ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -2-ஸாதந பாதம் –

தபஸ்‌, ஸ்வாத்தியாயம்‌, ஈஸ்வரப் பிரணிதாநம்‌ இவை கர்ம யோகம்‌.–1-

முந்திய அத்‌தியாயத்தில்‌, எவன்‌ மநம்‌ ஒழிவை அடைந்து அந்தர் முகப்பட்டு சமாதியில்‌ நோக்காயுள்ளதோ அவனுக்குப் பயன்படும்படியாக. யோகம்‌ சொல்லப்பட்டது. எவன்‌ மனம் அந்தர் படாமல் வெளி விஷயங்களில் ப்ரவர்த்திக்கின்றதோ அவனும்‌ யோகியாக ஆதலுக்கு அனுகூலமான ஸாதநக்கள்‌
இந்த அத்தியாயத்தில்‌ சொல்லப்படுகின்றன.

தபஸ்‌ என்றால்‌ தாபத்தை உண்டு பண்ணுதல்‌,. அதனால்‌ மநம் மொழி, மெய்யைப்‌ பரிசுத்‌தப்படுத்தல்‌.
மநத்தில்‌ ஏற்படும்‌ அசுத்தியானது வெகுகாலமாய்‌. இருந்து வருகிற கர்ம கிலேசங்களால்‌ நாநா விதமாயும்‌, விஷய நுகர்ச்சியில்‌ பிரவிர்‌த்‌திக்கும்படி.யாயும்‌ செய்கிறது-அது தபஸ்ஸினால்‌ பேதிக்கப்படுகிறது – ௮தனால்‌ தபஸ்‌ முக்கிய ஸாதனம் -சித்தத்தின்‌ பிரஸாதத்தைப்‌, பாதிக்காமல்‌ இத்‌ தபஸ்‌ நிகழ வேண்டும்‌.-தபஸ்‌ என்றால்‌ காயக்லேசம்‌ எனப்‌ பெ௱ருள்‌ பெறும்‌. சுத்தமாக ஆகாரமின்மை யோசாப்பியாசதிற்கு விரோதம்‌. இதனால்‌ மித போஜநம்‌ வேண்டும் என்பது இங்கு கிரஹிக்கப்படுறது. அதனால் தான்‌ சித்தத்தின்‌ பிரஸாதத்தைப்‌ பாதிக்காமல்‌ என்‌று எச்சரிக்கை ஏற்பட்டிருக்கிறது .-

ஸ்வாத்தியாயம்‌ யோகத்திற்குச்‌ சாதகமான பிரணவ முதலிய. பரிசுத்த மந்த்ரங்களை ஜபித்தாலும்
உபநிஷத் முதலிய மோக்ஷ சாஸ்‌திரத்தைப்‌. படித்தலும்‌ இதில்‌ அடங்கும்‌.

ஈஸ்வரப்‌. பிரணிதாநம்‌, ப்ர -நன்றாய் நிதாநம்‌ — வைத்தல்‌:
சகல காரியங்களையும்‌ பரம குருவான ஈஸ்வரனிடத்தில. அர்ப்பணம்‌ செய்‌தல்‌,

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத் பரா–
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே—৷৷12.6৷৷

அது (முன்‌ சொல்லிய கிரியா யோகமானது) ஸமாதி நிலையை ய்டைவதற்கும் கிலேசங்களைக்‌ குறை செய்து கொண்டு வருதலுக்கும்‌ (பிரயோஜநமாம்‌), –2-

அக் கிலேசங்களாவன:–அவித்யை – அஸ்மிதை,-ராகத் -துவேஷம்‌,-அபிநிவேசம்‌ (உயிர் மேல்‌ பற்று)–3-

இவை ஐந்தும்‌ மனிதனை ஆஸ்ரயித்து குணங்களை
ஸ்திரப் படுத்துகின்றன. மஹத்‌, அகங்காரம்‌, தந்மாத்ரைகள்‌ முதலிய பரிணாமங்களை விருத்தி செய்கின்றன. காரிய காரண பரம்‌பரையை விருத்தி அடையும்படி, பண்ணுகின்றன, ஒன்றுக்கொன்று உதவியாக விருக்து கர்மங்களின் பரிபாகத்தை உண்டு பண்ணுகின்றன

ப்ர ஸூப்த, தது, விச்சிந்ந, உதார என்ற நான்கு வித அவஸ்தைகளை யுடைய மேற் கண்ட அஸ்மிதை முதலிய நான்கு கிலேசங்களுக்கும்‌ அவித்‌யை என்பது, இருப்பிடமாம்‌,–4-

பிர ஸூப்‌த வெளியாகாமல்‌ வித்தில்‌ மரம் போல உள்ளடங்கி யிருத்தல்‌.
தந -ஒரு வாஸனையை, வேறொரு எதிரிடையான வாஸனையை அப்பியாஸம்‌ செய்து குறைத்தல்‌,
லிச்சிந்ந — ஒரு விர்த்தி வெளிப்படுவம் காலத்தில்‌, மற்ற விர்திகள்‌ ஒடுங்குதல்‌.
உதார ஓர்‌ ஓர்‌ விஷயத்தை நோக்கி விர்த்தி வெளிப்படுதல்‌.
மேற் கண்டபடி நாலுவிதமான அவஸ்தைகளை அஸ்மிதை முதலிய கிலேசங்கள் பெறுகின்றன.
புருஷ் ஸாக்ஷத்காரம்‌ பெறுமவனுக்கு இக் கிலேசங்கள்‌ வறுத்த விதை போல ஆகும்‌. திரும்பவும்‌ ௮வைகள்‌ முளைக்கலாம்‌.-அவனைப்‌ பாதிக்காலாம்‌, அது ஐந்தாம்‌ ௮வஸ்தை எனப்‌ பெயர்‌ பெறும்‌,
அதனால்‌ அந்த ஜென்மம் அவனுடைய கடையா ஐந்மாம்‌. விதேசுப்‌ பிரக்ருதி லயாளுக்கு அவர்கள்‌ மஹத்தான சுகங்கள் அனுபவிக்குலம் காலத்தில்‌, கிலேசங்கள்‌ பிரஸுப்த அவஸ்தையைப்‌ பெறும்‌. அச் சுகங்கள்‌ முடியுங்காலத்தில்‌ திரும்பவும்‌, அவர்‌கள்‌ ஜந்மம்‌ பெறும்‌ சமயத்‌தில்‌ அவர்களைப்‌ பாதிக்கும்‌.
கிலேசங்கள்‌ வர வரக்‌ குறைதலுக்கு இப்பாதம்‌ முதல்‌ ஸூத்ரத்தில்‌ சொல்லி யிருக்கிற தபஸ்‌ முதலானவை ஸாதநங்களாம்‌,
எல்லாக்‌ கிலேசங்களும்‌ ௮வித்தையின்‌ பேதங்களாம்‌.
தத்வங்களில்‌ லயமம் அடைவர்களுடைய கிலேசங்கள்‌ பிரஸுப்த அவல்தையைப்‌ பெறும்‌,
யோகிகளுடைய கிலேசங்கள்‌ தநு என்ற அலஸ்தையைப்‌ பெறும்‌.
ஸாதாரண விஷயிகளுடைய கிலேசங்கள்‌ விச்சிந்ந , உதார என்ற ௮வஸ்தைகளைப்‌ பெறும்‌.

அநித்தியத்தையும்‌, அசுத்தத்தையும்‌, துக்கத்தையும்‌, அநாத்மாவையும்‌ முறையே நித்தியமாயும்‌, சுத்தமாயும்‌, சுகமாயும்‌, ஆத்மாவாயும்‌ நினைத்தல்‌ அவித்தையாம்‌.–5-

அநித்தியத்தை நித்தியமாக நினைத்தல்‌, பிருதிவி
முதலிய பஞ்ச பூதங்களை நித்தியமென்று நினைத்து, அவைகளை உபாஸனை செப்து,
அவைகளின்‌ ஸ்வரூபத்தைப்‌ பெற வேண்டுமெனச்‌ சிலர்‌ முயலுகின்றுர்கள்‌. அவ்விதமே, சந்திரன்‌; சூரியன் ,
நக்ஷத்திரங்கள்‌ முதலியவைகளை நித்தியமாக நினை த்து அவைகளின்‌ தாரதம்மியம்‌ (நிலைமை) அடைய விரும்பினவராய் நாநாவிதமான கர்மங்களைச் சிலர்‌ அனுஷ்டிக்கிறார்கள்‌. அமரர்களாக வேண்டுமெனப்‌ பல தேவர்களை உபாஸிக்கின்‌றார்கள்‌.

அசுத்தத்தைச்‌ சுத்தமாய்‌ நினைத்தல்‌.–மாதாவின்‌ கர்ப்பாசயம்‌ என்ற இடம்‌, மாதா பிதாக்களின்‌ சுக்ல சோணித சம்பந்தத்தினால்‌ ஏற்படும்‌ உற்பத்தி நிலை,
மாதா உட்கொள்ளும்‌ உண்வினின்று சுண்‌டப் பெற்ற உணவு, கர்ப்பப்பையினின்று சிசு வெளிவந்த மேல்‌ உண்‌டாகும்‌ வியர்வை, மரணம்‌ முதலியன ௮சுத்தமாக இருக்கின்‌றன.
அவற்றைச்‌ சுத்தமென்று மதித்தல்‌, அசுத்தமாக இருக்கின்ற, சரீரத்தைச்‌ சுத்தமென்று மதித்தல்‌,
இவ்வித மதி யீ நத்தால்‌ ஸ்திரீகளைச்‌ சந்திரனைப் போலவும்‌ இன்னும்‌ பலவிசமாக வர்ணித்தலும்‌,,
பாபத்தைப்‌ புண்ணியமென நினைத்தலும்‌, தீயதை நலமெனக்‌ ௧௫தலும்‌ இவை போன்றவை இதில்‌ அடங்கும்‌.

துக்கத்தைச்‌ சுகமென்று நினைத்தல்‌, அறிஞர்‌ உலகத்தில்‌ உள்ள யாவும்‌ துக்கமெனக்‌ கருதுவர்‌,
பிறக்தோர் உறுவது பெருகிய துன்பம்‌
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்‌
பற்றின்‌ வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி -மணிமேகலைச் செய்யுள் இங்கு கவனிக்கத் தக்கது.

அநாத்மாவை ஆத்மாவாக நினைத்தல்‌:–அநாத்மாவாகிய புத்திர களத்திராதிகளையும்‌, போகத்‌திற்கு இருப்பி.மான
சரீரத்தையும் இந்திரியங்களையும்‌, மநத்தையும்‌ ஆத்மாவென நினைத்தல்‌.
நான்கு விதமாய்ச்‌ சொல்லப்பட்டிருக்கிற ௮வித்தையானது பெருகி வரும்‌ கிலேசங்களுக்குக்‌ காரணமாயும்‌, காமத்திற்கும்‌ அதின்‌ பலத்திற்கும்‌ இருப்பிடமாயும்‌, ஆகிறது.
அமித்ரன்‌ என்ற பதம்‌, மித்‌ரமின்மை என்ற அர்த்தத்தை மாத்திரம்‌ சூறிப்பிடாமல்‌ மித்ரன்‌ என்பதற்கு எதிரிடையான சத்துருவைக்‌ குறிப்பிடுகிறது ,
அவ்விதமே அவித்தை என்ற பதம்‌ ஞாநமின்மை என்ற அர்த்தத்தை மாத்திரம்‌ குறிப்பிடாமல்‌ வித்தைக்கு எதிரிடையான அவித்தை என்ற பதார்த்‌தத்தைக்‌ குறிப்பிடுகிறது , அவித்தை என்பது பாவ-வஸ்துவாம்‌–அபாவமன்று. .

பார்க்கிறவன்‌ (த்ருக்‌) பார்க்கச்‌ சாதநமான கருவியுடனே*(தர்சந அகங்காரத்துடனே) சேர்ந்து ஒன்றாய் இருப்பவன்‌ போல நடைபெறும்‌ நிலைமை அஸ்மிதையாம்‌. –6-

புருஷன்‌ பார்க்கிறவன்‌( திருக்‌). –தர்சநம்‌, பார்வை யென்றும்‌, பார்வைக்குச்‌ சாதநம்‌ என்றும்‌ பொருள்படும்‌. ஆனால்‌ இவ் விடத்தில்‌ சாதநமான அந்தக் கரணமாம்‌.–புருஷன்‌ அந்தக் கரணத்துடன்‌ சேர்ந்து ஒன்றாய்‌ இருப்பது போலத்‌ தோன்றுதல்‌ அஸ்‌மிதை ,
ஆத்மாவான புருஷன்‌ ௮நாத்மாவான அந்தக்காணத்தில்‌, நான்‌ அதாவது ஆத்மா என்றபிமானித்தல்‌ அஸ்மிதை என்பதாம்‌,-பரர்க்கிறவனான ஆத்மா பரர்வைக்குச்‌ சாதனத்தைத் தான்‌ என்றபிமாநித்தல்‌.-பார்வைக்குள்‌ சாதநமாவது அந்தக் கரணம்‌. இது
அகங்காரம்‌, புத்தி, சித்தம்‌, மநஸ்‌, எனப்‌ பிரியும்‌. இவைகளில்‌ அகங்காரம்‌ மூலம்‌, சித்தம்‌ என்பது முன்‌ அனுபவத்தைச்‌ சிந்திப்‌பது , மநஸ்‌ என்பது பிரக்ருதத்தில்‌ விஷயங்களை அறிவது, புத்தி என்பது ௮விவேகம்‌ ஏற்பட்டுச்‌ சந்தேகம் வரும் கால்‌ தீர்மானிப்பது .
ஆத்மா எப்போதும்‌ பரிணாமமில்லாதவன்‌. அந்தக் கரணம்‌ எப்‌போதும்‌ பரிணாமமுள்ளது . ஆத்மா சேதநன்‌, அந்தக் கரணம்‌ அநாத்மா -ஜடம் –
நாம் கோபம்‌, துக்கம் , சந்தோஷம்‌ முதலிய அனுபவங்கள்‌ அடையுங்கால்‌, .நான்‌ கோபி, துக்கி நான்‌ ஸந்தோஷி என்று சொல்லும் போது அந்தக் கரணத்துடன்‌ சேர்ந்து. அப்படி நினைக்கிறோம் .
ஆத்மா, அந்தக் கரணம்‌ இவைகளின்‌ உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தால்‌ கைவல்லியம்‌ ஏற்படும்‌.
சைவல்யம்‌ என்பது தன் நிலை ஆத்மாவும்‌ ௮ந்தக் கரணமும்‌ சம்பந்தப்பட்டால்‌ விஷயங்களின்‌ ௮னுபவம்‌ உண்டாகும்‌. இன்றேல்‌ தன்‌:நிலையில்‌ ஆத்மா இருக்கிறான்‌.

ஆசையானது ஸூகத்தையும்‌ ஸூக ஸாதநத்தையும்‌ நோக்கியதாக நடைபெறுகிறது.–7-

முன் அனுபவித்‌த ஸூகத்தின்‌ ஸ்மரணையால்‌, ஸூகத்தின் மீது அல்லது ஸூக ஸாதநத்தின்மீது உண்டாகும்‌ ஆசை ராகம்‌ எனப்படும்‌.
ஸுக சிந்தனையின் மேலுள்ள ஆசையும்‌ இதில்‌ அடங்‌கும்‌ |

வெறுப்பானது துக்த்தையும்‌ துக்க ஸாதநத்தையும்‌ நோக்கியதாக நடைபெறுகிறது.–8-

முன் அனுபவித்‌த துக்கத்தின்‌ ஸ்மரணையால்‌, துக்கத்தின் மீது அல்லது துக்க ஸாதநத்தின்மீது உண்டாகும்‌ வெறுப்பு த்வேஷம் எனப்படும்‌.
ஸுக சிந்தனையின் மேலுள்ள ஆசையும்‌ இதில்‌ அடங்‌கும்‌ |

அபிநிவேசம்‌ என்பது ஸ்வபாவமாய்‌ வாஸநா ரூபமாக நிகழ்வதாயும்‌ ஸாதாரண மனிதனிடத்தில்‌ போல வித்துவானிடமும் கூட ஸ்திரப் பட்டிருக்கிறதாயுமுள்ள ஓர் பற்று.–9-

உயிர்ப்பற்று , அதாவது . முன்‌ ஜந்மத்‌தின்‌ மரணானுபவம்‌ பின்‌ ஜந்மத்தில்‌ வாஸநா ரூபமாக விருந்து கொண்டு, ஆத்மாவானது சரீராதிகளினின்‌று விட்டுப் பிரிதல்‌ உண்டாகக் கூடாதென்ற மநோ விர்த்தி ௮பிநிவேசமாம்‌. இஃது எல்லாப்‌ பிராணிகளிடமும்‌ உள்ளது,
“நான்‌ இறக்காமல்‌ என்றும்‌ இருக்கக் கடவேன்‌ ”” என்ற பிரார்த்தனை ரூபமான விர்த்தி எல்லா ஜீவ.ராஸிகளிலும்‌ தவறாமல்‌ இருக்கின்றது.
மரண அனுபலமில்லானுக்கு இஃது இருக்கப் பாலதன்று. மரண பயம்‌ இருக்கின்றமையால்‌ பூர்வ ஐந்மம்‌ உண்டென்று அனுமாநிக்கலாகும்‌, பிறந்த புழுவுக்குங்கூட மரண பயம்‌ உள்ளது.-இது பிரத்தியக்ஷம்‌, அனு மாநம்‌, சப்தம்‌ என்ற பிரமாணங்களால்‌’ ‘உண்டாடகின்றதன்று, அறிவில்லானிடமும்‌, அறிவுள்ளானிடமும்‌ இது ஸமாநமாக இருக்கின்றது.

வாசநா ரூபமான ஸூஷ்ஷமமான கிலேசங்கள்‌ எதிரிடையான பரிணாமங்களால்‌ தள்ளத் தக்கன.–10-

கிலேசங்கள்‌’ஸ்‌தூலம்‌, ஸூஷ்மம்‌ என இரு வகைத்து -வாஸநா ரூபமானவை ஸுூ்ஷ்மமானவை.
யோகியின்‌ மநம்‌ ஸமாதியை யடையும் போது மேற் கண்ட ஐவகையான கிலேசங்கள்‌ வறுத்த வித்தைப் போலாகி மநத்துடன்‌ லயமடைகின்றன.
மநம்‌ விஷயங்களை நோக்கிப்‌ .பகிர் முகப்‌ படாமல்‌, தனக்குக்‌ கரணமான ௮ஸ்மிதையை நோக்கி அந்தர் முகப்பட்டு ஸ்வருப. நாசம்‌ பெறுகிறது
இது தான்‌ எதிரிடையான பரிணாமம்‌ பெறல்‌.-மநம்‌ நாசம் உறுகிறதனால் , ௮து சம்பந்தமாகவுள்ள. சூஷ்மமான
கிலேஸங்களும்‌ நாசமடைகின்‌றன.

(ஸ்தூலமான கிலேசங்களான) விர்த்திகள்‌ தியாநத்தினல்‌ தள்ளத் தக்கவைகள்‌.–11–

முன்‌ சூத்திரத்தில்‌ வாஸநா ரூபமான சூஷ்மமான. கிலேசங்கள்‌ அழிவுறும்‌ முறை உபேசிக்கப்பட்டது .
இந்த சூத்திரத்தில்‌ ஸ்தூலமான கிலேசங்கள்‌ (அவைகளே விர்த்திகளாம்‌)அழிவுறும்‌ முறை சொல்லப்படுகின்றது.-அதாவது அவைகள்‌ தியாநத்தால்‌ அழிகின்றன.-அழுக்கான வஸ்திரம்‌ தோய்க்கப் பட்டால்‌ அதன்‌ ஸ்தூலமான மலம்‌ முதலில்‌ போகின்றது – பின்பு உவர் மண்‌ முதலியவை சேர்த்‌துத் தோய்‌த்தால்‌ ௮தன்‌ சூஷ்மமான மலம்‌ போகின்றது.-மலத்தின்‌ வாஸனையானது வஸ்திரம் அழியும் வரை நிற்பதாகும்‌. வஸ்‌திரம்‌ அழிந்தால் அதுவும்‌ அழியும்‌; அவ்விதமே அடர்த்தியான,கிலேசங்கள்‌ கிரியா யோகத்தால்‌ பிரிந்து விலகியும் தியானத்தால் ஸூஷ்மமாகியும் பின்பு மநோ நாசத்தால்‌ நாசமடைகின்றன,

(புண்ணிய பாப) கர்மங்களின்‌ ஸம்ஸ்காரம்‌ கிலேசங்களை மூலமாக உடையது. இது திர்ஷ்டமான இந்த ஜந்மத்திலும்‌ அதிர்ஷ்டமான ஜந்மத்‌திலும்‌ அறியப்பாலது,–12-

கிலேசங்கள் இன்னவை என்ற நிரூபணம்‌ முன்னர்‌ ஏற்பட்டது. கிலேசங்கள் என்ற பெயர்‌ வருதலுக்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌,
அவைகள்‌ சாஷாத்தாக கேரில்‌ சுக துக்கங்களை உண்டு பண்ணா விட்டாலும்‌, கர்மங்களை உண்டு பண்ணி
அவைகள்‌ மூலமாய்‌ மனிதனைக்‌ கர்ம பலங்களை ௮னுபவிக்கும்படி.யாகச்‌ செய்‌கின்‌றமையால்‌ அவைகளுக்கு அப்பெயர்‌ ஏற்பட்டது.
இதில்‌ கர்மங்‌களின்‌ காரணம்‌, கர்மங்களின்‌ ஸ்வரூபம்‌, கர்மங்‌களின்‌ பலம்‌ இவை மூன்றும்‌ பிரஸ்தாபிக்கப்படுகின்றன,
அவித்தை முதலிய கிலேசங்‌களை முன் வைத்துத் தான்‌, புண்ணிய பாப கர்மங்களில்‌ பிரவிர்த்தி உண்டாகின்றது.
அதனால்‌ கிலேசங்கள்‌ கர்மங்களின்‌ காரணமாகும்‌.
கர்மங்களின்‌ ஸ்வரூபம்‌: மு.தலில்‌ ஸ்‌தூலமாக வெளிப்பட்ட கர்மங்‌கள்‌ இந்த ஜந்மத்திலோ வரும்‌ ஐந்மத்திலோ பலனைக்‌ கொடுக்கும்‌ வரையில்‌, ஸம்ஸ்கார ரூபமாக சூஷ்ம நிலைமையை அடைகின்‌ றது.-அது ஆசயம்‌ என்று சூத்திரத்தில்‌ சொல்லப் பெற்றிருக்கிறது .

கர்மங்களின்‌ பலன்‌ இருவகைத்து, ஒன்று, கர்மங்கள்‌ நிகழும் ஐந்மத்திலேயே பலன்‌ உண்டாகலும்‌ அனுபவித்தாலும் அறிதலுமாம்‌;
மற்றொன்று, இனி வரும்‌ ஜந்மாந்தரங்களில்‌ பலன்‌ உண்டாக, அதை அந்த அந்த ஐந்மாந்தரங்களில்‌ ௮நுபவித்தலும்‌ ௮றிதலுமாம்‌,

நந்திகேசுவரர்‌ மனிதனாகப்‌ பிறந்து தீவிர தபஸ்‌, மந்த்ர ஐபம்‌, ஸமாதி முதலியவைகளால்‌ ஈஸ்வர ஆராதனைகளைப்‌ புரிந்து
அவைகளின்‌ பயனாக ௮தே ஜந்மத்தில்‌ தேவஜாதி , தீர்க்க ஆயுஸ்‌, திவ்‌விய போகங்களையும்‌ அடைந்தார்‌,

விசுவாமித்திரர்‌ தீவிரமான தபஸ்‌ முதலியவைகளால்‌, ௮தே ஜென்மத்தில் உயர்ந்த ஜாதி, தீர்க்க ஆயுஸ்‌, ஸித்திகள்‌ இவைகளைப்‌ பெற்றார்

௮வ்விதமே உக்கிரமான பாப கர்மத்தால்‌ பலன்‌ இந்த ஜந்மத்திலேயே உண்டாகும்‌. நகுஷன்‌ முன்‌ ஜந்மத்தில்‌ செய்த புண்ணிய கர்ம பலனாக இந்திர பதவி பெற்றும்‌ உடனே கொடிய பாபம்‌ செய்ததினால்‌ ௮தே ஜன்மத்தில்‌ ஸர்ப்பமாக ஆனான்‌.

அதிர்ஷ்ட கர்ம பலன்களாவன:–இதே ஜந்மத்தில்‌ யாதொரு காரணமுமின்றி நன்மை அல்லது தீமையான ஸம்பவங்கள்‌ ஒருவனுக்கு நேரிடுகின்றன.
அவைகளின்‌ காரணத்தை ஆராய்வோமாகில்‌ அச் சம்பவங்கள்‌, முன்‌ ஜந்மங்களிற்‌ செய்த கர்மங்களின்‌ பலன்‌ எனவே மதிக்கத் தக்கன.
சில கர்மங்கள் செய்கின்றோம்‌. அவைகளின்‌ பலனை இனி வரும்‌ ஜென்மங்களில் ௮னு பவிப்போம்‌.

கர்மாசயத்திற்கு மூலமான கிலேசமானது இருந்தால் தான்‌, ஜநநம்‌ தீர்க்காயுஸ்‌, போகம்‌ என்றவை கர்மங்கவின்‌ பலனாக ஏற்படும்‌.–13-

கர்மங்களின்‌ பலன்கள்‌ ஏற்பட வேண்டுமாயின்‌ கிலேசங்கள்‌ இருத்தல்‌ வேண்டும்‌, அதனால்‌ கிலேசங்களின்‌ க்ஷயத்தை அடையும்‌ யோகிக்கு கர்ம பலன்கள்‌ இடையா என்று இதன்‌ மூலமாக ஏற்படுகிறது. யோகி யானவன்‌, பிரகிருதி புருஷ விவேகம்‌ பெற்று, அதனால்‌ கிலேசங்களைத்‌ தகிக்கிறான்‌. கிலேசங்கள்‌ போகவே, உமி போன நெல்‌ வித்தைப் போல; கர்மங்கள்‌ பலனைக்‌ கொடுக்கும்‌ தன்மையை இழக்கின்றன.

கர்ம பரிபாகம்‌ மூன்று விதம்‌:–
(1) ஜாதி, மக்கள்‌, தேவம்‌,நரகர்‌, விலங்கு முதலியன.
(2) ஆயுஸ்‌ உயிருடன்‌ இருக்கும்‌ காலம்‌ தீர்க்கமாக இருத்தல் வேண்டும்‌.
(3) போகம்‌, இது தான்‌ கர்மங்களின்‌ பலனுடைய அநுபவம்‌. முன்‌ ஜாதியும்‌ ஆயுஸும்‌ இதற்கு ஸாதநம்‌.

ஒரே ஜந்மத்தில்‌ பரஸ்பர விருத்தமான சுக , துக்க அனுபவங்கள் காணப் படுவதால் , முன்‌ கர்மங்களுள்‌ பரிபாகமுள்ள அநேகங்கள்‌ ஒன்று சேர்ந்து ஒரு ஜந்மத்தைக்‌ கொடுக்கின்றன என ஏற்படுகிறது-ஆனால்‌ ஒரு பெரிய கர்மம்‌ மாத்திரம்‌ அந்த ஜந்மத்தின்‌
பொது கதியை நடத்தும் ,–சிறியனவான பல கர்மங்கள்‌ அந்த ஜென்மத்தில் பல சமயங்களில்‌ சுகங்களையும்‌ துக்கங்களையும்‌ உண்டு பண்ணும்‌
சில கர்மங்கள்‌ பிறப்பையும்‌, சில ஆயுஸ்ஸையும்‌, சில போகத்தையும்‌ கொடுக்கின்றன
கர்மங்களின்‌ ஸ்வரூபத்தை அறிதல் மிகவும்‌ கஷ்டமானது.-
பொதுவாய்க்‌ கர்மங்கள்‌ இரண்டு விதமான தகைமைகளுடை,யன
(1) அவைகள்‌ செய்யப் பெறும்‌ ஜந்மத்திலே யாவது , வரும்‌ ஐந்மத்திலே யாவது சுக துக்கமான போகங்களை உண்டு பண்ணும்‌ இயல்பின.
(2) ஒரு விதமான கர்மத்தைச்‌ செய்‌து கொண்டு வருவதால் ,அத் தன்மையன கர்மங்களைச்‌ செய்யத் தூண்டும்‌ வாஸனை ஏற்படுகின்றது.
அவ் வாஸனை நன்மையாக இருப்பின்‌, விவேகத்தினால்‌ அதை யறிந்து , அதை விருத்தி செய்தலும்‌, அது தீமையாக இருப்பின்‌ வைராக்யத்தால் ௮தைத்‌ தவிர்த்து வேறு நல்ல கர்மத்தை அப்பியாஸம்‌ செய்தலும்‌ யோக சாஸ்திரத்தின்‌ உபதேசமாம்‌,
கர்மங்கள்‌ பூமியில்‌ பிறப்புக்கும்‌ இறப்புக்கும்‌ மத்ய காலத்தில் தான்‌ பெரும்பாலும்‌ ஏற்படுன்றன. இறந்த மேல்‌ மறு ஜந்மம்‌ ஏற்படும்‌ வரை அவைகள்‌ அநேகமாக உண்டாகின்றன அல்ல.
அப்போது முன்‌ கர்மங்களின்‌ அனுபவம்‌ மாத்திரம்‌ நிகழும் -சிறு பான்மையாய்‌ லோகாந்தரங்களில்‌ ஜீவன்‌ கர்மம்‌ செய்தல்‌ கூடும்‌.
மரண காலத்தில்‌ இனி வரும்‌ ஜந்மத்திற்குக்‌ காரணமாகும்‌ பரி பக்குவமான கர்மங்கள்‌ நன்றாய் வியக்தப்படுகின்றன ;-ஜீவனின்‌ பிரஞ்ஞையில்‌ தோன்றுகின்றன. இது விஷயமாகப்‌ ப்ருஹத்‌ ஆரண்‌ணியக உபநிஷத்‌, 4-வது அத்தியாயம்‌, 4-வது பிராஹ்மணம்‌,
2-ம்‌ மந்த்ரத்தையம்‌, அதன்மேல்‌ ஸ்ரீமத்‌ சங்கராசார்யரவா்களின்‌ பாஷ்யத்தையும்‌ பார்க்க.
பகவத் கீதை 8-ம்‌ அத்தி, 6-ம்‌ சுலோகமும்‌, 2-ம்‌ அத்தி. 78-ம்‌ சுலோகமும்‌ இங்கு கவநிக்கத்‌ தக்கன.

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.
ஸ்தித்வாஸ்யாமந்த காலேபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி—৷৷2.72৷৷

அர்ஜுனா இப்படிப்பட்ட நிலை ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது –
இதை அடைந்து மனிதன் மயக்கம் அடைவது இல்லை –
ஆயுளின் கடைசிப் பகுதியிலாவது இதில் நிலை நின்று ஆத்மாவை அடைகிறான்

யம் யம் வாபி ஸ்மரந் பாவம் த்யஜத் யந்தே கலேவரம்.—
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித-–৷৷8.6৷৷

அர்ஜுனா கடைசிக் காலத்தில் எந்த எந்த நிலையை நினைத்துக் கொண்டு சரீரத்தை விடுகிறானோ
அந்த அந்த நிலையையே அடைகிறான் -ஏன் எனில்
எப்போதும் அந்த நிலையிலேயே நினைவைச் செலுத்துகிறவன் அன்றோ
அந்திம ஸ்ம்ருதி -என்னை நினைத்து இருந்தவன் என்னை அடைகிறான் -ஜட பரதர் -மான் -விருத்தாந்தம் –
மானுடைய தன்மை போலே -சாயுஜ்யம் பெறுவோம் அவன் நினைவாகவே இருந்து –

இதனால் தான்‌, மரணகாலத்தில்‌ பகவந் நாமத்தை உச்சரித்தலும்‌ உபநிஷத்‌ முதலான பாராயணங்களும்‌ மரிக்கிறவன் காதில்‌ படும்படி.யாக உச்சரிக்கின்றார்கள்‌,
அவைகளால்‌ நல்ல சிந்தனை யுண்டாகி , அவன்‌ அச் சிந்தனைக்கு உரிய நற் கதியை யடைதல்‌ கூடும்‌ என்பதாம்‌.

அவை (ஜாதி, ஆயுஸ்‌, போகம்‌) சுக, துக்கங்களைப்‌ பலனாக்‌ உடையன -ஏனெனில்‌
அவைகளுக்கு (ஜாதி, ஆயுஸ்‌, போகங்களுக்கு ) புண்‌ணிய பாப கர்மங்கள்‌ காரணமாக இநக்கின்றமையால்‌.–14-

புண்ணிய, பாப கர்மங்கள்‌, ஜாதி, ஆயுஸ்களை உண்டு பண்ணுகின்றன, அவைகள்‌ உண்டாகவே, கர்ம பலங்களான சு௧ துக்கங்களின்‌ அனுபவம்‌ ஏற்படுகின்றது.-ஜாதி, ஆயுஸ்கள்‌ விலக்‌கப் படுவதற்காக உபாயத்தைத்‌ தெரிவிக்க இந்த சூத்தம்‌ எற்பட்டிருக்கிறது,

விவேகியாகிய யோகிக்கு எல்லாம்‌ (விஷய சுகம் எல்லாம்‌) துக்கமாகவே இருக்கின்றன. ஏனெனில்‌,
(விர்த்திகளின்‌) பரிணாமம்‌ (அவைகள்‌ நிகழங்காலத்தில்‌ உண்டாம்‌.) தாபம்‌, (பூர்வ ) வாஸனைகள்‌ துக்கமாகத்‌ தோன்றுகின்றன, தவிரவும்‌ குணங்களால்‌ உண்டாகும்‌ மநோ விர்‌த்திகள்‌ பரஸ்பர விரோதங்களாகவும்‌ இருக்கின்றன.–15-

(1) துக்கத்தைக்‌ கொடுக்கச்‌ கூடிய ஜாதி, ஆயுஸ்‌, முதலியவை தள்ளத் தக்கவை யாயினும்‌, சுகத்தைக்‌ கொடுக்கக்‌ கூடிய ஜாதி, ஆயுஸ்கள்‌ தள்ளத் தக்கவை யல்லவே என்ற வினவிற்கு இந்த சூத்திரம்‌ சமாதாநம்‌ சொல்லுகிறது . -யோகிக்கு எல்லாம்‌ துக்கமே
(2) விஷயசுகம்‌ அவித்தையா லேற்படுகிறது. சுகம்‌ என்பது கர்மேந்திரியம்‌, ஞாநேந்திரியம்‌, மநம்‌ இவைகள்‌ சலநமற்று’ ஒய்வடைதல்‌. ௮தாவது அவைகள்‌ திருப்தி யடைதல்‌.-அத்‌ திருப்தி. யில்லாமல்‌ ௮வை ௪ஞ்சலித்துக் கொண்டிருக்குமாகில்‌ துக்கப்‌ பிராப்தி யேற்படுகிறது. விஷய சுகக்களை யநுபவிப்பதினால்‌ அவைகளின்‌ ஆசை முடிவு பெறாது பெருகுவதாகும்‌.
தேள்‌ கொட்டுமெனப்‌ பயந்து ஸர்ப்பம்‌ கடிக்கப்‌ பெற்றால் போல, விஷய சுகங்களின்‌ போகத்தால்‌ திருப்தி பெற்று அவைகளின்‌ ஆசையைத் தொலைக்க கருதுகிறவனாவன்‌, இன்னும்‌ ௮திக ஆசை பற்றியவனாகி அதிகத் துக்கங்களுக்கு உள்ளாவான்

விஷய சுகங்களை அடிக்கடி அநுபவிக்க, காமாக்நி விருத்தி யடைகிறது. -இச்சை கொண்ட. விஷயம்‌ கிடைக்காவிடில்‌ துக்கமுண்டாகும்‌.
கிடைத்தாலும் அனுபவிக்க முடியாவிட்டாலும்‌ துக்கமுண்டாகும்‌. அனுபவித்தற்குத் தடை செய்பவர்களிடம்‌ துவேஷமுண்டாகும்‌.
தன்னிஷ்டப்படி. விஷய சுகங்களை யனுபவிக்கிறதினாலும்‌ வியாதிகள்‌ நேரிடுவதாகும்‌. இவை போன்று பரிணாமத்தின்‌ துக்கம்‌ நிகழும்‌,

விஷய சுகம்‌ அனுபவிக்குங்காலத்தில்‌, ,௮து நீடித்திருக்கமாட்‌டாதே என்ற கவலையும்‌, அதினால்‌ என்ன கெடுதல்‌ நேரிடுமோ என்‌ற கவலையும்‌ இவை போன்று தாபத்தின்‌ துக்கம்‌ நிகழும்‌.-ஸுக துக்க அதுபவங்களினால்‌ அவைகளின்‌ வாஸனைகள்‌ அமைகின்‌றன. ௮வை உண்மையில்‌ யோகிக்கு துக்கமே,
இதனால்‌ பகவான்‌ கௌதம புத்தர்‌ ஜந்மம்‌ துக்கம்‌, வியாதி துக்கம்‌, ஜரை துக்கம்‌, ஸகலமும்‌ துக்கமென்று உபதேசித்தார்‌.

வரப் போகின்ற துக்கம்‌ (பிரயத்தநத்தால்‌) தவிர்க்கத் தக்கது.-16-

(1) வியாதி, வியாதியின்‌ காரணம்‌, அதை நிவிர்த்திக்கும்‌ உபாயம்‌, ஆரோக்யம்‌ இந் நான்கும்‌ எவ்விதம்‌ வைத்திய சாஸ்திரத்தில் விசாரிக்கப்‌ படுகின்‌றனவோ, அவ்விதமே இந்த சாஸ்‌திரத்திலும்‌ (யல) தள்ளத் தக்கது இன்னது, ௮தன்‌ காரணம்‌,அதைத்‌ தவிர்க்கிறதற்கு உண்டான உபாயம்‌, பின்பு மோக்ஷம்‌ என்பன விசாரிக்கத் தக்கவை. இந்த சூத்ரம் முதலாவதான ஹேயத்தைப் பற்றியது

(2) மூன்று காலத்திலும்‌, துக்கம்‌ தள்‌ளத் தக்கதாக விருந்தாலும் இறந்த காலத்தைப் பற்றிய துக்கம்‌ அனுபவித்துச் சென்றமையாலும்‌, நிகழ் காலத்தைப் பற்றிய துக்கம்‌ ௮னுபவிக்கப்படுகின்‌றமையாலும்‌, அவைகள்‌ தள்ளுவதற்க்குச்‌ சாத்தியமானவையல்ல,
அதனால்‌ வருங்காலத்தைப் பற்றிய துக்கம்‌ மாத்‌திரம்‌ தள்ளத் தக்கது என்று இந்த சூத்ரம் அறிவிக்கிறது

புருஷனுக்கும்‌ புத்திக்கும் உள்ள சம்பந்தமானது (ஹேய) துக்கத்திற்‌குக்‌ காரணமாம்‌,–17-

(1) புருஷனிடத்‌தில் இருக்கின்ற சைதந்ய சக்த்தியானது புத்தியில்‌ பிரவேசிக்கின்றதினால்‌, உதாஸீநனான புருஷன்‌ திரஷ்டா எனப்படுகின்றான்‌.
திருஸ்யம்‌ என்னால்‌, பு,த்தியில்‌ தோன்றுகிற எல்லா விஷயங்களுமாம்‌. புத்தி யென்பது பிரதாநத்தின்‌ ௮தி சூஷ்மமான நிலைமை, –
மநஸ்‌, சித்தம்‌, அகங்காரம்‌, புத்தி முதலியன பிரக்ருதியின்‌ பரிணாமங்கள்‌.

(2) புருஷன்‌ ஹிருதய குகையில்‌ இருக்கிறான்‌. அவன்‌ ஸமீபத்திலிருக்கிறது புத்தி. அதனால்‌ புத்தியை மாத்திரம்‌ புருஷன்‌ அறியலாம்‌.
அதனால்‌ புத்தியைத்‌ திருச்யம்‌ எனச்‌ சொல்லலாம்‌.
மற்றைய வஸ்துக்கள்‌ புருஷனுடன்‌ ஸாக்ஷாத்‌ ஸம்பந்த மின்மையால்‌, அவைகளைத்‌ திருச்யம்‌ என எப்படிச்‌ சொல்லுதல்‌ கூடும்‌?
இதற்குச்‌ சமாதாநம்‌, புத்தியானது எல்லா விஷயங்களையும்‌ இந்திரியங்கள்‌ மூலமாய்க்‌ கிரஹித்து, அவ்வவ்விஷயங்கள்‌ ரூபமாகத்‌ தன்‌னைப்‌ பரிணமித்துக் கொள்ளுகின்றது. அத் தகைய புத்தியைப்‌ புருஷன்‌ சாஷாத்கரிப்பதால்‌, புத்தியில்‌ பரிணாமமாக அமைந்திருக்கின்ற எல்லா விஷயங்களையும்‌ புருஷன்‌ அறிந்தவனாக ஆகின்றான்‌.-அதனால்‌ எல்லா விஷயங்களும்‌ திருச்பமாக ஏற்படுகின்றன.

(3) புருஷனிடமுள்ள சைதன்னிய சக்தியைப்‌ புத்தி அடைவதாலும்‌ புருஷனுக்கு அடுத்து சமீபத்தில்‌ புத்தி இருக்கின்‌றமையாலும்‌ இரண்டும்‌ (புருஷனும்‌ புத்தியும்‌) ஒன்று போலத்‌ தோன்றுகின்‌றன. அயஸ் காந்தத்தைப்போல, புத்தியானது புருஷனிடமுள்ள
சக்தியை ஆகர்ஷித்த, புருஷனும்‌ தானும்‌ அபேதமாகத்‌ தோன்று கின்றது-.
இந்த அபேதப்‌ பிராந்தி தான்‌ அவித்தை என்னப்படும்‌,
இது தான்‌ துக்கதிற்குக் காரணம்‌. இப் பிராந்தியை விலக்குவதினால்‌ கைவல்லியம்‌ ஏற்படும்‌. முன்‌ தனிமையாக இருந்தால்‌ யாதொரு கெடுதியுமில்லை. ௮து காலில்‌ தைத்தால்‌ துக்கமுண்டாகிறது-அத்தைப் பிடுங்கி எறிந்தால்‌ துக்கம்‌ நீங்குகிறது -.
அது போல புத்திக்கும்‌ புருஷனுக்கும்‌ ஏற்பட்டிருக்கிற ஸம்யோகம்‌ நிங்கினால்‌ துக்கம்‌ நீங்குகிறது

(4)புத்திபின்‌ சத்துவத்தை, ரஜஸ்‌ தமோ குணங்கள்‌ மேல்‌ போக விடாமல்‌ பாதிக்கின்‌றன. அவை யிரண்டையும்‌ விலக்கி,
சத்துவகுணம்‌ மாத்திரம்‌ மேலிடும்படி செய்தால்‌, புத்தியானது புருஷ சாஷாத்காரத்தைப் பெறுகிறது .

திருசயம்‌ என்பது பிரகாசம்‌, கிரியை, இருத்தல்‌, இவைகளை உடையதாகவும்‌, பூதங்கள்‌, இந்திரியங்கள்‌ ரூபமாகவும்‌,
(புருஷனுக்கு) போக கைவல்லியங்களை& கொடுக்கக்‌ கூடியதாகவும்‌, இருக்கிறது.–18-

திருச்யத்தின்‌ ஸ்வரூபம்‌ இந்த சூத்திரத்தில்‌ சொல்‌லப்படுகிறது. பிரதாநம்‌ முதல்‌ பெளதிகங்கள்‌ வரை (ஸ்தாவர ஐங்கமங்கள்‌ வரை) யுள்ள ஸமஸ்த பதார்த்தங்களும்‌ திருச்யமெனப்படும்‌.-பிரகாசம்‌, கிரியை, இருத்தல்‌, என்பன முறையே சத்வ, ரஜஸ்‌, தமோ குணங்களின்‌ காரியமாம்‌. குணங்கள்‌ சூக்ஷ்மமாக விருக்கின்‌றமையால்‌, அவைகளைப்‌ பிரஸ்தாபிக்காமல்‌ அவைகளின்‌ காரியங்கள்‌ பிரஸ்‌தாபிக்கப்‌ பட்டிருக்கின்‌றன.-

பிரகாசம்‌ –ஸத்வ குணம்‌ மேலிடுதல்‌,
கிரியை –ரஜோ குணம்‌ மேவிடுதல்‌- சஞ்சலமாக இருத்தல்‌.
இருத்தல்‌ –மேற் கண்ட இரண்டும்‌ இல்லாமல்‌ மோக ரூபமாக இருத்தல்‌.
வஸ்‌க்கள்‌ குணங்களால்‌ தார தம்மியப்படு கின்றன. பிரதாநமே பஞ்ச தந் மாத்திரைகளாகவும்‌, பூதங்களாகவும்‌ கர்ம இந்த்ரியங்களாகவும் ஞாந இந்திரியங்களாகவும்‌ புத்தி, சித்தம்‌, மநஸ்‌, அஹங்காரங்களாகவும் பரிணமிக்கின்றது
போகம் அபவர்க்கம்‌, விஷய நுகர்ச்சி, வீடு அல்லது கைவல்லியம்‌ இவைகளைப்‌ புருஷனுக்குக்‌ கொடுக்கிறவைகளாக மேற் கண்ட பிரதாநத்‌தின்‌ பரிணாமங்களிருக்கின்‌றன.

சைவ ஸித்தாந்தத்தில்‌ சொல்லுகிறபடி தனு , கரண, புவந
போகங்கள்‌, புருஷன்‌ மேன்‌ மேலும்‌ சித்த சுத்தி பெற்றுக்‌ கடை முறையில்‌ வீடுபெற ஏற்பட்டி.ருக்கின்‌றன–

திருச்யம்‌ அல்லது பிரபஞ்சத்தின்‌ பிரயோஜநம்‌ யாது – புருஷன்‌ ௮னுபவம்‌ பெறுதலின்‌ பொருட்டாம்‌. புருஷன்‌ தன்‌ இயற்கை நிலைமையின்‌ அருமையையும்‌ பெருமையையும்‌ மறந்தான்‌.
ஒரு கதை–இந்த்ரன்‌ ஒரு காலத்‌தில்‌ பன்‌றியாக ஆயினான்‌; தன்‌ பெட்‌டைப்பன்றியுடனும்‌, குட்டிகளான பரிவாரங்களுடனும்‌ உல்லாசமாகவும்‌ சந்தோஷமாகவும்‌ காலங்கழித்தான்‌.
தேவர்கள்‌ இந்திரனின்‌ நிலையைக் கண்டு வியஸநமுற்று ஓ! பன்‌ றியே! நீவிர்‌ இந்திரனாவீர்‌.-நீவீர்‌ பன்றியாக உழலுவான் ஏன் என்று வினவ, இந்திரனான பன்றி சொன்னதாவது:–
*நான்‌ இந் நிலையிலேயே இருக்கட்டும்‌, இது எனக்குச்‌ சுகமாக இருக்கின்றது. தேவலோகம்‌ எனக்கு வேண்‌டாம்‌.”
இதைக்‌ கேட்ட. தேவர்கள்‌ வியப்புற்று இன்னவிதம்‌ செய்‌தால்‌ இந் நிலையை விட்டு இந்திரன்‌ திரும்புவார்‌ எனசத் தெரியாமல்‌:திகைப்புற்றார்கள்‌.
பின்பு ஒன்று ஓன்றாய்ப்‌ பன்‌றிக் குட்டிகளை அவர்கள கொல்ல ஆரம்பித்தார்கள்‌. கடையில்‌ பெண்‌ பன்றியையும்‌ கொன்றார்கள்‌.
எல்லாப்‌ பன்றிக் குட்டிகளும்‌ தன்‌ இணை பிரியாத பெட்டைப் பன்றியும்‌ இறந்த மேல்‌ பன்றி ரூபமான இந்திரன்‌.மிக வியஸனமுற்று -கோ! * என்று கதறி ௮ழுகவே, தேவர்கள் ௮ப்பன்றி சரீரத்தை வெட்டிப்‌ பிளந்தார்கள்‌.
அதனின்று திடீரென்று இந்திரன்‌ வெளிவத்து, இது என்ன கனவு! என்று சிரித்‌தான்‌, இவ்விதம்‌ புருஷன்‌ ப்ரக்ருதியுடன் ஸம்பர்சித்து , அபேத நினைவு கொள்ளுகிறான்‌.
சோஹாஹம்‌ சான்ற பாவநை பெறுகிறான்‌.-தன்னுடைய உண்மை நிலையை மறக்கிறான்‌. புருஷனான ஆத்துமா
உண்மையில்‌ சுத்தனுகவும்‌ ௮சங்கனாகவும்‌ இருக்கிறான்‌.
பிரபஞ்சமாகிய திருச்யத்துடன்‌ புருஷன் சம்பந்தம்‌ பெறுகிறதலினால்‌, சுக துக்கங்களுக்குட்பட்டவன்‌ போலக்‌ காணப் படுகிறான்
இச் சம்‌பந்தத்தை அனுபவத்‌தினால்‌ விலக்‌கிக் கொள்ளு தலின்‌ பொருட்டு யோக சாஸ்‌திரம்‌ பிரவிர்த்தித்தது (இது விவேகாநந்தர்‌ சொல்லியது )

விசேஷங்கள்‌, அவிசேஷங்கள்‌, லிங்கம்‌, அலிங்கம்‌, இவை(சத்வ, ரஜஸ்‌, தமஸ்‌) என்ற குணங்களின்‌ பரிணாமங்கள்‌.–19-

(1) விசேஷங்களாவன, பிருதிவி, அப்பு, தேஜஸ்‌, வாயு, ஆகாயம்‌ என்ற 5 மஹா பூதங்களும்‌, 5 கர்ம இந்திரியங்களும்‌ 5 ஞாந இந்திரியங்களும்‌, மநம்‌ 1, ஆக 16,-இவை எப்போதும்‌ மாறி மாறிக் கொண்டிருக்கின்‌றமையால்‌ ஸாங்க்ய சாஸ்‌திரத்தில்‌ விகாரங்‌கள்‌ எனப்‌ பெயர்‌ பெறும்‌.
இவை 16ம்‌ காரியங்களே அல்லாமல்‌ காரணமல்ல

(2) அவிசேஷங்களாவன பஞ்ச தன்மாத்திரைகள்‌, அகங்கார தத்துவம்‌ ஆக 6 இவை புத்தி (மஹத் தத்துவத்தின்‌) யின்காரியங்களாயும்‌, மேற்கண்ட 16 விசேஷங்களுக்குக்‌ காரணமாகவும்‌ இருக்கின்றன.
இவை புத்தியின்‌ காரியமாக இருக்கின்‌றமையால்‌ விகிருதி-என்றும்‌, விசேஷங்களுக்குக்‌ காரணமாக இருக்கின்‌றமையால்‌ பிரகிருதி என்‌றும்‌, இரண்டு தன்மைகளை உத்தசித்து பிரகிருதி விகிருதி என்றும்‌ பெயர்‌ பெறும்‌. ்‌

(3) லிங்கம்‌, மஹத் தத்துவம்‌: மூலப் பிரகிருதியான அலிங்கத்‌ தில்‌ இது லயமடைவதால்‌, இது லிங்கமெனப்‌ பெயர்‌ பெறும்‌,
(4) அலிங்கம்‌, மூலப்‌ பிரகிருதி, இது லயம்‌ அடையக்‌கூடியது, பிறிதொன்றுமில்லை. அதனால்‌ இது அலிங்க.மென்னப்படும் .
இது குணங்களுக்குள்‌ தார தம்மியமில்லாத ஸம்யா௮வஸ்தை
விசேஷங்கள்‌ 16-அவிசேஷங்கள்‌ 6, மஹத் தத்துவம்‌ 1,-மூலப்பிரகிருதி 1, ஆக தத்துவக்கள்‌ 24, புருஷன்‌ உள்பட. 25,

பார்க்கிறவன்‌ (புருஷன்‌) அறிவை (ஞாநத்தை) ஸ்வருபமாக உடையவன்‌- சுத்தன்‌, அதாவது பரிணாமமில்லாதவன்‌.-ஆயினும்‌ புத்தி விர்த்தியை அநுசரித்து விஷயங்களைக்‌ கிரஹிக்கிறன்‌,-20-

(1) புருஷன்‌ சுத்தனாய்‌ இருப்பினும்‌, புத்தியின்‌ விர்த்தி விசேஷங்களில்‌ பிரதி பிம்பிக்ககின்றமையால்‌, புத்தியின்‌ சலனங்கள் புருஷனுடையவையாக நினைக்கப் படுகின்‌றன,
(2) புருஷன்‌, சேதநன்‌. புத்தி, ௮சேதநம்‌. புத்திக்குப்‌ பல சாமக் கிரியைகள்‌ வேண்டும்‌. அவையாவன, இந்திரியங்கள்‌, விஷயங்கள்‌ முதலியன,
(3) புருஷன்‌ ஸ்வார்த்தன்‌, புத்தி பரார்த்தம்‌, சைதந்நியமே புருஷன்‌.

திருஸ்ய வஸ்துவின்‌ ஸ்வருபம்‌ (இருத்தலானது) அவனுடைய (புருஷனுடைய) பிரயோஜநத்திற்காகவாம்‌.–21-

(1) திருச்யம்‌, அதாவது வஸ்‌துக்களானவை கார்‌யம்‌, காரணம்‌, கரணம்‌, என குணத் திரயங்களாக இருக்கின்றன.
அவை புருஷனின்‌ போகத்தின்‌ பொருட்டும்‌, மோக்ஷத்தின்‌ பொருட்டுமாம்‌. பிருஹதாரண்ணியக உபநிஷத்தின்‌ மைத்திரேயி பிராஹ்‌மணத்தில்‌ இது பற்றி உபதேசம் உள்ளது
(2) திருஸ்ய வஸ்துக்களூக்கு அழிவு உண்டு, புருஷனுக்கு அழிவில்லை.
(3)அத்வைத வேதாந்திகளின்‌ அபிப்பிராயத்தில்‌, ப்ரஹ்மமே பிரபஞ்ச ஸ்வருபமாகத்‌ தோன்றுகிறது என்பதாம்‌.
சாங்க்ய யோகிகள்‌ மதத்தில்‌ புருஷனும்‌ பிரபஞ்சமும்‌ வேறாக இருப்பினும் புருஷனுடை.ப சம்பந்தமின்றி பிரபஞ்சம்‌ (ஸத்‌) இருத்தலைப்‌ பெறுதலின்றாம்‌.

போகம்‌, அபவர்க்கம்‌ இரண்டையும்‌ அடைந்த புருஷனை -முக்தனை -உத்தேசிக்க, பிரதாநம்‌ நாசமுற்றாலும் ,
அது முக்தனுக்கும் மற்றவர்களுக்கும்‌ பொதுவாய் உள்ளமையினால் போதா வரயுன்ளமையால்‌,
(அம்‌ மற்றவர்களை உத்தேசிக்க) நாசம் உறுகிறதில்லை.–22-

(1) யோகிகள்‌ மதத்தில்‌ புருஷர்கள்‌ பலர்‌. – ௮தனால்‌ ஒருவன்‌ முக்தி பெறுவதினால்‌, பிரதாநம்‌ அவனைக்‌ குறித்து நாசமடைந்தாலும்‌, மற்றவர்களுக்கு நாசமடைகிறதில்லை, வேதாந்திகள்‌ மதத்தில்‌, புருஷன்‌ ஒருவனே ஆயினும்‌, புருஷன்‌ பிரதிபிம்‌பிக்கின்ற உபாதிகள்‌ பலவாறாக இருக்கின்றமையால்‌, உபாதிகள்‌ நாசமுறும்‌ வரையில்‌ ஸம்ஸார பந்தம்‌ உண்டு.
(2) பிரதாநம்‌ ஒன்று, புருஷர்கள்‌ பலர்‌, இது சாங்க்ய யோகிகளின்‌ ஸித்தாந்தம்‌. -புருஷார்த்தம்‌ பெற்றவனுக்குப்‌ பிரதாநம்‌ இல்லை. புருஷார்த்தம்‌ பெறாதவனுக்கு, பிரதாநமானது, மஹதாதி ரூபமாகப்‌ பரிணமித்து , ஸம்ஸாரத்தை, யுண்டு பண்ணுகிறது.
இதனால்‌ ஒருவன்‌ முக்திப் பேறு மற்றவர்களுக்கு இன்றாம்‌ என்பது ஸித்தாந்தம்‌ பெறுகிறது

திருஸ்யம் , திரஷ்டா, இவ் விரண்டின்‌ சக்திகளின்‌ சம்பந்தமானது ஸ்வரூபத்தை அடைதலுக்குக்‌ காரணமாம்‌,–23-

(1) ஸ்வம்‌, திருச்யம்‌ அதன்‌ சக்தி என்றால்‌, ஜடத்‌தன்மை. பார்க்கத் தகுந்ததாக இருத்தல்‌ புத்தி முதல் .கீழ்க் கடையில்‌ உள்ள யாவற்றும்‌ திருச்யமாம்‌.
ஸ்வாமி என்றால்‌ (ஸ்வத்தை) உடையவன்‌, அதாவது புருஷன்‌, புத்தி (அந்தக்‌ கரணம்‌), விஷயமங்கள்‌ (திருச்யங்கள்‌) இருக்கின்றன.
புத்தி இந்திரியங்களுடன்‌ சேர்ந்து வெளி நோக்கி விஷயங்களைக்‌ கிரஹிக்க, போகங்கள்‌ உண்‌டா கின்றன, அதனால்‌ பந்தம் ஏற்படுகின்றது .
புத்தி, இந்திரியங்களின் சம்பந்தத்தைத் தவிர்ததுப்‌ புருஷனை அறிதல்‌ அபவர்க்கம்‌ எனப்படும்‌.-அதுவே கைவல்லியமாம்‌,
இவ்விதம்‌ யோகியான வன்‌ கைவல்லிய நிலையைப்‌ பெறவே, பிரதாநம்‌ இவனுக்கு, முன்‌ சூத்திரத்தில்‌ சொல்லியபடி நாசத்தை அடைகிறது,
கட உபநிஷத் இந்த்ரியங்கள்‌, மநம்‌, இவைகளுடன்‌ புருஷன்‌ சேருங்கால் போக்தா என்று அறிஞர்கள்‌ சொல்‌லுகிறார்கள்-இவைகளை விட்ட புருஷன்‌ முக்தனாகிறான் என்று சொல்லப்படுகிறது.

(3) ஸம்யோகம்‌ என்பது முன்‌ 1-வது குறிப்பில்‌ கண்டபடி.புத்திபின்‌ மூலமாய் விஷயங்களுடன்‌ சம்பந்தத் திலும்‌ விஷயங்களைத்‌ தவிர்த்து புத்தி புருஷனை சாஷாத்காரித்தலுமாம்-பிரகிருதி புருஷ ஸம் யோகத்தின்‌ முடிவான பிரயோஜநம்‌ யாதெனில்‌, புத்தி முதலில்‌ விஷயங்களுடன்‌ சம்பந்தம் பெற்று , விஷய நுகர்ச்சியின்‌ துக்கத்தை அனுபவத்தால்‌ அறிந்து அவைகளைச்‌ சிறுகச்‌ சிறுகத்‌ தவிர்த்து, வெளி நோக்கியதான புத்தி பின்பு அந்தர் முகப்பட்டு
ஆத்ம விஷயங்களில்‌ பயின்று , கடை முறையில்‌ ஆத்ம சாஷாத்காரம் பெறுதலுக்கேயாம்‌.
ஆத்ம ஸாக்ஷாத்காரம்‌ பெறவ, பிரக்ருதி புருஷ விவேகம்‌ ஏற்படும்‌. ஞாநம்‌, அதாவது புருஷ தர்சனம் பிரகிருதி புருஷ வியோகத்திற்குக் காரணமாம்‌,
அதர்சநம்‌ (அவித்யை ) பிரகிருதி புருஷ ஸம்யோகத்திற்குக்‌ காரணமாம்‌. அவித்யை என்ற திறை நீங்கவே , ஸ்வதஸ் ஸித்தமான கைவல்லியம்‌ ஸித்‌திக்கிறது.-இந்த தாvபரியத்தை ஸ்ரீ கீதையின்‌ முடிவில்‌ ௮ர்ஜுநன்‌ சொல்லி யிருக்கிறார்‌:–
மயக்கம் தீர்ந்தது -முன்னிருந்த ஞானத்தைத் திரும்பப் பெற்றேன்
இதில் ஸ்ம்ருதி -முன் நினைவு பத பிரயோகம் -எப்பொழுதும் ஜீவாத்மா ஸர்வஞ்ஞனாய் இருந்தும் மயக்கத்தால் அறியாதவன் போல் இருக்கிறான் -மயக்கம் நீங்கவே ஸ்வ பாவிகமான ஞானம் வெளிப்படுகிறது

அதற்கு (பிரகிநதி புருஷ ஸம்யோகத்திற்கு )க் காரணம்‌ அவித்தையாம்‌.–24-

முன்‌ சூத்தாத்தில்‌ ஸம்யோகத்தின்‌ ஸ்வரூபம்‌,காரியம்‌, இரண்டும்‌ சொல்லப்பட்டன. இந்த சூத்திரத்தில்‌ அதன்‌ காரணம்‌ சொல்லப்படுகிறது.
அவித்யை (பிராந்தி ஞாநத்தினல்‌ உண்டாகிற வாஸனை ) ஸம்‌யோகத்திற்குக்‌ காரணம்‌. திரஷ்டாவையும்‌,-திருச்யத்தையும்‌ ஒன்று படுத்தி, நான்‌ என நினைத்தல்‌ பிராந்தி. அந்த பிராந்தி வாஸநை யுடன்‌ கூடிய மனமானது பிரளய காலத்தில்‌ பிரதானத்தில் லயம் அடைந்து
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அந்த பிராந்தி வாஸநை யுடன்‌ வெளி வருகிறது.-இத் தன்மையான மநஸ்ஸி னால்‌ தான்‌ பந்தம்‌ உண்டாகிறது
அதனால்‌ அநாத்மாவில்‌ ஆத்மாவை நினைத்தும்‌,நான்‌ எனது என்ற பாவனைகளை ஜீவன்‌ விருத்தி செய்கிறான்‌,

அது (அவித்தை) இல்லாமல்‌ போதலினால்‌ முன்‌ சொல்லிய) புத்தி, புருஷன்‌ இரண்டின்‌ ஸம்யோகம்‌ அற்றுப்போகின்றது.
(இதற்கு) ஹாநம்‌ என்று பெயர்‌, அதுவே (இந்த ஹாநம்‌ நிகழ்தல்‌) சைதந்நிய ஸ்ரூபியாகிய புருஷனுக்குக்‌ கைவல்லியமாம்‌,–25-

முன்னர்‌ தள்ளத் தக்ககான துக்கம்‌ இன்னதென்றும்‌
துக்க காரணம்‌ இன்னதென்றும்‌, நிரூபணம்‌ செய்து ஹாநம்‌ (வீடுதல்‌) என்பது இன்னது என்று இந்த சூத்திரத்தில்‌ வியவஹரிக்‌கிறார்‌.
பந்த நிவிர்த்தி ஏற்பட்டால்‌ ஸ்வதஸ் ஹித்‌தமான ‘ புருஷ ஸ்வரூபம்‌ வெளியாகிறது என்று முன்‌ சொல்லியபடி, இப்போதும்‌ அவிததை நிங்கவே, புருஷ ஸ்வரூபம்‌ ஸித்திக்கிறதென்று இந்த சூத்திரத்தில்‌ சொல்லப்படுகிறது

ஸ்திரமான விவேக ஞாநம்‌ முன்‌ சொல்லிய ஹாநம்‌ பெறுதலுக்குச்‌ சாதநமாம்‌.–26-

(1) விவேகம்‌, திரஷ்டாவான புருஷன்‌ வேறு, திருச்யமாகிய புத்தி முதலிய பிரபஞ்சம்‌ வேறு, என ஆராய்‌தல்‌.
ஞாநம்‌, அதை அறிதல்‌. விப்லவம்‌ என்றால்‌ மித்தியா ஞாநம்‌.
(2) முதலில்‌ சாஸ்‌திர ஞாநத்தால்‌ விவேக ஞாநமானது சாதாரணமாய்‌ உண்டாகிறது. ௮ஃது அனுபவமில்லாமல்‌ பரோக்ஷ ஞாநம்‌ ஏற்படுகிறது.
பின்பு மநத்தினால்‌ அந்த சாஸ்‌திர ஞாநம்‌ திடப்பட்டும்‌, விஷயங்களில்‌ மநத்திற்கு வைராக்கியம்‌ உண்டாக்கியும்‌,
அதனால்‌ மநஸ்‌ ஆனது அந்தர் முகப்பட்டு, புருஷனையே நிரந்தரமாகத் தியானித்து மனஸ் ஆனது புருஷ ஸ்வரூபத்தைப்‌ பெறுகிறது.
இதைத் தான்‌ அவிப்லவ* என்ற பதம்‌ விவரிக்கிறது.

அவனுடைய (அந்த யோகியினுடைய) பிரஜ்ஜை யானது கட முறையில்‌ ஏழு படிகளை உடையது.–27-

(1) ஸ்திரமான்‌ விவேகத்தை யுடைய யோகியின்‌ பிரஞ்ஜைக்கு ஏழு படிகள்‌ உள்ளன.
i அறிய வேண்டியவை அறியப் பட்டன. இனி அறிய வேண்டியவை ஒன்றுமில்லை. இந்த பூமியில்‌ ஸர்வ ஸம்சயங்களும்‌ நிவிர்த்தி அடைகின்றன, தன்னை அறிய வேண்டுமென்ற விருப்பம்‌ மாத்திரம்‌ உள்ளது. ்‌
ii, பந்தத்‌துக்குக் காரணமான கிலேசங்கள்‌ எல்லாம்‌ நாசம்‌
பண்ணப் பெற்றன. ஸர்வ துக்கங்களும்‌ நிவிர்த்தி யடைகின்‌றன.
iii, இனி அடைய வேண்டியவை ஒன்றுமில்லை. ஸர்வ காமப்‌ பிராப்தி உண்டாகின்றது. இப்போது இவனுக்கு ஆப்‌த . காமன்‌ என்று பெயர்
iv. இனிச்‌ செய்ய வேண்டியவை ஒன்றுமில்லை. – நான்‌ கிருத கிருத்தியன்‌ என்ற ஞாநம்‌ உண்டாகிறது
v–சர்வ கார்ய நிவர்த்தி ஏற்படுகிறது, புத்தியானது நிர்‌மலமாகி சோக நிவிர்த்தியைப்‌ பெறுகிறது ,
ஆறாம்படியில்‌ புத்திக்கே காரணமான குணங்கள் இவனை விட்டு நழுவிப் பிரதாநத்‌தில்‌ லயமடைகின்றன. புத்தியும்‌ சூந்யம்‌ பெறுகிறது.
இதில்‌ “அபயம்‌?” என்று உபநிஷத்துக்களில்‌ சொல்‌லப் பெறும்‌ நிலை ஏற்படுகிறது .
7-இதில்‌ புருஷன்‌ தனிமையாக இருக்கிறான்‌. எல்லா ஸம்பந்தங்களும்‌ விலக, கேவலனாக இருக்கிறான்‌. இதுவே கைவல்‌லிய நிலை,

முதல் நான்கு படிகளில்‌ கார்யங்களினின்‌று கிரமமாக விடுதலையும்‌ ஐந்தாம் ஆறாம் படிகளில்‌ காரணங்களினின்‌று விடுதலையும்‌ ஏற்படுகின்றன. ஏழாம்படியில்‌, ஸ்வரூப மாத்ரமாக புருஷன்‌ இருத்தலும்‌ எற்படுகிறது.

உபநிஷத்துக்களும் மேற்கண்ட ஏழு படிகளையும் அடியில்‌ வருமாறு சொல்லப் படுகிறன:

காரண ரூபத்தில் பரமாயும் -கார்ய ரூபத்தால் அபரமாயும் -இருக்கின்ற அந்த பரமாத்மாவை ஒருவன் பார்ப்பானாகில்
ஹ்ருதயத்தின் கண் உள்ள அவித்யா வாஸனா மயமான பந்தங்கள் பேதிக்கப் பெற்று விட்டுப் போகின்றன
ஸமஸ்தமான ஸம்சயங்களும் நாசமுறுகின்றன -இந்த ஞானியின் ஆகாமி ஸஞ்சித கர்மங்களும் நசிக்கின்றன

நான்‌ ஏதோ காரணத்தால்‌ சுப கர்மத்தைச்‌ செய்யாமற்‌ போனேனே, ஏதோ காரணத்தால்‌ பாப கர்மததைச்‌ செய்தேனே என்ற தாபத்தால்‌ ௮ந்த ஞாநியானவன்‌ தபிக்கப் பெறுகிறானில்லை.

அந்த ஞாநி , பிரஹ்மமாக இருந்து , ஒரே காலத்தில்‌ எல்லாக்‌ கர்மங்களையும்‌ ௮டைகிறான்‌.
ஒருவன்‌ தன்‌ ஸ்வரூபம் இன்னதென்று அறிவானாகில் , அவன்‌ செய்ய வேண்டிய காரியம்‌ என்ன? ௮வன்‌ செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, என்‌றபடி..

எங்கும்‌ ஆத்மா ஒன்றையே பார்க்கிறவனுக்கு மோஹம்‌ ஏது சோகம்‌ ஏது ?

ஆத்மாவை அறிந்தவன் பயமற்ற நிலையைப் பெறுகிறான்

பிரஹ்மமானது ஸத் ரூபமாயும்‌, சித் ரூபமாயும்‌, ப்ரிச்சேதமில்லாததாயும்‌ இருக்கிறது. பிரஹ்மத்தை அறிந்தவன்‌ பிரஹ்மமாகவே ஆகிறான் –

யோக அங்கங்களை அநுஷ்டிப்பதினால்‌ மநத்தின்‌ மலம்‌ குறையக்‌ குறைய, புருஷ ஸாக்ஷாத்காரம்‌ வரையில்‌, ஞாநப் பிரகாசமானது மேன்‌மேலும்‌ உண்டாகிறது.–28-

ஜந்து வகையாயுள்ள (அவித்தை, அஸ்மிதை, ராகம்‌, துவேஷம்‌, அபிநி வேசம்‌)விபரியய ஞாநம்‌ யோகாங்கங்களான யமம்‌,நியமம்‌, முதலியவைகளைச்‌ சரியாய்‌ அப்பியஸிப்பதினால்‌ குறைவு படுகிறது.-அதன்‌ முடிவில்‌ புருஷ தர்சநம்‌ எற்படுகிறது. யோக அங்கங்களை அனுஷ்டித்தால்‌ பிரகிருதி புருஷ விவேக ஞாநம்‌ தானே உண்டாகின்றது.-அவ் வனுஷ்டாநத்தால்‌ மந மலம்‌ நீங்கவே, ஸ்வதஸ் ஸித்தமான புருஷனின்‌ ஸாக்ஷாத்கராரம்‌ ஏற்படுகிறது.

யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, பிராணயாமம்‌, பிரத்தியாஹாரம்‌, தாரணை தியாநம்‌, ஸமாதி என்பன யோக முறையில் எட்டு அங்கங்களாம்‌.–29-

(1) இதில்‌ சொல்லப்பட்டிருக்கிற வரிசையில்‌ முன்னதை அப்பியஸிக்காமல்‌, பின்னதை மாத்திரம்‌ அப்பியஸித்‌தால்‌ பிரயோஜநம் அன்று.
உதாரணமாக யமம்‌ மாத்திரம்‌ தனித்‌து அப்பியஸிக்கலாம்‌, யமம்‌ இன்றி, நியமம்‌ முதலியவற்றை அப்பியஸித்தால்‌ பிரயோஜநமுண்டாகாது. அப்படியே யமம்‌, நியமம்‌ இன்றி ஆஸநம்‌ மாத்திரம்‌ பிரயோஜாமின்றாம்‌. அப்படியே பின்‌னுள்ளவைகளைப் பற்றியும்‌ அறிந்து கொள்க, .

முதல்‌ பாதத்தில்‌ பிரஸ்தாபித்துள்ள அப்பியாஸம்‌,வைராக்கியம்‌, வீரியம்‌ முதலியவை யமம்‌ முதலியவைகளுள்‌ அடங்‌கும்‌.
அப்படியே வேதாந்திகள்‌ சொல்லுகிற விவேகம்‌, வைராக்கியம்‌, ஷட் ஸம்பத்தி, முமுஷுத்துவம்‌ இவைகளும்‌ யமம்‌ முதலியவைகளுள் அடங்கும்

அஹிம்ஸை, சத்தியம்‌, களவின்மை, இந்திரிய நிக்கிரஹம்‌, திரவிய அபேக்ஷையின்மை, இவை யமத்தின்‌ ஸ்வரூபங்களாம்‌-30-

அஹிம்ஸை: –மநம்‌, வாக்கு, காயத்தால்‌ எவ்விதத்‌தாலும்‌, எக் காலத்திலும்‌, எப் பிராணிக்கும்‌ ஹிம்ஸை செய்யாதிருத்தல்‌.
சத்தியம் முதலான மற்றையவை அஹிம்ஸை என்ற தர்மத்தைச்‌ சுத்தம் செய்வதற்கும்‌, பூர்த்தி பெறச்‌ செய்வதற்கும்‌ ஏற்பட்ட ஸாதநங்கள்‌.
அஹிம்ஸை என்ற ,தர்மத்தைப்‌ பரிபாலிக்காமல்‌ மற்றைய கர்மங்களை அனுஷ்ட்டித்தல் பிரயோஜனம் இல்லை. அஹிம்ஸை என்ற தர்மம்‌ மற்றைய தர்மங்களின்‌ அனுஷ்டாநம் இன்‌றி பூர்‌த்தி பெறாதாகையால்‌, அவைகள்‌ முக்கிய ஸாதநங்களாம்‌.

ஸத்தியம்‌:–பிறர்‌ நன்மையின்‌ பொருட்டு, பிரமாணங்களால் கிரஹித்து மநத்தால்‌ நினைத்தபடி வாக்‌கினால்‌ சொல்லுதல்‌.
இதைக்‌ கேட்கிறவன்‌ உள்ளபடி. கிரஹிக்கும்படியாகச்‌ சொல்ல வேண்டும்‌,
வஞ்சகமும்‌ கபடமுமுள்ளதாயும்‌, கேட்கிறவன்‌ உள்ளபடி அறியாமலிருக்கும்படி யாகவும்‌ மொழிதல்‌ சத்தியமன்று, உண்மையாயிருப்பினும்‌, பிராணிகளுக்கு நன்மை பயக்கக் கூடிய மொழி மாத்திரம்‌ சத்தியமாகும்‌. உண்மையாயிருப்பினும்‌ தீமை பயக்கக்‌ கூடியவை ௮சத்தியமேயாகும்‌,
ஒருகால்‌ நன்மை உண்டு பண்ணக்‌ கூடியதான பொய்யும்‌ சத்தியத்தின்‌ பெருமையைப்‌ பெறும்‌.
பொய்ம்மையும்‌ வாய்மை யிட,த்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்‌..–என்ற குறள்‌ இங்கு கவனிக்கத்‌ தக்கது,
மனுவின்‌ வசநம்‌ இதுவாம்‌–உண்மை பேசு, ௮து பிரிய கரமாக இருத்தல்‌, வேண்டும்‌. உண்மையான வார்த்தையாயினும்‌, பிரியமினறேல்‌,
அதைச்‌ சொல்லுதலைதத் தவிர்‌, பிரியமானதென்று பொய்யைப்‌ பேசாதே.

களவின்மை:–பலாத்காரமாகவாவது, இரஹஸ்யமாகவாவது,பிறர்‌ பொருளை அபஹரிக்காமல்‌ இருத்தலும்‌, அத் தன்மையான சிந்தனையைத் தவிர்த்தலும்‌, இந்திரிய நிக்கிரஹம்‌ அல்லது பிரஹ்மசர்யம்‌,ஸ்‌த்ரீகள் பற்றிய காமனைகளைத் தவிர்த்தலுமாகிய இவையே களவின்மையாம்‌.
ஸ்திரீகள்‌ பற்றிய காமனைகள்‌: இது 9 வித,மான அங்கங்களை யுடையன.
(1) ராகத்துடன்‌ ஸ்திரீகளைப்‌ பார்த்தல்‌ (2) ஸ்பர்சித்தல்‌, (3) அவர்கள்‌ வார்த்தைகளைக்‌ கேட்டல்‌,(4) அவர்களைச்‌ சிந்தித்தல் (5) அவர்களைப் பற்றிப்‌ பேசுதல்‌,
(6) அவர்களுடன்‌ விளையாடல்‌, (7)அவர்களுடன்‌ பேசுதல் (8) அவர்களைப் பற்றி ஸங்கற்பித்தல்‌, (9) அவர்களுடன்‌
ஸம் ஸர்கம்‌ செய்தல்‌ என்பவைகளாம்‌.

பிரஹ்மசர்யம்‌:–பிரஹ்ம வேதத்தை உத்தேசித்து, சர்யம்‌-நியமங்களை அனுஷ்டி.த்தல்‌. வேதாத்தியயநம்‌ செய்தலுக்கு, இந்திரிய நிக்ரஹம்‌ . முக்கியமானதால்‌, பிரஹ்ம சர்‌யம் என்ற பெயர்‌ இந்திரிய நிக்கிரஹத்திக்கு எற்பட்டு விட்டது .

திரவிய அபேஷை இன்மை:–சரீர யாத்திரைக்கு இன்றியமை யாவைகளைத் தவிர மற்ற விஷயங்களில்‌ பிர விருத்தி இல்லாமல் இருத்தல் என்பது இதன்‌ முக்கிய கருத்து.-சொத்தைச்‌ சம்பாதித்தல் அத்தைப் பேணுதல் அதற்காகப் பிறரை ஹிம்ஸித்தல்‌ இவைகளைத் தவிர்க்க வேண்டும்‌.

ஜாதி, தேசம்‌, காலம்‌, ஸமயம்‌ இவைகளின்‌ வரம்புக்கு உட்படாமல்‌, யோகத்தின்‌ எல்லாப்‌ பூமீகளிலும்‌, யமம்‌ என்ற விரதமானது அநுஷ்டிக்கத் தக்கது, இதைப்‌ பூர்ணமாக அனுஷ்டித்தல்‌ மஹாவிரதம் எனப்படும்‌.–31-

உதாரணமாக, மீன்‌ பிடிக்கிறவன்‌ மீனை மாத்திரம்‌ ஹிம்ஸித்தல்‌ கூடும்‌ என்று சொன்னாலும்‌, மற்றவைகளைத்‌ தவிர்த்தல் ஜாதி,
கோவில்‌ முதலிய புண்ணிய ஷேத்திரங்களில்‌ ஹிம்ஸித்‌ தலை விலக்கல்‌– தேசம்‌,
அமாவாஸ்யை முதலிய பருவ காலங்களில்‌ தவிர்த்தல்‌–காலம்‌.
சிராத்தம்‌ முதலியவைகளில்‌ தவிர்த்தல்‌ ஸமயம்‌.
இப்படியே சத்தியம்‌ முதலிய யமங்களையும்‌ சேர்த்து ஆராய்ந்து கொள்ளுக.

பரிசுத்தம்‌ செய்து கொள்ளுதல்‌ ஸந்தோஷம்‌,(தபஸ்‌) துவந்தங்‌களைச்‌ சகித்தல்‌, (ஸ்வாத்தியாயம்‌) யோக ஸித்திக்கநுகூலமான மந்த்ரங்‌களை ஜபித்தல்
(ஈஸ்வரப்‌ பிரணிதாநம்‌) எல்லாக்‌ கர்மங்களையும்‌ ஈஸ்வரனிடம்‌ அர்ப்பணம்‌ செய்தல் , நியமமாம்‌.–32-

பரிசுத்தம்‌ செய்து கொள்ளுதல்‌ இரு வகைத்து -ஓன்று பாஹ்ப செளசம்‌, ஜலம் முதலியவைகளால்‌ ஸ்தால சரீரத்தைச்‌ சுத்தம் செய்தல்‌.
இரண்டாவது ஆந்த்ர செளசம்‌ — மைத்ரீ,
முதிதா முதலிய ஸத்‌ பாவங்களால்‌ மநத்தின்‌ மலத்தை நீக்குதல்‌.
ஸந்தோஷம்‌ : கிடைத்ததை வைத்துத்‌ திருப்தி பெறல்‌,
தபஸ்‌ : காயக்‌ கிலேசத்திற்குரிய சாந்த்ராயண விரதத்தை அனுஷ்டித்தல் — ஸுக துக்கங்களான துவந்தங்களை ஸகித்தல்‌.
மற்றவைகள்‌ சூத்திரத்தின்‌ அர்த்தத்திலேயே விளங்கும்‌.

யம நியமங்களுக்கு விருத்தமான சங்கற்பங்களால்‌ தடைகள் நேரிடுமாகில் அச் சங்கற்பங்களின்‌ தோஷங்களை நினைக்கப்பாலது,- –33-

யோகத்திற்தத்‌ தடைகளான ஹிம்ஸை முதிலியன, தான்‌ நேரில்‌ செய்தாலும்‌, பிறரைச்‌ செய்யும்ப்டி ஏவினாலும்‌, அதைச்‌ சரியென்று அநுமோதித்தாலும்‌, (எல்லாம்‌ பாபமே யென்றும்‌), அவை ஆசையினாலாவது, கோபத்தினாலாவது, மோஹத்தினாலாவது உண்டாயினும்‌, அவை அற்பமாயினும்‌, மத்திமமாயினும்‌, அதிகமாயினும்‌ ஏற்பட்டாலும்‌, அவை முடிவில்லாத்‌ துக்கங்களுக்கும்‌, அறிவில்லாமைக்கும்‌ காரணமாகின்றன எனச்‌ சிந்திக்கத் தக்கவை.–34-

(1) இந்த சூத்திரத்தில்‌ யம, நியமங்களுக்கு விரோதிகளான எண்ணங்களின்‌ ஸ்வரூபத்தையும்‌, அவை உண்டாகும்‌
பிரகாரத்தையும்‌, காரணங்களையும்‌, உட்பிரிவுகளையும்‌, ௮வைகளின்‌ பயன்களையும்‌ விவரித்திருக்கிறார்‌.
(2) துக்கங்கள்‌ என்றால்‌ துக்கங்களுக்கு உரிய ௮நேக ஜென்மங்கள் என்று தாத்பர்யம்‌.

அஹிம்ஸை ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறும் பொழுது, அந்த யோகியின்‌ முன்னர்‌ பகைமை போய் விடும்‌.–35-

அ்‌த் தர்மத்தை அனுஷ்டிக்கிறவன்‌ முன்னிலையில்‌ பரஸ்பரம்‌ வைரியாயுள்ள ஜீவ ராசிகளும்‌ கூட விரோதத்தை விட்டு,பரஸ்பரம்‌ அன்பு பாராட்டும்‌.
உதாரணம்‌: பசு, புலி; பாம்பு, கீரி;எலி, பூனை முதலியனவாம்‌. மஹா தேவரின்‌ குடும்பம்‌ இங்கு கவனிக்கத் தக்கது —

ஸத்திய விரதம்‌ ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, யோகியின்‌ வார்த்‌தை கர்ம பலத்தை உண்டு பண்ணும்‌ தன்மையை உடையதாகிறது.–36-

ஸத்தியம்‌ என்ற தர்மம்‌ பூர்ணமாக ஏற்படவே, யோகியின்‌ வார்த்தை பலிக்கக் கூடிய து. விளையாட்டில்‌ சொன்னாலும்‌ கூட பலிக்கும்‌. நன்மை, தீமை என்ற இரு பலன்களையும்‌ அளிக்கும்‌. ௮வன்‌ வார்த்தை தவறாது :

களவின்மை ஸ்திரப்பட்டுப்‌ பூர்ணமாகவே, எல்லா விடத்திலும்‌, எல்‌லாக்‌ காலத்திலும்‌ ரத்நங்கள்‌ ழதலிய எல்லாப்‌ பொருள்களும்‌ அவனை யடையும்‌–37-

பிரஹ்ம சர்யம்‌ ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, வீர்ய லாபம்‌ உண்‌டாகும்‌.–38-

வீர்யத்தை வியயம்‌ பண்ணாமல்‌ உள்ளே அடக்க, மநத் தெளிவு, புத்தி நுட்பம்‌, தைர்யம்‌, பலம்‌ உண்டாகும்‌. அஷ்ட, ஸித்திகள் எற்படும்‌,–

பிரதி க்ரஹ்ம்‌ இல்லாமை ஸ்திரமாகிப்‌ பூர்ணம்‌ பெறவே, பிறப்பின்‌ காரணம்‌ தெளிவு பெறும்‌.–39-

பிறரிடம்‌ யாதொன்றையும்‌ கிரஹிக்காமலும்‌ இச்சிக்‌காமலும்‌ இருத்தல்‌ ஸ்‌திரப்படுமாகில்‌, யோகி யானவன்‌
பிரகிருத ஐந்மம்‌ உண்டாதலுக்கு யாது காரணம்‌ என்றும்‌, முன்‌ ஜந்மங்களில்‌ தான்‌ செய்த கர்மங்கள்‌ இன்னவை யென்றும்‌,
அவை இனி எத்‌தனை ஐந்மங்களை உண்டு பண்ணுமென்றும்‌, தான்‌ கைவல்யம்‌ பெறும்‌ வரை ஏற்படும்‌ ஜந்மங்கள்‌ இன்னவையென்றும்‌ அறிவான்‌.

பிறர்‌ உதவியை நாடான்‌, என்பதனால்‌, தான்‌ தனித்து நிற்கும்‌ தகைமையை யுடையவனாவான்‌. ஜநநத்தை உண்டு பண்ணும்‌ இரணத்தை இனிச்‌ செய்யான்‌.
௮தனால்‌ ௮வன்‌ மநம்‌ தூய்மை பெறுகிறது. அந் நிலையின்‌ பயனாய்ப்‌ பிறப்பு இன்னதென்பதையும்‌,௮தன்‌ பிரகாரத்தையும்‌ (மக்கள்‌, தேவர்‌, நரகர்‌ முதலியவைகள்‌),பிறப்‌பின்‌ காரணங்களான கிலேசங்களையும்‌ கர்மங்களையும்‌, அதன்‌ பலனான துக்கத்தையும்‌, முடிவான புருஷ ஸாஷாத் காரத்தையும் குரு உபதேசத்தால்‌ அறிகிறான்-

சவ்சம்‌ (சுத்தம்‌) பூர்ணமாக ஏற்படவே தன்‌ அவயவங்களில்‌ அருவருப்பும்‌, பிறருடன்‌ சேராமலிருத்தலும்‌ உண்டாகின்றன.–40-

இனி , நியமங்களின்‌ ஸித்திகளைச்‌ சொல்‌லுகிறார்‌. தன்‌ சரீரத்தை அடிக்கடி உள்ளும்‌ புறமும்‌ சுத்தி செய்து வரவே, அதன்‌ ஆராய்ச்சி எற்படுகிறது .
அதன்‌ தன்மை ௮சுத்தமென அறிகிறான்‌, அதனால்‌ சரிரத்தின் மேலுள்ள அபிமாநம்‌ விட்டு விலகுகிறது -பிறர்‌ சரீரங்களைப் பற்றி இன்னும்‌ அதிகமான அருவருப்பு உண்டாகிறது.

அதனால்‌ (சவ்சத்தின்‌ ஸித்தியால) மநம்‌ சுத்தம்‌ பெறுதலும்‌,அதனால்‌ மநத்‌ தெளிவும்‌, அதனால்‌ மநம்‌ ஒருமைப் படுதலும்‌,
அதனால்‌ இந்திரிய ஐயமும் ,முடிவில்‌ ஆத்ம ஸாக்ஷாத் காரம்‌ பெறுதலுக்கரிய தகைமையை அடைதலும்‌ ஏற்படுகின்றன.–41-

ஸந்தோஷம்‌ என்ற நியமம்‌ ஸித்தி பெறுதலினால்‌ உயர்நமுள்ள ஸுகம்‌ உண்டாகும்‌.–42-

எல்லா விஷய சுகங்களையும்‌ அனுபவித்தலால்‌ ஏற்படும்‌ ஸந்தோஷத்தைப்‌ பார்க்கிலும்‌, அவைகளில்‌ விருப்பு வெறுப்பு என்ற பற்றில்லாமல்‌ இருத்தலினால்‌ ஏற்படும்‌ ஸந்தோஷம்‌ மிகவும்‌ உயர்நலமுடையது. தைத்தரீய உபநிஷத்‌தின்‌, ஆநந்‌த மீமாம்ஸையில்‌ இந்தப்‌ பற்றில்லாமை கடை முறையில்‌ பிரஹ்ம ஆநந்தத்தைக்‌ கொடுக்கும்‌ என்ற உபதேசமுள்ளது.

தபஸ்ஸினல்‌ அசுத்தத்திற்குக்‌ காரணமாம்‌ கிலேசங்கள்‌ நசித்துப்‌ போகின்றன. அதன்‌ பயனாகச்‌ சரீரத்திற்கும்‌ இந்திரீயங்களுக்கும்‌ ஸித்திகள்‌ ஏற்படுகின்றன.–43-

சித்திகள்‌, அணிமா முதலான 8 ஸித்திகளும்‌,இந்த்ரியங்களுக்கு லோகாந்தரத்திலும்‌, தேசாந்தரத்திலும்‌, காலாந்திரத்திலும்‌ நேரிடும்‌ விஷயங்களைப்‌ பார்த்தல்‌, கேட்டல்‌ முதவிய ஸித்திகளும்‌ உண்டாகும்‌.

(யோகானுகூலமான) மந்த்ரங்களை ஜபிக்கிறதினால்‌, இஷ்டமான தேவர்களுடைய ஸாந்நித்தியம்‌ உண்டாகிறது,–44-

மந்த்ர ஜபத்தினால்‌ மந்தர அதிஷ்டாந தேவர்கள்‌,மந்த்ரத்தைக்‌ கண்டு பிடித்த ரிஷிகள்‌, ஸித்‌த புருஷர்கள்‌ இவர்கள்‌ இவனுக்கு தர்சநத்தைக்‌ கொடுத்து, அநுக்ரஹம்‌ செய்கிறார்கள்‌.

ஈஸ்வரனைத்‌ தியாநம்‌ செய்வதால்‌ அல்லது ஈஸ்வரனுக்குத்‌ தன்னை அர்ப்பணம்‌ செய்வதால்‌ ஸமாதியின்‌ ஸித்தி ஏற்படுகிறது.–45-

ஈஸ்வரத் தியானத்தால் ஸமாதி பூர்ணம் பெறுதல் உண்டாகிறது -அதாவது யோகியின்‌ பிரக்ஞை விசாலமாகிறது.
கால தேசங்களின்‌ வரம்பின்‌றி எல்லாவற்றையும்‌ ௮றியும்‌ தகைமையைப்‌ பெறுகிறான்‌,
ஈஸ்வரத்‌ தியாநத்தால்‌, ஸமாதி பூர்ணம்‌ உண்டாகிறது என்பதினால்‌ யமம்‌ முதலியவை வேண்டுவது இல்லை என்று அர்த்‌தமில்லை.
யமம்‌ முதலியவை மாத்‌திரம்‌ இருந்து ஈஸ்வரத்‌ தியாநம்‌ இல்லாவிடில்‌ ஸமாதி ஸித்தி உண்டாகாது என்பது பொருள்‌.

ஆஸநம்‌ என்பது ஸ்தீர கரமாயும்‌, ஸுக கரமாயும்‌ இருத்தலாம்‌.–46-

ஆஸநம்‌ இருவகைத்து , ஒன்று பாஹ்ய ஆஸநம்‌-வஸ்‌த்ரம்‌, கருப்பு மான் தோல்‌, தர்ப்பை, கம்பளம்‌ முதலியன-
இரண்டாவது சாரீர ஆஸநம்‌, பத்மாஸநம்‌, வீராஸநம்‌, பத்ராஸநம்‌,ஸ்வஸ்‌திகாஸநம்‌, தண்டாஸநம்‌ முதலியன.
முந்தியவை சரிரத்‌திற்குப்‌ புறம்பானவை. பிந்தியவை சரீர அவயவங்களைப்‌ பலவிதமாக அமைத்துக் கொள்ளுதலால்‌ ஏற்படுகின்‌றவை. ்‌

முயற்சியைத்‌ தேயும்படி செய்தலானும்‌, அநந்தன்‌ உபாஸனையாலும்‌ ஆஸந ஜயம்‌ உண்டாகும்‌.–47-

முயற்சியைச்‌ தேயும்படி, செய்தல்‌, என்றால்‌, மநம்‌, மெய்‌, மொழிகளால்‌ ஸாதாரணமாய்‌ உண்டாகும்‌ பிரயத்நங்களைத்‌ தடுத்து ஒருமுகப்படுத்தல்‌.
அநந்தன்‌ -ஆதிசேஷன்‌, பூமியைத்‌ தாங்குகிற 1,000 தலைகளை யுடைய ஆதி சேஷனை உபாஸனை செய்வதால்‌, ஆஸந ஜயத்தைப் பெறுகிறான்‌.
அநந்தன் ஆஸநத்திற்கு அபிமாநியான தேவதை -புராண வரலாற்றை நீக்‌கி , ௮தன் கண்‌ குப்‌தமாயுள்ள உண்மையை
வெளியிடில்‌, பூமிக்கு ஆகர்ஷண சக்தி யுண்டு,ஸூர்யனுக்கும்‌ ஆகர்‌ஷண சக்தி யுண்டு, இரண்டும்‌ ஒன்று மற்றொன்றை இழுக்கின்‌றன.
பூமி சிறிது, அதனால்‌ அதன்‌ சக்தியும்‌ சிறிது. சூரியன்‌ பெரிது, .அதனால்‌ ௮தன்‌ சக்தியும் பெரிது. அக் காரணத்தால்‌ பூமி, சூரியனிடம்‌ வீழ்ந்து போகாமல்‌ தன்‌ நிலையைக் காப்பாற்றிக் கொண்டு தான்‌ இயங்குகின்றது போல, யோகியானவன்‌ பெரிதான பலமான உலகப்‌ பற்றுக்களை ஜயித்து, அந்தர் முகப்பட்டு, மநத்தை ஒரு முகப் படுத்தி ஸ்‌திரப்படுத்திக் கொள்ளல்‌ வேண்டும்‌. ஆகர்ஷண சக்தியை ஸர்ப்பமாகப்‌ பிரதீகப் படுத்தப் பட்டிருக்கிறது

அதனால்‌, (ஆஸந ஜயத்தினால்‌) துவந்தங்கவின்‌ உபத்திரவம்‌ இன்றாம்‌.–48-

துவந்தங்கள்‌ — சீதோஷ்ண முதலியவைகள்‌.

அதில்‌ (ஆஸந ஜயம்‌ ஏற்படும்போது) சுவாஸத்தின்‌ வரத்துப்போக்கை நிறுத்தல்‌ பிராணாயாமமாம்‌.–49-

(1) ஆஸந ஐயத்தின்‌ மூலம்‌ சரீரம்‌ ஸ்வாதீநம்‌ ஆகிக்‌கொண்டு வர , பிராணாயாமம்‌ செய்தல்‌ இயலும்‌. பிராணன்‌ -பிராணனை, ஆயாமம்‌ -நீளும்படி செய்தல்‌.

ஸாதாரணமாய்‌, உஸ்வாஸமும்‌, நிஸ்வாஸமும்‌ நம்முடைய பிரயத்நமின்றி யாதொரு தடையில்லாமல்‌ விரைவாய்‌ நடைபெறுகிறது.
பிரயத்நத்தால்‌ ௮வை அளவுக்குட்பட்டு நடை பெறும்படி செய்தல்‌. அதாவது, உட் கொள்ளும்‌ ஸ்வாஸத்தை விரைவாய்த்‌ தானே செல்லாமல்‌ தடுத்து நீண்டகாலம்‌ நிகழும்படியாகவும்‌-அவ்விதமே உட்கொண்ட ஸ்வாஸத்தை வெளியேறாமல்‌ நீண்ட காலம்‌ தங்கும்படி செய்தலும்‌, பின்னர்‌ நிஸ்வாஸமாகி வெளியேறும்‌. ஸ்வாஸத்தை நீண்ட காலம்‌ நிகழும்படி. செய்தலும்‌ பிராணாயாமம்‌ எனப்படும்‌. உஸ்வாஸம்‌ – பூரகம்‌, நிறுத்தல்‌ = கும்பகம்‌, நிஸ்வாஸம் = ரேசகம்‌,

வெறுமையாக சுவாஸத்தை மேற்கண்டபடி. நிகழும்ப்டி, செய்தல்‌ மாத்திரம்‌ போதாது. மநு ஸ்ம்ருதியும்
பிரணவத்தோடு கூடிய ஏழு வியாஹிருதிகள்‌, காயத்ரீ,௮தன்‌ சிரஸ்‌ இவைகளை மநத்தால்‌ மும் முறை ஜபித்து சுவாஸத்தை நிரோதம்‌ செய்தல்‌, பிராணாயாமம்‌ என்பதாம்‌.-இது துவிஜர்கள்‌ செய்ய வேண்டிய முறை, ஏனையர்‌ அவரவர்கள்‌ இஷ்ட தேவதையைத் தியாநம்‌ பண்ணிக் கொண்டு செய்தல்‌ நலமாம்‌,

வெளிப் போகின்ற சுவாஸம்‌ (ரேசகம் ) என்ன, உட்கொள்ளும்‌ சுவாஸம்‌ (பூரகம்‌) என்ன, நிறுத்தப் பெறும்‌ சுவாஸம்‌ (கும்பகம்‌) என்ன,
இவைகளை தேசத்தினாலும்‌, காலத்தினாலும்‌ எண்ணிக்கையாலும்‌ கவநித்துப்‌ பார்த்து வருதவினால் சுவாஸம் நீண்டதாயும் சூஷ்மமாகவும் ஆகுதல் இயலும் –

(1) ரேசகம்‌ முன்‌ மாசம்‌ 12 அங்குலம்‌ நீண்டது -இந்த மாஸம்‌ 18 அங்குலம்‌ நீண்டது என்றறிவது தேசத்தால்‌ அறிதலாம்
முன்‌ மாசம்‌ 2 நிமிஷ காலம்‌ ரேசகம்‌ நிகழ்ந்தது -, இந்த மாஸம்‌ 3 நிமிஷ காலம்‌ நிகழ்ந்தது என்று அறிவது
காலத்தால்‌ அறிதலாம்‌.-முன்‌ மாசம்‌ 1 முதல்‌ 10 வரை எண்ணும்‌ வரைக்கும்‌ ரேசகம்‌ நடை பெற்றது ; இந்த மாஸம்‌ 1 முதல்‌ 20 வரை எண்ணும்‌ வரைக்கும்‌ ரேசகம்‌ நடை பெற்றது என்று அறிவது எண்ணிக்கையால்‌ அறிதலாம்‌.
இவ் விதமே, பூரகம்‌, கும்பகம்‌ முதலியவைகளையும்‌ தேசம்‌, காலம்‌, எண்ணிக்கைகளைச்‌ சேர்தது அறிந்து கொள்ளுக –
(2) ஸ்வபாவமாப்‌ ஏற்படும்‌ உஸ்வாஸ நிஸ்வாஸங்களை அப்‌படி. நிகழாமல்‌ பிரயத்நத்தால்‌ சிறுகச்‌ சிறுகத்‌ தடுத்து வந்து , கடை முறையில்‌ கும்பகம்‌ தீர்க்க காலம்‌ நிகழும்படி. செய்தல்‌ தான்‌ பிராணாயாத்தின்‌ , முக்கியக்‌ கருத்தாம்‌. அதனால்‌, மநம்‌ சலநமற்று ஓய்வைப் பெறும்‌.
(3) ரேசகத்தின்‌ அப்பியாஸத்தில்‌ ஸ்வாஸம்‌ எப்படி. நீண்டு வருகிறது என்பதை, பஞ்சு முதலிய மெல்லிய (திரவியங்களை மூக்கின்‌ முன்னர்‌ வைத்துப்‌ பரீக்ஷிக்க வேண்டும்‌.-பூரகத்தின் அப்பியபாஸத்தில்‌ எவ்விதம்‌ ஸ்வாஸம்‌ நீண்டு உட்கொள்ளப்படுகிறது என்‌பதை, முதல்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ மார்பு வரையும்‌, இரண்‌டாம்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ நாபி வரையும்‌, மூன்றாம்‌ மாசம்‌ அல்லது வருஷத்தில்‌ மூலாதாரம்‌ வரையும்‌, பின்னர்‌ கடைமுறையில்‌ சரீரம்‌ முழுமையும்‌ ஸ்வாஸம்‌ எரும்பு போல்‌ ஊரிக்கொண்டு பிரவேஸித்து ஸஞ்சரிக்கிறதைக் கவநமாய்‌ ஆராய்ந்து ௮றியலாம்‌.

4-பிராணன்‌, சாதாரணமாய்‌ சுவாஸம்‌ (பிராணவாயு) என்‌றாலும்‌, உண்மையில்‌, சரீரத்தின் கண்ணுள்ள எல்லா சக்திகளுக்கும் ஏற்பட்ட பெயர்‌,
பிரச்ந உபநிஷத்தில்‌, உலகத்திலுள்ளவைகள்‌ ரயி, பிராணன்‌ என இரண்டாகப்‌ பிரிக்கப் பட்டுள்ளன.
பிராணாயாம ஐயம்‌ என்றால்‌, அந்தப்‌ பிராணனை ஸ்வாதீநப்‌ படுத்தலாம்‌,

பிராணவாயு நாஸித் துவாரங்களிரண்டிலும்‌ மாறி மாறி ஸஞ்சரிக்கின்றது -, இடது துவாரத்தின்‌ வழியாய்ச்‌ செல்லும்‌ போது , இடை கலை யென்றும்‌, சந்திரன்‌ யென்றும்‌, வலது துவாரத்தின் வழியாய்ச்‌ செல்லும்‌ போது பிங்கலை யென்றும்‌, சூரியனென்றும்‌, புருவ மத்தியில்‌ ௮து நிற்கும் போது, ஸுஷும்நா அல்லது சுழி முனை யென்றும்‌ அக்கிநி என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
(6) தமிழ்‌ நூல்களில்‌, முக்கியமாக ஒளவையாரது ஞாநக்‌குறளில்‌, பிராணாயாமத்திற்கு வாயு தாரணை என்று பெயர்‌ வழங்குகிறது .
(7) சுவாஸமானது நாஸித் துவாரங்களில்‌ நடை பெறுவதில்‌ ஒவ்வொரு நாஸியில்‌ 5 நாழிகை மாறி மாறி நடை பெறும்‌. அப்படி நடை பெறுவதில்‌ 5 பாகமாகப்‌ பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகத்திலும்‌ அடியில்‌ வரும்‌ விவரப்படி. காலம்‌ செல்லும்‌.
பிருத்வீ -1.5 நாழிகை -அப்பு -1,25 நாழிகை -தேயு -1 நாழிகை -வாயு 0.75 நாழிகை –ஆகாயம் -0.5 நாழிகை
பிருத்வீ என்றால் இரு நாஸித் துவாரங்களுக்கும் மத்தியில் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
அப்பு என்றால் நாஸித் துவாரத்தின் வெளிப்பகுதியைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
தேயு என்றால் நாஸித் துவாரத்தின் மேற் பக்கத்தைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
வாயு என்றால் நாஸித் துவாரத்தின் கீழ் பாகத்தைத் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
ஆகாசம் என்றால் துவாரம் முழுவதையும் தழுவிச் செல்லும் ஸ்வாஸம்
இவற்றைப்பற்றிய மற்ற விவரங்களை அகஸ்தியர் சர ஸாஸ்த்ரத்தில் கண்டு கொள்க
சுவாஸ கதியின் மாத்ர விவரங்களை ஹடயோக ப்ரதீபிகை முதலிய சாஸ்திரங்களில் கண்டு கொள்க

நான்காவது, (ரேசகம்‌; பூரகம்‌, கும்பகம்‌ இவைகள்‌ நீங்கலாக )வெளி (ரேசகம்‌) உள் (பூரகம் ) விஷயங்களின்றி சம்பவிக்கிறது.–51-

ஸாதாரண அப்பியாஸி கும்பகம்‌ பண்ணுதல்‌,-ரேசக பூரகங்களின்‌ சம்பந்தத்துடன் நிகழ்வது -இதில்‌ பிரஸ் தாபிக்கப் படுவது கேவல கும்பகம்‌. அதாவது ரேசக பூரகங்களின்றி, நினைத்த மாத்திரத்தில் செய்தலாம்‌. இது உயர் தர நிலையாம்‌,

அதனால்‌ (பிராணயாமத்தினல்‌) பிரகாசத்தை (புத்தியின்‌ தெளிவை மறைக்கிற திறையானது வர வர நீங்குகிறது.–52-

(1) பிராணயாமம்‌ செய்து வருகின்ற யோகியின்‌ புத்தியை மறைக்கிற ஆவரண ரூபமான கர்மமானது வரவரக் குறைவு படுகிறது.
கர்மமானது புத்தியில்‌ ராகத்தை அதிகப்படுத்தி, புத்தியின்‌ ஸத்வ குணத்தை மறைத்து, விஷயாதிகளில்‌ ப்ரவர்த்திக்கும் செய்கிறது -அதனால்‌, புத்தியின்‌ பிரகாசம்‌ (தெளிவு )குறைகிறது. இதுவே இங்கு ‘ ஆவரணம்‌ என்று சொல்லப் பட்டு இருக்கிறது.
முறைப்படி பிராணாயாமம்‌ செய்வதினால்‌, இந்த ஆவரணம் வர வர நீங்கி புத்தி பிரகாசத்தைப்‌ பெறுகிறது

பிராணாயாமத்தைவிட உயர்ந்த தபஸ்‌ வேறில்லை. அதனால்‌ சித்த சுத்‌தி உண்டாகும்‌. அதனால்‌ ஞாநப் பிரகாசம்‌ ஏற்படும்‌.–பஞ்சசிகாசாரியர்‌.
(2)எல்லாப்‌ பாபங்களுக்கும்‌ பிராணாயாமம்‌ பிராயச்சித்தமாக விதிக்கப் பெற்றிருக்கிறது-அது சரீரம்‌, இந்திரியங்கள்‌, மநம்‌ இவைகளிலுள்ள தோஷங்களை விலக்கும்‌, எல்லாப்‌ பிராயச் சித்‌தங்‌களிலும்‌ பிராணாயாமம்‌ உயர்ந்தது. மற்றைய பிராயச்‌ சித்தங்கள்‌,
சரீரம்‌, இந்திரியங்கள்‌ இவைகளைச்‌ சுத்தம்‌ செய்யும்‌. அவைகளின்‌ பயனாக, மநம்‌ சுத்தம் பெறும்‌. பிராணாயாமமோ, மனத்தை நேராகவே சுத்தம்‌ செய்யும்‌ இயல்பினது, ஈஸ்வர ஸாஷாத்காரத்தையும் உண்டு பண்ணும்‌.

(பிராணாயாமத்தினால்‌ ஆவரணம் நீங்கவே) மநத்திற்கு தாரணையின்‌ தகைமை உண்டாகிறது.–53-

மநத்தை ஒரு இடத்தில்‌ நிறுத்தல்‌ தாரணையாம்‌.-விபூதி பாதம்‌ முதல்‌ சூத்திரத்தில்‌ இதன்‌ விவரம்‌ சொல்லப்பட்‌டிருக்கிறது .

பிரத்யா ஹாரம்‌ என்பது , இந்திரியங்கள்‌ விஷயங்களுடன்‌ சம்பந்தமில்லாமல்‌ சித்தத்தினுடைய தன்மையை அநு சரிப்பது போல இருத்தலாம்‌. –54-

(1) பிராணாயாம அப்பியாஸத்தால்‌ ஆவரணம்‌ பொய்த்துப் போய்‌, மநம்‌ வைராக்யம்‌ பெற்று புருஷ ஸாக்ஷாத்‌காரத்தை நோக்கி அபி விருத்தி யுள்ளதாக ஆகின்றது .-அந் நிலையில்‌ இந்திரியங்கள்‌ விஷயங்களுடன்‌ சம்பந்திக்காமல்‌ மநத்தையே அனு ஸரிக்கின்றன. பிரத்தியாஹாரம்‌: பிரதி – பிரதி லோமமாக,-எதிரிடையாக -ஆஹாரம்‌ – பிரவிர்த்திக்கும்படி செய்தல்‌: அதாவது
இந்திரியங்களை விஷய சம்பந்தங்களினின்று பெயர்த்து, அதற்கு எதிரிடையாக மநத்துடன்‌ பொருந்தும்படி. செய்தல்‌.

(2)இந்திரியங்களின்‌ ஸ்வபாவம்‌ விஷயங்களுடன்‌ சம்பதித்தல்‌, -அச்சம்பத்தத்தை நீக்கினால்‌, ஸத்துவத்‌துடன்‌ சம்பந்திக்கும்‌.
யோக்யதை யின்றி ஜடமாக இருக்கின்‌ற மையால்‌ மநத்துடன்‌ சம்‌பந்தப்பட்டது போல்‌ (இவ) என்று பதம்‌ உபயோகிக்கப் பட்டுள்ளது .
மநத்திற்கு சத்‌வத்தைக்‌ கிரஹிக்கும்‌ யோக்யதை உண்டு.
(3) இராணித்‌. தேனியானது வெளிக் கிளம்ப , மற்றைத்‌ தேனீக்கள்‌ வெளிக் கிளம்புமாப் போல, மநம்‌ வெளியேற இந்திரியங்கள்‌ அதைத்‌ தொடர்கின்றன.

அதனால்‌ (பிரத்யாஹாரத்தால்‌) இந்திரியங்கள்‌ பூர்ணமாய், வசப்பட்‌டிருக்கும்‌ தன்மை உண்டாகிறது.–55-

(1) வசப்படுதல்‌–, பூர்ணமாய்‌ (பரமமாய்‌)) வசப்படுதல்‌ இவை இரண்டிற்கும்‌ வித்யாஸமுண்டு.
சப்த முதலிய விஷயங்களை ராகத்‌ துவேஷமின்றி ௮னுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள் சிலர்

(2) சாஸ்த்ரங்களில்‌ நிஷேதிக்கப் படாத விஷயங்களை
அனுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள்‌ வேறு இலர்‌.
(3) விஷயங்களின்‌ வசமாகாமல்‌. ஸ்வ இச்சையாக அவைகளை அனுபவித்தல்‌ என்கிறார்கள்‌ மற்றும்‌ சிலர்‌,
(4) ராகத்‌ துவேஷமில்லாமலும்‌, அவைகளின்‌ பயனாகிய சுக துக்கங்களில்லாமலும்‌ தட்ஸ்‌தனாக இருந்து விஷயங்களை அனுபவித்தல்‌ இந்திரிய ஜயம்‌ என்கிறார்கள்‌ இன்னும்‌ இலர்‌.
(5). ஏகாக்ரதை பெற்ற. மநத்துடன்‌ இந்திரியங்கள்‌ ஒருமைப் பட்டபடியால்‌, விஷயங்கள்‌ முன்னிருந்தாலும் அவைகளைக்‌. க்ரஹிக்காமல் இருத்தல்‌ இந்திரிய, ஜயம்‌
என்கிறார் ஜைகீஷவ்ய மஹரிஷி
(6)இந்த ஐந்தாம் அபிப்பிராயத்தைகத் தான்‌ பூர்ணமாப்‌
(பரமமாய்‌) இந்திரியங்களை வசப்படுத்தல்‌ என்கிறார்‌ பகவான் பதஞ்சலியாரும்‌.
ஒரு. இந்திரியத்தை ஜயித்தால்‌ மற்றைய இந்திரியங்களின்‌ ஐயம்‌ ஏற்படுறதில்லை, –மநமானது அந்தர் முகப்பட்டு விஷயங்களின்‌ சம்பந்தமின்றி நிரோதம்‌ பெறுங்காலத்தில்‌ எல்லா இந்திரியங்களின்‌ ஜயமும்‌ உண்டாகிறது. இதுதான்‌ பரமாவசியம்‌ என்று மூலத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது .,
(i) இந்த பாதத்தில்‌ 1, கிரியாயோகம்‌ ii, கிலேசுங்கள்‌
3- கர்மங்களின்‌ பரிபாகம்‌, விபாகங்கள்‌ -4- அவைகளின்‌ பயனான ஹேயம்‌ (துக்கம்‌) -5-துக்கசத்தின்‌ காரணம்‌,-அதன்‌ நிவிருத்தி உபாயம்‌, அதன்‌ நிவ்ருத்தியான அதாவது . கைவல்யம்‌ இவைகளைப் பற்றிச்‌ சொல்லியிருக்கின்‌றது .

யமம்‌ முதலிய. யோக அஷ்டாங்களில்‌ யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, பிராணாயாமம்‌, பிரத்யாஹாரம்‌ என்ற ஐந்து பஹிரங்க சாதகங்களும்‌ இத்த; பாதத்திலும்‌,
தாரணை , தியாநம்‌, ஸமாதி அடுத்த பாதத்‌திலும்‌ சொல்லப்பட்டிருக்கின்றன.்‌

சாதன பாதம்‌ முற்றிற்று,

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading