களின்‌ களைப்பு ஆறுவதற்கு ப்ரளய 
காலத்தில்‌ ஜீவன்‌ பசகவானோடு சேருகிறான்‌. மரண காலத்தில்‌ பூத ஸுிஷ்மங்கள்‌ எடுக்கப்படும்போது 
(நேரும்‌ களைப்பு ஆறுவதற்கு ஜீவன்‌ பரமாத்மாவோடு சேருகிறான்‌. இதுபோல்‌ பூத ஸக்ஷ்மங்கள்‌ இதயத்தி 
லுள்ள பரமாத்மாவோடு சேருகின்றன. 'இவைகளோடு சேர்ந்த. ஜீவன்‌!.அந்தர்யரமியான பரமாத்மாவை 
விட்டுப்‌ பிரிய முடியாதவாறு.சேருகிறான்‌.. 

2. 7. ப்ரஹ்ம ஞானிக்கு உத்க்ராந்தி. 

ப்ரஹ்மஞானி ' உபாஸநம்‌, செய்யும் போது தான்‌ மூர்தந்யநாடி.வழியாகச்‌ சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி 
அர்ச்சிராதி மார்கத்தாலே: சென்று பரமாத்மாவை அடையப்‌ போவதாக தினந்தோறும்‌ இதையே சிந்தனை 
செய்வதால்‌ பகவான்‌ இதையே இவனுக்கு அருள்‌கிறான்‌. 
இவனது இதயத்தில்‌ இருள்‌ நீங்கி இந்த மூர்தந்ய நாடி யில்‌ ஒளி: சேருகிறது. 
இந்த ஒளியால்‌ இந்த நாடியின்‌  வ்ழியே ஜீவன்‌ கிளம்புகிறான்‌. . 

2. 8. ஜீவன்‌ மேலே செல்லும்‌ விதம்‌. 

சரீரத்தை விட்டு வெளிக்‌ இளம்பும்‌ ஜீவன்‌ சூர்ய கிரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
சூர்ய கிரணங்கள்‌. இரவில்‌ காண்பதில்லை; ஜீவனின்‌ நிலை என்ன? என்ற சங்கை எழுகின்றது. 
இரவு வேளையிலும்‌  சூரிய கிரணங்கள்‌ உள்ளன; கண்ணுக்குப்‌ புலனாவ தல்ல. 
இரண்டு கிராமங்களை இணைக்கும்‌ நெடுஞ்‌ சாலை போல்‌ சூரிய கரணங்கள்‌ மேலுலகையும்‌ பூமியையும்‌ இணைக்கின்றன. 
இவை. நாடிகளிலும்‌ ப்ரகாஸி க்‌கின்றன. ஆதலால்‌ ப்ரஹ்மஞானி இரவில்‌ மரணமடைந்தாலும்‌ 
சூரிய கரணங்களின்‌ வெளிச்சத்தாலே மேலே. சென்று பரமாத்மாவை அடைகிறான்‌, 
2. 9. இரவில்‌ ஜீவன்‌ மரண மடைந்தால்‌? 

மோக்ஷ மடையும்‌ ஞானிக்குச்‌ சரீரத்தோ டிருக்கும்‌ வரையில்‌ கார்மத்தோடு தொடர்புண்டு. 
சரீரத்திற்குக்‌ காரணமான ப்ராரப்த கர்மம்‌ இரவிலும்‌ முடிவடையும்‌ ; அப்போது மரணம்‌ நேரும்‌. 
இவ்வாறு மரணம்‌ நேரும்‌ போதே மோக்ஷமும்‌ நேரும்‌. 
இவனுக்குச்‌ சரீர சம்பந்தத்‌திற்குக்‌ காரணமில்லை; ஆதலால்‌ இரவில்‌ இறத்தாலும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு, 

2.10. தஷிணாயனத்தில்‌ மரணம்‌. 

தஷிணாயனத்தில்‌ மரணமடைந்தால்‌ ஜீவன்‌ சந்த்‌ரனை அடைகின்றான்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது, 
சந்த்ரனை அடைந்தால்‌ ஸம்ஸார மண்டலத்திற்கு மீட்சியும்‌. சொல்லப்படுகிறது. 
பீஷ்மர்‌ தஷிணாயனத்தில்‌ மரண மடைய விரும்பாதவராய்‌ உத்தரர்யணத்தை நோக்கிக் கொண்டிருந்தார்‌. 
ஆதலால்‌ தக்ஷிணாயனத்தில்‌ மரணமடையும்‌ உபாஸகனின்‌ நிலை என்ன? 

சந்த்ரனிடம்‌ சேர்ந்து பூமிக்கு மீள்வது என்று சொல்‌லியது ப்ரஹ்மஞான மில்லாதவனுச்கு: 
இரவில்‌: மரணம்‌  ஏற்பட்டால்‌ ப்ரஹ்மஞானி சந்த்ரனை அடைந்து சிறிது  தேரம்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்று 
மேலே செல்லுகிறான்‌ என்பதே ஊகிக்கவேண்டியது. 
பீஷ்மர்‌ தாம்‌ இஷ்டப்பட்ட காலத்தில்‌ மரண மடையக்கூடும்‌ என்ற வரம்‌ பெற்றிருந்தார்‌. 
உத்தராயண காலத்தின்‌ சிறப்‌பைக்‌ காட்டுவதற்கே அவர்‌ இதை அபேஷித்தார்‌. 

மரண மடையும்‌ ஜீவனுடைய வாக்‌ இந்த்ரியம்‌ மனத்‌துடன்‌ சேருகின்றது;மனம்‌ ப்ராணனோடு சேருகின்றது. 
ப்ராணன்‌ ஜீவனோடு சேருகின்றது. ஜீவனோடு கூடிய ப்ராணன்‌ மற்றைய பூதங்களோடு தேஜஸ்ஸோடு சேருகின்றது.
யாவும்‌ பரமாத்மாவோடு சேருகின்றன; லயமடையவில்லை. ஜீவன்‌ மூர்தந்ய நாடி வழியாக வெளி வருகின்றான்‌; 
இது உத்காந்தி ஆகும்‌. ஜீவன்‌ சூர்யனின்‌ கரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
இரவில்‌ மரண மடைந்தாலும்‌, தஷிணாயனத்தில்‌ மரண மடைந்தாலும்‌ உபாஸகனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு. 
----------

ப 3. மூன்றாம்‌ பாதம்‌ 

3.1. அர்ச்சிராதி. 
ஜீவன்‌ இதயத்தை விட்டு வெளி வந்ததும்‌ செல்லும்‌ மார்கம்‌ அர்ச்சிராதி என்பது. இந்த வழியில்‌ இவனை 
அழைத்துச்‌ செல்லும்‌ தேவர்கள்‌ அர்ச்சிஸ்‌ (அக்நி), அஹஸ்‌ (பகல்‌), சுக்லபக்ஷம்‌, உத்தராயணம்‌, ஸம்வத்‌ஸரம்‌ (ஆண்டு), 
ஆதித்யன்‌, சந்த்ரன்‌, வைத்யுதன்‌ (மின்‌னல்‌), வருணன்‌, இந்தீரன்‌,ப்ரஹ்மா. உபதிஷத்துக்களில்‌ சில வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ 
அர்ச்சிராதி மார்கம்‌ ஒன்றே வெவ்வேறல்ல. 

ஃ. ஆதிவாஹிகர்‌. 

ப்ரஹ்ம ஞானியை அர்ச்சிராதி கதியில்‌ அழைத்துசி செல்லும்‌ தேவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
"இவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ ஸ்தானம்‌ வரையில்‌ அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌. வித்வத்‌ புருஷன்‌ அமாநவன்‌ எனப்படும்‌ தேவன்‌? 
இவன்‌ முக்தனை பகவானிட்ம்‌ அழைத்துச்‌ செல்லுகிறான்‌. 
3. 9. அர்ச்சிராதி கதியில்‌ செல்வோர்‌ யார்‌? 

ப்ரஹ்ம உபாஸநம்‌ செய்தோர்‌ ப்ரஹ்மத்தை அடைகின்றனர்‌ அர்ச்சிராதி வழியாக. 
கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாஸிப்பவர்கள்‌ ப்ரஹ்ம லோகத்தை அடைகின்றனர்‌. 
ப்ரஹ்மாவின்‌ ஆயுட்காலம்‌ வரையில்‌ அங்குத்‌ தங்கி அவன்‌ பரமாத்மாவிடம்‌ போகும்போது உடன்‌ செல்லுகின்றனர்‌. 
இதுபாதரி என்பவரின்‌ கருத்து. 
தேவதாந்த்ர உபாஸனம்  செய்வோர்‌. அல்பமான, தாழ்‌வான பலனே பெறுவர்‌. 
கேவலம்‌ அத்மாவையே உபாஸனம் செய்வோர்க்கு நித்யமான பலன்‌ கிடைத்தாலும்‌, இவர்களது இன்பம்‌ அல்பமானது, ஓரளவு உடையது. 
பஞ்சாக்நி வித்யாநிஷ்டர்‌ ப்ரஹ்மத்தை அத்தர்யாமி யாகக்‌ கருதுவதால்‌ இவர்களுக்கும்‌ அர்ச்சிராதி உண்டு. 

சுருக்கம்‌ 
ப்ரஹ்ம வித்யைகளை உபாஸிப்பவர்கள்‌ எந்த வித்‌யையாயினும்‌ ஒரே அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்‌டம்‌ சேருகின்றனர்‌. 
முக்த் புருஷன்‌ ஸம்வத்ஸரத்‌தை அடைத்த பின்‌ வாயுவை அடைந்து ஆதித்யனை அடைகிறான்‌; 
தடித்‌ என்ற மின்னலுக்குப்‌ பின்பு வருணன்‌, இந்த்ரன்‌, பிரமன்‌ இவர்களை அடைகிறான்‌. 
அர்ச்சிஸ்‌ முதலான தேவர்கள்‌ முக்த்‌னை ஆங்காங்கு அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌; இவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
ப்ரஹ்ம உபாஸகர்களையும்‌, தம்‌ ஆத்மாவை உபாஸிக்கும்‌ கேவலர்களையுமே ஆதிவாஹிகர்‌ அழைத்துச்‌ “செல்கின்றனர்‌. 
--------------
4, நாலாம்‌ பாதம்‌ 
4. 1. ஜீவன்‌--ஸ்வரூபம்‌. 

அர்ச்சிராதி கதியில்‌ செல்லும்‌ ஜீவன்‌ பரமாத்மாவை  அடைத்து தனது இயல்பான ரூபத்துடன்‌ மின்னுறான்‌ என்று சாந்தோக்யம்‌ கூறுகிறது (8-12-2).
ரூபம்‌  என்பதற்குப்‌ புதிதாக ஒரு சரீரம்‌ என்பது கருத்தன்று, -இவனது ஸ்வரூபமும்‌ விரிவடைந்து விளங்குகிறான்‌. 
இவனுக்கு எப்போதும்‌ நிலையானது பூர்ணமான ஞானம்‌. சரீரத்தோடு இருக்கும்போது இந்த ஞானம்‌ மறைக்கப்படுகிறது. 
சரீரத்திலிருந்து விடுபட்டதும்‌  இது பூர்ணமாக விளங்குகிறது. 
ஜீவனது ஸ்வரூபம்‌?  பாவம்‌, மூப்பு, மரணம்‌, வருத்தம்‌, பசி, தாகம்‌ இவை யாவும்‌ அற்றது; 
தடைபடாத்‌ விருப்பங்களும்‌ சங்கல்பங்‌ களும்‌ வாய்ந்தது. 
இந்த எட்டு குணங்களும்‌ முக்தி  நிலையில்‌ முற்றிலும்‌ விளங்குகின்றன. 
ரத்னத்திலிருந்து  அமுக்கை அகற்றினால்‌ அது நன்றாக ஒனிர்கன்றது; புதிதாக ஓளி கொள்ளவில்லை. 
கிணற்றிலிருந்து மண்ணை  வெளியேற்றினால்‌ தண்ணீர்‌ தோன்றுகிறது; இதுமுன்பு இருந்ததே; புதிதாக ஊறவில்லை. 
இதுதான்‌ முக்தனுடைய ஸ்வகூபம்‌. 

4, 2, முக்தனின்‌ அனுபவம்‌. 
தத்வமஸீ”'--அந்தப்‌ பொருள்‌ நீ ஆகிறாய்‌, 
“அய காத்மா ப்ரஹ்மா''-- இந்த ஆத்மா பரஹ்மமே ஆகும்‌- 

இவைபோன்ற வாக்கியங்கள்‌ ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌. "ஒற்றுமையை வெளியிடுகின்றன. 
மேலும்‌ சில வாக்கி யங்கள்‌, பகவானுக்கு ஜீவன்‌ சரீரம்‌, பகவான்‌ ஜீவாத்மா வில்‌: உள்ளும்‌ புறமாகவும்‌ அடர்ந்திருக்கிறான்‌, 
இவனை ஜீவாத்மா அறியமாட்டான்‌ என்று வேற்றுமையைக்‌ 'குறிக்கின்றன. 
பகவானுக்கு உள்ள எட்டு குணங்கள்‌ முக்த ஜீவனுக்கும்‌ உள்ளன என்ற கருத்தும்‌ வந்துள்ளது. 
இவற்றை ஆராய்ந்தால்‌ தேறுவது: முக்தனது இயல்பு, இவனது குணங்களால்‌ பகவானோடு ஓத்தது என்பதே. 
இவனும்‌ பகவானும்‌ ஒன்றே என்பது பொருந்தாது. 
4. 3. முக்த ஜீவனின்‌ ஸ்வரூபம்‌. 
முக்தி அடையும்‌ ஜீவனைப்‌ பற்றி சாந்தோக்யம்‌ (4-7-1) வெளியிட்‌டுள்ளவாறு: 
பாவ மற்றவன்‌, யாவகை ஆனந்தமும்‌ போன்ற குணங்கள்‌ ஜீவன்‌ பெறுகிறான்‌ 
என்பதால்‌ இவனது ஞானமும்‌ சொல்லப்படுகிறது. 
உப்புக்கட்டியானநு உள்ளும்‌ புறமும்‌ நடுவும்‌ ஒரே உவர்ப்பு மயமாக இருப்பது போல்‌ முக்தனது ஞானமும்‌ 
முழுதாக எங்கும்‌ அடர்ந்துள்ளது. 

4. 4. ஜீவன்‌-- ஸத்ய ஸங்கல்பம்‌. 
முக்தி நிலையில்‌ ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பம்‌ என்ற குண  மூடையவன்‌ என்று அறிகிறோம்‌. 
“£ஸ தத்ர பர்யேதி ஐத்‌ இரீடந்‌ ரமமாண: ஸ்த்ரீ பிர்வா யாநைர்‌ லா  ஜ்ஞாதிபிர்‌ வா?” ஜீவன்விளையாடிக்கொண்டு களித்து, 
ஸ்த்ரீகளோடும்‌, வாகனங்களிலும்‌, உற்றாரோடும்‌ இன்ப முறுகிறான்‌ என்கிறது சாந்தோக்யம்‌ (9-72-22). 
இவ்வாறு முக்தன்‌ செயல்படுவது தனது ஸங்கல்பத்தா லேயே? வேறு முயற்சி எதுவும்‌ கொள்வதில்லை. 

சங்கை: முக்தன்‌ ஸ்த்ரீகள்‌ முதலோருடன்‌ களிப்பதாகக்‌ கூறுவதால்‌ இவனுக்குக்‌ கர்மத்தோடு தொடர்பு -திகழக்கூடும்‌.  

விளக்கம்‌ : ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பன்‌ என்பதால்‌  இவன்‌ பகவானைத்‌ தவிர வேறு எதற்கும்‌ வசப்பட்டவன்‌ அல்லன்‌; 
ஆதலால்‌ இவனுக்கு விதி, தடை என்பன இல- 
ஆக இவன்‌ கர்மம்‌ முதலான எதற்கும்‌ வசப்படுவதில்லை- இவன்‌ நிலையாக அனுபவிப்பவை 
பகவானது ஸெளந்தர்‌யம்‌, சல்யாண குணங்கள்‌, இருவடிகளில்‌ கைங்கர்யம்‌ செய்வது போல்வன. 
4. 5. முக்தன்‌ --சரீரம்‌, இந்த்ரியங்கள்‌. 

தனது ஸங்கல்பத்தாலே முக்தன்‌ பித்ருக்கள்‌ போல்‌வாரைப்‌ படைக்கிறான்‌ என்று முன்பு கூறப் பெற்றது. 
இவ்வாறு படைக்கும்போது இவனுக்குச்‌ சாரீரம்‌ உண்டா என்பது சங்கை.  

சரீரத்துடன்‌ இருந்தால்‌ இன்ப துன்பங்கள்‌ நீங்க மாட்டா என்பது ஒரு ச்ருதி வாக்யம்‌, அதே இடத்தில்‌ விளக்கம்‌ பெறுவது: 
இந்தச்‌ சரீரத்திலிருந்து கிளம்பி முக்தாத்மா பரஞ்சோதியான பரம புருஷனை அடைந்து இன்பமுறுகிறான்‌ என்பது. 
ஆகையால்‌ முக்தனுக்குச்‌ சரீரமில்லை என்பது ஒரு கருத்து.: 

*ஸ ஏகதா பவதி, த்ரிதா பவதி, பஞ்சதா பவதி”'-- இவன்‌ ஒரு படியாகிறான்‌, மூன்று படியாகிறான்‌, 
ஐந்துபடி யாகிறான்‌ என்பது சாந்தோக்ய வாக்கியம்‌ 
ஜீவாத்மா பல பகுதிகளாகப்‌ பிரிய இயலாது. ஆதலால்‌ பல சரீரங்கள்‌ கொள்கின்றது என்பது ஊகிக்கலாம்‌. 
இவ்‌ விரண்டு கருத்துக்களும்‌ ஏற்றுக் கொள்ள வேண்டும்‌ என்று  தீர்வு வரையப்பட்டுள்ளது.. 

ஒரு சங்கை: பரமபதத்தில்‌ முக்தன்‌ பெறுவது பரமாத்மாவை அனுபவிப்பது ஒன்றே. 
வேறு அனுபவத்‌திற்காக இவன்‌ சரீரங்களைப்‌ படைக்க எவ்வாறு விரும்புவான்‌? உலகில்‌ இருக்கும்போது ஜீவன்‌ கனவு நிலையில்‌ 
தேர்‌, அதில்‌ பூட்டப்பட்ட குதிரைகள்‌, குளங்கள்‌, ததி போன்றவற்றை அனுபவிக்கிறான்‌. 
இந்தப்‌ படைப்பு: பகவனாலே என்பது தாம்‌ அறிந்ததே, இதுபோல்‌ இவன்து அனுபவத்திற்காக பசுவான்‌ பித்ரு ஸமூகம்‌ முதிய 
வற்றைப்‌ படைக்கிறான்‌; இவ்வாறு படைப்பது முக்தனது போக ரஸத்திற்காக என்று ஊகிக்கலாம்‌. 

வேரு சங்கை : கர்ம வசப்படாத முக்தன்‌ பித்‌ருக்கள்‌ முதலோரை விரும்புவது எவ்வாறு? 

விளக்கம்‌ : பகவான்‌ தசரதன்‌, வஸுதேவன்‌ முதலோரைப்‌ படைத்து இவர்களுக்கு மகனாக லீலாரஸம்‌ அனுபவித்தான்‌. 
இதுபோல்‌ முக்கர்‌ அனுபவிப்பதற்‌கும்‌ படைக்கிறான்‌. 
அன்றியும்‌ தமது ஸங்கல்பத்தாலே முக்தர்கள்‌ இவ்வாறு படைக்கின்றனர்‌ லீலா ரஸம்‌ அனுபவிப்பதற்கு. 

வேதொரு சங்கை : முக்தன்‌ பல சரீரங்கள்‌ ஏற்றுக்‌ கொள்கிறான்‌ எனில்‌ ஒரே ஆத்மா பல சரீரங்களில்‌ எவ்‌வாறு இயங்கும்‌? 

விளக்கம்‌ : முக்தன்‌ அணு பரிமாண முள்ளவனானாலும்‌ தனது அறிவினாலேயே யாவற்றையும்‌ அறிந்து கொள்ளுமாறு பரவுகிறான்‌. 
ஓரிடத்திலுள்ள விளக்கின்‌ ஒளி எங்கும்‌ பரவுவது போன்றது இது, அன்றியும்‌ ஸெளபரீ பல வடிவங்கள்‌ எடுத்துக்கொண்டு அனுபவித்‌தார்‌ என்பது அறிவோம்‌. 
முக்தன்‌ ஓரே சமயத்தில் பல சரீரங்களையும்‌ வியாபித்து எல்லாவற்றையும்‌ அறிந்து நடத்துகிறான்‌ என்று வேதம்‌ வெளியிட்டுள்ளது. 
4. 6, முக்தனது ஐச்வர்யம்‌ : 

தனது அனுபவத்திற்காக முக்தன்‌ சரீரங்களைப்‌ படைக்கக்கூடும்‌ என்பது முன்பு கூறப்பட்டது. 
உலகங்‌களைப்‌ படைப்பதும்‌ நியமிப்பதும்‌ ஸார்வேச்வரனுக்கே உரியது என்பது விளக்கப்படுகிறது. 
உலகங்களைப்‌ படைப்பது முதலான செயல்கள்‌ ஜீவனுக்குக்‌ கூறப்பட வில்லை. 
பூதங்கள்‌ எல்லாம்‌ பரம்பொருளாலே உண்டாயின, அவனாலே வாழ்‌கின்றன, அவனிடத்தில்‌ லயமடைகின்‌றன என்றும்‌,
ப்ரஹ்மம்‌ ஒன்றாகவே இருந்தது,தான்‌ பலவாக இயங்கச்‌ சங்கல்பித்தது என்றும்‌, 
ப்ரளய காலத்‌தில்‌ நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌, பிரமனும்‌ சிவனுமில்லை என்றும்‌, 
இவன்‌ ஒருவனே யாவற்றையும்‌ நியமிக்‌கிறான்‌ என்றும்‌ வேத வாக்கியங்கள்‌ கூறுகின்றன. 
ஆதலால்‌ முக்தனது செல்வம்‌ உலகங்களைப்‌ படைப்பது, நியமிப்பது இவை நீங்கலாகவே. 

கர்மத்திற்கு வசப்படாத முக்தன்‌ எல்லா உலகங்களிலும்‌ தனது விருப்பத்திற்கேற்ப சஞ்சரிக்கிறான்‌ என்பது 
வேதத்தில்‌ வந்துள்ளது. இவ்வாறு அனுபவிப்பதால்‌ பெறும்‌ போகம்‌ அற்பமும்‌ நிலையற்றதுமாகும்‌ என்பது சங்கை
முக்தன்‌ அனுபவிப்பது வைகுந்தத்திலுள்ள போகங்களே. ப்ராக்ருதங்களான உலகங்களை இவன்‌ 
பகவானுடைய செல்வம்‌ என்றே நினைத்து அனுபவிக்கக்‌ கூடும்‌; இது விருப்பத்தால்‌, கர்மத்‌ தாலன்று. 
உலகைப்‌ படைப்பது,காப்பது, அழிப்பது போல்வன பகவானுக்கே உரியன என்று ச்ருதிகள்‌ கூறுகின்றன. 

ஒரு சங்கை: பகவான்‌ ஸ்வதந்த்ரன்‌; இவனது செயல்களைப்‌ பற்றி எவரும்‌ கேட்பற்தற்கில்லை. 
இவன்‌ ஜீவாத்மாவை இங்குத்‌ திருப்பி ௮னுப்புவானா? 

விளக்கம்‌: பகவான்‌ இவ்வாறு அனுப்பமாட்டான்‌ என்‌பதே சித்தாந்தம்‌, வேதங்கள்‌ வெளியிடுவது: 
யாவகையான குணங்களும்‌ வாய்ந்த பகவான்‌, “நான்‌ ஒரு சேதனனையாவது பெறமாட்டேனா?'' என்ற ஆவலுடன்‌ 
அவ்வப்போது உலகைப்‌ படைக்கிறான்‌. தன்னிடம்‌ பக்தி வாய்ந்தவர்களது அஜ்ஞானத்தைப்‌ போக்கித்‌ 
தன்னை அனுபவிப்பதாகிற ப்ரஹ்மானந்தத்தை அளிக்‌கிறான்‌, தன்னை விட்டுப்‌ பிரியாமல்‌ செய்து இன்புறுகிறான்‌. 

கீதையிலேயும்‌ பசுவான்‌ இதையே வெளியிடுகிறான்‌. 
மேலும்‌ “ந ௪ பரமபுருஷ: ஸத்யஸங்கல்ப:அத்யர்த்த ப்ரியம்‌ ஜ்ஞானிநம்‌ லப்த்வா,சுதர்சிதாவர்த்த யிஷ்பதி”
*பரம புருஷனும்‌ ஸத்ய ஸங்கல்பனுமாகிய பகவான்‌ தனக்கு மிகவும்‌ ப்ரியனான ஒரு ஞானியைப்‌ பெற்று ஒருபோதும்‌ 
மீண்டும்‌ கீழே செல்ல விரும்பவே மாட்டான்‌ என்று சுவைபட வாக்கியம்‌ அமைந்துள்ளது. 
பஹுூநாம்‌ ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்ப்ரபத்யதே! வாஸ தேவஸ்‌ ஸர்வ மிதிஸ மஹாத்மா ஸுதுர்லப:!-- 
ஞானி மிகச்‌ சிறந்தவன்‌; இவன்‌ துர்லபன்‌ என்றும்‌ கருதுகிறான்‌. பல  பிறவிகளுக்குப்‌ பின்‌ அறிவு முதிரப்‌ பெற்ற ஞானி, 
வாஸ தேவனே எனக்கு உபாயம்‌, என்னால்‌ பெறப்‌ பெறுபவன்‌, எனக்கு தாரகம்‌, போஷகம்‌, போக்யம்‌*
என்று பகவானைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறான்‌, இவன்‌ விசாலமான நெஞ்சுடையவன்‌ என்றும்‌,
தனக்குக்‌ கிடைத்‌தற்‌ கரியவன்‌ என்றும்‌ கண்ணன்‌ கூறுகிறான்‌. 
ஆதலால்‌ பகவான்‌ எவ்வகையாலும்‌ முக்தனை மீண்டும்‌ உலகிற்கு அனுப்பமாட்டான்‌; இது திண்ணம்‌. 

முக்தி நிலையில்‌ முக்தன்‌ தனது இயல்பான ஞானம்‌, பாவமின்மை முதலான எட்டு குணங்கள்‌. 
யாதொரு குறைவுமின்‌றி முற்றிலும்‌ விளங்கி பகவானை அனுபவிக்‌கின்றான்‌. இவன்‌ பகவானிடமிருந்து பிரிவதில்லை 
பகவானின்‌ கைங்கர்யத்தில்‌ தோய்ந்துள்ள முக்தன்‌ தனது சங்கல்பத்தாலேயே தான்‌ விரும்பும்‌ பொருள்களை அடைகிறான்‌. 
இவன்‌ சில சமயங்களில்‌ சரீரத்தோடு கூடியவனாகவும்‌, சில சமயங்கள்‌ சரீர மில்லாதவனாகவும்‌ அனுபவிக்கிறான்‌. 
இவனுக்கு உலகைப்‌ படைப்பது போன்ற தொழில்கள்‌ இல; இவை பகவானுக்கே உள. 
பகவானோடு போகம்‌ அனுபலிப்பதாலேயே இவன்‌ சாம்யம்‌ பெறுகிறான்‌. 
இவன்‌ எப்போதாயினும்‌ எவ்‌ விதத்திலாயினும்‌ ஸம்ஸாரத்திற்கு மீள மாட்டான்‌. 

--------------

அருஞ்‌ சொற்கள்‌ - விளக்கம்‌ 

அங்கம்‌ பிரிவு, உறுப்பு. 
அங்கை அங்கங்கள்‌ உடையவன்‌ (உடையது. 
அசேதனம்‌-- அறிவில்லாப்‌ பொருள்‌, சடப்பொருள்‌. 
அணுகாரண வாதி -உலகுக்குக்‌ காரணம்‌ பரமாணுக்‌கள்‌ என்ற கொள்கை உடையவன்‌. 
அத்வைகம்‌--லீவனும்‌ பரமனும்‌ ஒன்று என்றகொள்்‌ தை. 
அத்வைதி-- இக்கொள்கை உடையவன்‌ . 
அநாச்ரமி.-ப்ரஹ்மசரீயம்‌ முதலிய நான்கு வாழ்க்கை நிலைகளில்‌ ஒன்றிலும்‌ பொருத்தா தவன்‌. 
அதுகரணம்‌- முக்தி நிலையில்‌ பகவானைப்‌ போல்‌ குணங்கள்‌ ஜீவன்‌ பெற்று விளங்குவது. 
அரற்தராத்மா, அந்தர்யாமி-சரீரத்துள்‌ (ஆத்மாவில்‌ உறைழ்துள்ள பகவான்‌. ்‌ 
அபேத வாக்கியம்‌- ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேத மின்மையைக்‌ கூறும்‌ வேத வாக்கியம்‌. 
அமா. நவன்‌--ஆதிவா ஹிகருள்‌ ஒருவன்‌; வித்யுத்‌ புருஷன்‌? -பகவானிடம்‌ முக்தனை அழைத்துச்‌ செல்வோன்‌. 
அம்பரம்‌ --மேல்‌ ஆகாசம்‌: 
அம்ருதம்‌--அழிவில்லாமை,. 
அர்ச்சிஸ்‌ -- அக்நி; அர்ச்சிராதி மார்கத்தில்‌ மூதல்‌ தேவதை, 
அவ்யக்தம்‌ -- படைப்பின்போது பகவானிடமிருந்து தோன்றும்‌ முதல்‌ நிலை; பிரித்து, தெரியாத நிலை. 
அனுமானம்‌--இந்தீரியங்கள்‌ மூலம்‌ ஏற்கும்‌ அறிவு ஆதா. சமாக ஊளகித்தறிவது. 
அனுஷ்டானம்‌ - ஒழுக்கம்‌, பழக்கம்‌. 
௮ஸத்‌-இல்பொருள்‌; நிலை இல்லாதது. 
அஹண்‌.-பகல்‌. 
அக்ஷரம்‌-- அழிவில்லாதது. 
அக்ஷி-சுண்‌; அ௮க்ஷி புருஷன்‌ -- கண்ணினுள்‌ இருக்கும்‌. தேவதை. 
அஸ்தாலம்‌--பருமனில்லாமை (ஸ்தூலம்‌--பருமன்‌ ), 
ஆச்ரமம்‌--ஏற்கும்‌ வாழ்க்கை நிலை; ப்ரஹ்மசர்யம்‌, இல்‌லம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌. 

ஆத்மா. ஜீவன்‌. ஆத்ம குணங்கள்‌ ஆத்மாவுக்கு மேன்‌மையைக்‌ காட்டும்‌ குணங்கள்‌; சமம்‌ தமம்‌ போல்வன. 
ஆதிவாஹிகர்‌ -- முக்தனை அபர்ச்சிராதி மார்கத்தில்‌ அழைத்துச்‌ செல்வோர்‌. 
ஆதித்ய புருஷன்‌ சூரிய மண்டலத்திலுள்ள தேவதை. 
ஆனந்த மயன்‌-- கலப்பில்லாத ஆனந்தமே இயல்பாக உடையவன்‌; பகவான்‌. 
ஆனுமானிகம்‌--அனுமானத்தால்‌ தேறுவது, 

உத்க்ராந்தி--அத்மா உடலை விட்டு நீங்குவது. 
உத்ககம்‌--இசைக்கப்பெறும்‌ மந்த்ரம்‌, ப்ரணவம்‌. 
உத்தர காண்டம்‌- வேதத்தின்‌ இரண்டாம்‌ பகுதி. 
உபகரணம்‌--௨ தவிப்‌ பொருள்‌, துணைக்‌ கருவி, 
உபயலிங்கம்‌ -- இரட்டை அடையாளம்‌; பகவானது இயல்பு, குணங்கள்‌ இவை பற்றியது. 
உபாரக்யானம்‌--வேள்வியின்போது படிக்கும்‌ வரலாறு. 
உபாதானம்‌ -ஆக்கப்‌ பொருள்‌ (பானைக்கு மண்‌). 
உபாதான சாரணம்‌- - பகவானே உபாதானமாகிக்‌ காரணமாவது, 
உபாஸனை. பகவானை வழிபடும்‌ முறை; 
உபாஸகன்‌.- இவ்வாறு வழிபடுவோன்‌. 

கர்மா கா்மம்‌--செயல்‌; கா்ம--பலன்‌ செய்யும்‌ புண்ய பாவங்களின்‌ பயன்‌, 
கல்யாண குணங்கள்‌--பகவானுக்கே உரியனவான தனிப்‌ பட்ட சிறந்த பண்புகள்‌. 
காரணப்‌ பொருள்‌ பண்டம்‌ செய்வதற்குக்‌ காரணமான பொருள்‌ (பானைக்குக்‌ காரணப்‌ பொருள்‌ சுளிமண்‌ 
காரியப்‌ பொருள்‌--இவ்வகையால்‌ உருவாகும்‌ பொருள்‌ (குடம்‌ காரியப்‌ பொருள்‌). 
கார்ஹபத்யம்‌-- மூன்று வகை அக்நிகளுள்‌ வீட்டில்‌ வளர்ப்பது. 
கேவலார்‌ :- வாழ்க்கையிலிருந்து விடுபட்டுத்‌. தமது அத்மாவையே அனுபவிப்பவர்‌. 

சங்கல்பித்தல்‌-. எண்ணுவது: எண்ணுவதாலே செயல்‌ நிகழ்தல்‌. 
சங்கை--ஐயம்‌, சந்தேகம்‌. 
சரீரம்‌ -உடல்‌; சரீரி-உடலை இருப்பிடமாக உடையவன்‌. 

சாதனம்‌ - கருவி; முயற்சியால்‌ பெறுவது. 
சாரீரகம்‌- சரீரத்‌ கொடர்புடையது. 
சேதனன்‌-- அறிவுடையவன்‌, ஜீவன்‌, ஆத்மா. 

சேஷபூதன்‌-- தலைவனுக்கு அடிமையாக உரியவன்‌. 
சேஷி--தலைவன்‌ (சேஷபூதர்களுக்குர. 
சூன்யம்‌-- இல்லாமை? 
சூன்யவாதி யாவும்‌ சூன்யம்‌ என்ற கருத்துடையவன்‌. 

ச்ருதி-வேதம்‌. 

தடித்‌-- மின்னல்‌. 
தத்வம்‌--உண்மை? உள்ளதான நிலை. 
தஹரம்‌-- இதயத்தில்‌ உள்ளிடம்‌; தஹர வித்யை-இதயத்தில்‌ உறையும்‌ பகவானை வழிபடும்‌ வகை, 
தன்மாத்ரை-- பொறிகள்‌ ஒவ்வொன்றின்‌ மூலம்‌ 
தாமஸம்‌--தமோ குணத்‌ தொடர்புடையது, 
த்யுலோகம்‌-மேலுலகம்‌, ஆகாசம்‌: 

நித்யம்‌- நிலையாக வுள்ள. 
நிமித்த காரணம்‌ - -படைப்பைைச்‌ செய்பவன்‌. 
நியத்தா--ஆணையாளன்‌, நியமிப்பவன்‌, ஆள்பவன்‌. 
நிர்வஹித்தல்‌- பொறுப்புடன்‌ மேற்பார்வை யிடு தல்‌. 
நைமித்திகம்‌--சறப்பு வழிபாடு. 

பரமாணு---அணுவின்‌ பகுதி. 
பரிணாமம்‌ நிலையில்‌ மாறுபாடு. 
பரிமாணம்‌- அளவு. 
பஷ பாதம்‌-- ஓரம்‌, ஒருபக்கத்தையே ஆதரித்தல்‌. 
பாதம்‌--கால்‌ பங்கு 
பாஷ்ய- விரிவுரை, 
பாஷ்யகாரர்‌--ராமா நுஜர்‌. 
புருஷார்த்தம்‌ -பெற விரும்பும்‌ பொருள்‌. 

தம்‌ படைப்பில்‌ உண்டானது; நீர்‌, நெருப்பு, வாயு போல, 

பூத ஸுஷ்மம்‌--பதத்தின்‌ நுண்ணிய நிலை 
பூத யோநி-பூதங்களுக்குக்‌ காரணம்‌; பூத யோநி. 
அக்ஷரம்‌ -பூதங்களுக்குக்‌ காரணமான பரம்பொருள்‌ (அழிவில்லாத பகவான்‌]. 

பூமா-- பெருமை வாய்ந்தது. 

பேதம்‌--மாறுபாடு; 
பேத வாதி-ஜீவனும்‌ பகவானும்‌ : வேறு என்று கருதுவோன்‌; 
பேத வாக்கியம்‌.- இவ்வா றான பேதத்தைக்‌ காட்டும்‌ வேக வாக்கியம்‌, 

போகம்‌--இன்ப அனுபவம்‌ 
போக்தா--அனுபவிப்‌. பவன்‌. 

ப்ரக்ருதி -(மூல ப்ரக்ருதி)--படைப்பிற்கு மூல காரணமாக இகுப்பது; 
பராக்ருதம்‌-ப்ரக்ருதியில்‌ தொடா்‌ புடையது. 
ப்ரகாரம்‌--தானே ஆகும்‌ நிலை; 
ப்ரகாரி இவ்வாறு ப்ரகாரமாகுபவன்‌.  

ப்ரதிபிம்பம்‌ கண்ணாடியில்‌ (தண்ணிரில்‌ தோன்றுக, நிழல்‌. வு ர 
ப்ரமாணம்‌ சான்று. 
ப்ரமாதா- சான்றால்‌ அ௮.றிபவன்‌. 
ப்ரமிதன்‌-- கட்டைவிரல்‌ அளவுடையவன்‌. 
யப்ரமேயம்‌--சான்றால்‌ அறியப்படுவது. 
ப்ரளயம்‌--உலகங்கள்‌ யாவும்‌ பகவானிடம்‌ ஒடுங்கும்‌ நிலை, 
ப்ரஸ்மம்‌--தெய்வம்‌, பகவான்‌; 
ப்ரஹ்ம ஞானி-பக வானை நன்கறிந்தவன்‌; 
ப்ரஹ்ம காரணவாதி-- உல௫ற்குக்‌ காரணம்‌ பகவானே என்‌ கொள்கை யுடையவன்‌. 
ப்ரஹ்ம வித்யை-- பகவானை வழிபடும்‌ வகை. 
ப்ரஸித்தி--பரவிய புகழ்‌. 
ப்ராணன்‌ உயிர்‌; முக்கியமான வாயு மற்றவை அபா நன்‌, வ்யாதநன்‌, உதாறன்‌, ஸமா நண்‌. 
வ்ராப்தி- பெறுதல்‌? ப்ரஹ்ம ப்ராப்தி பகவானைப்‌ பெறுவது. 

முக்தன்‌- உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றவன்‌; 
மூக்தி-.. இவன்‌ பெற்ற விடுதலை. 

யக்ஞம்‌--யாகம்‌, வேள்வி. 
யோகம்‌--ஒன்‌ றியிருத்தல்‌;' யோகி--இவ்வா நிருப்பவன்‌. 
லயம்‌--ஓன்றுதல்‌. -ராஜஸம்‌ ரஜோ குணத்தின்‌ தன்மை. 

ரூபம்‌-- வடிவம்‌, உருவம்‌. 
விகாரம்‌ - வேறுபாடு. 
விதா நிஷ்டர்‌--வித்யையில்‌ ஊன்‌றி  நிற்பவர்‌, 
விக்யுத்‌--மின்னல்‌; விதியுத்‌ புருஷன்‌ -அமாநவன்‌ 
அிலகஷிணம்‌- தனிப்பட்ட மேன்மை. 

விஜ்ஞானம்‌--ஏறந்த அறிவு. மெய்யறிவு: 
விஜ்ஞான மயள்‌--அறிவே வடிவாக இருப்பவன்‌ (பகவான்‌). 
வைத்யுதன்‌--மின்னல்‌ வடிவமான அமான வன்‌. 
வைச்வாநரன்‌--அக்நி மயமான தேவதை? வைச்வாதர 
வித்யை-- இந்த தேவதையை வழிபடும்‌ வகை, 
வ்யக்தம்‌- தெளிவாக விளங்குகிற. 
வ்யஷ்டி ஸ்ருஷ்டி--பலபல வகையாகப்‌ படைத்தல்‌. 
ஸஞ்‌௫தம்‌-- திரண்டு ஒன்று சேர்ந்த. 
ஸத்‌-- உண்மைப்‌ பொருள்‌. 
ஸத்வம்‌- முக்குணங்களுள்‌ ஒன்று. 
ஸம்வத்ஸரம்‌--அர்ச்சிராதி மார்கத்தில்‌ ஒரு நிலை, ஆண்டு என்ற பொருளுடையது. 
ஸுஷும்நா--ஒரு நாடியின்‌ பெயா்‌; தலையின்‌ உச்சி வரையில்‌ செல்லும்‌ நாடி. 
ஸுக்ஷ்மம்‌ - நுண்ணியது. 
ஸ்வரூபம்‌ --இயல்பு. 
க்ஷ்ணம்‌ நொடிப்‌ போது. 
க்ணிகம்‌--நொடிப்‌ போதுன்ளது. 
ஜகச்சரீரன்‌--உலகு தனது சரீரமாக வுடையவள்‌, பக வான்‌. 
ஐ.டம்‌--அறிவில்லாதது. 
ஐடரம்‌--வயிறு. 
ஜாடராக்தி--வயிற்றிலுள்ள அக்நி. 
“ஜீவன்‌--ஆத்மா. 

ஸ்ரீ: ஸ்ரீம்தே ராமாநுஜாய நம:

—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் சாரம் —

January 27, 2023

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

ஸ்ரீ பாஷ்யம் அறிந்து கொண்ட பின்பே மற்ற பகவத் விஷயம் அறிந்து எடுத்து சொல்லணும்
ஸ்ரீ பாஷ்ய காரரின் ஆறு கட்டளைகளில் முதலில் இத்தையே அருளிச் செய்கிறார்
பாஷ்யத்தோன் ஈடேற பார்வை செய்தான் வாழியே-ஆள வந்தார் கடாஷித்து -இளைய ஆழ்வாரை ஆம் முதல்வன் ஆக்கி அருளினார்

ஸ்ரீ பிரணவ அர்த்தங்களை ப்ரத்யக்ஷமாக ஸ்ரீ ரெங்க விமானத்திலே தரிசித்து கொள்ளலாம்
ஸ்ரீ பாஷ்யம் மூலமும் அறியலாமே-ஜீவாத்மாக்களுடைய -அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வ ரூப ஆகார த்ரயம்

தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-

ஸ்ரீ வேத வியாசர் -ஆவேச அவதாரம் –அத்யாய சதுஷ்டயாத்மகமான சாரீரிக மீமாம்சக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மத்தை
ஜகத் ஏக காரணமாயும் -சேதன அசேதன விலக்ஷணமாயும் சர்வ சேஷியாகவும் அறுதி இட்டார் -இதுவே பிராணவார்த நிரூபணம்
மூன்றாம் அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் -என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ் சப்தார்த்த நிரூபணம் –
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் பிராப்யம் என்று அறுதி இட்டார் -இதுவே த்ருதீய பதார்த்த நிரூபணம்

காரணத்வமும் –அபாத்யத்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-இ றே அத்யாய சதுஷ்ட்யார்த்தம் –

நான்கு அத்தியாயங்களையும் –விஷய த்விகம் அல்லது சித்த த்விகம் -என்றும் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்றும் இரண்டு கூறாகப் பிரிப்பார்கள்
சித்த வஸ்துவைப் பற்றி பூர்வ த்விகமான முதல் இரண்டு அத்தியாயங்களும் விஷய த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் –
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான பக்தி ரூப ஞானமும் – நான்காவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான ப்ரஹ்ம அனுபவ ரூப ஞானமும்
விஷயியாயும் சேதன யத்ன சாத்யமாயும் உள்ள படியால் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்பர் –

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

—————–

இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சாரன்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக்கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

—————

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
7-காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
8-தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
12-ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
14-ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
16-சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

—————————–

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்

1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்

1-1-4-ஸமன்வய அதிகரணம்

1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்

1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்

1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –

1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா

1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-

இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –

அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –

சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -உத்தர மீமாம்சை -சாரீரக மீமாம்சை -நான்கு அத்யாயம் -நான்கு பாதங்கள் ஒவ் ஒன்றிலும் -ஆக 16 அத்யாயங்கள் –
156 அதிகரணங்கள்–545-ஸூ த்தரங்கள் –

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

—————

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

—————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாச அதிகரணம்
முதல் ஸூத்திரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
அத -கர்ம விசாரம் செய்து முடித்த பின்பு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது-

அத -அதற்குப் பிறகு -சங்கர பாஷ்யம் -சாதன சம்பந்தியின் ஆனந்தர்யமே -அது பொருந்தாது என்று மறுத்து-
ப்ரஹ்ம ஸ்வரூபம் பற்றி மற்றவர் தப்பாக கொள்வதை மறுத்து -லகு மகா பூர்வ பஷம் சித்தாந்தம்-

கர்ம மீமாம்சையில் அர்த்த வாத அதிகரணம் –
ஆம் நாயச்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தா நாம் தஸ்மாத நித்யமுச்யதே  -ஸூத்திரம்
கர்த்தவ்யார்த்தங்களை நியமேந போதிப்பதே வேதங்களின் க்ருத்யம்
அர்த்தவாத ரூபங்கள் -பிராமணியம் சம்பவிக்க மாட்டாது
வாயவ்யம் ச்வேதமால பேத பூதி காம -கர்மம் கர்தவ்யமாக விதிக்கப் பட்டது
அடுத்த வாக்கியம் -வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -வாயு  தேவதையின் பெருமை சொல்லும்
இது அர்த்தவாத வாக்கியம் –
கர்மம் விதிக்க வில்லை -விதி வாக்கியம் இல்லையே
விதி நாது ஏக வாக்யத்வாத் ச்துத்யர்த்தேன விதிநாம ஸ்யு-என்று முன் வாக்யத்துடன் சேர்த்து ஏக வாக்யமாக பிரமாண்யம் -ஜைமினி காட்டி அருளி
கார்யத்தில் அன்வயியாத ப்ரஹ்மம்-சித்த வஸ்துவை ஜிஜ்ஞாச்யமாக
ஸ்திரம் -அஸ்திரம் அறிந்து -அத -அத பதார்த்தம் –

———————————————————————————–

ஜன்மாத் யதிகரணம் –
ஜன்மாத்யஸ்ய யத -ஸூ த்த்ரம்
ஜந்மாதி -அஸ்ய -யத -மூன்று பதங்கள்
ஜந்மாதி -உத்பத்தி -ஸ்திதி -பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் சேதன மிஸ்ரமான பிரபஞ்சங்கள்
யத -எந்த வஸ்துவின் இடத்தின் நின்றும் ஆகின்றனவோ
அது தான் பர ப்ரஹ்மம்
தைத்ரிய உபநிஷத் ப்ருகு வல்லி-
யதோவா இமானி  பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்த்ய பி சம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ தத் ப்ரஹ்மேதி-

இங்கே பூர்வ பஷம் –
வ்யாவர்த்தகங்கள் பல -வ்யாவர்த்யமும் பலவாக வேணுமே
தேவ தத்தன் பருத்து கறுத்து யுவாவாய் செந்தாமரைக் கண்ணனாய் இருந்தான் –
அதோ பஷி இருப்பது தேவ தத்தன் கழனி-போலே மூன்றையும் ஜ்ஞாபக லஷணம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
அறிந்த தன்மை கொண்டு ப்ரஹ்மம் காட்டப் பட முடியாது -பூர்வ பஷம் –

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த -கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

——————————————————————————-

அடுத்து -சாஸ்திர யோநித்வாத் -அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் -ஸூத்த்ரம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாக கொண்டபடியால் –
அப்பஷோ வாயு பஷோ-தீர்த்தத்தை குடிப்பவன் -வாயுவை பஷிப்பவன் -சப்த்தார்த்தம்
தீர்த்தத்தை மட்டும் குடிப்பவன் -வாயுவை மட்டுமே பஷிப்பவன்-போல சாஸ்திரம் ஏவ யோனி-பிரமாணம்-

இங்குப் பூர்வ பஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு பிரமாணத்தால் ப்ரஹ்மம் சித்தித்து விட்டால் அங்கெ சாஸ்த்ரம் பிரவர்த்தியாது
பூம் யங்கு ராதிகம்   சகர்த்ருகம் –கார்த்யத்வாத் -கடவத் -அனுமான சரீரம்
வேதாந்த சாஸ்திர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் -செய்யத் தக்கது அன்று-

இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

——————————————————————————————

நான்காவது -அதிகரணம்
சமன்வயாதி கரணம்-
தத் து சமன்வயாத் -ஸூத்த்ரம்
தத் -கீழ் சொன்ன சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் -புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியால்-

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹஸ்வரூபம்-

—————————————————————————————-

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள் –
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

——————————————————————————————-

அடுத்து ஈஷத் அதிகரணம் -இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு சங்கல்ப விசேஷம் -முக்கியம்
அதேனமான பிரதானமாக இருக்க முடியாதே
ஜீவன் ஜகத் காரண வஸ்து இல்லை காட்ட -ஆனந்த மய அதிகரணம்
ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
ஆனந்தமய
அந்ய-சப்தம் மேல் உள்ள ஸூத்ரம் இருந்து வருவித்துக் கொண்டு
அப்யாசாத் -அளவு கடந்த
ஆனந்த வல்லி -துக்க மிஸ்ரமான ஜீவாத்மாவுக்கு சேராதே
தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
ச்ரோத்ரியச்ய சாகா மஹதச்ய-முக்த ஆத்மாவை சொல்லி -அகாமஹத -விஷய விரக்தன்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் செய்து ப்ரஹ்ம உபாசனம் மூலம் பெற்ற -சோபாதிகம் நிருபாதிகம் இல்லை
ச ஏகோப்ரஹ்மண ஆனந்த -இயற்கையான -ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கே-

கோஹ்யவான்யாத் க பிராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ் யேவா நந்தயாதி –
கோ வா அன்யாத்-கீழ் சொன்ன ஆகாசாதி -எந்த ஜந்து தான் ப்ராக்ருத மான ஆனந்தன் அடைய முடியும்
கோ வா பிராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
இப்படி அந்வய முகேன சொன்னதையே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய –
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் அடைகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்தம் பெற
அந்ய பந்தா ந வித்யதே -அந்த பரம புருஷனை தவிர வேறு உபாயம் இல்லை
வ்யதிரேக முகேன  சொல்லிற்று
ச யச்சாயாம் புருஷே யச்சா சா யாதித்யே  ச ஏக -அவனே ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷன்-

இதன் மேல் பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் -தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பத்வத்வம் சொல்லி
அகர்ம வச்யனுக்கு சம்பாவிகம் இல்லையே

இங்கு சித்தாந்தம்
சரீரமாக கொண்டவன் -வேத வாக்கியம் உண்டே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கைதான குணம் அவன் ஒருவனுக்கே
தயை குணத்தால் அடியார் துக்கம் கண்டு துக்கிப்பான்
இரண்டாவது ஸூத்த்ரம்
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோக –

—————————————————————————-

இரண்டாம் அத்யாயம் -சம்ருத்ய அத்யாயம்-
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத் –
கபில -சாங்க்ய மத நிரசனம் -மனு பராசர மக ரிஷிகள் வாக்யங்கள் விரோதிக்கும்

———————————————————————————-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் -க்ருத்ஸ ந ப்ரசக்தி-அதிகரணம்
பூர்வபஷ ஸூத்த்ரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வாதத்தில் ஜகத்தாக பரிணமிக்க  -ப்ரஹ்மமமோ நிர் வயவம் என்பதால்
ஏக தேச ந பரிணமிக்கிறது என்னும் பொது நிரவயவம் ஸ்ருதி விரோதிக்கும்
ப்ரஹ்மம் முழுவதுமே கார்யப் பொருளாக பரிணமிக்க வேண்டி வரும்
கீழே உபசம்ஹார அதிகரணத்தில் ஷீர திருஷ்டாந்தம் -பொருந்தாது -ஷீரம் சாவயவம் ஆகையாலே  –
மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து சப்தம் பூர்வபஷ வ்யாவர்த்திப்பிக்க வந்தது
ப்ரஹ்மம் நிரவயவம் -கார்யப் பொருளாக பரிணமிக்கும் -இரண்டும் ஸ்ருதி சித்தம்
லௌகிக பதார்த்த திருஷ்டியினால் கொள்ள முடியாது
சப்த பிரமாணம் ஒன்றாலே அறிய முடியும் -அநிர்வச நீயமான சக்தி விசேஷத்தை பொறுத்தது
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் ஆத்மநா பரிணாமம் போலே பிரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி சித்தம்-

—————————————————————————————

அடுத்த அதிகரணம் -பிரயோஜனவத்வ அதிகரணம் –
அவாப்த சமஸ்த காமன் –
இதில் முதல் ஸூத்ரம் -பூர்வபஷம்-( ஸ்ருஷ்டே ) ந பிரயோஜனவத்வாத்
மேல் சித்தாந்த ஸூத்திரம் -லோகவத் து லீலா கைவல்யம் –
மன் பல்லுயிர்களுமாய் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையான் -நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி காண்பதால் பஷபாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க –
சங்கை தீர -அடுத்த ஸூத்திரம்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் ததா ஹி தர்சயதி –
கருமங்களுக்குத் தக்கபடி -சிருஷ்டி-
இதன் மேலும் தோன்றும் சங்கைக்கு அடுத்த ஸூத்த்ரம்

——————————————————————————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
சர்வதா அநுபபத்தி அதிகரணம் –
சர்வ ஸூந்யவாதிகள் வாதம் நிரசிக்கப்படுகிறது
உத்பத்தி பாவத்தில் இருந்தா அபாவத்தில் இருந்தா
சர்வம் ஸூந்யம் என்பவர்கள் இந்த அர்த்தம் சாதிக்கும் பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பிரமாண சத்பாவத்தை இசைந்த போதே சர்வ ஸூந்ய  வாதம் தொலையுமே
அஸ்தி நாஸ்தி வாதங்கள் இங்கு இல்லை இப்பொழுது இல்லை
தேச காலங்களை சொல்லவே
சர்வதா -சர்வ பிரகாரத்தாலும்
அநுபபத்தே -சர்வ ஸூந்ய வாதம் உப பன்னம் ஆகாமையினாலே
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே-பாசுரம் ஆறாயிரப்படி  மொழி பெயர்ப்பே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்து உள்ளார்

———————————————————————————————

முதல் அத்யாயத்தினால்
ஜகஜ் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே என்றும்
நான்முகனாதிகள் லீலைக்காக சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள்
அவன் நித்ய விபூதியில் ஸ்வ இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து
நித்ய முக்தர்களினால் அனுபவிக்கப் பட்டு கொண்டு இரா நின்றான் என்கிற முகத்தால்
ஸ்வரூப ஸ்வ பாதிகள் நிரூபிக்கப் பட்டன-

இனி இரண்டாம் அத்யாயத்தில்
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக சாதித்து கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்று சாதிக்கப் பட்டது-

ஆக இரண்டாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
அடுத்து மிகுந்த ருசி உண்டாக்கி இதர விஷய வைராக்கியம் விளைவிக்க
பின்னிரண்டு அத்யாயங்கள்
ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலே அந்த அர்த்தம் சாதிக்கப் பட்டு விட்டதே
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் ஏற்படும் வைராக்கியம் கர்ம விசாரத்தினால் விளையாதே
அதனால் புன பிரயத்னம்
மூன்றாம் அத்யாயம் -கர்ம பலன்கள் நச்வரம் -நரக துல்யம் -பரமபுருஷ  பிராப்திக்கு உபாயம் தெரிவித்து
நான்காம் அத்யாயம் -உபாய பலமான உபேயத்தை தெரிவிக்கும் –

—————————————————————————————————–

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க அதிகரணம்
ஜீவாத்மா -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான
நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு
சுக துக்கங்களை அனுபவிக்கிறான் -என்று கீழே சொல்லி –
அப்படிப்பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தம் பட்டு இருந்தாலும் சுக துக்கங்கள் ஒட்டாமல்
கல்யாணக் குணக் கடலாய் இருப்பவன் என்று காட்ட இந்த அதிகரணம்
ந ஸ்தான தோபி பரஸ்யோபயலிங்கம் சர்வத்ர ஹி -தலையான ஸூத்த்ரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது
இதுக்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் -பரம புருஷன் சர்வ ஸ்ருதி ச்ம்ர்திகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாராண தர்மங்களோடு கூடியவன்
அவன் அபஹத பாப்மா   -ஆனந்தமய அதிகரணத்தில் பார்த்தோம்
அகர்மவச்யன் முதல் அத்யாயம் இரண்டாம் பாதம்
அங்கு பூர்வ பஷ சரீரம் வேறு
இவ்விடத்தில் பூர்வ பஷ சரீரம் வேறு -சூஷ்ம இஷிகையால் உணர வேணும்

———————————————————————————————

மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வ அன்ன அநு மதி அதிகரணம் –
முந்தின அதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவஸ்யகம் என்று சொல்லி
இதில் போஜன நியமம் ஆகிற நியம சம விசேஷம் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு உண்டா -விசாரம்
சர்வ அன்ன அநு மதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் -ஸூத்திரம்-

ப்ரஹ்ம வித்யா அதிகாரியின் பிராண ஆபத்து விஷயமாகையாலே -எனபது ஸூ த்ரார்த்தம்
இங்கு பூர்வ பஷம் -ப்ர்ஹ்ம வித்யா நிஷ்டனுக்கு நிஷித்த ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் என்பான்-
யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை பிராண ஆபத் தசையில்-உண்டு உயர் தரிக்கப் பெற்றான்
பிறகு அந்த யானைப் பாகன் கொடுத்த பானம் பருக வில்லை-ஆகார சுத்தி அவஸ்யகம்-

————————————————————————————

நான்காம், அத்யாயம்
மூன்றாம் அத்யாயம் உபாசன பரமாக பெரும்பாலும் செல்ல அதன் பலனை நிரூபிக்க நாலாம் அத்யாயம் அவதாரம் –
இதில் முதல் அதிகரணம் -ஆவ்ருத்த்ய அதிகரணம்
ஆவ்ருத்தி ரசக்ருதுபதேசாத் -முதல் ஸூ த்த்ரம்-

பூர்வ பஷம் -ஸ்வர்க்காதி-சக்ருத்-ஒரே தடவை போலே ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பகவத் சிந்தன ரூபமான வேதனமும் சக்ருத்
மேலே சித்தாந்தம்

தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
வேதனம்
உபாசனம்
த்ருவா ஸ்ம்ருதி
சாஷாத் காரம்
பக்தி–பர்யாய சப்த்தங்கள் –
பக்த்யா த்வ அந்யயயா சக்யா அஹமேவம் விதோர்ஜூனா-ஸ்ரீ கீதா ஸ்லோஹம் போலே
தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் என்று அறுதி இட்டு –
மேலே ஆறாவதாக -ஆப்ரயணாதி கரணம்
ஆப்ரயணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்திரம்
ப்ரஹ்ம உபாசனம் -மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் -என்கிறது –

————————————————————————————————

இனி ததிகமாதி கரணம்
தததிகம உத்தர பூர்வாகயோ ரச் லேஷ விநாசௌ தத் வ்யபதேசாத் -ஸூத்திரம்
பூர்வ பாபங்களுக்கு விநாசமமும் -நசிக்கும்
உத்தர   பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது
இங்கு பூர்வபஷம் –
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அனுபவித்தே கருமம் தொலைக்க வேணும்
சித்தாந்தம்
இது சாமான்ய விஷயம்
நெருப்பு சுடும்
தண்ணீர் நெருப்பை அணைக்கும் இரண்டும் உண்மையே-ப்ரஹ்ம வித்யை சக்தியால் கரும சக்தி பிரதிஹதமாய் விடும் –

—————————————————————————————————

நிசாதி கரணம்
நிசி மரணம் இரவில் மரணம் -அதம கதிக்கே ஹேது பூர்வ பஷம்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் யுள்ளவரைக்கும் மட்டுமே
அதனால் பாதகம் ஆகாது
திவா ச சுக்ல பஷச் ச -கீழே காட்டின வசனம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு சேராது

இனி தஷிணாயன அதி கரணம் –
ஒரே ஸூத்திரம்
தஷிணாயன மரணம் – சந்திர பிராப்தி பெற்று புநரா வ்ருத்தியும்
பீஷ்மர் ப்ரஹ்ம வித்து போல்வார் உத்தாராயண ப்ரதீஷை பண்ணினதாக சொல்லி
இதுவும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இல்லை –
ஆக நிசி மரணமோ கிருஷ்ண பஷ மரணமோ தஷிணாயன மரணமோ பரம புருஷார்த்த பிராப்தியில் குறை இல்லை –

———————————————————————————————–

முடிவான அதிகரணம்
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம்
முக்த பிரஜைக்கு ஜகத் சிருஷ்டிக்கு அதிகாரம் இல்லை
பரமபதத்தில் நின்றும் மீட்சி இல்லை -இரண்டையும் சொல்லும்
பூர்வ பஷம் முக்தனுக்கு பரம புருஷன் சாம்யம் கிட்டும்
சத்யசங்கல்பத்வமும் கிட்டும்
சர்வ லோக சஞ்சாரம் -காமாந்நித்வமும் -காம ரூபித்வமும் –
லோகங்கள் அவனுக்கு ஆதீனம்
மேல் சித்தாந்தம்
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -அசாதாரண தர்மம் லஷணம் ப்ரஹ்மத்துக்கு சொல்லி –
வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல்
பூர்த்தியாக அனுபவிப்பதே பலன்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் செய்யும் பொழுது ஆனந்த சாம்யம் இந்த ஸ்ருதியினால் சித்திக்கும்
ச ஸ்வராட் பவதி -என்பதும் கர்ம வஸ்யம்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி இத்யாதி மூலம் முக்தன் சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம்
பரம புருஷன் அதீநம் –

ஆனால் திரும்பி அவன் அனுப்புவானோ என்னில்
அநா வ்ருத்திச் சப்தாத் அநா வ்ருத்திச் சப்தாத் -சரம ஸூ த்திரம்
சாஸ்த்ரத்தை காட்டி ஸ்தாபித்தார் ஸூ த்த்ரகாரர்
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆனாலும்0
உந்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன் –
சத்யசங்கல்ப்பன் என்ற பேர் பெற்றவன்
கிருஷி பண்ணி பெற்ற சேத்னனை  விடுவானோ
பரமபுருஷம் ஜ்ஞாநினம்  லப்த்வா
யானொட்டி  என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று  என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும்
காட்கரையப்பன் கடியனே -என்றும்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக்   கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்- -முதல் நான்கு ஸூ த்திரங்கள் ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்–

December 25, 2022

ஸ்ரீ பிரம்ம சூத்திரம்-முதல் நான்கு ஸூ த்திரங்கள் 

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

முகவுரை
தத்துவம்
எந்த தத்தவமும் கீழ்கண்ட நான்கு விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

  1. Metaphysics (Ontology)
  2. Study of Knowledge (Etymology)
  3. Ethics
  4. Aesthetics

Meta physics (Ontology)  ஸத்தா விசாரம்
பொருளினுடைய இருப்பைப் பற்றிய விசாரம். மூன்று வகையான ஸத் இருக்கிறது. அவைகள் பாரமார்த்திக ஸத், வியாவகாரிக ஸத், பிராதிபாஸிக ஸத் ஆகியவைகளாகும். கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்தாகும்.
Study of Knowledged (Etymology) – ஞான விசாரம்; பிரமாண விசாரம்
நமக்கு அறிவு எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றிய விசாரம்.

Ethics – Study of Morality –  நீதிநெறி, ஒழுக்கவியல், நன்னெறி விசாரம்,  நல்லது-கெட்டது விசாரம்
தர்ஷணம்:

  1. நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், இறைவனைப்பற்றியும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள்.
  2. எதன் வழியாக இந்த நிச்சயத்தை அடைவோமோ அதையும் இவ்வாறாக அழைக்கப்படுகிறது.

 

மதம் வரையறை (Definition)
இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியிருப்பது. இறைவனைப் பற்றியும், இறை நம்பிக்கையை அடிப்படையில் சில மகான்களின் உபதேசத்தை மையமாகவும் கொண்டிருக்கும். இறைவனைப்பற்றிய நூல்களின் அடிப்படையில் பின்பற்றுகின்ற கருத்துக்கள். இதில் நம்பிக்கைதான் அச்சாணியாக இருக்கிறது. கடவுளைப் பற்றியும், தர்ம-அதர்மத்தைப் பற்றியும் பேசுவது. இதில் தத்துவத்தில் கூறப்படுகின்ற கருத்துக்களும் அடங்கியிருக்கிறது.
விசாரம்

*  மதத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்.

*  இதற்கெதிராக இருக்கின்ற கருத்துக்களை விசாரம் செய்தல்

*  இது அடிப்படைத்தேவைக்கு உருவாக்கப்பட்டதா அல்லது வசதிக்காக உருவாக்கப்பட்டதா?

*  மத நம்பிக்கை ஆன்மீக வளர்ச்சிக்கு, மனவளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறதா அல்லது தடையாக இருக்கிறதா என்ற ஆராய்ச்சியின் முடிவில் இரண்டும் சமவிகிதத்தில் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*  மத நம்பிக்கையினால் நல்லதை அடைவோமா அல்லது கெட்டதை அடைவோமா என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

*  மதம் மனிதனுக்கு அடிப்படைத் தேவையா அல்லது வசதிக்காக இருக்கிறதா என்று பார்க்கும் போது, அவசியமானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மனப்பக்குவத்துடன் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

*  சாத்விக நம்பிக்கையுடையவர்கள் நன்மையை அடைவார்கள். ராஜஸ, தாமஸ நம்பிக்கை உடையவர்கள் தீமையை அடைவார்கள். எனவே மனப்பக்குவத்தின் அடிப்படையில்தான் நன்மை, தீமை கிடைக்கின்றது.

மனிதர்களில் மூன்று வகையாக இருக்கிறார்கள். அவைகள்,

  1. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கையுடையவர்கள், சுயமாக சிந்திப்பவர்கள்.
  2. தத்துவவாதிகள்   – மத நம்பிக்கை மட்டும் உடையவர்கள்
  3. நன்னெறிவாதிகள் – மதநம்பிக்கையற்றவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள், நல்லொழுக்கமாக வாழ்பவர்கள்.

இவை மூன்றையும் சமமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்ததாகும்.

தத்துவம் என்று சொல்லும்போது அது ஆறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அவைகள்,

  1. ஜீவனுடைய தன்மை:
    2.    ஜகத் விசாரம்
    3.    ஈஸ்வரன்
    4.    பந்த ஸ்வரூபம்
    5.    மோட்ச ஸ்வரூபம்
    6.    சாதனங்கள்.-ஆகியவைகளாகும்.

————————–

ஜீவனுடைய தன்மை:

நாம் யார்? உடலழிந்துவிட்டால் ஜீவன் இருக்கின்றதா என்றெல்லாம் நம்மைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உடல் மட்டும்தான் ஜீவனாக இருக்கிறதா வேறெதாவது அதற்கப்பால் இருக்கின்றதா என்றும் விளக்கமாக பேசியிருக்க வேண்டும்.

ஜகத் விசாரம்
உலகத்தினுடைய தன்மையைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உலகத்திலுள்ள பொருட்களின் இருப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் இந்த உலகம் சத்தியமானது என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த உலகத்தை நாம் கண்ணால் பார்த்து அனுபவிக்கின்றோம். அத்வைதம் இந்த உலகம் பொய்யாக காட்சியளிக்கின்றது என்று உபதேசிக்கிறது. புத்தமதம் உலகம் சத்தியமென்றும், சூன்யமானதென்றும் கூறுகிறது.

3.   ஈஸ்வரன்
ஈஸ்வரன் என்கின்ற தத்துவத்தைப்பற்றி பேசியிருக்க வேண்டும். ஜீவ, ஜகத்திற்கு காரணமாக ஈஸ்வரன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஈஸ்வரனின் லட்சணங்களைக் கூறியிருக்க வேண்டும்.

  1.  பந்த ஸ்வரூவம்
    ஜீவன் மனநிறைவின்மையோடு இருப்பதைப் பார்க்கிறோம். சம்சாரத்திலிருப்பதைப் பார்க்கிறோம். எனவே பந்தத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும். பந்தத்தினால் சம்சாரத்தில் இருக்கின்றான். ஏன் இவ்வாறு பந்தப்படுகிறான் என்பதையும் பேசியிருக்க வேண்டும்.
  2. மோட்ச ஸ்வரூவம்
    எது மோட்ச நிலை என்பதைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் மரணமே மோட்சமென்றும், வேறுசிலர் உயர்ந்த லோகத்திற்கு செல்வதே மோட்சம் என்று கூறுகிறார்கள்.
  3. சாதனங்கள்
    ஜீவன் கடைபபிடிக்க வேண்டிய சாதனங்களைக் கூறியிருக்க வேண்டும். இவைகளை பயன்படுத்தி பந்தத்திலிருந்து விடுதலையடைந்து மோட்சத்தை அடைய முடிய வேண்டும்.

வேதாந்திகளின் தர்ஷணம் உத்தரமீமாம்ஸம் (அ) அத்வைதமாகும். இதன் மூலம் வேதாந்தம் (அ) உபநிஷத் ஆகும். அத்வைத தத்துவத்தை கற்க மூன்று நூல்களை படித்திருக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்படுகிறது. அந்த மூன்று நூல்களாவது, உபநிஷத், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவைகளாகும். இவை மூன்றையும் படித்து முடித்துவிட்டால் சாஸ்திரத்தை முழுவதுமாக படித்துவிட்டோம் என்றாகின்றது.

அத்வைத தத்துவத்தை புரிந்துக் கொள்வதற்கு மூன்று நூல்களின் வழியே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மூன்று நூல்கள் காட்டுகின்ற பாதையில் செல்ல வேண்டும்.
1வது பிரஸ்தானம்: உபநிஷத்- ஸ்ருதி பிரஸ்தானம், சப்தபிரமாணம், வேதாந்தம்

2வது பிரஸ்தானம்: பகவத்கீதை – ஸ்மிருதி பிரஸ்தானம் வேதத்தில் சொல்லப்பட்ட கருத்தை விளக்கியிருப்பது. உபநிஷத் மட்டும் போதாதா?  ஏன் ஸ்ம்ருதி பிரஸ்தானமான பகவத்கீதை படிக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே வரும். உபநிஷத்தில் முக்கியமான தத்துவத்தைப் பற்றிதான் விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். பகவத்கீதையில் இதையும் சேர்த்து அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கும்.

3வது பிரஸ்தானம்: பிரம்ம சூத்திரம் – இது நியாய பிரஸ்தானம். இதை வியாசபகவான் எழுதி இருக்கிறார். நியாயம் என்பது தர்க்கபிரதான பிரஸ்தானம். தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்காக தர்க்கமுறையை பயன்படுத்தியிருக்கிறார்.

முதலில் பிரம்ம சூத்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் பார்க்கப்படுகிறது. சூத்திரம் என்று சொல்லுக்கு நூல், புத்தகம், ரகசியம், உபாயம் மற்றும் தீர்ப்பு என்ற அர்த்தங்களும் உண்டு. இந்த இடத்தில் நூல் என்ற அர்த்தம் எடுத்துக் கொண்டால், எப்படி நூலானது மலர்களைச் சேர்த்து மாலைகளை உருவாக்க உதவுகிறதோ, அதுபோல பிரம்மத்தைப் பற்றிய விஷயங்களை மாலைப் போல் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார்.

 

  1. பிரஹ்ம பிரதிபாதகம் சூத்திரம் – பிரம்மத்தை விளக்குகின்ற புத்தகம்.
  2. பிரஹ்ம விஷயஹ சிந்தா சூத்ரியதே அனேன – பிரம்மத்தைப் பற்றிய கருத்துக்கள் கோர்வையாக தொகுக்கப்பட்ட நூலாகும்.

பிரம்ம சூத்திரத்தில் மூன்றுவகையான காரியங்கள் செய்துள்ளார். அவைகள்,

  1. ஸ்ருதி வாக்ய ஸமன்வயம் – ஸமன்வயம் என்ற சொல்லுக்கு ஒத்துப்போகுதல் என்ற அர்த்தம் உண்டு. உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப் போகின்றது என்பதை நிலைநாட்டியிருக்கின்றார். மேலும் சந்தேகத்தைக் கொடுக்கின்ற வாக்கியங்களையும், முரண்பாடுவது போல உள்ள வாக்கியங்களையும் எடுத்துக் கொண்டு அவைகளும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப்போகின்றது என்பதை  நிலைநாட்டுகின்றார். உதாரணமாக பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள வாக்கியமான ‘ஸத்யஸ்ய ஸத்யம்” என்ற வாக்கியம் சத்தியமான இந்த உலகத்திற்கு சமமாக பிரம்மம் இருக்கிறது என்று தப்பாக புரிந்து கொள்ளும் வாக்கியங்களுக்கு சரியான அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
  2. மற்ற மதங்களை நிராகரணம் செய்திருக்கிறார்.
  3. அத்வைத தத்துவத்தில் குறை சொல்பவர்களின் கருத்தை நீக்கி விடுகின்றார்.

அதிகாரி:

  1. வியாச பகவான் மீது முழு சிரத்தை வைத்திருப்பவர்கள், அடைந்த ஞானத்தில் நிலைப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இதுவொரு மனன கிரந்தமாகும். ஐந்தாவது சூத்திரத்தில் ஆரம்பித்து இறுதி சூத்திரம் வரை மனனத்திற்கு பயன்படும். முதல் நான்கு சூத்திரங்களும் அத்வைத தத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  2. உபநிஷத்தை முழுவதும் படித்திருப்பவர்கள்தான் அதிகாரி.  மனனம் செய்ய விரும்புவோர்களும் இதை படிக்கலாம்.

இனி விதவிதமான பூர்வபட்ச தர்ஷணங்கள் சிலவற்றை முகவுரையாக பார்க்கப்படுகிறது. இவைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் 1. நாஸ்திக தர்ஷணம், 2. ஆஸ்திக தர்ஷணம் ஆகும்.

நாஸ்திக தர்ஷணம்

  1. சார்வாக்க மதம் – சாரு – அழகான, வாக் – பேச்சு. இவர்களுக்கு பிரத்யக்ஷம்தான் பிரமாணம் வேறெதுவும் பிரமாணமல்ல. மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது இவர்கள் கொள்கை. இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால்தான் உருவாக்கப்பட்டது. ஆகாசம் என்றவொரு பூதமே கிடையாது. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை ஒன்று சேர்த்து சாப்பிடும் போது அந்தக் கலவை சிவப்பு வர்ணத்துடன் இருக்கிறது. இது எப்படியோ வந்திருக்கிறது. அதுபோல இந்த உடலுக்கு உணர்வு எப்படியோ வந்திருக்கிறது.

இவர்கள் ஆத்மாவை ஏற்றுக் கொள்வதில்லை. வேத சாஸ்திரத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்கள். கண்ணால் பார்த்து அனுபவிப்பதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். மூன்றுவிதமான சரீரங்கள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உணர்வு என்பது தற்காலிகமான விஷயம் என்பது இவர்கள் கொள்கை. உணர்வை மட்டும்தான் நம்புவார்கள்.

  1. ஜைனமதம்

இந்த மதத்தை தோற்றுவித்தவர் ரிஷபதேவர் ஆவார். மகாவீரர்தான் இரண்டாவது ஆச்சாரியாவார். இவர்களும் வேதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. குருதான் கடவுள் என்ற கொள்கையுடையவர்கள். ஈஸ்வரனின் லட்சணத்தையெல்லாம் குருவுக்கு கூறுவார்கள். ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்ற இரண்டு வகையினர் உள்ளார்கள். முதல்வகையினர் வெண்மை உடை அணிந்திருப்பார்கள். இரண்டாவது வகையினர் காட்டில் வசித்து கடுமையான தவம் செய்பவர்கள்.

இவர்களுடைய தத்துவத்திற்கு ஹயாத் என்று பெயர். இந்த உலகில் எந்த முடிவெடுத்தாலும் அவைகள் முழுவதுமாக இருப்பதில்லை. எல்லா முடிவுகளும் ஏதொவொரு கோணத்தில்தான் சரியாக இருக்கும். முடிவுகள் கால, தேசத்தால் வரையறைக்கபட்டவைகள். புத்தகம் இருக்கிறது என்ற வாக்கியத்தில் உள்ள இருக்கிறது என்பது தற்போது இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வேறொரு காலத்தில் அது இல்லாமல் போகலாம் என்பது அவர்களுடைய கொள்கையாகும். எல்லா உயிரினங்களையும் ஜீவன் என்று அழைக்கிறார்கள். இந்த ஜீவனை முக்தன், பத்தன் என்று மேலும் இரண்டாக பிரிக்கிறார்கள். அஜீவன் என்பது ஜடமானது என்பார்கள். அகிம்சையை முக்கியமாக பின்பற்றுபவர்கள். சிரத்தை, ஒழுக்கம் இவைகளை பின்பற்றுகிறார்கள். இவர்கள் 10 பண்புகளை பின்பற்றுகிறார்கள். அகிம்சையை பிரதானமாக பின்பற்றுகிறார்கள்.

2.1.        க்ஷமா – பொறுமையாக இருத்தல்

2.2.        வினய – பணிவு

2.3.        ஆர்ஜவம் – நேர்மை (சொல், செயல், மனம்)

2.4.        சத்யம் – உண்மை பேசுதல்

2.5.        சௌசம் – தூய்மை

2.6.        ஷம – மனக்கட்டுப்பாடு

2.7.        தப: – தவம், உபவாசம்

2.8.        த்யாக – விட்டுக் கொடுத்தல், தியாகம் செய்தல்

2.9.        வைராக்கியம் – போகப்பொருட்களுக்கு அடிமையாகமால் இருத்தல்

2.10.    ஷீலம் – ஒழுக்கமாக இருத்தல்

 

  1. புத்தமதம்

புத்தருடைய உபதேசத்தின் அடிப்படையில் பல பிரிவுகள் தோன்றியது. முதலில் 18 பிரிவுகள் இருந்தது. இறுதியில் இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கிறது. அவைகள் மஹாயானம், ஹீனயானம் ஆகும். ஹீனயான பிரிவினர் உலகத்தை சத்யம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாயான பிரிவினர் ஷணிகவாதியினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சூன்யம்தான் ஜகத் என்றும், மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் தோன்றி அழிவது போல இந்த உலகமும் தோன்றி, தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றது என்ற கொள்கை உடையவர்கள்.

நான்கு உண்மைகளை புத்தரின் உபதேசத்திலிருந்து பின்பற்றுகிறார்கள்.

3.1.     துக்கம் – இந்த உலகம் துக்கமயமானது. நாம் எப்போதும் துயரத்தில்தான் இருக்கிறோம்

3.2.     துக்க சமுதாயம் – இந்த துக்கத்திற்கு காரணம் இருக்கிறது.

3.3.     துக்க நிரோதஹ – துக்கத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

3.4.     துக்க நிரோத மார்க்கம் – துக்கத்தை நீக்கிக் கொள்ளும் வழி.

துக்கத்திற்கு காரணம் அறியாமைதான் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் வாசனைகள்தான் என்று கூறுகிறார்கள். உலகத்தோடு சம்பந்தம் வைப்பதாலும், ஆசைகளினாலும் துன்பத்தை அனுபவிக்கின்றோம். துயரத்திலிருந்து விடுதலை அடைவதுதான் மோட்சம் என்று கூறுகிறார்கள். 8 வகையான பண்புகளைக் கூறுகிறார்கள். அவைகள்,

  1. சம்யக் திருஷ்டி – சரியான கொள்கை, சரியான நோக்கு
  2. சம்யக் சங்கல்பம் – சரியான உறுதி, சரியான முடிவுகள்
  3. சம்யக் வாக் – சரியான பேச்சு
  4. சம்யக் கர்ம – சரியான நடத்தை
  5. சம்யக் ஜீவஹ – சரியான, சாமான்ய தர்மத்தை பின்பற்றி வாழ்தல்
  6. சம்யக் வ்யாயாபஹ – சரியான முயற்சி
  7. சம்யக் ஸ்ம்ருதி – நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருத்தல், கவனமாக இருத்தல்
  8. சம்யக் சமாதி – சரியான மனவொருமுகப்பாடு.

ஆஸ்திக தர்ஷணம்
ஆறுவகையான தர்ஷணங்கள் இருக்கிறது. அவைகள்,

  1. சாங்கிய மதம் – உருவாக்கியவர் கபில முனிவர்
  2. யோக மதம் – உருவாக்கியவர் பதஞ்சலி முனிவர்
    3.    நியாய மதம் – உருவாக்கியவர் கௌதம முனிவர்
    4.    வைஷேஷிக மதம் – உருவாக்கியவர் கனாத முனிவர்
    5.    பூர்வ மீமாம்ஸம் – வேதத்தின் முதல்பாகத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
    6.    உத்தர மீமாம்ஸம் – வேதத்தின் இறுதிபாகமான உபநிஷத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்

முதல் நான்கு வகையினர் வேதத்தை ஏற்றுக் கொண்டாலும் தர்க்கத்திற்குத்தான் அதிக முக்கியத்வம் கொடுக்கின்றனர்.

  1. சாங்கிய மதம்
    பிரகிருதி, புருஷன் என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றுக்கொன்று நிகராக இருக்கிறது. இவைகள் அறிவு ஸ்வரூமாக இருக்கின்றது. ஸ்ருஷ்டியைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஜகத்தும் உண்மை, புருஷனும் உண்மை என்று சொல்கிறார்கள்.
  2. யோக மதம்
    இதில் மனவொழுக்கத்தைப் பற்றி மிக நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. சித்திகள் மோட்சத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
  3. நியாய மதம்
    4.   வைஷேஷ மதம்
    இந்த இரண்டு மதங்களும் ஒன்றாகி தர்க்க சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனுமான பிராப்தி பற்றி நன்கு பேசியுள்ளார்கள்.
  4. பூர்வ மீமாம்ஸா பிரிவு
    ஜெய்மினி மகரிஷி பூர்வ மீமாம்ஸத்திற்கு சூத்திரங்கள் எழுதியிருக்கிறார்.
    அதா2தோ தர்ம ஜிக்ஞாஸா – கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள யாகங்களை, தர்ம-அதர்மத்தை சரியாக விசாரம் செய்துள்ளார்.
    குமாரபட்டர், பிரபாகர் என்பவர்கள் தனித்தனியாக இரண்டு மதங்களை தோற்றுவித்தனர். கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களை செய்து சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அடையலாம். இதுவே மோட்சமாகும் என்று கூறியுள்ளனர். இந்த மதங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. யாரும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
  5. உத்தர மீமாம்ஸா பிரிவு
    உபநிஷத் உபதேசங்களைக் கொண்டது. வியாகபகவான் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு சூத்திரங்களின் மூலம் விசாரம் செய்துள்ளார். இதற்கு பிரம்ம சூத்திரம் என்று பெயர். இதை ஶாரீர சூத்திரம் என்றும், வேதாந்த சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசபகவான் பாதராயனர் என்றும் அழைக்கப்படுவதால் அவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு பாதராயண சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.இதற்குள்ளேயே அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று மதங்கள் தோன்றி இருக்கிறது. சங்கரர் எழுதிய பாஷயத்திற்கு சங்கர பாஷ்யம் என்றும், ராமானுஜர் எழுதிய பாஷ்யத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறது. மாத்வர் என்பவரும் இதற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகளை அத்வைத தத்துவத்தை அடைவதற்கு படிகளாக எடுத்துக் கொள்ளலாம்.பிரம்ம சூத்திரத்தை படிப்பதற்கு முன்னே 10 சாந்தி பாடங்களை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்பட்டிருக்கிறது.
  6. ஷன் நோ மித்ர: ஷன் வருண:      – தைத்திரிய உபநிஷத்
    2.     ஸஹ நாவவது                   – தைத்திரிய உபநிஷத்
    3.     யஹ சந்தஸாம் ரிஷபோ          – தைத்திரிய உபநிஷத்
    4.     அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா       – தைத்திரிய உபநிஷத்
    5.     பூர்ணமத பூர்ணமிதம்              – ஈஸாவாஸ்ய உபநிஷத்
    6.     ஆப்யாந்து மமாங்கனி              – கேனோ உபநிஷத்
    7.     வாங்மே மனஸி பிரதிஷ்டா        – அய்தரேய உபநிஷத்
    8.     பத்ரங் கர்ணேபி                   – அதர்வன உபநிஷத்
    9.     பத்ரம் நோ அபிவாதய             – ரிக்வேதம்
    10.  யோ பிரஹாமானாம்              – யஜுர், ஸ்வேதாஸ்வர உபநிஷத்

மேலே கொடுத்துள்ள சாந்தி பாடங்களில் முதல் 8 சாந்தி பாடங்களின் விளக்கத்தை அந்தந்த உபநிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம். கடைசி இரண்டிற்கு மட்டும் இங்கே விளக்கம் காணலாம்.

சாந்தி பாடம் – 9
பத்ரம் நோ அபிவாதய மனஹ
இறைவா எங்களுடைய மனதை மோட்சத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்வீராக. இன்னொரு பொருள்: ஏ மனமே! எனக்காக மோட்சத்தில் நாட்டம் கொள்வாயாக என்பதாகும்.

சாந்தி பாடம் – 10
யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம்
யோ வை வேதாந்த ப்ரஹினோதி தஸ்மை
தம்ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாஸம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே.

யஹ                        – எந்த இறைவன்
ப்ரஹ்மானாம்      – ஹிரண்யகர்ப்பன்
பூர்வம்                      – முதன்முதலாக
வித3தா4தி                   – தோற்றி வைத்த
யோ வை                   – அந்த ஈஸ்வரன்
வேதாந்த                    – வேதாந்தத்தை
தஸ்மை                     – ஹிரண்யகர்ப்பனுக்கு
ப்ரஹினோதி       – உபதேசிக்கின்றாரோ
ஆத்மபுத்தி ப்ரகாஸம் – ஆத்மஞானத்தை எனக்கு அருள்கின்ற, பிரகாசிக்கும்படி செய்கின்ற
தம் தேவம்                 – அந்த இறைவனை
முமுக்ஷு: வை          – முமுக்ஷுவாக இருக்கின்ற
அஹம் சரணம் ப்ரபத்யே – நான் சரணடைகின்றேன்

இந்த பத்து சாந்திபாடத்தை படித்துவிட்டு இறுதியில் குரு சம்பிரதாய ஸ்துதி சம்பிரதாயத்தில்  படிக்கப்படுகின்றது.
நமோ ப்ரம்மாதி3ப்4யஹ – முதன்முதலில் பிரம்மவித்யாவை உபதேசித்த பிரம்மாவுக்கு நமஸ்காரம்.

ப்ரஹ்மவித்யா கர்த்ருப்4;யஹ –  இந்த பிரம்மவித்யாவை குரு-சிஷ்ய சம்பிதாயமாக வளர்த்து காத்த அனைவருக்கம் நமஸ்காரம்.
வம்ஸரிஷிப்4;யஹ – வம்சாவளியாக வருகின்ற அனைத்து ரிஷிகளுக்கும் நமஸ்காரம்.
மஹதப்4;யஹ           – ஞானநிஷ்டையடைந்த மகான்களுக்கு நமஸ்காரம்
நம: குருப்4;யஹ      – அனைத்து குருமார்களுக்கும் நமஸ்காரம்.
ப்ரக்ஞான கண        – பூரணமான அறிவு ஸ்வரூபமான
ப்ரத்யக் கர்த்தஹ     – என்னுடைய ஸ்வரூபமாக இருக்கின்ற
ப்ரஹ்ம ஏவ                – பிரம்மனாகவே
அஹம் அஸ்தி          – நான் இருக்கிறேன்.
ஸர்வ உபப்லவ ரஹித: – எந்தவிதமான துயரங்களும் இல்லாதவன்.

பிரம்ம சூத்திரம் தர்க்க பிரதானமான நூலாக இருப்பதால் இந்த நியாய பிரஸ்தானத்தை சுருக்கமாக பார்ப்போம். அனுமான பிரமாணத்தைத்தான் நியாய பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அனுமானம் இரண்டு வகையாக இருக்கின்றது. ஒன்று லௌகீக அனுமானம், மற்றொன்று வைதீக அனுமானமாகும்.

அந்த மலையில் நெருப்பு இருக்கிறது காரணம் அங்கிருந்து புகை வந்து கொண்டிருக்கிறது. நாம் சமையலறையில் நெருப்புடன் கூடிய புகையைப் பார்த்த அனுபவத்தினால் இவ்வாறு கூறுகிறோம்.
பக்ஷம்               – மலை
சாத்தியம்        – நெருப்பு
ஹேது               – புகை
வியாப்தி           – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் உள்ள மாறாத சம்பந்தம். அதாவது புகைக்கும், நெருப்புக்கும் சம்பந்தம் இருக்கின்றது.

லௌகீக அனுமானம் : நம் அனுபவத்திலிருந்து யூகிப்பது
வைதீக அனுமானம் : வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹேதுவை எடுத்துக் கொண்டு சொல்வது
பக்ஷம்      மகத்
சாத்தியம்    மாயை (வெறும் தோற்றம்)
ஹேது      இது வேதத்தினால் நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது. கயிற்றில் தோன்றும் பாம்பைப் போல இது நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது.
வேதத்தில் சிரத்தையற்றவர்கள் இந்த அனுமானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

வியாசபகவான் இரண்டு அனுமானங்களையும் பிரம்ம சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த நூலை படிக்க வருபவர்களுக்கு வேதாந்தத்தின் மீதும், வியாசர் மீதும் சிரத்தை உடையவர்களாக இருப்பார்கள். வைதீக அனுமானத்தை பயன்படுத்தி உபநிஷத் உபதேசங்களான ஜகத் மித்யா, பிரம்ம சத்தியம் ஆகியவற்றை நிலைநாட்டியிருக்கின்றார். லௌகீக அனுமானத்தை பயன்படுத்தி அத்வைதத்தை நிராகரிப்பவர்களின் காரணத்தை நீக்குவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.

சூத்திரங்கள் பெரும்பாலும் ஹேதுவாக அமைந்திருக்கும். இந்த நூல் நான்கு அத்தியாயங்களை உடையது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிளும் அதிகரணங்களாக பிhpக்கப்பட்டிருக்கும். இந்த அதிகரணத்தில் சூத்திரங்கள் இருக்கும். முதல் அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகரணங்கள் இருக்கும். அந்த அதிகரணத்தை விளக்குவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேலாக பல சூத்திரங்கள் இருக்கலாம். மொத்தம் 555 சூத்திரங்கள் இருக்கிறது. இவைகள் நான்கு அத்தியாயங்களாக பிரித்து, 16 பகுதிகள், 192 அதிகரணங்கள் இருக்கின்றது.

முதல் நான்கு அத்தியாயங்களைப் படித்தாலே முழு பிரம்ம சூத்திரத்தை படித்ததைப் போலாகும் என்று சம்பிரதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நாம் முதல் நான்கு சூத்திரங்களை மட்டும்தான் பார்க்கப் போகிறோம்.

1.   ஸமன்வய அத்தியாயம் – ஒத்துப் போகுதல்
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரம்மன் அத்வைதம் என்ற விஷயத்தில் ஒத்துப் போகின்றன என்பதை உபதேசிக்கும்.

  1. அவிரோத அத்தியாயம் – விரோதமில்லைமுரண்பாடில்லை

*  உபநிஷத்துக்குள் பரஸ்பர வேற்றுமையுடன் இல்லை.
*  அத்வைத தத்துவத்திற்கு ஸ்ம்ருதியும் விரோதமில்லை.
*  யுக்தி விரோதமும் கிடையாது.
*  வேற்று மதங்களின் அத்வைதத்திற்கு எதிரான கருத்துக்களை நிராகரித்து விடுவது
*  வேற்று மதங்களின் கருத்துக்களும் தவறானது என்று நிலைநாட்டப்படுகிறது.

  1. சாதனா அத்தியாயம் – மோட்சத்தை அடைவதற்கான சாதனங்கள் பேசப்படுகிறது.

மோட்சம், சொர்க்கம், பிரம்மலோகம் இவைகளை அடைவதற்கான சாதனங்களை கூறியிருக்கிறார். அந்தரங்க, பகிரங்க சாதனம் என்று இரண்டாக பிரித்து விளக்கி இருக்கிறார். ஸர்வாபேக்ஷ நியாயம் என்ற நியாயத்தை பயன்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  1. பல அத்தியாயம் – பலனைப் பற்றி விளக்கப்படுகிறது.
    பிரம்ம வித்யாவினால் அடைகின்ற பலனை விளக்கியிருக்கிறார்.

*  ஜீவன் முக்தனாக எப்படி மனநிறைவுடன் இருக்கிறான்.
*  விதேக முக்தியைப் பற்றி விளக்கப்படுகிறது.
*  கிரம முக்தியைப் பற்றியும் விளக்கப்படுகிறது.
*  கர்மத்தினால் அடைகின்ற பலன்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
சூத்திர அமைப்பின் இலக்கணம்.
ஓரு வாக்கியம் சூத்திரமாக இருபபதற்கு 6 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவைகள்,

  1. அல்பாக்ஷரம் – குறைந்த எழுத்துக்கனோடு இருக்க வேண்டும். மிக மிக சுருக்கமாக இருக்க வேண்டும்.
  2. அஸந்திக்தம் – சந்தேகமில்லாமல் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும். தெளிவாக அர்த்தம் புhpயும்படி இருக்க வேண்டும்.
  3. ஸாரவத் – பிரயோஜனம் இருக்க வேண்டும். மையக் கருத்து இருக்க வேண்டும்.
  4. விஸ்வதோமுகம் – பல கோணங்களில் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும்.
  5. அஸ்தோபம் – அர்த்தமில்லா சொற்கள் இருக்கக்கூடாது. ஸ்துதி இருக்கக்கூடாது.
  6. அனவத்யம் – தெளிவாக இருக்க வேண்டும். பொருள் குற்றம் இருக்கக்கூடாது. உண்மைக்கு புறம்பாக இருக்கக்கூடாது.

அதிகரண லட்சணம்
ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
1.    விஷய: – எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
2.    ஸம்ஸய: – சந்தேகம்
3.    பூர்வபக்ஷம் – சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
4.    உத்தரம் – பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
5.    சங்கதி – சம்பந்தம் – அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.
இவைகள் சரியாக இருக்கின்றதா என்பதை சோதிக்க 5வது அதிகரணத்தை எடுத்து இந்த நிபந்தனைகள் பொருந்தி வருகின்றதா என்று பார்க்கலாம்.

விஷய:       ஸதேவ ஸோம்ய இதம் அக்ர: ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் (சா.உ). ஸத் தான் முதலில் இருந்தது.

ஸம்ஸய:     இது சேதனமான பிரம்மத்தைக் குறிக்கிறதா அல்லது அசேதனமான மாயையைக் குறிக்கிறதா என்பது சந்தேகம்.

பூர்வபக்ஷம்   சாங்கியர்கள் கொள்கை – இது அசேதனமான, ஜடமான பிரகிருதியைத்தான் குறிக்கிறது என்பதாகும்.

உத்தரம்      ஸத் என்பது பிரகிருதியும் அல்ல, பிரதானமும் அல்ல பிரம்மன்தான்.

சங்கதி        இந்த அதிகரணத்திற்கும் இதற்கு முன்னேயுள்ள அதிகரணத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம். நான்காவது சூத்தரத்தில் பிரம்மன்தான் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அதிகரணத்தில் அதை மறுப்பதால் அந்த மறுப்பை நீக்குவதற்காக இந்த அதிகரணம் எழுதப்பட்டிருக்கிறது.

பாஷ்யம் – உரைநடை விளக்கம்
உபநிஷத், பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநடை விளக்கங்களுக்கு பாஷ்யம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எதற்கு விளக்கம் எழுதப்படுகிறதோ அதற்கு மூலம் என்று பெயராகும். பாஷ்யத்திற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டீகா என்று பெயர். டீகாவிற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டிப்பனி என்று பெயர்.

பாஷ்யத்தின் லட்சணம்:
சூத்திரத்தினுடைய அர்த்தமானது சூத்திரத்தில் உள்ள சொற்கள் எந்த வரிசையில் உள்ளதோ அதே வரிசையில் இருக்க வேண்டும். விளக்கத்தில் உள்ள கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
வியாக்யானத்தின் லட்சணம்:

ஒரு ஸ்லோகத்தை எடுத்து விளக்கும் முறைக்கு வியாக்யானம் என்று பெயர். இதில் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும்.

  1. பதஸ்சேதம் – சேர்ந்துள்ள இரண்டு சொற்களை சரியாக பிரிக்க வேண்டும்.
  2. பதார்த்த உக்தி – ஒவ்வொரு சொல்லுக்கான அர்த்தத்தை சொல்ல வேண்டும்.
  3. விக்ரஹ – எந்த அர்த்தத்தோ சேர்ந்துள்ளதோ அதே அர்த்தத்தோடு பிரித்த சொற்களுக்கு பொருள் கொடுக்க வேண்டும்.
  4. வாக்ய யோஜனா – எந்தச்சொல்லை எதனோடு சேர்த்து பொருள் சொல்ல வேண்டும்.
  5. ஆக்ஷேப: – கொடுக்கப்பட்ட பொருளுக்கு எதிர்க்கருத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
  6. சமாதானம் – ஆட்சேபத்திற்கு பதில் கொடுக்க வேண்டும்.

சது சூத்ரி அமைப்பு

நான்கு சூத்திரங்களுடைய அமைப்பு. ஒவ்வொரு சூத்திரமும் ஒரேயொரு அதிகரணத்தை உடையதாக இருக்கும். முதல் சூத்திரம் பிரம்மத்தைப் பற்றிய விசாரம் செய்ய வேண்டுமா?  வேண்டாமா?  என்பதாகும்.

முதல் சூத்திரம்
இது அனுபந்த சதுஷ்டயத்தை பூர்த்தி செய்கிறது. இதற்கு விஷயாமாக இருப்பது பிரம்ம விசாரம். இதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பலனும் அடையப்படுகிறது. இவைகளை நிலைநாட்டி பிரம்ம விசாரம் செய்துதான் ஆக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.

2வது சூத்திரம் – பிரம்மத்தின் லட்சணம் கூறப்படுகிறது.
3வது சூத்திரம் – பிரம்மத்தை போதிக்கின்ற பிரமாணம் கூறப்படுகிறது
4வது சூத்திரம் – பிரம்ம விசாரம் – பிரம்மன்தான உபநிஷத்தின் மையக்கருத்து.

சது சூத்ரி ஒன்பது வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்பது முக்கிய கருத்துக்கள் இந்த நான்கு சூத்திரத்திற்குள் இருக்கிறது. வர்ணகம் (தலைப்பு) என்பது ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றது.

  1. அத்3யாஸ பாஷ்யம்
  2. அக3தார்த்த2 வர்ணகம் – முதல் சூத்திரம்
  3. அதி3காரி வர்ணகம்     – முதல் சூத்திரம்
  4. ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3த4 வர்ணகம் – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.        – முதல் சூத்திரம்
  5. ப்3ரஹ்ம லக்ஷண வர்ணகம் – 2வது சூத்திரம்
  6. ப்3ரஹ்மன: ஸர்வக3த வர்ணகம் – பிரம்மன் அனைத்தையும் அறிந்தவர்; – 3வது சூத்திரம்
  7. ப்3ரஹ்மன: வேத3 ஏக பிரமாண தத்துவ வர்ணகம் – இந்த பிரம்மத்தை வேதம் என்ற ஒரு பிரமாணத்தின் மூலம்தான் அறிந்துக் கொள்ள முடியும். ; – 3வது சூத்திரம்
  8. ப்3ரஹ்மன: சாஸ்திர தாத்பர்ய தத்துவ வர்ணகம் – உபநிஷத்தின் உபதேசம் ஆத்மஞானத்தை கொடுப்பதுதான் முக்கிய நோக்கம். பிரம்மம் என்ற ஒன்றை விளக்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ; – 4வது சூத்திரம்
  9. ப்3ரஹ்மன: ஞான கம்பியத்வ வர்ணகம் – பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும். ; – 4வது சூத்திரம்

1.அத்யாஸ பாஷ்ய வர்ணகம்

முகவுரை

  1. அத்யாஸம்(Illusion) என்ற சொல்லுக்கு காட்சிபிழை என்று பொருட்கொள்ளலாம். கயிற்றில் பாம்பைப் பார்ப்பதுதான் அத்யாஸமாகும்.
  2. அத்யாஸம் எப்போது ஏற்படும்?
    அத்யாஸம் அரைகுறைவான வெளிச்சத்திலோ, மங்கலான வெளிச்சத்திலோதான் ஏற்படும். இதில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று சாமான்ய அம்சம், மற்றொன்று விசேஷ அம்சமாகும். இந்த உதாரண வாக்கியத்தில் உள்ள கயிற்றைப் பார்க்கும் போது “இது” என்ற அறிவு சாமான்ய அம்சமாகும். ஏதோவொன்று இருக்கிறது என்பது சாமான்ய அம்சமாகும். இது என்ற அம்சத்தில் கயிறு இருக்கிறது என்பது விசேஷ அம்சமாகும். அத்யாஸத்தினால் சாமான்ய அம்சத்தின் மீது சரியான விசேஷ அம்சத்திற்கு பதிலாக, தவறான விசேஷ அம்சமான பாம்பைப் பார்த்து விடுகிறோம். சாமான்ய அம்சத்தில் தவறான விசேஷ அம்சத்தை பார்ப்பதைத்தான் அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. சாமான்ய அம்சத்தில் தவறே ஏற்படாது. எனவே சாமான்ய அம்சம் சத்யம், விசேஷ அம்சம் மித்யா. இதிலிருந்து அறிந்து கொள்வது, அத்யாஸம் நடக்க வேண்டுமென்றால் சாமான்ய அம்சத்தை பற்றிய சரியான அறிவும், அதேசமயம் விசேஷ அம்சத்தில் அக்ஞானமும் இருக்க வேண்டும். கயிறே இல்லாத இடத்தில் பாம்பைப் பார்ப்பதற்கு மாயத்தோற்றம் என்பதாகும். அத்யாஸம் நடந்த இடத்தில் சரியான விசேஷ அறிவு வந்துவிட்டால் விசேஷ அக்ஞானம் சென்றுவிடும். அதனால் பாம்பு மறைந்து கயிறு காட்சியளிக்கும்.அதேபோல நான் என்ற சொல்லில் சாமான்யமாக நமக்கு தெரிவது பிரம்மன்தான். நான் இருக்கின்றேன்,   நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்று சொல்லம்போது  நாம் நம்மை அறியாமல் எப்போதும் இருந்துக் கொண்டிருக்கின்ற பிரம்மத்தை  நம்மையறியாமல் குறிக்கின்றோம். ஆனால் நம்முடைய விசேஷ ஞானத்தில்தான் தவறு நடந்திருக்கிறது,  அத்யாஸம் ஏற்பட்டுள்ளது. நான் அறிவற்றவன்,  நான் நோயுற்றிருக்கிறேன் என்ற விசேஷ ஞானம் இருக்கின்றது. இது கயிற்றில் பாம்பைப் பார்ப்பது போல உள்ள தவறான விசேஷ ஞானம். நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்கின்றோமோ அவைகளெல்லாம் அத்யாஸம். நம் உண்மை ஸ்வரூபத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டதாகும். இவைகளெல்லாம் ஸ்தூல, சூட்சும, காரண சரீரத்தின் தர்மங்கள், அம்சங்கள் ஆகும். பாம்பை எப்படி தவறென்று நீக்குகின்றோமோ அதேபோல மூன்று சரீரங்களையும் நீக்கி உண்மையான விசேஷ ஞானமான பிரம்மன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.நான் சம்சாரி என்ற வாக்கியத்தில் நான் என்பது சாpயான சாமான்ய அம்சம், சம்சாரி என்பது தவறான விசேஷ ஞானம். சாpயான விசேஷ அம்சமான பிரம்மமாக தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கயிறு என்ற சரியான விசேஷஞானம் வருவதும், தவறான விசேஷஞானம் செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கும். அதேபோல பிரம்மன் என்ற சரியான விசேஷஞானம் வந்தவுடன் சம்சாரி என்ற தவறான விசேஷஞானம் அதே நேரத்தில் சென்றுவிடும். மூன்று சரீரங்களில் உள்ள அபிமானம் சென்றுவிடும்.

விசாரம்:
பகவான் சங்கரர் அத்யாஸத்தை ஏன் முகவுரையாக கொடுத்துள்ளார் என்பது விசாரம் செய்யப்படுகிறது.
கேள்வி பிரம்ம சூத்திரம் அவசியமில்லை. அதனால் எழுத வேண்டிய அவசியமில்லை.

பதில்   முதல் சூத்திரத்தின் விளக்கம்தான் இதற்கு பதிலாகும்.

கேள்வி விசாரம் செய்வதினால் எந்தப் பலனும் அடையப் போவதில்லை. மேலும் நிர்குண பிரம்மத்தைப்     பற்றிய அறிவைக் கொடுத்து சம்சாரத்தை நீக்குகிறேன் என்று சொன்னால் அந்த நிர்குண பிரம்மமே கிடையாது என்று நான் சொல்கிறேன். எனவே அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

பதில்   இந்த நிர்குண பிரம்ம அறிவை அடைந்து மோட்சத்தை அடைய விரும்புகின்ற தகுதியுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதை முதல் சூத்திரத்திலேயே வியாச பகவான் நிலைநாட்டியிருக்கிறார்.

அத்யாஸ பாஷ்யமானது அத்யாஸத்தை நிலைநாட்டுவதால் பலனையும், அறிவையும் அடைவோம். அத்யாஸத்திற்கும் மோட்ச பலன் அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. அத்யாஸம் என்பது காரணத்தை நிலை நாட்டுகிறது. இது சாத்தியமான மோட்சத்தைக் கொடுக்கிறது.

பொதுவாக ஞானத்தினுடைய தன்மையானது இருப்பதைப் காட்டிக் கொடுப்பதாகும். ஞானம் எதையம் உற்பத்தி செய்யாது, எதையுமே அழித்தும் விடாது. உதாரணமாக அறையில் உள்ள பாம்பை பார்க்கும் போது பாம்பு இருக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த ஞானமே பாம்பை விரட்டாது. ஏதாவது செய்துதான் அதை விரட்ட முடியும். மங்கலான வெளிச்சத்தில் கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிறு என்ற ஞானம் வந்தவுடன் மறைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது பொய்யாக காட்சியளிக்கும் மித்யா வஸ்து ஞானம் வந்தவுடன் சென்றுவிடும் என்பதாகும். இங்கே ஞானம் கயிற்றில் விசேஷ அறியாமையினால் தோன்றிய பாம்பை நீக்குகிறது. அதேபோல பந்தம் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பந்தம் உண்மையாக இருந்துவிட்டால் அதை ஞானத்தால் நீக்க முடியாது. ஆனால் மித்யாவாக, பொய்யாக இருந்தால் ஞானத்தினாலே நீக்கிவிடலாம். இது தெரியாமல் இருப்பதால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே பந்தம் என்பது மித்யா என்று நிலைநாட்ட வேண்டிய அவசியமாகிறது. பந்தம் என்பது அத்யாஸம் என்று நிலைநாட்டினால் அதை ஞானத்தினால் நீக்கமுடியும்.

சம்சாரம் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். உடலுக்கு வரும் கஷ்டங்கள் உடலுக்குத்தான் துன்பத்தைத் தருகிறது. இது சம்சாரமல்ல. மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை, மனம் அனுபவிக்கின்ற வேதனைகள், பயம், க்ரோதம், பொறாமை போன்றவைகள்தான் சம்சாரம். இந்த சம்சாரம் யாவும் மித்யாவாகும். இது மித்யாவாக இருப்பதால் அதை ஞானத்தினாலேயே நீக்கமுடியும்.

 

கேள்வி பந்தம் இல்லையென்று சொல்கிறீர்கள். இல்லாததை நீக்குவதற்கு ஞானம் தேவையில்லை. அதனால் பொய்யான பந்தத்தினால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. எனவே எதற்கு பொய்யான பந்தத்தை போக்குவதற்கு முயற்சி எடுக்கிறீர்கள். பொய்யான கோபம் நம்மை பாதிக்காது. அதேபோல பொய்யான பந்தமும் நம்மை பாதிக்காத போது அதை நீக்குவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்.

பதில்   உண்மையான பாம்பைப் பார்த்தால் எந்தளவு பயம் ஏற்படுகிறதோ,  அதேயளவு பயம் பொய்யான பாம்பைக் கயிற்றில் பார்க்கும் போது ஏற்படுகிறது. கயிற்றின் இருப்பு பாம்புக்குப் போயிருக்கிறது. எனவே கயிறுதான் உண்மையில் பயத்தைக் கொடுக்கிறது. கயிற்றின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டால் பாம்பின் இருப்புக் கயிற்றுக்கு சென்றுவிடுவதால் பயம் சென்றுவிடுகிறது. அதேமாதிரி மித்யாவாக இருக்கின்ற ஜகத் நிமித்தமாக நமக்கு பயம் ஏற்படுகிறது. சம்சார தாபம் ஏற்படுகிறது. இந்த உலகத்தின் மித்யத்தன்மையை உணர்ந்துக் கொள்ளாததனால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் பொய் என்ற அறிவை அடைந்வுடன் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சம்சாரம் சென்றுவிடுகிறது. எனவே இந்த உலகம் மித்யா என்பதை நிலைநாட்டு வேண்டுமென்றால் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். ஞானத்தினால் ஒன்று செல்கின்றதென்றால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.

கேள்வி நிர்குண பிரம்மன் என்பதே கிடையாது. ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணம். காரண-காரிய தத்துவத்தில் காரணத்தின் குணம் காரியத்தில் இருக்கிறது. எனவே ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணமாக இருப்பதால் சகுண பிரம்மன்தான் இருக்கமுடியும்.

பதில்   இந்த உலகம் அத்யாஸத்தினால் தோன்றிக் கொண்டிருக்கின்றது. பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் தன்மைகளை பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்றோம். பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டு உலகம் சகுணமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த பிரம்மத்தின் மீது உலகம் ஏற்றி வைத்திருப்பதனால் பிரம்மன் சகுணத்திற்கு அதிஷ்டானமாக இருக்கிறது. எனவே நிர்குணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. எந்தவொரு அத்யாஸத்திலும் விசேஷ அக்ஞானம் இருக்க வேண்டும், சாமான்ய ஞானமும் இருக்க வேண்டும்.

கேள்வி தெரிகின்ற பிரம்மத்தைப் பற்றி எதற்கு விசாரம் செய்ய வேண்டும்?

பதில்   பிரம்மத்தைப் பற்றிய விசேஷ அக்ஞானம் இருப்பதனால்தான் விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது விசேஷ அக்ஞானத்தை நிலைநாட்ட வேண்டும். எனவே விசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

அத்யாஸ பாஷ்யத்தில் ஆறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்,

  1. அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
  2. சந்தேகத்திற்கான பதில்
  3. அத்யாஸ லட்சணம்
  4. அத்யாஸ நடப்பதற்கான வாய்ப்பு
  5. அத்யாஸம் நடந்திருக்கின்றது என்று அறிய உதவும் பிரமாணம்
  6. முடிவுரை

ஆகியவைகளாகும்.

 

  1. 1.அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்

ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் இடையே உள்ள அத்யாஸத்தைப் பற்றிய விளக்கம் கூறப்படுகிறது. ஆத்மாவென்ற கயிற்றில் அனாத்மா என்ற பாம்பை ஏற்றி வைத்திருப்பதைப் பற்றி விளக்கப்படுகிறது.

ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.

ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.

 

  1. விரோதாத்– ஆத்மா-அனாத்மாவிடையே இயல்பாகவே விரோதம் இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது. இருள், ஒளி இவையிரண்டுக்கும் இடையே அத்யாஸம் நடைபெற முடியாது. இருள் மீது ஒளியோ அல்லது ஒளி மீது இருளோ அத்யாஸம் நடக்காது. அதுபோல ஆத்மாவிடத்தில் அனாத்மா அத்யாஸம் செய்ய முடியாது. இரண்டும் சத்யமாக இருப்பதால் சேர்ந்தேயிருக்கிறது. இந்த விரோதம் மூன்று வகையாக இருக்கிறது.

1.1.     இயல்பாக விரோதமாக இருத்தல். (உ-ம்) எலி-பூனை, நான்,நீ.அது என்று சுட்டிக் காட்டுகின்ற பொருட்கள் சுபாவமாகவே விரோதமாக இருக்கிறது.

1.2.     ஆத்மா சாட்சி; அறிபவன், அனாத்மா அறியப்படுவது என்ற வேற்றுமை இருத்தல். ஆத்மாவால் பிரகாசப்படுத்துகின்ற அனாத்மா எப்படி என்னுள்ளே செல்லும். நான் என்ற சொல்லுக்குள் போக முடியும்?

1.3.     விவகாரத்தின் அடிப்படையிலும் விரோதம் இருக்கிறது. நான் கர்த்தா, நான் போக்தா என்ற விவகாரம் இருக்கிறது. நான் என்கின்ற பிரம்மன் வேறுபட்டிருக்கிறது. எனவே கர்த்தாவும், பிரம்மமும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது. கர்த்தாவான நான் ஏதாவது கர்மத்தை செய்துதான் பிரம்மனாக உயர முடியும்.

இந்த காரணங்களால் அத்யாஸம் என்பது நடக்கவே முடியாது.

  1. பிரத்யக்ஷ விஷயத்தில்தான் அத்யாஸம் நடைபெறும். பார்க்கப்படும் பொருட்களுக்குள்தான் அத்யாஸம் நடைபெறும். ஆத்மா அபிரத்யக்ஷமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறவே முடியாது.
  2. ஆத்மா ஸ்வயம் பிரகாசமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறாது. ஆத்மாவை எதுவும் மறைக்க முடியாது.
  3. ஸாத்3ருஷ்யம் அபா4வாத்

சாதிருஷ்யம் இல்லாததால் அத்யாஸம் நடைபெறாது. சாதிருஷ்யம் என்பது ஒன்றைப் போல் வேறொன்று இருப்பதாகும். கயிற்றில் பாம்பைப் பார்க்கக் காரணம் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. எனவே அங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது. ஆத்மாவும், அனாத்மாவும் ஒரேமாதிரியாக இல்லாததால் அத்யாஸம் நடக்காது.

அவயவ சாத்ருஷ்யம் – உடலுறுப்புக்கள் ஒரேமாதிரியாக இருத்தல். நாட்டெருமை, காட்டெருமை உடலமைப்பில் ஒரேமாதிரியாக இருப்பதால் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.

குண சாத்ருஷ்யம் – குணத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம். சிங்கத்தைப் போலிருக்கிறான் அவன் என்ற வாக்கியத்தில் குணத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது. ஆனால் ஆத்மா-அனாத்மாவிடத்தில் சாத்ருஷ்யமும் இல்லாததால் அத்யாஸமே நடைபெறாது. அனாத்மா அவயவங்களை உடையது, ஆத்மா அவயவங்களற்றது என்பதாலும், குணங்களுடன் கூடிய அனாத்மாவுக்கும், ஆத்மா நிர்குணமாக இருப்பதாலும் இவைகளிடத்தில் அத்யாஸம் நடைபெறாது.

  1. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ:

அத்யாஸம் நடைபெறுவதற்கு ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் மனதில் பதிந்திருக்கும். இந்த மனப்பதிவுகள் அத்யாஸத்திற்கு அவசியம். இந்த வகையான மனப்பதிவு ஆத்மா-அனாத்மா விஷயத்தில் கிடையாது. கயிற்றில் தோன்றிய பாம்பானது நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட மனப்பதிவினால் காட்சியளிக்கிறது. பாம்பைப் பார்க்காதவனால் கயிற்றைப் பாம்பாக பார்க்க முடியாது. அதேமாதிரி  உண்மையான அனாத்மாவை பார்த்திருந்தால்தான் ஆத்மா மீது அத்யாஸம் செய்ய முடியும். அனாத்மா மித்யாவென்று சொல்கின்ற உங்களால் எப்படி அத்யாஸம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?

 

மேற்கூறிய 5 காரணங்களால் அனாத்மாவான 3 சரீரங்களை ஆத்மா மீது ஏற்றி வைக்க முடியாது. இவையிரண்டுக்குமிடைய அத்யாஸம் நடைபெறவே முடியாது. உடலும், ஆத்மாவும் சத்யமாக இருப்பதால் ஏதாவது கர்மத்தை செய்துதான் உடலைவிட்டு வேறொரு உயர்ந்த நிலைக்கு சென்று மோட்சத்தை அடைய முடியும். அதாவது பிரம்மலோகத்தையோ, வைகுண்டத்தையோ, சிவலோகத்தையோ அடைந்து அங்கிருந்துதான் மோட்சத்தை அடைய முடியும். இவையிரண்டும் கர்ம சம்பந்தத்தினால் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே கர்மகாண்டம் மூலமாகவே மோட்சத்தை அடையலாம். ஞானகாண்டமே தேவையில்லை, அதை விசாரம் செய்யவும் தேவையில்லை.

  1. சந்தேகத்திற்கான பதில்
    இந்த அத்யாஸம் யுக்திக்கு பொருந்தி வரவில்லையே என்றால், நீ சொல்வது சரிதான். உதாரணமாக இந்த உலகத்தை எந்த தர்க்க தோஷம் இல்லாமல் விளக்க முடியாது. ஏனென்றால் அது அனிர்வசனீயம். இதை விளக்க முடிந்தால் அது சத்யமாகிவிடும். இதுவே அத்வைதத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த அத்யாஸம் தர்க்கத்திற்கப்பாற்பட்டு இருப்பதனால் அது அப்படி இருப்பதுதான் அதன் இயல்பான தன்மையாகும்.இந்த அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று கூறமுடியாது. இது அனுபவத்தில் இருக்கிறது. அக்ஞானியின் அனுபவத்தில் கர்த்தா, போக்தாவாகவும், ஞானி அகர்த்தா, அபோக்தாவாகவும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவனுக்குத்தான் இது அனுபவத்திற்கு வரும். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவத்தை அடைகிறோம். இந்த நிலையில் சரீர அபிமானம் இல்லாததால் துயரமில்லாமல் சுகத்துடன் இருக்கிறோம். எனவே அபாவாத் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக ஒரு பொருளை அது என்றும், இது என்றும் சொல்கிறோம். ஆனால் நாம் நான் என்ற சொல்லால் ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் மாற்றி, மாற்றி சொல்கிறோம். உண்மையில் நான் என்ற சொல் ஒன்றை மட்டும்தான் குறிக்க வேண்டும். இந்த உடல் விஷயத்தில் நமக்கு குழப்பம் இருக்கிறது. எனவே அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று சொல்வது தவறு. இதிலிருந்து அத்யாஸம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.

அத்யாஸம் நடைபெற காரணமில்லையே என்ற காரணத்தினால் இதை மறுக்கிறாய். அதற்கு நீ கூறிய 5 காரணங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது.

  1. விரோதத்துடன் இருக்கின்ற இரண்டு பொருட்களுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதுதான் இயல்பாகும். கயிறும், பாம்பும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதனால்தான் அத்யாஸம் நடக்கிறது.
  2. அத்யாஸம் நடைபெறுவதற்கு பிரத்யக்ஷம் தேவையில்லை. நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. அது விளங்கிக் கொண்டிருந்தால் போதும் என்று பதிலளிக்கப்படுகிறது.
  3. தெரியாத விஷயத்தில் தவறு நடைபெற முடியாது ஆனால் ஆத்மா எபிபொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்ல முடியாது. ஆத்மா தெரிந்தும், தெரியாமலும் இருக்கிறது. ஆத்ம விஷயத்தில் சாமான்ய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறேன்; எந்த தன்மையுடன் இருக்கிறது என்கின்ற விசேஷ ஞானம் இல்லாத காரணத்தால் ஆத்மாவின் மீது சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
  4. ஸாதிருஷ்யம் அபாவாத் என்ற காரணத்தால் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்கிறாய். கயிற்றை பாம்பாக நினைப்பதற்கு இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியான தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மாவும், அனாத்மாவும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் போது எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பார்க்கும் போது இது சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஆகாசத்தில் நீல வர்ணத்தை ஏற்றி வைத்துப் பார்க்கிறோம். உருவமில்லா பொருளில் எப்படி வர்ணத்தை ஏற்றி வைக்க முடியும்! இங்கு ஸாத்ருஷயம் இல்லை. அதேபோல ஆத்ம-அனாத்மா விஷயத்தில் இருக்கிறது. வறண்ட நிலத்தில் கானல் நீரை பார்ப்பது இன்னொரு உதாரணம். சாதிருஷ்யம் இல்லாத போதிலும் இங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது.
  5. பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ: பொய்யான அனாத்மாவை உண்மையாக முன்பே பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதனால் ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உண்மையான பாம்பைப் பார்த்ததினால் கயிற்றில் பாம்பை பார்க்க முடிந்தது.  ஏற்கனவே பார்த்த பொய்யான ஒன்றின் ஸம்ஸ்காரம் நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக இருட்டில் பார்த்த வழிகாட்டி தூணை பேய் என்று பயந்த சூழ்நிலையில் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் பேய் வழிகாட்டிதூணில் ஏற்றி வைக்க முடிகிறது. இந்த அத்யாஸம் அனாதியானது. அக்ஞானம் அனாதியாக இருப்பதனால் இதிலிருந்து தோன்றிய அத்யாஸமும் அனாதியாக இருக்கிறது.

பூ.ப    இந்த உடலினுடைய தன்மையாவது ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாமல்லவா?
பதில் உடலையும், அதனுடைய தர்மங்களையும் சேர்த்துத்தான் ஏற்றி வைக்க முடியும்.

3.அத்யாஸ லட்சணம்
நான்கு லட்சணங்கள் கொடுக்கப்படுகிறது. அவைகள்,

  1. ஸ்மிருதி ரூபஹ – ஞாபகத்தைப் போல. கயிற்றில் தோன்றும் பாம்பு ஞாபகத்தில் உள்ளதை போன்றது.
  2. பரத்ர –  வேறிடத்தில் (கயிற்றில்)
  3. பூர்வ த்3ருஷ்டா – ஏற்கனவே பார்த்தது.  (பாம்பு)
  4. அவபா4ஸக – தோற்றம்; காட்சி

 

லட்சணம்-1 (ஸ்மிருதி ரூபஹ)

*   சம்ஸ்கார ஜன்யம் : ஏற்கனவே பார்த்தவொன்று மனதில் பதிவாகியிருந்தால்  தான் நினைவுக்கு கொண்டு வரமுடியும்.

*   பிரமாண அஜன்யம் : நாம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர எந்த பிரமாணத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கயிற்றில் தோன்றிய பாம்பு நம் நினைவகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

*   தோஷ ஜன்யவாத் : பாம்பைப் பார்க்கும்போது பிரமாணத்தை தவறாக பயன்படுத்தி இருப்போம். இது நம் சம்ஸகாரத்திலிருந்து வந்திருப்பது, அதிஷ்டானத்தைப் பற்றிய சாமான்ய ஞானத்தினால் வருவது, அது வெளியே இருப்பது போல தோன்றுவது.

லட்சணம்2 (பரத்ர)
அதஸ்மின் தத் புத்தி:
அதஸ்மின் – அதில்லாத இடத்தில்
தத் புத்தி – அது இருப்பதாக பார்ப்பது, நினைப்பது
நான் ஒன்றைப் பார்த்தேன் என்று சொல்லும் போது எதைப் பார்த்தேன்,  எங்குப் பார்த்தேன் என்ற கேள்வி எழுகின்றது. எதைப் பார்த்தாய் என்ற கேள்விக்கு பாம்பின் உருவத்தைப் பார்த்தேன் என்றும், எங்குப் பார்த்தாய் என்று கேட்டால் கயிற்றில் பார்த்தேன் என்று பதில் சொல்வோம். எனவே அதஸ்மின் – கயிற்றில், தத் புத்தி – பாம்பைப் பார்த்தல்.

லட்சணம்-3 (பூர்வ த்3ருஷ்டா)
ஸத்யாநிருத மிதுனீ கரணம்
ஸத்ய அநிருத – உண்மை, பொய்
மிதனீ கரணம் – ஒன்றோடொன்று கலத்தல்
உண்மையும், பொய்யும் கலந்து விட்டோமேயானால் அதுவே அத்யாஸம். உண்மையான கயிற்றையும், பொய்யான பாம்பையும் கலந்து பார்க்கின்றோம்.

லட்சணம்-4 (அவபா4ஸக)
மித்யா ப்ரத்யய ரூபஹ – பொய்யான அறிவு வடிவம்
ப்ரத்யயம் – மனதில் தோன்கின்ற எண்ணம், அறிவு
பாம்பு என்ற அறிவிருக்கிறது, ஆனால் உண்மையில் பாம்பில்லை. இல்லாதவொன்று இருப்பது போன்ற எண்ணம் மனதில் தோன்றுவது.
விதவிதமான அத்யாஸங்கள் (பகவான் சங்கரர் பாஷ்யத்தில் இது குறிப்பிடவில்லை)

  1. அனாதி அத்யாஸம் (அ) காரண அத்யாஸம்

பிரம்மம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அது அனாதி என்று பதில் சொல்லி விடுவோம். அதேபோல மாயையும் அனாதி என்று சொல்லி விடலாம். இந்த மாயையை பிரம்மத்தில் ஏற்றிவைத்து அதன் தன்மையை பிரம்மத்திற்கு கொடுத்துவிட்டோம். இந்த அத்யாஸமும் அனாதி என்றாகி விடுகிறது. இதையே அனாதி அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது.

  1. ஸாதி அத்யாஸம் (அ) காரிய அத்யாஸம்

இந்த அத்யாஸத்திற்கு தோற்றமுண்டு. இந்த நேரத்தில்தான் அத்யாஸம் ஏற்பட்டது என்றும், இந்தக் காலத்தில்தான் அத்யாஸம் நடைபெற்றது என்றும் கூறிவிடலாம். இந்த ஸ்தூல சரீரமும் இந்த வகையான அத்யாஸத்தில் சேர்த்துவிடலாம்.

  1. தாதா3த்மிய அத்யாஸம் (அ) த3ர்மி அத்யாஸம்

சத்யமாக இருக்கின்ற ஒன்றின் மீது வேறொன்றை பார்ப்பது. கயிறு என்றவொன்றில் பாம்பு என்ற வேறொன்றை பார்ப்பது இதற்கு உதாரணமாகும்.

  1. ஸம்ஸர்க3அத்யாஸம் (அ) த3ர்ம அத்யாஸம்

ஸபடிகத்தின் பக்கத்திலுள்ள சிவப்பு மலர், தனது சிவப்பு நிறத்தை பொய்யாக ஸ்படிகத்திற்கு கொடுத்துவிடுவதால் அதுவும் சிவப்பாக தோன்றுகிறது. இங்கே மலரின் ஒரு தன்மையை மட்டும் ஸ்படிகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

  1. அர்த்த அத்யாஸம்

கயிறு-பாம்பு அத்யாஸத்தில், வெளியே தெரிகின்ற பாம்பு அர்த்த அத்யாஸமாகும்.

  1. ஞான அத்யாஸம்

பாம்பைப் பற்றிய எண்ணத்திற்கு ஞானாத்யாஸம் என்று பெயர்.

  1. ஸோபாதீக அத்யாஸம்

இந்த அத்யாஸம் நடைபெறுவதற்கு பார்க்கின்ற பொருளுக்கு பக்கத்தில் வேறொரு பொருள் இருக்க வேண்டும். (உ-ம்) ஸ்படிகத்திற்கு பக்கத்தில் மலர் இருந்தால்தான் இந்த அத்யாஸம் ஏற்படும்

  1. நிரூபாதி33அத்யாஸம்

கயிற்றை பாம்பாக பார்ப்பதற்கு வேறொரு பொருளோ, வேறெந்த நிபந்தனைகள் இல்லாமல் ஏற்படுவதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 

சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் சென்றுவிடும். உதாரணம்: கயிறு-பாம்பு. சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் இருக்கும். ஆனால் உண்மையென்ற புத்தி சென்றுவிடும். உதாரணம் கானல் நீர். அதேபோல பிரம்மஞானம் வந்தாலும் உலகம் மறைந்து விடாது. ஆனால் அது பொய்யானது என்ற புத்தியுடன் இருப்போம்.

 

க்2யாதி வாதம்

நாம் செய்கின்ற தவறு எப்படிபட்டது என்பதை விளக்குகின்ற முறையே க்யாதிவாதமாகும். கயிற்றை பாம்பாக பார்ப்பதுதான் க்யாதி என்ற கூறலாம். இந்த தவறின் தன்மை என்ன என்பதில் பல கருத்துக்கள் வந்துவிட்டது. ஐந்துவிதமான க்யாதி வாதங்கள் உண்டு. இவைகளில் முதல்  நான்கு தவறான கருத்துக்களை உடையது. இறுதியான ஒன்றுதான் சரியானது. சரியான முறையில் தவறை விளக்கினால்தான் சரியான நீக்கும் முறையை கண்டுபிடிக்க முடியும்.

 

  1. க்ஷணிக விக்ஞானவாதியின் வாதம்:

இதை ஆத்மக்யாதி என்றும் அழைக்கப்படுகிறது. வெளியே காட்சியளிக்கின்ற பொருட்கள் யாவும் நம்முடைய எண்ணங்கள்தான். மனதில் உள்ள எண்ணங்கள்தான் சத்யமானது. க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி மறைகின்ற எண்ணங்கள்தான் சத்யமானது. கயிறு-பாம்பு தவற்றில் இரண்டுமே தவறு என்று கூறுகிறான். வெளியே பார்ப்பதாக சொல்வது தப்பு. எல்லாமே மனதில் எண்ணங்களாக இருக்கிறது.

  1. சூன்யவாதம்.

அஸத்க்யாதி என்பது மற்றொரு பெயர். இல்லாத கயிற்றில் இல்லாத பாம்பைப் பார்க்கிறாய். எல்லாம் சூன்யமாக இருப்பதால் இந்த தவறு நடக்கவில்லை. இல்லாததற்கு எப்படி கயிறு, பாம்பு என்ற அடைமொழி கூறமுடியும்.

  1. அக்யாதி

ஏற்கனவே பார்த்த பாம்பைத்தான் இப்பொழுது கயிற்றில் பார்க்கிறாய். எங்கே பார்த்தாயோ அந்த தேச, காலம் இப்போது மாறியிருப்பதால் தவறு நடந்திருக்கிறது. பாம்பு சத்யம் என்பதும் தவறானது.

  1. அன்யதா வாதம்

உண்மையான பாம்புதான் பார்க்கப்படுகிறது. ஸமிருதி அல்லது பிரத்யக்ஷம் எது என்பதில்தான் தவறு நடந்திருக்கிறது. ஏதோ விளக்க முடியாத பிரத்யக்ஷத்தினால் பாம்பு தோன்றியிருக்கிறது.

  1. அனிர்வசனீய வாதம் – சரியான க்யாதிவாதம்

அந்த இடத்தில் ஸத்திற்கும், அஸத்திற்கும் வேறானவொன்று காட்சியளிக்கிறது. இருக்கிறது என்றோ இல்லையென்றோ சொல்லா முடியாததாக இருப்பதனால் இதை அனிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. மித்யா ஸ்ருஷ்டிதான் கயிற்றில் தோன்றும் பாம்பு. இது நம்மால் உருவாக்கப்பட்டதாகும். நாம் உருவாக்கிய பாம்பை நம்மால்தான் நீக்கமுடியும். வேறு யாராலும் விரட்டியடிக்க முடியாது. மனதில் உருவாகி இருப்பதை நாம்தான் அழிக்க வேண்டும், வேறுயாரும் அதை செய்ய முடியாது.

 

4.ஸம்பாவனா: அத்யாஸ வாய்ப்பு

  1. அக்ஞானம்      – முழுமையாக ஒன்றும் தெரியாத நிலை
  2. விபரீத ஞானம் – அறியாமை நீக்கி தவறான அறிவை அடைந்திருத்தல்
  3. சம்யக் ஞானம்  – அறியாமை நீக்கி சரியான அறிவை அடைந்திருத்தல்
  4. ஸம்பாவனா     – இருப்பதற்கு வாய்ப்பு
  5. சரியான அறிவை அடைதல்

 

இதுவே ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடையும் வழிமுறை. இதை ஆத்மஞானத்தை அடையும் விஷயத்தில் பொருத்திப் பார்ப்போம்.

  1. ஆத்மாவைப் பற்றிய அறியாமை
  2. உடல்தான் ஆத்மா என்ற தவறான எண்ணத்தை அடைதல்
  3. ஆத்ம விசாரம் செய்யும்போது உடலுக்கப்பால் நான் என்கின்ற ஆத்மா இருக்கலாம் என்ற சந்தேகம் வருவது
  4. ஆத்மாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
  5. இறுதியில் நானே ஆத்மா என்ற சரியான அறிவை அடைதல்.

மேற்கூறிய விசாரத்தைப் பார்க்கும்போது ஆத்ம-அனாத்மாவுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை பகவான் சங்கரர் கொடுக்கிறார்.
5.அத்யாஸ பிரமாணம்

5.1.     ஆத்ம-அனாத்மா விஷயத்தில் ஏற்பட்ட அத்யாஸத்திற்கு ஸ்ருதிதான் பிரமாணம். ஆத்மாவின் ஸ்வரூபம் அஸங்கமாகும. அனாத்மா விஷயங்கள் நீக்கப்படுவதாக இருப்பதால், அது மித்யாவாகும். இந்த ஜகத்தும், சரீரங்களும் நீக்கப்படுவதாக இருப்பதால், இவைகளும் மித்யாவாகும். சாட்சி பிரத்யக்ஷம் நம்முடைய மனதிலுள்ள உணர்வுகளை சாட்சியே விளக்குகிறது. அத்யாஸம் அனுபவத்திலே ஏற்படுகிறது. வெளி விஷயத்தை என்னுடையது என்று நினைக்கும்போது அதற்கு வருகின்ற நலம், கேடு அனைத்தும் தனக்கு வந்ததாகவும், உடலை அபிமானிக்கும்போது அதற்கு வருகின்ற கஷ்டங்கள் தனக்கு வந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இவைகள் நம் அனுபவத்திலேயே புரிந்து கொள்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் எதன் மீதும் அபிமானம் இல்லாததால் விவகாரம் எதுவும் நடக்கவில்லை. எனவே அத்யாஸத்திற்கு அபிமானம்தான் காரணமாகும்.

5.2.    அத்யாஸ பிரகாரம்

அத்யாஸம் படிப்படியாக எப்படி நடக்கிறது. நம்முடைய தேக விவகாரம் நடக்க வேண்டும் என்றால் உடல் மீது அபிமானம் இருக்க வேண்டும். நான் அறிய விரும்புவன் என்ற அத்யாஸம் இல்லாமல் எந்த விவகாரமும் நடக்காது என்று பகவான் சங்கரர் கூறுகிறார். இது மிருகங்களுக்கும் பொருந்தும். நம் சொந்த-பந்தங்களிடத்தில் அபிமானம் இருப்பதால் அவர்களுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் நம்மையும் பாதிக்கின்றது.

 

6.அத்யாஸ உபஸம்ஹாரம் (முடிவுரை)

இந்த அத்யாஸம் நம்முடைய சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் அத்யாஸத்தை முகவுரையாக கொடுத்து விளக்கப்பட்டிருக்கிறது. அத்யாஸத்தை நீக்கி ஆத்மா ஒன்றுதான் என்ற அறிவின் மூலமாக சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஞானம் அக்ஞானத்தை நீக்கிவிடுகிறது. இந்த அக்ஞானத்தினால் எவைகளெல்லாம் இருக்கிறதோ அவைகளெல்லாம் நீங்கிவிடுகிறது. கயிறு என்ற அறிவு வந்தவுடன் பாம்பு என்ற அபிமானம் சென்றுவிடுவதால் பாம்பின் உருவமும் மறைந்துவிடுகிறது. அத்யாஸமும் சென்றுவிடுகிறது.

பிரம்ம சூத்திரம்-பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஜிக்ஞாஸா அதிகரணம்-01

சூத்திரம்-1
अथातो ब्रह्मजिज्ञासा ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।

இந்த சூத்திரம் பிரம்மசூத்திரம் என்கின்ற நூலுக்குள் நுழைகின்ற வாயிலாக இருக்கிறது. இதற்கு அனுபந்த3 சதுஷ்டயம் என்ற வேறொரு பெயரும் உண்டு. அனுபந்த சதுஷ்டயம் என்பது நான்கு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவைகள் விஷயம், அதிகாரி, பலன், சம்பந்தம் ஆகியவைகளாகும். புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு இந்த புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை கூற வேண்டும். யாருக்காக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், படிப்பதனால் என்ன பலனை அடையலாம் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

வியாச பகவான் தான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதைக் கூறிவிட்டு, யார் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் கூறியிருக்கிறார். எனவே முதல் சூத்திரம் அனுபந்த சதுஷ்டயமாக அமைந்திருக்கிறது.

அதிகரணத்தின் அங்கங்களாவது விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் ஆகியவைகளாகும். இந்த முதல் சூத்திரமே ஒரு அதிகரணமாக இருப்பதால், இதற்கு அனுபந்த சதுஷ்டயம் இருக்கிறது.

  1. விஷயம்        – முழு வேதாந்த சாஸ்;திரமாகும்.
    2.    சந்தேகம்        – வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
    3.    பூர்வபக்ஷம்      – அனுபந்த சதுஷ்டயமே இல்லாததால் விசாரம் தேவையில்லை
    4.    சித்தாந்தம்      – வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.

கேள்வி  பிரம்ம சூத்திரத்தில் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்?

பதில்    உபநிஷத் வாக்கியங்களை எடுத்து பிரம்ம நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  அதைத்தான் கர்ம காண்டத்திலே சகுண பிரம்மனை நிச்சயம் செய்து விட்டதால் திரும்பவும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு நிச்சயம் செய்யத் தேவையில்லை.

பதில்    இதில் நிர்குண பிரம்மத்தைத்தான் நிச்சயம் செய்யப் போகிறேன்.

கேள்வி  நிர்குண பிரம்மன் என்றவொன்றே இல்லாதபோது அதை நிச்சயம் செய்யப் போகிறேன் என்று சொல்வது தேவையில்லாதது. மேலும் யாருக்காக இந்த விசாரம் செய்யப் போகிறீர்கள்?

பதில்    சாதன-சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்கள்தான் இதற்கு அதிகாரி.

கேள்வி  வைராக்கியம் என்பது அடையவே முடியாது. எனவே அதிகாரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் யாரும் இல்லை. அப்படியே ஒருசிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் அதனால் அடையும் பலன்தான் என்ன?

பதில்    இந்த மூன்று கருத்துக்களையும்தான் முதல் சூத்திரத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த உபநிஷத்துக்கம் நுழைவாயிலாக இருக்கிறது. இந்த சூத்திரத்தில் மூன்று வர்ணகங்கள் இருக்கிறது. அவைகள்,

 

2வது வர்ணகம் – அக3தார்த்த2 வர்ணகம்

அக3தார்த்த2ம் – பேசி முடிக்காத விஷயம். அதாவது நிர்குண பிரம்மன் கர்ம காண்டத்தில் பேசப்படவில்லை.

3வது வர்ணகம் – அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.

4வது வர்ணகம் – ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
சூத்திரத்தின் அர்த்தம்:
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।


வேதாந்தத்தின் அனுபந்த சதுஷ்டயம்:
1.   விஷயம்  – ஜீவ-பிரம்ம ஐக்கியம்
2.   அதிகாரி    – சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்தவர்கள்
3.   பலன்      – மோட்சம்; ஜீவன் முக்தி; விதேக முக்தி
4.   சம்பந்தம் – அதிகாரிக்கும் அவன் அடையப்போகும் பலனுக்கான சம்பந்தம்.
முதல் மூன்று கருத்துக்களையும் நிலை நாட்டுவதுதான் இந்த சூத்திரத்தின் நோக்கமாகும்.
அத2     – பிறகு (thereafter)
அத:  – ஆகவே (therefore)
ப்3ரஹ்ம – நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா – அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.

எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.

பிறகு    சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா – பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.

விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
பூ.ப   வேதாந்த சாஸ்திரத்தை விசாரம் செய்யக்கூடாது? எல்லா விஷயத்தையும் கர்மகாண்டத்தில் பேசியாகி விட்டது. மேலும் உபநிஷத்தை படித்து அறிவை அடைந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இதைப் படிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆகவே விசாரம் செய்யத் தேவையில்லை.

பதில் விஷயம் உண்டு. அதிகாரியும் உண்டு. பலனும் உண்டு. இதைத்தான் இந்த சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.

 

அத2” சப்த விசாரம்:

இந்த சொல்லுக்கு 7 அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றுள் இந்த இடத்திற்கு பொருத்தமான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏன் மற்ற அர்த்தங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

  1. மங்கலம் – தெய்வீகமானது
    2.    அனந்தரம் – பிறகு
    3.    ஆரம்பஹ – தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
    4.    ப்ரஶ்னஹ – கேள்வி
    5.    கார்க்ஸயம் – முழுமையான
    6.    அர்த்தாந்தரம் – பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா – புதிய தலைப்பு; அடுத்தது
    7.    க்ரமஹ – வாpசைக்கிரமம்

பூ.பக்ஷி மங்கலத்தை இந்த இடத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எதை தொடங்கினாலும் மங்கலத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு இறைவணக்கம் எதுவும் இல்லாததால் இதை இறைவணக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   அத2 என்ற சப்தமே மங்கலத்தைக் குறிக்கிறது. ‘பிறகு”  என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். சாஸ்திரத்தில் ஓம், அத2 என்கின்ற சொற்களின் உச்சரிப்பே மங்கலமானது. அத2 சொல்லானது சப்தமாகவும், அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அத2 என்ற சொல்லின் சப்தமே மங்கலத்தை குறிப்பதால், அதை விட்டுவிட்டு ‘பிறகு” என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பஹ என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் பிரம்ம ஞானத்தை அறிய விருப்பம் ஆரம்பமாகிறது என்றாகிவிடும்.  ப்ரஶ்னஹ என்ற அர்த்தத்தமும், கார்க்ஸயம் என்ற அர்த்தத்தமும் பொருந்தி வராது.

 

6.அர்த்தாந்தரம் – புதிய தலைப்பு; அடுத்தது

பூ.பக்ஷி கர்மகாண்ட விசாரம் முடிந்துவிட்டது எனவே அடுத்ததாக ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பது சரியாக பொருந்தி வருகிறது. இதுவே சரியான அர்த்தமாக இருக்கிறது.

பதில்   பிறகு என்ற அர்த்தத்திற்குள்ளே அடுத்தது என்ற அர்த்தம் வந்துவிடுவதால் இந்த அர்த்தம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. மேலும் அடுத்தது என்று சொல்லும் போது இதற்கு முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிறகு என்று சொல்லும்போது முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த அர்த்தம்தான் பொருத்தமாக இருக்கும். இந்த அர்த்தம் பிரம்ம ஞான விசாரத்திற்கு அவசியம என்ற உறுதி கூறுகிறது.

 

2.அனந்தரம் – பிறகு

பூ.பக்ஷி பிறகு என்பது சாதன சதுஷ்டய சம்பத்திக்கு பிறகு என்று எடுத்துக் கொள்ளமுடியாது. கர்ம காண்ட விசாரத்திற்கு பிறகு ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

பதில்   கர்ம காண்டத்திற்கு செல்வதற்கு முன்பே வைராக்கியம் இருந்துவிட்டால் கர்மகாண்ட விசாரம் தேவையில்லை. நேரிடையாக ஞானகாண்ட விசாரத்திற்கு வந்துவிடலாம். சுகர், நசிகேதன் போன்றவர்கள் கர்ம அனுஷ்டானம் செய்யாமலே பிரம்மஞானத்தை அடைந்தவர்கள். பகவான் கிருஷணர் பகவத்கீதையில் யோகபிரஷ்டன் என்பவனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவன் முற்பிறவியிலே விவேக, வைராக்கியத்தை அடைந்திருப்பான். இவன் இந்த பிறவியில் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று குறிபபிட்டிருக்கிறார்.

 

7.க்ரமஹ – வரிசைக்கிரமம்

பூ.பக்ஷி அத2 என்ற சொல்லுக்கு வரிசைப்படி என்ற முறையில் முதலில் தர்மத்தைக் கடைப்பிடித்து மனத்தூய்மையடைந்து அடுத்ததாக பிரம்ம விசாரம் என்ற வரிசையை எடுத்துக் கொள்ளலாம்.

பதில்   வரிசைப்படி இல்லாமலும் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வரலாம். ஒருவன் பல கர்மங்களை செய்ய வேண்டுமென்றால் இந்த கிரமத்தைப் பற்றி பேசலாம். உதாரணமாக ஒருவன் குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அலுவலகம் செல்கின்றான். இந்த இடத்தில் கிரமத்தை கடைப்பிடிக்கலாம். இந்த பிரம்ம விசாரம் வைராக்கியம் அடைந்திருப்பவன் செய்கின்றான். வைராக்கியம் இல்லாதவன் கர்மகாண்டத்திற்கு சென்று அதையடைந்து பிறகு பிரம்ம விசாரத்திற்கு வருவான். கர்ம காண்டத்தில் கிரமமாக சில யாகங்களை செய்ய வேண்டும் என்ற நியதியிருக்கிறது.

பூ.பக்ஷி ஞான-கர்ம சமுச்சயவாதி இரண்டு காண்டத்தையும் சேர்த்து செய்து கொண்டிருப்பான். இரண்டு காண்டங்களும் மோட்சம் என்கின்ற ஒரே பலனைத்தான் லட்சியமாக கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் மோட்சம் என்கின்ற பலனை மறைமுகமாக பேசுகிறது. ஞானகாண்டம் நேரிடையாக மோட்சத்தைப் பற்றி பேசுகிறது. பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போல மோட்சத்தை அடைவதற்கு இரண்டு காண்டங்களும் தேவைப்படுகிறது.

பதில்   ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டு பொருட்களை கலக்கமுடியாது. கர்ம காண்டத்தில் இருக்கும்போது சரீரமே நான் என்ற எண்ணத்தில் செயல் செய்து கொண்டிருப்பான். ஞானகாண்ட சாதகன் சரீர அபிமானத்தை நீக்க முயற்சி செய்து கொண்டிருப்பான். எனவே இரண்டும் ஒன்றக்கொன்று எதிராக இருப்பதால் சமுச்சயம் சம்பவிக்காது. இவையிரண்டையும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியாது. மேலும் இரண்டுக்கும் இடையே மூன்று வேற்றுமைகள் இருக்கிறது.

 

  1. விஷய பே4தஹ – இரண்டு காண்டங்களின் மையக்கருத்து வெவ்வேறாக இருக்கிறது. கர் காண்டம் புண்ணியங்களைத்தான் முக்கிய விஷயமாகக் கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டிருக்கின்ற கர்மங்களை முறைப்படி செய்தால் புண்ணியத்தை அடையலாம். இந்த புண்ணியத்தால் சுகத்தை அனுபவிக்கலாம். சுகத்தை துறந்தால் மனத்தூய்மை அடையலாம். ஆனால் ஞானகாண்ட விஷயமானது ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைத்தான் பேசுகிறது.
  2. 2ல பே4தஹ –  இரண்டு காண்டங்களின் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றது. கர்ம காண்டத்தினால் அடையப்படுகின்ற பலன்கள் நிலையற்றது. ஞானகாண்டத்தினால் அடைகின்ற பலன் நிலையானது.
  3. ப்ரவிருத்தி பே4தஹ – கர்மகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும், ஞானகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும் வெவ்வேறானது. கர்மத்தை செய்வதனால்தான் பலனை அடையமுடியும். யாகம் செய்யும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதை முறைப்படி செய்தால்தான் பலனை அடைவோம். ஆனால் ஞானகாண்டத்தில் ஞானத்தை அடைவதும், பலனை அடைவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது.

அத2” சப்த முடிவுரை:
சாதன சதுஷ்டய சம்பத்திக்குப் பிறகு பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது. பரீக்ஷய லோகான் கர்மசிதான் நிர்வேதம் ஆயாத் என்று தொடங்கும் முண்டக உபநிஷத் உபதேசம் உரைப்பது, இந்த உலகத்தில் அடைகின்ற அனுபவங்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து அடைவது வைராக்கியம், விவேகமாகும். பிறகு பிரம்மத்தை அறிவதற்கு தகுதி வாய்ந்த குருவிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஆத்மனஸ்ய காமாய… என்று தொடங்கும் பிருஹதாரண்க உபநிஷத் உபதேசமானது, இந்த உலகத்திலுள்ள பொருட்களின் மீது ஆசை கொள்வது அந்தப் பொருட்களின் நிமித்தமாக அல்லவென்றும், நம் மனதில் அடைகின்ற ஆனந்தமும்,  ஆசைதான் காரணம்.

மேற்கூறிய உபநிஷத் உபதேகங்களைப் பார்க்கும்போது சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று இருப்பதால் “அத2” என்ற சொல்லுக்கு பிறகு என்ற அர்த்தமே சரியாக இருக்கின்றது. ஆகவே உபநிஷத் சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ஆத்ம விசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பதால் பிறகு என்ற அர்த்தம்தான் சரியாக இருக்கும்.

அத: – ஆகவே. இந்தப் பொருளுக்கு பல காரணங்கள் உண்டு. அவைகளை பார்க்கலாம்.

  1. கர்மனா மோக்ஷ அபா4வாத் – கர்மத்தினால் மோட்சத்தை அடையமுடியாது.
  2. ஞானாதேவ மோக்ஷ ஸம்ப4வாத் –  பிரம்ம ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைய முடிவதனால் விசாரம் செய்யப்படவேண்டும்.
  3. ஸாதன சதுஷ்டய ஸம்ப4வாத் – சாதன சாதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்து விட்டதால் விசாரம் செய்ய வேண்டும்.
  4. ஸம்ஸாரஸ்ய அத்யாஸ பூர்வத்வாத் –  சம்சாரம் அத்யாஸமாக இருப்பதனால், விசாரம் செய்யப்பட வேண்டும்.

ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – இந்த சொல்லுக்குப் பிறகு கர்த்தவ்ய  என்ற வினைச் சொல்லை சேர்த்து பொருட்படுத்த வேண்டும். அப்போது பிரம்ம ஞானத்திற்காக விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற அர்த்தம் கிடைக்கும். ப்3ரஹ்மஜிக்ஞாஸா என்ற சொல்லை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் ப்ரஹ்மன:+ஜிக்+ஞாஸா – பிரம்மத்தைப் பற்றிய விசாரம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. ஜிக்ஞாஸா என்பது ஞாதும் இச்சா – அறிவதற்க விருப்பம்; அறிய ஆவல் என்ற அர்த்தம் கொடுக்கின்றது.

ஞானம் என்ற சொல் எதை அடைய ஞானம் தேவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதே பதிலாகும். எனவே பிரம்ம என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
ஸா – விருப்பம்- எதைப்பற்றிய ஆசை இருக்கிறது? எதையறிய விருப்பம் கொள்கிறாய் என்ற கேள்வியெழும்போது அதற்கான விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த விருப்பத்தினுடைய விஷயம் ஞானமாகும்.
பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லின் பொருள் பிரம்ம ஞானத்தில் விருப்பம் என்பதாகும். நாம் இதனுடன் கர்த்தவ்ய என்ற வினைச்சொல்லை பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் சரியாக இருக்காது. அதாவது பிரம்ம ஞானத்தில் விருப்பம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் தவறாக இருக்கிறது. விருப்பம் என்பது செயல் செய்து அடைவதில்லை. அதனால் இச்சா என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அது சம்பந்தமான வேறொரு சொல்லை பயன்படுத்தி வாக்கியத்தை பூர்த்தி செய்கிறோம். ஒரு பொருள் மீது ஆசை வந்தால் அதை அடைவதற்கான சாதனத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல் பிரம்மஞானத்தில் ஆசை வந்திருப்பதால் அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்கு வேதாந்த விசாரம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். எனவே இச்சா என்ற சொல்லை விட்டுவிட்டு, இச்சையை பூர்த்தி செய்கின்ற விசாரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறோம். இப்போது அந்த பிரம்ம ஞானத்தை அடைய விசாரம் செய்யப்படவேண்டும் என்ற சரியான வாக்கியமாக இருக்கிறது.

 

பிரம்மன் என்ற சொல்லுக்கான அர்த்தம் அடுத்த சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆறாவது வேற்றுமை உருபு உடைய என்பது ஒன்றினுடைய சம்பந்தத்தைக் குறிக்கும். இங்கே இது சரியாக பொருந்தி வராததால் இரண்டாவது வேற்றுமை உருபான ஐ எடுத்துக் கொண்டு பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பது சரியாக இருக்கும்.
பூ.பக்ஷி பிரம்ம சம்பந்தமான விசாரம் என்று பொருட்படுத்த வேண்டும்.

பதில்   பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பதுதான் சரியான அர்த்தம். ஏனென்றால் இதுவே பிரம்மத்திற்கு சம்பந்தபட்ட விஷயங்களும் விசாரம் செய்ய வேண்டும் என்பதே சேர்ந்திருப்பதால் நீ சொல்வது சரியல்ல. பிரம்மத்தை தனியாக சொல்வதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக ராஜா செல்கிறார் என்றால் அவர் பரிவாரங்களுடன் செல்கிறார் என்றுதான் புhpந்து கொள்வோம்.

ஞானம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.    விசாரம் செய்வதனால் அடையும் இறுதி பலன் ஞானமாகும்.
2.    ஞானத்தை அடைவதற்கான வழிமுறை, சாதனம்.

பிரம்ம ஞானத்தை அடைவதற்கு எத்தனை காலம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வினவினால் இதற்கு காலவரம்பெல்லாம் கிடையாது. முழுமையான ஞானத்தை அடையும்வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
4வது வர்ணகம்:

ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3தி4 – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.

 

பூ.பக்ஷி நிர்குண பிரம்மன் ஏற்கனவே தெரிந்ததா அல்லது தெரியாததா?

பதில்   நிர்குண பிரம்மன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. அதாவது சாமான்யமாக தெரிகிறது. விசேஷமாக தெரியவில்லை. எனவே இதை விசாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நிலை நாட்டுவதற்கு பகவான் சங்கரர் விசாரம் செய்கின்றார். இதை நிலைநாட்டிவிட்டால் முதல் சூத்திரம் நிலைநாட்டப்பட்டதாகிவிடும்.

பூ.பக்ஷி எந்த பிரமாணத்தின் மூலமாக பிரம்மம் சாமான்யமாக தெரிகிறது?

பதில்1  இது வேதப் பிரமாணம் மூலமாக அறியப்பட்டிருக்கிறது. அழியாதவொரு வஸ்து இருக்கிறது என்ற வேத வாக்கியம் இருக்கிறது. இதைக் கேட்பதன் மூலமாக பிரம்மன் இருக்கிறது என்ற சாமான்ய ஞானம் வந்துவிட்டது. ‘ப்ரஹ்மனேஹ ஆப்னோதி பரம்”, ‘ஸத்யம், அனந்தம், நித்யம் பிரம்மன்”, ‘பிரம்மன் நிரதிசயமானது ( எல்லையற்றது )” என்று படிக்கும் போது பொதுவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இது கர்மகாண்டத்திலே விசாரிக்கப்படாததால் இப்போது விசாரம் செய்யப்படுகிறது.

 

பதில்2     இந்த பிரம்ம விஷயத்தில் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதனாலே இது சாமான்யமாக அறியப்படுகிறது, விசேஷமாக அறியப்படவில்லை என்று தெரிகிறது. சார்வாக்கர்கள் தேகம்தான் ஆத்மா என்கின்றார்கள். கர்மகாண்டம் யாகத்தின் மூலமாக சொர்க்கத்தை அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது ஸ்தூல உடல் ஆத்மாவல்ல சூட்சும உடல்தான் ஆத்மா என்று நம்புகிறார்கள். ஷணிகவாதிகள் க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி தோன்றி; மறைந்து கொண்டிருப்பதால் இதுதான் ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரே ஆத்மாதான் இறந்து பிறக்கிறது. சூன்யவாதிகள் சூன்யம்தான் பிரம்மம் என்ற கொள்கையுடையவர்கள். இந்த சூன்யத்தை பார்ப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற வாதத்தினால் இந்தக் கொள்கை நீக்கப்படுகிறது. நியாய மதக்காரர்கள் ஆத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சாங்கிய மதக்காரர்கள் ஆத்மா போக்தாவாக மட்டும் இருக்கிறது என்கிறார்கள். யோக மதக்காரர்கள் ஈஸ்வரனே ஆத்மா என்கின்றார்கள். அத்வைதிகள் இந்த ஆத்மாதான் நிர்குண பிரம்மம் என்ற கொள்மையுடையவர்கள்.

பிரம்மத்தை விசேஷமாக புரிந்து கொள்ளாதவரை இந்த குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும். பிரம்மமே ஆத்மாவாக இருப்பதனால் நாம் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவை அடைந்திட வேண்டும். சாமான்ய ஞானம் இருந்தால்தான் விசேஷஞானத்தை அடைந்திட முடியும். எனவே இந்த விபரீதஞானத்தை நீக்கி விசேஷ ஞானத்தை அடைந்திட வேண்டும். அஹம் என்ற விஷயத்தில் சாமான்யமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விசேஷஞானம் அடைவதற்கு விசாரம் தேவைப்படுகிறது.
இத்துடன் முதல் சூத்திரம் முடிவடைந்தது.—

2வது சூத்திரம் – 2வது அதிகரணம் – ஜன்மாத்3யதி4கரணம்

जन्माद्यस्य यतः ||2 ||
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.

பொருள்:

யத:                     – எதனிடமிருந்து யாரிடமிருந்து
அஸ்ய              – இதனுடைய;  இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3      – பிறப்பு முதலியன
இந்த மூன்று சொற்களுடன் மேலும் மூன்று சொற்களை சேர்த்தால்தான் சரியான அர்த்தம் கிடைக்கும். அவைகள்,
ப4வதி                 – உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத்                   – அது
ப்3ரஹ்    – பிரம்மம்

பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
விசாரம்
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அடைய முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யபப்டுகின்றது.

ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.

ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:

  1. விஷயம் – பிரம்ம லட்சணமாகும்.
  2. சந்தேகம் – பிரம்மத்திற்கு லட்சணம் இருக்கிறதா, இல்லையா
  3. பூர்வ பக்ஷம் – பிரம்மன் நிர்குண,  நிர்விசேஷமாக இருப்பதால் அதற்கு லட்சணம் சொல்ல முடியாது என்று பூர்வ பக்ஷி கூறுவதால் இதை விசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
  4. சித்தாந்தம் – ஏற்றி வைக்கப்பட்ட சில குணங்களின் மூலமாக பிரம்மத்திற்கு லட்சணம் கொடுக்க முடியும்.
  5. சங்கதி – சென்ற சூத்திரத்திற்கும் இந்த சூத்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்க வேண்டும். இதற்கு ஆட்சேப சங்கதியாகும். முதல் சூத்திரத்தில் பிரம்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதற்கான லட்சணத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தம்.

சாஸ்தர உபதேசமானது மூன்று படிகளாக இருக்கிறது. அவைகள்,

  1. உத்தேசம் – நாம் எதைப்பற்றி விளக்கப்போகின்றோமோ அதை சுருக்கமாக முதலில் சொல்லிவிட வேண்டும்.
  2. லட்சணம் – பிரம்மத்திற்கு லட்சணம் கொடுத்துவிட்டு அதை நிச்சயம் செய்ய வேண்டும். இதைத்தான் இரண்டாவது சூத்தரத்தில் செய்துள்ளார். மூன்றாவது சூத்திரத்தில் பிரம்மத்தை அறிய உதவும் பிரமாணத்தை கூறியுள்ளார். இதன் மூலம் பிரம்மன் என்ற ஒன்றிருக்கிறது என்று நிச்சயம் செய்துள்ளார்.
  3. பரீக்ஷா – விசாரங்கள் செய்திருக்க வேண்டும். நான்காவது சூத்திரத்திலிருந்து இறுதி சூத்திரம் வரை இதைத்தான் வியாச பகவான் செய்திருக்கிறார்.

 

ஏதாவது ஒன்றிற்கு லட்சணம் கொடுக்கவேண்டுமென்றால் எப்படிபட்ட லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்றும், எந்த வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இனி விளக்கப்படுகிறது.

 

  1. சஜாதீய விஜாதீய வியாவர்த்தக லட்சணம்:
    வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
    சஜாதீய – ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
    விஜாதீய – மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
    அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
  1. தூ4ஷண த்ரய ரஹித தர்மஹ

எந்த லட்சணமும் மூன்று குறைகளற்றதாக இருக்கவேண்டும்.

2.1.   அதிவியாப்தி – லட்சியத்திற்கப்பால் சென்று விடக்கூடாது. உதாரணமாக காளை மாட்டின் சரியான லட்சணம் கழுத்தில் தசை தொங்கிக்கொண்டிருக்கும் என்பதாகும். நான்கு கால்களையுடையது என்பது தவறான லட்சணம். ஏனென்றால் இது மற்ற விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

2.2.   அவியாப்தி – கொடுக்கின்ற லட்சணம் லட்சியத்தை குறைவாகத்தான் வியாபிக்கிறது. இந்தியாவிற்கு லட்சணம் கொடுக்கும் போது தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடு என்பது தவறானதாகும். இது இந்தியாவின் ஒரு பகுதியைத்தான் குறிக்கிறது.

2.3.   அஸம்பவஹ – தலைகீழாக லட்சணையை கொடுப்பது. காளை மாட்டைக் குறிக்க பால் கொடுக்கும் மாடு என்பது முற்றிலும் தவறானதாகும்.

எதனால் லட்சியமானது அடையப்படுகிறதோ அதுவே சரியான லட்சணமாகும். சரியான லட்சணம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள்,
1.    ஸ்வரூப லட்சணம்
2.    தடஸ்த லட்சணம்
ஆகியவைகளாகும்.
ஸ்வரூப லட்சணம்
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.

தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.

பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.

பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.

இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
ஜன்மாதி3 என்ற சொல்லின் விசாரம்
ஜன்மாதி3 – ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம – பிறப்பு, தோற்றம்
ஆதி3 – முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி அனாதியாக இருக்கும்போது முதல் ஸ்ருஷ்டியை பேசவே முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் ஜன்மாதி என்று சொல்லியிருக்கிறார். லயத்தையோ அல்லது இருத்தலையோ முதலில் சொல்லியிருக்கலாமே?

பதில்1  ஸ்ருதி வாக்கியத்தின் அடிப்படையில்தான் விசாரம் செய்யப்படுகிறது. ஸ்ருதியில் வாக்கியத்தில் ஜன்மம் முதலில் சொல்லியிருப்பதால் அதையே முதலில் விசாரம் செய்யப்படுகிறது.

பதில்2  நம் அனுபவத்தில் எந்தவொரு பொருளும் பிறப்பைத்தான் முதலில் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் இருத்தல், லயம் என்ற வரிசை கிரமமாக அதன் நிலைமாறுகிறது.

 

பூ.பக்ஷி யாஸ்கர் என்ற முனிவர் ஆறுவிதமான விகாரங்களைக் கூறியிருக்கிறார். அவைகள் 1. பிறத்தல், 2.இருத்தல், 3.வளர்ச்சி, 4.மாற்றம், 5.தேய்தல், 6.இறத்தல் ஆகியவைகளாகும். இவரும் பிறப்பைத்தான் முதலில் சொல்லியிருககிறார். எனவே ஆதி என்ற சொல்லுக்கு பொருளாக மற்ற ஐந்து விகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

பதில்1  யாஸ்கர் ஸ்தூல பூதத்தினுடைய விகாரங்களைத்தான் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே சூட்சும பூதங்களுக்கும் முன்னாடி உள்ள நிலையைத்தான் பேசுகிறோம். உதாரணமாக ஆகாசத்திற்கு இந்த விகாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.

பதில்2  ஸ்ருதி இந்த ஆறு விகாரங்களைப் பற்றி பேசவில்லை. பிறப்பு, ஸ்திதி, லயம் என்கின்ற மூன்றைப் பற்றித்தான் பேசியிருக்கிறது. ஆகவே ஜன்மாதி என்ற சொல்லுக்கு பிறப்பு, இருத்தல், ஒடுங்குதல் என்பதுதான் சரியான பொருளாகும்.

அஸ்ய” என்ற சொல்லின் விசாரம்
அஸ்ய – இதனுடைய; இந்த உலகத்தினுடைய
இந்த உலகத்தை பகவான் சங்கரர் நான்கு விதமாக வர்ணிக்கிறார். இந்த வர்ணனையே சில தத்துவங்களை உணர்த்துகின்றது. இந்த வர்ணனை ஜகத்திற்கு லட்சணமாகவும் இருக்கிறது.

  1. நாம-ரூபாப்4யாம் வ்யாக்ருதஸ்ய

வ்யாக்ருதஸ்ய – வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது

நாம ரூபாப்யாம் – நாம் ரூபங்களாக

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது

1.1.     இந்த உலகம் நாம-ரூபங்களை உடையதாக அறிவுள்ள ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

1.2.     இந்த உலகம் நாம-ரூபமாக இருப்பதனால் மித்யா ஸ்வரூபமாக இருக்கிறது.

  1. அனேக3 கர்த்ருபோ4க்த்ரு ஸம்யுக்தஸ்ய

இந்த உலகம் பலவிதமான கர்த்தாக்களும், போக்தாக்களும் கூடியுள்ளவர்களாக இருக்கிறது. ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஆரம்பித்து அனைத்து தேவதைகளும் இந்த உலகத்தை படைத்தவர்கள் அல்ல. அவர்களும் தோற்றுவிக்கப்பட்டவர்கள்தான் என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களும் கர்த்தாவாக, போக்தாவாக இருக்கிறார்கள்.

  1. ப்ரதிநியதி தேஸகால நிமித்த க்ரியாபல ஆஸ்ரஸ்ய

ஆஸ்ரஸ்ய – இப்படிபட்ட தன்மையுடையது

ப்ரதிநியதி  – விதிமுறை

தேசம், காலம், நிமித்தம், க்ரியா, பலன் என்கின்ற ஐந்தும் இந்த இடத்தில், இந்த காலத்தில் இதன் காரணமாக, இந்த செயலுக்கு இந்தப்பலன் என்ற நியதியுடன் கூடிய தன்மையுடையது இந்த உலகம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு நாம்தான் காரணம் என்பதாகும். மேலும் அவரவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கக்கூடிய ஸர்வக்ஞன் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸர்வக்ஞன் ஈஸ்வரனே ஆவார்.

  1. மனஸா அபி4 அசிந்த்ய ரசனா ரூபஸ்ய

மனதினாலும் கூட, கூர்மையான புத்தியாலும் கூட எட்டாதபடி இந்த உலகத்தின் அமைப்பு இருக்கிறது. யாராலும் புரிந்து கொள்ள முடியாததாக இந்த உலகம் இருக்கிறது. ஈஸ்வரன் அனைத்து சக்தியுடையவராக இருப்பதால் அல்ப சக்தியடைய ஜீவர்களை இந்த உலகத்தில் படைத்திருக்கிறார்.

இத்துடன் இரண்டாவது சூத்திரத்தின் இரண்டாவது சொல்லின் விசாரம் முடிவடைகிறது.

யத” என்ற சொல்லின் விசாரம்
யத:- யாரிடமிருந்து
இது காரணத்தை விளக்குகின்ற சொல்லாகும். அதாவது இந்த உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் பிரம்மன். பிரம்மனே உலகத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார். இங்கு உபாதான காரணம்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமாக இருப்பது உபாதான காரணம். களிமண் பானைக்கு உபாதான காரணம். ஸ்ருஷ்டிக்கு மட்டும் காரணமாக இருப்பது நிமித்த காரணம். குயவன் பானைக்கு நிமித்தக் காரணம். ஜன்மாதி என்ற சொல் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறார் என்பது உணர்த்துகிறது.

ஜன்மாதி என்ற சொல் பிரம்ம லட்சணையைத்தான் குறிக்கிறது. பிரம்மன் காரணம் என்றால் ஜகத் காரியாமாகும். காரியத்திற்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவைகள்,
1.    காரணம் சத்யம், காரியம் மித்யா
2.    காரணம் சேதனம், காரியம் ஜடம்
3.    காரணம் வரையறுக்கப்படாதது, காரியம் வரையறுக்கப்பட்டது.
ஆகியவைகளாகும். இந்த மூன்று லட்சணங்களும் ஜகத்திற்கு பொருந்தி வருகின்றது.
கேள்வி மாயையினுடைய மாற்றமே சூட்சம பிரபஞ்சம். பிறகு ஸ்தூல பிரபஞ்சமாக மாறுகிறது. மாயை உபாதான காரணமா அல்லது பிரம்மன் உபாதான காரணமா? மாயையின் மூன்று குணங்களும் உலகத்தில் இருப்பதால் மாயைதான் உபாதான காரணமாக கூறமுடியும். ஏன் பிரம்மனை உபாதானமாக கூறப்படுகிறது?

பதில்   உபநிஷத் பிரம்மத்தை உபாதான காரணமாக சொல்லியிருப்பதால், வியாச பகவான் இங்கே பிரம்மத்தை உபாதானமாக கூறியிருக்கிறார். மாயை பரிணாமி உபாதானம், பிரம்மன் விவர்த்த உபாதானமாகும். மாற்றத்தை அடைந்து உபாதானமாக மாறுவது பரிணாமி உபாதானமாகும். ஸ்வரூப தியாகமில்லாமல் உபாதானமாக இருப்பது விவர்த்த உபாதானமாகும்.

மேற்சொன்ன கருத்துக்களினால் நாம் தெரிந்து கொள்வது பிரம்மத்தைத்தான் வியாச பகவான் உபாதான காரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். சாஸ்திரத்தின் மூலம் அடைகின்ற அறிவு சாஸ்திரம், யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது.
—இத்துடன் 2வது சூத்திரம் முடிவடைந்தது.—

3வது சூத்திரம் – 3வது அதிகரணம்

शास्त्रयोनित्वात्  || 3 ||
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
6வது அதிகரணம் – ப்3ரஹ்மன: ஸர்வக்3ஞத்வ
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர – வேதம்
யோனி – காரணம்

பொருள்:
வேதத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன். பிரம்மத்தினிடமிருந்து வேதம் தோன்றியது. எனவே இவர் அனைத்தையும் அறிபவர் என்று அறிய முடிந்தது. யார் எதை படைத்துள்ளாரோ அவருக்கு அதைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பார். பானையை உருவாக்கிய குயவனுக்கு அதைப்பற்றிய அறிவை உடையவராக இருப்பார். அதேபோல எல்லாவற்றையும் படைத்தவர் எல்லாவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பூ.பக்ஷி ஈஸ்வரன் எல்லாம் அறிந்தவர் அல்ல. எல்லாவற்றையும் படைத்தவர் அல்ல. வேதம் என்பது அனாதி. இது அனாதியாக இருப்பதாலே, ஈஸ்வரன் வேதத்தை உருவாக்கியவர் அல்ல. அதனால் அவர் எல்லாவற்றை’யும் அறிந்தவர் என்ற சொல்லமுடியாது.

பதில்   ஜகத்தும் அனாதிதான் என்ற சொல்கிறோம். ஸ்ருஷ்டியும் அனாதிதான். ஜகத்தையும், வேதத்தையும் பிரிக்க முடியாது. ஸ்ருஷ்டி என்பது வெளிப்படுத்துவது என்று பொருட் கொள்ள வேண்டும். அதேபோல அனாதியான வேதத்தை வெளிப்படுத்துவது ஸ்ருஷ்டி.

பிருஹதாரண்ய உபநிஷத் 2.4.10 – “அஸ்ய மஹதோ பூ4த3ஸ்ய…” என்ற வாக்கியத்தின் அடிப்படையில் இந்த சூத்திரத்தை எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தின் பொருள் பிரம்மத்தினுடைய மூச்சுக்காற்றிலிருந்து வெளிவந்ததுதான் வேதம் என்பதாகும். புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த புத்தகம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகம் அறிவை உடையவராக இருப்பார் என்பது நியதி. உதாரணமாக சமஸ்கிருத இலக்கணத்தை எழுதிய பாணினிக்கு அதைத்தவிர மேலும் அதிகமான அறிவை உடையவராக இருப்பார். அதேபோல வேதத்தை வழங்கிய ஈஸ்வரனுக்கு வேதம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகமான அறிவை உடையவராக இருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

  1. நன்மையை உபதேசிப்பதனால் அதை சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்பது வெளிச்சத்தைப் போன்றது. இது நம் வாழ்க்கையை சாpயான முறையில் நடத்தி செல்ல உதவியாக இருக்கிறது.
  2. வேதம் எல்லாவிதமான அறிவையும் கொடுக்கக்கூடிய சாஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. பத்துவிதமான சாஸ்திர ஞானம் இருந்தால்தான் வேதத்தை புhpந்து கொள்ள முடியும். அவைகள்,

2.1. புராணம்

2.2. நியாய

2.3. மீமாம்ஸ

2.4. தர்ம சாஸ்திரம்

2.5. சிக்ஷா

2.6. கல்ப

2.7. வியாக்ரணம்

2.8. நிருத்தம்

2.9. சந்தஹ

2.10. ஜோதிடம்

 

முடிவுரை

விஷயம்   பிரம்மம்

சந்தேகம்  பிரம்மம் சாஸ்திரத்திற்கு கர்த்தாவா, இல்லையா?

பூ.பக்ஷம்   வேதத்திற்கு ஈஸ்வரன் காரணமல்ல. ஏனென்றால் அது அனாதியாக இருக்கிறது.

பதில்       ஜகத்தும் அனாதியாக இருந்தாலும் ஈஸ்வரன் கர்த்தாவாக இருப்பது போல வேதம் அனாதியாக இருந்தாலும் அவரே கர்த்தாவாக இருக்கிறார்.

சங்கதி     பிரம்மன் அனைத்திற்கும் காரணமில்லை என்ற ஆட்சேபம் செய்வதால் அதற்கு வியாச பகவான் பதில் கூறியிருக்கிறார்.

—-ooo00ooo—-

7வது அதிகரணம் – ஶாஸ்த்ரயோனித்வாத் (3வது சூத்திரம்)

ஶாஸ்த்ர – வேதம்
யோனி   – பிரமாணம்

பொருள்: பிரம்மன் சாஸ்திரம் என்ற பிரமாணத்தின் மூலமாக அறியப்படுகிறது.
இந்த வர்ணகத்திற்கு ஸ்ருதி வாக்கியமானது பிரஹதாரண்ய உபநிஷத் 3.9.26 ஓளபநிஷத் புருஷம் ப்ருச்சாமி என்பதாகும். இதற்கு அர்த்தம் நான் அந்த உபநிஷத்தின் மூலமாக அடையக்கூடிய பிரம்மத்தினுடைய விளக்கத்தை கேட்கிறேன்.
பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற பொருளை சாஸ்திரத்தின் மூலமாகத்தான் அறிய வேண்டிய அவசியமில்லை. வேறொரு பிரமாணமாக மூலமாகவும் அடையலாம். இமயமலை எங்கே இருக்கிறது என்பதை புத்தகத்தின் மூலமாகவோ, நேரில் சென்றோ பார்க்கலாம். பிரம்மன் சித்த வஸ்துவாக இருக்கும்போது வேதத்தின் பிரமாணத்தை தவிர வேறொரு பிரமாணத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

பதில்   சாதரணமாக சித்த வஸ்துவாக இருந்தால் நீ சொல்வது சரிதான். ஆனால் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக சொர்க்கலோகம் இருக்கிறது என்பதற்கு சாஸ்திரம் மட்டும்தான் பிரமாணம். அதுபோல பிரம்மன் சித்த வஸ்துவாக இருந்தாலும் வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும். பிரம்மம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிவினால் நீக்க வேண்டும். இந்த அறிவை கொடுக்கும் பிரமாணம் வேதாந்தம் மட்டும்தான்.

 

முடிவுரை

விஷயம்   பிரம்மம்

சந்தேகம்  பிரம்மத்தை அனுமானம் முதலிய மற்ற பிரமாணத்தால் அறிந்து கொள்ள முடியுமா?

பூ.பக்ஷம்   வேறு பிரமாணத்தாலும் புரிந்து கொள்ள முடியும்.

சங்கதி    வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும்.

ஆட்சேபம் பிரம்மனை யூகத்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

பதில்      யூகத்தால் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தம் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.

—இத்துடன் 3வது சூத்திரம் முடிவடைந்தது.—

4வது சூத்திரம் – 4வது அதிகரணம் – ஸமன்வய அதிகரணம்
तत्तु समन्वयात् || 4 ||
தத்து ஸமன்வயாத் || 4 ||
இந்த சூத்திரம் 7வது வர்ணகம், 8வது வர்ணகம் என்று இரண்டு வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
7வது வர்ணகம்
முகவுரை
உபநிஷத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அது உபதேசிக்க விரும்பும் மையக்கருத்து பிரம்மன்தான். சிலர் வேதத்தின் முக்கிய கருத்து கர்மத்தை செய்து அடைகின்ற புண்ணியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த சூத்திரம் வேதத்தின் முக்கியமான அறிவைக் கொடுக்க விரும்பும் விஷயம் பிரம்மன்தான் என்பதை நிலைநாட்டுகிறார்.

பொருள்
தத் – பிரம்மன்; உபநிஷத்தின் மையக்கருத்து
ஸமன்வயாத் – சமன்வயப்படுவதனால்; உடன்பாடிருப்பதால்
ஸமன்வயம் உடன்பாடு; மையக்கருத்து மாறாமல் ஒத்திருத்தல்; எல்லா உபநிஷத்தும் தொடர்ந்து பிரம்மத்தை உபதேசிக்கம் விஷயத்தில் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

“து என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1.    து – ஏவ – மட்டும்
2.    து – பூர்வ பக்ஷ நிராகரணம் (எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுவதனால்)
விஷயம்   வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்)

சந்தேகம்  பிரம்மத்தை தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா அல்லது ஸ்ருஷ்டி, கர்மம், தர்மம் போன்ற வேறெதையாவது தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா?

பூ.பக்ஷம்   உபநிஷத் எதாவதொரு கர்மத்தை செய்யத்தான் உபதேசிக்கிறது.

பதில்      பிரம்மத்தைத்தான் மையக்கருத்தாக உபதேசிக்கிறது.

ஹேது     ஸமன்வயாத் – மீமாம்ஸ மூலமாக நிச்சயம்

ஆட்சேபம்   பிரம்மன் மட்டும் சாஸ்திரத்தின் விஷயம் அல்ல. பல விஷயங்களும் பேசப்பட்டிருக்கிறது.

பதில்      பிரம்மன் மட்டும்தான் முக்கிய விஷயமாக பேசியிருக்கிறது.

பிரம்மத்தைப் பற்றி பேசகின்ற எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

விசாரம்:
வேதாந்த சாஸ்திரத்தின் முக்கியமான ஒரே விஷயமாக பிரம்மன் இருக்கிறது. எல்லா உபநிஷத்துக்களும் முரண்பாடில்லாமல் இதைத்தான் உபதேசிக்கிறது. கர்மகாண்டம் தர்மத்தை முரண்பாடில்லாமல் தொடர்ந்து உபதேசிக்கிறது.
ஹேது – ஸமன்வயாத் – ஸம்+அனு+வ்யாத்

ஸம்  – நன்கு; தெளிவாக; சந்தேகமில்லாமல்

அனு  – தொடர்ச்சி (உ-ம்) அனுகச்சதி – தொடர்ந்து செல்கின்றான்

வ்யாத் – சொல்கிறது.

சாத்தியம் – பிரம்மன்தான் சாஸ்திர தாத்பர்யம்

 

பூ.பக்ஷி சமன்வயம் இருக்கிறதா?

பதில்   மீமாம்ஸகர்கள் ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்கள்.

 

வேதாந்தம் பிரம்மத்தைத்தான் பேசுகிறதா என்பதை ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக உறுதி செய்யலாம். அவைகள்,

  1. உபக்ரம – உபஸம்ஹாரம் : தொடக்கத்திலும், முடிவிலும் உபநிஷத் உபதேசிக்க விரும்புகின்ற மையக்கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
  2. அப்யாஸம் – முக்கிய கருத்தை மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டிருக்கும்.
  3. அபூர்வதா – புதியதாக அந்த கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
  4. பலன் – சொல்லப்படுகின்ற கருத்தினால் அடைகின்ற பலனை கூறியிருக்கும்.
  5. அர்த்தவாதம் – மையக்கருத்தை புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கும். இந்த ஞானம் அடையவில்லையென்றால் அடைகின்ற தீமையையும் சொல்லப்பட்டிருக்கும்.
  6. உபபத்தி – தர்க்கரீயாக நிரூபிக்கப்பட்டிருக்கும்.

சாந்தோக்ய உபநிஷத் – 6வது அத்தியாயம்

  1. தொடக்கம்-ஸதேவ ஸோம்ய இதமேவ ஆஸீத் – பிரம்மத்தை பற்றி கூறுதல்.  முடிவுரை – ஐதாத்மியம் இதம் ஸர்வம் – இவைகள் அனைத்தும் பிரம்மன்தான் என்று சொல்லி முடிக்கிறது.
  2. அப்யாஸம் – பிரம்மத்தைப் பற்றித்தான் திரும்ப, திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. தத்வமஸி என்ற சொல் 9முறை கூறப்பட்டிருக்கிறது
  3. அபூர்வதா – பிரம்மத்தை உபநிஷத் தவிர வேறெதிலும் பேசப்பட்டிருக்கவில்லை. வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ள முடியாது.
  4. பலன் – பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலன் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலனாக மோட்சம் கூறப்பட்டிருக்கிறது.
  5. அர்த்தவாதம் – பிரம்ம ஞானத்தை புகழ்ந்து கூறுதல். இந்த ஞானம் இல்லாத நிலையை இகழ்ந்து பேசுதல். “யேன அஸ்ரும் ஸ்ருதம்” (எந்த ஞானத்தால் கேட்கபடாததையெல்லாம் அறியப்படுகின்றதோ ) என்ற வாக்கியம் அனைத்தும் அறிந்தவனாகின்றான் என்று பலனைக் கூறுகின்றது.
  6. உபபத்தி – இந்த அறிவானது தர்க்கத்திற்கு விரோதமாக இல்லையென்று புரியவைத்தல். (உ-ம்) ஏகேன ம்ருதிபிண்டேன – ஒரு களிமண் குவியலை அறிந்தவன் அதிலிருந்து உருவான அனைத்து பானைகளையும் அறிந்தவனாகின்றான். ஈஸ்வரன் உபாதான காரணமாக இருப்பதால், உலகத்தில் ஈஸ்வரனை பார்க்க முடியும்.

மேற்கூறிய அடையாளங்களைக் கொண்டு சாந்தோக்ய உபநிஷத்தின் மையக்கருத்து பிரம்மம்தான் என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது. எனவே பிரம்மன் விஷயத்தில் ஸமன்வயம் இருப்பதனால் அதுதான் தாத்பர்யம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்துடன் 4வது சூத்திரத்தின் சாமான்ய அர்த்த விளக்கம் முடிவடைகிறது.

து” என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தமான பூர்வ பக்ஷி நிராகரணம் என்பதை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மம்தான மையக்கருத்து என்பதை எதிர்ப்பவர்களை நிராகரணம் செய்துவிட்டால் பிரம்மம் மட்டும்தான் உபநிஷத்தின் தாத்பர்யம் என்பது நிலைநாட்டப்பட்டுவிடும்.
பூர்வ பக்ஷி நிராகரணம்
ஆஸ்திக தர்ஷணத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் இவர்கள்தான் இங்கே பூர்வ பக்ஷிகளாக இருக்கிறார்கள்.
*  சாங்கிய மதம், யோக மதம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
*  நியாய, வைஸேசிக மதம்
*  பூர்வ மீமாம்ஸகர்கள்
*  உத்தர மீமாம்ஸா – விருத்திகார மதம்
இவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வியாச பகவான் நிராகரித்து விடுகின்றார். முதல் அத்தியாயத்தில் சாங்கிய, யோக மதத்தை நீக்கப்பட்டுள்ளது.
பூர்வ மீமாம்ஸா – வேதத்தின் கர்மகாண்ட அர்த்தத்தை நிர்ணயம் செய்வதற்காக ஜெய்மினி மகரிஷி சூத்திரங்களை எழுதியுள்ளார். இந்த சூத்திரங்களுக்கு சபரஸ்வாமி என்பவர் விளக்கம் எழுதியுள்ளார். இதற்கு ஸபரபாஷ்யம் என்று பெயர். இந்த இரண்டு நூல்களும் வேதாந்தத்திற்கு எதிரானதல்ல. இவர்கள் எடுத்துக் கொண்ட மையக்கருத்து வேறாகும். ஆனால் பிற்காலத்தில் இந்த நூல்களின் அடிப்படையில் குமாரிலபட்டர் என்பவர் பாட்ட மதத்தை தோற்றுவித்தார். இவர் மோட்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும், கர்மத்தினால் மோட்சத்தை அடையலாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். உபநிஷத்துக்கு முரணான கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் பிரபாகரர் என்பவரால் பிராபகார மதம் உருவாகியது. இது பாட்ட மதத்திலுள்ள சில கருத்துக்கள் தவறு என்று நீக்கி புதியதாக இந்த மதமானது தோற்றுவிக்கப்பட்டது. இந்த இரண்டு மதக்கொள்கைகளை பகவான் சங்கரர் நீக்கியுள்ளார்.

விருத்திகார மதமானது உபநிஷத்தின் உபதேசத்தை தவறாகப் பொருட்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மாத்வாச்சாரியாரின் த்வைதமும் நீக்கப்படுகிறது. இரண்டுவிதமான விருத்திகாரர்கள் இருக்கிறார்கள்.

  1. ஸமுச்சயவாதி – ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் மோட்சத்தைக் கொடுக்கும்.
  2. உபாஸனவாதி – தியானத்தின் மூலமாகத்தான் மோட்சம் கிடைக்கும்.

 

8வது வர்ணகம் (பூர்வ மீமாம்ஸ நிராகரணம்)

பாட்ட மதம், பிராபகர மதம் இவையிரண்டு மதங்களின் கருத்துக்களை; பார்க்கப்படுகிறது. இரண்டு மதங்களின் ஒத்தக் கருத்துக்களை முதலில் பார்க்கப்போகிறோம்.

  1. வேத வாக்கியங்கள் அனைத்தையும் இரண்டாக பிரிக்கிறார்கள். அவைகள்,

1.1.   சித்த போத வாக்யாணி – ஏற்கனவே இருக்கின்றதைப் பற்றி அறிவைக் கொடுக்கின்ற வாக்கியங்கள்

1.2.   காரிய போதக வாக்யாணி –  இதை செய்,  இதைச் செய்யாதே என்று போதிக்கின்ற வாக்கியங்கள். கர்மத்தைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்கள். செயலில் ஈடுபடுத்துகின்ற வாக்கியங்கள். விதி வாக்கியம் என்பது செய் என்கின்றது. நிஷேத வாக்கியம் என்பது செய்யாதே என்கின்றது.

இந்த இரண்டு வகையான வாக்கியங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

  1. பிரமாண லட்சணம் – பிரமாணத்திற்கு இவர்கள் கொடுக்கின்ற லட்சணம். பிரமாணத்தில் இரண்டு முக்கிய பிhpவுகள் உண்டு. அவைகள் 1. அனதி3க3த,  2.அபா4திதம் ஆகும். இவைகள் இருந்தால்தான் அறிவைக் கொடுக்கும் கருவி என்று சொல்லமுடியும்.

2.1.   அனதி3க3த – வேறொன்றின் மூலமாக அறியப்படாததாக இருக்க வேண்டும். (உ-ம்) ஒரு பொருளின் வர்ணத்தை கண் என்கின்ற பிரமாணத்தின மூலமாக மட்டும்தான் அறிய முடியும். இதை வேறொரு பிரமாணத்தின் மூலமாக அறிய முடியாது.

2.2.   அபா4திதம் – வேறெந்த பிரமாணத்தாலும் நீக்க முடியாததாக இருக்க வேண்டும். உதாரணமாக கானல்நீரை கண்ணால் பார்த்தாலும், அனுபவ பிரமாணத்தால் நீக்கப்படும்.

பூர்வ மீமாம்ஸகர்கள் மூன்றாவது நிபந்தனையை சேர்த்துக் கொள்கிறார்கள். அது பிரமாணம் பயனைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் அதை பிரமாண வாக்கியம் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று நிபந்தனைகளற்ற வாக்கியங்களை அர்த்தவாதம் என்று கூறுகிறார்கள். அவைகள் முக்கியமான பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக வாயுதேவன் ஸ்துதி செய்கின்ற வாக்கியமான ‘வாயுதேவர் வேகமாக ஓடுபவர்” என்ற வாக்கியம் ஒரு பயனையும் தராது. ஆனால் தியானம் செய்யும்போது வாயுபகவானை இவ்வாறு தியானிக்க வேண்டும். இவ்வாறு இந்த வாக்கியத்தை பொருட்படுத்த வேண்டும்.

ஜெய்மினியின் ஒரு சூத்திரத்தை எடுத்து விசாரம் செய்வோம்.
சூத்திரம்1 – ஆம்னாயஸ்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தானாம்
ஆம்னாயஸ்ய      வேதமானது (கர்ம காண்டத்தை குறிப்பது)
க்ரியார்த்தத்வாத்   செயலையே தாத்பர்யமாக கொண்டிருக்கின்ற காரணத்தினால்
அதத் அர்த்தானாம் கர்மத்தைப் பற்றி பேசாத வாக்கியங்கள்
ஆனந்தக்யம்       பிரயோஜனமற்றது
பூர்வ மீமாம்ஸகர்கள் ஆம்னாயஸ்ய என்ற சொல்லுக்கு முழு வேதத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது வாதம்: ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை; தெரிந்துக் கொண்டிருக்கின்ற ஒன்றைப் பற்றி பேசுவது பயனற்றது. செயலைப் போதிக்கின்ற வாக்கியம்தான் பயனுள்ளது. ஏற்கனவே இருக்கின்றதை பேசுவது பிரமாணமல்ல. உபநிஷத்துக்கள் அறிவைக் கொடுக்கின்ற பிரமாணமல்ல. ஏனென்றால் இருக்கின்ற பிரம்மத்தைப் பற்றி உபநிஷத் வாக்கியங்கள் பேசுகின்றது. மேலும் ஏற்கனவே இருக்கின்றதை பேசுவதை வேறு பிரமாணத்தாலும் அறியப்பட முடியும்.

 

முழு வேதத்தை அத்யயனம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் வேதத்திலே இருக்கிறது. இதிலிருந்து தெரிவது கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களையும், கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுக்கு உதவி செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களை அர்த்தவாத வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உபநிஷத் பிரம்மத்தை போதிக்கின்ற வாக்கியங்களை தேவதைகளை புகழ்கின்ற செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது.

இதுவரை கூறியது பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்களாகும்.

சூத்திரம்-2 – வித்னாத்து ஏகவாக்யத்வாத் ஸ்துதியர்தேன விதினாமஸ்யும்.
கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களை சென்று சேர்வதனால் அவைகளை ஸ்துதி செய்கின்ற அர்த்தத்தை கொடுப்பதன் மூலம் விதி வாக்கியத்துடன் இணைந்துக் கொள்கின்றது. இதன் மூலம் அனைத்து வேத வாக்கியங்களும் பயனுள்ளதாகின்றது, பிரமாணத்தை அடைந்து விடுகிறது.

பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்கள்:

*   உபநிஷத் கூறுகின்ற நிர்குண பிரம்மன் என்றவொன்று கிடையாது

*   ஆத்ம அக்ஞானம் என்பதே கிடையாது.

*   ஆத்மாவைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்களனைத்தும் யாகம் செய்கின்ற எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பூஜையில் பூஜிக்கின்ற தேவதைகளை புகழ்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

*   உபநிஷத் வாக்கியங்களையெல்லாம் கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை பாட்ட மதக்காரர்களின் கருத்துக்களாகும்

*   பிராபகார மதத்தினர் இரண்டு காண்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஞான காண்டம் உபாஸனையை போதிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ம போதக வாக்கியங்களுடன் ஞான போதக வாக்கியங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. உபநிஷத் வாக்கியங்களை தியானத்தை உபதேசிக்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். அஹம் பிரம்மாஸ்மி என்பது ஒருவகையான தியானமாகும். அதனால் அடைகின்ற பலன் பிரம்மலோகத்தையோ, சொர்க்கலோத்தையோ அடைவதாகும்.

 

சங்கராச்சாரியார் பதில்

பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் பயனற்றது.

பதில்1  சாதாரணமாக இது சரிதான். ஆனால் விசேஷமான இடத்தில் இத்தகைய வாக்கியங்களும் பயனைக் கொடுக்கின்றது. ஏதோவொன்று அக்ஞானத்தினால் தோன்றியுள்ள இடத்தில் இத்தகைய வாக்கியம் பயனைத் தரும். இது பாம்பு அல்ல என்ற சித்த வாக்கியம் இதற்கு உதாரணம். அறியாமையினால் கயிற்றில் பார்க்கின்ற ஒருவனிடத்தில் பாம்பு இல்லை என்ற வாக்கியமே பயனைக் கொடுத்துவிடுகிறது. மேலும் நீதான் பத்தாவது மனிதன் என்ற வாக்கியமும் அந்த சூழ்நிiலையில் பயனைத் தரும். எனவே ஸித்த போதக வாக்கியமும் பயனைத் தரும் என்பது அவர்கள் கருத்தை நீக்கி விடுகிறது.

பதில்2  உபநிஷத்திலுள்ள வாக்கியங்கள் ஞானத்திற்கு நேரிடையான பலனைக் கொடுக்கிறது. எடுத்துக் காட்டிற்கு சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

*   யாரொருவன் பிரம்மத்தை அறிகின்றானோ அவனுக்கு சோகமும், மோகமும் கிடையாது.

*   ஞானத்தினாலே மரணமற்ற பலனை அடைகிறான்.

*   ஆத்மாவை அறிபவன் சோகத்தை கடந்துவிடுகிறான்

*   தன்னை ஆத்மாவாக அறிந்து கொண்டவன், யாருக்காக, எதற்காக தன் சரீரத்தை வருத்திக் கொள்வான்.

 

பூ.பக்ஷி சப்த பிரமாணம் பிரத்யக்ஷ விஷயம் அல்லது அனுவாதத்தைத் சொல்லும். இதன் மூலம் புதியதாக அறிவை கொடுக்காது.

பதில்   பல இடங்களில் உண்மைதான். இதிலும் விதிவிலக்கு இருக்கிறது. கர்மகாண்டத்தில் சொர்க்கலோகத்தை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இது சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அறியப்படும். வேறுபிரமாணத்தால் அறிய முடியாது. அதேபோல பிரம்மத்தை உபநிஷத் சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அடைய முடியும் என்பது தெளிவாகிறது.

 

பூ.பக்ஷி ஆத்ம ஞானமே அனர்த்தம். ஆத்ம அக்ஞானமே சம்பவிக்காது. நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் ஆத்ம விஷயத்தில் விசாரம் தேவையில்லை.

பதில்   ஆத்மா சம்சாரியாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரம்ம ஸ்வரூபம் என்பது எல்லோருக்கும் தெரியவில்லை. ஆகவே விசாரம் தேவைப்படுகிறது.

 

பூ.பக்ஷி பிரமாணம் மூன்று நிபந்தனைகளை உடையதாக இருக்க வேண்டும்.

பதில்   பிரமாணத்திற்கு பிரயோஜனம் என்ற நிபந்தனை கிடையாது. நாம் வாழ்க்கையில் எத்தனையோ பயனற்றதை பார்க்கிறோம். எனவே மூன்றாவது நிபந்தனை தேவையில்லை. இருந்தாலும் வேதாந்த வாக்கியங்களும் பிரயோஜனத்துடன் கூடியதுதான்.

 

பூ.பக்ஷி எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கவில்லையோ அந்த வாக்கியத்தை கர்மத்தை போதிக்கின்ற வாக்கியத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது. எனவே உபநிஷத் வாக்கியங்களை கர்ம வாக்கியங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பதில்   உபநிஷத்துக்கள் இயற்கையாகவே பிரமாணம் என்ற தகுதியுடன் இருக்கிறது. பிரமாணத்தினுடைய லட்சணங்கள் உபநிஷத்திற்கு பொருந்துகிறது. அது ஸ்வ பிரமாணமாகவே இருக்கிறது. உபநிஷத்துக்கள் பிரயோஜனத்தை கொடுக்கக்கூடியது. உதாரணமாக குந்திதேவ கர்ணனிடம் நான்தான் உன் தாய் என்று சொல்கின்ற வாக்கியம் ஸித்தபோதக வாக்கியம்தான், இருந்தாலும் அது கர்ணனுக்கு பலனைக் கொடுத்திருக்கிறது. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியமும் பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.

 

உபநிஷத் கர்மத்தை நிந்தனை செய்திருப்பதால், கர்மத்தை உபதேசிப்பது முழு வேதத்தின் தாத்பர்யம் அல்ல என்று தெரிகிறது. மேலும் நிந்தனை செய்யப்பட்டதுடன் எப்படி சேர்க்க முடியும். ஆத்ம ஞானத்திற்கும், கர்மத்திற்கும் இருளும்-ஒளியும் போல் விரோதம் இருப்பதால் இரண்டையும் சேர்க்கமுடியாது. இவையிரண்டும் இருளும், ஒளியும் போல எதிரெதிர் தன்மையுடையதாக இருக்கின்றது. கர்மம் நடக்கின்ற இடத்தில் கர்த்தா, போக்தாவாகத்தான் இருக்க முடியும். ஆனால் பிரம்மஞான விஷயத்தில் அகர்த்தா, அபோக்தாவாக இருப்பதால் இரண்டையும் சேர்க்க முடியாது.

 

கர்மத்தோடு உபநிஷத் வாக்கியங்களை சேர்த்தால் அதில் தோஷம் வந்துவிடும். அந்த தோஷத்திற்கு ‘ஸ்ருதஹான அஸ்ருதகல்பனா” என்று பெயர்.

ஸ்ருதஹானம் –  கேட்டதை விட்டுவிட்டு

அஸ்ருதகல்பனா –  கேட்காததை எடுத்துக் கொள்ளுதல்.

உபநிஷத் பிரம்மன் ஆத்மஸ்வரூபமாக இருக்கிறது என்றும் அதை அறிவதனால் பலனுண்டு என்ற உபதேசத்தை விட்டுவிட்டு கர்ம வாக்கியத்தோடு சேர்த்துவிட்டால் இந்த தோஷம் வந்துவிடும். இந்த தோஷம் நல்லதைக் கொடுக்காது. இந்த தோஷத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். சான்றோர்கள் வாக்கியங்களில்தான் இதை பயன்படுத்த வேண்டும். இதற்கு எதிரானது வாச்யார்த்தம், லட்சியார்த்தம். இதை இவர்கள் விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.

 

பூ.பக்ஷி கர்மகாண்டம் பிரயோஜனமற்றதா! இது சொர்க்கம் முதலிய பலன்களைக் கொடுப்பதற்கு பிரமாணமாக இருக்கிறது.

பதில்   அக்ஞானிகளுக்கு பிரயோஜனமாக இருக்கலாம். ஆனால் முமுக்ஷுக்களுக்கும், ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லை.

பூ.பக்ஷி ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லையா?

பதில்   ஞானிகளுக்கு ஞானகாண்டமும் பிரயோஜனமில்லை.

 

பூ.பக்ஷி ஒன்றை சேர்ப்பதன் மூலமாக அல்லது விடுவதன் மூலமாகத்தான் பலனை அடைகிறோம். மனிதனின் வாழ்க்கையே ஹேயம்(விட்டுவிடுதல்), உபாதேயம்(எடுத்துக் கொள்ளுதல்) வழியேதான் சென்று கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் இதை நடைமுறைப்படுத்தத்தான் வழிமுறைகளை காட்டிக் கொடுக்கிறது. இதன் மூலம் கர்மகாண்டம் ஹேயம்-உபாதேயமாக இருந்துக் கொண்டு நமக்கு உதவி செய்கிறது. ஆனால் பிரம்மன் இவையிரண்டையும் செய்வதில்லை. இதனால் பிரம்மத்தினால் ஒருபலனும் கிடையாது. எனவே பிரம்மனிடத்தில் உதாசீனனாகத்தான் இருக்க முடியும். பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அடைவதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏன் கஷ்டப்படுத்துகிறாய்?

பதில்   உன்னால் கூறப்பட்ட தோஷம் பிரம்மத்திற்கு அலங்காரம்தான். பிரம்மன் ஹேய-உபாதேஹ ரஹிதம் என்று நீ கொடுத்த லட்சணம், பிரம்மத்திற்கு அலங்காரமாகத்தான் இருக்கிறது. கர்மத்திற்கு நீ கொடுத்த ஹேய-உபாதேய லட்சணம்தான் சம்சாரம். எதுவரை நம் மனதில் இதை நீக்க வேண்டும், இதை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றதோ அதுவரை நாம் சம்சாரியாக இருப்போம்.

 

மோட்சம் என்பது என்னால் நீக்கப்படவேண்டியது எதுவும் இல்லை,  அடையப்பட வேண்டியது எதுவும் இல்லை, ஏற்றுக் கொள்ள வேண்டியதும் எதுவும் இல்லை என்ற எண்ணமே மனதில் இல்லாத நிலையாகும். எதனிடத்தில் எதையும் சேர்க்க முடியாதோ, எதையும் நீக்கமுடியாதோ அதுவே பிரம்மன். இப்படிபட்டவன் நான் என்ற அறிவை அடைவதே மோட்சமாகும்.

 

9வது வர்ணகம் (விருத்திக்கார மத நிராகரணம்)

விருத்திக்கார மதத்தின் ஒரு பிரிவினர் ஞான-கர்ம சமுச்சயம் மூலம்தான் பலனை அடையலாம் என்று கூறுகின்றனர். இதற்கு சங்கரர் பலவிடங்களில் சரியான பதில் கொடுத்து நிராகரணம் செய்திருக்கிறார்.
பூ.பக்ஷி பிரம்ம உபாசனையின் மூலம் மோட்சத்தை அடையலாம். பிரம்மத்தை தியானம் செய்வதன் மூலமும் அடைந்து விடலாம்.

*  இவர்கள் நிர்குண பிரம்மத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

*  சாஸ்திரத்தின் மூலமாகத்தான் பிரம்மத்தை அடைய முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

*  வேதாந்தத்தின் அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

*  ஆனால் ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைந்திட முடியாது. பிரம்ம ஞானத்தை அடைந்தபிறகு அதை தியானிப்பதிலேயே மோட்சம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

*  உபநிஷத் மோட்சத்தை அடைய உதவும் சாதனம் என்பதையும், பிரம்மன்தான் அதனுடைய தாத்பர்யம் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

*  உபநிஷத் தியானம், உபாசனம் ஆகியவைகள் உபதேசித்திருக்கிறது. ஞானத்தை அடைந்த பிறகு தியானம் என்ற கர்மத்தை செய்து மோட்சம் அடையப்படும்.

*  எந்தவொரு சப்தமும் செய் அல்லது செய்யாதே என்ற ஏதாவது ஒன்றை செயல்படுத்தும்.

*  பிரம்மன் இருக்கிறது என்று சொல்வதை கேட்டு அதை தியானித்தல் என்ற செயலோடு இணைத்திட வேண்டும்.

*  ஸ்ருதி வாக்கியம்: ‘ஆத்மா இத்யேவ உபாஸீத:” – ஆத்மா என்றவொன்றை தியானிக்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும பலவிடங்களில் வேத3 என்ற சொல்லுக்கு தியானித்தல் என்ற பொருள்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

*  பிரம்மத்தை அறிந்தவர்களும் சம்சாரிகளாக இருக்கிறார்கள். அறியாதவர்களும் சம்சாரிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் அறிவை அடைந்ததும் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

*  இதற்கு உபநிஷத் பிரமாணம் சிரவணத்திற்கு மனனம், நிதித்யாசனம் ஆகிய கர்மங்களை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறது.

*  ஆகவே வேதாந்தமும் பிரம்மத்தை தியானிக்க வேண்டும் என்ற கர்மத்தை போதிப்பதால் முழு வேதாந்தமே கர்ம சாதனம்தான் என்ற தெரிகிறது. பிரம்மத்தை தியானித்து இறுதியில் மோட்சம் அடையப்படுகிறது.

பதில்   வேதாந்தம் எந்த கர்மத்தையும் போதிக்கவில்லை. வேதாந்த வாக்கியத்திற்கு நேரிடையாக பலனை கொடுக்கும் சக்தியிருக்கிறது. வேதாந்தத்தின் மூலமாக அடைகின்ற ஞானம் நான் எதையும் செய்வதில்லை என்பதாகும். ஞானத்தை அடைந்தவன் எந்த கர்மத்தையும் செய்ய மாட்டான். எந்தவித விதியும் இவனைக் கட்டுப்படுத்தாது, செயலில் ஈடுபட வைக்க முடியாது.

 

கர்மத்தின் ஸ்வரூபம்: இது உற்பத்தியாகின்ற இடங்கள் உடல், மனம், வாக்கு ஆகியவைகளாகும். இவைகளை பிரதானமாக கொண்டு செய்கின்ற செயல்கள், திட்டமிட்டு உருவாகுகின்றதுதான் கர்மம். இந்த மூன்று இடத்திலிருந்து உருவாகின்ற செயல்கள் விதியினால்தான் செயலுக்கு வருகின்றது. ஏதொவொரு தூண்டுதலால்தான் கர்மங்கள் செயல்படுகின்றது. உற்பத்திக்கான காரணம் செய் என்கின்ற உத்தரவுதான். உத்தரவு வந்தாலும் அது தன்னை பார்த்துதான் சொன்னது என்று நினைத்தால்தான் செயலும் உருவாகும். ஞானியை நோக்கி உத்தரவு வரும்போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அநத உத்தரவு செயல்படாது.

 

ஜெய்மினி சூத்திரம்
அதத த4ர்ம ஜிக்ஞாஸா
அத – வேதத்தை அத்யயனம் செய்தபிறகு
அத – அது பலனைக் கொடுக்கின்றததனால்
த4ர்ம ஜிக்ஞாஸா – தர்மத்தை-அதர்மத்தை நிர்ணயம் செய்ய கர்மகாண்ட விசாரம் செய்ய வேண்டும்.
*   கர்மத்தினால் அடைகின்ற பலன் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். மோட்சம் என்பது குறிப்பிட்ட பலனல்ல.

*   கர்மபலனில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மோட்ச பலனில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

*   மோட்சம் தர்ம-அதர்மத்திற்கு அப்பாற்பட்டது.

*   கர்மத்தை செய்வதற்கு, அனுபவிப்பதற்கு உடல், புலன்கள் தேவைப்படுகிறது. மோட்சம் என்பது சரீரமற்றது.

*   மோட்சம் கர்மபலன்களை நாசம் செய்து விடுகிறது.

*   கர்மபலன்கள் நான்கு வகைகளாக இருக்கிறது. அவைகள், ஓரிடத்தை அடைதல், புதிதாக உருவாகுதல், மாற்றியமைத்தல், தூய்மைப்படுத்துதல் ஆகியவைகளாகும். மோட்சத்தினால் இந்த நான்கு வகையான பலன்களையும் அடைவதில்லை.

*   ஞானத்திற்கு பிறகு பிரம்ம உபாசனை செய்யமுடியாது. ஞானம் வந்தவுடன் இனி நான் எந்த கர்மமும் செய்யத் தேவையில்லை என்ற நிலையை அடையும்போது தியானம் என்ற செயல் நடக்கவே நடக்காது. எனவே மோட்சத்தை கர்மபலனாக கூறுவது தவறு என்று நிலைநாட்டப்படுகிறது.

 

பூ.பக்ஷி ஞானம் நேரிடையாக பலனைக் கொடுக்காது.

பதில்   மூலக்காரணம் அக்ஞானமாக இருந்தால் அந்த இடத்தில் ஞானம்தான் நேரிடையான பலனைக் கொடுக்கும்.

பூ.பக்ஷி செயலில் ஈடுபடுத்தாத வாக்கியத்தினால் என்ன பயன்?

பதில்   நிஷேத வாக்கியங்கள் நம்மை செயல் செய்ய தூண்டுவதில்லை. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லும் செயல் செய்ய தூண்டாது. ஆனால் பலனைக் கொடுக்கும்.

பூ.பக்ஷி வேதாந்தம் கேட்ட பிறகும் சம்சாரிகளாக இருப்பதால் சிரவணத்திற்கு பிறகு தியானம் என்ற கர்மம் செய்ய வேண்டும்.

பதில்   பிரம்மத்தை புரிந்து கொண்டவனுக்கு சம்சாரம் இல்லை. பிரம்மத்தைப் பற்றி கேட்டவனுக்கு சம்சாரம் இருக்கும். சாதன சதுஷ்டய சம்பத்தியை உடையவர்களுக்கு பிரம்மம் புரிந்திருக்கும்.

பூ.பக்ஷி சிரவணத்திற்கு பிறகு மனனம், நிதித்யாசனம் என்ற கர்மத்தை செய்ய வேண்டும் என்று கர்மத்தை செய்ய சொல்கிறது.

பதில்   சிரவணம் ஞானத்தை அடைவதற்கு கூறப்பட்டிருக்கிறது என்றும் மனனம், நிதித்யாசனம் மோட்சத்தை அடைவதற்குத்தான் என்று புரிந்து கொண்டிருக்கிறாய். ஞானத்தை அடைவதற்கான தடைகளை நீக்குவதற்குத்தான் மனனம், நிதித்யாசனம் ஆகியவைகள் உபதேசிக்கப்பட்டுள்ளது.

பூ.பக்ஷி ஞானமும் ஒரு கர்மம்தானே? ஞானம் மானசீகமான கர்மமாகும்.

பதில்   ஞானம் வேறு, கர்மம் வேறு. கர்மம் புருஷ தந்திரம், ஞானம் வஸ்து தந்திரம்.

*  கர்மத்தை செய்யப் போகும் போது அதை செய்யலாமா, வேண்டாமா என்ற தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. ஞானத்தில் இந்தமாதிரி வாய்ப்பு கிடையாது. அறிவு என்பது ஒன்று எப்படியிருக்கின்றதோ அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

*  கர்மம் உத்தரவிலிருந்து உருவாகின்றது. ஞானம் பிரமாணத்தை பயன்படுத்தி அடைவதாகும்.

இதிலிருந்து கர்மம் வேறு, ஞானம் வேறு என்று புரிந்து கொள்வாயாக.

 

பூ.பக்ஷி ஆத்மாதான் (கௌன ஆத்மா) நான் என்று தெரிந்தே இந்த உடலை நான் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.

பதில்   எப்போது நன்கு தெரிகின்ற விஷயத்தில் தெரிந்தே ஒன்றை வேறொன்றாக சொல்ல முடியும். வேற்றுமை தெரியாமல் மாறிக் கூறினால் அது மித்யா-ஆத்மாவாகும். ஆத்ம-அனாத்மா விஷயத்தில் வேற்றுமை தெரியாமல் இருப்பதால் கௌனாத்மா என்று சொல்ல முடியாது.  மூன்று சரீரங்களை நான் என்ற சொல்லும் போது அது மித்யாத்மாவை குறிக்கிறது. கௌனாத்மா சம்சாரத்தைக் கொடுக்கக்கூடாது. உடல், மனம், புலன்கள் நான் சொல்லும் போது அவைகள் மித்யாத்மாவையே குறிக்கிறது. நான் என்ற சொல்லினுடைய உண்மையான ஆத்மா பிரம்மமாகும்.

நான் என்ற சொல்லுக்கு ஞானி இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்துவான். உலக விவகாரத்தில் ஈடுபடும்போது கௌனாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான். தியானத்தின் போது முக்கிய ஆத்மாவான பரமாத்மா என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவான்
இத்துடன் பிரம்மசூத்திரம் முடிவடைந்தது.

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது–1-ஆத்ம சித்தி –

November 30, 2021

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் -உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்னமய, ப்ராணமய மனோமயங்களுக்கு அவ்வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாநமயன் என்று காட்டியது.
ப்ரபந்நஜனகூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம்பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மைநிலை பகவத்குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்யஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்மமீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலைநாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாதபோது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வகர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பலப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.
மேலும் பரம்பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றி சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

-285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி /பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் /
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக / அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி -/
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம சூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம சூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்–

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

———-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———–

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சங்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி– யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா

பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

——————————————————–——

அதே மங்கள ச்லோகம்
ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ஸ்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ஸ்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழல மாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லா விதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார்.
ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும் ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

——————-

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –

அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்

பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருக்கட்டு

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

பாராசர்யா வச ஸூதாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
1-ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
3-விஷ்ணோ கடாஷம்
4-அத்வேஷம்
5-அபிமுக்யம் ச
6-சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூத்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூத்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம்
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம்
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம்
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூபர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூபர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

———

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———–

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

-——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -அதிகரண-ஸூத்ரங்கள் தொகுப்பு —/அதிகரண அர்த்த ஸாரங்கள் —

November 28, 2021

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————-

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

————-

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

————-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

——————————————————————————–

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

———————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

இப்படி இவ் வத்தியாயத்தில் முதல் பாதத்தில்
பாபத்தின் அஸ்லேஷ விநாஸ ரூபமான ப்ரஹ்ம வித்யா பலத்தை நிரூபித்து

இரண்டாம் பாதத்தில்
ஸ்தூல தேஹ ஹானி ரூபமான வித்யா பலத்தையும்

மூன்றாம் பாதத்தில்
அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ரக்ருதி மண்டலத்தை அதி க்ரமித்து -விரஜையைத் தாண்டிய பிற்பாடு –
ஸூஷ்ம தேஹ தியாக ரூபமான வித்யாஸத்தையும்
நிரூபித்தார்

இனி நான்காம் பாதத்தில்
ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்த வித்வானுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்த மய திவ்ய ரத்ன மண்டபத்திலே
திவ்ய ஸூரிகளின் குழாத்தில் பராங்குசாதி பூர்வாச்சார்யர் முன்னிலையில் திரு வனந்தாழ்வான் எனும் பர்யந்தத்தில்
எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ யபதியான ஸ்ரீ மன் நாராயணனின் ஸாமீப்யம் ஸாலோக்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம்
முதலியவற்றை அடைந்து பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் என்னும் ஆனந்த பரிவாஹ மாகிய
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளுக்கும் ஏற்ற ஸகல கைங்கர்யங்களையும்
நிரூபிக்கிறார் என்று பாத சங்கதி –

———————————————————————————————————————————-

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2-அவிபாகே ந த்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும்
முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -என்பது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன-

———————————————————————————————————————————–

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் –

முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-

பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த ஜீவனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் விளக்கப் படுகிறதா
ஸாதிக்கப்படும் வேறு ரூபத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறதா
என்று சம்ஸயம்

ஸ்வரூபத்திற்கு ஸூஷுப்த்யாதி தசையில் ஆனந்த அனுபவம் இல்லாமையாலும்
ஸ்வரூபம் மட்டும் எப்போதும் ஆவிர்பூதமாகையாலும்
ஸ்வர்க்காதிகள் போல் ஸாத்யமாயும் ஸூ கத்திற்கே உறைவிடமாயும் உள்ள தேகத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறது –
அதனால் அபி நிஷ் பத்யதே என்ற ஸப்தம் முக்ய அர்த்தம் உள்ளதாகும்
என்பது பூர்வ பஷி
புதிதான ரூபம் என்பர் –
துக்கத்தின் நீக்கம் என்பதே புருஷார்த்தம் ஆகாது என்பர் –

இத்தை நிரஸிக்கிறார் –

முக்தி பெரும் ஜீவனுக்கு அதிக சுக அனுபவம் உண்டு என்பதை
சாந்தோக்யம் -2-8–ச ஏகோ ப்ராஹ்மண ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய ச அகா மஹதச்ய-

அது மட்டுமே ப்ரஹ்மத்தின் ஆனந்தம் -வேதங்களில் வல்ல அந்தணன் போகங்களுக்கு ஏங்குவது இல்லை என்றும்

தைத்ரியம் -2-7-ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்றும் சொல்லிற்றே

சித்தாந்தம் –
ஸ்வரூபத்தின் விளக்கமே –
ஸ்வேன ரூபேண –ரூப பதத்துக்கு ஸ்வ விசேஷணம்-
ஞானம் விரிவு பெற்ற நிலையே -ஸ்வரூப விளக்கம் என்றது –

சம்பத்ய -பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்து ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்தமய திவ்ய மணி மண்டபத்தில்
திருவநந்தாழ்வான் ஆகிற திவ்ய பர்யங்கத்தின் நடுவே எழுந்து அருளி இருக்கும்
பரம புருஷனை ஸ்ரீ தேவியுடன் நெருங்கி
ஆவிர்பாவ -அபஹத பாப்மத்வாதி குண விசிஷ்டமான ஜீவன் ஸ்வ ஸ்வரூபத்துக்கு கர்ம க்ருத
தேஹ சம்பந்தம் மூலமாக திரோதானம் அற்று சுருக்கம் அற்ற ஞான குணகனாய்த் தோன்றுவர் என்று ஸ்ருதியால்
ப்ரதிபாதிக்கப் படுமே தவிர ஸாத்யமான தேகத்தின் சம்பந்தம் அன்று
ஏன் எனில்
ஸ்வேந சப்தாத்-ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்ற இடத்தில் –
ஸ்வேந-என்ற விசேஷண வாசக ஸப்தம் இருப்பதால் என்றபடி

இதனால் இங்கு ஸாத்யமாக ரூப சம்பந்தம் கருதப்பட்டதால் -அந்த ரூபமும் தனக்கு அசாதாரணம் ஆகையாலே –
ஸ்வேந-என்று விசேஷிப்பதால் பயனில்லை என்ற நிலை ஏற்படும் என்று கருத்து
ஆத்மாவுக்கு ஸ்வபாவ ஸித்தமான ரூபமே ஸ்வ ஸப்தார்த்தம் என்று கருத்து
இவ்வர்த்தத்தை மேல் இரு ஸூத்ரங்களும் விளக்கும்

ஸ்வ ஸ்வரூபம் மட்டும் -அஹம் ஜானாமி -என்று நித்யமாய் ஆவீர் பூதமாகையாலே
பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த பிறகு ஸ்வ ஸ்வரூப பிராப்தி என்பது பொருந்தாதே
என்று சங்கித்துப்
பரிஹரிக்கிறார் –

———————————————————

4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது –
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டது
என்று உறுதி படக் கூறியது –

யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான ஜென்மாதி காரணம்
ஸமஸ்த வஸ்து விலக்ஷண -சர்வஞ்ஞ -ஸத்ய சங்கல்ப-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி –
பரம காருணிக -நிரஸ்த சமாப்யதிக சம்பாவன பர ப்ரஹ்மா பிதாவ பரம புருஷோஸ் தீதி சப்தாத் வகம்யதே-

முக்த -கர்ம சம்பந்தத்தாலான தேகத்தில் இருந்து விடுபட்ட ஜீவனே -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே-
என்று சொல்லப்படுகிறான் -தேஹியான ஸம்ஸாரி ஜீவன் அல்லன்
பிரதிஜ்ஞா நாத் —ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி -என்று கர்ம சம்பந்தத்தாலான
தேஹ சம்பந்த க்ருதமான ஜாக்ரதாதி தசைகளில் இருந்தும் விடுபட்ட ஸ்வரூபமுள்ள ஜீவனே
இங்கு பேச வேண்டியவனாக ப்ரதிஜ்ஜை செய்ததால் என்றவாறு

இங்கு அவன் ஜீவ ஸ்வரூபம் நித்ய ப்ராப்தமானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மறைக்கப் பட்டவனுக்கு
மறைவின் நீக்கமே-அபிநிஷ்பத்தி – எனப்படுகிறது என்பதாம்

இப்படி ஸ்வரூப ஆவிர் பாவத்திலும் யுக்தியால் இவ்வர்த்தம் அபிநிஷ்பன்னம் ஆகிறது –
அபிநிஷ்பத்யதே -என்னும் இடத்தில் போலே அபிநிஷ்பத்தி -என்ற சொல்லின் பிரயோகத்தினைக் காணலாம்
ஆனாலும் ஸ்வரூப மாத்ர ஆவிர்பாவத்திற்கு புருஷார்த்தம் எப்படிக் கூடும் என்பதற்கு விடை அளிக்கிறார் –

——————————————————————————-

4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்யகாம சத்ய சங்கல்ப -என்றது
பரமாத்மாவை குறித்து அல்ல ஜீவாத்மாவைக் குறித்தே -என்று
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-18-உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூப வஸ்து -விளக்கத்திலே பார்த்தோம்

இதனையே சௌநக பகவான் –
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரஷாள நாத்மணே
தோஷ ப்ரஹாணான் ந ஜ்ஞான மாத்மந க்ரியதா ததா
யதோதபா ந காணாத் க்ரியதே ந ஜலாம்பராம்
ஸ்வேத நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத
ததா ஹேய குணத் வம்சாத் அவ போத தயோ குணா
பிரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மா நோ ஹி தே -என்று

வைரம் அழுக்கு நீக்கி புதிதான ஒளி வராதே
கிணறு வெட்டி நீரை விட வேண்டாமே
தாழ்வான குணங்கள் நீங்க இயல்பான ஆத்மா ஸ்வரூபம் வெளிப்படும்
எனவே பரமாத்மாவை அடைந்து புதிதான ஸ்வரூபம் அடையாமல் தன்னுடைய ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –

ஆத்மா -தேஹாதிகளை விட்ட ஸ்வரூபத்தோடு உள்ள ஆத்மா ஸ்வரூபத்தால் அபஹத பாப்மாத்வாதிகளான
எட்டு குணங்கள் உள்ளவனாக பிரஜாபதி வாக்யத்தால் சொல்லப் படுகிறான்
அத்தகைய ஆத்மாவுக்கு இங்கு ஆவிர்பாவம் கூறப்படுகிறது
ப்ரகரணாத் -அத்தகைய ஆத்மாவையே-ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி-என்று
ஏதம் என்று சொல்லும் பிரகரணத்தால் என்றபடி

ஆகையால் தானே குண அஷ்டகம் உடையவனானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மூடப்பட்ட
ஸ்வரூபத்தைக் கொண்டவனாகையாலே பரஞ்சோதியை அடைந்தே மறைவு நீங்கப் பெறுகிறான் –
ஆகவே ஆவிர்பாவம் என்று இங்கே சொல்கிறது என்றவாறு –

ஞான சுருக்கம் என்னும் அசுத்தம் விலகிப் பெற்ற ஸித்த ஸ்வரூபமே -ஸாத்யமான முக்தி
எப்படி – ஸித்தமான வ்ரீஹீ போல்வன ப்ரோஷணத்தால் சாத்யமாகிறதோ அதே போல் இங்கும்
ஆனால் அபி நிஷ் பத்தி சப்தத்துக்கு அர்த்தமாவது -முதலில் ஒரு பொருள் அனுகூலமாகவும்
பின்பு அனுபவத்தால் மிகவும் அனுகூலமாகவும் ஆவது போல்
ஸூக ஸ்வரூபனான ஆத்மா முக்தி தசையில் மிக்க அனுகூலமாகத் தோன்றுகிறான் என்று கருத்து

ஞானச் சுருக்கம் நீங்கி ஞான மலர்ச்சியை அபி வ்யக்தி யாகும் –
இந்த ஞானம் மீண்டும் சுருங்க ஹேதுவே இல்லை யாகையால் இந்த ஞான மலர்ச்சி நித்யம்
இப்படி தர்ம பூத ஞான மலர்ச்சியை இட்டு தர்மியைச் சொல்வதில் குறை இல்லை –

———————————————————————————————————————

அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் –

முக்தி தசையில் எல்லா பந்தங்களில் நின்றும் விடுபட்ட ஜீவன் தன்னை
பரமாத்மாவை விட வேறுபட்டவனாக அனுபவிக்கிறானா
அல்லது அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்றா -என்று சம்சயம்
இதுவே சங்கதி –

முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது

4-4-4-அபி பாகேந த்ருஷ்டத்வாத் –

வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது –
அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்

தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –

முண்டக -3-1-3-யதா பச்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரேசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
பொன் போன்ற அழகிய திருமேனி கொண்டவனும் இந்த உலகின் காரணமானவனும் –
அனைத்தையும் நியமிப்பவனும் -புருஷன் என்று அழைக்கப் படுபவனும்
எப்போதும் அனைத்துக்கும் காரணமாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை முக்தாத்மா எப்பொழுது காண்கிறானோ
அப்போதே தனது புண்ய பாபங்களை விடுகிறான்
தோஷம் அற்றவனாக பாபங்கள் இல்லாத உள்ளிட்ட எட்டு குணங்கள் நிறையப் பெற்றவனாக மாறுகிறான் –
ப்ரஹ்மத்துடன் ஒற்றுமை அடைகிறான் –

ஸ்ரீ கீதை -14-2- இதம் ஜ்ஞானம் அபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா-சர்க்கே அபி நோபஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -என்று
இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர்கள் என்னை ஒத்த குணங்களை அடைகின்றார்கள் –
அவர்கள் சிருஷ்டியின் போது தோன்றுவதும் இல்லை -பிரளயத்தின் போது துன்பம் அடைவதும் இல்லை

நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்றும்
மம சாதர்ம்யம் ஆகதா-என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள்
பிரித்துச் சொல்வதால் முக்தன் தன்னைத் தனிப் பட்டவ்வனாகவே அனுபவிக்கிறான்
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
முக்தன் தன்னைத் தனிப் படாதனாகவே அனுபவிக்கிறான் –
தனது ஆத்மாவை உள்ளபடி காண்கிறான் –

அபி பாகேந -முக்தன் தன் ஆத்மாவுக்கும் ஆத்மாவாய் -ஸர்வ அந்தர்யாமியாய் உள்ள பரமாத்மாவை
அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று தன்னோடு இரண்டற சேர்ந்தவனாகவே அனுபவிக்கிறான்
த்ருஷ்டத்வாத் –ஆத்மேதி தூப கச்சந்தி க்ராஹ யந்திச -என்ற நியாயப்படி
உபாஸன தசையில் உள்ளது உள்ளவாறு பரமாத்மாவை ஆத்மாவாகக் கொண்ட
ஸ்வ ஆத்மாவை ஸாஷாத் கரிப்பதால் என்றபடி

ஆகவே உபாசனம் செய்தபடியே பலன் ஆகையால் பல திசையிலும் முக்தன் அஹம் ப்ரஹ்மாஸ்மி
என்று அனுபவிக்கக் குறையில்லை
தத் த்வம் அஸி
அயமாத்மா ப்ரஹ்ம -என்று ஜீவனுடன் சாமானாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவம் –
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய ஆத்மா சரீரம் -என்று சொல்லப்பட்ட சரீராத்மா பாவத்தை அடிப்படையாகக் கொண்டது

இங்கு ஸ்வரூப ஐக்யம் பொருள் அல்ல
ஸாம்யத்தையே சொல்கிறது
பிரகார பூதனாய் இருந்தே ஸகல கல்யாண குண விசிஷ்டனாய் அனுபவிக்கிறான்
என்று அர்த்தத்தைச் சொல்கிறது –

ப்ரஹ்மத்துடன் ஜீவனுக்கு உள்ள ஒற்றுமை
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸி–அந்த பரம் பொருள் நீயே -என்றும் –

ப்ருஹத் -2-5-19-அயம் ஆத்மா ப்ரஹ்ம -இந்த ஆத்மா ப்ரஹ்மம் -என்றும்

சாந்தோக்யம் -6-8-7-ஜகத் ஆத்ம்யமிதம் சர்வம் -அனைத்தும் ஆத்மாவை பிரகாரமாகக் கொண்டது -என்றும் –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -இவை அனைத்தும் ப்ரஹ்மம் -என்றும்

அவனது பிரகாரமாகவே -அவனை ஆத்மா என்றும் தன்னை சரீரமாகவும் உணர்கிறான் –

சதபத ப்ரஹ்மணம்-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநி அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மா நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்ருத -என்று
எந்த பரம் பொருள் ஜீவனின் உள்ளும் புறமும் பரவி உள்ளானோ -யார் இப்படி உள்ளதை ஜீவன் அறியாமல் உள்ளானோ
யாருக்கு இந்த ஜீவன் சரீரமோ -யார் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறானோ-
அழிவு இல்லாத அந்தப் பரம் பொருளே உனக்கு அந்தர்யாமி -என்றது

தைத்ரிய ஆனந்த வல்லி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்று
அனைவருக்கும் ஆத்மாவாக உள்ள பரம் பொருள் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறான் -என்றும்

இதையே ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-22-அவஸ்தி தேரிதி காச க்ருதஸ்ந -என்று முன்பே பார்த்தோம் –

ஆகவே முக்தி பெற்றவன் -அஹம் பிரஹ்மாஸ்மி–நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன்
ப்ரஹ்மத்தை விட்டு அகலாமல் அனுபவிக்கிறான்

ப்ரஹ்ம ஸூத்ரம் –
4-4-8-சங்கல்பா தேவதத் ஸ்ருதே -என்றும்

2-1-2-அதிகம் து பேத நிர்த்தேசாத் -என்றும் –

3-4-8-அதிகோப தேசாத்-என்றும்

ஜீவனைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறு பட்டவனே -என்று பார்த்தோம் –

—————————————————————————————————-

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்-

அவித்யை நீங்கி ஸ்வரூபம் ஆவிர்பாவம் சொல்லிற்று
எந்த ஸ்வரூப ஆவிர்பாவம் -இரு வகை சுருதிகள் -இரு வகை விளக்கம் உண்டே -என்று சங்கதி
இந்த ஜீவனின் ஸ்வரூபம் அபஹத பாப்மாத் வாதி அஷ்ட குணங்களுடன் கூடிய சைதன்ய மாத்ரமா
அல்லது இவ்விரண்டும் ஸ்வபாவ ஸித்தமா என்று சம்சயம்
குண விஸிஷ்ட பக்ஷத்தை முதலில் காட்டுகிறார் –

ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் –
அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-

ப்ரஹ்மத்தின் குணங்களால் என்று உபன்யாசம் காணப் படுவதால் -இப்படியே ஜைமினி கருதுகிறார்
பாவங்கள் அற்ற தன்மை போன்றவை உண்டு என்று தஹர வித்யை சொல்லும்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப -என்று சொல்லிற்று

உபன்யாசாதிப்ய -ஆதி சப்தம் -உண்ணுதல் போன்ற செயல்களை சொல்லும்

இத்தையே சாந்தோக்யம் -2-12-3-ஜஷன் கிரீடன் ரமமாண –
உண்ணுதல் விளையாடுதல் மகிழ்தல் -என்றது-

இதனால் அறிவு மாத்ரம் உள்ள ஸ்வரூபம் அல்ல –
இதுவே ஜைமினி கருத்தாகும் –

ப்ராஹ்மேண ஜைமினி -குண விஸிஷ்ட முக்த ஸ்வரூப ஆவிர்பாவம் என்று ஜைமினி திரு உள்ளம்
ஏன் எனில்
உபன்யாசாதிப்ய-பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் இந்த குணங்கள் உபந்யஸிக்கப் படுவதால் என்றபடி
ஆதி -பதத்தால் -ஜஷன் கிரீடன் ரமமாண-என்பது போன்ற ஸ்ருதிகளாலும்
முக்தனுக்கு ஸத்ய சங்கல்பாதிகள் தோன்றுகின்றன -என்று கருத்து

இரண்டாவது பக்ஷத்தை உபந்யஸிக்கிறார்

—————————————————————————————————————

4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —

குணங்கள் இல்லாத ஞான மயமாக -மட்டுமே ஓதப்படுதலால் -ஔடுலொமி இப்படியே கருதுகிறார் –
பிரத்யகாத்மா ஜ்ஞான மாத்ர ஸ்வரூபம்

ப்ருஹத் -4-5-13-ச யதா சைந்தவகதந அனந்தர அபாஹ்ய க்ருத்சன ரசகன ஏவ ஏவம் வா அரே
அயம் ஆத்மா அந்தர -அபாஹ்ய க்ருத்சன ப்ரஜ்ஞாநகந ஏவ -என்று
உப்புக்கட்டி எவ்ப்படி உள்ளும் புறமும் நடுவிலும் உப்பாகவே உள்ளது போன்றே ஆத்மாவும் ஞான மயமாகவே உள்ளும் புறமும் நடுவிலும் -என்றும்

ப்ருஹத் -2-4-12-விஜ்ஞான கந ஏவ -என்று
ஆத்மா முழுவதும் ஞான மயமாகவே உள்ளது என்றும் சொல்லிற்றே

அபஹதபாப்மா மூலம் மாற்றம் மூப்பு வருத்தம் பசி தாகம் போன்றவை இல்லை என்றே சொல்லப்பட்டது ஒழிய
எட்டு தன்மைகள் உண்டு என்று கூறப்பட வில்லை –

எனவே ஞான மாத்ரமே என்பர் ஔடுலோமி-

சிதி தந்மாத்ரேன -ஜீவனுக்கு சைதன்யம் மாத்ரமே ஸ்வரூபமாதலின் அந்த ரூபத்துடன் ஆவிர்பாவம்
இதி ஔடுலொமி — என்று இவர் திரு உள்ளம்
ததாத்மகத்வாத் -விஞ்ஞான கன ஏவ -என்று விஞ்ஞான ஸ்வரூபத்வம் தவிர
வேறு குணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதால்

இவ்விரு மதங்களையும் நிரஸித்து ஸ்வ மதத்தை ஸ்தாபிக்கிறார் –

—————————————————————————

4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதாராயண –

ஞான மாத்ரம் என்பதை ஏற்றாலும் மற்ற தன்மைகள் உள்ளதாகக் கொள்வதில் முரண்பாடு இல்லை –
இப்படியே பாதராயணர் எண்ணுகிறார் –

ஏவம் அபி உபன்யாசாத் -ஆத்மா சித் ஸ்வரூபனே ஆனாலும் பிரஜாபதி வாக்கியத்தில்
குணங்களை உபந்யஸித்து இருப்பதால்
பூர்வபாவாத் -முன் உள்ள எட்டு குணங்களும் உள்ளவை என்று தோன்றுவதால்
இரண்டு ஸ்வரூபங்களுக்கும்
அவிரோதம் பாதாராயண –விரோதம் இல்லை என்பதே இவர் திரு உள்ளம்

விஞ்ஞான கன ஏவ -என்ற சுருதியில் ஏவ -வேறு ஸ்ருதிகளில் காட்டிய குணங்களைத் தடுக்காது
சைந்தவ ரஸ கன ஏவ என்பதில் லவணம் என்ற பொருளையும் ஸ்பர்சம் போன்ற குணங்களையும் காட்டுமா போலே
இங்கு ஏவ காரம் -மாம்பழம் ஒரு பக்கம் இனிப்பாயும் புளிப்பாயும் போல் இல்லாமல் ஒரே மாதிரி சுவை என்பது போலே
இங்கும் ஆத்ம ஸ்வரூபம் முழுவதும் ஸ்வயம் ப்ரகாசமாதலால் ஜடம் போல் இல்லாமல் ஞானமே வடிவானது என்று
அயோக வியச்சேதமே பொருள்

ஆகவே இரு ஸ்ருதிகளுக்கும் விரோதம் வாராமல் இரு ஸ்வரூபமும் உண்டு என்று ஒப்புக் கொண்டு
முக்தி தசையில் இவ்விரு ஸ்வரூபங்களுடனே ஆவிர்பாவம் என்று ஸாதிக்கிறார் –

இதுவே வாக்யத்தில் கூறப்பட்டதாலும்
முன்னரே உள்ளதாலும் –
இரண்டு பிரமாணாங்களும் சமம் –
ஞான மாத்ரமே வேறு ஏதும் இல்லை என்பதை உபநிஷத் வாக்கியம் ஏற்க வில்லை

விஜ்ஞான கந ஏவ என்பதில் -ஏவ என்பது
ஆத்மாவின் முழு பாகமும் ஜட தொடர்பு இல்லாமல் தானாகவே பிரகாசிக்க வல்லது என்றும்
இந்த பிரகாசத்தின் சிறிய பாகம் கூட மற்றவற்றை சார்ந்தது இல்லை என்பதையே காட்டும் –

ச யதா என்று ப்ருஹத் -4-5-13- இத்தையே காட்டுகிறது –

—————————————————————-

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –

ஞான ஸ்வரூபனாயும் குண விசிஷ்டனாயும் முக்தன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது கீழ்
இப்போது முக்தனைக் குறித்து சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம்
ப்ரயத்னம் எதையும் எதிர்பாராமல் செயலாற்றல் என்று ஸ்தாபிக்கப் படுகிறது
என்று சங்கதி –

முக்தனுக்கு விரும்பும் ஞாதிகள் போன்றோர் எதிர்வரக் கிடைப்பது வெறும் சங்கல்பத்தாலேயா
அல்லது வேறு ப்ரயத்னத்தை அபேக்ஷிக்குமா
என்று சம்சயம்

உலகில் பிரயத்தனாந்தரத்தை எதிர்பார்த்தே கார்யகரம் பார்க்கிறோம்
அதே போல் இங்கும் வேறு சிறிய முயற்சியை எதிர்பார்த்தே ஸங்கல்பத்தால் கார்ய சித்தி –
விஞ்ஞான கன ஏவ போல் ஸங்கல்பாத் ஏவ -என்பர் பூர்வ பக்ஷி

அதனை நிரஸிக்கிறார்

தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –

சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது

சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –

சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –சங்கல்பத்தாலேயே பித்ரு தேவதைகள் இவன் எதிரில்
வந்து விடுகிறார்கள் என்று ஸ்ருதி சொல்வதால்
விஞ்ஞான கன ஏவ போல் சுருக்கத்தைப் பொறுக்காது இங்கு ஏவ ஸப்தம்
ஏன் எனில்
அங்கு வேறே ஸ்ருதியால் வரும் குண விசிஷ்டத்தை தடுக்க சாமர்த்தியம் இல்லை
இங்கு வேறு எதையும் அபேக்ஷித்து இருக்க பிரமாணம் இல்லை
பரம புருஷன் ஸத்ய ஸங்கல்பன் -அவன் அருளால் பெற்ற சமயத்தால் முக்தனும் ஸத்ய சங்கல்பன் -என்றவாறு –

————————————————————————————–

4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

சர்வேஸ்வரனைத் தவிர முக்தன் யாருக்கும் வசப் பட்டவன் அல்லன் –
மற்றவருக்கு வசப்பட்டால் சத்ய சங்கல்பத்வம் தடைப்படும்

அத ஏவ ச -அபஹத பாப்மா -இத்யாதி ஸ்ருதியாலே
அநந்ய அதிபதி-பகவானைத் தவிர்ந்து வேறு கர்மா போல்வாரை அதிபதியாகக் கொண்டவன் ஆலன்
இதுக்கு இந்த ஸ்ருதியே பிரமாணம்

கர்ம வசப்பட்டவன் அல்லன் என்பதை
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி -கட்டுப் படாதவன் -என்றது –

———————————————————————————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –

முக்தனுக்கு தேஹ இந்திரியங்கள் உண்டா இல்லையா என்ற சம்சயம் வந்தால்
விருப்பப்படி சரீரம் எடுத்துக் கொள்ளலாம் என்று இங்கு சாதிக்கிறார்
என்று சங்கதி
இவை உண்டா -இல்லையா -சங்கல்பத்துக்கு ஏற்ப அவை அநியதங்களா -என்று சம்சயம்

சரீராதிகள் இல்லை என்பது முதல் பக்ஷம்
உண்டு என்பது இரண்டாவது பக்ஷம்
அநியதம் என்று மூன்றாவது பக்ஷம்

முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும்
சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது —

4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –

சரீரம் போன்றவை முக்தாத்மாவுக்கு இல்லை என்று பாதரி கூறுகிறார் –
வேதங்களும் இப்படியே ஒதுகின்றன –

சாந்தோக்யம் -8-12-1-ந ஹ வை ஸ சரீரஸ்ய சத் ப்ரியாப்ரியயோ அபஹதிரஸ்தி அசரீரம் வாவ
சந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருசத -என்று
ஒருவன் சரீரத்துடன் இருந்தால் இவ்வுலக இன்ப துன்பங்கள் அவனை விட்டு விலகவில்லை –
சரீரம் இல்லாமல் உள்ளவனை மட்டுமே இவை அண்டுவதில்லை -என்றது

மேலும் சாந்தோக்யம் -8-12-3-அஸ்மாத் சரீராத் சமுத்தாயா பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –என்று
இந்த சரீரத்தை விட்டு வெளியேறி பரஞ்சோதி யான பரமாத்வை முக்தன் அடைந்து தனது ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –
என்றதால் சரீரம் முக்தனுக்கு இல்லை
என்பர் பூர்வ பஷி

சரீராதிகள் முக்தனுக்கு இல்லை என்பர் பாதிரி

அடுத்து உண்டு என்ற பக்ஷம்

———————————————————————————–

4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –

முக்தாத்மாவுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் உண்டு என்று ஜைமினி கருதுகிறார் –
அவன் பலவிதமாக உள்ளதால்

சாந்தோக்யம் -7-26-2- ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்ததா -என்பதால் –
கர்மம் அடியாக இல்லை –
கர்மம் தொடர்பற்ற சரீரத்தை முக்தாத்மா எடுத்துக் கொள்கிறான் என்கிறார்-

பாவம் ஜைமினி –முக்தனுக்கு சரீராதிகள் உண்டு என்பர் ஜைமினி
விகல்பாமந நாத்-விவித கல்ப விகல்ப -பலவகையாக கூறப்படுவதால் என்கிறார்
ஒரே ரூபத்துடன் பிணைக்க முடியாத முக்த ஸ்வரூபத்தை பல ரூபங்கள் எடுத்துக் கொள்ளலாம்
என்று ஸ்ருதி உண்டே
எனவே தேஹாதிகள் முக்தனுக்கு நியதம் என்பர் ஜைமினி –

———————————————————————————-

4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –

முன்பு இரண்டு பூர்வ பஷ ஸூத்ரங்களுக்கு
சித்தாந்த ஸூத்ரம் இது

அத -என்றது சங்கல்பாத் ஏவ -சங்கல்பம் காரணமாக மட்டும் என்கிறது

இரண்டு வாக்யங்களும் பொருந்த இருவிதமாகவும் உள்ளான் என்கிறார்

த்வாதசாஹம் -என்ற யாகத்தில் உள்ள விதி வாக்கியம் போலே

த்வாதசாஹம் ருத்திகாமா உபேயு-என்று
செழிப்பை விரும்புவர்கள் த்வா தசாஹம் யாகத்தை இயற்ற வேண்டும் என்றும்

த்வா தசா ஹே ந பிரஜாகாமம் யாஜயேத்-
குழந்தையை விரும்பும் ஒருவனுக்கு த்வா தசாஹம் யாகம் செய்விக்க வேண்டும் என்று

முதல் வாக்கியம் மூலம் பல எஜமானர்கள் செய்யும் யாக ரூபமும் –
இரண்டாம் வாக்கியம் மூலம் ஒரு யஜமான் செய்யும் யாக ரூபமும் கூறப் பட்டது போலே –

அத –இருவித ஸ்ருதிகளும் இருப்பதால்
மனத்திலே அந்த லோகத்தில் எல்லாக் காமங்களையும் கண்டு மகிழ்கிறான் என்று ஒரு ஸ்ருதி
ஒன்றோ இரண்டோ மூன்றோ பல சரீரங்களை எடுத்துக் கொள்கிறான் என்பது மற்ற ஒரு ஸ்ருதி
உபயவிதம் பாதராயண -இதனால் முகத்தனை சரீரகனாகவும் அசரீரிகனாகவும் என்பர்

இதற்கு உதாஹரணமாக
த்வா தசா ஹவத் -ஒரே யாகம் -12 நாள் செய்யும் யாகம் சத்திரம் என்றும் அஹீனம் என்று பெயர் பெறுவது போல்
சங்கல்பத்துக்கு ஏற்ப இரண்டும் பொருந்தும் என்கிறார்

உபைதி என்ற வினைச் சொல்லால் விதிக்கப்படுவது ஸத்ரம் என்றும்
யஜதி -என்ற வினைச் சொல்லால் அஹீனம் என்றும் வேறுபாடு கூறுவதும் உண்டு

மேல் முக்தனுக்குச் சொன்ன சரீராதி சித்தியும் முக்தனுடைய சங்கல்பத்தால் மட்டும்
ஏற்படுவது அல்ல என்கிறார் –

———————————————————————————————————————————————–

4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —

முக்தன் எப்போது சர்வேஸ்வரனை அனுபவிக்கத் தக்க சரீரம் தேவை என்று எண்ணுகிறானோ
அப்போது அந்த சரீரம் முக்தனால் படைக்கப் படுகிறது என்ற விதி முறை இல்லை என்கிறார்

சரீரம் இல்லை என்றால் கனவு போன்று பொருந்தும் –
பரமாத்மா மூலமாகப் படைக்கப் பட்ட சரீரம் போன்றவை மூலமாக பகவத் அனுபவம் கிட்டும்

ப்ருஹத் -4-3-10-அத ரதான் ரத யோகன் பத ஸ்ருஜதே -என்று
கனவு நிலையில் தேர்கள் மற்றும் அவற்றில் பூட்டப் பட்ட குதிரைகள் அந்த தேர்கள் செல்லும் வழிகள்
ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் என்று தொடங்கி

அத வேசாந்தான் புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா -என்று
குளங்கள் நதிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் -காரணம் அவனே படைக்கிறான் என்றது

மேலும் கட உபநிஷத் -2-2-8-ய ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண ததேவ சுக்ரம்
தத் ப்ரஹ்ம ததேவாம்ருத முச்யதே தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சன -என்று
யார் ஒருத்தன் அனைத்தும் உறங்கிய நிலையில் உள்ள போது தான் விழித்த படி இருந்து சங்கல்பித்து
சங்கல்பித்துப் படைக்கிறானோ அவனை அமிர்தம் என்றே கூறுகின்றனர் –
அவனையே அனைவரும் அண்டி உள்ளனர் -என்றது

அது போன்று தனது விளையாட்டுக்காகப் படைக்கப் பட்ட பித்ரு லோகம் போன்றவை மூலம்
முக்தாத்மா அனுபவித்த படி உள்ளான் என்கிறது –

தன்வ பாவே -தன்னால் படைக்கப்பட்ட சரீராதிகள் இல்லாவிட்டாலும் பரமபுருஷனால் படைக்கப்பட்ட
சரீரத்தால் பொருத்தம் ஏற்படுவதால் போகம் உசிதமானதே
எவ்வாறு எனில்
சந்த்யவத் உபபத்தே-ஸ்வப்னத்தில் போலே

ஸ்வப்னத்தில் பரம புருஷன் படைக்கும் ரதாதி உபகரணங்களைக் கொண்டு ஜீவன் இன்ப துன்பங்களை அனுபவிப்பது போல்
முக்தனும் லீலையில் ஈடுபட்ட பரமபுருஷனால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட பித்ரு லோகாதிகளாலே போகத்தை அனுபவிக்கிறான் –

——————————————————————————————————————————–

4-4-14-பாவே ஜாக்ரவத் –

சரீரம் உள்ள போது விழித்து இருக்கும் ஜீவன் போன்றே –
பித்ரு லோகம் போன்றவற்றை அனுபவிப்பது விழித்து இருக்கும் ஜீவன் போலே என்றும் –
தனது சங்கல்பத்தாலும் லீலைகள் அடங்கிய பித்ரு லோகத்தை தாங்களே சிருஷ்டித்து அனுபவிப்பார்கள்

ஆகவே இரண்டும் பொருந்தும்-

பாவே -தன் சங்கல்பத்தால் படைக்கப்பட்ட அனைத்தும் இருக்குமாகில்
ஜாக்ரவத் –விழித்து இருக்கும் அரசர் போன்றோர் தன் சங்கல்பத்தால் தேடிய ஐஸ்வர்யத்தால் போகத்தை அனுபவிப்பது போல்
முக்தனும் தன் சங்கல்பத்தால் கிடைத்த பித்ரு லோகாதிகளைக் கொண்டு போகத்தை அனுபவிக்கிறான்
போகமானது லீலா ரஸம்

தனது லீலைக்காக தசரத வஸூ தேவாதிகளைப் படைத்து தானும் மனிதனாய் அவதரித்து லீலா ரஸத்தை அனுபவிப்பது போலே
முக்தர்களுக்கும் தன் லீலை சித்திக்கவே பித்ரு லோகாதிகளை ஸ்ருஷ்டித்து அனுபவிக்கச் செய்கிறான்

ஒரு சமயம் முக்தனும் ஸத்ய ஸங்கல்பனாக ஸ்வ பித்ரு லோகாதிகளைத் தானே ஸ்ருஷ்டித்து மகிழ்கிறான்

இதனால் ப்ரஹ்ம அனுபவ ஏகதானத்வம் கெடாது என்பாதாம்

முக்தனுக்கு சரீரவத்வம் தோன்றுவதால் ஸ சரீரம் என்று கூறும் ஸ்ருதி
கர்மக்ருத சரீரம் இல்லை என்ற கருத்துடையதாகும் என்று கருத்து –

ஆமாம் -ஆத்மா அணு என்று கூறப்பட்டது
அப்படியானால் ஒரே ஆத்மாவுக்கு பல சரீரங்களில் ஆத்மாவாய் ஒரே காலத்தில் இருப்பு எப்படிப் பொருந்தும் –
அவற்றில் ஆத்மாபிமானம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி-

ஆத்மா அணு அளவே என்பதால் பல சாரீரங்கள் உள்ளதாக எண்ணுவது
எப்படி -பூர்வ பஷி

விளக்கு போன்று ஆத்மா பரவி இருப்பதால் -வேதம் இப்படியே கூறுவதால்
தர்ம பூத ஞானம் மூலம் பல சரீரங்களிலும் பரவலாமே
முக்தி பெறாத நிலையில் கர்ம வசத்தால் பல சரீரங்களில் பரவ முடியாது –
முக்தனுக்கு தடை இல்லையே

ஸ்வேதாஸ்வதர -5-9- வாலாக்ர சதபாகச்ய சததா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவ ச விஜ்ஞேய ச சா நந்த்யாய கல்பதே-என்றது
ஜீவனின் அணுத்வம் பற்றி நெல்லின் நுனியை நேராக வெட்டி அதில் ஒரு பாகத்தை நூறாக்கி -அந்த அளவு என்றது –

பூர்வ பஷி –
பர ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் உள்ளும் புறமும் உள்ள விஷயங்களை அறியாத
ஞான ஸூன்யனாக உள்ளான் என்பர்

ப்ருஹத் -4-3-21-ப்ராஜ்ஞேந ஆத்மநா ஸம்பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சஞ வேதநாந்தரம் -என்று
ஸ்ருதி உள்ளதால்
முக்தன் பல சரீரங்களில் வியாபித்து எங்கனம் செயல் படுவான் என்பர் –

ப்ரதீபவத் ஆவேச -விளக்கு ஒளி போல் தர்மபூத ஞான பிரகாசம் -வியாப்தி —
தேகாந்தரங்களுக்கும் கூடலாம் என்று கருத்து
ததா ஹி தர்சயதி-இவ்வாறே ஸ்ருதி காண்பிக்கிறது –

நாணு ரதத் ஸ்ருதே -என்ற ஸூத்ரத்திலே பர ப்ரஹ்மத்துக்கே மஹத்வம் சொல்லுகையாலே
ப்ரத்யகாத்மாவுக்கு அணுத்வமே ஸ்வரூபம் என்பதே ஸூத்ரகாரர் திரு உள்ளம் –

ஆமாம் -பர ப்ரஹ்மத்தை அடைந்தவருக்கு உள் -வெளி ஞானம் எல்லாம் அற்றுப் போவதாகச் சொல்வதால்
அவனுக்கு ஞானத்தின் ஆனந்த்யம் எவ்வாறு கூறலாம்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————–

4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

அந்த ஸ்ருதி வாக்கியம் உறக்க நிலை அல்லது மரண நிலை இரண்டில் ஒன்றை மட்டும் கூறுகிறது

ஸ்வாப்யய -என்றது ஆழ்ந்த உறக்கம் –சம்பத்தி -மரணம் –
சாந்தோக்யம் -6-8-6-வாங்க மனஸூ சம்பத்த்யதே –என்று தொடங்கி –
தேஜ பரஸ்யாம் தேவதா யாம் -என்று மரண காலத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்று முடித்தது –
இந்த நிலைகளில் ஞானம் என்பதே கூறப்பட்டது
முக்தனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவும்
முக்தி அற்றவனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவு அற்று போவதும் உண்டே

சாந்தோக்யம் -8-11-1-நாஹ கல்வயம் சம்ப்ரத்யாத்மானம் ஜா நாதி அயமஹமச்மீதி நோ ஏவேமா நி பூதா நி
வி நாசமே வாபீதோ பவதி நாஹம் அத்ர போக்யம் பஸ்யாமி-என்றும்

முக்தாத்மாவைக் குறித்து -8-12-5-6- ஸ வா ஏஷ திவ்யேந சஷூஷா மனசைதான் காமான் பஸ்யன்
ரமதே ய ஏதே ப்ரஹ்ம லோகே -என்று மோஷ நிலையில் அனைத்தும் அறிந்த தன்மை சொல்லப் பட்டது –

சாந்தோக்யம் -7-26-2-சர்வம் ஹ பச்ய பச்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்று முக்தன் அறியும் நிலையும்

ப்ருஹத் -2-4-12- ஏதேப்ய பூதேப்ய சமுத்தாய தான்யேவா நுவி நச்யதி-
ஞானச் சுருக்கம் அடைந்து எதனையும் காண்பதில்லை -என்றது –

ஆகையால் அணுவான முக்தனுக்கு தர்மபூத ஞான வ்யாப்தியாலே ஆனந்த்யம் கூறியது உக்தமே

சங்கல்ப ஏவ என்னும் அதிகரணத்தில் முக்தன் தனது ஸங்கல்பத்தினால் அனைத்தும் அடைகிறான் என்று கூறப்பட்டது
இப்போது இந்த அபவாதிகரணத்திலும் ஸங்கல்பத்தாலேயே தேஹத்தைக் கொள்கிறான் எனப்படுகிறது
இது கூறியது கூறியதாகாதா என்ன
இதில் முக்தன் ஒரு சமயம் தனது சங்கல்பத்தால் பெறலாம் என்றும்
வேறு ஒரு சமயத்தில் பரமபுருஷன் சங்கல்பத்தால் பெறலாம் என்று அர்த்த பேதம் இருப்பதால்
கூறியது கூறவில்லை என்பது ஸூத்ர காரரின் திரு உள்ளம்

———————————————————————————————————————————————————–

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் –

இனி ஜகத் ஸ்ருஷ்டியாதி உடைய சர்வேஸ்வரனாகவும் ஆகக்  கூடுமா
அல்லது இவை அற்று ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலான சாம்யமா
என்ற சம்சயம் சங்கதி

ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன –

4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —

நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-

அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே

இன்னும் அநேக ஸ்ருதி வாக்யங்கள் –
சாந்தோக்யம் -6-2-2/3-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐஷத
பஹூச்யாம் பிரஜா யேயேதி தத் தேஜ அஸ்ருஜத-என்றும்

ப்ருஹத் -1-4-11-ப்ரஹ்ம வா இதம் ஏவம் ஏவ அக்ர ஆஸீத் தத் ஏகம் சன்ன வ்யபவத் தச்ச்ரேயோ ரூபமத்ய
ஸ்ருஜத ஷத்ரம் யான்யேதானி தேவத்ரா ஷத்ராணீந்த்ரோ வருண சோமோ ருத்ர பர்ஜன்யோ யமோ ம்ருத்யு ரிசாந–என்றும்

ஐதரேயம் -1-1/2–ஆத்ம வா இதம் ஏக ஏவ அத்ர ஆஸீத் நாந்யத் கிஞ்சன மிஷத் ச ஈஷத
லோகாந்து ஸ்ருஜ இதி ச இமான் லோகா ந ஸ்ருஜத -என்றும்

மஹா நாராயண உபநிஷத் ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந நேமே த்யாவா ப்ருதிவீ
ந நஷத்ராணீ ந ஆப ந அக்னீ ந சோம ந ஸூ ர்ய ச ஏகாகீ ந ரமதே தஸ்ய
த்யாநாந்தஸ் தஸ்ய ஏகா கன்யா தசேந்த்ரியாணி -என்றும்

சதபத ப்ராஹ்மணம் -14-6-7-7-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர -என்றும் –

14-7-7-30-ய ஆத்மநி திஷ்டன் -என்றும் பரம் பொருளுக்கே என்றது –

ஜகத் வ்யாபார வர்ஜம்–முக்தனுக்கு ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி நியமனம் முதலிய லீலைகளைத் தவிர
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ மாத்ரத்திலே பரம ஸாம்யம் உள்ளது
ப்ரகரணாத் -யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம-இத்யாதி
ஸ்ருதிகளால் பர ப்ரஹ்மத்தை மட்டும் உத்தேசித்து ஜகத் வியாபாரம் ஸ்ருதம் ஆகையால் என்றபடி
அசந்நிஹிதத்வாத் ச-அந்தந்த ப்ரகரணத்தில் முக்தனுக்கு இடம் இல்லாமையாலும்
ஜகத் வியாபாரம் நீங்கலாகவே ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலேயே பரம ஸாம்யம் என்று ஸித்தம் –

——————————————————————————————————————————————————————-

4-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே

முக்தனுக்கு நான்முகன் போன்றவர்களின் உலக போகங்களும் கூறப்பட்டதே என்பதால்
ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உண்டு
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -7-25-2-ஸ ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்று
எங்கும் சஞ்சரிக்கலாம் என்றும்

தைத்ரியம் -3-10-5-இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன் -என்று
விரும்பிய லோகங்களில் விரும்பிய உருவம் எடுக்கலாம் என்றதே என்பர்

அப்படி அல்ல
கர்ம தொடர்பு நீங்கியதால் தடைபடாத ஞானம் கொண்ட முக்தனுக்கு
அனைத்து செல்வங்களும் அனுபவிக்கக் கிட்டும் என்பதே கருத்து

ஜகத் வியாபாரம் போன்றவை இல்லாமல் இருத்தலே இவனது ஐஸ்வர்யம் என்றும்
ஜகத் வியாபாரம் இல்லை என்றும் தெளிவாகிறது –

பிரத்யஷ உபதேசாத் –ஸ்ருதி -தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன்-என்றும்
உள்ள ஸ்ருதிகளால் முக்தனுக்கும் ஜகத் வியாபாரம் உபதிஷ்ட்டமாகையாலே
இதி சேத் ந -ஜகத் வியாபாரம் இல்லை என்றால் அது தவறு –

ஏன் எனில்
அதிகாரிக -பரமபுருஷனால் லோகத்தை நியமனம் செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள ஹிரண்ய கர்ப்பாதிகளில்
மண்டல ஸ்தோக்தே-லோகங்களில் உள்ள போகங்களில் முக்தனுக்கு இச்சை இருக்குமாகில்
அங்கங்கே இச்சா அனுகுணமாக பரம புருஷ அனுக்ருஹீதனாயக் கொண்டு அங்கு உள்ள போகங்களை
முக்தன் அனுபவிக்கிறான் என்று அந்த ஸ்ருதியால் கூறப்பட்டதால் படி
காமான்நீ என்றும் காம சரோ பவதி என்றும் காம போகாதிகள் மாத்ரமே ஸ்ருதி சித்தங்களே தவிர
நியுங்க்தே என்ற ஸ்ருதி இல்லாமையால் முக்தனுக்குக் கிடையாது என்பதாம் –

உத்பத்தி யாதிகளான விகாரங்களுக்கு உரியதாதலின் தோஷங்கள் கலந்ததும் அதி யல்பமுமான
சதுர்முக லோகத்தின் போகங்கள் முக்தனுக்கு எப்படிக் கூடும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————–

4-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-

மாற்றங்கள் உள்ள அல்ப இன்பம் அனுபவிக்கிறான் என்றால்
முக்தனின் செல்வமும் அல்பம் என்றது ஆகுமோ என்னில்
மாற்றம் இல்லாத பர ப்ரஹ்மத்தையும் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-7-யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே அநிக்ருதே அநிலயநே அபயம்
பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கதோ பவதி -என்றும்

ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி என்றும்

கட -தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்றும்

சாந்தோக்யம் -7-25-2- சர்வேஷூ லோகேஷூ காம சார -என்றும்

அனைத்து செல்வங்களுடன் கூடிய பர ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது
அனைத்தையும் அனுபவிப்பதாகவே கூறப்பட்டது

இதனை விடுத்து ஜகத் வியாபாரம் போன்ற எதுவும் அங்கே கூறப் பட வில்லையே

ஸ-ஸப்தம் உறுதிப் பொருளைக் காட்டுவது
விகாராவர்த்தி ஸ -உத்பத்தியாதி விகாரங்கள் இல்லாத பர ப்ரஹ்மமே தான் முக்தர்களுக்குப் போக்யம்
ஏன் எனில்
ததா ஹி சிததிமாஹ-நிர்விகாரமாயும் -அனவதிக அதிசய ஆனந்த ரூபமாயும் உள்ள பர ப்ரஹ்மத்தில்
முக்தனுக்கு அனுபவிப்பவனாக இருப்பைக் கூறுவதும் ஸ்ருதி என்ற காரணத்தால் என்பதாம்
யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே -என்ற வாக்யப்படி
ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி -என்றும்
ஸ்ருதிகளிலே இவ்வாறு கூறப்படுகிறது என்பதாம்

முக்தனுக்கு இதனால் சதுர்முக லோகாதிகளில் மிக அற்பமான ஸூக போகாததால்
வர இருந்த தோஷத்துக்குப் பரிஹாரம் எப்படி எனில்
தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்று ஸ்ருதி சொல்லுகிறபடி
உபய விபூதிகளுக்கும் ஆதாரமான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே
பூர்வம் கர்ம வசத்தால் ஹேயமாய்த் தோன்றிய லீலா விபூதியில் உள்ள பதார்த்தங்கள்
அடியோடு கர்மாக்கள் அழியப் பெற்ற முக்தனுக்கு ப்ரஹ்மத்தின் விபூதியாக
மிக்க அனுகூலமாய்த் தோன்றுவதால்
ப்ரஹ்மத்தின் விபூதியில் உள்ளடங்கிய சதுர்முக லோகாதிகளில் உள்ள பதார்த்தங்களின் போகத்தையும்
ப்ரஹ்ம அனுபவத்தைச் சார்ந்ததாகவே முக்தன் அனுபவிக்கிறான் என்று இவ்வர்த்தத்தையே கூறுகிறது
சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி என்னும் ஸ்ருதி
ஆகையால் தோஷம் இல்லை என்று கருத்து –

—————————————————————————————-

4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-

ப்ரத்யஷம் -ஸ்ருதி
அநுமாநே-ஸ்ம்ருதி
இவைகள் இவ்வாறு
தர்சயத ச ஏவம் -ஜகத் வியாபாராதிகள் பகவானுக்கே உரியவை -முக்தனுக்குக் கிடையாது -என்றும்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமே அவனுக்கு உள்ளது என்றும்
இத்தகைய அர்த்தங்களைக் காட்டுகின்றன

ஜகத் வியாபாரம் பரம புருஷனுக்கே உரியவை என்று ஸ்ருதிகள் கூறுமே

தைத்ரியம் -2-8- பீஷாச்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூ ர்ய பீஷாஹ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சமா இதி -என்றும்

ப்ருஹத் -3-8-9-ஏதஸ்ய வா அஷரச்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்

ப்ருஹத் -2-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேதுர்விதரண ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய -என்றும்

ஸ்ரீ கீதை –
9-10-மாயத்யஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நாகேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

10-42-விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ச்னம் ஏகாம் சேன ஸ்திதோ ஜகத் -என்றும்

இது போலே முக்தனின் சங்கல்பம் ஆனந்தம் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் என்று ஸ்ருதிகள் முழங்கும்

தைத்ரியம் -2-7-ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

ஸ்ரீ கீதை –
14-26-மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத்ய ஏதான் ப்ரஹ்ம பூபாய கல்பதே -என்றும்

14-27-ப்ரஹ்மணோஹி பிரதிஷ்டாஹம் அம்ருதச்ய அவ்யயச்ய ச சாச்வதச்ய ச தர்மஸ்ய ஸூ கஸ்ய ஏகாந்தி கஸ்ய ச -என்றும்

அனைத்தும் அவன் இச்சை சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று

—————————————————————————————

4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச

ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடன் சாம்யம் கூறுவதால்
ஜகத் வியாபாரம் இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐஸ்வர்யம் என்றதாயிற்று

ப்ரஹ்மத்துடன் கூடி இருந்தே முக்தன் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-1- சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறது –

———————————————————————————-

4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

ஜகத் காரணத்வம் -ஜகன் நியந்த்ருத்வம் முதலியவை பரம புருஷனுக்கே அசாதாரணமானவை என்றால்
இவ்வாறு ஸ்வ தந்த்ர குண ஸர்வேஸ்வரன்
முக்தனை மீண்டும் ஒரு கால் சம்சாரி யாக்கக் கூடுமே என்கிற
சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

பரமாத்மாவாலே முக்தனின் ஐஸ்வர்யம் என்றால் அவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ –
சம்சாரத்துக்கு தனது சங்கல்பத்தினால் அனுப்புவானோ என்னில்

அகில ஹேய ப்ரத்ய நீகன்
சமஸ்த கல்யாண குணகன்
ஆதி ஸ்வாமி எங்கும் வியாபித்து உள்ளவன் சத்ய சங்கல்பன்
சர்வஜ்ஞன் வாத்சல்யம் மிக்கவன் பரம காருணிகன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
தானே கர்ம பலன்களை நீக்கி தன்னை அனுபவிக்கப் பண்ணுபவன்
இவற்றை எல்லாம் ஸ்ருதி மூலமே அறிகிறோம்

அதே ஸ்ருதி மீண்டும் அனுப்புவது இல்லை என்கிறதே-

அநாவ்ருத்தி சப்தாத்
இங்கு ஆவ்ருத்தி யாவது பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்தை விட்டு சம்சாரி ஆதல்
அநாவ்ருத்தி -ஒரு காலும் அவ்வாறு சம்சாரத்துக்குத் திரும்பாமை
பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்கு இடையூறு இல்லாது இருக்கை
சப்தாத் -இது முக்தனுக்கு சப்தத்தால் தெரிகிறது

பகவானுக்கு ஸ்ரஷ்டத்வம்-நியந்த்ருத்வம் முதலியவை ஸ்ருதியால் தெரிவது போலவே
ஏதேந ப்ரதிபத்ய மாநா இமாம் மாநவ மா வர்த்தம் நா வர்த்தந்தே என்றும்
ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே-என்றும் ஸ்ருதியிலும்
இதம் ஞானம் உபாச்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா சர்க்கேபி நோப ஜாயந்தே பிரளயே நவ்ய சந்திச-என்று ஸ்ம்ருதிகளாலும்
முக்தனுக்கு ஆவ்ருத்தி இல்லை என்று தெரிகிறதே –

சாந்தோக்யம் -8-12-1-ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே -என்றும்

ஸ்ரீ கீதை –
8-15-மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலய சாஸ்வதம் நாப் நுவந்தி மஹாத்மன சம்சித்திம் பரமாம் கதா -என்றும்

8-16-ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்
சொல்வதால் அவன் அனுப்ப மாட்டான்

பர ப்ரஹ்மத்தையே அனுபவிக்கும் சுருக்கம் இல்லாத ஞானம் கொண்ட முக்தன்
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மீண்டும் பிறப்பான் என்ற அச்சம் தேவை இல்லை

தனக்கு மிகவும் பிரியமான ஞானி
ஸ்ரீ கீதை –
7-17-ப்ரியோ ஹி ஜ்ஞாநின அத்யர்த்தம் அஹம் ச ச மம்ப்ரிய -என்றும்

‘7-18-உதாராஸ் சர்வே ஏதைவி ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் -என்றும்

7-19- பஹூ நாம் ஜன்மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸூதேவஸ் சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப

இப்படி கிடைப்பதற்கு மிகவும் அரியவன் நான் விடுவேனோ

ஸ்ரீ பாஷ்யம் நியமிக்கப் படுவதால் இரண்டு தடவை -அநாவ்ருத்தி சப்தாத் –அநாவ்ருத்தி சப்தாத் —

இங்கு பாஷ்யத்தில் அபிமதமான நான்கு வகை சங்கைகளுக்கும் பரிஹாரம் வருமாறு

1-பரமபுருஷன் ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆதலால் அவனை விட உயர்ந்த புருஷனால் ஆவ்ருத்திக்கு சங்கை இல்லை
2-அநவதிக அதிசய ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை அனுபவிப்பவனுக்கு அந்ய அபேக்ஷை இல்லாததாலே
ஸ்வ இச்சையாலும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
3-இவனுக்கு வாஸனையோடே கர்ம சமுதாயம் நசித்த படியாலே கர்ம மூலமாகவும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
4-பரம புருஷன் ஸ்வ தந்திரனானாலும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் முக்தனைத் தான்
திரும்பி அனுப்ப மாட்டேன் என்ற ஸங்கல்பம் மீற மாட்டாதவன் ஆகையால் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது

ஆகையால் காலதத்வம் உள்ளவரையும் முக்த ஐஸ்வர்யம் நிலை பெற்றதாகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி

சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ

வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

எல்லாம் மிகவும் ஸமஞ்சஸம்

இந்த கடைசி ஸூத்ரத்தை தனி அதிகாரணமாக சிலர் கொள்கிறார்கள்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அது திரு உள்ளம் அன்று
இது பூர்வ அதிகரண சேஷமாகவே கொள்ளத் தக்கது

ஆகவே
ஸர்வ ஸ்வாமியான பரம புருஷனுக்கு அசாதாரண சிஹ்ன மான
ஜகத் காரணத்வம்
மோக்ஷ ப்ரதத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
சேஷ ஸாயித்த்வம்
முதலியவற்றுடன்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யமே முக்தனுக்கு உரியது
என்று இந்த அதிகரணத்தின் அர்த்தம் நிலை பெற்றது –

————–

ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில் ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

ஆகியவை விளக்கப் பட்டன

மங்களம் ஸ்ரீ பாஷ்காராய மஹநீய குணாப்தயே
மங்களம் பூர்வ பாச்சாத்ய குருப்யோ அஸ்து நிரந்தரம் –

————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —

November 27, 2021

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூப

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

வித்வானுக்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிக தேவதைகளால் செய்யப்படும் உபசார ரூபமான
ப்ரஹ்ம வித்யா பலத்தை மூன்றாம் பாதத்தில் நிரூபிக்கிறார் என்று சங்கதி

இப்படி தேகத்தில் இருந்து வெளிக் கிளம்பிய வித்வானுக்கு மூர்த்தன்ய நாடியாலே
கதி தொடங்குவது முன் பாதத்தில் கூறப்பட்டது
இந்தப் பாதத்தில் மார்க்கம் நிர்ணயிக்கப் படுகின்றது என்று சங்கதி –

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம வித்யை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் –

சாந்தோக்யத்தில் உபகோஸல வித்யையில் அர்ச்சிராதி கதி சொல்லப்பட்டு
மீண்டும் எட்டாம் அத்தியாயத்தில் தஹர வித்யையிலும் சொல்லப்படுகிறது

கௌஷீதகி சாகையிலும் வேறு விதமாக அர்ச்சிராதி கதி சொல்லப்படுகிறது

ப்ரஹ்தாரண்யத்திலும் இரண்டு இடங்களிலும் உண்டு

இவை எல்லாம் ஒன்றா பலவா
வித்வான் ஒரே மார்க்கத்தில் செல்கிறானா
இவ்வாறு பல மார்க்கங்களில் செல்கிறானா என்று சம்சயம் –

அந்தவந்த மார்க்கங்களுக்கு ப்ரஹ்ம ப்ராப்தியில் பரஸ்பர அபேக்ஷை இல்லை –
பற்பல மார்க்கங்கள் தோன்றுவதால் விகல்பமே-
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

அர்ச்சிராதி கதி மூலமே -அதற்கே பிரசித்தம் உள்ளது –

சாந்தோக்யம் -4-15-5/6-
அத யது ச ஏவ அஸ்மின் சவ்யம் குர்வந்தி யது ச ந அர்ச்சிஷமேவ அஹ-அன்ஹ -அபூர்யமாண பஷம்
அபூர்யமாண பஷாத் யான் ஷடுதங்நேதி மாசாம்ஸ்தான் மாசேப்ய-சம்வத்சரம் சம்வத்சரான் ஆதித்யம்
ஆதித்யான் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் தத்புருஷோ அமாநவ ச ஏதான் ப்ரஹ்ம கமயதி
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமா நா இமம் மா நவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே -என்கிறது

இதே உபநிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் -8-6-5-
அத ஏதைரேவ ரச்மிபி ஊர்த்வம் ஆக்ரமதே -என்று
ஸூர்ய கிரணங்கள் மூலமாகவே கிளம்புகிறான் என்கிறது –

கௌஷீதகீ -1-3- ச ஏதம் தேவயாநம் பந்தா நம் ஆபத்ய அக்னி லோகம் ஆகச்சி ச வாயு லோகம் ச வருண லோகம்
ச ஆதித்ய லோகம் ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம் ச ப்ரஹ்ம லோகம் -என்கிறது

ப்ருஹதாரண்யகம் –
6-2-15-
ய ஏவமேவ விது-ஏ ச கிமே அரண்யே ஸ்ரத்தாம் சத்யம் உபாஸ்தே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹ –
அஹ்ந ஆபூர்யமாண பஷம் ஆபூர்யமாண பஷாத் யான் ஷண்மாசான் உதங் ஆதித்ய ஏதி மாசேப்ய தேவலோகம் தேவ லோகாத்
ஆதித்யம் ஆதித்யாத் வைத்யுதம் வைத்யுதாத் புருஷோ மானச ச ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -என்றும்

5-10-1-
யதா வை புருஷ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமா கச்சதி தஸ்மை ச விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன
ச ஊர்த்வம் ஆக்ரமதே ச ஆதித்யமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ஆடம்பரச்ய கம் தேன ச
ஊர்த்வமாக்ரமதே சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்த விஜிஹீதே யதா துந்துபே கம் -என்கிறது

இப்படி அனைத்து இடங்களிலும் அர்ச்சிராதி கதி பிரசித்தம் –
சில இடங்களில் கூட்டியும் குறைத்தும் சொல்லப் பட்டாலும்
அர்ச்சிராதி கதி அக்னி ஸூர்யன் போன்றவை ஓன்று போலே படிக்கப் படுகிறது –

அர்ச்சிராதி நா -வித்வான் அர்ச்சிராதி மார்க்கத்தில் தான் போகிறான்
தத்ப்ராதிதே –எல்லா ஸ்ருதிகளிலும் அதற்கே ப்ரஸித்தி இருக்கிற படியால்

ஆதித்யாதர்கள் விளக்கப்படுவதால் அனைத்தும் ஒரே மார்க்கமே
ஒன்றில் கூறிய விசேஷங்களை கூறப்படாத இடத்தில் உப சம்ஹாரம் செய்து
சேர்த்து அனுசந்தானம் செய்யப்பட வேண்டும்

சிலருக்கு ப்ரஹ்ம பிராப்தி இம் மார்க்கம் இல்லாமலும் உண்டு என்பதே பாஷ்ய காரர் திரு உள்ளம்
சிசுபாலாதிகள் -அயோத்யையில் வாழும் சராசரங்கள் -புண்டரீக பீஷ்மாதிகள் –
விபவ அவதார வ்யூஹ அவதார லோகத்தவர் -ப்ரஹ்மாக்கள் -அவர்கள் புத்ரர்கள் -போல்வார்
அதிகாரத்துக்கு ஏற்ப வேறு மார்க்கங்கள் உண்டே –

————————————————————————————————–

அதிகரணம் -2-வாய்வதிகரணம் –

அர்ச்சிராதி மார்க்கத்தால் வித்வான் போகிறான் என்றது கீழ்
இப்போது அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கிரமத்தை நிரூபிப்பதே சங்கதி –

சாந்தோக்யத்தில் ஸம்வத்ஸரத்துக்கும் ஆதித்யனுக்கும் நடுவிலே வாயு நிரத்திஷ்டன்
ப்ரஹதாரண்யத்தில் மாசத்திற்குப் பிறகு வாயு நிரத்திஷ்டன்
இவ்விடத்தில் சாந்தோக்யத்தில் சொன்ன சம்வத்சரத்தை மாதத்திற்குப் பிறகு வைக்க வேண்டும்
இப்படி இரண்டு இடத்திலும் மதியத்தில் நிர்த்திஷ்டையான வாயு தேவ லோக சப்தங்கள்
ஒரே பொருள் உள்ளவையா
வெவ்வேறு பொருள் உள்ளவையா என்று சம்சயம்

அவை வெவ்வேறு பொருள் உள்ளவை யாதலின்
வாயுவிற்கு பின் தேவ லோகம் சென்று பின் ஆதித்யனை அடைகிறான்
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்

சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது

4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும்

ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது

வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர
விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது

சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் –
தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்

வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும்

யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ –
வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-

வாயும் அப்தாத் -சம்வத்சரத்துக்கு மேலேயும் ஆதித்யனுக்குக் கீழும் வாயுவை மட்டும் வைக்க வேண்டும்
ஏன் எனில்
அவிசேஷ விசேஷாப்யாம்-பொதுவாயும் சிறப்பாயும் உள்ள சொற்களால் என்றபடி

இங்கு தேவலோக ஸப்தம் ஸாமான்யம்
வாயு ஸப்தம் விசேஷம்
தேவ லோக ஸப்தத்தால் தேவர்களின் வாசஸ் ஸ்தானம் என்ற காரணத்தால் வாயுவே கூறப்படுகிறது –
அதுவே விசேஷமாகும்
இரண்டும் ஒரே பொருளைக் கூறுவதால் ஸம்வத்சரத்துக்கு மேல் வாயுவை மட்டிலும்
அதற்கு மேல் ஆதித்யனையும் குறிப்பதே சரியான க்ரமம் என்றதாயிற்று
யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் ப்ரிய -என்பதே இதற்குப் பிரமாணம் –

—————————————————————————————–

அதிகரணம் 3-வருணாதி கரணம் –

இங்கும் ஆதி வாஹிக க்ரம சிந்தனையே என்று சங்கதி –

தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் –

கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது

ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல் வருணன்

வாயு வின் பின்னாலா வருணளின் பின்னாலா

சாந்தோக்யத்திலும் வாஜஸ நேயத்திலும் ஸர்வ ஸாகா பிரத்யய நியாயத்தாலே
அர்ச்சஸ் அஹஸ் பூர்வ பக்ஷம் உத்தராயணம் சம்வத்சரம் வாயு ஆதித்யன் சந்திரன் மின்னல்
வருணன் இந்திரன் பிரஜாபதி -ஆக 12 தேவதைகளும் அர்ச்சிராதிகள் என்று ப்ரஸித்தர்கள்

அவற்றுள் வாயு வரை ஸ்ருதி க்ரமம் கூறப்பட்டது
வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு மேலே மின்னலுக்கு இடம் குறிப்பது சரியா என்று சம்சயம்

கௌஷீ தகியின் பாட க்ரமம் படி -வாயுவுக்கு மேல் வருணனுக்கு
வருணனுக்கு மேல் இந்த்ர ப்ரஜாபதிகளுக்கும்
வாய்ப்பு பொருந்தும் என்பது பூர்வ பக்ஷம்

இத்தை நிரஸிக்கிறார்

மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்

அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் –
அமானவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –

தடித- அதி வருண -சம்பந்தாத் —
வருண-தடித- அதி–வருணன் மின்னலுக்கு மேல் வைக்கத் தக்கவன் –
சம்பந்தாத் —இருவருக்கும் சம்பந்தம் இருப்பதால்
மின்னல்கள் மேகத்திலும் இருப்பதால் -அதிலே இருக்கும் ஜலத்துக்கு வருணன் அதிஷ்டான தேவதை யாதலின்
இருவருக்கும் சம்பந்தம் தோன்றுகிறது

ஆகையால் கௌஷீதகி பாடக்ரமத்தைக் காட்டிலும் -மேகத்தினுள் இருப்பு என்ற சம்பந்த க்ரமம் பலமுள்ளதாதலின்
மின்னலுக்கு மேல் தான் வருணனை வைக்க வேண்டும்
அதனால் ஸ ஏநாத் ப்ரஹ்ம கமயதி -என்கிறபடி
வித்யுத் தேவதையான அமானவனுக்குச் சொன்ன ப்ரஹ்ம கமயித்ருத்வம் -ப்ரஹ்மத்தை அடைவிக்கும் தன்மை –
வருணனை வைப்பதால் இடையீட்டைப் பொறுக்கக் கூடியது என்று தோன்றுகிறது
ஆகையால் இந்த்ராதிகளுக்கு வருணனுக்கு மேலே இடம் வைப்பது உசிதம்

ஆகவே அக்னி தொடங்கி பிரஜாபதி வரை 12 ஆதி வாஹிக தேவர்களுக்கும் க்ரம விசேஷம் ஸித்திக்கிறது –

—————————————————————————————————————

அதிகரணம் -4-ஆதி வாஹாதி கரணம் –

அர்ச்சிராதிகள் மார்க்கத்தின் அடையாளமானவர்களா
அல்லது போக ஸ்தானங்களா
அல்லது ப்ரஹ்மத்தை அடையும் வித்வான்களை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்களா
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி

அடையாளமானவர் என்பர் பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் இதில்

அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-

இவர்கள் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்-
இப்படியாக ப்ரஹ்மத்தால் நியமிக்கப் பட்டவர்களே அடையாளங்கள் உண்டே –
அதி வஹ -அழைத்து செல்பவர்கள்

சாந்தோக்யம் -4-15-5-/5-10-2-தத் புருஷ அமானவன் ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
இறுதியில் சொன்னதால் முன்பே கூறப்பட்டவர்களும் ஆதி வாஹர்கள் என்றே கொள்ள வேண்டும்

அர்ச்சிஸ் பதங்கள் அபிமான தேவதைகளையே குறிக்கும்

மின்னலுக்கு பின் படிக்கப் பட்ட வருணன் இந்த்ரன் பிரஜாபதிகளை விட்டு
வித்யுத் புருஷன் மட்டும் என்பர்
பூர்வ பஷி –

சித்தாந்தம் அப்படி அல்ல
பரமபுருஷனால் நியமிக்கப் பட்ட அபிமானி தேவதைகள்
ப்ரஹ்மத்திடம் வித்வான்களை அழைத்துச் செல்பவர்கள்
ப்ரஹ்மத்திடம் சேர்ப்பிப்பதற்கு அங்கங்கள் உண்டே

—————————————————————-

4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

வருணன் உள்ளிட்டவர்கள் அமாநவ புருஷனுக்கு இந்த பணியில் உதவி செய்கிறார்கள் –

இந்த அர்ச்சிராதிகள் அக்னியாதி தேவதைகளுக்கும் அதிஷ்டாதாக்களான நித்ய ஸூரிகள் என்று ஒரு பக்ஷம்
வைத்யுதன் மட்டும் நித்ய ஸூரி என்று ஒரு பக்ஷம் உண்டு என்பது ஸ்வாமி தேசிகன் திரு உள்ளம்

அர்ச்சிராதி மார்க்கத்தால் ஸூர்ய பிராப்தி போலே
தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது
இது கர்மபலனை அனுபவிக்க ஆனதால் முன் கூறிய சந்த்ர ப்ராப்தியை விட வேறானது

அப்படியே புருஷ வித்யையில் ப்ரஹ்ம வித்துக்களுக்கும் தஷிணாய மானத்தால்
சந்திரனை அடைதல் ஆகிய பலன் கூறப்படுகிறது
இதுவும் வேறு தான்

இந்த அதிகரணத்தில் தஷிணாயணத்திலும் உத்தராயணத்தில் இறந்த ஸர்வ ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
சாதாரணமாக ஆதி வாஹிக க்ரமத்தில் எட்டாவதாக சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது

இதுவும் முன் சொன்ன இரு வகை சந்த்ர ப்ராப்திகளிலும் வேறு பட்டதாய் அபவர்க்கம் செல்பவர்கள்
அனைவருக்கும் பொதுவாய் உள்ளது என்று நுண் அறிவுள்ளோரால் அறியத்தக்கது என்று
அதிகரண சாராவளியில் ஸ்வாமி தேசிகன் காட்டி அருள்கிறார் –

———————————————————————————————————————————————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் –

இதில் இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ராப்யமான ஸ்தான விசேஷத்தை
நிஷ் கர்ஷிக்கிறார்
என்று அதிகரண சங்கதி –

இந்த ஆதி வாஹ்யகர்களின் கூட்டம் பர ப்ரஹ்மத்தின் படைப்பான
ஹிரண்ய கர்ப்பனின் உபாசகர்களை சேர்ப்பிக்கிறார்களா
அல்லது பர ப்ரஹ்ம உபாசகர்களையா
அல்லது ஜீவனை -ப்ரத்யகாத்மாவை -ப்ரஹ்மாத்மகமாக உபாசிக்கும் பஞ்சாக்னி நிஷ்டர்களையும்
ஸ்வ ஆத்மாவை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாசிப்பவர்களான சத் வித்யா தஹர வித்யா நிஷ்டர்களையா
என்று மூன்று வித சங்கைகள் –

இதில் கார்யமான ஹிரண்யகர்ப்ப உபாசகர்களையே ஹிரண்ய கர்ப்ப லோகத்தில் சேர்ப்பிக்கிறது
என்பது பூர்வ பக்ஷம்
இவ்விஷயம் ஐந்து ஸூத்ரங்களால் விளக்கப்படுகிறது –

ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள்
என்பது நிரூபிக்கப் படுகிறது –

4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே

ஹிரண்ய கர்ப்பனான நான்முகனை உபாசிப்பவர்களையே –
என்பர் பூர்வ பஷி –

பரிபூர்ணான ப்ரஹ்ம உபாசகனுக்கு ஒரு இடம் தேடி செல்ல வேண்டியது இல்லையே
எங்கும் உளன் ஆதலால்-

பின் பர ப்ரஹ்ம உபாசனம் இவர்களுக்கு எதற்கு எனில்
அவித்யையின் நிவ்ருத்திக்கே யானது
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ஆனதல்ல
இந்த பாதிரி மதமே சங்கர மதத்துக்கு ஆதாரம் –

எனவே கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாசிப்பவர்களையே
அமானவன் கூட்டிச் செல்கிறார்கள் என்பர் –

———————————————————————————–

4-3-7- விசேஷி தத்வாத் ச

ப்ருஹத் -6-2-15-புருஷ மானஸ ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி –
ப்ரஹ்ம லோகம் அழைத்து செல்கிறான் என்பர்

சாந்தோக்யம் -8-14-1-ப்ரஜாபதே சபாம் வேச்ம ப்ரபத்யே –
பிரஜாபதியின் அரச சபையை அடைகிறேன் -என்பர்

அப்படி ஆகில் –
சாந்தோக்யம் 4-15-5/5-10-2-தத்புருஷ அமாநவ ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
என்றது பொருந்தாதே

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம் பொருந்தாதே –

ப்ரஹ்மாணம் கமயதி என்று அன்றோ இருக்க வேண்டும் –

——————————————————————————–

4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம்-நான்முகனைக் குறிக்கும் என்பர்
நெருக்கமாக உள்ளவன் என்பதால் இப்படியே கூறப்படுகிறது

சாந்தோக்யம் -6-18-யோ ப்ரஹ்மாணம் விததாதி –
பிரமனை யார் படைக்கின்றானோ

சாந்தோக்யம் -4-15-6-
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதே ந பிரதிபத்யமா நா இமம் மானவமவர்த்ததம் நாவர்த்தந்தே -என்றும்

கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-/தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி -என்றும்
திரும்புதல் இல்லை என்றதே

ஆனால் ஸ்ரீ கீதை-8-16- -ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன -என்று
நான்முகன் இருப்பிடம் வரை சென்ற அனைத்தும் திரும்புகின்றன என்றதே

இரண்டு பரார்த்தங்களின் முடிவில் நான்முகனுக்கும் முடிவு உண்டே

——————————————————————————–

4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —

ப்ரஹ்ம லோகம் நான்முகன் அழியும் போது உபாசகன் அங்கு இருந்து
பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது

மஹா நாராயண உபநிஷத் -12-3-
தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரிமுச்யந்தி சர்வே -என்றதே –

இப்படி ஹிரண்ய கர்ப்பனின் ஸ்தானமே ப்ராப்யமானால்
அது நசிக்கக் கூடியதாதலால்
அமும் லோகம் நாவர்த்தந்தே என்று அபுநா வ்ருத்தியைச் சொல்லுகிற ஸ்ருதிக்கு உப பத்தி யாது என்றால்
கார்யாத்யயே -கார்யமான பிரமலோகம் நசித்த போது
ததத்ய ஷேண ஸஹ -அந்த லோகத்தின் தலைவருடன்
அத பரம் -அவனை விடச் சிறந்த ப்ரஹ்மத்தை அடைகிறான்
அவிதா நாத் —பாரமான அம்ருதத்வத்தை அடைந்து முக்தியை அடைகிறான் என்பதாம் –

———————————————————————————

4-3-10-ஸ்ம்ருதேச் ச

ஸ்ம்ருதியிலும் இவ்வாறே கூறப்படுகிறது –

ஸ்ரீ கூர்ம புராணம் -12-269-ப்ரஹ்மணா சஹ தே சர்வே சம்ப்ராப்தே பிரதிசஞ்சரே பரஸ் யாந்தே
க்ருதாத்மனா ப்ரவி சந்தி பரம் பதம் -என்கிறது-

பிரளயத்தின் முடிவில் சதுர்முகனின் ஆயுள் முடிந்ததும் அவருடன் சேர்ந்த அனைவரும் பரமபதத்தை அடைகின்றனர்
ப்ரதி சஞ்சாரம் -பிரளயம் -நான்முகனின் ஆயுள் முடிவு

இப்படியாக பல ஸூத்ரங்களால் நான்முகனை உபாசிப்பவர்களையே அழைத்து செல்வதாக
பாதரி என்னும் ஆச்சார்யர் உரைத்தார்

இனி ஜைமினி அடுத்த 3 ஸூத்ரங்களால் தனது கருத்தை உரைக்கிறார் –

————————————————————————————-

4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்

பரம் பொருளை உபாசிப்பவர்களையே அழைத்துக் கொண்டு செல்வதாக ஜைமினி கூறுகிறார் –
முக்கியமாக உள்ளதால்

பர ப்ரஹ்மம் எங்கும் இருந்த போதிலும் பரமபதம் சென்ற பின்னரே ப்ரஹ்ம ஞானிக்கு
தனது ஸ்வரூபம் மறைக்கும் கர்மங்கள் அழியும்

அவித்யை நீங்கி ப்ரஹ்ம அனுபவம் ஏற்படும் –
ப்ருஹத் -ப்ரஹ்ம லோகன் -என்றது
ப்ரஹ்மமாக உள்ள லோகம் என்று பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
லோகான் என்ற பன்மை கௌணமாகும்

———————————————————————————————————

4-3-12-தர்ச நாத் ச —

ஸ்ருதியிலும் காணலாம் –

சாந்தோக்யம் -8-3-4-
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஞோதி ரூப சம்பந்தய ஸ்வேண ரூபேண அபி நிஷ்பத்யதே

நான்முகனை அடைதல் தள்ளப் பட்டது

————————————————————————————————————————

4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —

அர்ச்சிராதி மார்க்கத்தால் சென்ற வித்வானுக்கு
கார்யே-கார்யமான சதுர்முக லோகத்தில்
ந ச பிரத்யபி சந்தி-ஆர்வம் இல்லை
ஏன் எனில்
ப்ராப்யமான லோகம் நித்யம் என்று விசேஷிதம் ஆகையால்

சாந்தோக்யம் -8-14-1-யசோஹம் பவாமி ப்ரஹ்மணாநாம்-
அனைத்துக்கும் ஆத்மாவாக பரமாத்மா உள்ளதாக எண்ணுவதால் அவித்யை நீங்கப் பெற்று
இந்த எண்ணம் நிலைக்கப் பெற்று உள்ளான் –

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூயபாபம் சந்திர இவராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருத்தாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றது

நித்தியமான பர ப்ரஹ்ம லோகத்தையே -நான்முகனின் பிரமலோகம் அல்ல –

——————————————————————————————————————————————————————————

4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத் க்ரது ச

ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பிராப்யமாகக் கொண்டு உபாசிக்காதவர்களை
அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்து செல்கின்றனர் -என்பர் பாதராயணர்

இவ்விதம் கூறாமல் மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன –
இதனையே தத் க்ரது நியாயம் கூறும்

பிரதீகம் -ப்ரஹ்மத்தின் அவயவம்சித் அசித் -போன்றவை –

ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்கிறார்

பர ப்ரஹ்மத்தை உபாசிப்பவர்கள் அனைவருக்கும் மோஷ பிராப்தி இல்லையே –
ஐஸ்வர்யம் கைவல்யம் வேண்டுவாரும் அவனையே உபாசிப்பதால்

ஜீவாத்மா ஸ்வரூபத்தை பஞ்சாக்னி வித்யையின் படி -பரமாத்மாவின் ஸ்வரூபமே ஆத்மா என்று உணர்ந்து –
உபாசிப்பவர்களும் மோஷம் அடைகிறார்களே

இவர்களும் பூர்ண ப்ரஹ்ம உபாஸகர்களே
உபாசனத்தில் விசேஷண விசேஷ்ய பாவத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது
இதனால் எந்தக் குறையும் இல்லை

அதாவது
ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மா -என்று உணர்ந்து
உபாசனையின் படியே பலம் என்பதையே தத் க்ரதுச்ச தத்க்ரது -என்கிறது –

——————————————————————————————————————

4-3-15-விசேஷம் ச தர்சயதி

ப்ரதீகங்களை உபாசிப்பவர்களுக்கு அல்ப பலமே கிட்டும் –

சாந்தோக்யம் -7-1-5-யாவன் நாம் நோ கதம் தத்ர அஸ்ய காமசாரோ பவதி –

அளவான பலனே கிட்டும்
அர்ச்சிராதி மார்க்கம் கிட்டாது

பராந்த காலே – சரம தேஹ அவசான காலத்தில்
பராம்ருதாத் -உபாசன ப்ரீதனான பரமாத்மாவின் மூலமாக
பரிமுச்யந்தே சர்வே -வேதாந்த விஞ்ஞானத்தால் மயர்வற்று தெளிவு பெற்று
பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்

——————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

ஐந்து அர்த்தங்களை ஸ்தாபித்து அருளினார் இப்பாதத்தில் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

November 27, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்

—————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –

முன் பாதத்தில்
ஸ்தூல தேகத்தில் இருக்கும் போது பாபங்கள் அஸ்லேஷமும் விநாசமும் வித்யா பலமாகக் காட்டி
இரண்டாம் பாதத்தில்
அர்ச்சிராதி கதிக்கு உபக்ரமாயும்
அழியும் நிலையில் உள்ள ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தியை -புறப்பாட்டை -முடிவாகவும் கொண்ட
வித்யா பலத்தைச் சிந்திக்கிறார் என்று பாத சங்கதி –

கதிக்குத் தொடக்கமான உத் கிராந்தி கூறப்படுவதால்
அதிகரண சங்கதி

ஆமாம்
வைராக்ய பாதத்தில் ஜீவனின் ஜாக்ரத் தசை முதலியன நிரூபிக்கப் பட்டமையால்
அத்துடனேயே இந்திரியாதிகளின் குழப்ப நிலையான மரணம் பற்றியும் பேச வேண்டி இருக்க
இங்கு தனியே யது பற்றிச் சொல்வதன் கருத்து யாது என் எனில்

ப்ரஹ்ம வித்தின் உத் க்ராந்தியில் மூர்த்தன்ய நாடி மூலமாக கமனம் சொல்வதற்காக
வைராக்ய பாதத்தில் பொதுவாக உத் க்ரமணத்தைக் கூறி
இங்கு விசேஷத்தைக் கூறியபடி யாம் –

முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –

11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் –
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –ஸூத்ரங்கள்–
தஷிணாயநத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————————————

அதிகரணம் -162-வாகாதி கரணம் -4-2-1-

உத் க்ராந்தத்தைப் பற்றிய ஸ்ருதி வாக் இந்த்ரி யத்துக்கு மனஸ்ஸில் லயத்தைச் சொல்லுகிறதா –
என்று சம்சயம்
வாக்கானது மனத்தை மூலமாகக் கொள்ளாமையால் ப்ரக்ருதியை விட்டு வேறு ஒன்றில்
எதற்கும் லயம் கூடாமையாலே
வாக் வ்ருத்தி மாத்ரத்தின் லயத்தை இது சொல்கிறது
என்று பூர்வ பக்ஷம்
இதனை நிராகரிக்கிறார் –

மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது
என்று நிரூபிக்கப் படுகிறது

497- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –4-2-1-

காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும் –
சாந்தோக்யம் -6-8-6-அஸ்ய சோம்ய புருஷஸ்ய ப்ரயத வாங்மனஸி சம்பத்யதே மன ப்ராணே
ப்ராணா தேஜஸி தேஜ ப்ரச்யாம் தேவதாயாம் -என்று
உடலை விட்டுக் கிளம்பும் உபாசகனின் வாக்கு இந்த்ரியம் மனதை அடைகிறது –
மனம் பிராணனிலும் -பிராணன் தேஜச்சிலும்-தேஜஸ் உயர்ந்த வஸ்துவிலும் சேர்கின்றன -என்றது

இந்த்ரியமா– செயல்பாடா– சங்கை

பூர்வ பஷி செயல்பாடு என்பர் –
செயல்பாட்டுக்கு மனம் பிரதான கார்யம் என்பதால் –

அப்படி அல்ல
ஸ்வரூபமே இணைகிறது –
வாக் செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண்கிறோம்

பூர்வ பஷி வாதம் போலே
மனம் வாக் இந்த்ரிய காரணம் அல்ல
எனவே லயிக்கிறது எனபது பொருந்தாது –
சுருதி வாக்யத்தின் படி -சென்று சேருகிறது என்றே கொள்ள வேண்டும் –

வாக் மனஸி -வாக் இந்திரியம் மனஸ்ஸில் லயிக்கிறது
தர்சநாத் -வாக் இந்திரியம் ஒய்வு அடைகையில் மனத்தில் செயல் காணப்படுவதால் என்றபடி
வாக் வ்ருத்தி அனைத்துக்கும் லயம் கூறினாலும் இது பொருந்தும் என்றால்
அது அல்ல
சப்தாத் ச-வாங் மனஸி ஸம்பத்தே -என்று வாக் இந்த்ரியதிற்கே மனதில் லயத்தைக் கூறும் ஸப்தத்தால் என்றபடி –
வாக் வ்ருத்திக்கே லயம் என்ற பஷத்திலோ அதற்கான ஸப்தம் இல்லாமையாலே
அகாரணத்தில் ஸம்பத்தி -லயம் – வராது என்ற தோஷம் சமமாகையால் அந்த பக்ஷம் கூடாது
ஸம்பத்தி என்பது சம்யோகத்தைக் குறிப்பதால் அகாரணத்தில் லயத்தைக் கூறவில்லை
ஆதலின் விரோதம் இல்லை என்று கருத்து –

————————————————————————————————————————————

499- அத ஏவ சர்வாணி அநு-4-2-1-

எக் காரணத்தால் வாக் இந்த்ரியத்திற்கு மனசில் சம்யோகம் மட்டும் சம்பத்தில் என்ற சொல்லால் கூறப்பட்டதோ
லயம் என்று கூறப்பட வில்லையே
அதே காரணத்தால் அது சர்வ இந்திரியங்களும் வாக்கை அனுசரித்து
மனசில் சம்பந்திக்கின்றன என்னும் அர்த்தத்தைச் சொல்லும் –
ஸ்ருதி வசனம் இதுக்குப் பொருந்துகிறது என்று கருத்து

ப்ரசன உபநிஷத் -3-9-தஸ்மாத் உபசாந்தா தேஜா புனர்பவம் இந்த்ரியை மனஸி சம்பத்ய மானை–
உஷ்ணம் குறைந்து மனதுடன் இந்த்ரியங்கள் இணைந்து மறு பிறவி அடைகிறான் -என்கிறது

—————————————————————————————-

அதிகரணம் -163- மநோதிகரணம் -2-4-2-

வாங் மனஸி சம்பத்யயே -வாக் ப்ராணே -என்கிற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி வெளிப்படையாய் உள்ளது

மன ப்ராணே -என்னும் ஸ்ருதியில் -பிராண ஸப்தத்தால்-
அப்பு -நீர் -சொல்லப்படுகிறதா -பிராணன் தானா
என்று சம்சயம்

பிராணன் மனத்தில் இருந்து நேரில் இல்லாத போதிலும்
அன்ன மயம் ஹி சோம்ய மன -என்று
மனதிற்கு அன்ன விகாரத்வம் ஸ்ருதமாகையால்
அன்னம் என்பதன் பொருளான பிருத்விக்கு ஜலம் காரணமாகையாலே
ஆபோ மய பிராணா -என்னும் ஸ்ருதியால் ப்ராணனுக்கு ஜலமயத்வம் தோன்றுவதாலும்
பரம்பரையாக ப்ராணனுக்கு ப்ரக்ருதியான ஜலத்தில் பரம்பரையாகவே மனசின் லயம் யுக்தமாகையால்
பிராணன் என்ற சொல்லால் ஜலம் அப்பு சொல்லப்படுகிறது
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

500-தத் மன பிராணா உத்தராத் —4-2-3-

சாந்தோக்யம் -6-8-6- மன ப்ராணே சம்பத்யதே -என்பதால்
முழுமையாக சேர்கின்றன செயல்பாடுகள் மட்டும் அல்ல –

இதற்கு பூர்வ பஷி –
மனம் உபாதான காரணமாக உள்ள பிருத்வீ தத்தவத்தின் மூலமாக
பிராணனின் உபதானக் காரணமான ஜல தத்துவத்தில் லயிக்கிறது என்று
பொருள் கொள்ள வேண்டும் என்பர்

சாந்தோக்யம் –
6-5-4-அன்ன மயம் ஹி சோம்ய மன –
மனம் அன்னத்தால் ஆனது -என்றும்

6-2-4-தா அன்னம ஸ்ருஜந்த–
அன்னத்தை நீர் உண்டாக்கியது –

6-4-4-ஆபோ மய ப்ராணா –
ஜல தத்வத்தில் இருந்து பிராணன் உண்டானது என்பர்

சித்தாந்தம்
மனம் அன்னத்தால் போஷிக்கப் படுகிறது –
பிராணன் ஜலத்தால் போஷிக்கப் படுகிறது என்று
வளர்க்கும் பொருள் அன்றி காரணப் பொருள் அல்ல

மனம் -அஹங்காரத்தின் மாறுபாடு என்றும்
பிராணன் ஆகாசத்தின் மாறுபாடு என்றும் சொல்வர்

ஆக
மனம் பிராணனுடன் சேர்க்கிறது என்பதே கருத்து –

தத் மன பிராணா-ஸர்வ இந்த்ரியங்களுடன் கூடிய மனனமானது ப்ராணனுடன் ஸம்யோகிக்கிறது
உத்தராத்-மன ப்ராணே என்ற அடுத்த வாக்கியமும்
முக்கிய ப்ராணனுடன் மனத்தின் சம்பந்தத்தைச் சொல்வதால் என்றபடி

இங்கு
அன்ன மயம் ஹி சோம்ய மன
ஆபோ மய ப்ராணா – என்ற ஸ்ருதியால்
மன ப்ராணன்களுக்கு மனமே ப்ரக்ருதி என்பதும் அப்பே ப்ரக்ருதி என்பதும் இவை சொல்லப்பட வில்லை
ஏன் எனில்
மனஸ்ஸு அஹங்காரத்தில் இருந்து தோன்றியதாலாலும்
அன்னத்தால் மனத்திற்குத் திருப்தியும்
ஜலத்தால் பிராணனுக்குத் திருப்தியும்
சொல்லப்படுகின்றன –
ஆகையால் முக்ய பிராணன் இடத்தில் மனஸ்ஸு சமயோகிக்கின்றது என்று தேறிற்று –

————————————————————————–

அதிகரணம் -164- அத்யஷாதி கரணம் –4-2-3-

மன ப்ராணே -ப்ராண தேஜஸி -என்ற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி ஸ்பஷ்டம்

பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

501-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —4-2-4-

ஜீவனுடன் பிராணன் ஒதுங்குகிறது –
சாந்தோக்யம் -6-8-6-பிராணஸ் தேஜஸி-என்பதால்
தேஜஸ்ஸில் ஒதுங்கும்
என்பர் பூர்வ பஷி –

அப்படி அல்ல

ப்ருஹத் -4-3-38-ஏவமேவ இமம் ஆத்மானம் அந்தகாலே சர்வே ப்ராணா அபி சமா யாந்தி -என்று
அரசனை வேலையாட்கள் பின் தொடர்வது போலே அனைத்து பிரானங்களும் ஜீவனை பின் தொடர்கின்றன –

இது போலே ப்ருஹத் -4-4-2-தம் உத்க்ராமந்தம் பிராண அநூதக்ரமாதி -என்று
அந்திம காலத்தில் வெளிக் கிளம்பும் ஜீவனைத் தொடர்ந்து பிராணனும் கிளம்புகிறது

பிராணஸ் தேஜஸீ-மூலம் பிராணன் ஜீவன் உடன் சேர்ந்து கொண்டு
அதன் பின்னர் தேஜஸ்ஸில் சேர்க்கிறது

யமுனை கங்கையில் சேர்ந்து
கடலில் சேர்வது போலே
ஸ்ருதிகளுக்கு விரோதம் வாராமைக்காக
ஜீவனிடம் பிராணனுக்கு சம்யோகத்தை அங்கீகரித்துப் பின்னர்
தேஜஸ்ஸில் ஸம்யோகம் சொல்வது பொருந்தும் என்று கருத்து –

——————————————————————————————————–

அதிகரணம் -164-பூதாதிகரணம் -4-2-4-

பிராணன் தேஜஸ் என்று ப்ராண சம்யுக்தனான ஜீவனுக்கு தேஜஸ்ஸிலே
ஸம்யோகம் -ஸம்பத்தி -சொல்லப்பட்டது
அந்த ஸம்பத்தி தேஜோ மாத்ரத்திலா
போதாந்தரங்களோடு சம்பந்தம் கொண்ட தேஜஸ்ஸிலா
என்ற சிந்தையால் சங்கதி

தேஜஸி -என்ற வசனத்தால் தேஜோ மாத்ரம்
என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரசிக்கிறார் –

ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ்ஸில் சேர்க்கிறது
என்று நிரூபிக்கப் படுகிறது –

502-பூதேஷு தச்ச்ருதே –4-2-5-

அனைத்து பூதங்களிலும் சேர்க்கிறது
தேஜஸ்ஸில் மட்டும் இல்லை –
ப்ருஹத் -4-4-5-ப்ருதிவீ மய ஆபோ மய தேஜோ மய –
இதன் படி ஜீவனுடன் கூடிய பிராணன்
பஞ்ச பூதங்களின் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது –

ப்ராண விசிஷ்ட ஜீவன் பூத ஸூஷ்மங்களில் ஸம் பன்னன் ஆகிறான்
ஸர்வ பூத மயத்வம் ஸ்ருதி ஸித்தமாகையால் -என்றபடி –

————————————————————————-

503-நைகஸ்மின் தர்சயதோ ஹி —4-2-6-

ந ஏகஸ்மின் -பிறவற்றுடன் கலவாத பூதங்கள் தனித் தனியே எக் காரியத்துக்கும் பயன்படாதவை யாதலின்
ஒவ்வொரு பூதத்தில் க்ரமமாக சம்பந்திக்கிறது என்பது கூடாது
தர்சயதோ ஹி-தனித்தனியே கார்ய அஷமங்கள் என்ற அர்த்தத்தை ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் காண்பிக்கின்றன –
ஆகையால் ப்ராணஸ் தேஜஸி -என்று தேஜஸ் ஸப்தத்தால் பூதாந்தரங்களுடன் கலந்த தேஜஸ்ஸே சொல்லப் படுகிறது –

பூதங்கள் தனித் தனியே தங்கள் செயலைச் செய்யும் வலிமை அற்றவை –

சாந்தோக்யம் -6-3-2-3-அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி
தாஸாம் த்ரிவிருத்தம் த்ரிவிருத்தம் ஏகைகாம் கரவாணி -என்று
ஜீவ சரீகனான என்னால் உள்ளே புகுந்து பெயர் மற்றும் சரீரம் அளிக்கப் படுகின்றன –
அவற்றை மூன்று மூன்று என நான் சேர்க்கிறேன் -என்று
பஞ்சீ கரணம் செய்த பின்னரே இவற்றை அறியலாம் –

இது போன்று ஸ்ரீ விஷ்ணு புராணமும்
நா நா வீர்யா ப்ருதக்பூதா தத தே சம்ஹதிம் விநா -நா சக்துவன் பிரஜா ஸ்ரஷ்டும் அசமாகம்ய க்ருத்சனச
சமேத்யே அந்யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா மஹதாத்யா விசேஷாந்தா ஹ்யண்டம் உத்பாதயந்தி தே -என்று
தேஜஸ் எனபது மற்ற பூதங்களுடன் ஒன்றாக உள்ள தேஜஸ் என்பதையே குறிப்பதாகக் கொண்டு
பிராணன் அனைத்து பூதங்களுடன் சென்று ஒடுங்குவதாகவே கொள்ள வேண்டும் –

—————————————————————————————————————————————————–

அதிகரணம் -165-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -4-2-5-

இந்த உத் கிராந்தி வித்வானுக்கும் அவித்வானுக்கும் சமமா
அல்லது வித்வானுக்கு மட்டுமா –
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி –

வித்வானுக்கு இங்கேயே அம்ருதத்வ பிராப்தி என்று ஸ்ருதி கூறுவதால்
அவித்வானுக்குத் தான் என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் –

வெளிக் கிளம்புதல் -உத்க்ராந்தி என்பது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது –

504-சமாநா ச ஆ ஸ்ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —4-2-7-

ப்ரஹ்ம ஞானிக்கு உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி –
அவன் சரீரத்தில் உள்ள போதே மோஷம் என்பதை
கட உபநிஷத் -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமா யேச்ய ஹ்ருதி ஸ்திதா –
அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஸ்நுதே-என்று
அனைத்து ஆசைகளும் விலகின உடனே மோஷம் அடைகிறான் -என்பதால் –

அப்படி அல்ல –
நாடி வழியாகவே சென்று மோஷம் அடைகிறான் என்பதை
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ந ஹ்ருதயச்ய நாட்ய தாஸாம் மூர்த்தானம் அபி நி ஸ்ருதைகா
தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி விஷ்வக் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -நே ந பிரத்யோத நைஷ ஆத்மா நிஷ்காமதி சஷூஷோ வா மூர்த்நோ வான்யேப்யோ வா சரீர தேசேப்ய-என்பதால்
ப்ரஹ்ம ஞாநிக்கு மூர்த்த்ன நாடி தலை மூலமும்
மற்றவர்களுக்கு கண்கள் மற்ற த்வாரங்கள் மூலமோ வெளிக் கிளம்புவதை உணர்த்தும்

அம்ருதோ இஹ பவதி -என்றது
இந்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இவனை விட்டு நீங்காமல் இருந்த போதிலும்
புண்ய பாபங்கள் ஒட்டாத தன்மை மற்றும் அவற்றின் அழிவே அம்ருதத்வம் எனப்பட்டது

இத்தைக் கருத்தில் கொண்டே
யதா சர்வே பிரமுச்யந்தே -அனைத்தும் நீங்கிய பின் என்றும்
அத்ர ப்ரஹ்ம சமச்நுதே -இங்கேயே ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது –

ஸ்ருத்-கதி
ஆ ஸ்ருத் யுபக்ரமாத்-அர்ச்சிராதி கதி ஆரம்பிக்கும் வரை
சமாநாச யுபக்ரமாத் -வித்வானுக்கும் அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமமாகும்
மூர்த்தன்ய நாடீ ப்ரவேஸாத் பூர்வம் -என்று கருத்து

அம்ருதத்வம் ச -அத மர்த்யோ அம்ருதோ பவதி -இங்கு கூறப்பட்ட அம்ருதத்வமானது
அநு போஷ்ய ச -ச என்று உறுதிப் பொருளில் வந்தது
சரீர இந்திரியாதி தாகம் இன்றி -அவை இருக்கும் போது காமாதி விமோக ரூபமாயும்
உபாசன நிஷ்பத்தி ரூபமாயும் உள்ள அம்ருதத்வம் தான்
இங்கு அடையப்படுவதே தவிர ஜீவன் முக்தி என்பது இல்லை –

வித்வானுக்கு அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்ம பிராப்தி ஸ்ருதமாய் இருப்பதால்
இங்கேயே முக்தி சொன்னால் ஸ்ருதி விரோதம் வரும்

இதயத்தில் உள்ள காம க்ரோதிகள் எக்காலத்தில் விடப்படுகின்றனவோ அதே காலத்தில்
உபாசனம் ஆரம்பிக்கப் படுகிறபடியால்
காமாதி விமோசனத்தின் பிறகு புருஷன் இங்கேயே அம்ருதத்வம் பெற சாதனமான உபாசனத்தை அடைகிறான் –
பின் அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்மத்தை அடைகிறான் -என்பதாகும்

இதில் மற்ற ஓரு விளக்கப்படி இங்கு தானே உபாசனத்தில்
நிரதிசய போக்யமான ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் என்றும் பொருள் –

—————————————————————————————————–

505-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —4-2-8-

சம்சாரத்தில் உள்ள போதே மோஷம் –
ப்ரஹ்மத்தை அடையும் வரையில் சம்சாரம் –
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த பின்னரே புருஷார்த்தம்
அது வரை சரீரத்தின் தொடர்புள்ள சம்சாரம் நீடிக்கும்

சாந்தோக்யம் –
6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே-என்றும்

8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றும் சொல்லிற்று –

தத் -அந்த அம்ருதத்வமானது -முன் சொன்ன பிரகாரமே தவிர வேறு பிரகாரம் அன்று
ஏன் எனில்
ஆ பீதே சம்சார வ்யபதேசாத்-ப்ரஹ்ம பிராப்தி வரை சம்சாரம் என்றே
சரீர சம்பந்தம் அடியாக வழங்கப் படுவதால் என்றபடி –

ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தனுக்கு சரீர சம்பந்தம் எப்படி என்றால் அது பற்றிக் கூறுகிறார் –

————————————————————————————

506-ஸூஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –4-2-9-

ஸூஷ்மம் -ஸூஷ்ம சரீரமானது அனுவர்த்திக்கிறது
இந்த அனுவர்த்தனம் அர்ச்சிராதி கதி பற்றிச் சொல்லியதால் மட்டும் தோன்றவில்லை
பிரமாணத ச -பிரமாணத்தாலும்
ததா உபலப்தே -ஸூஷ்ம சரீரம் உள்ளவனாகக் காணப்படுவதால் என்றபடி
சந்திரனுடன் சம்வாதம் ஸ்ருதமாகையால் ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது என்று கருத்து –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது –
அர்ச்சிராதி மார்க்கம் வழி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்

கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –
சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது –
சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்

————————————————————————————-

507-நோப மர்த்தே ந அத–4-2-10-

இந்த காரணங்களால் –
கட -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமோ யேச்ய ஹ்ருதி ஸ்திதா அத மர்த்யோ
அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -என்றது
பந்தங்கள் நீங்கி அதன் பின்னர் உண்டாகும் மோஷம் குறித்து ஏதும் கூற வில்லை-

அத -முன் சொன்ன காரணங்களால்
நோப மர்த்தே ந அத-அதமர்த்யோ அம்ருதோ பவதி என்ற வசனம் சரீர உப மர்த்தத்தால் உண்டான
அம்ருத்வத்தைச் சொல்லவில்லை
உபாசன ஆரம்பாதி ரூப அம்ருதத்வம் பற்றியே சொல்கிறது – என்பதாம்

——————————————————————–

508-அஸ்ய ஏவ சோபபத்தேர் ஊஷ்மா -4-2-11-

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால்
ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –

அஸ்ய -இந்த ஸூஷ்ம சரீரத்துக்கு
ஏவ ச உபபத்தேர் -ஓர் இடத்தில் இருப்பதாகிய உக்தியாலும் என்றவாறு
இத்தால் தேஹ சம்பந்த உபமர்த்தத்தால் உண்டான முக்தி அன்று
ஸூஷ்ம தேகம் உள்ளத்தில் பிரமாணம்
ஊஷ்மா-மரணத்துக்குத் தயாரான வித்வானின் ஸ்தூல சரீர ஏக தேசத்தில் தோன்றும்
ஊஷ்மாவானது -வெப்பமானது ஸ்தூல சரீர குணம் அன்று
ஏன் எனில்
ஸ்தூல தேகத்தில் -தேகாந்தரத்தில் ஊஷ்மா-புலப்படாமையால் -என்று கருத்து
இப்படி ஸித்தமான ஏதோ ஓர் இடத்தில் உள்ள ஊஷ்மாவினால் அனுமானிக்கப்பட்ட
ஸூஷ்ம சரீரத்துடன் உத் க்ராந்தியை அடைகிறான் என்பதாம் –

————————————————————————–

508-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —4-2-12-

ஞானி அல்லாதவனது உத்க்ராந்தியை
ப்ருஹத் -4-4-2-ச ஏதா தேஜோ மாத்ரா சமப்யாததாநோ ஹ்ருதய மேவ அன்வக்ராமதி-என்று
வாக்கு ஆத்மாவை அடைந்து ஆத்மா இதயத்தை அடைகிறது -என்றது

முன்னர் -4-4-1-தே ந பிரத்யோ தே ந ஆத்மா நிஷ்க்ராமதி தமுத்க்ராமந்தம் ப்ராணோ நுத்க்ராமதி -என்று
இதயத்தில் உள்ள த்வாரம் பிரகாசிக்கிறது –
ப்ரஹ்மத்தால் பிரகாசம் பெற்ற த்வாரத்தைக் கொண்டு ஆத்மா வெளிக் கிளம்பும் போது பிராணனும் வெளிக் கிளம்பும் -என்றும்

இதை முடிக்கும் பொழுது -4-4-4-அந்யத் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே -என்று
பழைய பொன் மூலம் தட்டான் புது ஆபரணம் பண்ணுமா போலே ஆத்மா வேறு சரீரம் எடுக்கிறான் –

4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத்கிஞ்ச இஹ க்ரோத்யயம் தஸ்மாத் லோகாத் புன –
ஏதி அஸ்மை லோகாய கர்மணே இது து காமாய மா ந –ஸ்வர்க்கம் அனுபவித்து திரும்புகிறான் என்றும்

4-4-6-அத ஆகாமயமா ந யோ அகாம நிஷ்காம அப்தகாம ஆத்மகாம ந தஸ்ய பிராண உத்க்ராமந்தி
ப்ரஹ்மைவ சந் ப்ரஹ்மாப்யேதி–
ப்ரஹ்ம ஞானிக்கி பிராணன் வெளிக் கிளம்புவது இல்லை

இது போன்று ஆத்ம பாதர் என்பவர் யாஜ்ஞ வல்க்யர் இடம் கேட்டு பெற்ற பதிலிலும்
பிராணன்கள் போவது இல்லை இங்கேயே சேர்க்கப் படுகின்றன என்பர்

இது தவறான வாதம் –

இங்கு பிராணன் ஜீவன் இடம் இருந்து வெளிக் கிளம்புவது இல்லை என்றே சொல்லப்பட்டது
சாரீரத்தில் இருந்து பிராணன் வெளிக் கிளம்புவது பற்றி இங்கும் ஏதும் கூறப்பட வில்லை

ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பிரமத்தை அடைகிற வரை பிராணன் பிரிவது இல்லை என்பதையே
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி என்றது –

திரும்பவும் வித்வானுக்கு உத் க்ராந்தி கிடையாது என்று சங்கித்து விடை கூறப்படுகின்றது
இதி சேத் ந -முன் சொன்ன உத் க்ராந்தி வித்வானுக்கும் பொருந்தும் என்பதாம்
ஏன் எனில்
சாரீராத் -சாரீர குண ஜீவனிடம் இருந்து ப்ராணன்களுக்கு விசேஷம் ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி
என்றுள்ள ஸ்ருதியில் நிஷேதிக்கப் பட்டு இருப்பதால் என்பதாம்
தஸ்ய -அகா மயமானனான வித்வான்களின் பிரயாணங்கள் அவனை விட்டுப் பிரிவது இல்லை
ஆனால் தேவையான மார்க்கத்தில் செல்லும் வித்வானின் உபகாரங்களாகக் கூடவே போகின்றன
என்பது ஸ்ருதியின் பொருள்
இதனால் ஜீவனின் உத் க்ராந்தி நிஷித்தை அன்று என்பதாம் –
ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம்-இவ்வர்த்தம் மாத் யந்தின சாமிகளின் பாடத்தில் ஸ்பஷ்டமாவே காணப்படுகிறது
ஆத்ம காம -பரம புருஷ பிராப்தி காமன் என்றபடி –

———————————————————————————

509-ஸ்மர்யதே ச–4-2-13

ஸ்ம்ருதியிலும் இப்படியே உள்ளது –
யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி -3-167-ஊர்த்வம் ஏக ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா
ஸூர்ய மண்டலம் ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்யதேந யாதி பராம் கதிம்-என்றது

வித்வானுக்கு மூர்த்தன்யா நாடியால் உத் க்ராந்தி ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம்

—————————————————————-

அதிகரணம் -166-பர சம்பத்த்யதிகரணம் -4-2-6-

இந்திரிய சமூகத்தோடும் பிராணனோடும் கூடின ஜீவனுக்கு உத் க்ராந்தி வேளையில்
தேஜஸ் முதலிய பூத ஸூஷ் மங்களில் ஸம்யோகம் சொல்லப்பட்டது
அந்த சம்யோகம் வித்யானுக்குக் கிடையாது என்று சங்கித்துப் பரிஹரிக்கப் பட்டது
இப்போது அந்த பூத ஸூஷ்மங்கள் ஜீவனுடன் தழுவியவையாய் -அவனவன் செய்த கர்மத்தையும் வித்யையும்
அனுசரித்துத் தங்கள் கார்யத்துக்காகப் போகின்றனவா
அல்லது பரமாத்மாவிடம் ஸம் பன்னங்கள் ஆகின்றனவா
என சிந்திக்கப் படுகிறது என்று சங்கதி –

பரமாத்மாவிடம் சம்பத்தி ஏற்பட்டால் ஸூக துக்க போகம் என்னும் கார்யம் இல்லாமையால் அந்த உபயோகத்தை அனுசரித்து
அவனவன் கர்மத்துக்கும் வித்யைக்கும் பொருத்தமாகவே பூத ஸூஷ்மங்கள் போகின்றன
என்று பூர்வ பக்ஷம்
எல்லா பதார்த்தங்களுமே பர தேவதா கார்யமாகையாலே தத் ஆத்மகங்கள் ஆகையால்
சேர வேண்டிய இடமும் தேஜ பரஸ்யாம் தேவதாயாம்-என்று சொல்லப்படுகின்றது என்று உப பத்தி

இத்தை நிரஸிக்கிறார்

தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

510–தாநி பரே ததா ஹ்யாஹ–4-2-14-

பூத ஸூஷ்மங்கள் அனைத்தும் பரமாத்மாவுடனே சேருகின்றன –

சாந்தோக்யம்-6-8-6-தேஜ பரஸ்யாம் தேவதாயாம்
இன்ப துன்பங்களால் வரும் களைப்பு உறங்கும் பொழுது போவது போலே
சிருஷ்டி காலத்தில் அனுபவித்த இன்ப துன்பங்களின் களைப்பால்
இளைப்பாறும் பொருட்டு பிரளய காலத்தில் பரமாத்மாவிடம் சென்று மறைவது போன்று
என்று கொள்ள வேண்டும்

உத் கிராந்தியால் ஏற்பட்ட ஆயாசம் தீருவதே ஜீவனுக்குப் பரமாத்மா சம்பத்தியான பலன்
என்று கல்பித்து ஸ்ருதி அர்த்தம் பொருந்தும் –

———————————————————————————————-

அதிகரணம் -167-அவிபாகாதி கரணம் -4-2-7-

கீழ்ச் சொன்ன பரமாத்மாவிடம் சம்பத்தி என்பது பிராகிருத லயம் போலே
காரண பத்தி ரூபமா அல்லது
வாக் மனஸ் சம்பாத்தி போலே பிரிக்க முடியாத தன்மையா என்று சம்சயம்

பரமாத்மா சர்வ காரணமாகையாலும்
அதில் சம்பத்தி செல்வதாலும்
காரணா பத்தியே என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரஸிக்கிறார்

பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

511-அவிபாகோ வசநாத் —4-2-15-

பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்

இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –

அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –

————————————————————————————

அதிகரணம் -168-ததோகோதி கரணம் -4-2-8-

இவ்வாறு கைமணம் தொடங்கும் வரை வித்வானுக்கும் அவித்வானுக்கும்
உத் கிராந்தி பிரகாரம் சமமாகவே கூறப்பட்டது
இப்போது வித்வானுக்கு ஒரு விசேஷம் கூறப்படுகிறது
என்று சங்கதி –

நாடிகள் மிக நுட்பமாய் இருப்பதால் பிரித்து அறிவது கடினம் -ஆதலின் நியமம் கூடாது
இந்த ஸ்ருதி வசனம் யதேச்சையாக ஏற்படும் ப்ரஹ்ம நாடீ வழியையே அனுவாதம் செய்கிறது
என்பர் பூர்வ பக்ஷி

இத்தை நிரசிக்கிறார் –

மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு
வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

512-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி
யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா–4-2-16-

வித்யையின் சாமர்த்தியத்தால்
தத்தேஷ தத் அ நு ஸ்ம்ருதி யோகாச்ச –அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி கதி சிந்தனையால் ப்ரீதி அடைந்த பரமாத்மா
ஹார்த்தா நுக்ருஹீத-ஹ்ருதய கமல அந்தரவர்த்தியாலே அனுக்ரஹிக்கப் பட்டவனாய்
ததோக-அந்த ஜீவனின் ஸ்தானமாகிய ஹ்ருதயம்
அக்ர ஜ்வலநம் -முன்புறம் பிரகாசம் உள்ளதாகிறது
தத் பிரகாசி தத்வாரோ -அவ்வாறு ப்ரகாசப்படுத்தப்பட்ட நாடி துவாரம் உடையவனாய்
வித்யா சாமர்த்யாத் க்சதாதிகயா-மூர்த்தம் நாடியாலே செல்கிறான் -என்றவாறு –

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச –
அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான
ஸூஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்

இந்த சிறப்பான உத்க்ராந்தி
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ்
ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –

சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-

—————————————————————————————————————–

அதிகரணம் -169-ரச்ம்யநு சாராதி கரணம் -4-2-9-

ஹ்ருதயத்தில் இருந்து மூர்த்தம் நாடி வழியாக வெளிவந்த வித்வானுக்கு
ஸூர்ய கிரணங்களைத் தொடர்ந்து கமனம் சிந்திக்கப் படுகின்றது
என்று சங்கதி –

இரவில் இறந்த வித்வானுக்கு ஸூர்ய கிரணம் சம்பவிக்காது
ஆதலின் இந்த நியமம் கூடாது என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரஸிக்கிறார்

ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான்
என்று நிரூபிக்கப் படுகிறது

513-ரச்ம்ய நு சாரீ-4-2-17-

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் ஸூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் –
இரவிலும் ஸூர்ய கிரணங்கள் உண்டே

நாடிகளுக்கும் ஸூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு –
சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ
மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –

———————————————————————————————–

அதிகரணம் -170-நிசாதிகரணம் -4-2-10-

இரவில் இறந்தவனுக்கும் கதிக்கு சாதனமாக ஸூர்ய கிரணங்கள் இருக்கட்டும்
ஆயினும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இரவில் மரணம் ஸாஸ்த்ர நிஷித்தம் ஆகையால்
அவர்களுக்கு இரவில் மரணம் சம்பாவிக்காது
என்ற சங்கையால் சங்கதி

இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

514-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –4-2-18

இரவில் மரணம் அடைந்தாள் மோஷம் இல்லை எனபது சரியல்ல –
கர்மத்தின் சம்பந்தம் சரீரம் உள்ள வரையிலும் தான்

பூர்வ பஷி
திவா ச சுக்ல பஷ ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பரசஸ்தா நி விபரீதம் து கர்ஹிதம் -என்றதே

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே -என்று
ப்ரஹ்ம ஞானிக்கு சரீரம் விடும் வரை மட்டுமே கால தாமதம் என்றதே-

நிசி நேதி சேத் ந -இரவில் மரித்தவனுக்கு முக்தி இல்லை என்பது சரி இல்லை
ஏன் எனில்
சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் -அநாரப்த கார்யங்களான சஞ்சித கர்ம சம்பந்தங்கள்
வித்யையால் வசித்த போதும் பிராரப்த கர்மங்களின் சம்பந்தம் இறுதி வரை நிற்பதாதலின்
அவ்வுடலின் இறுதி இரவிலும் சம்பவிக்கலாம்
ஆதலின் இதற்கு மேலான பந்தகம் இல்லாமையாலும்
இரவில் இறந்தவனுக்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் விரோதம் இல்லை
தர்சயதி ச–தஸ்ய தாவ தேவ சிரம் என்ற ஸ்ருதியே இவ்வர்த்தத்தைக் காட்டுகிறது
இரவில் மரணம் தடுக்கப்பட்டது அவித்வானுக்களுக்கே அன்றி ப்ரஹ்ம வித்துக்களுக்கு அல்ல –

———————————————————

அதிகரணம் -171-தஷிணாயநாதி கரணம் –4-2-11-

தஷிணாயணத்தில் இறந்தாலும் பந்த ஹேதுக்கள் இல்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தியில் விவாதம் இல்லை
தஷிணாயணத்தில் மரித்தவனுக்கு சந்த்ர ஸாயுஜ்ய பிராப்தி என்பது விஸ்ரம ஸ்தானத்தைக் குறிப்பதேயாகும்
வித்வானுக்குத் திரும்பி வருவது என்பது இல்லாமையாலே திரும்பி வருதல் என்னும் வசனம்
அவித்வான்களைப் பற்றியதே யாகும்

தஷிணாயணத்தில் இறந்தவன் திரும்பி வருவதாக ஸ்ருதி ஸ்ம்ருதி -கீதா வாக்கியங்கள்
உள்ளனவே என்பார் பூர்வ பக்ஷி

தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –

515-அத ச அயநே அபி தஷிணே –4-2-19-

பூர்வ பஷி காட்டும் பிரமாணம் –
மஹா நாராயண உபநிஷத் -25-1-
அதயோ தஷிணே பிரமீயதே பித்ருணா மேவ மஹிமானம் கத்வா சந்திர மசஸ் சாயுஜ்யம் கச்சதி -என்றும்

ப்ருஹத் –
6-2-16-யதா தத்பர்ய வௌதி-அது முடிந்த பின்னர் –

5-10-5-அத ஏவமேவ அத்வானம் புநர் நிவர்த்தந்தே –
சம்சார மண்டலத்துக்கே திரும்புகின்றனர்

மேலும் பீஷ்மர் போல்வார் உத்தராயண காலத்துக்கு காத்து இருந்தனரே என்பர்

இது தவறு
சந்திர மண்டலம் செல்வது ஒய்வு எடுக்கவே –
இத்தை மஹா நாராயண உபநிஷத் 24-2/25-1-தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமாநம் ஆப் நோதி-
ஆகவே அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது –

ஸ்ரீ கீதை –
8-23-யத்ர காலே த்வ நாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகிந ப்ரயாதா யாந்தி தம் காலம் வஷ்யாமி பரதர்ஷப -என்றும்

8-24-அக்னிர் ஜ்யோதி ரஹஸ் சுக்ல ஷண் மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா

8-25-தூமோ ராத்ரி ததா கிருஷ்ண ஷண் மாஸா தஷிணாயநம் தத்ர சந்த்ரமசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே -என்றும்

8-26-சுக்ல கிருஷ்ணே கதீ ஹ்யதே ஜகதச் சாச்வதே மதே ஏகயா யாத்ய நாவ்ருத்திம் அன்யயா ஆவர்த்ததே புந-என்றும்

தஷிணா யானத்தில் மரணம் அடைந்தால் ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்பர் பூர்வ பஷி –

இதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் மேல்

——————————————————————————————————-

516-யோகிந ப்ரதி ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே–4-2-20-

இவை யோகிகள் குறித்து தேவயான மற்றும் பித்ருயான மார்க்கங்கள் பற்றி உணர்த்தவே கூறப்பட்டன –
இத்தையே ஸ்ரீ கீதையில் -8-26-
நை தே ஸ்ருதீ பார்த்தஜாநத் யோகீ முஹ்யதி கச்சன தஸ்மாத் சர்வேஷூ காலேஷூ யோக யுக்தோ பாவர்ஜுனா-என்று
யோகிகள் மயங்க மாட்டார்கள் நீ அர்ச்சிராதி மார்க்கத்தை எண்ணி இருப்பாயாக என்றான்

8-24-
அக்னிர் ஜ்யோதி –

8-25-தூமோ ராத்ரி —என்பவை
தேவயானம் பித்ரு யானம் பற்றியே குறிக்கும்

8-26-யத்ர காலேது –
அபிமான தேவதையான ஆதி வாஹிகர்களை கால பதம் குறிக்கும்

ப்ருஹத் -6-2-15-தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –
அவர்கள் அர்ச்சையில் செல்கின்றார்கள் என்பதால்
அத்தையே எண்ணி இருப்பார்கள் –

யோகிந ப்ரதி -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களைக் குறித்து
ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே-இந்த தேவ யானம் பித்ரு யானம் என்ற வழிகள் ஸ்மரிக்கப் படுகின்றன
தினம் தோறும் நினைக்கத் தக்கவைகளாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன –

யத்ர காலேத்வநா வ்ருத்திம் ஆ வ்ருத்திஞ்சைவ யோகி ந -என்று தொடங்கி
நைதே ஸ்ருதீ பார்த்த ஜானன் யோகீ முஹ்யதி கச்ச ந
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுன-என்று
தினமும் சிந்திக்கத்தக்கவை என்று ஸ்ம்ருதியில் விதிக்கப்படுகின்றவை

இதனால் முமுஷுவுக்கு மரணகாலம் விதிக்கப்பட வில்லை

யத்ர காலே என்பதில்
காலே என்ற பதம் காலத்துக்கு அபிமானியான ஆதி வாஹிக தேவதையைக் குறிக்கிறது

இந்த ஸூத்ரத்தில் யோகி பதம் நான்கு வகை யோகிகளைக் குறிக்கிறது
முமுஷு யோகிக்கு -தேவயான சிந்தனமும்
ஐஸ்வர்யாத் யர்த்திக்கு யோகிக்கி -பித்ரு யான சிந்தனமும் என்று பிரிவு

யோக யுக்தோ பவார்ஜுன-என்கிற இடத்தில்
யோக சப்தம் மார்க்க அனுசந்தானம் ஆகிய யோகத்தைக் குறிப்பது என்பது திரு உள்ளம் –

—————-

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

இப்பாதத்தில் விளக்கப்பட்டன –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-