ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –
—————
சூரணை -308-
தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –
தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –
————–
சூரணை-309-
தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —
தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –
இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –
பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை
ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –
—————
சூரணை -310-
நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –
இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –
—————
சூரணை -311-
சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –
ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –
———————-
சூரணை -312-
இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –
ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –
—————–
சூரணை -313-
ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன் பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –
ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –
—————-
சூரணை -314-
கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –
இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –
———-
சூரணை -315-
நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –
நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –
———–
சூரணை -316-
சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –
ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –
—————
சூரணை -317-
பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –
சூரணை-318-
சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –
சூரணை -319-
இது தான் ஒவ்பாதிகம் –
சூரணை -320-
சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )
ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-
Leave a Reply