Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ பாரதியின் ஸ்ரீ பகவத் கீதையும் ஸ்ரீ விநாயகர் நான்மணி மாலையும்–முனைவர் நா.இளங்கோ–

February 12, 2021

ஸ்ரீ பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67,
திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.

இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு.
இதற்கு ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திரம், ஸ்ரீ உபநிஷத்துகள் ஆகியவற்றோடு ஸ்ரீ பகவத் கீதையும் இணைந்து
மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத் திரயம் என்று அழைக்கப்படுகிறது

சின்னசாமி ஐயர் – லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882-ம் ஆண்டு
திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்ரமணிய பாரதியார்.
பிறப்பிலேயே தமிழின்பால் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அந்தக் குழந்தைக்கு
தமிழ்க் கடவுளின் பெயரான சுப்ரமணியன் என்ற திருநாமத்தைச் சூட்டினர்.

1897-ம் ஆண்டு பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்கு கொண்டார் செல்லம்மா.
இவர், பாரதியின் இலக்கியப் பணிகளுக்குப் பாலமாக இருந்தார்.
தன் கணவரின் சொல்லுக்கு மறு சொல் பேசாத இவர், வறுமையிலும் வறட்சியிலும் வாடிப் போனாலும்,
அகத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் புன் சிரிப்பையுமே தனக்கான அணி கலன்களாகக் கொண்டு வாழ்ந்தார்.

`சுதேசமித்திரன்’ என்ற தமிழ் பத்திரிகையில் 1904-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை
உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912-ல் தமிழில் மொழி பெயர்த்தார்.
கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள் எனப் பல் வேறு வகையான பாடல்களும் எழுதினார்.
இவற்றில் சிலவற்றையே கண்ணன் பாட்டு, குயில் பாட்டு—போன்றவை.

பாரதியின் காலத்தைச் சுருக்க எத்தனித்த காலன், யானை வடிவில் உருவெடுத்து தமிழ் போற்றும்
நல்லுலகத்திடமிருந்து பாரதியைப் பிடிங்கிச் சென்றான்.
ஆம், சூழ்நிலை காரணமாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானையின்
கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் தமிழ் உலகை விட்டு பிரிந்தது

————

1. பாரதியின் பகவத் கீதை முன்னுரையும் பகவத் கீதை உரையும்,
2. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை.
பாரதியின் புதுவை வாழ்க்கையில் அவர் படைத்த உயர்ந்த இலக்கியங்கள் என்று போற்றப்படும்
கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்கள் தோன்றிய
அதே காலக்கட்டத்தில் பாரதி படைத்த மிகச்சிறந்த இலக்கிய, தத்துவப் படைப்புகள் தாம் மேற்குறிப்பிட்ட இரண்டு படைப்புகளும்.
என்ன காரணத்தாலோ கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்களும்
பெற்ற விளம்பரத்தை பாரதியின் பகவத் கீதை உரையும், விநாயகர் நான்மணி மாலையும் பெறவில்லை.

பாரதி 1912 ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார் என்று அறிகிறோம்.
1924 -25 ஆகிய இக்காலப் பகுதியில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களைப்
பாரதி பிரசுராலயத்தார் முதன் முதலில் பதிப்பித்தனர்.
பாரதி, கீதை உரை நூலுக்கு எழுதிய முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகப் பாரதி பிரசுராலயத்தார்
பகவத் கீதை முன்னுரை என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.
பாரதி தாம் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதைப் பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகின்றது.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணு தானே நிரம்பியிருக்கிறான்,
ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்.
இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம்.
அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்.
வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.
அதுவே முக்திக்கு வழி.(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)
எவ்வுயிரிடத்தும் எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே,
அதாவது சமத்துவமே விடுதலைக்குரிய வழி, அதுவே ஞானம் என்கிறார் பாரதி.

பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் போன்ற
பலருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது.
பாரதி இவர்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் முற்றிலும் வேறான நோக்கில் கீதையை தரிசித்தார்

——-

பாரதி கீதையில் தரிசித்த ஆன்மீகத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய
இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை.
பாரதி தம் தம்பி விசுவநாத ஐயருக்கு 3-8-1918 இல் எழுதிய கடிதத்தில் விநாயகர் ஸ்தோத்திரம் என்ற
தம் நூலைப்பற்றிக் குறிப்பிடுகின்றார்.
இந்த விநாயகர் ஸ்தோத்திரம் தான், விநாயகர் நான்மணி மாலை. 1918 க்கு முன் பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில்
புதுவை மணக்குள விநாயகரை முன்னிறுத்திப் பாடிய இந்த நூல் அச்சில் வெளிவந்தது பாரதி மறைவுக்குப் பின் 1929 இல்தான்.

பாரதி வழக்கமான பக்தி இலக்கியமாக இந்நூலைப் படைக்கவில்ல.
மாறாக, தம் தத்துவத் தேடலின் பிரதியாகத்தான் படைத்துள்ளார்.
இவ்வுலகில் கலியைக் கொன்று கிருதயுகத்தினைக் கொணர்ந்து எல்லோரும் இம் மண்ணிலேயே அமரத்தன்மை
எய்தும் வகையைச் சாத்தியமாக்கும் பிரகடணமாகவே இந்நூலைச் சமைத்துள்ளார்.

பாரதியின் கீதை முன்னுரையையும் விநாயகர் நான்மணி மாலை நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால்
இரண்டில் முன்னது இலக்கணம் போலவும் பின்னது இலக்கியம் போலவும் படைக்கப்பட்டுள்ள திறன் வியப்புக்குரியதாயுள்ளது.
பாரதி பகவத்கீதை முன்னுரையில் குறிப்பிடும் கீதையின் உட்பொருள்கள் சிலவும்
அதே உட்பொருளை விளக்கும் வகையில் பாரதி பாடிய விநாயகர் நான்மணி மாலைப் பாடல் பகுதிகளும் வருமாறு,

1-உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று, மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம்.
கவிதைகளெல்லாம் நாடகங்களெல்லாம் சட்டங்களெல்லாம் கதைகளெல்லாம் காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா?
(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்
சிந்தையே இம்மூன்றும் செய் (வி.நா.மா., பா.25)

2. எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும்
நீங்கி நிற்கும் நிலையே முக்தி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.7)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே கவலைப் படுதலே கருநரகம்மா
கவலை யற்றி ருத்தலே முக்தி (வி.நா.மா., பா.36)

3. சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.
அமரத்தன்மை, இஃதே வேத ரகஸ்யம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.18)

துயரிலாது இங்கு நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அமரத் தன்மை எய்தவும் இங்கு நாம் பெறலாம், இஃது உணர்வீரே! (வி.நா.மா., பா.4)

4. மோஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு அவனுடைய சொந்த மனமேயாம்.
உள்ளப் பகையைக் களைந்து விட்டால் புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.
(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.23,24)

மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா! (வி.நா.மா., பா.12)

மேவி மேவித் துயரில் வீழ்வாய் எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல். (வி.நா.மா., பா.36)

5. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்?
பொறுப்பைத் தொப்பென்று கீழே போட்டு விட்டுச் சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு.
எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? நீயா இதை நடத்துகின்றாய்?
உன்னைக் கேட்டா நஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்?
எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?
(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.8,9)

அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப் பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் (வி.நா.மா., பா.24)

மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன், இன்னும் உரைப்பேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன்? என்றிரு,
பாராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்
நமக்கேன் பொறுப்பு? (வி.நா.மா., பா.36)

6. கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும்.
வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்து கொண்டு, மனுஷ்ய இன்பங்களை யெல்லாம்
தானும் புசித்துக் கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களின்றும் விடுபட்டு
ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழி…..(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.32,33)

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாலும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயுந்தவமே. (வி.நா.மா., பா.10)

7. எல்லாம் கடவுள் மயம் எல்லாத் தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும்
எல்லாக் காட்சிகளும் எல்லாக் கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எல்லாச் சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும்
எல்லாம் ஈசன் மயம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.8)

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே (வி.நா.மா., பா.20)
பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருளை (வி.நா.மா., பா.12)

8. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டே யிருக்க வேண்டும்.
தன்னுயிரைப் போல் மன்னுயிரைப் பேணவேண்டும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.16)

மண்மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற் பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா! (வி.நா.மா., பா.32)

9. இடைக் காலத்தில் மாயை பொய் என்றதொரு வாதம் உண்டாயிற்று.
மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதே யெனில்,
மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை.
அது கடவுள் திருமேனி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.46)

வான முண்டு மாரி யுண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் லுலகமும்
என்றும் இங்குளவாம்……. (வி.நா.மா., பா.32)

—————-

கீதையில் பாரதி கண்ட புதிய தரிசனங்கள்:

பகவத்கீதைக்கு பாரதி முற்றிலும் வேறான முற் போக்கு விளக்கங்கள் கொடுத்து புதிய தரிசனங்களை கீதையில் காண்கிறார்.

1. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் – எல்லா மனிதரும் சமம், மனிதருக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை.

2. கீதை அமிர்த சாஸ்திரம், அமரத் தன்மை இதுவே வேத ரகஸ்யம்.

3. மனிதனுடைய ஒரே சத்ரு அவனுடைய சொந்த மனமேயாகும். எனவே அச்சப்படாதே, கவலைப்படாதே,

4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய், அன்பே சிறந்த தவம்.

5. துறவைவிட இல்லறமே மேலானது. இல்லறமே சுவர்க்கம்.

6. மாயை பொய்யென்னும் போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது.
மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி.

7. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். சமத்துவமே விடுதலைக்கு வழி.

பாரதியின் இந்தப் புதிய தரிசனங்களோடு படைக்கப் பட்டிருப்பது தான் விநாயகர் நான்மணி மாலையின் தனிச் சிறப்பு.

முடிவுரை:

பாரதியின் கடைசிப் படைப்பு என்று கருதப்படும் பின்வரும் பாடலில்,

முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை. (பாரத சமுதாயம், பாரதி)

என்று சொன்ன பாரதி, அதே பாடலில் ஒரு புதுமை செய்கிறான்,

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் (பாரத சமுதாயம், பாரதி)

பாரதி இந்தப் பாடலில் சமத்துவத்தையும் பகவத் கீதையையும் இணைத்திருக்கின்றார்.
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற கீதை வாசகம் இங்கே நினைவூட்டப் பட்டிருக்கிறது.
எல்லாம் கடவுள் மயம் என்பதிலிருந்து தான்
பாரதி அன்பை, விடுதலையை, சமத்துவத்துவத்தைக் கட்டமைக்கிறார்.
பாரதி கூறும் அமர நிலை என்பது சமத்துவ சமூகமே.
அதுவே கிருத யுகம். பாரதி ஆன்மீகத்தின் தனித் தன்மையும் இதுவே.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –18-61–18-78—

February 12, 2021

வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:

61. ஈஸ்வர: ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா

அர்ஜுந-அர்ஜுனா,
யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்,
ஈஸ்வர:-ஈசுவரன்,
மாயயா ப்ராமயந்-மாயையினால் சுழற்றிக் கொண்டு,
ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில்,
திஷ்டதி-நிற்கிறான்.

அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா
உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க் களத்துக்கு வந்த கோலமே இக் கோட்பாட்டை விளக்குகிறது.
ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது.
பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை.
சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது.
நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த
அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான்.
கிருஷ்ணன் தேர் ஓட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை.
அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.

அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது.
தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்து கொள்ள வல்லவனாகிறான்.
ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது.
இயங்குகின்ற மாயை அதன் வசப் பட்டிருக்கிறவர்களை யெல்லாம் இயக்குகிறது.
சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள்.
அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக் கொண்டு அதைச் செய்வேன் என்றும்,
இதைச் செய்ய மாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள்.
அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர்.
ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும்.
விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற
எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.

பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை.
ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ் விஷம் கடி யுண்டவனுக்கு மரணத்தைத் தரும்.
இதைப்போல
ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது.
ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஸர்வஂ ஹி பூத ஜாதஂ ஸர்வேஷ்வரேண மயா பூர்வ கர்ம அநுகுண்யேந ப்ரகரித் யநுவர்தநே நியமிதம்? தத் ஷ்ரரிணு —

৷৷18.61৷৷ஈஷ்வரஃ ஸர்வ நியமந ஷீலோ வாஸுதேவஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷே
ஸகல ப்ரவரித்தி நிவரித்தி மூல ஜ்ஞாநோதயே தேஷே திஷ்டதி.
கதஂ கிஂ குர்வந் திஷ்டதி (எதைக் கருவியாக வைத்துக் கொண்டு -என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறார்)
யந்த்ர ஆரூடாநி ஸர்வ பூதாநி மாயயா ப்ராமயந் ஸ்வேந ஏவ நிர்மிதஂ
தேஹேந்த்ரியா வஸ்த ப்ரகரித்யாக்யஂ யந்த்ரம் ஆரூடாநி ஸர்வ பூதாநி ஸ்வ கீயயா ஸத்த்வாதி குண மய்யா
மாயயா குண அநுகுணஂ ப்ரவர்தயந் திஷ்டதி இத்யர்தஃ.

பூர்வம் அபி ஏதத் உக்தம்’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் ஜ்ஞாநமபோஹநஂ ச’ (கீதா 15.15)
இதி’மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே’ (கீதா 10.8)
இதி ச. ஷ்ருதிஷ்ச — ‘ய ஆத்மநி திஷ்டந்’ (ஷத0 ப்ரா0 1.13.1)–இத்யாதிகா.

ஏதந் மாயா நிவரித்தி ஹேதும் ஆஹ —

(வியாபக மந்த்ரங்கள் -நாராயண -விஷ்ணு -வாஸூ தேவன் -மூன்றையும் சொல்லலாமே -நாமம் -மந்த்ரம் -ஓம் சேர்த்து -வாஸூ தேவன் பிள்ளை என்றும் சொல்ல வேண்டுமே-ஈஸ்வர -படர்க்கையாக இருந்தாலும் -தன்னாலே என்றபடி -நாவில் உளானே ஆழ்வார் இடம் மட்டும் எங்கும் -இங்கு ஹ்ருதய பிரதேசம் -சர்வ வ்யாபகன் -ஞானம் உதயம் இருக்கும் இடம் சொல்லவே இங்கு -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் நியமனம் அடியாக -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -அந்தர்யாமி இருவகை விக்ரஹ விசிஷ்டானாய் யோகிகளுக்கு மட்டும் –)

(யந்த்ரம் தேஹத்தைக் குறிக்குமா என்னில் ரதமாக கடவல்லி – ப்ரஹ்மம் ஆகிய பெரிய சக்கரத்தில் ஜீவன் சுழற்றப்படுகிறான் -துக்கச் சூழலில் சுற்றிக் கொண்டு இருக்கிறோம்-மாயாவீ -ஆச்சர்யமான ப்ரக்ருதியைக் கொண்டே படைக்கிறான்- என்று அறிந்தவன் சுற்ற வேண்டாம் -)

৷৷18.61৷৷உக்தார்த ஸ்தாபநாய த்வய் யுதாஸீநே கதமஹஂ ப்ரவர்தேய
ததாத்வே வா கதஂ தவ ஸர்வ ஹேதுத்வஂ இதி சோத்யம்’ஈஷ்வரஃ’
இதி ஷ்லோகேந பரிஹ்ரியத இத்யாஹ —
‘ஸர்வஂ ஹீதி’. உக்தஂ ஸ்வபாவ பாரதந்த்ர்யமபி மத்ப்ரயுக்தம்; மம ச ஸாதாரண காரணத்வாந்ந
கஷ்சித் விரோத இதி பாவஃ. ஈஷ்வரஷப் தஸ்யாத்ரேந்த்ராதி ஷப்தவத் அர்வாசீநேஷ்வர விஷய ரூடி ஷங்கா
பரிஹாராய யௌகிக மர்தமந்வர்த ஸமாக்யயா ஸ்தாபயதி’ஸர்வ நியமநஷீலோ வாஸுதேவ’ இதி.
‘ஸாபேக்ஷநிரபேக்ஷயோர்நிரபேக்ஷஸம்ப்ரத்யயஃ’
இதி ந்யாயா தீஷ்வரத் வஸ்ய ஸர்வ விஷயத்வஂ ஸித்தம். தஸ்ய ச வ்யாப்தி மூலத்வஂ வாஸுதேவ ஷப்தேந தர்ஷிதம்.
வக்தரி விஷயத்வ ஜ்ஞாபநாய வாஸுதேவஷப்தஃ. ஸர்வேஷ்வரேண’மயா’ இதி ஹ்யதஸ் தாத்தர்ஷிதம்.
ஸர்வ வ்யாப்தஸ்ய ஹரித்தேஷே விஷேஷ ஸ்திதிவசநஂ கிமர்தஂ இத்யத ஆஹ —

‘ஸகல ப்ரவரித்தி நிவரித்தி மூல ஜ்ஞாநோதயப்ரதேஷ’ இதி. ஏதேந ஹரிதய ஸ்திதேஃ’ப்ராமயந்’
இத்யத்ரோபயோகோ தர்ஷிதஃ.,’கதமித்யுபகரணாபிப்ராயம்’;’மாயயா’ இதி ஹி ததுத்தரம்.’கிஂ குர்வந்நிதி’ —
ஈஷ்வரஷப்தேந நியந்தரிதைகநிரூபணீயதயா ப்ரதிபந்நோஸௌ கீதரிஷஂ நியமநஂ குர்வந்நித்யர்தஃ.

‘யந்த்ர’ இத்யாதி’ப்ராமயந்’ இத்யந்தமேகஂ வாக்யஂ ப்ரஷ்ந வாக்யாதாகரிஷ்டேந திஷ்டதி நாந்வேதவ்யம்.
ப்ராகுக்தஸர்வபராமர்ஷேந யந்த்ரமாயாதிஷப்தாநாமர்தஂ விவரிணோதி —
‘ஸ்வேநைவ நிர்மித மித்யாதிநா’. பூத ஷப்தேந? ஹரித் ப்ரதேஷ நிர்தேஷேந?
புருஷ ப்ரவரித்தி விஷேஷாநுகுண்யாத்? அர்த ஸ்வபாவேந ச யந்த்ரஷப்தோத்ர தேஹேந்த்ரிய ஸங்காத விஷேஷ விஷயஃ.
மஹதஃ பரம வ்யக்தஷப்தேந நிர்திஷ்டம்? தத்ரைவ ச “ஷரீரஂ ரதமேவ ச” [கடோ.3.3]
இதி ரதாக்யயந்த்ரத்வேந ரூபிதமிதி ஜ்ஞாபநாய —
‘தேஹேந்த்ரியாவஸ்தஂ ப்ரகரித்யாக்யமித்யுக்தம்’. ததா ச ஷ்ரூயதே — ”
ஸர்வாஜீவே ஸர்வஸஂஸ்தே ப்ரமந்தே

(பரிஹந்தே) தஸ்மிந் ஹஂஸோ ப்ராம்யதே ப்ரஹ்மசக்ரே. பரிதகாத்மாநஂ ப்ரேரிதாரஂ ச மத்வா
ஜுஷ்டஸ்ததஸ்தேநாமரிதத்வமேதி” [ஷ்வே.உ.1.6+நா.ப.9.5] இதி.
ஏதேந’யந்த்ராரூடாநீவ'(ஷாஂ.)இதீவஷப்தலோபேந வ்யாகுர்வந்தோ நிரஸ்தாஃ.’ஸ்வகீயேதி’ —
ஆதௌ’குணமயீ மம மாயா’ [7.14]
இதி ஹ்யுக்தம். ஷ்ருதிஷ்ச “அஸ்மாந்மாயீ ஸரிஜதே விஷ்வமேதத்தஸ்மிஂஷ்சாந்யோ மாயயா ஸந்நிருத்தஃ” [ஷ்வேதா.4.9]
“மாயாஂ து ப்ரகரிதிஂ வித்யாந்மாயிநஂ து மஹேஷ்வரம்” [ஷ்வேதா.4.10] இதி.
ஜீவஸ்ய கர்தரித்வாதிபங்கபரிஹாராய’குணாநுகுணமித்யுக்தம்’.
நஹி ஜீவமீஷ்வரோ பூதாவேஷந்யாயேந ப்ரவர்தயதி? அபிது ஸத்த்வாதிகுணமயாந் பாவாந் புரஸ்கரித்ய
பூர்வஸித்தவாஸநாவிஷேஷஜநிதஸங்கத்வாரேணேதி ந விரோதஃ. ப்ராமயந்? ப்ரமயந்நித்யர்தஃ.
தத்ர ப்ரவரித்திஹேதுதயா மோஹநமந்தர்நீதஂ? ந து ஷாப்தமித்யாஹ — ‘ப்ரவர்தயந்நிதி’.
அத்ர ஷப்தேந பரோக்ஷவ்யபதேஷேநாபி வக்தா வாஸுதேவோ நிர்திஷ்ட இதீமமர்தஂ ப்ராகுக்தேந த்ரடயிதுமாஹ —
‘பூர்வமபீதி’. “ய ஆத்மநி திஷ்டந்” [ஷ.ப்ரா.14.5.30] இத்யாதி
நிர்திஷ்டோந்தர்யாமீ ஸௌபாலிக்யாமுபநிஷதி நாராயண இதி விஷேஷிதஃ
“ஸ ஏஷ ஸர்வபூதாந்தராத்மாபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” [ஸுபாலோ.7] இதி.

——————

கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :

62. தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்

பாரத-பாரதா,
ஸர்வபாவேந-எல்லா வடிவங்களிலும்,
தம் ஏவ ஸரணம் கச்ச-அவனையே சரணெய்து!
தத்ப்ரஸாதாத்-அவனருளால்,
பராம் ஸாந்திம் ஸாஸ்வதம் ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை,
ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.

அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய
நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும்.
உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல்,
உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன.
அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன.
அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது.
அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது.
அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது.
ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை.
இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.

பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருந்தனர்.
உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர்.
குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர்.
அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று.
கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.

ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள்
அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள்.
காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை.
அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது.
சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.

ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டு
வரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன்,
அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை,
இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்?
கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.

ஏதந் மாயா நிவரித்தி ஹேதும் ஆஹ –தூண்டுபவன் நீயாய் இருக்க வெளியில் வர உபாயம் அருளுவாய் என்ன பதில் -இங்கு தமேவ –பின்பு மாம் ஏகம் -ப்ராப்யமும் பிராபகமும் நானே என்கிறான்

৷৷18.62৷৷யஸ்மாத் ஏவஂ தஸ்மாத் தம் ஏவ- (உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் )ஸர்வஸ்ய ப்ரஷாஸிதாரம் ஆஷ்ரித வாத்ஸல்யேந -த்வத் ஸாரத்யே அவஸ்திதம்’இத்தஂ குரு’
இதி ச ப்ரஷாஸிதாரஂ மாஂ ஸர்வ பாவேந ஸர்வாத்மநா ஷரணஂ கச்ச அநுவர்தஸ்வ.
அந்யதா தந் மாயா ப்ரேரிதேந அஜ்ஞேந த்வயா யுத்தாதிகரணம் அவர்ஜநீயம்?(ஆதி -வர்ணாஸ்ரம கர்மங்கள் எல்லாம் பண்ண வேண்டும் -யுத்தம் செய்வது அதில் ஓன்று )
ததா ஸதி நஷ்டோ பவிஷ்யஸி. அதோ மதுக்த ப்ரகாரேண யுத்தாதிகஂ குரு இத்யர்தஃ. ஏவஂ குர்வாணஃ(ஆகையால் கர்மயோகம் செய்து -என்னையே சரணம் அடைந்து பக்தி ஆரம்ப விரோதிகளை போக்கி என்னையே அடைவாய் -அங்க ப்ரபத்தியை விதிக்கிறான் இத்தால் )
தத் ப்ரஸாதாத் பராஂ ஷாந்திஂ ஸர்வ கர்ம பந்த உபஷமநஂ ஷாஷ்வதஂ ச ஸ்தாநஂ ப்ராப்ஸ்யஸி. (கீழ் ஸாஸ்வதம் பதம் -இங்கு ஸ்தானம் -இடம் புத்தியின் நிலை அல்ல-தெளிவிக்கிறான் )யத் அபிதீயதே ஷ்ருதி ஷதைஃ —
‘தத்விஷ்ணோஃ பரமஂ பதஂ ஸதா பஷ்யந்தி ஸூரயஃ.’ (ற0 ஸஂ0 1.2.6.5)
‘தே ஹ நாகஂ மஹிமாநஃ ஸசந்த யத்ர பூர்வே ஸாத்யாஃ ஸந்தி தேவாஃ.’ (யஜுஃ ஸஂ0 31.16)’
யத்ர றஷயஃ ப்ரதமஜா யே புராணாஃ.”பரேண நாகஂ விஹிதஂ குஹாயாம்’ (மஹாநா0 8.14)
‘யோ அஸ்ய அத்யக்ஷஃ பரமே வ்யோமந்.’ (ற0 ஸஂ0 8.7.17.7)
‘அத யததஃ பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே’ (ச0 உ0 3.13.7)
‘ஸோத்வநஃ பாரமாப்நோதி தத் விஷ்ணோஃ பரமஂ பதம்’ (க0 உ0 3.9) இத்யாதிபிஃ.

(ஜீவன் முக்தி மோக்ஷம் -ஸூ ஷ்ம மூல ப்ரக்ருதி மோக்ஷம் -பிரகிருதி மண்டலத்துக்குள்ளே விஷ்ணு லோகம் இருக்கிறது -அனைத்தும் நிரஸனம்)

৷৷18.62৷৷’ஸ்வதந்த்ரே ஸ்வமாயயா ப்ரேரயதி? பரதந்த்ரஸ்தாஂ கதஂ நிஸ்தரேத்’ இத்யத்ரோத்தரஂ’தமேவ ஷரணம்’ இதி ஷ்லோக இத்யாஹ — ‘ஏதந்மாயாநிவரித்திஹேதுமாஹேதி’.’யஸ்மாதேவம்’ — அந்யதாபி புத்த்யா நிவர்திதுமஷக்யத்வாதித்யர்தஃ?
ஸர்வஸ்யேஷ்வராதீநத்வாதிதி வா.’தமேவ’ இத்யநேந மாயாஂ கோந்யோ நிவர்தயிதுஂ ஷக்நோதீதி ஸூசிதமித்யாஹ —
‘ஸர்வஸ்ய ப்ரஷாஸிதாரமிதி’. அத்யந்தஸ்வதந்த்ரஃ ஸ ஏவ ஹீதாநீஂ ரதிநஸ்தவ ஸாரதித்வேந பரதந்த்ரஃ
ப்ரஷாஸ்தீத்யபிப்ராயேண’ஆஷ்ரிதவாத்ஸல்யேநேத்யாதிகமுக்தம்’. ஏவமநுவர்தநீயத்வாய பரத்வஂ ஸௌலப்யஂ ச தர்ஷிதம்.
பாவஷப்தோத்ர மநோவரித்திபர இத்யாஹ’ஸர்வாத்மநேதி’. ஸர்வப்ரகாரேணேதி வார்தஃ. தேந’வாஸுதேவஃ ஸர்வம்’ [7.19] இத்யுக்தப்ரக்ரியயாந்தர்யாமித்வேநோபதேஷ்டரித்வேந ப்ராப்யத்வப்ராபகத்வாதிபிஷ்சைக ஏவாவஸ்தித இத்யநுஸந்தாநஂ வா விவக்ஷிதம்.
அத்ர ஷரணஷப்த உபதேஷாதிமுகேந கோப்தரிவிஷயஃ; தேநைவ த்வாரேணோபாயபரோ வா.
யதோபதிஷ்டகரணமேவாத்ர ஷரணாகதிரித்யபிப்ராயேணாஹ — ‘ஸர்வாத்மநாநுவர்தஸ்வேதி’.’ந ஷ்ரோஷ்யஸி”ந யோத்ஸ்யே’
இத்யுக்தநிஷேதபரத்வாதநுவர்தநமேவாத்ர ஷரணாகதிரிதி தர்ஷயிதுஂ ப்ரகரிதேந விபர்யயே ப்ரத்யவாயேந யோஜயதி —
‘அந்யதாபீதி’. ப்ரகரிதோபயோகேநாநுவரித்திஂ விஷிஂஷந் விவக்ஷிதமுபஸஂஹரதி —
‘அதஸ்ததுக்தப்ரகாரேணேதி’. ஸ்வவர்ணாஷ்ரமாநரூபததாஜ்ஞாநுவர்தநமேவ ஹி தத்ப்ரீணநமிதி பாவஃ.

உக்தாநுவரித்திஂ ப்ரஸாதஹேதுதயோத்தரார்தேந யோஜயதி —
‘ஏவஂ குர்வாணஸ்தத்ப்ரஸாதாதிதி’.’மத்ப்ரஸாதாத்’ [18.56;58] இத்யுக்த ஏவார்தஃ’தத்ப்ரஸாதாத்’ இத்யத்ர நிர்திஷ்டஃ.
தத்ரோக்தஂ ஸர்வதுர்கதரணமிஹ பரா ஷாந்திஃ. ஷாந்தேஷ்சாத்ர பரத்வஂ நிவரித்தஜாதீய காரண ஸாமாநாதிகரண்ய
விரஹேணாபுநரங்குரத்வமித்யபிப்ராயேணாஹ’ஸர்வகர்மேதி’. ஸர்வகர்மபந்தோபஷமபரஷாந்திஷப்தேந அநிஷ்டநிவரித்திருக்தா.
‘ஸ்தாநஂ ப்ராப்ஸ்யஸி’ இதி இஷ்டப்ராப்திருச்யதே. ஷாஷ்வதஷப்தேந ப்ரஹ்மாதிஸ்தாநவ்யவச்சேதஃ.
மூலப்ரகரிதிஃ ஸூக்ஷ்மாவஸ்தா? முக்தப்ராப்யஸ்தாநமிதி கேசித்; ஸத்யலோகாதிஷ்வேவ வைஷ்ணவஸ்தாநமிதி சாபரே;
தத்ஸ்தாநஷப்தஸ்ய முக்யார்தஸ்வீகாராய? வாதிக்ஷேபாய சாப்ராகரிதஸ்தாநஂ ஷ்ருதிபிருபபாதயதி — ‘யதபிதீயத’ இதி. அதீதவேதாநாஂ ஸம்ப்ரதிபத்த்யதிஷயார்தஂ’ஷ்ருதிஷதைரித்யுக்தம்’. ஏதேந காரணஷ்ருதீநாஂ “ஏகமேவாத்விதீயம்” [சாஂ.உ.6.2.1]

இத்யாதீநாஂ ஸ்ரக்ஷ்யமாணகார்யப்ரபஞ்சமாத்ரப்ரலயபரத்வஂ பஹுஷ்ருத்யவிரோதாய தர்ஷிதம்.’தத்விஷ்ணோஃ’
இதி வாக்யஂ ப்ரத்யேகஂ ஸதாபஷ்யதநேகஸூரிவிஷிஷ்டவிதிபரஂ? கரித்ஸ்நஸ்யாப்ராப்தத்வாத்.’விஷ்ணோஃ’
இதி வையதிகரண்யாச்ச நாத்ர ஸ்வரூபபரதா யுக்தா.’யத்ர பூர்வே ஸாத்யாஃ ஸந்தி’ இத்யத்ராப்யநவச்சேதாந்நித்யஂ ஸந்தீதி ஸித்தம்.
அத்ர ச’ஷாஷ்வதஂ ஸ்தாநம்’ இதி நிர்திஷ்டஂ பரமாத்மந ஏவ ஸ்தாநமிதி ப்ரகரணாந்தரே வ்யக்தம்.
‘ரம்யாணி காமசாராணி (திவ்யாநி காமசாரீணி) விமாநாநி ஸபாஸ்ததா. ஆக்ரீடா விவிதா ராஜந்! பத்மிந்யஷ்சாமலோதகாஃ.
ஏதே வை நிரயாஸ்தாத! ஸ்தாநஸ்ய பரமாத்மநஃ’ [ம.பா.12.198.4;11] இதி. ஆஹ ச பகவாந் பராஷரஃ —
‘ஏகாந்திநஃ ஸதா ப்ரஹ்மத்யாயிநோ யோகிநோ ஹி யே. தேஷாஂ தத்பரமஂ ஸ்தாநஂ யத்வை பஷ்யந்தி ஸூரயஃ’ [வி.பு.1.6.39] இதி.

—————–

63. இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண யதேச்சஸி ததா குரு

இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை,
மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது,
ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து,
யதா இச்சஸி ததா குரு-எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன்.
இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும்
நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம்
அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம்.
மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து
கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும்,
அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம்.
விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன.
மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும்
யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது
அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது.
இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை.
இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை.
ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும்
அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை.
குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும்
ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.

மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார்.
அவர் புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார்.
உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல.
உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான்.
உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது.
அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு,
அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார்.
சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.

৷৷18.63৷৷இதி ஏவஂ தே முமுக்ஷுபிஃ அதிகந்தவ்யஂ ஜ்ஞாநஂ ஸர்வ ஸ்மாத் குஹ்யாத் குஹ்ய தரஂ
கர்ம யோக விஷயஂ ஜ்ஞாந யோக விஷயஂ பக்தி யோக விஷயஂ ச ஸர்வம் ஆக்யாதம்.
ஏதத் அஷேஷேண விமரிஷ்ய ஸ்வ அதிகார அநுரூபஂ யதா இச்சஸி ததா குரு?
கர்ம யோகஂ ஜ்ஞாநஂ பக்தி யோகஂ வா யதேஷ்டம் (ச மற்றவை )ஆதிஷ்ட இத்யர்தஃ.

(அவதார ரஹஸ்யம் -புருஷோத்தம வித்யை -த்ரிவித த்யாகங்களுடன் கர்ம யோகம் செய்து -என்னை சரண் அடைந்து பக்தி யோக ஆரம்ப விரோதிகளை போக்கி பக்தி செய்து அடைவாய் என்கிறான் –
ஜீவ ஸ்வா தந்தர்யம் உண்டு -நான் சொன்னதை தேர்ந்து எடுத்துக் கொள்)

৷৷18.63৷৷ஏவமர்ஜுநஸ்ய யுத்தே ப்ரோத்ஸாஹநவ்யாஜேந ஸர்வாத்யாத்மஷாஸ்த்ரார்தஜாதமுபதிஷ்ய
ஸர்வாஸு நிஷ்டாஸு நித்யகர்மணோ துஸ்த்யஜதயாந்தேபி யுத்தகர்தவ்யத்வமேவ ஸ்தாபிதம்.
அத’ஸ ஹி தர்மஃ ஸுபர்யாப்தோ ப்ரஹ்மணஃ பதவேதநே’ [அநுகீ.1.12]
இதி ப்ரத்யபிஜ்ஞாபயிஷ்யமாணப்ரகாரேண ஷ்ரோதவ்யாந்தராபாவஜ்ஞாபநாய ப்ரக்ராந்தநிஷ்டாத்ரயஂ
புஷ்கலோபதிஷ்டதயா யதாதிகாரமநுஷ்டேயத்வேந நிகம்யதே’இதி தே ஜ்ஞாநமாக்யாதம்’
இதி ஷ்லோகேந. வாச்யவசநயோஃ ஸம்யக்த்வஂ பௌஷ்கல்யஂ ச இதிகரணேந விவக்ஷிதமித்யபிப்ராயேணாஹ —
‘இத்யேவமிதி’. தே’யச்ச்ரேயஃ ஸ்யாத்’ [2.7]

இத்யாதிவாதிநே ப்ரபந்நாய ஷிஷ்யாயேத்யர்தஃ. அத்ர லௌகிகப்ரமாணப்ரஸித்தவிஷயேப்ய
ஆயுர்தநுர்காந்தர்வவேதார்தநீதிஷாஸ்த்ராதிஜந்யேப்யோஜ்ஞாநேப்யஃ ப்ரகரிஷ்டாதீந்த்ரியபாரலௌகிக
ஸ்வர்காதிபுருஷார்தததுபாயவிஷயஂ வேதாக்யஷாஸ்த்ரமூலஂ விவிதஜ்ஞாநஂ குஹ்யஷப்தேந விவக்ஷிதம்.
குஹ்யதரஷப்தேந து வேதாந்தநிஷ்பாத்யஂ ததுபபரிஂஹணபூதைதச்சாஸ்த்ரவிஷோதிதஂ
முமுக்ஷுபிர்யதாதிகாரமநுஷ்டேயவ்யவஹிதாவ்யவஹிதஸமஸ்தமோக்ஷோபாயஜ்ஞாநஂ ப்ரதர்ஷ்யதே.
தத்ர த்ரிவர்கமாத்ரஸக்தேப்யோ கோபநீயதயா குஹ்யதரத்வோக்திரித்யபிப்ராயேணாஹ —

‘முமுக்ஷுபிரதிகந்தவ்யஂ ஜ்ஞாநஂ ஸர்வஸ்மாத்குஹ்யாத்குஹ்யதரமிதி’.நந்வேதச்சாஸ்த்ரோக்தேஷ்வேவ
குஹ்யகுஹ்யதரவிபாகஃ ஸ்யாத்; தத்ராப்யந்திமாத்யாயோக்தமேவ குஹ்யதரதயாத்ர நிகம்யத இதி
ஷங்காமபாகரோதி’கர்மயோகவிஷயஂ ஜ்ஞாநயோகவிஷயஂ பக்தியோகவிஷயஂ சேதி’.’விமரிஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு’ இத்யநந்தரவாக்யபராமர்ஷஸ்வாரஸ்யாத்கீதாஷாஸ்த்ரோக்தஂ கரித்ஸ்நமிஹ குஹ்யதரஷப்தேந விவக்ஷிதமிதி கம்யதே.
ததவாந்தரதாரதம்யே து ஸர்வகுஹ்யதமமித்யநந்தரஷ்லோகே வக்ஷ்யத இதி பாவஃ.’ஆக்யாதம்’
இத்யநேந வக்தவ்யாந்தராபாவோ வ்யஞ்ஜித இத்யபிப்ராயேணாஹ’ஸர்வமாக்யாதமிதி’.

மயா ஸ்வதஃ ஸார்வஜ்ஞாதிகுணயோகாதாப்ததமேந ஹிதைஷிணா சேத்யர்தஃ.’அஷேஷேண விமரிஷ்ய’ இத்யநேந
விவக்ஷிதமாஹ’ஸ்வாதிகாராநுரூபமிதி’. ஸஹஸைவ பூர்வபூர்வபரித்யாகோ ந யுக்த இதி பாவஃ.’யதேச்சஸி ததா குரு’
இத்யேதந்ந யுத்தகரணாகரணவிஷயம்? நிஷ்டாத்ரயேபி நித்யநைமித்திகாநாஂ வர்ணாஷ்ரமாநுபந்தி
கர்மணாமவஷ்யாநுஷ்டேயத்வோக்தேஃ?’யத்யஹங்காரமாஷ்ரித்ய’ [18.59]
இத்யாதிஷ்லோகாப்யாமர்ஜுநேந யுத்தஸ்ய துஸ்த்யஜதாஂ வததோ பகவதஸ்தந்நிவரித்திவிவக்ஷாநுபபத்தேஷ்ச.
அதோத்ர தத்தததிகாராநுரூபமுபதிஷ்டேஷு ஷாஸ்த்ரார்தபர்வஸு புத்திமத்தரஸ்த்வஂ கர்மஜ்ஞாநபக்திஷு
கர்மண்யஸ்மிந்மமேதாநீமதிகார இதி பராமரிஷ்ய தஸ்மிந் பர்வணி பரிகரிஹீதஸ்வவர்ணாஷ்ரமதர்ம ஏவ
வர்தஸ்வேத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கர்மயோகஂ ஜ்ஞாநயோகஂ பக்தியோகஂ வா யதேஷ்டமாதிஷ்டேதி’.
ஏதேந’கர்மஜ்ஞாநயோகயோரிதஂ நிகமநம்”ஸர்வகுஹ்யதமம்’ இத்யாதிநா’பக்தியோகநிகமநம்’
இதி கைஷ்சிதுக்தோ விபாகோ நிரஸ்தஃ.

————————

மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப் பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி
மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வ குஹ்ய தமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

৷৷18.64৷৷ஸர்வேஷு ஏதேஷு குஹ்யேஷு பக்தி யோகஸ்ய ஷ்ரேஷ்டத்வாத் குஹ்ய தமம் இதி
பூர்வம் ஏவ உக்தம்’இதஂ து தே குஹ்ய தமஂ ப்ரவக்ஷ்யாம் யநஸூயவே.’ (கீதா 9.1)
இத்யாதௌ. பூயஃ அபி தத் விஷயஂ பரமஂ மே வசஃ ஷ்ரரிணு இஷ்டஃ அஸி மே தரிடம் இதி ததஃ தே ஹிதஂ வக்ஷ்யாமி.

(ஸாஸ்த்ர சாரார்த்தம் உச்யதே -இதனாலேயே -உபக்ரமம் உப ஸம்ஹாரம் விஷயமே பக்தி யோகம் தானே-பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அடியாகவே பூய ஏவ மறுபடியும் சொல்கிறான் -பொறாமை இல்லாதவனாகையால் சொல்கிறேன் கீழ் இங்கு அதி பிரியம் -ஆகவே மீண்டும் சொல்கிறேன் என்கிறான் -பக்தி யோகத்தில் உள்ள ஆதரத்தாலே அதே பாதங்களை பிரயோகித்து அருளுகிறான் -உயர்ந்த விஷயம் பற்றியதால் சொல்லும் உயர்ந்ததாகிறது )

৷৷18.64৷৷அவிஷேஷேண த்ரிவிதேபி ஹி நிகமிதே த்ரயாணாமப்யந்யாபேக்ஷயா குஹ்யதரத்வே சோக்தே
த்ரிஷ்வேதேஷு வ்யவஹிதாவ்யவஹிதோபாயவிபாகேந குஹ்யதமாத்யவஸாயார்தஂ? புநஃ ப்ராதாந்யாத்தத்ரைவ
ஷாஸ்த்ரதாத்பர்யாதிஷயத்யோதநாய’ஸர்வகுஹ்யதமம்’ இத்யாதிஷ்லோகத்வயேந பக்தியோகரூபஷாஸ்த்ரஸாரார்தஃ
ப்ரதிஸந்தாப்யதே. ததபிப்ராயேண ஹி’ஷாஸ்த்ரஸாரார்த உச்யதே’ [கீ.ஸஂ.22]

இதி ஸஂகரிஹீதம். விவரிதஂ சாத்யாயாதௌ. அத்ர’ஸாரார்தஷேஷதயா ஸாரதமஂ ப்ரபதநஂ சரமஷ்லோகேந ப்ரதிபாத்யதே’
இதி ஸோபி’ஷாஸ்த்ரஸாரார்தஃ’ இத்யநேநைவ க்ரோடீகரிதஃ.’ஸர்வகுஹ்யதமம்’
இத்யத்ர யோகவிபாகவதா’ஸப்தமீ ஷௌண்டைஃ’ [அஷ்டா.2.1.40]
இத்யநேந ஸமாஸமபிப்ரேத்ய’ஸர்வேஷ்வேதேஷ்விதி’ ஸப்தமீநிர்தேஷஃ.
குஹ்யதமஷப்தப்ரத்யபிஜ்ஞாநாத்பூயஷ்ஷப்தஸ்வாரஸ்யாத்’மந்மநா பவ’ இதி
ஷ்லோகஸ்ய சால்பாந்தரஸ்ய பூர்வோக்தஸ்யைவ பாடாத்ஸ ஏவ பக்தியோக இஹ ஷாஸ்த்ராந்தே ஷாஸ்த்ரஸாரத்வஜ்ஞாபநாயோத்த்ரியதே? நத்வர்தாந்தரமித்யபிப்ராயேணாஹ’குஹ்யதமம்’ இதி’பூர்வமேவோக்தமிதி’. அத்ர வாச்யஸ்ய குஹ்யதமத்வமேவ
வசஸ்யுபசரிதமித்யாஹ’பூயோபி தத்விஷயமிதி’. ஷ்ரவணமாத்ராவரித்தேஃ’ஷ்ரரிணு’
இத்யநேநைவ ஸாத்யத்வாச்சுதார்தவிஷயத்வபரோத்ர பூயஷ்ஷப்தஃ.

வ்யவதாநநைரபேக்ஷ்யேண குஹ்யதமநிஷ்கர்ஷார்ததயா புநர்வசநஂ ஸார்தமிதி பாவஃ. வசஸஃ
பரமத்வோக்திஃ நாதஃபரஂ வக்தவ்யமஸ்தி இதி நிகமநாபிப்ராயா. யத்வா வாச்யஸ்ய பரமத்வாத்தத்வசஸோபி ததுச்யதே;
‘யஸ்மாத்தர்மாத்பரோ தர்மோ வித்யதே நேஹ கஷ்சந’
இதி பகவத்யோகஷ்ச ஸர்வேப்யோ யஜ்ஞாதிப்யஃ பரமஃ? பராந்தர ரஹிதஷ்சோச்யதே;
ததா’இஜ்யாசாரதமாஹிஂஸாதாநஸ்வாத்யாயகர்மணாம். அயஂ து பரமோ தர்மோ யத்யோகேநாத்மதர்ஷநம்’ [யா.ஸ்மரி.1.1.8]
இதி. ஆத்மா ஹ்யத்ர ஸர்வாந்தராத்மா. உபச்சந்தநஸ்துத்யாதிஷங்காபரிஹாராய’இஷ்டோஸி’ இத்யாதிகம்.
இஷ்டஃ ப்ரீதிவிஷய இத்யர்தஃ;’ப்ரியோஸி’ [18.65] இத்யநந்தரவத். தரிடமிஷ்டஃ அத்யர்தஂ ப்ரியஃ.
‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ [7.17] இத்யாதிபிஃ
ப்ராகுக்தஜ்ஞாநிவததிதரிடமிஷ்டோஸி; யதா குஹ்யதமஂ ப்ரகாஷநீயஂ? ததா ப்ரீதிவிஷயோஸீத்யர்தஃ.
இஷ்ட இதி யதஃ? ததஸ்தே ஹிதஂ வக்ஷ்யாமீதி வா.,

———————

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப் பொருளாகிய பகவான் பகர்கிறார்.
சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை.
பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம்
அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம்.
ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம்
வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம்
ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன.
அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை.
இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.

வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி.
கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம்.
அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம்.
அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம்.
இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது.
அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது.
விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது.
ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது.
உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம்.
அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான்.
பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால்
செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான்.
கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப்
பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார்.
உறுதிமொழி கூறுகிறார்.

ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப்
பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு
முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.

৷৷18.65৷৷வேதாந்தேஷு — ‘வேதாஹமேதஂ புருஷஂ மஹாந்தம் ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (ஷ்வே0 உ0 3.8)
‘தமேவஂ வித்வாநமரித இஹ பவதி.”நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ (ஷ்வே0 உ0 3.8)
இத்யாதிஷு விஹிதஂ வேதந த்யாந உபாஸநாதி (ஆதி- நிதித்யாஸன )ஷப்த வாச்யஂ தர்ஷந ஸமாநாகாரஂ ஸ்மரிதி ஸஂஸந்தாநம்
அத்யர்த ப்ரியம் இஹ’மந்மநா பவ’ இதி விதீயதே.மத் பக்தஃ அத்யர்தஂ மத் ப்ரியஃ அத்யர்த மத் ப்ரியத்வேந
ச நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதி ஸஂததிஂ குருஷ்வ இத்யர்தஃ. மத் யாஜீ தத்ராபி மத் பக்த இதி அநுஷஜ்யதே.
யஜநஂ பூஜநம்? அத்யர்த ப்ரிய மத் ஆராதந பரோ பவ. ஆராதநஂ ஹி பரிபூர்ண ஷேஷ வரித்திஃ.

மாஂ நமஸ்குரு நமோ நமநஂ மயி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவம் அத்யர்த ப்ரியஂ குரு இத்யர்தஃ. ஏவஂ வர்தமாநோ மாம் ஏவ ஏஷ்யஸி இதி
ஏதத் ஸத்யஂ தே ப்ரதி ஜாநே தவ ப்ரதிஜ்ஞாஂ கரோமி? ந உபச்சந்த மாத்ரஂ யதஃ த்வஂ ப்ரியஃ அஸி மே’ப்ரியோ ஹி
ஜ்ஞாநிநோத் யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ (கீதா 7.17)
இதி பூர்வம் ஏவ உக்தம். யஸ்ய மயி அதி மாத்ர ப்ரீதிஃ வர்ததே மம அபி தஸ்மிந் அதி மாத்ர ப்ரீதிஃ பவதி(என்னதுன்ன ஆவியில் -அறிவார் உயிரானாய் -அவன் மதம் தோன்றும்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்திலே பூரிக்கும் )
இதி தத் வியோகம் அஸஹ மாநஃ அஹஂ தஂ மாஂ ப்ராபயாமி? அதஃ ஸத்யம் ஏவ ப்ரதிஜ்ஞாதஂ மாம் ஏவ ஏஷ்யஸி இதி.

(அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் -அறிந்தேன் அவனை நான் -வேத்யம் -இது ஒன்றே உபாயம்
வெறும் அறிவு மட்டும் போதாதே –மனனம் த்யானம் அவிச்சின்ன தைலதாராவத்  நிதித்யாஸனம் மூலமே மானஸ ப்ரத்யக்ஷம் -தர்சன சமானாகாரம் -நினைவின் தொடர்ச்சியே தர்சனம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய இவை எல்லாம் ராக பிராப்தி இடைவிடாமல் சிந்திப்பதே விதி ஸ்ம்ருதி சந்தானம் நினைவு எதில் தொடர்கிறது அதுவே -நினைவின் தொடர்ச்சியே அவனைக் காட்டிக் கொடுக்கிறது மன்ன் உணர் அவை இலன் -மனசாது விசுத்தேனே –அறிய முடியாதவன் என்றே அறியலாம் -நின் புகழின் வைகும் சிந்தை -என்றதே இது நீ அருளும் வைகுந்தத்தை விட இதுவே இனிது -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -புகுந்தத்தின் பின் வணங்கும்  என் சிந்தனைக்கு இனியாய்-மத் பக்த வேட்க்கை மீதூறி -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் -)

(மத் பக்தோ மந்மநா பவ –மத் பக்தோ மத் யாஜீ –மத் பக்தோமாம் நமஸ்குரு.-பக்தியே ஒரே உபாயம் -அன்புடனே அனைத்தும் செய்ய வேண்டும் -பக்தி செய்ய அதே பத பிரயோகம் –இங்கு பக்தி அன்பு அத்வேஷ மாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்)

৷৷18.65৷৷’மந்மநா பவ’ இத்யஸ்யாவ்யவஹிதபலஸாதநதயா குஹ்யதமாங்கிஸ்வரூபபரத்வஂ தர்ஷயிதுஂ
தத்ஸ்வரூபஂ தாவத்ப்ரமாணதஃ ஷிக்ஷயதி’வேதாந்தேஷ்விதி’.’வேதாஹம்’ இத்யாதி
புருஷஸூக்தவாக்யோபாதாநமுபநிஷதந்தராணாஂ ததநுவர்தித்வஜ்ஞாபநார்தம்?’நாந்யஃ பந்தாஃ’
இதி ஹி தத்ஸாத்யோபாயாந்தரவ்யவதாநஷங்காநிராஸார்தம். அத்ர ச’அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதிதஃ புருஷோத்தமஃ’ [15.18]
இதி வக்துஷ்ச வாஸுதேவஸ்ய தத்ப்ரதிபாத்யத்வாத்’மந்மநா பவ’ இதி விஹிதஸ்ய மஹாபுருஷோபாஸநத்வஜ்ஞாபநார்தஂ ச.
வேதநஂ ஹ்யத்ரோக்தம்? ந து பக்திரித்யத்ராஹ — ‘த்யாநோபாஸநாதிஷப்தவாச்யமிதி’.
ஆதிஷப்தேந தத்தத்ஸ்மரித்யுக்தபக்திஸேவாதிஷப்தக்ரஹணம். ஸமாநப்ரகரணஸ்தாப்யாஂ த்யாநோபாஸநஷப்தாப்யாஂ
வேதநஂ ஹி விஷேஷ்யதே. அந்யதா குருலகுவிகல்பாத்யநுபபத்த்யா த்யாநாதிவிதிவையர்த்யப்ரஸங்க இதி பாவஃ.
வித்யுபாஸ்யோர்வ்யதிகரேணோபக்ரமோபஸஂஹாரதர்ஷநாச்ச வேதநமுபாஸநஂ இத்யேவ வ்யக்தமுபபாதிதஂ ஷாரீரகபாஷ்யாதிஷு.

கிஞ்ச “த்ரஷ்டவ்யஃ ஷ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்யஃ” [பரி.உ.2.4.5+4.5.6]
இத்யுக்த்வா தாந்யேவ தர்ஷநாதீந்யநுவதந்தீ ஷ்ருதிஃ விஜ்ஞாநஷப்தேந நிதித்யாஸநமநுவததி —
“ஆத்மநோ வா அரே தர்ஷநேந ஷ்ரவணேந மத்யா விஜ்ஞாநேந” [பரி.உ.2.4.5]
இதி. ஏவஂ “தஸ்மிந் தரிஷ்டே பராவரே” [முஂ.உ.2.2.8]
இதி வாக்யைர்தர்ஷநஂ ந ஸாக்ஷாத்ப்ரத்யக்ஷரூபஂ?,குருலகுவிகல்பாத்யநுபபத்தேரேவ.
ந சாதிகாரிபேதேந தத்ஸம்பவஃ? வ்யவஸ்தாபகாபாவாத். ந ச த்வாரித்வாரபாவகல்பநா ஷக்யா?
த்ருவாநுஸ்மரிதேர்தர்ஷநஸ்ய சாவிஷேஷேணாவ்யவஹிதஸாதநத்வஷ்ருதேஃ.
அத ஐகார்த்யேத்யவஷ்யம்பாவிந்யந்யதரஸ்யௌபசரிகத்வமந்தரேண ததஸம்பவாத்?
நிஷ்ப்ரயோஜநஸ்யோபசாரஸ்யாயோகாத்? ஸ்மரிதிஷப்தேந ச ப்ரத்யக்ஷஸ்யோபசாரேதிஷயாஸித்தேஃ?
விபர்யயே து தர்ஷநஸமாநாகாரத்வலக்ஷணவைஷத்யவிதாநேந ஸப்ரயோஜநத்வாச்ச.

‘ஸ்வப்நதீகம்யம்’ இத்யாத்யுபபரிஂஹணாபிப்ரேதவைஷத்யவிஷிஷ்ட ஸ்மரிதிரேவ “தஸ்மிந் தரிஷ்டே” “நிசாய்ய தஂ” [கடோ.1.3.15]
“த்ரஷ்டவ்யஃ” [பரி.உ.2.4.5+4.5.6] இத்யாதிபிர்விதீயதஂ இத்யபிப்ராயேணாஹ’தர்ஷநஸமாநாகாரமிதி’.’ஸ்மரிதிஸந்தாநமிதி’ —
தேந ஸ்மரிதிஃ ஸந்தந்யதே யத்ரேதி வா ஸ்மரிதேஃ ஸந்தாநோ யத்ரேதி வா வ்யுத்பத்த்யா நபுஂஸகத்வமத்ர ஜ்ஞாதவ்யம்.
ததஷ்சித்தைகாக்ர்யஷப்தார்தஃ. தேந தந்மூலஜ்ஞாநலக்ஷணயா தைலதாராவதவிச்சிந்நத்வஂ ஸூசிதம்.
வேதநஂ வா ஸாமாந்யரூபமத்ராந்யபதார்தஃ. தத்ர’வேதநம்’ இதி பாடே ததேவ விஷேஷ்யம்.
வேதநத்யாநோபாஸநாதி இதி பாடே து ஸ்மரிதிஸந்தாநஸ்ய விஷேஷ்யத்வாத்தஸ்யைவ பக்திரூபத்வாயாஹ —
‘அத்யர்தப்ரியமிதி’. இஹ அவ்யவஹிதமோக்ஷோபாயோபதேஷதஷாயாமித்யர்தஃ. வேதாந்தவிஹிதஸ்யாபி
அர்ஜுநேநாவிதிதத்வாத்தஂ ப்ரதி’மந்மநா பவ’ இதி விதிரேவேத்யாஹ — ‘விதீயத’ இதி.

மத்பக்தஷப்தார்தமாஹ — ‘அத்யர்தமத்ப்ரிய’ இதி. அத்யர்தமஹஂ ப்ரீதிவிஷயபூதோ யஸ்ய ஸோத்ராத்யர்தமத்ப்ரியஃ.’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ [7.17] இதி ஹ்யுக்தம். விதேயஸ்ய கர்தவ்யஸ்ய வைஷிஷ்ட்யாபிப்ராயேண கர்தரி விஷேஷணமித்யாஹ — ‘அத்யர்தமத்ப்ரியத்வேந நிரதிஷயப்ரியாமிதி’.’மத்யாஜீ மாஂ நமஸ்குரு’ இத்யுபாப்யாஂ அங்கிகோடிநிர்தேஷேநாந்தரங்கபரிகரயோக உபலக்ஷ்யத இதி தர்ஷயிதுமாஹ — ‘தத்ராபீதி’. யஜிநாத்ராவிவக்ஷிதஜ்யோதிஷ்டோமாதிப்ரதீதிவ்யுதாஸாய தாதுஷக்திஂ ஸ்மாரயதி — ‘யஜநஂ பூஜநமிதி’. பலிதமாஹ — ‘அத்யர்தப்ரியேதி’. பக்த்யநுப்ரவேஷேந ஸ்வரூபாநுரூபத்வத்யோதநாய? ஸாரதமத்வஸித்த்யை ஸாரார்தக்ராஹகபகவச்சாஸ்த்ராதிசோதிதாஂ ப்ரக்ரியாஂ ஸ்மாரயதி — ‘ஆராதநஂ ஹீதி’. அந்தஃகரணவரித்திவிஷேஷபர்யவஸாநாயாஹ’நமோ நமநமிதி’. ஏதேந ப்ரணிபாதமாத்ரபரத்வவ்யுதாஸஃ. த்ரிவிதா ஹி ப்ரணதிஃ ஷாஸ்த்ரேஷு ஷிஷ்யதே. மத்பக்தபதாநுஷங்கவிஷேஷிதஂ ததபிப்ரேதமாஹ — ‘மயீதி’. ஆத்மாத்மீயஂ ஸர்வஂ பகவத ஏவேத்யநுஸந்தாநாததிமாத்ரப்ரஹ்வீபாவஃ.

‘ஏவஂ வர்தமாந’ இதி — ஏதேநாத்யர்தப்ரியத்வாத்யநுவாதமாத்ரத்வஂ விவக்ஷிதஂ? ந தத்வ்யதிரேகேண ஸ்வாத்மாதாரத்வம்? அவதாரணேநாவ்யவதாநஂ விவக்ஷிதம்.’ஸத்யம்’ இதி ப்ரதிஜ்ஞாவிஷேஷணஂ? ந து ப்ரதிஜ்ஞாதஸ்யோக்திரித்யாஹ — ‘ஏததிதி’.’வாஸ்தோஷ்பதே ப்ரதிஜாநீஹ்யஸ்மாந்’ [றக்ஸஂ.5.4.21.1] இத்யாதிஷ்விவோபஸர்கஸ்ய கத்யபாவவிஷயமவிவக்ஷிதார்தத்வஂ நிராகரோதி — ‘ப்ரதிஜ்ஞாஂ கரோமீதி’.’த்யௌஃ பதேத்பரிதிவீ ஷீர்யேத்திமவாஞ்சகலீபவேத். ஷுஷ்யேத்தோயநிதிஃ கரிஷ்ணே! ந மே மோகஂ வசோ பவேத்’ இத்யாதிபகவத்வாக்யாநுஸாரேணாபிப்ரேதமாஹ’நோபச்சந்தநமாத்ரமிதி’. அத்ர ப்ரியவசநேந ப்ரரோசநரூபார்தவாதத்வஂ த்வயா ந ஷங்கநீயமித்யர்தஃ. ஏவஂ வர்தமாநஸ்ய ஸ்வப்ராப்தௌ ஸ்வப்ரீதிலக்ஷணத்வாரமுபக்ஷிப்யோபச்சந்தநஷங்காபாக்ரியதே’ப்ரியோஸி மே’ இத்யநேநேத்யாஹ — ‘யதஸ்த்வமிதி’. ஸாத்யமபி ஜ்ஞாநித்வஂ ஸித்தவத்கரித்வா’ப்ரியோஸி’ இதி தத்பலோக்திரித்யபிப்ராயேண’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தம்’ [7.17] இதி ஸாமாந்யேந ப்ராகுக்தப்ரயோஜகக்ரஹணம். ஏதேந பூயஷ்ஷப்தஸ்யோக்தார்தபரத்வஂ தர்ஷிதம். உக்தாஸம்பவஷங்காபரிஹாராய லோகதரிஷ்டமீஷ்வராபிப்ராயஂ சாநுஸரித்யோபாத்தவசநார்தமாஹ — ‘யஸ்யேதி’. தத்பலிதமாஹ — ‘இதி தத்வியோகமிதி’. ஹேதுவாக்யார்தஂ ஸாத்யேந ஸங்கமயதி — ‘அதஃ ஸத்யமிதி’.’ப்ரதிஜ்ஞாதமிதி’ பாவே நிஷ்டா.

———————

பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :

66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம்.
அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை;
ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல.
சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி.
ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது.
தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது.
அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல்.
கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.

பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை.
ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள் படுத்துவதில்லை.
தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.

அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!

பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள்
தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால்
ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும்
அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது.
தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.

இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம்.
எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள்.
அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா.
சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான்.
பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை.
ஞானியடையும் சரணாகதி இதுவே.

யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது.
சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.

சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை
அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை.
எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது
ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டு
வந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும்
மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது.
அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.

தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம்.
நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது.
நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால்
அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது.
ஸ்வ தர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்து போனால்
எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.

தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது.
ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை
நீக்கி விட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து
ஜீவ போதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம்.
பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம்.
ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை.
சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.

கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன்
கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட
சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான்.
இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து,
அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும்.
பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.

பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு
தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.

৷৷18.66৷৷கர்ம யோக ஜ்ஞாந யோக பக்தி யோக ரூபாந் ஸர்வாந் தர்மாந் பரம நிஃஷ்ரேயஸ ஸாதந பூதாந் மத் ஆராதநத்வேந அதி மாத்ர ப்ரீத்யா யதாதிகாரஂ(யானை இடம் காட்டும் பெருமை- இளவரசன் இடம் காட்டும் மதிப்புடன் பயம் -கைக் குழந்தை இடம் காட்டும் பிரியத்துடன் செய்ய வேண்டும் -அதி மாத்ர ப்ரீதி -யதா அதிகாரம் -வர்ணாஸ்ரம அதிகாரம் படி )குர்வாண ஏவ உக்த ரீத்யா பல கர்ம கர்தரித்வாதி (ஆதி -தேவதாந்த்ர பஜனத்தையும் விட்டு )பரித்யாகேந பரித்யஜ்ய (மோக்ஷ அனுபவத்திலும் ஸ்வார்த்ததா கந்த லேஸமும் இல்லாமல் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -)மாம் ஏகம் ஏவ கர்தாரம் ஆராத்யஂ ப்ராப்யம் உபாயஂ ச அநுஸஂதத்ஸ்வ.(இங்கு நினைப்பாய் உறுதி கொள்வாய் அடுத்த நிர்வாஹம் -என்னை மட்டுமே கர்த்தாவாகவும் அந்தர்யாமியாக நின்று அனுமதிக்கிறேன் என்ற எண்ணத்துடன் ஆராதனம் கொள்பவனும் ப்ராப்ய பிராபகமுமாய் அனுசந்திப்பாய் )ஏஷ ஏவ ஸர்வ தர்மாணாஂ ஷாஸ்த்ரீய பரித்யாகஃ–இதி’நிஷ்சயஂ ஷ்ரரிணு– மே தத்ர த்யாகே பரத ஸத்தம. த்யாகோ ஹி புருஷ வ்யாக்ர த்ரிவிதஃ ஸஂப்ரகீர்திதஃ৷৷’ (கீதா 18.4) இத்யாரப்ய’ஸங்கஂ த்யக்த்வா பலஂ சைவ ஸ த்யாகஃ ஸாத்த்விகோ மதஃ.’ (கீதா 18.9)’ந ஹி தேஹ பரிதா ஷக்யஂ த்யக்துஂ கர்மாண்ய ஷேஷதஃ. யஸ்து கர்ம பல த்யாகீ ஸ த்யாகீத் யபிதீயதே৷৷’ (கீதா 18.11) இதி அத்யா யாதௌ ஸுதரிடம் உபபாதிதம்.(இங்கு உள்ள சாஸ்த்ர முறைப்படி விடுவதையே -பரிதிஜ்ய-பத அர்த்தம் வருவே முதல் ஸ்லோகத்தில் இருந்து விரிவாக அருளிச் செய்தான் அன்றோ )–அஹஂ த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி ஏவஂ வர்தமாநஂ த்வாஂ மத் ப்ராப்தி விரோதிப்யஃ அநாதி கால ஸஂசித அநந்த அகரித்ய கரண கரித்ய அகரண ரூபேப்யஃ ஸர்வேப்யஃ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மா ஷுசஃ ஷோகஂ மா கரிதாஃ.-

(பிராரப்த கர்மாக்களை அனுபவித்தே தீர்த்து -உபாசன பலமாக சஞ்சித கர்மாக்களை ப்ரஹ்மம் தீர்த்து ப்ராப்தியின் பொழுது
புண்ய பலன் இவனுக்கு அனுகூலரானவர்கள் இடமும் பாப பலன் பிரதிகூலர்கள் இடம் சேர்க்கிறான் -உப நிஷத் சொல்லும் –

அநந்த அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான அநாதி கால சஞ்சித கர்மங்களையே இங்கு சொல்கிறான் -பிராரப்த கர்மங்களை சொல்ல வில்லை என்றே பாஷ்யம்-சொன்ன பின்பு இந்த அர்த்தம் ஸ்வா ரஸ்யம் இல்லை என்று அடுத்து ஸ்வாமி அருளிச் செய்கிறார்

சாதனம் தர்மம் என்றே உபநிஷத் சொல்ல பலத்தையும் எவ்வாறு கொள்ளலாம் -லக்ஷணையால் இத்தால் த்ரிவித தியாகம் சொன்னால் கர்ம ஸ்வரூபம் சொன்னது ஆகாதே -ஆகவே அஸ்வாரஸ்யம்
கீழேயே த்ரிவித த்யாகங்களுடன் கர்மயோகம் செய்வதை பரக்க அருளிச் செய்து பக்தி யோகத்தை விதித்த பின்பு இது ஒவ்வாதே
சோகம் இன்று வருவதாலும் ஸஞ்சித கர்மங்கள் பற்றி சோகப்படுவது இங்கு ஒவ்வாது அன்றோ –
ஸாஸ்த்ர சாரமான பக்தி பற்றி முன்பே சொல்லிய பின்பு கீழ் சொன்னவை மீண்டும் சொல்லக் கூடாதே –
2-12 தொடங்கி இது வரை பக்தி யோகம் சொல்கிறேன் என்றே கீழே சொன்னானே -ஆகவே இந்த ஸ்லோகமும் பக்தி யோகம் பற்றியே இருக்க வேண்டும் –

இவனுக்கு வருத்தம் பக்தி ஆரம்ப விரோதியையும் -பிராயச்சித்தம் பற்றிய பயமும் -பல விளம்பம் பற்றியே -கீழ் உபாயம் பலம் இரண்டும் காட்டினான் அன்றோ – )

அதவா (அன்றிக்கே) ஸர்வ பாப விநிர் முக்த அத்யர்த பகவத் ப்ரிய புருஷ நிர்வர்த்யத்வாத் பக்தி யோகஸ்ய ததாரம்ப விரோதி பாபாநாம் அநந்த்யாத்– ச தத் ப்ராயஷ்சித்த ரூபைஃ தர்மைஃ அபரிமித கால கரிதைஃ தேஷாஂ துஸ் தரதயா ஆத்மநோ பக்தி யோக  ஆரம்ப அநர்ஹதாம் ஆலோச்ய ஷோசதஃ அர்ஜுநஸ்ய ஷோகம் அபநுதந் ஷ்ரீபகவாந் உவாச — ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகஂ ஷரணஂ வ்ரஜ இதி.–(பிராயச்சித்த ரூபமான அனைத்து தர்மங்களையும் விட்டு என்றே இப்பொழுது கொள்ளலாமே )பக்தி யோகாரம்ப விரோத் யநாதி கால ஸஂசித நாநா வித அநந்த பாப அநுகுணாந் தத் ப்ராயாஷ் சித்த ரூபாந் கரிச்ச்ர சாந்த்ராயண கூஷ்மாண்ட வைஷ்வாநர ப்ராஜாபத்ய வ்ராதபதி பவித்ர இஷ்டி த்ரிவரித அக்நிஷ்டோமாதிகாந் (10 சொல்லி ஆதி என்று அநேகம் உண்டே )நாநா வித நந்தாந் த்வயா பரிமித கால வர்திநா துரநுஷ்டாந் -ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய –பக்தி யோகாரம்ப ஸித்தயே மாம் ஏகஂ -பரம காருணிகம் அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யம் ஆஷ்ரித வாத்ஸல்ய ஜலதிஂ ஷரணஂ ப்ரபத்யஸ்வ. –அஹஂ த்வா ஸர்வ பாபேப்யோ யதோதித ஸ்வரூப பக்த்யாரம்ப விரோதிப்யஃ ஸர்வேப்யஃ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி? மா ஷுசஃ.

(ஸாஸ்த்ர விதி மீறக்கூடாதே -முக்ய கல்பம் அமுக்கிய கல்பம் பல உண்டே -ஹரண்ய ஸ்ரார்த்தம் போல் ஒன்றுமே
முடியா விட்டால் -கையை மேலே தூக்கி பித்ருக்களை நினைத்து கதறினால் அதே பலன் கிட்டும் விதி விலக்குகள் உண்டே –
முடிந்தவன் இந்த வழிக்கு போகக் கூடாதே -சரணமாக இங்கு இவற்றைப் போக்க -வ்ரஜ -உறுதி கொள்வாய் -தர்மம் எல்லாம் கண்ணனே உறுதி கொள்ள வேண்டும் -அங்கு அனுசந்தானம் தானே

நித்ய நைமித்திக -கர்மங்களை விடக்கூடாதே -இவற்றை விட்டால் பாபங்கள் முன்பே சொல்லிற்றே –
பிராயச்சித்த கர்மங்களை செய்ய சக்தி உள்ளவனுக்கு விதிக்க வேண்டாம் -இல்லாதவனுக்கு விதிக்க வேண்டாமே -தன்னடையே போகுமே என்கிற ஆஷேபம்
விட்ட படை போல் விடும் -ஞானசாரம் -28-பாசுரம் -மற்ற ஒன்றைப் பற்றினால் அரண் ஆகாதே -இவன் முடிந்த
சிலவற்றையும் செய்யக்கூடாதே அதுக்கு விதிக்க வேண்டுமே
சக்தனுக்கும் கொஞ்ச நாள் கழித்து முடியாது என்று உணர்வான் -அவனுக்கும் உபதேசம் வேண்டுமே)

(இங்கு அங்கப் பிரபத்தி -ரஹஸ்ய த்ரயத்தில் அவ்வாறு இல்லையே என்னில்
எவன் ஒருவன் அடைய விரும்பும் பலனுக்கு சாதனம் தன்னிடம் இல்லாமல் வருந்தி என்னை அடைந்தவனுக்கு நானே அந்தப்பலனை அளிக்கிறேன்
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பக்தி யோகம் விதிக்கும் ஸாஸ்த்ரம் பொய்யாகாக் கூடாதே -வீணாகக் கூடாதே -என்றவாறு

இதுக்கும் ஆஷேபம் -சக்தனுக்கு முன்பு எவ்வாறு சரணாகதியைப் பற்றி சொல்வான் என்னில் -இரண்டும்சொல்லி ஏதாவது ஒன்றை தேர்ந்து எடுத்துக் கொள் என்றானே -அது எதற்கு என்ற கேள்வி
சக்தி இருந்த பிராட்டி –சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு –சக்தி இல்லாத திரௌபதி -இருவருமே சரணாகதி செய்தார்களே பிராப்தி இல்லை என்று அறிந்தவனுக்கு -அத்யந்த பாரதந்தர்யம் இருந்தவனுக்கு சக்தி இருந்தாலும் பிரபத்தி மார்க்கம் தானே -அதுவும் அவனது இன்னருளே -க்ருஷிகன் -ஆக சக்தன் அசக்தன் என்று பார்க்காமல் ஸ்வா தந்த்ர லேசம் உள்ளவனா இல்லையா என்றே கொண்டு இரண்டும் என்றவாறு -சர்வருக்கும் இங்கு அந்தரங்கர்களுக்கு அங்கு என்றவாறு )

(இனி மூன்றாம் நிர்வாஹம் -இங்கேயும் ஸ்வ தந்த்ர பிரபத்தி தான் –
அர்ஜுனன் பிரவிருத்தி பரன் -பிறப்பால் ராஜஸ குணம் -ஸ்வ தந்திரம் கொண்டவன் -ஆகவே பக்தி யோகம் 65 விதித்தான்
நிவ்ருத்தியில் ஆசை இல்லாமல் இருந்தான் –
எல்லாம் கண்ணன் என்று இருந்த எனக்கு இரண்டும் வித்தித்து இவன் எதற்கு ஸ்வா தந்தர்யம் தலையில் ஏற்றுகிறான்
இவனை சோதிக்கவே பக்தியை விதித்தான் –
இங்கும் பொறுப்பு தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்
திருத்திப் பணி கொள்ள பிரார்த்திப்பவன் ஸாதி மாம் ப்ரபன்னன் என்றானே
ஆகவே ஸ்வ தந்த்ர ப்ரபத்தியையே விதிக்கிறான் இங்கும் –
ஸ்வாமி வியாக்யானம் இது இல்லையே -என்ற கேள்வி வருமே –
ஆச்சார்யர் திருக்கோஷ்ட்டியூர்-நம்பி வார்த்தையை அதி லங்கனம் பண்ண மாட்டாமையால் –
இவ்வளவும் வாராதவனுக்கு -பக்குவம் இல்லாதவனுக்கு பறிப்பான் கையில் சிற்று அரிவாள் கொடுப்பது போல் ஆகுமே
ஆகவே அர்த்தத்தை மறைத்தே அருளினார் ஸ்வாமி
உறாமையோடே உற்றேன் பிறந்து உயர்ந்தே -சாதிமாம் ப்ரபந்ந -சொன்ன உடனே முதலிலே சொல்லாமல்
புறம்பு சொன்னது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கவே -பயம் வர வேண்டுமே -பேணிப் போஷித்து அளிக்க வேண்டுமே)

(இந்த நிர்வாகத்தில் உபாயாந்தரங்களை விட்டு -மோக்ஷ உபாயங்கள் பல -ஒவ்வொன்றிலும் அங்கங்கள் பல -ஆகவே ஸர்வ தர்மான்
என்னை அனைத்து கர்மங்களையும் போக்க உபாயமாகப் பற்றி -அதே பிறவியில் முக்தி இவனுக்கு -பிராரப்த கர்மாக்களை தேக அவசானத்திலே போக்குவான்
பரித்யஜ்ய -வெட்க்கி வாசனை ருசிகளை விட்டு –உபாயம் என்ற எண்ணங்களை விட்டு தர்மங்களை செய்ய வேணும் என்னில்
இங்கும் ஆஷேபம் -தர்ம சப்தத்துக்கு உபாய புத்தி என்று கொள்ளும் கொத்தை வருமே
இரண்டு பிரிவுகள் கர்ம ஞான பக்தி யோகங்களாக பிரித்து -ஒன்றை விட்டு ஒன்றைக் கொள்ள வேண்டும் –
கொலை பண்ணி -நாட்டு விரோதிகளை செய்தால் பதக்கம் -சேவை தானே -சுய நன்மைக்காகச் செய்தால் கொலை தானே -விநியோக ப்ருதக் நியாயம்
இதே போல் கைங்கர்ய ரூபமாகச் செய்தால் அவை உபா தேயம்
உபாயம் ரூபமாகச் செய்தால் த்யாஜ்யம் -கர்ம ஸ்வரூப த்யாஜ்யம் -என்றவாறு)

(விட்டே பற்ற வேணும் -விட்டு இருந்தால் பற்ற வேண்டும் என்பது இல்லை-தர்மான் பரித்யஜ்ய என்றால் அதர்மம் கை புகாதே –
தன் – ஸ்வரூபம் அவன் ஸ்வரூபம் -பல ஸ்வரூபம் பார்த்தாலே இது சித்தம் அன்றோ -ஸாஷாத் தர்மம் இவனே –
மாம் -ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்களை -எளியனான அடியேனை என்று –
அஹம் -என்கிறான் -ஆஸ்ரியன் கார்ய ஸித்தி ஆபாத குணங்கள் -ஏகம் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -காம்பற தலை சிரைக்க வேண்டுமே –வ்ரஜ -கத்யார்த்தா புத்யர்த்தா உறுதி கொள்ளுதல் -மூன்று விதிகள் இதில் விடுவதும் -பற்றுவதும் -சோகப்பாடாமல் இருப்பதும் -இதுவும் விதியே -)

(க்ஷுத்ரஸ்கலிதேஷ்வதூர விப்ரகரிஷ்ட யோஜநாபேதேஷு சோதாஸி தவ்யமித்யலமதி ப்ரஸங்கேந.பிஷாச-ரந்திதேவ-குப்த-ஷங்கர-யாதவ ப்ரகாஷ-பாஸ்கர-நாராயணார்ய யஜ்ஞஸ்வாமி-ப்ரபரிதிபிஃ ஸ்வஂ ஸ்வஂ மதமம் ஆஸ்திதைஃ பரஷ்ஷதைர் பாஷ்யகரித்பிஃ அஸ்மத் ஸித்தாந்த தீர்தகரைஷ்ச பகவத் யாமுநாசார்ய பாஷ்யகார அதிபிரவிகீத பரிகரிஹீதோயமத்ர ஸாரார்தஃ — “பகவாநேவ பரஂ தத்த்வம்? அநந்ய ஷரணைர்யதாதிகாரஂ ததேகாஷ்ரயணஂ பரம தர்மஃ” இதி.)

(ஷமிஸ்யாமி –சஞ்சித கர்மாக்களை க்ஷமிக்க போகிறேன் சங்கல்பிக்க -பிராகிருத கர்மங்கள் முடிந்து -சரீர அவசான காலத்தில் ஷாந்தம் என்கிற சங்கல்பம் -ஷமித்து விட்டேன்
இப்போது தான் சஞ்சித கர்மங்களைக் கழித்து அனுகூலர் பிரதிகூலர்களுக்கு கொடுக்க -நடுவில் பல பிறவிகள் உண்டே –
முதல் சங்கல்பம் முடிந்த பின்பு பாப பலன்கள் கிட்டாதே -புண்ய பலன்கள் தேவை இருப்பதால் வந்து கொண்டே இருக்கும் -அப்பொழுது தானே உபாசனம் தொடரும் –
அந்த புண்ய பலன்களை இறுதியில் விலக்குகிறான் -அவையும் பொன் விலங்கு)

(அதிகரணம் -157-ததிகமாதிகரணம் – 4-1-7-

490-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —4-1-13-

அதிகரணம் -158-இதராதிகரணம்–4-1-8-

491-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —4-1-14-

புண்ய பலன்கள் மழை உணவு போன்றவை
உபாசனம் முழுவதும் இயற்ற வேண்டுமே-அழிவு பற்றி கூறலாமோ என்ன

பாதே து – சரீரம் விழும் நேரத்தில் அந்த புண்ய பலன்கள் அழிகின்றன –
ப்ரஹ்ம ப்ராப்திக்கு தடையாக உள்ளதால் –

அதிகரணம் -159-அநாரப்த கார்யாதிகரணம் -4-1-9-

492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-

இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –

ஆர்த்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான பிராரப்த கர்மாக்களை உடனே முடிக்கிறார் -திருப்த ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்தில் முடிக்கிறார் -)

৷৷18.66৷৷ஏவஂ விஸ்தரேண ஸங்க்ரஹேண சோக்தாநாஂ கர்மயோகாதீநாஂ த்ரயாணாஂ ஸாதாரணஂ ஸாரதமாநுஸந்தாநவிஷேஷமுத்தரித்ய தத ஏவ’மாமேவைஷ்யஸி’ [18.65] இத்யுக்தேஷ்டப்ராப்தேஃ ப்ரதிபந்தகீபூதாநிஷ்டாநாஂ நிவரித்திருச்யதே — ‘ஸர்வதர்மாந்’ இதி ஷ்லோகேந. ததாஹ — ‘கர்மயோகேத்யாதிநா’. ஸர்வஷப்தேந ப்ரகரிதத்ரிகமவிஷேஷாத்கரிஹ்யதே. கர்மயோகாதீநாஂ தரிதிஸாதநத்வலக்ஷணதர்மஷப்தவாச்யத்வமாஹ — ‘பரமநிஷ்ஷ்ரேயஸஸாதநபூதாநிதி’. யதாயோகஂ பரம்பரயா ஸாக்ஷாச்சேதி ஷேஷஃ. தத்ஸாதகத்வப்ரயோஜகமாஹ — ‘மதாராதநத்வேநேதி’. த்ரிவர்கவைமுக்யஹேதுமாஹ — ‘அதிமாத்ரப்ரீத்யேதி’.’யதேச்சஸி ததா குரு’ [18.63] இதி பூர்வோக்தோபஜீவநேநாஹ — ‘யதாதிகாரஂ குர்வாண’ இதி. க்ரமாத்ஸர்வஂ ஹ்யஸ்யாநுஷ்டேயஂ ஸ்யாதிதி ச பாவஃ.’குர்வாண ஏவேத்யநேந’ ஸ்வரூபத்யாகாதிபக்ஷாஸ்தாமஸத்வாதிபிர்நிந்திதா இதி ஸ்மாரிதம். பரித்யாகஷப்தவிவக்ஷிதமாஹ — ‘உக்தரீத்யேதி’. அத்யாயாரம்பவிஷோதிதப்ரகாரேணேத்யர்தஃ.’பலகர்மகர்தரித்வாதிபரித்யாகேநேதி’ கர்மத்யாகஃ ஸ்வகீயதாபிமாநத்யாகஃ. பக்தியோகேபி ஐஷ்வர்யாதிபலாந்தரஂ த்யாஜ்யமேவ; மோக்ஷாக்யபலஸ்யாபி ஹி ஸர்வஷேஷிபகவச்சேஷத்வதியா ஸ்வஷேஷதாதீஃ பரிஹார்யா. ஆதிஷப்தேந கஞ்சுகபூதேந்த்ராதீநாமாராத்யத்வாபிமாநஃ ஸஂகரிஹீதஃ. கர்மணி கர்தரித்வஂ ஸ்வகீயதாபுத்திராதிஷப்தேந ஸஂகரிஹ்யதே.’பரித்யாகேந பரித்யஜ்யேதி’ விஷேஷேண ஸாமாந்யாவச்சேதஃ. அந்யத்ர ஸ்வாத்மநி கர்தரித்வஂ? ததோந்யஸ்மிந்நிந்த்ராதாவுபாஸ்யத்வஂ? ததுபயாந்யஸ்மிந் ஸ்வர்காதௌ ப்ராப்யத்வஂ? தேப்யோ வ்யதிரிக்தே கர்மணி உபாயத்வஂ சாபிமத்ய ஹ்யநதீதவேதாந்தாஃ ப்ரவர்தந்தே; ந ததா த்வயாநுஸந்தேயம்; ஏதத்ஸர்வமேகஸ்மிந்மய்யநுஸந்தத்ஸ்வேதி’மாமேகஂ ஷரணஂ வ்ரஜ’ இத்யஸ்யாபிப்ராயஃ; ததாஹ — ‘மாமேகமேவேத்யாதிநா’. அத்ர கர்தரித்வாதிஷு சதுர்ஷு ப்ரத்யேகஂ ஸமுதாயதஃ ஏகோபாதிநா ஷரணஷப்தவாச்யத்வாஸம்பவாத்கர்தரித்வாதிகஂ’மாமேகம்’ இத்யநேநாபிப்ரேதமநூதிதம்.’உபாயம்’ இதி து ஷரணஷப்தார்தோக்திஃ.’கர்தாரஂ’ கர்துஃ ப்ரயோஜகதயாந்தர்யாமித்வேந? அநுமந்தரிதயா ச அவஸ்திதமித்யர்தஃ. ததநுஸந்தாநாத்ஸ்வகர்தரித்வாபிமாநத்யாகஃ. கர்மணாஂ தேவதாந்தரஷேஷத்வஸ்வஷேஷத்வதீத்யாகார்தமாஹ — ‘ஆராத்யமிதி’.’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாஂ போக்தா ச’ [9.24]’ஸ்வகர்மணா தமப்யர்ச்ய’ [18.46] இத்யாதிகஂ ஹ்யுக்தம்.’ப்ராப்யம்’ ஸாக்ஷாத்பரம்பரயா சேதி ஷேஷஃ. தே ஸ்வர்காதிபலத்யாகஃ. த்ரிவிதத்யாகார்தமநூதிதமாகாரத்ரயமுக்தம்; அத்ர ஷரணஷப்தேந விதித்ஸிதமாஹ — ‘உபாயமிதி’. ஸ ஹி ஸர்வேஷு ஷாஸ்த்ரேஷு ப்ரீதஃ பலஂ ததாதீதி ப்ராகேவ நிர்ணீதம். ஸ்வஸாத்யநஷ்வரயஜ்ஞோபாஸநதாத்வர்தேஷு காலாந்தரபாவிபலஸாதநத்வபுத்திஂ பரித்யஜ்ய ஸித்தே ஸ்தாயிநி ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்பத்வமஹோதாரத்வாதிகுணஷாலிநி ஸகலஷாஸ்த்ரார்தஸமாராத்யே பலப்ரதத்வமநுஸந்தத்ஸ்வேதி ஸ்வரூபத்யாகாதிபக்ஷே ப்ரகரணவைகட்யமாஹ — ‘ஏஷ ஏவேதி’.’ஸுதரிடமுபபாதிதமிதி’ — அயமபிப்ராயஃ — ஏதச்ச்லோகாபாதப்ரதீத்யா கூடயுக்திபிஷ்ச யதா வர்ணாஷ்ரமதர்மஸ்வரூபத்யாகாதிபக்ஷோ நோதேதி? ததோபபாதிதம் — இதி.

‘அஹம்’ உக்தப்ரகாரேணாராதிதஃ பலப்ரதாநௌபயிகஸார்வஜ்ஞஸர்வஷக்தித்வபரமகாருணிகத்வாதிகுணகணவிஷிஷ்ட இதி பாவஃ. அநுஷ்டிதோபாயாவஸ்தாவிஷேஷவிஷயோத்ர’த்வா’ இதி நிர்தேஷ இத்யாஹ — ‘ஏவஂ வர்தமாநமிதி’. அவ்யவஹிதோபாயஸ்யாபி ஸர்வதர்மஷப்தேநோபாதாநாத்’மாமேவைஷ்யஸி’ [18.65] இத்யநந்தரோக்தத்வாச்ச’மத்ப்ராப்திவிரோதிப்ய’ இத்யுக்தம். அத்ர ப்ரதிபந்தநிவரித்திரேவோபாயஸாத்யா? பகவத்ப்ராப்திஸ்து ஸ்வரூபாவிர்பாவலக்ஷணா ஸ்வத ஏவ ஸ்யாதித்யபிப்ராயஃ. அத்ர ஸர்வஷப்தவிவக்ஷிதமாஹ’அநாதிகாலேத்யாதிநா’. நநு த்ரிஷ்வபி யோகேஷு நிகதிதேஷு ஸர்வகுஹ்யதமே ச ஷாஸ்த்ரஸாரார்தே புநர்விவிச்ய ப்ரதர்ஷிதே ததோப்யுபரி த்ரயாணாஂ ஸாதாரணாநுஸந்தாநஸ்ய ப்ராக்ப்ரபஞ்சிதஸ்யைவாத்ர புநஃ ப்ரதிபாதநே கிஂ ப்ரயோஜநஂ நசாயமர்தாந்தரபரஃ ஷ்லோகஃ? அப்ரதீதேஃ? ஸங்க்ரஹாதிஷு ததாநுக்தேஷ்ச. ஷாஸ்த்ராதாவப்யுக்தம். பாஷ்யேபி — ‘தமுவாச’ [2.10] இதிஷ்லோகே பரமாத்மயாதாத்ம்யதத்ப்ராப்த்யுபாயபூதகர்மயோகஜ்ஞாநயோகபக்தியோககோசரஂ’நத்வேவாஹஂ ஜாது நாஸம்’ [2.12] இத்யாரப்ய’அஹஂ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஃ’ இத்யேததந்தஂ வச உவாசேத்யர்தஃ — இதி. அபிசாத்ர’மா ஷுசஃ’ இத்யேதந்ந ப்ரதமோத்பந்நாஸ்தாநஸ்நேஹாதிமூலஷோகப்ரதிக்ஷேபார்தஂ? தஸ்ய பூர்வமேவ நிஷ்ஷேஷக்ஷாலிதத்வாத்; அதோ யதா’மா ஷுசஃ ஸம்பதஂ தைவீமபிஜாதோஸி’ [5.16] இத்யத்ராவ்யவஹிதப்ரஸ்துதோபாதிகஷோகாபநோதநார்தத்வஂ? ததாத்ராபீதி யுக்தம். ந து ஸூக்ஷ்மதியஃ க்ஷத்ித்ரயஸ்ய தார்மிகாக்ரேஸரஸ்யார்ஜுநஸ்ய ஸர்வஜ்ஞப்ரதர்ஷிதேஷூபாயேஷ்வஜ்ஞாநாதநர்ஹத்வாத்ப்ரதாநாஂஷாநிஷ்சயாத்வா ஷோகோயம். பலஸஂஷயோபி’மாமேவைஷ்யஸி’ இத்யாதிநா நிஷ்ஷேஷநிர்மூலிதஃ.

அதஃ பரிஷேஷாத்தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயோபாயதௌஷ்கர்யாத் பலவிலம்பாத்வா ஷோகோயஂ ஸம்பவேதிதி ததாவிதஷோகப்ரஷமநபரேணாநேந ஷ்லோகேந பவிதவ்யமித்யுக்தார்தாந்தராருசேருசிதஂ ஸ்வாரஸிகத்யாகஷப்தார்தமர்தாந்தரமாஹ — ‘அதவேதி’. அத்ர’ஸர்வபாபவிநிர்முக்தேத்யுபாயவிரோதிஸர்வவிஷயம்’. பாபநிர்மோக்ஷாதத்யர்தபகவத்ப்ரியத்வம்.’நராணாஂ க்ஷீணபாபாநாஂ கரிஷ்ணே பக்திஃ ப்ரஜாயதே’ [பாஂ.கீ.40] இதி ஹ்யுச்யதே.’விக்நாயுதேந கோவிந்தே நரிணாஂ பக்திர்நிவார்யதே’ இத்யாத்யநுஸந்தாநேநாஹ — ‘ததாரம்பவிரோதிபாபாநாமாநந்த்யாதிதி’.’ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ [பாஂ.கீ.40] இத்யாத்யநுஸாரேண’பரிமிதகாலகரிதைரிதி’ பாடே விலம்பாக்ஷமத்வஂ ஸூசிதம்.’அபரிமிதகாலகரிதைரிதி’ பாடே து அபிஷப்தோத்யாஹர்தவ்யஃ. தேநோபாயஸ்ய துஸ்ஸம்பாதத்வவ்யஞ்ஜநம்.’ஷோகமபநுதந்நிதி’ ஷோகாபநோதநாயேத்யர்தஃ.’மந்மநா பவ மத்பக்தஃ’ [18.65] இதி பூர்வஷ்லோகே பக்தியோகஸ்ய ப்ரகரிதத்வாத்ததாரம்பவிரோதித்வேந ஷோகநிமித்தபாபவிஷயோத்ர ஸர்வபாபஷப்தஃ. தத்தந்நிராகரணாயோக்ததர்மவர்கவிஷயஃ ஸர்வதர்மஷப்தஃ யஸ்யைதத்ஸங்க்ரஹஷாஸநஂ “தர்மேண பாபமபநுததி” [மஹாநா.17.6] இதி. பஹுவசநேந ஸர்வஷப்தேந ச வைவித்யமாநந்த்யஂ ச பாபேஷு தர்மேஷு ச வ்யஜ்யதே.

ததிதமாஹ — ‘பக்தியோகாரம்பவிரோதீத்யாதிநா’.’கரிச்ச்ரசாந்த்ராயணேத்யாதிநா’ ஸம்ப்ரதிபந்நபாபநிர்பஹணோதாஹரணம். அக்நிஷ்டோமாதயோபி விநியோகபரிதக்த்வேந அநேகபலஸாதகா இதி ப்ராகேவோக்தம். ஆதிஷப்தேந கர்மயோகாவாந்தரபேததயா’தைவமேவாபரே யஜ்ஞம்’ [4.25] இத்யாதிபிஃ ப்ராக்ப்ரபஞ்சிதாநாமநுக்தாநாஂ ச க்ரஹணம். ஏவஂ ஜ்ஞாநயோகோப்யாதிஷப்தேந ஸங்கரிஹீதஃ? தஸ்யாபி பக்தியோகாரம்பவிரோதிபாபநிபர்ஹணத்வேந ப்ராகேவ ப்ரபஞ்சநாத்.’பரிமிதகாலவர்திநேத்யேகஷரீராபிப்ராயஃ. அதிதுஷ்கராநுஷ்டாநமூலாநேகஜந்மஸஂஸித்தி ஸாத்யத்வநிஷ்சயாதேவ ஹ்யஸ்ய ஷோகஃ.’ஸர்வதர்மாந்பரித்யஜ்ய’ இதி ஸ்வரூபத்யாக ஏவாஸ்யாஂ யோஜநாயாம். ந ச தாவதா நித்யநைமித்திகலோபபப்ரஸங்கஃ? துரநுஷ்டாநப்ராயஷ்சித்தாதிவிஷயத்வோக்தேஃ. துல்யந்யாயதயா து நித்யநைமித்திகேஷ்வபி யாநி துரநுஷ்டாநாநி? தத்ரைவஂ ஸ்யாத்? ஷக்தமதிகரித்யைவ ஷாஸ்த்ரப்ரவரித்தேஃ? அஷக்தஸ்யாகரணே தோஷாபாவாத் அநுகல்பமாத்ரஷக்தௌ ச தஸ்யைவாநுஷ்டேயத்வாத்? இஹ ச முக்யாஷக்தஸ்ய ஸர்வப்ரகாரமுக்யாநுகல்பதயா ஏகஸ்யைவ பகவத்ப்ரபதநஸ்ய விதாநாச்சக்தாஷக்தாதிகாரிபேதாச்ச முக்யாநுகல்பயோஃ ஸர்வத்ர பலாவிஷேஷோபபத்தேஃ. அத ஏவ குருலகுவிகல்பாநுபபத்திப்ரஸங்காபாவஃ; யதா’ப்ரணவஂ வா த்ரிரப்யஸேத்ஸ்மரேத்வா விஷ்ணுமவ்யயம்’ இதி. யதா ச’மாந்த்ரஂ பௌமஂ ததாக்நேயஂ வாயவ்யஂ திவ்யமேவ ச. வாருணஂ மாநஸஂ சேதி ஸ்நாநஂ ஸப்தவிதஂ ஸ்மரிதம்’ இதி விஷ்ணுசிந்தநமேவாவகாஹநாதிஷ்வஸமர்தஸ்யாபி தத்பலஸாதகதயா விதீயதே? ததேஹாபீதி ந கஷ்சித்தோஷ இதி. அத்ர துஷ்கரதயா சிரகாலஸாத்யதயா சால்பஷக்திநா பரிமிதகாலவர்திநா ச துரநுஷ்டாநாநாஂ தர்மாணாமர்தஸித்த ஏவ த்யாகோ பகவதேகோபாயதாவரணவிதேருபகாரித்வேந விதிச்சாயயாநூத்யதே; யதா நிதித்யாஸநோபகாரிதயா ராகப்ராப்தே ஷ்ரவணமநநே “ஷ்ரோதவ்யோ மந்தவ்யஃ” [பரி.உ.2.4.5+4.5.6] இதி. ததேகோபாயதாவரணவிதாநஂ ச ததந்யோபாயபரித்யாகவிஷிஷ்டவிஷயம்; தேந தத்பலஸாதநத்வேந சோதிதாநாமந்யதேவதாவிஷயாணாஂ பகவதி ச தர்மாந்தராணாஂ த்யாகஃ ஸங்கரிஹ்யதே. அர்தஸித்தே ச தேவதாந்தரதர்மநிஷேதே தத்ஸித்த்யர்தஂ நாத்ர வ்யதிகரணஸமாஸஃ ஸமாஷ்ரயணீய இத்யபிப்ராயேண’ஸர்வாந் தர்மாநிதி’ தர்ஷிதம்.

நநு ஷக்தமதிகரித்ய நிஷேதே ஷாஸ்த்ரவையர்த்யம்? அஷக்தஂ ப்ரதி து ந வித்யபேக்ஷேதி சேத்? ந; அஷக்தஂ ப்ரத்யேவ ப்ரஹ்மாஸ்த்ரபந்தாதாவிவோபாயாந்தரபரிக்ரஹஸ்ய தத்விரோதித்வஜ்ஞாபநேநாபேக்ஷிதத்வாத். யத்வா யதர்தஂ ஷரணவ்ரஜ்யாநுஷ்டிதா? ததர்தோபாயாந்தரஷக்தேஃ பஷ்சாத்குதஷ்சித்தேதுவஷாத்ஸம்பவேபி ததர்தஂ ததுபாதாநஸ்யாகர்தவ்யதாஜ்ஞாபநேந ஸார்தம். அத்ர’அஹஂ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஃ’ இதி பலஸ்ய பகவதேகாதீநதயா ததேகப்ரபதநமேகஂ பலதயாநுஷ்டேயஂ ஷிஷ்டஂ? ஸர்வதர்மபரித்யாகஸ்ய து வாக்யாத்தச்சேஷத்வஂ ஸித்தம்? பலவத்ஸந்நிதௌ சாபலஂ ததங்கம். தத்ர பூர்வஸித்தாகாரபராமர்ஷே அதிகாரகோடௌ நிவேஷஃ; அந்யதா து லிங்காத்ததேகஷரணவ்ரஜ்யோபயோகிரூபே விஷ்ராந்திஃ. ததேகோபாயதாத்யவஸாயோ ஹி ததந்யோபாயபரிக்ரஹேண விருத்தஃ. அதஸ்த்யாகஸ்யாவஹந்தேஃ ஷேஷ்யபேக்ஷிததண்டுலோபயோகிரூபே பர்யவஸாநவத்ததேகப்ரபதநவிரோதிதர்மத்யாகே பர்யவஸாநாததத்பலார்தா நாமவிரோதிநாஂ நித்யாதீநாஂ த்யாகோஸ்ய நாபேக்ஷித இதி வர்ணாஷ்ரமாத்யநுபந்திஸ்வதந்த்ரவிதிப்ராப்தாஸ்தத்வதேவாவதிஷ்டந்தே. ந ச தேபி ப்ரபதநஸ்யாங்காந்யங்கிநோ வா? ததா நியோகாபாவாத்? அஷக்தஂ ப்ரதி துஷ்கரகர்மாங்ககப்ரபதநவிதாநாஸம்பவாத்? அததங்கஸ்யாபி யஜ்ஞாதேரந்யார்தமாஷ்ரமாத்யர்தஂ சாநுஷ்டாநோபபத்தேஃ. ஸர்வஷப்தநிர்திஷ்டப்ரத்யநீகதயா வா’மாமேகம்’ இத்யேகஷப்தஃ. ததஷ்ச பகவத்ப்ரபதநமேகமேவ ஸர்வப்ராயஷ்சித்தஂ ஸ்யாதித்யுக்தஂ பவதி. ஷரணாகதிஸ்வபாவாத்து ததந்யோபாயபரித்யாகஃ ஸித்த்யேத். யதா லக்ஷயந்தி — ‘அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிஷ்வாஸபூர்வகம். ததேகோபாயதாயாச்ஞா ப்ரபத்திஃ ஷரணாகதிஃ’ இதி. ஷரணஷப்தோத்ரோபாயபர்யாயஃ. யதோக்தஂ ப்ரபத்திப்ரகரணே’உபாயே கரிஹரக்ஷித்ரோஃ ஷப்தஃ ஷரணமித்யயம். வர்ததே ஸாம்ப்ரதஂ த்வேஷ உபாயார்தைகவாசகஃ’ [அஹி.ஸஂ.36.33] இதி. படந்தி ச — ‘ஷரணஂ கரிஹரக்ஷித்ரோருபாயே ச நிகத்யதே’ இதி. உபாயத்வஂ ச காருண்யாதிகுணவிஷிஷ்டஸ்யோபாயஸ்தாநேவஸ்தாய தத்கார்யகரணாதித்யபிப்ராயேண பரமகாருணிகத்வாதிகுணோக்திஃ.’ஏகம்’ இதி நைரபேக்ஷ்யபரஂ வா. தத்ஸித்த்யர்தமபி’மாம்’ இத்யநேநாபிப்ரேததயா காருண்யாதிக்ரஹணம்.’பரமகாருணிகமிதி’ — ‘வதார்ஹமபி காகுத்ஸ்தஃ கரிபயா பர்யபாலயத்’ [ ] இத்யாதிபிஃ கரிபாயாஃ பாரம்யஂ? ததஃ ஷரண்யத்வஂ ச ஸித்தம். தஸ்யாஸங்கோசமாஹ — ‘அநாலோசிதவிஷேஷாஷேஷலோகஷரண்யமிதி’. “ஸர்வஸ்ய ப்ரபுமீஷாநஂ ஸர்வஸ்ய ஷரணஂ ஸுஹரித் (பரிஹத்)” [ஷ்வே.உ.3.17] இதி ஷ்ருதிஃ.’ஸர்வலோகஷரண்யாய’ [வா.ரா.6.17.15] இதி ராவணாவரஜவாக்யம். ஸ்வவாக்யஂ ச’விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவணஃ ஸ்வயம்’ [வா.ரா.6.18.34] இதி. விஷேஷஷப்தோத்ர ஜாதிவர்ணவித்யாவரித்தகுணஸஂஸ்காரபூதபாவ்யுபகாராதிபரஃ. உக்தகுணாவிநாபூதஂ குணாந்தரமாஹ — ‘ஆஷ்ரிதவாத்ஸல்யஜலதிமிதி’.’விதிதஃ ஸ ஹி தர்ம-(ஸர்வ-)ஜ்ஞஃ ஷரணாகதவத்ஸலஃ’ [வா.ரா.5.21.19] இதி ஹ்யுக்தம்.’தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்’ [வா.ரா.6.18.3] இத்யாதிப்ரக்ரியயா தோஷாநாதராய வாத்ஸல்யோக்திஃ. கத்யர்தாநாஂ புத்த்யர்ததயா ப்ரயோகாத்வ்ரஜதிதாதுஃ பூர்வயோஜநாயாமநுஸந்தாநமாத்ரபரதயா வ்யாக்யாதஃ. இஹ து ரக்ஷிஷ்யதீதி மஹாவிஷ்வாஸபூர்வகவிஷிஷ்டாத்யவஸாயலக்ஷணபுத்திவிஷேஷநிரூடபதேந வ்யாசஷ்டே — ‘ப்ரபத்யஸ்வேதி’.

‘அஹஂ த்வேதி’ — ஸர்வஜ்ஞஃ ஸர்வஷக்திரஹம் அல்பஜ்ஞமல்பஷக்திஂ ச த்வாமித்யர்தஃ.’மா ஷுசஃ’ — ஏகேந ஸுகரேணாவிலம்பேநாஷேஷபாபநிவரித்திஸித்தேரநந்தைர்துஷ்கரைர்விலம்ப்யகாரிபிஃ ப்ரத்யேகபாபநிபர்ஹணைரிதாநீஂ பக்தியோகாரம்பார்ஹதாஸம்பாதநஸ்யாஷக்யதாநிமித்தஷோகஂ மா கரிதா இத்யர்தஃ. ஏவஂ ஸகலாபிமதஸாதநதயா பகவச்சாஸ்த்ராதிஷு ப்ரஸித்தஂ பகவத்ப்ரபதநமிஹ ப்ரகரிதபக்தியோகாரம்பவிரோதிபாபநிபர்ஹணரூபோதாஹரணவிஷேஷே ப்ரதர்ஷிதம்.’ஸுதுஷ்கரேண ஷோசேத்யோ யேந யேநேஷ்டஹேதுநா. ஸ ஸ தஸ்யாஹமேவேதி சரமஷ்லோகஸங்க்ரஹஃ’. அதஏவாத்ரத்யபாஷ்யக்ரந்தஸ்ய கத்யஸ்துதேஷ்சாவிரோத இதி. யதிஹ’ஷங்கரேணோக்தஂ’ — “‘மந்மநா பவ’ இதி ஷ்லோகேந ஸர்வகர்மயோகநிஷ்டாயாஃ பரமஂ ரஹஸ்யமீஷ்வரஷரணதாமுபஸஂஹரித்யாதேதாநீஂ கர்மயோகநிஷ்டாபலஂ ஸம்யக்தர்ஷநஂ ஸர்வவேதாந்தஸாரஂ விஹிதஂ வக்தவ்யமித்யாஹ — ‘ஸர்வதர்மாநிதி'” இதி. அயமபி’ஸர்வார்தாந் விபரீதாஂஷ்ச’ [18.32] இத்யஸ்யோதாஹரணவிஷேஷஃ? கர்மயோகநிஷ்டாயாஃ பரிதக்த்வேந பக்தியோகநிஷ்டாயாஃ ப்ரதர்ஷிதத்வாதத்ரைவ’ஷரணஂ வ்ரஜ’ இதி கண்டோக்திதர்ஷநேந பூர்வத்ர ததுபஸஂஹாரவாசோயுக்தேரஸங்கதத்வாத்.

யச்சாத்ர’மாமேகஂ ஸர்வாத்மாநஂ ஸமஂ ஸர்வபூதஸ்தமீஷ்வரமஹமேவேத்யேவமேகஂ ஷரணஂ வ்ரஜ; ந மத்தோந்யதஸ்தீத்யவதாரய’ இத்யுக்தம்; அத்ர தாவந்ந ஷப்தஸ்யைவஂ ஷக்திஃ; ந ச ததுபரோதேந லாக்ஷணிகார்தஸ்வீகாரே ஹேதுஂ பஷ்யாமஃ? ப்ரத்யுத’அஹஂ த்வா ஸர்வாபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ இத்யாதிஸ்வாரஸ்யாத்ராகவவிபீஷணாதிவச்சரண்யஷரணாகதயோர்கோப்தரித்வரக்ஷிதவ்யத்வலக்ஷணோ பேதஃ ப்ரதீயதே. ஷாஸ்த்ராந்தராணி சைததவிரோதேந பூர்வமேவ ஸ்தாபிதாநி. யச்சாத்ர’ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ இத்யநேந ஸர்வகர்மஸ்வரூபஸந்ந்யாஸவிதிஃ’ இதி? இதமப்யத்யாயாரம்போக்ததாமஸத்யாகஸ்வீகரணம். ஏதந்நிராகரணாயைவ ஸாத்த்விகஸ்த்யாகோத்ர பாஷ்யே (ரா.) தர்ஷிதஃ. நநு கர்மாதிகரிதேஷ்வேவாயஂ ஸாத்த்விகராஜஸதாமஸரூபஸ்த்யாகவிகல்பஃ? ஸர்வகர்மஸந்ந்யாஸிநாஂ தத்த்வவிதாஂ மோஹதுஃகமூலத்யாகாஸம்பவாத்; ஸாத்த்விகத்யாகோபி கர்மநிஷ்டமதிகரித்யைவோச்யத இதி தத்ரைவாஸ்மாபிர்வாக்யாதமிதி சேத்? ததஸத்; ஸாமாந்யதஸ்த்யாகஸந்ந்யாஸரூபவிஷயத்வாத்ப்ரஷ்நஸ்யோத்தரஸ்யாபி ஸாமாந்யவிஷயத்வஂ ப்ரதீயதே? ஜ்ஞாநநிஷ்டாநாமபி நித்யநைமித்திககர்மஸ்வரூபபரித்யாகஸ்ய ப்ராகேவ தூஷிதத்வாச்ச. யச்சாநுகீதாயாமுச்யதே — ‘நைவ தர்மீ ந சாதர்மீ ந சாபி ஹி ஷுபாஷுபீ. யஃ ஸ்யாதேகாஸநே லீநஸ்தூஷ்ணீஂ கிஞ்சிதசிந்தயந்’ [4.7+ம.பா.13.ப.] இதி?’ஜ்ஞாநஂ ஸந்ந்யாஸலக்ஷணம்’ (ஸந்ந்யாஸமித்யேகே) [34.12] இத்யாதி ச.

யச்ச ஷ்ரீமதி’பாகவதே’ புராணே — ‘தஸ்மாத்த்வமுத்தவோத்ஸரிஜ்ய சோதநாஂ ப்ரதிசோதநாம். ப்ரவரித்திஂ ச நிவரித்திஂ ச ஷ்ரோதவ்யஂ ஷ்ருதமேவ ச৷৷மாமேகமேவ ஷரணமாத்மாநஂ ஸர்வதேஹிநாம். யாஹி ஸர்வாத்மபாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம்’ (மயாஸ்யா ஹ்யகுதோபயஃ) [11.12.14;15] இதி. யச்சாந்யத்ர’த்யஜ தர்மமதர்மஂ ச த்யஜ ஸத்யாநரிதே அபி. உபே ஸத்யாநரிதே த்யக்த்வா யேந த்யஜஸி தத்த்யஜ’ [ம.பா.12.329.40+ஸந்ந்யாஸோ.2.12] இதி. ஏவமீதரிஷாநி வசநாநி ஸாத்த்விகத்யாகோக்தப்ரக்ரியயைவ நேதவ்யாநி. ஸமாதிதஷாதத்பரேஷு து வசநேஷு ந கஷ்சித்விரோதஃ.’த்யஜ தர்மமஸங்கல்பாததர்மஂ சாப்யஹிஂஸயா. உபே ஸத்யாநரிதே புத்த்யா புத்திஂ பரமநிஷ்சயாத்’ [ம.பா.12.329.40] இத்யாதிஷு ச ஸாத்த்விக ஏவ தர்மத்யாகஸ்தத்தத்வசநோக்த இதி ஸுவ்யக்தம்.

‘மாமேகம்’ இத்யத்ர ச நிர்விஷேஷசிந்மாத்ரைக்யாதிவிவக்ஷாஂ ஷ்ரரிண்வந்தோ பாலா அபி பரிஹஸேயுஃ. பாஷ்யோக்தஸ்த்வேகஷப்தார்தோ வசநஸ்வாரஸ்யபூர்வாபரஷாஸ்த்ராந்தரஸங்கதஃ. ஏகஷப்தஷ்சாத்யந்தபரிதக்பூதேஷ்வபி தரிஷ்யதே.’அபேத்யாஹமிமாஂ ஹித்வா ஸஂஷ்ரயிஷ்யே நிராமயம். க்ஷமஂ மம ஸஹாநேந நைகத்வமநயா ஸஹ’ [ ] இதி. ததா’க்வ தே ராமேண ஸஂஸர்கஃ கதஂ ஜாநாஸி லக்ஷ்மணம். வாநராணாஂ நராணாஂ ச கதமாஸீத்ஸமாகமஃ’ [வா.ரா.5.35.2] இதி ப்ரஷ்நே’ராமஸுக்ரீவயோரைக்யஂ தேவ்யேவஂ ஸமஜாயத’ [வா.ரா.5.35.51] இத்யாதிஷு. யா து’ஸர்வதர்மாந்பரித்யஜ்ய’ இத்யத்ர விரோதிதர்மமாத்ரத்யாகவிஷயத்வேந யாதவப்ரகாஷாதீநாஂ யோஜநா; ந தத்ரார்தவிவாதஃ. ஸர்வதர்மாநவஷ்யகரணீயாநபி பரித்யஜ்யேதி ஸ்துதிரூபயோஜநா து,அபிஷப்தாத்யாஹாராதிபிரயுக்தா. அநியததர்மபரித்யாகோத்ர விவக்ஷித இதி’நாராயணார்யவ்யாக்யாயாமபி’ நாநுஷ்டாநவிரோதஃ.அபிசாத்ராதிதஃ ப்ரபரிதி ஸம்மரிஷாமஃ — ப்ரதமே தாவதத்யாயேர்ஜுநஸ்யாஸ்தாநஸ்நேஹகாருண்யாதிபிஃ ஷாஸ்த்ரோல்லங்கநப்ரஸங்கேப்ஸுநோபக்ஷிப்தபூர்வபக்ஷபுத்திப்ரஷமநாய த்விதீயேநாத்யாத்மஷாஸ்த்ரமவதாரிதமித்யேதாவதி ஸர்வேஷாமவிவாதஃ.

த்விதீயாத்யாயோக்தஸ்ய யோகாதேரபி பகவாநேவாராத்ய இத்யத்ராபி ந விப்ரதிபத்திஃ. வ்ரீஹ்யாதிவிஷயைஃ ப்ரோக்ஷணாவகாதாதிஷாஸ்த்ரார்தைரபி ஹி ஸ ஏவாராத்யதே. ஸ து தத்ர ந ஸாக்ஷாத்விஷய இதி ப்ரகரணாதிபலாத்? ஸாக்ஷாத்பகவத்யோகிநஷ்ச’யோகிநாமபி ஸர்வேஷாஂ மத்கதேநாந்தராத்மநா’ [6.47] இத்யாதி ப்ரஸ்துத்ய ப்ரதிபாதயிஷ்யமாணத்வாச்ச ஸமர்திதம்.

தரிதீயே யோகாக்யோபாயாஂஷபூதயோஃ க்ரியாயோகபுத்தியோகயோஃ விமர்ஷ இத்யேததபி’ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாஂ கர்மயோகேந யோகிநாம்’ [3.3] இத்யதிகாரிபேதவர்ணநேந நிரஸ்தம். ந ச’தூரேண ஹ்யவரஂ கர்ம’ [2.49] இதி ப்ரதிபாதநாத்துல்யகக்ஷ்யத்வாநுபபத்திரிதி வாச்யஂ? தஸ்ய தத்ப்ரகரணநிந்த்யகாம்யகர்மவிஷயத்வஸ்தாபநாத்.’யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாத்’ [3.17] இத்யாதிஷ்லோகத்வயே தரிஷ்டாநுஷ்ரவிகவிஷயவிதரிஷ்ணஸ்ய பரமாத்மைகரதேஃ புருஷஸ்ய கரித்யாநுஷ்டாநே ப்ரயோஜநாபாவோகரித்யகரணே ப்ரத்யவாயாபாவஷ்ச ப்ரதிபாத்யத இதி யதுச்யதே? ததப்யயுக்தஂ? “நாவிரதோ துஷ்சரிதாத்” [கடோ.2.23] இத்யாதிவிரோதோபபாதநாத்? தத ஏவ’ஹத்வாபி ஸ இமா ఁல்லோகாந்’ [18.17] இத்யாதேரபி வக்ஷ்யமாணஸ்யாத்ரோதாஹரிதஸ்யாந்யவிஷயத்வஸ்தாபநாத். அத சேத்ஸமாதிதஷாயாஂ கர்தவ்யாந்தராபாவோஸ்மிந் ஷ்லோகத்வயே விவக்ஷித இத்யபிப்ராயஃ? ததா து முக்ததஷாயாமிவ விரோதாபாவாதப்யநுஜாநீமஃ. உக்தஂ ச ஸமாதிதஷாவிஷயத்வஂ ஷஷ்டே தைரேவ. ததாஹி — ‘யஂ ஸந்ந்யாஸ இதி ப்ராஹுர்யோகஂ தஂ வித்தி பாண்டவ!’ [6.2] இதி ஷ்லோகே’ஸமாதிவேலாயாமேவ கர்மஸந்ந்யாஸஃ கார்யஃ? நாந்யதேதி யாவத்’ இத்யுக்தம்.’ஆருருக்ஷோர்முநேர்யோகம்’ [6.3] இத்யத்ர சைவஂ வ்யஞ்ஜிதஂ — ‘யஸ்ய வஷிநோ யோகேந ஸகலகர்மகாலோ வ்யாப்தஃ? தஸ்ய கர்மபரித்யாகோ யுக்தஃ? நாந்யஸ்ய’ இதி. ஏததேவ தரிதீயசதுர்தபஞ்சமேஷ்வபி பகவதா ப்ரதிபாதிதமித்யநுஸந்தாதவ்யம். தரிதீயே தாவத்’யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாத்’ இத்யத்ர? சதுர்தேபி’யோகஸந்ந்யஸ்தகர்மாணம்’ [4.41] இத்யத்ர? பஞ்சமே ச’ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே’ [5.13] இத்யத்ர? தேநாத்மரதீநாஂ வஷிநாஂ யோகாரூடாநாமேவ கர்மஸந்ந்யாஸோ யுக்தஃ; தேஷாமபி லோகவிக்யாதாநாஂ ஸர்வலோகாதர்ஷபூதாநாஂ விதுஷாமாத்மாநுக்ரஹாபாவேபி லோகாநுக்ரஹார்தஂ கர்மயோக ஏவ யுக்த இதி பகவதபிப்ராயோ க்ராஹ்ய இதி நிகமிதம். யத்புநர்நிஷித்தாநுஷ்டாநே ப்ரத்யவாயாபாவாத்ததகரணே ப்ரயோஜநஂ நாஸ்தீதி? ஏதத்து தஸ்யாமவஸ்தாயாம் அப்ரஸக்தோபந்யாஸஃ.

யத்து’கர்மணைவ ஹி ஸஂஸித்திமாஸ்திதா ஜநகாதயஃ’ [3.20] இத்யத்ர ராஜ்ஞாமுபந்யாஸஸ்தத்வரித்தாந்தாநாமேவ லோகே ப்ரஸித்தத்வாதிதி? அத்ராயமேவ பாவ உசிதஃ. யத்த்வநந்தரஂ பக்ஷாந்தரமுக்தம்’ஏவஂ பரம்பராப்ராப்தமிமஂ ராஜர்ஷயோ விதுஃ’ [4.2] இதி லிங்காத்ராஜ்ஞாமேவாயஂ யோகிநாஂ கர்மாபரித்யாகோபதேஷஃ? நாந்யேஷாம்’ இதி? தந்மந்தம்? அந்யேஷாமபி கர்மஸ்வரூபாபரித்யாகஸ்ய ஸர்வத்ர ஸுஸ்பஷ்டத்வாத்; அத ஏவ ஹி சதுர்தே ஸ்வயமேவோக்தம். இஹ கேசித்’ராஜர்ஷயோ விதுஃ’ இத்யபிதாநாத்பூர்வஸ்மிந்நத்யாயே நிதர்ஷநார்தஂ ஜநகோபந்யாஸாத்? நவமேத்யாயே’ராஜவித்யா ராஜகுஹ்யம்’ [9.2] இதி வக்ஷ்யமாணத்வாச்ச ராஜ்ஞாமேவாஸ்மிந் பகவதுபதிஷ்டே யோகேதிகாரஃ? நாந்யேஷாமிதி மந்யந்தே; ததயுக்தஂ? நவமேத்யாயே’ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தேபி யாந்தி பராஂ கதிம்’ [9.32] இதி ஸர்வாதிகாரஸ்ய வக்ஷ்யமாணத்வாத். தஸ்மாத்ப்ரதர்ஷநார்தஂ ராஜ்ஞாஂ ப்ரவரித்திவிஷேஷாத்யுபந்யாஸஃ? நாந்யதேத்யப்யுபகந்தவ்யமிதி.

யத்து பஞ்சமே’ஸந்ந்யாஸஃ கர்மயோகஷ்ச நிஷ்ஷ்ரேயஸகராவுபௌ’ [5.2] இத்யுக்தஸந்ந்யாஸகர்மயோகாப்யாமநந்தரஂ’ஸாங்க்யயோகௌ பரிதக்பாலாஃ’ [5.4] இத்யாத்யுக்தஸாங்க்யயோகயோரர்தாந்தரத்வோபபாதநஂ? ததபி மந்தஂ?’ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாஂ கர்மயோகேந யோகிநாம்’ [3.3] இதி ப்ராகுக்தப்ரத்யபிஜ்ஞாநாத். ந ச ப்ரஸித்திவிரோதஃ? அஸ்மிந் ஷாஸ்த்ரே தயோரேவமேவ ப்ரஸித்தேஃ. ந ச’நிஷ்ஷ்ரேயஸகராவுபௌ’ இத்யுக்தேந புநருக்திஃ? ஸங்க்ரஹவிஸ்தரரூபத்வாதிநா தத்பரிஹாராத்? ஸர்வத்ர சைவஂ ஸர்வைரப்யுபகமாத். யதபி’பண்டிதாஃ ஸமதர்ஷிநஃ’ [5.18] இத்யத்ர ஸர்வத்ராஹிஂஸ்யதாபுத்திரநுக்ராஹ்யதாபுத்திஃ ஸர்வேஷாஂ,பூதாநாமீஷ்வராநுக்ராஹ்யதாபுத்திரீஷ்வரவிபூதித்வபுத்திஷ்ச ஸமதர்ஷநமபிப்ரேதமிதி? தாவதி ந விவாதஃ. யத்து தத்ராநந்தரமுக்தஂ’ந புநர்ஹிஂஸாநுக்ரஹேஷு பலஸாம்யபுத்திஃ ப்ராஹ்மண்யாதிவிஷேஷதிரஸ்காரோ வா. குத ஏதத் ஷாஸ்த்ராந்தராநுஸாராத்ப்ரமாணாந்தராநுஸாராச்ச’ இதி? அயமப்யாத்மவ்யதிரிக்தமித்யாத்வாதிவாதிநாஂ மதஸ்யோபாலம்பஃ? ந புநஃ ஸ்வதஃ பரஸ்பரஸமாநாநாஂ ஆத்மநாமௌபாதிகஸத்யவைஷம்யவாதிமதஸ்ய? விஷமதேஹாநாமபி ஸ்வரூபஸாம்யதர்ஷநே ஷாஸ்த்ராந்தரப்ரமாணாந்தரவிரோதாபாவாத்? ப்ரத்யுத தத்ஸஂவாதாச்சேதி.

ஷஷ்டோக்தயோகஸ்ய விஷயவிஷேஷாதிகஂ தத்ரைவ ஸுஸ்பஷ்டமுபபாதிதம். துரபஹ்நவஂ ச தைரபி யோகிநாஂ வைவித்யம். அத ஏவ ஹி’யோகிநாமபி ஸர்வேஷாம்’ [6.47] இதி ஷ்லோகே வ்யாசக்யுஃ’யோகிநஷ்சித்தாலம்பநவைசித்ர்யாத்பஹுவிதாஃ. தேஷு மய்யர்பிதசித்தோ மாமேவ ஷ்ரத்தயா பஜதே? ஸ மே யுக்ததமோ மத இதி ஹ்யாஹ’ இதி. யோஸ்மாபிரிஹ ஸங்க்ஷேபவிஸ்தராப்யாமுபந்யஸ்தோ யோகஃ? ஸ ஸர்வேப்யோ யோகேப்யஃ ஷ்ரேஷ்டதமோ மத இதி ச.’ஷப்தப்ரஹ்மாதிவர்ததே’ [6.44] இத்யேததபி த்ரிவர்காதிலங்கநவிஷயமேவாப்யுபகந்தவ்யம். அத்ர வேதத்வாரா தத்பலவிவக்ஷாயாஂ லக்ஷிதலக்ஷணாஸங்கோசாதிர்மஹாந் க்லேஷஃ. பாஷ்யோக்தப்ரக்ரியா து ஷ்ரரிங்கக்ராஹிகயா விவக்ஷிதஂ வக்தீதி விஷேஷஃ.’தபஸ்விப்யோதிகோ யோகீ’ [6.46] இதி ஷ்லோகே யதுக்தம் — ‘அத்ர தபஷ்ஷப்தேந வாநப்ரஸ்ததர்மாணாஂ பரிக்ரஹஃ; ஜ்ஞாநஷப்தேந ப்ரஹ்மசாரிதர்மாணாஂ? கர்மஷப்தேந கரிஹஸ்ததர்மாணாம்’ இதி? அயஂ விபாகோ நிர்மூலஃ; ஸர்வேஷ்வாஷ்ரமேஷு ஸ்வாஷ்ரமாவிரோதிநாஂ தபோஜ்ஞாநகர்மணாஂ ஸம்பவாத்யதாஷ்ருதவிரோதாபாவாத்வாநப்ரஸ்தாதிலக்ஷணாயாஃ ப்ரயோஜநாபாவாச்ச.

ஸப்தமோக்தசேதநாசேதநரூபப்ரகரிதித்வயஸ்யாபி ப்ரஹ்மஸ்வரூபாதத்யந்தபேதோஸ்மாபிஸ்தத்ரதத்ர ஸமர்திதஃ. அபரப்ரகரிதேரஷ்டதாவிபாகஷ்ச யதாஷ்ருத ஏவோபபந்ந இதி ஸ்தாபிதம். யச்ச’ரஸோஹமப்ஸு’ [7.8] இத்யாதிஸாமாநாதிகரண்யநிர்வாஹாயோக்தஂ’ஸமஸ்தகல்யாணகுணஸமஷ்டிவிக்ரஹோஹம்? அதோ மதஂஷாஃ ஸர்வே ஸர்வத்ர கல்யாணகுணா இத்யபிப்ராயேணாஹ’ இதி; தத்ர தாவத்ராஸிதகல்யாணகுணஸமஷ்டிர்ந பகவத்ஸ்வரூபஂ? நசாப்ராகரிதஸ்ய விக்ரஹஸ்ய ப்ராகரிதரஸாதிமயத்வம்; அதஃ பரிஷேஷாத்ரஸாதீநாமேவ விக்ரஹத்வமுக்தஂ ஸ்யாத்; தத்ர ஸமஷ்டிவ்யஷ்டிபாவேநாஂஷத்வோக்திர்நிஷ்பலா. தஸ்மாத்ததுத்பத்திதாததீந்யாதிபிரேவ ஸாமாநாதிகரண்யகமநிகா ஸமீசீநா. பேதாபேதநயேந கல்யாணகுணதாதாத்ம்யவிவக்ஷாயாமகல்யாணைரபி ஸர்வாத்மநஸ்தஸ்ய தாதாத்ம்யாத் ஸமஸ்தஹேயாஸ்பதத்வாதிதோஷப்ரஸங்கஃ. ஏவமுத்தரேஷ்வபி ஸாமாநாதிகரண்யேஷு பாவ்யம்.

அஷ்டமே ச’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1] இத்யாதிப்ரஷ்நாநாமேகாதிகாரிவேத்யவிஷயத்வஂ தத்ரைவாஸ்மாபிர்நிராகரிதம். ப்ரஹ்மாயுர்திவஸகல்பநா பௌருஷாஹோராத்ரகல்பநாமூலமஹாகல்பப்ரக்ரியோபந்யாஸஷ்ச ஸ்மரித்யந்தராநுஸாரேணாஸ்மாபிரப்யப்யுபகமாத்திரண்யகர்பதிவஸாவஸாநே மஹாப்ரலயவாதிநாமயமுபாலம்பஃ.’யத்கத்வா (யஂ ப்ராப்ய) ந நிவர்தந்தே தத்தாம பரமஂ மம’ [15.6] இத்யஸ்ய பரமவ்யோமவிஷயதாயாஂ ஸித்தாந்தவிரோதாபாவேப்யத்ர பரிஷுத்தாத்மவிஷயத்வே யுக்தயஸ்தத்ரைவாவஸ்தாபிதாஃ. யத்புநஃ’அக்நிர்ஜ்யோதிஃ’ [8.24]’தூமோ ராத்ரிஃ’ [8.25] இத்யத்ராக்நிதூமஷப்தாப்யாமஹோராத்ரைகதேஷபூதஃ காலவிஷேஷோ லக்ஷ்யத இதி; ததஸத்? தத்தச்சப்தைரத்ர தேவயாநபிதரியாநாக்யகதித்வயப்ரத்யபிஜ்ஞாநாத்?’நைதே ஸரிதீ’ [8.27] இதி நிகமநாத்?’யத்ர காலே’ [8.23] இத்யுபக்ரமஸ்தகாலஷப்தஸ்ய காலாபிமாநிதேவதாதிவாஹிகபூயஸ்த்வவிவக்ஷயா ஸ்தாபிதத்வாச்ச. அதஃ’உதகயநபூர்வபக்ஷாஹஃபூர்வாஹ்ணஸந்நிபாதே ப்ரஹ்மவித்பிர்யோகிபிரபுநராவரித்தயே ப்ரயாதவ்யம்’ இதி நியமநமஷக்யம். தக்ஷிணாயநாபரபக்ஷாபராஹ்ணராத்ரிஷு ப்ரயாதாநாஂ யோகிநாஂ சாந்த்ரமஸஜ்யோதிஃ ப்ராப்ய புநராவரித்திப்ரதிபாதநமுத்தரேண ஷ்லோகேந கரிதமித்யப்யஸத்’நிஷி நேதி சேந்ந ஸம்பந்தஸ்ய யாவத்தேஹபாவித்வாத்தர்ஷயதி ச’ [ப்ர.ஸூ.4.2.19]’அதஷ்சாயநேபி தக்ஷிணே’ [ப்ர.ஸூ.4.2.20] இத்யதிகரணாப்யாஂ தக்ஷிணாயநராத்ரிமரிதஸ்யாபி யோகிநஸ்தைத்திரீயோக்தப்ரக்ரியயா சந்த்ரஸாயுஜ்யபூர்வகஂ பரப்ரஹ்மப்ராப்த்யபுநராவரித்த்யோஃ ஸமர்திதத்வேநாஸ்ய ஷ்லோகஸ்ய ஸாக்ஷாத் யோகிவ்யதிரிக்ததூமாதிமார்கோசிதாதிகாரிவிஷயத்வவ்யவஸ்தாபநாத். யச்ச கதஂ புநரக்நிஜ்யோதிர்தூமஷப்தயோர்யதோக்தகாலவிஷேஷபரத்வமவகம்யதே இதி பரிசோதநாபூர்வகமுக்தஂ? ஷ்ருதிஷு ச ஸ்மரிதிஷு ச ஸமஸ்தாஸூதகயநபூர்வபக்ஷாஹஃபூர்வாஹ்ணாநாஂ ஸாமாந்யதோ தைவகர்மாங்கத்வோபதேஷாத்ப்ரயாணகாலாநுஸ்மரணஸ்யாபி தைவத்வாவிஷேஷாத் ஷாஸ்த்ராந்தரேஷ்வநயோர்தைவகர்மத்வேந தக்ஷிணாயநாதிஷு வர்ஜநப்ரஸங்காத் இதி.

யத்புநஃ’அஸமாஹிதசித்தாநாமபி ஸுகரஂ ஸுகாவகமஂ க்ஷிப்ரஂ பலஂ ப்ரதி பகவத்ப்ரபத்திப்ரகாரஂ வக்துஂ பகவாநுவாச’ இதி நவமாரம்பே வ்யாக்யாதம்? ததபி பூர்வோக்தஜ்ஞாநிஸாத்யாநந்யபஜநஸ்யைவ ப்ரபஞ்சநபரத்வப்ரதீதேரபாகரிதம். யச்ச’ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே’ [9.15] இதி ஷ்லோகே ப்ரகல்பிதஂ’ஸாங்க்யயோகாப்யாஂ ஸமுச்சிதாப்யாமுபாஸநமேகத்வேந உபாஸநஂ? விகல்பிதாப்யாமுபாஸநஂ பரிதக்த்வேநோபாஸநஂ? புத்தியோகோ வாத்ர ஜ்ஞாநஷப்தேந விவக்ஷிதஃ தத்ராப்யயமர்தஃ’கேசித்கர்மயோகபுத்தியோகாப்யாஂ ஸமுச்சிதாப்யாமுபாஸதே; கேசித்கேவலேந கர்மயோகேந; அபரே கேவலேந புத்தியோகேநேத்யேவஂ பஹுதோபாஸதே’ இதி. அத்ர ஸாங்க்யயோகாதிப்ரஸஞ்ஜகஂ ந கிஞ்சித்தரிஷ்யதே.’அஹஂ க்ரதுஃ’ [9.16] இத்யாத்யநந்தரவிவரணக்ரந்தாநுஸாரேண ஏகத்வபரிதக்த்வயோருபாஸ்யவிஷயத்வஂ ஸுஸ்பஷ்டம்.’அநந்யாஷ்சிந்தயந்தோ மாம்’ [9.22] இத்யாதௌ து நசாவஷ்யம்பாவிநே யோகக்ஷேமாயாபி மத்பக்தைரேகாந்திபிர்தேவதாந்தராணி தர்மாந்தராணி வாபேக்ஷணீயாநீத்யாதிகஂ ஸர்வமங்கீகரிதமஸ்மாபிஃ.

தஷமே ச’விஸ்தரேணாத்மநோ யோகஂ விபூதிஂ ச’ [18] இத்யத்ர யோகஷப்தஸ்ய பகவத்கர்மயோகவிஷயதயா வ்யாக்யாநமயுக்தம்?’பஷ்ய மே யோகமைஷ்வரம்’ [11.8]’ஏதாஂ விபூதிஂ யோகஂ ச’ [10.7] இத்யாதிப்ரத்யபிஜ்ஞாவிரோதாத்? அநந்தரமஸ்மிந்நத்யாயே தத்விஸ்தராதர்ஷநாச்ச.

‘மத்கர்மகரித்’ [55] இத்யாத்யேகாதஷாத்யாயாந்திமஷ்லோகஸ்ததுத்தரமித்யபி தூரவ்யவதாநாத்தத்ராபி விஸ்தராதர்ஷநாச்ச நிரஸ்தம். விபூதிவிஷேஷாணாஂ கரித்ஸ்நஸ்ய ச ஜகதஃ ஸ்வரூபைகதேஷத்வேநாஂஷதயா ஸாமாநாதிகரண்யவர்ணநமபி ப்ராகுக்தஸதோஷத்வாதிப்ரஸங்கப்ரக்ரியயா பராஸ்தம். ஏவஂ ஷ்ரீவிஷ்வரூபவிக்ரஹஸ்யாவயவத்வேந விஷ்வஸ்ய வர்ணநமபி ப்ராகரிதாப்ராகரிதவிபாகாதவதூதம்.த்வாதஷோக்தஸ்யாக்ஷரோபாஸநஸ்ய பகவதுபாஸநாத்பேதஃ ஸ்வவாக்யஸ்வாரஸ்யபுருஷோத்தமத்வாதிப்ரகரணாந்தரைகரஸ்யாதிபிஃ ஸாதிதஃ. யத்புநஃ — பேதவ்யபதேஷாஸ்து கதஞ்சிதவஸ்தாபேதமாஷ்ரித்ய நேதவ்யாஃ; அவஸ்தாபேதஷ்சாத்ர நிர்விஷேஷநிகிலவஸ்துமாத்ரரூபதா? ஆவிர்பூதஸமஸ்தகல்யாணகுணஸமஷ்டிரூபதா ச விவக்ஷிதா — இதி ததேததநேகவிஷயவ்யாகாதவிஸஂஸ்தூலமாகுமாரமபஹாஸ்யம். அந்யத்ர ச தூஷணப்ரபஞ்சநாதிஹோபரம்யதே.

த்ரயோதஷே க்ஷேத்ரஜ்ஞவிஷயே வக்தவ்யஂ ஸர்வஂ பூர்வமேவோக்தம்.’யதஷ்ச தத்’ [13.4] இதி பாடோப்ரஸித்தஃ. ததாபாடேபி ஜ்ஞாநபராமர்ஷோஸ்வரஸஃ. க்ஷேத்ரஸ்ய நித்யத்வேநாஹேதுகத்வாத்தேதுர்ந நிர்திஷ்ட இத்யுக்தமிதி சேத்? ஸத்யமுக்தஂ? துருக்தஂ து தத்?’மஹாபூதாந்யஹங்காரஃ’ [13.6] இத்யாதிநா வக்ஷ்யமாணஸ்ய க்ஷேத்ரஸ்யாவ்யக்தவ்யதிரிக்தஸ்ய ஸமஸ்தஸ்யாநித்யத்வஸம்ப்ரதிபத்தேஃ?’தஸ்மாதவ்யக்தமுத்பந்நஂ த்ரிகுணஂ த்விஜஸத்தம!. அவ்யக்தஂ புருஷே ப்ரஹ்மந்நிஷ்கலே ஸம்ப்ரலீயதே’ [வி.பு.] இத்யாதிபிர்நித்யஸ்யாப்யவ்யக்தஸ்த பரப்ரஹ்மண்யேகீபாவபரிதக்பாவவசநாச்ச. யச்ச’ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ’ [13.5] இத்யத்ரோக்தஂ — ‘க்ஷேத்ராதிதத்த்வவ்யவஸ்தாபநபராணி பஞ்சஷிகாதிப்ரணீதாநி ஸூத்ரபதாநி’ இதி? ததப்யநாதேஷிகஂ? பஞ்சஷிகாதிக்ரந்தே ப்ரஹ்மஸூத்ரப்ரஸித்த்யபாவாத். யத்து’மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே’ [13.19] இதி நிகமநாத்பகவாநேவ’ஜ்ஞேயஂ யத்தத் ப்ரவக்ஷ்யாமி’ [13.13] இத்யத்ர ஜ்ஞேயத்வேநோக்த இதி; தந்ந?’இதி க்ஷேத்ரஂ ததா ஜ்ஞாநஂ ஜ்ஞேயஂ சோக்தஂ ஸமாஸதஃ’ [13.19] இதி நிகமிதாநாஂ த்ரயாணாமேதச்சப்தேநாநுவாதாத்? தத்ர க்ஷேத்ரஜ்ஞஜ்ஞாநவத்கர்மவஷ்யக்ஷேத்ரஜ்ஞஜ்ஞாநஸ்யாபி மோக்ஷோபயோகித்வோபபத்தேஃ? க்ஷேத்ராதிஜ்ஞாநரூபஸ்யாபி ஷாஸ்த்ரார்தஸ்ய ஸர்வப்ரஷாஸிதுர்பகவதஃ ஸமாராதநரூபத்வேந’மதபக்த ஏதத்விஜ்ஞாய’ [13.19] இத்யநேந விரோதாபாவாச்ச.

யதபி சதுர்தஷே’மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கர்பஂ ததாம்யஹம்’ [14.3] இத்யத்ர பராவரப்ரகரித்யோர்ஜீவாவ்யக்தஸஂஜ்ஞயோரஂஷோமிலிதோ கர்ப இத்யுக்தஂ? தத்ர ப்ரஹ்மஷப்தேநாவ்யக்தஸ்ய நிர்திஷ்டத்வாத்தத்ர ததஂஷாதாநவசநஸ்ய ப்ரயோஜநாபாவாத்?’க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸஂயோகாத்’ [13.27] இத்யுக்தஸ்ய சாத்ர ப்ரத்யபிஜ்ஞாநாத்? கர்பஷப்தேந சேதநவிவக்ஷைவ யுக்தா.’ஸர்வத்வாரேஷு தேஹேஸ்மிந் ப்ரகாஷ உபஜாயதே. ஜ்ஞாநஂ யதா ததா வித்யாத்விவரித்தஂ ஸத்த்வமித்யுத’ [14.11] இதி ஷ்லோகே ப்ரகாஷஜ்ஞாநஷப்தயோஃ பாஹ்யாந்தரேந்த்ரியவரித்திவிஷயதயா வ்யவஸ்தாபநமஷக்யஂ? விபரிவர்தேபி விரோதபாவாத்வக்ஷ்யமாணராஜஸதாமஸஜ்ஞாநவ்யவச்சேதார்தஂ ப்ரகாஷஷப்தப்ரயோகோபபத்தேஷ்ச. ரஜஃகார்யஷ்லோகே லோபப்ரவரித்திர்லோபோத்பவ இதி ஸமஸ்ததயா வ்யாக்யாநமயுக்தஂ? ததாநத்யயநாத்?’அப்ரகாஷோப்ரவரித்திஷ்ச’ [14.13] இதி தமஃகார்யஷ்லோகே ஸத்த்வகார்யப்ரகாஷநிஷேதவத்ரஜஃகார்யப்ரவரித்திநிஷேதஸ்யாபி பரிதகுபந்யாஸாத்தத்ப்ரதியோகிதயா ப்ரவரித்தேரிஹ பரிதங்நிர்தேஷோபபத்தேஃ?’ஆரம்பஃ கர்மணாம்’ [14.12] இத்யஸ்ய து கோபலீவர்தந்யாயேந நிர்வாஹாத்.

பஞ்சதஷேபி’ப்ரபத்யேயதஃ ப்ரவரித்திஃ’ [15.4] இதி பாடோப்ரஸித்தஃ. யதபி’மமைவாஂஷோ ப்ரவரித்திஃ’ [15.4] இதி பாடோப்ரஸித்தஃ. யதபி’மைவாஂஷோ ஜீவலோகே ஜீவபூதஃ ஸநாதநஃ’ [15.7] இத்யத்ர ஸஂஸாரிவ்யதிரிக்தஃ ஸர்வேஷ்வரஸ்யைவ கஷ்சிதஂஷோ ஜீவஷப்தார்ததயா ப்ரதமஂ வ்யாக்யாயி; தத்ர யத்யபி அர்தவிரோதோ நாஸ்தி? ததாபி விபூதிப்ரகரணமத்யபாடாதந்தர்யாமிணஸ்து’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டஃ’ [15.15] இத்யநந்தரமேவ வக்ஷ்யமாணத்வாத்? பரமாத்மாஂஷவிஷேஷே ச ஜீவஷப்தஸ்ய ப்ரஸித்திப்ரகர்ஷாபாவாத் மாநவாதிஷாஸ்த்ராந்தரப்ரஸித்தேரபி’ஜீவபூதாஂ மஹாபாஹோ!’ [7.5] இதி ஸ்வஷாஸ்த்ரப்ரஸித்தேர்பலவத்த்வேந ஸ்வீகர்துமுசிதத்வாத்’விஷயாநுபஸேவதே’ [15.9] இத்யத்ர ச ப்ரதிகூலோதாஸீநபோகேப்யஃ ஸங்கோசஸ்ய க்லிஷ்டத்வாதுத்க்ரமணாத்யுக்தேஃ? ஹரிதயவ்யாப்தேரந்தர்யாமிணஃ ஸ்வாரஸ்யாதிந்த்ரியாதிஷ்டாநேஷ்வரஷப்தாதேஷ்ச தத்தந்நியந்தரி ஸஂஸாரிண்யப்யுபபத்தேஃ?’ஆத்மந்யவஸ்திதம்’ [15.11] இத்யத்ர சாத்மஷப்தஸ்ய நாநார்தஸ்ய ப்ரகரணோசிதார்தபரிக்ரஹோபபத்தேஃ? பவதுக்தா த்விதீயைவ யோஜநா பாஷ்யகரிதபிமதா ஸமீசீநேதி மந்யாமஹே.’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ [15.15] இத்யாதௌ வேதவேதாந்தஷப்தயோர்வக்தவ்யஂ ப்ராகேவோக்தம்.’கூடஸ்தோக்ஷரஃ’ [15.16] இத்யஸ்ய ஜீவபூதபரப்ரகரிதிவ்யதிரிக்தே முக்தே வரித்திஷ்ச ஸாதுதரா.

யத்து ஷோடஷே ப்ரோக்தஂ — ப்ரகாராந்தரேணார்ஜுநஸ்ய ஷோகமபநேதுஂ தேவப்ரகரிதீநாஂ ரூபஂ; தேஷாஂ பரமகல்யாணப்ரத்யாஸக்தேரர்ஜுநஸ்ய தைவப்ரகரிதித்வமாஸுரப்ரகரிதீநாஂ ரூபஂ? தந்நிமித்ததா ச ஸகலஸ்யாநர்தஜாதஸ்யோக்தம் — இதி. ததயுக்தஂ? ஷாஸ்த்ராரம்பேர்ஜுநஸ்ய ஸ்வப்ரகரித்யநிர்தாரணமூலஷோகப்ரஸங்காபாவாத்? அத்ர தத்ப்ரஸங்கே ததபநோதநஸ்யாபி ப்ராஸங்கிகஸ்ய யுக்தத்வாத்; அதஃ’தஸ்மாச்சாஸ்த்ரஂ ப்ரமாணஂ தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ’ [16.24] இதி நிகமநாநுஸாரேண பகவத்யாமுநேயோக்தப்ரக்ரியயா ஷாஸ்த்ரவஷ்யதைவாத்யாயப்ரதாநார்தஃ.

ஸப்ததஷே ஷ்ரத்தாத்ரைவித்யஂ ஷாஸ்த்ரீயேதரவிஷயமித்யயுக்தம்; அநந்தரம்?’அஷாஸ்த்ரவிஹிதம்’ [17.5] இதி பரிதகபிதாநாத். ந ச தத்ர ஷ்ரத்தாத்ரைவித்யமபி ஸமுச்சேதுஂ ஷக்யஂ? ததநுக்தேஸ்தத்க்லரிப்த்யநுபபத்தேஷ்ச.’ தத்ஸதிதி நிர்தேஷஃ’ [17.23] இத்யத்ர முமுக்ஷூணாஂ யஜ்ஞாதிஷு கிஞ்சிதங்கஂ தேஷாஂ வீர்யாதிஷயார்தமுபதிஷ்யத இத்யயுக்தம்? அமுமுக்ஷூணாமபி ததவிரோதாத்விஷேஷகாபாவாச்ச. அதோ’லக்ஷணஂ ஷாஸ்த்ரஸித்தஸ்ய த்ரிதா’ [கீ.ஸஂ.21] இத்யயமேவார்த உசிதஃ. அஷ்டாதஷே த்யாகஸ்வரூபாதிவிவேகே நாதீவ விரோதஃ? சரமஷ்லோகே வக்தவ்யஂ து ஸர்வஂ ஸக்தமஸ்மாபிஃ. ஏவமந்யேஷ்வபி பூதேஷு பவிஷ்யத்ஸு ச ஷ்ரீமத்கீதாபாஷ்யேஷு பகவத்யாமுநாசார்யபாஷ்யகாரமதாநுஸாரேண திங்மோஹஃ ப்ரஷமயிதவ்யஃ.

க்ஷுத்ரஸ்கலிதேஷ்வதூரவிப்ரகரிஷ்டயோஜநாபேதேஷு சோதாஸிதவ்யமித்யலமதிப்ரஸங்கேந.பிஷாச-ரந்திதேவ-குப்த-ஷங்கர-யாதவப்ரகாஷ-பாஸ்கர-நாராயணார்யயஜ்ஞஸ்வாமி-ப்ரபரிதிபிஃ ஸ்வஂ ஸ்வஂ மதமாஸ்திதைஃ பரஷ்ஷதைர்பாஷ்யகரித்பிஃ அஸ்மத்ஸித்தாந்ததீர்தகரைஷ்ச பகவத்யாமுநாசார்யபாஷ்யகாராதிபிரவிகீதபரிகரிஹீதோயமத்ர ஸாரார்தஃ — “பகவாநேவ பரஂ தத்த்வம்? அநந்யஷரணைர்யதாதிகாரஂ ததேகாஷ்ரயணஂ பரமதர்மஃ” இதி.

——————–

இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும்
பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :

67. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி

தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும்,
அதபஸ்காய-தவமிலாதோனுக்கும்,
அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும்,
அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும்,
ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும்,
ந வாச்யம்-சொல்லாதே.

இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால்
பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.

வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து
வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும்.
ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார்.
கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கை யில்லாதவர்களுக்குக்
கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும்.
பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது.
ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான்.
தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன்
என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்தது போன்று
எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது.
தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை
ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.

மழைத் தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது.
அது போல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை.
பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.

৷৷18.67৷৷இதஂ தே பரமஂ குஹ்யஂ ஷாஸ்த்ரஂ மயா ஆக்யாதம் (முனிவரை இடுக்கி சொல்லாமல் முந்நீர் வண்ணனாய் தானே வெளியிட்ட )அதபஸ்காய அதப்த தபஸே த்வயா ந வாச்யஂ -த்வயி வக்தரி மயி ச அபக்தாய கதாசந ந வாச்யஂ -தப்த தபஸே ச அபக்தாய ந வாச்யம் இத்யர்தஃ. –ந ச அஷுஷ்ரூஷவே பக்தாய அபி அஷுஷ்ரூஷவே ந வாச்யஂ –ந ச மாஂ யஃ அப்யஸூயதி மத் ஸ்வரூபே மதைஷ்வர்யே மத் குணேஷு ச கதிதேஷு யோ தோஷம் ஆவிஷ்கரோதி ந தஸ்மை வாச்யம்? -(குணத்தைக் குற்றமாகக் கொள்ளுதல் அஸூயை – குற்றத்தையே குணமாக்க கொள்ளுதல் வாத்ஸல்யம் கீழ் சொன்னவற்றை விட அஸூயை மிகவும் தாழ்ந்தது -9-1- தொடக்கத்திலேயே -அஸூயை இல்லாத உனக்குச் சொல்கிறேன் என்றானே- )அஸமாந  விபக்தி நிர்தேஷஃ தஸ்ய அத்யந்த பரிஹரணீயதா ஜ்ஞாபநாய.(அஸமாந விபக்தி -கீழ் எல்லாம் -சொல்லப் படக் கூடாது -இங்கே சொல்லாதே )

৷৷18.67৷৷ஏவஂ ஸ்வோபதேஷேந ப்ரதிஷ்டிததத்த்வஹிதஜ்ஞாநஸ்ய அர்ஜுநஸ்ய கர்தவ்யவிஷேஷோபதேஷவ்யாஜேந ஸம்ப்ரதாயவிதிஸித்த்யதமஸ்மிந் ஷாஸ்த்ரேநதிகாரிணஸ்தாவத்வ்யநக்தி — ‘இதஂ தே’ இதி ஷ்லோகேந.’இதம்’ இதி ஸாமாந்யேந நிர்திஷ்டஂ பூர்வாபரக்ரந்தஸ்தைஃ பதைர்விவரிணோதி — ‘இத தே பரமஂ குஹ்யஂ ஷாஸ்த்ரஂ மயாக்யாதமிதி’. அத்ர தேஷப்தஃ’இதி தே ஜ்ஞாநமாக்யாதம்’ [18.63] இதி ஷ்லோகாதாகரிஷ்டஃ; ஷ்லோகஸ்தஸ்ய து தேஷப்தஸ்ய’த்வயேதி’ வ்யாக்ரியா. அதபஸ்கஷப்தேந தபஃப்ராரம்பமாத்ரே கரிதேபி ஷ்ரவணாநதிகாரித்வஂ விவக்ஷிதமித்யாஹ — ‘அதப்ததபஸ’ இதி.’யஸ்ய தேவே பரா பக்திர்யதா தேவே ததா குரௌ’ [ஷ்வே.உ.6.23+ஸுபாலோ.16.2+யோ.ஷி.2.22+ஷாட்யாய.37] இதி ஷ்ருத்யநுஸாரேணாஹ — ‘த்வயி வக்தரி மயி சாபக்தாயேதி’. அபக்தத்வே விஷேஷஸங்கோசகாபாவாத்.’மத்பக்தேஷ்வபிதாஸ்யதி’ [18.68] இத்யநந்தரஂ பக்தாவாதரதர்ஷநாச்ச.

‘கதாசந’ இத்யநேந தபஸி ஸம்யகநுஷ்டிதேபீதி விவக்ஷிதமித்யாஹ — ‘தப்தபஸே சாபக்தாயேதி’. ப்ரத்யேகபரிஹரணீயத்வாய ச நஞ்ப்ரயோகாவரித்திஃ. உத்தரோத்தரதீவ்ரத்வதாத்பர்யேண க்ரமவிஷேஷ இத்யபிப்ராயேணாஹ — ‘பக்தாயாப்யஷுஷ்ரூஷவ’ இதி. அத்ராபி ஸங்கோசஹேத்வபாவாத் பூர்வவத்.’ப்ரப்ரூஹி தஂ ஷ்ரத்ததாநாய மஹ்யம்’ [கடோ.1.1.13] இதி ஷ்ருத்யா ச ஷுஷ்ரூஷாப்ராதாந்யமவகதம்? மாமப்யஸூயதி மஹ்யமப்யஸூயதீத்யர்தஃ.’க்ருததுஹேர்ஷ்யாஸூயார்தாநாஂ யஂ ப்ரதி கோபஃ’ [அஷ்டா.1.4.37] இதி கர்மத்வஸ்யாபி ஸித்தத்வாத் த்விதீயாத்ராநபோதிதா. மாஂ ப்ரத்யஸூயதீத்யுக்தஂ பவதி. விஷயதோ லக்ஷணதஷ்ச அஸூயாஂ வ்யநக்தி’மத்ஸ்வரூப’ இத்யாதிநா.’மாம்’ இதி ஸப்ரகாரபராமர்ஷ இதி பாவஃ.

ப்ரக்ரமாநுரோதேந’நசாப்யஸூயவே’ இதி வக்தவ்யே ப்ரக்ரமபங்கேந விரூபவாக்யகரணஂ கேநாபிப்ராயேணேத்யத்ராஹ — ‘அஸமாநேதி’. “அஸூயகாயாநரிஜவே” [முக்திகோ.1.51]’அஸூயகாய மாஂ மாதாஃ’ [மநுஃ2.114] இத்யாதிபிரஸூயாமாத்ரவதே ப்ரவசநஂ நிஷித்தம். பகவத்யப்யஸூயாவதே து ப்ரவசநமத்யந்தபரிஹரணீயமிதி பாவஃ.’ந ச ৷৷. வாச்யம்’ இத்யநேநாநதிகாரிஷு ப்ரவசநே ப்ரத்யவாயஃ ஸூசிதஃ. அத்ர’மேதாவிநே தபஸ்விநே வா’ இத்யநயோர்விகல்போந்யத்ர தரிஷ்டஃ? பக்தாதேஸ்து ந ததா; அதோ பக்த்யாதிரஹிதாய ந மேதாவிநே நாபி தபஸ்விநே வாச்யம். ஸர்வகுணயோகேபி பகவத்யப்யஸூயாவதே ந வாச்யமித்யுக்தஂ பவதி.

———————

ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:

68. ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது.
தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை
முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது.
உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு.
ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது
தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான்.
இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.

அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது.
தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான்.
பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு
தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.

பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது.
தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை.
பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன.
அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.

৷৷18.68৷৷இதஂ பரமஂ குஹ்யஂ மத் பக்தேஷு யஃ அபிதாஸ்யதி? வ்யாக்யாஸ்யதி ஸஃ மயி பரமாஂ பக்திஂ கரித்வா மாம் ஏவ ஏஷ்யதி ந தத்ர ஸஂஷயஃ.(நான்கு வர்ணத்தவர்களுக்கும் கேட்க அதிகாரம் உண்டு-பக்தியே வேண்டுவது-ஸ்வயம் ப்ரயோஜனன பக்தி நிஷ்டன் -கதி த்ரய மூலத்தவம்-வேறே ஒன்றையும் கணிசிக்க மாட்டானே -பரமபக்திக்கு வந்தவன் என்னையே அடைகிறான் -சங்கை இதில் இல்லை -அந்த பக்தனுக்கும் என்னைப் பற்றிய சங்கை இல்லை )

৷৷18.68৷৷அதாதிகாரிவிஷேஷேஷ்வவஷ்யவக்தவ்யத்வஂ தேஷு வசநஸ்யாபவர்காக்யபலபர்யவஸாநஂ சோச்யதே’ய இதம்’ இதி ஷ்லோகேந.’மத்பக்தேஷு’ இத்யநேநைவாதபஸ்கத்வாதிதோஷா தூரோத்ஸாரிதாஃ? ஸ்திதமநஸாஂ தேஷாஂ ததஸம்பவாத்.’ஷ்ராவயேச்சதுரோ வர்ணாந்’ [ம.பா.12.327.48] இத்யேதாவதா ஸர்வேஷு வக்தவ்யம்? தேஷ்வேவ மத்பக்தா ஏவ ஷ்ரவணாதிகாரிண இத்யுக்தஂ பவதி. அத்ர’அபிதாஸ்யதி’ இத்யர்தஷ்ராவணபர்யந்தமித்யாஹ — ‘வ்யாக்யாஸ்யதீதி’. யத்வரித்தவஷாத்’ஸஃ’ இத்யத்யாஹரிதம். யோக்யேஷு வ்யாக்யாநமபி கர்மயோகாதிகோடௌ? பக்தியோகாங்குரே வா நிவிஷ்டஂ பரபக்திஂ ஜநயதீதி’பக்திஂ மயி பராஂ கரித்வா’ இத்யுச்யதே.’மாமேவ’ இத்யவதாரணேந மத்கீதாவ்யாக்யாயிநோ ந க்ஷுத்ரபலேஷு ஸங்கஂ ஜநயாமீத்யபிப்ரேதம். பலிதமாஹ — ‘ந தத்ர ஸஂஷய’ இதி.’அஸஂஷயஃ’ இதி ஸஂஷய ஏவ வா நிஷித்யதே.

———————-

பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:

69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி

தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன்,
மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை,
புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு,
ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன் வேறு எவனும்,
ந பவிதா-ஆக மாட்டான்.

மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை.
உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.

எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம்.
அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது.
இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது.
அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன.
அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன.
அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம்.
ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை.
அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை.
கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.

வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது,
பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது.
அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம்
மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.

৷৷18.69৷৷ஸர்வேஷு மநுஷ்யேஷு இதஃ பூர்வஂ தஸ்மாத் அந்யோ மநுஷ்யோ மே ந கஷ்சித் ப்ரிய கரித் தமஃ அபூத்? இதஃ உத்தரஂ ச ந பவிதா? அயோக்யாநாஂ ப்ரதமம் உபாதாநஂ யோக்யாநாம் அகதநாத் அபி தத் கதநஸ்ய அநிஷ்ட தமத்வாத்.

৷৷18.69৷৷ஸ்வஷாஸ்த்ரவ்யாக்யாநஸ்ய ஸ்வப்ராப்திஸாதநத்வே த்வாரமுச்யதே — ‘ந ச தஸ்மாத்’ இதி ஷ்லோகேந. ப்ரியகரித்தமத்வப்ரியதரத்வயோர்ஹேதுகார்யபாவேந’பவிதா’ இத்யுபாத்தக்ரியயைவாந்வயே ஸம்பவத்யபி காலத்ரயவர்திநிஷேதேர்தகௌரவேண தாத்பர்யஸித்த்யர்தஂ’மநுஷ்யேஷ்விதஃ பூர்வமித்யாத்யுக்தம்’. நநு ஷாஸ்த்ரஸ்யாதிகாரீ அபேக்ஷிதஃ? அதஃ ஸ தாவத்வக்தவ்யஃ; அநதிகாரீ து தத ஏவார்தாத் வ்யுதஸ்யதே; ப்ரதாநதமாததிகாரிணோநந்தரஂ வா வ்யவச்சேத்யதயாநதிகாரீ வக்தவ்யஃ; இஹ து தத்வைபரீத்யே கிஂ நிபந்தநஂ இத்யத்ராஹ — ‘அயோக்யாநாமிதி தத்கதநஸ்ய’ — அயோக்யாந்ப்ரதி கதநஸ்யேத்யர்தஃ.’அநிஷ்டதமத்வாத்’ அநிஷ்டதமத்வஜ்ஞாபநார்தமித்யர்தஃ. யோக்யாநாமகதநஸ்யாநிஷ்டத்வஂ’ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்மவித்யாம்’ [முஂ.உ.1.2.13] இதி ப்ரஹ்மவித்யாப்ரவசநஸ்ய வைதத்வாத். ப்ரோவாச ப்ரப்ரூயாதித்யர்தஃ.’சந்தஸி லுங்லங்லிடஃ’ [அஷ்டா.3.4.6] இதி விதாநாத். அந்யதா “ஸ குருமேவாபிகச்சேத்” [முஂ.உ.1.2.12] இதி ப்ரதமேந வாக்யேநாநந்வயாத்.

——————

பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :

70. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:

இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை,
ய: அத்யேஷ்யதே-எவன் கற்றறிகிறானோ,
தேந ச அஹம்-அவனாலும் நான்,
ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன்,
இதி மே மதி:-இஃதென் கொள்கை.

நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால்
நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.

கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான்.
உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது.
வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான்.
அக்கோட்பாட்டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான்.
நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே.
கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது.
ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.

৷৷18.70৷৷ய இமம் ஆவயோஃ தர்ம்யஂ ஸஂவாதம் அத்யேஷ்யதே? (கீதா உபநிஷத் -அத்யயனம் பண்ண வேண்டுமே )தேந ஜ்ஞாந யஜ்ஞேந அஹம் இஷ்டஃ ஸ்யாம்; இதி மே மதிஃ. அஸ்மிந் யோ ஜ்ஞாந யஜ்ஞஃ அபிதீயதே? தேந அஹம் ஏதத் அத்யயந மாத்ரேண இஷ்டஃ ஸ்யாம் இத்யர்தஃ.(நமனும் உத்கலனும் பேச நரகில் உள்ளார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமானதே-சாதன நிஷ்டன் ஆகிறான் -கீழ் சொன்னதை விட ஒரு நிலை கீழ் )

(அதிகாரிகள் உள்ளாருக்கு சொல்ல வேண்டியதை விட அதிகாரிகள் இல்லாதவர்களுக்கு சொல்லாமல் இருப்பதே பிரதானம் என்பதால் அத்தை முன்னமே அருளிச் செய்தான்)

৷৷18.70৷৷ஏவமுபதேஷ்டுஃ பலமுக்தம்; அத ஷப்ததோர்ததஷ்ச குருஸகாஷாதத்யேதுஃ பலமுச்யதே — ‘அத்யேஷ்யதே’ இத்யாதிநா ஷ்லோகத்வயேந.’ஷ்ரரிணுயாத்’ இதி பரைரதீயமாநபாடஷ்ரவணமாத்ரஂ வா.’அத்யேஷ்யதே’ இதி — நஹி ஸர்வஜ்ஞஸ்ய பகவதோ பவிஷ்யத்பாரதநிபந்தாவேக்ஷணேந ஸ்வஸஂவாதாத்யயநபாவித்வோக்திஃ; அபிது பூதாவேக்ஷணேந. மஹாபாரதஂ ஹி தரிதராஷ்ட்ராத்யுத்பத்தேஃ ப்ராகேவ பகவத்ப்ரஸாதலப்ததிவ்யசக்ஷுஷா பகவதா வ்யாஸேந நிபத்தம். அநுஜ்ஞாதஂ ச ஷிஷ்யேப்யஃ; தைஷ்ச’நாரதோ ஷ்ராவயத்தேவாநஸிதோ தேவலஃ பிதரி஀ந். கந்தர்வயக்ஷரக்ஷாஂஸி ஷ்ராவயாமாஸ வை ஷுகஃ’ [ம.பா.1.1.7;8] இதி மாநுஷவ்யதிரிக்தேஷு லோகேஷு ப்ரகாஷிதம். மாநுஷே து லோகே ஜநமேஜயபுரஸ்காரேண ப்ரகாஷிஷ்யதே. ததபேக்ஷயோக்தம் — ‘அத்யேஷ்யதே’ இதி. உபநிஷத்ஸாரத்வாதத்யயநோக்திஃ. கதிதஂ சாஷ்ரமவர்ணநே கவிபிஃ’அநவரதாதீதபகவத்கீதம்’ இதி.’ஷ்ரேயாந் த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞஃ பரந்தப!’ [4.33] இதி யஃ ப்ரதமஷட்கே ஜ்ஞாநயஜ்ஞோபிஹிதஃ? நாஸாவத்ர விவக்ஷிதஃ; அபிது பக்தியோகப்ரகரணே’ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே’ [9.15] இதி யோ பகவதநுஸந்தாநவிஷேஷரூபோ ஜ்ஞாநயஜ்ஞ உக்தஃ? ஸ ஏவாத்ர ஷாஸ்த்ரஸாரபூதோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘அஸ்மிந் யோ ஜ்ஞாநயஜ்ஞ’ இதி. விதிஜபோபாஂஷுமாநஸாநாஂ ஜ்ஞாநயஜ்ஞோ மாநஸத்வாத்விஷிஷ்டஃ.’ஏததத்யயநமாத்ரேணேதி’ — ‘அயமபிப்ராயஃ’ — ‘யோஷ்வமேதேந யஜதே. ய உ சைநமேவஂ வேத’ [அ.மே.2]’யஂ யஂ க்ரதுமதீதே தேநதேநாஸ்யேஷ்டஂ பவதி’ [ஆர.2] இத்யாதிஷு யதா,தத்தத்க்ரத்வத்யயநஸ்ய தத்துல்யபலதா? ததாத்ராபி ஜ்ஞாநயஜ்ஞவத்பகவத்ப்ரீதிஜநகத்வஂ தத்கீதாத்யயநஸ்ய — இதி.

——————-

தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை.
அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :

71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்

ய: நர:-எந்த மனிதன், ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக,
அநஸூய: ச-பொறாமை போக்கியவனாக,
ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே செய்வானெனினும்,
ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு,
புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை,
ப்ராப்நுயாத்-எய்துவான்.

நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான்,
அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.

உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை
அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான்.
அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம்.
அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.
பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது.
பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது.
இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்.
பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது.
பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.

৷৷18.71৷৷ஷ்ரத்தாவாந் அநஸூயஷ்ச யோ நரஃ ஷ்ரரிணுயாத் அபி தேந ஷ்ரவண மாத்ரேண ஸஃ அபி பக்தி விரோதி பாபேப்யோ முக்தஃ புண்ய கர்மணாஂ மத் பக்தாநாஂ லோகாந் ஸமூஹாந் ப்ராப்நுயாத்.

(பக்தி ஆரம்ப விரோதியைத் தொலைக்கிறேன் -மங்கள ஸமூஹம் -பாகவதர் குழாங்கள் -சேர்வான் -ஸ்வர்க்கம் த்ருணவத் எண்ணுவான்
பாகவதர் உபதேசம் பெற்று மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவான்-ஸ்ரவணம் நேராகப் பலன் தராதே -பக்தி ஒன்றாலே பேறு )

৷৷18.71৷৷’ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச’ இதி சகாராதத்ராநுஷக்தாநாமபி ப்ராகுக்தாநாஂ ப்ரணிபாதபரிப்ரஷ்நஸேவாநாஂ க்ரஹணம்.’ஷ்ரரிணுயாத்’ இத்யநேந ஆசார்யஸகாஷாதிதி கம்யதே. ஷ்ரூயதே ஹி — “தத்விஜ்ஞாநார்தஂ ஸ குருமேவாபிகச்சேத்” [முஂ.உ.1.2.12] இதி. “ஆசார்யாத்த்யேவ வித்யா விதிதா ஸாதிஷ்டஂ ப்ராபத்” [சாஂ.உ.4.9.3] இதி. ஏதேந ஸ்வயஂ க்ரந்தநிரீக்ஷணமந்யாயேநாந்யஸ்மாத்க்ரஹணஂ ச வ்யவச்சித்யதே.’ஸோபி’ இதி விலம்பஃ ஸூச்யதே. தேந’பக்திவிரோதிப்யோ முக்த’ இத்யுக்தம். அந்யதா வித்யந்தரவையர்த்யாதிப்ரஸங்க இதி பாவஃ. அர்தஜ்ஞாநாதிமதஷ்ச கைமுத்யமபி ஷப்தேந வ்யஞ்ஜிதம். ப்ரவசநபடநயோர்மோக்ஷைகாந்தபலஸ்ய பூர்வமுக்தத்வாத் ஸஹபாவேநாக்ர்யப்ராயந்யாயாச்ச்ரவணேபி தாதரிஷபலஂ பகவதபிப்ரேதஂ ஸ்வீகர்துமுசிதம். நரககல்பஸ்வர்காதிப்ராப்தேரநபிமதத்வாந்மத்பக்தாநாஂ’லோகாந்ஸமூஹாநித்யுக்தம்’. அத்ர பாடஷ்ரவணாதிப்ரீதோ பகவாந் ஸ்வபக்தாந் ப்ராபயதி. பகவத்பக்தாநாஂ ப்ராப்திர்ஹி யோகோபதேஷாதித்வாரா மோக்ஷாய ஸ்யாத்.

—————–

மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு.
அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:

72. கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய

பார்த-பார்த்தா,
ஏதத் த்வயா ஏகாக்ரேண சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு,
கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா?
தநஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்,
கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?

பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது.
ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும்
சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த
மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது.
புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.

குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன.
ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது.
ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது.
அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத்
திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான்.
அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான்.
வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை.
அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம்
தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.

৷৷18.72৷৷மயா கதிதம் ஏதத் பார்த த்வயா அவஹிதேந சேதஸா கச்சித் ஷ்ருதம் தவ அஜ்ஞாந ஸஂமோஹஃ கச்சித் ப்ரநஷ்டஃ யேந அஜ்ஞாநேந மூடோ ந யோத்ஸ்யாமி? இதி உக்தவாந்.

৷৷18.72৷৷அதார்ஜுநஸ்ய விதிதாஷயோபி பகவாநாதரேணாவிஸ்மரணாயோபதேஷஸாபல்யஂ ஜிஜ்ஞாஸமாந இவ பரிச்சதி — ‘கச்சிதிதி’. ஏததிதி அர்தபர்யந்தத்வாச்ச்ருதமித்யர்தஃ. தீபர்யந்தஂ மத்கதிதமேதத்கிஂ நிரர்தகமித்யபிப்ராயேணைதச்சப்த இத்யாஹ — ‘மயா கதிதமேததிதி’. அஜ்ஞாநஸம்மோஹஃ கச்சித்ப்ரணஷ்ட இதி ஷ்ருதபலாநுயோகஃ. அஜ்ஞாநஹேதுகஂ ப்ராந்திஜ்ஞாநமிஹாஜ்ஞாநஸம்மோஹஃ. யேநாஜ்ஞாநேந மூட இத்யஸ்யாஜ்ஞாநஸம்மோஹ இதி ப்ரதிநிர்தேஷே தேநாஜ்ஞாநேந ஜநிதஸம்மோஹ இத்யந்வயோ பாவ்யஃ.

—————–

நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :

அர்ஜுந உவாச

73. நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ

அர்ஜுந உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான்,
அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே மயக்கம் அழிந்தது,
மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன்,
கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம் விலகி நிற்கிறேன்,
தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது செய்வேன்.

அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்;
ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான்.
அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான்.
மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும்
உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது.
அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான்.
அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை;
அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி
அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது.
செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.

அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து.
எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை.
பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள்
ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய்
அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை.
ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று.
யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான்.
அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான்.
அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது.
அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :

அச்யுதா என்று தன்னை ஆட்கொண்டவனை அவன் அழைக்கிறான்.
அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது.
தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும்
பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.

மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம்.
மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே
மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது.
இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை;
தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.

ஸ்ம்ருதி: மயா லப்தா – ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம்.
மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது.
மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்;
எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான்.
தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால்
ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது.
அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம்.
ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.

த்வத் ப்ரஸாதாத் – உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம்.
மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான்
என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம்.
ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று.
அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது.
குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான்.
ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான்.
தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.

ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம்.
புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன,
ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை.
பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை.
அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன்
ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான்.
தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது.
பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.

கத ஸந்தேஹ : – சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி
வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத்
தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி
பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.

தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம்.
அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான்.
செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று.
சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

தவளைக்குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து
விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும்,
அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.

৷৷18.73৷৷அர்ஜுந உவாச — மோஹஃ விபரீத ஜ்ஞாந த்வத் ப்ரஸாதாத் மம தத் விநஷ்டம். ஸ்மரிதிஃ யதாவஸ்தித தத்த்வ ஜ்ஞாநஂ த்வத்ப்ரஸாதாத் ஏவ தத் ச லப்தம்.அநாத்மநி ப்ரகரிதௌ ஆத்மாபிமாந ரூபோ மோஹஃ? பரம புருஷ ஷரீரதயா ததாத்மகஸ்ய கரித்ஸ்நஸ்ய சிதசித்வஸ்துநஃ அததாத்மாபிமாந ரூபஃ ச? நித்ய நைமித்திக ரூபஸ்ய கர்மணஃ பரம புருஷாராதநதயா தத் ப்ராப்த் யுபாய பூதஸ்ய பந்தத்வ புத்தி ரூபஃ ச? ஸர்வோ விநஷ்டஃ. ஆத்மநஃ ப்ரகரிதி விலக்ஷணத்வதத் ஸ்வபாவ ரஹித தாஜ்ஞாதரித்வைக ஸ்வபாவதா பரம புருஷ ஷேஷதா தந்நியாம்யத்வைக ஸ்வரூபதாஜ்ஞாநம்? பகவதோ நிகில ஜகதுத்பத்தி ஸ்திதி ப்ரலய லீல அஷேஷ தோஷ ப்ரத்யநீக கல்யாணைக ஸ்வரூப ஸ்வாபாவிக அநவதிக அதிஷய ஜ்ஞாந பலைஷ்வர்ய வீர்ய ஷக்தி தேஜஃ ப்ரபரிதி ஸமஸ்த கல்யாண குண கண மஹார்ணவ பர ப்ரஹ்ம ஷப்த அபிதேய பரம புருஷ யாதாத்ம்ய விஜ்ஞாநஂ ச? ஏவஂ ரூபஂ பராவர தத்த்வ யாதாத்ம்ய விஜ்ஞாந ததப்யாஸ பூர்வக அஹரஹர் உபசீயமாந பரம புருஷ ப்ரீத்யைக பல நித்ய நைமித்திக கர்ம நிஷித்த பரிஹார-ஷம தமாத் யாத்ம குண நிர்வர்த்ய பக்தி ரூபதாபந்ந பரம புருஷ உபாஸநைக லப்யோ வேதாந்த வேத்யஃ பரம புருஷோ வாஸுதேவஃ த்வம் இதி ஜ்ஞாநஂ ச லப்தம்.ததஃ ச பந்து ஸ்நேஹ காருண்ய ப்ரவரித்த விபரீத ஜ்ஞாந மூலாத் ஸர்வ ஸ்மாத் அவஸாதாத் விமுக்தோ கத ஸஂதேஹஃ ஸ்வஸ்தஃ ஸ்திதஃ அஸ்மி. இதாநீம் ஏவ யுத்தாதி கர்தவ்யதா விஷயஂ தவ வசநஂ கரிஷ்யே யதோக்தஂ யுத்தாதிகஂ கரிஷ்யே இத்யர்தஃ.தரிதராஷ்ட்ராய ஸ்வஸ்ய புத்ராஃ பாண்டவாஃ ச யுத்தே கிம் அகுர்வத இதி பரிச்சதே — ஸஂஜய உவாச —

(யுத்தாதி சொன்னாலும் -ஆதி வேறே ஒன்றும் செய்ய வில்லை -மறந்தே போனேன்-என்றான் அப்ரீதி அடைந்தேன் என்று சொல்லி -அநு கீதை மீண்டும் சாதித்தான்)

৷৷18.73৷৷அத கரிதஜ்ஞதாஂஷஂ வ்யஞ்ஜயந்நர்ஜுநஃ ஷ்ருதபலஸித்த்யா ப்ரதிவக்தி’நஷ்டோ மோஹஃ’ இதி. அர்ஜுநேநாஸ்யார்தஸ்யேதஃபூர்வமநவகமாத்வாக்யேந ப்ரதமஂ ஸ்மரிதேரநுதயாத்தந்மூலபூதஷப்தஜந்யோநுபவ இஹ ஸ்மரிதிஷப்தேந லக்ஷ்யத இத்யாஹ — ‘ஸ்மரிதிர்யதாவஸ்திததத்த்வஜ்ஞாநமிதி’.’ஸ நோ தேவஃ ஷுபயா ஸ்மரித்யா ஸஂயுநக்து’ இத்யஸ்ய மந்த்ரஸ்ய’ஸ நோ புத்த்யா ஷுபயா ஸஂயுநக்தி(க்து)’ [ஷ்வே.உ.3.4] இதி ஷாகாந்தரே பாடதர்ஷநாத்ஸ்மரிதிபுத்திஷப்தாவதூரவிப்ரகர்ஷேணேகார்தௌ யுக்தாவிதி பாவஃ. நிவர்த்யமோஹஸ்வரூபஂ சோபதேஷஸ்யாமூலசூடபராமர்ஷேந வ்யநக்தி — ‘அநாத்மநீத்யாதிநா’. ப்ரகரிதிவிலக்ஷணத்வஂ ஸ்வப்ரகாஷத்வாதிபிஃ விகாராத்யபாவாத்தத்ஸ்வபாவரஹிததா. ஸ்வஸ்தஃ ப்ரகரிதிஸ்த இத்யர்தஃ. உபதேஷவசநஸ்ய ஸ்வரூபேணாநநுஷ்டேயத்வாத்தேந தத்ப்ரதிபாத்யஂ லக்ஷ்யத இத்யாஹ — ‘யதோக்தஂ யுத்தாதிகமிதி’.

‘ஏவஂ சாபிப்ராயஃ’ — ஆதிஷப்தேந பக்தியோகபர்யந்தக்ரஹணம். அநநுஷ்டாநஂ து ஸ்மரிதிப்ரஂஷாதிதி ஹி வக்ஷ்யதி — ‘யத்து தத்பவதா (யத்தத்பகவதா) ப்ரோக்தஂ புரா கேஷவ! ஸௌஹரிதாத். தத்ஸர்வஂ புருஷவ்யாக்ர! ப்ரஷ்டஂ மே நஷ்டசேதஸஃ’ [அ.கீ.1.6] இதி. ப்ரதிவக்ஷ்யதி ச பகவாந் — ‘ஷ்ராவிதஸ்த்வஂ மயா குஹ்யஂ ஜ்ஞாபிதஷ்ச ஸநாதநம். தர்மஂ ஸ்வரூபிணஂ பார்த! ஸர்வலோகாஂஷ்ச ஷாஷ்வதாந். அபுத்த்யா மாக்ரஹீர்யத்த்வஂ தந்மே ஸுமஹதப்ரியம்’ [அ.கீ.1.9;10]’ஸ ஹி தர்மஃ ஸுபர்யாப்தோ ப்ரஹ்மணஃ பரிவேதநே’ [அ.கீ.1.12] இதி.

——————-

ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது.
இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :

ஸஞ்ஜய உவாச

74. இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்,
இதி அஹம்-இப்படி நான்,
வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும்,
இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்,
ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.

சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த
அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.

உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும்.
பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன்,
பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால்
புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை.
திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.

அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக
நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

৷৷18.74৷৷ஸஂஜய உவாச — இதி ஏவஂ வாஸுதேவஸ்ய வஸுதேவ ஸூநோஃ பார்தஸ்ய ச தத் பிதரிஷ் வஸுஃ புத்ரஸ்ய ச மஹாத்மநோ மஹா புத்தேஃ தத் பத த்வந்த்வம் ஆஷ்ரிதஸ்ய இமஂ ரோம ஹர்ஷணம் அத்புதஂ ஸஂவாதம் அஹஂ யதோக்தம் அஷ்ரௌஷஂ ஷ்ருதவாந் அஹம்.

৷৷18.74৷৷’மாமகாஃ பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய!’ [1.1] இதி ப்ரஷ்நே கரித்ஸ்நஂ ஸங்கமயதீத்யாஹ — ‘தரிதராஷ்ட்ராயேதி’.’மஹாத்மநஃ’ இத்யுக்தஂ வ்யநக்தி — ‘தத்பதத்வந்த்வமாஷ்ரிதஸ்யேதி’.’கரிஷ்ணாஷ்ரயாஃ கரிஷ்ணபலாஃ கரிஷ்ணநாதாஷ்ச பாண்டவாஃ’ இதி ஹ்யந்யத்ரோக்தம். அத்ரச’ஷிஷ்யஸ்தேஹஂ ஷாதி மாஂ த்வாஂ ப்ரபந்நம்’ [2.7] இதி. அத்புதத்வாதிஷயாத்ரோமஹர்ஷணத்வம்.’யதோக்தமஷ்ரௌஷமிதி’ — யதா தாப்யாமுக்தஂ? தத்ர மமாஷ்ருதாஂஷோ நாஸ்தீத்யர்தஃ. ஏதேந யதார்ததர்ஷித்வஂ வ்யஞ்ஜிதம். யத்வா யதா தவ மயோக்தம்? ஏவமேவ ஷ்ருதவாநஸ்மி? ததஷ்ச யதாதரிஷ்டார்தவாதித்வஂ வ்யஞ்ஜிதஂ பவதி.

———————-

தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க
ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :

75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாஷாத்கதயத: ஸ்வயம்

யோகேஸ்வராத் க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து,
பரம் குஹ்யம்-பரம ரகசியமான,
ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த யோகத்தை தான்,
ஸாஷாத் கதயத:-நேராகவே சொல்லும்போது,
அஹம் வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால்,
ஸ்ருதவாந்-கேட்டேன்.

யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது
நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும்
விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது,
அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.

৷৷18.75৷৷வ்யாஸ ப்ரஸாதாத் வ்யாஸ அநுக்ரஹேண திவ்ய சக்ஷுஃஷ்ரோத்ர லாபாத் ஏதத் பரஂ யோகாக்யஂ குஹ்யஂ யோகேஷ்வராத் ஜ்ஞாந பலைஷ்வர்ய வீர்ய ஷக்தி தேஜஸாஂ நிதேஃ பகவதஃ கரிஷ்ணாத் ஸ்வயம் ஏவ கதயதஃ ஸாக்ஷாத் ஷ்ருதவாந் அஹம்.

৷৷18.75৷৷மந்தஸ்ய மோஹநகாலுஷ்யநிவரித்திலக்ஷணப்ரஸாதஸ்யாத்ராபாவாத்’வ்யாஸாநுக்ரஹேணேத்யுக்தம்’. தேவைரப்யதரிஷ்யஸ்ய ஷ்ரீவிஷ்வரூபஸ்ய தர்ஷநார்தஂ தூரஸ்தவாக்யஷ்ரவணார்தஂ ச அநுக்ரஹாவாந்தரவ்யாபாரமாஹ — ‘திவ்யசக்ஷுஷ்ஷ்ரோத்ரலாபாதிதி’. அதீந்த்ரியாதிக்ரஹணஸாமர்த்யாதிமாத்ரேணாத்ர திவ்யத்வம். ஏததிதி நபுஂஸகநிஷ்பத்தயே யோகஷப்தஂ விஷேஷணீகரோதி — ‘யோகாக்யமிதி’.’பரஂ ப்ரஹ்ம’ இத்யகர்மணி யோக்யதாபிப்ராயம். ததாபூதமபி ஹி மயா ஷ்ருதமிதி வ்யாஸமாஹாத்ம்யவ்யஞ்ஜநம்.’யோகேஷ்வராத்’ இத்யத்ர யோகஷப்தஃ கல்யாணகுணயோகபரஃ’ஏதாஂ விபூதிஂ யோகஂ ச’ [10.7] இதி ப்ராகுக்தவதித்யாஹ — ‘ஜ்ஞாநேதி’. ஸ்வயமேவ கதயதஃ? ந து பரைர்வாசயத இத்யர்தஃ. தேந வக்தரிவைலக்ஷண்யோக்திஃ. யதா’பஞ்சராத்ரஸ்ய கரித்ஸ்நஸ்ய வக்தா நாராயணஃ ஸ்வயம்’ [ம.பா.12.348.68] இதி.’ஸாக்ஷாச்ச்ருதவாநஹமிதி’ — ந து விவஸ்வதர்ஜுநாதிதச்சிஷ்யத்வாரேத்யர்தஃ. யத்வா தூரஸ்தோபி ப்ரத்யக்ஷஂ ஷ்ருதவாநிதி.

——————-

அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :

76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:

ராஜந்-அரசனே,
கேஸவார்ஜுநயோ:-கேசவ அர்ஜுனரின்,
அத்புதம் புண்யம் ச இமம் ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை,
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து,
முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும்,
ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.

அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான்,
மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.

ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார்
அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.

৷৷18.76৷৷கேஷவார்ஜுநயோஃ இமஂ புண்யம் அத்புதஂ ஸஂவாதஂ ஸாக்ஷாச் ச்ருதஂ ஸ்மரித்வா முஹுஃ முஹுஃ ஹரிஷ்யாமி

৷৷18.76৷৷அத்புததரத்வமாஹ — ‘ராஜந்’ இத்யாதிநா ஷ்லோகத்வயேந. புண்யஂ ஷ்ரவணமாத்ரேணாபி ஜ்ஞாநயஜ்ஞாதிவத்பாவநம். அத்புதஂ ஷப்ததோர்ததஷ்ச ஆஷ்சார்யாவஹம்.

—————

77. தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:

ராஜந்-அரசனே!
ஹரே: அதி அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான,
தத் ரூபம் ச-அந்த ரூபத்தை,
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து,
மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது,
ச புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து
எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான்.
சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு
பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு
போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும்
அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை.
திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது.
தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.

৷৷18.77৷৷தத் ச அர்ஜுநாய ப்ரகாஷிதம் ஐஷ்வரஂ ஹரேஃ அத்யத்புதஂ ரூபஂ மயா ஸாக்ஷாத் கரிதஂ ஸஂஸ்மரித்ய ஸஂஸ்மரித்ய ஹரிஷ்யதோ மே மஹாந் விஸ்மயோ ஜாயதே புநஃ புநஃ ச ஹரிஷ்யாமி.கிம் அத்ர பஹுநா உக்தேந(.பல சொல்லி என்ன பயன் சொல்லப் புகில் மஹா பாரதம் ஆகுமே -அத்புத ரூபம் ஸ்லோகத்தில் விஸ்வ ரூபம் பாஷ்யத்தில் -நினையும் தோறும் சொல்லும் தோறும் நெஞ்சு உருகும் அன்றோ -தூதர்கள் சஜாதீயம் -திருவடி கேட்டது லவகுசர் சம்வாதம்)

৷৷18.77৷৷தச்ச ரூபமித்யேதத்ஸர்வஜநப்ரத்யக்ஷவஸுதேவதநயரூபாத்வ்யவச்சேதார்தமித்யாஹ — ‘அர்ஜுநாய ப்ரகாஷிதமைஷ்வரஂ ரூபமிதி’.’ஸஂஸ்மரித்ய’ இத்யஸ்ய ஸமாநகர்தரிகத்வாய ஹரிஷ்யாமீதி ஸமபிவ்யாஹாராநுஸாரேண — ‘ஹரிஷ்யத’ இத்யுபாத்தம். தரிஷ்டஂ ச பலஂ மஹத்தரமித்யஸ்ய ஷ்லோகஸ்ய பாவஃ.

——————

78. யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர் த்ருவா நீதிர்மதிர்மம

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள் கண்ணனும்,
யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ,
தத்ர ஸ்ரீ: விஜய: பூதி:-அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்,
த்ருவா நீதி-நிலை தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான கருத்து (இது).

கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்?
அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.

இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும்.
கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன.

தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப் பெற்றாலும் அது யோகமாகிறது.
அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபை கூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன்.

முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான்.
முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும்.

இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான்.
கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும்.

இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் !
அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றி யுண்டாகாது;
உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம்
என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது.
கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.

தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும்.
மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு
தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று
ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்து விட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது.
யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.

கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக்
கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான்.
சத்வ குணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள்.
தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினை யாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது.
இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது.
பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும்
கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.

ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.
அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்கு மேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும்.
வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறை தவறி நடந்து கொள்ளமாட்டான்.
நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.

ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன.
அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன.
ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது.
அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.

சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற
வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும்.
அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும்,
ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.

பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார்.
அவதார புருஷரோடு வருபவர்கள் நித்திய முக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.

৷৷18.78৷৷யத்ர யோகேஷ்வரஃ கரித்ஸ் நஸ்ய உச்சாவச ரூபேண அவஸ்தி தஸ்ய சேதநஸ்ய அசேதநஸ்ய ச
வஸ்துநோ யே யே ஸ்வபாவ யோகாஃ தேஷாஂ ஸர்வேஷாஂ யோகாநாம் ஈஷ்வரஃ
ஸ்வ ஸஂகல்பாயத்த ஸ்வேதர ஸமஸ்த வஸ்து ஸ்வரூப ஸ்திதி ப்ரவரித்தி பேதஃ கரிஷ்ணோ வஸுதேவ ஸூநுஃ
யத்ர ச பார்தோ தநுர் தரஃ தத் பிதரிஷ் வஸுஃ புத்ரஃ தத் பத த்வந்த்வ ஏகாஷ்ரயஃ(தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி )
தத்ர ஷ்ரீஃ விஜயோ பூதிஃ நீதிஃ ச த்ருவா நிஷ்சலா இதி மதிஃ மம இதி. ,

৷৷18.78৷৷ஸுயோதநவிஜயபுபுத்ஸயா கரிதஸ்ய ப்ரஷ்நஸ்ய ஸஹஸா ஸாக்ஷாதுத்தரஂ வக்துமஷக்நுவந்’அர்தோக்தாஃ குருபாஞ்சாலாஃ’ இதி மத்வா கூடாபிஸந்திஃ ஸஂவாதாத்புதத்வாதிகமுக்தவாந்; தாவதாப்யஜாநதஃ ஸர்வாத்மநாந்தஸ்ய ஸாக்ஷாதுத்தரமாஹேத்யாஹ — ‘கிமத்ர பஹுநேதி’. அநபிப்ராயஜ்ஞஸ்ய தே பகவதார்ஜுநாயாத்யாத்மோபதேஷவைஷ்வரூப்யப்ரகாஷநாதிபிஃ பாண்டவவிஜயஸூசகைரலம்; ஸூசிதமேவ ஸ்பஷ்டஂ வதாமீத்யுச்யத இதி பாவஃ. யத்ர யஸ்மிந் பக்ஷ இத்யர்தஃ. யோகேஷ்வரஷப்தஸ்ய’கதயதஃ ஸ்வயம்’ இத்யத்ராப்ததமத்வாய ப்ராகுக்தாதர்தாதர்தாந்தரகதநம்? அநேகார்தஸம்பவாத் ப்ரகரணாநுகுண்யேந தத்தத்விஷேஷபரிக்ரஹோபபத்தேஷ்ச. ஈஷ்வரஷப்தஸ்ய நியந்தவ்யஸாகாங்க்ஷதயா யோகஷப்தேந நியந்தவ்யவிஷேஷஸமர்பணஂ ச யுக்ததமம்; அதோ விவக்ஷிதவிஜயாத்யநுகுணமர்தமாஹ — ‘கரித்ஸ்நஸ்யேத்யாதிநா’. தத்ர பலிதமாஹ — ‘ஸ்வஸங்கல்பேதி’. அவஸ்தாந்தரேபி ஷ்யாமபூதஃ; அதஃ கரிஷ்ணஷப்தோத்ராவதாரதஷாயாமபி யோகேஷ்வரத்வேநாஜஹத்ஸ்வஸ்வபாவத்வஸூசநார்த இத்யபிப்ராயேணாஹ — ‘வஸுதேவஸூநுரிதி’. பார்தஸம்பந்தவிஷேஷோப்யநேந ஸூசிதஃ. அத ஏவ ஹி பார்தஷப்த ஏவஂ வ்யாக்யாயதே — ‘தத்பிதரிஷ்வஸுஃ புத்ர’ இதி.’விஸரிஜ்ய ஸஷரஂ சாபம்’ [1.47] இதி ப்ராகுக்தாவஸ்தாவ்யதிரேகபரோத்ர தநுர்தரஷப்தஃ பகவதநுஷிஷ்டயதோக்தகரணார்ததயா காண்டீவாக்யதநுர்க்ரஹணத்யோதநார்தஃ. தத்ர விஷிஷ்டோபகரணவிஷேஷவீர்யாதிவிஷேஷோப்யந்தர்நீதஃ.’பார்தஸ்ய ச மஹாத்மநஃ’ [18.74] இதி ப்ராகுக்தமஹாமதித்வஂ பார்தஷப்தேந ஸூசிதமித்யாஹ — ‘தத்பதத்வந்த்வைகாஷ்ரய’ இதி. நஹ்யஸௌ த்வத்புத்ரவத்கரிஷ்ணமப்யர்த்ய நிஸ்ஸாராந்பரிகரத்வேந பரிஜக்ராஹேதி பாவஃ.’தத்ர’ இதி ஸாமாந்யநிர்தேஷஃ ப்ரத்யக்ஷபாருஷ்யபரிஹாரார்தஃ. ஷ்ரீஃ ராஜ்யாதிபோக்யஸமரித்திரூபா. விஜயஃ ஷத்ருநிராஸஃ.’தத்ர த்ருவஃ’ இதி விபரிணாமஃ. பூதிஃ ஐஷ்வர்யம்?’விபூதிர்பூதிரைஷ்வர்யம்’ [அமரஃ1.1.38] இதி பர்யாயபாடாத். தேநாஸ்ய புருஷஸ்ய ப்ரபுத்வாதிஷக்தியோகோ விவக்ஷிதஃ. உத்பந்நாயாஃ ஸமரித்தேருத்தரோத்தராபிவரித்திரூபமவநஂ பூதிஃ? நீதிஃ அர்தஷாஸ்த்ரஜந்யகர்தவ்யநிஷ்சயஃ? தச்சோதிதா தர்மாவிருத்தா வா வரித்திஃ; படுப்ரஜ்ஞைரவஹிதைரபி யுஷ்மாபிஷ்சதுர்பிரப்யுபாயைரகம்பநீயோ நயோ த்ருவஷப்தாபிப்ரேத இத்யாஹ — ‘நிஷ்சலேதி’.’மதிர்மம’ இத்யஸ்யாந்வயார்தமிதிஷப்தோத்யாஹரிதஃ. மமைவ மதிஃ’வித்யா (ஷ்ரரிணு) ராஜந்ந தே வித்யா மம வித்யா ந ஹீயதே. வித்யாஹீநஸ்தமோத்வஸ்தோ நாபிஜாநாஸி கேஷவம்’. [ம.பா.5.69.2]’மாயாஂ ந ஸேவே ப்ரதஂ தே ந வரிதா தர்மமாசரே. ஷுத்தபாவஂ கதோ பக்த்யா ஷாஸ்த்ராத்வேத்மி ஜநார்தநம்’ [ம.பா.5.69.5] இதி. அதஸ்தே த்ருவா நைவஂ மதிஃ? மம த்வேவஂ ஸமீசீநா மதிஃ ஸஞ்ஜாதேதி பாவஃ.கரிஷ்ணஸ்தத்த்வஂ பரஂ தத்பரமபி ச ஹிதஂ தத்பதைகாஷ்ரயத்வஂ ஷாஸ்த்ரார்தோயஂ ச ஷட்கைஸ்த்ரிபிரிஹஂ கதிதஸ்தத்ர பூர்வத்ர ஷட்கே.பக்த்யர்தஸ்வாத்மதரிஷ்டேஃ கரயுகலதஷா மத்யமே பக்த்யுபாயஃ ஸ்வோக்தாநுஷ்டாநவரித்திஂ த்ரடயிதுமகிலஂ ப்ரோக்தமந்தேப்யஷோதி৷৷1৷৷அத்யாயைஃ ஷிஷ்யமோஹஸ்ததுபஷமவிதிஃ கர்மயோகோஸ்ய பேதாஸ்தத்ஸௌகர்யாதியோகஸ்ததுசிதமஹிமா பூதிகாமாதிபேதஃ.பக்திஸ்தந்மூலபூமா பஜநஸுலபதா பக்திஷைக்ர்யாதி ஜீவத்ரைகுண்யஂ ஷாஸிதாஜ்ஞா தததிகமபரஃ ஸாரவர்கஷ்ச கீதாஃ৷৷2৷৷৷৷. ৷৷. ৷৷. ৷৷. இத்யாதிஃ ஸர்வயோகோ பகவதி பரமைகாந்த்யஸம்ப்ரீதியுக்தம்.யேஷாமந்யோந்யயோகோ பவதி ச கலயா நித்யநைமித்திகாநாஂ த்ரிஷ்வப்யேதேஷு யோகஂ பரமமிதபலஂ வக்துமந்யத்ப்ரஸக்தம்৷৷3৷৷ஷுத்தாதேஷவஷஂவதீகரிதயதிக்ஷோணீஷவாணீஷதா ப்ரஜ்ஞாதல்பபரிஷ்கரிதஷ்ருதிஷிரஃப்ராஸாதமாஸேதுஷீ.நித்யாநந்தவிபூதிஸந்நிதிஸதாஸாமோததாமோதரத்வித்ராலிங்கநதௌர்லலித்யலலிதோந்மேஷா மநீஷாஸ்து மே৷৷4৷৷தத்த்வஂ யத்ப்ரணவே தநஞ்ஜயரதேப்யக்ரே தரீதரிஷ்யதே தச்சித்தோ புவி வேங்கடேஷ்வரகவிர்பக்தோநுகம்ப்யஃ ஸதாம்.தத்தாதரிக்குருதரிஷ்டிபாதமஹிமக்ரஸ்தேந யச்சேதஸா கீதாவிஷ்ணுபதீ யதீஷ்வரவசஸ்தீர்தைரவாகாஹ்யத৷৷5৷৷

இதி ஷ்ரீகவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீபகவத்ராமாநுஜவிரசிதஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ அஷ்டாதஷோத்யாயஃ৷৷18৷৷ ,

ஸ்ரீ வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய ஸ்ரீ மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும்,
யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய ஸ்ரீ பகவத்கீதை என்னும்
உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.

————–

மஹாத்ம்யம்
இந்திரன் -பதவி –
ஸூஷ்ம அர்த்தம் அறிய இந்திரன் நாராயணன் இடம் சென்று கேட்க
கோதாவரி நதிக்கரையில் 18 அத்யாயம் பாராயணம் செய்தவர் -100 அஸ்வமேத யாகம் செய்தவனுக்கு கிட்டும் இந்திர பதவி பெற்றார்
இந்திரன் தானும் மீண்டும் பதவி பெற அவனும் பாராயணம் செய்ய -இந்திர பதவி ஆசை விட்டு மோக்ஷம் போனான்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –18-41–18-60—

February 12, 2021

இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :

41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:

பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே,
ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய,
கர்மாணி-தொழில்கள்,
ஸ்வபாவ ப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி,
ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.

பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில்
விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.

ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது.
குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது.
அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது.
ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம்.
சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது.
ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும்.
பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு.
இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.

சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று.
ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு.
பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம்
வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது.
அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு.
அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை.
ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை
அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும்.
இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

இதாநீம் ஏவஂ பூதஸ்ய மோக்ஷ ஸாதநதயா க்ரியமாணஸ்ய கர்மணஃ பரம புருஷ ஆராதந வேஷதாம்? ததா அநுஷ்டிதஸ்ய ச கர்மணஃ தத் ப்ராப்தி லக்ஷணஂ பலஂ (இதுவே பரிணாமம் அடைந்து ப்ரஹ்மத்தையே பலமாகப் பெற்றுக் கொடுக்கும் )ப்ரதிபாதயிதுஂ ப்ராஹ்மணாத் யதிகாரிணாஂ ஸ்வபாவ அநுபந்தி(முன் வினைகள் அடிப்படையில் )ஸத்த்வாதி குண பேத பிந்நஂ வரித்த்யா ஸஹ கர்தவ்ய கர்ம ஸ்வரூபம் ஆஹ –(குளித்து மூன்று அனலை ஓம்பும் அந்தணமை ஒழித்திட்டேன் -இதுவே கர்தவ்யம் -குலம் தாங்கும் சாதிகள் நான்கும்-நான்கு வர்ணத்தவர்களும் தங்கள் கர்ம அனுஷ்டானங்களாலே குலத்தைத் தங்குகிறார்கள் )

৷৷18.41৷৷ப்ராஹ்மண க்ஷத்ரிய விஷாஂ ஸ்வகீயோ பாவஃ ஸ்வபாவஃ; ப்ரஹ்மணாதி ஜந்ம ஹேது பூதஂ ப்ராசீநஂ கர்ம இத்யர்தஃ. தத் ப்ரபவாஃ ஸத்த்வாதயோ குணாஃ; ப்ராஹ்மணஸ்ய ஸ்வபாவ ப்ரபவோ ரஜஸ் தம அபிபவேந உத்பூதஃ ஸத்த்வ குணஃ? க்ஷத்ரியஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ ஸத்த்வ தமஸோஃ அபிபவேந உத்பூதோ ரஜோ குணஃ? வைஷ்யஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ ஸத்த்வ ரஜ அபிபவேந அல்ப உத்ரிக்தஃ தமோ குணஃ? ஷூத்ரஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ து ரஜஃ ஸத்த்வ அபிபவேந அத்யுத்ரிக்தஃ தமோகுணஃ. ஏபிஃ ஸ்வபாவ ப்ரபவைஃ குணைஃ ஸஹ ப்ரவிபக்தாநி கர்மாணி ஷாஸ்த்ரைஃ ப்ரதிபாதிதாநி. ப்ராஹ்மணாதய ஏவஂ குணகாஃ தேஷாஂ ச தாநி கர்மாணி வரித்தயஃ ச ஏதா இதி ஹி விபஜ்ய ப்ரதிபாதயந்தி ஷாஸ்த்ராணி.

৷৷18.41৷৷ஏவஂ ஸர்வேஷாஂ ஸஂஸாரிணாஂ குணத்ரயவஷ்யத்வமுக்தம்; அத தத்தத்குணதாரதம்யவத்தேஹயோகிநாமதிகாரிணாஂ யதாதிகாரஂ ஷாஸ்த்ரைர்விபக்தாநி கர்மாதீநி விவிச்யந்தே. தஸ்ய பரமப்ரஸ்துதேந ஸங்கத்யர்தமத்யாயாரம்பப்ரக்ராந்தஂ ப்ரதர்ஷயதி — ‘த்யாகேநேத்யாதிநா’.’ஸந்ந்யாஸஷப்தார்தாதநந்ய’ இதி — ஷ்ருதாவபி ஹி “த்யாகேநைகே” [மஹாநா.8.14கைவல்யோ.2] “ஸந்ந்யாஸ யோகாத்” [முண்டகோ.3.2.6] இத்யுபாவேகவிஷயாவிதி பாவஃ’ஏவம்பூதஸ்யேதி’ — த்ரிவிதத்யாகயுக்தஸ்யேத்யர்தஃ.’வரித்த்யா ஸஹேதி’ கரிஷிகோரக்ஷ்யாதீநி ஹி வக்ஷ்யமாணாநி [18.44] ஜீவிகாவிஷேஷா இதி பாவஃ.

அத்ர’ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவிஷாம்’ இதி ஸமாஸோ த்விஜத்வே ஸதி வேதாதிகாராத். ப்ராசீநகர்மாநுரூபஂ ஸத்த்வாதிகுணவரித்திஃ ப்ராகேவ ப்ரபஞ்சிதா? அதஸ்தத்தேதுகஂ கர்மாத்ர தத்தத்குணப்ரசுரபுருஷாஸாதாரணதர்மதயா ஸ்வபாவ இதி தர்ஷிதம். ஏதேந’கர்மவஷ்யா குணா ஹ்யேதே ஸத்த்வாத்யாஃ பரிதிவீபதே!’ [வி.பு.1] இதி வசநாதௌபாதிகாநாஂ குணாநாஂ சாத்ர ஸ்வாபாவிகதோக்திஷங்காபி நிரஸ்தா. குணவிபாகப்ரகாரோ ப்ராஹ்மபுராணாதிஷு ப்ரபஞ்சிதஃ. தஸ்யாயஂ ஸங்க்ஷேபஃ — ‘தமஃ ஷூத்ரே ரஜஃ க்ஷத்த்ரே ப்ராஹ்மணே ஸத்த்வமுத்தமம்’ இதி. அஸ்யார்தஂ வதந்ப்ரகரிதஂ விவரிணோதி — ‘ரஜஸ்தமோபிபவேநோத்பூதஃ ஸத்த்வகுண’ இதி. உத்தமஷப்தஸ்ய’ரஜஃ க்ஷத்த்ரே’ இத்யாதிஷ்வப்யந்வயமாஹ’க்ஷத்ித்ரயஸ்யேத்யாதிநா’.’அல்போத்ரிக்த’ இதி ஷூத்ராத்வ்யவச்சேதாய. அதீந்த்ரியாணாஂ குணாநாமபி ஷாஸ்த்ராதீநவிபாகத்வாத்கர்மப்ரவிபாகே குணாநாஂ கர்தரித்வாத்யஸம்பவாச்ச’குணைஃ ஸஹேத்யுக்தம்’. குணாபேக்ஷயா ஷாஸ்த்ரேண விபக்ததயா குணப்ரவிபக்தத்வோபசாராதயமேவார்த உசித இதி பாவஃ. கைர்விபக்தாநீதி ஷங்காயாஂ’ஷாஸ்த்ரைரிதி’ ஷேஷபூரணம். ஸ்வரூபவிபாகஸ்ய ஷாஸ்த்ராதீநத்வாபாவாதஸங்கீர்ணபோதநஂ விவக்ஷிதமித்யாஹ — ‘ப்ரதிபாதிதாநீதி’. விபஜ்ய ப்ரதிபாதநஂ விவரிணோதி — ‘ப்ராஹ்மணாதய’ இதி. கர்மஷப்த ஏவ ஸாமாந்யதோ வரித்திமபி ஸஂகரிஹ்ணாதி? தாதர்த்யாத்வா ததாக்ஷேப இத்யபிப்ராயேணாஹ’வரித்தயஷ்சேதி’. ஜீவநோபாயா இத்யர்தஃ.

—————————-

வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :

42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் ஷாந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்

ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்,
ஸௌசம்-தூய்மை,
ஷாந்தி-பொறுமை,
ஆர்ஜவம்-நேர்மை,
ஆஸ்திக்யம்-ஆத்திகம்,
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ – ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்,
ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம்,
கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம்.
மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம்.
எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம்.
ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது.
வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது.
ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.

கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக
அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில்.
தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன.
புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான்.
துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும்
அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான்.
சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான்.
ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம்.
அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான்.
எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று.
எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான்.
ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை
அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.

৷৷18.42৷৷ஷமஃ பாஹ்யேந்த்ரிய நியமநம். –தமஃ அந்தஃகரண நியமநம். –தபஃ போக நியமந ரூபஃ ஷாஸ்த்ர ஸித்தஃ காய க்லேஷஃ. –ஷௌசஂ ஷாஸ்த்ரீய கர்ம யோக்யதா. –க்ஷாந்திஃ பரைஃ பீட்யமாநஸ்ய அபி அவிகரித சித்ததா. –ஆர்ஜவஂ பரேஷு மந அநு ரூபஂ பாஹ்ய சேஷ்டா ப்ரகாஷநம்.– ஜ்ஞாநஂ பராவர தத்த்வ யாதாத்ம்ய ஜ்ஞாநம். –விஜ்ஞாநஂ பரதத்த்வ கத அஸாதாரண விஷேஷ விஷயஂ ஜ்ஞாநம்.– ஆஸ்திக்யஂ வைதிகார்தஸ்ய கரித்ஸ்நஸ்ய ஸத்யதா நிஷ்சயஃ ப்ரகரிஷ்டஃ? கேநாபி ஹேதுநா சாலயிதும் அஷக்ய இத்யர்தஃ.–பகவாந் புருஷோத்தமோ வாஸுதேவஃ பர ப்ரஹ்ம ஷப்தாபிதேயோ நிரஸ்த நிகில தோஷ கந்தஃ ஸ்வாபாவிக அநவதிக அதிஷய ஜ்ஞாந ஷக்த்யாத் யஸஂக்யேய கல்யாண குண கணோ நிகில வேத வேதாந்த வேத்யஃ ஸ ஏவ நிகில ஜகதேக காரணஂ நிகில ஜகதாதார பூதோ நிகிலஸ்ய ஸ ஏவ ப்ரவர்தயிதா தத் ஆராதந பூதஂ ச கரித்ஸ்நஂ வைதிகஂ கர்ம? தைஃ தைஃ ஆராதிதோ தர்மார்த காம மோக்ஷாக்யஂ பலஂ ப்ரயச்சதி? இதி அஸ்ய அர்தஸ்ய ஸத்யதா நிஷ்சயஃ ஆஸ்திக்யம்.– வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ.’ (கீதா 15.15)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8)’மயி ஸர்வமிதஂ ப்ரோதம்.’ (கீதா 7.7)’போக்தாரஂ யஜ்ஞ தபஸாஂ ৷৷. ஜ்ஞாத்வா மாஂ ஷாந்திமரிச்சதி৷৷’ (கீதா 5.29)’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.’ (கீதா 7.7)’யதஃ ப்ரவரித்திர் பூதாநாஂ யேந ஸர்வமிதஂ ததம். ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திஂ விந்ததி மாநவஃ৷৷’ (கீதா 18.46)’யோ மாம் அஜமநாதிஂ ச வேத்தி லோக மஹேஷ்வரம்.’ (கீதா 10.3) இதி ஹ்யுச்யதே.தத் ஏதத் ப்ராஹ்மணஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

৷৷18.42৷৷’ஷமோ தமஃ’ இத்யாதௌ பூர்வஂ வ்யாக்யாதநாமபி குணாநாஂ புநர்வ்யாக்யாநஂ வர்ணாநுபந்தேந விதாநேவாந்தரவிஷேஷஷங்காபாகரணார்தஂ’ப்ராஹ்மஂ கர்ம’ இத்யுக்தகர்மத்வஸித்தயே? நியதநாதிரூபேண புருஷவ்யாபாரஸாத்யத்வஜ்ஞாபநார்தஂ ச. அதஃ ஷௌசாவபி ததாபாதநஂ க்ராஹ்யம். அஸ்தி மதிரஸ்யேத்யாஸ்திகஃ; தத்பாவ ஆஸ்திக்யஂ; தச்சாப்ராமாணிகேஷு பவத்தோஷாய; ப்ரத்யக்ஷாதிஸித்தே து நாஸாவதிஷயஃ; ஷாஸ்த்ரீயேஷ்வபி க்வாசித்கஸஂஷயாதௌ குதரிஷ்டித்வப்ரஸங்கஃ; அதோ’வைதிகார்தஸ்ய கரித்ஸ்நஸ்யேத்யுக்தம்’. ஸஹபடிதவிஜ்ஞாநாதேர்பேதஜ்ஞாபநாய ஸத்யதாநிஷ்சயஸ்ய ப்ரகரிஷ்டத்வோக்திஃ. தத்விவரிணோதி — ‘கேநாபீதி’.வைதிகஸ்ய கரித்ஸ்நஸ்யேத்யுக்தஂ குதரிஷ்ட்யாத்யநமதவைதிகார்தஸங்க்ரஹவ்யுதாஸாய ப்ராதாந்யேந ஸங்கலய்ய வ்யநக்தி — ‘பகவாநித்யாதிநா’. அத்ர விஷேஷணாநாஂ ப்ராகேவ வ்யாக்யாதத்வாதேஹ ஸர்வவேதஸாரதயோத்தரிதஸ்யார்தஸ்ய ததுபபரிஂஹணேஸ்மிஂஞ்சாஸ்த்ரே ததாத்வேநைவ ப்ரஸ்பஷ்டதாமாஹ — ‘வேதைஷ்சேதி’. நிகிலவேதவேதாந்தவேத்ய இத்யுக்தார்தக்ரமாநுஸாரேண விப்ரகீர்ணவாக்யோத்தாரக்ரமஃ. ஷ்லோகார்தஂ நிகமயதி — ‘ததேததிதி’. ப்ரஹ்மணஃ கர்ம ப்ராஹ்மம்; ப்ரஹ்மஷப்தோத்ர ப்ராஹ்மணஜாதிபர இத்யபிப்ராயேணாஹ — ‘ப்ராஹ்மணஸ்யேதி’.

—————————

43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம்

ஸௌர்யம்-சூரத் தன்மை,
தேஜ:-ஒளி,
த்ருதி:-உறுதி,
தாக்ஷ்யம் ச-திறமை,
யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை,
தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை),
ஸ்வபாவஜம் க்ஷத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை
இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை
ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது.
நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான்.
அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான்.
பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால்,
அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான்.
இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை.
சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.

கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப் பட்டிருக்கிறான்.
பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில்
அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.

எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான்.
அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை
அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு
தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும்
மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது.
சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம்.
ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான்.
பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல்.
குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன்
யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது.
இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும்.
இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம்.
எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும்
அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள்.
ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு.
இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து
நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய
பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான்.
பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான்.
பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.

৷৷18.43৷৷ஷௌர்யஂ யுத்தே நிர்பய ப்ரவேஷ ஸாமர்த்யம். –தேஜஃ பரைஃ அநபிபவநீயதா. –தரிதிஃ ஆரப்தே கர்மணி விக்நோபநிபாதே அபி தத் ஸமாபந ஸாமர்த்யம். –தாக்ஷ்யஂ ஸர்வ க்ரியா நிவரித்தி ஸாமர்த்யம். –யுத்தே ச அபி அபலாயநஂ யுத்தே ச ஆத்ம மரண நிஷ்சயே அபி அநிவர்தநம் –தாநம் ஆத்மீயஸ்ய த்ரவ்யஸ்ய பரஸ்வத்வ ஆபாதாந பர்யந்தஃ த்யாகஃ? –ஈஷ்வர பாவஃ ஸ்வ வ்யதிரிக்த ஸகல ஜநநி யமந ஸாமர்த்யம்? ஏதத் க்ஷத்ரியஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

৷৷18.43৷৷’ஷூரஂ பீருஂ கவிஂ ஜடம்’ இதி பீருப்ரதியோகிநி ஷூரஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘நிர்பயப்ரவேஷஸாமர்த்யமிதி’. மாநஸஷாரீரஸஂவலநமிதம். ப்ரவிஷ்டஸ்ய பரைஃ பரிபவே ப்ரவேஷோபி தோஷஃ ஸ்யாத்? அதஸ்தத்பரிஹாராய தேஜ இஹோக்தமித்யாஹ’பரைரநபிபவநீயதேதி’. தாக்ஷ்யாத்தரிதேர்விஷேஷோ’விக்நோபநிபாதேபீதி’ தர்ஷிதஃ. ப்ரவரித்திஸாமர்த்யாத்ப்ரவரித்தாபரித்யாகோ ஹ்யந்ய ஏவ.’யுத்தே சாபி’ இத்யத்ராபிஷப்தத்யோதிதஂ தீவ்ரஂ பலாயநநிமித்தமாஹ’ஆத்மமரணநிஷ்சயேபீதி’. அத்ரேஷ்வரபாவஷப்தேந துஷ்டநிக்ரஹஷிஷ்டாநுக்ரஹஷக்திர்விவக்ஷிதேத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வவ்யதிரிக்தேதி’.’ஸகலஜநேதி’ ஸ்வராஷ்ட்ராத்யவச்சிந்நவிஷயம்.

—————

44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்

க்ருஷி கௌ ரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம்,
வைஸ்ய கர்ம ஸ்வபாவஜம் – இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்,
பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்,
ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்.
தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல்
ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப்
பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள்.
இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள்.
இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம்.
இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும்,
அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம்
பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும்.
கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன.
அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.

பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான்.
இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள்
பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள்.
அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை
நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம்.
உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும்
உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.

இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள்
இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில்
ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள்
பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம்.
பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள்.
மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும்
நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன்.
இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.

கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம்.
ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில்
சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன்.
சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும்.
சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன்.
சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால்
அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான்.
நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.

நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும்
நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால்
இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.

৷৷18.44৷৷கரிஷிஃ ஸஸ்யோத்பாதந கர்ஷணம். கோ ரக்ஷ்யஂ பஷுபாலநம் இத்யர்தஃ. வாணிஜ்யஂ தநஸஂசய ஹேதுபூதஂ க்ரய விக்ரயாத்மகஂ கர்ம. ஏதத் வைஷ்யஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

பூர்வ வர்ண த்ரய பரிசர்யா ரூபஂ ஷூத்ரஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.தத் ஏதத் சதுர்ணாஂ வர்ணாநாஂ வரித்திபிஃ ஸஹ கர்தவ்யாநாஂ ஷாஸ்த்ர விஹிதாநாஂ யஜ்ஞாதி கர்மணாஂ ப்ரதர்ஷநார்தம் உக்தம். யஜ்ஞாதயோ ஹி த்ரயாணாஂ வர்ணாநாஂ ஸாதாரணாஃ?

ஷம தமாதயஃ அபி த்ரயாணாஂ வர்ணாநாஂ முமுக்ஷூணாஂ ஸாதாரணாஃ. (பக்தி யோகம் -உபாஸனம் -மூன்று வர்ண ஆண்களுக்கு -மட்டுமே )ப்ராஹ்மணஸ்ய து ஸத்த்வோத்ரேகஸ்ய ஸ்வாபாவிகத்வேந ஷம தமாதயஃ ஸுகோபாதாநாஃ இதி கரித்வா தஸ்ய ஷம தமாதயஃ ஸ்வபாவஜஂ கர்ம இதி உக்தம். –க்ஷத்ரிய வைஷ்யயோஃ து ஸ்வதோ ரஜஸ் தமஃ ப்ரதாநத்வேந ஷம தமாதயோ துஃகோபாதாநாஃ இதி கரித்வா ந தத் கர்ம இதி உக்தம். –ப்ராஹ்மணஸ்ய து வரித்திஃ யாஜந அத்யாபந ப்ரதிக்ரஹாஃ.– க்ஷத்ரியஸ்ய ஜந பத பரிபாலநம்.– வைஷ்யஸ்ய கரிஷ்யாதயோ யதோக்தாஃ. –ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஃ ச பூர்வ வர்ண த்ரய பரிசர்யா ஏவ.

৷৷18.44৷৷ரூடிஂ வ்யுத்பத்திஂ சாநுஸரித்ய பலதஃ ஸ்வரூபதஷ்ச கரிஷிஂ தர்ஷயதி — ‘ஸஸ்யோத்பாதநஂ கர்ஷணமிதி’. ஏவஂ வாணிஜ்யவ்யாக்யாநேபி க்ராஹ்யம். கௌஃ ரக்ஷ்யா யத்ர? தத்கர்ம கோரக்ஷ்யமித்யபிப்ராயேணாஹ’பஷுபாலநமிதி’. ரக்ஷ்யமிதி பாவார்தஂ வா? ரக்ஷணமித்யர்தஃ. கௌரக்ஷ்யமிதி வா பாடஃ. கா ரக்ஷதீதி கோரக்ஷஃ? தஸ்ய கர்ம கௌரக்ஷ்யஂ பஷுபாலநஂ; வணிஜஃ கர்ம வாணிஜ்யமிதிவத். ஏவஂ விஷஃ கர்ம வைஷ்யஂ;’குணவசநப்ராஹ்மணாதிப்யஃ கர்மணி ச’ [அஷ்டா.5.1.124] இதி ஷ்யஞ்ப்ரத்யயஃ.

ஷாஸ்த்ராந்தராநுஸாரேண பரிசர்யாயாஃ ப்ரகரிதத்ரிதயாநுபந்தித்வமாஹ — ‘பூர்வவர்ணத்ரயேதி’. நநு ஷட்கர்மா ப்ராஹ்மணஃ? த்ரிகர்மாணௌ க்ஷத்ித்ரயவைஷ்யௌ? ஷூத்ரஸ்யாபி’பார்யாரதிஃ ஷுசிர்பரித்யபர்தா ஷ்ராத்தக்ரியாந்விதஃ (க்ரியாரதஃ — க்ரியாபரஃ). நமஸ்காரேண மந்த்ரேண பஞ்சயஜ்ஞாந்ந ஹாபயேத்’ [யா.ஸ்மரி.1.5.121] இத்யாதயோ தர்மா விதீயந்தே; தத்கதமிஹ தத்கர்மணாமியத்தாநிர்தேஷஃ இத்யத்ராஹ — ‘ததேததிதி’. ப்ரதர்ஷநீயாநுதாஹரதி’யஜ்ஞாதயோ ஹீதி’. ப்ரதர்ஷநார்தத்வே ஹேத்வந்தரமாஹ ‘ஷமதமாதயோபீதி’. ஷமாதீநாஂ மோக்ஷார்திவர்ணத்ரயஸாதாரண்யேந கதஂ ப்ராஹ்மணஸ்யைவ ததுக்தமித்யத்ராஹ’ப்ராஹ்மணஸ்ய த்விதி’.’ஸ்வபாவப்ரபவைஃ’ [18.41 இதி பூர்வோக்தாநுவிதாநாத்ஸஹஜத்வவிவக்ஷயாத்ர ஸ்வபாவஜஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஸத்த்வோத்ரேகஸ்ய ஸ்வாபாவிகத்வேந ஷமதமாதயஃ ஸுகோபாதாநா’ இதி. வர்ணாந்தரகுணஸம்பேதஂ நிர்வஹதி — ‘க்ஷத்ித்ரயவைஷ்யயோரிதி’. ந தத்கர்மேத்யுக்தமிதி’ தத்கர்மேதி நோக்தமித்யந்வயஃ. உக்தாநாஂ வரித்தீநாஂ ப்ரதர்ஷநார்தத்வாய சதுர்ணாஂ வரித்த்யஂஷஂ விவிச்ய விவிநக்தி’ப்ராஹ்மணஸ்ய து வரித்திரித்யாதிநா’. ஷூத்ரதர்மோ வரித்திஷ்ச யாஜ்ஞவல்க்யேந ஸ்மர்யதே — ‘ஷூத்ரஸ்ய த்விஜஷுஷ்ரூஷா தயாஜீவந்வணிக்பவேத். ஷில்பைர்வா விவிதைர்ஜீவேத்த்விஜாதிஹிதமாசரந்’ [1.5.120] இதி; மநுஸ்தத்ர விஷேஷமாஹ — ‘விப்ரஸேவைவ ஷூத்ரஸ்ய விஷிஷ்டஂ கர்ம கீர்த்யதே’ [10.123] இதி; ததிதமபிப்ரேத்யாஹ — ‘ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஷ்ச பூர்வவர்ணஂத்ரயபரிசர்யைவேதி’.

நந்விதமயுக்தஂ’பார்யாரதிஃ’ இத்யாதேருக்தத்வாத்;’மாஂ ஹி பார்த! வ்யபாஷ்ரித்ய’ இத்யாரப்ய’ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தேபி யாந்தி பராஂ கதிம்’ [9.32] இதி ச ஸ்வயமேவாஹ;’வஸந்தே தீக்ஷயேத்விப்ரம்’ இத்யாரப்ய’ஹேமந்தே ஷூத்ரமேவ ச. ஸ்த்ரியஂ ச வர்ஷாகாலே து பஞ்சராத்ரவிதாநதஃ’ இதி பகவத்ஸமாராதநார்தஂ தீக்ஷா ச விஹிதா; ததா’ப்ராஹ்மணைஃ க்ஷத்ித்ரயைர்வைஷ்யைஃ ஷூத்ரைஷ்ச கரிதலக்ஷணைஃ. அர்சநீயஷ்ச ஸேவ்யஷ்ச நித்யயுக்தைஃ ஸ்வகர்மஸு৷৷ஸாத்த்வதஂ விதிமாஸ்தாய கீதஃ ஸங்கர்ஷணேந யஃ’ [ம.பா.66.39;40] இதி தீக்ஷிதஷூத்ராதேர்பகவதர்சநாதிகஂ ஸ்பஷ்டமுக்தம். ததா யுகதர்மாந் ப்ரக்ரம்யோச்யதே — ‘கரிதஂ நாம யுகஂ பூர்வஂ யத்ர தர்மஃ ஸநாதநஃ. கரிதமேவ ந கர்தவ்யஂ யஸ்மிந் காலே நரோத்தம!. ப்ராஹ்மணாஃ க்ஷத்ித்ரயா வைஷ்யாஃ ஷூத்ராஷ்ச கரிதலக்ஷணாஃ. கரிதே யுகே ஸமபவந் ஸ்வகர்மநிரதாஃ ஸதா৷৷ஏகவேதஸமாயுக்தா ஏகமந்த்ரவிதிக்ரியாஃ. பரிதக்தர்மாஸ்த்வேகவேத்யா தர்மமேகமநுவ்ரதாஃ৷৷சாதுராஷ்ரம்யயுக்தேந கர்மணா காலயோகிநா. அகாமபலஸஂயோகாத் ப்ராப்நுவந்தி பராஂ கதிம்’৷৷[வி.த.108.19] இதி.

ஷ்ரீஸாத்த்வதே ச — ‘அஷ்டாங்கயோகயுக்தாநாஂ ஹரித்யாகநிரதாத்மநாம். யோகிநாமதிகாரஃ ஸ்யாதேகஸ்மிந் ஹரிதயேஷயே৷৷வ்யாமிஷ்ரயாகயுக்தாநாஂ விப்ராணாஂ வேதவாதிநாம். ஸமந்த்ரே து சதுர்வ்யூஹே ஹ்யதிகாரோ ந சாந்யதா৷৷த்ரயாணாஂ க்ஷத்ித்ரயாதீநாஂ ப்ரபந்நாநாஂ ச தத்த்வதஃ. அமந்த்ரமதிகாரஸ்து சதுர்வ்யூஹக்ரியாக்ரமே৷৷ஸக்ரியே மந்த்ரசக்ரே து வைபவீயே விவேகிநாம். மமதாஸந்நிரஸ்தாநாஂ ஸ்வகர்மநிரதாத்மநாம்৷৷கர்மவாங்மநஸைஃ ஸம்யக்பக்தாநாஂ பரமேஷ்வரே. சதுர்ணாமதிகாரோ வை வரித்தே தீக்ஷாக்ரமே ஸதி’ [7.8.9.10.11] இத்யதிகாரவிஷேஷநியமஃ கரிதஃ. ஸப்தமே ச வ்ரதவிதாநபரிச்சேதே’தாநார்சநே து ஷூத்ராணாஂ வ்ரதகர்மணி ஸர்வதா. அஸித்தாந்நஂ து விஹிதஂ ஸித்தஂ வா ப்ராஹ்மணேச்சயா৷৷ஸ்வகர்மணா யதோத்கர்ஷமப்யேதி ச ததார்சநாத். தஸ்மாத்ஸ்வேநாதிகாரேண குர்யாதாராதநஂ ஸதா৷৷ஸர்வத்ராதிகரிதோ விப்ரோ வாஸுதேவாதிபூஜநே. யதா ததா ந க்ஷத்த்ராத்யாஸ்தஸ்மாச்சாஸ்த்ரார்தமாசரேத்৷৷நயேந்நக்தாஷநைர்பக்த்யா திநாந்யேதாநி மௌத்கல!. வ்ரதாத்யந்தே து விஹிதஂ பரிபீடஂ ஹி தஸ்ய வா’৷৷[7.53.54.55.56] இதி வ்ரதவிஷேஷக்ரமோ தர்ஷிதஃ. மௌத்கலேதி பகவச்சாஸ்த்ரே ஷூத்ரநாம. பரிபீடமுபவாஸஃ. ததா மந்த்ரேஷு சைவஂ நியமோந்யத்ர கரிதஃ.’வௌஷட்ஸ்வாஹாவஷட்காரநிஷ்டாநாஂ து ப்ரதிக்ரியா. நமஸ்காரேண விஹிதா’ இதி. ததா நாரதீயே ஷ்ரீமதஷ்டாக்ஷரகல்பே — ‘ந ஸ்வரஃ ப்ரணவோங்காநி நாப்யந்யவிதயஸ்ததா. ஸ்த்ரீணாஂ து ஷூத்ரஜாதீநாஂ மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே’ [நா.அ.க.1.120] இதி.

ஏவமேகாதஷீவ்ரதாதயோபி ஸர்வஸாதாரணாஃ புராணாதிஷு பட்யந்தே. ததாந்யேபி வர்ஜ்யாவர்ஜ்யநியமாஃ கதிகதி தர்மஷாஸ்த்ராதிஷு கத்யந்தே. யதா — ‘கபிலாக்ஷீரபாநேந ப்ராஹ்மணீகமநேந ச. ஷூத்ரே வேதாக்ஷரேணைவ நிஷ்கரிதிர்ந விதீயதே (வேதாக்ஷரவிசாரேண ஷூத்ரஸ்ய நரகஂ த்ருவம்)’৷৷[பா.ஸ்மரி.1.74]’ஹரித்கண்டதாலுகாபிஸ்து யதாஸங்க்யஂ த்விஜாதயஃ. ஷுத்யேரந் ஸ்த்ரீ ச ஷூத்ரஷ்ச ஸகரித்ஸ்பரிஷ்டாபிரந்ததஃ”தேஷாஂ ஸ ஏவாசமநகல்ப அதிக அஹரஹஃ(). கேஷஷ்மஷ்ருலோமநகவாபநம்’ இத்யாதி. தஸ்மாத்’ஜபஸ்தபஸ்தீர்தயாத்ரா ப்ரவ்ரஜ்யா மந்த்ரஸாதநம். தேவதாராதநஂ சைவ ஸ்த்ரீஷூத்ரபதநாநி ஷட்’ இத்யாதிகஂ விஹிதவ்யதிரிக்தவர்ணத்ரயஷுஷ்ரூஷாவிருத்தவிஷயமிதி யோஜ்யம். அபி ச — ‘ந ஷூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஃ ஸ்மரிதாஃ’ [வி.ஸஂ.24.10] இத்யாதிவசநாஜ்ஜயாக்யஸஂஹிதாதிஷு பாகவதாநாஂ சதுர்ணாஂ ஸமத்வவசநாச்ச பகவத்பரிசர்யாவஷாத்வர்ணத்ரயபரிசர்யாநிவரித்திரபி ஸம்பவேத். அதஃ கதஂ’ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஷ்ச பூர்வவர்ணத்ரயபரிசர்யைவ’ இதி பாஷிதம். அத்ர ப்ரூமஃ — யத்யபி விஹிதவ்யதிரிக்தவிஷயாஃ ஸர்வநிஷேதாஃ விஷிஷ்டஸஂஸ்காரகுணவிஷேஷாதிமதாஂ ச ஷூத்ராணாமபி தர்மவிஷேஷா விஹிதாஃ? ததாபி தே ஸர்வே வர்ணத்ரயபரிசர்யாக்யப்ரதாநதர்மாவிரோதேந தந்நியுக்தைஃ ஷூத்ரைஃ தத்பரிசர்யாபாவநயைவாநுஷ்டேயாஃ. அத ஏவ ஹ்யத்ரோச்யதே,’பரிசர்யாத்மகஂ கர்ம’ இதி. அந்யதா பரிசர்யேத்யேவ வக்தவ்யம்; நச நிஷ்ப்ரயோஜநாதிகக்ரஹணஂ யுக்தம்.

ஆமநந்தி ச’ரஹஸ்யாம்நாயவிதஃ’ — ‘ஜ்ஞாநஜ்ஞாபநஸம்ப்ரேஷணகர்மா ப்ராஹ்மணஃ? ஜ்ஞாநபரித்ராணகர்மா க்ஷத்ித்ரயஃ? ஜ்ஞாநபீஜவர்தநகர்மா வைஷ்யஃ? ஜ்ஞாநபர்யுத்தாநகர்மா ஷூத்ரஃ? கரிதயுகஸ்யாந்தே த்ரேதாயுகஸ்யாதௌ ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவைஷ்யஷூத்ரா பித்யந்தே? தேஷாஂ பிந்நாநாஂ தரிஷ்டிஃ ந ததா பவதி? பத்யா ரஸநா ந ததா பவந்தி; புஷ்பபலமோஷதிவநஸ்பதயோ ந ததா தததே; தாஂ தரிஷ்ட்வா ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவைஷ்யஷூத்ராணாமஸூயா ப்ராதுர்பபூவ — ஷூத்ரஃ ப்ரதமஜாதிர்ந வஃ பர்யுத்தாஸ்யாமீதி? வைஷ்யோ த்விதீயஜாதிர்ந வோ பீஜாநி வர்தயிஷ்யாமீதி? க்ஷத்ித்ரயஸ்தரிதீயஜாதிர்ந வஃ பரித்ராஸ்ய இதி. தாந் ப்ராஹ்மண இத்யாஹ. ஆஸ்திதா யூயஂ ந வோ வக்ஷ்யாமி’ இதி. அத்ர பர்யுத்தாநஂ பரிசர்யா. ஏவஂ ஷூத்ரஃ ஸாதுஃ இத்யாதிப்ரகரணாந்தராணி ச த்ரஷ்டவ்யாநி. ஏதேந’ந ஷூத்ரா பகவத்பக்தாஃ’ இத்யாதிஸ்துதிவாக்யேந வர்ணத்ரயபரிசர்யாதிநிவரித்திப்ரஸங்கோபி ப்ரத்யுக்தஃ? பகவதேகாந்தஷூத்ரஸ்யைவ பர்யுத்தாநவிதேஃ. பகவத்பக்திஸ்துதிபரத்வாதேவ ஹி’ஸர்வவர்ணேஷு தே ஷூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்தநே’ [வி.ஸஂ.24.10] இதி வ்யதிரேகநிந்தா. கிஂ தர்ஹ்யத்ர ஸ்துதிநிந்தாலம்பநம் ஆந்தரஃ ஸத்த்வாதிகுணோந்மேஷஃ. யதபேக்ஷயா ப்ராஹ்மணாதேரேவ ப்ரஹ்மண்யாதிகஂ ஷ்ருத்யாதிஷு கீர்த்யதே — “மௌநஂ சாமௌநஂ ச நிர்வித்யாத ப்ராஹ்மணஃ” [பரி.உ.3.5.1] இதி.’விஷ்ணுஂ க்ராந்தஂ (விஷ்ணுக்ராந்தஂ) வாஸுதேவஂ விஜாநந்விப்ரோ விப்ரத்வஂ கச்சதே தத்த்வதர்ஷீ’ [ஷா.உ.+4ம.பா.13.16.2]’சண்டாலமபி வரித்தஸ்தஂ தஂ தேவா ப்ராஹ்மணஂ விதுஃ’ இத்யாதி.

யத்து ஷாரீரஸத்த்வாதிகுணதாரதம்யநிபந்தநஂ ஜாதிரூபஂ ப்ராஹ்மண்யாதிகஂ? தஸ்யாந்தரஸத்த்வோந்மேஷாதாவப்யநுவரித்தேராஷரீரபாதஂ ஜாதிநியமஃ ஸ்தித ஏவ. ததநுபந்திநஷ்ச தர்மாஸ்தத ஏவாவதிஷ்டந்தே. அத ஏவ ஹி விதிதப்ரஹ்மவித்யோபி விதுரஃ ஸ்வஸ்ய தத்வசநேநதிகாரமாஹ — ‘ஷூத்ரயோநாவஹஂ ஜாதோ நாதோந்யத்வக்துமுத்ஸஹே’ [ம.பா.5.41.5] இதி. ஷமாதிகுணபௌஷ்கல்யயோகிநி து ஷூத்ராதௌ ஸ்த்ரீதர்மிண்யாஂ ஜநந்யாமிவாவஜ்ஞாநாதிநிவரித்திமாத்ரவிஷேஷாபேக்ஷயா ஜாதிஸாமாந்யவீக்ஷணப்ரதிஷேத இதி. யதா ஸ்மரந்தி — ‘ஏதைஃ ஸமேதஃ ஷூத்ரோபி வார்தகே மாநமர்ஹதி’ இதி. அத ஏவ’பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்ததே. தஸ்மை தேயஂ ததோ க்ராஹ்யஂ ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்’ [கா.ரு.பூ.க.219.7.8] இத்யாதிகமநுபப்லவபர்யந்ததயாபி நிர்வ்யூடம். ஸாம்யோக்திரபி ஸர்வோத்கர்ஷபலாதிஸாம்யவிஷயா; அபஷூத்ரநயாத்யவிரோதஷ்ச. உக்தஂ சாசார்யைர்பாகவதத்வேந ஷூத்ரஸ்யோத்கர்ஷே ப்ராஹ்மணஸ்யாபி தேநைவோத்கர்ஷ இதி புநர்வைஷம்யமிதி ஸர்வஂ ஸமஞ்ஜஸம். அதஃ ஸுஷ்டூக்தஂ — ‘ஷூத்ரஸ்ய வரித்திகர்தவ்யயோரைக்யம்’ இதி. ,

———————

45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு

ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில்,
அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான்,
ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்,
யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று,
தத் ஸ்ருணு-அதைக் கேள்.

தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில்
இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.

பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது
அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே.
ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான்.
அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று.
தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன்
தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான்.
படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம்
அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும்.
வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது
போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால்
மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:

৷৷18.45৷৷ஸ்வே ஸ்வே யதோதிதே கர்மணி அபிரதோ நரஃ ஸஂஸித்திஂ பரம பத ப்ராப்திஂ லபதே. ஸ்வ கர்ம நிரதோ யதா ஸித்திஂ விந்ததி பரமஂ பதஂ ப்ராப்நோதி ததா ஷ்ரரிணு.(இங்கு ஸித்தி என்றது த்யான நிஷ்டையைக் கொடுக்கும்-ஸம்யக் -பத யோகம் -ஞான யோக நிஷுடன் அடைவதையே கர்மா யோகியும் அடைகிறான் -இருவரும் பக்தி யோகம் மேல் செய்தே பரம பிராப்தி பெறலாம் -என்றபடி )

நைஷ்கர்மம் -கர்ம யோகம் முடிந்து ஞான யோகம் இருப்பவன் தன்மை -ஞான யோகத்துக்குப் பலன் பக்தி யோகம்-

மூவருக்கே அதிகாரம் என்னும் பொழுது ஸ்வ ஸ்வ கர்ம சொல்லலாமோ என்று ஆஷேபம்
இந்த பிறவியில் கூடா விட்டாலும் அடுத்த பிறவியில் த்ரைவர்ணிக -பக்தி யோகத்துக்கு அதிகாரம் கிட்டும்
கர்மயோகம் இவ்வாறு சிறப்பு உண்டு என்று முண்டே சொன்னானே –
விதுரர் இந்த பிறவியில் சதுர்த்த வர்ணம்-பக்தி யோக அதிகாரம் இல்லையே என்னில் -எவ்வாறு மோக்ஷம் போனார்
முன் ஜன்மாவில் அதிகாரம் உள்ள பிறவியில் இருந்துள்ளார்
பின்பு அடுத்த பிறவியில் சதுர்த்த வர்ணம் எவ்வாறு என்னில் -சாப வசம் -யமதர்ம ராஜனே விதுரராக பிறந்தவர்
ராவணாதிகளும் சாப வசத்தால் தானே
இந்த பிறவியில் விதுரர் பக்தி யோகம் செய்யா விட்டாலும் -பூர்வ வாசனையால் பக்தி யோக நிஷ்டர் போலவே நடந்து கொண்டார் –

‘தர்மவ்யாதாதயோப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே. வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தாஃ ஸஂஸித்திஂ ஷ்ரமணீ யதா’ [வி.த.102.30] இதி.இவர்களும் முன் ஜென்ம பலனாலே கொண்டாடப்பட்டவர்கள்

৷৷18.45৷৷வர்ண தர்ம விபாகோ மோக்ஷ ஷாஸ்த்ரே கிமர்தஂ இத்யத்ராஹ –‘ஸ்வே ஸ்வே கர்மணீதி’. ஸஂஸித்தி ஷப்தஸ்யாத்ர பரமபதப்ராப்திவிஷயத்வஂ ப்ரகரணாத்ஸித்தம்.’ஷாஷ்வதஂ பரமவ்யயம்’ [18.56] இதி ஹி வக்ஷ்யதி. யத்வா ஸித்திஷப்தஃ’நைஷ்கர்ம்யஸித்திம்’ [18.49] இதி வக்ஷ்யமாணவிஷயஃ.

தத்பர்யவஸாநஜ்ஞாபநாயாத்ர பரமப்ராப்யக்ரஹணம். நநு ஸ்வகர்மநிரதஸ்யாபி ஷூத்ரஸ்ய கதஂ பரமபதப்ராப்திஃ தஸ்ய மோக்ஷஸாதநவித்யாயாமநதிகாரஃ ஷாரீரகே அபஷூத்ராதிகரணே ஷிக்ஷிதஃ. ஸத்யஂ? பவாந்தராதிகாரத்வாரா பரம்பரயா பரமபதப்ராப்தேர்விவக்ஷிதத்வாந்ந விரோதஃ. விதுராதிவஜ்ஜாதிஸ்மரேஷு ஜந்மாந்தரப்ராரப்தபரவித்யாப்ரதிஸந்தாயிஷு ஸ்வகர்மணாமகரணநிமித்தப்ரத்யவாயபரிஹாரார்தத்வஂ ஸாக்ஷாத்ஸஂஸித்தியோக்யத்வஂ த்ரஷ்டவ்யம். யதோக்தஂ பகவதா ஷௌநகேந —

‘தர்மவ்யாதாதயோப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே. வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தாஃ ஸஂஸித்திஂ ஷ்ரமணீ யதா’ [வி.த.102.30] இதி.

நநு பரிமிதபலப்ரதாநஸமர்தேந்த்ராத்யாராதநரூபாணாஂ தத்தத்வர்ணாஷ்ரமகர்மணாஂ கதஂ பரமபதப்ராப்திஹேதுத்வஂ இத்யத்ரோத்தரஂ’ஸ்வகர்மநிரத’ இதி.’யதா’ இத்யஸ்ய ப்ரதிநிர்தேஷத்வாத்தச்சப்தஃ ப்ரகாரபராமர்ஷீத்யாஹ — ‘ததா ஷரிண்விதி’.

—————-

46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:

யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ,
யேந இதம் ஸர்வம் ததம் – எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ,
தம்-அந்த பரமாத்மாவை,
ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்,
மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.

உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை.
ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான்.
ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும்.
அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.

ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர்.
கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர்.
செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம்.
தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம்.
இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான்.
அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான்.
அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது.
வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம்.
அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது.
உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.

தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன.
தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது
மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.

৷৷18.46৷৷யதோ பூதாநாம் உத்பத்த்யாதிகா (ஆதி ஸ்திதி சம்ஹாரம் )ப்ரவரித்திஃ? யேந ச ஸர்வம் இதஂ ததஂ ஸ்வ கர்மணாஂ தஂ மாம் இந்த்ராத் யந்தராத்மதயா அவஸ்திதம் அப்யர்ச்ய மத் ப்ரஸாதாத் மத் ப்ராப்தி ரூபாஂ ஸித்திஂ விந்ததி மாநவஃ.மத்த ஏவ ஸர்வம் உத்பத்யதே? (பக்தி யோகம் மோக்ஷ பிரதத்வம் ஆகாதே -அவனே திரு உள்ளம் உகந்து அருளுகிறான் )மயா ச ஸர்வம் இதம் ததம் இதி பூர்வம் ஏவ உக்தம் — ‘அஹஂ கரித்ஸ்நஸ்ய ஜகதஃ ப்ரபவஃ ப்ரலயஸ் ததா৷৷மத்தஃ பரதர நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஂஜய.’ (கீதா 7.6)’மயா ததமிதஂ ஸர்வஂ ஜகதவ்யக்தமூர்திநா.’ (கீதா 9.4)’மயாத்யக்ஷேண ப்ரகரிதிஃ ஸூயதே ஸசராசரம்৷৷’ (கீதா 9.10)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8) இத்யாதிஷு.

৷৷18.46৷৷ஸர்வகாரணபூதஃ ஸர்வாந்தர்யாமீ பரமாத்மா ஸ்வஸரிஜ்யத்வஷரீரபூதேந்த்ராதிவாசகைஃ ஷப்தைராம்நாயத இதி தத்ஸமாராதநத்வாத்ஸஂஸித்திஸாதநத்வஂ வர்ணாஷ்ரமதர்மாணாமுபபந்நமித்யுச்யதே’யதஃ ப்ரவரித்திஃ’ இதி ஷ்லோகேந. ப்ரவரித்திஷப்தஸ்யாத்ர சேஷ்டாமாத்ரபரத்வவ்யுதாஸாயாஹ’உத்பத்த்யாதிகேதி’. சேதநாசேதநவாசிபூதஷப்தஸமந்விதஃ ப்ரவரித்திஷப்தோத்ர விஷேஷகாபாவாத்ஸர்வவிதவ்யாபாரஸங்க்ராஹக இதி பாவஃ. ஸர்வவிதகாரணத்வோபயுக்த ஆகார உச்யதே’யேந ஸர்வமிதஂ ததம்’ இதி. ததஂ நியந்தரித்வேநேதி ஹரிதயம்.’தம்’ இதி பரோக்ஷதயா நிர்திஷ்டஃ’கதஂ மாமிதி’ வ்யாக்யாயதே இதி ஷங்காயாஂ’யதஃ’ இத்யநுவாதஸ்ய ப்ராப்த்யர்தஂ புரோவாதஂ ஸ்மாரயதி — ‘மத்த ஏவேதி’. காரணத்வஸர்வாதிகத்வஸர்வவ்யாபித்வஸர்வநியந்தரித்வாதிஷு யதாஸம்பவஂ வசநாநி யோஜ்யாநி.

———————–

47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று,
ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை,
கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.

பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று.
இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.

சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது.
அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம்.
துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது.
போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.

வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது.
விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது.
அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான்.
உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள்.
எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை
ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது;
பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது.
தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது.
அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று
விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.

৷৷18.47৷৷ஏவஂ த்யக்த கர்தரித்வாதிகோ மதாராதந ரூபஃ ஸ்வ தர்மஃ ஸ்வேந ஏவ உபாதாதுஂ யோக்யோ தர்மஃ. ப்ரகரிதி ஸஂஸரிஷ்டேந ஹி புருஷேண இந்த்ரிய வ்யாபார ரூபஃ கர்ம யோகாத்மகோ தர்மஃ ஸுகரோ பவதி. அதஃ கர்ம யோகாக்யஃ ஸ்வ தர்மோ விகுணஃ அபி (குறைவாக செய்யப்பட்டு இருந்தாலும் )பர தர்மாத் இந்த்ரிய ஜய நிபுண புருஷ தர்மாத் ஜ்ஞாந யோகாத் ஸகலேந்த்ரிய நியமந ரூப தயா ஸப்ரமாதாத் கதாசித் ஸ்வநுஷ்டிதாத் ஷ்ரேயாந்.

தத் ஏவ உபபாதயதி — (அதையே விளக்குகிறார் )ப்ரகரிதி ஸஂஸரிஷ்டஸ்ய புருஷஸ்ய இந்த்ரிய வ்யாபார ரூப தயா ஸ்வபாவத ஏவ நியதத்வாத் கர்மணஃ கர்ம குர்வந் கில்பிஷஂ ஸஂஸாரஂ ந ஆப்நோதி அப்ரமாதத்வாத் கர்மணஃ. ஜ்ஞாந யோகஸ்ய ஸகலேந்த்ரிய நியமந ஸாத்யதயா ஸப்ரமாதத்வாத். தந்நிஷ்டஃ து ப்ரமாதாத் கில்பிஷஂ ப்ரதிபத்யேத அபி;

அதஃ கர்ம நிஷ்டா ஏவ ஜ்யாயஸீ இதி தரிதீயாத்யாயோக்தஂ ஸ்மாரயதி.

৷৷18.47৷৷ஏவஂ வர்ணாஷ்ரமதர்மாணாஂ ஸ்வரூபேணாபரித்யாஜ்யத்வஂ பரப்ராப்திஸாதநத்வப்ரகாரஷ்ச தர்ஷிதஃ. அத தேஷாமேவ’தைவமேவாபரே யஜ்ஞம்’ [4.25] இத்யாத்யுக்தப்ரதாநதர்மயோகேந நியமவிஷேஷாதியோகேந கர்மயோகாந்தர்பூதாநாஂ ஜ்ஞாநயோகாதிகாரிணாமப்யபரித்யாஜ்யத்வஂ ப்ராகுக்தஂ [3.35] ப்ரத்யபிஜ்ஞாப்யதே — ‘ஷ்ரேயாந் ஸ்வதர்மஃ’ இத்யாதிபிஃ. அத்ர ஸ்வதர்மஷப்தோ ந வர்ணாஷ்ரமநியததர்மபரஃ? ததா ஸதி பரதர்மஷப்தேந வர்ணாந்தராதிதர்மோபாதாநப்ரஸங்காத்; நச தத்யுக்தஂ? தஸ்ய நிஷித்தத்வேநாதர்மதயா ஸ்வதர்மஸ்ய தத்ர ப்ரஷஸ்யதமத்வலக்ஷணஷ்ரேயஸ்த்வவசநாயோகாத். நஹி பாபாத்புண்யஂ ஷ்ரேய இதி கத்யதே; அத ஏவ வேதபாஹ்யதர்மாத்வைதிகஸ்ய தர்மஸ்ய ஷ்ரேயஸ்த்வமுச்யத இத்யபி ந யோஜ்யம்; க்ஷத்ித்ரயஸ்யார்ஜுநஸ்ய’ஷ்ரேயோ போக்துஂ பைக்ஷம்’ [2.5] இத்யுக்தப்ராஹ்மணதர்மபூதப்ரவ்ரஜ்யாப்ரதிஷேதோயமிதி சேத்? ந; தத்ப்ராப்தௌ நிஷேதாயோகாத்; அப்ராப்தௌ பாபத்வாதேவ தத்தோத்தரத்வாத். ஆபத்ஸ்வநந்தரா ச வரித்திர்துஸ்த்யஜா. அதோத்ர ஸ்வதர்மபரதர்மஷப்தௌ ப்ராக்வத்கர்மயோகஜ்ஞாநயோகவிஷயௌ வ்யாக்யாதௌ.’ஏவம்’ இத்யாரப்ய’ஸ்வதர்மஃ’ இத்யந்தமேகஂ வாக்யம்? அந்யதோத்தரக்ரந்தாநந்வயப்ரஸங்காத். ஸ்வஷப்தஸ்ய ஜாதிவிவக்ஷாவ்யுதாஸாயாஹ’ஸ்வேநைவேதி’.’ஸ்வபாவநியதஂ கர்ம’ இத்யநந்தரோக்த்யநுஸாரேண கர்மவிஷயஃ ஸ்வதர்மஷப்தஃ ப்ரகரணாந்நிஷ்காமகர்மவிஷயஃ. தத்ர’ஸ்வேநைவோபாதாதுஂ யோக்ய’ இத்யுக்தஂ விவரிணோதி’ப்ரகரிதீதி’. விகுணஷப்தஸ்ய த்யாஜ்யத்வஷங்காபரத்வமாஹ’விகுணோபீதி’. கத்யந்தராபாவாதமுக்யத்வகல்பத்வேநாநுமதோபீத்யர்தஃ. ஸ்வஷப்தநிர்திஷ்டாத்கர்மயோகார்ஹாதந்யோத்ர பரஃ; ஸ ச ஜ்ஞாநயோகார்ஹ இத்யபிப்ராயேணாஹ’இந்த்ரியஜயேதி’. ஸப்ரமாதஸ்ய ஸ்வநுஷ்டிதத்வஂ கதஂ ஸ்யாத் இத்யத்ராஹ — ‘கதாசிதிதி’.

‘ஸ்வபாவநியதம்’ இத்யத்ர ஜாதிநியதத்வஷங்காவ்யுதாஸாயாஹ — ‘ததேவேதி’. யதா விஷதருநிம்பதிந்திண்யாதிஜாதாநாஂ ஜந்தூநாஂ ஸ்வபாவநியதா ஆஹாரா இதி பாவஃ. கில்பிஷஷப்தோநிஷ்டதமத்வத்யோதநாய ஸஂஸாரஷப்தேந தத்பலபர்யந்ததயா வ்யாக்யாதஃ. ஜ்ஞாநயோகநிஷ்டாஸம்பாவிதநிஷேதாய வா? விஷேஷநிஷேதஃ ஷேஷாப்யநுஜ்ஞாபர இத்யபிப்ராயேண வாஹ — ‘ஜ்ஞாநயோகஸ்யேதி’. அர்தாந்தரபரத்வஷங்காவ்யுதாஸாய ஆதராதிஷயவிவக்ஷயா? புநருக்திபரிஹாராய ச’தரிதீயாத்யாயோக்தஂ (35) ஸ்மாரயதீத்யுக்தம்’.

——————

48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:

கௌந்தேய-குந்தி மகனே,
ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும்,
ந த்யஜேத்-கைவிடலாகாது,
தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல,
ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும்,
தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.

குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது.
எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும்.
அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்;
அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்;
மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம்.
பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை.
அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ?
தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு.
எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும்
உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம்.
காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது.
வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது.
தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில்
கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று
ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை
தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும்.
ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.

அதஃ கர்ம நிஷ்டா ஏவ ஜ்யாயஸீ இதி தரிதீயாத்யாயோக்தஂ ஸ்மாரயதி.(கர்மயோகம் உடம்பு வருத்தமாகிய தோஷம் உள்ளதே என்ன ஞான யோகத்துக்கும் தோஷம் உண்டே என்கிறான்-இங்கு தோஷம் பாபம் என்று கொள்ளக் கூடாது-கவனக்குறைவுக்கு ஞான யோகத்துக்கு வாய்ப்புகள் அதிகம் -செய்வதற்கு அரிது இந்திரியங்கள் எளிதாக அடக்க முடியாதே -ஞான யோக நிஷ்டனுக்கும் கர்மயோகமும் வேண்டுமே   )

৷৷18.48৷৷அதஃ ஸஹஜத்வேந ஸுகரம் அப்ரமாதஂ ச கர்ம ஸதோஷஂ ஸதுஃகம் அபி ந த்யஜேத். –ஜ்ஞாந யோக யோக்யஃ அபி கர்ம யோகம் ஏவ குர்வீத இத்யர்தஃ. ஸர்வாரம்பாஃ கர்மாரம்பா ஜ்ஞாநாரம்பாஃ ச ஹி தோஷேண துஃகேந தூமேந அக்நிஃ இவ ஆவரிதாஃ. இயாந் து விஷேஷஃ கர்ம யோகஃ ஸுகரஃ அப்ரமாதஃ ச? ஜ்ஞாந யோகஃ தத் விபரீதஃ இதி.

৷৷18.48৷৷’ஸஹஜத்வேந’ வாஸநாநியதத்வாதித்யர்தஃ. ததஃ கதஂ த்யாஜ்யத்வாபாவஃ இத்யத்ராஹ’ஸுகரமிதி’. தோஷஷப்தேந பாபவிவக்ஷா ந யுக்தா? விஹிதே ததயோகாத்; ததா ச’ந த்யஜேத்’ இதி ந யுக்தஂ? பாபாஂஷஸ்ய ஸர்வைஃ பரித்யாஜ்யத்வாத்; அதஃ காயக்லேஷாதிமாத்ரகர்பத்வமிஹ ஸதோஷத்வமித்யுச்யதே. தாவந்மாத்ரேப்யலஸாநாஂ த்யாஜ்யதாபுத்திஃ ஸ்யாதித்யபிப்ராயேணாஹ’ஸதுஃகமபீதி’. ஏதேந காபிலமதாந்வாரோஹேண’ஸதோஷமபி’ இத்யநுவாத இதி வ்யாக்யாந்தரஂ நிரஸ்தம். முமுக்ஷோஃ கதஂ ஷாஸ்த்ரீயே ஷ்ரேயஸ்த்வேந சோக்தே க்ஷுத்ரக்லேஷாஸஹத்வேந த்யாஜ்யதாபுத்திஃ அதஃ ப்ரஸங்காபாவாத் ப்ரதிஷேதோ ந யுக்த இத்யத்ராஹ — ‘ஜ்ஞாநயோகயோக்யோபீதி’. அபிஷப்தோந்யஸ்ய கைமுத்யஜ்ஞாபநார்தஃ. அக்லேஷோபாயதர்ஷநே ஸ்வாதிகாரமப்ரதிஸந்தாய தத்ர ப்ரவரித்திஃ ஸ்யாதிதி ததோ நியம்யத இத்யர்தஃ. ஸதுஃகத்வநிர்துஃகத்வலக்ஷணவைஷம்யமந்வாருஹ்யாப்ரமாதத்வாதிபிர்நியம உக்தஃ. அத ஸதுஃகத்வமபி த்வயோஃ ஸமாநமித்யுச்யதே’ஸர்வாரம்பா ஹி’ இத்யர்தேந.’கர்மாரம்பாஃ ஜ்ஞாநாரம்பாஷ்சேத்யநேந’ ஸர்வஷப்தஸ்யாத்ர ப்ரகரிதஷாஸ்த்ரீயகாத்ஸ்ந்ர்யபரத்வமாஹ. துஃகஸாம்யே ஸதி கிமந்யதரநியமேந கதஂ ச ந தத்தஸ்ய ஹேதுஃ இத்யத்ராஹ — ‘இயாநிதி’. கர்மாரம்பேஷு காயக்லேஷமாத்ரஂ? ஜ்ஞாநாரம்பேஷு த்வத்யாஸந்நத்வேபி கபோணிகூடாயமாநப்ரத்யக்விஷயாந்வேஷணேந இந்த்ரியமநோநியமநப்ரயாஸோ துஃகாத்மக இதி பாவஃ.

——————-

தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :

49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி

அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன்,
விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக,
ஜிதாத்மா-தன்னை வென்றவன்,
ஸர்வத்ர-எங்கும்,
பரமாம் நைஷ்கர்ம்ய ஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி),
அதிகச்சதி-அடைகிறான்.

யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப்
பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன்.
அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான்.
மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது
தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்;
அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன.
அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணவில்லை.
பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது.
பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர்,
உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம்.
கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம்.
யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும்.
போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம்.
அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது.
ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான்.
ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான்.
நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.

৷৷18.49৷৷ஸர்வத்ர பலாதிஷு அஸக்த புத்திஃ ஜிதாத்மா ஜித மநாஃ பரம புருஷ கர்தரித்வ அநுஸந்தாநேந ஆத்ம கர்தரித்வே விகத ஸ்பரிஹஃ ஏவஂ த்யாகாத் அநந்யத்வேந நிர்ணீதேந ஸஂந்யாஸேந யுக்தஃ கர்ம குர்வந் பரமாஂ நைஷ்கர்ம்ய ஸித்திம் (நிகத கர்ம ஞான யோகம் )அதி கச்சதி. பரமாஂ த்யாந நிஷ்டாஂ ஜ்ஞாந யோகஸ்ய அபி பல பூதாம் அதி கச்சதி இத்யர்தஃ. வக்ஷ்யமாண த்யாந யோகாவாப்திஂ ஸர்வேந்த்ரிய கர்ம உபரதி ரூபாம் அதி கச்சதி.

৷৷18.49৷৷’ஸர்வத்ராஸக்தபுத்திஃ’ இத்யுக்தேபி புநஃ’விகதஸ்பரிஹஃ’ இத்யேதத்பலஸங்கநிவரித்திரூபத்யாகஸஹபடிதகர்தரித்வத்யாகவிஷயத்வௌசித்யாத் ஸ்வப்நாதிஷ்வபி ஸ்வாத்மநி கர்தரித்வாநுஸந்தாநப்ரஸங்கநிவரித்திரூபத்யாககாஷ்டாவிவக்ஷயேத்யாஹ’ஆத்மகர்தரித்வே விகதஸ்பரிஹ’ இதி.’ஸந்ந்யாஸேநாதிகச்சதி’ இதி ந ஜ்ஞாநயோகாதிபரஂ?’கர்ம ந த்யஜேத்’ இதி ப்ரகரிதாநந்வயாத்? அத்யாயாரம்போக்தஸந்ந்யாஸவிஷயத்வௌசித்யாச்சேத்யபிப்ராயேணாஹ’ஏவஂ த்யாகாதநந்யத்வேந நிர்ணீதேநேதி’. அத்ர நைஷ்கர்ம்யஸித்திஷப்தோ ந மோக்ஷவிஷயஃ’ஸித்திஂ ப்ராப்தஃ’ இத்யாதிநா புநஃ கர்தவ்யவிதாநாத்? நாபி ஜ்ஞாநயோகமாத்ரவிஷயஃ?’பரமாம்’ இதி விஷேஷணாந்நைஷ்கர்ம்யஷப்தமாத்ரேண ச தத்விவக்ஷோபபத்தேஃ. அதோத்ர ஜ்ஞாநநிஷ்டாபலப்ராரம்போ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ’பரமாஂ த்யாநநிஷ்டாமிதி’.’நைஷ்கர்ம்யஸித்திம்’ இதி ஸமாஸவஷாத்பரமத்வவிஷேஷணஷக்த்யா வா ஸித்திஂ,விவரிணோதி — ‘ஜ்ஞாநயோகஸ்யாபி பலபூதாமிதி’. உக்தார்தபரத்வமுத்தரக்ரந்தாநுகுண்யேநாஹ — ‘வக்ஷ்யமாணத்யாநயோகாவாப்திமித்யாதிநா’. நிர்கதகர்மா நிஷ்கர்மா? தஸ்ய பாவோ நைஷ்கர்ம்யமிதி வ்யுத்பத்திஂ வ்யநக்தி’ஸர்வேந்த்ரியகர்மோபரதிரூபாமிதி’.

—————–

50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா

ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை,
யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன்,
யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ,
ததா-அந்த நிலையை,
ஸமாஸேந ஏவ-சுருக்கமாக,
மே நிபோத – என்னிடமிருந்து தெரிந்து கொள்,
கௌந்தேய-குந்தி மைந்தனே!

சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை
யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது.
சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன.
பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது.
பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம்.
அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது.
மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை.
வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன.
ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.

எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது.
மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது.
மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை.
எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.

யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன்.
பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன.
ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.

৷৷18.50৷৷ஸித்திஂ ப்ராப்தஃ ஆப்ரயாணாத் அஹரஹஃ அநுஷ்டீயமாந கர்ம யோக நிஷ்பாத்ய த்யாந ஸித்திஂ ப்ராப்தோ யதா யேந ப்ரகாரேண வர்தமாநோ ப்ரஹ்ம ப்ராப்நோதி ததா ஸமாஸேந மே நிபோத. தத் ஏவ ப்ரஹ்ம விஷிஷ்யதே நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா இதி. ஜ்ஞாநஸ்ய த்யாநாத்மகஸ்ய யா பரா நிஷ்டா பரஂ ப்ராப்யம் இத்யர்தஃ.

৷৷18.50৷৷’ஸித்திஂ ப்ராப்தஃ’ இத்யஸ்யோக்தாநுவாததாஂ ஸப்ரகாரஹேதுநிர்தேஷேநாஹ’ஆப்ரயாணாதிதி’. ஸித்திஂ ப்ராப்தஸ்ய ப்ரஹ்மப்ராப்த்யபிதாநாத்தத்வ்யதிரிக்தவிஷயத்வஜ்ஞாபநாய’த்யாநஸித்திமித்யுக்தம்’.’யதா’ இத்யஸ்யாநந்தரக்ரந்தாநுஸாரேண புருஷவ்யாபாரோபாதேயப்ராபகப்ரகாரபரதாமாஹ — ‘யேந ப்ரகாரேண வர்தமாந’ இதி. மே நிபோத மத்தோ நிஷ்சயேநாவதாரயேத்யர்தஃ. பரமே பலே ஹ்யுபாயோ நிதிஷ்டதி; அதஸ்ததேவோபாயபர்யவஸாநபூமிதயா நிஷ்டேத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ததேவ ப்ரஹ்ம விஷேஷ்யத’ இதி. ஜ்ஞாநஷப்தஸ்யாத்ராநந்தரோச்யமாநத்யாநவிஷ்ராந்திமாஹ — ‘த்யாநாத்மகஸ்யேதி’.

——————–

51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச

விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்,
த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி,
ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து,
ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.

தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து,
விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து
அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை.
பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால்
அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும்.
புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும்.
சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும்.
உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான்.
மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை.
உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான
பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான்.
அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :

৷৷18.51৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்தித ஆத்ம தத்த்வ விஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷய விமுகீ கரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந் நிமித்தௌ ச ராக த்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்த ஸேவீ ஸர்வைஃ த்யாந விரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷந அநஷந ரஹிதஃ? யத வாக் காய மாநஸஃ த்யாந அபிமுகீ கரித காய வாங் மநோ வரித்திஃ? த்யாந யோக பரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாந யோக பரஃ? (கர்மம் அனுஷ்டானமும் தியானமும் இடைவிடாமல் என்பதாலேயே த்யான காலம் வேறே என்றதாயிற்றே )வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேய தத்த்வ வ்யதிரிக்த விஷய தோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ- பலஂ தத் விவரித்தி ஹேது பூதஂ வாஸநா பலஂ -தந் நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? (செருக்கு -அனுஷ்ட்டிக்கும் த்யானித்தில் வரும் கர்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே )நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீய புத்தி ரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைக ஸுகஃ? ஏவஂ பூதோ த்யாந யோகஂ குர்வந் ப்ரஹ்ம பூயாய கல்பதே ப்ரஹ்ம பாவாய கல்பதே ஸர்வ பந்த விநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷18.51৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ.,விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.

ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

—————–

52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித:

விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய்,
லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி,
நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து,
வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.

தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று,
தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான்.
பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான்.
யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு
மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது.
சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான்.
மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது.
குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான்.
மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே
அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும்.
அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா.
மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும்.
அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது.
உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ
அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது.
வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில்
பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.

৷৷18.52৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷயவிமுகீகரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந்நிமித்தௌ ச ராகத்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்தஸேவீ ஸர்வைஃ த்யாநவிரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷநாநஷநரஹிதஃ? யதவாக்காயமாநஸஃ த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திஃ? த்யாநயோகபரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாநயோகபரஃ? வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேயதத்த்வவ்யதிரிக்தவிஷயதோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ பலஂ தத்விவரித்திஹேதுபூதஂ வாஸநாபலஂ தந்நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீயபுத்திரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைகஸுகஃ? ஏவஂபூதோ த்யாநயோகஂ குர்வந் ப்ரஹ்மபூயாய கல்பதே ப்ரஹ்மபாவாய கல்பதே ஸர்வபந்தவிநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷ 18.52 ৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ. விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

——————-

53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்,
விமுச்ய-விடுத்து,
நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.

அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி
சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி
இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும்
எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும்.
ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான்.
பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம்.
ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று.
தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு.
அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது.
இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர்.
காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே.
உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது.
ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது.
பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில்
அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும்.
பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது.
இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான்.
அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :

৷৷18.53৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷயவிமுகீகரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந்நிமித்தௌ ச ராகத்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்தஸேவீ ஸர்வைஃ த்யாநவிரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷநாநஷநரஹிதஃ? யதவாக்காயமாநஸஃ த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திஃ? த்யாநயோகபரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாநயோகபரஃ? வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேயதத்த்வவ்யதிரிக்தவிஷயதோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ பலஂ தத்விவரித்திஹேதுபூதஂ வாஸநாபலஂ தந்நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீயபுத்திரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைகஸுகஃ? ஏவஂபூதோ த்யாநயோகஂ குர்வந் ப்ரஹ்மபூயாய கல்பதே ப்ரஹ்மபாவாய கல்பதே ஸர்வபந்தவிநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷ 18.53 ৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ. விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

————–

54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும்
சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்;
இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது.
முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது.
தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம்.
இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது;
தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.

ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது
அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த
பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான்.
அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின.
பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் !
விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும்.
ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு.
பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும்
ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது
அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை;
தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை.
ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.

৷৷18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-

மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —

(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )

৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.

‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.

—————-

55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு.
டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில்,
அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும்.
அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.

பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது.
ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது.
உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான்.
இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும்.
ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம்.
வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து
தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை.
நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும்.
இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால்
இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி
கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே.
ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

தத் பலம் ஆஹ -பரபக்தியின் பலமாக பர ஞானம்-மாம் -இரண்டு பாதங்களிலும் -ஆதார அதிசயம்

உள்ளபடி அறிகிறான் -உள்ள படி அறிந்து –இதுவே பர ஞானம் -மீண்டும் மீண்டும் -அறிகையே ஸ்வயம் பிரயோஜனம் -அறிந்த பின்பு விஷதே அடைகிறான் -உடனே -அதே ஸ்லோகத்தில் பரமபக்தி-கேவல ஞானம் மோக்ஷம் அளிக்காதே -கீழ் உள்ள பர பக்தியை பரம பக்தியாக மலர்க்கவே பர ஞானம் -ஞானான் மோக்ஷ பக்ஷம் நிரஸனம் -இங்கு தத பத பிரயோகம் -அத்தாலே பரஞானத்தாலே பரமபக்தி என்றவாறு -ஸ்வயம் ப்ரயோஜன பக்தனுக்கு உடனே பிராப்தி -ஸ்வார்த்த மாக உள்ள பக்தி நிஷ்டனுக்கு பிராரப்த கர்மங்கள் முடிவில் பல பிறவிகள் கழித்தே பேறு

৷৷18.55৷৷ஸ்வரூபதஃ ஸ்வபாவதஃ ச யஃ அஹஂ குணதோ விபூதிதோ யாவாந் ச அஹஂ தஂ மாம் ஏவஂ ரூபயா பக்த்யா தத்த்வதோ விஜாநாதி. மாஂ தத்த்வதோ ஜ்ஞாத்வா ததநந்தரஂ (தத – அத்தாலே இங்கு பர பக்தி கீழ் -அதன் பர ஞானம் – பரம பக்தி )தத்த்வ ஜ்ஞாந அநந்தரஂ ததோ பக்திதோ மாஂ விஷதே ப்ரவிஷதி.(ப்ரவேஷ்டும் கீழ் -விஷதே -ஒரே பொருள் வருவதற்காக பர்ஸமை பத பிரயோகம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்காகவே எனைக் கொள்ளும் ஈதே )தத்த்வதஃ ஸ்வரூப ஸ்வபாவ குண விபூதி தர்ஷந உத்தர காலபாவிந்யா அநவதிகாதிஷய பக்த்யா மாஂ ப்ராப்நோதி இத்யர்தஃ. -அத்ர தத இதி ப்ராப்தி ஹேது தயா நிர்திஷ்டா பக்திஃ ஏவ அபிதீயதே.’பக்த்யா த்வநந்யயா ஷக்யஃ’ (கீதா 11.54) இதி தஸ்யா ஏவ தத்த்வதஃ ப்ரவேஷ ஹேதுதாபிதாநாத்.

ஏவஂ வர்ணாஷ்ரம  உசித நித்ய நைமித்திக கர்மணாஂ பரி த்யக்த பலாதிகாநாஂ பரம புருஷாராதந ரூபேண அநுஷ்டிதாநாஂ விபாக உக்தஃ. இதாநீஂ காம்யாநாம் அபி கர்மணாம் உக்தேந ஏவ ப்ரகாரேண அநுஷ்டீயமாநாநாஂ ஸ ஏவ விபாக இத்யாஹ —

பர பக்தி -த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷ அபி நிவேசம் –
பர ஞானம் து-தத் ஏவ மானஸ சாஷாத்காரம்
புனர் விஸ்லேஷ பீருத்வம்

நனியாம் பரமப க்தியால் நைந்து பங்கயத்தாள் கோனைச் சேர்ந்தான் -தத்வ வேதனம் மறப்பற்று -பர ஞானம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்று
காதலைப் பெருக்கிய பக்தி உழவன் ஹிருஷீ பலத்தாலே பரம பக்தியாக பரிமளித்த பின்பே பேறு

৷৷18.55৷৷’தத்பலமாஹேதி’ — அவ்யவஹிதஂ வ்யவஹிதஂ சேதி ஷேஷஃ. பூர்வக்ரந்தோக்தஜகத்காரணத்வலக்ஷிதஸர்வேஷ்வராக்யதர்ம்யபிப்ராயேண’யஃ’ இத்யஸ்யார்தமாஹ — ‘ஸ்வரூபத’ இதி. விதிநிஷேதரூபஷோதகவாக்யாவஸிதஸர்வவித்யாநுஸந்தேயஸ்வரூபநிரூபகதர்மயோகஃ’ஸ்வபாவத’ இதி நிர்திஷ்டஃ. ஸ்வரூபநிரூபகதர்மாபாவே அநிரூபிதஸ்வரூபதயா நிஸ்ஸ்வபாவமேவ வஸ்து ஸ்யாத். ஸ்வரூபஷப்தஃ ஸ்வரூபநிரூபகதர்மபரஃ? ஸ்வபாவஷப்தஸ்து ஸௌலப்யபர இதி கேசித். யாவச்சப்தோ ஹி ப்ரகர்ஷநிகர்ஷபராமர்ஷயோக்யாகாரவிஷயோ யுக்த இத்யபிப்ராயேணாஹ’குணதோ விபூதிதோபீதி’.’யாவாஂஷ்சாஹமிதி’ குணஷப்தோத்ர நிரூபிதஸ்வரூபவிஷேஷகஜ்ஞாநஷக்த்யாதிஸமஸ்ததர்மவிஷயஃ.’யாவாந்யஷ்ச’ இத்யநயோர்வ்யுத்க்ரமேண வ்யாக்யாநஂ புத்த்யாரோஹக்ரமப்ரதர்ஷநார்தம்.’தத்த்வதஃ’ இத்யஸ்ய’யாவாந்யஷ்ச’ இத்யத்ராநபேக்ஷணாத்’அபிஜாநாதி’ இத்யத்ர ஸஂஷயாதிவ்யுதாஸாய ததபேக்ஷணாச்ச’தத்த்வதோபிஜாநாதீதி’ யோஜிதம்.

‘மாஂ தத்த்வதோபிஜாநாதி’ இத்யுக்தஸ்யைவ’மாஂ தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யநுபாஷணமுபாயபூதஸ்யாபி ஸ்வாதுதமதயா ஸுதுர்லபத்வேநாதராதிஷயார்தம்.’தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யநேநைவ ஆநந்தர்யஸித்த்யர்தஹேதுபௌஷ்கல்யஜ்ஞாபகாநுவாதஸ்ய ஸித்தத்வாத்?’ததநந்தரம்’ இத்யநேநைவ ப்ரவேஷஸ்யாநந்தர்யகண்டோக்தேஃ?’பக்த்யா த்வநந்யயா’ [11.54] இத்யாதௌ ப்ரவேஷேபி ஹேதுதயா பக்தேரேவ ப்ராகுக்தத்வாச்ச’ததோ பக்திதோ மாஂ விஷதே’ இத்யேவாந்வயோ தர்ஷிதஃ.’ப்ரவேஷ்டும்’ இதி ப்ராகுக்தைகார்த்யஜ்ஞாபநாய பதஸித்தயே ச’ப்ரவிஷதீத்யுக்தம்’. யதாவஜ்ஜ்ஞாநமபி காஷ்டாப்ராப்தபக்தேஃ. அந்யோந்யாஷ்ரயணஂ ச பக்தேஃ பூர்வபேதாத்பரிஹரிதம். ஸைவ து ததாவிதாவஸ்தா ஸாக்ஷாந்மோக்ஷஸாதநமித்யாஹ’தத்த்வத’ இத்யாதிநா.,தர்ஷநஷப்தேநாநுபாஷணாத்’தத்த்வதோபிஜாநாதி’ இத்யஸ்ய ஸாக்ஷாத்காரபரத்வஂ வ்யஞ்ஜிதம்.பரபக்த்யாபி தத்த்வஜ்ஞாநமேவ ஸாத்யஂ? ததேவ து ஸாக்ஷாந்மோக்ஷஸாதநமிதி குதரிஷ்டிமதமபாகரோதி’அத்ரேதி’. ஏவகாரேண தர்ஷநவ்யவச்சேதஃ. யத்யப்யத்ர பக்திஷப்தோ வ்யவஹிதஃ? தத்த்வஜ்ஞாநஂ த்வவ்யவஹிதஂ? ததாபி வ்யவஹிதபராமர்ஷ ஏவ யுக்தஃ; அந்யதா’தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யாதிநா புநருக்திப்ரஸங்காத். அத்ர தர்ஷநஜநகபக்த்யநுவாதே ப்ரயோஜநாபாவாத்ஸைவ ததுத்தராவஸ்தா பராமரிஷ்யத இதி பாவஃ. ப்ராகுக்தஂ ஹேதுமாஹ’பக்த்யா த்வநந்யயேதி’.’அயமபிப்ராயஃ’ — உபக்ரமந்யாயாத்பூர்வஂ ப்ரபலஂ? ஸ்பஷ்டாஸ்பஷ்டயோஷ்ச ஸ்பஷ்டாநுஸாரேணாந்யத்கமயிதவ்யம் — இதி.

——————-

56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன.
சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற
எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது.
தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை.
தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது.
அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம்.
ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை.
ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான்.
கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது.
கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்து கொள்ளலாம்;
நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும்
அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம்.
அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம்.
அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.

கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின்
முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம்.
ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

ஏவஂ வர்ணாஷ்ரம  உசித நித்ய நைமித்திக கர்மணாஂ பரி த்யக்த பலாதிகாநாஂ பரம புருஷாராதந ரூபேண அநுஷ்டிதாநாஂ விபாக உக்தஃ. -இதாநீஂ காம்யாநாம் அபி கர்மணாம் உக்தேந ஏவ ப்ரகாரேண அநுஷ்டீயமாநாநாஂ ஸ ஏவ விபாக இத்யாஹ –(காம்ய கர்மங்களும் கூட -கீழ் சொன்ன -த்ரிவித தயக்கத்துடன் யதா சக்தி செய்து -விபாகம் அடைந்து -பரிபக்குவம் அடைந்து மோக்ஷம் கொடுக்கும் )

அர்ஜுனன் யுத்தம் செய்வது நித்ய நைமித்திக கர்மம் என்று கொள்ளாமல் காம்ய கர்மமாகக் கொண்டால் அதுவும் பக்குவம் அடைந்து மோக்ஷம் தருமோ என்ன
இதுவும் வர்ணாஸ்ரம கர்மம் என்பதால் நித்ய நைமித்திகம் தான் –
இவ்வாறு இல்லை என்று நீ சொன்னபடி காம்ய கர்மமாகக் கொண்டாலும் அதே பலன் இதுக்கும் உண்டே என்கிறான்

৷৷18.56৷৷ந கேவலஂ நித்ய நைமித்திக கர்மாணி அபி து காம்யாநி அபி ஸர்வாணி கர்மாணி மத் வ்யபாஷ்ரயஃ மயி ஸஂந்யஸ்த கர்தரித்வாதிகஃ குர்வாணோ மத் ப்ரஸாதாத் (பக்தி உபாயமாகுமே தவிர மோக்ஷ பிரதத்வம் அவனுக்கே தானே )ஷாஷ்வதஂ பதம் அவ்யயம் அவிகலஂ ப்ராப்நோதி. பத்யதே கம்யதே இதி பதம் மாஂ ப்ராப்நோதி இத்யர்தஃ.

யஸ்மாத் ஏவஂ தஸ்மாத் —

৷৷18.56৷৷பூர்வத்ர ஜ்ஞாநநிஷ்டோக்தா? அநந்தரஂ கர்மநிஷ்டோச்யத இதி ஷங்காவ்யுதாஸாய பூர்வத்ராபி கர்மநிஷ்டாயாமேவாவாந்தரவிஷேஷவிபக்திமநுவதந் ஸங்கதிமாஹ — ‘ஏவமிதி’. விபாகோத்ர பூர்வஷ்லோகத்வயோக்தபரபக்திபரஜ்ஞாநபரமபக்திபர்யந்தஃ. விஹிதகர்மணாஂ பூர்வமுக்தத்வாத்ஸர்வகர்மாண்யபீதி நிஷித்தாநுஷ்டாநஂ பகவதநந்யதாஸ்துத்யர்தமுபக்ஷிப்யத இதி ஸ்வைராபிலாஷிஷங்கராதிமதமபாகரோதி’இதாநீஂ காம்யாநாமபி கர்மணாமிதி’. ஸர்வஷப்தோத்ர ஷாஸ்த்ரீயேஷ்வேவாநுக்தஸங்க்ரஹணார்த இதி பாவஃ. ததேவ விவரிணோதி’ந கேவலமித்யாதிநா’. பூர்வஷ்லோகஸ்தப்ராப்யமேவாத்ராபி ஸவிஷேஷணபதஷப்தேந நிர்திஷ்டமித்யபிப்ராயேண நிர்வக்தி’பத்யத’ இதி.

—————-

ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :

57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம்
அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான
பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில்
அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில்
அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில்
அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை
ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது
யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக
விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம்.
தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.

புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான்.
காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான்.
சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது.
எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது.
ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர
ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள்,
குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா?
இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும்.
ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும்.
ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால்
மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம்
பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

யஸ்மாத் ஏவஂ தஸ்மாத் –எதனால் இது காறும் சொல்லப்பட்டதோ அதனாலே

৷৷18.57৷৷சேதஸா ஆத்மநோ மதீயத்வ மந் நியாம்யத்வ புத்த்யா  (தாதர்த்த சதுர்த்தி இத்தையே சொல்லும் )உக்தஂ ஹி ‘மயி ஸர்வாணி கர்மாணி ஸஂந்யஸ்ய அத்யாத்ம சேதஸா.’ (கீதா 3.30)(உண்மையான அறிவோடு அங்கும் இதே போல் )இதி ஸர்வ கர்மாணி ஸகர்தரிகாணி ஸ ஆராத்யாநி மயி ஸஂந்யஸ்ய மத் பரஃ’அஹம் ஏவ பல தயா ப்ராப்யஃ’ இதி அநு ஸஂததாநஃ கர்மாமி குர்வந் இமம் ஏவ புத்தி யோகம் உபாஷ்ரித்ய ஸததஂ மச் சித்தோ பவ.ஏவம் —

৷৷18.57৷৷உக்தஂ பரமபுருஷார்தஸாதநத்வமநந்தரோபாயாநுஷாஸநஹேதுரித்யாஹ’யஸ்மாதேவமிதி’. சேதஷ்ஷப்தஸாபல்யாய ததபிப்ரேதஂ சேதஸோ பகவதி கர்மஸந்ந்யாஸகரணத்வஂ யேந ப்ரகாரேண? தமாஹ’ஆத்மநோ மதீயத்வமந்நியாம்யத்வபுத்த்யேதி’. அத்ர சேதஷ்ஷப்தஸ்யைவ தாத்பர்யஂ ப்ராசீநஸவிஷேஷணநிர்தேஷேந ஸ்தாபயதி’உக்தஂ ஹீதி’. அத்யாத்மசேதஸா? பரஷேஷத்வாதிவிஷேஷிதயதாவஸ்திதாத்மகோசரபுத்த்யேத்யர்தஃ. ஸர்வஷப்தேந ஸ்வரூபகாத்ஸ்ந்ர்யவதநுபந்திகாத்ஸ்ந்ர்யமபி ப்ராகுக்தப்ரகாரேணாபிப்ரேதமித்யாஹ’ஸகர்தரிகாணி ஸாராத்யாநீதி’. புத்தியோகஷப்தேந முமுக்ஷோரஸாதாரணஂ கர்தரித்வாநுஸந்தாநாதிகஂ ஸர்வஂ ப்ரத்யபிஜ்ஞாப்யத இத்யாஹ’இமமேவ புத்தியோகமிதி’.

——————–

புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:

58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி

மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்,
ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
தரிஷ்யஸி-கடந்து செல்வாய்,
அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்,
விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.

என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய்.
அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும்
இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம்.
நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம்.
வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும்.
நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது.
ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது
அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு
நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத்
திருத்தி யமைத்துக் கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.

இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன.
மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும்.
அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :

நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.

என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது.
நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே.
உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம்
உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று
எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.

৷৷18.58৷৷மச் சித்தஃ ஸர்வ கர்மாணி குர்வந் ஸர்வாணி ஸாஂஸாரிகாணி துர்காணி மத் ப்ரஸாதாத் ஏவ தரிஷ்யஸி. –அத த்வம் அஹஂகாராத் அஹம் ஏவ கரித்யாகரித்ய விஷயஂ ஸர்வஂ ஜாநாமி இதி பாவாத் மதுக்தஂ ந ஷ்ரோஷ்யஸி சேத் விநங்க்ஷ்யஸி நஷ்டோ பவிஷ்யஸி. –ந ஹி கஷ்சித் மத் வ்யதிரிக்தஃ கரித்ஸ்நஸ்ய ப்ராணி ஜாதஸ்ய கரித்யாகரித்யயோஃ ஜ்ஞாதா ஷாஸிதா வா அஸ்தி.(சர்வருக்கும் செய்ய வேண்டியதையும் செய்யத் தகாதவற்றையும் அறிந்து உபதேசம் செய்வது என்னைத் தவிர வேறு யார் )

৷৷18.58৷৷’மச்சித்தஃ ஸர்வதுர்காணி’ இத்யத்ர மச்சித்தஷப்தேந பூர்வஷ்லோகோக்தஸ்யைவாநுவாதாத்தத்ர ச புத்திவிஷேஷவிஷிஷ்டகர்மவிதிபரத்வாதுத்தரேஷ்வபி க்ரந்தேஷு யுத்தாக்யஸ்வதர்மப்ரோத்ஸாஹநஸ்யைவ ஸ்புடத்வாதிஹாபி தத்விவக்ஷாமாஹ — ‘ஏவஂ மச்சித்தஃ ஸர்வகர்மாணி குர்வந்நிதி’. மச்சித்தத்வமாத்ரஸ்ய விதேயத்வே அநந்தரஂ யுத்தநிவரித்த்யத்யவஸாயப்ரதிக்ஷேபோ ந ஸங்கச்சத இதி பாவஃ. துர்கஷப்தஸ்ய கிரிவநஜலாதிதுர்கேஷு ப்ரஸித்திப்ரகர்ஷாத்க்ஷத்ித்ரயஸ்ய சார்ஜுநஸ்ய யுயுத்ஸோஸ்தந்நிஸ்தாராபேக்ஷாஸம்பவாத்தத்விஷயத்வஷங்காமப்யபாகர்துஂ பூர்வாபராநுரோதேந’ஸாஂஸாரிகாணீதி’ விஷேஷிதம்.’மத்ப்ரஸாதாத்’ இத்யநேந வ்யுத்பத்த்யநுஷாஸநஷ்ருதிஸ்மரித்யாதிவிருத்தாபூர்வாதிகல்பநாவ்யுதாஸஃ? ஸ்வஸ்ய பலப்ரதாநே ப்ரதிபந்தநிவரித்த்யாதிமாத்ரஸாகாங்க்ஷத்வஂ ச ஸூச்யத இத்யபிப்ராயேணாஹ’மத்ப்ரஸாதாதேவேதி’. ஏவஂ நித்யநைமித்திககாம்யரூபாணாஂ கர்மணாஂ புத்திவிஷேஷநியமாதியோகேந கர்மயோகஷப்திதாநாஂ பரம்பரயா பரிபூர்ணபகவத்ப்ராப்திபர்யந்தஂ விபாகமுபபாத்ய ஸர்வதா கர்மயோக ஏவ தே கர்தவ்ய இதி நிகமிதம்.,அத ததகரணே ப்ரத்யவாயமாஹ — ‘அத சேத்’ இத்யர்தேந. ஹிதவசநாநாதரஸ்ய நிமித்தபூதமஹங்காரவிஷேஷமாஹ’அஹமேவ கரித்யாகரித்யவிஷயஂ ஸர்வஂ ஜாநாமீதி பாவாதிதி’.’ந ஷ்ரோஷ்யஸீதி’ — ஷ்ரூயமாணேபி ஷ்ருதபலநிவரித்த்யபிப்ராயம்.’விநங்க்ஷ்யஸி’ இத்யநேநாநாதிகாலமநுவரித்தஸ்யாத்மநாஷஸ்யோத்தரகாலேப்யநுவரித்திர்விவக்ஷிதேத்யபிப்ராயேணாஹ’நஷ்டோ பவிஷ்யஸீதி’.’புத்திநாஷாத்ப்ரணஷ்யதி’ [2.63] இதி ப்ராகுக்தப்ரத்யபிஜ்ஞாபநமிதி பாவஃ. அஷ்ரவணாதிநிதாநமாப்தாந்தராதிஸம்பவமபாகுர்வந்’விநங்க்ஷ்யஸி’ இத்யஸ்ய ஷாபவசநதுல்யதாவ்யாவரித்த்யர்தஂ ஸ்வஸ்யைவாப்ததமத்வகதநேந ஸ்வோபதிஷ்டஸ்யார்தஸ்திதிருபதாயாமபிப்ராயமாஹ’நஹி கஷ்சிதிதி’. அந்யே ஹி வக்தாரோ மயா வாசிதாஃ பரிமிதவிஷயஂ கிஞ்சித்வதந்தி; அஹஂ து ஸர்வஸ்யாதிகாரிணஃ ஸர்வவிதஹிதாஹிதவேதா; யாநி ச பரோக்தாநி ஷாஸ்த்ராண்யநுக்தாநி ச ச்சந்தாஂஸி? தாந்யபி மதாஜ்ஞாரூபதயைவ ப்ரமாணபூதாநீதி பாவஃ.

——————

அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :

59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி

யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு,
ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ,
தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது,
ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.

நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம்.
இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக்
குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை.
பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில்
தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை
என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை.
ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக
அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :

இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது.
தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா?
தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது.
அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும்.
எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.

தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய்.
ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :

৷৷18.59৷৷யத் அஹஂகாரம் ஆத்மநி ஹிதாஹித ஜ்ஞாநே ஸ்வாதந்த்ர்யா அபிமாநம் ஆஷ்ரித்ய மந் நியோகம் அநாதரித்ய’ந யோத்ஸ்யே’ இதி மந்யஸே ஏஷ தே ஸ்வாதந்த்ர்ய வ்யவஸாயோ மித்யா பவிஷ்யதி. யதஃ ப்ரகரிதிஃ த்வாஂ யுத்தே நியோக்ஷ்யதி; மத் ஸ்வாதந்த்ர்யோத் விக்ந மநஸஂ த்வாம் அஜ்ஞஂ ப்ரகரிதிஃ நியோக்ஷ்யதி.

தத் உபபாதயதி —

৷৷18.59৷৷ஏவமஷ்ரவணபலபூதயுத்தநிவரித்தேர்விநாஷஹேதுத்வமுக்தம்; அத யுத்தநிவரித்தேரேவாஷக்யத்வமுச்யதே? கிஞ்ச பவது கர்மயோகோ மயா கர்தவ்யஃ; யுத்தவ்யதிரிக்தஂ கிமபி கர்மயோகாந்தரமுபாததாநஸ்ய மே விநாஷோ ந ஸ்யாதிதி,ஷங்காமபாகரோதி’யத்யஹங்காரஂ’ இதி ஷ்லோகேந. அஹங்காரஂ யுத்தநிவரித்த்யாநுகுண்யேந விஷிநஷ்டி’ஆத்மநி ஹிதாஹிதேதி’. அஹங்காராஷ்ரயணபலமாஹ’மந்நியோகமநாதரித்யேதி’.’ந ஷ்ரோஷ்யஸி’ இத்யஸ்யைவாயமர்தஃ.’ஏஷஃ’ இத்யநேந பராமரிஷ்டமாஹ — ‘ஸ்வாதந்த்ர்யவ்யவஸாய’ இதி. ஸ்வாதந்த்ர்யாபிமாநகர்பஸ்தந்மூலோ வா வ்யவஸாயஃ ஸ்வாதந்த்ர்யவ்யவஸாயஃ. ததுபயஂ’மந்யஸே’ இத்யநேந ‘அஹங்காரமாஷ்ரித்ய’ இத்யநேந ச ஸூசிதம். ப்ரகரிதிர்நியோக்ஷ்யதீத்யயுக்தம்? அசேதநத்வாத்தஸ்யாஃ? சேதநவ்யாபாரத்வாச்ச நியோகஸ்யேதி ஷங்காமுபாலம்பாபிப்ராயேண பரிஹரதி — ‘மத்ஸ்வாதந்த்ர்யோத்விக்நஂ த்வாமிதி’. மதுக்தகரணே ஸர்வஜ்ஞஸ்ய மே ஸர்வஂ பரஃ ஸ்யாத்; மந்நியோகாதிக்ரமே து மய்யுதாஸீநே ப்ரகரிதிபரதந்த்ரஸ்த்வமஹிதேஷ்வேவ ப்ரவரித்ஸ்யஸீதி பாவஃ.

——————

60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத்

கௌந்தேய-குந்தியின் மகனே!
யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால்,
நிபத்த:-கட்டப் பட்டு,
அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது.
அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு
ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான்.
பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது.
நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் !
அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான்.
காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது.
பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட
அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.

மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை.
அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது.
உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி
அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை.
தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும்
மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ,
தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும்.
மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும்
அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம்.
எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.

தத் உபபாதயதி –அத்தையே மேலும் விளக்குகிறான் இதில்

৷৷18.60৷৷ஸ்வபாவஜஂ ஹி க்ஷத்ரியஸ்ய கர்ம ஷௌர்யஂ ஸ்வபாவஜேந ஷௌர்யாக்யேந ஸ்வேந கர்மணா நிபத்தஃ தத ஏவ அவஷஃ பரைஃ தர்ஷணம் அஸஹமாநஃ த்வம் ஏவ தத் யுத்தஂ கரிஷ்யஸி; யத் இதாநீஂ மோஹாத் அஜ்ஞாநாத் கர்துஂ ந இச்சஸி.

ஸர்வஂ ஹி பூதஜாதஂ ஸர்வேஷ்வரேண மயா பூர்வ கர்ம அநுகுண்யேந ப்ரகரித் யநுவர்தநே நியமிதம்? தத் ஷ்ரரிணு —

৷৷18.60৷৷புநருக்திபரிஹாராயாஹ — ‘ததுபபாதயதீதி’. ப்ரகரிதேஃ ப்ரேரகத்வப்ரகாரமவாந்தரவ்யாபாரேண தர்ஷயதீத்யர்தஃ.’ப்ரகரிதிஃ’ இதி நிர்திஷ்ட ஏவாயமர்தஃ ஸ்வபாவஷப்தேநாநூதிதஃ. ஸ்வபாவஷப்தஷ்ச’ஸ்வபாவப்ரபவைர்குணைஃ [18.41] இத்யத்ர வ்யாக்யாதஃ. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர தேஹாத்யாகாரபரிணதப்ரகரிதிவிஷயத்வேபி ஸ்வபாவஷப்தஃ பூர்வோக்தார்த ஏவ.’ஷௌர்யஂ தேஜஃ’ இத்யாதிகஂ ஸ்மாரயதி’ஸ்வபாவஜஂ ஹீதி’.’ஸ்வேந’ க்ஷத்ித்ரயாஸாதாரணேநேத்யர்தஃ. ஷௌர்யஂ நிர்பயப்ரவேஷஸாமர்த்யஂ; தேந தந்மூலஂ கர்மாத்ர வாஸநாவஷாத்ருசிவிஷயதயா பந்தகத்வேநோக்தம். மதுக்தாநாதரே ப்ரகாராந்தரேணாபி கரிஷ்யஸ்யேவேத்யபிஷப்தார்தஃ. ததபிப்ராயேணாஹ — ‘த்வமேவேதி’.’பரைர்தர்ஷணமஸஹமாந’ இதி விஷேஷணஂ அவஷஸ்ய கதஂ கர்மகர்தரித்வமிதி ஷங்காபரிஹாரார்தம். அமர்ஷசிகீர்ஷாதிஸ்பர்தககுணபாரவஷ்யஂ கர்தரித்வஸ்யோபயுக்தமேவேதி பாவஃ.’கர்துஂ நேச்சஸி யந்மோஹாத்’ இதி வாக்யாந்தர்வாக்யநிவேஷோ ஹாஸ்யகருணரஸாவேஷேந? தத்விவிநக்தி’யதிதாநீமிதி’. ப்ராப்தாவஸரே தர்மயுத்தாநுஷ்டாநஂ பரித்யஜ்யாதிக்ராந்தாவஸரே பரபரிபவவ்ரீடிதோகதஜலஸேதுபந்தஂ கரிஷ்யஸீதி வர்தமாநபவிஷ்யத்வ்யபதேஷயோஸ்தாத்பர்யமிதி பாவஃ.’ந ஷ்ரோஷ்யஸி’ [5.188] இதிவதுபதிஷ்டஸ்ய சித்தாநாரோஹ இஹ மோஹஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘அஜ்ஞாநாதிதி’.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –18-18–18-40—

February 12, 2021

18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ:

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்,
த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன,
கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்,
கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.

அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.

அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது
பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன்.
இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும்.
அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது.
அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பது போன்று
திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது.
கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.

கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை
அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம்.
இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன.
கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன.
ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள்.
படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும்.
அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும்.
ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான்.
முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது.
ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.

ஸர்வம் இதம் அகர்தரித்வாத்  யநுஸந்தாநஂ ஸத்த்வ குண வரித்த்யா ஏவ பவதி- இதி ஸத்த்வஸ்ய உபாதேயதா ஜ்ஞாபநாய -கர்மணி ஸத்த்வாதி குண கரிதஂ வைஷம்யஂ ப்ரபஞ்சயிஷ்யந் கர்ம சோதநா ப்ரகாரஂ தாவத் ஆஹ –(இனி ஸத்வ குணம் உபாதேயம் தூண்டப்போகிறான் -அதற்காக -செய்யப்படும் கர்மங்கள் -ஞானம் கர்த்தா இவை அனைத்தும் மூவகை படும் -)

৷৷18.18৷৷ஜ்ஞாநஂ கர்தவ்ய கர்ம விஷயஂ ஜ்ஞாநம்? ஜ்ஞேயஂ ச கர்தவ்யஂ கர்ம? பரிஜ்ஞாதா தஸ்ய போத்தா- இதி த்ரிவிதா -கர்ம சோதநா; -போத போத்தவ்ய போத்தா த்ரி யுக்தோ ஜ்யோதிஷ்டோமாதி கர்ம விதிஃ இத்யர்தஃ. தத்ர போத் தவ்ய ரூபஂ கர்ம த்ரிவிதஂ ஸஂகரிஹ்யதே கரணஂ கர்ம கர்தா இதி. கரணஂ ஸாதந பூதஂ த்ரவ்யாதிகம்? கர்ம யாகாதிகம்? கர்தா அநுஷ்டாதா இதி.

৷৷18.18৷৷ஏவஂ ஸாத்த்விகத்யாகோ விஷோதிதஃ; அத ததர்தஂ’நித்யஸத்த்வஸ்தஃ’ [2.45] இத்யாதிபிர்பஹுதா ப்ராக்ப்ரஸக்தஸத்த்வோபாதேயதா நிரவஷேஷஂ விஷோத்யா; தத்ர மத்யே கர்மசோதநாப்ரகாராதிகதநஂ கதஂ ஸங்கச்சதே இத்யத்ராஹ — ‘ஸர்வமிதி’. கர்மசோதநாப்ரகாரோக்திஸ்ததநுபந்திஷு ஜ்ஞாநாதிஷு குணதஸ்த்ரைவித்யஂ ப்ரபஞ்சயிதுமித்யர்தஃ.’கர்தவ்யகர்மவிஷயமித்யாதி’ ஜ்ஞாநஜ்ஞேயஜ்ஞாதரிஷப்தாஃ ஸாமாந்யவிஷயா அபி கர்மசோதநாத்ரைவித்யார்தத்வாத்விஷேஷபரா இதி பாவஃ. ஏதேந ஜ்ஞாநஷப்தஸ்யாத்ர ஷாஸ்த்ரபரத்வவ்யாக்யா நிரஸ்தா. ப்ரவர்தகவசநரூபசோதநாஸ்வரூபவிலக்ஷணாநாஂ ஜ்ஞாநாதீநாஂ கதஂ சோதநாபேதத்வோக்திஃ இத்யத்ராஹ — ‘போதபோத்தவ்யபோத்தரியுக்த’ இதி. ஜ்ஞாநாதீநாஂ சோதநாநுபந்தித்வமாத்ரேண விதாஷப்தோக்தஂ ப்ரகாரத்வமித்யர்தஃ. ஏவஂ’த்ரிவிதஃ கர்மஸங்க்ரஹஃ’ இத்யத்ர ஹேதுத்வயஸஹிதஸ்வரூபேண த்ரைவித்யம்.அநுக்தவிஷயத்ரைவித்யாந்தரோக்திஷங்காவ்யுதாஸாய த்ரிஷ்வந்யதமஂ விவிச்யத இத்யாஹ — ‘தத்ரேதி’. ஸங்க்ரஹஷப்தஸ்ய கர்மணி வ்யுத்பத்திமாஹ — ‘ஸஂகரிஹ்யத’ இதி. கர்மைவ ஸங்க்ரஹ இதி கர்மதாரயஃ? கர்மணோ வா ஸங்க்ரஹஃ. “வ்ரீஹிபிர்யஜேத” [ஆப.ஷ்ரோ.6.31.24]’தத்நா ஜுஹோதி’ [ஆப.ஷ்ரௌ.6.25.10] இத்யாதிப்ரதிபாதிதஂ க்ரியாகரணமிஹ கரணஷப்தேநோச்யதே. பலாபேக்ஷயா து கர்மண ஏவ கரணத்வாதித்யபிப்ராயேணாஹ’ஸாதநபூதஂ த்ரவ்யாதிகமிதி’. ஆதிஷப்தேந ஜாத்யாதிக்ரஹணம். நந்வத்ர ஜ்ஞாயதேநேநேதி ஜ்ஞாநஂ? ததேவ கரணமித்யுச்யதே; ஜ்ஞாநாதித்ரயமேவ ஹி கரணகர்மகர்தரிஷப்தைர்விவரிதமிதி யுக்தம்; அத ஏவ ஹி’ஜ்ஞாநஂ கர்ம ச கர்தா ச’ இத்யநந்தராநுவாதஸங்கதிரிதி சேத் — மைவஂ? ஷப்தஸ்வாரஸ்யாபாவாத்? உக்தமாத்ரஸ்ய ச ஷப்தாந்தரேண புநரபிதாநே ப்ரயோஜநாபாவாத்; உக்தாவாந்தரவிபஜநஸ்ய து விவேகோபயுக்தத்வாதிதி பாவஃ. கர்தரிகரணஸமபிவ்யாஹாராத்கர்மஷப்தோபி காரகவிஷேஷவிஷய இதி ஷங்காமபாகரோதி’கர்ம யாகாதிகமிதி’. க்ரியாஸ்வரூபஂ ஹி குணதஸ்த்ரிவிதஂ விபஜிஷ்யத இதி பாவஃ. நியோஜ்யாவஸ்ததயா’பரிஜ்ஞாதா’ இதி நிர்திஷ்ட ஏவாநுஷ்டாத்ரவஸ்ததயா புநஃ கர்மஷேஷதயா தத்ப்ரகாரத்வேந’கர்தா’ இதி வ்யபதிஷ்யத இத்யாஹ — ‘கர்தா அநுஷ்டாதேதி’.

————

ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம்.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :

19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி

குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே,
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால்,
த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன,
தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.

குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும் மூன்று வகைப்படும்.
அவற்றையும் உள்ளபடி கேள்.

ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது.
பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை
இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது.
அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை.
பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது.
முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது.
அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.

அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும்.
உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது.
தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே.
உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது.
அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு
வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும்
ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.

৷৷18.19৷৷கர்தவ்ய கர்மவிஷயஂ ஜ்ஞாநம்? அநுஷ்டீய மாநஂ ச கர்ம தஸ்ய அநுஷ்டாதா ச ஸத்த்வாதி குண பேததஃ த்ரிதா ஏவ ப்ரோச்யதே. குண ஸஂக்யாநே குண கார்ய கணநே யதாவத் ஷ்ரரிணு தாநி அபி — தாநி குணதோ பிந்நாநி ஜ்ஞாநாதீநி யதாவத் ஷ்ரரிணு.

৷৷18.19৷৷’ஜ்ஞாநஂ ஜ்ஞேயஂ பரிஜ்ஞாதா’ [18.18] இத்யுக்தா ஏவ பதார்தாஃ’ஜ்ஞாநஂ கர்ம ச கர்தா ச’ இத்யநூத்யந்தே. ஜ்ஞாதரித்வகர்தரித்வயோரவஸ்தாபேதமாத்ரத்வாத் ஜ்ஞாநோக்த்யைவ ஜ்ஞாதுரபி ஸித்தேரிஹாநுக்திஃ; ஜ்ஞேயஷப்தஸ்ய ச கர்மவிஷயத்வாத். கரணஂ து கர்மாநுப்ரவிஷ்டத்வாந்ந பரிதக்விபஜிஷ்யதே. குணஸங்க்யாநஷப்தேந ஸாங்க்யராத்தாந்தவிவக்ஷாயாஂ ப்ரமாணாபாவாத்ப்ரகரிதே சாநுபயோகாத் குணஸ்வரூபகணநே ச ஜ்ஞாநாதேரநுப்ரவேஷாபாவாத்’குணகார்யகணந’ இத்யுக்தம்.’யதாவச்சரிணு’ யதாவச்ரவணயோக்யமவதாநஂ குர்வித்யர்தஃ.’யதாவத்’ இதி விவக்ஷிதஂ ப்ரகாரமாஹ’குணதோ பிந்நாநீதி’.

——————

20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்

ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான,
ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும்,
அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை,
ஈக்ஷதே – காணுகிறானோ,
தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்விகம் என்று அறி .

பிரிவு பட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே.
அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது.
ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து;
கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை.
அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை.
துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.

காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை.
பரம் பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.

৷৷18.20৷৷ப்ராஹ்மண க்ஷத்ரிய ப்ரஹ்மசாரி கரிஹஸ்தாதி ரூபேண விபக்தேஷு ஸர்வேஷு பூதேஷு கர்மாதிகாரிஷு யேந ஜ்ஞாநேந ஏக ஆகாரம் ஆத்மாக்யஂ பாவஂ தத்ர அபி அவிபக்தஂ ப்ராஹ்மணத்வாத் யநேக ஆகாரேஷு அபி பூதேஷு ஸித தீர்காதி (உயரம் குள்ளம் போன்ற )விபாக வத்ஸு ஜ்ஞாநைக ஆகாரஂ ஆத்மாநஂ விபாக ரஹிதம். அவ்யயஂ வ்யய ஸ்வபாவேஷு அபி ப்ராஹ்மணாதி ஷரீரேஷு அவ்யயம் -அவிகரிதஂ பலாதி ஸங்க அநர்ஹஂ ச கர்மாதிகார கேலாயாம் ஈக்ஷதே? தத் ஜ்ஞாநஂ ஸாத்த்விகஂ வித்தி.(மாடுகள் பல வர்ணங்கள் பால் வெள்ளை தானே )

৷৷18.20৷৷ஸாத்த்விகஜ்ஞாநாதிகதநஂ கர்தரித்வே குணபாரதந்த்ர்யஜ்ஞாபநார்தம்; ஸர்வபூதஷப்தபிப்ரேதமநாத்மவித்பிரநுஸஂஹிதஂ பாஹ்யவைசித்ர்யமாஹ — ‘ப்ராஹ்மணேத்யாதிநா’. ஜ்ஞாநஷப்தஸ்யாத்ர ப்ரகரிதகர்மசோதநாநுபந்திகர்மாநுஷ்டாநதஷாபாவிஜ்ஞாபநபரத்வாத்’கர்மாதிகாரிஷ்விதி’ பூதாநி விஷேஷிதாநி. பாவஷப்தோத்ர பதார்தபர்யாயஃ.’ஏகமிதி’ ஜாத்யைக்யவிவக்ஷயோச்யதே; ஆத்மபஹுத்வஸ்ய ப்ராகேவ ஸமர்திதத்வாத்? அத்வைததர்ஷநஂ ஸாத்த்விகஜ்ஞாநமிதி பரோக்தஸ்ய நிர்மூலத்வாத்?’நாநாபாவாந்’ [18.21] இதி ச அநந்தரஂ பஹுத்வோக்தேஃ? ஸாம்யாநுஸந்தாநப்ரபஞ்சநஸ்யாத்ர ப்ரத்யபிஜ்ஞாநாத்? கர்தேதி ப்ரகரிதப்ரத்யகாத்மவிஷயத்வௌசித்யேந பரமாத்மபரத்வாயோகாச்சேத்யபிப்ராயேணாஹ’ஆத்மாக்யமிதி’.’ஸிததீர்கேத்யாதிநா’ -‘கவாமநேகவர்ணாநாஂ க்ஷீரஸ்ய த்வேக(க்ஷீரஸ்யாப்யேக)வர்ணதா’ [அ.பிந்தூ.19] இத்யாதிஷ்ருதிஸூசநம். அத்ர ஸர்வபூதஷப்தேந ப்ராஹ்மணத்வாதிஜாதிக்ரஹணாத்குணாத்யவாந்தரவிபாகபரோவிபக்தஷப்த இதி ச பாவஃ. கேநாகாரேணைகத்வம் இத்யத்ராஹ’ஜ்ஞாநாகார’ இதி. ப்ரதிஷித்த்யமாநஸ்ய வ்யயஸ்ய ப்ரஸஞ்ஜகமாஹ’வ்யயஸ்வபாவேஷ்வபீதி’. ப்ராகுக்தஂ பலாதிஸங்கரூபவிகரிதிராஹித்யமப்யவிகரிதத்வபரேணாவ்யயஷப்தேந ஸஂகரிஹீதமித்யாஹ’பலாதிஸங்காநர்ஹஂ சேதி’. ஸங்கோத்ர ஸம்பந்தஃ; அநுபவ இத்யர்தஃ. இச்சாபரத்வேபி போகோர்தஸித்தஃ. கர்மசோதநாநுபந்திஜ்ஞாநபலத்வாத்’கர்மாதிகாரவேலாயாமித்யுக்தம்’.’மயேதஂ கர்தவ்யஂ’ இத்யநுஸந்தாநதஷாயாமித்யர்தஃ. யேந ஜ்ஞாநேநேக்ஷதே விஷயீகரோதீத்யர்தஃ.

——————

21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்

து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக,
ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும்,
ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்,
ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும்,
தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.

உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.

ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன
வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம்.
தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை.
அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது.
உபாதி பேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு.
உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும்
ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை.
வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.

৷৷18.21৷৷ஸர்வேஷு பூதேஷு ப்ராஹ்மணாதிஷு ப்ராஹ்மணாத்ய ஆகார பரிதக்த்வேந ஆத்மாக்யாந் அபி பாவாந் நாநா பூதாந் ஸித தீர்காதி பரிதக்த்வேந ச பரிதக் விதாந் பலாதி ஸஂயோக யோக்யாந் கர்மாதிகார வேலாயாஂ யத் ஜ்ஞாநஂ வேத்தி தத் ஜ்ஞாநஂ ராஜஸஂ வித்தி.

৷৷18.21৷৷’பரிதக்த்வேந ச பரிதக்விதாந்’ பரிதக்த்வேந விஷேஷிதாநித்யர்தஃ. பரிதக்த்வாதிஷப்தாநாஂ புநருக்திபரிஹாராயாஹ’ப்ராஹ்மணாத்யாகாரபரிதக்த்வேநேதி”ஸர்வேஷு பூதேஷு’ இதி விஷிஷ்டாநுவாதஃ; தத்ர’பாவாந்’ இதி விஷேஷ்யநிஷ்கர்ஷ இத்யபிப்ராயேணாஹ’ஆத்மாக்யாநபி பாவாநிதி’. ஜாதிபேதவிஷேஷ்யபேதகுணாதிபேதபரதயா பரிதக்த்வநாநாத்வபரிதக்விதஷப்தாநாமபுநருக்திஃ. உக்தவ்யதிரேகபரதயா பலாதிஸஂயோகயோக்யத்வோக்திஃ.’ஜ்ஞாநஂ வேத்தீதி’ கர்தரித்வோபசாரஃ.

———————-

22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்

து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை,
க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும்,
அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும்,
அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும்,
தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.

காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது.
கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர்.
அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும்.
ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும்,
கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான்.
விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர்.
புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால்
அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது.
உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை.
ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.

৷৷18.22৷৷யத் து ஜ்ஞாநம் ஏகஸ்மிந் கார்யே ஏகஸ்மிந் கர்தவ்யே கர்மணி ப்ரேத பூத கணாத் யாராதந ரூபே அத் யல்ப பலே கரித்ஸ்ந பலவத் ஸக்தம் அஹேதுகஂ வஸ்துதஃ து அகரித்ஸ்ந பலவத் தயா ததாவித ஸங்க ஹேது ரஹிதம்; அதத்த்வார்தவத் பூர்வவத் ஏவ ஆத்மநி பரிதக்த்வாதி (ஜாதி குண பேதங்கள் )யுக்த தயா மித்யா பூதார்த விஷயம்? அத் யல்ப பலஂ (ஸ்வரூபத்தால் கீழ் இங்கு பலத்தால் அல்பம் )ச ப்ரேத பூதாத் யாராதந ரூப விஷயத்வாத் அல்பஂ ச? தத் ஜ்ஞாநஂ (நல்ல -விபரீத அஞ்ஞானம் எல்லாவற்றிலும் ஞான பத பிரயோகம் உண்டே )தாமஸம் உதாஹரிதம்.

ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநஸ்ய அதிகார வேலாயாம் அதிகார்யஂ ஷேந குணதஃ த்ரைவித்யம் உக்த்வா அநுஷ்டேயஸ்ய கர்மணோ குணதஃ த்ரைவித்யம் ஆஹ —

৷৷18.22৷৷கார்யஷப்தோத்ர நோத்பத்திமாத்ரபரஃ? ஸ்வகர்தவ்யவிஷயத்வாத்; ஏகஷப்தஷ்ச ஸங்காநர்ஹத்வாய பலத்வாரா பரிமிதபரஃ; தஸ்யாபி ஹேதுஃ ப்ராகுக்தபரிமிதஷக்தீநாமாராதநத்வமித்யபிப்ராயேணாஹ’ஏகஸ்மிந் கர்தவ்யே கர்மணி ப்ரேதபூதகணாத்யாராதநரூபேத்யல்பபல’ இதி. கர்மஸ்வரூபகார்யமாத்ரஸ்யாபி ஸங்கயோக்யத்வாபாவஃ; தத்ராபி பலவிவக்ஷாயாமாஹ’கரித்ஸ்நபலவதிதி’; கரித்ஸ்நபலஹேதுபூதகர்மணீவேத்யர்தஃ. கார்யபூதஸ்ய ஜ்ஞாநஸ்ய ஸங்கஸ்ய வா காரணமாத்ரநிஷேதாயோகாத் ப்ரேக்ஷாவத்ஸங்கஹேதுரிஹ ப்ரதிஷித்யத இத்யாஹ’வஸ்துத’ இதி.’அஹைதுகம்’ இதி பாடேபி ஹைதுகாதந்யத்வவிவக்ஷயாயமேவார்தோ க்ராஹ்யஃ.’பூர்வவதேவேதி’? ராஜஸவதித்யர்தஃ.’ஏகஸ்மிந்கார்யே ஸக்தமஹேதுகம்’ இத்யநேநைவால்பபலத்வஸித்தேஃ கத்யோதப்ரகாஷவத்ஸ்வரூபத ஏவால்பத்வஂ ஸ்வாரஸிகமல்பஷப்தேந விவக்ஷிதமித்யபுநருக்திரித்யபிப்ராயேண’அத்யல்பபலஂ ச ப்ரேதபூதாத்யாராதநரூபவிஷயத்வாதல்பஂ சேத்யுக்தம்’.’ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ [14.17] இதி பூர்வோக்தஂ து ராஜஸதாமஸஜ்ஞாநயோரஜ்ஞாநத்வவிவக்ஷயா. உக்தஂ ஹி’ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநஂ யததோந்யதா’ [13.11] இதி.

——————–

23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே

யத் கர்ம-எந்த செய்கை,
நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி,
அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல்,
அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி,
க்ருதம்-செய்யப் படுகிறதோ,
தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.

பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை,
சாத்விக மெனப்படும்.

சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது.
ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது.
கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும்.
உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது.
அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி
சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது
அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு.
அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும்.
பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும்
கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.

சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை.
கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான்.
இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.

ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநஸ்ய அதிகார வேலாயாம் அதிகார்யஂ ஷேந குணதஃ த்ரைவித்யம் உக்த்வா அநுஷ்டேயஸ்ய கர்மணோ குணதஃ த்ரைவித்யம் ஆஹ –(ஞான பேதங்கள் பார்த்த பின்பு- கர்ம பேதங்கள் பற்றி அருளிச் செய்கிறான் )

৷৷18.23৷৷நியதஂ ஸ்வ வர்ண ஆஷ்ரம உசிதஂ ஸங்கரஹிதஂ கர்தரித்வாதி ஸங்க ரஹிதம்? அராக த்வேஷதஃ கரிதஂ கீர்தி ராகாத் அகீர்தி த்வேஷாத் ச ந கரிதம்? அதம்பேந கரிதம் இத்யர்தஃ; அபல ப்ரேப்ஸுநா அபலாபி ஸந்திநா கார்யம் இதி ஏவ கரிதஂ யத் கர்ம தத் ஸாத்த்விகம் உச்யதே.

৷৷18.23৷৷’அதிகார்யஂஷேநேதி’ — அவிபக்தத்வவிபக்தத்வாதிவிஷேஷிதகர்மாதிகாரிஸ்வரூபாநுஸந்தாநேநேத்யர்தஃ. விஷிஷ்டே கர்மணி விஷேஷணதயாதிகாரிணோஂஷத்வோக்திஃ. யத்யபி ஸங்கஷப்தோ விபஜ்ய பலஸங்ககர்தரித்வத்யாகப்ரதிபாதநே விஷேஷவிஷயஃ? ததாபி’ஸங்கரஹிதம்’ இத்யத்ர ஸங்கோசகாபாவாதபேக்ஷிதத்வாச்ச கண்டோக்தபலப்ரேப்ஸாதிரிக்தஸாமாந்யவிஷய இத்யாஹ’கர்தரித்வாதிஸங்கரஹிதமிதி’. ஆதிஷப்தேந மமதா கரிஹ்யதே.’முக்தஸங்கோநஹஂவாதீ’ [18.26] இத்யாதிகதிதஃ கர்தரிதர்ம இஹ தத்த்வாரா கர்மவிஷேஷணத்வேந யோஜிதஃ. ப்ரஹ்மணி ராகாத்ஸஂஸாரத்வேஷாச்ச க்ரியமாணஸ்ய கர்மணஃ கதமராகத்வேஷதஃ கரிதத்வஂ இத்யத்ராஹ — ‘கீர்திராகாதகீர்தித்வேஷாச்சேதி’. ஸங்கஷப்தபுநருக்திஷ்சாநேந பரிஹரிதா. அகாரஸ்யாஸமஸ்தத்வவிவக்ஷயா வா பலிதத்வோக்திவிவக்ஷயா வா’ந கரிதமித்யுக்தம்’.’தபோ தம்பேந சைவ யத்’ [17.18] இத்யாத்யுக்தப்ரதிஷேதார்தமிதமித்யபிப்ராயேணாஹ — ‘அதம்பேநேதி’.’கார்யமித்யேவேதி’ ஸாத்த்விகத்யாகஸ்மாரணம்.

———————

24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்

து யத் கர்ம-ஆனால் எந்த செயல்,
புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்,
வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால்,
பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை,
தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த
ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.

ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது.
அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன.
ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும்.
முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும்.
ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது.
அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.

சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது,
கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது.
தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது.
சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.

துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது;
என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.

৷৷18.24৷৷யத் து புநஃ காமேப்ஸுநா பல ப்ரேப்ஸுநா ஸ அஹஂகாரேண வா? வா ஷப்தஃ சார்தே? கர்தரித்வ அபிமாந யுக்தேந ச? (வா-ஷப்தஃ-இதுவோ அதுவோ என்று இல்லாமல் மூன்றும் சேர்ந்தே வரும் )பஹுல ஆயாஸஂ யத் கர்ம க்ரியதே? தத் ராஜஸம் — (லகு ஆயாசம் சாத்விகத்துக்கு-செய்த கர்மத்தால் அவன் திருப்தி அடைந்து லகுவாக ஆக்கி அருளுவான் அன்றோ )’பஹுல ஆயாஸம் இதஂ கர்ம மயா ஏவ க்ரியதே’ இத் யேவஂ ரூப அபிமாந யுக்தேந யத் கர்ம க்ரியதே தத் ராஜஸம் இத்யர்தஃ.

৷৷18.24৷৷’காமேப்ஸுநா’ இத்யநேந’அபலப்ரேப்ஸுநா’ [18.23] இத்யுக்தவிபரீதோக்தஂ வ்யநக்தி — ‘பலப்ரேப்ஸுநேதி’. ஸம்பந்தஸாமாந்யஷஷ்ட்யாத்ர ஸமாஸஃ. அத்ர விகல்பாத்யஸம்பவாத்’வாஷப்தஷ்சார்த’ இத்யுக்தம். ப்ரவரித்திப்ரதாநரஜோமூலதயாநுபயுக்தப்ரயாஸமிஷ்ரணாத்பஹுலாயாஸத்வம். தத்ர ச ஸர்வத்ர ஸ்வயமேவ ஹேதுரித்யபிமாநஃ ஸாஹங்காரஷப்தேந விவக்ஷிதஃ. தத ஏவ பஹுலாயாஸபதஂ ச ஸப்ரயோஜநமித்யபிப்ராயேணாஹ’பஹுலாயாஸமிதஂ கர்ம மயைவேதி’.

———————

25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத் தாமஸமுச்யதே

யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும்,
க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்,
ஹிம்ஸாம்-துன்பத்தையும்,
பௌருஷம் ச-செய்வானது திறமையையும்,
அநவேக்ஷ்ய-கருதாமல்,
மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ,
தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.

செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும்,
செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.

தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று
எண்ணிப் பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும்
சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல,
மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான்
எடுத்துக் கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான்.
விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.

மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள்.
கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும்.
அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம்.
ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு.
பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது.
எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக
மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.

৷৷18.25৷৷கரிதே கர்மணி அநு பத்த்யமாநஂ துஃகம் அநுபந்தஃ? க்ஷயஃ கர்மணி க்ரியமாணே அர்த விநாஷஃ? ஹிஂஸா தத்ர ப்ராணி பீடா? பௌருஷம் ஆத்மநஃ கர்ம ஸமாபந ஸாமர்த்யம்? ஏதாநி அநவேக்ஷ்ய அவிமரிஷ்ய மோஹாத் பரம புருஷ கர்தரித்வ அஜ்ஞாநாத் யத் கர்ம ஆரப்யதே க்ரியதே? தத் தாமஸம் உச்யதே.

৷৷18.25৷৷க்ஷயஷப்தேந தாதாத்விகார்தவ்யயதோஷவிவக்ஷணாதுபஸர்கஷக்த்யா சாநுபந்தஷப்த ஏதத்ஸம்பந்திதயா பஷ்சாத்பாவிதுஃகபர இத்யாஹ’கரிதே கர்மணீதி’. ஹிஂஸா ஸ்வவிஷயா பரவிஷயா சேத்யபிப்ராயேண’தத்ர ப்ராணிபீடேதி’. ஸாமாந்யோக்திஃ. தைவப்ரதிஸம்பந்திநஃ பௌருஷஸ்ய புருஷஸம்பந்திதரிஷ்டஸாமக்ரீஸமவதாநரூபதாமாஹ’ஆத்மநஃ கர்மஸமாபநஸாமர்த்யமிதி’. பவிஷ்யதோநுபந்தாதேஃ ஸாக்ஷாத்காராஸம்பவாத்யுக்திபிராகமைஷ்ச அபராமர்ஷோத்ராநவேக்ஷணமித்யாஹ’அவிமரிஷ்யேதி’. அநுபந்தாத்யஜ்ஞாநஸ்ய ப்ராகுக்தத்வாத்ப்ரக்ராந்தாகர்தரித்வஜ்ஞாநப்ரத்யநீகோத்ர மோஹஷப்தார்த இத்யாஹ — ‘பரமபுருஷேதி’.

——————-

ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.

26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே

முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும்,
அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்,
த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்,
ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்,
கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.

நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான்.
எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான்.
அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்;
அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை.
தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.

பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று
எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற
திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.

கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட
மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல,
கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.

৷৷18.26৷৷முக்த ஸங்கஃ பல ஸங்க ரஹிதஃ? அநஹஂவாதீ கர்தரித்வ அபிமாந ரஹிதஃ; தரித் யுத்ஸாஹ ஸமந்விதஃ? ஆரப்தே கர்மணி யாவத் கர்ம ஸமாப்த் யவர்ஜநீய துஃக தாரணஂ தரிதிஃ? உத்ஸாஹஃ உத் யுக்த சேதஸ்த்வம்? தாப்யாஂ ஸமந்விதஃ; ஸித்த்ய ஸித்த்யோஃ நிர் விகாரஃ யுத்தாதௌ கர்மணி ததுபகரண பூத த்ரவ்யார்ஜநாதிஷு ச ஸித்த் யஸித்த்யோஃ அவிகரி சித்தஃ கர்தா ஸாத்த்விக உச்யதே.

৷৷18.26৷৷’அநஹஂவாதீ’ இத்யநேந கர்தரித்வாபிமாநரூபஸங்கஸ்ய பரிதங்நிஷேதாத்’முக்தஸங்கஃ’ இத்யத்ர ஸங்கஷப்தஃ ஸங்குசிதவிஷய இத்யாஹ — ‘பலஸங்கரஹித’ இதி. தத ஏவ கர்மணி ஸ்வகீயதாநுஸந்தாநரூபஸங்கோபி ப்ரதிஷித்தஃ. அஹஂவதநஷீலோஹஂவாதீ? ததந்யோநஹஂவாதீ? தத்ர மநஃபூர்வா ஹி வாகித்யபிப்ராயேணாஹ’கர்தரித்வாபிமாநரஹித’ இதி. கர்தரித்வஸ்ய விவிச்யமாநத்வாத்ததுபயுக்தா தரிதிரிஹ விவக்ஷிதேத்யாஹ’ஆரப்த’ இதி. ப்ரயத்நரூபஸ்யோத்ஸாஹஸ்ய கர்தரிஷப்தேநைவ ஸித்தத்வாத்ராஜஸாதிகர்தரிஸாதாரண்யாச்ச விஷேஷவிவக்ஷாமாஹ — ‘உத்யுக்தசேதஸ்த்வமிதி’.’முக்தஸங்கஃ’ இத்யநேந ஸ்வர்காதிபலஸங்கநிவரித்தேருக்தத்வாத்’ஸித்த்யஸித்த்யோர்நிர்விகாரஃ’ இத்யஸ்ய தரிஷ்டபலவிஷயதாமாஹ’யுத்தாதாவிதி’. முக்தஸங்கத்வபலஂ வா நிர்விகாரத்வம்.

——————-

27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:

ராகீ-வேட்கையுடையோன்,
கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன்,
லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்),
ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன்,
அஸுசி:-தூய்மை யற்றோன்,
ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்,
கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்

வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன்,
களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான்.
அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும்,
பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை.
விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான்.
வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.

ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.

வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென
அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச்
சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும்
மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.

৷৷18.27৷৷ராகீ யஷோர்தீ? கர்ம பல ப்ரேப்ஸுஃ கர்ம பலாதீஂ? லுப்தஃ கர்மாபேக்ஷித த்ரவ்ய வ்யய ஸ்வபாவ ரஹிதஃ; ஹிஂஸாத்மகஃ பராந் பீடயித்வா தைஃ கர்ம குர்வாணஃ? அஷுசிஃ கர்மாபேக்ஷித ஷுத்தி ரஹிதஃ? ஹர்ஷ ஷோகாந்விதஃ யுத்தாதௌ கர்மணி ஜயாதி ஸித்த் யஸித்த்யோஃ ஹர்ஷ ஷோகாந்விதஃ கர்தா ராஜஸஃ பரிகீர்திதஃ.

৷৷18.27৷৷’கர்மபலப்ரேப்ஸுஃ’ இத்யநேநாநுஷ்ரவிகஸ்வர்காதிபலார்தீ த்வஸ்யாபிதாநாத்’ராகீ’ இத்யாநுஷங்கிகதரிஷ்டபலஸங்கவிவக்ஷாமாஹ’யஷோர்தீதி’. அபாத்ரவ்யயாதிராஹித்யஸ்ய குணத்வாத்’கர்மாபேக்ஷிதேதி’ விஷேஷிதம்.’காமமாத்மாநஂ பார்யாஂ புத்ரஂ வோபருந்த்யாந்ந த்வேவ தாஸகர்மகரம்’ [ஆ.த.2.4.9.11] இத்யாத்யுக்தவிபரீதஸ்வபாவதாத்ர ஹிஂஸாத்மகஷப்தேந விவக்ஷிதேத்யாஹ’பராந்பீடயித்வேதி’. கர்தரித்வோபயோகாய’தைஃ கர்ம குர்வாண’ இதி பலிதோக்திஃ. ஏவஂ’கர்மாபேக்ஷிதஷுத்திரஹித’ இத்யபி ந ஹி தர்ஷநஸ்பர்ஷநாதியோக்யஷுசித்வமாத்ரேண கர்மண்யதாநிஷ்பத்திரிதி பாவஃ.

—————

28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே

அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்,
ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன்,
ஸட:-வஞ்சகம் உடையவன்,
நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்,
விஷாதீ-கவலை கொண்டவன்,
அலஸ:-சோம்பேறியும்,
தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
கர்தா தாமஸ உச்யதே – இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்

யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி,
ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,
இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.

அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத
மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன்.
வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது
தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான்.
பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான்.
செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும்
தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து
பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி
யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு
நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.

ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து
வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன.
ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்விட்டன.
உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர்.
1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.

৷৷18.28৷৷அயுக்தஃ ஷாஸ்த்ரீய கர்மாயோக்யஃ விகர்மஸ்தஃ? ப்ராகரிதஃ அநதிகத வித்யஃ? ஸ்தப்தஃ அநாரம்ப ஷீலஃ? ஷடஃ அபிசாராதி கர்ம ருசிஃ? நைஷ்கரிதிகஃ வஞ்சந பரஃ? அலஸஃ ஆரப்தேஷு அபி கர்மஸு மந்த ப்ரவரித்திஃ. விஷாதீ அதிமாத்ராவஸாத ஷீலஃ? தீர்க ஸூத்ரீ அபிசாராதி கர்ம குர்வந் பரேஷு தீர்க கால வர்த்யநர்த பர்யாலோசந ஷீலஃ? ஏவஂ பூதோ யஃ கர்தா ஸ தாமஸஃ.

ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநே கர்தவ்யே ச கர்மணி அநுஷ்டாதரி ச குணதஃ த்ரைவித்யம் உக்தம்? இதாநீஂ ஸர்வ தத்த்வ  ஸர்வபுருஷார்த நிஷ்சய ரூபாயா புத்தேஃ தரிதேஃ ச குணதஃ த்ரைவித்யம் ஆஹ —

৷৷18.28৷৷அவதாநாபாவாதேஃ’ப்ராகரிதஃ’ இத்யாதிநா ஸித்தேரயுக்தஷப்தேந அநர்ஹத்வஂ விவக்ஷிதமித்யாஹ’ஷாஸ்த்ரீயேதி’. அஷுசிஷப்தநிர்திஷ்டாத்ராஜஸஸ்யாயோக்யத்வாததிகமயோக்யத்வமிஹ விவக்ஷிதமித்யாஹ’விகர்மஸ்த’ இதி. ஏவஂ ஹி தஸ்யாயோக்யதாதிஷயஃ; யதா’ ஷைவாந்பாஷுபதாந் ஸ்பரிஷ்ட்வா லோகாயதிகநாஸ்திகாந். விகர்மஸ்தாந் த்விஜாஞ்சூத்ராந் ஸசேலோ ஜலமாவிஷேத்’ இதி ஷாஸ்த்ராத்யயநததர்தோபதேஷாதிஜநிதஸாத்த்விககர்மாநுஷ்டாநாநுகுணவிஷேஷராஹித்யஂ ப்ராகரிதஷப்தேந விவக்ஷிதமித்யாஹ’அநதிகதவித்ய’ இதி. பூஜ்யேஷ்வபி த்வரிதாவஷ்யகர்தவ்யயதோசிதப்ரணாமாத்யாரம்பவிபரீதஂ ஸ்திமிதஸ்வபாவத்வமிஹ ஸ்தப்தஷப்தார்த இத்யாஹ’அநாரம்பஷீல’ இதி. கூடவிப்ரியகரித்த்வஂ ஷடத்வஂ; தச்ச ப்ரகரணாச்சாஸ்த்ரோதிததாமஸகர்மத்வாரேத்யாஹ — ‘அபிசாராதிகர்மருசிரிதி’. புநருக்திபரிஹாராய மாயாப்ரதாரணாதிலௌகிககர்மத்வாரா நைகரிதிகத்வமாஹ — ‘வஞ்சநபர’ இதி.’ஷ்வஃ கார்யமத்ய குர்வீத’ [ம.பா.12.321.73] இதி ந்யாயாச்சாஸ்த்ரீயேஷு த்வரிதேந பவிதவ்யம்; தத்வைபரீத்யமிஹாலஸ்யஂ? தத்ராநாரம்பஸ்ய ஸ்தப்தஷப்தேநோக்தத்வாத்’ஆரப்தேஷ்விதி’ விஷேஷிதம்.’விஷாதீ’ இத்யத்ர தாதோரேவாவஸாதார்தத்வாதுபஸர்கேண தத்ப்ரகர்ஷஃ? ப்ரத்யயேந தாச்சீல்யஂ ச விவக்ஷிதமித்யாஹ’அதிமாத்ராவஸாதஷீல’ இதி. அவஸாதஷ்ச லக்ஷிதோ வாக்யகாரேண’தேஷகாலவைகுண்யாச்சோகவஸ்த்வாத்யநுஸ்மரிதேஷ்ச தஜ்ஜஂ தைந்யமபாஸ்வரத்வஂ மநஸோவஸாதஃ’ இதி. ப்ராரப்தகர்மணாஂ ஷீக்ரமஸமாபநரூபமந்தப்ரவரித்தித்வாதேரலஸாதிஷப்தேந நிர்திஷ்டத்வாதவயவஷக்தேஃ ஷாட்யாதிஸமபிவ்யாஹாரஸ்ய சாநுகுணதீர்கஸூத்ரத்வஂ விஷிநஷ்டி’அபிசாராதிகர்ம குர்வந்பரேஷு தீர்ககாலவர்த்யநர்தபர்யாலோசநஷீல’ இதி.’ஸூத்ர ஸூத்ரேண(வேஷ்டநே)’ [தா.பா.10-375] இதி தாதுஃ? ஸூத்ரணஂ சிந்தநஂ; தாச்சீல்யார்தப்ரத்யயஃ; தீர்கஸூத்ரணாத்தீர்கஸூத்ரீ. நிரபராதஷகுந்தாதிக்ரஹணார்ததீர்கஸூத்ரகர்தரிஸமாநதயா தீர்கஸூத்ரீத்யௌபசாரிகக்ரஹணஂ து மந்தமிதி பாவஃ.

——————-

அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:

29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய

தநஞ்ஜய-தனஞ்ஜயா,
குணத: ஏவ-குண வகையால்,
புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும்,
த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை,
அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும்,
ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.

குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்;
தனஞ்ஜயா, கேள்.

திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால்
அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும்
செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.

செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது.
அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது
திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது.
அது போன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.

உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன.
அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும்.
இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும்.
மூன்றாவதில் தண்ணீரே நுழையாது.
முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன்.
இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும்.
மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.

ஏவஂ கர்தவ்ய கர்ம விஷய ஜ்ஞாநே (செய்யத்தகுந்த ஞானம் )கர்தவ்யே (செய்யத்தக்க கர்மா )ச கர்மணி அநுஷ்டாதரி ச (கர்த்தா )குணதஃ த்ரைவித்யம் உக்தம்? இதாநீஂ ஸர்வ தத்த்வ  ஸர்வ புருஷார்த நிஷ்சய ரூபாயா புத்தேஃ தரிதேஃ ச குணதஃ த்ரைவித்யம் ஆஹ –(புத்தியைப் பற்றியும் த்ருதியையும் சொல்லப் போகிறேன் )ஞானம் அறிவு -புத்தி- உறுதியான அறிவு -இது வந்தால் தான் முயற்சி தொடங்கும் -அறிந்து பிரயத்தனம் அடைதல் மூன்று நிலைகள்
த்ருதி -அடைந்தே தீருவேன் -செயலில் ஈடுபடும் பொழுது தடங்கல் வந்தால் தளராமல் இருப்பது -கீழ் கர்மம் விஷயமான ஞானம் -இங்கு தத்வ ஞானம் வந்தால் தான் கர்மங்கள் செய்து புருஷார்த்தம் பெறலாம் என்கிற உறுதியான அறிவு -கர்மம் தொடங்கவே இது வேண்டுமே -ஸாஸ்த்ர ஜன்யத்தாலும் ஸ்ரவண ஞானத்தாலும் பிரத்யஷத்தாலும் வரும் ஞானம் -ப்ரமாணங்கள் மேய்ப்படத்தானே அவனும் அவதரிக்கிறான் –

৷৷18.29৷৷புத்திஃ விவேக பூர்வகஂ நிஷ்சய ரூபஂ ஜ்ஞாநம்? தரிதிஃ ஆரப்தாயாஃ க்ரியாயாஃ விக்நோபநிபதிஂ அபி விதாரண ஸாமர்த்யம்? தயோஃ ஸத்த்வாதி குணதஃ த்ரிவிதஂ பேத பரிதக்த்வேந ப்ரோச்யமாநஂ யதாவத் ஷ்ரரிணு.

৷৷18.29৷৷ஜ்ஞாநத்ரைவித்யமுக்தம்; புநர்புத்தித்ரைவித்யஂ வக்ஷ்யதே; தத்ர பர்யாயதயா புநருக்திஷங்காஂ பரிஹர்துமுக்தஸ்ய விஷேஷவிஷயதாமநுவததி’ஏவஂ கர்தவ்யகர்மவிஷயஜ்ஞாந’ இதி. ப்ரகரிதோபயுக்தமநந்தரஂ ப்ரஸ்தூயத இதி ஸங்கத்யபிப்ராயேணாஹ’இதாநீமிதி’. ஜ்ஞாநத்ரைவித்யஂ பூர்வோக்தஂ? புநரிஹ த்ரைவித்யகதநஂ கிமர்தம் இதி ஷங்காயாமநுஷ்டாநதஷாபாவ்யநுஸந்தாநாத்விலக்ஷணஸ்தத்தேதுதயா ததஃ பூர்வபாவிஷாஸ்த்ராதிஜந்யோத்யவஸாய இஹ புத்திஷப்தார்த இத்யாஹ’ஸர்வதத்த்வஸர்வபுருஷார்தநிஷ்சயரூபாயா’ இதி. ஏதேந’ஜ்ஞாநஂ புத்தேர்வரித்திஃ? புத்திஸ்து வரித்திமதீ’ இதி பரோக்தஂ (ஷஂ.) நிரஸ்தம். ததேவ வ்யநக்தி — ‘புத்திர்விவேகபூர்வகஂ நிஷ்சயரூபஂ ஜ்ஞாநமிதி’.’விவேகபூர்வஂ’ பக்ஷாந்தரப்ரதிக்ஷேபபர்யந்தவிசாரபூர்வமித்யர்தஃ. ப்ரஸ்துதத்ரிவிதாநுஷ்டாநோபயுக்தப்ரகாரேண த்ரிவிதாயா தரிதேஃ ஸாதாரணஂ ரூபமாஹ — ‘ஆரப்தாயா’ இதி. அயமபி ஸங்கல்பதார்ட்யாதிரூபோ புத்திஸ்வபாவவிஷேஷ ஏவ. குணதோ விபக்தே வாச்யே? வசநே சாஸங்கீர்ணஸ்வரூபேந்வயாத்ித்ரவிதபரிதக்த்வஷப்தயோரபுநருக்திமாஹ’த்ரிவிதஂ பேதஂ பரிதக்த்வேந ப்ரோச்யமாநமிதி’. ஏவஂ புத்த்யாதிகார்யகாத்ஸ்ந்ர்யபரஸ்ய’அஷேஷேண’ இத்யஸ்ய ஷ்ரவணேந்வயாதபுநருக்திஃ’யதாவச்சரிண்விதி’ தர்ஷிதா. ஸாவதாநஂ ஸஂஷயவிபர்யயரஹிதஂ ஷ்ரரிண்வித்யர்தஃ. திக்விஜயே மாநுஷதைவதநவச்சமாதிதநஂ ச ஜேதவ்யமிதி ஸம்புத்தேர்பாவஃ.

—————–

அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :

30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ

பார்த-அர்ஜுனா,
யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்,
கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது,
பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்,
ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.

தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது,
விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.

பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது.
மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால்
மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது.
தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம்.
விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது.
தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை.
அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது.
பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன.
அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.

இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு
பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க,
நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி,
மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும்,
ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது.
ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம்.
எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி,
அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு
உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது !
குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப்
போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை.
பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது.
மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை.
வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும்
அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?

৷৷18.30৷৷ப்ரவரித்திஃ அப்யுதய ஸாதந பூதோ தர்மஃ? நிவரித்திஃ மோக்ஷ ஸாதந பூதோ தர்மஃ? தௌ உபௌ யதா வஸ்திதௌ யா புத்திஃ வேத்தி; கார்யாகார்யே ஸர்வ வர்ணாநாஂ ப்ரவரித்தி நிவரித்தி தர்மயோஃ? அந்யதர நிஷ்டாநாஂ தேஷ காலாவஸ்தா விஷேஷேஷு’இதஂ கார்யம் இதம் அகார்யம்’ இதி ச யா வேத்தி; பயாபயே ஷாஸ்த்ராத் நிவரித்திஃ பய ஸ்தாநஂ தத்நுவரித்திஃ அபய ஸ்தாநஂ பந்தஂ மோக்ஷஂ ச ஸஂஸார யாதாத்ம்யஂ தத் விகம யாதாத்ம்யஂ ச யா வேத்தி? ஸா ஸாத்த்விகீ புத்திஃ.

৷৷18.30৷৷கார்யாகார்யஷப்தாப்யாஂ புநருக்திஷங்காபரிஹாராய’ப்ரவரித்திலக்ஷணஂ தர்மஂ ப்ரஜாபதிரதாப்ரவீத். நிவரித்திலக்ஷணஂ தர்மமரிஷிர்நாராயணோப்ரவீத்’ [ம.பா.12.217.2;3] இத்யாத்யநுஸாரேண ப்ரவரித்திநிவரித்திஷப்தயோஃ ப்ரதாநகர்மவிஷயத்வமாஹ — ‘அப்யுதயஸாதநபூத’ இத்யாதிநா. ராஜஸதாமஸபுத்த்யோஃ’அயதாவத்’ இத்யாதிவிஷேஷணாதிஹார்ததஸ்தந்நிவரித்தேர்விவக்ஷிதத்வஜ்ஞாபநாய யதாவஸ்திதத்வோக்திஃ. கார்யாகார்யஷப்தயோரிஹ ப்ரகரிதப்ரதாநகர்மேதிகர்தவ்யதாபூததரிஷ்டாதரிஷ்டவ்யாபாரபரத்வமாஹ — ‘ஸர்வவர்ணாநாமித்யாதிநா’. தத்ர ஸூக்ஷ்மதீவேத்யத்வாய’தேஷகாலாவஸ்தாவிஷேஷேஷ்விதி’ விஷேஷிதம். ஸ்மர்யதே ஹி — ‘ஷரீரஂ பலமாயுஷ்ச வயஃ காலஂ ச கர்ம ச. ஸமீக்ஷ்ய தர்மவித்புத்த்யா ப்ராயஷ்சித்தாநி நிர்திஷேத்’ இதி;’தேஷஂ காலஂ ததாத்மாநஂ’ இத்யாதி ச. அத்ர ஷக்யாஷக்யயோரபி கார்யாகார்யஷப்தாப்யாமேவ க்ரஹணம். பயாபயயோஃ ஸ்வரூபஜ்ஞாநஸ்ய ஸர்வஸாதாரணத்வாதிஹ தந்நிமித்தஜ்ஞாநஂ விவக்ஷிதம்; தச்ச ப்ராகரணிகவிஷேஷவிஷயமாஹ — ‘ஷாஸ்த்ராந்நிவரித்திர்பயஸ்தாநமிதி’. பிபேத்யஸ்மாதிதி பயம்; ஸர்வப்ரஷாஸிதுரீஷ்வராதேவ ஹி தத்த்வவிதாஂ பயமபயஂ ச; நஹி தத்ப்ரேரணமந்தரேண கேநசித்பாதிதுமபாதிதுஂ வா ஷக்யம். ததஸ்ததாஜ்ஞாநுவரித்த்யதிவரித்தீ ஏவ பயாபயநிமித்தமிதி பாவஃ. பந்தமோக்ஷஸத்பாவஜ்ஞாநஸ்யாபி ஸாதாரண்யாத்பந்தஸ்ய மித்யாத்வாதிவாதோ மோக்ஷஸ்ய பாஷாணவத்பாவாதிமதஂ ச யாதாத்ம்யஷப்தேந வ்யுதஸ்தம்.’வேத்தீதி’ கர்தரித்வோபசாரஃ; ஸ்வாச்சந்த்யேந விஷயீகரோதீத்யர்தஃ.,

—————-

31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ

பார்த-பார்த்தா.
யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்,
கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது,
அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத,
ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.

தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.

அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான
தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத்
தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான்.
தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல்.
ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.

ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது.
ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது.
அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான்.
ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்;
அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்;
வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான்.
தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்;
ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான்.
வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது.
காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன்.
முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும்
உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான்.
பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும்.
பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான்.
கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும்.
நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான்.
ரஜோ குணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.

৷৷18.31৷৷யயா பூர்வோக்தஂ த்விவிதஂ தர்மஂ தத் விபரீதஂ ச தந்நிஷ்டாநாஂ தேஷ கால அவஸ்தாதிஷு கார்யஂ ச அகார்யஂ ச யதாவத் ந ஜாநாதி ஸா ராஜஸீ புத்திஃ.

৷৷18.31৷৷தரிதிஸாதநஂ தர்ம இதி வ்யுத்பத்த்யா தர்மஷப்தஸ்ய ப்ரவரித்திநிவரித்திஸாதாரண்யாதுபயப்ரஸங்காச்ச — ‘பூர்வோக்தஂ,த்விவிதமித்யுக்தம்’.

——————

32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ

பார்த-பார்த்தா,
யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்,
அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்,
ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக,
மந்யதே-நினைக்கிறதோ,
ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.

பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும்
நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன்
என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு.
அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை;
துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது.
கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை;
சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர்.
கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது.
வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து.
விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர்.
ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும்,
குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது.
ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள்.
சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள்.
இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.

৷৷18.32৷৷தாமஸீ து புத்திஃ தமஸா ஆவரிதா ஸதீ ஸர்வார்தாந் விபரீதாந் மந்யதே; அதர்மஂ தர்மஂ தர்மஂ ச அதர்மம்? ஸந்தஂ ச அர்தம் அஸந்தம்? அஸந்தஂ ச அர்தஂ ஸந்தம்? பரஂ ச தத்த்வம் அபரம்? அபரஂ ச தத்த்வஂ பரம்? ஏவஂ ஸர்வஂ விபரீதஂ மந்யதே இத்யர்தஃ.

৷৷18.32৷৷’தாமஸீ’ இத்யநேநைவ தமோமூலத்வஸித்தேஃ’தமஸாவரிதா’ இத்யநேந தாதாத்விகதமோநிருத்தப்ரஸரத்வஂ விவக்ஷிதமித்யாஹ — ‘தமஸாவரிதா ஸதீதி’.’ஸர்வார்தாந்’ இத்யநேந ஸித்தஸாத்யரூபஸமஸ்தாநுக்தஸங்க்ரஹமாஹ — ‘ஸந்தஂ சார்தமஸந்தமஸந்தமித்யாதிநா’. ஏதேந பாஹ்யாநாஂ குதரிஷ்டீநாஂ ச மதஂ தாமஸமிதி தர்ஷிதம். உக்தஂ ச மநுநா — ‘யா வேதபாஹ்யாஃ ஸ்மரிதயோ யாஷ்ச காஷ்ச குதரிஷ்டயஃ. ஸர்வாஸ்தா நிஷ்பலாஃ ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தாஃ ஸ்மரிதாஃ’ [மநுஃ12.95] இதி. அத்ர ராஜஸதாமஸபுத்த்யோரியாந்விஷேஷஃ — அஸமக்ரவேதநமந்யதாவேதநஂ ச ராஜஸ்யாஂ’யதாவந்ந ஜாநாதி’ இதி வ்யாக்யாநாத்; தாமஸ்யாஂ து ஸர்வஂ விபரீதஂ மந்யதே?’ஸர்வார்தாந்’ இத்யுக்தேரித்யேகே. அந்யே த்வாஹுஃ — ப்ரகாராந்யதாத்வஂ ப்ரகார்யந்யதாத்வஂ ச விஷேஷஃ. யத்யபி உபயத்ராதிஷ்டாநபூதே தர்மிண்யதத்தர்ம ஏவாத்யாஸ்யதே; ததாபி ஸ்வரூபநிரூபகதர்மவைபரீத்யே தாமஸதா; யதா ஷுக்திரஜதப்ரமே; நிரூபிதஸ்வரூபவிஷேஷகதர்மவைபரீத்யே து ராஜஸதா; யதா பீதஷங்கப்ரம இதி.

—————–

இனி, திருதி விளக்கப்படுகிறது :

33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ

பார்த-பார்த்தா,
யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்,
யோகேந-யோகத்தின் மூலம்,
மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை,
தாரயதே-நிலை நிறுத்துகிறானோ,
ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.

மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன்
தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.

திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே.
நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது.
அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது.
அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது.
அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும்,
பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன.
இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன.
அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும்,
கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம்
விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது.
அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது.
நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும்.
இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும்.
ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது.
ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும்,
கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி
நிற்பது போன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது.
அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.

৷৷18.33৷৷யயா தரித்யா யோகேந அவ்யபிசாரிண்யா மநஃப்ராணேந்த்ரியாணாஂ க்ரியாஃ புருஷோ தாரயதே; யோகோ மோக்ஷ ஸாதந பூதஂ பகவதுபாஸநம்; யோகேந ப்ரயோஜந பூதேந அவ்யபிசாரிண்யா யோகோத்தேஷேந ப்ரவரித்தாஃ தத் ஸாதந பூதா மநஃப்ர பரிதீநாஂ க்ரியாஃ யயா தரித்யா தாரயதே? ஸா ஸாத்த்விகீ இத்யர்தஃ.

৷৷18.33৷৷ராஜஸதரிதௌ த்ரிவர்கோக்தேரபவர்கஸாதநபூதோ யோக இஹ விவக்ஷிதஃ? ஸ சாநந்யோபாஸநமேவ ப்ராகநுஷிஷ்டமித்யாஹ — ‘யோகோ மோக்ஷஸாதநபூதஂ பகவதுபாஸநமிதி’. பலாந்தரஸங்கோத்ர வ்யபிசாரஃ; யோகஸ்ய தந்நிரோதகரணஂ ஸ்வரூபதஃ பலதஷ்ச மஹாநந்தரூபத்வேநேத்யாஹ — ‘யோகேந ப்ரயோஜநபூதேநேதி’. யோகாவ்யபிசாரோக்திஸாமர்த்யாத்யதாஸம்பவமுபகாரவிவக்ஷயா — ‘யோகோத்தேஷேந ப்ரவரித்தாஃ தத்ஸாதநபூதா’ இத்யுக்தம். மாநஸீ க்ரியா தாவத்ஸாக்ஷாத்கரணஂ; ப்ராணக்ரியாபி’யத்ர மநஸ்தத்ர வாயுர்யத்ர வாயுஸ்தத்ர மநஃ’ இத்யந்யோந்யபரிஷ்வங்காத்; யதோச்யதே’புநர்வாயுபதஂ ப்ராப்ய மநோ ப்ரமதி வாயுவத்’ இதி; ததா ப்ராணாயாமப்ரக்ரியயா ய யோகவிரோதிக்லேஷபாபாதிஜயஹேதுத்வாத். பாஹ்யேந்த்ரியக்ரியா து’ஸ்வாத்யாயாத்யோகமாஸீத யோகாத்ஸ்வாத்யாயமாமநேத். ஸ்வாத்யாயயோகஸம்பத்த்யா பரமாத்மா ப்ரகாஷதே’ [வி.பு.6.6.2] இத்யாதிபிருத்தாநகாலபாவியோகாங்கநிஷேவணரூபேண ப்ரத்யாஹாரே நிருத்யமாநரூபேண வா.

——————-

34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ

து பார்த-ஆனால் பார்த்தா,
அர்ஜுந-அர்ஜுனா,
பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன்,
யயா த்ருத்யா-எந்த உறுதியினால்,
ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு,
தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ,
ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.

பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப்
பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.

புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது
அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது.
தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும்
சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம்.
காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்;
இது எவ்வளவு உறுதியாக மனதைப் பற்றிப் பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது.
உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான்.
அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது.
சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான்.
அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது.
இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான்.
மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது.
அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன.
இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன.
அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம்.
சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன.
வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது.
உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது.
நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம்.
பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய
அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு.
ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.

தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும்
வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா?
அது போல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன்
ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால்
அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.

৷৷18.34৷৷பலாகாங்க்ஷீ புருஷஃ ப்ரகரிஷ்ட ஸங்கேந தர்ம காமார்தாந் யயா தரித்யா தாரயதே? ஸா ராஜஸீ; தர்ம காமார்த ஷப்தேந தத் ஸாதந பூதா மநஃ ப்ராணேந்த்ரிய க்ரியா லக்ஷ்யந்தே;’பலாகாங்க்ஷீ’ இதி அத்ர அபி பலஷப்தேந ராஜஸத்வாத் தர்ம காமார்தா ஏவ விவக்ஷிதாஃ. அதோ தர்ம காமார்த அபேக்ஷயா மநஃ ப்ரபரிதீநாஂ க்ரியாஃ யயா தரித்யா தாரயதே? ஸா ராஜஸீ இதி உக்தஂ பவதி.

৷৷18.34৷৷ப்ரஸங்கஷப்தோத்ர ந ப்ராஸங்கிகத்வார்தஃ? ததநுபயோகாத். தரிதேஃ ஸ்வவ்யாபாரவிஷயத்வாய ப்ரகரிதப்ரக்ரியாநுஸாராய ச தர்மாதிஷப்தைஸ்தத்தத்ஸாதநலக்ஷணோக்தா. ஸாமாந்யஸ்யாபி பலஷப்தஸ்யாத்ர ஸாத்த்விகபலாதபவர்காத்ஸங்கோசாயாஹ — ‘பலாகாங்க்ஷீத்யத்ராபீதி’. லாக்ஷணிகப்ரயோகாபிப்ரேதஂ விவரிண்வந் ஷப்ததோர்ததஷ்ச பலிதமாஹ — ‘அத’ இதி.

—————–

35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ

யயா-எந்த (மன உறுதியினால்),
ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்,
விஷாதம்-ஏக்கத்தையும்,
மதம்-செருக்கையும்,
ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ,
பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத்
திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது.
கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம்.
அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது.
அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.

தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன்.
தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும்.
துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது.
ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது.
தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று.
அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான்.
ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான்.
ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை.
எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது.
விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.

திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம்
அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை.
அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும்.
செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது.
எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும்.
செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது.
பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள்.
மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது.
கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று.
தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு
துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும்.
இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை.
இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்

৷৷18.35৷৷யயா தரித்யா ஸ்வப்நஂ நித்ராஂ மதஂ விஷய அநுபவ ஜநிதஂ மதஂ ஸ்வப்நமதௌ உத்திஷ்ய ப்ரவரித்தா மநஃ ப்ராணாதீநாஂ க்ரியாஃ துர்மேதாஃ ந விமுஞ்சதி தாரயதி. பய ஷோக விஷாத ஷப்தாஃ ச பய ஷோகாதிதாயி விஷய பராஃ; தத் ஸாதந பூதாஃ ச பநஃ ப்ராணாதி க்ரியாஃ யயா தாரயதே? ஸா தரிதிஃ தாமஸீ.

৷৷18.35৷৷ஸ்வப்நஷப்தோத்ர ஸுஷுப்தேரப்யுபலக்ஷக இத்யபிப்ராயேணாஹ — ‘நித்ராமிதி’. தைவாகதோந்மாதாதிவ்யவச்சேதாய துர்நீதிமூலத்வஂ மதஸ்யாத்ர தர்ஷயதி — ‘விஷயாநுபவஜநிதமிதி’. அஸ்வாதீநாநாஂ ஸ்வப்நாதீநாஂ கதஂ புருஷேண தாரணஂ இதி ஷங்காயாமத்ராபி ஹேதுலக்ஷணா பூர்வவதித்யாஹ — ‘ஸ்வப்நமதாவுத்திஷ்யேதி’. ஸ்வப்நமதயோஃ ஸுகாபிமாநாஸ்பததயா பயாதேஃ பரிதக்கரித்ய வ்யாக்யாநம். தாரணமேவாத்ர யோக்தவ்யத்வஸூசநாய’ந விமுஞ்சதி’ இத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந விமுஞ்சதி தாரயதீதி’. ந சாத்ர பீரோர்தரிதிர்விருத்தேதி வாச்யம்? ஆகாம்யநவேக்ஷணேந துர்மதேஸ்தத்தேத்வநுவர்தநபரத்வாத். பயதாயிவிஷயோ துர்மாநமூலப்ரபலவிரோதாதிஃ; ஷோகதாயீ து க்ரோதாதிமூலபந்துவதாதிஃ? விஷாததாயீ து வரிதாவித்தவ்யயாதிஃ. துர்மேதாஃ — துர்மேதஸ்த்வாதித்யர்தஃ.

———————

36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி

பரதர்ஷப-பாரதக் காளையே!
இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை,
மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள்,
யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ,
து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.

பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள்.
எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை.
அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு.
மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது.
மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது.
இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது.
அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது.
ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது.
அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம்
ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு.
அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம்
பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம்.
அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது.
அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும்.
துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.

৷৷18.36৷৷பூர்வோக்தாஃ ஸர்வே ஜ்ஞாந கர்ம கர்த்ராதயோ யச் சேஷ பூதாஃ? தத் ச ஸுகஂ குணதஃ த்ரிவிதம் இதாநீஂ ஷ்ரரிணு.

யஸ்மிந் ஸுகே சிரகால அப்யாஸாத் க்ரமேண நிரதிஷயாஂ ரதிஂ ப்ராப்நோதி; துஃகாந்தஂ ச நிகச்சதி? நிகிலஸ்ய ஸாஂஸாரிகஸ்ய துஃகஸ்ய அந்தஂ நிகச்சதி.தத் ஏவ விஷிநஷ்டி —

৷৷18.36৷৷அநந்தரக்ரந்தஸங்கத்யர்தஂ துஷப்தத்யோதிதஂ வ்யநக்தி — ‘பூர்வோக்தா’ இதி. பரதர்ஷபஷப்தோத்ர ப்ரகரிஷ்டஸாத்த்விகஸுகஸங்கயோக்யதாஜ்ஞாபநார்தஃ.’இதாநீமிதி’ — ஸாதநபேதஸ்யோக்தஸ்ய ஸாத்யபேதாகாங்க்ஷாவஸர இத்யர்தஃ. ஆபாதமதுரத்வாபாவாத்ஸாத்த்விகஸ்யாப்யாஸஸாபேக்ஷத்வஂ; லோகேப்யாப்யாஸிகீ க்ஷுத்ரா ப்ரீதிரஸ்தி தத்வ்யுதாஸாய’க்ரமேண நிரதிஷயாமித்யுக்தம்’. ரதிம் — அத்யந்தாதரமித்யர்தஃ. துஃகஷப்தஸ்யாத்ர ஸங்கோசகாபாவாத்கரித்ஸ்நவிஷயத்வோக்திஃ.

——————

37. யத்ததக்ரே விஷமிவ  பரிணாமே  அம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்

யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்,
தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ,
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது,
தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.

எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ,
அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது.
பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது.
அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.

பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம்.
ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும்
இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும்
நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும்.
யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.

முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை
ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர்.
ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான்.
அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர்.
அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க
வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து,
மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம்.
அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்!
அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது.
இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது.
வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது.
இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.

பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள்.
ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து
தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள்.
ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா?
அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.

இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம்.
அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.

৷৷18.37৷৷யத் தத் ஸுகம் அக்ரே யோக உபக்ரம வேலாயாஂ பஹ்வாயாஸ ஸாத்யத்வாத் விவிக்த ஸ்வரூபஸ்ய அநநுபூதத்வாத் ச விஷம் இவ துஃகம் இவ பவதி? பரிணாமே அமரிதோபமஂ பரிணாமே விபாகே அப்யாஸ பலேந விவிக்தாத்ம ஸ்வரூப ஆவிர்பாவே அமரிதோபமஂ பவதி? தத் ச ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்? ஆத்ம விஷயா புத்திஃ ஆத்ம புத்திஃ? தஸ்யாஃ நிவரித்த ஸகலேதர விஷயத்வஂ ப்ரஸாதஃ? நிவரித்த ஸகலேதர விஷய புத்த்யா விவிக்த ஸ்வபாவாத்ம அநுபவ ஜநிதஂ ஸுகம் அமரிதோபமஂ பவதி; தத் ஸுகஂ ஸாத்த்விகஂ ப்ரோக்தம்.

৷৷18.37৷৷அப்யாஸஸாபேக்ஷத்வதுஃகாந்தஹேதுத்வயோஃ ப்ரயோஜகரூபமநந்தரமுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ததேவ விஷிநஷ்டீதி’.’யத்தத்’ இதி தச்சப்தஷிரஸ்கேண யச்சப்தேநாநுவாதஃ ஷ்ருத்யாதிப்ரஸித்ததரத்வத்யோதநாய.’தத்ஸுகம்’ இதி ப்ரீத்யதிதேஃ.’விஷமிவ’ இத்யநேந ஆபாதப்ராதிகூல்யமாத்ரஂ விவக்ஷிதமித்யாஹ — ‘துஃகமிவேதி’. அநேந மந்தமதீநாஂ,ஜிஹாஸாஸ்பதத்வஂ தர்ஷிதம். ந ஹி ஸுகஂ நாம கிஞ்சித்வஸ்து விஷவதமரிதவச்ச பரிணமதே; அதஸ்ததுபசரிதமாஹ — ‘அப்யாஸபலேந விவிக்தாத்மஸ்வரூபாவிர்பாவ’ இதி. புத்தேராத்மீயத்வாதிமாத்ரோக்தேரபலத்வாத்’ஆத்மவிஷயேத்யுக்தம்’. புத்தேரயோக்யவிஷயஸஂஸர்கரூப காலுஷ்யநிவரித்திர்ஹி ப்ரஸாத இத்யபிப்ராயேணாஹ — ‘நிவரித்தஸகலேதரவிஷயத்வமிதி’. ஜராமரணாதிநிவர்தகத்வாத்போக்யதமத்வேந ஹாதுமஷக்யத்வாச்சாமரிதோபமத்வம். பரஷேஷதைகரஸஸ்வஸ்வரூபஸ்ய யதாவதாவிர்பாவே பரமாத்மாநுபவஸுகஸ்யாந்தர்நீதத்வாதிஹ பரிதகநுக்திஃ.

—————-

38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்

யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்,
அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து,
பரிணாமே விஷமிவ – விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ,
தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.

விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது.
வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது.
வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால்
புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது.
செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை.
அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது.
ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.

வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற
உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம்.
அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது.
அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள்.
எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.
முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி
வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த
உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும்.
இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.

৷৷18.38৷৷அக்ரே அநுபவ வேலாயாஂ விஷயேந்த்ரிய ஸஂயோகாத் யத் தத் அமரிதம் இவ பவதி? பரிணாமே விபாகே விஷயாணாஂ ஸுகதா நிமித்த க்ஷுதாதௌ நிவரித்தே (பசி தாகம் போனபின்பு )தஸ்ய ச ஸுகஸ்ய நிரயாதி நிமித்தத்வாத் விஷம் இவ பீதஂ பவதி? தத் ஸுகஂ ராஜஸஂ ஸ்மரிதம்.

৷৷18.38৷৷’விஷயாணாஂ’ தத்ததிந்த்ரியார்தாநாமந்நபாநாதீநாமித்யர்தஃ.’ஸுகதாநிமித்தக்ஷுதாதௌ நிவரித்தே’ இதி ராஜஸஸுகஸ்ய தரிஷ்டப்ராதிகூல்யநிதாநோக்திஃ. யதுக்தஂ பகவதா பராஷரேண — ‘அக்நேஃ ஷீதேந தோயஸ்ய தரிஷா பக்தஸ்ய ச க்ஷுதா. க்ரியதே ஸுககர்தரித்வஂ தத்விலோமஸ்ய சேதரைஃ’ [வி.பு.1.17.64] இதி.’க்ஷுத்தரிஷ்ணோபஷமஂ தத்வச்சீதாத்யுபஷமஂ ஸுகம். மந்யதே பாலபுத்தித்வாத்துஃகமேவ ஹி தத் புநஃ’৷৷இதி. தரிஷ்டஸுகதாநிமித்தநிவரித்தௌ உபேக்ஷணீயதாமாத்ரவ்யாவரித்த்யர்தஂ துஃகோதர்கத்வஂ’பரிணாமே விஷமிவ’ இத்யநேந வ்யஜ்யதே. பாரதாரிகரஸாதீநி ஹி பயாதிபூயிஷ்டக்ஷணிகக்ஷுத்ரதரஸுகாந்யநந்தரகாலபாவ்யதிகோரநிரதிஷயதுஃகாய பவந்தீத்யாகாமிகஂ விஷத்வமாஹ — ‘நிரயாதிநிமித்தத்வாதிதி’.

——————–

39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்

யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்,
ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,
நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் – உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும்
தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான்.
சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது.
கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது.
மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது.
வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன.
அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும்
தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.

ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள் தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினாலும்
அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.

৷৷18.39৷৷யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச அநுபவ வேலாயாஂ விபாகே ச ஆத்மநோ மோஹநஂ மோஹ ஹேதுஃ பவதி மோஹஃ அத்ர,யதாவஸ்தித வஸ்த்வ ப்ரகாஷஃ அபிப்ரேதஃ. நித்ர ஆலஸ்ய ப்ரமாதோத்தஂ நித்ர ஆலஸ்ய ப்ரமாத ஜநிதம்; நித்ராதயோ ஹி அநுபவ வேலாயாம் அபி மோஹ ஹேதவஃ.நித்ராயா மோஹ ஹேதுத்வஂ ஸ்பஷ்டம்; ஆலஸ்யம் இந்த்ரிய வ்யாபார மாந்த்யம்; இந்த்ரிய வ்யாபார மாந்த்யே ச ஜ்ஞாந மாந்த்யஂ பவதி ஏவ; ப்ரமாதஃ கரித்ய அநவதாந ரூப இதி தத்த அபி ஜ்ஞாந மாந்த்யஂ பவதி; ததஃ ச தயோஃ அபி மோஹ ஹேதுத்வம்; தத் ஸுகஂ தாமஸம் உதாஹரிதம்;

அதோ முமுக்ஷுணா ரஜஸ் தமஸீ அபிபூய ஸத்த்வம் ஏவ உபாதேயம் இதி உக்தஂ பவதி.(ஆகையால் சத்வம் உபா தேயம் என்றதாயிற்று )

৷৷18.39৷৷அநுபத்யத இத்யநுபந்தோ விபாகஃ? மோஹநஷப்தஸ்யாத்ர பாவார்தாநந்வயாத்கரர்ணார்தத்வமாஹ — ‘மோஹஹேதுரிதி’. நித்ராதிஜந்யஸுகஸ்ய விபரீதஜ்ஞாநஹேதுத்வாபாவாத்’மோஹோத்ர யதாவஸ்திதவஸ்த்வப்ரகாஷ’ இத்யுக்தம். ராஜஸஸுகஸ்ய விபாகே மோஹஹேதுத்வஂ? தாமஸஸுகஸ்ய து ததாநீமபீதி லோகஸித்தமித்யபிப்ராயேணோக்தஂ விவரிணோதி — ‘நித்ராதயோ ஹீதி’.’ஸ்பஷ்டமிதி’ — ந யுக்த்யாகமஸாபேக்ஷமித்யர்தஃ. அலஸஸ்ய ப்ரவரித்த்யபாவமாத்ரஂ தரிஷ்யதே? ந ஜ்ஞாநாபாவ இத்யத்ராஹ — ‘ஆலஸ்யமிந்த்ரியவ்யாபாரமாந்த்யமிதி’. ததஃ கிஂ இத்யத்ராஹ — ‘இந்த்ரியேதி’. கரணவ்யாபாரதாரதம்யாநுகுணஂ ஹி கார்யதாரதம்யம். ஜ்ஞாநஸ்ய மாந்த்யஂ சால்பவிஷயத்வம். தச்ச விஷயாந்தரப்ரகாஷாபாவகர்பமிதி பாவஃ. ப்ரமாதஸ்ய ஸ்வரூபேணைவாபேக்ஷிதாஜ்ஞாநரூபதாமாஹ’கரித்யாநவதாநரூப’ இதி. ஏவமாலஸ்யப்ரமாதயோரஜ்ஞாநாநுவித்தத்வஂ தர்ஷிதஂ; தத்தேதுத்வஂ து கதமித்யத்ராஹ — ‘ததஷ்சேதி’. ஜ்ஞாநஸ்யாபடுத்வஂ ஹி க்ரமாதத்யந்தாஜ்ஞாநே விஷ்ராம்யதீதி பாவஃ. நித்ராயாஃ ஸுகஹேதுத்வமாயாஸவிஷ்ரமஹேதுத்வாதிபிஃ? விச்சேதகேஷு ரோஷாச்ச லோகஸித்தம்? இந்த்ரியவ்யாபாரமாந்த்யஸ்யாப்யங்கஸங்க்ஷோபாதிநிவரித்தித்வாரா அநவதாநஸ்ய து புத்தேரேகாக்ரதாகல்பநரூபப்ரயாஸநிவரித்த்யேதி. ஸுகாபாஸப்ரஸங்கேநாகாலநித்ராதிகஂ நோபாதேயமித்யுக்தஂ பவதி. ஸ்மரந்தி ச — ‘யாமத்வயஂ ஷயாநஸ்து ப்ரஹ்மபூயாய கல்பதே’ இத்யாதி. ஆஹுஷ்சாயுர்வேதவிதஃ — ‘அகாலேதிப்ரஸங்காச்ச ந ச நித்ரா நிஷேவிதா. ஸுகாயுஷீ பராகுர்யாத்காலராத்ரிரிவாபரா’ இதி. குணகரிதவிபாகப்ரகரணதாத்பர்யமநுஷ்டாநபர்யவஸாநரூபப்ரயோஜநேநோபஸஂஹரதி — ‘அத’ இதி.

——————-

40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:

ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும்,
ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும்,
முக்தம்-விடுபட்ட,
யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ,
தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ,
திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயோ,
புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.

இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை;
வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.

புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள்.
அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில்
அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு.
ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல.
அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது.
பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று
பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார்.
அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.

ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும்
ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம்.
முக் குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை.
அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.

৷৷18.40৷৷பரிதிவ்யாஂ மநுஷ்யாதிஷு திவி தேவேஷு வா ப்ரகரிதி ஸஂஸரிஷ்டேஷு ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தேஷு ப்ரகரிதிஜைஃ ஏபிஃ த்ரிபிஃ குணைஃ முக்தஂ யத் ஸத்த்வஂ ப்ராணி ஜாதஂ ந தத் அஸ்தி.’த்யாகேநைகே அமரிதத்வ மாநஷுஃ’ (மஹாநா0 8.14) இத்யாதிஷு மோக்ஷ ஸாதநதயா நிர்திஷ்டஃ த்யாகஃ ஸஂந்யாஸ ஷப்தார்தாத் அநந்யஃ? ஸ ச க்ரிய மாணேஷு ஏவ கர்மஸு கர்தரித்வ த்யாக மூலஃ; பல கர்மணோஃ த்யாகஃ கர்தரித்வ த்யாகஃ ச பரம புருஷே கர்தரித்வ அநுஸந்தாநேந இதி உக்தம். ஏதத் ஸர்வஂ ஸத்த்வ குண வரித்தி கார்யம் இதி ஸத்த்வ உபாதேயதா ஜ்ஞாபநாய ஸத்த்வ ரஜஸ் தமஸாஂ கார்ய பேதாஃ ப்ரபஞ்சிதாஃ;

இதாநீம் ஏவஂ பூதஸ்ய மோக்ஷ ஸாதநதயா க்ரியமாணஸ்ய கர்மணஃ பரம புருஷ ஆராதந வேஷதாம்? ததா அநுஷ்டிதஸ்ய ச கர்மணஃ தத் ப்ராப்தி லக்ஷணஂ பலஂ ப்ரதிபாதயிதுஂ ப்ராஹ்மணாத் யதிகாரிணாஂ ஸ்வபாவ அநுபந்தி ஸத்த்வாதி குண பேத பிந்நஂ வரித்த்யா ஸஹ கர்தவ்ய கர்ம ஸ்வரூபம் ஆஹ —

৷৷18.40৷৷ப்ராகரிதகுணாதீதஷுத்தஸத்த்வமயபகவத்ப்ராப்திலக்ஷணமோக்ஷாத் ப்ராங்நியததேஷகாலபலபோகைருச்சாவசைஃ ஸர்வைரபி க்ஷேத்ரஜ்ஞைருக்தஸ்ய த்ரிகுணஸ்ய நிஷ்ஷேஷதுஸ்த்யஜத்வமுகேந குணகார்யப்ரகரணஂ நிகம்யதே — ‘ந ததஸ்தி’ இதி ஷ்லோகேந. குணத்ரயப்ரகரணஂ து நாத்ரோபஸஂஹரிதம்? அநந்தரமபி’ஸ்வபாவப்ரபவைர்குணைஃ’ [18.41] இத்யுக்தேஃ.’திவி தேவேஷு’ இதி ஸத்த்வோத்தரதேஷாதிகாரிணாமுபலக்ஷணம். தத்துல்யதயா’பரிதிவ்யாம்’ [7.9] இத்யத்ராபி’மநுஷ்யாதிஷ்விதி’ ராஜஸதாமஸாதிகாரிவிவக்ஷாக்யாபநம்.’ஹிரண்யகர்போ பகவாந்’ [வி.பு.6.7.56]’ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தாஃ’ [வி.த.104.23] இத்யாத்யநுஸாரேண பஹுவசநாபிப்ரேதமாஹ — ‘ப்ரஹ்மாதிஷ்விதி’. குணப்ரகரணாத் ஸத்த்வஷப்தஸ்ய குணவிஷேஷார்ததாப்ரமவ்யுதாஸாய ப்ராணிஷப்தஃ. ஸமுதாயரூபேணாபி நிர்தார்யமாணேஷு தத்ராபி குணநிர்முக்தஂ ந கிஞ்சித்ஸத்த்வமித்யபிப்ராயேண ஜாதஷப்தஃ. ஜாதமிதி வா வ்யஸ்தம் — ஆஸஂஸாரஂ ஜந்மப்ரபரிதி குணபத்ததாத்யோதநார்தம்.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –18-1–18-17—

February 12, 2021

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்வ உபாதேயதா அந்தி மே —-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்ம யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –

சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

———————

ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 –
தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 –
ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 –
கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 –
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 –
முக் குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 –
நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 –
கர்ம யோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 49-57 –
அஹங்காரம் கொடியது 58-60 –
எல்லாம் ஈசன் செயல் 61-62 –
உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 –
சரணாகதி தத்துவம் 64-66 –
கீதைக்கு அதிகாரி யார்? 67-71 –
ஞானோதயம் 72-73 –
ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.

————–

அவதாரிகை
அத்யாய த்வய -அதீத அத்யய த்வயம் -கடந்த இரண்டால்
இத் யுக்தம் -இதுகாறும் சொல்லிற்று ஆயிற்று
சித்த த்ரிகம் 13-14-15 -தத்வ த்ரயம் பற்றி பேசி
சாத்ய த்ரிகம் 16-17-18-யாகாதிகள்–பக்த்யாதிகள் = செய்து பேறு பெறுவது பற்றி பேசி
இந்த மூன்றில் அதீத அத்யய த்வயம் -கடந்த இரண்டால்
அப்யுத -இவ்வுலக இன்பம் இவ்வுலக மோக்ஷம் வைதிக
வைதிகம் ஏவ யாகம் தானம் தபஸ் –ந அந்யத்
வைதிகஸ்ய கர்மணாம் ஸாமான்யேண பிரணவ அந்வயம் -தத்ர மோக்ஷ அப்யுத தத் சத் -சப்த நிரதேசத்வேந -ஓம் தத் -ஓம் சத் -இது மட்டும் அல்ல -தியாகம் சேர்ந்த கர்மயோகம்
பலாபி சந்தி ரஹிதம்
தத் ஆரம்பஸ்ய ஸத்வம் குணம் வளர
சாத்விக ஆகாரம் தேவை இத் யுக்தம் -சொல்லிற்று ஆயிற்று –

அநந்தரம் -இதில் –
மோக்ஷ சாதனதயா -நிர் திஷ்டஸ்யோ தியாகம் ஸந்நியாசம் -வேதம் சொல்லும் இரண்டு சொற்களுக்குள் வாசி –
யாகாதிகள் சாதனமா இவையா
இவை இரண்டும் ஒன்றா வேறே வேறாயா
இவற்றின் ஸ்வரூபம் என்ன
அர்ஜுனனின் சங்கை

யாகாதிகள் சாதனமே -ஆனால் பழத்தில் விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும்
கர்மங்களை விடுவது தியாகம் சந்நியாசம் அல்ல -பலன்களை விடுவதே
ஸூ கர்ம ஞான –வைராக்ய -முதலிலே சொல்லிற்றே –
த்யாகேன ஏகேன அம்ருதம் போன்ற ஸ்ருதிகள்
இரண்டும் ஐக்யம் -என்றே சொல்லப் போகிறான் -ஒன்றே
த்யாகஸ்ய ஸ்வரூபம் -ஸர்வேச்வரேச்வரன் ஸ்வயம்சேவ கர்த்தா -செய்வாரைச் செய்வேனும் யானே என்னும் -சர்வ கரமாணாம் கர்த்ருத்வம் பகவத் ஸர்வேஸ்வரஸ்வரன் அவனே என்று எண்ண வேண்டுமே – அனுசந்தானம் -நினைவே வேண்டும்
இதுக்காகவே ஸ்ருஷ்ட்டி அவதார முகேன -அவன் செய்த ஷேம க்ருஷி பலம் –
சன்யாசம் தியாகம் பற்றி விசாரம் ஆளவந்தார் காட்டவே இல்லையே என்னில்
ஸர்வேச்வரேச்வரனே கர்த்ருத்வ புத்தி சொன்னதில் இதுவும் அடங்கும் அன்றோ

சத்வ குணம் உபாதேயத்வம்
ஸ்வ வர்ண உசித கர்மாணாம் –பரம புருஷ ஆராதன ரூபம் இதுவே பரிணாமம் அடைந்து -பகவத் பிராப்தி பர்யந்தம் ஆகுமே – நிர்வர்தன பிரகாரம்
க்ருஸ்நஸ்ய கீதா சாஸ்த்ரஸ்ய சாரார்த்தம் -பக்தி யோகம் இது ஏதே-கீழே சொன்னவை அனைத்தும் – ப்ரதிபாத்யந்தே -அந்திமே உச்யதே
தத்ர தாவத் தியாக சந்யாச ப்ருதக்த்வ ஏகத்வ நிர்ணயாய
ஸ்வரூப நிர்ணயாயஸ்ய அர்ஜுனன் கேள்வி

—————–

அர்ஜுந உவாச

1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந

அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்,
ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா,
கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே,
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும்,
த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும்,
ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின்
இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன.
ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது.
ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம்.
புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும்.
சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு.
யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது.
அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது.
பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.

கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான்.
கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான்.
ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது.
கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான்.
இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.

அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.

அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார்.
இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.

வாழ்க்கையைப் பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும்.
அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப் பற்றி எரிவது போன்று படம் வரையலாம்.
ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்து கொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும்.
எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான்
அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.

அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார்.
சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கி யிருக்கின்றன.
அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும்.
எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு.
இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன;
மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார்.
உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன.
கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது.
ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன்.
யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர்.
அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.

৷৷18.1৷৷அர்ஜுந உவாச — த்யாக ஸஂந்யாஸௌ ஹி மோஷ ஸாதநதயா விஹிதௌ –,’ந கர்மணா ந ப்ரஜயா தநேந த்யாகேந ஏகேந அமரிதத்வ மாநஷுஃ’ (மஹாநா0 8.14)’வேதாந்த விஜ்ஞாந ஸுநிஷ்சிதார்தாஃ ஸஂந்யாஸ யோகாத் யதயஃ ஷுத்த ஸத்த்வாஃ. தே ப்ரஹ்ம லோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே৷৷’ (மு0 உ0 3.2.6) இத்யாதிஷு. அஸ்ய ஸஂந்யாஸஸ்ய த்யாகஸ்ய ச தத்த்வஂ யாதாத்ம்யஂ பரிதக் வேதிதும் இச்சாமி. அயம் அபிப்ராயஃ — கிம் ஏதௌ ஸஂந்யாஸ த்யாக ஷப்தௌ பரிதகர்தௌ? உத ஏகார்தௌ ஏவ- யதா பரிதகர்தௌ? ததா அநயோஃ பரிதக்த்வேந ஸ்வரூபஂ வேதிதும் இச்சாமி. ஏகத்வே அபி தஸ்ய ஸ்வரூபஂ வக்தவ்யம் இதி.அத அநயோஃ

ஏகம் ஏவ ஸ்வரூபம்? தத் ச ஈதரிஷம் இதி நிர்ணேதுஂ வாதி விப்ரதிபத்திஂ தர்ஷயந் ஷ்ரீபகவாநுவாச —

৷৷18.1৷৷கர்தவ்யவிஷோதநப்ரதாநே அந்திமேத்யாயத்ரிகேஸ்யாத்யாயஸ்ய பஷ்சாத்பாவித்வஜ்ஞாபநாய ஷோடஷஸப்ததஷயோர்தேவாஸுரவிபாகோக்த்யாதிமுகேந ஹேயோபாதேயவிபஜநபரதயா ப்ரகட்டகைக்யமபிப்ரேத்யாஹ — ‘அதீதேநேதி’.’வைதிகஸ்ய கர்மணஃ ஸாமாந்யலக்ஷணஂ ப்ரணவாந்வயஃ? தத்ர மோக்ஷாப்யுதயஸாதநயோர்பேதஸ்தத்ஸச்சப்தநிர்தேஷத்வேநேதி விபஜமாநஸ்வாயமபிப்ராயஃ’ — விஷேஷணாதிஸாமர்த்யலப்தோயஂ விபாகஃ. ப்ரஹ்மணஃ பாரோக்ஷ்யாத்’தத்’ இதி நிர்தேஷஃ. தஜ்ஜ்ஞாநே து ஸந்மாத்ரவிவக்ஷயா ஸச்சப்தஃ. க்ரமாதேதே ஸாத்த்விகராஜஸதாமஸா இதி விபாகஸ்து கஸ்யசிதுத்ப்ரேக்ஷாகல்பிதஃ — இதி. ஏவமுக்தேஷ்வப்யர்தேஷு மோக்ஷஸாதநபூதாஂஷஸ்வரூபஷோதநமுத்தராத்யாயேந க்ரியத இதி ஸங்கத்யபிப்ராயேணாஹ — ‘அநந்தரமிதி’.’ஈஷ்வரே கர்தரிதாபுத்திஃ ஸத்த்வோபாதேயதாந்திமே. ஸ்வகர்மபரிணாமஷ்ச ஷாஸ்த்ரஸாரார்த உச்யதே’ [கீ.ஸஂ.22] இதி ஸங்க்ரஹஷ்லோகே த்யாகஸந்ந்யாஸைக்யதத்ஸ்வரூபாநுக்திரீஷ்வரே கர்தரிதாபுத்தேஃ ஷேஷதயா ததுபந்யாஸாதிதி மந்தவ்யம். ஸத்த்வோபாதேயத்வமத்ர தாத்பர்யவரித்த்யாபிதீயத இத்யபிப்ராயேணாஹ’ஸத்த்வரஜஸ்தமஸாஂ கார்யவர்ணநேநேதி’.’ஸ்வதர்மஜ்ஞாநவைராக்யஸாத்யபக்த்யேககோசரஃ’ [கீ.ஸஂ.1] இதி ஸங்க்ரஹாரம்போக்தப்ரதாநகர்தவ்யபரோத்ர’ஷாஸ்த்ரஸாரார்தஷப்தஃ’ இத்யபிப்ராயேணாஹ’ஸாரார்தோ பக்தியோக’ இதி. ஸ்வர்காதிஸாதநாநாஂ யஜ்ஞதாநாதீநாஂ ஸ்வரூபாவிஷேஷேபி யத்யோகாந்மோக்ஷஸாதநத்வஂ? ததிதாநீஂ ஸவிஷேஷஂ ஷோதயிதுமர்ஜுநஃ பரிச்சதீத்யபிப்ராயேண ப்ரகரிதே ப்ரஷ்நஂ ஸங்கமயதி — ‘தத்ர தாவதிதி’. ஸத்த்வவிவரித்திததுபாயாதிகதநஂ த்யாகாதிவிஷிஷ்டமோக்ஷஸாதநகர்மார்ததயா. ஸந்ந்யாஸஷப்தஸ்யாஷ்ரமவிஷேஷாதிரூடேஸ்த்யாகமாத்ரேபி ஷக்தஃ பரிதக்த்வைகத்வஷங்கா. வாதிவிப்ரதிபத்த்யாதிபிஃ ஸ்வரூபவிஷேஷாநிஷ்சயஃ. த்யாகஸந்ந்யாஸயோர்விஷேஷதஸ்தத்த்வபுபுத்ஸாஹேதுமாஹ — ‘த்யாகஸந்ந்யாஸௌ ஹீதி’. கர்மஸ்வரூபே ஸ்வர்காபவர்காதிஸாதாரணே த்யாகாதிஸஂஜ்ஞகவிஷேஷணயோகாதேவ ஹ்யபவர்கஸாதநத்வம். அதஃ ப்ராப்தாப்ராப்தவிவேகேந விஷேஷணே தத்ஸாதநத்வவ்யபதேஷஃ. ஸஂஷயவிபர்யயோபமர்தீ விஷேஷ இஹ தத்த்வஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘யாதாத்ம்யமிதி’. பரிதக்த்வஂ வேதிதுமிச்சாமீத்யுக்தே நிஷ்சிதபரிதக்த்வஸ்ய தத்தத்ஸ்வரூபஜிஜ்ஞாஸா ப்ரதீயதே; ந ச தத்யுக்தஂ? பூர்வத்ர பரிதக்த்வநிஷ்சயஹேத்வபாவாதுத்தரத்ர சைகத்வஸ்யைவ வக்ஷ்யமாணத்வாத். அதோயஂ ப்ரஷ்நோநுபபந்நஃ; ப்ரதிவசநாஸங்கதிஷ்சேத்யத்ராஹ — ‘அயமபிப்ராய’ இதி.’தத்த்வஂ வேதிதுமிச்சாமி’ இத்யேததேவ விவக்ஷிதம்; பரிதக்த்வநிர்தேஷஸ்து ஸஂஷயகோட்யந்யதரோபக்ஷேபமாத்ரபரஃ.’பரிதக்த்வமஸ்தி சேத்தத்வேதிதுமிச்சாமி’ இதி வா வாக்யாவரித்திரித்யபிப்ராயேணாஹ — ‘கிமிதி’.

——————–

ஸ்ரீபகவாநுவாச

2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது,
ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்,
ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்,
த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்.
எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம்
முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம்.
இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து.
வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர்.

சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு.
இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை.
தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும்.
காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாக வேண்டும்.
பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது.
ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம்
பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு.
வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர்.
அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.

சத்வ குணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகி விடுகின்றன.
வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார்.
கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்!
குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள்.
அதே போல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றி விடுகின்றார்.
ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும்.
ஒரு பணக்காரனுடைய வேலையாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களை யெல்லாம் கவனிக்க வேண்டும்.
இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு,
பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.

ஏகம் ஏவ ஸ்வரூபம்? (ஒன்றே )தத் ச ஈதரிஷம்-(இப்படிப்பட்டது என்று காட்ட ) இதி நிர்ணேதுஂ வாதி விப்ரதிபத்திஂ தர்ஷயந் (நீ பலர் இடம் கேட்டதால் குழம்பி உள்ளாய் )ஷ்ரீபகவாநுவாச —

৷৷18.2৷৷ஷ்ரீபகவாநுவாச — கேசந வித்வாஂஸஃ காம்யாநாஂ கர்மணாஂ ந்யாஸஂ ஸ்வரூப த்யாகஂ ஸஂந்யாஸஂ விதுஃ; கேசித் ச விசக்ஷணாஃ நித்யாநாஂ நைமித்திகாநாஂ காம்யாநாஂ ச ஸர்வேஷாஂ கர்மணாஂ பல த்யாக ஏவ மோக்ஷ ஷாஸ்த்ரேஷு த்யாக ஷப்தார்தஃ இதி ப்ராஹுஃ.தத்ர ஷாஸ்த்ரீயஃ த்யாகஃ காம்ய கர்ம ஸ்வரூப விஷயஃ? ஸர்வ கர்ம பல விஷயஃ? இதி விவாதஂ ப்ரதர்ஷயந் -ஏகத்ர ஸஂந்யாஸ ஷப்தம் இதரத்ர த்யாக ஷப்தஂ ப்ரயுக்தவாந்; -அதஃ த்யாக ஸஂந்யாஸ ஷப்தயோஃ ஏகார்தத்வம் அங்கீகரிதம் இதி ஜ்ஞாயதே.

ததா’நிஷ்சயஂ ஷ்ரரிணு மே தத்ர த்யாகே பரத ஸத்தம.’ (கீதா 18.4) இதி த்யாக ஷப்தேந ஏவ நிர்ணய வசநாத்.’நியதஸ்ய து ஸஂந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே. மோஹாத் தஸ்ய பரி த்யாகஸ்  தாமஸஃ பரிகீர்திதஃ৷৷’ (கீதா 18.7)’அநிஷ்ட மிஷ்டஂ மிஷ்ரஂ ச த்ரிவிதஂ கர்மணஃ பலம். பவத் யத்யாகிநாஂ ப்ரேத்ய ந து ஸஂந்யாஸிநாஂ க்வசித்৷৷’ (கீதா 18.12) இதி பரஸ்பர பர்யாயதா தர்ஷநாத் ச தயோஃ ஏகார்த த்வஂ ப்ரதீயதே? இதி நிஷ்சீயதே৷৷

৷৷18.2৷৷பரிதக்த்வைகத்வ தத் ஸ்வரூப ஜிஜ்ஞாஸயா ப்ரஷ்நஷ்சேத் தத்ர கஸ்மிந்நஂஷே’காம்யாநாம்’ இத்யாதி மதபேதோபந்யாஸஸ்ய ஸங்கதிஃ இத்யத்ராஹ — ‘அதேதி’.’அயமபிப்ராயஃ’ — ந்யாயதோ ஹ்யத்ர நிர்ணயஃ ப்ரதிபாத்யதே; ஸந்திக்தே ச ந்யாயாவதாரஃ; ஸந்தேஹஷ்சாத்ர வாதி விப்ரதிபத்தி நிபந்தந இதி ந்யாய விஷய விஷோதநாய விப்ரதிபத்த்யுபந்யாஸஃ — இதி. ஏதேந கதிதார்தயோரபி ஸந்ந்யாஸ த்யாக ஷப்தயோர் விப்ரதிபத்தி ப்ரஷமநாய அஸ்மிந்நத்யாயே புநஃ ப்ரஷ்ந இத்யபி ஸூசிதம். ஏகத்வஸ்வீகாரேண ப்ரதிவசநாத் பரிதகத்வ ப்ரதிக்ஷேபோர்தஸித்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஏகமேவ ஸ்வரூபமிதி’. ஸ்வமதஸ்ய’நிஷ்சயஂ ஷ்ரரிணு’ [17.4] இதி வக்ஷ்யமாணத்வாத்.’கவயஃ”விசக்ஷணாஃ’ இதி பத த்வயஂ நார்தப்ராஷஸ்த்யார்தவக்தரிகௌரவபரம்; அபிது விப்ரதிபத்த் யுபயுக்தவேதநமாத்ரபரமித்யபிப்ராயேணாஹ — ‘கேசந வித்வாஂஸ’ இதி. அநந்தரஷ்லோகேந பேதஸ்ய’ஏகே? அபரே’ இதி வ்யக்தமுக்தத்வாதிஹாபி தத்விவக்ஷேத்யபிப்ராயேண — ‘கேசநேத்யுக்தம்’.’காம்யாநாஂ கர்மணாஂ ந்யாஸம்’ இதி விஷேஷணாதிதரேஷாம பரித்யாகஃ ப்ரதீயதே; உத்தரத்ர ச’ஸர்வ கர்ம பல த்யாகம்’ இதி விஷேஷணாதத்ர காம்ய ஸ்வரூப த்யாகஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வரூபத்யாகமிதி’. காம்ய ஸ்வரூப த்யாகஂ’வததாமயமபிப்ராயஃ’ — ந தாவந் நித்ய நைமித்திகவத் அகரணே ப்ரத்யவாயாத் கர்மாந்தராநர்ஹதாபத்திபயாத்வா காம்ய மநுஷ்டீயதே. ந ச த்ரிவர்க ஸாதநாய? தஸ்யாபவர்கப்ரத்யநீகத்வாத். ந ச ததேவ கர்மாபவர்கஸ்யாபி ஸ்வயஂ ஸாதநம்? உபாஸநாதிநைரர்தக்ய ப்ரஸங்காத். நச விநியோக பரிதக்த்வேந வித்யாங்கதயா தத் பரிக்ரஹஃ? யஜ்ஞாதிஷ்ருதேர் நித்ய நைமித்திக மாத்ர விஷயத்வேபி விரோதாபாவாத். அத ஏவ ஹி’ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதிஷ்ருதேரஷ்வவத்’ [ப்ர.ஸூ.3.4.26] இத்யதிகரணமாஷ்ரமதர்மஸாபேக்ஷதாபரஂ பாஷ்யதே. தஸ்மாத் ஸ்வர்காதி ஸஂஜ்ஞ நரகஹேதவஃ காம்யாஃ க்ரியா முமுக்ஷுபிர்நாநுஷ்டேயாஃ — இதி.

ஸர்வ கர்ம பல த்யாகமிதி வததாஂ’த்வயமாஷயஃ’ — பல விரோதாத்தி காம்யாநாஂ த்யாகஃ ஷங்க்யதே; அதஃ பலமேவ த்யஜ்யதாம்? ந ச நிஷ்பலாநுஷ்டாந ப்ரஸங்கஃ? நித்ய நைமித்திகவதேவ பகவத் ப்ரீதிமாத்ரார்ததயா ததநுஷ்டாநோபபத்தேஃ. ந சைவஂ ந விதிஃ’யோ வா ஏததக்ஷரஂ கார்க்யவிதித்வா ஜுஹோதி யஜதே தபஸ்தப்யதே பஹூநி வர்ஷ ஸஹஸ்ராணி அந்தவதேவாஸ்ய தத்பவதி’ [பரி.உ.3.8.10] இத்யாதிநாக்ஷரஷப்த நிர்திஷ்ட பரம புருஷ வேதநாவேதநாப்யாமேவ தஸ்யைவ கர்மணோ நித்யாநித்யபல ஸாதநத்வஷ்ருதேஃ. அதோ நித்ய நைமித்திகாநாமிவ காம்யாநாமபி ந ஸ்வரூப த்யாகஃ — இதி.

விவாதஸ்ய பிந்ந விஷயத்வாயோகாதத்ர த்யாக ஸந்ந்யாஸ ஷப்தயோரேகார்தத்வாவஷ்யம் பாவாத்பரிதகர்தத்வஷங்காபரிஹாரோர்தலப்த இத்யாஹ — ‘தத்ரேதி’. ஏதேந ஸந்ந்யாஸ த்யாக ஷப்தயோஃ பரிதகர்தத்வமங்கீகரித்ய கஸ்யசித் காம்ய ஸ்வரூப ப்ரஹாண விஷயதயா கஸ்யசித்து நித்ய நைமித்திக பலோபேக்ஷார்ததாஂ ச வதந்தஃ ப்ரத்யுக்தாஃ. நஹ்யத்ர காம்யேதரகர்ம பல த்யாகமித்யுச்யதே. ததஷ்ச ஸங்கோசகாபாவாத் த்ரிவிதமபி கர்ம ஸஂகரிஹ்ணாதி. ததிதமுக்தஂ — ‘நித்யாநாஂ நைமித்திகாநாஂ காம்யாநாஂ ச ஸர்வேஷாஂ கர்மணாமிதி’. நித்யாநாமபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ [வி.பு.1.6.37] இத்யாதிநா பல ஸஂயோகோவகதஃ.

அத்ர ஷ்லோகே த்யாக ஸந்ந்யாஸ ஷப்த யோரர்த பேத வ்யுத்பாதந பரதாஂ நிரஸிதுமைகார்தே ப்ரஸ்பஷ்டஂ ஹேதுத்வயமாஹ — ‘ததேதி’. நஹ்யர்தத்வய விஷயேத்ர விமர்ஷே அந்யதரஸ்யைவ நிஷ்சய உபபந்ந இத்யபிப்ராயேணோக்தஂ’த்யாக ஷப்தேநைவேதி’.’பரஸ்பர பர்யாயதாதர்ஷநாச்சேதி’ — ‘அயமபிப்ராயஃ’ — ‘நியதஸ்ய து ஸந்ந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே’ [18.7] இதி நிஷித்த ஏவ ஹி ஸந்ந்யாஸஃ.’மோஹாத்தஸ்ய பரித்யாகஃ’ [18.7] இதி த்யாக ஷப்தேநாநூத்ய தாமஸத்வேந நிந்த்யதே? அந்யதா ஜரத்கவாதி வாக்யவத்பரஸ்பராநந்வய ப்ரஸங்காத். ஏவஂ’பவத்யத்யாகிநாஂ ப்ரேத்ய’ [18.12] இத்யுக்த ஏவார்தஃ’ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ [18.12] இதி வ்யதிரேகேண தரிடீக்ரியதே. ந ச ததந்யவிதிரந்யாபாவஸ்ய வ்யதிரேகஃ. அத இமௌ ஷப்தாவத்ராப்யேகார்தாவித்யங்கீகரிதம் — இதி ப்ரதிவக்த்ரா பகவதேதி ஷேஷஃ.

—————–

3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே

ஏகே மநீஷிண:-சில அறிஞர்,
கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்,
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.

சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்.
வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.

கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு.
மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது.
இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது.
புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது.
ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது.
அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது.
ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம்.
உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல்.
சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல்.
இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில்
வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர்.
வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது.
மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது.
அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி
அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது.
உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால்,
அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது.
மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால்
தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.

৷৷18.3৷৷ஏகே மநீஷிணஃ காபிலா வைதிகாஃ ச தந்மத அநு ஸாரிணோ ராகாதி தோஷவத் பந்தகத்வாத் ஸர்வஂ யஜ்ஞாதிகஂ கர்ம முமுக்ஷுணா த்யாஜ்யம் இதி ஆஹுஃ. –அபரே பண்டிதா யஜ்ஞாதிகஂ கர்ம ந த்யாஜ்யம் இதி ப்ராஹுஃ.

৷৷18.3৷৷ஏவஂ’காம்யாநாம்’ [18.2] இதி ஷ்லோகேந பல விரோதததபாவ த்வாரா விரோதோ தர்ஷிதஃ. அத’த்யாஜ்யஂ தோஷவத்’ இதி ஷ்லோகேந ஸ்வரூபதோ தோஷயோகததபாவாப்யாஂ ப்ரத்யவாயத்வாதி முகேந விவாதஃ ப்ரதர்ஷ்யதே — வைதஹிஂஸாபி காபிலைர் நிஷித்தத்வேந தோஷதயாங்கீக்ரியதே. யதோக்தமீஷ்வரகரிஷ்ணேந’தரிஷ்டவதாநுஷ்ரவிகஃ ஸ ஹ்யவிஷுத்தஃ க்ஷயாதிஷயயுக்தஃ’ இதி. உக்தஂ ச பஞ்சஷிகாசார்யைஃ — ‘ஸ்வல்பஃ ஸங்கரஃ ஸுபரிஹரஃ ஸப்ரத்யவமர்ஷஃ’ இதி. அதோ வைதஹிஂஸா புருஷஸ்ய தோஷமாவக்ஷ்யதி? கதோஷ்சோபகரிஷ்யதீதி தந்மதம். அதஃ’ஏகே’ இதி ஷப்தேந ஸாமாந்யதோ நிர்திஷ்டாவாதிநஃ’தோஷவத்’ இதி ஹேத்வந்வயாதிஸாமர்த்யாத்தோஷாக்யதரிஷ்டாந்தோக்திபலாத்வா விஷேஷதோ வ்யஜ்யந்த இத்யாஹ’காபிலா வைதிகாஷ்ச தந்மதாநுஸாரிண’ இதி. ஏதேந ஸர்வ கர்ம ஸ்வரூப ஸந்ந்யாஸவாதிநாஂ மதமபி வேத பாஹ்யத்வேந தர்ஷிதம்.’ராகாதிதோஷவதிதி’ — ராகாதயோ தோஷா பந்தகா இதி ஸர்வஸைத்தாந்திகஸம்மதத்வாத்ததுதாஹரணம்; யத்வா கர்மைவ ராகாதி தோஷவத்; அத ஏவ பந்தகமித்யபிப்ராயஃ. அஸ்யாஂ யோஜநாயாமாதிஷப்தோ ஹிஂஸாதிகமபி ஸஂகரிஹ்ணாதி.’ஸர்வஂ யஜ்ஞாதிகஂ கர்மேதி’ — கர்ம ஷப்தோத்ர ஸாமாந்ய விஷயோபி’யஜ்ஞ தாந தபஃ கர்ம ந த்யாஜ்யம்’ இதி பக்ஷாந்தரே விஷேஷணாச் சாஸ்த்ரசோதிதவிஷயஃ; தத்ர ச விஷேஷகாபாவாத்காம்யவிஷயத்வே பௌநருக்த்யாச்ச ஸர்வவிஷய இதி பாவஃ. ஸர்வைஸ்த்யாஜ்யத்வே தத்விதாயகஸ்ய ஷாஸ்த்ரஸ்யாப்ராமாண்ய ப்ரஸங்காத்’முமுக்ஷுணேதி’ விஷேஷிதம். அபரஷப்தோத்ர ஸ்வமதாநுஸாரி விஷயஃ.’யஜ்ஞதாநதபஃகர்ம ந த்யாஜ்யஂ கார்யமேவ தத்’ [18.5] இதி ஹி ஸ்வமதஂ வக்ஷ்யத இத்யபிப்ராயேணாஹ’பண்டிதா’ இதி; த்யாஜ்யோபாதேயவிபாகதத்த்வவித இத்யர்தஃ.

——————-

அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :

4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:

பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே,
புருஷவ்யாக்ர-புருஷப் புலியே,
தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்,
ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்;
கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.

சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது.
பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன்
ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது.
மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது.
அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன.
தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள்
தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல்.
பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம்.
மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன்
ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று.
கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும்.
கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :

৷৷18.4৷৷தத்ர ஏவஂ வாதி விப்ரதிபந்நே த்யாகே த்யாக விஷயஂ நிஷ்சயஂ மே மத்தஃ ஷ்ரரிணு. த்யாகஃ க்ரியமாணேஷு ஏவ வைதிகேஷு கர்மஸு பல விஷயதயா? கர்ம விஷயதயா? கர்தரித்வ விஷய தயா ச பூர்வம் ஏவ ஹி மயா த்ரிவிதஃ ஸஂப்ரகீர்திதஃ –‘மயி ஸர்வாணி கர்மாணி ஸஂந்யஸ் யாத்யாத்ம சேதஸா. நிராஷீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகத ஜ்வரஃ৷৷’ (கீதா 3.30)இதி.கர்ம ஜந்யஂ ஸ்வர்காதிகஂ பலஂ மம ந ஸ்யாத் இதி பல த்யாகஃ. மதீய பல ஸாதந தயா மதீயம் இதஂ கர்ம இதி கர்மணி மமதாயாஃ பரி த்யாகஃ கர்ம விஷயஃ த்யாகஃ; ஸர்வேஷ்வரே கர்தரித்வ அநுஸந்தாநேந ஆத்மநஃ கர்தரிதா த்யாகஃ கர்தரித்வ விஷயஃ த்யாகஃ.

৷৷18.4৷৷’தத்ர’ இதி ஷப்தஃ ப்ரகரிதே விப்ரதிபத்திவிஷயதாநுவாதமுகேந ந்யாயப்ரவரித்திவிஷயஸந்திக்ததாத்யோதக இத்யபிப்ராயேணாஹ’ஏவஂ வாதிவிப்ரதிபந்ந’ இதி.’மே நிஷ்சயம்’ இத்யநேந மதாந்தரோத்தாநஷங்காவ்யுதாஸாயாஹ’த்யாகவிஷயஂ நிஷ்சயஂ மத்தஃ ஷரிண்விதி’. மத்தஃ ப்ரமாதிதோஷரஹிதாதித்யர்தஃ.’த்யாகோ ஹி’ இத்யாதிகஂ ந வக்ஷ்யமாணஸாத்த்விகத்யாகாதித்ரைவித்யவிஷயஂ? கிந்து ஸாத்த்விகத்யாகாவாந்தரபேதவிஷயஂ’ஸம்ப்ரகீர்திதஃ’ இத்யஸ்ய,ப்ராகுக்ததத்பரத்வஸ்வாரஸ்யாத். ஹிஷப்தேந ஷ்ரோதரிஸம்ப்ரதிபத்த்யாதிப்ரதீதேஷ்சேத்யபிப்ராயேணாஹ’த்யாகஃ க்ரியமாணேஷ்வேவேத்யாதி’.’மயி ஸர்வாணி’ இத்யேக ஏவ ஷ்லோகஸ்த்ரிவிதத்யாகபர இதி அத்ர நிஷ்பலாநுஷ்டாநஸ்வரூபத்யாகஂ? ஸாங்க்யமதஷங்காஂ ச ப்ரதிக்ஷேப்துஂ த்ரயாணாஂ ஸ்வரூபஂ விவிநக்தி’கர்மஜந்யமித்யாதிநா’.’மதீயபலஸாதநதயேத்யாதி’ — ஸ்வகீயப்ரீதிஸாதநதயா ஸ்வார்தமேவ பகவாந் ப்ரவர்தயதீதி ஹி முமுக்ஷோரநுஸந்தாநமிதி பாவஃ. ஸ்வகர்தரித்வஸ்ய தாததீந்யததநுமதிஸாபேக்ஷத்வாதிபிஃ ஸர்வேஷ்வரே கர்தரித்வாநுஸந்தாநம். கர்தரித்வத்யாகஸ்து அநேககர்தரிகே பரப்ரயுக்தஸ்வாத்மகர்தரிகத்வாநுஸந்தாநமித்யுத்தரத்ர விஷோதயிஷ்யதே.

——————

5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்

யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும்,
யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும்,
மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும்.
வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது.
சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது.
அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது.
இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும்.
அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ
அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை.
காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது.
பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது;
அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது.
அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன.
பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது.
ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது.
ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும்.
அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது.
அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.

৷৷18.5৷৷யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதி வைதிகஂ கர்ம முமுக்ஷுணா ந கதாசித் அபி த்யாஜ்யம்; அபி து ஆப்ரயாணாத் அஹரஹஃ கார்யம் ஏவ; குதஃ யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதீநி வர்ணாஷ்ரம ஸம்பந்தீநி கர்மாணி மநீஷிணாஂ மநந ஷீலாநாஂ பாவநாநி. மநநம் உபாஸநம். முமுக்ஷூணாஂ யாவஜ் ஜீவம் உபாஸநஂ குர்வதாம் உபாஸந நிஷ்பத்தி விரோதி ப்ராசீந கர்ம விநாஷநாநி இத்யர்தஃ.

৷৷18.5৷৷ஏவஂ த்ரிவிதத்யாகாநுவாதஸ்ய ஸ்வரூபத்யாகவ்யவச்சேதார்ததோச்யதே’யஜ்ஞதாந — ‘ இத்யாதிநா. விவிதிஷாத்யுத்பத்தேஃ ப்ராக்யஜ்ஞாதிகமநுஷ்டேயஂ? பஷ்சாத்து பரித்யாஜ்யமித்யாக்யாதீதி கேசித்; தந்மதவ்யுதாஸாயாஹ — ‘ந கதாசிதபீதி’. “ஸ கல்வேவஂ வர்தயந்யாவதாயுஷம்” [சா.உ.8.15.1] இதி ஷ்ருத்யபிப்ராயேணாஹ — ‘அபித்வாப்ரயாணாதிதி’. ததா ச ஸூத்ரம்’ஆப்ரயாணாத் தத்ராபி ஹி தரிஷ்டம்’ [ப்ர.ஸூ.4.1.12] இதி.’அஹரஹரிதி’ சோதிதகாலோபலக்ஷணம். நநு வித்யாநிஷ்டஸ்ய கிமர்தஂ கர்ம ந தாவதாராதுபகாரித்வேந? ஸமுச்சயாதிபக்ஷாநப்யுபகமாத்; நாபி தத்த்வஜ்ஞாநார்தஂ? ஸபரிகராத்ப்ரமாணாதேவ தத்ஸித்தேஃ; ந ச ததநுஸ்மரணரூபோபாஸநார்தஂ? தஸ்யாபி ஸஂஸ்காரபாடவாதிஸாத்யத்வாத்; ந சாந்யத்கிஞ்சித்கர்மஸாத்யஂ முமுக்ஷ்வபேக்ஷிதஂ ப்ரயோஜநஂ பஷ்யாமஃ;’ந ச ப்ரயோஜநமநுத்திஷ்ய மந்தஸ்யாபி ப்ரவரித்திஃ’ இத்யபிப்ராயேண’குத’ இத்யாகாங்க்ஷாப்ரதர்ஷநம். சகாரோநுக்தஸமுச்சயார்த இத்யபிப்ராயேண ப்ரபரிதிஷப்தஃ.’வர்ணாஷ்ரமஸம்பந்தீநீதி’ — நித்யநைமித்திகாநாமபி ஸ்வரூபத்யாக இதி யஃ பலஃ? ஸ இஹ ப்ரதிக்ஷிப்யத இதி பாவஃ. யஜ்ஞாதீநாஂ ஸந்நிபத்யோபகாரத்யோதநாயோபகர்தவ்யஜ்ஞாநஸ்வரூபபரோத்ர மநீஷிஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘மநநஷீலாநாமிதி’. மநஸ ஈஷிணோ மநீஷிண இதி வ்யுத்பத்தௌ பலிதோக்திரியம். ஷ்ரவணாநந்தரபாவியௌக்திகமநநவ்யவச்சேதாயாஹ — ‘மநநமுபாஸநமிதி’.’பாவநாநி மநீஷிணாம்’ இதி ஸமபிவ்யாஹாரஸித்தமுபகாரப்ரகாரஂ வ்யநக்தி — ‘முமுக்ஷூணாமித்யாதிநா’. “ப்ராயணாந்தமே த்யாயீத” [ப்ரஷ்நோ.5.1] இதி ப்ரக்ரம்ய “யஃ புநரேதஂ(ஏதத்)த்ரிமாத்ரேணோமித்யநேநைவாக்ஷரேண(பரஂ பு) பரமபுருஷமபித்யாயீத” [ப்ரஷ்நோ.5.5] இத்யுபாஸநஂ யாவஜ்ஜீவமநுஷ்டேயமிதி கம்யதே. அதஸ்ததங்கமபி யாவஜ்ஜீவமநுஷ்டேயம். தச்ச “ஸ கல்வேவஂ வர்தயந்யாவதாயுஷம்” இத்யாதிபிர்வர்ண்யத இதி பாவஃ. உபாஸநவதுத்தராகநிவர்தகத்வாபாவாத்ப்ராசீநஷப்தஃ.

—————–

அறிஞர் யார்? விடை வருகிறது :

6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்

து பார்த-ஆனால் பார்த்தா,
ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்,
பலாநி ச-பயன்களை வேண்டாமலும்,
கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது,
மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.

ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும்
என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள்.
பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது.
இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம்.
தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது.
இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம்.
கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர்.
பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர்
இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும்.
உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.

ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய
வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.

৷৷18.6৷৷யஸ்மாத் மநீஷிணாஂ யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதீநி பாவநாநி? தஸ்மாத் உபாஸநவத் ஏதாநி அபி யஜ்ஞாதீநி கர்மாணி மதாராதந ரூபாணி ஸங்கஂ கர்மணி மமதாஂ பலாநி ச த்யக்த்வா அஹரஹ ஆப்ரயாணாத் உபாஸந நிர்வரித்தயே முமுக்ஷுணா கர்தவ்யாநி இதி மம நிஷ்சிதம் உத்தமஂ மதம்.

(மே மதம் -உத்தமம் மதம் -நிச்சிதம் மதம்-மூன்று காரணங்களை சொல்லி கைவிடாமல் இருக்க -ஆராதன ரூபம் எனது திரு உள்ள உகப்புக்காகவே –
கரிய உரு கோல உரு திரு உரு போல் -எய்தற்கு அரிய மறை பொருள் ஆயிரம் இன் தமிழ் -இங்கும் மூன்று போல்)

৷৷18.6৷৷ஏவஂ பாவநத்வோக்த்யா’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இதி பக்ஷஃ ப்ரதிக்ஷிப்தஃ.’நிஷ்சயஂ ஷ்ரரிணு’ [18.4] இத்யாதிநோக்த ஏவார்தஃ’ஏதாந்யபி’ இதி ஷ்லோகேந நிர்தோஷத்வாத்யவஸாயார்தஂ நிகமநாத்மநா தரிடீக்ரியத இத்யபுநருக்திஃ. ஹேதுஸாத்யபாவேந பூர்வோத்தரக்ரந்தௌ ஸங்கமயதி’யஸ்மாதிதி’. மநீஷிஷப்தஸூசிதோபாஸநஸமாநயோகக்ஷேமதாத்யோதநாய அபிஷப்த இத்யாஹ — ‘உபாஸநவதேதாந்யபீதி’. பரமாத்மப்ரீதித்வாரா கர்மணாஂ பாவநத்வாதிஸித்த்யர்தமாஹ’மதாராதநரூபாணீதி’. ஸங்கஷப்தஸ்ய பலத்யாகோக்த்யா புநருக்திஂ பரிஹரதி’கர்மணி மமதாமிதி’.’நிஷ்சிதமிதி’ — நாத்ர புநஸ்த்வயா ஸஂஷயிதவ்யமிதி பாவஃ.’உத்தமமிதி’ — அஸர்வஜ்ஞாநாமந்யேஷாமேதத்விருத்தஂ ஸ்வரூபத்யாகாதிமதஂ ஸர்வமதமத்வாதநாதரணீயமிதி பாவஃ.

————-

7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:

து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை,
ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது,
மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்,
தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.

நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.

பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும்.
அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை
விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான்.
அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம்.
சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.

மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு
நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன.
உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள்.
மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும்.
அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று
கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.

மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும்,
உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.

৷৷18.7৷৷நியதஸ்ய நித்ய நைமித்திகஸ்ய மஹா யஜ்ஞாதேஃ கர்மணஃ ஸஂந்யாஸஃ த்யாகோ ந உபபத்யதே.’ஷரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மணஃ৷৷’ (கீதா 3.8) இதி ஷரீர யாத்ராயா ஏவ அஸித்தேஃ. ஷரீர யாத்ரா ஹி யஜ்ஞ ஷிஷ்டாஷநேந நிர்வர்த்யமாநா ஸம்யக் ஜ்ஞாநாய ப்ரபவதி. அந்யதா’புஞ்ஜதே தே த்வகஂ பாபாஃ’ (கீதா 3.13) இதி அயஜ்ஞ ஷிஷ்ட அக ரூப அஷநாப்யாயநஂ மநஸோ விபரீத ஜ்ஞாநாய பவதி.

‘அந்நமயஂ ஹி ஸோம்ய மநஃ’ (சா0 உ0 6.5.4) இதி அந்நேந ஹி மந ஆப்யாயதே.’ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ ஷுத்திஃ ஸத்த்வ ஷுத்தௌ த்ருவா ஸ்மரிதிஃ. ஸ்மரிதிலம்பே ஸர்வ க்ரந்தீநாஂ விப்ரமோக்ஷஃ’ (ச0 உ0 7.26.2) இதி ப்ரஹ்ம ஸாக்ஷாத்கார ரூபஂ ஜ்ஞாநம் ஆஹார ஷுத்த் ஆயத்தமிதி ஷ்ரூயதே. தஸ்மாத் மஹா யஜ்ஞாதி நித்ய நைமித்திகஂ கர்ம ஆப்ரயாணாத் ப்ரஹ்ம ஜ்ஞாநாய ஏவ உபாதேயம் இதி தஸ்ய த்யாகோ ந உபபத்யதே.

ஏவஂ ஜ்ஞாநோத்பாதிநஃ கர்மணோ பந்தகத்வ மோஹாத் பரி  த்யாகஃ தாமஸஃ பரிகீர்திதஃ. தமோ மூலஃ த்யாகஃ தாமஸஃ? தமஃ கார்ய அஜ்ஞாந மூலத்வேந த்யாகஸ்த தமோ மூலத்வம். தமோ ஹி அஜ்ஞாநஸ்ய மூலம்’ப்ரமாதமோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச৷৷’ (கீதா 14.17) இதி அத்ர உக்தம். அஜ்ஞாநஂ து ஜ்ஞாந விரோதி விபரீத ஜ்ஞாநம். ததா ச வக்ஷ்யதே — ‘அதர்மஂ தர்மமிதி யா மந்யதே தமஸா வரிதா. ஸர்வார்தாந் விபரீதாஂஷ்ச புத்திஃ ஸா பார்த தாமஸீ৷৷’ (கீதா 18.32) இதி. அதோ நித்ய நைமித்திகாதேஃ கர்மணஃ த்யாகோ விபரீத ஜ்ஞாந மூல ஏவ இத்யர்தஃ.

৷৷18.7৷৷அத’நியதஸ்ய’ இத்யாதிநா மதாந்தராணாமதமத்வஂ ஸ்வமதஸ்யோத்தமத்வஂ ச ப்ரபஞ்ச்யதே. வர்ணாஷ்ரமப்ரயுக்ததயா துஸ்த்யஜத்வஂ நியதஷப்தேநாபிப்ரேதமித்யாஹ — ‘நித்யநைமித்திகஸ்யேதி’. துஷப்தஸஹிதஃ ஸந்ந்யாஸஷப்தோத்ர’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இத்யத்ர ஸ்வரூபத்யாகாநுவாதீ? ஸ ஏவ ஹி’மோஹாத்தஸ்ய பரித்யாகஃ’ இத்யுத்தரார்தேந நிந்த்யத இத்யபிப்ராயேண’ஸந்ந்யாஸஸ்த்யாக’ இத்யுக்தஃ. பாவநத்வேநாவஷ்யகர்தவ்யத்வே ஷிஷ்டே புநஸ்த்யாகோ நோபபத்யத இதி ஷாஸநஂ ப்ராக்ப்ரபஞ்சிததரிஷ்டாதரிஷ்டாநுபபத்திஸ்மாரணபரமித்யபிப்ராயேணாநுபபத்திஂ விவரிணோதி — ‘ஷரீரயாத்ராபீதி’. கேவலாஷநாதிநாபி லௌகிகதேஹயாத்ரா ஸித்த்யேதித்யத்ராஹ — ‘ஷரீரயாத்ரா ஹீதி’.’பஞ்சபூதாத்மகைர்போகைஃ பஞ்சபூதாத்மகஂ வபுஃ. ஆப்யாயதே’ இதி ஸ்மரணாத்கதமாஹாரேண மநஸ ஆப்யாயநமித்யத்ராஹ’அந்நமயஂ ஹீதி’. ஸாத்த்விகாஹங்காரகார்யஸ்யாந்நவிகாரத்வாஸம்பவாதாப்யாயநோக்திஃ. “ஸ்மரிதிலம்பே ஸர்வக்ரந்தீநாஂ விப்ரமோக்ஷஃ” [சாஂ.உ.7.26.2] இத்யேதத் “பித்யதே ஹரிதயக்ரந்திஃ” [முஂ.உ.2.2.8] இத்யாதிகயா ஸமாநார்தயா ஷ்ருத்யா தர்ஷநஷப்தேந விஷேஷ்யேத இத்யபிப்ராயேண’ப்ரஹ்மஸாக்ஷாத்காரரூபமித்யுக்தம்’. விஷததமத்வாத்ஸாக்ஷாத்காரோக்திரிஹ பாவ்யா. ஸகரிதநுஷ்டிதஸ்ய வித்யோபகாரித்வஷங்காஂ பரிஹரந்நிகமயதி — ‘தஸ்மாதிதி’.’நோபபத்யதே’ இத்யஸ்ய காரணாபாவே கதஂ கார்யஂ ஸ்யாத் இதி பாவஃ. உக்தப்ரகாரேணாபரித்யாஜ்யத்வநியமவத்த்வஂ தஸ்யேத்யநூத்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ஏவஂ ஜ்ஞாநோத்பாதிந’ இதி.’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இத்யநூதிதஸ்ய மதஸ்யைதத்தூஷணமித்யபிப்ராயேணாஹ — ‘பந்தகத்வமோஹாதிதி’.

‘தத்ர பவஃ’ [அஷ்டா.4.3.53] இத்யண்ப்ரத்யயேந தாமஸஷப்தஂ நிர்வக்தி — ‘தமோமூல’ இதி. ஸம்பந்தமாத்ரேபி தத்திதார்தே பலிதவிஷேஷோயம். தாமஸபுத்திமூலத்வேந ஸத்வாரகஂ தமோமூலத்வஂ விவரிணோதி’தமஃகார்யேதி’. நந்வத்ர ஸமபிவ்யாஹரிதமோஹமூலத்வேநைவ தமோமூலத்வே தர்ஷயிதவ்யே தமஃகார்யாஜ்ஞாநமூலத்வோக்திஃ கிமர்தா ததர்தைவ; நஹ்யுக்தஸ்யைவ புநஷ்ஷப்தாந்தரவ்யஞ்ஜநே ப்ரயோஜநம்? அதிகபோதநஂ து யுக்தஂ? அவிருத்தஂ சேதி. நநு’ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச’ [14.17] இதி ஷ்லோகே மோஹஷப்தேந விபரீதஜ்ஞாநஸ்ய பரிதகுக்தத்வாதஜ்ஞாநஷப்தேந ஜ்ஞாநாபாவ உச்யத இதி வ்யாக்யாதம்; இஹ புநஃ’அஜ்ஞாநஂ து ஜ்ஞாநவிரோதி விபரீதஜ்ஞாநம்’ இதி கதமுச்யதே இத்தஂ — ஜ்ஞாநாபாவஸ்யாபி வரித்திஹேதுத்வஂ விபரீதஜ்ஞாநத்வாரேதி ப்ரதர்ஷநார்தஂ ஷ்லோகஸ்தமோஹஷப்தஸ்ய ப்ரயோஜநாந்தரவிவக்ஷயா வா ஷ்லோகஸ்தஸ்யாஜ்ஞாநஷப்தஸ்ய மோஹவிஷயத்வஜ்ஞாபநார்தஂ வேதி. தாமஸபுத்தேஃ கர்மத்யாகஹேதுதாஂ வக்ஷ்யமாணேந வ்யநக்தி — ‘ததா சேதி’. தத்த்வவிதோ ந பரித்யஜந்தீத்யபிப்ராயேண தாமஸநிர்தேஷபலிதஂ நிகமயதி — ‘அத’ இதி’நித்யநைமித்திகாதேஃ’ இத்யாதிஷப்தேந பலாபிஸந்திரஹிதகாம்யாநாமபி வக்ஷ்யமாணாநாஂ க்ரஹணம்.’விபரீதஜ்ஞாநேத்யநேநாயதாஜ்ஞாநமூலாத்ராஜஸத்யாகாத்விஷேஷப்ரதர்ஷநம்.’அயதாவத்’ [18.31] இதி ஹி ராஜஸபுத்திர்வக்ஷ்யதே.

——————-

8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்

யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ,
து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி,
காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்,
த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால்,
ஸ:-அவன்.
ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து,
த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.

உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன்
புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.

மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும்,
சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும்
தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன்
ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான்.
அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது.
ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.

போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது.
உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது.
வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது.
அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.

৷৷18.8৷৷யத்யபி பரம்பரயா மோஷ ஸாதந பூதஂ கர்ம ததாபி துஃகாத்மக த்ரவ்யார்ஜந ஸாத்யத்வாத் பஹு ஆயாஸ ரூபதயா காய க்லேஷ கரத்வாத் ச மநஸஃ அவஸாத  கரம் இதி தத் பீத்யா யோக நிஷ்பத்தயே ஜ்ஞாந அப்யாஸ ஏவ யதநீய இதி யோ மஹா யஜ்ஞாத் யாஷ்ரம கர்ம பரித்யஜேத்; ஸ ராஜஸஂ ரஜோ மூலஂ த்யாகஂ கரித்வா தத் யதா அவஸ்தித ஷாஸ்த்ரார்த ரூபம் இதி ஜ்ஞாந உத்பத்தி ரூபஂ த்யாக பலஂ ந லபேத்.’அயதாவத் ப்ரஜாநாதி புத்திஃ ஸா பார்த ராஜஸீ৷৷’ (கீதா 18.31) இதி ஹி வக்ஷ்யதே. (விபரீத ஞானம் கீழ் -தர்மத்தை அதர்மமாக நினைப்பது -இங்கு அந்யதா ஞானம் -சுக ரூபத்தை துக்க ரூபமாக நினைப்பது )ந ஹி கர்ம தரிஷ்ட த்வாரேண மநஃ ப்ரஸாத ஹேதுஃ. அபி து பகவத் ப்ரஸாத த்வாரேண.

৷৷18.8৷৷ததேவமந்தரங்கதயா ஸ்வரூபஷப்தவ்யபதேஷ்யஸ்வரூபநிரூபகதர்மப்ராணப்ரததர்மவைபரீத்யாபாவேபி நிரூபிதஸ்வரூபவிஷேஷகதர்மவைபரீத்யேந ராஜஸீஂ புத்திஂ வக்ஷ்யமாணாமநுஸ்மரந் ராஜஸத்யாகஂ விவரிணோதி — ‘யத்யபீத்யாதிநா’.’துஃகமித்யேவ’ இத்யவதாரணாத்’காயக்லேஷபயாத்’ இதி சோக்தேரதர்மத்வமோஹோத்ர நாஸ்தீதி பலிதம்.’அர்தாநாமார்ஜநே துஃகம்’ [ம.பா.3.2.44] இத்யாத்யநுஸாரேணாஹ — ‘துஃகாத்மகேதி’.’மநஸோவஸாதகரமிதி’ — அநவஸாதோ ஹி விவேகாதிஸாதநஸப்தகே கணித இதி பாவஃ. அந்தரங்கபஹிரங்கவிரோதே பஹிரங்கத்யாகோ யுக்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநாப்யாஸ ஏவேதி’.’யதோக்தாந்யபி கர்மாணி பரிஹாஸ்ய த்விஜோத்தம!. ஆத்ம ஜ்ஞாநே ஷமே ச ஸ்யாத் வேதாப்யாஸே ச யத்நவாந்’ இத்யநுவாத வாக்யாந்யஸ்ய மூலம்.’ஸ கரித்வா ராஜஸஂ த்யாகம்’ இத்யநுவாதவிவக்ஷிதமாஹ — ‘அயதாவஸ்திதேதி’. வக்ஷ்யமாணஸாத்த்விகத்யாகபலமிஹ த்யாகபலஷப்தேந விவக்ஷிதம்? முமுக்ஷுப்ரகரணத்வாத்கர்மத்யாகே தத்ஸாத்யஸ்வர்காதிபலஸ்ய ப்ரஸங்காபாவாச்சேத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநோத்பத்திரூபமிதி’. துஃகாத்மகத்வாதிப்ரயுக்தமநோவஸாதஷங்காஂ பரிஹரதி — ‘நஹீதி’.’பலஸம்பிபத்ஸயா ஹி’ இத்யாத்யுக்தக்ரமேண கர்மபிஃ ப்ரஸாதிதோ பகவாந்மநஸோ஀நவஸாதமேவ கரோதீத்யர்தஃ.

——————

9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:

அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை,
கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால்,
ஸங்கம் பலம் ச த்யக்த்வா – ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து,
க்ரியதே-செய்தால்,
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.

நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து,
அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது.
சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது.
நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான்
கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான்.
அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.

மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்;
சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன்.
ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான்.
அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.

ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய
தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது.
அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான்.
ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி
உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு.
சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான்.
அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான்.
ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.

৷৷18.9৷৷நித்ய நைமித்திக மஹா யஜ்ஞாதி வர்ணாஷ்ரம விஹிதஂ கர்ம மதாராதந ரூப தயா கார்யஂ ஸ்வயஂ ப்ரயோஜநம் இதி மத்வா ஸங்கஂ கர்மணி மமதாஂ பலஂ ச த்யக்த்வா யத் க்ரியதே ஸ த்யாகஃ ஸாத்த்விகோ மதஃ ஸ ஸத்த்வ மூலஃ. யதா வஸ்தித ஷாஸ்த்ரார்த ஜ்ஞாநமூல இத்யர்தஃ.

ஸத்த்வஂ ஹி யதா வஸ்தித வஸ்து ஜ்ஞாநம் உத்பாதயதி இதி உக்தம் — ‘ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ (கீதா 14.17) இதி. வக்ஷ்யதே ச — ‘ப்ரவரித்திஂ ச நிவரித்திஂ ச கார்யாகார்யே பயாபயே. பந்தஂ மோக்ஷஂ ச யா வேத்தி புத்திஃ ஸா பார்த ஸாத்த்விகீ৷৷’ (கீதா 18.30) இதி.

৷৷18.9৷৷அத’த்யாகோ ஹி’ [18.4] இத்யாதிநா ஸ்மாரிதமேவோத்தரித்ய ஸத்த்வகார்யயதாவஸ்திதஜ்ஞாநமூலதயா தஸ்யைவ ஷாஸ்த்ரீயத்வஂ த்ரடயதி — ‘கார்யமித்யேவ’ இதி ஷ்லோகேந.’நியதஸ்ய து ஸந்ந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே’ [18.7] இதி ப்ரக்ரமாதிஹாபி நியதஷப்தஃ கர்மவிஷேஷணமிதி ததர்தமாஹ’நித்யேதி’. ஆஹத்ய கார்யத்வஂ ஹி ப்ரயோஜநஸ்யைவ. ததர்ததயைவ ஹி ஸாதநஸ்ய கார்யதா; தஸ்மாதபலஸ்ய கதஂ கர்தவ்யத்வஂ இத்யத்ராஹ — ‘மதாராதநரூபதயா கார்யமிதி’. ததபிப்ரேதமாஹ’ஸ்வயம்ப்ரயோஜநமிதி’. கர்தரித்வத்யாகோப்யத்ராநுஸந்தேயஃ. அத ஏவ ஹ்யநந்தரஷ்லோகே’த்யாகீ’ இதி ஷப்தஃ ஸங்கபலகர்தரித்வத்யாகீதி வ்யாக்யாயதே.

—————-

அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :

10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:

ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்,
சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி,
அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை,
ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை,
குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.

சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை.
இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில்
ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான்.
அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான்.
அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம்.
பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது.
கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது.
அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை.
கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை.
பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது.
ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்
பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.

அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம்.
இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை.
அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர்.
உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது.
இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.

৷৷18.10৷৷ஏவஂ ஸத்த்வ ஸமாவிஷ்டோ மேதாவீ யதா வஸ்தித தத்த்வ ஜ்ஞாநஃ தத ஏவ சிந்ந ஸஂஷயஃ கர்மணி ஸங்க பல கர்தரித்வ த்யாகீ ந த்வேஷ்டி அகுஷலஂ கர்ம குஷலே ச கர்மணி ந அநுஷஜ்ஜதே.அகுஷலஂ கர்ம அநிஷ்ட பலம்? குஷலஂ ச கர்ம இஷ்ட ரூப ஸ்வர்க புத்ர பஷ் வந்நாதி பலம்; ஸர்வஸ்மிந் கர்மணி மமதா ரஹிதத்வாத்; த்யக்த ப்ரஹ்ம வ்யதிரிக்த ஸர்வ பலத்வாத்? த்யக்த கர்தரித்வாத் ச தயோஃ க்ரிய மாணயோஃ ப்ரீதி த்வேஷௌ ந கரோதி. அநிஷ்ட பலஂ பாபஂ கர்ம அத்ர ப்ராமாதிகம் அபிப்ரேதம்?’நாவிரதோ துஷ் சரிதாந் நா ஷாந்தோ நா ஸமாஹிதஃ. நா ஷாந்த மாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத்৷৷’ (கட0 உ0 1.2.24) இதி துஷ் சரிதா விரதேஃ ஜ்ஞாநோத்பத்தி விரோதித்வ ஷ்ரவணாத்.அதஃ கர்மணி கர்தரித்வ ஸங்க பலாநாஂ த்யாகஃ ஷாஸ்த்ரீயஃ த்யாகஃ ந கர்ம ஸ்வரூப த்யாகஃ.

தத் ஆஹ —

৷৷18.10৷৷ஸத்த்வாதிமூலஷாஸ்த்ரீயத்யாகயுக்தஸ்ய’வர்ததே ஸாத்த்விகோ பாவ இத்யுபேக்ஷேத தத்ததா”உதாஸீநவதாஸீநஃ’ [14.23] இத்யாதிப்ரஸித்தஂ விகாராபாவரூபஂ லக்ஷணமுச்யதே — ‘ந த்வேஷ்டி’ இதி ஷ்லோகேந. தேநோக்தலக்ஷணத்யாகஸ்ய ஸத்த்வமூலத்வமப்யுபபாதிதஂ பவதி. தத்ர ஹேதுகார்யக்ரமௌசித்யேந பிந்நக்ரமதயாக்யாக்யாதி’ஸத்த்வஸமாவிஷ்ட’ இத்யாதிநா.’தீர்தாரணாவதீ மேதா’ [அமரஃ1.5.2] இதி நைகண்டுகாஃ. ஷ்ருதிஷ்ச — “மேதா மநீஷேமா விஷதாஂ ஸமீசீ பூதஸ்ய பவ்யஸ்யாவருத்யை” [ஆரண்ய.5.42] இதி. அத ஆசார்யோபதிஷ்டேஷ்வர்தேஷு அப்ரச்யுதேரந்யாஸங்கராச்ச பலிதமாஹ — ‘யதாவஸ்திததத்த்வஜ்ஞாந’ இதி. அத்ர ஷுபாஷுபபர்யாயகுஷலாகுஷலஷப்தாப்யாஂ ப்ரதிஷித்த்யமாநத்வேஷஸங்கஹேத்வநுவாத இத்யபிப்ராயேணாநிஷ்டபலத்வாத்யுக்திஃ.’த்யாகீ’ இத்யுக்தஸ்ய த்யாகஸ்ய ஹேதுதாஂ விவரிணோதி — ‘ஸர்வஸ்மிந்நித்யாதிநா’. யதாந்யதீயேந்யகர்தரிகே கர்மணி ஸ்வஸம்பந்தவிரஹாத்பாதகாத்யபாவநிஷ்சயேந த்வேஷாத்யபாவஃ? ததாத்ராபீத்யபிப்ராயஃ. அநநுஷ்டாநதஷாயாஂ ஹி ஹர்ஷத்வேஷப்ரஸங்காபாவாத்’க்ரியமாணயோரித்யுக்தம்’. நநு’குஷலே நாநுஷஜ்ஜதே’ இத்யேதத்யுக்தஂ?,ஸ்வர்காதிநிஸ்ஸங்கதாமாத்ரேண காம்யாநுஷ்டாநேபி தத்பலாநந்வயஷாஸ்த்ராத்;’ந த்வேஷ்ட்யகுஷலஂ கர்ம’ இதி து விருத்தஂ? பலஸங்காபாவே ஸத்யேவ நிஷித்தாநாஂ பலாந்வயாத்? அந்யதா க்வசிதபி ப்ரத்யவாயாபாவப்ரஸங்காத். ந ஹி நரகாதிகஂ கஸ்யசிதிஷ்டஂ ஸ்யாத். ஏவஂ தரிஷ்டப்ரத்யவாயஹேதுஷ்வப்யத்வேஷோ ந யுக்த இத்யத்ர ப்ராமாதிகவிஷயத்வேந பரிஹார உக்தஃ. நந்வதிகாரிவிஷேஷே புத்திபூர்வைரபி பாபகர்மபிரலேபஃ கிஂ ந ஸ்யாத் இத்யத்ராஹ — ‘நாவிரத’ இதி. ஏதச்ச்லோகார்தஂ ப்ரகரிதஹேதுதயா கடயந்பரமப்ரகரிதஂ நிகமயதி — ‘அத’ இதி.

———————-

பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :

11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே

ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால்,
அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை,
த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது,
ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ,
ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின்
பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர்.
அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது;
மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது;
கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு.
விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும்.
அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது.
பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப் பற்றிக் கவலையற்றவனாகப்
பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம்.
உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.

தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்?
உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு.
கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும்.
விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம்.
அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம்.
அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல;
காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம்.
அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது;
கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான்.
பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.

தத் ஆஹ —

৷৷18.11৷৷ந ஹி தேஹ பரிதா த்ரியமாண ஷரீரேண கர்மாணி அஷேஷதஃ த்யக்துஂ ஷக்யம் -தேஹ தாரணார்தாநாம் அஷந பாநாதீநாஂ ததநுபந்திநாஂ ச கர்மணாம் அவர்ஜநீயத்வாத்; ததர்தஂ ச மஹா யஜ்ஞாத் யநுஷ்டாநம் அவர்ஜநீயம். யஃ து தேஷு மஹா யஜ்ஞாதி கர்மஸு பல த்யாகீ ஸ ஏவ’த்யாகேநைகே அமரிதத்வ மாநஷுஃ (மஹாநா0 8.14) இத்யாதி ஷாஸ்த்ரேஷு த்யாகீ இதி அபிதீயதே.பல த்யாகீ இதி ப்ரதர்ஷநார்தஃ? பல கர்தரித்வ கர்ம ஸங்காநாஂ த்யாகீ இதி;’த்ரிவிதஃ ஸஂப்ரகீர்திதஃ’ இதி ப்ரக்ரமாத்.

நநு கர்மாணி அக்நி ஹோத்ர தர்ஷ பூர்ண மாஸ ஜ்யோதிஷ்டோமாதீநி மஹா யஜ்ஞாதீநி ச ஸ்வர்காதி பல ஸம்பந்திதயா ஷாஸ்த்ரைஃ விதீயந்தே. நித்ய நைமித்திகாநாம் அபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ (வி0 பு0 1.6.37) இத்யாதி பல ஸம்பந்தி தயா ஏவ ஹி சோதநா. அதஃ தத் பல ஸாதந ஸ்வபாவதயா அவகதாநாஂ கர்மணாம் அநுஷ்டாநே பீஜாவாபாதீநாம் இவ அநபிஸஂஹித பலஸ்ய அபி இஷ்டாநிஷ்ட ரூப பல ஸம்பந்தஃ அவர்ஜநீயஃ; அதோ மோஷ விரோதி பலத்வேந முமுக்ஷுணா ந கர்ம அநுஷ்டேயம் இதி? அத உத்தரம் ஆஹ –(த்ரிவித த்யாகத்துடன் செய்தாலும் செய்தவற்றின் பலன் கிட்டாமல் இருக்காதே -கர்மங்களை விட்டால் தான் பலம் வராமல் இருக்கும் என்று ஆக்ஷேபிக்க)

৷৷18.11৷৷’நியதஸ்ய’ [18.7] இத்யாதிப்ரதிபாதிதயுக்திவிவரணபூர்வகஂ பலத்யாகேநோபலக்ஷணேந ப்ராகுக்தஸ்த்ரிவிதோபி ஸாத்த்விகத்யாகோ’நஹி’ இதி ஷ்லோகேந நிகம்யத இத்யாஹ — ‘ததாஹேதி’. அத்ர’தேஹபரிதா’ இதி ந ப்ராணிமாத்ரநிர்தேஷஃ? அநுபயோகாத். அதஃ கர்மஸ்வரூபத்யாகாஷக்யதாஹேதுரவயவார்தோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ’த்ரியமாணஷரீரேணேதி’.’ஷக்யம்’ இதி த்யஜநபரத்வாந்நபுஂஸகத்வைகத்வே? ஸாமாந்யரூபவிவக்ஷணாத்வா. தேஹபரித்த்வஹேதுகமஷக்யத்வஂ விவரிணோதி’தேஹதாரணார்தாநாமிதி’. ததநுபந்திநோர்தார்ஜநாதயோ பவந்து லௌகிகாநி; கிஂ ஷாஸ்த்ரீயைஃ இத்யத்ராஹ’ததர்தஂ சேதி’. ஷ்ருதிஸ்வாரஸ்யஹேதுகாஂ ஸ்வரூபத்யாகஷங்காஂ பரிஹர்துஂ’யஸ்து’ இத்யாதிகமுச்யத இத்யபிப்ராயேணாஹ’யஸ்த்விதி’.’அபிதீயதே’ இத்யஸ்ய கைரித்யாகாங்க்ஷாஷமநாய’த்யாகேநைகே’ இத்யாதிஷ்ருத்யுபபாதநம். ப்ரக்ராந்தநிகமநபரத்வேந ப்ரதர்ஷநார்ததாஂ த்ரடயதி — ‘த்ரிவித’ இதி.

——————

பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :

12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித்

அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என,
த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்,
அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது,
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத்
தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது.
சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும்,
மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம்.
கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.
அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும்.
கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை;
பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.

எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில்
இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள்.
நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது.
ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.

தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம்.
தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான்.
செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன்
தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது.
இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு.
சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர்.
இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.

நநு கர்மாணி அக்நி ஹோத்ர தர்ஷ பூர்ண மாஸ ஜ்யோதிஷ்டோமாதீநி மஹா யஜ்ஞாதீநி ச ஸ்வர்காதி பல ஸம்பந்திதயா ஷாஸ்த்ரைஃ விதீயந்தே. நித்ய நைமித்திகாநாம் அபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ (வி0 பு0 1.6.37) இத்யாதி பல ஸம்பந்தி தயா ஏவ ஹி சோதநா. அதஃ தத் பல ஸாதந ஸ்வபாவதயா அவகதாநாஂ கர்மணாம் அநுஷ்டாநே பீஜாவாபாதீநாம் இவ அநபிஸஂஹித பலஸ்ய அபி இஷ்டாநிஷ்ட ரூப பல ஸம்பந்தஃ அவர்ஜநீயஃ; அதோ மோஷ விரோதி பலத்வேந முமுக்ஷுணா ந கர்ம அநுஷ்டேயம் இதி? அத உத்தரம் ஆஹ –(த்ரிவித த்யாகத்துடன் செய்தாலும் செய்தவற்றின் பலன் கிட்டாமல் இருக்காதே -கர்மங்களை விட்டால் தான் பலம் வராமல் இருக்கும் என்று ஆக்ஷேபிக்க)

৷৷18.12৷৷அநிஷ்டஂ நரகாதிபலம்? இஷ்டஂ ஸ்வர்காதி? மிஷ்ரம் அநிஷ்ட ஸஂபிந்நஂ புத்ர பஷ்வந்நாதி; ஏதத் த்ரிவிதஂ கர்மணஃ பலம் அத்யாகிநாஂ கர்தரித்வ மமதா பல த்யாக ரஹிதாநாஂ ப்ரேத்ய பவதி; ப்ரேத்ய கர்ம அநுஷ்டாந உத்தர காலம் இத்யர்தஃ. ந து ஸஂந்யாஸிநாஂ க்வசித் ந து கர்தரித்வாதி பரி த்யாகிநாஂ க்வசித் அபி மோக்ஷ விரோதி பலஂ பவதி.

ஏதத் உக்தஂ பவதி — யத்யபி அக்நி ஹோத்ர மஹா யஜ்ஞாதீநி நித்யாநி ஏவ? ததாபி ஜீவநாதிகார காமாதி காரயோஃ இவ மோக்ஷாதிகாரே ச விநியோக பரிதக்த்வேந பரிஹ்ரியதே? மோக்ஷ விநியோகஃ ச — ‘தமேதஂ வேதாநுவசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஞேந தாநேந தபஸா நாஷகேந’ (பரி0 உ0 4.4.22) இத்யாதிபிஃ இதி.தத் ஏவஂ க்ரியமாணேஷு ஏவ கர்மஸு கர்தரித்வாதி பரித்யாகஃ ஷாஸ்த்ர ஸித்தஃ ஸஂந்யாஸஃ; ஸ ஏவ ச த்யாக இதி உக்தஃ.

இதாநீஂ பகவதி புருஷோத்தமே அந்தர்யாமிணி (மூன்று விசேஷணங்கள்-பகவதி கல்யாண குணங்கள் நிறைந்த -நல்லதே செய்பவர் -தவறான காரியங்கள் செய்யத் தூண்டுபவர் அல்ல -நம் கர்மம் தூண்டவே செய்கிறோம் -புருஷோத்தமன் -பத்த முக்த நித்ய க்ருஸ்த்தன ஜகத்துக்கும் கர்த்தா -அந்தர்யாமிணி -உள்ளே இருந்து செலுத்துபவன் )கர்தரித்வ அநுஸஂதாநேந ஆத்மநி அகர்தரித்வ அநுஸந்தாந ப்ரகாரம் ஆஹ. தத ஏவ பல கர்மணோஃ அபி மமதா பரித்யாகோ பவதி இதி. -பரமபுருஷோ ஹி ஸ்வகீயேந ஜீவாத்மநா ஸ்வகீயைஃ ச கரண கலேவர ப்ராணைஃ (யானும் என் உடைமையும் நீயே )ஸ்வ லீலா ப்ரயோஜநாய கர்மாணி ஆரபதே. (இன்புறும் இவ்விளையாட்டுடையவன் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -லோகவத்து லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம் -நம்மை மோக்ஷத்துக்குக் கூட்டிப் போவதும் லீலையே )அதோ ஜீவாத்மகதஂ க்ஷுந் நிவரித்த்யாதிகம் அபி பலஂ தத் ஸாதந பூதஂ ச கர்ம பரம புருஷஸ்ய ஏவ –(ஜீவாத்மாவின் பசி போவதும் கூட ப்ரஹ்மத்துக்கே பலம் என்கிற எண்ணமும் வேண்டும் )

৷৷18.12৷৷லௌகிகபலஸாதநகர்மப்ரக்ரியயைவ ஹி வைதிகாநாமபி பலஸாதநத்வவ்யவஸ்தாபநம். லௌகிகாநி ச கர்மாணி பலேச்சாபாவேபி ஸ்வஷக்த்யநுரூபஂ பலந்தி. ஏவஂ வைதிகேஷ்வபீத்யபிப்ராயேண ஷங்கதே — ‘நந்விதி’. நந்வக்நிஹோத்ராதீநாஂ மஹாயஜ்ஞாதீநாஂ ச விநியோகபரிதக்த்வேந ஆஷ்ரமாங்கத்வஸ்வர்காத்யர்தத்வாவிரோதாத் ஸ்வர்காத்யர்ததயாநுஷ்டாநஂ மா பூத்? ஆஷ்ரமார்ததயாநுஷ்டாநே து கோ விரோதஃ இத்யத்ராஹ — ‘நித்யநைமித்திகாநாமபீதி’. பீஜாவாபாதிதரிஷ்டாந்தேந’அகுஷலம்’ [18.10] இத்யுக்தஸ்ய ப்ராமாதிகஸ்யாபி பந்தகத்வஂ ஸூசிதம். ந ஹி பூமௌ ப்ரமாதநிபதிதஂ பீஜஂ ந பலதி (). தஸ்மாதமரிதரஸார்திநோ விஷதருபீஜாவாபதுல்யோயஂ கர்மகலாப இத்யபிப்ராயேண பலிதஂ ஸ்வரூபத்யாகமாஹ — ‘அத இதி’.அமுமுக்ஷூணாமிதமநிஷ்டத்வாதித்ரைவித்யம்? முமுக்ஷ்வபேக்ஷயா ஸ்வர்காதேரப்யநிஷ்டத்வாதித்யபிப்ராயேண நரகஸ்வர்காதிகதநம். காரீர்யாதிஸாத்யவரிஷ்ட்யாதிபலாநாஂ ஜீவத்தஷாபாவித்வஸ்திதேஃ.’ப்ரேத்ய’ இதி ப்ரதர்ஷநார்தம்; அந்யதா தஸ்மிந்நேவ ஷரீரே த்யாகிநாமபி த்ரிவிதஸ்யாபி பலஸ்ய ஆரம்பாநுமதிப்ரஸங்காத்;’ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ இதி வ்யதிரேகோக்த்யா தஸ்யாபி பாதாச்சேத்யபிப்ராயேணாஹ’கர்மாநுஷ்டாநோத்தரகாலமிதி’. அத்ராப்யநிஷ்டபலாநந்வயஃ பூர்வோக்தரீத்யா ப்ராமாதிககர்மவிஷயோ பந்தவ்யஃ.,உக்தஸ்ய சோத்யஸ்ய ப்ரதிஜ்ஞாமாத்ரேணோத்தரமிதமுச்யதே; ந து கயாசித்யுக்த்யேத்யத ஆஹ — ‘ஏததுக்தமிதி’. விநியோகபரிதக்த்வஂ விநியோஜகவாக்யபரிதக்த்வேந க்ராஹ்யம். விநியோகாத் பரிதக்த்வேந ஜ்யோதிஷ்டோமாதிஷு பாபக்ஷயாதிநாநாபலத்வஂ ஸித்தம்.’பரிஹ்ரியதே’ — விருத்தபலத்வசோத்யமிதி ஷேஷஃ. நநு “தமேவஂ வித்வாநமரித இஹ பவதி. நாந்யஃ பந்தாஃ” [யஜுஸ்ஸஂ.31.18+தை.ஆ.3.1.3+த்ரி.ம.நா.4.3+சித்த்யு.12.7+13.1+மஹாநா.3] இதி நியமநாத்வேதநமேவ மோக்ஷஸாதநதயா விதீயதே; கர்ம து வ்யவச்சித்யதே; அதஃ கதஂ மோக்ஷாதிகாரே விநியோகோக்திஃ தத்ராஹ — ‘மோக்ஷவிநியோகஷ்சேதி’.’அஸிநா ஜிகாஂஸதி; அஷ்வேந ஜிகமிஷதி’ இத்யாதிஷ்விவார்தஸ்வபாவாதிஹாபீஷ்யமாணதாத்வர்தகரணதயாந்வயஃ. அதோ வேதநோத்பத்தித்வாரேண பரம்பரயா ஸாதநத்வாந்மோக்ஷவிநியோகஃ. அவ்யவஹிதஸாதநவிவக்ஷயா து “நாந்யஃ பந்தாஃ” [ஷ்வேதா.3.8+6.15+நா.ப.9.1+த்ரி.ம.நா.4.3மஹாநா.3+சித்த்யு.12.7] இத்யாதிபிர்நிஷேத இதி பாவஃ. ஏவஂ பரிப்ரஷ்நாபிப்ரேதமந்யதாபி ப்ரதிவக்துமுபக்ரமத இத்யபிப்ராயேண ஸங்கத்யர்தமுக்தமஂஷஂ நிகமநச்சாயயாநுவததி — ‘ததேவமிதி’.’தத்’ — ஸ்வரூபத்யாகாதேஸ்தாமஸத்வாதித்யர்தஃ.’ஏவஂ’ வர்ணாஷ்ரமாதிநியதஸ்ய துஸ்த்யஜத்வப்ரகாரேணேத்யர்தஃ. அஸ்மிந்நேவ ஷ்லோகே’பவத்யத்யாகிநாஂ ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ இதி த்யாகாபாவவிபர்யயஸ்ய ஸந்ந்யாஸஷப்தேநாநுகதநாத்த்யாகஸந்ந்யாஸபரிதக்த்வஷங்கா ச பரிஹரிதேத்யாஹ — ‘ஸ ஏவ ச த்யாக’ இதி.

————————

கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது.
அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :

13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்,
ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு,
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன,
மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.

எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன.
அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.

சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு.
ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது.
வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு
கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது.
அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது.
ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு
வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை
அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

৷৷18.13৷৷ஸஂக்யா புத்திஃ? ஸாஂக்யே கரிதாந்தே யதாவஸ்தித தத்த்வ விஷயயா வைதிக்யா புத்த்யா அநு ஸஂஹிதே நிர்ணயே ஸர்வ கர்மணாஂ ஸித்தயே — உத்பத்தயே ப்ரோக்தாநி பஞ்ச ஏதாநி காரணாநி நிபோத மே; மம ஸகாஷாத் அநு ஸஂதத்ஸ்வ.(எல்லா கர்மங்களின்  உத்பத்திக்கே இவை தேவை )

வைதிகீ ஹி புத்திஃ ஷரீர இந்த்ரிய ப்ராண ஜீவாத்ம உபகரணஂ பரமாத்மாநம் ஏவ கர்தாரம் அவதாரயதி.’ய ஆத்மநி திஷ்டந்நாத்நம் அந்தரோ யமாத்மா ந வேத? யஸ்யாத்மா ஷரீரம்? ய ஆத்மாநம் அந்தரோ யமயதி? ஸ த ஆத்மாந்தர்யாம்யமரிதஃ (ஷ0 ப0 14.5.30)’அந்தஃப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா’ (தை0 ஆ0 3.11.3) இத்யாதிஷு.

தத் இதம் ஆஹ —

৷৷18.13৷৷’அநிஷ்டமிஷ்டம்’ [18.12] இத்யாதேரநந்தரஂ காரணபஞ்சகோக்தேஃ கா ஸங்கதிஃ இத்யத்ராஹ — ‘இதாநீமிதி’. ஸாக்ஷாத்ப்ரஷ்நவிஷயே ப்ரத்யுக்தே ஸதீத்யர்தஃ.’பகவதி புருஷோத்தம’ இத்யுமாப்யாஂ ப்ராகுக்தப்ரகாரேண ஸர்வாந்தர்யாமிணஃ தத்கதத்வதத்ப்ரயுக்ததோஷாபாவக்யாபநம்.’ப்ரகாரமாஹேத்யநேநாதரிதீயாத்யாயாதநுக்ராந்தஸ்யாகர்தரித்வாநுஸந்தாநஸ்யாத்ரைவ’ ஸஹேதுகயதாவஸ்திதஸ்வரூபஷோதநமிதி தர்ஷிதம். த்ரிஷு த்யாகேஷு ப்ரக்ராந்தேஷு அந்யதமஸ்ய ப்ரகாரஷோதநமிதி ஸங்கதிஃ. த்ரிவிதேபி த்யாகே ஸாத்த்விகதயா ப்ரக்ராந்தே கிமிதி கர்தரித்வத்யாகப்ரகாரமாத்ரோபபாதநஂ இத்யத்ராஹ — ‘தத ஏவேதி’. இதிஷப்தோத்ர ஹேத்வர்தஃ. றத்விகாதிஷு கர்தரித்வேபி யஜமாநாதேஃ கர்மணி பலே ச மமதா தரிஷ்யதே; தத்வதஸ்யாபி கிஂ ந ஸ்யாத் அதஃ கர்தரித்வத்யாகமாத்ராத்கதஂ கர்மணி பலே ச மமதாபுத்திநிவரித்திஃ இத்யத்ராஹ — ‘பரமபுருஷோ ஹீதி’.’ஹீதி’ ப்ரமாணப்ரஸித்திஸூசநம்.’த்வஂ ந்யஞ்சத்பிருதஞ்சத்பிஃ கர்மஸூத்ரோபபாதிதைஃ. ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபிஃ”பாலஃ க்ரீடநகைரிவ’ [ம.பா.3.12.54+3.30.37]’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யாதிப்ரஸித்தமாஹ — ‘ஸ்வகீயேநேத்யாதிநா’. கரணாதிபாதிபோ ஹி பரமபுருஷஃ ஷ்ரூயதே; அதஃ கரணாநாஂ ஜீவஷேஷத்வதஷாயாமபி கஜதுரகாத்யலங்காரேஷு ராஜ்ஞ இவ பரமபுருஷஸ்ய ஷேஷித்வஂ ந நிவர்தத இத்யபிப்ராயேணாஹ’ஸ்வகீயைஷ்ச கரணகலேவரப்ராணைரிதி’. ஸங்கோசகாபாவாத்தரிஷ்டாதரிஷ்டபலப்ரதாநாதிகமபி தஸ்ய லீலேத்யாஹ’ஸ்வலீலாப்ரயோஜநாயேதி’.’லோகவத்து லீலாகைவல்யம்’ [ப்ர.ஸூ.2.1.33] இத்யாதிபிரிதஂ மீமாஂஸிதமிதி பாவஃ. லீலாதிப்ரயோஜநாயேதி பாடே து ஆதிஷப்தேந காருண்யாதிமூலபக்தரக்ஷணாதிக்ரஹணம். நநு ஷாஸ்த்ரீயஸ்ய கர்மணஃ பரமபுருஷஸமாராதநதயைவ விதாநாத்பலபர்யந்தஸ்ய தஸ்ய ததீயதா யுக்தா; லௌகிகஂ து கர்ம ந ததா ஷிஷ்டஂ? நாபி ததாத்யக்ஷஂ? க்ஷுந்நிவரித்த்யாதேஃ பலஸ்ய ஜீவகாமித்வேநைவோபலம்பாத்? அதோ லௌகிகாநாஂ பலாநாஂ ஜீவஷேஷத்வே தத்ஸாதநஸ்யாபி கர்மணஸ்ததர்ததா யுக்தா; தஸ்மாத்’ஸித்தயே ஸர்வகர்மணாம்’ இத்யாதிபிஃ ஸர்வவிஷயஸங்கத்யாகாத்யுபபாதநமஷக்யமிதி தத்ராஹ — ‘அத இதி’.’பரமபுருஷஸ்யைவேதி’ — ஷஷ்டீ ஸ்வஸ்வாமிபாவாக்யஸம்பந்தவிஷேஷவிஷ்ராந்தா. யதா பஞ்ஜரஷகுந்தபோஷணாதிகஂ தத்ஸுகாதிகஂ ச ஸார்வபௌமஸ்ய ஷேஷபூதஂ? ததாத்ராபீதி பாவஃ.,’ஸாங்க்யே கரிதாந்தே’ இதி ந ஸாங்க்யஸித்தாந்தோ விவக்ஷிதஃ? தத்ரேஷ்வராநப்யுபகமாத்; கரணாதிரிக்தஸ்ய கர்தரித்வாநப்யுபகமேந’கர்தா கரணஂ பரிதக்விதம்’ இதி கர்தரிகரணவிபாகோக்த்யஸம்பவாத்? தஸ்ய வேதவிருத்தத்வே தத்த்வோபதேஷாய ததுபந்யாஸாயோகாத்? அவிருத்தத்வேபி வேதமூலத்வஸ்யைவாங்கீகர்தவ்யத்வே வேத ஏவ விஷ்ரமாத்? அர்தௌசித்யாய ச ரூடிபரித்யாகேந யௌகிகார்தாவலம்பநஸ்ய ஸர்வஸம்மதேஃ; அதோ வேதேஷ்வேவ யதாவஸ்திததத்த்வநிர்ணயாய ப்ரவரித்தோ பாகஃ ஸாங்க்யகரிதாந்தஷப்தேந விவக்ஷித இத்யபிப்ராயேண நிர்வக்தி — ‘ஸங்க்யா புத்திரிதி’. ப்ரகரணாநுரோதேந புத்திஂ விஷிநஷ்டி’யதாவஸ்திதேதி’. யதிஹ’ஷங்க்தரேணோக்தஂ”பதார்தாஃ ஸங்க்யாயந்தே யஸ்மிந் ஷாஸ்த்ரே தத்ஸாங்க்யஂ வேதாந்தஃ? ஸ ஏவ கரிதாந்தஃ? கரிதஸ்ய கர்மணோஸ்மிந்நந்தஃ’ இதி; ததஸத்? வேதாந்தேஷ்வபி கர்மாந்வயஸ்ய ஸ்தாபிதத்வாத்? ரூடிபரித்யாகே சாவஷ்யம்பாவிந்யுசிததமயோகஸ்யைவ க்ரஹீதுஂ யுக்தத்வாத். அந்தஷப்தோ நிஷ்சயபரதயா நைகண்டுகைஃ படிதஃ; ஸ ஏவ புத்திபூர்வஸம்பாதிததயா கரிதஷப்தேந விஷேஷ்யத இத்யபிப்ராயேண’அநுஸஂஹிதே நிர்ணய’ இத்யுக்தம். யத்வா நிர்ணயஷப்தோத்ர நிர்ணீதவஸ்துபரஃ; கரிதாந்தஷப்தஸ்ய ஸித்தாந்தபர்யாயஸ்ய தத்ததப்யுபகதார்தரூடத்வாத். அத ஏவ ஹி — ‘அநுஸஂஹித’ இதி விஷேஷிதம். ந ஹி நிர்ணய ஏவாநுஸந்தாதவ்யஃ. அதவா ப்ராசாஂ நிர்ணயஃ பரைரநுஸஂஹித இதி பாவஃ. நிர்ணாயகஷப்தபரோ வாத்ர நிர்ணயஷப்தஃ. ததாநீஂ’ப்ரோக்தாநி’ இத்யநேந ஸமந்வயஃ. ஸித்திஷப்தேந பலபர்யந்தத்வாதிகமிஹாவிவக்ஷிதம்;’யத்கர்ம ப்ராரபதே? ৷৷. ৷৷. பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இதி கர்மஸ்வரூபோபஸம்பத்தேரேவாநந்தரோக்தேரித்யபிப்ராயேணாஹ — ‘உத்பத்தய’ இதி.’மம காரணாநி’ இத்யஸம்பவாந்மதீயாநி காரணாநீத்யுக்தேரிஹ தைவஷப்தநிர்திஷ்டஸ்ய ஸ்வஸ்ய ஸ்வகீயத்வாபாவேநாநந்வயாதுசிதமந்வயமாஹ — ‘மம ஸகாஷாதநுஸந்தத்ஸ்வேதி’. வக்ஷ்யமாணாநாஂ பஞ்சாநாஂ யதாதர்ஷநஂ விவிக்தே ஹேதுபாவே மநஸ்ஸமாதாநவிதாநார்தமிதமிதி பாவஃ. ஷ஀ட்விஂஷகமநப்யுபகச்சதாஂ பஞ்சவிஂஷகஂ ச கர்தரித்வாரோபமாத்ராதிகரணஂ ப்ரதிபாதயதாஂ ப்ரகரணமிதஂ விருத்தமித்யபிப்ராயேண யௌகிகார்தபரத்வமுபபாதயதி — ‘வைதிகீ ஹீதி’. ஷரீரேந்த்ரியப்ராணஜீவாத்மோபகரணமிதி பஹுவ்ரீஹிஃ. உபகரணஂ விவக்ஷிதகார்யார்ததயோபாத்தஃ பரிகரஃ.

——————–

எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :

14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.

ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள்.
இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம்.
மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது.
விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது.
தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான்.
சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன.
அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம்.
அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல்.
ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு
அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது.
ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன.
பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன.
பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது.
அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.

தத் இதம் ஆஹ —

৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )

பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)

இதி.ஏதத் உக்தஂ பவதி — (இத்தால் சொல்லிற்று ஆயிற்று) -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததா ஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வ புத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்)பல ப்ரவரித்திஷு பஹு புருஷ ஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.

৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.

‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.

விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.

கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.

ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

———————-

15. ஸரீரவாங்‌மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு
ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார்
அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது.
களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று
அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.

கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது.
செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது.
இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள்.
ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன.
இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.

உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம்.
மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும்
தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.

৷৷18.15৷৷ந்யாய்யே ஷாஸ்த்ரஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹாபூதஸஂகாதரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ரார்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ரோபபாதிதம். கரணஂ ச பரிதக்விதம் வாக்பாணிபாதாதிபஞ்சகஂ ஸமநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக்விதஂ கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத்வரித்திவாசிநா? ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேதுகலாபே தைவஂ பஞ்சமம் பரமாத்மா அந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுஃ இதி அர்தஃ உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர்விஜ்ஞாநமபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வபூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.

பரமாத்மாயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச்ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்மாயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதிநிஷேதஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ரகாரேண ஏவ பரிஹரிதம்.’கரிதப்ரயத்நாபேக்ஷஸ்து விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42) இதி.ஏதத் உக்தஂ பவதி — பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரணகலேவராதிபிஃ ததாஹிதஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததாஹிதஷக்திஃ ஸந் கர்மநிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத்யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதிதாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்திஹேதுத்வம் அஸ்தி. யதா குருதரஷிலாமஹீருஹாதிசலநாதிபலப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதிநிஷேதபாக்த்வஂ ச இதி.

৷৷ 18.15

৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.’அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

—————-

இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :

16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி:

து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில்,
ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை,
தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை,
கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக்
குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம்.
மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன.
வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி.
பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல.
அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.

எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன.
மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது
தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது.
எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது.
ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா.
அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே.
ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது.
ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது.
அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது
பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை.
ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.

৷৷18.16৷৷ஏவஂ வஸ்துதஃ பரமாத்ம அநுமதி பூர்வகே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஸதி தத்ர கர்மணி கேவலம் ஆத்மாநம் ஏவ கர்தாரஂ யஃ பஷ்யதி? ஸ துர் மதிஃ விபரீத மதிஃ? அகரித புத்தித்வாத் — அநிஷ்பந்ந யதாவஸ்தித வஸ்து புத்தித்வாத் -ந பஷ்யதி ந யதாவஸ்திதஂ கர்தாரஂ பஷ்யதி.

(ஸூஷ்மமான ஆத்மா எவ்வாறு புலன்களுடன் சேர்ந்து வியாபாரிக்க முடியும் என்னில்
தாருண் யக்நிர் யதா தைலஂ திலே தத்வத் புமாநபி. ப்ரதாநே வஸ்திதோ வ்யாபீ சேதநாத்மாத்ம வேதநஃ’ இத்யாதிபிஃ-ஸ்ரீ விஷ்ணு புராணம்
தர்மபூத ஞான த்வாரா வியாபிக்கிறான் என்றபடி)

৷৷18.16৷৷யத்யேவஂ பஞ்சாநாஂ ஹேதுத்வேப்யாத்மைவ கர்தா? தர்ஹ்யகர்தரித்வாநுஸந்தாநஂ ப்ராந்திரூபமேவ ஸ்யாத்; விதிநிஷேதாதிஸஂரக்ஷணாய கர்தரித்வஂ தாவத்துஸ்த்யஜம்; ந ச ஸஹகாரிநிரபேக்ஷகர்தரித்வஂ ப்ரதிஷித்யத இதி வாச்யஂ; தஸ்ய ப்ரஸங்காபாவேந ப்ரதிஷேதாயோகாத். ந ஹி கஷ்சித்தேஹேந்த்ரியதண்டசக்ராதிநிரபேக்ஷஃ கரோமீதி மந்யத இதி ஷங்காயாஂ நியந்த்ரந்தரநிரபேக்ஷஸ்வாபாவிககர்தரித்வப்ரமஸ்ய தேஹாத்யாத்மப்ரமவதாஂ சாநேகாதீநே கர்மண்யநந்யாதீநத்வாபிமாநஸ்ய நிவாரணமகர்தரித்வாநுஸந்தாநமித்யுச்யதே’தத்ரைவம்’ இதி ஷ்லோகேந.’பரமாத்மாநுமதிபூர்வக’ இதி ஸர்வநிர்வாஹகப்ரதாநஹேதுக்ரஹஃ.’ஆத்மாநமிதி’ ஸ்வாத்மாநமித்யர்தஃ. அத ஏவ ச கர்தரிஷப்தோத்ர ந பூர்வவத்தர்மிஸமர்பகஃ; இதரதா கர்மப்ராரம்பஹேதுமித்யத்யாஹாரப்ரஸங்காச்சேத்யபிப்ராயேணாஹ — ‘கேவலமாத்மாநமேவ கர்தாரமிதி’. துஷப்தோத்ராவதாரணார்தோ வ்யாக்யாதஃ. ஷங்காநிவர்தகத்வேபி வா கேவலஷப்தோக்தவ்யக்த்யர்த ஏவகாரஃ.நந்வத்ர கேவலஷப்தேந ஸ்வாபாவிககர்தரித்வாநுவாதமாத்ரஂ ஸ்யாதிதி சேத் ந சதுர்பிஃ ஸம்பூயகரணே ப்ரஸ்துதே ததவபிஜ்ஞநிந்தாயாஂ தத்வ்யவச்சேதார்தத்வஸ்வாரஸ்யாத்தஸ்யாபேக்ஷிதத்வாச்ச. தத்ர யத்பரைருக்தம் — ‘ஆத்மநோவிக்ரியஸ்வபாவத்வேநாதிஷ்டாநாதிபிஃ ஸஂஹதத்வாநுபபத்தேஃ விக்ரியாவதோ ஹ்யந்யைஃ ஸஂஹநநஂ? ஸஂஹத்ய வா கர்தரித்வஂ ஸ்யாத்; நத்வவிக்ரியஸ்யாத்மநஃ கேநசித்ஸஂஹநநமஸ்தீதி ந ஸம்பூயகாரித்வமுபபத்யதே’ இதி; ததஸத் ஸ்வரூபோத்பத்த்யாதிவிகாரரஹிதஸ்யாத்மநஃ’

தாருண் யக்நிர் யதா தைலஂ திலே தத்வத் புமாநபி. ப்ரதாநே வஸ்திதோ வ்யாபீ சேதநாத்மாத்ம வேதநஃ’ இத்யாதிபிஃ

ஷாஸ்த்ரைர்த்ரவ்யாந்தரேண ஸஂஹநநஸ்ய ஜ்ஞாநசிகீர்ஷாத்யாதாரதயா ஸஹகாரிபிஃ ஸம்பூயகர்தரித்வஸ்ய ச ஸ்தாபநாத். அந்யதாத்ராபி’பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இதி கர்துரபி ஹேதுத்வேந பரிகணநஸ்ய பங்கப்ரஸங்காதிதி.’ஸ துர்மதிஃ’ இத்யேததுக்தஸ்யைவாநுவாதஃ; அந்யதா பௌநருக்த்யாதித்யபிப்ராயேணாஹ — ‘விபரீதமதிரிதி’. அகரிதபுத்திரிஹாத்யாத்மஷாஸ்த்ரைரநிஷ்பாதிதபுத்திஃ; ததாஹ — ‘அநிஷ்பந்நேதி’.’யஃ பஷ்யதி? ந ஸ பஷ்யதி’ இதி வ்யாகாதாத் ஸதபி தர்ஷநமயதாபாவேநாஸங்கல்பதயா நிந்த்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந யதாவஸ்திதமிதி’. பாஹ்யேஷு யதாவஸ்திதிதர்ஷநஸம்பவாத்ப்ரஹரிதவிஷயே நியச்சதி’கர்தாரமிதி’. ஸ்வபாவார்தஷாஸ்த்ரப்ராப்தவ்யதிரிக்தேஷு ந ப்ரவர்தேத; அவஷ்யகர்தவ்யேஷு ஸ்வபாவாதிப்ராப்தேஷ்வபி ஸ்வஸ்மிந்நதிஷ்டாநாதிஷு ச யதாஂஷஂ கர்மபந்தநமஸ்ய ப்ரவர்தேதேதி ஹரிதயம்.

—————

17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே

யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ,
யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன்,
ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்,
ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.

நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன்
இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.

தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான்.
நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான்.
மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது.
பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை.
வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான்.
ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன.
பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து
எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.

கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல.
இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.

ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று.
அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில்
உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை.
கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.

புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும்
செய்து வருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷி மாத்திரமாகத் தானிருக்கிறானென்றும் சாங்கிய தர்சனம் கூறுகின்றது.
மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.

৷৷18.17৷৷பரம புருஷ கர்தரித்வ அநுஸந்தாநேந யஸ்ய பாவஃ கர்தரித்வ விஷேஷ விஷயோ மநோ வரித்தி விஷேஷோ ந அஹஂகரிதோ ந அஹம் அபிமாந கரிதஃ’அஹஂ கரோமி’ இதி ஜ்ஞாநஂ யஸ்ய ந வித்யதே இத்யர்தஃ. புத்திஃ யஸ்ய ந லிப்யதே? அஸ்மிந் கர்மணி மம கர்தரித்வ  அபாவாத் ஏதத் பலஂ ந மயா ஸஂபத்யதே? ந ச மதீயம் இதஂ கர்ம இதி யஸ்ய புத்திஃ ஜாயதே இத்யர்தஃ. ஸ இமாந் லோகாந் யுத்தே ஹத்வா அபி தாந் ந நிஹந்தி (தேசத்துக்காக செய்தால் போற்றுகிறோமே-ஷத்ரியன் தர்ம யுத்தத்தில் யாரைக் கொன்றாலும் குற்றம் வாராது என்றபடி -பீஷ்மர் ஷத்ரியன் அல்லவே -அதனாலே அவருக்கு குற்றம் -முன்பே சொன்னான் -துரியோதனனுக்கு குற்றம் வரும் -அது அதர்ம யுத்தம் -நான் ராஜ்யத்துக்காக பண்ணுகிறேன் என்ற புத்தி உள்ளவன் அன்றோ -அனைத்து பாபங்களும் அவனுக்குத் தீண்டும் – )ந கேவலஂ பீஷ்மாதீந் இத்யர்தஃ. ததஃ தேந யுத்தாக்யேந கர்மணா ந நிபத்யதே? தத் பலஂ ந அநுபவதி இத்யர்தஃ.(தியாக விஷய ப்ரகரணம் இத்துடன் முடிவுற்றது )

ஸர்வம் இதம் அகர்தரித்வாத்  யநுஸந்தாநஂ ஸத்த்வ குண வரித்த்யா ஏவ பவதி இதி ஸத்த்வஸ்ய உபாதேயதா ஜ்ஞாபநாய கர்மணி ஸத்த்வாதி குண கரிதஂ வைஷம்யஂ ப்ரபஞ்சயிஷ்யந் கர்ம சோதநா ப்ரகாரஂ தாவத் ஆஹ —

৷৷18.17৷৷துர்மதிப்ரஸங்கே கஸ்தர்ஹி ஸுமதிஃ இதி புபுத்ஸாயாமேவஂவிதாகர்தரித்வாநுஸந்தாநஸ்ய ப்ரயோஜநமுச்யதே — ‘யஸ்யேதி’ ஷ்லோகேந. பாவோத்ராபிப்ராயஃ அர்தாந்தராநந்வயாத். ஸ ச ப்ரகரணாத் ஸமபிவ்யாஹாராச்ச விஷேஷ்யதே — ‘கர்தரித்வவிஷயோ மநோவரித்திவிஷேஷ’ இதி.’அஹஂகரிதஃ’ இத்யத்ர கர்த்ரர்தத்வாநந்வயாத்கர்மார்தத்வேபி மநோவரித்திவிஷேஷஸ்யாஹமபிமாநவிஷயத்வாயோகாத்தந்மூலத்வமாத்ரமிஹ விவக்ஷிதமித்யாஹ’அஹமபிமாநகரித’ இதி. அத்ராஹஂஷப்தேநாஹமபிமாநலக்ஷணா வா. யத்வா’அஹஂகரிதஃ’ இதி’புக்தா ப்ராஹ்மணாஃ’ இதிவத்கர்தரி க்தஃ; அஹமபிமாநகரித இதி பலிதோக்திஃ. நநு ஆத்மநோஹமர்தத்வாத்கதமஹமபிமாநவர்ஜநம் தத்ராஹ — ‘அஹஂ கரோமீதி’. ஸாவதாரணமிதஂ யோஜ்யம்? அந்யதா ஸாக்ஷாத்கர்தரித்வவிரோதாத். ஏவஂ கர்தரித்வத்யாகே கண்டோக்தே பரிஷேஷாத்தேநார்தஸித்தஃ பலஸங்கத்யாகோ’புத்திர்யஸ்ய ந லிப்யதே’ இத்யநூத்யத இத்யாஹ’அஸ்மிந்நிதி’. “நாவிரதோ துஷ்சரிதாத்” [கடோ.1.2.23] இத்யாதிப்ரதிஷித்தவைதேதரஹநநவ்யுதாஸாய ஷாஸ்த்ரோபக்ரமாதிஸித்தமநுகரிஷ்யாஹ’யுத்தே ஹத்வாபீதி’. ந ஹந்தி — ஹநநாபிமாநஜந்யாதரிஷ்டவத்தயா தத்பலஸம்பந்தயோக்யஹந்த்ரந்தரவிலக்ஷண இத்யர்தஃ. அந்யதா’ஹத்வாபி ந ஹந்தி’ இதி வ்யாகாதாத்.,யத்து பரைரத்ரோக்தம் — ‘ஆத்மநோ ஹநநகர்தரித்வாபாவாத்தத்கார்யணாதர்மபலேந ந ஸம்பத்யத இத்யுச்யதே’ இதி; ததஸத்?’யஸ்ய நாஹஂகரிதோ பாவஃ’ இதி விஷேஷணவையர்த்யாத்; அவிதுஷோந்யஸ்யாபி தந்மதே கர்தரித்வாபாவாத்தஸ்மிந்நபி ச கர்மபலலேபஸ்ய மித்யாத்வாப்யுபகமாத்.’கதஂ பீஷ்மம்’ [2.4] இத்யாதேஃ ப்ரஷ்நஸ்ய கேமுத்யேந ப்ரதிக்ஷேபார்தம்’இமா ఁல்லோகாந்’ இதி ஸாமாந்யேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந கேவலமிதி’. அத்ர’ந ஹந்தி’ இத்யஸ்ய’ந நிபத்யதே’ இதி வ்யாக்யாநமிதி யோஜநா ஸமீசீநே கத்யந்தரே ஸம்பவதி ந யுக்தா. அதஃ’யஸ்ய நாஹஂகரிதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே’ இத்யநயோர்ஹேதுஸாத்யபாவேநாவஸ்திதயோஃ பலமபி ஹேதுஸாத்யபாவேந’ந ஹந்தி ந நிபத்யதே’ இத்யநூத்யத இத்யாஹ — ‘தத’ இதி.’ந நிபத்யதே’ இத்யநேந கர்மஸாத்யமோக்ஷவிரோதிபலாநந்வயோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘தத்பலஂ நாநுபவதீதி’. ஏதேந “க்ரியாகாலே நாஹங்காரஃ க்ரியோத்தரகாலே மயா கரிதமிதி ப்ரதிஸந்தாநாலேபஃ?’ந ஹந்தி ந நிபத்யதே’ இத்யுபாப்யாமைஹிகாமுஷ்மிகப்ரத்யவாயப்ரதிஷேதஃ” இதி யோஜநாந்தரஂ நிரஸ்தம்.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினேழாம் அத்தியாயம் — ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்–17-14-17-28–

February 11, 2021

14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே

தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல்,
ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை,
ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை,
பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித்
தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம்.
அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய
மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.

பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய
பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள்.
மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம்.
நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம்
ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது.
சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன.
போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம்.
தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால்
இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.

அத தபஸோ குணதஃ த்ரை வித்யஂ வக்துஂ தஸ்ய ஷரீர வாங் மநோபிஃ நிஷ் பாத்யதயா தத் ஸ்வரூப பேதஂ தாவத் ஆஹ –(தபஸ் -ஆறு ஸ்லோகங்கள் –மானஸ   வாசக காயிக இவ்வாறு மூன்றும் -சாத்விக ராஜஸ தாமஸ இவ்வாறு மூன்றும் )-இதில் காயிகம் –

৷৷17.14৷৷தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞாநாஂ பூஜநம்? -ஷௌசஂ தீர்த ஸ்நாநாதிகம்? -ஆர்ஜவஂ யதா வாங் மநஃ ஷாரீர வரித்தம் -ப்ரஹ்மசர்யஂ யோஷித்ஸு போக்யதா புத்தி யுக்த ஈக்ஷணாதி ரஹிதத்வம்? -அஹிஂஸா அப்ராணி பீடா? ஏதத் ஷாரீரஂ தப உச்யதே.

৷৷17.14৷৷ஆஹாராதீநாஂ ஸாத்த்விகத்வாதித்ரைவித்யே ப்ரக்ராந்தே தபஸஃ கரணபேதேந த்ரைவித்யோக்திஃ கிமர்தா இத்யத்ராஹ — ‘அதேதி’. தேவத்விஜகுருப்ராஜ்ஞாநாஂ ஸந்நிதௌ தத்ததுசிதஃ ஷாஸ்த்ரோதித ஆசார இஹ பூஜநமித்யுச்யதே. யதா — ‘ப்ரஷஸ்தமங்கல்யதேவாயதநசதுஷ்பதாதிப்ரதக்ஷிணமாவர்தேத மநஸா வா தத்ஸமக்ரம்’ இத்யாதி. ததா — ‘ப்ரதக்ஷிணஂ வ்ரஜேத்விப்ராந் காமஷ்வத்தஂ ஹுதாஷநம்’ இதி.’ஆஸநேப்யஃ ஸமுத்தஸ்துர்மாநயந்தஃ புரோஹிதம்”உர்த்வஂ ப்ராணா ஹ்யுத்க்ராமந்தி யூநஃ ஸ்தவிர ஆகதே (ஆயதி). அப்யு(ப்ரத்யு)த்தாநாபிவாதாப்யாஂ புநஸ்தாந்ப்ரதிபத்யதே’ [மநுஃ2.120] இத்யாதிநா. ததா — ‘ந ஹாயநைர்ந பலிதைர்ந வித்தைர்ந (வித்தேந ந) ச பந்துபிஃ. றஷயஷ்சக்ரிரே தர்மஂ யோநூசாநஃ ஸ நோ மஹாந்’ [மநுஃ2.154] இதி. ஷுத்திரூபஸ்ய பலபூதஸ்ய ஷௌசஸ்ய தபஸ்த்வேந விபஜநாயோகாத்தத்தேதுமாஹ’தீர்தஸ்நாநாதிகமிதி’. ஆர்ஜவஸ்ய ஷாரீரதபஸ்த்வேந வ்யபதேஷார்தஂ வாங்மநஃகாயாநாமைகரூப்யஂ ஷரீரப்ரதாநதயா வ்யபதிஷதி’யதா வாங்மநஷ்ஷாரீரவரித்தமிதி’.’ப்ரஹ்மசர்யஂ ச யோஷித்ஸு போக்யதாபுத்திவர்ஜநம்’ இத்யாத்யநுஸாரேணாஹ — ‘யோஷித்ஸ்விதி’. தாதரிஷப்ரேக்ஷணாதிகமபி’ஸ்மரணஂ கீர்தநஂ கேலிஃ ப்ரேக்ஷணஂ குஹ்யபாஷணம்’ [த.ஸ்மரி.7.31] இத்யாதிநா மைதுநத்வேந விபஜ்ய ஸ்மரந்தீதி ப்ராகேவ தர்ஷிதம். அத்ராபீக்ஷணாதிரஹிதத்வ க்ரஹணஂ ப்ரஹ்மசர்யஸ்ய ஷாரீரதபஸ்த்வஜ்ஞாபநாய.

——————

15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே

யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது,
ப்ரிய ஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய,
வாக்யம் ச-சொல்லுதல்,
ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி,
வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.

சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல்,
கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.

காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல்.
தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது.
ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும்.
எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.

மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு.
இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது.
கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.

பரத்தினை சாஷாத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன.
இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம்.
அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது.
பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது.
இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.

৷৷17.15৷৷பரேஷாம் அநுத்வேக கரஂ ஸத்யஂ ப்ரிய ஹிதஂ ச யத் வாக்யஂ ஸ்வாத்யா யப்யஸநஂ ச இதி ஏதத் வாங்மயஂ தப உச்யதே.

৷৷17.15৷৷’அநுத்வேககரமித்யாதி’ — புருஷமர்மோத்தட்டநாபரிவாதாதிராஹித்யாதநுத்வேககரத்வம். பயாதேரஹேதுபூதமித்யர்தஃ. ஸத்யஂ யதாதரிஷ்டார்தவிஷயபூதஹிதவாக்யமிதி ப்ராகேவ தர்ஷிதம். [10.4+16.2?7] ப்ரியத்வமத்ர ஸ்வாகததர்மாநுமோதநாதிரூபேண அப்ராப்தவிஷயஸ்துத்யாதிரூபப்ரியவசநஸ்ய நிஷித்தத்வாத்தத்பரிஹாராய ஹிதத்வவசநஂ புருஷார்தபர்யவஸாயீத்யபிஹிதம்.’ஸ்வாத்யாயாப்யஸநம்’ இதி ஜபயஜ்ஞோக்திஃ.

——————–

16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே

மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி,
ஸௌம்யத்வம்-அமைதி,
மௌநம்-மௌனம்,
ஆத்மவிநிக்ரஹ: – தன்னைக் கட்டுதல்,
பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை,
இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.

மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.

சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம்.
சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும்,
ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச்
சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு
வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது.
வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.

৷৷17.16৷৷மநஃப்ரஸாதஃ — மநஸஃ க்ரோதாதி ரஹிதத்வம்? ஸௌம்யத்வஂ மநஸஃ பரேஷாம் அப்யுதய ப்ராவண்யம்? (என்னைத் தீ மனம் கெடுத்தாய் மருவித் தொழும் மனமே தந்தாய் -)மௌநஂ மநஸா வாக் ப்ரவரித்தி நியமநம்? ஆத்ம விநிக்ரஹஃ — மநோ வரித்தேஃ த்யேய விஷயே அவஸ்தாபநம்? பாவஸஂ ஷுத்திஃ ஆத்ம வ்யதிரிக்த விஷய சிந்தா ரஹிதத்வம்? ஏதத் மாநஸஂ தபஃ.

৷৷17.16৷৷மநஃப்ரஸாதஸௌம்யத்வஷப்தாப்யாஂ பரேஷ்வஹிதாபிப்ராயரூபகாலுஷ்யநிவரித்திஃ? ஹிதாபிப்ராயயோகஷ்ச விவக்ஷித இத்யாஹ’மநஸஃ க்ரோதாதிரஹிதத்வமித்யாதிநா’.’வஸதி ஹரிதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமாஞ்ஜகதோஸ்ய ஸௌம்யரூபஃ’ [வி.பு.3.7.24] இத்யாதிநோக்தமாகாரஸௌம்யத்வமபி மநஸ்ஸௌம்யத்வபலமேவ. அத ஏவ ஹி தேந மநஸஃ ஸௌம்யத்வமுந்நீயதே. இஹ ச மாநஸதபோவிபஜநாந்மநஸ இதி புத்த்யா நிஷ்கரிஷ்யாநுஷஞ்ஜிதம். மௌநஸ்யாபி மாநஸதபஸ்த்வாய மநோவ்யாபாரப்ராதாந்யமாஹ’மநஸா வாக்ப்ரவரித்திநியமநமிதி’.’ஆத்மவிநிக்ரஹஃ’ இதி அப்ராப்தவிஷயவிநிவாரணஂ ஹி ப்ராப்தவிஷயைகாக்ர்யார்தமித்யபிப்ராயேணாஹ’த்யேயவிஷயேவஸ்தாபநமிதி’.’பாவஸஂஷுத்திஃ’ இத்யஸ்ய மநஃப்ரஸாதாதிபிஃ புநருக்திபரிஹாராயாஹ’ஆத்மவ்யதிரிக்தவிஷயசிந்தாரஹிதத்வமிதி’. பாவஷப்தோத்ராபிப்ராயார்தஃ. தஸ்ய ஸஂஷுத்திஃ ஸமஸ்தேதரவர்ஜநம். ஏதேந பரதாராதிஷு மநஸோ ரஹஸ்யபி ப்ரவரித்திர்தூரதோ நிரஸ்தா. அத்ர தபஸஃ ஷாரீரத்வாதிவிபாகஃ? தத்ர ஷரீராதிப்ராதாந்யாத்; அந்யதா’பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இத்யநேந விரோதாத்.

——————

17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே

அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால்,
பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன்,
தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம்,
ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன்
செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.

பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை
நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும்
அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள்.
அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை.
முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.

৷৷17.17৷৷அபல ஆகாங்க்ஷிபிஃ பல ஆகாங்க்ஷா ரஹிதைஃ. யுக்தைஃ பரம புருஷாராதந ரூபம் இதம் இதி சிந்தா யுக்தைஃ நரைஃ பரயா ஷ்ரத்தயா யத் த்ரிவிதஂ தபஃ காய வாங் மநோபிஃ தப்தஂ தத் ஸாத்த்விகஂ பரிசக்ஷதே.(விதி பூர்வகமாக செய்வதை விட ராக ப்ராப்தமாகச் செய்யும் பொழுது ஸ்ரத்தை மிக்கு இருக்குமே )

৷৷17.17৷৷ஏவஂ ஷாரீரவாசிகமாநஸரூபேண த்ரிவிதஸ்யாபி தபஸஃ ஸத்த்வாதிகுணபேதேந த்ரைவித்யமுச்யதே’ஷ்ரத்தயா’ இத்யாதிநா. பலாகாங்க்ஷாநிஷேதேந ஸஹ படிதோ யுக்தஷப்தஸ்ததுபயுக்தபகவத்ப்ரீதிவிலக்ஷணபலாந்தரத்யாநபர இத்யபிப்ராயேணாஹ’பரமபுருஷாராதநேதி’. புநருக்திஷங்காபரிஹாராய ஸத்காரமாநபூஜாஷப்தாநாஂ க்ரமாந்மநோவாக்காயநிஷ்பாத்யஸம்பாவநாபரத்வோக்திஃ.

————-

18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்

யத் தப:-எந்த தவம்,
ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்),
தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய,
இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும்,
தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.

மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய
தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ
இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள்.
தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்;
வீழ்ந்து வணங்க வேண்டும் – இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர்.
பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும்.
செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.

৷৷17.18৷৷மநஸா ஆதரஃ ஸத்காரஃ? வாசா ப்ரஷஂஸா மாநம்? ஷாரீரோ நமஸ்காராதிஃ பூஜா. பல அபிஸந்தி பூர்வகஂ ஸத்காராத் யர்தஂ (மானஸ காயிக வாசக மாக இம்மூன்றும் எதிர் பார்த்து -க்யாதி லாப பூஜா அபேக்ஷையுடன் )ச தம்பேந ஹேதுநா (பூஜார்த்தம் இப்பொழுது செய்வதை புகழுவதற்காக -டம்பம் பின்பு புகழ்ந்து பேச என்ற வாசி-இங்கு ராஷசத்தில் டம்பம் கர்ப்பத்தில் இருக்கும் -தாமஸத்தில் வியக்தமாய் இருக்கும் )யத் தபஃ க்ரியதே தத் இஹ ராஜஸஂ ப்ரோக்தம்; ஸ்வர்காதி பல ஸாதநத்வேந அஸ்திரத்வாத் சலம் அத்ருவம்; சலத்வஂ பாத பயேந சலந ஹேதுத்வம்; அத்ருவத்வஂ க்ஷயிஷ்ணுத்வம்.

৷৷17.18৷৷’அபலாகாங்க்ஷிபிஃ’ [17.17] இதி ஸாத்த்விகஸ்ய தபஸோ விஷேஷணாதிஹ பலாகாங்க்ஷா அர்தஸித்தேத்யபிப்ராயேணாஹ — ‘பலாபிஸந்திபூர்வகமிதி’.’ஸ்வர்காதிபலஸாதநத்வேநாஸ்திரத்வாதிதி’ அஸ்திரஸ்வர்காதிபலஸாதநத்வாதித்யர்தஃ. ஸ்வரூபதஃ காதாசித்கோக்தேரநுபயோகாத்பலத்வாராத்ர சலத்வமத்ருவத்வஂ ச. தத்ராத்ருவஷப்தேந பலாநித்யத்வோக்தேஷ்சலஷப்தஃ பலஸ்ய வித்யமாநதஷாபாவிதோஷபரஃ. வித்யதே ச தத்ர சலயதீதி வ்யுத்பத்த்யா சலஷப்தஷக்திரித்யபிப்ராயேணாஹ’பாதபயேந சலநஹேதுத்வமிதி’. அத்ர சலஷப்தேந அநித்யபலத்வம்? அத்ருவஷப்தேந ப்ரதிபந்தஸம்பவாதநைகாந்திகபலத்வஂ சோச்யத இத்யயுக்தம்? அந்யத்ராபி ப்ரதிபந்தஸம்பவஸ்யாவிஷேஷாதிதி பாவஃ.

—————

19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்

யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன்,
ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு,
பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய,
தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.

மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும்,
பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.

விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள்.
பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை
செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள்.
அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள்.
அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.

৷৷17.19৷৷மூடாஃ — அவிவேகிநஃ மூட க்ராஹேண மூடைஃ கரிதேந அபிநிவிஷேந ஆத்மநஃ ஷக்த்யாதிகம் அபரீக்ஷ்ய ஆத்ம பீடயா யத் தபஃ க்ரியதே பரஸ்ய உத்ஸாதநார்தஂ ச யத் தபஃ க்ரியதே? தத் தாமஸம் உதாஹரிதம்.

৷৷17.19৷৷அஹிதப்ரவரித்திஹேதுபூதமூடத்வமஹிதேஷ்வேவ ஹிதத்வப்ரம இத்யபிப்ராயேணாஹ — ‘அவிவேகிந’ இதி. மூடாநாமபிநிவேஷேநேதி ஸமாஸார்தஃ. தத்ர கர்தரி ஷஷ்டீதி ஸுவ்யக்த்யர்தமாஹ’மூடைஃ கரிதேநாபிநிவேஷேநேதி’. ஸாமாந்யேநோக்தமநுஷ்டாதரி விஷிஷ்யாஹ’ஆத்மநஃ ஷக்த்யாதிகமபரீக்ஷ்யேதி’. ஆதிஷப்தேந ஷாஸ்த்ரபர்யுதஸ்தத்வம்?’அஷக்யாநி துரந்தாநி ஸம வ்யய பலாநி ச. அஸாத்யாநி ச வஸ்தூநி நார பேத விசக்ஷணாஃ’. இத்யாத் யுக்த விஷய தோஷாஷ்ச ஸஂகரிஹீதாஃ. அயதாபலாரம்பாதிரிஹாத்மபீடா? தேநால்பபீடாகரயதாபலவதாதிவ்யவச்சேதஃ. யதோக்தஂ’ஸந்நிரீக்ஷ்ய பலாபலம்’ இதி. ஸ்மரந்தி ச’தேஷஂ காலஂ ததாத்மாநஂ த்ரவ்யாத்ரவ்யஂ ப்ரயோஜநம். உபபத்திமவஸ்தாஂ ச ஜ்ஞாத்வா ஷௌசஂ ஸமாசரேத்’ இத்யாதி.

—————-

20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதே அநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்

தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம்,
தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும்,
அநுபகாரிணே தீயதே – கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ,
தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.

கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும்
பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.

செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது.
தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம்.
கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார்.
ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது.
இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு
மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.

৷৷17.20৷৷பலாபிஸந்தி ரஹிதஂ தாதவ்யம் இதி தேஷே காலே பாத்ரே ச அநுபகாரிணே யத் தாநஂ தீயதே தத் தாநஂ ஸாத்த்விகஂ ஸ்மரிதம்.

৷৷17.20৷৷ராஜஸே தாநே’பலமுத்திஷ்ய’ இதி விஷேஷணாதத்ர ஸ்வர்காதிபலஸங்கநிவரித்திருக்தா.’அநுபகாரிணே’ இத்யேதத் தரிஷ்டபலாபிஸந்திரஹிதாபிப்ராயம்.’தாதவ்யம்’ இத்யேதத்ஸாத்த்விகதபஃப்ரபரிதிஷ்விவாபிஸந்த்யந்தரவ்யுதாஸார்தமித்யாஹ — ‘பலாபிஸந்திரஹிதமிதி’. யத்யப்யத்ர பாத்ரமேவார்ததோநுபகாரித்வேந விஷேஷ்யதே? ததாபி ஸம்ப்ரதாநத்வத்ரவ்யப்ரதிஷ்டாதிகரணத்வயோர்விவக்ஷயா சதுர்தீஸப்தம்யோஃ ஸஹ ப்ரயோகஃ. பாத்ரே ஸித்தேநுபகாரிணே தஸ்மா இதி வாந்வயஃ. பாத்ரே தீயதே? தச்சாநுபகாரிணே தீயத இதி வா வாக்யபேதோ க்ராஹ்யஃ. தேஷகாலஷப்தாவத்ர தாநார்ஹதயா சோதிதபுண்யதேஷகாலவிஷயௌ. பாத்ரஂ து’ந வித்யயா கேவலயா ஜந்மநா (தபஸா) வாபி பாத்ரதா. யஸ்ய வரித்தமிமே சோக்தே தத்தி பாத்ரஂ ப்ரசக்ஷதே’ [யா.ஸ்மரி.1.200] இத்யாதிபிர்விவக்ஷிதம்.

—————

21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்

து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன்,
ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும்,
பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ,
தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.

கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.

தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு.
அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும்.
ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப்
பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான்.
அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.
தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான்.
இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது.
ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ,
ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான்.
தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம்.
தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும்
அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும்
தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான்.
இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.

৷৷17.21৷৷ப்ரத் யுபகார கடாக்ஷ கர்பஂ பலம் உத்திஷ்ய ச பரிக்லிஷ்டம் அகல்யாண த்ரவ்யகஂ யத் தாநஂ தீயதே தத் ராஜஸம் உதாஹரிதம்.

৷৷17.21৷৷’ப்ரத்யுபகாரகடாக்ஷகர்பமிதி’ — ப்ரத்யுபகாராபிப்ராயபூர்வகமித்யர்தஃ. ஏதேந பூர்வகரிதப்ரத்யுபகாரரூபதா பாவிப்ரத்யுபகாரப்ரயோஜகதா ச ஸங்கரிஹீதா. த்ரவ்யராகாத்பரிக்லேஷேந த்யஜந் ஹி புருஷஃ கல்யாணமஂஷஂ ஸ்வஸ்மை ஸ்தாபயித்வா அந்யத்பரஸ்மை ஸமர்பயதீத்யபிப்ராயேணாஹ’அகல்யாணத்ரவ்யகமிதி’. அஷ்ரத்தாஹதத்வாத்வா த்ரவ்யஸ்யாகல்யாணத்வமிஹ பரிக்லிஷ்டஷப்தார்த இதி பாவஃ.

———————-

22. அதேஸ காலே யத் தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்

யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி,
அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன்,
அதேஸ காலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில்,
அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.

தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன்
செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.

புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக்
கவனித்துக் கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள்
தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள்,
பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம்.
முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி,
ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.

ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக
இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக
ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது.
ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.

৷৷17.22৷৷அதேஷ காலே அபாத்ரேப்யஃ ச யத் தாநஂ தீயதே? அஸத் கரிதஂ பாத ப்ரக்ஷாலநாதி கௌரவ ரஹிதம்? அவஜ்ஞாதஂ ஸாவஜ்ஞம்? அநுபசார யுக்தஂ யத் தீயதே தத் தாமஸஂ உதாஹரிதம்.-

ஏவஂ வைதிகாநாஂ யஜ்ஞ தபோ தாநாநாஂ ஸத்த்வாதி குண பேதேந பேத உக்தஃ. -இதாநீஂ தஸ்ய ஏவ வைதிகஸ்ய யஜ்ஞாதேஃ ப்ரணவ ஸஂயோகேந தத் ஸச் சப்த வ்யபதேஷ்யதயா ச லக்ஷணம் உச்யதே —

৷৷17.22৷৷அதேஷஃ கலிங்ககீகடாதிஃ. அகாலோ ராத்ர்யாதிஃ. அபாத்ராணி பங்க்திதூஷகமூர்கதஸ்கரகிதவபந்திவைதாலிகாதயஃ. ஸத்கரிதஂ ஸத்கரணஂ தத்ரஹிதமஸத்கரிதம்; ததாஹ’பாதப்ரக்ஷாலநேதி’. ப்ரதிக்ரஹீதரிபுருஷாவஜ்ஞைவ க்ரியாபர்யந்தப்ரஸாராத்தத்விஷேஷணதயா வ்யபதிஷ்யத இத்யபிப்ராயேணாஹ’ஸாவஜ்ஞமிதி’. அவஜ்ஞாயா வாசிகாதிவிஷயத்வமாஹ’அநுபசாரயுக்தமிதி’. ஷாஸ்த்ரப்ராமாண்யாநிஷ்சயேந ஸந்திக்தபரலோகத்வாத் பாத்ரேப்யஃ ஸ்வத்வோத்கர்ஷாபிமாநோச்சாஸத்காராவஜ்ஞே. தேஷாதிஸம்பத்தாவப்யஸத்கரிதத்வாதி பரிஹர்தவ்யம்.

—————-

செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம்.
அதற்கு விடை வருகிறது :

23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா

ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக,
ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர்,
தேந புரா-அதனால் முன்பு,
ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும்,
விஹிதா:-வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும்,
வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது.
மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது.
ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது.
ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும்.
கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான்.
அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள்
(தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது
வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.

எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம்.
எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள்
ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.

பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே
பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும்
அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன.
உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர்.
அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும்
நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள
பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.

ஓம் -ஆதாரம் -பிரபாவா வேதா -ஓம் மூவகை அதிகாரிகளுக்கும் -ஓம் தத் மோஷார்த்தி -ஓம் சத் ப்ரயோஜனார்த்திகள்-

பிரணவம் -பிரகர்ஷேண ஸ்துத்யா அநேந -நன்கு ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறான் -சொத்துக்கள் எல்லாம் தனது என்று சொல்லுவதால் ப்ரீதிகரம்

ஏவஂ வைதிகாநாஂ யஜ்ஞ தபோ தாநாநாஂ ஸத்த்வாதி குண பேதேந பேத உக்தஃ. –

இதாநீஂ தஸ்ய ஏவ வைதிகஸ்ய யஜ்ஞாதேஃ ப்ரணவ ஸஂயோகேந தத் ஸச் சப்த வ்யபதேஷ்யதயா ச லக்ஷணம் உச்யதே —

৷৷17.23৷৷’ தத் ஸத்’ இதி த்ரிவிதஃ அயஂ நிர்தேஷஃ ஷப்தஃ ப்ரஹ்மணஃ ஸ்மரிதஃ? ப்ரஹ்மணஃ அந்வயீ பவதி.(வேத வைதிக வைதிக கர்மங்கள் உடன் சேர்ந்தே -இருக்கும் ஸப்தங்கள்-இவ்வாறு ப்ரஹ்மம் வேதம் என்று சொல்லி நிர்வகிக்காமல் -மூன்றும் பர ப்ரஹ்மத்துடன் சேர்ந்தே நேராகவே தொடர்பு கொள்ளலாமே என்னில் -இங்கு பிரகரணம் – -முக் குணங்கள் அடிப்படையில் கர்மங்கள் -பற்றியே -எனவே இப்படியே கொள்ள வேண்டும்  )ப்ரஹ்ம ச வேதஃ; வேத ஷப்தேந வைதிகஂ கர்ம உச்யதே; வைதிகஂ யஜ்ஞாதிகம்; யஜ்ஞாதிகஂ கர்ம’ தத் ஸத்’ இதி ஷப்தாந்விதஂ பவதி.’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வயோ வைதிக கர்ம அங்கத்வேந ப்ரயோகாதௌ ப்ரயுஜ்ய மாநதயா;’தத் ஸத்’ இதி ஷப்தயோஃ அந்வயஃ பூஜ்யத்வாய வாசக தயா.தேந த்ரிவிதேந ஷப்தேந அந்விதா ப்ராஹ்மணா வேதாந்வயிநஃ த்ரை வர்ணிகாஃ வேதாஃ ச யஜ்ஞாஃ ச புரா விஹிதாஃ புரா மயா ஏவ நிர்மிதா இத்யர்தஃ.

த்ரயாணாம்’ தத் ஸத்’ இதி ஷப்தாநாம் அந்வய ப்ரகாரோ வர்ண்யதே. ப்ரதமம்’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வய ப்ரகாரம் ஆஹ —

(இவற்றாலே -கருவியாக கொள்ளாமல் கூடினவரான -என்று உபலஷணத்தால் கொள்ள வேண்டும் -இவை உபாதான காரணம் அல்லவே -இவற்றுடன் கூடியே படைத்தேன் -வேதம் படைக்க ப்பட வில்லையே -நிர்மிதா -நிர்மிக்கப் பட்டன என்றபடி )

৷৷17.23৷৷உக்தத்ரைவித்யவதுபர்யபி த்ரைவித்யாந்தரோக்திரிதி ஷங்காவ்யுதாஸாய உக்தஸமஸ்தலக்ஷணபரதயோத்தரமவதாரயதி — ‘ஏவமித்யாதிநா’. த்ரைவித்யவிதிரநபேக்ஷிதஃ? லக்ஷ்யேஷூத்திஷ்டேஷு லக்ஷணவிதிஸ்த்வபேக்ஷித இத்யபிப்ராயேண’ப்ரஹ்மணஃ ஸ்மரிதஃ’ இத்யந்வயோ தர்ஷிதஃ. வக்ஷ்யமாணப்ரகாரேண த்ரிஷ்வதி நிர்தேஷேஷு கர்மத்வேநாந்வயாயோகாத் — ‘ப்ரஹ்மணோந்வயீ பவதீதி’ ஸம்பந்தஸாமாந்யார்ததோக்திஃ. நநு’ஓஂ தத்ஸத்’ இதி வைதிகஸ்ய யஜ்ஞாதேர்லக்ஷணமுச்யத இத்யுக்தமயுக்தஂ? ப்ரஹ்மஷப்தஸ்ய தத்வாசகத்வாபாவாந்முக்யார்தபாதாபாவாச்ச. த்ரயாணாஂ ச ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ஷ்ருதிஸித்தஂ “தத்தே பதஂ ஸங்க்ரஹேண ப்ரவீமி ஓமித்யேதத்” [கடோ.1.2.15] இதி வா; “ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நாம பவதி? யோஸ்யைததேவ நாம வேத ப்ரஹ்ம பவதீதி” “ஸந்மூலாஃ ஸோம்யேமாஃ ஸர்வாஃ ப்ரஜாஃ ஸதாயதநாஃ ஸத்ப்ரதிஷ்டாஃ” [சாஂ.உ.6.8.6] இத்யாதிஷு. அதஃ ஷாஸ்த்ரப்ரதாநப்ரதிபாத்யபரப்ரஹ்மநிர்தேஷப்ரகாரோயமுபாஸகஸஂவ்யவஹாரார்தமுபதிஷ்யத இதி யுக்தம். த்விகுணமபி ஹி கர்ம,ப்ரஹ்மணோபிதாநத்ரயப்ரயோகேண ஸகுணஂ ஸம்பாதிதஂ பவதி. கர்மணி கர்மாந்தரேண லௌகிகவாசா நித்ராப்ரமாதாதிபிஷ்ச வ்யவாயே ஸந்தஃ ஸர்வத்ர’ஓஂ தத்ஸத்’ இத்யுதாஹரேயுஃ. அதஏவ சாத்யாயாத்யந்தேஷு ஸர்வேஷ்வயமேவ த்ரிவிதோ நிர்தேஷஃ பட்யத இதி ஷங்காயாஂ — கர்மணி ப்ரஹ்மஷப்தமவதாரயிதுஂ தத்ப்ரதிபாதகே ப்ரயோகஸ்தாவத்ஸித்த இத்யபிப்ராயேணாஹ’ப்ரஹ்ம ச வேத’ இதி. வேதாபிதாநஸ்ய பூர்வாபரவஷாத்ததர்தபரதாமபிப்ரேத்யாஹ’வேதஷப்தேநேதி’. வேதநிரூடப்ரயோகேண ஷப்தேநேத்யர்தஃ.’ப்ரஹ்மஷப்தேந’ இதி கேஷாஞ்சித்பாடஃ.

‘அயமபிப்ராயஃ’ — யத்யபி’ஓஂ தத்ஸத்’ இதி ஷப்தாநாஂ ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ப்ரஸித்தஂ? ததாப்யத்ர தத்விவக்ஷா ந யுக்தா; அத்யாயே தத்ப்ரஷ்நாத்யபாவாத்? அநந்தரஂ ச’ப்ராஹ்மணாஸ்தேந’ இத்யாதிநாநந்வயப்ரஸங்காச்ச; அதோ வேதேநோபலக்ஷணேந வைதிகஸ்யைவாயஂ த்ரிதா நிர்தேஷஃ — இதி. ஏததேவ விவரிணோதி — ‘வைதிகமிதி’. த்ரயாணாமந்வயப்ரகாரேவாந்தரபேதஂ வக்ஷ்யமாணமுபக்ஷிபதி’ஓமிதி’. கரணாத்யர்தாஸம்பவாதுபலக்ஷணதரிதீயார்தமாஹ — ‘தேந த்ரிவிதேந ஷப்தேநாந்விதா’ இதி. ப்ராஹ்மணஷப்தோத்ர ப்ரஹ்மஷப்தவிவக்ஷிதவேதாந்வயாத் த்ரைவர்ணிகவிஷயஃ.’ப்ரஹ்மவாதிநாம்

—————

இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :

24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்

தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள்,
விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி,
தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள்,
ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று,
உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.

ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள்
எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.

குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது.
தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது.
கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது.
அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும்.
இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது.
அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும்.
இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன்.
செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது.
ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும்.
அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.

த்ரயாணாம்’ தத் ஸத்’ இதி ஷப்தாநாம் அந்வய ப்ரகாரோ வர்ண்யதே. ப்ரதமம்’ஓம்’ இதி ஷப்தஸ்ய அந்வய ப்ரகாரம் ஆஹ —

৷৷17.24৷৷தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாஂ வேதவாதிநாஂ த்ரைவர்ணிகாநாஂ யஜ்ஞ தாந தபஃ க்ரியாஃ விதாந உக்தாஃ (வேதத்தில் விதிக்கப்பட்ட )வேத விதாந உக்தாஃ ஆதௌ ‘ஓம்’ இதி உதாஹரித்ய ஸததஂ ஸர்வதா ப்ரவர்தந்தே.(ஸததம் -எப்பொழுதும் என்பதால் இதுக்கு-ஓம் – கால நியமம் இல்லை )வேதாஃ ச’ஓம்’ இதி உதாஹரித்ய ஆரப்யந்தே.ஏவஂ வேதாநாஂ வைதிகாநாஂ ச யஜ்ஞாதீநாஂ கர்மணாம்” இதி ஷப்த அந்வயோ வர்ணிதஃ. ஓம் இதி ஷப்த அந்வித வேத தாரணாத் ததந்வித யஜ்ஞாதி கர்ம கரணாத் ச ப்ராஹ்மண ஷப்த நிர்திஷ்டாநாஂ த்ரைவர்ணிகாநாம் அபி’ஓம்’ இதி ஷப்த அந்வயோ வர்ணிதஃ.(பல சாதனமாக கர்மங்களிலும் வேதத்திலும் சேரும் –வைதிகர்கள் வேதம் சொல்வதாலும் வேத விஹித கர்மங்களை அனுஷ்டிக்கிற படியாலும் ப்ராஹ்மண த்ரை வர்ணிகர் களுடனும் அந்வயிக்கும்)அத ஏதேஷாஂ’தத்’ இதி ஷப்த அந்வய ப்ரகாரம் ஆஹ —

[17.24] இதி ஹ்யநந்தரமுச்யதே. தேநைவ ப்ரணவாந்வயப்ரகாரோபி ஸூசித இத்யபிப்ராயேணாஹ — ‘வேதாந்வயிநஸ்த்ரைவர்ணிகா’ இதி.’விஹிதாஃ’ இத்யஸ்ய கர்த்ரபேக்ஷாயாஂ’சாதுர்வர்ண்யஂ மயா ஸரிஷ்டம்’ [4.13] இத்யாதிபராமர்ஷேநாஹ’புரா மயைவ நிர்மிதா’ இதி. வேதாநாஂ விஹிதத்வஂ யதாபூர்வஂ ப்ரவர்திதத்வஂ? “யோ வை வேதாஂஷ்ச ப்ரஹிணோதி தஸ்மை” [ஷ்வே.உ.6.18]’அநாதிநிதநா ஹ்யேஷா வாகுத்ஸரிஷ்டா’ [ம.பா.12.232.24கூ.பு.பூ.2.30] இத்யாதிஷ்ருதிஸ்மரிதிபிஸ்தந்நித்யத்வஸித்தேஃ.

৷৷17.24৷৷’தஸ்மாத்’ இத்யாதீநாஂ சதுர்ணாஂ ஷ்லோகாநாஂ ப்ரகரிதப்ரபஞ்சநரூபதாமாஹ — ‘த்ரயாணாமிதி’. ப்ராஹ்மணவேதயஜ்ஞாநாமித்யர்தஃ. யஜ்ஞஷப்தோத்ர தபோதாநாதீநாமுபலக்ஷகஃ? யஜ்ஞதபஃக்ரியா இத்யாதி ஹ்யநந்தரமுச்யதே. அநுஷ்டாநஸ்வரூபாநுப்ரவேஷாத்தத்ராபி ப்ராதம்யாச்சாத்ராபி ப்ரதமமோங்காரஸ்யோக்திரித்யபிப்ராயேணாஹ’ப்ரதமமிதி’.’தஸ்மாதிதி’ — ஸர்வஸ்ரஷ்ட்ரா மயா ததைவ ததந்விதத்வேந விஹிதத்வாதித்யர்தஃ. கரணவ்யுத்த்பத்த்யா விதாநமிஹ வைதிகஂ விதாயகவாக்யமித்யாஹ’வேதவிதாநோக்தா’ இதி. யஜ்ஞதாநாதீநாமோங்காரபூர்வகத்வஂ தத்தத்விதாயகைஃ ஸித்தமித்யபிப்ராயேணாஹ — ‘ஆதாவிதி’. ஓமித்யுதாஹரணஂ சாத்ர ஷ்ருதவேதாந்தாநாஂ ஸர்வாந்தரபரப்ரஹ்மாநுஸந்தாநேந தத்ஸமாராதநபுத்த்யாநுஸந்தாய. ஸ்மரதி ச பகவாஞ்சௌநகஃ’ஹரிமேவ ஸ்மரேந்நித்யஂ கர்மபூர்வாபரேஷு ச’ [வி.த.] இதி அஷ்ருதவேதாந்தாநாமபி தத்வாசகஷப்தாபிதாநாந்மங்கலாதிலாபோர்தஸித்தஃ. ஏவஂ ச ப்ரணவஸ்ய வைதிகஸமஸ்தாந்வயஸித்திஃ. யத்யபி “வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா யஜேத” “ஷரதி வாஜபேயேந யஜேத” இத்யாதிபிஃ காலவிஷேஷநியதாஃ க்ரியா விதீயந்தே; ததாபி ஸர்வாஸாஂ க்ரியாணாஂ ப்ரணவபூர்வகத்வே து ந காலவிஷேஷநியம இதி ஸததஷப்ததாத்பர்யமித்யபிப்ராயேணாஹ’ஸர்வதேதி’. ஸ்வர்கஸாதநத்வேநாநுஷ்டாநே அபவர்கஸாதநத்வேநாநுஷ்டாநே ச ப்ரணவாந்வயஃ ஸாதாரண இதி பாவஃ. அத்ர ஷ்லோகே வேதாநாமநுபாதாநேபி பூர்வஷ்லோகே’ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச’ [17.23] இத்யுக்தத்வாத் “யத்வேதாதௌ ஸ்வரஃ ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டிதஃ. தஸ்ய ப்ரகரிதிலீநஸ்ய யஃ பரஃ ஸ மஹேஷ்வரஃ” [தை.நா.6.10.24]’ப்ரஹ்மணஃ ப்ரணவஂ குர்யாதாதாவந்தே ச ஸர்வதா. ஸ்ரவத்யநோஂகரிதஂ பூர்வம்’ [மநுஃ2.74] இத்யாத்யநுஸாரேணாஹ — ‘வேதாஷ்சேதி’.’விதாநோக்தாஃ’ இத்யநேந ப்ரஹ்மவாசிஷப்தேந ச வேதாநாமப்யத்ர ஷ்லோகே ப்ரணவாந்வயஃ ஸூசித இத்யபிப்ராயேணாஹ — ‘ஏவமிதி’. ஓமித்யுதாஹரணகர்தரித்வவ்யபதேஷேந ததந்விதப்ரஹ்மவாதித்வவ்யபதேஷேந ச ப்ராஹ்மணாநாமப்யோமிதிஷப்தேநாந்வயஃ ப்ரதர்ஷித ஏவேத்யாஹ — ‘ஓமிதிஷப்தாந்விதவேததாரணாதிதி’.

—————

25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:

தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து,
பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல்,
விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும்,
தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள்,
மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய
கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும்,
எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும்
அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள்
கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும்.
உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி
அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன்
தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது.
அதனால் முமுக்ஷத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.

‘தத்’ இதி ஷப்த அந்வய ப்ரகாரம் ஆஹ —

৷17.25৷৷பலம் அநபிஸஂதாய வேதாத்யயந யஜ்ஞ தபோ தாந க்ரியாஃ மோக்ஷகாங்க்ஷிபிஃ த்ரை வர்ணிகைஃ யாஃ க்ரியந்தே? தாஃ ப்ரஹ்ம ப்ராப்தி ஸாதநதயா ப்ரஹ்ம வாசிநா தத் இதி ஷப்த நிர்தேஷ்யாஃ.

‘ஸவஃ கஃ கிஂ யத் தத் பதமநுத்தமம்’ (வி0 ஸஹ0 நா0 91) இதி தச் சப்தோ ஹி ப்ரஹ்மவாசீ ப்ரஸித்தஃ.–ஏவஂ வேதாத்யயநய ஜ்ஞாதீநாஂ மோக்ஷ ஸாதந பூதாநாஂ தச் சப்த நிர்தேஷ்யதயா தத் இதி ஷப்தாந்வய உக்தஃ. –த்ரைவர்ணிகாநாம் அபி ததாவித வேதாத்யயநாத் யநுஷ்டாநாத் ஏவ தச் சப்தாந்வய உபபந்நஃ.(வேதத்துடன் அத்யயன சம்பந்தம் – கர்மங்களுடன் அனுஷ்டான சம்பந்தம் -ஆகையால் தத் சப்தம் வைதிகர்கள் உடனும் அன்வயம் )

அத ஏஷாஂ’ஸத்’ ஷப்தாந்வய ப்ரகாரஂ வக்துஂ லோகே ஸச் சப்தஸ்ய வ்யுத்பத்தி ப்ரகாரம் ஆஹ —

৷৷17.25৷৷ஏவஂ ஸ்வர்காபவர்கஸாதநஸமஸ்தவைதிகஸாதாரணஂ ப்ரணவாந்வயரூபஂ லக்ஷணமுக்தம்; அத தத்ஸச்சதௌ மோக்ஷஸாதநாநாஂ த்ரிவர்கஸாதநாநாஂ ச விஷேஷலக்ஷணதயோச்யேதே. வக்ஷ்யதி சைததஷ்டாதஷாரம்பே [ரா.பா.ஷ்லோ.1]’வைதிகஸ்ய ச கர்மணஃ ஸாமாந்யலக்ஷணஂ ப்ரணவாந்வயஃ; தத்ர மோக்ஷாப்யுதயஸாதநயோர்பேதஃ தத் ஸச் சப்த நிர்தேஷ்யத்வேந’ இதி.’ஏதேஷாமிதி’ த்ரயாணாஂ பராமர்ஷஃ. உக்தாநாஂ யஜ்ஞாதீநாமுபலக்ஷணதயா வேதேஷ்வபி தச்சப்தப்ரவரித்திஜ்ஞாபநாய வேதாத்யயநோபாதாநம்.’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ இத்யநேந’ஸூசிதமாப்ரஹ்மப்ராப்திஸாதநதயேதி’. ததிதி — பலமநபிஸந்தாயேத்யந்வயஃ. தச்சப்தாபிதேயப்ரஹ்மப்ராப்திஸாதநதயா தச்சப்தோபசார்யதயா புத்த்வா பலாந்தரமநபிஸந்தாயேத்யர்தஃ. இதி கரணஸாமர்த்யாத்’உதாஹரித்ய’ இதி பதஂ வா பூர்வஷ்லோகாதநுஷஞ்ஜநீயமித்யபிப்ராயேணாஹ’ததிதிஷப்தநிர்தேஷ்யா’ இதி. தச்சப்தஸ்ய ப்ரஹ்மநாமத்வே ஸித்தே ஹி தேந தத்ப்ராப்திஸாதநதயேதி லக்ஷணா? ததேவ குதஃ இத்யத்ர ததிதி ஷ்ருதேருபபரிஂஹணேந விஷதீகரிதத்வமபிப்ரேத்யாஹ’ஸவ’ இதி. பகவந்நாமஸஹஸ்ரே’யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநஃ’ [ம.பா.13.149.13வி.ஸ.நா.15] இதி ப்ரக்ரமாத்’நாம்நாஂ ஸஹஸ்ரம்’ [ம.பா.13.149.121வி.ஸ.நா.157] இதி நிகமநாச்ச யத்ததாதிஷப்தாநாஂ ஸர்வநாமதயா வ்யாபிநாமபி விஷேஷதஃ ஸாக்ஷாத்பரப்ரஹ்மநாமத்வஂ ஸித்தமிதி பாவஃ. ஷ்லோகேநுக்தஸ்யாபி வேதாத்யயநஸ்ய ப்ரயோஜகேந ஸங்கரிஹீதத்வமாஹ’ஏவமிதி’. ததாபி த்ரயாணாமந்வயோ ந ஸித்யதி? ப்ராஹ்மணஷப்தநிர்திஷ்டாநாஂ த்ரைவர்ணிகாநாஂ மோக்ஷஸாதநத்வநிபந்தநதச்சப்தநிர்தேஷ்யத்வாபாவாதித்யத்ராஹ’த்ரைவர்ணிகாநாமபீதி’.’மோக்ஷகாங்க்ஷிபிஃ க்ரியந்தே’ இத்யநேந பரம்பரயா ததந்வயஃ ஸூசித இதி பாவஃ.

——————-

26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே

ஸத் இதி-ஸத் என்ற சொல்,
ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும்,
ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது,
பார்த-பார்த்தா,
ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும்,
ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.

ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது.
பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.

முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது.
பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம்.
நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில்
உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.

சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது.
பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது.
அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான்.
சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது.
இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.

இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது.
பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம்.
விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம்.
அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம்.
மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.

பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும்,
முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது.
ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.

அத ஏஷாஂ’ஸத்’ ஷப்தாந்வய ப்ரகாரஂ வக்துஂ லோகே ஸச் சப்தஸ்ய வ்யுத்பத்தி ப்ரகாரம் ஆஹ —

৷৷17.26৷৷ஸத்பாவே வித்யமாநதாயாஂ ஸாதுபாவே கல்யாண பாவே ச ஸர்வ வஸ்துஷு ஸத் இதி ஏதத் பதஂ ப்ரயுஜ்யதே லோக வேதயோஃ. ததா கேநசித் புருஷேண அநுஷ்டிதே லௌகிகே ப்ரஷஸ்தே கல்யாணே கர்மணி ஸத் கர்ம இதம் இதி ஸச் சப்தோ யுஜ்யதே ப்ரயுஜ்யதே இத்யர்தஃ.

(இருப்புக்கும் -நல்லதுக்கும் –லௌகிக மங்களகரமான காரியங்களுக்கும் -சத் பத பிரயோகம் லோகத்தில் உண்டே
ஸாது பாவம் -பிரசாஸ்தே கர்மங்களையும் சேர்க்காமல் -மேல் வைதிக கர்மங்களை சொல்லப் போகிறார் -அதுக்குப் பீடிகையாக இங்கு பிரித்தே சொல்கிறான்)

৷৷17.26৷৷த்ரயாணாஂ த்ரிபிரந்வயே ப்ரதிபிபாதயிஷிதே’ஸத்பாவே ஸாதுபாவே ச’ இத்யப்ரஸ்துதோபந்யாஸஃ கிமர்தஃ இத்யத்ராஹ — ‘அதைஷாமிதி’. யதா ப்ரயோகபலாத்வித்யமாநத்வாதிஷு ஸச்சப்தப்ரவரித்திரங்கீக்ரியதே? ஏவஂ ப்ரஸ்துதேபீத்யபிப்ராயேணாநேகார்தோதாஹரணஂ’வித்யமாநதாயாமிதி’; அஸத்விலக்ஷணத்வரூபஸத்த்வவிஷயோ வா? வர்தமாநத்வவிஷயோ வா ஸத்பாவஷப்த இதி பாவஃ. “ஸாதுகாரீ ஸாதுர்பவதி” [பரி.உ.4.4.5] இத்யாதிஷ்விவாத்ராபி ஸாதுஷப்தஃ புண்யாதிரூபத்வபர இத்யாஹ’கல்யாணபாவ’ இதி; தச்சப்தாந்வயே’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ இதி விஷேஷணாத். இஹ து’ப்ரஷஸ்தே கர்மணி’ இதி ப்ரஷஸ்ததாமாத்ரநிமித்தவசநாந்மோக்ஷேதரபுருஷார்தஸாதநலக்ஷணதயா ஸச்சப்தோத்ர வ்யுத்பாத்யத இதி பாவஃ. அத்யந்தவிஜாதீயேஷ்வப்யுக்தோபாதித்வயயோகே ஸச்சப்தோநுவரித்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஸர்வவஸ்துஷ்விதி’.’ப்ரயுஜ்யதே’ இத்யவிஷேஷநிர்தேஷாத் ப்ரயோகஸ்ய ஸார்வத்ரிகத்வேந தார்ட்யஂ ஸூச்யத இத்யாஹ’லோகவேதயோரிதி’.’ததா’ இதி ப்ரஸ்துதாஸந்நே லௌகிகோதாஹரணார்தம்; அந்யதா புநருக்திப்ரஸங்காத்? இத்யபிப்ராயேணாஹ’லௌகிக’ இதி.’ஸாதுபாவே’ இதி நிர்திஷ்டமேவ நிமித்தஂ ப்ரகரிதாஸந்நோதாஹரணாந்தரே ப்ரஷஸ்தஷப்தேநாவதார்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கல்யாண’ இதி. தாதுலீநார்தவ்யஞ்ஜநமாத்ரமுபஸர்கேண க்ரியதே. அதோத்ர ஷ்லோகே’யுஜ்யதே”ப்ரயுஜ்யதே’ இதிபதத்வயமேகார்தமித்யாஹ’ப்ரயுஜ்யத இத்யர்த’ இதி.

———————–

இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :

27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும்,
ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது.
பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.

யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே
ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம்.
உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம்.
வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல்.
அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல்
இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா.
நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன.
முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள
குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம்.
பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி.
தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான்.
தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும்.
பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில்
குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது.
தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது.
கடவுள் பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.

৷৷17.27৷৷அதோ வைதிகாநாஂ த்ரைவர்ணிகாநாஂ யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதிஃ கல்யாண தயா ஸத் இதி உச்யதே. –கர்ம ச ததர்தீயஂ த்ரைவர்ணிகார்தீயஂ யஜ்ஞ தாநாதிகஂ (ஆதி அத்யயனம் போல்வன )ஸத் இதி ஏவ அபிதீயதே.தஸ்மாத் வேதா வைதிகாநி கர்மாணி ப்ராஹ்மண ஷப்த நிர்திஷ்டாஃ த்ரைவர்ணிகாஃ ச’ஓஂ தத் ஸத்’ இதி ஷப்தாந்வய ரூப லக்ஷணேந அவேதேப்யஃ ச அவைதிகேப்யஃ ச வ்யாவரித்தா வேதிதவ்யாஃ.

৷৷17.27৷৷ஏவஂ ஸச்சப்தஸ்ய வ்யுத்பத்திப்ரகாரஂ ப்ரயோகஂ சோதாஹரித்ய ததுபஜீவநேநாநந்தரஂ லிலக்ஷயிஷிதே ப்ராஹ்மணாதித்ரிகே தத்ப்ரயோகோபபத்திருபஸஂஹ்ரியத இத்யபிப்ராயேணாஹ’அத’ இதி. ஸ்திதிமுகேந ஸ்தாதரி஀ணாஂ ஸ்தாபகாநாஂ ச வேதாநாஂ ஸச்சப்தார்தாந்வயோர்தாதுச்யத இத்யபிப்ராயேணாஹ’வைதிகாநாமிதி’. அத்யாயாந்தேஷு’ஓஂ தத்ஸத்’ இதி பாடாத்ஸ்திதிஷப்தோத்ர அந்தபர இதி வ்யாக்யாந்தரஂ ப்ரகரிதோபயுக்தப்ரஸித்ததமார்தே ஸம்பவத்யயுக்தமிதி பாவஃ. ஸ்திதிஷப்தேந புத்தாவுபஸ்தாபிதாஃ ஸ்தாதாரஸ்தச்சப்தேந பராமரிஷ்யந்த இத்யபிப்ராயேணாஹ’த்ரைவர்ணிகார்தீயமிதி’. த்ரிவிதநிர்தேஷவிஷயதயா’ப்ரகரிதேஷ்வரார்தீயம்’ இதி(ஷாஂ) வ்யாக்யாந்தரமதிவ்யவஹிதபராமர்ஷாத்ஸர்வேஷாஂ யஜ்ஞாதீநாமததர்தீயத்வாச்ச அயுக்தமிதி பாவஃ. யஜ்ஞாத்யர்தீயஸாதநஸம்பாதநரூபகர்மணி ஸச்சப்தநிர்தேஷவசநாதபி ப்ரக்ராந்தே யஜ்ஞாதாவேவ ததுக்திரிஹோபபந்நேத்யபிப்ராயேணாஹ’யஜ்ஞதாநாதிகமிதி’.’ததர்தீயம்’ இதி ஸாமாந்யஸங்க்ரஹாவலம்பிநா ஆதிஷப்தேநாத்யயநாதிக்ரஹணாத்வேதாநாமபி ஸச்சப்தாந்வயோத்ர ப்ரதர்ஷித ஏவ. பவத்வேவஂ த்ரயாணாஂ த்ரிபிரந்வயஃ? ததுக்திரிஹ கிமர்தா இத்யத்ர லக்ஷணோக்திப்ரயோஜநபூதவிவிக்தாநுஸந்தாநப்ரதிபாதநமுகேந’ஓஂ தத்ஸத்’ இத்யாதிஷ்லோகைஃ பலிதஂ வதந்நுபஸஂஹரதி’தஸ்மாதிதி’. யத்து — கைஷ்சித்’ஓஂ தத்ஸத்’ இத்யமீஷாஂ வாக்யத்வகல்பநேந வாக்யார்தவர்ணநஂ? யத்பலாபிஸந்திரஹிதஂ கர்ம? தச்சோபநமிதி யுக்தம் ததோஂததேவேத்யர்த இதி; ஏததேவஂ விவக்ஷிதமித்யத்ர ந கஷ்சித்தேதுஃ; ந சோபயோகஃ; லக்ஷணத்வாபிதாநஂ த்வநுஷ்டாநோக்தமிதி பாவஃ.

——————-

28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ

பார்த-பார்த்தா,
அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும்,
தப்தம் தப: ச-செய்யும் தவமும்,
யத் க்ருதம்-கர்மமும்,
அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.

அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும்.
பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;

யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது.
இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது.
இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும்.
பரம் பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும்.
சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.

சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது.
கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன.
ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான்.
யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது,
தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம்.
பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது.
தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது.
யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன.
சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால்.
அம் மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும்.
அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.

அஸ்ரத்தை யுடன் அஸாஸ்த்ர செயல்கள் அநர்த்தம் விளைவிக்கும் என்று முன்பே சொல்லி
இங்கு அஸ்ரத்தை யுடன் சாஸ்த்ர செயல்களை செய்தால் இங்கும் அங்கும் பயன் இல்லையே
ஆகவே ஸ்ரத்தையுடன் யுத்தம் செய் என்கிறான் இறுதியில்

৷৷17.28৷৷அஷ்ரத்தயா கரிதஂ ஷாஸ்த்ரீயம் அபி ஹோமாதிகம் அஸத் இதி உச்யதே. குதஃ ந ச தத் ப்ரேத்ய நோ இஹ? ந மோக்ஷாய ந ஸாஂஸாரிகாய ச பலாய இதி.

৷৷17.28৷৷’ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய’ [16.27] இத்யாதிநா அத்யாயாரம்பே ப்ரஷ்நோத்தரமுகேந ஷ்ரத்தாயுக்தஸ்யாப்யஷாஸ்த்ரீயஸ்யாஸுரத்வேநாஸத்த்வஂ ப்ரதிபாத்ய ஷாஸ்த்ரீயஸ்ய ததோ வ்யாவரித்திர்தர்ஷிதா; இதாநீஂ வ்யதிரேகேண ப்ரகரிதாநாஂ ஸதிதி நிர்தேஷார்ஹத்வதரிடீகரணாய ஷாஸ்த்ரீயஸ்யாபி ஷ்ரத்தாரஹிதஸ்யாஸத்த்வமுச்யதே. விஷிஷ்டவ்யதிரேகஸ்ய விஷேஷணாபாவே விஷேஷ்யாபாவே ச ஸமாநத்வாதித்யபிப்ராயேணாஹ’அஷ்ரத்தயா கரிதஂ ஷாஸ்த்ரீயமபீதி’. கரிதஷப்தஸ்ய ஹுததத்தயோரந்வயஃ.’தப்தம்’ இத்யநேந தபஸஃ கரிதத்வஸித்தேர்ஹுததத்தஷப்தாவத்ர பாவார்தௌ. ஏவஂ கரிதஷப்தஸ்ய விஷேஷணதயாந்வயேபேக்ஷிதே ஸாமாந்யவிஷயபரோபகாராதிவிஷயத்வக்லரிப்திரயுக்தேதி ச பாவஃ. யத்யப்யஷாஸ்த்ரீயவந்நிரயபதநைகஹேதுத்வஂ நாஸ்தி? ததாபி தத்தத்வாக்யோதிதபலாபாவாதஸத்த்வமுபபத்யத இத்யபிப்ராயேண ஹேத்வாகாங்க்ஷாஂ தர்ஷயதி’குத’ இதி.’யேயஂ ப்ரேதே’ [கடோ.1.1.20] இதி ஷ்ருத்யவிரோதேந ப்ரேத்யஷப்தஸ்ய முக்ததஷாவிஷயத்வோபபத்தௌ’மோக்ஷகாங்க்ஷிபிஃ’ [17.25] இத்யாத்யுக்தபலவ்யதிரேகஸ்ய’ந ச தத்ப்ரேத்ய’ இத்யாதிநா விவக்ஷிதத்வமாஹ’ந மோக்ஷாயேதி’. பரிஷேஷஸித்தமிஹஷப்தஸ்யார்தமாஹ’ந ஸாஂஸாரிகாய பலாயேதி’.,ஷ்ரத்தாயுக்தமப்யவைதிகஂ? வைதிகமபி ஷ்ரத்தாஹீநஂ தரிஷ்டாதரிஷ்டப்ரயோஜநவிரஹாதநநுஷ்டேயம்; உபயவிதப்ரயோஜநயோகாத்வைதிகமேவ ஷ்ரத்தாபூதமேவாநுஷ்டேயமித்யத்யாயஸார இதி பாவஃ.

இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு பகவத்ராமாநுஜவிரசிதஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ ஸப்ததஷோத்யாயஃ৷৷17৷৷

16 அத்யாயம் -மஹாத்ம்யம்
கட்க பாஹு -குஜராத் ஸுராஷ்ராம் பட்டத்து யானை மதம் பிடித்து துவம்சம்
யானையை அடக்க போக
உயிர் தப்பி மீண்டான்
வயோதிகர் -அங்கு மகிழ்ச்சியுடன் சென்று
யானை ஒன்றும் பண்ணாமல் நமஸ்கரித்துப் போனதே
அரசன் மகிழ்ந்து எப்படி வினவ
யோகி 16 அத்யாயம் சொல்லிக் கொடுக்க
அனுசந்தான மஹிமை
தேவ ஸ்ரத்தை அதிகமாக வந்து இருக்கும் –

17 அத்யாயம் மஹாத்ம்யம்
யானை மதம் குறைய வில்லை
கட்க பாஹு பிள்ளை அரசன்
அந்தப்புரத்தில் வேலையாள் யானையை அடக்கப்போக
இவன் 16 அத்யாயம் அத்யயனம் அரசன் பண்ண கேட்டு இருந்தவன்
யானை த்வமஸிக்க
யானையை நினைத்தே பிராணன் விட்டான்
யானையாகவே ஸிம்ஹ தேசத்தில் பிறக்க
கீழ் வாசனை தொடர்ந்தது
இந்த யானையை பரிசாக கொடுக்க
இளவரசன் அத்தை கவிக்கு கொடுக்க
மாள்வ தேச அரசனுக்கு அவன் கொடுக்க
நாள் பட யானை நோய்வாய்ப்பட
அரசன் இடம் யானை பேச
17 அத்யாயம் கற்று சொல் அதுவே எனக்கு உயர்ந்த கதி கிடைக்கும்
ஸ்ரத்தை வளரும்
ஸாத்விக குணம் வளரும் -என்று சொல்லிப் போனதாம்
நம் சம்ப்ரதாயம் குட யானை தென் யானை –பிரஸித்தம் -சங்கிலி தன்னைக் கட்டத் தானே கொடுக்கும் –
பக்தி அருளுவான் நமக்கும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினேழாம் அத்தியாயம் — ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்–17-1-17-13-

February 11, 2021

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -ஆகையால் பயன் அற்றவை -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -யஜ்ஜம்-தானம்-கர்மா–இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

——————————

மூன்று வித ஸ்ரத்தை 1-7-ஸ்லோகங்கள்
மூன்று வித உணவு 8-10 –ஸ்லோகங்கள்
மூன்று வித ஆராதனை 11-13 –ஸ்லோகங்கள்
மூன்று வித தபஸ் 14-19 –ஸ்லோகங்கள்
மூன்று வித தானம் 20-22 –ஸ்லோகங்கள்
குறைகளை நிறையாக்குதல் 23-28-ஸ்லோகங்கள்

—————-

ஸாஸ்த்ரம் மீறி மனம் போன படி நடந்து பலன் பெறாமல்
அர்ஜுனன் சாஸ்திரம் மீறினவன் ஒருவன் என்றும்
ஸ்ரத்தை உடன் செய்தால் பலம் கிட்டுமா கேட்க
கிருஷ்ணன் கோபித்துக் கொண்டு மூன்று ஸ்லோகன்களால் பதில் சொல்லாமல்
மேல் 4-5 ஸ்லோகங்களால் பதில்
சாஸ்திரம் விதித்தும் இருக்க வேண்டும் -ஸ்ரத்தையும் வேண்டும் -என்று மேல் பதில் சொல்லுகிறான்

—————————

அவதாரிகை
தேவ அஸூர விபாக யுக்தி முகேந
ப்ராப்ய தத்வ ஞானமும் -தத் பிராப்தி யுபாய ஞானமும் -வைதிக மூலம் -வேதமே ப்ரஹ்மத்துக்கும் அவனை அடைய வேண்டிய பக்திக்கும் இரண்டுக்கும் பிரமாணம் -வேதைக சமைதி கம்யன் -ப்ரத்யக்ஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாதே
இதாநே-இதிலே -17 அத்தியாயத்தில்
அஸாஸ்த்ர விதி அஸூரத வேந அபலத்வ ம்
ஸாஸ்த்ர விதிகளுக்கு குண பேதங்களால் ஸ்ரத்தை -முக்குணங்கள் அடிப்படையே என்றும்
ஸாஸ்த்ர விதிப்படி சித்த லக்ஷணம் -ஓம் சத் தத் -செய்ய வேண்டிய முறைகளையும் சொல்கிறான்

—————————

அர்ஜுந உவாச

1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:

அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா,
யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி,
ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ,
தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது?
ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு
என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)

ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது.
முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது.
ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது
தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால்
அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது
தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா?
மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.

৷৷17.1৷৷அர்ஜுந உவாச — ஷாஸ்த்ர விதிம் உத்ஸரிஜ்ய ஷ்ரத்தய அந்விதா யே யஜந்தே தேஷாஂ நிஷ்டா கா- கிஂ ஸத்வம் -ஆஹோ ஸ்வித் ரஜஃ அத தமஃ நிஷ்டா ஸ்திதிஃ? ஸ்தீயதே அஸ்மிந் இதி ஸ்திதிஃ? ஸத்த்வாதிஃ ஏவ நிஷ்டா இதி உச்யதே? தேஷாஂ கிஂ ஸத்த்வே ஸ்திதிஃ கிஂ வா ரஜஸி கிஂ வா தமஸி இத்யர்தஃ.-

ஏவஂ பரிஷ்டஃ பகவாந் அஷாஸ்த்ர விஹித ஷ்ரத்தாயாஃ தத் பூர்வகஸ்ய ச யாகாதேஃ நிஷ் பலத்வஂ ஹரிதி நிதாய ஷாஸ்த்ரீயஸ்ய ஏவ யாகாதேஃ குணதஃ த்ரை வித்யஂ ப்ரதிபாதயிதுஂ ஷாஸ்த்ரீய ஷ்ரத்தாயாஃ த்ரை வித்யஂ தாவத் ஆஹ —

(யாகம் சொன்னது உப லக்ஷணம் தானம் ஹோமம் தேவ பூஜை இத்யாதிகளை )

(கிருஷ்ணன் பூமியில் உள்ளாருக்கு ஆனந்தம் கொடுப்பவன் -சங்கையைத் தீர்த்து எனக்கு ஆனந்தம் கொடுப்பாய்)

৷৷17.1৷৷உக்தஷேஷதயா ஸப்ததஷமவதாரயிதுமுக்தமுத்கரிஹ்ணாதி — ‘தேவாஸுரேதி’. ப்ரகரிதஸ்ய முகபேதேந ப்ரபஞ்சநபரதயா ஸங்கதிமாஹ — ‘இதாநீமிதி’. ஹேயோபாதேயவ்யவஸ்தாயாஃ ஷாஸ்த்ரைகமூலத்வோக்திஸமநந்தரமித்யர்தஃ.’அஷாஸ்த்ரமாஸுரஂ கரித்ஸ்நஂ ஷாஸ்த்ரீயஂ குணதஃ பரிதக். லக்ஷணஂ ஷாஸ்த்ரஸித்தஸ்ய த்ரிதா ஸப்ததஷோதிதம்’ [கீ.ஸஂ.21] இதி ஸங்க்ரஹஷ்லோகஂ விவரிணோதி — ‘அஷாஸ்த்ரவிஹிதஸ்யேத்யாதிநா’. அத்ர ஸாமாந்யதோ விஷேஷதஷ்ச ஷாஸ்த்ரீயார்தவிபஜநமத்யாயாநுவரித்தார்தஃ.’ஸப்ததஷோதிதம்’ இத்யேதத்ஸங்க்ரஹஷ்லோகவாக்யத்ரயேபி ப்ரத்யேகமந்வேதவ்யம். ஏதத்ஸர்வஂ ஸப்ததஷோதிதமிதி ஸர்வோபஸஂஹாரேண வாந்வயஃ.’ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம்’ [16.24] இத்யஸ்யாநந்தரஂ’யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய’ இதி ப்ரஷ்நஃ கதஂ ஸங்கச்சதே இத்யத்ராஹ’தத்ரேதி’.’அஷாஸ்த்ரவிஹிதஸ்ய நிஷ்பலத்வமஜாநந்நிதி’.’அயமபிப்ராயஃ’ — ப்ரேக்ஷாவதாஂ ஸ்வதஃ ப்ரயோஜநே ததுபாயே வா புபுத்ஸா; அதஃ ஸத்த்வாதிநிஷ்டாபேதபுபுத்ஸா தந்மூலபலவிஷேஷபர்யந்தா; ந ச நிஷ்பலத்வஜ்ஞாநே பலவிஷேஷஜிஜ்ஞாஸா; ததஷ்ச லோகஸித்தாஃ கரிஷிசிகித்ஸாதயோபி ப்ரேக்ஷாவத்ப்ரவரித்திவிஷயாஃ ஸபலா ஏவ தரிஷ்யந்தே? அந்யதா ஷாஸ்த்ரஸ்யாபி நிர்மூலத்வப்ரஸங்காத். அலௌகிகேஷ்வப்யாசாரஸித்தாஃ கதிகதி தர்மாஃ; நச தே யத்கிஞ்சித்பலமந்தரேண ஸ்யுஃ? ப்ரேக்ஷாவதாமப்ரவரித்திப்ரஸங்காத். ந ச ஷ்ரத்தாபூர்வகாநுஷ்டாநேங்கவைகல்யாத் பலாபாவஃ ஸம்பவதி; நச ப்ரேக்ஷாவத்பிரநந்தைர்ஜநைர்பஹுவித்தவ்யயாயாஸாதிநாநுஷ்டீயமாநேஷு தரிஷ்டப்ரயோஜநரஹிதேஷு கர்மஸு அதரிஷ்டபர்யவஸாநமந்தரேண கதிஃ; அதஃ ஷாஸ்த்ரவிஹிதாதஸ்ய யதி கிஞ்சித்வைஷம்யமுச்யதே? ததா ஸத்த்வாதிகுணபேதப்ரயுக்தபலதாரதம்யமாத்ரமேவ ஸ்யாத். அதஃ’யஃ ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய வர்ததே காமகாரதஃ. ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகஂ ந பராஂ கதிம்’ [13.23] இதி பூர்வோக்தமபி ப்ராயஷஃ ப்ரகரிஷ்டஸுகாபாவவிவக்ஷயா’காமகாரதஃ’ இதி விஷேஷணஂ வா ஷ்ரத்தாயுக்தவ்யவச்சேதார்தமிதி துருபதேஷபாஹ்யாகமஸ்வோத்ப்ரேக்ஷாவரித்தவ்யவஹாரமாத்ரகல்பிதே ஹ்யத்ர தர்மாபிஸந்திஷ்ரத்தாதியோகாந்நைஷ்பல்யநிவரித்திர்யுக்தேத்யர்ஜுநஸ்யாஷயஃ — இதி.

விஷிஷ்டஸ்ய பலத்வஷங்காஸ்பதத்வாய கர்தரிவிஷேஷணஂ க்ரியாவிஷேஷணதயா வ்யாக்யாதம். யாகோத்ர தாநாத்யுபலக்ஷணார்தஃ தேவபூஜாத்வாவிஷேஷாத்தத்ஸங்க்ரஹோ வா. அத்ர கரிஷ்ணஷப்தேந’கரிஷிர்பூவாசகஃ ஷப்தோணஷ்ச நிர்வரிதிவாசகஃ’ [ம.பா.5.70.5] இதி ஸர்வாபேக்ஷிதஃ ஸித்த்யௌபயிகீஂ நிருக்திமபிப்ரைதி. துஷப்தேந ஷாஸ்த்ரீயநிஷ்டாதஃ காமகாரதஷ்ச வ்யாவரித்திர்விவக்ஷிதா. விபரிணதஸ்ய கிஂஷப்தஸ்ய’அஹோ’ இதி பதஸ்ய வா அத்ராவரித்திமபிப்ரேத்யாஹ — ‘கிஂ ஸத்த்வமிதி’. விநாஷாத்யர்தவ்யவச்சேதார்தஂ ஸத்த்வாதிஸாமாநாதிகரண்யாய சாதிகரணவ்யுத்பத்திமவதாரயிதுஂ பர்யாயேண ஸ்வரூபஂ வ்யநக்தி’நிஷ்டா ஸ்திதிரிதி’.’தேஷாஂ நிஷ்டா து கா’ இதி பரிஷ்ட ஏவார்தஃ’ஸத்த்வஂ’ இத்யாதிநா விஷேஷ்யத இத்யபிப்ராயேண பலிதமாஹ’தேஷாமிதி’.

————-

ஸ்ரீபகவாநுவாச

2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான ஸ்வபாவத்தால் உண்டான,
ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை,
த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது,
ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என,
தாம் ஸ்ருணு-அதைக் கேள்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது.
சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது.
பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான்.
இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.

ஏவஂ பரிஷ்டஃ பகவாந் அஷாஸ்த்ர விஹித ஷ்ரத்தாயாஃ தத் பூர்வகஸ்ய ச யாகாதேஃ நிஷ் பலத்வஂ ஹரிதி நிதாய ஷாஸ்த்ரீயஸ்ய ஏவ யாகாதேஃ குணதஃ த்ரை வித்யஂ ப்ரதிபாதயிதுஂ ஷாஸ்த்ரீய ஷ்ரத்தாயாஃ த்ரை வித்யஂ தாவத் ஆஹ —

৷৷17.2৷৷ஷ்ரீபகவாநுவாச — ஸர்வேஷாஂ தேஹிநாஂ ஷ்ரத்தா த்ரிவிதா பவதி; ஸா ச ஸ்வபாவஜா — ஸ்வபாவஃ ஸ்வ அஸாதாரணோ பாவஃ? ப்ராசீந வாஸநா நிமித்தஃ தத் தத் ருசி விஷேஷஃ? யத்ர ருசிஃ தத்ர ஷ்ரத்தா ஜாயதே. ஷ்ரத்தா ஹி’ஸ்வாபிமதஂ ஸாதயதி ஏதத்’ இதி விஷ்வாஸ பூர்விகா ஸாதநே த்வரா. வாஸநா ருசிஃ ச ஷ்ரத்தா ச ஆத்ம தர்மாஃ குண ஸஂஸர்கஜாஃ.தேஷாம் ஆத்ம தர்மாணாஂ வாஸநாதீநா ஜநகாஃ தேஹ இந்த்ரிய அந்தஃ கரண விஷயகதா தர்மாஃ கார்யைக நிரூபணீயாஃ ஸத்த்வாதயோ குணாஃ? ஸத்த்வாதி குண யுக்த தேஹாத் யநுபவ ஜா இத்யர்தஃ.ததஃ ச இயஂ ஷ்ரத்தா ஸாத்த்விகீ ராஜஸீ தாமஸீ ச இதி த்ரிவிதா. தாம் இமாஂ ஷ்ரத்தாஂ ஷ்ரரிணு. ஸா ஷ்ரத்தா யத் ஸ்வபாவா தஂ ஸ்வபாவஂ ஷ்ரரிணு இதி அர்தஃ.

(முக்குண மய தேஹம் -அநுபவம் -வாசனை -அத்தால் ருசி -அத்தால் ஸ்வ பாவம் -அத்தால் -ஸ்ரத்தை-அத்தால் ப்ரயத்னம்-காமம் -ஸங்கல்பம்-எதிர்பார்ப்பு -ஸ்ரத்தை- ப்ரீதி- வெட்கம்- ஞானம் பயம் -உறுதி -மன ஏவ -மன வியாபாரங்கள் -தேஹினாம் ஸ்வ பாவம் -ஆத்மாவின் தர்ம பூத ஞானம் தான் மனசு உடன் சம்பந்தித்து – இவ்வாறு பரிணமிக்கும்- சரீர தொடர்பு இல்லாமல் இருந்தால் இவ்வாறு ஆகாதே -ஆகவே தேஹினாம்   )

৷৷17.2৷৷ஷ்ரத்தா கதிவிதா இதி ப்ரஷ்நாபாவேபி ததுக்திவைகட்யஷங்காஂ பரிஹரந் ஷ்ரத்தாத்ரைவித்யகதநஸ்ய ப்ரயோஜநஂ சாஹ — ‘ஏவஂ பரிஷ்ட’ இத்யாதிநா. பூர்வோபதிஷ்டவிருத்தஂ பரிஷ்ட இத்யர்தஃ.’ஹரிதி நிதாயேதி’ — க்ரமேண ஸாக்ஷாதுத்தரமவதாரயிதுமித்யர்தஃ. ப்ரஷ்நஸ்யாத்யந்தாநாதரபரத்வஜ்ஞாபநாய வா ஸஹஸா ஸாக்ஷாதுத்தராநுக்திரிதி பாவஃ.’குணதஸ்த்ரைவித்யமிதி’ — குணபேதநிமித்தபலபேதயோகித்வமிதி பாவஃ. அத்ர ஹி ஷ்ரத்தாயோகாத்ஸாத்த்விகத்வஂ ஷாஸ்த்ரோல்லங்கநாத்தாமஸத்வஂ ததுபயஸமுச்சயாத்ராஜஸத்வமாஷங்கிதஂ; தத்ர தாவச்ச்ரத்தாபூர்வகத்வஂ பலஸாதநத்வாயோபயுக்தம்? தச்சாஸ்த்ரீயேஷ்வேவ; தத்ராபி ஷ்ரத்தாயா ந த்வைகாந்திகத்வமித்யபிப்ராயேண ஷாஸ்த்ரீயஷ்ரத்தாயாஸ்த்ரைவித்யக்ரஹணம். ஏதேந பரிஸங்க்யாந்யாயேநாஷாஸ்த்ரீயேஷு பலபேதநிமித்தஂ த்ரைவித்யஂ ப்ரத்யுக்தம். அத்ர ஷ்ரத்தாபேதாத் ஸத்த்வாதிநிஷ்டாபேதநிர்ணய இத்யுக்தஂ பவதி.’தேஹிநாஂ’ இத்யநேந தத்தத்தேஹாநுரூபமதிகாரிவைசித்ர்யஂ விவக்ஷிதமித்யபிப்ராயேணாஹ’ஸர்வேஷாமிதி’. ப்ரஹ்மாதீநாமபீத்யர்தஃ.’தேஹிநாம்’ இதி ஸத்த்வாதிகுணப்ரசுரதேஹவிஷேஷாநுரூபமிதி பாவஃ. ஸாதாரணேஷு ஷாஸ்த்ரேஷு தத்ப்ரரோசகேஷ்வர்தவாதாதிஷு ச கதஂ புருஷபேதநியதஷ்ரத்தாபேதஃ இதி ஷங்காயாஂ’ஸா ஸ்வபாவஜா’ இதி வாக்யாந்தரமித்யபிப்ராயேணாஹ’ஸா சேதி’. கார்யாஸாதாரணத்வாய காரணாஸாதாரணத்வவிவக்ஷாமாஹ’ஸ்வபாவஃ ஸ்வாஸாதாரணோ பாவ’ இதி. கோஸௌ பாவஃ கஷ்ச தஸ்யாப்யஸாதாரண்யஹேதுஃ இத்யத்ராஹ — ‘ப்ராசீநேதி’. பாவஷப்தோத்ர தர்மவிஷேஷபரஃ. நாநார்தே ஸ்வபாவஷப்தே கதமத்ர ருசிவிவக்ஷா இத்யத்ராஹ’யத்ர ருசிரிதி’. ருசிஷ்ரத்தயோஃ கார்யகாரணபாவோந்வயவ்யதிரேகஸித்த இத்யர்தஃ. ருசிவ்யதிரிக்தா தத்கார்யபூதா கா ஷ்ரத்தா இத்யத்ராஹ’ஷ்ரத்தாஹீதி’.’ஷ்ரத்தா விஷ்வாஸகாங்க்ஷயோஃ’ இதி த்வராபர்யந்தவிஷ்வாஸேபி ஹி ஷ்ரத்தாஷப்தஂ நைகண்டுகாஃ படந்தி. நநு “காமஃ ஸங்கல்போ விசிகித்ஸா ஷ்ரத்தாஷ்ரத்தா தரிதிரதரிதிர்ஹ்ரீர்தீர்பீரித்யேதத்ஸர்வஂ மந ஏவ” [பரி.உ.1.5.3] இதி ஷ்ரவணாத் அந்தஃகரணதர்மேஷ்வாத்மாநமலிம்பத்ஸு ஷ்ரத்தாதிஷு குணகரிதத்வாச்ச குணதர்மத்வஸம்பவேபி கதமத்ர ஸ்வஷப்தேந தேஹிஷப்தேந ச நிர்திஷ்டப்ரத்யகாத்மநி ததந்வயோக்திஃ தத்ராஹ’வாஸநேதி’. ஷுத்தஸ்வபாவஸ்யைவாத்மநஃ கர்மமூல-குணமய-ப்ரகரிதிஸஂஸர்கோபாதிக-தர்மபூத-ஜ்ஞாநபரிணதிவிஷேஷா இத்யர்தஃ. ஷ்ரத்தாபேதேஷு ஸாத்த்விகாதிஸஂஜ்ஞாநிவேஷாய நிர்குணஸ்யாத்மநஃ கதஂ ஸத்த்வாதிமூலவாஸநாதியோகஃ இதி ஷங்காவ்யுதாஸாய ச தேஹிஷப்தஸூசிதப்ரக்ரியயா குணஸஂஸர்கஜத்வஂ விவரிணோதி’தேஷாமிதி’. யதௌஷதாதிவிஷிஷ்டதஹநாதிஸம்பந்தாத் பார்திவாதிஷு பாகஜகுணாரம்பஃ? ததாத்ரேதி பாவஃ. தத்தத்கார்யஹேதுதயா ஷாஸ்த்ரஸித்தாநாமநுபலப்த்யா நிராகரணமயுக்தமித்யபிப்ராயேணாஹ’கார்யைகநிரூபணீயா’ இதி. அதீந்த்ரியாணாமநநுபூதாநாஂ கதஂ வாஸநாஹேதுத்வஂ இத்யத்ராஹ’ஸத்த்வாதிகுணயுக்தேதி’. மூலகாரணாபேக்ஷயா ஷ்ரத்தாயாஃ ஸாத்த்விகாதிஸஂஜ்ஞாபேத இத்யாஹ’ததஷ்சேதி’. ஸாத்த்விகத்வாதித்ரைவித்யேந ஷ்ராவிதாயாஂ புநஃ’ஷ்ரரிணு’ இதி கிமுச்யதே இத்யத்ராஹ’ஸா ஷ்ரத்தா யத்ஸ்வபாவேதி’. ஸ்வரூபஸ்ய ஸாமாந்யதஸ்த்ரைவித்யஸ்ய ச விதிதத்வாதவிதிதப்ரகாரவிஷேஷாபிப்ராயேண’ஷ்ரரிணு’ இத்யுக்தம்.

———————-

3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:

பாரத-பாரதா,
ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்த படியாகவே அமைகிறது,
அயம் புருஷ: ஸ்ரத்தா மய:-மனிதன் சிரத்தை மயமானவன்,
ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை யுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளே தான் ஆகிறான்.

பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது.
மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.

விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள
மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது.
இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால்
உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது.
மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான்.
நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித்
யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை.
ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யம லோகத்துக்குச் சென்றான்.
பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது
என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான்.
இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது.
அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :

৷৷17.3৷৷ஸத்த்வம் அந்தஃகரணம்? ஸர்வஸ்ய புருஷஸ்ய அந்தஃகரண அநுரூபா ஷ்ரத்தா பவதி; அந்தஃகரணஂ யாதரிஷ குண யுக்தம்? (முக் குணம் பற்றிச் சொல்லும் பிரகரணம் -ஆகவே ஸத்வம் பத பிரயோகம் மனஸ் இந்திரியம் தேஹம் இவற்றைச் சொன்னவாறு )தத் விஷயா ஷ்ரத்தா ஜாயதே இத்யர்தஃ. ஸத்த்வ ஷப்தஃ பூர்வ உக்தாநாஂ தேஹ இந்த்ரிய அதீநாஂ ப்ரதர்ஷநார்தஃ.ஷ்ரத்தா மயஃ அயஂ புருஷஃ? ஷ்ரத்தா மயஃ ஷ்ரத்தா பரிணாமஃ; (ஸ்ரத்தா மயம் -வேறுபாடு அர்த்தத்தில் மயம் -தர்ம பூத ஞானத்தில் வேறுபாடு என்றவாறு-விளையும் பயனைக் கொண்டே இவ்வாறு சொல்லலாம் )யோ யச் ச்ரத்தஃ? யஃ புருஷோ யாதரிஷ்யா ஷ்ரத்தயா யுக்தஃ? ஸ ஏவ ஸஃ ஸ தாதரிஷ ஷ்ரத்தா பரிணாமஃ. புண்ய கர்ம விஷயே ஷ்ரத்தா யுக்தஃ சேத் புண்ய கர்ம பல ஸஂயுக்தஃ பவதி- இதி ஷ்ரத்தா ப்ரதாநஃ பல ஸஂயோக இதி உக்தஂ பவதி இதி.-

தத் ஏவ விவரிணோதி —

৷৷17.3৷৷’ஸத்த்வாநுரூபா’ இத்யத்ர ந ஸத்த்வகுண உச்யதே; ஸர்வஸ்ய புருஷஸ்ய ஷ்ரத்தாயாஸ்தததீநத்வே ராஜஸதாமஸஷ்ரத்தாவிபாகாயோகாத். ஸஹகாரித்வேந ஸத்த்வஂ ஸர்வத்ராபேக்ஷிதமிதி சேத்? ந; ரஜஸ்தமஸோரபி ததாத்வாத். த்ரைகுண்யஂ ஹி பரஸ்பராங்கபாவேந ஸ்தித்வைவ ஹி வாதபித்தகபாதிவத்ஸர்வஂ கார்யமாரபதே. அதோத்ர ஸர்வஷ்ரத்தாஸாதாரணகாரணத்வேந நிர்திஷ்டஂ ஸத்த்வஂ குணத்ரயோபஷ்டப்தமந்தஃகரணமேவேத்யாஹ’ஸத்த்வமந்தஃகரணமிதி’. ஆநுரூப்யஂ விவரிணோதி’அந்தஃகரணஂ யாதரிஷகுணயுக்தமிதி’. யத்விஷயருசிஜநகவாஸநோத்தம்பகஸத்த்வாதியுக்தமித்யர்தஃ. பூர்வஂ’தேஹிநாஂ ஸா ஸ்வபாவஜா’ [17.2] இத்யுக்தம்? இஹ த்வந்தஃகரணஹேதுகத்வமுச்யதே? ததேதந்ந வைகல்பிகஂ? ஸித்தே ததயோகாத்; நாபி புருஷபேதேந விகல்பஃ? ஸர்வஸ்யேத்யுக்தேஃ; நாபி ஸமுச்சயஃ? நைரபேக்ஷ்யப்ரதீதேரித்யத்ராஹ — ‘ஸத்த்வஷப்த’ இதி. ஸாமக்ரீமத்யபாதிஷு தத்ரதத்ராந்யதமநிர்தேஷோ நாநுபபந்ந இதி பாவஃ.’ஷ்ரத்தாமயஃ’ இத்யத்ர மயடஃ ஸ்வார்திகத்வே நிஷ்ப்ரயோஜநத்வாத்ப்ராசுர்யாத்யர்தத்வேபி ப்ரகரிதாநுபயோகாச்ச்ரத்தாபலாந்வயவிவக்ஷயா விகாரார்தத்வமாஹ’ஷ்ரத்தாபரிணாம’ இதி. ஏவஂ ஸாமாந்யேந ஷ்ரத்தாஜந்யபலஸம்பந்தித்வமுக்தம்; தத்ர’யோ யச்ச்ரத்தஃ’ இத்யாதிநா ஷ்ரத்தாவிஷேஷவதஃ பலவிஷேஷயோக உச்யத இத்யாஹ — ‘யஃ புருஷ’ இதி. ஷ்ரத்தாந்தரவைதர்ம்யத்யோதநாய யத்தச்சப்தயோஃ’யாதரிஷ்யா’ இத்யாதிநா ப்ரகாரபராமர்ஷித்வோக்திஃ.’ஆயுர்கரிதம்’ [யஜுஃ2.3.2.2] இத்யாதிவத்கார்யகாரணபாவாதிஷயவிவக்ஷயா’ஸ ஏவ ஸஃ’ இதி நிரூடோயமாரோப இத்யாஹ’ஸ தாதரிஷஷ்ரத்தாபரிணாம’ இதி. ஏதேந’ஸ ஏவ ஸஃ’ இத்யத்ர விதேயபேதாபாவாத்புநருக்திஷங்காபி பரிஹரிதா. புருஷஸ்ய நித்யத்வாத்தர்மபூதஜ்ஞாநவிகாஸாதேஷ்சேந்த்ரியத்வாரா வ்யவஸ்திதத்வாத்? தேஹாதேஷ்சாசித்பரிணாமவிஷேஷத்வாத்கிமபேக்ஷஸ்ய ஷ்ரத்தாபரிணாமத்வோக்திரித்யத்ராஹ — ‘புண்யகர்மேதி’. பலபேதபுபுத்ஸயா ஹ்யத்ர ப்ரஷ்நோதய இதி ச பாவஃ.

—————–

4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:

ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர்,
ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்),
அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர்,
ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.

ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும்
ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள்.
நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு.
அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன.
சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக
சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன.
இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று
வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும்
தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும்.
சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள்.
தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும்.
இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:

தத் ஏவ விவரிணோதி –கீழ் சொன்னவற்றையே விவரிக்கிறார்

৷17.4৷৷ஸத்த்வ குண ப்ரசுராஃ ஸாத்த்விக்யா ஷ்ரத்தயா யுக்தா தேவாந் யஜந்தே.-துஃக அஸஂபிந்ந உத்கரிஷ்ட ஸுக ஹேது பூத தேவ யாக விஷயா ஷ்ரத்தா ஸாத்த்விகீ இதி உக்தஂ பவதி.- (பரம ஸாத்விகர் தேவதேவனைப் பற்றுவார்கள் -அவனைப் பற்றி இங்கு இல்லையே )ராஜஸா ஜநா யக்ஷ ரக்ஷாஂஸி யஜந்தே. -அந்யே தாமஸாஃ ஜநாஃ ப்ரேதாந் பூத கணாந் யஜந்தே.-துஃக ஸஂபிந்ந அல்ப ஸுக ஜநநீ ராஜஸீ ஷ்ரத்தாஃ? துஃக ப்ராயா அத்யல்ப ஸுக ஜநநீ தாமஸீ இத்யர்தஃ.

ஏவஂ ஷாஸ்த்ரீயேஷு ஏவ யாகாதிஷு ஷ்ரத்தா யுக்தேஷு குணதஃ பல விஷேஷஃ. அஷாஸ்த்ரீயேஷு தாந தபோ யாக ப்ரபரிதிஷு மத் அநுஷாஸந விபரீதத்வேந ந கஷ்சித் அபி ஸுக லவஃ. அபி து அநர்த ஏவ இதி ஹரிதி நிஹிதஂ வ்யஞ்ஜயந் ஆஹ —

৷৷17.4৷৷ப்ரக்ராந்தஷ்ரத்தாயாஃ ஸாத்த்விகத்வாதிவிபாகோநந்தரஂ ஸாத்த்விகராஜஸதாமஸஷ்ரத்தேயைஃ ப்ரதர்ஷ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ததேவ விவரிணோதீதி’. தத் பலவிஷேஷணாநாஂ ஷ்ரத்தாவிஷேஷாணாஂ ஷ்ரத்தாவிஷேஷநிபந்தநத்வமித்யர்தஃ. புருஷஸ்ய ஸத்த்வாதயோ ஹ்யுபசீயமாநாஃ ஸ்வாநுரூபே விஷயே ஷ்ரத்தாஂ ஜநயந்தீத்யபிப்ராயேணாஹ’ஸத்த்வகுணப்ரசுரா’ இதி. ஸர்வேஷு த்ரைகுண்யஸஂஷ்ரிதேஷு கேநசித்விஷேஷேண நிர்தேஷஸ்தத்ப்ராசுர்யாத். தத்ர ஸாத்த்விக்யா ஷ்ரத்தயேதி புருஷஸ்ய ஸாத்த்விகத்வகதநேந அர்தஸித்தஹேதுகதநம். ஷ்ரத்தாயா ஏவ ஸ்வரூபேண நிர்திஷ்டத்வாத்’தாஂ ஷ்ரரிணு’ இதி ஷ்ரத்தாஸ்வபாவோ ஹி ஜ்ஞாபயிதுஂ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ’துஃகாஸம்பிந்நேதி’. ஆராத்யஸாயுஜ்யாதிர்ஹி ஆராதநாநாஂ பலமித்யபிப்ராயேண துஃகாஸம்பிந்நத்வாதிகதநம். ஏவமுத்தரயோரபி பாவ்யம். தாமஸாநாமிதரேப்யோத்யந்தவைதர்ம்யஜ்ஞாபநாயாந்யஷப்தஃ. பூதகணா ருத்ரபார்ஷதாதயஃ.

———————

5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:

யே ஜநா:-எந்த மக்கள்,
அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி,
தம்ப அஹங்கார ஸம்யுக்தா: – டம்பமும் அகங்காரமுமுடையராய்,
காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய்,
கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.

(சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும்
விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.

ஏவஂ ஷாஸ்த்ரீயேஷு ஏவ யாகாதிஷு ஷ்ரத்தா யுக்தேஷு குணதஃ பல விஷேஷஃ. அஷாஸ்த்ரீயேஷு தாந தபோ யாக ப்ரபரிதிஷு மத் அநுஷாஸந விபரீதத்வேந ந கஷ்சித் அபி ஸுக லவஃ. அபி து அநர்த ஏவ இதி ஹரிதி நிஹிதஂ வ்யஞ்ஜயந் ஆஹ –(ஸாஸ்த்ரம் படி -முக்குண மய சேதனர் ஸ்ரத்தை யுடன் செய்பவருக்கு பலம் கீழே சொல்லி-ஸாஸ்த்ரம் விதிக்காத -ஆணையை மீறி விபரீதமாக இருப்பதால் சுக லேசமும் கிட்டாது
அது மட்டும் அல்ல அநர்த்தமே கிட்டும் -திரு உள்ளக் கருத்தை நன்கு விளக்குகிறான் )

৷৷17.5৷৷அஷாஸ்த்ர விஹிதம் அதி கோரம் அபி தபோ யே ஜநாஃ தப்யந்தே? (யாகம் பண்ணுவரைப் பற்றி கேள்வி -இங்கு பதில் தபஸ் -யஜனம் சப்தம் யாகம் தபஸ் ஹோமம் அனைத்தையும் குறிக்கும் )ப்ரதர்ஷநார்தம் இதம்? அஷாஸ்த்ர விஹிதஂ பஹு ஆயாஸஂ யாகாதிகஂ யே குர்வதே? தே தம்ப அஹங்கார ஸஂயுக்தாஃ காம ராக பலாந்விதாஃ ஷரீரஸ்தஂ பரிதிவ்யாதி பூத ஸமூஹஂ கர்ஷயந்தோ மத் அம்சபூதம் ஜீவஂ ச அந்தஃஷரீரஸ்தஂ கர்ஷயந்தோ யே தப்யந்தே யாகாதிகஂ ச குர்வதே? தாந் ஆஸுர நிஷ்சயாந் வித்தி.

(மாம் -எனக்கு அம்சமான ஜீவாத்மாவை வருந்துகிறார்கள் -சுக துக்கம் அனுபவிக்கும் ஆத்மாவைத் தான் வருத்தப்படுத்த வைக்க முடியும்
பரமாத்மா வருந்துவது தனது இச்சையால் -பர துக்க அஸஹிஷ்ணுதவத்தாலே தானே-அநஸ்யன் அந்நியன் அவன் -உண்ணாமல் உள்ளே உறைகிறான் )

৷৷17.5৷৷ஏவமர்தாத்ப்ரஷ்நஸ்ய நிஷேதஃ கரிதஃ; அத கண்டோக்த்யேத்யபிப்ராயேணாஹ — ‘ஏவமிதி’.’ந ஸ ஸித்திம்’ [16.23] இத்யாதிப்ராகுக்தஸ்மாரணாய’ந கஷ்சிதபி ஸுகலவ’ இத்யுக்தம்.’அபித்வநர்த ஏவேத்யநேந’ பூர்வோக்தநரகபதநஸ்மாரணம். ப்ரஷ்நவாக்யகதஷ்ரத்தாந்விதத்வாநுபாஷணவிவக்ஷயா தத்கார்யாதிப்ரயாஸஜ்ஞாபநபரோ கோரஷப்த இத்யபிப்ராயேணாஹ’அதிகோரமபீதி’. நநு’யஜந்தே ஷ்ரத்தயாந்விதாஃ’ [9.23] இதி யாகவிஷயே ப்ரஷ்நே தப்யந்த இதி தபஸோத்தரஂ கதஂ ஸங்கச்சதே இத்யத்ராஹ’ப்ரதர்ஷநார்தமிதமிதி’. ஸங்க்ராஹகாகாரஂ தர்ஷயந் பலிதமாஹ’அஷாஸ்த்ரவிஹிதமிதி’. வேதபாஹ்யாகமோக்தஂ வைதிகமப்யநதிகாரிபிர்தேஷகாலத்ரவ்யக்ரியாதிநியமாநாதரேணாயதாநுஷ்டிதஂ சாஷாஸ்த்ரவிஹிதம். தாருணபர்யாயகோரஷப்தாபிப்ரேதமாஹ’பஹ்வாயாஸமிதி’.’யாகாதிகமித்யநேந’ ப்ரஷ்நேபி யாகக்ரஹணஂ ப்ரதர்ஷநார்தமிதி ஜ்ஞாபிதம். அத ஏவ ஹி ப்ரஷ்நோத்தரயோரேகவிஷயத்வம். ஷாஸ்த்ரைரசோதிதாநாஂ சோதகாந்தரமுச்யதே — ‘தம்பாஹங்காரஸஂயுக்தா’ இத்யாதிநா. பலமத்ர காமராகயுக்தத்வாதஸாத்த்விகம்.’பலஂ பலவதாஂ சாஹஂ காமராகவிவர்ஜிதம்’ [7.11] இதி ஹி ப்ராகுக்தம். ந கேவலஂ பரத்ர நரகம்; அபித்விஹாபி காயகர்ஷநமித்யபிப்ராயேண ஷரீரஸ்தபூதஸமூஹகர்ஷநோக்திஃ.’அந்தர்யாம்யமரிதஃ’ [பரி.உ.3.7.3 — 23] “அநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி” [முஂ.உ.3.1.1]’ந ஸ்தாநதோபி பரஸ்யோபயலிங்கஂ ஸர்வத்ர ஹி’ [ப்ர.ஸூ.3.2.11] இத்யாதிபிஃ பரமாத்மநஃ ஸ்வரூபதோ தர்மதோ வா கர்ஷநாஸம்பவாத். ஸம்பவே ச ஷாஸ்த்ரவிஹிதோபவாஸாதிபிரபி ப்ரஸங்காச்சரீரகர்ஷநேந ச ஷரீரிணாஂ க்ஷேத்ரஜ்ஞாநாஂ ஜ்ஞாநஸுகாதிஸங்கோசரூபஸ்ய கர்ஷநஸ்ய ஷ்ருதிஸ்மரிதிலோகஸித்தத்வாத்’அந்தஷ்ஷரீரஸ்தம்’ இத்யநேந ஷரீராவச்சிந்நக்ஷேத்ரஜ்ஞத்வஸூசநாத்’க்ஷேத்ரஜ்ஞஂ சாபி மாஂ வித்தி’ [13.3]’மமைவாஂஷஃ’ [15.7] இதி ப்ராகுக்தப்ரக்ரியயா ஸர்வஷரீரகபரமாத்மவிஷேஷணாஂஷபூதஜீவவிவக்ஷயாத்ர மாமிதி நிர்தேஷ இத்யாஹ’மதஂஷபூதஂ ஜீவமிதி’. மச்சரீரபூதஜீவபீடநஂ மத்பீடநதுல்யமிதி தோஷாதிஷயஸூசநார்தோயமுபசாரஃ. ஷாஸ்த்ரோல்லங்கநேநாத்மபீடநரூபமபி பாபமேஷாமாயாதமித்யபிப்ராயஃ. யஜ்ஞஸ்ய ஸ்வதோ யாஜ்யபாவநத்வாச்சாஸ்த்ரீயப்ரகாரவிரஹேபி நாத்யந்தவிகலதா; தபஸஸ்து ஸ்வதஃ ஸர்வகர்ஷநதயா ஷாஸ்த்ரீயப்ரகாராபாவே பாவநத்வஂ ந ஸ்யாதிதி ஹைதுகப்ராயாணாஂ விபாகஂ ப்ரதிக்ஷேப்துமாஹ’யாகாதிகஂ சேதி’. ஆஸுரோ நிஷ்சயோ யேஷாஂ தேத்ராஸுரநிஷ்சயாஃ; தத்ர தத்திதஸ்யேஹ ஸம்பந்தமாத்ரபரதாமாஹ’அஸுராணாமிதி’. ததபிப்ரேதநிஷ்சயஸ்ய விஷேஷஂ வ்யஞ்ஜயிதுமாஹ’அஸுராஹீதி’. ஆஸுரநிஷ்சயத்வக்யாபநஂ ப்ராகுக்தாநர்தபர்யவஸாநப்ரகாஷநாயேத்யாஹ’மதாஜ்ஞாவிபரீதகாரித்வாதிதி’.’ஆஸுரநிஷ்சயாந்’ இத்யேதாவதா கதமயமர்தஃ ஸித்த்யேத் இத்யத்ராஹ — ‘பூர்வமேவேதி’.

—————–

6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந்

ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும்,
அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ – அகத்திலுள்ள என்னையும்,
கர்ஷயந்த:-வருத்துகிறார்கள்,
தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள்,
ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.

இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள
என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்;
கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது.
சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள்.
மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காதது
போன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை.
இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார்.
சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது.
இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.

৷৷17.6৷৷அஷாஸ்த்ரவிஹிதம் அதி கோரம் அபி தபோ யே ஜநாஃ தப்யந்தே? ப்ரதர்ஷநார்தம் இதம்? அஷாஸ்த்ரவிஹிதஂ பஹ்வாயாஸஂ யாகாதிகஂ யே குர்வதே? தே தம்பாஹங்காரஸஂயுக்தாஃ காமராகபலாந்விதாஃ ஷரீரஸ்தஂ பரிதிவ்யாதிபூதஸமூஹஂ கர்ஷயந்தோ மதஂஷபூதஂ ஜீவஂ ச அந்தஃஷரீரஸ்தஂ கர்ஷயந்தோ யே தப்யந்தே யாகாதிகஂ ச குர்வதே? தாந் ஆஸுரநிஷ்சயாந் வித்தி.

அஸுராணாஂ நிஷ்சயஃ ஆஸுரோ நிஷ்சயஃ? அஸுரா ஹி மதாஜ்ஞாவிபரீதகாரிணஃ; மதாஜ்ஞாவிபரீதகாரித்வாத் தேஷாஂ ஸுகலவஸம்பந்தோ ந வித்யதே. அபி து அநர்தவ்ராதே பதந்தி இதி பூர்வம் ஏவ உக்தம்.’பதந்தி நரகேஷுசௌ’ (கீதா 16.16) இதி.

அத ப்ரகரிதம் ஏவ ஷாஸ்த்ரீயேஷு யஜ்ஞாதிஷு குணதோ விஷேஷஂ ப்ரபஞ்சயதி; தத்ர அபி ஆஹாரமூலத்வாத் ஸத்த்வாதிவரித்தேஃ? ஆஹாரத்ரைவித்யஂ ப்ரதமம் உச்யதே.’அந்நமயஂ ஹி ஸோம்ய மநஃ’ (சா0 உ0 6.5.4) ஆஹாரஷுத்தௌ ஸத்த்வஷுத்திஃ’ (சா0 உ0 7.26.2) இதி ஹி ஷ்ரூயதே.

৷৷ 17.6৷৷ஏவமர்தாத்ப்ரஷ்நஸ்ய நிஷேதஃ கரிதஃ; அத கண்டோக்த்யேத்யபிப்ராயேணாஹ — ‘ஏவமிதி’.’ந ஸ ஸித்திம்’ [16.23] இத்யாதிப்ராகுக்தஸ்மாரணாய’ந கஷ்சிதபி ஸுகலவ’ இத்யுக்தம்.’அபித்வநர்த ஏவேத்யநேந’ பூர்வோக்தநரகபதநஸ்மாரணம். ப்ரஷ்நவாக்யகதஷ்ரத்தாந்விதத்வாநுபாஷணவிவக்ஷயா தத்கார்யாதிப்ரயாஸஜ்ஞாபநபரோ கோரஷப்த இத்யபிப்ராயேணாஹ’அதிகோரமபீதி’. நநு’யஜந்தே ஷ்ரத்தயாந்விதாஃ’ [9.23] இதி யாகவிஷயே ப்ரஷ்நே தப்யந்த இதி தபஸோத்தரஂ கதஂ ஸங்கச்சதே இத்யத்ராஹ’ப்ரதர்ஷநார்தமிதமிதி’. ஸங்க்ராஹகாகாரஂ தர்ஷயந் பலிதமாஹ’அஷாஸ்த்ரவிஹிதமிதி’. வேதபாஹ்யாகமோக்தஂ வைதிகமப்யநதிகாரிபிர்தேஷகாலத்ரவ்யக்ரியாதிநியமாநாதரேணாயதாநுஷ்டிதஂ சாஷாஸ்த்ரவிஹிதம். தாருணபர்யாயகோரஷப்தாபிப்ரேதமாஹ’பஹ்வாயாஸமிதி’.’யாகாதிகமித்யநேந’ ப்ரஷ்நேபி யாகக்ரஹணஂ ப்ரதர்ஷநார்தமிதி ஜ்ஞாபிதம். அத ஏவ ஹி ப்ரஷ்நோத்தரயோரேகவிஷயத்வம். ஷாஸ்த்ரைரசோதிதாநாஂ சோதகாந்தரமுச்யதே — ‘தம்பாஹங்காரஸஂயுக்தா’ இத்யாதிநா. பலமத்ர காமராகயுக்தத்வாதஸாத்த்விகம்.’பலஂ பலவதாஂ சாஹஂ காமராகவிவர்ஜிதம்’ [7.11] இதி ஹி ப்ராகுக்தம். ந கேவலஂ பரத்ர நரகம்; அபித்விஹாபி காயகர்ஷநமித்யபிப்ராயேண ஷரீரஸ்தபூதஸமூஹகர்ஷநோக்திஃ.’அந்தர்யாம்யமரிதஃ’ [பரி.உ.3.7.3 — 23] “அநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி” [முஂ.உ.3.1.1]’ந ஸ்தாநதோபி பரஸ்யோபயலிங்கஂ ஸர்வத்ர ஹி’ [ப்ர.ஸூ.3.2.11] இத்யாதிபிஃ பரமாத்மநஃ ஸ்வரூபதோ தர்மதோ வா கர்ஷநாஸம்பவாத். ஸம்பவே ச ஷாஸ்த்ரவிஹிதோபவாஸாதிபிரபி ப்ரஸங்காச்சரீரகர்ஷநேந ச ஷரீரிணாஂ க்ஷேத்ரஜ்ஞாநாஂ ஜ்ஞாநஸுகாதிஸங்கோசரூபஸ்ய கர்ஷநஸ்ய ஷ்ருதிஸ்மரிதிலோகஸித்தத்வாத்’அந்தஷ்ஷரீரஸ்தம்’ இத்யநேந ஷரீராவச்சிந்நக்ஷேத்ரஜ்ஞத்வஸூசநாத்’க்ஷேத்ரஜ்ஞஂ சாபி மாஂ வித்தி’ [13.3]’மமைவாஂஷஃ’ [15.7] இதி ப்ராகுக்தப்ரக்ரியயா ஸர்வஷரீரகபரமாத்மவிஷேஷணாஂஷபூதஜீவவிவக்ஷயாத்ர மாமிதி நிர்தேஷ இத்யாஹ’மதஂஷபூதஂ ஜீவமிதி’. மச்சரீரபூதஜீவபீடநஂ மத்பீடநதுல்யமிதி தோஷாதிஷயஸூசநார்தோயமுபசாரஃ. ஷாஸ்த்ரோல்லங்கநேநாத்மபீடநரூபமபி பாபமேஷாமாயாதமித்யபிப்ராயஃ. யஜ்ஞஸ்ய ஸ்வதோ யாஜ்யபாவநத்வாச்சாஸ்த்ரீயப்ரகாரவிரஹேபி நாத்யந்தவிகலதா; தபஸஸ்து ஸ்வதஃ ஸர்வகர்ஷநதயா ஷாஸ்த்ரீயப்ரகாராபாவே பாவநத்வஂ ந ஸ்யாதிதி ஹைதுகப்ராயாணாஂ விபாகஂ ப்ரதிக்ஷேப்துமாஹ’யாகாதிகஂ சேதி’. ஆஸுரோ நிஷ்சயோ யேஷாஂ தேத்ராஸுரநிஷ்சயாஃ; தத்ர தத்திதஸ்யேஹ ஸம்பந்தமாத்ரபரதாமாஹ’அஸுராணாமிதி’. ததபிப்ரேதநிஷ்சயஸ்ய விஷேஷஂ வ்யஞ்ஜயிதுமாஹ’அஸுராஹீதி’. ஆஸுரநிஷ்சயத்வக்யாபநஂ ப்ராகுக்தாநர்தபர்யவஸாநப்ரகாஷநாயேத்யாஹ’மதாஜ்ஞாவிபரீதகாரித்வாதிதி’.’ஆஸுரநிஷ்சயாந்’ இத்யேதாவதா கதமயமர்தஃ ஸித்த்யேத் இத்யத்ராஹ — ‘பூர்வமேவேதி’.,

———————

இன்னும் எவைகளைக் கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது :

7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு

ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும்,
த்ரிவித: பவதி – மூன்று வகைப்படுகிறது,
ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.

ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும்
அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது.
முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.

அத ப்ரகரிதம் ஏவ ஷாஸ்த்ரீயேஷு யஜ்ஞாதிஷு குணதோ விஷேஷஂ ப்ரபஞ்சயதி; தத்ர அபி ஆஹார மூலத்வாத் ஸத்த்வாதிவரித்தேஃ? ஆஹார த்ரைவித்யஂ ப்ரதமம் உச்யதே.’அந்ந மயஂ ஹி ஸோம்ய மநஃ’ (சா0 உ0 6.5.4) ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ ஷுத்திஃ’ (சா0 உ0 7.26.2) இதி ஹி ஷ்ரூயதே.

৷৷17.7৷৷ஆஹாரஃ அபி (யுக்த சமுச்சயம்-கீழே ஸ்ரத்தை மூவகை ஸ்ரத்தை யுடையவர்களும் மூவகைப் பட்டமை சொல்லிற்றே )ஸர்வஸ்ய ப்ராணி ஜாதஸ்ய ஸத்த்வாதி குண த்ரய அந்வயேந த்ரிவிதஃ ப்ரியோ பவதி. (ஆஹார சுத்தியால் ஸத்வ குணம் வளரும் -வளர வளர ஸாத்விக ஆகாரத்தில் ப்ரீதி யுண்டாகும் என்றபடி )ததா ஏவ யஜ்ஞஃ அபி த்ரிவிதஃ? ததா தபோ தாநஂ ச. தேஷாஂ பேதம் இமஂ ஷ்ரரிணு — தேஷாம் ஆஹார யஜ்ஞ தபோ தாநாநாஂ ஸத்த்வாதி குண பேதேந இமம் உச்யமாநஂ பேதஂ ஷ்ரரிணு.

(கடித்து உறிஞ்சி நக்கி பருகி -நான்கு வகை உணவு பார்த்தோம் முன்பு -அவை ஒவ்வொன்றிலும் இந்த ஸத்வ ரஜஸ் தாமஸ உணவு வகைகள் உண்டு)

৷৷17.7৷৷ஏவமுத்தரே ப்ரதிஷேதரூபேர்ததஃ கண்டோக்த்யா ச தத்தே புநராஹாராதித்ரைவித்யவர்ணநமபுபுத்ஸிதோபந்யாஸஃ ஸ்யாதித்யத்ராஹ — ‘அத ப்ரகரிதமேவேதி’.’அயமபிப்ராயஃ’ — அஷாஸ்த்ரீயேஷு ஸத்த்வாதிநிஷ்டாமூலபலபேத புபுத்ஸிதே ஷாஸ்த்ரீயேஷ்வேவாயமிதி ப்ரத்யுக்தம். தத்ர ஷ்ரத்தாதத்வதாஂ ஷ்ரத்தேயாநாஂ ச குணதோ விபாக உபந்யஸ்தஃ. தச்ச்ரவணாதேவ தத்துல்யயோகக்ஷேமேஷு ஸர்வேஷு புபுத்ஸா பீபத்ஸோர்ஜாயதே. அதஏவ தத்பேதோபந்யாஸஃ — இதி.’ப்ரபஞ்சயதீத்யநேந’ பௌநருக்த்யஷங்காபி பரிஹரிதா. யஜ்ஞதபஃப்ரபரிதிஷு ஷாஸ்த்ரீயேஷு திஷ்டத்ஸு ராகப்ராப்தஸ்யாஹாரஸ்ய ப்ரதமோபதேஷஃ கேநாபிப்ராயேணேத்யத்ராஹ’தத்ரேதி’.’வரித்திஃ ஸமாநைஃ ஸர்வேஷாஂ விபரீதைர்விபர்யயஃ’ [அ.ஹரி.ஸூ.1.14] இத்யாயுர்வேதோக்தந்யாயஸஞ்சாராதாப்யாயகத்ரவ்யகுணாநுஸாரேணாந்தஃகரணாதேஃ ஸத்த்வாதிவரித்திஃ ஷ்ரௌதீத்யபிப்ராயேண’அந்நமயமிதி’. ஆஹாரஸ்ய ஸத்த்வஸ்ய சாத்ர ரஜஸ்தமோராஹித்யஂ ஷுத்திஃ. அபிஷப்தஃ ப்ராகுக்தஷ்ரத்தேயதேவதாதிபேதவத்ஸாத்த்விகாதிவிபாகாநுகர்ஷணார்தஃ.’பசாம்யந்நஂ சதுர்விதம்’ [15.14] இதி ப்ராகுக்தசாதுர்வித்யாவிரோதாய சதுர்விதேப்யேதத்குணகரிதத்ரைவித்யமிஹோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ஸத்த்வாதிகுணத்ரயாந்வயேநேதி’.’த்ரிவிதஃ’ இதி ஸாமாந்யதோ விபாகேபி விஷேஷதோ வக்ஷ்யமாணாகாராபேக்ஷயேதமுச்யத இத்யாஹ’ஸத்த்வாதிபேதேநேமமிதி’. வக்ஷ்யமாணஸ்யாத்ராஸத்த்யா வர்தமாநவ்யபதேஷ இத்யாஹ’உச்யமாநமிதி’. குணாநாஂ ஸ்வவிஷிஷ்டாநுபவஜநிதவாஸநாத்வாரா ஸ்வாநுரூபவிஷயருசிஜநநாத்தத்ததாஹாராணாஂ தத்தத்குணவிஷிஷ்டப்ரியத்வம்.

—————–

8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:

ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி,
விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின,
ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள்,
ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன,
குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.

பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும்.
சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது.
மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது.
அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு.
காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி
தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும்
உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.

பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.

৷৷17.8৷৷ஸத்த்வ குணோபேதஸ்ய ஸத்த்வ மயா ஆஹாராஃ ப்ரியா பவந்தி. ஸத்த்வ மயாஃ ச ஆஹாரா ஆயுர் விவர்தநாஃ (புருஷார்த்தம் தேட ஆயுஸ் வேண்டுமே )புநஃ அபி ஸத்த்வஸ்ய விவர்தநாஃ. ஸத்த்வம் அந்தஃகரணம்? அந்தஃகரண கார்யஂ ஜ்ஞாநம் இஹ ஸத்த்வ ஷப்தேந உச்யதே.’ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ (கீதா 14.17) இதி ஸத்த்வஸ்ய ஜ்ஞாந விவரித்தி ஹேது வசநாத். -ஆஹாரஃ அபி ஸத்த்வ மயோ ஜ்ஞாந விவரித்தி ஹேதுஃ.–ததா பலாரோக்யயோஃ அபி விவர்தநாஃ? ஸுக ப்ரீத்யோஃ அபி விவர்தநாஃ. பரிணாம காலே ஸ்வயம் ஏவ ஸுகஸ்ய விவர்தநாஃ? ததா ப்ரீதி ஹேது பூத கர்மாரம்ப த்வாரேண ப்ரீதி வர்தநாஃ;ரஸ்யாஃ மதுர ரஸோபேதாஃ? ஸ்நிக்தாஃ ஸ்நேஹ யுக்தாஃ? ஸ்திராஃ ஸ்திர பரிணாமாஃ? ஹரித்யாஃ ரமணீய வேஷாஃ? ஏவஂ விதாஃ ஸத்த்வ மயா ஆஹாராஃ? ஸாத்த்விகஸ்ய புருஷஸ்ய ப்ரியாஃ.

৷৷17.8৷৷ஆயுர்விவர்தநத்வாதய ஆஹாரகுணாஃ கேசிதாயுர்வேதாதவகந்தவ்யாஃ? கேசிச்சாஸ்த்ரநிரபேக்ஷாஃ ப்ரத்யக்ஷத ஏவ ஸித்தாஃ; பூர்வமேவ ஸத்த்வவிவரித்த்யா ஹி ஸாத்த்விகாஹாரருசிரித்யபிப்ராயேணாஹ — ‘புநரபீதி’. ஆயுஷஃ ஸர்வபுருஷார்தநிஷ்பாதநோபயோகித்வேந ப்ரதமக்ரஹணம்; ஸத்த்வஸ்ய து விஷேஷதோ முமுக்ஷோரபேக்ஷிதத்வாத்ததநந்தரோக்திஃ. “ஆஹாரஷுத்தௌ ஸத்த்வஷுத்திஃ ஸத்த்வஷுத்தௌ த்ருவா ஸ்மரிதிஃ” [சாஂ.உ.7.26.2] இதி ஷ்ருதேருபபரிஂஹணார்தத்வாதாஹாரஸாத்யஸத்த்வவிவரித்திஜ்ஞாநபர்யந்தேத்யபிப்ராயேண ஜ்ஞாநே ஸத்த்வஷப்தமுபசாரயிதுஂ தத்காரணே தாவதவதாரயதி — ‘ஸத்த்வமந்தஃகரணமிதி’.’த்ரவ்யாஸுவ்யவஸாயேஷு ஸத்த்வமஸ்த்ரீ து ஜந்துஷு’ [அமரஃ3.3.212] இதி ஜ்ஞாநவிஷேஷே ச ஸத்த்வஷப்தஃ ப்ரயுக்தசர இத்யபிப்ராயேணாஹ — ‘அந்தஃகரணகார்யஂ ஜ்ஞாநமிதி’.’இஹ’ — ஆஹாரஷுத்திஷ்ருத்யுபபரிஂஹணதஷாயாமித்யர்தஃ. யதா தத்தத்த்ரவ்யகதாநாஂ ரஸாதீநாஂ ஷரீரதாத்வாதிபோஷகத்வேந ஷாஸ்த்ராபிஹிததத்தத்த்ரவ்யாணாமபி ததா வ்யபதேஷஃ; ததேஹாபி ஸத்த்வகுணஸ்ய ஜ்ஞாநவிவரித்திஹேதுத்வே ததாஷ்ரயஸ்யாஹாரத்ரவ்யஸ்யாபீத்யபிப்ராயேணாஹ — ‘ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநமிதி’. பலாரோக்யயோஃ ஸுகப்ரீத்யோஷ்ச நிரந்தரபாடஃ ஸமுச்சித்ய ப்ரவரித்த்யா பரஸ்பராவிநாபாவவிவக்ஷயேத்யபிப்ராயேண’பலாரோக்யயோஃ ஸுகப்ரீத்யோரிதி’ த்வந்த்வவிபஜநம். பலமிஹ ப்ராணாக்ந்யோருபசயஃ; ஆரோக்யஂ தாதுஸாம்யாதி. கர்மதோஷாக்நிதாதுவைஷம்யேண ஹி ரோகாஃ ப்ராதுஷ்பதந்தி. தஸ்ய ரஸ்யத்வஹரித்யத்வாப்யாஂ தாதாத்விகஸுகஜநகத்வஸித்தேஸ்தத்பௌநருக்த்யபரிஹாராய ஸுகவர்தகத்வஂ’பரிணாமகால’ இதி விஷேஷிதம். ப்ரீதிவர்தகத்வாத்பேதப்ரதர்ஷநாய’ஸ்வயமேவேத்யத்வாரகத்வோக்திஃ’. யதோந்மாதாதிஹேதுபூதாநி த்ரவ்யாணி பக்ஷிதாநி லோகோத்வேகாதிஜநககர்மத்வாரா புருஷஸ்யாப்ரீதிஂ வர்தயந்தி; ததா ஸத்த்வஹேதுபூதாந்யபி மங்கலேஷு லோகோபகாரகேஷு பரலோகாதிஹிதேஷு ச கர்மஸு ப்ரசோத்ய தத்த்வாரேண ப்ரீதிஂ ஜநயந்தீத்யபிப்ராயேணாஹ’ப்ரீதிஹேதுபூதகர்மாரம்பத்வாரேணேதி’.’கட்வம்ல — ‘ இத்யதிந

——————–

9. கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா:

கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும்,
அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன,
ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன,
ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர்,
து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன –
இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.

நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது;
வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள்.
ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.

৷৷17.9৷৷கடு ரஸாஃ (சுக்கு மிளகு திப்பிலி துவர்ப்பு )அம்ல ரஸாஃ லவணோத்கடாஃ அத் யுஷ்ணாஃ அதி தீக்ஷ்ணாஃ ரூக்ஷாஃ விதாஹிநஃ ச இதி கட் வம்ல லவணாத் யுஷ்ண தீக்ஷ்ண ரூக்ஷ விதா ஹிநஃ; அதி ஷைத்யாதி தைக்ஷ்ண்யாதிநா துருபயோகாஃ தீக்ஷ்ணாஃ? ஷோஷகராஃ ரூக்ஷாஃ? தாபகரா விதாஹிநஃ? ஏவஂ விதாஃ ஆஹாரா ராஜஸஸ்ய இஷ்டாஃ. தே ச ரஜோ மயத்வாத் துஃகஷோகா மயத்வாத் துஃகஷோகா மய வர்தநாஃ ரஜோ வர்தநாஃ ச.

[17.9] ரஸாந்தராணாமஸாத்த்விகத்வேந வக்ஷ்யமாணத்வாத்தத்ப்ரயோகப்ராசுர்யாநுஸாராச்ச அத்ர ரஸஷப்தோ ரஸவிஷேஷவிஷய இத்யாஹ — ‘மதுரரஸோபேதா’ இதி. அநேந ப்ரத்யயஸ்யாத்ர ஸம்பந்தமாத்ரோபலக்ஷகதாபி தர்ஷிதா. ரஸ்யந்த இதி வா ரஸ்யாஃ. தத்ர’மதுரரஸோபேதா’ இதி காரணோக்திஃ. மாதுர்யஂ ஹி ரஸாந்தரேப்யஃ ஷரீரஸ்திதௌ விஷேஷேண ஹேதுர்பவதி. யதோக்தஂ வாக்படேந — ‘ரஸாஃ ஸ்வாத்வம்லலவணதிக்தோஷணகஷாயகாஃ. ஷட்த்ரவ்யமாஷ்ரிதாஸ்தே ச யதாபூர்வஂ பலாவஹாஃ’ [அ.ஹரி.ஸூ.1.14;15] இதி. போஜநஂ ச ஸ்வஸ்தஸ்ய மதுரரஸப்ராயதயா நியம்யதே — ‘ஷட்ரஸாந்மதுரப்ராயாந்நாதித்ருதவிலம்பிதம்’ [அ.ஹரி.ஸூ.7.36] இதி. ஸாயநாதி காலேஷு ச மதுர ஏவை கோ விதீயதே. ஏவஂ ஸ்நேஹயுக்தஆஹாரோபி ரௌக்ஷ்யவிரோதீ ரூக்ஷேண வாயுநா ஷரீரஸ்யாபி விஷராருதாஂ வாரயதீத்யப்யாயுர்வேதாவஸிதம். அத்யமாந ஆஹாரே ஸ்வரூபஸ்தைர்யஸ்யாஸம்பவாதகுணத்வாச்ச ஷரீராக்யஸங்காதஸ்தைர்யஹேதுபூதரஸருதிர மாஂஸமேதோஸ்திமஜ்ஜாஷுக்ராக்யதாதுஸப்தகரூபபரிணாமஸ்ய பலாதேஷ்ச ஸ்வஸாத்யஸ்ய சிரகாலஸ்தாயித்வலக்ஷணஂ ஸ்தைர்யஂ விவக்ஷிதமித்யாஹ — ‘ஸ்திரபரிணாமா’ இதி. உபயோகாத்பூர்வமேவ ஜுகுப்ஸநீயஸந்நிவேஷரூபவிஷேஷாதிவிரஹாத்ஸந்தர்ஷநமாத்ரேணாபி ப்ரீதிஜநகத்வமிஹ ஹரித்யத்வமித்யாஹ’ரமணீயவிஷேஷா’ இதி. யேஷு தர்மஷாஸ்த்ராயுர்வேதயோருபயோரபி ஸாங்கத்யஂ? தேஷாஂ ஸர்வேஷாமிதமுபலக்ஷணமித்யபிப்ராயேணாஹ’ஏவஂவிதா’ இதி. ஏதேந ப்ராகுக்தயுக்தாஹாரத்வஂ ச விவரிதம்.,৷৷17.9৷৷கட்வம்லஷப்தயோஸ்த்ரிகடுகதிந்திண்யாதிஷு விஷேஷதஃ ப்ரயோகாதிஹ தாவந்மாத்ரவிவக்ஷாவ்யுதாஸாயாஹ — ‘கடுரஸா அம்லரஸா’ இதி. ஸாத்த்விகஸ்யாபி வ்ரதாதிவ்யதிரிக்தகாலேஷு ருசிமாத்ரார்தலவணயோகாநுமதேஃ ஸ்வரூபதோ லவணஸ்யாஹாரத்வாஸம்பவாத்ப்ரத்யக்ஷலவணஸ்ய கோமாஂஸதுல்யதயா ஸ்புடநிஷேதாச்சாத்ர தத்வ்யதிரிக்தாபேக்ஷயா லவணஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘லவணோத்கடா’ இதி.’ஸ்நிக்தமுஷ்ணஂ (ஸாத்ம்யமல்பஂ) ச போஜநம்’ [அ.ஹரி.ஸூ.7.47] இதி கோஷ்ணஸ்ய போஜநஸ்ய விஹிதத்வாத்’அத்யுஷ்ணேதி’ விஷேஷிதம்.’கட்வாதீநாஂ விதாஹிநஃ’ இதி ப்ரமவ்யுதாஸாயாத்ர ஸமாஸோக்திஃ. தீக்ஷ்ணஸ்யாபி மரீச்யாதேஸ்தத்தத்த்ரவ்யரோசநார்தஂ மாத்ரயாநுமதேஸ்தத்ராப்யுபஸர்கஸ்யாந்வயோ தர்ஷிதஃ. உஷ்ணஸ்ய பரிதகுபாத்தத்வாதத்ர தீக்ஷ்ணஷப்தோ ந தத்பர்யாயஃ; ஆஷுகாரிஷு மரீச்யாதிஷ்வாயுர்வேதே தீக்ஷ்ணத்வமுச்யதே; அதோத்ர ப்ரயோகக்ஷணப்ரபரிதி ப்ரதிகூலதமாநி த்ரவ்யாணி தீக்ஷ்ணாநீத்யபிப்ராயேணோதாஹரதி — ‘அதிஷைத்யேதி’. ஸ்நேஹப்ரதிபக்ஷபூதோ குணோ ரௌக்ஷ்யமநுஷிஷ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ஷோஷகரா ரூக்ஷா’ இதி. வாதகோபநத்வமநேந ஸித்தம். அத்ர விதாஹிஷப்தே ப்ரகரிதிப்ரத்யயயோர்விவக்ஷிதஂ வ்யநக்தி — ‘தாபகரா’ இதி. பித்தகோபநா இத்யர்தஃ.’ஏவஂவிதா’ இதி பூர்வவத்.’தரிஷ்ணாஷோகஸமுத்பவம்’ [14.7] இத்யாதி ப்ராகுக்தஂ ஸ்மாரயதி — ‘ரஜோமயத்வாதிதி’. கடுப்ரபரிதீநாஂ துஃகாதிஹேதுத்வஂ ச ப்ராயஷோந்வயவ்யதிரேகயோக்யமாயுர்வேதவிஷோதிதஂ ச. துஃகப்ரதத்வஂ தாதுவைஷம்யாதித்வாரா; ஷோகப்ரதத்வஂ தத்பராமர்ஷஜபஷ்சாத்தாபாதிநா; ஆமயஃ காலக்ரமேண. ந கேவலமத்ரைவ தமோவத்துஃகாதிஹேதுத்வம்; அபிது பரம்பரயா பரலோகே தேஹாந்தரேபீத்யபிப்ராயேண ஸத்த்வவர்தகஸாத்த்விகாஹாரஸமாநந்யாயஸித்தமர்தமாஹ — ‘ரஜோவர்தநாஷ்சேதி’.

———————

10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்

யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது,
கதரஸம்-சுவையற்றது
பூதி – அழுகியது,
பர்யுஷிதம் ச-பழையது,
உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது,
அமேத்யம் அபி-அசுத்தம்,
தாமஸ ப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு
தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது.
மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது.
மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது.
இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன.
தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.

৷৷17.10৷৷யாதயாமஂ சிரகால அவஸ்திதம்? கதரஸஂ த்யக்த ஸ்வாபாவிக ரஸம்? பூதி துர்கந்தோ பேதம்? பர்யுஷிதஂ காலாதிபத்த்யா ரஸாந்தராபந்நம்? உச்சிஷ்டஂ குர்வாதிப்யஃ (ஆதி ஜ்யேஷ்ட பிராதா பிதா பத்ரு பரம பாகவதர் -போனகம் செய்த சேதம் தருவரேல் புனிதம் அன்றே )அந்யேஷாஂ புக்த ஷிஷ்டம்? அமேத்யம் அயஜ்ஞார்ஹம்? அயஜ்ஞஷிஷ்டம் இத்யர்தஃ; ஏவவிதஂ தமோ மயஂ போஜநஂ தாமஸ ப்ரியஂ பவதி. புஜ்யதே இத்யாஹார ஏவ போஜநம்? புநஷ்ச தமஸோ வர்தநம். அதோ ஹிதைஷிபிஃ ஸத்த்வ வரித்தயே ஸாத்த்விக ஆஹார ஏவ ஸேவ்யஃ.

(நாரதர் ஸ்ரீ மத் பாகவதம் -1-5-முன் கதை -உச்சிஷ்டம் உண்டு பாவநத்வம் பெற்ற விருத்தாந்தம் —
ஆபஸ்தம்ப ஸூத்ரம் -ஆச்சார்யர் உச்சிஷ்டம் உத்தேச்யம் -அவர் திரு குமாரர் உச்சிஷ்டம் த்யாஜ்யம்)

৷৷17.10৷৷ஸாத்த்விகராஜஸாஹாரயோர்குணகார்யகதநேபி தாமஸே குணமாத்ரகதநமதூரவிப்ரகர்ஷேண ராஜஸஸமாநகார்யத்வாத் ஸர்வேஷ்வாஹாரேஷு யாமாதிக்ரமணமாத்ரேண தோஷாபாவாத்தேஷு தேஷு த்ரவ்யேஷு யாவதா காலேந துஷ்டதா? தாவத்விவக்ஷாமாஹ — ‘யாதயாமஂ சிரகாலாவஸ்திதமிதி’. யாமஃ ஷ்ரேஷ்டோஂஷஃ; யதா’கரிதாத்பரஂ மண்டமிவாதிஸூக்ஷ்மம்’ இதி கேசித். தேந நிர்வீர்யத்வமுக்தஂ பவதி. ததபி’சிரகாலாவஸ்திதமித்யநேந’ அர்தஸித்தம். அம்மயேஷு பரிதிவீமயேஷு ச ஆஹாரேஷு தத்தத்பாகபேதேநாபி கதாசிதபி ஸர்வரஸத்யாகாபாவாத்தத்தத்ரவ்யஸ்வபாவதயாநுஷிஷ்டரஸத்யாகேந ரஸாந்தராபத்திரிஹ கதரஸஷப்தேந,விவக்ஷிதேத்யாஹ’த்யக்தஸ்வாபாவிகரஸமிதி’. ஏதேந கதரஸஷப்தேந நிர்வீர்யஸ்யோக்ததயா’யாதயாமஂ மந்தபக்வம்’ இதி வ்யாக்யா நிரஸ்தா.யத்யபி பூதிஷப்தோஸாத்த்விகதயா பகவச்சாஸ்த்ராதிஸித்தே கரஞ்ஜாதித்ரவ்யேபி ப்ரயுஜ்யதே; ததாபி அத்ர த்ரவ்யவிஷேஷோபாதாநப்ரகரணாபாவாத்குணாதிமுகேந ஸர்வாஹாரோபலக்ஷணப்ரகரணாச்சாத்ர பூதிஷப்தேந ஹேயதயா லோகஷாஸ்த்ரப்ரஸித்தகுணவிவக்ஷாமாஹ — ‘துர்கந்தோபேதமிதி’. காலாதிபத்திமாத்ரஸ்ய யாதயாமஷப்தேந க்ரஹணாத் ரஸத்யாகஸ்ய’கதரஸம்’ இத்யுக்தத்வாத் யேஷு காலாதிபத்தௌ தோஷஃ? க்ஷீராதிஷ்விவாதஞ்சநாதிபிஷ்ச ரஸாந்தராபத்திஃ? தத்ர காலாதிக்ரமணமாத்ரேண ரஸாந்தராபந்நத்வமிஹ விவக்ஷிதமித்யாஹ — ‘காலாதிபத்த்யாரஸாந்தராபந்நமிதி’. ஹேயவிகரித்யந்தராதீநாமுபலக்ஷணமிதம். அத ஏவ பக்வாநாமவிகலாநாமபி ஜலாதீநாஂ ராத்ர்யந்தரிதாநாஂ த்யாகஃ. ஏதேந யாதயாமஷப்தோத்ர ரஸாந்தராபத்திரஹிதகாலாதிக்ரமமாத்ரதுஷ்டவிஷய இதி தர்ஷிதம்.

உச்சிஷ்டவிஷேஷஸ்ய ஷாஸ்த்ராநுமதேராசார்யோச்சிஷ்டஸ்ய ச பாபவிஷேஷப்ராயஷ்சித்ததயா பவித்ரத்வேநாபி க்ரஹணாத்தத்வ்யதிரிக்தவிஷயோத்ர உச்சிஷ்டஷப்த இத்யாஹ — ‘குர்வாதிப்யோந்யேஷாமிதி’.’குர்வாதீத்யாதிஷப்தேந’ பிதுஃ ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுஃ பார்யாவிஷயே பர்துஷ்ச க்ரஹணம். யத்து “அதிதிஃ புத்ரகாமா ஸாத்யேப்யோ தேவேப்யோ ப்ரஹ்மௌதநமபசத். தஸ்யா உச்சேஷணமததுஃ. தத்ப்ராஷ்நாத். ஸா ரேதோதத்த” இத்யாதௌ உச்சேஷணப்ராஷநமாம்நாயதே; தத்ப்ரஹ்மௌதநாதிவிதிபரத்வாதந்யபரம். புக்தாவஷிஷ்டபாகபாத்ரஸ்தௌதநவிஷயத்வேப்யவிருத்தம். அப்ராப்தத்வாத்விதிபரத்வஸ்வீகாரேபி அதிதிஸாத்யதேவஸஂவ்யவஹாரமாத்ரவிஷயம். ந தாவதா அத்யதநாநாமநுஷ்டாநப்ராப்திஃ; ப்ராப்தாவபி ததாவிதகர்மநியதம். நசாத்ர விதிஸ்தத்கல்பநாவகாஷஷ்சேத்யப்ராப்திரேவ. யத்து பகவதா நாரதேந ஜாதிஸ்மரேண ப்ராசீநஷூத்ரஜந்மாநுஷ்டாநமநுஸரித்யோக்தம்’உச்சிஷ்டலேபாநநுமோதிதோ த்விஜைஃ ஸகரித்ஸ்ம புஞ்ஜே ததபாஸ்தகில்பிஷஃ’ [பாக.1.5.25] இத்யாதி; ததபி தஸ்மிந் ஜந்மநி நாரதஸ்தேஷாஂ ஷிஷ்யஃ ஷூத்ரஷ்சேதி தாதரிஷேஷ்வேவ தத்ப்ராப்நோதி; நாந்யாதரிஷேஷு. ததா ஸதி ஹி வாக்யாந்தரமபி ந விருத்யதே. ந ச வசநவிரோதே லிங்கதர்ஷநமாத்ரேணாநுஷ்டாநக்லரிப்திஃ. ப்ரதிஷேததி ஹ்யாசார்யபுத்ராதேரப்யுச்சிஷ்டம் — ‘உச்சிஷ்டாஷநவர்ஜமாசார்யவதாசார்யபுத்ரே வரித்திஃ’ [ஆ.த.1.2.7.30] இத்யாதிநா. கிமுதாந்யேஷாம் பாகவதஸ்ய து ஆசார்யவ்யதிரிக்தஸமஸ்தோச்சிஷ்டபக்ஷணேபி தீவ்ராணி ப்ராயஷ்சித்தாந்யநுஷிஷ்யந்தே. யதா ஸநத்குமாரீயஸஂஹிதாயாமுதாஹரிதமித்யாகமப்ராமாண்யே பகவத்யாமுநாசார்யைருபாத்தஂ — ‘நிர்மால்யஂ பக்ஷயித்வைவமுச்சிஷ்டமகுரோரபி. மாஸஂ பயோவ்ரதோ பூத்வா ஜபந்நஷ்டாக்ஷரஂ ஸதா. ப்ரஹ்மகூர்சஂ ததஃ பீத்வா’ இத்யாதி.

பாஷ்யே சாத்ர குருஷப்த ஆசார்யவிஷயஃ? பிதரிவிஷயோ வேத்யயுக்தம்? குருஷப்தார்தோபாத்யாயாத்யுச்சிஷ்டக்ரஹணஷாஸ்த்ராபாவாத். நச யத்கிஞ்சிதுபதேஷமாத்ரேப்யாசார்யத்வம்?’உபநீய து யஃ ஷிஷ்யஂ வேதமத்யாபயேத்த்விஜஃ. ஸகல்பஂ ஸரஹஸ்யஂ ச தமாசார்யஂ ப்ரசக்ஷதே’ [மநுஃ 2.140] இத்யாதிபிஸ்தல்லக்ஷணாத்? அந்யத்ர ப்ரயோகஸ்யோபசாராதபி ஸம்பவாத். யஷ்சோபநேதா ப்ரணவாதிமாத்ரமுபதிஷ்ய விரதஃ? யஷ்ச கேவலஂ ரஹஸ்யஷப்தநிர்திஷ்டா மோக்ஷஸாதநபூதா வித்யாஸ்தத்தச்ச்ருதிமுகேந ஷிக்ஷயதி; தயோரப்யாசார்யத்வாதிகஂ வசநபலாதங்கீக்ரியதே. உக்தஂ ச குர்வாதிலக்ஷணஂ பகவதா யாஜ்ஞவல்க்யேந — ‘ஸ குருர்யஃ க்ரியாஃ கரித்வா வேதமஸ்மை ப்ரயச்சதி. உபநீய து தத்வேதமாசார்யஃ ஸ உதாஹரிதஃ. ஏகதேஷமுபாத்யாயஃ’ [1.34;35] இதி. யத்து’ஏகாக்ஷரப்ரதாதாரமாசார்யஂ யோவமந்யதே (யோ குருஂ நாபிமந்யதே)’ [அத்ரிஸ்மரி.10] இத்யாதி? ததவமதிநிவாரணாத்யர்தமாசார்யதரிஷ்டிமாத்ரேணோச்யதே; ந தாவதா ஆசார்யத்வப்ரயுக்தஸர்வோபநிபாதஃ. யத்யப்யாசார்யஷப்தோ நிருக்த்யாத்யநுஸாராதஸ்த்ரஷஸ்த்ராதிஷிக்ஷகேஷு த்ரோணகரிபாதிஷு ப்ரயோகப்ரௌட்யா ச யதாப்ரயோகஂ ஸர்வத்ர முக்ய இதி கைஷ்சிதங்கீக்ரியேத? ததாப்யுச்சிஷ்டபக்ஷணாநுமதிநிதாநமாசார்யத்வஂ ப்ரணவாதித்ரிகபூர்வகபரவித்யோபதேஷ்டர்யேவ; ததைவ ஷாஸ்த்ரைர்நியமாச்சிஷ்டாசாராச்ச.ப்ரத்யக்ஷஷ்ருத்யாதிவிருத்தஸ்து ப்ராந்தாநாமபிப்ராயாந்தரேண ஷாஸ்த்ரோல்லங்கிநாமப்யாசாரோ ந ஷிஷ்டாசாரஃ. யதபி கைஷ்சித்பட்யதே’நாராயணைகநிஷ்டஸ்ய யா யா வரித்திஸ்ததர்சநம். யோ யோ ஜல்பஃ ஸ ஸ ஜபஸ்தத்த்யாநஂ யந்நிரீக்ஷணம். தத்பாதாம்ப்வதுலஂ தீர்தஂ ததுச்சிஷ்டஂ ஸுபாவநம். ததுக்திமாத்ரஂ மந்த்ராக்ர்யஂ தத்பரிஷ்டமகிலஂ ஷுசி’ இதி. இதமபி நாராயணைகநிஷ்டப்ரஷஂஸாபரம்; ந து ஸ்வயஂ விதாயகம். அந்யதஃ ப்ராப்தேரேவ ஹ்யத்ர ப்ரஷஂஸா. தத்ர ப்ரதமஷ்லோகஃ ஸ்வபாவப்ராப்தமர்தப்ராப்தஂ சாநுவததி; யச்ச ஷாஸ்த்ரப்ராப்தம்; ந து புநஃ ஷாஸ்த்ராந்தரநிஷித்தபராமர்ஷி.,ப்ரமாணப்ராப்தவிஷயத்வாதேவ ஹி’அதுலஂ ஸுபாவநமக்ர்யமகிலம்’ இதி விஷேஷணேஷு ஸஂரம்பஃ.’ப்ராஹ்மணாஃ பாததோ மேத்யாஃ’ இத்யாதிபிர்விப்ரபாதோதகஸ்ய ஸாமாந்யதஃ பாவநத்வப்ராப்தௌ பாகவதத்வாவஸ்தாயாஂ அதுலஂ தீர்தமிதி விஷேஷ்யதே. ஏவமநேகாந்திநோப்யுபநேதரிப்ரபரிதேருச்சிஷ்டே பாவநத்வேந ப்ராப்தே தஸ்ய நாராயணைகநிஷ்டத்வதஷாயாஂ ஸுபாவநத்வஂ விதீயதே. ததா மஹாபுருஷகரிதஸ்துத்யாதேர்மங்கலதமத்வே ஸித்தே’ததுக்திமாத்ரஂ மந்த்ராக்ர்யம்’ இதி பகவதநந்யப்ரணீதஸ்ய காதாகீதாதேரபி மந்த்ராக்ர்யவத்பலாதிஹேதுத்வஂ ப்ரதிபாத்யதே.ஏவஂ ஷுத்தாநாஂ ஷோதகாபேக்ஷாயாஂ நிர்ணேஜநாதிவந்மஹாத்மநாஂ ஸ்பர்ஷோபி மாஹாத்ம்யவிஷேஷவஷாதிச்சாஷோதகதயா ப்ராப்தஃ’தத்ஸ்பரிஷ்டமகிலஂ ஷுசி’ இத்யநேந ஸர்வஸ்யாபி த்ரவ்யஸ்ய பரிதக்சோதிதஷோதகபேதஸ்ய பேதஸ்ய பாகவதஸ்பர்ஷ ஏகஃ ஷோதகோ பவிதுமர்ஹதீத்யுச்யதே. அந்யதா பாகவதேந யதரிச்சாதிஸ்பரிஷ்டசண்டாலலஷுநகரிஞ்ஜநாத்யஷுத்தக்ரஹணேநாலேபகபாதவத்ஸ்பரிஷ்யாஸ்பரிஷ்யபக்ஷ்யாபக்ஷ்யாத்யத்வைதப்ரஸங்கஃ. ஏதேந பரமாப்தஸ்ய பக்தாங்க்ரிரேணோர்பாஷாகாதாபி நிர்வ்யூடா. ஏவஂ ஹி ஸா ஸஂஸ்கரிதேந விபரிணஂஸ்யதே — ‘திவ்யைரவேத்யவிபவேதி யதி ப்ருவந்தி மாத்வீமநோஜ்ஞதுலஸீக யதீதி சாஹுஃ. ஊநக்ரியா அபி பராநபி காரயந்தோ புக்தாதிகஂ தததி சேந்நநு தத்பவித்ரம்’ இதி. இதமபி ஸங்கீர்தநப்ரஷஂஸாபரமிதி ப்ரகரணாத்ஸ்வவாக்யஸ்வாரஸ்யாச்ச ஸுவ்யக்தம். புக்தஷேஷஷப்தஷ்ச பாகபாத்ரஸ்தவிஷயத்வேபி ந விருத்தஃ; யதா’அந்நஷேஷஃ கிஂ க்ரியதாம்’ இத்யத்ர அவஷிஷ்டம். புக்தஷிஷ்டஂ து பாகபாத்ரஸ்தமபி த்யாஜ்யமேவ. தத்பரிஹாரார்தோயஂ ப்ரதிப்ரஸவஃ. அந்யதாபி ப்ரமாணாந்தராவிரோதாயாசார்யாத்யுச்சிஷ்டவிஷயமேவ ஸ்யாத். ததாஹி’ஊநோ ஹீநஃ பரிஸ்ரஸ்தோ நஷ்டஃ’ இதி விகலபாகவதாந் துஷ்கர்மதாரதம்யாச்சதுர்தா ரஹஸ்யாம்நாயவிதஃ ஸமாமநந்தி. தத்ரோநத்வாத்யவஸ்தாயாமாசார்யோச்சிஷ்டஸ்யாபவித்ரத்வஂ ப்ரஸக்தம்; தத்ர யத்யநந்யத்வஸ்தைர்யவ்யஞ்ஜநஸங்கீர்தநஂ ஸ்யாத்? ததா ததுச்சிஷ்டமபவித்ரஂ ந பவதீதி அநந்யத்வபங்கே ஹ்யாசார்யஸ்யாபி ஸர்வதா வர்ஜநஂ தத்ரைவாம்நாதமித்யலமதிப்ரஸங்கேந.

மேதாவிரோதிந்யப்யமேத்யஷப்தப்ரயோகாத்தஸ்ய ச தரிஷ்டப்ரத்யவாயமாத்ரபர்யவஸாநாத்ததோபி தோஷாதிஷயஸூசநாய மேதோத்ர யஜ்ஞஃ? ததர்ஹஂ மேத்யஂ? தத்விபரீதமமேத்யமித்யாஹ — ‘அயஜ்ஞார்ஹமிதி’. நநு யஜ்ஞார்ஹஸ்யாபி த்ரவ்யஸ்யாபக்ஷணீயத்வஂ மந்வாதிபிருச்யதே; யதா — ‘வரிதா கரிஸரஸஂயாவஂ பாயஸாபூபமேவ ச. அநுபாகரிதமாஂஸாநி தேவாந்நாநி ஹவீஂஷி ச’ [மநுஃ5.7] இதி. தத்ராஹ — ‘அயஜ்ஞஷிஷ்டமித்யர்த’ இதி. ஏதேந ஸாத்த்வதாதிஷாஸ்த்ரேஷு’நாநிவேத்ய ஹரேஃ கிஞ்சித்ஸமஷ்நீயாத்து பாவநம்’ இத்யாதிகமப்யத்ராநுஸஂஹிதம். ஆஹ்ரியந்த இத்யாஹாராஸ்தத்தத்த்ரவ்யாணி ப்ரதீயந்தே? ந ச போஜநக்ரியாமாத்ரே யாதயாமத்வாத்யுக்திரந்வேதி; நாபி முக்யே ஸம்பவதி லக்ஷணா ந்யாய்யா. அதஃ’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மணி ல்யுடந்ததாமாஹ — ‘புஜ்யத’ இதி.’புநஷ்ச தமஸோ வர்தநமிதி’ — பூர்வவத். ஆஹாரத்ரைவித்யோக்தேரபிப்ரேதமாஹ — ‘அத’ இதி. பத்யாபத்யவிபாகோக்தௌ பத்யக்ரஹணவதிதி பாவஃ. ஏவமேவ யஜ்ஞாதித்ரைவித்யோக்தாவப்யந்ததோபிப்ராயோ க்ராஹ்யஃ.

——————–

இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:

11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:

ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி,
யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று,
இதி மந: ஸமாதாய-மனம் தேறி,
அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ,
ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.

பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி
இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள்.
நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு.
அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது.
பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எண்ணிக்கையில் அடங்கா.
தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வர வேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள்.
அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார்.
மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன்.
இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.

சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.

৷৷17.11৷৷பல ஆகாங்க்ஷா ரஹிதைஃ புருஷைஃ விதி தரிஷ்டஃ ஷாஸ்த்ர தரிஷ்டஃ மந்த்ர த்ரவ்ய க்ரியாதிபிஃ யுக்தஃ. யஷ்டவ்யம் ஏவ இதி பகவத ஆராதநத்வேந ஸ்வயஂ ப்ரயோஜநதயா யஷ்டவ்யம் இதி மநஃ ஸமாதாய யோ யஜ்ஞ இஜ்யதே ஸ ஸாத்த்விகஃ.

৷৷17.11৷৷அபலஸ்ய கஸ்யசிதாகாங்க்ஷாப்ரதீதிவ்யுதாஸாயாஹ — ‘பலாகாங்க்ஷாரஹிதைரிதி’. பரமாத்மப்ரீத்யதிரிக்தநிரபேக்ஷைரித்யர்தஃ.’விதிதரிஷ்டஃ’ இத்யுக்தே ப்ரஜாபதிநா தரிஷ்டத்வஂ ப்ரதீயேத; ஸ ஹி ஸர்வேஷாஂ யஜ்ஞாநாஂ த்ரஷ்டேத்யாமநந்தி; ந சாத்ர ப்ரஜாபதிதரிஷ்டத்வோக்த்யாநுஷ்டாநே கஷ்சிதுபகாரஃ; அதோ விதாயகஷாஸ்த்ரமேவாத்ர விதிஷப்தேந விவக்ஷிதமித்யாஹ’ஷாஸ்த்ரதரிஷ்ட’ இதி. ஷாஸ்த்ரைகப்ரமாணதயா ப்ரஸித்தே ஷாஸ்த்ரதரிஷ்டத்வோக்திரநபேக்ஷிதேத்யத்ர யதாஷாஸ்த்ரகரணாதவைகல்யஂ? தத்விவக்ஷிதமாஹ — ‘மந்த்ரேதி’.’யஜ தேவபூஜாயாம்’ [தா.பா.1.1027] இதி தாத்வர்தாநுஸாரேணாஹ — ‘பகவதாராதநத்வேநேதி’. அவதாரணாபிப்ரேதமாஹ — ‘ஸ்வயம்ப்ரயோஜநதயேதி’.’அயமபிப்ராயஃ’ — யத்யபி ப்ரயோஜநமநுத்திஷ்ய ந ப்ரவரித்திஃ? ததாபி ப்ராகுக்தஸுஹரித்ஸமாராதநந்யாயேந யஜ்ஞாதிப்ரவரித்தேரேவ ப்ரயோஜநத்வாபிஸந்திஃ ஸம்பவதி — இதி.’மநஃ ஸமாதாயேதி’ ப்ரகாராந்தராத்விநிவார்ய ப்ரஸ்துதப்ரக்ரியாயாமேகாக்ரஂ கரித்வேத்யர்தஃ. யஜ்ஞ இஜ்யதே யஜ்ஞஃ க்ரியத இத்யர்தஃ.

———————–

12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்

து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்!
தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு,
யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ,
தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்

பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!

கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை
வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர்.
தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு.
இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.

৷৷17.12৷৷பலாபி ஸந்தி யுக்தைஃ தம்ப கர்போ யஷஃபலஃ ச யஃ யஜ்ஞ இஜ்யதே? தஂ யஜ்ஞஂ ராஜஸஂ வித்தி.(தம்பம் வியக்தம் தாமஸ -ஆகவே இங்கு கர்ப்பம் உள் அடக்கி )

৷৷17.12৷৷தம்பஹேதுகத்வமிஹ தம்பார்தஷப்தேந விவக்ஷிதமித்யாஹ — ‘தம்பகர்ப’ இதி. தாம்பிகத்வக்யாபநாபிஸந்திரஹித இத்யர்தஃ. கேவலஂ தம்பகர்பஸ்து தாமஸஃ. அத ஐஹிகாமுஷ்மிகபலஸம்பேதமாத்ரமிஹ ராஜஸத்வஂ விவக்ஷிதத்வமித்யபிப்ராயேணாஹ — ‘யஷஃபலஷ்சேதி’. தம்பாநுஸாராத்வா தரிஷ்டைகபலத்வோக்திஃ.’பரதஷ்ரேஷ்ட!’,இதி த்வஂ து ஸாத்த்விகயஜ்ஞாத்யதிகாரீத்யபிப்ராயஃ.

———————

13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே

விதிஹீநம்-விதி தவறியது,
அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும்,
மந்த்ரஹீநம்-மந்திர மற்றது,
அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது,
ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது,
யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது –
இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.

எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்கு மிடையிலுள்ள
தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது.
நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள
எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது.
கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார்.
புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது.
தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது.
ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது.
இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.

மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது.
தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.

৷৷17.13৷৷விதி ஹீநஂ ப்ராஹ்மண உக்த விதி ஹீநஂ ஸதாசார யுக்தைஃ விதி வித்பிஃ ப்ராஹ்மணைஃ யஜஸ்ய இதி உக்தி ஹீநம் இத்யர்தஃ. -அஸரிஷ்டாந்நம் அசோதித த்ரவ்யம். –மந்த்ர ஹீநம் அதக்ஷிணஂ ஷ்ரத்தா விரஹிதஂ ச யஜ்ஞஂ தாமஸஂ பரிசக்ஷதே.

அத தபஸோ குணதஃ த்ரை வித்யஂ வக்துஂ தஸ்ய ஷரீர வாங் மநோபிஃ நிஷ் பாத்யதயா தத் ஸ்வரூப பேதஂ தாவத் ஆஹ —

৷৷17.13৷৷அஸரிஷ்டாந்நத்வமந்த்ரஹீநத்வாத்யுக்த்யைவ சோதிதப்ரகாரவிஹீநத்வஸித்தேரத்ர’விதிஹீநம்’ இத்யயதாஷாஸ்த்ரத்வஂ ந விவக்ஷிதம்; அந்யஸ்ய சாவஷ்யாபேக்ஷிதஸ்ய ஹாநிரிஹ ஸூசயிதுமுசிதேத்யபிப்ராயேணாஹ — ‘ப்ராஹ்மணோக்திஹீநமிதி’. ஷாஸ்த்ரோதித ஏவார்தஃ ஸத்பிரநுஷிஷ்டோநுஷ்டேய இதீமமர்தஂ விவரிணோதி — ‘ஸதாசாரேதி’. லோபாதிஷயாத்தக்ஷிணாயா அப்யபாவே அந்நதாநாபாவஸ்ய கைமுத்யஸித்தத்வாத்’அதக்ஷிணம்’ இத்யநேநைவாந்நாதாநாதேருபலக்ஷணாத் அஸரிஷ்டஷப்தஸ்வாரஸ்யாத்தோஷாதிஷயக்யாபநோபயோகாச்ச. அஸரிஷ்டாந்நஷப்தேந ஷூத்ரப்ரதிக்ரஹாதிவிவக்ஷாமாஹ’அசோதிதத்ரவ்யமிதி’. யஜ்ஞார்தஂ ஸரிஷ்டமிஹ ஸரிஷ்டஷப்தேந விவக்ஷிதம்; ந்யாயாகதமித்யர்தஃ. ததந்யதஸரிஷ்டஂ? யதா — ‘ந யஜ்ஞார்தஂ தநஂ ஷூத்ராத்விப்ரோ பிக்ஷேத தர்மவித். யஜமாநோ ஹி பிக்ஷித்வா ப்ரேத்ய சண்டாலதாஂ வ்ரஜேத்’ இதி.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினாறாம் அத்தியாயம் — தெய்வாசுர சம்பத் விபாக யோகம்—16-13–16-24—

February 11, 2021

13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்

மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது,
இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்,
மே இதம் தநம் அஸ்தி – என்னிடம் இந்த செல்வம் உள்ளது,
புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.

இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்;
இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”

৷৷16.13৷৷இதஂ க்ஷேத்ர புத்ராதிகஂ ஸர்வஂ மயா மத் ஸாமர்த்யேந ஏவ லப்தம்? ந அதரிஷ்டாதிநா? (அஹங்காரமாகிய மயக்கத்தால் -பகவத் அனுக்ரஹம் அத்ருஷ்டத்தில் நம்பாமல் )இமஂ ச மநோ ரதம் அஹம் ஏவ ப்ராப்ஸ்யே? ந அதரிஷ்டாதி ஸஹிதஃ; இதஂ தநஂ மத் ஸாமர்த்யேந லப்தஂ மே அஸ்தி? இதம் அபி புநஃ மே மத் ஸாமர்த்யேந ஏவ பவிஷ்யதி.

৷৷16.13৷৷ஏவஂ’ஸஹஸ்ரபகஸந்தர்ஷநாத்மகஷ்ச மஹாநந்தலக்ஷணோ மோக்ஷஃ’ இத்யாதிபிஃ காமோபபோகஃ பரமபுருஷார்த இதி கரித்வா ததர்தமர்தபுருஷார்தஸ்வீகார இத்யுக்தம்; அத தத்ர ப்ரவரித்தஸ்ய வ்யதிரேகஸஂஜ்ஞாஸஂஸ்தாவஸ்திதயோகிவல்லப்தாலப்தகரிதாகரிதப்ரத்யவேக்ஷணமுச்யதே’இதமத்யேத்யாதிநா’. ஏதேந பூர்வோக்தசிந்தாவிஷயாநந்த்யமப்யுதாஹரிதஂ பவதி. வக்ஷ்யமாணதநவ்யதிரிக்தவிஷயத்வத்யோதநாய புத்ரக்ஷேத்ராதிஷப்தஃ. ஸாத்த்விகாநாமீஷ்வராத்யதீநகரிதாகரிதப்ரத்யவேக்ஷணாவ்யவச்சேதாய அஹங்காரகர்பதயாபி ததாவிதாநு ஸந்தாநஸ்ய ப்ராந்திரூபத்வஂ’மயா’ இத்யநேந ஸூச்யத இத்யாஹ — ‘மத்ஸாமர்த்யேநைவேதி’. ஏவகாராபிப்ரேதஂ விவரிணோதி — ‘நாதரிஷ்டாதிநேதி’. ஏவமேவோத்தமபுருஷாகரிஷ்டாஹஂஷப்தவ்யாக்யாநரூபே’அஹமேவ’ இத்யாதாவப்யபிப்ராயஃ.’இதமஸ்தீதமபி’ இதி சிந்தாயாஂ விஷயபூயஸ்த்வஜ்ஞாபநம்.

—————–

14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ

அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்,
ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன்,
அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி,
அஹம் ஸித்த:-நான் சித்தன்,
பலவாந்-பலவான்,
ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.

இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்;
நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”

৷৷16.14৷৷அஸௌ மயா பல வதா ஹதஃ ஷத்ருஃ. அபராந் அபி ஷத்ரூந் அஹஂ ஷூரோ தீரஃ ச ஹநிஷ்யே. கிமத்ர மந்த தீபிஃ துர் பலைஃ பரிகல்பிதேந அதரிஷ்டாதி பரிகரேண –ததா ச ஈஷ்வரஃ அஹஂ ஸ்வாதீநஃ அஹம் அந்யேஷாஂ ச அஹம் ஏவ நியந்தா. அஹஂ போகீ ஸ்வத ஏவ அஹஂ போகீ? ந அதரிஷ்டாதிபிஃ. ஸித்தஃ அஹம் — ஸ்வதஃ ஸித்தஃ அஹம் ந கஸ்மாச்சித் அதரிஷ்டாதேஃ. ததா ஸ்வத ஏவ பலவாந் ஸ்வத ஏவ ஸுகீ.

(சாரு வாக்-அழகிய வார்த்தை – லோகாயுதன்-லோகத்தில் ஈர்ப்பு –கண்டதே காட்சி கொண்டதே கோலம் -கண்ணாலே கண்டத்தையே நம்புவான்)

৷৷16.14৷৷ஏவமிஷ்டப்ராப்தாவபிப்ராய உக்தஃ; அதாநிஷ்டநிவரித்தௌ உச்யதே — ‘அஸௌ மயேதி’. அத்ர’மயா’ இத்யாதேஃ ஷத்ருஹநநோபயுக்தகுணவத்தாபிமாநகர்பதாமாஹ — ‘பலவதேதி’. ஷூரஃ வ்யாக்ராதிவத்பரபலஂ தரிணீகரித்ய நிர்பயப்ரவேஷஷீலஃ?’ஷூரஂ பீருஂ கவிஂ ஜடம்’ இதி ஷூரஸ்ய பீருப்ரதியோகிகத்வேந பாடாத். வீரோத்ர பராக்ரமே க்லாந்யாதிவிகாரரஹிதஃ. ப்ரேக்ஷாவதநந்தபுருஷப்ரவரித்திவிஷயாதரிஷ்டாநாதரேண ஸ்வஸாமர்த்யமாத்ராவலம்பநே கோ ஹேதுஃ இத்யத்ராஹ’கிமத்ரேதி’.’மந்ததீபிரிதி’ — ‘அயமபிப்ராயஃ’ — அர்தாதிக்ரஹணலுப்தைஃ நிகூடாபிப்ராயைர்க்ரந்தைஃ ப்ரதாரிதா தாநயஜ்ஞாதிஷு ப்ரவரித்தாஃ ஸித்தமப்யர்தஂ பரித்யஜ்ய கரிபணா பவந்தி — இதி.’துர்பலைரிதி’ — ப்ரபலோ ஹி ந ப்ரதாரயிதுஂ ஷக்யதே?’ந ஸாம ரக்ஷஸ்ஸு குணாய கல்பதே ந தாநமர்தோபஹிதேஷு யுஜ்யதே. ந பேதஸாத்யா பலதர்பிதா ஜநாஃ பராக்ரமஸ்த்வேஷ மமேதி ரோசதே’ [வா.ரா.5.41.3] இதி ந்யாயாதிதி பாவஃ.’பரிகல்பிதேநேதி’ — ந து லோகாயதஷப்தவிவக்ஷிதப்ரத்யக்ஷாந்வயவ்யதிரேகரூபப்ரமாணஸித்தேநேத்யர்தஃ.ஏவமிஷ்டப்ராப்த்யநிஷ்டபரிஹாரயோஃ ஸ்வஸாமர்த்யமாத்ராதீநத்வப்ரம உக்தஃ; அதஃ ஸ்வஸாமர்த்யாதாவபி காரணபூதாதரிஷ்டாதிநைரபேக்ஷ்யப்ரம உச்யதே’ஈஷ்வரோஹம்’ இத்யாதிநேத்யாஹ — ‘ததா சேதி’. ஸர்வேஷ்வரவதீஷிதவ்யத்வாபாவோப்யத்ரேஷ்வரஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘ஸ்வாதீநோஹமிதி’. ஸ்வவ்யதிரிக்தஸமஸ்தநியந்தரித்வாபிமாநோப்யத்ராபிப்ரேத இத்யாஹ — ‘அந்யேஷாஂ சேதி’.’தவாஂஸகூடே பூமண்டலம்? த்வஂ ஹி ஸர்வேஷாஂ நியந்தா’ இத்யுக்தே ததாவிதத்வாபிதாநாதேவ ஹி ததாவிதாநாஂ ப்ரீத்யாதிஸம்பவஃ. பூர்வாபராநுகுண்யாத்’போகீ’ இதி போகஸாமர்த்யபரம்; தத்ராஹஂ சேத் — ந தர்மஸ்வபாவாதேவம்பூத இத்யஹஂஷப்தாபிப்ராயமாஹ — ‘ஸ்வத ஏவேதி’. ஸித்தஃ ஜ்ஞாநாத்யதிஷயஸம்பந்ந இத்யர்தஃ. ஸித்தஸமீஹித இதி வா.’ஸுகீதி’ — புத்ரஜந்மாதிஸுகயோகீத்யர்தஃ. போகிஸுகஷப்தயோர்ஹேதுபலவிவக்ஷயா வா பௌநருக்த்யபரிஹாரஃ. ஏஷாமீஷ்வரத்வாதீநாமபிஜநாந்தாநாஂ புக்தஷிஷ்டகர்மமூலத்வஂ ப்ராகேவ ஷ்ருதிஸ்மரிதிபிருபபாதிதம்.

————-

15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:

ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன்,
மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்?
யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன்,
தாஸ்யாமி-கொடுப்பேன்;
மோதிஷ்ய-களிப்பேன்,
இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.

நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்”
என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

৷৷16.15৷৷அஹஂ ஸ்வதஃ ச ஆட்யஃ அஸ்மி? அபிஜநவாந் அஸ்மி; ஸ்வத ஏவ உத்தம குலே ப்ரஸூதஃ அஸ்மி. அஸ்மிந் லோகே (வேறே லோகம் ஒத்துக் கொள்ள மாட்டானே-தவம் இருந்து பிரமன் இடம் வரம் வாங்கி அவர்களையே நலிவான் அன்றோ )மயா ஸதரிஷஃ கஃ அந்யஃ ஸ்வ ஸாமர்த்ய லப்த ஸர்வ விபவோ வித்யதே அஹஂ ஸ்வயம் ஏவ யக்ஷ்யே? தாஸ்யாமி? மோதிஷ்யே இதி அஜ்ஞாந விமோஹிதாஃ ஈஷ்வர அநுக்ரஹ நிரபேக்ஷேண ஸ்வேந ஏவ யாக தாநாதிகஂ கர்துஂ ஷக்யம் இதி அஜ்ஞாந விமோஹிதா மந்யந்தே.

৷৷16.15৷৷’அஸ்ிம ఁல்லோகே’ இதி — லோகாந்தரஂ து நாஸ்தீதி ஹி ததபிப்ராயஃ; யத்வா அஸ்திஷப்தாபிப்ரேதஃ ஸார்வகாலிகஸமநிஷேதவிவக்ஷயா’அஸ்ிம ఁல்லோகே’ இதி நிர்தேஷஃ. யாவல்லோகமந்வேஷணேபீதி பாவஃ. ப்ரகரிதைரேவாகாரைரேகைகஷோபி ஸதரிஷஃ ப்ரதிஷித்யத இத்யாஹ — ‘ஸ்வஸாமர்த்யேதி’. மயா ஸதரிஷஃ கஃ இத்யேதாவதி வக்தவ்யே அந்யஷப்தஃ அந்யத்வமேவாஸாமர்த்யே ஹேதுரிதி த்யோதநார்தஃ. யத்வா?’மத்தோந்யோ மயா ஸதரிஷோ நாஸ்தி; அஹமேவ மயா ஸதரிஷஃ’ இதி’ககநஂ ககநாகாரஂ ஸாகரஃ ஸாகரோபமஃ. ராமராவணயோர்யுத்தஂ ராமராவணயோரிவ’ [வா.ரா.6.107.52] இதிவத்பாவ்யம்.’யக்ஷ்யே தாஸ்யாமி’ இத்யேதத்ஸாத்த்விகவிடம்பநமாத்ரவிஷ்ராந்தேந தம்பேநைவ?’தம்பேநாவிதிபூர்வகம்’ [16.17] இதி ஹ்யநந்தரஂ விஷேஷ்யதே.’மோதிஷ்ய’ இதி — ந ஸ்வர்காதிவிவக்ஷயா? அபிது யஜமாநத்வாதிநிமித்தமஹச்சப்தாதிலாபேந.’யக்ஷ்யே’ இத்யாதிப்ரதிபத்தாவபி ப்ராகரணிகீமஹங்காரோபஹதிஂ தர்ஷயதி — ‘ஈஷ்வராநுக்ரஹநிரபேக்ஷேணேதி’.’இத்யஜ்ஞாநவிமோஹிதா’ இத்யேவ பர்யாப்தஂ;’மந்யந்த’ இதி து வைஷத்யார்தமுக்தம்.

——————-

16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ

அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர்,
மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர்,
காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் –
இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம்
சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.

৷16.16৷৷அதரிஷ்ட ஈஷ்வராதி ஸஹகார ம்றதே ஸ்வேந ஏவ ஸர்வஂ கர்துஂ ஷக்யம் இதி கரித்வா ஏவஂ குர்யாம் ஏதத் ச குர்யாம் அந்யத் ச குர்யாம் இதி அநேக சித்த விப்ராந்தாஃ — அநேக சித்த தயா விப்ராந்தாஃ; ஏவஂ ரூபேண மோஹ ஜாலேந ஸமா வரிதாஃ; காம போகேஷு ப்ரகர்ஷேண ஸக்தாஃ; மத்யே மரிதாஃ அஷுசௌ நரகே பதந்தி.

৷৷16.16৷৷ஈஷ்வரே ந்யஸ்தபரா ஹி ப்ராயஷோ நிஷ்சிதாஃ? தத்வ்யதிரேகமாஹ — ‘ஸ்வேநைவ ஸர்வமிதி’.’இதி கரித்வா’ — இதி மத்வேத்யர்தஃ. சிந்தாரூபவரித்தியுக்தஂ மந ஏவ சித்தம்? தத்ப்ரவரித்திபேதாதநேகத்வோக்திஃ; தத்தர்ஷயதி’ஏவஂ குர்யாமித்யாதிநா’.’விப்ராந்தாஃ’ விக்ஷிப்தா இத்யர்தஃ. யத்வா விப்ராந்திர்விபரீதஜ்ஞாநம்? மோஹஸ்த்வஜ்ஞாநம். அதவா’அந்யதா சிந்திதஂ கார்யஂ தேவேந கரிதமந்யதா’ இதி ந்யாயாச்சிந்தாநாமேவ ப்ராந்திரூபத்வமாஹ’ஏவஂ ரூபேணேதி’.’ந ஜாது காமஃ காமாநாமுபபோகேந ஷாம்யதி. ஹவிஷா கரிஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே’ [வி.பு.4.10.23+பாக.9.19.14+ம.பா.17.75.50+மநுஃ.2.94] இத்யயமர்த உபஸர்கேண த்யோத்யத இத்யாஹ’ப்ரகர்ஷேண ஸக்தா’ இதி.’இதஂ கரிதமிதஂ கார்யமிதமந்யத்கரிதாகரிதம். ஏவமீஹாஸமாயுக்தஂ கரிதாந்தஃ குருதே வஷே’ இத்யுக்தமாஹ’மத்யே மரிதா’ இதி. அஷுசௌ காமபோகே ப்ரஸக்தாநாஂ ததாவிதமேவ பலமித்யபிப்ராயேண நரகஸ்யாஷுசித்வவிஷேஷணம். பூயருதிரவஸாதிமயத்வஂ சாஷுசித்வம்.

——————–

அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :

17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்

ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர்,
ஸ்தப்தா:-முரடர்,
தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர்,
தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி,
தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.

இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்;
டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும்
இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும்.
கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு.
தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.

৷৷16.17৷৷ஆத்ம ஸம்பாவிதாஃ ஆத்மநா ஏவ ஸம்பாவிதாஃ ஆத்மநா ஏவ ஆத்மாநஂ ஸம்பாவயந்தி இத்யர்தஃ. ஸ்தப்தாஃ பரிபூர்ணஂ மந்யமாநா ந கிஞ்சித் குர்வாணாஃ? கதம் -தந மாந மதாந்விதாஃ — தநேந வித்ய அபிஜந அபிமாநேந ச ஜநித மதாந்விதாஃ; நாம யஜ்ஞைஃ நாம ப்ரயோஜநைஃ யஷ்டா இதி நாம மாத்ர ப்ரயோஜநைஃ யஜ்ஞைஃ யஜந்தே? தத் அபி தம்பேந ஹேதுநா யஷ்டரித்வ க்யாபநாய? அவிதி பூர்வகம் அயதா சோதநஂ யஜந்தே.தே ச ஈதரிக் பூதா யஜந்தே இத்யாஹ —

৷৷16.17৷৷’ஆத்மஸம்பாவிதாஃ’ இத்யத்ர பரஸம்பாவநாப்ரஸங்கரஹிததயா’அப்பக்ஷஃ’ இதிவதவதாரணகர்பதாமாஹ — ‘ஆத்மநைவ ஸம்பாவிதா’ இதி. ஆத்மப்ரஷஂஸாதிரூபதோஷவ்யக்த்யர்தமாஹ’ஆத்மநைவாத்மாநமிதி’. பரைஃ ஸம்பாவிதா அபி ஹி ஸந்தோ லஜ்ஜந்தே. ஸ்தப்ததாஹேதுஃ — ‘பரிபூர்ணஂ மந்யமாநா இதி’.’ந கிஞ்சித்குர்வாணா’ இதி துஷப்தார்தஃ. கிஞ்சித் குருவந்தநாதிகமபீத்யர்தஃ. தநாதிதரிஷ்டஸம்பத்திமதேந அதரிஷ்டவைகல்யதிரஸ்கார இதி வக்துஂ பாரலௌகிகாப்ரவரித்திஹேதுஂ ஷங்கதே — ‘கதமிதி’.’வித்யாமதோ தநமதஸ்தரிதீயோபிஜநோ மதஃ’ [ம.பா.5.34.44] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாத்தநஸ்யாத்ரோக்தேஷ்ச தத்ஸமபிவ்யாஹரிதோ மதஹேதுர்மாநோ வித்யாபிஜநநிபந்தந இத்யாஹ’வித்யாபிஜநாபிமாநேந சேதி’. நாமஸம்பந்திநோ யஜ்ஞா நாமயஜ்ஞாஃ; ஸம்பந்தஷ்சாத்ர தர்மாதிப்ரயோஜநாபிஸந்திவ்யுதாஸாய பலபலிபாவேநேத்யபிப்ராயேணாஹ’நாமப்ரயோஜநைரிதி’. கீர்த்யாதிஷ்வபி நாமஷப்தப்ரயோகாத்ததபிஸந்தேஷ்ச’தம்பேந’ இத்யாதிநா ஸித்தேஃ ஸஂஜ்ஞாயாஂ ப்ரஸித்திப்ரகர்ஷாதபஹாஸார்தத்வௌசித்யாச்ச’யஷ்டேதி நாமமாத்ரப்ரயோஜநைரித்யுக்தம்’. அத ஏவ’யஜ்ஞஸமாக்யாமாத்ரம்; ந து வஸ்துதோஸௌ யஜ்ஞஃ’ இதி வ்யாக்யாபி மந்தா ப்ரதர்ஷிதா; அவிதிபூர்வகத்வோக்த்யைவ ததர்தஸித்தேஷ்ச.’தம்பேந ஹேதுநேத்யபிஸந்திவிஷயஸ்ய’ ஹேதுத்வோக்திஃ.’யஷ்ட்டத்வக்யாபநாயேதி’ து விஷயதஃ ப்ரயோஜநதஷ்ச தத்விவரணம். விதிரத்ர விதாயகஂ வாக்யம். ததுக்தப்ரகாரபரித்யாகோத்ராவிதிபூர்வகத்வமித்யாஹ — ‘அயதாசோதநமிதி’.

——————-

18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா:

அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும்,
காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய,
அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக,
ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள,
மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.

அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய
இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை
இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய
ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச்
சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.

எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய
உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :

৷৷16.18৷৷அநந்ய அபேக்ஷஃ அஹம் ஏவ ஸர்வஂ கரோமி இதி ஏவஂ ரூபம் அஹங்காரம் ஆஷ்ரிதாஃ? ததா ஸர்வஸ்ய கரணே மத் பலம் ஏவ பர்யாப்தம் இதி ச பலம்? அதோ’மத் ஸதரிஷோ ந கஷ்சித் அஸ்தி’ இதி ச தர்பம்?’ஏவஂ பூதஸ்ய மம காம மாத்ரேண ஸர்வஂ ஸஂபத்ஸ்யதே’ இதி காமம்?’மம யே அநிஷ்ட காரிணஃ தாந் ஸர்வாந் ஹநிஷ்யாமி’ இதி ச க்ரோதம்? ஏவம் ஏதாந் ஸஂஷ்ரிதாஃ ஸ்வ தேஹேஷு பர தேஹேஷு ச அவஸ்திதஂ ஸர்வஸ்ய காரயிதாரஂ புருஷோத்தமஂ மாம்(மூன்று விசேஷணங்கள்-நீக்கமற நிறைந்து -நியமித்து -புருஷோத்தமனான என்னை -என்னிடமே பொறாமைப் படுகிறார்கள் )அப்யஸூயகாஃ ப்ரத்விஷந்தஃ குயுக்திபிஃ மத் ஸ்திதௌ தோஷம் ஆவிஷ் குர்வந்தோ மாம் அஸஹமாநாஃ? அஹங்காராதிகாந் ஸஂஷ்ரிதாஃ? யாகாதிகஂ ஸர்வஂ க்ரியா ஜாதஂ குர்வதே இத்யர்தஃ.

৷৷16.18৷৷புநருக்த்யாதிபரிஹாராயாநந்தரஷ்லோகஸ்ய ஸாத்த்விகயஜநேதிகர்தவ்யதாரூபகுணவைபரீத்யபரத்வமாஹ — ‘தே சேதரிக்பூதா யஜந்த’ இதி. பகவாநேவ ஸர்வஂ காரயதீத்யஸ்ய ப்ரதிக்ஷேபோஹங்காரஃ? யத்பரிஹாராய ஸ்மர்யதே’யத்யஹங்காரமாஷ்ரித்ய யஜ்ஞதாநதபஃக்ரியாஃ. குர்வஂஸ்தத்பலமாப்நோதி புநராவர்தநஂ து தத்’ இதி. பலவத்த்வமாத்ரஸ்யாதோஷத்வேபி’பகவதோ பலேந’ இத்யாதேர்விபரீதஂ ஸ்வபலபர்யாப்த்யநுஸந்தாநம்? ததுபயமூலோ தர்பஃ ஸர்வாவஜ்ஞாநஹேதுஃ பூஜ்யபூஜாப்ரதிஸ்பர்தீ பகவத்ப்ரஸாதாதேவேஷ்டப்ராப்த்யநிஷ்டபரிஹாராவித்யஸ்ய விபரீதௌ காமக்ரோதாவிதி க்ரமேண தாம்பிகயஜ்ஞேதிகர்தவ்யதாக்ரமஂ விவரிணோதி’அநந்யாபேக்ஷ’ இத்யாதிபிஃ. ஸஂஷ்ரிதாஃ ஸம்யநாஷ்ரிதாஃ? நிரபேக்ஷஹேதுத்வேநாபிமந்யமாநா இத்யர்தஃ. அத்ர’பரதேஹேஷ்விதி’ யஜ்ஞாநுகூலப்ரதிகூலறத்விக்தஸ்கராதிவிவக்ஷயா ஸப்தம்யா ஸ்திதிஃ ஸித்தா; ஸா ச ப்ரவர்தநாத்யர்தமிதி ஷ்ருத்யாதிபிஃ ப்ராக்ப்ரபஞ்சிதம்; தத்ப்ரதிபத்திவிருத்தஂ ஸ்மாரயதி’ஸர்வஸ்ய காரயிதாரமிதி’. ஹிதப்ரவர்தநமேவாஸூயாஹேதுரிதி பாவஃ.’புருஷோத்தமமிதி’ — யத்வைலக்ஷண்யவிஜ்ஞாநமாத்ராத் கரிதகரித்யோ பவதீத்யுக்தஂ? ஸ ஹி மஹோபகாரீ த்வேஷாஸூயாஸ்பதமேஷாமிதி பாவஃ. ஸர்வப்ரவர்தநாதிகுணகதநஂ? குணேஷு தோஷாவிஷ்கரணரூபாஸூயாலக்ஷணவ்யக்த்யர்தஂ ச. புருஷோத்தமப்ரகரணே ஹி ஸ்மரித்யாதிப்ரவர்தநாய’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டஃ’ [15.15] இத்யுக்தம்; ததேவாத்ர’மாமாத்மபரதேஹேஷு’ இத்யநேந ஸ்மார்யத இதி ச பாவஃ.’ப்ரத்விஷந்தோப்யஸூயகாஃ’ இத்யநயோஃ ப்ராதிலோம்யேந ஹேதுகார்யதயாந்வய க்ரமஂ யஜந்த இத்யநுகர்ஷணேந வாக்யஸமாப்திஂ சாஹ’குயுக்திபிரிதி’. ஈஷ்வரபரதந்த்ரத்வே கதஂ கர்மவஷ்யதா பலாநாஂ கர்மமூலத்வே ச கிமீஷ்வரேணேத்யாதயஃ குயுக்தயஃ. அநஸூயாலக்ஷணவ்யாஜேநாஸூயாமபி பரிஹஸ்பதிரலக்ஷயத் — ‘ந குணாந்குணிநோ ஹந்தி ஸ்தௌதி மந்தகுணா-(சாந்யாந்குணா-) நபி. நாந்யதோஷேஷு ரமதே (ந ஹஸேச்சாந்யதோஷாஂஷ்ச) ஸாநஸூயா ப்ரகீர்திதா’ [அ.ஸ்மரி.37] இதி. அஸஹிஷ்ணுத்வரூபேண லக்ஷணேந த்வேஷஂ விவரிணோதி’மாமஸஹமாநா’ இதி. அஸஹமாநத்வஂ ச ததாஜ்ஞாதிலங்கநபர்யந்தமநுஸந்தேயம். ஏதச்ச ஸ்வவஂஷ்யாநாமப்யஷுசிநரகபதநே நிதாநம்; யதோச்யதே’மஜ்ஜந்தி பிதரஸ்தஸ்ய நரகே ஷாஷ்வதீஃ ஸமாஃ. த்விஷ்யாத்யோ விபுதஷ்ரேஷ்டஂ தேவஂ நாராயணஂ ஹரிம்’ [ம.பா.12.346.6] இதி. ஏவஂ’யே த்விஷந்தி மஹாத்மாநஂ ந ஸ்மரந்தி ச கேஷவம் (ஜநார்தநம). ந தேஷாஂ புண்யதீர்தேஷு கதிஃ ஸஂஸர்கிணாமபி’ [ம.பா.12.336.36குஂ.கோ.] இத்யாதி சாத்ராநுஸந்தேயம்.’நாமயஜ்ஞைஃ’ [16.17] இத்யஸ்யோபலக்ஷணமாஹ’யாகாதிகஂ ஸர்வமிதி’.,

————-

19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு

த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும்,
நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை,
அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும்,
ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில்,
ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை
நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது.
இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:

ததாமி புத்தி யோகம் என்பாயோ ஷிபாமி என்பாயோ -என்று இனி இனி என்று கூப்பிடுவார்கள் அன்றோ

৷৷16.19৷৷ய ஏவஂ மாஂ த்விஷந்தி தாந் க்ரூராந் நராதமாந் அஷுபாந் (தங்களையும் மறந்து ஈஸ்வரனை வெறுத்து -ஈஸ்வர கைங்கர்யம் அறியாமல் ஆஸூர சம்பத் என்று பிரமித்து )அஹம் அஜஸ்ரஂ (இடைவிடாமல் )ஸஂஸாரேஷு ஜந்ம ஜரா மரணாதி ரூபேண பரிவர்தமாநேஷு ஸஂதாநேஷு? தத்ர அபி ஆஸுரீஷு ஏவ யோநிஷு க்ஷிபாமி. (தேவாதி நான்கு யோனிகளிலும் அசூரத் தன்மை உண்டே -எல்லா யோனிகளிலும் தேவ அசூரத் தன்மைகளுடன் இருந்தவர்கள் உண்டே )மதாநுகூல்ய ப்ரத்யநீகேஷு ஏவ ஜந்மஸு க்ஷிபாமி. தத் தஜ் ஜந்ம ப்ராப்த் யநுகுண ப்ரவரித்தி ஹேது பூத புத்திஷு க்ரூராஸு அஹம் ஏவ ஸஂயோஜயாமி இத்யர்தஃ.

(ஜாதி வேறு தன்மை வேறு – ஜாதி சண்டாளன் கர்ம சண்டாளன் இருவருக்குள் பிறவி சண்டாளனுக்கு ஒரு கால் -காலாந்தரத்திலே உய்வு உண்டாகலாம் -கர்ம சண்டாளனுக்கு மார்வில் இடட பூணூலே வாராகி விடுமே-இவனது த்வேஷமே ஹேது -கர்மம் அடியாகவே பலன் -வைஷம்யம் நைர் க்ருண்யம் இவன் மேல் வராதே )

৷৷16.19৷৷ஏவஂவிதப்ரத்வேஷாதிபூர்வகயாகாதேரபி யதோசிதப்ரதிகூலபலப்ரதோஹமேவேத்யுச்யதே — ‘தாநஹம்’ இத்யாதிஷ்லோகத்வயேந. வைஷம்யநைர்கரிண்யபரிஹாரார்தஃ’தாந்’ இத்யநுவாத இத்யபிப்ராயேணாஹ’ய ஏவஂ மாஂ த்விஷந்தீதி’. அத்ர சதுர்பிர்விஷேஷணைஃ’ந மாஂ துஷ்கரிதிநஃ’ [17.15] இத்யாதிநோக்தாஷ்சதுர்விதா துஷ்கரிதிந ஏவ விவக்ஷிதா இதி தத்வ்யாக்யாநம். ததா ஹி — நராதமஷப்தஸ்தாவத்ஸ ஏவ?’ஆஸுரஂ பாவமாஷ்ரிதாஃ’ [7.15] இத்யேதத்து’த்விஷந்தஃ’ இத்யேதத் ஸமாநார்ததயா ப்ராகேவ வ்யாக்யாதம்? ஏவஂ க்ரூராஷுபஷப்தாவபி யதாயோகஂ மூடாதிஷப்தஸமாநார்தௌ நேதவ்யௌ. அத்ராவிபாகேந யோஜநஂ சாஸுரராஷ்யைக்யாத். ஜந்மாதிசக்ரபரிவரித்திஷ்வவிச்சிந்நதயைகாகாரேண ஸரணாத் ஸஂஸாரஃ ஸந்தாநஃ. ஸஂஸரதி புருஷோஸ்மிந்நிதி அதிகரணார்தகஞந்தோத்ர ஸஂஸாரஷப்தஃ. தத்பஹுத்வோக்திஷ்சக்ரபரிவரித்த்யாநந்த்யாதித்யாஹ’ஜந்மஜரேத்யாதிநா’. ஸஂஸாரஷப்தஸ்ய ஸதஸஜ்ஜந்மஸாதாரணத்வாத்விஷேஷ்யத இத்யாஹ’தத்ராபீதி’.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யாத்யுக்தபகவத்யோகாநுகூலஸாத்த்விகஜந்மவிஷேஷவ்யவச்சேதாய தாமஸத்வம்’ஆஸுரீஷ்வேவ’ இத்யுச்யத இத்யாஹ’மதாநுகூல்யப்ரத்யநீகேஷ்விதி’. ஈதரிஷஂ ப்ரதிகூலஜந்ம தேவாதிசதுர்விதயோநிஷ்வபி த்ரஷ்டவ்யமிதி. “ஏஷ ஏவாஸாது கர்ம காரயதி தஂ யமதோ நிநீஷதி” [கௌ.உ.3.9] இத்யாதிஷ்ருத்யநுஸாரேண’க்ஷிபாமி’ இத்யுக்தஸ்ய த்வாரமாஹ’தத்ததிதி’. பாபப்ரவரித்திஹேதுபூதக்ரூரபுத்த்யாதிப்ரதாநமபி ப்ராசீநப்ரத்வேஷாதிபலபூதத்வாந்நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம்.

———————-

20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்

கௌந்தேய-குந்தியின் மகனே!
மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும்,
ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி,
தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.

பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே
மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!

கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன்
மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற
கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.

৷৷16.20৷৷மதாநுகூல்ய ப்ரத்யநீக ஜந்ம ஆபந்நாஃ புநஃ அபி ஜந்மநி ஜந்மநி மூடா மத் விபரீத ஜ்ஞாநாஃ மாம் அப்ராப்ய ஏவ,’அஸ்தி பகவாந் வாஸுதேவஃ ஸர்வேஷ்வரஃ’ இதி ஜ்ஞாநம் அப்ராப்ய ததஃ (என்னை அடையாமல் -ஈஸ்வர ஸத்பாவம் உண்டு என்கிற -ஞானம் கூட இல்லாமல் -அஸ்தி பகவான் -ஸர்வேஸ்வரன் -வாஸூ தேவன் -என்கிற ஞானம் கூட இல்லாமல் )ததோ ஜந்மநஃ அதமாம் ஏவ கதிஂ யாந்தி.

அஸ்ய ஆஸுர ஸ்வபாவஸ்ய ஆத்ம நாஷஸ்ய மூல ஹேதும் ஆஹ —

৷৷16.20৷৷உத்தரோத்தரமபகர்ஷபரம்பரோச்யதே — ‘ஆஸுரீம்’ இதி ஷ்லோகேந. மூடஷப்ததஃ பலிதமாஹ’மத்விபரீதஜ்ஞாநா’ இதி. யத்வா விபரீதஜ்ஞாநமேவாத்ர மோஹஃ; ஸ ச வாக்யார்தாநுகுண்யாத்ஸ்வவிஷயோ விஷேஷிதஃ. ஸத்த்வோத்தராணாமபி பரப்ரஹ்மப்ராப்தேரநேகஜந்மஸஂஸித்திஸாத்யதயா தாமஸேஷு தத்ப்ரஸங்கப்ரதிஷேதயோரநௌசித்யாத்ப்ராப்தேஃ ப்ரதமபவபூதஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநப்ராப்திரிஹாஷாஸ்த்ரவஷ்யேஷ்வாஸுரேஷு ப்ரதிக்ஷிப்யதே. தத்ர ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்வவ்யக்த்யர்தமாஹ — ‘அஸ்தி பகவாநிதி’. அதமத்வஸ்யோத்தமாவதிஸாபேக்ஷத்வாதவதிஸமர்பணஸமர்ததயா ஸந்நிஹிதஃ ததஷ்ஷப்தோ ந ஹேதுபர உசித இத்யபிப்ராயேணாஹ’ததஸ்ததோ ஜந்மந’ இதி.

——————

இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :

21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்

இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான,
த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள்,
காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா,
தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.

ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன)
காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.

அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது.
லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு
இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான்.
இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில்
ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.

அஸ்ய ஆஸுர ஸ்வபாவஸ்ய ஆத்ம நாஷஸ்ய மூல ஹேதும் ஆஹ —ஆத்ம ஸ்வரூபம் அழிய காரணம் மேல்

৷৷16.21৷৷அஸ்ய அஸுர ஸ்வபாவ ரூபஸ்ய நரகஸ்ய ஏதத் த்ரிவிதஂ த்வாரம் தத் ச ஆத்மநோ நாஷநம்; காம க்ரோதஃ லோப இதி. த்ரயாணாஂ ஸ்வரூபஂ பூர்வம் ஏவ வ்யாக்யாதம். த்வாரஂ மார்கோ ஹேதுஃ இத்யர்தஃ. தஸ்மாத் ஏதத் த்ரயஂ த்யஜேத். தஸ்மாத் அதி கோர நரக ஹேதுத்வாத் காம க்ரோத லோபாநாம் ஏதத் த்ரிதயஂ தூரதஃ பரி த்யஜேத்.

(நரகம் துன்பப்பட பாபங்கள் குறையுமே -அசூரத்தன்மை விட உயர்ந்ததே-வெந்நரகம் அன்றோ இது )

৷৷16.21৷৷அவஷ்யபரிஹரணீயஂ ஸங்க்ஷிப்யோச்யத இத்யபிப்ராயேணாநந்தரக்ரந்தஂ ஸங்கமயதி — ‘அஸ்யேதி’. யதாவஸ்திதஸ்யாத்மநோப்ராப்திரேவ ஹ்யாத்மநாஷஃ? ஸ சாஸுரஸ்வபாவ ஏவேத்யபிப்ராயேணாஹ’ஆஸுரஸ்வபாவஸ்யாத்மநாஷஸ்யேதி’. மூலச்சேதாத் ஸர்வோப்யாஸுரஸ்வபாவஷ்சிந்ந ஏவேத்யபிப்ராயேணாஹ’மூலஹேதுமிதி’.’ஆஸுரஸ்வபாவரூபஸ்ய நரகஸ்யேதி’ — ஏதஸ்மாததிகஂ கிமந்யந்நரகஂ இதி பாவஃ. ஆஸுரஸ்வபாவபரிஹாரார்தஂ ஹி தந்மூலோபதேஷோயமிதி வா?’தமோத்வாரைஃ’ இத்யநந்தரைகார்த்யஂ வா விவக்ஷிதம்.’ஆத்மநோ நாஷநமிதி’ — “அஸந்நேவ ஸ பவதி” [தை.உ.2.6.1] இத்யாதிக்ரமேணேதி பாவஃ. ப்ரவேஷஹேதுர்ஹி த்வாரஂ? தேநாபி ப்ராப்திமாத்ரஹேதுத்வமிஹ விவக்ஷிதமித்யபிப்ராயேணோபசாராவலம்பநக்ரமமாஹ’மார்கோ ஹேதுரித்யர்த’ இதி. த்வாரஂ நாஷநஂ ப்ரவிஷந்நேவ நஷ்யதீதி பாவஃ. த்யாஜ்யஸ்ய தோஷோக்திஸ்த்யாகவித்யுபகாரிகேத்யபிப்ராயேணாஹ — ‘தஸ்மாதிதி’. ரௌரவாதிர்நரகஃ பாபக்ஷயஹேதுஃ; ஆஸுரஸ்வபாவஸ்த்வஸௌ பாபார்ஜநஹேதுத்வாததிகோர இத்யபிப்ராயேணாஹ’அதிகோரநரகஹேதுத்வாதிதி’. ஸர்வஸ்யாஸுரஸ்வபாவஸ்ய பரித்யாஜ்யத்வேபி விஷேஷநிஷேதோத்யந்தபரிஹரணீயத்வஜ்ஞாபநாயேத்யாஹ — ‘தூரதஃ பரித்யஜேதிதி’.

—————-

பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :

22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன்,
நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்,
தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.

இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்;
அதனால் பரகதி அடைகிறான்.

துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன.
ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான்.
முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்
நோக்கிப் போக ஆரம்பித்து விட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான்.
ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.

৷৷16.22৷৷ஏதைஃ காம க்ரோத லோபைஃ தமோ த்வாரைஃ மத் விபரீத ஜ்ஞாந ஹேதுபிஃ விமுக்தஃ நர ஆத்மநஃ ஷ்ரேய ஆசரதி. லப்த மத் விஷய ஜ்ஞாநோ மதாநுகூல்யே ப்ரவர்ததே; -ததோ மாம் ஏவ பராஂ கதிஂ யாதி.–

ஷாஸ்த்ர அநாதரஃ அஸ்ய நரகஸ்ய ப்ரதாந ஹேதுஃ இதி ஆஹ —

(நல்ல வார்த்தைகள் எங்கும் இருக்க -த்வேஷித்து காதை அடைத்து கேட்க்காமல் இருக்க -அத்வேஷ லேசம் வந்தாலே இரும்பு போல் வலிய நெஞ்சத்தை தனது பக்கம் இழுத்துக் கொள்கிறான் -காந்தஸ்தே புருஷோத்தமன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
விபரீத ஞானம் தவிர்த்து காம க்ரோதாதிகளை விடுத்து – அத்வேஷ லேசம் – ஞானம் வந்து – முயற்சி செய்து -அனுகூல புத்தி -படிக்கட்டுகள்)

৷৷16.22৷৷த்யாஜ்யஸ்ய தோஷோக்த்யா த்யாகோ விஹிதஃ; த்யாகஸ்யைவேதாநீஂ பலப்ரவாஹ உச்யதே’ஏதைஃ’ இதி ஷ்லோகேந.’மத்விபரீதஜ்ஞாநஹேதுபிரிதி’ தமஃபலோக்திஃ; தமஷ்ஷப்தோ வாத்ர தத்பர்யந்தலக்ஷகஃ; தமோத்வாரைர்விமுக்தத்வாத்தமஸாபி விமுச்யதே; ஷ்ரேயஷ்சரணஂ ச தத்த்வஜ்ஞாநபூர்வகமித்யபிப்ராயேணாஹ’லப்தமத்விஷயஜ்ஞாந’ இதி.’ஷ்ரேய ஆசரதீத்யநேந’ ப்ராகுக்தபகவத்ப்ரத்வேஷாதிநிவரித்திர்விவக்ஷிதா. ஷ்ரேயஃ ப்ரஷஸ்தஂ; தச்ச ஸங்க்ரஹாத்பகவதாநுகூல்யஂ? ததநுப்ரவேஷாத்ஸர்வஸ்ய ஷாஸ்த்ரீயஸ்யேத்யபிப்ராயேணாஹ’மதாநுகூல்ய’ இதி. ததஃ ஷ்ரேயஷ்சரணாதேவ ஹேதோரித்யர்தஃ.’மாமப்ராப்யைவ’ [16.24] இத்யாதிபராமர்ஷாதிஹ பரகதிஷப்தநிர்திஷ்டஃ ப்ராப்யபர்யவஸாநபூமிஃ பரமபுருஷ இத்யாஹ — ‘மாமேவ பராஂ கதிமிதி’.

———————

அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :

23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்

ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி,
காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ,
ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான்,
பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான்,
ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.

சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்;
அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது.
இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது.
ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான்.
சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு
அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.

ஷாஸ்த்ர அநாதரஃ அஸ்ய நரகஸ்ய ப்ரதாந ஹேதுஃ இதி ஆஹ –கீழே காம க்ரோத லோபம் – மூன்றும் -பிரதான காரணம் ஸாஸ்த்ரத்தில் அநாதார புத்தி –
அத்ருஷ்ட பலம் நம்பிக்கை வருவது துர்லபம் -அன்றோ

৷৷16.23৷৷ஷாஸ்த்ரஂ வேதாஃ விதிஃ அநு ஷாஸநம் வேதாக்யஂ மத் அநு ஷாஸநம் உத் ஸரிஜ்ய யஃ காம காரதோ வர்ததே ஸ்வச் சந்த  அநுகண மார்கேண வர்ததே? ந ஸ ஸித்திம் அவாப்நோதி? ந காம் அபி ஆமுஷ்மிகீஂ ஸித்திம் அவாப்நோதி. ந ஸுகஂ ஐஹிகம் அபி கிஞ்சித் அவாப்நோதி. ந பராஂ கதிம்; குதஃ பராஂ கதிஂ ப்ராப்நோதி இத்யர்தஃ.

(ந வேதாந்த ஸாஸ்த்ரம் ந தெய்வம் கேசவ –பரம் இதுவே சாஸ்திரம் வேறே இல்லை -ஸாஸனம் ஆணை அனு ஸாஸனம் அவன் திரு உள்ளம் பின் தொடரும் -ஸாஸனாத் சாஸ்திரம்)

৷৷16.23৷৷ஆஸுரஸ்வபாவேஷு மூலதயா ப்ரதாநபூதாஸ்த்ரய உக்தாஃ; தேப்யோபி ப்ரதாநதமஃபரிஹார்யோ ஹேதுரநந்தரமுச்யத இத்யாஹ’ஷாஸ்த்ராநாதர’ இதி. ஸர்வாவஸ்தஸமஸ்தபுருஷஹிதாநுஷாஸநாச்சாஸ்த்ரஷப்தோ வேதேஷ்வேவ ப்ரதமஂ ப்ராப்தஃ; ததநுபந்தாதந்யேஷ்வித்யபிப்ராயேணாஹ’ஷாஸ்த்ரஂ வேதா’ இதி. விதாயகவாக்யஸ்ய ஷாஸ்த்ரஷப்தேநோபாத்தத்வாத் தத்வ்யாபாரோத்ர விதிஷப்தவிவக்ஷித இத்யாஹ — ‘விதிரநுஷாஸநமிதி’. பலிதமாஹ — ‘வேதாக்யஂ மதநுஷாஸநமிதி’. ஷாஸ்த்ரமேவ விதிரிதி ஸாமாநாதிகரண்யஂ வா விவக்ஷிதம்.’மதநுஷாஸநஂ’ இத்யநேந’ஷ்ருதிஃ ஸ்மரிதிர்மமைவாஜ்ஞா’ [வி.த.76.31] இத்யாதிஸ்மாரணம். ஏதேநாந்யதா லிங்காத்யர்தஂ வர்ணயந்தோபி ப்ரத்யுக்தாஃ. லிஙாதயோ ஹி ப்ரஷாஸிதுரபிப்ராயமாக்ஷேபாதபிதாநதோ வா வ்யஞ்ஜயந்தி. ஷாஸ்த்ரப்ரதிபக்ஷபூதஃ காமகாரோத்ர ந ஷாஸ்த்ரீயவைகல்பிகாதிவிஷய இத்யபிப்ராயேணாஹ’ஸ்வச்சந்தாநுகுணமார்கேதி’.’அத கேந ப்ரயுக்தோயஂ’ [3.36]’காம ஏஷ க்ரோத ஏஷஃ’ [3.37] இத்யாத்யுக்தகாமப்ரயுக்தேத்யுக்தஂ பவதி.’யா வேதபாஹ்யாஃ ஸ்மரிதயோ யாஷ்ச காஂஷ்ச குதரிஷ்டயஃ. ஸர்வாஸ்தா நிஷ்பலாஃ ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தாஃ ஸ்மரிதாஃ’ [மநுஃ12.96கூ.பு.பூ.7.2.31] இத்யாத்யநுஸந்தாநேநாஹ’ந காமப்யாமுஷ்மிகீஂ ஸித்திமிதி’. ஆமுஷ்மிகஸுகஹேதுபூதாமுபாயஸித்திமித்யர்தஃ. ந ஸுகஂ ந ஸ்வர்காதிஸுகமித்யர்தஃ. யத்வா’ஆமுஷ்மிகீஂ ஸித்திமிதி’ ஸ்வர்காதிபலவிஷயம்;’ஸுகமிதி’ த்வைஹிகபரம்; அத ஏவ ஹி கிஞ்சிச்சப்தஃ. இஹாபி ஹி ஸுகஂ ஷாஸ்த்ரீயாநுஷ்டாநஜநிதபரமபுருஷாநுக்ரஹாதேவ. அத ஏவ ஹ்யுச்யதே — ‘அநாராதிதகோவிந்தா யே நரா துஃகபாகிநஃ’ [வி.த.19.13] இதி. கைமுத்யப்ரதர்ஷநாயாத்ராந்யஸுகஸமபிவ்யாஹார இத்யாஹ — ‘குதஃ பராஂ கதிமிதி’.

——————

இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :

24. தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்து மிஹார்ஹஸி

தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு,
இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில்,
ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்,
ஜ்ஞாத்வா-அதை அறிந்து,
ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை,
கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.

ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்.
அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.

சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது.
ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம்
சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும்.
முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள்.
அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.

நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார்.
நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு
என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை;
என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.

৷৷16.24৷৷தஸ்மாத் கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ உபாதேய அநுபாதேய வ்யவஸ்தாயாஂ ஷாஸ்த்ரம் ஏவ தவ ப்ரமாணம். தர்ம ஷாஸ்த்ர இதிஹாஸ புராணாத் யுப பரிஂஹிதா வேதா யத் ஏவ புருஷோத்தமாக்யஂ பரஂ தத்த்வஂ தத் ப்ரீணந ரூபஂ தத் ப்ராப்த் யுபாய பூதஂ ச கர்ம அவ போதயந்தி; தத் ஷாஸ்த்ர விதாந உக்தஂ தத்த்வஂ கர்ம ச ஜ்ஞாத்வா யதாவத் அந்யூந அதிரிக்தஂ விஜ்ஞாய கர்துஂ த்வஂ அர்ஹஸி தத் ஏவ உபாதாதும் அர்ஹஸி.

৷৷16.24৷৷அத்யாயோக்தஂ ஸர்வமேததர்தமித்யபிப்ராயேணாநுஷிஷ்யதே — ‘தஸ்மாச்சாஸ்த்ரமிதி’. அத்ர கார்யாகார்யஷப்தயோருத்பாத்யாநுத்பாத்யாதிவிஷயத்வஸ்யாஸங்கதிமபிப்ரேத்யாஹ’உபாதேயாநுபாதேயவ்யவஸ்தாயாமிதி’. அநுஷ்டாநவிபர்யயஸ்ய தத்த்வவிபர்யயஸ்ய ச ஆஸுரஸ்வபாவே ப்ரதர்ஷிதத்வாதத்ர ச தத்விபர்யயஸ்ய விவக்ஷிதத்வாத் கார்யாகார்யஷப்தௌ தத்த்வாதத்த்வயோஃ ப்ரதர்ஷநார்தாவித்யபிப்ராயேணோபாதேயாதிஸாதாரணஷப்தஃ. உபாதாநமத்ர யதாஷாஸ்த்ரஂ மநஸா ஸ்வீகரணஂ ஷாஸ்த்ரமேவேத்யுக்தஂ?’ஷ்ருதிஃ ஸ்மரிதிஃ ஸதாசாரஃ’ [யா.ஸ்மரி.1.7] இத்யாதிவிரோதாதித்யத்ராஹ — ‘தர்மஷாஸ்த்ரேதி’. ஆதிஷப்தேநாசாரக்ரஹணஂ?’யஜந்த்யவிதிபூர்வகஂ’ [9.23]’ந து மாமபிஜாநந்தி’ [9.24] இத்யாதிவ்யவச்சேதாய ஜ்ஞாத்த்வேத்யாதிகமுச்யத இத்யாஹ’யதேவேதி’. ஸர்வாணி ஹி ஷாஸ்த்ராணி ஸாக்ஷாத்வா பரம்பரயா வா பரமபுருஷஸமாராதநதயைவ ஸர்வாணி விதததி; தத்ர தத்த்வஹிதயோஃ’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ [15.15] இத்யுக்தஂ பரதத்த்வஂ ப்ராகுக்தஸமாக்யயா ஸ்மாரயதி’புருஷோத்தமாக்யமிதி’.’தத்ப்ராப்த்யுபாயபூதஂ சேதி’ ஸர்வேஷாஂ ஹி பலஸங்காதித்யாகேநாநுஷ்டிதாநாஂ பரப்ரஹ்மப்ராப்த்யுபாயத்வமேவ ஸ்வபாவ இதி பாவஃ. அத்ர’அவபோதயந்தீத்யநேநாஜ்ஞாதஜ்ஞாபநரூபவிதாநஷப்தார்தோ’ விவரிதஃ. அயதாஷாஸ்த்ரஂ கர்மணாஂ கரணஂ ச ந கர்தவ்யமித்யபிப்ராயேண’கர்துமர்ஹஸி’ இத்யுக்தம். தஸ்மாதப்யநுஷ்டாநதத்த்வாத்யவஸாயஸாதாரண்யமாஹ’உபாதாதுமிதி’.’அர்ஹஸி’ இத்யேததநுஸாரிமத்யமத்வமிதி நிர்தேஷஃ தஸ்ய தைவீஸம்பதபிஜாதஸ்ய யோக்யத்வாதிஷயத்யோதநாய.’ஏததுக்தஂ பவதி’ — ஸத்த்வோத்தரேண பவதா குஹகபுருஷகௌஷலாதிஷயபரிக்ராஹிதமோஹநஷாஸ்த்ராபாஸப்ரக்ரியாநுதாவநேந நித்யபகவதாஜ்ஞாரூபவேதாக்யஷாஸ்த்ரஸாரபூதாத்யதாதிகாரஂ கர்மயோகபக்தியோகரூபபகவதநந்யபஜநபரமதர்மாந்ந ப்ரச்யுதேந பவிதவ்யம்; அபிது ஸ ஏவ நித்யமுபாதேயஃ — இதி. இஹேதி நிர்தேஷஃ கர்மாதிகாரபூமிப்ரதர்ஷநார்தஃ? கர்மவஷ்யாவஸ்தத்வஜ்ஞாபகோ வா.

இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு பகவத்ராமாநுஜவிரசிதஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ ஷோடஷோத்யாயஃ৷৷16৷৷

——————–

மூன்று ஸ்லோகங்களால் 26 தெய்வத்தன்மைகள்
அடுத்த அசூரத்தன்மை குணங்கள்
அடுத்து இரண்டு சம்பத்துக்களின் பலன்
அடுத்து மா ஸூ ச
அடுத்து இரண்டு வகைகள்
அடுத்து ப்ரவ்ருத்தி மார்க்கம் நிவ்ருத்தி மார்க்கம் அறியாமல்
அசத்தியம் -அப்ரதிஷ்டம் அநீஸ்வரம்
ஆண் பெண் சேர்க்கையே காரணம்
இதே போன்றவக்காற்றைப் பற்றிக்கொண்டு அறிவித்த தொலைத்து உக்ரமான கார்யங்கள் செய்து
நிறைவேற்ற முடியாத காமம் -டம்பத்துக்கா யாகாதிகள்
அநேக துன்பம் பிரளயம் வரை
காம க்ரோதமே பராயணமாக கொண்டு முயன்று துர் பிரயோகம்
எல்லாம் தன்னாலே செருக்குக் கொண்டு
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தியும் தன்னாக்கே
ஈஸ்வரோஹம் -சொல்லிக்கொண்டு –
மோகம் அடைந்து நரகத்தில் வீழ்ந்து
நாமம் பெறவே யாகங்கள் செய்து
அஹங்காராதி பீடிக்குப்பட்டு
த்வேஷமே ஹேதுவாக ஆசூர பிறவிகளிலே தள்ளுகிறேன்
காமம் க்ரோதம் லோபம்
விட்டு -த்வேஷம் -போய் அனுகூல புத்தியால் பராம் கதி
சாஸ்திரம் அநாதரமே பிரதான ஹேது
தத்வ உபாயங்களை ஸாஸ்திரமே பிரமாணம் -அதன் படியே வாழ வேண்டும்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினாறாம் அத்தியாயம் — தெய்வாசுர சம்பத் விபாக யோகம்—16-01–16-12—

February 11, 2021

தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞான ஸ்தேநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவாஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞான  -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்-அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
ஸ்தேநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

——————————

தெய்வீக இயல்பு 1-3 –
அஸுர இயல்பு 4 –
இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 –
அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 –
ஆஸுரனது வீழ்ச்சி 19-21 –
அஸுர இயல்பினின்று விடுதலை 22 –
சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.

———

அவதாரிகை
அநக -கீழ் அர்ஜுனனைக் கொண்டாடி -அது திரு உள்ளத்தில் நிழலாட -இந்த அத்யாயம்
கர்ம ஞான பக்தி யோகம் ஸ்வரூபம் விளக்கி –ஸாத்விகர்கள் தானே செய்வார்கள் –
குணம் அடிப்படையிலும் -கிரியை அடிப்படையிலும் -அதிகாரிகளை பிரித்து விளக்குகிறான்
கர்ம தீ பக்தி பூர்வ சேஷங்களை மேல் அருளிச் செய்கிறான்

அதீதேன அத்யாய த்ரய
பிரகிருதி புருஷ யோகோ- ‘விவிக்த யோகோ – ஸம்ஸ்ருஷ்ட யோகோ யாதாத்ம்யம்
தத் சம்சர்க்க-வ்யோஹஸ்ய – குண சங்க -தத் விபர்யய சுக துக்க
சர்வ ப்ரகாரேண -ஸூஷ்ம ஸ்தூல அசித்தும் -பத்த முக்த சித்தும் -பகவத் விபூதித்வம்
விபூதி மதோ பகவதோ விபூதி பூதாத் அசித் சித்த வஸ்து பக்தி முக்த உபய
அவ்யயத்வம் -வியாபகம் -பரணம் -ஸ்வாமித்வம்-அர்த்த அந்தர தயா -புருஷோத்தமஞ்ச மஹாத்ம்யம் வக்தும்
அநந்தரம்
உக்தஸ்ய க்ருத்ஸ்னஸ்ய அர்த்தஸ்ய -தத்வம் உபாயம் விவரணம் -சொல்லிய பின்பு
ஸ்தேமே திடமான அறிவு பிறக்க
ஸாஸ்த்ர வஸ்யதாம் வக்தும்
ஸாஸ்த்ர வஸ்ய -தத் விபரீத -யோகோ தேவோ அஸூர விபாகம்
குணம் -கிரியை -ஸ்ரத்தை -தானம் -ஆதாரம் ஞானம் அடிப்படைகளில் அருளிச் செய்கிறான்

—————-

ஸ்ரீபகவாநுவாச

1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை,
ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி,
தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம்,
யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல்,
தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி,
ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.

அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான்.
அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது,
அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம்.
உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.

நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது.
இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும்.
தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை
அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.

தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின் மீது,
அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம்.
தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது.
தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.

பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது.
உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம்.
சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.

৷৷16.1৷৷ஷ்ரீபகவாநுவாச — இஷ்ட அநிஷ்ட வியோக ஸஂயோக ரூபஸ்ய துஃகஸ்ய ஹேது தர்ஷநஜஂ துஃகஂ பயம்? தந் நிவரித்திஃ அபயம்.

ஸத்த்வ ஸஂஷுத்திஃ ஸத்த்வஸ்ய அந்தஃகரணஸ்ய ரஜஸ் தமோப்யாம் அஸஂஸ்பரிஷ்டத்வம்.

ஜ்ஞாந யோக வ்யவஸ்திதிஃ ப்ரகரிதி வியுக்த ஆத்ம ஸ்வரூப விவேக நிஷ்டா.

தாநஂ ந்யாய ஆர்ஜித தநஸ்ய பாத்ரே ப்ரதிபாதநம்.

தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )

யஜ்ஞஃ பலாபி ஸந்தி ரஹித பகவதாராதந ரூப மஹா யஜ்ஞாத்யநுஷ்டாநம்.(ஆதி நித்ய நைமித்திகம் )

ஸ்வாத்யாயஃ  ஸ விபூதேஃ பகவதஃ ததாராதந ப்ரகாரஸ்ய ச ப்ரதிபாதகஃ கரித்ஸ்நோ வேதஃ? இதி அநுஸஂதாய வேதாப்யாஸ நிஷ்டா.

தபஃ கரிச்ச்ர சாந்த்ராயண த்வாதஷ் யுபவாஸாதேஃ பகவத் ப்ரீணந கர்ம யோக்யத ஆபாதநஸ்ய கரணம்.

ஆர்ஜவம் மநோ வாக் காய கர்ம வரித்தீநாம் ஏக நிஷ்டா பரேஷு.

৷৷16.1৷৷தரிதீயஷட்கஸ்ய த்ரிகபேதாதிப்ரகாரஃ ப்ராகேவாஸ்மாபிஃ ப்ரபஞ்சிதஃ; தத்ர த்ரிகபேதஂ ப்ரதர்ஷ்ய த்ரிபிஃ ஸங்கததயா ஷோடஷமவதாரயிதுஂ தத்த்வத்ரயவிஷோதநபரஸ்ய த்ரயோதஷாதித்ரிகஸ்யார்தஂ க்ரமாதநுவததி — ‘அதீதேநாத்யாயத்ரயேணேதி’. குணஸங்கதத்விபர்யயஹேதுத்வமிதி பாடஃ. கப்ரத்யயப்ரயோகாபாவேப்யத்ர பஹுவ்ரீஹித்வமேவேதி.’இதி குஹ்யதமஂ ஷாஸ்த்ரம்’ [15.20] இதி பூர்வாத்யாயாந்தே ஷாஸ்த்ரமுபக்ஷிப்தம். அநகபாரதஷப்தாப்யாஂ ச தததிகாரீ ஸூசிதஃ. ஸ ஏவ ஹி’மா ஷுசஃ ஸம்பதஂ தைவீமபிஜாதோஸி பாண்டவ!’ [16.5] இதி வக்ஷ்யதே. தத்ரோக்தார்தவ்யவஸாயஸ்ய ஷாஸ்த்ராதீநத்வாத்புருஷஸ்ய ஷாஸ்த்ரவஷ்யத்வஂ தாவத்வக்தவ்யம். தச்ச’தஸ்மாச்சாஸ்த்ரஂ ப்ரமாணஂ தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ. ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தஂ கர்ம கர்துமிஹார்ஹஸி’ [16.24] இத்யத்யாயாந்தே வக்ஷ்யதி. ததர்தமேவ ச பூர்வாத்யாயாந்தஸூசிதாதிகாரிவிஷேஷவிவேசநாயாத்ராதௌ தைவாஸுரவிபாகோக்திஃ. ததபிப்ராயேண ஸஂகரிஹீதஂ’தைவாஸுரவிபாகோக்திபூர்விகா ஷாஸ்த்ரவஷ்யதா. தத்த்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே ஷோடஷ உச்யதே’ [கீ.ஸஂ.20] இதி. ததேதத்ஸர்வமபிப்ரேத்யாஹ — ‘அநந்தரமிதி’.

‘உக்தஸ்ய கரித்ஸ்நஸ்யார்தஸ்யேதி’ — வக்ஷ்யமாணஸ்யாநுஷ்டாநவிவேகஸ்யாப்யுபலக்ஷணம். உக்தைகதேஷவிஷோதநரூபத்வாத்வா ததவிவக்ஷா. ஸங்க்ரஹஷ்லோகோக்தாநுஷ்டாநமபி’கரித்ஸ்நஸ்யேதி’ விஷேஷணேந அந்தர்பாவிதம். ஹேயோபாதேயஸ்வபாவகதநஸ்ய ஹாநோபாதாநார்ததயா பலிதமாஹ — ‘ஷாஸ்த்ரவஷ்யதாஂ வக்துமிதி’. ஷாஸ்த்ரவஷ்யத்வகதநேதேவாஸுரவிபாகோக்திஃ குத்ரோபகுருதே தத்ராஹ — ‘ஷாஸ்த்ரவஷ்யதத்விபரீதயோரிதி’. பகவதாஜ்ஞா ஹி ஷாஸ்த்ரஂ? ததநுவர்திநோ தேவாஸ்தேநாநுகரிஹ்யந்தே; அதஸ்ததா வர்திதவ்யம். ததாஜ்ஞாதிக்ராமிணோஸுராஸ்தேந நிகரிஹ்யந்தே; அதஸ்ததா ந வர்திதவ்யமிதி பாவஃ. நைஸர்கிகவிரோதத்யோதநாயாத்ர வக்ஷ்யமாணஸர்கஷப்தோபாதாநம். விபாகோத்ர குணக்ரியாதிபிர்வக்ஷ்யமாணைஃ’யயா ஸ்வப்நஂ (ஸுப்தஂ) பயஂ ஷோகம்’ [18.35] இத்யாதிபிஃ. தமஷ்ஷீலஂ ஹி பயம்; தத்ஸாத்த்விகஸ்ய தைவஸர்கஸ்ய ந பவதீத்யபிப்ராயேண பயநிரூபணார்தஂ தத்ப்ரதியோகிஸ்வரூபஂ ஷிக்ஷயதி — ‘இஷ்டாநிஷ்டேதி’. வியோகஸஂயோகஷப்தாவிஷ்டாநிஷ்டாப்யாஂ யதாக்ரமமந்வேதவ்யௌ. இதஂ ச ஸ்வரூபகதநம்; ந து பயலக்ஷணாநுப்ரவிஷ்டம்; ஆகாமிதுஃகஹேதுதர்ஷநஜஂ துஃகமித்யேவ ஹி தத்.’ஸத்த்வஸஂஷுத்திஃ’ ஸத்த்வாதிஷ்டாநமந்தஃகரணமிஹ ஸத்த்வம்; தஸ்ய ஸமீசீநா ஷுத்திஃ ஸஂஷுத்திஃ ஸர்வதோஷநிவரித்திஃ. தத்ர கந்தபூதரஜஸ்தமோநிவரித்த்யா காமராகாஸூயாவஞ்சநாதிஸர்வதோஷநிவரித்திமபிப்ரேத்யாஹ — ‘ரஜஸ்தமோப்யாமஸஂஸ்பரிஷ்டத்வமிதி’. ஜ்ஞாநயோகஷப்தோத்ர ந கர்மயோகாதீநாஂ வ்யவச்சேதார்தஃ? தேஷாமபி ஸாத்த்விகோபாதேயத்வாத்; அதஃ கர்மஜ்ஞாநபக்தீநாஂ ஸாதாரணஂ ஷாஸ்த்ரீயஂ ஷுத்தாத்மஸ்வரூபவிவேசநமிஹ விவக்ஷிதமித்யாஹ — ‘ப்ரகரிதிவியுக்தேதி’. ஜ்ஞாநமேவாத்ரோபாயத்வாத்யோகஃ. யத்வா ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநநிஷ்பாத்யஂ சிந்தநஂ ஜ்ஞாநயோகஃ.’ந்யாயார்ஜிதேத்யாதிகஂ’ தாந்தஸ்ய ஷாஸ்த்ரீயாகாரப்ரதர்ஷநம்? அநேவங்கரணஸ்ய ராஜஸதாமஸத்வேந வக்ஷ்யமாணத்வாத். ஏதச்ச யதாவிபவமநுஸந்தேயம். தமநஂ தமஃ; தச்சாந்தஃகரணகர்மகஂ அமார்காந்நிவர்தநஂ ப்ரகரணாந்தராதிஸித்தமாஹ — ‘மநஸ’ இதி. பாஹ்யேந்த்ரியநியமநஂ ஹி ஷாந்திஷப்தேந வக்ஷ்யதி. ஏதேந கேஷாஞ்சிதநயோஃ ஷப்தயோர்வ்யுத்க்ரமேணார்தவ்யாக்யாநஂ நிரஸ்தம்.

‘யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்’ [16.17] இத்யாஸுரயஜ்ஞாநாஂ வக்ஷ்யமாணத்வாதத்ர மோக்ஷப்ரகரணேபிமதஂ ஸாத்த்விகஂ யஜ்ஞவிஷேஷமாஹ — ‘பலாபிஸந்திரஹிதேதி’. ஸமஸ்தநித்யநைமித்திகோபலக்ஷணதயாத்ர யஜ்ஞோபாதாநமித்யாதிஷப்தஃ. அபகரிஷ்டதேவதாவிஷயஸ்ய அல்பபலகாம்யகர்மவிதாயகஸ்ய ச வேதபாகஸ்ய யாவாநர்தஉதபாநந்யாயாந்முமுக்ஷுணாநப்யஸநீயத்வமாஷங்க்ய தத்ராபி த்ரைவர்கிகவேதாப்யாஸாத்வ்யாவரித்திஂ ப்ரகரணலப்தாமாஹ — ‘ஸ விபூதேரிதி’. “ஸர்வே வேதா யத்பதமாமநந்தி” [கடோ.2.15] “ஸர்வே வேதா யத்ரைகஂ பவந்தி” [ஆ.3.11.1] இத்யாதிக்ரமேணாநுஸந்தாய படத உபநிஷதப்யாஸவிதிப்ரயுக்தஸ்ய ஸர்வஂ ப்ரணவாஷ்டாக்ஷரஷடக்ஷரத்விஷட்கநிஷதுபநிஷதப்யாஸகல்பமித்யபிப்ராயஃ. ஏதேந “அந்யா வாசோ விமுஞ்சத” [முஂ.உ.2.2.5] இத்யாதிகமப்யந்யபரஂ நிவரித்தம்?’ஓமித்யே-(வஂ த்யாயதாமாத்மாநஂ)வாத்மாநஂ த்யாயத’ [முஂ.உ.2.2.6] இதி த்யாநதஷாயாஂ ப்ரணவஸ்யைவோபாதேயத்வே தாத்பர்யாச்ச. யத்யபி ஸ்வேநாதீயத இதி ஸ்வாத்யாயஃ ஸ்வஷாகா? ததாபி’ந சைகஂ ப்ரதி ஷிஷ்யதே’ இதி ந்யாயாத்ஸர்வஷாகாநுகதஸ்யார்தஸ்யாநுஸந்தேயத்வாத்? ஜபவிதேஷ்ச ஸர்வத்ராவிஷேஷாத்’வேதாப்யாஸநிஷ்டேதி’ ஸாமாந்யேநோக்தம். ஷாஸ்த்ரீயோ போகஸங்கோசஸ்தப இதி லக்ஷிதே தத்விஷேஷாநுதாஹரதி — ‘கரிச்ச்ரேதி’.’ஏகபு(ப)க்தேந நக்தேந ததைவாயாசிதேந ச. உபவாஸேந (சைவாயஂ பாதகரிச்ச்ரஃ ப்ரகீர்திதஃ) தாநேந ந நிர்த்வாதஷிகோ பவேத்’ [யா.ஸ்மரி.318அத்ரிஸ்மரி.124] இத்யாதிவிஹிதத்வாதஷீஸமாராதநார்தைகாதஷ்யுபவாஸோத்ர த்வாதஷ்யுபவாஸ இத்யுக்தஃ. யத்வா திதிவ்ரதேஷு திதித்வயவ்ரதே ச த்வாதஷ்யுபவாஸோப்யஸ்த்யேவ. ஆதிஷப்தேந கரணத்ரயநிஷ்பாத்யாநாஂ வக்ஷ்யமாணாநாஂ தபஸாஂ க்ரஹணம். ராஜஸதாமஸக்ராஹ்யபலார்ததபோவ்யவச்சேதார்தமாஹ — ‘பகவத்ப்ரீணநகர்மயோக்யதாபாதநஸ்யேதி’. தபஸா ஷுத்தஸ்ய ஹ்யர்சநாதிஷ்வதிகாரஃ. அத்ராந்யேஷாமபி கரணத்ரயஸ்ய ஸ்வஸ்மிந்நைகரூப்யாத்தத்வ்யாவரித்த்யர்தமாஹ — ‘பரேஷ்விதி’.,

————

2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்

அஹிம்ஸா-கொல்லாமை,
ஸத்யம்-வாய்மை,
அக்ரோத:-சினவாமை,
த்யாக:-துறவு,
ஸாந்தி-ஆறுதல்,
அபைஸுநம்-வண்மை,
பூதேஷு தயா-ஜீவதயை,
அலோலுப் த்வம் – அவாவின்மை,
மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை,
அசாபலம்-சலியாமை.

கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,

உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து
தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது.
அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது.
கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும்.
மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக்
கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து
அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது.
உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல்.
இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது
பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு.
அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது.
புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும்.
மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும்.
மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது.
தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய
உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது
வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.

৷৷16.2৷৷-10-அஹிஂஸா பர பீடா வர்ஜநம்.

11-ஸத்யஂ யதா தரிஷ்ட அர்த கோசர பூத ஹித வாக்யம்.-உள்ளத்தை உள்ளபடி கண்டு கண்டத்தையே சொல்வது பூத ஹிதமாகவும் இருக்க வேண்டும்

12-அக்ரோதஃ பர பீடா பல சித்த விகார ரஹிதத்வம்.

13-த்யாகஃ -பிரகரணத்துக்கு ஏற்ற படி இங்கு -ஆத்ம ஹித ப்ரத்யநீக பரிக்ரஹ விமோசநம்.

14-ஷாந்திஃ (பாஹ்ய)இந்த்ரியாணாஂ விஷய ப்ராவண்ய நிரோத ஸஂஷீலநம்.

15-அபைஷுநஂ பர அநர்தக வாக்ய நிவேதந அகரணம்.

16-தயா பூதேஷு ஸர்வேஷு துஃக அஸஹிஷ்ணுத்வம்.

17-அலோலுப்த்வம்? அலோலுபத்வம்? அலோலுத்வம் இதி வா பாடஃ. விஷயேஷு நிஃஸ் பரிஹத்வம் இத்யர்தஃ.-பேராசை சஞ்சலத்வம்

18-மார்தவம் அகாடிந்யம்; ஸாது ஜந ஸஂஷ்லேஷ அர்ஹதா இத்யர்தஃ.

19-ஹ்ரீஃ அகார்ய கரணே வ்ரீடா.-வெட்கம்

20-அசாபலஂ ஸ்பரிஹணீய விஷய ஸந்நிதௌ அசபலத்வம்.

৷৷16.2৷৷கௌடில்யப்ரஸங்கஸ்தலே ஹி தந்நிவரித்திர்வக்தவ்யேத்யபிப்ராயஃ.’பரபீடாவர்ஜநமிதி’ ஸ்வபீடோபலக்ஷணம். ஸ்வபீடாபி மூர்காணாஂ பரபீடாபிப்ராயேதி வா பாவஃ. யதாதரிஷ்டார்தவசநேநைவ ஸத்யவாதீ பவதி; ததாபி’ஸத்யஂ பூதஹிதஂ ப்ரோக்தம்’ இதி நியமாத் பூதஹிதோக்திஃ.’பரபீடாபலேதி’ ப்ராக்வத்பாவ்யம். ஸ்வபாவார்தஷாஸ்த்ரப்ராப்தாநாஂ நித்ராஷநமஹாயஜ்ஞதண்டகுண்டிகாதீநாஂ த்யாகாயோகாத்விஷேஷே நியச்சதி — ‘ஆத்மஹிதப்ரத்யநீகேதி’. தமஷப்தேந மநோநியமநஸ்யோக்தத்வாத். “ஷாந்தோ தாந்தஃ” [பரி.உ.4.4.23] இத்யாதிஷ்விவ ஷாந்திரிஹ பாஹ்யேந்த்ரியகதேத்யபிப்ராயேணாஹ — ‘இந்த்ரியாணாமிதி’. அக்ரோதாஹிஂஸாதிஷ்விவ ப்ரதியோகிலக்ஷணத்வாரேண அபைஷுநஂ லக்ஷயதி’பராநர்தேதி’.’தயா’ இத்யேதாவதா பூதவிஷயத்வே ஸித்தேபி புநருபாதாநஂ பஹுவசநஂ ச ஷத்ருமித்ராதிஸர்வவிஷயாபிப்ராயேண. யதோக்தஂ கௌதமேந — ‘தயா ஸர்வேஷு பூதேஷு க்ஷாந்திரநஸூயா ஷௌசமநாயாஸோ மங்கலமகார்பண்யமஸ்பரிஹா’ [கௌ.த.7.10] இதி. அந்யத்ர ச’ஸர்வபூததயா புஷ்பம்’ [ப.பு.4.73.58] இத்யாதி. ததாஹ — ‘ஸர்வபூதேஷ்விதி’.’தாபத்ரயேணாபிஹதஂ யதேததகிலஂ ஜகத். ததாஷோச்யேஷு பூதேஷு கருணாஂ ந கரோதி கஃ (த்வேஷஂ ப்ராப்தஃ கரோதி கஃ) [வி.பு.1.17.70] இதி ஹி கருணாக்யசித்தபரிகர்ம ப்ரஹ்லாதஃ ப்ராஹ. துஃகாஸஹிஷ்ணுத்வஂ தந்நிராகரணேச்சேத்யர்தஃ. லுபிதாதௌ யங்லுகந்தே க்விபி கரிதே லோலுபிதி பகாராந்தஂ பதம்; அசி கரிதே து ஸோலுப இதி? தத்வ்யஞ்ஜயதி — ‘அலோலுப்த்வம் அலோலுபத்வமிதி’.’லரிஞ் சேதநே’ [தா.பா.9.11] இதி தாதௌ லோட் இதி யங்லுகந்தம். தத்ர’த்வே ச’ [அஷ்டா.3.3.64] இதி ச்சாந்தஸஂ ஹ்ரஸ்வமபிப்ரேத்யாஹ — ‘அலோலுத்வமிதி வா பாட’ இதி. அயோக்யஸ்பரிஹாரூபஂ லௌல்யமிஹ நிஷித்யத இத்யபிப்ராயேணாஹ — ‘விஷயேஷ்விதி’. முக்யஸ்ய மார்தவஸ்யாத்ராநந்வயாத் பூர்வபாஷித்வமுகஸௌம்யத்வாதிவ்யங்க்யமௌபசாரிகஂ தர்ஷயிதுமாஹ — ‘அகாடிந்யமிதி’. கடிநஂ ஹி த்ரவ்யமந்யேஷாஂ அநுப்ரவேஷாநர்ஹம்; தத்வதிஹ ஸ்தப்தப்ரகரிதிரிதி தத்வ்யதிரேகவிவக்ஷயா பலதோ மார்தவஂ வ்யநக்தி — ‘ஸாதுஜநேதி’. அவமதத்வாதீநாஂ யோகோபகாரகத்வாத்தந்மூலா வ்ரீடா ஸத்த்வநிஷ்டாநாமயுக்தா; அத உபயுக்தஂ ஹ்ரீவிஷேஷமாஹ — ‘அகார்யகரணே வ்ரீடேதி’. ப்ரக்யாதாபிஜநவித்யாவரித்தா ஹி மஹாந்தஃ பரேஷ்வப்யகார்யகாரிஷ்வபத்ரபந்தே; ஸ்வயஂ து கிமுதேதி பாவஃ. அலோலுபத்வாசாபலத்வயோரபௌநருக்த்யாயாஹ — ‘ஸ்பரிஹணீயவிஷயஸந்நிதாவிதி’. ஏதேந க்ரீடாபரிஹாஸமரிகயாக்ஷாதிஷ்வ ப்ரஸங்கோபி தர்ஷிதஃ.

—————–

3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம்,
அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை,
தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை,
அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன,
பாரத-பாரதா.

ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!

கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத்
தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது.
மனதின் கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது.
விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும்
அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது.
மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது.
பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது.
பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு.
அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.

৷৷16.3৷৷21-தேஜஃ -துர்ஜநைஃ அநபிபவநீயத்வம்.

22-க்ஷமா –பர நிமித்த பீடாநுபவே அபி பரேஷுஂ தஂ ப்ரதி சித்த விகார ரஹிததா.

23-தரிதிஃ மஹத்யாம் அபி ஆபதி கரித்யகர்தவ்ய தாவதாரணம்.-மஹா ஆபத்து சமயங்களும் செய்ய வேண்டியவற்றைச் செய்யும் உறுதி

24-ஷௌசஂ பாஹ்ய அந்தஃகரணாநாஂ கரித்ய யோக்யதா ஷாஸ்த்ரீயா.

25-அத்ரோஹஃ பரேஷு அநுபரோதஃ; பரேஷு ஸ்வச் சந்த வரித்தி நிரோத ரஹிதத்வம் இத்யர்தஃ.

26-ந அதி மாநிதா -அஸ்தாநே கர்வஃ அதி மாநித்வம்? தத் ரஹிததா.

ஏதே குணா தைவீஂ ஸஂபதம் அபி ஜாதஸ்ய பவந்தி. தேவ ஸம்பந்திநீ ஸஂபத் தைவீ; தேவா பகவத ஆஜ்ஞ அநுவரித்தி ஷீலாஃ? தேஷாஂ ஸஂபத். ஸா ச பகவத ஆஜ்ஞ அநுவரித்திஃ ஏவ? தாம அபி ஜாதஸ்ய தாம் அபிமுகீ கரிதஸ்ய ஜாதஸ்ய தாஂ நிர்வர்தயிதுஂ ஜாதஸ்ய பவந்தி இத்யர்தஃ.

৷৷16.3৷৷பூதேதரவிஷயஸ்தேஜஷ்ஷப்தஃ பராபிபவநஸாமர்த்யே அந்யாநபேக்ஷதாயாஂ வா ப்ரயுஜ்யதே; அதோத்ராபிபாவகத்வாவிநாபூதமநபிபவநீயத்வஂ விவக்ஷிதம்; தச்ச துர்ஜநாவகாஷப்ரதாயிகார்பண்யாபாவத்வாரேத்யபிப்ராயேணாஹ — ‘துர்ஜநைரிதி’. அக்ரோதாத் க்ஷமாயா விஷேஷஂ தர்ஷயதி — ‘பரநிமித்தபீடாநுபவேபீதி’. நிரபராதேஷு நிர்விகாரதா ஹ்யௌதாஸீந்யமாத்ரம். ந து க்ஷமா; பட்யதே ச நிரபராதேஷ்வபி க்ரோதஃ — ‘ப்ராஹ்மணா கணிகா வைத்யாஃ ஸாரமேயாஷ்ச குக்குடாஃ. தரிஷ்டமாத்ரேண குப்யந்தி ந ஜாநே தத்ர காரணம்’ இதீத்யபிப்ராயஃ.’பரேஷு தஂ ப்ரதீதி’ — பரேஷாஂ பீடாநுபவஂ ப்ரதீத்யர்தஃ. பயசாபலநிவரித்தேஃ பரிதகுக்தத்வாதுபஸ்திதாயாமபி மஹத்யாமாபதி ஷாஸ்த்ரீயாநுஷ்டாநஸங்கல்பஸ்ய அப்ரச்யுதாவலம்பநமிஹ ஸாத்த்விகீ தரிதிரித்யபிப்ராயேணாஹ — ‘மஹத்யாமிதி’.’மஹத்யாபதி ஸம்ப்ராப்தே() ஸ்மர்தவ்யோ பகவாந் ஹரிஃ’ [ம.பா.2.68.42] இதி ஸுகரமுக்யகர்தவ்யாபரித்யாகாதிதரதபி கர்தவ்யஂ கரிதமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ. வக்ஷ்யதி ச ஸாத்த்விகீஂ தரிதிஂ’தரித்யா யயா தாரயதே மநஃப்ராணேந்த்ரியக்ரியாஃ. யோகேநாவ்யபிசாரிண்யா தரிதிஃ ஸா பார்த! ஸாத்த்விகீ’ [18.33] இதி. யோகேநாவ்யபிசாரிண்யா மோக்ஷஸாதநபூதபகவதுபாஸநாக்யப்ரயோஜநேந ப்ரயோஜநாந்தரநிரபேக்ஷயேத்யர்தஃ. ஷரீரவாங்மநாஂஸி ஹ்யஷுசிபுருஷஸ்பர்ஷாஷுசித்ரவ்யோபயோகாதிபிருபஹதஸத்த்வாநி தேஷுதேஷு கர்மஸ்வயோக்யாநி ஷாஸ்த்ரைஃ ஷிஷ்யந்தே. ததபாவோத்ர ஷௌசமித்யாஹ’பாஹ்யேதி’. ப்ரத்யக்ஷஸித்தகரணபாடவாதிரூபகரித்யயோக்யதாவ்யவச்சேதாயாஹ — ‘ஷாஸ்த்ரீயேதி’. அஹிஂஸாயா உக்தத்வாதத்ரோஹஸ்ய ததோ விஷேஷப்ரதர்ஷநாயாஹ — ‘பரேஷ்வநுபரோத’ இதி. ப்ரபலேந ஹி துர்பலாஃ ஸ்வவஷே ஸ்தாபிதாஃ,ஸ்வாச்சந்த்யாந்நிவார்யந்தே? ஸோயமுபரோதஃ; ததகரணமத்ராநுபரோத இத்யாஹ — ‘ஸ்வச்சந்தேதி’. ஸ்வஸ்ய து யோகோபகாரீ ஸ்வச்சந்தவரித்திநிரோதஸ்தப ஏவ. அதஃ’பரேஷ்விதி’ விஷேஷிதம். மாநோ கர்வ இதி பர்யாயஸ்து ஸாமாந்யத இஹ நிஷேத்துமிஷ்டஃ; ததாபி வஂஷவீர்யஷ்ருதாத்யநுகுணஂ மாத்ரயா பவந்நஸௌ ஸஹ்யேதாபி; அந்யதா பவந்நஸுராணாஂ தர்மதயா வக்ஷ்யமாணோத்ர ந ப்ரஸங்கமர்ஹதீத்யபிப்ராயேண ஸோபஸர்கமாநநிஷேத இத்யாஹ — ‘அஸ்தாநே கர்வ’ இதி.

‘தைவீஂ ஸம்பதம்’ இத்யுக்தே தேவாநாஂ விபூதிஃ ப்ரதீயேத; ஸா சாத்ர நாந்வேதி; அதோபிப்ரேதமவதாரயிதுஂ வ்யுத்பத்திஂ தாவதாஹ — ‘தேவஸம்பந்திநீதி’.’ஸத்த்வஂ தேவகுணஂ வித்யாதிதராவாஸுரௌ குணௌ’ இதி விபாகாத்?’ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ [14.17] இதி ஸத்த்வஸ்யாநுஷ்டாநபர்யந்தஜ்ஞாநஹேதுத்வாச்ச ஸத்த்வோத்தரத்வாதேவ பகவதாஜ்ஞாஂ நாதிவர்தந்தே; ததாதாவேவாஹ — ‘பகவதாஜ்ஞாநுவரித்திஷீலா’ இதி. ஸைவ ச தேஷாஂ ஸம்பதபிமதா. அவிவேகிநாஂ போக்யதத்ஸாதநஸமரித்திவத்தேஷாஂ பகவதாஜ்ஞாநுவரித்தேஃ ப்ரீதிவிஷயத்வாத்பரமபுருஷார்தஹேதுத்வாச்சேத்யாஹ — ‘ஸா சேதி’. உக்தஂ ச’மஹாத்மாநஸ்து மாஂ பார்த! தைவீஂ ப்ரகரிதிமாஷ்ரிதாஃ. பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்’ [9.13] இதி. அந்யத்ர ச’விஷ்ணுபக்திபரோ தேவஃ’ [வி.த.109.74+அ.பு.373.12] இதி. ஜாதஸ்யேத்யகர்மகஸ்ய ஜாயதேஃ பதத்யாதிஷ்விவோபஸர்கவஷாத்த்விதீயாந்வயமாஹ — ‘தாமபிமுகீகரித்யேதி’.’அபிரபாகே’ [அஷ்டா.1.4.91] இதி கர்மப்ரவசநீயயோகாத்வா த்விதீயா.’அபிமுகீகரித்ய’ அபிலக்ஷ்ய; யதா தைவீ ஸம்பத்பவதி? ததா கரித்வா ஜாதஸ்யேதி யாவத். ஈதரிஷகுணயுக்தாநாமேவஂவிதாயாஃ ஸம்பதோவஷ்யம்பாவித்வமத்ர அபிமுகீகரணஂ விவக்ஷிதம். ததா ச ஸ்மர்யதே — ‘ஜாயமாநஂ ஹி புருஷஂ யஂ பஷ்யேந்மதுஸூதநஃ. ஸாத்த்விகஃ ஸ து விஜ்ஞேயஃ ஸ வை மோக்ஷார்தசிந்தகஃ’ இதி. ததிதமாஹ — ‘தாஂ நிர்வர்தயிதுஂ ஜாதஸ்யேதி’.,

——————-

இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :

4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்

பார்த-பார்த்தா,
தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம்,
க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை,
அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம்,
ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை,
அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.

டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம்
காணப்படுகின்றன; பார்த்தா!

ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக் கொண்டு தன்னை
மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக
எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும்,
கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது.
தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.

பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்
பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள்
நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான
பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.

৷৷16.4৷৷தம்பஃ தார்மிகத்வ க்யாபநாய தர்மாநுஷ்டாநம்.(க்யாதி லாப பூஜா அர்த்தத்துக்காகச் செய்யக் கூடாதே )–தர்பஃ கரித்ய அகரித்ய அவிவேக கரோ விஷய அநுபவ நிமித்தோ ஹர்ஷஃ.,–அதிமாநஃ ச ஸ்வ வித்ய அபி ஜந அநநுகுண அபிமாநஃ.(இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் )– க்ரோதஃ பர பீடா பல சித்த விகாரஃ.– பாருஷ்யஂ ஸாதூநாம் உத்வேக கரஃ ஸ்வபாவஃ. –அஜ்ஞாநஂ பரா வர தத்த்வ கரித்ய அகரித்ய அவிவேகஃ. ஏதே ஸ்வபாவாஃ ஆஸுரீஂ ஸஂபதம் அபிஜாதஸ்ய பவந்தி. அஸுரா பகவத ஆஜ்ஞாதி வரித்தி ஷீலாஃ.

৷৷16.4৷৷’தம்போ தர்பஃ’ இத்யாதௌ பவந்தீத்யநுஷஜ்யதே.’தார்மிகத்வக்யாபநாயேதி’? ந து பகவதாஜ்ஞாநுவரித்திபுத்த்யேத்யர்தஃ.’கரித்யாகரித்யாவிவேககர’ இதி ஷாஸ்த்ராதிலங்கநஹேதுரிதி பாவஃ. அதிமாநஷப்தோக்தகர்வாபரபர்யாயாத்தத்காரணாபிமாநாத்தர்பஸ்ய விஷேஷமாஹ’விஷயாநுபவநிமித்த’ இதி. ஏதேநாசார்யபகவத்ஸந்தர்ஷநாதிநிமித்தஹர்ஷவ்யவச்சேதஃ. அஸ்தாந இதி பூர்வோக்தமத்ர’ஸ்வவித்யாபிஜநாநநுகுண’ இத்யநேந விவரிதம். வித்யாபிஜநக்ரஹணஂ வீர்யாதேரப்யுபலக்ஷணம்.’வயஸஃ கர்மணோர்தஸ்ய ஷ்ருதஸ்யாபிஜநஸ்ய ச. வேஷாவாக்வரித்தி(க்புத்தி)ஸாரூப்யமாசரந்விசரேதிஹ’ [மநுஃ4.18] இத்யஸ்யோல்லங்கநமிஹாபிப்ரேதம். பாஹ்யகுதரிஷ்டிஷு சோராதிஷு ச வாக்பாருஷ்யஂ தண்டபாருஷ்யஂ ச நாதீவ தோஷ இத்யபிப்ராயேணாஹ — ‘ஸாதூநாமுத்வேககரஃ ஸ்வபாவ’ இதி. அதஏவ ஸாதுபஹிஷ்காராச்சாஸ்த்ரபஹிஷ்காரோபி ஸ்யாதேவேத்யர்தஃ. ப்ராப்தகாலநித்ராதிரூபமநுபயுக்தவிஷயஂ சாஜ்ஞாநமாஸுராணாமந்யேஷாமபி துல்யமதோஷஷ்ச. தத்வ்யவச்சிநத்தி — ‘பராவரேதி’. ஈதரிஷாஜ்ஞாநமூலமாகமாந்தரேஷு பராவரதத்த்வவ்யத்யயகல்பநஂ? வேதவிருத்தாசாரபரிக்ரஹஷ்ச. பூர்வோக்தகதிபயகுணவ்யதிரேகப்ரதர்ஷநமிஹோபலக்ஷணார்தம். சகாரேண வாநுக்தஸமஸ்தஸமுச்சயஃ. ஆஸுரீஂ ஸம்பதமபிவ்யக்துமாஹ — ‘பகவதாஜ்ஞாதிவரித்திஷீலா’ இதி. யாந் ப்ரத்யுச்யதே’பஷ்யத்யேநஂ ஜாயமாநஂ ப்ரஹ்மா ருத்ரோதவா புநஃ (லோகபிதாமஹஃ) ரஜஸா தமஸா சைவ மாநஸஂ ஸமபிப்லுதம்’ [ம.பா.12.348.77?78] இதி;’விபரீதஸ்ததாஸுரஃ’ [வி.த.109.74] இதி ச. ப்ரஜாபதிவாக்யே ச தேஹாத்மாபிமாநாதிமூலத்ரிவர்கமாத்ர நிஷ்டாமதிகரித்யோச்யதே “அஸுராணாஂ ஹ்யேஷோபநிஷத்” [சா.உ.8.8.5] இதி. அத்ர ஸம்பச்சப்தோ பகவதாஜ்ஞாதிலங்கநருசீநாமபிப்ராயேணோபலம்பாபிப்ராயேண வா ஸம்பத்யத இத்யேதாவந்மாத்ரவிவக்ஷயா வா ஜ்ஞாதவ்யஃ.

——————–

இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :

5. தைவீ ஸம்பத்விமோஷோய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ

தைவீ ஸம்பத் விமோஷோய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம்,
ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை,
பாண்டவ-பாண்டவா,
தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய்,
மா ஸுச:-துயரப்படாதே.

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா,
தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது.
அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று
அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு
அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன்
முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில்
அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.

৷৷16.5৷৷தைவீ மத் ஆ ஜ்ஞாநு வரித்தி ரூபா ஸஂபத் விமோக்ஷாய பந்தாத் முக்தயே பவதி– க்ரமேண மத் ப்ராப்தயே பவதி இத்யர்தஃ.–ஆஸுரீ மத் ஆஜ்ஞ அதி வரித்தி ரூபா ஸஂபத் நிபந்தாய பவதி? (நி பந்தாய–நியத நிஷ்க்ருஷ்ட )அதோ கதி ப்ராப்தயே பவதி இத்யர்தஃ.

ஏதத் ஷ்ருத்வா ஸ்வ ப்ரகரித்ய நிர்தாரணாத் அதி பீதாய அர்ஜுநாய ஏவம் ஆஹ — ஷோகஂ மா கரிதாஃ; த்வஂ து தைவீஂ ஸஂபதம் அபி ஜாதஃ அஸி. ஹே பாண்டவ தார்மிக அக்ரேஸரஸ்ய ஹி பாண்டோஃ தநயஃ த்வம் இதி அபிப்ராயஃ.(வாசகம் கொண்டு அருளாயே மாஸூச -அவனுக்கு ஒரு சொல் நமக்கு வாழ்வு )

(தீரோதத்தனாக இருப்பதால் எனக்கு அஹங்காரம் இருக்குமோ அஸூர தன்மை உள்ளதோ என்ற சங்கை வந்ததால் சோகம் அடைய மாஸூச)

৷৷16.5৷৷தைவாஸுரஸ்வபாவயோஃ ஷ்ரத்தோத்வேகஜநநாய’ஊர்த்வஂ கச்சந்தி ஸத்த்வஸ்தாஃ’ [14.18] இத்யாதிநோக்தமிஹ ஸங்க்ஷிப்ய ஸ்மார்யதே — ‘தைவீ ஸம்பத்’ இத்யர்தேந. விமோக்ஷஸ்யேஷ்டப்ராப்திபர்யந்ததாஂ வக்துமாத்யந்திகாநிஷ்டநிவரித்திரூபஂ ஷப்தஸ்ய முக்யார்தமாஹ — ‘பந்தாந்முக்தய’ இதி. அவ்யவஹிதஹேதுத்வவிவக்ஷாயாஂ ஸமாதிபர்யந்தஷாஸ்த்ரார்தவையர்த்யஂ ஸ்யாதித்யபிப்ராயேணாஹ’க்ரமேணேதி’. ஆத்மஸாக்ஷாத்காராதித்வாரேதி வா. நிபந்தஃ நியதோ பந்தஃ. தத்ர’அதோ கச்சந்தி தாமஸாஃ’ [14.18] இத்யேதத்ஸ்மாரயதி — ‘அதோகதீதி’. அத்ர’மா ஷுசஃ’ இதி வசநஂ ந ஷாஸ்த்ரோபக்ரமப்ரகாந்தாஷோச்யவிஷயஷோகப்ரதிஷேதார்தம்? தஸ்ய பஹுதா பரிஹரிதத்வாத்?’ஸம்பதஂ தைவீமபிஜாதோஸி’ இத்யநேந தத்பரிஹாராஸம்பவாச்ச. அதோ’நிபந்தாயாஸுரீ மதா’ இத்யுக்தே ஷாஸ்த்ரீயமர்யாதாநதிலங்கிந்யபி ஸ்வாத்மநி’ஸ்திரோ நிகூடாஹங்காரஃ’ [த.ரூ.2.5] இதி ப்ரக்ரியயா தீரோதாத்தநாயககுணபூதஸ்ய நிகூடஸ்வாஹங்காரத்வஸ்ய,ஸ்வாத்மஸாக்ஷிகத்வாத்தாவந்மாத்ரேணாபி ஸ்வஸ்மிந்நாஸுரத்வமதிஷங்கமாநஸ்ய ஷ்ருதத்விவிதஸம்பத்கஸ்ய பீபத்ஸோஃ ஸ்வப்ரகரித்யநிர்தாரணாத்புநரபாரஸஂஸாரஸாகரநிமஜ்ஜநபீத்யா ஷோசதோ தேவப்ரகரிதித்வஜ்ஞாபநேந ஷோகமபநயதீத்யாஹ — ‘ஏதச்ச்ருத்வேதி’. அத்ராப்யஸ்தாநே ஷோகஂ த்வமேவாஹாரயஸீத்யபிப்ராயேணாஹ’ஷோகஂ மா கரிதா’ இதி. ந ஹி தேவப்ரகரிதீநாஂ தர்மோத்தராணாமாஸுராஃ புத்ராஃ ஸம்பவந்தீத்யபிப்ராயேண பாண்டவஷப்தஸம்புத்திரித்யாஹ’தார்மிகாக்ரேஸரஸ்யேதி’.

——————–

ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :

6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு

பார்த-பார்த்தா,
அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில்,
பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்,
தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது,
தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன்,
ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.

இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது.
தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது
அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணை புரிகிறது;
மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது.
கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது.
ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம்.
சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.

৷৷16.6৷৷அஸ்மிந் கர்ம லோகே கர்ம கராணாஂ பூதாநாஂ ஸர்கௌ த்வௌ த்விவிதௌ? தைவஃ ச ஆஸுரஃ ச இதி. ஸர்கஃ உத்பத்திஃ? ப்ராசீந புண்ய பாப ரூப கர்ம வஷாத் பகவத ஆஜ்ஞ அநுவரித்தி தத் விபரீத கரணாய உத்பத்தி காலே ஏவ விபாகேந பூதாநி உத்பத்யந்தே இத்யர்தஃ.தத்ர தைவஃ ஸர்கோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ. தேவாநாஂ மத் ஆஜ்ஞ அநுவர்தி ஷீலாநாம் உத்பத்திஃ யத் ஆசார கரணார்தா; ஸ ஆசாரஃ கர்ம யோக ஜ்ஞாந யோக பக்தி யோக ரூபோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ. அஸுராணாஂ ஸர்கஃ ச யதாசார கரணார்தஃ தம் ஆசாரஂ மே ஷ்ரரிணு? மம ஸகாஷாச்சரிணு.(என்னிடம் இருந்து கேட்டுக் கொள் கை விடுவதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் )

৷৷16.6৷৷ஸ்வரூபாதிபிஃ ஸமேஷு ஸர்வேஷு ஆத்மஸு தைவாஸுரவிபாகஸ்ய கிஂ நிதாநம் இதி ஷங்காஂ ஸவிஷேஷாநுவாதேந பரிஹரந்நத்யந்தபரிஹர்தவ்யத்வஜ்ஞாபநாய ப்ரஸக்தஸ்யாஸுரவரித்தாந்தஸ்ய விஸ்தரமுபலக்ஷயதி’த்வௌ பூதஸர்கௌ’ இதிஷ்லோகேந.’அஸ்மிந் லோகே’ இதி ந லோகாந்தரவ்யவச்சேதார்தம்? ஸர்வத்ர தேவாஸுரவிபாகஸித்தேஃ; ந ச நிரர்தகாதிகரணமாத்ரநிர்தேஷோ யுக்தஃ; அதோ லோகோபலம்பஸித்தாகாரேண விஹிதநிஷித்தகரணஸூசநமிஹ விவக்ஷிதமித்யபிப்ராயேணாஹ’கர்மகராணாமிதி’. கர்மலோகவிவக்ஷயா வா’அஸ்மிந்’ இதி விஷேஷணம்.’ஸர்கஃ ஸ்வபாவநிர்மோக்ஷநிஷ்சயாத்யாயஸரிஷ்டிஷு’ [அமரஃ3.3.22] இதி பஹ்வர்தஸ்யாபிப்ரேதஂ வக்துமிஹார்தவஷாத்தாதோஃ ப்ரயோஜ்யவ்யாபாரபரத்வஂ தாவதாஹ — ‘ஸர்க உத்பத்திரிதி’. உத்பத்திஸ்வரூபே கதஂ தைவத்வாஸுரத்வவிபாகஃ இதி ஷங்காயாஂ’லோகேஸ்மிந்’ இத்யநேந தைவாஸுரவிபாகே ஸர்கஷப்தேந சாபிப்ரேதஂ ஸங்கலய்யாஹ’ப்ராசீநேதி’. தைவாஸுரஸம்பதர்தத்வாதுத்பத்தௌ தைவாஸுரத்வோக்திரித்யர்தஃ.

ஸர்கஷப்தஸ்ய ஸ்வபாவபரத்வஂ ஸரிஜ்யமாநபரத்வஂ சாப்ரஸித்தத்வாதநாதரித்ய ப்ரஸித்தஸரிஷ்டிபரத்வேந வ்யாக்யாதம்.’தைவஃ ஸர்கோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ’ இத்யுக்தே தேவாநாஂ வஂஷாநுசரிதகீர்தநவத்ப்ரதீயதே; நச ததா கரிதம். யத்யபி’ப்ரஜஹாதி யதா காமாந்’ [2.55]’தைவமேவாபரே யஜ்ஞஂ’ [4.25]’சதுர்விதா பஜந்தே மாஂ’ [7.16]’மஹாத்மாநஸ்து மாஂ பார்த!’ [9.13] இத்யாதிபிர்ஜ்ஞாநயோககர்மயோகபக்தியோகநிஷ்டாஃ புருஷா நிர்திஷ்டாஃ; ததாபி தத்கர்தவ்யப்ரபஞ்சந ஏவ தத்ராபி தாத்பர்யம்; அதோத்ர தைவஸர்கஸ்ய விஸ்தரேணோக்திஸ்தத்கார்யத்வாரேத்யபிப்ராயேண’யதாசாரகரணார்தேத்யாதிகமுக்தம்’.’அபயஂ ஸத்த்வஸஂஷுத்திஃ’ [16.1] இத்யாதிகஂ ப்ராக்விஸ்தரேணோக்தஸ்ய ஸங்க்ரஹணமித்யபிப்ராயேண கர்மயோகாதிக்ரஹணம்.’ஆஸுரஂ ஸர்கஂ’ இத்யத்ராபி வக்ஷ்யமாணாநுஸாராதேவமேவ விவக்ஷேத்யாஹ’அஸுராணாமிதி’.’ஆஸுரஂ ஸர்கஂ மே ஷ்ரரிணு’ இத்யுக்தே ஸர்காந்வயேந கர்தரி ஷஷ்டீப்ரதீதிஃ ஸ்யாத்; ததோபி’ஷ்ரரிணு’ இத்யஸ்யாபேக்ஷிதமாப்ததமத்வஸூசநமேவோசிதமித்யபிப்ராயேணாஹ’மம ஸகாஷாதிதி’. அவிதிதமுபாதேயஂ யதா நோபாதாதுஂ ஷக்யஂ? ததா ஹேயமப்யவிதிதஂ ந ஹாதுஂ ஷக்யம்; அதோத்ர ஸாவதாநோ பவேத்யபிப்ராயேண’ஷ்ரரிணு’ இத்யுக்தம்.

——————

7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே

ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர்,
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்,
தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை,
ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை,
ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.

அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்.
தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது.
அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்து கொள்கின்றன.
அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல,
உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல.
ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.

৷৷16.7৷৷ப்ரவரித்திஂ ச நிவரித்திஂ ச அப்யுதய ஸாதநஂ மோஷ ஸாதநஂ ச வைதிகஂ தர்மம் ஆஸுரா ந விதுஃ ந ஜாநந்தி.

ந ச ஷௌசஂ வைதிக கர்ம யோக்யத்வஂ ஷாஸ்த்ர ஸித்தம்; -தத் பாஹ்யம் ஆப்யந்தரஂ ச அஸுரேஷு ந வித்யதே. ந அபி ச ஆசாரஃ? தத் பாஹ்யாப்யந்தர ஷௌசஂ யேந ஸந்த்யா வந்தநாதிநா ஆசாரேண ஜாயதே? ஸ அபி ஆசாரஃ தேஷு ந வித்யதே. ததா உக்தம் — ‘ஸந்த்யா ஹீநோ ஷுசி நித்யம் அநர்ஹஃ ஸர்வ கர்மஸு.’ (தக்ஷஸ்மரிதி 2.23) இதி.ததா ஸத்யஂ ச தேஷு ந வித்யதே -ஸத்யஂ யதார்த ஜ்ஞாநஂ பூத ஹித ரூப பாஷணஂ தேஷு ந வித்யதே.–

கிஂ ச —

(ப்ராஜாபத்ய லோக பிராப்தி நித்ய கர்ம பலமா -மனஸ் ஸூத்தியா -என்னில் காயேன வாசா ஸ்லோகம் சொல்லி பல தியாகம் செய்கிறோமே -இது தான் பல நீ காட்டிபிப் படுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ -)

৷৷16.7৷৷அத்ர ப்ரவரித்திநிவரித்திஷப்தௌ ந லௌகிகவிஷயௌ; ஆஸுராணாமேவ லௌகிகேஷ்டாநிஷ்டப்ராப்திபரிஹாரார்தமபதப்ரவரித்தேஃ ஸத்பதநிவரித்தேஷ்ச ஸித்தத்வாத்; ந ச விஹிதநிஷித்தமாத்ரவிஷயௌ? ராகப்ராப்தஷாஸ்த்ரப்ராப்தவிஷயௌ வா?’ந ஷௌசஂ நாபி சாசாரஃ’ இத்யாதேஃ புநருக்திப்ரஸங்காத்; அதோத்ர முமுக்ஷ்வபேக்ஷிதப்ரவர்தகநிவர்தகதர்மவிவேகாபாவே தாத்பர்யமித்யாஹ — ‘அப்யுதயஸாதநமித்யாதிநா’. தாவேதௌ தர்மௌ ஸ்மர்யேதே’ப்ரவரித்திலக்ஷணஂ தர்மஂ ப்ரஜாபதிரதாப்ரவீத்’ [ம.பா.12.217.4]’நிவரித்திலக்ஷணஂ தர்மமரிஷிர்நாராயணோப்ரவீத்’ [ம.பா.12.217.2] இதி.’ந விதுஃ’ இத்யத்ர’ந ஸத்யஂ தேஷு வித்யதே’ இதிவதஸத்பாவமாத்ரஂ ந விவக்ஷிதம்? அபிது ஷதகரித்வஃ ப்ரதிபாதிதேபி தமஃப்ராசுர்யாதபரிஜ்ஞாநமித்யபிப்ராயேணாஹ — ‘ந ஜாநந்தீதி’.’கரித்யயோக்யதா’ இதி ப்ராகுக்தமத்ர’வதிககர்மயோக்யத்வமித்யநேந’ விவரிதம். பாஹ்யஷௌசமஷுசிஸஂஷீலநாதிபிரவஷ்யகர்தவ்யாகரணாச்ச ந வித்யதே; ஆந்தரஂ த்வாத்மகுணாபாவாத்.’ந ஷௌசஂ நாபி சாசாரஃ’ இதி க்ரமாத்கார்யகாரணயோர்நிஷேத இத்யபிப்ராயேணாஹ — ‘ததிதி’. நநு ஸந்த்யாவந்தநாதேர்வர்ணாஷ்ரமதர்மஸ்ய’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாஂ ந்யாஸிநாஂ ப்ரஹ்மஸஂஜ்ஞிதம். யோகிநாமமரிதஂ ஸ்தாநஂ ஸ்வாத்மஸந்தோஷகாரிணாம்’ [வி.பு.1.6.36] இத்யாதிபிஃ பலாந்தரஂ ஷ்ரூயதே; தத்கதஂ தஸ்ய ஷௌசஹேதுத்வோக்திஃ இத்யத்ராஹ — ‘யதோக்தமிதி’. வ்யதிரேகோக்த்யா ஹேதுஹேதுமத்பாவோத்ர தரிடீகரிதஃ. இதஂ நித்யகர்மாந்தரஹாநாதபி க்ராஹ்யம்.’யதாஜ்ஞாநமித்யாதி’ — விப்ரலம்பரஸிகத்வாதயதாஜ்ஞாநஂ பாஷணாபாவஃ? ஹிஂஸாஸ்வபாவத்வாத்திதரூபபாஷணாபாவஃ.

————————

ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால்
அவர்களிடமிருந்து வரும் விடையாவது :

8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்

ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும்,
அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள்,
காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது,
அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள்.
இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.
சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள்.
அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர்.
காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.

சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம்.
பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை.
பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும்,
தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.

கிஂ ச –எப்படி என்னில்

৷৷16.8৷৷அஸத்யஂ ஜகத் -ஏதத் ஸத்ய ஷப்த நிர்திஷ்ட ப்ரஹ்ம கார்ய தயா ப்ரஹ்மாத்மகம் இதி ந ஆஹுஃ.- அப்ரதிஷ்டஂ ததா ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதம் இதி ந வதந்தி.- ப்ரஹ்மணா அநந்தேந தரிதா ஹி பரிதிவீ? ஸர்வாந் லோகாந் பிபர்தி. யதோக்தம்’தேநேயஂ நாக வர்யேண ஷிரஸா விதரிதா மஹீ. பிபர்தி மாலாஂ லோகாநாஂ ஸதேவாஸுர மாநுஷாம்৷৷’ (வி0 பு0 2.5.27) இதி.

அநீஷ்வரஂ -ஸத்ய ஸஂகல்பேந பர ப்ரஹ்மணா ஸர்வேஷ்வரேண மயா (நான்கு விசேஷணங்கள் )ஏதத் நியமிதம் இதி ச ந வதந்தி.- அஹஂ ஸர்வஸ்யஂ ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8) இதி ஹி உக்தம்.வதந்தி ச ஏவம்; அபரஸ்பர ஸம்பூதஂ கிம் அந்யத் -யோஷித் புருஷயோஃ பரஸ்பர ஸம்பந்தேந ஜாதம் இதஂ மநுஷ்ய பஷ்வாதிகம் உபலப்யதே. -அநேவஂ பூதஂ கிம் அந்யத் உபலப்யதே -கிஞ்சித் அபி ந உபலப்யதே இத்யர்தஃ. அதஃ ஸர்வம் இதஂ ஜகத் காம ஹேதுகம் இதி.

(சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -சத்யம் என்னும் ப்ரஹ்மம் -சத் -அம்ருதமான ஜீவாத்மா தி அழியும் அசேதனம் யம் நியமிக்கும் ஈஸ்வரன் -என்று சொல்லும் சாஸ்திரம் இவன் நம்பவில்லையே
காரணத்தைப் பற்றியே பேசாமல் தானே நிர்வாஹகன் லோகம் அநீஸ்வரம் என்பான் ஆகையால் ப்ரஹ்மாத்மகமே இல்லை என்கிறான்
இவனுக்கு சாஸ்திரம் கசக்கும் என்பதால் இவன் ப்ரஹ்மம் ஆத்மா என்று சொல்லும் சாஸ்திரம் சொல்வது பொய் என்கிறான்

உலகம் நிலை நிற்கும் என்று ப்ரத்யக்ஷம் என்பதால் அப்ரதிஷ்டம் என்பது ப்ரஹ்மத்தால் நிலை நிற்கப்பெறுகிறது
தனது பெருமை வியாபகம் தாரகம் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளாதவன்

ஆதி கூர்மம் -ஆதி சேஷன் -அஷ்ட திக் கஜங்கள் -அதுக்கும் மேல் அண்டம் -என்று சாஸ்திரம் சொல்வதை இவன் ஏற்க வில்லையே )

৷16.8৷৷ஏவஂ ந ஸத்யஸ்யாபாஷணமாத்ரம்; அபிது தத்விபரீதபாஷணமஸ்தீத்யநந்தரமுச்யத இத்யாஹ — ‘கிஞ்சேதி’. அஸத்யஷப்தோத்ர ந மித்யாத்வபரஃ? தஸ்ய லோகோபலப்திஸ்வவசநவிரோதாதிபிரேவ ப்ரதிக்ஷிப்தத்வேந அதிஸ்தூலத்வாத்? பரமார்தஂ ஸ்திரஂ சைஷ்வர்யமபிமத்ய நிரூடாபிநிவேஷாநாமாஸுராணாஂ ப்ரபஞ்சமித்யாத்வகூடயுக்திபிஃ ப்ரதார்யத்வாஸம்பவாச்ச.’யதா வயமநரிதப்ராயாஃ? ததா ஸர்வஂ ஜகதிதி ப்ராஹுஃ’ (ஷஂ.) இதி வ்யாக்யாபி மந்தா? ஜகச்சப்தஸ்ய சேதநமாத்ரவிஷயத்வாபாவாத் நிஷேதாநாஂ சாத்ர பூர்வோக்தாகாரவ்யதிரேகபரத்வாத்?’அப்ரதிஷ்டமநீஷ்வரம்’ இதிவச்சாஸ்த்ரஸித்தப்ரதிஷேதபரத்வாத்? அஸுராணாஂ ச ஷாஸ்த்ரப்ரத்வேஷஷீலத்வாத். அதோத்ர ஷாஸ்த்ரஸித்தஸ்ய ப்ரதிஷேதபரோயஂ ஷப்தஃ. தச்ச ஸத்யஂ ப்ரஹ்மைவேதி “ஸத்யஂ ஜ்ஞாநமநந்தஂ ப்ரஹ்ம” [தை.உ.2.1] இத்யாதிஷு ப்ரஸித்தம். சாந்தோக்யே ச சேதநாசேதநநியந்தரித்வேந ப்ரஹ்மநாமதயாஸௌ நிருக்தஃ — “தஸ்ய ஹ வா ஏதஸ்ய ப்ரஹ்மணோ நாம ஸத்யமிதி. தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி? ஸத்? தி? யம்? இதி. தத்யத்ஸத்ததமரிதம். அத யத்தி தந்மர்த்யமத யத்யஂ தேநோபே யச்சதி யதநேநோபே யச்சதி தஸ்மாத்யமஹரஹர்வா ஏவஂவித்ஸ்வர்கஂ லோகமேதி” [சாஂ.உ.7.3.4;5] இதி. அதோத்ர கபிலகுருகுமாரிலஜிநஸுகதசார்வாகாதிமதாநுவர்திந இவாப்ரஹ்மாத்மகஂ ஜகதாஹுரிதி விவக்ஷாமாஹ — ‘ஸத்யஷப்தேதி’. அப்ரதிஷ்டஷப்தேநாபி ஸர்வலோகவிரோதாதிபிஃ ப்ரத்யக்ஷஸித்தப்ரதிஷ்டாநிஷேதாஸம்பவாச்சாஸ்த்ரேஷு ப்ரதிஷ்டாத்வேந உபதிஷ்டஸர்வப்ரதிஷேதவிவக்ஷாமாஹ — ‘ததேதி’. ததேவோதாஹரணவிஷேஷேண விவரிணோதி — ‘ப்ரஹ்மணாநந்தேநேதி’. ஏதேந ப்ரதிஷ்டாஷப்தஸ்ய தர்மாதர்மமாத்ரபரத்வேந வ்யாக்யா நிரஸ்தா.’ஸர்வால் ఁலோகாந் பிபர்தீதி’ ஸ்வரூபதஃ கார்யதஷ்சேதி பாவஃ.ஆதிகூர்மஷேஷதிங்நாகப்ரபரிதிபிர்மஹீ விதரிதேதி ஷாஸ்த்ரேணோக்தே ஹி ஹைதுகைரேவஂ ஜல்ப்யதே’தர்தா தரித்ர்யா யதி கஷ்சிதந்யஸ்தஸ்யாபரஸ்தஸ்ய பரஸ்ததோந்யஃ. ஏவஂ ஹி தேஷாமநவஸ்திதிஃ ஸ்யாத்ததோ ஹி பர்த்ர்யா புவ ஏவ ஷக்திஃ’ இதி. வாயுவேகவஷாச்ச பூப்ரமணவாதஂ கேசிதிச்சந்தி. குருத்வாந்நித்யபதநஂ ச ஜைநாஃ. அநீஷ்வரஷப்தோப்யத்ர ந ப்ரதிமாராஜாதிலௌகிகேஷ்வரப்ரதிஷேதார்தஃ? தைஸ்தத்ப்ரதிஷேதாபாவாத். யதாநுவதந்தி — ‘லோகவ்யவஹாரஸித்த இதி சார்வாகாஃ’ இதி. நச ப்ரஹ்மநிஷேதமாத்ரார்தஃ’அஸத்யம்’ இத்யாதிநா புநருக்தேஃ. அதோத்ர வ்யுத்பத்த்யநுஸாரேணாலௌகிகநியந்தரிநிஷேதே தாத்பர்யமித்யாஹ — ‘ஸத்யஸங்கல்பேநேத்யாதிநா’. அயஸ்காந்தாதிவதசித்ஸ்வபாவஜீவாஜீவாத்மகஂ ஸர்வஂ ஜகதேதந்நிரீஷ்வரமிதி ஜைநாதிதரிஷ்ட்யா தர்மாதிமாத்ரவஷாத்வா?’பரமேஷ்வரஸஂஜ்ஞோ ஜ்ஞஃ கிமந்யோ மய்யவஸ்திதஃ’,இதிவதாபிமாநிகேஷ்வரஷாஸநாத்வா? தேஷகாலாவச்சிந்நேஷ்வரஸமுதாயப்ரவாஹவஷாத்வா ஜகத்ப்ரவரித்திரிதி ஹி தத்தந்மதமிதி பாவஃ.’நியமிதமிதி’ — யே து மத்வ்யதிரிக்தாந்ப்ரஜாபதிபஷுபதிப்ரபரிதீநபி பரமேஷ்வரத்வேந கல்பயந்தி? த ஆஸுரா ஏவேதி பாவஃ.

அந்யேபி கேசிதீஷ்வராஃ ப்ரவர்தகா தரிஷ்யந்தே? ஷ்ரூயந்தே ச; தத்கதஂ பகவதஃ ஸர்வநியமநம் இத்யத்ராஹ — ‘அஹஂ ஸர்வஸ்யேதி’. அந்யேஷாமபி நியந்தரி஀ணாஂ நியமநரூபப்ரவரித்திர்பகவததீநைவ. ததாச ஸூத்ரிதஂ — ‘கர்தா ஷாஸ்த்ரார்தவத்த்வாத்’ [ப்ர.ஸூ.2.4.1] இத்யுபக்ரம்ய’பராத்து தச்ச்ருதேஃ’ [ப்ர.ஸூ.2.3.41] இதி. ஏவஂ த்ரிபிர்ஜகத உத்பத்திஸ்திதிப்ரவரித்தீநாஂ பரப்ரஹ்மாதீநத்வஂ நேச்சந்தீத்யுக்தஂ பவதி? தத்ர ஜகதுத்பத்தேஃ ப்ரதிஜ்ஞாதஂ ப்ரஹ்மநைரபேக்ஷ்யமந்யதஃ ஸித்ததயைவமுபபாதயந்தீத்யாஹ — ‘வதந்தி சைவமிதி’.’அபரஸ்பர’ — இத்யாதிகஂ ந பூர்வேணைகவாக்யம்?’கிமந்யத்’ இத்யாதேரநந்வயாத்க்லிஷ்டகல்பநாதநுபபத்தேஷ்ச. ஏததேவைஷாமாஸுரத்வே பர்யாப்தஂ? கிமந்யதுச்யதே இதி கல்பநா அத்யாஹாராதிக்ரஸ்தா.’வதந்தி சைவமிதி’ து நாத்யாஹாராதிவிவக்ஷயோக்தம்?’ஏதாஂ தரிஷ்டிம்

—————-

இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :

9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா:

ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று,
அல்பபுத்தய: நஷ்டாத்மாந: – அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள்,
அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக,
உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக,
ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.

இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு
சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான்.
தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது.
உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.

৷16.9৷৷ஏதாஂ தரிஷ்டிம் அவஷ்டப்ய அவலம்ப்ய? நஷ்டாத்மாநஃ? அதரிஷ்ட தேஹாதிரிக்த ஆத்மாநஃ? அல்ப புத்தயஃ — கடாதிவத் ஜ்ஞேய பூதே தேஹே ஜ்ஞாதரித்வேந தேஹ வ்யதிரிக்த ஆத்மா ந உபலப்யதே? இதி விவேக அகுஷலாஃ. (அறியப்படும் பொருளுக்கும் அறியும் ஆத்மாவுக்கும் பகுத்து அறிய சாமர்த்தியம் இல்லாதவர்களாய்-இது காரணம் -அல்ப புத்தி கார்யம் -விலங்குகள் போல் இவர்கள் )உக்ர கர்மாணஃ ஸர்வேஷாஂ ஹிஂஸகாஃ? ஜகதஃ க்ஷயாய ப்ரபவந்தி.

[16.9] இத்யநேவ தத்ஸித்தேஃ. அதஃ’காமஹேதுகம்’ இத்யஸ்யைவோபபாதநாய’அபரஸ்பரஸம்பூதம்’ இத்யாத்யுக்திரித்யபிப்ராயேணாஹ — ‘யோஷிதிதி’. க்ரியாஸாந்தத்யேந ஹேதுபலபாவரஹிதமிதி வ்யாக்யாந்தரமதிமந்தஂ? ப்ரஸித்ததமார்தத்யாகாத்’காமஹேதுகம்’ இத்யநந்வயாச்சேத்யபிப்ராயேணாஹ — ‘அநேவம்பூதஂ கிமந்யதுபலப்யத’ இதி. யத்யபி யோஷித்புருஷஸஂஸர்கமந்தரேணைவ ஸ்வேதஜாநாஂ ஸ்தாவராணாஂ சோத்பத்திர்தரிஷ்யதே; ததாபீஷ்வரமாத்ரஹேதுகா தேவாதிஸரிஷ்டிர்நோபலப்யதே; தரிஷ்யமாநஂ த்வயோநிஜஂ யோநிஜவதேவ தர்ஷநபலாதங்கீகுர்மஃ; தத்ராப்யந்வயவ்யதிரேகாவஸ்திததத்தத்ஸாமக்ரீமாத்ராத்கார்யஸித்திஸம்பவே கிமீஷ்வரேண கர்த்ரா கல்பிதேநாகமிகதயா ஸ்வீகரிதேந வேதி பாவஃ.’அகிஞ்சித்காமஹேதுகம்’ இதி பரோக்தபாடாந்தரஸ்ய அப்ரஸித்தத்வாதிபிரநாதரவ்யக்த்யர்தஂ’கிமந்யத்’ இதி பாடஸ்ய ப்ரதிநிஷேதபரதாஂ வ்யநக்தி — ‘கிஞ்சிதபி நோபலப்யத’ இதி.’அத’ இதி — அந்வயவ்யதிரேகபலாதித்யர்தஃ.’காமஹேதுகம்’ இதி தரிஷ்டகாரணோபலக்ஷணம். காமப்ராவண்யவஷாத்ததுக்திஃ. யதா பாஷண்டாகமா அபி தத்தத்புருஷப்ரவர்திதா இதி தத்ததாகமைஸ்ததாதநப்ரத்யக்ஷமூலதயோபதேஷபரம்பரயா ச வ்யவஸ்தாப்யந்தே? யதா வா சிரந்தநநகரவரித்தாந்தாதயஃ; ஏவஂ கல்பேகல்பே ப்ரவரித்தமீஷ்வரஷில்பிநோ ஜகந்நகரவரித்தாந்தஂ ஸம்பாவிதமபி தீவ்ரௌஷதகல்பஷாஸ்த்ரப்ரத்வேஷாதபலபந்தீத்யுக்தஂ பவதி. ,৷৷16.9৷৷’ஏதாஂ தரிஷ்டிமிதி’ — விபரீதாஂ தரிஷ்டிமித்யர்தஃ.’அவஷ்டப்ய’ இத்யாக்ரமணாதிப்ரதீதிவ்யுதாஸாயாஹ — ‘அவலம்ப்யேதி’. நித்யஸ்யாத்மநோ விநாஷாபாவாத்’ணஷ அதர்ஷநே’ [தா.பா.4.88] இதி தாத்வர்தோத்ர விவக்ஷித இத்யாஹ — ‘அதரிஷ்டேதி’. ஸ்வயஞ்ஜ்யோதிஷஃ ப்ரத்யகாத்மஸ்வரூபஸ்ய தேஹாத்யாஸாதிஷ்டாநதயா நித்யமுபலம்பாத்தேஹாதிரிக்தத்வேந விஷேஷிதம். நஷ்டாத்மத்வஹேதுரிஹால்பபுத்தித்வமுச்யத இதி. புநருக்திபரிஹாராபிப்ராயேணாஹ’கடாதிவதிதி’. யத்வா பஷுமரிகாதிவத்கர்மவஷாத்ஸ்வாரஸிகோ விவிக்தாத்மாநுபலம்பஃ.’அல்பபுத்தய’ இதி து தத்பரிஹாராஷக்திருச்யத இதி பாவஃ. ஏவஂ பராவராத்மவிஷயவிபரீததரிஷ்டிருக்தா; அத’ப்ரபவந்த்யுக்ரகர்மாணஃ’ இத்யாதிநா தத்பலமுச்யதே.’உக்ரகர்மாணஃ’ இத்யத்ரோக்ரவ்ரதாதிப்ரதீதிவ்யுதாஸாயாஹ — ‘ஸர்வேஷாஂ ஹிஂஸகா’ இதி. அஷுபாஃ ஸ்வஸஂஸர்கிணாமபி தோஷாவஹா இத்யர்தஃ.’ஜகதஃ க்ஷயாய ப்ரபவந்தீதி’ — ‘அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக்’ [3.10]’பரஸ்பரஂ பாவயந்தஃ ஷ்ரேயஃ பரமவாப்ஸ்யத’ [6.11] இத்யாதிப்ரதிபாதிதாஂ பகவந்மூலாஂ லோகபாவநதர்மமர்யாதாமதிலங்கயந்தி; ததநுவர்திநஷ்சாந்யேபி மந்தாஃ ததாசாரோபதேஷாதிவிஸ்ரம்பாதிக்ரமேண ஸர்வஸ்ய ஜகதஸ்த்ரிவர்காபவர்கரூபவரித்திவிரஹிணஸ்த்ரிவிததாபாஹதிரூபாய க்ஷயாய பவந்தீத்யர்தஃ.

———————-

அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :

10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா:

தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய்,
துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து,
மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு,
அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால்,
பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

৷৷16.10৷৷துஷ் பூரஂ துஷ் ப்ராப விஷயஂ காமம் ஆஷ்ரித்ய தத் ஸிஷாதயிஷயா மோஹாத் அஜ்ஞாநாத் அஸத் க்ராஹாந் அந்யாய கரிஹீதாந் அஸத் பரிக்ரஹாந் கரிஹீத்வா அஷுசி வ்ரதாஃ அஷாஸ்த்ர விஹித வ்ரத யுக்தாஃ? (பாஷாண்ட ஆகமம் )தம்ப மாந மதாந்விதாஃ ப்ரவர்தந்தே.

৷৷16.10৷৷காமோ ஹி ஜகத்தேதுருக்தஃ; அதஃ ஸ ஏவ ஹி தேஷாமாஷ்ரயணீயோபிமதஃ; ததாஷ்ரயேணேதிகர்தவ்யதாரூபாஸ்து தம்பமாநாதயோஷுசிவ்ரதபர்யந்தா இத்யுச்யதே’காமம்’ இதி ஷ்லோகேந. துஷ்ப்ராபவிஷயத்வஂ துஷ்பூரத்வே ஹேதுஃ; யத்வா விஷயப்ராப்திர்ஹி காமஸ்ய பூரணம்; அதோ துஷ்ப்ராபவிஷயத்வமேவ துஷ்பூரத்வம். ஆஷ்ரித்ய ப்ரயோஜநதயாபிஸந்தாயேத்யர்தஃ. ததபிப்ராயேணாஹ’தத்ஸிஸாதயிஷயேதி’. விபரீதப்ரவரித்திஹேதுபூதஂ கரித்யாகரித்யவிவேகாந்தத்வமிஹ மோஹஷப்தேந விவக்ஷிதமித்யாஹ’அஜ்ஞாநாதிதி’. அஸத் க்ரஹணம் ஆர்ஜநஂ யேஷாஂ தேத்ராஸத்க்ராஹாஃ. தர்மாபிஸந்திமந்தோ ஹி ந்யாயேநார்ஜயந்தி; காமப்ரவணாஸ்து சௌர்யாதிபிஸ்ததுபகரணாநீத்யாஹ — ‘அந்யாயகரிஹீதாநஸத்பரிக்ரஹாநிதி’. பரிக்ரஹஷப்தோத்ர பரிக்ராஹ்யபரஃ.’ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்’ [16.12] இதி தஸ்யைவ விவரணம். அத ஏவாஷுபாபிநிவேஷாநிதி (ஷாஂ.) வ்யாக்யாப்யத்ர மந்தா.’கரிஹீத்வேதி’ தாதாத்விகவிநியோகபரத்வாதாத்மீயத்வாபிமாநபரத்வாத்வா புநருக்திபரிஹாரஃ. பாஷண்டாகமாதிநிர்திஷ்டாநி ஹி வ்ரதாநி புருஷஸ்ய தர்ஷநஸ்பர்ஷநாத்யயோக்யதாஹேதுத்வாத்ஸ்வயமஷுசீந்யேவேத்யபிப்ராயேணாஹ — ‘அஷாஸ்த்ரவிஹிதவ்ரதயுக்தா’ இதி. தர்மாபிஸந்திரஹிதாநாமபி தாமஸாநாஂ விஷஹரணபாஷாணஸ்போடநாதித்யஸ்தம்பநப்ரதிமாஜல்பாதிவஞ்சநோபாயைர்வஷீகரிதாநாஂ வேதபாஹ்யேஷு வ்ரதேஷு மாத்ரயா ஸஂயோகோ பவதி; யத்வா ஷௌர்யாஹங்காராதிமூலஃ ஷாஸ்த்ரவிருத்தஃ ஸங்கல்போத்ர வ்ரதஷப்தாபிப்ரேதஃ. ஷாஸ்த்ரீயேஷ்வபி வ்ரதேஷு பகவத்ஸமாராதநவிவக்ஷாமஜாநதாமயதாஷாஸ்த்ரகரணாதஷாஸ்த்ரவிஹிதப்ரயுக்தத்வம். தம்பமாநௌ ப்ராகேவ வ்யாக்யாதௌ. மதோத்ர தநாபிஜநவித்யாதிமூலமயதாயதசேஷ்டிதாரம்பகமௌத்தத்யம்.

——————

11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா:

ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில்,
உபாஸ்ரிதா:-பொருந்தி,
காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்,
ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.

பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்,
உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,

மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது
அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது.
கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை.
ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து
ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.

அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள்.
ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள்.
ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது;
கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில்
அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்!
குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச்
சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்!
பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்;
பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன !
இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு
சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும்
ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !

மேல் ஏழு ஸ்லோகங்களால் இவர்களின் சிந்தனா விவரணம்-மநோ ரதம் இதில் -அடுத்ததில் அதுக்கு கிரியை

৷৷16.11৷৷அத்ய வா ஷ்வோ வா முமூர்ஷவஃ சிந்தாம் (ஒருமை இருந்தாலும் நிறைவேறாமல் )அபரிமேயாஂ ச அபரிச்சேத்யாஂ ப்ரலயாந்தாஂ ப்ராகரித ப்ரலயாவதி கால ஸாத்ய விஷயாம் உபாஷ்ரிதாஃ.(பிராகிருத பிரளயம் வரை இருந்து -நினைத்தவற்றைப் பெறாமல் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள் ) ததா காம உப போக பரமாஃ காம உப போக ஏவ பரம புருஷார்தஃ? இதி மந்வாநாஃ. ஏதாவத் இதி நிஷ்சிதாஃ? இதஃ அதிகஃ புருஷார்தோ ந வித்யதே இதி ஸஂஜாத நிஷ்சயாஃ.

৷৷16.11৷৷ஏவஂ ப்ரவர்தகாநாமுபர்யுபரிமநோவிகாராதய உச்யந்தே — ‘சிந்தாமபரிமேயாமித்யாதிபிஃ’. அஷக்யவிஷயவரிதாப்ரயாஸவ்யஞ்ஜநாயாஹ’அத்ய ஷ்வோ வேதி’.’அபரிமேயாம்’ இத்யஸங்க்யேயவிஷயத்வேநாநந்தஷாகத்வஂ விவக்ஷிதமித்யாஹ — ‘அபரிச்சேத்யாமிதி’.’ப்ரலயாந்தாம்’ இத்யத்ர ஷரீரபாதாவதிகத்வோக்திர்மந்தா; அநந்தகாலஸாத்யமல்பகாலேந ஸிஸாதயிஷந்தீதி து வ்யாமோஹாதிஷயக்யாபநேந ஸப்ரயோஜநமிதம்; ப்ரலயஷப்தஷ்ச ப்ரஸித்ததமவிஷய உசிதஃ; சிந்தயிதரி஀ணாஂ புருஷாணாமாப்ரலயஸ்தாயித்வாபாவாச்சிந்தாயாஃ ஸ்வரூபேண ப்ரலயாந்தத்வஂ சாயுக்தமித்யபிப்ராயேணாஹ’ப்ராகரிதப்ரலயாவதிகாலஸாத்யவிஷயாமிதி’. அஸங்க்யேயேஷு சிந்தாவிஷயேஷ்வேகைகோபி துஸ்ஸாத்ய இதி பாவஃ. ப்ரயோஜநதயாபிமதேஷு காமோபபோக ஏவ பரமோ யேஷாஂ தேத்ர காமோபபோகபரமாஃ; ததாஹ’காமோபபோக ஏவேதி’. ஸ்வர்காபவர்கப்ரதிஷேதார்த ஏதாவச்சப்த இத்யாஹ — ‘இதோதிக’ இதி.’ஸஞ்ஜாதநிஷ்சயா’ இதி. அத்ர நிஷ்சிதஷப்தே’புக்தா ப்ராஹ்மணாஃ’ இதிவத்கர்தரி க்த இதி பாவஃ.

——————-

12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்

ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால்,
பத்தா:-கட்டுண்டு,
காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க்,
காமபோகார்தம்-காம போகத்துக்காக,
அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக
அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது.
பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது.
மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்).
ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர்.
காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.

கீழே வழியில் பேராசை இதில் பலங்களில் பேராசை

৷৷16.12৷৷ஆஷா பாஷஷதைஃ ஆஷாக்ய பாஷஷதைஃ பத்தாஃ காம க்ரோத பராயணாஃ காம க்ரோதைக நிஷ்டாஃ. காம போகார்தம் அந்யாயேந அர்த ஸஂசயாந் ப்ரதி ஈஹந்தே.

৷৷16.12৷৷சிந்தா கர்தவ்யவிஷயா? ஆஷா து பலவிஷயா; ஆஷாவிஷயாணாமஸங்க்யாதத்வாத்ததாஷாநாமபி ஷதஷாகத்வேந ததாத்வம்.’காமக்ரோதபராயணாஃ’ இத்யத்ர க்ரோதஸ்ய பரமப்ராப்யதயா ததபிமாநவிஷயத்வாபாவாத் காமக்ரோதயோரைகாக்ர்யமாத்ரஂ விவக்ஷிதமித்யாஹ — ‘காமக்ரோதைகநிஷ்டா’ இதி. அயநஷப்தோத்ர ஆஷ்ரயபரஃ; காமோ ஹி விஹந்யமாநஃ க்ரோதாத்மநா பரிணமதீதி ப்ராக்ப்ரபஞ்சிதஸ்மாரணே [3.37] தாத்பர்யாந்ந புநருக்திஃ.’காமோபபோகார்தமிதி’ விஷயாநுபவார்தஂ பரமநிஷ்ஷ்ரேயஸஸாதநபூதபரமபுருஷஸமாராதநார்தஂ யத்கர்தவ்யஂ? ஹந்த ததநர்தாவஹாதிக்ஷுத்ரக்ஷணிகஸுகாபாஸார்தமாஸீதிதி பாவஃ.’அந்யாயேநேதி’ — நஹி யஜ்ஞாதிவந்ந்யாயார்ஜிதைஃ காமோபபோகோ நிஷ்பாத்யத இதி பாவஃ. த்விதீயாந்வயஜ்ஞாபநாயாஹ’ப்ரதீதி’. ப்ரவர்தந்தே ஈஹந்த இத்யுபயமத்ர ஸமாநவிஷயஂ? தத்ர ஈஹயா,நிஷ்பாதயந்தீதி விவக்ஷிதத்வாத்’அர்தஸஞ்சயாந்’ இதி த்விதீயாந்வயஃ.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினைந்தாம் அத்தியாயம் -புருஷோத்தம யோகம்–15-10–15-20—

February 11, 2021

10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ:

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும்,
ஸ்திதம் வா-நிற்கையிலும்,
புஞ்ஜாநம் வா – உண்ணுகையிலும்,
குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்,
விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை,
ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும்,
அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன.
உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது.
இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள்.
விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர்.
அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும்.
அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.

மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும்,
வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே.
அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான்.
மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும்
ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.

ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :

৷৷15.10৷৷ஏவஂ குணாந்விதஂ ஸத்த்வாதி குண மய ப்ரகரிதி பரிணாம விஷேஷ மநுஷ்யத்வாதி ஸஂஸ்தாந பிண்டஸஂ ஸரிஷ்டஂ பிண்ட விஷேஷாத் உத்க்ராமந்தஂ பிண்ட விஷேஷே அவஸ்திதஂ வா குணமயாந் விஷயாந் புஞ்ஜாநஂ வா கதாசித் அபி ப்ரகரிதி பரிணாம விஷேஷ மநுஷ்யத்வாதி பிண்டாத் விலக்ஷணஂ ஜ்ஞாந ஏக ஆகாரஂ விமூடா ந அநுபஷ்யந்தி.விமூடாஃ மநுஷ்யத்வாதி பிண்டாத்ம அபிமாநிநஃ.ஜ்ஞாந சக்ஷுஷஃ து பிண்டாத்ம விவேக விஷய ஜ்ஞாநவந்தஃ ஸர்வாவஸ்தம் அபி ஏநஂ விவிக்தாகாரம் ஏவ பஷ்யந்தி.

৷৷15.10৷৷கர்மகலாபநிகலிதஸ்ய கலேவரகாராகரிஹேவஸ்தாநஂ? தத்ரோத்க்ரமணப்ரவேஷாதிக்லேஷஃ? தத்ரஸ்தஸ்ய ச விஷமதுகல்பக்ஷுத்ரதரவிஷயோபஸேவா சோக்தாநி. அத ததுபரி தந்நிதாநபூதமாத்மாபஹரணசௌர்யமுபக்ஷிப்ய யோக்யாநுபலம்பஂ ச பரிஹரதி — ‘உத்க்ராமந்தம்’ இதி ஷ்லோகேந. குணாந்விதத்வமிதரேஷாஂ ஹேதுரித்யபிப்ராயேண பூர்வஂ தத்வ்யாக்யா. உத்க்ரமணாதிகதநஂ ஸர்வாவஸ்தோபலக்ஷணமித்யபிப்ராயேண’கதாசிதபீத்யுக்தம்’.’அஹம்’ இதி நித்யமுபலப்யமாநே ஸர்வேஷாஂ ஸ்வாத்மநி? புஞ்ஜாநதாதௌ ச ஸ்வாத்மஸாக்ஷிகே கதஂ கேசிந்நாநுபஷ்யந்தி இத்யுச்யத இத்யத்ராஹ — ‘மநுஷ்யத்வாதிபிண்டாத்விலக்ஷண’ மிதி. ப்ரகரிதிபரிணாமவிஷேஷமநுஷ்யத்வாதிவிஷிஷ்டபிண்டாதித்யர்தஃ. ஜ்ஞாநைகாகாரத்வோக்திர்வைலக்ஷண்யப்ரகாராணாமுபலக்ஷணார்தா.’விமூடா நாநுபஷ்யந்தி’ இதி பகவதஃ ஸாநுக்ரோஷோக்திஃ. யதாவஸ்திதாத்மதர்ஷநமூலஂ விமூடத்வஂ தத்விஷயமேவேத்யாஹ — ‘மநுஷ்யத்வாதிபிண்டாத்மாபிமாநிந’ இதி. நித்யஸ்வப்ரகாஷத்வாத்வ்யதிரேகாய விவிக்தாகாரத்வோக்திஃ.

————–

11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ:

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள்,
ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்,
ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்,
அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்.
முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது.
முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான்.
வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான்.
உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான்.
அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று,
அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.

நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம்.
அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட
அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.

৷৷15.11৷৷மத் ப்ரபத்தி பூர்வகஂ கர்ம யோகாதிஷு (ஆதி ஞான யோகத்தாலும் )யதமாநாஃ தைஃ நிர்மலாந்தஃ கரணாஃ யோகிநஃ யோகாக்யேந சக்ஷுஷா ஆத்மநி ஷரீரே அவஸ்திதம் அபி ஷரீராத் விவிக்தஂ ஸ்வேந ரூபேண அவஸ்திதம் (ஞானமே வடிவான நிஷ்க்ருஷ்ட வேஷ இயற்கைத் தன்மை )ஏநஂ பஷ்யந்தி. யதமாநாஃ அபி அகரிதாத்மாநஃ மத் ப்ரபத்தி விரஹிணஃ தத ஏவ அஸஂஸ்கரித மநஸஃ (நெஞ்சுக்கு சம்ஸ்காரம் இல்லாத யோகம் இல்லாத சுத்தி இல்லாத )தத ஏவ அசேதஸஃ ஆத்மாவலோகந ஸமர்த சேதோ ரஹிதாஃ ந ஏநஂ பஷ்யந்தி.

ஏவஂ ரவி சந்த்ராக்நீநாம் இந்த்ரிய ஸந்நிகர்ஷ விரோதி ஸஂதமஸ நிரஸந முகேந இந்த்ரியாநுக்ராஹ கதயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாநஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத் விபூதிஃ இதி உக்தம்’தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவ லோகே ஜீவ பூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.இதாநீம் அசித் பரிணாம விஷேஷ பூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத் விபூதிஃ இத்யாஹ —

৷৷15.11৷৷உக்த ஏவார்தஃ ஸஹேதுகமுபபாத்யதே — ‘யதந்தஃ’ இதி ஷ்லோகேந.’யதந்தோ யோகிநஃ’ இதி பூர்வப்ரபஞ்சிதமிஹ ஸ்மாரிதமித்யாஹ — ‘மத்ப்ரபத்திபூர்வகமிதி’. ஆத்மஷப்தோத்ரார்தாந்தராநந்வயாத்ப்ரஸ்துதஷரீரவிஷயஃ. ததா ஸத்யதர்ஷநஷங்காஹேதுஷ்சாநூதிதோ பவதீத்யபிப்ராயேணாஹ — ‘ஷரீரேவஸ்திதமபீதி’. யதமாநாநாஂ கதமகரிதாத்மத்வஂ இத்யத்ராஹ — ‘மத்ப்ரபத்திவிரஹிண’ இதி. அத்ராஸஂஸ்கரிதமநஸ்த்வஂ ஷரணவரணாபாவஃ. வித்யமாநஸ்யாபி சேதஸஃ ப்ரகரிதோபயோகாபாவாதஸத்கல்பத்வமசேதஷ்ஷப்தேந விவக்ஷிதமித்யாஹ — ‘ஆத்மாவலோகநஸமர்தசேதோரஹிதா’ இதி.

——————–

பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :

12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி,
அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ,
ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும்,
யத் அக்நௌ ச – தீயிலுள்ளதும்,
தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும்,
அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள்.
எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது
கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது.
ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது.
சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது.
சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம்.
ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம்.
இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை.
சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை.
இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே.
மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும்
அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள
ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது.
அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.

மூன்று ஸ்லோகங்களால் பிராகிருத பதார்த்தங்களாகும் என்னதே -அனைத்தையும் புகுந்து நியமித்து வியாபித்து தாங்கி -எனது சொத்துக்கள் தான் ஆகையாலே நானே புருஷோத்தமன் என்று சொல்வதற்கு பீடிகை
ஏவஂ ரவி சந்த்ர அக்நீநாம் இந்த்ரிய ஸந் நிகர்ஷ விரோதி ஸஂதமஸ நிரஸந முகேந இந்த்ரிய அநு க்ராஹக தயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாந ஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத் விபூதிஃ இதி உக்தம் -‘தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவ லோகே ஜீவ பூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.இதாநீம் அசித் பரிணாம விஷேஷ பூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத் விபூதிஃ இத்யாஹ —

৷৷15.12৷৷அகிலஸ்ய ஜகதோ பாஸகம் ஏதேஷாம் ஆதித்யாதீநாஂ யத் தேஜஃ தத் மதீயஂ தேஜஃ– தைஃ தைஃ ஆராதிதேந மயா தேப்யோ தத்தம இதி வித்தி.பரி திவ்யாஃ (ஒரு பொருளின் தன்மை மற்ற பொருளில் இருந்தால் இரண்டுமே ஓன்று அத்வைதி -ஸ்ருஷ்டிக்கப்படும் ஆதித்யனும் ஸ்ருஷ்டித்த ப்ரஹ்மமும் ஒன்றாகாதே-என்னை ஆராதித்து -திருப்தி அடைந்த நான் ஒளி கொடுத்துள்ளேன் -எனது திரு மேனியில் ஒரு பகுதி என்றவாறு-ப்ரதாதா பிரதாத்ரு பாவம் -வேத நான்காய் -ப்ரதிபாத்ய ப்ரதிபாத்யம் பாவம் என்றும் ப்ரதாதா பிரதாத்ரு பாவம் என்றும்   )

ச பூத தாரிண்யா தாரகத்வ ஷக்திஃ மதீயா இத்யாஹ —

৷৷15.12৷৷’யதாதித்யகதஂ தேஜஃ’ இத்யாதேஃ பூர்வோத்தராஸங்கதிபரிஹாராய ஸுகக்ரஹணாய சோக்தமர்தஂ நிஷ்கரிஷ்யாஹ — ‘ஏவஂ ரவிசந்த்ராக்நீநாமிதி’. ஆத்மஜ்யோதிஷோ விபூதித்வோக்த்யநந்தரஂ தத்ப்ரகாஷநாஸமர்ததயா வ்யவச்சேத்யத்வேந ப்ரஸக்தாநாஂ ப்ராகரிதஜ்யோதிஷாமபி விபூதித்வோக்திர்யுக்தேத்யுக்தஂ பவதி அந்யேஷாஂ தேஜஃ கதமந்யஸ்ய ஸ்யாத் அதோத்ராதித்யாதிதாதாத்ம்யஂ ப்ரதீயத இத்யத்ராஹ — ‘தைஸ்தைராராதிதேநேதி’. ஷ்ரூயதே ஹி “யேந ஸூர்யஸ்தபதி தேஜஸேத்தஃ” [கடோ.3.9] “யஸ்யாதித்யோ பாமுபயுஜ்ய பாதி” “ந தத்ர ஸூர்யோ பாதி” இத்யுபக்ரம்ய “தஸ்ய பாஸா ஸர்வமிதஂ விபாதி” [கடோ.5.15] இதி. அதஃ ஸர்வஂ ஸ்வத ஈஷ்வரஷேஷபூதஂ ஸத் தத்தத்கர்மாநுரூபாத்தத்ஸங்கல்பாத் கியந்தஂ காலமந்யேஷாமபி ஷேஷத்வஂ பஜத இதி பாவஃ. அத்ர தேஜஷ்ஷப்தேந சைதந்யஜ்யோதிர்விவக்ஷா’ஜகத்பாஸயதேகிலம்’ இத்யாதிநா ந ஸங்கச்சதே; நஹ்யாதித்யாதிகதத்வேந சைதந்யமஸ்மாகஂ கடாதீந் ப்ரகாஷயதி. ஸர்வத்ர சைதந்யாவிஷேஷேப்யாதித்யாதிஷு ஸத்த்வாதிக்யாத்தர்பணாதிவதித்யப்யஸாரம்? தந்மதே சைதந்யஸ்ய வ்யங்க்யத்வாத்யஸம்பவாதிதி ஜ்யோதிஷாஂ ப்ரகாஷகத்வஷக்திஃ? ஸ்வகீயேத்யுக்தம்.

————–

மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :

13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து,
ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்,
ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி,
ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப்
பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.

ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த்
தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன.
சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம்
செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு.
இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.

ச பூத தாரிண்யா தாரகத்வ ஷக்திஃ மதீயா இத்யாஹ —

৷৷15.13৷৷அஹஂ பரிதிவீம் ஆவிஷ்ய ஸர்வாணி பூதாநி ஓஜஸா மம அப்ரதிஹத ஸாமர்த்யேந தாரயாமி. ததா அஹம் அமரிதர ஸமயஃ ஸோமோ பூத்வா ஸர்வௌஷதீஃ புஷ்ணாமி.

(ஆகாசத்தையும் த்ருடமாக தரிக்கிறேன் -ஸங்கல்ப சக்தியாலேயே தடங்கல் அற்ற தரிக்கும் தன்மை யுண்டே –வேதம் ஸ்வத ப்ரமாணிகத்வம் உண்டு போல் ப்ரஹ்மம் தனது மஹிமையாலே தானே தனக்கு தாரகம் -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்)

৷৷15.13৷৷ஏவமந்யேஷாமபி ஸர்வேஷாஂ தத்தத்விஷேஷகார்யஜநநஷக்திஃ ஸ்வகீயேதி பரிதிவீஸோமவைஷ்வாநராணாஂ தாரணாப்யாயநபசநஷக்திபிருபலக்ஷ்யதே? அந்யதா ஸ்வஷக்திமாத்ரகதநே ப்ரகரிதவைரூப்யாதித்யபிப்ராயேணாஹ’பரிதிவ்யாஷ்ச பூததாரிண்யா தாரகத்வஷக்திர்மதீயேதி’.’ஸர்வாணீதி’ — சராணி ஸ்தாவராணி சேத்யர்தஃ. அந்யே ஹி பதார்தாஃ ப்ரதிகாதிநா ஸஂயோகேந தாரயந்தி; அதஸ்தத்வ்யவச்சேதார்தஂ’ஓஜஸா’ இதி ஸ்வாஸாதாரணஷக்திநிர்தேஷஃ. ததபாவே பரிதிவ்யா தாரகத்வஷக்திஃ ப்ரதிஹந்யேதேத்யபிப்ராயேணாஹ’மமாப்ரதிஹதஸாமர்த்யேநேதி’. ஷ்ரூயதே ச “யேந த்யௌருக்ரா பரிதிவீ ச தரிடா’ [யஜுஃ.கா.1.8.5] “ஸ தாதார பரிதிவீஂ த்யாமுதேமாஂ” [றக்ஸஂ.8.7.3.1] “யேநேமே விதரிதே உபே. விஷ்ணுநா விதரிதே பூமீ” “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாஸநே கார்கி த்யாவாபரிதிவ்யௌ விதரிதே திஷ்டதஃ” [பரி.உ.3.8.9] இதி. ஸோமத்வாகாரோத்ர ரஸாத்மக இதி விஷேஷ்யதே? தேந போஷணத்வாரவிவக்ஷாமாஹ — ‘அமரிதரஸமயஃ ஸோமோ பூத்வேதி’. அத்ர விஷேஷணஷக்த்யா ரஸைஃ,புஷ்ணாமீதி கம்யதே.

———–

அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :

14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்,
ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி,
வைஸ்வாநர: பூவா – வைசுவாநரன் என்கிற அக்னியாகி,
சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற
வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது.
அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய
நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது.
இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது.
இவை யாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.

ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :

৷৷15.14৷৷அஹஂ வைஷ்வாநரோ ஜாடர அநலோ (அலம் புத்தி இல்லாத அக்னி )பூத்வா ஸர்வேஷாஂ ப்ராணிநாஂ தேஹம் ஆஷ்ரிதஃ தைஃ புக்தஂ காத்ய சோஷ்ய லேஹ்யபே யாத்மகஂ சதுர் விதம் அந்நஂ ப்ராண அபாந வரித்தி பேத ஸமா யுக்தஃ பசாமி–.

அத்ர பரம புருஷ விபூதி பூதௌ ஸோம வைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத் ஸாமாநாதி கரண்யேந நிர்திஷ்டௌ.– தயோஃ ச ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச பரம புருஷ ஸாமாநாதி கரண்ய நிர்தேஷே ஹேதும் ஆஹ —

ப்ரஹ்ம ஸூத்ரம் 2-4 பஞ்ச வ்ருத்த மனஸ் ஐந்து -சித்தம் -இத்யாதி ஐந்து நிலைகள் உண்டே
பிரகர்ஷேண பாஹுர் ஆயுத பிராண -வெளி விடும் காற்று
அதோ நய அபான -கீழ் விடும் காற்று -ஸர்வத்ர ஆநயததி சமானம் நடுப்பகுதி நாபி மண்டலம்
ஊர்த்தம் கமநம் உதாந கண்டத்தில் -விநயதி விசேஷண பிரஜ்ஜை இருப்பதைக்காட்ட – வ்யான-அதனதன் சக்தி எல்லாம் என்னுடையதே என்கிறான்

৷৷15.14৷৷’ஜாடராநலோ பூத்வேதி”கோஷ்டேக்நிர்புக்தமரிச்சதி’ இதி தேந ஹ்யுக்தமிதி பாவஃ. நநு “த்ரேதா விஹிதஂ வா இதமந்நமஷநஂ பாநஂ காதஃ” [1ஐத.3.4.3] இதி வசநாத்கதஂ சாதுர்வித்யஂ தத்ராஹ — ‘காத்யசோஷ்யலேஹ்யபேயாத்மகமிதி’ ஆகாராந்தரேண ஸஂக்ரஹாதந்யத்ர த்ரேதோபதேஷ இதி பாவஃ.’அபாநப்ராணயோர்மத்யே ப்ராணாபாநஸமாஹிதஃ. ஸமந்விதஃ ஸமாநேந ஸம்யக்பசதி பாவகஃ’ இத்யாதிஷ்வாந்தரபவநவரித்திஸந்துக்ஷிதோ ஹ்யக்நிஃ பசநாய ப்ரபவதீத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ’ப்ராணாபாநவரித்திபேதஸமாயுக்த’ இதி.

——————

15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும்
என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்;
வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார்.
ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது
அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன.
வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள்.
இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக் கொண்டிருக்கிறது.
அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது.
அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது.
அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக் கொண்டிருக்கிறது.
ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம்.
பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி.
இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான்.
பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.

அத்ர பரம புருஷ விபூதி பூதௌ ஸோம வைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத் ஸாமாநாதி கரண்யேந நிர்திஷ்டௌ.– தயோஃ ச ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச பரம புருஷ ஸாமாநாதி கரண்ய நிர்தேஷே ஹேதும் ஆஹ –காரணத்தை இதில் விளக்குகிறார்

৷৷15.15৷৷தயோஃ ஸோம வைஷ்வாநரயோஃ ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச ஸகல ப்ரவரித்தி நிவரித்தி மூல ஜ்ஞாந உதய தேஷே ஹரிதி (உள்ளத்தே உறையும் மால் )ஸர்வஂ மத் ஸஂகலபேந நியச்சந் அஹம் ஆத்ம தயா ஸந்நிவிஷ்டஃ.

ததா ஆஹுஃ ஷ்ருதயஃ — ‘அந்தஃப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா’ (தை0 ஆ0 3.11)’யஃ பரிதிவ்யாஂ திஷ்டந்’ (பரிஹ0 உ0 3.7.3)’யஃ ஆத்மநி திஷ்டந் ந ஆத்மந அந்தரோ யமயதி.’ (பரிஹ0 உ0 3.7.22)’பத்ம கோஷ ப்ரதீகாஂஷ ஹரிதயஂ சாப்யதோ முகம்.’ (தை0 நா0 11)’அத யதித மஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரஂ புண்டரீகஂ வேஷ்ம’ (சா0 உ0 8.1.1) இத்யாத்யாஃ.

ஸ்மரிதயஃ ச’ஷாஸ்தா விஷ்ணுர் அஷேஷஸ்ய ஜகதோ யோ ஜகந் மயஃ.’ (வி0 பு0 1.17.20)’ப்ரஷாஸிதாரஂ ஸர்வேஷாம் அணீயாஂஸம் அணீயஸாம்.’ (மநு0 12.122)’யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹரிதி ஸ்திதஃ.’ (மநு0 8.92) இத்யாத்யாஃ.–

அதோ மத்தஃ ஏவ ஸர்வேஷாஂ ஸ்மரிதிஃ ஜாயதே? ஸ்மரிதிஃ பூர்வாநுபூத விஷயம் அநுபவ ஸஂஸ்கார மாத்ரஜஂ ஜ்ஞாநம். (ப்ரத்யபிஜ்ஜை வேறே -ப்ரத்யக்ஷம் சேர வேண்டும் -அதே வஸ்து இங்கு இருக்க அனுபவிப்பது -இங்கு அனுபவ மாத்திரம் -ஸ்ம்ருதி வேறே இத்தை விளக்குகிறார் )ஜ்ஞாநம் இந்த்ரிய லிங்க ஆகம யோகஜோ வஸ்து நிஷ்சயஃ? -ஸஃ அபி மத்தஃ. –அபோஹநஂ ச? அபோஹநஂ ஜ்ஞாந நிவரித்திஃ.–அபோஹநம் ஊஹநஂ வா ஊஹநஂ ஊஹஃ? ஊஹோ நாம — இதஂ ப்ரமாணம் இத்தஂ ப்ரவர்திதும் அஹர்தி இதி ப்ரமாண ப்ரவரித்த் யர்ஹதா விஷயஂ –ஸாமக்யாதி நிரூபண ஜந்யஂ– ப்ரமாண அநுக்ராஹகஂ ஜ்ஞாநம்; ஊஹோ நாம விதர்கஃ? ஸ ச மத்த ஏவ.வேதைஃ ச ஸர்வைஃ அஹம் ஏவ வேத்யஃ. அதஃ அக்நி வாயு ஸூர்ய ஸோமேந்த்ராதீநாஂம் அதந்தர்யாமி கத்வேந மதாத்மகத்வாத் தத் ப்ரதிபாதந பரைஃ அபி ஸர்வைஃ வேதைஃ அஹம் ஏவ வேத்யஃ? தேவ மநுஷ்யாதி ஷப்தைஃ ஜீவாத்மா இவ.

வேதாந்தகரித் வேதாநாம் இந்த்ரஂ யஜேத்’ (ஷத0 ப்ரா0 5.1.6)’வருணஂ யஜேத’ (ஷத0 ப்ரா0 2.3.37) இதி ஏவமாதீநாம் அந்தஃ பலஂ பலே ஹி தே ஸர்வே வேதாஃ பர்யவஸ்யந்தி? அந்தகரித் பலகரித்? வேதோதித பலஸ்ய ப்ரதாதா ச அஹம் ஏவ இத்யர்தஃ.(சர்வ தேவதா அந்தர்யாமி -சர்வ ஆராதானமும் எனக்கு -பலம் தருமவனும் நானே -வேதாந்தம் -வேத பலன் என்றே இங்கு )

ததுக்தஂ பூர்வம் ஏவ — (முன்பே சொல்லப்பட்டதே )’யோ யோ யாஂ யாஂ துநஂ பக்தஃ ஷ்ரத்தயார்சிதுமிச்சதி.’ (கீதா 7.21) இத்யாரப்ய’லபதே ச ததஃ காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்.’ (கீதா 7.22) இதி;’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாஂ போக்தா ச ப்ரபுரேவ ச৷৷’ (கீதா 9.24) இதி ச.வேதவித் ஏவ ச அஹம் வேதவித் ச அஹம் ஏவ? ஏவஂ மதபிதாயிநஂ வேதம் அஹம் ஏவ வேத. இதஃ அந்யதா யோ வேதார்தஂ ப்ரூதே? ந ஸ வேதவித் இதி அபிப்ராயஃ.

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

(ஏவ -சர்வை வேத ஏவ -வேதத்தாலேயே சொல்லப்படுகிறேன் -ப்ரத்யக்ஷம் அனுமானம் காட்டாது
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைர் ஏவ சொல்லியே தீரும் மூன்றாவது
வேதைர் ஏவ அஹம் ஏவ –தேவாதாந்த்ரங்களைச் சொல்வதும் என்னையே -ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் அதி கச்சதி-பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -திட ப்ராமண சித்தன் -ஊற்றம் யுடையாய்-அடியேன் உள்ளான் -அவையுள் தனி முதல் –

ப்ரஹ்மம் வேதம் அறிந்தவனே -அயோக விவச்சேதம் -ராமன் வில்லாளியே -ப்ரஹ்மம் ஜகாத் காரணமே
ராமனே வில்லாளி -அந்நிய யோக விவச்சேதம் -ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ப்ரஹ்மமே இவனே வேதம் அறிந்தவன் -முன் ஓதிய பட்டன் – )

(அபோஹம் -ஊஹம் -பிரமாணம் செயல்பாட்டுக்கு சக்தி -ஸாமக்ரியால் பிறக்கும் -பிரமாணம் ஸ்தாபிக்க உதவும் மூன்றும்
கண்ணால் தூணை க்ரஹிக்கும் சக்தி உடையது என்னும் ஞானம் ஊஹம் -தூண் 12 ஆதி உயரம் வர்ணம் இத்துடன் சேர்ந்தா இல்லையா –
வெளிச்சம் இருந்தால் தான் க்ரஹிக்கும் -ஸாமக்ரியை
முதலில் தூண் மட்டுமா தன்மைகளையும் சேர்த்தா -தன்மைகளை விட்டுப் பிரியாத தூணை கிரஹிப்பதால் சேர்த்தே க்ரஹிக்கும் -மூன்றும்
இந்த ஊகம் ஞானமும் நானே என்றுமாம்)

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.

৷৷15.15৷৷ஏக ஏவ ஹி வாயுஃ ஷாரீரோநேகவரித்திரிதி’பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி ஸூத்ரபாஷ்யேண “ப்ராணோபாநோ வ்யாந உதாநஃ ஸமாந இத்யேதத்ஸர்வஂ ப்ராண ஏவ” [பரி.உ.1.5.3] இதி ஷ்ருத்யோபபாதிதம்.’ஸர்வஸ்ய சாஹம்’ இதி ஷ்லோகஸ்யாசெய்ய கமலக்கண்ணன் -செய்கைப் பயன் உண்பேனும் யானே அனைத்தும் தானே ஸாங்கத்யஷங்காபரிஹாராயோக்தஸாமாநாதிகரண்யஹேதுபரத்வேந ஸங்கதிமாஹ’அத்ர பரமபுருஷவிபூதிபூதாவித்யாதிநா’. சஷப்த உக்தஸமுச்சயார்த இத்யபிப்ரேத்ய உக்தார்தமாஹ’தயோஃ ஸோமவைஷ்வாநரயோரிதி’.’ஸர்வஸ்ய’ இத்யஸ்ய’ஹரிதி’ இத்யேதத்ஸமபிவ்யாஹாரஸாமர்த்யலப்தார்தமாஹ — ‘ஸர்வஸ்ய ச பூதஜாதஸ்யேதி’.’ஹரிதி’ இதி நிர்தேஷஸ்ய ப்ரயோஜநஂ ஸூசயிதுஂ தத்ஸ்வபாவமாஹ’ஸகலப்ரவரித்தீதி’. ஆகாஷவந்நிவிஷ்டத்வவ்யவச்சேதாயாஹ — ‘ஆத்மதயா ஸந்நிவிஷ்ட’ இதி. ஆத்மத்வோபபாதநாயோக்தஂ’ஸர்வஂ மத்ஸங்கல்பேந நியச்சந்நிதி’.

‘ததாஹுரிதி’. நியமநார்தமந்தஃப்ரவிஷ்டத்வேநாத்மத்வேந சேமமாஹுரித்யர்தஃ. ப்ரதமபாதோக்தார்தோ த்விதீயபாதேநோச்யமாநார்தே ஹேதுரித்யாஹ’அத’ இதி.’ஸர்வேஷாஂ ஜாயத’ இதி சார்தஸித்தகதநம். ஷ்ருத்யுபபரிஂஹணஸ்மரிதிப்ரமவ்யுதாஸாயாஹ’ஸ்மரிதிரிதி’. பாஹ்யவிஷயாநந்விதத்வமதவ்யுதாஸாயோக்தஂ’பூர்வாநுபூதவிஷயமிதி’. ப்ரத்யபிஜ்ஞாநப்ரத்யக்ஷவ்யாவரித்யர்தஂ’மாத்ரபதம்’. கோபலீவர்தந்யாயமபிப்ரேத்ய ஜ்ஞாநபதஂ வ்யாசஷ்டே — ‘இந்த்ரியலிங்கேதி’.’அபோடதோஷஃ’ இத்யாதிப்ரயோகாநுஸாரேணாபோஹநஷப்தஸ்ய நிவரித்திபரத்வம்? நிவரித்தேஃ ப்ரதியோகிஸாகாங்க்ஷத்வேந ப்ரகரிதஜ்ஞாநப்ரதியோகிகத்வஂ சாபிப்ரேத்யாஹ’அபோஹநஂ ஜ்ஞாநநிவரித்திரிதி’. பூர்வம்’அப பரீ வர்ஜநே’ [அஷ்டா.1.4.88] இத்யபேத்யஸ்ய வர்ஜநத்யோதகத்வமபிப்ரேத்ய வ்யாக்யாதம்; இதாநீஂ ததவிவக்ஷயா’அத்யாஹாரஸ்தர்க ஊஹஃ’ [அமரஃ1.5.3] இதி கோஷாநுஸாரேண ஜ்ஞாநபதோக்தப்ரமாணஜ்ஞாநாநுக்ராஹகதர்கபரத்வமுசிதமித்யபிப்ராயேண வ்யாசஷ்டே’அபோஹநமூஹநஂ வேதி’. ஊஹநஷப்தஷ்ச பாவே ல்யுடந்த இத்யாஷயேநாஹ’ஊஹநமூஹ’ இதி.’இத்தஂ ப்ரவர்திதுமர்ஹதீதி’ — சாக்ஷுஷப்ரமா ரூபிரூபததேகாஷ்ரயயோக்யசக்ஷுஸ்ஸம்பந்தவிஷயே ப்ரவர்திதுமர்ஹதீத்யேவமாதிரூபப்ரமாணப்ரவரித்த்யர்ஹதாவிஷயமித்யர்தஃ.

‘ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டஃ’ இத்யுக்தஸர்வாந்தராத்மத்வஸ்ய’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ இத்யத்ராபி ஹேதுத்வமாஹ — ‘அத’ இதி.’ஸர்வைர்வேதைரஹமேவ வேத்ய’ இதி — ‘நாராயணஂ மஹாஜ்ஞேயஂ வசஸாஂ வாச்யமுத்தமம்’ இத்யுக்தப்ரதாநவேத்யோஹமேவேத்யர்தஃ. ஷரீரவாசிஷப்தைராத்மந ஏவ ப்ரதாநவேத்யத்வே தரிஷ்டாந்தமாஹ — ‘தேவமநுஷ்யாதீதி’.’சத்வாரஃ பஞ்சதஷராத்ரா தேவத்வஂ கச்சந்தி”வாசிகைஃ பக்ஷிமரிகதாஂ மாநஸைரந்த்யஜாதிதாம். ஷரீரஜைஃ கர்மதோஷைர்யாதி ஸ்தாவரதாஂ நரஃ’ [மநுஃ12.9] இத்யாத்யநந்யதாஸித்தவைதிகலௌகிகப்ரயோகாந்மநுஷ்யாதிஷப்தாநாமாத்மபர்யந்தத்வஂ முக்யமேவேதி பாவஃ. வேதாந்தஷப்தஸ்யோபநிஷத்பரத்வே வேதநாஷபரத்வே ப்ரகரிதாஸங்கத்யாநுபபத்த்யா சாந்தஷப்தஸ்ய சரமவாசிஅபிப்ரேத்ய வ்யாசஷ்டே — ‘வேதாநாமிதி’.’இந்த்ரஂ யஜேதேதி’ — ‘இந்த்ரஂ யஜேத வருணஂ யஜேத’ இத்யேவமர்தவாக்யாநாமித்யர்தஃ. “ஐந்த்ரஂ தத்யமாவாஸ்யாயாம்” [யஜு.2.5.4.1]’ஐந்த்ரஂ பயோமாவாஸ்யாயாம்”தாவதோ வாருணாஂஷ்சதுஷ்கபாலாந்நிர்வபேத்’ [யஜுஃ2.3.12.1] இத்யாதீநாமிதி யாவத். அந்தஷப்தஸ்ய கதஂ பலபரத்வஂ இத்யதஸ்ததுபபாதயதி’பலே ஹீதி’.’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாஂ போக்தா ச ப்ரபுரேவ ச’ [9.24] இதிவத்.’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ இத்யநேந பலிதஸர்வகர்மஸமாராத்யத்வாநந்தரஂ தத்பலப்ரதத்வோக்திஸ்தைரேவ ஸங்கதேதி ஸூசயந்பலிதமர்தஂ ஸஸஂவாதமாஹ — ‘வேதோதிதபலஸ்யேத்யாதிநா’. ஏவகாரஸ்ய யதாஷ்ருதாந்வயே அயோகவ்யவச்சேதார்தத்வஂ ஸ்யாத்; தச்சாயுக்தம்? பகவதி வேதவித்த்வாயோகஸ்யாயுக்தேஃ; அதோ விஷேஷ்யாந்வயமாஹ — ‘வேதவிச்சாஹமேவேதி’.’யே ச வேதவிதோ விப்ராஃ’ [ம.பா.3.66.26] இதி பகவததிரிக்தாநாமபி வேதவித்த்வப்ரதீதேஃ.’அஹமேவேதி’ கதமிதரயோகவ்யவச்சேதஃ இத்யதஸ்ததபிப்ராயமாஹ — ‘ஏவஂ மதபிதாயிநமிதி’.

—————–

பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :

16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம்
என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள்.
நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம்
க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால்
இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது
என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை.
மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும்
மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின்
வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது.
இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது.
பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.

பழத்தின் மேல் தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன.
அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

৷৷15.16৷৷க்ஷரஃ ச அக்ஷர ஏவ ச இதி த்வௌ இமௌ புருஷௌ லோகே ப்ரதிதௌ.– தத்ர க்ஷர ஷப்த நிர்திஷ்டஃ -புருஷோ ஜீவ ஷப்த அபிலபநீய ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த க்ஷரண ஸ்வபாவ அசித் ஸஂஸரிஷ்ட ஸர்வ பூதாநி; அத்ர அசித் ஸங்க ரூபைக உபாதிநா புருஷஃ இதி ஏகத்வ நிர்தேஷஃ.(ஜாதி ஏக வசனம் )அக்ஷர ஷப்த நிர்திஷ்டஃ கூடஸ்தஃ? அசித் ஸஂஸர்க வியுக்தஃ? ஸ்வேந ரூபேண அவஸ்திதோ முக்தாத்மா. ஸ து அசித் ஸஂஸர்க அபாவாத் அசித் பரிணாம விஷேஷ ப்ரஹ்மாதி தேஹ ஸாதாரணோ ந பவதி இதி கூடஸ்த இதி உச்யதே.

கூடஸ்தர் -பத யோகத்தால் அர்த்தம்-யவ்கிக அர்த்தம் மூலம் முக்தாத்மாவைச் சொல்லி – -ரூடி அர்த்தம் ப்ரஸித்த அர்த்தம் இல்லை -விகாரம் இல்லா கொல்லம் பட்டரை இரும்பு-இங்கு பல பிரிவுகளுக்கு பொதுவாக இருப்பவன் -முக்தாத்மா-அசித் சம்சர்க்கம் இல்லாமை ஏக வசனம் ஒருமையில் கூடஸ்தர்

அத்ர அபி ஏகத்வ நிர்தேஷஃ அசித் வியோக ரூபைக உபாதிநா அபிஹிதஃ. ந ஹி இதஃ பூர்வம் அநாதௌ காலே முக்த ஏக ஏவ. யதா உக்தம் — ‘பஹவோ ஜ்ஞாந தபஸா பூதா மத் பாவமாகதாஃ৷৷’ (கீதா 4.10)’மம ஸாதர்ம்ய மாகதாஃ. ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச৷৷’ (கீதா 14.2) இதி.

৷15.16৷৷ஸர்வவேதஸாரரூபபுருஷோத்தமயாதாத்ம்யப்ரதிபாதநமுக்தேந ஸங்கமயந்நவதாரயதி — ‘அதோ மத்த ஏவேதி’. லோக்யதேநேநேதி வ்யுத்பத்த்யா ப்ரமாணபரத்வமபிப்ரேத்ய’ப்ரதிதஃ’ இத்யேததநுஷஜ்ய வசநவிபரிணாமேந யோஜயதி — ‘லோகே ப்ரதிதாவிதி’. ப்ரமாணஂ ச “அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோநுஷேதே ஜஹாத்யேநாஂ புக்த போகாமஜோந்யஃ” [ஷ்வே.உ.4.5] இத்யாதிகமபிப்ரேதம். புருஷஷப்தநிர்திஷ்டாத்மநஃ ஸ்வரூபேண க்ஷரத்வாயோகாச்சரீரத்வாரா ததித்யபிப்ரேத்ய தரிதீயபாதஂ வ்யாசஷ்டே’தத்ர க்ஷரஷப்தநிர்திஷ்ட’ இத்யாதிநா.’க்ஷரஃ’ இத்யேகத்வநிர்தேஷேந’பூதாநி’ இதி பஹுத்வநிர்தேஷஸ்தூபாதிகரித இதி ஷங்காவ்யுதாஸாயாஹ — ‘அத்ராசித்ஸஂஸர்கேதி’. பத்தாத்மநாஂ ஸ்வரூபதோ பேதாபாவே ஸர்வதுஃகஸுகப்ரதிஸந்தாநஂ ஸர்வேஷாஂ ஸ்யாதிதி பாவஃ. கூடஸ்தஷப்தோநேகஸந்ததிமூலபுருஷே ப்ரஸித்தஃ; ஸ சாத்ர ந பரமபுருஷஃ?’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17] இதி தஸ்ய பரிதக்வக்ஷ்யமாணத்வாத். நாபி ஹிரண்யகர்பாதிஃ? தஸ்ய தேஹஸம்பந்தித்வேந க்ஷரஷப்தநிர்திஷ்டத்வாத்; நாபி முக்தாத்மா? ரூட்யாத்யவிஷயத்வாதித்யதஸ்தத்ர யோகவரித்திமபிப்ரேத்ய முக்தாத்மபர இத்யாஹ — ‘அசித்ஸஂஸர்கவியுக்த’ இதி. யோகவரித்திமுபபாதயதி — ‘ஸ த்விதி’.’ப்ரஹ்மாதிதேஹேதி’ — ப்ரஹ்மாதிதேஹஸம்பந்தாயத்தவிசித்ரஸுகதுஃகாத்யஸாதாரணாகாரோ ந பவதீத்யர்தஃ. ஏதேந “ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே” [சா.உ.8.12.2] இதி ஷ்ருத்யுக்தாஸங்குசிதஜ்ஞாநைகாகாரத்வலக்ஷணஸாதாரணாகாரோ பவதீத்யுக்தஂ பவதி. ததாச கூடவத்திஷ்டதீதி கூடஸ்த இதி வ்யுத்பத்திரபி ஸூசிதா. ஸாதாரணாகாரத்வமேவாத்ர கூடஸாதரிஷ்யமிதி பாவஃ. அத்ராப்யேகத்வநிர்தேஷ ஏகோபாதிக்ரோடீகாரநிபந்தந ஏவேத்யாஹ — ‘அத்ராபீதி’.’நிர்தேஷ৷৷.அபிஹித’ இத்யேதத்’பாகஂ பசதி’ இதிவத் த்ரஷ்டவ்யம். உக்தார்தே ஹேத்வபிப்ராயேண முக்தாத்மபஹுத்வஂ ஸப்ரமாணமாஹ — ‘பூர்வமநாதௌ கால’ இதி.

———————–

இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :

17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.
அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம்.
நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புருஷோத்தமன்.
அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன.
அவரே முழு முதற் பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும்,
சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.

சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல
அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான்.
அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.

৷৷15.17৷৷உத்தமஃ புருஷஃ து தாப்யாஂ க்ஷராக்ஷர ஷப்த நிர்திஷ்டாப்யாஂ பத்த முக்த புருஷாப்யாம் அந்யஃ அர்தாந்தர பூதஃ பரமாத்மா இதி உதாஹரிதஃ.ஸர்வாஸு ஷ்ருதிஷு பரமாத்மா இதி நிர்தேஷாத் ஏவ ஹி உத்தமஃ புருஷோ பத்த முக்த புருஷாப்யாம் அர்தாந்தர பூதஃ இதி அவகம்யதே. கதம்(புருஷோத்தமன் பரமாத்மா என்பான் என் என்னில் )யோ லோக த்ரயம் ஆவிஷ்ய பிபர்தி; லோக்யத இதி லோகஃ (வேதத்தால் -ப்ரமாணத்தால் -அறியப்படுவதால் )தத் த்ர்ய லோகம்  லோக த்ரயம் அசேதநஂ- தத் ஸஂஸரிஷ்டஃ சேதநோ –முக்தஃ ச இதி ப்ரமாண அவகம்யம் ஏதத் த்ரயஂ -ய ஆத்ம தயா ஆவிஷ்ய பிபர்தி? (உள்ளே நிறைந்து வியாபித்து தாங்குபவன் )ஸ தஸ்மாத் வ்யாப்யாத் பர்தவ்யாத் ச அர்தாந்தர பூதஃ.இதஃ ச உக்தாத் லோக த்ரயாத் அர்தாந்தர பூதஃ. யதஃ ஸஃ அவ்யய ஈஷ்வரஃ ச. (அழிவற்றவன் நியமமிப்பவன் )அவ்யய ஸ்வபாவோ ஹி வ்யய ஸ்வபாவாத் அசேதநாத் தத் ஸஂபந்தேந ததநுஸாரிணஃ ச சேதநாத் அசித் ஸஂபந்த யோக்யதா பூர்வ ஸஂபந்திநஃ முக்தாத் ச அர்தாந்தர பூத ஏவ; -ததா ஏதஸ்ய லோக த்ரயஸ்ய ஈஷ்வரஃ ஈஷி தவ்யாத் தஸ்மாத் அர்தாந்தர பூதஃ.

(ஆவிஷ்ய-உள்ளும் புறமும் வியாபித்து – பிபர்த்தி -தாங்கும்
அவ்யயம் -அழிவற்ற -ஈஸ்வரன் -நியமிப்பவன் -நான்கும் சொல்லி
தத்வ த்ரயமும் அழிவற்றவையே தான் -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாதவன் -என்றவாறு

முக்தாத்மா-முன்னால் இருந்த அசித் சம்பந்தம் -இருந்ததே இவை வ்யயம் –நித்யர் போல் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் அவ்யயம் -)

(வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் -என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நிய மானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

பதி சேஷி ஸ்வாமி வியாபகம் நியாந்தா -ஸ்வாமித்வம் முக்யம் -த்வயம் பூர்வ உத்தர வாக்கியசத்தில் இது உண்டே -கைங்கர்யம் ஏற்றுக்கொள்ள –
இவை எல்லாம் தனது பொருட்டாகவே செய்கிறான் -அமலன் நிமலன் விமலன் நின்மலன்-படர்க்கையாகவே சொல்லிக் கொள்கிறான் -ஸர்வஸ்வ ஸ அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -போல் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டானே -நாராயணனே-சங்கரரும் பாஷ்யத்தில்   )

৷৷15.17৷৷அப்ராப்தத்வாதந்யத்வஸ்ய விதேயத்வஂ வதந் தஸ்ய ப்ரதியோகிஸாபேக்ஷத்வாத் ப்ரகரிதக்ஷராக்ஷரபுருஷயோரேவ ப்ரதியோகித்வமாஹ — ‘உத்தமஃ புருஷஸ்து தாப்யாமிதி’.’பரமாத்மேத்யுதாஹரிதஃ’ இத்யஸ்ய விதேயபரத்வாஸம்பவேந அந்யத்வஹேதுபரத்வமாஹ — ‘ஸர்வாஸு ஷ்ருதிஷு சேதி’.’தஸ்யாஃ ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதஃ” [மஹாநா.9.13+வாஸு.6+மஹோ.1.9+சதுர்வேதோ.6] “ஆத்மா நாராயணஃ பரஃ” [மஹாநா.9.4] இத்யாதிஷ்வித்யர்தஃ. பரமாத்மேதிநிர்தேஷஹேதுத்வோபபாதகத்வேநோத்தரார்தமவதாரயதி — ‘கதமிதி’. லோகஷப்தஸ்ய புவநபரத்வே லோகத்ரயஂ பூராதிலோகத்ரயஂ? ஸ்வர்கமர்த்யபாதாலலக்ஷணலோகத்ரயஂ வா ஸ்யாத். ததா ச தத்வ்யாபநபரணயோஃ ஸர்வாத்மத்வபர்யவஸிதபரமாத்மத்வோபபாதகத்வேந க்ஷராக்ஷராத்மகஸர்வாந்யத்வஸாதகத்வஂ ந ஸ்யாத். கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமிதி லோகத்ரயபரத்வேபி தத்ரத்யபுருஷேஷு லக்ஷணா ஸ்வீகார்யா; ததோ வரஂ யோகவரித்த்யாஷ்ரயணமித்யபிப்ரேத்ய வ்யாசஷ்டே — ‘லோக்யத இதி லோக’ இத்யாதிநா. கதமசாக்ஷுஷயோர்பத்தமுக்தயோர்லோகநகர்மத்வமித்யத ஆஹ — ‘ப்ரமாணாவகம்யமேதத்த்ரயமிதி’.’யஃ’ இதி “அந்தஃ ப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா” [சித்த்யு.11.1+ஆ.3.11] “பர்த்தா ஸந் ப்ரியமாணோ பிபர்தி” [ஆ.3.14] இத்யாதிகமத்ராபிப்ரேதம்.’ஸஃ’ இதி — பரமாத்மேதி நிர்திஷ்ட இத்யர்தஃ.’யஃ’ இத்யஸ்ய தத்பரத்வாத்ப்ரத்யேகஂ விஷேஷணாநாமந்யத்வஸாதநஸாமர்த்யாத் ததர்தஸ்திதிமாத்ரவிவக்ஷாயாமத்ராநபேக்ஷிதோக்த்யா பதாந்தரவையர்த்யாதித்யபிப்ராயேணாஹ — ‘இதஷ்சேதி’.

அத்ராவேஷபரணேஷ்வரத்வாநாஂ கர்மகர்தரிபாவேந அந்யத்வோபஸ்தாபகத்வம்? அவ்யயத்வஸ்ய து ஸாக்ஷாத்ஸ்வபாவவிரோதாதித்யபிப்ராயேணாஹ — ‘அவ்யயஸ்வபாவோ ஹீதி’. ஏவமவாந்தரவைஷம்யஂ தர்ஷயிஷ்யதி’அவ்யயஸ்வபாவதயா வ்யாபநபரணைஷ்வர்யாதியோகேந ச’ [ரா.பா.15.19] இதி.’தத்ஸம்பந்தேந ததநுஸாரிண’ இதி — தததீநஜந்மவிநாஷாதிக்லேஷபாஜ இத்யர்தஃ. தத்வஜ்ஜ்ஞாநஸங்கோசவிகாஸலக்ஷணவிகாரயோகிந இதி வா. யோக்யதா நாம ஸஹகாரிஸந்நிதௌ குர்வத்ஸ்வபாவத்வஂ? ஸஹகார்யபாவப்ரயுக்தகார்யாபாவவத்த்வஂ வா. ஸா ச முக்தஸ்யாப்யஸ்தீதி ஸ்வபாவவிரோதஸ்தத்ராப்யவிஷிஷ்ட இத்யாஹ — ‘அசித்ஸம்பந்தயோக்யதயா பூர்வஸம்பந்திந’ இதி. அநவச்சிந்நாத்மவ்யயத்வஂ முக்தஸ்யாபி நாஸ்தீதி பாவஃ. ஈஷ்வரஷப்தோத்ர நாநுபயுக்தஸஂஜ்ஞாமாத்ரரூப இத்யபிப்ராயேணாஹ — ‘ததைதஸ்யேதி’. அத்ராத்மலக்ஷணாந்தர்கதாநுப்ரவேஷதாரணநியமநாநாஂ கண்டோக்தௌ ஸ்வார்ததாரணாதிவஷாதேவ ஷேஷித்வமபி ஸித்யதீத்யபிப்ராயேண ஸஂக்ரஹஷ்லோகே ஸ்வாம்யோக்திஃ. ததாச தத்ர நியந்தரித்வமுபலக்ஷணீயம். ஏவஂ’அவ்யயத்வவ்யாபநபரணஸ்வாம்யைஃ’ [ரா.பா.16.1] இத்யநந்தராத்யாயாரம்பபாஷ்யேபி த்ரஷ்டவ்யம். யத்வா கேவலநியந்தரித்வாதிவிஷிஷ்டேஷ்வபீஷ்வரஷப்தஸ்ய ப்ரயுக்தசரத்வாபாவாத் ஸ்வாம்யோபஷ்லிஷ்டநியமநவேஷே ச நிரூடப்ரயோகத்வாதீஷ்வரஷப்தேநைவ ஷேஷித்வமப்யுபஸ்தாபிதம். அபி சாத்ர’யஃ’ இதி வ்யாப்த்யாத்யாநுவாதே’மயி ஸர்வமிதஂ ப்ரோதம்’ [7.7] இத்யாதிபுரோவாதபராமர்ஷாத்தத்ப்ரகரணே’பூமிராபஃ’ [7.4] இத்யாதிநோக்தஂ ஷேஷித்வமப்யாகரிஷ்யத இதி “பதிஂ விஷ்வஸ்யாத்மேஷ்வரம்” [மஹாநா.1.6] இதி பதிஷப்தஸ்தாநே சேஷ்வரஷப்தஃ ப்ரயுக்த இதி,பாவஃ.

—————-

18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.

க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது.
அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன்.
சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள்.
ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம்.
பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.

৷৷15.18৷৷யஸ்மாத் ஏவம் உக்தைஃ ஸ்வபாவைஃ க்ஷரஂ புருஷம் அதீதஃ அஹம்? அக்ஷராத் முக்தாத் அபி உக்தைஃ ஹேதுபிஃ உத்கரிஷ்ட தமஃ? அதஃ அஹஂ லோகே வேதே ச புருஷோத்தமஃ இதி ப்ரதிதஃ அஸ்மி. வேதார்த அவலோகநாத் லோக இதி ஸ்மரிதிஃ இஹ உச்யதே. ஷ்ருதௌ ஸ்மரிதௌ ச இத்யர்தஃ.

ஷ்ருதௌ தாவத் — ‘பரஂ ஜ்யோதி ரூபஂ ஸஂபத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே ஸ உத்தமஃ புருஷஃ’ (ச0 உ0 8.12.3) இத்யாதௌ. ஸ்மரிதௌ அபி’அஂஷாவதாரஂ புருஷோத்தமஸ்ய ஹ் யநாதி மத்ய அந்தம்  அஜஸ்ய விஷ்ணோஃ.’ (வி0 பு 5.17.33) இத்யாதௌ.

( இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ-புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு -யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும் )

৷৷15.18৷৷ஏவஂ ப்ரதிஜ்ஞாதமந்யத்வஂ ஷ்ருதிஸ்மரிதிப்ரஸித்ததாத்வர்தயா ஸமாக்யயா ஸ்தாபிதம்; ததேவ புநஸ்ததாபூதஸமாக்யாந்தரேண’உத்தமஃ புருஷஃ’ இத்யநுவாதஸ்மாரிதேந ஸ்திரீக்ரியதே’யஸ்மாத்’ இதிஷ்லோகேந. ஏதேந பூர்வஷ்லோகே பராக்த்வநிர்தேஷோபி ஸ்வவிஷய ஏவேதி தர்ஷிதம். அத்ர’யதோஸாவக்நிமாந்? அதஏவ தூமவாந்’ இத்யாதிவத்ஸாத்யமேவ ஸாதகஂ ப்ரதி நியாமகதயா ஹேதுர்வ்யபதிஷ்யதே. தச்ச ஸாத்யஂ ஸஹேதுகமிஹ ஸமாக்யாநிதாநமித்யபிப்ராயேணாஹ’யஸ்மாதேவமுக்தைஃ ஸ்வபாவைரிதி’.’க்ஷரமதீதஃ’ இதி தத்ஸ்வபாவகந்தாநாக்ராதத்வமுச்யதே. அத்ராபி க்ஷரஷப்தஃ ப்ரஸ்துதைகார்த்யாந்ந ப்ரதாநவிஷய இத்யாஹ’க்ஷரஂ புருஷமிதி’. அக்ஷரஷப்தஸ்ய ப்ரதாநேஷ்வராதிஷ்வபி ப்ரயோகாத்தத்வ்யவச்சேதாய’கூடஸ்தோக்ஷரஃ’ [15.16] இத்யுக்தைகார்த்யமாஹ’அக்ஷராந்முக்தாதிதி’. ஏதேந புருஷோத்தமஷப்தநிருக்திரப்யத்ர தர்ஷிதா.’உக்தைர்ஹைதுபிரிதி’ — ‘ஷஷ்டீ ஹேதுப்ரயோகே’ [அஷ்டா.2.3.26] இதி நியமஸ்ய ப்ரயோஜநரூபஹேதுவிஷயதயைவ ப்ரயோகப்ராசுர்யாந்ந தரிதீயயாநுபபத்திஃ. உத்தமஷப்தே ப்ரகரிதிப்ரத்யயபேதேந விவக்ஷிதமாஹ — ‘உத்கரிஷ்டதம’ இதி. முக்தோ ஹி பத்தாதுத்கரிஷ்டஃ; ததோப்யஸௌ ஸர்வாந்தராத்மத்வாதிபிருக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதமஃ. ப்ரதிதஷப்தேந கேவலப்ரதநவிதேஃ ப்ரகரிதாநந்வயாத்ஸவிஷேஷணோஸௌ விஷேஷணோபஸஂக்ராமீத்யபிப்ராயேண’புருஷோத்தம இதீதி’ இதிகரணம். நாத்ர லோகஷப்தோ புவநவிஷயஃ? ஜநவிஷயோ வா; தத்ர ப்ரகரிதநிருக்திவிவக்ஷாப்ரமாணத்வாஸம்பவாத். நச காவ்யாதிப்ரயோகபரதா? தத்ராப்யதிதராஂ ஸ்வாரஸ்யாபாவாத். அதோ வேதஸஹபாடாத்ததநுவர்திஸ்மரிதிபரோயம். தத்ர ச லோக்யதேநேந வேதார்த இதி வ்யுத்பத்த்யா வரித்திரித்யபிப்ராயேணாஹ — ‘வேதார்தாவலோகநாதிதி’.’ஷ்ருதௌ ஸ்மரிதௌ சேத்யர்த’ இதி. அயமபிப்ராயஃ — ஷ்ரூயதே நித்யமிதி ஹி ஷ்ருதிஃ. அதோ வக்தரிதோஷப்ரஸங்காபாவாதஷிதிலஸம்ப்ரதாயத்வாச்ச ததுக்தஂ தாவத்ப்ராமாணிகமேவ. ஸ்மரிதிரப்யல்பஷ்ருதைர்துரவபோதஸகலஷாகாநுகதமர்தஂ ஸங்கலவ்யோபபரிஂஹயந்தீ பரமாத்மதமமந்வாதிப்ரணீதா ப்ரமாணமேவேதி தயா வேதார்தாவலோகநஂ யுக்தம் — இதி.

‘பரஂ ஜ்யோதிருபஸம்பத்ய’ இதி முக்தோபஸம்பத்தவ்யதயா நிர்திஷ்டோ நிரதிஷயதீப்தியுக்தஃ புருஷ ஏவாத்ர “ஸ உத்தமஃ புருஷஃ” இதி பராமரிஷ்ய விஷேஷ்யதே; ததுபபரிஂஹணாய ஹி’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17] இதி தத்துல்யவ்யஸ்தப்ரயோகோயஂ ப்ரதர்ஷித இத்யபிப்ராயேண’பரஂ ஜ்யோதிஃ’ இத்யாதிவாக்யோதாஹரணம். அத்ர’ப்ரதிதஃ புருஷோத்தமஃ’ இத்யுக்தஸமஸ்தப்ரயோகப்ரதர்ஷநார்ததயா’அஂஷாவதாரஂ புருஷோத்தமஸ்ய’ [வி.பு.5.17.33] இதி ஸ்மரித்யுதாஹரிதிஃ. அத்ர’விஷ்ணோஃ’ இதி ஸஂஜ்ஞாநிர்தேஷேபி’புருஷோத்தமஸ்ய’ இதி விஷேஷணைகார்த்யஸ்ய விவக்ஷிதத்வாத்யோகரூடோயஂ ஷப்த இதி ஸித்தம். ஏதேந’ரூட்யா து காமஂ புருஷோத்தமோஸ்து’ இதி ப்ரலபந் வேதபாஹ்யஃ ப்ரத்யுக்தஃ. நநு கதஂ யௌகிகார்தவிவக்ஷாயாமஸ்ய ஸாதுதா ந தாவதஸௌ ஸமாநாதிகரணஸமாஸஃ’ஸந் மஹத்பரமோத்தமோத்கரிஷ்டாஃ பூஜ்யமாநைஃ’ [அஷ்டா.2.1.61] இதி ப்ரதமாநிர்திஷ்டஸ்யோத்தமஷப்தஸ்யோபஸர்ஜநதயா பூர்வநிபாதாபாதாத். நாபி வ்யதிகரணஃ. உத்தமஃ புருஷ இவேத்யுபமிதவிவக்ஷாநுபபத்தேஃ; ததர்ததயோதாஹரிதாயாஂ ஷ்ருதாவபி வையதிகரண்யாதர்ஷநாத். நசாஸௌ ஷஷ்டீஸமாஸஃ? நிர்தாரணே தந்நிஷேதாத் நசாந்யஸ்யாபீஹ ஸம்பவ இதி. மைவஂ? ஷஷ்டீஸமாஸஸ்யைவாத்ர யுக்தத்வாத்; நஹி வயமத்ர நிர்தாரணார்ததாஂ ப்ரூமஃ. புத்ராதிவத்ஸம்பந்திஷப்தோ ஹ்யஸௌ. அதமாதிஸாபேக்ஷஂ ஹ்யுத்தமத்வம். இதஂ ச ஸூசிதம் — ‘உக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதம’ இதி ஜாதிகுணாத்யஸம்பந்திஷப்தேஷு ஹி நிர்தாரணே ஷஷ்டீ. ஸம்பந்தஸாமாந்யவிஹிதா ச ஷஷ்டீ தத்தத்ஸம்பந்திஷப்தஸமபிவ்யாஹாராநுரோதேந தத்ஸம்பந்தவிஷேஷஂ ப்ரதிபாதயதி. ஏவமேவ ஹி நாகோத்தமாதிஷப்தாநாஂ ஸாதுத்வஂ வையாகரணைர்வ்யாக்யாதம். அத்ர ச’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17]’க்ஷரமதீதோஹமக்ஷராதபி சோத்தமஃ’ இதி சார்தகதநமாத்ரஂ? ந து தத்ஸமாஸாஂஷத்வயவிவக்ஷா. ஏவமேவ “ஸ உத்தமஃ புருஷஃ” இதி ஷ்ருத்யுதாஹரணமபி. கேசித்து பஞ்சமீஸமாஸஂ வ்யாகுர்வதே. ந சோத்தமஷப்தயோகே பஞ்சமீ ந ஷிஷ்டேதி வாச்யஂ; யதா’யஸ்மாததிகம்’ [அஷ்டா.2.3.9] இத்யாதிஸௌத்ரப்ரயோகாதஷிஷ்டஸ்யாபி பரிக்ரஹஃ;’ஏவமக்ஷராதபி சோத்தமஃ’ இத்யாதிப்ரயோகபலாதேவ தத்பரிக்ரஹோபபத்தேஃ. இதமபி ஸூசிதஂ’முக்தாதப்யுக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதம’ இதி. யோகவிபாகாச்ச பஞ்சம்யா உத்தமாதிஷப்தைஃ ஸமாஸோப்யநுஷிஷ்ட ஏவ. ஏவஂ ஸப்தமீஸமாஸத்வேபி ந தோஷஃ? ஷௌண்டாதிஷ்வபடிதத்வேபி தத்ராபி யோகவிபாகாப்யநுஜ்ஞாநாதேவ ததுபபத்தேஃ. ஏதத்ஸர்வஂ விஜாநத்பிர்மஹாகவிபிரபி விவக்ஷிதயோக ஏவாயஂ ப்ரயுஜ்யதே ப்ரதிபாத்யதே ச. ததாதிகாவ்யே’ந ச தேந விநா நித்ராஂ லபதே புருஷோத்தமஃ’ [வா.ரா.1.18.30] இதி. ததேதத்ஸர்வமபிஸந்தாய பகவத்யாமுநமுநிபிருக்தஂ ஸ்தோத்ரே’கஃ புண்டரீகநயநஃ புருஷோத்தமஃ கஃ’ இதி.

—————-

இத்தகைய புருஷோத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :

19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத

பாரத:-பாரதா!
ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை,
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி – இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ,
ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்,
மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன்.
அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு
அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன.
அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன.
பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன;
உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து
ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான்.
ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது.
மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.

ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும்.
ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது.
இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.

৷৷15.19৷৷யஃ ஏவம் உக்தேந ப்ரகாரேண புருஷோத்தமஂ மாம் அஸஂமூடோ ஜாநாதி? க்ஷர அக்ஷர புருஷாப்யாம் அவ்யய ஸ்வபாவ தயா வ்யாபந பரண ஐஷ்வர்யாதி யோகேந ச விஸஜாதீயஂ ஜாநாதி? ஸ ஸர்வ வித் -மத் ப்ராப்த் யுபாய தயா யத் வேதிதவ்யஂ தத் ஸர்வஂ வேத.- பஜதி மாஂ ஸர்வ பாவேந- (ஸர்வ பாவம் என்றது சர்வ கிரியைகளாலும் – ஸர்வம் வாஸூ தேவம் இருப்பவர் வேறே -இங்கு உபாசன பிரகாரம் -அஹங்கார மிஸ்ரம் -)யே ச மத் ப்ராப்த் யுபாய தயா மத் பஜந ப்ரகாரா நிர் திஷ்டாஃ தைஃ ச ஸர்வைஃ பஜந ப்ரகாரைஃ மாஂ பஜதே.-ஸர்வைஃ மத் விஷயைஃ வேதநைஃ மம யா ப்ரீதிஃ யா ச மம ஸர்வைஃ மத் விஷயைஃ பஜநைஃ உபய விதா ஸா ப்ரீதிஃ அநேந வேதநேந மம ஜாயதே.

இதி ஏதத் புருஷோத்தமத்வ வேதநஂ பூஜயதி.

৷৷15.19৷৷ஏவஂ புருஷோத்தமஷப்தநிர்வசநஂ ததாநுசிந்தநார்தமிதி வ்யஞ்ஜயந் புருஷோத்தமத்வவேதநஂ ஸ்தௌதி — ‘யோ மாமேவம்’ இதி ஷ்லோகேந. புருஷோத்தமத்வேந ஜாநாதீதி விவக்ஷாயாமஸம்மூடபதநைரர்தக்யம். அதஏவ’புருஷோத்தமஂ৷৷.மாம்’ இத்யர்தஸ்திதிஂ நிர்திஷ்ய தத்ர யதாவஜ்ஜ்ஞாநஂ’அஸம்மூடோ ஜாநாதி’ இத்யுச்யதே. ததாஹ — ‘ய ஏவமுக்தேநேதி’. ஏகீகரித்ய மோஹரஹிதத்வமஸம்மூடத்வம். தச்ச பூர்வோக்தஸ்வப்ரகாராந்யத்வாநுஸந்தாநாதித்யாஹ — ‘க்ஷராக்ஷரேதி’. ஏவமஸம்மூடஷப்தேந பராபிமதஜீவேஷ்வரைக்யவேதநஸ்ய ப்ராந்திரூபத்வஂ ப்ரகரிதிபுருஷேஷ்வரபேதஸ்ய பாரமார்திகத்வஂ ச வ்யஞ்ஜிதம்.’ஸ ஸர்வவித்’ இத்யத்ர புருஷோத்தமஷப்தார்தவேதநேநாஷ்டாதஷவித்யாஸ்தாநாதிவேதநாஸித்தேரத்ர சாநபேக்ஷிதகேஷகீடாதிஸங்க்யாவேதநேந ஸ்துத்யஸம்பவாத் தஸ்ய’பஜதி மாஂ ஸர்வபாவேந’ இத்யத்ர மந்தப்ரயோஜநத்வாச்ச பஜநாநுஷ்டாநோபயோகிவிஷயதயா நியச்சதி — ‘மத்ப்ராப்த்யுபாயதயேதி’. பஜநக்ரியாவஷீகரிதஃ ஸர்வபாவஷப்தோ பஜநாவாந்தரபேததயா ப்ராக்ப்ரபஞ்சிதகீர்தநயதநாதிப்ரகாரபரஃ.’வாஸுதேவஃ ஸர்வம்’ [7.19] இத்யாத்யர்தவிவக்ஷாதோப்யயமேவார்தஃ ஸ்துத்யுபயோகாதிஷயாதிஹோபாதேய இத்யபிப்ராயேணாஹ’யே சேதி’. பாவஷப்தோத்ர க்ரியாவாசீ பதார்தமாத்ரவாசீ வா ஸந்ப்ரகாராக்யவிஷேஷே விஷ்ராந்தஃ.

நந்வத்ர தத்த்வஹிதவேதநஂ ஹிதாநுஷ்டாநஂ ச ஷாஸ்த்ரபலஂ விவக்ஷிதம். தத்ர ந தாவத்புருஷோத்தமத்வவேதநமேவ பரவ்யூஹவிபவகுணசேஷ்டிதாதிஸர்வவேதநஂ ஸர்வவிதபஜநகரணஂ ச ஸ்வரூபாந்யதாத்வாத். ந சாரோப்ய ஸ்துதிஃ? அநூர்ஜிதத்வாந்நிஷ்பலத்வாச்ச. ந சாத்ர ஹேதுபலபாவவிவக்ஷா’ஏதத்புத்த்வா புத்திமாந் ஸ்யாத்

——————-

கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்‌புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.

குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன்.
பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.

ஸ்ரீ பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது.
ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான்.
அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன.
பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை.
பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை.
பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.

பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய
முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனே யாவான்.

இதி ஏதத் புருஷோத்தமத்வ வேதநஂ பூஜயதி.-இந்த ஞானத்தை புகழ்கிறான்

৷৷15.20৷৷இத்தஂ (இவளை போல் இங்கு இதம் )மம புருஷோத்தமத்வ ப்ரதிபாதநஂ ஸர்வேஷாஂ குஹ்யாநாஂ குஹ்ய தமம் இதஂ ஷாஸ்த்ரஂ த்வம் அநக தயா யோக்ய தம இதி கரித்வா மயா தவ உக்தம். ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் கரிதகரித்யஃ (செய்த வேள்வியர் ஆவாய் )ச மாஂ ப்ரேப்ஸுநா உபாதேயா யா புத்திஃ ஸா ஸர்வா உபாத்தா ஸ்யாத். யத் ச தேந கர்தவ்யம்? தத் ச ஸர்வஂ கரிதஂ ஸ்யாத் இத்யர்தஃ.அநேந ஷ்லோகேந அநந்தர் உக்தஂ புருஷோத்தம விஷயஂ ஜ்ஞாநஂ ஷாஸ்த்ர ஜந்யம் ஏவ ஏதத் ஸர்வஂ கரோதி; ந து ஸாக்ஷாத்கார ரூபம் இதி உச்யதே.

[15.20] இத்யநந்தரேண பௌநருக்த்யாத் அதோ நிரர்தகமிதமித்யத்ராஹ — ‘ஸர்வைர்மத்விஷயைரிதி’.

৷৷15.20৷৷யதி புருஷோத்தமத்வவேதநமாத்ரேண பகவதஃ ஸர்வவிதா ப்ரீதிர்ஜாயதே? தர்ஹி பஜநாத்யநுஷ்டாநவிதிவையர்த்யம்; தத்ராஹ — ‘இத்யேததிதி’. ஸர்வாஸாஂ ப்ரதீதீநாமேததேவ ஹி மூலகாரணம். பலஸாம்யாத்வா ஸர்வஸ்ய விதிதத்வகரிதகரித்யத்வவசநமிதி பாவஃ. இத்யேததித்யாதிகமுத்தரஷ்லோகாவதாரிகா வா. ரஹஸ்யதயா கோபநீயமத்வஂ பாரமார்திகத்வஂ பலப்ரகர்ஷஂ ச வ்யஞ்ஜயந்நிகமயதி — ‘இதி குஹ்யதமமிதி’ ஷ்லோகேந. ஏததேவ கீதாஷாஸ்த்ரநிகமநமிதி வததாஂ ப்ரதிக்ஷேபாயாஹ — ‘புருஷோத்தமத்வப்ரதிபாதநமிதி’. பஞ்சதஷேத்யாய இத்யர்தஃ.’அநக!’ இதி ஸம்புத்திரதிகாரிஸூசநார்தேத்யாஹ — ‘அநகதயா யோக்யதம இதி கரித்வேதி’. ஏவஂ பாரதஸம்புத்திரபி ஜந்மதோதிகாரித்வஸூசநார்தம்.’இதமிதி’ — அஸ்ய’வக்தா ஷ்ரோதா ச துர்லபஃ’ இத்யபிப்ராயஃ.’இதஂ’ ஷாஸ்த்ராந்தரேப்ய உத்கரிஷ்டதமமிதி வா. உக்தஂ சாபியுக்தைஃ’யஸ்மிந் ப்ரஸாதஸுமுகே கவயோபி தே தே ஷாஸ்த்ராண்யஷாஸுரிஹ தந்மஹிமாஷ்ரயாணி. கரிஷ்ணேந தேந யதிஹ ஸ்வயமேவ கீதஂ ஷாஸ்த்ரஸ்ய தஸ்ய ஸதரிஷஂ கிமிஹாஸ்தி ஷாஸ்த்ரம்’ இதி.’மயா’ வக்தவ்யதத்த்வவேதிநா? த்வததிகாரவேதிநா? தவ ஸக்யா சேத்யர்தஃ. ப்ராகுக்தஷாஸ்த்ராநுவாததாப்ரமவ்யுதாஸாயாஹ’தவோக்தமிதி’.’ஸா வித்யா யா விமுக்தயே”வித்யாந்யா ஷில்பநைபுணம்’ [வி.பு.1.19.41]’தஜ்ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யதுக்தம்’ [வி.பு.6.5.87]’ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநஂ யததோந்யதா’ [13.12] இத்யாதிபிரந்யாஸாஂ புத்தீநாஂ அபுத்திப்ராயதோக்தேரிஹ புத்திஷப்தவிவக்ஷிதமாஹ — ‘மாஂ ப்ரேப்ஸுநோபாதேயேதி’. கரித்யஷப்தோப்யத்ர முமுக்ஷ்வபேக்ஷிதவிஷயஃ. தஸ்யைவ’தத்கர்ம யந்ந பந்தாய’ [வி.பு.1.19] இத்யாதிஷு க்ரஹணாத்? அந்யேஷாஂ ச’ஆயாஸாயாபரஂ கர்ம’ [வி.பு.1.19] இதி நிந்தநாதித்யபிப்ராயேணாஹ’யச்ச தேந கர்தவ்யமிதி’. ப்ரஸ்துதோர்தஸ்தஜ்ஜ்ஞாநஂ வாத்ர ப்ரஷஂஸநீயம்? கிமத்ர ஷாஸ்த்ரக்ரஹணேந ததாத்ர பூர்வஷ்லோகபௌநருக்த்யமித்யத்ராஹ’அநேந ஷ்லோகேநேதி’.

‘அயமபிப்ராயஃ’ — ஸார்தகஷாஸ்த்ரஜ்ஞாநஷக்த்யா’ஏதத்புத்த்வா’ இத்யநூத்யதே; அதோர்தஜ்ஞாந ஏவ தாத்பர்யஂ; தத்ர ஷாஸ்த்ரஷப்தக்ரஹணஂ ஷாஸ்த்ரமாத்ரஜந்யஸ்யாபி ஜ்ஞாநஸ்ய பலாவிநாபாவாபேக்ஷயேதி.’ஸ ஸர்வவித்’ [15.19] இத்யாதேஃ’புத்திமாந்ஸ்யாத்’ இத்யாதேஷ்ச அர்தைக்யமபிஸந்தாய புநருக்திபரிஹாரஷ்சாத்ர கரிதஃ. பாரத ஏதத்புத்த்வா த்வமபி கரிதகரித்ய இதி ச பாவஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ பஞ்சதஷோத்யாயஃ৷৷15৷৷

——————————————————-

முதலில் -அஸ்வத மரம்
அடுத்து -கீழ் மேல் கிளைகள்
மரக்கிளை வெட்ட பற்றின்மை-கோடரி – -முக்குணம் கடக்க வேண்டும் –
அஞ்ஞானம் நிவ்ருத்திக்கு சரணம் அடைந்து
அப்படி சரணம் அடைந்தவர் பெருமை
முக்தாத்மாவின் பெருமை
ஏழாவது -அனைத்து தேஜஸ் எல்லாம் என்னதே
எட்டாவது -சரீரம் போகும் பொழுது புலன்கள் பூத ஸூஷ்மங்களைக் கொண்டே செல்கிறான்
விஷம் கலந்த தேன்போல் இந்திரிய சுகம்
ஆத்ம அபஹாரி பெரிய கள்வன் -வேறுபட்ட ஆத்மா அறியாமல்
முயல்வார் -சரண் அடைந்தே பலம்
12-15- ஆதித்ய தேஜஸ் -பூமி தரிப்பதும் சந்திரன் அம்ருதமும் நானே -நானே அக்னி -புகுந்து நியமிக்கிறேன்
16-20-புருஷோத்த வித்யை விளக்கி மஹாத்ம்யம் சொல்லி நிகமிக்கிறான்

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-