Archive for the ‘Raamaanujar’ Category

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

December 9, 2021

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

December 9, 2021

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–59-68–

December 9, 2021

இக் கலி காலத்தில்–எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே –
என்று எவரும் நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் என்னும் குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்
துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது-

உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான்
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை –

——–

ஸ்வாமியின் ஞான வைபவத்தை அறிவித்த பின்பு –பக்தி வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்
உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்-

எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார்
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –

மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-
வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான்
பொருந்தும் பதி -எனவே
பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க-

நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது-

பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது –

————-

ஸ்வாமியுடைய குண வைபவம் இருக்குபடியை அருளிச் செய்கிறார் –

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –
அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார்

நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்-புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று-

————

கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று –
அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம்
பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம்
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – –
இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் –
அடிகளில் விழுந்து கெஞ்சிப் பல் இளித்தாலும் அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி–

———–

அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று
விளக்க பட்டு உள்ளமையும் கவனிக்க தக்கது –

ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க
படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –

————

புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து இராமானுச முனி யாகிய யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –

பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே
மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை

இராமானுச முனி யாகிற வேழம் -முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
முனிவர் .. வேழம் என்று இரு பண்புகளும் கொண்ட இராமானுசன் என்றபடி இரு பெயரேட்டுப் பண்புத் தொகை.
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க –

இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ்
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து –

அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26-
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார்
மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து –
திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து-அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-
வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார்

———-

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த
நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –

தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது என்றபடி .
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5-
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது-
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .

———-

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது -கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான்
அந்தோ அருளானான மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன் பக்தர்களை .
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்-
எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார்-

எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று

———–

எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே நம் இந்திரியங்களைக் கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து
இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –திருவாய் மொழி –1 4-9 –
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர்
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க

———-

இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய
குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

தக்க ஐவர் தமக்காய்-
அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – –
என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார்-

மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை-

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–49-58–

December 9, 2021

எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார்
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு கூறப்பட்டது .-

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

பூம் கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல்
திருவரங்கத்தில் தாமரை மலர்கள் தேன் சொரியும்–
வயல்கள் தண்ணீரினால் அல்ல—இந்த தாமரை மலர்கள் தேனினால் செழிப்பாகும் .
அது போல், இராமானுசரும் பெரிய பெருமாள் திருவடியை தனக்குத் தாரகமாகக் கொண்டு தரிக்கிறார்.

கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக் கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –

உதித்து ஆனது செம்மை அற நெறி –
ஸூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-

இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-

————

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார்

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன-

திருமங்கை ஆழ்வாரும் தானே , நின்ற மாமருது இற்றிற்று-என்றும்
வானவர் கை தொழும் இணைத் தமரையடி என்றும் கலியன் கண்ணனின் திருவடியால் இருவர வீழ்ந்தது அருளிச் செய்தார்.
எம்பெருமானாரின் இணையடியோ பலரை அஞ்சும்படி பண்ணியது .

பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-
எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

————

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார் அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – – ஈடு
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது –
நம் ஆழ்வாரும் -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –

———–

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளிச் செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –புன்மையினேன் -என்கிறார்.

புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-
என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –

ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-மாயப் பற்று அறுத்து –தீர்ந்து
தன் பால் மனம் வைக்கத் திருத்தி-தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்து வைத்தார் .

————-

சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் –

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் –
இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது
தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும்
நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்

பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே –
அவ் வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின் பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின
பரனது எனும் நற் பொருள்-பிரதான பிரதி தந்த்ராரத்தம்

—————

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது

————–

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்-

தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார் -அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி செய்யவே
வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் –

பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று –
நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே எல்லாருக்கும்
அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் –

அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் –

———–

எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் –

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க

வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு
உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார்

தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்

————-

இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் –

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் –
அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்-

சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் –

பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது-

————

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார்
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –

ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று
சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகாசித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார்

நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது
ஜீவான்மக்களுள் பேதமும் –பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்-உணர்த்தப் படுகின்றன
அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்

சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-என்பது உணரத் தக்கது .

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பிரனோடு ஒன்று-உடலை ; மெய் என்கிறார் அமுதனார்.
உலகம் மாயை என்று இதை மெய் என்று சொல்லிட்டு இந்த உடலின் மாயையை உணர்த்துகிறார்
‘அஸ்மாத் சரீராத் சமுத்தாய ‘ இந்த் உடலினின்று விடுபட்டதாக கொள்ளாமல் ,
இந்த உடல் மாயை என்று உணருவதே இவர்கள் புருஷார்த்தம் சரி,
உடல் மாயை என்ற உன்னத நிலையை அடைந்த பின் இந்த ஆத்மா தன்னை பிரமனோடு ஒன்றாக உணர்கிறது
ப்ர்ஹமவித் பிரஹ்மைவ பவதி -ப்ர்ஹமத்தை உணர்பவன் ப்ர்ஹமம் ஆகிறான் .

அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–29-38–

December 9, 2021

கீழ் எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்தார் –

இனி ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமான ஆழ்வார் -அவரது அருளிச் செயல்களில் ஈடுபட்ட
ஸ்ரீ உடையவர் தமக்குச் செய்து அருளிய உபகார பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார் –

ஸ்ரீ பாஷ்ய ஸூத்ரங்களை இது கொண்டு ஒருங்க விட்டு அருளியதையும் –
ஸ்ரீ பாஷ்யம் அருள ஸம்ப்ராயத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அதற்காகவே
சரண் அடைந்த ஸ்ரீ தேவப்பெருமாள் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் இருந்தமையும் –

எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
அவர்க்கு ஆத்ம குணங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதையும் –

ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும்-

உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
தன் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்பதையும் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் தம்மை அடர்க்க வழி இல்லை என்பதையும் –

நாமும் ஆஸ்ரயிக்கும் படி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்தும் –

நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்பதையும் –

அவரை நோக்கி இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும்
என்ன ஹேது என்று வினவுகிறார் –38-என்பதையும் –

————

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -எம்பெருமானார் உடைய கிருபையையே –
விதி -இங்கே எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது

தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
அதனை வளர்த்த தாய் இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
வேத வியாசர் இயற்றிய பிரம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –கூட்டும் விதி என்று கூடும் கொலோ
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண்பயனாவதே -பெருமாள் திருமொழி – – 2-1 –என்றார் குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின்
காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-கண்டதும் களிப்பினால் கண்கள்
மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –பரம புருஷார்த்தமான இது அர்த்தித்துத் தானே பெற வேண்டும் –

————–

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

இன்பம் தரு பெரு வீடு
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –விசேடித்தத்தார்

தொல் உலகு -என்பதனால் -உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு
பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –

மன் பல் உயிர் -என்பதனால் -சித் தத்துவம் கூறப்படுகிறது-
மன் -என்பதனால்–உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே -அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்ப்படுமாயினும் –
பல -என்று மிகை பட கூறியது -ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு இருப்பது பற்றி
அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம் வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –

இறைவன் -சேஷி -அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்தக் கொள்ளும்
உரிமை வாய்ந்தவன் -இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது
ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –

உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் பரப்ரமம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –

அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரியத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –நம் ஆழ்வார்

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம்மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –

அவருடைய உறுதிப்பாட்டினும் அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –

இவர் பேரனான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்றுபாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

—————

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -பாரதம் பாடிய பெறும் தேவனார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 –

பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப்பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின்
தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக அமைந்த அத்தியூர் என்னும் பேரே சிறந்தது
என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார்

மேலும் ஊரகம் பாடகம் முதலிய பல திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு
காஞ்சி -என்பது பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –
அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஜீயர் –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட
அன்பாளராய் அன்றோ எம்பெருமானார் இருந்தார் –

இனி காண் தகு தோள் அண்ணல் என்பதை
எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண் நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

————–

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

தனமாய தானே கை கூடும் -முதல் திருவந்தாதி -43 -என்றார் பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 –

ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா –
அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால் தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் –
அத்தகைய அரிய தவம் அவரது –
இங்கு தவம் என்பது-தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே
எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-
ஞாலத்தவர் -உய்வு பெற்று விடுகிறார்கள்-இவ் வரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –

வந்தெடுத்தளித்த அருந்தவன்- க்ருபா மாத்திர ஆசார்யனரான எம்பெருமானார் இன்னருளால் யாவரையும் உய்வித்தது அறிந்ததே .
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் எம்மிராமானுசன் மண்ணின் தலத்துதித்து என்று பின் வரும் பாசுரமும் காணலாம்.
இப்படி காரேய் கருணை இராமானுசனைப் பொருந்திய பின் நமக்கு வரும் மேன்மையை சொல்லி யருள்கிறார் அமுதனார்

———–

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
அழிக்கும் ஆயுதங்கள் – அளிப்பனவாயின என்பது -எல்லாம் பிராட்டி சந்நிதியால் வரும் மற்றம் தான் இது

இராமானுச முனி இடையே யாயின –
இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-

இனி இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன-
கலியை நீக்க வல்ல இராமனுசராக எம்பெருமானின் திவ்யாயுதங்கள் வந்தவதரித்தன-

ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-எம்பெருமானாரைக் கொள்வது மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்- ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை –

———-

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ கலி செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –

பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் இராமானுசனை
அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல – ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப் படுகின்றனவாம் –
புத்தகச் சும்மை
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது அமுதனார் கருத்து

———-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் ஒரு தெய்வம்
எம்பெருமானாரே தெய்வம் என்பர்-கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –

சில மானிடத்தை
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி -சில மானிடத்தை –என்று அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார்

கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –

இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக –
இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள வ்யாமோகத்தாலே என்கிறார் ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான அமுதனார் –

இனி திருவரங்கம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –

அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று
பெரியவாச்சான் பிள்ளை-அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –

இறைவன் திருநாமங்கள் பல இருக்க பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே எம்பெருமானாருக்கு-மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப்பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ்விஷயம்பெரிய ஜீயரால் பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்-உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் -என்று அருளிச் செய்ய –
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர் –

நயவேன் பிறர் பொருளை நல்லேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோ டல்லால்-வியவேன்
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம்மேல் வினை –பொய்கை யாழ்வார் – 35- -என்ற பாசுரத்தொடு இதனை ஒப்பிடுக –

1-பிறர் பொருளை விரும்பேன்-
2-கீழாரோடு சேரேன் –
3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –
5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் -நம் மேல் வினை எவ்வாறு வரும்

————–

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து –கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்

விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –

கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

ஆருயிர் நாதன் என்று பாடம் –
இந்த உயிர் ஆன்மா அவனுக்கு வசப்பட்டது. என்னும் இயல்பான பொருள் கண்டு அளித்தது புலப்படும்.

சர்வேஸ்வரன் கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் -அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி –யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –

———

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி -மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட
பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –
வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று
வெள்ளமாக-இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –

வெள்ளம் -கடலுமாம் –வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருன்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று
இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

எம்பெருமானாரின் நெஞ்சம் பள்ளமடையாதலால். இந்த பக்தி வெள்ளம் சென்று இராமனச்ர் மனதில் குடி கொண்டது.
அவரும் இராமனின் குணங்களில் ஆழங்கால் பட்டு அதை தன நெஞ்சில் கொண்டு
நம் சம்பிரதாயத்தில் இதன் ஊடே ஆழ்ந்திருந்தது தெரிந்ததே.

ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக எம்பெருமானாரே அமைகிறார் -.ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

——-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

ஆக்கி-என்கிறார் -திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்-என்றாலே -ஆக்கி யடிமை நிலைப்பித்தது தானே
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102)
“இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113)
“வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணை
நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க ……
இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க”

அருள் புரிந்தாலும் அத்வேஷமும் இசைவும் இருக்க வேணுமே ?அதற்கும் இந்த அருள் தானே மூலம்.

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–22-28–

December 9, 2021

எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை மேல்
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –என்று உபக்ரமித்து
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –என்று நைச்யம் பாவித்து
இன்று கண்டு உயர்ந்தேன்– இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –என்று தேறி
நீ என்னை யுத்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –என்று
போக்யதையில் ஆழங்கால் பட்டு
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –என்று
ததீய சேஷத்வ நிஷ்டையில் ஆழ்ந்து
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-என்று
மீண்டும் நைச்யம் தலையெடுத்துப் பேசி
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 – என்று ஹ்ருஷ்டமாய் அருளிச் செய்கிறார் –

———–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –

அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –

தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும்
போக்கியும் போக்கி அவர்களை தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ
எனக்கு ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

———-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி
மற்ற நிதி , வைப்பு, எல்லாம் பயன் படுத்த பயன் படுத்தக் குறைந்து போகும்.
எம்பெருமானார் என்னும் நிதி அள்ள அள்ளக் குறையாது .

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க

எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- –

————–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –

அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய்ஞ் ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க

———–

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாரது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்-

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌலப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –
அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு- என்கையாலே
கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு
வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

மெய்க் குற்றம்
ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம்
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –

விளங்கிய மேகத்தை
சேதன லாபம் ஈச்வாரனுக்கு என்னுமா போலே , அமுதனார் கிடைக்கப் பெற்று எம்பெருமானார் உகந்தார்.
இதைத்தான் விளங்கிய மேகம் என்று எம்பெருமானரைக் குறிக்கிறார் அமுதனார்

மேவும் நல்லோர் –என்னை ஆட் கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட் கொண்டு விடுகிறது -என்கிறார் –

வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர்
என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கபாலரைப் போலே –
இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி

இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் –
உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர்

அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

———-

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே
என்று பயப்படுகிறார் -தான் மிக உயர்வது பற்றி அமுதனார் மகிழ் உற வில்லை –
எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –

தள்ளுற்று இரங்கும் தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி -எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-
மற்று ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்
சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து அறிந்த பின்னரே –
காய்ந்து கை விடுகிறான் கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே – என்றாள்
ஆண்டாள் திருப்பாவை யிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –
திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் நம் ஆழ்வாரும் –

கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது -சக்கரவர்த்தி திருமகன் போலே
ஆளிட்டு -அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –
குஞ்சி பிடித்து இழுத்து -மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-
வதம் செய்தமையால் –கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம்

பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –தன்னை –
ஆத்மா ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –என்பது கருத்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –
அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-
வியக்க தக்கது என்பது கருத்து –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–ஸ்ரீ வேதாந்த தீப–மங்கள ஸ்லோகங்கள்–

November 29, 2021

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும்
உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு
ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும்.
இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால்
வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை.

ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.

சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ் முறையும்,
ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.

இதில் முன்னது தாழ்ந்த நிலை,
பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் –
ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –

ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்

பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவஸ்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக,
இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.

ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.

ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,

ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.

ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு
தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,

பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது.
பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி
சாத்விகர்கள் ஆவரே

இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி ஸ்ருதி –
அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு ஸ்ருதி –

ஸ்ருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –

இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –
சேஷி சேஷ சம்பந்த ஞானமும்
சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –

வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –
யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –

கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –

கர்ம யோகம் ஒன்றாலேயே –
ஞான யோகம் ஒன்றாலேயே –
ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே

நாம் செய்யும் கர்ம யோகம் பகவத் ஆராதனம் ஆகும் –
அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.

ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.

சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர்.

ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது,
அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே
வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால்
ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.

எத் தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது.
உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈஸ்வரானுபவமானது
அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே.
கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,

ஈஸ்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா.

இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது

ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.

ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ
இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது.
கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன.
இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.

அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று
அவித்யை அடியாகவே சரீரம் –

கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக சதுர்வித தேக பிரவேச க்ருத –
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் –
அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே
வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.

வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து
சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.

துயரத்தை மறுப்பது மட்டுமன்று,
பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–/ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள் —

November 29, 2021

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–

1–ஸ்ரீ சொட்டை நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருக்குமாரர் –இவரது திருக்குமாரர் ஸ்ரீ என்னாச்சான்-அவரது திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
2–ஸ்ரீ புண்டரீகர் -ஸ்ரீ பெரிய நம்பி திருக்குமாரர்
3–ஸ்ரீ தெற்கு ஆழ்வான் -ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குமாரர்
4–ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்-ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக்குமாரர்
5–ஸ்ரீ ராமானுஜன் -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி யுடைய திருக்குமாரர்- ஸ்ரீ திருமலை நம்பி என்ற இவரது திருக்குமாரரும்

6–ஸ்ரீ கூரத்தாழ்வான்-அவரது திருக்குமாரர் -ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ஸ்ரீ ராம பட்டர்
7–ஸ்ரீ முதலியாண்டான் -அவரது திருக்குமாரர் -ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
8–ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
9–ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
10–ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

11–ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
12–ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
13–ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
14–ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
15–ஸ்ரீ அனந்தாழ்வான்

16–ஸ்ரீ மிளகு ஆழ்வான்
17–ஸ்ரீ நெய்யுண்டாழ்வான்
18–ஸ்ரீ சேட்டலூர் சிறிய ஆழ்வான்
19–ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
20–ஸ்ரீ கோயில் ஆழ்வான்

21–ஸ்ரீ உங்கள் ஆழ்வான்
22–ஸ்ரீ ஆரண புரத்து ஆழ்வான்
23 –ஸ்ரீ எம்பார்
24–ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
25–ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான்

26–ஸ்ரீ ஈச்ச்சம்படி ஆச்சான்
27–ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
28–ஸ்ரீ ஈச்சம்படி ஜீயர்
29–ஸ்ரீ திருமலை நல்லான்
30–ஸ்ரீ சட்டாம்பள்ளி ஜீயர்

31–ஸ்ரீ திரு வெள்ளறை ஜீயர்
32–ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி ஜீயர்
33–ஸ்ரீ திரு நகரி பிள்ளான்
34–ஸ்ரீ காராஞ்சி சோமாஜியார்
35–ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

36–ஸ்ரீ நம்பி கருந்தேவர்
37-ஸ்ரீ சிறு புள்ளி தேவராஜா பட்டர்
38–ஸ்ரீ பிள்ளி உறாந்தை உடையார்
39–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
40–ஸ்ரீ பெரிய கோவில் வள்ளலார்

41–ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
42–ஸ்ரீ ஆசூரிப் பெருமாள்
43–ஸ்ரீ முனிப் பெருமாள்
44–ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
45–ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்

46–ஸ்ரீ மாற்று ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான்
47–ஸ்ரீ சோமாசியாண்டான்
48–ஸ்ரீ ஜீயர் ஆண்டான்
49–ஸ்ரீ ஈஸ்வர் ஆண்டான்
50–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை ஆண்டான்

51–ஸ்ரீ பெரியாண்டான்
52–ஸ்ரீ சிறியாண்டான்
53–ஸ்ரீ குறிஞ்சியூர் சிறியாண்டான்
54–ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
55–ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்

56–ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
57–ஸ்ரீ தொண்டனூர் நம்பி
58–ஸ்ரீ மருதூர் நம்பி
59–ஸ்ரீ மழுவூர் நம்பி
60–ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

61–ஸ்ரீ குருவை நம்பி
62–ஸ்ரீ முடும்பை நம்பி
63–ஸ்ரீ வடுக நம்பி
64–ஸ்ரீ வங்கீபுரத்து நம்பி
65–ஸ்ரீ பராங்குச நம்பி

66–ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
67–ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
68–ஸ்ரீ உக்கலம் அம்மாள்
69–ஸ்ரீ சொட்டை அம்மாள்
70–ஸ்ரீ முடும்பை அம்மாள்

71–ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
72–ஸ்ரீ கொமாண்டூர் இளையவல்லி
73–ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74–ஸ்ரீ காட்டுப் பிள்ளான் –

———————

1-ஸ்ரீ சொட்டை நம்பி தனியன்
மகரே சைகபாத்யேச யாமுநாச்சார்ய நந்தநம்
கூர நாதோ குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் –

தாய் பூரட்டாதி திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரார்
இவற்றால் தனக்கு ஸ்ரீ பரமபதம் நிச்சயம் -அங்கு சென்றாலும் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம்
ஸ்ரீ நம்பெருமாள் திரு முகம் போல் குளிர்ந்து இரா விடில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே திரும்புவேன் என்றாராம்
ஸ்ரீ பராசர பட்டர் போல் இவரும் இவ்வாறு அருளிச் செய்தார் என்பர் –
இவருடைய திருக்குமாரர் -ஸ்ரீ என்னாச்சன் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்

——-

2-ஸ்ரீ புண்டரீகர்
இவரை ஸ்ரீ பெரியநம்பி திருக்குமாரர் -ஸ்ரீ அத்துழாயின் திரு சகோதரர் –
ஆடி உத்தராடம் திரு அவதாரம் -ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்

இவர் தனியன் –
ஸூசவ் மாஸ் யுத்தரா ஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூதாம்
யதி ராஜாங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே –

இவர் ஸஹவாஸ தோஷத்தால் போகக்கூடாது இடம் போக
ஸ்ரீ உடையவர் நீர் நம்மை விட்டாலும் நான் விட்டேன் என்று தாமே அங்கு சென்று திருத்திப் பணி கொண்டார்

————–

3-ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி உடைய திருக்குமாரர் –காஸ்யப கோத்ரம் -ஆடி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியின் திரு சகோதரர்

கர்கடே ஸ்ரவணே ஜாதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
காஸ்ய பாந்வய ஸம் பூதம் நாராயண குரும் பஜே

இவருக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது -இவருக்கு ஸ்ரீ கோளரி ஆழ்வான் நண்பர் இருந்தார்
நாம் குளிப்பதால் பாபங்கள் போகாது -ஸ்ரீ சிங்கப்பிரானின் ஸ்ரீ சக்ராயுதத்தால் மட்டுமே
பிரதிபந்தங்கள் போகும் என்ற வார்த்தை கேட்டு ஸ்ரீ பட்டர் மகிழ்ந்தார்

———————

4-ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

————-

5-ஸ்ரீ பிள்ளைத் திருமலை நம்பி
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய திருக்குமாரர்
வைகாசி விசாகம் திரு அவதாரம்
இவருக்கு ஸ்ரீ ராமானுஜன் என்ற திரு சகோதரரும் உண்டு

தனியன்
வ்ருஷே விசாக ஸம் பூதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே

இவருடைய சகோதரியின் கணவர் -ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருக்குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
இவரும் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -வரிசை -35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற -ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாசாரியார் –

———-

6-ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

தனியன்
யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ஸ மஹாம் புதி
மந் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம்

ஸ்ரீ கண்ணபிரான் யது குல புரோகிதர் கர்க்கர் வம்சம்
ஸ்ரீ திருநாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் உடன் இருந்தவர்
அங்கே ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சிக்கு ஸ்ரீ சொட்டை அம்மாளுக்கு ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர்
அவர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க உபதேசித்தவர்

எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
தம்மை ஆஸ்ரயித்த
மாறு ஒன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
அரண புரத்து ஆழ்வான்
ஆஸூரிப் பெருமாள்
முனிப் பெருமாள்
அம்மங்கிப் பெருமாள்
முதலானோரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தவர்
இவர்கள் யாவருமே 74 ஸிம்ஹாஸனாதி பத்திகளில் ஒருவராக நியமிக்கப் பட்டனர்

ஸ்ரீ மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ பரவஸ்து பட்டர் ஜீயர் இவர் வம்சமே
இவருடைய வம்ஸ பரம்பரை
நடுவில் ஆழ்வான்
ஆழ்வான்
வைத்த மா நிதி
அழகிய மணவாளர்
வரதாச்சார்யர்
வேங்கடத்து உறைவார்
சடகோபாச்சார்யர்
போரேற்று நாயனார்
கோவிந்தாச்சார்யார்
கிருஷ்ணமாச்சார்யார்
ராமானுஜாச்சார்யார்
கோவிந்த தாஸர் அப்பர் என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயருக்கு பூர்வாஸ்ரம வம்சம்
அண்ணன் பரவஸ்து அழகிய மணவாளர்
பரவஸ்து நாயனார்
சடகோபாச்சார்யர்
வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயரானார் –

———–

ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருப் பேரானார் பிள்ளை லோகம் ஜீயர் –

————————————————-

7-ஸ்ரீ கோமடத்து ஆழ்வான்
இவர் ஸ்ரீ கோமடத்து பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவருடைய சிஷ்யர் காக்கைப்பாடி ஆச்சான் பிள்ளை
இவருடைய வம்சத்தில் தான் ஸ்ரீ மணவாள மா முனிகள் அவதாரம்
ஸ்ரீ மா முனிகளின் திருத்தகப்பனார் -திரு நாவீறுடைய தாஸர் அண்ணர்
ஸ்ரீ மா முனிகளின் பூர்வாஸ்ரம திருப்பேரானார் -ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் அண்ணனுடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் –

—————

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் ஆழ்வான்
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய சிஷ்யர்
பாகவதர்களைக் கடுமையாகப் பேசி அபசாரப்பட்டு –
ஸ்ரீ கூரத்தாழ்வான் தானே தானம் கேட்டு திருத்திப் பணி கொள்ளப் பட்டவர்
வீரசுந்தர ப்ரஹ்மராயர் இவர் திருமாளிகையை பிடிக்கவே தான் ஸ்ரீ பட்டர் திருக்கோஷ்டியூர் எழுந்து அருளி
நமக்கு திருப்பாவை தனியன் கிடைக்கப் பெற்றோம் –
புள்ளும் சிலம்பின் -காலை வேளையில் பறவைகளின் ஒலி நமக்கு மிகவும் உத்தேச்யம் என்பார்
குழந்தை தாய்ப்பால் பருகி அவள் முகம் நோக்குவது போல்
திருவடிகளை முன்னிட்டு திரு மேனி கல்யாண குணங்களில் ஈடுபடுவோம் என்பார்

————–

9-ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

தனியன்
யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரேணதுர் நிஷ் க்ராம
தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத் ப்ரிய பாகி நேயம் வந்தே
குரும் வரத விஷ்ணு பதாபிதானம்

ஐவரும் ஸ்ரீ ராமானுஜரின் திரு மருமகன்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -திருக்காஞ்சியில் திருவவதாரம் -வரத விஷ்ணு என்றும் திரு நாமம்
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனபதி-என்று ஸ்ரீ பாஷ்யகாரரால் பட்டம் சூட்டி அருளப்பட்டராவர்
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவருடைய சிஷ்யர்
நடாதூர் அம்மாள் எனப்படும் வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவருடைய திருப்பேரானார்
இவர் மாந யாதாத்ம்ய நிர்ணயம் -என்னும் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறையில் இவரது அர்ச்சா திருமேனி உள்ளது –

———-

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம் பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

———–

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்

திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்

அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்

ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்

எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்

பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.

அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,

விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

———————————————

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்

இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்

இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

—————————

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

————————————

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வைபவம்

ஸ்ரீ திருவரங்கத்தில் இருந்து ஸ்ரீ அழகிய மணவாளனும்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீ நம்மாழ்வாரும் -கலாபத்துக்கு பிறகு -1323- தம் தம்
ஸ்தானங்களை விட்டு கோழிக்கோடு முந்திரிப்பூ காடு வழியாக கர்நாடக -திருக் கணாம்பி -என்னும் ஊரில் எழுந்து அருளினார்கள்
கலாபத்துக்கு பின்பு ஸ்ரீ திருக் குருகூர் புனர் நிர்மாணம் பண்ணி அருளினார்
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்னும் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை

நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மனே ப்ரஸாத லப்த
பரம ப்ராப்ய கைங்கர்ய சாலி நே

சீர் உற்ற செஞ்சொல் திருவாய் மொழிப்பிள்ளை செம்முகமும் தார் உற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனிகள் பொன்னடிகள் பாரில் தரித்து அடியேன் பற்றினனே –ஸ்ரீ கந்தாடை அண்ணன்

ஸ்ரீ பகவத் விஷய உபதேச மார்க்கம் தமக்கு திருவாய் மொழிப்பிள்ளை பேர் அருளாலே வந்த படியை
தமக்கு உள்ள பேர் அன்பாலே பாசுரம் இட்டு அருளுகிறார் மா முனிகளும்

திரு அருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றான் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பத்ம நாதர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே – –

1301-1406-இவர் விபவ வருஷம் வைகாசி விசாகத்தில் பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் திரு அவதாரம் –
மதுரைக்கு அருகில் குந்தீ -இப்பொழுது மருவி கொந்தகை என்று அழைக்கப் படுகிறது –

திரு நாமங்கள்
ஸ்ரீ சைலேசர்
திருமலை ஆழ்வார்
திருவாய் மொழிப்பிள்ளை
காடு வெட்டி ஐயன்
சடகோப தாசர்
ஸ்ரீ நாத முனிகள் சிஷ்யர் உய்யக் கொண்டார் வம்சத்தவர் என்பர்

திருத்தாயார் சாத்விகை அம்மையார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இடம் பஞ்ச சம்ஸ்காரம்
பாண்டிய ராஜ புரோகிதர் -பின்பு ராஜாவாகவும் ஆனவர்
பிள்ளை லோகாச்சார்யார் ஜோதிஷ் குடியில் அழகிய மணவாளரை பாது காத்து
அருளும் பொழுது இவருக்கு 40 திரு நக்ஷத்ரம்

பிள்ளை லோகாச்சார்யார் திருமலை ஆழ்வாரை அனுவர்த்தித்து
ஸ்ரீ கூர குலோத்தமை தாசரை ரஹஸ்யார்த்தங்களை ப்ரசாதிக்கும் படியாகவும்
திருக் கண்ணங்குடி பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும் திருவுவாய் மொழிப் பொருளை உபதேசிக்கும் படியாகவும்
மற்றும் உள்ள மூவாயிரம் வியாக்கியானங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப்பிள்ளைக்கும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தமான ஸப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை
விளாஞ்சோலைப் பிள்ளைக்கும் நியமித்து அருளினார் –

கூர குலோத்தமை தாசர் திருவடிகளே சரணம் என்று அநவரதம் சொல்லக் கேட்டு
ராஜ மஹிஷி இவருக்கு அரசுப் இருந்து ஒய்வு வழங்கி விட்டார்

கூர குலோத்தம தாசர் திரு வரசு சிக்கில் கிடாரத்தில் உள்ளது
இங்கு திருவாய் மொழிப்பிள்ளை தங்கி இருந்த திரு மாளிகை சேஷமும் இன்றும் உள்ளது
குந்தீ -கொந்தகையில் வீற்று இருந்த திருக்கோலத்துடனும் செங்கோலுடனும் சேவை சாதித்து அருளுகிறார்

நம்மாழ்வாரை முந்திரிப்பூ பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து அருளப்பண்ணி –
அங்கேயே பரமபதம் அடைந்த தோழப்பர் திருக்குமாரர் -அப்பன் பிள்ளைக்கு -ஆறுதல் கூறி
ஆழ்வார் உம்மை புத்ரராக கொண்டார் -இன்றும் ஆழ்வார் தோழப்பர் -அருளப்பாடு -உண்டே

நம்மாழ்வாரை திருக்கணாம்பி எழுந்து அருளப்பண்ணி -இருந்த கோயிலிலே மேலே கருட பக்ஷி கூடு கட்டி இருந்தது
ஆழ்வாரை சேவிக்க திருவனந்த புரம் திருவட்டாறு திருவண் பரிசாரம் திருவல்லவாழ் திவ்ய தேச நம்பூதிரிகள் போத்திமார்கள் வந்து
உதய காலத்தில் திரு மஞ்சனம் செய்து அருளி
தத்யோந்நம் நெய் தோசைப்படி பாகு கூட்டின கட்டிப்பொரி -பால் கஞ்சிக் கடாரம் அமுது செய்து அருளி
மத்தியானம் நாயக அலங்காரம் -சம்பா அவசரம் திருப்பணியாரங்கள் –
சாயங்காலம் திருவாராதனம் கண்டு அருளி
அஸ்தமன சமயத்தில் உப்புச் சாத்தமுது -சம்பா -தோசைப்படி -பொரி அமுது செய்து அருளி
பிற்பாடு அத்தாளமுது செய்து அருளி
இராக்காலமாய் ஸ்ரீ பலிதுடி -திரு உற்ற சாதம் -அரவணை -சுக்கு கஷாயம் அமுது செய்து அருளி
போத்திமார் திட்டம் பண்ணி நடத்திப் போந்தார் –

பேர் அருளாளர் நியமனம் அடியாக கச்சி மா நகரில் ஆச்சான் பிள்ளை திரு மலை ஆழ்வாருக்கு
ஈடும் நாலாயிர பொருள்களையும் சாதித்து அருளினார்

காடு வெட்டி நாடாக்கி -நல்லார் பலர் வாழ் குருகூர் என்னும்படி குடியேறி திருக் கணாம்பியில் இருந்து
திருநகரிக்கு எழுந்து அருளப்பண்ணி -குருகூர் சடகோபன் என்னும்படி
உறங்கா புளி நிழலிலே ஏறி அருளப் பண்ணி சேவித்து நின்றார்

நம்மாழ்வார் சடகோப தாசர் -திருநாமம் யதார்த்தமாம் படி பிரசாதித்து அருளினார்
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படியும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்னும் படியும்
புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும் புரிசை சூழ் கழனி
தண் பொருனை மன் ஆழ்வார் மறைத் தமிழ் ஆயிரமும் திகழும் படி செய்த
ஸ்ரீ சைலேசர் என்னும் படி கைங்கர்யமே நிரூபகமாக இருந்தார்

1371-விஜய நகர மன்னர் வீர கம்பண்ணர் -செஞ்சி மன்னன் கோபணார்யன் –
விஜய நகர் படைத்தலைவன் சாளுவ மங்கி ஆகியோரின் பெரு முயற்சியால்
நம்பெருமாள் பரிதாபி ஆண்டு வைகாசி -17- நாள் திருவரங்கத்துக்கு எழுந்து அருள
அருணோதயம் போல் 1370 சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் -மா முனிகள் திரு அவதாரம்

திருவாய் மொழிப்பிள்ளை உடைய திரு ஆராதனப் பெருமாள் -இன வாயர் கொழுந்து –

இவர் சிஷ்யர்கள்
பெரிய ஜீயர்
நம்மாழ்வார் கோயில் எம்பெருமானார் ஜீயர்
எம்பெருமானார் கோயில் சடகோபர் ஜீயர்
தத்வேச ஜீயர்
இவர் 105 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திரு அத்யயனம் வைகாசி கிருஷ்ண அஷ்டமி

————

ஸ்ரீ மா முனிகளின் வைபவம்

ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான் -7 th ஸிம்ஹாஸனாதி பதி
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜனிஷ்யத்த பரோ முனி ததஸ்ரஸ் யாஸ் ஸதாச்சாரா சாத்விகாஸ் தத்வ தர்சன —
தேவப் பெருமாள் கந்தாடை தொழப்பர் ஸ்வப்னத்தில் மா முனிகள் அவதாரம் பற்றிய ஸ்ரீ ஸூக்தி

கிடாம்பி ஆச்சான் சிஷ்யர் கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார் -திருவாய் மொழிப் பிள்ளை ஆணைப் படி –
ஒரு தடவை கால ஷேபம் செய்து அருளிச் செயல்களில் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டார் –
செல்வ நாயனார் -ஐகள் அப்பா -இருவரும் கிடாம்பி நாயனார் உடன் கால ஷேபம்
ஆதி சேஷன் உருவம் கண்டார்கள்

யதோத்தகாரி சந்நிதியில் வியாக்யான முத்திரை உடன் இன்றும் சேவை உண்டே

பிரணவம்
ஆழ்வார் -அகாரம்
எம்பெருமானார் -உடையவர் –
ஜீயர் -மணவாள மா முனிகள் -மகாரம்

மன்னிய சீர் மாறன் கலையை உணவாகப் பெற்றோம் -திருவாய் மொழி ஜீயர் எண்ணலாமே
கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர் -ஈடு அனுசந்தானம் செய்து கொண்டே இருக்கும் ஜீயர் -என்று உண்டே

இயல் பெயர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
திருத் தகப்பனார் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர் –
அவதார வருஷம் -சாதாரண வருஷம் -துலா மாதம் –26- நாள் – in AD 1370.–திரு மூலம் -கௌண்டிந்ய கோத்ரம் –
சிக்கில் கடாரம் திரு அவதாரம் இருந்தாலும் ஆழ்வார் திரு நகரியிலே வளர்ந்து கற்றார் –
திருக்கல்யாணம் –15 திரு நக்ஷத்திரத்தில் –1386 AD (February)-க்ரோதன ஸம்வத்சரம் –மகர மாசம் –
சந்யாச ஆஸ்ரமம் –விஜய நாம சம்வத்சரம் –1415-AD -(APRIL ) -பெரிய திரு மண்டபத்தில் -ஸ்ரீ சடகோப முனி ஜீயரால் –

திருக்குமாரர் -எம் ஐயன் ராமானுஜன்
அவர் உடைய திருக் குமாரரர்கள் -ஜீயர் நாயனார் -வேதப்பிரான் பட்டர் ஸ்ரீ ஜீயர் நாயனார்-
24 th வம்சத்தவர் -ஸ்ரீ கோமடம் எதிராஜ சம்பத் குமாராச்சார்யர் –
இப்பொழுது ஸ்ரீ ரெங்கம் மா முனி சந்நிதி கைங்கர்யம்
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ கோமடம் சடகோபாச்சார்யர்

1443-ஆனி மூலம்
ஸ்ரீமான் வகுள தர ஸாஸ்த்ர பாவம் ஸ்ரீ சைலே பத்ர் -எறும்பி அப்பா
அப்புள்ளார் -சம்பிரதாய சந்திரிகை -ஆனந்த வருஷம் முன் நாள் திங்கள் பவுர்ணமி மூலம் -ப்ரமாதித வருஷம்
12-JUNE -1433-மாலை
அரங்கர் தாமே வந்து தனியன் செய்து தலைக் காட்டினார்
பானு வாரம் –
கூட இருந்த ஸ்வாமிகள் பட்டோலை
மாப்பிள்ளை -மணவாளப்பிள்ளை ஜா மாதா
ரம்ய -அழகிய
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாள மா முனி ஜீயர்
ஸ்ரீ சைலேச -திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை
முனிம் -ஐந்தாவது பெருமை தனியனில்
தனியன் -மற்ற ஸ்தோத்ரங்களில் இருந்து எடுத்தவை
சுக்ரீவன் சைலேச தயா பாத்திரம் -நாதம் இச்சதி -சரணம் கத
மதங்க முனிவர்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி -வால்மீகி
வான் தமிழ் மா முனி -அகஸ்தியர்
சாந்தீபன் அடி பணிந்து அடி பட்டு மனம் வருந்தி
ஆர்ணவம் -லவ ஆர்ணவம்
தன்னை உற்றாரை அன்றி தன்மை உற்றாரை -யதீந்த்ரர் திருவடி விட யதீந்த்ர பிரவணர் திருவடி

அஸ்மத் ஆச்சார்யர் -கூரத்தாழ்வான் -லஷ்மீ நாத சமாரம்பாம் -நாத யமுனா மத்யமாம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம் -லஷ்மீ வல்லன பர்யந்தாம் -குரு பரம்பரை -சொல்லி ஆழ்வார்
இதுக்கு முன்பு சொல்லி
இது வந்த பின்பு இத்தை சொல்வது -க்ரமம் பெரிய பெருமாளே ஏற்பாடு
ஒருவரைச் சொல்லி பின்பு குரு பரம்பரை -எல்லா ஆச்சார்யர்களையும் காட்டும் தனியன்

அனைவருக்கும் அன்வயித்து அர்த்தம் சொல்லலாம் படி பொதுவான
ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம்
திருமலை -ஸ்ரீ சைலம் -ஈசன் -தயைக்கு பாத்திரம் நம்மாழ்வார் –
ஸ்ரீ நம் பெருமாள் இங்கே தங்கி -ஸ்ரீ ரெங்க மண்டபம் -22-வருஷங்கள்
1371 திரும்பி -பரிதாபி வருஷம்
1370 மா முனிகள் அவதாரம் -பின்பே வர தைர்யம்

ஸ்ரீ சைலத்தை தனக்கு பாத்திர பூதமாகி –
தீ ஞானம்
பக்தி -அவனுக்கு உண்டோ -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம்
பகவத் பக்தி -நமக்கு -பக்தர்கள் இடத்தில் -பக்த வத்சலன் அன்றோ
யதீந்த்ரர் இடம் ப்ராவண்யம் -அறிவோம் -அரையர் மூலம் கூட்டி வந்து –
யதீந்த்ர ப்ராவண்யம் தன்னிடம் கொண்டவர்
ரம்யா ஜாமாதரம் -இவனுக்கும் பொருந்தும்
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாளன் இயல் பெயரை மாற்ற வேண்டாம் —
சடகோப ஜீயர் ஆசைப் பட்டார் என்று -முன்புள்ள திரு நாமமே வைத்து நடத்தும்
மா முனி -மட்டும் சேர்த்து
ஆச்சார்யர் திரு நாமம் பின்பு சிஷ்யன் வகுக்க வேண்டும் -மாற்ற வேண்டாமே என்பதால் இப்படி
மனன சீலன் -முனியே இவனே
பிராட்டிக்கும்
அகலகில்லேன் -பாத்ர பூதை
எம்பெருமானார் இடம் ஈடுபாடு -வித்யாசல வேடன் வேடுவிச்சி
அவருக்கும் இவள் இடம் ப்ராவண்யம்
ரம்யா ஜா மாதாவை எப்பொழுதும் த்யானம்

சேனை முதலியார்
வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
எம்பெருமானார் இவரே தேசிகன் -சப்ததி
பிரம்பு -த்ரி தண்டம்

நம்மாழ்வாருக்கும் பொருந்தும்
மாரி மாறாத –
த்வய சாரம் -பூர்வ உத்தர திரு வேங்கடம் விஷயம்
இருவருக்கும் ஈடுபாடு வாசா மகோசரம்
மதி நலம் -தீ பக்தி
பவிஷ்யதாச்சார்யர்
அவர் ப்ராவண்யம் இவர் இடமே
மாறன் அடி பணிந்து
பராங்குச பாத பத்மம்
இப்படி அனைவருக்கும் பொருந்தும்

திரு முடி சம்பந்தம் திருவடி சம்பந்தம் -அனைவருக்கும் யதீந்த்ர ப்ராவண்யம்
எம்பெருமானாருக்கு ஆளவந்தார் மீதும் அவருக்கு இவர் மீதும் ப்ராவண்யம் உண்டே
அனைத்து ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் அறிந்தவர் இவர் ஒருவரே –
ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
சகல பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற சாகர சந்த்ரன் அன்றோ இவர் –
தனி ஒருவர் இல்லை
முன்னவர் தாம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் —
embodiment of all

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு –தான் -நண்ணார் அவர்கள்
அன்பு தன் பால் -என்று தன் -அவரைச் சொல்லி
தன் குரு -மா முனிகள் தானே
ஐந்து கார்யம் சிஷ்யன் ஆச்சார்யருக்கு செய்ய வேண்டும்
தனியன் சமர்ப்பித்து
திரு நாமம் வகித்து
சொத்தை சமர்ப்பித்து -ஆதி சேஷனையே கொடுத்து அருளி -ஆச்சார்ய சம்பாவனை -சேஷ பீடம்
திரு நக்ஷத்ரம் -தீர்த்தம் கொண்டாடி
நேர் சிஷ்யர்கள் தானே திரு அத்யயனம் –
வேறே எவருக்கும் இல்லாமல் -மாசி சுக்ல பக்ஷம் துவாதசி இன்றும்
எம்பெருமானாருக்கு எம்பார் பண்ணி பின்பு அவர்க்கு பின்பு பண்ணுவார் இல்லை
என்றும் இறவாத எந்தை அன்றோ இவர் சிஷ்யர்
உச்சிக்கால பூஜை அப்புறம்
சுருள் அமுது கண்டு அருள மாட்டான் இன்றும் –
குரு பிரகாசம் -எங்கும் ஓலை அனுப்பி ஏற்பாடு –

இந்த ஒன்றை அனுசந்தித்தால் அனைவரையும் அனுசந்திப்பதாக இருப்பதால்
வைதிகம் விதி பிரேரிதம் இல்லாமல் எங்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
தாமரை உடன் இருக்கும் தவளை அறியாத ஏற்றம் வண்டு உணரும்
தெய்வ வண்டு காட்டக் கண்டு அனுபவிப்போம்

———————

மூலம் –19 நக்ஷத்ரம் -ஆச்சார்யர் வரிசைகளில் –19–
எம்பெருமானார் -திருப்பாவை ஜீயர் -ஆச்சார்யர் வரிசைகளில் -9-
திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யர் வரிசைகளில்-18-

தென் திசை இலங்கை நோக்கி -இலக்காக நோக்கி -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
எழுந்து அருளிய ஆழ்வார் திரு நகரியையே நோக்கி -ரக்ஷண அர்த்தமாக –
இவர் அவர்களுக்கு ரக்ஷணம் -அவர்கள் இவனுக்கு ரக்ஷணம்

நான்கு யானைகள் வட பாலானாய் -அவனுக்கு -ஆச்சார்யருக்கு இரட்டை சம்பாவனை -அஷ்ட திக் கஜங்கள்

11 பட்டம் -12 பட்டம் மா முனிகள் அலங்கரித்த 1428-சீலக வருஷம் -ஸுவ்மய வருஷம் சாதாரண –
மூன்று வருஷம் -58–61-திரு -சாதாரண -நடுவில் -ஷஷ்ட்டி அப்த பூர்த்தி அங்கு
திருவேங்கட ராமானுஜ ஜீயர் சின்ன ஜீயர் –
இவரே பெரிய ஜீயராகி அவர் சிஷ்யர் சின்ன ஜீயர்
பெரிய சின்ன சேஷ வாகனங்கள் எம்பெருமானார் பெரிய ஜீயர் அடிமை ஸ்மாரகம்
திருவாய் மொழி நூற்று அந்தாதி ஸ்பஷ்டமாக திருவேங்கடம் பிராட்டி பெருமாள் நினைவாக –மா முனிகளின் ஈடுபாடு –

பத்து ஒற்றுமைகள் -ஸ்ரீ பராங்குச முனிக்கும் நம் மா முனிகளுக்கும் –

1-ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம் -திருமலையான் கருணையில் மூழ்கி
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதி ஆழ்வார் திருநகரியை சூழ்ந்து
கண்ணாவான் -வேங்கட வெற்பனே முதலில் திவ்ய தேசம்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் நின்றானை
பக்கம் நோக்கு அறியாமல் பராங்குசன் மேல் ஒருங்கே கடாக்ஷம்
2-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் இருவரும்
என் மனனே அப்புறம் -இங்கு யாருக்கு அருளினான் -அருளி சத்தை பெற்றதால்
மா முனிகள் -தீ பக்த்யாதி குண அர்ணவம் -ஆதி -சரம பர்வம் -நிஷ்டையில் முழுவதும் –
திவ்ய தேசம் திரு அவதரித்த நாள்களையும் காட்டி அருளி உபதேச ரத்ன மாலையில் –
3-திருக் குருகூரில் அவன் அருளால் தோன்றி -தானே யான் என்னும் படி –
வரகுண பாண்டியன் -இசை -ஹேம நாத பாகவதர் -பாடி -சம்பாவனை -பாண்டிய நாட்டையே கொடுக்கும் படி -வாய் வார்த்தை –
குடி மகன் பேச்சு வேறே -சிம்காசன பேச்சு வேறே -எனக்கு நிகராக உன் நாட்டு பாடகர் பாடினால் கொடுக்க
பாண பத்ரர் -மீனாட்சி பக்தி -இசைத்தமிழே -சாதாரி பண்ணில் -பந்து வராளி –
விறகு வெட்டுபவராக -பாண பத்ரர் சிஷ்யராக கொள்ளாத நான் –
அகஸ்திய முனிவர் -வண் தமிழ் மா முனி -குறுங்குடி நம்பி இடம் -போக –
விஷ்வக்ஸேனராக நம் ஆழ்வார் தென் பாண்டி சீமையிலே -திரு விளையாடல் புராணம் –
பண் தரு மாறன் பசும் தமிழ் -சாம வேதம் -இன்னிசை பாடித் திரிவேனே
ஆதியிலே அரவசரை –மா முனிகளும் இவரால்
புக்ககம் இருந்து பிறந்தகம் போவதாக மா முனிகளே சொல்லிக் கொள்கிறார்
4-ஸ்ரேஷ்ட முனி இருவரும்
நாத யமுன ராமானுஜ முனிகள் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அதுவே பொழுது போக்காகப் பெற்றோம் என்று
தானே சொல்லும் படி -மா முனி -முன்னோர் ஸ்ரீ ஸூ க்திகள் அனைத்தும் இவர் இடமே
5-யதீந்த்ர ப்ரவணர்கள் -பொலிக பொலிக -உடையவருக்கு நண்பராகி
அகில புவன -ஜென்ம -ஸ்தேம பங்காதி லீலைகளில் பொழுது போக்கு -இதுவே உலகம் என்று-இருந்த ஆழ்வார்
இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ள -ரக்ஷ ஏக தீக்ஷை
அவனோ தீர்ந்த அடியாரை
உயர்ந்த ஸ்ரீ நிவாஸன் -கைங்கர்ய ஸ்ரீ யைப் பெற்றவர்
பக்தி ரூபா பன்ன ஞானம் இவர் இடம் பெறவே ஸ்ரீ பாஷ்யம் மங்களா சாசனம்
வண்ணான் பிள்ளைகளை கூப்பிட்ட ஐ திக்யம் –
கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் இஷ்டப்பட்டால் மோக்ஷம் -ராமானுஜர் –
அதிகாரம் இருந்தால் அரங்கர் இரங்குவார்-நம் ஐயன் ராமானுஜன் இவர் திருக்குமாரர்
6-வாக்கு வன்மை -வேதம் தமிழ் செய்த மாறன் -விசத வாக் சிரோமணி
உளன் எனில் உளன் -இலன் எனில் அவ்வருவம் அவன் உருவம்
god is no where- god is now here
7-வேதம் விளக்கிய சாம்யம் – பஞ்சகம் -தமிழ் வேத நான்முகன் நம்மாழ்வார் -தானான -தலைவி தோழி தாய் –
உடல் மீசை உயிர் எங்கும் பரந்துளன் -யஸ்ய ஆத்ம சரீரம் -உடல் -நியாந்தா -ஆனால் அறியாமல் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
அந்த தமிழ் வேதத்தை மூ உள்ள காளியே -காளி க்கு மங்களா சாசனம் தப்பாக –
முப்பத்தாயிர பெருக்கர் -ஈடு சதா அனுசந்தானம் -நூற்று அந்தாதி –
2000 நாக்குகள் -1000 வாய்கள் -ஆற்றில் கரைத்த புளி ஆகாமல்
8-ரஹஸ்யார்த்த விளக்கம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி
நாலாம் பத்து -முழுவதும் ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஐந்தாம் பத்து சரணம் -ஆறாம் பத்து பிரபத்யே –
ஸ்ரீ மதே -செல்வ நாராயணன் -முதல் பத்து -நாராயணாயா -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே –
நம -மூன்றாம் பத்து வழு இலா அடிமை -ததீய சேஷத்வம் பயிலும் சுடர் ஒளி
9-பெரியவர் -பூமா -பஹு -மா -வார்த்தை பேச்சு மனஸ் உறுதி புத்தி த்யானம் விஞ்ஞானம் உடல் வலிமை
உணவு தண்ணீர் ஒளி ஆகாசம் நினைவு ஆற்றல் ஆர்வம் ஆத்மா -இப்படி ஒன்றுக்கு மேல் ஓன்று பூம வித்யை
நம்பெருமாளுக்கும் ஆச்சார்ய -பெருமை -ஆதி சேஷன் ஆசனம்
10-ஸச் சிஷ்யர் கூடவே
மதுர கவி நாதமுனிகள் உடன் ஆழ்வார்
இவரோ அஷ்ட திக் கஜங்கள்

—- —————

அகஸ்தியர் விசுவாமித்திரர் மந்த்ர உபதேசம் -அவர்களுக்கும் மா முனி சப்தம் அருளிச் செயல்களில் உண்டே
அதே போல் இவரும் உபதேசித்ததால் மா முனி
நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை -இவ்வாறு வேறு படுத்தி
வடக்கு திரு வீதிப்பிள்ளை திருக்குமாரரும் பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரரும்
இவருக்கு மட்டுமே அதே திரு நாமம்
ஆகவே சந்யாச ஆஸ்ரமம் ஏற்றுக் கொண்ட பொழுது திரு நாமம் மாற்ற வேண்டாம் என்று அரங்கன் நியமனம்
ஆச்சார்யர் திரு நாமம் சிஷ்யர் கொள்ள வேண்டுமே
இவரை ஆச்சார்யராக கொள்ள நினைப்பதால் -அந்த திருநாமம் வஹிக்க வேண்டுமே
மணவாள மா முனி தானே வர வர மா முனி
வரன் -மாப்பிள்ளை மணவாள பிள்ளை சுருக்கி
மணவாள பெண் மாட்டுப்பெண்
வர ஸ்ரேஷ்டம்

——————

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –

1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை

——————

ஸ்ரீ ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர்
அவதார திருநக்ஷத்ரம் புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ர
2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து,
தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து
விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில் ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்கு
விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும்
எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம்.
நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள்.
1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர்.
2) திருவேங்கட ஜீயர்.
3) பட்டர்பிரான் ஜீயர்.
4) கந்தாடை அண்ணன்
5) எறும்பியப்பா
6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
7) அப்புள்ளார்
8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால்
திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா?
என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவருடைய நிழல் போல் வாழ்ந்து
மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்பு தான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம்.
ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி)
நம்மாழ்வார் திருவடி-உடையவர்,
உடையவர் திருவடி-முதலியாண்டான்,
மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள்.
1. அப்பாச்சியாரண்ணா.
2. போரேற்று நயினார்
3. சுத்த ஸத்வம் அண்ணா
4. ராமாநுஜம் பிள்ளை
5. சண்டமாருதம் மஹாசாரியர்
6. திருக்கோட்டியூரையன்
7. பள்ளக்கால் சித்தர்
8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16.வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும்
அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த
ஒன்றான வானமாமலை ஜீயர்
“இரண்டு முலைக் காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமே யன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பி வைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு
நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்க நகரப்பனை
ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம். ***

——————————

ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்

———-

2-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்

ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்

————–

3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே

வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்

இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்

இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே

—————–

4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி

கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்

இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –

இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –

92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –

————

6-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்

துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே

ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்

அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே

———————-

7- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –

————————-

8- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –

—————-———————————————

என் மூலம் அஸ்வயுஜம் அஸ்யாவதார மூலம் காந்தோ பயந்த்ருயமினா கருணைக ஸிந்தோ
அசிதஸத்சு கணிதஸ்ய மாம் அபி சதாம் மூலம் ததேவ ஜகத் உபயதயைக மூலம்
யதாவதாரண மூலம் முக்தி மூலம் ப்ரஜாநாம் சடாரிபு முனி த்ருஷ்டா ஆம்னாய சாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷா சமூலோன் மூலாநே மூலமிந்தே ச பவது வரயோகி ந சமஸ்தர்தா மூலம்

மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் —12-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது
பரமம் தாமம் தேஜோ நிதானம்
பூமா தஸ்மிந் பூ மா சஹாயா குஸலீ பவது
திவ்யம் தஸ்மை ஜகது விபவம் வர வர முனி தேசிகோ தேசிகா நாம் மங்களானி கல்பயன்
ரெங்க தேசிகன் பெரிய பெருமாள் லஷ்மீ நாதன் -மா முனிகளோ தேசிகோ தேசிகா நாம்-

திருமாலவன் கவி நம்மாழ்வார்
நம்மாழ்வார் கவி மதுரகவி
அமுதனார் ராமானுஜர் கவி
எறும்பி அப்பா வர வர முனி கவி -ஷட் பதமாக -தேவராஜம் –
காட்டில் இருந்தாலும் -வண்டு போல் அல்லவே மண்டூகம் தாமரை அருகில் இருந்தாலும்
வண்டே கமல மது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் தவளை இதன் ஏற்றம் அறியாதே –
திவ்ய ஞானம் -ம முனிகள் திருவடிகளைப் பற்றுவதையே காட்டி அருளினார்

மூலம் சடரிபி முக ஸூ க்தி விவேசனாயா
கூலம் காவேரி கரையில் –
மம ஆலம்பநஸ்ய -பற்றுக்கோடு
ஜன்மஸ்ய மூலம்
சதுலம்-அளவோடு கூடியது -அர்த்தம் இல்லை -துலா மாச மூலம் அர்த்தம்
அதுலஸ்ய சித்தம் -அளவில்லாதது
சதுலம்
துங்கம் ரெங்கம் ஜெயது
பூமா ரமா மணி பூஷணம் ஜெயது
வரத குரு (கோயில் அண்ணன் ) சஹா சுப அநுவர்த்த ஸ்ரீ மன் ராமானுஜ ஏவ ஜெயது

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்–

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

———-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———–

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சங்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி– யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா

பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

——————————————————–——

அதே மங்கள ச்லோகம்
ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ஸ்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ஸ்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழல மாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லா விதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார்.
ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும் ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

——————-

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –

அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்

பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருக்கட்டு

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

பாராசர்யா வச ஸூதாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
1-ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
3-விஷ்ணோ கடாஷம்
4-அத்வேஷம்
5-அபிமுக்யம் ச
6-சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூத்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூத்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம்
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம்
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம்
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூபர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூபர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

———

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———–

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

-——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -அதிகரண-ஸூத்ரங்கள் தொகுப்பு —/அதிகரண அர்த்த ஸாரங்கள் —

November 28, 2021

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————-

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

————-

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

————-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

——————————————————————————–

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

———————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-