ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –
———–
ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை முதல் பிரகரணத்தில் அருளிச் செய்து தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –
உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–
————-
சூரணை -23-
பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-
பிரபத்திக்கு இத்யாதி
ந தேச காலவ் ந அவஸ்த்தாம் யோகோஹ்யய மபேஷதே -என்றும்
ந திதி ந ச நக்ஷத்ரம் ந க்ரஹோ ந ச சந்த்ரமா ஸ்ரத்தைவ காரணம் நிரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே -என்றும்
சொல்லுகிறபடியே இதுக்கு தேச கால நியமம் இல்லை –
—————
சூரணை -24-
விஷய நியமமே உள்ளது –
நிரபேஷ உபாயமான இதுக்கு -பிரபத்தவ்ய விஷய நியமமே உள்ளது என்கிறார் மேல் -கர்மத்துக்கு -இத்யாதியாலே
—————–
சூரணை-25-
கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் –
இவ் வுபாய ஸுகர்ய சாதன அர்த்தமாக ஏதத் ப்ரதிகோடி சாதனங்களுக்கு -தேச காலாதி சாபேஷதை -உண்டு என்கிறார் –
இத்தால்
யஜ்ஜேந தாநேந தபஸா அ நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-என்கையாலே
பக்திக்கு பிரதம உபகாரமான கர்மத்துக்கு தேசோயம் ஸர்வ காம துக்-என்னும்படியான புண்ய ஷேத்ரமும்
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத-என்கையாலே வஸந்தாதி காலம்
ஆக்நேயம் அஷ்டாகபாலம் ஐந்தரம் த்வாதஸ கபாலம் -இத்யாதி பிரகார விதாயக ஸாஸ்த்ர உக்தங்களான
அவ்வவ் உபாயங்களும்
இவை தான் த்ரை வர்ணிகருக்கே கர்த்தவ்யங்கள் ஆகையாலும் -அது தன்னிலும்
கிருஷ்ண கேஸோக்நீநாததீத -என்கையாலே இவை அத்தனையும் ஸர்வதா வேணும் என்கிறார் –
————-
சூரணை -26-
ச ஏஷ தேச கால -என்கையாலே–இதுக்கு தேச கால நியமம் இல்லை –
இவ்வோபாதி ப்ரபத்தியும் உபாயமாய் இருக்கச் செய்தே அவை வேண்டா என்கைக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார்
ச ஏஷ தேச கால -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாகப் பெருமாளை நோக்கித் திருவடி விண்ணப்பம் செய்த வார்த்தை இத்யாதியாலே
————–
சூரணை-27-
இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்-
தேச காலாதி நியமம் இன்றிக்கே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்னும்படியான இவ்வர்த்தம்
ஸகல பிராமண ஸாரமான த்வ்யத்தில் ஸ்ரீமத் பதத்தில்
மதுப்பில் விசதம் என்கிறார்
———–
சூரணை-28-
பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –
இனி பிரகார நியதி இத்யாதியாலே
யுக்தமான தேச காலாதிகளில் விசேஷித்து பிரகார அதிகாரி பல நியமங்கள் இல்லை என்னும் இடத்தை விவரித்து
அருளிச் செய்கிறார் மேல் –
———-
சூரணை-29-
திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –
இந்த பிரகார நியதி இல்லாமை ப்ரபத்தாக்கள் பக்கல் எங்கும் காணலாம் –
அது எங்கே கண்டது என்ன -கீழே பிரஸ்த்துதரா னவர்களில் – திரௌபதி அப்ரயதையான தசையிலே பிரபத்தி பண்ணுகையாலும்
நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -என்கிற ஹேயர் நடுவே அர்ஜுனன் இப்பிரபத்தி அர்த்தத்தைக் கேட்கையாலும்
பிரகார நியதி இல்லாமை விசதம் இறே –
————-
சூரணை -30-
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –
ஸூத்தி அஸூத்யாதிகள் இத்யாதி
கீழ் அஸூத்தரான தசையிலே ப்ரபன்னரானமை சொல்லுகையாலே
அவ் வஸூத்தி தான் இதுக்கு அங்கமாகிறதோ என்ன
அஸூத்தி அங்கம் அல்லாதவோபாதி ஸூத்தியும் இதுக்கு அங்கம் அல்ல
ருசி பிறந்த தசையில் நின்ற நிலையே அதிகாரம் -என்கிறார் –
————–
சூரணை -31-
இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
வேல் வெட்டிப் பிள்ளைக்கு -இத்யாதியாலே இவ்வர்த்தத்தில் ஆப்த வசனத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பெருமாள் சமுத்திர ராஜனான வருணனை சரணம் புகுந்த இடத்தில் ப்ராங் முகத்வாதி நியமங்களோடே சரணம் புகுருகையாலே
யத் தாசரதி ஸ்ரேஷ்ட -இத்யாதி க்ரமத்தாலே அல்லாதாருக்கும் அவை அநுஷ்டேயங்கள் ஆகாதோ -என்று வேல் வெட்டிப்பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய
அது அங்கனே அன்று காணும் -ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -என்று பெருமாளுக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்த
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே கால் தோய்த்தல் -அடங்கின வெற்றிலை உமிழ்தல் -செய்யாமையாலே
அவை சர்வ சாதாரணம் அன்று காணும்
அவர் ஆசார ப்ரதாநமான குலோத் பவராகையாலே அவை தானே வந்தது அத்தனை –
தீஷிதனுக்கு கர்ம யோக்யதா ஹேதுவான சிகா யஜ்ஜோ பவீதங்கள் கிடந்தவோ பாதி நை சர்கிகமானவை கிடக்குவுமாய்
அவனுக்கு நித்தியமான சந்தியாவந்தனம் இல்லாதாவோ பாதி இவனுக்கும் ஸ்வீ கார தசையிலே தத் அங்கமாக ஒரு நியதி வேண்டாமையாலே
இவன் நின்ற நிலையே காணும் இதுக்கு அதிகாரம் -என்று அருளிச் செய்தார் –
—————-
சூரணை -32-
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –
அதிகார நியமம் –இத்யாதி
திரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் ஸத்ருக் ஜனார்த்தனம் -என்று
ஷத்ரியரான தர்ம புத்ராதிகள் சரணம் புகுருகையாலும்
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று ஸ்திரீயான திரௌபதி சரணம் புகுருகையாலும்
ஸ பித்ரா சேத்யாதி தமேவ சரணம் கத -என்று தேவ யோனியான காகம் சரணம் புகுருகையாலும்
கிருபா மாத்ரா மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்று திர்யக் யோனியான காளியன் சரணம் புகுருகையாலும்
ஸ து நாகவர ஸ்ரீ மான் -இத்யாதி மனஸா சிந்தயத் ஹரிம் -என்று கஜேந்திரன் சரணம் புகுருகையாலும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்று ராக்ஷஸ யோனியான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுருகையாலும்
அஞ்சலிம் ப்ராங் முக க்ருத்வா -என்று ஸர்வாதிகாரன பெருமாள் சரணம் புகுருகையாலும்
ஸ பிராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய -என்று பெருமாளை பிரியில் தரியாதபடி அநந்யார்ஹரான இளைய பெருமாள் சரணம் புகுருகையாலும்
அதிகாரி நியமம் இல்லை -என்கிறார் –
—————-
சூரணை-33-
பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–
பல நியமம் -இத்யாதியாலே
கீழ்ச் சொன்ன அதிகாரிகளுக்கு பலம் ஒருபடிப்பட்டு இராமையாலே
ஸகல பல ப்ரதமான இவ்வுபாயத்துக்குப் பல நியமம் இல்லை -என்கிறார்-
———
சூரணை -34-
விஷய நியமம் ஆவது-குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –
சூரணை -35-
ஆழ்வார்கள் பல இடங்களிலும்-பிரபத்தி பண்ணிற்றும்-அர்ச்சாவதாரத்திலே –
மேல் -விஷய நியமம் -இத்யாதியாலே
கீழே -விஷய நியமமே உள்ளது -என்று ப்ரதிஜ்ஜை பண்ணினதை ப்ரதிபாதிக்கிறார் –
ஸமஸ்த கல்யாண குண பரி பூர்த்தி உள்ள இடமே சரண்ய விஷயம் என்றும் –
அது தான் அல்லாத இடங்களை பற்றி அர்ச்சாவதாரத்திலே அதி சாய்த்து இருக்கும் என்றும் –
இக்குண பூர்த்தியாலே அனுஷ்டாதாக்களான ஆழ்வார்களும்
பிறந்த வாற்றிலும் மற்றும் க்வா சித்கமாக அவதாராதிகளிலே சரணம் புகுந்தார்களாகிலும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும்
இத்யாதிகளிலே உகந்து அருளின நிலங்களிலே விசேஷித்து சரணம் புகுகையாலும்
அர்ச்சாவதாரமே ஸகலர்க்கும் சரண்ய விஷயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
——————-
சூரணை -36-
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –
பூர்ணம் -இத்யாதி -இத்தால் –
ப்ரமாதாக்களுடைய அனுஷ்டானமே அன்றிக்கே -கடவல்லியில் -த்வயத்தில் -பூர்வ உத்தர கண்ட மத்யத்திலே
ஓதப்படுகிற பிரமாண ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதிக்கிறார் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ருச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வஸிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -என்னக் கடவது இறே –
———-
சூரணை-37-
பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்-இருட்டறையிலே விளக்குப் போலே-பிரகாசிப்பது இங்கே –
ப்ரபத்திக்கு இத்யாதி -இத்தால் -அர்ச்சையிலே இக் குணங்கள் பிரகாசிக்கும் படியை அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி ரூப உபாயங்களில் அஞ்ஞனாய் -அஸக்தனாய் -அகிஞ்சனனாய் -அபராத பூர்ணனானவன் –
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
கண்டு பற்றுகைக்கும்
இவன் கைம்முதல் பாராமைக்கும்
பற்றும் இடத்தில் இவன் தோஷத்தைக் குணமாகக் கொள்ளுகை
முதலானவற்றுக்கும் அபேக்ஷிதங்களான
ஸுலப்ய
வாத்ஸல்ய
அவாப்த ஸமஸ்த காமத்வாதி -குணங்கள்
பகவத் ஸ்வரூப திரோதாநகரியான இவ்விபூதியில்
இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆஸ்ரயிக்கும் படி நிற்கையாலே
பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவை இவ்விடத்திலே விசேஷித்து பிரகாசிக்கும் என்கிறார் –
——————-
சூரணை -38-
பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும் குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை-தான் ஆதரித்து நிற்கிற இடம் –
இப்படி இவ்விடத்தில் எல்லாக் குணங்களும் பரிபூர்ணமே யாகில்
அர்ச்சயஸ் ஸர்வ ஸஹிஷ்ணு -இத்யாதிப்படியே –
இச் சேதனன் கை பார்த்து இருக்கிற படி எங்கனே என்ன
ஆஸ்ரித அர்த்தமாக அக்குணங்களை அமைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்று
ஸுலப்ய காஷ்டையை ஸாதிக்கிறார் –
—————
சூரணை-39-
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —
இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு எதிர்த்தட்டான நித்ய ஸூரிகள் பக்கல் ஆஸ்ரயண உப யோகியான இக்குணங்களுக்கு
விஷயம் இல்லாமையாலே பர அவஸ்தையில் பகல் விளக்குப் பட்டு இருக்கும்
அவற்றுக்கு விஷயமுள்ள இடத்திலே ப்ரகாசித்த வத்தனையான பின்பு அவை அன்றோ என்ன
பூதக ஜலம் போலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
பூதக ஜலம்-இத்யாதியாலே
எங்கும் ஜல ஸாம்யம் யுண்டே யாகிலும் -தடாக ஜலம் ஸர்வ கால -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வருக்கும் உபயோக யோக்யமாமோ பாதி
பரத்வாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இக்குணங்கள் ஏகீ பாவித்து இருந்ததே யாகிலும்
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அந்தர்யாமித்வம் அதீந்திரியாகார ஸ்வ பாவ விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
இவை நாலிலும் வைத்துக் கொண்டு அர்ச்சாவதார இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
ஸர்வதா சமாஸ்ரயணீயம் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்
அதிலே தேங்கின மடுக்கள் -என்றது
அர்ச்சா முகமாக ப்ராசுர்யேண உகந்து அருளுவது அவதார விக்ரஹங்கள் ஆகையாலே –
———
ஆனால் இவ்வர்ச்சா வவதாரம் ஆஸ்ரயித்து இருக்கிற சேதனனுக்குச் செய்யும் உபகாரம் தான் என் என்ன
செய்யும் உபகாரங்களை அருளிச் செய்கிறார் -இது தான் ஸாஸ்த்ரங்களால் -இத்யாதியால்
சூரணை -40-
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால் உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —
இது தான் –இப்படி ஸூலபமான அர்ச்சாவதாரம் தான்
அதீந்த்ர்ய அர்த்த ப்ரகாசகங்களான ஸாஸ்த்ரங்களாலும்
அஞ்ஞாத ஞாபந முகத்தாலே திருத்த அரிதாம் படி பகவத் வ்யதிரிக்தங்களான ஸப்தாதி விஷய அனுபவ அபி நிவேசம் பண்ணி
நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு வர்த்திக்கிற சேதனர்க்கு -தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -என்கிறபடியே
அவர்கள் வாசலிலே சென்றாகிலும் தன் வடிவழகை அனுபவிப்பித்து வை முக்கியத்தை பற்றி -பிரதம பாவியான ருசியை உண்டாக்கி
விஷய வை லக்ஷண்யத்தாலே யாதாவான ருசி பிறந்தால் தன்னைப் பெறுகைக்கு வேறே ஓன்று தேட வேண்டாதே
எடுத்தாப் போலே கோயிலாம் படியான தானே உபாயமாய் –
தன்னைப் பற்றின அநந்தரத்திலே சேஷ பூதனான இவனுக்கு போக்யமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித
கைங்கர்யத்தையும் கை மேலே பண்ணிக் கொடுக்கும் என்கிறார் –
ஆக
ப்ரபத்திக்கு தேச நியமம்-என்று தொடங்கி
பிரபத்தி வை லக்ஷண்யத்தையும்
பிரபத்தவ்ய விஷய வை லக்ஷண்யத்தையும்
ப்ரதிபாதித்தார் –
———-
சூரணை -41-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –
மேல் இந்த அர்ச்சாவதாரம் தன்னிலே ப்ரபத்தாக்களான அதிகாரிகள் த்ரி விதராய் இருப்பர்கள் என்கிறார் –
இது தன்னில் -இத்யாதியால்
———
சூரணை -42-
அஞ்ஞரும்–ஞானாதிகரும்-பக்தி பரவசரும் —
அவர்களுடைய த்ரை வித்யம் இருக்கும் படி எங்கனே என்னில் -அஞ்ஞரும் இத்யாதியால்
ஸம்ஸார ஆர்ணவ மக்நா நாம் விஷய அக்ராந்த சேதஸாம் -என்கிறபடியே
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலிலே விழுந்து நஷ்ட ஸர்வ சேஷ்டராய் -விவித விஷய க்ராஹகங்களால் வந்த
வ்யஸன பரம்பர அபி பூதராகையாலே இத்துக்க நிவ்ருத்தி அர்த்தமாக உபாயாந்தரங்களிலே இழிகைக்கு
ஒருபடியாலும் ஞான சக்திகள் இல்லாமையாலும்
விஷ்ணு போதம் அல்லது வேறு கத்தி இல்லை என்று ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியானவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயாந்தரங்களில் இழிகைக்கு யோக்யதை இல்லாத படியான அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப யாதாத்ம்ய ஞானாதிக்யத்தால்
ப்ராப்த சேஷியான அவன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
இவ்விஷயத்தில் வடிவு அழகில் உண்டான வை லக்ஷண்ய அனுஸந்தா நத்தாலே ஈடுபட்டு
இதர உபாய அனுஷ்டானத்தில் இழியவும் கூட ஸக்தர் அல்லாத படி இட்ட கால் இட்ட கையராம் படி
பக்தி பரவசராய் இருக்கையாலே ஸகல பர ஸமர்ப்பணம் பண்ணுவாருமாய்
இப்படி இவர்கள் ராஸி த்ரய அந்தர் பூந்தராய் இருப்பார் என்கிறார் –
———-
சூரணை -43-
இவர்களுடைய த்ரை வித்யம் எங்கே காணலாம் என்னும் அபேக்ஷையிலே அருளிச் செய்கிறார்
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
இனி அஸ்மதாதிகள் -என்றது
ப்ரபந்ந அதிகாரிகளிலே வேறே சிலரை ப்ரக்ருதி பாரவஸ்யத்தாலே அஞ்ஞராக அருளிச் செய்ய மாட்டாமையாலே
ஆதி -ஸப்தத்தாலே -இவ்வதிகாரி பாஹுல்யத்தை அருளிச் செய்கிறார் –
ஞான ஆதிக்யத்தாலே ப்ரபன்னரான ஆச்சார்யர்கள் என்றது
நாத யாமுனர் தொடக்கமானவர்களை
ஆழ்வார்கள் பக்தி பரவசர் என்னும் இடம் அவர்கள் பாசுரங்களாலே அறியலாம் –
———–
சூரணை -44-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —
இவ்வாகாரங்கள் ராஸி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ ஆகாரங்களே உள்ளது என்னும் படி அவற்றிலே ஊன்றிப் போருகையாலே
———–
சூரணை -45-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –
அசித் சம்பந்தம் அடியான அஞ்ஞானத்தாலும்
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய வேதனத்தால் யுண்டான ஞான ஆதிக்யத்தாலும்
பகவத் விஷயத்தில் பக்தி பாரவஸ்யத்தாலும்
சரணம் புகுகையாலே மூன்று ராஸியும் கீழ்ச் சொன்ன தத்வ த்ரய ஞான நிபந்தமாய் வரும் என்கிறார் –
———
சூரணை -46-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –
இத்தால் பரமாச்சார்யாருடைய பாசுரத்தாலே இம்மூன்று அதிகாரிகளுடைய நினைவு பிரகாசிக்கும் என்கிறார் –
———
சூரணை -47-
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –
சூரணை -48-
முக்கியம் அதுவே –
அவ்வாழ்வாருடைய திரு உள்ளத்தால் பர பக்தி பாரவஸ் யத்தால் வந்த ப்ரபத்தியேயாய் இருக்கும் –
பகவத் வை லக்ஷண்யம் அடியாக வந்தது ஆகையால் முக்யமும் அதுவே என்கிறார் –
———
சூரணை -49-
அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம்
அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –
த்ரை வித்ய பேதத்துக்குப் பிரமாணம்
இதில் தேவ என்கிறது பக்தி விஷயமாக
————
சூரணை -50-
இதம் சரணம் அஜ்ஞானாம் –
இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–ஸ்ரீ லஷ்மி தந்த்ர ஸ்லோகம் -100-
பாரம் திதீர்ஷதாம்-என்கிறது மூவருக்கும் ஒக்கும்
———
சூரணை -51-
பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே-இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –
இதில் பக்தி பாரவஸ் யத்தாலே ப்ரபன்னரானவர்களுக்கு -அதனுடைய பாக விசேஷத்தாலே வந்த அவஸ்த்தா பேதங்களாலே
ஸ்வரூப ஹானியான ப்ரவ்ருத்தியிலே மூட்ட -இந்த பிரபத்தி விஸ்வாசம் குலையக் கடவதாய் இருக்கும் என்று
அவ்வதிகாரிகளான ஆழ்வார்களுடைய அனுஷ்டானங்கள் விஷய வைலக்ஷண்ய அதீனமாய் வருகையாலே
ஸ்வரூப ஹானி அன்று என்று பரிஹரிக்கிறார் –
———-
சூரணை -52-
தன்னைப் பேணவும் பண்ணும் –தரிக்கவும் பண்ணும் –
சூரணை -53-
இந்த ஸ்வபாவ விசேஷங்கள்-கல்யாண குணங்களிலும்-திரு சரங்களிலும்-
திரு நாமங்களிலும்-திரு குழல் ஓசையிலும்-காணலாம்-
அவ் விஷய வைலக்ஷண்யம் ஆழ்வார்களை ஒருபடிப் பட்டு இருக்க ஒட்டாமை –
அவ்விஷய அனுபந்திகளானவற்றின் பக்கலிலும் காணலாம் என்கிறது
பக்தி பாரவஸ் யத்தாலே -பந்தோடு கழல் மருவாள் -இத்யாதியில் படியே தன்னைப் பேணாமையும்
இட்ட கால் இட்ட கைகள் -இத்யாதிப்படியே தறியாமையும் யுடையராய் இருப்பாரை
அவன் வரவைக் குறித்து ஸ்வயமேவ -காரை பூணும் -இத்யாதில் படியே தந்தாமை அலங்கரித்துப் போரவும்
அத்தசையிலே அவன் வரக்கொள்ள அவ்வரவு தானே அநிஷ்டமாய்
போகு நம்பீ –
கழகமேறேல் நம்பீ -இத்யாதில் படியே தள்ளித் தரித்து இருக்கவும் பண்ணும் அவஸ்த்தா விசேஷங்களைப் பிறப்பிக்கிற
ஸ்வ பாவ விசேஷங்கள் -வல்வினையேனை ஏற்கின்ற குணங்களை உடையாய் -என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -என்றும் இத்யாதிகளாலே
கல்யாண குணங்களிலும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே -என்றும்
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்றும் இத்யாதிகளாலே
திருச்சரங்களிலும்
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -என்றும்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று இத்யாதிகளாலே
திரு நாமங்களிலும்
அவனுடைய தீம் குழல் ஈரும் -என்றும்
ஆ கள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -என்றும்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராயே -என்றும் இத்யாதியாலே
திருக் குழல் ஓசையிலும் தோற்றும் என்கிறார் –
————
சூரணை -54-
இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்-பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே-இருப்பது ஓன்று –
இப்படி பக்தி பாரவஸ்ய ப்ரபத்தியில் வரும் ஸம்சய நிவ்ருத்தியைப் பண்ணி -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி
உக்தையான ப்ரபத்தியினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி –
நிரூபாதிக சேஷ வஸ்துவினுடைய ஸ்வரூப அனுரூபமான இந்த பிரபத்தி தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்று தொடங்கி
பிதாவுக்கு -இத்யாதியாலே -நிஷேகாதி முகத்தாலே தன்னை உண்டாக்கின ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து
புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே உபய ஸம்பந்த விருத்தம் என்கிறார் –
————–
சூரணை -55-
இது தனக்கு ஸ்வரூபம்-தன்னைப் பொறாது-ஒழிகை –
ஆனால் இது தனக்கு வேஷம் எது என்னச் சொல்கிறது மேல் -இது தனக்கு -இத்யாதி
இப்பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபம் தன்னை உபாயம் என்னப் பெறாது ஒழிகை
————-
சூரணை -56-
அங்கம் தன்னை-ஒழிந்தவற்றை-பொறாது ஒழிகை –(சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –)
இப் பிரபத்திக்கு அங்கம் தன்னை ஒழிந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமானவை ஒன்றையும் ஸஹியாது ஒழிகை
———-
சூரணை -57-
உபாயம் தன்னை பொறுக்கும்-
சூரணை-58-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –)
ஆனால் தன்னை யுபாயம் என்னப் பொறுக்கும் இந்த ஸித்த உபாய வ்யதிரிக்தமான உபயாந்தரம் தன்னை உபாயம் என்னவும் பொறுக்கும்
தனக்கு அவிநா பூதமாகையாலே ப்ரவ்ருத்தி ஸ்வரூபமான அம்சத்தையும் பொறுக்கும் –
——–
சூரணை -59-
இது இரண்டையும் பொறாது-
இந்த பிரபத்தி
உபாயத்வத்தையும்
சேதன க்ரியாதிகள் அங்கம் ஆகுகையும்
பொறாது என்கிறார் –
———–
சூரணை -60-
பலத்துக்கு ஆத்ம ஞானமும்-அப்ரதிஷேதமுமே-வேண்டுவது –
ஆனால் பல ஸித்தி உண்டாம்படி எங்கனே என்ன -பலத்துக்கு என்று தொடங்கிச் சொல்லுகிறது
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்த ஸித்தமான தத் ஏக ரஷ்யத்வ ரூப ஆத்ம ஞானமும்
ரக்ஷகனுடைய ஸ்வீ கார விஷய பூதனான தன் விலக்காமையுமே
பொறுக்க அபேக்ஷிதம் என்கிறார் –
————
சூரணை-61-
அல்லாத போது-பந்தத்துக்கும்-பூர்த்திக்கும்-கொத்தையாம் –
இனி அல்லாத போது -என்றது -அநாதி காலம் அஹம் கர்த்தா -அஹம் போக்தா -என்று போந்த இத்தனையிலும் சில உண்டாக வேண்டாவோ என்ற போது
பந்தத்துக்கும் இத்யாதி
ததேக சேஷமாய்த் ததேக ரஷ்யமான பந்தத்துக்கும்
அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வ ரூபமான பூர்த்திக்கும்
மாலின்யமாம் –
———
சூரணை -62-
ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –அத்தை விளைத்து கொள்ளாது-ஒழிகையே வேண்டுவது –
ஆகையால் -ஆபத்தை -என்று தொடங்கி -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அபூரணனான தான்
மம மாயா துரத்யயா -என்கிற அவித்யா ஸம்பந்த ரூபமான ஆபன் நிவ்ருத்திக்கு ஆயாஸிக்க வேணும் என்று ப்ரமித்து
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா -என்கிறபடியே
அவ்வாபத்தை சத சாகமாகப் பணைப்பித்துக் கொள்ளாது ஒழிகையே இவனுக்குக் கர்தவ்யம் என்கிறார் –
—————-
சூரணை -63-
ரஷணத்துக்கு அபேஷிதம்-ரஷ்யத்வ அனுமதியே –
ஆனால் நித்ய ஸம்ஸாரியான இவனை ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வராதபடி ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ரக்ஷிக்கும் படி எங்கனே என்னில்
ரக்ஷணத்துக்கு இத்யாதி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிற இவனுக்கு ரக்ஷண தர்மத்துக்கு வேண்டுவது
ஸ்வரூப பத ரஷ்ய மாத்ரமான இவனுடைய –
வைத்தேன் மதியால் -என்கிற அனுமதி மாத்திரமே அபேக்ஷிதம் -என்கை –
————
சூரணை -64-
எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —
ஆனால் இப்படி இத்தசையில் இசைவை அபேக்ஷித்து இருந்து ரக்ஷிக்கும் இடத்தில் அவ்வனுமதிதான் சாதனம் ஆகாதோ என்னில்
ஆகாது என்னும் இடத்தைப் பல யுக்திகளாலே அருளிச் செய்கிறார் -எல்லா உபாயத்துக்கும் -என்று தொடங்கி
ஜ்யோதிஷ்டோமாதிகளை அனுஷ்டி என்றால் -அப்படிச் செய்கிறோம் என்ற அனுமதி மாத்ரத்தால் அவற்றை அனுஷ்ட்டித்தான் ஆகாமையாலும்
இம்மாத்திரத்தாலே சேதனனான ஆகாரம் தெரிவிக்கின்ற இத்தனையே யாகையாலும்
அவன் ஏவி அடிமை கொள்ளும் இடத்தில் இவ்வனுமதி பல வேளையிலும் அனுவர்த்திக்கையாலும்
அத ஏவ விருத்தம் இல்லாமையாலும்
சைதன்ய ஆதாரமான அசித் வியாவ்ருத்தி மாத்ரமாய்
அதிகாரி விசேஷணமான இவன் அனுமதியை உபாயமாக்க ஒரு வழி இல்லை என்கிறார்
அசாதாரணமான ஸ்த்ரீயை அபிமதனானவன் ஸ்தந போஷண அத்யவஸர ப்ரதீஷனாய் அனுபவித்தால் அவள் அவ்வனுபவத்துக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினாள் ஆகாள் இறே –
————
சூரணை -65-
அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்-உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்-உபேயத்தில் உகப்பும் –
இந்த அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஸாதனமே யல்ல வாகில் இது எதுக்கு பிரயோஜனம் என்ன
உபாய தசையில் அவன் பண்ணின உபகாரத்தில் -உனக்கு என் செய்கேன் -என்கிற உபகார ஸ்ம்ருதியும்
உபேய தசையில் எதிர் விழியால் உண்டான உகப்புக்கும் உறுப்பு -என்கிறார் –
————-
சூரணை-66-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே-பிராப்திக்கு உபாயம்-அவன் நினைவு —
இப்படி அத்தலையால் வந்த நினைவே உபாயம் என்கைக்கு ஆப்த வசனத்தை எடுக்கிறார் –
உன் மனத்தால் -இத்யாதியாலே –
———–
சூரணை -67-
அது தான் எப்போதும் உண்டு –
ஸர்வஞ்ஞனாய் -காருணிகனான அவன் நினைவு காதாசித்கம் ஆகிறது என்
அது நித்யமானால் ஆகாதோ என்ன
அது தான் எப்போதும் உண்டு -என்கிறார் –
————–
சூரணை -68-
அது பலிப்பது-இவன் நினைவு மாறினால் –
ஆனால் அது ஸர்வதா பலம் ஆகாது ஒழிகிறது என் என்ன -அது பழிப்பது இத்யாதி
ஸர்வஜ்ஜோபி ப்ரதீக்ஷதே -என்கிறபடியே நான் எனக்கு உரியேன் என்கிற இவன்
கை வாங்கும் அளவை கடாக்ஷித்து அருளுகையாலே என்கிறார் –
———
சூரணை -69-
அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –
இதுக்கு உதாஹரணம் -அந்திம -காலத்துக்கு இத்யாதி -அதாவது
நஞ்சீயர் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய அந்திம தசையிலே அறிய வேணும் என்று எழுந்து அருள
அவர் -இப்போது எனக்குத் தஞ்சமாக ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன
வாரீர் இப்போது உமக்குத் தனிபாம் தேட இருந்தீர்
இத்தலையில் தங்கம் என் என்கிற நினைவு குளிகை தானே காணும் தஞ்சம்
ஆனபின்பு ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் நிர் அந்வயராய் நிர்ப் பயராய் இருக்காய் காணும் உமக்கு
ஸ்வரூப அனுரூபமான தஞ்சைமாவது -என்று அருளிச் செய்தார் –
————-
சூரணை -70-
பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —
ஆக
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பெறாது ஒழிகை -என்று தொடங்கி
இவனுடைய ஸ்வீ காரம் உபாயம் ஆகாது -ஸ்வரூபமாம் அத்தனை என்னும் இடத்தை இவ்வளவும் உப பாதித்து
இங்கே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை ச ப்ரகாரமாக சோதிக்கிறார்
ப்ராப்தாவும் என்று தொடங்கி –
இப்படி ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் அந்வயம் இல்லாத படி இவனுடைய ஸ்வரூப சித்த்யதிகள் அவன் அதீனம் ஆகையாலே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து -என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாக இத் தலையை வந்து பிராபிக்கக் கடவானும்
நயாமி -என்கிறபடியே இவனுக்குப் ப்ராபகனும்
இவனைப் ப்ராபித்தால் உகப்பானும் அவனே என்று உபபாதிக்கிறார் –
————–
சூரணை -71-
ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –
இப்படி எல்லாமே அவனே என்கைக்குத் தான் நிபந்தநம் என் என்னில்
ஸர்வதா ஸ்வ ஸ்வா தந்தர்ய ராஹித்யமே ஸ்வரூபமாம் படி-பாரதந்தர்ய சேஷத்வங்கள் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப தர்மங்களாய்க் கொண்டு பலிக்கையாலே -என்கிறார் மேல்
இவை பலிக்கிற படி தான் எங்கனே என்னில் -ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதி
அசித்வத் உண்டான அத்யந்த பாரதந்தர்யத்தாலே ஸ்வ யத்ன நிவ்ருத்தி உண்டாகையாலும்
பரகத அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி உண்டாகையாளுண்ம் அவை இரண்டும் பலித்தது என்கிறார் –
———-
சூரணை -72-
பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –
இவ்வோபாதி ஞான சிகீர்ஷா ப்ரயத்னங்களும் ஆத்ம தர்மம் அன்றோ -அவற்றுக்குப் பிரயோஜனம் என் என்ன -பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி என்று தொடங்கி –
பிரதானமான சேஷத்வ பாரதந்தர்யங்களுக்கு சேஷமாய்க் கொண்டு இவை அவற்றை ச ப்ரயோஜனமாக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாரதந்தர்யத்தாலே பலித்த ஸ்வ யத்ன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான கர்த்ருத்வம் அடியாக வந்த ப்ரயத்னம் ஆகையாலே
அந்த பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி ரூபமான பலமன் அந்த ப்ரயத்னத்தால் என்றும்
தத் விஷய ப்ரீதியாலே பர அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே பலித்த ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான ஞாத்ருத்வத்துக்குப் பலம்
அன்ன மதந்த மத்மி-என்றும்
பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே
இத்தலையில் பிரவிருத்தி கண்டு விக்ருதமான பகவத் விஷயத்தினுடைய ப்ரீதிக்கு எதிர் விழி கொடுக்கையால் வந்த ப்ரீதி என்றும் அருளிச் செய்கிறார்
அந்த ப்ரீதி தானே இறே இவனுக்கு அதந்தமத்மி -என்கிற நிலை நின்ற போக்த்ருத்வமாவது –
—————–
சூரணை -73-
அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –
ஆனால் சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களும் ஆத்ம தர்மங்களாய் இருக்க
சேஷத்வ பாரதந்தர்யங்களை ப்ரதானம் ஆக்கி ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களை அவற்றுக்கு சேஷமாக்குகைக்கு நியாமகம் ஏது –
மற்றைப்படி யானாலாகாதோ என்ன -அது சேராது என்னும் இடத்தை -ஞான ஆனந்தங்கள் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ்வாத்மாவுக்கு பஹிரங்கமான அசித் வ்யாவ்ருத்தி ரூபமான ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும் படி அந்தரங்கமான ஈஸ்வர வ்யாவ்ருத்தி ரூபமான தாஸ்யம் அந்தரங்கமாகையாலே தத் தர்மங்களையும் தத் அனுரூபமாகக் கொள்ள வேணும் இறே என்கிறார்
அந்தரங்க பஹி ரங்க யோர் அந்தரங்கம் பலீய-என்னக் கடவது இறே –
————–
சூரணை-74-
இது தான் வந்தேறி அன்று –
சூரணை -75-
ஸ்வாதந்த்ர்யமும்–அந்ய சேஷத்வமும்-வந்தேறி-
முன்பு அஹமிதமபி வேத்மி -என்று ஞான ஆனந்த ரூபமான அஹம் அர்த்தமும் தத் தர்மங்களுமான ஞான ஆனந்தங்களும் அன்றோ ப்ரகாசித்துப் போந்தது
இப்போது அன்றோ தாஸ்யாதிகள் ப்ரகாசிக்கிறது -ஆகையால் இது வந்தேறி யன்றோ என்ன
ஆகந்துக விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே அபி பூதமாய்க் கிடந்த வித்தனை –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யம் ஸ்வதஸ் ஸித்தம் இறே -என்கிறார் -இது தான் வந்தேறி அன்று -என்று தொடக்கி –
——————
சூரணை -76-
சேஷத்வ விரோதி ஸ்வாதந்த்ர்யம்-தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –
இதில் சேஷத்வ விரோதி -இத்யாதியாலே சாமான்யேன சேஷத்வத்துக்கு விரோதி தனக்குத் தான் கடவன் என்கை –
விசேஷித்து பகவச் சேஷத்வத்துக்கு விரோதி இதர சேஷமாகை என்கிறார் –
——————
சூரணை -77-
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-
அஹங்காரம் -இத்யாதி -இப்படி ஸ்வரூபத்துக்கு வந்தேறியான அழுக்கு அறுத்தால் –
யஸ்யாஸ்மி –
பரவாநஸ்மி –இத்யாதிகளாலே சொல்லப்படுகிற
தாஸ்ய விஸிஷ்டமான ஆத்மாவுக்கு வாஸ்தவமான நாமம் அடியான் இறே என்கிறார்-
———-
சூரணை -78-
க்ராம குலாதிகளால்-வரும் பேர்-அநர்த்த ஹேது –
க்ராம குலாதிகளால் -இத்யாதி -கீழ் இப்படி உக்த ஸ்வரூபமான னவனுக்கு
கோயிலிலே வாழும் வைட்டணவன் -என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி -இத்யாதியாலும் வருகிற நிர்த்தேசம் ஒழிந்து
அல்லாத ஒவ்பாதிக குல சரண கோத்ராதிகளாலே வருமது ஸ்வரூப ஹானி என்று அதுக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார் –
———
சூரணை -79-
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –
ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -என்று
———-
சூரணை -80-
உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —
ஆக இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை -என்ற பாசுரத்திலே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை இவ்வளவாக
பாரங்கதமாக்கி -அப்பாசுரத்தால் பலித்த ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூபமான உபாய உபேயங்களிலே நிஷ்டரான அதிகாரிகளை
இப்ப்ரபந்ந அதிகாரிக்கு த்ருஷ்டாந்தமாக வெளியிடுகிறார் -உபாயத்தில் -என்று தொடங்கி -எங்கனே என்னில் –
உபாய அத்யவசாயத்தில் நெருப்பை நீராக்க வல்ல பிராட்டி ஸ்வ ரக்ஷணத்தில் இழியாதே
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று இருந்தால் போலேயும்
ஸ்த்ரீத்வத்துக்குப் படி எடுக்க வேண்டும்படியான திரௌபதி அம் மஹா சதஸ்ஸிலே பிறந்த பரிபவத்தில் உரிக்கிற துகிலை வாஸனையாலே தானும் ஒரு கை பற்றாது ஒழிந்தால் போலேயும்
திருக்கண்ண மங்கை யாண்டான் பத்தராவி திருவடிகளிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி அவர் கைப்புடையிலே கண் வளர்ந்தால் போலேயும்
இவ்வதிகாரியும் இருக்க வேணும் என்கிறார் –
ஆனால் உபேய அதிகாரிகள் இருக்கும் படி எங்கனே என்கிற சங்கையிலே சொல்லுகிறது -உபேயத்தில் -என்று தொடங்கி –
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றும்
குருஷ்வ மாம் அநு சரன் -என்றும்
பெருமாளைப் பிரியில் தரியாதே பின் சென்று
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஸர்வவித கைங்கர்யங்களையும் அதிகரித்து
அது தன்னிலும்
ஸ்வயம் து ருசிரே தேசே -இத்யாதியாலே அவனுக்கு உகந்த அடிமையிலே அதிகரித்த இளைய பெருமாளைப் போலேயும்
ஆஸ்ரயண வேளையிலும் புருஷீ கரித்து -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்கிறபடி
அடிமை கொள்ளுகைக்கு முற்பாடையான பிராட்டி விஷயமாகத் தம்மை அழிய மாறி அடிமை செய்த ஜடாயு மஹா ராஜரையும்
திரு நாராயண புரத்தில் வேத நாராயணர் விஷயமாக அக்னி பயத்தால் வந்த அபாயத்தில் அந்த பகவத் ஸுகுமார்ய அநுஸந்தானத்தாலே
ஸ குடும்பராக விதக்தராம் படி ஸாஹஸ ப்ரவ்ருத்தி பண்ணின திரு நறையூர் அரையரையும்
தத் சித்த விமலாஹ்லாத -இத்யாதிப்படியே
தான் யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே முடிந்த சிந்தையந்தியைப் போலேயும் இருக்க வேணும் என்கிறார் –
————–
சூரணை -81-
பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –
சூரணை -82-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –
இனி உக்தரான உபாய அதிகாரிகள் தம்தாமுக்கு உள்ள கைம்முதல்களைக் கழித்து விடக் காண்கையாலே
உபாய தசையில் இவ்வதிகாரியும் தம் கைம்முதலாய் உள்ளவற்றைக் கழிக்கக் கடவன்
என்னும் இடத்தை -பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
—————
சூரணை-83-
பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –
சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –
இனி பசியராய் இருப்பார் -என்று தொடங்கி
உடம்பு தன்னடையே போயிற்று -என்னும் அளவும்
அவ்வுபேய அதிகாரிகளுடைய அனுஷ்டானத்தை விசதமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –
————-
சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும்-
உபாயத்துக்கு இத்யாதியாலே
இப்படி இவ்வ்வநுஷ்டானங்களில் சிஷ்டாசாரம் யுண்டாகையாலே கீழே ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்திகளிலே ப்ரஸ்துதரான
இவ்விரண்டு அதிகாரிகளுக்கும் அவை அநுஷ்டேயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்
தறியாமையும் வேணும் என்னும் அளவும் –
——————
சூரணை-86-
இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –
ஆனால் பெரிய யுடையாருக்கு -அவ்யவஸ்தித்வ ஹி த்ருஸ்யதே யுத்தே ஐயபராஜயவ் -என்று
யுத்தத்தில் வெற்றி தோல்விகள் வ்யவஸ்திதங்கள் இல்லாமையாலும்
சிந்தயந்திக்கு அனுபவ அலாபத்தாலே ஸ்வயமேவ சரீரம் விடுகையாலும்
முடிகை பிராப்தம்
உத்தம வர்ணரான திரு நறையூர் அரையர் ஒன்றையும் பாராதே ஸ்வயமேவ ஆத்ம பாதகராய்க் கொண்டு செய்த அதி ஸாஹஸ ப்ரவ்ருத்தி
ஸாஸ்த்ரங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் சேராது இறே என்ன
இவனுக்கு வைதமாய் வரும்து இறே -என்று தொடங்கி அது சேரும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
விதமாய் வரும்து என்றது -சில பலாந்தரங்களை உத்தேசித்து
ப்ராஹ்மணார்த்தே கவார்த்தே வா ஸம்யக் ப்ராணன் பரித்யஜேத் -இத்யாதி
விதி பரதந்த்ரமாய் வரும் வியாபாரங்கள் இறே இவ்வதிகாரிக்கு விடலாவது
விஷய வை லக்ஷண்யத்தாலே ராக ப்ரேரிதமாய்க் கொண்டு தானே வருமத்தைத் தள்ள ஒண்ணாது இறே –
——————–
சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –
உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் -என்றது
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான அவ்வனுஷ்டானத்தில் உபாயத்வ புத்தி யுண்டாய்த்தாகில்
அது ஸ்வரூப ஹானி யாகையாலே தானே இத்தை நிவர்த்திப்பிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
இவ்விஷயம் தன்னை உபாயமாக அனுசந்திக்கில் -அது ஸித்த உபாயமாகையாலே தானே நிவர்த்திப்பிக்கும் என்னுதல்
இனி உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம் -என்றது –
இவ்விரண்டும் இன்றிக்கே உபேய வை லக்ஷண்ய அனுசந்தானம் தானே ப்ரவர்த்திப்பித்தது என்கிறார் –
————-
சூரணை-88-
அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய ப்ரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –
உபேயம் என்ன ஸாஸ்த்ர விருத்தங்களான ஏவம் வித ப்ரவ்ருத்தியிலே இவர் ப்ரவர்த்திக்கலாமோ என்ன
அப்ராப்த விஷயங்கள் -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார்
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சிஷ்ட கர்ஹிதமாய்
ஜூகுப்ஸா விஷயங்களுமாய்
உதர்க்கத்தில் நரகாவஹமான விஷயங்களிலே அபி நிவிஷ்டமானவனும் தன்னை அழிய மாறியும் அத்தைப் பெற வேணும் என்று இரா நின்றால்
எல்லா வழியால் அதற்கு எதிர்த்தட்டாய் ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்ட இவருக்கு இப்படிப் படச் சொல்ல வேணுமோ என்கிறார் –
————
சூரணை -89-
அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய கோடியில் அன்வயியாது —
ப்ரயோஜன மநுத்திஸ்யா ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்கையாலே
இது உபாயமாய் ஸம்பவிக்கிலோ என்னில் -அனுஷ்டானமும் -இத்யாதி
கீழ்ச் சொன்ன உபாய அதிகாரி லக்ஷண தயா வந்த அனுஷ்டானங்கள் உபாயத்தில் அந்வயியாதவோ பாதி
இவருடைய இந்த அனுஷ்டானமும் உபாயத்தில் அந்வயியாது
அங்கன் அன்றாகில் இது தான் உபேய அதிகாரிகள் எல்லாருக்கும் அநுஷ்டேயமாம் இறே –
——————
சூரணை -90-
அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –
இவர் அநித்யமான சரீரத்தை அழிய மாறின இதுக்குப் படுகிறதோ
நித்தியமான ஆத்ம வஸ்துவும் அஸத் சமமாம் படி அத்யந்த விலக்ஷணரானவர்களும் விஷய வைலக்ஷண்யத்தாலே அநந்ய உபாயத்வாதிகள் குலைந்து
அலமாவா நிற்க என்று அவ்வனுஷ்டானத்தில் ப்ரஸித்தியைப் பிரகாசிப்பிக்கிறார் -அநந்ய உபாயத்வமும் -என்று தொடங்கி
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
மற்றை நம் காமன்கள் மாற்றும் -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
அநந்ய உபாயதவாதிகள் யுடைய பிராட்டி
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு -நோற்கின்றேன் காம தேவா -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன் –இத்யாதியாலே
அவை குலையும்படியான ப்ரவ்ருத்திகளிலே ப்ரவர்த்திக்கையாலும்
அல்லாத ஆழ்வார்களும்
நோற்ற நோன்பு -என்று தொடங்கி அடுத்ததுசுத்து பிரபத்தி பண்ணுகையாலும்
மடல் எடுக்கையாலும்
ஓதி நாமம் குளித்து -இத்யாதியாலே உபாயாந்தரங்களிலே இழிய நினைக்கையாலும்
இவ்வநுஷ்டானம் ப்ரத்யக்ஷம் இறே -என்கிறார் –
————-
சூரணை -91-
ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–
ஆனால் அவர்கள் செயல் தானும் அஞ்ஞான கார்யமாய் இருந்ததே என்ன -அத்தைப் பரிஹரிக்கிறார் ஞான விபாக கார்யம் -இத்யாதி
பகவத் வை லக்ஷண்ய ஞானத்தினுடைய பரிபாக தசையிலே உண்டாமதான பக்தி பாரவஸ் யத்தாலே முன்னாடி தோற்றாதே
இப்படிப்படும் அலமாப்புக் கண்டு அங்கு அதிசயித புருஷார்த்த அந்வயியாய் விடும் என்கிறார்
அடிக்கழஞ்சு பெறுகை யாவது
அதில் அந்வயித்த அம்சம் பல ரூபமாய் இருக்கையாலே அத் யுத்தமம் என்கை-
————–
சூரணை -92-
உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –
உபாய பலமாய் –இத்யாதியால் –
இத்தலையில் ஸ்வீ காரமும் பொறாத சுணை யுடைய உபாயத்துக்கும் இந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூப வியாபாரங்கள் விலக்காகாவோ என்ன
அந்த உபாய ஸ்வீ கார அநந்தரம் பெரும் பேறு அன்றோ என்னுதல்
அன்றிக்கே
உபாய பூதனுடைய அநாதி கால கிருஷி பலமாய் அபி நிவேச அதிசயத்தாலே உபாயாந்தரங்களிலும் ப்ரவ்ருத்திக்கும் படியான
இவனுடைய துடிப்பைக் கண்டு அவனுக்குப் பிறக்கும் முகோலாசம் ப்ராப்ய அந்தர் கதமாகையாலே ஸித்த உபாயத்துக்கு அவை விலக்கு ஆகாது என்கிறார் –
————-
சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —
இந்த ப்ரேம அதிசயத்தால் வந்த கலக்கம் விலக்கு ஆகாது என்னும் இடத்தை விசதம் ஆக்குகிறார் -ஸாத்ய ஸமாநம் -என்று தொடங்கி -அதாவது
ஸர்வதா இவ்வுபாயம் தான் புருஷகார குண விக்ரஹங்களால் பூர்ணமாய்க் கொண்டே இருக்கையாலே
ஸர்வதா ஸாத்யத்தோடே ஒக்கும் என்றும்
ஸித்தமுமாய் ஸர்வ சக்தித்வாதிகளோடே கூடி இருக்கையாலே
ப்ரேமாந்த்யத்தாலே இப்படிப் பதறும்படி விளம்பத்தைப் பொறாது என்றும் அன்றோ இதர உபாயங்களை பற்ற இவ்வுபாயத்துக்கு ஆதிக்யம்
ஸாத்ய ப்ராவண்யம் –இத்யாதி -இப்படிப்பட்ட ப்ராப்யத்தில் த்வராதிசயத்தாலே இறே ப்ரதமத்திலே தான் இந்த ப்ராபகத்தை ஸ்வீ கரிக்கிறது
ஆகையால் விஷய வை லக்ஷண்ய அதீனமாய் வந்த அதி ப்ரவ்ருத்தி உபாய விரோதி யாகாது
ஸ்வரூப அனுரூபமாம் இத்தனை என்று திரு நறையூர் அறையருடைய அதி ப்ரவ்ருத்தியில் சங்கையை இவ்வளவாகப் பரிஹாரம் பண்ணி நின்றது –
———–
சூரணை-94-
இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –
மேல் -இவனுக்குப் பிறக்கும் -என்று தொடங்கி -இப்படி இந்த ப்ராவண்யம் பல வேளையிலே யாராது உபகாரகமாகை அன்றிக்கே
தன்னுடைய உத்பத்தியிலே ஸந்நிபத்ய உபகாரகங்களான ஆத்ம குணங்களுக்கு மூலமும் தானே யன்றோ என்கிறது –
————-
சூரணை -95-
மால் பால் மனம் சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –
அது எங்கனே என்னில் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றும்
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி -என்றும்
கண்டு கேட்டு -என்று தொடங்கி -கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்றும்
இப்படி விலக்ஷண விஷய தர்சனத்தாலே முதலில் ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசையற்று என்கையாலும் -என்கிறார் –
——————-
சூரணை -96-
ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –
ஆத்ம குணங்களில் -இத்யாதி -சமமாவது -பர தாராதிகளில் போகாத படி இந்திரியங்களை நியமிக்கை
தமமாவது -உபஸமநம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
——————-
சூரணை -97-
இந்த இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —
இவை இரண்டும் உண்டானால் என்று தொடங்கி -இவன் சம தம உபேதனானவாறே ஸதாசார்ய ஸ்வீ காரம் உண்டாகும்
அவ்வங்கீ கார்த்தாலே ருஷோ யஜும் ஷி -இத்யாதில் படியே
ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்திரம் ஸித்திக்கும்
இது ஸித்தித்தவாறே ஸகல வேத வேத்யமான ஸர்வேஸ்வரன் சந்நிஹிதனாம்
அவன் சந்நிஹிதனானவாறே அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷம் அதி ஸூலபமாம் -என்கிறார் –
————–
சூரணை -98-
பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –
இனி ப்ராப்ய லாபம் என்று தொடங்கி -ஸிம்ஹ அவ லோகந ந்யாயத்தாலே யுக்த அர்த்தத்தை ஸ்த்திரீ கரிக்கிறாதல்
நிஸ் ரேணிகா ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு இவற்றினுடைய ஸ்வரூப ஸித்தி உண்டாம் என்கிறார் ஆதல்
மீள ஆச்சார்ய லாபம் என்கிறது ஸ்வரூப ஞான பிரதர் என்றும் சொல்லுவார் –
——–
சூரணை -99-
இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —
சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –
இப்படிப் பகவத் ப்ராவண்யம் மூலமாக வந்த ஆத்ம குணங்களால் வரும் பல பரம்பரைகளைச் சொல்லுகிறது
ப்ரபந்ந அதிகாரிக்கு விஷய விரக்தியில் ஊற்றம் சொல்லுகைக்காக –
இவ்விஷயத்தில் ஒரோ வகைகளாலே உபாதேய புத்தி பண்ணி இருக்கிற ஐஸ்வர்ய காமனையும் உபாசகரையும் எடுக்கிறார் -இது தான் -என்று தொடங்கி
இது தான் என்றது இவ்வாத்ம குணம் தான் என்றபடி
ஐஸ்வர்ய காமருக்கும் -இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா -என்கையாலே
இந்திரிய ஜய அர்த்தமாக பர தாராதிகள் நிஷித்தங்கள்
ஸ்வ தாராதிகள் ப்ராப்ய தயா உபாதேயங்கள்
உபாஸகனுக்கு சாந்தோ தாந்த -இத்யாதிகளில் படியே உபாஸன விரோதித்வேந பர தாராதிகள் பரித்யாஜ்யங்கள்
ஸ்வ தாராதிகள் ஸஹ தர்ம சாரிணீத்வேந உபாதேயங்கள்
ப்ரபன்னனுக்கு பகவத் அனுபவ விரோதித்வேந உபாயமும் பரித்யஜ்யம் –
———
சூரணை -101-
மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன் ஏற்றம் –
இனி பிரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்கிறது -ஸ்வ தாராதிகள் மற்றை இருவருக்கும் உபேய தயாவும் உபாய தயாவும் உபாதேயங்கள் ஆகையாலும்
ஏகாந்தீ து வினிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை -பஃத்யுபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ண ஏக சாதன -என்கிறபடியே
இவன் ததேக போகனுமாய் ததேக உபாயனுமாகையாலே இவனுக்கு ஸ்வ தாரதாதிகளையும் விடுகை அவர்களைப் பற்ற ஆதிக்யம் -என்றபடி –
—————-
சூரணை -102-
இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –
இது தான் இத்யாதி –இந்த இதர விஷய விரக்தி ப்ரபன்னனுக்குப் பிறக்கும்படி தான் எங்கனே என்னில்
கீழே அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகளை -இவ்விடத்தில் அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார்
பக்தி பாரவஸ்ய ப்ரபன்னர்க்கு விஷய வை லக்ஷண்யத்தாலும்
ஞாணாதிக்ய ப்ரபன்னர்க்கு நிர்ஹேதுக கிருபையாலும் பிறக்கும்
சிலருக்கு ஆசாரத்தாலே என்றது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா -என்கிற பகவத் ஆஜ்ஞ அதி லங்கனத்தாலே வந்த தண்ட தரத்வம் அடியாக வருகிற ஆசாரத்தாலே யாதல்
ராமாவதாராதிகளில் அவருடைய ஆசாரம் அஸ்மத்தாதிகளைக் குறித்து அன்றோ என்னுதல்
எம்பார் முதலான ஆச்சார்யர் அனுஷ்டானங்களாலே யாதல்
இவ்விஷய விரக்தி பிறக்கும் -என்கிறார் –
———-
சூரணை -103-
பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும் –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –
இவ் வதிகாரிகளுக்கு அந்த வை லக்ஷண்யாதிகள் விரக்தி உண்டாக்கும் க்ரமம் என் என்னில்
அவனுடைய அபரிச்சின்னமான திவ்ய ஸுந்தர்யம்
நோ பஜநம் ஸ்மரன் நிதம் ஸரீரம் -என்கிறபடியே
,முதலிலே இதர விஷய ஞானம் இல்லாத படி பண்ணும்
அவனுடைய அருள் அன்ன மென்னடையினார் கலவியை அருவருக்கப் பண்ணும்
கீழ்ச் சொன்ன பகவத் பாகவத அனுஷ்டானங்கள் ஆகிற ஆசாரம் பயத்தை உண்டாக்கும் என்கிறார் –
——–
சூரணை -104-
இவையும் ஊற்றத்தைப் பற்றச் சொல்லுகிறது –
இவையும் -என்றது -கீழேயும் ஊற்றம் சொல்லுகையாலே அஞ்ஞானமும் அரிசியும் பயமும் அதிகாரி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்க
ஒவ்வொன்றிலே ஊற்றமாய் இருக்கையாலே –
——-
சூரணை-105-
அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் —
சூரணை -106-
அது பிரதான ஹேது அன்று –
சூரணை -107-
அப்ராப்தையே பிரதான ஹேது –
அருசி பிறக்கும் போதைக்கு -இத்யாதி -இவ்வதிகாரிகளுக்கு அருசி பிறப்பது விஷயங்களுடைய தோஷ பூயிஷ்டதையைக் கண்டாலோ என்னில்
அதுவும் ஒரு ஹேது
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராது என்று விடுமதுவே பிரதான ஹேது -என்கிறார் –
———
சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —
பகவத் விஷயத்தில் -இத்யாதி -கீழே மால் பால் மனம் சுழிப்ப -இத்யாதி ப்ரமாணங்களாலே இதுக்குப் ப்ரதிகோடியாக எடுத்த
பகவத் விஷயத்தில் பிரவணராகிறதும் -கல்யாண குண தர்சனத்தாலேயோ -ஸ்வரூப அனுரூபம் அன்றோ என்ன
இக் குணங்கள் அவ்வஸ்து கதமே யாகிலும் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறது -என்னும் இடத்தை ன் அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தா பர்யந்தமாக அருளிச் செய்கிறார் –
———-
சூரணை -109-
இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )
இப்படிக் கொள்ளாத போது -இத்யாதியாலே இவ்வர்த்தத்தை
பர்வதோயம் அக்னி மான் தூமத்வாத் யத் யக்னி மான் ந பவதி தர்ஹி தூமவான் அபி ந பவதி -என்னுமா போலே
அநிஷ்ட ப்ரசங்க முகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
அதாவது -ஸ்வரூப அனுரூபம் என்றும் ஸ்வரூப ஹானி என்றும் கொள்ளாத போது அபி நிவேச அனுரூபமாக அவன் முகம் காட்டாத படியாலே
அவனுடைய குண ஹானியே தோற்றுகிற அளவிலும் ஆழ்வார்கள் மேன்மேல் என அவ்விஷயத்திலே மண்டுகையும்
ஸம்ஸாரத்திலே தோஷம் ஸர்வ ஸம் பிரதிபன்னமாகக் காணா நிற்கச் செய்தேயும் அதிலே ஆதரித்துப் ப்ரவர்த்திக்கையும் கூடாது இறே என்கிறார்
இதர விஷய தோஷ தர்சனத்தாலே விடப்படுமாகில் -அஸ் ஸம்ஸார அனுபவ தசையிலே சிலருக்கு அசிந்திதமாக ராஜ்ய ஷோபம் பிறந்து
அவர்கள் ச குடும்பமாக பர்வத ஆரோஹணம் பண்ணா நிற்க -மத்யே மார்க்கே கர்ப்பிணிக்கு ப்ரஸவ காலமாகத் தன்னால் பரிஹரிக்க அரிதான பாரங்களாலும்
புத்ர பஸ் வாதி பாரவஸ் யத்தாலும் அத்யந்த பீதி யுக்தனாய்ப் போரு கிற சமயத்திலே அபஹர்த்தாக்களால் ப்ராண பர்யந்தமான
ஆபத்து வந்தாலும் இற்றை அளவுக்கு பிராணன் ஆகிலும் கிடந்ததே என்று தான் முடியும் அளவும் அதில் அருசி பிறவாதே
புத்ரா தய கதமம மீ -இத்யாதில் படியே அக்குடும்ப ரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கக் காண்கையாலும் கூடாது இறே
ஆகையால் சம்சாரத்தைத் தோஷம் கண்டு கை விடுகிறதும் இல்லை
பகவத் விஷயத்தை குணம் கண்டு பற்றுகிறதும் இல்லை –
ஸ்வரூப ஹானி என்று விடுகையும்
ஸ்வரூப பிராப்தம் என்று பற்றுகையுமே
நிலை நின்ற ஆகாரம் என்கிறார் –
———–
சூரணை -110-
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —
கொடிய என்னெஞ்சம் -இத்யாதி -பகவத் விஷயம் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறதுக்கு பிரமாணங்கள் –
—————–
சூரணை-111-
குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் —
குண கிருத தாஸ்யத்திலும் -இத்யாதியாலே சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரஸித்துக்கு அடி -ரஹஸ்ய த்ரயத்தில்
சேஷத்வமும் குணத்தால் வந்தது -என்ற அநந்தரம்
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்றும்
குண அத்யவசாயம் சொல்லா நிற்க ஸ்வாமித்வத்தாலே ஸ்வரூப அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் -என்ற அநந்தரம்
சேஷித்வத்திலே நோக்கு -என்கையாலும்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றிலும் குண க்ருதமாய் வருமத்தைப் பற்ற ஸ்வரூப பிரயுக்தமானது ப்ரபலமாகையாலே -என்கை –
————–
சூரணை -112-
அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–
இவ்வர்த்தத்துக்கு உதாஹரணம் -அநஸூயைக்கு -இத்யாதி
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாள் எழுந்து அருளின போது அவன் அநஸூயை இடுவித்துப் பிராட்டியை ஆதரிப்பித்த அநந்தரத்திலே
அவள் பெருமாள் ஸுகுமார்யத்தைக் கண்டு பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீகளுக்கு பார்த்தாக்களே கிடீர் தேவதை
இவ்வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் காட்டிலே வந்த நீர் இவர் அளவிலே இன்று போலே என்றும் இருக்க வேணும் கிடீர் -என்ன
அவளைப் பார்த்து -இவரையும் இவர் வை லக்ஷண்யத்தையும் வ்யதிரேகித்துக் காட்ட வல்லேனாகில் இறே
இவ்வழகை ஒழியவும் நாம் பெருமாளுக்கு நல்லேன் ஆண்மை காட்டலானமை -என்றாள் –
————
சூரணை -113-
பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –
ஆனால் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -என்னும்படி இப்படி சத்தா ப்ரயுக்த தாஸ்யத்தை யுடைய ஸ்வரூபத்துக்கு முன்பு சொன்ன
அநந்ய தைவத்தாதிகள் குலையும்படியான பகவத் விஷயத்தில் அதி ப்ரவ்ருத்திகள் சேருமோ என்னில்
அதுக்கடி ப்ராவண்யம் -என்று தொடங்கி -சத்தா பிரயுக்த ஸம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வருகிற
ப்ரவ்ருத்தி களாகையாலே சேரும் என்கிறார் மேல் –
அவ்வாதி ப்ரவ்ருத்திக்கு அடி பகவத் விஷயத்தில் ப்ராவண்ய அதிசயம்
அப்பிராவண்யத்துக்கு அடி -மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற சம்பந்தம்
அஸ் ஸம்பந்தம் தான் வந்தேறி அன்று –
———
சூரணை -114-
அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –
யாவதாத்ம பாவி அப்ருதக் ஸித்தமான அந்த சத்தை ஸ்வ சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வரும் பகவத் அனுபவம் பெறா விடில்
மாந்து சோர்கிற பசியிலே சோறு பெறாத போது பிராணன் போமா போலே குலையும்
அது குலையாமைக்காக -இத்யாதி -இஸ் சத்தா ஸத் பாவ ஹேதுவாய்க் கொண்டு பி வரும் வியாபாரங்கள் எல்லாம் வருந்தியும் விடப்போகாத படியுமாய்
விழுக்காட்டில் ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய் இருக்கும்
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் என்று சோத்ய பரிஹாரம் பண்ணுகிறார் –
————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-