நமஸ் ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜன்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலி நே
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பதாஸ்ரயம்
வஸோ பூஷா ப்ரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸாதரம் —
—————
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –
—————
முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –
மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –
———–
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான -ஸர்வேஸ்வரன் -தன் நிர்ஹேதுக கிருபையாலே
அசித் அவிசேஷிதாந் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
கரண களேபர விதூரராய் -போக மோக்ஷ ஸூ ன்யரான சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
இவர்களுக்கு புருஷார்த்த -தத் சாதன -ஞானம் பிறக்கைக்காக வேதங்களையும் -வேத உப ப்ரும்ஹணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் கொடுத்து அருள
அவற்றில் சொல்லுகிற தத்வ ஹித புருஷார்த்தங்கள் ஒருவருக்கும் அவகாஹித்து அறிய அரிதாகையாலே
தத் அவகாஹன சதுரரான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்த வசன ஸ்ரேஷ்டங்களாலே அலங்க்ருதமான அர்த்த விசேஷங்களை
பிள்ளை தம் பரம கிருபையாலே இவ்வசன பூஷண கிரந்த முகேந அருளிச் செய்கிறார் –
சூர்ணிகை -1- வேதார்த்தம் அறுதியிடுவது -ஸ்ம்ருதி -இதிஹாஸ -புராணங்களாலே –
இத்தால் இப் பிரபந்த ப்ரதிபாத்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரதிபாதிக ப்ரமாணம்
பிரம விப்ர லம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமான வேதம் என்னும் இடம்
உபக்ரமத்திலே -உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று அருளிச் செய்கையாலும்
ப்ரத்யக்ஷம் ஏகம் ஸர்வாகா -இத்யாதி க்ரமத்திலே அல்லாதார் ப்ரத்யஷாதிகளை ப்ரமாணமாகக் கொள்ளா நிற்க
ஆதவ் வேதா பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்று பிரமாணாந்தரங்களில் பிரதான பிரமாணமாக பட்டர் வேதத்தை அங்கீ கரிக்கையாலும்
இவரும் வேதார்த்தம் அறுதியிடுவது -என்று உபக்ரமித்து அருளிச் செய்கிறார் –
வேதார்த்தம் அறுதியிடுவது –
பூர்வ உத்தர பாக த்வய ரூபமான நிகில வேத வேதாந்த தாத்பர்ய நிச்சயம் பண்ணுவது –
ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே -என்றது
ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே-என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ யேத் -என்றும்
சொல்லுகையாலே இவற்றைக் கொண்டே அவற்றை அறுதியிட்டு வேண்டும் என்கிறார்
———————————
சூரணை-2
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
ஸ்ம்ருதியாலே இத்யாதி –
இத்தால் இந்த வேதத்தினுடைய பூர்வ உத்தர பாக்க த்வயத்தில்
கபந்த மீமாம்சகனான பாட்டனையும்
ராஹு மீமாம்சகனான மாயா வாந்தியையும்
போல் அன்றிக்கே -உபய பாகமும் ஏக ஸாஸ்த்ர தயா பிரமாணமாக அங்கீ க்ருதம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
இதில் எந்த பாகத்தில் அர்த்தம் எத்தாலே அறுதி யிடக் கடவது என்னில்
ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தங்களை விதிக்கிற ஸ்ம்ருதியாலே கர்ம பாகமான பூர்வ பாக அர்த்தத்தை அறுதி யிடக் கடவது என்கிறார்
மற்றை இரண்டாலும் -இத்யாதி
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டி தாதிகளை பிரகாசிப்பிக்கிற இதிஹாஸ புராணங்களாலே உத்தர பாக அர்த்தத்தை அறுதி இடக் கடவது -என்கிறார் –
——–
சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –
இவை இரண்டிலும் -இத்யாதி
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் -இத்யாதிப்படியே
பகவத் அவதாரமான வேத வியாசனனாலே மஹா பாரதம் ப்ரவ்ருத்தமாகையாலும்
வேத வேத்யே பரே பும்ஸி -இத்யாதிப்படியே
சாஷாத் வேத அவதாரமான ஸ்ரீ ராமாயணம் அயோ நிஜரான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரவ்ருத்தமாகையாலும்
இதிஹாசம் ப்ரபலம் என்கிறார் –
———-
சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –
அத்தாலே அது முற் பட்டது –என்றுகீழ் உக்தமான பிரகாரத்தாலும்
இதிஹாஸ புராணாநி கல்பான் என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் -என்றும்
இத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் முற்பட எடுக்கையாலே
புராணத்துக்கும் ப்ரமாணத்வ ஸாம்யம் உண்டாய் இருக்க இதிஹாசம் முற்பட்டது
வர்ண ஸாம்யம் உண்டாய் இருக்க க்ஷத்ரியாதிகளுக்கு முன்னே ப்ராஹ்மணனை எடுக்குமா போலே முற்பட்டது -என்கை –
———
சூரணை -5-
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-
இனி -இதிஹாஸ ஸ்ரேஷ்டம் -என்றது
நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி
பாரத வம்சத்தையும்
பூசல் பட்டோலையும் -புணர்ந்து
தத் அர்த்தமாக -வாசம் ஸுரி கதாலாப கங்கயைவ புநீம் அஹே -என்று எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாத படி
கோன் வஸ்மின் -என்று தொடங்கி அவனுடைய அவதார சேஷ்டிதங்களையே சொல்லித் தலைக்கட்டுகையாலே
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -இத்தால்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும்
ஸ்ரீ மத் ராமாயணம் அபி பரம் ப்ரணிதா த்வச் சரித்ரே -என்றும் சொல்லுகிறபடியே
சாமாந்யேன ஸ்திரீகளுக்குச் சிறை இருக்குமது ஹேயமாய் இருக்க
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற தன்னை
அழிய மாறி
சிறை இருந்த தேவ ஸ்திரீகளை விடுவித்து
அவ்விருப்பிலே பிராணி ரக்ஷண அர்த்தமாகாது தான் இருக்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்கிறது –
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -என்னக் கடவது இறே
மஹா பாரதத்தில் –இத்யாதி
ஸ்திரீகளுக்கு சிறை இருக்குமோ பாதி புருஷனுக்கு தூது போகை ஹேயமாய் இருக்க
புருஷோத்தமனான தான் ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே
இன்னார் தூதன் என நின்றான் -என்னும்படி
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க -நிற்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்லுகிறது –
——–
சூரணை-6-
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –
இவை இரண்டாலும் இத்யாதி
ஆக -வேதார்த்தம் என்று தொடங்கி -பிராமண சோதனத்தைப் பண்ணி –
இப்படி சோதிதமான பிராமண ப்ரதிபாதிதமான அர்த்தம் புருஷகார -உபாயங்கள் -என்று பிரதமத்திலே ப்ரஸ்தாவித்து –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா – என்று
தர்மே பிரமீய மாணே ஹி வேதேந கரணாத்மநா -என்றும்
தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாய ஸம்பவாமி -என்றும்
வேதங்களுக்கும் வேத்யனுக்கும் சேதனர்க்கும்
சித்த ஸ்வரூபமான தர்ம சம்ஸ்தாப நத்திலே தாத்பர்யமாகையாலே
இப்பிரபந்தத்திலும் ஒரு முமுஷுவுக்கு ஞாதவ்யமான தத்வ ஹிதாதி ஸகல அர்த்தங்களையும் சாதியா நின்றதே யாகிலும்
உபாய யாதாத்ம்யத்தை வெளியிடுகையிலே தாத்பர்யமாகையாலே அதுக்கு உபயுக்தமாக பிரதமத்திலே புருஷகார உபாயங்களை அருளிச் செய்கிறார் –
சிறை இருக்கையும்
தூது போகையும் -ஆகிய
இவை இரண்டாலும் புருஷகார உபாயங்களினுடைய வைபவங்களை சொல்லிற்றாய் விட்டது என்கிறார் –
————
சூரணை -7-
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-
புருஷகாரமாம் போது -என்று தொடங்கி
ப்ரஸ்துதமான புருஷகார வேஷத்துக்கு அனுரூபமான குணங்களை விதிக்கிறார் –
இதில் கிருபை வேணும் என்றது –
தன்னைப் பற்றும் போது அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே -சேதன விஷயமாக கிருபை வேணும்
புருஷகார தசையில் தான் ஈஸ்வரனைப் பற்றும் போதும் அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே
அவனுக்கு சேஷபூதையாய் நம்முடைய நினைவே தனக்கு நினைவாம்படி இருக்கிறவள் சொல்லும் கார்யம் என்றும்
கொள்ளுகைக்காகவும் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் என்கிறது –
————————
சூரணை-8-
பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –
பிராட்டி முற்படப் பிரிந்தது –இத்யாதியாலே
யுக்தமான குணங்கள் புருஷகாரத்துக்கு பிராமண ஸித்தம் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –
இதில் முற்படப் பிரிந்தது கிருபையை வெளியிட்டபடி எங்கனே என்னில்
இஹ சந்தோ ந வா சந்தி -இத்யாதியாலே
பர அநர்த்தம் கண்டு ஸஹிக்க மாட்டாதே
மித்ர மௌபயிகம் கர்த்தும் -இத்யாதியாலே அநர்த்த பரிஹாரத்தை அருளிச் செய்கையாலும்
கார்யம் கருணமார்யேண – என்று தன்னை நலிந்தாரையும் ரஷிக்கை யாலும்
கிருபையை வெளியிட்டு அருளினாள்-
வந வாஸ வ்யாஜேந வந்த நடுவில் பிரிவில்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்துர் மா பரிஹாஸ்யதி என்று
பெருமாள் நினைவை பின் சென்று
பாஸ்கரேண ப்ரபா யதா -என்கிற தான் பிரிந்து இருக்கையாலே
பாரதந்தர்யத்தை வெளியிட்டாள் -என்கிறார்
அநந்தரம் -இத்யாதியாலே
வால் மீகி தன் ஆஸ்ரமத்தில் நின்றும் இவளை எழுந்து அருள்வித்துக் கொண்டு வர
ஜனக ஸமான மஹரிஷி இடத்திலே இருக்கையாலே நீ செய்ய வேண்டுவது ஓன்று இல்லையே யாகிலும்
லோக அபவாத பரிஹார அர்த்தமாக ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணி வா என்ன
நான் பெருமாளுக்கு அநந்யார்ஹை யாகில் பூமி நீயே ஜனனியானமை தோற்ற இடம் தா -என்று
எழுந்து அருளுகையாலே அநந்யார்ஹத்தை வெளியிட்டு அருளினாள் என்கிறார் –
————–
சூரணை-9-
சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –
சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் – என்றது
இப்படி அவதார ப்ரயுக்தமான ஸம்ஸ்லேஷ தசையோடு விஸ்லேஷ தசையோடு வாசியற
ஸீதா சமஷம் காகுஸ்த்தம் இதன் வசனம் அப்ரவீத் -என்றும்
ஸீதாம் உவாஸ -என்றும் சொல்லுகையாலே -ஸம்ஸ்லேஷ திசையிலும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ –இத்யாதிகளாலே விஸ்லேஷ தசையிலும் புருஷீ கரிக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் ப்ரகாசிக்கும் என்கிறார் –
—————-
சூரணை-10-
ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –
ஸம்ஸ்லேஷ தசையில் இத்யாதியாலே
இவள் இன்ன தசையில் இன்னாரைத் திருத்தும் என்னும் வகையை அருளிச் செய்கிறார்
————-
சூரணை -11
இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –
இருவரையும் நிறுத்துவதும் -என்று தொடங்கி
இவ்வகையில் இவள் திருத்தும் பிரகாரம் ஏது என்ன
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைத் திருத்தி உபதேசிக்கை யாவது –
பிதேவ த்வத் ப்ரேயான் -இத்யாதியில் படியே
தேஹம் பொல்லா வாக்கை -தேஸம் இருள் தரும் மா ஞாலம் -தேசிகரோ என்னில் பகவத் விமுகர்
மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -இவர்கள் தோஷத்தை வாத்சல்யத்துக்கு இரையாக்கி அங்கீ கரித்து அருளீர் -என்று உபதேசிக்கையும்
இச்சேதனனைத் திருத்தி உபதேசிக்கை யாவது
விதித –இத்யாதி களாலே அவனுடைய வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்துப் பற்றுவிக்கையும்
—————–
சூரணை-12-
உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –
உபதேசத்தாலே -இத்யாதியால் -இப்படி இருவருக்கும் உபதேசிகையாலே
சேதனனுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யமான -கர்ம பரதந்த்ரனாய் புஜிக்கை -குலையும்
ஈஸ்வரனுக்கு சேதனருடைய புண்ய பாப அநு ரூபமாக அநுபவிக்கக் கடவோம் என்று
இருக்கும் ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யமும் குலையும் என்கிறார்
இவ் விரண்டு வகைக்கும் ஈஸ்வரன் ஸஹித்தோம் என்கை இறே உள்ளது –
————-
சூரணை -13-உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –
உபதேஸத்தாலே மீளாத போது என்றது
நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலும் -அநாதி கால பாப வாஸனையாலும் -இவ்விருவரும் மீளாத போது என்றபடி
சேதனரை -இத்யாதி –
சேதனரை அருளால் திருத்துகை யாவது
பங்கயத்தாள் திருவருள் -என்கிற காருண்ய வர்ஷத்தாலே பதம் செய்விக்கை
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
உசிதைர் உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி –என்கிறபடியே
கச்சை நெகிழ்த்தல் -கண்ணைப் புரட்டுதல் செய்து -வடிவு அழகாலே மயக்கி -வசமாக்கிக் கொள்ளுகை –
———————-
ஆக
ஸ்ரீ ராமாயணத்தால் சொன்ன புருஷகார ஸ்வரூபத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லி
மஹா பாரத ப்ரதிபாத்யமான உபாய ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் மேல் -அறியாத அர்த்தங்களை -என்று தொடங்கி
சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –
அர்ஜுனனுக்குத் தத்த்வ விவேகாதிகளாலே அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகையாலே -ஆச்சார்ய க்ருத்யத்தையும்
தானே அவனை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகையாலே புருஷகார க்ருத்யத்தையும்
கிருஷ்ணம் தர்மம் ச நாதனம்-என்று உபாயம் தானேயாய் இருக்கச் செய்தே
அவ் வர்ஜுனன் -த்வமே உபாய பூதோ மே பவ – என்னாது இருக்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே –
அன்றிக்கே
வஸ்து உபேயமாய் இருக்க இவனுடைய செயலறுதியாலே உபாயம் ஆகிறான் ஆகையாலே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது ஆகவுமாம்
ஆச்சார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டவன் -தானே உபாய க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
இங்கே இப் பிரபந்த தாத்பர்யமான சரம உபாயம் ஸூசிதம் –
————-
ஆக
கீழ் -புருஷகார உபாயங்களினுடைய வை லக்ஷண்யத்தை ச பிரகாரமாக அருளிச் செய்தாராய் நின்றது
இனி புருஷகாரம் உபாயம் சொல்லிற்று என்னாதே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று என்பான் என் என்ன
இவற்றுக்கு வைபவமாவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -புருஷகாரத்துக்கும் -இத்யாதி –
உபய சாதாரண வைபவம்
சூரணை-15-
புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-
இதில் தோஷமும் குண ஹானியும் ஆகிறது -அக்ருத்ய கரணமும் க்ருத்ய அகரணுமும் -ஆகையாலே இவை இரண்டையும் பார்த்து
சேதனரை புருஷகார உபாய பூதரானவர்கள் விட மாட்டாத அளவன்றிக்கே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்கிறபடியே
அவர்களை அங்கீ கரிக்கும் இடத்தில் -அவை தன்னையே ஆதரணீயமான உபஹாரமாக்கி அங்கீ கரிக்கை -என்கிறார்
த்யஜ்யதே யதி தோஷேண குணேந பரி க்ருஹ்யதே ஸ்வ ஸாதாரண அர்த்தோயம் ஆஸ்ரிதஸ்ய க்ருதம் பலம் -என்னக் கடவது இறே –
————
சூரணை -16
இரண்டும் இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –
இரண்டும் இரண்டும் இத்யாதி –
இரண்டும் என்கிறது -கீழ் ப்ரஸ்துதமான -புருஷகார உபாயங்களை –
மறித்து இரண்டு என்கிறது -தோஷ குண ஹானிகளை
இவை இரண்டும் போனவாறே அங்கீ கரிக்கிறோம் என்று இருக்கில்-இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது-புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் அந்த தோஷ குண ஹாநிகள் உண்டாகை
புருஷகாரத்துக்கு அந்த தோஷ குண ஹாநிகள் வரும்படி எங்கனே என்னில் –
மாத்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே ஸ்தநந்த்ய ப்ரஜையினுடைய தலையைத் திருகித் தள்ளும் தாயைப் போலே இவனை உபேக்ஷிக்கையாலும்-பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையே வடிவான தன்னுடைய கிருபையை இவனுக்கு பண்ணாது ஒழிகையாலும்
உபாயத்துக்கு தோஷ குண ஹாநிகள் ஆவது
பித்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே-ஷிபாம் யஜஸ் ரம ஸூபான் -என்று தள்ளுகையும்-இவனுடைய தோஷங்களை கணக்கறு நலமான தன் வாத்சல்யத்துக்கு இரையாக்காது ஒழிகையும்
————–
சூரணை-17-
இரண்டும் குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –
இரண்டும் குலைந்தது என்று இருக்கில் –இத்யாதி
சேதனன் நம்முடைய தோஷ குண ஹானிகள் போனவாறே அன்றோ
இது நெடும்காலம் அங்கீ கரியாதவன் இன்று அங்கீ கரிக்கிறது என்று இருக்கில் இவனுக்கு அவை உண்டாம்படி என் என்னில்
தம் ஸ்வம் ஆகையாலே விட மாட்டாமல் ஸ்வாமி யானவன் அங்கீ கரித்தான் என்று இராமையாலே தோஷமும்
நம் தோஷங்களைப் பாராதே நிர் ஹேதுகமாகப் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அங்கீ கரித்தான் என்று இராமையாலே குண ஹானியும் யுண்டாய்த்து என்கிறார் –
———–
சூரணை -18-
ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –
இனி புருஷகாரம் இவை இரண்டும் பாராதே இப்படிப் பச்சை யாக்கி அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம் -என்று அவ்வர்த்தத்தை வெளியிடுகிறார்
இங்கு ராஷசிகளுக்கு தோஷ குண ஹானிகளாவது
ததை வார்த்ராபராதா -என்னும்படி தர்ஜன பர்த்ஸ நாதிகளிலே ஸந்ததம் தத் பரைகளானதுவும்
ஸ்த்ரீத்வ சாமான்யத்தை இட்டாகிலும் த்ரிஜடாதிகளைப் போலே அனுகூல பாஷணாதிகள் பண்ணாமையும்
இவற்றைப் பச்சையாக்கி அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
இவர்களை நலிய ஆர்த்தித்த திருவடியைக் குறித்து
பாபாநாம் வா ஸூபா நாம் வா -என்றும்
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞயா விதேயாநாம் ச தாஸீ நாம் க குப்யேத் வாந ரோத்தம -என்றும்
ஸ்வாமிக்கு சந்த அநு வ்ருத்திகளாய்க் கொண்டு சாவதானைகளாக நலிந்தவர்கள் ஓக்க பூர்ண அதிகாரிகள் உண்டோ –
இப்படி ஸ்வாமி கார்யம் செய்தார் தண்ட் யராம் இடத்தில் உன்னோடு அவர்களோடு வாசியுண்டோ என்று மன்றாடி மறுதலைத்து
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்னும்படி அவர்களை ரக்ஷித்து
பவேயம் சரணம் ஹி வ -என்று அங்கீ கரிக்கையாலே ப்ரகாசிதம் –
————
சூரணை-19-
ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-
சூரணை-20-
திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது-கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –
இனி உபாய பூதன் இரண்டும் பாராதே அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன -அத்தைச் சொல்லுகிறது மேல்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் -இத்யாதி
ஊர்வசியையும் முறை கூறி உபேக்ஷிக்கும் படி -இந்த்ரிய ஜெயம் பண்ணினவர்களில் ப்ரதானனாய்
ப்ரவஹ்யாம் யந ஸூயவே -என்று வைப்பான அர்த்தங்களையும் பரக்க உபதேஸிக்கும் படி பரம ஆஸ்திகனாய்
பிராணஸ்ய ப்ராண -என்று லோகத்தில் தாரகங்களானவற்றுக்குத் காரகனான கிருஷ்ணனுக்கும் -அர்ஜுன கேஸவஸ் யாத்மா -என்னும்படி ப்ராண பூதனான அர்ஜுனனுக்கு
தோஷம் பாராதே அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
பந்துக்கள் இத்யாதியாலே
அவனுக்கும் ஸாமான்ய தோஷமும் விசேஷ தோஷமும் உண்டு என்னும் இடம் காட்டுகிறார் –
அதாவது
யுத்த யுன்முகனான ஷத்ரியனுக்கு வத பீதி வர்த்தித்தால் யாகத்தில் பஸ்வாலம்பந பீதியோ பாதி ப்ராயச்சித்த விஷயமாகையாலே
ஆச்சார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பவுத்ரான் ஸகீம் ஸ்ததா ஸ்வ ஸூரான் ஸூ
ஹ்ருதஸ் சைவ சேநயோர் உபயோர் அபி -என்று
ப்ரக்ருதி பந்துக்கள் பக்கல் யுண்டான ஸ்நேஹமும் -சாமான்யேன உண்டான பர அநர்த்த அஸஹமான காருண்யமும்
இவர்களை வதித்தால் வரும் அநர்த்தத்தில் பீதியும் வர்த்தித்த சாமான்ய தோஷமும் பாராமையும்
சங்க சக்ர கதா பாணே -இத்யாதியால்
சரணாகதையான திரௌபதியினுடைய பரிபவத்தை தர்ம ஆபாஸ அதி லங்கந பீதியாலே கூடப்பார்த்துக் கொண்டு இருந்த விசேஷ தோஷமும் பாராமையும் அங்கீ கரித்தமை யுண்டு -என்கிறார் –
—————–
சூரணை -21-
பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க- வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –
பாண்டவர்களை -இத்யாதியாலே
இந்த தோஷ துஷ்டதையை அர்ஜுனனுக்கும் ஸ்தீரி கரிக்கிறார்
ஞானாதிகரான பீஷ்மாதிகள் தன்னை யுள்ளபடி அறிந்து இருக்கச் செய்தே அவர்களையும் நிரசித்தது
அவளுடைய பரிபவத்தைப் பொறுத்து இருக்கையாலே இறே
இங்கனே இருக்க அர்ஜூனாதிகளை நிரசியாது ஒழிந்தது விரித்த தலை கண்டு பொறுக்க மாட்டாதவன் வெறும் கழுத்துக் கண்டு பொறுக்க மாட்டாமை இறே -என்கிறார்
——–
சூரணை -22-
அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —
அர்ஜுனனுக்கு -இத்யாதியாலே
இப்படி தலை யறாத மாத்ரமேயோ
அநுகூலா சரணங்களைப் பண்ணிற்றும் இவளுக்காக இறே என்கிறது
அங்கன் அல்லது பிரபத்தி யுபதேச அநந்தரத்திலே
இதம் தே நாதபஸ்காய -இத்யாதி –இச்சீரிய அர்த்தத்தை இவனுக்கு வெளியிட்டோமே என்று அனுதபிக்கக் கூடாது இறே
ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை இவ்வளவாகத் தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –
———–
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-
Leave a Reply