ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஒண் நுதலே –உடையவளே-மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய-தலை மகள் தோழியைக் கூறுவதாகவும் தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம்- –
இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே-ஒண் நுதலாள் -என்று கொண்டு-பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும்-பின்னை கொல் இத்யாதியால் தலை மகள் ப்ரீதி அபிமானம் ரக்ஷணம் -இவற்றை அவளைப் போலவே இவளுக்கும் உண்டே-பாய் இருள் -பாய்ந்த இருள் -பாய்கின்ற இருள் – பாயும் இருள் –-கடாயா -தாண்டுதல் -அளந்த -நடத்தின- – ரஷித்த–ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் – சங்கீதம் கூட்டி அங்கு இதே இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை

சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று  இலனோ -என்று (நம் மேலொருங்கே பிறழ வைத்தார் என்றும் என்னைக் கொண்டு தன்னைத் தான் பாடி ) ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும்
ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் தான் ராத்திரி வ்யசனத்தாலே நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே-தோழி வார்த்தை ஆதல் –

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர் தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்-பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்-முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு இது காதாசித்கமுமாய் அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது – கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல் தோழி வார்த்தை யாதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே
-49 –தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ
–44-விஸ்லேஷ வ்யசனம் ஒரு மடை செய்ய காலமும் விடியாது ஒழிய
மடல் எடுக்கை போய் –முடிகை தேட்டமான அளவிலே அதுவும் கிடையாமையால் இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள்  ஒருத்தி காணும் இவள் தான் –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் அநேகம் பிரளயங்களை நீஞ்சி கரை கண்டால் போல் – இதுக்கு முன்பு அநேக ராத்திரி -வியசனங்களும் அனுபவித்து –அவற்றுக்கு ஒரு அவசானமும் (முடிவும் )கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும் – முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டு போந்தோம் –இப்பாயிருள் இத்யாதி –அவ்வளர்த்தியோடே இப்படி பரந்த  இருள் போலே இருப்பதொன்று-கண்டு அறியோம் – இவ் விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது –இவ் விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –நம்மோடு சஹோதரிகளாய் ராத்திரி வியசனதுக்கு உடல் கொடுத்து போந்த –ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போலே இருப்பார் தான் இப்படி இருப்பது ஓன்று அனுபவித்து போந்ததாக கேட்டு அறிவதும் இல்லை –முன்பு சம்சாரயாய் நின்ற நிலையில் கண்டு அனுபவித்ததும் அநேகம் போந்தது –இவ் விசேஷ கடாஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே-

(மூன்று வித ராத்திரி-சம்சாரி யாய் இருந்த நிலையில்-மதிநலம் அருளினை பின்பு-விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்பு-கண்டதும் இல்லை-கேட்டதும் இல்லை-அறிவதும் இல்லை பகவத் அனுபவ அலாப-இருள் அன்ன மேனியைக் கொண்டு பண்ணினான் )

காள வண்ணன் –-இவ் விருள் பாதகமாம்படி பண்ணிற்று ஓர் இருளை இட்டு காணும் – இருளன்ன மா மேனியைக் காட்டி யாயிற்று-போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவைக் கொண்டு –வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு  அடி –வண்டுந்துழாய் – ஒப்பனையால் வந்த அழகைச் சொல்லுகிறது –மது சூதனன் – இவற்றால் வந்த போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை அம் மதுவை போக்கினால் போல் போக்குமவன் –தாமோதரன்
உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –உண்டும் இத்யாதி –உண்பது-உமிழ்வதாய் கொண்டு நடத்துகிற –அவனுக்கு ரஷ்யமாம் இடத்து பூமியோடு நேர் ஒத்த –

இது தலைமகள் வார்த்தை ஆன போது – பூமி பிரளயத்தில் கரைந்து போகாதே கிடந்தவோபாதி –
இந்த ராத்திரி வியசனத்தை தப்பி என் சத்தை கிடந்தது உன் சந்நிதி ஆகை இறே –தோழி வார்த்தை யான போது--தன் உடைமையை அழியக் கொடுப்பான் ஒருவன் அன்று காண்  அவன் –
தான் படாதது பட்டு நோக்கும் அவன் காண்-பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே விட்டு இரான் காண்–ஒண் நுதலே –அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –உனக்கு ஒப்போ அம் மண் – அவனுக்காகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

காள வண்ணம் -வண்டுக்கும் எம்பெருமானுக்கு விசேஷணம் –
மண்ணேர் அன்ன -ஒண் நுதலுக்கும் ஒண் நுதலாளுக்கும் விசேஷணம்-பூமிப் பிராட்டி போன்ற சிறந்தவள்-உண்ணாது கிடந்தது ஓர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்கு உரியவரோடு இத்திரு–
மண்ணேர் அன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு —ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -123-
-கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்திரி வியாசனத்தாலே தான் நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் – தோழி வார்த்தை யாதல் -நம்பிள்ளை ஈட்டில் அவதாரிகை –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-முற் காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இந்தப் பரந்த இருள் போலே நாங்கள் கண்டதுவும் இல்லை அறிவதும் இல்லை கேட்பதுவும் இல்லை–காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்-கறுத்த வண்ணத்தை யுடையவனாய்-வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால் ஸர்வ சேஷியானவன்(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ ) –காள வண்ண வண்டு -என்று-வண்டின் நிறம் ஆகவுமாம்–மதுசூதனன்-மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்–தாமோதரன்-ஆஸ்ரித பவ்யனானவன்–உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்-அநந்தரத்திலே உமிழ்ந்தும்-ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே-மண்ணேர் அன்ன-நேர் அழகு-அன்ன -நிகரானகடாய -என்று-நடத்துதலாய் நிர்வஹிக்கை-அதாவது ரஷிக்கை–அன்றியே-கடாய் என்று கடத்தலாய் அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –இத்தால்-முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே ஸ்ரவணத்துக்கும் மனனத்துக்கும் அபரோஷிக்கைக்கும் விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –காள
-என்று தொடங்கி-மண்ணேர் அன்ன ஒண் நுதலே –என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண ) போக்யத்தையும் -(வண்டுந்துழாய் ) சேஷித்வத்தையும் -(பெருமான் ) விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் ) சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன் ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி–ஒள்ளிய நுதலுக்கு-மண்ணேர் ஒத்தது என்கையாலே-ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம் நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான் மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே-வீங்கிருள் காண்டும்-முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்–இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்-இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது – இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்-நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த – ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை – முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள் ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன இவ் விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே-மே த்ருஷ்டிபும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு-மே ராமம்-இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று-அத்யாபி ந நிவர்த்ததே-கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே-ந த்வா பஸ்யாமி-பெருமாளைக் காணப் பெறா விட்டால்-அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்-கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே–நத்வா பஸ்யாமி -என்கையாலே–போக்குமவன்-தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்-அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி-கடாய-கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

ஸ்வாபதேசம் –
எம்பெருமான் பல வகையாலும் பாது காத்த லீலா விபூதியை ஒரு புடை ஒப்புமை சொல்லத் தக்க
ஞான பிறப்பை திரு முகத்தில் விளங்கப் பெற்ற ஆழ்வார் -என்றும் திரு மண் காப்பைத் தரிக்க தகுந்த திரு நெற்றி உடையவர் -என்றுமாம் –வியாமோஹ அதிசயத்தை வியந்து கண்டும் இல்லோம் கேட்பதும் இல்லோம் அறிவதும் இல்லோம் -என்று பாகவதர்கள் சொல்வதாக கொள்ள வேண்டும் –

தாத்பர்யம்-சர்வேஸ்வரன் தன் இடத்தில் விசேஷ கடாக்ஷம் அருளின வற்றை அனுசந்தித்த பின்பும்
சம்சாரத்தில் இருப்பு அத்யந்த அஸஹ்யமாய் பிரிய விரஹ சின்னையானவள் பிராட்டி நிலையை அடைந்து தோழியிடம் நாயகன் பிரிந்த பின்பு பாய் இருளாய் அநேகம் வடிவு கொண்டு அநேக ராத்திரி முன்பு பார்ததது போல் இல்லாமல் இங்கே இவ் விபூதி அடங்கிலும் பரவி இது போல் முன்பு பார்த்தும் கேட்டும் அறிந்தும் இல்லையாய் இப்படி அதி மாத்ர சங்கட சமயத்திலும் மது பானம் பண்ணித் திரியும் வண்டுகள் மொய்த்த திருத்துழாய் சூடிய பரம போக்யனாய்-விரோதி நிரசன சீலனாய்-ஆஸ்ரித ஸுலப்ய சீலனாய்-அத்யந்த ஸூலபனாய் சர்வேஸ்வரன் பிரளயம் முதலிய ஆபத்துகளிலும்
அளந்த -மஹாபலி அபிமானத்தில் இருந்து ரக்ஷித்து அருளியும்-உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க-தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்-ஜீவித்ததே இருக்க மாட்டேனே
-என்கிறாள்

5-4-ஊரெல்லாம் துஞ்சி -ப்ரவேஸம்

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்”-5-3-10- என்று பெரியதொரு மனோ வேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
மடல் ஊரப் பெறுகை தான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம் படி பலக் குறைவு அதிகரித்தது;
இனித் தான், மடல் ஊரும் போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுத வேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல்,
இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அது தான் மாலை நேரம் அளவு அன்றிக்கே
சரா சரங்கள் முற்றும் அடங்கிய நடு இரவாய், பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒரு சேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே, இவ் வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச்
செல்லுகிறது இத் திருவாய்மொழி.

அனுபவ யோக்யமான காலம் -இரவில் -சந்நிஹிதமாக இருக்கச் செய்தேயும் -அவன் அசந்நிஹிதன் –
பிரவ்ருத்திக்கு ஷமர் இல்லாமல்
அவசன்னராய் விளம்பம் அசஹ்யமாக ரஷிக்கும் அவன் குணங்களைச் சொல்லி கூப்பிடுகிறார் –
ஆற்றாமையால் இரவு நெடுமைக்கு இரங்கி –
சூர்யன் இந்த பெண் ஆற்றாமையை பார்க்க முடியாதே என்று இருக்க —
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்-

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே
.–5-4-1-

ஊர் எல்லாம் துஞ்சி– ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம் மடல் ஊர்வது என்கிறாள்.-சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்.-திருவடி செல்லுகிற ஷணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழி சொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
அன்றிக்கே,-இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒரு சேர உறங்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத் துணையாவாரோடு வாசி அற,
எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள் என்கை.
இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது.
ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பே யுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில்,-உலகு எல்லாம் நள் இருளாய் 
பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.

பண்டும் இராத்திரி நெடுகா நிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று.-மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு,
அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையா யிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும்; பிரளய ஆபத்து அங்கு -தம்மால் வந்த ஆபத்து இங்கு –திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவன்- உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி.
ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய ஸூரிகள் படியும் இல்லை யாயிற்று,
சம்சாரிகள் படியும் இல்லை யாயிற்றே நமக்கு! -தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்த படியாலே ‘நம்’ என்கிறாள். த்வரை விளைத்த உபகாரத்வம் தோன்ற வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா,-உடம்போடே அணைய வேண்டா,
வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ.–

ஆவி காப்பார் ஆர் – பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ?-“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ”-9-9- என்கிறபடியே,
இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவு படுகிற தோழி காக்கவோ,-ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ,-பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ?ரக்ஷகனானவன் வந்திலன்,-எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.-

—————

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.
–5-4-2-

இருள் அன்ன மா மேனி அன்றோ. கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ.-என் கண்ணன்–கம்சன் காவலாக வைத்த தீயோர் கண் படாதபடி இருளிலே வந்து உதவினவன்.-நள்ளிருட் கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ.-கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?-“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் 

நீயும் பாங்கு அல்லையே– ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ?-ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ-ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரன் பிரணயித்தவத்தால் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்-பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும்.–என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ.
ஸ்வரத்தால் நீயும் கூட பங்கு இல்லையே என்று சொல்ல வேண்டும் –ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.-பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

————–

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே
.–5-4-3-

முதலிலே நெடிதான இரவானது, அதற்கு மேலே-அடி காண ஒண்ணாத படியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இரா நின்றது.-சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களை யுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே
சிறு பேர் தவிர்ந்து ‘சோழக் கோனார்’, ‘தொண்டை மானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று,-இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரை யுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்.-அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லை யாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

அவனது சார்ங்கம் என்னளவிற் கண்டிலேன்.-பக்ஷபாதம் -அன்பு -சார்ங்கம் -சாடு –காகுத்தன் வாரானால்-முடி சூடிய அரச புத்திரர் அல்லாதார் தாம் தவிருகிறார்கள்,
முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்?-ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று-பொருமவனும் வருகின்றிலன்-

செற்றார் -திறல் அழிய -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —
தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –-1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –

வல் வினையேன்--முடிந்து போதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாத படியான பாவத்தைச் செய்தேன். என்றது,-பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி.-ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம், முடிந்து போதல் தேட்டமான போது அரிதாம்,-ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமா மித்தனை அன்றோ.-புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுது-பெண் பிறந்தே – பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.-பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்-பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:-ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.-அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வதந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே 

‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;-அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும் பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;-பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,-எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;-தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –-நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.-“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள், இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து, அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்-

————–

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?
–5-4-4-

ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தை யுடையவனும் வாராதே மறைந்தான்.-ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ,
இக் கொடுமை என் கண்களால் காணப் போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்கிறாள்.-அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள்.
வாரானால்--இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள்.-இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமான போது, பண்டு என்னோடே கலந்ததனாலே-தன் நிறம் பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக.

வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது.-‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. -எண்ணுவதற்கு அரியதான – பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம் தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே.

சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் – மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும்.-“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள் தாம். அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம்,-துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது,-மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று;
ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்ன படியேயாம். பிரிவு நிலையில் நினைவு தான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ;
“கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்”
“காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக் கடவதன்றோ.

என்னையே – இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள்.-நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகா நின்றார்களே அன்றோ,-சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, “தியானிக்கக் கடவன்” என்ற நினைவு-தன்னையே விதியா நின்றதே அன்றோ;-அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

————-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே
.–5-4-5-

“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும்.-அவன் வருகின்றிலன்,
இது போகிறதில்லை.-நான் காரியத்திலே முடிந்தேனா யிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப் பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஹேதுவானபடி.-அடியுடைய பெயர் -பகவத் கடாஷம் -உடையவர் -சடாரி என்றுமாம் –-ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே.
இதனுடைய அடி யுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
பேர் என்னை மாயாதால் –-பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்ற படி

பின் நின்று – நான் முடியச் செய்தேயும் இப் பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.-வருகிற போது ஒரு சேர வந்தால், போகிற போதும் ஒரு சேரப் போக வேண்டாவோ.-முற்பட வந்தார்க்கு முற்படப் போக வேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?-நாமம் ரூபத்துக்கு முற்பட வந்தும் பிற்பட போக வில்லையே -என்கிறார்-

—————-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?
–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது.
இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.-நெஞ்சம் பெரிது அடும் 
நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.-நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;-அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று-இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று – காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.-எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது,-கட் கண்ணை இரவு மறைத்தது.

போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு,
போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி.-நிவர்த்தகம் சக்கரம் நிவர்த்தத்தை அந்தகாரம் அழிப்பவன்–பிரகாச த்ரவ்யம் -இருளை கூட்டி வந்ததே-இங்குச் சங்கல்பம் அழிய வேண்டா; வருவதாக நினைக்க அமையும்.

இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன்,
வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக் கொண்டு நின்று வழக்குப் பேசா நின்றதாயிற்று ஆத்ம வஸ்து.-இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை,-இச் சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்-‘பிரிவிலும் முடியாத என் உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று. இவ்விடத்தே-சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.-

—————–

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
–5-4-7-

இரவுப் பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.-எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சின படியாலே அன்றோ-‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

காப்பார் ஆர் இவ்விடத்து–‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு,-‘அம்ம’ என்று அப்புத் தட்டி –(துடை தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்) -இருந்தவளே அன்றோ, -இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்;-பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வ ரக்ஷகத்வம் ஓர் அச்சாய் அன்றோ இருப்பது.(அச்சிலே அந்தர்ப் பூதமான அகாரத்தாலே சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர் பொருள்-ஏக ரூபமாய் என்பது வேறும் ஒரு பொருள்.)-இவர் அல்லிலே (ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம
ஸ்வரூபத்தை நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.)கிடந்து நோவு படுகிறாரே அன்றோ. அவன் உண்டாயிருக்க, முதலிலே(அகாரம் முதலில்) ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

அகார வாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகார வாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து, ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று-நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.-அம்ம,-அ ம காரம் இரண்டும் காட்டி –

இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.-அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.-பண்டே இவள் கை கண்டு வைத்தமை யன்றோ இவை தாம்.-இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.

தெய்வங்காள் என் செய்கேனோ
1-தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே உறங்காதவர்கள்;-இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்கு மேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள்.
2-தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள்,-சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக் காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள்.
3-“ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய் மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப் படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற் போலே இருக்கிறது காணும்.-

———-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே
.–5-4-8-

ஓர் இரவு ஏழ் ஊழியாய் – கீழே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியா நின்றது.
சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற் போன்று,
இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளா நின்றது என்றபடி.

எனது ஆவி மெலிவிக்கும் – மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடு நகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியா நின்றது. என்றது, போன உயிரை மீளக் கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கை வந்த சக்கரத்து–இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.-கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி

கை வந்த சக்கரத்து என் கண்ணன்-ஸ்ரீ பீஷ்மரைத் தொடருகிற போது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி.-ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது பொருத படியால் அருச்சுனன் இளைத்தான்,-அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான்,
தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான்.-ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

வெம் சுடரில் தான் அடுமே – வெவ்விய சுடரைக் காட்டிலும் அடும் என்னுதல்.
சுடரைப் போன்று நலியா நின்றது என்னுதல்.-உலகத்திலே உள்ள நெருப்பைக் காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ,-நரக அக்நியைக் காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.-

————-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே
.–5-4-9–

சூரிய மண்டலத்திலே எழுந்தருளி யிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.ஞான ஸ்வரூபன் -இவனுக்கு ஞானம் கொடுத்து ஆந்தரமான அந்தகாரம் போக்குவானே –

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது,-தரிக்கவும் ஒட்டாது,-முடிய உருகினபடியே நிற்குமித்தனை.-இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,-அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

——–

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே
.–5-4-10-

எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழா நின்றது. யாரைப் போன்று எனின்,நின்று உருகுகின்றேனே போலே –-கண் கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.

பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப்
போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ-ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, புழுக் குறியிட்டது எழுத்தானாற் போன்று-எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று,-அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்.-லோகத்துக்கு உபகாரகன் -நானும் லோகத்தில் ஒருத்தி -பெருக்காறு போலே அது ஒரு கால் –நடந்து அளந்து காட்டிய சேஷ்டிதம் வாராமையே ஸ்வ பாவம் என்று சொல்லவும் ஆள் இல்லையே –அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார் பிரிந்தவனோடு ஒத்ததீ –-ஒ – வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே

————-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?
–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,-அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.

இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ- இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
“பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள்.-இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரம பதம் ஆகையாலே-வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில், பகவத் விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்று- “நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading