ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் -துறை இது-தோழி பாசுரம்
உலகு அளந்த அவதார பரத்வம் சொல்லும் பாசுரம் திண்ணன் வீடு -இதன் விவரணம்
உயர் திண் அணை ஓன்று -நான்கும் பர ஸ்வரூபம் சொல்லும் பதிகங்கள்
உயர் -பரத்வே பரத்வம்-திண் -விபவ பரத்வம் ஒன்றும் -அர்ச்சையில் பரத்வம்
இங்கும் அளந்த பெருமையை உரைத்து தோழி ஆற்றாமையை சமிப்பிக்கிறாள்
ஒரு திருவடியே பூமி எங்கும் வியாபித்ததே –கழல் -தலம் –-மற்ற ஓன்று போய் வளர்ந்து நிழலைக் கொடுக்க ஆகாசம் எங்கும் பூர்ணமாக வியாபித்ததே-அண்டம் எங்கும் சஞ்சரிக்கும் ஞானச் சுடர் விளக்கு -பெருமாளுக்கு -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –-பின்னானார் வணங்கும் சோதி
திருமூழிக் களத்து விளக்கு-தன்னையும் காட்டி மற்ற அனைத்தையும் காட்டும்-மிகுநர் இல்லாத- ஒப்பார் மிக்கார் இலையா மா மாயன்-சம அப் யதிக ராஹித்யம் தாமரைக் கண்ணன் –-எத்தை அளக்க வந்தான் -பக்தர் திரு உள்ளத்தையா லோகங்களையா–
அவதாரிகை –
கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி –(தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே -ஸ்ரீ திரு மாலை-35) ஆன பின்பு நமக்கு ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து- இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் – அவன் நிற்கிறபடியைக் கண்டு அத்தை பேசுகிறார்-தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –
இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர் ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு விளம்பம் என் என்று தளும்ப அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம் அதுக்கு ஈடான குண வைலஷண்யம் அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம் இவற்றை அனுவதித்து இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய் அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது- இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று – மகாபலி பக்கலில் நின்றும் திருக் கையிலே நீர் விழுந்த போதே-ஒரு திருவடிகளே பூமிப் பரப்பு அடங்கலும் போய் விளாக்குலை கொண்டது –கழல் தலம் –-பாத தலம்-(அகன்ற திருவடித் தாமரை ) ஒன்றே –அவன் வினைவும் வேண்டாதே திருவடிகள் தானே எங்கும் ஒக்க பரந்தது –ஒரு கழல் போய் –மற்றை ஒரு திருவடிகளும் போய்-நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது – அவதரித்து மீண்டும் போய் -தன்னுடை சோதியில் புக்காலும் –அவன் ஒருவன் உளன் என்று-விஸ்ரம்பித்து அவன் நிழலில் ஒதுங்கலாம் படி –யாகாசாவகாசம் -ஆகாச அவகாஸம் -உள்ளிட எங்கும் போய் பரம்பிற்று –ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து போல் இரண்டு திருவடிகளும் அத்விதீயம்–
நிழல் தர –பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பாயுமா போலே – வெளி உள்ள இடம் எங்கும் போய் வியாபித்தது –வாஸூ தேவ தருச்சாயா — எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –(ஸர்வத்ர வசதி வாஸூதேவ -எங்கும் ஓக்க வியாபிக்க இந்தப் பத பிரயோகம் )–நாதி சீதா -இத்யாதி –மிக வெப்பதும் செய்யாதே – மிக வவ்வ விடுவதும் செய்யாதே – நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று–சாகிமர்த்தம் ந சேவ்யதே – –இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ – இது நன்று அல்ல என்னவோ – இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –(தாழ்ச்சி மற்று எங்கும் -உனது திருவடி நிழலே வாழ்ச்சி -நம்மாழ்வார் ) –(திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால் மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் – பெரியாழ்வார் ) ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது ஒரு நிழல் கண்டிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் –ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது ஒரு நிழல் கண்டிலேன் –
நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )-நிவாச வ்ருஷ ஸாதூநாம்--வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்- அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன–அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –பெருமாள்-என்றாள் –ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன – சொல்லுகிறாள்–நிவாச வ்ருஷ ஸாதூநாம் இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –பூவாயும்-பழமாயும் -நிழலாயும்- தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும் -தன் கீழே இருந்து தன்னை அழியச் செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் – இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –(வாஸம் மட்டும் அல்லவே-நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம் -கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ – செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –ஆபன்நாநாம் –ஒதுங்கோம் என்னாமை போராது காண் – ஆபன் நராகவும் வேணும் காண் –நான் தான் ஆபன்னன் அன்றோ –உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –ஆர்த்தா நாம் – ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –ஆபத்தை இசையவும் வேணும் காண் –நமக்கு ஒரு ரஷகன் வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன–யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்–இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே அவர்களை சொல்லுகிற இதில் ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் – வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே – கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –ஏக பக்திர் விசிஷ்யதே –என்கிற ஞானியை சொல்கிறதாய்- முந்துற சம்சாரத்தில் நொந்து – பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-அநந்தரம்–பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய் – இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )–இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே–ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்–ஆபன்னானாம் கைவல்ய பரர்–ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி -அனைவருக்கும் -பராம் கதி —
நீண்ட வந்ததது உழறலர் ஞான சுடர் விளக்காய் –பரப்பை உடைத்தான அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம் ஆகிற பிரகாசம் ரூபம் ஆகிய தீபத்தை உடையவனாய் – எல்லார் தலை மேலேயும் திருவடிகளை வைத்து –தன் பேறாய்- அத்தால் வந்த அலப்ய லாபத்தாலே சஹஜ சார்வஜ்ஞமும் விகசிதம் ஆயிற்று –உயர்ந்தோரை இல்லா – ப்ரஹ்மாதிகளும் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே – நான் -என்பார் இல்லை யாயிற்று –-அழறலர் தாமரைக் கண்ணன்--அழற்றிலே நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–என்னோ விங்களக்கின்றதே ––அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்–நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடி மாறி இடில் இறே அளந்தது ஆவது –-இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம் என்னுதல் –அன்றிக்கே நிர்ஹேதுகமாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கச் செய்தே ஒன்றும் செய்யாதால் போல் இன்னமும் பாரியா நின்றான் –என் செய்யாதானாய் திரு உள்ளத்தால் இங்கன் பாரிக்கிறது –என்னோ விங்களக்கின்றதே –கால் பெருத்து போலி சிறுத்தாலும் அளப்பார் உண்டோ-மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ–ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது என்றபடி-
ஸாதூநாம் ஞானியை சொல்லுகிறது–ஆபன் நானம் கேவலரை-ஆர்த்தானாம் த்ரிவித ஐஸ்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது–ஆழ்வாரை கண்ட ப்ரீதி அளந்த அன்றையில் ப்ரீதி போலே இருந்தது என்றபடி–அன்றிக்கே என்னை விஷயீகரித்த பின்பும் வேறு ஒரு விஷயம் உண்டோ –வியலிடம் என்கிற பாட்டில் –குண ஞானத்தினாலே தரிக்கை யாகிற-சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆகையாலே –-தானான தன்மை பிறந்து –அந்த குணம் தானும் சௌசீல்யம் ஆகையாலே-
அத்தை இப் பாட்டில் அருளிச் செய்கிறார் என்று சங்கதி உட் கொண்டு அருளிச் செய்கிறார் –
கீழ் -இத்யாதி -அவசாதம் எல்லாம் என்றது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி –1- பண்டும் பல பல வில் பட்ட வியசனம் என்ன–2-மலை கொண்டு என்றதில் கார்ச்யம் என்ன—3-வர்ஷா காலத்தில் வந்த கிலேசம் என்ன–4-வாராயின முலையாளில் மோஹம் என்ன –5-வீசும் சிறகாலில் தூஷ ப்ரேஷ்ணம் என்ன -இவை எல்லாம் என்றபடி –விளாக்குலை கொண்டது –வியாபித்தது–பூவாயும் இத்யாதி –பூ -போக்கியம் –பழம்- தாரகம் – நிழல் -போஷகம்–
சர்வ சக்தன் அன்றோ -அவன் பிரதிபந்தகங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை களைந்து
சம்ச்லேஷிக்க விரைந்து வருவான் என்று தோழி சொல்லி தலைவியை ஆற்றுகிறாள் –தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே -என்ன ஆச்சர்யம் -என்றும் எப்படி பொருந்தும் என்றுமாம் –
அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே–அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே–அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம் என்னுதல்–நீண்ட வண்டத்து உள்ளவன் -மேலும்–உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லாதவன் -அழறலர் தாமரைக் கண்ணனாய் இருப்பவன் ––அழறலர் தாமரை-பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று-ஒரு அடித் தலமே பூமி அடையாத தானாயிற்று–ஒரு கழல் போய்–ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்–நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது-ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –ஒருவன் திருவடியை விளக்க – ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே அவர்களுக்குள் கொடுத்தது–நீண்ட வண்டத்து-அபரிச்சின்னமாய் பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான பரமபதத்திலே–உழறலர் ஞான சுடர் விளக்காய்-உழன்று சஞ்சரிப்பதால் அலர்ந்து விகஸிதமான ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்–இத்தாலே-ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் –திருவாய் -4-1-8-என்கிற கணக்கிலே ஸகல வியாபார மூலமாய் ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும் ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று–உயர்ந்தோரே இல்லா–தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்–இத்தாலே–உயர்வற உயர்நலம் யுடையவன் –1-1-1- என்னும்படி-ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி–அழறலர் தாமரைக் கண்ணன்— இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி–என்னோ விங்களக்கின்றதே-இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும் விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன் ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு இவ் விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ–அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –இத்தால்-விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன் த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று அவனுடைய ஸம்பந்தத்தையும் ஸக்தியையும் பிரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்–இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்-அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன் அழறு -சேறு–என்னோ விங்களக்கின்றதே – எந்தப் பிரகாரமாக இங்கு அளந்தானோ-அளப்பது நின்ற இடம் ஒழியவாம் நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை –ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது –இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான் சொல்லாய் நீ தான் தோழி –
ஸ்வாபதேசம் —
பாகவதர்கள் ஆழ்வாரை தேற்றுகிறார்கள் -சர்வ சக்தனைப் பற்றி சொல்லி-த்ரிவிக்ரமனாக உடைமையை உடையவன் சேர்த்துக் கொள்வான் –சம்பந்தம் சக்தி விசேஷங்களை-எடுத்துக் கூறி ஆழ்வாருடைய ஆற்றாமையை தணித்தனர்-
தாத்பர்யம் –
கீழ் பகவத் குண அனுசந்தானம் ஆகிற பகவத் சம்ஸ்லேஷத்தை பெற்று – ஆற்றாமை-நீங்கி -தாமான நிலையில் இருந்து –அவனுடைய சீலாதி குணங்களைப் பேசுகிறார் இப்பாட்டில்–த்ரி விக்கிரம அவதாரத்தில் ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் என்றும் பாராமல் சகல பிராணிகள் உஜ்ஜீவிப்பைக்காகாக
அவர்கள் தலையில் திருவடி படும் படி -ஓர் திருவடியினால் பூமியை அளந்தான் –இத் திருவடி சேஷி என்றும் – நாம் சேஷ பூதர் என்றும் எல்லாரும் அறிக்கைக்காகவும் – தன் திருவடி கீழே சம்சார ஆபத்தரான இவர்களை அகப்படுத்தி -ஆஸ்வசிப்பைக்காகாவும்–மற்று ஒரு திருவடியை ஆகாசத்திலே தூக்கி -அவ் ஆகாசத்தை அளந்தான் –இப்படி சர்வஞ்ஞனாய் –பராத் பரனான புண்டரீ காஷன் – இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது – மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –
2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –
கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.
‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.
இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே
இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
‘ஆயின், முதல் திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?
ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்
ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை
இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –
முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-
இது திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் பிரளய ஆபத் சகனான கிருஷ்ணனே ஈஸ்வரன்-என்கிறார் –எண்ணின் மீதியன் –எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன்.-எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ -முழுதுமாய் -சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய பேத பின்ன சகல வித மோக்ஷ ப்ரதன்-காத்தல் அவனுக்குத் தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-
‘நம் கண்ணன் கண்’ என்கையாலே அன்வய -விதி-முகத்தால் பரத்துவமும்,
‘அல்லது இல்லை’ என்கையாலே வ்யதிரேக- மறை-முகத்தாலே பரத்துவமும் அருளிச் செய்தார்.
‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது,அன்வய – விதி-முகத்தாற் கூறியது.
‘அல்லது இல்லை ஓர் கண்’ என்றது -வ்யதிரேக -மறைமுகத்தாற்கூறியது.
———–
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-
அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? ப்ரஹ்ம ருத்ரர்களும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின்,
‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்;-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே-அவர்கள் ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான்-ரக்ஷிக்கிறவன் இவன்;-அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்-அவன் -சர்வ விஷயமாகப் பண்ணின ரக்ஷணம் -எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை-கிடக்கக்கிடீர் – நிற்க;
தந்தாம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே-ஆபன்னரானால் –ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ -துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார்.
இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும்,-இறைவன் எத்துணைத் தன்னைத் தாழ விட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன.-கோபால கோள் அரி ஏறு –-கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம்.-கோள் – வலிமை.
———-
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-
ஏறனை –சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.பூவனை –‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.-
ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார். ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’
————
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–
பூவுக்கு ஈடான ஸுகுமார்யமும் பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும் அவனை ஒழிய வேறு ஒரு வியக்தியிலே இல்லாமையால் இவனே ஈஸ்வரன்-ஒரு பூவில்-உந்தித் தாமரை- நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.-சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது;
அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும்,
‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும்,
‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும்,
‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும்
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் ஜோதி மேல் அறிவார் யவரே என்றும்
அவ் வைராக்கியத்தையே அருளிச் செய்தார்.-ஆகையால் ஞானத்தில் காட்டில் இதர விஷயத்தில் சரக்கு அறுகை யாகிற வைராக்யம் ஸ்ரேஷ்டம்
————-
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-
புண்டரீகாக்ஷனாகையாலும் – இவனே ஈஸ்வரன் ,-தகும் அம்மான் -படைக்கத் தகும் தாமரைக் கண்ணன் -தகுகைக்கு ப்ரகாசகங்கள் திருக்கண்கள்-எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ –
—————
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-
ஆபத் சகனாகையாலும் இவனே ஈஸ்வரன்-கவர்வு இன்றி –-கவர்கையாவது-க்ரஹிக்கை – பற்றுகை:அதாவது,-ஹிம்சையாய் – துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி.-பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு-ரஷிப்பதற்கு- உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை யுடையனாய்.-இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற (சுடர் என்றதிலே நோக்கு ) திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர்,-இப்படி– ஆபத்துக் காலத்தில் துணைவனாய் -இவனே ஈஸ்வரன்-அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய்- ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்-ஆபத் சகனாய்-ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானாய்- அணியன் ஆகையாலும் சர்வேஸ்வரன்-
————–
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-
அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே ஈஸ்வரன்-அவாந்தர பிரளயத்தில் மூன்று லோகமாய் இருக்க இங்கு ஏழு உலகம் என்றது ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பைக் காட்டவே-கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி,‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’அவன் தன் கள்ள மாய மனக் கருத்தை உள்ளுள் அறியார் யார்-இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ-
————–
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-
ஸ்ருஷ்டியும் பாலனமும் ஸ்வ அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே ஈஸ்வரன் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம்-
——-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீனமாம்படி இருக்கை யாலும் இவனே ஈஸ்வரன்-சம்ஹாரம் ஒன்றே கீழ்ப்பாட்டில் இருந்து இதுக்கு வாசி )பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம்
———–
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-
நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன்-ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பார்களோ?‘கள்வா’ என்பர்கள்-அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் ––ஈண்டுக் களவாவது,தன் ஸ்வாதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை.-கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே-அந்தப்புரத்தில் செல்லுகைக்கு அந்தரங்கதை போராமையாலே ஆட்டத்து வெளியிலே யானைக் காலிலே விழுந்து கூப்பிடுவாரைப் போலே பெரிய திருவடியின் மேலே ஏறிப் புறப்பட்ட இடத்தே யாயிற்றுப் புகழ்வது –வேத மயமான கருடன் வாஹனமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-
———
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-
இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’-ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை-வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –