ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –457-463- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –
அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

இப்படி ஸ்வரூப ஹானி வரும் என்னும் பயத்தாலே -விடுகிற அளவு -போராது
ப்ராப்த விஷய ப்ரவண சித்ததையாலே -ப்ராக்ருத சகல போக்ய வஸ்துக்களும்
பிரதிகூலமாகத் தோற்றும் அவஸ்த்தை பிறக்கவும் வேணும் –
ஸ்வரூபம் குலையாமைக்கு – என்கிறார் மேல் –

அதாவது –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாராபசவோ க்ருஹாணி த்வத் பாத பத்ம ப்ரவணா
ஆத்மவ்ருத்தே பவந்தி சர்வே பிரதிகூல ரூப -என்று
பேரருளான பெருமாளைக் குறித்து -பிரம்மா விக்ஜ்ஜாபித்த ஸ்லோகத்தில் சொல்லுகிற –
ஷேத்ரம் மித்ரா தந -ஆதிகளான-சமஸ்த வஸ்த்துக்களும்-
அக்நி கல்பமாய் தோற்றும்படியான  அவஸ்த்தை  பிறக்க வேணும் -ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு -என்கை –
இந்த ஸ்லோக அர்த்தத்தை –
நல்ல புதல்வர் ஞானசாரம் -19–இத்யாதியாலே -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் அருளி செய்தார் இறே –

தத் வ்யதிரிக்த ஷேத்ராதி சூத்ர விஷயங்கள் அடங்க த்ருஷ்ட்டி விஷயமாகவே தோன்ற வேண்டுமே
நல்ல மனையாள் இத்யாதி இருந்தாலும் நெருப்பில் இட்ட விறகு போலே பரிபக்குவ நிஷ்டை வேண்டுமே
ஸ்வரூபம் நழுவாமல் இருக்க வேண்டும்

———————————————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

இனிமேல் பிராப்ய பூமியில் ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு
அவஸ்ய அபேஷிதம் என்னுமத்தை அறிவிக்கைக்காக -அவற்றினுடைய
உபாய  சதுஷ்டய சாதாரண்யத்தை அருளிச் செய்கிறார் –

ப்ராப்ய பூமி -ஆவது -தனக்கு வகுத்த சேஷியான விஷயம் எழுந்து அருளி இருக்கிற தேசம் –
தத் ப்ராவண்யம் ஆவது -அத் தேசத்தை கிட்டி அல்லது தரியாத அதி மாத்ரமான ஆசை –
த்யாஜ்ய பூமி ஆவது -அவ் விஷயத்தை அகன்று இருக்கைக்கு உடலான தேசம் –
தஜ் ஜிஹிசை ஆவது -இத்தை விட்டே நிற்க வேணும் என்னும் இச்சை –
அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண யோக்யதை -யாவது -வகுத்த சேஷியான விஷயத்தினுடைய விக்ரஹாத் அனுபவம் பெறாத போது-
தேக தாரணமான போஜனம் இல்லாவிடில் தேகம் தரியாதாப் போலே -தான் தரித்து இருக்கைக்கு யோக்யன் அன்றிக்கே இருக்கை-
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் -என்றது -இவை இத்தனையும் -உபாய சதுஷ்டய அதிகாரிகளுக்கும் –
அதிகார அநு குணமாக வேண்டும் -என்றபடி –
உபாய சதுஷ்டயம்-ஆவது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தாலே -என்று துடங்கி -கீழ் அருளிச் செய்த
பக்தி பிரபத்திகளும் -ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் —
பகவத் விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் – ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் –ஆகவுமாம்–
இதில் முற்பட்ட யோசனைக்கு ஓவ்சித்தியம் உண்டு –
கீழே நான்கு உபாயத்தையும் சேர இவர் தாமே அருளிச் செய்ததுக்கு சேருகையாலே-
இதில்
பக்தி பிரபத்தி நிஷ்டர் இருவருக்கும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்கிற ப்ராப்ய பூமியான பரம பதத்தில் பிராவண்யமும் –
வரம் ஹூத வஹ ஜ்வாலா பஞ்சராந்தர்வ்ய வஸ்த்திதி ந ஸௌரி சிந்தா விமுக ஜந சம்வாச வைசசம்-
கொடு வுலகம் காட்டேல் -என்னும்படி
ப்ராப்ய வஸ்துவை இழந்து -ப்ராக்ருத மத்யே இருக்கைக்கு உடலான சம்சாரம் ஆகிற த்யாஜ்ய பூமியில் ஜிஹிசையும்
உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்று இலேன் -என்கிறபடியே –
பகவத் அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண  அயோக்யதையும் -அவசியம் உண்டாக வேணும் –
ஆசார்ய விஷயத்தில் -ஸ்வகத பரகத ஸ்வீகார நிஷ்டரான இருவருக்கும் –
எல்லாம் வகுத்த இடம் என்று இருக்கையாலே –
ஆசார்யன் எழுந்து அருளி இருக்கிற தேசம் ப்ராப்ய பூமியாய்-
(பரகால நாயகி- விமல சரம திருமேனி- திருவடி தொட்டு இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே-
ஆளவந்தார் –திரு முதுகே பிரமேயம்–பின்பழகாம் பெருமாள் ஜீயர் -வைத்தியர் இடம் -ஐதீகம் – )
அவனைப் பிரிந்து இருக்கிற  இடம் த்யாஜ்ய பூமியாய் –
அவனுடைய விக்ரஹாதிகளே அனுபவ விஷயமும் ஆகையாலே –
பிராப்ய பூமியில் ப்ராவண்யாதிகள் மூன்றும் -இவனுக்கு அநு குணமாக
அவசியம் உண்டாக வேணும் என்று -அதிகார அநு குணம் விபஜித்து சொல்லக் கடவது –
அன்றிகே –
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்று தாம் அருளி செய்த பிரபந்தத்தை அப்யசித்தவர்களுக்கு வாசஸ்த்தானம்-
ததீய வைபவமே நடக்கும் ஸ்ரீ வைகுண்டம் என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –
சரம பர்வ நிஷ்டரானவர்களுக்கும் –
ஸ்வ ஆசார்யன் உகந்த பகவத் விஷயத்தில் பரி பூர்ண அனுபவாதிகள் சித்திப்பது அவ்  விபூதியிலே ஆகையாலும்
பிராப்ய பூமி பரம பதம் – (ஈரரசு பட்டு இருக்காதே )
இருள் தருமமா ஞாலம் ஆகையாலே -அதுக்கு விரோதியான சம்சாரம் -த்யாஜ்ய பூமி –
அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண அயோக்யதை -ஆவது -ஸ்வ ஆசார்ய விஷயத்திலும் அவன் உகந்த பகவத் விஷயத்திலும் உண்டான
அனுபவம் பெறாத அளவில் -தான் தரித்து இருக்க மாட்டாமை என்று –
இங்கனே யோஜிக்கவுமாம் –

பக்தி -பிரபத்தி -ஆச்சார்ய ஸூவ கத அபிமானம் -ஆச்சார்யர் நம்மை அபிமானிப்பது -இந்த நான்கும்
சர்வ உபாய அதிகார சாதாரணங்கள் -அவசியம் அபேக்ஷிதம் -ஸ்ரீ வைகுண்டம் -ப்ராப்ய பூமி -ஆசை பிராவண்யம்
சம்சாரத்தில் வெறுப்பு இல்லாமல் தரியாமை-என்று நேராக சொல்லாமல் -ஆச்சார்யர் திருவடிகளே ப்ராப்ய பூமி -சரம பர்வ நிஷ்டருக்கு
ஒளிக் கொண்ட சோதி -மாக வைகுந்தம் -உடன் கூடுவது என்று கொலோ -முக்த ப்ராப்ய பூமி –
பெற்று அல்லது தரியாத நிரதிசய பிராவண்யம்
கொடு உலகம் காட்டேல்-முமுஷுக்களுக்கு இதுவே த்யாஜ்யம் -சம்சார தர்சனத்தில் வெருவி-
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கில்லேன் -ஆத்ம தாரணம் முடியாமல் ஸூ பாஸ்ரய விக்ரஹம் -தேவரீர் திருமேனி அனுபவம் இல்லையாகில்
காணுமாறு அருளாய் –ப்ருஹத்-ப்ரஹ்மம் அனுபவம் இல்லாவிடில் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் –
மத் விஸ்லேஷம் அஸஹம்–தேஷாம் ஞானி நித்ய யுக்த –எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவர்கள் –
உள்ளம் துடிப்பு இருக்க வேண்டும் -மலைச்சுமையான ஆத்ம தாரணம்-
பகவத் -ஆச்சார்ய -ஸூ கத -பரகத –இப்படி நான்கும் என்றும் ஒரு நிர்வாஹம்
பக்தி பிரபத்தி ததீய அபிமானம் ஆச்சார்ய அபிமானம் என்றுமாம்
சரம கடாக்ஷம் -ஸூபாஸ்ரய-தத் பிரதான –தத் சம்பந்தி -இப்படி நான்கும் பிரதம மத்யம சரம நிஷ்டருக்கும் -இப்படி -12-விதங்கள் –
தேசிகர் உள்ள தேசம் -தேசிக தர்சனீய விக்ரஹம் -ஏதத் அனுகுண பிராவண்யம் கைங்கர்யம் வேண்டுமே

——————————————————————

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பூர்வ உக்த உபாய சதுஷ்டயத்திலும் -பகவத் விஷயத்தை அவலம்பித்து இருக்கிற – பக்தி பிரபத்திகள்  ஆகிற உபாய த்வ்யமும் –
இவ் அதிகாரிக்கு நழுவி நின்ற பிரகாரத்தை கீழ்
அருளிச் செய்த அநந்தரம்-
ஆசார்யனை தான் பற்றும் பற்று -என்றும் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம்- என்றும் அருளிச் செய்த ஆசார்ய விஷயத்தில் –
ஸ்வகத பரகத ஸ்வீகார ரூப உபாய த்வத்துக்கும்-
பிரமாண தர்சனம் பண்ணுவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
ப்ரதமம் -ஸ்வகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல்-தொழுவாரைக் கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறத்து
வீற்று இருப்பார் மிக்கு –
அதாவது –
அமோகமாய் இருப்பதோர் உபாயம் அறிந்தேன்-
ஆஸ்ரயிப்பார்க்கு சமாஸ்ரணீயனாய் கொண்டு-திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அவனுடைய திருவடிகளை
தப்பாத பிரகாரத்தை நினைத்து -நாள் தோறும் அநு கூல விருத்தியை பண்ணிக் கொண்டு போரும் ஞானாதிகரைக் கண்டு
தங்களுக்கு தாரகமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் அவர்கள் –
ஆத்மாவோடே அவிநா பூதமான பாபத்தைப் போக்கி -ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் திறந்து -அங்கே
சம்ருத்தமான ஞானாதிகளை உடையராய் -ததீய கைங்கர்ய நிரதராய் கொண்டு – வ்யாவிருத்தராய் இருப்பர் என்று –
பரம ஆப்தரான – திருமழிசைப் பிரான் அருளிச் செய்த -பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் -என்கிற
பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்பட சொன்ன
ஸ்வகத ஸ்வீகார மாகிற உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்கை-
இத்தால் –
ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-
(தாவு பௌ–இருவருக்கும் நியாமேந-பல சித்தி –
பிரபத்திக்கு சரண்யா ஹ்ருதய அனுசாரி யாக இருக்க வேண்டும் –
பரம தயாளு -என்பதால் அது இங்கு இல்லை -அஹங்கார கர்ப்பம் –பழுது என்று ஒத்துக் கொண்டு –
பழுது ஆகாது -பல சித்தியில் -என்று இரண்டுக்கும் இதுவே பிரமாணம் –
அபலை சிறு பெண் -பிஞ்சாய் பழுத்து அவள் ஸ்ரீ ஸூக்தி அடுத்ததுக்கு -)

பூர்வ உபாயம் என்பது ஆச்சார்யரை நாம் பற்றும் பற்று -ஸூ கத ஸ்வீ காரம்
அடுத்த சூரணை-ஆச்சார்யர் நம்மைப் பற்ற-பரகத ஸ்வீ காரம் -அதுக்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்
அடியார் அடியார் -வேறு பாடு தோன்ற வீறுடன் மிக்கு வீற்று இருப்பர் – -இவர்கள் –
உபாயத்வ பிரகாசத்வம் காட்டும் பிரமாணங்கள் –
அமோகமாய் -அத்விதீயமாய் -பழுது ஆகாமல் ஒன்றாய் –
அறிவிக்க அறிந்தேன் –
ஆஸ்ரித ரக்ஷணம் -பாற் கடலான் -அதுவே ஸ்வரூப நிரூபனம் -ப்ராப்தமான திருவடிகள் -இறங்கினதே அருள தானே
வழுவாத -பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லாமல் -வகை உபாயம்
நிரந்தரம் அனுகூல வ்ருத்தி பண்ணும் -வைகல் தொழுவாரை -கைங்கர்யம்
உத்தாராகராக -கொண்டு சரணம் புகுந்து -உஜ்ஜீவிக்கும் அவர்கள் வாழ்வார்
கலந்த வினை -ஸ்வரூபத்தில் பிரிக்க முடியாமல் கலந்த அவித்யாதி -கர்மா வாசனா ருசி -போக்கி கொண்டு
விண் திறந்து -வாசலை திறந்து -வீற்று -விகசித ஞானம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று வ்யாவருத்தராய் இருக்கார் -மிக்கு –
பூர்வ உபாயத்துக்கு முக்கிய பிரமாணம் –
அமோகமாய் –ஸ்வ கத ஸ்வீ காரமும் வீணாகாதே -இங்கே ஆச்சார்ய அனுசார ஹ்ருதயம் சங்கை இல்லையே -பரதந்த்ரன் என்பதால் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு -அங்கும் ததீயருக்கே –

———————————————–

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

அதாவது –
1-தோழி யானவள் -தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது -அவன் –
நத்யஜேயம் -என்ன வார்த்தையும் -பெரிய ஆழ்வார் வயிற்றில் பிறப்பையும் -ஆயிற்று –
இப்போது அவன் வார்த்தை தனக்கு பலியாத மாத்ரத்தை கொண்டு -இது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இனி இவள் எங்கனே  ஜீவித்து தலை கட்டப் போகிறாள் என்னும் இழவு தோற்ற இருக்க –
அவளைப் பார்த்து என்னிலும் என் இழவுக்கு நோவு படும் படி ஸ்நிக்தையான என்னுடைய தோழி –
அநந்த சாயியாய்-அத ஏவ- சர்வ ஸ்மாத் பரராய் இருக்கிறவர் -அதுக்கு மேலே –
ஸ்ரீ யபதியாய் -ஒருவருக்கும் எட்ட ஒண்ணாத பெருமையை உடையராய் –
இருப்பார் ஒருவர் -தேவ யோநியில் பிறந்து-சிறிது அணைய நிற்கையும் அன்றிகே –
அவருக்கும் நமக்கும் பர்வத பரம அணுக்கள் ஓட்டை வாசி போரும்படி ஷூத்ரரான மனுஷ்யர் நாமான பின்பு நம்மால் செய்யலாவது உண்டோ –
அவர் ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைத்தார் என்றதைக் கொண்டு -நம்மால் அவரை வளைக்கப் போகுமோ -அது கிடக்கட்டும் –
நமக்கு பேற்றுக்கு வழி உண்டு காண்-
ஸ்ரீ வில்லி புத்தூரில் அவதரித்த ஏற்றத்தை உடையராய் -சர்வ வ்யாபக வஸ்துவை தன் திரு உள்ளத்தில் அடக்கி கொண்டு இருக்கிற
பெரிய ஆழ்வாரை -ஆசார்ய தேவோ பவ -என்கிறபடியே -நமக்கு தேவரான -தமக்கு தேவராய் இருக்கிற அவரை –
ஓர் இசையை சொல்லி இசைக்கவுமாம் –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-
திருமஞ்சனத்தை சேர்த்து வைத்து அழைக்கவுமாம்-
திருக்குழல் பணியை சமைத்து வைத்து அழைக்கவுமாம்-
திருவந்திக் காப்பிட அழைக்கவுமாம் –
அன்றிக்கே
நாம் தம்மை முன்னிட்டாப் போலே -தனக்கு புருஷ்காரமாவரை (நாகணை மிசை நம் பரர் )முன்னிட்டு வரப் பண்ணவுமாம் –
நல்லதொரு பிரகாரம் வருவித்தார் ஆகில் -அத்தைக் கண்டு இருக்கக் கடவோம் –
நாம் மேல் விழக் கடவோம் அல்லோம் -என்று
ஆண்டாள் அருளிச் செய்த -நல்ல என் தோழி -பாட்டையும் –

2-ஈஸ்வரன் என்று பாராதே -தனக்கு எதிரியான ஹிரண்யாசுரனைக் -கூறிய திரு வுகிராலே-வர பலங்களால் பூண் கட்டி இருக்கிற மார்பை –
பொன் மலை பிளந்தால் போல் இரண்டு கூராம்படி அநாயாசேன -கிழித்துப் பொகட்ட மிடுக்கை உடைய நரசிம்ஹத்தை –
அந்தி அம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்று
அநந்ய ப்ரயோஜனராய்  கொண்டு மங்களா சாசனம் பண்ணி இருப்பாரை ஜயிக்குமே-
வ்யாவிருத்தராய் இருக்கிற அவர்கள் பக்கலிலே ந்யஸ்த பரராய் -அவர்கள் அபிமானத்திலே ஒதுங்கி இருப்பாருடைய ஸூக்ருதம் -என்று –
திரு மழிசை பிரான் -அருளிச் செய்த – மாறாய தானவனை -என்கிற பாட்டையும் –

3-அக்ருத்ரிம-என்று துடங்கி -ஸ்வாபாவிகமாய்-தேவருடைய ப்ராப்தமுமாய் -போக்யமுமான –
திருவடிகளில் உண்டான பிரேமத்தினுடைய அதிசயத்துக்கு எல்லை நிலமாய் இருப்பாராய்-
அந்த பிரேம பிரகர்ஷத்துக்கு அடியான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை உடையராய் –
வித்தையாலும் -ஜன்மத்தாலும் -அடியேனுக்கு பிதா மகராய் இருக்கிற -நாத முனிகளைப் பார்த்து –
அடியேனுடைய விருத்தத்தைப் பாராதே -பிரசன்னராய் அருள வேணும் -என்று பரம ஆசார்யான ஆளவந்தார் அருளிச் செய்த –
வேதாந்த தாத்பர்யமான -ஸ்தோத்ர ரத்னத்தில் -சரமமான ஸ்லோகத்தையும் –

4-ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத பசு பஷிகள் ஆகவுமாம்- ஞான யோக்யதை உள்ள மனுஷ்யர் ஆகவுமாம் –
யாவர் சிலர் பகவத் சம்பந்தமே நிரூபகமாம் படி ( க்ராம குல இத்யாதிகள் வேண்டாம் ) இருப்பானொரு
ததீயனோடே சம்பந்த்தித்து  இருக்கிறார்கள் –
அவர்கள் அந்த வைஷ்ணவனாலே – ப்ராப்ய பூமியான பரம பதத்தை ப்ராபிப்பர்கள் என்கையாலே –
ஞானம் உண்டாகவுமாம் -இல்லையாகவுமாம் – ததீய அபிமானமே உத்தாரகம் –
என்னும் இடத்தை ஸூஸ்பஷ்டமாக சொல்லுகிற -பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ  சம்ஸ்ரயா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிற பௌராணிக ஸ்லோகத்தையும் –

ஆசார்ய அபிமானம் ஆகிற இந்த பரகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்றபடி –

தங்கள் தேவர் -நமக்கு அல்ல என்று விலக்குகிறாள்-பிராட்டி -உற்றது சொல்லும் நல்ல துணை –உயிரான தோழி
அனந்தஸாயி -நாகணை -நம்மை -எட்டாது இருக்கும் -நம்மை மறப்பிக்கும் உபய விபூதி ஐஸ்வர்ய செருக்கு
எல்லாரையும் கும்பீடு கொள்ளும் முதலியார் -அதி ஷூத்ரராய் சிறு மானிடர் -என்னவும் பற்றாமல் முடியும் தண்ணியம் நாம்
அவரை சிறுக்கப் பண்ணவோ -ஸ்வ தந்த்ரர் செய்வதை பார்த்து இருக்கலாம் –
ஸ்ரீ வில்லிபுத்தூர் அவதார வாசியால் சர்வ வியாபக வஸ்துவை தன சித்தத்தில் அடக்கி ஆளும் பெரியாழ்வார்
ஆச்சார்ய தேவோ பவ -அவர் நாங்கள் தேவர்
பேசிற்றே பேசும் ஏக கண்டர் -ஆழ்வார்கள் அனைவரையும் சேர்த்து தங்கள் தேவர் –
சாண் கரு முக மாலை இடுதல் -வாராய் –வருவிப்பார் -வல்ல பரிசு -வல்லமை –
நீராட இத்யாதி -பண்ணை நனைத்துதல்
அஞ்சலி பண்ணி
நம் கால் நடையில் கழுத்தில் கப்படம் -கட்டுப்பட்டு அரங்கில் விழுவான் –
தேர் யானை இத்யாதி இல்லை -காண்போம் -பிஞ்சில் பழுத்த பாசுரம்

த்வயம் சொல்லி -ஏற்றி -தபஸ் -அநந்ய பிரயோஜனர் -அத்யந்த பாரதந்தர்யம்
பகவான் இடம் -பாரதந்தர்யம்
அதி பாரதந்தர்யம் நாம் ஆச்சார்யர்
அத்யந்த -அவர் அபிமானித்தில் ஒதுங்கி
உறை கழற்றியவர் பாசுரம்

நமோ –ஆச்சார்ய பிரணவம் -ஆரம்பத்திலும் முடிவிலும் -வேதாந்த தாத்பர்யம் -பிரணவ ஸஹிதம்-
ஸ்வா பாவிக -தேவரீர் யுடைய –அடியேனுக்கு பிராப்தமான ப்ராப்தமான -போக்யமான அரவிந்த -திருவடிகளில்
பிரேம அதிசய சீமா பூமி – பஹுமந்தவ்யர் நாத முனி பார்த்து -அடியேனுடைய கிருத்யம் பாராமல் -அக்ரித்ரிம என்ற சரம ஸ்லோகம் –

ஞானம் பெற யோக்யதை இல்லாத பசுவோ பஷியோ மனிசனோ -நடுவில் வைத்தது –
ஸ்ரீ வைஷ்ணவ திருவடி பற்றி அதன் பலமாகவே ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் –
அபிமானத்தால் -பெறுதற்கு அறிய பரமபதம் பிராபிக்கும்
இந்த நான்கும் முக்கிய -பர-பரதர–பரதமமான பிரமாணம்
இதில் தானே பசுவும் பஷியும்
ப்ரபத்திக்கு சேஷம் காரணம் என்று கொள்ள வேண்டாம் –
ஞானம் யோக்யதை இல்லாத பசு பஷி எடுத்ததால் இது ஸூவ தந்த்ர உபாயம் என்று ஸூ ஸ்பஷ்ட பிரமாணம் இது

ஆச்சார்யர் மூலம் தானே பகவத் பிரபத்தி -அதே போலே ஆச்சார்ய அபிமானம் பகவத் பிரபத்தி நிரபேஷம் இல்லை
ஈஸ்வர ஸுஹார்த்தம் பொதுவாக அனைவருக்கும் உண்டே –
பலம் தானே கொடுக்கும் -பெருமாள் புருஷகாரம் ஆச்சார்ய லாபம் பகவானால் பார்த்தோம் –
இவ்வர்த்தம் -ப்ரத்யக்ஷமாக யதிராஜா இடம் வசப்பட்டு -திருவடிகளை – –தான் அது தந்து –
கால த்ரயேபி-அடுத்த ஸ்லோகம் -சரணாகதி -கூட நீர் நம் பொருட்டு செய்தீர் -அதுவே ஷேம கரம் நமக்கு-
நல்ல என் தோழி -பெரியாழ்வார் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் –
தங்கள் தேவர் -அவருக்கு பிடித்தம் என்பதால் –
இவளுக்கு அவர் அபேக்ஷிதம் என்றால் நம் தேவர் என்று இருக்க வேண்டுமே –

———————————————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு
அங்கமாய் –
ஸ்வ தந்த்ரமுமாய் –
இருக்கும் –

கீழ் சொன்ன பிரபத்தி நிஷ்டனான அதிகாரிக்கு -உபாய அதிகாரத்தில் குறை உண்டாகிலும் -அது பாராமல் ஈஸ்வரன் –
கார்யம் செய்கைக்கு உடலாகக் கொண்ட -உபாய சேஷமாய் இருந்த -ஆசார்ய அபிமானத்தை -இப்போது
ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் -என் –
அன்றிக்கே –
உபாய ஆகாரமும் கூடுமோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -15-4-
தமேவ சரணம் கச்ச-18-68- -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
விரோதி பாப ஷயத்துக்கும் -பக்தி விருத்திக்கும் – உடலாய் கொண்டு உபாயந்தரமான பக்திக்கும் -அங்கமுமாய் –
தத் த்யாக பூர்வகமாக (அந்த பக்தியையும் விட்டு- சர்வ தர்மான் பரித்யஜ்ய ) -மாம் ஏகம் சரணம் வ்ரஜ-என்று விதிக்கும்படி –
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும் ஸ்வயமேவ உபாயமாகக் கொண்டு –
ஸ்வ தந்திர உபாயமாய் இருக்கும் பிரபத்தி போலே
உபாய அதிகார மாந்த்யத்தைப் பார்த்து -ஈஸ்வரன்  உபேஷியாமல் கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆகையாலே –
ஸ்வ இதர உபாயமான பிரதிபத்திக்கு
சாபல்யத்தையும் உண்டாக்கி நின்று கொண்டு -அவ்வழியாலே-அதுக்கு அங்கமாய் –
அத்தை ஒழிய தன்னை உபாயமாகக் கொள்ளும் அளவில் -அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளுக்கு
தானே உபாயமாக கொண்டு -ஸ்வ தந்த்ரமாயுமாய் இருக்கும் -என்கை –
அன்றிக்கே –
அநாச்சார்யோ பலப்தாஹி வித்யேயம் நச்யதி த்ருவம் -என்றும் –
சாஸ்த்ரா திஷூ சூத்ருஷ்டாபி சாங்கா சஹப லோதய ந பிரசித்திய தீவை வித்யா விநாசது பதேசத -என்றும் சொல்லுகையாலே –
ஏதேனும் ஒரு வித்தையை அவ லம்பிக்கும் அதுக்கு -ஆசார்ய உபதேசம் வேண்டுகையாலே –
ஆசார்ய அபிமானம் சகல உபாய அங்கமாய் இருக்க –
தேனைவ தே  பிரயாச்யந்தி -என்று ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் என் -என்ன –
ஆசார்ய அபிமானம் தான் -என்று துடங்கி -அருளிச் செய்கிறார் ஆகவுமாம் —
அதாவது –
பிரபத்தி தான் கர்ம ஞான பக்திகள் ஆகிற -உபாயாந்தரங்களுக்கு –
உத்பத்தி விருத்தி விரோதி பரிஹார அர்த்தமாக -விஹிதமாய் கொண்டு –
தத் அங்கமுமாய் –
அநந்ய சாத்த்யே ஸ்வா பீஷ்டே  மகா விச்வாச பூர்வகம் தத் ஏக உபாய தாயாச் ஞா பிரபத்தி சரணாகதி -என்கிறபடியே
அந்ய உபாயங்களை ஒழிந்து-தன்னையே உபாயமாகக் கொள்ளும் அளவில் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட ப்ராப்த்திக்கு -ஸ்வயமேவ நிர்வாஹகமாய் கொண்டு –
ஸ்வ தந்த்ரமாய் இருக்குமா போலே –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது தான் –
ஏதேனும் ஒரு உபாயத்துக்கும் ஆசார்ய உபதேசம் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
அவ்வழியாலே உபாயாந்தரங்களுக்கு அங்கமாய் இருந்ததே ஆகிலும் –
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் –
பசுர் மனுஷ்ய பஷீவா -இத்யாதிப் படியே
ஸ்வயமேவ உத்தாரகம் ஆகையாலே -ஸ்வ தந்திர உபாயமுமாய் -இருக்கும் -என்கை —

ப்ரபத்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் ஆச்சார்ய அபிமானம் இருக்குமே –
பிரபத்தி பக்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் இருக்குமா போலே –
சதாச்சார்யனால் ஸ்வீ கரிக்கப்படும் உபாயம் —
கர்ம ஞான பக்தி உபாயாந்தரங்களுக்கு விச்சேத பரிகார அர்த்தம் -தத் வர்க்கமான -அங்கமாய் -அங்க பிரபத்தி
யாவதாத்மாபாவி ஸ்தான த்ரய பக்தி பிரார்த்தித்து -பிராப்ய ரூப பக்தி நித்தியமாக கத்யத்த்ரயத்தில் உண்டே –
இரண்டு ஆகாரங்கள் -விதி பேதத்தாலும் அதிகாரி பேதத்தாலும் –
ஈஸ்வர ஸ்வா தந்திரம் கண்டு பயந்த -பயப்படாத அதிகாரிகள் பேதம் உண்டே –
சரமாய் ஸூ ஸ்பஷ்டமாய் –பசு பஷிக்கு பிரபத்தி இல்லையே -வைஷ்ணவனைப் பற்றி -அதனால் ஸ்வ தந்த்ரமாகவே உண்டே –
ஆச்சார்ய உபதேசம் எல்லா வித்யைக்கும் வேண்டும் -சகல உபாயத்துக்கும் அங்கமாய் இருக்கும்
தேனை ஏவ -அந்த வைஷ்ணவனை பற்றிய ஒன்றே எதிர்பார்த்து -தானே ஸ்வ தந்திரமாயும் இருக்கும் –
பிரபத்தி ஸ்வ தந்த்ர உபாயம் இந்த கைங்கர்ய உபயோகி பக்திக்கு –
ஸூ இதர உபாயாந்தரங்களுக்கும் இது -பக்தி ப்ரபத்திகளுக்கு-இவர் தானே உபதேசிக்க வேண்டும் –
அதனால் அங்கம் -அபிமானம் இருப்பதால் தானே உபதேசம் –
தெய்வம் போலே ஆச்சார்யரை உபாசி -சித்த -ஸ்வ தந்திரம்
பக்தி ஸ்வதந்த்ரம் மேலே பிரபத்தி போலே பிரபத்திக்கு இந்த சரம பிரபத்தி
பக்திக்கு அந்தர்யாமி விஷயம்
பிரபத்திக்கு அர்ச்சாவதாரம் விஷயம்
சரம பிராப்திக்கு சாஷாத் தெய்வம் பீதக வாடைப்பிரான் பிரம குருவாக வந்ததே விஷயம்
நம்பி மூத்த பிரான் -ஆதி சேஷனா பெருமாளா -சங்கை –
தசாவதாரம் சேஷ அம்சம் -அவதாரம் விசேஷ அதிஷ்டானம் தானே -பயனுக்காக சக்தி இறக்கி
அதே போலே சேஷ பூதன் ஆச்சார்யரும் -தன் ஆச்சார்யருக்கு சேஷ அம்சம் –
விசேஷ அதிஷ்டானம் -செய்து -பரத்வாதி சரம பகவத் அவதாரம் –
பரத்வம் -வ்யூஹ -விபவ -அந்தர்யாமி அர்ச்சை அடுத்த -நிலை
பக்திக்கு அந்தர்யாமி -பிரபத்திக்கு அர்ச்சை -ஆச்சார்ய அபிமானத்துக்கு இந்த ஆறாவது அதிஷ்டானம் என்றவாறு
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் –
பரங்கத்திம் -ஸ்தோத்ர ரத்னம் இதே போலே ஆனால் அங்கு பரங்கத்திம்-இல்லை காது கண் பெறுவது -பிரபத்தி பண்ணாதவனுக்கு –
பசு பஷிர்-பிரபத்தி கிடையாதே –

—————————————————

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

இப்படி ஸ்வதந்த்ரமான இவ் உபாயத்துக்கு அதிகாரி இன்னார் -என்று அருளிச் செய்கிறார் –

அதாவது -உபய பரிகர்மி தச்வாந்தச்ய -என்கிறபடியே –
ஜன்மாந்தர சகஸ்ர சித்த கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு-
ஜனிக்குமதாய் -ஸ்வ பாரதந்த்ர்ய விரோதியான -ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கும் -பக்தி உபாயத்தில் –
துஷ்கரத்வ புத்தியாலும் -ஸ்வரூப விரோதித்வ புத்தியாலும் -நாம் இதுக்கு சக்தர் அல்ல என்று கை வாங்கினவனுக்கு –
நிவ்ருத்தி சாத்திய தயா -ஸூகரமுமாய் -பகவத் பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப அநு ரூபமான -பிரபத்தி உபாயம் –

அத்ய அவஸ்ய ஞான ரூபமான பிரபத்தி உபாயத்தில் -மகா விசுவாசம் உண்டாகை அரிதாகையாலும்-
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யா பயத்தாலும் –
நாம் இதுக்கு சக்தன் அல்ல என்று தேங்கினவனுக்கும் பசு வாதிகளுக்கும் கார்யகரம் ஆகையாலே -விசவாஸ அபேஷமும் அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவுமாய் இருக்கும் -பரதந்த்ர்ய ஸ்வரூபனுடைய சதாசார்யனுடைய  அபிமான ரூபமான இந்தசரம உபாயம் -என்கை –

பக்தியில் அசக்தனுக்கு -துஷ்கரத்வ ஸ்வரூப விரோதித்வங்கள் இரண்டும் ஹேதுவாகிலும்-
இவ்விடத்தில் ஸ்வரூப விரோதித்வமே பிரதான ஹேது –
பிரபத்தியில் அசக்தனுக்கும் விச்வாச்யமாந்த்ய பகவத் ஸ்வா தந்த்ர்ய பய ரூப ஹேது த்வயம் உண்டே ஆகிலும் –
பகவத் ஸ்வ தந்த்ர்யமே பிரதான ஹேது –
ஸ்வ தந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –
பகவத் ஸ்வ தந்தர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று -என்று இறே இவர் தாமே கீழ் அருளிச் செய்தது –
இத்தால்-
அந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவனே -பிரபத்தி அதிகாரி யாமோபாதி-
இவ் உபாய அதிகாரியும் -அநந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவன்-என்றது ஆயிற்று –
அன்றிக்கே –
இதன் ஸ்வ தந்த்ரவத்தை -பக்தியில் அசக்தனுக்கு -இத்யாதியாலே -ஸ்தீகரிக்கிறார்  ஆகவுமாம் –
வாக்யார்த்த யோசனையில் பேதம் இல்லை –
பக்தியில் அசக்தனைக் குறித்து -விஹிதமான பிரபத்தி உபாயம் ஸ்வ தந்த்ரம் ஆனாப் போலே
பிரபத்தியில் அசக்தனை குறித்து -விஹிதமான இதுவும் -ஸ்வ தந்தரமாக குறை இல்லை -என்று கருத்து –
( அதிகாரி ஸ்வரூபமாகவும் -ஸ்வ தந்த்ர உபாயம் என்பதை பக்தி பிரபத்தி போலே இதுவும் என்று திருடிகரிக்கிறார் என்ற இரண்டு யோஜனை )

இயலாமை இல்லை-ஸ்வரூப விருத்தம் என்பதால் அந்வயிக்க சக்தி இல்லை என்று இருக்கும் அதிகாரி -என்றவாறு –
பிரபத்தி -விநிவ்ருத்தி ரூபம் தானே -இதில் சக்தி -ஈஸ்வர ஸ் வாதந்த்ரத்தால் என்ன ஆகுமோ -தெரியாத ஒன்றில் அன்வயம் எதற்கு என்கிற சக்தி –
இதில் இருந்து தாண்டி -வேறுபட்ட சரம அதிகாரி –
பக்தி -கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு பிறக்கும் -விஸிஷ்ட வேஷஅனுசந்தான சித்த துஷ்கரத்வ பிரபத்தியாலும் -இங்கு சக்தி இயலாமை -ஆயாசம்
நிஸ்க்ருஷ்ட வேஷம் ஸ்வரூபம் பாரதந்தர்யம் அறிந்து அசக்தி -பகவத் ஸ்வா தந்த்ரயத்துக்கு விரோதி ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
பாரதந்தர்யம் அறிந்தவனே பிரபதிக்கு அதிகாரம் –
இங்கும் விஸிஷ்ட நிஸ்க்ருஷ்ட வேஷம் -அத்வயவாசாய ஞானம் -மஹா விசுவாச மாந்தியதாலும் –சம்சாரம் இருப்பதால்–
நிஸ்க்ருஷ்ட வேஷத்தில் நிராங்குச ஸ்வா தந்திரம் கண்டு பயந்துஅ சக்தி –
இப்படி நாலு வித அ சக்தி சொல்லி மேலே
சரம -நிலை நின்ற அதிகாரம் -ஸூ வ ஆச்சார்யர் பரதந்த்ர -சதாச்சார்ய அபிமான விசேஷ -பரதந்த்ர சேஷி தானே நம் ஆச்சார்யர்
ஸ்வரூப விருத்தம் அந்வயிக்க கூடாதே -பக்தியில் இருந்து பிரபத்தி
இங்கு பிரதம -சரம -ஸ்வாதந்த்ர ஜெனித பயத்தால் தான் –

————————————————————–

சூரணை -463-

இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம்
பல பர்யந்தம் ஆக்கும் —

இவ் ஆசார்ய அபிமானம் இவனுக்கும் உண்டாக்கும் பல பரம்பரையை
அருளிச் செய்து -இவ் அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

அதாவது –
இப்படி கீழ் சொன்ன ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி –
பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் –
சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி –
நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -என்றபடி –

பரம ரஹஸ்யமான திரு மந்த்ரத்தில் பத த்ரய -ப்ரதிபாத்யமான -அநந்யார்ஹ சேஷத்வாதி ஆகார த்ரயமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாய் –
அது தான் சர்வ பர்வ பர்யந்தமாய் இறே இருப்பது -இவை தான் ஆசார்ய உபதேசாதிகளாலே  -லப்யங்கள் ஆகையாலும் –
இவ் உபதேசாதிகளுக்கு அடி -இவன் நம்முடையவன் என்கிற ஆசார்ய அபிமானம் ஆகையாலும் –
ஆச்சார்ய அபிமானம் இவற்றை உண்டாக்கும் -என்கிறது –

ஆக -இப்படி இருந்துள்ள -பத த்ரய அர்த்த நிஷ்டையை -இவ் ஆசார்ய அபிமானம் இவனுக்கு உண்டாக்கி –
உஜ்ஜீவிப்பித்தே விடும் படி சொல்லிற்று ஆயிற்று –

அதவா –
இப்படி ஸ்வதந்த்ர்ய உபாயமான இது -இவன் ஸ்வரூபத்தை பர்வ க்ரமேண உஜ்ஜீவிக்கும்படியை
பிரகாசிப்பியா நின்று கொண்டு -இவ் அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –
அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமம் பகவத் விஷயத்தில் அன்வயிப்பித்து –
அநாதி காலம் தத் அந்வய ராஹித்யத்தாலே -வாடினேன்-என்னும்படி -யுறாவிக் கிடந்த ஸ்வரூபத்தை பல்லவிதமாக்கும்-
பின்பு பாகவத விஷயத்தில் ஊன்றுவித்து -பல அந்வய யோக்கியம் ஆக்குகையாலே
பல்லவிதமாய் இருந்த இத்தை புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் –
நின்று தன் புகழ் ஏத்த -என்கிறபடியே சரமபர்வத்தில் -நிலை பெறுத்தி-
புஷ்பிதமாய் இருந்தவற்றை பல பர்யந்தம் ஆக்கும் -என்னவுமாம் –

ஆக –
இப் பிரகரணத்தால் –
ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு -பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் என்னும் பிரசங்கம் இல்லாமையும் -407
இவ் அர்த்த நிர்ணய பிரமாணம் இன்னது என்னுமதும்-409-
இவ் அர்த்த ஸ்தாபனத்துக்கு ஈடான உபபத்தியும்-410- -ஐதிக்யமும் -411-
இவ் அர்த்த உபபாதன அர்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும் -412-
இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு சத்ருசமாகக் கொள்ள வேணும் ப்ராபகம் என்னும் அதுவும் -425-
அல்லாத போது வரும் -தூஷணமும் -426-
ஈஸ்வர விஷயத்தில் இவனுக்கு உள்ள சரணவத் பாரதந்த்ர்ய அனந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு -427-
ஈஸ்வரனைப் பற்றும் அதில் இவனைப் பற்றும் அதுக்கு உள்ள விசேஷமும் -428-
ஈஸ்வர சேதனர்கள் இருவருக்கும் இவன் உபகாரகன் என்றும் -429
ஈஸ்வரனும் ஆசைபடும் பதத்தை உடையவன் என்றும் -430
இவன் பண்ணும் உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரம் இல்லை என்றும் -432
இவனோட்டை சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்றும் -433
ஈஸ்வரனை உபகரித்த இவனிலும் -இவனை உபகரித்த ஈச்வரனே மகா உபகாரகன் -என்றும் -436
இவ் ஆசார்ய வைபவமும் -ஆத்ம குணம் உண்டானாலும்
ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ்க்லில் அந்த பிரயோஜனமும் அவத்யகரமும் ஈஸ்வர நிஹ்ரக ஹேதுவாம் படியும் -437-438-439-
ஆசார்ய சம்பந்த விச்சேதத்தில் பகவத் சம்பந்த த்வர்பலமும் -440-
ஆசார்ய அன்வயத்துக்கும் பாகவத சம்பந்தம் அபேஷிதம் என்னும் அதும் -441-442-443-
ஆசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்னும் இடத்தில் -ஆப்த உபதேசமும் –
இவ் அர்த்தத்தினுடைய ஸ்தீரீகரணமும்-444-445-
இவ் ஆசார்ய அபிமான நிஷ்டனான அவன் சுலபமான இவ் விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை ரஷகமாக விச்வசிக்க கடவன் அல்லன் -என்றும் -448-
பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் -என்றும் -450-
இவனுக்கு பிரதிகூல அநு கூல அநு பயர் இன்னார் என்றும் -451
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கு விநியோகமும் -452-
இவனுக்கு நிஷித்த அனுஷ்டானமும் 453–விஹித போகாதிகளும் -த்யாஜ்யம் என்னும் இடமும் -455-
ஸ்வரூப பிரச்யுதி வாராமைக்கு வேண்டும் அவஸ்தையும் -457-
ப்ராப்ய பூமி ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அதுவும் -458-
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார உபாய த்வய பிரமாணங்களும் -459-/460-
ஆசார்ய அபிமானத்தின் ஸ்வ தந்திர உபாயத்வமும் -461-
தத் அதிகாரி நிர்ணயமும் -462-
இவ் ஆச்சார்ய அபிமானம் இச் சேதனனுக்கு உண்டாக்கும் பல பரம்பரையும் 463–சொல்லுகையாலே –
சதாச்சார்ய அபிமானமே சர்வருக்கும் உத்தாரகம் -என்னும் இடம் சொல்லப்பட்டது –

ஆக
இத்தால்
வாக்ய த்வயயோ உக்யதா- உபாய உபேய -சரம அவதியை -அருளிச் செய்தார் ஆயிற்று –

அநந்யார்ஹ சேஷத்வ ஞானமே மொட்டு -நமஸ் பரதந்த்ர ஞானம் பூ / அவனாலே அனுபவிக்கப்படுபவன் பல பர்யந்தம் –
அதுக்கும் மேலே அவனுக்கும் அவன் அடியார்க்கும் -அவர்களே உபாயம் பாகவத பாரதந்தர்யம் -அவர்கள் கைங்கர்யமே பலம் -என்று இருக்க வேண்டும்
அதுக்கு மேலே ஆச்சார்ய விஷயம்
அன்றிக்கே
பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் -ஆச்சார்ய சேஷத்வம் என்றுமாம்
ஸ்வ தந்த்ர உபாயம் மட்டும் இல்லை -பிரதமத்தில் ஸ்வரூப ஞானம் -அபிமான அன்வய காலத்திலே-
அநாதி காலம் இழந்து சரக்காய் உலர்ந்து போன ஜீவாத்மா -உபய சேஷத்வம் -மிதுனம் -பல்லவம்
அம்ருத வர்ஷத்தால் சரம அளவாக வளர்த்து பிரணவ அர்த்தம் ஆனபின்பு -பார தந்தர்யம் புரிய வைப்பார் –
மடை திறந்த கடாக்ஷத்தால் -தத் ஏக போக்யத்வ சித்த சரம அனுபவ கைங்கர்யம் ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும்
சேஷத்வ ஞானம் பல்லவிப்பித்து பாரதந்த்ர ஞானம் பூ பூக்க வைத்து -பழுக்க போக்யமாக கூட்டிச் செல்லும்
ஸ்வ தந்தர்ய த்வத்யம் தோஷம் இல்லை -பிரதமத்தில் பிரஸ்துதமான புருஷகார பூர்வகமாக பகவத் உபாயமே சரம உபாயமாக பழுக்கும்
அது தான் பூத்து காய்த்து பழமானது என்று வடக்குத்திருவீதி பிள்ளை பலகாலும் அருளிச் செய்வார்
ஆக
சார வசன–கண்ணி–பரதந்த்ர சேஷியை பற்றுமதுவே ஸ்வரூப அனுரூப உபாயம்
துர்லபம் ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
சரம சேஷியே அனைத்தும் -விரக்தி விஷயம் சம்சாரம்
உபகாரர் உத்தாராகர் -சம்பந்த சரம சேஷி
ஸ்வரூப ஞானம் தொடங்கி பல பர்யந்தம் உஜ்ஜீவிக்கும் –

இந்த நிஷ்டை துர்லபம் -நம் ஆச்சார்ய கடாக்ஷத்தாலே கிட்ட வேண்டும் –
வாழி ஸ்ரீ பிள்ளை உலகாசிரியன் —
வாழி திருமழிசை அண்ணா அப்பன் ஐயங்கார் ஸ்வாமி -ஸ்ரீ ரகுவரர் வாழி –
நேர் பொருளும் நீள் கருத்தும் அருளி -பார் பகர் தென்னெறியால் தமிழ் வழங்கியவர் வாழி –
வாழி ஆய் ஸ்வாமிகள் –
வாழி ஸ்ரீ மணவாள மா முனிகள் —

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading