ஸ்ரீ பகவத் கீதை வெண்பா பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல்.
பாயிர வெண்பாக்கள் 223.
இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார்.
—–
மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த் தொன்முனிதன்–மேய
தகையான் மணவாள மா முனிவன் சொன்னான்
தொகையாரும் லெண்பாச் சுரந்து.
சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்
————
1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.
2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.
3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.
4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.–இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்
5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.–இருள் நூந -அஞ்ஞான இருள் கெட
6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.
தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.
7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.
ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.
8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.
உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.
9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.
கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.
10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.
தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.
11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.
அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.
12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.
புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.
13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.
ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.
———————————-
அத்யாயம் I,–அர்ஜனவிஷாதயோகம்.
வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.
வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்..
தன்ம நில மாகும் குரு நிலத்து தாம் சேர்ந்து
வன்மை யமர் இச்சிதது என் மைந்தரு்,ம் தன்மை யுறப்
பஞ்சவரும் என்செய்தா ரென்றந்தன் பண்புரைப்பச்
சஞ்சயனுஞ் சொன்னான் சமைந்து.-1
முன்னரில்லா திருந்த தர்மத்துக்கு உற்பத்தி ஸ்தானைமாயும்
இருந்ததர்கு ௮பி விருததி ஸ்தானமாயும்
வித்துக்கு விளை நிலம் போல விளங்கியதால்–குருக்கள் வாழ்ர்த நிலத்தைத் -தன்மநிலம்’ என்றார்,
சஞ்சயன்-நன்றாக (ராக த்வேஷாதிகளை) ஜயித்தவன், வியவகார நேத்திரம் இழந்தவனாய் இருப்பதோடு புத்திர வாஞ்சையே மேலிட்டுத்
தர்ம நோக்கத்தையும் இழந்தவனாய் இருத்தல் பற்றிப் பெயரைச் சொவ்லாமல் :௮ந்தன்’ எனக் கூறினான்
பாண்டவ சேனையைக் கண்டு துரியோதனன் பெரிதும் அச்சம் உற்றானென்பதையும்.
சென்று செப்பினானென்னாமல் சென்றடைந்து செப்பினான்’ என்பதனால்
தனுர் வித்யா ஸம்ப்ரதாய பிரவர்த்தகரான தனது குருவாகிய துரோணரை ஸ்வ ரக்ஷணார்த்தம் சரணம் புகுந்தானென்பதையும்
ஸஞ்சயர் திருதராஷ்டிரனுக்குக் குறிப்பாயுணர் ததினாரென்௧,
தார் அழகே யல்லாமல் வார்த்தை யழகொன்று மில்லை யென்பார் தாரார் துரியோதனன்? என்றார்.
பாண்டவர் கடங்கள் படை வகுத்த பாங்கதனைப்
பூண்டு மிக நோக்கிப் பொறாமையினாற்–றூண்டுபரித்
தேரார் துரோணன் பாற் சென்றடைந்து செப்பிஞன்
றாரார் துரியோதனன், 2
பாரா ரியனேயிப் பாண்டவர்கள் சேனையினைத்
தாராரும் பாஞ்சாலன் றந்தமகன்–சீரார்
மதியுடைமை நீ கொடுக்க வண்மையினாரற் காக்கும்
விதியுடைமை பூண்ட வியப்பு. 3
பாண்டவர்கள் துரோணருக்குப் பிரியமான சிஷ்யர்களாகையால் ஒருவேளை ௮ப்பாண்டவர்களின்
வில் வன்மையைச் கண்டு மகிழ்ந்து
இவர் போர்புரியாமல் நின்று விடுவரோ என்ற சங்கை யுடையவனாகையால் சத்துருக்கள் செய்யும் அவமதிப்பைத்
துரோணருக்கு அறிவித்துசக் கோபமூட்டும் பொருட்டுப் பார் என்று தொடங்கி இப்பாசுரத்தைச் சொல்லலானான் என்க
தங்களைப் போலொத்த மகானுபாவர்கள் சமீபத்திலிருப்பதையும் கவனியாமல் சற்றேனும் பய
மின்றி யெதிர்த்து நிற்கும் பாண்டு புத்திரர்களுடைய பெரியதான இச் சேனையைப் பாராய் என்கிறான்
௮வர்சள் ௮வமதிப்பாலாவதென்? என்று ஓழியப் போகாது காண் –
தங்கள் சிஷ்யனை யன்றோ படைத் தலைவனாகக்
கொண்டு எதிர்க்கக் கோலினார்கள் என்பதைத்
தெரிவிக்க ‘நீ கொடுத்த வண்மையினுல் காக்கும்’ என்கிறான்
திருஷ்டத்யும்நன் என்னாது பாஞ்சாலன் தந்த மகன்’ என்றது திருபதனுக்கும் துரோணருக்கு
முள்ள
பழைய விரோதத்தைச் தெரிவித்துக் குரோதத்தை யெழுப்புவதற்காக வென்க,
உபேஷிக்கத்தக்கவனல்லன் என்பான் :மதியுடைமை’ யினான் என்றும்,
௮ம்மதிதானும் அதிசயித்தன்றோ விருப்பது என்பான்
“சீரார்மதியுடைமை” என்றும் குறிப்பதை யுணர்க,
இனி, பராக்காயிருக்காமல் கார்யத்திற் கண்ணுடைய
வனாயிரு என்று வர்புறுத்த *பார்’ இச்சேனையை என்று
சுட்டிக் காட்டி மனத்தைத் திருப்புகிறான்,
இனி மற்ரோர் பொருள் தோன்றுமாறு :-துரோணர் பாண்டவரகளிடத்தில் பிரீதியுடையவ ராகையால் *பாண்டவர் தன் ஆரியனே!’ என விளிக்கின்றானென்க, சத்ருவான உன்னைக் கொல்ல உன்னிடத்திலேயே வித்யை கற்றானே ௮வனல்லவோ புத்திமான் என்பதைக் காட்ட(சீரார் மதியுடைமை’ யென்றும் ,
உன்னுடைய வதை நிமித்தமாகவே நோற்றுப் பெற்றவனென்பதை யறியாமல் பகைவன் புத்திரனான பாஞ்சாலன் தந்த மகனுக்கு நீ
வித்தையைக் கொடுத்த மதியின்மையாலன்றோ எனக்கு இவ்வாறு நேர்ந்தது என்பதைக்காட்ட பாஞ்சாலன் தந்த மகன்–சீரார், மதியுடைமை நீ கொடுத்த வண்மையினால் காக்கும்’ என்றும்,
இவ் வெட்கக்கேட்டை .யாருடன் விளம்புகேன்! நீயே காணாய் என்பதைக் காட்டப் :பார்’ என்றும்
இக்தோர் புதமையென்பான்*வியப்பு’ என்றும்,
இது விதியால் வந்ததென்பான் :விதி யுடைமை பூண்ட வியப்பு” என்றும் ஆற்றாமைப் பட்டு உரைக்கிறான் என்க
தன்ம நிலத்திருந்தும் இவ்வாறு தனது ஆசார்யனையே இகழ்ந்தும் சினந்தும் பேசத் துணிந்தானுக்குத்
துஷ்டபுத்தி தொலைந்து தெளிவு எவ்வாறு உண்டாகும் என அந்தனுக்கு ஸஞ்சயர் ௮றிவிக்கலானார் என்க
வென்றியமர் வில்லாளர் வீமன் விசயனென
நன்றியமர் தன்னு ணலம்புனைவோர்-நின்றிகல்வோன்
வெல்லும் விராடன் மிகு தோளன் பாஞ்சாலன்
சொல்லு மளவோ தொகை, |-4-
மற்றம் பல வரசர் மா ரதராய் நிற்கின்றார்
முற்று மபிமனுடன் முந் துற்றுப் –பற்றி
யமர் முயற்றி சேர்வ ரது நிற்க கேளாய்
நமர் முயற்றி தன்னை நயந்து. 5-
பாஞ்சாலன் மகன் ஒருவன் மாத்திரமேயோ !-போரில் வீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகராகச் சொல்லத்தக்க
வில்லாளர்களான, யுயுதானன், விராடன்.பாஞ்சாலன் முதலிய பவரிருக்கின்றார்கள்,
ஆகையால் உதாஸீனமாக இருக்க வொண்ணாதென்கிறான்
வென்றி அமர் என்பதற்கு ஜயம் பொருந்திய போர் என்றும் போரில் வெற்றியை யுடைய என்றும் பொருள் கொள்ளலாம்
நின்றிகல்வோன் –யுயுதானன், சஸ்திர சாஸ்திரங்களில் வல்லவனாய்ப் போரில்
தான் பதினாயிரம் பேரை வெல்ல வல்லன்- மகா ரதனாம். -மாரதன்–மகா ரதன்,
சத்ருக்களுடைய சேனை இப்படிப்பட்ட மகாரதர்களான சூரர்களோடு கூடினதாக்க இருக்கிறது என்று
சொன்ன தினால் சமரத்தை நிறுத்திச் சமாதானமாய்ப் போய்விடு என்று
ஆசார்யர் சொல்லுவரோ என்று சங்கித்து நம்மவர் சேனையையும் பாரென்பான் –
அது நிற்க, கேளாய்–நமர் முயற்றி தன்னை நயந்து ” என்று சொன்னானெனக . முயற்றி-முயற்சி,
“முயற்றி சுமந் தெழுந்து முந்துற்ற செஞ்சே என்பதுபெரிய திருவந்தாதி –1-
மின்னு நூல் வேதியனே வெற்றியரை யானுரைக்கேன்
முன்னு நீ பாட்டன் முயல் கன்னன்–முன்னங்
கிருபன் அஸ்வத் தாமா விகன்னனுடன் கேளீர்
நிருபர் பலரு நிறைந்து,– 6–
வேறும் பல சூரர் மெய்யே யெனக்காக
வூறு படவுடல முள்ளுபிர்விட்–டேறு
நிலையுடைய பல்படையார் நின்றமரு ளென்று
மலை யுமவ ரெல்லாரும் வந்து . –7-
நங்கள் படை பாட்ட னயந்தினிது காக்கவே
யிங்கமைவு போதா திரா நிற்கு–மங்கவர்தம்
வீமன் மிகக் காக்கும் வென்றிப் படையமைந்து
சேம முறுதிபெறுஞ் சேர்ந்து — 8
வேகப் படை நடப்பி லெல்லாம் வியரந் துமது
பாகத்தை நீங்காது பாட்டனையே—யேகமா
யாங்கமர்ந்து சூழ்ந்தே யமர் முகத்து நோக்குங்கோள்
பாங்கறிந்து நீங்கள் பலர், 9
இவ்வா றியம்பு மிகலரச னுண் மகிழ்ந்து
தெவ்வார் குருமுதலாஞ் சீர்மாட்ட–னெவ்வாறுஞ்
சிங்க வரவஞ் செலுத்திஞன் வீடுமனற்
சங்கு முழங்குவித்தான் தான். 10
பின்னும் பல சங்கம் பேரி பெருமூரசு
துன்னும் பணவமுதற்று ஓல்லியங்கள்—பன்னி
யறைந் தெழுந்த வந்த வொலி மேலாகு மாழி ”
நிறைந்தெழுந்த பேரொலிபோ னின்று, 11
ஆங்கதற்பின் வெள்ளைப் புரவி யணி தேரின்மேற்
பங்கமரு மாதவனும் பாண்டவனு–மோங்கரவச
சங்கமலர்க் கைகளினாற் றம்முகம் வைத்தூதினா
ரங்கமலத் தன்ன மதுவாம், –12
பன்னிய சீர்ப் பாஞ்ச சனியப் பணவத்தை
முன்னிருடீ கேசன் முழக்கினான் –மன்னிய பூந்
தாரார் தனஞ்சயனுந் தன்றேவ தத்தமெனுஞ்
சீரார் சங்கூதினான் சேர்ந்து –. 13-
பாடார் பவுண்டரமாம் பாரப் பணிலத்தை
யோடா விறலவீழ நூதினான்-சேடார்ந்த
வர்தருமன் மைந்தனனந்த விசயமெனு
நந்தருவம் செய்தாம் நயந்து –. 14–
துங்கப் பரிநகுலன் றொல்சீர்ச் சகோடமெனுஞ்
சங்கத் தரவந் தனை விளைத்தான்-றுங்க மலர்
மிக்க மணிப் புட்பகத்தை வென்றிச சகதேவன்
ஓக்க வெடத் தூதினான் உற்று, 15
வில்லாண்மைக் காசிமனும் வென்றிச் சிகண்டியுடன்
மல்லார் பாஞ் சாலனவன் மைந்தனும் மற்றெல்லாரும்
சாத்திகியும் செளபத்திரனும் தனித் தனியே
வாய்த்த தஞ்சங் கூதினார் மற்று, 16
அக்கடிய பேரரவ மந்தன் சுதரிதயஞ்
சிச்செனச் தீரச் சிதைத்ததே–தொக்கெழுந்து
வான்றிசையு மண்ணகமு மற்றும் பலவிடமுசந்
தான்றிகழ வோங்கித் தழைத்து –. 17–
போர் முகத்தில் வந்துன் புதல்வர் தமை நோக்கிக்
கார் முகத்தை வாங்கிசக் கவித்துவசன்–பார் முகத்து
நின்றா ரிருபடைக்கு ணீநிறுத்தென் தேர் கண்ணா
வென்றாங் குரைத்தா னிது, –18-
மகா லீரனும், ஜயப் பிரதனும், பய நாசகனுமான ஹநுமான்-துவஜ ரூபமாக வந்து அனுக்கிரகித்ததால்
அர்ஜுனன் எவ் விதத்தும் பயமில்லாதவன் என்பார் :கவித்துவசன்’ என்று கூறினார் என்க –
பொல்லாத வந்தன் புதல்வனுக்குப் போர் முயல
லெவ்லாரும் வந்திங் கெதிர்நின்றே –வில்லாண்மை
யேவருடன் காட்டுதென் றேவவும் படை முனையில்
யாவரையுங் காண்பனினி யான், 19
என்று விசய னிசைப்ப வெழிற்கண்ணன்
சென்றங் கிருபடையுட் டேர்கிறுத்தி–நின்றணியும்
பாட்டன் றுரோணன் முன் பார்த்தனே பல்குருக்க
ளீட்டம்பா ரென்றா னெடுத்து.–20–
பந்தமுற வாங்கவனும் பார்த்தான் படையிரண்டிற்
றந்தையர்கள் பாட்டர் தாந் தாழ் குருச்கள்–மைந்த
ருடன் பிறர்தார் பேர ருயர்மாமர் தோழர்
மடந்தையருண் மாமடிகண் மற்று, 21
மேலலராய் நின்றெதிர்ந்த மிக்க பெருஞ் சுற்றமாங்
காவலரை நோக்கிக் கவுந்தேய–னோவதனான்
மிக்க மனம் பேரிரக்க மேவிப் பிரான் முன்றான்
றக்க வுரை செய்தான் றளர்ந்து, 22
நன்றி புனையு நமரெல்லா நாளமருட்
கன்றி வரக்கண்டு கண்ணனே–குன்றி
முகஞ்சுவறி மெய்ந் நடுங்கி முற்றும் தளர்ந்தென்
னகம் குழைய ரோமாஞ்ச மாம், -23–
கைந் நின்றுங் காண்டீவம் வீழும் கனன்றுடறோன்
மெய்ந் நின்று தாங்கமிக மாட்டேன்–மைந்நின்ற
நெஞ்சந் திகைக்கு நிமித்தங் களுந் தீதா
வஞ்சும் படியா மவை. –24–
தன்றமரைச் கொன்று சமரத்தத் தான் சேரு
நன்றி தனையொன்று நான் காணேன்–கொன்ற
விசையமுநான் கண்ணனே வேண்டே னரசு
மசைவில் வருஞ்சுகமு மாங்கு.–25–
இந்த வுயிரரசு போகங்கக ளாலெமககென்
னந்தவவை யாவர்க்கா வத்திக்தோ –நந்தமரா
மங்கவர்க ளெல்லா மமர்த்தலையி லேநின்றார்
தங்களுயிர் வித்தரந் தவிர்ந்து –, 26
தந்தை குரு பாட்டர் தம்மாமர் மாமடிகண்
மைந்த ரவர் மைந்தர் மற்றுள்ள–பந்தத்
தியன்ற விவர் தம்மை யான் கொல்ல வெண்ணேன்
முயன்று கொலினுமெனை மொய்த்து.– 27–
மூவுலகும் பேறெனினு முன்னேன் கொலை யதனிற்
பாவுதரைக் காகப் பகைப்பனோ–மேவு சினத்
தந்தன் புதல்வர்களை யாஙகமருட் கொன்று எங்கட்
கெந்த வுகப் புண்டா மினி, –28–
பாவிகளா மற்றிவரைச் கொன்றாலும் பாவமே
மேவுமெமை யாதலினிம் மேவலரைச்—சாவ நினைந்
தேதமுயல் கிற்கிலோ மென்சுற்றங் கொன்றிங்சே
மாதவனே யாம் சுகிப்போம் வந்து, –29–
கோதில் குலஞ்செற்ற குற்றங் குலச்கேளைக்
காதி வரும் பாவம் காணாத–வேதிலர்க
ளீங்கிவர் களேலு மிஃதறிர்த யாந் தவிர்த
லாங்கிசைகை யான வமைவு, –30–
குலங்குறையின் மாளுங் குலத்தறங்கண் மீது
விலங்கு நெறியமுக்கி மேலா–நலங் குலைரந்து
மாதர் நெறியழிவர் வண்ணங் கெடுமதுவே
போத நரகப் புணர்ப்பு. 31
மீது மவர்பிதுக்கள் வீழ்வர் மிகு பழியாற்
சாதி குலதன்மந் தானழியு–மாதலினா
னீங்கா நிரயத்து நிற்பவ ரென்றுரைக்கும்
பாங்கார் சுருதிப் பயன்,– 32–
ஜயோ பெரும்பாவத் தாங்கமைந்தோ மாதலினான்
மெய்யோருஞ் சுற்றத்தை வீழ்த்துதலால்-வையோவாச்
சத்திரத்தால் வீண்கையெனைத் தாந்தடிவ ரேன்மாற்றா
ரத்திரத்தா லக்தே சடன்,–33–
இவ்வாறு சொல்லி யிகல் விசய னம்புடனே
தெவ்வார் சிலைபொகட்டுச் சிந்தை தளரந்–தவ்வாறு
நின்றதேர் மீது நிலை குலைந்து தானிருந்தான்
துன்றுசோ சத்தாற் றிகைத்து, -34–
இப்படியார் பார்த்த னெழுந்த பெருஞ் சோகத்தாற்
றப்படியார் தன்மையினைச் சரர்ந்ததனை–மைப்படியா
மாயனருள் கீதை மன்னு முத லோத்துரைக்கு
மேய பொருண்முடிந்த திங்கு —
—————-
2: ஸாங்க்ய யோகம்:
மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.
காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.
‘ஆத்மாவை யறிபவன் சோகத்தைக் கடந்து நிற்கிறான்’–ஸ்ருதி
தண்கொ ளருளாவே சூழ்வுற்ற தார் விசயன்
கண்க ளழுநீர்சக் கலுழியெழ–வெண்குலைந்த
வண்ணங் கண்டாங்கே மதுசூ தனனவன்ற
னெண்ணம் கொண் டீ.துரைத்தா னேன்று, –1–
எத்தாலே யுன்னைகத் தகாவிடத்தே யிசக் கலச்கஞ்
சத்தானார் சாராது சார்ந்ததுதா–னித்தாலே
மேலுலக மில்லை மிகுபழியாம் பார்த்தனே
யேலு மதன்றே காண் இது –2-
இந்த வலித்தனத்தை யெய்தாதே யீதுன்பால்
வந்தணை வதல்ல காண் மன்னவனே–குந்தி
சிறுவனே நெஞ்சிளைப்பாஞ் சிற்றியல்பை நீங்கி
யுறவதே கொண்டெழு நீ யுற்று, –3–
௮வ்வளவி லந்த வருச்சுனனு மண்ணலைப் பார்த்
தெவ்வகையாம் பாட்ட னெழிற்குருவா–மில்வவரைப்
‘பூசிப்ப தன்றிப் பொருவதேதம் பாலென்று
வாசிப் பட வுரைத்தான் மற்று,–4–
,
தொழப்படும் மேலோரைத் தொலையா துலகில்
எழப்படுத னன்றே யிரப்பில்—விழப் படுத்தி
வாய்ந்த பொருள் காமித்த மற்றவரை யக்குருதி
தோய்ந்ததுவோ போகத்தின் றுய்ப்பு, -3-
ஏதறியோஞ் சீரிதென யாம் வெல் லவுமாகு
மீதவர்கள் வெல்லவுமாம் வேறில்லை–பூதலத்தல்
யாவரை நாம் கொன்றா லீராதே முடிகின்றோ
மாவரிவர் போர்முன் னமர்ந்து –, 6–
கார்ப்பண்யத் தாற் கலங்கிக் கண்ண தருமமனத்து
ஓர்ப்பதிலேன் கேட்கின்றே னுன்னை யான்-றாற்பரியத
தேதிறலாஞ் சொல்லது நீ யான் உன் அடியனெனைச்
சாதி யுனைத் தாழ்ந்தேனைச் சார்ந்து –, 7–
சால வெதி ரற்றித் தலத்தரசில் வீற்றிருப்பு
மேலமரர் நாயகமு மேவிடிலு–ஞாலத்தென்று
ஓல்லைப் புலனுவர்,ததுஞ் சோகத்தைப்போச்குவதோர்
எல்லைப் பொருள் காணேன் யான், –8-
மைவண்ண மாயவனை மன்னன் குடாகேச [
னிவ்வண்ணம் வார்த்தை யியம்பியே–தெய் வண்ணங்
கோலேன்யான் போரென்று கோவிந்தனை யுரைத்து
மேலேதுஞ் செய்யான் வெறுத்து –9–
முன்ன மவனை முறுவலிப்பான் போன்மாயன்
மன்ன னிருபடையிலன் மத்தியத்தே–யின்னே தன்
சிந்தை யழிந்தோனைத் தெளிவித்தல் காரணமா
விந்த மொழி சொன்னா னெடுத்து –, 10–
சோகிக்க லாதவற்றைச் சோகித்தாய் தொல்லறிவி
லாகப் படி பகர்வ தாகின்றா–யோகத்தான்
மாயு முயிர்களையு மாயா வுயிர்களையு
மாயுமவர் சோகியா ராங்கு, –11-
இறையாகிய நானும் இவ்வுயுரா நீயு
முறையா லரசரிவர் முற்று–மறையாலே
முன்னாளு மின்மையிலை மு.ற்றுமிதன் மேலாகு
மென்னாளு மின்மையிலம் யாம். –12–
இந்தவுயிர் கௌமாரம் யெளவனமூப் பென்பவற்றை
வந்தவுட னின்று மருவுதல்போ—லந்தவுயிர்
வேறுடல மேவுதலு மிக்கன்ன தாஙகதனைத்
சேறுமவர் தாங்கலங்கார் தீர்ந்து — 15
தன்மாத் திரை தீண்டும் தன்மையவை சீதமழ
லென்மாச் சுக துக்க மெய்துவிக்கும்–புன் மாயம்
வந்தியன்று போமதனான் மற்றவற்றை யெய்த லுறாத
குந்தி சுதா நீபொறுத்துசக் கொள். 14
ஒத்த சு௧துக்க னுயர்திரன் என்னாரை அட
யித் தகைய தன்மையிவை யீ டழியா–முத்தனென
வாங்கவன்றா னாகுமே யாணேறாம் பார்த்தனே
யோங்கமுதத் தன்மைக் குறுப்பு, –15–
நில்லா வுடலகத்து நிற்குமுயிர் சத்த தனா
லில்லா ததுக் குண்மை யில்லை யுண்மைக்–கில்லாத
தென்றிரண்டி னீறுங்கண் டேய்ந்தவகத் தத்துவத்தை
நின்றென்றுங் காண்பார் நிகழ்ந்து –.16–
யாதினா லிந்த வசித்தெங்கும் யாப்புற்ற
தாதிதனை மாயாதென் றாங்குணர்வாய்–மீ து தனக்
கூன மிலாதா லிதற்கொருவ னாசத்தை
யான மியற்றுவா னல், –17–
மாயா தளவின்றி மன்னுஞ் சரீரிதனக்
கோயாது மாறு முடலமிவை–மீயாரு
மந்த முடையவெனு மாதலினாற் பார்ததனே
யிந்த வமர் முயல்வா யின்று. –18–
யாவ னிவனை யிவன் கொல்வா னென்றறியும்
யாவனிவன் கொல்லுண்பா னென்றறியும்–மேவு
மறிவிருவ ருஞ்சாரா ராங்கிவனும் கொல்லா
னெறியவனுங் கொல்லுண்ணா னேர்ந்து.– 19–
என்றும் பிறவா னிவனிறவான முன்புளனாய்ச்
சென்று பிறந்திலனாஞ் செய்தி யில–னின் ரென்றுந்
தொல்லை யவனானவிவன் றோன்றுமுடல்கொன்றாலுங்
கொல்லரிய னாகும் குறித்து, –20–
உண்டாய்ப் பிறந்து வளர்ந் தோங்கிக் குறைந் திறத்தல்
கொண்டோ டுடம்பியல்வைக் கூடானைக் —கண்டா
னெவனைத் தான் கொல்லுவிக்க வேல்வான்மற் றெங்க
னெவனைத்தான் கொல்வா னியன்று, –21–
பீறும் பழம்புடைவை பேணாது விட்டொருவன்
வேறு புதுப்புடைவை மேவுதல்போ–லீறிலவன்
முத்துடம்பை விட்டு முதிராது வேறுவரும்
புத்துடம்பைச் சேரும் புகுந்து –. 22–
ஆயுதங்க ளாங்கிவனைச் சேதியா வன்னவகை
தியு மவனைசத் தெகியா து–பாயுஞ்
சலத்தாறு மற்றவனைத் தான் கரைக்க மாட்டா
துலர்த்தாது மாருதமு முற்று, –23–
௮வ்வவற்றா லேது மழியா னிவனென்று
மெவ்விடத்து்ந் தாணுவா யேய்ந் தசசைவ்-றிவ்வகையென்
றாதுந் துயரே தெரியா னறிவறிவா னென்றறிந்து
யாதுந் துயரேனீ யிங்கு –24-
இத்தன்மை யன்றியிவ னென்றும் பிறந் திறக்கு
மத்தன்மை யாக வறிதியோ.-.சித்தந்
தளரும் படியிங்கன் றான் வெறுக்க வேண்டா
வளருரந் திரடோளாய் மற்று,–25-
பிறந்தவனுக் காங்கிறத்தல் பின்னறுதி யவ்வா
றிறந் .தவனுக் கும்பிறட்பு மெய்துந் –திறந் தன்னா
லொன்றும் பரிசார மில்லா வொருபொருட்கு
நின்று மனர்தளரே னீ. –26–
பூதங்க ளான புணர்ச்சி முதல் விளங்கா
சாதனங்க ளானவிடை தான் விளங்கு—மீதங்குப்
பொன்று நிலை தான் விளங்கா போக்கா மதில் வெறுப்பெ
னின்றதனைக் கேளின்ன நீ –. 27–
வியப்புளனாக் காணு மிவனை யொருவன்
வியப்புளனாக் கூறு மொருவன்–வியப்புளனாய்
மற்றொருவன் கேட்குமிம் மன்னுயிரைசக் கேட்குந்தா
னுற்றுணர்க லானொருவ னோர்ந்து.– 28–
நின்ற வுயிர் வதத்தை நேரா துடலெதிலு
மென்றதனி லெங்கு மிடரெய்தே –லுன்றருமம்
பார்த்துந் தளர்வுறாய் பார்த்திபர்க்குத் தன்மப்போர்க்
கேற்குந் தகைமைய தொன்றில்,– 29–
தானே வருமிந்தத் தன்ம சமரத்தை
வானேறும் வாயி லென மதித்துத்–தேனேருந்
தார் மன்னர் பார்த்தனே தாங்கள் சுகமுடனே
சீர்மன்ன வேறுவர் காண் சென்று,– 30–
நீ யித் தரும சமரத்தை நின்றியலா
யாயிற் புகழுன் னறம்விட்டுப்–போயிற்றால்
பாவந் தனையடைதி பாரெல்லா நின்றிசைக்கு
மேவந் தனையே யெழுந்து,–31-
கொண்டாட்டுற் றார்க்குக் கொடிதுபழி சாமதனிற்
கண்டார்க ளச்சத்தாற் காதமரிற்…றிண்டாடி
மீண்டா யென நினைப்பர் மேலாம் வியப்புறு நீ
வேண்டாத நோய்மை யுறேன் மிக்கு.– 32–
ஒன்னாதா ருனனாண்மை யொன்றன் றெனப்பழீத்துச்
சொன்னாடாப் பல் பழியைச் சொல்லு வார்.-எந் நாளு
மாஙகதனின் மிக்க வருந் துன்பந் தானுண்டோ
வோஙகினிதாரந் தோளா யுரை,–33–
இன்றிகலிர் பொன்றினீ யிந்திரலோ கம் பெறுதி
வென்றி யுறி லாளுதியிம் மேதினியை–யென்றிதனை
யோரந் ததனாற் கெளந்தேயா வுற்றெழு நீ வெஞ்சமத்துத்
தீர்ந்த மனத் தோடுந் தெளிந்து –.34–
இன்பந் துன் பம்பே றிழவு சயாசயங்க
ளுன்பந்தத் தொக்க வுணர்வெய்தி–வன்பந்தத்
தெவ்வகையார் வெஞ்சமத்தைச் சேர்வுறு நீ பாவத்தை
யிவ் வகையான் மேலணையா யிஙகு, –35–
சாங்கியத்தின் தன்மையின் மேற் புந்தித் தக வுரைத்தே
னீங்கு கன்ம யோகத் தியல்பிலி தன்–பாங்கியம்பக்
கேளாயிப் புத்தியினைக் கிட்டவினைக் கட்டினை நீ
மூளா மனிற்றி முயன்று — 36–
செய்தவறங் குன்றாது சேரா தவஞ்சிறிது
மெய்தருமங் காக்கு மிகு பயத்திற் -பொய்தவிரும்
புத்தி தீர் வொன்றாகும் புன்மைப் பல நினைவா
மத்தி ரந்தீர் வில்லா தவர்க்கு, –37–
புன்பயனாற் பூத்தவுரை போதப் புகல்வரறி
வென்பதனை யில்லா ரெழின்மறையி–னன்பகருஞ்
சொற்பயனே பற்றிய திற்றொல் பொருண் மற் றில்லென்
பார், கற்பதனைக் காணாதார் கண்–38–
காமத்தை யுன்னிக் கணிசித்து மேலுலகைச்
சேமத்தை யிட்டுச் செளித்துழலு–மீமத்
தியற்றி தரும் போகத்தி லின்பத்தை நோக்கி
முயற்றி யுட னே யெழுவர் மூண்டு, –39–
போகமிகு செல்வத்துப் பூண்ட தன் னெஞ்சழிந்தார்க்
கேக வகை யுற்ற வெழிற்புந்தி.-யோக
மமைவுறா துள்ளத்தி லாதலால் வேதச்
௪மைவுதான் கேளாய் தரித்து. –40–
முக் குணத்தோர் பண்புரைச்கு மூண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா-.-யிக் குணத்தாற்
சாரு துய ரற்றென்றுஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருமியோ கக்சேம மற்று, –41–
எங்கு நிறை நீ ரெழிற்றடத்து யாவர்க்கு
மிங்கு மருவுபய னெவ்வளவா…_மங்கனைத்து
வேதத்து மந்தணற்கு வேண்டுபய னவ்வளவாம் ‘
போதத்துக் கீடாப் புணர்ந்து–42–
கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா–தொருமித்த
மற்றதனுசக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு,–43–
பேறிழவி லொத் தமைத்துப் பேணு நசை துறந்து
தேறி வரும் யோகத்துச் சேர்ந்து நீ -யாறியமைந்
தித் தகைவி லாங்கரும மேந்திய நீ யோகந்தான்
ஓத்த லெனவுரைப்ப ரோர்ந்து,–44–
தக்கமரும் புத்தியோ கத்திரற் றனஞ்சயனே
யக்கருமந் தூர வவரங்கா–ணொக்கவரும்
புத்திக்கே நிற்கும் புகல்விருப்புப் புல்லியா்கா
ணத்தித்தே செய்யு மவர்–45–
,
இந் நிலையிமற் புத்தியுட னேய்ந்தா ரிருமைவினை
தந் நிலையை யிங்கே தவிர்வர்கா -ணன்னிலையான்
மெய்கருதி யோகத்து மேவுதிர நீ யோகம் காண்
செய்கருமசத் தாகுஞ் சிறப்பு–46–
,
தீர்ந் த மனத்துத் தெளிவுற்றார் செய்கருமத்
தார்ந்த பயனை யறத்துறந்து —சேர்ந்த
பிறப்பணையும் கட்டவிழ்த்து பெய் துயர் நோய் தீர்ந்த
சிறப்பு அணைவர் நன்மையினைச் சேர்ந்து –47–
எவ்வளவி னின்மோகத் திற்கலக்க மாமிதனை
யிவ்வகையே புந்தி யெழக் கடக்கு–மவ்வளவிழற்
கேத மருவுதி நீ கேட்பதிலுங் கேட்ட திலும்
ஏத மிகும் பயனா மென்று, –48–
ஒதுமென் பாற்கேள்வி யுற்றமைந்த புந்தி யுயிர்
மீது சமாதிக் கண் மிசச் சலியாப்–போதினீ
வந்தி யோகத் துணர்வை மன்னுறுதி யாங்கதுகாண்
புந்தி யோகத்தின் புணர்ப்பு, –49–
என்று திருமா லியம்பு நிலை கேட்ட
வென்றி விசயன் மிக விரும்பி–நின்ற
வறிவுடையான் மாற்ற மவனிலைமை பேற்றின்
பிறிவுறையா யென்றுரைத்தான் பின்,–50–
ஆங்கவனுக் கண்ண லது வுரைத்தா னாங்குயிரின்
பாங்கதனாற் ருனே படிந் தமைந்து —தாங்கரிய
வெண்ணரிய காமங்க ளெல்லாந் துறக்குமவன்
றிண்ணறிவ னாகுமெனச் செப்பு, –51–
துன்பத்தி லென்றுந் துளங்கா மனத்தனா
யின்பத் திடையாசை யில்லவனாய்ப்—புன் பற்றி
லன்பு பயம்வெகுளி யற்றவனே யாங்குணர்வின்
வன்பு பெறு முனியா மற்று, –52–
எங்கு மருவு நசை யேது மறத்துறந்து
தங்கு நலந்தீங்கு தானணைந்தே–யங்கங்கு
முந்து முகப்பு முதிர் வெறுப்பு மற்றார்க்கு
வந்து நிலையா மதி, –55–
௮ங்ககக ளாமை யகத்தடக்கு மாறுபோ
லிங்கைம் பொறிக ளியல்பனைத்தும்–பொங்கைம்
புலனின் றகத்தடக்கும் போதத் தனக்கு
வலனின்ற வேற்குமே வந்து –54-
துய்யாது தான்றுறந்தான் றுய்த்த பொருள் விட்டாலு
மெய்யாருஞ் சங்கம் விடாதிருக்கும்–பெய்யவே
சென்று பரமாகுஞ் சீருயிரைச் கண்டக்கா
னின்றதவு நீங்கு நெகிழ்ந்து — 55–
முயன்றிடினுந் தன்புலன்கண் மொய்ம்பான் மனத்தை
யியன்று நிலை தொலைக்கு மென் பா–னயந்தே
யவையென்றுங் காக்சி லவன் கண் வசமா
நவையின்று நிற்குமதி நன்கு.– 56–
புன்பொருளை யுள்ளும் புமானுக் கதிற்சங்கம்
பின்பதனாற் காமமதிற் பின்வெகுளி–யன்பதனான்
மோகமதிற் பொன்று மிருதியதிற் புத்தியழி
வாகுமதிற் றான சிக்கு மாங்கு. –57–
உகப்பு வெறுப் பற்றுத் தன் னுள்ளாற் பொருள்க
ளகத்து .வசமாம் புலனா லார்ந்தோன்–மிகத்தெளிவு
சேரு மதிற்றுயருசந் தீருந் தெளிநெஞ்சி
லாரு நிலைப் புந்தி யாசு.– 58–
யோக மென் பக்க லிலானுக்குப் புந்தியில்லை
யேக நினை வவனுக் கில்லையுமாம்–போகத்திற்
சாந்தியவ னுக்கில்லை சாந்தியில னுக்கெத்தா
லேந்திவரு மின்பந்தா னீங்கு,– 59–
ஏயு மனந் தோய்புலனி லேதுடனா மாதுணர்வை
வாயுமரத் தோணியென மாய்க்குமால்–தோயும்
பொருளிடத்து நின்று புலன்மீட்க வாங்கே
தெருளுறைப்புச் சேருஞ் சிறந்து — 60–
யாது வுலகர்க் கிருளிரவா மாங்குணர்ந்து
போத மருவும் புலன் வென்றோ–னேதி
லுணர்வுறுவ ரீங்கிவர்க ளுற்றுணர்ந்த யோகிக்
கிணரில்லா தாகு மிருண்டு, –61–
நிறைந்து நிலை சலியா நீள் கடல்வாய் நீர்யா
றுறைந்த வகையதுபோ லள்ளே–மறைந்தெவன்பால்
காமங்க ளெல்லாங் கரக்குமவன் சாந்தி பெறு
மேமம் பெறான் காமி யிங்கு, –62–
காம மவை யனைத்துங் கைவிட் டவணசையற்
றேமமுற யானெனதென் றிவ் விரண்டி–னாம
மறத்துறந்து நின்றா னவன் கண்டாய் சாந்தி
பெறப் பயின்று நின்றான் பெரிது –. 63–
இது காண் பிரமமெனு மிவ்வுயிரின் றன்மை
யிது காண் பெறின் மயக்க மெய்தா..னிதுதன்னி
னந்த காலத் தமர்ந்தப் பிரமானந் தமெனுஞ்
சந்தமாந் தன்மை பெறும், –64–
ஆய னருள் கீதை யாய்ந்த விரண்டா மோததின்
மேய வுயிர்நிலைமை மெய்ம்முடிவு– தூய் மனத்த
ரன்றதுணி வற்ற லமைந்தா ரமர் பொருள்க
ளென்ற வகை தான் முடிந்த திங்கு–
———-
3: கர்ம யோகம்
மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.
முன் உரைத்த புந்தியினும் –
முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.
நாதா கருமத்தி னன்றாகிற் புத்தியினை
யேதாக விக்கரும்த தேவுதி-சூதார்ந்த [னன்றியெனத்
வுன்னுரை யென் லுண்மயக்கு மொன்றுரையென்
தன்னுரை செய்தான் விசயன் தான்.– 1–
௮ண்ணலவன் கேட்க வதனியல்க ளங்குரைத்தா
னெண்ணமருஞ் சாங்கியருக் கின்னறிவு-வண்ண நிகழ்
சீருடைய யோகியர்க்குச் செய்கரும மென்றிரண்டும்
பேருலகிற் சொன்னேன் பிரித்து, –2–
இட்டத்தாற் கன்மத் திழியார் வினை யொழியார்
விட்டத்தாற் பேறதனை மேலடையார்-தொட்டொன்
செய்யாரிறைப் பொழுது நில்லார் செறிந் தியல்வர் | றைச
மெய்யார் குணத்தெவரு மிக்கு,– 3–
கருமக் கரணங்கள் கட்டித்தன் னெஞ்சில்
வருமப் பொருணினைந்து மன்னிப்–பெருமைவினைக்
கைம்மையினாற் பாவிக்குங் கள்ளக் கருத்துடையான்
பொய்ம்மையினா னென்றே புகல்,– 4–
நெஞ்சாற் புலனடச்கி நேர் கரும யோகத்தை
யெஞ்சா துழல் கரும விந்தியத்தாற் –றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந் தன்மையுடன் றொத்தற்றான்
வான்றொடர்ந்த வண் புகழான் மற்று, –5–
நின்று நீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத்… துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி, –6–
ஐவகைய வேள்வியினுக் காகாக் கருமங்கண்
மெய் வகையே கட்டு மிக வுலகை–யிவ் வகையா
யாங்கதனுக் காக வமைந்துன் னசையை விடுத்
தீங்கிதனை நின்றே யியற்று, –7–
வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்து முனங்
கேள்வி யவர்க்குரைத்தான் கேண்மையுட–நூழ்வி
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்கினையா
கெத்தாலு மின்பளிக்கு மீது. –8–
இவ் வேள்வி யானீ ரிறைஞ்சிடுமின் வானோரை
யவ் வேள்வி யாலவரு மாக் கத்தா _லெம்வாறு
மும்மை யளிப்ப ரொருவர்சக் கொருவர்நீ
ரிம்மை மறுமை யுறு மிங்கு –9–
௮ன்ன பெரு வேள்வியா லாங்கிறைஞ்சப் பட்டமரர்
மன்ன பெரியவள மற்றளிப்ப–ரின்னே
யவர் தந்த போக மவாக்களியா துண்பான்
கவர்கின்றான் கள்வனே காண், –10–
வேள்வியினின் மிக்கதனை யுண்பார் விடப்படுவ
ரூழ் வினைக ளின் தொடர்சசி யுண்ணின்றுங் கேள்வியிலாத்
தன்னுடம்புக் காகச் சமைத்துண்பார் பாவத்தை
முன்னுடனே யுண்பார் முயன்று, –11–
.
அன்னத்தாற் பூதங்க ளுண்டாகு மன்னந் தான்
மின்னத் தாழ் மாரியான் மிக்கியலு–மன்னத்தான் ,
மாரியது வேள்வியால் வந்தியலு மவ்வேள்வி
காரியம தாலாகுங் காண், –12–
இக் கருமங் காய மெனச்சேர் பிரமத்தா
மக்கருமஞ் சீவனா லாங்கதுவாஞ்–சிக் கெனவே
யெங்கு நிகழ் வுடலா மிப் பிரமம் வேள்வியிலே
தங்கு நிலை யமருந் தான், –13–
இப்படியே யீங்கமைந்த சக்கிரத்தை யேவன்றான்
மெய்ப்படியே தான் சென்று மேவலுறா –னெப்படியும்
பாவி யுயி ராகிப் பழுதே படர் பொறிப்பட்
டாவி சுமப்பா னவன் –14–
தன் விரும்பித் தன்னுகந்து ,தன்னமைந்த ஞானிக்குப்
பின் விரும்பிச் செய் கருமம பெற்றில்லை-முன் விரும்பிச்
செய்தத்தா லொன்றில்லை செய்யாத்த தாலில்லை
வையத்தா தும்பயனின் மற்று, –15–
ஆதலினாற் பற்றற் றமரியற்பாய் நின்கரும
நீ தகவு தன்னுடனே நின்றியல்வாய்–மீததனைப்
பற்றற் றியன்றார் பரமா முயிரினையே
பெற்றத்தை நின்றுய்யும் பின், –16–
முன்னஞ் சனகாதி யோகியரு மூண்டியன்ற
வன்ன கருமத்தா லானபயன்–மன்னினர்கா
ணிந்த வுலக மிசைவகையும் பார்த்தியலா
யந்த வுயர் கரும மாய்ந்து.–17–
மேல் ஒருவன் செய்த மிகு கருமம் தான் எது என்று
ஏலுமதின் மற்றிங் கியல்சனமுஞ்–சால வவன்
யாதைத் தன் னங்க மென வியலு மிவ்வுலக
மாதைப்பின் செல்லு மமர்ந்து.– 18–
மூவுலகுரந் தன்னுள்ளு முன்பெய்த தாய்ப்பின்பு
மேவுமியல் பாலெய்.த வேண்டுவதொண்ட றாவதெனக்
கில்லையா யே.பிருக்க வெல்லாக் கருமத்து
மொல்லையா லின்றி யல்வ னோர்ந்து — 19–
யானியலா திங்கொழியி லென் வழியைப் பின்செல்வர்
மானிடர் மற்றிவ்வுலக மாயுமாற் .றானிலைசேர்
நன் மரபு தான் கலக்கி நானே யிவர் தம்மைப்
புன்மையினி லுய்த்தேனாய்ப் போம். –20–
நசை.புடையார் செய்கைபோன் ஞானி நசையின்றி
யிசை யுலகுக் காக வியல்யான்–பசை கருமத்
தானவறி வில்லார்க் கதினெஞ்சைப் பேதியேற்
றானிசைவு செய்கவதிற் சார்ஈ்து,– 21–
மெய்க்கருமந் தன்குணத்தான் மேவிவரும் வேறறியா
னிக் கருமம் யான் செய்தே னென்றிருக்கு–மக்கருமத்
தேயகுணம் வேறறிவா னிக்குணங்க டன்னிற்றா
னாயவென வுன்னு நசை யற்று. –22–
முக் குணத்தான் மூடரா மாந்தர் முயல் கரும
மக்குணத்து நாளு மமர்வுறுவர்–மிக்க
வறிவுடையா ரல்லாரை யாங்கசைவு செயயார்
செறிவுடைய ஞானத்தன் சேர்ந்து –23–
என்னிடையே யிக்கரும மெல்லா மினிதிருத்தி
நின்னிடையின் மிக்கமர்ந்த நெஞ்சினான்.-மன்னியபே
ராசை யுட னீமமதை யற்று அங்கு அமர் முயல்வா
யாசையுட னுள் வெதுப்பற் ரார்ந்து –24-
எவர் விருப்போ டிழவின்றி யென்மதத்தை
மேவி முயல்வார் விடப்படுவார்–பாவத்தா
லாங்கவர்க ளல்லா ரறிவழிந்து மூடராய்த்
தீங்கமர்வ ரென்றே தெரி,–25–
தன்னியல்வுக் கீடாகத் தானியலும பேரறிவு
மன்னியவ னானமையு மற்றெயையு… மந் நிலையே
தன்செய்தி யாகுதலாற் றான்விலக்க நூலுரைப்ப
தென்செய்வதாக விசைந்து –26–
உற்றபொரு டோறு முகப்பு பெறுப்பவைதாம்
பெற்ற நிலைபினவாம் பேசுங்கான் –மற்றவற்றை
யாங்கணைவா னல்ல னவையிவனுசக் கெவ்வாறுந்
தீங்கமைக்குஞ் சேரச செறிந்து –27–
குறைந்திடிலுந் தன் கருமம் குற்றமா மேலே
நிறைந்தியலு மற்றை யதி னேரே -மறைந் திருந்து
தன கருமத் தைச் செயினுந் தானனறு வேறான
வன கருமத் தசசம வரும. –28–
பின்பு விசயன் பெருமானே பாவத்தை
யன்பிலனே லும் புருட னாஙகெததால–வன் பதனி
லேவுறறான் போல வியலு மெனவ்வனுக
காவறறான் சொன்னா னமைநது, –29–
காம மிதுதான கடுங் கோபமுமாதித்
தீமை நடுக் குணததுச் சோந்திககு– மாமதெலலாம
வாரி யுடன புசிக்கு மாபாவ மாமிதனை
வைரி யெனவே மதி,– 30–
தூ மத்தாலங்கி சுணை யழுக்காற் கண்ணாடி
தாமக கருவுற பாக கட்டதனா -லே மத்தச்
சூழ்வுற்ற௱ தெனனவே சூழபபடடு இங்கு அதனாற்
றாழ்வுற்ற திசசெந்துத் தான, –31–
மனனறிவி னுக் கென்றும் வைரியாயக் காமமெனு
மனனவுரு மேலியதா யாங்கு அனைத்தும் துன்ன விடும்
போது நிறை யாதமையாப பொலலாங்கு இதனாலே
மீ.துணர்வு சூழ்ச்சி யுறும் மிக்கு –32–.
புலன்கண் மனமதுவாம் புத்தி நிலை யாகு
மலங்கொளிதற் கென்பர் மதித்தோர்–சலங்கிளரு
மின்னவிது தானிவற்றா லீங்கிவனைச் தான் மயக்கு
மன்னறிவு தன்னை மறைத்து — 33–
ஆதலா னீபரதா வாதியிலே வைம்புலனைக்
காதி யுனதறிவு கட்டழித் து—மீதியலிப்
பாவத்தை நீக்கும படிபா ரதுதன்னா
லாவத் தவைதரா லாங்கு, –34–
புலன் கண் மே லாமென்பர் போதஞ் செறுக்க
வலங்கொண் மனமதன் மேன் மன்னும்–புலங்கிளரும்
புந்தியதின் மேலாகும் புந்தி தனிற் காமந் தான்
குந்தி சிறு வாபரமாக் கொள், –35–
புந்திக்கு மேற்காமம் புந்தித்துப் புந்தியாற்
சந்தித் தறத்து மனஞ் சார்த்தி நீ –வரந்தியலுஞ்
சேமமிக வீழ்த்துந் தீங்கி யற்றும் வன் பகையாக
காமமது நீத்தல் கடன். 20
மெய்யமரும் புததி விடாதென்று ரின்றிவணுஞ்
செய்ய கருமச் சிறப்பதனை. வையத்து
வாய்ந்த புகழ்க் கீதை வளர் மூன்றா மோத்துரைத்த
வேய்ந்த பொருண் முடிந்த திங்கு–
————-
4: ஜ்ஞான யோகம்:
நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.
நாராயணன் – (கண்ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.
இந்த யோகத்தை யிரவிக்கு யானுரைத்தேன்
வந்த வவன் மனுவுக்கு ஆங்கு உரைத்தான் –மைந்தனா
மிக்குவா குக்கவனு மேன்றுரைத்தான் இப்படியா,ற்
றக்கு வாய்ந் துற்றது தான். –1-
இன்னே பரம்பரையா லேய்ந்ததனை யீங்கறிவர்
முன்னே யரைச முனிவர்கள்–பின்னேபோய்சக்
காலத்தி னான் மறைந்து கை கழிந்து விட்டதே
ஞாலத்தில் யோத நலம்–2–,
போதமிகு மிந்தப் புராதனமாம் யோகத்தை
யேத மற வுனக்கு இங்கு யானுரைத்தேன்–காதலமர்
பத்தனுமாய்த் தோழனுமாய்ப் பண்பான் மறைப்பொருளா
முத்தமமீ தென்றோர்ந் துகந்து –3–
ஆங்கு விசயன்றா ன் ஆதித்தன் முன் பிறந்தா
னீங்கு நீ பின் பிறந்தா யெங்கன் நான்–பாங்கினின்
முன்னுரை செய் வண்ணம் மித முற்றுணர்வ னென்றுரைக்கத்
தன்னுரை செய்தான் பரமன் தான் –4–
என் பிறவி யான தியம்பிரற் பலவாகு
முன் பிறவி யானயையு மொக்குமவை–தன் படியை
யானறிவன் எல்லா மிகல் விசயா விங்கு
தானறியாத் தகைமை தான்,–5–
மேவ பிறப் பில்லனுமாய் மெய்த தன்மை குன்றானாய்
மூவுலகுச் கெண்ணு முறையிறையாந் –தேவுடனே
யென்னுடையா மூர்த்தியினையெய்தியே யென்னிணைவ
தன்னியல்வாலே பிறப்பன் சார்ந்து –6-
அறங் தளரு மக்கால மெக்கால மாங்கே
மறங் கிளர்ந்து பாவம் வளரும்–பிறங்கரசர்
வெந்தைத் தருவிக்கும் வில் விசயா வக்காலத்து
என்னைப் பிறப்பிப்பன் யான், –7-
நல்லார்க டம்மை நலம் புரிந்து காத்தற்கும்
பொல்லாரைப் பொன்று நெறி போக்கற்கும் –சொல்லாரு
முந்தை யற நாட்ட முய்த்தற்கு நான் பிறப்பன்
இந்த யுகம் தோறும் உகந்து –8–
என் பிறவி யென் கரும மிவ்வண்ணந் திவ்ய மென்
றன்பினொடு முண்மை யறிவுற்றான்–முன் பிறவி
யேய்ந்த உடல் விட்டே யெதிர்ப்பிறவி யேவாதே
யாய்ந் தெனையே யெய்து மவன்,–9-
நேயம் பயம் வெகுளி 8ீக்கி யென் றன்மையரே
யாய திறத்தா லடைந் தென்னைத்–தூய
வறிவாரந் தவத்தா லனேகரென் றன்மை
செறிவார்கள் பூதராய்ச் சேர்ந்து,–10–
என்னை யெவ ரெவ்வா றடைந் தியல்வர் யானவரை
யன்னவகை யான் மிகவு மன்புற்றே –பின்னடைந்து
காட்டுவன் மற்றாதலினா லென்னெறியைக் காதலினா
னாட்டெவரும் பின் செல்வர் நன்கு. –11-
கரும பயன் காமித்தார் காமத்தா லிங்கே
யொருமையுடன் றேவருட னொன்றி–யருமையினாற்
றாங்கி நின்றஞ்சா நிற்பர் தாழா துலகு தனி
லாங்கருமத் தானபயனார்ந்து.–12–
வண்ணங்க ணாலு மருவுங் குணங்களுடன்
பண்ணுங் கருமம் பலவகையா–லெண்ணி
வகுத்தேயான் செய்திடினு மற்றதுசெய் யேனா
மிகுத்தே யெனை நீ வேறு,– 13–
ஏது மிழிசா வெனைக் கரும மென்றெனக்கிங்
கோது பயனாசை யொன்றிலையென்று –நீ துணர்ந்தே
யென்னை மிக வறிவான் யாவ னவன் கண்டாய்
முன்னை வினை யகல்வான் முற்று, –14–
இன்னே யறிர்து கருமத்தை யென்றி யன்றார்
முன்னே வீ டெய்த முயல்வாரு–மன்னே
தொல்லையார் தாமுயன்ற தொல்கருமந் தன்னையே
யொல்லையாய் நின்றியல்வா யுற்று, –15–
ஏது கருமமாங் கேதுணர்வா மென்றறியார்
மூதிணர்வினின்றாரு மோகிப்பர் –மீதுனக்கு இங்கு
அக் கருமந் தன்னை யமர்ந் துரைக்கே னாங்கதனை
மிக்குணர்ந்தே தீங்க்கல்வை விட்டு, –16–
இக்கருமத் துக்கு மிதில்விவித மானதுக்கு
மக்கரும மல்லா வறிவுக்கு—மிச்க
வறிவுடைமை வேண்டு மது வுரைக்கி லாங்குப்
பிறிதுணர்வு தானரிது பின்,–17–
கன்மதகின் ஞானத்தைக் காணு மவனெவன்றான்
கன்மததின் ஞானத்தைக் கண்டியல்வான்–நன்மைக்கே
தக்க பெரும் புத்தி சமைந்தா னவனவனே
யெக்கருமஞ் செய்தானும் இங்கு .– 18–
எலலா முயற்சியுமொன் றிச்சியா தோர்ந்தியல
வலலானைப் பண்டிதனா யாயந் துரைப்பர்—நலலா
ரறிவா லவன்வினைக ளெல்லா மழிந்தே
பொறி வாயிற் பஞ்செனவே போம், –19–
கருமப் பயனசையைச் கைவிட்டே யெனறு
மொருமித துகந்து புறத் தொட்டாப்-பெருமையோன்
மெய்யார் கருமத்து மேலியன்றா னேலுமவன்
செயயான தொன்றுஞ் செறிந்து — 20–
ஆசை துறந் துள்ள மமைந்த வுணர்வினனாய்ப்
பாசமுட னெப்பொருளின் பற்றற்றுப்–பேசியதன்
சாரீர கன்மமே சார்ந்தியல்வான போந்தணையான்
சேரீரு பாவமுஞ் சென்று, –21–
பேறிழவி லொத்திருந்து பெற்றததா லுள்ளமைந்து
கூறு மிரு துயரிற் கூடாதே- வேறொருவன்
தன்பாற் பொரறாமையிலான் றன்கருமஞ செய்திடினு
மன்பாற் பிணிப்புண்ணா னங்கு,–22–
போன நசையினனாய்ப் புன் புலனின் முத்தனாய்
ஞான நிலைகொண்ட நன்னெஞ்சா–யானதொழில்
வேள்வியினுக் காக விரும்பி முயல்வானுக்
கூழ்வினையெல் லாம்போ முடைந்து, –23–
செய்யுந் தொழில் கண்மணஞ் சேரும் விதியதனிற்
பெய்யு மவியாற் பெறுந் தொழின்–மெய்யணைந்து
தான் பிரம மென்றுன்னித் தன் பிரம கன்மத்தான்
வான் பிரமத் தன்மையுறும் வாய்ந்து, –24–
வேறுசில யோகியர்கண் மேலான தேவரிடைசக்
கூறுபடு மெச்சங் குறித்தியல்வ–ரீறில்
பிரமமா மங்கிப் பிறரெச்ச முய்ப்பா
ரூரமத்தா லெச்சவுறப் புற்று, –25–
அறிபொறியை யான்றமைத லாமனலிற் பெய்வர்
பிறிதுசி ல ரோமமெனப் பேணிப்–பொறியனல்வாய்
வந்தியலு மைம்பயனை வாரியுட னோமிப்பர்
செந் தொழிலி னின்றார் சிலர்.– 26–
எல்லாப் புலனி னியல்வும் பிராணனாற்
செல்லா வி.பலுஞ் செயலனைத்துஞ்–சொல்லாரு
முள்ளமைந்த, யோகவன லுய்ப்பர் சிலருணர்விற்
சொன்னவது மேல் விளக்கிற் கொண்டு,–27–
பொருளெச்சம் பொன்றாத் தவவெச்சம் யோகத்
தெருளெச்சம் சேர்வர் சிலர்கண்–மருளற்ற
வாய்ந்த மறை யுணர்வா மன்னெச்ச மேவுவரே
யேய்ந்த வதிவிரக ரிங்கு. –28–
மற்றும்பி ராணாயா மத்தியல்வார் வாயுகதி
யுற்றுத் தகைந் தங்குடனாக்கச்–செற்றுப்
பிராண னபானனிடைப் பெய்த லபானன்
பிராணனிலுய்த் தோமிப்பர் பேர்த்து,– 29–
உண்ணா வவர்நியத ; மொல்லைப் பிராணனவை
திண்ணார வங்க வற்றிற் சேர்விப்ப–ரெண்ணார்ந்த
வெல்லாரு மெச்ச மவரறிவ ரெச்சத்தாற்
பொல்லா வினையொழியப் போந்து,– 30–
ஆங்கெச்ச மிசச மமுதூண் விரும்புமவ
ரோங்கு பிர மத்தை யுற்றணைவர்–பாஙகாக
விவ் வுலக மில்லெச்ச மில்லார்க்கு மேலாகு
மவ் வுலக மத்தாலுண் டாம, –31–
இன்னே பலவகையா லெச்சம் பிரமத்து
முன்னே பரந்த முகஞ்செய்தே–யன்னவை
தான்கருமத் தானவெனச் சார்ந்தறி நீ யாங்குனக்கு
வான்கருது முத்தி வரு மற்று, –32–
பொருண் மயமா மெச்சத்திற் போதமிகு”மெல்லாந்
தெருண் மயமா மெச்சந் தெளிதாங்–கருமமெல்லாம்
ஞானத்து வந்து முடிந்தே நலம் பயக்கு
மானத்தைப் பார்த்தான் மதித்து –. 33–
௮ந்த வறிவை யறிநீ யடிவணங்கிச்
சிந்தை யுடன் கேட்டுச் சேவித்தே–முந்தறிவை
யொத்துபதே சிப்ப ருனக் குணர்ந் தோராய்த்
தத்துவத்தைக் கண்டிருப்பார் தாம், –34–
யாததனை யிங்கறிந்தா லிவ் வண்ண மோகியா
யாததனா லுன்னிடத்து மென்னிடத்து –மேதமறப்
பூதங்க ளெல்லாம் பொருந்து நெறி தாண்டி நீ
யாதங் கறிவென் பதம், –35–
பாவிகளெல் லாரினு நீ பாவத்தை மிக்கயன்று
மேவதி யாகிலுமிம் மெய்யுணர்வாற் -றாவிவருந்
தெப்பத்தை மேற் கொண்டு தீவினையாம் வெங்கடலைத்
தப்பக் கடப்புதி நீ தான்.– 36–
அங்கி விற கெல்லா மெரிப்பதுபோ லவ்வறிவு
பொங்கிவரு கன்மம் பொடியாக்கு–மிங்கில்லை
மெய்யறிவிற் றூயது தான் மிக்க வதும் யோகி தான்
பையவெய்து நெஞ்சிற் பயின்று–37–,
ஆதரவு மிக்கா னறிவு பெற மாங்கதனின்
மீதமருந் தன்மையான் வென்று புலன்–போதமது
பெற்றொல்லை யாங்கே பெரிதான சாந்தியினை
யுற்றெய்தும் யோகி யுணர்ந்து, –38–
அறியானா யாதரவு மற்றே மயச்கஞ்
செறிவான் விநாசத்தைச் சேரும்–பொறி வாயில்
வந்தலா திம்மை மறுமையுட னின் பந்தான்
சந்தேகப் பட்டான் றனக்கு, –39–
ஆன யோ கத்தா லமர்கருமத் தன்பற்று
ஞான யோகத் தான் மயக்க நன்கறுத்து –வானையோர்
நெஞ்சந் தனைக் கரும நேர் பிணியா வாகியவத்
தஞ்சந் தனஞ்செயனே சார், –40–
ஆதலினா னீ.யுள் யறியாமை யால் வந்த
போத மயக் கத்தைப் புகருடைய–மீதறிவாம்
வாளா லறுத்து வளர் கரும யோகத்து
மூளா வெழு நீ முயன்று,– 41–
எண்று கரும மிகை யடனே யோகத்தை
நன்று புணர்லித்து நற் கீதை –யொன்றிய விந்
நாலாமோத் தாலுரைத்து நாதனருள் செய்த பொருள்
மேலாய் முடிந்ததிது மிக்கு,
————-
5 – கர்ம ஸந்யாஸ யோகம்:
அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.
அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.
கரும விடுமறிவுங் கண்ணவதற் பின்னு
மொருமையுடன் யோகு முரைத்தி–யிருமையிலு
மொன்றுரைப்பா யென்றுரைத்தான் பார்த்தனுயரிறையை
நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து –1-
இக் கரும யோகமது விட்டுணர்வா மிவ்விரண்டுந்
தக்க நலஞ் சாதிக்குஞ் சாதனமா–மக்கருமம்
விட்டிய றன்னின் மிக நன்றதன் செயவிற்
பட்டியலு மாறு பயின்று, –2–
வெறுப்பு நசை யற்றவவன் விட்டவனா மென்றும்
பொறுப்புடனே தன்னிருமை பூண்ட–செறுப்பகற்றி
நின்றான் விசயனே நீள் வினையின் கட்டுவிட்டுச
சென்றான் சுகத்துச் சிறந்து –3–
சாங்கியமாம் யோக மதுந் தானறியார் வேறென்
ராங்கதனை நன்கறிவா ரஃதரையா–ராங்கவற்றி
லொன்றுதனி னின்று முடனியல்வா னவ் விரண்டி
னின்ற பய னெல்லா நிகழ்ந்து –4–
அறிவாராஞ் சாங்கியருக் காகுபயன் கன்மச்
செறிவாராம் யோகியர்க்குச சேரு–நெறியாலே
யொன்றெனவே சாங்கியமும் யோகமது முன்னினவ
னன்றெனவே கண்டா னலம், –5–
ஏலுந் துறவறிவிங் கெய்தவறி தாகுமுனே
கோலுமயோகத் தக்கருமங் கூடாமல்–மேலுந் தா
னுற்றா னியோக முயர் முனிவன் றாழாமற்
பெற்றான பிரம வுமிர்ப் பேறு –6–
ஒன்றிய யோகத்தா லுளந் தெளிந்து தன்வசமாய்
வென்று புல னெவ்வுயிரு மேவினனாய்–நின்றவவ
னெல்லாக் கரும மியற்றிலு மப்பயன்கள்
செல்லா வவனிடையிற் சேர்ந்து –7–
காட்சிமுத லைந்தின் கதி கண் டுயிலுயிர்ந்ததன்
மாட்சியுரை மற்றயையும வன்புலன் களாட்சி யினிற்
றன்பயனிற் செல்லுமெனத் தான்மதித்து யானியலே
னென்பதறி வான்யோகி யிங்கு,. –8–
காத லது விட்டுக் கருமம் பிர மமெனு
மூதுயிரிற் றானமைத்து முற்றியல்வான்–றீதான
பாவத்தின் மன்னான் பதுமத திலை நீரின்
மேவப் படாதது போன் மிக்கு, –9-
காயத்தா னெஞ்சாற் கருத்தமரும் புத்தியான்
மாயத்துச் சேரா வரும்புலனா–னேயத்து
நீக்கத் துடன்கரும நின்றியல்வர் யோகியர்க
ளூக்கத் துளந் தெளிவை யுற்று, –10–
ஏற்ற மிகும் யோகி யியல்கருமப் பேழவிடுத்
தாற்ற நிலைமை யடைந் தியலு–மூற்றமில்லாக்
காமத்தா னந்தக் கருமம் பலனசையாந்
தாமத்தாற் கட்டுண்ணுந் தான், –11–
ஒன்பதெனும் வாச லுடையபுர மாமுடலிற்
றன்பயிலுஞ் செய்தியெனத் தானியலா–னென்பதனா
லேது மியலா னியற்றான் சுகமிருக்கு
மோது புலன்வென்றோ னுற்று, –12–
கத்தாவா குந் தன்மை கன்மங்க ளாங்கலற்றி
லொத்தாம் பலன்சே ருலகுக்குசத் –தத்துவமா
நின்ற வுயிர் தான் செய்யா நேர் நடக்கு மாறிதுதா
னொன்றிய முன் வாதனையா லுற்று,–13–
ஆங்கொருவன் தீ வினையும் நல் வினையும் பெரியோன்
பாங்கு இனிஆற்றான் வாங்கும் பண்பினா –லீங்கறிவு
மாய வினையான் மறைந்தன்றி மோகத்தி
லாய வுயிர்க ளவை, –14–
அந்த மயர்வை யறிவா னசிப்பித்துச்
சிந்தை தெளிந்து சிறப்புடையோர்_.தந்தமது
பேரறிவு தானே பகலவனிற் பீடுடைத்தாய்
நேரறிவு காட்டு நிறத்து –15–
௮ப்புந்தி யந்த மன மந் நிலைமை யப்பயனா
மிப்புந்தி யால் வினையை யீடழித்தோர்–மெய்ப்புந்தி
மீளா வகையுடைய மெய்ப்பயனை நண்ணு வரேன்
மாளா வுயிரின் வழீ, –16–
ஆன்றுணர்ந்த வந்தணனா வத்திநாய் நீசனெனத்
தோன்றுடலந் தோறுந் தவக்கமைந் தங்கேன்ற வுயி
ரொக்க நிகழு முணர்வோ ரெனமறையிற்
றக்க வறிவுடையோர் தாம், –17–
இப்பிறவிச் சங்க மிவரால் வெலப்பட்ட
தொப்பி லெவர்க்குமன மொத்தமைந்த….தப்படியாத்
தீதிலா வொத்தவுயிர் சீரார் பிரமத்துள்
மீது தான் நிற்குமவர் மிக்கு, –18–
இன்பமது பெற்றுகவா னின்னாத துண்ணடுங்கான்
றன்படியிற் புந்தி தனை நிறுத்தி–முன்பயிலு
மோக மொழிசந் திறையை முற்றுமறிந் திவ் வுயிரின்
போக மதி னின்றமைந்தான் பூண்டு, –19–
புறம்பயிலுந் தொத்தற்ற புந்தியனா யுள்ளே
சிறந்த வுயிரின் பமெவன் சேருந் – துறந்தவவன்
சேரும் பிரமத்திற் சிந்தையனா யந்தமிலா
தாருஞ் சுகமடையு மாங்கு, –20–
புலன்சேர் பொறியில் வரும் போகங்க டுன்பக்
குலஞ்சேருங் காரணமாங் கோளா–னலஞ்சேர்ந்து
நிற்பதுவு மில்லை நிறை ஞான வானவற்றி
லற்பமுகப் பெய்தா னமர்ந்து,– 21–
காயங் கழிப்பதற்கு முன்னிலிலிக் காலத்தே
மாயந் தருகாமம் வல் வெகுளி–யாயவிவை
வேகத்தைத் தானடக்க வல்லா னவன் யோகி
போகத்தைத் தானடையும் போய், –22–
தன்னுள மரின்பத்தோன் றன்னி ழவிற்றான் மகிழ்வோன்
றன்னு ளுயர் சோதி தானுடையோன்-றன்னுருவே
யான பிரமமா மந்தப் பிரமத்தைத் .
தானடையு மின்பந் தழைத்து. –23-
கண்ட முனிவர் கடுவினையின் கட்டழித்துக்
கொண்ட வுயிரிருமை கூர்ந்த துயர்–விண்டறவே
கெஞ்ச நிறிஇயுயிர்க்கு நீடின்பம் பூண்டவரே
யெஞ்சாப் பரம்பெறுவ ரேய்சந்து,– 24–
இவ்வாறு காம வெகுளி யடக்கி மதி
லெவ்வாறு தாமனத்தை வென்றோர்க்கு எவ்வாறு
மீளாது துய்க்கு மிகு பிரம வாநந்த
நீளாகு மென்று நிகழ்ந்து –25-
புறப்பற்றை நீக்கிப் புருவத்துட் கண்ணாற்
சிறந்தொக்க மூச்சிருகாற் செலல–நிறுத்து மனப்
புந்தியான் வென்ற பயவெகுளி யானவனே
சிந்தையான் முத்தன் சிறந்து, –26–
வேள்வி தவங் கொள்வோனாய் மிக்கனைத்து மென்வசமா
வாள் வினையனாகி யனைத்துலகு–நீ ளுற்ற
வெல்லா வுயிர்க்கு முறவா மெனையறிந்த
நல்லான் பெறுஞ்சாச்தி நன்கு –27–
———
6 – அத்யாத்ம யோகம்:
அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)
யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.
யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.
கன்ம பல னண்ணாது காரியமென் றுன்னியவத்
தன்மையுமத்தூய் வனதிற் சார்ந்தியல்வா -னன்மையமர்
ஞானியவன் யோகி யவ னல் லங்கி யிற் கிரிசை
தானிகழா னென்றுஞ் சமைந்து, –1–
கூரறிவு சேர் துறகென் றெத்தைக் குறித் துரைப்பர்
பாரறிவில் யோக மதாம் பாண்டவனே– தூரநசை
விட்டியலா தானொருவன் மெய் கரும யோகி யெனப்
பட்டியல மாட்டான் பயின்று, –2–
ஞானயோ கத்தி னயந்தற வேண்டுமுனிக்
கானயோ கக் கரும மாமுதலா–மேனலஞ்சேர்
மிக்கமர்ந்தே யோகத்தின் மேலா மவனுக்கே
தக்க முதலாகும் சமம்–3–
கோலும் புலன்பொருளிற் கூட்டுங் கருமத்தி
லேலு நசையறுத்தா னெப்பொழுது –மேலுயர்ந்தே
யெப்பொருளின் சங்கற்பம் விட்டேறும் யோகி யென
வப்பொழுதே பேருடைய னாம் –, 4–
தன்னைத் தன் நெஞ்சாலே தான் எடுப்பான் தன் நெஞ்சாற் றன்னைத் தளர் விக்கத் தானியலா னன்னவனா
தன்னுடைய நெஞ்சு தனக்குறவு தன்னெஞ்சே
தன்னுடைய வான்பகையாந் தான். ’–5–
எவன் றன்னாற் றன்னெஞ்ச மேனறு வெலப் பட்ட
தவன் றனக்கந் நெஞ்ச முறவாகு–மெவன்றன்னா
லான்ற நெஞ்சில் லாதவனுக் காங்கதுமா றேயியலு
மேன்ற பகை வன்போ லிங்கு –6–
சீத மழலின்பந் துன்பஞ் சிறப்பிகழ்வின்
மீதமைவு சேர்ந்து மிக வென்றுமனம்–போதந்
திகழ்ந்தவவ னெஞ்சிற் றெளிவுறவே நிற்கு
நிகழ்ந்த வுயிர் பரமா நேர்ந்து –7–
ஞான விவேகத்து நன்குகந்தார் தன்மையனா
யான புலன்வென் றமர்யோகி –தானோட்டிற்
கற் கனகத் தொத்தியல் வான் காட்சியினாற் றக்கானெள
றோற் கமறுஞ் சொற்கேரு முற்று–8–
நன்னெஞ்சன் றோழன் பகைவ னயப்பறியான்
பன்னு நடுவோன் பழிவெறுப்போன்- றன்னளவி
லுற்றாயர் கருமர் பாவிகளா லொத்த மனம்
பெற்றான் மிகத் தக்கான் பின்,–9-
தானே யிருந்து தனியிடத்து தன் சிந்தைக்
கானா மனமடக்கி யாசையற்றுத்.-தானேய்ந்த
வெத்துவக்கு மற்ற வெழில்யோகி தன்னையென்று
தத்துவத்திற் சார்விப்பான் தான்,–10–
தூய நிலத் தோக்கந் தாழ் வற்றதகில் தோலதுமே
லாயது கீழாக்குசமா மாசனத்து —மேயதன்
புத்தி யொரு மித்துப் புலனடக்கி யோகததைச்
சுத்தி பெச் செய்வான் தொடர்ந்து –11–.
தன் காயஞ் சென்னி களந் தாங்கிச் சலியாமன்
முன் காண மூக்கைக் கண் மொய்த்த திசைப்-பின் காணா
தாறியஞ் சாதே யறத் துரனாய் நெஞ்சடக்கித்
‘தேறியென் பால்விருப்பான் சேர்ந்து –12–
இன்னே நெஞ் செந் நாளு மென்னிடை யிற் சேர்யோகி
தன்னேர் மனமக்கித் தானிறுத்தி.-மன்னேர்ந்த
வானந்த மேலா யமர்சாந்தி யென்னிடையிற்
றானந்த மற்றடையுந் தான்,–13–
உண்ணுமவ னுக்குமிக வுண்ண தவனுக்கும்
கண்ணுறங்கு வோற்குங் கடிந்தோற்கு–மெண்ணுங்காண்
மண்ணாளும் வேந்தனே மாயோக மிவ்வோர்க்கு
நண்ணாது காணு நயந்து — 14–
தக்௧ வுணவியற்றி தன் கருமசத் துண் முயற்றி
தக்க துயிலுணர்த்தி தானமர்ந்த —தக்கவனுக்
கெவ்வாறும் யோக மிருந் துயரை நீக்கியே
யெவ்வாறு வந்தியலு மாங்கு. –15–
எப்போது நெஞ்ச மினிய வுயிர் தன்னிற்
றப்பாது பூண்டு தனி நிற்கு–மப்போது
காம மனைத்திற் கழிந்த நசை யோகி யெனு
நாம முடையனா நன்கு, –16–
வாயு விலாதிடத்து மன்னும் விளக்கதுதா
னேயு சலனமறு மெவ்வாறு–தூயமள
நன்மையினிற் சேர்ந்தியலு நல் யோகி யோகிதன .
தன்மையினுக் கொப்பதுவே தான், –17–
நெஞ்சுதா னேதினிருத்தமாம் யோகத்தா
லெஞ்சலிலா தென்று மினிதமரு–நெஞ்சமா
வேதின் மனத்தாலே யினிய வுயிர் கண்டு
மீததனிற் றானுகக்கு மிக்கு.–18–
புலங்கடந்து யோகத்துப் புந்திபினாற் றோன்று
நிலங் கடந்த வின்ப நுகர்வோ–னலங்கலந்த
புன்மையிலா னந்தப் புணர்ப்பெய்தி நின்றவவன்
றன்மையினின் றுஞ்சலியா தான்,–19–
யாதொன்றைப் பெற்றா லதனில்வே றோர்பேறு
மீதென்று பின்றான் மிகமதியான்–போதமுடன்
மிக்க கதி நின்றான் மிகு துன்ப மேலிடினுந்
தக்கவதிற் பின்சலியான் றான்,–20-
யோகமென்று போரம் வியோக மதுதுன்ப
மாக வுறும்யோக மஃ்தறிவான்–யோக மது
தீங்கு இன்றி நின்ற திசைப்பற்ற செஞ்சினாற்
பாங்கொன்றி யொன்றப் படும்,–21–
தன்னிலாங் காமங்க டானெல்லா நெஞ்சால்விட்
டன்ன புலனனைத்து மான்றடக்கி -மன்னுநிலைப்
புந்தியினின் மெள்ளமனம்’ பூண்டாங் குயிர் மன்னச்
சிந்தியான் வேறொன்றுஞ் சேர்ந்து –22–
நில்லா துழனெஞ்சு நீங்கு மவை மேலவற்றிற்
செல்லாமைத் தன்வசத்தைச் சேர்விப்பான்-நல் யோகி
யாறினான் றீங்கு செருசக் கற்றுப் பிரமவுயிர்
தேறினா னின்ப மிகச் சேர்ந்து,– 23–
இவ்வண்ணமே தன்னை யோகத்திலே விடுத்துத்
தெவ் வண்ண வல்வினைகள் செற்றென்று-மெய்வண்ண
யோகி பிரமத் தணைந் தீறி வின்பத்தா
னாகி யுயிரேலெளிதே யாங்கு, –24–
எல்லா வுயிரு மென துயிர்போ லென்னுயிர்தா
னெல்லா வுயிர் போ லெனக் காணுஞ்–சொல்லார்ந்த
யோகஞ்சேர் நன்னெஞ்ச னெவ்விடத்து மொத்துயிர்க
ளேகஞ்சேர் வண்ணமறிக் தேய்ந்து, –25–
என் றன்மையா லுயிர்க ளெங்கு மெனைக் கண்டவற்றைத்
தன்றன்மை யாலென்பாற்றான் காண்பான்–சிந்தை யினில்
நான்றோன்றா வாறில்லை நன்குணர்ந்தான் றன் னிடையிற்
றான்றோன்றா வாறில்லை தான். –26–
எங்கு நிகழ்ந் திருக்கு மென்றன்னை யேகமாத்
தங்குஞ் சமநினைவான் றானுணார்ந்தா –னங்கங்கே
யெவ்வா றியன்றிடினும் யோகி யவ னென்னிடையி
லவ்வா றியன்றவனே யாம், –27–
தன்னொத்த வெவ்விடத்து மன்னா சமமாக
மன்னொத்த வின்பம் வளர் துன்ப–முன்னலுறி
லாங்கவனே சால வதி நாம யோகி யெள
வோங்கறிவார் தாமதிப்ப ருற்று, –28–
௮ண்ணலைப் பின் கேட்டா னமர் விசய னீ யுரைத்த
லெண்ண மரு மொப்பா ரெழில் யோகந் –திண்ணமிது
மன்னு நிலைமை மது ஸூதனா காணே
னுன்னு மனஞ் சஞ்சலத்தா லோர்ந்து. –29–
வன்னெஞ்சு சஞ்சலமாய் மாறாய் வலிந் தடரு
நந் நெஞ்சு காற்றைப்போ லான்றடக்கித் –தன்னி
லரிதென் றிருப்பனென காங்கவனுங் கேட்கச்
சுரிசங்கன் றானுரைத்தான் சொல். –30–
நேராக நின்றடக்க நில்லா தரிது மனங்
காரார் கொடைத் தடந் தோட் கெளந்தேயா–சீராரும்
யோகத் திடைப்பயில்வா லேலுந் துறவதனா
லாகத் தது வடக்க லாம்.– 31–
தன்னிசையா நெஞ்சு தன்னாற் சார்வரிதாம் யோகமென்
றென்னிசைவ தாகு மிது பின்னை-.-முன்னிசையு
செஞ்சான். முயன்றவன னேரே யுபாயுத்தா
லெஞ்சா தடையலா மிங்கு –32–
ஆங்கு விசய னமலன் றனைக்கேட்டா
னீங்கு விருப் புற்றா னியல் வற்றுப். பாங்கு மனந்
தக்க யோகத்துச் சலித்தங்க் கதுசேரா
தெக்கதியைத் தானடையு மிங்கு. –33–
முன்பயன்சேர் கன்ம முழுதொழிந்து மேற்பிரமந்
தன் பயனா நல் வழியிற் சாராதே–பின் பவன் றான்
றஞ்சமில்லா தவ்விரண்டுந் தானழூவிச் சின்னமா
மஞ்செனவே மாயுமோ மற்று, –34–
மிக்க மயக்கி தனை மீண்டொன்று ஓழியாமற்
றக்க பரிச றுக்கத் தக்சவனீ–மிக்கோரி
லுன்னை யொழிய யொழிப்பா ரித கண்ணா
பின்னையெவ ருண்டு பெயர்ந்து.–35–
ஆய வவனுக் கறிய வுரை செய்தான்
மேயவுல கத்தினு மேலிடத்து –மாய்வவனுக்
கில்லாதா னன்றி யிவன்றான் விசயனே
பொல்லா நெறியிற் புகான், –36–
புண்ணியர்கள் எய்து பெரும் போகத்து இனிதமர்ந்தே
நண்ணியதிற் பல்லூழி நாளிருந்து..-திண்ணிய சீர்
செல்வ நலந் தூயார் சிறந்த மனை யிற் பிறக்கு
நல்வினையோ கஞ்சிதைந்தா னன்கு, –37–
மற்றதவே யன்றி வளர் மதி சேர் யோகியர்க
ளுற்ற குலத்தி லுதயமா_ முற்றுலகி ,
லிவ்வாறு சேரு மிதிற்பிறவி தான் மன்னா
வெல்வாறு தானரிதே யிங்கு.–38–
ஆங்கேதன் முன் பிறவி யானயோ கத் துணர்வைப்
பாங்கேலும் புத்தியினிற் பற்றியே–யீங்கமர்ந்த
பின்னு மதின்முயற்றி பெற்றியன்று பேறதனின்
மன்னுமவ னாகுமே மற்று, –39–
முன்னியலும் யோக முயற்சி வசமறவே
பின்னிவனைத் தன்வசமாம் பேறளிக்கு–மன்னு நசை
யோகத்தி லுற்ற னுரைசேர் பிரமமா
மாகத்து மீதியல்வா னாம் — 40–
மிக்க முயற்றியுடன் மேவியல்வான் பல்பிறப்பி
லொக்க வருநல் லுயர் வினையிற் –றக்கமர்ந்து
சாருந் துயரகன்று தானியன்றா னாய்ப் பின்னுஞ்
சேரும் பரகதியைச் சென்று, ‘– 41–
தவம் புரிந்தார் தன்மை யுணர்ந்தார் கருமத்
துவந்தி யன்றார் தங்களிலும் யோகி –யவன் சிறந்து
மிக்குணர்ந் தானென்றுணரப் பட்டான் விசயாநீ
தக் குயா்ந்த யோகமே சார். -42–
முன்னுரைதத யோகி கண் முற்றுமென்பான் மனஞ்சேர்
தன்னுரைப்பான் மேல் விரும்பித் தானென்னை -மன்னு நலம்
பெற்றே பணிந்தான் பிறங்கி யுயிர் யோகி யென
வற்றே நான் கொள்வன் உகந்து –43–
யோக வதியோகி யோக்த்து நாலுவகை
போகமது மேலா வுயர் நிலைமை –மேகநிக
ரணண வருள கீதை யாறுமோத் தினபொருளாக
திண்ண முடிந்ததிது சேர்ந்து
——–
முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.
சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.
பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து
முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.
அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.