ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -56-பாசுரம் -வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –கண்கள் சிவந்து -8-8-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி நாயகன் வந்தமை அறியாமல் இருக்க–ஏகம் சுகம் துக்கம் போன்றவள் அன்றோ-வந்தார் கலந்தார் பிரிந்தார் தூது விட்டதால் வந்தமை சொல்லவில்லை -குறிப்பால் உணர்த்துகிறாள் –
அதுவும் உபாயம் இல்லையே-அவன் அருளாலேயே வந்தார்-விடுத்த திரு அருளால் உயலிடம் பெற்று உய்ந்தும்–ரஹஸ்யத்தில் உரைக்கும் துறை -இரவிடைக் கலந்தமை-தென் மேற்கு காற்று தென்றல் வந்து -அயல் இடம் யாரும் அறியாமல்-திருத்துழாய் தரித்து -வர -தென்றல் வீச -இனிமை இவள் இடம் விடுத்துப் போனதே-வந்து கலந்தார் நேராகச் சொல்ல வில்லை – தோழிக்கு மட்டும் தெரியும்படி குறிப்பால் -சொல்கிறாள் சங்கேத மொழி –அதே போல்-கண்கள் சிவந்து -8-8-இதன் விவரணம்கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்

கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே
–8-8-1-கலந்தபடியால் கண்கள் சிவந்து-பெரியவாய் வாயும் சிவந்து -கனிந்து உள்ளே வெண் பல் இலகு -சுடர் –மகர குண்டலத்தன் –மாறுதல் மட்டும் சொல்லி கலந்தமை அங்கும் உண்டே-இதில் அவன் கலந்ததால் ஆழ்வாருக்கு வந்த மாற்றம்உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3–
இங்கு விடுத்த திருவருளால் உய்ந்தோம்

அவதாரிகை–கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க – பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –
இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இதுவாய் இருந்தது –(இதுவாய் இருந்தது –விரஹ தசையில் சிறிது தெளிந்து இருக்கிறாளே ) நாயகனையோ வரக் காண்கிறிலோம் – இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை – இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட –இத்தைக் கண்ட தலைமகள் – இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக(தூது விட்டதை உபாயமாகக் கொள்ள மாட்டாளே -பிரபன்ன ஜன கூடஸ்தர் அன்றோ )ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம்  ஆயிற்றாய்- அத்தை இவளை நோக்கி – நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ஸ்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் –நீ அஞ்ச வேண்டா காண் – என்று தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான   சம்ஸ்லேஷத்தை சொல்லுகிறாள் –

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே வந்த கிலேசம் தீரும்படி ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத் தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது-நாயகனையோ வரக் காண்கிறிலோம் இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட-இத்தைக் கண்ட தலைமகள் ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண் நீ அஞ்ச வேண்டா காண் -என்று தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
-56 –தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78–இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்-அதுக்கு இடம் அறும்படி ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ் வாத்ம ஸ்வரூபம் இருப்பது -என்று ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

தோழி வார்த்தை – இது உண்டான போது நமக்கு ஒரு கை முதல் வேணும் – அது இன்னது என்று அறிந்திலோமே -என்ன-வியலிடம் உண்ட – அவன் அருள் ஸஹகாரி நிர பேஷமாய் இருக்கும் என்னும்
பிரளயத்தில் பூமிக்கு உள்ள கைம்முதல் இறே நமக்கு உள்ளது என்கிறாள் –ஆபத்தை காண வேண்டுவது அவர்க்கு – பிரளய ஆபத்தில் தன் வயற்றில்  வைத்து நோக்குகிற போது பூமிக்காகா ஏதேனும் ஒரு கைமுதல் உண்டோ –அப்போது அப் பூமிக்காகா  உண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும் –அவ் வாராகரமே. அவர் பக்கல் உள்ளது –அவர் பண்ணும் கிருபைக்கு பாத்ரமாம் இத்தனையே இத்தலைக்கு வேண்டுவது –அவர் பண்ணும் அருள் ஒரு ஸஹகாரியை அபேஷித்து இரா இறே–

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே – ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிறவர்கள் -நமக்கு தஞ்சமாக நினைத்து இருக்க அடுப்பது என் -என்ன வங்கி புரத்து நம்பி இருந்தவர் –மூடோயமல்பமதி -என்ற ஷத்ர பந்துவினுடைய வாக்கியம் அன்றோ -அது ஒண்ணாது  காண் – பிரணதே -(ப்ரக்ருஷ்டமான நமஸ்கராம் ) -என்று ஓன்று உண்டு – அதிலே ஒரு சர்வஞ்ஞன் அறிய நிர் மமனாய் விழ வேணும் இறே –(அது நம்மாலே இயலாதே )-நம் தலையிலே ஏதேனும் ஒரு அந்வயம் ஒதுங்கில் அது செய்து தலை கட்டுகையில் உள்ள அருமையாலே அது இழவோடே தலைக் கட்டும்படி இருக்கும் காண் – இத் தலையில் ஏதேனும் ஒரு அம்சம் உண்டாகில் அது அப்ரதிஷேத்திலே புகும் இத்தனை அல்லது –உபாய சஹ காரம் ஆகாது –நீ உபாயம் ஆக வேணும் -என்கிற ஸ்வீகாரம் அவஸ்ய அபேஷிதமாய் இருக்க செய்தேயும்- அத் தலையிலே உபாய பாவமாம் படி இறே இருப்பது–இவன் பக்கலிலே பரம பக்தி பர்யந்தமாக விளைந்தாலும் – அது ஸ்வரூப பிரயுக்தமான ருசியிலே-அந்வயிக்கும் இத்தனை போக்கி –
ஸ்வ தந்தரமாக  நின்று பல பிரதமாக மாட்டாதே இறே இருப்பது-ஆனால் பின்னை நினைத்து இருக்க அடுப்பதென் -என்ன-காளியனுடைய வார்த்தையை-நினைத்து இருக்க அடுக்கும் -என்று
அருளிச் செய்து அருளினார் –

சோஹம் –(அந்த நான் ) திரு மேனியிலே என்னுடலை இட்டு சுற்றின பிராதி கூல்யத்தில் நின்று நிவ்ருதனாகா நான் –தேவ தேவச –பிராதி கூல்ய நிவ்ருத்தியே -பரிகாரமாக போரும்படியாய் அன்றோ –
உன்னுடைய நைர பேஷ்யம் இருப்பது –கிருபை பண்ண வேணும் என்கிற உக்தி மாத்ரத்தை இறே-
இப்போது பிரதிகூல்ய நிவ்ருத்தி யாக நினைக்கிறது –

நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
.–நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் (பிராதி கூல்யத்தில் நின்று நிவ்ருதனாகா நான்) வெருவி வந்து நின் சரண் என  (உக்தி மாத்ரத்தை இறே) –கையில் உள்ளது -பிரதி கூல்யத்துக்கு பரிகரமாய் இருக்க –
சரணம் -என்ற உக்தி மாத்ரம் இறே அதின் பக்கல் உள்ளது-வெருவி வந்து--அந்த உக்தி தானும் போழ்கன் இறே –யார்த்தி இல்லாமையாலே சத்ரு பயத்தாலே வந்த இத்தனை இறே –
நார்ச்சா நாதவ் ஸ்துதவ் நச சாமர்த்யவான் –போழ்கன்-போட்கனேன்
மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே
–ஸ்ரீ திருமாலை-33—எனக்கு என்றால் வெல்லாம் செய்ய வல்லேன்-உனக்கு என்றால் ஒரு துரும்பு நறுக்குகைக்கு சக்தி இல்லை
ஒன்றும் செய்ய வேண்டாதபடி நிர பேஷனாய் இருந்தாய்-ஒன்றும் செய்கைக்கு சக்தி அன்றே இருந்தேன் நான்–உனக்கு என்றால் எல்லாம் செய்ய வல்லை ஆகில் -எனக்கு என்றால் ஒன்றும் செய்ய மாட்டாய் ஆகில் – ஆனால் இனி நம்மை செய்ய சொல்லுகிறது  என் என்னில் –க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி –இனி கிருபை பண்ண வேண்டி இருந்தது –அதுக்கு அனுதாபம் வேணும் –கிருபைக்கு பரிகரமான அனுதாபம் என் பக்கல் இல்லாமல் இருந்தது –இனி இவ் அனுதாபத்தால் கொள்ளும் கார்யதையும் கிருபையையே கொண்டு கொள்ள பார்த்து அருள வேணும் –அப்படி அனுதாபம் இன்றிக்கே இருந்தவர்களையும் ரஷிக்குமோ என்ன-பலி புஜி சிசுபால இத்யாதி-காகம் ஆனால் -சதம் நிபதிதம் -என்று ஆர்தியோடே பூமியிலே வந்து விழுந்ததமை உண்டு-சிசுபாலானால் திரு நாமங்களை சொல்லி த்வங்கரித்தமை உண்டு-இப்படி அவர்கள் பக்கல் அல்ப குணம் அரோபிக்கையாலே அவர்கள் பக்கல் உன் கிருபை முடங்கப் பட்டது –(இரண்டு பேர் இடமும் குண லேசம் உள்ளதே ஒன்றும் இல்லாதவரை ரஷித்தேன் என்ற பட்டம் தேடி உள்ளாய் நீ அதுவே நான் )-என் பக்கல் அங்கன்பழி இடலாவது  ஓன்று இல்லாமையாலே உன் கிருபைக்கு தான் நினைத்த படி அழகு செண்டேறலாம் இறே என் பக்கல்

விடுத்த திருவருளால் –-அவர் தந்த அருளாலே -இத் தலையில் உள்ளது ஒன்றும் பாராதே –
தம் பேறாக-அவர் பண்ணின அருளாலே –விடுத்த –-வர விட்ட -தந்த–உயலிடம் பெற்று உய்ந்தோம்  
இவளுக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஓர் அவகாசம் இல்லை –இவள் உஜ்ஜீவித்தாளாக காணப் பட்டோம் -என்று இறே தோழி இருந்தது –உஜ்ஜீவிகைக்கு ஓர் அவகாசம் உண்டாயிற்று –அது தான் மேல் வரக் கடவது என்று பார்த்து இருக்கை அன்றிக்கே -பெற்று உய்வதும் செய்தோம் –உய்ந்தோம்-இருவரும் உஜ்ஜீவித்தோம் -பஹு வசனம் -அவன் ஸ்வபாவத்தை  தோழி அறிந்து இருக்கையாலே –அவனையும் இழந்தோம் இவளையும் இழந்தோம் என்று இறே இருந்தாள் – எல்லோரும் உஜ்ஜீவித்தோம் காண் –அஞ்சல்-அஞ்சாதே கொள்–அம் தோழி –என்னுடைய பேறே உனக்கு பேறாக இருக்கும் அவள் இறே நீ –
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் –என்கிறபடியே – தோழி என்ற போதே -இவ்வளவு இல்லையோ –அம் தோழி என்றதால் பெற்றது என் என்னில் –தம் தம் பிரயோஜனமும் இத்தலையில் பிரயோஜனமும் வேண்டி இருப்பாரும் உண்டு –-ஸ்வ பிரயோஜனத்தை பாராதே –இத் தலையிலே பிரயோஜனமே பிரயோஜனமாய் இருக்கை –அம் –என்கிற விசேஷணத்தாலே–ஸூஹ்ருதோ வா பவத்விதா -என்னக் கடவது இறே –-சுக்ரீவனை பார்த்து பெருமாள் அருளிய வார்த்தை இது –-நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரி யாக்கி –அவனிலும் நம்மை அந்தரங்கர் ஆக்கிக் கார்யம் கொள்ளும் தனை
ஸௌ ஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார் –என்னுடைய பேறே உன்னுடைய பேறாய்
என்னுடைய இழவே உனக்கு  இழவு என்று இருக்கையாலே என்னுடைய இழவை நினைத்து அஞ்சுதி இறே  –இனி அஞ்சாதே கொள் —ஓர் தென்றல் வந்து –-தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது –-இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –-தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே–சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள்  –அவளும் அத்தை சங்கேத பிரக்ரியையால் அறிந்து – அயல் அறிய செய்வது என் என்று – துணுக்கு என –அயலிடை யாரும் அறிந்திலர்–அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–(இவர் வாயில் –என்னையும் நோக்கி என் அல்குலையும் நோக்கி –
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் -அங்கு தலைமகள் வார்த்தை 
)-மேல் செய்தது என் என்று கேட்க –-அம் பூம் துழாயின் இன் தேன் –அழகிய பூம் தாரை உடைய திருத் துழாயின் இனிய தேன் துளிகளை –புயலுடை நீர்மையினால் –குளிர்ந்த மேகத்தின் உடைய ஸ்வபாவத்தாலே- ஒருவர் அபேஷிதாய் இருக்க  வந்து உபகரித்த படிக்கு சொல்லுகிறது–தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் – எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-இத்தால்
சம்ஸ்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –

தலைவி இரவிடத்து தலை மகன் கலந்தமையை தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம் –
குளிர்ந்த தென்றல் அயல் அறியாமல் ஏகாந்தமாக நாயகியின் திருத் துழாயின் தேனைத் துளித்துக் கொண்டு எனது அவயவங்களிலும் ஆபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்தது காண் -என்கிறாள் –
நேராக கலந்ததை கூட வெட்க்கி தென்றல் மேலே வைத்து அருளிச் செய்கிறாள் – இனி வாடை போன்றவற்றுக்கு அஞ்ச வேண்டாம் -என்கிறாள் –வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்-பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அருளியது போலே-துக்க சாகரத்தில் மூழ்கித் தவிக்கின்ற என்னை ரக்ஷித்ததால் –உய்ந்தும்-உய்ந்தனம் -என்றபடி –ஆற்றாமை தீரும் படி குளிர்ந்த புதுமையான தென்றல் -ஓர் தண் தென்றல் வந்து-தோழி நாம் அஞ்ச வேண்டாம் -கலவியை அயலார் அறிந்திலர் -அயலிடை யாரும் அறிந்திலர்-நாயகன் கருணை திறத்தை –  -என்கிறாள் –தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் –எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-இத்தால் சம்ச்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –

வியலிடம் உண்ட பிரானார்-விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்–விடுத்த திரு அருளால்-அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே–உயலிடம் பெற்று உய்ந்தும்–உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்–அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை-தோழி-இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு–ஓர் தண் தென்றல் வந்து-நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே-அத்விதீயமாய் நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய் நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை யுடைத்தான தென்றலானது தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து-அயலிடை யாரும் அறிந்திலர்-தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து-(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை-ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )தோழி அசல் அறியில் செய்வது என் -என்று துணுக்கு என்ன-அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை என்கிறார்–மேல் செய்வது என் என்று கேட்க –அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது-அன்றியே-பொலன் கலன் என்ற பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்–இத்தால்-ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லைபிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும் ஞானாதி குண அலங்காரங்களையும் தான் விரும்பினான்–புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு பிரித்து அருளிச் செய்கிறார் -நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸிப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன-வியலிடம் யுண்ட பிரானார்-பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்-ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்-பிரானார்-உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது -அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ர பூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது-அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால் உயலிடம் பெற்று உய்ந்தும் விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம் -தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்-அஞ்சலம் தோழி –நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி-ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர் அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி குளிர்ந்த தென்றல் வந்தபடி-வந்தது என் செய்தது என்ன-அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே-என்கிறாள்-அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும் அது செய்து போந்துள்ள ஸூகத்தை நான் ஏது என்று சொல்லுவேனடி

ஸ்வாபதேசம் –
கலங்கின அன்பரை நோக்கிக் கூறும் ஆழ்வார் -லௌகிக பதார்த்தங்களை அஞ்ச வேண்டாம் –
பிறர் ஒருவருக்கும் புலன் ஆகாமல் வந்து தன் போக்யதையை வெளிக்காட்டி என் துயரம் எல்லாம் தீர்க்கும்படி என் உறுப்புக்கள் ஞானம் போன்ற அலங்காரங்களையும் விரும்பி ஆட் கொண்டான் என்கிறார் –

ஸ்வாபதேசம்
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச ந
எம்மின் முன்னுக்கு அவனுக்கு மாய்வர் -என்று மோகித்து கிடக்கிற தோழி போலே – தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய மன்னேர் அன்ன என்ற பாசுரத்தை உள் கொண்டு அந்த ஆபத்து இவளுக்கு உண்டு என்று அவதாரிகை-

தாத்பர்யம்
நாயகி விட்ட தூதுவர் நாயகனை கொண்டு வர நாயகன் உடன் சேர்க்கச் சேர்ந்தமையையும் அறியாதே தோழி –அதற்கு முன் இருந்தே மோஹித்து இருக்க மோஹம் தெளிந்து எழுந்து இருந்து
முன்புள்ள தலைவியின் ஆற்றாமையையே நினைத்து தான் வியசனப்பட அந்தத் தோழிக்கு நடந்த சம்ஸ்லேஷம் அறிவித்துத் தேற்றுகிறாள் தலைவி –
ஓ தோழீ நீ வியசனப்பட வேண்டாம் பிரளயத்தில் ஆபத்து வந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து அருளியது போல் அந்த மஹா உபகாரகர் என்னுடன் கலந்து என்னுடைய ஆற்றாமையை நீக்கி அருளினார்-இத்தால் முன்புள்ள சங்கடம் தீர்ந்து இருவரும் பிழைத்தோம் ஆனோம்
முன் பாதகமான தென்றலும் அவன் சூடும் திருத்துழாயில் தேனை முகந்து-என் இந்த்ரியங்களையும் ஆபரணங்களையும் தடவிக் கொடுத்து ஆஸ்வாஸப்படுத்திற்று-அசலார் யாருமே இந்த கலவியை அறியார்-லோக அபவாதத்துக்கு நீ அஞ்ச வேண்டாம் என்று தலைவி பாசுரமாய் இருக்கிறது –

8-8-கண்கள் சிவந்து பெரியவாய்வாயும் சிவந்து கனிந்து-ப்ரவேஸம்-

கண்கள் சிவந்து -பிரவேசம்
மாயக் கூத்தா என்னும் திருவாய் மொழியிலே–இவருக்கு ஓடின விடாய் எல்லாம் ஆறும்படி
இருத்தும் வியந்து -என்கிற திருவாய்மொழி யிலே வந்து கலந்து
இவர் விடாயும் தீர -தன் விடாயும் தீர்ந்து–இவரைப் பெற்ற பேற்றினால் ப்ரீதனாய்-
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே இங்கனே சேர விழுந்தது-யாங்கனம் விழுந்தது எனின் –

(ப்ரவ்ருத்தமான ஸம்ஸ்லேஷம் சிதிலமாக ஒண்ணாது )இனி உண்டான கலவி குலைய ஒண்ணாது –
இவர் ஆகிறார்
வளவேழ் உலகின் -என்ற திருவாய் மொழியைப் பாடின ஆழ்வார் ஆயிற்று –
நாம் கிட்டக் கொள்ள -சிறியேனுடைச் சிந்தையுள் -என்று-(கீழ் சொன்னது ஸுசீல்யம் அனுபவித்து -அத்தையே இப்பொழுது )தம் தாழ்வினை நினைத்தவர்-
இன்னும் அது பின் நாட்டி அகலப் பார்ப்பர்-
அங்கனம் அகலப் பார்ப்பதற்க்கு முன்னே அதனை நீக்க வேண்டும் -என்று பார்த்து

இனி இவர் தாம் அகலப் பார்ப்பதும்-அநாதி காலம் சம்சாரத்தில் உழன்று போந்த ஆத்ம வஸ்து
அங்குத்தைக்கு யோக்யதை இனியது அன்று என்று ஆயிற்று-
இது அங்கன் அன்று-வந்தேறியான இதனைப் பாராமல்-அடியைப் பாரீர் என்று-
இந்த ஆத்ம வஸ்து வினுடைய சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்த வேண்டும் என்று பார்த்தான்

(வைலக்ஷண்யம் -ராகவனுக்கு வைதேஹி போல் -நித்யம் -ஞான ஆனந்த மயம் -அத்யந்த சேஷம்)

அங்கனம் பார்த்து–
என்றும் உள்ளதாய்-ஞான ஆனந்த லஷணமாய்–நமக்கே உரிய அடிமையாய் காணும் இருப்பது
நீர் கிட்டுமது நமக்கு தாழ்வு அன்று
கௌஸ்துவத்தை போன்றும் பிராட்டிமாரைப் போன்றும் -நமக்கு நிறமாம் இத்தனை -என்று
இவருடைய ஸ்வரூபத்தின் சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்துகிறான்-

அங்கனம் படுத்தும் இடத்து
உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி காட்டுவதற்கு வாரீர் -என்றால்-
மின் மினி போலே இருக்கிற இதில் சரக்கு என் -என்று இசைவார் ஒருவர் அல்லர் இவர்
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்றருள் -(8-7-7)-என்று-நம் வடிவிலே துவக்குண்டு இருப்பது ஓன்று உண்டு

ஆதலால் நம் வடிவினைக் காட்டி அதன் மூலமாக நமக்கு
பிரகாரமாக இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுப்போம் -என்று பார்த்து –
வாரீர் நம்முடைய வடிவு அழகு இருக்கிறபடி கண்டீரே
நம்மைக் காணும் காட்சியிலே உம்மையும் காணலாய் காணும் இருப்பது -என்று
தம்முடைய வடிவு அழகினை முற்பட அனுபவிப்பித்து

தனக்கு நூபுரம் முதலானவைகளைப் போன்று மிக இனிய பொருளுமாய்
தனக்கே அடிமையுமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க
அதனை-அனுபவித்து இனியர் ஆகிறார்-

ஸ்ரீ கௌஸ்துபம் முன் அருளிச் செய்தது எம்பெருமான் திரு உள்ளம் -பிரணயித்தவ ஸ்வ அபிப்ராயத்தால்
நூபுரம் என்றது ஆழ்வார் திரு உள்ளம் -இது தத்வ ஸ்திதி –
தாஸ்ய பாவனையில் இருப்பாரே -பிரேம பாவனை விட -பர்த்ரு பார்யை -ஸ்வாமி தாஸ்ய பாவமே -மிகுத்து இருப்பாரே –
அத்யந்த போக்யமுமாய் அத்யந்த சேஷத்வமுமாய் இருக்கும்-அமுதனார் -இத்தை கொண்டே ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
சீலம் கொள் நாதமுனியை -யதிகட்க்கு இறைவன் யமனைத் துறைவன் -திருவடி -அப்ருதக் சித்தம் என்று காட்டி அருளினால் போலே –

இத் திருவாய்மொழி யில் முதல் இரண்டரை பாசுரங்களால்-பாட்டையும் பிரிக்காமல் -அவ்வளவு நெருக்கம் என்று காட்ட –
தன்னை அனுபவிப்பித்து-பின்னர் ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தானாய் இருக்கும்-அதற்கு அடி என் என்னில்
ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி
பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர்

அன்றிக்கே
ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று
தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –

அன்றிக்கே –
இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறிய
கலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

பிராணவார்த்தம் -8-8-என்பர் -8-8-/-8- 9/8-10 -மூன்றும் சேர்ந்து திருமந்த்ரார்த்தம் –
பகவத் ஸ்வரூபம் ஆரம்பித்து ஆத்ம ஸ்வரூபத்தில் -முடியும் -கீதை விட ஏற்றம்
சந்தோஷம் உடன் ஆரம்பித்து வருத்தம் உடன் கீதை முடிய
ஏ பாவம் பரமே -உற்றேன் உன பாதம் பெற்றேன் -ஆனந்தம் முடித்து
ஐவரை வாழ வைக்க அது

ஒருவரை வாழ்வித்து 25 பேரை அழிக்க திருவாய் மொழி –
இருத்தும் வியந்து -உபாயம் இரக்கம்
அருத்தித்து -தகுதி -இச்சை
அவர் பொன்னடிக்கீழ் -இனிமை புருஷார்த்தம் –
இச்சை இரக்கம் இனிமை –
பாலோடு அமுது அன்ன ஆயிரம் -த்ருஷ்ட்டி விஷம் இந்த திருவாய் மொழி
வானோர் மனச் சுடரை தூண்டுவிக்கும் வினைச் சுடரை அழிக்கும் திருமலை போலே –

மாசி மகம் -மணக்கால் நம்பி -ராம மிஸ்ரர் -கலியுக ராமர் -மூவர் இடம் இல்லா பெருமை
அனுஜித ஷமா யோகம் -பரசுராமர் போல் ரோஷ ராமர் இல்லை
அபுண்ய ஜன பாதகம் -பெருமாள் போலே இல்லையே –
மது -கள் குடிக்காத -பல ராமர் போலே இல்லையே —

எட்டாம் திருவாய் மொழியில் -கீழ் தம்முடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இந்திரியாதி விரோதிகளை நசிப்பித்துத்
தன் பேறாகக் கலந்து ப்ரீதனான ஈஸ்வரன் -இவருக்கு நிகர்ஷ ஆபாதகமான விரோதி வந்தேறி என்னும் இடம்
இவர் அறியும் படி இவருடைய ஸ்வரூபமானது நமக்கு பிரகாரமாய் இருக்கிறபடியையும்
விலக்ஷணமாய் இருக்கிறபடியையும் காட்டி நைர் தோஷயத்தை பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி
இவருடைய ஆத்ம ஸ்வரூபம் தன்னை ஆஸ்ரயித்து இருக்கும் என்கைக்கு உறுப்பாகத்
தான் இவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிற இருப்பையும்
சர்வாந்தராத்ம பூதனான தன்னுடைய நிரதிசய ஞானானந்த யோகத்தையும்
அஹமர்த்த பூதனான ஆத்மாவும் தனக்கு பிரகார பூதன் என்னும் இடத்தையும்
சர்வ காரண பூதனான தான் விலக்ஷண சாரஸ்யத்தை யுடையனான சேதனனுக்கு அப்ருதக் பூதனான நிலையையும்
ஸ்வ பிரகார பூதனான ஆத்மாவினுடைய ஸூரவதமத்வத்தையும்
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ப்ராப்ய பாவத்தையும்
ஏவம் வித ஆத்ம ஞானம் இல்லாதாருடைய சம்சார சம்பந்தத்தையும்
ஆத்மாபிராப்தி காமனுடைய அந்திம ஸ்ம்ருத்யபேஷையையும்
ஸ்வரூப ஐக்கிய ரூபமான மோக்ஷம் அசம்பாவிதம் என்னும் இடத்தையும்
ஏவம் விதனான ஆத்மாவுக்குத் தன் பக்கல் ப்ரத்யாசத்தியே உஜ்ஜீவன ஹேது என்னும் இடத்தையும்
பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து இப்படி விலக்ஷணமான ஆத்மாவினுடைய நைர் தோஷயத்தை பிரகாசிப்பித்துத்
தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டான் என்று ப்ரீதராகிறார் –

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கபோலம் சொல்லாமல் -ஏழையராவி பதிகத்தில் கபோலம் படுத்துவதை சொல்ல வில்லையே –
அங்கே எதனால் சொல்ல வில்லை –வாசா மகோசரம் அது -பேசாமல் விக்கித்து போனார்
கூரத் ஆழ்வான் -யசோதை கை பட்டு பருத்த இந்த இடம் – -தாயாருக்கு சொத்து என்று விட்டார் -மற்றவை எல்லாம் பார்யை இவளுக்கு

உள்ளான் -உள்ளே ஆனான் -உள்ளே இருப்பானாக இருக்கிறான் -உள்ளத்திலே பிரகாசிக்கிறான்-என்றபடி

அடியேன் உள்ளானே-இந்த அழகைக் கண்டு மயங்கி -சேஷ பூதன் இப்பொழுது தான் –நானும் உனக்கு பழ வடியேன்ஸ்வரூபம்
இங்கு அழகுக்குத் தோற்று அடிமை –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தான் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஐயப்பாடு அறுத்ததும் அழகால்
உள்ளானே-உள் ஆனே-உள்ளத்திலே பிரகாசிக்கிறான்

அவன் தன்னுடைய கலவியாலே புதுக் கணித்த-திவ்ய ஸுந்தரியாதிகளோடே -தெய்வத் தன்மை உடைய வனப்பு முதலானவைகளோடே
என்னுடைய மனத்தினிலே புகுந்து இருந்தான் -என்கிறார் –

நம் ஆழ்வார்கள் வடிவு அழகிற்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் –அவன் தன்னோடு-பிராட்டிமாரோடு-அடியார்களோடு-வாசி இல்லை-எல்லாருக்கும் விரும்பத் தக்கதாய் இருக்குமாயிற்று திருமேனி –இச்சா க்ருஹீத அபிமத தேகம்

ஆசார்ய ஹிருதயம் -சூர்ணிகை -58-மூவாறு மாசம் மோஹித்து – என்ற இடத்து
மாயக் கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தால் போலே
தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து-தம்மோடு கலந்த பின்பு அவை தன் நிறம் பெற்றதை அனுசந்தித்து
ஈதென்ன பிரகாரம் -என்று ஆறு மாசம் மோகித்து -மணவாள மா முனிகள் வியாக்யானம் –
இருத்தும் வியந்து -என்ற திருவாய்மொழியிலே கலவியாலே தன்னிறம் பெற்றபடி –
கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு -இசையிலே காணும் இத்தனை –கண்கள் சிவந்து -சிவந்த்தில் அழுத்துச் சொல்ல வேண்டும்

குனி சாரங்கன் –மகர குண்டலத்தன் -எனபது போன்று-இவையும் சில ஆபரணங்கள் இருக்கிறபடி-திருவாரமும் -திருவே ஆரம் –திருவும் ஹாரமும் என்றபடி -சரபங்கன் ஆஸ்ரமம் -இளைய பெருமாள் இடம் வில்லில் நாணை இறக்கி உள்ளே போகச் சொல்லி
இங்கு பராங்குச நாயகி செல்ல வளைந்து இருக்க வேணுமோ என்னில் –
வீரர்கள் கையில் வில் வினை இல்லாத போதும்-வளைந்தே இருக்குமாதலின் -குனி சாரங்கன் -என்கிறது –

——–

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான் –சேஷத்வ ஏக நிரூபணீயம்-அடிமைத் தனமே அடையாளம் அஹம் அர்த்தம் –

உபய லிங்க விசிஷ்டம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகை த ஏக குணாத்மகன் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம்
ஞானானந்த விசிஷ்டம் -உபமான ராஹித்யம் என்றதாயிற்று-அனைவருக்குள்ளும் இருந்தாலும்
இத்தை அறிந்தவர் உள்ளே இருந்து அவனுடைய போகத்துக்கு விஷயம் ஆவோம்
அறியாமல் இருந்தால் அவனுடைய லீலைக்கு விஷயம் ஆவோம்)

என்னுடைய மனத்தில் புகுந்த அளவு அன்றிக்கே-என் சரீரத்திலும் புகுந்து கலந்தான் -என்கிறார்-
கீழே அடியேன் உள்ளான் -உள்ளே ஹிருதயத்தில்-என்றாரே -இதில் சரீரத்திலும் புகுந்து கலந்தான் என்றவாறு —

அஹம் அர்த்தத்துக்கு ஞாநானந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தி –

ஈஸ்வரனுக்கும் இவருடைய ஆத்மாவைக் காட்டிலும்-இவர் கழிக்கிற சரீரம் உத்தேச்யமாய் தோற்றா நின்றது –
செருக்கர் தாம் உகந்த விஷயத்திலே அழுக்கு உகக்குமா போலே –த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் –

இதனால்–உயிர்கள் பரனோடு ஒன்றாம் என்னும்  -அல்லல் எல்லாம் வாதில் வென்றான் –என்றபடி
ஜீவ பர பேதமும் -அடியேன் -உள்ளான்-உள்ளே இருக்கிறான் -என்பதால்-
ஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் –அடியேன் –அண்டத்தகத்தான்-ஏக பஹு வசனங்கள் -என்பதால்-
சேஷ சேஷி சம்பந்தமும் இல்லை-என்று சொல்லுகிற மதங்கள்-அர்த்தாத் ஸித்தம் -பொருள் ஆற்றலால் மறுக்கப் பட்டனவாம்-

ஓடியா இன்பப் பெருமையோன் -உணர்விலும்பர் ஒருவன்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
எல்லாருக்கும் விரும்பத் தக்கவனாய் இருக்கிறவன் காண்-என் சரீரத்தை விரும்புகிறான்-

————–

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

காரணம் இலாத கிருபையாலே -நிர் ஹேதுக-கிருபையாலே-தன் விஷயமாக இச்சையும் பிறப்பித்து–
என்னோடே கலந்து-(இது வரை முதல் பாதி பாசுர அர்த்தம் =மேல் கலவி ஸ்திரமாக இருக்க அநந்யார்ஹத்வம் ஸ்வரூப நிரூபகம் என்று காட்டி அருளினான் என்கிறார் )அக் கலவி நிலைத்து நிற்கும் பொருட்டு-
சிறப்பினை உடையதாய்-தனக்கே யுரியதுமான ஆத்மாவின் ஸ்வரூபத்தையும்-காட்டி அருளினான் -என்கிறார்
அநந்யார்ஹ சேஷத்வமான ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டி அருளினான் -என்றவாறு —

யானும் தானாய் ஒழிந்தானே-அவ்வளவிலும் முடியாமல்-
என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம்படி-தனக்கு பிரகாரம் ஆகையாலே-
அடிமை என்னும் இடத்தையும் காட்டிக் கொடுத்தான் –

ஆழ்வீர்-என்றால் ஏன் -என்பான் ஈஸ்வரனே போலும் காணும்-
நான் என்னும் சொல்லும்-நான் என்னும் புத்தியும்-தன்னளவும் செல்லும் படி சரீரமாய் இருக்கையே
ஸ்வரூபமாம்படி இருக்கிற படியைக் காட்டித் தந்தான் –

தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று-
த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்-அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன் — த்வம் -நீ — அஸி -ஆகிறாய்–போலே என்கிறார்-
இரண்டும் ப்ரஹ்மம் -விசேஷணங்கள் தானே மாறி இருக்கும்-விசேஷ்யம் ஒன்றே -இது தானே சாமாநாதி கரண்யம் -விசிஷ்டாத்வைதம் –

———-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4

அநந்யார்ஹ சேஷத்வம் -முதல் பாதியில் லுப்த சதுர்த்தி அர்த்தம் -பின் பாதி –

பிராப்தி -தொடர்பினைக் காட்டின அளவே அன்றிக்கே-இவ்வாத்மா தனக்கு மிகவும் இனிய பொருள்
என்னும் இடத்தையும் காட்டித் தந்தான் -என்கிறார்-

அவனுக்கு -என்னது -என்பதனால் இனியதாய் இருக்கும்-
இவனுக்கு -அவனது -என்பதனால் இனியதாய் இருக்கும்-

நின்ற ஓன்று -என்று ஜீவாத்மா ஸ்வரூபத்தைக் காட்டும் இந்த சொல்லானது-
இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய-பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது-
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்-பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது-

நின்றனர் இருந்தினர் -என்ற பாசுரத்திலே போலே-இந்த சாமாநாதி கரண்யத்துக்கு
இனிமையோடு கூடிய ஸ்வரூபத்தின் விசேஷண அம்சமான-இனிமையிலே தாத்பர்யம்

——–

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே-8-8-5-

மகாரார்த்தம் விளக்கி அருளிச் செய்கிறார்

மேல் பாசுரத்தில் பகவான் உடைய சரீரமாக ஆத்மா பேசப் பட்டது –
இதற்கு மேலே நான்கு பாசுரங்கள் –
ஆடையில் உள்ள வெண்மையைப் பிரித்து நிஷ்கர்ஷக சப்தத்தை இட்டுச் சொல்லுமா போலே-
நிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் பிரித்து பேசுவது-
அநிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் அபேதமாக பேசுவது-
நியத நிஷ்கர்ஷகம் தர்மி தர்மங்களை பிரித்து பேசுதல்-வாசனை உடைய மண் போலே-

வைஷிக நிஷ்கர்ஷகம் ஆவது தர்ம தர்மிகளை விருப்பத்துக்கு தக்க பிரித்து பேசுவது -வஸ்த்ரம் வெண்மை நிறத்தை உடையது போலே-
மேலே நான்கு பாசுரங்களும் வைஷிக நிஷ்கர்ஷ்கம் என்பார் எம்பார்-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் கதி த்ரய மூலஸ்தம் உண்டே –

அநிஷ்கர்ஷமாக திருமாலை ஆண்டான் நிர்வாகம்-

எம்பெம்மானோடு -என்கிற பாசுரம் முடிய கேவல ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுகிறது -என்று எம்பார் அருளிச் செய்யும் படி –
திருமலை ஆண்டான் -சரீரமான தன்மையிலே வைத்து சொல்லுகின்றன -என்று பணிப்பர் –

வெண் பட்டு -இரண்டையும் முதல் வேற்றுமையில் பிரித்து சொல்லாமல்
பட்டின் வெண்மை வேற்றுமை உருபுடன் பிரித்துச் சொல்லுமா போல் இரண்டு நிர்வாஹங்கள்

இப் பாட்டில் சாங்கிய சாஸ்த்ரத்தில்-தத்துவங்களை என்னும் முறையாலே
ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும் படியையும்-அதனை அறிகையில் உண்டான அருமையும் சொல்லிற்று-

——–

நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ் உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே–8-8-6-

யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே-இந்திரியங்களை அடக்குதல் முதலியவற்றின் வடிவமான யோகத்தாலே-பிரகிருதியின் நின்று விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை வருந்தினால் நேரே காணலாம் –என்கிறார்

பகவத் பிரகாரம் -மூன்றாம் -பாசுரம் —போக்யம் நாலாவது -பாசுரம் –ஸ்வயம் பிரகாசம் -ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி –
கைவல்யம் பெறவும் பகவத் பிரசாதத்தால் -ஆறாம் பாசுரத்தில் –இவற்றை தெரியாமல் சம்சாரத்தில் உழல்வோம் என்று ஏழாம் பாசுரம் -அருளிச் செய்கிறார்

வீடு –பிரகிருதி சம்பந்த பட்ட பொருள்களிலும் தொற்று அறும் –
பிரகிருதி போன்று -சுனையும் -நாணமும் -மிருதுத் தன்மையும் உடையார் அலர்-
தன் பக்கல் பராமுக புத்தி பண்ணினாரை தானும் முகம் பாராது –
பகவான் -தள்ளி நிற்க தள்ளி நிற்க அவகாசம் பார்த்து உடனே இருப்பானே -அவன் போலே இல்லையே பிரகிருதி —

அதுவே வீடு –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -என்கிறபடியே-பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களில் தொற்று அற்றவாறே-
ஆத்துமாவை அடைதல் ஆகிற அதுவே-மோஷமாய் இருக்கும் –
அதற்கு என்று செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -என்பார்-வீடாமே-என்கிறார் –

வீடாமே–சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக ஆத்தும வஸ்துவை நினைத்து-
அவ்வழியாலே இதனை பேறாக அன்றோ இவர் தாம் நினைத்து இருப்பது-
அவ்வளவு போக மாட்டாமல் இதன் நன்மையைக் கண்டு- இவ்வளவில் கால் தாழ்வார்க்கும் போந்திருந்ததே -என்கிறார்-
தம்முடைய உத்தேச்யத்தில் ஒரு சிறு பகுதியை புருஷார்தத்தில்-முடிந்த நிலமாக
கொள்ளுகையால் அன்றோ முன்பு–அது செற்று -திருவாய் -1-2-5– இவர் இதனைச் சிரித்து இருந்தது-

————

அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

மேலே கூறிய உபாயத்தின் படியே-அந்த ஆத்துமாவை அடையாமல்
அதிலே ஐயம் தொடரப் பெற்றவர்கள்-உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –என்கிறார் –

——-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

இப்படி அரிதில் பெறத் தக்க-ஞானம் கை வந்தாலும்-அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில்
செய்தன எல்லாம் பயன் அற்றவை ஆகும்-என்கிறார்-

எம்பார் நிர்வாகத்துக்கு சேர -ஆத்மா வினுடைய இயல்பான தன்மை பற்றி அருளிச் செய்தார் -இப்படி என்று தொடங்கி-
மேல் திருமாலை ஆண்டான் நிர்வாகத்துக்கு சேர எம்பெருமான் நினைவோடு ஒத்தே சேர்ந்து -சேஷமாக-என்று நினைவு பற்றி -அருளிச்செய்கிறார் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்னும் பாட்டு தொடங்கி-நிஷ்கிருஷ்ட ஆத்மா அனுசந்தானம் மாத்ரமே அன்றிக்கே-
பகவானுக்கு அடிமையாம் தன்மை பர்யந்தமாக அனுசந்திக்கிறது என்றும்-
இப்பாட்டில் எம்பெருமானோடு ஒத்தே சென்று அங்கே உள்ளம் கூடக் கூடிற்றாகில் -என்னும் அந்திம ஸ்ம்ருதியும்-
எம்பெருமான் தனக்கு அடிமையாக இவ்வாத்மாவை நினைத்து இருக்குமா போலே-
இவனும் அவன் நினைவோடே ஒத்து அந்நிலையிலே அடிமையாம் தன்மையை நினைக்கிற நினைவு கூடுமாகில்
நல்ல வாய்ப்பு என்று ஆண்டான் அருளிச் செய்வர் –ஓத்தே சென்று என்றும் ஒத்த தேஐஸ்  என்றும்

நன்று
பகவான் உடைய குணங்களில் ஈடுபட்டவராய் இருக்கிற இவர் இவற்றை எல்லாம் பேசுவது என் -என்னில் –
இப்படி அரிதாய் இருக்கிற இதனைக் கண்டீர் எனக்கு காட்டித் தந்தது -என்று
அவன் பக்கலிலே செல்லுகின்ற செய்ந்நன்றி அறிதலே காரணமாம் -என்க –

—–

கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே–8-8-9-

அந்திம ஸ்மிருதியிலே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்-பேதம் கூறப்படவாறே-
இந்த பேதம் உண்மை அன்று-தத்வ ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஓன்று -என்று கொண்டு
எப்பொழுதும் பிறவியிலே உழன்று திரிகிற ஆத்மாவை ப்ரஹ்மமாகச் சொல்லுகிற-மாயாவாதிகளை இகழ்கிறார்

உயிர்கள் மெய் விட்டு ஆதி பரனோடு ஒன்றாம் -அல்லல்-குத்ருஷ்ட்டி பக்ஷம் சம்பவம் -நிரசிக்கிறார்

அது அதுவே –அந்த ஆத்மவஸ்து அந்த ஆத்மவஸ்துவே-ஒரு பொருள் வேறு பொருள் ஆகாதே அன்றோ –ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே
நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாக-இச் சம்சாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களை சொல்லுவாரும் உளரோ -என்ன –

———-

உளரும் இல்லை அல்லராய் உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

சாங்க்யம் முதலான குத்ருஷ்டி மதங்களில்-நான் புகாதபடி-தானே யாதொரு பயனையும் கருதாது என்னை அங்கீகரித்து-
நினைவுக்கு வாய்த்தலையான மனத்திலே நித்ய வாஸம்-செய்கையாலே -என்னுடைய எல்லா துக்கங்களும் போயின –என்கிறார் –

உளரும் இல்லை அல்லராய் –இல்லை அல்லராய் உளரும்-சேஸ்வர சாங்க்ய மதம்

உளராய் யில்லை யாகியே –இல்லை யாகியே உளராய் –நிரீஸ்வர சாங்க்யன்

அன்றிக்கே-
அடியர் -அடியர் அல்லாதவர் -விஷயமாக்கி-இல்லை அல்லராய் உளராய் இருப்பார் அடியார்க்கு-ஆஸ்ரிதற்கு
இல்லை யாகியே உளராய் இருப்பார் அடியார் அல்லாதார்க்கு -என்னுதல் –நாஸ்திகர்க்கு –

———–

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11–

ஆத்ம அவலோகனம்-முடிந்து -அழகை அனுபவிக்கிறார் -நாயகி பாவம் -பொசிந்து காட்டுகிறது
குருகூர் சப்தம் இல்லை -பகவத் பிராப்தி பலன் -பிரகாரமாக ஆத்மாவை அன்பவித்து –
தெருளும் மருளும் மாய்த்துத்-சம்சார விஷய ஞானமும் த்யாஜ்யம் -பகவத் விஷய ஞானம் மட்டுமே நிலைக்க வேண்டும்

நிகமத்தில்-இப்பத்தும் கற்றாரை–தம்மை அங்கீகரித்தாப் போலே அங்கீகரித்து–தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்வான் –என்கிறார் –

வாய் திறந்து அருள பாடிட்டு –அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மீன் என்று அருளி இருத்தும் அம்மானாம்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்-இப்போதைய வீரக் கழல்-
பிராட்டி முன்னாக அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –திண் கழலாய் இருக்குமே 

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading