ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்

ஸ்ரீ உவே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் முதன் முறையாக ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை மேலைத் திரு மாளிகை ஸ்ரீ கோவிந்தாரியாருடைய பார்யை
ஸ்ரீ மதி அலமேலு மங்கை அம்மங்கார் அவர்கள் 1919-1920-தமிழக அரசின் கீழ்த் திசைச் சுவடி நூலகத்துக்கு வழங்கியதாக நூலாகக் குறிப்பு உள்ளது
ஓலைச் சுவடியின் தொடக்கத்தில்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை திரு மாளிகை பொன்னப்பங்கார் ஏடு –
என்று குறிப்பிடப் பெற்று உள்ளது

இந்த சுவடியின் தொடக்கத்தில்
நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மநே ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே -என்ற தனியனும்
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பத ஆஸ்ரயம்
வாஸோ பூஷா பிரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸா தரம் –

தேவ ராஜர் என்ற இயல் பெயர் கொண்ட நாலூர் ஆச்சான் பிள்ளை திருவடிகளைப் பற்றியவர்

ஸ்வாதீந தேசிகர் –கூர குலோத்தம தாசர் என்ற ஆச்சார்யரைத் தமக்கு அதீனராக யுடைய திருவாய் மொழிப்பிள்ளை என்றபடி
பாண்டிய அரசனின் பிரதான மந்திரியான திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை
ஆழ்வார் திருநகரியை காடு திருத்தி நாடாக்கி –
மறைத்து வைக்கப்பட்டு இருந்த நம்மாழ்வார் உத்சவ விக்ரஹத்தையும் தேடி எடுத்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்வித்து
ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அக்ரஹாரத்தையும் ஏற்படுத்தி
பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் பிரதிஷ்டை செய்வித்து
இவை அனைத்தையும் அவர் அரசுச் செல்வாக்குக் காரணமாக ஸ்வ ஆதீனமாகச் செய்த படியால் ஸ்வா தீன தேசிகர் என்று வழங்கப்பட்டார் -என்றுமாம் –

திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனைவருமே திருவாய் மொழிப்பிள்ளை என்றே வழங்கப்படுவதால்
மா முனிகளுக்கும் பிற்காலத்தில் வந்தவராலும் பண்ணப் பெற்றும் இருக்கலாம்


இதில் எங்கும் காணப்படாத சில அரிய ஐதிஹ்யங்கள் இடம் பெற்று உள்ளன –

1-உடையவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் -சூர்ணிகை -332-ல் காணப்படுகிறது
திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத் பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்த்வத்தை விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் என்ன –
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்து ஏற எழுந்து அருள
ஆழ்வானை அருளப் பாடிட்டு-பல வேளையிலே இப்படிச் செய்தாயே -என்ன
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால்
ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் -என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் பிரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே

2- இதே போல் பட்டருக்கு நஞ்சீயருக்கும் இடையே நடந்த பரிமாற்றம் வேறு எந்த நூலிலும் இடம் பெறாமல் இதில் சூர்ணிகை -338 ல் காணப் படுகிறது

பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்தது என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தானம் ஒழிய இல்லை என்ன
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே
ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளினை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போக விட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்திலே தனம் இருக்கிறது -அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திரு மாளிகையிலே செலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையில் வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர
அத்தைக் கண்டு அருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்து அழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள் என்று அருளிச் செய்தார் இறே

3- மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் செய்த சரம கைங்கர்யம் –
மற்ற வியாக்யானங்களிலும் குறிப்பிடப்பட்டாலும் இதில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் சம்வாதம் விரிவாக உள்ளது -சூர்ணிகை -234-

இச் செய்தியை உடையவர் கேட்டருளி ஸ்ரீ பாதத்திலே சென்று கண்டு லோக உபக்ரோஸம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினாள் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆகில் அங்கு உற்றைக்கு அநந்யார்ஹனான அடியேனை நியமிக்கலாகாதோ என்ன
ஆசார பிரதானரான பெருமாள் இப்படி பெரிய உடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜனும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமைகளுக்கு நான் போடும் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடைவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது -என்கிறார்
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையால் நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் அத்தனை
நான் பெருமாளின் அதிகனாய் தவிரவோ
இவர் அப்பஷியில் தண்ணியராய் தவிரவோ என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் என்று பிரசித்தம் இறே

4- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே
கீழை யூரிலே தேவதாசி பக்கலிலே சக்தராய் சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே
இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க -அத்தாலே விஷண்ணராய்ப் பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும்
இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்பந்திக்க
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு வந்து ஸ்ரீ பாதத்தின் கீழே தெண்டனாக விழுந்து
இப்படி இவ்வடிகளுக்கு அமுதுபடி த்ரோஹ பர்யந்தமாக ஆத்ம நாசம் பிறக்கும் அளவில் தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக -உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே
அப்போதே அவர்கள் நினைவு மாறி என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய் இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர
அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாமாய்த்து –

5- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வார் –

6- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி வினோத அர்த்தமாகப் புறம் திண்ணையைக் காட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்திய ராத்திரி யானைவாறே
தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என் -இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக
அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு அவர்களால் வந்த
வியஸனத்தை நிவர்த்திப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக
அத்தை அவளுக்கு ஸூஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் –என்றும் –


இதிஹாச புராண கதைகள் –
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹருதீ கரித்து சூர்ணிகை -260-இல் –

ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வார்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு தம் அசல் அகத்தில் அவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற யம தூதரும் வந்து ப்ரவேசிக்க -இவன் கையும் திருப் பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு
மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய் ப்ரவேசித்துக் கிடக்க-அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க
அத்தைக் கண்டு அப் பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித்த திருவடிகளிலே சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே

அடுத்தது சூர்ணிகை -321-இல்
இந்த குரு ஸூஸ்ருஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச சென்ற ப்ராஹ்மண புத்ரனைத்
தன்னுடைய பசு பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து அப் பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக்
கன்று உண்கிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகைகளாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து அப்பச்சிலைகளும் தீய்ந்தவாறே
எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க
அவ்விடத்திலும் கன்றுண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

நிர்வாஹங்கள்
சூர்ணிகை -54-
பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமா போலே
இதுக்கு -மா முனிகள் -தாமப்பனுக்கு புத்ரனானவன் –நீ என்னை ரக்ஷிக்க வேணும் -என்று எழுத்து வாங்கினால்
இவரோ -ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே –என்று அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -165-இல்
ஆபரணம் அநபிமதமாய்-அழுக்கு அபிமதமாய் -இரா நின்றது இறே
இதற்கு மா முனிகள் -லோகத்தில் விஷய ப்ரவணராய் இருப்பவருக்கு அபிமத விஷயத்தினுடைய ஓவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய்
அநவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே -என்கை –
இவரோ -அதாவது ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு -இவளை அந்தப்புரம் ஏற அழைப்பியுங்கோள் என்று அந்தரங்கரை நியமிக்க –
அவர்கள் பயாதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கு என் வந்தாள் என்று அநாதரிக்க
அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்து புஜித்தான் என்று ப்ரஸித்தம் இறே -என்று இவ்விஷயம் ஒரு கதை போலச் சொல்லப் படகியுள்ளது –

சூர்ணிகை –181-இல்
அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே
என்பதை விளக்க -அத் தோஷமாவது -ஸ்மஸாந அக்னி கிளம்பினால் மருங்கு அடைந்து தூற்ற அளவிலே சுடும் –
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்னீ பாத்திரங்கள் எல்லாவற்றையும் தக்தம் ஆக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனான இவ் வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் என்று விளக்கமாக உள்ளது –
மற்ற வியாக்யானங்களில் இந்த விளக்கம் இல்லை –

சூர்ணிகை -96-இல்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும்
இதுக்கு மா முனிகள் -சமமானது அந்தக்கரண நியமனம் -தமமாவது பாஹ்ய கரண நியமனம்
இவரோ -சமமானது பர தாராதிகளில் போகாதபடி இந்திரியங்களை நியமிக்கஇ
தமமாவது -உபஸ மனம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
என்று அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –240-இல்
ஜீவாத்மாக்களுக்கும் பிராட்டிக்கும் ஆறு பிரகாரங்களால் சாம்யம்
இத்தை விளக்க மற்ற வியாக்யானங்களில்
1-அநந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரண்யத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4- ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5- விஸ்லேஷத்தில் தரியாமை
6-தத் ஏக நிர்வாஹ் யத்வம்
இவரோ
ஞான -ஆனந்தங்களும் -சேஷத்வ பாரதந்தர்யங்களும் -ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் -விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையும்
ஆகிற அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே அவளோடு ஸர்வ ஸாம்யம் இல்லையாகிலும்
இவ்வாறு பிரகாரங்களாலே தத் ஸாம்யம் யுண்டு என்கிறார்
இவளுக்கு உண்டான அதிகமான பிரகாரங்கள்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ சம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூரகத்வம் -முதலானைவை இறே என்று
வேறு ஆறு பிரகாரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் வேறுபாடுகளும் உண்டு என்று சுட்டிக் காட்டப் படுகிறது

சூர்ணிகை –169-இல்
பரம ஆர்த்தனைப் பற்றியது
இத்தனை விளக்கும் போது
ஆர்த்தன் என்பது –

ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
என்று ஆர்த்தனிலும் திருப்தானிலும் மூன்று வகைகளை அருளிச் செய்கிறார்
இந்த விஷயம் மற்ற வியாக்யானங்களில் கூறப்பட வில்லை

சூர்ணிகை – 335-இல்
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி என்ற ஸூ த்ரத்துக்கு
சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும் -ஆச்சார்யனுக்குத் தன்னுடைய தேஹ ரக்ஷணமும் கர்த்தவ்யம் அன்று என்றதாயிற்று -மா முனிகள் வியாக்யானம்
இவரோ
அதே கருத்தும் மற்ற ஒரு நிர்வாஹமும் -அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யன் தான் -தான் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே
அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும்
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் சிஷ்யன் தான் பலகாலும் ப்ரவர்த்தித்திக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம்

———-

பாசுரங்களின் உட் பொருள்கள்
இன்னார் தூதன் என நின்றான் -பாசுர விளக்கம் -சூர்ணிகை -5-இல்
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க நிற்கையாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
அதாவது -நின்றான் -முன்பு இருந்த குறை தீர்ந்து பூரித்து நின்றான் –

சூர்ணிகை -380-இல் அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் -என்பதற்கு
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியும் சினம் உண்டாகக் கூடாது இறே –
அகற்றிடினும் -கூடாதது கூடினாலும் என்றபடி –

—-

ஸூ த்ரங்களின் சொல் பொருள்களின் உட் கருத்து
ஈஸ்வரன் தானும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு இருக்கும் -என்றதன் கருத்தை
அடுத்த சூர்ணிகை வியாக்யானத்தில்
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும்படியான
இரண்டு தலையையும் சத்தை உண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு –
அவதரித்து
தூத்ய முகேந கடகனாய்
இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போனதான் இறே
அர்ஜுனனைக் குறித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றதும் கார்யகரம் ஆய்த்து இல்லை
அது பின்புள்ளாருக்கு-ஸதாச்சார்ய உபதேசத்தகாலே பலமாயிற்று இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை என்கிறது –
ஸ்வ தந்த்ரனான இவனால் ஆசைப்பட மட்டுமே முடியும் -என்பதைக் காட்டி அருளுகிறார்


பிரமாணங்கள்
மற்ற வியாக்யானங்களில் இல்லாத பலவும் இவரால் காட்டப்பட்டுள்ளன
சூர்ணிகை -268-இல்
ஆசா மஹா சரண ரேணு ஜூஷா மஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மலத ஒவ் ஷதீ நாம் யா துஸ் த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் சுருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸு நாம் வா ந காமயே காம் கதம்போ பூயாஸம் ருந்தோ வா யமுனா தடே என்றும் இத்யாதிகளாலே
ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்த் தாவராதிகளை ஆசைப்பட்டான் இறே

——-
உவமைகள்
வேறு உபாயங்களைக் கை விடுகைக்கு காரணம் அவை ஸ்வரூப விரோதங்கள் -சூர்ணிகை -115-என்ற கருத்தை விளக்க
ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும்-குடம் சுமைக்கையும் அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார்

சூர்ணிகை -174-இல்
ஆறு ஏறினாருக்குத் தெப்பம் வேண்டாவோ பாதி -என்ற உதாரணமும்

சூர்ணிகை -199-இல்
வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வதா ரோஹணம் பண்ணுமோ பாதி -என்கிற உதாரணமும் காட்டப்படுகிறது –

——————–

ஸூத்ர அர்த்தோ வர்ண்யதே தத்ர வாக்யை ஸூத்ர அநு சாரிபி
ஸூத்ரத்தை அநு சரித்த வாக்யங்களால் ஸூத்ரார்த்தம் இதில் வர்ணிக்கப்படுகிறது –

————

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

தஸ்மை ராமாநுஜார்யாய -நம பரம யோகிநே -யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் –ஸ்ருத பிரகாசிகை

பூர்வ அபிதேயேந ஸஹ யேந தர்ம விசேஷண அனந்தர அபிதேயஸ் சம்பத்யதே ஸ தர்ம விசேஷ அனந்தர அபிதேய விஷ்டஸ் சங்கதி
இதுவே சங்கத்தின் லக்ஷணம்
முதலில் சொல்லப்பட்ட விஷயத்துடன் எந்த தர்ம விசேஷத்தால் அடுத்துச் சொல்லப்படும் விஷயம் சம்பந்தித்து இருக்கிறதோ
அடுத்துச் சொல்லப்படும் விஷயத்தில் உள்ள அந்த தர்ம விசேஷம் சங்கதி ஆகும்

முதல் திருவாய் மொழி -பரத்வ பரம்
இரண்டாம் திருவாய் மொழி பஜ நீயத்வம்
பரத்வம்-காரணம் -பஜ நீயத்வம் -கார்யம் -மேன்மை உள்ள வஸ்துவைப் பற்றினாள் தானே புருஷார்த்தம் கிட்டும் -கார்யதா சங்கதி

மூன்றாம் திருவாய் மொழி -ஸுலப்ய பரம் -பஜ நீயத்வம் வர இதுவே காரணம் -காரணதா என்பது சங்கதி

அப்படியே
ப்ரசங்க
ஆக்ஷேப
த்ருஷ்டாந்த
ப்ரத் யுதாஹரணம்
அபவாதம்
அதி தேச
உபோத்காத –முதலிய பல சங்கதிகள் உள்ளன

இவை அனைத்துமே ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையால் நன்கு காட்டப் பட்டுள்ளன –

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

———

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தம்மை மிகக் கொண்டு கற்றோர் -தம்முயிர்க்கு
மின்னணியாய்ச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம்
என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் பி-

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல இவ் வார்த்தை மெய் இப்போது

சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

————

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற -ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading