ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-
இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .
இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்
———-
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்
———–
அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா
அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.
இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.
ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.
ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.
பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.
வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.
சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –
வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே
இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்
பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்
ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.
இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.
வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே
அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்
ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே –
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சங்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே
ஸ்ரீநிவாச
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.
பக்தி ரூபா சேமுஷீ பவது
ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.
எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்
தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி– யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –
பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா
பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்
ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது
அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்
அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —
சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்
அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :
1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்
விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.
தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக
மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –
அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்
வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே
நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி
சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –
தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –
——————————————————–——
அதே மங்கள ச்லோகம்
ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே
அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
“தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.
ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
“விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.
இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.
விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.
ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.
ஸ்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ஸ்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.
வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழல மாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
“ ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.
ப்ரஹ்மணி
எல்லா விதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார்.
ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.
ஸ்ரீநிவாஸே
இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.
ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,
ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும் ஸ்ரீமான்,
அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.
இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.
ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.
இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.
ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.
திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.
பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?
ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.
நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?
சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!
ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.
——————-
ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –
அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-
லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்
முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்
பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்
————————————————————————————————————————
இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||
1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருக்கட்டு
பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி
ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே
பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –
கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –
விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –
பாராசர்யா வச ஸூதாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்
ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
1-ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
3-விஷ்ணோ கடாஷம்
4-அத்வேஷம்
5-அபிமுக்யம் ச
6-சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-
பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூத்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூத்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –
வச ஸூ தாம் –
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம் –
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே
வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –
பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா –
அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-
சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்
இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று
பூர்வா சார்ய ஸூ ரஷிதாம் –
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம் –
முரண்பட்ட வெவ்வேற மதியால்
ஆநீதாம் –
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –
நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-
ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூபர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூபர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்
———
ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –
இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.
———–
ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்
“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”
வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.
அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.
பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
-——————————————————————————–——————————————————————————–——————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply