ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம்புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம் –
யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே
ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்-எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.
திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி
அவதார ஸ்தலம்: எறும்பி
ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்
சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்
நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்(ப்ரஸ்ன உத்தர ரூபமாக ஸேனாபதி ஆழ்வான் பட்டோலை செய்து அருளியது), சரம குரு நிர்ணயம்-உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்
அப்புள்ளார் தீர்த்த யாத்ரை அருளி இவரைக் கண்டு வாதம் செய்ய வர இவரது மஹிமையைப் பார்த்து அனுவர்த்தி செய்தார்
பெரிய கந்தாடை அண்ணன் இவரது ஆப்த பந்து -அவர் மூலம் மா முனிகள் காலஷேபம் கேட்க செல்லும் பொழுது மாமுனிகள் வைபவம் கேட்டு அவரைத் தண்டனிட கோயில் (ஸ்ரீரங்கம்) வந்த எறும்பியப்பா, மாமுனிகளின் காலக்ஷேபத்தில் திருவாய்மொழி முதல் பாசுரமான “உயர்வற” பாசுர விளக்கத்தில் எம்பெருமான் பரத்வம் கேட்டு அதில் வேத வேதாந்தங்கள் செறிவுக்கு நெகிழ்ந்தார். மாமுனிகள் அவரைத் ததீயாராதனத்துக்கு எழுந்தருளப் பண்ண, அப்பா சந்யாசி அளிக்கும் ஆஹாரம் நிஷேதம் எனும் சாமான்ய சாஸ்த்ரம் காட்டி அவ்வுணவுண்டால் தோஷம் நீங்கச் சாந்த்ராயண வ்ரதம் செய்யவேணும் என்று நினைத்து திருமாலையில் ஆழ்வார் 41ம் பாசுரத்தில் “தருவரேல் புனிதமன்றே” என்று அருளிய விசேஷ தர்மத்தை உணராது மறுத்து தன் ஊர் திரும்பினார். காலையில் அநுஷ்டானங்கள் முடித்து அவர் தம் திருவாராதனத்துக்குக் கோயிலாழ்வார் திறக்கமுயல, அது முடியாமல் போக, தம் பெருமாளான சக்ரவர்த்தித் திருமகனைத் தொழாத வருத்தத்தால் ப்ரசாதம் உண்ணாமல் உறங்க, கனவில் அவன் வந்து மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் ஆதலால் அவரைச் சரண் புக்கு உய்வுறும் என நியமிக்க, (சேஷ ஸ்ரீ மான் -போகி பூதா ராகவஸ்ய -பூத்வா வரவர முனி -பத்ர பீடம் ரஷதி -ஸ்லோகம்)அப்பா மீண்டும் விரைந்து கோயிலேறச் சென்று மாமுனிகளிடம் பிழை பொறுத்தருள வேண்டி, கோயில் கந்தாடையண்ணன் புருஷகாரத்தால் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, சிஷ்யராகி அஷ்ட திக் கஜங்களில் ஒருவரும் ஆனார்.
இந்தக் கிரந்தத்தில் உதாஹரிக்கப்பட்ட பூர்வாச்சார்கள் திரு நாமமும் அவர்கள் அருளிய க்ரந்தங்களின் திரு நாமமும்
1-சோமாஸி யாண்டான் –குரு குண விவரணம் -குரு குண வலி
2-வடுக நம்பி
3-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்
4- நஞ்சீயர்
5-கணியனூர் சிறியாச்சான்
6-நலம் திகழ் நாராயண தாஸர் –குரு ப்ரபாவ தீபிகை
7- ஜீயர்
8- அபியுக்தர்
———-
அவனும் ஆச்சார்ய பதத்தை விரும்பி -குரு பரம்பரையில் பிரதமம் இடத்தைப் பிடித்துக் கொண்டான்
ஆனால் அவனது ஸ்வ தந்தர்யம் -இல்லாத நம் பூர்வாச்சார்யர்களின் ஏற்றம் சொல்ல வேண்டாமே-
இறுதியான பெருமை -சரமம்- ப்ரதாநம் –
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம–வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ( ராமாநுஜஸ் ஸ்ம் ருத )–கச்சித் பவிஷ்யதி -பாட பேதம் ஆர்ஷ வசனம் -அனைத்து உலகும் வாழப் பிறந்த உத்தாரக ஆச்சார்யர் -ஒருவரே –
ஆச்சாரகர்கள் அருளிச் செய்த பட்டோலை கிரந்தம் -சரம உபாயம் பற்றியும் சரம குரு பற்றியும் உண்டு
சரம குரு ராமானுஜரே என்று நிர்ணயம் பண்ணும் கிரந்தம்
சரம உபாய ஸங்க்ரஹம் என்றும் சரம உபாய தாத்பர்யமும் இவர் அருளிச் செய்ததாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்த பட்டோலை என்ற நூலில் உள்ளது-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சரம உபாயம் -பஞ்சம உபாயம் –
————-
சரம குரு நிர்ணயம் ஸமதநுத யஸ் ஸ்வயம்
பரம புருஷஸ்ய ஸத் பத கமல பக்தித
யதி வர பதாம்புஜ ப்ரவண மநஸம் ஸூபம்
வரத குரும் அந் வஹம் வர குண நிதிம் பஜே
பரம புருஷனுடைய திருவடித்தாமரை இணையில் அன்பாலே எவர் ஒருவர் சரம குரு நிர்ணயத்தை அருளினாரோ -யதிராஜருடைய திருவடித்தாமரையில் ஈடுபட்ட நெஞ்சுடையவரும் -மங்களமானவரும் -நற்குணங்களுக்குக் கொள்கலமானவருமான அந்த வரத குருவாகிற எறும்பி யப்பாவை தினம் தோறும் உபாஸிக்கிறேன் -என்றவாறு
கு ஸப்தஸ்த் வந்தகாரஸ் ஸ்யாத் ரு ஸப்தஸ் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே —(ப்ரபந்ந அம்ருதத்திலும் -6-7-எடுத்து அருளப்பட்ட ஸ்லோகம்)
(கு ஸப்தம் இருளைக் குறிக்கும் ரு ஸப்தம் அதன் அழிவைக் குறிக்கும் -இருளை அழிப்பவனாகையாலே ஆசார்யன் குரு எனப்படுகிறான் -என்றவாறு)
என்று கு ஸப்தம் அந்தகார வாஸியாய் -ரு ஸப்தம் அந்தகார நிவர்த்தக வாஸியாய் -ஆக குரு ஸப்தம் அந்தகார நிவர்த்தகனான ஆச்சார்யனைச் சொல்லுகிறது
அந்தகாரமாவது
ஸம்ஸாரியான இச் சேதனனுக்கு க்ருத்யாக்ருத்யங்கள் இன்னது–உத்தேஸ்ய அநுத்தேஸயங்கள் இன்னது -உபாதேய அநுபாதேயங்கள் இன்னது என்று
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி அக்ருத்ய அனுத்தேஸ்யங்களைக் கழித்து க்ருத்ய உத்தேஸ்ய உபாதேயங்களை அனுஷ்ட்டித்து -விரும்பிக் கொண்டு(ப்ரீதி பூர்வகமாக)
ஸ்வரூப அனுரூபமாக வர்த்திக்கும் படியான நிஷ்டையை அறிய ஒட்டாமல் மாம்ஸ த்ருஷ்டி விஹீநத்வம் பதார்த்த தர்சந அஷமத்வத்தைப் பண்ணுமா போலே ஒரு போகியான இருட்சியைப் பண்ணக் கடவதான அஞ்ஞான விசேஷம் இறே
இத்தை நிவர்திப்பிக்கை யாவது -ப்ரக்ருதி சம்பந்தித்தினுடைய ஹேயதையும் (கர்மாதீனம் ஜடம் முக்குண வசம் அழுக்கு உடம்பு -பொல்லா ஒழுக்கம் -பொய் நின்ற ஞானம்)ப்ரக்ருதே பரனான ஆத்ம ஸ்வரூபத்தினிடைய (அஜடம் நித்யம் சேஷ ஆனந்த ஞான மயன் ஞான குணகன் அணு ஸ்வரூபம்)உத்தேஸ்யதையையும் -சித் அசித் ஸ்வரூப நிர்வாஹகனான ஈஸ் வரனுடைய உபாதேய தமத்வத்தையும் ப்ரமாண முகத்தாலே உள்ளபடி உணர்த்தி நிவர்த்திப்பிக்கை
இப்படிப்பட்ட இச் சேதனனுடைய அஞ்ஞானத்தை நிவர்த்திப்பிக்கும் அவனுக்கு ஆய்த்து குரு ஸப்த வாஸ்யத்வம் உள்ளது-
தத்வ த்ரய சூர்ணிகைகள்
(அசித்து-ஞான சூன்யமாய்-விகாராஸ்பதமாய் இருக்கும் –இது சுத்த சத்வம்
என்றும் மிஸ்ர சத்வம் என்றும் சத்வாதி சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –)
(ஆத்ம ஸ்வரூபம்-சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே-1-தேக இந்த்ரிய மன
பிராண புத்தி விலஷணமாய்-2-அஜடமாய்-3-ஆனந்த ரூபமாய்-4-நித்யமாய் 5-அணுவாய்
6-அவ்யக்தமாய்-7-அசிந்த்யமாய்8-நிரவயவமாய் 9-நிர்விகாரமாய் 10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய் 12-தார்யமாய் 13-சேஷமாய் இருக்கும்-)
(ஈஸ்வரன்-அகில ஹேய ப்ரத்ய நீக-அனந்த ஜ்ஞான ஆநந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –-சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்-ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்- தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்)
அஞ்ஞான திமிராந் தஸ்ய ஞான அஞ்ஞன ஸலாகயா
சஷுர் உன் மீலிதம் யேந தஸ்மை ஸத் குரவே நம –2-என்னக் கடவது இறே-ஸலாகயா-சங்கிடுவான்
(அஞ்ஞான அருளாலே குருடனாய் இருப்பவனுக்கு அறிவாகிற மைக்குச்சியைக் கொண்டு எவராலே கண் திறக்கப்படுகிறதோ அத்தகைய பெருமையுடைய நல்லாசிரியருக்கு நம்காரம் -என்றபடி)
(ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் நிறைந்த கூரத்தாழ்வான்-இதில் குருவுக்கு அவஸ்யம் வேண்டிய அஷ்ட லக்ஷணங்களை அருளிச் செய்கிறார் மேல்)
(தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 4 –)
(ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.)
அஞ்ஞான நிவர்த்தகனான ஆச்சார்யனை அன்றி ஸம்ஸார நிவ்ருத்திக்கு வேறு பிஷக் இல்லை
ஓவ்ஷத்யம் பரமம் மன்யே குரோர் அஞ்ஞான வாரகாத் -(அஞ்ஞானமாகிய நோயைப் போக்கடிக்கையாலே ஆச்சார்யனை மேலான மருந்தாக நினைக்கிறேன்)என்று இறே பராசர பகவான் சொல்லி வைத்தது
இப்படிப்பட்ட குருவாகிறான் ஸர்வ லக்ஷண ஸம்பந்தனாய்த்து இருப்பது –
1-சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் உள்ளபடி ப்ரதிபாதிக்கவற்றான வேதாந்த ஞான பூர்த்தியை யுடையவனாய் இருக்க வேணும்
2-வேதாந்த ஞானம் யுடையவனாய் இருந்தானே யாகிலும் தத் ப்ரதிபாத்யனான பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் இல்லாவிடில் அநர்த்தா வஹமாய்த் தலைக்கட்டும்
அப்படி ஆகாமைக்கு வேதாந்த ப்ரதிபாத்யனான எம்பெருமான் இடத்தில் நிரவதிக பக்தி யுக்தனாக வேணும்-
3- பக்தி உண்டானாலும் பிரயோஜனம் இல்லை இறே ஏதத் ஞான பக்தி யுக்தரான ததியர் இடத்தில் த்வேஷம் நடையாடுமாகில் –
ஆகையால் ஞானாதி குண பூர்ணரான ஸஜ் ஜன விஷயத்தில் த்வேஷ ரஹிதனாய் பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனாக இருக்க வேணும்
(நரஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹ- யாதவ ஸிம்ஹ- ரெங்கேந்திர ஸிம்ஹ விஷயங்களில் பார்த்தோமே )
துர்லபம் மா முனிகள் முன்பே அருளிச் செய்துள்ளார் அன்றோ -ஆட் கொண்ட வில்லி ஜீயர் நஞ்சீயர் ஸம்வாதம் -பிள்ளாய் -பாகவத நிஷ்டை அறியாதவள்)
4-இந்த குணங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்தரஸ் ஸநாதந-(நாரதீய கல்பம்-அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யை-1-11-)(மந்திரங்களில் மேலான மந்த்ரமும் ரஹஸ்யங்களுக்குள் மேலான ரஹஸ்யமும் -பாவனங்களுக்குள் பரம பாவனமும் -பழையதான அஷ்டாக்ஷரம் என்னும் மூல மந்திரமே யாகும்)என்கிறபடியே -பகவத் மந்திரமான எல்லாவற்றிலும் உத்க்ருஷ்ட மந்திரமாய் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை உள்ளபடி ப்ரதிபாதிக்க வற்றான திருமந்திரத்தை உள்ளபடி அறிந்து தந் நிஷ்டனாய் இருக்க வேண்டும்(திருமந்திரத்தில் பிறந்து த்வயத்திலே வளர்ந்து யாவச் சரீர பாவம் தன்னிஷ்டனாய் இருக்க வேண்டுமே)
5-மந்த்ர ஞானம் உண்டாய் இருந்ததே யாகிலும் தத் ப்ராவண்யம் இல்லையே யாகில் ஞாதமான அர்த்தம் நெஞ்சில் தேங்காது இறே -ஆகையால் மந்த்ர விஷயத்தில் பக்தி யுடையவனாக இருக்க வேணும்(ஸ்ரீ மன் நாராயணன்-இங்கு திருமந்திரம் சொல்வது சேஷித்வ உபாயத்வ உபேயத்வங்கள் -வேதாந்தம் சொல்வது காரணத்வ அந்தர்யாமித்வ நியந்த்ருத்வங்கள்)
6–மந்த்ர விஷயத்தில் ஞான பக்திகள் உண்டாகவே அந்த மந்த்ர அனுசந்தானம் இவன் பக்கல் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்கும் படி இராமல்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோநாராயணமே”(6-10-6)-என்கிறபடியே நிரவதிக போக்யமாய் இருக்க வேண்டும்(குலம் தரும் இத்யாதி முதலில் -பின்பு ஆறு நூறு பாசுரங்களுக்குப் பின்பு அன்றோ இனிமை பற்றிய அருளிச் செயல்)
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-
7-இவை இத்தனையும் யுண்டாய் இருந்தும் ஸூக்தி இல்லாவிடில் கார்யகரம் ஆகாது இறே -ஸூக்தியாகிறது-ஸ்வயம் பிரயோஜனமாக திருமந்த்ரத்தை பிரயோஜனாந்தரத்தைக் கணிசித்து அஸத் பாத்ரங்களிலே விநியோகிக்கை யாகிற குற்றம் அற்று இருக்கை(மந்த்ரம் யத்நேனே கோபயேத்)
மற்றப்படி ம்ருத் வாரிகளால் யுண்டான ஸூத்தி ஸூத்தி அன்று -அர்த்த ஸூத்தியே ஸூத்தி(மண்ணாலும் நீராலும் கழுவுவது மட்டும் ஸூத்தியாகாதே -பொருள் அர்த்தம் ஒன்றே ஸூத்தி யாகும்)
ஸர்வேஷாம் ஏவ ஸுஸாநாம் அர்த்த ஸுஸம் பரமம் ஸ்ம்ருதம் யோ அர்த்தே ஸூஸ் ஸஹி ஸூசிர் ந ம்ருத்வாரி ஸூசிஸ் ஸூசிர் -(மனு ஸ்ம்ருதி-5-10-6-)(எல்லா ஸூத்திகளுக்குள்ளும் -பொருள் விஷயத்தில் ஸூத்தனாய் இருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது -பொருள் விஷயத்தில் எவன் ஸூ த்தனாய் இருக்கிறானோ அவனே ஸூத்தன் -மண்ணாலும் தண்ணீராலும் மட்டும் ஸூத்தி செய்து கொள்ளுபவன் ஸூத்தன் அல்லன்)என்று இறே பிரமாணம்
ஆகையால் இப்படிப்பட்ட ஸூத்தியை யுடையனாய் இருக்க வேண்டும்
8-மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரவ்
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் –(ஸ்ரீ விஷ்ணு தத்வம்)என்னக் கடவது இறே(மந்திரத்தின் இடமும் அதன் தேவதையிடமும் அப்படியே மந்த்ரத்த அளித்த ஆச்சார்யனிடமும் ஒன்றும் ஒழியாமல் இம் மூன்றினிடமும் எப்போதும் பக்தி செய்யப்பட வேண்டும் -அந்த பக்தியே பகவத் ப்ராப்திக்கு முதல் உபாயமாகும்)
இப்படிக்கு கீழுள்ள அர்த்தங்களை ஒருவன் உபதேஸிக்க அறிந்து தன்னிஷ்டனாய் இருந்தானே யாகிலும்
பிரமாண ஞான புரஸ்ஸரம் ஆகாவிடில் அதுக்கு ஸ்தைர்ய ஸித்தி பிறவாது ஆகையாலே தத் ஸித்தி யர்த்தமாக வேத உப ப்ரும்ஹணங்க ளாய் தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ குரு லக்ஷண யதார்த்த ப்ரதிபாதன பரங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளை விசேஷித்து உள்ளபடி அறிந்து இருக்க வேணும்
ஆக இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் லக்ஷண பூர்த்தியை யுடையனாய் இருக்குமவன் யாய்த்து குரு என்று சொல்லலாவது-இப்படி இறே பிரமாணம் சொல்லுகிறது-இந்த அஷ்ட லக்ஷணங்களையும் சொல்லும் பிரமாணம் –
ஆச்சார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர
மந்த்ரஜ்ஜோ மந்த்ர பக்தஸ் ச ஸதா மந்த்ர ஆஸ்ரயஸ் ஸூசி
குரு பக்தி ஸமா யுக்த புராணஜ்ஜோ விசேஷத
ஏவம் லக்ஷண ஸம்பந்த குருரித் யபிதீயதே
(ஆச்சார்யன் ஆவான் 1-வேத அத்யயனம் செய்தவனாகவும் -2-விஷ்ணு பக்தனாகவும் 3–மாத்சர்யம் அற்றவனாகவும் -4-மந்த்ரத்தை அறிந்தவனாகவும் -5-மந்திரத்தில் பக்தி யுள்ளவனாகவும் -6-எப்போதும் மந்த்ரத்தைப் பற்றி இருபவனாகவும் -7-அதைக்கொண்டு ஷூத்ர பலன்களை ஸாதித்துக் கொள்ளாத )பரி ஸூத்தி யுடையவனாகவும் -8-தனது ஆச்சார்யன் இடத்தில் பக்தி யுடையவனாகவும் -9-சிறப்பாகப் புராணங்களை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும் இத்தகைய லக்ஷணங்களை யுடையவனே குரு என்று சொல்லப்படுகிறான்)
சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-நியாய விம்சதி முதல் ஸ்லோகம் தேசிகனும் 14 ஆச்சார்ய லக்ஷணங்கள் காட்டி அருளி உள்ளார்
1-ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி, வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
2-ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
3-அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
4-ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
5-ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
6-ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
7-ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
8-ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
9-டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
10-ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
11-தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
12-தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
13-ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
14-ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் – சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான்
இன்னம் குரு லக்ஷணங்கள் அநேகம் உண்டு -இப்படி ஸர்வ லக்ஷண ஸம் பன்னமான குருத்வம் ஸார்வத்ரிகமாகக் காணாமையாலே ஒரு வியக்தியிலே விசேஷ நிஷ்டமாக்கி நிர்ணயிக்க வேணும் இறே(ராமன் இடம் 16 குண பூர்த்தி போல்)
அது செய்யும் இடத்தில் அஸ்மத் குரு (வாக்ய குரு பரம்பரை)என்று தொடங்கி –ஸ ச ஆசார்ய வம்ஸோ ஜேயோ பவதி ஆசார்யாணாம் அஸாவஸாவித்யாய பகவத்த (ரஹஸ்ய ஆம்நாய ப்ராஹ்மணம் )(பகவானிடம் இருந்து தொடங்கி -அல்லது பகவான் வரையில் -இவர் இவர் என்று குரு பரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும் )-என்கிறபடியே எம்பெருமான் அளவும் செல்ல இவர்களுடைய ஸ்வபாவங்களை உள்ளபடி அறிந்து நிர்ணயிக்க வேணும்
(அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.
வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்)
இப்படி நிர்ணயிக்கப் படுகிற குருத்வம் தான் பிரதம குரு என்றும் சரம குரு என்றும் த்வி விதமாய் இருக்கையாலே அதில் பிரதம குருவான எம்பெருமானை ஒழிய இவ்வருகுள்ள வ்யக்திகளிலே நிர்ணயிக்க வேணும் இறே
குருத்வம் எல்லாருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே பவ்ரயாபர்ய விபாகத்தாலே பிரதம சரமம் என்னப்படுகிறது
இவர்கள் பக்கல் ஆபேஷிக ப்ராதம்யம் ஒழிய நைசர்கிக ப்ராதம்யம் இல்லை இறே -அது உள்ளது எம்பெருமானுக்கே யாய்த்து -நித்ய சித்தனாய் யாகையாலே
இப்படி எல்லாருக்கும் சரம குருத்வம் அவிசிஷ்டமாகில் ஏகத்ர விசேஷ நிஷ்டமாக்க வேண்டுவான் என் என்னில்
குருத்வம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் அது இவ்விபூதியிலே நிரர்கலமாக விலைச் செல்ல வேணும் –
அப்படி விலைச் செல்லுகிற குருத்வம் சார்வத்ரிகம் ஆக மாட்டாது
ஆகையால் வ்யக்தி நிஷ்டமாகவே கொள்ள வேணும் இறே -அது கொள்ளும் பிரகாரம் எங்கனே என்னில்
புரா மந்த்ர த்வயம் ப்ரஹ்மன் விஷ்ணு லோகே மஹா புரே
தஸ்மிந் நந்தபுரே லஷ்ம்யை மயா தத்தம் ஸநாதநம் –என்கிறபடியே(அந்தணரே -ஆதி காலத்தில் விஷ்ணு லோகமாகிற பெரிய உலகில் அந்தப்புரத்திலே ஸநாதனமான த்வய மந்த்ரம் லஷ்மீ தேவிக்கு என்னால் உபதேஸிக்கப் பட்டது )
பெரிய பிராட்டியார் எம்பெருமான் பக்கலிலே மந்த்ர ரத்னமான த்வயத்தைப் பெற்று ஸிஷியஸ்தாநீயரான சேனை முதலியாருக்கு உபதேஸித்து அவ்வளவிலே அவளுடைய குருத்வம் விலைச் சென்றது இத்தனை போக்கி ஸார்வத்ரிகமாகப் பெற்றது இல்லை
லஷ்ம்யா தத்தம் ஸ்வயம் ஸம்யக் ஸேநேஸோ அபி ததாஸ் ஆதராத்
பரங்குசாய ப்ராயச்சத் மந்த்ர ரத்னம் மஹத்தரம் -என்கிறபடியே
பெரிய பிராட்டியார் பக்கலிலே லப்தமான மந்த்ர ரத்னமான த்வயத்தை ஸேனாபதி யாழ்வானும் ஆதர பூர்வகமாக நம்மாழ்வாருக்கு உபதேஸித்து வ்யக்த்யந்தரத்தில் போகாமையாலே அவருடைய குருத்வமும் ஆழ்வார் அளவிலே நின்றது
பெரிய பிராட்டியாருடையவும் சேனை முதலியாருடையவும் குருத்வமானது உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடியாய் வந்தது இத்தனை போக்கி அஞ்ஞான தமோ நிவர்த்தக த்வாரா யோகமாய் வந்ததன்று
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அஸங்குசித ஞாநாதி குண யுக்தரான சேனை முதலியாருக்கு அஞ்ஞானஸ் தமஸ் ப்ரவ்ருத்தி யுண்டாய் தன் நிவ்ருத்தி யர்த்தமாக உபதேசித்தாள் இல்லை இறே
லோக ரக்ஷண அர்த்தமாக லீலா விபூதியிலே ப்ரவர்த்திப்பிக்க வேண்டி அர்த்தத்தை சீர்மையாலே உபதேஸ பரம்பரா ப்ராப்தமாக வேணும் என்ற நினைவாலே உபதேசித்தாள் அத்தனை இறே
ஆகையால் உபதேஷ்ட் ருத்வ பர்யாயமான குருத்வமே உள்ளது(பங்கஜம் ரூடி தாமரை -சேற்றில் பிறந்த அனைத்துக்கும் யவ்கிக்க பொருளில் -அதே போல் குருத்வம் ரூடி யாகவும் அஞ்ஞானம் போக்கியவருக்கும் பொருந்தும் அன்றோ)
ஆழ்வாரைக் குறித்து யுண்டான சேனை முதலியாருடைய குருத்வமும் –மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறபடியே பிரதம குருவான எம்பெருமான் அஞ்ஞான நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்து -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிரதமத்திலே கொடுத்தானாகையாலே -ஆழ்வாருக்கு அஞ்ஞானம் நடையாடுகிற தசையிலே தன்நிவ்ருத்தி யர்த்தமாக உபதேஸிக்கை அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அநந்தரம் உபதேஸித்தான் ஆகையாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் அத்தனை
இனி இவ்வருகுள்ள ஆழ்வார் தொடக்கமாயுள்ள ஆச்சார்யர்களுக்கு அஞ்ஞான தமோ நிவர்த்தன த்வாரா வந்த குருத்வம் தான் ஸார்வத்ரிகமாக விலைச் செல்லப் பெற்றது இல்லை -எங்கனே என்னில்
பகவன் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற நம்மாழ்வார்
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் -என்றும்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேனே -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்று நிவ்ருத்தரானார் அத்தனை போக்கி
ஸங்கல்பித்த படியே தம்முடைய குருத்வத்தை ஸார்வாத் ரிகமாக விலைச் செலுத்தக் கண்டதில்லை
ஸங்கல்பித்த அம்சத்தில் சிலர் திருந்தின இத்தனை –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
(வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – திருவிருத்தம்-96 )
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —பெரிய திருவந்தாதி-25-
எழுந்து அருளி இருந்த முப்பத்து நான்கு திரு நக்ஷத்ரமும் (சில இடங்களில் 32 திரு நக்ஷத்ரம் என்பர்-மூவாறு மாதம் மோகித்து இருந்தார் அன்றோ -முன்பு 16 வருஷமும் மதுரகவி வந்த பின்பு 16 வருஷமும் -ஆக 34 என்றும் சொல்லலாம்)குண அநுபவத்திற்கும் விஸ்லேஷ வ்யஸன அநுபவத்துக்கும் -ஸ்வ தேஹ தோஷத்தை அறிவிக்கைக்குமே உடலாய்த்து(மங்க ஒட்டு உன் மா மாயை)
ஆகையால் ஆழ்வாருடைய குருத்வ பூர்த்திக்கும் சிலவொருவாய் யூன்றி இருக்கும்
(ஓ ஓ உலகினில் இயல்பே என்றும்– மருள் ஒழி மட நெஞ்சே -திருவாறன்விளையிலேயே இருப்பதாகவே போதும் என்று முன்பு அருளிச் செய்தாலும் பின்னர் நெஞ்சுக்கும் உபதேசித்து அங்கு செல்ல த்வரித்தார் அன்றோ)
ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே–திருவாசிரியம்–6–
மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே
(அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே)
ஆழ்வாருக்கு இவ்வருகுள்ள நாத முனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார் பெரிய நம்பி முதலான நம் பூர்வாச்சார்யர்கள்
ஸ்வ ஸ்வ காலங்களிலே உபதேஸ அனுஷ்டானாதி முகத்தாலே சில ஜீவாத்மாக்களைக் கறுந்தரையிலே திருத்தி உஜ்ஜீவிப்பித்துக் கால யாபனம் பண்ணிப் போந்தார்கள்
ஆகையாலே அவர்களுடைய குருத்வமும் க்வாசித்கமாகி விட்டது
இனி ஸர்வ லக்ஷண உபேதமான குருத்வ பூர்த்தி தீர்க்கஸ் தாயியாய் நின்று கண்டாபதமாய்க் கொண்டு விலைச் சென்றது நம் குல நாதரான எம்பெருமானார் திருவவதரித்த பின்பு இறே
எம்பெருமான் ஸம்ஸாரி சேதன உஜ்ஜீவன அர்த்தமாக வேத இதிஹாஸ புராணாதிகளைப் ப்ரவர்த்திப்பித்தும் -ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்தும் -ஆழ்வார்களை அவதரிப்பித்தும்
ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்தில் ஒருவரும் திருந்தக் காணாமையாலே ஆச்சார்ய ரூபேண சிலரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்தக் கடவோம் என்று திருவாழி ஆழ்வானை ஏவுவது -திருவனந்த ஆழ்வானை ஏவுவதான இடத்திலும் -ஆடவிட்டுத் திருந்தக் காணாமையாலே
இனி நாமே சென்று ஆச்சார்ய ரூபேண அவதரித்து சிறிது காலம் வருந்தி இருந்தாகிலும் ஜகத்தை அடையாத திருத்தக் கடவோம் என்று அமோகமாக ஸங்கல்பித்து
ஆச்சார்யத்வ பூர்த்திகளிலே யாதல் -லக்ஷணங்களிலே யாதல் ஒரு குறைகளும் இன்றிக்கே ஸர்வ லக்ஷண உபேதனாயக் கொண்டு எம்பெருமான் தானாகவே அவதரித்த அவதாரம் இறே எம்பெருமானார் –எம்பெருமானாருக்குப் பின்பும் ஒருவரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்த வேண்டும்படி இன்றிக்கே அப்ரதிஹத மநோ ரதனாய் நின்று ஸங்கல்பித்து இதுவே அவதியாக குரு ரூபேண அவதரித்த அவதாரமாகையாலே எம்பெருமானது சரம குருத்வமும் இவர் பக்கலிலே யாய்த்து உள்ளது-
(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-)
இந்த குருத்வம் தான் ரூடி யோக த்வயத்தாலும் பரிபூர்ணமாகக் கண்டது இவர் பக்கலிலே இறே –
ஆச்சார்ய பதம் நிர்வஹிப்போம் என்று இருப்பார் பக்கல் குருத்வம் போலே சங்குசிதமாய்க் கிடக்கை அன்றிக்கே –விஷ்ணு சேஷி ததீய ஸூவ குண நிலயோ விக்ரஹ ஸ்ரீ ஸடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்
தஸ்மிந் ராமாநுஜார்யே குரு ரித ச பதம் பாதி நான்யத்ர தஸ்மாத்
ஸிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமிதம் அகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ (பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக ஸ்ரீ வைஷ்ணவ சமாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஸ்லோகம் )(விஷ்ணுவானவர் அனைவருக்கும் சேஷியாய் இருப்பவர் -நற்குணங்களை இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார் -கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடையாளாகிய திருவடித்தாமரை இணையாய் விளங்குகிறார் -அந்த எம்பெருமானார் இடத்திலேயே ஆசார்ய ஸப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது -வேறு ஒருவர் இடமும் அப்படி விளங்க வில்லை -ஆகையால் மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் தலைவரான அந்த எம்பெருமானார்க்கே சேஷமாய் இருப்பது ) என்று நாள் தோறும் நாள் தோறும் ஒளி விஞ்சிச் செல்லும்படி இறே எம்பெருமானாருடைய குருத்வம் (இதனால் தான் நம்மாழ்வார் சந்நிதியில் ஆழ்வார்திருநகரியில் ராமானுஜன் சாதிக்கவும் மற்ற இடங்களில் மதுரகவி சாதிக்கவும் நிற்கிறோம் )
ரூடி க்ரமத்தாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வமும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் நின்று உபதேசிக்கிற இவர் பக்கலிலே முக்ய தமமாய் இருக்கும்
(காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-)
ஏதத் வ்யதிரிக்த விஷயத்தில் உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தி பூர்வகமாய் இருக்கும் –நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தியாவது சிஷ்யனுடைய அநு வர்த்தகம் பாதி ஆச்சார்யனுடைய கிருபை பாதியாய் உபதேஸிக்கை இன்றிக்கே சிஷ்யனுடைய அநு வர்த்தன ப்ரதீஷனாய் தத் அநு வர்த்தகத்துக்கு முகம் மலர்ந்து உபதேஸிக்கை
ஸம் மிஸ்ர அநு வ்ருத்தி யாவது -சிஷ்யன் விஷயத்தில் ஆச்சார்யனுக்கு கிருபை உண்டாய் இருக்கவும் தத் அனுவர்த்தன அபாவத்தில் முகம் மாறி வருத்தப்பட்டு உபதேஸிக்கை
இப்படி யன்றிக்கே மறுவற்ற கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யத்வ முகத்தாலே சிஷ்யனுடைய துர்கதியே பற்றாசாக மேல் விழுந்து உபதேஸிக்கும் ஆகாரம் இவருக்கே யாய்த்து உள்ளது
(தாயுக்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் -நம்மாழ்வாருக்கு -இவர் அடி பணிந்தாருக்கும் இவை உள்ளது -கனைத்து இளம் –நினைத்து -முலை வழியே பால் பொழியுமா போல்)
அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-
காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-
யோக க்ரமத்தாலே அஞ்ஞான தமோ நிவர்தந த்வாரா வந்த குருத்வமும் இவர் பக்கலிலே முக்கிய வ்ருத்தி-ஏதத் வ்யதிரிக்த விஷயங்களில் குருத்வம் அந்நிய சாபேஷமாய் இருக்கும் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டுகையாலே
1-ஸம்ஸாரி ஜந அநர்த்த தர்சன அஸஹிஷ்ணுத்வம் -2-தத் விஷய காருண்ய மஹா குணாகரத்வம் ச -3-அஸ்மத் குல நாதே -4-அஸ்மத் சேஷிணி -5-அஸ்மத் ஸ்வாமிநி 6-அபரிமிதோதார பாவ கல்யாண குண சாகரே -7-அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்யைக நிதவ் சம தமாதி ஸமஸ்த ஆத்ம குணவ்க மஹா ஆர்ணவே -பகவதி ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யே வ்யவஸ்திதே பவத -என்று
சோமாஸி ஆண்டானும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் எம்பெருமானார் பக்கலிலே வ்யவஸ்திதமாய் இருக்கும் என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே
(ஸம்ஸாரத்தில் உழலும் சேதனர்களின் அநர்த்தம் கண்டு ஆற்ற மாட்டாமையும் அவர்கள் விஷயத்தில் கருணையாகிற பெரிய குணத்தை யுடையவராய் இருக்கையும் -நமது குல நாதராய் நமது சேஷியாய் நமது ஸ்வாமியாய் எல்லையற்ற வண்மையுடைய கல்யாண குணக்கடலாய் எல்லையற்ற பெருமையுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் ஆகியவற்றுக்குக் கொள் கலமாய் -சமம் தமம் முதலான எல்லா ஆத்ம குண வெள்ளங்களும் சேரும் பெரும் கடலாய் இருக்கும் பகவானான ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யார் இடம் நிலை நிற்கின்றன-என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)
(கிடாம்பி ஆச்சானுக்கு -அநாதன் -சொல்லக்கூடாது அழகர் அருளிச் செய்த வ்ருத்தாந்தம்
சேஷி ராமானுஜன் சேஷ ராமானுஜன் உடையவரும்-கண்ணனும் என்பர் பொதுவாக – -இங்கு ராமானுஜரே சேஷி -உடையவர் பட்டம் என்பதால் ஸ்வாமி -உபய விபூதி -ஆள்பவர்
நீ நம்மை விட்டாலும் நாம் உம்மை விட மாட்டாதே -என்று அருளிச் செய்தார் அன்றோ)
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே.–26-
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-
அஞ்ஞாந தமோ நிவர்த்தந த்வாரா யாத குருத்வம் யப் யஸ்மின் ராமானுஜ குரவ் முக்ய வ்ருத்தி ந த்விதரேஷு தைஸ் தஸ்ய புரஸ் க்ருதத்வாத் -என்றும் அருளிச் செய்தார் இறே
(அஞ்ஞான இருளைப் போக்குவதன் மூலம் ஏற்பட்ட குருத்வமும் இந்த ராமாநுஜாசார்யார் இடமே முக்கியமாகப் பொருந்தி இருக்கின்றது -மற்றவர்கள் இடம் அப்படியில்லை -அவர்கள் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டி இருக்கையால் -என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)
இப்படி ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்த்தியை யுடையவராய் -சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமானாருடைய அபிமானம் உஜ்ஜீவனேச்சுக்களான ஸமஸ்த சேதனருக்கும் உத்தாரகம்-ஏதத் வ்யதிரிக்த குரு ஜனங்களுக்கு எல்லாம் உபகாரத்வமே யுள்ளது
1-சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமாருடைய வைபவத்தை (பார்த்தசாரதியை ஸ்வாமி அவதாரம் அன்றோ)பிரதமத்திலே இவனுக்கு உள்ளபடி யுணர்த்தி -2-அவருடைய அபிமானம் இவனுக்கு ஸம்ஸார நிஸ்தரண உபாயம் என்னும் பரமார்த்தத்தையும் அறிவித்து -3-தந் குண அநுஸந்தானமே கால ஷேப விஷயம் என்றும் உபதேஸித்து அவ் வழியாலே இச் சேதனனுக்கு உபகாரகராய்ப் போருவார்கள்(இதுக்கும் மேல் எம்பார் ஸ்வாமி வடிவு அழகு இதயத்தில் உள்ளதால் இல்லை எனக்கு எதிர் என்று அருளிச் செய்தார் அன்றோ)
(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –(பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் )
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –
மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –)
ஏவம் ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்ண சரம குரு ரூப பகவத் அவதார ராமானுஜ குரோர் அபிமான ஏவ ஆத்ம உஜ்ஜீவன அபேஷாணம் அகில சேதநாநாம் ஸம்ஸார நிரயகர்த்த நிஸ்தரண உபாய -தத் வ்யதிரிக்த பூர்வாபர குரு ஐநாநாம் உபகாரத்வம் ஏவ -நாத் உத்தாரகத்வம் -தே புநஸ் அஸ்ய ஸம்ஸாரி சேதனஸ்ய ஆத்ம ஹிதைஷிண ப்ரதமதோ அஸ்மச் சேஷிண பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய பகவத் ஸ்ரீ ராமானுஜ குரவ் வைபவம் உபதிஸ்ய தஸ்ய அபிமானம் ஏவ ஸம் ஸ்ருதி நிஸ்தரண உபாய -தத் குண அனுசந்தானம் ஏவ காலக்ஷேப விஷய இதி ஞாபயித்வா தத் த்வாரா சேதநஸ்ய பரம உப கர்த்தாரோ பவந்தி –என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்
(இவ் வண்ணமாக எல்லா வகையான குரு லக்ஷணங்களும் நிறைந்த சரம குருவாய் -எம்பெருமானுடைய அவதாரமாய் இருக்கும் ராமானுஜாச்சாருடைய அபிமானமே ஆத்ம உஜ்ஜீவனத்தை விரும்பும் எல்லாச் சேதனருக்கும் ஸம்ஸாரம் ஆகிற நரகப்படு குழியில் இருந்து கரை ஏறும் உபாயமாகும் -அவருக்கு முன்னும் பின்னுமுள்ள மற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரகத்வம் உண்டே ஒழிய உத்தாரகத்வம் கிடையாது -அவர்கள் இந்த ஸம்ஸாரி சேதனனுடைய ஆத்மாவுக்கு நன்மையை விரும்புபவர்களாய் முதன் முதலில் நமக்கு ஸ்வாமியாய் -பரம காருணிகராய் -எல்லையற்ற வண்மை யுடையரான பகவானான ஸ்ரீ ராமானுஜாச்சார்யருடைய பெருமையை உபதேசித்து அவரது அபிமானமே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு உபாயம் என்றும் -அவரது குண அநு ஸந்தானமே போது போக்குக்கு விஷயம் என்று அறிவித்து -அவ்வழியாலே இந்தச் சேதனனுக்கு மேலான உபகாரத்தைச் செய்கிறார்கள் -என்றபடி)
(பரமார்த்த த்ரயம் உபதேசம் –
1-இராமானுஜர் வைபவம் உபதேசம்
2-ராமானுஜர் அபிமானம் பெற உபதங்களை உபதேசிப்பது
3-இனி இருக்கும் காலம் ராமானுஜர் குணங்களை அனுசந்தித்து போக வேண்டும்)
(இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-)
தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஆச்சர்யத்வமும் உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடி க்ரமாகதமான ஆச்சார்யத்வம் ஒழிந்து யோக க்ரமத்தாலே வந்த ஆச்சார்யத்வம் அன்று
அது முக்ய வ்ருத்தியாகக் கண்டது நம் குல நாதரான எம்பெருமானார் பக்கலிலே யாய்த்து
வடுக நம்பி -ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் உள்ளது எம்பெருமானாருக்கே யாய்த்து -என்று அருளிச் செய்தார் இறே
அவதாரணத்தாலே அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணப்படுகிறது(எம்பெருமானாரே குரு ஆச்சார்யர் என்றபடி)
(அழகிய மணவாளன் என்று பட்டர் அருளிச் செய்வதும் -தொலைவில்லி மங்கலம் என்று நம்மாழ்வாரும் -திருக்கண்ணபுரம் என்று திருமங்கை ஆழ்வாரும்- எம்பெருமானார் என்று வடுக நம்பி அருளிச் செய்வதும் ஸ்ரேஷ்ட்டம் அன்றோ)
ஆச்சார்யத்வ பதம் ததைவ குருதா யோக க்ரமாதாகதே
ஞாந அபாவ தமோநிவ்ருத்தி கரண ஸ்ருத் யர்த்த விஷ்டாப நாத்
காருண்ய ஏக நிதவ் பவாப்தி தரண ப்ரபோதக உத்தாரகே
ஸ்ரீ மல் லஷ்மண யோகிநி வ்யவசிதே நாந்யேஷு மாந்யேஷ் வபி –என்று இறே சோமாஸி ஆண்டான் பணிக்கும் படி
(ஆச்சார்ய பதவியும் ஆச்சார்யத் தன்மையும் யோக க்ரமத்தாலே பொருள் கொள்ளும் போது -அஞ்ஞானமாகிற இருளைப் போக்குவதையும் -வேதார்த்தத்திலே நிலை நிறுத்துகையும் செய்கையாலே கருணைக்கு ஓர் கொள் கலமும் -ஸம்ஸாரக் கடலைத் தூண்டுவிக்கும் உத்தாரகருமான ஸ்ரீ ராமானுஜாச்சார்யார் இடத்திலேயே நிலை நிற்கின்றன -கௌரவிக்கத் தக்கவர்களாயினும் மற்ற ஆச்சார்யர்களிடம் நிலை நிற்பது இல்லை-என்கிறபடி)
(கீழ் யோக கிராம குரு அர்த்தம் அருளிச் செய்து மேல்)யோக க்ரமாகதமான ஆச்சார்யத்வமாவது
ஆசிநோதி ஹி ஸாஸ்த்ர அர்த்தான் ஆசாரான் ஸ்தாபயத் யபி
ஸ்வயம் ஆரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத –(எவன் ஒருவன் 1-ஸாஸ்த்ரங்களைச் சேகரித்துத் 2-தானும் அவற்றின்படி நடந்து காட்டிப் 3-பிறரையும் ஆசாரத்தில் நிலை நிறுத்துகிறானோ -அவனே ஆச்சார்யன் எனப்படுவான் -ப்ரபந்நாம்ருதம் -63-5-6-)என்கிறபடியே
ஏதத் ப்ரதிபாத்யமான ஆசாரங்களை யுடையனாய் இருக்கை -அதாவது
ஆசிநோதி -வேதாந்தங்களிலே பல இடங்களிலும் கூளமும் பலாப்பிசிலும் போலே ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ண அரிதாம் படி கலந்து கட்டியாய் ஸ குண பரமாயும் நிர்குண பரமாயும் பின்ன பரமாயும் அபின்ன பரமாயும் போருகிற வாக்ய ப்ரதிபாத்யங்களான அர்த்தங்களை எல்லாம் உருவக் கண்டு -தரித்து- ஸகல ஸாகா ப்ரத்யய முகத்தாலே அக்ராஹ்யமான அர்த்தங்களை ஒதுக்கி -உபா தேயமான அர்த்த அம்சங்களை அவிரோதேன ஒன்றும் சிதறாமல்
ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம -என்கிறபடியே (அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பகவஸ் ச விக்நா யத் சார பூதம் தத் உபாததீத ஹம்ஸோ யதா ஷீரமிவாம்பு மிஸ்ரம் –-உத்தர கீதை -3-1-அறிய வேண்டிய ஸாஸ்த்ரங்கள் பலவாகவும் கரை காண ஒண்ணாதவை யாகவும் உள்ளன -காலமோ சிறிது -இடை யூறுகளோ பற்பல -ஆகையால் நீரோடு கலந்திருக்கும் பாலை ஹம்ஸம் பிரித்து எடுத்துக் கொள்வது போலே அசார அல்ப ஸாரமான அர்த்தங்களோடே கலந்து இருக்கும் ஸாஸ்த்ரங்களில் ஸாரமானதையே அறிவாளி எடுத்துக் கொள்ள வேண்டும் -என்றபடி)மறு வில்லாதபடி திரட்டி எடுக்கும் உபகாரத்தைச் சொல்லுகிறது
ஹி -ஸப்தம் ப்ரஸித்தி பரம் -அதாவது இப்படி உபா தேயமான அம்ஸங்களைத் திரட்டி எடுக்க வல்ல சக்தி ப்ரஸித்தியைச் சொன்னபடி (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்)–அன்றியே ஹேது பரமாகவுமாம்
ஸாஸ்த்ர அர்த்தான்-வேதார்த்தம் -என்றபடி(ந தேவம் கேசவா பரம் -ந ஸாஸ்த்ரம் வேதம்)
வேத ஸாஸ்த்ர அவிரோதிநா -என்னக் கடவது இறே(ஆர்ஷம் தர்ம உபதேஸம் ச வேத ஸாஸ்த்ரா விரோதி நா –யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத நேதரே –மநு ஸ்ம்ருதி -ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப்பட்ட அர்த்தங்களை அந்த ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடு முரண்படாத தர்க்கங்களைக் கொண்டு எவன் அர்த்த நிஷ்கர்ஷம் செய்கிறானோ -அவன் தர்மத்தை அறிவான் -அப்படிச் செய்யாதவன் அறிய மாட்டான் -என்றபடி)
வேத நூல் -என்றும் உண்டு இறே
(வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே–திருமாலை -3-)
இது உபரிதன பாகத்துக்கும் உபலக்ஷணம் –
அன்றிக்கே –ஸாஸ்த்ரம் -என்று பூர்வ பாகத்தைச் சொல்லி –அர்த்த ஸப்தத்தாலே உபரிதந பாகத்தைச் சொல்லவுமாம்
இத்தை ஸாஸ்த்ரம் என்றது —சாஸநாத் ஸாஸ்த்ரம் -என்கிறபடியே –இதம் குரு இதம் மா கார்ஷீ (இதைச் செய் இதைச் செய்யாதே என்று ஆணை விடுவது ஸாஸ்த்ரம்-ஸாஸ்த்ர ஸப்த வ்யுத்பத்தி)என்று விஹித ப்ரஷித்த விவேக உபாதேந முகத்தாலே கர்த்தாவான இச் சேதனனை மர்யாதையிலே ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருகையாலே(கர்த்தா சாஸ்த்ரார்த்தத்வாத்) இப்படி பூர்வ உத்தர பாக த்வய ரூபேண அவஸ்திதங்களான வேத வேதாந்த ப்ரதிபாத்யங்களாய் இருந்துள்ள அர்த்தங்களை அறிந்து- 1-வர்ண அநு பந்திகளாயும் -2-பகவத் ஆராதன ரூபங்களாயும் -3-தத் பிராப்தி சாதன பூதங்களான உபாஸனாதிகளுமாயுமுள்ள க்ரியா கலாபங்களை என்றபடி
ஆசாராந் -ஆசாரங்களாவன சிஷ்டாசாரங்கள் என்றபடி(சர நடத்தல் ஆ சார முழுவதுமான நல்ல நடத்தைகள்)
தர்மஞ்ஞ சமயத்தை இறே முந்துற முன்னம் ஸ்தாபிக்க வேண்டியது (வேதம் அறிந்த சான்றோர் நடத்தையை முதலில் சொல்லி அப்புறம் வேதத்தைச் சொல்லி)-பிரமாண உபாதானத்தில் ப்ரதமோ பாத்தமாகையாலே ப்ரபலம் இறே -வேத ப்ரமாணத்தைக் காட்டிலும் சிஷ்டாசாரம் ப்ரபலம் என்னும் அர்த்தம் தோற்ற வேண்டி ப்ரதமத்தில் –யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -(3-21)என்றான் இறே பகவானும்
மேலையார் செய்வனகள் என்றாள் இறே ஆண்டாளும் –
(யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷
சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர் அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது)
(மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்)
சிஷ்டாசாரங்கள் தான் பலவாம் -இதோடு அன்று
ஸ்வயம் ஆசரதே–தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே என்றவன் தானே
உத் ஸீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் –வர்த்த ஏவ ச கர்மணி -என்று ஸ்வ அநுஷ்டான முகத்தாலே தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணா விடில் லோகோத்ஸாதனம் பிறக்கும் என்றான் இறே
(பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷
நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்
உத்ஸீதேயு ரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்.–
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா ப்ரஜா—৷৷3.24৷৷
நான் கர்மத்தைச் செய்ய வில்லை யாகில் என்னைப் பின் பற்றும் இவர்களும் கர்மத்தைச் செய்யாமல் அழிந்து விடுவார்கள் –வர்ணாஸ்ரமக் கலப்பைச் செய்பவனாகவும் நான் ஆகி விடுவேன் –அதனால் இந்த மனிதர்கள் உய்வற்றவர்களாயும் ஆக்கி விடுவேன்
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷
பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத் தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்)
பத்ரிகாஸ்ரமத்தில் திரு மந்த்ர உபதேஸம் பண்ணும் அளவில் தானே நர நாராயண ரூபேண நின்று நாராயண அம்சம் ஆச்சார்ய ரூபமாகவும் நர அம்சம் ஸிஷ்ய ரூபமாகவும் நின்று உபதேசித்தான் (அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும்) இறே -ஸிஷ்யனான நரனுக்கு ஸ்வ அநுஷ்டான முகத்தாலே செய்யாவிடில் லோகம் கொள்ளாது என்று-
யஸ் –யச் சப்தம் இவை எல்லாம் அங்குசிதமாக நிர்வஹிக்க வல்ல அநுஷ்டாதாவினுடைய ஸ்வரூப வை லக்ஷண்ய ப்ரஸித்தியைக் சொல்லுகிறது
து -ஸப்தம் -இவனுடைய வ்யபதேஸ்யத்தவ விசேஷத் யோதநார்த்த மாயிருக்கிறது
ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத –அவன் தான் ஆசார்யன் என்று நினைக்கப்படுமவன்
ஸ -யச் ஸப்தத்தாலே சொல்லப்பட்ட ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடையவன்
ஆசார்ய இதி -இதுவே யாய்த்து இவனுக்கு நிரூபகம்
ஸ்ம்ருத –இப்படிப்பட்ட ஆசார்யனாய்த்து நிரந்தர ஸம் ஸ்ம்ருதிக்கு விஷய பூதனாகிறான்
இப்படிப்பட்ட ஆச்சார்யத்வம் ஸதா சார்ய க்ருத்யங்களில் ஒன்றும் குறைவற்று ஸர்வ ப்ரகார பரிபூர்ணரான எம்பெருமானாருக்கே வ்யவஸ்திதம் -தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸம்மிஸ்ர வ்யவஹாரிகமான ஆச்சார்யத்வமே உள்ளது
ஆசார்யத்வம் உபாயதாத்மாகமஹோ ராமானுஜர்யே குரவ்
ந அந்யேஷ் வார்ய வரேஷு தே யதி வராதீந ஆத்ம சத்தா யத
தஸ்மாத் ஆர்ய பரம்பராஸ்ரித பதாம் போஜஸ்ய பாதாஸ்ரய
கர்த் தவ்யஸ் ஸ்வ ஹிதைஷிபிர் கில ஜநைஸ் ஸம்ஸார சஞ்சித்தயே –என்னக் கடவது இறே
(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்யத்வம் ஆச்சார்யரான ராமானுஜர் இடமே உள்ளது -வேறே எந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டர் இடமும் இல்லை ஏன் எனில் -அவர்கள் அனைவரும் அந்த எதிராஜாராலேயே சத்தை பெற்றவர்கள் அன்றோ –ஆகையால் தமக்கு நன்மையை விரும்புகிறவர்கள் ஆச்சார்ய பரம்பரையால் உத்தாரகமாகக் கொள்ளப்பட்ட திருவடித் தாமரையை யுடைய அந்த எம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம் அடியோடு நீங்குவதற்காக ஆஸ்ரயிக்க வேண்டும் -என்றபடி-நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு பவிஷ்யத் ஆச்சார்யர் திருவிக்ரஹமும் அருளி இவ்வர்த்தத்தைக் கட்டி அருளினார் அன்றோ)
உபாயத்மகம் ஆசார்ய ஸ்வரூபம் ஸூ வ்யவஸ்திதம்
அஸ்மச் சேஷிணி யோகீந்த்ரே லஷ்மணார்யே மஹாத்மநி
அந் யேஷாம் அபி ஸர்வேஷாம் குரூணாம் ந ஸமர்த்திதம்
வ்யாவஹரிக மேவாஸ்மிந் குரு வர்க்கே ந முக்யதா
யததீநாத்ம ஸத் தாத்யா தேஸிகாஸ் ஸத்வ வித்தமா
தத் க்ருதே நாபி மாநேந தேஷாம் முக்திர் ந ஸம்ஸய
ஏதத் வரண கர்த்ருத்வாத் ப்ராக்தநா குரவஸ் ஸ்வயம்
பவந்த்யஸ்யோப கர்த்தார ந முக்தி பலதா ஹி தே
தஸ்மாத் உஜ்ஜீவநேச் ஸூநாம் பவாப்திம் தர்த்து மிச்ச தாம்
அஸ்மத் குல பதே ஸ்ரீ மல் லஷ்மணார் யஸ்ய தீமத
அங்க்ரி யுக் மாத்ருதே தேஷாம் உபாயோ நைவ த்ருஸ்யதே -என்று
வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே
(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்ய ஸ்வரூபம் -நமக்கு சேஷியாய் -மஹாத்மாவாய் -யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் சார்யர் இடம் நன்கு நிலை நிற்கிறது -மற்ற எல்லா ஆச்சார்யர்கள் இடமும் இது இல்லை –ஆச்சார்யத்வம் மற்ற ஆச்சார்யர்கள் இடம் ரூடி வழங்கினால் வழங்கப்படுகிறதே ஒழிய முக்யமாவது இல்லை -எம்பெருமானாருடைய திரு உள்ளம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர்களாக அவ் வாச்சார்யர்கள் அவருக்கு அதீனமான சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையவர்களாய் இருக்கையாலே அவரது அபிமானத்தாலே அவர்களுக்கு மோக்ஷம் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை -இவரை உத்தாரகராக வரிக்கச் செய்கையால் மற்ற பூர்வாச்சார்யர்கள் சேதனனுக்குத் தாமே உபகாரம் புரிகின்றனர் -ஆயினும் அவர்கள் மோக்ஷம் அளிக்கும் உத்தாரகர்கள் அல்லர் ஆகையால் உய்ய விரும்புபவர்களாய் ஸம்ஸாரக் கடலைத் தாண்ட விரும்புபவர்களுக்கு நமது குலபதியும் பேர் அறிவாளருமான ஸ்ரீ மத் ராமானுஜருடைய திருவடியிணை தவிர வேறு உபாயம் ஒரு போதும் காணப்படுவது இல்லை -என்றபடி)
நஞ்சீயரும்
சித் அசித் ஈஸ்வர தத்வ ஸ்வரூப ஸ்வ பாவ திரோதாயக ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தி பூர்வக நிரவதிக ஆனந்த ஜனக பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷ மஹா பல ப்ரதாந நிபுணம் அப்ரதிஹத உபாயாத்மகம் ஆசார்யத்வம் -ஹி -பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்ய குணாகரஸ்ய நிஷ்க்ருஷ்ட சம தமாத்யாதி யாத்ம குண கண ஏக மஹா ஆர்ணவஸ்ய -நிகில நிகம ஸிரோ விஞ்ஞாந விசக்ஷணஸ்ய அநவரத விதித பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஜாத யாதாத்ம்யஸ்ய ப்ரபந்ந ஜன கூடஸ்த பகவத் பராங்குச பாதார விந்த யுகல பூதஸ்ய பராபர நிகில குரு ஜன ஸமாஸ்ரித விமல சரண கமலா யுக்மஸ்ய ஸம்ஸாரி ஸகல சேதன உஜ்ஜீவந கரண ஏக தத்த சித்தஸ்ய பகவதஸ் ஸ்ரீ ராமானுஜ குரோரேவ வ்யவஸ்திதம்
ந த்விதரேஷு -தே புநஸ் ஸர்வே ராமாநுஜார் யாயத்த ஆத்ம ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்தய ததபிமாந அந்தர் பூதா தச் சரணாரவிந்த யுகல மேவ சரணம் மந்வாநா ஸ்வ ஆஸ்ரிதாநாம் அபி ததேவ சரணம் உபதி சந்த தத் ஸம்பந்த கடநாதேவ ஸ்வ ஆஸ்ரித ஸர்வ ஜன உபகர்த்தாரோ பவந்தி–என்று அருளிச் செய்தார் இறே
(சித் அசித் ஈஸ்வரன் எனும் தத்வ த்ரயங்களின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை மறைக்கும் ஸம்ஸார ஸம்பந்தத்தை நீக்கி எல்லையற்ற பேரின்பத்தை விளைக்கும் பகவத் ப்ராப்தியாகிற மோக்ஷம் என்னும் பெரும் பயனை அளிக்க வல்லதாய் -தடையற்ற உபாயத்வமாய் இருப்பதான ஆசார்யத்வம் -பரம காருணிகராய் எல்லையற்ற வண்மை யுடையவராய் -எல்லையற்ற பெருமையை யுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் எனும் குணங்களுக்கு இருப்பிடமாய் -சிறப்பை அளிக்கும் சமம் தமம் முதலான ஆத்ம குணங்களுக்குப் பெரும் கடலாய் இருப்பவராய் எல்லா வேதாந்தங்களின் பொருளையும் அறிய வல்லவராய் -பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளின் உண்மையை எப்போதும் காண்பவராய் -ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பகவத் பராங்குசர் எனும் நம்மாழ்வாரின் திருவைத்தாமாரை இணையாய் இருப்பவராய் முன்னும் பின்னும் உள்ள எல்லா ஆச்சார்யர்களாலும் ஆஸ்ரயிக்கப் பெட்ரா குற்றமற்ற திருவடித்தாமரை இணையை யுடையவராய் -ஸம்ஸார மண்டலத்தில் உள்ள எல்லாச் சேதனரும் உய்வதிலேயே திரு உள்ளம் ஊன்றி இருப்பவரான பகவான் ஸ்ரீ ராமாநுஜாசார்யார் இடமே நன்கு நிலை நிற்கிறது -வேறு எவரிடமும் இல்லை -அவர்கள் அனைவரும் ராமாநுஜாசார்யாராலே சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை அடைந்தவர்களாய் அவரது அபிமானத்தில் அடங்கியவர்களாய் அவரது திருவடித் தாமரை யிணையையே உபாயமாகக் கொள்கின்ற வர்களாய் தம் அடியார்களுக்கும் அவ்வண்ணமே உபதேஸிக்கின்றவர்களாய் அவ்வெம்பருமானாருடைய சம்பந்தத்தை உண்டாக்குவதன் மூலமே தம் அடியார்களுக்கு உபகாரம் செய்பவர்களாய் விளங்குகின்றனர் -என்றபடி )_
இப்படி தத்வ வித அக்ரேஸரான பூர்வதந ஸகல குரு ஜனங்களாலும் அறுதியிடப்பட்ட ஸர்வ ப்ரகார குரு லக்ஷண பூர்ணமான ஆசார்யத்தை யுடையவராய் -பகவத் அவதாரமான எம்பெருமானாரே ஸகல சேதனருக்கும் உத்தாரகராகையாலே ஏதத் அபிமான அந்தர் பூதராய் உஜ்ஜீவிக்குமது ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வழியில்லை இறே
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா ந அத்ர ஸம்ஸய -ப்ரபந்ந அம்ருதம் –61-45- என்று (முக்காலும் ஸத்யம் செய்து கூறுகிறேன் -யதிராஜரே உலக குருவாவார் எல்லா வுலகும் உய்விக்க வல்லவர் அவரே -இதில் ஐயம் இல்லை)கணியனூர் சிறிய ஆச்சான் ஸசேலஸ்நாந பூர்வகமாக ஸ்ரீ சடகோபனைத் தலையில் வைத்து எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வேறு உஜ்ஜீவிக்கைக்கு வழியில்லை என்று பெருமாள் திரு ஓலக்கத்திலே சபதம் பண்ணினார் இறே
(கூரத்தாழ்வானும் கொள்ளிடத்தில் இறங்கி அருளிச் செய்ததாகவும் சொல்வர்)ஏதத் சம்பந்தத்தை விட்டு ப்ரகாராந்தரத்திலே உஜ்ஜீவிக்கிறோம் என்று இருக்கும் துர்மானிக்கு யவாதாத்மபாவி ஸம்ஸாரம் அனுவர்த்திக்கும்
மம ஆசார்ய அவதாரத்வே யேஷாம் பக்திர் பவிஷ்யதி -29-என்று(ஆச்சார்ய ரூபமான என்னுடைய அவதாரத்தில் இவர்களுக்கு பக்தி யுண்டாகிறதோ அவர்களுக்கே உய்வுண்டு மற்றவர்களுக்கு இல்லை) எம்பெருமான் தானே அருளிச் செய்தான் இறே
ஸர்வ உபாய தரித்ராணாம் சேதநா நாம் வராந நே
மம அபி மாநாத் ஸர்வேஷாம் முக்திர் குரு ஸரீரிண –(அழகிய முகமுடையவனே வேறு எவ்வகையான உபாயமும் அற்ற சேதனர் அனைவருக்கும் ஆசார்யனை சரீரமாகக் கொண்ட எனது அபிமானத்தாலேயே மோஷம் ஏற்படும்)என்றும் சொன்னான் இறே(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானத்தை ஒழிய வேறே விரகில்லை என்பதுக்கு இதுவே பிரமாணம்)
பகவத் ஸம்பந்தம் குலையாமல் நிலை நிறுத்திக் கொள்ளுமவனுக்கு எம்பெருமானாருடைய ஸம்பந்தம் இல்லாவிடில் நிலை நில்லாது இறே
இவனுக்கு ப்ரதமத்தில் பகவத் ஸம்பந்தம் தான் உண்டாகிறதும் பகவத் ப்ரவண உஜ்ஜீவனம் உண்டானாலாய்த்து -அந்நிய சேஷத்வத்தைத் கழித்துக் கொண்டு பகவத் அநந்யார்ஹ சேஷத்வ முகத்தாலே உஜ்ஜீவனம் யுண்டாம்படி பண்ண வேண்டும் -இப்படி உஜ்ஜீவன உப யுக்தமான தத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்கும் போது ததீய பர்யந்தமாய் நிற்க வேண்டுகையாலே -ததீய அக்ரேஸரராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு (காருணிகரான சர்வேஸ்வரன் -ஸ்வா தந்திரம் இருப்பதால்
-பரம காருணிகர் -எம்பெருமானார்)ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ ஸித்தியை யுடையவனாய் அநந்தரமாய்த்து -தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸம்பந்த ஸித்தியை யுடையவனாவது -ஆகையால் ப்ரதம பர்வ நிஷ்டனுக்கும் சரம குருவான எம்பெருமானாருடைய ஸம்பந்தம் அவஸ்யம் வேணும் இறே
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-
பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ரூப ஸம்பந்த ஸ்தைர்யாஸ் அகாங்ஷிண –சரம குரு ராமாநுஜாசார்ய ஸம்பந்த அபாவே தத் ஸம்பந்த ஸ்தைர்ய ஸித்திர் ந ஸ்யாத் -அஸ்ய சேதநஸ்ய ப்ரதமதோ பகவத் ஸம்பந்த ஸத் பாவோ அபி பகவத் ப்ரவண உஜ்ஜீவந ஸத் பாவே சதி சேத் –தத் ஸித்திர் அபி அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வக பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவே ஹி ஸ்யாத் –ஏவம் உஜ்ஜீவந உப யுக்த தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவஸ்ய ததீய பர்யந்தத்வ ஏவ சித்தத்வாத் ததார்த்தம் ததீய அக்ரேஸர பரம காருணிக ராமானுஜ குரு சமாஸ்ரயணம் லப்த்வா ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ சம்பந்த யுக்தஸ் சந்தத நந்தரம் கலு ததநந்யார்ஹ சேஷத்வ ஸித்தி யுக்தோ பவதி -அத ஏவ பிரதம பர்வ நிஷ்டஸ்யாபி சரம குரு பரம காருணிக ராமானுஜ குரு சரண சமாஸ்ரயண ம் அவஸ்ய அபேக்ஷிதம் பவதி –-31-என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே
(எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வ ரூபமான ஸம்பந்தம் நிலை நிற்க வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் -சரம குருவான ராமாநுஜாசார்யாரோடு ஸம்பந்தம் இல்லாவிடில் அந்த பகவத் சம்பந்தம் அவனுக்கு நிலை நில்லாது -இச் சேதனனால் சிலருக்கு பகவானிடத்தில் ஈடுபாடு உண்டாகி உஜ்ஜீவனம் உண்டானால் தான் இவனுக்கு முதன் முதலில் பகவத் ஸம்பந்தம் உள்ளதாகக் கொள்ள முடியும் ஆகையால் இவன் சிலருக்கு அந்நிய சேஷத்வத்தைக் கழித்து -எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வம் உண்டாம்படி செய்து -அவர்களை உய்விக்க வேண்டும் =இப்படிப் பிறரை உய்விப்பதற்கு உறுப்பான பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்க வேண்டுமானால் இவனுக்கு எம்பெருமானுடைய அடியார்கள் இடத்திலும் சேஷத்வம் உண்டாக வேண்டும் -ஆகையால் அச்யுதன் அடியார்களில் தலை சிறந்தவராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு அவருக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான பின்பு தான் இவன் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாக முடியும் -ஆகையாலேயே ஓ பிரதம பர்வமான எம்பெருமானிடம் ஊன்றி இருப்பவனுக்கும் சரம குருவாய் பரம காருணிகரான ராமானுஜருடைய திருவடிகளை அடைவது அவஸ்யமாகிறது -என்றபடி )
(ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடைய -உடையவரே உத்தாரகர் என்ற ஞானமும் அவர் இடம் ப்ராவண்யம் என்னும் அனுஷ்டானமும் -அவர் ரூப குண அனுசந்தானமே கால ஷேபம் -என்று உபதேசிப்பதும் -நன்றாக உள்ள ஆச்சார்யர் என்றபடி
பகவல் லாபம் ஆச்சார்யனாலே -ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலே -ஸ்ரீ வசன பூஷணம் -எனவே ஈஸ்வரனும் உபகாரகன் -ராமானுஜரே உத்தாராக ஆச்சார்யர்)
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவன இச்சுக்களான ஸகல சேதனர்க்கும் எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தை வருந்தியும் தத் அபிமான நிஷ்டரை த்ரிவித கரணத்தாலும் அனுவர்த்தித்தப் பெற வேணும் இறே -இனி எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரமாதிகாரிக்கு –குரும் ப்ரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத் -அப்ரகாஸப் ரகாஸாப்யாம் ஷீயதே ஸம் பதா யுஷீ -சேஷ ஸம்ஹிதை -14-50-(அறிவாளியாய் இருப்பவன் குருவை வெளிப்படுத்தக் கடவன் -மந்திரத்தை மிக முயன்று அநாதிகாரிகள் இடமிருந்து மறைக்கக் கடவன் -ஆசார்யனை வெளிப்படுத்தாததாலும் மந்த்ரத்தை வெளிப்படுத்துவதாலும் முறையே செல்வமும் ஆயுளும் நசிக்கும் என்றபடி ) –என்கிறபடியே -எம்பெருமானாருடைய ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை(காஷாய ஷோப-இத்யாதி -பத்மம் என திகழும் பல்லவம் விரலும் இத்யாதி) எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்னும்படி ஸார்வாத்ரிகமாக எல்லாரும் அறியும்படி-ப்ரஸித்தமாம் படி கொண்டு வர்த்திக்க வேணும் —
(அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:)
(கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.)
இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் பரம காருணிகராய் சரம குருவான எம்பெருமானாருக்கு ஸர்வோத் தாரகத்வம் கொள்ளும் போது ஸர்வ ஸப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலே ஏதத் பூர்வ காலீநரான நாத யாமுன ப்ரப்ருதிகளான நம் பூர்வாசார்யர்களுக்கும் இவர் உத்தார கராக வேண்டி வரும் -அப்படி நாம் கொள்ளும் அளவில் அசங்கதமாய்த் தோற்றும் -இது என் என்னில் -அப்படி சொல்லப்படாது
நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் ஸ்வப்ந முகேன பவிஷ்யதாசார்யரான எம்பெருமானாருடைய ஸம் ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி -இந்த வியக்தி இருந்தபடி கண்டீரே -இவ் வியக்தியே ப்ரபந்ந குல அந்தர் பூதரான எல்லாருக்கும் உத்தாரகமாகப் போகிறது –என்று அருளிச் செய்ய
நாதமுனிகள்-நித்யமாக இந்த வியக்தியை ஸாஷாத் கரித்துக் கொண்டு இருக்கும் விரகு ஏது என்று கேட்க
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை உண்டாக்கி அந்த விக்ரஹத்திலே ஒரு ஸக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்து அவ்விக்ரஹத்தை ப்ரஸாதித்து (ஏற்கனவே மதுரகவி ஆழ்வாருக்கு அருளிய இந்த விக்கிரஹத்தை ப்ரசாதித்து)-ராமஸ்ய தஷிணோ பாஹு –(அயோத்யா -34-13-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன்)-என்கிறபடியே இவ் வியக்தியை நமக்கு அவயவமாக நினைத்து இரும் இவ் வியக்தியினாலே நாடடஙக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கொழுந்து விட்டுச் செல்லப் போகிறது -இவ்வியக்தியையே உத்தாரகமாக உபதேஸியும் என்று ஸூஸ் பஷ்டமாக அருளிச் செய்கையாலே நாத முனிகள் தொடங்கி இவ்வருகுள்ள உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி முதலான நம் ஆச்சார்யர்கள் ஆழ்வார் அனுமதிப்படி நாதமுனிகள் ஸம் ப்ரதாய ஸித்தமான இவ் வர்த்தத்தை உப தேசித்துப் பரமாசார்ய ப்ரஸாத லப்தமான விக்ரஹத்தையும் காட்டிக் கொடுக்கையாலே இவ்விடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போந்தார்கள்
பெரிய நம்பி தொடக்கமான பஞ்ச ஆச்சார்யர்களும் தங்களுக்கு உத்தார கத்வம் இல்லாமையாலே உபதேஷ்ட்ருத்வ வ்யாஜேன இவரோடு சம்பந்தம் யுடையராய்த் தம் தாம் குமாரர்களை எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து அவ்வழியாலே இவருடைய உத்தார கத்வத்தை வெளியிட்டார்கள்
இந்த சங்கா பரிஹாரங்கள் எல்லாம் சரம உபாய ஸங்க்ரஹத்திலே பரக்கச் சொல்லுகையாலே இங்கு விவரிக்க வில்லை -ஆகையால் ஸர்வ உத்தார கராகக் குறையில்லை -(சரம உபாய தாத்பர்யம் என்னும் கிரந்தம் நாயனார் ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்துள்ளார்)
உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-என்றும்-புல்லுயிர்க்கும் பாட பேதம்
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –என்றும்-(பெரியவர் சீரை என்றது மதுரகவி ஆழ்வார் சீரை -சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)
ஸத் வ்ருத்த சிர உபாஸநா லப்த ஸகல அர்த்தங்களையும் அறிந்து ஸர்வஞ்ஞரான அமுதனார் இவருடைய ஸர்வ உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் இறே
ஆகையால் எம்பெருமானாருடைய திருவடிகளே உஜ்ஜீவன இச்சுக்களான அதிகாரிகளுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –என்றும்-அமுதனார் தாமே அருளிச் செய்தார்
பேறு ஓன்று மற்று இல்லை–ஆறு ஒன்றும் இல்லை—என்று அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே தத் வ்யதிரிக்த விஷயங்களிலே ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸாயமானது ஏதத் அபிமான அந்தர் பூதனுக்கு ஏதன் முக கமல விலாஸ ஹேதுவாம் இத்தனை போக்கி கார்யகரத்வத்திலே புகாது -நம்முடைய சம்பந்தத்தை உணர்த்தினவர்கள் பக்கல் இவனுக்கு இத்தனை ப்ராவண்யம் உண்டாவதே என்று எம்பெருமானாருக்குத் திருமுகம் மலருமாய்த்து
ஏதத் வ்யதிரிக்த விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ புத்திர் அபி ஏதத் அபிமான அந்தர் பூதாநாம் ஏதத் ராமாநுஜ குரு முக கமல விலாஸ ஹேது கோடவ் அந்தர் பூதா பவதி ந கார்ய கரண கோடவ் -தத் உத்பாத கோப யுக்த வ்யவசாயஸ்ய தஸ்ய தஸ்மிந் நேவ க்ருதத்வாத் –என்று இறே ஜீயர் பணிக்கும் படி
(எம்பெருமானார் ஸம்பந்தமுடைய ஆச்சார்யர்கள் இடத்தில் ஒரு சேதனன் இவர்களே பரம ப்ராப்ய பரம ப்ராபகம் என்று உறுதி கொள்வது -எம்பெருமானாரது அபிமானத்தில் அடங்கிய அச் சேதனன் விஷயத்தில் நம்முடைய ஸம்பந்தத்தை உணர்த்தினவர்கள் இடம் இவனுக்கு இத்தனை ஈடுபாடு உண்டாவதே -என்று எம்பெருமானாருக்குத் திரு முக மலர்த்தி உண்டாக்க காரணமாகிறது -அவ்வுறுதி இவனுக்கு மோக்ஷ பலனை விளைப்பது அன்று -மோக்ஷ பலனுக்கு உறுப்பான ஆறாகவும் பேறாகவும் இருப்பவர் எம்பெருமானாரே -என்று உறுதி கொள்ளும்படி அன்றோ இவன் தன் ஆசார்யனால் ஆக்கப்பட்டு இருக்கிறான் -என்றபடி )
ஸ்ரீ மல் லஷ்மண யோகி நோ அந்நிய குருஷு ப்ராப்யாதி பாவாஸ்ரயா -புத்திர் தன் முக ஹர்ஷ ஸம்பவகாரா விஞ்ஞாயதே நான்யதா
தஸ்மாத் தத் பத பங்கஜே ப்ருச கரம் பூர்வைஸ் க்ருதத்வாதயம்
ஸர்வேஷாம் அபி முக்தித கருணயா ராமாநுஜாக்யோ குரு –என்று —குரு குணாவளியிலே சோமாஸி யாண்டான் அருளிச் செய்யும் படி
(ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாரின் ஸம்பந்தமுடைய மற்ற ஆச்சார்யர்கள் இடம் அவரவர்களுடைய சிஷ்யர்கள் ப்ராப்யம் என்றும் -ப்ராபகம் என்றும் -உறுதி கொள்வது எம்பெருமானாருடைய முக மலர்த்தியை விளைப்பதாகவே அறியப்படுகிறது -அவ்வுறுதியினால் மோக்ஷம் விளைவது இல்லை -ஆகையால் பூர்வாச்சார்கள் அனைவரும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளையே ஆறாகவும் பேறாகவும் உறுதி கொள்ளுகையாலே அந்த ராமாநுஜாசாரியரே அனைவருக்கும் கருணையினால் மோக்ஷம் அளிப்பவர் ஆவார் -என்றபடி)
(சித்திர் பவது வா ந வா பக்த இத்யாதி -அடியார்களை பற்றி பேறு நிச்சயம் -அவனோ பணத்துக்கும் மோக்ஷத்துக்கும் -துர்லபமும் ஆகும்
சஷுர் கம்யம் குரு கைக்கு எட்டிய இவரை விட்டு ஸாஸ்த்ரம் மூலமே அறியப்படும் அவனைப் பற்றுவது துர்லபம் அன்றோ)
எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதர்களான சரம அதிகாரிகளுக்கு எம்பெருமானாருடைய திருமுக மலர்த்தியே ப்ரயோஜனமாகையாலே தத் ஸித்தியானது தத் வ்யதிரிக்த குரு விஷயங்களில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயத்தாலே சம்பவிக்குமாகில் எம்பெருமானார் விஷயத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயம் வேண்டுவான் என் என்னில் -அப்படிச் சொல்ல ஒண்ணாது
இந்த சரம அதிகாரிக்கு ப்ராப்ய பூதமான எம்பெருமானாருடைய முகோலாசமானது பரோஷமாயும் அபரோஷமாயும் -(அதாவது ப்ரத்யக்ஷம் இல்லாமலும் ப்ரத்யக்ஷமாயும்-ப்ரோஷம் கண்ணுக்கு விஷயம் இல்லாமல் என்றபடி-)இரண்டு படிப்பட்டு இருக்கும்
இவ் விபூதியிலே பரோஷமும் நித்ய விபூதியிலே அபாரோஷமாயும் இருக்கும் -பரோஷமான முக விலாசம் இரண்டு வழியிலே வர வேணும் -அதவாது -ஸ்வ அனுவ்ருத்தியாலும் அபிமான நிஷ்டரான ததீய அனுவ்ருத்தியாலும் ஸித்திக்க வேணும் -இந்த அனுவ்ருத்தி த்வயத்தினாலும் எபெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாசம் அர்ச்சாவதாரத்திலே யாகையாலே -அர்ச்சாவதார தான் திருப்பவளம் திறந்து வார்த்தை அருளிச் செய்தல் -திருக்கண்களாலே குளிர நோக்குதல் -திருக்கைகளாலே அணைத்தல் செய்யக் காணாமையாலே அர்ச்சாவதாரமான எம்பெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாஸம் ஏதத் அர்வா ஸீநரான அஸ்மதாதிகளுக்கு எல்லாம் பரோக்ஷ ஸித்தமாய் இருக்கும் -தத் சம கால வர்த்திகளான ஆண்டான் ஆழ்வான் எம்பார் தொடக்கமான ஸஜ்ஜனர்களும் பிரத்யஷமாகப் பெறலாயிற்று -தத் பூர்வ காலீ நரான நாதமுனி ப்ரப்ருதிகளும் (யோக மகிமையால் பெற்றார்கள்)பரோஷமாகப் பெற்றார்களே -நித்ய விபூதியிலே அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோலாசம் அஸ்மதாதிகள் பெறுமளவில்லை -ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே போய் பெற வேண்டுகையாலே -ஸம்ஸார உத்தாரகத்வம் எம்பெருமானாருக்கே உள்ளது ஒன்றாகையாலே ஸம்ஸார நிவ்ருத்தி அர்த்தமாக உத்தாரகரான எம்பெருமானார் இடத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டனாய் இருக்க வேணும் –இவ்வர்த்தங்களை எல்லாம் குரு ப்ரபாவ தீபிகையிலே பரக்க அருளிச் செய்தார் இறே எம்பெருமானாருடைய ஸிஷ்ய ப்ரசிஷ்யரான நலம் திகழ் நாராயண தாஸரும் –அதாவது –
சரம குரு ராமானுஜாச்சார்ய அபிமாந அந்தர் பூதாநாம் சரம அதிகாரிணாம் தந் முக்கோலாஸ ஏவ பரம ப்ரயோஜனத்வாத் –தத் ப்ராப்தேர் அபி தத் அபிமான நிஷ்ட -ததீய ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸ்ஸாய புத்தி சித்தத்வாத் –ராமானுஜ குரு விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ யவசாயபுத்தி யையர்த்தம் ஸ்யாதிதி சேத் –தத் யுக்திர் ந யுக்தா -அஸ்ய ச சரம அதிகாரிண ப்ராப்ய பூத பகவத் ராமானுஜ குரு முக விலாஸோ அபி விபூதி த்வய வாஸ பேதேந பரோக்ஷ அபரோக்ஷ ரூபத் வைசித்ய யுக்தோ பவதி –தத்ர பிரதமோ பாத்த பரோக்ஷ முகோல்லாஸ மார்க்க த்வயேநோபகதஸ் ஸ்யாத் ஸ்வ அநுவர்த்தநேந ஸ்வ அபிமான நிஷ்ட ததீய அநுவர்த்தநேந ச –ஏதத் அநுவர்த்தநத்யேந ராமானுஜ குரு உத்பத்யமாந முககோல்லாஸஸ் யார்ச்சாவதார ஜன்யத்வாத் -அர்ச்சாவதாரஸ்யாபி ஆலோக ஆலாப ஆலிங்கநாதி கரண அஷமத்வாதி -அர்ச்சாவதார பூத ராமானுஜாச்சார்ய முகோல்லாஸ தத் அர்வாசீந அஸ்மதாதி சரம அதிகாரிணாம் பரோக்ஷ ஸித்த ஏவ ஸ்யாத் –தத் சம கால வர்த்திநாம் தாசரதி ஸ்ரீ வத் ஸாங்க மிஸ்ர தத் ஸூநு பட்டாரக கோவிந்த குருகேஸ ப்ரப்ருதிநாம் தேந ஸஹாவஸ்தி தத்வாத் அபரிமித அசிந்த்ய ஸூஹ்ருத விசேஷ பாஜாம் தேஷாம் குரு ஐநாநாம் தஸ்ய பரம காருணிகஸ்ய பரம உதார பாவஸ்ய அபரிமித அநவதிக அதிசய யாஸ்ரித வாத்ஸால்ய ஸுசீல்ய மஹா குண ஸாகரஸ்ய அசிந்த்ய திவ்ய ஞான பக்தி வைராக்ய ராஸே -அபரிச்சின்ன மஹாத்ம்யஸ்ய விமல விசத சம தமாத்யாத்ம குண கணாகரஸ்ய -நிரந்தர நிகில குரு ஐநநி வஹ சமாஸ்ரயணீய நிஜ சரண கமல யுகலஸ்ய நித்ய நிரவத்ய பகவத் அனுபவ அதிசய ஜெனித நிரதிசய அநந்த ஸந்தோஹ அம்ருத சாகர அந்தர் நிமக்ந ஸர்வ அவயவஸ்ய அகில ஜகத் பரம குரோ அஸ்மத் குல நாத பூதஸ்ய -அஸ்மத் ஸ்வாமிந் -அஸ்மந் நிருபாதிக சேஷிண -அசரண்ய ஸரண்யஸ்ய ப்ரபந்ந ஐந ஹ்ருதய பங்கேருஹ ஹம்ஸாய மாநஸ்ய பகவத ஸ்ரீ மத் ராமானுஜ குரோ -அபரிமித நிர்மல கம்பீர ஜலாசய மத்ய உத் பன்ன ஸூம்ருஷ்ட நாலமிஹிரத தருண கிரண நிகர விகசித புண்டரீக தல அமலாய தேஷண முகோல்லாஸ ஸ்வ கரதல நிஹித ஸூவ்ருத்த மல ஆமலகவத் ப்ரத்யக்ஷ ஸித்தோ பபூவ –தத் பூர்வ காலீந ராம மிஸ்ர புண்டரீக நயன நாதமுனி ப்ரப்ருதீ நாம் அபி பரோக்ஷ ஸித்த ஏவாபவத் -அத புந நித்ய விபூதவ் அபரோக்ஷ ஸித்த பகவத் ராமானுஜ குரு முகோல்லாஸே அஸ்மதாதிபிர் லப்தவ்யே ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகம் ப்ராப்ய தேச பூத ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரம் உப கம்ய தஸ்ய லப்யத்வாத் ஸம்ஸார உத்தாரகத்வஸ் யாபி அஸ்மின் ராமானுஜ குராவேவ அசாதாரணத்வேந வ்யவஸ்தி தத்வாத் ஸம்ஸார நிவ்ருத்தி யர்த்தம் ஸர்வ உத்தாரக ராமானுஜ குரவ் ப்ராப்ய ப்ராபகத்வ த்வயமபி நிஸ் சித்ய ததேக நிஷ்டாவதா பூத்வா சரம அதிகாரிணா ஸ்தா தவ்யம் பவதி -என்று அருளிச் செய்தார் இறே
(சரம ஆச்சார்யரான ராமானுஜருடைய அபிமானத்திலே அடங்கிய சரம பர்வ நிஷ்டர்களுக்கு அவரது முக மலர்த்தியே பரம ப்ரயோஜனமாகையாலும் -அவருடைய அபிமானத்திலே அடங்கிய ஆசார்யர் ஒருவரிடம்-இவரே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்னும் உறுதியாலே அந்த முக மலர்த்தி சித்திக்கையாலும் -ராமானுஜர் விஷயத்தில் இவரே ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்று உறுதி கொள்ளுவது தேவை இல்லையே எனில் இப்படிக் கூறுவது பொருந்தாது -இந்தச் சரம அதிகாரிக்கு ப்ராப்யமாய் இருக்கும் எம்பெருமானாரின் முக மலர்த்தியும் –இரண்டு விபூதிகளில் வஸிப்பதை விட்டு அப்ரத்யக்ஷமாகவும் ப்ரத்யக்ஷமாகவும் இரண்டு படிப்பட்டதாய் இருக்கும் -இவற்றில் முதலில் எடுக்கப்பட்ட அப்ரத்யக்ஷ முக மலர்த்தி தன் கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் -தன் அபிமானத்திலே அடங்கியவர்களுடைய கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் இரண்டு வழியாலே வருவதாய் இருக்கும் -இவ்விரண்டு கைங்கர்யத்தாலும் ராமாநுஜாசார்யார் இடம் விளையும் முக மலர்த்தி அர்ச்சாவதாரத்தில் விளைவதாகையாலும் -அர்ச்சாவதாரத்தில் குளிரக் கடாக்ஷித்தல் வாய் திறந்து பேசுதல் -அணைத்தல் -செய்யக் காணாமையாலும் இந்த எம்பெருமானார் முக மலர்த்தி அவருக்குப் பிற் காலத்தில் உண்டான நம்மைப்போன்ற சரம பர்வ நிஷ்டர்களுக்கு அப்ரத்யக்ஷமாகவே இருக்கும் -அவரோடு ஒரே காலத்தில் வாழ்ந்த முதலியாண்டான் கூரத்தாழ்வான் அவர் குமாரரான பட்டர் எம்பார் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலானவர்கள் இப்படி ஒரே காலத்தில் வாழ்ந்ததனால் எல்லை அற்றதும் நினைத்ததற்கு அரியதுமான புண்ணியம் யுடையவர்களான அந்த ஆச்சாயர்களுக்கு -பரம காருணிகராய் பெரு வண்மை யுடையவராய் -எல்லை அற்றதும் ஒப்புயர்வற்றதுமான ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் முதலான பெரும் குணங்களுக்குக் கடலாய் இருப்பவராய் நினைத்ததற்கு அரிய திவ்ய ஞான பக்தி வைராக்யங்களுக்குக் கொள்கலமாய் இருப்பவராய் -எல்லை யற்ற பெருமை யுடையவராய் குற்றம் அற்றவையாய் -தெளிவானவையான சமம் தமம் முதலிய ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாய் இருப்பவராய் -எல்லா ஆச்சார்ய ஸமூஹங்களாலும் எப்போதும் ஆஸ்ரயிக்கப்படும் திருவடித் தாமரையிணையை யுடையவராய் -நித்யமாய் குற்றம் அற்றதான பகவத் அனுபவ வெள்ளத்தால் உண்டான எல்லையற்ற ஆனந்தம் அலை எறியும் அமுதக்கடலில் மூழ்கிய ஸர்வ அவயவங்களையும் உடையவராய் -உலகு அனைத்துக்கும் பரம ஆச்சார்யராய் -நமக்கு குல நாதராய் நமக்கு ஸ்வாமியாய் நமக்கு இயல்வான சேஷியாய் -புகலற்ற அனைவருக்கும் புகலாய் இருப்பவராய் ப்ரபந்ந ஜனங்களுடைய இதயத்தாமரையில் வாழும் ஹம்ஸமாய் இருப்பவராய் -பகவானான ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாருடைய மிகுந்ததாய் குற்றம் அற்றதாய் ஆழ்ந்ததான நீர் நிலையின் நடுவில் உண்டானதாய் பருத்த கண்டாய் உடையதாய் இளம் ஸூர்யனுடைய கிரணங்களால் மலர்ந்ததான தாமரையின் இதழ் போன்று குற்றமற்று நீண்டு விளங்கும் திருக்கண்களை யுடைய திரு முக மண்டலத்தின் மலர்த்தி -தம் கையில் இலங்கும் உருண்டையான அழுக்கற்ற நெல்லிக்கனி போல் நேரில் காணலாய் இருந்தது -எம்பெருமானார்க்கு முற்காலத்தில் இருந்த மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் நாதமுனி முதலானவர்க்கும் அம்முக மலர்த்தி அப்ரத்யக்ஷமாகவே இருந்தது –இனி நித்ய விபூதியில் ப்ரத்யக்ஷமாக எம்பெருமானாரின் முக மலர்த்தியை நாம் அடைய வேண்டி இருக்கும் போது ஸம்ஸாரம் நீங்கி ப்ராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரத்தை யடைந்து அந்த முக மலர்த்தியை அனுபவிக்க வேண்டி இருக்கிற படியாலும் ஸம்ஸாரத்தில் இருந்து கரை ஏற்றுவிக்கும் உத்தாரகத்வமும் இந்த ராமாநுஜாசார்யாருக்கே உரியதாய் இருகையாலும் சரம அதிகாரிகள் சர்வ உத்தார கரான ராமானுஜர் இடமே ப்ராப்ய ப்ராபகத்வங்கள் இரண்டையும் அறுதியிட்டு அதிலேயே ஊன்றி இருப்பவர்களாய் இருக்க வேண்டும் -என்றபடி)
(பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி –அனைத்தும் வகுத்த இடமே -ஆச்சார்யர் இடம் உபகாரத்வ புத்தி இருக்க வேண்டும் -உடையவர் முக மலர்த்தியே பரம பிரயோஜனம் -ப்ரத்யக்ஷமாக அங்கே தானே காணலாம் -அங்கு செல்ல உத்தாரகத்வ புத்தியும் வேணுமே -)
(பர பக்தி பர ஞானம் பரம பக்தி நித்தியமாக வேணுமே -யாவதாத்ம பாவி கைங்கர்யம் செய்ய ருசி வளர அங்கும் வேண்டுமே
இங்கு உத்தாரகத்வம் ப்ராப்யம் -என்று கொண்டு அங்கு போனபின்பு அவர் திருவடிகளே ப்ராபகம் என்று உணர வேண்டுமே -ஆனந்தமாக அனுபவித்து கைங்கர்யம் வேண்டுமே
அங்கும் பகவத் கைங்கர்யங்கள் கிட்ட இவரது ப்ராபகத்வ புத்தியும் வேண்டும் கூரத்தாழ்வான் உடையவருக்கு முன்னே நித்ய விபூதிக்குச் சென்ற வ்ருத்தாந்தம் அறிவோமே -அங்கும் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று அணுவார்த்தனம் பண்ணினார் அன்றோஇத்தை மேலே அருளிச் செய்து நிகமிக்கிறார் மேல்)
நிஷ்க்ருஷ்ட ஸத்வாத்மகமாய் -பஞ்ச உபநிஷத் மயமாய் -அஞ்ஞான தமோ லேஸமும் நடையாடுகைக்கு இடமில்லாத நித்ய விபூதியில் ஸர்வோபாதி விநிர்முக்தராய் நிஷ்க்ருஷ்ட தர்ம பூத ஞான ஆனந்த ஸ்வரூபராய் -பகவத் ஆயத்த ஆத்ம சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்களை யுடையராய்- அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ யுக்தராய் -பகவத் அநுபவ ஜெனித நிரவதிக ஆனந்த யுக்தராய் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜனம் பரமம் ஸாம்யம் உபைதி –-முண்டகம் -3-1-3-(பரம புருஷனை ஸாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு ப்ரக்ருதி சம்பந்தம் அற்றவனாய் -புருஷோத்தமனுடன் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் -என்றபடி-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் )-என்கிறபடியே எம்பெருமானோடு பரம ஸாம்யாபத்தியைப் பெற்று எல்லாரும் நித்ய பரிபூர்ணராய் இருக்கிற தசையிலே -ஸிஷ்ய ஆச்சார்ய விபாகம் யுண்டாய் தத் தத் கார்யங்களும் நடக்கும்படி எங்கனே என்னில் -அங்கும் நடக்கும் -எல்லாருக்கும் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் அவிசிஷ்டம் என்னும் இடத்தில் ஸங்கோசம் இல்லை இறே -இவ்விபூதியில் போலே ஒருவன் உணர்த்தின போது தெளிய அறிந்தும் -உணர்த்தாத போது ஸ்வரூப ஞானம் இல்லையாயும் போருகிற ஆகாரம் அங்கு இல்லை இறே (அவிபாகேந த்ருஷ்டத்வாத் -விட்டுப் பிரியாமல் நித்ய அனுபவம் அங்கு -ஸ்வரூப விளக்கம் ஆவிர்பாவம் உண்டே அங்கு)-ஆகையால் அவ் விபூதியில் ஆத்ம ஸ்வரூபம் தோற்றும் போது எல்லாம் பகவத் அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றி -அது தான்- ததீய பர்யந்தமாகா விடில் ஸ்தைர்ய ஸித்தி பெறாதாகையாலே முதலடியிலே நிற்கை யன்றிக்கே- ததீய பர்யந்தம் சென்று ஸ்வரூபமானது மறுவற்ற ததீய அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றும் -இப்படி இருக்கிற ததீய அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூபமானது –நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை) என்றும் –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநுப பத்தி -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் பொருந்தாது)-என்கிறபடியே கிஞ்சித்கார அபாவத்தில் சத்தை பெறாதானாகையால் -தத் ஸித்தி யர்த்தமாக ததீய பர்யந்தம் சேஷ வ்ருத்தி பண்ணிப் போர வேணும்-
நநு பகவத் வ்யதிரிக்த ஸகல ஜீவாத்மாக்களுக்கும் ததீய சேஷத்வம் ஸ்வரூபம் -தத் ஸித்தி ததீய கிஞ்சித் காரத்தாலே யுண்டாக வேணும் என்று கொள்ள வேணுமாகில்- அப்போது கிஞ்சித் கரிப்பார் சிலரும் கிஞ்சித்கார ப்ரதி சம்பந்திகள் சிலரும் ஆகையால் இவர்களுக்கு ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய் -தத் ஸித்தி யர்த்தம் ததீய கிஞ்சித்காரம் பண்ண வேண்டி வரும் -அப்போது வேறே சில ப்ரதி சம்பந்திகளை அங்கீ கரிக்க வேணும் -அவர்கள் ஸ்வரூபத்தைப் பார்த்தால் அவ்வளவே சில ப்ரதி சம்பந்திகள் வர வேணும் –இனி கிஞ்சித் கர்த்தாக்களே ப்ரதி சம்பந்திகளாய் ப்ரதி சம்பந்திகளே கிஞ்சித் கர்த்தாக்கள் ஆகையால் அந்யோன்ய ஆஸ்ரய தோஷமும் அநவஸ்தையும் ப்ரசங்கிக்குமே என்னில் -அப்படி சொல்ல ஒண்ணாது
நித்யாபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -40-என்கிறபடியே -எல்லாருக்கும் ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய்த்து –
(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-77-
கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்-நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்-அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற-பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும் பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் – மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும் இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)
தானும் ததீய சேஷத்வ வ்ருத்தியாலே நிலை நிற்க வேணுமாகையாலே எல்லாரும் ஸ்வரூபத்தைத் தவிர்ந்து இருக்கும் அளவில் ப்ரதி சம்பந்திகள் இல்லாமையாலே சேஷ வ்ருத்தி அபாவ ப்ரயுக்தமான ஸ்வரூப சங்கோசத்துக்கு இடமாகையாலே சில ததீயர் சில ததீயரை சேஷிகளாக வரித்து தத் விஷயத்திலே கிஞ்சித் கரிக்க வேணும் -அவர்களும் தங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் இவர்கள் முக மலர்த்தியை ப்ரயோஜனமாகக் கொண்டு இவர்கள் பண்ணுகிற கிஞ்சித் காரத்தை அங்கீ கரிக்க வேணும் -தாங்களும் தங்கள் சேஷத்வ ஸ்வரூபமான நைச்யத்தை முன்னிட்டு அவர்களை சேஷிகளாக வரித்து தத் விஷய கிஞ்சித் கார்த்தாலே ஸ்வரூப ஸித்தி பெற வேணும் -ஆகையால் பரஸ்பர சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான நீச பாவத்தைப் பிரார்தித்துப் பெறுகிற இடமாகையாலே (நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்)ஸ்வரூபத்தோ பாதி ஸ்வரூப அநு பந்தியான பரஸ்பர நைச்ய ப்ரார்தனையும் அங்கமாக நடக்கும் என்றிட்டு கிஞ்சித் கர்த்தாக்கள் ப்ரதி சம்பந்திகளாய்-ப்ரதி சம்பந்திகள் கிஞ்சித் கர்த்தாக்களாம் இடத்தில் குற்றம் இல்லை –
இப்படி ஸ்வரூபம் எல்லாருக்கும் ஒத்து இருந்ததே யாகிலும் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளில் தலைவரான அநந்த கருட விஷ்வக் சேன ப்ரப்ருதிகளுக்கு ப்ராதான்யம் கொண்டால் போலே நிரஸ்த ஸம்ஸார ஸம்பந்தரான முக்த வர்க்கத்தில் நம் ஆச்சார்யர்களில் சிலருக்கு ப்ராதான்யம் கொள்ள வேணும் -அதாவது –குரு பரம்பரை -அத்தாலே யுண்டோ என்னில் –பராங்குசாத்யைர் பக்தைர் அபி யாசார்யைஸ் ஸம் உபஸ்திதம் –— (பக்தர்களான பராங்குசர் முதலான ஆச்சார்யர்களால் கூடி இருக்கப் பெற்ற பரமபத நாதனை)என்று இறே அபியுக்தர் வசனம் –இப்படிப்பட்ட இருக்கிற நாயகக் கல் போலே இறே நம் குல நாதரான எம்பெருமானார் -இப்படி உபய விபூதி வர்க்கத்துக்கும் ஒவ்ஜ்ஜ்வல்ய கரரான எம்பெருமானார் பக்கல் அங்கு விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்
(அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-யதிராஜ சப்ததி-15
ஸ்வாமி தேஜஸ் ஒளி விஞ்சி -பிரபன்னர் உடைய மாநசீக குரு பரம்பரையில் நடு நாயகமாக உள்ளார் –)
இவருடைய அபிமானம் கொண்டு ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்ய பூமியிலே இவனுக்கு தத் விஷயத்திலே அங்கும் விசேஷ ப்ரதிபத்தியுடனே அசேஷ சேஷ வ்ருத்திகளையும் பண்ணி அவ்வழியாலே தன் முகோல்லாஸமான ப்ராப்யத்தைப் பெறுகை ஸ்வரூபம் இறே –இங்கு இருக்கும் நாள் அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோல்லாஸம் பெறாத அவ்விழவு எல்லாம் அவ்விபூதியில் தத் விஷய அசேஷ சேஷ வ்ருத்தி கரண ஜன்யமான முகோல்லாஸ ரூப ப்ராப்ய லாபத்தாலே தீரப்பெற வேணும்
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற உபய விபூதி விசேஷ ப்ரதிபத்திக்கு விஷயமான எம்பெருமானார் இடத்திலே பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு -தத் விஷயத்தில் அகதி நிஷ்டனாய் எம்பெருமானாருடைய திருவடிகளே ப்ராப்ய ப்ராபக முகமாக அத்யவசித்து-தத் அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரம அதிகாரிக்கு -1-யாவச் சரீர பாதம் எம்பெருமானாருடைய குண அநு ஸந்தானமும் -2-ஏதத் குண அநு சந்தான ரஹித துஷ் ப்ரக்ருதிகளுடன் ஸஹ வாஸ நிவ்ருத்தியும் ஸஹ போஜன நிவ்ருத்தியும் -3-ஏதத் அபிமான அந்தர் பூதரான சரம அதிகாரி விஷயத்தில் ப்ராவண்யமும் தத் ஸஹ வாஸமும் தத் ஸம் பாஷணமும் தத் பாத தீர்த்த ஸ்வீ காரமும்(போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே) —நாராயண ஏக நிஷ்டஸ்ய யா யா வ்ருத்திஸ் ததர்சநம் -யோ யோ ஜல்பஸ் ஸ ஸ ஜய தத் த்யானம் யந் நிரிக்ஷணம் –தத் பாதாயப் சதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸூ பாவநம் -ததுக்தி மாத்ரம் மந்த்ர அக்ரயம் தத் ஸ்ப்ருஷ்டம் அகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை (நாராயணனையே ப்ராப்ய ப்ராபகமாகக் கொண்டவன் எந்தச்செயல் செய்தாலும் அது எம்பெருமானுடைய அர்ச்சனமாகும் -அவன் எதைப் பேசினாலும் அது எம்பெருமான் மந்த்ரத்தை ஜபிப்பதாகும் -அவன் எதை உற்று நோக்கினாலும் எம்பெருமானைத் த்யானிப்பதாகும் -அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பரி ஸூத்தப்படுத்துவதில் ஒப்பற்றதாகும் -அவன் உண்டு உமிழ்ந்த எச்சில் பரி ஸூத்தப்படுத்துவதில் தலை சிறந்ததாகும் -அவனுடைய சொல் எல்லாம் உயர்ந்த மந்திரமாகும் அவன் தொட்டது எல்லாம் ஸூ த்தமாகிறது -என்றபடி)- என்னும்படியான தளிகை ப்ரஸாத ஸ்வீ காரமும் தத் ஸஹ வாஸத்துடன் கால க்ஷேபமும் அநவ்ரதம் யுண்டாம்படி ஸர்வ உத்தாரகரான எம்பெருமானார் திரு முன்பே நித்யமாகப் பிரார்த்திக்க்க் கொண்டு த்ரிவித கரணத்தாலும் ததீய விஷயத்தில் பர ஸம்ருத்யேக ப்ரயோஜன புத்தியுடன் ஸ்வரூப அநு குணமாக முன்னடி பார்த்து வர்த்திக்கை அவஸ்ய அபேக்ஷிதம் எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யம் இல்லாத துர்மானிகளுடன் ஸஹ வாஸம் வருந்தியும் பரிஹரணீயம்
ஸ்ரீ சரம குரு நிர்ணயம் முற்றிற்று
———————————————————–
ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை ஸ்வாமிகள்
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.
“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,
ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே, ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –
அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே–(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||–ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||–ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||–நாலூர் பிள்ளை தனியன்
நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||நாலுராச்சான் பிள்ளை தனியன்
—————-
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்
சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |
யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||
பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .
பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;
1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” (பகவத்கீதாஅத்யா 3 ஶ்லோ 21)என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்
எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத் யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்த தேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ண ஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.
“கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ–பூர்வாசார்ய ஸூக்தி
கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷ த்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,
முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே
பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;-திராதிறே , “ விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: (“ ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 )என்றதிறே .
விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .
இதுக்கு மேலே முக்த கண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,
ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லுகிற விடத்திலே“ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்தவ வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||
ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்ய வேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .
“ தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வனகள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல
ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–
த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |
க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||
ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ்விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .
இதி ப்ருஷ்டோ மஹா லக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |
குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||
பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகாரமாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத
————–
ஸ்ரீபகவாந் | ஸாது ப்ருஷ்ட்டஸ் த்வயா தேவீ ஸாராம் ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷ்யே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||
சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .
ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||
ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும் ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .
ததோ விபவ ரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநி தேவி மோக்ஷ ஆர்த்த கோபி ந பவத் ||
இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .
————-
1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |
தேஷ்வப்யஶக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||
“ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .
ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||
ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .
ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |
அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் ரமே ||
ஏ பத்மாஷீ — தாமரைப் பூப் போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .
இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத:
ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .
——————-
லக்ஷ்மீ: ||
( லக்ஷ்மீ: ) — ( இப்படி எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .
கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர் ஜநிம் | கஸ்மிந் யுகே வதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத ப்ரபோ: ||
ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .
ஶ்ரீபகவான் || அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||
இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .
தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||
( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது
விஶிஷ்யமே தேவி கலௌ யுகே குரோர் ஜநிர் பவித்ரீ கலு ஸத் குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீ கலு — உண்டாகப் போகிறது( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ் வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது
( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .
ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குரு ஸரீரிண:
ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு பட வநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்ய ரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து ஆகர்ஷிக்கப்படுகிறது . )
மத் பக்தா ஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||
கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்ய ரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .
மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |
ஸ யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||
ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோஷ ப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .
குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||
ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .
————-
மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||
ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,-யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .
குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |
ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||
( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப் போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .
மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர் பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||
யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத் தானே ,
முக்தி: — பகவத் ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .
அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி |
மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||
( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது-( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப் போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .
என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,-நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச் செய்கையாலே மற்றுமவனருளிச் செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயே யிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதி யிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாண ப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .
—————-
இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதி யாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
“ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;
( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .
ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .
இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
“ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,
“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம் போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாய பக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்து விடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;
இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,தேவமிவாசார்ய துபாஸீத “ ,ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உப ப்ரும்மணத்தின் படியே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப் போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .
“ ஆசார்யான் புருஷோ வேதா “ ,ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .
“ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “ ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) –
தமேவ –– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .–என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;
“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே
ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததே யாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .
——————–
ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;
தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென்கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .
மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||
எங்ஙனேயென்னில்
ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,-தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாண குண புஷ்கலமாயும் ,
ஷட் விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .
பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||
அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .
—————-
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்
ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயாளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .
ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,-என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் உடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .
———————
“ லோகே ச பாதபதநம் பாணி ஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;
லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .
“ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரண க்ரஹண மமோகோபாயமிறே |
சரண க்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;
பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .
நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்-இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;
அவத்யகரமாகையாவது , பகவந் நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .
“ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ –விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் என்று எம்பெருமான் தானே யருளிச் செய்தானிறே .-
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .
“ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து “ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,-தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;-இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்ய ருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;
லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .
சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .
ஸோமாஸியாண்டானும் ,
“ பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார
ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )
( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட
( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –
இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )
இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது
பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |
பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |
வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில்,
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |
த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||
நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |
( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|
இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )
1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |
1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |
1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |
ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் , “
2 பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ
2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |
ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |
1 லக்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..
1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |
“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
“ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |
இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |
1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |
1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |
இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |
ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
“ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |
இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |
1 “ யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: | நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி
( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;
அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —
இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , த
னக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவ யோக்யரும் , ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் ,
இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் , எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |
# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,
இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி
யீடுபட்டிருக்கு மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் ,
எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் ,
தேஹயாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
“ இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தார் இறே |
இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது
# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “
பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத் குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .
இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது ,
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ;
இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து ,
அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடியறிகை
ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை
“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .
ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே
1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை
கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப் பண்ணுகை .
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று
இவ்வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெருமானாருடைய முக விகாஸத்துக் குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித்காரத் தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநு வர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை .
இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்க மாயிருக்கிறது .
“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே .
உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் ,
தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து ,
கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து
தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .
இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ;
அவையாவன : —
நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ள த்தை யுடையனாக வேணும் ;
அதுக்கடியாக விவனுக்கு ஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம்
இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்கவேணும் ;
இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தையுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;
இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
“ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) –
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை .
ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .
ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,
யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .
பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .
இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .
“ அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )
நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .
இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம் ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் ,
2-அவர்களுடன் ஸஹவாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வாந்நபோஜநமும் ,
ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன். (தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலேபோக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் .
இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .
ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,
“ ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும்
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்
# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .
எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி
த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது “ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி , உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .
த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –
( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )
இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர்
“ ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளமபி மதாநுரூப நிரவதிக அனந்த சந்தோஹ ஜநக
“ நித்யஸூரி பரிஷ தந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதக மஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ
மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி
சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத ,
பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:–எம்பார் ஸ்ரீஸூக்தி
ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்தி தானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே
நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .
ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .
சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாசயா: | பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.
பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணிய லமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு , பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே ,
இருள் தரு மாஞா லமான விக்கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும்
சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்
சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் | ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.