Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ கீதா ஸ்லோகங்களும் தமிழ் பாசுரங்களும்- முதல் ஷட்கம்-அமைதியும் ஆனந்தமும்-ஸ்ரீ கிருஷ்ணாத்மாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்-

May 12, 2025

அமைதியும் ஆனந்தமும் -பாகம் -1 – ஜீவாத்ம விசாரணை
1-அர்ஜுனனிடம் துக்கத்தின் வெளிப்பாடு-அர்ஜுன விஷாத யோகம் -47 பாடல்கள்
2-தத்துவ ஞானத்தைப் பெறுதல்- ஸாங்கிய நயாகம் -72 பாடல்கள்
3-செயலை செயல் யோகமாக்குதல்—கர்ம யோகம் –43 பாடல்கள்
4-அறிவால் செயலை விலக்கி அறிதல்-ஞான கர்ம ஸந்ந்யாஸ யோகம் –42 பாடல்கள்
5-செயல் துறவு-ஸந்ந்யாஸ யோகம் — 29 பாடல்கள்
6-தியானத்தில் தெளிவு-தியான யோகம் – 47 பாடல்கள்

—————-

  1. தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
    மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான்,
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா-ஒன்று கூடி,
யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட,
மாமகா-நம்மவர்களும்,
பாண்டவா-பாண்டவரும்,
கிம் அகுர்வத-என்ன செய்தனர்?

திருதராஷ்டிரன் புகன்றான்”
தர்ம பூமியாம் குரு பூமியில் ஒன்று கூடி யுத்தம் விரும்பியே |
என்னவர்களும் அவ்வைவரும் என் செய்தனர் ஸஞ்ஜயா ||

———–

2. ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்

ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்,
ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்;
வ்யூடம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை,
த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு,
ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய்,
வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:

“சஞ்ஜயன் புகன்றான்”
ராஜா துரியோதனன் அச் சமயம் ஐவர் படை அணி வகுப்புக் கண்டதும் |
ஆச்சார்யர் துரோணரையே அணுகி வாய் மொழிந்தா னிவ்வார்த்தையினை ||

—————

3. பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வயூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா

ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான,
தீமதா- நிபுணனான,
த்ருபத புத்ரேண-துருபதன் மகனால்,
வ்யூடாம் பாண்டு புத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்,
ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.

குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.

ஆச்சார்ய நர! உம் புத்திமான் சிஷ்யன்; துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் |
அணி வகுத்த பாண்டு புத்திரர்கள் தம் மா பெரும் சேனையைப் பாரும் ||

————-

4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:

அத்ர-இங்கு,
மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும்,
யுதி-போரில்,
பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய,
ஸூரா-சூரர்,
யுயுதாந-யுயுதானன்,
த்ருபத-மகாரதனாகிய துருபதன்.

இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

காணீர்!இப் படை சூரர் வில்லாளிகள் பீமார்ஜுனனுக்குச் சமமாமவர் |
போரில் சாத்யகியாம் யுயுதானனும் விராட தேசத்தரசன் துருபதனுமாம் ॥

————

5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:

த்ருஷ்டகேது-திருஷ்ட கேது,
சேகிதாந-சேகிதானன்,
வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன்,
புரூஜித் -புரூஜித்,
குந்திபோஜ-குந்தி போஜன்,
நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.

திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

த்ருஷ்ட கேதுவும் சேகிதானனும் வீர்யவான் காசி ராஜனும் |
புருஜித்தும் குந்தி போஜனும் மா மனிதன் சைப்ய னிருப்பதும் காணீர் ||

———————

6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:

விக்ராந்த-வலிமை மிக்க,
யுதாமந்யு-யுதாமந்யு,
வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா,
ஸௌபத்ர-சுபத்திரை மகன்,
த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.

வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.

பேராற்றல் பெற்ற யுதாமன்யுவும் வல்லமை யுடை உத்ததமௌஜஸும் |
சுபத்ரையின் மகன் அபிமன்யுவும் திரௌபதியின் ஐம் புதல்வரும் மஹா ரதர்களே ||

——————–

7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே

த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே,
அஸ்மாகம்-நம்முள்ளே,
யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ,
தாந்-அவர்களை,
நிபோத-தெரிந்து கொள்,
மம ஸைந்யஸ்ய-எனது படையின்,
யே நாயகா-எவர் நாயகர்களோ,
தாந்-அவர்களை,
ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக,
ப்ரவீமி-சொல்லுகிறேன்.

இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள்.
இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.

அந்தண உத்தம நர! நம்மில் சிறந்தோ ரவர்களையும் நீ ரறிந்து கொள்ளும் |
என்னுடைய சேனையின் நாயகர்கள் கூறுகேன் அவர்களை அறியும் பொருட்டே
||

———————

8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:

பவாந்-நீ,
பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன்,
ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய,
ததா ஏவ-அதே போல,
அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.

நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய
கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;

தாங்களும் பீஷ்மரும் கர்ணனும் வெற்றியே வடிவான க்ருபரும் |
அங்ஙனமே அஶ்வத்தாம விகர்ணனும் ஸோம தத்தன் மகன் பூரிஸ்ரவஶுமுளரே ||

———–

9. அந்யே ச பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:

அந்யே ச-இன்னும் வேறு,
பஹவ: ஸூரா-பல சூரர்,
மதர்தே -என் பொருட்டு,
த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர்,
ஸர்வே-எல்லோருமே,
நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்,
யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.

எண்ணிலா ஆயுத மம்புகள் கூடி பலப் பல சூரர்க தளல்லாம் |
யுத்தத்தில் சிறந்தே உளர் என் பொருட்டு உயிர் துறக்கவே ||

————

10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும்,
அஸ்மாகம் பலம்-நமது படை,
அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை,
பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும்,
ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ,
பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது

(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை.
வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.

இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்;
பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

———–

11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி

ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும்,
யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு,
பவந்த: ஸர்வ-நீங்களனைவரும்,
பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே,
அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.

நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.

பீஷ்மர் காக்கும் நம் சேனை அளவில் அடங்காது விரிந்துளது |
பீமனால் காக்கப்படு மச்சேனை அளவில் அடங்கியே யுள்ளது ||

———-

12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்

குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய,
ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன்,
தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்),
ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு,
உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம்,
விநத்ய-புரிந்து,
ஸங்கம் தத்மௌ-சங்கை ஊதினான்

(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.

வல்லவன் கௌரவ முதல்வன் பாட்டன் பீஷ்ம பிதா மகன் |
உற்சாகமூட்டவே அவன் பொருட்டு உரக்க ஊதினான் சிம்ம நாதம்தனை ||

———–

13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்

தத-அப்பால்,
ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும்,
பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
ஸஹஸா-திடீரென,
அப்யஹந்யந்த-ஒலித்தன,
ஸ: ஸயுப்த-அந்த ஓசை,
துமுல-பயங்கரமாக,
அபவத்-இருந்தது.

அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.(இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.)

பின்பு தொடர்ந்த பல நாதங்கள் சங்கு பேரிகை தம்பட்டைகளும் |
பறையுடன் ஒலி மிகுந்த கொம்புகளுமே ஒருங்கே சேர்ந்து முழங்கினவே ||

———-

14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:

தத-பின்பு,
ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய,
மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில்,
ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும்,
திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை,
ப்ரதத்மது-ஊதினர்.

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை ஊதினர்.

பிறகு வெண் குதிரைகளுள்ள மேலாம் தேரில் வீற்றிருந்த மாதவ அர்ஜுனரும் |
தத்தம் தெய்வீகம் மிகு சங்குகளையே உடன் எடுத்து உரக்க ஊதினரே ||

————–

15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை,
நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை,
பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்,
தத்மௌ-ஊதினான்.

கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.

ஊதினான் ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் ஊதினான் தனஞ்சயன் தேவதத்தம் |
ஊதினான் பெரு வினை யாற்றும் பீமசேனன் ஊதினனே பௌண்ட்ர மஹா சங்கம் தனையே ||

வ்ருகோதர = ஓனாய் வயிற்றோன்; பெரு வினை யாற்றும் திறன்

—————-

16. அநந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்,
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும்,
நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

குந்தியின் மகன் தர்ம ராஜன் ஊதினனே அநந்த விஜயம் தனை |
ஊதினரே ஸுகோஷ மணி புஷ்பகம் தனை முறையே நகுல சக தேவருமே ||

17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ ச மஹாரத​:
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:

பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்,
மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும்,
த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும்,
அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,

சீர்மிகு வில்லாளி காசிராஜன் மஹாரதி த்ருஷ்டத்யும்ன சிகண்டியும் |
அங்ஙனமே விராட தேசத்தரசனும் வெல்ல வியலா சாத்யகியு மூதினரே ||

————-

18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்

த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்,
மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்,
ஸர்வஸ-எல்லோரும்,
ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்),
ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக,
ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.

துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்
தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!

புவியாளும் வேந்தனே ! மன்னா! துருபதனும் த்ரௌபதியின் ஐம் புதல்வரும் |
பெரும் தோளோன் சுபத்தர மகனும் ஊதினரே தத்தம் சங்குகளை எப்புறமும் ஓலிக்கவே ॥

————–

19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்

ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை,
நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும்,
வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து,
தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்,
ஹ்ருதயாநி-நெஞ்சுகளை,
வ்யதாரயத்-பிளந்தது.

அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய்,
திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

அப்போரொலிப் பெரு முழக்கம் விண் புவிக்கும் இடை ஒலிக்க |
கௌரவரின் உள்ளம் தன்னில் சீறிப் புகுந்துப் பிளந்தது காணும் ||

—————

20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:

அத-அப்பால்,
கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன்,
வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை,
த்ருஷ்ட்வா-நோக்கி,
ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது,
தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.

அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.-தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.

புவியாளும் மன்னா! குரங்குக் கொடியோன் போர் துவங்கிய தார்த்தராஷ்டிரர் தமை நோக்கி| அம்புகள் விண்ணிலே பாயுமுன்னே || இருஷீகேசரிட மிவ்வார்த்தை தனைப் புகன்றான் |

————

அர்ஜுன உவாச

21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத

ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை,
ஹ-சொல்கிறான்,
மஹீபதே-ராஜனே!,
அச்யுத-ஹே அச்சுதா,
மே ரதம்-என்னுடைய ரதத்தை,
உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின்,
மத்யே-நடுவே,
ஸ்தாபய-நிறுத்துக

அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

  1. யாவதேதாந்நிரீஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
    கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே

அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில்,
மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை,
யாவத்-எவ்வளவு நேரம்,
அஹம் நிரீஷே அஹம் -நான் பார்க்கிறேன்

சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும்.
இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

“அர்ஜுனன் புகன்றான்”
ஓஅச்சுதா! இவ்விரு சேனை யிடையே எம் தேரை எதிர் நிறுத்து வீரே ||
என்னுடன் போர் விரும்பி நிற்கும் | இக் கூட்டம் தனை நான் காணவே ||

————–

23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா​:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:

துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு,
யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம்,
யே-எவர்,
ஏதே-இந்த அரசர்கள்,
அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர்,
யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை,
அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்

“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.

இவ்விதம் துஷ்ட புத்தி யுடன் நிற்கும் அந்தகன் மகன் துரியோதனன் தம் |
பிரியம் விரும்பியுளோர் தமையும் களம் புகுந்தோரையும் காணவே ||

————-

24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்

பாரத-(கேளாய்) பரத நாட்டரசே,
குடாகேஸேயுந-அர்ஜுனனால்,
ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு,
ஹ்ருஷீகேஸயு-கண்ணன்,
உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும்,
மத்யே-நடுவில்,
ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை,
ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.

சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

சஞ்ஜயன் புகன்றான்”
பரத குலத்தோன்றலே ! த்ருதராஷ்டிரரே ! இவ்விதம் பகர் குடாகேசன் சொல் கேட்ட |
ஹ்ருஷீகேசர் உத்தமமாம் தேரை இரு சேனைக்கிடை நிறுத்தியே |

———————

25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி

பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம்-எல்லா அரசர்களுக்கு முன்,
இதி உவாச-இவ்வாறு சொன்னான்,
ஸமவேதாந்-கூடி இருக்கும்,
ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு,“பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

வழிநடாத்தும் பீஷ்மரும் த்ரோணரும் மற்றுமுள வேந்தர்களின் முன்னிருத்தியே |
ஒருங்கே கூடியுள்ள இக் கௌரவர் தமைப்- பார்த்தனே ! “தீர்க்கமாய்க் காண் ”என்றார்||

——–

26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா

அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன்,
தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்,
ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்,
ததா-அதே போல,
ஸகீந்-நண்பர்களும்,
அபஸ்யத்-பார்த்தான்

அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும்,
அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

பார்த்தன்! பார்த்தானிரு சேனையினரை பாட்டன்- ஆச்சார்யர்- அம்மான் களையும் |
சகோதர புத்திர பேரர்களையும் அவ்விதமே அனைத்துத் தோழர்களையும்.||

—————

27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்

ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும்,
ஸ்வஸுராந்-மாமன்மாரும்,
ஸுஹ்ருத ச-நண்பர்களும்,
ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும்,
அவஸ்திதாந்-நிற்பவர்களை,
ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து,
கௌந்தேய​-அர்ஜுனன்

அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

மாமனார்கள், நல்உள்ள முள்ளோரையும் ஒன்று கூடி நிற்கு முறவுகளையும் |
உற்று நோக்கி உள்ளம் வருந்தியே மிகு விரக்கமுடன் குந்தி மகன் கூறினானே ॥

28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன்,
பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக,
விஷீதந்-துயரடைந்து,
இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா,
யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன்,
ஸமுபஸ்திதம்-நிற்கிற,
இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே

மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன,
முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது,
மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம்
ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.

என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

“அர்ஜுனன் புகன்றான்”
ஓ கிருஷ்ணா வென்றே கூவி! | யுத்தம் விரும்பிக்களம் புகுந்து நிற்கும்
உறவுகளை யான் உற்று நோக்கிடில் |
அங்கமெலாம் தளர்ந்து நாவறள்கின்றதே உடல் நடுங்கி மயிர்க்கூச் செறிகின்றதே ||

———–

30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந​:

ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது,
த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது,
மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல,
அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.

காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது.-என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

காண்டீவம் கையினின்றும் நழுவுகிறதே சர்மமெல்லாம் பற்றி எரிகின்றதே |
நிற்பதற்கும் சக்தி யற்றவனானேனே என் மனம் குழம்புவது போலுள்ளதே ||[சர்மம்
– த்வக் – உடலின் மேல் தோல் ]

————

31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்,
ஆஹவே-போரிலே,
ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று,
ஸ்ரேய: ச-நன்மையும்,
ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில்
எனக்கு நன்மை தோன்றவில்லை.

ஓ கேசவா! கெடுதல்கள் அளிக்கும் சகுனங்க ளனைத்தும் காண்கின்றேன் |
உறவினர் தமை நாம் கொல்லுவதால் மேன்மை ஏதும் காண்கிறேனில்லை ॥

  1. ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
    கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்,
கோவிந்த -ஹே கோவிந்தா,
ந காங்ஷே-விரும்புகிலேன்,
ஜீவிதேந ராஜ்யேந:
போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
கிம்-என்ன

கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன்-கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்?
உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

ஹே கிருஷ் ணா! வெற்றியையும் விரும்பவில்லை ராஜ்யம் தனையும் விரும்பவில்லை |
சுகங்களையும் யான் விரும்பவில்லை கோவிந்தா! ராஜ போகத்தால் நமக்கென் பயன்? ||

———

33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச

யேஷாம் அர்தே-எவருக்காக,
ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்,
ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ,
தே இமே-அந்த இவர்களே,
யுவே-யுத்தத்தில்,
ப்ராணாந்-உயிர்களை,
த்யக்த்வா-இழந்தவராய்,
இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

யாவர்க்காக நாம் சுக போகங்களை வேண்டி விரும்பத் தக்கதாயிற்றோ |
அவர்களோ செல்வமுயிராசையும் துறந்து போர்க் களத்தில் கூடிநிற்கக் காணீர்||

34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள்,
ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்,
பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும்,
பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

அனைத்து ஆசார்யர்களும் தந்தை தனயரும் அவ்வாறே பாட்டன் அம்மான் மார்களும் |
மைத்துன மாமனார்களும் பேரன் களனைவரும் உறவினருடன் கூடி யிருக்கக் காணீர்||

———-

35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

மதுஸூதந-மதுசூதனா,
க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும்
த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும்,
ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை,
மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

ஓ மதுஸூதனா! என்னைக் கொன்றாலும் மூவுலக ராஜ்யத்தின் ஆசையாலும் |
கொல்லேன் இவர்களை நானொரு பொழுதும் கொல்வேனோ இப் புவியின் பொருட்டு ||

———–

36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

ஜநார்தந-ஜனார்தனா,
தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று,
ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது,
ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால்,
அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

ஓ ஜனார்தனா!
திருதாஷ்டிர மைந்தர்கள் தம் உயிர்-நீக்கினால் மகிழ்ச்சி யுண்டோ நமக்கு |
இப் பஞ்சமா பாதகர் தமைக் கொன்றால் பாவம் அன்றோ நம்மைச் சாரும் ||[ ஆததாயிந =
பஞ்ச மகா பாதகர்]

———-

37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

மாதவ-ஹே மாதவா,
தஸ்மாத்-இதிலிருந்து,
ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை,
ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்,
ஹி-ஏனெனில்,
ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின்,
கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது.
மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

ஆம்! நம்உறவினர் துரியோதனாதிகளை நாம் கொல்லுதல் தக்கதன்றே |
ஓ மாதவா! உறவினர்களுயிர் போக்கி சுகத்தை யெப்படிக் காண்போம் ||

————-

38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து,
ஏதே-இவர்கள்
குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்,
மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்,
ந பஸ்யந்தி-காண்கிலர்,
யத்யபி-இருந்தும்,

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும்
நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

பேராசையால் கவர்ந்த இவர் மனம் குல நாச தோஷத்தை யறியுமோ ? |
மித்ர த்ரோக பாவம் தனை உணருமோ அவர்கள் தீமையை யுணரா விடினும்.. ||

——————

39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

ஜநார்தந-ஜனார்தனா,
குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம்
ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால்
பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக,
கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

ஓ ஜனார்தனா! குலநாச தோஷங்களைத் தெளிவுற நன்றாயறியும் நாம் |
இப் பாவச் செயல் விடுத்து விலகிட ஏன் முயலுதல் செ(ய்)யக் கூடாது? ||

———-

40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

குலக்ஷயே-குல நாசத்தினால்,
ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற,
குல தர்மா​-குல தர்மங்கள்,
ப்ரணஸ்யந்தி-அழிகின்றன,
தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில்,
க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும்,
அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

குல நாசத்தால் என்றுமுள்ள குல தர்மங்கள் அழிகின்றன.-தர்மம் அழிவதனால் குல முழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

குல நஷ்ட மெய்திடில் என்றுமுள குல தர்மங்கள் அழிவது திண்ணம் |
தர்மம் அழிந்தால் குலமனைத்திலு மதர்மம் வெகுவாய்ப் பரவுமே ||

——–

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால்,
க்ருஷ்ண-கண்ணா,
குலஸ்த்ரிய​-குலப் பெண்கள்,
ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள்,
துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால்,
வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள்.
விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

கிருஷ்ணா! அதர்மம் மிகப் பெருகிடில் குலப் பெண்கள் நன்னலம் இழப்பர்|
பெண் கள் அந்நலம் இழக்கில் வர்ணக் கலப்பும் தோன்றும் வ்ருஷ்ணி குலத்தோனே ! ||

————-

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

ஸங்கர-குழப்பத்தால்,
குலஸ்ய ச-குலத்தையும்,
குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும்,
நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது),
பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி,
ஏஷாம் பிதர:
ஹி-இவர்களுடைய முன்னோர்களும்,
பதந்தி-வீழ்வர்.

அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது.
இவர்களுடைய பிதிருக்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

குல நாச கருமவர் குலமும் வர்ணக் கலப்பால் நரகம் அடைவரே |
இவர் முன்னோர் பிண்ட நீர்க் கடனற்றே நிச்சயம் வீழ்ச்சி அடைவார்களே ||

———–

43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின்,
ஏதை: வர்ணஸங்கரகாரகை​:
தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்,
ஸாஸ்வதா​-என்றும் உள்ள,
ஜாதி தர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள்,
உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக் குற்றங்களால் ஜாதி தர்மங்களும்
தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

குலநாசகர் செயும் இவ் வர்ணக் கலப்பு எனுமிந்த தோஷங்களா லென்றும் |
சாச்வத ஜாதி குல தர்மங்களும் நிச்சயம் அழிவில் அழுந்துமே ||

———–

44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

உத்ஸந்ந குல தர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள்,
மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு,
அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம்,
வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

ஜநார்த்தனா! குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

ஜனார்தனா! குல தர்மத்தை யிழந்த மனிதர்கள் தாம் நரகத்தில் |
நெடிது வாழும் நிலை யடைவர் என்று கேட்டிருக்கிறோம் நாம் ||

————–

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

அஹோ-அந்தோ,
பத-பாவம்,
வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம்,
வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம்,
யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு,
ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல,
உத்யதா​-முனைந்து விட்டோம்,

அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

அந்தோ பெரும் பாவம் செய விழைந்தோம் அன்றோ நாமே |
ராஜீயசுக ஆசையாலே கொல்லவே முனைந்தோமோ உறவினர்கள் தமையே ||

————

46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி,
அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல்,
மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய,
தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார்,
யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும்,
தத் மே-அதில் எனக்கு, ÷
க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ஆயுத பாணிகளாய்ப் போரில் மடித்து விடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்-இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

ஆயுதமின்றி எதிர்த்துப் போரிடா எனை ஆயுதம் தாங்கியே துரியோதனாதிகள் |
இப் போர்க் களத்தில் கொன்றாலும் அது வெனக்கு நன்மை பயப்பதாகுமே ||

———

ஸஞ்ஜய உவாச

47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

ஸங்க்யே-போர்க்களத்தில்,
ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன்,
அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி,
ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும்,
விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு,
ரதோபஸ்த-தேர்த்தட்டில்,
உபாவிஸத்-உட்கார்ந்தான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

சஞ்ஜயன் புகன்றான்’
சோகம் தாக்கிய மனதுடை அர்ஜுனன் போர்க் களத்தி லிவ்விதம் பகன்றே |
வில்லம்புகளைக் கீழ் எறிந்தே தேர்த் தட்டில் அமர்ந்தனனே ||

———————————-

அத² த்³விதீய அத்⁴யாய: ।-இரண்டாம் அத்தியாயம் -ஸாங் க்²ய யோக³: । “தத்துவ ஞானத்தைப் பெறுதல் ”

ஸஞ்ஜய உவாச

1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:

ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்
ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை)
மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்

அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய
அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:

சஞ்ஜயன் புகன்றான்”
இவ்வித மிரக்கம் மேலோங்கி கண்களில் கண்ணீர் ததும்பி வழிய I
சோகமே வடிவான அர்ஜுனனிடம் மதுசூதனன் இவ் வார்த்தை தனைப் பகர்ந்தனனே II

ஸ்ரீ பகவாநுவாச

2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

ஸ்ரீ பகவான் உவாச-
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
அர்ஜுந!-அர்ஜுனா
விஷமே-தகாத சமயத்தில்
குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது
அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது
அகீர்திகரம்-புகழையும் தராதது

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
ஹே அர்ஜுனா! தகாத சமயந் தனில் இம் மோஹம் வந்ததன் காரணமென் சொல் I
இச் செயல் சான்றோர் தவிர்த்ததன்றோ உனக்கிது ஸ்வர்க்கமும் புகழுமளிக்காதே II

———

3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே
ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று
க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.

பார்த்தா பேடித் தன்மை யடையாதே! இது நினக்குப் பொருந்தாது.
இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

ஓ பார்த்தனே ! பேடித்தன்மையை அடையாதே உனக்கித் தன்மை பொருத்தமன்றே I
“இழிந்த இவ் வுள்ளத் தளர்ச்சியினையே விடுத்து போருக்கெழுந்திடு” பரந்தப! II

—–

அர்ஜுந உவாச

4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்
அஹம் ஸங்க்யே-நான் போரில்
கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால்
பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன்
அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!

“அர்ஜுனன் புகன்றான்”
ஓமதுஸூதனா! இப் போர்களம் தனில் நான் பெரியோராம் பீஷ்ம துரோணர்களை I
அரிஸூதனா! பூஜைக்குரிய இவர்களை அம்புகளாலே எவ்விதம் எதிர்ப்பேன் II

———

5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ் ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்

மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
இஹ லோகே-இவ்வுலகத்தில்
பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து
போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்று
ஹி-ஏனெனில்
அர்த காமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
இஹ-உலகில்
புஞ்ஜீய-துய்க்கும்
போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்

பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நன்று.
பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்தில் (ரத்தத்தில்) கலந்தனவாம்.

மேன்மை பொருந்தின ஆச்சார்யர்களைக் கொல்லாமல் இவ் வுலகிலே
மேன்மை தருமே பிச்சையால் கிட்டும் உணவையும் கூட உண்பதாலே I
குருமார்களைக் கொன்ற பின் இப் புவியில் அனுபவிக்கப் போகிறேன்
இரத்தம் கலந்த செல்வமும்; ஆசைக்குரிய வஸ்து போகங்களையே
II

———

6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:

ந:-நமக்கு
கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை
யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல்
யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல்
ந வித்ம:-விளங்கவில்லை
யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்ற பின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மை யென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

நமக்கு இவ்விரண்டில் எது சிறந்த தென்றறியோம்
நாமோ ! இவர்களோ ! வெல்வோம் என்பது மறியோம் I
எவர்களைக் கொன்ற பின் வாழ விரும்ப வில்லையோ
அத் துரியோதனாதிகளே எதிர்த்து நிற்கின்றனர் நம் முன்னே II

————-

  1. கார்பண்யதோஷோபஹத ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா:
    யச்ச்ரேய: ஸ்யாந் நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்

கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன்
யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது
தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
அஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்,யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

கோழைத்தன மோங்கிச் சீரழிந்த மன முடையோனாகி தர்மத்தில்
குழம்பிய மனதால் தங்களிடம் வினவுகின்றேன் ஏதெனக்கு I
நிலையான மேன்மை யளித்திடுமோ அதைப் புகல்வீர்; உம் சீடன் நான்
எனக்கு பதேசித்துக் காப்பீர், தங்களை சரணடைகின்றேனே II

————

8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்

ஹி-ஏனெனில்
பூமௌ-பூமியில்
அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான
ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை
உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம்
அபநுத்யாத்-போக்கடிக்கும்
ந ப்ரபஸ்யாமி-காணவில்லை

பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர் மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.

பூமியில் எதிரிகளற்ற தன தான்யங்கள் மிகு ராஜ்யமும்
தேவர்களுக் கரசனாய் இருக்கும் நிலை யடையப் பெறினும் I
எனது இப் புலன் களையெலாம் வாட்டுகின்ற சோகந் தனை
போக்குமென அதனை நான் ஒரு பொழுதும் காண்கிறேனிலேன் II

——–

ஸஞ்ஜய உவாச

9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ

ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே!
குடாகேஸ: ஹ்ருஷீகேஸம்
ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி
தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய் புதைத்திருந்தான்.

“சஞ்ஜயன் புகன்றான்”
எதிரிகளை வாட்டுபவனான குடாகேசன் புலன்களின் அதிபதியாம் ஹ்ருஷீகேசரிடம்
இவ்விதம் கூறியே போர் புரியேன் என்றுரைத்து மௌனமாகி விட்டான் II

—-

10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:

பாரத-பாரதா
உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே
விஷீதந்தம்- துயருற்று இருக்கும்
தம்-அவனிடம் (அர்ஜுனன்)
ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.

பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ் வசனமுரைக்கிறான்:

பரத வம்சத்தரசே ! புலன்களின் அதிபதி இருசேனை நடுவிருக்கும் துயரோன்- I
அர்ஜுனனை நோக்கியே , புன் சிரிப்பு மேலிட வாய் மலர்ந்தாரே இவ் வார்த்ததகளை II[ ஹ்ருஷீகேஶ
: = புலன்களின் அதிபதி ]

———

11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:

ஸ்ரீ பகவான் சொல்கிறான்

த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார்
அந்வஸோச:-வருந்துகிறாய்
ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று
பாஷஸே-பேசுகிறாய்
கதாஸூந்-இறந்தார்க்கேனும்
அகதாஸூந்-இருந்தார்க்கேனும்
பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை

துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்!
இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
துக்கப்படத் தகாதவர்க்கு துக்கிக்கிறாய் பண்டிதர்கள் போல் பகருகின்றாய்நீ I
உயிர் பிரிந்தும் பிரியாத வர்களுக்காக ஞானிகள் இருப்பர் வருத்தமின்றியே II

——–

12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்

ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

இவ்விதம் நானில்லாம லிருந்ததென்பது இல்லை ; நீ யுமிவ்வரசர்களும் இல்லாமல் I
இருந்ததில்லை ஒரு பொழுதும்; நாமெலாம் இனியுமில்லாமற் போவதென் பதில்லையே II

——–

13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி

யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு,
அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும்,
மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

எவ்விதம் ஜீவனுக்கு இளமையும் வாலிபமும்
முதுமையும் இவ் வுடலில் தோன்றுவது போல் I
அவ்விதம் வேறுடலெடுப்பதுவு மமைகிறதே
அறிவாளி யிக் கூற்றில் மயங்குவதில்லையே II

———

14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்,
மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை
அநித்யா:-அநித்யமானவை
பாரத – தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

புலன்களின் போக விஷயச் சேர்க்கை தருமே குளிர் வெப்பம் சுக துக்கங்களையே I
நிலை யில்லா இவை தோன்றி மறைபவையே அவை தமைப் பொறுத்திடு பரத குலத்தோனே II

———-

15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே

ஹி-ஏனெனில்,
புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே,
ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென,
யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.

யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான்,
அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.

சிறந்தோனே புனிதர்களில்! எத்தீரன் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுவானோ I
அவனைக் கலங்கச் செய்யா இவ் விருமைகள் அவன் தகுதியுற்றான் மாேஷத்திற்கே II

———

16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:

அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை,
ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை,
அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.

இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது.
உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

இல்லாததற்கு இருப்பு என்பதில்லையே இருப்பதற்கு இல்லாமை யென்ப தில்லையே I
இருப்பதில்லாமை இவ் விரு தத்துவம் தனையே இறை ஞானிகள் இவ்விதம் கண்டறிந்தனரே II[ தத்த்வ த³ர்ஶிபி
= இறை ஞானிகள் = ஆத்ம ஞானிகள் =
தனை யுணர்ந்தவர்கள் ]

———-

17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி

அவிநாஸி து-அழிவற்றது தான் என்று,
தத் வித்தி:-அதை அறிந்து கொள்.
யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும்,
ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு,
விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.

இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது;
இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

அழிவற்றதென்று அதை யறிந்து கொள்வாய் அனைத்தும் எதனால் வியாபிக்கப் பட்டுளதோ I
அந்த அழிவில்லாததற்கு ஆங்கழிவை ஆக்குவதற்கு எவர்க்கு மாற்றலில்லையே II

———-

18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத

அநாஸிந:-அழிவற்றான்,
அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான்,
நித்யஸ்ய-நித்தியன்,
ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்,
அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர்,
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.

ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள்
இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

அறிதற் கரிதான ஜீவன் முடிவில்லா நித்யமாம் அதனுடை இவ் வுடலங்கள் அனைத்தும் I
அழியக் கூடியவை யென்று கூறப்பட்டுளது ஆதலால் பரத குலத்தோனே ! போர் புரிவாயாக
II[ இவ்வுடலங்கள் = இந்த சரீரங்கள் = ஶரீரிண: ]

———-

19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே

ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை),
ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ,
ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
தௌ உபௌ-அந்த இருவருமே,
ந விஜாநீத:-அறியாதவர்கள்,
அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை,
ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.

இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;

எவனிதைக் கொல்பவனாக அறிகின்றானோ எவனிதைக் கொல்லப்பட்டதா யறிகின்றானோ I
இவ் வுண்மை அறியாதோரிவ் விருவரே இவ் வாத்மா கொல்வதும் கொல்லப்படுவது மில்லையே II

————-

20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே

அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும்,
ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை,
பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை,
அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்,
ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

இவ்வாத்மா ஒரு போதும் பிறப்பது மிறப்பது மில்லையே இருந்து விட்டு மீண்டு மில்லாமல் போவதென்பதுமில்லையே I
இவ்வாத்மா பிறவாத, நித்யமான, மாறாத, பழமை யானதுமாம் மிவ் வாத்மாவுக் கழிதவன்ப தில்லையே இவ்வுடலழியும் இடத்தும்
II[ இருந்துவிட்டு = ஒரு காலத்தில் இருந்து விட்டு = பூத்வா ]

——–

21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்

பார்த-பார்த்தா!
ஏநம்-இந்த பொருள் (ஆத்மா),
அவ்யயம்-மாறாதது,
நாஸிநம்-அழிவற்றது,
நித்யம்-என்றும் உளது,
அஜம்-பிறப்பற்றது,
ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ,
ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?

இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?

பார்த்தனே ! இவ்வாத்மா அழிவற்றது என்றுமுளது பிறவாதது மாறுதலற்றதென்று I
எவனொருவ னறிகின்றானோ அம் மனிதன் எவ்வாறெவரைக் கொல்வான் கொல்விப்பான் II

——-

22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ

யதா நர:-எப்படி மனிதன்,
ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ,
ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து,
அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல,ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

எவ்விதம் மனிதன் நைந்த தன் துணிகளைக் களைந்து விட்டு வேறு புதுப்புது ஆடைகளை அணிந்து கொள்கிறானோ I
அவ்விதம் ஜீவன் பழைய நைந்த விவ் வுடல்களை விட்டு வேறு புதுப் புது உடல்களை அணிந்து கொள்கின்றானே II

——

23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:

ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை,
ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை,
ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை,
மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.

இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.

இவ்வாத்மாவை ஆயுதம் வெட்டுவதில்லை இவ்வாத்மாவை நெருப்பும் எரிப்பதில்லை I
இவ்வாத்மாவை நீரும் நனைப்பதில்லை இவ்வாத்மாவை , காற்றும் உலர்த்துவதில்லையே II

——-

24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:

அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன்,
அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன்,
அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன்,
அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன்,
நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன்,
ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; அசையாதவன்
ஸநாதந:-என்றும் இருப்பான்.

பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்;
எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

இவ்வாத்மா வெட்ட எரிக்கவியலாது இவ்வாத்மா நனைக்க உலர்த்த வியலாது I
இவ்வாத்மா நித்யமாய் எங்குமுளதியங்காது இவ்வாத்மா எக் காலமும் நகராதிருப்பதுவே II

——

25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி

அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்,
அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன்,
அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன்,
உச்யதே-என்று கூறப் படுகிறது,
தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.

தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப!
ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”

இவ்வாத்மா புலன்களுக்குப் புலப்படாது இவ்வாத்மா மனதிற்கு அகப்படாது I
இவ்வாத்மா மாறுதலற்றதெனப் பகர்வரே இவ்விதமறிந்து வருத்தம் தவிர்ப்பாயே II

——–

26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி

அத ச த்வம்-ஆயினும்,
ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது
எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்,
மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே,
ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.

அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால்,
அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

இவ்வாத்மாவை எப்பொழுதும் பிறப்பதும் இறப்பதும் என்றே நீ கருதிடினும் I
இங்ஙனமே யாயினும் பெருந்தோளா! இவ்விதம் வருத்தமுறுதல் சரியன்றே II

——–

27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில்,
ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில்,
தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக,
த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.

பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில்,
இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.

ஏனெனில் பிறந்தவனுக்கிறப்பு நிச்சயம் இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமே I
ஆதலால் தவிர்க்க வியலா இவ் விஷயமதில் நீ வருத்தப்படுவதற்கு அருகதை யன்றே II

———

28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா

பாரத-பாரதா!
பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை,
அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை,
வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது,
தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?

பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது;
இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?

உயிரெலாம் தோன்றுமுன் தென் படாதிருந்தன அவை யிறந்த பின் தென்படாது போகின்றனவே I
அவ் வுயிர்கள் இடையில் மட்டுமே தோன்றுபவை இவ் விஷயத்தில் வருத்தமேன் பரத குலத்தோனே ! II

——-

29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்

கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன்,
ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான்,
ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான்,
ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான்,
கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

யாரோ ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்க் காண்கிறான் வேறு ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்ச் சொல்கிறான் I
மற்றொருவனோ இவ் வாத்மாவை ஆச்சர்யமாய்க் கேட்கின்றான் யாரொருவனும் இவ்வாத்மாவை அறிவதில்லை கேட்பினுமே II[ஆஶ் சர்யவத்
= அதிசயம் மற்றும் ஆச்சர்யமாய் = அதிசயம் போல் ]

———

30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

பாரத-பாரதா,
அயம் தேஹீ-இந்த ஆத்மா,
ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும்,
நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்,
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும்,
த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.

பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

பரதகுலத்தோனே ! உடல்களனைத் திலுமுள இவ் வாத்மாவை ஒரு போதும் கொல்ல வியலாதே I
ஆதலால் அனைத்துயிர்களின் பொருட்டும் நீ வருத்த முறுதலென்பது சரியன்றே II

——-

31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும்,
விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது,
க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.

ஸ்வ தர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

அவ்விதம் தன்தர்மமென்றே நோக்கினும் பயங்கொள உனக்குத் தகுதியன்றே I
அரசனுக்கு தர்மமாம் போரைக் காட்டினும் மேன்மை தகு கடமை வேறில்லையே II

——–

32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்

பார்த-பார்த்தா,
யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும்,
அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்,
ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது.
இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!

பரந்தப! சொர்க்க வாயில் வடிவிலே திறந்துளது இத்தகை தர்ம யுத்தம் I
தற்செயலாய் வாய்த்திருக்கும் வாய்ப்பீது பாக்யமுடை வேந்தர்களே டைவர் காண் II[ ஸுகின
: = பாக்யவந்த = பாக்யத்தை உடைய ]

——-

33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி

அத-அன்றி,
இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை,
த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால்,
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று,
பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்

அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும்,
கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.

ஆதலால் தர்மத்துடனி ணைந்துள இப் போர் தனைச் செய்யாதிருப்பாயேல் I
அச் சமயம் பாவத்தைப் பெற்றிடுவாய் இழப்பாய் செய் கடமையையும் புகழையும் II

——-

34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே

பூதாநி ச-உலகத்தாரும்,
தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய,
அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள்,
ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன்
அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அப கீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும்
அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

மேலுமே உலகத்தோர் உனைப்பற்றிப்- பேசுவரே அழியா இழிச் சொல் கூறி I
பேரோடும் புகழோடு மிருந்தவனுக்கு மரணத்தினும் கொடிதே இவ்விழிச் சொல் II

———

35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து,
லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ,
மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை,
பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக,
மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.

நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

பயத்தினால் போர் விடுத்துப் புறம் போனாயென்றே யுனைக் கருதுவர் பெருந் தேராளிகள் I
யாவர் முன் மதிப்புயர் வோடிருந்தனையோ அவர் முன் நிச்சயம் சிறுமை யடைவாயே நீ II

———

36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்

தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார்,
தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள்,
பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல,
வதிஷ்யந் -சொல்லுவார்கள்,
தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது

உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

உன் எதிரிகள் உன் திறமை தனை இகழ்ந்தே சொல்லத்தகா பல சொற்களைச் சொல்வாரே I
அதனினும் மிக்கதோர் துன்பந் தனையே அளிக்க வல்லது வேறேதும் உண்டோ ? II

———

37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய்,
ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய்,
தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே,
க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு

கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

கொலை யுண்டால் சொர்கமதை யடைவாய் வெற்றி கண்டால் பூமி தனை யனுபவிப்பாய் I
கௌந்தேயா! ஆதலால் எழுந்திடுவாய் போர் புரியவே நிச்சயம் செய்தவனாய் II

——-

38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி

ஸுக – து:கே-இன்பம், துன்பம்,
லாப – அலாப= பேறு, இழவு,
ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி,
ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு,
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக,
ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.

இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு,
நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.

இன்ப துன்ப லாப நஷ்டந்தனையும் வெற்றித் தோல்வியும் சமமாயெதிர் கொள்வாய் I
அதன் பின் தயாராய் யுத்தம் செய்வாய் இவ்விதம் நீ செய்திடில் பாவமடையாய் II

——–

39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி

பார்த-பார்த்தா,
ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு,
ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன்,
து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்,
யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம்
ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள்-இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

ஞானயோக விஷயத்தில் இவ்வறிவையே பகர்ந்தேன் உனக்குப் பார்த்தனே
கர்மயோக விஷயத்தி லினிக் கேளிதை கர்மபந்தமதை எவ்வறிவுடன் விலக்கிடுவாயோ II

——

40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

இஹ-இதில் (கர்ம யோகத்தில்),
அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை,
ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை,
அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்,
மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும்-அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

இதில் முயற்சி வீணாகவில்லையே எதிர் வினைகளு மிதிலில்லையே I
இந்த தர்மத்தின் சிறிதளவுமே பெரும் பயத்திலிருந்து காத்திடுமே II

——-

41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்

குருநந்தந-குருகுலத் தோன்றலே!
இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
புத்தய:-புத்திகள்,
பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
அநந்தா: ச-முடிவற்றது,

குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

குரு நந்தனா! இங்கு நிச்சய வடிவாம் புத்தியோ ஒன்று தானுள்ளது I
நிச்சயம் அற்றோருடைய புத்திகளோ பல கிளை கொண்டும் முடி வற்றதாயுளதே II

———-

  1. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
    வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:

பார்த-பார்த்தா!
வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்,
ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழை யென்கிறார்கள்.

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்.-தமது கொள்கை ஓழிய மற்றது பிழை யென்கிறார்கள்.

பார்த்தனே ! தெளிவிலோர் மனமகிழ்ந்து வேத கர்ம பலன் புகழ்களைப் பாடியே I
அலங்காரச் சொல் கூறி சொர்கமே முடிந்த முடிவாம் வேறில்லை என்பரே II

———

43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி

காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள்,
ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்,
போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்,
க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.

இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

போகத்தில் மனம் மூழ்கி வுயர் சொர்கம் மேலானதென்றே எண்ணி வுயர் பதவியும் I
போகமும் பெற வேண்டி யுயர் பிறவியும் போதல் கருதி விசேஷச் செயல் செய்வராம் II

———-

44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே

தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு,
போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்,
வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி,
ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.

செல்வ போகப் பற்றும் மிகவுடையோன் அப்பேச்சிலே மனதையு மிழந்தோன் I
தெளிவில்லா அறிவையு முடையோன் புத்தியுமே பரம் நிலை நிற்பதில்லையே II

——–

45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்

வேதா-வேதங்கள்,
த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக-இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

ஆகமங்க ளறிவிக்கும் முக் குண விஷயமாய் அக் குண சாதனமதில் பற்றற்றிருப்பாய் I
இருமை கடந்தே சத்துவத்தில் நிலைப்பாய் ஈட்டிக் காத்தல் துறந்தும் தன் மயமாவாய் II

——

46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:

ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்,
யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது,
ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதங்களினாலும்,
விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
தாவாந்-அவ்வளவு தான் (பயன்).

எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது;
அன்ன பொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.

எங்குமே நீர் விரிந்து இருக்கையிலே சிறிய நீர் நிலை யென்பதும் பயனுளதோ I
வேதப் பொருளு ணர்ந்த விற்பனருக்கோ வேத கர்மங்களின் பயனு மம்மட்டே II

——–

47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி

தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

உனக்கதிகாரம் செயல் செய்தலில் மட்டுமே உனக்கதிகாரம் பயனில் வேண்டாமே I
கர்ம பலன் நிர்ணயம் நீ செய்யாதே கர்மம் செய்தலில் பற்றற்றும் நீ இராதே

——-

48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

தநஞ்ஜய-அர்ஜுனா!
யோகஸ்த:-யோகத்தில் நின்று,
ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி,
ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
கர்மாணி குரு-தொழில்களைச் செய்க,
ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

தனஞ்ஜயா! பற்றனைத்தும் விலக்கியே அடைந்த, அடையாததில் சமநிலை யெய்தியே I
யோகத்தி லமர்ந்தே செய் கர்மத்தையே யோகமென்பது மனதின் சம நிலையே II

————

49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:

தநஞ்ஜய-தனஞ்ஜயா!
புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது,
புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.

தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.

தனஞ்ஜயா! இப் புத்தி யோகத்தினும் மிகத் தாழ்ந்த தல்லவோ இக் கர்மம் I
அடைவாயே தஞ்சம் சம புத்தியில், அற்பமாம் பலன் கருதியே செய்கர்மம்
II[க்ருபணா = அற்பமாம் = வரை யறுக்கப் பட்டது ]

——

50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்

புத்தியுக்த:-புத்தியுடையவன்,
ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான்,
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு,
யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.

சம புத்தி உடையோன் இவ் வுலகில் விடுகின்றான் புண்ய பாவ மிரண்டையும் I
சமத்துவமாம் யோக நிலை மேற் கொண்டே திறமையுடன் செய்கடமை யோகமதே II

———-

51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்

ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்,
பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து,
ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி,
ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

சமபுத்தி கூடி ஞானியர் ஞானமடைந்திட்டு கர்ம வினையாம் பலனைத் துறந்திட்டு I
பிறவியெனும் பந்தம் அறுத்திட்டு பிணி யற்ற பரம்நிலை அடைந்திட்டனரே II

——–

52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச

யதா தே புத்தி-எப்போது உனது புத்தி,
மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ,
ததா-அப்போது,
ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்,
நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.

உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.

எக்காலம் உன்னுடைய புத்தியே மோஹமெனும் சேற்றினைக் கடந்திடுமோ I
அக் காலம் நீ கேட்டது பற்றியுமே கேட்க வுளதிலுமே நீ வைராக்யம் அடைவாய் II

———

53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி

ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய்,
தே புத்தி-உனது புத்தி,
மாதௌ-சமாதி நிலையில்,
நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது,
யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின்,
ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.

உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில்
அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.

பற்பல வேத வாக்யங்களால் கலங்கியஉம் புத்தி எப்பொழுது அசையாமலே I
ஆத்மனிலே உறுதியாய் நிலை நிற்குமோ அப்பொழுதிலே அடைவாய் யோகத்தையே II

———–

அர்ஜுந உவாச

54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
கேஸவ-கேசவா!
ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்?
கிம் வ்ரஜேத-எதனையடைவான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

“அர்ஜுனன் புகன்றான்”
உறுதியான நிலைத்த அறிவுடையோன் ஆத்மனில் தெளிந்த ஞானமுடையோன் I
இலக்கண மெதுவோ கேசவரே !அவன் பேசுவது மமர்வதும் நடப்பது மெங்ஙனம் II

———-

ஸ்ரீ பகவாநுவாச

55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே

ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பார்த-அர்ஜுனா!
மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்,
ப்ரஜஹாதி-துறக்கிறான்,
யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பார்த்தனே ! எப்பொழுதிலே மனதிலே எழும் ஆசைகள னைத்தும் விலக்கியே நிற்கிறானோ Iதன்னிலே தனைக் கண்டு திருப்தி காண் பானோ அப்பொழுது நிலைத்த ஞான முடையோன் என்பரே II

———

56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே

து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய்,
ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.

துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”

துக்கங்களில் கலங்கிடா மனதுடனும் சுகங்களில் ஏங்குதலைத் தவிர்த்தவனும் I
விருப்பு பய கோபம் நீங்கி யுள்ளவனாம் அம் முனியை நிலைத்த அறி வுடையோன் என்பர்II

———–

57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

ய:-எவன்,
ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும்,
ப்ராப்ய-அடைந்து,
ந அபிநந், ததி -மகிழ்வதில்லை,
ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை,
ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும்
பகைப்பதுமின்றி யிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

யாரொருவ னனைத்திலும் பற்றின்றியும் அவ் வவ் வின்ப துன்ப மடைந்ததனில் I
மகிழ்வும் வெறுப்பும் கொள்வதில்ளையோஅவனுடை ஞானம் நிலை யானதாம்
II

———–

58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும்,
ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல்,
அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை,
யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.

எப்பொழுதங் கங்களைப் யெப்புறத்தினின்றும் உள்ளிழுக்கு மாமைபோல், புலன் களை எல்லாம் I
புலப் பொருட் களினின்று முள்ளிழுப்பானோ அவனுடை ஞானம் உறுதி பெற்றதாமே II

——–

59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே

நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும்,
ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

புலப் பொருட்களைத் தவிர்த்த மனிதன் தன், அவை நீங்கியும், ரஸமாம் பற்று விலகாதே I
உயர் ஆன்மாவை யறிந்த வவனுக்கே அந்த ரஸப் பற்று முழுதும் விலகிடுமே II

——-

60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஹி-ஆனால்,
யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட,
ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள்,
ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.

குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

குந்திமகனே ! ஏனெனில் முயற்சி யுடைய புத்திமானான மனிதனின் மனத்தையும் I
கொந்தளிப் பியல்புடைப் புலன்கள் பலமாக விழுத்துச் செல்கின்றனவே II

———

61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி,
மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு,
யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய்,
யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

அவை யனைத்தையும் தன் வயமாக்கிய விவேகி குவிந்த மனதுடன் எனை லக்ஷியமாய் அமர்வன் I
எவனுடைப் புலன்கள் வசப்பட்டிருக்குமோ அவனுடை யறிவு தான் நிலை யானதாகுமே II

———–

62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே

பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது,
தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது,
ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது,
காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

புலப்பொருட்களையே சிந்திக்கும் மனிதனுக்கு அவ் விஷயங்களிலே பற்றும் படர்ந்தது I
பற்றுதலினாலே ஆசையும் அலர்ந்தது ஆசையினாலே கோபமும் தோன்றியது II

——–

63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி

க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது,
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல்,
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம்,
புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.

சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்;
புத்தி நாசத்தால் அழிகிறான்.

கோபத்தினாலே மயக்கமும் மலர்ந்தது மயக்கத்தினாலே நினைவிழத்தல் வந்தது I
நினைவிழத்தலாலே மதி நாசமும் ஏற்பட்டது மதி நாசத்தாநல மனிதன் மடிகின்றானே II

————–

64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி

விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்),
ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி,
ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.

விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.

மாறாக! அடங்கிய மனதுடையோன் விருப்பு வெறுப்பற்ற தன் வயமுடையோன் I
புலன் களைப் புலப் பொருட்களில் செலுத்தினும் தெளிந்த மனவமைதியை அடைகின்றான் II

———–

65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே

ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்,
ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி:
உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது,
ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன்,
புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது

சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.

மனவமைதி தோன்றிடில் இவனுடைய துக்கங்க ளனைத்தும் அழிவடையுமே I
ஏனெனில், தெளிவாம் மனமுடைய ஞானியினறிவு விரைவில் நிலை நிற்குமே II

———–

66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்

அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு,
புத்தி நாஸ்தி-புத்தியில்லை,
அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை,
அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை,
அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனை இல்லை.
மனோ பாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தி யில்லாதவனுக்கு இன்பமேது?

மனமடங்கா தோனுக்குப் புத்தியில்லை மனமடங்கா தோனுக்குத் தியானமில்லை I
தியானமில்லா தோனுக்கமைதி யில்லை அமைதியில்லா தோனுக்கு ஸுகமெங்கே ? II

———

67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி

ஹி-ஏனெனில்,
அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்,
சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ,
தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.

இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம் மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவது போல் அறிவை மோதுகிறது.

காரணம் அலையும் புலன்கள் பின்னே எம் மனம் சென் றலையுமோ அங்ஙனமே I
காற்றினால் நீரிலலையும் படகு போலே அம் மனம் அவனறிவையும லையச் செயுமே II

——

68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
தஸ்மாத்-ஆகையால்,
யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள்,
இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.

ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலை கொண்டது.

ஆகையால் பெருந்தோள் படைத்தவனே !எவருடை புலன்கள் புலப் பொருளிலிருந்தே I
முற்றிலும் அடங்கிய நிலை யிலுள்ளதோ அவருடை ஞானம் நிலை நின்றிருக்குமே II

———-

69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:

ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்,
யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ,
பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.

எல்லா வுயிர் களுக்குமெது விருளோ வதிலே விழிப்புடனி ருப்பான் மன மடங்கியோன் I
எதில் உயிரினங்கள் விழித் திருக்குமோ அதில் இருளிலி ருப்பான் தனை யறிந்த முனி II

70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ

யத்வத்-எவ்விதம்,
ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக,
யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ),
ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

எங்கும் நிரம்பித்ததும்பி அசைவற்று நிலை நிற்கும் கடலை யடைந்து நதிகள் தந்நிலை இழக்கின்றனவோ I
அவ் விதம் தனை யறிந்தோனைப் பொருட்கள் சென்றடையினும் அவனமைதி மாறாதாம், போக விரும்பி அதை யடையானாம் II

———

71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி

ய: புமாந்-எந்த மனிதன்,
ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான்,
ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.

இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.

எம் மனிதன் ஆசைகளனைத்தும் துறந்து நானெனது என்பதனைத்தும் இழந்து I
ஏங்குதல் சிறிதுமின்றி உலாவிடுவானோ அவன் அடைகின்றானே அமைதியை

———

72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி,
ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை,
அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும்
அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு,
ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-ப்ரஹ்ம நிர்வாண மெய்துகிறான்.

பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை.
இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

ஓபார்த்தனே !
இதுவன்றோ பிரம்மத்தை யடைந்தோன் நிலை இந்நிலை யடைந்த பின் மோகமென்பதில்லை I
அந்திமக் காலத்திலும் அதில் நிலைத்தே திரும்பி வாரா முக்தி நிலை யடைகின்றானே II

———–

ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–செயலை செயல் யோகமாக்குதல்

அர்ஜுன உவாச

1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
ஜநார்தந-ஜநார்த்தனா,
கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது,
தே மதா சேத்-நின் கொள்கையாயின்,
தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில்,
மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

“அர்ஜுனன் புகன்றான்”
ஜனார்த்தனா! ஞானம் கர்மத்தினும் மேலாமென்பது உம்முடை கருத்தானால் |
அவ் வமயம் கேசவா! எனை யேன் கொடியதான வினையதில் ஏவுகின்றீர்||

2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்

வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால்,
மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை,
தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை
தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

முரண்பாடுளது போன்ற சொற்களாலென் புத்தியைத் தாம் மயக்குவது போலுள்ளது |
நானெதனால் உயர் நலம் பெறுவேனோ அதிலொன்றை நிச்சயித்துப் பகர வேண் டுமே ||

———-

ஸ்ரீ பகவாநுவாச

3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது,
ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்,
யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டு வித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பாவமற்றவனே ! ஆதியிலென்னா லிப் புவியில் தத்வ விசாரம் செய்வோனுக்கு ஞான யோகமாம் I
செயல்களைச் செய்வோனுக்கு கர்ம யோகமாம், இவ் விரு வாழ்க்கை முறை பகரப் பட்டதாம் II

——–

4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி

புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்,
நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை,
ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை.
துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

மனிதன் செயல்களைத் துவங்காததால் செயலற்ற முக்திநிலை அடை வதில்லையே I
செயல்களை மட்டுமே துறப்பதனால் செயலில்லா நிறை நிலை எய்துவதில்லையே II

———–

5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:

ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே,
ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி,
கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.

எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

யாரும் கணப் பொழுதேனும் செயலில் ஈடுபடா திருப்பதில்லையே ஏனெனில் I
இயல்பான குணங்களினாலே யெல்லோரும் தன் வயமின்றிச் செயலிலீடு படுகிறார்களே II


6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே

ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா,
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு,
இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை,
மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ,
ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப் படுகிறான்.

கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

எவன் செயல் புலன்களையே நன்கடக்கியும் மனதால் புலப்பொருட்களையே நினைந்தும் I
மனம் கலங்கி யிருக்கின்றானோ அவனைப் பொய் யொழுக்கமுடை யோனென்றே பகர்வர் II

———

7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்,
கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

அர்ஜுனா, அவ்விதமின்றி யெவன் தன் புலன்களை மனத்தினால் நன்கடக்கியும் I
பற்றற்றும் செயல் புலன்கள் மூலமாய் செயல் யோகத்தைத் துவங்குமவன் சிறந்தோன் II

——-

8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:

நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்,
ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ,
அகர்மண:-தொழிலின்றி,
தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட,
ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.

விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய் விடும்.

விதிக்கப்பட்டுள செயல்களை நீ செய்வாய் செயல் செய்யாமை யினும் செய்தல் சிறந்ததாம் I
மேலுமெவ்விதச் செயலையும் செய்யாதோன் உடலைப் பேணுத லென்பது மியலாது போகுமே II

———–

9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது,
அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது,
கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து,
ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது-ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.

வேள்விச் செயல் தவிரப் பிற செயல்களால் இம் மனித உலகம் பந்தப் படுகின்றதே I
குந்திமகனே ! பற்றின்றிச் செயல்களையே வேள்வியின் பொருட்டு நன்கியற்றுவாயே II

———-

10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்

புரா-முன்பு,
ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து,
உவாச-சொல்லினான்,
அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள்,
ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களை யெல்லாம் தருவதாக ஆகட்டும்.

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

ஆதியில் பிரம்ம தேவன் வேள்வியுடன் உலகோரைத் தோற்றுவித்து வேள்வியினால் I
வளமடைவீர்! ஈதுங்களுக்கு இஷ்டமானதை வழங்கிடும் காமதேனுவா கட்டுமென்றார் II

———–

11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்,
தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்,
பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால்,
பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை,
அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

இதன் மூலம் தேவர்களைப் போஷியுங்கள் அவர்களும் உங்கதளப் போஷிக்கட்டும் I
இவ்விதம் ஒருவரை யொருவர் பேணுதலால் உயர்வான நன்மையை யெய்துவீர்களாம் II

——–

12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:

யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்,
ஹி தாஸ்யந்தே-தருவர்,
தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்,
ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.

வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”

வேள்வியால் பேணப்பட்ட அத் தேவர்களுங்களுக்குப் பிடித்த போகங்களை நிச்சய- I
மளிப்பர்; அவர்களளித்தவைகளை மீண்டு மளிக்காது தானே யுண்ணுவோன் கள்வனாம் II

————-

3. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியி லெஞ்சியதை யுண்ணும் சான்றோர் எல்லாப் பாவங்களி லிருந்தும் விடுபடுகின்றனர்I
ஆனாலெவர்கள் தமக்காகவே சமைக்கும் அத்தீச் செயலோர் பாவத்தையே உண் கின்றனர்II

—————

14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:

பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன,
பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது,
பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது,
யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.

அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

உணவினின்று உயிரினங்க ளுருவாகின்றன-மழையினின்று உணவுகள் உண்டாகின் றன I
வேள்வியினின்று மழைகள் பொழிகின்றன வேள்வியோ செயல்களிலிருந்து விளைகின்றதே II

——–

15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்

கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது,
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்,
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது.
ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

வேதத்திலிருந்து செயல்களு திக்கின்றன வேதமோ அழியாப் பிரஹ்ம்மனிடமு திக்கின்றன- I
வென் றறிக; ஆதலாதலெங்குமுள்ள வேதமோ வேள்வியில் நித்யமாம் நிலை நிற்கின்றதே II

————

16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி

பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில்,
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக,
இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ,
ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான்,
மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.

இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கை யுடையான்;புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

அர்ஜுனா! யாவனிங்கு இவ் விதமாய்ச் சுழலும் படைப்புச் சக்கரம் பின் பற்றானோ I
பாவ வாழ்வும், புலனின் பத்திலுமவன் திளைத்தே வீண் வாழ்வு வாழ்கின்றானே II

———

17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே

து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன்,
ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான்,
ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான்,
ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்,
தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.

தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

ஆனாலாத்மாவிலே திளைத்திருக்கும் மனிதன் ஆத்மாவிலேயே திருப்தி யுடனி ருப்பவனாய் I
ஆத்மாவிலேயே சந்தோஷமுள்ள வனாயிருக்கும் அவனுக்குச் செய்ய வேண்டிய தே துமில்லையே II

———

18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:

தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில்,
கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை.
அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை,
ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும்,
அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும்,
கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.

அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

இப்புவியிலிருக்கும் இஞ்ஞானிக்கு செயலைச் செய்தும், செய்யாததாலும் பலநேதுமில்லை I
இன்னும் இவனுக்கு எவ் வுயிர்களிடத்தும் பயன் நாடிச் சார்ந்திருக்க வேண்டுவதில்லையே II

———-

19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
ஸமாசர-செய்து கொண்டிரு,
ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

ஆதலால் நீ பற்றின்றிச் செய்ய வேண் டிய செயல்களை எப்பொழுதும் நன்கியற்றுவாய் I
ஏனெனில் பற்றற்று செயல்களைச் செய்யும் மனிதன் பரம நிலை எய்துகின்றான் II

——-

20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி

ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
கர்மணா ஏவ-செய்கையாலேயே,
ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
நீ தொழில் புரிதல் தகும்.

ஏனெனில் கடமைகளின் மூலம் முக்தியையும் ஜனகன் முதலானோர்கள் அடைந்தனரே I
நீ யுமுலகை நல் வழிப் படுத்த வேண்டியே கடமையைச் செய்வதற்குரிய வனாகின்றாய் II

—–

21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே

ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ,
இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்),
ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ,
லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

மேலோன் எதை யதைக் கடைப் பிடிக்கின் றானோ உலகோர் அதை யதையே யனுசரிக்கின்றனரே I
அவனெதைப் பிரமாணமாய்க் கொள்கின்றானோ அதனையே உலகமும் பின்பற்றுகின்றதே II

——-

22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி

பார்த-பார்த்தா,
மே-எனக்கு,
த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும்,
கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை,
அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை,
கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.

பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

அர்ஜுனா! மூவுலகிலும் எனக்குச் செய்ய வேண்டிய தேதுமில்லையே ! இனியுமே பெற- I
வேண்டியதும் வேண்டாததும் ஏதுமில்லை இருப்பினும் செயலில் நான் ஈடுபடுகின்றேனே II

——-

23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

ஹி பார்த-ஏனெனில் பார்த்தா!
ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின்,
ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா,
எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

பார்த்தனே ! ஏனெனில் எப்பொழுதும் நான் சோம்பலின்றிச் செயல்களி லீடுபடாவிடில் I
என் பாதயையே யுதாரணமாய் மனிதர்கள் என்றுமே எவ் விதத்திலும் பின் பற்றுவரே II

——-

24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:

அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால்,
இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்,
ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன்,
இமா: ப்ரஜா:-இந்த மக்களை,
உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.

நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்;
குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

செயல்களை யான் செய்யா திருப்பேனாகில் இப் புவன மனைத்தும் அழிந்து போகும் I
மேலும் நான் குலக் குழப்பம் செய்தவனாவேன் இம் மக்களனைவரையும் அழித்தவனாவேன் II

—–

25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்

பாரத-பாரதா,
அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்,
யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ,
ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி,
லோக ஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி,
குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.

பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

பரத குலத்தோனே ! செயல் பற்றி னா லெவ்விதம் அறிவிலோர் செயல்களைச் செய்வாரோ அவ் விதம்
அறிவுளோர் உலக நன்மையைக் கருதியே பற்றற்றுச் செயல்களைச் செய்ய வேண்டுமே II

———–

26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்

யுக்த: வித்வாந்-அறிவுடையோன்,
கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு,
புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி,
ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.

அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது.-அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.

செயலில் பற்றுள்ள அறிவிலோர் புத்தியிலே ஞானியவன் குழப்பமுண்டு பண்ணலாகாதே I
நன்றாகத் தானும் செயல்களை நன்கியற்றியே அவர்களையும் செயலிலீடுபடச் செய வேண்டுமே II

——–

27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

எவ் வகையிலும் பிரகிருதியின் குணங்களால் செயல்களனைத்தும் செய்யப் படுகின்றன I
அகங்காரத்தால் மனம் மயங்கி யிருப்போன் செய்பவன் நான் என்றெண்ணி யிருக்கின்றானே II

————

28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே

து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.

ஆனால், பெருந்தோளா!குணங் களுமவை தம் செயல்களின் தத்துவத்ததயு முணர்ந்தோன் I
குணத் தோன்றல் குண வடிவாம் பொருட்களில் செல்கின்றன வென்றே பற்றற்றிருப்பான் II

————–

29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்

ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்,
குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்,
தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத,
மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.

இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்.சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.

பிரகிருதி குணங்களால் நன்கு மயங்கியோர் குணக் கர்மங்களில் பற்று வைக்கிறார்கள் I
முற்றுமறியா அம் மந்த புத்தி யுடையோரை முற்றுமறிந்தோன் கலங்கச் செய்யலாகாதே II

————–

30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:

அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக,
ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும்,
மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு,
விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்,
நிராஸீ நிர்மம:
பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று,
யுத்யஸ்வ-போர் செய்.

எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

ஆத்மனில் வைத்த மனதுட னிருந்திடு எல்லாச் செயல்களையு மென்னிடமளித்திடுI
எதிர்பார்ப் பெனதென்றெண் ணங்கதளந்திடு மனக் கொந் தளிப்பின்றிப் போ
ர் புரிந்திடு II

————-

31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:

யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி,
ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய்,
மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை,
நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ,
தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப்
பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

எம் மனிதர்கள் சிரத்தை யுடன் கூடி நின்று என்னுடை கொள்கையைக் குறை காணாமல் I
இவ் வுபதேசத்தின் படி வாழுமவர்களும் செயல்களினால் விடுபடு கின் றார்களே II

——–

32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:

து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால்,
மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ,
தாந் அசேதஸ:-அந்த மூடர்களை,
ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்,
நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ,
எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

எவர்கள் யான் கூறிய இவ் வுபதேசத்தைக் கடைப் பிடியாது குறை கண்டும் வாழ்ந்திடில் |
எவ்வறிவிலும் குழப்பமுடை அவர்களை விவேகமிலாது நஷ்டமடைந் தோனாயறிதி ||

————

33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட,
ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே,
சேஷ்டதே-நடக்கிறான்,
நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான்.
உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

ஞானத்தை யுடையோனும் தன்னுடைய இயல்பு சார்ந்தே இயங்குகின்றான் எல்லா I
உயிர்களு மியல்பையே அனுசரிக்கின்றன இதைத் தடுப்பதாலாகப் போவதென்ன? II

———

34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ

இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்,
ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன,
தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது,
ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.

இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

ஒவ்வொரு புலன்களின் விஷயத்திலும் விருப்பும் வெறுப்பும் அமைந்துள்ளன I
அவைகளினிடத்தில் வசப்படலாகாது ஏனெனில் அவை இவனுக்கு விரோதிகளாம் II

——–

35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது,
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்,
பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.

நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

திறமையோடு செயும் பிறர் தர்மந் தன்னிலும் குணங்களற்ற தன் தர்மம் மீலானதாம் I
மரணமும் தன் தர்மத்தில் மேன்மையாம் பிறர் தர்மமோ அபாயத்தை யளித்திடுமாம் II

————

அர்ஜுந உவாச

36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன்,
அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும்,
பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

அர்ஜுனன் புகன்றான்”
வ்ருஷ்ணி குலத்தோனே! இனி யிம் மனிதன் விருப்ப மில்லாமலி ருக்கும் பொழுதும் I
பலமாகத் தள்ளி விடப் பட்டவன் போலே எதனால் ஏவப்பட்டுப் பாவம் செய்கிறான்? II

————–

ஸ்ரீ பகவாநுவாச

37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
இதுவே வேட்கையும் இதுவே கோபமுமாம் இவையோ ரஜோ குணத்தில் தோன்றியவையாம் I
இங்கே யிதை அனைத்தையும் விழுங்குமெனவும் இதை மஹா பாவியுமாய் எதிரியுமா யறிவாயே II

————–

38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்

யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும்,
மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும்,
ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ,
யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ,
ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும்
இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

எங்ஙனம் நெருப்பைப் புகை சூழ்ந்துளதோ கண்ணாடி அழுக்கினால் மறைக்கப் பட்டுளதோ I
கருவை கருப்பை எவ்விதம் மூடியுளதோ அவ்விதம் அதனாலிது மறைக்கப் பட்டுளதே II

———

39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச

ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே,
துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்,
காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும்,
ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை,
ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

ஞானிகளுக் கெப்பொழுதும் பகையதுவாய் எளிதினில் நிறைவினை யடையாததுமாய் I
குந்திமகனே ! வேட்கை யெனுமித் தீயினால் ஞானம் மூடி மறைக்கப்பட் டுளது காண் II

———-

40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்

இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும்,
அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.

பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர்.
இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

இந்திரியங்களும் மனமும் புத்தியும் இவைகளே இதனுடைய இருப்பிடமாம் I
இவைகளின் வழியாக ஞானத்தை மறைத்து இது உடல் உடையோனை மயக்குகின்றதே II

————

41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்

தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய,
ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

பரத குலக் காளையே ! ஆகையால் ஆதியில் நீ புலன்களை யெலாம் நன்றாய் வசப்படுத்தி I
ஞான விஞ்ஞான மிவைகளை யழித்திடும் இப் பாவியை நிச்சயம் விலக்கி விடு II

—————

42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:

இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர்,
இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல்,
மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்,
புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்;
மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

புலன்களை தேகத்திலும் மேலாய்ச் சொல்வர் புலன்களைக் காட்டிலும் மேலானதாம் மனம் I
மனதினும் மேலானதாம் புத்தி யென்பர் புத்தியைக் காட்டிலும் மேலானவன்-
அவன் II

43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்

ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான,
புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து,
ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம்,
ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

பெருந்தோளாய்! இங்ஙனம் புத்தியினும் மேலாம் பரத்தை யறிந்து, நன்கடக்கியே I
மனதை மனதால், எளிதினில் வெல்லவியலா ஆசை வடிவாம் பகைவனை அழிப்பாய் நீயே ! II

———

ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–அறிவால் செயலை விலக்கி அறிதல் ”

ஸ்ரீ பகவாநுவாச

1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை,
அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்,
மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
இந்த அழிவில்லா யோகத்தை யான் ஆதித்யனுக்குப் பகர்ந்தேன் |
ஆதித்யன் மனுவுக்குப் புகன்றார் மனு இஷ் வாகுவுக்குக் கற்பித்தாரே ||

——–

2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

பரந்தப-எதிரிகளை எரிப்பவனே !
ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்,
ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக,
ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர்.
பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

இவ்வாறு பரம்பரையாய் வழங்கப்பட்ட இதனை இராஜரிஷிகள றிந்திருந்தனர் I
எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா!அந்த யோகமானது காலப் போக்கில் மறைந்த
தே II

————

3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்

மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்,
இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை,
அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது,
ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.

அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்,
நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.

என் பக்தனும் தோழனுமாய் யுள்ளாய் ஆதலால் அத் தொன்மையான அதே யோகம் I
இத்தினம் என்னாலுனக்கு இயம்பப் பட்டது ஏனெனில் இது மேலான இரஹஸ்யமாம் II

———

அர்ஜுந உவாச

4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது,
த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று,
ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?

அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது.
நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?

“அர்ஜுனன் புகன்றான்”
உம்முடையப் பிறப்பென்பது பிந்தியது கதிரவனின் பிறப்பென் பது முந்தியது I
ஆதியில் தாங்கள் தான் உபதேசித்தீர்கள் என்பதை யான் எங்ஙன மறியலாகும் II

ஸ்ரீபகவாநுவாச

5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பரந்தப அர்ஜுந-அர்ஜுனா,
மே தவ ச-எனக்கும் உனக்கும்,
பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்,
அஹம் வேத-நான் அறிவேன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
எனக்கும் உனக்கும் அர்ஜுனா! பலப்பல பிறவிகள் கடந்து போயின I
எதிரிகளை வாட்டுபவனே ! அவை யெலாம் நன்கறிவேன் நான், நீயோ வறிய மாட்டாய் II

——–

6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

பிறப்பற்றவன் நான் அழியாதிருப்பினும் உயிர்களுக் கெல்லாம் ஈசனாயிருப்பினும் I
என்னுடைய பிரகிருதியை வசப் படுத்தியே என்னுடைய மாயையால் அவதரிக்கின்றேனே II

————-

7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது,
தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய்,
அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ,
ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ,
அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பரதவம் சத்தோனே ! எப்பொழுதெலாம் தர்மத்திற்கு நலிவு ஏற்படுகின்றதோ I
அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகின்றதோ அப்பொழுது எனை யான் தோற்று விக்கின்றேனே II

—————

8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும்,
துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும்,
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும்,
யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

ஸந் மார்கத்தோரைக் காக்கும் பொருட்டும் தீயன செய்வோரை விலக்கும் பொருட்டும் I
தர்மம் தனை நிலை நாட்டும் பொருட்டும் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் நான் II

———-

9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அர்ஜுனா!இவ்விதம் என்னுடைய தெய்வீகப் பிறப்பையும் செயலையும் உள்ளவாறெவன் I
அறிகின்றானோ , அவனுடலை விட்ட பின் மீண்டும் பிறவாது எனையே அடைகிறான் |
|

———–

10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்,
மந்மயா:-என் மயமாய்,
மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து,
பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று,
மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.

விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்

ஆசை யச்சம் சினம் நீக்கி யோரெலாம் என் மயமாய் யெனைத் தஞ்ச மடைந்நதாரெலாம் I
ஞான தபஸால் தூய்மை யடைந்தோராய்ப் பலர் என்னுடை இயல்பையே அடைகிறார்கள் II

11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

எவர்கள் எனை எப்படி வழிபடுகின்றனரோ அவர்களுக்கு நானவ்விதமே அருளுகின்றேன் I
பார்த்தனே ! மக்கள் எல்லா விதங்களிலும் என்னுடை வழியையே பின் பற்றுகின்றனரே ॥

———–

12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா

இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில்,
கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர்,
தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்,
ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி,
க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!

தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்.
மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!

வினைகளின் பலன்களை விரும்புவர்கள் தேவதைகளை இவ்வுலகில் பூஜிக்கின் றனர் I
ஏனெனில் கர்மத்திலுதிக்கும் பலன்கள் விரைவில் வருகின்றனவே மனித வுலகில் II

————-

13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

நான்கு வர்ணங்களு மென்னால் குணத்திற்கும் செயல்களுக்கு மேற்பப் படைக்கப் பட்டன I
அவைகளைச் செய்தவனாயினும் செய்யாதவனாய் மாற்றமில்லா தவனாயுமெனை அறிவாயாக! II

———–

14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே

மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல,
மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை,
ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன்,
ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை.
இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

என்னைச் செயல்கள் தீண்டுவதில்லை எனக்குச் செயல் பலனிலே ஆசை யில்லை I
என்றெனை எவன் நன்கு அறிகின்றனோ செயல் பலன் களாலவன் கட்டுண்ணான் II

———

15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்,
ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து,
கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர்,
தஸ்மாத் த்வம்-அதனால் நீயும்,
பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி,
கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.

முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர்.
ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.

இவ்விதமறிந்து முக்தியில் நாட்டமுடைய முன்னோர்களாலும் செயல்கள் செயப்பட்டன I
ஆதலால் நீயும் முன்னாளில் முன்னோர்கள் செய்து வந்த அச் செயல்களையே
செய்வாயாக II

————-

16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்

கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்,
கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்,
யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால்,
அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.

எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்க மெய்துகிறார்கள்.-ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.

செயலெது செயலின்மை யெதுவென்று மேதாவிகளும் மதி மயங்கியே யுள்ளனர்I
எதை யறிந்து துக்கத்தினின்று விடுபடுவாயோ அச் செயல் பற்றி யுனக்குப் பகர்வேன் கேள் II

————-

17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:

கர்மண: அபி-தொழிலின் இயல்பும்,
போத்தவ்யம்-தெரிய வேண்டும்,
அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்,
விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்,
ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.

தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்;
தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

செயல்களைப் பற்றியு மறிய வேண்டும் செயல் தவிர்த்தல் பற்றியு மறிய வேண் டும் I
செய்யாதிருத்தல் பற்றியு மறிய வேண்டும் செயலினியல்பு அறிதற்கு அரிதானதாம் II

———-

18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்

கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும்,
ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும்,
ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ,
ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன்,
ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).

செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ,
அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

யாரொருவன் செய்தலில் செயலின்மையையும் செய்யாதிருத்தலில் செயலையும் காண் கிறானோ I
மனிதருள் புத்திமானும் யோகியுமாமவன் செய வேண்டிய தெல்லாம் செய்து முடித்தோனாம் II

———-

19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்,
காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ,
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ,
தம் புதா:-அவனை ஞானிகள்,
பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.

எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

எவருடைய செயல் தொடக்கமு மவாவும் பலனைச் சார்ந்த நோக்கமு மின்றியும் I
ஞானத் தீயால் எரிக்கப் பட்டதாயுளதோ அறிவாளிகள், அவரை ஞானி யென்பரே II

———–

20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:

கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக,
நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக,
ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட,
கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).

கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும்
சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.

செயல் பலனிலே ஆழ் பற்றை விட்டு என்றும் செயலில் திருப்தனாய் எதையுமே சாராது I
செயலில் ஈடு பட்டிருந்த பொழுதிலும் செயலெதையும் செய்வதில்லை யவன் II

21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி,
த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,
நிராஸீ-ஆசையற்றவனாய்,
கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்,
கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.

பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

எதிர்பார்ப்பற்ற, மனதையும் உடலையும் நன்கடக்கி அனைத்துடைமை களைத் துறந்தும் I
செயல்களை உடலைப் பேணுதற்கு மட்டுமே செய்பவன், பாவத்தை அடைவதில்லையே II

—————–

22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே

யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக,
விமத்ஸர:-பொறாமையற்றவனாக,
த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக,
ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்,
க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமை யற்றவனாய் –வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

தானாகக் கிடைத்ததில் மகிழ்வுடையோன் பொறாமை யற்றவ னிருமைகளைக் கடந்தவன் I
வெற்றி தோல்வியில் சமமா யுள்ளவன் செயலைச் செய்யினும் பந்தப் படுவதில்லை II

23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து,
முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்,
யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில் புரிவான்,
ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான்,
வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது

பற்றிலனாய் முக்தனாய் ஞானமதில் நிலை பெற்ற மனத்தினை யுடையோனாய் I
இறைவனுக்காகச் செயலில் ஈடுபடுமவனின் எல்லாச் செயல்களும் கரைந்து விடுகிறதே II

———————–

24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்,
ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்,
ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்,
ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.

பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

அர்ப்பணக் கருவியும் ஹவிஸும் பிரம்மன் அர்ப்பணிக்கிறதா மக்னியில் பிரம்மன் I
அப்பிரம்மச் செயலில் மனம் குவிந்துள்ள அவனால் அடையப் படுவதும் பிரம்மனே II

————–

25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி

அபரே யோகிந:-சில யோகிகள்,
தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே,
பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள்,
அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில்,
யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து,
உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள்.
வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.

மற்ற யோகிகள் தேவதைகளை யெலாம் வேள்வியால் பூஜிக்கின்றனர், இன்னும் I
வேறு சிலர் பிரம்மத் தீயில் ஆத்மாவை ஆத்மாவினாலேயே வேள்வி செய்கின் றனர்II

————–

26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை,
ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்,
அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை,
இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.

வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.

செவி முதலிய புலன் களை வேள்வியாய்ச் சிலர் அடக்கு தலெனுமக்னியி லிடுகிறார்கள் I
மற்றையோர் ஒலி முதலாய் விஷயங்களை வேள்வியாய்ப் புலனக்னியி லிடுகிறார்கள் II

————-

27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே

அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்,
ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும்,
ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற,
ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில்,
ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா
இந்திரியச் செயல்களையும் உயிர்ச் செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

மேலும் சிலர் ஞானக் கர்மப் புலன்களின் செயல்களை , விவேகத்தால் பிரகாசிக்கும் I
ஆத்மாவினில் மனதை யடக் குதலெனும் யோகத் தீயில் வேள்வியாய்ச் செய்கின் றனர் II

————–

28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:

அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்,
தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர்,
ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.

விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

சிலர் பொருட்களைத் தானமெனும் வேள்வியாகவும், தவ யோகங் களையும், வேதமோதுதல்-ஞான I
விசாரத்தையும் வேள்வி யாய்ச் செயும்,விடா முயற்சிதீர் மானமுடையோரென அநேகராம் II

———–

29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:

அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்,
ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபான வாயுவில் பிராண வாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்,
ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.

இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.

மற்று சிலர் அபான வாயுவில் பிராணனையும் பிராணனிலபா னனையும் வேள்வியாய்ச் செய்வர்I
பிராணாபானப் போக்கினை அடக்கியே சிலர் பிராணா யாமத்திலேயே கருத்தூன் றியுளர் II

———–

30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:

அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி,
ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்,
ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து,
யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்.
இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

வேறு சிலர் உணவில் நியம முடையோராய் பிராணனைப் பிராணனில் வேள்வி யாய்ச் செய்வர்I
வேள்வியறிந்து செய்யுமிவர் களனைவரும் வேள்வியாலே பாவத்ததப் போக்கி யவர்களாம் II

————

31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம

குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய்,
யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்,
ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்,
யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக் கிவ்வுலகமில்லை,
அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?

வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்.
வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?

32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே

ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள்,
ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக,
விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன,
தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன,
வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

இங்ஙனம் பலவகையான வேள்வி யெலாம் வேதத்தின் வாயிலாய் விளம்பப் பட்டுள்ளன I
அவையாவும் செயலில் தோன்றி யவைகள் எனவறி இவ்விதம் நீ யறிந்துப் பின் முக்தி யடைவாயே II

33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே

பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா!
த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்,
ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது,
அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம்,
ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.

பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.

பரந்தப! பொருள் கொண்டு செயும் வேள்வியினும் ஞானத்தால் செயும் வேள்வி மிக வுயர்ந்தது I
பார்த்தனே ! எல்லாச் செயலும் மீதமின்றியே ஞானத்தில் முழு முடிவை அடைகின்றனவே II

34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்,
தத் வித்தி-அதனை அறிந்துகொள்,
தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள்,
தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.
உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

வீழ்ந்து வணங்கியே பணிவிடை செய்தும் உண்மை யறியவே கேள்விகள் கேட்டும் I
அதனை யறிவோமாக;கற்று ணர்ந்த ஆத்ம ஞானிகள் ஞானத்தை உபதேசிப்பரே II

———-

35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி

யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர்,
பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்,
ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ,
யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி,
ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.

அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய்.
இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

பாண்டவா! எதை யறிந்த பின் மோஹத்தை மீண்டுமடைய மாட்டாயோ எதனால் I
அனைத்து உயிர்களையுமே உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாயோ அதை யறிவாய் II

————-

36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி

ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும்,
பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால்,
ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தை யெல்லாம்
ஞானத் தோணியால் கடந்து செல்வாய்.

பாவஞ் செய்தோ ரெல்லோரை நோக்கினும் பெரும்பாவம் செய்தவனாய் நீ யிருப்பினும் I
ஆத்ம ஞானமென்னும் படகிலேறி எளிதில் பாவமங்களனைத்தையும் கடந்திடுவாய் நீ II

————

37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா

அர்ஜுந-அர்ஜுனா!
யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ,
ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ,
ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா,
ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

அர்ஜுனா! சுடர் விட்டெரியும் நெருப்பானது எவ்விதம் விறகுகளை நீறாகச் செய்யுமோ I
அவ்விதம் ஞானமெனுமக் கனலானது அனைத்துச் செயல்களையும் நீறாக்குமே II

————

38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி

இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்,
பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை,
தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்,
ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.

ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.

இவ்வுலகில் தூய்மை தனைத் தருதலில் ஞானத்துக் கொப்பானதே துமில்லையே I
செயல்யோக மதில் நிறைவடைந்தோனதை காலப் போக்கில் தன்னகத் தடைகின்றான் II

————

39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி

ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக,
தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்,
ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான்,
ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின்,
அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்

சிரத்ததயும் முக்தியும் மேலாயுடையோன் புலன் களை யடக்கியோன் ஞானமடைகிறான் I
ஞானமதனை யடைந்தபி னவன் மேலாம் அமைதியினைத் தாமதமின்றி யடைகின் றான் II

———-

40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:

அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி,
ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்,
ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை,
பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்.
ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

அறிவிலியும் நம்பிக்கை யில்லோனும் ஐயமுறு பவனுமழிவை யடைகின்றான் I
சந்தேக முறுமவனுக்கிவ் வுலகும் அவ்வுல குமில்லை ,சுகமுமில்லையே II

41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய

தனஞ்ஜயா!-அர்ஜுனா,
யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து,
ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை,
கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.

யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.

யோகத்தினால் செயல்களைத் துறந்தவனை மெய்யறிவினால் ஐயங்களை யகற்றியவனை I
தன்னாத்ம சொரூபத்தி லிருக்குமவனை தனஞ்ஜயா! செயல்கள் தீண்டுவதில்லை II

———-

42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத

தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா,
ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து,
யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.

அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.

ஆதலால் நீ யறியாமை யாலுதித்திருக்கும் அகஉள்ளத் திலுள இவ்வான்ம சந்தேகத்தை I
மெய்ஞான மெனும் வாளினால் வெட்டி வீழ்த்தி யோகம் தனைக் கைக் கொள் பாரதா!எழுந்திரு II

——

ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–“செயல் துறவு”

அர்ஜுந உவாச

1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்

அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா !
கர்மணாம்-செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய்,
ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று,
ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி,
தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்;
பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

“அர்ஜுனன் புகன்றான்”
கிருஷ்ணா! தாங்கள் செயல் துறத்தலையும் செயல் யோகத்தையும் புகழ்கின்றீர்கள் |
ஏதெனக்கு இவ் விரண்டினில் மேலானதோ அஃதொன்றை நிச்சயித்துப் பகர வேண்டுமே ||

ஸ்ரீபகவாநுவாச

2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும்,
நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன,
து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்ம துறவைக் காட்டிலும் கர்ம யோகம்,
விஸிஷ்யதே-மேம்பட்டது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
செயலைத் துறத்தலும் செயல் யோகமும் இவ்விரண்டும் மேன்மை அளிப்பவையே I
ஆனாலவைகளில் செயலைத் துறத்தலினும் செயலைச் செய்தலென்பது மேலானதே —
ஸம்ந்யாஸ = ஸாங்க்ய யோகம் / செயல்துறவு / ஞான யோகம் / சன்யாஸ வாழ்க்கை ; –கர்மயோகம் / செயல் யோகம் / க்ருஹஸ்த பாதை / இல்வாழ்க்கை

————

3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே

மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய:
ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும்,
ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும்,
ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன்,
ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி,
ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய்.
பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

பெருந்தோளா! விருப்பும் வெறுப்பு மற்றோன் என்றும் துறவி யென் றறியத் தக்கவன் I
ஏனெனில் இருமைகளை விட்டொழித்தவன் எளிதில் தளைகளிலிருந்து விடுபடுகிறானே II

————–

4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்

ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும்,
ப்ருதக்-வெவ்வேறென்று,
பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்,
ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன்,
உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.

சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்.-இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

செயல் துறவையும், செயல் யோகத்தையும் பாலர்கள் வேறாய்ப் பகர்வர், பண்டிதரோ I
அவ்விதமில்லை , இவற்றுள் ஒன்றினில் நிலைத்தோனிரண்டின் பலனைப் பெறுகிறானே II

5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி

ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ,
தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள்,
ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.

சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.

எந்நிலை யடைவரோ செயல் துறந்தோர் அந் நிலை யடைவரே செயல் யோகத்தார் I
எவன் யோகம் ஸாங்க்ய மிரண் டிதனயும் ஒன்றாய்க் காணுமவன் அவனே காணுமவன் II

—————

6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி

து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய்,
அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்,
யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை,
நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.

பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்.
யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

பெருந் தோளாய்! செயல் யோக மின்றித் துறவை அடைவதரிதாமா னாலிறை தியானத்துடன் I
கூடியே முயற்சி செய்யும் முனி வனானவன் தாமதமின்றியே பிரம்மத்தை யடைகின்றான் II

————–

7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே

விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன்,
ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,
விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன்,
ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன்,
யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும்,
ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.

யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,-எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

செயல் யோகம் கூடி மனந் தெளிந்தோன் உடல் புலன் எல்லாம் நன் கடக்கியே I
அதனத் துயிர்களைத் தன் னாத்மாவாய்க்- காணுபவன் செயல் செய்யினுமது தீண்டாதே I

—————-

8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்

பஸ்யந்-காண்கினும்,
ச்ருண்வந்-கேட்கினும்,
ஸ்ப்ருஸந்-தீண்டினும்,
ஜிக்ரந்-மோப்பினும்,
அஸ்நந்-உண்பினும்,
கச்சந்-நடப்பினும்
ஸ்வபந்-, உறங்கினும்,
ஸ்வஸந்-உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி,
கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை,
இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.

உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான்.
காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

தத்துவம் தனை யறிந்த யோகியவன் பார்த்தல் கேட்டல் தொடுதல் பேசுதல் I
முகர்த லுண்ணுத லுறங்குதல் செயினும் சுவாசித்தல் போதல் விட லெடுத்தலும் II

————–

9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்

ப்ரலபந்-புலம்பினும்,
விஸ்ருஜந்-விடினும்,
க்ருஹ்ணந்-வாங்கினும்,
உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும்,
நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி,
இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில்,
வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு,
(நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).

புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.

கண் திறந்து மூடுமிவை களைச் செயினும் புலன்கள் புலபொருட் களிலுள்ளன I
எனத் தெளிந்து நானெதனையும் செய்வதில்லை

—————–

10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா

ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ,
அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல்,
ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

எவனிறை வனிடமர்ப்பித் துச் செயல்களைப் பற்றின்றியே செய்கின் றானோ வவன் I
பாவத்தினால் பற்றுதலற் றிருப்பான் தாமரை யிலைத் தண்ணீர் போன்றே I

11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே

யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து,
ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக,
காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும்,
கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.

யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும்,
புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

செயல் யோகிகள் பற்றினை விடுத்தே மனத் தூய்மைப் பொருட்டு வெறும்- I
உடலாலும் மனத்தாலும் புத்தியாலும் புலனினாலும் மட்டுமே செயல்புரிவரே II

————

12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து,
நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்,
அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப்,
பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு,
நிபத்யதே-தளைப்படுகிறான்.

யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்.-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

யோகியானவன் செயல் பலனைத் துறந்து நிஷ்டையா லுதிக்குமமைதி யுடையோனாம் I
செயல் யோக மற்றானோ ஆசை யுந்துதலால் பலனில் பற்று வைத்தே கட்டுறுகிறான் II

13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்

வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா,
ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி,
நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்,
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.

தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

புலன் மன மிவைகளை வசப் படுத்திய தேஹீ விவேகத்தால் செயலை யெலாம் விலக்கியே I
ஏதும் செய்யாதும் செய்விக்காது மொன்பது வாயிலுடைய நகரில் சுகமாயி ருக்கின்றானே II

———-

14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே

கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை,
கர்மாணி-கர்மங்கள்,
கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல்,
ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை,
து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள்
மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.

பரமாத்மா எவர்க்கும் செயல்களையும் செய்பவனென் பதையுமுண்டு பண் ணுவதில்லை I
செயல் பலனி னிணைப்பையும் செய்வதில்லையே சுபாவம் அனைத்தையும் செய்விக்கின்றதே II

————-

15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:

பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று,
கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை,
அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது,
தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை.
அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

எங்குமுள்ள ஆத்மா எவருடைய பாவ புண் ணியங்களையும் ஏற்பதில்லையே I
அறிவு அறி யாமையால் மறை பட்டுளதே ஆதலால் மனிதர்கள் மயங்குகின்றனரே II.

————-

16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்

து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்,
ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ,
தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்,
தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

ஆனால், எவர்களுடைய அவ்வறியாமை ஆத்ம அறிவினால ழிக்கப்பட்டுளதோ I
அவர் தம் ஞானம் கதிரவன் போல் அப் பரம் பொருளை விளங்கச் செய்கிறதே II

——–

17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:

தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்,
அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

அதில் புத்தியுளோரதுவே தாமாயிருப்போர் அதிலே நிலை பெற்றவரா யதையே மேலாம் I
அடைக்கலமா யடைந்து, ஞானத்தால் பாவம் அழித்தோர் திரும்பி வாரா நிலை யடைவரே II

————-

18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட,
ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

கல்வி யடக்கமுடைய அந்தணரிடத்தும்பசு யானை யிடத்தும் நாயினிடத்தும் I
நாயைச் சமைத்துண்போனிடத்தும் ஞானியர் சம திருஷ்டி யுடனிருப்பரே II

19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ,
தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலை யுற்றது,
தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர்.
பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

எவர் மனம் சமத்தில் நிலைத்துள்ளதோ அவர்களால் பிறப்பும் வெல்லப் பட்டதாம் I
ஏனெனில் குற்றமிலா சமமாம் பிரம்மம் ஆதலாலவர் பிரம்மனில் நிலையாயுளரே II

————–

20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:

ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்,
அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி,
ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்ம ஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

பிரம்மத்தை யறிந்தோன் அதில் நிலை பெற்று மயக்கமில்லா உறுதியான புத்தி யுடையோன் I
பிரியமானதை யடைந்து மகிழ்வதுமில்லை பிரியமற்றதை யடைந்து வருந்துவதுமி[ல்]லையே II

21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே

பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில்,
அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில்,
யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி,
ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.

புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன்
பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

புறப் பொருட் களில் மனம் பற்றாதோன் ஆத்மாவிட முள்ள சுகத்தை யடைகிறான் I
பிரம்ம சமாதியில் நிலைத்த வறிவுடையோன் அழிவில்லா ஆனந்தம் அனுபவிக்கின்றான் II

——–

22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ,
தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்,
ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை),
கௌந்தேய-குந்தி மகனே,
புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும்.
அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

புலப் பொருட் களைத் தீண்டு வதாலுதித்த இன்பங்களே துக்கத்திற்குக் காரணமாம் I
துவக்கமும் முடிவுமுள்ள வவைகளில் கௌந்நதயா! ஞானியர் களின்புறுவ தில்லையே ॥

———-

23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர
:

ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே,
ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர்,
காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்,
வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ,
ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி,
ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.

சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

இப்பிறவியில் உடலை விடும் முன்பே ஆசை கோபம் இவை தம் மால் தோன்றும் I
வேகமதைத் தாங்க வல்லோனே யோகியாம் அவனே மகிழ்ச்சி யுடைய மனிதனாம் II

————

24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி

ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக,
அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ,
ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய்,
ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

எவன் தன்னிலே இன்பம் துய்த்தும் தன்னிலே களிப் படைந்து மவ்விதம் I
எவன் உட்ப்ர காசமுளனோ அவ்யோகி பிரம்ம மாயறிந்து பேரானந்தமடைகிறானே II

———————-

25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:

சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு,
ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி,
யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ,
ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து,
ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

பாவங்களைக் களைந்தும் ஐயங்களை யகற்றியும் புலனடக்க முடையோராய் I
உயிரனைத்தின் நன்மையில் மகிழ்வுடை ரிஷிகள் முக்தியினை யடைகின்றார்களே II

————

26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்

காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து,
யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய,
யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

ஆசை கோபத் தினின்றும் விடுபட்டோரும், ஆத்மாவினை அறிந்தவர்களும்,மனத்தை I
அடக்கியோரு மான,சந்யாஸிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் முக்தியுள்ளதே II

27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
நாஸாப்யந்தரசாரிணௌ

பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி,
நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.

புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே
இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:

யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி,
விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து,
மோக்ஷ பராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற,
ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.

புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)

வெளியிலுள்ள பொருட்களை வெளியே வைத்தும் கண் களைப் புருவங்களிடை யிருத்தியும் I
மூக்கிலியங் கும் பிராண அபானங்களை நன்கு சமன் செய்து புலன் மனபுத்தி- II
இவை தமை நன் கடக்கியே முக்தியினை மேலாமிலக் காய்க் கருதியே , பயமச்சமும் I
விருப்பும் விலக்கிய வனான அந்த முனிவனவன் எப்பொழுதும் முக்தன் தானே II

———–

29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி

மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்,
ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்,
ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்,
ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.

வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

யாக தவம் இவைகளை அனுபவிப்பனாக அனைத்துல கங்களுக்குமீஶ் வரனாக I
அனைத்துயிர்களுக்கும் நண்பனாக எனை அறியுமவன் சாந்தியை அடைகின்றான் II

————

ஸ்ரீ பகவத்கீதை –ஆறாம் அத்தியாயம் — தியான யோகம்–தியானத்தில் தெளிவு”

ஆசைகளாகிய நீரலைகள், மலர்களாகிய வாசனைகள், பட்டாம் பூச்சி போல் சுற்றித் திரியும் மனம், இவற்றை -விழிப்புணர்வாய் தியானித்தல்

ஸ்ரீபகவாநுவாச

1. அநாஸ்ரித​: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய​:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய​:

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
ய: கர்மபலம் அநாஸ்ரித​:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி,
கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ,
ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்,
ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்,
அக்ரிய​: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
எவன் செயல் பலனைச் சாராம லிருந்து செய்ய வேண்டிய செயலைச் செய்பவனோ |
அவன் சந்யாஸியும் யோகி யுமாவான், அக்னி கர்மமும் செயலையும் விட்டவனாகான் ||

———–

2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந

பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி,
ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத,
கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.

பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி.
தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

பாண்டவனே ! எதை சன்யாஸமென்று பகர்வரோ அதை யோகமென்று அறிதி I
ஏனென் றால் ஸங்கல்பத்தை விடாத எவனும் யோகியாய் ஆக மாட்டான் II

——————-

3. ஆருருஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம​: காரணமுச்யதே

யோகம் ஆருருஷோ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு,
கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது,
தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
ஸம​: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.

யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது.
அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

தியான யோகமதில் முன்னேற விரும்பும் முனிக்குச் செயல் சாதனமாய்ச் சொலப் பட்டது I
தியான யோகமதில் முன்னேறி யவனுக்கே செயலின்மை சாதனமாய்ச் சொலப்பட்டது II

—————-

4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே

யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ,
கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ,
ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்,
யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.

ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.

எப்பொழுது புலப் பொருட்கள னைத்திலும் செயல்களிலும் பற்றுக் கொள்வ தில்லையோ I
அப் பொழுது எல்லா சங்கல்பங் களையும் துறந்த யோகியை யோக நிலை யுற்றவரென்பர் II

—————

5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந​:

ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க,
ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா,
ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன்,
ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.

தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா;
தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

தன்னைத் தானே உயர்த்திக் கொள்வானாக தன்னைத் தாழ்த்திக் கொளாதி ருப்பானாக I
ஏனென்றால் தனக்குத்தானே நண்பனும் தனக்குத் தானே பகைவனு மாவானவன் I

—————

6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:
அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்

ஏன ஆத்மநா ஆத்மா ஜித​:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ,
தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு,
ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன்,
து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்,
ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல,
ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.

தன்னைத் தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்;
தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

எவ்வாத்மா வினாலாத்மா வெல்லப் பட்டதோ அவ் வாத்மா அவனுடை யாத்மா வுக்கு நண்பன் I
ஆனாலாத்மாவை வெல்லாதவ னுக்கவனே எதிரியைப் போலே பகை யுடனிருப்பானே II

——————–

7. ஜிதாத்மந​: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:
ஸீதோஷ்ணஸுகது​:கேஷு ததா மாநாபமாநயோ​:

ஸீதோஷ்ண ஸுகது​:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
மாந அபமாநயோ​:-மானாபிமானங்களிலும்,
ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட,
ஜிதாத்மந​:-தன்னை வென்ற மனிதனிடத்தில்,
பரமாத்மா ஸமாஹித​:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

தன்னை வென்று மனம் தெளிந்தோனுக்குச் சீதோஷ்ண சுக துக்கத் திலுமவ்விதமே I
மான அவமானத் திலும் சித்த மொரு முகமாகிப் பரமாத்மாவில் நிலைத்திருக்குமே II

————-

8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய​:
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந​:

ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ,
கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ,
விஜிதேந்த்ரிய​:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ,
ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந​:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்று போலே காணும்,
யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று,ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

அறிவில் அனுபவ அறிவில் மனநிறைவும் மாறுதலில்லா தோன் புலன் களையு மொருங்கிணைத்தோன், கல் மண் பொன் னிவை தமைக் காணுமிடத்தும் யோகி சமமாயிருப்பா னென்பர் II

———–

9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே

ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்,
ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட,
ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்,
விஸிஷ்யதே-மேலோனாவான்.

ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர்
எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

நல்லுள்ளமுடையோன் நண்பன் பகைவன் உதாஸீனனும் நடுவு நிற்போனுறவினன் வெறுப்புக்கு ரியோன் சாது பாவிகளிடமும் சம புத்தி யுடையோன் சிறந்தோனாவான் II

10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித​:
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ​:

யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
அபரிக்ரஹ​:-ஏற்பது நீக்கிய
யோகீ ஏகாகீ-யோகி தனியனாக,
ரஹஸி ஸ்தித​:-மறைவிடத்தில் இருந்துகொண்டு,
ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

மறை விடத்தில் இருந்து கொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

யோகி தனிமையில் தனியாய் இருந்தும், ஆசைகளும் பொருட்களும் இன்றியும், I
தன்னடக்க முடையோனாய் எப்பொழுதும் தியானத்தில் தானீடுபட வேண்டும் II

———-

11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந​:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்

ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில்,
சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது,
ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்,
ஆத்மந​: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம்,
ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.

சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

தூய்மையான அசையாததான இடத்தில் தர்பை தோல் மேல் பருத்தித் துணியாலான
தனக்காகவே ஆன ஆசனத்தை மிகவும் தாழ்வுமின்றி, உயரமுமின்றியே அமைத்து

——–

12. தத்ரைகாக்ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா​:
உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே

தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து,
யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
மந​: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி,
ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி,
யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.

அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

ஆங்காசனத் தமர்ந்து மனதை நன்- கொருமுனைப் படுத்தியே புலன் மனச்- I
செயல்களை யடக்கியே மனத்தின் தூய்மை கருதி தியானம் பழக வேண்டும் II

———–

13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர​:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்

காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக,
ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு,
திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல்,
ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை,
ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.

உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு,
உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

உடல்தலைக் கழுத்திவை தமை நேராயும் அசையாமலே யிருத்தி யுறுதியுடனும் I
தன்னுடைய மூக்கின் நுனியைக் கண்டும் திசைகளைக் காணாமல் அமர வேண்டுமே II

————

14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:
மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​:

ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி,
ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு,
மந​: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி,
மச்சித்த: மத்பர​:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு,
யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.

நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

மனவமைதி பயமற்றோன் பிரம்மச்சாரியும் விரதமுளோனும் மனதை வசமாக்கியோனும் I
மனமொருநிலைப் பட்டும்,என்பால் சித்தமும் எனையே யிலக்கா யமர வேண்டும் தியானத்திலே II

—————-

15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ​:
ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி

நியதமாநஸ​:-மனதைக் கட்டுப்படுத்தி,
யோகீ ஏவம்-யோகி இவ்விதம்,
ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு,
மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள,
ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.

இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி,
என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

இவ்விதம் கணப்பொழுதும் தன் மனதை தியானத்தி லிருத்தியே ,மன மடங்கிய I
யோகியவன் என்னிடமுள்ள முக்தியில் முற்றுப் பெறும் சாந்தியை யடைகின்றான் II

———-

16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத​:
ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா!
அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை,
அநஸ்நத​: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது,
ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை,
ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.
மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

அர்ஜுனா! மிக உண்போனுக்கு யோகமில்லை அறவே யுண்ணாதோனுக்கு மஃதில்லையே I
அதிக முறங்குவோனுக்குத் தியானமில்லை அதிகமாய் விழித்திருப் போனுக்குமில்லையே II

———–

17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து​:கஹா

யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
து​:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

உண்பதிலு முலாவுவதிலு மிதமாயிருப்போரும் கடமையை அளவுடன் செய்பவருக்கும் I
விழிப்பு முறக்கமுமள விலுள்ளோருக்கும் யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறதே II

————-

18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா

விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம்,
யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே,
அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ,
ததா ஸர்வகாமேப்ய: நி​:ஸ்ப்ருஹ​:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்,
யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.

உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும்
வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

நன்றா யடக்கிய சித்தம் எப்பொழுது ஆத்மாவிலே நிலைத்துளதோ , அப்பொழுது I
அனைத்துப் பொருட் களினின்றும் பற்று நீங்கியோன் தியானம் கூடியவனாவான் II

———-

19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந​:

நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு,
யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ,
ஸா உபமா-அதே உவமை,
ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய,
யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.

சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில்
அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

எவ்விதம் காற்றில்லா விடத்திலே யுள்ளதீபமானது அசையாமலி ருக்குமோ I
அவ்விதம் மனமடங்கி ஆத்ம தியானம்- பழகும் யோகிக்கு உவமையாய் எண் ணுவர் II

————–

20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி

யோகஸேவயா-யோகப் பயிற்சியினால்,
நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம்,
யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ,
ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து,
ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ.

எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால்
ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

எப்பொழுது யோகப் பயிற்சி யிலடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நிலை நிற்கிறதோ I
அப்பொழுது மேலும் தன்னில் தன்னைக் கண்டு தன்னிலேயே மகிழவடைந்திருக்கின்றானே II

——–

21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத​:

அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும்,
புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும்,
யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை,
தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ,
யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால்,
தத்த்வத​: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.

புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

———-

22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத​:
யஸ்மிந்ஸ்திதோ ந து​:கேந குருணாபி விசால்யதே

யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின்,
தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால்,
குருணா து​:கேந அபி-பெரிய துக்கத்தாலும்,
ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.

எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

மேலுமெதை யடைந்த பின் வேறு லாபத்தை அதிக மென்று எண்ணுவதில்லையோ ,எதில்- I
நிலைத்து நின் றவன் மிகப் பெரியதான துக்கத்தாலு மசைக்கப் படுவதில்லையோ

23. தம் வித்யாத்து​:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா

து​:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை,
தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று,
வித்யாத்-உணர்,
ஸ யோக:-அந்த யோகத்தை,
அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி,
நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவன்.

அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர்.
உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவன்.

துக்கத்தின் சேர்க்கை யிலிருந்து பிரிதல் யோகமென்று சொல்லப்ப டுவதாயறிக I
தளர்விலா சித்தத்துடனும் உறுதியான மனதுடனும் அவ்யோகத்தைப் பயில வேண்டும் II

———-

24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத​:
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத​:

ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும்,
ஸர்வாந் காமாந் அஸேஷத​: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு,
மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.

சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு,
எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

சங்கல்பத் தினின்று தோன்றிய ஆசை களனைத்தையும் மிச்சமில்லாமல் துறந்தும் I
மனத்தினால் புலக் கூட்டத்தை யெல்லாம-னைத் துப்பக் கத்தினின்றும் நன் கடக்கிப்

25. ஸநை​: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்தம் மந​: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

ஸநை​: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து,
த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன்,
மந​: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி,
கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவன்.

துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்;
எதற்கும் கவலை யுறாதிருக்கக் கடவன்.

பகுத்தறிவுடன் கூடிய புத்தியினால் மனதை யாத்மாவில் நிலை நிற்கச் செய்து I
மெது மெதுவா யொடுங்கச் செய்ய வேண்டும், வேறெதையுமே சிந்திக்கா திருந்தவாறே II

———

26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்

யத: யத:-எங்கெங்கே,
எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத,
சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ,
தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி,
ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக்
கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

மனமானது யுறுதி யற்று மெக் காரணத்தினால் எதனெதனி டத்திலேய வைகின்றதோ I
அதனதனி டத்திலிருந்த ழைத்து வந்து ஆத்மாவினி டத்திலே யிருக்கச் செய்வாயாக II

————

27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்

ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக,
அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி,
ப்ரஹ்ம பூதம்-பிரம்மமேயாகிய,
ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு,
உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு
மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

ஆழ்அமைதி யுள்ள மன முடையோனும் ரஜோ குண வேகம் தணிந்து பாவ தோஷங்- I
களற்றவனும் பிரம்மமாய்த் தனை யறியும் இந்த யோகியை உத்தம சுகம் சேர்கின்றதே II

———-

28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ​:
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே

விகதகல்மஷ​:-குற்றங்களைப் போக்கி,
ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய,
அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை,
ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.

குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

இவ்விதமே யெப்போதும் தன்னை யிணைத்துக் கொண் டவப் பாவங்களற்ற யோகியானவன் I
பிரம்மத்தி லொன்று படுவதால் தோன்றும் அளவற்ற ஆனந்தத்தை யடைகின் றானே II

—————

29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந​:

யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன்,
ஸர்வத்ர ஸமதர்ஸந​:-எங்கும் சமப் பார்வை யுடையவனாய்,
ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்,
ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.

யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

ஆத்ம யோகத்தில் மனமொடுங்கியவனும் எல்லாவற்றிலும் சமநோக்குடனிருப்போனும் I
தன்னிலே அசையு மசையாவனைத் துயிர்களையும் மேலும் தன்னை யெல்லா வுயிர்களிலும் காண்கிறான் II

—————-

30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி

ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ,
ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ,
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை,
ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித​:
ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே

ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக,
ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள,
மாம் பஜதி-என்னைத் தொழுவோன்,
ஸ யோகீ:-அந்த யோகி
ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும்,
மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

எவன் அதனத்துயிர்களிலு முறையும் என்னை ஒன்றே யென எண்ணி நிலை நின்று I
எனையே தொழுகின்றானோ அந்த யோகீயானவன் எப்பாங்கி லிருப்பினு மென்னிடத்தே யுளன் II

—————-

32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
ஸுகம் வா யதி வா து​:கம் ஸ யோகீ பரமோ மத​:

அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி,
யதி ஸுகம் வா து​:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும்,
ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே,
ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ,
ஸ: பரம யோகீ மத​:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

எவன் தன்னை உவமையா யெண் ணி, அர்ஜுனா! எப்பொழுதும் சுகத்தையும் துக்கத்தையும் I
அனைத்திலும் சமமாய்க் காண்கின்றானோ அந்த யோகி மேலோனெனக் கருதப்படுகிறான் II

————

அர்ஜுந உவாச

33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மதுஸூதந
ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
மதுஸூதந!-மதுசூதனா,
அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று,
ய: த்வயா ப்ரோக்த​:-எது உங்களால் சொல்லப் பட்டதோ,
ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை,
சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

“அர்ஜுனன் புகன்றான்”
மதுசூதனா! சமமாய்க் காணுதலெனும் இந்த யோகம் உம்மால் உபதேசிக்கப்பட்ட- I
இதற்கு நிலையாயுள்ள இருப்பை யான் மனச் சஞ்சலத்தினால் காண்கிறேனில்லை I

———

34. சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
ப்ரமாதி-தவறும் இயல்பினது,
பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

கிருஷ்ணா! மனமலையும் தன்மை யானதன்றோ கலக்கமும்,வலிமையும் திண்மையு மானதன்றோ ? I
அதனை யடக்குதல் காற்றை அடக்குவது- போல் கடின மானதென நானெண் ணுகிறேன் II

ஸ்ரீ பகவாநுவாச

35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந் தோளாய்,
அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்,
துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான்,
கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்,
க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பெருந்தோளா! ஐயமில்லை மனதின் தன்மை அடக்குதற் கரிது மலைவதும் தான் I
குந்திமகனே ! தொடர் பயிற்சியாலும் வைராக்யத்தாலு மடக்கவியலுமே II

—————

36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி​:
வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத​:

அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன்,
யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது,
து வஸ்ய ஆத்மநா யததா உபாயத​:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்,
அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது,
இதி மே மதி​:-என்று நான் கருதுகிறேன்.

தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன்.
தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

மனதை யடக்காதவனால் யோகமடைய வியலாது என்பதென் கருத்து,மற்றும் I
மனதை யடக்கியவன் உபாயத்தாலும் முயற்சி செய்வதாலு மடைய வியலுமே II

—————-

அர்ஜுந உவாச

37. அயதி​: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ​:
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்,
அயதி​: யோகாத் சலிதமாநஸ​:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன்
யோக ஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய்,
காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!

அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

“அர்ஜுனன் புகன்றான்”
கிருஷ்ணா! சிரத்தை யுடையோனாயினும் முயற்சி யிலாதவனால் யோகத்தினின்றும் I
நழுவிய மனமுடையோன் யோகம் முழுமை பெறாமல் எக் கதியினை அடைகின்றான் II

————–

38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண​: பதி

மஹாபாஹோ ப்ரஹ்மண​:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற,
பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி,
அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக,
உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக,
சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல்,
கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?

ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ?
பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

பெருந்தோளாய் பிரம்மப் பாதையில் மதி மயங்கியவன், நிலை பெறாது இரண்டு- I
பாதையிலிருந்தும் வழுவியே சிதறுண்ட மேகம் போலல்லவா அழிவடைகின்றான் II

—————

39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத​:
த்வதந்ய​: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை,
அஸேஷத​: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்,
ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்,
த்வத் அந்ய​: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.

கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி
இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

ஹே கிருஷ்ணா! எனதிந்த ஐயத்தை யறவே விலக்கு வதற்குத் தகுதியானவர் நீரே I
தங்களைக் காட்டிலும் இவ் ஐயத்தை நீக்குபவர் நிச்சயமாய் வேறு ஓருவரில்லையே II

———–

ஸ்ரீபகவாநுவாச

40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பார்த-பார்த்தா,
தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை,
அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை,
தாத-பிரியமானவனே (மகனே!),
ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

“ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
பார்த்தனே ! அவனுக்கு இம்மையிலும் அழிவில்லை , அழிவில்லையே மறுமையிலும் I
மகனே !நன்மையைச் செய்பவரெவரும் அடையார் துன்ப கதியை நிச்சயமாய் II

———-

41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே

யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன்,
புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி,
ஸாஸ்வதீ​: ஸமா​: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து,
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபிஜாயதே-பிறக்கிறான்.

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு
கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

யோகத்தினின்று வழுவியவன் புண்ணியம் செய்தோருலகங்களை யடைந்து நெடிது காலம்- I
வாழ்ந்த பின், ஆசாரமுடன் கூடிய செல்வர்களி னில்லத்திலே பிறக்கின்றான் II

———-

42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்

அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்,
குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான்,
ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.

அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்.
இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

அல்லதிவன் அறிவாளிகளாம் யோகிகளி னில்லத்தில் பிறக்கின்றான், இவ்விதமான I
பிறப்பானது எதுவோ ,அது உலகத்தில் நிச்சயம் அடைவதற் கரிதானதாகுமே II

———-

43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூய​: ஸம்ஸித்தௌ குருநந்தந

தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய,
புத்தி ஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான்,
குருநந்தந-குருநந்தனா, தத: பூய​: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு,
யததே-முயற்சி செய்கிறான்.

அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால்
அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

குரு நந்தனா! முற்பிறவி தேகத்திலடைந்த யோக புத்தியை இப்பிறவியி லடைகின் றான் I
மேலுமே அதை விட அதிகமாய் முயற்சியைச் செய்கிறான் யோக புத்தி முழுமை பெறவே II

———

44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ​:
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே

ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும்,
தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்,
யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட,
ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து,
அதிவர்ததே-செல்லுகிறான்.

பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

அவன் தன் முயற்சியின்றியே முற்பிறவி அப்யாஸத் தாலிழுக்கப் படுகின் றானே I
யோக தத்துவ மறிய முயல்பவனும் கூட வேத கர்ம பாகத்தைக் கடக்கின்றானே II

———-

45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ​:
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்

ஸம்ஸுத்த கில்பிஷ​:-பாவம் நீங்கியவனாய்,
து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்,
யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.

பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின்
வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

ஆனால் முழு முயற்சி யுடைய யோகியோ பாவங்கள் நீங்கிப் புனிதனாயாகியே I
பல பிறவிகளில் பக்கு வமடைந்தே அதனால் மேலாம் கதியை யடைகின்றானே
II

———

46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக​:
கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந

யோகீ தபஸ்விப்ய: அதிக​:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்,
ஜ்ஞாநிப்ய: அபி அதிக​: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்,
ச கர்மிப்ய: யோகீ அதிக​:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன்,
தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

தவமுடை யோரினும் யோகீ மேலானவன் வேதமறிந் தோரினும் யோகீ மேலானவன் I
செயல் புரிவோரினும் யோகீ மேலானவனே ஆதலால் யோகீ யாவாய் நீ அர்ஜுனா! II

——–

47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:

ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

எவன் முழு நம்பிக்கை யுடனும்,சித்தம் என் பால் லயித்துமுள்ளோன் தியானத்தால்- I
என்னைத் தொழுகின்றானோ ,அவன் யோகிகளில் எல்லாம் சிறந்தோன் என்பதென் கருத்து II

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா சதுஸ்லோகி -ஸ்ரீ பகவத் திரு அவதார ரஹஸ்யங்கள்-

October 18, 2024

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—
৷৷4.5৷৷

ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறினார்
ஹே அர்ஜுனா
தவ ச -உனக்குப் போலே
மே -எனக்கு
பஹூநி ஜந்மாநி .–கணக்கற்றவையான பிறவிகள்
வ்யதீதாநி-கடந்து விட்டன
ஹே பரந்தப-எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே
தாநி ஸர்வாணி-உன்னுடைய மற்றும் என்னுடைய எல்லாப் பிறவிகளையும்
அஹம் -நான்
வேத -அறிவேன்
த்வம் -நீ
ந வேத்த -அவற்றை அறிய மாட்டாய்

ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –

நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் —

மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –

உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

அஜாய மானோ பஹுதா விஜயதா
சன்பம் பல பல செய்து
அணைவது அரவணை மேல் –இணைவனாம் எப்பொருட்கட்க்கும்
தேவ -உபேந்த்ரன்
மனுஷ்ய -ராம கிருஷ்ண
சங்கமம் விலங்கு வராஹ நரஸிம்ஹ ஹயக்ரீவ
ஸ்தாவரம் குப்ஜா மரம்
விஜாயதே -நன்றாக -பிறக்கப் பிறக்க தேஜஸ் விஞ்சி அன்றோ அவனுக்கு -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்

ஜென்ம ப்ரதிபாஸம் -தோற்றங்கள் கழிந்து விட்டன சொல்லாமல் ஜென்மங்கள் கழிந்து விட்டன
உண்மை என்பதை நேராகச் சொல்லாமல் பல -பஹத்வம் -முடிந்தமை -கழிந்தமை -பல பிறவிகள் கழிந்து விட்டன
தவ ச -அவனது த்ருஷ்டாந்தம் -அதே போல் உண்மை யானவையே –
குண ராசிகளின் வெளிப்பாடே அவதாரங்கள்
அவற்றையும் எண்ண முடியாது -இவற்றையும் எண்ண முடியாது –
முன்பு விவஸ்வானுக்கு உபதேசித்தது இவன் நினைவில் உள்ளது என்பதைக் காட்டவே -எனது -உனது -முன் பிறவிகளை அறிவேன் -என்கிறான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை.
கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்.
அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார்.
ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும்.
வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார்.
இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.

ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை.
பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:

৷৷4.5৷৷ஷ்ரீபகவாநுவாச அநேந ஜந்மநஃ ஸத்யத்வம் உக்தம்’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’ இதி வசநாத்,
தவ ச இதி தரிஷ்டாந்த தயா உபாதாநாச்ச.

৷৷4.5৷৷ஏஷூத்தரஂ க்ரமாத் பகவாநுவாச’பஹூநீத்யாதிபிஃ’. நஹி பூர்வ ஜந்மநாமேகத்வபஹுத்வே பரிஷ்டே, ந ச தஜ்ஜ்ஞாநாஜ்ஞாநே இதி ஷங்காயாமாஹ ‘அநேநேதி’. கதஂ ஜந்மநஃ ஸத்யத்வமுக்தஂ? பஹுத்வாதீதத்வதஜ்ஜ்ஞாநாதி ஹி வாசநிகதயா ப்ரதீயத இத்யத்ராஹ ‘பஹூநீதி’.’அயமபிப்ராயஃ’ ‘இதாநீந்தநஸ்த்வஂ ததாநீந்தநாய கதமுக்தவாந்?’ இதி ப்ரஷ்நே ஜந்மாந்தரேணாஹமுக்தவாந், தச்சேதாநீமநுஸந்தாய வதாமீதி ஸாக்ஷாதுத்தரமுச்யேத, தஸ்ய ச ப்ரஷ்நஸ்யாந்யபரத்வஸ்ய பூர்வஂ ஸஹேதுக முக்தத்வாதவஷ்யஂ ப்ரஷ்டவ்யேஷ்வர்தேஷு யத்பரத்வமத்ர வ்யாகர்துஂ ஷக்யஂ தத்பராண்யேவ பஹூநீத்யாதி விஷேஷணாநி; ஸத்யத்வே ஹி பஹுத்வாதீதத்வாதீநி ஸ்வரஸாநி ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்ம ப்ரதிபாஸா இதி,’தவ ச'(ஜென்ம தோற்றம் என்று சொல்லாமல் ஜென்மம் என்பதால் அத்வைதி மதம் நிரசனம் )இத்யபரிஷ்டஸ்யார்தஸ்ய உபாதாநமப்யேதத்ஸத்யத்வதரிஷ்டாந்தாபிப்ராயமந்தரேண ந கடதே, ந சார்ஜுநஸ்ய ஜந்ம மித்யா, தஸ்ய வா ததாத்வப்ரதிபாஸஃ, தத்ஸம்பவே வா கரிஷ்ண ஜந்மநி குதோஸ்ய ஸஂஷயஃ? இதி.

————————

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

அஜோபிஸந் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு அற்றவனாய் இருந்து கொண்டே-அபி சந் -இப்படியும் இருந்து கொண்டு –
அவ்யயாத்மா -அபி சந் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய்க் கொண்டே
பூதாநாம் -எல்லாப் பொருள்களுக்கும்
ஈஸ்வரோபிஸந்.—ஈஸ்வரனாகவும் இருந்து கொண்டே
ஸ்வாம் ப்ரக்ருதிம் -எனக்கே உரிய அப்ராக்ருத திரு மேனியை
அதிஷ்டாய –தரித்துக் கொண்டே
யாத்ம மாயயா—என் சங்கல்பத்தாலேயே
ஸம்பவாமி -பலபடியாகப் பிறக்கிறேன்

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்

அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷

மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை –வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம்

சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் –அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் –

அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
முடிவு இல்லாதவனாக கொண்டு –
ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –

ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –

ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –

கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –

கர்மத்தால் பிறக்காததால் பர ப்ரஹ்மம் -அஜன்-தன்மைகளை விடாமல் பிறக்கிறேன்
அரி அயன் அரன் -அரி -அஜன் -ஹரன் -நான்முகனும் நாபியில் பிறந்ததால் அஜன்

அவ்யய ஆத்மா அபி சந் -கர்மத்தால் ஏற்படும் அழிவு இல்லையே
ராமாவதாரம் -11000-கிருஷ்ண அவதாரம் -110-வருஷங்கள் கழித்து தீர்த்தம் ப்ரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிறார்
பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸமஸ்த பூதங்களின் உள்ளே புகுந்து இயக்குகிறேன் –
இப்படி அஜா அபி சந் -அவ்யயா ஆத்மா பூதா நாம் ஈஸ்வர அபி சந் -அஜஹத் ஸ்வ பாவங்கள் விடாமல் அவதரிக்கிறேன்
அர்ச்சாவதாரங்களிலும் இவை உண்டு
பூர்ணம் –சர்வம் பூர்ணமஸ்ய -அவன் இவன் என்று கூழேன் மின்
உபய லிங்கம் -எல்லா நிலைகளிலும் –
சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸமஸ்த கல்யாண பூர்ணன் அவாப்த ஸமஸ்த காமன்
-இவற்றுக்கும் உப லக்ஷணம்
அதிஷ்டானம் -உள்ளே புகுந்து இயக்குதல் -தன்னுடைய பிரக்ருதியை -அசாதாரண தன்மையை ஸ்வ பாவத்தை -எடுத்துக் கொண்டு அவதரிக்கிறேன் –
முக் குணங்களைச் சொல்ல வில்லை -இங்கு ப்ரக்ருதி என்று –
பஞ்ச உபநிஷத் -ந பூத சங்க ஸம்ஸ்தானம் –
கோப ப்ரக்ருதி கோபமே இயல்வாக்க கொண்ட என்பது போல்
ஸ்வ பாவம் விட்டுப் புரியாதது போல் பிரகிருதி –
திவ்ய மங்கள விக்ரஹம் -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -ரஹஸ்யம் என்கிற அர்த்தத்தில் –
ஸூத்த சத்வ மயம் -பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல –

ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் –அங்கே போலவே இங்கும்
பரம் சுடர் உடம்பாய்

ஆத்ம மாயையால் அவதாரம்
பொய் மித்யை அல்ல -ஆச்சர்யம் -புரிய முடியாதது-விசித்ரம் – -ஸங்கல்பம் என்றவாறு
ஆசையாலே -தனது முடிவு என்பதையே-விசித்திரமான இச்சை – -மாயை -என்கிறார்

மூன்றாலும் புருஷோத்தமன் அஜ அவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வர –
பிறப்பு -அசேதன வஸ்துக்களுக்கு அழிவு போல் அல்லவே இவனுக்கு – -ஆத்மாவுக்கு போல் பந்தம் போல் இல்லை
அவ்யயம் -தேயாத குறையே இல்லாத -முக்தர் முன்பு ஞானம் மங்கி இருந்தார்களே -அவர்களை விட
உயர்ந்தவன்
பூதாநாம் ஈஸ்வரோபி சந் -நித்யர்களை விட உயர்ந்தவன் -இவர்களும் இவனால் இயக்கப்பட்டு இருப்பார்களே
இப்படி மூன்று சொற்களால் புருஷோத்தமன் இவன் ஒருவனே என்று காட்டி அருளுகிறான்

৷4.6৷৷ஆத்மநஃ அவதார ப்ரகாரஂ தேஹ யாதாத்ம்யஂ ஜந்ம ஹேதுஂ ச ஆஹஅஜத்வா (பத்த வ்யாவ்ருத்தி-பிறப்பிலி -ஸ்தம்ப சம்பவாமி )வ்யயத்வ (ஆங்கு மலராது குவியாது-முக்த  வ்யாவ்ருத்தி )ஸர்வேஷ்வரத்வாதி (நித்ய வ்யாவ்ருத்தி )ஸர்வஂ பாரமேஷ்வரஂ ப்ரகாரம் அஜஹத் ஏவ ஸ்வாஂ ப்ரகரிதிம் அதிஷ்டாய ஆத்ம மாயயா ஸஂபவாமி ப்ரகரிதிஃ ஸ்வபாவஃ, (ப்ரக்ருதி சப்தம் பஞ்ச பூதம் என்றும் ஸ்வ பாவம் என்றும் இங்கு ஸ்வ பாவம் )ஸ்வம் ஏவ ஸ்வபாவம் அதிஷ்டாய ஸ்வேந ஏவ ரூபேண ஸ்வேச்சயா ஸஂபவாமி இத்யர்தஃ.

ஸ்வரூபஂ து ‘ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (யஜுர்வே0 31.18)’க்ஷயந்தமஸ்ய ரஜஸஃ பராகே.’ (ஸாம0 17.1.4.2)’ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மயஃ புருஷஃ’ (சா0 உ0 1.6.6) தஸ்மிந்நயஂ புருஷோ மநோ மயோ மரிதோ ஹிரண்மயஃ.’ (தை0 உ0 1.6.1)’ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யுதஃ புருஷாததி.’ (யஜுர்வே0 32.2)’பாரூபஃ ஸத்ய ஸஂகல்ப ஆகாஷாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காமஃ ஸர்வ கந்தஃ ஸர்வ ரஸஃ.’ (சா0 உ0 3.14.2)’மாஹா ரஜநஂ வாஸஃ’ (பொன்னிற ஆடை போல் -பரி0 உ0 2.3.6) இத்யாதி (உபாஸ்யமான திவ்ய மங்கள விக்ராஹ வர்ணனை )ஷ்ருதி ஸித்தம்.

ஆத்ம மாயயா ஆத்மீயயா மாயயா.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ (வே0 நி0 த0 வ0 22) இதி ஜ்ஞாந பர்யாயஃ அத்ர மாயா ஷப்தஃ. (ஞான ரூபமான சங்கல்பம் )ததா ச அபி யுக்த ப்ரயோகஃ ‘மாயயா ஸததஂ வேத்தி ப்ராணிநாஂ ச ஷுபாஷுபம்’ இதி. ஆத்மீயேந (தன்னுடைய )ஜ்ஞாநேந ஆத்ம ஸஂகல்பேந இத்யர்தஃ.அதஃ அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வஂ ஸர்வம் ஐஷ்வரஂ ஸ்வபாவம் அஜஹத் ஏவ ஸ்வம் ஏவ ரூபஂ தேவ மநுஷ்யாதி ஸஜாதீய ஸ்தாநஂ குர்வந் ஆத்ம ஸஂகல்பேந தேவாதி ரூபஃ ஸஂபவாமி.(பல பிறப்பாய் ஒளி வரும் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் )

தத் இதம் ஆஹ ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ (யஜுர்வேத 31.19) இதி ஷ்ருதிஃ. இதர புருஷ ஸாதாரணஂ ஜந்ம அகுர்வந் தேவாதி ரூபேண ஸ்வஸஂகல்பேந உக்த ப்ரக்ரியயா ஜாயத இத்யர்தஃ.’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந. தாந்யஹஂ வேத ஸர்வாணி’ (கீதா 4.5)’ததாத்மாநஂ ஸரிஜாம்யஹம்৷৷’ (கீதா 4.7)’ஜந்ம கர்ம ச மே திவ்யமேவஂ யோ வேத்தி தத்த்வதஃ.’ (கீதா 4.9) இதி பூர்வாபராவிரோதாச்ச.ஜந்ம காலம் ஆஹ(இவை ரூப பரம் அல்ல ஸ்வரூப பரம் என்றால் விரோதங்கள் வருமே என்றவாறு )

৷৷4.6৷৷அத ப்ரகாராதிப்ரஷ்நத்ரயோத்தரமநந்தரஷ்லோக இத்யாஹ ‘அவதாரேதி’. அஜாவ்யயஷப்தாப்யாஂ ப்ரகரிதிபுருஷயோரிவ ஸ்வரூபதோ தர்மதஷ்ச விகாரா ந ஸந்தீத்யுச்யதே; அஜாவ்யயஷப்தௌ கர்மகரிதஜந்மமரணநிவரித்திபரௌ வா; தேந ஹேயப்ரத்யநீகத்வமுக்தஂ பவதி.’பூதாநாமீஷ்வரோபி’ இதி கல்யாணகுணாகரத்வாப்ரச்யுதிருபலக்ஷ்யதே. யத்வா அஜஷப்தேந ஸ்வரூபதஃ ஷரீரத்வாரா ச ஜந்மயுக்தாசித்க்ஷேத்ரஜ்ஞாப்யாஂ வ்யாவர்தநம்.’அவ்யயாத்மா’ இத்யாத்மஷப்தஸ்ய ஸ்வபாவபரதயா நஞோத்யந்தாபாவபரதயா ச கதாசிஜ்ஜ்ஞாநஸங்கோசாதிமதோ முக்தாத்வ்யாவரித்திஃ.’ஈஷ்வரஷப்தேந’ நித்யாஸங்குசிதஜ்ஞாநேப்யோ நித்யமுக்தேப்யோ வ்யவச்சேதஃ.’அவ்யயாத்மா’ இத்யத்ராபி பூர்வோத்தரவத்’அபி ஸந்’ இத்யநுஷஞ்ஜநீயம். அத்ர ச பூர்வார்தேந தரிதீயசதுர்தபாதாப்யாஂ ச ப்ரஷ்நத்ரயஸ்ய க்ரமாத்பரிஹாரஃ. ஆதிஷப்தேநேஷ்வரத்வோபலக்ஷிதஸர்வஜ்ஞத்வஸத்யஸங்கல்பத்வாவாப்தஸமஸ்தகாமத்வாதீநி கரிஹ்யந்தே.’ஸர்வமிதி’ ந கஸ்யசிதபி ஸ்வபாவலேஷஸ்ய ஹாநிரிதி பாவஃ. பரமேஷ்வரஸம்பந்தி பாரமேஷ்வரஂ, பரமேஷ்வரத்வப்ரயுக்தமித்யர்தஃ.’அபி ஸத்’ இத்யஸ்ய வர்தமாநநிர்தேஷஸ்ய தாத்பர்யமாஹ ‘அஜஹதேவேதி’. ஏதேந தத்ததவதாரேஷு தாஸு தாஸ்வவஸ்தாஸு ச பாரமேஷ்வரஸ்வபாவஸ்ய ஸத ஏவ ஸ்வேச்சாயா திரோதாநமாத்ரமிதி ஸூசிதம்; ததா சாஹுஃ’குணைஃ ஷட்பிஸ்த்வேதைஃ ப்ரதமதரமூர்திஸ்தவ பபௌ ததஸ்திஸ்ரஸ்தேஷாஂ த்ரியுகயுகலைர்ஹி த்ரிபிரபுஃ. வ்யவஸ்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்கரிதிவஷாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணிதமஹாமங்கலகுணஃ৷৷வரதராஜஸ்தவே16 இதி. அவதாரேஷு ஹி பரமேஷ்வரத்வஂ வ்யபதிஷ்யதே.’ஈஷந்நபி மஹாயோகீ’ ம.பா.5.68.14’கரிஷ்ண ஏவ ஹி லோகாநாஂ’ ம.பா.2.38.23’வ்யக்தமேஷ மஹாயோகீ பரமாத்மா’ வா.ரா.6.1.11 இத்யாதிபிஃ. நாத்ர ப்ரகரிதிஷப்தேந’ப்ரகரிதிஂ ஸ்வாமவஷ்டப்ய விஸரிஜாமி’ 9.8 இத்யாதிஷ்விவ த்ரிகுணா ப்ரகரிதிருச்யதே, அவதாரேஷ்வபி தத்விக்ரஹஸ்ய த்ரிகுணோபாதாநத்வாபாவாத். யதோக்தஂ’ந பூதஸங்கஸஂஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.’ந தஸ்ய ப்ராகரிதா மூர்திர்மாஂஸமேதோஸ்திஸம்பவா’ வா.பு.பூ.34.40வ.பு.14.41. இதி. அதோத்ராவதாரோபயுக்தாந்யா ப்ரகரிதிருச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரிதிஃ ஸ்வபாவ’ இதி.’ப்ரகரிதிஃ பஞ்சபூதேஷு ஸ்வபாவே மூலகாரணே’ இதி நைகண்டுகாஃ. விக்ரஹஸ்யாபி’நித்யாலிங்கா ஸ்வபாவஸஂஸித்திஃ’ ர.ப்ரா. இத்யேகாயநஷ்ருத்யநுஸாரேண நிருபாதிகஸ்வாஸாதாரணவிஷேஷணத்வாத் ஸ்வபாவஷப்தேநோபாதாநம். கோபலீவர்தந்யாயாச்சாத்ர விக்ரஹாக்யஸ்வபாவவிஷேஷபரதா, ஸ்வபாவபர்யாயப்ரகரிதிஷப்தேநாபரிதக்ஸித்திலாபேபி’ஸ்வாஂ’ இதி நிர்தேஷோ ஜீவஸாதாரணத்ரிகுணப்ரகரிதிவ்யவச்சேதார்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸ்வமேவேதி’.’அந்தரதிகரணபாஷ்யேப்யேதத்வ்யாக்யாதஂ”ஸ்வமேவ ஸ்வபாவமாஸ்தாய ந ஸஂஸாரிணாஂ ஸ்வபாவமித்யர்தஃ’ இதி. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர விக்ரஹபரத்வஂ’அதிஷ்டாய’ இத்யநேநஸூசிதஂ ஸ்வாதந்த்ர்யஂ ச தர்ஷயதி ‘ஸ்வேநைவ ரூபேணேதி’. யத்வா’ஸ்வமேவ ஸ்வபாவஂ’ இத்யாத்யேகவாக்யஂ ஸங்கலிதார்தபரம், தததிஷ்டாயேத்யேததந்தஂ பூர்வார்தஸ்யார்தஃ,’ஸ்வேநைவ ரூபேண’ இதி து தரிதீயபாதஸ்ய’ஸ்வேச்சயா’ இதி சதுர்தபாதஸ்ய. அஸ்யாஂ யோஜநாயாஂ ப்ரகரிதிஷப்தோவதாரோபாதாந பூததிவ்யவிக்ரஹமேவாஹ.அவதாரவிக்ரஹோபாதாநபூதப்ரகரிதேர்பஹுஷ்ருதிஸித்ததாமாஹ ‘ஸ்வஸ்வரூபமிதி’.’ஸ்வரூபஂ’ ப்ரஹ்மணோபரம்’ இதி ப்ரயோகாத் ஸ்வரூபஷப்தோத்ர விக்ரஹபரஃ. “ஆதித்யவர்ணஂ தமஸஃ பரஸ்தாத்” இத்யநேநாப்ராகரிதத்வஂ, ஸ்வாஸாதாரணநிரதிஷயதீப்தியுக்தத்வஂ ச ஸித்தம். தத்ப்ரகரணே ச தேஷவிஷேஷவர்தித்வநித்யஸூரிஸேவ்யத்வலக்ஷ்மீபதித்வாதிகமபி பாவ்யம்.’க்ஷயந்தம்’ இத்யத்ர ரஜஷ்ஷப்தோ மூலப்ரகரிதிவிஷயஃ, ந து லோகவிஷயஃ’தமஸஃ பரஸ்தாத்’ இத்யநேந துல்யார்தத்வாத். ரஜோகுணகத்வாச்ச ரஜஷ்ஷப்தேநோபாதாநம். வ்யாப்தஸ்ய தேஷவிஷேஷே’க்ஷயந்தம்’ இதி நிவாஸவசநாத்விக்ரஹவத்த்வஂ ஸித்தம். ஏவஂ பரமபதநிலயநித்யவிக்ரஹஸத்பாவஃ ஷ்ருதித்வயேந தர்ஷிதஃ. தஸ்யைவ விக்ரஹஸ்யாவதாரதஷாஂ தர்ஷயதி ‘ய ஏஷ’ இதி.’ஆதித்யவர்ணஂ”ஹிரண்மயஃ’ இதி ச ஏக ஏவ வர்ணஃ ப்ரதியோகிபேதாதீநப்ராதிகூல்யாநுகூல்யாப்யாஂ முகபேதேந நிர்திஷ்யதே. யதாஹுர்த்ரமிடாசார்யாஃ’ஹிரண்மய இதி ரூபஸாமாந்யாச்சந்த்ரமுகவத்’ இதி. யத்வா, ஹிரண்யவிகாரத்வவ்யவச்சேதார்தஂ த்ரமிடபாஷ்யம். தத்ர’மயூரகண்டச்சவிஷுத்தஹேம’ இதி ஷில்பஷாஸ்த்ராநுஸாராச்ச்யாமத்வஸித்திஃ. அதவா ஸ்வேச்சயா தத்ர தத்ர ரூபபேதேபி ந தோஷஃ; யுகாதிபேதே பர்யாயதஃ ஸிதரக்தாதிவிகல்பிதவாஸுதேவாதிவ்யூஹரூபபேதவத். தஸ்யைவ ஹரிதயாந்தர்வர்தித்வே ஷ்ருதிமுதாஹரதி ‘தஸ்மிந்நிதி’.’மநோமய’ இதி விஷுத்தேந மநஸா ப்ரசுரஃ க்ராஹ்ய இத்யர்தஃ. ஆப்யாஂ ஷ்ருதிப்யாமுபாஸநஸ்தாநவிஷேஷஸ்திதிர்தர்ஷிதா. காரணவாக்யேபி தஸ்ய ஸத்பாவஂ தர்ஷயதி ‘ஸர்வ’ இதி.’வித்யுத’ இதிபதஂ வித்யுத்வர்ணாதித்யந்யத்ர வ்யாக்யாதம். “ஷாந்த உபாஸீத” சாஂ.உ.3.14.1 இதி பூர்வோக்தமுபாஸநஂ’ஸ க்ரதுஂ குர்வீத’ இத்யநூத்ய தச்சேஷதயா விதீயமாநேஷு பாரமார்திகேஷு குணேஷு விக்ரஹஸ்ய ஸஹபாடஂ தர்ஷயதி ‘பாரூப’ இதி. பாஸ்வரரூப இத்யர்தஃ. “மாஹாரஜநஂ வாஸஃ” இத்யேஷா ஷ்ருதிஃ ஷாரீரகே வ்யாக்யாதா “தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபஂ யதா மாஹாராஜநஂ வாஸஃ” பரி.உ.2.3.6 இத்யாதிநாகாரவிஷேஷஂ சாபிதாய, இதி. ஸர்வாஸு சாஸு ஷ்ருதிஷு விலக்ஷணஸ்தாநவிஷிஷ்டத்வவர்ணவிஷேஷபுருஷஷப்தாதிபிஃ பூர்வோபாத்தபுருஷஸூக்தவாக்யைகார்தத்வஂ ஸித்தம். ஷஷ்டீஸமாஸே ஸ்வஸ்வாமித்வலக்ஷணஃ ஸம்பந்தோத்ர விவக்ஷித இத்யாஹ ‘ஆத்மீயயேதி’.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ இதி நிகண்டூபாதாநம். ஸ்வேச்சாவதரணப்ரகரணே ஸ ஏவார்த உசித இதி பாவஃ. நிகண்டுஸித்தமர்தஂ தந்மூலபூதாபியுக்தப்ரயோகேண த்ரடயதி ‘ததா சேதி’.’மாயயா வேத்தி’ இதி நிர்தேஷாதியஂ மாயா நிகண்டுஸித்தஂ ஜ்ஞாநமேவ, பரப்ரஸித்தமாயாயாஸ்தத்த்வார்தப்ரகாஷகத்வாபாவாதிதி பாவஃ. ஏதேந ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர த்ரிகுணாத்மகப்ரகரிதிவிஷயத்வஂ மாயாஷப்தஸ்ய மித்யார்தபரத்வஂ ச’ஷங்கரோக்தஂ’ ப்ரத்யுக்தம்.’ஆத்மமாயயா’ இத்யஸ்ய ந பரமார்ததோ லோகவதிதி வ்யவச்சேதஷ்சாயுக்தஃ; அந்யேஷாமபி ஜந்மநஸ்தந்மதே மித்யாத்வாத்யவிஷேஷாத். பலிதஂ வக்துமாஹ ‘ஆத்மீயேந ஜ்ஞாநேநேதி’. ஜ்ஞாநமாத்ரஸ்ய கதமவதாரஹேதுத்வம்? ததா ஸதி ஸர்வதாவதாரப்ரஸங்காதித்யத்ராஹ ‘ஆத்மஸங்கல்பேநேத்யர்த’ இதி.

ஷ்லோகஸ்ய பிண்டிதார்தஂ விஷதயதி ‘அத’ இதி.’அபஹதபாப்மத்வாதீத்யநேந தஹரவித்யாஸுபாலோபநிஷத்ப்ரபரிதிஷு’ நிர்தோஷத்வமங்கலகுணாகரத்வப்ரதிபாதகாநாஂ வாக்யாநாஂ ஸ்மாரணம்.’ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமித்யாதிநா”ஸமஸ்தகல்யாணகுணாத்மகோஸௌ ஸ்வஷக்திலேஷாத்தரிதபூதஸர்கஃ. இச்சாகரிஹீதாபிமதோருதேஹஃ ஸஂஸாதிதாஷேஷஜகத்திதோஸௌ’ வி.பு.6.5.84 இத்யாதி ஸ்மாரிதம். ஈஷ்வரஸ்வபாவஃ ஸர்வோப்யுபயலிங்கத்வேந ஸங்கரிஹ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வமைஷஂ ஸ்வபாவமிதி’. ஸ்வமேவ ரூபமித்யாதிநா’ஸமஸ்தஷக்திரூபாணி தத்கரோதி ஜநேஷ்வரஃ. தேவதிர்யங்மநுஷ்யாதிசேஷ்டாவந்தி ஸ்வலீலயா’ வி.பு.6.7.70 இத்யாதி பகவத்பராஷரவசநஂ ஸ்மாரிதம். அஜத்வஷ்ருத்யா ஸ்மரிதிரியஂ பாத்யேதேத்யத்ராஹ ‘ததிதமாஹேதி’. அஜாயமாநத்வஜாயமாநத்வோக்த்யா வ்யாஹதத்வாதந்யபரேயஂ ஷ்ருதிரித்யத்ராஹ ‘இதரேதி’.’அஜாயமாநஃ’ இதி ஸாமாந்யநிஷேதோ’பஹுதா விஜாயதே’ இதி விஷேஷவிதாநஸந்நிதாநாத்ஸங்குசிதவிஷயஃ. அதோ விரோதே ஷாந்தே தாத்பர்யாந்தரஂ ந கல்ப்யம். ந சேதஂ “பஹு ஸ்யாம்” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இதிவஜ்ஜகத்ரூபேண பஹுபவநம் “தஸ்ய தீராஃ பரிஜாநந்தி யோநிம்” இத்யநந்தரவாக்யைர்முமுக்ஷூணாமத்யந்தோபகாரகாவதாரரஹஸ்யஜ்ஞாநஸ்யைவ வக்துமுசிதத்வாத், அஸ்ய ச ததைகார்த்யாதிதி பாவஃ. ஸத்யமித்யாத்வாப்யாஂ விரோதபரிஹாரஷங்காஂ ப்ரதிக்ஷேப்துஂ’ப்ரகரிதிஂ ஸ்வாமதிஷ்டாய’ இத்யஸ்ய விக்ரஹபரத்வே மாயாஷப்தஸ்ய ஜ்ஞாநபரத்வே ச ஹேத்வந்தரமாஹ’பஹூநீதி’.’வேத, ஸரிஜாமிதிவ்யம்’ இதி ஷப்தைர்ஜந்மநோ புத்திபூர்வத்வேச்சாமாத்ரகரிதத்வதிவ்யத்வாதீநி ப்ரதீயந்தே. மாயாதிஷப்தஸ்யாவித்யாதிபரத்வே து ததகிலஂ விருத்யேத. நஹ்யத்ர ஜந்மஷப்தோ ஜந்மப்ரதிபாஸவாசீ; ந ச ப்ரத்வஸ்தபர்யாயோ வ்யதீதஷப்தோ பாதபரஃ; ந ச மாயாகரிஹீதஸ்ய ஸர்வவேதித்வம்;நாபி மித்யாபூதே ஸரிஷ்டிஷப்தஃ; ந ச த்ரிகுணப்ரஸூதஸ்ய திவ்யத்வமிதி பாவஃ.

—————

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்
—৷৷4.7৷৷

பாரத—பரத குலத்தில் உதித்தவனே
யதா யதா ஹி -எந்த எந்தக் காலங்களில்
தர்மஸ்ய -அறத்திற்கு
க்லாநிர் பவதி -வாட்டம் ஏற்படுகிறதோ –
அ தர்மஸ்ய-அறத்திற்கு எதிரான மறத்திற்கு
அப்யுத்தாநம் -(பவதி )–எழுச்சி ஏற்படுகிறதோ-உத்தானம் -எழுவது
ததா-அந்த அந்தக் காலங்களில்-ததா-ஒரு முறை இருந்தாலும் இரண்டு முறை சொன்னதாகவே கொள்ள வேண்டும்
அஹம் -நான்
ஆத்மாநம் -என்னையே
ஸருஜாமி –படைத்துக் கொள்கிறேன்

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

யதா யதா -இரட்டை -எப்போது எப்போது-யுகத்துக்கு உள்ளேயும் -கால நியமம் இல்லாமல் – -யுகம் தோறும் அவதாரம் அடுத்த ஸ்லோகத்தில் –
கால அநியமும் யுக அநியமும் -இரண்டையும் சொன்னவாறு –
ஜீவாத்மாவுக்கு -கர்மம் யுந்த பிறவி -கர்மம் பழுத்து பயன் தர வேண்டுமே –
இவனுக்கோ காருண்யம் இல்லாத சமயமே இல்லையே -இயற்கையான காருண்யம்
மீனாய் ஆமையுமாய் –கற்கியுமாம் –இன்னம் கார் வண்ணனே –பிறந்து பிறந்து ஒளி விஞ்சி அன்றோ இருக்கிறான் –

வேதத்தால் சொல்லப்பட்டதே தர்மம்
இதம் குரு -இதம் மா குரு சொல்லுமே -இத்தைச் செய் நன்மை பயக்கும் -இத்தைச் செய்யாதே தீமை விளையும் செய்யாதே என்றும் சொல்லும்
ஜைமினி சோதனா – லக்ஷண அர்த்த -ஸ்ரேயஸ் தரும் படியும் இருக்கும்

க்லானி-குறைபாடு -மறையும் பொழுது தான் பிறக்கிறேன் என்று இல்லை -சிறிது குறைபாடு ஏற்பட்டாலே பிறக்கிறான்
அப்படி ரக்ஷிக்கும் தர்மம் ஒரு நாளும் அழியாதே -சநாதனம் -அதனாலே ஆகும் –

ஆத்மாநம் -ஸ்வரூபத்தை இங்கே சொல்ல வில்லை -உடலோடு கொடியவன் என்பதும் இல்லை -திருமேனியும் நித்யம் –
அப்ராக்ருத விக்ரஹத்துடன் அவதரிப்பதையே சொன்னவாறு -அஹம் ஸ்ருஜாமி -நானே என்னைப் படைத்துக் கொள்கிறேன் –

৷4.7৷৷ந கால நியமஃ அஸ்மத் ஸஂபவஸ்ய; யதா யதா ஹி தர்மஸ்ய வேதேந உதிதஸ்ய சாதுர் வர்ண்ய சாதுராஷ்ரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய(வேதத்தால் விதிக்கப்பட்ட  வர்ணாஸ்ரம வரம்பு மீறாமல் ) கர்தவ் யஸ்ய க்லாநிஃ பவதி, யதா யதா ச தத் விபர்ய யஸ்ய (வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் )அதர்மஸ்ய அப்யுத்தாநஂ ததா அஹம் ஏவ (ஏவகாரம் -நானே -ஸஹ காரி நிரபேஷமாக சாஷாத்தாக நானே )ஸ்வ ஸஂகல்பேந உக்த ப்ரகாரேண ஆத்மாநஂ ஸரிஜாமி.ஜந்மநஃ ப்ரயோஜநம் ஆஹ(ஸ்வரூபத்தை பிறப்பிக்க முடியாதே -ஆத்மாநாம் -திவ்ய மங்கள விகிரஹத்துடன் படைத்துக் கொள்கிறேன் என்கிறான் )

(தன்னை தூஷிப்பதைப் பற்றி சொல்லாமல் -வேதம் வாழ்தல் எல்லாமே வாழும் -சாஸ்த்ர யோனித் வாத் -வேதைக சமைதி கம்யன் -ஊற்றம் உடையாய் -உளன் -சுடர் மிகு ஸ்ருதியும் உளன்)

৷৷4.7৷৷கதா? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மகாலமாஹேதி’. யுகா நியமஸ்ய வக்ஷ்யமாணத்வாத்’யதா யதா’ இதி வீப்ஸா யுகாந்தர்வர்திகாலாநியமபரேத்யபிப்ராயேணாஹ ‘ந காலேதி’. ஜீவவத்புண்யாபுண்யவிபாககரிதோ வா, வ்யவஸ்தித ஸ்வஸங்கல்பகரிதோ வா, மந்வந்தரமஹாகல்பாதிரூபோ வா காலநியமோ நாஸ்தீத்யர்தஃ. ப்ரமாணதஃ ஸ்வரூபதஷ்ச க்லாநிப்ரகாரஸூசநாய பாஹ்யதர்மதர்மைகதேஷவ்யவச்சேதாய ச’வேதேநோதிதஸ்யேத்யாதிவிஷேஷணம்’.’வேதேநோதிதஸ்ய கர்தவ்யஸ்ய’ இதி தர்மலக்ஷணமப்யுக்தஂ பவதி. அதர்மஷப்தே நஞோ விரோதிவிஷயத்வமபிப்ரேத்யோக்தஂ’தத்விபர்யயஸ்யேதி’. ததஷ்சாவைதிகாகமோதிதஸ்ய வர்ணாஷ்ரமாதிவ்யவஸ்தாரஹிதஸ்ய தத ஏவாகர்தவ்யஸ்யேதி பூர்வோக்தப்ரகாரவைபரீத்யஂ பலிதம். தர்மக்லாநேரதர்மோத்தாநஸ்ய ச துலாக்ரநமநோந்நமநவத்பரஸ்பராவிநாபாவித்வஂ ச தர்ஷிதம். ததேத்யத்ராபி’யதாயதா’ இத்யேதத்ப்ரதிநிர்தேஷரூபத்வாத்வீப்ஸாநுஸந்தேயா. தர்மஸ்ய க்லாநிமபி ந ஸஹே, கிஂ புநர்விச்சேதஂ? இதி க்லாநிஷப்ததாத்பர்யம். ஏவமதர்மஸ்யோத்கமமாத்ரமபி ந ஸஹே, கிமுத ஷாகாநுஷாகதாஂ? இத்யப்யுத்தாநஷப்தாபிப்ரேதம்.’அஹஂ ஸரிஜாமி’ இத்யத்ராபேக்ஷணீயாந்தராதர்ஷநாத்’அஹமேவ ஸ்வஸங்கல்பேநேத்யுக்தம்’. தேந காலஸ்யாப்யதிஷ்டாதுஸ்தஸ்ய காலபரதந்த்ரத்வஂ பரிஹரிதஂ பவதி.’ஆத்மாநஂ ஸரிஜாமி’ இத்யேதந்ந தாவத்ஸ்வரூபவிஷயஂ, தஸ்ய நித்யத்வாத், ஆத்மாஷ்ரயாதிப்ரஸங்காச்ச. நாபி ஜீவவிஷயஂ, தஸ்ய ப்ரகரணாஸங்கதத்வாத். நாப்யாத்யவிக்ரஹவிஷிஷ்டஸ்வாத்மவிஷயஂ, தஸ்யாபி ரூபஸ்ய நித்யத்வாத்; அதோவதாரவிக்ரஹ விஷிஷ்டஸ்வாத்மாத்ர’ஆத்மாநம்’ இதி நிர்திஷ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’உக்தப்ரகாரேணேதி’.

———–

எந்தக் காலத்தில் பிறக்கிறாய் என்பதுக்கு கீழ் பதில்
இதில் பிறந்ததனால் பிரயோஜனம் என்ன என்பதற்குப் பதில்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

ஸாதூநாம்-நல்லோர்களை
பரித்ராணாய –நன்கு ரக்ஷிப்பதின் பொருட்டும்
துஷ் க்ருதாம்–தீயவர்களை
விநாஸாய -அழிப்பதின் பொருட்டும்
ச .–உம்மைத் தொகை
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய -அறத்தை நன்கு நிலை நிறுத்துவதில் பொருட்டும்
ஸம்பவாமி யுகே யுகே—அந்த அந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன் –

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தம் தானே முக்கிய காரணம் -அது பண்ண
துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
கொடியேன் பால் காண வாராய்-

சாலப் பல நாள் -யுகம் தோறும்-உயிர்கள் காப்பானே-கோலத் திரு மா மகளுடன்-

ரஷணம் என்றாலே -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் தானே –

சாதுக்களை ரக்ஷிப்பதற்காக மேலோட்டம்
வைஷ்ணவ அக்ரேஸர் –அநந்யார்ஹ பக்தி ஒன்றிலே நோக்கம் –
ஆஸ்திகர் -தேவதாந்த்ர பரர்களும் – அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் பூஜிப்பவர்களும் -நேராக அவனையே -மூன்றாம் வகை
இங்கு சாது என்றது இந்த மூன்றாம் வகை -உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன் –
2-56-வஸீ கார ஸம்ஹிதை பார்த்தோம் -ஞான யோகத்தில் மிக உயர்ந்த நிலை -ப்ரஹ்லாதன் எடுத்துக் காட்டு –
உடலையும் பொருட்படுத்தாமல் கடிப்பதை அறியாமல் இருந்தானே
பரித்ராணாம் -முழுமையாக நன்றாக ரக்ஷிப்பது -சேர்ந்தால் தரிப்பர் -ஒரு பகல் விஸ்லேஷம் ஆயிரம் ஊழி போல் –
சாதுக்களுக்கு -வெளி விரோதி -தீயோர்-உள் விரோதி -அவனைக் காணாமல்-அணைக்காமல் – இருப்பது -தன்னைக் கொடுத்து தரித்து இருக்கப் பண்ண வேண்டுமே –
ச காரம் -உம்மைத்தொகை -அன்வாசயம் -இரண்டாம் பக்ஷ பிரயோஜனம் -என்றவாறு -இத்தை அவதரிக்காமலே செய்ய முடியுமே
சாது பரித்ராணாமே முக்ய பிரயோஜனம் -அவதரித்தது தானே தன்னைக் காட்டவும் அணைக்கவும் பெறப்பெறுவார்கள்
தர்மம் ஸம் ஸ்தாபனம் -நன்றாக நிலை பெறச்செய்வது ரிஷிகள் ஆச்சார்யர்கள் மூலம் செய்யாமல் -நேராகச் செய்வது
செய்து காட்டி -அனுஷ்டானம் -பெருமாள் -இளைய பெருமாள் -பரத்தாழ்வான் -சத்ருக்கனன் மூலம் விசேஷ தர்ம அனுஷ்டானம் –
அதுக்கும் மேல் யாரைக் குறித்து செய்ய வேண்டும் என்றும் காட்டி அருளி -அஹம் ஹி ஸர்வ யஜ்ஜாநாம் போக்தா பிரபு ஏவச –
ஆராதனத்தில் ஊற்றம் வர அவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமே -இதுவே தர்ம ஸம் ஸ்தாபனம் –

பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
காக்கப்  படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்மஷீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )மத்தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.

৷৷4.8৷৷கிமர்தஂ? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மந’ இதி. ஸாதுஷப்தோத்ர நாஸமர்தாதிவிஷயஃ, துஷ்கரிச்சப்தப்ரதியோகிரூபத்வாத்; அதஃ ஸுகரிதிவிஷயோயமித்யபிப்ராயேணோக்தஂ ‘உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி.’உக்தலக்ஷணஷப்தேந”வேதேநோதிதஸ்ய’ இத்யாதி பராமரிஷ்யதே. யே புநருக்தலக்ஷணதர்மேண தேவதாந்தராண்யேவ உபாஸதே; யே ச வைஷ்ணவாஃ’ப்ரதர்ஷநவித்யாதிந்யாயேந’ தத்தத்தேவதாவிஷிஷ்டவேஷேணைவ பகவந்தமுபாஸதே; ந தேஷாமவதாரப்ரதர்ஷநேத்யந்தநிர்பந்தஃ; தத்தத்தேவதாகஞ்சுகிதவேஷேணைவ ததபேக்ஷிதஸகலப்ரதாநோபபத்தேரித்யபிப்ராயேணோக்தஂ ‘வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பகவத்பக்தவர்யா இத்யர்தஃ.’உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி’வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பதாப்யாஂ’ந சலதி நிஜவர்ணதர்மதோ யஃ’ வி.பு.3.7.20’வர்ணாஷ்ரமாசாரவதா’ வி.பு.3.8.9 இத்யாதி ஸூசிதம். யதாவஸ்திதமுபாயஂ ப்ராப்யஂ சாவலம்பமாநா இதி ச பலிதம். த்ராணஂ ஹி நாமாத்ராநிஷ்டநிவர்தநபூர்வகேஷ்டப்ராபணம். ஏவஂவிதவைஷ்ணவாக்ரேஸராணாமநிஷ்டஷ்ச பகவதலாபஃ; தத்ஸமாஷ்ரயணபூர்வகஂ தல்லாபேநைவ ச தஸ்யாநிஷ்டஸ்ய நிவர்தநமித்யபிப்ரேத்யோச்யதே’மத்ஸமாஷ்ரயண’ இத்யாரப்ய’ஆலாபாதிதாநேநேத்யந்தம்’. நஹ்யமீஷாமந்நபாநதாம்பூலாதிதாரணபோஷணாதிகம், கிந்து’அஹஂ கரிஷ்ண ஏவ ஸர்வஂ’ இத்யபிப்ராயேணோச்யதே’மத்தர்ஷநாத்விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிகமலபமாநா’ இதி. அதர்ஷநஂ சாநிஷ்பந்நயோகாவஸ்தத்வாத். யத்யமீ மத்ஸாக்ஷாத்காராத்பூர்வமல்பஂ காலஂ லோசநே மீலயித்வா ஸஹேரந், ததாஹமபி தாதரிஷீஂ தேஷாமவஸ்தாஂ ஸஹேயாபி, நத்வேதே ததேத்யபிப்ராயேணோக்தஂ ‘க்ஷணேத்யாதி’.’த்ருடிர்யுகாயதே த்வாமபஷ்யதாம்’ பாக.10.31.15 இத்யாதிகமிஹ பாவ்யம். அதர்ஷநதுஃகஸ்ய ச சரமாவஸ்தோச்யதே’ப்ரஷிதிலஸர்வகாவா பவேயுரிதி’. ஸ்வவிஷ்லேஷபரிக்லிஷ்டாநாமுஜ்ஜீவநாய ப்ரவரித்தஸ்ய க்ரமாத்பக்தாநுபாவ்யாகாரா உச்யந்தே’மத்ஸ்வரூபசேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேநேதி’. நஹ்யபவர்கஸுகாதிவதவதாரமந்தரேண ஸ்வஸங்கல்பமாத்ரேணைவ தத்தாதுஂ ஷக்யமிதி பாவஃ.’பரித்ராணாய’ இத்யத்ரோபஸர்கேண விவிதாநிஷ்டநிவரித்திபூர்வகவிவிதேஷ்டப்ராப்திஃ ஸூசிதேத்யபிப்ராயேண’மந்நாமகுணகர்மேத்யாதிகஂ தாரணேத்யாதிகஂ ஸ்வரூபசேஷ்டிதேத்யாதிகஂ’ சோக்தம். ஸ்வரூபமத்ர விக்ரஹஃ. ஏவஂ ஸாதூநாமாந்தரபயாத்பரித்ராணமுக்தம்; அத தேஷாமேவ பாஹ்யபயாத்பரித்ராணமுச்யத இத்யபிப்ராயேணாஹ’தத்விபரீதாநாஂ விநாஷாய சேதி’. சகாரோந்வாசயார்தஃ. இதமப்யுக்தமந்தராதித்யாதிகரணபாஷ்யே’ஸாதவோ ஹ்யுபாஸகாஃ, தத்பரித்ராணமேவோத்தேஷ்யம்; ஆநுஷங்கிகஸ்து துஷ்கரிதாஂ விநாஷஃ, ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தேஃ’ இதி. பாகவதாநாமபராதோ ஹி துஷ்கரித்த்வகாஷ்டேத்யபிப்ராயேண’தத்விபரீதாநாமித்யுக்தம்’.’ரிபூணாமபி வத்ஸலஃ”மச்சரைஸ்த்வஂ ரணே ஷாந்தஸ்ததஃ பூதோ பவிஷ்யஸி’ இதிவத்துஷ்கரிதாமபி விநாஷோ நாத்யந்தவிநாஷஃ; கிந்து, வைபரீத்யஹேதுபூதராக்ஷஸப்ரபரிதிஷரீரக்ரந்த்யாதிவிநிவர்தநம்; தந்நிவரித்தௌ ச தேஷாமபி தார்மிகத்வஂ ஸம்பவேதிதி ஸோபி தர்மஸஂஸ்தாபநபர்யவஸிதஃ. மச்சேஷபூதமாராதநஂ மயைவ ஹி ஸ்தாபநீயமித்யபிப்ராயேண’மதாராதநரூபஸ்யேத்யுக்தம்’. அநுஷ்டாநமுகேநோபதேஷமுகேந ச தர்மப்ரவர்தநஂ வ்யாஸாதித்வாராபி ஷக்யம்; ஆராத்யரூபப்ரதர்ஷநேந பக்த்யுத்பாதநமவதாராஸாதாரணப்ரயோஜநம்; பரஷ்ஷதபருஷவாதீ ஜந்மத்ரயஷத்ருஃ ஷிஷுபாலோபி ஹி கரிஷ்ணதர்ஷநேந ப்ரீதிமாந்பூத்வா முக்திஂ கத இத்யபிப்ராயேண’ஆராத்யஸ்வரூபப்ரதர்ஷநேநேத்யுக்தம்’.’ருபௌதார்யகுணைஃ புஂஸாஂ தரிஷ்டிசித்தாபஹாரிணாம்’ வா.ரா.2.3.29 இத்யாதி ச பாவ்யம். ஏதேந தர்மஸ்ய ஸம்யக்ஸ்தாபநஂ ஹி ஸ்வபர்யந்ததயா ஸ்தாபநமித்யுக்தஂ பவதி.’யுகே யுகே’ இதி வீப்ஸாதாத்பர்யஂ வ்யநக்தி’கரிதத்ரேதாதீதி’. ந து ப்ரதியுகமவஷ்யஂ ஸம்பவாமி, நாபி யுகவிஷேஷநிர்பந்த இதி பாவஃ.

————

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
––ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசத் தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

மக்களுக்குத் திவ்யம் -ஆச்சர்யம் என்று மட்டும் இல்லை
தனக்கே ஆனந்தம்
தன் சரிதை கேட்டு பெருமாள் மகிழ்ந்தானே -ம்ருத சஞ்சீவனம் –
பீஷ்மர் சொல்லக் கேட்டான்
பூரி ஜெகந்நாதப்பெருமாள் இந்த சேவை தானே
ஸ்ரீ ரோகிணி தேவி சொல்ல கேட்டு கண்கள் விரிந்து ஸேவை

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக் கொள்கிறான்.
அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக் கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:

৷4.9৷৷ஏவஂ (இப்படிப்பட்ட -கீழ் ஸ்லோகங்களில் சொன்னபடி )கர்ம மூல பூத ஹேய த்ரிகுண ப்ரகரிதி ஸஂஸர்க ரூப ஜந்ம ரஹிதஸ்ய (பிறப்பால் தாழ்ச்சி இல்லையே ப்ரக்ருதி சம்பந்தம் இல்லையே-கர்ம  மூலம் இல்லை இச்சா க்ருஹீதாம் )ஸர்வேஷ்வரத்வ ஸர்வ ஜ்ஞத்வ ஸத்ய ஸஂகல்பத்வாதி ஸமஸ்த கல்யாண குணோபேதஸ்ய ஸாது பரித்ராண மத்ஸமாஷ்ரயணைக ப்ரயோஜநஂ திவ்யம் அப்ராகரிதஂ மதஸாதாரணஂ (அசாதாரணம் -அந்தர்யாமி போல் அல்லவே-ஸாஷாத்தாக )மம ஜந்ம சேஷ்டிதஂ ச (அப்ராக்ருதமாய் -தாழ்ச்சி அற்றதாய் -பரம போக்யமாய் -நெஞ்சால் நினைப்பரிய -அளவிட முடியாத -இமையோர் தமக்கும் நினைப்பரிதால் -அம்ருத மயமாய் -இவை மூன்றும் ஜென்மங்களுக்கு சேஷ்டிதங்களுக்கும் உண்டே -மே திவ்யம் -அதி மானுஷ –எனக்கு வியப்பாக உள்ளதே -அலாப்ய லாபம் போல் )தத்த்வதஃ யோ வேத்தி (உள்ளபடி அறிந்து -சம்சயம் விபர்யயம் அல்லாமல் )ஸ வர்தமாநஂ தேஹஂ பரித்யஜ்ய புநஃ ஜந்ம ந ஏதி மாம் ஏவ ப்ராப்நோதி.மதீய திவ்ய ஜந்ம சேஷ்டித யாதாத்ம்ய விஜ்ஞாநேந வித்வஸ்த ஸமஸ்த மத் ஸமாஷ்ரயண விரோதி பாப்மா அஸ்மிந் ஏவ ஜந்மநி யதோதித ப்ரகாரேண மாம் ஆஷ்ரித்ய மதேக ப்ரியோ மதேக சித்தோ மாம் ஏவ ப்ராப்நோதி.தத் ஆஹ(அவன் ஜென்மம் நமக்கு என்று கோல நம் ஜென்மம் தந்தை கால் விலங்கு போல் வெடிக்கும் அன்றோ-பிறந்தவாறும் -திடமாக இங்கேயே இருக்க சரணாகதி அன்றோ -நீ நெய் உண்டாய்– நாம் கண் உண்டோம்– பிரதிகூலர் மண் உண்டார்கள்  )

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

৷৷4.9৷৷ப்ராஸங்கிகஸ்யாவதாரயாதாத்ம்யகதநஸ்ய பரமப்ரகரிதமோக்ஷோபயோகித்வமுச்யதே ‘ஜந்ம கர்ம’ இதி ஷ்லோகேந.’ஏவமிதி’ ‘அஜோபி’ 4.6 இத்யாதிநோக்தப்ரகாரேணேத்யர்தஃ.’திவ்யஂ’ இத்யஸ்யைவார்தஃ’அப்ராகரிதமிதி’.’மதஸாதாரணமித்யநேந’ “பஹு ஸ்யாஂ ப்ரஜாயேய” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இத்யுக்தஜந்மவ்யவச்சேதஃ. வஹ்ந்யௌஷ்ண்யவத்தர்மிக்ராஹகப்ரமாணஸித்தஃ பதார்தாந்தரேஷ்வதரிஷ்டஷ்ச ப்ரகாரோ ந தர்கபாத்ய இதி பாவஃ.’ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ இத்யுக்தே ஜந்மவத்தத்தேதுபூதஂ புண்யமபி கிமஸ்தி?. இதி ஷங்காவ்யுதாஸாய’சேஷ்டிதமிதி’ வ்யாக்யாதம்.’தத்த்வத’ இதி ஸஂஷயவிபர்யயரஹிதமித்யர்தஃ.’தேஹஂ பரித்யஜ்ய’ இத்யுக்தே ப்ராரப்தகர்மபர்யவஸாநதேஹஂ பரித்யஜ்யேதி ஸாதாரணப்ரதீதிஃ ஸ்யாத், தத்வ்யவச்சேதாய ‘வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யுக்தம்’. ஏதச்ச’யோ வேத்தி ஸ புநர்ஜந்ம நைதி’ இதி வேதிதரித்வாவஸ்தாபேக்ஷயா புநர்ஜந்மப்ரதிஷேதாத்பலிதம்.’புநர்ஜந்ம நைதி’ இத்யநேந விரோதிநிவரித்திருச்யதே;’மாமேதி’ இதீஷ்டப்ராப்திஃ. ந கேவலஂ விரோதிநிவரித்திமாத்ரேண ஸ்வாத்மாநந்தாநுபவமாத்ரம், அபித்வவதாரரஹஸ்யஜ்ஞாநவாந்மாமேவ ப்ராப்நோதீத்யவதாரணார்தஃ. நநு வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யாத்யயுக்தம், ப்ராரப்தகர்மாவஸாநே ஹி மோக்ஷஃ ஷாரீரகே நிர்ணீதஃ, ப்ராரப்தஸ்ய ச கர்மணஃ கியந்தி ஜந்மாநி ஸாத்யாநீதி ந நியமஃ; வ்யாஸாதிஷ்வநியமதர்ஷநாத். ந ச ஜந்மகர்மஜ்ஞாநமாத்ராந்மோக்ஷஃ, தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயதுஷ்கரதரகர்மஜ்ஞாநாநுகரிஹீதோபாஸநஷாஸ்த்ரார்தநைரர்தக்யப்ரஸங்காதித்யத்ராஹ ‘மதீயேதி’. திவ்யஜந்மசேஷ்டிதஜ்ஞாநேநோபாஸநவிரோதிநாஂ ஸமஸ்தாநாஂ பாபாநாஂ நிவரித்தத்த்வாதஸ்மிந்நேவ ஜந்மநி ஜந்மாந்தராரம்பகபாபாஂஷப்ரஷமநஸமர்தபுஷ்கலோபாஸநநிஷ்பத்தேர்ந ஜந்மாந்தரபரிக்ரஹஃ. ஸ்மரந்தி ச’விநிஷ்பந்நஸமாதிஸ்து முக்திஂ தத்ரைவ ஜந்மநி’ வி.பு.6.7.35 இதி. ஏவஂ சோபாஸநபௌஷ்கல்யஹேதுதயாஸ்யாபிதாநாத் பரம்பரயா மோக்ஷஸாதநத்வமிதி நோபாஸநஷாஸ்த்ரவையர்த்யமிதி பாவஃ.’யதோதிதப்ரகாரேண மாமாஷ்ரித்யேதி’ புஷ்கலத்யாநாவஸ்தோச்யதே.’மதேகப்ரிய’ இதி து பக்திரூபாபந்நதோக்திஃ. அஹமேக ஏவ ப்ரியஃ ப்ரீதிவிஷயோ யஸ்ய ஸ மதேகப்ரியஃ’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ 7.17 இதி வக்ஷ்யதே. ஏதேந புருஷார்தாந்தரநிஷ்டவ்யவச்சேதஃ.’மேதகசித்த’ இதி ஸமாத்யவஸ்தா. மய்யேகஸ்மிந்நேவ சித்தஂ யஸ்ய ஸ மதேகசித்தஃ.

———–———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதைகள்-

September 25, 2024

வேதத்தின் சாரம் எனப்படுகிறது பகவத் கீதை.-பதினெட்டு அத்தியாயங்கள்; எழுநூற்றி ஒன்று ஸ்லோகங்கள்;  6446 பதங்கள் 8990 பதச் சேதங்கள் (சப்தங்கள்) உள்ள பகவத் கீதை உலகில் கோடானுகோடி பேருக்கு காலம் காலமாக வழி காட்டி வருகிறது.

மஹாபாரத கீதைகள்

மஹாபாரதத்தில் மட்டும் பகவத் கீதை, பராசர கீதா, ஹம்ஸ கீதா, அனு கீதா, உத்தர கீதா, ஷட்ஜ கீதா, ப்ராம்மண கீதா, வ்யாத் கீதா, பக கீதா, நகுஷ கீதா, சௌன்க கீதா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

ஒவ்வொன்றும் அபூர்வமான தத்துவங்களை விளக்குகின்றது.

உத்தர கீதை ; பிரமாண்ட புராணத்தில் இடம் பெறும் கீதை இது. ப்கவத் கீதைக்கு இது ஒரு அநுபந்தம் போன்றது. உண்மையை இடையறாது தியானி என்ற சுலபமான வழியை இது கூறுகிறது. இதற்கு ஆதி சங்கரரின் குருவான கௌடபாதர் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்.

வேணு கீதை: பாகவதத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கோபிகள் கிருஷணர் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் பக்தி மேலிட அவரது புகழைப் பாடத் தொடங்குகின்றனர். கிருஷ்ணரின் குழலோசை அவர்களை புளகாங்கிதம் அடைய வைத்து இறை உணர்வை ஊட்டுகிறது.

சுருதி கீதை: பாகவதம் பத்தாம் ஸ்காந்தத்தில் இடம் பெறும் இக்கீதை சுருதிகள் நாராயணனைப் பிரார்த்திப்பதை விளக்குகிறது.

கபில கீதை: பாகவதம் மூன்றாம் ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கபிலர் தன் தாயாரான தேவஹூதிக்கு செய்த பிரமாதமான போதனை இதில் உள்ளது

யுதிஷ்டிர கீதை. மஹாபாரத்த்தில் வரும் பிரசித்தமான சம்பவம் ய்ட்சனும் யுதிஷ்டிரரும் செய்த சம்வாதம். யட்சனின் கேள்விகளுக்கு அனாயாசமாக பதில் கூறி அவனிடம் வரம் பெற்று இறந்த தன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறார் தர்மர்.  யட்ச ப்ரஸ்னம்  என்று புகழ் பெற்றுள்ளது இதுவே.

அஷ்டாவக்ர கீதை; மாமன்னன் ஜனகன் ஒரு கனவு காண்கிறான். அதில் அவன் பசியால் வாடி பிச்சை எடுப்பது போலவும் இறுதியில் சிறிது கஞ்சி கிடைக்க, அதை வாயருகில் கொண்டு போகும் போது இரு எருதுகள் சண்டையிட்டுக் கொண்டு அவன் மீது மோத கைக்குக் கிடைத்த கஞ்சி வாய்க்குக் கிடைக்காமல் கஞ்சி சட்டி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைவது போலவும் காண்கிறான்.. அப்போது கனவிலிருந்து விழித்த ஜனகன், “இதுவா, அதுவா , எது உண்மை?” (மன்னனாக இருப்பதா, பிச்சை எடுப்பதா?) என்ற கேள்விக்கு ஆளாகிறான். அவனை சந்திக்கும் அஷ்டாவக்ரர், “இதுவும் உண்மையல்ல; அதுவும் உண்மையல்ல” என்று கூற அவன் தன் குழப்பம் நீங்குகிறான். ‘அப்போது எது உண்மை?’ என்று ஜனகன் கேட்க உண்மைப் பொருளை அஷ்டாவக்ரர் விளக்குகிறார். அதுவே இந்த அஷ்டாவக்ர கீதையாக மலர்கிறது.

சௌனக கீதை ; மஹாபாரதத்தில் சௌனக முனிவர் தர்மபுத்திரருக்கு உரைக்கும் உபதேச மொழிகளே சௌனக கீதையாக அமைகிறது. பிரபஞ்ச வாழ்வு பற்றி இதில் எடுத்துரைக்கப்படுகிறது

பக கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது.

பக முனிவர் பல கற்பங்கள் வாழ்ந்தவர். அவருக்கும் இந்திரனுக்கும் நடக்கும் இந்த சம்பாஷணையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மிக மிக நீண்ட காலம் வாழ்ந்த முனிவர் தன் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறார்.

நஹுஷ கீதை: மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஒட்டி எழும் கீதை இது. நஹுஷன் என்ற பாம்பிடம் பீமன் பிடிபடுகிறான். அவனை விடுவிக்க விரைகிறார் தர்மபுத்திரர். தர்மரிடம் நஹுஷன் கேள்விகள் கேட்க அதற்குத் தக்க விடை அளிக்கிறார் தர்மர். அதனால் மனம் மகிழ்ந்த நஹுஷ பாம்பு பீமனை விடுவிக்கிறது. நஹுஷனின் கேள்விகளும் தர்மரின் பதில்களும் மிக்க சுவையானவை.

அவதூத கீதை; உயர்ந்த அத்வைத ஞானம் பற்றி அறிய விரும்புவோருக்கான  கீதை இது. பரமாத்மா சிவம். சிவம் என்றால் மங்கலமானவர். அவரைப் பற்றிய உண்மையில் ஆரம்பித்து அத்வைத சித்தாந்தத்தைக் கூறுகிறது இது.

தத்தாத்ரேய முனிவருக்கும் ஸகந்தனுக்கும் நடந்த இந்த சம்பாஷணை உயர் நிலையில் உள்ள சாதகர்களுக்காக அமையும் ஒரு கீதை.

அனு கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கிருஷ்ணரை மீண்டும் பகவத் கீதையை உரைக்குமாறு அர்ஜுனன் வேண்ட அவனை கிருஷ்ணர் கடிந்து கொள்கிறார். நினைத்த நேரம் எல்லாம் சொல்லக் கூடிய ஒன்று அல்ல கீதை. இருந்தாலும் அருள் மீதூற சுருக்கமாக கீதை தத்துவத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளி உரைப்பது இது.

தேவி கீதா ; தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 32ஆம் அத்தியாயமாக மிளிர்கிறது தேவி கீதா. இதே நூலில் பகவதி கீதாவும் இடம் பெறுகிறது.

ஹம்ஸ கீதை ; அன்னப் பறவை வடிவில் இருந்த விஷ்ணுவிற்கும் பிரம்மாவின் புத்திரரகளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையே ஹம்ஸ கீதை.

வராஹ புராணத்தில் ருத்ர கீதா மற்றும் அகஸ்திய கீதா இடம் பெறுகின்றன.

கூர்ம புரணமோ ஈஸ்வர கீதா மற்றும் வியாச கீதாவை எடுத்துரைக்கிறது.

ரிபு கீதா:  விஷ்ணு புராணத்தில் இடம் பெறும் இதில் ரிபு முனிவர் தனது சீடரான நிதகருக்கு வேதாந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

சிவ பார்வதி சம்வாதமான குரு கீதா குருவின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையில் நடந்த சுவையான உரையாடல் ராம கீதையாக அத்யாத்ம ராமாயணத்தில் அமைகிறது.

வசிஷ்ட கீதையில் வசிஷ்ட முனிவர் ராமருக்குப் பல பேருண்மைகளைக் கூறுகிறார்.

நாரத கீதை கிருஷ்ணருக்கும் நாரத முனிவருக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறுகிறது.

இன்னும் சூர்ய கீதா, பஞ்ச தச கீதா, சக்தி கீதா, பிங்கல கீதா, சம்பு கீதா, சப்த ஸதி கீதா, ப்ரமர கீதா, ராஸ கீதா, விஷ்ணு கீதா, பித்ரு கீதா, பிருத்வி கீதா, சாந்தி கீதா, போத்ய கீதா, துளஸி கீதா, வைஷ்ணவ கீதா, ஹரித கீதா, பீஷ்ம கீதா, ஞான கீதா, ஜன்ம கீதா, ம்ருத்யுஞ்சய கீதா,ப்ரணவ கீதா என்று இப்படி பெரிய கீதை பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டமான பேருண்மையை உபதேசிக்கிறது.

———-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன ஸ்ரீ கண்ணதாசன்-

September 19, 2024

முதல் அதிகாரம் -ஸ்ரவண அதிகாரத்வம்
இரண்டாம் அதிகாரம் -தன் மோஹ நிவ்ருத்தி
மூன்றாம் அதிகாரம்-கர்மயோக கர்த்ருத்வம்-அவனது கருவியாக இருக்க வேண்டும் கர்வியாக இருக்கக் கூடாதே
நான்காம் அத்யாயம் -கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான யோகமே ஸ்ரேஷ்டம்
ஐந்தாம் அத்யாயம் கர்ம யோக அந்தர் கத ஞான விபாகம்
ஆறாம் அத்யாயம் யோக அப்யாஸ விதிகள்
இதுவரை ஞானத்துடன் கூர்ம கர்மா யோகம் -ஆத்மா சாஷாத்காரம் பலன்
மேல் பக்தனின் ஏற்றமும் பக்தி யோகமும்

ஏழாம் அத்யாயம் பிரபுத்த்ய ப்ரதானம் -ஞாநியின் ஏற்றம் -சதுர்வித அதிகாரிகளில் அநந்யார்ஹ பக்தன் ஞானி -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருக்குமவர்கள்
எட்டாம் அதிகாரம்–உடல் விட்டு த்ரிவித அதிகாரிகள் செல்லும் இடங்கள்-தூமாதி மார்க்கம் -கைவல்யம் அர்ச்சிராதி மார்க்கம் –
ஒன்பதாம் -தத் ப்ரகார பக்தி யோகம் –இடைவிடாமல் தைலதாரா -மன் மநா பாவ மத் பக்தன் மத் யாஜி மாம் நமஸ்குரு மாம் பாராயணம் -மாம் ஏவ வைஷ்யஸி -இத்யாதி
பத்தாம் அத்யாயம் -பூமா விபூதி ஆதிக்யம் -பக்தி செய்ய -வளர -மாதங்களில் நானே மார்கழி போல் –
பதினொன்றாம் அத்யாயம் -வைஸ்வா ரூப தர்சன உபாயம் -திவ்ய சஷுஸ் -அளித்து -காட்டவே கண்டான் –
பன்னிரண்டாம் அத்யாயம் -பக்தி வளர அப்யாஸம் -கைங்கர்யங்கள் -ஸர்வ கர்ம பல தியாகம் செய்து செய்யவே தூய்மையான மனஸ் பெற்று -மேல் மேல்
இத்துடன் கீதை முடிவு

சேஷமானவை மேல் ஆறு அத்தியாயங்கள்
பதிமூன்றாம் அத்யாயம் -தொடங்கி -க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் விபாகம் அறிய விளக்கம்
14- முக் குண தன்மை –
15-புருஷோத்தம வை லக்ஷண்யம்
16-ஸாஸ்த்ர வஸ்யத்வம் -தேவ அஸூர விபாகம்
17-ஸாஸ்த்ர வஸ்யத்வத்திலும் முக் குண சேர்க்கையின் விபாகம்
18-சார அத்யாயம்

———

கவியரசின் முழுப்பாடல் உங்களுக்காக……… 


மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா…
மரணத்தின் தன்மை சொல்வேன்…!


மானிடர் ஆன்மா மரணமெய்தாது…
மறுபடி பிறந்திருக்கும். 

மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்… 

ஆ… ஆ…


என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!


கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்!

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!


சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்…

துணிந்து நில் தர்மம் வாழ… 

…


புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!


கண்ணனே காட்டினான்! கண்ணனே தாக்கினான்!
கண்ணனே கொலை செய்கின்றான்!

காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!


இக்களமெலாம் சிவக்க வாழ்க…


ஆ… ஆ… ஆ…

பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்


தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே

இந்தப் பாடல் அதிஅற்புதமானது. உண்மையிலேயே பதினெட்டு அத்தியாயங்கள் 700 ஸ்லோகங்கள் உள்ள கீதையை, பாமரனுக்கும் புரியக் கூடிய எளிய வார்த்தைகளிலே இதைவிடச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? கவியரசு கண்ணதாசன் பகவத்கீதையின்  சாரத்தை 9 பிரிவுகளாகப்  பிரித்துக் கொண்டிருக்கிறார்.

மரணத்தை நினைத்து கலங்குகின்றான் விஜயன். அதுதான் முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம். 

அப்பொழுது மரணத்தைப்பற்றி ஒரு தெளிவு அவருக்கு ஏற்படுத்த வேண்டும். இது இரண்டாவது பகுதி. 

உடம்பு என்றால் என்ன ஆன்மா என்றால் என்ன என்கின்ற தத்துவ விளக்கத்தைச் சொல்ல வேண்டும். இது மூன்றாவது பகுதி. 

பகவான் தன்னைப் பற்றியும் சொல்ல வேண்டும். இறைத் தன்மை. இது நான்காவது பகுதி. 

பகவானின் இரக்க குணம் இந்தப் போர்க்களத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதைச் சொல்ல வேண்டும். இது ஐந்தாவது பகுதி.

தான் பகவான் என்பதை அவன் உணர்ந்து கொள்ள தன்னுடைய விஸ்வரூபத்தைப் பற்றி சொல்ல வேண்டும் அது ஆறாவது பகுதி. (விபூதி யோகம்) 

கடமையிலே வீறு கொண்டு அவனை எழ வைக்க வேண்டும். அது எட்டாவது பகுதி. 

புண்ணியம் பாவம் இது இரண்டும் என்ன? எப்படி செய்தால் அவை இரண்டும் அதாவது புண்ணிய பாவ விளைவுகள் ஒருவருக்கு ஒட்டாமல் இருக்கும், என்கிற தத்துவத்தைச் சொல்ல வேண்டும். அதோடு ஒரு அருமையான கீதை ஸ்லோகத்தையும் இணைக்க வேண்டும். இத்தனையும் 18 வரிகளில் சொல்லியிருப்பார் கண்ணதாசன்.

நான் இந்தப் பாடலை, வரி வரியாக கீதையின் ஸ்லோகங்களோடு இணைத்துப்  பார்க்கும் பொழுதுதான், எத்தனை ஆழமாக கீதையின் சாராம்சம் அவருடைய உள்ளத்தில் இறங்கி இருக்க வேண்டும். கீதை ஸ்லோகங்களுடைய சாரமான விஷயங்களை எடுத்து அதை தமிழிலே அத்தனை அழுத்தமாக கவிஞர் கொடுத்து இருக்கிறார் என்பதெல்லாம் புரியும்.

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா…

என்ன சுவையாக கண்ணதாசன் ஆரம்பிக்கிறார் பாருங்கள். மரணத்தை எண்ணி விஜயன் கலங்குகின்றான். விஜயன் என்றால் வெற்றியைத் தவிர வேறு அறியாதவன். எது அவனுக்கு வெற்றியைத்  தருகிறதோ, அந்த காண்டீபம் கையில் இருக்கும்போது அவன் மரணத்தை எண்ணிக் கலங்குகிறான் என்றால், தன் மரணத்தை எண்ணிக் கலங்கவில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். மரணத்தை எண்ணி கலங்க அவசியமில்லை. காரணம் நீ இருக்கும் வரை மரணம் வரப் போவது இல்லை. அது வந்து விட்ட பிறகு நீ இருக்கப் போவதில்லை. அதனால் எந்த விதத்திலும் நீ கவலைப்படும் படியாக மரணம் இருப்பதில்லை. ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தைக் குறித்துத் தான் நாம் கவலைப்படுகிறோம்.

அர்ஜுனன் அதைத் தான் முதலிலே சொல்லுகின்றான். குரு, தாத்தா, அண்ணன், தம்பி, உறவுகள், நண்பர்கள் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு நான் எப்படி வாழ்வேன்? இவர்கள் மரணத்தை நான் எப்படி கண்ணால் பார்க்க முடியும்? என கவலைப்படுகிறான். முதல் அத்தியாயமே அர்ஜுனன் கவலையைப் பற்றித்  தெரிவிப்பது. அர்ஜுன விஷாதயோகம் என்று பெயர்.

ஸோக ஸம் விக்ந மானஸ :  

சோகத்துடனும் கலங்கிய மனத்துடனும் அர்ஜுனன் இருக்கின்றான். மரணத்தை எண்ணிக் கலங்கினான் என்கின்ற அந்த கிட்டத்தட்ட நாற்பத்தி ஏழு ஸ்லோகத்தின் உடைய விஷயத்தை ஒரே வரியில் சொல்லுகின்றார். மரணத்தை எண்ணிக் கலங்குகிறான்.

2. மரணத்தின் தன்மை சொல்வேன்…! மானிடர் ஆன்மா மரணமெய்தாது…

இரண்டாவது அத்தியாயத்திலேயே பகவான் அர்ஜுனன் சோகத்தை தீர்க்கக்கூடிய முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றான். ஒன்றை புரிந்து கொள்ளாதவரை அதைப்பற்றி அச்சம் இருக்கும். 

மரணத்தைப்பற்றிய பயம் என்று சொன்னால் மரணத்தினுடைய தன்மை என்ன என்பது அவனுக்குப் புரியவில்லை. அதனால் இரண்டாவது அத்தியாயத்தில் அத்தனை சாரத்தையும் எடுத்து ஒருசில வரிகளிலேயே கவிஞர் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

மரணத்தின் தன்மை சொல்வேன்…!
மானிடர் ஆன்மா மரணமெய்தாது…

மரணம் உடலுக்கு உயிர் இருக்க. உயிர் பிரிந்து விட்டது என்று சொன்னால், அங்கே உடல் வேறு, உயிர் வேறு ஆகிவிட்டது. உடம்பு இங்கே இருக்கிறது. உயிர் போய் விட்டது என்று சொன்னால், அது இங்கே இல்லை, போய் விட்டது என்று தான் பொருளே தவிர, அழிந்துவிட வில்லை.

இதை திருவள்ளுவரும் அழகான உவமையோடு சொல்லுகின்றார்.

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந் தற்றே 

உடம்பொடு உயிரிடை நட்பு 

தன்னுடைய கூட்டை தனித்து விட்டுவிட்டு ஒரு பறவை பறந்தது போல இந்த உயிர் பறந்து விட்டது. இரண்டும் சேர்ந்து இருந்தது. ஒன்று அழிந்தது இன்னொன்று அழிய வில்லை. அழிந்தது உடல். அழியாதது ஆன்மா. ஒருவரை வெட்டினால் அவருடைய உயிர் போய்விடுகிறது. அந்த உயிர் வெட்டுப் படுவதில்லை. ஆனால் அந்த உயிர் இருந்த  உடம்பு அந்த உயிரைத்  தாங்க முடியாத ஒரு நிலையை அடைந்துவிடுகிறது என்பது தான் மரணத்தின் தன்மை.

3. மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும்

அயம் ந ஹந்தி – ஆத்மாவானது கொல்வதில்லை
ந ஹந்யதே – கொல்லப்படுவதில்லை
ந ஜாயதே – பிறப்பதில்லை (புதிதாக)
ந ம்ரியதே – இறப்பதில்லை.

ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே – உடல் வெட்டப்படும் பொழுதும் கொல்லப்படும் போதும் ஆன்மா கொல்லப்படுவதில்லை
ஸஸ்த்ராணி ந சிந்தந்தி – ஆயுதத்தால் வெட்ட முடியாது
பாவக: ந தஹதி – நெருப்பால் எரிக்க முடியாது அப்படியானால் இந்த தேகம் எப்படி கிடைக்கிறது.

ஜீவாத்மா(தேஹி) ஜீர்ணானி (பழைய, நைந்து போன) ஸரீராணி – உடல்களை, விஹாய – விட்டுவிட்டு அந்யாநி  – வேறு  நவாநி – புதிய உடல்களை, ஸம்யாதி – அடைகிறான் பிறவி என்ற நம்முடையது அல்லாத பிற வேறு ஒரு தேகத்தை எடுத்துக் கொள்ளுதல். அதனால் பிறவி எடுக்கிறோம்.

4. நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்து தான் தீரும்

காரணம் மரணம் என்பது நிச்சயமானது. ஜாதஸ்ய ம்ருத்யு த்ருவ: – பிறந்தால் இறப்பு நிச்சயம். தவிர்க்க முடியாதது.
மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்…
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? பகவானைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தான் அடுத்து சொல்லுகின்றார்.

மா ந அபிஜாநந்தி – என்னை அறிய வேண்டும். அதை செய்வதில்லை.

அநன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜநாபர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்  

இதை தெரிந்து கொள்ள வேண்டும்
என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்!

பகவானை அருகில் இருந்தும் தெரிந்து கொள்ளாததால் தான் அவன் காண்டீபத்தை நழுவவிட்டான்.
அந்த வார்த்தை கீதையில் இருக்கிறது.

காண்டீபம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் – கையிலிருந்து காண்டீபம் நழுவியது

மன்னனும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்…
துணிந்து நில் தர்மம் வாழ… ஆ…

இப்போது தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டுகின்றார். தான் யார் என்பதை காட்டுகின்றார். அந்த விபூதி யோகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களையும், பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சில கருத்துகளையும் இணைத்து, நான்கு வரிகளில் கொடுத்துவிடுகின்றார்.


அஹம் க்ரது. அஹம் யக்ஞ: ஸ்வதா அஹம் அஹம் ஷதம்  
மந்த்ரோ அஹம் அஹம் அக்னி
அஹம் அஸ்வத்த சர்வ விருட்ஷானாம் – எல்லா மரங்களும் நானே

மன்னனும் நானே – நராணாம் நராதிபம்
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!
கண்ணனே காட்டினான்! கண்ணனே சாட்டினான்!

கண்ணனே கொலை செய்கின்றான்!
நீ ஏன் கவலைப்படுகிறாய்? பலத் தியாகம் செய்து விடு. அப்படிச் செய்தால், அந்த செயலால் உன்னுடைய கர்மாவினை ஒட்டுவதில்லை.

ஸர்வாணி கர்மானிட மயி ஸந்ந் யஸ்ய பலம்  கொடுத்துவிடு
நான் இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறாய்?

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!

அவன் தெளிவுபெறவேண்டும். தெளிவு பெறுவது தான் காட்சி. அதை ஒரு ஆணையாக பகவான் சொல்லுகிறார்.

நஷ்டோ மோஹ: ஸ்மிருதிர் லப்தா த்வத் ப்ரஸாதந் மயாச்சுதா

ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ  கரிஷ்யே வசநம் தவ:

இதை என்னுடைய முடிவு பெறும் பொழுது இப்படித்தான் முடிவு பெறுகிறது. அச்சுதன் என்றால் நழுவவிடாதவன். நழுவாதவன் என்று பொருள்.

அந்த ஒரு திருநாமத்தைத் தான் அந்த இடத்திலே பகவத் கீதையில் போடுகின்றார். நான் உறுதி பெற்றேன். நான் லாபம் அடைந்தேன். எனக்கு சந்தேகம் இல்லை. நான் உன்னுடைய ஆணையை ஏற்றுக் கொள்ளுகின்றேன். இதைவிட பகவத் கீதையை யார் சொல்லமுடியும்? கண்ணன் சொன்னதை கண்ணனுக்கு தாசன் தானே சொல்ல முடியும்.

———-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ரஹஸ்ய த்ரய சார அர்த்தங்கள்

August 31, 2024

ரஹஸ்யார்த்த நிர்வாஹங்களில் சார தமமாகக் கொள்ளப்படும் மூன்று விஷயங்கள்
1- சேஷத்வமே ஞான ஆனந்தங்களை விட ஜீவாத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம்
2-ஸ்வ கத ஸ்வீ காரத்தைக் காட்டிலும் பர கத ஸ்வீ காரமே ஸ்ரேஷ்டம்
3- சேதன லாபம் எம்பெருமானுக்குப் புருஷார்த்தமே ஒழிய எம்பெருமானைப் பெறுவது சேதனனுக்குப் புருஷார்த்தம் அன்று

மற்ற விஷயங்கள் இவற்றுள் அந்தர்பவிக்கும்

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-
மற்ற இடங்களில் -அடியேன் -என்பது தேஹ விஸிஷ்ட ஆத்மாவைக் குறிக்கும்
அடியேன் சிறிய ஞானத்தன் -1-5-2- என்கிற இடத்தில் ஞானமுடைமை தேஹத்துக்கு அஸம்பாவிதம் என்பதால் இங்கு ஆத்மாவையே சொல்லுமோ என்னில்
காண்பான் அலற்றுவன் என்ற கிரியையுடன் இது அந்வயிக்கிற படியால்
வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே தேஹ விஸிஷ்ட ஆத்மாவையே குறிக்கும்
இவ் விடத்தில் மட்டுமே ஆத்மா என்பதும் அடியேன் என்பதும் பர்யாயம் –
அதாவது ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம் என்பது ஆழ்வாரது திரு உள்ளம்

இந்த மஹா அர்த்தம் ஸ்வாமியுடைய திரு உள்ளத்தில் நன்கு ஊறி இருந்து-

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–7-16-

৷৷7.16৷৷ஸுக்ருதிநஃ புண்ய கர்மாணோ மாஂ ஷரணம் உபகம்ய மாம் ஏவ பஜந்தே. தே சே ஸுக்ருத தார தம்யேந சதுர்விதாஃ, ஸுக்ருத கரீயஸ் த்வேந ப்ரதிபத்தி வைஷேஷ்யாத் உத்தரோத்தராதிகதமாஃ பவந்தி.–(புண்ய மிகுதி மிகுதியால்-பிரதிபத்தி – விருப்பத்தின் வேறுபாட்டால் -விரும்பியதை அருளுகிறேன் )

ஆர்த்தஃ ப்ரதிஷ்டா ஹீநோ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத் ப்ராப்தி காமஃ.

அர்தார்தீ அப்ராப் தைஷ்வர்ய தயா ஐஷ்வர்ய காமஃ, தயோஃ முக பேத மாத்ரம், ஐஷ்வர்ய விஷய தயா ஐக்யாத் ஏக ஏவ அதிகாரஃ.(அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம் )

ஜிஜ்ஞாஸுஃ ப்ரகரிதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சுஃ ஜ்ஞாநம் ஏவ அஸ்ய ஸ்வரூபம் இதி ஜிஜ்ஞாஸுஃ இதி உக்தம்.(ஞான ஸ்வரூபமான ஆத்ம பிராப்தி காமன் )

ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைக ரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யான் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்
இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)

৷৷7.16৷৷’சதுர்விதா பஜந்தே’ இத்யத்ர பஜந பர்யவஸிதா ப்ரபத்திர் விதித்ஸிதா; பூர்வ ஷ்லோகே தந்நிஷேதா தத்ர தத்விதாநஸ்யைவோ சிதத்வாதித் யபிப்ராயேண’ஷரணமுபகம்யேத் யுக்தம்’. ஸுகரிதித்வாவிஷேஷே கதமதிகாரி பேத இத்யத்ரோக்தஂ’ஸுகரிததாரதம்யேநேதி’. தாரதம்யஂ விவரிணோதி’ஸுகரிதகரீயஸ்த்வேநேதி’. விஷ்வாஸாதேஃ ஸாதாரணத்வேபி ப்ரபத்தேர்வைஷிஷ்ட்யஂ பலேச்சாபேதாத். ஆர்தஷப்தோத்ரார்தி மூலபூர்வஸ்திதிஷை தில்ய பர இத்யபிப்ராயேணாஹ ’ப்ரதிஷ்டாஹீந’ இதி. ஆர்தஸ்ய ஹி பரபஜநமார்தி நிவரித்த்யர்தமேவேத் யபிப்ராயேணாஹ’ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத்ப்ராப்திகாம’ இதி. பாடக்ரமாதப்யர்தக்ரமஸ்ய ப்ரபலத்வாஜ் ஜிஜ்ஞாஸோஃ ப்ராகேவார்தார்திந உபாதாநம். ஆர்தாத்தஸ்ய விஷேஷஂ தர்ஷயதி’அப்ராப்தேதி’. அர்தஷப்தோத்ரார்தநீய போக விஷேஷ பரஃ. பல த்வாரா ஹ்யதிகாரி பேதோபிதீயதே; பலஂ சார்தஸ்யார்தார்திநஷ் சைஷ்வர்யமேகமேவ. யதா புநஸ்ததவாந்தர பேதேந பேதக்லரிப்திஃ ததா பேதாந்தரமபி வக்துஂ ஷக்யமித்யத்ராஹ’தயோரிதி’. ப்ரஸித்தேநாவாந்தரபேதேந விஷேஷ வ்யபதேஷ மாத்ரமிதி பாவஃ. ஜிஜ்ஞாஸு ஷப்தேந ஜ்ஞாநார்தி மாத்ரஂ கிஂ ந கரிஹ்யதே. பகவந்தமேவ வா ஜிஜ்ஞாஸுஃ பக்தி ஷ்ரத்தா ரஹிதஃ குதூஹல மாத்ரேண பகவந்தஂ ஜிஜ்ஞாஸமாநோ வா, யதைகதமே த்விததாதயஃ’யூயஂ ஜிஜ்ஞாஸவோ பக்தாஃ’ இதி.’ஆரோக்யஂ பாஸ்கராதிச்சேச் ச்ரியமிச்சேத் துதாஷநாத். ஈஷ்வராஜ் ஜ்ஞாநமந்விச்சேந் மோக்ஷமிச்சேஜ் ஜநார்தநாத்’৷৷[ம.பு.77.49] இத்யுக்தாதிகாரி சதுஷ்டயே சாத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநே ஜிஜ்ஞாஸுரபி ஸ ஏவ பவிதுமர்ஹதி; தத்ராஹ’ப்ரகரிதீதி’. பகவந்தஂ ஜிஜ்ஞாஸோ ரந்ததோ பகவாநேவ ப்ராப்யதயாபிமத இதி ந புருஷார்தபேதஃ; தத்பேதாச் சாத்ராதிகாரி பேதஃ ப்ரதிபாத்யதே.’ஆர்தஃ, அர்தார்தீ’ இதி பாஹ்ய புருஷார்தாபிலாஷிணோ நிர்திஷ்டாஃ. பகவதர்தீ ச’ஜ்ஞாநீ’ இதி; ஜீவாத்ம ஸ்வரூபஂ சாதிகாநந்தஸ்வரூபஂ ப்ராப்யஂ சாந்யத்ர ப்ரஸித்தம்; அத்ராபி பரஸ்தாததிகாரி பேதஃ ஸமர்தயிஷ்யதே; அதஃ பரிஷேஷாதாத்மார்திவிஷயோயஂ ஜிஜ்ஞாஸுஷப்த இதி பாவஃ. ஜ்ஞாநார்திவாசகே ஜிஜ்ஞாஸுஷப்தே கதமாத்மார்தித்வஂ வ்யாக்ரியதே? இத்யத்ராஹ ‘ஜ்ஞாநமேவேதி’. ஜ்ஞாநமிஹ ஷுத்தாத்மா நுபவரூபஂ விவக்ஷிதமிதி பாவஃ. ஜ்ஞாநிநோதி கார்யந்தரத் வாநுகுணாந் வக்ஷ்யமாணாந் விஷேஷா நநுஸந்தாய விஷிஷ்ட ஜ்ஞாநத்வஂ தர்ஷயதி’இதஸ்த்வந்யாமி த்யாதிநா’.’கேவலாத்மந்ய பர்யவஸ்யந்நிதி’ நகரஂ ப்ரவிவிக்ஷோரத் வகஸ்ய ச்சாயாதரு மூலஸ்வாபவதாத்மா நுபவவிலம்ப இதி பாவஃ. அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யஂ ஸர்வமஷ்டமே ப்ரபஞ்ச யிஷ்யாமஃ. விஷிஷ்ட ஜ்ஞாந பல பூதஂ புருஷார்தாந்தர பரிக்ரஹமாஹ’பகவந்தஂ ப்ரேப்ஸுரிதி’. தத்ர ஹேதுமாஹ ‘பகந்வதமிதி’. ’பகவந்த மேவேத்யாத்மாநுபவ விலம்பாக்ஷமத்வ மபிப்ரேதம்’.

இங்கு சங்கரர்
ஞானீ –விஷ்ணோஸ் தத்வ வித்
ஸ்வாமியோ
ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

இப்படி இந்த ஒரு இடம் மட்டும் இல்லாமல் ஞாநீ என்று வரும் இடங்களில் எல்லாம் ஸ்வாமியுடைய பாஷ்யம் இவ்வாறே அமைந்துள்ளது-ஜீவாத்மாவின் ஞானத்துக்குப் பிரயோஜனம் தன்னுடைய சேஷத்வத்தை அறிவது தான் என்று ஆழ்வாருடைய அருளிச் செயல்களில் அவகாஹநம் இருப்பதாலேயே ஸ்வாமியின் திரு உள்ளம் இவ்வாறு என்பது தெளிவாகத் தெரிகிறது

——-

ஸ்வ கத ஸ்வீகாரம் -மர்க்கட கிசோர நியாயம்
பர கத ஸ்வீ காரம் –மார்ஜார கிசோர நியாயம்

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:–8-14-

    பார்த: ய:-பார்த்தா! எவன்,
    அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி,
    நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ,
    நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு,
    அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்

    ஏவம் ஐஷ்வர்யார்திநஃ கைவல்யார்தி நஷ்ச ஸ்வ ப்ராப்யாநுகுணஃ பகவதுபாஸந ப்ரகார உக்தஃ. –கீழ் இவரைப்பற்றி சொல்லி முடிக்கப் பட்டன )அத ஜ்ஞாநிநோ பகவதுபாஸந ப்ரகாரஂ ப்ராப்தி காரஂ ச ஆஹ — பகவத் லாபார்த்தி பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது )

    ৷৷8.14৷৷நித்யஷோ மாம் உத்யோக ப்ரபரிதி ஸததஂ ஸர்வ காலம் அநந்ய சேதாஃ யஃ ஸ்மரதி அத்யர்தஂ மத் ப்ரியத்வேந மத் ஸ்மரித்யா விநா ஆத்ம தாரணம் அலபமாநோ நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதிஂ யஃ கரோதி தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்ய யோகஂ காங்க்ஷமாணஸ்ய யோகிநஃ அஹஂ ஸுலபஃ அஹம் ஏவ ப்ராப்யஃ ந மத் பாவ ஐஷ்வர்யாதிகஃ.

    ஸுப்ராபஷ்ச தத் வியோகம் அஸஹமாநஃ அஹம் ஏவ தஂ வரிணே; (விட்டுப் பிரிய சகியாமல் நான் இருப்பதால் நானே வரிப்பதால் )மத் ப்ராப்த் யநு குணோபாஸந விபாகஂ தத் விரோதி நிரஸநம் அத்யர்தஂ மத் ப்ரியத்வாதிகஂ ச அஹம் ஏவ ததாமி இத்யர்தஃ.'(-காதல் அவஸ்தையை வளர்த்து -சிறுச் சிறிது விழித்து -அல்வழக்குகளை சமஸ்தமாகப் போக்கி -ஞானீயை ஞானவானாக ஆக்குகிறேன் )யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ’ (மு0 3.2.3) இதி ஹி ஷ்ரூயதே வக்ஷ்யதே ச.’தேஷாஂ ஸதத யுக்தாநாஂ பஜதாஂ ப்ரீதி பூர்வகம். ததாமி புத்தி யோகஂ தஂ யேந மாமுபயாந்தி தே৷৷தேஷாமேவாநுகம் பார்த மஹ மஜ்ஞாநஜஂ தமஃ. நாஷயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷’ (கீதா 10.10-11) இதி.

    அதஃ பரம் அத்யாயஷேஷேண -(இதற்க்கு மேல் அத்யாய சேஷத்தில் )ஜ்ஞாநிநஃ கைவல்யார்தி நஷ்ச அபுநராவரித்திம் -(திரும்பி வராத மோக்ஷத்தையும் )ஐஷ்வர்யார்திநஃ புநராவரித்திஂ ச ஆஹ –(திரும்பி வரும் நிலையையும் )

    ৷৷8.14৷৷ஸங்கத்யர்தமநுவததி — ‘ஏவமிதி’. அத்யாயாரம்பகதப்ரஷ்நோத்தரயோஸ்தத்ப்ரஸஞ்ஜகே பூர்வாத்யாயாந்தே சாயஂ க்ரமோ ந விவக்ஷிதஃ அதியஜ்ஞாந்திமப்ரத்யயயோஃ ஸாதாரண்யேந ப்ரதிபாதநே தாத்பர்யாத். இஹ து ப்ரதிநியதார்தோபதேஷரூபத்வாதுத்தரோத்தரஂ உத்கரிஷ்டதாப்ரதர்ஷநாயைஷ்வர்யாக்ஷரயாதாத்ம்யஂ பகவச்சரணார்திநஃ க்ரமேணோக்தமிதி பாவஃ. அத்ர ச’ஏவம்’ இதி நிர்தேஷாத்’ஸ்வப்ராஷ்யாநுகுணஂ’ இதி நிர்தேஷாச்ச ப்ரகரணஸ்யாதிகாரித்ரயவிஷயத்வவ்யவஸ்தாபகஹேதவஃ ப்ரதர்ஷிதாஃ. ததாஹி — ஏவமத்ர கஷ்சிச்சங்க்யேத — நநு’தே ப்ரஹ்ம தத்விதுஃ’ [7.29]’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1]’அக்ஷரஂ ப்ரஹ்ம பரமம்’ [8.3] இதி ப்ரஹ்மஷப்தஸ்ய ஸாக்ஷாத்ப்ரஹ்மவிஷயத்வே கோ பாதஃ? தஸ்யைவ ச ஸர்வாத்மத்வாதத்யாத்மஷப்தேநாபி தத்கதஂ ஸர்வஂ க்ரஹீதுமுசிதம்;’பூதபாவோத்பவகரோ விஸர்கஃ’ [8.3] இத்யபி ஜகத்ஸரிஷ்டிக்ரஹணஂ யுக்தஂ தேவதோத்தேஷேந த்ரவ்யத்யாகோ வா; ஸ சாத்ர நிவரித்திலக்ஷணோ யஜ்ஞஃ;’அதிபூதஂ க்ஷரோ பாவஃ’ [8.4] இதி ச அதிபவதீதி வ்யுத்பத்தேஃ ப்ராணிஜாதம். புருஷஷ்ச அதிதைவதமிதி பரப்ரஹ்மாவஸ்தாவிஷேஷஃ ஸமஷ்டிபுருஷாதிர்வா; அதியஜ்ஞஃ ஸர்வயஜ்ஞாபிமாநிநீ விஷ்ண்வாக்யா தேவதா’யஜ்ஞோ வை விஷ்ணுஃ’ [ஷ.ப்ரா.1.3.1] இதி ஷ்ருதேஃ;’அந்தகாலே ச’ [8.5] இத்யாதி ஷ்லோகத்ரயமபி முமுக்ஷோரேவாந்திமப்ரத்யயமதிகரித்யோக்தம்; ப்ரஷ்நப்ரதிவசநஷ்லோகாநாஂ பூர்வாத்யாயே ப்ரஸ்துதாதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயபரத்வேப்யுபரிதநாஃஷ்லோகாஃ ப்ரதாநதயா ஸுதுர்லபத்வேந நிர்திஷ்டஜ்ஞாநிபரா யுக்தாஃ அந்யதா’மாமேவ ஸ்மரந்’ [8.5]’மாமேவைஷ்யஸி’ [8.7] இத்யாதேர்பாதாத்; அத ஏவ’ப்ரயாணகாலே ச கதம்’ [8.2]’அந்தகாலே ச மாம்’ [8.5] இதி ஷ்லோகயோரதிகாரித்ரயபரத்வேபி தத்விவரணேத்ர ததைகார்த்யஂ க்ராஹ்யமித்யபி நிரஸ்தம். தத்ராபி சாதிகாரித்ரயபரத்வஂ ந ப்ரதீயதே நசைஷ்வர்யார்திநஃ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ பஷ்யாமஃ; ஏவமுத்தரேஷ்வபி ஷ்லோகேஷ்வேக ஏவாதிகாரீ தத்வேத்யஂ சைகமேவ புநஃ புநரநூத்ய விஷேஷதோ விஷதீக்ரியதே; நச புநருக்திதோஷஃ அப்யாஸஸ்ய ஜ்ஞாநிப்ராதாந்யலிங்கத்வாத்;’ஸஂஸித்திஂ பரமாஂ கதாஃ’ [8.15]’ஸ யாதி பரமாஂ கதிஂ’ [8.13]’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இத்யமீஷாமைகார்த்யஂ ச ப்ரதீதஂ த்வபரித்யாஜ்யம்; ந ச பரமகந்தவ்யாதிரிக்தா பரமஸஂஸித்திஃ.’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இதி பரோக்ஷநிர்தேஷஷ்ச’புருஷஃ ஸ பரஃ பார்த!’ [8.22] இதிவத்ஸ்யாத்;’பரமஂ புருஷஂ திவ்யஂ’ [8.8]’ஸ தஂ பரஂ புருஷமுபைதி திவ்யஂ’ [8.10]’புருஷஃ ஸ பரஃ பார்த! பக்த்யா லப்யஸ்த்வநந்யயா’ [8.22] இத்யமீஷாஂ பிந்நார்தத்வகல்பநஂ சாயுக்தம்; பரைரபி ச ஸர்வைஃ ப்ராயஷ ஏவமைககண்ட்யேந வ்யாக்யாதம் — இதி. அத்ரைவஂ பரிஹாரக்ரமஃ — ‘அதியஜ்ஞோஹமேவ’ இதிவத்’அஹமேவ ப்ரஹ்ம’ இத்யநுக்தேரத்யாத்மாதிவதத்ர ப்ரஹ்மஷப்தார்தஸ்யாப்யர்தாந்தரத்வஂ தாவத்ப்ரதீதம் நச ப்ரஹ்மஷப்தாதக்ஷரஷப்தஸ்ய பரமாத்மநி ரூட்யதிஷயஃ யேந ததஸ்தத்வ்யாக்யாநஂ ஸ்யாத்.’ஏவஂ ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாஂ பர்யுபாஸதே. யே சாப்யக்ஷரமவ்யக்தம்’ [12.1] இத்யாதிஷு ச பரமாத்மநோந்யதேவோபாஸ்யத்வமக்ஷரஷப்தேந ப்ரதீயதே;’த்வே ரூபே ப்ரஹ்மணஸ்தஸ்ய மூர்தஂ சாமூர்தமேவ ச. க்ஷராக்ஷரஸ்வரூபே தே ஸர்வபூதேஷு ச ஸ்திதே৷৷அக்ஷரஂ தத்பரஂ ப்ரஹ்ம க்ஷரஂ ஸர்வமிதஂ ஜகத்’ [வி.பு.1.22.55;56] இத்யாதிஷு சாக்ஷரபரப்ரஹ்மஷப்தௌ பரிஷுத்தாத்மவிஷயௌ ஷாரீரகபாஷ்யே ஸமர்திதௌ; அதோத்ர’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1] இத்யுக்தேஹமேவ ப்ரஹ்மேத்யவ்யாக்யாநாத்ஸ்வேதரவிஷயப்ரஹ்மஷப்தஃ பரமஷப்தவிஷேஷிதாக்ஷரஷப்தாநுகுண்யாச்ச ப்ரகரிதேரீஷ்வராச்சாந்யஸ்மிந்பரிஷுத்தாத்மந்யுபசாராத்வர்ததே; பஷ்சாச்சாயமேவ’அவ்யக்தோக்ஷர இத்யுக்தஃ’ [8.21] இதி வக்ஷ்யதே; ந சாஸௌ ஷ்லோகஃ பரமாத்மபர இதி ஷங்கநீயம்’யே சாப்யக்ஷரமவ்யக்தஂ’ [12.1]’யே த்வக்ஷரமநிர்தேஷ்யஂ’ [12.3]’க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச’ [15.16] இத்யாதிஷ்விவாத்ராபி அக்ஷரஷப்தஸ்ய பகவத்வ்யதிரிக்தவிஷயத்வப்ரதீதேஃ ஸஂஸித்திஷப்தஷ்ச பரமகதிஷப்தநிர்திஷ்டப்ராப்யவிலக்ஷணாஂ ஸமீசீநாஂ ஸித்திஂ ஸ்வரஸத உபஸர்கஷக்த்யா வ்யநக்தி அதஏவ ஸ்வபாவாதிஷப்தா அதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயவஸ்துவிஷேஷபரா உக்தாஃ. ஏவஂ ஸ்வவாக்ய பர்யாலோசநயா பூர்வாத்யாயப்ரகரிதபராமர்ஷேந ச ப்ரஷ்நப்ரதிவசநவாக்யாநாமதிகாரித்ரயவிஷயத்வே ஸித்தே ததநந்தராணாமபி க்ரந்தாநாஂ யதாஸம்பவஂ ஸர்வவிஷயத்வஂ யுக்தம். ப்ரக்ராந்தே சாதிகாரித்ரயே யத்வரித்தத்ரயேணாநூத்யமாநே கைவல்யபகவத்ப்ராப்திகாமயோரநந்தரஂ ஸ்பஷ்டமபிதாநாத்’அப்யாஸ’-[8.8] இத்யாதிகஂ பரிஷேஷாதைஷ்வர்யார்திவிஷயம்; யச்சைஷ்வர்யார்திநாஂ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ நாஸ்தீதி; ததபி ந ஷ்ரீமத்பாகவதே புராணே த்ருவசரிதே தத்தரிஷ்டேஃ — ‘பக்திஂ ஹரௌ பகவதி ப்ரவஹந்’ இத்யாதிநா. அதோ யதோக்த ஏவார்தஃ. யத்யபி ப்ரஹ்மபுருஷபரகத்யாதிஷப்தைரிஹ ஸர்வத்ர பரமாத்மபஜநதத்ப்ராப்த்யாதிரேவ ப்ரதீயதே; ததாபி தாவதைவாதிகாரிவிஷயத்வஂ வக்துஂ ந யுஜ்யதே பூர்வத்ர ப்ரயாணகாலே ப்ரூமத்யே ப்ராணாவேஷஸ்ய தத்ரைவ பரமாத்மத்யாநஸ்ய ச விஹிதத்வாத் அநந்தரஂ ச ஹரிதி த்யாநஸ்ய மூர்த்நி ப்ராணாவேஷஸ்ய ச தத்கால ஏவ விதாநாத்; ததிதஂ த்வயஂ பரஸ்பரவிருத்தஂ கிஂ காலபேதாத்வ்யவஸ்தாப்யேதாதிகாரிபேதாத்வா?; தத்ர ந தாவத்காலபேதஃ ஷ்ருதஃ; ப்ரத்யுத காலைக்யமேவ ஷ்ரூயதே; அதஃ பரிஷேஷாத்ஸித்தோதிகாரிபேதஃ. கிஞ்ச “ஷதஂ சைகா ச” [சாஂ.உ.8.6.6] இத்யாதிபிர்மூர்தந்யநாட்யா நிஷ்க்ரமணஂ மோக்ஷஹேதுஃ அந்யாபிர்நிஷ்க்ரமணஂ பலாந்தரஹேதுரித்யவகதே ப்ரயாணகாலே ப்ரூமத்யே மூர்த்நி ச ப்ராணாவேஷஸ்யோத்க்ரமணஷேஷதயா தத்தத்தேஷகதநாட்யோத்க்ரமணே ப்ரதீதே ஸித்தஸ்தததிகாரிபேதஃ. பூர்வத்ர சாத்யாயே’சதுர்விதா பஜந்தே மாம்’ [7.16] இத்யாதாவயமதிகாரிபேதஃ ப்ரஸ்துதஃ; ததந்தே ச’ஜராமரணமோக்ஷாய’ [7.29]’ஸாதிபூதாதிதைவஂ மாம்’ [7.30] இதி ஷ்லோகயோர்யச்சப்தாவரித்த்யாதிகாரிபேதப்ரதீதிர்பாஷ்யே ப்ரதிபாதிதா; ஸா சாத்ராபி ஸ்புடா’அணோரணீயாஂஸமநுஸ்மரேத்யஃ’ [8.9]’யஃ ப்ரயாதி த்யஜந் தேஹஂ’ [8.13]’யோ மாஂ ஸ்மரதி நித்யஷஃ’ இதி. ஏததகிலமபிப்ரேத்யோக்தஂ’ஏவமைஷ்வர்யார்திந’ இத்யாதி.

    உக்தஷ்சாஸ்யாதிகாரீ’அநந்யசேதாஃ’ இத்யுச்யத இதி பரோக்தஂ நிராகுர்வந்’அநந்யசேதாஃ’ இதி ஷ்லோகஸ்யார்தமாஹ — ‘அதேதி’.’நித்யஷஃ’ இத்யநேநாத்மாநுபவாதிபலாந்தரவ்யவதாநநைரபேக்ஷ்யஂ விவக்ஷிதமித்யாஹ — ‘உத்யோகப்ரபரிதீதி’. அந்யதா’ஸததம்’ இத்யநேந புநருக்திஃ ஸங்கோசக்லேஷோ வா ஸ்யாதித்யபிப்ராயேணாஹ — ‘ஸததஂ ஸர்வகாலமிதி’. அநந்யசேதஷ்ஷப்தேநாபிப்ரேதஂ ஸ்மரிதேர்பக்திரூபாபந்நத்வஂ தர்ஷயதி — ‘அத்யர்தேதி’. அநந்யசேதஸ்த்வாதேவ ச ஸ்மரணஸ்யாச்சித்ரத்வம். உத்கண்டநேபி ச ஸ்மரதிஃ ப்ரயுஜ்யதே — ‘ப்ராதரௌ ஸ்மரதாஂ வீரௌ’ [வா.ரா.2.13] இத்யாதிஷு.’நித்யயுக்தஸ்ய யோகிநஃ’ இத்யுக்தாநுவாதஃ பலஸ்யாவ்யவஹிதத்வத்யோதநாய. அத்ர அஹஂஷப்தேநேஷ்வரஸ்ய ப்ரத்யகர்தோபிப்ரேதஃ. தேந தத்விஷேஷணபூதாக்ஷராதிபலப்ராப்திவ்யவச்சேதோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘அஹமேவேதி’. ததேவ விவரிணோதி — ‘ந மத்பாவ’ இதி. பகவத்ப்ராப்தேஃ பலாந்தரேப்யோதிஷயிதபலத்வாத்தத்ப்ராப்தௌ ப்ரயாஸாதிரேகஸம்பாவநாவ்யவச்சேதாய ஸுலபபதமித்யபிப்ராயேணாஹ — ‘ஸுப்ராபஷ்சேதி’. அகரிச்ச்ரேண ப்ராப்ய இத்யர்தஃ.’ஈஷத்துஸ்ஸுஷு கரிச்ச்ராகரிச்ச்ரார்தேஷு கல்’ [அஷ்டா.3.3.126] இத்யநுஷிஷ்யதே. ஆஷ்ரிதவத்ஸலஸ்யேஷ்வரஸ்ய ஸௌலப்யஂ ராகப்ராப்தமித்யாஹ — ‘தத்வியோகமிதி’. உக்தஸ்யாதிவாதமாத்ரத்வஷங்காவ்யுதாஸாய ஷ்ருதிமூலதாமாஹ — ‘யமேவேதி’. அத்ர வரணஷப்தேந கிமுச்யதே? ந தாவச்சேஷத்வஷரீரத்வாத்யாகாரேண ஸ்வீகாரஃ தஸ்ய நித்யஸித்தத்வாத்; ந ச தத்விபரீதஃ விருத்தத்வாதேவ; நச ப்ராப்திப்ரதாநஂ’தேந லப்யஃ’ இத்யநேந பௌநருக்த்யப்ரஸங்காத்; நசாந்யோத்ர ப்ரகாரஃ அஸம்பவாதித்யத்ராஹ — ‘மத்ப்ராப்த்யநுகுணேதி’. விபாகோத்ர த்ருவாநுஸ்மரிதிரூபத்வதர்ஷநஸமாநாதிகாரத்வாதிரூபஃ. தத்விரோதிநோ துஷ்கரிதரஜஸ்தமோராகத்வேஷமோஹாதயஃ.’அத்யர்தமத்ப்ரியத்வஂ’ நிரதிஷயபக்தித்வம். ஆதிஷப்தேந பரமபதபர்யந்தாஸத்திபர்யந்தஂ யந்மத்யேபேக்ஷிதஂ தத்ஸர்வஂ விவக்ஷிதம்.’அஹமேவேதி’ பரமகாருணிகஸ்ய மமைவாயஂ பர இத்யபிப்ராயஃ.’தஸ்யாஹஂ ஸுலபஃ’ இத்யாதேருக்தார்தபரத்வஸ்திரீகரணாயாஸ்யைவார்தஸ்ய வக்ஷ்யமாணஂ விஸ்தரகுதாஹரிதஷ்ருத்யுபபரிஂஹணரூபஂ தர்ஷயதி — ‘வக்ஷ்யதே சேதி’.,

    என்னோடு எப்போதும் கூடி இருக்க வேணும் என்கிற விருப்பம் யுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன் –
    மிக எளியதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் -என்கிறான்
    அதாவது
    அவனது பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் -அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாதவனாய் நானே அவனை வரிக்கிறேன்
    என்னை அடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும்
    அதற்குற்ற இடையூறுகளை நீக்குதலையையும்
    என்னிடத்தில் அதிகமான ப்ரீதி
    முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்
    நாயமாத்மா ஸ்ருதி ப்ரஸித்த அர்த்தமும் இதுவே
    மேலே 10-10/10-11 ஸ்லோகங்களின் அர்த்தங்களும் இதுவே

    10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
    ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே

    ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்,
    ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும்,
    தேஷாம்-அவர்களுக்கு,
    யேந-எந்த உபாயத்தின் மூலம்,
    மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ,
    தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.

    ৷৷10.10৷৷தேஷாஂ ஸதத யுக்தாநாஂ மயி ஸதத யோகம் ஆஷஂ ஸமாநாநாஂ மாஂ பஜமாநாநாம் அஹஂ தம் ஏவ புத்தி யோகஂ விபாக தஷாபந்நஂ (தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம் )ப்ரீதி பூர்வகம் ததாமி யேந தே மாம் உபயாந்தி.கிஂ ச —

    (ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
    பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
    வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு)

    ৷৷10.10৷৷பகவத்குணவிபூதிஜ்ஞாநஸ்ய பக்த்யுத்பத்திவிவரித்திஹேதுத்வமுக்தம்; ததாவிதவிவரித்தபக்தேர்பகவத்ப்ராப்திபூர்வபாவிவிஷததமஸாக்ஷாத்காரரூபாவஸ்தாவிஷேஷஹேதுத்வஂ பகவத்ப்ரஸாதாவாந்தரவ்யாபாரகமுச்யதே’தேஷாமிதி’.’மயி ஸததயோகமாஷஂஸமாநாநாமிதி’. நஹி ஸததஂ ஸமாதாநரூபோ யோகஃ ஷக்யஃ. ஸததஷப்தேந ப்ரதிதிநவிவக்ஷா ச ந ஸ்வாரஸிகீ? ந ச ப்ராப்திரூபஸததயோக இதாநீஂ வரித்தஃ; அத ஆஷஂஸார்தத்வமேவ யுக்தமிதி பாவஃ.’தமேவேதி’ ஆஷஂஸாவிஷயாந்தர்கதமேவேத்யர்தஃ. ஸததயோகாஷஂஸயைவ பஜநே ப்ரீதிரூபத்வஸ்ய பலிதத்வாத்’ப்ரீதிபூர்வகம்’ இத்யஸ்ய பஜநாந்வயே ப்ரயோஜநஂ நாஸ்தி’ததாமி’ இத்யநேநாந்வயே து பஜநாவாந்தரவ்யாபாரகதநரூபேண பரமோதாரத்வாதிபகவத்குணகணப்ரகாஷநேந ச மஹத்ப்ரயோஜநமித்யபிப்ராயேண’ப்ரீதிபூர்வகஂ ததாமீத்யந்வய’ உக்தஃ.’மாமுபயாந்தி’ இத்யத்ராபராமரிஷ்டபதபதார்தைர்மூடைரைக்யாபத்திர்வ்யாக்யாதா.

    ——————

    பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

    11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
    நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா

    தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான்,
    ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று,
    அஹம் ஏவ-நானே,
    அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை,
    பாஸ்வதா-ஒளிமயமான,
    ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால்,
    நாஸயாமி-அழிக்கிறேன்.

    ৷৷10.11৷৷தேஷாம் ஏவ அநுக்ரஹார்தம் அஹம் ஆத்ம பாவஸ்தஃ தேஷாஂ மநோ வரித்தௌ விஷய தயா அவஸ்திதோ மதீயாந் கல்யாண குண கணாந் ச ஆவிஷ்குர்வந் மத் விஷய ஜ்ஞாநாக்யேந பாஸ்வதா தீபேந ஜ்ஞாந விரோதி ப்ராசீந கர்ம ரூப அஜ்ஞாந ஜஂ மத் வ்யதிரிக்த விஷய ப்ராவண்ய ரூபஂ பூர்வ அப்யஸ்தஂ தமஃ நாஷயாமி.

    ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத அஸாதாரணஂ ஷ்ரரிண்வதாஂ நிரதிஷயாநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ ததைஷ்வர்யவிததிஂ ச ஷ்ருத்வா தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ அர்ஜுந உவாச —

    ৷৷10.11৷৷உக்தபுத்தியோகோத்பத்திப்ரதிபந்தநிரஸநஂ’தேஷாமேவ’ இதி ஷ்லோகேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கிஞ்சேதி’.’அநுகம்பாஷப்தேநாத்ர’ அநிஷ்டநிவரித்திபூர்வகேஷ்டப்ராப்திஹேதுஃ’மதநுக்ரஹாய’ [11.1] இதி வக்ஷ்யமாணப்ரஸாதவிஷேஷோ விவக்ஷிதஃ. ஸஹஜகாருண்யமாத்ரபரத்வேர்தஷப்தஸ்ய வ்யர்தத்வாதித்யபிப்ராயேணோக்தஂ — ‘அநுக்ரஹார்தமிதி’. அத்ர சாஹஂஷப்தேநாநுக்ரஹௌபயிகஜ்ஞாநஷக்திகருணாதிவ்யமங்கலவிக்ரஹாதிவிஷிஷ்டஸ்வரூபஂ விவக்ஷிதம்.’மநோவரித்தாவிதி’ — ஆத்மபாவஷப்தஸ்யாத்ராத்மத்வஸ்வஸ்வபாவாதிபரத்வேதிகப்ரயோஜநஂ நாஸ்தி; மநோவரித்திவிஷயத்வஂ து புத்தியோகஸ்யாத்யந்தோபயுக்தமிதி பாவஃ. வ்யாப்தஸ்யேஷ்வரஸ்ய கீதரிஷீயமபூர்வா ஸ்திதிஃ இத்யத்ரோக்தஂ — ‘விஷயதயேதி’. தீபதயா ரூபிதஸ்ய ஜ்ஞாநஸ்ய பாஸ்வரத்வஂ பரிதஃ ப்ரகாஷநம்? தச்ச ப்ரகாரவிஷேஷப்ரகாஷநஂ பவிதுமர்ஹதி. ததாவிதவிஷதாநுபவாதஜ்ஞாநநிவரித்திஃ? ஷப்தாதிப்ராகரிதகுணப்ராவண்யநிவரித்திஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘மதீயாந்கல்யாணகுணகணாஂஷ்சாவிஷ்குர்வந்நிதி’. ஹேதுகார்யபாவேந வ்யபதேஷாதஜ்ஞாநதமஷ்ஷப்தயோரத்ரார்தாந்தரஂ வாச்யம்; கர்மணி ச ஜ்ஞாநவிரோதித்வேநாஜ்ஞாநஷப்தஃ; யதோக்தம் — ‘அவித்யா கர்மஸஂஜ்ஞாந்யா’ [வி.பு.6.61] இதி. கர்மஜந்யஂ பகவத்ஸாக்ஷாத்காரரூபப்ரகாஷப்ரதிபந்தகஂ ச தமோர்தஸ்வபாவாத்விஷயாந்தரப்ராவண்யமேவ. நிரதிஷயபோக்யபகவஜ்ஜ்ஞாநஸ்ய போக்யாந்தரப்ராவண்யநிவர்தகத்வஂ யுக்தஂ?’தவாமரிதஸ்யந்திநி பாதபங்கஜே நிவேஷிதாத்மா கதமந்யதிச்சதி. ஸ்திதேரவிந்தே மகரந்தநிர்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகஂ ஹி வீக்ஷதே’ [ஸ்தோ.ர.] இத்யாதிந்யாயாத்; ததேததபிப்ரேத்யோக்தஂ’ஜ்ஞாநவிரோதீத்யாதி’. தமஷ்ஷப்தேந தமோவரித்திலக்ஷணாதிபக்ஷோப்யநேந நிரஸ்தஃ. யத்யபி விஷயப்ராவண்யநிவரித்திபூர்வகஂ பஜநஂ? ததாபி,ஸஂஸ்காரஷேஷாதநுவரித்தஂ ஸூக்ஷ்மஂ ப்ராவண்யமிஹ பஜநவிநாஷ்யதயோக்தமிதி நாந்யோந்யாஷ்ரயஃ.

    ———————-

    சூரணை -142-

    இவன் அவனைப் பெற நினைக்கும் போது
    இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

    இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
    இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
    கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

    ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -/சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-
    இது முதல் -மேல் -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
    கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் –
    பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் –
    ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே /
    வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்-
    ஆனந்தமயன் அறிந்தவன் அடைகிறான்–தூ மணி விஷய வாக்கியம்
    அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் -நோற்காமலே பெற்ற கோபி -நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் /
    இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்
    பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –
    சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —
    அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபதிக்கும் கேட்க வேண்டுமே
    அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் -/
    பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் / பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே /
    இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —
    ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே /
    உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
    பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் –அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —
    அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
    ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் /
    இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
    சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –
    ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
    சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே/ நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷணம் கார்யம் செய்ய மாட்டார்களே /

    அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
    அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
    அதாவது –
    உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
    பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
    அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –

    —————————————-

    சூரணை-143-

    அவன் இவனை பெற நினைக்கும் போது
    பாதகமும் விலக்கு அன்று —

    இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

    ஸூவ இச்சையால் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி / பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதிகாலமாக புத்தி பூர்வகமாக
    அநேக மஹா பாதகங்களும் -அவனை பெறுகைக்கு விலக்கு அன்று -/ பாவங்கள் பாதகங்களை விட சிறியவை /
    லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் /
    லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து /
    நரகங்களில் விழப்பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் –

    அதாவது –
    ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
    ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
    பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
    இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
    பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
    சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–

    —————————————–

    சூரணை -144-

    இவை இரண்டும்
    ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
    ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
    காணலாம் –

    இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
    அருளிச் செய்கிறார் –

    உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க / தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே/

    ————————————-

    சூரணை -145-

    ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

    அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

    தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
    பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் நன்மையாயிற்றே –
    ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் / பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –
    சிரஸா யாஜிதோ மயா பிராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
    இன்றே திரு அபிஷேகம் -ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் -ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
    ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் –
    -தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -/ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —
    சீக்ர கால சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
    தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் –காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே –
    இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே /
    பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
    பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து –இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே
    நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே —
    பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ /
    திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் அங்கம் குறை சொல்ல முடியாதே /
    அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும்/ சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்
    மதி -இச்சா / கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் /
    சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே /
    ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் / மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் /
    பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் /
    புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை -இந்த தேசம் இந்த காலம் புண்யம் வேறே மாறலாம் -நியதங்கள் இல்லை /
    அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே
    இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் / நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை –

    வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –
    அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே /
    சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் –
    அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க -அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
    பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே /
    பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
    திரு உள்ளம் அறியாதவன் என்று –
    அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே -ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
    பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி –
    சர்வஞ்ஞான அவனும் ஸூவதந்திரத்தால் —
    செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
    ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து –
    அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
    ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே
    -அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் /
    எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –
    சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் /
    உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை
    -இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
    தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே / சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக –
    பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் /
    சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே /ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே /
    மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து -/
    சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் -ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
    இவரே பண்ணி உள்ளாரே
    சில அதிகார தோஷங்களை தப்பாக சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி –பிராயச்சித்தம் பண்ண சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
    நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ண சொல்லியும் பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை –
    மடல் தூது போன்றவை தானே இவை –
    ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே
    மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே /

    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -/ அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் -/
    துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்
    விஷய சபலமும் ஏழை / ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் / கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும்
    ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான்
    நன்மையே தீமையாயிற்று / தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் -/
    வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே / அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் /
    நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி –
    இது நிலைக்குமோ –நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு /
    இனி நான் பழுதே அகலும் படி என் /உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் / அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் /
    தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக /பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே /
    தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் /
    சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கனீசியாமல் இங்கு மட்டுமே தானே –
    அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே –
    மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே
    சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு /
    இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் /
    வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி
    பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி –
    ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு –
    உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
    படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
    வழி பறிப்பாகிய வழி அடி -ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
    ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு /
    பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே /சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் –
    சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
    ராமன் இருக்க சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் /
    தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் -காட்டி கொடும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் /
    காள மேகப் பெருமாள் –ஆப்தன் / குகனும் கரிய திரு மேனி / ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் /
    அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க / காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே /
    பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் /
    கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ
    புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை / அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் /
    அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் / ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்கு குறை இல்லையே –
    ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு

    மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே /
    பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு
    அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே
    அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் /
    ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே –

    அதாவது –
    பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
    தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
    ஏபிச்ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
    வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
    திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
    சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
    ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
    அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
    பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
    யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
    ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

    இத்தால் ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வடமொழியில் அருளிச் செய்தவற்றையே பின்பு மா முனிகளும் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானத்தில் அருளிச் செய்துள்ளார் என்பது தெளிவு

    நாம் பற்றும் பற்றன்று
    எம்பெருமான் தானே பற்று வித்து அருளினான்
    அவனுடைய க்ருஷி பலித்தது அத்தனை அன்றோ என்று உள்ளூற அனுசந்திக்கையே ப்ராப்தம்

    —————————————————————–

    இனி மூன்றாம் ஸாரார்த்தம்
    ஈஸ்வரனுக்கு சேதன லாபம் புருஷார்த்தம்
    மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34-

    மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
    மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
    மத்யாஜீ-என்னைத் தொழு,
    மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
    ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
    மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

    மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
    இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

    ৷৷9.34৷৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே
    ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

    (இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

    புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

    இனி ஒப்பனை அழகு விவரணம்
    அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

    இனி கல்யாண குண விவரணம்

    அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

    (இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

    ৷৷9.34৷৷’பஜஸ்வ’ [9.33] இத்யுக்தபக்திஸ்வரூபநிஷ்கர்ஷோநந்தரஂ க்ரியத இதி ஸங்கதிஂ தர்ஷயதி — ‘பக்திஸ்வரூபமாஹேதி’. ஸாமாந்யேந ஸர்வாஸு பரவித்யாஸூபாஸ்யதயா ததுபயுக்ததயா ச ப்ரமாணஷதைஃ ப்ரதிபாதிதாஃ ஸ்வரூபரூபகுணாதயோத்ராஸ்மச்சப்தேந விவக்ஷிதா இத்யபிப்ராயேணாஹ — ‘மயீதி’. “தமீஷ்வராணாஂ பரமஂ மஹேஷ்வரஂ” [ஷ்வே.உ.6.7] “ந தஸ்யேஷே கஷ்சந” [தை.நா.1.9] இத்யாதேரர்தமாஹ — ‘ஸர்வேஷ்வரேஷ்வர’ இதி. ந ஹ்யஸமர்தஸேவயா கிஞ்சில்லப்யதே; நச ப்ரஹ்மாண்டாந்தராதேரநீஷ்வரா ப்ரஹ்மேஷாதயோபி மோக்ஷதாநஷக்தா இதி பாவஃ. ‘க்ஷேத்ரஜ்ஞஸ்யேஷ்வரஜ்ஞாநாத்விஷுத்திஃ பரமா மதா’ [யா.ஸ்மரி.3.34] இதி ஹ்யுச்யதே. ஹேயாஸ்பதஸ்ய குணரஹிதஸ்ய ச பஜநீயத்வாபாவாதிதரவ்யாவரித்த்யர்தஂ ஸகுணநிர்குணஷ்ருதீநாஂ விஷயவ்யவஸ்தயோபயலிங்கத்வமாஹ — ‘நிகிலேதி’. ஸமஸ்தாநிஷ்டநிவர்தகத்வாதநந்தபோக்யமயத்வாச்சாயமேவோபாஸ்ய இதி பாவஃ. அநந்தமங்கலகுணோபலக்ஷகதயா த்யேயலக்ஷணஜகத்காரணத்வமோக்ஷப்ரதத்வௌபயிகஂ குணத்வயஂ’ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்ப’ இத்யுக்தம். “யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்ய ஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாமரூபமந்நஂ ச ஜாயதே” [முஂ.உ.1.9] இதி? “ஸத்யகாமஃ ஸத்யஸங்கல்பஃ” [சாஂ.உ.8.1.5] இதி ச அநிஷ்டநிவரித்த்யாதௌ சாந்யாஜ்ஞாதஂ ஸஹகாரிஸாபேக்ஷத்வஂ ச நாஸ்தீதி பாவஃ. “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யுபக்ரம்ய “தத்விஜிஜ்ஞாஸஸ்வ” [தை.உ.3.1.1] “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இத்யாத்யபிப்ராயேண — ‘நிகிலஜகதேககாரண’ இத்யுக்தம். நிகிலஷப்தேநாவ்யக்தாதேர்ப்ரஹ்மருத்ராதேஷ்ச ஸங்க்ரஹஃ. வ்யோமாதீதநிர்குணவாதாதிநிராகரணஂ? ஸாமாந்யவிஷேஷஷப்தயோரைகரஸ்யஂ சாபிப்ரேத்ய’பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம’ இத்யுக்தம். அநேந ஸர்வாத்மகத்வஂ ஸர்வவிலக்ஷணத்வஂ சாவிருத்தமுபதர்ஷிதஂ பவதி. நாராயணாநுவாகபுருஷஸூக்தாதிகஂ ச ஸ்மாரிதம். ஏதாவதா விஷிஷ்டஂ ஸ்வரூபமுக்தம்;.

    அத ஸர்வஷாகாதிபடிதபுருஷஸூக்தாதிஸித்தஂ ஷுபாஷ்ரயப்ரகரணப்ரபஞ்சிதஂ ச விக்ரஹதத்குணாதிகமுச்யதே.’தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ’ [சாஂ.உ.1.6.7] இத்யாத்யுக்தபரத்வசிஹ்நமாஹ — ‘புண்டரீகதலாமலாயதாக்ஷ’ இதி.’ஸ்வச்சேத்யாதிநா’ “நீலதோயதமத்யஸ்தா” [தை.நா.11.12] இத்யாதிகமநுஸஂஹிதம். ஸ்வச்சத்வஂ மணிமுகுரஸலிலகாசாதிவத்வ்யவஹிதப்ரகாஷப்ரதிபிம்பாதியோக்யஃ ப்ரஸாதவிஷேஷஃ.’திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய’ [11.12] இத்யாதி வக்ஷ்யமாணஂ “தமேவ பாந்தம்” [முஂ.உ.2.2.10] இத்யாதிஷ்ருதிஂ சாபிப்ரேத்யோக்தஂ — ‘யுகபதித்யாதி’. ஷ்ருத்யாதிப்ரஸித்தஂ பஹூநாமுதாரத்வமௌர்ஜித்யமபிமதபலப்ரதத்வஂ ச. யத்ர ரூபாந்தரஂ ந விஷிஷ்டஂ? தத்ர வக்துர்வஸுதேவநந்தநஸ்ய ரூபஂ விவக்ஷிதம்; தச்ச ஸர்வாவதாரோபலக்ஷணம். சதுர்புஜத்வஂ பகவதஃ கரிஷ்ணஸ்ய பரரூபஸ்ய ஸாஂஸித்திகம்; த்விபுஜத்வஂ ஸஹஸ்ரபுஜத்வாதிகஂ சாஹார்யமித்யாஷயேநோக்தஂ — ‘சதுர்பாஹாவிதி’. அதவாபி சதுர்புஜத்வஂ — ‘புஜைஷ்சதுர்பிஃ ஸமுபேதமேதத்ரூபஂ விஷிஷ்டஂ திவி ஸஂஸ்திதஂ ச. பூமௌ கதஂ பூஜயதாப்ரமேயஂ ஸதா ஹி தஸ்மிந்நிவஸாமி தேவாஃ!’ இத்யாதிகமிஹ பாவ்யம். திவ்யாம்பரயோகமாஹ — ‘அத்யுஜ்ஜ்வலிதேதி’. மூர்தாதிபாதாந்ததிவ்யாவயவகதஸமஸ்தாபரணவர்கோபலக்ஷணதயா கிரீடாத்யுக்திஃ.’த்யேயஃ ஸதா’ இத்யுபக்ரம்ய’கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ’ [ப.உ.பு.ஆ.ஹரி.155] இத்யாதிகமிஹ த்ரஷ்டவ்யம். மகரஷப்தோ மகராகாரகுண்டலபரஃ. தேஜஃப்ராசுர்யஂ ப்ரதிகூலைர்துஷ்ப்ரேக்ஷத்வஂ சாபிப்ரேத்ய’யுகபதித்யாதிகமுக்தம்’.

    ‘லாவண்யேத்யாதிநா’ து தஸ்யைவாநுகூலபோக்யத்வாகர்ஷகத்வாதிகமபிப்ரேதம். சக்ஷுராநந்தஜநகஸ்தேஜோவிஷேஷோ ஹி லாவண்யம். தத இதமுச்யதே — ‘லோசநைரநுஜக்முஸ்தே தமாதரிஷ்டிபதாத்புநஃ. மநோபிரநுஜக்முஷ்ச கரிஷ்ணஂ ப்ரீதிஸமந்விதாஃ৷৷அதரிப்தமநஸாமேவஂ தேஷாஂ கேஷவதர்ஷநே. க்ஷிப்ரமந்தர்ததே ஷௌரிஷ்சக்ஷுஷாஂ ப்ரியதர்ஷநஃ৷৷அமரிதஸ்யேவ நாதரிப்யந் ப்ரேக்ஷமாணா ஜநார்தநம்’ [ம.பா.2.2.26-28]’நஹி தஸ்மாந்மநஃ கஷ்சிச்சக்ஷுஷீ வா நரோத்தமாத். நரஃ ஷக்நோத்யபாக்ரஷ்டுமதிக்ராமதி ராகவே’ [வா.ரா.2.17.13] இதி.’அபாரேத்யாதிநா’ ஸௌலப்யோபயோகிநோமிதாஃ ஸுந்தரத்வாதிமிஷ்ராஃ ஸமாஷ்ரயணீயத்வேத்யந்தாபேக்ஷிதாஃ ஸ்வரூபரூபயோர்குணா உக்தாஃ.’ஸர்வலோகஷரண்யாய’ [வா.ரா.6.17.17]’ஸுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா’ [வா.ரா.6.18.5]’விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவணஃ ஸ்வயம்’ [வா.ரா.6.18.34] இத்யாதிகமநுஸந்தாய காருண்யாதிபலிதமாஹ — ‘அநாலோசிதேதி’. ஆஷ்ரிதஸஂரக்ஷணஂ ஸ்வலாபஂ மத்வா ப்ரவர்தத இத்யபிப்ராயேணோக்தஂ — ‘ஸர்வஸ்வாமிநீதி’.’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யுக்தம். “நிதித்யாஸிதவ்யஃ” [பரி.உ.2.4.5;4.5.6] “த்யாயத” [முஂ.உ.2.2.6] “த்ருவா ஸ்மரிதிஃ” [சாஂ.உ.7.26.2] “ஆவரித்திரஸகரிதுபதேஷாத்” [ப்ர.ஸூ.4.1.1] இத்யாத்யநுஸந்தாநேந மநஷ்ஷப்தஸ்யாத்ர த்யாநாக்யமநோவரித்திவிஷேஷவிஷயதாமாஹ — ‘தைலதாரேதி’.’மய்யேவ மந ஆதத்ஸ்வ’ [12.8] இத்யுச்யத இதி. அத்ர’மாமேவைஷ்யஸி’ இதி ஸாத்யகதாவதாரணாத்ஸாதநேப்யவதாரணஂ விவக்ஷிதமிதி கம்யதே. தேந சாநந்யமநஸ்த்வாதிகஂ ஸித்தம். ததஷ்ச தைலதாராதிவதவிச்சேதோபி பலித இதி பாவஃ.

    “யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ” [கடோ.1.2.22] இதி ஷ்ருத்யுபபரிஂஹணதாமபிப்ரேத்யாஹ’ததேவேதி’. பக்தேரபி ஜ்ஞாநவிஷேஷரூபத்வாத்விஷேஷகத்வமுபபத்யத இத்யபிப்ராயேணாஹ’அத்யர்தேதி’. ஸ்வதந்த்ரார்தாந்தரவிதாநஷங்காநிராஸாயாஹ ‘புநரபீதி’. பக்திஸ்வரூபவிஷேஷநிஷ்கர்ஷபரத்வாத்ததஸாதாரணஷாஸ்த்ரவிஷேஷப்ரதிபாதிதபூஜாவிஷேஷபரோயஂ யஜநஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘யஜநஂ நாமேதி’. ஷேஷவரித்திஃ கைங்கர்யம். இதஂ ச’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதிநா ப்ரதர்ஷிதஸ்ய பகவச்சாஸ்த்ரப்ரபஞ்சிதஸ்ய ஸங்க்ரஹஷாஸநம். அதோத்ர யஜிர்தர்ஷபூர்ணமாஸாதிவிஷய இதி ந ப்ரமிதவ்யம்.’யஜ தேவபூஜாயாம்’ [தா.பா.1.1027] இத்யேவ ச பட்யதே.’தேவதாமுத்திஷ்ய த்ரவ்யத்யாகோ யாகஃ’ இதி சாஹுஃ. அக்நிஹோத்ராதிவ்யதிரிக்தேஷ்வபி பஞ்சமஹாயஜ்ஞாதிஷு யஜிர்நிரூடஃ. அந்யத்ராபி’கரிஷ்ணோ வாக்யைரிஜ்யதே ஸம்மரிஷாநைஃ’ [ம.பா.13.18.6] இத்யாதயஃ ப்ரயோகாஃ. அதோத்ர பகவச்சாஸ்த்ராதிப்ரபஞ்சிதவிஷயோயஂ யஜிரித்யபிப்ராயேணாஹ — ‘ஔபசாரிகேதி’. ஔபசாரிகாஃ நீராஜநாதயஃ; ஸாஂஸ்பர்ஷிகாஃ ஸ்ரக்சந்தநாதயஃ; ஆதிஷப்தேந ஸாந்தரிஷ்டிகதீபாதிக்ரஹணம்.’மத்யாஜீ’ இத்யநேந பாஹ்யக்ரியாபரேண மந்மநஸ்த்வஂ கதஂ விஷேஷ்யத இத்யத்ராஹ — ‘யதேதி’.

    ‘புநரபீத்யாத்யபி’ பூர்வவத். பூர்வோக்தாததிகரூபத்வஂ தர்ஷயிதும் — ‘அபர்யவஸ்யந்நித்யந்தமுக்தம்’.’அத்யர்தஷப்தேந’ தாஸ்யஸ்ய ஸ்வரூபப்ராப்ததா விவக்ஷிதா.’அதிமாத்ரஷப்தேந’ தஸ்ய நிரதிஷயபோகரூபத்வஂ ஸூசிதம். த்ரிவிதப்ரதிஸங்க்ரஹாய நமதாதுஸ்வரூபநிரூபணேந ப்ரஹ்வீபாவஷப்தஃ.’ப்ரேக்ஷாவதஃ ப்ரவரித்திர்யா ப்ரஹ்வீபாவாத்மிகா பரா. உத்கரிஷ்டஂ பரமுத்திஷ்ய தந்நமஃ பரிகீயதே’ [அஹிர்பு.ஸஂ.52.10] இதி ஹி நமஷ்ஷப்தோ விவரிதஃ. ஜ்ஞாநவிஷேஷகத்வவ்யக்த்யர்தஂ’வ்யவஸாயஷப்தஃ’.’பராயணஃ’ இத்யத்ர பரஷப்தவிஷேஷணஸாமர்த்யாதவதாரணஂ விவக்ஷிதமித்யபிப்ராயேண’அஹமேவேத்யுக்தம்’. பலிதமாஹ — ‘மயா விநேதி’. ஏஷைவ பக்தேஃ பரமா காஷ்டா ப்ராப்தேரவ்யவஹிதபூர்வபாவிநீதி பலாபிலாஷஜ்ஞாபநார்தோ மத்பராயணஷப்த இத்யபிப்ராயஃ. ஏவஂஷப்தாநூதிதமாகாரமாஹ — ‘அநவதிகேத்யாதிநா’.’ஆத்மாநஂ”யுக்த்வா’ இதி பதயோரத்ரோசிதார்தப்ரதர்ஷநஂ’மநஃ ப்ராப்யேதி’. யுஜிரத்ர யோகார்தஃ ஸமாத்யர்தோ வா.’மந்மநா பவ’ இத்யுக்தார்தபரத்வஂ’ஏவமாத்மாநம்’ இத்யநுவாதேந ப்ரதீயத இத்யபிப்ராயேணாஹ — ‘ஆத்மஷப்தோ ஹீதி’. மநஸோத்ர நிர்தேஷோ த்யாநாதிகரணத்வேநேதி ப்ரதர்ஷயந் ஷ்லோகஸ்ய பிண்டிதார்தமாஹ — ‘ஏவஂ ரூபேணேதி’. நிரதிஷயப்ரீதிமதேத்யர்தஃ. த்யாநாதிகஂ மத்பக்த இதி விஷேஷணாத்போகரூபமித்யபிப்ராயேண’மாமநுபூயேத்யுக்தம்’.

    அத ஸுகக்ரஹணாத்யாயப்ரதாநார்தபூதஸாங்கோபாங்கபலஷிரஸ்கபக்திஸ்வரூபஂ ஸங்க்ஷேபேண நிஷ்கரிஷ்ய வதந்நுபஸஂஹரதி — ‘ததேவமிதி’. தத் தஸ்மாதித்யர்தஃ. தவ துஃகபஹுலஸஂஸாரஸாகரபதிதத்வாத்? மம ச பரத்வஸௌலப்யாதியுக்தஸ்ய ஸமஸ்ததுஃகஸாகரோத்தரணஸாஂயாத்ரிகத்வாத்? உபாயஸ்ய சாத்யந்தஸுகரத்வாதிகுணயுக்தத்வாதித்யர்தஃ.’ஏவமிதி’ பூர்வக்ரந்தைருக்தப்ரகாரேணேத்யர்தஃ.’லௌகிகாநீத்யாதி குர்வந்நித்யந்தஂ”யத்கரோஷி’ இத்யாதேரர்தஃ;’மந்நியாம்யமித்யாதிகஂ”மயா ததம்’ [9.4] இத்யாதேரபிப்ரேதகதநம்;’அத்யர்தப்ரியமத்குணகணமிதி”ஸமோஹம்’ [9.29]’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதேரர்தஃ. குணாநுஸந்தாநாத்பக்தேஃ புருஷஸாத்யத்வஂ யுஜ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘மத்குணகணஂ சாநுஸந்தாயாஹரஹருக்தலக்ஷணமிதமுபாஸநமுபாததாந’ இதி.’இதி மத்வா பஜந்தே மாம்’ [10.8] இத்யாதிகமத்ராநுஸஂஹிதம்.’அஹரஹரித்யாதிகஂ”மந்மநாஃ’ இத்யாதேர்விவக்ஷிதம். ஆப்ரயாணத்வஸித்த்யர்தம்’அஹரஹரித்யாத்யுக்தம்’.’உக்தலக்ஷணமிதி’ — அநந்யப்ரயோஜநநமஸ்காராதிப்ரேரகமதேகதாரகத்வதஷாபர்யந்தநிரதிஷயப்ரீதிரூபமித்யர்தஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ நவமோத்யாயஃ৷৷9৷৷

    ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய
    ஸ்ரீ பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.

    ஆஸ்ரித ஸம் ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
    ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
    ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலும்-அநா வ்ருத்தி ஸப்தாத் -ஸூத்ர பாஷ்யத்திலும்
    ந ச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞாநிநம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யத்
    ஸ்வ தந்த்ரனே யானாலும் ஸத்ய ஸங்கல்பம் உடையவன் அன்றோ
    பேற்றுக்குத் த்வரிக்கையும் நம்மால் விளைவது அல்ல
    நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண –
    ஜீவாத்மாவுக்கு அசித்வத் பாரதந்தர்யத்துக்கு சைதன்யம் இடையூறு என்பதால் அத்தையும் கல்மஷம் என்கிறது என்றுஆச்சார்யர்கள் நிலைநாட்டி அருளுகிறார்கள்
    வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
    ஸ மஹாத்மா ஸூ துர்லப –

    ———-————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகங்கள் /ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா”/ ஸ்ரீ கீதா ஶ்லோகார்த்த ஸாரம் —–

    August 12, 2024

    ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்

    யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
    வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்-

    1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
    திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
    நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
    புன்பொருளிற் போகா புலன்.

    2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
    போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
    வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
    நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

    3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
    வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
    பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
    சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

    4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
    போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
    பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
    தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

    5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
    நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
    தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
    லிருணூற வேற்றுகேன் யான்.

    ——————

    1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
    நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

    ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
    தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
    இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
    பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
    கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
    ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான

    6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
    லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
    னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
    கெண்ணும் பொருளா மிசைந்து.

    தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
    சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
    (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
    அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
    பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
    நண்ணும் – அடையும்,
    பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
    நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
    இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
    எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

    —————————

    பூர்வ ஷட்கம்:

    2) ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

    ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
    நன்கு அலங்கரிக்கப்பட்ட,
    சம்ஸ்காரம் -பகவத் கைங்கர்ய அர்த்தம் ப்ரீதி அர்த்தம் என்ற எண்ணத்துடன் -த்ரிவித தியாகங்கள் உடன் செய்வதே வைராக்யம்
    அதுவே நன்கு ஸம்ஸ்கரிப்பட்ட யோகம்
    ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,

    யோகம் -சன்னகனம் -சேகரிப்பது உபாயம் த்யானம் சங்கதி யுக்தி -ஐந்து பொருள்கள்
    இங்கு உபாயம்

    யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,

    இங்கு யோகம் த்யானம்
    அஷ்டாங்க யோகம் -ஆசனம் பிராணாயாமம் போல்வன இங்கு
    படித்து கற்று நினைத்து ஆள் மனதில் பதிய வேண்டுமே

    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
    பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
    சோதிதே – விதிக்கப்பட்டன.

    7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
    யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
    தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
    முன்னாறோத் தோதும் முயன்று.

    ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
    ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
    ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
    இங்கு – இவ்வுலகிலேயே,
    ஊனம் அற – குறைவில்லாமல்,
    தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
    நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
    முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
    முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

    ———

    மத்யம ஷட்கம்:
    3) மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
    ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:

    மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
    பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
    ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
    பக்தி யோக: – பக்தி யோகம்,
    ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

    பகவத் தத்வம் உள்ள படி அறியவும் பக்தி வேண்டும்
    ஞான தர்சன பிராப்தி மூன்று நிலைகளுக்கும் பக்தி வேண்டுமே
    இதுவே பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகும்
    அறிந்தால் தானே அடைய ஆசை வரும்
    ப்ரகீர்த்தித்த -நன்றாக -பக்தன் பெருமை -அங்கங்கள் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறான் அன்றோ

    8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
    தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
    நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
    யிடையாறோத் தோது மெடுத்து.

    உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
    முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
    பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
    நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
    இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

    ———–

    அந்திம ஷட்கம்:
    4) ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
    கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

    ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
    ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
    வ்யக்த-பிரக்ருதியில் தோன்றிய பொருள்கள் –
    கர்ம: – கர்ம யோகமும்,
    தீ: – ஜ்ஞாந யோகமும்,
    பக்தி: – பக்தி யோகமும்,
    இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
    பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
    அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
    விவேசநம்-பகுத்து அறிவு

    த்ரிகம் -பிரித்து
    முதல் த்ரிகத்தால் -13-14-15-அத்யாயங்களால் கீழே சொல்லிவற்றின்-தத்வம்- சேஷம்
    இரண்டாம் த்ரிகத்தால் -16-17-18- அத்யாயங்களாலால் -கீழே சொல்லிவற்றின்-ஹிதம்- சேஷம்

    9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
    வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
    வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
    பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

    கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
    இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
    சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
    அருமை அற – சிரமம் இல்லாமல்,
    என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
    பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
    பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

    10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
    யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
    தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
    கன்மயோ கத்தின் கணக்கு.

    தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
    பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
    இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
    சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
    கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

    11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
    கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
    யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
    பத்தியோ கத்தின் படி.

    அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
    அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
    அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
    நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
    மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
    ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
    நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
    பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
    யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
    மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
    ஞானயோ கத்தி னலம்.

    புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
    தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
    செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
    உற்ற – தோன்றும்,
    உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
    மான யோகத்து – யோக முறைகளினாலே,
    இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
    மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
    காண்பதே – அனுபவித்தலே,
    ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
    தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
    வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
    மானந் தருமியல்பால் வாய்ந்து.

    ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
    இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
    தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
    அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

    —————————

    1: அர்ஜுன விஷாத யோகம்:

    5) அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
    பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

    அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
    உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
    ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
    ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
    பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
    ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

    காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

    வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
    பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
    சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
    னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

    வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
    நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
    வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
    அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
    பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
    மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
    சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
    சோகித்த – வருத்தமுற்ற,
    தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
    உற்ற – அடைந்த,
    மயல் – மயக்கத்தை,
    முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

    ——–

    2: ஸாங்க்ய யோகம்:

    6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
    த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

    நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
    இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
    ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
    ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
    தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
    த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
    ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

    காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
    மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
    விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
    மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
    உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
    மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

    சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
    பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
    கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
    ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

    12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
    31 –கர்ம யோகம் –53 வரை
    53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
    புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

    முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்து ஶ்லோகங்கள் முடியவும்
    சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக் கூறும் அவதாரிகை யாகிறது.

    11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
    14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
    பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
    16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
    26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
    29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
    30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
    31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
    35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
    (இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
    இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

    38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
    39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
    அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
    53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
    54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
    59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
    அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
    69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
    72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

    ———

    3: கர்ம யோகம்:

    7) அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
    ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா

    லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
    குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
    கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
    ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
    அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
    அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
    கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
    த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

    மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
    ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
    தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
    வன்கருமந் தீரும் வகை.

    முன் உரைத்த புந்தியினும் –
    முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
    ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
    என்பதனால் – என்னும் காரணத்தினால்,
    ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
    தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
    வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
    தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
    என – என்று,
    மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
    மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

    1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று;
    நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம்.
    இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
    3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விட முடியாததாயிருக்கை
    முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
    9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்;
    அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
    17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால்,
    அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.
    20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.
    20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரி யாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை
    ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
    27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும்
    அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால்,
    ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.
    31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
    33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும்
    காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும்.
    அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும்.
    ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய்,
    செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்ம யோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக் கொள்ளத் தக்கது.

    —————

    4: ஜ்ஞான யோகம்:

    8) ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
    பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

    சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
    கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
    அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
    ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
    ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
    ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

    நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
    சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
    யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
    மேகப் பலபரிசா வேய்ந்து.

    நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
    கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
    தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
    ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
    ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
    பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
    முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
    உரைக்கும் – உபதேசிக்கிறான்.

    1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
    4: அர்ஜுனனின் கேள்வி.
    5-11: அவதார ரஹஸ்யம்.
    12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
    25-30: கர்மயோக வகைகள்.
    30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
    33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
    41-42: முடிவுரை.

    5 – கர்ம ஸந்யாஸ யோகம்:

    9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
    ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

    கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
    ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
    ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
    காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
    ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
    பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.

    அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
    திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
    சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
    முந்தை மறைநெறியை மூண்டு.

    அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
    அருள் – அருளிச் செய்த,
    கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
    அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
    முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
    கருமம் – கர்ம யோகம்,
    உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
    உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
    சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

    1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
    2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
    8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
    12 பல த்யாகம் மோக்ஷஹேது.
    13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
    14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
    16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
    17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
    1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
    2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
    3. அதற்காக முயல்பவர்கள்
    4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
    இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
    18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
    இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
    20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
    1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
    2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
    3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

    இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
    4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
    5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
    6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
    26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
    இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
    27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
    29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

    ——————–

    6 – அத்யாத்ம யோகம்:

    10) யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
    யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

    யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
    சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
    யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
    யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
    ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
    ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
    தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
    — — — —
    — — — — (லுப்தம்)

    யோக விதியோகி யோகத்து நாலுவகை
    யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
    ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
    திண்ண முடிந்ததிது சேர்ந்து.

    யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
    யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
    யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
    மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
    இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
    மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
    கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

    1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
    7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
    10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
    10-12 பாஹ்ய உபகரண நியமம்.
    13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
    15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
    16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
    18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
    20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
    24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
    28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

    29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
    1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
    2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
    3. அந்தர்யாமியைக் காணுதல்
    4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

    33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
    35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
    37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
    40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
    46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
    47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

    முதல் ஷட்கத்தின் ஸாரம்:
    சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
    லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
    காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
    மாட்சிமை சொல்லும் வகை.

    சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
    உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
    தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
    அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
    (அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
    உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
    இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
    முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
    மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

    பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
    முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
    றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
    தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
    கூறு நடுவாறுங் கூர்ந்து

    முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
    நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
    தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
    ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
    இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
    நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

    · அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
    அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
    · ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
    · ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

    —————————–

    7 – விஜ்ஞான யோகம்:
    11) ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
    பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

    ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
    ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
    ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
    அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
    ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
    பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
    ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
    மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
    சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
    யரணுயர்வு சொல்லு மமைந்து.

    ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
    ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
    அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
    மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
    ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
    அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
    ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
    அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

    I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
    1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
    2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
    3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
    அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
    அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
    4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
    5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
    6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
    7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
    7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
    8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
    12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
    ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
    அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

    II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

    III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
    15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

    IV பக்தபேதம்
    16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
    1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

    V 17-27 ஞானியின் சிறப்பு
    17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
    எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
    சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
    பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
    எம்பெருமானுக்கு மிகவினியவன்.
    18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
    ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
    19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
    அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
    இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
    20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
    21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
    22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
    23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
    24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
    25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
    26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
    27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
    புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
    VI முடிவுரை
    28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
    பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
    29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
    30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
    பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

    ——————————

    8 – அப்யாஸ யோகம்:

    12) ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
    வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

    ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
    அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
    வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
    பேத: – வேறுபாடு,
    அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
    காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
    தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
    செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

    போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
    உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
    பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
    பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
    அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
    செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
    மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
    கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

    1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
    2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
    3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
    4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
    3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
    4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
    5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
    ‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
    6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
    அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
    7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
    செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
    8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
    8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
    14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
    15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
    ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
    15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
    16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
    17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
    20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
    22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
    பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
    23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
    ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
    25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
    26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
    பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
    27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
    28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
    ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
    அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
    என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

    ———————-

    9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

    13) ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
    விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:

    ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
    மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
    மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
    பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
    நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
    ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

    உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
    நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
    யொன்றியசீ ரொன்பதா மோத்து.

    உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
    பரன் – பரமாத்மாவினுடைய,
    ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
    உயர்த்தி – மேன்மையை,
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
    தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
    நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
    நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

    1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
    2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
    3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
    4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
    4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
    படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
    6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
    7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
    8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
    9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
    10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
    11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
    13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
    14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
    16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
    அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
    20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
    22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
    23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
    24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
    அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
    25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
    26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
    27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
    28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
    29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
    செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
    31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
    32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
    உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
    34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

    ——————-

    10 – விபூதி யோகம்:

    14) ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
    பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

    பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
    ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
    அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
    விஸ்தீர்ணா – விரிவாக,
    தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
    வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
    கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
    தின்புறவே யோது மெடுத்து.

    1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
    4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
    9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
    12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
    12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
    அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
    16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
    19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
    சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
    20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
    அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
    முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
    மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
    மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
    21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
    39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
    40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
    41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
    ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
    42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
    என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

    —————————

    11 – விஶ்வரூப தர்சனம்:

    15) ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
    தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா

    ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
    ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
    தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
    ததா – அவ்வண்ணமே,
    விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
    பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
    உக்தம் – சொல்லப்பட்டது.

    பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
    மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
    காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
    கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

    பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
    மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
    கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
    இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
    உடம்பதனில் – தன் சரீரத்தில்,
    கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
    தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
    தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
    குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

    1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
    4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
    5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
    9-13 விஶ்வரூப வர்ணனை.
    14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
    31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
    32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
    35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
    47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
    50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
    51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
    52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
    திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

    ———————–

    12 – ஸ்ரீ பக்தி யோகம்:

    16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
    தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே

    பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
    உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
    அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
    ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
    தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
    பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
    த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
    மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
    பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
    திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

    முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
    பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
    பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
    அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
    அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
    உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
    திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
    சொற்களால் நன்றாகக் கூறும்.

    1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
    என்னும் அர்ஜுனனின் கேள்வி.
    2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
    என்னும் கண்ணனின் பதில்.
    3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
    6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
    8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
    9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
    அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
    10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
    விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
    11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
    கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
    12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
    13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
    20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

    மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
    பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
    யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
    காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
    மாட்டிடையா றொத்தின் வகை.

    கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
    இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
    நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
    பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
    பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
    பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

    மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
    கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
    நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
    காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
    யேயவமைந் தேலுமீ றாறு.

    முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
    கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
    கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
    நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
    ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
    தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

    ———————

    13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

    17) தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
    பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

    தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
    ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
    ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
    பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
    விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
    த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப் படுகிறது.

    ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
    தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
    தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
    நன்மையுடன் சொல்லு நயந்து.

    ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
    முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
    ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
    ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
    நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
    தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
    முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
    சோதித்து – ஆராய்ந்து,
    நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

    1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
    2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
    3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
    4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
    5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
    7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
    இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

    அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
    ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

    இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
    ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

    அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
    நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

    மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
    விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

    அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
    ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

    12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
    18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
    19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
    23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
    24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
    26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
    27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
    34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

    —————————

    14 – குண த்ரய விபாக யோகம்:

    18) குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
    கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

    குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
    தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
    தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
    கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
    தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
    சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப்படுகிறது.

    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
    மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
    கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
    போதத் தியல்பாற் புரிந்து.

    மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
    (தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
    அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
    போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
    புரிந்து – விருப்பத்தோடு,
    கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

    1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
    3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
    தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
    5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
    6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
    அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
    9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
    10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
    அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
    11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
    14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
    16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
    (இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
    19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
    20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
    மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
    21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
    என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
    22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
    26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
    27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

    ————————–

    15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

    19) அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
    வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

    அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
    விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
    வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
    பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
    ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
    அந்ய: – வேறுபட்டவனான,
    புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
    பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
    மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
    மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
    யோதும் பதினைந்தா மோத்து.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
    கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
    மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
    உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
    அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
    பரித்து – அவற்றைத் தாங்கி,
    இறையாய் – அவற்றை உடையவனாய்,
    மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
    பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
    ஓதும் – கூறும்.

    1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
    2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
    3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
    அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
    3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
    ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
    4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
    ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
    5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
    ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
    இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
    ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
    6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
    7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
    விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
    8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
    9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
    10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
    இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
    இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
    11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
    12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
    பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
    இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
    எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
    15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
    அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
    எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
    கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
    16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
    என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
    17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
    நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
    18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
    “புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
    19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
    பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
    20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
    இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
    செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

    ——————————-

    16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

    20) தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே

    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
    பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
    தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
    முன்னிட்டுக்கொண்டு,
    ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
    ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
    நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
    யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
    யுரைக்கும் பதினாறா மோத்து.

    கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
    அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
    அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
    அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
    தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
    பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
    நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
    தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

    1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
    1. பயமின்மை,
    2. மனத்தின் பரிசுத்தி,
    3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
    4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
    5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
    6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
    7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
    8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
    9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
    10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
    11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
    12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
    13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
    14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
    15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
    16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
    17. விஷயங்களில் பற்றின்மை,
    18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
    19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
    20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
    21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
    22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
    23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
    24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
    தகுதியை உடையவனாயிருக்கை,
    25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
    26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

    4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
    1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
    2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
    3. அதிகமான கர்வம்,
    4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
    5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
    6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

    5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
    எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
    5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
    6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
    அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
    7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
    இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
    2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
    3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
    4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

    8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
    ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
    2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
    காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

    9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
    உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
    10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
    சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
    ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
    11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
    பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
    12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
    2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
    12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
    13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    *14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
    14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
    16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
    17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
    2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
    3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

    அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
    4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

    யாகம் செய்கிறார்கள்.
    18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
    19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
    20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
    21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
    22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
    23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
    24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

    ——————–

    17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:

    21) அஶாஸ்த்ரம்  ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
    லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்

    க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
    ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
    குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
    ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
    ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
    த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
    (தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
    ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
    றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
    சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
    வோர்ந்தே பதினேழா மோத்து.

    சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
    சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
    செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
    மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
    பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
    இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
    பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
    ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

    1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
    2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
    3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
    4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
    5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
    என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
    7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
    8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
    9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
    10 தாமஸ ஆஹார விளக்கம்.
    11 ஸாத்விக யாக விளக்கம்.
    12 ராஜஸ யாக விளக்கம்.
    13 தாமஸ யாக விளக்கம்.
    14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
    18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
    19 தாமஸ தவத்தின் விளக்கம்.
    20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
    21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
    22 தாமஸ தானத்தின் விளக்கம்.
    23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
    என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
    24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
    மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
    25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
    மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
    26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
    27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
    ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
    28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
    “அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

    ——————–

    18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

    22) ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
    ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

    ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
    ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
    ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
    ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
    அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
    மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
    சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
    றோரும் பதினெட்டா மோத்து.

    செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
    மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
    உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
    இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
    பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
    உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

    1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
    2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
    4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
    7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
    8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
    9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
    10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
    11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
    13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
    16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
    18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
    19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
    20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
    24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
    25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
    26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
    27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
    28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
    29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
    30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
    31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
    32 தாமஸ புத்தியின் விளக்கம்.
    33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
    34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
    35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
    36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
    38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
    39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
    (ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
    40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
    41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
    42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
    43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
    44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
    45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
    46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
    47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
    48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
    49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
    50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
    51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
    54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
    55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
    56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
    57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
    58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
    59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
    60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
    (இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
    61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
    62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
    63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
    64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
    66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

    (இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

    62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
    63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
    64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
    66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
    (கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

    67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
    68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
    69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
    70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
    71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
    72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
    73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
    74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
    கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

    ———–

    த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

    உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
    யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
    தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
    மாவனபின் னாறோத் தமர்ந்து.

    உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
    உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
    இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
    திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
    குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
    பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

    ————-

    இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –

    இந்த 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-

    23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
    ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

    கர்ம யோக: – கர்ம யோகமாவது,
    தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
    இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.-பல பர்யந்தம் ஸேவை தொண்டு கைங்கர்ய ரூபமாகவே -13 வகைகள் கீழேயே பார்த்தோம் –
    ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
    ஜித ஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
    பரி ஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலை நிற்றலே யாகும்.

    இந்திரியங்களை மனசில் அடக்கி- -கூர்மம் போல் -ஆத்மா இடமே ஈடுபட்டு -திரும்ப திரும்ப அப்யாஸம் -இதன் ஏற்றமும் தாழ்ந்த அவற்றின் தோஷமும் அறிந்து -முழுவதும் அடங்கினால் தான் ஞான யோகம் கைகூடும் -கரணங்களை முழுவதும் அடக்க இயலாதவனுக்கு கர்ம யோகம் -திசை திருப்பி ஆத்மாவையே அனுபவிக்க வேண்டுமே -பரி ஶுத்தாத்மநி-நிஷ்க்ருஷ்ட ஆத்ம முக்த நிலை

    ————

    24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
    த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

    பக்தியோக: – பக்தியோகமாவது,
    பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
    த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
    த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

    முக் கரணங்களையும் அவன் இடமே ஈடுபடுத்தி

    த்யாநாதி ஆதி -பிராணாயாமம் அர்ச்சனை நாம சங்கீர்த்தனம்

    மஹநீய விஷய ப்ரீதியே பக்தி
    ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் கொண்ட அன்பு
    தசரதன் ராமன் இடம் உள்ள ஸ்நேஹமும் பக்தியும் எனக்கு உண்டு என்றானே திருவடி
    செயல்படுதல் -கர்ம -அறிவு -ஞானம் -அன்பு -பக்தி –
    த்யானம் அர்ச்சனம் பிரணாமம்-இதி கர்தவ்ய –
    அன்பு கலந்த -அநு த்யானம் -சிந்தனைத் தொடர்ச்சி –
    காதல் அவா வேட்க்கை அன்பு அபி நிவேசம் -ஸூ ஸூகம் கர்தவ்யம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி
    ஷூஸ்திதி-ஆ பிரயாணாதி-பல பர்யந்தம் நிலை நிற்க வேண்டுமே

    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – கர்ம யோகம் செய்ய ஆத்ம பரமாத்ம ஞானமும் உண்டே -வறட்டு த்யானம் இல்லாமல் அன்புடன் செய்ய வேண்டுமே –
    பக்திக்கு செயல்பாடுகள் உண்டே -அந்யோன்யம் ஒன்றுக்கு ஓன்று இருக்குமே –

    தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -ஸர்வ ரஸ –

    ———–

    25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
    ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

    பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
    நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
    (த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தி யுண்டு),
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
    யோக த்வாரேண – (மனம் ஒருமுகப் பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
    ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
    ஸாதகா: – உபாயங்களாகின்றன.

    பக்தி யோகம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு சாதகம் ஆகுமோ -ஆத்ம தர்சனத்துக்குப் பின்னே தான் –
    பக்தி பிறந்து பரமாத்மா ப்ராப்யம் என்றால் -அது பர பக்தி தசை
    ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வ பாரதந்த்ர ஆகாரம் உணர சாமான்யமான பக்தி வேண்டுமே அத்தைச் சொல்கிறது இங்கு
    நித்ய நைமித்திக கர்மங்கள் -ஸூர்யாதி அந்தர்யாமி யான பர ப்ரஹ்மம் குறித்தே செய்வதாகவே அனுசந்தானம் –
    பரிமித பலம் தானே தேவதாந்த்ரங்கள் தர முடியும் -அல்பம் அஸ்திரம் –
    பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லையே -சரீர பூதர்களே –
    உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
    ஸாஷாத் ஸப்தமே அவனையே குறிக்கும் -அக்ர நயன அக்னி -பரம ஐஸ்வர்யம் இந்திரன் –

    ஆத்ம சாஷாத்காரம் அடைந்த பின்பே பக்தி யோகம்
    இங்கு ஆரம்ப நிலை பக்தி

    ———

    26)  நிரஸ்த நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
    ப்ரதிலப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்

    நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
    பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
    ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
    த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
    பராம் பக்திம் – பர பக்தியை,
    ப்ரதி லப்ய – அடைந்து,
    தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
    தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நோதி – அடைகிறான்.

    அஞ்ஞானம் விலகி -ஆத்ம தர்சனம் -பர பக்தியாலேயே -அது முதிர்ந்து பர ஞானம் பரம பக்தி நிலை வந்த பின்பே ப்ராப்யம்
    உபாசகனுக்கு பர பக்திக்கும் பர ஞானத்துக்கும் நெடு காலம் விளம்பம் உண்டே –
    பிரபன்னனுக்கு ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்-அர்ச்சிராதி மார்க்கம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டனுக்கும் இதே போல் ஆகும் –
    ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் பூ மணம் ரத்னம் ஒளி போல் -அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் –

    சென்று சென்று பரம் பரமாய் -அன்ன மயம் தொடங்கி மேல் மேல் தாஸ பூத ஸ்வாபாவிக சேஷ பூதனான இவன் -ஞான ஆனந்த மயன் என்று உணர வேண்டும் -சேஷத்வமே அந்தரங்க ஸ்வரூபம்

    ———

    27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
    ஆத்மார்த்தீ சேத் த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

    பக்தி யோக: – பக்தி யோகமானது,
    ததர்த்தீ சேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
    ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
    ஆத்மார்த்தீ சேத் – ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
    தத் கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்ம மாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

    பிரதிபத்தி வைசிஷ்யாத் –யதோ உபாசனம் ததோ பலம் -கதி த்ர்ய மூலத்வாத்-

    மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

    யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுவை ஆராதித்து நான்முகன் ப்ராப்யம் அடைகிறான் –

    தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்-ப்ரசாதத்தில் இருந்து நான்முகன் கோபத்தில் இருந்து ருத்ரன் –

    கேவலம் -ஐஸ்வர்ய பகவத் அனுபவம் கலசாமல் ஆத்ம அனுபவம் ஒன்றே -ப்ராப்யமாகவே பகவானைப் பற்றினவன்

    ————-

    28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
    யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே

    ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
    பகவதி – எம்பெருமானிடம்,
    ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
    ஸமாநம் – பொதுவானது;
    யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
    பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
    அடைய விரும்பினானாகில்,
    தத் ஏவ – அந்தத் திருவடியையே,
    அத்யந்தம் – எப்போதும்,
    அஶ்நுதே – அடைகிறான்.
    (உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
    அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

    யாவத் பிராப்தி -அடைவதற்குள் -ஸூ பாஸ்ரயமான திரு மேனி அவர்கள் மனமும் மாறும் படி வைக்கும் அன்றோ -இங்கு புத்தி மாற வேண்டும்
    அடையும் வரையில் -தியானம் பண்ணினால் தான் பேறு என்றுமாம் -இங்கு புத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும் –

    ———–

    29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:

    பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
    தத் யாதத்த ஆ த்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
    அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
    ததேக தீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

    து -கீழ் சொன்னவர்களை விட வியாவ்ருத்தி ஸ்வயம் ப்ரயோஜன பக்தன் –

    இதுவரை ஏகாந்திகள் –கடைசி நான்கு ஸ்லோகங்களால் – பரம ஏகாந்தி –மிகவும் ஒருமுகப்பட்ட அதிகாரி -ப்ரபன்னர்கள்-

    தேவதாந்த்ர பரன் -ப்ரயோஜனாந்தர பரன் -ஸூய முயற்சியால் பகவத் லாபார்த்தி-அனைவரிலும் ஸ்ரேஷ்டன்
    வைப்பும் வாழ்வும் அவனே
    தனியேன் வாழ் முதல்
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி
    ஊனில் உயிரில் உணர்வில் -அவனே –
    தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
    உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
    பத்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்க மாட்டான் –
    தழுவி முழுசி அணைக்க -முக் கரணங்களாலும் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
    கடியேன் கொடியன் நெடிய மால் மாயத்தன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -தத் ஏக தீ -இங்கு

    ——————-

    30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

    பகவத் த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
    அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன்.-லப்தாத்மா-இவற்றாலேயே தரித்து இருக்கிறான்-

    போற்றி புகழ்ந்து வருவதையே ஸ்துதி கீர்த்தனை இங்கு
    இவை எல்லாம் செய்ததாலேயே சத்தை லப்த ஆத்மா
    முக் கரணங்களும் ஈடுபட்டு -ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:-பஞ்ச பிரயாணங்கள்
    அத்யவசாயம் புத்தி உறுதி -அபிமானம் அஹங்காரம் சித்தம் நினைக்கும் -மனசின் வியாபாரங்கள்
    பஞ்ச பிராணங்கள் –
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
    ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவகம் –இத்யாதி -பிரகலாதன்
    அக்னியில் பிராமணர் களுக்கு -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் -ஸர்வத்ர சம தர்சனருக்கு எங்கும் -நம் போல்வாருக்காகவே அர்ச்சை பிரதிமாஸூ அப்ரபுத்தர்
    பாஹ்ய யோ திரிவனே -எண் திசையும் அறிய இயம்புவேன்
    வாசித்தும் எழுதியும் பூசித்தும் போது போக்கினேன் தரித்து இருந்தேன் -திருமழிசை ஆழ்வார்
    ராக பிராப்தம் அன்றோ -ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்புமே -சஷுஸ் ஸ்ரவா -கட்ச்செவி
    காலும் எழா கண்ண நீரும் எழா -ஆடி ஆடி அகம் கரைந்து –

    உயிர் முதலாய் வாழ் முதலாய் மகிழ் முதலாய் கொள்கிறானே -மாயா சிரஸ் -நான் இருக்க பெருமாள் இருக்கிறார் -அறிகிறேன் சத்தயா தாரகம்
    அன்று எனக்கு பட்டினி நாளே -செல்கின்றது என் நெஞ்சமே -மனமும் கண்ணும் ஓடி அங்கு அணைந்ததே

    ——————

    31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
    உபாயதாம் பரி த்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

    நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
    பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
    உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கை விட்டு,
    ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
    குர்யாத் – (பரமை காந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;
    அபீ: – பயமற்றவனாய்,
    தாம் – அந்த உபாயத்வத்தை,
    தேவே து – எம்பெருமானிடமே,
    ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

    சரம ஸ்லோகார்த்தம்
    ப்ரீதியாலேயே தூண்டப்பட்டு-வர்ணாஸ்ரம கர்மங்களை-பக்தி பர்யந்தம் ஆஜ்ஜா ரூபம் -ஆராதன ரூபம் -சிஷ்டாசாரம் – கைங்கர்ய ரூபம் -கர்மம் பரிணாமம் –
    வகுத்த ஸ்வாமி -ப்ராப்தம் -செய்கிறான் -ஆசையால் -போஜனத்துக்கு ஷுத்து பசி போல் -உபாயமாக இல்லாமல் –பல அனுபவ யோக்யதா ஆ பாதமாகவே செய்கிறான்

    தர்ம ஸ்வரூபம் விட மாட்டான் – பலம் முன்பே விட்டான் உபாய புத்தி விடுகிறான் -பரந்த ரஹஸ்யம் பெரியவாச்சான் பிள்ளை
    கிருபை ஜன்யம் என்கிற புத்தி கூடாதே -கிருபையாலேயே தூண்டப்பட்டு செய்கிறான்
    பல கரண கருவி உபாயம் -பக்தி என்று நினையான் – தூண்டும் அவனே கொடுக்கிறான் -பல ப்ரதனும் அவனே என்று எண்ணுகிறான்

    ————

    அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

    1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
    நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
    ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

    2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
    ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

    3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
    தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
    கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
    (ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

    4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
    2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
    3. கர்ம யோக ஸ்வரூபம்.
    4. அதன் வகைகள்.

    5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
    2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
    3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

    6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
    2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
    3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
    4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
    5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

    7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
    2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
    3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
    4.பக்தர்களில் நாலு வகை.
    5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

    8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
    கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
    (பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
    உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
    மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

    9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
    (3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

    10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
    எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

    11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
    (2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

    12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
    (2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
    (3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
    (4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

    13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
    (4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

    14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
    (2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
    (3) அந்த குணங்களை நீக்கும் முறை.
    (4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

    15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
    பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
    (அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

    16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
    (மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
    மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

    17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
    (2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
    (3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
    (அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

    18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
    (2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
    (3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
    (4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

    ————————-

    ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

    32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
    தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

    ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முக மலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
    எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
    தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நுயாத் – அடைவான்;
    இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
    தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
    இதி – இவ் வண்ணமாக,
    கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

    நாஸ்திகனாய் இருப்பவனையும் பரம ஏகாந்தியாக்கும் கீதை என்பதே கீதார்த்த சாரம்
    அவன் ஆனந்தத்துக்காகவே -ஏகாந்தம் -அத்யந்தம் -முக மலர்த்தியே அனைத்து செயல்களையும் செய்கிறான்
    தாஸ்யம் ஏக ஆசை கொண்டவன்
    மஹா க்ரம -செங்கண் சிறு சிறிதே விழித்து மேலே மேலே கூட்டிப் போகிறான்
    வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
    ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை செய்யப் பெறுவேன் ஆக வேண்டும்
    ஸத்வ நிஷ்ட சம் ப்ரதாயம் -பரம்பரா -திரு உள்ளத்துக்கு ஏற்றது -யோக மஹிமை -முமுஷுக்களுக்கு சிறந்த பொக்கிஷம்
    நாதனுக்கு நாலாயிரம் அளித்து உள்ளம் கையில் நெல்லிக்கனி போல் ஸ்வரூப ரூப விபூதி குணங்களை கண்டு அவற்றை
    மணக்கால் நம்பி மூலம் பெற்ற அர்த்தங்கள் இவையே

    ————–

    ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
    அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
    கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

    ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

    ——————-

    ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

    கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
    ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

    சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
    பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
    தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
    வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

    ——————————————————————–

    சிறப்புத் தனியன் –

    கட்டப் பொருள் விரித்த காசினியில் நான் மறையின்
    இட்டப் பொருள் இயம்பும் இன்பொருளைச் சிட்டர் தொழும்
    வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
    பாதாம் புயம் அடியேன் பற்று –

    கட்டப்பொருள் -அறிவதற்குக் கடினமான அர்த்தங்களை
    சிட்டர்-பெரியோர்கள் –

    கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
    பாதார விந்த மலர் பற்று –

    பற்று -அனைவருக்கும் தஞ்சமாகும்

    —————————————————————

    கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
    தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

    கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
    எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

    ——————————————————————

    உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
    தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
    உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
    நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

    ——————————————————————

    உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
    விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
    கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
    விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

    இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
    பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
    இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
    தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

    ————————————————————————————

    சங்கம் தவிர்ந்து ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்று
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -4-

    3 வது அத்யாய சாரம் –
    சங்கம் தவிர்ந்து–கர்ம பலங்களிலே பற்று விட்டு -பகவான் உடைய மகிழ்ச்சியே வேண்டும் அநந்ய பிரயோஜனராய்
    ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்-மாறி மாறி வ்ருத்தி அடையும்
    சத்வம் ரஜஸ் தமஸ் குணங்களால் நிகழும் கார்யங்கள் எல்லா வற்றையும் அந்த குணங்களுக்குள் ஏற்றி வைத்து
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் – உரைத்த கிரிசைகள் -சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் எல்லா வற்றையும்
    ஈஸ்வரனாகிய நம்மிடத்திலே சமர்ப்பிக்க வேண்டும்
    எனவும் நவின்றார் -என்று அனுசந்தித்த பெரியோர்கள்
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆவார் என்று உபதேசித்து அருளினான் –

    ——————————————————————————————

    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

    நான்காம் அத்யாய சாரம் –
    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
    தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
    கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
    புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
    தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

    —————————————————————————-

    கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
    மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
    கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
    வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

    ஐந்தாம் அத்யாய சாரம் –
    கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
    ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
    மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
    உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
    மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
    மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
    கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
    காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
    வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

    —————————————————————————————

    யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
    யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
    யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
    நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7

    ஆறாம் அத்யாய சாரம் –
    பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

    ———————————————————————————

    தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
    தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
    மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
    தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

    ஏழாம் அத்யாய சாரம்
    பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
    மாயை -பிரகிருதி –

    ————————————————————————–

    ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
    பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
    தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

    8 அத்யாய சாரம்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
    குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
    அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

    —————————————————————————-

    தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
    பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
    நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

    9 அத்யாய சாரம் –
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
    தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

    —————————————————————————

    எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
    எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
    எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
    எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

    10-அத்யாய சாரம் –

    ———————————————————————————–

    எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
    சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
    வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
    நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

    11-அத்யாய சாரம் –
    மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
    -இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

    ——————————————————————————–

    தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
    இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
    தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
    தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

    12 அத்யாய சாரம்

    ———————————————————————-

    ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
    ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
    ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
    தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

    13 அத்யாய சாரம் –
    ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
    உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
    உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

    ——————————————————————————————-

    முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
    முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
    முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
    முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

    14-அத்யாய சாரம்
    முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

    ——————————————————————————

    மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
    தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

    15 அத்யாய சாரம் –
    மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
    மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
    விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
    தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

    ———————————————————

    ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
    கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
    பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
    காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

    16 அத்யாய சாரம்
    கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
    பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
    பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
    காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

    ————————————————————————-

    மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
    மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
    மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
    மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

    17 அத்யாய சாரம் –
    மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
    குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

    ———————————————————————————-

    சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
    சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
    சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
    சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

    18 அத்யாய சாரம் –
    கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
    பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

    ——————————————————————-

    வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
    இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
    யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
    துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

    பலன் சொல்லி அருளுகிறார் –

    ——————————————————————————————-

    தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
    மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
    கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
    காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

    நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

    ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை

    1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
    2-தன் மோஹ சாந்தி -சமனம் –
    3-கர்மயோக கர்தவ்யத்வம்
    4-தத் அவாந்தர பேதம்
    5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
    6-யோக அப்யாஸ விதி
    7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
    8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
    9-பக்தி யோகம்
    10-குணம் விபூதி பத்தாவதில்
    11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
    12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
    13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
    14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
    15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
    16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
    17-சாஸ்திரீய விவேகநம்
    18-சாரம் உத்தேச்ய –
    இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார்

    ———————————————————————————————————

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பகவத் கீதா தியான -மஹாத்ம்ய ஸ்லோகங்கள்-ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்–

    May 27, 2024

    ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
    கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
    ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
    விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

    ———

    ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
    வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
    அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
    த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-
    1-

    ஓம்
    பார்த்தாயா –பார்த்தனுக்காக
    பகவதா நாராயணேந –பகவன் நாராயணனால்
    ஸ்வயம் ப்ரதி போதிதாம் –தானே உபதேசித்தது
    வ்யாஸேந புராண முநிநா-பழமையான முனிவர் வியாஸரால்
    க்ரதிதாம் மத்யே மஹா பாரதம் –மஹா பாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
    அம்ப பகவத் கீதே–தாயே பகவத் கீதே
    அஷ்ட தச அத்யாயிநீம் -பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டவளே
    அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் -சர்வம் ப்ரஹ்மாத்மஹம் என்ற அத்வைத அம்ருதத்தை பொழியும் இறைவியே
    பவத் வேஷிணீம் -பிறப்பை நீக்குபவளே
    த்வாம் அநு சந்ததாமி –உன்னை த்யானிக்கிறேன்

    புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

    பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

    .பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

    —————–

    நமஸ் அஸ்து தே வ்யாஸ விசால புத்தே புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர
    யேந த்வயா பாரத தைல பூர்ண ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப

    வ்யாஸ -வ்யாஸ பகவானே
    விசால புத்தே –விசாலமான ஞானம் புத்தி கொண்டவரே
    புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர –பூத்த தாமரை இதழ்கள் போன்ற திருக்கண்கள் கொண்டவரே
    யேந த்வயா பாரத -உங்களால் இந்த மஹா பாரதம்
    தைல பூர்ண -எண்ணை ஊற்றப்பட்டு நிறைந்ததான
    ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப –ஞான மயமான ஒளி பரப்பும் விளக்கு என ஒளிர்கிறது
    நமஸ் அஸ்து தே –உங்களுக்கு வணக்கங்கள்

    அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

    இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவு கூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாச பூர்ணிமா எனப்படுகிறது.

    ———-

    ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

    ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

    ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
    தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
    ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
    கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
    க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

    ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்த சாரதியாக , இன்னொரு கையில் ஞான முத்திரையுடன், கீதை என்கிற பாலைக் கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

    —-

    ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

    பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

    உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

    பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப் பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெறத் தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

    பாலைக் கறந்த பின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

    ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
    -சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
    கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
    ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

    சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
    தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
    தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
    ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

    ——–

    வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

    தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

    இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

    வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
    தே³வம் = தேவனான
    கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
    தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
    க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
    ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

    வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

    ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

    ——

    பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

    ஶல்ய க்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

    அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

    ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

    பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப் போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

    பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
    ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
    கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
    ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
    க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
    கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
    அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
    து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
    ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
    பாண்ட³வை: = பாண்டவர்களால்
    உத்தீர்ணா = கடக்கப் பட்டது
    கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

    இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

    சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

    கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

    —-

    பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

    லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

    பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

    பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
    கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
    நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
    ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
    லோகே = இவ்வுலகில்
    அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
    ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
    முதா³ = மகிழ்ச்சியாக
    பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
    கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
    அமலம் = குற்றமில்லாததும்
    பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
    ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

    அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

    —-

    மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

    யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

    யத் க்ருபா = எவருடைய கருணையால்
    மூகம் = ஊமையும்
    வாசாலம் = பேசும் திறன்
    கரோதி = அடைகிறானோ
    பங்கு³ம் = ஊனமுற்றவனும்
    கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
    தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
    அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

    யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

    —-

    யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

    யம் = எவரை
    ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
    தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
    ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
    யம் = எவரை
    ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
    ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
    உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
    வேதை³: ​= வேதங்களாலும்
    கா³யந்தி = இசைக்கிறார்களோ
    த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
    தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
    யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
    யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
    ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
    ந விது³​: = அறியவில்லையோ
    தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

    இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

    —————————

    கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
    விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

    இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
    கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
    ய​: புமாந் = எந்த மனிதர்
    ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
    ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
    வர்ஜித​: = நீங்கி
    விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
    அவாப்நோதி = அடைகிறார்.

    ————–

    கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
    நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

    கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
    ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
    பாபாநி = பாவங்கள்
    பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
    ந ஸந்தி = இருப்பதில்லை

    —————–

    மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
    ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

    பும்ஸாம் = மனிதர்கள்
    தி³நே தி³நே = தினந்தோறும்
    ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
    மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
    ஸக்ருத் = ஒரு தடவை
    கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
    ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

    —————–

    கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
    யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

    பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
    ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
    யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
    ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
    கீ³தா = அந்த கீதை
    கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
    அந்யை​: = வேறு
    ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

    ————–

    பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
    கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

    விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
    பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
    விநி​:ஸ்ருதம் = உதித்தது
    கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
    பீத்வா = குடித்த பின்
    புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

    —————–

    ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
    பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

    ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
    தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
    பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
    ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
    து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

    —————–

    ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
    ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

    ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
    ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
    தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
    ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
    தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
    ஸேவா = சேவை செய்தலே

    ————-

    ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
    விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
    லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
    வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

    ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
    பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
    பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
    ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
    விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
    க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
    மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
    ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
    லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
    கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
    யோகி³பி⁴: = யோகிகளால்
    த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
    ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
    ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
    விஷ்ணும் = விஷ்ணுவை
    வந்தே³ = வணங்குகிறேன்

    ———————

    ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

    கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
    யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா
    – (மஹா. பீஷ்ம. 43/1)

    ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
    மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
    கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
    எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

    ————-

    ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
    கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
    ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
    பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
    ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
    கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
    கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
    ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

    ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
    காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
    கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
    முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
    அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
    முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

    ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
    ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

    கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
    கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் –
    (வராஹபுராணம்)

    (கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
    கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

    ——————–

    உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
    என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

    பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
    பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
    ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
    இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

    பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
    நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
    அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
    இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
    பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
    அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
    இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
    கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
    நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

    அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
    அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

    அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
    ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

    ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
    மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

    பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
    மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
    பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

    தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
    அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
    வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
    ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

    ————

    ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்

    தாரோ உவாச:

    1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
    பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

    நிலமகள்-சொன்னது:

    பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

    ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

    2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
    ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

    ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

    கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
    அவனே முக்தன், இவ் வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

    3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
    க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

    கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
    தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

    4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
    தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

    கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
    தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

    5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
    கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

    தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
    நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

    6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
    யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
    தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

    எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
    ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

    7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
    கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

    கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
    கீதா ஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

    8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
    அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

    எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
    அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

    9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
    வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

    மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
    இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

    10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
    ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

    உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
    அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

    11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
    ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

    முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
    கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

    12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
    ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

    மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
    ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

    13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
    ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

    பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
    அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

    14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
    ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

    வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
    ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

    15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
    த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
    சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
    கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

    கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
    பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
    கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

    17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
    கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

    கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
    மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

    18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
    வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

    மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
    அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

    19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
    ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

    ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
    கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

    20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
    நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

    இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
    நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

    21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
    வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

    கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
    வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

    22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
    ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

    இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
    பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

    ஸூத உவாச:

    23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
    கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

    ஸூதர் சொன்னது:

    கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
    அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

    இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
    வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

    ————–

    கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
    நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
    இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
    2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
    3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
    4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
    அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
    5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
    6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
    7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
    8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
    9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
    10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
    11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
    12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
    13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
    14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
    15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
    16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
    17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
    18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
    கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
    உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    ————

    1. விஷாத யோகம்.
    பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
    என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
    2. சாங்கிய யோகம்.
    பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
    3. கர்மயோகம்.
    உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
    4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
    பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
    5. சன்னியாச யோகம்.
    நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
    6.தியான யோகம்.
    கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
    இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
    7. ஞானம்.
    இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
    8. அட்சர பிரம்ம யோகம்.
    எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
    9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
    கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
    காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
    10. விபூதி யோகம்.
    அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
    11. விஸ்வரூப தரிசன யோகம்.
    ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
    12. பக்தி யோகம்.
    இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
    எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
    13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
    எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
    14. குணத்ர விபாக யோகம்.
    பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
    15. தெய்வாசுர விபாக யோகம்.
    தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
    16. சம்பத் விபாக யோகம்.
    இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
    17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
    சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
    18.மோட்ச சன்யாச யோகம்.
    யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
    இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

    சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
    நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
    பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

    ———————————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்–ஸ்ரீ பகவத் கீதையும், ஸ்ரீ கோதா கீதையும் (ஸ்ரீ திருப் பாவையும்)–

    January 29, 2024

    ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்

    நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
    பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
    ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
    கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

    பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம்
    தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
    மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
    ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

    அத்யா பயந்தீ-
    பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
    சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
    பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
    உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

    தனியனில் பரார்த்யம் ஸ்வம் என்று பட்டர் அருளிச் செய்தார். “அகாரேண உச்யதே விஷ்ணூ “என்பதால் பிரணவத்தினுடைய அர்த்தம் உபநிஷத்தில் காட்டப்பட்டபடியால் அதன் விசேஷத்தை ஆண்டாள் இங்கு அருளிச் செய்தாள். கம்பன் சுமித்திரை வாயிலாக, “பின்னும் பகர்வரள் மகனே இவன்பின செல் தம்பி, என்னும்படி அன்று, அடியார்க்கு ஏவல் செய்து” என்று இப்பொருளை வெளியிட்டான். இந்த பிரணவத்தின் அர்த்தங்களை அர்ஜுனன் ரதத்திலும் அக்ரத: ப்ரயயோ ராம: என்கிற ஸ்லோகத்திலும் கண்டு கொள்வது என்கிறார் வேதாந்த தேசிகன் “அபிரக்ஷிதும் அக்ரத: ஸ்திதம் த்வாம்” என்று பரமார்த்த ஸ்துதியிலும் சொன்னார்.

    ———

    அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
    பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
    பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
    பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு

    —————

    மார்கழி திங்கள்–மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம்–சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-
    அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

    நீராட-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

    செல்வச் சிறுமீர்காள்– லஷ்மணோ லஷ்மி சம்பன்ன–அந்தரி ஷக்த ஸ்ரீ மான்–சது நாகவர ஸ்ரீ மான்

    சிறுமீர்காள்–துல்ய சீல வயோ வ்ருத்தாம்

    நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
    சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
    நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
    தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
    பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
    நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

    மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
    தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

    நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
    தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

    நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே-திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

    ஆகையால் இப் பாட்டு-திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
    இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது

    ——————

    வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே-கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே- அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே –
    காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே —ஹாவு ஹாவு ஹாவு–

    கேளீரோ-சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
    வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது

    முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறதுஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —-ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

    வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம்துயின்ற பரமன்–ஸ்ரீ மான்–ஸூக ஸூப்த-பரந்தப–மயா போதித

    மை இட்டு எழுதோம் –அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லைபக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ – அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ

    உய்யுமாறு எண்ணி-எண்ணி உகந்து –மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
    ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம்–அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
    சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

    வையத்து வாழ்வீர் என்ற பாசுரத்தில் ஸாங்க பிரபதன அனுஷ்டானம் சொல்லப்படுகிறது. உய்யும் ஆறு எண்ணி என்று சொல்வதால் அங்கங்கள் கூறப்பட்டது. மோக்ஷத்துக்காக அனுஷ்டிக்கும் சரணாகதியில் பிரசித்தமான ஐந்து அங்கங்களுடன் பலத்யாகம் என்கிற அங்கம் அதிகம் இருப்பதை மனதில் வைத்து ஆறு என்று சொன்னாள்.
    த்வயம் என்கிற மந்திரத்தைச் சொல்லி ப்ரபத்தியை அனுஷ்டிக்கிறோம். அம்மந்திரத்தில் ஆறுபதங்கள் இருக்கின்றன. அதையும் நினைவு படுத்துகிறாள்

    —————

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி-அஷ்டாக்ஷரம் -மார்கழி
    த்வயம் வையத்து –சரம ஸ்லோகம் ஓங்கி-புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் –மூன்று மட்டுமே அடியாரின் ஆத்ம ஸூத்திக்கு போதுமானவை;

    பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
    ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

    முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு  ஆகதோ மதுரா நிலையன் –
    நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
    இது முதல் பேர் பாடுதல் தொடக்கம்-பேர் பாடி-திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து

    யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
    ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
    நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
    நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
    மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

    உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை
    முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி
    இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
    இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்-திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –

    ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
    நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
    நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
    நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !–இத்தையே நாராயணன் -பையத் துயின்ற பரமன்ஓங்கி உலகளந்த உத்தமன்

    ஓங்கி உலகளந்த உத்தமன்–பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-
    ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
    ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம்-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்–ஓங்கி – பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே -பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே-பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை

    நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே-இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை

    மும்மாரி பெய்து –ரஹஸ்ய த்ரயம்–ஷட்க த்ரயம்-தத்வ த்ரயம்-ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் 

    பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப– ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
    ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே- ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––

    ————–

    ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் -பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க
    அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

    ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
    பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி

    த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
    யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்

    தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
    பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு-அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

    சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி –தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது

    ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
    உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
    நாம்-என்றும் –-யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

    முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் என்றவாறு –உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே

    ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

    இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

    ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்-ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்-ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து-முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து-ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து-ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,-ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற-ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!–வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்-தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
    நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

    ———–

    மாயனைத் தாமோதரனைச் செப்பு –1-மாயனைச் செப்பு –2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு-3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு-4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு-5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு-6-தாமோதரனைச் செப்பு-குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே-பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

    மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –உபய விபூதி உக்தனாய் –ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

    யதோ வாசோ நிவர்த்தந்தே–-யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்–
    பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

    வட மதுரை -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
    (மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

    தூய பெரு நீர் யமுனை –யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
    பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
    கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

    கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
    வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,-“தாமோதரனை” என்று பேரும்,“யமுனைத் துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

    தோன்றும் -“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,”-கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது

    நாராயணன் -என்றும் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் – ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் – ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியேஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

    ஏவம் விதமானவன்
    மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
    ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
    பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
    அதுக்கு மேலே
    தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
    மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
    அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
    கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

    இது சரம ஸ்லோக விவரணம் –

    ———–

    புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
    பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –
    ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச—அகஸ்திய ப்ராதரம்- நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
    வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
    அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

    கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –-ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

    ஹரி ஹரி என்கை யாவது –ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி –( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே-உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

    ————

    காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்- ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ–உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் மங்களம் –

    அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –குழல்களில் வண்டுகளின் த்வனியும் – ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் தயிர் கடைகிற ஓசையோடே கலசி கிளர்ந்து பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ –

    ————

    வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
    உன் பக்கலிலே வந்து நின்றோம் – கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம் விபீஷணன்  -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் பொறுமையுடன் நின்றானே -முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம்

    தேவாதி தேவனை–ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –-ஸோஹம் தே தேவதேவேச (அர்ச்சனை பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் ) அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

    ————

    உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ–தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா–ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —

    மாமன் மகளே–அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –-தானும் ஒரு மாலா காரர் மகள் இறே(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் — மாலாகார: க்ருபாகார: கோகிலஸ்வரபூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

    ——-

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்-தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
    இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )-

    ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி । யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
    ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

    ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
    மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

    சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி – விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்-செய்த வேள்வியர் -அனைத்தையும் செய்தவன் ஆகிறான்
    யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –

    ——–

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே-முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் –

    கற்றுக் கறவை –பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று-சக்கரவர்த்தி இளகினால் போலே-வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
    இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

    கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே ஆபீஜாத்யம் உடையாளாய்
    ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

    (கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
    கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
    அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்-விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
    வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம்ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
    பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்

    ———–

    அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
    பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள்

    பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
    கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து-கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

    ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
    இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

    அவர்களுடைய அனுஷ்டானமும்-இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
    யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
    விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

    ———-

    புள்ளின் வாய் கீண்டானை–இதிலும் அடுத்த பாசுரத்தில்-போதரிக் கண்ணினாய் –ஞானம் தனக்கு உஜ்ஜீவனம்-நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க-இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே

    கீர்த்திமை பாடி– சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
    உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

    கள்ளம் தவிர்ந்து-சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று-சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
    சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
    குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

    (இந்த பெண் தானே இவளுக்கு சேஷி-பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்-அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

    ———-

    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வதந்த்ர்யம் தலை மடிந்தது காண்

    செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று பகவத் விஷயத்தில் சக்தராய்
    இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
    போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய் சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம்

    நாவுடையாய்-ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்-நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்-சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்-நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

    பங்கயக் கண்ணானைப் பாட-உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் – (இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

    —————

    நானே தானாயிடுக”-“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்”மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்  வன பிரவேச ரகுநந்தனஸ்ய என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்

    ————-

    நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
    தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில் அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை இப் பாட்டாலே சொல்லுகிறது

    பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
    சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் – தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
    பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
    அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும் புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

    கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே- வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது
    க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
    பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும்

    வாய் நேரந்தான்-ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
    ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
    அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
    க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
    சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக் கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

    அறம் செய்யும்

    ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்

    நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
    பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
    ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
    கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

    பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம்
    தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
    மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
    ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

    அத்யா பயந்தீ-
    பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
    சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
    பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
    உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

    ———

    அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
    பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
    பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
    பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு

    —————

    மார்கழி திங்கள்–மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம்–சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-
    அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

    நீராட-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

    செல்வச் சிறுமீர்காள்– லஷ்மணோ லஷ்மி சம்பன்ன–அந்தரி ஷக்த ஸ்ரீ மான்–சது நாகவர ஸ்ரீ மான்

    சிறுமீர்காள்–துல்ய சீல வயோ வ்ருத்தாம்

    நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
    சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
    நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
    தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
    பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
    நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

    மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
    தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

    நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
    தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

    நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே-திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

    ஆகையால் இப் பாட்டு-திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
    இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது

    ——————

    வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே-கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே- அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே –
    காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே —ஹாவு ஹாவு ஹாவு–

    கேளீரோ-சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
    வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது

    முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறதுஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —-ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

    வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம்துயின்ற பரமன்–ஸ்ரீ மான்–ஸூக ஸூப்த-பரந்தப–மயா போதித

    மை இட்டு எழுதோம் –அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லைபக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ – அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ

    உய்யுமாறு எண்ணி-எண்ணி உகந்து –மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
    ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம்–அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
    சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

    —————

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி-அஷ்டாக்ஷரம் -மார்கழி
    த்வயம் வையத்து –சரம ஸ்லோகம் ஓங்கி-புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் –மூன்று மட்டுமே அடியாரின் ஆத்ம ஸூத்திக்கு போதுமானவை;

    பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
    ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

    முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு  ஆகதோ மதுரா நிலையன் –
    நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
    இது முதல் பேர் பாடுதல் தொடக்கம்-பேர் பாடி-திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து

    யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
    ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
    நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
    நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
    மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

    உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை
    முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி
    இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
    இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்-திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –

    ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
    நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
    நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
    நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !–இத்தையே நாராயணன் -பையத் துயின்ற பரமன்ஓங்கி உலகளந்த உத்தமன்

    ஓங்கி உலகளந்த உத்தமன்–பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-
    ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
    ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம்-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்–ஓங்கி – பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே -பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே-பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை

    நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே-இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை

    மும்மாரி பெய்து –ரஹஸ்ய த்ரயம்–ஷட்க த்ரயம்-தத்வ த்ரயம்-ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் 

    பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப– ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
    ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே- ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––

    ————–

    ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் -பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க
    அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

    ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
    பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி

    த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
    யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்

    தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
    பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு-அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

    சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி –தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது

    ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
    உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
    நாம்-என்றும் –-யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

    முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் என்றவாறு –உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே

    ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

    இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

    ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்-ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்-ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து-முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து-ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து-ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,-ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற-ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!–வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்-தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
    நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

    ———–

    மாயனைத் தாமோதரனைச் செப்பு –1-மாயனைச் செப்பு –2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு-3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு-4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு-5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு-6-தாமோதரனைச் செப்பு-குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே-பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

    மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –உபய விபூதி உக்தனாய் –ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

    யதோ வாசோ நிவர்த்தந்தே–-யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்–
    பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

    வட மதுரை -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
    (மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

    தூய பெரு நீர் யமுனை –யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
    பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
    கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

    கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
    வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,-“தாமோதரனை” என்று பேரும்,“யமுனைத் துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

    தோன்றும் -“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,”-கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது

    நாராயணன் -என்றும் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் – ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் – ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியேஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

    ஏவம் விதமானவன்
    மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
    ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
    பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
    அதுக்கு மேலே
    தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
    மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
    அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
    கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

    இது சரம ஸ்லோக விவரணம் –

    ———–

    புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
    பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –
    ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச—அகஸ்திய ப்ராதரம்- நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
    வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
    அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

    கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –-ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

    ஹரி ஹரி என்கை யாவது –ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி –( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே-உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

    ————

    காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்- ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ–உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் மங்களம் –

    அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –குழல்களில் வண்டுகளின் த்வனியும் – ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் தயிர் கடைகிற ஓசையோடே கலசி கிளர்ந்து பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ –

    ————

    வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
    உன் பக்கலிலே வந்து நின்றோம் – கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம் விபீஷணன்  -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் பொறுமையுடன் நின்றானே -முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம்

    தேவாதி தேவனை–ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –-ஸோஹம் தே தேவதேவேச (அர்ச்சனை பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் ) அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

    ————

    உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ–தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா–ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —

    மாமன் மகளே–அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –-தானும் ஒரு மாலா காரர் மகள் இறே(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் — மாலாகார: க்ருபாகார: கோகிலஸ்வரபூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

    ——-

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்-தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
    இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )-

    ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி । யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
    ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

    ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
    மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

    சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி – விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்-செய்த வேள்வியர் -அனைத்தையும் செய்தவன் ஆகிறான்
    யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –

    ——–

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே-முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் –

    கற்றுக் கறவை –பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று-சக்கரவர்த்தி இளகினால் போலே-வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
    இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

    கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே ஆபீஜாத்யம் உடையாளாய்
    ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

    (கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
    கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
    அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்-விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
    வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம்ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
    பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்

    ———–

    அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
    பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள்

    பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
    கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து-கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

    ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
    இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

    அவர்களுடைய அனுஷ்டானமும்-இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
    யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
    விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

    ———-

    புள்ளின் வாய் கீண்டானை–இதிலும் அடுத்த பாசுரத்தில்-போதரிக் கண்ணினாய் –ஞானம் தனக்கு உஜ்ஜீவனம்-நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க-இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே

    கீர்த்திமை பாடி– சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
    உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

    கள்ளம் தவிர்ந்து-சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று-சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
    சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
    குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

    (இந்த பெண் தானே இவளுக்கு சேஷி-பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்-அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

    ———-

    உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வதந்த்ர்யம் தலை மடிந்தது காண்

    செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று பகவத் விஷயத்தில் சக்தராய்
    இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
    போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய் சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம்

    நாவுடையாய்-ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்-நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்-சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்-நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

    பங்கயக் கண்ணானைப் பாட-உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் – (இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

    —————

    நானே தானாயிடுக”-“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்”மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்  வன பிரவேச ரகுநந்தனஸ்ய என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்

    இதில் நானேதான் ஆயிடுக என்பது சாரம். இதில் பாகவத ப்ராதான்யமும் விசிஷ்டாத்வைதமதமும் காட்டப்படுகிறது. ப்ரஹ்லாதன் தன்னை எம்பெருமானாகவே நினைத்து “அவனேநான்” என்று சொன்னான். “த்வம்வா அஹமஸ்மி பகவோ தேவதே” என்றது உபநிஷத்து.
    ஸோம்ஹ, ஸோம்ஹ என்பது உபாசன பிரகாரம். இவ்வாறு ஸோஹம், ஸோஹம் என்று சொல்லிக் கொண்டே வந்தால் ஹம்ஸ என்று மாறி விடுகிறது. இதனால் தான் பரமஹம்ஸம் என்று உபாசனம் செய்பவர்களை சொல்வது, தாஸத்வம் என்பது ஜீவனுக்கு ஏற்படும். ஆக ஸோஹம் என்பது தாஸோஹம் என்பதில் முடியும். ஜீவாத்மாவிக்கும் பரம் பொருளுக்கும் ஒருவகையில் அபேதம் ஒருவகையில் பேதம் என்பது இங்கு புலப்படும். பேதம், அபேதம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் ஆனபடியால் பொருத்தம் உள்ளதாக ஆகாதே என்று ஆத்மபாவத்தை முன்னிட்டு அபேதமும் வரலாம். விருத்தமான இந்த இரண்டும் ஓரிடத்திலே இருப்பது இயலாதது. ஆயினும் நரசிம்மம் என்று ஒருவரையே நரம் என்றும் சிம்மம் என்றும் கூறுகின்றோம். அதுபோல் இங்கும் நான் என்று சொல்லக்கூடிய பொருளும். இதை பட்டர் “விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநா திகரணே ந்ரஸிம்த்வே பிப்ரத் வரத பிபரா மாஸித ஜகத்” என்பதால் ஸூசிப்பித்தார். ஆகையாலே தத்துவமன்று. தத் = அந்தப்ரம்மம். த்வம் = நீ அன்று என்று சொல்லப்பட்டது.

    ————-

    நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
    தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில் அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை இப் பாட்டாலே சொல்லுகிறது

    பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
    சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் – தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
    பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
    அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும் புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

    கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே- வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது
    க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
    பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும்

    வாய் நேரந்தான்-ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
    ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
    அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
    க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
    சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக் கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

    அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா-பாலாபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கைமஹதா தபஸா ராம -என்று சக்கரவர்தியைப் போலே
    அவதாரத்துக்கு அதிருஷ்ட யத்னம் பண்ண வேண்டா இறே-எடுத்த பேராளன் ஆகையால்(சாத்விக தானம் லக்ஷணம் கீதையில் -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
    பிரயோஜனம் கருதாமல் -கண்ணன் திரு உள்ளம் உகக்கும் என்றே கொடுப்பதே)

    எம்பெருமான்-பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் – ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ –என்றும் –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று என்றே – எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்-

    செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
    பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –-பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் – பலை கதா மநி -(ஆளவந்தார் )
    அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
    இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )

    சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை – ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே-எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
    வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ-திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்-சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
    உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

    செந்தாமரைக் கையால்-அவனும் ஆசைப்படும் கை – அவன் உகக்கும் அணி மிகு தாமரைக் கை – அவனுடையது தாமரைக் கை இறே
    ததவ் பாஹு (ராஸக்ரீடை களைப்பு -சாய்ந்து கண்ணன் தோள் உடன் இணைந்து )எங்களை –எங்களை மா ஸூச என்னும் கை
    நீங்கள் பண்ணுகிற பாபத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா நான் உள்ளேன் -என்கிற
    இப் பெருமாளுடைய அஞ்சேல் என்ற கை
    பவேயம் சரணம் ஹி வ -(ராக்ஷஸிகளுக்கும் மா ஸூச )என்னும் கை-
    ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா என்கிறது பெரிய பிராட்டியார் அஞ்சல் என்ற கை(‘மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா’ -அவள் கையை உன் கையால் பிடி ஜனகனும் முதலில் -)

    முப்பத்து மூவர் இத்யாதி–வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடாதி துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது
    நீ உணரும்படி காண ஆசைப்பட்டார்க்கு உதவலாகாதோ(நீ உணர்ந்தாலே நடுக்கமும் போய் இன்பமும் பெறுவோம்

    நீராட்டு தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து – அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

    அம்பரமே, உந்து, முப்பத்து இதில் பிரணவார்த்தம் அ, உ, ம என்று பிரணவத்தை ஸூசிப்பித்துக் கொண்டு விளக்கப்படுகிறது.
    அமலனாதி, உகந்த உள்ளத்தனாய், மந்திபாய் என்று அமலனாதி பிரானில் உள்ளது போல் உந்தன்னோடு உறவேல் நமக்கு எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பதில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது.
    புருஷகார ப்ரதிபாதனம். குத்து, முப்பத்து இந்த இரண்டு பாசுரத்திலும் வரிசையாக த்வயத்தில் சொல்லப்பட்ட இரண்டு கண்டங்கள் சொல்லப்படுகின்றன. முதல் பாசுரம் ப்ராபகத்வபரம், இரண்டாவது ப்ராப்யத்வபரம். உக்கமும் தட்டொளியும் என்று அங்கு கைங்கர்யம் சொல்லப்பட்டது.
    முப்பத்து மூவர் என்கிற பாசுரம் பரித்ராணாய சாதூனாம் என்கிற கீதையில் சொன்ன அர்த்தம் சொல்லுவதற்காக வந்தது.

    த்வயத்தில் பூர்வ வாக்யார்த்தம் குத்து விளக்கு–உத்தர வாக்யார்த்தம் ஏற்ற கலங்கள்

    மாற்றாதே பால் சொரியும்-பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–என்றும்
    யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா -ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் இதஞ்ச ச ச்ருணு மைத்ரேய -என்றும் ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று ஊற்று மாறாதே பால் சொரியும்

    மகனே அறிவுறாய் ஒரு தடவை–சுடரே துயில் எழாய்–ஒரே பாசுரத்தில் இரண்டு தடவை-அறிவுறாய் -மதுரையில் அவதரித்து இங்கே நந்த கோபன் மகனாக வந்த பிரயோஜனம் ஆராய்ந்து பாராய்-

    பெரியாய் – யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –
    யஸ்ய அமதம் தஸ்ய மதம் –
    அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் என்றும்
    பிரமாணங்களுக்கு-இவ்வளவு என்ன ஒண்ணாத படி இருக்கை  -அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிகளை உடையவனே –

    கடோகநிஷத்தில் உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ரபோதத, நிசாமயத என்று எழுந்து இருத்தல், விழித்தல், அறிவு, பெறுதல், பார்த்தல் என்று சொல்லப்பட்டது. இவை திருப்பாவையில் உள்ளன. எழுந்திருக்கும்போது ஹரிநாம கீர்த்தனம் செய்ய வேண்டும். நடந்து செல்லும்போது கேசவனைப் பாடவேண்டும். சாப்பிடும்போது கோவிந்தனை, தூங்கும்போது மாதவனை என்றது ஸாஸ்திரம். இதிலும் ஹரி என்ற பேரரவம், கேசவனைப் பாடவும், கோவிந்தா உந்தன்னைப் பாடி, வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று சொல்லி இருப்பதை நோக்கவும். காலை, பகல், மாலை மூன்று வேளையிலும் சந்தியாவந்தனம் முடிந்தவுடன் ரங்கநாதனையும் திருவேங்கடமுடையானையும் தேவப் பெருமானையும் யதுகிரி நாதனையும் வணங்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
    ஸ்ரீரங் மங்கலநிதிம் கருணா நிவாஸம் ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
    ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம் ஸ்ரீசம் நவாமி சிரஸா யதுசைல தீபம்

    இங்கும் “பையத்துயின்ற பரமனடி” “வெள்ளத்தரவில்” “இங்ஙநே போந்தருளி என்பதில் ரங்கநாதன் துதிக்கப்பட்டார். “செல்வ திருமாலால்” என்பதால் திருவேங்கடமுடையானும் தேவாதிராஜனை என்பதாலும் புள்ளரையன் கோயில் என்பதாலும் தேவப் பெருமாள் சொல்லப்பட்டார். ஏற்றக் கலங்கள் பாட்டில் ஆற்றப் படைத்தான் மகனே என்பதால் செல்வப்பிள்ளை சம்பத்குமாரன் சொல்லப்பட்டான்.

    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-

    1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
    2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
    3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
    4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
    5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
    6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
    7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
    8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
    9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
    10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
    11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
    12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
    13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

    முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –

    திங்களும் ஆதித்யனும்–உபய வேதாந்தம்–ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்-இப்படிச் சொல்வதும் ஊற்றத்தைப் பற்ற —பரசமய நிரசன பூர்வகம் அது -செவிக்கு இனிய செஞ்சொல் இது–சஷூஸ் மத்தா து சாஸ்த்ரேண

    கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்

    திங்களும் ஆதித்யனும் போலே–அங்கண் இரண்டும்-ஆசார்யர் கண் பகவான் கண் இரண்டும் வேண்டுமே–கர்ப்பம் கடாஷம் ஆசார்யரை காட்டும் கடாஷம்-

    போந்தருளி -சதுர்க் கதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் )இறே
    கஜ சிம்ஹ கதீ வீரவ்-சார் தூல வ்ருஷ போபமவ் -புண்டரீக விசாலாக்ஷவ் கட்க தூணீ தநுர் தரவ் -இத்யாதிப் படி இறே
    நடை அழகில் ருஷபத்தினுடைய செருக்கும் –
    மத்த கஜத்தினுடைய திமிர்ப்பும் –
    புலியினுடைய உறட்டும்-
    சிம்மத்தினுடைய பராபி பாவன சாமர்த்தியமும் தோன்றி இருக்கும்
    இது எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம்(ஸிம்ஹ ரிஷப வியாக்ர கஜ சர்ப்ப ஹம்ஸ கருட மஸ்தக -நடை அழகுகள் )

    ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து-தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்-ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை-விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி
    இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு பிண்டாகாரமாய் நிமிர்ந்து
    மகா சம்ப்ரமத்துடனே மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே-

    ———-

    இங்கு போற்றி என்று ஆறு ரஸம் சொல்லப்படுகிறது. நம்மால் உட்கொள்ளப்படும் பொருள்களின் சுவை ஆறு வகை.
    (1) பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேக்யம், காத்யம், பேயம்.
    (1) பக்ஷணம், ஹவிஸ், வற்றல், துகையல், காய்கறி, பாயஸம், ஒளபசாரிகம், அர்க்யாதி.
    (2) ஸாம்ஸ்பர்சிகம் – புஷ்பம், சந்தனம் முதலியவை
    (3) ஸாந்த்ருஷ்டிகம் – தீபம், கற்பூர ஹாரத்தி, தூபம்
    (4) ஆப்யவ்யவஹாரிகம் – போஜனம். இப்படி போஜனத்தில் ஆறு ரசங்கள்.

    ஒருத்தி மகனாய் பிறந்து-தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம் மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம் வசுதேவ ஜக்ஷத

    தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
    அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு-ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவன் இறே -(ஏஷ நாராயண ஸ்ரீ மான்–ஆகாதோ மதுராம் புரம்)

    ————–

    கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
    சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
    கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
    ஆக இரண்டு பட்டாலும்-சாம்யா பத்தியும்-குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது

    யாம் பெரும் சம்மானம்-பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்-பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்

    சூடகமே —காப்பே
    தோள் வளையே —திரு இலச்சினையே
    தோடு —திரு மந்த்ரமே
    செவிப்பூவே–த்வயமே
    பாடகமே–சரம ஸ்லோகமே
    இவை
    ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
    இதில் தோடு –
    மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே -திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
    செவிப்பூ
    ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
    பாடகம்
    பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
    இம் மூன்று ரகச்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
    அது எங்கனே என்னில் –
    திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞானபரம் ஆகையாலும்
    த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
    சரம ச்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

    இத்திருப்பாவையில் முதல் பாசுரத்தில் “கார்மேனிச் செங்கண்” என்றும், “செங்கண் சிறுச் சிறிதே” என்றும் “செங்கண் திருமுகத்து” என்றும் மும்முறை செங்கண் என்று சொல்லப்பட்டுள்ளது. இதிலிந்து மூன்று கண்களை உடைய எம்பெருமானான அழகிய லக்ஷ்மிநரஸிம்ஹனிடத்தில் ஆண்டாளுக்கு பக்தி அதிசயம் காட்டப்பட்டாகிறது. “தபன இந்து அக்னி நயன..” என்று ஸ்வாமி தேசிகன் மூன்று கண்ணை உடையவன் லக்ஷ்மி நரஸிம்ஹன் என்று சொன்னார் காமாஸிகாஷ்டகத்தில்.
    “கோவிந்தா என்பதையும் இத்திருப்பாவையில் மூன்று முறை உபயோகித்திருக்கிறாள். “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”, “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா”, “பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா” என்று

    இத்திருப்பாவையில் செங்கண், கோவிந்தா என்பதை மும்முறை சொன்னதுபோல் நாராணா என்ற நாமமும் மும்முறை சொல்லப்பட்டிருக்கிறது.
    1. நாராயணனே நமக்கே பறை தருவான். 2. நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
    3. நாற்றத்துழாய் முடி நாராணன் என்ற இடங்களில்.

    திருப்பாவையில் ஆண்டாளால் காட்டப்பட்ட பன்னிரண்டு திருநாமம் ஒன்று உண்டு. (1) நாராணன் (2) ஓங்கி உலகளந்த உத்தமன் (வாமனன்) (3) தாமோதரன் (செய்த தாமோதரனை) (4) கேசவன் (கேசவனைப் பாடவும்) (5) தேவாதிதேவன் (6) மாதவன் (7) வைகுந்தன் (8) முகில் வண்ணன் (9) பங்கயக் கண்ணன் (10) மணிவண்ணன் (11) கோவிந்தன் (12) நெடுமால் இவைகள்.
    மாயனை என்பது திருப்பாவையில் நான்கு முறை சொல்லப்பட்டிருக்கிறது (1) மாயனை மன்னு (2) மாமாயன் மாதவன் (3) மாயனைப்பாடு (4) அறைபறை மாயன் என்று. நான்கு வேதங்களின் ஸாரார்த்தத்தை காட்டுகிறது.

    ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என்பது மோக்ஷத்தின் நாலுவகை. ஸாயுஜ்யம் என்பதுதான் முக்யமான மோக்ஷம். முந்தியவை இதற்கு முன்தசைகள். (லோகேஷு) கோபிகைகளுக்கு கோகுலவாசம் சாலோக்யம். நந்தகோபனுடைய இல்லத்தை சேருதல் சாமீப்யம். மாலே மணிவண்ணா, கூடாரையிலும் ஸாமீப்யமும் ஸாயுஜ்யமும் சொல்லப்படுகின்றன.
    கூடாரையில் சதம் மாலா ஹஸ்தா: சதம் அஞ்சன ஹஸ்தா: சதம் சூர்ணவஸ்தாக: சதம் வாஸோ ஹஸ்தா: என்று உபநிஷத்தில் மாலை, மை, மணத்தூள், ஆடை, ஆபரணம் இவைகள் ஒவ்வொன்ளையும் நூறு நூறு பெண்மணிகள் எடுத்து வந்து முக்தனை அலங்கரிக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட விஷயம் கூறப்படுகிறது. தம் பிரும்மகந்த: பிரவிசதி, பிரும்மரஸ: பிரவிசதி. பிரும்மதேஜ: பிரவிதி, பிரக்ஞயா விபஸ்யதி என்று ஐந்து குணங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. “என்றனைய பல்கலனும் என்பதால் அபஹதபாப்மா என்ற சொல்லப்பட்ட எட்டு குணங்களுக்கு ஆவரிபாவம் காட்டப்படுகிறது. ஆடையுடுப்போம் என்பதால் எம்பெருமானுக்கு தாம் செய்யும் தொண்டுகளுக்குப் பொருத்தமான கரணகளேபரம் இந்திரியம் சரீரம் முதலியவைகளை எடுத்துக் கொள்வது விளக்கப்பட்டது. பால்சோறு என்பதால் அமுதமாகிய பிராட்டியுடன் கூடின எம்பெருமானாகிற ஷாட்குண்யமான அன்னம் தெரிவிக்கப்படுகிறது. “ஸோச்நுதே சர்வாந்” என்று வேதத்தில் சொல்லப்பட்ட விஷயம் கூடியிருந்து என்பதால் பாட்டப்பட்டது. காமாநீ, காமரூபீ, அனுஸஞ்சரன் என்பதும் இங்கு அறியத்தகுந்தது. குறிர்ந்து என்பதால் “ஏஷ பிரும்ம பிரவிஷ்டோஸ்மி கிரீஷ்மே சீதமிவ ஸ்ரதம்” என்கிற விஷயம் சொல்லப்பட்டது. ஆக வைகுண்டத்தில் முக்தனுக்கு ஏற்படும் ஸாயுஜ்யம் இந்த பாசுரத்தில் ஆண்டாளால் நன்கு வெளியிப்பட்டது. அத்துடன் ஸார்ஷ்டிதையும் சொல்லப்பட்டது. அதாவது “ஸார்ஷ்டி தாதத்ர போகஸ்ய தாரதம்ய விஹீனதா” என்று சொல்லுகிறபடி ஏற்றத்தாழ்வு இல்லாமல் அநுபவிப்பது.

    அறிவொன்றும் இல்லாத -1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை3-அறிவு ஒன்றும் இல்லை-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
    ந தர்மோஷ்டமி ந பக்திமான்–நோன்ற நோன்பிலேன்–குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி – இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை

    திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
    திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
    திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
    சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
    துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
    ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு
    துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும்,
    உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
    இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
    ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம்
    சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

    அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
    ததேக உபாயதா யாஞ்சா –இதி பிரார்த்தனா மதி : சரணாகதி 

    ந வேதாந்தாது சாஸ்திரம்-ந மதுமதனாது தத்வம் அகிலம்-ந ஸத்வாது ஆரோக்கியம்-ந துவயவசனத : க்ஷேமகரம்

    செல்வத் திருமாலால்-உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே
    இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து-மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்
    செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே

    காலையில் எழுந்தவுடன் நாம் ஹரிநாம சங்கீர்த்தனத்தை ஏழுமுறை செய்யவேண்டும். இவ்விஷயம் ஆஹ்னிக க்ரந்தத்தில் காட்டப்பட்டுள்ளது. நாம் ஹரி என்கிற நாமத்தை உச்சரிக்கிறோம். ஹரி என்கிற ராமன், நமக்கு புருஷகார பூதையாயும் அவனுக்கு தர்ம பத்நியாயும் அமைந்துள்ள சீதாதேவியை காலையில் எழுந்தவுடன் நினைக்கிறான். “சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதி புத்யதே” என்பது ராமாயணம். திருப்பாவையிலும் பிராட்டியை சொல்லக்கூடிய திரு என்கிற சொல் ஏழுமுறை சொல்லப்பட்டுள்ளது. நாம் ஏழுமுறை பகவானை சொல்வதுபோல் அவனும் ஏழுமுறை திரு என்று பிராட்டியை சொல்கிறான். நித்ய விபூதியில் உள்ள பிராட்டியானவள் புருஷகாரபூதை ஆகிறாள். ராமாவதாரத்தில் சீதை அப்படி ஆகிறாள். கிருஷ்ண அவதாரத்தில் நீளா தேவி. அர்ச்சனையிலே நமக்கு ஆண்டாள் புருஷகாரம்.

    திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
    அதாவது
    அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
    அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
    ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
    இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
    ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
    தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று

    ஸ்ரீ கேசவ நம்பியையைக் கால் பிடித்து
    இயம் கோதா –மம ஸூதா –பத்ரம் தே -ஸஹ தர்ம சரீதவ-ஜகத் ரக்ஷண தர்மம்
    ஸ்ரீ பட்டருக்கு அபகரித்த ஸ்ரீ பட்டர் பிரான்
    நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்-கொம்பினுக்கும் அஃதே
    ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ ஆண்டாள் –தரணியே பாக்யம் -தவம் உடைத்து
    பல்லாண்டு பல்லாண்டு என்று ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்க மன்னாருக்குப் பாடிக் கொண்டே கால ஷேபம் செய்வோம்

    –———————————-

    Bagavath Geethaiyum
    Thiruppavai
    ஸ்ரீ பகவத் கீதை
    ஸ்ரீ கோதா கீதை–ஸ்ரீ திருப்பாவை
    1 உலகுக்குத் தந்தையான கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டது
    2.தேவர்க்கும் தேவனான பகவானாலே உபதேசிக்கப்பட்டது
    3.அர்ஜுனனை வியாஜமாக்கி உலகத்துக்கு உபதேசிக்கப்பட்டது
    4.அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து அதன் மூலமாக அவனுக்கு ஆசார்யனாலே உபதேசிக்கப்பட்டது,
    5 தனது க்ஷத்ரிய தர்மத்தை இழந்த அர்ஜுனனைக் குறித்து உபதேசிக்கப்பட்டது.
    6 இதில் உபதேசம் செய்ததால் பலர் மாண்டனர்.
    7 சர்வக்ஞனான பகவானால் உபதேசம் செய்யப்பட்டிருந்தும் அர்ஜுனன் மறந்தான்.
    8 பாரதத்தில் சொல்லப்பட்டிருந்தும் பகவத்கீதை உபநிஷத்தாக கருதப்படுகிறது.
    9 அர்ஜுனன் எனும் புருஷனான தோழனைக் குறித்து கிருஷ்ணன் உபதேசித்தது.
    10 கிருஷ்ணன் சரம உபாயமான ப்ரபத்தியை கடைசியில் உபதேசம் செய்தான்.
    11 கீதையை மக்களுக்கு உபதேசம் செய்து ஜகதாசார்யன் ஆனான் கண்ணன்.
    12 ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி பல அல்லல்களை அடைந்து, வாடிக்கிடக்கும் மக்களுக்கு, தத்வஞானம் உண்டாவதற்காக கண்ணனால் உபதேசம் செய்யப்பட்டது. ஆக சோகநிவிருத்திக்காக ஏற்பட்டது கீதை.

    13 விஜயனுக்கு மூன்று வகையில் சோகங்கள் ஏற்பட்டன. 1. பந்துக்களை அழிப்பதால் பாபம் ஏற்படும் என்ற சோகம். 2. தைவ ஸம்பத்து உள்ளவனுக்குத் தான் நற்கதி, ஆஸுர ஸம்பத் உள்ளவனுக்கு இல்லை என்று சொல்வதின் மூலம் நாம் ஆஸுர ஸம்பத்தில் சேர்ந்திருந்தால் என் செய்வது? என்ற சோகம். 3. கடினமான கர்ம, ஞான, பக்தி யோகஙஙகளை உபதேசமாகப் பெற்றதால், தம்மால் அவற்றை செய்ய முடியாதே என்ற சோகம். இம் மூன்றையும் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் மூலமாகப் போக்கடித்தான்.

    1 உலகத்துக்குத் தாயான ஆண்டாளால் உபதேசிக்கப்பட்டது.
    2 கிருஷ்ணனுக்கு உபதேசித்து அவனுக்கும் ஆச்சார்ய பூதையான ஆண்டாளாலே உபதேசிக்கப்பட்டது.
    3 கிருஷ்ணனை ?ியாஜமாகக்கி உலகதத்துக்கு உபதேசிக்கப்பட்டது.
    4 கிருஷ்ணனுக்கு உபதெசித்து அவனுக்கும் ஆசார்ய பூதையான ஆண்டாளாலே உபதேசிக்கப்பட்டது.
    5 ஜகத்ரக்ஷணத்தை தர்மமாக கொண்டு இருந்தும், அதை அடியோடு விட்ட பகவானைக் குறித்து உபதேசிக்கப்பட்டது.
    6 இதில் உபதேசம் மூலம் மக்கள் அனைவரும் உஜ்ஜீவித்தனர்.
    7 இங்கு ஆண்டாளால் உபதேசிக்கப்பட்ட அனைவரும் மறந்தார்கள் அல்லர். வழி தொடர்ந்தார்கள்.
    8 திவ்ய பிரபந்தத்தில் சேர்ந்து திருப்பாவையும் உபநிஷத்தாக கருதப்படுகிறது. த்ரமிட உபநிஷத்துகளாக கருதப்பட்டாலும், உபநிஷத்துக்கும் வித்து ஆன படியால் மிகச் சிறந்த உபநிஷத்து.
    9 பெண்களான தோழிகளைக் குறித்து, ஆண்டாள் உபதேசிக்கிறாள். ஏலோ ரெம்பாவாய் ஏல் = ஏற்றுக்கொள்! ஓர் = இதன் பொருளை தெரிந்துகொள்!. எம்பாவாய் = எனது தோழியே! என்பதும் பொருள் திருமங்கை மன்னனின் 11-5 திரு மோழியான மானமரும் மென்னோக்கி” என்பதில் தோழியை குறித்து சொல்வது போல் இங்கும் உணர்க.
    10 அதே உபாயத்தை ஆண்டாள் முதலிலேயே மார்கழி என்பதால் உபதேசம் செய்தாள். மார்கழி மார்கசீர்ஷம் தலையான உபாயம்.
    11 ஜகதாசார்யனான கண்ணனுக்கும் ஆசார்யை சிறுவர்களுக்கு வேதங்களை பயிற்றுவிப்பது போல், வேதாந்த அர்த்தங்களை உபதேசித்து ஆசார்யை ஆனாள்.
    12 தஜ்வாலையுடன் கூடிய ஒரு பள்ளத்தில் சிக்குண்டு தவிக்கும் ஜீவர்கள் நற்கதி அடைய, வராஹ எம்பெருமானிடம் இருந்து உபதெசம் பெற்று, இவள் உபதேசித்தாள். ஆக சோக நிவருத்திக்காக ஏற்பட்டது இதுவும்.
    13 இங்கும் மூன்று வகையில் சோகங்கள் ஏற்பட்டன.
    1. இங்கும், ஆயர்பாடியில் துர்பிக்ஷம் ஏற்பட்டதால், இதை விலக்க, நோன்பு செய்தனர். இதனால் துர்பிக்ஷத்தால் ஏற்பட்ட சோகம் நோன்பின் மூலம் அகன்றது. 2. ஆயர்ப பெண்கள் நந்தனுடைய புதல்வனான கண்ணனைக் கணவனாக வரிக்க வேண்டும் என்று யமுனைக் கரையில் அர்ச்சித்தார்கள். கண்ணனைக் கணவனாக அடையாமையைப் பற்றிய சோகம். இதுவும் நோன்பால் அகன்றது. 3. மக்கள் உண்டியே உடையே என்கிற வகையில் திரிந்து கொண்டும் தவிக்கின்றனர். நற்கதியை அடைய இவர்களுக்கு வழி அறியாமல் இருந்தபடியால் சோக ஸமுத்ரத்திலேயே மூழ் இருந்தனர். அந்த சோகமும், இதனால் நிவ்ருத்தமானது. நோன்பு, கண்ணனை பர்த்தாவாக அடைவது, தத்வங்களை உணர்த்துவது இவை மூன்றும் இத் திருப்பாவையில் உபதேசிக்கப் பட்டபடியால், மேல் கூறிய மூன்று சோகங்களும் அகன்றன.

    திருப்பாவை
    1. மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது.
    2. பாவைக்காக = நோன்புக்காக சொல்லப்பட்டது.
    3. பாவையின் பொருட்டு (தோழியின் பொருட்டு) சொல்லப்பட்டது.
    4. பாவையை – பெண்களை அழைத்து சொல்லப்பட்டது.
    5. பாவையை அடைய (புருஷ காரார்தம்) சொல்லப்பட்டது
    6. பாவை மூலம் (லக்ஷமி மூலம் = நீளாதேவியின் மூலம்) பகவானை அடைய சொல்லப்பட்டது.
    7. பாவை = வழி (சரணாகதியைச் சொல்ல ஏற்பட்டது.
    8. பாவை = பலத்தை அடைய சொல்லப்பட்டது.
    இப்படி பல வகையில் பொருள் கொள்ளலாம்.

    ———-

    திருப்பாவை – அடிவரவில் விசேஷம்:

    திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களுக்கும் அடிவரவு முன்னிட்டு விலக்ஷணமான வேதாந்த விழுப்பொருள் ஒன்று வரைகின்றோம்.
    1. மார்கழி வையத்து(ள்) ஓங்கி நிற்கிறது. மார்கசீர்ஷமான ப்ரபத்தி, பூலோகத்தில் சிறந்து விளங்குகிறது.
    2. ஆழிமாயனை புள்ளும் கீசு கீசு (க்ருஷ்ண க்ருஷ்ண) என்று அழைக்கின்றது.
    3. கீழ்வானம் வெள்ளென்றது. ஆசார்யனை அடைந்தது முதல் மோக்ஷம் அடையும் வரையுள்ள ப்ரபாத காலம் – அறிவுற்றகாலம்.
    4. தூமணி (ஜீவன்) நோற்று சுவர்கம் புகும்.
    5. கற்றுக் கறவை (ஆசார்யர்) கனைத்தது இளம் கன்றுக்கே. (சிஷ்யர்க்கே).
    6. புள்ளின் வாய்க்கீண்டானை, உங்கள் புழைக்கடைத் தோட்டத்து (ஹ்ருதயம்) வாவியுள் காணலாம்.
    7. எல்லே (என்ன ஆச்சர்யம்)!
    8. நாயகனாய் நின்றவன், அம்பரம் (ஹ்ருதய ஆகாசம்)!
    9. உந்து மதகளிற்றன் (யானை போன்றவன்) அவனே குத்து விளக்கு (நிலையான விளக்கு)!
    10. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் செல்ல ஏற்றவன் (எல்லா தேவர்களுக்கும் அரசன்)!
    11. (அவனை) அங்கண் மாஞாலத்தரசர் (ஜீவர்கள் தங்களது) மாரிமலை முழைஞ்சில் (ஹ்ருதயத்தில்) அன்று த்யானித்தார்கள்.
    12. ஒருத்திமாலே! (நிகரற்ற ஆண்டாளிடத்தில் மோகமடைந்த திருமால்).
    13. கூடாரை (பாவங்களை) வெல்லும் சீர் உடையவன் அவன்!
    14. கறவைகள் (ஆசார்யர்கள்) பின் சென்று சிற்றஞ்சிறுகாலான (பிரபத்தியைச் செய்து) வங்கக் கடல் கடைந்த மாதவனால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.

    ——————–

    ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
    நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

    ————————————————————————————————————————————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பகவத் கீதா தியான ஸ்லோகங்கள்:

    October 9, 2023

    ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
    கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
    ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி
    விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

    ———

    ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

    வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

    அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

    அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||–1-

    புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

    பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

    .பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

    ——

    நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

    யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||-2-

    அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

    இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.

    ———-

    ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

    ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

    ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

    —-

    ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

    பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

    உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

    பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

    பாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

    ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
    -சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
    கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
    ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

    சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
    தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
    தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
    ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

    ——–

    வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

    தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

    இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

    வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

    ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

    ——

    பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

    ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

    அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

    ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

    பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப்போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

    இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

    சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

    கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

    —-

    பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

    லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

    பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

    அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

    —-

    மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

    யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

    யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

    —-

    யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

    இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

    —————————————————————-

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பகவத் கீதை வெண்பா -ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர்–மூன்றாவது ஷட்கம்

    October 8, 2023

    ஸ்ரீ பகவத் கீதை வெண்பா  பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
    14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி – அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல்.
    பாயிர  வெண்பாக்கள் 223.
    இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார்.

    மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
    தூய பெரும்பூதூர்த்‌ தொன்முனிதன்‌–மேய
    தகையான்‌ மணவாள மா முனிவன்‌ சொன்னான்‌
    தொகையாரும்‌ லெண்பாச்‌ சுரந்து.

    சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
    சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
    கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
    சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

    ————

    1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
    திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
    நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
    புன்பொருளிற் போகா புலன்.

    2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
    போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
    வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
    நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

    3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
    வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
    பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
    சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

    4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
    போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
    பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
    தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.–இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்

    5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
    நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
    தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
    லிருணூற வேற்றுகேன் யான்.–இருள் நூந -அஞ்ஞான இருள் கெட

    6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
    லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
    னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
    கெண்ணும் பொருளா மிசைந்து.

    தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
    சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
    (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
    அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
    பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
    நண்ணும் – அடையும்,
    பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
    நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
    இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
    எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

    7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
    யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
    தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
    முன்னாறோத் தோதும் முயன்று.

    ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
    ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
    ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
    இங்கு – இவ்வுலகிலேயே,
    ஊனம் அற – குறைவில்லாமல்,
    தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
    நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
    முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
    முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

    8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
    தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
    நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
    யிடையாறோத் தோது மெடுத்து.

    உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
    முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
    பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
    நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
    இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

    9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
    வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
    வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
    பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

    கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
    இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
    சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
    அருமை அற – சிரமம் இல்லாமல்,
    என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
    பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
    பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

    10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
    யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
    தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
    கன்மயோ கத்தின் கணக்கு.

    தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
    பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
    இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
    சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
    கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

    11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
    கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
    யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
    பத்தியோ கத்தின் படி.

    அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
    அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
    அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
    நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
    மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
    ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
    நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
    பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
    யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
    மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
    ஞானயோ கத்தி னலம்.

    புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
    தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
    செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
    உற்ற – தோன்றும்,
    உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
    மான யோகத்து – யோக முறைகளினாலே,
    இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
    மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
    காண்பதே – அனுபவித்தலே,
    ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
    தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
    வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
    மானந் தருமியல்பால் வாய்ந்து.

    ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
    இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
    தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
    அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

    ———————————-

    கன்ம உயிர் உணர்வால் கட்டவரு முன்னாறு
    நன்மை இறை பத்தி நடுவாறு தன்மையுடன்
    காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை
    யேய வமைந்தேலும் ஈறு ஆறு

    13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

    ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
    தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
    தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
    நன்மையுடன் சொல்லு நயந்து.

    ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
    முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
    ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
    ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
    நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
    தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
    முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
    சோதித்து – ஆராய்ந்து,
    நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்

    இந்தச் சரீர இகல் விசயா கேத்திரம் என்று
    அந்தப் பரிசறிவார் ஆய்ந்து உரைப்பார் –முந்தி தனை
    ஈங்கு அறிவான் கேத்திரஞ்ஞன் என்றும் உயிர் என்றவனை
    யாங்கு அறிவார் சொல்வார் அமைந்து –1-

    கேத்திரங்கள் எங்கும் அமர் கேத்திரஞ்ஞனாக
    பார்த்து அறிவு மேவு நீ பார்த்தனே –சீர்த்த
    இவை இரண்டு மற்றும் அறியும் இந்த அறிவுக்கு
    நவையில் அறிவு என்று அறிவனான்–2-

    அக்கேத்திரம் யாதாம் அங்கு எவ்வாறு இவ்விகற்பு
    மிக்கெதிலாம் எம் மயமாய் மேவி அமரும் தக்க விவன்
    தான் எவன் எத்தகையோன் சார்ந்த சுருக்கத்ததனை
    யான் நேர்ந்து சொல்லக்கேள் இங்கு –3-

    போத முனிவர் புகல்வர் பல வகையே
    வேதம் விவிதக்கால் வேறு பட -வோதுமது
    வேதாந்த ஸூத்ரங்கள் வேறுரைக்கும் ஏதுவுடன்
    மீதார்ந்த நிச்சயத்தான் மிக்கு –4-

    பூதங்கள் பூதாதி புத்தி ப்ரக்ருதி
    யோதிந்தி யம் பதினொன்று ஒண் புலன் ஐந்து இதில் வரும்
    இச்சை சினம் இன்ப துன்ப மேலும் உடல் சேதனை தாதுச்
    சிருப்பிதாகும் சுருக்கு –5-

    இவ்வியல்பில் கேத்திரம் தான் இன்னே சுருக்காக
    வல் வினை சேர் காரியத்தோடு ஆய்ந்து உரைத்தேன் செவ்வியுடன்
    ஆர் உயிரின் தன்மை அறிவாம் உபாயங்கள்
    சேரு நெறி கேண்மின் சிறந்து –6-

    மானமுடனே டம்பம் வன் கொலையின் மாறு நிலை
    யான பொறை செவ்வை யமர் குருவின் பான் அணுகல்
    சுத்தி யமர் வுற்ற துணி யுடைமை சூழ் மனத்தைச்
    சித்தி யளவும் செறுப்பு –7-

    இந்தியங்கள் சார் பொருளில் ஒன்றும் துறந்து இருத்தல்
    வந்தியலும் ஆங்கார மற்று ஒழிதல் –புந்தியினால்
    சென்ம மரண சரை நோய் சேர் துக்கமாம்
    புன்மை யுணரும் புணர்ப்பு –8–

    நின்ற நசை யறுதல் நேர் புதல்வர் தாரம் மனை
    ஓன்று மனம் அங்கு ஒழிவித்தல் என்றுஞ்சமன்
    ஆர்ந்தே இருத்தல் உகப்பு வெறுப்பாம் பொருள்கள்
    சேர்ந்து வரலிற் றெளிந்து –9-

    என் பால் அநநியிமாய் எய்ந்து புறம் போகாத
    வன்பாரும் பத்தி யமர் யுறுத லின்பார்
    தனி இடத்தில் சார்தல் சனம் குழுவு கண்டால்
    நனி யுகப்புச் சேரா நலம் –10–

    ஆர் உயிரின் மேல் அறிவில் ஆய்ந்து என்று நின்றமர்வு
    பேர் உணர்வாந் தத்துவத்தின் பீடறிவு –சீருடைய
    மெய்ஞ்ஞான மாமதென மிக்குரைத்தேன் வேறுளது
    பொய்ஞ்ஞான மாகும் புறம் –11-

    இவ்வறிவால் எய்தும் உயிர் தன்னை ஈங்கு உரைக்கேன்
    எவ்வறிவா னல்லமுத மெய்தலாம் செவ்வை யதில்
    ஆதி யில தெற் பரமா யான்ற பிரமமா
    ஈதுல் அது உண்டு என்று உரைப்பதில் –12–

    எங்கும் கரம் பாதம் எங்கும் கண் சென்னி முகம்
    எங்கும் செவியாம் இயல்புடைத்தாய் -இங்கு வதில்
    எப்பொருளும் தன் தகவால் ஏய்ந்து பரந்து நிற்கும்
    அப்பொருளின் தன்மை யது –13–

    எல்லாப் புலன் இயல்வும் ஏய்ந்தே விளங்குமதா
    எல்லாப் புலன் இயல்வும் இல்லையா –எல்லாந்
    தரிக்கும் ஒரு தத்தற்றுச் சார் குண மூன்று இன்றி
    விரித்தனைக் துய்க்கும் மிக –14-

    பூதங்களுக்குள் புறம்புமாய்த் தான் நின்று
    மீது அங்கு இயல்வதுமாய் மேவியே –போதந்து
    நுண்ணிமையினான் மிகவும் நோக்க அரியதாய் தூரத்து
    மண்ணிமையினால் அருகுமாம் –15-

    வேறுபாடு அற்ற வது வேற்றுமை சேர் பூதத்து
    வேறுபாடு உற்றது போன் மிக்கு இருக்கும் –கூறு பாடு
    உற்ற பொருள் தான் பரிக்கும் உண்ணும் உண்டாக்கும் என
    மற்று அறியத் தக்கதது வாய்ந்து –16-

    சோதிகளின் மிக்கது தான் சோதியாய்த் தொக்க தம
    மீது பரன் என்னும் உரை மேவுமதாய்ப் -போதமெனத்
    தான் அறியலா வறிவாற் சாருமதா யாவர்க்கும்
    ஊன மற உள்ளிருக்கு முற்று –17-

    இப்படியாற் கேத்திரமும் ஞானத்து இயல் வகையும்
    மெய்ப்படியா ஜேய வியப்பதுவும் –தப்பறவே
    யான் திரளச் சொன்னேன் என் பத்தனாய் ஈது அறிந்து
    தான் திகழ்ந்து என் மயனாம் சார்ந்து–18–

    சித்தும் அசித்தும் அநாதி எனச் சிந்தி நீ
    பத்தில் விகார மணி குணங்கள் ஒத்து எழுந்து
    பந்த முறு வித்தாகும் பந்த மொழி வித்தாகும்
    வந்தென வெண்ணுற்று மதி–19-

    கார்ய காரணங்கள் கர்த்தா வியற்றுமிடத்
    தேய ப்ரக்ருதி யேதுவா –மேய சுகம்
    துக்கம் புசிக்கும் தொடர்பு அதனிலேதுவா
    ஓக்க வரும் புருடன் உற்று–20-

    வாய்ந்த ப்ரக்ருதி நின்ற புருடன் அதில்
    ஏய்ந்த குணத்தின் இயல்பு எய்தும் –தோய்ந்த குண
    சங்கம் அடியான சதசத்தாம் யோனிகளில்
    தங்க வவர் பிறப்பிற் சார்ந்து –21-

    இவ்வுடம்பின் மேலாம் புருடன் கண் டேய்ந்திசை வான்
    அவ்வுடம்பு தாங்கி யதித் துய்ப்பான் –செவ்வி யதிற்
    தங்கிய பேர் ஈசனாய்த் தான் பரம வான் மாவா
    யிங்கியம்பப் பட்டான் இவன்–22-

    இந்தப் புருடனையும் இந்த அசித்தினையும்
    அந்தக் குணங்களுடன் ஆய்ந்து அறிவான் -எந்தவவன்
    எவ்வாறு மேவும் இயல்பால் திரிந்திடினும்
    இவ்வாறு அவன் பிறவான் இங்கு–23-

    மிக்கார் சிலர் நெஞ்சால் மெய்ப்ப ரதியானத்தாற்
    றக்கார் உயிர் காண்பர் தாம் சிலர்கள் –எக்கால
    சாங்கிய யோகம் தன்னால் தம் கர்ம யோகத்தால்
    ஆங்கு அறிவர் வேறு சிலர் ஆய்ந்து–24-

    மற்று இங்கு அவ்வாறு அறியார் மன்னறிவார் பாற் கேள்வி
    யுற்று அன்புடனே யுபாசிப்பர் -நற்றமா
    வந்தவரும் அரும் பவத்தைத் தாம் கடப்பர்
    இந்த மிகக் கேள்வி யாய்ந்து –25-

    எவ்வளவு நின்று இயலும் இந்தப் பொருள் உண்டாம்
    அவ்வளவு தன்னை யடல் விசயா –விவ்வகையே
    சித்தும் அசித்தும் சிறந்த புணர்ப்பதனால்
    ஒத்தியல்வது என்றே யுணர் –26–

    ஒத்துப் பொருள் அனைத்துள்ளே அமர விருந்
    தத்துப் பரமோ னாகியே தத்துவங்கள்
    மாயும் அளவதிலும் மாயா தவணைக் கண்
    டாயுமவன் கண்டா னமைந்து –27-

    எவ்விடத்தும் தான் இறையாய் ஏய்ந்து இருக்கும் இவ்வுயிர் தான்
    எவ்விடத்தில் ஒத்தி அல்லதா வறியான் இவ்விடத்தில்
    தன்னைத் தன் நெஞ்சத்தினாற் றானலியான் றானடையும்
    பின்னைப் பர கதியாம் பேறு–28-

    ஏய்ந்த ப்ரக்ருதி இத்தால் கருமம் எல்லாம்
    வாய்ந்து இயலும் என்று அறிந்து மன்னுயிரை யாய்நது இவனைக்
    கர்த்தா இவன் என்று காண்பான் எவன் அவனே
    சத்தாம் உணர்வுடையான் தான் –29–

    அப்போது பூதத்து இயல் வேறுபாட்டினையும்
    ஒப்பொருவா ஒன்றில் உறு வகையும் தப்போடார்
    பந்தப்பரப்பும் உணர் பங்கானப் போது யிரா
    மந்தப் பிரமம் அடைந்ததாம்–30–

    இங்கனையும் ஆதி இலானாம் குணம் இவனாம்
    பங்கடலோ இந்தப் பரமான்பர் தங்கி யுடன்
    நின்றிடிலும் கௌந்தேயா நேர் ஒன்றும் தான் செய்யான்
    என்று மதிற்றோய் விலனா மேய்ந்து –31-

    ஓங்கு விசும்பு எங்கும் உளதாய் அநுட் பத்தால்
    அங்க தனிற்றோயா தது போலத் தாங்குடல
    மேதிலு நின்றாலும் இலகும் உயிர் அவ்வண்ணம்
    ஆதி யல்வாற் றோயானாம் அங்கு–32–

    எவ்வா றிரவிதான் இந்த உலகனைத்தும்
    இவ்வாறு எழில் விளக்கம் எய்துவிக்கம் அவ்வாறு
    பாரதனே இவ்வுடல் எல்லாம் பரந்து உயிர் தான்
    சீரதனாற் றான் விளங்கும் சேர்ந்து –33–

    காயம் உயிர் இவற்றின் கண்ணார் பிரிவவ்வா
    றேய வறிவாம் எழில் கண்ணான் –மேயவுடல்
    வீடமர்வு தானும் மிக உணர்வார் தாம் பரமாம்
    பீடமர்வர் தன்மையினைப் பெற்று –34–

    இத் தன்மையால் உடலும் இவ்வுயிரும் சேர்ந்து இயலும்
    அத் தன்மை யாம் அப்பவிழ் விரகு –மேய்த்தன்மை
    யோர்ந்த பதின் மூன்றாம் ஓத்து இங்கு உரைந்து முடித்து
    ஆய்ந்த பொருள் ஆய்ந்தோம் அறிந்து

    ————

    14 – குண த்ரய விபாக யோகம்:

    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
    மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
    கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
    போதத் தியல்பாற் புரிந்து.

    மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
    (தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
    அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
    போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
    புரிந்து – விருப்பத்தோடு,
    கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

    மற்றும் உனக்கு இன்னம் மன வறிவின் மேல் அறிவை
    வுற்று உணரும் வண்ணம் உரைக்கின்றேன் -அற்ற மறை
    யாது அறிந்து மா முனிவர் இப்பவம் விட்டு எய்தினார்
    மீதம் அரும் தன்மையினை மிக்கு –1-

    இந்த அறிவை இனிது ஆர்ந்து இங்கு என் ஒப்பாம்
    அந்த உயர்வை அடைந்தவர்கள் –பந்தமுடன்
    சற் கத்திலும் பிறவார் தாம் துயரம் சாரார்
    ஓற்கப் ப்ரளயத்தினுள் –2–

    மிக்க பிரமம் விறல் யோநி என்று உரைக்கத்
    தக்க தெனத சித்திற் சார்வு பெறத் -தொக்க வுயிர்
    கெற்பத்தை யான் சேர்ப்பன் கேழ் கிளரும் பூதங்கள்
    உற்பத்தி சேரும் இதில் உற்று –3–

    இங்கு உலகில் யோனிகளாம் எத்திறத்து மூர்த்திகளா
    அங்கு உதயம் செய்யும் அவை தமக்குப் -பங்கம் இலா
    விந்தப் பரமமே யோனி கருவளிக்கும்
    அந்தப் பிதா யானே யாங்கு–4–

    சத்துவ ரசோ தமமாய்ச் சாரும் குணம் மூன்று
    மொய்த்த பிரகிருதி உள்ளவையாம் -இத்தகைய
    ஆருயிரைத் தேகத்து அமரப் பிணைக்குமே
    சீராய் அரும் தோளாய் செறுத்து –5-

    ஆங்கு அவற்றில் சத்துவம் தான் அன்று அழுக்கு அற்றார் தலினால்
    ஈங்கு ஒளி செய்தலு நோ யீடழித்துப் –பாங்கில்
    வரும் சுகத்தில் மற்று அறிவின் மன்னு நசை தன்னாற்
    பொருந் துயிரைக் காட்டும் பண்பு–6–

    ராக மதின் தன்மை ராசதமாம் கௌந்தேயா
    தாகமுடன் சங்கம் தனை விளைக்கு மாக நினை
    மற்றது தான் கன்மத்தில் வன் நசையாற் றேகிதனை
    யுற்ற அமரக் கட்டும் உறைத்து–7-

    தம் அறிவு கேடு தரும் தான் அறி நீ மோக
    மம ருயிர் கட் கு எல்லாம் அளிக்கும் -தமர் என்னாது
    ஓராமை சோம்பல் உறக்கத்தால் பார்த்தனே
    சோராமல் காட்டும் துணிந்து–8-

    சத்துவம தின்பத் தனிற் றுவக்குந் தான் இரசத்
    தொத்தியலும் கன்மம் துவக்குவிக்கு -மைத்தும்
    மன்னறிவு தன்னை மறைத்திட்டு ஓர்ப்பின்மையினிற்
    றுன்ன மிகத் தான் துவக்கும் சூழ்ந்து–9–

    முக்குணங்கள் தம்மின் முதல் குணம் தான் மற்ற இரண்டும்
    ஓக்க வமுக்கி யுற மேவா –மிக்க
    விடைக்குணம் தான் பார்த்தனே மற்ற இரண்டும் இங்கே
    கடைக்குணமும் அவ்வாறு காண்–10-

    பொறி வாயில் எங்கும் புணரும் ஒளியாம்
    அறிவானது எப்பொழுது உண்டாகும் –குறியாலே
    மன்னுடம்பில் அப்பொழுது வாய்ந்து யரும் சத்துவமுமாம்
    என்னுமது தான் அறிவான் இங்கு–11-

    ஈயாமை வீண் உழற்றி ஏய்ந்த கருமத் தொடக்கம்
    சாயா புலன் எழுச்சி தன்னாசை –ஓயாமல்
    உண்டாம் இவை கண்டாய் உற்றி ரசத்து ஒங்கதனால்
    வண்டாரும் தார் விசயா மற்று–12–

    மன்னு உணர்வில்லாமை ஒன்றின் முயல்வறு தன்
    மன்னும் உயிர் ஓர்ப்பின்மை மா மோகம் என்னும் இவை
    மீதில் உயர் தமத்தின் மேவும் அவையாக நீ
    கோதில் குரு முதல்வா கொள்–13–

    சத்து மிக்கு ஒக்கம் தரும் பொழுதில் தான் மரணத்து
    ஒத்து உடம்பு விட்ட உயிர் உடையோன்–தத்துவத்தின்
    மேலறிவு சேர்ந்தார் மிக வமலமாம் குலத்துச்
    சால வவன் தான் பிறக்கும் சார்ந்து–14–

    கன்ம நயந்தோர் குளத்தில் காதலுடன் தான் பிறக்கும்
    வன்மையிர சத்துயர்வின் மாய்ந்தவவன் நன்மை இலா
    மூடர் இடைப்பிறக்கும் முழுதும் தமத் துயர்வில்
    பீடை யுற மரித்தான் பின்–15–

    நீதி கருமத்து நின்மலமா நற் பயனைக்
    கோதின் முதற் குணத்தே கூறுவரான் மீதியலும்
    துக்கம் இடைக் குணத்தில் சூழ் பயனாம் பிற் குணத்திற்
    றக்க அறிவின்மை தான்–16–

    முற் குணத்தில் ஆரு முழுதுணர்வு தானிடையி
    லற் குணத்து லோப மதுவுண்டாம் பிற் குணத்தில்
    ஓராமை மோகம் உணராமை யுண்டாரும்
    சீரார் புகழ் விசயா சேர்ந்து –17–

    மேலடைவர் முற் குணத்தோர் மேவு நடுக்குணத்தோர்
    சால நடுவாம் உலகிற் குனிற்பர் –ஞாலத்துப்
    பின்னால் குணத்தியல்வோர் பீடழிவர் கீழ்மையினை
    எந்நாளும் சேர விழிந்து–18–

    மிக்க குணம் அவற்றில் வேறுபட்ட கர்த்தாவைத்
    தக்க வுணர்வுடையோன் தான் உணரான் –ஓக்க குணர்
    தன்னில் பரம் எனவும் தன் அறிவால் சேருமே
    என்னிற் பரத்தன்மை யேய்ந்து–19-

    இங்கு உடல் மேவி யமர் இக் குணங்கண் மூன்றினையும்
    மங்கும் வகை கடந்து மன்னினவன் –றங்கு
    பிறப்பு இறப்பு மூப்புப் பிணி விடுத்துத் தன்னாம்
    சிறப்பு அமுதம் சேரும் சிறந்து–20-

    இவ்வளவில் பார்த்தன் இயம்பினான் இங்கு இறைவா
    வவ்வகை சேர் முக்குணத்தை யாங்கு அன்னோன் –எவ்வகையில்
    சேரும் அடையாளத் தன் செய் தொழில் ஏது எங்கனே
    சீருடன் இத்தைக் கடப்பான் செப்பு–21-

    ஈண்டு அவனுக்கு கண்ண வியல்பின் றக வுரைத்தான்
    பாண்டவனே முந்திப் பரந்த ஒளி –மூண்டியற்றி
    மோக முளவற்றை முனியான் முன் மூண்டத்து
    வேக நசையிலான் மிக்கு–22-

    முன்னுக்கு உதாசீனம் போல் இருக்கும் முக்குணங்கள்
    தன்னுற்று அலைந்திடினும் தான் சலியான் –மன்னு குணச்
    செய்தி இது என்று இருக்கும் செய் தொழிலில் சேட்டியான்
    மெய்திருந்து நெஞ்சுடையான் மேல்–23–

    தன் சுகத்தும் துக்கத்தும் தான் சமனாயத் தன்னமர்ந்து
    பொன் கலுட னோடி தனிற் புத்தி ஓத்தோன் -அன்பர்
    வெறுப்பரிடை ஒப்போன் மிகு பழி நன் கீர்த்தி
    நிறுத்த சம நிற்கு நிகழ்ந்து –24-

    தன்ன மரு மான மவமானஞ் சாரான் நண்பன்
    என்னலர் தம் பக்கத்த மொத்தியல்வான் –மன்ன
    செய்ம் முயற்றி எல்லாம் செய்யான் அவன் குணம் கண்
    மெய்ம் முயற்றியால் கடந்தான் மிக்கு –25-

    என்னைப் புறம் போகா யோகமாம் பத்தியினான்
    மன்னப் பயின்று மருவுமவன் –றன்னமரப்
    பேசு குணம் செற்றுப் பிரமமாம் தன்மையினை
    மாசில் குணம் சேர்ந்திடுமே மற்று–26–

    குன்றா வமுதக் குணப் பிரமமாம் உயிர்க்கு
    நன்றாம் இருப்பிடம் தானானவன் நின்றாரும்
    தன்மப் பயனுக்கும் தான் ஒருமை சார் சுகமா
    நன்மைக்கும் என்று நயந்து –27–

    கட்டுதலும் கர்த்தவாம் தன்மையும் கட்டு அவிழ்ப்பு
    விட்டுத் திகழ் அமுதின் மேவுதலும் –தொட்டு வரு
    முக்குணத்தின் சார்வா முயன்று பதினாலாம் ஒத்
    துக்கும் உரை ஓரும் உணர்ந்து

    ———

    15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
    மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
    மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
    யோதும் பதினைந்தா மோத்து.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
    கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
    மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
    உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
    அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
    பரித்து – அவற்றைத் தாங்கி,
    இறையாய் – அவற்றை உடையவனாய்,
    மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
    பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
    ஓதும் – கூறும்.

    மீது முதலாய் மிகு சாகை கீழாக
    வோது முலகா முயராசைப் போதுந்
    தளிர்கள் மறையாகத் தானுணர் வானந்த
    ஒளி கொள் மறை யுணர்ந்தான் உற்று–1-

    கீழ் தனிலும் மேலும் கிளைகள் அதுக்குப் பரந்து
    தாழ்வில் குணத்து உயரும் சார் புலன் தன் –சூழ் தளிரா
    மூலம் கீழும் பரக்கு முன்னை வினைத் தொடர்பாய்
    ஞாலத்தின் மேல் அமர்ந்து நன்கு –2-

    இத்தின் உருவும் இதில் முடிவும் ஆதியும் மற்று
    அத்தின் இருப்பு அறிவரிதாம் -மொய்த்தமர்ந்த
    மூல வர சாமி தனை முற்று மறுத்தறவாங்
    கோல வலிச் சத்திரம் தான் கொண்டு –3–

    ஆங்கு அதனால் இப்பதம் தான் ஆராயதற்காகுமேல்
    ஈங்கு அதனில் சென்றால் இனி மீளார் -பங்காதற்குப்
    பற்றுவா நாகப்பரனை எவனான் மன்னு
    முற்றும் இயல்வுண்டா முயன்று–4-

    மனமோ நங்களின்றி மற்று நசைக் குற்றமற்
    றான உயிர்த் தன்மை யமர்ந்தாசையது தானகன்று
    இன்ப மிகு துன்ப இருமை விட்டு இங்கு உணர்வோர்
    மன் பதமே தாம் அடைவர் வாய்ந்து –5-

    அந்த உயிர்ச் சோதியினை ஆதித்தன் சந்திரனும்
    செம் தழலும் தாம் விளக்கம் செய்யார்கள் -அந்தத்
    தாளடைந்தார் மீளார்கள் தாமம் அஃது எனக்கே
    யான வகை நீ தான் அறி–6-

    என்னாரு மாம்சமா இவ்வுலகிற் சீவனாய்
    முன்னார நின்று முயலு முயர் -தன்னாரு
    மைம்புலனும் நெஞ்சும் அவை யாறையும் வலிக்கும்
    வெம் புலத்துச் சேர விரைந்து–7–

    எந்த உடல் விட்டு எவ்வுடல் அடையும் ஈசனவன்
    சந்தமுடன் அங்கு இவற்றைத் தான் வாங்கிப் -பந்தமுடன்
    தானேகும் வாயுத்தன் சார் மணங்கள் வாங்கியே
    பூ நேர் நின்று ஏகுமது போல் –8–

    செவி கண் டுவக்குடன் சிங்கவை நாசிச் சேர்ந்
    தவி மின்றி நெஞ்சோடு அமர்ந்து -நவிவில் வாய்
    புன் பொருள்கள் எல்லாம் புசித்தியலும் இவ்வுயிர் தான்
    இன்புறுதல் சேர் நசையால் இங்கு–9-

    இந்த உடல் விட்டேக லேய்ந்து மிதிலிருந்தும்
    வந்து புசித்தும் குணத்தின் மன்னினவனை –வந்தறிவின்
    மூடர் உணர் முக அறியார் முற்றுணர்வர்
    நாட உணர்வழியார் நன்கு –10–

    மன்னு கருமத்து மருவியல் யோக்கியர்கள்
    தன்னுடம்பின் மேவி அவனைச் சார்ந்து உணர்வார் –முன்னு ணரு
    நெஞ்சம் இல்லாதார் நிறைவின்றித் தாம் உணரார்
    எஞ்சல் அறவியன்றிம் இங்கு–11-

    ஆதித்தன் பானின்று அனைத்து உலகும் தான் விளக்கும்
    சோதிச் சுடர் சோமன் சூழங்கி -மீதிலகி
    மன்னு மொழி தன்னின் வனப்பதவு மன்னனே
    என்னதன உற்று அறி நீ ஏய்ந்து–12–

    பூதலத்தின் மேவியே பூதங்கள் தான் தரிப்பன்
    மீது அடர்த்து நின்று மிடுக்கால் –சீதளம் சேர்
    சோமன் என நின்று அமுதம் சோர்ந்தே பயிர் எல்லா
    சேம முற நிறைப்பன் சேர்ந்து–13-

    நான் அமர்ந்து நின்று உலகினில் நடும் உயிர் உடலி
    லூன மறக்கிளரும் ஒள் எரியாத் –தான் கலவா
    வேல் வகை சேர் வாயு விரண்டால் அறப்புசிப்ப
    னால் வகை சேர் அன்னத்தை நன்கு-14-

    எல்லார் இதயத்து இருப்பேன் நான் என்னாலே
    நல்லார் நினைவறிவு நாட்டமாம் –சொல்லார்ந்த
    வேதங்கள் யானைக்கும் வேத்தியனான் மேவு பயன்
    மிதந்தது அறிவேன் மிக்கு–15–

    கண்ணார் உலகிற் கரனக் கரன் என்றே
    எண்ணாம் புருடர் இவர் இருவர் -பண்ணாரும்
    பூத யுயிர் எல்லாம் கரனாம் பொருவில் சீர்
    மீத வுயிரக் கரனாம் வேறு–16-

    ஆங்கு இவரில் உத்தமனே யாம் புருடன் அன்னியனாய்ப்
    பாங்கிற் பரமான் மா வென்று உரைத்தான் ஓங்கியே
    தாம் புகுந்து நின்றே தரித்து உலக மூன்று இறையா
    யோம்பு மவன் குன்றாது மேல்–17–

    எத்தகவால் யான் கரன் மீது ஏகியே யக்கரனாம்
    உத்தனிலும் உத்தமனா உற்று உயர்ந்தேன் -இத்தகவால்
    வேதம் உலகு இவற்றின் மேவு புருடோத்தமனா
    வோத உரை சிறந்தேன் உற்று –18–

    என்னை இங்கே இவ்வண்ணம் ஏய்ந்த புருடோத்தமனாம்
    உன்னை யமர் ஒழித்து முற்று உணர்ந்தான் பின்னையவன்
    எல்லாம் அறிந்தே எனை அடைந்து பத்தியுடன்
    செல்வான் எவ்வாறும் சிறந்து –19–

    இன்னே இச்சாத்திரமாய் ஏய்ந்த மறைப்பொருளை
    மன்னே யுரைத்தேன் நான் மற்று இதனை நன்னெறியா
    யுற்று அறிந்தான் நேரே யுணர்ந்தானாம் பார்த்தனே
    மற்று அனைத்தும் செய்தவனாம் ஆய்ந்து –20–

    ஏலும் புருடோத்தமனாம் ஏற்றத்தைச்
    சால இறைவனே தான் உரைத்த –மேலான
    கீதை பதினைந்தாம் ஒத்துக் கெழு மிகு சீர்ப்
    போதப் பொருள் உரைத்தோம் பூண்டு

    ———-

    16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

    தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
    நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
    யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
    யுரைக்கும் பதினாறா மோத்து.

    கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
    அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
    அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
    அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
    தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
    பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
    நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
    தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

    அஞ்சாமை நெஞ்சு தெளிவாய்ந்து அறிவாம் யோக நிலை
    எஞ்சாத தானம் இசைந்த தமந் -துஞ்சாத
    வெச்ச மறை வேலும் தவ முயற்றி
    நிச்சந்தனிற் செவ்வை நேர்ந்து –1-

    கொல்லாமை மெய்ம்மை வெகுளாமை கோள் விடுத்து
    றோல்வார் சமங்குறளைச் சொல்லாமை -எல்லாத்து
    மேவு தயை தான் சலிப்பு மேவாமை மேன்மை நாண்
    பாவு பொருள் சாபவந்தீர் பண்பு–2-

    தேசு பொறை திண்மை தூய்மை சின மறு தன்
    மாசு நிகழ் மிசை சேர் மான மொழி வாசலியை
    தெய்வ மெனும் சம்பத்திற் சேர்ந்து பிறந்தார்க்கு உண்டோ
    மெய் வகையாற் பார்த்தனே மிக்கு–3-

    தன்ம மிலா டம்பம் தன் செருக்குத் துன்மானம்
    வன்மை யுறு செற்றம் வளர் கொடுமை -நன்மை
    அறியாமை பார்த்தனே யாசுரமாம் செல்வம்
    செறிவாருக்கு உண்டாம் திறம்–4–

    தெய்வம் எனும் செல்வம் திகழ் மோக்கத் தாசுரந்தா
    னை வகை சார் பந்தத்து நாடுறுப்பாம் -இவ்வகையாற்
    சேர்ந்து உயர்ந்த சீர்ப் பார்த்தா தெய்வமாம் சம்பத்தை
    நேர்ந்துதித்தாய் சோகியே நீ–5–

    பூதம் இரு வகையாப் போருமே இவ்வுலகி
    லாத மரும் தெய்வமாம் அங்கு அசுரமாம் -ஈது அதனில்
    தெய்வம் விரித்து உரைத்தேன் சேர்ந்து நீ யாசுரத்தை
    மெய் வகை கேள் பார்த்தா விரித்து–6–

    செய்கின்ற இல்லறமும் செய்யாத் துறவறமும்
    நைகின்ற வாசுரர்கள் நன்கறியார் –மெய் குன்றாத்
    தூய்மை யுடனா சாரம் சொல்லின் பயனாய்
    வாய்மையும் மற்றில்லை யவர் மாட்டு–7–

    இச்சகத்து மெய்யன் இதற்கோர் நிலையில்லை
    மிச்ச விறை இல்லென்று மேல் விழுந்து -பிச்சுரைப்பார்
    தன்னிற்றான் காமத்தாற் சார்ந்தே பிறக்கு மதென்
    றென்னிற்றான் மற்றேது எனில் –8–

    இங்கு இதுவே கண்ணாகவே வேற்றுத் தன்னறியா
    தங்கியலும் புத்தி யறவறமாய்ப் பொங்கு
    கொடும் தொழிலராகிக் குல வுலகைத் தீம்பால்
    அடும் தொழிலராவர் அவர்–9–

    கிட்டாத காமத்தை யுன்னியது கிட்டும் வினைப்
    பட்டாங் கறிவின்றிப் பாவத்தாலிட்ட பொருள்
    வாங்கி மத டம்பம் சேர் மானமுடன் இங்கு உழல்வார்
    தீங்கியன்று மல் விரதம் சேர்ந்து–10-

    துங்க வளவில்லாதே தோற்றம் சேர் சிந்தையினைத்
    தம் கண் முடிவளவும் தாமருவி அங்கு அமரும்
    காம போகம் பரமாக் கண்டறுதி மேவுவரே
    யேமமிது வல்ல திலை என்று –11-

    காமம் சேர் ஆக்கை சதங்களால் கட்டுண்டு
    காமம் க்ரோதத்துக் கை வளர்ந்து -சேமமுடன்
    ஆங்கு அதனைப் துய்ப்பர் அனியாய வத்தத்தை
    யோங்கி மிகத் தாம் சேர்ப்பர் உற்று–12–

    இது பெற்றேன் இப்போது இது யான் இணைந்தது
    இது கிட்டுவன் மேலும் இன்னே இது என்ன
    தாயே யுண்டாகின்றதாம் அதற் பின் இத்தனமு
    மேயே யுண்டாம் எனக்கு மிக்கு–13–

    இப்பகைவன் பட்டான் மற்றி யாவரையும் கொல்வேன் நான்
    செப்பம் இறை நான் போகி சித்தனான் –மெய்ப்பொருளோன்
    மேவு வலியோன் சுகி நான் மேற் குல நானாகின்றேன்
    எவன் என்னோடு ஓப்பான் மற்று இங்கு–14–

    நானே யெசிப்பேன் கொடுப்பேனனி யுகப்பேன்
    றானே என மோகம் சார்ந்தவர்கள் நானா நெஞ்
    சோடியே மோகித்து உறங்கா மத்தார் நரகிற்
    கூடியே வீழ்வர் தொலைந்து–15–

    தம்மைத் தாம் சம்மதிப்பார் தாமுயலார் தம்பித்துச்
    செம்மைத் தன் மானம் சேர் செருக்கால் -இம்மைக்கே
    நாம வினையால் யசிப்பர் நாட்டியலும் டம்பத்தாற்
    சேம விதி சேராது சென்று–16–

    ஆங்காரம் வன்மை யதன் செருக்குக் காமமுடன்
    தீங்கார் க்ரோதமது சேர்ந்தவவர் –பாங்காரத்
    தம் பிறர்க டேகத்துச் சார்ந்த வெனைத் தான் வெறுப்பார்
    வெம்பிய சூயைச் சுடரால் வெந்து–17–

    ஆங்கு என்னைத் தான் வெறுத்த வந்த நராதமரை
    ஈங்கு உழலும் இப் பகத்தில் என்று நான் -ஈங்கு உழலும்
    அசுரமாம் யோனி யவை தன்னிடை எய்த
    மாசறவே தள்ளுவேன் மற்று–18–

    உற்று நிகழ்ந்த அசுரமாம் யோனிகளில் பல் பிறப்பில்
    முற்றும் அறிவின்றியே மூடராய்க் -கொற்றவனே
    என்னை அடையாதே ஈங்கு அதனில் ஆழ்ந்த கதி
    தன்னடைவர் என்றும் தளர்ந்து–19-

    மா நரகின் வாசலாய் மன்னும் இவை மூன்று யிருக்
    கீனமா நாசம் இயற்றுமவை -தான் அமரும்
    காமம் குரோதம் உலோபம் கடிதிவற்றி
    னாமம் செறு நீ நவிற்று–20-

    இந்த அறிவு கேட்டுக்கு இம் மூன்றும் வாசல் என
    அங்கு அறிந்து விட்டோன் அரசனே -சங்கை அறத்
    தன்நன்மை யாசரிக்கத் தண்மை பரகதியாம்
    இந்நன்மை சேரும் எழுந்து–21-

    விட்டமரும் சாத்திரத்தின் மேய விதியை எவன்
    இட்ட மிகத் தன்னால் இயல்கின்றான் –றட்டறு சீர்ச்
    சித்தியது சேர்ந்தடையான் சேரான் சுகம் பரமா
    முத்தியது சாரான் முதிர்ந்து–22-

    மன்னிச் செய்யுமதுவும் மற்றதுவும் முற்றறிவு
    தன்னில் பிரமாணம் சாத்திரமே -என்னுமதால்
    அந்த விதானம் அறிந்தே கருமத்தை
    முந்த வியனீ முயன்று–23–

    இப்படியே தேவ அசுரமாம் இயல்வதனைத்
    தப்பது சீர் ஞானத் தரு நிலைமைக்கு ஒப்பாப்
    பகர்ந்த சீர்க் கீதை பதினாறாம் ஒத்தில்
    நிகந்த பொருள் முற்றியது நேர்ந்து

    ———–

    17–ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்

    ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
    றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
    சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
    வோர்ந்தே பதினேழா மோத்து.

    சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
    சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
    செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
    மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
    பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
    இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
    பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
    ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

    மேவிய சீரப் பார்த்தன் வினவ யுரைத்தான் கண்ணனே
    பாவிய சீர்ச் சாத்திரத்தின் பாங்கு ஒழிந்து இங்கு ஓவா
    விருப்பற்று இயல்வார்க்கு மிக்க குணம் மூன்றில்
    இருப்பேது இனி உரையாய் இங்கு–1-

    ஐயன் அவனுக்கு ஆங்கு அறிய உரை செய்தான்
    செய்ய கருமச் சிரத்தை தான் மெய் யமரும்
    தன்மையான் முக்குணத்தின் சார்வாகு மூ வகையாம்
    பன்மை நீ கேளாய் பயின்று–2–

    நீடுலகில் எல்லார்க்கு நெஞ்சுக்கு அநு குணமாப்
    பாடு பெறும் இந்தப் பருஞ் சிரத்தை–நாடுஞ்
    சிரத்தை யுருவாம் புருடன் சேர்ந்தே சிரத்தை
    வுரைத்தது எவற்கு ஆங்கு அவனாம் உற்று–3-

    சத்துவத்தர் சார்வமரர் தாம் இயக்கரோடு அரக்கர்
    மத்தியத்தர் சேரும் வகையது தான் புத்தி செறு
    புன்மைத் தமோ குணத்தர் பூதம் பிரேத கணம்
    தன்னைச் சமைந்து அணைவர் தாம் –4–

    கோரமாய்ச் சாத்திரத்தில் கூறாத் தவம் தன்னைச்
    சேரவே யார் இயல்வால் டம்பமுடன் –ஈரமிலா
    வாங்காரம் கூடி யதி காம ராகங்கள்
    தீங்காகும் திண்மை செறிந்து –5-

    உற்ற உடல் பூதங்கள் தன்னை ஓறா நின்றே
    மற்று அதனுள் மேவு வுயிராய் மன் எனையும் -பற்று அற்று
    அற வருந்து விப்பர ராசுரமாம் புத்தி
    மறவர் என நினை நீ மற்று–6–

    எவர்க்கும் தான் உகப்பா மூணெச்ச மேய்ந்த தவ
    மேவத் தகு தானம் வேறுபடப் -பாவும்
    குணம் தன்னான் மூ வகையாகக் கூறிய அப்பேதம்
    உணர்ந்து இங்கே கேள் இதனை உற்று–7–

    வாழ் நாள் மனம் தெளிவு மன்னு வலி நோயாமை
    பூணாம் சுக முகப்பைப் பொங்குவித்து –மாணார்ந்த
    தித்தித்து நெய்த்துத் திரமாய் மநோ கரமாய்
    ஒத்திடுமே முற் குணத்தில் ஊண்–8-

    காழ்த்துப் புளித் துப்பாய்க் கைக் கொதித்துத் தான் கடிதா
    யாழ்ச்சிக் கொடிதா யழல் விளைத்து –மூழ்ச்சியினிற்
    றுக்கஞ் சோகம் பிணியைச் சூழ்க்கு நடுக் குணத்தின்
    ஓக்க உகந்து உண்ணும் ஊண்–9-

    காலம் கழிந்து கழிந்து இரந்துற் கெந்தித்
    தேல மிகப்பழகி எச்சிலாய்ச -சாலப்
    படைத்த முதுக்காகத பாவச் சோறாகும்
    கடைக் குணத்தால் உண்ணும் கணக்கு–10-

    வேண்டாததில் பயனை வேத விதி மேவி மணம்
    பூண்டார் இயல்வாகப் புந்தித்து மூண்டு ஆங்கு
    தாம் இயல்வர் எச்சம் தகவான் முதற் குணத்திலாம்
    எனவே கொள்க அறிந்து–11-

    சேர்ந்த பயன் இனைந்தும் டம்பம் பொருட்டாயும்
    சார்ந்தது எது பரதர் தம் தலைவா கூர்ந்த
    மனத்தால் அவ்வெச்சத்தை வாய்ந்து அறி நீ அந்த
    வினத்தால் இடைக்குணத்தது என்று–12–

    விதியற் றவியற்று மந்திரமும் விட்டே
    யதின் மேவு தக்கணையும் அற்றுக் கதி சேர்ந்த
    வேலும் சிரத்தை இலா எச்சம் கடைக்குணத்தாற்
    கோலும் என உரைப்பர் கூர்ந்து–13-

    காயம் சொலவு மனம் காட்டும் தவங்களவை
    மேய குணம் கண் மிகு நெறியா லாய வெனின்
    மூன்று அதனின் நின்று முயலும் படி உரைக்க
    வேன்றதனைக் கீழ் நீ யினி–14–

    தேவர் மறையோர் குணங்கண் மிக உணர்ந்தோர்
    மேவ வருச் சித்தன் மெய் தூய்மை யோவாத
    செவ்வை மகளிடரைச் செல்லாமை கொல்லாமை
    இவ்வகைக் காயத் தவமாம் இங்கு–15-

    அஞ்சா வகை சொல் லதன் மெய் யுகப்பிதமாத்
    துஞ்சா மறையின் சொலின் வலியால் எஞ்சாத
    வாக்கத்தனின் நின்றும் மருவு தவம் என்பரே
    யூக்க மனமுடையோர் உற்று–16-

    மனம் தெளிந்தது நன்கு அறிதல் வாயுரையை மீட்ட
    நினைவும் மனம் சேர நிறுத்தலினம் இயல்வு
    சேராதே தூய்மையிவை சித்தத்துச் சேர் தவம் என்று
    ஆராய்வர் ஞானத்தவர்–17-

    முக்கரணம் செய் தவங்கள் முற்று விதம் ஆர்வம் உயர்ந்து
    ஓக்க வரு பயனை யுள் ஒழித்துத் தக்கவர்கள்
    செய்யும் தவத்தைச் சிறக்கின்ற முற்குணத்து என்று
    உய்யுமவர் யுரைப்பர் யுற்று–18-

    நாடு நல நினைந்து கொண்டாடி நன்கு இறைஞ்சத்
    தேடு மனம் நினைந்து டம்பத்தாற் பீடுறவே
    ஏய்ந்த தவ நில்லாது இடைக் குணத்ததாய்ச சலித்து
    மாய்ந்து யறும் என்றே உரைப்பர் மற்று–19-

    மூட மதியான் முயல் வுற்றுத் தம்முயிர் தான்
    பீடை மருவப் பிறர் கேடு கூடவே
    யுற்ற தவமானத்துடனே கடைக் குணத்தைப்
    பற்ற வரும் என்பர் பயின்று–20-

    வேறு உபகாரத்தை வரும் பாதியில் வென்று
    கூற இடம் கால நலம் கொள் பவனைத் தேறியே
    தான் கொடுக்கும் தானம் தான் சத்துவத்தின் நின்று மேல்
    வான் கொடுக்கும் என்பர் மதித்து–21-

    மீண்டு உபகாரம் கொளவும் வேறு பலம் இச்சித்தும்
    பூண்டு மிக வருந்திப் புன் பொருள்கள் வேண்டு நெறி
    இட்டு இயலும் தானம் இடைக் குணத்தின் பாங்கு அதனில்
    பட்டு இயலும் என்பர் பலர்–22-

    தேச காலம் சிறப்புச் சிந்தியா தேற் பவன் பால்
    அசின்மை பாராது அவமதித்து நேசம் செய்யா
    தரிப்பது இல்லா தவத்தானாம் பிற் குணத்தை
    மீதரிப்பது என்று உரைப்பர் மிக்கு–23–

    ஒந்தற் சத்து என்னும் உரை முயன்று ஒண் மறையாய்
    வாய்ந்த பிரமத்தின் மண்ணியவர் ஏய்ந்து இவ்
    விலக்கணத்தால் அந்தணர்கள் வேதங்கள் எச்சம்
    கலக்கம் அற வுண்டான் காண்–24–

    ஆதலால் ஓம் என்று அமர்ந்து உரைத்தே யந்தணர்க்கு
    வேத நின்றோதும் விதி வகையே போதமுடன்
    எச்சம் தானம் தவங்கள் எல்லாம் எக்காலத்தும்
    இச்சந் தன்னா னடக்கு மேல்–25–

    நெஞ்சால் பலத்தை நினையாது எச்சம் தானம்
    துஞ்சாத் தவமுத்தி தொன்மை நினைந்து எஞ்சாமல்
    ஒத்து இங்கு இயலும் உயர்ந்தது எனச் சொல்லும்
    எத்து என்று உரைக்கும் தரம்–26-

    உண்மையிலும் நன்றான ஒண்மையிலும் சத்து எனும்
    வண்மை யுரை தன்னை மதித்து உரைப்பர் -திண்மை யுயர்ந்
    தேலும் கருமத்தைச் சத் கர்மம் என்று உரைப்பர்
    மாலும் புகழ் விசையா வாய்ந்து–27-

    அங்கு அதனால் எச்சம் தவம் தானமாம் இவற்றில்
    ஓங்கமரும் தன்னிலையும் உற்றவற்றில் பாங்கியலும்
    சத்து என்று உரைக்கத் தகும் என்று வேதியர்கள்
    ஒத்து என்று உரைப்பர் உகந்து–28–

    தான் விருப்பம் இன்றிச் செய் தானம் தவம் ஓமம்
    வான் விருப்பத் தேற வழியாகா வான் விருப்பாக
    காயத்தின் நன்கு காரணத்தாற் தான் சத்தாய்
    மாயத் துறுவிக்கு மற்று –29–

    மேவு குணங்களினால் வேறாம் கருமங்கள்
    பாவு சுருதிப் பயில் வகையே சேவையுறும்
    பாங்குரைத்த கீதை பதினேழாம் ஒத்ததனை
    ஈங்கு யுரைத்தோம் இப்பொருளா ஏய்ந்து

    ———-

    18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

    செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
    மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
    சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
    றோரும் பதினெட்டா மோத்து.

    செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
    மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
    உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
    இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
    பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
    உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

    ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
    முன் யான் பிறிவொருமை முற்றறியேன் பின் பின் யான்
    தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்க்கே
    என்று அங்கு இறைத்தான் இறை–1-

    காமக் கருமங்கள் கை விடுதல் சந்நியாஸம்
    சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
    எக்கரும அப்பேறு மிகழ்வு தியாகம் எனச்
    சிக்கனவே சொல்வர் சிலர் -2-

    ஏதம் போற் கன்ம மிகழப் படும் என்று
    போதர் சில யுரைப்பர் புந்தியான் -மீதென்று
    மெச்சத் தவம் தான் ஈங்கு இழவு அல்லது என
    நிச்சம் சிலர் யுரைப்பர் நின்று–3-

    அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
    சந்ததிகள் பாரதர் தம் தலைவா முந்துறுவே
    யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்தைத்
    தான் பயணம் சங்கம் தவிர்ந்து–4-

    பாவியர் எச்சம் பயிலும் தவம் தான்
    மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
    யாவின் பால் ஆங்கு அவை தானான வறிவினர்க்கும்
    பாவனமாம் என்றும் பயின்று–5-

    இக்கருமமான விவை என் கருமம் என
    மிக்கமருஞ் சங்க மிகு பயன்கள் ஓக்க விடுத்து
    ஏய்ந்த இயல் வென்றே இயலுமது என் தனக்கு இங்கு
    ஆய்ந்த வறுதி மிகமாம்–6-

    என்று நியதமாய் இந்தக் கருமங்கள்
    ஒன்றும் விட இவனுக்கு ஒண்ணாதான் இன்று இவற்றை
    மோகத்தால் தான் விடுதன் முக்குணத்திற் பிற் குணத்தில்
    வாகத்தால் வந்த அது–7-

    துக்கம் எனக் கன்மத்தைத் தோன்றும் உடல் வருத்த
    மிக்க பயத்தால் செய்யா விட்டவன் தான் சிக்கெனவில்
    வாய்ந்த விடைக்குணத்தான் மற்றது விட்டப் பயனாம்
    ஏய்ந்த அறிவு பெறான் இங்கு–8-

    நின்று நியதக் கருமத்தை நேர்ந்தி அல்ல என்று
    என்றும் இயன்றே யிகல் விசையா-வொன்றி யரும்
    சங்கம் பயன்று றப்பார் சாரும் தியாகம் தான்
    அங்கு அந்த முற் குணத்ததாம்–9-

    தத்துவத்தின் நின்றும் தவிர்ந்த பயன் சார்ந்த அறிவு
    சத்துவத்தில் சந்தேகம் தான் அற்றான் ஒத்து வரும்
    தீ வினையில் நல் வினையில் சேர் வெருப்பு சங்கமிவை
    யோவி யிருப்பு எய்தும் உகந்து–10–

    காய முடையோன் கருமம் எல்லாம் கை விடுத
    லாய வகை யங்கு அரிதாகு மேய
    பலன் துறந்தோன் நன்றாம் படி துறந்தோன் என்று
    நலம் சிறந்தோர் சொல்வர் நயந்து–11-

    நன்றும் தீதும் கலந்து நண்ணும் பல மூன்றாப்
    பொன்றும் துறவாதுடன் சென்றார்க்கு என்றும்
    கருமத்தில் ஒன்றிற் கருது பயன் சாராது
    ஒருமைப்படத் துறந்தார்க்கு உற்று–12–

    செய்யும் கருமம் எல்லாம் சிந்திக்க நீ விசையா
    வுய்யு மதி யறுதி யுற்று உணர்ந்தவை வகை சேர்
    காரணங்கள் என் பாற் கருத்து அமர்ந்து கேட்டு அறி நீ
    யாரணங்கள் சொல்லுமது–13–

    நிற்க நிலை யாகும் உடன் நேர்ந்த வுயிராம் கர்த்தா
    வற்க்கு நிழல் செய் கரண மற்றவை தானாற் கழிலாச்
    சேட்டை பல பஞ்சமாம் தெய்வ விறை தன் மத்துக்
    கூட்ட மாவதாகவே கொள்–14–

    காயத்தால் வாக்கால் கருது மனம் தன்னால்
    வாயத்தான் செய்ய மருவி முயல் -நேயத்தால்
    நல் வினைக்கும் தீ வினைக்கு நாட்டில் இவை ஐந்தும்
    செய்வினையில் ஏதுவாம் சேர்ந்து–15–

    இவ்விகையால் ஈசனால் கர்த்தாவாம் இவ்வுயிரில்
    செவ்வை மதியாது வெறும் சீவனை எவ்வகையில்
    கர்த்தாவாம் என்னவே காண்கின்றது உன் மதி தான்
    ஓத்தாரும் புத்தி யுறான்–16–

    நான் செய்தேன் என்று நடக்கு மனம் இன்றித்
    தான் சேர் பயன் அதனில் சார்வற்றான் -தான் சேரும்
    இவ்வுலகைக் கொன்றும் இவன் கொல்லான் கட்டுண்ணான்
    அவ்வினையில் சேரான் அவன்–17–

    அறிவு ஆங்கு அறியப்படும் கன்ம மத்தை
    யறிவான் விதி மூன்றோடு ஆகும் செறிவார்
    கரணம் செய் கருமம் அதில் கர்த்தவாம் மூன்றாம்
    கரணம் செய் கன்மத்து அடைவு–18–

    காண் உணர்வும் கன்மமும் கர்த்தாவும் மும் மூன்றாய்ப்
    பேணும் குணத்தில் பிரியுமதென் றேணுறவே
    யக்குணம் சேர் தண்மை யற வுரைப்பாராம் ஆங்கு அதனை
    மிக்கு உணர்ந்து மன்னா கேள் வேறு–19–

    வன்னாச் சிரம வகை சேர் எஞ்ஞானத்தும்
    கண்ணாருயிர் ஒருமைக் காட்சியாற் திண்ணார
    வேறறவே நோக்கு மிகும் அறிவைச் சத்துவத்தில்
    சேர் அறிவாம் என்றே தெளி–20–

    வேறு படு பூதம் கண் மேவு உயிரும் வெவ்வேறாய்க்
    கூறு படும் வகையில் கூடும் எனத் தேறும்
    அறிவை இடைக்குணத்தில் ஆகி இவ்வண்ணம்
    செறிவது எனவே அறி நீ தேர்ந்து –21–

    ஏதேனும் ஓர் கருமுத்து எல்லாம் பெறலாம் என்
    றாதே நசை பண்ணி அற்பமாய் மீதேயோர்
    மெய்ம்மை யடையா வெறும் அறிவு பிற் குணத்திற்
    பொய்ம்மை புனையும் புணர்ந்து–22-

    உகப்பு வெறுப்பு அன்றி வுயர் நசையும் அற்றே
    மிகத் தனி இயல்வாம் என்று மேவி அகப்பயனில்
    ஆசை ஒழிந்து அங்கு இயலும் அக்கருமம் முக்குணத்திற்
    பேச வரும் மேல் யுயர்த்தி பெற்று–23–

    காம நசை தன்னால் அகங்காரக் காழ்ப்பினிற்
    றாம் மருவும் ஆயாசம் தான் மிக்குச் சேமமென
    நின்று இயலும் அக்கரும நேர்ந்தே இடைக்குணத்திற்
    சென்று இயலும் என்று உரைப்பர் தேர்ந்து–24-

    துக்கத் தொடர்ச்சி பொருள் நாசம் சூழ் பீடை
    ஓக்க வியல் வலிதான் ஒன்றினையும் தக்கறியான்
    மோகத்தால் செய்யும் கருமம் உண்டேற் கடைக்குணத்தின்
    வேகத்தால் ஆகுமே மிக்கு–25–

    ஆர்ந்த பயன் ஆசை யது விட்டு அகங்காரம்
    தீர்ந்து திடனாய் முயற்றி சென்றி யன்று -சேர்ந்து வரும்
    பேர் இழவில் வேறு படாப் பீடுடைய கர்த்தாவாம்
    வீறு இயலும் சத்துவத்தான் மிக்கு –26–

    புகழ் விரும்பிப் புன் பயனை வேண்டிப் பொருளை
    மிக வவ்விப் பீடையினை மேவித் தகவு என்னும்
    சுத்தி உறாது உட் களிப்புச் சோகத் துறும் கர்த்தா
    மத்தியமாம் குணத்தான் மற்று–27-

    நன்மைத் தகான் அறிவு நண்ணான் முயற்றி யுறான்
    வன்மைச் சடன் மறத்தின் மன்னுவான் புன்மை சேர்
    மந்தன் சோம் பன்நெடுக வாதை நினையும் கர்த்த
    கந்தத்தாற்றா மதனாம் தான்–28-

    புந்தியிலும் திண்மையிலும் பூணும் குணப்பிரிவால்
    வந்திவை தான் முன்றாம் வகை யதனைச் சிந்தை திகழ்ந்து
    எல்லாம் பிறிவறிய யான் இயம்பக் கேள் இதனை
    நல்லாய் தனஞ்சயனே நன்கு–29-

    துக்க வியல் அறமும் நல்ல அறமும் காரியமும்
    மிக்க வகாரியமும் மேல் அச்சம் தக்க வரும்
    அஞ்சாமை பந்தம் வீடான்றறியும் புந்தி தான்
    எஞ்சா முதற் குணத்தாம் இங்கு -30-

    தன்மமும் மற்று யதன்மையும் காரியமும்
    புன்மைய காரியமும் போக்குத்தா நன்மை யுறக்
    காணும் வகை யன்றிக் காணலுறும் புத்தி தான்
    பேணும் இடைக்குணத்தைப் பேர்ந்து–31-

    மேவு பொருள் எல்லாம் விபரீதமாகவே
    தாவும் இருள் சேர்ந்து தனஞ்சயனே -யாவதென
    வொன்று மதன்மத்தை வேறுணரும் புத்தி தான்
    சென்று கடைக்குணத்தாம் சேர்ந்து–32–

    உண்மையினால் நெஞ்சை உயிர் புலன்கள் உற்ற செயல்
    வண்மை யறி யோகத்து மன்னி வரும் திறமையினால்
    உற்றே தரிக்கும் உயர் திருதி பார்த்தனே
    யற்றே முதற் குணத்ததாம்–33-

    தன்ம காம அர்த்தங்கள் தன்னையே யாதினாற்
    புன்மை சேர் தன் பயனாற் புந்தித்து -வன்மை சேர்
    சங்கமுடனே தரிக்கின்றானத் திருதி
    யங்க விடைக் குணத்ததாம்–34–

    மன்னும் உறக்கம் பயம் சோகம் வாட்டம் அதந்
    துன்னுமிவை இத்தனையும் துன் மதியால் மன்னி
    இடைவிடாதே மருவும் இத் திருதி பார்த்தா
    கடையிலாம் குணத்தின் காழ்ப்பு–35–

    தான் அமர்ந்து சேர் சுகம் தான் தன் குணத்தான் மூன்று மிகை
    யானபடி கேள் நீ அமர் விசயா வூன மற
    மிக்கு அதனிற் சீலத்தான் மெய்யே உகப்பு எய்துத்
    துக்க முடிவும் செறியும் சூழ்ந்து–36–

    எது முதல் விடம் போல் இன்னாது பின்னது தான்
    மீது வளர்ந்து அமுதமே ஒக்கும் ஒத்து உயிர்ப்
    புந்தித் தெளிவு தகும் பொற் பார் சுகமது தான்
    முந்தித் திகழ் குணத்தின் மொய்ம்பு–37–

    மூளும் பொறி புலனான் முன்னமுதம் போலாகி
    மீளும் பொழுதில் விடம் போலே -நாளும்
    கொடு நிரையத்தே வீழ்க்கக் கூட்டும் சுகம் தான்
    அடும் திகழும் அக்குணத்தின் நட்பு–38-

    தோன்றுழியிற் றுய்ப்பிற் றுளங்கா வுயிர் மயக்கி
    யூண் றுறக்க முண் மடிவோர்ப் பின்மையா லேன்று வரு
    மோகச் சுகமது தான் முற்குணத்திற் பிற குணத்த
    தாகப் புகன்றார் அறிந்து–39–

    பூமி மிசை மானிடரிற் பொன்னுலகின் மன்னுவா
    ராம் இமையோர் தம்மில் அமர்ந்து ஒருவர் தாம் இயலும்
    முன்னைப் ப்ரக்ருதி மூளுந்த முக்குணங்கள்
    தன்னைப் பிரிந்ததிலைத் தான்–40-

    மா மறையோர் மன்னவர்கள் வைசியர்கள் சூத்திரர்க
    ளாம் மனிசர்க்காகி யமர் தருமே தா மருவும்
    தன்மை யமர் குணத்தின் சார்வுடனே வேறு படு
    நன்மை யமரு நயந்து–41–

    சமம் தமம் சார்ந்த தவம் தன்னமர்ந்த சுத்தி
    நமர்ந்த பொறை செவ்வை ஞானம் அமர்ந்த
    இறையை அறி உண்மை யுணர் விக்கரும மாகு
    மறையவர் தம் தண்மை மதம்–42-

    ஸுர்யமும் மிக்கு ஒளியும் தத் துணிவும் தன சமத்தும்
    வைரியமர் நாணாமை வாய்ந்த கொடை சீரியனாய்
    ஒக்கரிய மிக்குமதும் ஓங்கு அரசர் தம் தன்மை
    தக்க கருமமாம் சார்ந்து–43–

    காணி விளைப்பதுவும் காலி யாவை காப்பதுவும்
    வாரியமும் வைசியர்க்கு வாய்த்த தொழில் பேணி அவர்
    மூவருக்கும் ஆளாய் முயலுமதே சூத்திரர்க்கு
    மேவப்படும் தொழிலாம் மிக்கு–44-

    தம் தம் கருமத்துச் சார்ந்தே தரும பயன்
    வந்தடைய லாகு மனிசர்க்கும் சந்தமுடன்
    தன கருமம் நின்று ஒருவன் தன் சித்திக் சார் வகையை
    நன்கு அமரக் கேள் நீ நயந்து –45-

    எவன் பால் பூதங்கள் எல்லாம் பிறந்து இயலும்
    எவன் தான் இங்களிடைப் பரம்பும் மேவியே
    அங்கு அவனைத் தன் கருமத்தாலே அருச்சித்தே
    ஒங்க அவன் சித்தி உறும்–46-

    தன் கருமம் அல் குணத்தைச் சார்ந்திடினு மிக்கியன்ற
    வன் கருமமானவது மற்று ஒன்றி -நன்கு அதுவாம்
    தன்மை சேர் கன்மத்துத் தக்கியல்லால் சார் துயரப்
    புன்மை சாரான் போய்ப் புறத்து–47–

    கூடப் பிறந்த கருமம் குறையுறிலும்
    வீடப் படாது விகல் விசையா -பீடுற்ற
    எல்லா முயற்றியையும் ஏய்ந்து எரியத் தூமம் போற்
    பொல்லாங்கு சூழும் புகுந்து–48–

    எங்கும் துவக்கின்றி ஏலும் மனம் செயித்துப்
    பொங்கு நசையில்லாப் போதத்தால் அங்குத்
    தனி யமர் சந்நியாசச் சார்வதனாற் மேவும்
    வினை யகன்ற மேலாம் வியப்பு–49–

    செவ்வி யுறும் தியானத்தின் சித்தியினைச் சேர்ந்தவவன்
    எவ்வாறு தான் பிரமம் எய்தினான் அவ்வாறு
    சேர்ந்த வதில் இலையாம் சித்தியது சுருக்க
    வார்ந்து எனது பால் நீ யறி–50-

    கோதறு சீரப் புத்தியுடன் கூடித்தன்று இன்மையான்
    மீதியாலும் நெஞ்சை மிக யடக்கித் தீத மரு
    மோசை முதற் பொருள்கள் உள்ளுற விட்டு ஒன்றி வரும்
    ஆசை வெறுப்பு அவையும் அற்று–51–

    தக்க தணியும் இடத்துச் சார்ந்த அறிவு தான் சிறிது உண்டு
    ஓக்க உரை காய நெஞ்சு உள் ஒடுக்கி மிக்கு அமர்ந்தே
    என்றும் தியானமாம் யோகம் சேர்ந்து எவ்விடத்தும்
    ஒன்று நசை விடுதல் உற்று –52–

    ஆங்காரம் யத்தில் செருக்கும் காமமுடன்
    தீங்கார் வெகுளி தான் சேர் சுற்றம் தேங்காது
    நீந்து மமதை நெகிழ்ந்தே நிகழ் சாந்தின்
    வாய்ந்த பிரமத்தானாம் வந்து–53–

    தொண்மைப் பிரம வுயிர் தோன்ற மனதில் தெளிந்து
    புன்மைப் பல சோகம் பூண் நசையின் றன்மை யவித்து
    எப்பொருட்க்கும் ஒத்து என்பால் ஏய்ந்த பரபத்தியினைப்
    தப்பறவே சேரும் சமைந்து–54–

    எவன் நானாவேன் மற்று எவ்வளவின் உண்மையினால்
    ஆவன் ஆங்கு என்னை யறிவது தான் -மேவ நிகழ்
    பத்தி யான் மெய் யுணர்ந்தே பண்பால் எனைப் பின்னே
    முத்தியால் வந்து அடையும் முற்று–55–

    மற்று இக்கர்மங்கள் எல்லாம் மருவி எனைப்
    பற்றிப் பயின்று எங்கும் பார்த்தி யல்லான் அற்ற மந
    மேவும் எனது அருளால் மிக்கடையும் அற்கமற
    ஓவுதல் இல்லாப் பதத்தை யுற்று–56–

    நெஞ்சாற் கருமம் எல்லா நேராக என்னிடை வைத்து
    எஞ்சாம் வெற் பரனாய் எந்நாளும் துஞ்சாத
    புத்தி யோகத்தைப் புணர்ந்து பொருவில் என் தன்
    பத்தி யோகம் பெறு நீ பார்த்து–57–

    என்னை நினைந்த நீ என்றும் இத் துற்கங்கள்
    தன்னிகரில்லா என் அருளால் தான் கடத்தி-பின்னை தனை
    யாங்காரத்தாலே யமர்ந்து நீ கேளாய் ஏற்
    றாம் காதிங்கேந சித்தி தான் –58-

    ஓங்கும் அகங்காரத்தில் உற்றே வுயர் சமரம்
    ஈங்கு முயலேன் என்று இருத்தியேல் ஆங்கு நிறை
    மேவும் துணிவதுவும் மெய்யன்று தன்மை யுனை
    ஏவும் சமயத்தில் ஏய்ந்து–59-

    தன்மை யமர் தன் கருமம் தன்னால் பிணிப்புண்டு
    நன்மை யமர்ந்த வமர் நாணி நீ யுன் மருவு
    மோகத்தால் மீண்டிடினும் உண்டே யவசனாய்
    வேகத்தாற் செய்வுதி நீ மிக்கு –60–

    ஈசன் அவன் ஒருவன் எல்லார் இதயமாம்
    தேசம் அதனில் நிற்கும் சீர் விசயா பாசமுடன்
    எல்லா உயிர்களையும் மாயையினால் திரிக்க
    வல்லான் இயந்திரத்தில் வைத்து–61-

    அந்த அவன் தன்னையே யானாதவன் சரணாச்
    சந்தமுடன் அடை நீ தார் விசயா முந்த வவன்
    தன்னருளால் மேலான சாந்தியையும் சாயாத
    வன் பதமும் நீ பெறுதி வாய்ந்து–62–

    இவ்வாறு ஞானம் உனக்கு இங்கே எழில் மறையிற்
    செவ்வா மறைப்பொருளைச் செப்பினேன் எவ்வாறு
    தன்னியல்வை ஆராய்ந்து சாய்ந்து அதனை இச்சித்தாய்
    நின்னியல்வாற் செய் நீ நிகழ்ந்து–63–

    செவ்வாம்‌ மறைட்பொருளை- செவ்வை யான ரவாஸ்யார்த்தங்களை,
    செப்பினேன்‌…உபதேஸித்‌தேன,
    நின்‌ இய்ல்வால்‌–உன்‌ அதிகாரத்துக்குத்‌ தக்க படி-

    இன்ன மறைப் பொருள்களுக்கு எல்லாம் மிக மேலா
    மென்ன மருஞ்சொல்லின் இறுதி கேள் முன் அமரும்
    இட்டன் றிடன் என்னும் இத்தால் உனக்கு இதமாய்ப்
    பட்டதனைச் சொல்வன் பரிந்து–64–

    இட்டன்‌–இஷ்டன்‌,
    இதமாப்‌ பட்டதனை –இதமாகவுள்ளதை.
    பரிந்துசொல்‌வன்‌–பரிவாகச்‌ சொல்லுவேன்‌,

    என்னை மனனம் பண்ணு என் பக்தனாகியே
    என்னை அருச்சி என்னை வணங்கு என்னையே
    மேவுதிரி மெய் உனக்கு மிக்கறுதி சொன்னேன் நான்
    ஏவு தவற்று என் உகப்பால் உற்று–65–

    என் பத்தனாகியே –. என்னிடத்தில்‌ பிரீதியைக்‌ கொண்டு,
    என்னை மனனம்‌ பண்‌ணு –பிரீதி ரூப மாயிருக்கிற ஸ்மிருதி பரம்பரையைச்‌ செய்‌.
    வேதகம்‌,தியானம்‌, உபாஸனம்‌ முதலிய சொற்களுக்குப்‌ பொருளாய்‌, தரிசனத்துக்கு ஸமானமாயிருக்கும்‌ மிகுக்த
    பிரீதி ரூபமாயிருக்கும்‌ ஸ்மிருதி பரம்பரை யென்சு,]
    அருச்சி–ஆராதனஞ்செய்‌, ஆராதனமாவது–பரிபூர்‌ண சேஷ விருத்தி.
    என்னையே மேவுதி–என்னையே யடைவாய்‌.
    அறுதி—நிச்சயம்‌,

    எல்லா அறங்களையும் இங்கு அற விட்டு என்னையே
    நல்லார் சரணமா எண்ணி யிடு தொல்லாரும்
    பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்
    தவம் தனை ஒழி நீ தான்–66-

    எல்லா அறங்களையும்‌ ௮றவிட்டு…சர்மயோகம்‌, ஞானயோகம்‌, பக்தியோகம்‌ என்கிற மோக்ஷ ஸாதனங்களான எல்லாத்‌ தர்மங்களையும்‌
    என்னுடைய ஆராதன ரூபமாக மிகுந்த பிரீதியோடு உன்‌ ௮திகாரத்‌துக்குத் தக்கபடி செய்து கொண்டே, கீழ்ச சொன்ன படி பலனையும்‌, கர்மத்தையும் ,கர்த்ருத்வத்தையும்‌ விட்டு,
    என்னையே சரணமாக எண்ணியிடு–ஆராத்ய ஸ்வரூபனான என்னையே பலமாகவும்‌ உபாயமாகவும் கருதி சரணம் புகுவாய்‌.
    பாவங்களின் நின்று வுன்னைப் பற்று விடுவிப்பன் நான்–(என்னை யடைதற்கு விரோதிகளாய்‌,
    செய்யத்‌ தகாவற்றைச்‌ செய்கையும்‌, செய்யத் தக்கனவற்றைச்‌ செய்யாமையுமான)
    ஸகல பாவங்களினின்றும நான்‌ உன்னைப் பற்று விடுவிப்பேன்‌.
    தவம் தனை ஒழி–(ஆகையால்‌)நீ சோசம் கை விடு[பக்தி யோகத்தை நாம்‌ செய்ய வொட்டாமல்‌ விரோதியாய் பாதிக்குமவைகளாய்‌
    அநாதி காலமாய்‌ ஸம்பாதிக்கப்பட்டவைகளாய்‌ நாநாவிதங்களாய்‌ அநேகங்களாயுள்ள பாபங்களுக்குத் தக்க
    பிராயச்சித்த ரூபங்களாயும்‌, இருச்சிரம்‌, சாந்திராயணம்‌, கூச்மாண்‌டம, வைச்சுவாரரம்‌, வ்ராதபிவித்திரேஷ்டி, சரிவரத்‌நிஷ்டோமம்‌ போலப்‌ பலவித௩்களாயும்‌-௮னந்தங்களாயும்‌ எத்தனை காலம்‌ ஜீவித்திருந்து அனுஷ்டித்தாலும்‌ அனுஷ்டிக்க உரியவைகளாயுமிருக்கின்‌ற கர்மங்களையும்‌ விட்டு,
    பக்தியோகம் ஆரம்பிப்பதற்‌ காகப்‌ பரம காருணிகனாய்ப்‌ பிராணிகளிடத்தில்‌ ஒரு விசேஷத்தையும்‌ ஆலோசியாமல்‌ அவைகளுக்கெல்லாம்‌ சரண்யனாய்‌
    ஆஸ்ரிதர்களிட த்திலுண்டான வாத்ஸல்‌யத்துக்குக்‌ கடலாயிருக்கின்ற என்னையே சரணகப்‌ பற்று,
    நான்‌ உன்னைக் கீழ்ச சொன்ன பக்தியோக ஆரம்பத்திற்கு விரோதிகளான பாபங்களினின்ரும் விடுவிக்கின்றோம்‌,இதற்காகச்‌ சோகிக்க வேண்டாம்‌ என்று உரைத்‌தலுமுண்டு, |

    இப்பொருளை இல்லாத் தவத்தாற்கும் என்னிடையின்
    மெய்ப்பொருளாம் பக்தி இலா வீணற்கும் சொப்படவே
    இச்சையுடன் கேளார்க்கும் என்னைப் பொறாதற்கும்
    அச்சமுற நீ யுரையேல் ஆங்கு–67–

    இப்பொருளை–( இப்போது நான்‌ உனக்குச்‌ சொன்ன பாம ரஹஸ்யமான) இந்த அரத்தத்தை,
    இல்லாத்‌ தவத்தாற்கும்‌–இல்லாத தவத்தை யுடையானுக்கும்‌ –௮தாவது தவம் புரியாதவனுக்கும்‌,

    என்னைப்‌ பொறாதாற்கும்‌–என்‌ குணங்களைக் கேட்க ஸஹிக்காதவனுக்கும்

    இத்தகையின் மேலா மறைப்பொருளை யேவன் என் தன்
    பத்தரிடை நின்று பரிந்து உரைக்கும் அத்தகையோன்
    அன்பால் பரமாம் பக்தி எய்தி ஐயமற
    இன்பால் எனை யடையும் ஏய்ந்து–68–

    மிகவும்‌ ரஹஸ்யமான இவ் வர்ததத்தை யாவன் ஓருவன்‌ என்‌ பக்தரிடத்தில்‌ பரிவோடு சொல்லுகிறானோ
    ௮வன்‌ என்னிடத்தில்‌ மிகுந்த பக்தியைச் செய்‌து ஸந்தேகமில்லாமல்‌ என்னையடைவான்‌.

    மானிடரால் ஆங்கு அவனின் மற்று ஒருவன் என் உகப்பில்
    தான் இயல்வு மிக்கவவன் தான் இல்லை மேனிகழும்
    எக்காலும் மேதினியில் இல்லையாம் என்னுகப்பில்
    தக்கார்வம் மிக்கு இனியன் தான்–69–

    ௮வனின்‌–அவனைப்போல,
    மேதினிபில்‌–பூமியில்‌,
    இனியும்‌ உண்டாகப் போவதில்லை யென்பார்‌ எக்காலுமில்லை என்கிறார் .
    (அயோக்கியர்களை முந்தி யெடுத்தது, இவ்வர்த்தததை யோக்கியர்களுக்குச சொல்லாமல் இருப்பதைப்‌ பார்க்க அவர்களுக்குச் சொல்‌வது மிகவும்‌ ௮நிஷ்டம் என்கைக்காக என்க .]

    நாம் இருவர் நின்று இயம்பு நல்லறம் சேர் இக்கீதை
    பா மருவி ஓதும் பரிவன் எனைத் -தூ மருவு
    நெஞ்சறிவாம் எச்சத்தால் நேரே இறைஞ்சினன் என்று
    எஞ்சலற யான் மதிப்பன் இங்கு–70–

    செஞ்சறிவாம்‌ எச்சம்‌–ஞான யோகம்‌,
    இறைஞ்சினான் -ஆராதித்தான்‌.
    எஞ்சலற-குறைவற,

    சேர்ந்து ஸ்ரத்தையினைச் சேராத அஸூயை யினை
    யார்நது இதனைக் கேட்க்கும் நரன் ஆனவனுக்கும் தீர்ந்து துயர்
    அற்றே அறிவெய்தும் அன்புடையோர் தம் கூட்டம்
    பெற்றே மகிழும் பெருத்து–71-

    துயரற்று-பக்தி ஆரம்ப பாபக்களினின்றும்‌ விடுபட்டு

    பார்த்தனே நின் ஒருமை பற்றி யாம் சித்தத்தால்
    சேர்க்க இது கேட்டுச் சிறந்தாயே பேர்த்து உன்னை
    மோகத்தைச் செய் மாயம் முற்றும் கழிந்ததே
    போகத்தைச் சேர்ப்பான் புணர்ந்து–72–

    என்று இறையோன் சொல்ல எழில் விசயன் செப்பினான்
    இன்றியலும் மோகம் போய் ஏய்ந்து மதி நின்று நான்
    உன்னருளினால் மயக்கம் ஒன்றும் இன்றிச் சென்று இயல்வன்
    சொன்னது எல்லாம் செய்வன் துணிந்து–73-

    உன்னுடைய பிரஸாதத்தால்‌ விபரீத ஞானம்‌
    போய்‌ ஞானத்தைப்‌ பெருக்கி மயக்கத்தை யொழித்தேன்‌, சொன்னதெல்லாஞ்‌ செய்வேன்‌ என்க,
    [தேகாதிகளே ஆத்மாவென்கிற துரபிமானமும்‌,
    சேதனாசேதன ரூபமான ஸகல பிரபஞ்சமும்‌ பரம புருஷனுக்‌குச்‌ சரீரமென்கிற விஷயமும் தெரியாமல்‌
    நினைத்திருந்த துரபிமானமும்‌,
    நித்திய நைமித்திகமான கர்மம்‌ பரம புருஷனுடைய ஆராதன ரூபமாக அனுஷ்டிக்கப்படுமாகில்‌
    அவனை யடைவதற்கு உபாயமாகுமென்கிற விஷயமும் தெரியாமல்‌
    அதைச் சரீரத்துக்குடலாச நினைத்திருந்த அஞ்ஞானமும் தொலைந்தன.
    ஆத்‌மா பிரகிருதியின்‌ ஸ்வபாவமின்றி அறிவதே ஸ்வபாவ
    மாயப்‌ பரமபுருஷனுக்குச்‌ சேஷப்பட்டு ௮வனால் ஆளப்‌
    படுவதே ஸ்‌வரூபமாயிருக்கிறது என்ற ஞானமும்‌,
    பரம புருஷனுடைய உண்மையை யறியும் படியான ஞானமும்‌,
    பரமபுருஷனுக்குப்‌ பிரீதியை வளர்ப்பதான
    நித்திய நைமித்திக கர்மங்களை யனுஷ்டிப்பதாலும்‌,
    சமம்‌, தமம்‌ முதலிய ஆத்ம குணங்களாலும் பெறவேண்டிய (பக்தி ரூபமாய்ப்‌ பரிண மிக்கி இருக்கிற) பரமபுருஷோபாஸனத்தால்‌ மாத்திரம்‌
    அடையப்படும்‌ பொருளும்‌,
    வேதாந்த விழுப் பொருளும்‌, பரம புருஷனுமான வாஸுதேவன்‌ தேவரீரே யென்ற ஞானமும்‌ எனக்கு உண்டாயின என்பதாம்‌.]

    இவ்வண்ணம் மாயனுக்கும் ஏந்து உயர் சீரப் பார்த்தனுக்கு
    மெய் வண்ணம் வார்த்தை விளைந்த படி செய் வண்ணம்
    மீண்டே நான் கேட்டேன் இவ்வற்புதத்தை இவ்வுடலில்
    பூண்டே மயிர் எறிவாம் பூண்டு –74–

    இப்படி மஹாத்மாவான வாஸூ தேவனுக்கும்‌ பார்த்தனுக்கும் உண்டான அற்புதமாய்‌
    ரோம ஹர்ஷணமான இந்த ஸம்வாதத்தை நான்‌ கேட்டேன்‌ என்க
    செவ்வண்ணம்‌ என்றும்‌ பாடம்‌,

    சீரார் வியாதன் திருவருளால் மிக்குயர்ந்த
    ஏரார் மறைப்பொருளாம் இவ் யோகத்தைப் பேர் ஆண்மைக்
    கண்ணன் அவன் தானே கருத்தோடு உரைத்து அருள
    வெண்ணமுடன் கேட்டேன் நான் இங்கு–75-

    யோகத்தை நேரே யருளிச் செய்கிற யோகேஸ்வரனான கண்ணன்‌ பக்கல்‌ நின்றும்‌
    இந்தப்‌ பரமான குஹ்ய தமத்தை வியாஸ மகரிஷயினுடைய பிரஸாதத்தாலே கேட்டேன்‌ என்க,

    மன்னவா கேசவனும் பாண்டவனும் வார்த்தியினைச்
    சொன்னவா நான் நினையும் தோறு எல்லாம் இன்னவாறு
    என்ன ஒண்ணாது அற்புதமாய் இயல்கின்ற புண்ணியமாப்
    பன்ன வுகப்பவன் பயின்று–76-

    ராஜாவே! கேசவார்ஜுனர்களுடைய, புண்யமாய்‌ ௮த்புதமான இந்த ஸம்வாதத்தை
    நினைக்க நினைக்க எனக்கு ஸந்தோஷமுள்ளடங்காமல்‌ வருகின்றது என்பதாம்‌.

    அங்கு மிக அற்புதமாம் அண்ணல் வடிவினையும்
    ஈங்கு நினைதோறும் எழ வியப்பாய் ஓங்கும்
    உகப்பு மிகு மேன்மேலும் உற்று என்று உரைத்தான்
    மிகப் புகழ் சேர் சஞ்சயன் தான் மிக்கு–77-

    கிருஷ்ணனுடைய ௮த்புதமான அந்த ரூபத்தை நினைக்க நினைக்க எனக்குப்‌ பெரிய விஸ்மயமுண்டாகா நின்றது.
    பின்னையும்‌ பின்னையும்‌ பிரீதனாகா நின்றேன்‌ என்க,

    எவ்விடத்தான் யோகத்துக்கு ஈசனாம் கண்ணன் தான்
    எவ்விடத்தான் வில்லேந்தும் எழில் விசயன் அவ்விடத்தே
    வாய்ந்த திருவிசை யம் வாழ்வு வள நீதி திட
    மேய்ந்தன வென்றே மதிப்பன் யான்–78–

    எங்கே யோகேஸ் வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான்‌ எழுந்தருளி யிருக்கின்றானோ,
    ௮வன்‌ திருவடிகளையே நம்பிபிருக்கின்ற வில்லுங்கையுமான அர்ச்சுனன்‌ எங்கே விளங்குகின்றானோ
    அங்கு லஷ்மியும்‌, விஜயமும்‌, விபூதியும்‌, நீதியும்‌ சாஸ்வதமாய்‌ நிலை நிற்கும்‌ என்பது என்னுடைய ஸித்தாந்தம்‌,

    தன்மைக் கருமம் தகு குலத்தின் தூய்மை யுடன்
    நன்மை பயில் சார நன்கு அறியத் தொன்மைப்
    பரமன் அருள் கீதை பதினெட்டாம் ஒத்தாம்
    சாமம் உரைத்து சார்ந்தது இது தான்

    ————

    த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

    உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
    யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
    தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
    மாவனபின் னாறோத் தமர்ந்து.

    உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
    உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
    இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
    திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
    குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
    பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

    ஸந்யாஸம் கன்மத்தில் சாரும் தியாகத்தில்
    முன் யான் பிறிவொருமை முற்று அறியேன் –பின் பின் யான்
    தோன்றாது நீ இதனைச் சொல் என்றான் பார்த்தன் அதற்கு
    என்று அங்கு உரைத்தான் இறை–1–

    காமக் கருமங்கள் கை விடுதல் ஸந்நியாசம்
    சேமத்தது என்று சிலர் உரைப்பர் -ஏமத்தால்
    எக் கருமம் அப்பேறும் இகழ்வும் தியாகம் எனச்
    சிக்கெனவே சொல்வர் சிலர் –2-

    ஏதம் போற் கன்மம் இகழப்படும் என்று
    போதர் சிலர் உரைப்பர் புந்தி யான்–மீதென்றும்
    எச்சம் தவம் தானம் ஈங்கு இகழ்வது அல்லது என
    நிச்சம் சிலர் உரைப்பர் நின்று–3-

    அந்தத் தியாகத்து அறுதியினை என் பால் கேள்
    சந்ததிகள் பாரதர்கள் தம் தலைவா -முந்துறவே
    யான் பகர்ந்தேன் மூன்று வகை என்றே தியாகத்
    தான் பயனச் சங்கந் தவிர்ந்து –4-

    பாவிய சீர் எச்சம் பயிலும் தவம் தான்
    மேவி இகழாது என்று முற்றியல மேவினவை
    யாவின் பால் ஆங்கு அவை தானான அறிவினர்க்கும்
    பாவனமாம் என்றும் பயின்று–5–

    ————-——————-

    பின்னுரை

    தூய கருமங்களினால் சத்வம் மிக யுண்டாக்கி
    ஏய உணர்வால் உயிரின் ஈறு அறிந்து -மாயனிடை
    முத்தி யுறும் சிந்தை முயலாசை முன் பணிவாள்
    பத்தி யுறல் கீதைப்பயன் –1–

    எவ்வறமும் சொல்லி யிறுவாம் ஸ்லோகத்தால்
    செவ்வறமாம் தன் சரணாச் செப்புதலால் அவ்வறத்துத்
    தான் துணையா மாயன் தனித்துத் தனை அளிக்கும்
    வான் துணையாம் என்று இருத்தல் வாய்ப்பு –2-

    நெஞ்சுள் கலந்து என்னை நேர் நினைத்து நூல் இட்டுச்
    செஞ்சுடர் சேர் தாற்பரிய தீபத்தால் பஞ்சவர் தம் தேர்ப்பாகன் கீதைச் சிறந்த பொறுப்பில் காட்டினேன்
    நேர்ப்பாகு நன்றே இனிது –3

    மாயனருள் கீதை மன்னு பொருடன்னைத்
    தூய பெரும்பூதூர்த்‌ தொன்முனிதன்‌–மேய
    தகையான்‌ மணவாள மா முனிவன்‌ சொன்னான்‌
    தொகையாரும்‌ லெண்பாச்‌ சுரந்து.

    சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
    சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் – கட்டு எழில் சீர்க்
    கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
    சீமான் அடி சேர்வர் சென்று.-ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

    ————–————-——————-

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-