Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –7–ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –சூர்ணிகை–321–365—

August 9, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்

இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –

———–

சூரணை -322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –

—————

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –

—————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –

————

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –

இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –

—————–

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

————-

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-

ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே

ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –

—————–

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –

——————

சூரணை -330-

நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே

————-

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-

ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –

——————

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –

இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –

————

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்

————-

சூரணை -334-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –

————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –

இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –

சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –

அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –

ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –

——————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –

——————

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –

—————

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –

இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –

—————-

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –

———————–

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –

————-

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –

—————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –

———————-

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –

————

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்

இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்

இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –

————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-

குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-

குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –

மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –

தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –

————

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து

இனி

இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –

அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –

————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –

இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –

—————

சூரணை -351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –

—————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் உண்டு  என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –

—————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –

————-

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –

————-

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –

————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –

——————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –

ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –

————-

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –

கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –

———–

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –

———–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –

————-

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –

————–

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –

—————

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்

இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –

இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –

இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –

அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்

உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்

ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து

இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்-சூர்ணிகை —308–320–

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –

————–

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –

இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –

பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –

—————

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –

—————

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –

———————-

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –

—————–

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –

—————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –

———-

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –

———–

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –

—————

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )

ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –5-பிரபன்ன தினசரியா பிரகரணம்-சூர்ணிகை -244–307-

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ –என்று தொடங்கி
மங்களா ஸாஸனமும் அனுகூல ஸஹ வாஸமும் பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் சதாச்சார்ய ப்ரஸாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்று இத் தின சரிதையிலே ப்ரஸ்த்துதமான இந்நாலு அர்த்தத்தையும் சோத்ய பரிஹார ரூபேண விஸ்தரித்து அருளிச் செய்கிறார் மேல்
எங்கனே என்னில் -மங்களா ஸாஸனம் இத்யாதி

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்துள்ள ஸர்வ ரக்ஷகனுக்கு
அஞ்ஞனாய்-அஸக்தனாய் -அபூர்ணனாய்க் கொண்டு -தத் ஏக ரஷ்ய ஸ்வரூபனான தான் ரஷா ரூபமான மங்களங்களைப் பிரார்த்திக்கை தன் ஸ்வரூபத்துக்குச் சேராதது அன்றோ என்று சோத்யமாக
ஞான தசையில் -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார் -அதாவது

அவ்வதிகாரிக்கு -அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம் -என்று பிரதமத்திலே பிறக்கும் ஞான தசையில் தான் ரஷ்யனாகவும் அவன் ரக்ஷகனாகவும் பிறக்கும் அனுசந்தானம் யதா வஸ்திதமாய் இருக்கும் –
அந்த ஞானத்தினுடைய பரிபாக அவஸ்தையான ப்ரேம தசையில் வந்தால் அவ்வனுசந்தானம் விபர்யாஸ ஆஸ்ரய அவஸ்திதமாய் இருக்கும் –

—————–

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

அவை தான் எங்கனே என்னில் -ஸர்வ பிரகார ரக்ஷகனான அவனுடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறபடியே
அவனே ரக்ஷகனாக அத்யவசித்துக் கொண்டு தன் ஸ்வரூபத்தைக் காக்கும் –
அவ்விலக்ஷண ரூபத்துக்கும் ப்ரகாசகமாய் அத்யந்த அபி ரூபமான அவனுடைய விக்ரஹத்தில்
புஷ்ப ஹாஸ ஸூ குமாரமான ஸுகுமார்யத்தை அனுசந்தித்தால்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே -என்றும்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்றும்
இத்யாதியில் படியே தன்னை ரஷா சாதனமாக நினைத்து அவனைக் காக்கத் தேடும் –

—————-

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

உபய ஸ்வரூப அனுரூபமான இவ்வநுஷ்டானம் எங்கே கண்டோம் என்ன –
இது சிஷ்டாசார ஸித்தம் என்னும் இடத்தை சக்ரவர்த்தி ஸ்ரீ ஜனக ராஜன்-என்று தொட்ங்கிப் பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார்

பெருமாள் பிராட்டியைத் திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க மத்யே மார்க்கே பரஸூ ராமன் -என் வில் வலி கண்டு போ -என்று
பெருமாளோடே எதிரிட்ட தசையிலே சக்ரவர்த்தி முன்பே தாடகா தாடகேயருடைய நிரசன பிரகாரத்தைக் கேட்டிருக்கச் செய்தேயும்
அப்பரஸூராமனை -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணஸ் ச மஹா யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று
பெருமாள் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே சரணம் புகுந்து அவன் தோற்றுப் போனமை கேட்டிருக்கச் செய்தேயும்
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட ப்ரமுதிதோ ந்ருப புனர் ஜாதம் ததா மேநே ஸூத மாத்மாந மேவ ச -என்று
தானும் பெருமாளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருக்கையாலும்

ஜனக ராஜன் பிராட்டியைப் பெருமாளுக்கு நீர் வார்த்துக் கொடுத்த தசையிலே தநுர் பங்கத்தால் வந்த சக்தியைக் கண்டு வைத்தும்
ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே -என்று
அச்சேர்த்திக்கு என் வருகிறதோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகையாலும்

தலை நீர்ப்பாட்டிலே பெருமாள் வைபவம் எல்லாம் அறிந்து இருக்கிற பிராட்டி அவர் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே
பதி சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான்ய பிதத்த்யுஷீ பூர்வாம் தீஸம்
வஜ்ர தர -என்று தொடங்கி-திக் பாலர்களை-அவருக்கு ரக்ஷகராக அபேக்ஷிக்கையாலும்

விஸ்வாமித்ரன் அப்பெருமாளை அத்வர த்ராணார்த்தமாக அழைத்துக் கொண்டு போகிற போது நடுவே
தாடகை பெரிய ஆர்ப்பரவத்தோடே யுத்த உன்முகையாய் வந்து தோன்ற
ஊன ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந -ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷசை -என்று
இவரைப் புறப்பட விடுகைக்கும் இசையாதே கண்ணழிவு சொன்ன சக்கரவர்த்திக்கு
அஹம் வேத்மி வஸிஷ்டோ வேத்தி -என்று அவருடைய ஸர்வ ஸக்தி யோகத்தைச் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தவன் –
அனந்தரம் தாடகையைக் கண்டவாறே அத்தை மறந்து –
விச்வாமித்ரோபி ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத–என்று
த்ரிகாலஞ்ஞனானவன் அவர்களுக்கு மங்களங்களை ஆசாசிக்கையாலும்

ஐந்தர வியாகரண பண்டிதனான திருவடி பெருமாள் தோள் அழகிலே ஈடுபட்டு
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந வி பூஷிதா -என்று
ஆபரணங்களாலே அரண் செய்ய வேண்டும்படி அதி ஸூந்தரமான திருத் தோள்களை அவற்றை ஒழிய இப்படி ஆவிஷ் கரிக்கைக்கு அடி என் என்று அதி சங்கை பண்ணுகையாலும்

ஸூக்ரீவ மஹா ராஜர் பெருமாள் பக்கல் பரிவாலே சரணாகதரான ஸ்ரீ விபீஷணப் பெருமாளை
வத்யதா

—————–

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இப்படி விசேஷஞ்ஞரே அன்றியே அவிசேஷஞ்ஞரையும் அதி சங்கை பண்ண வைக்கும் அவ்விஷய வை லக்ஷண்யம்
என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் -இளைய பெருமாள் என்று தொடங்கி -அதாவது –
ஸ்ரீ குஹப்பெருமாள் இடத்திலே பெருமாள் எழுந்து அருளின போது -அவர் பக்கல் பரிவாலே பங்காகப் படுத்து
அவரைப் பள்ளி கொள்ளப் பண்ணுவித்த அநந்தரம் அப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் வெளிக் காவலாக நடை மதிள் இட்டால் போலே
கையும் வில்லுமாய்க் கொண்டு காவலாக வருகிற இளைய பெருமாளைக் கண்டு -ஒரு தம்பி இவரைக் காடேற ஓட்டினான்
இவர் என் செய்ய இப்படி இடம் பார்க்கிறாரோ என்று ஸ்ரீ குஹப்பெருமாள் அதி சங்கை பண்ணி அவர் இட்ட அடியிலே தாமும் அடி இட்டு
அங்கனே யாகில் அவரை அழித்தும் பெருமாளை நோக்கக் கடவோம் என்று பிடித்துக் கொண்டு வாரா நிற்க
அவர் ஞாதி -இவன் க்ரூர ஹ்ருதயனான வேடன் -இவ்விருவரும் இவரை என் செய்யப் புகுகிறார்களோ என்று அதிசங்கை பண்ணி
ஸ்ரீ குஹப்பெருமாளுடைய பரிகர பூதரானவர்கள் ஸ்வாமிகள் என்று பாராமல் இவ்விருவரையும் அழியச் செய்தாகிலும்
பெருமாளை நோக்குகையிலே உத்யுக்தரானார்கள் இறே என்கிறார் –

—————-

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஒரு நாள் இத்யாதி -இப்படி இவர்களுக்குப் பரிவுண்டாயிற்று அவ் விஷயத்தில் சிரகால வாஸனையாலே ஈடுபட்டோ என்னில்
அங்கன் அன்று –
ராம கமல பத்ராஷ -ஸர்வ சத்த்வ மநோ ஹர -என்கிறபடியே
ஸர்வ சத்த்வ மநோ ஹரமான அவ்வழகிலே ஈடுபட்டு
ஸதா பஸ்யந்தி -பண்ணினார் படுவுற்றை ஒரு நாள் அது கண்ணுக்கு இலக்கான மாத்ரத்திலே பட்ட பாடு இறே இது என்கிறார் –

—————

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே-என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இவர்கள் இத்யாதி -கீழ்ச் சொன்ன இவ் வதிகாரிகள் இவ் வர்த்தத்தில் ஆஸ்திகராய்
யதா அனுஷ்டானம் இல்லாத அஸ்மாதாதிகள் கோடியிலே அந்வயித்த மாத்ரம்
என்னும்படி யாயிற்று இவ் வர்த்தத்தில் யாதாவான பாவ பந்தமுடைய ஆழ்வார்களுடைய தசை –

—————

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்-

ஆழ்வார்கள் எல்லாரையும் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தத்தில் அனுஷ்டாதாக்களான மற்றுள்ள ஆழ்வார்கள்
எல்லாரையும் போல் அல்லர் -கேவலம் ப்ரேம பரவசரான பெரியாழ்வார் –

——————

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –-இவர்க்கு இது நித்யம் –

அது எங்கனே என்னில் -அவன் வடிவழகு அவர்கள் நெஞ்சில் உற்று இருந்தால் அத்தைத் தங்கள் அனுபவிக்க ஆசைப்படுவது ஒழிய
அவ்வடிவழகுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை -அங்கும் இங்கும் -இத்யாதிகளிலே காதாசித்கமாக ஓரொருக்கால் உண்டாம் அத்தனை –
இப்பெரியாழ்வாருக்கோ -மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -என்று தொடங்கி
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -என்றும்
மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் -என்றும்
உறகல் உறகல் -என்று தொடங்கி விஷ்ணு சித்தராகையாலே தம் திரு உள்ளத்திலே அவ்வஸ்துவை சேமம் கொண்டு
பள்ளியறை குறிக்கொண்மின் -என்று இத்யாதிகளாலே
பரிந்து நோக்குகையே பணி யாகையாலே இவருக்கு நித்யம் -என்கிறார் –

————–

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அவ்வளவும் அன்று -அவ்வாழ்வார்கள் -காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று ஆழங்கால் படுகிற
அவன் வைலக்ஷண்யம் தானே
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சுகிற இவருக்கு தரித்து நின்று மங்களா ஸாஸனம் பண்ணுகைக்கு
ஈடான நிலமாய் இருக்கும் –

————————

சூரணை -253-

அவர்களுக்கு-உபய சேஷத்வத்தையும் அழித்து-ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து இத்யாதி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ -என்றும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் –
உனக்குத் திரு உள்ளமான படி செய்து அருளு என்று இருக்கும் படியான பகவத் சேஷத்வத்தை உடையரானவர்கள்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே இழிந்தும்
அவ்வதி ப்ரவ்ருத்திகள் ஆகாது என்று ததீயரை -உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று உபேக்ஷித்துப் போரும் படி
உபய சேஷத்வத்தையும் அழித்து -மங்களா ஸாஸனத்துக்கு வாய் திறக்க ஒட்டாத படி ஸ்வரூபத்தை மதி மயங்கப் பண்ணும்
வை லக்ஷண்யம் தானே -இப்பெரியாழ்வாருக்கு
உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்றும்
மங்கையும் பல்லாண்டு -என்றும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் -இத்யாதிகளாலே
பகவத் பாகவத விஷயங்களிலே மங்களா ஸாஸனத்தைப் பண்ண அவ்வுபய சேஷத்வ ஸித்திக்கும் ஹேதுவாய்
அம் மங்களா ஸாஸனம் சரமாவதி யாகையாலே அஸ் ஸ்வரூபத்தை பாரங்கதமாக்கும் என்கிறார் –

——————-

சூரணை -254-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

இனி -பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –என்று தொடங்கி -இவருக்கு இது நித்யம் என்றது தன்னையே விசதமாக்குகிறார்
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –இத்யாதி -அதாவது
அங்குல் யக்ரேண தான் ஹந்யாம் -என்றும்
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்றும்
இத்யாதிகளாலே நிவ்ருத்த பயரான மஹா ராஜ பரங்குசாதிகளைப் போலே அன்றிக்கே
அவன் மல்ல வர்க்கத்தை அநாயாசேந அழித்த தன் மிடுக்கைக் காட்ட அது தனக்குப் பல்லாண்டு என்று பயப்படுவது
அநந்ய ப்ரயோஜனரான தமக்குப் பிரதிகூலரான கேவலரையும் ஐஸ்வர்யார்த்தி களையும்
மங்களா ஸாஸன அர்த்தமாக அழைத்து சங்கதராய் அவர்களோடே திருப்பல்லாண்டு பாடி அனுகூலராக்கிக் கொள்வது
கதே ஜலே சேது பந்தனம் பண்ணுவாரைப் போலே அன்று
பாழாளாகப் படை பொருதானுக்கு -இத்யாதிகளாலே
முன்பு அவன் பண்ணின அபதாநங்களுக்கு அக் காலத்தில் உதவப் பெறாத இழவுக்கு இன்று இருந்து வயிறு பிடிப்பது
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்று
அவ் விலக்ஷண வஸ்துவை ப்ராபித்த அநந்தரம் அந்த பிராப்திக்கு பலமும் இம் மங்களா சாஸனம் என்பது
அப் பலாதிகாரிகளாய் -அஸ்தானே பய சங்கிகளுமான அநிமிஷரைப் பார்த்து
உறகல் உறகல் -என்ற பாட்டின்படியே -உபதேசிப்பதாய்க் கொண்டு
இம் மங்களா சாஸனமே இவருக்கு விருத்தியாய் இருக்கும் என்கிறார் –

——————

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்-தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

அல்லாதவர்களைப் போலே -இத்யாதி -இப்படி ப்ரயோஜனாந்தர பரரோடு -அநந்ய ப்ரயோஜனரோடு வாசியற இவர் உபதேசிக்கும் இடத்தில்
அல்லாத ஆழ்வார்கள் -ஆச்சார்யர்களைப் போலே உபதேசிக்கிற அர்த்தத்தைக் கேட்கிறவர்கள்
பகவத் விமுகராகையாலே -தனியரான ஸம்ஸாரிகளுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும்
பகவத் குண அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்குத் துணைத் தேட்டமாம் படி
தனியராய் இருக்கிற வக்தாக்களான தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும் அன்றியே
ஆளுமாளார்-என்கிற பாட்டின் படியே ஆழ்வாரை ஒழிய அநு சரர் இல்லாத படியாய் அத்விதீய ஸுகுமார்யத்தை யுடைய ஈஸ்வரன்
தனிமையைத் தவிர்க்கைக்காக வாய்த்து திருக்கோட்டியூர் நம்பி அஷட் கர்ணமாக உபதேசித்த அர்த்தத்தை அவ்வாச்சார்ய வார்த்த
அதி லங்கனம் பண்ணியே யாகிலும் பெரிய பெருமாளுடைய மங்களா ஸாஸன அர்த்தமாகப் பெரிய திரு மண்டபத்திலே பேர் ஓலக்கமாக வைத்து உபதேசித்த பாஷ்ய காரரும்
திருப் பல்லாண்டிலே அநந்ய ப்ரயோஜனரோடு ஓக்க ப்ரயோஜனாந்தர பரரையும் அழைத்து ஆள் தேடும் ஐவரும் உபதேஸிப்பது -என்கிறார் –

————–

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்-பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –

அல்லாதார்க்கு -இத்யாதி -அல்லாத ஆழ்வார்கள்
நின்னலால் இலேன் காண் -என்றும்
என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ -என்றும் சொல்லுகையாலே
அவனைக் கண்டு அனுபவித்த போது சத்தை யுண்டாய்
அவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே சத்தா பலமான ஸம்ருத்தியுமாக இருப்பர்கள்
இப் பெரியாழ்வாருக்கு -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற அன்றே தொடங்கி மங்களா ஸாஸன ஏக தத்பரராய்ப் போரு கையாலே
அவ்விரண்டுமே மங்களா ஸாஸனத்திலே என்கிறார் –

——————–

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை அநு சந்தித்தால்-ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே-நமக்கு எல்லாம்-யாத்ரையாக வேணும் –

உகந்து அருளின நிலங்களில் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தம் சிஷ்டாசார ஸித்தமான பின்பு இதில் ஆஸ்திக் யத்தையும் ஆதரத்தையும்
யுடையோமாய்க் கொண்டு போருகிற நமக்கு எல்லாம் அத்யந்த விலக்ஷணனாய் வைத்து அதி ஸூ குமாரமான வடிவோடே
அர்ச்சாவதார ரூபியாய்க் கொண்டு அவன் உகந்து அருளின அருளின நிலங்களை அனுசந்தித்தால்
விசேஷித்து மங்களா ஸாஸனம் ஒழியச் செல்லாத விஷயத்தில் நமக்கு தேஹ தாரண அர்த்தமான ஊணுக்கும் உறக்கத்துக்கு உட் பட அவசரம் இன்றிக்கே
இவ் வாழ்வாருடைய மங்களா ஸாஸன யாத்ரையே தேஹ யாத்ரையாம்படி வர்த்திக்க வேணும் -என்று விதித்து அருளுகிறார் –
அன்றிக்கே
இவ்வதிகாரிக்கு -ஊணும் உறக்கமும் இன்றிக்கே -என்றது
ஸோஸ்நுதே -இத்யாதில் படியே
ஓவாத ஊணாக உண்ணப்படும் பகவத் குண அனுபவ ஸூக ரூபமாகிற உறக்கமும் இன்றிக்கே -என்றுமாம் –

————————-

சூரணை -258-

ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

ஆகையால் இத்யாதி -ஆகக் கீழே -மங்களா ஸாஸனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ -என்று சங்கித்து ப்ரேம தசையிலே வரும்
மங்களா ஸாஸனம் ஸிஷ்டாச்சார ஸித்தமாகையாலே -அநந்ய ப்ரயோஜனர்க்கு எல்லாம் இதுவே அநுஷ்டேயம் என்று நிர்ணயித்து
இப்படி இது ஸ்வரூபத்தோடே சேருமதாகையாலே மங்களா சாஸனமே ஸ்வரூப அநு குணம் என்று பரிஹரித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்-
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப் போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

இனி அநு கூலர் ஆகிறார் -என்று தொடங்கி -அநு கூல ஸஹ வாஸமும் -என்று கீழே சொன்ன
ஸஹ வாஸ யோக்யருமான சரம அதிகாரிகளுடைய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு ஸஹ வாஸத்துக்கு அநுகூலராவார் விசதமான ஞானம் என்ன -அந்த ஞான விபாக தசையான பக்தி என்ன
அவ் விரண்டின் கார்யமாய் வருகிற இதர விஷய வைராக்யம் என்ன -இவை ஓரொன்றை அவ்விஷயத்திலே இட்டு மற்றை இரண்டையும் மாற்றிப் பார்த்தால் –
ஒரு பாத்ரத்திலே இருந்த பண்டத்தை ஒழித்து மற்ற ஒரு பண்டத்தை இட்டு அத்தைப் பூரித்துப் பார்த்தால் அது இருக்குமோ பாதி அவை ஓரொன்றே பரிபூர்ணங்களாய்
வசதி ஹ்ருதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமான் ஜகதோஸ்ய சவும்ய ரூப
ஷிதிர ஸமதிரம்ய மாத்ம நோந்த கதயதி சாருதயைவ சால போத -என்னுமா போலே
அவர்கள் திருமேனியிலே அவை தெரியக் கண்டு படி எடுத்துக் கொள்ளலாம் படி வர்த்திக்கிற மங்களா ஸாஸன கதாரகரான சரம அதிகாரிகள் என்கிறார் –

——————-

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்-தீரக் கடவதாய் இருக்கும்

ஆனால் இவர்களோட்டை ஸஹ வாஸம் சிலருக்கு உத்தாரக ஹேதுவாகக் கண்ட இடம் உண்டோ என்ன
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹ்ருதீ கரித்து -ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வர்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு -நம் அசல் அகத்தில் இவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற எமதூதரும் வந்து ப்ரவேசிக்க
இவன் கையும் திருப்பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய்ப் பிரவேசித்துக் கிடக்க
அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க -அத்தைக்கு கண்டு அப்பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி –
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித் திருவடிகளில் சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே
அப்படி ஒரு விளை நிலமானது நீர் நிரம்ப நின்றால் அத்தோடு ஒத்த நிலமும் அதில் பொசிவாலே தரித்துக் கிடக்குமா போலே
கீழ்ச் சொன்ன ஞான பக்தி வைராக்யங்கள் இல்லாதாருக்கும் அவற்றில் பூர்ணரான அவ்வதிகாரிகளோட்டை ஸம்பந்தத்தாலே
ஸம்ஸார வெக்காயத்தால் வந்த உறாவுதல் தீர்ந்து சத்தை தரிக்கும்படி யாய் இருக்கும் என்கிறார் –
கேதாரஸ் யேவ கேதாரஸ் ஸோத கஸ்ய நிரூ தக
உபஸ்நேஹேந ஜீவாமி ஜீவந்தீம் தாம் அநு ஸ்மரன்-என்றார் இறே பெருமாளும் –

————

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

இனி -ஆறு நீர வர அணித்தானால் – என்று தொடங்கி -அவர்களோட்டை ஸஹ வாஸம் இப்படி சத்தா ஹேதுவாம் அளவே யல்ல அவர்களுடைய
ஸ்வ பாவ விசேஷங்களும் தனக்கே பிரதிபன்னமாம் படி தன்னடையே பலித்து அறும் என்கிறார் –
அது எங்கனே என்னில் -காவேரி நீர் வர அணித்தானால் மணல் ஈர்க்கை முதலாக மற்றும் அதுக்கு ஈடான அடையாளங்கள்
ஸஹ்ய பர்வத ஸம்பந்த மாத்ரத்தாலே ஸம் பிரதிபன்னமாக உண்டாமா போலே இவ்வதிகாரிக்கும் பகவத் பிராப்தி அணித்தனவாறே
பரம ஆர்த்தரானவர்களுடைய உத்தமமான ஸ்வபாவ விசேஷங்கள் இவர்களுக்கும் ஸ்வயமேவ வரக்கடவதாய் இருக்கும் –

———————–

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று- தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

இவற்றை இத்யாதி -இஸ் ஸ்வ பாவ விசேஷங்களைக் கொண்டு அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த தனக்கே
இனி ஸம்ஸரிக்கைக்கு ஹேது வல்லாத சரம சரீரம் இது என்று ஸ்வயமேவ நிர்ணயிக்கலாய் இருக்கும் -என்கிறார் –

—————-

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

ஆக -கீழ் –
ஸஹ வாஸ யோக்யரான அனுகூலருடைய லக்ஷணத்தையும் –
அஸ் ஸஹ வாசத்தால் வரும் பல விசேஷங்களையும்
அருளிச் செய்து
இனி பிரதிகூலராவார் -இத்யாதியாலே –
பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் -என்று கீழ்ச் சொன்ன ஸஹ வாஸ யோக்யர் அல்லாத பிரதிகூலருடைய பேதங்களை ப்ரதிபாதிக்கிறார் –
பிரதிகூலராகிறார் -இத்யாதி -காண்கிற தேஹமே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்களைத் தொடங்கி
ஒருவருக்கு ஒருவர் ஆதிக்யம் தோற்றும்படியான க்ரமத்திலே அவர்களை அருளிச் செய்கிறார் –

—————

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

இவர்களை ஸஹ படிக்கையாலே வந்த ஸாம்யத்தாலே அந்யோன்யம் அபேத சங்கையைத் தவிர்க்கைக்காக இவர்களுக்கு
உத்தேச்யரும் -உபாய உபேயங்களும் பேதித்து இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேச்யர் –தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–

2-ஸ்வ தந்த்ரர்க்கு -உத்தேச்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-

3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –

4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –

5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான் யவன் -என்கிறவன் –
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அந்த பேதம் தான் எங்கனே என்னில் –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆதரணீயர் தாரகாதிகளாலே அத்தேஹத்தை வர்த்திப்பிக்குமவர்கள்
அஸ்திரமான தேஹமே ஆத்மாவாக அத்யவசித்து இருக்கையாலே அஸ்திரமான அர்த்தமும்
புத்ர பஸ் வாத்ய ஐஹிக போகமும் -அவர்களுக்கு உபாய உபேயங்கள் என்கிறார்

ஸ்வ தந்த்ரருக்கு இத்யாதி –
இனி தேஹ அதிரிக்தனான ஆத்மா ஒருவன் உளன் என்று அவன் ஞாதாவாய் கர்த்தாவாய் இருக்கும் என்னும் இடம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே
அந்த ஸாஸ்த்ர ஞானத்தாலே தங்களை ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி இருக்குமவர்களுக்கும்
ஆதரணீயர் கீழ்ச் சொன்ன ஐஹிகத்தில் விலக்ஷணமான ஸ்வர்க்காதி போக ப்ரதரான அக்னி இந்த்ராதி தேவதைகள் –
இவர்களுக்கு உபாயம் -ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத=இத்யாதிகளால் சொல்லப்படுகிற ஸ்வ யத்ன ரூபமான கர்ம அனுஷ்டானம்
இவர்களுக்கு உபேயம் -ஸ்வ போக்த்ருத்வ ரூபமான ஸ்வர்க்காதி போகம்

அந்நிய சேஷ பூதர்க்கு -இத்யாதி
ஸ்வரூபம் ஸ்வ அதீனம் இல்லாமையை லோக வேதங்களிலே காண்கையாலே சேஷத்வத்தை இசைந்து அதில் ஆபாத ப்ரதீதி ப்ரஸித்தரான
பகவத் வ்யதிரிக்தருக்கு சேஷம் என்று இருப்பார்க்கு உத்தேச்யர் ஜகாத் ஸ்ருஷ்ட்டி யாதிகளிலே நியுக்தரான ப்ரஹ்மாதிகள்
இவர்களை ஆராதிக்கையும்
ஏதா ஸாமேவ தேவதா நாம் ஸாயுஜ்யம் -என்கிறபடியே இவர்களுடைய போக்ய ஸாம்யா பத்தியும் உபாய உபேயங்கள் என்கிறார் –

உபாயாந்தர நிஷ்டருக்கு -இத்யாதி –
அங்கன் இன்றியே ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷம் என்னும் இடத்தை ஆச்சார்ய உபதேசாதிகளாலே அறிந்து வைத்து
அவனையே பற்றாதே இதர சாதன அனுஷ்டான பரரானவர்களுக்கு ஆதரணீயன்
அவ்வுபாயத்துக்கு
யஜ்ஜேந தாநேந -என்கிற கர்ம ப்ராதான்யத்தாலே வேதத்தில் பூர்வ பாகத்தில் ஆராத்யரான அக்னி இந்த்ராதி
தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸர்வேஸ்வரன் –
இவர்களுக்கு உபாயம் -உபய பரிகர்மி ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோகைக லப்ய -என்கையாலே கர்ம ஞானாதிகள்
பேஜஷம் பகவத் ப்ராப்திர் ஏகாந்த அத்யந்திகீ மதா-என்கையாலே உபேயம் பகவத் அனுபவம் –

ஸ்வ ப்ரயோஜன பரர்க்கு -இத்யாதி –
சாதனாந்தரம் துஷ் கரத்வாதி தோஷ துஷ்டம் என்று தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஈஸ்வரனே உபாயமாகத்
தங்கள் ஸ்வீ கரித்த ஸ்வ ப்ரயோஜன பரருக்கு ஆதரணீயன்-ஆஸ்ரிதர் நெஞ்சால் உகந்த த்ரவ்யங்களிலே
அப்ராக்ருத விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார ரூபியான ஸர்வேஸ்வரன்
இவனுக்கு உபாய உபேயங்கள் -அஹம் மமதா தூஷிதமான தான் பற்றும் பற்றும் தன் பேறாகச் செய்யும் கைங்கர்யமும் –

ஆனால் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனரான சாதனாந்தர நிஷ்டருக்கும்
தத் ஏக உபாயரான ஸ்வ ப்ரயோஜன பரருக்கும்
முக்த அவஸ்தையில் வந்தால் -அநந்ய சாதனனாய் -அநந்ய ப்ரயோஜனான விலக்ஷண அதிகாரியோபாதி
பலம் அவிசிஷ்டமான பின்பு உபேயம் பகவத் அனுபவ மாத்ரம் என்றும் -ஸ்வார்த்த கைங்கர்யம் என்றும் அவர்களுக்கு விசேஷித்துச் சொல்லுவான் என் என்னில்
உபாஸகனுக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்தால் அவ்வாத்மாவினுடைய
ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் முற்பட உதித்து -பகவத் சமாஸ்ரயண அனுரூபமாக அநந்தரம் தத் சேஷத்வ பாரதந்தர்யங்களும் உதிக்கையாலே
அவ் வுபாசனத்துக்குக் கர்த்தாவான தனக்கு நிரதிசய போக்யமான பகவத் ப்ராப்தியை புருஷார்த்தமாகக் கோலுகை அவ்வுபாசனத்துக்கு அபிப்ராயமாக ஸம்பாவிதமாகையாலும்
ஸ்வ பிரயோஜன பரனாகச் சொல்லுகிறவனும் ஏக பதத்தாலே கழி யுண்கிற ஸ்வீ காரத்தை ஸ்வ கீயமாக்குகையாலே
உபேய தசையிலும் ஸ்வார்த்த ரூப கைங்கர்யம் அவனுக்கு அபிப்ராயமாகக் கூடுகையாலும்
உபாய தசையில் இவ்வதிகாரிகளுக்கு உண்டான அபிப்ராயத்தை த்யோதிப்பித்த மாத்ரம் இத்தனை
இனி கைங்கர்ய தசையில் இவற்றை பிராயச்சித்தத்தாலும் புருஷகாரத்தாலும் கழித்துக் கொள்ளுகையாலே
பல விசேஷ தோஷம் இல்லை என்று அபிப்ராயம் –

————–

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு –

முதல் சொன்ன மூவரும் -இத்யாதி –
தேஹாத்ம அபிமானிகள் என்றும் -ஸ்வ தந்த்ரர் என்றும் -அந்நிய சேஷ பூதர் என்றும் பிரதமத்திலே சொன்ன மூவரும்
ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸூரீஷ்வே வயோநிஷு -என்கிறபடியே
கேவலம் ஈஸ்வரனுடைய நிக்ரஹத்துக்கு விஷய பூதர்
அவசிஷ்ட ரான உபாசகனும் -ஸ்வ கத ப்ரபன்னனும்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே -இத்யாதிப்படியே பகவத் கிருபா விஷயங்கள் -என்கிறார் –

———————-

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாஸ்யம் –

ஆனால் இவர்களுடைய இந்த அக்ருத்ய கரணங்கள் போம்படி எங்கனே என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூபா ஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்கையாலே
மூவருடைய கர்மங்களும் அனுபவ ஏக விநாஸ்யம் –
நாலாம் அதிகாரியான உபாசகனுக்கு பகவத் அனுபவ விரோதி ப்ராசீன கர்மங்கள் எல்லாம்
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாஸவ் -என்றும்
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத -என்றும்
இத்யாதியில் சொல்லுகிறபடியே உபாஸன உபக்ரமத்திலே அவை நசிக்கையாலும்
அவ்வுபாசன ரூப பக்தி பரிபாகத்தோடே ப்ராரப்த சேஷமும் நசிக்கையாலும்
இவ்வதிகாரிக்கும் அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் அவஸ்யம் ஸித்தமாய் இருக்க
பகவத் அனுபவ மாத்ர ருசி தோஷமும் சரம தசையில் பகவத் கிருபா அதிசயத்தாலே போகையாலும்
பிராயச்சித்த விநாஸ்யம் -என்கிறார் –
அஞ்சாம் அதிகாரியான ஸ்வ ப்ரயோஜன பரனுக்கு அத்தோஷம் புருஷகாரத்தாலே நசிக்கையாவது –
சேதனனாகையாலே இவன் நா நீட்டினானாகில் முத் திரு உள்ளம் பற்றாதே அத்தோஷத்தையும் வாத்சல்யத்துக்கு இரை யாக்கி யருளீர் என்று புருஷீ கரித்துப் போக்குகை -என்கிறார் –

————-

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –

ஆனால் இவனுக்குப் புருஷகாரமோ விரோதி நிவர்த்தகம் ஆகிறது என்கிற சங்கையிலே -உபாயம் ஸ்வீ கார காலத்தில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

இதர ஸஹாய அஸஹமான ஸித்த உபாயம் தன்னை இஸ் ஸம்ஸாரியான சேதனன் ஸ்வீ கரிக்கும் இடத்தில் ஸர்வ முக்தி பிரசங்காதி பரிஹார அர்த்தமாகவும்
ஸ்வீ காரத்தினுடைய தார்ட்ய ஹேதுவாகவும் -சேதனனாகிற புருஷனையும் –
பிராட்டியாகிற புருஷகாரத்தையும் -அபேக்ஷித்திக் கொண்டு இருக்கும் –

கார்ய காலத்தில் இத்யாதி -இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் அளவில்
இவ்வுபாயம் கீழ்ச் சொன்ன இரண்டையும் அபேக்ஷியாது என்கிறார் –

இனித்தான்
ஸ்வீ காரத்தில் விசேஷண ப்ராதான்யமாய்
கார்ய காலத்தில் விசேஷ்ய ப்ராதான்யமாய்
போக தசையில் விஸிஷ்ட ப்ராதான்யமாய் -இருக்கும் இறே –

————

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

இனிக் கீழ் ப்ரஸ்துதமான -ஸ்வ ப்ரயோஜனத்வம் -ஆழ்வார்கள் பாசுரங்களிலும் தோற்றுகையாலே அவர்களை வ்யாவர்த்திக்கைக்காக
ஸ்வ ப்ரயோஜனர் எல்லாரையும் என்று தொடங்கி சோத்ய பூர்வமாக அத்தைப் பரிஹரிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ப்ரயோஜன பரர் எல்லாரையும் -இத்யாதி –

இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
நான் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாய் -என்றும்
கண்டு நான் யுன்னை யுகக்க -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
இத்யாதிகளாலே தாங்கள் அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார்களையும் இவர்களோடு ஓக்க ஸ்வ ப்ரயோஜனர் என்று நினைக்கலாமா -என்னில் –

—————-

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அது ஒண்ணாது -அது எங்கனே என்னில் -பிரதிகூல விபாகம் பண்ணுகிற இவ்விடத்தில் ஸ்வ ப்ரயோஜனமாகச் சொல்லுகிறது
பல அனுபவத்துக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய துர் வாஸனா தோஷம் அடியாக வந்த ஸ்வ ப்ரயோஜனத்வத்தை –

——————

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

ஆகையால் இவனைப் பிரதிகூலன் என்ன தோஷம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

இங்கனே யாகிலும் இந்த ஸ்வ பிரயோஜனம் அவிசிஷ்டமாகையாலே ஆழ்வார்களுக்கு அத்தோஷம் இல்லையான படி என் என்ன
விஷய தோஷத்தால் வரும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
அந்த விஷய தோஷமாவது –
அவர்கள் அனுபவத்துக்கு விஷயமானவனுடைய பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான அவனுடைய வயிர உருக்கான வை லக்ஷண்யம்
இவ்வைலக்ஷண்யம் அடியாக நா நீளுகிற அந்த ஸ்வ ப்ரயோஜனத்வம் தோஷம் இல்லை மாத்ரம் அன்றியே
ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே விடவும் முடியாது என்கிறார் -எங்கனே என்னில்
கீழில் துர் வாஸனையால் வரும் ஸ்வ ப்ரயோஜனத்வம் ஒரு ஆச்சார்ய முகத்தாலே இது ஸ்வரூப ஹானி என்று சிஷித்தவாறே த்யஜிக்கலாம்
விஷய வைலக்ஷண்யம் யாவதாத்ம பாவி யாகையாலே த்யஜிப்பிக்க நினைத்த அந்தரங்கரையும்
ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று த்யஜிக்கும் படி பண்ணா நிற்கும் இறே –

———————-

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-

இனி இவ்வர்த்தத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுடைய பாசுரம் உண்டு என்னும் இடத்தை –
ஊமை யாரோடு செவிடர் வார்த்தை —
கதம் அந்நிய திச்சதி -என்று அருளிச் செய்கிறார் –
இத்தால் பகவத் விஷயத்தில் பக்தி பரவசராய் இருப்பார்க்கு இவ்விஷயத்தில் நின்றும் மீட்கச் சொல்லுவார் வார்த்தை
மூகரோடே பதிரர் வார்த்தை சொன்னவோ பாதி நிஷ் பிரயோஜனம் என்கிறது –
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதம் அந்நிய திச்சதி –
ஸ்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷுரகம் ஹி வீக்ஷதே -என்றார் இறே ஆளவந்தாரும் –
இதில் -நிவேசிதாத்மா -என்றது உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளிலே வைக்கப்பட்ட நெஞ்சானது -என்றபடி –
கதம் அந்நியதிச்சதி -அந்த நெஞ்சானது அந்த போக்யத்தையை விட்டு மற்ற ஒன்றை எங்கனே புஜிப்பது என்றபடி –

—————–

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –

ஆகக் கீழ் ஸஹ வாஸ யோக்யர் அல்லரான பிரதிகூலருடைய ப்ரகார பேதங்களை அருளிச் செய்து
அதிலே ப்ரஸ்துதமான சங்கா பரிகாரங்களையும் பண்ணி
மேல் ஸதாச்சார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் என்றத்தை விவரிக்கிறார் -இப்படி இவை இத்தனையும் -என்று தொடங்கி –
இவ் வதிகாரி தான் இவை வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போருவது எங்கனே என்னில்
வித்யுக்தங்களான வக்தவ்ய -அவக்தவ்ய -ஜப்தவ்ய -பரிக்ராஹ்ய -பரித்யாஜ்ய -கர்தவ்யாதி களிலே இவன் ஸதா காலமும் நியதனாகவே
கீழ் தின சரிதையில் சொன்ன அனுஷ்டானங்கள் ஸ்வயமேவ ஸித்திக்கும் -என்கிறது -வஸ்ததவ்யம்-இத்யாதி –
மத் பக்தைஸ் ஸஹ வாஸோ தத ஸித்தவ் மயாபி வா -என்கையாலே
ஸத்யம் வத தர்மம் சர -என்று தொடங்கி -அந்தே வாஸியான தன்னை அநு சாஸித்துக் கொண்டு போருவான் ஒரு ஆச்சார்ய ஸந்நிதியும்
அழகாலும் ஆ ஸக்தியாலும் அவற்றிலே அத்யவசாய அபி ருசிகளை விளைவிக்கும் அர்ச்சாவதார ஸந்நிதியும்
இவனுக்கு வஸ்தவ்ய ஸ்தலம் என்றும்

இப்படி வஸிக்கும் இடத்தில் –
ப்ரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்றும்
குரும் ப்ரகாஸ யேத் தீமான் -என்றும் சொல்லுகையாலே
வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும்
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து -என்றும்
திக ஸூசி மவிநீதம் -என்றும் இத்யாதிகளில் படியே –
அவ்விரண்டு சந்நிதியிலும் ஸ்வ நிகர்ஷமே சொல்லப்படும் என்றும் –

இவனுக்கு ஜப்தவ்யமும்-ஆசார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த-என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத் ஸ யாமுன முநேஸ் ஸ ச நாத வம்ஸ்ய
வம்ஸ்யஸ் பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேஷ ணீய -என்றும்
த்வயம் அர்த்த அநு ஸந்தாநேந ஸஹ ஸ தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ -என்றும் அருளிச் செய்கையாலே
குரு பரம்பரா பூர்வகமான த்வயம் என்றும்

இவனுக்கு பரிக்ராஹ்யமும்
ஸூ வ்யாஹ் ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததஸ் ததஸ் சஞ்சின்வன் தீர ஆஸீத ஸில ஹாரீ ஸிலம் யதா -என்றும்
குரோர் வார்த்தாம் கதாம் சைவ -என்றும்
யான் யஸ் மாகம் ஸூ சரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி -என்றும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தாத்தா தேவே தரோ ஜன ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே -என்றும் சொல்லுகையாலே
பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த நல் வார்த்தைகளும்
பஞ்ச கால பராயண ரானவர்களுடைய அநுஷ்டான விசேஷங்களும் என்றும்

இவனுக்குப் பரித்யாஜ்யமும் -ஸ்ருத வான் வா குலீநோ வா தபஸ்வீ வா பராசர த்வய அதிகாரீ நோ சேத் தம் தூரத பரிவர்ஜயேத்-என்கையாலே
கீழ் யுக்தமான அனுஷ்டான விசேஷங்களில் அதிக்ருதர் அல்லாத அவைஷ்ணவர்களோடே பண்ணும் ஸஹ வாஸமும்
அனுஷ்டானத்துக்கு விரோதியான துரபிமானமும்

இவனுக்குக் கர்த்தவ்யமும் -ஆச்சார்ய அதீநோ பவ -என்றும் –
மத் பக்தைஸ் ஸததம் யுக்தஸ் தேஷ் வேகஸ்ய வஸே ஸ்திதஸ் தஸ்ய அநு ஸாஸனம் குர்வன் மத் சாதர்ம்யாய கல்பதே -என்றும்
அர்ச்ச நீயஸ்ய வந்த்யஸ் ச கீர்த்த நீயஸ் ச ஸர்வதா த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்ச யேந் நர -என்றும்
தாமர்ச்ச யேத்தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத் -என்றும் சொலுகையாலே
ஆச்சார்ய கைங்கர்யமும்
அவனுக்கு உகப்பாய் வரும் திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை -தொடக்கமான பகவத் கைங்கர்யமும் –
என்றும் இப்படி இவன் இதிலே நிஷ்ணாதனாய்க் கொண்டு வர்த்திக்கவே கீழ்ச் சொன்ன தினசரிதா விஹிதமான அனுஷ்டானங்கள்
இவனுக்கு ஸ்வயமேவ ஸித்திக்கும் என்று
ஆக இவ்வளவால்
அத்தினசரிதையிலே சங்கித்துச் சொன்ன சோத்யங்கள் நாலையும் பரிஹரித்து அருளினார் ஆய்த்து-

—————-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

இனி இவன் அங்கு கைங்கர்யங்களைப் பண்ணும் இடத்தில் எம் முகத்தால் பண்ணுவான் என்னும் ஆகாங்க்ஷையிலே –
கீழ்ச் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
இங்கு கீழ்ச் சொன்ன என்கிறது வக்தவ்யமான மேலில் பாசுரத்துக்குக் கீழே யான பாசுரம் தன்னை –
அதில் இவன் பகவத் கைங்கர்ய அனுஷ்டானம் அறிவது –
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா -என்கிற ஸ்ருதி ரூபமான கேவல ஸாஸ்த்ர முகத்தாலே
ஆச்சார்ய கைங்கர்யம் அறிவது -குருரேவ பரம் ப்ரஹ்ம –
அர்ச்ச நீ யஸ்ய வந்த்யஸ் ச -இத்யாதிகளான
ஸாஸ்த்ர முகங்களாலும்
அவ்வாச்சார்யன் தான் ஸ்வாச்சார்ய விஷயத்தில் தன்னுடைய அநு வர்த்தன க்ரமத்தை ஸ ப்ரகாரமாக அருளிச் செய்கையாலும்
இவனுக்கு அறியலாம் என்கிறார் –

—————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனி மேல் -கைங்கர்யம் தான் இரண்டு -என்று தொடங்கி -கீழே கைங்கர்யம் ப்ரஸ்துதமாகையாலே
இங்கே சதுர்த்யர்த்தமான கைங்கர்யத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
கைங்கர்ய தசை போலே -என்னும் அளவும் –

——————

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

இனி -அதாவது இஷ்டம் செய்கையும் -அநிஷ்டம் தவிருகையும் -என்று
இவன் கைங்கர்யம் செய்கையாவது -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் இஷ்டமானது செய்கையும்
அநிஷ்டமானது தவிருகையும் என்று பிரதமத்தில்
கைங்கர்ய வேஷம் இருக்கும்படியை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————–

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

அவர்களுடைய இஷ்ட அநிஷ்டங்கள் தான் எத்தைப் பற்ற வருகின்றனவோ என்ன –
இக் கைங்கர்யத்திலே அதிக்ருத்தனான இவ் வதிகாரியினுடைய வர்ணாஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றிக் கொண்டு அவர்களுக்கு அவை உண்டாம் என்கிறார் –
அது என் என்னில் -இக் கைங்கர்யம் தன்னை -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா -என்ன
ஈஸ்வரன் -என்ன -ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்ற சதாச்சார்யன் -என்ன –
இவ்வுபயருக்கும் ஓக்கச் சொல்லிக் கொண்டு போகையாலே
இவன் வர்ணாஸ்ரமங்களுக்குச் சொன்ன அனுஷ்டானங்களைச் செய்கையும்
அவற்றுக்குச் சேராத அநிஷ்டங்களைத் தவிருகையும்
அவ் வாச்சார்யனுக்கும் ஈஸ்வரனுக்கும் அத்யந்தம் உகப்பாய் இருக்கும் என்று கருத்து –
அங்கன் அன்றாகில் கீழே உத்க்ருஷ்ட ஜன்மாக்களாக ஸாதித்த இவர்கள் அளவில் உகப்பாலே
முன்புள்ளாரும் வர்ணாஸ்ரம விருத்தமான கொள் கொடை பண்ணுதல் –
அவ் வுத்க்ருஷ்ட ஜன்மாக்கள் தான் ஸ்ரீ புருஷ ஸூக்தாதி வைதிக மந்த்ரங்களாலே பகவத் ஸமாராதநத்திலே
ப்ரவ்ருத்தரானார்கள் என்றாதல் கேட்க வேணும் இறே –
அன்றிக்கே -இக் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தையே நிரூபித்துப் பார்த்தால்
வர்ணாஸ்ரமங்கள் மாத்ரத்தையே அவலம்பித்துக் கொண்டு வருமவை அவர்களுக்கு அநிஷ்டங்களாய் கேவல ஆத்ம ஸ்வரூபத்தை
அவலம்பித்துக் கொண்டு வருமாவை இஷ்டங்களாய் இருக்கும் என்று அருளிச் செய்வர்கள் –

———————–

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-

ஆனால் முதல் சொன்ன அர்த்தத்தோடே -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-என்கிற பாசுரத்தில் அர்த்தம் –
சங்கதமாகிற படி என் என்னில் -இவ்வளவில் ருசி பிறந்து லௌகிகருக்கு ஆதரணீயமான வர்ணமும் கால் கட்டாம் என்று அஞ்சுகிற இவ்வதிகாரி
வர்ணாஸ்ரமங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் சேராததாய் -அத ஏவ -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் அநிஷ்டமான பாபத்தை
முதல் தன்னிலே பண்ணான் இறே என்று இவ்வதிகாரிகள் அநிஷ்டங்களில் இழியாமையை சாதிக்கிறது –

—————

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

மேல் -இவன் புண்யத்தைப் பாபம் என்கிறது -இவ்வதிகாரிக்கு மோக்ஷ பலமான கைங்கர்ய விரோதியாகையாலே
ஈஸ்வரன் இவனுடைய பாபத்தைப் புண்யம் என்று இருக்கிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்று இருக்கும் வத்சலனாகையாலே
இனி அவனுக்கு அது கிடையாது -என்றது அநிஷ்ட ப்ரவ்ருத்தி ரூபமான பாபம் இவ்வதிகாரிக்கு ஸம்பாவிதம் அல்லாமையாலே –

———————-

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

கைங்கர்யம் தான் இத்யாதி -இப்படி யுக்த லக்ஷணோ பேதமான இக்கைங்கர்யம் தான் -என்றபடி –
பக்தி மூலம் இல்லாத போது பீதி மூலமாகிலும் வேணும் -என்று இக் கைங்கர்யத்துக்குக் கீழ் நின்ற நிலையைப் பற்ற
ஓர் ஓவ்ஜ்வல்ய ரூப தஸா விசேஷத்தை ப்ரதிபாதிக்கிறார் -அதாவது
சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான பக்தி மூலமாகப் பண்ணும் கைங்கர்யமே பிராப்தம்
ப்ரக்ருதி வஸ்யதையாலே அது கூடா விடில்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா என்கிற பகவத் ஆஜ்ஞா அதி லங்கன பீதி மூலமாகவும்
அந்தே வாஸிந மநு சாஸ்தி -என்று ஆச்சார்யனுடைய அனுஸான லங்கன பீதி மூலமாகவும்
லோக அபவாத பீதி மூலவாகவும் ஆகிலும்
அனுஷ்ட்டிக்கப்படும் என்கிறார் –

——————–

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அதுவும் இல்லாத போது -இத்யாதி -அந்த பீதி மூலமாகிலும் அனுஷ்டியாத போது
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கையாலே சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூப ஸத் பாவம் இல்லாமையாலும்
அதிகாரத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியும்
அவனுடைய கிருபையும் உகப்பும் இவனுக்கு இல்லாமையாலே உபாயத்திலும் உபேயத்திலும் அந்வயம் இன்றிக்கே ஒழியும் -என்கிறார் –

—————-

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

கைங்கர்யம் தன்னை இத்யாதி -இத்தால் கைங்கர்யம் தனக்கே அநந்ய ப்ரயோஜனத்வ ரூப தஸா விசேஷத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது –
உக்தமான உபய பிரகாரத்தையும் உடைத்தான கைங்கர்யம் தன்னை ப்ரீண புத்தயா பண்ணும் உபாசகனைப் போலே ஒரு பலத்தை உத்தேசித்து
இத்தை சாதனமாகப் புத்தி பண்ணாதே-பதியது ஏத்தி எழுவது பயனே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே -என்றும்
இத்யாதியில் படியே -கேவலம் பகவத் ப்ரிய ரூப கைங்கரியமேயாக பிரதிபத்தி பண்ண வேணும் –

————

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

அதாவது -அப்பல ரூப கைங்கர்யமாவது –
தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை –
தேஹி மே ததாமி தே -என்று தான் அவன் பக்கல் அபேக்ஷியாதே
யா க்ரியாஸ் ஸம் ப்ரயுக் தாஸ்யு ஏகாந்த கத புத்திபி
தாஸ் ஸர்வாஸ் சிரஸா தேவா ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம் -என்று
அவன் தானே உகந்து அர்த்தித்து குச்சியால் ஏற்கும்படி அநந்ய பிரயோஜநனாய்ப் பண்ணுகை-
பலார்த்தீ பஜதே யோ மாமன்வஹம் காம லோலுப ஸ்ரத்தயாபி துராசாரோ ந ஸ ப்ருத்யஸ் ச வை வணிக் -என்னா நின்றது இறே –

———–

சூரணை -285-

கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

மேல் -கொடுத்துக் கொள்ளாதே -என்று தொடங்கி -கைங்கர்யத்துக்குக் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தால் வரும் அளவு அன்றிக்கே
தத் ஏக ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தாலே வரும் ஓவ்ஜ்வல்யத்தையும் அருளிச் செய்கிறார் -கொடுத்துக் கொள்ளாதே -இத்யாதி –
இத்தால் இப்படி -தேஹி மே ததாமி தே -என்னாதே
அநந்ய ப்ரயோஜனத்வம் மாத்ரம் அன்றிக்கே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்கிறபடியே
ததேக ப்ரயோஜனனாய்க் கொண்டு இட்ட த்ரவ்யத்தை அவன் அங்கீ கரித்ததுக்கு அந்த உபகார ஸ்ம்ருதியாலே கைக்கூலி கொடுத்து
அத்தைக் கூலி கொண்டதுக்கும் கைக்கூலி கொடுக்க வேணும் என்கிறார் –

—————

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

ஸ்ரீ விதுரரையும் இத்யாதி -இத்தால் ததேக ப்ரயோஜனத்வ ரூப கைங்கர்யத்தில்
அனுஷ்டாதாக்களும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

மடி தடவாத சோறும் –இத்யாதி -மடி தடவாத சோறாவது -ஒருவனுக்கு ஒருவன் சோறு இடும் போது ப்ரத்யுபகாரம் எவ்வளவு செய்தால் இவன் திருப்தனாம் என்னும்
சித்த வ்யதையோடே இருக்குமவனுடைய மிடறு பிடித்தால் போலே அவன் பக்கல் பிரதியுபகாரங்களைக் குறித்து வார்த்தை சொல்லாதே இடுமது –
சுருள் நாற்றமும் சுண்ணாம்பும் பூவுக்கும் சாந்துக்கும் அவத்யகரங்கள் யாகையாலே இப்பாசுரங்களை இட்டு ப்ரயோஜனத்வ ரூப தோஷத்தைத் தோற்றுவித்து
இஸ் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூப கைங்கர்யம் இறே இவர்கள் பண்ணிற்று என்கிறார் -எங்கனே என்னில்
புக்தவத்ஸூ த்விஜாக்ர் யேஷு நிஷண்ண பரமாஸநே விதுர அந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச -என்றும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்றும்
ஸூகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே ஆவயோ காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம் -என்றும்
இப்படிகளைச் சொல்லா நின்றது இறே –

————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

இனி -கைங்கர்ய தசை போலே -என்று தொடங்கி
கீழே -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -என்று ப்ரஸ்துதமான கைங்கர்யத்தை
இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்றும்
பக்தி மூலம் அல்லாத போது பீதி மூலமாகிலும் வர வேணும் -என்றும்
அநந்ய பிரயோஜனமாக வேணும் -என்றும்
ததேக பிரயோஜனமாக வேணும் -என்றும்
இப்படி நாலு பிரகாரத்தாலே கைங்கர்ய தசையை உஜ்வலமாக்கி –
இனி மேல் –
கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும் இவ்வதிகாரியுடைய ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்க வேணும் என்று
கைங்கர்யத்துக்குப் பூர்வபாவிகளாய் வரும்
ஞான தசை
வரண தசை
பிராப்தி தசை
ப்ராப்ய அனுபவ தசைகளை
சோதியா நின்று கொண்டு இப்படி சாதுர்யேண வரும் ஸ்ருங்கலா பத்தமான அர்த்த விசேஷங்களை அருளிச் செய்கிறார் மேல் –

——————

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

அதாவது -ஞான தசையும் -இத்யாதி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியாய் வரும் நாலு தசையுமாவது
ஆச்சார்யன் இவனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகிற ஞான தசையும்
ஞானான் மோக்ஷம் ஆகையாலே -அந்த மோக்ஷ உபாயத்தை விவரிக்கிற வர்ண தசையும்
அந்த வர்ண தசையின் பலமாக வருகிற பகவத் ப்ராப்தி தசையும்
தத் பலமான ப்ராப்ய அனுபவ தசையும் -என்கிறார்
இவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் இறே கீழ் சோதிதமான கைங்கர்யம் தான் இருப்பது –

—————

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

யுக்தமான நாலு தசையிலும் இவன் ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்கும் படி என் என்ன -ஞான தசையில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சதாச்சார்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேக பூர்வகமாக த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை உண்டாக்கும் தசையில்
தத் வித்தி பிரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா-என்கிறபடியே
ப்ரணிபாத பரி ப்ரஸ்நாதி தத் பரனாய்க் கொண்டு தத்வ ஹித புருஷார்த்தங்களில் அடியேன் அறிவது ஒன்றும் இல்லை என்று
தன் அஞ்ஞானத்தை விண்ணப்பம் செய்கையும்
வர்ண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது உபாய வர்ண தசையில்
ந தர்ம நிஷ்டோஸ்மி –
ஸத் கர்ம நைவ கில கிஞ்சித் சஞ்சிநோமி வித்யாப்யவத்ய ரஹிதா ந ஹி வித்யதே மே
கிஞ்ச த்வதஞ்சித பதாம்புஜ பக்தி ஹீந பாத்ரம் பவாமி பகவன் பவதோ தயாயா -என்றும் –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதிகளில் படியே –
தன்னுடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ரூபமான அபூர்த்தியை விண்ணப்பம் செய்கையும்
பகவத் ப்ராப்தி தசையில்
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இத்யாதிகளில் படியே
தன் ஆர்த்தியின் அதிசயத்தை விண்ணப்பம் செய்கையும்
ப்ராப்யமான பகவத் அனுபவ தசையில் அவ்வனுபவ ஜெனித ப்ரீதியாலே
ஒழிவில் காலத்தில் படியே கைங்கர்யத்தில் அபி நிவேசத்தை விண்ணப்பம் செய்கையும் –

—————

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் இவை இவனுக்கு சமிப்பது எத்தாலே என்ன -அவற்றைச் சொல்லுகிறது -அஞ்ஞானம் போவது -என்று தொடங்கி
காலை நன் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -என்கையாலே
இவனுடைய அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே

குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருஸ நிம்ந மிமம் ஜன முன்னமய யதபேஷ்ய மபேஷி துரஸ்ய ஹி தத் பரி பூரணமீஸி துரீஸ் வரதா -என்றும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றும் சொல்லுகையாலே
இவனுடைய அபூர்த்தி போவது ஸர்வேஸ்வரனுடைய பூர்த்தியாலே –

உன்னடி சேர் வண்ணம் அருளாயே -என்றும்
இத்யாதிகளில் படியே இவனுடைய ஆர்த்தி போவது பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –

மாறுளதோ இம்மண்ணின் மிசையே –
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே –
இனி என்ன குறை எழுமையுமே -இத்யாதிகளில் படியே –
இவனுக்கு முன்பு அனுபவிக்கப் பெறாத அபி நிவேசம் போவது பரிபூர்ணமான பகவத் அனுபவத்தாலே –
அல்லது -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமான -விஷயத்தில் அபி நிவேசம் மாறாது இறே –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

இப்படிப் போக்க வேண்டும்படியான இஸ் ஸ்வ பாவ விசேஷங்கள் இவனுக்கு ஸம்பவிக்கைக்கு அடி என் என்ன
அஞ்ஞானத்துக்கு அடி இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
முன் செய்த முழு வினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதே -என்றும்
மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன்-என்றும்
பாவமே செய்து பாவியானேன் மற்றேலொன்று அறியேன் -என்றும் இத்யாதிகளில் படியே –
ஆர்த்திக்கு அடி பகவத் அனுபவ அலாபம் -என்றும்

வேங்கடத்து எந்தை தந்தை தந்தைக்கு வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்கையாலே
அபி நிவேசத்துக்கு அடி அவன் வடிவழகு என்றும் அருளிச் செய்து –
இவ்விடத்தில் ஸங்க்ரஹேண சொன்ன ஆர்த்தியினுடைய பிரகாரத்தையும் அபி நிவேசத்தினுடைய பிரகாரத்தையும் தாம் அருளிச் செய்த
அர்ச்சிராதி கதி என்கிற பிரபந்தத்திலே விஸ்தரேண காணலாம்படி சொன்னோம் -என்கிறார் –

————

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

இவன் தனக்கு இத்யாதி -கீழ்ச் சொன்ன கைங்கர்ய தசையிலும்-தத் பூர்வ பாவிகளான நாலு தசையிலும்
உஜ்ஜ்வல ஸ்வ ரூபமான தனக்கு இப்படி ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவாக நாலு தசையும் யுண்டானாப் போலே
ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான நாலு குணமும் யுண்டு என்கிறார் –

——————-

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

அவை எவை என்ன –
ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -என்கிறார் –

—————

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இவை தான் இவனுக்கே அசாதாரணமாய் வரும் குணங்களோ என்னில் அன்று
கீழே ப்ரஸ்துதமான கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான எம்பெருமானுக்கும் யுண்டாகையாலே
இது தான் அவனுக்கும் உண்டு என்கிறார் –

—————-

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுக்களான இவ்விருவருடைய குணங்களுக்கும் விஷயங்கள் எவை என்ன –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சர்வஞ்ஞனான எம்பெருமானுடைய விஸருங்க லமான ஞானத்துக்கு விஷயம் இவ் வதிகாரியுடைய ஆத்ம குணங்கள் என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் அகஸ் ஸூ கமலேக்ஷண ஸதா ஜகத் ஸமஸ்தம் ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்தித -என்றும்
அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம் ஸூ -என்றும்
குன்று அனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்றும் சொல்லுகிறபடியே
அவனுடைய அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய ப்ரக்ருதி வஸ்யதையால் வந்த தோஷம் என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீ ஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் -என்கையாலே
ஸர்வ சக்தியானவனுடைய சக்திக்கு இலக்கு இரும்பைப் பொன்னாக்குவரைப் போலே
நித்ய ஸம்ஸாரியான இவனை நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக்கி ரக்ஷிக்கும் ரக்ஷணம் என்றும்
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மநா -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும் இருக்குமவனாகையாலே
அவனுடைய இந்த அசக்திக்கு இலக்கு இவனை எத்தசையிலும் விடுகையும் என்கிறார் –

——————–

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

ஆனால் இவ்வதிகாரி தன்னுடைய குணங்களுக்கு விஷயம் எவை என்னில் -இவனுடைய ஞானத்துக்கு இலக்கு இத்யாதி –
குரோர் குரு தரன் நாஸ்தி குரோர் அந்யன்ன பாவயேத் -என்கையாலே
சதாசார்ய லப்தமான இவனுடைய ஞானத்துக்கு விஷயம் மஹா உபகாரகனான அவ்வாச்சார்யனுடைய ஸத் குண ஸமூஹம்
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் அவ்வாச்சார்யன் எடுத்த திருமேனிக்கு அனுரூபமான சேஷ்டிதங்களில்
ப்ரக்ருதி வாசனையால் வந்த தோஷங்கள் -அதாவது –
அத்தை அவதார சேஷ்டிதங்களோ பாதியாக நினைக்க வேண்டுகையாலே –
ஆச்சார்ய அதீநநாய் இருக்கிற இவனுடைய சக்திக்கு விஷயம் அவனுக்கு இஷ்ட தமமான கைங்கர்யம்
இவனுடைய ஒரு ப்ரவ்ருத்தி யோக்யதை இல்லாத அசக்திக்கு விஷயம் ஆச்சார்யனுக்கு அநிஷ்டமாய் ஸாஸ்த்ர விருத்தங்களுமான நிஷித்த அனுஷ்டானம் -என்கிறார் –

——————-

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

இப்படிப்பட்ட நிஷித்த அனுஷ்டானம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
அவையும் நாலு படியாய் இருக்கும் என்கிறார் –

—————-

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

அவை தான் எவை என்னில்
அக்ருத்ய கரணமும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

இனி அக்ருத்ய கரணமாவது -இத்யாதியாலே
ஸாஸ்த்ரங்களிலே பரக்க ப்ரதிபாதிக்கப் படுகிற பர ஹிம்ஸாதி நிஷித்த அனுஷ்டானங்களை
ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கிறார் –

—————-

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை-

பகவத் அபசாரமாவது –இத்யாதி –
யேது சாமான்ய பாவேன மன்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டிநோ ஞ்ஞேயாஸ் சர்வ கர்ம பஹிஷ்க்ருதா-என்றும்
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே ச யாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்றும் சொல்லுகையாலே –
ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனை அவனுடைய ஈஸிதவ்ய ஏக தேச பூதரான தேவதாந்தரங்கோளோடே சமானமாக நினைக்கையும்

ராம கிருஷ்ணாதிகளான அவதாரங்களில் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றபடி
அவை பரனாமவனாதல் பாவியாதே லோக மர்யாத அநு வர்த்தனம் பண்ணின மாத்ரத்தைக் கொண்டு
மனுஷ்ய ஸஜாதீயனாக அத்யவசிக்கையும்

அக்ர ஜன்மாவானவன் மாம்ஸாதிகளாலே ஆராதிக்கையும்
துரீய ஜன்மாவானவன் வைதிக மந்த்ரங்களாலே ஆராதிக்கையும்
உத்தம ஆஸ்ரமியானவன் தாம்பூலாதிகளைக் கொண்டு ஆராதிக்கையும்
எம்பெருமானுக்கு அநிஷ்டமாகையாலே -வர்ணத்துக்கும் ஆஸ்ரமத்துக்கும் சேராத உபசாரங்களும்

யோ விஷ்ணவ் ப்ரதிமாகாரே லோஹ பாவம் கரோதி யோ குரவ் ச மாநுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் -என்றும்
தஷாபி நீசைஸ் ஸூஹ்ருதான வித்யான் பாஷாணம் ருத்தாரு மயாம்ஸ் ச தேவான் வதந்தி யே மாதவ நிந்த காஸ்தே பூர்ணஸ் ஸதா நந்த மயோ ஹி விஷ்ணு -என்றும்
சொல்லுகையாலே அர்ச்சாவதாரத்திலே தாரு லோகாத் யுபதான நிரூபணம் பண்ணுகையும்

யோ அந்யதா சந்தமாநம் யோ அந்யதா ப்ரதிபத்யதே கிந்தேந ந க்ருதுதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –என்றும்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும் சொல்லுகையாலே –
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மாவை ஸ்வ தந்த்ரம் என்று இருக்கையும்

அமுது படி சாத்துப்படி முதலான பகவத் த்ரவ்ய அபஹாரம்-தொடக்கமானவை பகவத் அபசாரம் என்கிறார் –

—————-

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

இப்படி பகவத் த்ரவ்யத்தை அபஹரியாது ஒழியும் அளவேயோ வேண்டுவது என்னில் -பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –இத்யாதி -அங்கன் அன்று
இந்த பகவத் த்ரவ்யத்தைத் தானே அபஹரித்து ஜீவிக்கும் அளவன்றிக்கே -பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுகிறவர்களுக்கு
ஏதேனும் ஒரு படியாலே ஸஹ கரித்து அவ்வழியாலே தான் ஜீவிக்கையும்
நாம் அபஹரிக்கிறோம் அன்று இறே என்று அவர்கள் பக்கல் யாசித்து வாங்கி ஜீவிக்கையும்
இனித்தான் நாம் யோசித்தோம் அன்று இறே என்று அவர்கள் தாங்களே தருமவற்றை வாங்கி ஜீவிக்கையும்
எம்பெருமானுக்கு அத்யந்த அநபிமதம் -என்கிறார் –

————–

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

பாகவத அபசாரமாவது-இத்யாதி -ஸ்வரூப விருத்தமான அஹம் மாநம் அடியாகவும் -அத்யந்த த்யாஜ்யமாய்த்
தன்னுடைய மமதா விஷயமான அர்த்த காமங்களை அவர்களும் ஆதரித்தார்கள் என்னும் இவ்வளவையும் கொண்டு
அர்ச்சாயாமேவ மாம் பஸ்யன் மத் பக்தேஷு ஸதா த்ருஹன் விஷதக்தை ரக்நி தக்தை ஆக ஸைர் ஹந்தி மாமசவ் -என்னா நிற்க –
இப்படி எம்பெருமானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விருத்தா சரணமும் பாகவத அபசாரம் ஆவது என்கிறார் –

————————–

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அஸஹ்ய அபசாரமாவது -இத்யாதி -இதில் நிர்நிபந்தனமாகை யாவது தன்னுடைய அர்த்த காமங்களுக்குப் பண்ணும் விரோத நிபந்தநமாகை யன்றிக்கே
கேவலம் பகவத் பாகவத விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே -ஹிரண்யனைப் போலே -அஸூய பரனாய்க் கொண்டு அஸஹமானனாக இருக்கையும்
தன்னுடைய ஆத்ம உஜ்ஜீவநாத் அகில சம்பத்துக்கும் அடியான ஆச்சார்யன் பக்கல் பண்ணும் அபசாரமும்
உயிர் நிலையிலே எறட்டினால் போலே அவன் உகந்த விஷயங்களிலே ஞாதி ஸ்பர்த்தை போலே பண்ணும் அபசாரங்களும்
அஸஹ்ய அபசாரமாவது என்கிறார் –

————–

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்-இத்யாதி –
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரம் ஆகையாவது -அக்ருத்ய கரணம் ப்ராயச்சித்தத்தாலே நசிக்கும் –
அத்தைப் பற்ற குரூரமான பாகவத அபசாரம் அவர்கள் தங்களையே க்ஷமை கொண்டவாறே நசிக்கும் -அது எங்கனே என்னில்
அம்பரீஷ சக்ரவர்த்தி பாரண காலத்திலே தனக்கு அதிதியாய் வந்த துர்வாஸர் வருவதற்கு முன்பே த்வாதஸீ கழியப் புகுந்த வாறே துளஸீ பாரணத்தைப் பண்ண –
தன் நிமித்தமாக குபிதனாய் வந்த துர்வாஸர் சபிக்கப் புக-
அவனும் ஆழ்வானைத் த்யானம் பண்ண -அவ்வாழ்வானும் துர்வாஸரைத் தொடர -அவனும் ஷீராப்தி பர்யந்தமாக தட்டித் திரிந்து
மீண்டும் அம்பரீஷன் பக்கலிலே வந்து
அஹோ அநந்தா தாஸாநாம் மஹாத்ம்யம் த்ருஷ்டமத்ய மே -என்று வந்து விழ
அவ்வபசாரத்தைத் தானும் க்ஷமித்து அத்திருவாழி ஆழ்வானையும் க்ஷமை கொண்டான் இறே –
இனி அதிலும் குரூரமான அஸஹ்ய அபசாரம் நிர் நிபந்தனமாக வருகையாலே அறிந்து ஷமிக்கைக்கு விஷயம் இன்றிக்கே
தன் நெஞ்சிலே கிடந்து புழுங்கி விடுவது ஒன்றாகையாலும்
தனக்கு அஞ்ஞாத ஞாபனம் முதலாக அகில சம்பத்துக்கும் மூலமான ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உகந்த விஷயத்திலும் பண்ணும் அபசாரம் ஆகையாலே
இது மிகவும் ஸ்வரூப நாஸகரம் –
ஆகையால் இப்படி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய் -அக்ருத்ய கரணம் தொடக்கமான இவ்வபசாரங்கள் இவ்வதிகாரிக்கு
பகவத் கிருபா விரோதிகளுமாய் -பகவன் முகோல்லாஸ விரோதிகளுமாகையாலே
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய் -இருக்கும் என்கிறார் -எங்கனே என்னில்
நா விரதோ துஸ் சரிதான் நஜா சாந்தோ நா ஸமாஹித நா சாந்த மானஸோ வாபி ப்ரஞ்ஞா நேநைந மாப்நுயாத் -என்கையாலே –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -சித்த உபாய நிஷ்ட வைபவ-பிரகரணம்-சூர்ணிகை -159–243-

July 24, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

————-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

———-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

அது என் -சேஷத்வத்தாலே அன்றோ ஆத்மாவை ஆதரிக்கிறது
இப்படி அவனுக்கு ஆதரணீயமாம் படி அலங்காரமான சேஷத்வம் அனுபவ விரோதியாம் படி எங்கனே என்ன
அழகுக்கு -என்று தொடங்கி த்ருஷ்டாந்த முகத்தாலே சொல்லுகிறது –

சூரணை -162–

ஹாரோபி—

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்றார் இறே

இவ்வர்த்த விஷயமாகப் பெருமாளும் –சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,

பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள் –

————-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

புண்யம் போலே -இத்யாதி -இப்படி இருக்கிற சேஷத்வத்தைப் பற்ற இட்டு வைத்த இடத்தே இருக்கும் படியான பாரதந்தர்யம் நன்று இறே -என்ன
ஸாஸ்த்ரங்களிலே நிஷேதிக்கிற பாபங்களில் காட்டில் அவற்றிலே அநுஷ்டேயமாக விதிக்கிற புண்யம் நன்றே யாகிலும்
மோக்ஷ விரோதித்வாத் -புண்ய பாப விதூய -என்கையாலே புண்யமும் த்யாஜ்யம் ஆகிறாப் போலே
அவன் இட்டு வைத்த இடத்தே இருக்கும்படியான பாரதந்தர்யமும்
கட்டை போலே எதிர் விழி கொடா விடில் அவனுக்குப் போக விரோதமாகையாலே த்யாஜ்யம் -என்கிறார் –

——————

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –

குணம் போலே -இத்யாதி -கீழ் லோக வேத ஸித்தமான த்ருஷ்டாந்தங்களாலே அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்குப் புறம்பான
சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஸ்வரூப விருத்தம் என்று -குணம் போலே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு அந்தரங்க குணமான அவை விருத்தமானாப் போலே
அவித்யாதி தோஷத்தைப் போக்கி அவன் நம்மை விநியோகம் கொள்ள வேண்டாவோ என்னுமதுவும் தோஷாவஹம் என்று
அவை தன்னையே தோஷ நிவ்ருத்திக்கு த்ருஷ்டாந்தம் ஆக்குகிறார் –

————–

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

ஆபரணம் -என்று தொடங்கி -இவ்வர்த்தம் லோக ப்ரஸித்தம் என்கிறார் -அதாவது
ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு இவளை அந்தப்புரத்து ஏற அழைப்பியுங்கோள் என்று
அந்தரங்கரை நியமிக்க அவர்கள் பய அதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கன் வந்தாள் என்று அநாதரிக்க -அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்துப் புஜித்தான் என்று பிரசித்தம் இறே –

———

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –

இவ் வர்த்த விஷயமாக ராவண வத அநந்தரம் திருவடி பெருமாள் பக்கல் ஏறப் பிராட்டியை எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிற தசையிலே
இவருடைய இந்த வேஷத்தைக் கண்டால் அவர் ஸஹிக்க மாட்டார் என்று திருமஞ்சனம் பண்ணி வைக்காத தேட
அவனைப் பார்த்து -ஸ்நாநம் ரோஷ ஜனகம் கிடாய் -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார்
அதுக்கு ஒக்கப் பெருமாளும் -தீபோ நேத்ரா துரஸ் யேவ ப்ரதி கூலாசி மே த்ருடம் -என்றார் இறே
த்வயி ப்ரசன்னே கிமாஹா பரைர்ந த்வய்ய ப்ரசன்னே கிமாஹா பரைர் ந -ரக்தே விரக்தேபி வரே வதூ நாம் நிரர்த்தக குங்கும பத்ர பங்க -என்றார் இறே ப்ரஹ்லாதனும் –

—————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி தோஷமே போக்யமாக அவன் தான் விரும்பக் கண்ட இடம் உண்டோ என்ன
உண்டு என்னும் இடத்துக்கு உதாஹரணமாக
வஞ்சக்கள்வன்
மங்க வொட்டு -என்று எடுக்கிறார் –
நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இறே
மங்க வொட்டு -என்று கால் கட்டிற்று –

————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

ஹேயமான ப்ரக்ருதியை அவன் இப்படி ஆதரிக்கிறது தான் என் என்ன
வேர் சூடுமவர் -இத்யாதியாலே அத்தை த்ருஷ்டாந்த முகேந ப்ரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

ஆனால் -ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா -என்னா நிற்க -இப்படி ஞானாதிகராய் அத்யந்தம் ஆர்த்த அதிகாரியானவர்களுக்கு
இஸ் ஸரீரத்தோடே இருக்கிற இருப்புக்கு ஹேது என் என்ன -பரம ஆர்த்தனான இவனுடைய -இத்யாதியாலே சொல்லுகிறது –

ஆர்த்தன் என்பது -ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை

இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை

கேவல பகவத் இச்சை என்றது
கர்ம ஆராப்த சரீரமே யாகிலும் கர்ம சேஷத்தால் அன்றிக்கே -மோக்ஷயிஷ்யாமி என்று
ஸர்வ சக்தி தன் கேவல வாஞ்ச அதிசயத்தாலே வைத்தான் அத்தனை -என்கிறார் –

————

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி இவ்விஷயத்திலே பண்ணும் அபி நிவேசத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஆழ்வார்கள் விஷயமாக
அவன் பண்ணின அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் -திருமாலிருஞ்சோலை மலையே -என்று தொடங்கி
இதில் ஆழ்வாருடைய ஒரோ அவயவங்களிலே இவ்விரண்டு திவ்ய தேசத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணும் என்கையாலே
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்தில் பண்ணும் என்கிறார் –

————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

அங்குத்தை வாஸம் -இத்யாதி -அவ்வுகந்து அருளின நிலங்களில் வாஸம் தானும்
நாகத்தணைக் குடந்தை
நின்றது எந்தை ஊரகத்து
நிற்பதும் ஓர் வெற்பகத்து –இத்யாதில் படியே
அணைப்பார் கருத்தானாகைக்காக வாகையாலே
அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -என்கிறார்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தான் -என்றார் இறே-

————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –

கல்லும் கனை கடலும் இத்யாதி -இந்த ஞானாதிகனுடைய சாத்தியமான நெஞ்சு நாடு நிலமானவாறே இதுக்கு சாதனமான
உகந்து அருளின நிலங்களில் ஆதரம் அற்பமாய் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

அது அப்படியாகக் கூடுமோ என்ன -இளங்கோயில் இத்யாதி –
என் நெஞ்சம் கோயில் கொண்ட -என்கிறபடியே
மூல ஆலயமான பெரும் கோயிலுக்குள்ளே ப்ரதிஷ்டித்து உன்னை அனுபவித்தேன்
இனி இதுக்குப் பாலாலயமான ஷீராப்தியையும் கை விடாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து வைக்கையாலே
அது கூடும் இறே என்கிறார் –

————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

அங்கனே யாகில் ஆறு ஏறினார்க்குத் தெப்பம் வேண்டாவோ பாதி அவனுக்கு அபேக்ஷிதம் கிட்டின பின்பு
அவ்வோ தேச வாஸத்தை இவர்கள் அபேக்ஷிக்கிறது என்
அவன் தானும் அத்யாபி ஆதரிக்கிறதும் என் என்ன -ப்ராப்ய ப்ரீதி இத்யாதியாலே சொல்லுகிறது –
அவனுக்குப் ப்ராப்யராய் -கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -என்று
இருக்கும்படியான ஆழ்வார்களுடைய உகப்புக்கு விஷயமாகையாலும்
இவ்விடங்களில் நிலையாலே இறே இவர்களை பெற்றோம் என்று இருக்கும் க்ருதஜ்ஞதையாலும்
அந்தப் ப்ராப்யம் கை புகுந்த பின்பும் அவ்வோ தேசங்கள் அபிமதமாய் அவன் வர்த்திக்கும் என்கிறார் –
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றது
அத்தேச விசேஷத்தில் க்ருதஜ்ஞதையாலே இறே –

——–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே-ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

ஆகையாலே -இத்யாதி -இப்படி இவ்வதிகாரி யுடைய தோஷமே போக்யமாக அவன் ஆதரிக்குமது உண்டாகையாலே
இவன் தன் தோஷத்தைப் போக்கி விநியோகம் கொள்ள வேணும் என்னுமது தோஷா வஹம் என்னும் இடம் ஸித்த மாகையால்
இது போலே அவன் விநியோகத்துக்குப் புறம்பாய் வரும் ஆந்தரமான சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஸ்வரூப விரோதியாய் இருக்கும் என்று
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்களை அந்யோன்ய த்ருஷ்டாந்த முகத்தாலே த்ருடீ கரிக்கிறார்
கீழே குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றார் இறே –

—————-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

தோஷ நிவ்ருத்தி தானே -இத்யாதி -ஆந்தர குணம் தோஷா வஹம் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆக்கின
இந்த தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம்-என்னும் இடம் இவ்வளவாக ஸாதித்தோம் இறே என்கிறார் –

———-

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை-

இப்படி தன் நினைவால் வருமது புருஷார்த்த விரோதியாம் அளவன்றிக்கே சமுசித ஸ்வரூப உபாயாதி ஸகலங்களிலும்
தான் தேடுமது துர்லபமுமாய் -ஸாவதியுமாய் -சோபாதிகமுமாய் -ஸ்வரூபத்துக்கு அநநு ரூபமாயும் இருக்கும்
என்னும் இடத்தை -தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே என்றும் –
நிருபாதிகனான -அவன் அடியாக வரும் நன்மை முலைப் பால் போலே ஸூ லபமுமாய் -நிருபாதிகமுமாய் -எல்லா அவஸ்தையிலும்
தாரகமாகையாலே ஸ்வரூபத்துக்கு அநு ரூபமுமாய் இருக்கும் என்று பிள்ளான் அருளிச் செய்வர் -என்கிறார் –

———————–

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே-காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று –

அவனை ஒழிய -இத்யாதி -இப்படிப் ப்ராப்தனானவனை ஒழிய எல்லா வழியாலும் அப்ராப்தனான தான் தனக்கு ஸ்வரூப உஜ்ஜீவனம் தேடுகை
ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை -காதுகனான -என்று தொடங்கி -த்ருஷ்டாந்த முகேந அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
முலை பிரியில் முடியும் ஸ்நந்தயம் போலே -நான் உன்னை அன்றி அறியிலேன் – என்னும் படி நித்ய ஸ்தநந்த்யமான ஆத்மாவை
மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்குகையாவது -ஸ்ரீ யபதியே இதுக்கு அவஸ்த அநு ரூபமாக நன்மை ஆசா சிப்பான் என்று இராமை –
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே யாவது -இது நெடும் காலம் தன்னை
அஸத் சமானாக்குகைக்கே வழி பார்த்து போந்த தானே தன் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கை –
அத்தால் வரும் ஹானி யாவது -அவ்வாட்டு வாணியன் அதன் காலை அறுத்து அடையாளமாகத் தூக்கி வைத்து – அப்பிரஜையை அறுத்து
அம்மாம்சத்தோடே கலந்து கூறு செய்து விற்று வயிறு வளர்க்குமா போலே இவனும் தன்னை ஆத்ம வித்தாகவும்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு யத்னம் பண்ணுகிறானாக நினைத்தானே யாகிலும்
அநாதி வாஸனையாலே தேஹமே ஆத்மாவாக நினைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து அத்தால் வந்த அநேக பாப சஞ்சயங்களாலே
அந வரதம் ஸம்ஸரிக்கையே பலமாய் விடும் என்கிறார் –

————

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

ஆத்மைவ ரிபுராத்மந -என்கிறபடியே தனக்கு இப்படி பாதகனாவானும் தானே யாகையாலே –
தன்னைத் தானே இறே முடிப்பான் -என்கிறார் –

————–

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி இவ்வளவான அர்த்தத்தைத் அருளிச் செய்து மேல்
தன்னைத் தான் முடிக்கை யாவது -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கி
ம -என்கிற ஷஷ்ட் யர்த்தமான அஹம் -மமதா தோஷங்களை அருளிச் செய்கிறார் –

——————

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –என்று அதில் பிரதமோ பாத்தமான அஹங்கார தோஷத்தை அருளிச் செய்கிறார் –
அத் தோஷமாவது ஸ்மஸ அக்னி கிளம்பினால் மருங்கடைந்து தூற்ற வளவிலே சுடும்
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்நீ பாத்ரங்கள் எல்லாவற்றையும் தக்தமாக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனனான இவ்வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் –

——————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ்வர்த்தத்தில்-ந காம கலுஷம் சித்தம் –
என்றது கைங்கர்யத்தில் ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரஸத்வங்கள் இவனுக்கு ஸ்வரூப ஹானி என்னும் இடத்தில் பிரமாணம்
ந ஹி மே -என்று தொடங்கி -எம்மா வீட்டு திறமும் செப்பம் -என்னும் அளவாகவும்
ஸ்வ அஹங்கார ஸ்பர்சம் உள்ளவை அடங்க துஷ்டம் என்னும் இடத்தில் பிரமாணம் –

————-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே-

இனி -பிரதிகூல விஷய ஸ்பர்சம் –என்று தொடங்கி -கீழே விஷயங்களையும் விரும்புகை -என்று ப்ரஸ்தாவித்த மமதா விஷய
ஸ்பர்சத்தால் வரும் தோஷத்தை விஸ்தரேண அருளிச் செய்தார்
பிரதிகூல விஷய ஸ்பர்சம் -என்றது -சாஸ்திரங்களிலே இவனுக்கு பிரதிகூலங்களாக நிஷேதிக்கப் பட்ட பர தாராதிகளை –
விஷ ஸ்பர்சம் போலே-என்றது அது ஸரீரத்திலே ஸ்பர்சித்த மாத்ரத்திலே பிராண ஹானியாமாப் போலே
அவை இவனுக்கு ஸ்வரூப நாஸகம் ஆகையாலே –
அனுகூல விஷய ஸ்பர்சம் -என்றது -ஸாஸ்த்ரங்களிலே
இவனுக்கு அனுகூலங்களாக விதிக்கப் பட்ட ஸ்வ தாராதிகள் –
அவை -விஷ மிஸ்ர போஜனம் போலே-என்றது -கேவல விஷம் ஸ்பர்சித்தால் மணி மந்த்ர ஒவ்ஷதாதிகளாலே
அறிந்து மாற்றலாய் இருக்கும் –
இது அங்கன் அன்றிக்கே அபிமதமான போஜனத்திலே அஞ்ஞாதமாய்க் கலசின விஷம் ஆரோக்ய கரமுமாய் போக ரூபமாய்
இருக்கும் என்றே புஜிக்கையாலே படுக்கையோடே பிராணன் போய்க் கிடக்கைக்கு ஹேதுவாமோ பாதி
அத்யந்தம் ஸ்வரூப நாஸகம் -என்கிறது –

————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் ஸூகிக்க நினைக்கை —

அக்னி ஜ்வாலையை -இத்யாதி -இப்படி உபய ஆகாரேண சொன்ன விஷய அனுபவ ஸூகம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை
பிரமாண ப்ரஸித்தமான திருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாம் து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நஸ் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே கர்ம காலத்தில் பெரு விடாய்ப் பட்டவன் நெருஞ்சிப் பழம் போலே சிவந்து குளிர்ந்த
தண்ணீராகப் பிரமித்து அக்னி ஜ்வாலையை விழுங்கி த்ருஷார்த்தி தீர நினைக்குமா போலேயும்
மத்யாஹ் நார்க்க மரீசி தப்தனானவன் தன்னுடைய தாப ஸ்ரமம் ஆறுகைக்கு ப்ரக்ருதியாப்ரகுபித புஜங்க பணா மண்டலச் சாயையைப்
பணைத்து ஓங்கின மர நிழலாக நினைத்து அதிலே ஒதுங்க நினைப்பாரைப் போலேயும் இறே
விஷய ஸூகத்தாலே இவன் ஸூ கிக்கப் பார்க்குமது -என்கிறார் –
அங்கார ஸத்ருஸா நாரீ க்ருத கும்ப சம புமான் தஸ்மான் நாரிஷு ஸம் சர்க்கம் தூரத பரிவர்ஜயேத் -என்றும்
விஷஸ்ய விஷயாணாம் து தூர மத் யந்த மந்தரம் உப யுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி -என்றும் சொல்லக் கடவது இறே –

—————

சூரணை -185–

அஸூணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

அஸூணமா -இத்யாதி -இத்தால் இவ்வதிகாரிக்கு இப்படிப்பட்ட விஷய ஸ்பர்சம் வேண்டா –
அதனுடைய தர்சன மாத்ரம் அமையும் ஸ்வரூப ஹானிக்கு -என்கிறார் -அதாவது
அஸூணமா-என்பதொரு பக்ஷி விசேஷத்தை அகப்படுத்தி ஹிம்சிக்க நினைத்தான் ஒருவன் அவை உள்ள இடத்திலே இருந்து –
அதி மிருதுவாய் பாடினவாறே ஸூக ஸ்ரவண ஏக தத் பரங்களானவை அங்கேற வரும்
அவ்வளவிலே அவன் அருகே இருந்த முரசை அடிக்க அக்கடின த்வனி செவிப்பட்ட அளவிலே அவை கலங்கி முடியுமா போலே
பகவத் குண அனுபவ ஆனந்த ஏக தத் பரனாய் அவ்வனுபவ அதிசயத்தாலே மெல்கி அதி மிருது ஸ்வ பாவனாய் இருக்கிற இவ்வதிகாரி
இன்னமுது எனத் தோன்றும் விஷய தர்சன மாத்ரத்தாலே மயங்கி ஸ்வரூப ஞானம் ,அறைந்து முடியும் படியும் –

—————-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

காட்டிப் படுப்பாயோ -என்று விஷய தர்சன மாத்ரமே நாஸகம் என்றார் இறே
உழைக் கன்றே போல நோக்கமுடையவர் வலையில் பட்டு -என்றும்
மாத் யந்தி ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸூராந் பீத்வாது மாத் யந்தி தஸ்மாத் த்ருஷ்ட்டி பதான் நாரீம் தூரத பரி வர்ஜயேத்-என்றும்
கௌளீ மாத்வீ ச பைஷ்டீ ச விஜ்ஜேயாஸ் த்ரி விதாஸ் ஸூரா -என்றும்
சதுர்த்தா ஸ்த்ரீ ஸூரா ப்ரோக்தாஸ் தஸ்மாத் தாம் பரி த்யஜேத் -என்றும் சொல்லக் கடவது இறே –

———–

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்-கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்-ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்

ஆஸ்திக நாஸ்திகனை-ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

பகவத் ப்ரபாவத்தாலே ஞானாதிகனான இவனுக்கு இவ்விஷய அனுபவ ருசி இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்ன
அல்லாதாரைப் பற்ற -விதுஷோதி க்ரமே தண்ட பூயஸ் த்வம் -என்கிறபடியே அவனுக்கு அது தோஷா வஹம் என்னும் இடத்தை
அஜ்ஞனான விஷய பிரவணன் என்று தொடங்கிச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
இப்படி யுக்தமான விஷய தோஷத்தில் அஞ்ஞனாய்க் கொண்டு அவ்விஷயத்தே ப்ரவணனாய் இருக்குமவன்
உதர பரண மாத்ர கேவல இச்சோ புருஷப ஸோஸ் ச பஸோஸ் ச கோ விசேஷ -என்னும்படியான
முதலிலே அத்ருஷ்ட ருசி இல்லாத ஸூத்த நாஸ்திகனோடு ஒக்கும் –
இதில் விஷய தோஷத்தை உள்ளபடி அறிந்து வைத்து -இவ்விஷய அனுபவத்தாலே ஸூ கிக்க நினைக்கிற இவ்வதிகாரி
காண்கிற தேஹாதி ரிக்தரான ஆத்ம ஈஸ்வர ஞானம் யுண்டாய் வைத்தே அவற்றில் தாத்பர்யம் அற்று ஸ்வைர சஞ்சாரியாய்த் திரியுமவனோடே ஒக்கும் என்கிறார்

ஆனால் இவற்றில் சொன்ன தாத்பர்யம் என் என்ன
அஜ்ஞஸ் ஸூக மாராத்யதே ஸூக தர மாராத்யதே விசேஷஜ்ஞ -ஞான லவ துர் விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஞயதி-என்கிறபடியே
கேவல நாஸ்திகனானவனை அஞ்ஞாத ஞாபன முகத்தாலே திருத்தலாம் –
அறிந்து வைத்தே அதில் நிஷ்ணாதன் அல்லாத ஆஸ்திக நாஸ்திகனானவனை எத்தனையேனும் அதிசயித ஞானராலும்
யாவஜ் ஜீவம் திருத்த ஒண்ணாமையாலே இவன் ஈஸ்வரனுக்கு தண்ட்யனேயாம் அத்தனை -என்றபடி
அநு பதன் நபி விஸ்வப்ரே கேவலம் அநு கம்ப்யதே கர்ணாந்த லோசந கூபே பதம் கைர்ந வித்பயதே-என்னக் கடவது இறே –

ஆக கீழ் ப்ரபன்னனுக்கு -விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-என்ற இடத்தில் இவ்விஷய ப்ராவண்யம்
உபாய அதிகாரிக்கு த்யாஜ்யம் என்கையிலே
ஊற்றமாகையாலே இங்கே உபேய அதிகாரிக்குத் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி நின்றது –

———–

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

இனி இவை இரண்டும் -என்று தொடங்கி -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்ற
அஹங்கார மமதா ரூபமான விஷயப்ப்ராவண்யமும் என்ற
இவை இரண்டும் ஸ்வயமேவ நின்று இவ்வாத்மாவை நசிப்பிக்கையே அன்றிக்கே
பாகவத அபசாரமாகிற மஹா அநர்த்தத்தையும் உண்டாக்கி நசிப்பிக்கும் என்று
இவ் வஹங்கார விஷய ப்ராவண்யம் அடியாக வருகிற
பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

இதில் ஸ்வரூபேணே என்றது -ஸ்வேந ரூபேண -என்றபடி –

—————–

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்-தக்த படம் போலே –

நாம ரூபங்களை -இத்யாதி -இப் பாகவத அபசார பலம் அல்லாதார்க்கும் ஒத்து இருக்க -நாம ரூபங்களை உடையராய் -என்று விசேஷித்து
கீழில் ப்ரகரண பலத்தாலே வைஷ்ணவத்வ சிஹ்னமான நாம ரூபங்களை உடையராய் வைத்து பாகவத அபசாரத்தைக் கூசாதே பண்ணி தத் பயத்தால் வரும் அனுதாப ஸூ ன்யராய்க் கொண்டு திரியுமவர்கள்
தக்த படம் போலே என்றது -நேய மஸ்தி புரீ லங்கா -இத்யாதி வத்-அஸத் சமராய்க் கொண்டு சஞ்சரிக்கிறார் இத்தனை என்றபடி –

——————

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்
காற்று அடித்தவாறே பறந்து போம் –

அது எங்கனே என்ன -மடிப்புடவை -இத்யாதியாலே சொல்லுகிறது –
கேவலம் புடவை வெந்தால் என்னாதே -ஒரு ஸம்ஸ்கார விசேஷம் தோற்றும் படி -மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும் -என்றது
புஜ யுகமபி சிஹ்நை ரங்கிதம் -இத்யாதி க்ரமத்திலே ஸாத்விக லக்ஷண ஸம்ஸ்க்ருத வேஷராய் வைத்தே பாகவத அபசாரத்தாலே

————-

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்-

ஸர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் இவர்கள் பக்கல் இப்படி சீறக் கூடுமோ என்ன
அச் சீற்றத்தின் மிகுதியாலே அன்றோ அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களும் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படியை இவ் வர்த்தத்துக்கு உதாஹரிகிறார் -ஈஸ்வரன் அவதரித்து -இத்யாதி –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தாலே அழியச் செய்கை யன்றிக்கே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்துத் தானே
கை தொடானாய்ச் செய்த அதிசயித சக்தித்வாதிகள் தோற்றும் படியான அகில வியாபாரங்களும் அபிமதரான பாகவத விஷயத்தில்
அபசாரமும் அஸஹ்யமாய் இறே அருளிச் செய்வர் அல்லது அவனுக்கு விரோதிகள் ஒருவரும் இல்லை இறே –
யத் அபராத ஸஹஸ்ரம் அஜஸ் ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்-வரத
தேந சிரம் த்வம விக்ரியோ விக்ருதி மர்ப்பக நிர்ப்பஐநாதகா -என்றார் இறே கூரத்தாழ்வானும்-

———-

சூரணை -193–

அவமாநக்ரியா–

(அவமாந க்ரியா -என்று அவ்வீஸ்வர வசனம் எடுக்கிறார் –
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே )
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படி அஹம் மமதை களாலே ஆரப்தமாம் பாகவத அபசாரம் தான் உத்பத்தி நிரூபணம் -வாஸ நிரூபணம் –
ஆலஸ்ய நிரூபணம் -அவஸ்தா நிரூபணம் -முதலானவை
அநேகமாகையாலே -பாகவத அபசாரம் தான் அநேக விதம் என்கிறார்-

———

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அதிலே இத்யாதி -அவற்றில் ஜென்ம நிரூபணம் கொடியதாகையாலே
அத்தை விசேஷித்து எடுக்கிறார் –

———–

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

அதில் க்ரவ்ர்யம் எவ்வளவு என்ன –
அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் அதி க்ரூரம்-என்கிறார் –

———-

சூரணை -197–

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அதிலும் குரூரமான படி என் -என்ன -அத்தை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யாஸ் துல்யம் ஆஹூரேவம் மநீஷிண –என்று
மாத்ரு யோநி பரிக்ஷையை ஸாஸ்த்ரம் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிற இடத்தில் அர்ச்சாவதார உபாதான ஸ்ம்ருதி ரூபமான அபசாரத்தை
அந்த மாத்ரு யோநி பரிக்ஷையில் அபசார துல்யமாகச் சொல்லி –
வைஷ்ணவ உத்பத்தி ரூபமான அபசாரம் வாக்குக்கு நிலம் அல்லாமை தோற்ற –
ஏவமாஹு -என்று அவ்வபசாரத்தை அதி தேசித்து விடுகையாலே என்கை –
ஆகை இறே -ஸாஸ்த்ரம் அத்தைச் சொல்லிற்று என்று விசேஷித்தது –
அது தான் மாத்ரு யோநி பரீஷையோடு ஓக்கை யாவது -கீழே -இது தான் -ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே -என்று தொடங்கிச் சொன்ன க்ரமத்திலே
அநாதி காலம் விஷய ப்ரவணனாய்க் கொண்டு நாஸ்திகனாய் -அசன்னேவ-என்னும் படி போந்த இவனை
பொருள் அல்லாத என்னை -இத்யாதிப்படியே –
ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் முடிவாக உண்டாக்கி –
ஸ்வரூபா பத்தியையும் பிறப்பிக்குமது அர்ச்சாவதாரமாகையாலே அதனுடைய வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம் பண்ணுமது
அல்லாத ஸ்த்ரீகளுடைய யோநி வை லக்ஷண்ய நிரூபண வாஸனையாலே தனக்கு உத்பாதகையாய்
மாத்ரு தேவோ பவ -என்று பிரதமத்திலே பூஜ்யையாக விதித்து இருக்கிற மாத்ரு யோநி வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம்
பண்ணுமோ பாதி மஹா பாதகமாகையாலே –

————-

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

ஆனால் காற்று அடித்தவாறே பறந்து போம் -என்கையாலே சரீர அவஸ அநந்தரம் இப்படி ஸ்வரூப ஹானி வரும் அத்தனையோ என்னில் -அங்கன் அன்று
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் ஸத்யஸ் சண்டாள தாம் வ்ரஜேத் -என்றும்
நுமர்களைப் பழிப்பராகில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இஜ்ஜன்மத்திலே அதிலும் -அபசாரம் பண்ணின நிலையிலே -ஸ்வரூப ஹாநியாம் -என்னும் இடத்தை -த்ரி சங்குவைப் போலே -என்று தொடங்கிச் சொல்லுகிறது
அதாவது – ஸ ஸரீர ஸ்வர்க்கம் யுண்டாம் படி தன்னை யஜிப்பிக்க வேணும் என்று ஸ்வ ஆச்சார்யனான வஸிஷ்டனை அபேக்ஷிக்க
அவன் அது அப்ராப்தம் என்று நிஷேதித்தது பொறாமல் அவ்வஸிஷ்ட புத்திரர்கள் பக்கலிலே சென்று அவன் இவ் வ்ருத்தாந்த கத நத்தைப் பண்ண
அவர்கள் ஆச்சார்ய வாக்ய அதி லங்கனம் பண்ணின அப்போதே நீ சண்டாளன் என்று சபிக்க
அநந்தரம் அவனுடைய ஷத்ரிய வேஷ உசிதமான ஆபராணாதிகள் எல்லாம் நிஹீந த்ரவ்யங்களாய்க் கொண்டு
நீ ச வேஷோ சிதமாய் விட்டாப் போலே பாகவத உத்பத்தி நிரூபணம் அடியாக சண்டாளனாய் உத்தம வர்ணனான தன் மார்பில் இட்ட ப்ரஹ்ம வர்சஸ்ஸூக்கு
ஹேதுவான யஜ்ஜோ பவீதம் தானே -அவர்கள் தாம் புல்லியர் -என்கிற ஜன்மத்துக்கு உறுப்பான வாராய்
அபசாரம் பண்ணின வாக்கில் த்ருபிசம் தானே அபேயமுமாய் விடும் என்கிறார் –

————

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –அதுவும் இல்லை இவனுக்கு –

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

இங்கனே யாகில் லோகத்தில் சண்டாளர்களுக்கும் ஒரு கால் உஜ்ஜீவனம் உண்டாகிறவோ பாதி இவனுக்கும் ஒரு காலாந்தரத்திலே யாகிலும்
உஜ்ஜீவனம் உண்டாமோ என்னில் -இல்லை என்னும் இடத்தை -ஜாதி சண்டாளனுக்கு -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
அதாவது வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வத ஆரோஹணம் பண்ணுமோ பாதி
ஜாதி சண்டாளனுக்கு ஸத்ய ஆர்ஜவாதி
தர்ம அனுஷ்டானத்தாலே ஸத்வ உத்ரேகம் யுண்டாய் அத்தாலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு
உயர ஏறினவன் விழுந்தால் உருக் காண ஒண்ணாத படி உடைந்து போமா போலே உத்தம வர்ணத்தில் நின்று உத்பத்தியிலே
அபசாரம் பண்ணிய அப்பதித்வமே ஸ்வரூபம் என்னும் படி அத பதிக்கையாலே அவனுடைய யோக்கியதையும் இவனுக்கு இல்லை என்கிறார் –

———-

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே-

இது தனக்கு இத்யாதி -இவ் வபசாரம் இதர விஷயங்களில் ஒழிந்து ஞானாதிக விஷயத்திலும் இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்னில்
இவ் வபசாரம் பலிக்கும் இடத்தில் அவ்வதிகாரி நியமம் இல்லை என்று இதுக்குப் பிரமாணமாக
தமர்களில் தலைவராய -என்று அருளிச் செய்கிறார் –

———-

சூர்ணிகை -203-

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-

இவ் விடத்திலே என்று தொடங்கி அதுக்கு ஐதிஹ்யங்களை ஸ்மரிப்பிக்கிறார் -அவை எங்கனே என்னில் –
பெரிய திருவடி விநதா ஸூதனாய் வந்து அவதரித்த தசையிலே -இவனுக்கு பால்ய மித்ரனாய் இருப்பான் ஒரு ப்ராஹ்மண புத்ரன்
வேத அத்யயனம் பண்ணின சமயத்திலே குரு தஷிணைக்கு பஞ்ச வர்ணமான பஞ்ச சத அஸ்வம் தரச் சொல்லி அவனை ஆச்சார்யன் அருளிச் செய்ய
ஆஸ்திக்யத்தாலே அப்படிச் செய்கிறோம் என்று அவ் வை நதேயனையும் ஸஹ கரிப்பித்துக் கொண்டு போகா நிற்க
பர்வத பார்ஸ்வத்திலே வர்த்திப்பளாய்-
சாண்டில்யை என்ற பெயரை யுடையாள் ஒரு பாகவதை யானவள் நீங்கள் ஏதேனும் அபசாரத்தைப் பண்ணினது உண்டோ இப்படிக்கு கிடப்பான் என் என்ன
இவ்வளவுண்டு -விலக்ஷணையான இவளுக்கு வாஸம் ஒரு திவ்ய தேசமாகப் பெற்றது இல்லையே என்று இருந்தோம் என்ன –
அங்கன் இருந்தால் உங்கள் இளைப்பில் இவ்வாதித்யம் எனக்குக் கூடுமோ -தப்ப நினைத்தி கோள் என்று கையாலே தடவி அவர்களைத் தரிப்பிக்க
அநந்தரம் அவர்கள் தரித்து எழுந்து இருந்து சிறகும் எழுந்து போனார்கள் என்று ப்ராமண ஸித்தமாகையாலும்
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனான பிள்ளைப் பிள்ளை ஆழ்வானைக் குறித்து அவர் அதற்குப் பதறி இருக்கையாலே
இவருக்கு இது பாகவத அபசார பர்யந்தமாகப் பலிக்கில் செய்வது என் என்று த்ரிவித கரணங்களையும் தமக்குத் தக்ஷிணையாகத் தா என்று வாங்கிப்
பின்பு உடையவர் அருளிச் செய்த வார்த்தைக்காக
உமக்கு மற்றை மானஸ காயிகங்கள் இரண்டும் மீளத் தந்தோம்
வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்கையாலும்
அபசாரத்துக்கு அதிகாரி நியமம் இல்லாமைக்கு வை நதேய வ்ருத்தாந்தத்தையும் -பிள்ளைப்பிள்ளான் ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-என்கிறார் –

——————–

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

அது எங்கனே என்னில் -ஞான அனுஷ்டான ஹீநோபி ததா பாகவதேஷணாத் -ஜீவேத் ததா தத் யுக்தோபி நஸ்யேத் ததந பேஷணாத் – என்கிறபடியே
எத்தையேனும் மோக்ஷ ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் அன்றியிலே இருந்தார்களே யாகிலும்
அந்தோ நந்த க்ரஹண வச த -இத்யாதிப்படியே
அப் பேற்றுக்கு அத் தேசிகரான பாகவதர்களுடைய ஸம்பந்தமே போருமோ பாதி –
அப் பல ஹாநிக்கும் ஸ்வரூப ஹாநிக்கும் அவர்களுடைய அந பேஷண ஹேதுவாக அபசாரமே போரும் -என்கிறார் –

—————–

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-என்றது -உத்க்ருஷ்டமான ஜென்ம வ்ருத்த ஞானங்களை
யுடையாருடைய ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவனமும் அவர்கள் பக்கல் இழவுமாக வேணும் என்கிற நியமம் இல்லை
இவற்றால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் நேரே பாகவதர்கள் ஆகில் அவர்களுடைய சம்பந்தமே உஜ்ஜீவன ஹேதுவாய்
அவர்கள் பக்கல் அபசாரமே இழவுக்கு ஹேதுவாம் என்றபடி –

—————-

சூர்ணிகை –206–

இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -அத்தைச் சொல்லுகிறது -இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்-என்று தொடங்கி –
கைசிக வ்ருத்தாந்தத்திலே சரக வம்சஜனாய் -உத்க்ருஷ்ட ஜன்மாவான ஸோம சர்மாவினுடைய யஜ்ஞ சாபம் எத்தனையேனும்
அபக்ருஷ்ட ஜென்ம வ்ருத்தங்களை யுடையரான ஸ்வ பாகருடைய ஸம்பாஷண ஸஹ வாஸாதி களாலே
யஜ்ஞ ஸாபாத் வி நிர்முக்த ஸோம சர்மா மஹா யஸா -என்கிறபடியே அவனுக்குப் போகக் காண்கையாலும்
உபரிசரவ ஸூ வ்ருத்தாந்தத்தாலே ஆகாஸ ஸாரியான ரதத்தை யுடையனாய் – ஷத்ரியனுமாய் இருக்கிற உபரிசரவஸூ ஸகல தர்ம ஸூஷ்ம ஜ்ஞானனுமாய்-அத்யந்தம் ஞானாதிகனுமாய் இருக்கையினாலே
பிஷ்ட பஸூக் கொண்டே யஜிப்புதோம் என்ற ருஷிகளுக்கும்
யதாவான பஸூக் கொண்டே யஜிக்க வேணும் என்கிற தேவர்களுக்கும் விவாதம் ப்ரஸ்துதமாய் -அவர்கள் ஞானாதிகனானவனைக் கேட்க வர
அத்தை நாம் எல்லாரும் கூட விசாரிக்கும் அத்தனை அன்றோ என்று அவர்கள் பொருந்தச் சொல்லாதே
சேஷிகள் உகந்ததே சேஷ பூதங்கள் இட வேண்டாவோ என்று சிவிட்கெனச் சொல்ல
அத்தாலே ரிஷிகளும் த்வம்ஸ -என்று சபிக்க
அவர்களிலும் ஞானாதிகனான உபரி சரவஸூ அதிபதிக்கக் காண்கையாலும்
இவை இரண்டிலும் காணலாம் -என்கிறார் –

—–

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-வேதாத்யய நாதி முகத்தாலே–பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –த்யாஜ்யமாம் இறே —

ஆனால் அபிமத வித்யா வ்ருத்தங்களுடைய உத்க்ருஷ்டதையால் வரும் பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்ன –
ப்ராஹ்மண்யம் விலைச் சொல்லுகிறது -இத்யாதியாலே அவை பகவத் ப்ரத்யா சத்தி ஹேதுவாம் என்று இறே உத்தேஸ்யமாவது –
அவை தானே நாஸ ஹேதுவாமாகில் த்யாஜ்யமாம் அத்தனை இறே என்கிறார் –
அதாவது –
உத்க்ருஷ்ட ஜன்மா வாகையால் வருகிற வை லக்ஷண்யம் ஸர்வ ஸாமான்யமாக உத்தேஸ்யமாய்க் கொண்டு போருகிறது
பிரதமத்திலே சாங்கமான வேத அத்யயனம் என்ன -அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிறபடியே -அந்த ஞான அநு ரூபமான நிஷ்டை என்ன –
அவைகளால் -அல்லாதாரைப் பற்ற ஸூ கரமாக பகவத் பிராப்தி ஹேதுவாம் என்று இறே –
அந்த ப்ராஹ்மண்யத்தால் வந்த உத்தேஸ் யதை -தானே பாகவதர் பக்கல் அப க்ருஷ்ட புத்திக்கு ஹேதுவாய் ஸ்வரூபத்தை நசிப்பிக்குமாகில் அது தானும் த்யாஜ்யம் இறே -என்கிறார் –

————-

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய-உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம் –

ஜென்ம வ்ருத்தங்களினுடைய -இத்யாதி -ஆகக் கீழே ப்ரதிபாதிதமான அர்த்தம்
ஜென்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்குப் பிரயோஜகம் அன்று
அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜகம் அன்று –

—————

சூரணை-209–

பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்- தத் அசம்பந்தமும் –

இனி -உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு -கார்யகரமாவது
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கையாலே பகவத் சம்பந்த ஞானம் உண்டாகையும்
அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கையாலே நாஸ ஹேதுவாயத் தலைக்கட்டுவதும்
அப் பகவத் ஸம்பந்த ஞானம் இல்லாமையும் என்றதாயிற்று –

——–

சூரணை -210-

பகவத் சம்பந்தம்-உண்டானால்-இரண்டும் ஒக்குமோ என்னில் –

சூரணை -211-

ஒவ்வாது –

பகவத் ஸம்பந்தம் உண்டானால் -இத்யாதி -இப்படி உஜ்ஜீவன ஹேதுவான பகவத் சம்பந்த ஞானம்
கீழ்ச் சொன்ன உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்கள் இருவருக்கும் உண்டானால் தான்
அவை இரண்டு ஜென்மமும் தன்னில் ஒக்குமோ என்று நிரூபித்து -அவ்வளவிலும்
ஒன்றினுடைய தோஷா வஹத்வ புத்யா ஒன்றுக்கு உதகர்ஷம் தோற்றுகையாலலே இரண்டும் ஒவ்வாது -என்கிறார் –

———

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இதில் இப்படி தோஷா வஹமான ஜென்மம் ஏது -அத்தைப் பற்ற அதிகமான ஜென்மம் ஏது என்ன -உத்க்ருஷ்டமாக பிரமித்த -என்று தொடங்கிச் சொல்லுகிறது
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ப்ரகாசகமான திரு மந்திரத்தில்
ப்ரணவத்தாலே ஆபி ஜாத்யமும் –
நமஸ்ஸாலே வித்யையும்
சரம பதத்தில் சதுர்த் யர்த்தமே வ்ருத்தமும்
தனக்கு நிலை நின்ற அபிஜன வித்யா வருத்தங்களாய் இருக்க
அஸ்த்திரமான தோல் புரையே போம் அபிஜன வித்தா விருத்தங்களாலே தான் உத்க்ருஷ்டனாக பிரமித்த
உத்தம ஜென்மம் யதாவான அபிஜன விருத்தங்களை யுடைய ததீய சேஷத்வ பர்யந்தமான அத்யந்த பாரதந்தர்ய விருத்தமாய்க் கொண்டு
ஸ்வரூப நாஸகம் ஆகையாலே
ஸரீரே மஹத் பயம் வர்த்ததே -என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப விருத்தமான உபாயாந்தர அனுஷ்டான யோக்கியமான உத்க்ருஷ்ட ஜென்மத்தில்
சரீரம் ஸ்வரூப அனுரூபமான பாகவத அனுவர்த்தனத்துக்கும் விரோதியாய் இருக்கையாலும்
மிகவும் பயாவஹமாய் இருந்த உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு
தம் அடியார் அடியோங்கள் -என்கிற நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப அனுரூபமான தாழ்ச்சியை நினைத்த படி வாராமையாலே பாவிக்க வேண்டுகையாலும்
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜென்மம் தோஷாவஹம் என்கிறார் –

———–

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த-உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

இனி -அபக்ருஷ்டமாக -இத்யாதி -ஸ்வரூப ஸ்பர்ஸி களாய்க் கொண்டு நிலை நின்ற ஆபி ஜாத்யாதிகளால் அவன் அதிக ஜன்மாவாய் இருக்கக் காண்கிற
சரீரத்தை இட்டு இவன் தன்னை உத்க்ருஷ்டமாக பிரமித்தால் போலே -தான் அபக்ருஷ்டனாக பிரமித்தவனுடைய
உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு பய ஜனகன் என்றும் சோக ஜனகன் என்றும் பாவிக்க வேணும் என்கிற
யுக்தமான உபய தோஷமும் இல்லை –

———

சூரணை -215-

நைச்சயம் ஜன்ம சித்தம்-

நைச்சயம் ஜன்ம சித்தம்–என்கிற இத்தால் ஸ்வரூப அனுரூபமான பாகவத அநு வர்த்தனத்துக்கும்
ஸ்வரூபத்துக்குச் சேராத உபாயந்தரங்களினுடைய அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாமைக்கு
நைச்யம் பாவிக்க வேண்டாத படி -அது அவனுக்கு ஜன்ம ஸித்தம் –

———

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

ஆகையால் -இத்யாதி -இப்படி இவனுக்கு இரண்டு தோஷமும் இல்லாமையாலே
வந்தேறியான உத்க்ருஷ்ட ஜென்மமும் இன்றிக்கே
நிலை நின்ற உத்க்ருஷ்ட ஜென்மமே ஸ்ரேஷ்டம் என்று நிச்சயித்து அருளிச் செய்கிறார் –

—————-

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால-

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்று இவ்வர்த்தத்தில் பிரமாணம்
அவைஷ்ணவோ வேதவித் யோ வேத ஹீநோ ஹி வைஷ்ணவ -ஜ்யாயாம் சம நயோர் வித்தி யஸ்ய பக்திஸ் ஸதா மயி -என்னா நின்றது இறே

————-

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

நிக்ருஷ்ட ஜென்மத்தால் -இத்யாதி -ஆனால் உத்க்ருஷ்ட ஜன்மாவாக பிரமித்தவனுடைய அபக்ருஷ்ட ஜென்மம்
அடியாக வந்த கீழ் யுக்தமான தோஷங்கள் நிலை நின்றே விடுமத்தனையோ என்ன –
அது போவது உத்க்ருஷ்ட ஜன்மாவாக நிச்சயித்த விலக்ஷணனுடைய அபிமான விசேஷத்தாலே -என்கிறார் –

—————

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

ஸம்பந்தத்துக்கு -இத்யாதி -அவர்களுடைய அபிமான அந்தர் பூதனாகைக்கு அதிகாரம் யுண்டாகும் போது
இவன் உத்க்ருஷ்டனாக பிரமித்த வந்தேறியான ஜன்ம வ்ருத்த அபிமான தோஷம் போக வேணும் –

—————–

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜன்மத்துக்கு -இத்யாதி -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மத்துக்கு ஆபி ஜாத் யாதிகள் வந்தேறி என்னும் இடத்தையும்
அதுக்குப் பரிஹாரம் அந்த விலக்ஷண அபிமானம் என்னும் இடத்தையும்
பழுதிலா ஒழுகல் -என்ற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் -என்கிறார் –

————–

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

வேதகப் பொன் -இத்யாதி -இப்படி அபக்ருஷ்ட ஜன்மாவானவன் -அவ் விலக்ஷண ஸம்பந்த மாத்ரத்தாலே
விலக்ஷணனாகக் கூடுமோ என்னில் –
ரஸ குளிகை யானது விஸஜாதீய த்ரவ்யங்களையும் விலக்ஷண த்ரவ்யம் ஆக்குமா போலே
இவர்களும் நச்சு மா மருந்தான கேவல பகவத் ப்ரபாவம் அடியாக வந்த பாக விசேஷத்தாலே
அவனையும் விலக்ஷணன் ஆக்கக் குறையில்லை -என்கிறார் –

——————-

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

இவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படி ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே ஸ்வரூப உஜ்ஜீவனம் உண்டாக்குமவர்கள் பக்கலில்
அவர்கள் பிரதிபத்தி பண்ணும் படி தான் எங்கனே என்ன –
ஸமராகவும் அதிகராகவும் பிரதிபத்தி பண்ண வேணும் -என்கிறார் –

——————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும்
சம்சாரிகளிலும்
தன்னிலும்
ஈச்வரனிலும் அதிகர் என்றும் நினைக்கை-

அதாவது -இத்யாதி -அவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும் -ஆதிக்ய புத்தியும் -நடக்கை யாவது -ப்ரத்யஷிதாத்ம நாதராய் பகவத் அநுபவ ஏக போகராய்
ஸ்ரீ காஞ்சீ பூர்ண ஸத்ருசரான அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் -ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்கிறபடியே
ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே உஜ்ஜீவிப்பிக்கிற -விப்ரஸ் ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிற ஸ்வா சார்ய ஸத்ருசர் என்றும்
அதிகாரம் இடத்தில் ஸ்வ ஜாதி ஸம்பந்த ருசி பின்னாட்டாத படி பரமை காந்திகளான வர்களுடைய ப்ரக்ருதி பந்துக்களான ஸம்ஸாரிகளிலும்
தேஹ யாத்ராபராவஸ் யாதிகளை யுடைய தன்னிலும்
வாய் திறந்து க்ருத்யா க்ருத்யங்களை விதிக்கை முதலானவற்றாலே அர்ச்சாவதார ரூபியான
ஸர்வேஸ்வரனிலும் அவர்கள் அதிகர் என்றும் ஸ்மரிக்கை –

—————–

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சார்ய ஸாம்யத்துக்கு -இத்யாதி -ப்ரத்யுபகார விஸத்ருசமாக உபகாரகனான ஆச்சார்யனோடு சம புத்தி பண்ணுகைக்கு அடி
அவன் உபதேச காலத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காண் என்று உபதேசிக்கையாலே -என்கை –

——————–

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –என்றது அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் இவ்வநு ஸந்தான விசேஷங்கள் நடையாடா விடில்
கீழ்ச் சொன்ன பாகவத அபசாரத்திலே இதுவும் ஓன்று என்றதாயிற்று –

——————-

சூரணை -226-

இவ் அர்த்தம்
இதிகாச புராணங்களிலும் –
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் –
நண்ணாத வாள் அவுணரிலும் –
தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

கீழே விசதமாகச் சொன்ன பாகவத வைபவம் பிரபல ப்ராமண ஸித்தமுமாய்-ப்ராமாணிக வசன ஸித்தமுமாய் இருக்கும் என்னும் இடம்
விசதமாகக் காணலாம் என்கிறார் -இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –என்று தொடங்கி -எங்கனே என்னில்
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
(மத் பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி நகதிஸ் தஸ்ய வித்யதே -என்றும் )
ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம் ததா வீக்ஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -என்றும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா –ஸர்வ வர்ணே ஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்தனே -இத்யாதி களாலே இதிஹாச புராணங்களிலும்
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை -திருவாய் மொழி களிலே -நம்மாழ்வாரும்
கண் சோர வெங்குருதி –
நண்ணாத வாள் அவுணர் -என்கிற திரு மொழிகளிலே திருமங்கை ஆழ்வாரும்
தேட்டரும் திறல் தேன் -என்கிற திருமொழியிலே பெருமாளும்
மேம் பொருளுக்கு மேல் அஞ்சு பாட்டுக்களிலே ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
விஸ்தரித்து அருளிச் செய்கையாலே விசதமாகக் காணலாம் -என்கிறார் –

————–

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

ஆனாலும் இப்படி இஜ் ஜென்மம் தன்னிலே இந்த ஹேய ஸரீரத்தோடே இருக்கிறவர்கள் உத்தம ஜென்மாவினுடைய தோஷ நிவ்ருத்தி பூர்வகமாக
அவனை உஜ்ஜீவிக்கும் படி உத்க்ருஷ்டரானவர்கள் என்றால் இது கூடுமோ என்ன
ஒருவனுக்கு வந்தேறியான தொரு உபாதி விசேஷமான தபோ பலத்தாலே ஒரு உத்க்ருஷ்டம் உண்டான படி கண்டால்
நிருபாதிகமான பகவத் சம்பந்தம் அவர்களுக்கு அவ் வுத்கர்ஷத்தைப் பண்ண மாட்டாதோ என்னும் அர்த்தத்தை
ஷத்ரியனான விஸ்வாமித்ரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விஸ்வாமித்ரனுக்கு அடியில் ஷத்ரிய ஜென்மமாய் இருக்க வந்தேறியான தொரு தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷித்வம் ஆகிற
உத் கர்ஷத்தை அடைந்த பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டித்து இல்லை இறே –

————–

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –
பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்கிறார் –

விபீஷணனை -இத்யாதி -ஸோ பாதிக பந்துவான ராவணன் -விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்னும் படியான
ஸ்ரீ விபீஷணப் பெருமாளை -த்வாம் து திக் குல பாம்ஸநம் -என்று இக்குலத்துக்கு அழுக்காய்ப் பிறந்தாய் நீ போ என்று உபேக்ஷித்தான்
பெருமாள் இத்யாதி -நிருபாதிக பந்துவான பெருமாள் -ந த்ய ஜேயம் கதஞ்சந -என்று இவனை விடில் நாம் உளோம் ஆகோம் -என்று கைக்கொண்டு
ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலா பலம் -என்று தம் பின் பிறந்த இளைய பெருமாளோ பாதியாக இவரையும் நினைத்து
ராக்ஷஸருடைய பலா பலங்கள் இருக்கும் படி சொல்லிக் காணீர் -என்றார் இறே என்கிறார் –

—————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

பெரிய உடையார் என்று தொடங்கி -இந் நிருபாதிகமான பகவத் ஸம்பந்தமே பிரபலமாய்க் கொண்டு கார்யகரமாவது என்னும் இடத்தைப்
பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார் -எங்கனே என்னில்
சர்வாதிகராய் ஆசார பிரதானரான பெருமாள் திர்யக் ஜாதீயராய் மாம்ஸாசியுமான ஜடாயு மஹா ராஜரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார் -என்றும் –

—————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

தர்ம தேவதா ஸ்வரூபமான தர்ம புத்திரர் பூஜ்யரான ஸ்ரீ விதுரருடைய ஸம்ஸ்கார சிந்தா வ்யாகுலிதரான தசையிலே
அசரீரி -உமக்கு ப்ரஹ்ம மேத ஸம்ஸ்கார யோக்யர் இவர் என்று சொல்லுகையாலும்
ஸம் ப்ரதி பன்னமான அவருடைய ஞானாதிக்யத்தாலும்
ஹீந ஜன்மாவான அவரை ப்ரஹ்ம மேதத்தால் ஸம்ஸ்காரம் பண்ணினார் என்றும் –

———–

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

மஹ ரிஷிகள் தர்ம ஸூஷ்ம விசேஷஞ்ஞன் யாகையாலே தர்ம வ்யாதன் என்று ப்ரசித்தனான வேடனுடைய வாசலிலே
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி யர்த்தமாக வந்து அவன் வேட்டையாடி வரும் அவஸர ப்ரதீ ஷிதராய்க் கொண்டிருந்து
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு போனார்கள் என்றும் –

—————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு-ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளின மத்யாஹன வேளையிலே மீண்டு எழுந்து அருளா நிற்க
பீஷ்ம த்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மது ஸூதந -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி
ஆபி ஜாத்யத்தாலும் -வித்யையிலும் -வ்ருத்தத்திலும் -இவை ஓர் ஒன்றிலே விசேஷித்து துரபிமானம் பண்ணி இருக்கிற
துரியோதனையும் -ஸ்ரீ பீஷ்மரையும் -துரோணாச்சார்யரையும் அதிக்ரமித்துப் போந்து
இத்துரபிமானங்களாலே துஷ்டம் இல்லாத ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
புக்த வத்ஸூ த்வி ஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸனே விதுராந்நாநி புபுஜே ஸூ சீநி குணவந்தி ச -என்று
பக்தி ரசத்தாலும் பாவநாத்வத்தாலும் போக்யத்வங்களோடே கிருஷ்ணன் அமுது செய்தான் என்றும் –

———-

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்கிற படியே சக்ரவர்த்தி திரு மகனான பெருமாள்
வேடுவச்சியான ஸ்ரீ சபரி கையாலே திருந்தத் திருவாராதனம் கொண்டு அருளினார் -என்றும்
இப்படி இதிஹாஸ புராண யுக்தங்களான உதாஹரணங்களை அருளிச் செய்து –

——————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

மேல் -மாறநேர் நம்பி -இத்யாதியாலே
நம் தர்சன ப்ரவர்த்தகரான பாஷ்யகாரருக்கும் -பிரதம ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய அனுஷ்டானத்தையும்
பிரகாசிப்பிக்கிறார் -அதாவது
மாறநேர் நம்பி தம்முடைய அந்திம தசையில் ப்ரக்ருதி பந்துக்களுடைய ஸ்பர்சம் வரில் செய்வது என் என்று அதி சங்கை பண்ணி
ஸ ப்ரஹ்ம சரியான பெரிய நம்பியைப் பார்த்து
ஆளவந்தார் அபிமானித்த சரீரமான பின்பு இப்புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் -என்ன
அவரும் அத்தசையிலே உதவித் தாமே அத்திரு மேனிக்கு வேண்டும் ஸம்ஸ்காரம் எல்லாம் பண்ணித் திரு முடியும் விளக்கி மீள எழுந்து அருளி இருக்க
இச்செய்தியை உடையவர் கேட்டருளி -ஸ்ரீ பாதத்தில் சென்று கண்டு லோக உபக்ரோசம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினால் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆசார ப்ரதாநரான பெருமாள் பெரிய யுடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வைதர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜரும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை களுக்கு நான் பொருள் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார் –
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையாலே நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் இத்தனை
நான் பெருமாளில் அதிகனாய்த் தவிரவோ –
இவர் அப்பஷியில் தண்ணியராய்த் தவிரவோ -என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் -என்று ப்ரஸித்தம் இறே –

————-

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-

மேல் -ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –என்று
உத்தமமான அனுஷ்டானத்துக்கு விஷய பூதரானவர்களுடைய அவதாரம்
ஸர்வேஸ்வரனுடைய ஸூர நர திர்யக் ஸ்தாவர அவதாரங்கள் போலேயான பின்பு
இவ்வநுஷ்டானங்கள் உண்டானால் லோக கர்ஹை இல்லை என்றும்
இவ்வதிகாரம் இன்றிக்கே ஜகாத் ஸ்ருஷ்டிகளை யுடையவன் பக்கல் விமுகரானவர் பக்கல் யுண்டான
வித்யா வ்ருத்த பாஹுள்யமும் விதவாலங்காரம் போலே என்றும் சொன்ன
ஸ்ரீ ஸூக வாக்கியத்தை -ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-என்று ப்ரசங்கிக்கிறார் –

——————–

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதன் அன்றிக்கே -இத்யாதி -இப்படி பகவத் சம்பந்தம் அடியாக வந்த வை லக்ஷண்யம் இன்றிக்கே இருக்க
வேத அத்யயனம் என்ன
அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஞான அனுரூபமான அதில் அனுஷ்டானம் என்ன –
இவை இத்தனைக்கும் தாங்கள் நிர்வாஹகராய் இருக்குமவர்
விலக்ஷண போக ஏக தத் பரரானவருக்கு போக உபகரணமான குங்குமப் பாரத்தை பூதி கந்த
தத் பரமான கர்த்தபம் பூர்ணமாக வஹிக்குமோ பாதி என்றும் பிரமாண சித்தம் இறே என்கிறார் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை ப்ராஹ்மண கர்த்தப-என்று
ஸ்ம்ருதி ப்ரஸித்தமாகையாலே

——————

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

ஆக நிஹீன ஜன்மாவானவன் இஜ் ஜென்மம் தன்னிலே பகவத் ப்ரத்யாசத்தியாலே இப்படி உத்தேச்யமான அளவே அன்று
அந் நிக்ருஷ்ட ஜென்மம் தன்னை உத்க்ருஷ்ட ஜன்மாக்களானாரும்
ஆசைப்பட்டும்
ஆஸ்தாநம் -பண்ணியும் போரும்படி இறே
அந்த பகவத் ப்ரத்யா சத்தியால் வரும் வை லக்ஷண்யம் என்கிறார் -ராஜாவானவன் என்று தொடங்கி -அவை எங்கனே என்னில்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவர தாம் நர -என்கிறபடியே
பாப பலமாய் வரும் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை த்வதீய வர்ணரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –என்றும்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –என்றும்
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –என்றும்
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்றும்
இத்யாதிகளாலே ஆசைப்பட்டார் –

—————–

சூரணை -238-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்- கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே-

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே

——————-

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

கந்தல் கழிந்தால் -இத்யாதி -இத்தால் கீழ்ச் சொல்லிக் கொடு போந்த உத்கர்ஷ அபகர்ஷ வைஷம்யம் தான்
இவர்களுடைய கர்ம தாரதம்யத்தால் வந்த சரீர வைசிஷ்டியிலே வருமவை யாகையாலே
அக் கந்தல் கழிந்த நிஷ்க்ருஷ்ட வேஷத்தைப் பார்த்தால் ஸகல ஆத்மாக்களுக்கும் அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே
அவனுக்கு அத்யந்த அபிமதையான பிராட்டி தசை பிறக்கக் காட்டுவதாய் இருக்கும் -என்கிறார் –

—————–

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

ஆறு பிரகாரத்தாலே இத்யாதி -ஈஸ்வரீம் ஸர்வ பூதா நாம் -என்கிறவளுடைய அவஸ்த்தை இவர்களுக்கு வருகையாவது என் என்ன
பரி ஸூத்தமான நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஞான ஆனந்தங்களும்
சேஷத்வ பாரதந்தர்யங்களும்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையுமாகிற
அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே
அவளோடே ஸர்வ ஸாம்யம் இல்லையே யாகிலும் இவ்வாறு பிரகாரத்தாலே தத் ஸாம்யம் உண்டு என்கிறார் –
ஆனால் இவளுக்கு இவற்றில் அதிகமான பிரகாரங்கள் எவை என்னில்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ ஸம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூர கத்வம் –முதலானவை இறே –

————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

ஆக -கீழே -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கிச் சொன்ன அஹம் மமதைகளையும்
அவ் வஹம் மமதா கார்யமான பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்ய ப்ரதிபாதன அர்த்தமாக ப்ரஸ்துதமான
பாகவத வைபவத்துக்கு மூலமான பகவத் சம்பந்த யாதாத்ம்யத்தையும் -த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் அஹங்காரத்தாலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது -குக்ராம நியாமகனைத் தொடங்கி ஸர்வ நிர்வாஹகரான பிரம்மா அளவாக
அஹங்கார மமகாரங்களினுடைய அதிசயம் எவ்வளவு உண்டு அவ்வளவும் த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாய் இருக்கும் என்றும்
பகவத் சம்பந்தம் அடியாக உத்தேஸ்யமான பாகவத விஷயத்தில் எத்தனையேனும் ஜென்ம ஞான வ்ருத்தங்களால் குறைய நின்றவர்கள் பக்கலிலும்
அவ் வஹங்கார மமகார ராஹித்யத்தாலே அத்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாம் என்றும் நிகமிக்கிறார் –

—————-

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் வஹங்காரம் உண்டானதாலும் இல்லை யானதாலும் வரும் பிரயோஜனம் ஏது என்னச் சொல்லுகிறது -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் -இத்யாதி
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வஹங்காரத்தில் அதிகனான பிரம்மாவாய் -த்வி பரார்த்த அவசானே மாம் ப்ராப்தும் அர்ஹஸி பத்ம ஜ -என்று
இவ்வஹம் மமதை உள்ள அளவும் ஈஸ்வரனாய் இழந்து போதல்
ஜென்ம ஞான வ்ருத்தங்களால் அவ்வஹங்கார ரஹிதை யான சிந்தயந்தி யாகிற இடைச்சியாய் அவனை லாபித்துக் கொள்ளுதல்
செய்யும் படியாய் இருக்கும் -என்று –

———————-

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

இவ்வளவாக -தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கின நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்தார் –
இனி ஸ்வரூப அனுரூபமாக சோதிதமான உபாய உபேயங்களில் நிஷ்ணாதரான அதிகாரிகளுடைய அனுசந்தான பிரகார விசேஷங்களை
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வரூப தசையோடு
உபாய தசையோடு
புருஷகார தசையோடு
வாசியற ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்வரூப நாசகமாகச் சொன்ன அஹங்காரத்துக்கும் அது அடியாக வரும் மமக விஷயமான
இஸ் ஸப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கும் ஜென்ம பூமி சரீர விசிஷ்டனான தானாகையாலே அந்த சரீர விசிஷ்டமான ஸ்வ விஷய ஞானம் பிறந்தால்
தன்னை ஸ்வ அநர்த்த கரரான சத்ருக்களைக் கண்டால் போலேயும்

அவ்வஹங்கார மமகாரங்களை அதிசயிப்பிக்கிற ஸம்ஸாரிகளை அனுசந்தித்தால் அணுகில் அள்ளிக் கொள்ளும் என்று அஞ்ச வேண்டும்படியான ஸர்ப்பத்தைக் கண்டால் போலேயும்

மத்யம பத நிஷ்டராகையாலே அவ்வஹம் மமதா நிவர்த்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்தித்தால் தன்னுடைய அர்த்த ப்ராமண அபிமானங்களுக்கு அபிமானிகளான ப்ராண பந்துக்களைக் கண்டால் போலேயும்

ஸர்வ பிரகார ரக்ஷகனாய் நிருபாதிக சேஷியான ஈஸ்வரனை அனுசந்தித்தால் தன்னுடைய அநவதானத்தாலே வரும் அக்ருத்யங்களை அறிந்து
ஹித பரனாகையாலே ஸிஷித்துக் கொண்டு போரும் பிதாவைக் கண்டால் போலேயும்

ஸ்வரூப உத்பாதகனுமாய் -ஸ்வரூப வர்த்தகனுமாய்த் தன்னை ஆதரித்தார்க்கு எல்லாம் சத்தையை நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்ய விஷயத்தை அனுசந்தித்தால் பெறில் தரித்தல் பெறா விடில் முடியும்படியான பெரும் பசியனானவன்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே -இத்யாதிகளில் படியே ஸர்வ ஒவ்ஷதமான அன்னத்தைக் கண்டால் போலே அபி நிவிஷ்டனாய் இருக்கை –
அதாவது –
ஆச்சார்ய சங்கம்
ஆச்சார்ய விக்ரஹ சங்கம்
ஆச்சார்ய கைங்கர்ய சங்கம்
ஆச்சார்யனுடைய வார்த்தையிலே இன்ன இடத்திலே இன்னபடி அருளிச் செய்தான்
என்று இருக்கும் அதிசங்கம் யுடையவனாகை –
அத்யந்த பாரதந்தர்யத்தையே வடிவாக யுடையராய் அத ஏவ அபிமத ரூபமான சிஷ்யர்களைக் கண்டால்
அவர்களுக்கு சேஷத்வமாகிற சட்டையை இட்டு ஆத்ம குணங்களாகிற ஆபரணங்களை பூட்டி பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் அபிமான
அந்தர்ப்பூதனாக்குகை ஆகிற அந்தப்புரத்தில் வைத்து
தேவதாந்தர ப்ரயோஜனாந்தர நிவ்ருத்தி சாதனாந்தர நிவ்ருத்தி முதலான கல் மதிளை இட்டு வைத்து ரஷிக்கையாலே அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து என்கிறது –

மண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றம்பாலை இட்டுத் தேற்றி -அது தெளித்தால் பாத்ராந்தத்திலே சேர்க்கும் தனையும்
காற்று அடிக்கில் கலங்கும் என்று நோக்குவாரைப் போலே ஞான அஞ்ஞான மிஸ்ரமான தேஹத்திலே இருக்கிற ஆத்மாவைத்
திருமந்திரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்றி -அப்ராக்ருதமான தேஹாந்தரத்திலே வர்த்தித்த போது காண்
ஸ்வரூப சித்தி உள்ளது என்றார் இறே ஆச்சான் பிள்ளையும்

இனி அஹங்கார -அர்த்த காமங்கள் மூன்றும் -என்று தொடங்கி

அஹங்காரமானது அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே பிரயோஜனம் கொள்ள வேணும் என்னும் ருசியைப் பிறப்பிக்கையாலே
அவர்கள் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்கும் என்றும்

அர்த்த ஸ்ரத்தை யானது பிரதிகூலரான சம்சாரிகள் பக்கலிலே ப்ராவண்யத்தை விளைக்கும் என்றும்

காம ஸ்ரத்தை யானது -ஈஸி போமின் -என்று உபேக்ஷிக்கும் விஷயங்களிலே -பல்லே ழையர் தாம் இழிப்பச் செல்வர் -என்னும்படியான அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்றும்

அடைவே இவற்றுக்கு அஞ்சி -சம தம நியதாத்மா -இத்யாதியாலே சொல்லப்படுகிற ஆத்ம குணங்கள்
அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கே வழி பார்த்துப் போந்த நம்மாலும் –
இஸ் ஸம்ஸார வர்த்தகராயப் போந்த பிறராலும் உண்டாக்கிக் கொள்ள ஒண்ணாது
ஸப்த பூருஷ விஜ்ஜேயே சந்தத ஏகாந்த்ய நிர்மலே குலே ஜாதோ குணைர் யுக்தோ விப்ர ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிறபடியே
விலக்ஷண அதிகாரியாய் -ஆத்ம குணங்களால் பரிபூர்ணனாய் -பரம கிருபாவானான ஸதாசார்ய அங்கீ காரம் அடியான
பகவத் கடாக்ஷத்தாலே பிறக்கும் என்று அத்யவசித்து
அது எங்கனே என்னில்
அபிஷிக்த க்ஷத்ரியர்அதிக குல அபிமானத்தாலே பிறந்த கன்யகைக்குப் பிறந்த வன்றே தொடங்கி அறைப்பத்திட்டு அங்க மணி செய்து அது பக்வமானவாறே
அவஸர ப்ரதீஷனாய்க் கொண்டு அங்கீ கரிக்குமா போலே ஸதாச்சார்ய அபிமானம் அடியான பகவத் ப்ரஸாதத்தாலே ஆத்ம குணங்கள் யுண்டாய்
அங்கீ க்ருதனாம் என்றபடி –

ஆக -தன்னைக் கண்டால் என்று தொடங்கி -இவ்வளவும் வர -இவ்வதிகாரியுடைய அனுசந்தான பிரகாரங்களை சொல்லி
மேல் தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -என்று தொடங்கி -மங்களா ஸாஸனம் அளவும்
இவனுடைய திநசர்யை இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

அதில் கர்ம ஆரப்தமான தேஹ யாத்ரை கர்ம அனுரூபமாக ஸ்வயமேவ வருகையாலே
யோ மே கர்ப்ப கதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவான் ப்ரபு –
சேஷ வ்ருத்தி விதாநே ஹி கிம் ஸூப்தஸ் ஸோதவா கத -என்று அதில் தனக்கு உபேக்ஷையும்

சேஷத்வ ஸ்வரூபமான ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே அபேக்ஷையும்

அக் கைங்கர்ய ஏக போகனான தனக்கு ஹேயமான பிராகிருத வஸ்துக்களில் வாசனையால் வரும் போக்யதா புத்தியால்
பஞ்ச பூதாத்ம கைர் த்ரவ்யை பஞ்ச பூதாத்மகம் வபுஸ் ஆப்யாயதே யதி தத பும்சோ போகோத்ர கிம் குத -என்று நிவ்ருத்தனாகையும்

இனி -ஆமின் சுவை யவை ஆறோடு அடிசிலை -அத்ய சனமாம் படி புஜித்துக் கிடந்து புரளாதே தேகம் தரித்து இருக்கைக்கு வேண்டும் அளவே
பரமாத்ம ஸமாராதனத்தினுடைய பூர்த்தி ரூபமான ப்ரஸாத ப்ரதிபத்தி பண்ணும் இடத்தில் பதி விரதைக்கு பர்த்துர் உச்சிஷ்ட போஜனம்
பாதி வ்ரத்ய ஹேதுவாமோ பாதி ஸ்வரூப அனுரூபம் என்கிற புத்தியாலே தேஹ தாரணம் பண்ணுகையும்

ஏவம் வித அனுஷ்டானங்களை யுடைய தனக்கு ப்ராரப்த சரீரம் அடியாகச் சில துக்க அனுபவம் உண்டானால்
இச்சரீரத்தோடே அநுபாவ்யமாம் அவற்றில் அச்சுமை கழிந்தது இறே என்று ப்ரீதனாதல்
அன்றிக்கே
ஹரீர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும்
யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்கிறபடியே
சரீர க்ரந்தியால் வருகிற துக்கம் மீளவும் கர்ஹியாத படி பண்ணுகிற பகவத் கிருபையினுடைய பலம் என்றாதல்
அகிலேசத்தில் உண்டாம் உகப்பும் ஏவம் விதமான தன்னுடைய அனுஷ்டானங்களைத் தன் பேற்றுக்குக் கைம்முதலாக நினையாது ஒழிகை யும்
இவற்றை கேவலம் உபேய தயா அனுஷ்டித்துப் போருகிற விலக்ஷணரான பூர்வர்களுடைய ஞான அனுஷ்டானங்கள் நமக்கு உண்டாக வேணும் என்கிற ஆசையும்
ந கந்தைர் ந அநு லேபைஸ் ச நைவ புஷ்பைர் மநோ ஹரை ஸாந்நித்யம் குருதே தத்ர யத்ர சந்தி ந வைஷ்ணவா -என்கையாலே
விலக்ஷணரான ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு ஆதரணீய ஸ்தலம் என்று ஸர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களில் நித்ய வாஸ நித்ய கைங்கர்யம் தொடக்கமான வற்றில் அத்யந்த ஆதரமும்
அத் தேச விசேஷங்களிலே உகந்து அருளின அர்ச்சாவதார வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு -இத்யாதியில் படியே
வெளி விழுங்குகிறதோ என்று நித்ய ஸூரிகளும் அஞ்சி அனுபவிக்கும் படியான விலக்ஷண விஷயம் இந் நிலத்திலே நிரந்தர வாஸம் பண்ணுவதே
என்று இவ்விஷயத்தில் பரிவாலே வரும் மங்களா ஸாஸனமும்

அவ்விலக்ஷண விஷய வியதிரிக்தங்களான ஸப்தாதி விஷயங்களில்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -என்கிற அருசியும்

இப்படியே இவற்றில் அருசி உண்டானாலும் –
பா மாரு மூவுலகில் படியே இருந்ததின் நடுவு நின்றும் அக்கரைப் படப்பெறாத ஆர்த்தியும்

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -இத்யாதியில் படியே பகவத் பாகவத வ்யதிரிக்த விஷயங்களில் த்ரி கரண வ்யபிசாரமும் வாராத படியான அநு வர்த்தன நியதியும்

யுக்தமான
அனுசந்தான
அனுஷ்டான
அநு ரூப
ஞான ஹேதுவுமாய்
ஸாஸ்த்ர அவிருத்தமுமாய்
ததீய அபிமான அந்தர் கதமுமான ஆகாரத்தில் நியதியும்

அவ்வாஹார நியதி முதலானவற்றிலே நிரதரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசமாகிற அநுகூல ஸஹ வாஸமும்

அவ்வனுகூல ஸஹ வாஸத்துக்கு எதிர் தட்டாய்
ந சவுரி சிந்தா திமுக ஜன ஸம் வாஸ வைச ஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதிதி -என்கிறபடியே
ஹுத வஹ ஜ்வாலா பஞ்சர வாஸமே ஸ்ரேஷ்டம் என்னும்படி கொடியராய் பகவத் விமுகரான பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும்

இப்படி இவை இத்தனையும்
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களுக்கு அடியான அந்த ஸதாசார்யருடைய ப்ரஸாதத்தாலே அபி வ்ருத்தமாம் படி
அனுஷ்டித்துக் கொண்டு வர்த்திக்கக் கடவன் -என்று
இவ் வதிகாரிக்குக் கர்தவ்யமான தின சரிதத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- முதல் பிரகரணம் -உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

July 20, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———–

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை முதல் பிரகரணத்தில் அருளிச் செய்து தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

பிரபத்திக்கு இத்யாதி
ந தேச காலவ் ந அவஸ்த்தாம் யோகோஹ்யய மபேஷதே -என்றும்
ந திதி ந ச நக்ஷத்ரம் ந க்ரஹோ ந ச சந்த்ரமா ஸ்ரத்தைவ காரணம் நிரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே -என்றும்
சொல்லுகிறபடியே இதுக்கு தேச கால நியமம் இல்லை –

—————

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

நிரபேஷ உபாயமான இதுக்கு -பிரபத்தவ்ய விஷய நியமமே உள்ளது என்கிறார் மேல் -கர்மத்துக்கு -இத்யாதியாலே

—————–

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இவ் வுபாய ஸுகர்ய சாதன அர்த்தமாக ஏதத் ப்ரதிகோடி சாதனங்களுக்கு -தேச காலாதி சாபேஷதை -உண்டு என்கிறார் –
இத்தால்
யஜ்ஜேந தாநேந தபஸா அ நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-என்கையாலே
பக்திக்கு பிரதம உபகாரமான கர்மத்துக்கு தேசோயம் ஸர்வ காம துக்-என்னும்படியான புண்ய ஷேத்ரமும்
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத-என்கையாலே வஸந்தாதி காலம்
ஆக்நேயம் அஷ்டாகபாலம் ஐந்தரம் த்வாதஸ கபாலம் -இத்யாதி பிரகார விதாயக ஸாஸ்த்ர உக்தங்களான
அவ்வவ் உபாயங்களும்
இவை தான் த்ரை வர்ணிகருக்கே கர்த்தவ்யங்கள் ஆகையாலும் -அது தன்னிலும்
கிருஷ்ண கேஸோக்நீநாததீத -என்கையாலே இவை அத்தனையும் ஸர்வதா வேணும் என்கிறார் –

————-

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே–இதுக்கு தேச கால நியமம் இல்லை –

இவ்வோபாதி ப்ரபத்தியும் உபாயமாய் இருக்கச் செய்தே அவை வேண்டா என்கைக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார்
ச ஏஷ தேச கால -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாகப் பெருமாளை நோக்கித் திருவடி விண்ணப்பம் செய்த வார்த்தை இத்யாதியாலே

————–

சூரணை-27-

இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்-

தேச காலாதி நியமம் இன்றிக்கே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்னும்படியான இவ்வர்த்தம்
ஸகல பிராமண ஸாரமான த்வ்யத்தில் ஸ்ரீமத் பதத்தில்
மதுப்பில் விசதம் என்கிறார்

———–

சூரணை-28-

பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

இனி பிரகார நியதி இத்யாதியாலே
யுக்தமான தேச காலாதிகளில் விசேஷித்து பிரகார அதிகாரி பல நியமங்கள் இல்லை என்னும் இடத்தை விவரித்து
அருளிச் செய்கிறார் மேல் –

———-

சூரணை-29-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

இந்த பிரகார நியதி இல்லாமை ப்ரபத்தாக்கள் பக்கல் எங்கும் காணலாம் –
அது எங்கே கண்டது என்ன -கீழே பிரஸ்த்துதரா னவர்களில் – திரௌபதி அப்ரயதையான தசையிலே பிரபத்தி பண்ணுகையாலும்
நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -என்கிற ஹேயர் நடுவே அர்ஜுனன் இப்பிரபத்தி அர்த்தத்தைக் கேட்கையாலும்
பிரகார நியதி இல்லாமை விசதம் இறே –

————-

சூரணை -30-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

ஸூத்தி அஸூத்யாதிகள் இத்யாதி
கீழ் அஸூத்தரான தசையிலே ப்ரபன்னரானமை சொல்லுகையாலே
அவ் வஸூத்தி தான் இதுக்கு அங்கமாகிறதோ என்ன
அஸூத்தி அங்கம் அல்லாதவோபாதி ஸூத்தியும் இதுக்கு அங்கம் அல்ல
ருசி பிறந்த தசையில் நின்ற நிலையே அதிகாரம் -என்கிறார் –

————–

சூரணை -31-

இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

வேல் வெட்டிப் பிள்ளைக்கு -இத்யாதியாலே இவ்வர்த்தத்தில் ஆப்த வசனத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பெருமாள் சமுத்திர ராஜனான வருணனை சரணம் புகுந்த இடத்தில் ப்ராங் முகத்வாதி நியமங்களோடே சரணம் புகுருகையாலே
யத் தாசரதி ஸ்ரேஷ்ட -இத்யாதி க்ரமத்தாலே அல்லாதாருக்கும் அவை அநுஷ்டேயங்கள் ஆகாதோ -என்று வேல் வெட்டிப்பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய
அது அங்கனே அன்று காணும் -ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -என்று பெருமாளுக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்த
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே கால் தோய்த்தல் -அடங்கின வெற்றிலை உமிழ்தல் -செய்யாமையாலே
அவை சர்வ சாதாரணம் அன்று காணும்
அவர் ஆசார ப்ரதாநமான குலோத் பவராகையாலே அவை தானே வந்தது அத்தனை –
தீஷிதனுக்கு கர்ம யோக்யதா ஹேதுவான சிகா யஜ்ஜோ பவீதங்கள் கிடந்தவோ பாதி நை சர்கிகமானவை கிடக்குவுமாய்
அவனுக்கு நித்தியமான சந்தியாவந்தனம் இல்லாதாவோ பாதி இவனுக்கும் ஸ்வீ கார தசையிலே தத் அங்கமாக ஒரு நியதி வேண்டாமையாலே
இவன் நின்ற நிலையே காணும் இதுக்கு அதிகாரம் -என்று அருளிச் செய்தார் –

—————-

சூரணை -32-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அதிகார நியமம் –இத்யாதி
திரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் ஸத்ருக் ஜனார்த்தனம் -என்று
ஷத்ரியரான தர்ம புத்ராதிகள் சரணம் புகுருகையாலும்
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று ஸ்திரீயான திரௌபதி சரணம் புகுருகையாலும்
ஸ பித்ரா சேத்யாதி தமேவ சரணம் கத -என்று தேவ யோனியான காகம் சரணம் புகுருகையாலும்
கிருபா மாத்ரா மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்று திர்யக் யோனியான காளியன் சரணம் புகுருகையாலும்
ஸ து நாகவர ஸ்ரீ மான் -இத்யாதி மனஸா சிந்தயத் ஹரிம் -என்று கஜேந்திரன் சரணம் புகுருகையாலும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்று ராக்ஷஸ யோனியான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுருகையாலும்
அஞ்சலிம் ப்ராங் முக க்ருத்வா -என்று ஸர்வாதிகாரன பெருமாள் சரணம் புகுருகையாலும்
ஸ பிராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய -என்று பெருமாளை பிரியில் தரியாதபடி அநந்யார்ஹரான இளைய பெருமாள் சரணம் புகுருகையாலும்
அதிகாரி நியமம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

பல நியமம் -இத்யாதியாலே
கீழ்ச் சொன்ன அதிகாரிகளுக்கு பலம் ஒருபடிப்பட்டு இராமையாலே
ஸகல பல ப்ரதமான இவ்வுபாயத்துக்குப் பல நியமம் இல்லை -என்கிறார்-

———

சூரணை -34-

விஷய நியமம் ஆவது-குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –

சூரணை -35-

ஆழ்வார்கள் பல இடங்களிலும்-பிரபத்தி பண்ணிற்றும்-அர்ச்சாவதாரத்திலே –

மேல் -விஷய நியமம் -இத்யாதியாலே
கீழே -விஷய நியமமே உள்ளது -என்று ப்ரதிஜ்ஜை பண்ணினதை ப்ரதிபாதிக்கிறார் –
ஸமஸ்த கல்யாண குண பரி பூர்த்தி உள்ள இடமே சரண்ய விஷயம் என்றும் –
அது தான் அல்லாத இடங்களை பற்றி அர்ச்சாவதாரத்திலே அதி சாய்த்து இருக்கும் என்றும் –
இக்குண பூர்த்தியாலே அனுஷ்டாதாக்களான ஆழ்வார்களும்
பிறந்த வாற்றிலும் மற்றும் க்வா சித்கமாக அவதாராதிகளிலே சரணம் புகுந்தார்களாகிலும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும்
இத்யாதிகளிலே உகந்து அருளின நிலங்களிலே விசேஷித்து சரணம் புகுகையாலும்
அர்ச்சாவதாரமே ஸகலர்க்கும் சரண்ய விஷயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

——————-

சூரணை -36-

பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

பூர்ணம் -இத்யாதி -இத்தால் –
ப்ரமாதாக்களுடைய அனுஷ்டானமே அன்றிக்கே -கடவல்லியில் -த்வயத்தில் -பூர்வ உத்தர கண்ட மத்யத்திலே
ஓதப்படுகிற பிரமாண ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதிக்கிறார் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ருச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வஸிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -என்னக் கடவது இறே –

———-

சூரணை-37-

பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்-இருட்டறையிலே விளக்குப் போலே-பிரகாசிப்பது இங்கே –

ப்ரபத்திக்கு இத்யாதி -இத்தால் -அர்ச்சையிலே இக் குணங்கள் பிரகாசிக்கும் படியை அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி ரூப உபாயங்களில் அஞ்ஞனாய் -அஸக்தனாய் -அகிஞ்சனனாய் -அபராத பூர்ணனானவன் –
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
கண்டு பற்றுகைக்கும்
இவன் கைம்முதல் பாராமைக்கும்
பற்றும் இடத்தில் இவன் தோஷத்தைக் குணமாகக் கொள்ளுகை
முதலானவற்றுக்கும் அபேக்ஷிதங்களான
ஸுலப்ய
வாத்ஸல்ய
அவாப்த ஸமஸ்த காமத்வாதி -குணங்கள்
பகவத் ஸ்வரூப திரோதாநகரியான இவ்விபூதியில்
இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆஸ்ரயிக்கும் படி நிற்கையாலே
பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவை இவ்விடத்திலே விசேஷித்து பிரகாசிக்கும் என்கிறார் –

——————-

சூரணை -38-

பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும் குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை-தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இப்படி இவ்விடத்தில் எல்லாக் குணங்களும் பரிபூர்ணமே யாகில்
அர்ச்சயஸ் ஸர்வ ஸஹிஷ்ணு -இத்யாதிப்படியே –
இச் சேதனன் கை பார்த்து இருக்கிற படி எங்கனே என்ன
ஆஸ்ரித அர்த்தமாக அக்குணங்களை அமைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்று
ஸுலப்ய காஷ்டையை ஸாதிக்கிறார் –

—————

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு எதிர்த்தட்டான நித்ய ஸூரிகள் பக்கல் ஆஸ்ரயண உப யோகியான இக்குணங்களுக்கு
விஷயம் இல்லாமையாலே பர அவஸ்தையில் பகல் விளக்குப் பட்டு இருக்கும்
அவற்றுக்கு விஷயமுள்ள இடத்திலே ப்ரகாசித்த வத்தனையான பின்பு அவை அன்றோ என்ன
பூதக ஜலம் போலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
பூதக ஜலம்-இத்யாதியாலே
எங்கும் ஜல ஸாம்யம் யுண்டே யாகிலும் -தடாக ஜலம் ஸர்வ கால -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வருக்கும் உபயோக யோக்யமாமோ பாதி
பரத்வாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இக்குணங்கள் ஏகீ பாவித்து இருந்ததே யாகிலும்
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அந்தர்யாமித்வம் அதீந்திரியாகார ஸ்வ பாவ விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
இவை நாலிலும் வைத்துக் கொண்டு அர்ச்சாவதார இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
ஸர்வதா சமாஸ்ரயணீயம் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்
அதிலே தேங்கின மடுக்கள் -என்றது
அர்ச்சா முகமாக ப்ராசுர்யேண உகந்து அருளுவது அவதார விக்ரஹங்கள் ஆகையாலே –

———

ஆனால் இவ்வர்ச்சா வவதாரம் ஆஸ்ரயித்து இருக்கிற சேதனனுக்குச் செய்யும் உபகாரம் தான் என் என்ன
செய்யும் உபகாரங்களை அருளிச் செய்கிறார் -இது தான் ஸாஸ்த்ரங்களால் -இத்யாதியால்

சூரணை -40-

இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இது தான் –இப்படி ஸூலபமான அர்ச்சாவதாரம் தான்
அதீந்த்ர்ய அர்த்த ப்ரகாசகங்களான ஸாஸ்த்ரங்களாலும்
அஞ்ஞாத ஞாபந முகத்தாலே திருத்த அரிதாம் படி பகவத் வ்யதிரிக்தங்களான ஸப்தாதி விஷய அனுபவ அபி நிவேசம் பண்ணி
நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு வர்த்திக்கிற சேதனர்க்கு -தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -என்கிறபடியே
அவர்கள் வாசலிலே சென்றாகிலும் தன் வடிவழகை அனுபவிப்பித்து வை முக்கியத்தை பற்றி -பிரதம பாவியான ருசியை உண்டாக்கி
விஷய வை லக்ஷண்யத்தாலே யாதாவான ருசி பிறந்தால் தன்னைப் பெறுகைக்கு வேறே ஓன்று தேட வேண்டாதே
எடுத்தாப் போலே கோயிலாம் படியான தானே உபாயமாய் –
தன்னைப் பற்றின அநந்தரத்திலே சேஷ பூதனான இவனுக்கு போக்யமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித
கைங்கர்யத்தையும் கை மேலே பண்ணிக் கொடுக்கும் என்கிறார் –

ஆக
ப்ரபத்திக்கு தேச நியமம்-என்று தொடங்கி
பிரபத்தி வை லக்ஷண்யத்தையும்
பிரபத்தவ்ய விஷய வை லக்ஷண்யத்தையும்
ப்ரதிபாதித்தார் –

———-

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

மேல் இந்த அர்ச்சாவதாரம் தன்னிலே ப்ரபத்தாக்களான அதிகாரிகள் த்ரி விதராய் இருப்பர்கள் என்கிறார் –
இது தன்னில் -இத்யாதியால்

———

சூரணை -42-

அஞ்ஞரும்–ஞானாதிகரும்-பக்தி பரவசரும் —

அவர்களுடைய த்ரை வித்யம் இருக்கும் படி எங்கனே என்னில் -அஞ்ஞரும் இத்யாதியால்
ஸம்ஸார ஆர்ணவ மக்நா நாம் விஷய அக்ராந்த சேதஸாம் -என்கிறபடியே
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலிலே விழுந்து நஷ்ட ஸர்வ சேஷ்டராய் -விவித விஷய க்ராஹகங்களால் வந்த
வ்யஸன பரம்பர அபி பூதராகையாலே இத்துக்க நிவ்ருத்தி அர்த்தமாக உபாயாந்தரங்களிலே இழிகைக்கு
ஒருபடியாலும் ஞான சக்திகள் இல்லாமையாலும்
விஷ்ணு போதம் அல்லது வேறு கத்தி இல்லை என்று ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியானவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயாந்தரங்களில் இழிகைக்கு யோக்யதை இல்லாத படியான அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப யாதாத்ம்ய ஞானாதிக்யத்தால்
ப்ராப்த சேஷியான அவன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
இவ்விஷயத்தில் வடிவு அழகில் உண்டான வை லக்ஷண்ய அனுஸந்தா நத்தாலே ஈடுபட்டு
இதர உபாய அனுஷ்டானத்தில் இழியவும் கூட ஸக்தர் அல்லாத படி இட்ட கால் இட்ட கையராம் படி
பக்தி பரவசராய் இருக்கையாலே ஸகல பர ஸமர்ப்பணம் பண்ணுவாருமாய்
இப்படி இவர்கள் ராஸி த்ரய அந்தர் பூந்தராய் இருப்பார் என்கிறார் –

———-

சூரணை -43-

இவர்களுடைய த்ரை வித்யம் எங்கே காணலாம் என்னும் அபேக்ஷையிலே அருளிச் செய்கிறார்

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-

ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –

பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இனி அஸ்மதாதிகள் -என்றது
ப்ரபந்ந அதிகாரிகளிலே வேறே சிலரை ப்ரக்ருதி பாரவஸ்யத்தாலே அஞ்ஞராக அருளிச் செய்ய மாட்டாமையாலே
ஆதி -ஸப்தத்தாலே -இவ்வதிகாரி பாஹுல்யத்தை அருளிச் செய்கிறார் –
ஞான ஆதிக்யத்தாலே ப்ரபன்னரான ஆச்சார்யர்கள் என்றது
நாத யாமுனர் தொடக்கமானவர்களை
ஆழ்வார்கள் பக்தி பரவசர் என்னும் இடம் அவர்கள் பாசுரங்களாலே அறியலாம் –

———–

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இவ்வாகாரங்கள் ராஸி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ ஆகாரங்களே உள்ளது என்னும் படி அவற்றிலே ஊன்றிப் போருகையாலே

———–

சூரணை -45-

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

அசித் சம்பந்தம் அடியான அஞ்ஞானத்தாலும்
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய வேதனத்தால் யுண்டான ஞான ஆதிக்யத்தாலும்
பகவத் விஷயத்தில் பக்தி பாரவஸ்யத்தாலும்
சரணம் புகுகையாலே மூன்று ராஸியும் கீழ்ச் சொன்ன தத்வ த்ரய ஞான நிபந்தமாய் வரும் என்கிறார் –

———

சூரணை -46-

என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

இத்தால் பரமாச்சார்யாருடைய பாசுரத்தாலே இம்மூன்று அதிகாரிகளுடைய நினைவு பிரகாசிக்கும் என்கிறார் –

———

சூரணை -47-

அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –

சூரணை -48-

முக்கியம் அதுவே –

அவ்வாழ்வாருடைய திரு உள்ளத்தால் பர பக்தி பாரவஸ் யத்தால் வந்த ப்ரபத்தியேயாய் இருக்கும் –
பகவத் வை லக்ஷண்யம் அடியாக வந்தது ஆகையால் முக்யமும் அதுவே என்கிறார் –

———

சூரணை -49-

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம்

அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –

த்ரை வித்ய பேதத்துக்குப் பிரமாணம்
இதில் தேவ என்கிறது பக்தி விஷயமாக

————

சூரணை -50-

இதம் சரணம் அஜ்ஞானாம் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–ஸ்ரீ லஷ்மி தந்த்ர ஸ்லோகம் -100-

பாரம் திதீர்ஷதாம்-என்கிறது மூவருக்கும் ஒக்கும்

———

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே-இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –

இதில் பக்தி பாரவஸ் யத்தாலே ப்ரபன்னரானவர்களுக்கு -அதனுடைய பாக விசேஷத்தாலே வந்த அவஸ்த்தா பேதங்களாலே
ஸ்வரூப ஹானியான ப்ரவ்ருத்தியிலே மூட்ட -இந்த பிரபத்தி விஸ்வாசம் குலையக் கடவதாய் இருக்கும் என்று
அவ்வதிகாரிகளான ஆழ்வார்களுடைய அனுஷ்டானங்கள் விஷய வைலக்ஷண்ய அதீனமாய் வருகையாலே
ஸ்வரூப ஹானி அன்று என்று பரிஹரிக்கிறார் –

———-

சூரணை -52-

தன்னைப் பேணவும் பண்ணும் –தரிக்கவும் பண்ணும் –

சூரணை -53-

இந்த ஸ்வபாவ விசேஷங்கள்-கல்யாண குணங்களிலும்-திரு சரங்களிலும்-

திரு நாமங்களிலும்-திரு குழல் ஓசையிலும்-காணலாம்-

அவ் விஷய வைலக்ஷண்யம் ஆழ்வார்களை ஒருபடிப் பட்டு இருக்க ஒட்டாமை –
அவ்விஷய அனுபந்திகளானவற்றின் பக்கலிலும் காணலாம் என்கிறது
பக்தி பாரவஸ் யத்தாலே -பந்தோடு கழல் மருவாள் -இத்யாதியில் படியே தன்னைப் பேணாமையும்
இட்ட கால் இட்ட கைகள் -இத்யாதிப்படியே தறியாமையும் யுடையராய் இருப்பாரை
அவன் வரவைக் குறித்து ஸ்வயமேவ -காரை பூணும் -இத்யாதில் படியே தந்தாமை அலங்கரித்துப் போரவும்
அத்தசையிலே அவன் வரக்கொள்ள அவ்வரவு தானே அநிஷ்டமாய்
போகு நம்பீ –
கழகமேறேல் நம்பீ -இத்யாதில் படியே தள்ளித் தரித்து இருக்கவும் பண்ணும் அவஸ்த்தா விசேஷங்களைப் பிறப்பிக்கிற
ஸ்வ பாவ விசேஷங்கள் -வல்வினையேனை ஏற்கின்ற குணங்களை உடையாய் -என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -என்றும் இத்யாதிகளாலே
கல்யாண குணங்களிலும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே -என்றும்
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்றும் இத்யாதிகளாலே
திருச்சரங்களிலும்
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -என்றும்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று இத்யாதிகளாலே
திரு நாமங்களிலும்
அவனுடைய தீம் குழல் ஈரும் -என்றும்
ஆ கள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -என்றும்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராயே -என்றும் இத்யாதியாலே
திருக் குழல் ஓசையிலும் தோற்றும் என்கிறார் –

————

சூரணை -54-

இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்-பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே-இருப்பது ஓன்று –

இப்படி பக்தி பாரவஸ்ய ப்ரபத்தியில் வரும் ஸம்சய நிவ்ருத்தியைப் பண்ணி -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி
உக்தையான ப்ரபத்தியினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி –
நிரூபாதிக சேஷ வஸ்துவினுடைய ஸ்வரூப அனுரூபமான இந்த பிரபத்தி தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்று தொடங்கி
பிதாவுக்கு -இத்யாதியாலே -நிஷேகாதி முகத்தாலே தன்னை உண்டாக்கின ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து
புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே உபய ஸம்பந்த விருத்தம் என்கிறார் –

————–

சூரணை -55-

இது தனக்கு ஸ்வரூபம்-தன்னைப் பொறாது-ஒழிகை –

ஆனால் இது தனக்கு வேஷம் எது என்னச் சொல்கிறது மேல் -இது தனக்கு -இத்யாதி
இப்பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபம் தன்னை உபாயம் என்னப் பெறாது ஒழிகை

————-

சூரணை -56-

அங்கம் தன்னை-ஒழிந்தவற்றை-பொறாது ஒழிகை –(சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –)

இப் பிரபத்திக்கு அங்கம் தன்னை ஒழிந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமானவை ஒன்றையும் ஸஹியாது ஒழிகை

———-

சூரணை -57-

உபாயம் தன்னை பொறுக்கும்-

சூரணை-58-

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –

அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –)

ஆனால் தன்னை யுபாயம் என்னப் பொறுக்கும் இந்த ஸித்த உபாய வ்யதிரிக்தமான உபயாந்தரம் தன்னை உபாயம் என்னவும் பொறுக்கும்
தனக்கு அவிநா பூதமாகையாலே ப்ரவ்ருத்தி ஸ்வரூபமான அம்சத்தையும் பொறுக்கும் –

——–

சூரணை -59-

இது இரண்டையும் பொறாது-

இந்த பிரபத்தி
உபாயத்வத்தையும்
சேதன க்ரியாதிகள் அங்கம் ஆகுகையும்
பொறாது என்கிறார் –

———–

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்-அப்ரதிஷேதமுமே-வேண்டுவது –

ஆனால் பல ஸித்தி உண்டாம்படி எங்கனே என்ன -பலத்துக்கு என்று தொடங்கிச் சொல்லுகிறது
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்த ஸித்தமான தத் ஏக ரஷ்யத்வ ரூப ஆத்ம ஞானமும்
ரக்ஷகனுடைய ஸ்வீ கார விஷய பூதனான தன் விலக்காமையுமே
பொறுக்க அபேக்ஷிதம் என்கிறார் –

————

சூரணை-61-

அல்லாத போது-பந்தத்துக்கும்-பூர்த்திக்கும்-கொத்தையாம் –

இனி அல்லாத போது -என்றது -அநாதி காலம் அஹம் கர்த்தா -அஹம் போக்தா -என்று போந்த இத்தனையிலும் சில உண்டாக வேண்டாவோ என்ற போது
பந்தத்துக்கும் இத்யாதி
ததேக சேஷமாய்த் ததேக ரஷ்யமான பந்தத்துக்கும்
அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வ ரூபமான பூர்த்திக்கும்
மாலின்யமாம் –

———

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –அத்தை விளைத்து கொள்ளாது-ஒழிகையே வேண்டுவது –

ஆகையால் -ஆபத்தை -என்று தொடங்கி -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அபூரணனான தான்
மம மாயா துரத்யயா -என்கிற அவித்யா ஸம்பந்த ரூபமான ஆபன் நிவ்ருத்திக்கு ஆயாஸிக்க வேணும் என்று ப்ரமித்து
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா -என்கிறபடியே
அவ்வாபத்தை சத சாகமாகப் பணைப்பித்துக் கொள்ளாது ஒழிகையே இவனுக்குக் கர்தவ்யம் என்கிறார் –

—————-

சூரணை -63-

ரஷணத்துக்கு அபேஷிதம்-ரஷ்யத்வ அனுமதியே –

ஆனால் நித்ய ஸம்ஸாரியான இவனை ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வராதபடி ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ரக்ஷிக்கும் படி எங்கனே என்னில்
ரக்ஷணத்துக்கு இத்யாதி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிற இவனுக்கு ரக்ஷண தர்மத்துக்கு வேண்டுவது
ஸ்வரூப பத ரஷ்ய மாத்ரமான இவனுடைய –
வைத்தேன் மதியால் -என்கிற அனுமதி மாத்திரமே அபேக்ஷிதம் -என்கை –

————

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —

ஆனால் இப்படி இத்தசையில் இசைவை அபேக்ஷித்து இருந்து ரக்ஷிக்கும் இடத்தில் அவ்வனுமதிதான் சாதனம் ஆகாதோ என்னில்
ஆகாது என்னும் இடத்தைப் பல யுக்திகளாலே அருளிச் செய்கிறார் -எல்லா உபாயத்துக்கும் -என்று தொடங்கி
ஜ்யோதிஷ்டோமாதிகளை அனுஷ்டி என்றால் -அப்படிச் செய்கிறோம் என்ற அனுமதி மாத்ரத்தால் அவற்றை அனுஷ்ட்டித்தான் ஆகாமையாலும்
இம்மாத்திரத்தாலே சேதனனான ஆகாரம் தெரிவிக்கின்ற இத்தனையே யாகையாலும்
அவன் ஏவி அடிமை கொள்ளும் இடத்தில் இவ்வனுமதி பல வேளையிலும் அனுவர்த்திக்கையாலும்
அத ஏவ விருத்தம் இல்லாமையாலும்
சைதன்ய ஆதாரமான அசித் வியாவ்ருத்தி மாத்ரமாய்
அதிகாரி விசேஷணமான இவன் அனுமதியை உபாயமாக்க ஒரு வழி இல்லை என்கிறார்
அசாதாரணமான ஸ்த்ரீயை அபிமதனானவன் ஸ்தந போஷண அத்யவஸர ப்ரதீஷனாய் அனுபவித்தால் அவள் அவ்வனுபவத்துக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினாள் ஆகாள் இறே –

————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்-உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்-உபேயத்தில் உகப்பும் –

இந்த அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஸாதனமே யல்ல வாகில் இது எதுக்கு பிரயோஜனம் என்ன
உபாய தசையில் அவன் பண்ணின உபகாரத்தில் -உனக்கு என் செய்கேன் -என்கிற உபகார ஸ்ம்ருதியும்
உபேய தசையில் எதிர் விழியால் உண்டான உகப்புக்கும் உறுப்பு -என்கிறார் –

————-

சூரணை-66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே-பிராப்திக்கு உபாயம்-அவன் நினைவு —

இப்படி அத்தலையால் வந்த நினைவே உபாயம் என்கைக்கு ஆப்த வசனத்தை எடுக்கிறார் –
உன் மனத்தால் -இத்யாதியாலே –

———–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

ஸர்வஞ்ஞனாய் -காருணிகனான அவன் நினைவு காதாசித்கம் ஆகிறது என்
அது நித்யமானால் ஆகாதோ என்ன
அது தான் எப்போதும் உண்டு -என்கிறார் –

————–

சூரணை -68-

அது பலிப்பது-இவன் நினைவு மாறினால் –

ஆனால் அது ஸர்வதா பலம் ஆகாது ஒழிகிறது என் என்ன -அது பழிப்பது இத்யாதி
ஸர்வஜ்ஜோபி ப்ரதீக்ஷதே -என்கிறபடியே நான் எனக்கு உரியேன் என்கிற இவன்
கை வாங்கும் அளவை கடாக்ஷித்து அருளுகையாலே என்கிறார் –

———

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இதுக்கு உதாஹரணம் -அந்திம -காலத்துக்கு இத்யாதி -அதாவது
நஞ்சீயர் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய அந்திம தசையிலே அறிய வேணும் என்று எழுந்து அருள
அவர் -இப்போது எனக்குத் தஞ்சமாக ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன
வாரீர் இப்போது உமக்குத் தனிபாம் தேட இருந்தீர்
இத்தலையில் தங்கம் என் என்கிற நினைவு குளிகை தானே காணும் தஞ்சம்
ஆனபின்பு ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் நிர் அந்வயராய் நிர்ப் பயராய் இருக்காய் காணும் உமக்கு
ஸ்வரூப அனுரூபமான தஞ்சைமாவது -என்று அருளிச் செய்தார் –

————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

ஆக
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பெறாது ஒழிகை -என்று தொடங்கி
இவனுடைய ஸ்வீ காரம் உபாயம் ஆகாது -ஸ்வரூபமாம் அத்தனை என்னும் இடத்தை இவ்வளவும் உப பாதித்து
இங்கே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை ச ப்ரகாரமாக சோதிக்கிறார்
ப்ராப்தாவும் என்று தொடங்கி –
இப்படி ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் அந்வயம் இல்லாத படி இவனுடைய ஸ்வரூப சித்த்யதிகள் அவன் அதீனம் ஆகையாலே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து -என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாக இத் தலையை வந்து பிராபிக்கக் கடவானும்
நயாமி -என்கிறபடியே இவனுக்குப் ப்ராபகனும்
இவனைப் ப்ராபித்தால் உகப்பானும் அவனே என்று உபபாதிக்கிறார் –

————–

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

இப்படி எல்லாமே அவனே என்கைக்குத் தான் நிபந்தநம் என் என்னில்
ஸர்வதா ஸ்வ ஸ்வா தந்தர்ய ராஹித்யமே ஸ்வரூபமாம் படி-பாரதந்தர்ய சேஷத்வங்கள் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப தர்மங்களாய்க் கொண்டு பலிக்கையாலே -என்கிறார் மேல்
இவை பலிக்கிற படி தான் எங்கனே என்னில் -ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதி
அசித்வத் உண்டான அத்யந்த பாரதந்தர்யத்தாலே ஸ்வ யத்ன நிவ்ருத்தி உண்டாகையாலும்
பரகத அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி உண்டாகையாளுண்ம் அவை இரண்டும் பலித்தது என்கிறார் –

———-

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

இவ்வோபாதி ஞான சிகீர்ஷா ப்ரயத்னங்களும் ஆத்ம தர்மம் அன்றோ -அவற்றுக்குப் பிரயோஜனம் என் என்ன -பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி என்று தொடங்கி –
பிரதானமான சேஷத்வ பாரதந்தர்யங்களுக்கு சேஷமாய்க் கொண்டு இவை அவற்றை ச ப்ரயோஜனமாக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாரதந்தர்யத்தாலே பலித்த ஸ்வ யத்ன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான கர்த்ருத்வம் அடியாக வந்த ப்ரயத்னம் ஆகையாலே
அந்த பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி ரூபமான பலமன் அந்த ப்ரயத்னத்தால் என்றும்
தத் விஷய ப்ரீதியாலே பர அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே பலித்த ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான ஞாத்ருத்வத்துக்குப் பலம்
அன்ன மதந்த மத்மி-என்றும்
பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே
இத்தலையில் பிரவிருத்தி கண்டு விக்ருதமான பகவத் விஷயத்தினுடைய ப்ரீதிக்கு எதிர் விழி கொடுக்கையால் வந்த ப்ரீதி என்றும் அருளிச் செய்கிறார்
அந்த ப்ரீதி தானே இறே இவனுக்கு அதந்தமத்மி -என்கிற நிலை நின்ற போக்த்ருத்வமாவது –

—————–

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

ஆனால் சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களும் ஆத்ம தர்மங்களாய் இருக்க
சேஷத்வ பாரதந்தர்யங்களை ப்ரதானம் ஆக்கி ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களை அவற்றுக்கு சேஷமாக்குகைக்கு நியாமகம் ஏது –
மற்றைப்படி யானாலாகாதோ என்ன -அது சேராது என்னும் இடத்தை -ஞான ஆனந்தங்கள் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ்வாத்மாவுக்கு பஹிரங்கமான அசித் வ்யாவ்ருத்தி ரூபமான ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும் படி அந்தரங்கமான ஈஸ்வர வ்யாவ்ருத்தி ரூபமான தாஸ்யம் அந்தரங்கமாகையாலே தத் தர்மங்களையும் தத் அனுரூபமாகக் கொள்ள வேணும் இறே என்கிறார்
அந்தரங்க பஹி ரங்க யோர் அந்தரங்கம் பலீய-என்னக் கடவது இறே –

————–

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்–அந்ய சேஷத்வமும்-வந்தேறி-

முன்பு அஹமிதமபி வேத்மி -என்று ஞான ஆனந்த ரூபமான அஹம் அர்த்தமும் தத் தர்மங்களுமான ஞான ஆனந்தங்களும் அன்றோ ப்ரகாசித்துப் போந்தது
இப்போது அன்றோ தாஸ்யாதிகள் ப்ரகாசிக்கிறது -ஆகையால் இது வந்தேறி யன்றோ என்ன
ஆகந்துக விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே அபி பூதமாய்க் கிடந்த வித்தனை –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யம் ஸ்வதஸ் ஸித்தம் இறே -என்கிறார் -இது தான் வந்தேறி அன்று -என்று தொடக்கி –

——————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இதில் சேஷத்வ விரோதி -இத்யாதியாலே சாமான்யேன சேஷத்வத்துக்கு விரோதி தனக்குத் தான் கடவன் என்கை –
விசேஷித்து பகவச் சேஷத்வத்துக்கு விரோதி இதர சேஷமாகை என்கிறார் –

——————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

அஹங்காரம் -இத்யாதி -இப்படி ஸ்வரூபத்துக்கு வந்தேறியான அழுக்கு அறுத்தால் –
யஸ்யாஸ்மி –
பரவாநஸ்மி –இத்யாதிகளாலே சொல்லப்படுகிற
தாஸ்ய விஸிஷ்டமான ஆத்மாவுக்கு வாஸ்தவமான நாமம் அடியான் இறே என்கிறார்-

———-

சூரணை -78-

க்ராம குலாதிகளால்-வரும் பேர்-அநர்த்த ஹேது –

க்ராம குலாதிகளால் -இத்யாதி -கீழ் இப்படி உக்த ஸ்வரூபமான னவனுக்கு
கோயிலிலே வாழும் வைட்டணவன் -என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி -இத்யாதியாலும் வருகிற நிர்த்தேசம் ஒழிந்து
அல்லாத ஒவ்பாதிக குல சரண கோத்ராதிகளாலே வருமது ஸ்வரூப ஹானி என்று அதுக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார் –

———

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -என்று

———-

சூரணை -80-

உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —

உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

ஆக இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை -என்ற பாசுரத்திலே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை இவ்வளவாக
பாரங்கதமாக்கி -அப்பாசுரத்தால் பலித்த ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூபமான உபாய உபேயங்களிலே நிஷ்டரான அதிகாரிகளை
இப்ப்ரபந்ந அதிகாரிக்கு த்ருஷ்டாந்தமாக வெளியிடுகிறார் -உபாயத்தில் -என்று தொடங்கி -எங்கனே என்னில் –
உபாய அத்யவசாயத்தில் நெருப்பை நீராக்க வல்ல பிராட்டி ஸ்வ ரக்ஷணத்தில் இழியாதே
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று இருந்தால் போலேயும்
ஸ்த்ரீத்வத்துக்குப் படி எடுக்க வேண்டும்படியான திரௌபதி அம் மஹா சதஸ்ஸிலே பிறந்த பரிபவத்தில் உரிக்கிற துகிலை வாஸனையாலே தானும் ஒரு கை பற்றாது ஒழிந்தால் போலேயும்
திருக்கண்ண மங்கை யாண்டான் பத்தராவி திருவடிகளிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி அவர் கைப்புடையிலே கண் வளர்ந்தால் போலேயும்
இவ்வதிகாரியும் இருக்க வேணும் என்கிறார் –

ஆனால் உபேய அதிகாரிகள் இருக்கும் படி எங்கனே என்கிற சங்கையிலே சொல்லுகிறது -உபேயத்தில் -என்று தொடங்கி –
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றும்
குருஷ்வ மாம் அநு சரன் -என்றும்
பெருமாளைப் பிரியில் தரியாதே பின் சென்று
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஸர்வவித கைங்கர்யங்களையும் அதிகரித்து
அது தன்னிலும்
ஸ்வயம் து ருசிரே தேசே -இத்யாதியாலே அவனுக்கு உகந்த அடிமையிலே அதிகரித்த இளைய பெருமாளைப் போலேயும்
ஆஸ்ரயண வேளையிலும் புருஷீ கரித்து -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்கிறபடி
அடிமை கொள்ளுகைக்கு முற்பாடையான பிராட்டி விஷயமாகத் தம்மை அழிய மாறி அடிமை செய்த ஜடாயு மஹா ராஜரையும்
திரு நாராயண புரத்தில் வேத நாராயணர் விஷயமாக அக்னி பயத்தால் வந்த அபாயத்தில் அந்த பகவத் ஸுகுமார்ய அநுஸந்தானத்தாலே
ஸ குடும்பராக விதக்தராம் படி ஸாஹஸ ப்ரவ்ருத்தி பண்ணின திரு நறையூர் அரையரையும்
தத் சித்த விமலாஹ்லாத -இத்யாதிப்படியே
தான் யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே முடிந்த சிந்தையந்தியைப் போலேயும் இருக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

இனி உக்தரான உபாய அதிகாரிகள் தம்தாமுக்கு உள்ள கைம்முதல்களைக் கழித்து விடக் காண்கையாலே
உபாய தசையில் இவ்வதிகாரியும் தம் கைம்முதலாய் உள்ளவற்றைக் கழிக்கக் கடவன்
என்னும் இடத்தை -பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –

—————

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

இனி பசியராய் இருப்பார் -என்று தொடங்கி
உடம்பு தன்னடையே போயிற்று -என்னும் அளவும்
அவ்வுபேய அதிகாரிகளுடைய அனுஷ்டானத்தை விசதமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –

————-

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —

உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும்-

உபாயத்துக்கு இத்யாதியாலே
இப்படி இவ்வ்வநுஷ்டானங்களில் சிஷ்டாசாரம் யுண்டாகையாலே கீழே ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்திகளிலே ப்ரஸ்துதரான
இவ்விரண்டு அதிகாரிகளுக்கும் அவை அநுஷ்டேயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்
தறியாமையும் வேணும் என்னும் அளவும் –

——————

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

ஆனால் பெரிய யுடையாருக்கு -அவ்யவஸ்தித்வ ஹி த்ருஸ்யதே யுத்தே ஐயபராஜயவ் -என்று
யுத்தத்தில் வெற்றி தோல்விகள் வ்யவஸ்திதங்கள் இல்லாமையாலும்
சிந்தயந்திக்கு அனுபவ அலாபத்தாலே ஸ்வயமேவ சரீரம் விடுகையாலும்
முடிகை பிராப்தம்
உத்தம வர்ணரான திரு நறையூர் அரையர் ஒன்றையும் பாராதே ஸ்வயமேவ ஆத்ம பாதகராய்க் கொண்டு செய்த அதி ஸாஹஸ ப்ரவ்ருத்தி
ஸாஸ்த்ரங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் சேராது இறே என்ன
இவனுக்கு வைதமாய் வரும்து இறே -என்று தொடங்கி அது சேரும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
விதமாய் வரும்து என்றது -சில பலாந்தரங்களை உத்தேசித்து
ப்ராஹ்மணார்த்தே கவார்த்தே வா ஸம்யக் ப்ராணன் பரித்யஜேத் -இத்யாதி
விதி பரதந்த்ரமாய் வரும் வியாபாரங்கள் இறே இவ்வதிகாரிக்கு விடலாவது
விஷய வை லக்ஷண்யத்தாலே ராக ப்ரேரிதமாய்க் கொண்டு தானே வருமத்தைத் தள்ள ஒண்ணாது இறே –

——————–

சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் -என்றது
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான அவ்வனுஷ்டானத்தில் உபாயத்வ புத்தி யுண்டாய்த்தாகில்
அது ஸ்வரூப ஹானி யாகையாலே தானே இத்தை நிவர்த்திப்பிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
இவ்விஷயம் தன்னை உபாயமாக அனுசந்திக்கில் -அது ஸித்த உபாயமாகையாலே தானே நிவர்த்திப்பிக்கும் என்னுதல்
இனி உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம் -என்றது –
இவ்விரண்டும் இன்றிக்கே உபேய வை லக்ஷண்ய அனுசந்தானம் தானே ப்ரவர்த்திப்பித்தது என்கிறார் –

————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய ப்ரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

உபேயம் என்ன ஸாஸ்த்ர விருத்தங்களான ஏவம் வித ப்ரவ்ருத்தியிலே இவர் ப்ரவர்த்திக்கலாமோ என்ன
அப்ராப்த விஷயங்கள் -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார்
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சிஷ்ட கர்ஹிதமாய்
ஜூகுப்ஸா விஷயங்களுமாய்
உதர்க்கத்தில் நரகாவஹமான விஷயங்களிலே அபி நிவிஷ்டமானவனும் தன்னை அழிய மாறியும் அத்தைப் பெற வேணும் என்று இரா நின்றால்
எல்லா வழியால் அதற்கு எதிர்த்தட்டாய் ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்ட இவருக்கு இப்படிப் படச் சொல்ல வேணுமோ என்கிறார் –

————

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

ப்ரயோஜன மநுத்திஸ்யா ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்கையாலே
இது உபாயமாய் ஸம்பவிக்கிலோ என்னில் -அனுஷ்டானமும் -இத்யாதி
கீழ்ச் சொன்ன உபாய அதிகாரி லக்ஷண தயா வந்த அனுஷ்டானங்கள் உபாயத்தில் அந்வயியாதவோ பாதி
இவருடைய இந்த அனுஷ்டானமும் உபாயத்தில் அந்வயியாது
அங்கன் அன்றாகில் இது தான் உபேய அதிகாரிகள் எல்லாருக்கும் அநுஷ்டேயமாம் இறே –

——————

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

இவர் அநித்யமான சரீரத்தை அழிய மாறின இதுக்குப் படுகிறதோ
நித்தியமான ஆத்ம வஸ்துவும் அஸத் சமமாம் படி அத்யந்த விலக்ஷணரானவர்களும் விஷய வைலக்ஷண்யத்தாலே அநந்ய உபாயத்வாதிகள் குலைந்து
அலமாவா நிற்க என்று அவ்வனுஷ்டானத்தில் ப்ரஸித்தியைப் பிரகாசிப்பிக்கிறார் -அநந்ய உபாயத்வமும் -என்று தொடங்கி
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
மற்றை நம் காமன்கள் மாற்றும் -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
அநந்ய உபாயதவாதிகள் யுடைய பிராட்டி
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு -நோற்கின்றேன் காம தேவா -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன் –இத்யாதியாலே
அவை குலையும்படியான ப்ரவ்ருத்திகளிலே ப்ரவர்த்திக்கையாலும்
அல்லாத ஆழ்வார்களும்
நோற்ற நோன்பு -என்று தொடங்கி அடுத்ததுசுத்து பிரபத்தி பண்ணுகையாலும்
மடல் எடுக்கையாலும்
ஓதி நாமம் குளித்து -இத்யாதியாலே உபாயாந்தரங்களிலே இழிய நினைக்கையாலும்
இவ்வநுஷ்டானம் ப்ரத்யக்ஷம் இறே -என்கிறார் –

————-

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

ஆனால் அவர்கள் செயல் தானும் அஞ்ஞான கார்யமாய் இருந்ததே என்ன -அத்தைப் பரிஹரிக்கிறார் ஞான விபாக கார்யம் -இத்யாதி
பகவத் வை லக்ஷண்ய ஞானத்தினுடைய பரிபாக தசையிலே உண்டாமதான பக்தி பாரவஸ் யத்தாலே முன்னாடி தோற்றாதே
இப்படிப்படும் அலமாப்புக் கண்டு அங்கு அதிசயித புருஷார்த்த அந்வயியாய் விடும் என்கிறார்
அடிக்கழஞ்சு பெறுகை யாவது
அதில் அந்வயித்த அம்சம் பல ரூபமாய் இருக்கையாலே அத் யுத்தமம் என்கை-

————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

உபாய பலமாய் –இத்யாதியால் –
இத்தலையில் ஸ்வீ காரமும் பொறாத சுணை யுடைய உபாயத்துக்கும் இந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூப வியாபாரங்கள் விலக்காகாவோ என்ன
அந்த உபாய ஸ்வீ கார அநந்தரம் பெரும் பேறு அன்றோ என்னுதல்
அன்றிக்கே
உபாய பூதனுடைய அநாதி கால கிருஷி பலமாய் அபி நிவேச அதிசயத்தாலே உபாயாந்தரங்களிலும் ப்ரவ்ருத்திக்கும் படியான
இவனுடைய துடிப்பைக் கண்டு அவனுக்குப் பிறக்கும் முகோலாசம் ப்ராப்ய அந்தர் கதமாகையாலே ஸித்த உபாயத்துக்கு அவை விலக்கு ஆகாது என்கிறார் –

————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இந்த ப்ரேம அதிசயத்தால் வந்த கலக்கம் விலக்கு ஆகாது என்னும் இடத்தை விசதம் ஆக்குகிறார் -ஸாத்ய ஸமாநம் -என்று தொடங்கி -அதாவது
ஸர்வதா இவ்வுபாயம் தான் புருஷகார குண விக்ரஹங்களால் பூர்ணமாய்க் கொண்டே இருக்கையாலே
ஸர்வதா ஸாத்யத்தோடே ஒக்கும் என்றும்
ஸித்தமுமாய் ஸர்வ சக்தித்வாதிகளோடே கூடி இருக்கையாலே
ப்ரேமாந்த்யத்தாலே இப்படிப் பதறும்படி விளம்பத்தைப் பொறாது என்றும் அன்றோ இதர உபாயங்களை பற்ற இவ்வுபாயத்துக்கு ஆதிக்யம்
ஸாத்ய ப்ராவண்யம் –இத்யாதி -இப்படிப்பட்ட ப்ராப்யத்தில் த்வராதிசயத்தாலே இறே ப்ரதமத்திலே தான் இந்த ப்ராபகத்தை ஸ்வீ கரிக்கிறது
ஆகையால் விஷய வை லக்ஷண்ய அதீனமாய் வந்த அதி ப்ரவ்ருத்தி உபாய விரோதி யாகாது
ஸ்வரூப அனுரூபமாம் இத்தனை என்று திரு நறையூர் அறையருடைய அதி ப்ரவ்ருத்தியில் சங்கையை இவ்வளவாகப் பரிஹாரம் பண்ணி நின்றது –

———–

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

மேல் -இவனுக்குப் பிறக்கும் -என்று தொடங்கி -இப்படி இந்த ப்ராவண்யம் பல வேளையிலே யாராது உபகாரகமாகை அன்றிக்கே
தன்னுடைய உத்பத்தியிலே ஸந்நிபத்ய உபகாரகங்களான ஆத்ம குணங்களுக்கு மூலமும் தானே யன்றோ என்கிறது –

————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

அது எங்கனே என்னில் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றும்
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி -என்றும்
கண்டு கேட்டு -என்று தொடங்கி -கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்றும்
இப்படி விலக்ஷண விஷய தர்சனத்தாலே முதலில் ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசையற்று என்கையாலும் -என்கிறார் –

——————-

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

ஆத்ம குணங்களில் -இத்யாதி -சமமாவது -பர தாராதிகளில் போகாத படி இந்திரியங்களை நியமிக்கை
தமமாவது -உபஸமநம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –

——————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இவை இரண்டும் உண்டானால் என்று தொடங்கி -இவன் சம தம உபேதனானவாறே ஸதாசார்ய ஸ்வீ காரம் உண்டாகும்
அவ்வங்கீ கார்த்தாலே ருஷோ யஜும் ஷி -இத்யாதில் படியே
ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்திரம் ஸித்திக்கும்
இது ஸித்தித்தவாறே ஸகல வேத வேத்யமான ஸர்வேஸ்வரன் சந்நிஹிதனாம்
அவன் சந்நிஹிதனானவாறே அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷம் அதி ஸூலபமாம் -என்கிறார் –

————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இனி ப்ராப்ய லாபம் என்று தொடங்கி -ஸிம்ஹ அவ லோகந ந்யாயத்தாலே யுக்த அர்த்தத்தை ஸ்த்திரீ கரிக்கிறாதல்
நிஸ் ரேணிகா ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு இவற்றினுடைய ஸ்வரூப ஸித்தி உண்டாம் என்கிறார் ஆதல்
மீள ஆச்சார்ய லாபம் என்கிறது ஸ்வரூப ஞான பிரதர் என்றும் சொல்லுவார் –

——–

சூரணை -99-

இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படிப் பகவத் ப்ராவண்யம் மூலமாக வந்த ஆத்ம குணங்களால் வரும் பல பரம்பரைகளைச் சொல்லுகிறது
ப்ரபந்ந அதிகாரிக்கு விஷய விரக்தியில் ஊற்றம் சொல்லுகைக்காக –
இவ்விஷயத்தில் ஒரோ வகைகளாலே உபாதேய புத்தி பண்ணி இருக்கிற ஐஸ்வர்ய காமனையும் உபாசகரையும் எடுக்கிறார் -இது தான் -என்று தொடங்கி
இது தான் என்றது இவ்வாத்ம குணம் தான் என்றபடி
ஐஸ்வர்ய காமருக்கும் -இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா -என்கையாலே
இந்திரிய ஜய அர்த்தமாக பர தாராதிகள் நிஷித்தங்கள்
ஸ்வ தாராதிகள் ப்ராப்ய தயா உபாதேயங்கள்
உபாஸகனுக்கு சாந்தோ தாந்த -இத்யாதிகளில் படியே உபாஸன விரோதித்வேந பர தாராதிகள் பரித்யாஜ்யங்கள்
ஸ்வ தாராதிகள் ஸஹ தர்ம சாரிணீத்வேந உபாதேயங்கள்
ப்ரபன்னனுக்கு பகவத் அனுபவ விரோதித்வேந உபாயமும் பரித்யஜ்யம் –

———

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

இனி பிரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்கிறது -ஸ்வ தாராதிகள் மற்றை இருவருக்கும் உபேய தயாவும் உபாய தயாவும் உபாதேயங்கள் ஆகையாலும்
ஏகாந்தீ து வினிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை -பஃத்யுபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ண ஏக சாதன -என்கிறபடியே
இவன் ததேக போகனுமாய் ததேக உபாயனுமாகையாலே இவனுக்கு ஸ்வ தாரதாதிகளையும் விடுகை அவர்களைப் பற்ற ஆதிக்யம் -என்றபடி –

—————-

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

இது தான் இத்யாதி –இந்த இதர விஷய விரக்தி ப்ரபன்னனுக்குப் பிறக்கும்படி தான் எங்கனே என்னில்
கீழே அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகளை -இவ்விடத்தில் அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார்
பக்தி பாரவஸ்ய ப்ரபன்னர்க்கு விஷய வை லக்ஷண்யத்தாலும்
ஞாணாதிக்ய ப்ரபன்னர்க்கு நிர்ஹேதுக கிருபையாலும் பிறக்கும்
சிலருக்கு ஆசாரத்தாலே என்றது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா -என்கிற பகவத் ஆஜ்ஞ அதி லங்கனத்தாலே வந்த தண்ட தரத்வம் அடியாக வருகிற ஆசாரத்தாலே யாதல்
ராமாவதாராதிகளில் அவருடைய ஆசாரம் அஸ்மத்தாதிகளைக் குறித்து அன்றோ என்னுதல்
எம்பார் முதலான ஆச்சார்யர் அனுஷ்டானங்களாலே யாதல்
இவ்விஷய விரக்தி பிறக்கும் -என்கிறார் –

———-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ் வதிகாரிகளுக்கு அந்த வை லக்ஷண்யாதிகள் விரக்தி உண்டாக்கும் க்ரமம் என் என்னில்
அவனுடைய அபரிச்சின்னமான திவ்ய ஸுந்தர்யம்
நோ பஜநம் ஸ்மரன் நிதம் ஸரீரம் -என்கிறபடியே
,முதலிலே இதர விஷய ஞானம் இல்லாத படி பண்ணும்
அவனுடைய அருள் அன்ன மென்னடையினார் கலவியை அருவருக்கப் பண்ணும்
கீழ்ச் சொன்ன பகவத் பாகவத அனுஷ்டானங்கள் ஆகிற ஆசாரம் பயத்தை உண்டாக்கும் என்கிறார் –

——–

சூரணை -104-

இவையும் ஊற்றத்தைப் பற்றச்  சொல்லுகிறது –

இவையும் -என்றது -கீழேயும் ஊற்றம் சொல்லுகையாலே அஞ்ஞானமும் அரிசியும் பயமும் அதிகாரி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்க
ஒவ்வொன்றிலே ஊற்றமாய் இருக்கையாலே –

——-

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் —

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

அருசி பிறக்கும் போதைக்கு -இத்யாதி -இவ்வதிகாரிகளுக்கு அருசி பிறப்பது விஷயங்களுடைய தோஷ பூயிஷ்டதையைக் கண்டாலோ என்னில்
அதுவும் ஒரு ஹேது
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராது என்று விடுமதுவே பிரதான ஹேது -என்கிறார் –

———

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

பகவத் விஷயத்தில் -இத்யாதி -கீழே மால் பால் மனம் சுழிப்ப -இத்யாதி ப்ரமாணங்களாலே இதுக்குப் ப்ரதிகோடியாக எடுத்த
பகவத் விஷயத்தில் பிரவணராகிறதும் -கல்யாண குண தர்சனத்தாலேயோ -ஸ்வரூப அனுரூபம் அன்றோ என்ன
இக் குணங்கள் அவ்வஸ்து கதமே யாகிலும் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறது -என்னும் இடத்தை ன் அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தா பர்யந்தமாக அருளிச் செய்கிறார் –

———-

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதியாலே இவ்வர்த்தத்தை
பர்வதோயம் அக்னி மான் தூமத்வாத் யத் யக்னி மான் ந பவதி தர்ஹி தூமவான் அபி ந பவதி -என்னுமா போலே
அநிஷ்ட ப்ரசங்க முகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
அதாவது -ஸ்வரூப அனுரூபம் என்றும் ஸ்வரூப ஹானி என்றும் கொள்ளாத போது அபி நிவேச அனுரூபமாக அவன் முகம் காட்டாத படியாலே
அவனுடைய குண ஹானியே தோற்றுகிற அளவிலும் ஆழ்வார்கள் மேன்மேல் என அவ்விஷயத்திலே மண்டுகையும்
ஸம்ஸாரத்திலே தோஷம் ஸர்வ ஸம் பிரதிபன்னமாகக் காணா நிற்கச் செய்தேயும் அதிலே ஆதரித்துப் ப்ரவர்த்திக்கையும் கூடாது இறே என்கிறார்
இதர விஷய தோஷ தர்சனத்தாலே விடப்படுமாகில் -அஸ் ஸம்ஸார அனுபவ தசையிலே சிலருக்கு அசிந்திதமாக ராஜ்ய ஷோபம் பிறந்து
அவர்கள் ச குடும்பமாக பர்வத ஆரோஹணம் பண்ணா நிற்க -மத்யே மார்க்கே கர்ப்பிணிக்கு ப்ரஸவ காலமாகத் தன்னால் பரிஹரிக்க அரிதான பாரங்களாலும்
புத்ர பஸ் வாதி பாரவஸ் யத்தாலும் அத்யந்த பீதி யுக்தனாய்ப் போரு கிற சமயத்திலே அபஹர்த்தாக்களால் ப்ராண பர்யந்தமான
ஆபத்து வந்தாலும் இற்றை அளவுக்கு பிராணன் ஆகிலும் கிடந்ததே என்று தான் முடியும் அளவும் அதில் அருசி பிறவாதே
புத்ரா தய கதமம மீ -இத்யாதில் படியே அக்குடும்ப ரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கக் காண்கையாலும் கூடாது இறே
ஆகையால் சம்சாரத்தைத் தோஷம் கண்டு கை விடுகிறதும் இல்லை
பகவத் விஷயத்தை குணம் கண்டு பற்றுகிறதும் இல்லை –
ஸ்வரூப ஹானி என்று விடுகையும்
ஸ்வரூப பிராப்தம் என்று பற்றுகையுமே
நிலை நின்ற ஆகாரம் என்கிறார் –

———–

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

கொடிய என்னெஞ்சம் -இத்யாதி -பகவத் விஷயம் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறதுக்கு பிரமாணங்கள் –

—————–

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் —

குண கிருத தாஸ்யத்திலும் -இத்யாதியாலே சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரஸித்துக்கு அடி -ரஹஸ்ய த்ரயத்தில்
சேஷத்வமும் குணத்தால் வந்தது -என்ற அநந்தரம்
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்றும்
குண அத்யவசாயம் சொல்லா நிற்க ஸ்வாமித்வத்தாலே ஸ்வரூப அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் -என்ற அநந்தரம்
சேஷித்வத்திலே நோக்கு -என்கையாலும்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றிலும் குண க்ருதமாய் வருமத்தைப் பற்ற ஸ்வரூப பிரயுக்தமானது ப்ரபலமாகையாலே -என்கை –

————–

சூரணை -112-

அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–

இவ்வர்த்தத்துக்கு உதாஹரணம் -அநஸூயைக்கு -இத்யாதி
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாள் எழுந்து அருளின போது அவன் அநஸூயை இடுவித்துப் பிராட்டியை ஆதரிப்பித்த அநந்தரத்திலே
அவள் பெருமாள் ஸுகுமார்யத்தைக் கண்டு பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீகளுக்கு பார்த்தாக்களே கிடீர் தேவதை
இவ்வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் காட்டிலே வந்த நீர் இவர் அளவிலே இன்று போலே என்றும் இருக்க வேணும் கிடீர் -என்ன
அவளைப் பார்த்து -இவரையும் இவர் வை லக்ஷண்யத்தையும் வ்யதிரேகித்துக் காட்ட வல்லேனாகில் இறே
இவ்வழகை ஒழியவும் நாம் பெருமாளுக்கு நல்லேன் ஆண்மை காட்டலானமை -என்றாள் –

————

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

ஆனால் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -என்னும்படி இப்படி சத்தா ப்ரயுக்த தாஸ்யத்தை யுடைய ஸ்வரூபத்துக்கு முன்பு சொன்ன
அநந்ய தைவத்தாதிகள் குலையும்படியான பகவத் விஷயத்தில் அதி ப்ரவ்ருத்திகள் சேருமோ என்னில்
அதுக்கடி ப்ராவண்யம் -என்று தொடங்கி -சத்தா பிரயுக்த ஸம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வருகிற
ப்ரவ்ருத்தி களாகையாலே சேரும் என்கிறார் மேல் –
அவ்வாதி ப்ரவ்ருத்திக்கு அடி பகவத் விஷயத்தில் ப்ராவண்ய அதிசயம்
அப்பிராவண்யத்துக்கு அடி -மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற சம்பந்தம்
அஸ் ஸம்பந்தம் தான் வந்தேறி அன்று –

———

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

யாவதாத்ம பாவி அப்ருதக் ஸித்தமான அந்த சத்தை ஸ்வ சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வரும் பகவத் அனுபவம் பெறா விடில்
மாந்து சோர்கிற பசியிலே சோறு பெறாத போது பிராணன் போமா போலே குலையும்
அது குலையாமைக்காக -இத்யாதி -இஸ் சத்தா ஸத் பாவ ஹேதுவாய்க் கொண்டு பி வரும் வியாபாரங்கள் எல்லாம் வருந்தியும் விடப்போகாத படியுமாய்
விழுக்காட்டில் ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய் இருக்கும்
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் என்று சோத்ய பரிஹாரம் பண்ணுகிறார் –

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்-முதல் பிரகரணம் –புருஷகார உபாய வைபவ பிரகரணம் –சூர்ணிகை-1-22- —

July 17, 2022

நமஸ் ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜன்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலி நே

ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பதாஸ்ரயம்
வஸோ பூஷா ப்ரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸாதரம் —

—————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –
மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –

———–

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான -ஸர்வேஸ்வரன் -தன் நிர்ஹேதுக கிருபையாலே
அசித் அவிசேஷிதாந் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
கரண களேபர விதூரராய் -போக மோக்ஷ ஸூ ன்யரான சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
இவர்களுக்கு புருஷார்த்த -தத் சாதன -ஞானம் பிறக்கைக்காக வேதங்களையும் -வேத உப ப்ரும்ஹணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் கொடுத்து அருள
அவற்றில் சொல்லுகிற தத்வ ஹித புருஷார்த்தங்கள் ஒருவருக்கும் அவகாஹித்து அறிய அரிதாகையாலே
தத் அவகாஹன சதுரரான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்த வசன ஸ்ரேஷ்டங்களாலே அலங்க்ருதமான அர்த்த விசேஷங்களை
பிள்ளை தம் பரம கிருபையாலே இவ்வசன பூஷண கிரந்த முகேந அருளிச் செய்கிறார் –


சூர்ணிகை -1- வேதார்த்தம் அறுதியிடுவது -ஸ்ம்ருதி -இதிஹாஸ -புராணங்களாலே –

இத்தால் இப் பிரபந்த ப்ரதிபாத்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரதிபாதிக ப்ரமாணம்
பிரம விப்ர லம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமான வேதம் என்னும் இடம்
உபக்ரமத்திலே -உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று அருளிச் செய்கையாலும்
ப்ரத்யக்ஷம் ஏகம் ஸர்வாகா -இத்யாதி க்ரமத்திலே அல்லாதார் ப்ரத்யஷாதிகளை ப்ரமாணமாகக் கொள்ளா நிற்க
ஆதவ் வேதா பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்று பிரமாணாந்தரங்களில் பிரதான பிரமாணமாக பட்டர் வேதத்தை அங்கீ கரிக்கையாலும்
இவரும் வேதார்த்தம் அறுதியிடுவது -என்று உபக்ரமித்து அருளிச் செய்கிறார் –

வேதார்த்தம் அறுதியிடுவது –
பூர்வ உத்தர பாக த்வய ரூபமான நிகில வேத வேதாந்த தாத்பர்ய நிச்சயம் பண்ணுவது –

ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே -என்றது
ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே-என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ யேத் -என்றும்
சொல்லுகையாலே இவற்றைக் கொண்டே அவற்றை அறுதியிட்டு வேண்டும் என்கிறார்

———————————

சூரணை-2

ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

ஸ்ம்ருதியாலே இத்யாதி –
இத்தால் இந்த வேதத்தினுடைய பூர்வ உத்தர பாக்க த்வயத்தில்
கபந்த மீமாம்சகனான பாட்டனையும்
ராஹு மீமாம்சகனான மாயா வாந்தியையும்
போல் அன்றிக்கே -உபய பாகமும் ஏக ஸாஸ்த்ர தயா பிரமாணமாக அங்கீ க்ருதம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
இதில் எந்த பாகத்தில் அர்த்தம் எத்தாலே அறுதி யிடக் கடவது என்னில்
ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தங்களை விதிக்கிற ஸ்ம்ருதியாலே கர்ம பாகமான பூர்வ பாக அர்த்தத்தை அறுதி யிடக் கடவது என்கிறார்
மற்றை இரண்டாலும் -இத்யாதி
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டி தாதிகளை பிரகாசிப்பிக்கிற இதிஹாஸ புராணங்களாலே உத்தர பாக அர்த்தத்தை அறுதி இடக் கடவது -என்கிறார் –

——–

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இவை இரண்டிலும் -இத்யாதி
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் -இத்யாதிப்படியே
பகவத் அவதாரமான வேத வியாசனனாலே மஹா பாரதம் ப்ரவ்ருத்தமாகையாலும்
வேத வேத்யே பரே பும்ஸி -இத்யாதிப்படியே
சாஷாத் வேத அவதாரமான ஸ்ரீ ராமாயணம் அயோ நிஜரான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரவ்ருத்தமாகையாலும்
இதிஹாசம் ப்ரபலம் என்கிறார் –

———-

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

அத்தாலே அது முற் பட்டது –என்றுகீழ் உக்தமான பிரகாரத்தாலும்
இதிஹாஸ புராணாநி கல்பான் என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் -என்றும்
இத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் முற்பட எடுக்கையாலே
புராணத்துக்கும் ப்ரமாணத்வ ஸாம்யம் உண்டாய் இருக்க இதிஹாசம் முற்பட்டது
வர்ண ஸாம்யம் உண்டாய் இருக்க க்ஷத்ரியாதிகளுக்கு முன்னே ப்ராஹ்மணனை எடுக்குமா போலே முற்பட்டது -என்கை –

———

சூரணை -5-

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-

இனி -இதிஹாஸ ஸ்ரேஷ்டம் -என்றது
நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி
பாரத வம்சத்தையும்
பூசல் பட்டோலையும் -புணர்ந்து
தத் அர்த்தமாக -வாசம் ஸுரி கதாலாப கங்கயைவ புநீம் அஹே -என்று எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாத படி
கோன் வஸ்மின் -என்று தொடங்கி அவனுடைய அவதார சேஷ்டிதங்களையே சொல்லித் தலைக்கட்டுகையாலே
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -இத்தால்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும்
ஸ்ரீ மத் ராமாயணம் அபி பரம் ப்ரணிதா த்வச் சரித்ரே -என்றும் சொல்லுகிறபடியே
சாமாந்யேன ஸ்திரீகளுக்குச் சிறை இருக்குமது ஹேயமாய் இருக்க
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற தன்னை
அழிய மாறி
சிறை இருந்த தேவ ஸ்திரீகளை விடுவித்து
அவ்விருப்பிலே பிராணி ரக்ஷண அர்த்தமாகாது தான் இருக்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்கிறது –

தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -என்னக் கடவது இறே

மஹா பாரதத்தில் –இத்யாதி
ஸ்திரீகளுக்கு சிறை இருக்குமோ பாதி புருஷனுக்கு தூது போகை ஹேயமாய் இருக்க
புருஷோத்தமனான தான் ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே
இன்னார் தூதன் என நின்றான் -என்னும்படி
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க -நிற்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்லுகிறது –

——–

சூரணை-6-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

இவை இரண்டாலும் இத்யாதி
ஆக -வேதார்த்தம் என்று தொடங்கி -பிராமண சோதனத்தைப் பண்ணி –
இப்படி சோதிதமான பிராமண ப்ரதிபாதிதமான அர்த்தம் புருஷகார -உபாயங்கள் -என்று பிரதமத்திலே ப்ரஸ்தாவித்து –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா – என்று
தர்மே பிரமீய மாணே ஹி வேதேந கரணாத்மநா -என்றும்
தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாய ஸம்பவாமி -என்றும்
வேதங்களுக்கும் வேத்யனுக்கும் சேதனர்க்கும்
சித்த ஸ்வரூபமான தர்ம சம்ஸ்தாப நத்திலே தாத்பர்யமாகையாலே
இப்பிரபந்தத்திலும் ஒரு முமுஷுவுக்கு ஞாதவ்யமான தத்வ ஹிதாதி ஸகல அர்த்தங்களையும் சாதியா நின்றதே யாகிலும்
உபாய யாதாத்ம்யத்தை வெளியிடுகையிலே தாத்பர்யமாகையாலே அதுக்கு உபயுக்தமாக பிரதமத்திலே புருஷகார உபாயங்களை அருளிச் செய்கிறார் –
சிறை இருக்கையும்
தூது போகையும் -ஆகிய
இவை இரண்டாலும் புருஷகார உபாயங்களினுடைய வைபவங்களை சொல்லிற்றாய் விட்டது என்கிறார் –

————

சூரணை -7-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

புருஷகாரமாம் போது -என்று தொடங்கி
ப்ரஸ்துதமான புருஷகார வேஷத்துக்கு அனுரூபமான குணங்களை விதிக்கிறார் –
இதில் கிருபை வேணும் என்றது –
தன்னைப் பற்றும் போது அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே -சேதன விஷயமாக கிருபை வேணும்
புருஷகார தசையில் தான் ஈஸ்வரனைப் பற்றும் போதும் அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே
அவனுக்கு சேஷபூதையாய் நம்முடைய நினைவே தனக்கு நினைவாம்படி இருக்கிறவள் சொல்லும் கார்யம் என்றும்
கொள்ளுகைக்காகவும் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் என்கிறது –

————————

சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

பிராட்டி முற்படப் பிரிந்தது –இத்யாதியாலே
யுக்தமான குணங்கள் புருஷகாரத்துக்கு பிராமண ஸித்தம் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –
இதில் முற்படப் பிரிந்தது கிருபையை வெளியிட்டபடி எங்கனே என்னில்
இஹ சந்தோ ந வா சந்தி -இத்யாதியாலே
பர அநர்த்தம் கண்டு ஸஹிக்க மாட்டாதே
மித்ர மௌபயிகம் கர்த்தும் -இத்யாதியாலே அநர்த்த பரிஹாரத்தை அருளிச் செய்கையாலும்
கார்யம் கருணமார்யேண – என்று தன்னை நலிந்தாரையும் ரஷிக்கை யாலும்
கிருபையை வெளியிட்டு அருளினாள்-

வந வாஸ வ்யாஜேந வந்த நடுவில் பிரிவில்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்துர் மா பரிஹாஸ்யதி என்று
பெருமாள் நினைவை பின் சென்று
பாஸ்கரேண ப்ரபா யதா -என்கிற தான் பிரிந்து இருக்கையாலே
பாரதந்தர்யத்தை வெளியிட்டாள் -என்கிறார்

அநந்தரம் -இத்யாதியாலே
வால் மீகி தன் ஆஸ்ரமத்தில் நின்றும் இவளை எழுந்து அருள்வித்துக் கொண்டு வர
ஜனக ஸமான மஹரிஷி இடத்திலே இருக்கையாலே நீ செய்ய வேண்டுவது ஓன்று இல்லையே யாகிலும்
லோக அபவாத பரிஹார அர்த்தமாக ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணி வா என்ன
நான் பெருமாளுக்கு அநந்யார்ஹை யாகில் பூமி நீயே ஜனனியானமை தோற்ற இடம் தா -என்று
எழுந்து அருளுகையாலே அநந்யார்ஹத்தை வெளியிட்டு அருளினாள் என்கிறார் –

————–

சூரணை-9-

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் – என்றது
இப்படி அவதார ப்ரயுக்தமான ஸம்ஸ்லேஷ தசையோடு விஸ்லேஷ தசையோடு வாசியற
ஸீதா சமஷம் காகுஸ்த்தம் இதன் வசனம் அப்ரவீத் -என்றும்
ஸீதாம் உவாஸ -என்றும் சொல்லுகையாலே -ஸம்ஸ்லேஷ திசையிலும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ –இத்யாதிகளாலே விஸ்லேஷ தசையிலும் புருஷீ கரிக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் ப்ரகாசிக்கும் என்கிறார் –

—————-

சூரணை-10-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –

ஸம்ஸ்லேஷ தசையில் இத்யாதியாலே
இவள் இன்ன தசையில் இன்னாரைத் திருத்தும் என்னும் வகையை அருளிச் செய்கிறார்

————-

சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் நிறுத்துவதும் -என்று தொடங்கி
இவ்வகையில் இவள் திருத்தும் பிரகாரம் ஏது என்ன

நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைத் திருத்தி உபதேசிக்கை யாவது –
பிதேவ த்வத் ப்ரேயான் -இத்யாதியில் படியே
தேஹம் பொல்லா வாக்கை -தேஸம் இருள் தரும் மா ஞாலம் -தேசிகரோ என்னில் பகவத் விமுகர்
மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -இவர்கள் தோஷத்தை வாத்சல்யத்துக்கு இரையாக்கி அங்கீ கரித்து அருளீர் -என்று உபதேசிக்கையும்

இச்சேதனனைத் திருத்தி உபதேசிக்கை யாவது
விதித –இத்யாதி களாலே அவனுடைய வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்துப் பற்றுவிக்கையும்

—————–

சூரணை-12-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

உபதேசத்தாலே -இத்யாதியால் -இப்படி இருவருக்கும் உபதேசிகையாலே
சேதனனுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யமான -கர்ம பரதந்த்ரனாய் புஜிக்கை -குலையும்
ஈஸ்வரனுக்கு சேதனருடைய புண்ய பாப அநு ரூபமாக அநுபவிக்கக் கடவோம் என்று
இருக்கும் ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யமும் குலையும் என்கிறார்
இவ் விரண்டு வகைக்கும் ஈஸ்வரன் ஸஹித்தோம் என்கை இறே உள்ளது –

————-

சூரணை -13-உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

உபதேஸத்தாலே மீளாத போது என்றது
நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலும் -அநாதி கால பாப வாஸனையாலும் -இவ்விருவரும் மீளாத போது என்றபடி
சேதனரை -இத்யாதி –
சேதனரை அருளால் திருத்துகை யாவது
பங்கயத்தாள் திருவருள் -என்கிற காருண்ய வர்ஷத்தாலே பதம் செய்விக்கை
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
உசிதைர் உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி –என்கிறபடியே
கச்சை நெகிழ்த்தல் -கண்ணைப் புரட்டுதல் செய்து -வடிவு அழகாலே மயக்கி -வசமாக்கிக் கொள்ளுகை –

———————-

ஆக
ஸ்ரீ ராமாயணத்தால் சொன்ன புருஷகார ஸ்வரூபத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லி
மஹா பாரத ப்ரதிபாத்யமான உபாய ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் மேல் -அறியாத அர்த்தங்களை -என்று தொடங்கி

சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

அர்ஜுனனுக்குத் தத்த்வ விவேகாதிகளாலே அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகையாலே -ஆச்சார்ய க்ருத்யத்தையும்
தானே அவனை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகையாலே புருஷகார க்ருத்யத்தையும்
கிருஷ்ணம் தர்மம் ச நாதனம்-என்று உபாயம் தானேயாய் இருக்கச் செய்தே
அவ் வர்ஜுனன் -த்வமே உபாய பூதோ மே பவ – என்னாது இருக்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே –

அன்றிக்கே
வஸ்து உபேயமாய் இருக்க இவனுடைய செயலறுதியாலே உபாயம் ஆகிறான் ஆகையாலே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது ஆகவுமாம்

ஆச்சார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டவன் -தானே உபாய க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
இங்கே இப் பிரபந்த தாத்பர்யமான சரம உபாயம் ஸூசிதம் –

————-

ஆக
கீழ் -புருஷகார உபாயங்களினுடைய வை லக்ஷண்யத்தை ச பிரகாரமாக அருளிச் செய்தாராய் நின்றது
இனி புருஷகாரம் உபாயம் சொல்லிற்று என்னாதே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று என்பான் என் என்ன
இவற்றுக்கு வைபவமாவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -புருஷகாரத்துக்கும் -இத்யாதி –

உபய சாதாரண வைபவம்
சூரணை-15-

புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

இதில் தோஷமும் குண ஹானியும் ஆகிறது -அக்ருத்ய கரணமும் க்ருத்ய அகரணுமும் -ஆகையாலே இவை இரண்டையும் பார்த்து
சேதனரை புருஷகார உபாய பூதரானவர்கள் விட மாட்டாத அளவன்றிக்கே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்கிறபடியே
அவர்களை அங்கீ கரிக்கும் இடத்தில் -அவை தன்னையே ஆதரணீயமான உபஹாரமாக்கி அங்கீ கரிக்கை -என்கிறார்
த்யஜ்யதே யதி தோஷேண குணேந பரி க்ருஹ்யதே ஸ்வ ஸாதாரண அர்த்தோயம் ஆஸ்ரிதஸ்ய க்ருதம் பலம் -என்னக் கடவது இறே –

————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் இரண்டும் இத்யாதி –
இரண்டும் என்கிறது -கீழ் ப்ரஸ்துதமான -புருஷகார உபாயங்களை –
மறித்து இரண்டு என்கிறது -தோஷ குண ஹானிகளை
இவை இரண்டும் போனவாறே அங்கீ கரிக்கிறோம் என்று இருக்கில்-இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது-புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் அந்த தோஷ குண ஹாநிகள் உண்டாகை
புருஷகாரத்துக்கு அந்த தோஷ குண ஹாநிகள் வரும்படி எங்கனே என்னில் –
மாத்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே ஸ்தநந்த்ய ப்ரஜையினுடைய தலையைத் திருகித் தள்ளும் தாயைப் போலே இவனை உபேக்ஷிக்கையாலும்-பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையே வடிவான தன்னுடைய கிருபையை இவனுக்கு பண்ணாது ஒழிகையாலும்
உபாயத்துக்கு தோஷ குண ஹாநிகள் ஆவது
பித்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே-ஷிபாம் யஜஸ் ரம ஸூபான் -என்று தள்ளுகையும்-இவனுடைய தோஷங்களை கணக்கறு நலமான தன் வாத்சல்யத்துக்கு இரையாக்காது ஒழிகையும்

————–

சூரணை-17-

இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் குலைந்தது என்று இருக்கில் –இத்யாதி
சேதனன் நம்முடைய தோஷ குண ஹானிகள் போனவாறே அன்றோ
இது நெடும்காலம் அங்கீ கரியாதவன் இன்று அங்கீ கரிக்கிறது என்று இருக்கில் இவனுக்கு அவை உண்டாம்படி என் என்னில்
தம் ஸ்வம் ஆகையாலே விட மாட்டாமல் ஸ்வாமி யானவன் அங்கீ கரித்தான் என்று இராமையாலே தோஷமும்
நம் தோஷங்களைப் பாராதே நிர் ஹேதுகமாகப் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அங்கீ கரித்தான் என்று இராமையாலே குண ஹானியும் யுண்டாய்த்து என்கிறார் –

———–

சூரணை -18-

ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இனி புருஷகாரம் இவை இரண்டும் பாராதே இப்படிப் பச்சை யாக்கி அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம் -என்று அவ்வர்த்தத்தை வெளியிடுகிறார்
இங்கு ராஷசிகளுக்கு தோஷ குண ஹானிகளாவது
ததை வார்த்ராபராதா -என்னும்படி தர்ஜன பர்த்ஸ நாதிகளிலே ஸந்ததம் தத் பரைகளானதுவும்
ஸ்த்ரீத்வ சாமான்யத்தை இட்டாகிலும் த்ரிஜடாதிகளைப் போலே அனுகூல பாஷணாதிகள் பண்ணாமையும்

இவற்றைப் பச்சையாக்கி அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
இவர்களை நலிய ஆர்த்தித்த திருவடியைக் குறித்து
பாபாநாம் வா ஸூபா நாம் வா -என்றும்
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞயா விதேயாநாம் ச தாஸீ நாம் க குப்யேத் வாந ரோத்தம -என்றும்
ஸ்வாமிக்கு சந்த அநு வ்ருத்திகளாய்க் கொண்டு சாவதானைகளாக நலிந்தவர்கள் ஓக்க பூர்ண அதிகாரிகள் உண்டோ –

இப்படி ஸ்வாமி கார்யம் செய்தார் தண்ட் யராம் இடத்தில் உன்னோடு அவர்களோடு வாசியுண்டோ என்று மன்றாடி மறுதலைத்து
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்னும்படி அவர்களை ரக்ஷித்து
பவேயம் சரணம் ஹி வ -என்று அங்கீ கரிக்கையாலே ப்ரகாசிதம் –

————

சூரணை-19-

ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

சூரணை-20-

திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது-கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இனி உபாய பூதன் இரண்டும் பாராதே அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன -அத்தைச் சொல்லுகிறது மேல்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் -இத்யாதி
ஊர்வசியையும் முறை கூறி உபேக்ஷிக்கும் படி -இந்த்ரிய ஜெயம் பண்ணினவர்களில் ப்ரதானனாய்
ப்ரவஹ்யாம் யந ஸூயவே -என்று வைப்பான அர்த்தங்களையும் பரக்க உபதேஸிக்கும் படி பரம ஆஸ்திகனாய்
பிராணஸ்ய ப்ராண -என்று லோகத்தில் தாரகங்களானவற்றுக்குத் காரகனான கிருஷ்ணனுக்கும் -அர்ஜுன கேஸவஸ் யாத்மா -என்னும்படி ப்ராண பூதனான அர்ஜுனனுக்கு
தோஷம் பாராதே அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
பந்துக்கள் இத்யாதியாலே
அவனுக்கும் ஸாமான்ய தோஷமும் விசேஷ தோஷமும் உண்டு என்னும் இடம் காட்டுகிறார் –
அதாவது
யுத்த யுன்முகனான ஷத்ரியனுக்கு வத பீதி வர்த்தித்தால் யாகத்தில் பஸ்வாலம்பந பீதியோ பாதி ப்ராயச்சித்த விஷயமாகையாலே
ஆச்சார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பவுத்ரான் ஸகீம் ஸ்ததா ஸ்வ ஸூரான் ஸூ
ஹ்ருதஸ் சைவ சேநயோர் உபயோர் அபி -என்று
ப்ரக்ருதி பந்துக்கள் பக்கல் யுண்டான ஸ்நேஹமும் -சாமான்யேன உண்டான பர அநர்த்த அஸஹமான காருண்யமும்
இவர்களை வதித்தால் வரும் அநர்த்தத்தில் பீதியும் வர்த்தித்த சாமான்ய தோஷமும் பாராமையும்
சங்க சக்ர கதா பாணே -இத்யாதியால்
சரணாகதையான திரௌபதியினுடைய பரிபவத்தை தர்ம ஆபாஸ அதி லங்கந பீதியாலே கூடப்பார்த்துக் கொண்டு இருந்த விசேஷ தோஷமும் பாராமையும் அங்கீ கரித்தமை யுண்டு -என்கிறார் –

—————–

சூரணை -21-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க- வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

பாண்டவர்களை -இத்யாதியாலே
இந்த தோஷ துஷ்டதையை அர்ஜுனனுக்கும் ஸ்தீரி கரிக்கிறார்
ஞானாதிகரான பீஷ்மாதிகள் தன்னை யுள்ளபடி அறிந்து இருக்கச் செய்தே அவர்களையும் நிரசித்தது
அவளுடைய பரிபவத்தைப் பொறுத்து இருக்கையாலே இறே
இங்கனே இருக்க அர்ஜூனாதிகளை நிரசியாது ஒழிந்தது விரித்த தலை கண்டு பொறுக்க மாட்டாதவன் வெறும் கழுத்துக் கண்டு பொறுக்க மாட்டாமை இறே -என்கிறார்

——–

சூரணை -22-

அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

அர்ஜுனனுக்கு -இத்யாதியாலே
இப்படி தலை யறாத மாத்ரமேயோ
அநுகூலா சரணங்களைப் பண்ணிற்றும் இவளுக்காக இறே என்கிறது
அங்கன் அல்லது பிரபத்தி யுபதேச அநந்தரத்திலே
இதம் தே நாதபஸ்காய -இத்யாதி –இச்சீரிய அர்த்தத்தை இவனுக்கு வெளியிட்டோமே என்று அனுதபிக்கக் கூடாது இறே

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை இவ்வளவாகத் தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

———–

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்

July 17, 2022

ஸ்ரீ உவே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் முதன் முறையாக ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை மேலைத் திரு மாளிகை ஸ்ரீ கோவிந்தாரியாருடைய பார்யை
ஸ்ரீ மதி அலமேலு மங்கை அம்மங்கார் அவர்கள் 1919-1920-தமிழக அரசின் கீழ்த் திசைச் சுவடி நூலகத்துக்கு வழங்கியதாக நூலாகக் குறிப்பு உள்ளது
ஓலைச் சுவடியின் தொடக்கத்தில்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை திரு மாளிகை பொன்னப்பங்கார் ஏடு –
என்று குறிப்பிடப் பெற்று உள்ளது

இந்த சுவடியின் தொடக்கத்தில்
நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மநே ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே -என்ற தனியனும்
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பத ஆஸ்ரயம்
வாஸோ பூஷா பிரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸா தரம் –

தேவ ராஜர் என்ற இயல் பெயர் கொண்ட நாலூர் ஆச்சான் பிள்ளை திருவடிகளைப் பற்றியவர்

ஸ்வாதீந தேசிகர் –கூர குலோத்தம தாசர் என்ற ஆச்சார்யரைத் தமக்கு அதீனராக யுடைய திருவாய் மொழிப்பிள்ளை என்றபடி
பாண்டிய அரசனின் பிரதான மந்திரியான திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை
ஆழ்வார் திருநகரியை காடு திருத்தி நாடாக்கி –
மறைத்து வைக்கப்பட்டு இருந்த நம்மாழ்வார் உத்சவ விக்ரஹத்தையும் தேடி எடுத்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்வித்து
ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அக்ரஹாரத்தையும் ஏற்படுத்தி
பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் பிரதிஷ்டை செய்வித்து
இவை அனைத்தையும் அவர் அரசுச் செல்வாக்குக் காரணமாக ஸ்வ ஆதீனமாகச் செய்த படியால் ஸ்வா தீன தேசிகர் என்று வழங்கப்பட்டார் -என்றுமாம் –

திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனைவருமே திருவாய் மொழிப்பிள்ளை என்றே வழங்கப்படுவதால்
மா முனிகளுக்கும் பிற்காலத்தில் வந்தவராலும் பண்ணப் பெற்றும் இருக்கலாம்


இதில் எங்கும் காணப்படாத சில அரிய ஐதிஹ்யங்கள் இடம் பெற்று உள்ளன –

1-உடையவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் -சூர்ணிகை -332-ல் காணப்படுகிறது
திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத் பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்த்வத்தை விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் என்ன –
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்து ஏற எழுந்து அருள
ஆழ்வானை அருளப் பாடிட்டு-பல வேளையிலே இப்படிச் செய்தாயே -என்ன
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால்
ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் -என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் பிரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே

2- இதே போல் பட்டருக்கு நஞ்சீயருக்கும் இடையே நடந்த பரிமாற்றம் வேறு எந்த நூலிலும் இடம் பெறாமல் இதில் சூர்ணிகை -338 ல் காணப் படுகிறது

பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்தது என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தானம் ஒழிய இல்லை என்ன
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே
ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளினை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போக விட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்திலே தனம் இருக்கிறது -அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திரு மாளிகையிலே செலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையில் வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர
அத்தைக் கண்டு அருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்து அழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள் என்று அருளிச் செய்தார் இறே

3- மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் செய்த சரம கைங்கர்யம் –
மற்ற வியாக்யானங்களிலும் குறிப்பிடப்பட்டாலும் இதில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் சம்வாதம் விரிவாக உள்ளது -சூர்ணிகை -234-

இச் செய்தியை உடையவர் கேட்டருளி ஸ்ரீ பாதத்திலே சென்று கண்டு லோக உபக்ரோஸம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினாள் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆகில் அங்கு உற்றைக்கு அநந்யார்ஹனான அடியேனை நியமிக்கலாகாதோ என்ன
ஆசார பிரதானரான பெருமாள் இப்படி பெரிய உடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜனும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமைகளுக்கு நான் போடும் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடைவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது -என்கிறார்
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையால் நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் அத்தனை
நான் பெருமாளின் அதிகனாய் தவிரவோ
இவர் அப்பஷியில் தண்ணியராய் தவிரவோ என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் என்று பிரசித்தம் இறே

4- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே
கீழை யூரிலே தேவதாசி பக்கலிலே சக்தராய் சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே
இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க -அத்தாலே விஷண்ணராய்ப் பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும்
இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்பந்திக்க
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு வந்து ஸ்ரீ பாதத்தின் கீழே தெண்டனாக விழுந்து
இப்படி இவ்வடிகளுக்கு அமுதுபடி த்ரோஹ பர்யந்தமாக ஆத்ம நாசம் பிறக்கும் அளவில் தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக -உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே
அப்போதே அவர்கள் நினைவு மாறி என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய் இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர
அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாமாய்த்து –

5- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வார் –

6- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி வினோத அர்த்தமாகப் புறம் திண்ணையைக் காட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்திய ராத்திரி யானைவாறே
தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என் -இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக
அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு அவர்களால் வந்த
வியஸனத்தை நிவர்த்திப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக
அத்தை அவளுக்கு ஸூஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் –என்றும் –


இதிஹாச புராண கதைகள் –
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹருதீ கரித்து சூர்ணிகை -260-இல் –

ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வார்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு தம் அசல் அகத்தில் அவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற யம தூதரும் வந்து ப்ரவேசிக்க -இவன் கையும் திருப் பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு
மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய் ப்ரவேசித்துக் கிடக்க-அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க
அத்தைக் கண்டு அப் பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித்த திருவடிகளிலே சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே

அடுத்தது சூர்ணிகை -321-இல்
இந்த குரு ஸூஸ்ருஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச சென்ற ப்ராஹ்மண புத்ரனைத்
தன்னுடைய பசு பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து அப் பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக்
கன்று உண்கிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகைகளாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து அப்பச்சிலைகளும் தீய்ந்தவாறே
எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க
அவ்விடத்திலும் கன்றுண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

நிர்வாஹங்கள்
சூர்ணிகை -54-
பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமா போலே
இதுக்கு -மா முனிகள் -தாமப்பனுக்கு புத்ரனானவன் –நீ என்னை ரக்ஷிக்க வேணும் -என்று எழுத்து வாங்கினால்
இவரோ -ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே –என்று அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -165-இல்
ஆபரணம் அநபிமதமாய்-அழுக்கு அபிமதமாய் -இரா நின்றது இறே
இதற்கு மா முனிகள் -லோகத்தில் விஷய ப்ரவணராய் இருப்பவருக்கு அபிமத விஷயத்தினுடைய ஓவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய்
அநவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே -என்கை –
இவரோ -அதாவது ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு -இவளை அந்தப்புரம் ஏற அழைப்பியுங்கோள் என்று அந்தரங்கரை நியமிக்க –
அவர்கள் பயாதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கு என் வந்தாள் என்று அநாதரிக்க
அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்து புஜித்தான் என்று ப்ரஸித்தம் இறே -என்று இவ்விஷயம் ஒரு கதை போலச் சொல்லப் படகியுள்ளது –

சூர்ணிகை –181-இல்
அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே
என்பதை விளக்க -அத் தோஷமாவது -ஸ்மஸாந அக்னி கிளம்பினால் மருங்கு அடைந்து தூற்ற அளவிலே சுடும் –
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்னீ பாத்திரங்கள் எல்லாவற்றையும் தக்தம் ஆக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனான இவ் வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் என்று விளக்கமாக உள்ளது –
மற்ற வியாக்யானங்களில் இந்த விளக்கம் இல்லை –

சூர்ணிகை -96-இல்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும்
இதுக்கு மா முனிகள் -சமமானது அந்தக்கரண நியமனம் -தமமாவது பாஹ்ய கரண நியமனம்
இவரோ -சமமானது பர தாராதிகளில் போகாதபடி இந்திரியங்களை நியமிக்கஇ
தமமாவது -உபஸ மனம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
என்று அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –240-இல்
ஜீவாத்மாக்களுக்கும் பிராட்டிக்கும் ஆறு பிரகாரங்களால் சாம்யம்
இத்தை விளக்க மற்ற வியாக்யானங்களில்
1-அநந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரண்யத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4- ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5- விஸ்லேஷத்தில் தரியாமை
6-தத் ஏக நிர்வாஹ் யத்வம்
இவரோ
ஞான -ஆனந்தங்களும் -சேஷத்வ பாரதந்தர்யங்களும் -ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் -விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையும்
ஆகிற அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே அவளோடு ஸர்வ ஸாம்யம் இல்லையாகிலும்
இவ்வாறு பிரகாரங்களாலே தத் ஸாம்யம் யுண்டு என்கிறார்
இவளுக்கு உண்டான அதிகமான பிரகாரங்கள்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ சம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூரகத்வம் -முதலானைவை இறே என்று
வேறு ஆறு பிரகாரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் வேறுபாடுகளும் உண்டு என்று சுட்டிக் காட்டப் படுகிறது

சூர்ணிகை –169-இல்
பரம ஆர்த்தனைப் பற்றியது
இத்தனை விளக்கும் போது
ஆர்த்தன் என்பது –

ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
என்று ஆர்த்தனிலும் திருப்தானிலும் மூன்று வகைகளை அருளிச் செய்கிறார்
இந்த விஷயம் மற்ற வியாக்யானங்களில் கூறப்பட வில்லை

சூர்ணிகை – 335-இல்
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி என்ற ஸூ த்ரத்துக்கு
சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும் -ஆச்சார்யனுக்குத் தன்னுடைய தேஹ ரக்ஷணமும் கர்த்தவ்யம் அன்று என்றதாயிற்று -மா முனிகள் வியாக்யானம்
இவரோ
அதே கருத்தும் மற்ற ஒரு நிர்வாஹமும் -அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யன் தான் -தான் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே
அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும்
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் சிஷ்யன் தான் பலகாலும் ப்ரவர்த்தித்திக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம்

———-

பாசுரங்களின் உட் பொருள்கள்
இன்னார் தூதன் என நின்றான் -பாசுர விளக்கம் -சூர்ணிகை -5-இல்
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க நிற்கையாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
அதாவது -நின்றான் -முன்பு இருந்த குறை தீர்ந்து பூரித்து நின்றான் –

சூர்ணிகை -380-இல் அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் -என்பதற்கு
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியும் சினம் உண்டாகக் கூடாது இறே –
அகற்றிடினும் -கூடாதது கூடினாலும் என்றபடி –

—-

ஸூ த்ரங்களின் சொல் பொருள்களின் உட் கருத்து
ஈஸ்வரன் தானும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு இருக்கும் -என்றதன் கருத்தை
அடுத்த சூர்ணிகை வியாக்யானத்தில்
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும்படியான
இரண்டு தலையையும் சத்தை உண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு –
அவதரித்து
தூத்ய முகேந கடகனாய்
இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போனதான் இறே
அர்ஜுனனைக் குறித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றதும் கார்யகரம் ஆய்த்து இல்லை
அது பின்புள்ளாருக்கு-ஸதாச்சார்ய உபதேசத்தகாலே பலமாயிற்று இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை என்கிறது –
ஸ்வ தந்த்ரனான இவனால் ஆசைப்பட மட்டுமே முடியும் -என்பதைக் காட்டி அருளுகிறார்


பிரமாணங்கள்
மற்ற வியாக்யானங்களில் இல்லாத பலவும் இவரால் காட்டப்பட்டுள்ளன
சூர்ணிகை -268-இல்
ஆசா மஹா சரண ரேணு ஜூஷா மஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மலத ஒவ் ஷதீ நாம் யா துஸ் த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் சுருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸு நாம் வா ந காமயே காம் கதம்போ பூயாஸம் ருந்தோ வா யமுனா தடே என்றும் இத்யாதிகளாலே
ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்த் தாவராதிகளை ஆசைப்பட்டான் இறே

——-
உவமைகள்
வேறு உபாயங்களைக் கை விடுகைக்கு காரணம் அவை ஸ்வரூப விரோதங்கள் -சூர்ணிகை -115-என்ற கருத்தை விளக்க
ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும்-குடம் சுமைக்கையும் அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார்

சூர்ணிகை -174-இல்
ஆறு ஏறினாருக்குத் தெப்பம் வேண்டாவோ பாதி -என்ற உதாரணமும்

சூர்ணிகை -199-இல்
வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வதா ரோஹணம் பண்ணுமோ பாதி -என்கிற உதாரணமும் காட்டப்படுகிறது –

——————–

ஸூத்ர அர்த்தோ வர்ண்யதே தத்ர வாக்யை ஸூத்ர அநு சாரிபி
ஸூத்ரத்தை அநு சரித்த வாக்யங்களால் ஸூத்ரார்த்தம் இதில் வர்ணிக்கப்படுகிறது –

————

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

தஸ்மை ராமாநுஜார்யாய -நம பரம யோகிநே -யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் –ஸ்ருத பிரகாசிகை

பூர்வ அபிதேயேந ஸஹ யேந தர்ம விசேஷண அனந்தர அபிதேயஸ் சம்பத்யதே ஸ தர்ம விசேஷ அனந்தர அபிதேய விஷ்டஸ் சங்கதி
இதுவே சங்கத்தின் லக்ஷணம்
முதலில் சொல்லப்பட்ட விஷயத்துடன் எந்த தர்ம விசேஷத்தால் அடுத்துச் சொல்லப்படும் விஷயம் சம்பந்தித்து இருக்கிறதோ
அடுத்துச் சொல்லப்படும் விஷயத்தில் உள்ள அந்த தர்ம விசேஷம் சங்கதி ஆகும்

முதல் திருவாய் மொழி -பரத்வ பரம்
இரண்டாம் திருவாய் மொழி பஜ நீயத்வம்
பரத்வம்-காரணம் -பஜ நீயத்வம் -கார்யம் -மேன்மை உள்ள வஸ்துவைப் பற்றினாள் தானே புருஷார்த்தம் கிட்டும் -கார்யதா சங்கதி

மூன்றாம் திருவாய் மொழி -ஸுலப்ய பரம் -பஜ நீயத்வம் வர இதுவே காரணம் -காரணதா என்பது சங்கதி

அப்படியே
ப்ரசங்க
ஆக்ஷேப
த்ருஷ்டாந்த
ப்ரத் யுதாஹரணம்
அபவாதம்
அதி தேச
உபோத்காத –முதலிய பல சங்கதிகள் உள்ளன

இவை அனைத்துமே ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையால் நன்கு காட்டப் பட்டுள்ளன –

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

———

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தம்மை மிகக் கொண்டு கற்றோர் -தம்முயிர்க்கு
மின்னணியாய்ச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம்
என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் பி-

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல இவ் வார்த்தை மெய் இப்போது

சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

————

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற -ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

ஸ்ரீ த்வயமும் ஸ்ரீ திருவாய் மொழியும் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்–

June 14, 2022

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹி -முதல் வியாக்யானம்
தத்வ ஞானான் மோக்ஷம்
ரஹஸ்ய த்ரயங்கள் -திருமந்திர விவரணம் த்வயம் -அதன் விவரணம் சரம ஸ்லோகம்
த்வயம் -இரண்டு வாக்கியங்கள் -ஆறு பதங்கள் -பத்து அர்த்தங்கள்

————–

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————————————————————————————————————————————————

ஸ்ரீ சார ஸங்க்ரஹம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –
பூர்வ வாக்யம் உபாயத்தையும் -உத்தர வாக்கியம் உபேயத்தையும் –
இப்படி இரண்டு அர்த்தங்களை அறிவிக்கும் என்பதால் த்வயம்
பிராட்டி பெருமாள் இருவரையும் காட்டுவதால் த்வயம்
இரண்டு திருவடிகளைக் காட்டுவதால் த்வயம்-
பூர்வ வாக்கியம் ஐந்து அர்த்தங்கள் -உத்தர வாக்கியம் ஐந்து அர்த்தங்கள் -என்பர் பிள்ளை லோகாச்சார்யார்
திருவாய் மொழி த்வயார்த்த ப்ரதிபாதகம்
முதல் ஐந்து பத்துக்கள் பூர்வ வாக்ய விவரணம்
அடுத்த ஐந்தும் உத்தர வாக்ய விவரணம்

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
ஸ்ரீ பதி சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திம் ச குருதே ஸ்வயம்
பர ஸ்வரூபம் முதல் இரண்டு பத்துக்கள்
ஸ்வ ஸ்வரூபம் அடுத்த இரண்டும்
உபாய ஸ்வரூபம் -அடுத்த இரண்டும்
அநிஷ்ட நிவ்ருத்தி அடுத்த இரண்டும்
இஷ்ட பிராப்தி -கடைசி இரண்டும்

இவரே வேறே ஒரு நிர்வாகம்
முதல் நான்கும் ஸித்த வஸ்துக்களான பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் அருளிச் சொல்லி
கடைசி நான்கு பத்தும் ஸாத்ய வஸ்து-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
இடையில் இரண்டு பத்துக்கள் ஸித்த ஸாத்ய பரங்கள்-சித்தஉபாய ப்ரதிபாதிகம் ஐந்தாம் பத்து -சித்த உபாயமான அவனை அறிந்துபற்றுதல் ஆறாம் பத்து –

திராவிட உபநிஷத் சாரத்தில்-முதல் பத்தில் எம்பெருமானே உபாயம் என்றும்
‘இரண்டாம் பத்தில் அவனே ப்ராப்யம் என்றும்
மூன்றாம் பத்தில் அவன் திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன் என்றும்
நான்காம் பத்தில் அவனைத்தவிர வேறே பலம் கிடையாது என்றும்
மேல் ஆறு பத்துக்களால் அத்தையே விஸ்தீ கரிக்கிறார் என்பர்

————

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் த்வய மஹா மந்த்ர ரத்னத்தை பிராட்டிக்கு உபதேசம் பண்ணி அருளினான்

ஸ்ரீயப்பதித்வத்தையும் அதனால் அவனுக்கு உண்டான ஏற்றத்தையும் முதல் பத்து விவரிக்கிறது –
உயர்வற -திருவாய் மொழி -ப்ரஹ்ம ஸப்தார்த்தம்
அந்த ப்ரஹ்மமே நாராயணனே -வண் புகழ் நாரணன் -இத்யாதிகளால் அருளிச் செய்து
அவனே ஸ்ரீ மன் நாராயணன் -என்று அடுத்த திருவாய் மொழியால் காட்டி அருளுகிறார்

இத்தை அடி ஒற்றியே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறருக்கு அரிய வித்தகன் -மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
ஸுலப்ய பரத்வங்களுக்கு ஹேது ஸ்ரீயபதியாய் இருப்பதே-

———–

என் அமுதம் -சுவையன் திருவின் மணாளன் -1-9-1-ரஸ் யத்வ -ராஸிக் யங்களுக்கு ஹேது பிராட்டி சம்பந்தமே

மலராள் மைந்தன் -1-5-9-
திருமகளார் தனிக்கேள்வன் -1-6-9-
மலராள் மணவாளனை -1-10-4-
இவ்வாறு முதல் பத்தால் ஸ்ரீ யபதித்தவம் தெரிவிக்கிறது

————-

இரண்டாம் பத்தாலே நாராயண ஸப்தார்த்தம்

தோற்றோம் மட நெஞ்சம்  எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

நாரங்களுக்கு இருப்பிடமாக -பஹு வ்ரீஹி ஸமாஸம் -வாத்சல்யம காட்டும் தாய் -ஸ்வாமி சொத்தை விடான் –
அவன் எங்கு இருக்கிறான் -எங்கும் உளன் கண்ணன் –

விண்ணோர் நாயகன்  எம்பிரான் எம்மான் நாராயணனாலே -2-7-1-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா –
இவை அனைத்தும் நாராயணனாலேயே -ஏவகாரம் -ஸ்வாமி செய்ததாலேயே -தாம் செய்தது ஒன்றுமே இல்லையே –

நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-

நாரணன் ஸப்தம் சொல்லி அதன் அர்த்தமான முழு ஏழு உலகுக்கும் நாதன் என்று அசேஷ சித் அசித் வஸ்து சேஷித்வத்தையும்
பின்பு வேதமயன் என்று இவ்வர்த்தம் வேதங்களால் ப்ரதிபாத்யன்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர என்றும்
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண -என்றும்
ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ் ச நாராயண -என்றும்
ஸம்புஸ் ச நாராயண –சிவஸ் ச நாராயண -என்றும்
எல்லா சப்தங்களோடும் சாமானாதி கரண்யேந நாராயண சப்தத்தை வேதாந்தங்கள் கோஷிக்குமே

ஆக இரண்டாம் பத்து முழுவதும் நாராயண ஸப்தார்த்தை ஆழ்வார் ப்ரதிபாதித்தார் ஆயிற்று –

————–

மூன்றாம் பத்தில் -உபாய உபேய த்வங்கள் -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் ஆனவனுக்கே

முடிச்சோதியாயினது முகச்சோதி -இத்யாதி
நலமுடையவன் என்றும் அருளினான் என்றும் குண யோகத்தையும்
அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று நித்ய விபூதி யோகத்தையும் –
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -என்று லீலா விபூதி யோகத்தையும் –
துயரறு சுடர் அடி -என்று திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் -ஸங்க்ரஹமாக அருளிச் செய்தார் கீழே –

சரணவ் திருவடிகளை -சேர்த்தி அழகையும் உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாய் இருக்குமே
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை -பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே
இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் -குண ப்ரகாசகமுமாய் – சிசுபாலனையும் அகப்படடத் திருத்திச் சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது –
முழுதும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியாய் வந்து இறைஞ்ச இராதே
கமல பாதம் வந்து என்னும்படி நீள் கழலாய்ச்
சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடி யாகையாலே
யாவருக்கும் வன் சரணாய்
அழும் குழவிக்கும் பேதைக் குழவிக்கும் தாரகமுமாய் போக்யமுமாய்
இணைத்தாமரை என்னும்படி சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளைச் சொல்லுகிறது –

அவன் மாம் -என்று தன்னைப்பற்றிச் சொன்னாலும்
சேஷபூதர்
கண்ணன் கழலிணை பணிமின்
ஆயனடி அல்லது
நின்னடி யன்றி மற்று அறியேன் -என்று பற்றுவார்கள் அன்றோ
ருசி ஜனகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டு இறே

இத்தால்
புருஷகாரமான பனிமலராள் வந்து இருக்கும் இடமாய்
சுடர் வான் கலன் பெய்த மாணிக்கச் செப்பு போலே ஸ்வரூப குணங்கள் நிழல் எழும்படியாய்
திருமேனி கிடந்ததுவே என்னும்படி அவை ஒழியவும் தானே கார்யம் செய்யவற்றாய்
ஸி ஸூ பாலனோடு சிந்தயந்தியோடு வாசியற ஸித்த ஸாத்ய ரூபமான உபாயங்களால் செய்யும் கார்யத்தைத் தானே செய்து அலவலைமை தவிர்த்த
காதல் கடல் புரைய விளைவித்த என்னும்படி
அத்வேஷத்தையும்
பரபக்தியையும் உண்டாக்கி
தன்னோடு சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது –அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –

சரணவ்-
இணைத்தாமரை அடி
இரண்டு தாமரைப்பூவை நிரைத்து வைத்தால் போலே இருக்கிற சேர்த்தி அழகையும்
த்வி வசனம் இரண்டுக்கு மேல் மற்ற ஓன்று புகுர ஸஹியாமல்
ஸஹாயாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது –

ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாகச் சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும்
என்னடியார் அது செய்யார் என்னும்படி நாராயண பதத்தில் சொன்ன குண விசிஷ்டனான அவனும் கைவிடிலும்
திருவடிகள் தன் வை லக்ஷண்யத்தாலே துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்கிறபடியே
பற்றினாரை நழுவ விடாதே திண்மையை யுடைத்தாய் இருக்கும்

நாராயண பதத்தில் கூறப்பட்ட குணங்களுக்கு இருப்பிடமான பரமாத்ம ஸ்வரூபம்
ந க்ராஹ்ய
ஸ்வப்னதீ கம்யம்
ஊனக் கண்களுக்கு அவிஷயமாகக் கூறப்படுவதாலும்
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க விரகு இல்லாமையாலும்
கண்டு பற்றுகைக்காக திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது –

ஆஸ்ரயணத்துக்கு திருமேனி -விக்ரஹம்-அபேக்ஷிதம் ஆகில் வாத்சல்யாதிகள் செய்கிறது என் என்னில்
குற்றம் கண்டு கை விடாமைக்கும்
அங்கீ காரம் தன் பேறாகைக்கும்
அங்கீ கார விஷய பூத சேதனர் சிறுமை பாராமைக்கும்
வாத்ஸல்யாதிகள் உண்டானாலும் இவை ஆஸ்ரயண உன்முகனைக் குறித்தாகையாலே
ஆஸ்ரயணம் சஷுர் இந்திரிய க்ராஹ்யமான விஷயத்தில் அல்லது கூடாமையாலே
அந்த வாத்ஸல் யாதிகளாலே பிரகாசிதமாய்
ஸுலப்ய குண கார்யமாய்
மூர்த்தம் ப்ரஹ்ம -என்னும்படி குளங்களிலும் அந்தரங்கமாய்
அபிமதோரு தேஹ -என்கிறபடி அபிமதமாய்
ஷாட் குண்ய விக்ரஹம் -என்கிறபடி மாணிக்கச் செப்பில் பொன் போலே அகவாயில் ஆத்ம குணங்களைப் பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது –

ஏக அவயவ மாத்ரமான திருவடிகளை சொல்லுவான் என் என்னில்
சேதனன் அநந்யார்ஹ சேஷத்வத்தை அறிந்தவன் ஆகையாலும்
ஸ்வாமித்வ சேஷித்வங்களுக்கு எதிர் தட்டான ஸ்வத்வ சேஷத்வங்களை அறிந்தவனாகையாலும்
ஸ்தானத்திலே விசேஷ பிராப்தி உண்டாம் போலே அடியேன் சேவடி அன்றி நயவேன் -என்று ஸ்வரூபத்துக்கு அனுரூபமான அம்ருதத்தை
விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ
உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே
என்கிறபடியே ப்ரவஹிக்கையாலும்
சேஷபூதனுடைய உக்தியாகையாலும்
கையைபிடித்துக் கார்யம் கொள்ளுமத்திலும் காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமவன் பக்கலிலே கிருபை அதிசயித்து இருக்கையாலும்
சொல்லிற்று

உபாய வரணத்துக்கு சரணாகதிக்கு
வாத்சல்ய முகேந நம்முடைய பயத்தை ஒழித்து
ருசியைப் பிறப்பித்து
ஞான சக்த்யாதி முகேந கார்யகரனாகுமா போலே
திரு மேனி முகமாகவும்
ருசி ஜனகனுமாய்
உபாயபூதனாகையாலே
அந்த உபாயத்வ ப்ராதான்யத்தைப் பற்றியே சரணவ் பத பிரயோகம் –

தெரிவைமார் உருவமே மருவி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய்
என்கிறபடியே நாசகரமான நாரீ ஜனங்களுடைய நயனங்களில் அகப்பட்டு நாரகிகளாய்ப் போருகிற நார ஜனங்களை
தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்கிறபடியே தன் பக்கலிலே ப்ரவணமாம் படி பண்ணி
ஜிதம் தே புண்டரீகாக்ஷ நமஸ்தே -என்று தோற்றுத் திருவடிகளில் விழும்படி பண்ணி –
ஸர்வதா சரண த்வந்தம் வ்ரஜாமி சரணம் தவ -என்று பின்னை தன்னையே உபாயமாகப் பற்றி –
பாஹி மாம் புண்டரீகாக்ஷ ந ஜாநே சரணம் பரம்
த்வத் பாத கமலா தந்யத் ந மே ஜன்மாந்தரேஷ் வபி
நிமித்தம் குசலஸ் யாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம் -என்றும்
ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்த்திதம் -என்றும்
ஆக இப்படி
ருசி ஜனகமுமாய்
ருசி பிறந்தால் உபாயமுமாய்
இதர விஷயத்தில் சங்கத்தைப் போக்க வற்றாய்
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி –
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி
என்கையாலே ஸர்வ அபாஸ்ரயமாய்
திரு மா நீள் கழல்
திருக்கமல பாதம் வந்து -என்கையாலே ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே தானே சென்று அங்கீ கரிக்கக் கடவதாய்
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் -என்று ஞான விஷயமாய்
உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது –
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்று பக்தி விஷயமாய்
அந்த பக்தியால் கலங்கி
உபாயம் வாப்யபாயம் வா ஷமோன் யன் நாவலம்பிதும் –
என் நான் செய்கேன் -என்கிறபடியே உபாய அனுஷ்டானம் பண்ண ஸக்தர் அல்லாதார்க்கு
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்று உபாயமாய்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
கற்றினோம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் -என்று உபதேச சமயத்திலும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணனைத் தாள் பற்றி
வேங்கட மா மலை மேய ஆயன் அடி யல்லது மற்று அறியேனே -என்று ஸ்வீ கார சமயத்திலும் வியதிரிக்தங்களில் செல்லாதபடி பண்ணக் கடவதாய்
செய்ய நின் திருப்பாதத்தை யான் என்று கொல் சேர்வது
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல்
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
த்வச் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி கதா புந –என்று ப்ராப்யமாகப் பிரார்திக்கப் படுவதாய்
நான் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் சரணங்கள் என்கையாலே ப்ராப்யத்வேந லப்தமாய்
நலம் கழல் அவனடி நிழல் தடம்
ஆத்தன் தாமரை யடி -என்று நிழல் கொடுத்து ஆப்தமாக வழி நடத்தி
தாளின் கீழ்ச் சேர்த்து
பாத பற்புத் தலை மேல் சேர்த்து
பொன்னடிச் சேர்த்து வேறே போக விடல் -என்று நிஷ்கர்ஷித்துப் பிரார்த்திக்க
பிராத்தனைக்கு அனுகுணமாய் அருளி
அடிக்கீழ் இருத்திக் கொண்டு
இறப்பவை பேர்த்து
அடிக்கீழ் குற்றேவல் –
என்கிற கைங்கர்யத்தில் மூட்டி முடிய நடத்தக் கடவதாய் இறே சரண உப லஷிதமான விக்ரஹம் இருப்பது –

ஆகையால் இறே
ஸ்வரூப குணங்களில் ஓர் அறிவும் இன்றிக்கே விக்ரஹ அனுபவ ஏக பரையாய் இருக்கிற சிந்தயந்தீ
சின்யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்மண ஸ்வரூபிணம் நிருச்ச்வாஸதயா முக்திம் கதான்யா கோப கன்யகா
தச்சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா ததா
தத் பிராப்தி மஹா துக்க விலீநா சேஷ பாதகா -என்றும்
கதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஸாம்யம் உபைதி என்கிறபடியே
நிரதிசய ஆனந்த ரூபமான ஸாம்யா பத்தி ரூப மோக்ஷத்தை கேவல விக்ரஹ த்யானத்தாலே பெற்றாள் என்று எழுதுகிறதும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்று விக்ரஹ தர்சனத்தாலே
பரத்வம் ஸ்வரூபமாகையாலே கழற்ற ஒண்ணாமை கிடக்கிறது அத்தனை -தண்ணளியே விஞ்சி இருப்பது
இவ்வர்த்தம் ராஜ மார்க்கத்தில் போய் கம்ஸ க்ருஹத்திலே புகாதே
நம் தெருவே நடுவே வந்திட்டு -என்னும்படி
நான் இருந்த முடுக்குத் தெருத் தேடிக்கொண்டு வந்த போதே தெரியாதோ
நான் க்ருதார்த்தனானேன் -தரித்ரனானவன் நிதி எடுத்தால் போலே
வைத்த மா நிதி
வைப்பான் மருந்தாம்
என்கிற ஆயர் கொழுந்தாகிற நிதியைப் பெற்று அழித்துக் கெடுத்து உஜ்ஜீவிக்கப் பாரா நின்றேன் -என்று சொல்லும்படி
ருசியே தொடங்கி
மோக்ஷ பர்யந்தமான பேற்றுக்கு எல்லாம் விக்ரஹமே ஹேதுவாக எழுதிற்றும் –

விக்ரஹமே உபாயபூதமாகில் விபவ அர்ச்சாவதார ரூபங்களைக் கண்டவர்கள் பகவத் விஷயத்தில் பிரவணராகாது ஒழிவான் என் எனில்
எல்லாருக்கும் ஒக்கக் காட்சி உண்டே யாகிலும் விஷயம் தான் சவுந்தர்யாதிகளை ஆவிஷ் கரியாமையாலே அந்நிய பரர்கள் ஆகிறார்கள் அல்லது விக்ரஹத்துக்கு அந்த ஸ்வ பாவம் இல்லாமை அன்று –
ஆகை இறே பாஷ்யகாரர்
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலா காரா தீன் பரம பாக்வதான் க்ருத்வா -என்று அருளிச் செய்ததும்-

இளைய பெருமாள் -ந ச அஹம் அபி ராகவ-என்று அவனை விட்டுத் தனக்கு ஸ்வரூபம் இல்லை என்றால் போலே
ஆழ்வாரும் மாறாமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ என்றார்

ப்வாஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -போலவே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட -என்று அருளிச் செய்கிறார்

ச ப்ராது சரணவ் காடம் நிபீட்ய-என்று அவன் திருவடிகளையே உபாயமாகப் போற்றுகிறார்
இது இறே சரண ஸப்தார்த்தம்

ஆக ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று
திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்
சீலம் எல்லை இல்லான் அடி
திருக்கமல பாதம் வந்து
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
நம்பி தன் மா மலர்ச் சேவடி
உன் பொற்றாமரை அடி
அருளுடையவன் தாள்
என்று வாத்சல்யம் தொடங்கி கிருபா பர்யந்தமான குண விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரகாசகமான திருவடி களைச் சொல்லிற்று ஆயிற்று –

இவ்விஷயங்களைத் திரு உள்ளம் பற்றியே பிள்ளை லோகாச்சார்யார் சார ஸங்க்ரஹத்திலே
மூன்றாம் பத்தால்
நாண் மலராம் அடித்தாமரை -என்று-நாட் பூ மலர்ந்தது என்னலாம் படி ஸூகுமாரமான திருவடித் தாமரைகள்
இது இறே துக்க நிவ்ருத்திற்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-பரம போக்யம் என்று வாஸ்தவ அர்த்தம் –

அங்கதிர் அடியன் -என்று அழகிய ஒளி விடுகிற திருவடிகளை யுடையவன் -என்றபடி
பங்கயக்கண்ணன் என்று கூறப்பட்ட நோக்கும்
பவளச் செவ்வாயன் என்று கூறப்பட்ட மந்த ஹாஸத்துக்கும்
தோற்றார் விழும் திருவடிகள் –

அவன் பாத பங்கயம் -என்று-சேஷியான அவனுடைய பாதபங்கயம் -நிரதிசய போக்யமான திருவடிகள்

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -என்று-சேநா தூளியும் உழவு கோலும் சிறுவாய்க் கயிறும்
தேருக்குக் கீழே சாற்றின திருவடிகளும் அதிலே சாத்தின சிறுச் சதங்கையுமான சாரத்ய வேஷத்தோடே நின்ற நீர்மை -என்றபடி –

மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -என்று குணாகுண நிரூபணம் பண்ணாதே அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யமான திருவடி என்றபடி

ஆக மூன்றாம் பத்தால் நாராயணனுடைய ஸர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் ப்ரதிபாதிதம் ஆயிற்று –

———————–

நான்காம் பத்தில் சரண சப்தார்த்தம்
சரணம் -உபாயமாக-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உடலாக –
உபாயே க்ருஹ ரஷித்ரோ ஸப்த சரணம் இத்யயம் வர்த்ததே ஸாம் பிரதம் ஸைஷ உபாயர்த்த ஏக வாசக
உபாயம் க்ருஹம் ரக்ஷிதா மூன்றையும் காட்டுமே யாகிலும் இங்கே உபாயமே -விவஷிதம்
ரக்ஷகம் என்றும் உபாயம் என்றும் பர்யாயம் -உபாயம் பிரபன்னனுக்கு ரக்ஷகம் என்பது அசாதாரணம் –

அநிஷ்ட நிவ்ருத்தி
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
அநாத்மத் யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வமிதி யாமதி -என்கிற அவித்யையும்
அவித்யா கார்யமான ராக த்வேஷாதிகளும்
கர்ண த்ரயத்தாலே செய்யப்படும் புண்ய பாப ரூப கர்மங்களும்
போக அர்த்தமாக பரிக்ரஹிக்கும் தேவாதி சரீரங்களும்
அவற்றால் அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் –

இஷ்டமாகிறது
கர்ம விதூ நந பிரகாரமும்
ஹார்த்த மார்க்க விசேஷ பிரகாரமும்
ஹ்ருதய குஹா நிர்க் கமனமும்
அர்ச்சிஸ் வாஸர உத்தராயண ஸூக்ல பஷாத் யாதி வாஹிக ஸத் காரமும்
சலில தஹன பவநாத் யாவரண ஸப்த காதி லங்கனமும்
த்ரிகுணாதி க்ரமணமும்
விரஜாக்ய -அப்ராக்ருத நதீ விசேஷ அவகாஹனமும்
ஸூஷ்ம சரீர விமோசனமும்
அமானவ கர ஸ்பர்சமும்
அபஹத பாப் மத் வாதி குண கண தத் ஆஸ்ரய ஸ்வரூப ப்ரகாஸமும்
பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும்
ஐரம்

மதீய திவ்ய சர பிராப்தியும்
திவ்ய அப்சரஸ் சங்க ஸத் காரமும்
ப்ரஹ்ம அலங்கார அலங்கரணமும்
ப்ரஹ்ம கந்தராய தேஜஸ் ப்ரவேஸமும்
திவ்ய மண்டப பிராப்தியும்
திவ்ய பர்யங்க நிரீக்ஷணமும்
ஸ பத்நீக ஸர்வேஸ்வர தர்சனமும்
ஆனந்தமய பரமாத்ம ஸமீபஸ்த்தியும்
பாத பீட பர்யங்க உத்ஸங்க ஆரோஹணமும்
ஆ லோகந -ஆலாப -ஆலிங்கநாத் யநுபவமும்
ஸ்வரூப குண விக்ரஹாத் யநுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷமும்
நாநா வித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்த உசித ஸர்வ பிரகார கைங்கர்ய கரணமும்

இப்படிப்பட்ட அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயத்தைச் சொல்லுகிறது
சரண ஸப்தம் என்றபடி –

ஸ்ரீ மன் நாராயண சரணவ்-ஏக பதமாகக் கொண்டு நிர்வகித்தார் பராசர பட்டர் அஷ்ட ஸ்லோஹியில் -ஷட் பதோயம் த்வி கண்ட -என்று
கமல நயன வாஸூ தேவ பாவ சரணம் -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்றும்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்றும்
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும் உள்ள பிராமண ஜாலங்களை ஆராய்ந்தால் ஸ்ரீ மன் நாராயண -இரண்டையும் விளியாக்கி
தவ என்ற ஒரு பாதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பர்கள் –
இதம் அஷ்ட பதம் வ்யாஸே ஸமாஸே ஷட்பதம் விது -தேசிகன்
ஸ்ரீ மத்வமும் குண யோகமும் திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் -இம்மூன்றுக்கும் சேஷித்வ அனுகுணமாக சம்பந்தம் உண்டு

1-கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4-2-8-
கொம்பு வஞ்சிக்கொம்பு என்றும் ஏகதேச மான கொம்பு என்றும் இரண்டு நிர்வாஹங்கள்
இலங்கை நகர் -இரு சுடர் மீதினில் இயங்கா –
அங்கு அன்றோ சர அக்னியைப் பிரவேசிக்க விட்டான் சக்கரவர்த்தி திருமகன்
இத்தால் ஜனகராஜன் திருமகள் விரோதியைப் போக்கி அருளின படி -அநிஷ்ட நிவ்ருத்திக்குத் தப்பாத உபாய பூதன்

2- வல்வினை தீர்க்கும் கண்ணனை –தொல் வினை தீர-4-4-11-
என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேன் –
ஆழ்வான் திரு நயனங்கள் நோவு பட்ட பின்பு எம்பெருமானார் திரு உள்ளம் நோவு பட்டால் போலே காணும் திருத்தாயார் திரு உள்ளம் படுகிறது-
பெற்றவர்கள் கை விட்டால் பிடித்தவர்கள் கை விடார்கள் இறே -கைப்பிடித்த அழகிய மணவாளன் கை விடான்

3-வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-

4- மேவி நின்ற தொழுவார் வினை போக –
தேஹி மே ததாமி தே -என்று ப்ரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்றுக் கொண்டு போகை அன்றிக்கே
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் -என்பவர்
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் -என்று தொழுபவர்கள் –

5- பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்

6- நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்ற இவை ஒழிய –

7- வேட்கை எல்லாம் விடுத்து கூட்டரிய திருவடிகள் கூட்டினை –4-9-9-
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -நாள் வீடு செய்யும் -போக்கி அருளும் தாய் தந்தை திருமால் -வணங்குவனே
இதுவே கர்தவ்யம்

திருநாரணன் தாள் -அஃதே உய்யப்புகும் ஆறு -4-1-11-
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-

வேதமே ப்ரஹ்மம் அறிய பிரமாணம்
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித்
பராஸ்ய ஸக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிக ஞான பல கிரியா ச
ஸாஷாத் ச உபாயம் நாநாத் -1-4-25-
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ நிமித்தத்வ உபாதாநத்வ உபயோகி நீ -ஸ்ருத ப்ரகாஸர்
ஸங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் உபாதானம் –
ஸங்கல்பம் நிமித்தத்தா அவச்சேதகம்
சேதன அசேதன வை சிஷ்ட்யம் உபாதானதா அவச்சேதகம்
ப்ராப்ய ப்ராபக ஐக்யம்
நெறி வாசல் தானே யாய் நின்றான் -பொய்கையார்
கருணா விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாய பூதன்
போக்யதா விஸிஷ்ட ப்ரஹ்மம் உபேய பூதன்
உபாயம் ஸ்வீ கார காலத்தில் புருஷ ஸா பேஷமாயும் புருஷகார ஸா பேஷமாயும் இருக்கும் –
கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் –
கார்ய காலத்தில் ஸஹ கார்ய அபேக்ஷத்வம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைர பேஷியத்துக்கு ஹானி வரும் என்று கருத்து -மா முனிகள் –

—————-

ஐந்தாம் பத்து -ப்ரபத்யே ஸப்தார்த்தம்

நோற்ற நான்கிலும் இருந்து பிரமாணங்களை எடுத்துக் காட்டி அருளுகிறார் சாரா ஸங்க்ரஹத்தில்
1- தமியேனுக்கு அருளாய் -5-7-2-
தமியேன் -என் பக்கலிலே ஸத்தாத்திரேகியாய் இருப்பது ஒன்றும் இல்லை
அருளாயே -ருசிக்கு பண்ணின கிருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை -பெரியவாச்சான் பிள்ளை
தமியேன் -பிராட்டியை வ்யாவ்ருத்தி -அங்கு திரிஜடை யாகிலும் உண்டே
இங்கு ஆவாரார் துணை என்னும்படி இறே தனிமை
இத்தலையும் குறைவற்றது என்கிறார்
அங்கு பிரியாது தரித்து இருக்கிறவர் படியும் அல்லேன்
இங்கு பிரியாது தரித்து இருக்கிறவர் படியும் அல்லேன்
பிரிந்து இருக்கிற எனக்கும் என்றும்
உபாய ஸூ ன்யனான எனக்கும்
ஸம்ஸாரிகள் துணை இல்லாத எனக்கும் -மூன்று அர்த்தங்கள்
ஆற்றாமையை ஸாதனம் என்று பழி இட்டு விலக்கப் பார்த்தால் நித்ய ஸூரிகளை அன்றோ முற்பட விடப்போவது
உபாய ஸ்வீ காரமும் உபாயம் அன்று அன்றோ
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார்
அவன் அடியாக -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது

2- ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-
ஏக பதம் வ்ரஜ -என்கிற ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறதே
ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணின கிருஷி பலம் -அதுவும் அவனது இன்னருளே
பாதமே சரணாக்கும் ஒவ்தார்யம் வான மா மலையிலே கொழுந்து விடும் –

3- உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-
நானும் எனக்கு கடவனாய் பிறரும் சக்தரான அன்றும் உன்னால் வரும் நீ ஒழிய என்னால் வரும் நீயும் வேண்டா
பிறரால் வரும் நெடியும் வேண்டா என்கை
த்வமேவ உபாய பூதோ மே பவ

4- கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11-
அவதாரணத்தாலே ஸஹ காரி நைர பேஷ்யம் சொல்லுகிறது -மாம் ஏகம்

5-அடி மேல் சேமங்கள் -5-9-11-
பிராட்டி ஆற்றாமை மிகு இருந்தாலும் ராவணனை சபியாதே பெருமாள் வரவையே எதிர்பார்த்து இருந்தால் போல்

6- நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11-
சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது ஒழிய வேறே ஒன்றிலே கால் தாழாது ஒழிகை மஹா விஸ்வாசம் ஆகிறது –

ஆக ஐந்தாம் பத்தால் அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் கூறப்பட்டது

ஆக பூர்வ வாக்யார்த்தம் அருளிச் செய்யப்பட்டது –

—————

திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52-
அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை -1-5-7-ஐஸ்வர்யா கைவல்யங்களைக் கொண்டு அகலாதே
ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியிலே அடிமையே பேறு என்று இருக்கவே அமையும்
அநந்ய சாதனத்வ ஸித்திக்கு உபாய அத்யவசாயம் வேணும்
அநந்ய போகத்வ ஸித்திக்கு உபேய அத்யவசாயம் வேணும்
முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -உபாயாந்தர வைராக்யம்
உத்தர வாக்கியம் நாம் அவனுக்குச் சொல்லும் மாஸூச –
நான் உன்னைப் பிடித்தேன் கொள் சிக்கனவே -ஆழ்வார் திரு வாக்கு கேட்டு சோக நிவ்ருத்தன் ஆனான் –

தாவதார்த்தி ததா வாஞ்சா தாவந் மோஹஸ் ததா ஸூகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே

உத்தர வாக்கியம் ஸ்ரீமதே நாராயணாய நம -மூன்று பதங்கள் -ஐந்து பாகன்களாகப் பிரித்து ஐந்து அர்த்தங்கள் -சார ஸங்க்ரஹம்

முதல் பாகம் -ஸ்ரீ மத் ஸப்தம் -இருவருமாக சேர்த்தியில் கைங்கர்யம் -நித்ய சம்பந்தம் ப்ரதிபாதிதம் ஆயிற்று
இதுக்குப் பிரமாணம் ஆறாம் பத்து

1- திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் -6-5-8-
வேதம் கட்டளைப்பட்டு உள்ளது திருத் தொலை வில்லி மங்கலத்துள்ளார் பரிகரித்த பின்பே
இதை சர்வம் சமஞ்ஜஸம்
ஆராத்யமான திவ்ய மிதுனம்

2-அடிமைசெய்வார் திருமாலுக்கே -6-5-11-

3- ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-திருமகளார் கேள்வன் என்பதாலேயே பெருமை

4- என் திரு மார்வற்கு -6-8-10-

5- கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-
ரக்ஷிக்கும் இடத்தில் ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூட வாயிற்று -ஸ்ரீ யபதியே ப்ராப்யம்
ஞாலத்தூடே -ஸர்வ பிரகார ரக்ஷகத்வம்
சாலப்பல நாள் -ஸர்வ கால ரக்ஷகத்வம்
ஸ்ரீ ஸத்வம் ஸர்வத உத்கர்ஷாத் உபேயத்வம் அபூரயத்

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி
தயா சஹா ஸீநம்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
அடிமை செய்வார் திருமாலுக்கே

ப்ரகர்ஷயந்தம் மஹிஷீம் மஹா புஜம் -என்றும்
ஸ்ரீய ஸ்ரீயம் என்றும் –விஸிஷ்ட வேஷத்தை அருளிச் செய்து
ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -தத் விஷயமான வ்ருத்தி விசேஷ பிரார்த்தனை

ஸ்ரீ வல்லப -என்று விஸிஷ்ட வேஷமே ப்ராப்யம் -பாஷ்யகாரர்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ
த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரி பிதா

ஆஸ்ரயண வேளையில்
ஸூ மஜ்ஜாநயே விஷ்ணவே ததா ஸதி
அனுபவ வேளையில்
ஸ்ரீய ஸாரத்தம் ஜகத் பதி

மிதுன பரம் ப்ராப்யம் ஏவம் ப்ரஸித்தம் -பட்டர்

ஆக ஸ்ரீ மத் பதார்த்தம் கூறப்பட்டது –

————-

கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு நாற்றங்காலான ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியைச் சொல்கிறது நாராயண பதம்
அஸ்னுதே காமான்
லப்தவா ஆனந்தீ பவதி
இமான் லோகான் அநு சஞ்சரன்
ஸதா பஸ்யந்தி
அநுபாவ்ய விஷய பூர்த்தியைக் காட்டுகிறது நாராயண பதம் –
ஸ்வரூபத்தைப் பார்த்தால் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அத்யந்த வியாவ்ருத்தமாய் இருக்கும்
ரூபத்தைப் பார்த்தால் – ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -அப்ராக்ருதமாகையாலும் –
ஸகல ஜகதாரமாகையாலும் -வியாவ்ருத்தமாய் இருக்கும்
குணங்களை பார்த்தால் அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை குண ஏகமுமாய் நிஸ் ஸீமமுமாய் அபரிச்சின்னமுமாய் இருக்குமே
விபூதியும் பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரி பாதஸ்ய அம்ருதம் திவி
இப்படி ஸர்வ பிரகாரங்களிலும் சர்வாதிகனாய்
பதிம் விஸ்வஸ்ய
பதிம் பதீ நாம்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த
பிணங்கி அமரர் பேதங்கள் சொல்லும் படி
எழில் கொள் சோதி
மலர் புரையும்
ஸ்வாமித்வ போக்யதைகளில் நோக்கு

பூர்வ வாக்யத்திலம்நாராயண பதத்துக்கு ஸுலபயத்தில் நோக்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்வாமித்வ போக்யதைகளிலே நோக்கு
தத்வ பிரகரண உசிதமாய் இருக்குமே

நிரதிசய போக்யதையை ஏழாம் பத்தாலும்
ஸ்வாமித்வத்தை எட்டாம் பத்தாலும் சார ஸங்க்ரஹத்தில் பாசுரங்களைக் காட்டி அருளுகிறார் –

—————–

1- கன்னலே அமுதே -7-1-2-ஸர்வதோ முகமான ஸாரஸ்யம்

2- கொடியேன் பருகு இன்னமுதே -7-1-7-தோளும் தோள் மாலையுமாய்க் கடலைக் கடைகிற -விஜாதீயமான அமுதம்

3-அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5-இவரது அமுதத்தைக் கொண்டு அன்றோ அவர்கள் கடல் கடைந்து

4-திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -7-9-9-நிரதிசய போக்யன்

5-இவ் வேழு உலகை இன்பம் பயக்க -7-10-1-
இப்படி ஏழாம் பத்தில் போக்யதை கூறப்பட்டது

——-

இனி எட்டாம் பத்தில் ஸ்வாமித்வம்

1-அடியனேன் பெரிய அம்மான் -8-1-3-நான் முறையிலே நின்றவாறே நீயும் முறையிலே நின்றாய்
ஸ்வத்மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் இறே

2- விண்ணவர் கோன் நாங்கள் கோனை –8-2-2-நித்யர்களைப் போலவே என்னையும் அநந்யார்ஹன் ஆக்கி அருளினவன்
ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை என்னை ஒருத்தியையுமே படுத்திற்று

3-அமர்ந்த நாதனை -8-4-10-
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாத் நாத வத்தரம் -ரஷ்யம் சுருங்கி ரக்ஷகத்வ துடிப்பே விஞ்சி இருக்கும்

4-முனைவர் மூவுலகாளி –8-9-5-ஸர்வ ஸ்வாமி

5- நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் -8-9-1-
அநு ரூப ஸ வை நாத -அனுகூலமான திருமேனியை யுடையவன் –
நிரதிசய ஆனந்த யுக்தன்
ஸர்வ வியாபகன்
பர வ்யூஹாதி பிரகார பஞ்சக விசிஷ்டன்
ருத்ராதி சரீர விலக்ஷண சரீரன்
கருட வாஹனன்
நிருபாதிக சேஷீ
ஸர்வ ஸ்வாமி

இப்படி போக்யதா ஸ்வாமித்வ ப்ரதிபாதக நாராயண சப்தார்த்தம் கூறப்பட்டது

———-

ஆய -விபக்தி -நான்காம் வேற்றுமை -கைங்கர்யத்தை பிரகாசிக்கிறது -பகவன் முக விகாஸ ஹேதுவான வியாபாரம்
ஏதத் ஸாம காயன் நாஸ்தே
நம இத்யே வாதிந
இரைத்து நல்ல மேன் மக்கள் ஏத்த
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி –
வாசிக
காயிக
ரூபமாய் இருக்கும்

சதுர்த்தி கைங்கர்யத்தில் இரப்பைக் காட்டுகிறது
எய்தியும் மீள்வர்கள்-என்கிற போகம் போலே அன்றிக்கே மீளா அடிமைப் பணியாய்
சிற்றின்பம் போல் அன்றிக்கே அந்தமில் அடிமையாய்
வந்தேறி அன்றிக்கே தொல் அடிமையாய் -ஸஹஜமாய் –
உகந்து பணி செய் என்னும்படி ப்ரீதியால் வரக்கடவதாய்
ஏவ மற்று அமரர் ஆட் செய்யார் -சொல் பணி செய்யுமா போல்
முகப்பே கூவிப்பணி கொண்டு அருள வேணும் -என்கிற இரப்போடே பெற வேணும்
பவாநி -என்று ஸ்ரீ பாஷ்ய காரரும்
அடிமை செய்ய வேண்டும் -என்று ஆழ்வாரும் பிரார்த்திகையாலே
ப்ரார்தனா பர்யந்தமாக அர்த்தம் என்னப் பட்டது –

இதுவே ஒன்பதாம் பத்தில் அருளிச் செய்யப்படுகிறது

1- பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1-
என்னடியார் அது செய்யார் என்கிற உன் கடாக்ஷமும்
ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று
க்ருபயா பர்யபாலயத் என்று கிருபா பரதந்த்ரனான உன் கடாக்ஷமும்
அப்பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் பெற்று
அவனுடைய பாரதந்தர்யம் பிரணயித்வம் அன்றோ நிலை நிற்குமோ ஸ்வா தந்தர்யம் அன்றோ பிரகிருதி என்று அஞ்ச வேண்டா
அவள் அருகே இருக்க ஸ்வா தந்தர்யம் ஜீவியாது -ஆகை இறே முற்கூற்றால் அவளைப் பற்றுகிறது
நின் கோயில் சீய்த்து -உகந்து அருளினை நிலங்களில் அசாதாரண பரிசர்யை பண்ணி
சரணாகதனுக்கு பரிசர்யை உபாயத்தில் அந்வயியாது ஸ்வயம் ப்ரயோஜனமாய் இருக்குமே
திருக்கண்ண மண்நகை ஆண்டான் திரு மகிழ மரம் அடியிலே பரிசர்யை -சருகைத் திரு அலகிட்டாரே –

2-நின் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து -9-2-2-

3- தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-

4- கொடு வினையேனும் பிடிக்க -9-2-10-

5- உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு -9-4-4-

6- ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-

7- நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-

சேஷத்வ ஞான அனந்தர பாவியாய்
சேஷத்வ உபபத்தி ஹேதுவாய்
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று ஸ்வீ குறித்த உபாயத்தை பலமாக
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயாமி -என்று பெரிய முதலியாராலும்
அநந்ய சரண த்வத் யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
நித்ய கிங்கரோ பவாநி -என்றும் ஸ்ரீ பாஷ்ய காரராலும்
அடிமை செய்ய வேண்டும் நாம் என்று ஆழ்வாராலும்
ஸ்வரூப விகாஸ ஸூ சகமான கைங்கர்ய பிரார்த்தனை செய்யப்பட்டதே

—–

இனி முடிவான நம பதார்த்தம் -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
கைங்கர்ய பிரார்த்தனை போலவே இதுவும் அடிமைக்குக் களையான அஹங்கார மமகாரங்களைக் கழிக்கிறது –

ஊணிலே மயிரும் புழுவும் பட்டால் போல் அன்றோ இவை
ஆவி அல்லல் மாயத்தே
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அத்தலையில் உகப்பே பேறு -பரார்த்த கைங்கர்யம் பரமபுருஷார்த்தம் –

ஜிதந்தே புண்டரீகாக்ஷ –ஹ்ருஷீ கேஸ
பரவா நஸ்மி காகுத்ஸ்த –ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதை மாம் வத
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
மற்றை நம் காமன்கள் மாற்று
ஆம் பரிசு அறிந்து கொண்டி ஐம் புலன் அகத்து அடக்கி –

ப்ரபல தர விரோதி பிரஹாணம்-அஷ்ட ஸ்லோகி
அஹம் அன்னம் –முதலில் சொல்லி பின்னை அன்றோ அஹம் அந்நாத என்றது

அவன் ஆனந்தத்துக்காகவே கைங்கர்ய பிரார்த்தனை
பகவத் போகமே அவளுக்கு உள்ளது
அவளும் அவனுமான சேர்த்தி இவனுக்கு போக்யம்
மரவடிகளைப் போலே திருவடிகளில் கிடக்கவுமாய்
மாலையோ பாதி திரு முடியில் ஏறவுமாய்
இளைய பெருமாளை போலே உடன் போக்கவுமாம்
பரதாழ்வானைப் போல் தலையிலே முடி வைக்கவுமாய்
அத்தலையில் திருமுக மலர்த்திக்கு உருப்பாயே இறே அறுவது

ஆச்சார்ய ஸேவா பலம் அவதாரண த்ரயத்திலும் அர்த்த ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கை காண் -ஆச்சான் பிள்ளை வார்த்தை

இதுவே பத்தாம் பத்தில் ஆழ்வார் -பத்து -பாசுரங்களைஉதாஹரித்து விளக்கி அருளுகிறார் சார ஸங்க்ரஹத்தில்

1-துயர் கெடும் கடிது -10-1-8-அபேக்ஷிக்காமலேயே சடக்கென போமே -நீயும் வேண்டா நானும் வேண்டா அவை தன்னடையே விட்டுப்போம் –

2-கெடும் இடராய வெல்லாம் –10-2-1-அவன் ஒரு விரோதியைப் போக்கினை படியைச் சொல்ல விரோதி என்று பேர் பெற்றவை எல்லாமே நசிக்குமே

3- எழுமையும் ஏதம் சாரா -10-2-2-சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தன –ராஜ குலா ஸம்பந்தத்தாலே விட்டு ஓடிப்போம்

4-தீரும் நோய் வினைகள் எல்லாம் -10-2-3-துக்கங்களும் துக்க ஹேதுக்களும் -வசிக்கும்

5- இப்பிறப்பு அறுக்கும் -10-2-5-கண்டது இறே இதனுடைய இழை யீடு -நூலாலே தைத்தால் போல் அவயனங்களின் சேர்க்கையால் ஆன ஆக்கை
தோஷங்களைக் காணவே விரக்தி பிறக்கும் -இப்படி ஹேயமான பிறப்போம் அறுக்கும்

6-உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் -10-3-9-
தாதார்த்தத்தின் எல்லை பேசும் பாசுரம் –
‘உனது உகப்புக்குப் புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வமும் வேண்டோம் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி

7- பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7-

8- பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-

9- விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9-

10- அமரா வினைகளே -10-5-9-

11- கடு நரகம் புகல் ஒழித்த–10-6-11-

12- பிறவி கெடுத்தேன் –10-8-3-

13- தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-6-

14- அந்தி தொழும் சொல்லு –10-8-7-நம இத்யேவ வாதிந
ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை

15-அவா வற்று வீடு பெட்ரா –10-10-11-

ஸ்வரூப விரோதி
சாதனா விரோதி
பிராப்தி விரோதி
ப்ராப்ய விரோதி
சதுஷ்ட்யத்தின் நிவ்ருத்தி முக்யமாகக் கூறப்பட்டது
கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியைக் கழிக்கை

இப்படி
ஸ்ரீ யபதித்வ பிரமுகங்களாய்-
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள உபாதேய அர்த்தங்களை
பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்யத்வமும் –
திருவாய் மொழியும் –
பகவத் சரணார்த்தி களாய்-அநந்ய உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
போக ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் —என்று அருளிச் செய்து  ஸார சங்க்ரஹத்தை நிகமித்து அருளுகிறார் ஸ்ரீ பிள்ளை லோக்கலாச்சார்யார்   –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

”ஸ்ரீ” சப்தார்த்தம்–

January 5, 2022

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

ஆக –
திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே
பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய்
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம் விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் –
வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி இவ் யுபாய ஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ் ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -ஸ் ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –

வ்யுத்பத்தித் த்வயத்தாலும் –
சேவிக்கப் படா நின்றாள் –
சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –
அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ –
விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ –
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய்
பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
த்வம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக –
மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ –
ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-

ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே –
சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே
ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் –
இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-

கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க –
அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –

பின்பு –
இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –

பின்பு
அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது –
நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –

நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து

இவை படுகிற நோவைக் கண்டு –
இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –

சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது

பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று
நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்

ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது

அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று –
நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –

தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –
ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –

ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –

சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –

அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-
ந கச்சின் ந அபராத்யதி -என்னும்

இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று
புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –

இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே –
அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –

நாயந்தே
இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –

ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று
நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி
தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –

அவனுடைய பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –

பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –

சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக் குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –

ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –

கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –

அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –

இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ –
சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –

ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது –
உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –

அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று
இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –

————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -த்வய -பிரகரணம்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————–

ஸ்ரீ சப்தார்த்தம்
1- அதில் ஸ்ரீ மத் என்கிற அம்சத்தாலே புருஷகாரத்தையும் –
புருஷகாரத்தினுடைய நித்ய சந்நிதியையும் சொல்லுகிறது –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
பிராட்டியுடைய புருஷகார பாவத்துக்கு உபயுக்தங்களான குண விசேஷங்களைச் சொல்லுகிறது –

அக்குண விசேஷம் ஆகிறது உபய சம்பந்தம் –
அதில் கர்மணி வ்யுத்பத்தி சேதனனோடு உண்டான பந்த விசேஷத்துக்கு பிரகாசகமாய் இருக்கும்
கர்த்தரி வ்யுத்பத்தி ஈச்வரனோட்டை சம்பந்தத்துக்கு பிரகாசகமாய் இருக்கும் –

சேதனனோடே மாத்ருத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –
ஈஸ்வரனோடே மஹிஷீத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –

மாத்ருத்வ லஷண பந்தத்தாலே புருஷகார நிரபேஷமாக சகல சேதனர்க்கும் ஆஸ்ரயணீயையாய் இருக்கும் –
மஹிஷீத்வ பிரயுக்தமாக ஈஸ்வரனோடே நித்ய சம்யுக்தையாய் இருக்கையாலே புருஷகார நிரபேஷமாக ஈஸ்வரனை சேவியா நிற்கும் –

யஸ்யா கடாஷணம் அநு ஷணம்-இத்யாதியாலே
வ்யுத்பத்தி த்வயத்தாலும் உண்டான அர்த்தத்தை ஆழ்வான் அருளிச் செய்தார்

ஸ்ருணோதி ஸ்ராவயதி என்கிற நிறுக்தி விசேஷத்தாலே
ஸ்ரீ யதே ஸ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்த விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸ்ருணோதி என்றது கேளா நிற்கும் என்றபடி –
ஸ்ராவயதி என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –

ப்ரதீப்த சரணத்தில் பொருந்தாதாப் போலே சம்சாரம் அடிக் கொதித்து
பகவத் விஷயத்தை கிட்டி யல்லது தரிக்க மாட்டாத படியான தசா விசேஷத்தை யுடையனாய் –
பகவத் சமாஸ்ரயண உன்முகனான சேதனன் –
யத் ப்ரஹ்ம கல்ப இத்யாதிப் படியே கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
சிறிது வரையிட்டுக் காட்டக் கடவதல்லாத படி க்ரூரங்களாய் இருக்கிற
அக்ருத்யகரண க்ருத்யாகரண பிரமுகங்களான அபராத விசேஷங்களை கரண த்ரயத்தாலும்
அநாதி காலம் கூடு பூரித்து ஈஸ்வரனுடைய -ஷிபாமி – ந ஷமாமி -என்கிற
வெட்டிய சொற்களுக்கு விஷயபூதனாய் போந்தான் ஒருவன் ஆகையாலே
அநாதி கால ஆர்ஜிதங்களான தன்னுடைய அபராத விசேஷங்களையும் –
ஈஸ்வரனுடைய நிரந்குச ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து பீதனாய்
பிராட்டியுடைய நிரவதிகமான காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு உண்டான பந்த விசேஷத்தையும் புரச்கரித்து
சாபராதனாய் அநந்ய சரணனாய் இருக்கிற எனக்கு அபராத நிவ்ருத்தி மாத்ரத்திலே ப்ரசன்னையாய்
அசரண்ய சரண்யையாய் இருக்கிறவள் திருவடிகளை ஒழியப் புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையை தானே கேளா நிற்கும் –
ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்யும் வார்த்தையை அவன் கேட்கும்படி பண்ணா நிற்கும் –

இச் சேதனனுக்கு இருவரோடும் பந்தம் உண்டாய் இருக்க அவனுக்கு அவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில்
மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும்
ஈச்வரனோபாதி காடின்ய மார்த்தவங்கள் கலந்து இருக்கை யன்றிக்கே கேவல மார்த்தவமேயாய்
சாபராதரான சேதனரை அபராதா நுகுணமாக நியமிக்கும் இடத்தில்
மர்ஷயாமீஹ துர்பலா -என்கிறபடியே அசக்நையாய் இருக்கையாலும்
தவம் நீசச்சவத் ஸ்ம்ருத என்கிறபடியே தன் திருவாயாலே இப்படி புல்லிதமான வார்த்தையை அருளிச் செய்ய வேண்டும்படி
விபரீத புத்தியாய்-தன் திறத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணி
ராவணோ லோக ராவண -என்கிறபடியே இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிட வேண்டும்படி
பர ஹிம்சையே யாத்ரையாக யுடையனாய் இருக்கிற
ராவணனுடைய தண்ணிமையைப் பாராதே
அவனைக் குறித்து -தேன மைத்ரி பவது -என்றும் –
மித்ர மௌபயிகம்கர்த்தும் -என்றும் ஹிதோபதேசம் பண்ணுகையாலும்

ராஷசிகள் ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்னம் கண்டு அத்தாலே பீத பீதைகளாக -த்ரிஜடை-
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-என்று
நாம் விடாதே இருந்து தர்ஜன பர்த்சனங்களைப் பண்ணி நலிய
நம்மாலே நலிவு படுகிறவள் தானே நமக்கு ஆபத்து உண்டான காலத்திலேயே
நம்மைக் கைவிடாதே ரஷிக்கும் என்று சொல்லுகையாலும்

இப்படி பிறர் சொன்ன அளவன்றிக்கே பிராட்டி தானும் இவர்கள் நோவுபடுகிற சமயத்தில்
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள்
நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா -என்று அபய பிரதானம் பண்ணுகையாலும்

இப்படி வ்யவஹார மாத்ரமேயாய் அனுஷ்டானம் விபரீதமாகை யன்றிக்கே திருவடி வந்து
ராவணன் பட்டான் -பெருமாள் விஜயிகளானார்-என்று
விண்ணப்பம் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உபகாரத்துக்கு
சத்ருச பிரத்யுபகாரங்கள் காணாதே தடுமாறுகிற அவஸ்தையிலே

பத்து மாசம் தேவரீரை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணி நலிந்து போந்த இப்பெண் பயல்களை
நான் நினைத்த வகைகளிலே நலியும்படி அவர்களைக் காட்டித்தர வேணும்
நான் முன்பு தேவர் திருவடிகளிலே வந்த போது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்க மாட்டாதே நொந்து போனேன் –
இப்போது இவர்களை நிரசிக்கைக்கு ஒரு ப்ரதிபந்தகம் இல்லை –
இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும் வகை சொல்லா நின்றேன் –
இவனுக்கு நாம் பரிசிலாகக் கொடுக்கலாவது என் என்று தடுமாற வேண்டா –
இவர்களை நிரசிக்கும் படி என்கையிலே காட்டித் தருமது ஒழிய
எனக்குப் பண்ணும் பிரத்யுபகாரம் வேறில்லை என்று விண்ணப்பம் செய்ய

திருவடி பண்ணின உபகாரத்தையும் ராஷசிகள் பண்ணின அபகாரத்தையும் பாராதே
அப்போது அவர்களுடைய அச்சம் ஒன்றுமே திரு உள்ளத்திலே பட்டு
அவர்களுடைய கண் குழிவு காண மாட்டாதபடியான மார்த்தவத்தாலே
ந கச்சின்னா பராத்யதி -என்றும் -க குப்யேத்-என்றும் -துர்ப்பலா -என்றும்
திருவடியோடே மன்றாடி ஆர்த்ராபராதைகளான ராஷசிகளை ரஷிக்கையாலும்

இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் நிறுத்திப் போகத் தேடின அளவிலே
சீதாமுவாச -என்று பிராட்டி புருஷகாரமாகப் பெருமாளோடு கூடப் போகையாலும்

ஸ்ரீ விபீஷணப் பெருமாள் ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ என்று ஜீவிக்க வேண்டி இருந்தாயாகில்
பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர இருக்கும் படி
பண்ணப் பார் என்று ராவணனைக் குறித்து பெருமாளும் பிராட்டியும் சேர இருக்கைக்கு உறுப்பான
வார்த்தைகளைச் சொல்லியும்
த்ரிஜடையைப் பிராட்டிக்கு வ்யசனங்களில் உசாத் துணையாக வைத்தும் இப்படி
பிராட்டி முன்னாக பெருமாளை சரணம் புகுகையாலும்

மஹா ராஜர் திருவாபாரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும் –
காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியிலே தலை யறுப்புண்ணாதே பிழைக்கை யாலும்

ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கே இருக்க பிராட்டி சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்கையாலும்

பின்னையும் இளைய பெருமாளைக் குறித்து பிராட்டி தன்னை வனத்திலே விட்டுப் போகா நிற்க
தம்பிமாரோடே ஒக்க நாட்டை ரஷிக்க விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்கையாலும்

மற்றும் இவை தொடக்கமான ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லாவற்றாலுமாக
ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது இவள் புருஷகார பூதையாகக் கடவள் –

முக்யமாக எம்பெருமானை ஆஸ்ரயிக்கை யாவது -பிராட்டி முன்னாக ஆஸ்ரயிக்கை –
ஆச்சி சிறியாத்தானுக்கு பகவச் சேஷமாய் அவற்றை நெடும் காலம் அகன்று போந்த இவ்வாத்மாவை
எம்பெருமானோடே இணைக்கக்குப் பற்றாசாக நமக்குப் பிராட்டி யுளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் –

சர்வஜ்ஞனாய் சர்வசக்தியாய் இருக்கும் ஈஸ்வரன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே
ஹ்ருதிச்தனாய்க் கொண்டு
சேதனர் பண்ணும் அபராதங்களைக் குறித்து அவற்றுக்கு ஈடாக நியமிக்கையாலே
சாபராதரான சேதனர் சரண உக்தியைப் பிரயோகித்தால் அதுவும் அபராத கோடிகடிதமாய் இருக்கும் இறே

ஆகையாலே அநாதி காலம் தான் பண்ணிப் போந்த அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் போது
அந்தபுர பரிகரமாய் நின்று விண்ணப்பம் செய்ய வேண்டுகையாலே –
சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தரனாம் படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் –
மலராள் தனத்துள்ளான் -என்றும் –
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும்
தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் உண்டான உசித உபாய விசேஷங்களாலும்
சேதனனுடைய அபராதங்கள் ஈஸ்வரன் திரு வுள்ளத்தில் படாதபடி பண்ணி
அநாதி காலம் அகன்று போந்த இருவரையும் சேர்க்கக் கடவதாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று

——————————————————————————————————————-

”ஸ்ரீ” சப்தார்த்தம்.
” ஸ்ரீ ” என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது.

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க,

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று)

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து,

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து,

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான
அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற
(அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி.

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே

ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் –
அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்

இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நம் நிலை நாம் பெரும்பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக் களையற வெண்ணினமே –12-

இலக்காம் வடிவில் இணை யடிகள் -ஆஸ்ரிதர்கள் தியானிக்க இலக்காகும் திரு மேனியில் ஒரு பாகமாகிய இரண்டு திருவடிகளும்
பார்க்கும் சரண் -சேதனர்கள் பிரதானமாக கருதும் உபாயமான ஸ்ரீ மன் நாராயணனும்
நாம் பெரும் பேறு ஏற்கின்ற வெல்லைகள் -நாம் அடையும் பிரதான பலனான ஸ்ரீ மன் நாராயணனும்
கைக்கொள்ளும் சரம புருஷார்த்தமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் முதலியன –

1-சேர்க்கும் திருமகள்-ஸ்ரீ சப்தார்த்தம்
2-சேர்த்தியில் மன்னுதல் -மதுப்பின் அர்த்தம்
3-சீர்ப் பெரியோருக்கு ஏற்கும் குணங்கள்-நாராயண சப்தார்த்தம்
4-இலக்காம் வடிவில் இணை யடிகள் -சரண பதார்த்தம்
5-பார்க்கும் சரண் -சரணம் பதார்த்தம்
6-அதில் பற்றுதல் -பிரபத்யே யார்த்தம்
7-நம் நிலை -அகிஞ்சனர் அநந்ய கதிகள் ஆகிய நம் நிலை
8-நாம் பெரும் பேறு -ஸ்ரீ மன் நாராயண பதார்த்தம்
9-ஏற்கின்ற வெல்லைகள் -ஆய சப்தார்த்தம்
10-எல்லாக் களையற-நம சப்தார்த்தம்

வெண்ணினமே–ஆக இந்த பத்து அர்த்தங்களையும் அருளும் ஸ்ரீ த்வய அனுசந்தானம் செய்வதே காலஷேபம் -என்றவாறு –

அருள் தரு மடியவர்பான் மெய்யை வைத்து தெருள் தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென இருள் செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன. நின் திருவுருவில் அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித் தீண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக நின்னுடன் சேர்ந்து நிற்கு நின் திருவே.”– –(மும்மணிக்கோவை. 1)

[தெருள் – பூர்ண ஜ்ஞாநம் ;
அருள் எனும் சீர் – கிருபை என்கிற கல்யாண குணம் ;
ஓர் — ஒப்பற்ற;
அரிவை – பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்);
இருள் – அஜ்ஞாநாத்யந்தகாரம் ;
செக – நசிக்க ;
விளக்கு — நிரதிசயாநந்த ரூபமான பகவத் ஸ்வரூபம்,
அபராதாநுகுணமாக தண்ட தரனான அவன்படி ஒளி விளக்கு,
பெரிய பிராட்டியின்படி இன் விளக்கு,
ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு.
ஆகையாலே த்வத் விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ;
மணிவரை – மரகதமலை ;
திருவுருவில் – திருமேனியில் ;
ஆகம் – திருமார்பு;
அலங்கலாய் — மாலையாய் ;
இலங்கி – விளங்கி ;
நின்படிக்கெல்லாம் – என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ;
அன்புடன் – இருதலையன்புதனால்.) என்றும் ;

வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன் -(அமிருதாசுவாதினி. 8) –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–

October 31, 2021

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

யதீந்திர மத தீபிகா :

ஸர்வம் வஸ்து ஜாதம் .
அவை ஜடம் + அஜடம் எனவாய்
பிரகிருதி, காலம் 2ம் ஜட வஸ்து.
நித்ய விபூதி, தர்மபூத ஞானம், ஜீவன், ஈஸ்வரன் இவை 4ம் அஜட வஸ்து ஆகும்.

இந்த அஜட வஸ்த்துக்கள் 4ல் முதல் இரண்டும், அதாவது நித்ய விபூதி, தர்மபூத ஞானம் 2ம் பிரத்யக் என்றும்,
ஜீவனும் ஈஸ்வரனும் பராக் என்றும்,

ஜடம், அஜடம், இரண்டும் திரவ்யத்திலும் ,
ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் அதிரவ்யங்களுமாய்
கீழ் கண்ட Chart மூலம் அறியலாம்.

வஸ்து பிரமாணம் (3) ; பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் -; ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் ; பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் -; நித்ய விபூதி + தர்ம பூத க்ஞானம்
| தர்மி பூத க்ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் ; பர +
| வியூக (4) +
| விபவ ; ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி +
| அர்சை (106 +ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு -; அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமைகாந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

—————–

ஜட வஸ்துவில் ஒன்றான பிரக்ருதி 23 தத்வங்களாய் பார்க்கப் படுகின்றன. அவை:
மூல பிரகிருதி. மஹான், (சாத்விக + ராஜச + தாமச ) அஹங்காரம் – 3
ஆகாசம், வாயு, அக்நி , ஜலம், பிருதிவி ஆகிற – 5
ஞான இந்திரியம் – சப்த, ஸ்பர்ச, ரூப ரச கந்தம் – 5
கர்மேந்திரியம் – காது , தோல், கண், நாக்கு, மூக்கு – 5
பஞ்ச தன்மாத்ரைகள் . சக்ஷுர், கிரண, ஷோத்ரிய, பாயு, உபஸ்தங்கள் – 5
இவற்றுக்குமேல் மனசு 24 வது தத்வம் . ஆத்மா 25. பரமாத்மா 26 வது தத்வம் என்றும் அறியவும்.

————–

பிரத்யக் + பராக்
என வஸ்துக்கள் ஐந்திரியமாகவும்; அதீந்த்ரிய மாகவும் காணக் கிடைக்கின்றன.

பிரமா ; உள்ளதை உள்ளபடி அறிகை பிரமா .
பிரமாணம்; பிரமா கரணத்வம் பிரமாணம். அதிசயித்த ஞானத்தை கால விளம்பம் இன்றி சாதித்துக் கொடுப்பது பிரமாணம்.

பிரமா -; ஞானம் ; லக்ஷியம்.
பிரமாணம் -; கருவி ; லக்ஷணம்.
பிரமேயம் ; பிரத்யக்ஷ, அனுமான, ஸப்த பிரமாணங்களால் அறியப் படுமவை பிரமேயம்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டு நேராக உள்ளதை உள்ளபடி அறிய ஹேதுவாக இருப்பது பிரத்யக்ஷம்.

ஸவிகல்ப ஸாக்ஷத்காரம் ; இரண்டு, அதற்கு மேற்படவும் குணங்களை கிரஹிப்பது .
நிர்விகல்ப ஸாக்ஷத்காரம் ; பிரதம பிண்ட கிரஹணம் – விசேஷணங்களை சமூகமாக முதல் முறையாக அறிதல்.
சம்யோகம் -; இந்திரிய திரவ்ய சம்பந்தம் ஸம்யோகம்
சம்யுக்த சம்யோகம் -; திரவிய ஆஸ்ரய குணத்தை அறிகை .உ.ம். வர்ண கலாபமான மண் குடத்தின் வர்ணம் இன்னது என்று அறிகை.

நம்முடைய ஞானம் இந்திரிய ஸம்யோகத்தால் உண்டாவது -; அர்வாசீனம்.
ரிஷிகளுடைய ஞானம் யோக ஸம்யோகத்தால் உண்டாவது. -; அநர்வாசீனம் – ஸ்வயம் சித்தம்.
ஆழ்வார்களுடைய ஞானம் பகவத் அனுக்கிரஹ ஸம்யோகத்தால் உண்டாவது. – மயர்வற மதி நலமான பகவத் பிரசாதம்..

ஸம்ஸ்காரம் -; பிரத்யக்ஷத்தால் ஏற்படும் ஞானம்.
ஸ்மிருதி – பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் ஸ்மிருதி.(நினவுப் பதிவு).
ஊகம் , சம்சயம், பிரதிபா, பிரமம் இவை அனைத்தும் பிரயக்ஷத்துள் அடக்கம்.
சம்ஸயம் -; இதுவா, அதுவா என்பது – ஸ்தம்போவா புருஷோவா என்கிற சந்தேகம்.
விபர்யயம் -; அன்யதா ஞானம் + விபரீத ஞானம் வஸ்து, குணம் இவைகளை மாறாடி நினைகை .
பிரமம் ; பாம்பை பழுதென நினைப்பிடுகை பிரமம்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் – காணலாக ஜீவனை காணும்படியானவன் ஜீவன் என்னல்.
ஸக்கியாதி -; உண்மை அறிவு. இந்த உண்மை அறிவால் அறியப்படும் அனைத்தும் உண்மை / சத்யம்.
அ+கியாதி =; சுக்தியை வெள்ளி என்று பார்க்கும் போது பிரத்யக்ஷத்தில் கிளிஞ்சல் இருந்தாலும்
அதன் பளபளப்பினால் வெள்ளியின் நினைவு வருகிறது.
இங்கே பிரயக்ஷமும், ஸ்ம்ருதியும் இருக்கின்றன. சுக்திக்கும் வெள்ளிக்கும் உள்ள பேதத்தை உணர முடியாத
அறியாமையோடு கூடிய ஞானம் அக்யாதி /அன்யதா கியாதி என்கிறான் மீமாம்ஸகன்.

ஆத்மாவின் ஞானம் ஒன்று தான் எங்கும் இருப்பது. அதற்கு விஷயமாக வெளிப் பொருள் எதுவுமில்லை.
சுக்தியானாலும், வெள்ளியானாலும் பார்க்கப்பதுவது ஞானம் தான் என்கிறான் யோகாசாரன் (பௌத்தன்). இது ஆத்மகியாதி.

சுக்த்தியில் வெள்ளி உண்டாகி பிறகு போய் விடுகிறது.
இப்படி வெள்ளி என்கிற ஞானம் உண்டாகி மறைவது அநிர்வநீயக்யாதி என்கிறான் அத்வைதி..

விசேஷணம் -; சிறப்பம்சம் , ஒன்றிலிருந்து மற்றதை வியாரவர்த்திக்கை / கழித்து வேறுபடுத்தல் பிரயோஜனம்.
உ.ம். கடம் என்றால் படத்வ பின்னம்.

சங்க : பீத : என்பது மருள் (அக்ஞானம்=குணத்தை மாறாடி நினைத்தல் ) – பார்ப்பவன் குறையே ஒழிய பொருளில் குறை இல்லை..
முத்துச் சிப்பியை வெள்ளி என்று அறிதல் மயர்வு (அன்யதா ஞானம்=வஸ்துவை மாறாடி நினைத்தல் ) பயன் பாட்டின் குறை.
மாறாக , தெருள் = பிரமா – வியவஹார பூர்த்தியோடு கூடிய ஞானம்.

——–

வேதாந்தம் ; விசேஷ ஸாஸ்த்ரம் .

வியாகரணம்
தர்க்கம்
மீமாம்சை இவை -; சாமான்ய ஸாஸ்த்ரம் .

உத்திஷ்ட ; எழு – Arise
ஜாக்ரத ; விழித்துக் கொள் – Awake and
பிராப்பியவரான் நிபோதித -; முயற்சி செய் – Stop not till the Goal is reached.
என்று ஞான ஸந்தர்சன கார்யம் விவேகம்.
ஐந்த்ரியத்தை பிரத்யக்ஷ த்தாலும், அனுமானத்தாலும் சாதிக்கலாம்.
அதீந்திரியமான பகவத் தத்வத்தை சப்த பிரமாணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
பிரத்யக்ஷ அனுமானங்கள் ஐந்திரிக சாதன மாகையாலே.

———————————-

இது இப்படி, இது ஆனபடியாலே .
இது இப்படி இல்லை; இது இல்லாத படியாலே .
என்று யூகிப்பது அனுமானம்.

அனுமிதி -; பிரமிதி -; ஞானம் .
அனுமானம் -; கருவி (பிரமாணம்). ஆக அனுமிதிக்கு கரணம் அனுமானம். அப்படிப்பட்ட அனுமானம் பலிக்க :
ஹேது வியாப்தியால் இருக்க வேண்டும்.
பக்ஷத்தில் ஹேது தர்மம் இருக்க வேண்டும்.
ஸபக்ஷத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஹேது வியாவர்த்திக்கக் கூடாது.
ஹேது பிரத்யக்ஷத்தில் பாதிக்கப் பட கூடாது.
பிரதி பக்ஷம் இருக்கக் கூடாது.

வியாப்தி -; எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கு நெருப்பு உண்டு என்று பொதுப்படுத்திக் கூறுவது வியாப்தி..
வியாபகம் -; ஆதிக்யம் உடையது. – அதிக இடத்தில் அதிக காலத்தில் இருக்கும்.
புகை இருக்குமிடம் எல்லாம் நெருப்பு உண்டு. ஆகையால் நெருப்பு வியாபகம். உ.ம். மடைப்பள்ளி. பூஜை அறை etc
வியாப்பியம் -; நியூனதையோடே கூடி இருக்கும். – குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் இருப்பது.
நெருப்பு இருக்கும் இடமெல்லாம் புகை இருப்பதில்லை. ஆகையால் புகை வியாபியம். உ.ம். அயப்பிண்டம்.
சாகசர்யம் -; இது இருந்தால் அது உண்டு . புகை (வியாப்பியம்) இருந்தால் நெருப்பு (வியாபகம்) உண்டு
என்கிற நியத சாகசர்யம் என்பது -; நியத சாமான்யாதிகரண்யம்

பர்வதோ வன்னிமான், தூமத்வாத்.

இதில்
பர்வதம் – பக்ஷம். வன்னிமான் – சாத்யம் . தூமத்வாத் – ஹேது .
சாத்தியம் எதிலே சாதிக்கப் படுகிறதோ அது பக்ஷம்.
நெருப்பு மலையில் சாதிக்கப் படுவதால், மலை = பக்ஷம்.
எதை சாதிக்கிறோமோ அது சாத்தியம் .
மலையில் நெருப்பை சாதிப்பதால், நெருப்பு = சாத்தியம்.
எதனால் (எந்த காரணத்தைக் கொண்டு) சாதிக்கிறோமோ, அது ஹேது = லிங்கம் = சாதனம்.
புகையைக் கொண்டு மலையில் நெருப்பை சாதிப்பதால், புகை = ஹேது .

சபக்ஷம் -; எங்கெல்லாம் புகை இருந்ததோ அங்கெல்லாம் நெருப்பு இருந்ததாகக் காண்கிறோம்.. உ.ம். மலை, அடுப்பு, ஊதுவத்தி etc .
விபக்ஷம் -; நெருப்பாகிற வியாபகம் சேராத இடம் உ.ம். குளம்.
லிங்க பராமர்சம் ; புகை என்கிற அடையாளம் (ஹேது ) மலை என்கிற பக்ஷத்தில் இருப்பதாக காண்பது.

ஈர விறகு என்றால் புகையும்

1. அன்வய வியாப்தி . 2. வியதிரேக வியாப்தி. 3. அன்வய வியதிரேகி 4. பாவ வியாப்தி. 5. அபாவ வியாப்தி என ஐந்து வகை.

அன்வய வியதிரேகி -; அந்வயம், வியதிரேகம் இரண்டிலும் சொல்லலாம்.
கேவல அன்வயி -; அன்வயத்தில் மட்டுமே சொல்லலாம். உ.ம். பிரம்மத்தை வார்த்தையால் சொல்லத் தகும், வஸ்த்துவாய் இருக்கையாலே..
இதுக்கு விபக்ஷம் சொல்ல முடியாதாகையால் இது கேவல அன்வயி யாகும், அவஸ்து என்ற ஒன்று இல்லையாதலால்.

அவியாபதி -; உ. ம். வெளிய பசு என்றால் வேறு நிற பசுக்கள் உண்டாகையால் ;
அதிவியாப்தி -; உ.ம். கொம்புள்ள பசு என்றால், கொம்புள்ள வேறு மிருகங்களும் உண்டாகையால்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் உ.ம். காணலா ஜீவனை காணும் படியான ஜீவன் என்னால்.

இனி உ.ம். பார்க்கலாம் :
ஜீவன் முக்குணத்தன், என்றால், நித்ய முக்தர்கள் பக்கல் அவியாப்தி
ஜீவன் ஞான குணகன் என்றால்,, பரமாத்மாவும் ஞான குணகன் ஆகையால் அதிவியாப்தி .
சக்ஷுர் விஷயம் ஜீவன் என்றால், கூடாத அடையாளம் ஆதலால் அசம்பவம்..

இதில் இன்னது இருக்கிற படியாலே இப்படி இருக்க வேண்டும், இதை போலே .
எங்கெல்லாம் புகை உண்டோ, அங்கு நெருப்பு இருக்கிறது, சமையல் அறை அடுப்பு போலே.
இந்த மலை புகை உடைத்தது,.
ஆகையாலே , இந்த மலை நெருப்பை உடைத்ததாய் இருக்கிறது,–என்பதையே
பர்வதோ வந்நிமான், தூமத்வாத் என அனுமானிக்கிறோம்.

ஆக அனுமானிக்க 5 அங்கங்கள் வேண்டும். :அவை
1-பக்ஷம் – மலை.
2-ஹேது – புகை.
3-சாத்யம் – நெருப்பு.
4-ஸபக்ஷம் – சமையலறை.
5-விபிக்ஷம் – குளம்.

————

உபமானம் – வியாப்திக்கு சம்பந்தப் பட்ட மற்றுமோர் இடம் – பூஜை அறை .
அன்வய வியாப்தி -; புகை இருக்கும் இடத்தல் நெருப்பு இருக்கும்
வியதிரேக வியாப்தி ; நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது.
இதில் புகை – ஹேது , நெருப்பு சாத்தியம். ஆக சாத்தியம் இல்லையேல் ஹேது இருக்காது.
அனுமானம் துஷ்ட மாகாத போது ஏற்படும் ஞானம் ஸாது .

அனுமான பிரக்ரியை -;

1. பிரதிக்ஞா – பக்ஷத்தில் ஸாத்யம் இருப்பதாக அறிவது.
2. ஸத் ஹேது – ஹேதுவை காண்பது.
3. உதாரணம் – எங்கெல்லாம் புகை இருக்குமோ, அங்கே நெருப்பு இருக்கும், மடைப் பள்ளி போலே .
4. உபமானம் – மடப் பள்ளியில் புகை-நெருப்பு சம்பந்தத்தை , மலையில் உள்ள புகையோடு ஒப்பிட்டு மலையில் நெருப்பு இருக்க வேண்டும் என யூகிப்பது.
5. நிகமனம் – ஆக, இம்மலை நெருப்போடு கூடியது (அன்வயம்)
அதவா இம்மலை நெருப்பின்மை யோடு கூடியது அல்ல (வியதிரேகம்) என முடிப்பது.
தூம சதுர்ச தூசி மண்டலம் ஹேதுவாபாச மாகக் கடவது.

நையாயிகன் – 1 -; 5 அவஸ்யா பேக்ஷிதம் .
மீமாம்சகன் – 1 -; 3 மட்டும்.
பௌத்தன் – 2ம் 4லும் .
விசிஷ்டாத்வைதி – அநியமம்

துஷ்ட அனுமானம் :

1. அசித்தம் -;
a . ஸ்வரூப அசித்தம் – ஜீவன் அநித்யன், கண்ணால் பார்க்கப் படும் குடத்தைப் போலே .
b .ஆஸ்ரய அசித்தம் – ஆகாசத் தாமரை போலே .
c . வியாப்தி அசித்தம் – எது எது உள்ளதோ அது அநித்தியம் என்பதில்,
உதாரணம் காட்டப் படவில்லை யாதலால், உதாரண ராஹித்யத்தால் அசித்தி .

2. விருத்தம் -; பிரகிருதி நித்யா, கிருதகிருத்தவாத் , காலவது ..
உலகம் அழிவில்லாதது, படைக்கப் பட்டதால், கால தத்வத்தைப் போலே .
படைக்கப்படுமவை யாவும் அழியக் கூடியவை ஆகையாலே , நித்யம் என்று சாதிப்பது விருத்த அனுமானம்.

3. அனைகாந்திகம் (வியபிசாரம்) -; ஹேதுவும், சாத்தியமும் சேருமிடம் ஏகாந்தம். உ.ம். புகை+நெருப்பு கூடிய மலை .
சேராத இடம் தோஷம் (அ ) வியபிசாரம்.உ.ம். புகை இல்லாத நெருப்பு பழுக்கக் காச்சின இரும்பு.

a . ஹேது – பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் 3லும் இருந்தால், அது சாதாரண ஹேது.
உ.ம். ஸப்தம் அழிவற்றது, அறியப் படுவதால், ஆத்மாவைப் போலே .
”அழிவற்றது” என்கிற ஹேது , ஸப்தத்தில் (பக்ஷத்தில்) உள்ளது. ச பக்ஷமாகிற ஆத்மாவுக்குப் பொருந்தும் .
ஆனால் உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட விபக்ஷமான கடத்துக்குப் பொருந்தாது,
கடம் அழியக் கூடியது ஆகையாலே . அனுமானமும் தோஷமாய் முடியும்.

b . ஹேது – பக்ஷத்தில் இருந்து, சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லாது போனால், அது அசாதாரண ஹேது .
உ.ம். பூமி அழிவற்றது, கந்தவது பிருதிவி. ”அழிவற்றது” என்கிற ஹேது பக்ஷத்தில் மட்டும் இருந்து,
மற்ற இரண்டில், சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லையாய்ப் போவது.

4. பிரகரண சமம் (ஸத் பிரதி பக்ஷம்) ;
உ. ம். பகவான் நித்யம், அநித்ய தர்மம் இல்லாத படியால்.
இதில் ஹேது ”நித்யம்”.
பகவான் அநித்தியம், நித்ய தர்மம் இல்லாதபடியால்.
இதில் வரும் ” அநித்தியம்” பூர்வ வாக்யத்துக்கு ஹேத்வந்தரம் எதிர்மறை ஹேத்வபாவமாகையால், ஏற்படும் அனுமானம் தோஷதுஷ்ட்டம்.

5. காலாத்யபாவம் -;
உ.ம். நெருப்பு உஷ்ணமில்லாதது, வஸ்துவாய் இருக்கிறபடியாலே , ஜலத்தைப் போலே .
பிரத்யக்ஷத்தில் நெருப்பு உஷ்ணமானது. ஆகையால், சாத்தியம் பக்ஷத்தில் இல்லாத போது அபாவம்.

—————

தர்க்கம் -;

a நிஸ்சய வாதம். – தர்க்க அனுகிருஹீத பிரமாண பூர்வக தத்வ அவதாரணம்.
பிரமாணங்களின் உதவி கொண்டு உண்மைப் பொருளை நிரூபித்தல் .
வாதி பிரதிவாதி பக்கல் சாராமல் , பக்ஷபாத மில்லாமல் செய்யப்படுமது.
b ஜல்பம் – ஜன்னி வந்தாப் போலே சொன்னதை விடாமல் மீண்டும் மீண்டும் பேசி வாதடுவது.
c விதண்டா – தன் பக்ஷ ஸ்தாபனத்தை விட்டு, எதிரி பக்ஷ தவற்றையே பேசுவது.
d சலம் – எதிரி பக்ஷம் நினைப்பிடாததை ஆரோபித்து மடக்கி பேசுவது..
e ஜாதி – ஸ்வ பக்ஷ விரோதமாய் நிக்ரஹத்தில் முடியும் வாதம் ஜாதிஹி.
f நிக்ரஹ ஸ்தானம் – பராஜாய ஸ்தானம் . தவறான உத்தரத்தால், தன் பக்ஷம் தோற்றுப்போ போவது.
இவை 6ம் அனுமானத்துக்குள்ளும் பிரத்யக்ஷயத்துக்குள் அந்தர்கதம் .

—————-

ஸப்த பிரமாணம் —

பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிக்கப் படலாம். அதே போல் அனுமானம் பிரத்யக்ஷத்தால் பாதிக்கப்படலாம்.
ஆனால் சப்த பிரமாணங்களில் ஒன்றான வேதம் ஸவ்த சித்தம்.
அதீந்ரியமான பிரம்மத்தை அறிய சப்த பிரமாணமாகிற வேதம் ஒன்றே வழி. அது கால ஆராய்ச்சிக்கு உட்படாதது. அநாதியானது.
ஒரு புருஷனால் சொல்லப் பட்டது அல்லதாய் அபௌருஷேயம். அபூர்வார்த்த பிரதிபாதனே ஸதி சத்ய வாதத்துவம் தெரியாத
புதிய அர்த்தங்களைத் தருவதோடு சத்யமான வற்றையே பேசும்.

பிரத்யக்ஷத்துள் ஒன்றான ஸ்ரோத்ர ஐந்திரிய கரண சப்தம் வார்த்தை அளவிலானது.
வேதமாகிய பிரமாணத்துக்கு கரணம் (கருவி) சப்தம் அது சப்த்தத் தால் குறிப்பிடப் படும் பொருள் வரையிலுமாக உணர்த்த வல்லது.

வேதம் ஆப்த வசனம் என்பது நையாயிக பக்ஷம். சத்ய வசனமாகிலும் ஆப்தன், புருஷனாலே சொல்லப்பட்டது என்றால்
அபௌருஷேயத்வம் சித்திக்காது.ஆகவே அநாப்பதனாலே சொல்லப் படாதது என்று
வியதிரேகத்திலே கொள்வோமேயானால், அதுவே சாதுவான பக்ஷம். இராமானுஜ சம்மதம் .

அநாப்தனாலே சொல்லப்படாத வாக்கியத்தாலே ஏற்படும் அர்த்த ஞானம் , சப்த பிரமாணம் எனப்படும்.

காரணத்வ, பாதகத்வங்கள் இதுக்கு இல்லை.. வேத பிரமாணத்துக்கு பகவானும் காரணமில்லை..
அவனும் முன்னிருந்தபடி புத்தி செய்து படைப்பு காலத்தில், பிரமனுக்கு உபதேசித்தானாகில் இதுக்கு காரணத்வ தோஷம் இல்லை.

”பசுவை அழைத்து வா .கட்டு” என்ற வாக்கியத்தின் படி இன்னது பசு என்கிற காரிய-காரணத்வ சம்பந்தத்தால்
ஏற்படும் அறிவு ப்ரஹ்மத்தின் விஷயத்தில் உதவாது. காரணம் ப்ரஹ்மம் சித்த வஸ்து ஒழிய காரிய வஸ்து அல்லவே.
ஆக சப்த வாக்கிய பிரமாணம் ப்ரஹ்மத்தை சொல்லாது என்பது பூர்வ பக்ஷம் .

இதுக்கு பிரதிபக்ஷம் என்ன வென்றால் – ஒரு தாய் தன் குழந்தைக்கு இன்னார் தந்தை என்று காட்டும் போது
வாயால் ”அப்பா” என்று சொல்லி ஜாடை செய்யும் போது குழந்தை புரிந்து கொள்கிறது.
இவ்விடத்தில் வருதல் , காட்டுதல் போல காரிய விவகாரம் இல்லை ஆகிலும் குழந்தைக்கு இன்னார் தான்
தந்தை என்கிற அறிவு சித்த வஸ்துவைக் காட்டி சப்த சூசனையால் சாதிக்கப் படுவதால்,
ப்ரஹ்மத்தின் விஷயத்திலும் காரியபரதையாகிற அபேக்ஷை இல்லை.

”ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதிதாஸ்யவ்ய: என்கிற உபாசன காரிய பரதை ப்ரஹ்மத்தின் விஷயத்திலும்
சொல்லலா மாகையாலே , ப்ரஹ்மம் சித்த வஸ்து வானாலும் சப்த பிரமாணம் கொண்டு அப்பியகம வாதம்,
அனப்பியகம வாதம் இரண்டாலும் – எதிராளி சொல்வதை ஏற்றுக் கொண்டோ அல்லது நிராகரித்தோ பிரஹ்மத்தை சாதிக்கலாம்.

பில்லி சூன்யம் சேன யாகாதி அபிச்சாரி கர்மங்கள் அடங்கிய வேத பாகம் பிராமணம் ஆகுமோ என்னில் ,
திருஷ்ட பலத்தைக் காட்டி, அதிருஷ்ட பலமாகிற மோக்ஷத்தில் மூட்டுகிற படியால் வேதம் முழுவதுமாக பிரமாணம் ஆகும்.
திரைகுண்யா விஷயா வேதா: என்பதால் தாமச பிரகிருதிக்கு உண்டான வேத பாகம் சாத்விகருக்கு
அன்வயமில்லை ஆனாலும், அவைகளின் பிராமாண்யதைக்கு குறை இல்லை.

பூர்வ பாகம் கர்ம மீமாம்ஸா – உத்தர பாகம் ப்ரஹ்ம மீமாம்ஸா
கர்ம பாகம் தேவதா ஆராதன விதிகளையும்
ப்ரஹ்ம பாகம் ஆராத்ய தேவதா பிரகாரமும் சொல்லும்.

மந்த்ர அனுஷ்டான விதி பாகம் கர்ம காண்டம். அதில் சொல்லப் பட்ட செயலில் தூண்டி அதில்
உத்தியோகிக்க வேண்டி போற்றிப் பேசும் கொண்டாட்டம் அர்த்த வாதம் – ஹிதைஷி வாக்கியம் விதி.எனப்படும்.

விதி வாக்கியங்கள் அபூர்வம், , பரசங்கியா , நியமம் என மூன்றாய் நித்ய, நைமித்யக, காம்ய கர்மங்கள் என பிரிந்து இருக்கும்.

விரீன் புரோக்ஷய என்கிற விதி வாக்கியம் அபூர்வ விதி. யாக திரவ்யமான நெல்லை ஹவிஸாக பயன்படுத்தும் முன்
புரோக்ஷிப்பாய் என்கிற இந்த விதி நூதனமாக சொல்லப் படுவதால் இது அபூர்வம்.

இரண்டு விதமான செயலில் ஒன்றை முதலில் செய் என்று ஆணை இடுவது ப்ரசங்கியா விதி.

பலவழிகளில் செய்யப்படுமதை ”குரும் அபிகமநாத்’
என்று ஞனத்தை சம்பாதிக்கிற விஷயத்தில் படித்து தெரிந்து கொள்வது , ஆசாரியனை அடைந்து தெரிந்து கொள்வது
என்கிற பல வழிகள் இருக்க, ”குருவை” அடைவாய் என்று உபதேசிப்பது நியமம்.

சந்தியாவந்தனாதி விதிகள் நித்ய விதி.
ஒரு காரணத்தைப் பற்ற வருகிற விதி நைமித்திகம். உ.ம்.கிரஹண தர்ப்பணம்.
ஜோதிஷ்ட்டேன காம்ய கார்ய அபிஸந்தி விதி காம்ய. விதியாகும்.

சந்தா – அனுஷ்டுபு (32 எழுத்து) , த்ரிஷ்டுப்பு (44 எழுத்து) என சந்தஸில் உள்ள எழுத்து, பாத கணக்கு பற்றியது.

கல்பம் – எழுத்து விதி சௌதா ஸ்மார்த்த விதிகளாகக் கடவது.

ஸிக்ஷஆ – ஸ்வரம் சம்பந்தப் பட்டது.

நிரூக்தம் – அபூர்வ அர்த்த வார்த்தைகள் சம்பந்தப் பட்டது.

ஜோதிஷம் – – கால நிர்ணய வானவியல் சாஸ்திரம் ஆகக் கடவது.

வியாகரணம் – இலக்கண சாஸ்திரம்.இவை 6ம் வேதாங்கங்கள் .

மனு, யாக்ஞய வல்கிய , போதாயன, ஆஸ்பலதாயர் இவை போல ஸ்மிருதிகளும் வேதாங்கம் ஆகும் .
பிரம்மா, கபிலர் இவர்கள் இயற்றிய யோக சாஸ்திரம், தள்ளத்தக்கது , அவை வேத விரோதமாம்போது.

ஸ்மிருதிகள் போலே இதிஹாச புராணங்களும் வேதத்துக்கு அவை உப பிராம்மணங்கள் ஆகும்.
ஸ்மிருதிகள் கர்ம பாகத்துக்கு அங்கமானால் , இதிஹாச புராணங்கள் உபநிஷத் பாகத்தின் அங்கமாகும்.

புராணங்கள் வகை 18. அவையுள் சாத்விக புராணங்கள் 6ம் , வேத அனுரோத ராஜஸ., தாமஸ புராண பாகங்களும் பிரமாணம்.
மற்ற பாகங்கள் தள்ளத்தக்கன. பாசுபத ஆகமமும் அப்படியே.

வைகானஸ சாஸ்திரம் போலே பாஞ்ச்ராத்ர ஆகமம் முழுவதும் பகவானாலே வேதத்ததை அனுசரித்து சொல்லப் பட்ட படியால் அதுவும் பிரமாணமே .

வைத்திய சாஸ்திரம் (ஆயுர்வேதம்) , சில்ப சாஸ்திரம் (Temple architecture ) , காந்தர்வம் (Musicology ),
பரதம் (நிருத்யம்), தத்வ, உபாய புருஷார்த்தம் சம்பந்தப் பட்ட பாகங்கள் ஆய கலைகள் 64லிலும் பிரமாணமே

(a)ஆக்காங்க்ஷ (b) யோக்கியதை (c) சந்நிதி ஆகிற 3ம் இருக்கிற லௌகிக கிரந்தங்களும் பிரமாணமாகும் .

சடகோபமுனி .சாதித்த திராவிட வேதம் 4ம் , அதற்கு அங்கமான ஏனைய ஆழ்வார்கள் பிரபந்தங் களும் பிராமண தரம் .
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லை என்பது ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி .

பகவத் ராமானுஜர் சாதித்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள், ஏனைய ஆச்சார்யர் களுடைய ஸ்ரீ ஸூக்திகள் அனைத்தும் பிராமண தமம்

மொத்தத்தில் உண்மை அறிவை போதிக்கும் எந்த வாக்கியமும் பிரமாணம் தான்.

அதில் வேத வாக்கியம் வைதிகம். லோக வியவகார வாக்கியம் லௌகீகம் .

முக்கிய விருத்தி – சிங்கம் என்ற சொல் மிருக ராஜனை குறிப்பது முக்கிய விருத்தி

அபிதா விருத்தி – யோகம் – ரூடி என இரண்டு வகை காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்பதே அவை. உ.ம். பாசகன் = .
பச + ஆக என்கிற சேர்க்கையால் (யோகம்) சமையல் காரன் என்ற பொருளில் வருவது.

பங்கஜம் – பங்க + ஜ என்று சேற்றில் எழ செந்தாமரையாக தாமரை மலரைக் குறிப்பது ரூடியர்த்தம் .
குமுத மலரும் ஆம்பலும் சேற்றிலே மலர்ந்தாலும் தாமரையை அது உணர்த்துவதாக அறிவது லோக வழக்கம் கொண்டு.

முக்கியார்த்தத்தை சொல்ல முடியாத போது அருகாமையான லக்ஷணையாலே குறிப்பது கௌணார்த்தம் .
இது தமிழில் ஆகு பெயர் எனப்படுவது. கங்காயாம் கோச : என்றால் கங்கைக் கரையிலுள்ள தான குடிசையை குறிக்கும் .
உலகம் என்றால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பது போலே.

புஷ்பம் என்றால் அது பழம், பறவை, என்பதான இதர பொருள்களில் இருந்து வேறுபடுகிறது.
நீலோத்பலம் என்றால் செந்தாமரையில் இருந்து வேறுபடுகிறது. ஆக உலகத்தில் எந்தப் பொருளும் ,
விசேஷண விசிஷ்டமாய் விசேஷ்யத்தைக் குறிக்கும் – நிர்விசேஷணமாய் எந்த வஸ்துவும் இருத்தல் ஆகாது என்று தேறுகிறது .

மேலும் வஸ்துக்களைக் குறிக்கும் எந்த சொல்லும் அது அந்த வஸ்துவைத் தாங்கும் ஆத்மா மூலமாக
அந்தராத்மா வான நாராயணன் வரை பர்யவசிக்கும் (சென்று குறிக்கும்) காரணம் ,
பிரம்மா, ருத்ரன்,இந்திரன், அக்நி ஆகிய சேதனர்கள் , பிரகிருதி, காலம், ஆகாசம், பிராணன் ஆகிய
அசேதன வஸ்து விசிஷ்டமான ப்ரஹ்மம் அவனாகையாலே.
இத்தால் , சர்வ சப்த வாச்யார்த்தம் நாராயணன் என்பது வேதாந்த விழுப் பொருள்.

பிரமேயம் – பிரகர்ஷேண மேயம் – நன்கு அறியப்படுவது பிரமேயம்.
பிரமா + இயம் = எது எப்படிப் பட்டது என்று அறிவது பிரமேயம்
எதைக் கொண்டு அறிகிறோமோ அது பிரமாணம் .

யார் அறிகிறாரோ அவர் பிரமாதா.

இவை

திரவ்யம் + அதிரவ்யம் என்று இரண்டாய் ,
அதில்
திரவ்யம் : உபாதான (அவஸ்தா விசேஷம்) பேதம் திரவ்யம் .
பிரக்ருதி (அ) லீலா விபூதி – சரீரம் தொடங்கி மூலப் ப்ரக்ருதியினின்றும் படைக்கப் பட்ட பிராக்ருதங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
கர்ம , சாமான்ய, விசேஷ, ஸமவாய அபாவங்கள் – ஆகிய நையாயிக பக்ஷ 5ம் – திரவ்யத்தோடே அடங்கும்.
மேல், கீழ், சுருங்கல்,விரித்தல் , சலித்தல் ஆகிய நிலை = அவஸ்தை கர்ம.

சலநாத்மகம் கர்மா என்று ஒன்றை 5ஆக விரித்துக் கூறுகை கௌரவம் என்கிற குற்றத்துக்கு உள்ளாகும்.
லாகவம் =சுருங்க உரைத்தல்; கௌரவம் =பரக்கப் பேசுதல் .
இந்த சலனமும் ஸம்யோகத்தோடே சேர்த்து படிக்கலாம்.
கடத்வ படத்வ ஜாதி விசேஷம் இதை அதிலிருந்து வேறு படுத்த போதுமானதாக இருக்க சாமான்யம் என்கிற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்றை நிரூபிக்க இன்னொன்றை புதிது புதிதாக கல்பித்தலாகிற அநவாஸ்தான தோஷம் ஸமவாயத்துக்கு உண்டு. ஆக அதுவும் விலக்கு.

இனி அபாவம் – பிராக் அபாவும், பிரத்வம்ஸா அபாவும், அன்யோன்யா அபாவம் ,
அத்யந்த அபாவமாவது முன்.பின்,ஒன்றினோடு இன்னொன்று ,
எப்போதுமான ”கடத்தில் மறொன்றின் இன்மை ” படத்தில் இன்னொன்றின் இன்மை”
ஸ்வதசித்தம் . தனித்து அபாவாத்தின் அவசியம் இல்லை.

குடம் இன்மை என்கிற நிலை குடத்தை செய்வதற்கு முன் ,(மண் என்கிற நிலை ), அந்த
குடம் உடைந்த பின் (ஓட்டு சில்லு அல்லது சூர்ணம் என்கிற நிலை)
குடத்தின் இடத்தில் இன்னொன்று இருக்கும் பக்ஷத்திலும் (அன்யோன்யா அபாவம்)
குடம் இருந்ததே இல்லை என்கிற அத்யந்த அபாமாகிற 4 ஆக நையாயிகன் பிரித்து திரவ்யங்கள் மொத்தம் 7 என்று கணக்கிடுகிறான்.
இந்த 4ம் பூதல ஸ்வபாவமாய், பிரத்யக்ஷத்தில் அடங்கும் என்பது வைதிகர் – ராமானுஜ பக்ஷம் .

இனி திரவ்யம் என்பது வெவ்வேறு (உபாதானங்களாய்) தசா விசேஷங்களாய், குண ஆஸ்ரயமாய் இருக்கும்.

மஞ்சள் குடம் என்றால் மஞ்சள் வர்ணத்தோடு கூடிய குடம் என்றும் மண்ணாய் இருந்த தன்மை போய்
கடமான தன்மையில் மஞ்சள் பூச்சு ஆசிரயணீயம்.

பிரக்ருதி , காலம் ஆகிற ஜட வஸ்து இரண்டும் ஸ்வயம் பிரகாசம் இல்லாதது.
நித்ய விபூதி , தர்மபூத ஞானம் , ஜீவன் , ஈஸ்வரன் ஆகிற அஜட வஸ்து 4லும் ஸ்வயம் பிரகாசிதம் .
இவை 6ம் திரவ்யம் – முக்குணங்கள் அதிரவ்யம் என்றும் அறியவும்.

– – – – — – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – –

பகவானுக்கு சரீரமாக இருக்கிற பிரக்ருதியை மூலப் பொருளாக கொண்டு
அத்வாரக + ஸத்வாரக ஸ்ருஷ்டி
சமஷ்டி + வியஷ்டி ஸ்ருஷ்டி
என்பவை சிருஷ்டிப் பிரகாரம்.

வைகாரிக + தைஜஸ + பூதாதி ; ஸாத்விக , ராஜஸ, தாமச அகங்காரங்களின் வேறு பெயர்கள்.

சாத்விகா அஹங்காரம் -; 11 இந்திரியங்கள்.
மனசு -; (நிச்சிதா) புத்தி -; அஹங்காரம் = மனசின் வேறு நிலைகள்.
ஞானேந்ரியம் + 5 தன்மாத்ரங்கள் (= சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் ) + பஞ்ச பூதம்.
கர்மேந்த்ரியம் ; வாக், பாணி, பாத, மல, ஜல உபஸ்தங்கள்.
ஞானேந்ரியம் சாத்விக அஹங்கார பரிணாமம்.
கர்மேந்த்ரியம் தாமஸ அஹங்கார பரிணாமம்.
சாத்விக தாமஸ அஹங்கார பரிணாம சககாரி ராஜச அகங்காரம்.

குறிப்பு: ஒருவன் மறித்து விட்டால் பயணமாகும் ஆத்மாவோடு , கர்ம வினைகளும், இந்திரிய ஸூக்ஷ்மங்களும் எடுத்து செல்லப்படும்.
கர்ம வினைகளுக்குச் சேர கிடைக்கிற சரீரத்துக்கு அதனதன் பயன்பாட்டுக்கு அவைகள் ஆட்படும்.
இது பிராகிருத பிரளயம் வரை அழிவதில்லை. பிரம்மா வுடைய காலம் முடிந்து, பிராகிருத பிரளயத்தில்,
பஞ்சபூதங்கள் மஹான்-பிரக்ருதியில் லயம் அடையும் போது மட்டுமே இந்த இந்திரிய ஸூக்ஷ்மங்கள் முடிவுக்கு வரும்.
அந்த நிலையிலும் தொலையாதது கர்ம பயன்.

ஒருவேளை அந்த ஆத்மாவுக்கு மோக்ஷம் கிட்டினால் , அப்ராக்ருத தேசமான அங்கு பிரகிருதி பிராக்ருதமான
இந்திரிய ஸூக்ஷ்மங்கள் புகுற வழியில்லை. விரஜைக்கு இப்பால் அவைகள் விடப்பட்டு , பிரளயத்தோடே நசியும்.
அல்லது அதன் குறைபாடு உள்ள ஆத்மாவுக்கு உபயோகி ஆகலாம்.

பாலை உறையவிட்டு தயிராக்கும் போது , பாலாகிற தன்மை போய் தயிர் என்றாவதாகிற கால அளவைக்கு
இடைப்பட்ட நிலை போன்றதானது , தாமஸ அஹங்காரம் பஞ்ச பூதங்களாக மாறுவதற்கு முன்னான (அவ்யவஹித தசை)
பஞ்சதன் மாத்ரங்களாகிற நிலை எனலாம்..

ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து உருவாவது ஆகாசம். அதாவது தாமஸ அஹங்காரம் ஆகாசமாக மாறுவதற்கு
இடைப்பட்ட நிலையிலுள்ள திரவ்யம் ஸப்த தன்மாத்ரம். அடுத்து வாயு, அக்நி , அப்பு, பிருதிவி இவர்களுக்குரிய
ஸ்பர்ச, ரூப ரஸ , கந்த தன்மாத்ராங்கள் படைக்கப் படுகின்றன.

ஆகாசத்துக்கு ஒலியின் குணம் மட்டும் உண்டு. அடுத்து வரும் வாயுவிற்கு ஸப்தம் , ஸ்பர்சம் இரண்டின் குணங்கள் உண்டு.
அக்கினியில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் முக்குணங்கள்; ; தண்ணீரில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் ரசம் ஆகிய 4ம் ;
பூமியில் கந்தம் சேர 5ன் குணங்களும் உண்டு.

ஆகாசத்தை தொடு உணர்ச்சியால் உணர முடியாது. அதாவது தொட்டு உணர முடியாது.
சூரியன், சந்திரன், உலகம், உலகில் உள்ள எல்லாவிதமான பொருள்களுக்கும் இடம் கொடுப்பதாய் ஆகாசம் இருக்கும்.
ஆகாசம் உண்டாவதில்லை, நித்யம் என்கிற சிலர் வாதமும் தவறு,
ஏனென்றால் ஸப்த தன்மாத்திரத்தில் இருந்து ஆகாசம் உருவாகிறது என்று இங்கு படிக்கப்படுவதால்.

ஆகாசத்துக்கு ஒலி மட்டும் குணம் என்றால் அது நீல நிறமான அக்கினியின் குணத்தில் ஒன்றான
ரூபத்தைக் கூட்டிக் கொண்டு காண்பது ஏன்?
இதற்கு விடை ஒவ்வொன்றின் தன்மை மற்ற பூதங்களில் பஞ்சீகரண முறையில் பகிரப் படுவதுதான் காரணம்.

ஆகாசம்,காற்று நெருப்பு ஆபப் பிருத்வி கால திக்கு ஆத்மா மனசு என வைசேஷிகர்கள் திரவ்யங்களை 9ஆக பிரிக்கின்றனர் .
அது தேவை இல்லை என்பது வைதிக பக்ஷம். திஸ ஸ்ரோத்ராத் என்கிற விடத்தில் திசைகள் படைக்கப் படுகின்றன என்று கொள்ளாமல் ,
திசையில் உள்ள லோகங்கள் படைக்கப் படுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆக திக்கு என்ற பதார்த்தம் கிடையாது. .

ஆகாசம் படைக்கப் பட்ட பிறகு, ஸ்பர்ச தன்மாத்திரத்தில் இருந்து உருவாவது வாயு. இது தொடு உணர்ச்சியால் அறியப்படுவதாய் ,
உஷ்ணம் குளிர்த்தி ரூபம் இல்லாதது. காற்று சப்த, ஸ்பர்ச இந்த்ரியங்களுக்குப் புலப்படுவது.
பிராண (ஹ்ருதய ஸ்தானம்), அபான (பிருஷ்ட பாகம்), வியான (சரீரம் முழுவதும்), உதான (கண்டம்) ,
சமான (நாபி தேசத்தில் ) வர்த்திக்கும் பஞ்ச பிராண சக்தி மனிதன், விலங்கு போன்ற ஜங்கம (mobile life form)
ஜீவராசிகளில் பூர்ணமாய், ஸ்தாவர வர்கங்களில் ஸ்வல்பமாயும் உபகாரமாகிறது.

ரூப தன்மாதரத்தைக் கொண்டு உருவாவது தேஜஸ் . இது அக்நி சூரியன் போன்ற பதார்த்தங்களில் இருந்து ,
தொட்டால் சுடுவதுமாய், ஒளியோடே கூடியது. ஜாடராக்நி யாய் வைச்வாநரன் என்ற பெயரில் பிராணிகளின் வயிற்றில்
ஆகாரத்தை ஜெரிக்கச் செய்கிறது. வெளிச்ச ரூபத்தில் நம்முடைய சக்ஷுர் இந்த்ரியத்துக்கு பதார்த்தங்களைக் கண்டு
அறிய உதவவும் செய்கிறது. பகல் குருடு ஆந்தை இதுக்கு விதிவிலக்கு. இதை 4ஆக பிரிக்கலாம்..

பௌமம் -; எண்ணை விறகு போன்ற பூமியில் கிடைக்கும் பொருள் கொண்டு எரிவது .
திவ்யம் -; சூரியன், மின்னல் இவை பிரகாசிப்பது ஜலத்தைக் கொண்டு.
உதரியம் ; ஜாடராக்நி இதற்கு இந்தநம் தண்ணீரும், பௌமமும்.
ஆகரஜம் -; தங்கம், வைரம் போன்ற சுரங்க கனிமங்கள் – நிரிந்தனம்
.
தங்கம், வைரம் இவைகளில் ஒளஷ்ணியம் இல்லையே என்றால் அவைகளில்
பிருதிவி அம்சம் அதிகமாய் தேஜஸ் அம்சம் அல்பமாய் இருப்பதே காரணம்.

ஞானம் ஆத்மாவுக்கு குணம். அதுபோல் ஒளி தீபத்துக்கு குணம். இதில் ஞானம், ஆத்மா, ஒளி
இவை மூன்றும் திரவ்ய கோஷ்டியிலும் சேரும் குண கோஷ்டியிலும் சேரும்.

திரவ்யம் இடத்தை அடைக்கும். குணம் இடத்தை அடைக்காது. ஆத்மா, ஒளி (தேஜஸ்) இரண்டும் திரவியம் ஆனாலும் ,
இடத்தை அடைக்காது குணங்களைப் போலே . ஒலி ,உணர்வு, உருவம் இவை மூன்றும், தேஜசின் குணங்கள்.

ரஸ தன்மாத்திரத்தில் இருந்து உண்டாவது ஜலம். குளிர்த்தி, சுவை, வாசனை அற்ற தன்மை நீரினுடையது.
கடல்,ஆறு கிணறு என பலவாக ஆஸ்ரயணத்துக்குச் சேர நிறம் மணம் பெற்றாலும் உண்மையில் அவை இல்லாதது.

அடுத்து, கந்த தன்மாத்திரத்தில் இருந்து உருவவாது பிருதிவீ . கந்தம் , அஉஷ்ண சீத ரஹித ஸ்பர்ஸ யோக்யதா லக்ஷணம் பிருத்வி.
மண் கல் கட்டி என்று இருப்பதோடு உணவு, மூலிகை விளையவும் உதவுவது பூமி. மற்ற பூதங்களுடன் சேர்ந்து பக்குவப் படும் போது
நிறம், மணம் ரூபம் மாறக் கூடியது. பொருள்களையும் தாங்குவதாய் நிறம் மணம் உரு ஒலி ஒளி என்று 5ன் குணமும் இதில் உண்டு.

தமஸ் (அ ) இருட்டு என்பது ஒளியின்மை என்பது சிலர் வாதம். அது தவறு. தமஸ் பூமியின் ஒருபகுதி, அது கருநீலமாக இருக்கிறபடியால்.

படைக்கப் பட்ட 5 பூதங்கள் பஞ்சிகரண முறையில் கலப்படம் செய்யப்பட்டு சரீரமானது உருவாகிறது.
உருவான சரீரத்தில் – தங்க தோட்டில் வைரம் பதிப்பது போல் – இந்திரியம், மனசு இவை பதிக்கப்பட்டு
அவை அந்தந்த சரீரத்தை ஆக்ரமிக்கின்றன.

சரீரத்துக்கு லக்ஷணம் : ஜீவாத்மாவால்
1. ஆதேயத்வம் – தாங்கப் படுமது.
2. விதேயத்வம் – ஏவப்படுமது.
3. சேஷத்வம் – ஜீவாத்மாவுக்கு சொத்தாய்
4. அப்பிரதத் சித்தமாய் – பிரிக்க முடியாததான திரவியம் சரீரம். (அ )

ஈஸ்வரனும் அவனுடைய ஞானம் நீங்கலாக உள்ள அனைத்துமே சரீர சப்த வாச்யம்.. இதை
நித்யம் Vs அநித்தியம் என பிரிக்கலாம்.
பகவானுக்கு சரீரமாக உள்ள அனைத்தும் நித்யம்.
பிரக்ருதி காலம் ஜீவாத்மாக்கள், பகவத் திவ்ய மங்கள விக்ரகம் இவை அனைத்தும் அவனுக்குச் சரீரமான படியாலே நித்யம்.

நித்யஸூரிகள் கர்மத்தால் பிறவாதவர்கள். மற்றவை
கர்மத்தால் பிறப்பன Vs கர்மத்தால் அல்லாது பிறப்பவை இவை இரண்டும் அநித்தியம் .
மஹான், அஹங்காரம் இத்யாதி , இச்சா கிருஹீத நித்ய, முக்தர்களுடைய பார்த்திவ சரீரம் அநித்யஸ்ய அகர்ம கிருதம்.
சங்கல்ப வர்ஜித கர்ம கிருதம் Vs சங்கல்பத்வேன கர்மகிருதம்

நாமும் சௌபரியும் (ஆபாச அனுபவத்துக்கு 50 சரீரம்?

மரம், செடி. கொடி புதர் ; ஸ்தாவரம்
தேவ, மனுஷ்ய, திர்யகு , நாரகி ; ஜங்கமம்
இவை அனைத்தும் கர்மாதீனமாய்ப் பிறப்பன.

உத்பிஜ்ஜ (விதை வெடித்து) ஸ்வேதஜ (வியர்வை யிலிருந்து) அண்டஜ (முட்டையிலிருந்து)
ஜராயு (கர்பப் பையிலிருந்து) பிறப்பவை என மேலும் 4 வகையாக சரீரத்தைப் பிரிக்கலாம்.

சீதை, ஆண்டாள் முதலாழ்வார்கள் அயோநிஜர்களாய் பிறந்த இன்னோரு வகுப்பும் உண்டு.

இப்படி ஸ்ருஷ்டியானது , பனை ஓலையிலிருந்து காது ஓலை பிறந்தாப் போலே – ஒன்றின் கார்யம் மற்றொன்றின் காரணமாய் –
பகவத் சங்கல்பத்தாலே பரிணமிப்பதே ஒழிய எதுவும் புதிதாக உற்பத்தி ஆவதில்லை.

முன்னது பின்னத்துக்குக் காரணம் என்றால் பிரஹ்ம காரணத்வ வாதம் தொலையாது? என்னில் அப்படி அன்று!

மண் குடமாம்போது , களி மண் என்ற ஆகாரம் போய் வாயும் வயிறுமான குடம் என்ற ஆகாரம் வந்ததே ஒழிய .
இதில் அவஸ்தா பேதம் தவிற உபாதான பேதம் உண்டோ? இல்லை.

அதுபோலவே பிரகிருதி மஹானாகவும், மஹான் சாத்விக தாமஸ அகங்காரத்தின் வழி 21 தத்துவங்களாக பிரிவது காரண பிரஹ்மம் -;
காரிய பிரஹ்மம் ஆவது அவனுடைய சரீரத்துக்குண்டான அவஸ்தா பேதமே ஒழிய இரண்டுக்கும் சேர
அவனுடய உபாதான காரணத்வத்துக்கு நசிவில்லை, எப்படி மண்ணானது குடமானபோதும் அதை மண்குடமாகவே வியவகரிப்பது போலே.

பிரஹ்மமே பலவற்றின் காரிய காரணமாக ஆவது அவனுடய சங்கல்ப மாத்திரத்தாலேயே என்பதால்,
சிருஷ்டிக்கு நிமித்த , சககாரி காரணமும் அவனே.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

பிரக்ருதி பரமாத்மா ஜீவாத்மா இரண்டுக்குமாக போக போகஸ்தான போகோப கரணமாக இருப்பது .
சக்கரை பொங்கல் – போகம் , உபகரணம் – தொன்னை. போகஸ்தானம் – கோயில் .

கண் மூக்கு நாக்கு செவி தோலிவை போகோபகரணம். பார்த்தல் நுகர்தல் சுவைத்தல் கேட்டல் உணர்தல் இவை போகம். .
அங்கண் மா ஞாலம் போக ஸ்தானம். அதாவது அண்டமும் அண்டத்துகுள்ளீடான இந்த பிரபஞ்மும்.

ஆக இந்த அண்டமானது திரவ்யமாய் இருக்கும். பிராகிருதமாய் இருக்கும். பஞ்சீகிருத பஞ்ச பூதத்தால் ஆக்கப் பட்டிருக்கும்.
விளாம்பழ வடிவில் இருக்கும் அதில் ஒரு பத்மத்தின் வடிவில் இருப்பது பூமி.
பூமியின் நடுவில் தலைகீழாய் குத்திய ஆணிபோல் இருப்பது மேரு மலை.
அதன் தெற்கு பகுதியில் இருப்பது பாரத, ஹரி, கிம்புருஷ வர்ஷங்கள். ரம்யகம், ஹிரண்யக, குரு வர்ஷங்கள் வடக்கிலும் அமையப் பெற்றுள்ளன.
பார்தஸ்வம் கிழக்கிலும், கேதுமால வர்ஷம் மேற்கிலும் அமைந்துள்ளன. மத்தியில் இளா வருஷம் சேர ஆக மொத்தம் ஒன்பது வர்ஷங்கள்.

இந்த ஜம்பூ த்வீபம் ஒரு லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் கொன்டது.
இதை சுற்றி வளைத்து இருப்பது உப்புக்கடல். அடுத்து
பிலக்க்ஷ தீபம். கடல் கரும்புச் சாறு. விஸ்தீர்ணம் இரண்டு லக்ஷம் யோஜனை. மூன்றாவது
சால்மலித் த்வீபம். கள்ளுக் கடல். விஸ்தீர்ணம் நான்கு லக்ஷம் யோஜனை. .
குசத்வீபம் – நெய்கடல் – 800000 யோஜனை.
கிரௌஞ்ச த்வீபம். – தயிர்க்கடல் – 1600000 யோஜனை
சாக த்வீபம் – பாற்கடல் – 3200000 யோஜனை
புஷ்கர த்வீபம் – மானலோத்ர பர்வதம் – ஸுத்த தீர்த்தம் – 6400000 யோஜனை.
ஸ்வர்ண பூமி – லோகாலோகம்
கர்த்தம் (ஒருவித ஜலம்)
அண்ட ஓடு.
பெருவெளி.
இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக கோள வடிவில் ஒரு விளாம்பழம் போல் அமைந்திருப்பது இந்த அண்டகடாகம் .

– – – – – – – – – – – – – – –

தமஶ்**
ஸத்ய லோகம்
தபோ லோகம்
மஹர் லோகம்
ஸுவர் லோகம்
புவர்லோகம்
||
த்ருவ பதம்
ஸப்த ரிஷி மன்டலம்
சனி
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
நக்ஷத்ரங்கள்
சந்திரன்
ஸூரியன்
||
புவர்லோகம்
||பூமி||
அதள
விதள
ஸுதள
தலாதள
மஹாதள
ரஸாதள
பாதளம்
நரகம் (பாப பூமி)
தமஸ்**
கர்த்தம்
அண்ட ஓடு
பெருவெளி.
தமசிலிருன்து தமஸ் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ண்யம்.

– – – – – – – – – — – – – – –

திரவ்யம் -; சேதனம்(2) அசேதனம் (4)
சேதனத்தில் அடங்கும் திரவ்யம் இரண்டு ஈஸ்வரனும் ஜீவனும்.
அசேதனத்தில் அடங்கும் திரவ்யம் பிரக்ருதி, காலம், ஸுத்த ஸத்வமாகிற நித்ய விபூதி, தர்ம பூத ஞானம் ஆகியவை.

இதில் அஜடமான சேதனனும், ஈஸ்வரனும் ஶ்வயம் பிரகாஸமாய்,
பிரத்யக் என்று, தீபத்தைப் போலே தன்னைக் காட்டி , பிரவற்றையும் காட்டித் தரும்.
இதையே ஶ்வயம் பிரகாஸிதம், ஶ்வஶ்மை பிரகாஸிதம் என்று சொல்லுவர்.

அசேதன திரவ்யமான பிரக்ருதி, காலம் இரண்டும் தானாகவும், தனக்காகவும் பிரகாசிக்காது.
அஶ்வயம் பிரகாசிதம், ஜடமான படியாலே.

நித்ய விபூதியும், தர்ம பூத ஞானமும் அசேதன, அஜட திரவ்யம் பராக் என்று அழைக்கப்பட்டு தானே பிரகாஸிக்கும், தனக்கு பிரகாஸிக்காது .

– – – – – – – – – – – – – –

இனி கால தத்வத்தைப் பார்ப்போம் :

இது ஒரு ஜடப்பொருள். முக்குணத்துக்கு அப்பாற்பட்டது
ஶ்வஶ்மை பிரகாஸத்வம், ஸ்வயம் பிரகாஸத்வம் இல்லாதது.
இது அகண்ட காலம் ஸகண்ட காலம் என நித்யாநித்யமாய் இரண்டு.
அகண்ட காலம் ஶகண்ட காலத்துக்கு உபாதானமாய் இருக்கும்.
அகண்ட காலம் நித்யம். ஶகண்ட காலம் கார்யமாய், ஸதத பரிணாமியாய் அநித்யம்.

அகண்டகாலம் – பூத, பவத், பவிஷ்யத் காலம் என்றும், யுகபத (ஒரே ஸமயம்);
க்ஷிப்ர (ஸீக்ர/விரைவானதாய்); சிராதி என்று (நீண்டதாயும்) இருக்குமது.

ஶகண்ட காலம் – விநாடி, நிமிடம், மணி, நாள், வாரம், பக்ஷம், ருது, அயனம், ஶம்வத்சரம்
என்று மாறிமாறி சுழலுமது. இவை மநுஷ்ய மாண நேரம்.

பித்ருக்கள் நேரம் :
மநுஷ்ய மாதம் அவர்களுக்கு 1 நாள். வளர் பிறை – பகல். தேய்பிறை – இரவு. அம்மாவாசை மதியம்.

தேவர்கள் நேரம் :
மநுஷ்யர்களின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள்.
உத்தராயணம் – பகல்.
தக்ஷ்ணாயனம் – இரவு.
தேவ வருஷம் 12000 = ஒரு சதுர் யுகம். அதில்

கிருத யுகம் 4000 யுக சந்தி 800(700) தர்மம் 1 கால்.
திரேதா யுகம் 3000 – 600(500) – 3/4.
த்வாபர யுகம் – 2000 – 400(500) – 1/2.
கலி யுகம் – 1000 – 200(300) – 1/4.

தேவமாண 1000 சதுர் யுகம் பிரம்மாவுக்கு பகல்.
இந்த 1000 சதுர் யுகத்தில், 71 சதுர் யுகம் என்கிற விகிதத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிக்கள் வந்து போவார்கள்.
பிரம்மாவுடைய ஆயுசு 2000 சதுர்யுகம் x 30 x 365

பிரளயம் :

௧. நித்ய பிரளயம் – சரீர வியோகம் (அ) மரணத்தில் ஏற்படுவது.

௨. நைமித்யிக பிரளயம் – பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் பூ, புவ, ஸுவர் லோகங்கள் அழியும் .
பிரம்மாவின் ஆயுட்காலதில் நடுநடுவே ஏற்படுவதால், இது அவாந்தர பிரளயம் என்றும் – கிருதம் என்றும் அழைக்கப்படும்..
இந்த சமயத்தில், மஹர்லோக வாசிகள் குடிபெயர்ந்து ஜனர்லோகத்தில் இருப்பர்.
அதாவது பிரம்மாவுடைய இரவுக்காலத்தில், முதல் மூன்று லோகங்கள் அழிய, மற்ற நான்கு உலகங்களும் அழிவதில்லை.
மறுபடியும் பிரம்மவுக்கு பகல்போது ஆகும் போது, அழிந்த மூன்று உலகங்களும் படைக்கப்பதும்.
ஆகவே இந்த மூன்று உலகங்களும், கிருதம் என்றும், மஹர் லோகம் – கிருதகிருத்யம் (அழியாதது ஆனால் வசிப்பார் அற்றது) என்றும்,
அதன்மேல் உள்ள சத்ய, தபோ, ஜநைர் லோகங்கள், அழிவதில்லை யாதலால், அகிருதம் என்றும் அழைக்கப் படுகின்றன.

௩. பிராகிருத பிரளயம் :

பிரம்மவினுடைய ஆயுஸு முடியும் போது 14 உலகங்களும் அழிந்து, ப்ருத்வி நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும்,
காற்று அண்ட வெளியிலும், இப்படி பஞ்ச பூதங்களும் கலந்த ஆகாஸம் அஹங்காரம், மஹாந் பிரகிருதி என்று
எம்பெருமான் திருமேனியிலும் லீநமடையும்.

அப்படி அவைகள் அநாதியாய் ஸூக்ஷ்ம தசையில் ஒன்றிக் கிடக்க, காலத்தால் உணர்த்தப் பட்டு,
பிராட்டி அனுஞையோடே மீண்டும் உண்டாவது தான் படைப்பு.
இப்படியான யோகபத்யம் அநுகிரஹ கார்யம் என்பது பிரசித்தி.

ஆக லீலா விபூதி காலாதீனம். பகவானும் இங்கு காலத்துக்கு கட்டுப் பட்டே கார்யம் செய்கிறான்.

நித்ய விபூதியில் காலம் உண்டு ஆனால் அதன் ஆட்சி இல்லை. ”நவைகால தத்ர பிரபுஹு” என்கிற பிர்சித்தியோடே,
ஒன்றின் அடுத்து ஒன்று என்கிற கிரமம்தான் உண்டு. அந்த ஒவொன்றும் எத்தனை காலம் என்பது கிடையாது,
பகவாக்ஞா ஸீமிதமானது என்றே சொல்ல வேண்டும்.
நித்யவிபூதியில் காலம் ஷடிந்திரிய கிராஹ்யமாய், ஆறு இந்திரியங்களாலும் அறியத்தக்கதாயிருக்கும்..

௪. அத்யந்திக பிரளயம் – ஜீவன் முக்தி அடைவதாகும்.

1, 4 ஜீவாத்மா சம்பந்தப் பட்டது.
2, 3 லோகங்கள் சம்பந்தப் பட்டது.

– – – – – – – – – – – – –

நித்ய விபூதி / வைகுந்தம் :

திரவ்யமாய், பராக் கோஷ்டியில் அன்வயிப்பதாய், அஜடமாய் இருக்கும்.
ஶ்வயம் பிரகாசம், ஶ்வஶ்மை பிரகாசத்வத் தோடு கூடியது. அதாவது பிறர்க்கு ஒளிவிடும்.
தனக்கு ஒளிவிடாது. ஸுத்த சத்வமாய், மிஶ்ர தத்வம் கலசாதது. தூமணி துவளில் மாமணி விளக்கம் இங்கு நோக்கத்தக்கது.

மேல் பக்க வாட்டங்களில் அசீமிதமாய், கீழ்வாட்டில் லீலாவிபூதியால் சீமிதமானது.
ஆனாலும் முக்குணத்தால் ஆன ப்ரக்ருதி தத்வதினிற்றும் தனித்து, ஸுத்த சத்வமயமானது.
அசேதனம். ஆனந்தாவஹம். பஞ்ச உபனிஷத் மய- பூத தத்வத்தாலும், பஞ்ச சக்தி- இந்திரிய விசேஷங்களாலும் ஆன
சரீரங்களோடு கோடிய நித்ய, முக்த ஜீவாத்மாக்களுக்கு இடம்.

அங்கு போகம் – பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
போகோபகரணம் – சந்தன, புஷ்ப, குசுமாதிகள். (லீலாவிபூதிபோல் இந்த்ரியங்கள் அன்று).
போகஸ்தானம் – கோபுர, பிராகார, விமான, மண்டபம் இத்யாதிகள்.

நித்ய, முக்தர்கள் பரிகிரஹிக்கிற சரீரம், ஸுத்த சத்வமயமாய், ஈஶ்வர சங்கல்ப்பத்தாலே அமைவது. கர்மத்தால் அன்று.
பகவத், வியூக, விபவ, அர்சா திருமேனியும் அப்ராகிருதம்தான். வேறு சிலர் அவன் அர்சா திருமேனியை
பிராகிருதம் என்று சொனாலும் அதுவும் அப்ராகிருத ஆவிர்பாகம் என்றே நம் சித்தாந்தம்.

சிலர் அவனுக்கு சரீர்மே இல்லை என்று வாதிக்க, நித்ய முக்த்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கைகாக
பரமபதத்தில் அவன் ஒரு அபிராகிருத சரீரத்தோடே இருத்தல் அவஸ்யம்.

நித்ய முக்தர்கள் அசரீரியாக, ஆத்ம வடிவமாகவே இருந்து அனுபவிக்கலாமே என்றால்,
திருவாராதன, உற்சவ கைங்கர்யங்களைச் சமர்ப்பிக்க, அவர்களுக்கும் கரண களேபரங்கள் அவஶய்மாகின்றன.

ஞான பல ஐஶ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் பகவத் சரீரத்தாலே பிரகாஸிதம். மேலும்
நித்ய, நிரவத்ய, நிரதிசய, ஔஜல்ய , ஸௌகந்த, ஸௌகுமார்ய, லாவண்ய, யவ்வன, மார்த்வ, ஆர்ஜவ குண ஸம்பன்னன்.
அவனுடைய திருமேனி இப்படியாக அபிராகிருதம் – ஹேய குண பிரதிபடம்.

அவர் ஆத்மாவாலும், ஸ்வரூபத்தாலும் விபு – வியாபிக்கக் கூடிய சக்தி சாமர்த்தியம் உடையவர்.
இதற்கு கண்ணனெம் பெருமான் குருக்ஷேத்ரத்தில் காட்டிய, விராட் ஶ்வரூபமே சாக்ஷி.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஸ்வயம் பிரகாசம் :
ஆத்மா ஞானதால் ஆனது. ஞானவான். ஞான குணகனும் கூட. மற்றப் பொருள்களை தன் ஞானம் கொண்டு அறிவதோடு
தனக்கு ஞானம் உண்டு என்பதும் அறிபவர். இதையே தனக்கு பிரகாசிப்பவர். தானே பிரகாசிப்பவர் என்கிறது.
ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய விபூதி ஸ்வயம் பிரகாஸம். ஆனால் ஶ்வஸ்மை பிரகாஸிதம் இல்லை.
முக்குணத்தால் ஆன லீலா விபூதியில் எம்பெருமான் அவதரிக்கும் போதும் , அர்ச்சா திருமேனியோடு இருக்கும் போதும்
ஸுத்த ஸத்வ மயமாமன திவ்யமங்கள விக்ரகத்தோடே எழுந்தருளுவதால், லீலா விபூதியிலும் ஸுத்த ஸத்வதுக்கு அவகாசம் உண்டு.

ஶ்ரீ விஶ்ணுபுராண அஸ்த்ரபூஷணா அத்யாயத்தின்படி லீலா விபூதியில் காண்கிற ஒவ்வொன்றுக்கும்
எம்பெருமான் திருமேனியில் பிரதிநித்வம் (ஸர்வ அபாஸ்ரயத்வம்) உண்டு.
கௌஸ்துபம்=ஜீவாத்மா.
ஶ்ரீவத்ஸம் என்கிற திருமார்பில் மரு = பிரக்ருதி.
கதை = மஹான்
சங்கு= ஶாத்விக அஹங்காரம்.
சார்ங்கம்=ராஜஸ அஹங்காரம்.
கட்கம்=ஞானம்.
கட்கத்தின் உறை=அஞானம்.
சக்ரம்=மனசு.
அம்ராதூளியில் உள்ள 10 அம்பு=ஞாநேந்திரியம், கர்மேந்திரியம்.
வைஜயந்தி,வனமாலா =பூத ஸூக்ஷ்மங்களும், பஞ்ச பூதமும்.

ஆமோத, பிரமோத, ஸம்மோத, வைகுந்தம் என்று நித்ய விபூதியில் அடைகிற ஆனந்தத்தின் நான்கு நிலைகள் தான் அவை.
அதாவது பார்த்துக் களிப்பது. பார்த்ததை அடைந்து ஆனந்திப்பது. அடைந்ததை அநுபவித்து இன்புருவது.
கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்து சிரகாலம் அநுபவிப்பது என்கிற நாலு நிலைக்கு நித்ய விபூதியில் உண்டான நான்கு விபாகங்கள்.

திரிபாத் விபூதி, பரமபதம், பரமவியோமம், பரமாகாச, அம்ருத, நாத, அப்ராக்ருத, ஆனந்த, வைகுண்ட, அயோத்யா
என்று பரம பதமான நித்யவிபூதிக்கு பர்யாய சப்தங்கள்.
அப்படிபட்ட தேசத்தில் இருகிற ஊர் வைகுந்தம். அது 12 மதில்களால் சூழப்பெற்றது.
அங்கு ஆனந்த மண்டபம் என்கிற கோயிலில் 1000 கால் மண்டபத்தில், திரு மாமணி மண்டபம் என்கிற திரு ஓலக்க சபை உண்டு.
அதில் ஆயிரம்தலை பணாமண்டலம் கொண்ட ஸேஷபீடம் –
அதில் (தர்மம், அதர்மம்-ஞானம், அஞானம்-வைராகியம், அவைராகியம்-ஐஸ்வர்யம், அநைஸ்வர்யம் என்கிற எட்டு கால்களை) உடைய தர்மாதி பீடம்.
அஷ்டதள தாமரை மலர்போல ஆசனம், சத்ர, சாமர, ஆலவட்ட கைங்கர்ய பரர்கள் சூழ
வீரா சனத்தில் தேதீப்யமான திவ்யமங்கள விக்ர்ஹதோடே நம்பெருமாள் சேவை சாதிகும் படியான தேசம் நித்ய விபூதி.

—————–

இனி தர்மபூத ஞானம் விவரிக்கப்படுகிறது:
ஜீவ-பர தர்மமாய் (குணமாக) இருகிற ஞானம், தர்ம பூத ஞானம். பரமாத்மாவுக்கு அது பூர்ணமாக விகஸித்திருக்கும்.
ஜீவாத்மாகளுக்கு அது கர்மத்தால் மழுங்கி இருக்கும். பரம பதத்தில் கர்மா இல்லையாய், விகஸித்தபடி காணலாம்.
ஸ்வந்திரன் என்கிற ஞான ஸங்கோசம் போய், சேஷ பூதன் என்கிற விகசித ஞானம் பெறுகை.
புத்தி (அ) தர்மபூத ஞானம் – ஸ்வயம் பிரகாசம். ஸ்வஸ்மை பிரகாசிதம் இல்லையாய் பராக் என்றும், அசேதனமாயும் இருப்பது.
ஸூர்யனுக்கு பிரகாசம் போலே, விளக்குக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு ஞானம்.
அணுவான ஆத்மாவுக்கு குணமான ஞானம் விபுத்வத்தோடே கூடியது.
அதாவது ஆத்மா ஓரிடத்தில் இருக்க, சரீரம் முழுவதுமாய் வியாபிப்பது. அதுக்குண்டான, தர்மபூத ஞானம்.

பரமாத்மாவோ என்னில் அவன் ஸ்வரூபத்தாலும் விபு. அவருடைய ஞானமாகிற குணத்தாலும் விபு.
தனக்குத் தானே ஒளிவிடும் ஜீவாத்மா. தனக்குத் தானே ஒளிவிடுவார் பரமாத்மா.
தானே ஒளிவிடும் தனக்கு ஒளிவிடாது ஞானம். தானும் ஒளிவிடாது, தனக்கும் ஒளிவிடாது ஜடப்பொருள்கள்.
ஞானத்தைக் கொண்டு மற்ற பொருள்களை ஆத்மா கிரகிக்கிறது.
ஆக பொருள்கள் ஞானத்துக்கு விஷயம். ஞானமே விஷயமாம்போது, விஷயி ஆகிறது.

இந்த தர்மபூத ஞானம் பகவானுக்கும், நித்ய ஸூரிகளுக்கும் எங்குமே எப்போதுமே விபுவாயிருக்கும்.
பத்தர்கள் விஷயத்தில் இது மூடப்பட்டு குறைய பிரஸரிக்கும். முக்தர்களுக்கு இது மறைவு வெளிப்பட்டு, நித்யர்களுக்குப் போலே ஒளிவிடும்.
பிறந்திறவாத ஆத்மாவை பிறந்தார், இறந்தார் என்னுமாபோலே, ஞான உத்பந்நம், நஷ்ட்டம் என்கிற வியவகாரம்,
அது கர்மத்தால் சங்குசிமாவதும், கர்மம் தொலைந்தால் விகசிப்பதுமான நிலையைக் குறிக்கும்.
எதைப்பற்றிய ஞானம், யாருக்கு ஞானம் என்பதைக் கொண்டு கர்மக-ஞானம் கருத்ருக-ஞானம் என்று ஞான விபாகம்.

இது விளக்கு என்று புரிதலாகிற ஞானம் உண்டாகும்போது, விளக்கு கர்மா, அறிபவர் கர்த்தா.
தீபம் அஹம் ஞானாமி அன்ற வாக்கியத்தில், தீபம் ஞானத்துக்கு விஷயம். அஹம் ஞானத்துக்கு ஆஶ்ரயம்.
இத்தால் ஞானம் ஸகர்மக-ஸகர்த்ருக மாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தேறுகிறது.
வேகம், நுண்மை, லகு இத்தோடு தான் இருக்கும் போது, பிரகாசியாமல் இருக்காது ஞானம் என்பது.
ஞன பிரஸர த்வாரம் இந்திரியம். இந்திரிய நிஸ்ருஜ்ய ஞானம் என்பது விஷயத்துக்கும் (பொருள்கள்) இந்திரியத் துக்குமான இரு-வழி பாலம்.
அதாவது – ஆத்மாவிலிருந்து புறப்படும் ஞானம் மனம் மொழி காயங்கள் ஆகிற இந்திரியங்கள் வழியாக
பொருட்களைக் கிரஹித்து மீண்டு புத்திக்கு விஷய மாக்குகை.
ஆக ஞனத்துக்கு கமனம், பாம்பின் உடல் குண்டலத்தைப் போல் – சுருங்கி விரிவது ஞானம்.

ஞானம் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருப்பதால் ”குணம்” என்றும், சுருங்கல் விரிதல், கமனம் ஆகிய மாறுதலுக்கு உட்பட்டுவதாய்,
அக்ஞானம், ஞான சங்கோசம், ஞான விகாசம் என்கிற நிலையை அடைவதாலும் ”திரவ்யம்” என்று கூறலாம்.
விளக்கு போலே தன்னைக் காட்டி பிறவற்றைக் காட்டும், தான் ஆஸ்ரயித்து இருக்கிற ஆத்மாவுக்கு மட்டிலும்,
ஏனெனில் அந்தந்த ஆத்மாவுக்கான ஞானம் அதனதன் இந்திரிய சன்நிகர்ஷத்தாலே ஏற்படுமே அன்றி
ஒருவருடைய ஞானம் மற்றவருக்கு ஒளிர வழியில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் தனக்கு போல் இன்னொருவருக்கும் ஏற்பட வழி உண்டாகையால்,
அதை அநுமானத்தல் அறியலாம் அன்றி தன்னுடைய ஞானம் அவர் அளவாக பிரஸரிப்பதாகிற பிரத்யக்ஷ பிரமாணத்தை கொண்டு இல்லை எனலாம்.
ஞானம் ஸ்வத ஏவ பிரமாணம்-எந்த ஞானமும் உண்மை ஞானம் என்பது ராமனுஜ சம்பிர தாயத்தின் அடிப்படைக் கொள்கை.
இது விளக்கு என்ற அறிவுக்கு சஜாதீயமான இன்னொரு விளக்கு தேவை இல்லை.
விஜாதீயமான கர்தாவும், கார்யத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும். ஆக அது ஸ்வயம் பிரகாசம்.

ஞானம் க்ஷணிகம் (பௌத்தன்), த்ரிக்ஷணிகதம் (நையாயிகன்), ஞான குணகன் ஆதமா என்னாமல் ஞானமே ஆத்மா (அத்வைத மதம்),
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிக்கிற ப்ராதிபாஸ ஞானம் (மாயா வாதம்)அனைத்தும் மேற்சொன்னவைகளால் நிரஸிக்கப் பட்டன.
ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஏற்படுகிற ஞானம் வெவ்வேறு அல்ல ஒரே ஞானம் தான்.
தமோ குண சன்னிதியால் மயக்கம், தூக்கம் இவை எற்பட்டு ஞானம் மூடப்படலாமே ஒழிய அது ஞான அபாவம் என்று சொல்லு வதற்கில்லை.
எதை போலே என்றால் , யவ்வன பருவத்தை பாலய பருவம் மூடினால் போலே, கௌமாரம் நீங்கி யுவா ஆனவாரே ஸுக்லம் பிரஸரிப்பது போலே இது.

மதி, பிரக்ஞா, ஸம்விது, தீ, மணீஷா, ஸேமுஷி, மேதா, புத்தி என்பது தர்மபூத ஞானத்துக்குண்டான ஒரு பொருள் பல சொல்.
சுக, துக்க, இச்சா, துவேஷ பிரேமம் அனைத்தும் ஞான விபாகமே. அனுகூல ஞானம் சுகம். பிரதிகூல ஞானம் துக்கம்.
இப்படி ஸில பல உபாதியால் வேறுப்டுகிற ஞானம் இவை அறிவின் வேறு வேறு நிலைகள்.
நினைவு கூறுதலாவது முன் நிகழ்ந்த ஒன்றை, பார்த்த, கேட்ட ஸம்பவம், பொருள் அல்லது மனிதரை ஞாபகப் படுத்திக் கொள்வது.
இது இரண்டு வகையில் ஏற்படலாம். அதே சம்பவம் மீண்டும் நிகழ மறு நினைவு ஏற்படலாம்.
இதை ஸ்மரணை என்பர். அல்லது ஒன்றின் நினைவு இன்னொன்றின் எண்ணத்தை மீட்க்கலாம்.
இதுக்கு பிரத்யபிக்ஞா என்று பெயர். அப்படியான அறிவின் மாறுபாடுகளே சுக, துக்காதிகள்.

——————————————————————————–

சேமுஷி பக்தி ரூபா – ஜ்ஞானம் கலந்த நலம் – மதி நலம் என்ற இவை முதிர்ந்த பகவத் பத்தியை குறிக்கும்.
இந்த பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் மோஷோபாயம். இந்த ஜ்ஞானம் ஜீவனுக்கும்,ஈஸ்வரனுக்கு குணமாய் இருப்பதால்
அதை தர்ம பூத ஜ்ஞானம் என்கிறோம்.

இந்த தர்மபூத ஜ்ஞானம் திரவியமாய் , அசேதனமாய், அஜடமாய் இருப்பது. வெறுமனே ஜ்ஞானம் பக்தியாகி விடாது,
ஏனென்றால் கர்மத்தால் அது மூடப்பட்டுள்ளது, வெட்டி எடுக்கப்பட்ட வைரம் போலே.
அதன் ஒளியை கூட்ட பட்டை தீட்டுவது போல், அதை நன்றாக
(1) ஆச்சார்ய உபதேசங்களாலும்
(2) உபதேச உசித அநுஷ்டானத்தாலும் பரிஷ்கரிக்கப்பட வேண்டும்.
ஆத்மா வா அரே ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: திர்ஷ்டவ்ய: நிதித்யாஸி தவ்ய : என பரிபக்வமாக வேண்டும்.

காமம் (விருப்பம்) சங்கல்பம் (உறுதி) சிரத்தை (ஈடுபாடு),விசிக்கிச்ஸா (அறிந்து கொள்ளும் ஆசை)
திருதி (தைர்யம்) ஹ்ரீஹி ( வெட்கம் ) தீஹி (புத்தி) பீஹி (பயம்)
இவை அனைத்தும் ஜ்ஞானத்தின் வெளிப்பாடுகளே. இவை மனதின் வெளிப்பாடு என்று சாஸ்த்ர வசனம் இருக்கிறதே,
மனம் ஜடப் பொருளாயிற்றே ? அஜடமான ஜ்ஞானத்தின் வெளிப்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்டால்.
அவை ஜ்ஞான காரியமாக இருக்க, மனக் காரியம் என்றது உபசார வழக்காகக் கொள்ள வேண்டும்,
ஜ்ஞானம், மன சாகாய மின்றி நடவாதாகையால்.

பிரத்யக்ஷம், அனுமிதி, சாஸ்திர (ஆகம) ஜ்ஞானம், ஸ்மிருதி, சம்ஸயம் (இதுவா அதுவா என்று தடுமாறுகிற அறிவு),
விபர்யயம் (இதுதான் என்று தவறாக முடிவு பண்ணுகிற அறிவு), மயக்கம் (வஸ்துவை மறாடி நினைக்கை)
விவேகம் (பகுத்து அறிதல்), வ்யவசாயம் (துணிவு), மோஹம் (கிறக்கம்) ராகம், த்வேஷம், மதம் (செறுக்கு )
மாத்சர்யம், தைர்யம், சாபல்யம், டம்பம் (தர்ம காரியத்தை படாடோபத்துக்குச் செய்வது),
லோபம், க்ரோதம், தர்ப்பம் (செருக்கு) ஸ்தம்பித்தவம் (திகைப்பு) துரோகம், அபிமானம், நிர்வேதம் (மன வெறுப்பு) ஆனந்தம் ,
நல்ல அறிவு, தீய அறிவு, அன்பு, திருப்தி, சாந்தி, கீர்த்தி, வைராக்கியம், மன அழுத்தம், இன்பம், நட்பு, கருணை, இச்சை,
மென்மை, பொருமை , வெறுப்பு,, பாவனை,பேராசை, துராசை ,சர்ச்சை, சக்தி,பக்தி, பிரபத்தி இவை முதலான ஆத்மாவின் குணங்கள்.

ஜ்ஞான, சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் வாத்சல்ய, காருண்ய இத்யாதி பகவத் குணங்கள்.
அவருடைய ஜ்ஞானம் இறந்த காலம் நிகழ் காலம், வருங்காலம் அனைத்தும், பிரத்யக்ஷத்தில் காண்பது போல் அறிபவர்.
மநுஷ்யர்களுக்கு இறந்த காலத்தில் சிலவும், நிகழ் காலமும் வியக்தம்.
ரிஷி, முனிகளுக்கு இறந்த காலமும், வரும் காலமும் ஸ்புரிக்குமே ஒழிய, கண்முன் நடப்பதுபோல் தோன்றாது .
ஆனால் பகவானுக்கு அவைகள் பிரத்யக்ஷத்தில் பார்ப்பதுபோல் ஒளிவிடக்கூடியது.

சக்தி அகடித கடனா சாமர்த்தியம்.
பலம் ஜகத் தாரண சாமர்த்தியம்.
ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் .
வீர்யம் அவிகாரத்வம் .தன்னுடன் சேர்ந்தவைகள் மாற்றம் அடைந்தாலும், தான் மாறுதல் இல்லாத.
தேஜஸ் பராபிவன சாமர்த்தியம்.
சௌசீல்யம் – நீரந்தரேண சம்ஸ்லேஷம்
வாத்சல்யம் – குற்றத்தையே குணமாக பார்த்தல்.
மார்த்தவம் – அடியார்கள் பிரிவை சகியாதவன்.
ஆர்ஜவம் – ஒன்றே நினைத்து ஒன்றே பேசி ஒன்றே செய்வது.
சௌஹார்த்தம் – தனக்கு இழுக்கான செயலானாலும், பிறர் ரக்ஷணத்தில் முனைப்பு.
சாம்யம் – ஆஸ்ருதர்களிடத்தில் உயர்வு தாழ்வு பாராதவன். யதிவா ராவண ஸ்வயம் என்ற இடம் காண்க.
ஆனால் அபக்தன், பக்தன் இவர்களிடம் வேறுபாடு பார்க்கமாட்டான் என்பது இல்லை.
காருண்யம் – பரதுக்க துக்கித்தவம், பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் . பிறர் வருத்தம் கண்டு பொறாதா தன்மை
மாதுர்யம் – போக்கிய வஸ்துவான பால் மருந்தாமாப் போலே, உபாய உபேயம் இரண்டிலும் மதுரமாம் தன்மை.
காம்பீர்யம் – ஆழங்கால் காண முடியாத கொடையாளி. திரௌபதி விஷயத்தில் எல்லாம் செய்தும், என்ன செய்தோம் என்ற அதிருப்த்தி .
சாமர்த்தியம் – அடியார்கள் அபராதங்களை தான் கணிசியாததோடு , மறைக்கிறார்.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்னடியார் அது செய்யார் என்று தோஷ கோபத்வம்.
ஸ்தைர்யம் – பக்தர்கள் ரக்ஷண விஷயத்தில் யார் எதுசொன்னாலும் அசராதவன் தடங்கலைக் கண்டு கலங்காதவர் .
தைர்யம் – பழுதாகாத பிரதிக்ஞை உடையவர்.
சௌர்யம் – பரபல பிரவேஸ சாமர்த்தியம்.
பராக்கிரமம் – பரர்களை சின்னாபின்ன மாக்கல் .
என்று எண்ண முடியாததாய், அனுபவித்து முடிக்க முடியாததாய் இருக்கும் பரமாத்மாவுடைய ஜ்ஞானம்.

இனி பக்தி பிரபத்தியின் தன்மைகளை கிஞ்சிது பார்ப்போம்,
ஏனெனில் அவைகளை பற்றி முழுவதுமாக ஒரு ஆசாரியனை வணங்கியே அறியலாவது.

பக்தி பிரபத்திகளை வியாஜமாகக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே உபாயமாக இருந்து
மோக்ஷத்தை அளிக்கிறான் என்பது தேர்ந்த உண்மை.

மோக்ஷோபாயத்தை சித்தோபாயம் சாத்யோபாயம் என்று இரண்டாக பிரிக்கலாம்
இதில் சித்தோபாயம் பகவான். சாத்யோபாயம் பக்தி/பிரபத்தி.
இது விஷயமான கலா பேதம் பிள்ளைலோகாச்சார்யார் (தென்கலை) சம்பிரதாயம் என்றும்;
வேதாந்த தேசிகர் (வடகலை) சம்பிரதாயம் என்றும் இரண்டு.
பக்தியோ பிரபத்தியோ வியாஜ உபாயமே. பகவானே முக்கிய உபாயம் என்பது தேசிக பக்ஷம்.
அவை அதிகாரி விசேஷணம் மாத்திரமே வியாஜ மாத்ர உபாயமும் இல்லை என்பது பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.
இருவருக்கும் பகவானே உபாயம் என்பதில் பேதமில்லை.
ஆனால் அவனுடைய அந்த உபாயத்வம்; கிருபா ஜன்யமா? கிருபா ஜனகமா? என்பதிலேயே பேதம் சொல்லப்படுகிறது. .’
‘அதுவும் அவனது இன்னருளே ” என்கிறபடி கிருபா ஜன்யம் . இது பிள்ளை லோகாசார்யர் அபிப்ராயம்.
இவன் செய்யும் பிரபத்தி கிருபா ஜனகம் என்பது தேசிகர் அபிப்ராயம்.

பக்திக்குச் சாதனம் கர்மயோகமும், ஜ்ஞான யோகமும். கர்மயோகம் சித்த சுத்தியை ஏற்படுத்தும் அது ஜ்ஞான யோகத்திலும்,
ஜ்ஞான யோகம் ஆத்ம சாக்ஷத்காரத்தை வரவழைத்து, பகவத் பக்தியிலே மூட்டும்.

இவை மூன்றும் தனித்தனியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு.
ந தர்ம நிஷ்டோஸ்மி நசாத்மவேதி ந பக்திமான் — ஆளவந்தார். பக்திக்கு அங்கமாக மற்றை இரண்டும் வைத்து,
பக்தியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு. நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் — நம்மாழ்வார்.
பக்திக்கு அங்கமான இவை இரண்டும் இல்லை என்றால், மோக்ஷோபாயமான பக்தியம் இல்லை என்று சொல்ல பிரசக்தியே இல்லை என்கிறார்.

கர்மயோகமாவது :

வர்ணாஸ்ரம தர்மத்தில் நின்று
தேவதா ஆராதனா, யாக யஜ்ஞம், தான தர்மாதிகளை செய்வது
ஆச்சார்யனை அண்டி தத்வ ஜ்ஞானம் பெற்று, அதற்கநுகுணமான ஆசாரத்தில் நிற்பது
அகிருத்ய கிருத்யம் , கிருத்ய அகிருத்யம் இவைகளை தவிர்ப்பது
கர்த்ருத்வ தியாகம், பலத் தியாகம் , பல சங்கத் தியாகம் கூடிய நித்ய கர்மாநுஷ்டான வர்தனம்
தாழ்ந்த பலன்களில் கண் வையாமை
செய்பவை யாவும் பகவத் கைங்கர்யமாக செய்தல் இத்யாதி.

கர்ம யோகத்தால் மனதின் அழுக்கு நீங்கி ஜ்ஞான யோகத்துக்கு வழி வகுக்கும்.

ஜ்ஞான யோகமாவது :

வேதாந்த விசாரமும்
பகவத் சேஷமான
நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்வரூப
தியான, ஆசன, யோக முறைகளும் (அ )
நாம சங்கீர்த்தனம் (அ )
திவ்ய தேச வாசம் (அ)
பக்திக்கு அங்கமான சரணாகதியாலே

பகவத் பக்தியில் ஈடுபட உள்ள தடங்கல்கள் விலகி
பக்தி யோகத்திலே மூட்டும்.

பக்தி யோகமாவது :

யமம் நியமம் ஆஸனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் ஸமாதி என்று எட்டு அங்கங்களோடு கூடியதான
தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தானம் (அ)

விவேக, விமோக, அவ்யாச, கிரியா, கல்யாண, அநவசாத, அனுதர்ஸ்வ ; சாதன சப்தகம் பக்தி.

இந்த மேலே விளக்கமாகப் பார்க்கலாம்:

பக்தி பிரபத்தி இரண்டுமே ஜ்ஞானத்தின் வெளிப்பாடுதான். தர்மிபூத ஜ்ஞானம் நெருப்பு என்றால்,
அந்த தீயின் பொறி போன்றது தர்ம பூத ஜ்ஞானம். ஜ்ஞானத்தின் முதிர்ந்த நிலை பக்தி.
கர்ம, ஜ்ஞான யோகத்தாலேயே பெறப்படும் ஒன்று. இந்த பக்தியே முக்தியைப் பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்து.
இல்லை கர்ம, ஜ்ஞாம, பக்தி யோகங்களே தனியாக, நேரே மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பது இன்னொரு சாரார் கருத்து.

கர்ம ஜ்ஞான ஸகக்ருதையான பக்தி யோகம் என்பது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து,
தூமலர் தூவித் தொழுது என்கிறபடி மனம் மொழி காயம் என்று மூன்றாலும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்.
அர்ச்சனம் செய்தல், நமஸ்காரம், பூத் தொடுத்தல், நாம சங்கீர்த்தனம் செய்தல்,
”மத் கதா ப்ரீதிஹி” என்று அவனுடைய கதையைக் கேட்டல் , அவரை விட்டுப் பிரிந்தால் தாங்க மாட்டாமை ,
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருத்தல் பத்திக்கு லக்ஷணம்.
இது 8 அங்கங்களைக் கொண்டு , பக்தி அங்கியாய் இருக்கும்.

யமம் – சத்தியம் பேசுதல், திருடாமை, அஹிம்சை, பிரஹ்மசரியம் ,
அபரிக்ரஹம் (= தேவைக்கு அதிகமான பொருள்கைளின்மேல் பற்றின்மை) யமம் .

நியமம் – வேதம் (அ ) அதுக்கு நிகரான ஆழ்வார் பாசுரங்களை ஓதுதல், சுத்தியோடு இருத்தல்=
சரீரத்துக்கு அழுக்கு சேறு, சகதி, வியர்வை, மலஜலம்.
மனசுக்கு அழுக்கு காம, குரோதாதி அரிஷட் வர்க்கங்கள்.
ஆத்மாவுக்கு அழுக்கு பாப புண்யங்கள். துஷ்டி = இருப்பதைக் கொண்டு நிறைவடைதல்.
காய கிலேசமான சுத்தி = தேகமாய் போஷிக்காமல், சரிரமாய் நோக்கிப் போதல். மனதை நியமித்து பகவானிடத்தில் ஈடுபடுத்தல் நியமம்.

ஆசனம் – தியானத்துக்கு உசித (துதிகால் தொடையில் தொட அமர்ந்து கொள்கிற பத்மாசனம் போன்ற ) அமர்வு நிலை.

பிராணாயாமம் – கும்பகம் (உள்வாங்கல்), பூரகம் (இழுத்து நிறுத்தல்), ரேசகம் (வெளியேற்றல்) இவைகளை சமமான கால அளவில் செய்தல்.

பிரத்யாஹாரம் – புறப்பொருள்களில் ஈடுபட்டுள்ள புலன்களை வாங்கி, ஆத்ம, பரமாத்ம விஷயத்தில் திருப்பி விடுகை.

தாரணம் – அவைகளை பரமாத்ம விஷயத்தில் நிலை நிறுத்தல் .

தியானம் – நிறுத்திய மனதை மற்றது கலசாத சதத பகவத் நினைவு.

சமாதி – இப்படிப்பட்ட முயற்சிகளால் அந்த பகவானை வசீகரித்தல்.

தைல தாரை போலேயுள்ள விடுபடாத தொடர் நினைவுச் சங்கிலி சாதன பக்தி.
மோக்ஷத்துக்கு சாதனமாக இருக்கிற பக்தி சாதன பக்தி. இது உபாசகர்களுக்கு வழி.

பிரபன்னர்கள் செய்கிற பக்தி சாத்ய பக்தி. மோக்ஷத்துக்கு
சாதனமாக இல்லாது அதுவே பிரயோஜனமாய், பகவானால் அருளப்படும் (பிரசாதிக்கப்படும்) பக்தி சாத்ய பக்தி (அ) பலபக்தி யாகும்.

பிரபத்தி அனுஷ்ட்டித்த பிறகு, மோக்ஷம் போவதற்கு இடையில் உண்டான – இருக்கும் நாள் –
பிராப்ய ருசியினாலே செய்கிற பக்தி ஸ்வயம் பிரயோஜன (சாத்ய) பக்தி. கொடுத்துக் கொள்ளாதே,
கொண்டதுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமாய் –
ஒன்று நூறாக பின்னும் ஆளும் செய்வன் என்கிற ஸ்வயம் பிரயோஜன பக்தி. இவை 8ம் ஒருவகை.

சாதன சப்தகமடியாக செய்கிற பக்தி இன்னொரு வகை.

விவேகம் – ஆகார சுத்தி = ஜாதி துஷ்டமான, ஆச்ரய துஷ்டமான, நிமித்த துஷ்டமான (=தலை மயிர், புழு விழுந்த ) பண்டங்களை ஸ்வீகரியாமை .

விமோகம் – பற்று அற்று இருத்தல் = லௌகீகர்கள் விரும்புகிற விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்.

அப்பியாசம் – பகவத் விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பது.

கிரியா – பஞ்ச மஹா யக்ஞங்களை ( ப்ரஹ்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவைகளை), விடாமல் செய்வது.

கல்யாணம் – உண்மை பேசுதல், ஆர்ஜவத்தோடு (=மனஸ் ஏகம் , வசஸ் ஏகம் , கர்மண் ஏகம் என்று) நேர்மையாய் நடத்தல்,
கருணையோடு இருத்தல், தான, தர்மம் செய்தல், அஹிம்சை, பிறர் பொருள் நச்சுதல் செய்யாமை இவை .

அநவசாதம் – துக்கம் கண்டு துவளாமை. நிர்வேதம் கொள்ளாமை .

அனுர்தர்ஷம் – சந்தோஷம் வரும்போது உன்மத்தர் ஆகாமை.

இந்த 7 னாலும் கிட்டுவதும் பக்தியே .

பக்திக்கு பிரயோஜனம் தரிசன சமானாகார பகவத் சாக்ஷத்காரம் . இதை மோக்ஷ பர்யந்தம் அனுஷ்டிக்க வேண்டுவதாய்,
மோக்ஷம் அடைந்து அங்கு செய்கிற பக்தி , சாதன பக்தியாய் இல்லாது, சாத்ய பக்தியாய் இருக்கும்.

யாருக்கு எப்போது மோக்ஷம் என்ற கேள்வி வரும் போது,
சாஸ்திரம் ”கர்மாவசாநே மோக்ஷம்” என்கிறது. கர்மங்கள் முழுவதுமாக தொலைவது எப்போது என்றால்

பக்தி நிஷ்டனுக்கு பக்தி யோகத்தில் இழியும் நிலையில் சஞ்சித கர்மங்கள் தீயினில் தூசாகும்.
உபாசன மாஹாத்ம்யத்தாலே ஜன்மாந்தரத்தில் பிராரப்த கர்மம் முடிந்த நிலையில், அந்திம ஸ்மிருதி ஏற்பட்டு மோக்ஷம் கிட்டும் .
இப்படி உபாசகர்கள் விஷயத்தில் பிராரப்த கர்மத்தைக் தொலைத்துக் கொள்வது அவர்களுடைய பொருப்பு .

பிரபன்னனுக்கு சரணாகதி அனுஷ்ட்டிக்கும் போது சஞ்சித கர்மமும், தேஹாந்தர ஆரப்த கர்மமும் நசியும்.
வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் தேஹாவசாநே தொலைந்து இந்த ஜன்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிட்டும்.
இவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி நியமமில்லை. அத்தோடு இவர்களின் பிராரப்த கர்மாவை போக்கிக் கொடுப்பது பகவானின் பொருப்பு.

பூர்வாகங்கள் (சரணாகதிக்கு முன்செய்தவை) இப்படிக் கழியுமாகில், உத்தராகங்கள் க்ஞாதம், அக்ஞாதம் என்று இரண்டாய்,
க்ஞாதம் பஸ்சாதாபத்தால் கழியப் பெற்று, அதில்லாது தெரிந்தே செய்தவையாய், வருத்தமும் படாததாய் உள்ளவை யாவை,
அவை அனைத்தும் வர்த்தமான சரீர ஆரப்தத்தோடே சேர்க்கப்பட்டு அதிகப்படி அனுபவிக்க வேண்டியதாய் வரும்.

”ஆக, ஸர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி ” என்கிற இதுக்குப் பொருள், மேல் சொன்ன சஞ்சித பாபங்கள் வரை பக்தனுக்கும் ,
தேஹாந்த்ர ஆராப்த கர்மம் வரை சரணாகதனுக்கும் போக்கித் தருவேன் என்பது கூடார்த்தம் .
அதுவா, வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் மோக்ஷ பர்யந்தம் அனுபவித்தே அற வேண்டும் என்பதிலே கிருஷ்ண கீதைக்கு நோக்கு.

இங்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஒருவனுக்கு ஆயுசு 80 என்று வைத்துக் கொண்டால் ,
அவன் 60 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, மீதம் உள்ள 20 வயதுக்கான ஆரப்த கர்மத்தோடு,
உத்தராகங்களையும் சேர்த்து அந்த 20 வருடத்தில் தீவ்ரமாக அனுபவிக்க வேண்டி வரும்..
அங்கனன்றி, அவரே 20 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, அனுபவ காலம் நீண்டு தீக்ஷண்யம் மிதமாய் இருக்க ஹேது உண்டு.

வேதனம், தியானம், உபாஸனம் என்கிற எல்லாம் பக்தியையே குறிக்கும்.
இந்த பக்திக்கு அங்கமான சரணாகதியும் ஜ்ஞான விபாகமே.
இத்தை பரபக்தி , பரஜ்ஞான, பரம பக்தி என்று பக்தியின் மூன்று நிலைகளாகச் சொல்லுவார்.

ஜ்ஞாதும், திரஷ்ட்டும் , பிரவேஷ்ட்டும்
அறிகை, காண்கை , அடைகை
ஜ்ஞான, தரிசன , பிராப்தி
இவை ஒவ்வொன்றும் பக்திக்கு அங்கமான பிரபத்தியின் ஆவிஷ்காரமே.

அறிகை – பகவானாப் பற்றிய ஜ்ஞானம் ஏற்படுகை., ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பும் , விஸ்லேஷத்தில் தரியாமையுமாகிற பரபக்தி நிலை.
காண்கை – பிரத்யக்ஷ தர்சன ஸமானாகாரமான பர ஜ்ஞானம். சாட்சாத்காரமாவது நேரில் காண்பது போன்ற மானச அநுபவம் .
அடைகை – பகவான் திருவடிகளை அடையப் பெற்று மீளா இன்பத்தில் திளைக்கை பரம பக்தி.

பிரபன்னாதிகாரிக்கு சரீர அவஸாந பர்யந்தம் பரபக்தியாலே செல்லும். சரீர வியோகத்தில், அர்ச்சிராதி மார்க கதி மத்தியில்
பரஜ்ஞான தசையான தரிசன ஸமாநாகாரம் லபிக்கும் . பரம பதத்தை சேர்ந்தவாரே பரம பக்தி தலை எடுக்கும்.

ஆழ்வாருக்கு இவைமூன்றும் திருப்புளியாழ்வார் அடியிலேயே பிராப்தமாம்பட்டி வைத்தது,
இவரைக் கொண்டு ஊரும் நாடும் திருத்த வேண்டிய படியாலே. அது ஆழ்வார் பால் அவனுக்குண்டான கருணை என்பதை விட
ஆழ்வார்மேல் அவன் கொண்ட பிரேமம் என்றே சொல்ல வேண்டும். கணவன் மனைக்கு மத்தியில் நியமங்கள் நடக்கலாம் ,
காமுகன் காமுகிக்கு இடையில் அக்ரமமே ஸக்ரமம் அன்றோ?

சாதன பக்தியானது கீழ்ச் சொன்ன அஷ்டாங்க யோகத்தாலோ (அ) சாதன சப்தகத்தாலோ உண்டாவது.
பல பக்தியோ வென்னில் ஈஸ்வர கிருபையாலே ஏற்படுவது. நம் பூர்வாச்சார்ய கோஷ்டியில்
நம்மாழ்வார் தொடக்கமாக நாதமுனிகள், எம்பெருமானார் என்று அனைவரும் பல பக்தி நிஷ்டர்களேயாவர் .
பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி என்று கொண்டு பக்தியில் அவர்கள் இழிந்தார் இல்லையோ என்னில், அங்கனன்று.

அவதார ரஹஸ்யம், புருஷோத்தம வித்தை இதன் படிக்கு பக்தி உபாசகனாக இருந்து ”புனர் ஜன்ம ந இதி” என்கிற விதி விலக்கால்,
அந்த ஜன்மத்தின் இருதியில் , பிரபன்னனைப் போலவே முக்தி அடைய வழி உண்டானாலும் ,
கால விளம்ப அசகதவமும் காரணமன்று. ஸ்வரூப விரோதமே காரணம். பக்தி ஸ்வாதந்த்ரிய அனுரோதாமான படியாலே .
தங்கமயமான பாத்திரத்தில் வைத்த பாலேயானாலும் , ஒரு துளி கள்ளு சேர்ந்தால் எப்படி நிஷித்தமோ அதுபோலே ,
ஆத்மா = தங்கபாத்ரம். பக்தி = பால். ஸ்வாதந்திரியம் = கள்ளு, என்பதாலே அஸ்வீகாரம்.

அங்கனாகில் பூர்வாச்சார்ய கோஷ்டியில் பக்திக்கு அங்கீகாரமில்லையோ என்னில் , தவறு.
சாதன பக்தியை விட்டு, சாத்ய பக்தியை அன்றோ அவர்கள் ஆதரித்தது.
”சார்வே தவ நெறிக்கு தாமோதிரன் தாள்கள் …” என்கிற திருவாய்மொழி (10-4-1) வியாக்கியானம் இங்கு அனுசந்தேயம் .

ஸ்வ பிரயோஜனம், ஸ்வயம் பிரயோஜனம், பர பிரயோஜனம் என்கிறத்தின் அடிப்படையில் வந்தவை இத்தனையும்.

ஸ்துதி, நமஸ்காரம் போன்கிற பிரயோகம் பக்தியை குறிக்குமோ என்னில் , இல்லை. அவை உபசார வழக்கே ஆகும்.

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதிவ்ய: என்றவிதில்
எது விதி வாக்கியம் , எது ராக பிராப்தம் என்று விசாரித்ததில்
வேத படன வனந்தரம் ப்ரஹ்ம தியான விஷயமாக கேட்பதற்கும், மனனம் பண்ணுவதற்கும்
ஒருவன் ஆசைகொண்டு வருவது பிராப்தமாகையால் , ஸ்ரோத்ரம், மந்தாரம் இரண்டும் ராக பிராப்யமாய் ,
ப்ரஹ்ம சாட்சாத்காரத்துக்கு நிதித்யாஸனமே விதி வாக்கியம் என்று கொள்வதே அநுமதம்.

தியானம் என்கிற பக்தியை, வித்யா பேதத்தால் இரண்டாக பார்க்கப் படுகின்றது.
இகலோக பலத்தைக் குறித்தாக்கில், ஐஹிக்க-பலா என்றும், மோக்ஷ பலத்தைக் குறித்து செய்யும் தியானம்
பாரமார்த்திக-பலா என்றும் இரண்டு வகை. இதையே உத்கீத வித்யா, மற்றும் பிரம்மா வித்யா என்றும் கூறுவார்.

அக்ஷி வித்யா – கண்ணில் சூரியனை வைத்து செய்யும் தியானம்.

அந்தராதித்ய வித்யா – சூர்ய மண்டல மத்திய வர்தியான ப்ரஹ்மத்தைக் குறித்துச் செய்யும் உபாசனம்.

தகர வித்யா – ஹ்ருதயத்து தகராகாசத்தில் உள்ள ப்ரஹ்மத்தை தியானிப்பது.
.
பூமா வித்யா – நிரதிசய சுகம் முதலிய குணங்களுக்கு ஆஸ்ரயனாக செய்யும் வித்தை.

ஸத் வித்யா – ஸத் சப்த வாச்யனான பகவானைத் தியானிப்பது.

மது வித்யா – வஸ்வாதிகளுக்கு அந்தராத்மாவாககே கொண்டு தியானிப்பது.

பஞ்சாக்கினி வித்யா – பகவானை ஆத்மாவாகவும், தன் ஆத்மாவை அவருக்கு சரீரமாகவும் வைத்து செய்யும் வித்யை.

அந்தரிக்ஷ வித்யா –

உப போசல வித்யா –

சாண்டில்ய வித்யா –

புருஷ வித்யா –

பிரதர்தன வித்யா –

வைஸ்வானர வித்யா –

என்று ப்ரஹ்ம வித்தைகள் 32. அதில் ஒன்று

நியாஸ வித்தை – இதுதான் சரணாகதி.

அநன்ய ஸாத்யே ஸாபீஷ்டா மஹா விஸ்வாசா பூர்வகம் ததேக உபாயதா யாஞ்சா பிரபத்தி சரணாகதி ஹி – என்கிற
பிரபதனம் சரணாகதி. பிரபத்யே என்கிறதில் உள்ள கத்யர்தே புத்யர்த்தம் ஜ்ஞான கார்யமான படியாலே ,
இந்த பிரபத்தி ஜ்ஞான விபாகமாக சொல்லப்படுகிறது.

பஞ்ச அங்க வித்யையே பரண்யாசம்.

ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்
பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விசஸ்வாச:
கோப்திருப்த வரணம் ததா
கார்ப்பணயம்
இவை ஐந்தும் அங்கங்களாகக் கொண்ட ஞாசமாகிற = ஆத்ம ரக்ஷணாபர ஸமர்ப்பணமே
பிரபத்தி என்பது ஸ்வாமி தேசிகர் பக்ஷம்.

இத்துடன்
ஆத்ம நிக்ஷேபமாகிற
ஆத்ம ஸமர்பணம் சேர்த்து ஷடங்கியாக இருப்பது சரணாகதி.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – என்கிற ஒன்றே பிரபத்திக்கு அங்கம்.
மேற்சொன்ன 6ம் அவகாத-ஸ்வேதம் = நெல் குத்த வியர்வை தானே சுரக்குமா போலே
சம்பாவித ஸ்வபாவம் என்பது ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.

ஈஸ்வர பிரவிருத்தி விரோதி ஸ்வ பிரவிருத்தி தந் நிவிர்த்தி ஏவ பிரபத்திஹி என்கிற இத்தால்,
ஸ்வ பிரவிருத்தி நிவிருத்திக்கு ஈடான ஸர்வ தர்ம பரித்யாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகாதோ என்னில் ,

அங்கங்களை எதிர்பார்க்கும் பிரபத்தியால் பகவான் கார்யம் செய்கிறான் என்றால்
அது சாதன பக்தியாகுமே ஒழிய சாத்ய பக்தி ஆகாது.
அந்த விதத்தில் மேற்சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகம் நிவிர்த்தி தர்மம் மாகையாலே அது, அங்கமாக கணக்கிடப் படாது.

பிரபதியின் விசேஷங்களாவன :
தேஹாவஸாநே மோக்ஷம்.
அந்திம ஸ்மிருதி வர்ஜனம்.
ஸக்ருத் = ஒருமுறையே செய்யப்பட வேண்டியதான் அபேக்ஷை .
ஜ்ஞான விசேஷ ரூபம் = ஜ்ஞானத்தின் செறிந்த நிலையோடு .
ஒரு சதாசார்யனை அண்டி அறிய வேண்டும் ரஹஸ்யம் இது.

சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே , பிரபத்திக்கு விஷய நியமம் அதிமுக்யம்.
இத்தால், தேவதாந்திர சம்பந்தமும், பாகவதா பச்சாரத்தையும் இது பொறாது . ஆர்த்தி தலை எடுத்து,
ஆர்த்தியில் பூர்த்தி ஏற்பட்ட வன்றே (= விஷயாந்தர ஸ்பர்சம் லவலேசமும் இல்லையான பின்பே) மோக்ஷம் சுநிஸ்ச்சிதம் .

”இன்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று தொடங்கின ஆழ்வாருக்கு உடனே கிட்டாத மோக்ஷம்,
நாலு பிரபந்தம் பாடி, வைகுந்தத்தில் நின்று, வரகுண மங்கை இருந்து, புளிங்குடிக்கிடந்து என்றபடி
ஆழ்வாராகிற ஆத்ம = அன்னம் பரிபக்குவமாக பார்த்தானாய், நமக்கும்
”மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” பிரானான அவன், அந்திம தசையில்
அவைகளை உண்டாகித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான்.

தேகமே ஆத்மா என்றிருக்கிற லோகாயதனுக்கு ஸ்வர்க, நரக , பாப, புண்யங்கள் கிடையா தாகையாலே
பக்தி, பிரபத்தி இவை பொருந்தாது .

க்ஷணிக வாதியான பௌத்தன், க்ஷணிக ஜ்ஞானமே ஆத்மா என்பதால், முக்தி, உபாயங்களின் பிரசங்கமில்லை.
ஒன்று இன்னொன்றில் மூட்டுக்கையாகிற ஜ்ஞான பரம்பரை வைத்துக் கொண்டு பார்க்கில்,
உபாசிக்கும் ஆத்மா ஒன்றாக, மோக்ஷ பல சித்தி அடையும் ஆத்மா வேறு என்று முடியும் .
ஒருத்தன் நோவுபட்ட இன்னொருத்தன் அனுபவிப்பது சாத்தியமல்லவே.

சப்த பங்கி வாதிகளான க்ஷபணர்கள் மோக்ஷத்தை இருக்கு, இல்லை, இருந்தும் இல்லை, இல்லையாய் இருக்கும்
என்று பேசி சேருமிடம் அறியமாட்டாத அவர்களுக்கும் பக்தி, பிரபத்தி பொருந்தாது.

வைசேஷிகர்கள் பாஷாண கல்பமான ஸ்திதியை மோக்ஷம் என்றும்,
சாங்கியன் சித் , அசித் தத்வங்களை ஒப்புக்கொண்டு,
ஈஸ்வரனை இல்லை செய்கிறபடியால், யாருக்கு எதனால் மோக்ஷம் என்பது அஸ்பஷ்ட்டம்.

மாய வாதிகளான அத்வைதிகள் வியாவஹாரிக பிரஹ்ம வாதத்தால் பாரமார்த்திக மோக்ஷத்தை ஒப்புக்கொள்வ தில்லை .
பாஸ்கர, யாதவ பிரகாசர்கள் கர்ம – ஜ்ஞான சமுச்சயம் மோக்ஷ சாதனம் என்ன, வேதமானது பக்தியையே
மோக்ஷ சாதனமாக சொல்லுகிற படியால், இவர்கள் மதம் குதிருஷ்டி மதமாகிறது.
வேத பிராமாண்யத்தை ஒப்புக் கொண்டும், அதற்கு விருத்தமான கொள்கையை பேசுவதால் அதுவும் தள்ளுபடி.

சைவம், லைங்கியம் , பாசுபதம் போன்ற மதங்களில், பிராப்யம் சிவன் என்று பேச, அதுவும்
அநுத்தேஸ்ய மாயிற்று.

இத்துடன் தர்மபூத ஜ்ஞான விளக்கம் முற்றுப் பெறுகிறது.

———————————————————————————-

8 வது அவதாரம் ஜீவனைப் பற்றியது.
கீழே சொல்லப்பட்டவையுள் பிரமாணங்கள் 3 அவதாரம் .
பிரமேயத்தில் அடங்கின திரவ்யங்களைப் பற்றியதான 4 அவதாரங்கள்.
பிரகிருதி, காலம், தர்ம பூத ஜ்ஞானம், சுத்த சத்வமான பரம பதம்.
இவை பராக் என்றும், திரவ்யங்களில் அடங்கின ஜீவனும் , ஈஸ்வரனும் பிரத்யக் என்றும் பார்த்தோம்.

ஜீவன் என்பது :
அணுவாய், நித்தியமாய், ஜ்ஞானமாய், ஜ்ஞான குணகனாய் பகவத் சேஷ பூதனாய் விளங்குமவர்.
தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றிற்கும் சாமான்ய லக்ஷணம் சொல்லப் புகில் :

சித்தும், அசித்தும் பகவத் சேஷ வஸ்து.
சித்தும், ஈஸ்வரனும் ஜ்ஞானம் உடைத்து.
அசித்தும், ஈஸ்வரனும் தன்னை சேர்ந்தவர்களை தன்னைப் போல் ஆக்கும் ஸ்வபாவம் படைத்தவர்கள்.
அசித் சம்பந்தம் அவஷ்டப்யம் . பகவத் சம்பந்தம் உன்மீயம்.

பிரத்யக்த்வம் – தனக்குத் தானே ஒளி விடுபவர். தானே பிரகாசிப்பவர். ஸ்வயம் பிரகாசத்வம்.
சேதனத்வம் – அறிவுடையவர். தனக்குப் பிரகாசிப்பவர். ஸ்வஸ்மை பிரகாசத்வம்.
ஆத்மத்வம் – அநாத்மா அல்லாதது. சரீரத்துக்கு பிரதி சம்பந்தியாய், ஈஸ்வரனுக்குத் தான் சரீரமாக இருப்பது.
கர்திருத்வரம் – செயல் திறன் உடையது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரதத்வம் நீங்கலாக ,
லௌகிக கார்ய, மோக்ஷ சாதன அனுஷ்டான பர்யந்தமான கர்திருத்தவம் உடையவர். சங்கல்ப ஜ்ஞான ஆஸ்ரயத்வம் கர்திருத்தவம் .

இவை 4ம் ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு உண்டான சாமான்ய (பொதுவான) லக்ஷணம்.

ஆத்மா, அறிவு, பொருள் (அசேதனம்) இவையில்,

ஆத்மா – ஜ்ஞானம் உடையதாய், ஜ்ஞானமுமாய் – இரண்டுமாய் இருக்கும்.

அறிவு – ஜ்ஞானமாய் இருக்கும். ஜ்ஞான முடையதாய் இருக்காது.

பொருள்கள் – ஜ்ஞான ஆகாரமோ, பாசமோ – இரண்டும் இல்லாதது.

இல்லதும் , உள்ளதும் அல்ல தவனுரு — நம்மாழ்வார்.

இல்லது – ஜ்ஞானம் அற்றது, அசித்து .
உள்ளது – ஜ்ஞானம் உள்ளது. சித்து .
அல்லது அவனுரு – சித் , அசித் விலக்ஷணன் என்கிற வியாவர்த்தம் சொல்ல வந்த பாசுரம் இது.

கணவனுக்கு மனைவி, பிரதி சம்பந்தி.
சேஷனுக்கு சேஷி, பிரதி சம்பந்தி. அது போல
சரீரத்துக்கு ஆத்மா, பிரதிசம்பந்தி –
ஒன்றிருந்தால்தான் , இன்னொன்று இருக்கும் என்கிற சம்பந்தம், பிரதி சம்பந்தத்வம்.

இனி ஆத்மாவுக்குண்டான அசாதாரண லக்ஷ்ணம் :

1. அணுவாய் இருக்கும் போதே அறிவுடையதாய் இருக்கும்.
2. பகவத் சேஷமாய் இருக்கும் போதே ஜ்ஞானத்தோடே இருப்பவர்.

சேஷத்வத்தை முதலில் சொல்லி ஜ்ஞாத்ருத்வத்தை அடுத்து சொன்ன படியால், ஆத்ம ஸ்வரூபத்துக்கு சேஷத்வமே பிரதானம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (திருவாய் 8-8-2)

ஈஸ்வரனுக்குண்டான சரீர-ஆத்ம அந்தராத்மதையைச் சொல்லும்போது, ஆத்மாவை ஆழ்வார்
அடியேன் என்று சொன்னபடி காணலாம். ”உள்ளான்” என்கிற வியாபக ஜ்ஞானம் உடைய ஆழ்வார் தன்னை,
என்னுள் உள்ளான் என்று சொல்லாமல் அடியேன் உள்ளான் என்று சொன்ன படியாலே,
ஜ்ஞாதிருத்துவத்தைக் காட்டிலும், சேஷத்வமே ஆத்மாவுக்குண்டான விசேஷ தர்மமாய் தேறுகிறது .

யானும் தானாய் ஒழிந்தானே (நம்மாழ்வார் 8-8-3) என்ற இடத்தில் ஜீவ-பர ஐக்கியம் அர்த்தம் ஆகுமோ என்னில்,
”ஆய்” என்கிற சாமானாதிகரண்யத்தாலே சரீராத்மா பாவத்தைக் காட்டியதாகவே பார்க்கலாம்.

பகவத் சேஷத்வம் சித் அசித் இரண்டுக்கும் பொது. அந்த சேஷத்வமாகிற வைரத்தை ஜ்ஞாத்ருத்வமுடைய
தங்க பெட்டியில் இருப்பது அசித்தோடு இருப்பதைக் காட்டிலும் உயர்வு.
அது தோற்ற சேஷத்வத்தைச் சொல்லி பிறகு ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உயர்ந்த பகவத் சேஷத்வத்தை மறந்து வர்த்திக்கை அசித் சமானமன்றோ?
ராஜ புத்திரன் அத்தை அறியாது கிடக்க, சம்பந்த ஜ்ஞானம் பெற்றவாரே உண்மை யான அறிவு பிறக்குமா போலே,
ஒரு சதாசாரியனை அண்டி வருகிற சேஷத்வ ஜ்ஞானம் , ஆத்மாவை அழகு படுத்தும்.

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல்நெஞ்சே ! (திருமழிசை ஆழ்வார்) அப்போது தான்
பகவத் தத்வம் நெஞ்சுக்கு நன்கு பிரகாசிக்கும். நெஞ்சும் நல் நெஞ்சாகும்.

ஆதேயத்வம் (தாங்கப் படுமவர் )
விதேயத்வம் (ஆணைப்படி நடப்பவர்)
பராதீன கர்த்ருத்வம் (எண்ணப்படி செய்பவர்)
பரதந்திரம் (பகவானையே பரம பிரயோஜனமாக கொண்டிருப்பவர்)

தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

தேகமே ஆத்மா என்பது பொருந்தாது. நான் உடல் என்பது வழக்கு இல்லை. என்னுடைய உடல் என்பது தான் வழக்கு.
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு தேக அதிரிக்தன் ஆத்மா என்பதை உறுதி படுத்துகிறது.

கண்களால் பார்க்கிறேன் என்பதிலுள்ள ”ஆல்” 3ஆம் வேற்றுமை உறுபு வெளி இந்திரியங்கள் ஆத்மா இல்லை,
அவை கருவி , ஆத்மா கர்த்தா என்பதை உறுதி படுத்துகின்றன. த்ரிதீயா விபத்தே கருத்ருத்வாத் என்பது சூத்திரம்.

மனஸா ஸ்மராமி , நெஞ்சால் நினைக்கிறேன் என்கிற வழக்கும் – ”ஆல்” வேற்றுமை உறுபு –
அந்தக் கரணமான மனசைக் காட்டிலும் ஆத்மா வேறு என்பதை தெரிவிக்கிறது.

மம பிராணாஹி – என்னுடைய பிராணன் என்கிற வழக்கும்
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு கொண்டு ஆத்ம பரிச்சேதம் சொல்லிற்று.

தீ = ஜ்ஞானம். தர்ம ஜ்ஞானத்தை உடையது ஆத்மா. ”யான்” தர்மி ஜ்ஞானம். ”எனது” தர்ம (பூத) ஜ்ஞானம்.
ஆக தர்ம பூத ஜ்ஞானமும், ஆத்மாவும் வேறு.

ஆத்மா அணு, வேத உபநிஷத் பாகங்களில் இப்படி சொல்லி இருக்கிறபடியால். .
ஆனையின் ஆத்மா ஆனை அளவு, பூனையின் ஆத்மா பூனை அளவு என்கிற ஜைன சம்பிரதாயம் பொருந்தாமையோடு கூடியது.
அவர்கள் சொல்லுகிற படியானால், ஆத்மாக்கள், வேறு வேறு பிறவிகளில் , எடுத்துக் கொள்கிற தேகத்துக்கு ஏற்ப
சுருங்கல் , விரித்தல் செய்ய வேண்டும். அதாவது ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் உண்டு என்பதை நியாயப் படுத்த வேண்டும்.
உண்மையில் ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவித்தலாகிற ஸ்வபாவ விகாரம் உண்டு. ஸ்வரூப விகாரம் கிடையாதே .
ஆகவே அது ஏகதா அணுவாகவே இருக்கும், ஒரு கால விசேஷத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா, உத்கிரமித்து,
அர்ச்சிராதி மார்க்கத்தில் பரமபதத்தை அடைகிற படியால். ஆத்மா விபுவாக இருந்தால், பயணப்பட வாய்ப்பில்லை யாகையாலே.

ஆத்மா ஒரு இடத்தில் இருந்தாலும், அதனுடைய தர்மபூத ஜ்ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும்.
ஸ்வப்ன சரீரத்திலும் வியாபிக்கும். ஆபாச இன்பத்துக்கு ஐம்பது சரீரம் என்று சௌபரிக்குப் போலே
அத்தனைக்கும் வியாபிக்கும். கூடு விட்டு கூடு பாய்கிறபோது அந்த இரண்டு சரீரமளவும் வியாபிக்கும்.

ஆத்மா நித்யம். பௌத்த, சார்வாக மதத்தில் சொல்லியது போல் ஆத்மா அநித்யமாய், சரீரத்தோடே அழிவதாகில் ,
கிருத பிரணாசம் (=செய்தவை களுக்கு பலன் கிட்டாமை)
அகிருத அப்பியாகமம் (=செய்யாதவைகளுக்கு அனுபவிக்கை)
ஆகிற தோஷம் வரும்.
ஆத்மாவுக்கு உற்பத்தி, நஷ்ட்டம் தேக சம்பந்தமும், வியோகமும் ஸ்வரூபேண உண்டாதல் சாதல் கிடையாது.
ஜீவராசிகளுக்கு ஜ்ஞானத்தில் உண்டான தாரதம்யத்துக்குச் சேர மனுஷ்ய, மிருக, ஸ்தாவர, ஜங்கம பிறவிகள் கிடைக்கின்றன.
அவர்களின் ஜ்ஞானம் கர்மத்தால் மறைக்கப் படும் அளவைப் பொருத்து
ஜ்ஞான சங்கோச, விகாச பரிமாணத்தின் அளவையைக் கொண்டு அந்தந்த பிறவி கிட்டுகிறது எனலாம்.

மனுஷ்ய சரீரத்தில் நகம் முதல், மயிர் கால் வரை பல ஆத்மாக்கள் உண்டு.
அவைகள் கல்லுக்குள் இருக்கிற ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் மழுங்கின நிலையில் உள்ள படியாலே
அதிஷ்டான ஆத்மாவுக்குண்டான சுக துக்க அனுபவங்கள் வியாபரியாத ஆத்மாக்களுக்கு கிடையாது.

ஆக ஆத்மா ஒன்றல்ல, பின்னமே. ஒவ்வொரு சரீரத் துக்குள்ளேயும் உள்ள ஆத்மாக்கள் வேறு வேறு என்பது அத்வைத சித்தாந்த பிரதிபடம் .
ஜ்ஞானத்தில் சமண ஆகாரத்தைக் கொண்டு, ஜாத்யேக வசனமாய் அவை ஒன்று என்று சொல்லும் வழக்கு உண்டு.
பரமாகாச-கடாகாசம் போலன்று.

ஆகாசத்தில் உள்ள சூரியன், குளத்தில், கிணற்றில், கண்ணாடியில் பட்டு ஒன்று பலவாக தெரிவது போல்,
ப்ரஹ்மம் ஒன்றே. சரீரமாகிற உபாதியால் அவை பலவாக தோற்றுகின்றன.
சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தால், பல என்ற அந்த பிரமம் விலகும் . என்பது உண்மையானால்

நித்யோ நித்யானாம், சேதன சேதனாநாம் என்கிற பஹு வசன பிரயோகம் ஆத்மாக்கள் ஒன்றல்ல,
பல என்று பேசுவதை எப்படிப் பரிஹரிப்பது? ”ஏஷாம் – தேஷம் ” என்கிற கீதா ஸ்லோகத்தை எப்படிப் பொருந்த விடுவது?
ஆக அத்வைதம் பொய்யாகி, ஆத்மாக்கள் பல என்பதே நிரூப்யம்.

அஹம் அல்லாததை அஹம் புத்தி பண்ணுகை

ஆத்மா கர்த்தா – லௌகிக வியாபாரங்கள், மற்றும் மோக்ஷோபாய சாதனா அனுஷ்டான, உபாசனா கிரியா கர்தாவாகையாலே.
போக்தா-பாப புண்ய விஷயானுபவங்கள் நடக்கிற படியாலே .
சரீரி, சரீரம் – இந்த உடலோடும் , பரமாத்மாவோடும் வைத்துப் பார்க்கையில்,
உடலை தாங்குபவராயும், ஈஸ்வரனால் தாங்கப் படுமவராயும் இருக்கையாலே.
அமலத்வம்-குற்றமற்ற தன்மை. இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஆத்மா -; ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருக்கும்

ஜ்ஞானம் -; ஜ்ஞானம் ஞேயம் 2ஆய் மட்டும் இருக்கும் . ஜ்ஞாதாவாய் இருக்கமாட்டார் அசேதன மாகையாலே.

பிரகிருதி -; ஞேயமாய் மட்டும் இருக்கும்.

ஈஸ்வரன் -; ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருப்பர்.
கூடவே தாதாவாய் இருப்பர், மூன்றன் பிரதாதா அவரானபடியாலே.

—————————————————————————

பர பக்ஷம் :

பௌத்தன் – ஆத்மா க்ஷணிகம். ஏனெனில் அவர்கள் மதத்தின் படி ஜ்ஞானமே ஆத்மா. ஜ்ஞானம் க்ஷணிகம்.
ஆகவே ஆத்மாவும் க்ஷணிகம். ஒருகாலத்தில் ஏற்படும் ஜ்ஞானம் மறறொரு காலத்தில் ஏற்படும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறு பட்டது,
காலத்தால். அப்படிப் பார்த்தால் நோற்பும் பயனும் வெவ்வேறு ஆத்மாக்களதாய் ஸ்ரமிசிதவனுக்கு பலன் இல்லாமல் போகும்.
உலகியல் நடைமுறை இப்படி இல்லை ஆதலால், ஜ்ஞானமும் க்ஷணிகமல்ல. ஆத்மாவும் க்ஷணிக மல்ல .

சாருவாகன் – பூத சதுஷ்டயத்தால் (ஆகாசம் தவிர்ந்த பிருதிவி, அப்பு தேஜஸ் வாயு இவற்றால்) ஆன தேகமே ஆத்மா.
தேக அதிருக்த ஆத்மா என்பது இல்லை. ஸ்வர்க்க நரகங்கள் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற நாஸ்திக வாதம்.
உயிருள்ள தேகம், உயிரற்ற உடல் என்கிற வித்யாசம் தெரிகிற படியால் இவர்கள் பக்ஷமும் உண்மைக்குப் புறம்பானது.

ஜைனர் – யானைக்கு யானை அளவு பெரிய ஆத்மா . எறும்புக்கு எறும்பளவு ஆத்மா என்கிற இவர்கள் பக்ஷமும் நிரஸ்த்தம் .
இந்த ஜென்மத்தில் யானையாக இருந்து அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறக்க வேண்டுமானால்,
ஆத்மா சுருங்கல், விரித்தலுக்கு உள்ளாக வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆத்மாவை அணு என்று சொல்லி இருக்கிற படியால்,, இவர்கள் வாதமும் தவறு.

சாங்கியம் – கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பிரகிருதி புருஷன்கள் அளவே. மூன்றாவதான ஈஸ்வர தத்துவம் இல்லை என்று மறுப்பவர்கள் .
செயல் உடலதாகவும், அனுபவம் ஆத்மா வுடையதாகவும் பார்ப்பவர்கள்.
இது நிரீஸ்வர் சாங்கியம். ஸேஸ்வர சாங்கியர் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும்,
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பூத பரிமாண உடலுக்கேயாய்,
ஜெபா குஸும – ஸ்படிக உதாரணத்தின் மூலம், எப்படி புஷ்பத்தின் சிகப்பு நிறம் ஸ்படிகத்தில் பட்டு, ஸ்படிகம் சிகப்பாக தெரிகிறதோ,
அதுபோல, தேகத்துக்குண்டானது ஆத்மாவுக்குப் போலே தெரிகிறது என்பர்.
உண்மையில் கருத்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவனுக்கே என்பது வைதிக பக்ஷம். ராமானுஜ சம்பிரதாயமும் கூட.

யாதவ பக்ஷம் – பிரம்மத்தின் அம்சம் ஜீவன் என்பது . அதுவும் தவறு ஏனென்றால், பிரமத்துக்கு சரீரம் பிரக்ருதியும், ஆத்மாவும்.

பாஸ்கர பக்ஷம் – சரீரமாகிற உபாதியாலே பிரம்மத்தின் ஒரு கண்டமாக (பகுதியாக) சோபாதிக ஜீவன் இவர்களால் பார்க்கப் படுகிறது.
அதுவும் தவறு ஏனெனில், ஆத்மா அணுவாகவும், பிரமத்துக்கு சரீரமாகவும் இருக்கிற படியால்.

அத்வைதம் – பிரம்மத்துக்கு அஜ்ஞானம். தன்னைப் பலவாக பிரமிக்கிறது அப்படி இல்லை என்கிற ஐக்கிய ஜ்ஞானம் வந்தால்,
அதுவே மோக்ஷம். இதிலே பல கேள்விகள்.

1. பிரம்மத்துக்கு பிரமம் என்பது இயற்கையா? செயற்கையா?
2. அதாவது, ஸ்வரூபமா? ஸ்வரூப வியதிரேகியா?
3. ஸ்வரூபம் (இயற்கை) என்றால், அவித்யை விலக வாய்ப்பில்லை. அப்படியானால்,
பிரமத்தால் வந்த ஜகத் வியாவிர்த்தி விலகாது / அஸ்த்தமிக்காது .அங்கனாகில் மோக்ஷம் சித்திக்காது .
4. இயற்கை இல்லை. செயற்கைதான் என்றால், அத்வைதம் நிற்காது. பிரம்மம் என்கிற ஒருதத்வம்.
பிரம்மத்துடைய அஜ்ஞானம் என்கிற ரெண்டாவது தத்வம் சித்திக்கும்.
5. இதில் எது உண்மை? பிரம்மம் பாரமார்த்திகமா? அதன் அஜ்ஞானம் பாரமார்த்திகமா?
6. பிரமத்தை பொய் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவித்யை பொய்யானால், பொய்யான ஒன்றை எப்படிப் போக்க?
7. முடிவாக, அவித்யா சபளித்த பிரம்மத்தின், அஜ்ஞானத்தை யார் போக்க?
அதுவும் பொய்யான ஒரு ஆசாரியானால் , பொய்யான ஜ்ஞானத்தால் மறைக்கப் பட்ட உண்மையான
பிரம்மத்தினிட மிருந்து பிரமத்தை எப்படிப் போக்க முடியும்?
என்பதான 7 வித (ஸப்தவித) அனுபபத்தி சித்திக்கும் . இதனால் ஏக ஜீவ பக்ஷமும் நிரஸநமாகிறது .

வாசஸ்பதி மதம் – பிரம்மத்துக்கு பல அந்தக் கரணங்கள் (மனசு) இருப்பதால், பல ஜீவர்களாக தோற்றுகிறது
என்பதும் ஆத்மா விபு என்கிற வாதம் உள்பட அனைத்தும் தவறு. ஏனென்றால்,

1. ஆத்மாக்கள் அநேகம்.
2. அதனதன் கர்மத்தால், வெவ்வேறு சரீரங்களை எடுத்துக் கொள்கின்றன.
3. பிராகிருத சரீரம் அசேதனம். கர்மத்தால் அதனுள் விலங்கிடப் பட்டுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் சேதனம்.
4. அவை அனைத்தும் பிரம்மத்துக்கு சரீரமாய் (உடலாய்) பிரகாரமாய் இருக்கும்.
5. சாஸ்திர ஜ்ஞானத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் , கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை
அனுஷ்ட்டித்து (அ) பகவானை சரணமடைந்து அவனுடைய கருணையால் பாபங்கள் விலக்கப் பெற்று
சம்சாரத்தைக் கடந்து மோக்ஷமடைகிறான். என்கிற, இதுவே சாஸ்திர சம்மதமான மார்க்கம். மற்றவை குத்ருஷ்டிகள் மதமாகின்றன.

6. ஆத்மா விபுவல்ல அணுவே. அதன் தர்ம பூத ஜ்ஞானம் பல சரீரங்களில் பிரசுரிக்க ஒருவர் பல சரீரம் எடுக்கவோ
அவர் புகழ், பெருமை பல இடங்களில் வியாபிக்கவோ, வாய்ப்புண்டு .
அது யோக சக்தியாலோ / அதிருஷ்ட பலத்தாலோ உண்டாவது.

இங்கு அதிருஷ்டமாவது பகவானுக்கு பிரீதியை விளைவிக்கிற , ஜீவனாலே செய்யப் பட்ட கர்ம விசேஷம்.
சுருங்கச் சொல்லில், பகவத் கிருபை (அ) பகவத் ப்ரீதி விசேஷ ஜ்ஞான ரூபம் அதிருஷ்டம்.
”விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்று ஆழ்வார் விளக்கம்.
அது பகவான் ஒருவனிடத்தில் மட்டும் நிலைப்பது., தேவதாந்தரங்கள் அநித்யமாகையாலே.

—————–

அந்த ஜீவாத்மா 1. பத்தர். 2.முக்தர். 3. நித்யர் என மூவகைப் பட்டவர்கள்.
இதில் பத்தர்கள் கர்மத்துக்கு வசப்பட்டு, பிராகிருத பூமியில் இன்னும் உழன்று கொண்டு இருப்பவர்கள்.
முக்தர்கள் கர்மங்களில் இருந்தும், பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு, அர்ச்சிராதி மார்க்கத்தில்
”அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்ற கணக்கில் வைகுந்தம் புகுந்தவர்கள்.
நித்யர்கள், அநந்த,கருட,விஸ்வக்ஷேணர் போல, கர்ம வாசனையே இல்லாதவர்களாய்,
பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் இருப்பவர்கள்.

1. பத்தர்கள் : 1. தேவர்கள் :

பிரம்மா ; சிவன்.
||
V
நாரதாதி தேவர ரிஷிகள்
விசிஷ்டாதி பிரம்ம ரிஷிகள் (ராஜ ரிஷி, மகா ரிஷி, ரிஷி என்று அவர்களின் யோக/வைராக்யங்களை இட்டு தார தம்யாம்)
புலஸ்திய, மரீசி, கச்யப, தக்ஷ நவ பிரஜாபதிகள்
திக்பாலகர்க்ள் -; வ – குபேரன் ; கி – இந்திரன்; தெ – எமன்; மே – வருணன்)
14 – இந்திரர்கள் (பிரம்மா பகல் போதில் படைக்கப் படுமவர்கள்)
14 – மநுக்கள்
அஸுரர்கள்
பித்ருக்கள்
கந்தர்வ யக்ஷ
கின்ன
கிம்புருஷ
சித்த
வித்யாதரர்கள்
8 – வஸுக்கள்
11 – ருத்ரர்கள்
12 – ஆதித்யர்கள்
2 – அஸ்வினி தேவதைகள்
தானவ யக்ஷ ராக்ஷஸ
பிசாசங்கள் .

2. பத்தர்கள் : மநுஷ்யர்கள் :
||
v
பிராஹ்மண
க்ஷத்ரிய
வைஸ்ய
சதுர்த்தர்கள்

3. பத்தர்கள் : திர்யக்கு :
||
v
பசு
பக்ஷி
ஊர்வன (பாம்பு முதலான)
பறப்பன (விட்டல் பூச்சி முதலான)
கீடங்கள் (புழு பூச்சிகள்)

4. பத்தர்கள் : ஸ்தாவரம் :
||
v
விருக்ஷம்
குல்மம் (புதர்)
லதா (கொடி)
வீறு (அறுக்க, அறுக்க முடியாதன)

இந்த நான்கையும் வேறுவிதமாகவும் பிரிக்கலாம்.

ஜராயுஜ (கர்ப பையிலிருந்து உண்டாவன ) = 1,2;3.
அண்டஜ ( முட்டையிலிருந்து உண்டாவன ) = 3
உத்பிஜ்ஜ (முளைவிட்டு உண்டாவன) = 4
ஸ்வேதஜ (வியர்வையில் உண்டாவன ) = 3
அயோநிஜ (யோநியில் சேராத)
||
v
பிரம்மா (நாபி கமலம்)
சிவன் (பிரம்மாவின் புருவ நெறிப்பு)
ஸநகாதிகள் (பிரம்மாவின் மனசிலிருந்து )
சீதா (பூமியிலிருந்து)
முதலாழ்வார்கள் (பூவிலிருந்து)
திரௌபதி, (நெருப்பிலிருந்து)
திருஷ்ட துயும்னன்
பூத, வேதாளங்கள்.

கர்ம பிரவாக சக்ரம் :

அவித்யா (அறியாமை)
ருசி (தூண்டுதல்)
கர்மா
(தவறான செயல்)
ஜென்மம்
(அழுத்தம்)
வாசனை
விதை செடி பூ காய் பழம் விதை போலே பிறவியும்

கர்ப ஜன்ம சைஸவ பால்ய யௌவன
ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்தி மூர்ச்சா
ஜரா மரண
ஸ்வர்க்க நரகாதி
ஆத்யாத்மிக ஆதி தைவீக ஆதி பௌதிக தாப த்ரய சுழற்சி .

ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தியும் இழந்து,
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடு கிறவர்களே பத்தர்கள்..

——————————————————————

சாஸ்திரத்துக்கு வசப்படாதவை -; விலங்குகளும், ஸ்தாவரங்களும்..

சாஸ்திரத்துக்கு வசப்பட்டவர்கள் -; தேவர்களும், மநுஷ்யர்களும். விவேக ஜ்ஞானம் உள்ளபடியால்.
||
V
புபுக்ஷுக்கள் ; தேஹாத்மாபிமானிகளாய்
அர்த்தத்தில், காமத்திலும் இச்சை உடையவர்கள்.

முமுக்ஷுக்கள் -; தேஹ அதிருக்த ஆத்ம பிரசம்ஸை உள்ளவர்கள். தர்மத்தில் பற்றுடையவர்கள்.

பரலோக அனுபவ ச்ரேயஸ் சாதனம் தர்மம் . யக்ஞ, தான, தபஸ், தீர்த்த யாத்திரை, திவ்ய தேச வாசம் இத்யாதி இதில் அடங்கும்.
||
V
தேவதாந்த்ர பரர்கள் ; தர்மார்த்த புருஷார்த்த துக்காக அன்ய தேவதைகளை உபாசிப்பவர்கள்.

பகவதாஸ்ருதர்கள் -; பக்தன். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களில் ,
வீட்டின்பத்தை விட்டு இதர பலன்களுக்காக பகவானை ஆச்ரயிப்பவர்கள்.
பிரபன்னன் -; மோக்ஷ லாபார்த்தி.

ஆர்த்தன் -; பிரஷ்ட ஐஸ்வர்ய காமன்.
அர்த்தார்த்தி -; அபூர்வ ஐஸ்வர்ய காமன்.
ஜிக்ஞாஸி -; கைவல்யார்த்தி.

கேவலன் -; ஆத்மானுபவம் தவிர்ந்த இரண்டாவதான பகவதனுபவ பர்யந்தம் வராதவன்.

தேசிக பக்ஷம் -; கேவலன் புபுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் , பிரகிருதி நியுக்த ஸ்வாத்மானுபவ நிஷ்டராய்
விரஜைக்கு இப்பால் வர்த்திப்பவர். திருந்தி பகவன் லாபார்த்தியாக வழியுண்டு.

பிள்ளை லோகாச்சாரியர் பக்ஷம் =; கேவலன் முமுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் ,
ப்ரக்ருதி நியுக்த ஸ்வாத்மானுபவம் விரஜைக்கு அப்பால். கர்ம பூமியை விட்டு விலகி
போக பூமியுள் வந்துவிடுகிற படியால் ஸ்வானுபவத்தை விட்டு, பதி -தியக்த பத்நி போலே ,
பகவன் லாபார்த்தியாக வழியில்லை.

பகவத் பக்தனுக்கும் , பிரபன்னனுக்கும் வேண்டியவை :

வேதத்தை அதன் அங்கங்களோடே வாசிக்கை. அதாவது கர்ம காண்டம் + தேவதா காண்டம் + ஜ்ஞான காண்டங்கள் கற்று
பூர்வ மீமாம்ஸா + உத்தர மீமாம்ஸா இவைகளில் தேர்ந்து
சித், அசித்தினின்றும் வேறுபட்ட
அதிசய, ஆச்சர்ய, ஆனந்த நிலையனாய்
ஹேய குணங்கள் இல்லாதவனாய்
கல்யாண குணைகதானனாந பகவான்
அவனை, ஸ்த்ரீ. சதுர்த்த வர்ணத்தவர்கள் நீங்கலாக
அடைய அங்கங்களோடே கூடிய பக்தியை உபாயமாகக் கொண்டு மோக்ஷமடைபவன் பக்தன். இவர்கள் சாத்யோபாய நிஷ்டர்கள்.

ஆர்த்தித்தவம் , சாமர்த்தியம் இரண்டும் பக்திக்கு யோக்யதைகள்.

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தணன் ஒருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டுநீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உன்னை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்–(பெரிய திருமொழி 5-8-7)

வைதிகன் பிள்ளை மோக்ஷ பூமியை பிராபித்தும் திரும்ப சம்சாரத்தில் வந்தது மோக்ஷ மடைய சாமர்த்தியம் இல்லையான படியால்.
அர்ஜூணனும் வைதிகனும், மோக்ஷத்தின் வாயில் வரை சென்றார்களாயினும்,
மோக்ஷ பூமியைப் பிராபிக்காதது அவர்களிடத்தில் ஆர்த்தித்தவம் இல்லை யானபடியாலே.
அத்தகைய பக்தியானது புத்தி பரிச்சேத ஜ்ஞான விசேஷம் (அ ) முதிர்ந்த ஜ்ஞானம் என்பர்.

வியாசர் முதலானோர் -; சாதன பக்தி நிஷ்டர்கள். அறம், பொருள், இன்பமாகிற திரைவர்கிக பலம் உத்தேஸ்யம்.

நாதமுனி முதலானோர் -; சாத்ய பக்தி (பல பக்தி) நிஷ்டர்கள். மோக்ஷ பலம் உத்தேஸ்யம்.

பிரபத்திக்கு உறுப்பு ஆகிஞ்சின்யமும் , அநன்யகதித்வமும் .
நம்மாழ்வாருடைய நோற்ற நோன்பிலேன், ஆராவமுதே திருவாய்மொழிகள் இதுக்கு லக்ஷணம்.

வீடடைய வேண்டுவது :
சத்ஸங்கம்
நித்ய, அநித்ய வஸ்து விவேகம்
ஸம்சாரத்தில் நிர்வேதம்
வைராக்கிய சீலராய்
மோக்ஷத்தில் விருப்பம்
த்வேஷ மற்றவனாய், விஷ்ணு பக்தனாய், வேத சாஸ்திர விற்பன்னனாய் இருக்கிற ஆசாரியனை அடைந்து
அவர் மூலமாக புருஷகார பூதையான பிராட்டியை ஆஸ்ரயித்து
பக்தி முதலான மற்ற உபாயங்களை (அசத்தி ஆயாசங்களுக்காயும், பிராப்தி இன்மைக்குமாக) விட்டவனாய்
ஆகிஞ்சின்யத்வ , அனன்ய கதித்வங்களை (கர்ம, ஜ்ஞான, பக்தி இல்லை. வேறு கதி இல்லை என்று) பிரார்த்திப்பவராய்

1. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்;
2. பிராதி கூல்யஸ்ய வர்ஜனம்;
3.ரக்ஷஸ்யதி இதி விச்வாஸ:
4.கோப்த்ருத்வ வரணம்;
5.கார்ப்பண்யம்;
6. ஆத்ம நிக்ஷேபம்

இந்த ஆறும் ஏற்பட்டவனாய்
ஸ்ரீமன் நாராயணனுடைய சரணங்களையே உபாயமாக சுவீகரிப்பவன் பிரபன்னன்.

தேசிக பக்ஷம் =; ஆத்ம சமர்ப்பணத்துக்குக் கீழ் சொன்ன
5 ம் அங்கமாய் அங்க பிரபத்தியிலே சேரும்.

லோகாசார்ய பக்ஷம் =; அங்கமாகக் கொண்டு செய்கிற பிரபத்தி சாதன பக்தியில் போய் முடியுமாகையால்
கீழ்ச் சொன்ன 5 ம் ஸம்பாவித ஸ்வபாவங்களாய் – நெல் குத்த வியர்க்குமா போலே –
இவை 6ம் தானே ஏற்பட, ஸ்வதந்த்ர பிரபத்தியிலே சேரும்.

பிரபதிக்கு ஸர்வரும் அதிகாரிகள்.
||
V
ஏகாந்தி :
தேஹ யாத்திரை நிமித்தமாக மற்றதும் கேட்டு, மோக்ஷமும் பிரார்திப்பார்..
இரண்டும் பகவானிடத்திலேயாய், தேவதாந்தரங்கள் பக்கல் போகாதவர்கள்.

பரமைகாந்தி:
பரமனான பகவானை மட்டுமே பலமாக பிரார்த்திப்பவர். இவரும் பகவானைத் தவிர
வேறு இடத்தில் கை ஏந்தாதவர்கள். பிராப்பியா பிராபக ஐக்கியம் இங்கே உண்டு.
||
V
திருப்தன் -; அஸ்மதாதிகள் . இவர்களுக்கு தேஹாவஸானே மோக்ஷம். மரணமானால் வைகுந்தம் தரும்.

ஆர்த்தன் -; ஆழ்வார், ஆசாரியர் போல்வார். பிரபத்தி உத்தர க்ஷணத்திலே மோக்ஷம். .மரணமாக்கி வைகுந்தம் தரும் .

இதுவரை சொல்லப் பட்டவர்கள் பக்தர்கள். கர்மத்தால் தளைப் பட்டவர்கள். பகவத் கிருபையால் மோக்ஷ மடைபவர்கள்.

——————————————————————————

இனி முக்தர்கள் :

உபாய சுவீகார அனந்தரம்
ஆஜ்ஞா கைங்கர்யம் (அகரனே பிரத்யவாயங்கள் – செய்யத் தவறினால் பாபம் )
அநுஜ்ஞா கைங்கர்யம் (பாபம் ஸம்பவிக்காது – செய்யாமல் விட்டால் அவன் முகமலத்திக்கு குந்தகம் ஏற்படும்).
ஸ்வயம் பிரயோஜனமாய் (வேறு எந்த பலனையும் எதிர்பாராது அல்ல அல்ல செய்வதே பிரயோஜனமாய்)
பகவத், பாகவத, ஆச்சார்ய, அசக்கியா அபசார விமுக்தராய்/தவிர்ந்தவராய்
தேஹாவாசானே / சரீரம் விழும் போது
புண்யங்களை மித்ரர்களுக்கும் , பாபங்களை அமித்ரர்களுக்கும் பகவானாலே கொடுக்கப் பட
ஹ்ருதய வாசியான பெருமானிடம் விடை பெற்று
ஸுஷும்நா நாடியை அடைந்து
பிரம்ம ரந்தரம் வழி வெளிப்பட்டு
சூரிய கிரணங்களை வாகனமாகப் பற்றி

அர்ச்சிஸ் மார்க்கத்தில் முதலில் அக்கினி லோகம்
பகல்
ஸுக்ல
உத்தராயணம் வாயு
சூர்ய லோகம்
சந்திர
வித்யுத் / மின்னல்
வருண
இந்திர
சத்ய லோகம் இவைகளை ஆதிவாகர்கள் கடத்த , அவ்வோ லோகங்களின் அபிமானிநி தேவதைகள் ஸத்கரிக்க

பரமபத வாசலில் உள்ள விரஜையில் குளித்து
ஸூக்ஷ்ம சரீரத்தை உதிரி
அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று
அபிராக்ருத திருமேனியும்
பிரம்மாலங்காரமும் செய்யப் பெற்று
நகர பாலகர்களுடைய அனுமதி கிட்டி

வைகுந்தம் புகுதலும்
அனந்த கருட விஸ்வகஸேனர்களைச் ஸேவித்து
திருமாமணி மண்டபத்தில், ஸ்வ ஆச்சார்ய கூடஸ்தரையும் ஸேவித்து
பர்யங்க சயனத்தில், தர்மாதி பீடத்தில் தேவிமார் மூவருடன் ஜாஜுல்யமாய் எழுந்தருளி இருக்கும்
திவ்ய பூஷணார் பூஷிதம், அபரிமித கல்யாண குண பூர்ணராய் ஸேவை சாதிக்கும்
பகவான் திருவடிகளை தலைகளால் வணங்கி
பர்யங்கத்தில் கால் வைத்து மிதித்து ஏறலும்

பகவான் கைபிடித்து தூக்கி மடியில் அமர்த்தி
”கோஸி ?” என்று விளிக்க
அஹம் பிரஹ்ம பிரகார:
பிரஹ்ம பரிகார:
பிரஹ்ம பிரகாஸ: அஸ்மி என்று சொல்லி நிற்க
பகவான் தன்னுடைய குளிர்ந்த கண்களால் கடாக்ஷிக்க
அந்த அனுபவம் தந்த ஆனந்தம் பல்கிப் பெருக
ஸர்வ தேச ஸர்வ கால சர்வாவதோசித சகலவித கைங்கர்யங்களையும் செய்ய விரும்புவனாய்
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸாயுஜ்ய மாகிற
( ஜகத் வியாபார வர்ஜம் – போக மாத்ர ஸாம்ய லிங்காஸ்ச — ஸ்ரீபாஷ்யம் இத்யாதிகளில் தெரிவித்த )
அஷ்டவித ஆவிர்பாகத்தை அடைந்து எல்லை யற்ற பிரம்மானந்தத்தில் தோய்கிறவன் முக்தன்.

”ஸோஸ்ணுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா ” என்று
ஆனந்தத்தில் ஸாம்யம் அடைவதன்றி ஸ்வரூப ஐக்கியம் அடைகிறான் அன்று .

———————————————————————————-

வேத வேதாந்தங்களிலே பிரஹ்மத்தைப் பற்றி சொன்ன வாக்கியங்களுக்கு அர்த்தம் பார்க்கும் போது
எந்தவித முரண்பாடும் கிடையாது. அப்படி விரோதம் தோற்றினாலும் அதை பரிஹரிக்கவே
சுவாமி எம்பெருமானார் பல கிரந்தங்களை அனுகிரகித்தார்.
அவருடைய மதத்தை வெளிச்சம் போட்டு காட்ட அவதரித்த கிரந்தமே ”யதீந்த்ர மத தீபிகா என்கிற இந்த நூல்.

இதிலுள்ள 10 அவதாரங்களில், 9 வது அவதாரம் ”ஈஸ்வரனைப் ” பற்றிய விசாரம்.

ஸர்வேஸ்வரத்வம் .= நியந்திருத்தவம். ஈஸ் +வரச் =ஈஸ்வரன். நியமன சாமர்த்தியம்.
ஸ்வபாவார்த்தே வரச். ஈசன சீல: நாராயண: என்று சங்கராச்சாரியார் வியாக்கியானம்.
ஸர்வ சப்தத்தால் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்குமான ஈஸ்வரன், தனக்கொரு ஈஸ்வரன் இல்லாத என்று பொருள்படும்.
அவன் ஈஸ்வரன். அவனுடைய செயல் ஈசனம் நாம் ஈஸிதவ்யர்கள்.

ஸர்வ சேஷித்வம் = எல்லோருக்கும் ஸ்வாமியாய் , சேஷியாய் இருத்தல். கைங்கர்ய பிரதி சம்மந்தி.
பகவானுக்கு பெருமை சேர்க்க வல்ல கார்யங்களையே எவனொருவன் செய்கிறானோ அவனே சேஷன். பகவான் சேஷி.

ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம்.= எல்லாருடைய (சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஸ்ரார்த்தமித்யாதி)
கர்மங்களாலும் ஆராதிக்கப் படுமவர். ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி.
.
ஸர்வ கர்ம பலபிரதத்வம்.= எல்லா கர்மங்களுக்கும் பலன் கொடுப்பவர் நாராயணனே..
தேவதாந்தரங்கள் கொடுக்கிற பலன்கள் இவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற சக்தி சாமர்த்தியத்தைக் கொண்டு.
அப்படிக் அவர்கள் கொடுக்கும் போதும் இவன் அவர்களுக்குள் அந்தராத்மாவாக இருந்தே கொடுக்கிறான்.

ஸர்வ ஆதாரத்வம்.= எல்லாவற்றையும் தாங்குமவர். அவன் ஆதாரம். நாம் ஆதேயம்.

ஸர்வ கார்ய உத்பாதகத்வம்.=
”செய்கின்ற கிரியெல்லாம் யானே என்னும், செய்வா நின்றகளும் யானே என்னும் ,
செய்து முநிறந்தவையும் யானே என்னும், செயகைப் பயநுண்னுபேம் யானே என்னும் ” (திருவாயிமொழி-5-6-4) என்றபடி
செய்வார்கள் செய்யும் கிரியைகள் அனைத்துக்கும் ஊற்றுவாய் அவரே.

ஸர்வ வாச்யத்வம். = எல்லா சொல்லின் பொருளும் அவரே. திருமால் , சிவன், இந்திரன் என்று எது சொன்னாலும்
அவை அனைத்தும் பர்யவஸான விதியின் படி சரீரியான நாராயணனையே குறிக்கும். வாசகம் = சொல். வாச்யம் = பொருள்.

ஸ்வக்ஞான ஸ்வேதிர ஸமஸ்த திரவ்ய ஸரீரத்வம் = தன்னையும், தன் ஜ்ஞானம் இரண்டும் தவிர்ந்த அனைத்தும் அவருக்கு சரீரம்.
ஜ்ஞானம் அவருக்கு குணமாதலால் அவர் குணியாகிறார். அவர் மற்றவைகளை தாங்குபவராக இருக்கிறாரே ஒழிய,
தன்னைத் தான் தங்குபவராக இல்லை. எனவே தன்னையும், தன் ஜ்ஞானமும் தவிர மற்றவைகளுக்கு சரீரியாக இருக்கிறார் என்று சொல்லப் பட்டது..

இவை ஈச்வரனுக்குண்டான அடையாளங்கள். இந்த பிரஹ்மம் ஜகத்துக்கு திரிவித – உபாதான, நிமித்த, சககாரி – காரணங்களாக இருக்கிறார்.

எது எதுவாக மாறுகிறதோ, அது அதுக்கு உபாதானம். மண் குடத்துக்கு உபாதானம்.
தங்கம் சங்கிலிக்கு உபாதானம். பஞ்சு வேஷ்ட்டிக்கு உபாதானம். மூலப் பொருள் உபாதானம்.
செய்கிறவர் சங்கல்பமடியாக பொருள்கள் படைக்கப் படிகின்றன.
எனவே குயவன், தட்டான், நெசவாளி இவர்கள் குடத்துக்கு, சங்கிலிக்கு, வேஷ்டிக்கு நிமித்த காரணம்.
இப்படி படைக்க உதவும் கருவிகளுக்கு – சககாரி காரணம் என்று பெயர்.
குயவனுக்கு தண்ட ,சக்ரம். தட்டானுக்கு நெருப்பு துருத்தி, ஊது குழல், நெசவாளிக்கு ராட்டை,
நெய்கிற இயந்திரம் இவைகள் அவரவர்களுக்கு சககாரி காரணம்.

சித் அசித் விஷிஷ்ட பிரஹ்மம் ஏகம் .

பிரஹ்மத்தோடு கூட இரண்டாவது கிடையாது. – அதுவைதம்

சித் அசித்தோடு கூடிய பிராஹ்மம் (போல ) இரண்டாவது கிடையாது – விஷிஷ்டாத்வைதம்

விஷிஷ்ட யோகோ அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் –
பிரஹ்மத்தோடு கூடி இருக்கிற (ஜாத்யேக வஸ்துக்களான) சித் அசித் போலே இரண்டாவது கிடையாது.
விஷிஷ்ட அஸ்ய அத்வைதம் விஷிஷ்டாத்வைதம் – சித் அசித் கூடி இருக்கிற பிரஹ்மத்தைப் போல இரண்டாவது கிடையாது .-
ந த்வத் சமஸ்ச அப்யதிகஸ்ச திருஸ்யதே என்றபடி.

ஸத் வித்யா பிரகரணம் :(சாந்தோக்ய உபநிஷத்)

ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் – பிரதிக்ஞை.

ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் ஜ்ஞானம்.

மண் என்கிற காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யமான குடம், மடக்கு, பொம்மை அனைத்தும் அறிந்ததாகும் அல்லவா? அதுபோல

காரண பிரஹ்மத்தை அறிந்தால், அதன் காரியமான ஜகத் அனைத்தும் அறிந்ததாகும்.

குடம் என்றும், மடக்கு என்றும் பொம்மை என்றும் பலவாக பார்ப்பது வியவகார வழக்கு.
ஆனால் எல்லாம் மண் என்பதே உண்மை. காரண ரூபத்திலான மண்ணுக்கும் காரிய ரூபத்திலான
மண்ணுக்கும் நாம (குடம்) ரூப (வாயும், வயிறுமான ஆகாரம்) வியவகார வித்யாசம் உண்டு போலே ,
காரண பிரஹ்மமான ஈஸ்வரனுக்கும் கார்ய பிரஹ்மமான ஜகத்துக்கும் குடத்துக்கும் மிருக் பிண்டத்துக்குமான
வேறுபாடு போலே ஆதார ஆதேயத்தவ, சேஷ சேஷிதவ வியவகார பேதம் உண்டு.

மண், மண்ணால் ஆன குடம். பிரஹ்மம். பிரஹ்மத்தால் ஆன ஜகத் என்பதே உண்மை.
எது எதுவாகிறதோ அது அதுக்கு உபாதாந காரணம் என்று வைத்து பார்க்கில், ஜகத்துக்கு ஈஸ்வரன் உபாதாந காரணம்.

பிரளயம் காரண தசை. ஸ்ருஷ்டி கார்ய தசை. காரண பிரஹ்ம விசிஷ்டமான சித்தசித் ஸூக்ஷ்ம தசையிலும் ,
கார்ய பிரஹ்மமான ஜகத் நாம-ரூப வியார்த்தமாய் ஸ்தூல தசையை அடைவதே ஸ்ருஷ்டி.

” பஹுஸ்யாம் பிரஜாயேய ”என்று பிரஹ்மம் சங்கல்பிப் பதால் பிரஹ்மமே நிமித்த காரணம்.
நான் பலவாக ஆகிறேன் ”அநேந அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி ” என்று தான்
தன்னை கார்ய வஸ்துக்களாக மாற்ற நினைப்பதால், ”அபிந்ன நிமித்த உபாதான காரணம் பிரஹ்ம”
என்கிற சாஸ்திர வசனத்தின்படி உபாதாந காரணமாகவும் அவரே ஆகிறார்.

தண்ட, சக்ரம் போலே பிரஹ்மம் தன்னிடத்தேயான பிரக்ருதி, காலம், ஜ்ஞானம், சக்தி இவைகளைக் கொண்டே படைப்பதால் ,
சககாரி காரணமும் பிரஹ்மமே என்று தேறுகிறது.

”ஸதேவ ஸோம்ய ஏகமேவ அக்ர ஆஸீத், அத்விதீயம் ”

ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டாவது இல்லை என்றால்

1. ஸதேவ = உள்ளத்திலிருந்து உள்ளது வந்தது (ஸத் கார்ய வாதம்) அன்றி இல்லத்திலிருந்து உள்ளது வர (அஸத் கார்ய வாதம்) இல்லை ‘
2. ஏகமேவ = நாம ரூபம் இல்லாது ஒன்றே என்று சொல்லும்படியாக ஸூக்ஷ்ம தசையில் இருந்த சேதநா சேதன விஸிஷ்ட காரண பிரஹ்மம் அதுவே
3. அதுவிதீயம் = ஸ்தூல தசையிலான சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மமாயித்து, இரணடாவது இல்லை.
வஸ்து இரண்டாவது இல்லை என்ற பொருள் அல்ல. காரண பிரஹ்மமே காரிய பிரஹ்மம் ஆனபடியால் இரண்டாவது இல்லை என்கிறது.

சைஸவம், பால்யம், யௌவனம் , யுவா, குமார விருத்த என்று ஒருவருக்கு பல அவஸ்தை உண்டு போலே,
பிரஹ்மத்தின் சரீரமான சித்தசித் பிரகிருதி பிராகிருதங்களாக விகாரமடைகிறதே ஒழிய,
ஆத்மாவுக்குப் போலே பிரஹ்மத்துக்கும் எந்தவித விகாரமும் ஏற்படுவது இல்லை . பிரஹ்மம் நிர்விகாரம்

”தத்வமஸி ஸ்வேத கேதோ” = தது + த்வம் +அஸி .

விட்டு (ஜகல்) இலக்கணம்
விடாத (அஜகல் ) இலக்கணம்
விட்டு விடா (ஜகாலஜகல்) இலக்கணம்

விசேஷணத்தை (அடைமொழி) விட்டு விசேஷ்யத்தை (அடைகொளியைப் ) பார்ப்பது விட்டிலக்கணம் .
சேர்த்துப் பார்ப்பது விடாவிலக்கணம்.

தது = த்வம் அஸி
விசிஷ்ட பிரஹ்மமே = ஸ்வேதகேதோ, உனக்கு அந்தராத்மாவான பிரஹ்மம் ஆகிறது.

ஸூக்ஷ்ம சேதநாசேதன விசிஷ்டமாய் பிரஹ்மம் இருக்கிறபடியால் அது உபாதான காரணம் ஆகிறது.
கார்ய ரூபமாக விகாரம் அடையக் கூடிய வஸ்து உபாதான வஸ்து . மண் குடமாவதற்கு இடையில் பல நிலைகள் உள்ளன.
மண்ணைப் பிசைந்து உருட்டி, சக்கரத்தில் இட்டு சுழற்றி வாயும் வயிறுமாகப் பிடித்தால் குடம் உண்டாகும் .
இப்படியான அடுத்தடுத்த நிலைகளின் (நியத) முன் நிலை, அதன் அதன் உபாதானப் பொருள் ஆகும்.

சங்கல்ப விசிஷ்ட பிரஹ்மமாய் இருக்கிறபடியால் அதுவே நிமித்த காரணம் ஆகிறது.
காரணப் பொருளை கார்யப் பொருளாக யார் பரிணமிக்கச் செய்கிறாரோ அவர் நிமித்தம்.
தான் மாறாமல் தன்னோடு கூடிய சேதநாசேதனங்களை மாற்றமடையச் செய்கிறபடியால்.

காலம் , ஜ்ஞான, சக்தியாதிகளுக்கு அந்தர்யாமி பிரஹ்மம்மாய் இருக்கிறபடியால் சககாரி காரணமும் அதுவே ஆகிறது.
கார்ய உத்பத்தியில் உதவி செப்பவை ஸஹகாரி.

இப்படியாகப் படைப்பவர் நாராயணன் என்று சொல்லலாம். அதுதான் எப்படி? என்றால் :

கஸ்ய த்யேய:? காரணம்து த்யேய:

உள்ளது காரணமா? இல்லது காரணமா? உள்ளது காரணம் என்றால் ”ஸத் ” காரணம். ‘ஸதேவ ஸோம மக்ரம் ஆஸீத்”.

ஜ்ஞானம் உள்ளது காரணமா? ஜ்ஞானம் அற்றது காரணமா? ஜ்ஞானம் உள்ளது காரணம் என்றால் ‘
‘ஆத்மா ” காரணம். ”ஆத்மா வா இதம் ஆக்ர ஆஸீத் ”

சிறியது காரணமா? பெரியது காரணமா? பெரியது காரணம் என்றால், ”உள்ளதாய் ,
” ஜ்ஞானம் உள்ளதாய்” இருக்கிற ”பிரஹ்மம் ” காரணம். ஆகும்.

அந்த பிரஹ்மம் நாராயணனே என்றது எந்த நியாயத்தாலே?

1. ஸர்வ சாகா பிரத்யயம் நியாயம். – பூர்வ பாகத்தில், பல சாகைகளில் பலபடி சொல்லப்பட்ட
ஒன்றை சமன்வயப் படுத்தி பொருள் கொள்ளல்.

2. ஸகல வேதாந்த பிரத்யயம் நியாயம். – பல பல உபநிஷத்துக்களில் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கொன்று
முரண்படாமல் பொருள் கூறல். ஸத் , ஆத்மா , பிரஹ்மம் என்று வெவ்வேறு சொல்லால் குறிப்பிட்ட பிரஹ்மத்தை ,
வேதாந்தங்களில் பூர்ணமாக பிரஹ்மத்தைப் பற்றி சொன்னதுக்கு முரண் படாமல் இன்னது அன்று அறுதி இடல்.

3. சாமான்ய விசேஷ நியாயம். – பொதுவாக சொன்னவைகளை விசேஷித்து சொன்னதனோடு சேர்த்துப் படித்தல்.
அதாவது, ஸத்; ஆத்மா; என்கிற சாமான்ய சப்தங்களை , பிரம்மா; சிவன்; இந்திரன் என்று விசேஷித்துச் சொன்ன சப்தங்களோடு சேர்ப்பது.

4.சாக-பசுந் நியாயம். – பசுவைக் (4 கால்மிருகம்) கொண்டு யாகம் செய் என்று சாஸ்திரம் சொல்ல,
எந்த நாலுகால் பசு? என்ற விசாரம் வந்தது. அதற்கு சாஸ்திரம் சாக-பசு என்று விசேஷித்து
”வெள்ளாட்டைக்” கொண்டு யாகம் செய் என்று நிர்தேசித்தது.

சப்தங்களுக்கு பொருள் இரண்டு வகையில் சொல்லலாம்.
ஒன்று யோகம்.= சப்த சேர்க்கை.
இரண்டாவது ரூடி = பிரசித்த வழக்கு.
பங்கஜ -; தாமரை. நாய்க்குடை, ஆம்பல், அல்லி எல்லாம் தாமரையை போலவே நீர் அளரில் தோன்றினாலும்,
ரூடி அர்த்தம் தாமரை என்பதே.

வேதாந்தத்தில் பிரம்மா, சிவன், இந்திரன், ருத்ரன், ஹிரண்யகர்பன், நாராயணன் என்று பல படி சொல்லி இருப்பதால்,
இவர்களில் காரண பிரஹ்மம் யார் என்ற விசாரம் வந்தது. இந்த சப்தங்களின் ரூடி அர்த்தத்தை மாற்ற முடியாது.
யோக அர்த்தத்தைக் கொண்டு மற்றவர்களின் பெயர்களை நாராயணனுக்கு பொருந்த விட வழி உள்ளது போல்
மற்றவர்களின் பெயருக்கு நாராயணன் என்பதும் அர்த்தமாகச் சொல்ல வழி இல்லை. காரணம்:

பூர்வ பததாது ஸம்க்ஞா: அக: என்ற பாணினி சூத்திரத்தின் படி
நாரா: + அயன = நாராயன என்பதற்கு பதிலாக நாராயண என்றாகும் என்கிறார்.
அதாவது ஒருசொல் ”ர ” வில் முடிந்து அடுத்த சொல் ”க ” வில் தொடங்காவிடில், ”ன ” என்பது ”ண ” என்று மாறி,
விசேஷித்து ஒருத்தரை மட்டுமே குறிக்கும் என்பது வியாகரணம்.

ஆதலால் யோகிகப் பொருள் கொண்டு ”நாராயணன் ‘ என்ற சொல்லை, இந்திரன், சிவன், ருத்ரன் பிரம்மன்
இவர்களுக்கு பொருந்த விட முடியாதோ , என்றால், ‘ண ” த்வம் ஒரு தேவதா விசேஷத்தைத்தான் குறிக்கும்
என்பது பாணினி சூத்திரத்தின் விதி.
அவர்கள் எல்லாம் ”ஸ்ரஷ்டம் ” என்பது பிரசித்தமும் கூட.
எனவே ”ஸத் ” ஆத்மா ” பிரஹ்மம் ” என்ற நாமங்கள் நாராயணனை மட்டுமே குறிக்கும்
ஆதலால், நாராயணனே ஸ்ருஷ்டி கர்த்தா, பர பிரஹ்மம் என்பது கரதலாமலகமாய் விளங்குமன்றோ?

பிரகிருதி காரணமா? என்றால் அதுக்கு உபாதான காரணத்வம் சொல்லப் போனாலும்,
நிமித்த காரணம் சொல்லப் போகாது , ஜ்ஞானம் இல்லையாதலால்.

சாந்தோக்கியத்தில் ஸத், ஆகாச, பிராண, சப்தங்களைச் சொல்லி ஜகத் காரணம் என்றது..
வாஜஸநேயத்தில் பிரஹ்ம்ம சப்தம் சொல்லி காரணத்வம் கூறப்பட்டது.

ஸகல வேதாந்த பிரத்யய நியாயத்தைக் கொண்டு சாமான்ய சப்தங்களை பிரஹ்மத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.
பிரஹ்ம சப்தத்தை சாக-பசுந் நியாயத்தாலே ஒரு தேவதா விசேஷத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த பிரஹ்மம் எது என்று கேள்வி எழ, தைத்ரீய உபநிஷத்தின் படி ஆத்ம சப்தத்திலே சேர்க்க வேண்டும்.

அந்த ஆத்மா யார் என்ற கேள்வி வர, ஸ்ருதிகளில் சொல்லப்பட்ட இந்திரனா?
அல்லது அவரைப் போல பிரசித்தமாய் இருக்கிற அக்நியா? உபாஸ்ய விஷயமான ஸூர்யனா?
அல்லது ஸோமந் தான் பிரஹ்மமா? குபேரனா? வருணனா? எமனா? என்ற சந்தேகம் எழ,
கர்ம வஸ்யராய் படைப்புக்கு உள்ளாகி, பரிமித ஐஸ்வர்ய தேவதைகளாகவும், பிரம்மாவினுடைய ஆயுஸ்
காலத்துக்குள்ளாக அழிவராகவும் இருக்கும் பக்ஷத்தில், அவர்களுக்கு பிரஹ்மத்துவம் சித்திக்க வழி உண்டோ? இல்லையே.

ஸ்வேதஸ்வேதா உபநிஷத்தில் ”சிவவஸ்ச காரணன் ” என்று சொல்லப் பட்டு இருக்கிறதே ?
அவர்தான் பிரஹ்மமோ? அதர்வ சிகையிலே சம்புவை காரணம் , சர்வத்துக்கும் ஆத்மா என்கிறதே?
தைத்ரீய உபநிஷத்தில் ஹிரண்யகர்பர்க்கு இதே காரணத்வம் சொல்லப் பட்டிருக்கிறதே? என்றால்
ஸாமான்ய-விசேஷ நியாயத்தாலே ஸம்பு, சிவன், ருத்ர வாச்யர்களை , ஹிரண்யகர்பர் என்கிற
பிரம்மாவிடத்திலே சேர்க்க வேணுமாகும் . காரணம் – சிவன், சம்பு என்று சொல்லப் படுகிற ருத்ரன்,
பிரம்மாவினுடைய கோபத்தால் புருவ நெறிப்பின் நடுவில் இருந்து பிறந்தான் என்றும்,
கபாலித்தவம் பவிஷ்யத்தலாகிற பாபங்கள் அவருக்கு புராணங்களில் படிக்கிற படியால்.

மஹோபநிஷது , நாராயண உபநிஷது , ஸுபாலோபநிஷது , மைத்ராயணி, புருஷ ஸூக்தம் ,
நாராயண அநுவாகம் , அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதிகளில்
பரம காரணத்வம்
ஸர்வ ஸப்த வாச்யத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ ஸரீரகத்வம்
நாராயணனுக்கே என்கிறபடியால், பிரம்மாவுக்குண்டான ஸ்வயம்பூ , ஹிரண்யகர்ப, பிரஜாபதி சப்தங்கள்
நாராயணிடத்தே பர்யவசானமாக , சாக – பசுந் நியாயத்தாலே நாராயணனே காரண பிரஹ்மம் என்று இறுதியாகத் தேறுகிறது.

அந்தராதித்ய வித்யா பிரகாரணத்தில் , சூர்ய மண்டல மத்திய வர்த்தி பர்க்க: = சிவன் என்று இருப்பதால்,
நாராயண பரத்வம் ஏற்பல்ல என்கிற வாதம் வந்ததாகில் அதற்கு சமாதானம் :

ஹர : சிவ: பர்க: சிவனைக் குறித்தாலும், தது ஸவிதுஹு வரேண்யம் பர்க: என்று இருப்பதால்,
தது – வரேண்யம் என்று ”நபும்ஸஹ ” லிங்கத்தோடே வருகிற பர்க: சப்தத்தையும்,
அது புல்லிங்க மானாலும், ”ஹார்ஷ பிரயோகமாக”, நபும்ஸக லிங்கமாகவே கொள்ள வேண்டும்.
அப்படி ”அ ”காரத்தில் முடிவதை ”ஸ ” காரமாகக் கொண்டால் , ”உயர்ந்த ஒளி ” என்றுதான் பொருள் படும்,
”சிவன் ” என்று அர்த்தம் வராது. ஆக அந்தராதித்ய வித்யா பிரகரணத்தில் சிவ தியானம் சொன்னதாக ஆகாது.
என்றால் நாராயண பரத்வத்துக்கு குறை இல்லை.

இதே போல தகர வித்யா பிரகரணத்தில் ”தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யப்பரஸ்ய மஹேஸ்வர:” என்று
ஹிருதய மத்தியில் இருக்கிற ஆகாசத்தை விஷ்ணுவாகச் சொல்லி, விஷ்ணுவுக்கு அந்தராத்மாவான சிவனை
தியானம் பண்ண வேண்டும் என்கிறது என்பர்.
”வி சோக:” என்பதற்கு சிவன் என்று கொள்ளாமல் அஷ்ட குணங்களில் உள்ள ”வி சோக:” என்கிற குணமாகக் கொண்டு,
அந்தராத்மாவான நாராயணனுடைய குணங்களை உபாசிப்பாய் என்றே கொள்ள வேண்டும்.
ஆக அந்த விதத்திலும் நாராயண பரத்வத்துக்குக் குறை இல்லை.

ஸப்ரஹ்மா ஸசிவஸ் ஸேந்திர ஸோ அக்ஷரப் பரம ஸ்வராட்| —
அந்த பரமாத்மாவே சிவன், இந்திரன், அக்ஷரம் அனைத்துமே என்கிறது விஷ்ணு ஸூக்தம்.
அவனே கல்யாண குணாத்மகனாய் , பிரகிருதி புருஷர்களோடு கூடியவராய், அவர்களைக் காட்டிலும் வேறு பட்டவராய்
இருக்கிற நாராயணன். அவரே ஜகத் காரணம் . மற்ற தேவதைகளின் பெயர்கள் ஜகத் காரண விஷயத்தில் ,
சரீராத்ம சம்பந்தத்தாலே அவை அனைத்தும் நாராயணனையே சொன்னதாக அமையும். காரணம்:

ப்ரஹ்மாச நாராயண: சிவச்ச நாராயண: என்று நாராயண உபநிஷத்திலும்;
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று ஆழ்வாரும் சொல்லி இருக்கிறபடியால்
சரீராத்ம பாவம் அவருக்கே பிரஸித்தம் .
மேலும் ”நீராய் நிலனாய் ..சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயனானாய் (திருவாயமொழி-6-9-1) என்று
சாமான்யதிகரணத்தில் ( முதல் வேற்றுமை உறுப்பில்) படித்ததும் சரீராத்ம சம்பந்தத்தைக் கொண்டே எனலாம்.

—————————————————————————————————————————————–

ஆத்மா – பரமாத்மா = இருவருக்கும் ஜ்ஞானம் பொது.
சேதனன் – பரம சேதனன்
தத்வம் – பரதத்வம் / பர பிருஹ்மம்
பிருஹ்மம் என்று சொல்ல தகுதி படைத்தவர் ஒருவரே. அவரே பர பிருஹ்மம் ஸ்ரீமந் நாராயணன்.
அவரே அகில ஜகத்துக்கும் மூன்று வித காரணமாயும் இருக்கிறார். ஆனால் தான் விகாரமடைவதில்லை.
தன்னோடு கூடி இருக்கிற சேதநா சேதனங்கள் நிலை பெருத்தலும் நீக்கலும் உடையன.
ஸ்தூல சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மம் ஸூக்ஷ்ம சேதநா சேதன விசிஷ்ட காரண பிருஹ்மமாய்
இருக்கையை நிலை பெருத்தலும் நீக்கலும் ஆகும்.
எதுபோல என்றால், 25 வயது கட்டிளங் காளை 60 வயது முதியவர் ஆகும்போது
அவருடைய சரீர கத மாற்றங்கள் ஆத்மாவை பாதியாது போலத்தான்

அங்கனாகில், ஆத்மா இந்த உடலோடு கூடி இருக்கும்போது, படுகிற இன்ப துன்பங்கள் ,
சேதநா சேதன விசிஷ்ட பிருஹ்மத்துக்கும் உண்டோ என்னில்? கிடையாது.

ஸம்ஸார பத்தமான ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களாகிற ஸ்வபாவ விகாரம் உண்டே ஒழிய,
ஸ்வரூப விகாரம் கிடையாது. இவை அனைத்தும் கர்மத்தால் வருவன. தோஷ பூயிஷ்டம்..

மாறாக பரமாத்மா விஷயத்தில், ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டுமே கிடையாது,
காரணம் அவருக்குச் சரீரமான சேதநா சேதனங்கள் அவருடன் கூடியிருப்பது அவருடைய சங்கல்பத்தாலே யாகி குண கோடியிலே சேரும்.

ஆனால், முக்த ஆத்மாவுக்கு பரமாத்மாவைப் போலே ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டும் கிடையாது,
அங்கு சென்றதும் கர்மம் தொலைந்து, ஸாரூப ஸாயுஜ்யம் பெறுவதாலே .

அத்துவைதிகள் பிருஹ்மம் ஒன்றே சத்தியம் . ஜகத்து கானல் நீரைப் போலே பொய்த் தோற்றம்.
ஆத்மாக்கள் பலவாக தோற்றுவது மாயை. அந்த மாயை எப்படிப் பட்டது என்றால், அநிர்வசனீயம்.
பிருஹ்மம் அவித்தையால் மறைக்கப்பட்டு, ஒன்றை பலவாக பிரமிக்கிறது. (அபேத ஸ்ருதி) வாக்கிய ஜன்ய (தத்வமஸி)
வாக்கியார்த்த (ஐக்கிய) ஜ்ஞானத்தாலே, அவித்தையாகிற திரை விலகி,
பிரஹ்மமே மோக்ஷம் அடைகிறது என்பது அவர்களுடைய மதம்.

பிரக்ருதி பிராக்ருதங்களுக்கு ஸ்வரூப, ஸ்பாவ விகாரம் இரண்டும் உண்டு.
பத்த ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் கிடையாது. ஸ்வபாவ விகாரம் மட்டும் உண்டு.
தத்வம் எல்லாம் ஒன்று என்றால், இப்படியான தோஷங்கள் பிருஹம்மத்துக்கும் வந்து சேரும் அல்லவா?
என்கிற விசிஷ்டாத்வைத வாதத்துக்கு எதிர்வாதம் :

நேஹ நாநாஸ்தி கிஞ்சந …பல என்பது இல்லை. பல என்று படித்தால் சம்ஸாரம் சித்திக்கும் என்பதும்
சாத்திர வசனம் தானே இது போன்ற ஆக்ஷேபங்கள் வருமே? என்றால்

போக்தா போக்கியம் பிரேரிதாம் ச மத்வா க்ஷரம் பிரதானம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநா ஈஷதே தேவ ஏக: என்று
பேத ஸ்ருதிகள் தத்வங்களை மூன்றாகப் பிரிக்கின்றன.

யஸ்ய ஆத்மா சரீரம், யஆத்மா நவேத யஸ்ய பிருதிவி சரீரம், யம்பிருதிவி நவேத என்கிற
அந்தர்யாமி ப்ராஹ்மணங்களில் சொல்லப் பட்ட கடக வாக்கியங்களை முக்கியமாகக் கொண்டு,
அத்துவைத -துவைத மத சங்கடங்களைப் பரிகரிக்கலாவது.

ஸஜாதீய பேதம் = ஒரே ஜாதியில் வெவ்வேறு வகை = மா, பலா என்று மரங்களிலேயே வேறு வகை.
விஜாதீய பேதம் = வேறு ஜாதி வேறு பொருள் = மலை, மரம் என்கிற இரு வேறு ஜாதி
ஸ்வகத பேதம் = ஒரு வகையில், வேறு வேறு பிரிவு, பாகங்கள் = மரம், கிளை, பூ, காய், பழம் என்பன.

சங்கரர் இந்த மூன்றுவித பேதங்களும் பிரஹ்மத்துக்குக் கிடையாது என்கிறார். அதாவது

பிரஹ்மம் ஜ்ஞான முடைத்து. சஜாதீயமான (ஜ்ஞான வாச்சயமான) ஆத்மா தனிப்பட இல்லை யாதலால் ஸஜாதிய பேதமில்லை.

ஜடப் பொருள்களுக்கு ஜ்ஞானமில்லை. ஜெகன் மித்யா வாதத்தால் விஜாதீயமான பேதமும் இல்லை.

ஜ்ஞான முடைய பிரஹ்மத்துக்கு, குணங்கள் இல்லை யாதலால் , ஸ்வகத பேதமும் இல்லை என்பர்,

ஆத்மா, பிரக்ருதி , குணங்கள் மூன்றும் பிரஹ்மத்தைப் போலே சத்தியம், நித்தியம் அனந்தம் ஆகையால் ,
ராமானுஜ ஸம்பிரதாயத்தில் திரிவித பேதமும் ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

இந்த மூறு பேதமும் கிடையாது என்கிற அத்துவைதிகள் , சரீர கத தோஷம் ஆத்மாவுக்கு உண்டு போல் ,
அந்தர்யாமி பிரம்மத்துக்கும் சேதநா சேதன விகாரங்கள் வாராதோ என்று ஆக்ஷேபிக்க , அதற்கு உத்தரம் என்ன வென்றால் :

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா – என்று வியாப்பியம் சொன்ன விடத்தில்,
வியாப்பிய கத தோஷமும் தட்டாதவர் என்கிற வாக்கியங்களும் சேர்த்தே படிக்கிற படியால்,
அமலன், விமலன், நின்மலன் நீதி வானவன் – என்றார் திருப்பாணாழ்வாரும்.

யோகபத்யம் அனுக்கிருஹ கார்யம். விஷம ஸ்ருஷ்டிக்கு ( படைக்கப் பட்டவைகளுள் ஏற்ற தாழ்வுக்கு)
அவரவர் கர்மா காரணமே ஒழிய, பிரஹ்மம் காரணமன்று.
வீட்டை பண்ணி விளையாடும், விமலன் ..(நாச்சியார் திருமொழி) என்றபடியால்
பிரஹ்மத்துக்கு வைஷம்ய நைர்கிருண்ய தோஷம் இல்லை என்பது ஆண்டாள் திருவாக்கும் கூட .

படைப்பாளி பிருஹ்மம் நாராயணன் என்று தேறின பிறகு

கர்திருத்வ (செய்ப்பவர்)
காரயித்வ (செய்விப்பவர்)
நியந்திருத்தவ (உள்ளிருந்து நடத்துபவராய்)
பிரகாசயித்தவ (பிரகாசப் படுத்துவராய் )
அநுமந்திருத்வ (ஜீவ சுவாதந்ரியத்தைக் கொண்டு செய்யப் புகுகிற காரியங்களில் அனுமதிப்பிரதானம் பண்ணி )
சககாரித்தவ (கர்மானுசாரமாய் மேன்மேலும் பிரவர்திப்பித்து)
உதாசீனத்தவம் (சாஸ்த்ர வஸ்யத்தை இன்றி புறம்பே போகும் போது தடுக்கவும் தடுக்காமல் ,
ஆதரிக்கவும் செய்யாமல் திருந்துவான் என்று உதாசீனவது ஆசீனம் – நித்ய, நிரவதிக, நிருபாதிக, நிர்ஹேதுக கிருபை காரணம் )

இவை அனைத்தும் நாராயணனுக்கே குறைவின்றிப் பொருந்தும்.

ஆதார-ஆதேயத்வம்.
விதாதா-விதேயத்வம்.
சேஷி-சேஷத்வம்.

என்று சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான தொடர்பு போல,
ஆத்மாவுக்கும் (சரீரம்) பரமாத்மா (ஈஸ்வரன்) வுக்குமான தொடர்பு இவையாகும்.

அந்த ஈஸ்வரன் விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்து) இருக்கிறார். இப்படி அவர் வியாபிப்பதுவும் மூன்று படியாலே .

ஸ்வரூப வியாப்தி.
விக்ரக வியாப்தி
தர்ம பூத ஜ்ஞானத்தாலே வியாப்தி.

ஆத்மா அணுவாகையால், தர்ம பூத ஜ்ஞான வியாப்தி தவிர்ந்த மற்ற இரண்டும் கிடையாது.

ஈஸ்வரன் அனந்தன் . அதாவது அந்த மற்றவன்.

கால அபரிச்சினன் (நித்யமானபடியாலே)
தேச அபரிச்சினன் (எங்கும் வியாபித்திருக்கிற படியாலே )
வஸ்து அபரிச்சினன் (ஸமஸ்த வஸ்துக்களும் அவருக்கு சரீரமான படியாலே ).

சத்யத்வம்
நித்யத்வம்
ஆனந்தத்வம்
அமலத்வம்

இவை அவருக்கு ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஸ்ருஷ்டி உபஹிருதங்களான ஸர்வக்ஜ்ஞத்வம்
சர்வ சக்தித்வம் நிரூபித ஸ்வரூப குணங்கள்.

சௌலப்யம்
சௌசீல்யம்
வாத்சல்யம் இத்யாதி ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்.

காருண்யம் முதலியன ரக்ஷணத்துக்கு உபயோகியான குணங்கள்.

அந்த ஈஸ்வரன் அண்டங்களை படைப்பதற்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர்..
பிறகு சதுர்முக பிரம்மா, தக்ஷ பிரஜாபதி இவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து வியஷ்டி ஸ்ருஷ்டிகளைத்த தொடங்குகிறார்.
தான் விஷ்ணுவாக அவதரித்து காலம், மனுவாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ரக்ஷணத் தொழிலைச் செய்கிறார்.
ருத்ரன், மிருத்யு தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸம்ஹாரத் தொழிலைச் செய்கிறார்.
ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் இவரே செய்கிறார்.

இப்படியான ஈஸ்வரனின் நிலைகள் ஐந்து. இதை

விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய் , மண்மீதுழல்வாய், இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் (திருவாய்மொழி -6-9-5)
பாட்டு கேட்குமிடம்; கூப்பீடு கேட்குமிடம், குதித்த விடம் , வளைத்த விடம் , ஊட்டுமிடம் என்று ஆழ்வார்களில்
நம்மாழ்வாரும், ஆச்சாரியர்களில் பிள்ளை லோகாச்சாரியரும் பேசியுள்ளனர்.

பர – பரம பதத்தில் இருப்பு. – பரபிருஹ்மம் , பர வாசுதேவனான ஸ்ரீமந் நாராயணனாய் ஸர்வ லோக மஹேஸ்வரனாய் இருக்கும் இருப்பு.

வியூகம் – திருப்பாற்கடல் சயன வியூக வாசுதேவன் தன்னை நான்காக வகுத்துக் கொண்டு முத்தொழிலும் நடாத்துகின்ற கார்ய வைகுண்டம் வாசம்..

வியூக வாசுதேவன் -ஷாட்குண பூர்ணன் -கேசவன் சக்ரதாரி தங்க வர்ணம் ; நாராயணன் சங்கம் கருநீல வர்ணம் ; மாதவன் கதை மணியின் வர்ணம் ;
ஸங்கர்ஷணன் – ஜ்ஞான, பலம் – ஸம்ஹாரம் – கோவிந்தன் சார்ங்கம் நிலாவின் ஒளி ;
விஷ்ணு கலப்பை தாமரை மகரந்த வர்ணம் ; மதுசூதனன் கல் உலக்கை செந்தாமரை வர்ணம்;
பிரத்யுமனன் – ஐஸ்வர்ய, வீர்யம் – ஸ்ருஷ்டி- திருவிக்ரமன் வாள் நெருப்பு வர்ணம் ;
வாமனன் வஜ்ராயுதம் உதய சூர்ய வர்ணம் ; ஸ்ரீதரன் கோடாரி வெண்டாமரை வர்ணம்;
அநிருத்தன் – சக்தி, தேஜஸ் – ஸ்திதி – ஹிருஷீகேசன் மின்னல் வர்ணம் இரும்பு உலக்கை ;
பத்மநாபன் – சூரிய ரஷ்மி வர்ணம் பஞ்சாயுதம் ; தாமோதரன் இந்திரகோப வர்ணம் (பட்டாம்பூச்சி வர்ணம்) பாசக்கயிறு பிடித்திருப்பார்.

விபவம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள் .
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியுமானான் .
தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளில் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா ! – என்று ஆழ்வார் காட்டினபடி.

முக்கியாவதாரம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள். இவர்கள் மட்டுமே உபாசிக்கத் தக்கவர்கள். மற்ற.அநுபாஸ்யங்களான கௌணாவதாரத்தில்
ஸ்வரூப ஆவேசாவதாரம் – பரசுராம, பலராமர்கள்
சக்தி (அம்ச) ஆவேசாவதாரம் – பிரம்மா, ருத்ரன், மரீசி, வியாசர் இவர்கள்.

1. நம்முடையது பிறப்பு. அவனுடையது அவதாரம். நம் பிறப்பு கர்மத்தால். அவன் அவதாரம் தன் இச்சையால் (ஸ்வ சங்கல்ப்பத்தால்).
2. நாம் பிறந்து சிரமப் படுகிறோம். அவன் அவதரித்து மேன்மை அடைகிறான். ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமான:
3. நம்முடையது பாஞ்ச பௌதிக தேகம். (பிறந்த இடத்தும்) அவனுடையது அபிராக்ருத திருமேனி.
4. தர்மம் செய்து மேன்மை அடைய நம் பிறவி. நலிவுற்ற தர்மத்தை உத்தரிக்க அவன் அவதாரம்.
5. கர்மம் கழிய வேண்டி நாம் பிறக்கிறோம் . அதர்மத்தை அழித்து, ஸாதுக்களை ரக்ஷிப்பது பகவதவதார பிரயோஜனம்.
6. நாம் பிறவாதிருக்க வேண்டி அவன் பிறக்கிறான்

அந்தர்யாமி – ஹார்த்த ரூபியான – தகராகாஸ வாசி. தன்னை அநாதரிப்பவர்களையும் ஆதரித்துப் போருகிற இடம்.
இவனுடைய ஸ்வர்க்க நரகாதி யானத்திலும் விடாதே பற்றி இருக்கும் நிலை. உடன் கேடனாய் இருக்குமிடத்தும்,
தோஷ அஸம்ஸ்பிருஷ்ட்டனாய். ரிஷி யோகிகளுக்கும் பிரத்யக்ஷம்.

அர்ச்சை .- திருவாளன் திருப்பதிகள் தோறும் விக்ரக ரூபத்தில் எழுந்தருளி இருத்தல்.
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று கிருஹார்ச்சையாய் சந்நிதி பண்ணி அபூர்ணனைப் போலேயும்
அசகத்தனைப் போலேயும் இட்டது கொண்டு நிறைவு அடைபவனாய் ரக்ஷணம் பண்ணி போருமவன்.

ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வானமாமலை , திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் திருவேங்கடம் நைமிசாரண்யம் புஷ்கரம் பத்ரிநாத் முக்திநாத்.

தெய்வ
சித்த
மநுஷ்யர்களால்
ஏறி அருளப் பெற்ற க்ஷேத்ரங்கள் என அர்ச்சாவதார க்ஷேத்ரங்கள் நான்கு வகை.

பகவத் விபவ அவதார காலங்களிலும் ஆராதிக்கப் பெற்ற பெரிய பெருமாள், ராமப்பிரியன் போன்று
பெருமை உடைய அவதாரம் அர்ச்சாவதாரம். ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று பிரபத்திக்கு உகந்தவிடம் அர்ச்சாவதாரம் .
ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் பிரபத்தி பண்ணித்து அர்ச்சையிலே .

இந்த 5 நிலைகளிலும் ” அகலகில்லேன் இறையும் என்று லக்ஷ்மி விசிஷ்டனாகவே அவன் கோயில் கொள்கிறான் என்பது
வேத, இதிஹாச, புராண, ஆழ்வார் பாசுரங்களில் பிரசித்தம்.
ஆக, இது ஒரு மிதுன ஸம்பிரதாயமாய் ஏகாயான மதம் நிரசிக்கப் பட்டது .

—————————————————————————–

கடிகாசலம் என்கிற சோள சிம்ம புரம் தொட்டையாச்சார் ஸ்வாமியின் சிஷ்யர்
ஸ்ரீநிவாஸ குரு சாதித்த பால போத கிரந்தம் ”யதீந்திர மத தீபிகா” என்கிற இந்த நூல்,
பகவத் அவதாரங்கள் 10 போலே , ஆழ்வார்கள் அவதாரங்கள் 10 போலேயும் 10 அவதாரங்களைக் கொண்டது.
அவை பிரமாணங்கள் விஷயமான 3ம் + பிரமேயங்கள் விஷயமான 7 மாக 10 அவதாரங்கள். அவையாவன:

பிரத்யக்ஷ பிரமாணம்.
அனுமானப் பிரமாணம்,
சப்த பிரமாணம்
என்ற மூன்று.

அடுத்து பிரமேயத்துக்கான 7ல் திரவியம் 6 + அதிரவ்யம் 1. திரயங்களில் ஜடம் 4 + அஜெடம் 2.

பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்; (பராக்)
சுத்த சத்வமாகிற பரம பதம் (பராக்) 4ம் ஜடம்.

ஜீவாத்மா; (பிரத்யக்)
பரமாத்மா (பிரத்யக்) 2ம் அஜடம்.

லக்ஷ்மி லக்ஷியா அனயா தேவி. பூ நீளா தேவிகளோடு சேர்ந்து நம் குற்றங்களைப் பொறுப்பிக்குமவள் அவளே.
ஜீவாத்மாவுக்கு ஒரு மிதுனமே உத்தேச்யம். பகவான் உபாயமும், பிராப்பியமுமாய் இருக்க,.
பிராட்டி புருஷகார பூதை மற்றும் கைங்கர்ய பிரதி சம்மந்தியுமாவள். அவளை பற்றித்தான் பகவானைப் பற்ற வேண்டும்.
புருஷம் கரோதி இதி புருஷகார: நம்மை அருளாலே திருத்தி, அவனை அழகால் திருத்தும்,
பிராட்டியை முதலில் பற்றுவதற்குக் காரணம், உபாய அத்யாவசாயம் பலிக்கவே.
இவளுடைய அருளாலே அவனுடைய ஸ்வாதந்திரியம் மடிந்தால், தலை எடுக்கும் குணங்கள் :
நீரிலே நெருப்பு கிளருமா போலே ,
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யுமென்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம் .
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீலயம் . கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.
விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்.

அஸ்ய ஈஸானா ஜகத: விஷ்ணு பத்நி என்று அவள் நமக்கு சேஷியாய், விஷ்ணுவுக்கு பத்நியாய் , பிரதம கிங்கரியாய் விளங்குமவள்.

இந்த விஷயத்தில் ஒரு யோஜனா பேதம் உண்டு. பிராட்டியை பிருஹ்ம கோடியிலே சேர்ப்பதா? சேஷ கோடியிலே சேர்ப்பதா ? என்பதே அது.
விசிஷ்ட அத்வைதம் என்று பிரஹ்ம ஏக வாதமாய் இருக்க, பிராட்டியை ஆத்ம கோடியில் இல்லாது பிரஹ்ம கோடியில் சேர்த்தால்,
விசிஷ்ட துவைத்த சம்பிரதமாக வன்றோ தேறும்? என்பது தென்னாசார்ய பக்ஷம்.

நம் விஷயத்தில் அவளுக்கான ஆகாரத் திரயம் :(லோகாசார்ய பக்ஷம்)

புருஷகாரத்வம்.
சேஷித்வம்.
பிராபியத்வம்.
ஸ்வரூபதயா அணுத்வம்.
பகவத்விக்ரக வியாப்திதயா விபுத்வம் ஸம்பாவிதம்.

அவளுக்கு உபாயத்வம் இல்லை என்பதாம். உபாயத்வம் ஸ்வதந்திரனான பரமாத்மாவுக்கே அசாதாரணம்.
பிராட்டி உட்பட அனிதரர்கள் அவனுக்கு பரதந்திரப் பட்டவர்கள் என்பது கொண்டு.

தேசிக பக்ஷம்:

புருஷகாரத்வம்.
உபாயத்வம்.
பிராபியத்வம் .
ஸ்வரூபத்தாலேயே விபுத்வம் வியவஸ்திதம்.

—————————————————————————————–

இனி பத்தாவது அவதாரம் அ திரவ்யம்.

சம்யோக ரஹிதம் அதிரவ்யம். (Dimensionless-non object ) அதாவது அதிரவ்யங்கள் ஒன்றோடு ஒன்று சேர இயலாதன.

குணங்கள் ஒன்றொடு ஒன்று சேர இயலாது. ஆனால் அவை ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம்.
அதாவது ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் ஒன்றோடு ஒன்று சேராது
ஆனால் அவை சரீரமாகிய ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம். குணம் சரீரத்தை ஆஸ்ரயித்து இருக்கலாம்.
குணம் குணத்தை ஆஸ்ரயித்து இருக்கலாகாது.

அவஸ்தாஸ்ரயம் (மாறுதலுக்கு உட்படுவது) திரவ்யம் = உபாதானம்.

அ-திரவியங்களாவன :

ஸத்வம் = உண்மை அறிவாய், சுகமாய் லாகவமாய் அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. மோக்ஷ ஹேது .
அதுவும் இரண்டு வகை.
1. சுத்த ஸத்வம் = ரஜஸ் தமஸ் ரஹித விருத்தி (ரஜஸ் தமஸ் இல்லாத ஆஸ்ரயம்).
அவைதான் பரம பதமும் , பகவத் திவ்ய மங்கள விக்கிரகமும்.
2. மிஸ்ர ஸத்வம் = ரஜஸ் தமஸ் சகசாரி . பிரகிருதி, பிராகிருத்தங்கள்.

ரஜஸ் = அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. உலக விஷயங்களில் விருப்பம், ஆசை, பேராசை செயல்பாடு இவைகளுக்கு காரணம்.
ஸ்வர்க்க, பித்ரு லோக பிறப்பிக்குமதாய், அல்ப, அஸ்திர, ஆமுஷ்கிக பல, துக்க ஹேது .
மாறாக, பகவத் விஷயத்திலான விருப்பம், ஆசை, பேராசை, செயல் பாடு சத்வ குண பிராசர்யத்தால் வருவது.

தமஸ் = மறதி , மயக்கம், சோம்பல், தூக்கம், கவனக் குறைவு இவைகளுக்கு காரணமாகிறது. அஜ்ஞான ரூப, நரக ஹேது.

இம்மூன்றும் பிரளய தசையில் சமமாய் இருக்க , சிருஷ்டியின் போது வி சமமாய் (ஆகவே தான் ஸ்ருஷ்டி விஷம சிருஷ்டி யாகிறது?).
உபயுக்த மாகின்றன. ஸ்ருஷ்டி ரஜோ குண கார்யம். சம்ஹாரம் தமோகுண கார்யம். ரக்ஷணம் ஸத்வ குண கார்யம் .
பகவானுக்கு முக்குணங்கள் உண்டா என்றால் இல்லை. லீலார்த்தமாக, தன் இச்சையால் அவைகளை அவலம்பித்து கார்யம் செய்வார்.

ஸப்த = காற்றின் உதவியால் காதால் உணரப் படுவது. பஞ்ச பூதத்தால் ஆனது.
இதுதானும் வர்ணாத்மகம். அவரணாத்மகம் என இரண்டு வகை.
உயிர் எழுத்து (13), மெய்யெழுத்து (18), உயிர்மெய்எழுத்து (216) அனைத்தும் வர்ணாத்மகம்.
இவை மனுஷ்ய, தேவ உதட்டசைவுகளால் ஏற்படுவன.
மற்ற ஒலி வடிவங்கள் (பட்சிகளின் சப்தம், வாத்தியங்களின் சப்தம் இவை) அவர்ணாத்மகம் .

விஜாதீயமாய் பரமபதத்தில் உணரப்படிகிற சப்த ரூப ரஸ கந்தம் இங்கு சொல்லப் பட்டவைகளைக் காட்டிலும்
விலக்ஷணமானவை.வேறுபட்டவை.

பிரணவத்தின் உள்ள அகாரம் , சப்தங்களுக்கு உபாதானமாய் சொல்லப்படுவதால்,
சப்தம் அதிரவ்யம் என்பது பொருந்தாதே என்னில் , ”அ ” என்பது விஷ்ணுவைக் குறிக்குமாதலால்,
எப்படி விஷ்ணு ஜகத்துக்கு உபாதான காரணமோ, அதுபோல் சப்த ராசிகளுக்கு அகாரம் உபாதான காரணம் என்று
கொள்வதும் ஒளபசாரிகமாய் ஒழிய வஸ்துதா இல்லை.

ஸ்பர்ச = தொடு உணர்ச்சியால் அறியப் படுவது. வெப்பம், குளிர்த்தி, இரண்டும் அற்ற தன்மை என மூன்று வகையாக உணரப்படும்.
தண்ணீர் குளிர்த்தி. நெருப்பில் இருப்பது வெப்பம். நிலம், காற்று இவைகளில் இரண்டும் அற்ற தன்மையைப் பார்க்கலாம்.
இந்த ஸ்வபாவ குணங்கள் அவையவை நெருப்போடு சம்பந்தப் படும்போது மாறலாம்.
ஆனால் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். நெருப்போடு சம்பந்தப் பட்டால்
”பாகஜம்” என்றும், மற்ற நிலை ”பாகஜ அபேதம் ” என்றும் பிரிக்கலாம். உ.ம். அமிர்தம், பஞ்சு நெருப்பு, கல்லு, பசு இவை.

ரூப = நிறம், பளபளப்பு எனப்படுகிற அதிரவ்யம் ரூபம். அத்தை கண்களால் மட்டுமே உணர முடியும் .
மஞ்சளான அக்ஷதையை கண்ணால் பார்த்தும் , கைகளாகிற தொடு உணர்ச்சியாலும் அறியலாம்.
ஆனால் அதன் மஞ்சள் நிறத்தை கண்களால் மட்டுமே கிரஹிக்க முடியும். துவக் இந்திரியத்தால் ஆகாது.
எனவே ரூபம் கண்களுக்கு மட்டுமே விஷயம்.
நிறங்களில், வெண்மை, சிகப்பு, மஞ்சள், கறுப்பு என்று நால்வகை வர்ண பேதம் பார்க்கப் படுகின்றன.
பாஸ்வரம் =ஒளிவிடக் கூடிய (நெருப்பில் உள்ள சிகப்பு)
ஆபாஸ்வரம் = ஒளிவிடாத (ஜெபா குசுமாம் ) என்று நிறங்களை வேறு விதமாவும் பிரிக்கலாம்.

ரஸ = வாயிலுள்ள நுனி நாக்கால் உணரப்படும் சுவைகள் 6 – இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு , காரம்.
அடியார்களுக்கு ஆறு சுவை அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்கிற ஷட் ரஸமாகும்

கந்தம் = மூக்காகிற இந்திரியத்தினால் உணரப்படுவது. பூ, சந்தனம் இவைகளில் உள்ள நறுமணம்,
மல, மூத்திராதிகளில் உள்ள துர்நாற்றம் என்று இரண்டு வகை.
காற்று, ஜலம் இவைகளுக்கு இயற்கையில் மணம் இல்லாவிட்டாலும், ‘
‘கந்தவது பிரிதிவி ” என்ற வகையில் பூமியில் இருந்து உண்டாகும் பூக்களின் மகரந்த சேர்க்கையால்
காற்றுக்கும், ஏலம், கிராம்பு போன்றவைகளின் சேர்க்கையால் ஜலத்துக்கும் மணம் பாக பேதத்தால் சம்பாவிதம்.

ஆகாசம் – சப்தம் – காது
நெருப்பு – ரூபம் – கண் –
காற்று – ஸ்பர்சம் – தொடு உணர்சி
நீர் – சுவை – நாக்கு
நிலம் – மணம் – மூக்கு.

பஞ்சிகரணத்தால் எல்லாவற்றிலும் எல்லா குணங்களும் இருக்குமானால் , பிரதானமான குணங்கள் இவை.
பாகம் படும்போது மற்றைய குணங்கள் வெளிப்படுவது உண்டானாலும் அது நேரம் போகப் போக பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
இரும்பு கொதிக்கிறது என்றால், காய்ச்சும் போது கடின பதார்த்தம் திரவம் போல் ஆனாலும்,
உஷ்ணம் நீங்கும் போது மீண்டும் கெட்டிப் படும் என்பது இயற்கை.

ஸம்யோகம் – கூட்டறவுக்கான புரிதல் ஸம்யோகம். உ.ம். மேசை மேல் புத்தகம் இருக்கும் போது
புத்தகத்தின் ஒரு பகுதியும் மேசையின் குறிப்பிட்ட பகுதியும் சம்பந்தப் பட்டிருக்கும்.
அப்படியான மேசையின் ”மேல் ” புத்தகத்துக்கான சம்பந்தத்தை ” மேல்” என்கிற புரிதலால் அறிகிறோம். அந்த அறிவு ஸம்யோகம்.

கார்ய ச சயோகம் – இரண்டு ஆடுகள் முட்டிக் கொள்ளும்போது அதன் தலைக்கான சம்பந்தம்.
மரக் கிளையின் மேல் கிளி வந்து உட்காருதலால் ஏற்படுகிற சம்பந்தம். கையில் புத்தகத்தை எடுக்கும் போது உண்டாகும் சம்பந்தம் இவை.

கையோக ச சயோகம் – கையில் புத்தகம் இருக்க, உடலுக்கும் புத்தகத்துக்குமான சம்பந்தம்.
இது கையோகத்தில் அடக்கமாதலால், அதிவாதமாய் மறுக்கப் படுகிறது.
அதே கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டால் ஏற்படும் எதிர் நிலை விபாகச விபாகம் என்பர் தாரிக்கிகர் .
இதுவும் மறுக்கப் படுகிறது. இத்தை சையோகச அபாவத்தில் அடக்கிவிட முடியுமாதலால்.

ஆகார்யச சையோகம் – இரண்டு விபு தத்வங்களுக்கான சம்பந்தம். பிரஹ்மமும் காலமும் சம்பந்தப் பட்டிருத்தல்.
பிரஹ்மமும் பிரகிருதியும் சேர்ந்து இருத்தல்.

சக்தி.- நெருப்புக்கு சுடுதலாகிற தன்மையை எது செய்கிறதோ அதை சக்தி என்கிறோம்.
அதேபோல் எல்லாப் பொருட்களுக்கும் அதனதன் தன்மையை நிர்வகிக்கும் அதிரவ்யம் ”சத்தி” எனப்படும்.
காந்தமும்-இரும்பும் போலே . மந்த்ரம், மருந்து, இவைகளால் கட்டி இடாதபோது வெளிப்படுமது .

பரா அஸ்ய சக்திஹி விவிதைஸ்ச ஸ்ரூயதே — என்று சொல்லப்பட்ட விஷ்ணு சக்தி அதுவாகும்.
அது இந்திரியங்களுக்கு கோசரம் இல்லை.

தார்க்கிகள் சொல்லும் மேலும் 14 விதமான குணங்கள் தனித்து சொல்லாமல் மேல் சொன்ன 10 அதிரவ்யங்க ளுக்குள்ளேயே
அடக்கிவிடலாம் என்பது ராமானுஜ பக்ஷம்.

புத்தி, இச்சை சுகம் துக்கம் த்வேஷம் யத்தனம் இந்த 6ம் ஜ்ஞானத்தின் வெளிப்பாடு ஆகையால்
தனிப்பட்ட சொல்ல வேண்டியதில்லை ஜீவனுடைய ஜ்ஞாத்துக்குள் அந்தர்கதம் .

தர்ம அதர்மமௌ பாப புண்யௌ ஈஸ்வ்ர ப்ரீதி கோபௌ என தர்ம அதர்மங்களை ஈஸ்வர ஜ்ஞானத்துள் படிக்கலாம்.

சம்ஸ்காரம் எனப்படும் பாவனை, வேகம் , ஸ்திதி ஸ்தாபனம் (எத்தனைப் பிரயத்னப் பட்டாலும்
அதன் முன் நிலைக்கே திரும்புவது, நாய் வால் போலே ) மூன்றும் ஜ்ஞான விபாகமாகவும்,
வஸ்து ஸ்வரூபமாகவும், சையோகத்து க்குள்ளாகவும் சேர்த்து விடலாம்.

விபாகம் (பிரிவு) பிரதத்வம் (தனிமை) இரண்டும் அப் பாவ நிலையாய், சையோகத்துக்குள் அடங்கும்.

சங்கியா (எண்ணிக்கை), பரிமாண (மாறுதல்), திரவத்வ (நீரான தன்மெய்), ஸ்நேஹானாம் (பிசு பிசுப்பு)
இவை வஸ்து ஸ்வபாவமாய், தனிப்பட சொல்ல வேண்டியதில்லை.

குருத்வம் (எடை கூடிய நிலை) சக்தி- அதிரவ்யத்துக்குள் அடக்கி விடலாம். ஆக அதிரவ்யங்கள் 24 (அ ) 38 இல்லை 10 மட்டுமே.

சத்வ, ரஜஸ் , தமோ குணங்கள் பிரகிருதி சம்பந்தப் பட்டது. ஆத்மாவுக்கு இல்லை.
ஆனால் சரீரத்துக்குள்ளான ஆத்மாவுடைய தர்மபூத ஜ்ஞானம் முக்குணங்களால் மறைக்கப் படுவதால்
ஆத்மாவை அவை பாதிப்பதாக சொல்லப் படுகிறது.

சாத்விக ஜ்ஞானம் , சாத்விக காலம் என்கிற வழக்கு உபசார வழக்கே. உண்மையில் சரீரத்தில் சாத்விக தாதுக்கள்
மேலோங்கின காலத்து ஜ்ஞானம், சாத்விக வஸ்து பரிமித காலம் என்று கொண்டு ஒளபசாரிகமாக கொள்ளவேண்டும்.

ஆகாசம் – சப்தம்
நெருப்பு – ரூபம் + சப்தம்
காற்று – ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நீர் – சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நிலம் – மணம் + சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
என கலசி இருக்கும்.

சுத்த சத்வம் திரிபாத் விபூதியிலும் அதனை வளர்த்துக் கொடுக்கும் பகவானி டத்திலுமாய் இருக்கும் .

சையோக சக்தி கீழ்ச் சொன்ன
பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்;
சுத்த சத்வமாகிற பரம பதம்
ஜீவாத்மா;
பரமாத்மாவாகிற
6 திரவ்யங்களில் இருக்கும்.

ஆத்யாத்கமி சாஸ்திரமான இதில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டதும் இப்புடைகளாலே :

பிரகிருதி, ஜீவ பர பரிச்சேதம் சொல்லு முகேண தத்துவமும்; புத்தி பரிச்சேத முகேண ஹிதமும் (பக்தி, பிரபத்தி முதலான உபாயமும் ) ;
நித்ய விபூதி, ஈஸ்வர பரிச்சேத முகேண புருஷார்த்தமும்
(நித்ய விபூதியைப் பிராபிக்கை பிராப்தி என்றும் ஈஸ்வர கைங்கர்யம் பிராப்தி பலம் என்றும்) விளக்கப்பட்டன.

தத்வம் ஏகம் என்று சூரிகளும் ; அதுவே
ஆத்மா (ஜீவ, பரர்கள்) அநாத்மாவாய் (பிரகிருதி) இரண்டு என்று ரிஷிகளும்
போக்யம், போக்தா பிரேரிதா என்று மூன்றாய் ஸ்ருதியிலும் ;
ஹேயம் (சரீரம்), தஸ்ய நிவர்த்தகம் (கழிய வழி ) உபாதேயம் (கொள்ளத்தக்கது )
தஸ்ய உபாயம் ( அதை அடைய வழி) என நான்காய் இதர ஆசாரியர்களும் ;
பிராப்பியம், பிராப்தா, உபாயம், பலம், விரோதி என் அர்த்த பஞ்சகமாய் அஸ்மத் ஆசாரியர்களும்
அத்தோடு ஜீவா-பர சம்பந்தம் சேர்த்து தத்துவங்கள் ஆறு என்று சொல்பவரும் உண்டு.

எப்படிச் சொன்னாலும், சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் ஏக மேவ என்பதே வேதாந்தத்தின் முடிவு..
அதையே வேத வியாசரும் தன்னுடைய பிரஹ்ம சூத்திரத்தில் பிரஹ்ம ஜகத் காரணத்வத்தை முதல் இரண்டு அத்தியாயத்திலும்,
அத்தை அடைய உபாயம் பக்தியே என்று 3வது அத்யாயத்திலும், பிரஹ்ம சாயுஜ்யமாகிற முக்தியை 4வது அத்தியாயத்திலும்
காட்டியதான அந்த பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே தத்வம் என்பது விசிஷ்டாத்வைதிகளின் தர்சனமாகும் .

அற நூல் அளித்த அறிவின் வழி யாத்த
மறை நூல் ”யதிபதி போதநல் — நிறை கொள்
விளக்கம்” திருவளர் சீனிவாச மா குருநாம்
ஆள வகுத்த தொழுகு

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .