Archive for the ‘திரு விருத்தம்’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -70 -வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –பிறவித் துயரற -1-7-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் – பிறவித் துயரற -1-7- நிரதிசய போக்யத்வம் ஆராதனைக்கு இனியவன்–இதிலும் துழாய் இனியது-திருத்துழாய் முடிந்த அவன் -இரான் எனில் -அதிலும்–மூன்று அர்த்தங்கள்–1-திருத்துழாய் ஆசைப்பட்ட எனக்கு -கிடையாதபடியாலே வண்ணம் பசலை நோய் இப்படி மாறிக் கொண்டு இருக்க – 2-இரவு நெடுகி துன்பம் கொடுக்க – 3-இப்பொழுது மாலை மாறி இரவு வரப் போகிறது இது அநேகம் கல்பங்களாகி என்னாய் ஆகுமோ – )

அவதாரிகை –-ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால்
உண்டான-த்வரையாலே – காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –

இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும் விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே வந்த ஆர்த்தியை இரவின் நெடுமைக்கு இரங்கின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு ––அவதாரிகை -ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும் என்னும் அபேக்ஷையால் உண்டான த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள–அவதாரிகை-இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப் பாசுரத்தில்

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
— 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு —7–ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும் உள்ளது தேவையாய் இருக்கும் அன்று-ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன-ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு- குணைர் விருருசே ராம-என்னும்படி நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய் அங்கே  பற்றும் படி ஓடு-

வளைவாய் திருச் சக்கரத்து –வளைத்த வாயை உடைய திருச் சக்கரம் -என்னுதல்-அன்றிக்கே –
வளை -ஸ்ரீ பாஞ்ச   ஜன்யமாய் –வாயை உடைய திரு ஆழியை உடையவன் என்னுதல்–தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர -என்னக் கடவது -இறே (மண்டோதரி பெருமாளது அடையாளம் சொல்லும் ஸ்லோகம் )-எங்கள் வானவனார் முடி மேல் –த்ரிபாத் விபூதி யடைய திவ்ய ஆயுதங்களும் – சாத்தின மாலைகளும் – ஆன இவ் அழகே யாம்படி  இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய – திரு அபிஷேகத்தில்  உண்டான தொடை வாய்ப்புள்ள –அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே –தளை என்று தொடையாய் –வாய் –வாய்ப்பை உடைய – தொடை வாய்ப்புள்ள திருத் துழாய்–வண்ணம் பயலை விளைவான்–நறுங்கண்ணி தண் அம் துழாய்க்கு – செவ்வியை உடைய மாலையான திருத் துழாய்க்கு வண்ணம் இத்யாதி –அம் மாலையை ஆசைப்பட்டு -பெறாமையாலே நிறமானது பயலை யாம்படி-விவர்ணமாம் படியாக–மிக வந்து இத்யாதி – முந்துற ஒரு ராத்திரி –ஒரு நாளாய் பெருகிற்று –
அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் – அது போய் ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய
என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –மிக வந்து – ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் – அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே – இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-

இருள் இன்று என்னை அடியோடு முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நீடிக்கிறதே
வளைவாய்த் திருச் சக்கரத்து-வட்டமான நுனியை யுடைய திருச் சக்கரம் என்றும் -சங்கையும் கூர்மையான சக்கரமும் என்றுமாம்-ஸர்வேஸ்வரத்வத்துக்கு ஸூ சகமம் -அடிமை கொள்ள -சம்பந்தமும் உடைய -உபய விபூதி நாயகன் -அலங்காரமும் உடைய சர்வேஸ்வரனை அனுபவிக்க பெறாமையாலே தன்மை குலையும் படி காலம் வரையறை இல்லாமல் வளர்கின்றதே –

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்-வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய் எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின-தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு-வண்ணம் பயலை விளைவான்-ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு ராத்ரி மிக்கு நாளாயும் மாஸமாயும் ஆண்டாயும் ஊழியாயும் வந்து ஒழிய–எம்மைஉளைவான் புகுந்து-எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி-இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-இந்த ஒரு ராத்ரியானது ஆயிரம் கல்பம் ஆகா நின்றன-ஆயிரம் என்றது-அநந்தம் என்றதாகவுமாம் –இத்தால்-வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும் விபூதியையும்
பூஷணத்தையும் ஒப்பனையையும் யுடைய ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை–வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாக-விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — காலமானது அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –வியாக்யானம்-வளைவாய்த் திருச் சக்கரத்து-வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்–அன்றிக்கே-வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே–எங்கள் வானவனார் முடிமேல்-த்ரிபாத் விபூதியை யுடையராய் திவ்ய ஆயுதங்களும் சாத்தின மாலைகளுமான அழகேயாய் இருக்கிறவர் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான-தளைவாய்-தொடை வாய்ப்புள்ள அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே–நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு–வண்ணம் பயலை விளைவான்–அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக விவரணமாம் படியாக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று-அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று-அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று–அது நிற்க-அத்தைக் கடக்க நிறுத்தி இது ஒரு ராத்ரி இருந்தபடி என் அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது–எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது அநேகம் ஊழிகளாய் இரா நின்றன-மிக வந்து–ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே இது ஒரு ராத்ரி இருந்தபடி என்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்-வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய் எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு நாழிகையே வந்து நாளாயும் திங்களாயும் ஆண்டாயும் ஊழியாயும் மிகவும் வளர்ந்து நிற்குமே–எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது எங்கனே நான் தரிக்கும் படி –

ஸ்வா பதேசம்–இத்தால் –பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21- அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும் என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

ஸ்வாபதேசம்-இத்தால்-பதி சம்மா நிதா சீதா –என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை- ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே -பெற வேணும் என்று ஆசைப்பட்டு – பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –ஒரு கங்குல் –வளைவாய் திருச் சக்கரத்து எங்கள் வானவனார்
முடி மேல் தளைவாய் தண் அம் துழாய்க்கு
வண்ணம் பயலை விளைவான் மிக வந்து-
நாளாய் திங்களாய் ஆண்டாய் ஊழியாய் வர்த்திக்கிற மாத்ரம் அன்றிக்கே – எம்மை உளைவான் புகுந்து ஊழிகள் ஆயிரமாகா-நின்றது
– என்று அந்வயம் –தளை –கட்டாய் —வாய் -வாய்ப்பாய் –தொடை வாய்த்து இருக்கை–என்னை உபேஷித்து என் உடம்பை விவர்ணமாம் படி செய்து –-தான் தன திருக்கையில் இற்று இருக்கிற திரு ஆழியினால் தன்னுடைய பரம பதத்தை விளங்கச் செய்து –
அவ் விபூதி எங்கும்-தான் சூடிய திருத் துழாய் பரிமளம்  கமழும் படி  தூரமாக வீற்று இருந்தான் –
என் எளிமை அறிந்து-இந்த இரவானது இப்படி நீண்டு அநந்த கல்பங்களாக பரிணமிக்க தொடங்கிற்று இதைக் கடந்து-நாம் ஜீவிக்க வழி என் -என்று சோகிக்கிறாள்  –

தாத்பர்யம்-இதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்வஸிப்பித்த அளவிலும் அஷமத்தால் -கால விளம்பம் பொறுக்காமல் நலிய கார் காலத்தில் வருவதாகச் சொல்லிப் போந்தான்-அதுவும் வந்து அவனும் வாராமல் நலிய இப்பொழுது இரவும் வந்து குளிர்ந்த திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு பெறாமல்
பயலை நோய் திரு மேனி எங்கும் பரவ அவன் ஸ்ரீ வைகுண்டத்தில் -எட்டா நிலத்தில் -தூரமாக வீற்று இருந்து அங்கு உள்ளார் அதன் பரிமளம் அனுபவிக்க இப்பொழுது எனது எளிமையையும் தனிமையையும் அறிந்து நலிய இரவு வந்து பரிணமிக்கும் காலம் போல் இல்லாமல் அளவுக்கு உட்பட்ட காலம் இல்லாமல் அளவு இல்லாத அநேக கல்பங்களாய் பரிணமிக்கத் தொடங்க இத்தைக் கடந்து நாம் ஜீவிப்பது எங்கனே என்கிறாள்

1-7-பிறவித் துயர் பிரவேசம் 

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்-இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே . 

ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும் 

ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே 
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே 
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ 
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
 –1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
 –1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே 
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
 –1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே 
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே 
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு-கற்பார் இராம பிரானை -7-5-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கால மயக்கு-தோழி சந்த்யா காலம் இல்லை-மாலையும் வந்தது -இரவும் வரும் -பெருந் துக்கம் வர
சர்வ ரக்ஷகன் வந்துவிடுவான்-கார் எருதுவும் சிகப்பு எருதுவும் சண்டை போடுகின்றன என்கிறாள்
ப்ராத காலம் சாயங்காலம் -அதுக்கு ஒரு காலம் இதுக்கு ஒரு காலம்-அற்பமான இருள் அதிகமான சுடர் ப்ராத காலம்-அற்பமான சுடர் அதிகமான இருள் சாயம் சந்த்யா-அருளால் விட மாட்டார் -வருந்தாதே -சமாதானம் படுத்துகிறாள் கற்பார் இராம பிரானை -7-5-இதன் விவரணம்-சராசரம் முற்றும் நற்பாலுக்கு உய்த்தவன் அன்றோ-மோக்ஷ பிரதன்-ரக்ஷகத்துக்கு சீமா பூமி தானே நாட்டை அளித்து ஷேம கரன்
சிசுபாலனுக்கும் ரக்ஷகன் அன்றோ-நன்மைப்புனல் பண்ணி -நான்முகனைப் பண்ணி -பாட்டுத்தொறும் ரக்ஷகத்வம் உண்டே –

அவதாரிகை –அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய –அநந்தரம்-போகயோக்யமான காலமாய் இருக்க அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக –இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்றுகாலம் மயக்கி அவளைத் தரிப்பிக்கிறாளாய்  -இருக்கிறது –

இப்படி ஆஸ்வாஸ கரரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள் இவ் வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே தலைமகள் நோவு பட-இத்தைக் கண்ட தோழியானவள் ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
– -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா
 –65-கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

காரேற் றிருள்–இருளாகிற கார் ஏறானது- கறுத்த வ்ருஷபம்  ஆனது –செகிலேற்றின சுடருக்கு உளைந்து –ஆதித்யனாகிற சிவந்த ரிஷபத்தினுடைய கிரணங்களுக்கு தோற்றுப் போய் சுரமடைந்தது (தளர்ந்து மங்கிப்போனது )- வெல்வான்போரேற்று எதிர்ந்தது–அது -நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடக்கும் இத்தனையோ –நாமும் ஒருகால் மேலிட வேணும் -என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது – இருள் தான் வெல்ல வேணும் என்று மாலை இட்டுக் கொண்டு வந்தது போலே காணும் –(சாடு -மாலைப் பொழுது ஏறிட்டுக் கொண்டு-உறுதி தீக்ஷை மாலை சாத்தி வந்தது ) புன் தலைமாலை – புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் –1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் உன்னை விடுமோ –4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை விட்டு இருக்குமோ –(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி ) -காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –5-மண்ணுக்குப் பதறி இரந்தவன் பெண் ஒரு தலை யானால் ஆறி  இருக்குமோ –6-வாரேற்றி இள  முலையாய் -என்னும் அளவுக்கு – காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்- உன்  முலை மேலே காலை வையாது ஒழியுமோ –

புவனி இத்யாதி –பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு  –எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்-பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –அருளா விடுமே – சத்வம் உடையாருக்கு தன்னை அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான   உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ-அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான  அருளும் உன் பக்கம் கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்று இள முலையாய் –
வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடையவளே – வார் தரித்தல்-தான் தரித்தல் செய்ய வேண்டும்படியான முலைகளை நீ தரிக்க விட்டிட்டு இருக்குமோ –இள முலையாய் –பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் – வாராலே தரிக்க வேண்டும்படியாய் காணும் முலைகள் இருப்பது –
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்னுமா போலே – விஷயத்தை காட்டு காட்டு -என்று
கிளருகிற இள முலைகள் –வருந்தேல் உன் வளைத்-திறமே –உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா –வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக வருந்தில் வருந்து – அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று – அதற்கு மங்களாசாசனம் பண்ணு –(அதுக்கு வருந்தி பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் இது தானே நமது கையில் அகப்பட்டு
பல்லாண்டு பாடி ரக்ஷிக்க வேண்டும் என்றபடி )

இத்தால்-அவனுடைய குண ஞானத்தாலும் – அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும் தரிப்பித்த படியைச் சொல்லிற்று கீழ் –இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது – அவனாகில் ரஷகனாய் – இத்தலையாகில் ரஷ்யகமாய் -இருக்கும் இறே –ஓங்காரம் பார்த்தே தரிக்கலாம்–தர்மி இருவரும் ஸ்வரூபம் சொல்லும் பிரமாணம் பிரணவம்
அவனாகில் ரக்ஷகன் அவ ரஷணே தாது இத்தலை ரஷ்யம்–வருந்தேன் உன் வளைத் திறமே -மாஸூச -என்கிறாள் – அஹம் த்வா இரண்டு தர்மி சப்தங்கள் -என்று (ப்ராப்தனாய் சக்தனாய் ரக்ஷகனாய் இத்யாதி-அஹம் அசக்தனாய் இத்யாதி -த்வா ) இருவருடையவும் சொல்லி வைத்து இறே – மாஸூச -என்றது –செல்வான்-ஜெயிக்கைக்காக –நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை-என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது-

இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது –
பிரத்யஷ்யமான சந்த்யையை- ருஷபங்கள்  என்று சொல்லுகிறது என் என்ன –
புன் தலை மாலை ஆகையாலே -புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல்
-என்று அந்வயம்

மாலை பொழுதில் தோழி தலைவிக்கு -இருள் ஆகிய கறுத்த எருதும் ஸூ ரியன் ஆகிய சிவந்த எருதும் பொருகின்றன- காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது வெல்லும் பொருட்டு வந்து மேலிடத்து என்கிறார்-இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரிபுவனம் த்வயா ஸ்ம்ரத்பரிய தத் வைரம் அத்ய தைரேவா மிர்ஜித்த-மண்டோதரி ராவணனுக்கு இந்திரியங்கள் சமயம் பார்த்து ராவணனை நலிய வந்தன என்றால் போலே-காவலில் புலனை வைத்து -என்ற பாசுரத்தில் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார்-புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்–நீரேற்று தாரேற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம் பொன் முடி காரேற்ற மேனி அரங்கன் கையும் கழலும் ஓக்க நீர் ஏற்றன வண் திருக் குறளாகி நிமிர்ந்த அன்றே -திருவரங்கத்து மாலை -33—நெடிய பிரான் -ஓங்கி உலகு அளந்த பராத் பரன் பூமிப் பரப்படைய நீரேற்றுஅளந்து கொண்டு –-புவனி எல்லாம்-நீரேற்று அளந்த நெடிய பிரான் -அருளாவிடுமே -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்றி இள முலையாய்-இப்படிப் பட்ட அழகையும் இளமையையும் விட்டு இருப்பானோ-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து-கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து–வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே-இதுக்கு வன்மையாவது-பிரிந்தாரை நலிகை–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன் பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ-வாரேற்றி இள முலையாய் -வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே–ஏற்றுகை -முடிகை–வருந்தேல் உன் வளைத் திறமே-உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று கிலேசிக்க வேண்டுவது இல்லை-அவன் அருளும் என்றதாயிற்று –இத்தால்–காரேற் றிருள் -என்று (மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு ) பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து-செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே கழிந்தமை சொல்லி —வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று–வாரேற்றி இள முலையாய் –என்கையாலே இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி–வருந்தேல் உன் வளைத் திறமே -என்று-இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில் பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா–சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-காரேற் றிருள்-இருளான கார் ஏறானது கறுத்த வ்ருஷபமானது-செகிலேற்றின சுடருக்கு உளைந்து-ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது–வெல்வான் போரேற்று எதிர்ந்தது-நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ-நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது–புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது-நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய (இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது ) ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை ஸந்த்யை தான் அல்லது காண் இது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம-காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப் போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது–மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ-கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே-உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்–உன்வளைத் திறமே வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –முன்பு உள்ள அஞ்ஞானம் -பக்தி ரூபா பன்ன செவ்விய ஞானத்தால் கழிந்தது என்றும்
உரிய காலத்தில் அனுபவிக்கப் பெறாமையால் அருள பெற்ற மதி நலமும் அழிந்து மோஹாந்தகாரம் மேலிட்டது என்றும்-வாரேற்றி இள முலையாய்-அடக்கவும் மறைக்கவும் அரிதான பக்தி விசேஷம்
வருந்தேல் உன் வளைத் திறமே -இப்படிப் பட்ட பக்தி வெள்ளம் உடைய நீர் உமது அடிமைத் திறம் குலையும் என்று வருந்த வேண்டா –

தாத்பர்யம்--கீழ் சொன்ன கொன்றை மலர் விருத்தாந்தத்துக்கு மேல் மாலையும் வர -அவனும் வாராமல் இருளும் வரத் தொடங்க-ஸந்த்யா காலத்துக்கு வருந்த அவரை ஆஸ்வாஸப்படுத்த பார்ஸ்வத்ஸர் பாசுரத்தை தலைவியை சமாதானப்படுத்தும் தோழி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–இவை இரண்டு ரிஷபங்கள் –இருள் கறுத்த எருது -ஒளி சிவந்த எருது – இரண்டு எருதுகளும் போர் புரியும் காலம் இது
முன் ஜெயிக்கப்பட்டு தனக்கும் ஒரு காலம் வரும் என்று கருவி இருந்து மூலையில் ஒழிந்து இருந்து சமயம் வந்ததும் ஆக்ரோஷமாக சண்டை போட யத்தனிக்கிறது-ஆஸ்ரித அநாஸ்ரித பேதம் இல்லாமல் அவர்கள் தலையில் தனது திருவடி வைத்து ரஷித்த அவனுக்கு அபிமதை யாகவும் அவனாலேயே ரஷிக்கப்பட வேண்டிய உன்னை ரஷியாமல் – உனது கை வளையல்களை கழல விட மாட்டான் –
சோகப்படாதே என்கிறாள்

7-5-கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

அஞ்சாம் திருவாய்மொழியில்-கீழ் -அநேக வித விஜய அபதானங்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய
அதிசயித சக்தி யோகத்தை அனுசந்தித்து விரோதி நிரசன சமர்த்தன் அவனே என்று அறுதி இட்டவர் –
அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காக -ஸ்வ அபிமான அந்த பாவ மாத்ரத்தாலே
அவனுடைய அதிசயித புருஷார்த்த பிரதத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி யுக்தமான ரேஷன் பிரகாரத்தையும்
சிசுபால மோக்ஷத்தையும்
ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
ஸ்ரீ வராஹ வ்ருத்தாந்தத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான ஆர்த்தித்தவ சாமர்த்யத்தையும்
மார்க்கண்டேய ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான ஹிரண்ய நிரசனத்தையும்
பாண்டவ விரோதி பஞ்சனத்தையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனாய் அதிசயித சீல ப்ரகாசகமான அவதார வைலக்ஷண்யத்தை யுடைய சர்வேஸ்வரனை ஒழிய
அநிஷ்ட நிவ்ருத்தி அர்த்தமாகவும் இஷ்ட பிராப்தி அர்த்தமாகவும் ஆஸ்ரயணீயர் வேறொருவர் இல்லை என்னும் இடம்
சர்வ ஸம்ப்ரதிபன்னம் என்று அருளிச் செய்கிறார் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1

கற்பார் –ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே-அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.-இராமன்’ என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும் பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

கற்பார் இராம பிரானை – கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’-ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

மற்றும்’ என்றதனால், வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர். பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;-பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை

புல் பா முதலா – பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,-பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்-இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி. புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;-வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.-தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;-இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.-‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.-இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.-காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.-முற்றவும்’ என்று முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது, ‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.-‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ சாதனம்-நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ –அயோத்தியில் வாழும்- வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,-அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

நற்பாலுக்கு உய்த்தனன் –நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும் தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்-பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –-இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )-

—————

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே
.–7-5-2-

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.-நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.-நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.-நாரணற்கு –-வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,-அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,-அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,-அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,-அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை-எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?-ஆள் அன்றி ஆவரோ –-மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது; இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; ‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.-ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,-அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,-கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,-பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,-அதற்கு மேலே, செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.-நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து – யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,-அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,-இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க,-

நடந்தமை கேட்டுமே.-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றும் சொல்லுகிற பிரயாண வ்ருத்தாந்தத்தை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளின்றி ஆவரோ –

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து தான் வந்து அவதரித்து அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு பொகட்டுப் போவது படு கொலை போலே –இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

————-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே 
.–7-5-3-

பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.-நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?-கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,-ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,-அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,-‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,-தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.-

————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’-உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?-நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் -என்கையாலே -சேதன அசேதனங்களை உண்டாக்குவானும் இவனே -அவனாலே வந்த ஸ்ருஷ்டியும் இவனதே -அவை உபகரணம் மாத்திரமே -உபகாரணமாம் இடத்தில் அசேதனத்தோபாதி சேதனனும் –விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.-

——————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.
–7-5-5-

தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட-பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் – தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து-நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;-தான் கொண்ட–முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,-தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.-கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )-அது தான் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கையாலே திருவுரு என்கிறார் இவர் –கோலா வராகம் ஒன்றாய் -பன்றியாம் தேசு -பரமபத நிலையனான தேஜஸ் ஸூ க்கும் அவ்வருகு ஒரு தேஜஸ் ஸூ இ றே

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே
.–7-5-6-

ஈட்டம் கொள் தேவர்கள் –கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.-எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.-ஈட்டம் – திரள்.-சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம் பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ-செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.

பொற் கை – பொலிவு எய்தின கை;-‘அழகிய கை’ என்றபடி. -கொடுத்து வளர்ந்த கை;-செய்த கூத்துகள் கண்டுமே –அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப் பேச்சுக்களும்-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச் செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

———————-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே
.–7-5-7-

தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று-இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு, ஒரு நாளிலே வந்தவாறே
தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,

‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:-அருகில் மாலையைப் பாராதே-என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடு நாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?-உனக்கு ஒரு பற்றுக் கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,-ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.-தன்னொடும் கொண்டு–இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.-உடன் சென்றது உணர்ந்தும் – ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடு போமாறு போலே கொடு போனான் காணும்.

நெடுநாள் தேவதாந்த்ர பஜனம் பண்ணினவன் மறந்தும் புறம் தொழா மாந்தரான சாத்விக புருஷகாரம் ஆவது ஆதல் -பிராட்டி புருஷகாரமாவது ஆதல் அன்றிக்கே தாமஸ தேவதையை புருஷகாரமாக கொண்டு வர -புறம் தொழா தவகம் படி சீற -அவர்களையும் பொருந்த விட்டு -மேன் மேலே ரஷித்த நீர்மைக்குப் போருமோ கீழ் சொன்ன குணங்கள் என்கிறது –

——————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே
.-7-5-8-

மல்லல் அரி உருவாய்--மல்லல்-பெருமை.-‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’-இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே,-மல்லல் என்று செல்வமாய்,-அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்

ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்-

—————-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?-பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் –-பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் – உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்-நடந்த நல் வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?-தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,
பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் – எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.-

———–

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே
.–7-5-10-

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?-அவை போன்றது அன்றி,-சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

வார்த்தை அறிபவர் – மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ? வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.- கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?-ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து- பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-அவன் செய்யும் சேமத்தை எண்ணி –பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணி விடுகை. ‘-இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’ இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;-இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதிற் சொல்லுகிற குணம்.-மேற் கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?-

————-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
–7-5-11-

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு--பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர்-நாட்டார் செயல்களைக் கண்டாதல், போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.-நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.-போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,-உத்தேஸ்ய துர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

தெளிவுற்ற கண்ணனை-இவன் தெளிய மாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை

தெளிவுற்ற ஆயிரம் – மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’
 என்பது, ஆசார்ய ஹ்ருதயம், –71

பாமரு மூவுலகத்துள்ளே –-‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் -கொண்ட பெண்டிர் -9-1-

March 6, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இது கால மயக்கு–கொன்றை மலர் பூக்கும் பொழுது வருவதாகச் சொல்லி-அவையும் பூக்க
தோழி -இவை மொட்டு விடத் தொடங்கிற்று -பூக்க வில்லை–இரண்டையும் சொல்லி -ஏமாற்றாமல் –
வருவதுக்கும் ஸூசகமாக மொட்டு விட்டது என்றும் சொல்ல வேண்டுமே –-கார்த்தனவே-சினத்தன
மலர்ந்தே ஓழிந்தில-முழுவதாக மலரவில்லை –கொண்ட பெண்டிர் –
9-1-இதன் விவரணம்
பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை-சகலவித பந்துவும் அவனே-வீடு சொன்னால் ஒரு கொண்ட -நான்கும் விரோதி ஸ்வரூபம்-அவன் வரவில்லை -விரோதி போக்கி தோழி ஆற்றுகிறாள் இதில்-மற்று ஓன்று இல்லை -சுருங்கச் சொன்னோம்- மானிடத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்-மலர்ந்தே ஒழிந்தில-கார்த்தனவே -இதுவே சுருக்கமாக இங்கே சொல்லி
ஆழ்வாரைக் கூட்டிப் போகும் காலம் அணித்தாயிற்று-உபதேசம் இன்னும் பண்ண வேண்டுமே -இதுவே காலமயக்கு
–சம்சார வெறுப்புடன் ஆழ்வார் இருக்க-பாட்டுத் தோறும் வடமதுரைப் பிறந்தான்
ஆஹதோ மதுரா புரம்
-ஆனானப்பட்ட அவனே பிறக்க நீர் இருந்தால் என்ன-உம்மைக் கூட்டிப் போகவே பிறந்தான் என்றுமாம்-அதே போல் இங்கும் பூக்கவில்லை கார்த்தனவே

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால் பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க-யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகள் கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய் அக்காலமும் வந்து அவையும் பூக்கவும் அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர அத்தைக் கண்ட தோழி அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –காலம் தாமும் இளையது என்று ஆற்றின தோழி பாசுரத்தாலே தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
– 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு 
–81-தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு – அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பஹூ முகமாக சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது 

மலர்ந்தே ஒழிந்தில –அக் காலம் அல்ல காண் -என்னாமே தோழி –  கெடுவாய்-இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன –மலர உபக்ரமித்த-இத்தனை காண் – மலர்ந்து சமைந்தது இல்லை காண் –மாலை இத்யாதி –மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –
தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் –தழைப் பந்தலாக பணைகள் தோறும் கண்கள் தோறும் நாற்றி –புலந்தோய் –புலம் –இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் –(புலந்தோய்-புலன்கள்-அபகரிக்கும் -பூமியில் படராமல் இரண்டும் உண்டே )புலம் -பூமியாய் –தோய்கை-ஸ்பர்சிக்கையாய் –
தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்-பொரு கடல் இத்யாதி –அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –-முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை -பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு – அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –தனது வைகுந்த மன்னாய் –உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ –-அவனதான நித்ய விபூதியோடு  ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ –அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது – உன்னை தளர விட்டு இருக்குமோ-ஆண்டு தோறும் அங்கு சென்று-நம் சடகோபனைத் தந்து அருளாய் என்ன கொடுத்து அருளுகிறானே-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அறியாது ஒழிந்தால் –அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் -உன்னை விட்டு இருக்குமோ –கலந்தார் -என்றே-காணும் அவனுக்கு நிரூபகம் –ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும்-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -விமல சரம தேகம் அன்றோ-ஸ்வரூபம் இங்கு ஆழ்வார் ரூபம் நிலம் தாவிய எம்பெருமானே கலந்தார் – வேறே பெயர் இல்லாமல் இதுவே ஸ்வரூப நிரூபகம்வா வெதிர் கொண்டு – வாசி யறியாத ஸ்த்தாவரங்களும் கூட –
அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற   படியைக் கண்டு(இவையும் உத்யோகித்து )அலராமல் நிற்க –நீ தளரும் இத்தனையோ –வன் கொன்றைகள் – அவன் வரில்  அலரக் கடவதாய் -இல்லையாகில் தவிருமதாய் –இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் –இவை பூத்தால் அவன் வந்திகிடுவான்-பூக்க வில்லையே-அதனால் வன் கொன்றைகள் குயிலே நீ கூவினால் அவன் வந்திடுவான் போல்கார்த்தன –சினைத்தன –கருவடைந்தால்-ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் –அன்றியே-கார்காலத்தைக் காட்டி நின்றன -என்றது ஆதல் –பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் – வன் கொன்றைகள் கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன – மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில –-அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில  -என்னுதல் –

கார்காலம் வந்தது அன்று -அவன் வருகையை முன்னிட்டு மகிழ்ந்து கொன்றை மலர்கள் அரும்பின –
கலந்து பிரிந்த தலைமகன் கொன்றை போக்கும் காலத்திலேயே வருவேன் என்று சொல்லிப் போக –
அக்காலமும் வந்து அவையும் போகச் செய்தே-அவன் வாராமையாலே தலைமகள் தளர அத்தைக்கு கண்ட தோழியானவள் – அக்காலம் அல்ல என்ன ஒண்ணாத படி-அவை முடிகிக் கொடு நிற்கையாலே இவை பூக்க உத்யோகிக்கின்றன அத்தனை -பூத்துச் சமைந்து இல்லை காண்-ஆன பின்பு அவனும் வந்தான் அத்தனை -நீ அஞ்சாதே கொள் என்று ஆசிவசிப்பிக்கிறாள்-அக்காலம் அல்ல காண்
என்னும் தோழி கெடுவாய் இவை இங்கனம் மலரா நிற்க அல்ல காண் என்னும் படி எங்கனே என்ன மலர உபக்ரமித்த அத்தனை காண் -மலர்ந்து சமைந்து இல்லை காண் -என்கிறாள்–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால் – தழைப் பந்தர் தண்டுற நாற்றி -என்கிறார் இத்தைக் கண்ட கண்கள் வேறு எங்கும் போகாது என்பதை –புலந்தோய் தழை- புலம் -நிலம் -தரையிலே வந்து தோயும்படி கவிந்து செழித்து உள்ள தழை என்றுமாம்–வைகுந்த மன்னாய்-எம்பெருமானுக்கு உரியவள் -உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான்-கலந்தார்-பிரிந்தார் என்னாமல் -கலந்தார் என்றது உன்னை கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்றபடி-வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-வாசி அறியாத ஸ்தாவரங்கள் கூட வர இருப்பதைக் கண்டு அலரா நிற்க நீ தளர வேண்டுமோ –தாம் மலர்ந்தால் இவள் கலங்குவாள் என்று அறிந்தும் மலர்ந்த வன் கொன்றைகள்
கார்த்தன -கருக் கொண்டன -அரும்பின் நிலையை ஒழிய மலரின் நிலையை அடைய வில்லையே –
கார் காலத்தை காட்டா நின்றன என்றுமாம் –எம்பெருமானுக்கு உரியவரே-உம்மை ஆட் கொள்ளாது ஒழியான் –அவன் வரவை ஸூசிப்பிக்கும் காலம் தோன்றா நின்றது-வரும் காலம் இன்னும் அணுகிற்றிலை என்று கூறி ஆற்றிய படி –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி –கொன்றைகளானவை மாலையாகவும் மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே கொம்புகள் சிக்கனைத் தூக்கி மலர்ந்தே வியானவில்லை–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய–பொரு கடல்-செறிந்த கடல் என்னவுமாம்–தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே-அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான ஸ்வ பாவத்தை யுடையவளே–(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே-நித்யம் நிரதிசய போக்யம் -கீழ் அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழ்பவர் அன்றோ )கலந்தார் வர வெதிர் கொண்டு-தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி-வன் கொன்றைகள்-நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத வன்மையை யுடைய கொன்றைகள்–கார்த்தனவே –-கருவடைந்து அரும்பின இத்தனை-மலர்ந்தன வில்லை என்றதாயிற்று-வன் கொன்றை என்று அரும்பின சிக்கனவைச் சொல்லி மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )-இத்தால் விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே (கொன்றைப் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு உஸாத் துணையாக ஆசைப்பட்டவர் விளம்ப அஷமதையாலே சிதிலராக ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது–இதில் வன் கொன்றை -என்கையாலே ஸ்த்தாவர பிராயராய் அஞ்ஞரான சரீரிகளுடைய தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-தண்டுற நாற்றி -என்கையாலே (கிளையில் பொருந்தி ) இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி (கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )-மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே-கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில் அதிசயித்தது இல்லை என்றபடி-அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது-பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடிகார்த்தனவே -என்கையாலே ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே தூக்கின அளவே காண்
மலர்ந்தே ஒழிந்தில-மலர உபக்ரமித்தனை-இன்னும் மலர்ந்தது இல்லை-அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே-உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள் கார்த்திக் கொண்டே நின்றன காண்–கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ-அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-ஸ்வாபதேசம்-இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் இக்கலையை அவகாஹித்த படியாலும் போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் – இத் தலையை அவன் அவஹாகித்த படியாலும்-
போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை   சொல்லுகிறது –தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை
-செறிந்த  –பந்தல் -பந்தலாக –தண்டு -சாகைகளிலே –உற –சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் –
சினைத்தல் -கர்ப்பமாதல்-மொட்டாதல்-மகாத்மாவின் விரஹ அஸஹத்வம் வளத்தின் களத்திலே கூடு பூரிக்கும் –திரு மூழிக் களத்திலே காட்டி அருளிய திருக்குணம்

தாத்பர்யம்–சர்வேஸ்வரன் குறித்த காலத்திலேயே வராததால் நோவு பட்ட தலைவியைத் தோழி காலத்தை மயக்கி சமாதானப்படுத்தும் பாசுரம்-பார்ஸ்வஸ்த்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்
கிலேசிக்கும் ஆழ்வாரை சமாதானப்படுத்த கிறார்கள்
ஓ சஹி நாயகன் குறித்த காலம் இன்னம் வர வில்லை-பூக்கள் மாலையாகவும் பூமி எங்கும் படர்ந்து இருக்கும் காலத்தில் அன்றோ வருவதாகச் சொல்லிப் போந்தான்-அவன் உன்னைக்கான உத்யோகிக்க
இவையும் பூக்கள் அலர்ந்து உத்யோகிக்கின்றன அத்தனையே -இவரை சமாதானம் பண்ண இத்தனையும் பண்ண வேண்டுமே
உபய விபூதி நாதன் ஒரு கால விசேஷத்தில் இங்கே வந்து அவதரித்து போல் அல்லாமல் நித்ய ஸ்ரீ வைகுண்டம் போல் அவனது போக்யத்தை நித்தியமாக வளர்க்கும் படி அன்றோ உம்முடைய போக்யதை
உம்முடைய சம்ஸ்லேஷமே தாரகம்-என்று -இருப்பவன் அன்றோ அவனும்-உன்னை விட்டு க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லன் அல்லனே -அவன் வரவைக் கண்டு இவையும் பூக்க ஆரம்பிக்கின்றன-அண்ணல் வந்தான் -ஆரியன் வந்தான் என்று திருவடி-பரதனுக்கு சமாதானம் சொன்னதுக்காக அவன் வரவில்லை-அதே போல் அரும்பிக்கத் தொடங்கிற்று-இவை பூத்து சமையும் அளவில் வந்தே தீருவான் கவலைப்படாதே என்று சமாதானம் பண்ணுகிறார்கள்

9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ப்ரவேஸம்-

ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –

————————————————————————————————-

கொண்ட பெண்டிர் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்

முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –

முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –

கீழ் அனுகூலமாகக் கொண்ட -இங்கு எல்லாமாகக் கொண்ட பெண்டிர்-ஆச்சார்யனும் பரம் பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட –பத்னியே ஸர்வம் என்று கொண்ட -தான் மட்டும் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி-பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி-தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம்-

காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்

மற்று -எனபது-காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது-அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே

பிரான் –
உபகார சீலன் ஆனவன் –

தொண்டரோமாய் உய்யல் அல்லால் –இல்லை கண்டீர் துணையே–விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ் வர்த்தத்தை அறுதி இடுகிறார்-ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்-அவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் இல்லை யாகில் இல்லையாம் இத்தனை –அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

————

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக் கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-விஸ்வாச ஜனகனுமாய்-யுபகரிக்குமவனை-ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –

துணையும் சார்வும் –துணையாகை யாவது –துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் 

புணை என்று உய்யப் போகல் அல்லால் – இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாத்ரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

—–

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆன பின்பு-அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்–அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்-கொடுக்கத் தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –

—————-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய-இல்லை கண்டீர் சதிரே –

இல்லை கண்டீர் சதிரே –நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ-சதிராவது -அநாயாசேன பலம் பெறலாம் பிரவிருத்தி-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —
நெற்றி சிறியதாய் பயன் கனக்கப் பெறுமது அன்றோ சதிராவது- இங்கு நெற்றி –நம -என்றல்-பயன் –சமன் கொள் வீடு -அன்றோ –

———

சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர் கொள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி-மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-

தன்னைப் பெறா விடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப் படுவர்
ஆன பின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்

எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் – எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது-உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

———

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –

உள்ளது நினையாதே – உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –

மல்லை மூதூர் வடமதுரைப் – நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-முன்பே துருவன் தவம் செய்த மதுவனமாகவும்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –

———-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்

மற்று ஓன்று இல்லை – இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

சிற்ற வேண்டா –வருந்த வேண்டா-சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாரத்தவ
அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

———–

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் –நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –

——

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –

மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –

——-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –

தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்

தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி

—————

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகவத உத்தமர்களுக்கு சேஷ பூதர்-இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –தாது சேர் தோள் கண்ணனை-அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -67-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –நங்கள் வரி வளை -8-2-

March 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் செவிலித்தாய் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள்-

அவதாரிகை –கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்டதிருத் தாயார்- பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து – என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–இப் பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று அருளிச் செய்த படியே
இவ் வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்mஇந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய் இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
–47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்
—60-ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
–சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார் அது சேஷித்வ உத்தியோகம் இது சேஷத்வ உத்தியோகம் –அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்–நெஞ்சே வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்-

திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –-வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –
என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம் தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –முகந்து சொரிகின்றது –
அங்கு குறைவற்று கிடக்கிறது – வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு
பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது – அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும்  அப்படியே -என்கிறாள் –
(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –-திரிகின்றது என்றது-(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில்-அதுவும் அது -அவ்வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —

கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 –ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் )-தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே – ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி—பதி சம்மாநிதா –அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று- அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி – ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி –ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )

தலைவன் தன் ஆற்றாமைக்கு காரணம் சொல்லும் பாசுரம் – உத்தம லக்ஷணம் ஆகிற ரேகைகள் செம்மையால் செங்கழு நீரையும் -கரு நிறத்தால் நீலோத்பத மலரையும் கூர்மையாலும் வருத்துவதாலும் ஒளியால் வேலாயுதம் போன்றதும் -குளிர்ச்சியால் வடிவாலும் கயல் மீனையும்
மருட்சி முதலியவற்றால் மான் விழி போன்ற பல வற்றுக்கும் கூட ஒப்பு சொல்ல முடியாத திருக் கண்கள்
என்னை வென்று வருத்தி உயிர் நிலையில் நலிகின்றன-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று –சிவப்பாலே செங்கழு நீரையும் நைல்யத்தாலே நெய்தலையும் கூர்மையாலும் ஒளியாலும் வேலையும் குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்-மற்றும்-கண்ணுக்கு ஒப்பான வாள் அம்பு வடி மான் விழி முதலான பலவற்றையும் வென்று–அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே பலவற்றையும் வென்று என்னவுமாம்–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல இவற்றினுடைய கோலுதலின் பரப்பு–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்-விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்–பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே-இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்--கோவிந்தன்-வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ-பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்–வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்–இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )கண்களாய துணை மலரே-கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை–இவற்றுக்கு -என்று-அத்யாஹரித்து-ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று அந்வயம்

இத்தால்–காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே–ஆழ்வாருடைய ஞானமானது ராக ஹேதுவான ரஜஸ்ஸையும் கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும் லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே-முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )-இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி-தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே-இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும் பாரதந்தர்யமும் (பேடை) ஸூசிதமாயிற்று–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று-அலர் மேல் மங்கையைச் சொல்லி அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )-கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்–ஆஸ்ரிதற்கும் துணையான விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம் –காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று-கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்-விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால் எல்லாம் கூட ஒப்பாகவற்றோ-மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது–விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே-பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை–இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு-சிவப்பாலே செங்கழுநீரை வென்று கருமையாலே நெய்தலை வென்று ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று-மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன–ஆவியின் தன்மை அளவுள்ள–இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன-இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்–அசுரைச் செற்ற மா வியம்புள் வல்ல மாதவன்–அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய் விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய் இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்-மாதவன் -கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்-கோவிந்தன் -அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்–வேங்கடம் சேர்-அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி திருமலையிலே வந்து ஸூலபனானவன்–தூவியம் பேடை யன்னாள்-கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான தூவியம் பேடை யுண்டு அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை-அத்தோடு ஒத்து உள்ளவள்–அன்றிக்கே-தூவியம் பேடை -என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய் அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்–கருட வாஹனன்–ஸ்ரீ லஷ்மீ பதி என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை–கண்களாய துணை மலரே–கண் என்கிற வியபதேசத்தாலே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று–கண்களாய துணை மலரின் பாரிப்பு காவியும் என்று தொடங்கி ஆவியின் அளவுள்ள பாரிப்பு என்று அந்வயம்இத்தால் திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும் கறுப்பாலே நெய்தலையும் தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும் ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும் மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்-அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர் கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும் திருவேங்கடம் சேர்ந்தவனும் அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய் தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய கண்களாய துணை மலரே–ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே–என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு-என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத பலவிதரண உத்ஸாஹம் உள்ளது–ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில் கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

ஸ்வாபதேசம் –-ஆழ்வார் ஞான விளக்கம் -ஆழ்வார் -துஷ்ட நிக்ரஹ சீலத்திலும்-கருடாவாஹன ரூபத்திலும் -உத்தம பிரமாண ப்ரதிபாத்யனுமாய் புருஷகார பூதையான பிராட்டிக்கு வசப்பட்டவனும் – ஆத்மாக்களை பரிபாலனம் செய்து அருளும் அவனது வாஸஸ் ஸ்தானம் திரு மலையில் ஆழ்வார் ஈடுபட்டமை –வேங்கடம் சேர்-இடை விடாமல் நினைந்து கொண்டே இருப்பவர் என்றவாறு
தூவியம் பேடை யன்னாள்-சுத்த ஸ்வ பாவமும் -அர்ச்சிராதி கதி கூட்டிச் செல்ல சாதனம் உடைமையும் பார தந்தர்யமும் சொன்ன படி-வேங்கடம் சேர்-தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயாருக்கு ஒப்பு உடையவள் என்றுமாம்-கண்களாய துணை மலரே-தமக்கும் தம் அடியார்க்கும் துணை யாகும் ஞான வகைகள் காவியை வென்றது என்றது ரஜஸ் குணங்களை அகற்றி என்றபடி-நீலத்தை வென்றது தமஸ் அகற்றி வேலை வென்றது என்றது சத்வ குணத்தை கடந்து – கயலை வென்றது முக்குணங்கள் ஜட பொருள்களை வென்று சஞ்சலத் தன்மை இல்லாமை என்றபடி-இப்படி பட்ட ஞான விசேஷம் எம்மை வென்றதில் அதிசயம் இல்லையேவியப்புள் என்றது -வியம்புள்-என்று மெலித்தது –

ஸ்வாபதேசம்–இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு–பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –

6-10-உலகம் உண்ட பெருவாயா! -ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக் கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக் கடவன.

கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் –
பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
சரணாகதனுக்கு பிராப்ய பிராபகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே -வாத்சல்யம் திருவேங்கடத்தில் –

பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும் -அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்கக் கடவது -என்றவாறு

கீழே ஸங்க்ரஹ சங்கதி
இனி விஸ்தார சங்கதி அருளிச் செய்கிறார்

மிகப் பெரிய துன்பத்தோடே பரம பதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் சர்வ ரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே,
நித்திய ஸூரிகட்குக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சர்வேஸ்வரன், பலரும் நம்மை இழக்க
நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து
அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;

அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்க வேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம் புக்குத் தம்முடைய-அத்யாவசாயத்தை – எண்ணத்தை அறிவிக்கிறார்.

மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மி புக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அது போலே இத் திருவாய்மொழி.

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –
(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் –
ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்

இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

இனித் தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும் வேணும்;
தான் அதிகாரியாகவும் வேணும்.
நற் குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அது தானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணா நின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.

இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –

“மயர்வற மதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்.
(எப்படியாவது கார்யம் செய்விக்கத் தேடுவார்களே -அச்சம் கொடுத்து ஆகிலும் காரியமே மடல் எடுப்பது )
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடி யுடையார்க்குக் கார்ய கரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே

“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாசசலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வேங்கடாசலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்ததால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிரார்தித்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
ஓன்று அத்விதீயம் இரண்டு வாக்கியம் மூன்று கண்டங்கள்-
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே –
அஷ்டாஷர விவரணம்- நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –
கைங்கர்ய பிரார்த்தனை ஒழி வில் காலம் எல்லாம்
இதில் சரணாகதி
த்வயம் இரண்டு வாக்யத்துக்கும் இவை இரண்டும் –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயம் ஸதா அனுசந்தேயம் –சந்ததஸ் ஸ்புரிதா சதம் -நம் பூர்வர்களுக்கு

பத்தாம் திருவாய் மொழியில் -கீழ் -தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே புருஷார்த்த வைலக்ஷண்ய நிபந்தமான ஆர்த்தி
பிறந்து கூப்பிட்டவர் -பல சித்திக்கு சரணையானவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை -என்று அறுதி இட்டு
சரண்யத்வ பிரகாசகமான அகில ஜகத் ரக்ஷண ஆகாரத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தனத்தில் அத்யுஜ்ஜ்வல பரிகர யோகத்தையும்
ரூப குண சாரஸ்யத்தால் யுண்டான ஊத்துங்க அநு பாவ்யதையையும்
ஜகத் விரோதிகளுக்கு தீங்கு விலைக்கும் ஸ்ரீ மத்தையையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான அ நாயாச வியாபாரத்தையும்
அதிசயித ஞானர்க்கும் ஆராத்யனாம்படியையும்
சர்வ சாதாரண சாரஸ்ய அதிசயத்தையும்
சர்வ ரோதரான ஈஸ்வர அபிமானிகளுக்கும் சதா ஆஸ்ரயணீயனாம் படியையும்
அதிசயித போக்யமான அவயவ சோபையையும்
ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தையும்
அனுசந்தித்து -இப்படி சரண்யனான திருவேங்கடமுடையான் விஷயமாக
ச க்ரம சமக்ர சரணாகதியைப் பண்ணித் தலைக் கட்டுகிறார்-

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே
.–6-10-1-

1-பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
2-அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
3-வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
4-அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய்- நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
5-வாயாலேயே ரக்ஷிக்க வேண்டுமோ -வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
6-அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
7-உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை -ரஷிக்கலாகாதோ
8-வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
9-வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
10–ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி ரஷிக்கலாகாதோ -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
11-பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து -கூட இருப்பாரை ரஷிக்கலாகாதோ
12–மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மாஸூச சொல்லி ரஷிக்கலாகாதோ
13-ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
14-அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்

ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
( உலகத்தார் உலகம் போல் அசேதனமாக இருந்தார்களே )
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப் பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேண்டும் என்கிற நியதி உண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?

பெரு வாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,-அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.-உலப்பு இல் கீர்த்தி அம்மானே – இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;-இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஆர்ஜித்த -ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.-பொழில் ஏழும் காவல் பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,-இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியை யுடைய சர்வேஸ்வரனே!-ஸ்வரூபம் ஒழிய குணங்களுக்கு அன்றோ இவர் தோற்றது-நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி – பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி-த்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.-நெடியாய் –மேலே கூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதபடி யாயிருக்கை.-நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.-அடியேன் ஆருயிரே–-வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னை விட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!-“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க-இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.

இவ்வளவும் வர, அவனுடைய ஸ்வரூபம் சொன்னார்; இனி, தம் ஸ்வரூபம் சொல்லுகிறார்:-குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி –
இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;-தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் –உன பாதம் கூடுமாறு கூறாய் –-ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.-அடியவன் உன்னைக் கூட என்னுமது ‘உன பாதம் கூட’ என்பதே அன்றோ.-இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
பெறுமாறு சொல்லாமல் கூடுவதை -சா யுஜ்யம் -யுஜ் -தாது -சேர்ந்து குண அனுபவம் –-கூறாய் –-உனக்கு ஒரு சொல்;-எனக்கு ஸ்வரூப லாபம் கண்டாய்.-அவன் ஒரு வார்த்தை அருளிச் செய்ய, தளப்பம்-அலைச்சல் – தீரும் அன்றோ-இவர்க்கு. “மாஸூச: – துக்கப்படாதே” என்ன வேணும்.-

—————–

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே
.–6-10-2-

அவன் அருள் மறுத்த போதும் இங்குத்தை அருள் மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.-அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.-திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு-திரு நேமி வலவா –-நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!-தெய்வக் கோமானே –அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர்.
அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இரு துண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ.-இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.-அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.-அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கை மேலே ஜீவனமாயிருக்கும்;-இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-ஸூய பிரயத்தனம் இங்கு –

சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –-சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப் போலே மலரா நிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;-நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.

ஆறா அன்பில் அடியேன் –-இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி.-சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.-மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.-கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.-உன் அடி சேர் வண்ணம் அருளாயே – உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்.-நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை இடப் பாராய்-நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –

———–

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.
–6-10-3-

வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞான லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு,
பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? -என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ

மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி-இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள் கொள் அணி மேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாய் – கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!-உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு
ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருள வேண்டும்.-உன்னடி அன்றோ?
உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.-

அடியேற்கு ஆ ஆ என்னாயே.–அடியோமுக்கு -முறை அறிந்த எங்களுக்கு -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருள வேணும் –வடிவு அது -குண சேஷ்டிதங்கள் அவை -ரஸ்யத்தை அது -மேன்மை அது -ஸுலப்யம் அது -இப்படிப்பட்ட உன்னோடு உண்டான முறையை அறிவித்தால் ஆறி இருக்கலாமோ-

————–

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.
–6-10-4-

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;-நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,-“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,-“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,-“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.-ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம்-

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,-‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,-செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் -விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;-நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.-பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.

திருமாமகள் கேள்வா –-விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ-உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ?புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?-அருவினையேன் 
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது,-எனக்கு ஆசை கரை புரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனிய பொருளாக இருப்பது;-இங்ஙனே இருக்கச் செய்தே,
கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.-
பொருந்துமாறு புணராயே –
அசோக வனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;-புணராய் –உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்ய வேணும் என்னுதல்.

————–

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே
.–6-10-5-

ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

திணர் ஆர் சார்ங்கம் –-தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.-உன பாதம் – அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.-சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் –-ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே-சேர்வது அடியேன் எந்நாளே –-கையில் வில் இருக்க இழக்க வேண்டா விரோதி உண்டு என்று;-இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்ல வேணும். கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம் where there is will there is way

————

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?
–6-10-6-

 இங்குள்ளார் அங்கே சென்று அடிமை செய்ய ஆசைப்படுமாறு போலே காணும்,
அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.-மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் 
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யா நிற்பர்கள்.
அன்றியே,-மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது,-வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக் கொண்டு அடைந்து வணங்குதல்.-நித்திய ஸூரிகளான போது, கைங்கரியமாகக் கொள்க.
பிரமன் முதலான தேவர்களான போது, உபாசனமாகக் கொள்க-மேலே அவர்களை சொல்லுகையாலே ப்ரஹ்மாதிகளை சொல்கிறது உசிதம் அன்று –.-மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –-குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;-நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே
.–6-10-7-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – தேவஜாதிகளுடைய உப்புச் சாறு போலன்று;
ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;-வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.-அநந்ய ப்ரயோஜனமாய் -நித்தியமாய் -அத்விதீயமாய் இருக்கை-அமர்கின்ற -அர்ச்சை-மேவி -மற்றவற்றை த்யஜித்து-செடியார் வினைகள் தீர் மருந்தே-அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.-

திருவேங்கடத்து எம்பெருமானே – அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.

1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய், 4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,
6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.

1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தைச் சொல்லி –4–ஸுலப்யம் சொல்லி –5-அழகைச் சொல்லி-6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது

பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே,-என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே
இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்–அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப் பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே அனுஷ்ட்டித்து பலம் தாழ்த்தாரைப் போலே கூப்பிடா நின்றேன் –

————

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே
–6-10-8-

எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது – 

மாலாய் மயக்கி –-“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,-அன்றிக்கே,-மாலாம்படி மயக்கிக் கொண்டு வர வேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;-ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் –-வ்யாமோஹம் என்னிடம் உண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,-கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக் கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒரு வரத்து வர வேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.-மாலே செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத் தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை.-மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-

————–

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே
.–6-10-9-

போக்கியமும் குறைவற்று, அவன் தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப் பெறாது ஒழிவதே–எனதுயிரே!-புண்டரீகாக்ஷமாய் சதுர்புஜமுமாயிற்று இவர் பிராணன் இருப்பது-அந்தோ -ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே
அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –-என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.-காணா நிற்கச் செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.-நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
.–6-10-10-

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–
வெறுமையும் ஸ்வரூபமும் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் – பிரபதிக்கு பரிகாரம் அன்றோ

அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
(போக்யத்வம் மார்த்வம் வாலப்யம் மூன்றும் கீழே பார்த்தோம் இதுக்கு )
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,(பிரிய மாட்டாள்)
“உறை மார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
(பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி –
கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் –
எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே )

“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் )
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

இனி த்வயத்தை விட இங்கு ஏற்றம்
அதில் அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின் பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-
பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –
(த்வயத்துக்கு லக்ஷணம் சொல்லும் இந்த வாக்கியத்தில் இருப்பதால் இது இங்கு தானாகேவே சொல்லவில்லை -)

ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச் செய்கையில் அருளிச் செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச் செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
(கையில் வில் நழுவி போக்கற்று நின்ற நிலையே சரணாகதி தானே )
இங்ஙனே இருக்கச் செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக் கண் இட்டிருக்கை அன்றிக்கே,
தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.

ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச் சொல்லி,
முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது.
தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக் கடவ இவள்,

இதில் உபாயத் தன்மை சொல்லச் செய்தே,
உபேய விஷயமும் ஸூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில்,
இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமை செய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப் பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாக வல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.

இவள் அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத் தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது. -காஷாய வஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப் புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.-இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விட ஒண்ணாது என்கிறார்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –

திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்த பொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குண யோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும் இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலை பெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. –
அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.

மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி
சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் ஸ்வரூபமாவது,
நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.

அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்திய ஸூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க் கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத ஸ்வபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக் காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பிய ருசியும் ஸ்வரூபப் பிரகாசமும் என்கிற இவையே யன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;

ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;-புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –

உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் –
சரீரத்தால் பேறு வேதம் —
ஆத்மாவால் பேறு திருமந்திரம் –
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்

திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –பாத ரேகை போல் அமர்ந்து புகுந்தார்
மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -சாம்யாபத்தி கொடுக்கும் –
கிழிச் சீரை போல் தனம் –
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே
ராஜ குமாரர் கற்பூர நிகரம் போல் த்வயம் நமது பூர்வர்களுக்கு
கூரத்தாழ்வானனுக்கு சரம விமல திருமேனியில் த்வயம் ஓத உடையவர் கட்டளை –

———————

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
.–6-10-11-

அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.-“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.

பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம் புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.

நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து
இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.

பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் – வேணும் –இவை அந்தர் பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று -நோற்ற நோன்பு -5-7-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு-தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது-அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது -ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோஇந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுது விவரணம் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –பதிகங்களும் அடுத்து அடுத்து உள்ளன –ஆழ்வார் ஞானம் –அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை-இதுவே புகல் இப் பாசுரம் -வேறே கிஞ்சித்தும் இல்லை-இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் –ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்-காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே பேசித்தான் ஞானம் வளரும் –செவி அளவு நீண்டு என்றுமாம் –1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்–2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்–3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்–4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள் -யெம்மை உண்கின்றவே -என்றவாறு-

அவதாரிகை தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள்  தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்குச் சொல்லுகிறான் –தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்-கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு-(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்-உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல்)இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே ) அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை–தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன் ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-வண்ணம் சிவத்தில் அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன் அவன் நோக்கின் வாசியை-செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் இதில்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
–65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது
—-47–அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று சம்சாரி சம்ரஷண அர்த்தமாக ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற-நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –அவ்விடத்தில்- அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்

கற்றுப் பிணை மலர் –கன்றான மான் –முக்தமான மானுடைய கண் –மலர்க் கண் –மலர் போல் இருக்கிற கண் என்னுதல் –விகசிதமான கண் என்னுதல் –குலம் வென்று –அஜ் ஜாதியாக வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்றுஒரோ கார்யத்திலே உற்று –அதிலே நெருங்கி –அதை செவியொடு உசாவி –சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே –ஒன்றிலே துணிந்து –அதிலே நெருக்கி –அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே- இவனையே ச விஷயமாக (விசேஷமாக )கடாஷிப்பது –இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி –யான் நோக்கும் காலைநிலை நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (திருக்குறள்) -என்கிறபடியே –உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து –அவன் எல்லைக்குள்ளே இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –உற்றாம் உறாது மிளிர்ந்த –உற்றும் உறாதும் மிளிர்ந்த மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –அந் நோக்கிலே பரவசனாய் –இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு மிளிரா நின்றுள்ள –கண்ணா யெம்மை உண்கின்றவே –கண் என்கிற வ்யபதேசத்தாலே –ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –இணைக் கூற்றங்கள் கொலோ அறியேன் -ஆழ்வார் அருளிச் செய்தது போல்-

ஸ்வா பதேசம்-இத்தால்–ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது – கற்றுப் பிணை மலர்க் கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது (அறியாத பிள்ளைகள் போல் ) ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால்
பிரபத்தியை சொன்னபடி இறே-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ – கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் –அதில் கர்த்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது –இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே –சாதனத்தில் அன்வயியாதே- ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே-பிரார்த்தனா மதி சரணாகதி–அறிவும் வேணும்-பற்றினதுவும் உபாயம் இல்லை என்ற அறிவும் வேண்டுமே-அவன் திருவடியே -இசைவித்து அவன் தாளிணைக் கீழ் இருத்துமவன் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தியுயைத் தவிர்ந்த ஞானம் -ஆழ்வாரது – இது தானே குலமாக வென்ற ஞானம் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ கண்ணா இத்யாதி –சொன்ன படியை உடையராய் இருக்கிற(ஞானிகள் அனைவருடைய ஞானங்களையும் விழுங்கிய ஞானம் தானே ஆழ்வாரது )
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று இருப்பதாய் – ஒரோ கருமமும் உற்றுப் பயின்று – செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் – உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் இருந்து – உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற – என்று அந்வயம் –

தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும் தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –உற்றமுறாதும் மிளிர்ந்த –குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே –உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று-தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே-பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்–செவியொடு உசாவி-மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும் நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த ஈஸ்வரனுடைய திருவடிகளிலே–உற்றமுறாதும்-உற்றும் உறாதும்-கிட்டினார் கண் போலேயும் கிட்டாதார் கண் போலேயும்–அதாவது உகப்பும் செல்லாமையும் தோற்றி இருக்கை-நாயகனைக் கண்ட உகப்பும் இவனை ஒழியச் செல்லாமையும் தோற்றும்படி பார்வையிலே அறியலாய் இருக்கை–மிளிர்ந்த கண்ணாய்-உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி கண் என்று பேராய்-எம்மை உண்கின்றவே-நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள் கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று-

இத்தால்–கற்றுப் பிணை -இத்யாதியாலே–இவ்வாழ்வாருடைய ஞானம் ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி-ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே -ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும் ஸ்வரூப விரோதிகளிலும் புருஷார்த்த விரோதிகளிலும் சாதன விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி–செவியொடு உசாவி –என்கையாலே இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது-மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று–எம்மை யுண்கின்றனவே -என்கையாலே-இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் கற்றுப் பிணை-கன்றான மான் முக்தமான மானினுடைய-மலர் கண்ணின்-மலர் போலே இருக்கிற கண் என்னுதல்-விகஸிதமான கண் என்னுதல்-குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-ஒரோ கார்யத்திலே யுற்று அதிலே நெருங்கி அத்தைச் செவியோடே உசாவி ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே ஒன்றிலே துணிந்து அதிலே நெருங்கி அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது–உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்-மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது-அந்நோக்கிலே பரவசனாய் இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்–எம்மை உண்கின்றவே-கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது–இத்தால் ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறதுஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால் ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது–பின்னை ஞான கார்யம் அன்றோ –கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில் அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது-இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே-செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
-சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்–ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்-தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய் ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்-செவியொடு உசாவி-அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும் அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய–உற்றமுறாதும்-கிட்டின அவளாயும் கிட்டாத அவளாயும்–மிளிர்ந்த கண்ணாய்-கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்–எம்மை-என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு–உண்கின்றவே-எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

ஸ்வாபதேசம் –-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம் செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாத -இரண்டையும் காட்டிய படி-மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –

தாத்பர்யம்–ஆழ்வாருடைய ஞான வைபவம் -சொல்லும் பாசுரம் நாயகி பேச்சால் அருளிச் செய்கிறார்
இரண்டு கண்கள் என்னை ஈடுபடுத்தி -வேறே எங்கும் செல்ல வேண்டாத படி ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–மான் பேடைகள் சேர்ந்தாலும் -குலத்தையே வெல்லும் பிரபன்ன ஜன கூடத்ஸ்தர் அன்றோ-அதி ஸூந்தரமாய் சாமான்யம் இல்லாமல் -விலக்ஷணமான கண்கள் நான் வேறே இடம் பார்க்க என்னையே பார்க்கும் நம்பினான் –மடவாரையும் முன் எல்லாம் செம் பொன் மாடத் திருக் கோயில் – திருடப் போனேன் பயன் ஒன்றும் இல்லாமல் பாங்கும் இல்லாமல் இருக்க என்னைத் திருத்திப் பணி காய்ந்து அருளினாரே –நான் திருந்திய பின்பு-இங்கு இல்லாமல் -தன்னுடைச் சோதி புறப்பட்டு போனார்–செவியுடன் ஆலோசித்து -செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-ஆழ்வார் நினைவால் இவர் தமக்கு சிஷ்யன் அல்லர் -தான் ஆச்சார்யர் உடைய ஸஹ சிஷ்யரே என்று திரு உள்ளம் கொண்டவர் அன்றோ -இத்தை அறிய உசாவி ஆலோசித்து-செவி அளவும் நின்று உலாவும் உலகம் அளந்த அவனது திருவடிகள் போல் ரக்ஷகனாய் இல்லாமல் என்னைப் பாதிக்கின்றனவே–மத் பாபமே-ஆழ்வார் -அனுபவம் பகவத் அனுபவத்துக்கும் மேலே அன்றோ-ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்-ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –

5-7-நோற்ற நோன்பிலேன்-ப்ரவேஸம்

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ

ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
.—5-7-1-

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,-“நோற்ற நோன்பிலேன்”–இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;-“ஆற்றகிற்கின்றிலேன்–பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;-சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த”--ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ -பக்தியுடையேனல்லேன்-‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன-சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது-க்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.-ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,-அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்-அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,-ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,-“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் ஆத்ம சித்தி “சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.–புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது

உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.-ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,-இனி--உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –-ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –-என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?

உன்னை விட்டு-நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,-உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.-ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் – உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.-“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.

உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம்-வீற்றிருந்த--‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,-தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )– அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! -பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.-அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –-காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.-உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன்-இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்-ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.–ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –

—————-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே
.–5-7-2-

“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் –அங்குற்றேன் அல்லேன் – முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.-இங்குற்றேன் அல்லேன் –-இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.-உன்னை மறந்து,“அவர் தரும் கலவியே கருதி”அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் -‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.- ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.

அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.-இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்-நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )-பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;-அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன்-சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் –

ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது-அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ-சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?

சங்கு சக்கரத்தாய் –-பரிகரம் இல்லையே? என்ன, ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது -1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?

தமியேனுக்கு – 1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு--2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு.-தமியேன்–3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை.

அருளாயே –-என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,-அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.-ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.-

————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே
 –5-7-3-

கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங் நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை-சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும்-

———–

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?
–5-7-4-

கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –-ஐவர்க்காய் –-அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.–மாயப்போர் தேர்ப்பாகு–எந்தாய் –-எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.

பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? –அம்மானே –‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.

அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,-‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.-சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.—வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,-இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும்-

———-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
–5-7-5-

அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு--வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:
” -ஸ்ரீ கீதை, 9: 34-
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.-இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,-ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:

எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –-அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.-அங்கு புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து -தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,-வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி

அம்மானே– சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?-உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –-அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய்.——-அது நானும் கண்டேன் –-ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;-அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,-அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.-திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.-வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

————–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6-

வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.—-ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.-காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.-சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.-என் அப்பனே-பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-கோலம் கொள்ள வேண்டுமோ?-(முகம் – வேறொரு பிரகாரமும்,-வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.)

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –-தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய ஸூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-மணி மாணிக்கச் சுடரே –உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,-இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்திய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –-சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —-இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

அடியேன் தொழ வந்தருளே –சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன்-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும்-என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும்-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

—————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
.–5-7-7-

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, – சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்துஅநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.

உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்-திரவிய குணங்கள் போலே சேர்ந்தான்-அப்ருதக் சித்தம்- என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-நித்திய ஸூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் 

ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.-இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.-

வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.-பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.-சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்-அடியேனை அகற்றேலே – ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.-இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –-இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.-வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார்

————

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!
–5-7-8-

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே-என்னை அகற்றினாய் அல்லையோ -உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்த-மாய வல் லைம் புலன்கள் –நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.-

————–

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே
.–5-7-9-

கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.-ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக் கொண்டவனே!-நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே –மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினை யுடையவர்கள்- நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்-மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்றிருக்குமவர்கள்-

எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,– ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.-விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,-இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
–5-7-10-

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.-ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.-சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்-ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்

2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.-ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று சொற்களைக் கூட்டிக் கோடல் தகும்.

நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி-நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.-நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –

4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் –மேலே அருளிச் செய்வார் –

நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!– திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் – பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே – தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி-நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-

—————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.
–5-7-11-

குருகூர்ச் சடகோபன் –-ஸ்ரீகீதையில் வேறுபாடு.-தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது–வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய ஸூரிகளுக்கு அமுதாவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –பாமுரு மூவுலகும் -7-6-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருநாமம் கற்க வில்லை -சொல் கற்றேன் -அர்த்தம் அறியாமல் கடாக்ஷம் பெற்றது -திரு நாமம் அஹ்ருத்யமாக சொன்னதால் என்றம் கனி கிடைக்காமல் காய் உண்பாரைப் போல் சொல் கற்றேன்–ஸர்வ ஸப்த வாஸ்யன் -அனைத்தும் அவனையே சொல்லும் -முனியே நான்முகனே -போன்ற சொற்களும் அவனையே சொல்லும்-நாராயண அனுவாஹம் நேராகச் சொல்லுமே-அதிகாரம் இல்லை எனக்கு -ருக் -வேத வாக்கியம் அறியாதவன் –பூ ஸூரர்கள் முறை மாறாமல் நீதி வானவர் போல் வணங்க நானும் நப்பாசை கொண்டு -வினைகள் பூரித்து நொந்து கொள்ள வேண்டும் படி உள்ளனவே-பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்-ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்-வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு-லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்-வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்-அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு-ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம் –

அவதாரிகை–திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது – அல்லாதார் மேல் வையாதே- தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் –அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன – அத்தாலே ஆகாதே -என்கிறார் –
(திருமால் இருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே )

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து -இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன–விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன் இத்தனை யன்றோ என்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்–அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன் அத்தாலே அன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே
– -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்
–66–கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-இப்படி ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே என்று வெறுக்கிறார் –

இருக்கார் மொழியால் –இருக்கில் ஆர்ந்த மொழியாலே –பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே–அறை வயிறாகவும்–பதராகவும் பார்க்கலாயிருக்கும் இடங்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று –வேதங்களிலே அவன் விபூதியை பரக்க சொல்லா நின்றால்-அதிலே ஏக தேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதி பத்தியை பண்ணியும் –  ப்ரசம்சா பரம் என்றும் சொல்லா நிற்பார்கள் –அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை பேசுகிற இடத்தில் – ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பார்க்கும்
பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை ஆயிற்று –
அதில் ஆர்ந்த (ஆர்த்த )மொழியாக சொல்லுகிறது –சர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி -என்ற
வாக்யங்களுக்கும் ஒருவனே வாச்யன் ஆகை இறே உக்தம் —(ஓதுவார் ஒத்து எல்லாம் அவனையே சொல்லுமே )உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்களை(சிவா சம்பு போன்ற சப்தங்கள் )
இவ் அநு வாகத்தில் நின்றவன் பக்கலிலே பிரயோக்கிகை யாலே எல்லாம் அவனையே சொல்லுகிறதாக வேணும் இறே –நெறி இழுக்காமை – பகவத் சமாராதனம் ஆகிற வைதிக மரியாதையை தப்பாமே –உலகு அளந்த திருத் தாளிணை –இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  –
என் உடம்பை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை –இவை அறியாது இருக்கச் செய்தே –தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –நிலத் தேவர் வணங்கும் –சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே –-விண்ணுளாரிலும் சீரியர் –என்னும்படியான பூஸூரர்  ஆனவர்கள் – உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –யாமும் –அவர்கள் உடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும் –அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை –பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்- அத்தை அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து – இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து

கனி இன்மையில் கருக்காய் கடிப்பவர் போல் – நெறி இழுக்காமை வணங்கும் படி அவர்கள் தம் பாவம் எனக்கு இல்லை யாகிலும் – கனி இல்லாமையாலே கருக்காய்-மெல்லுவாரைப் போலே — பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –திரு நாமம் சொல் கற்றனமே – இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –-இதில் நான் உட் புகாத நிலை பார்க்கிறிலேன் – நிர்ஹேதுகமாக கடாஷித்தான் இத்தனை –அன்றிக்கே-அவா -இத்யாதி –-பகவத் விஷயத்தில் அபிநிவேசத்தை அங்கு நின்றும் மீட்டு இதர-விஷயங்களிலே மடை மாற ஒட்டாத வினை உண்டு –பக்தி –அத்தோடும் –இப்போது பகவத்-அலாபத்தாலே படுகிற கிலேசத்துக்கு ஹேதுவாகையாலே பக்தியை வினை என்னலாம் இறே –பகவானை அடையாமல் இருக்க கர்மம் காரணம் நமக்கு பக்தி இல்லை நமக்கு அடையாத போது துன்பம் இல்லை நமக்கு ஆழ்வாருக்கு பக்தி உண்டே -ஆகவே அலாபத்திலே கிலேசம் உண்டே-அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே – இது இல்லாதார் உண்டு உடுத்து சுகமே திரியா நின்றார்கள் இறே-கனி இன்மையால் கருக்காய் கடிப்பார் போல் – கனி இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு   அவன் பேரைக் கொண்டு என் செய்வார்–இனி மூன்றாவது நிர்வாகம்
காயாக இருக்கும் பொழுது கடித்தால் கனி யாகாதே -அன்றிக்கே–கனி இன்மைக்கு இங்கனே பொருள் ஆகவுமாம் –
மேல் கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே – நித்ய ஸூரிகளுக்கு போக்கியம் அன்றிக்கே ஒழியும்படி இவ் வஸ்துவை  நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம் –பரமே வணங்கும்படி –அவர்களைப் போல் -சதுர்த்த வர்ணத்வாத் -அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்  –கற்றனமே ஏகாரம் -இரக்கம்-ஒருக்கா- ஈறு கெட்ட வினை எச்சம்

நாயகி திரு நாமங்களை சொல்லி தரித்து இருந்தமை –ப்ராஹ்மண உத்தமர்கள் வேத மந்த்ரங்கள் ஓதி அனுபவிக்கும் அவனை-கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-என்கிறார் –
கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப் பட்டவருக்கு திரு நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதாதே–இருக்கார் மொழியால்-ருக்காதி வேதங்கள் பொருந்திய புருஷ சூக்தம் -அன்றிக்கே –திரு மந்த்ரம் –நெறி இழுக்காமை உலகளந்த-திருத் தாளிணை -வழி படும் முறைமையில் தவறாமல் சர்வ ஸூலபனானவன் திருவடித் தாமரைகளை வினையொடும் எம்மோடும் நொந்து-அனுபவிக்கப் பெறாத பிரதிபந்தகங்காளல் வெறுத்து கனியின்மையின்-கருக்காய் கடிப்பவர் போல்-கருக்காய் -பசுங்காய் -இளங்காய் -நைச்சயானு சந்தானம்-யாமுமவா-யாமும் அவ்வோ -அப்படி பாக்யம் செய் தேன் அல்லேன் என்றபடி –அவா ஆசைப்பட்டது தோன்ற ஒருக்கா வினையொடும் -பரிஹரிக்கப் போகாத வினை என்றபடி – அபரிஹரியமாய் இருபத்தொரு பாபம் உண்டாவதே-இத்தை அனுஷ்டிக்கைக்கு நான் உண்டாவதே –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்-வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே (ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே ) ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்–யாமுமவா-யாமும் அவா அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ-அல்ல என்றபடி–ஆனால் உம்முடைய அளவு என் என்னில்–ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து–அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும் பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு -துன்பப்பட்டு–கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே–திருநாமம் சொல் கற்றனமே–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி–இப் பாட்டு–கலந்து பிரிந்த நாயகி–கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான் தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்-

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14–என்றதாய்க் கொண்டு-திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–வியாக்யானம்–இருக்கார் மொழியால்–இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்-பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே-அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்-ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே–அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்-ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது–ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால் எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்-உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள் இவ் வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே–நெறி இழுக்காமை-பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே–உலகளந்த திருத் தாளிணை–இவை அறியவுமாம்-அறியாது ஒழியவுமாம்–என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீகரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை-இவை அறியாதே இருக்கச் செய்தேயும்-தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே–நிலத் தேவர் வணங்குவர்–ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்–விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்–யாமும்-அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்–அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து-கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்-
கனிந்த பழம் இல்லாத போது காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப் உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்–திருநாமம் சொல் கற்றனமே–அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்-நமோ நாராயணாய என்பது அத்தை உச்சரித்தேன் அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

தாத்பர்யம்–கீழ் சர்வேஸ்வரன் கடாக்ஷிக்க காரணம் ஆராய்ந்து திருநாமத்தை அஹ்ருதயமாகச் சொன்னதையே வியாஜமாக்கி நிர்ஹேதுகமாக அருளினான் என்று உணர்ந்து அருளிச் செய்யும் பாசுரம் மந்தமாதிகளாகப் பிரமிக்கும் அந்த சப்தங்கள் போல் இன்றிக்கே அசாதாரண நாராயண நாமம்
ஸூ ஸ்பஷ்டமாக அவனையே காட்டுமே-திருநாம அர்த்த அனுசந்தான பூர்வகமாக பகவத் சமாராதானம் செய்யும் பூ ஸூரர்கள் போல் இன்றிக்கே அர்த்தம் அனுசந்தானம் இல்லாமலே திருநாம சொல்லையே சொன்னதையே வியஜமாக்கி கடாக்ஷித்தான் என்கிறார் –

7-6-பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!ப்ரவேஸம்-

இப்படித் தெளிந்தால்,(தெளிவுற்ற ஆழ்வார் -அவனே உபாயம் உபேயம் என்று தெளிந்த பின்பு )
பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.

‘அம்மங்கி அம்மாள்’ இத் திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப் போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.

மேலே, ‘ஆழி எழச் சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே,
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய வீரச் செயல்களை அருளிச் செய்தார்;

அருளிச் செய்த முகத்தாலே
அவனுடைய அவதாரங்களையும்
அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
‘இக் குணங்களும் நடையாடா நிற்க,
இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க,
தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில்.

‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்;
விருப்பமுடைய நாம் இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும்
வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த விடத்து,

அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறாமல்
மிகவும் துக்கித்தவராய்ச்
சர்வேஸ்வரனுக்குப் பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே
நிரம்பிற்று ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு
அவ் விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி,

அவன் பிராப்பியனாய் இருக்கிற படியையும்-(1-2-பாசுரங்கள் -தாமரைக் கண்ணாவோ -ஸ்ப்ருஹணீயன் )
பிராபகனாய் இருக்கிறபடியையும் -(3-7–பாசுரங்கள் -வந்து எய்துமாறு அறியேன் )
விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி,
கேட்டாரடைய நீராகும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.

‘பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடி சூட்ட’ என்று கோலி,
‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி,
அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
‘நான் இங்ஙனே பெருமாளைத் திருமுடி சூட்டப் பாரா நின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
உடனே, ‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)

(இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –)
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோ த்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,

‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே
உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய,
படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

‘ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு
சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி.

‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே,
புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால்,
பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
‘இவ் வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
இப்படிப் பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

ஆறாம் திருவாய் மொழியில்
இப்படி ஆஸ்ரித பவ்யனாய் விரோதி நிவாரகனான சர்வேஸ்வரனுடைய குணாதிக்யத்தைக் கீழே அனுசந்தித்து
அவனை ஒழிய வேறு விரோதி நிவர்த்தகர் இல்லாமையால்
அவனுடைய காரணத்வாதி ப்ரயுக்தமான சம்பந்த்ய விசேஷத்தையும்
தத் கார்யமான சர்வாத்ம பாவத்தையும்
ரக்ஷணைகாந்தமான பரதவ ஸுலப்யங்களையும்
அவற்றோடு கூடின போக்யதா அதிசயத்தையும்
அந்த போக்யதா ப்ரயுக்தமாய் அத்யுஜ்ஜ்வலமாய் யுள்ள ப்ராப்யதையையும்
அந்த ப்ராப்யதா ப்ரகாசகமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஸ்வேந ரூபேணவும் காரண புருஷ ரூபேணவும் உண்டான ரக்ஷண பிரகாரத்தையும்
தத் உபயுக்தமான மாலி ப்ரப்ருதி நிரசனத்தையும்
விபீஷண பஷ பாதத்தையும்
ஸ்வ ஜன ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய ப்ராப்தியாலும் பஷ பாதத்தாலும் அவனைக் கொண்டு
விரோதியைக் கழித்துக் கொண்டு அவனை பிராபிப்பதாக அத்யார்த்தராய்க் கூப்பிடுகிறார் –

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?
–7-6-1-

பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –-பா என்பது,பதார்த்த வாசகமாய்
தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய்,-பா மருவி இருந்துள்ள;
அதாவது,‘பொருள்களினுடைய நெருக்கத்தை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-அன்றிக்கே,-‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்: பாபம் என்றது, ‘பா’ எனக் கடைக் குறைந்து வந்தது.-அன்றிக்கே,-‘பா’ என்று பரம்புதலாய்,-‘பரப்பை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.-‘மூன்று உலகு’ என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல். அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.-‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில் தான் நான் ஆறி இரேனோ?-நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?

தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலே யாயிற்று,-பரதன் அக்ரூரர் மாருதி -அணைத்த –தாமரைக் கையாவோ–பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள்-‘பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 1.-இட்டுக் கொடுக்கலாவது தம்பிமார்க்கோ?-உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’ என்று ஒருநாள்-இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?

தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே – நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே? இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?-‘உன்னை என்று கொல் சேர்வதுவே’ என்னா நிற்க,-அது சேரும்படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே,-‘உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வருமன்றோ?-

———

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!
–7-6-2-

அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும் படியான திருவடிகளை.
வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக் கடவேன்?

படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத் கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் — நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் – இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல் முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப் பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு,
தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால்.-ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அனு பிரவேசித்து பெற்ற பிரகார பிரகாரி பாவம் அருளிச் செய்கிறார்-இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது,

ரக்ஷணத்துக்காக மலையை எடுத்து நின்ற நிலை இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருந்தது –

ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும்-அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால்,-பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது:
மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.

—————

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!
–7-6-4-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு உண்டான உச்சாரயமும் நீயே கொடுத்து அருளினாய் -அப்படியே என்னுடைய அபேக்ஷிதமும் நீயே செய்து அருளும் இத்தனை போக்கி என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார்–கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே, இனிமையின் மிகுதி சொல்லிற்று;-என்னுடைக் கோவலனே!’ என்கையாலே, அடியார்கட்குப் பவ்யனாய் இருக்கும் தன்மையைச் சொல்லுகிறது. -உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ, உன்னுடைய உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.-அடியார்கட்கு அடக்க முடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!

————-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?
–7-6-5-

உன்னடைய உந்தியிலே மலரா நின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள் தோறும், தனித் தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வ சத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.-இது என் நிலை இருந்தபடி.-அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாக வுடையையாய் இருந்தாய்.-என் நிலை இருந்தபடி இது;-உன் நிலை இருந்தபடி அது; -என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது;-ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?

ஆக. ஸ்வரூபம் உன் அதீனமாய் இருந்தது,-அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;-என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.-

————

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.
–7-6-6-

வடிவழகு இல்லை என்று விடவோ,(மல்கு நீலம் சுடர் தழைப்ப )
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,(திருமார்பனை)
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ(வந்து எய்துமாறு அறியேன் –ஆசை உண்டு -என்னால் வர முடியாதே )

‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் -ஆஸ்ரயமான-பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச் செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் (பன்னீராயிரப்படி -அந்தரம் பரம வ்யோமம் )-திருப் பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம்
இவை, சிவந்த சுடரை யுடைத்தான ஒளியை வீச.-உறை என் திரு மார்பனை –-இதுவும் ஓர் ஆபரணம் போலே:-என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.-எனக்கு பவ்யனான ஸ்ரீ யபதி என்னுதல் –

—————

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?
–7-6-7-

என் திரு மார்பன் தன்னை 
ஆஸ்ரயண தசையில் அவளைப் பற்றும் –
பிராப்தி தசையில் அவனைப் பற்றும் –
பிராபகத்தில் இருவரையும் பற்றும் –
(இப்படி மூன்றிலும் -விசேஷணத்திலும் விசேஷ்ய அம்சத்திலும் விசிஷ்டத்திலும் உண்டே )

‘என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது,
விசேடிய அமிசத்திலே ஊற்றம்.-அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார்-இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன் மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி-‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:

காணேனோ?–என்னுடைய சத்தையே தொடங்கி உன் அதீனமாய் உன்னாலே பேறான பின்பு நான் இங்கனம் இழந்து போம் இத்தனையோ –-இனி.-இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.-இப்படி இருக்கச் செய்தேயும் தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

———–

ஆளியைக் காண் பரி யாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–
7-6-8-

அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?

———-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே
?–7-6-9-

அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,-அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;-அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.

தன் சோதி புக்க – அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத்
தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற
பரம பதத்திலே போய்ப் புக்க.-அமரர் அரி ஏற்றினையே– அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்திய ஸூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?-பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்திய ஸூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-நித்திய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

———-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே
.-7-6-10-

முதல் இரண்டு பாட்டாலே -ப்ராப்யம் அவனே என்றார் –
அநந்தரம் ஐந்து பாட்டாலே உபாயமும் அவனே என்றார் -அநந்தரம் இரண்டு பாட்டாலே பிரதிபந்தகங்களைப் போக்குவானும் அவனே என்றார் –
இதில் குணாகுண நிரூபணம் பண்ண மாட்டாத மவ்க்யத்தாலே பரமபதத்தை தந்து அருளும் என்று அறுதி இடுகிறார் –

ஆற்றல் மிக்கான் .-துரியோதனாதிகளை அழிய செய்து -தர்ம புத்ரனையும் முடி சூட்டி -திரௌபதி குழல் முடித்த பின்பும் -நாதிஸ் வஸ்த்தமநா -என்றும் -ருணம் ப்ரவ்ருத்த மிவ மே -என்றும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றும் அஸந்துஷ்டனாய் எழுந்து அருளினான் –பெரிய பரஞ்சோதி புக்க அரியே – கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,-நித்திய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று,ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.-

————–

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே
.–7-6-11-

இத்திருவாய்மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் திருப் பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் பண்ணி -சிலாகிப்பார் -என்கிறார் –நம்முடைய பிரகிருதி நமக்கு பய ஹேது என்று  அபேக்ஷித்தால்  நிரசிக்கும் என்று கருத்து –

புக்கு அ அரி உருவாய் – உக்ரம் வீரம் –இத்யாதி அந்த அரி உருவாய்ப் புக்கு. அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.-நரசிங்கமான வேடத்தைக் கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி.-அன்றிக்கே,-இரணியன் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக்கடுமை,(அங்கு அப்பொழுதே தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை )
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு புறப்பட்டாற்போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

சக்கரச் செல்வன் தன்னை –-இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,-பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.
(அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பாக திருவாழி பத்ரம் கட்ட -பல்லாண்டு பாட
திரு உகிரின் அழகுக்கு )

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –இவையும் அவையும் -1-9-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சரணம் என்றால் கார்யம் செய்யாமல் மரணம் என்றாலே தானே கடல் கார்யம் செய்யும்
இவளோ அபலை-நீர் முகில்வண்ணன் அரவணை மேல் பள்ளி கொண்டு அருளி
உமது இரக்கமே இவளுக்கு கார்யகரம் ஆகும்-தேவிமாராவார் – ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸர்வ சரீரீ -இரண்டாலும் கார்யம் ஆகவில்லை என்றால் -கூப்பீடு அங்கு-தலைவன் இயல்பை பழித்துப் பேசும் பாசுரம் அது-அத்தை மறுக்கும் குணம் தானே கற்பு இது தலைமகள் பாசுரம்-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –-பழிப்பைத் தடுத்து பேசும் பாசுரம் இது
திருக் கண்கள் காட்சி பெற்று –
சாத்மிக்க -சாத்மிக்க போக பிரதாத்ருதம் -புள்ளு பிள்ளைக்கு இரை –-அனுபவம் மெதுவாக கொடுத்து அருளுபவர் தானே செங்கண் சிறுச் சிறிதே விழிப்பான் –ஆர்த்தி விளைக்க -இவையும் அவையும் -சூழல் உளானே -இதன் விவரணம்-சுவையன் திருவின் மணாளன் -திருமுடியில் நேராக வராமல்-
சூழலில் -அருகில் -ஒக்கலில் –நாவில் -உச்சியில் -படிப்படியாக -அமலங்களாக விளிக்கும்
வானாடமரும் குளிர் விழிய-நித்ய ஸூரிகள் -ஆர -அமர -தரிக்க கடாக்ஷம் அருளுபவர் –
பொலிந்து நின்ற பிரான் ஆழ்வாருடைய திருமுடி சேவை இன்றும் பிரஸித்தம்ஒழிவிலன் என்னோடே உடனே –திருவாய் மொழியில் உண்டே –அடியேனோடு இக்காலம் இருக்கின்றனவே இங்கும்

அவதாரிகை ––முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே –-வந்து குளிர நோக்கினான்-

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின ஸூஹ்ருத்துக்களைக் குறித்து அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து சமாதானம் பண்ணின பாசுரத்தை தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே-வந்து குளிர நோக்கினான் அந் நோக்குக்கு இலக்கான தலைமகள் ஹ்ருஷ்டையாய் தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய் அருளிச் செய்கிறார் இதில்

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
— 63–தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —9–இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும் திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில் அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன் அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படிப் பெறாப் பேறு பெற்று அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள் நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –

வண்ணம் சிவந்துள ––திருக் கண்களுக்கு சிவப்பு பிறப்பே ஸ்வா பாவமாய் இருக்கும் இறே –இப்போது
வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால் – பூர்வ அவஸ்தையிலும் வைவர்ண்யம் அத்தலையிலே என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் ஷணம் அபி – என்னும் ஆற்றாமையில் ஏற்றம் அத் தலையிலே இறே –ஆகையால் கண்ணும் –காணாமையால் வந்த சிவப்பில் வைவர்ண்யம் தீர்ந்தது இப்போது என்று-தோற்றும்படி இருக்கை –வானாடு அமரும் குளிர் விழிய – த்ரிபாத் விபூதியாக -கண்ணில் குமிழிக்கு (மதகுக்கு )கீழே யாயிற்று ஜீவித்து கிடப்பது – வானாடு அமரும்படியான (தரிக்கும் படியான )-குளிர்ந்த கடாஷங்களை உடைய-அமருகை யாவது –இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை – தாரக போஷாக போக்யமும் -எல்லாம் இவையாய் இருக்கை –தண் இத்யாதி – குளிர்ந்து மிருதுவாய் இருப்பதொரு -தாமரைப் பொய்கை பரப்பு மாறப் பூத்தால் போலே-யாயிற்று திருக் கண்கள் இருப்பது –தாம் இவையோ –தஸ்ய யத்ர கப்யாசம் புண்டரீக மேவ அஷணீ-என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோமே –
அவை தான் இருக்கும்படி இதுவே –கண்ணன் திருமால் –திருமால் கண்ணன் – ஸ்ரீ ய பதி யாகையாலே ஆஸ்ரிதர்க்கு கையாளானவன் –திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு – அழகிய திரு முகத்தோடு வந்து -குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –எண்ணம் புகுந்து – நான் மநோ ரதித்தபடியே -கை புகுந்தது என்னுதல் –அன்றிக்கே- எண்ணம் புக்கு என்றாய் – என்னுடைய மநோ ரதத்தை தானே ஏறிட்டு கொண்டு –

அடியேனோடு-ஜிதம் -என்கிறார் –-அஹம் அர்த்தத்தின் உடைய ஸ்வரூபம் அடியேன் என்று போலே காணும் இருப்பது –(ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -தாமரைக் கண்ணன் என்றதுமே ஜிதந்தே சொல்ல வைக்கும் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-ஞாத்ருத்வமா சேஷத்வமா -சேஷத்வம் என்கிற ஞாத்ருத்வமே – சேஷத்வமே பிரதானம்)-அஹங்காரம் ஆழ்வாராதிகள் -அடியேன் -அர்த்தம் தான் -நான் அர்த்தம் இல்லையே மணத்தையும் ஒளியையும் — -ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும்-ஓம் -பிரணவம் -அநந்யார்ஹ சேஷ பூதன்-ஜீவ ஸ்வரூப பரமான வாக்யத்தில் படியே இறே (அடியேன்) சொல்லுகிறது –அது (ஓம்) ஜீவ ஸ்வரூப பரமோ  என்றால் –ஒமித் யாத்மானம் யுஞ்சித –என்றும் உண்டு –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லா நின்றது இறே –பர ஸ்வரூபம் அன்றோ என்னில்
உபய பிரதானம் -திருக்குருகூர்-பரே சப்தம் பொலியும்-திருத்தேர் தட்டுப் போல்-ராஸ க்ரீடை போலவும்
இதுக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்-ஓம் என்று சொல்லி -உயிரை அறவிலை செய்தனன் –ஒமித் யாத்மானம் யுஞ்சித -ஜீவ ஸ்வரூபத்துக்கும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு–விஷ்ணு ஸ்வரூபத்துக்கும்-

இக் காலம் –இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் –இருக்கின்றனவே –நச புன ஆவர்த்ததே -என்னும் பேற்றைப் பெற்றோம் என்று தோன்றி இரா நின்றது –ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது –மானஸ அனுபவம் )பிரத்யஷ சமாநகாரம் ஆகிலும் இவருக்கு சமானகாரமாக தோற்றாதே-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –
-அவ்வளவு ஆழமான அனுபவம் கொடுத்து அருளுவான் அன்றோ ஆழ்வாருக்கு -கண் அழகுக்கு தோற்று அடியேன்  என்கிறார் என்னுதல் –ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை இட்டு சொல்லுகிறார் ஆதல் –குண க்ருதம் ஆதல் –ஸ்வரூபம் ப்ரயுக்தம்  ஆதல் –சிறந்த வர்ணத்தை உடையவனாய் -வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாஷத்தை உடையவனாய் – தண் மென் கமலத் தடம் போல் பொலிந்து இருப்பவனவான இந்த கண்களானவை –திருமால் கண்ணனுடைய திருமுகம் தன்னோடும் காதல் செய்த என்னுடைய எண்ணம் புகுந்தபடி – அடியேனோடு -இக்காலம் இருக்கின்றது -என்று அந்வயம் –ஜீவ ஸ்வரூப -ராஜ புருஷ -சப்த பிரதாந்யத்தாலே-ஜீவ பரமும் -ராஜ்ஞா புருஷ  -என்கிற அர்த்த பிரதாந்யத்தாலே- பகவத் பரமுமாய் இருக்கும் என்றபடி இருக்கின்றதே -அருளிச் செய்கிறார் –அரசனின் ஆள் -வேற்றுமை உருபு இல்லாமல் அரசனுடைய ஆள் -அரசனுக்கு ப்ராதான்யம் –

தோழி நாயகனை பழித்துச் சொல்வதை பொறுக்காத நாயகி -அவன் திருக் கண்கள் என் நெஞ்சுள்ளும்
கண்ணுள்ளும் தோன்றி நீங்காது இருக்கின்றன –

இங்கனம் அன்போடு அணியனாய் உள்ளவனை அநாதரம் செய்து பிரிந்து சென்றான் என்று பழிப்பாயோ-என்கிறாள் – வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய-அநு ராகத்தாலும் சீற்றத்தாலும் சிவக்கலாம் -இங்கு குளிர்ந்த வேட்க்கையால் அன்றோ – தாம் இவையே -மானஸ அனுபவம் மாத்திரம் இன்றியே உரு வெளிப்பாடால் பிரத்யக்ஷம் ஆனவாறு-நினைவின் முதிர்ச்சியால் –அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-அவன் பூர்ண கடாக்ஷம் தம் நெஞ்சில் நிலை பெறும் படி பேர் அருள் செய்த விதத்தை அறிவித்து அவர்களை சமாதானப் படுத்திய பாசுரம் –

வண்ணம் சிவந்துள-தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம் இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்–அது சீற்றத்தாலோ என்னில்–வானாடமரும் குளிர் விழிய–நித்ய விபூதியிலே இருந்து நித்ய அனுபவம் பண்ணி நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன–இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும் குளிர்த்தி மாறாது இருக்கை –தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால் மிகுத்துத் தோன்றா நின்றன –தாமிவையோ-இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன–ஸ்ம்ருதி -நினைவு மட்டும்-அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பதுகண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்
— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு-கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு–எண்ணம் புகுந்து-தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே-என் நெஞ்சிலே புகுந்துஅடியேனோடு-தனக்கே சேஷமான என்னோடே கூட(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )இக்காலம் இருக்கின்றதே-க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன–ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று தோழிக்கு இயற் பட மொழிந்ததாயிற்று–இத்தால் வண்ணம் சிவந்துள என்கையாலே ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த ராகம் ஸூசிதமாயிற்றுவானாடு இத்யாதியாலே அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும் இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று-(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது-என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள-திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே-இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்-பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே அத்தலையில் ஆற்றாமை ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும் வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை–வானாடமரும் குளிர் விழிய-ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்–அமருகையாவது-இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை-தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை–தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-குளிர்ந்து மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற அலர்ந்தால் போலே யாயிற்று திருக்கண்கள் இருப்பது–தாமிவையோ-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோம் அவை தான் இருக்கும் படி இதுவோ–கண்ணன் திருமால்–திருமால் கண்ணன் -ஸ்ரீ யபதி யாகையாலே ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்-திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு–அழகிய திரு முகத்தோடு வந்து குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு–எண்ணம் புகுந்து–மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே-எண்ணம் புகுந்து என்றாய்-என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு-அடியேனோடு-ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்-அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது-ஜீவ ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது-அது ஜீவ ஸ்வரூப பரமோ என்னில்-ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் –என்றும் யுண்டு-ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே–இக் காலம்-இப் பேற்றுக்கு வரவாறு முன் நாள் அறிந்திலேன் கிடீர்–இருக்கின்றதே-நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும் பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது-ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது-ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே -ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று–அதுக்கும் மேலே–வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ-இவை திருக்கண் மலர்கள்-வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய் ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய் அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது–ஓ-இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி-கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற
–திருவாய் –7-7-8–ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில் அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது-அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே–தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது அநு பாவ்யமாய் இருக்கிறது-ப்ரத்யக்ஷமாய்த் தானே இங்கும் ஓ என்பது அன்விதம்

தாத்பர்யம்–கீழே நாயகியின் ஆர்த்தியையே சொல்லி முறையிட்ட தோழி பாசுரம் கேட்டு த்வரித்து அவன் கடாக்ஷித்து அருளmநாயகி அத்தாலே அவனது ஸ்வ பாவத்திலே ஈடுபட்டு பாடுகிறார்
ஆஸ்ரித ஸூ லபனாயும் ஸ்ரீயப்பதியாயும் -கண்ணன் திருமால் –நித்ய ஸூரிகளுக்கு ஜீவன ஹேதுவாய் –கடாக்ஷம் தாரக போஷக போக்யமாய் -உள்ளவர்கள் அன்றோ –
தாமரைத் தடாகம் போல் குளிர்ந்த மிருதுவாய் சகல குண பரிபூர்ணமாய் குளிரக் கடாக்ஷித்து
இப்பொழுது ஆழ்வாரது மனோரதம் நிறைவேற்றி அதனாலேயே தானும் உளனாகி
அந்தாமத்து அன்பு செய்து -உளன் ஆனால் போல் ஆனான் அன்றோ ஆகவே அவன் மேலே குற்றம் சொல்லாதே என்றவாறு

1-9-இவையும் அவையும் -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;

இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான  விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி  அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை  எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
 –1-9-1-

ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –

அவையுள் தனி முதல்- இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், தத் அநு ப்ரவேஸ்ய  ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,-இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.

கண்ண பிரான் –‘இப்படி இருக்கிறவன் தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.-என் அமுதம்-தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.-சுவையன்-பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!-திருவின் மணாளன் – இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.-திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே- ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்-‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே
 –1-9-2-

என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.-சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.-ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.-சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘கேழல் ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.  ‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார். கேசவன்– அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.வேழம் மருப்பை ஒசித்தான் –குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.-விரோதி நிரசன சீலன் என்றபடி-வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)

———

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
 –1-9-3-

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்-என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை

———-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே
 –1-9-4-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

திருமகள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-மண் மகள் முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி –ஆயர் மட மகள் -அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி –திருமகள் அவன் ஐஸ்வர்யம்-மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –என்று இவர் மூவர்-மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-என் ஓக்கலையானே —ஸ்ரீ யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே
 –1-9-5-

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,- சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன் என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.-மாயன்- ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன். சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ-என் நெஞ்சின் உளான் – என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.-ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான சர்வ ஜகத்துக்கும் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ஜெகன் நியந்தாவாய் –ஆச்சர்ய பூதனுமாய் -விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் –
இருந்தவன் என் ஓக்கலையில் தான் இருந்த இருப்பு எனக்கு சாத்மித்தவாறே -என் மார்விலே வந்து இருந்து அருளினான் -என்கிறார் –

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே
 –1-9-6-

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.-காயமும் சீவனும்
சர்வ அந்தராத்மா என் தோளைப் பற்றி வர்த்தியா நிற்கிறான்-தூயன்-இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதை முதலானவர்கட்கு யதி சக் நோஷி ‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘
என்னலாம்படி இருப்பான்.-இதனால், அணிமைக்கு எல்லை கூறினார்.-துயக்கன் மயக்கன் –
உகவாதார்க்கு-சம்சய விபர்யயங்களை – ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன்.-என்னுடைத் தோளிணையானே–என் அளவில் அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இரா நின்றான்.-சம்சய விபர்யய ரஹிதமாக என் தோளிலே வர்த்தியா நின்றான்-பெரிய திருவடி தோளில் இருப்பை மாறி என் தோளிலே இரா நின்றான் –-இவனுக்கு என் பக்கலுள்ள அபி நிவேசம் இருக்கும் படியே இது -என்கிறார்

————

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே
 –1-9-7-

நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.-ஆழ்வார் விரும்பிய வாறே திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,–அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்.-அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.-தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.

இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;-அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;-அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?-ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;-ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

————–

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே
 –1-9-8-

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு-கமலக் கண்ணன் என் கண்ணினுளானே-திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின்  ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம் -ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே
 –1-9-9-

ஸ்வ சங்கல்ப ஏக தேசத்தில் சர்வத்தையும் உண்டாக்கினவன்-என்னுடைய சரீர ஏக தேசத்தைப் பற்றி தான் உளனாக நினையா நின்றான்-கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார் –அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.-என் நெற்றி யுளான் –  கர்மானுகுணமாக -கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். பிரயோஜன நிரபேஷமாக ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார்,  நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

————–

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே
 –1-9-10-

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்  என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியிலே வைத்தாலும், திருக் குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையா நிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். –கற்றை – தழைத்தல். -இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், 
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –

———

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே
 –1-9-11-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்-என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –தேவிமார் ஆவார் -8-1-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடியவர் அங்கு அணை மேல் பள்ளி கொண்டமை வியக்தமாக இல்லை-இதில் தான் முகில் வண்ணன் பத பிரயோகமும்-அரவணை மேல் பள்ளி கொண்டவன் வியக்தமாக உள்ளது-ஆனால் இப் பாசுர விவரணம் தேவிமார் ஆவார் –8-1-திருவாய் மொழியே அங்கும் ஓங்காரம் பல உண்டே–இங்கு முறையோ கேள்வி போல் அங்கும் திருத் தாயார் உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-தோழி கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சியைப் பற்றி புலம்பும் -பாசுரம்-தலைவன் மறைந்து இருக்க -முறையோ என்று அவனையே குறித்து சொல்லும் பாசுரம் என்றுமாம்–முறையோ ஓங்காரம் -இரக்கம் குறித்து–அறையோ -சந்தேகம் -அறை கூவுகிறதோ ஐயம் இது-நிறையோ -அடக்கம் -தெரிநிலை ஓங்காரம் -நிறை யானது-உனது திரு அருளாலே காக்கப்பட வேண்டும்-தேவிமார் -தாள்களைத் –பேர் உதவிக்கைம்மாறு –ஆத்மா சமர்ப்பணம் -உயிரை அறவிலை செய்தனன்-அதுவும் அவனது இன்னருள் -எனது ஆவி யார் யான் யார் தந்த நீ உனது இரக்கமே சாதனம் -தடுமாறி சொல்லுவார் அங்கும்-ஆளவந்தார் -மயா சமர்ப்பித்தம் -கின்னு ஸமர்ப்பயாமி போல் உண்டே இரக்கமே உபாயம் இதில் வியக்தமாக உள்ளதே

அவதாரிகை–கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே  அனுசந்தித்தது – அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே – கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தரானார் –அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது என்று திருத் தாயார் (செவிலித்தாயார் )சொல்லுகிறாளாய்  இருக்கிறது- தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் ) ஆர்த்தரான இவருக்கு ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்ட தோழி புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார் அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
– 62–தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் – அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்-ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ இரங்காது--காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் – சரணம் புகை தான் மிகையாம்படிக்கு ஈடே இறே இவள் தசை -என்று தசையைக் காட்டச் செய்தேயும் – புறம்பொரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் -என்னச் செய்தேயும் – ஏக தேசமும்  இரங்குகிறது  இல்லை –பாதகர்க்கு இத் தலைவி எளிமையை அறிவித்த அளவாய் விட்டதே –
இத்தனை எளிதாகில் நமக்கு-நினைத்தபடி பாதிக்கலாம்  ஆகாதே என்று அதிலேயும் முறைக்கைக்கு உடலாயிற்று  —இது தான் சரணம் என்றால் இரங்குமதும்  அன்றிக்கே –
அம்புக்கு முகம் காட்டுமது இறே –அது ஆர்த்திக்கு இரங்கும் அது அல்லவே -அம்புக்கு இரங்கும் அது இறே –தனக்கு சரணம் என்றால்-இரங்கும் அது   அன்றே –மரணமானால்  இரங்கும் அது இறே –அறையோ என நின்றதிரும்  கருங்கடல் –-இங்கனே வெளியிலே புறப்பட்டாயோ –-அறையோ அறை என்று கூறுவாரைப் போலே இரா நின்றது –கருங்கடல் –அகவாயில் சீற்றம் உடம்பிலே நிழல் இட்டால் போலே இருக்கை –சிவப்பும் கருப்பும் சினம் -என்னக் கடவது இறே –ஈங்கு இத்யாதி –இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது –உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் –உம்முடைய  பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே –ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது –ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் – நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி –மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி வெறுத்துப் பேசுவான் என் என்னில் பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார் அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

நாயகனை நோக்கி நாயகியின் ஆற்றாமையை தோழி கூறுதல் – தானே இரங்க ப்ராப்தமாய் இருக்க -அப்படி செய்யாததோடு இவளது பெண்மையையும் ஸுகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு வேண்டிக் கொண்டாலும் இப்பாழும் கடல் இரங்குகிறது இல்லை-மேலில் காணும் கருமை நிறத்தோடு உள்ளுள்ள கருமையும் -கொடுமையையும் -காட்டுவதற்கு கருங்கடல் -என்றது –
இனி -கடல் ஆகிய பெரும் பகையும் யுண்டாய் -தனக்கு நிறை காக்கும் சக்தியும் இல்லையுமான பின்பு –
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடைக்க -அரவணைமேல் பள்ளி கொண்ட-படுக்கை கொள்ளாமல் கருந்தரையில் இவள் கிடக்க இவளுக்கு இடம் கொடாமல் மெல்லிய படுக்கை தேடிக் கிடக்கிறீரே –
முறையோ — முகில் வண்ணனே -மேகம் போலே உதார குணம் கொண்ட நீர் இவளுக்கு உதவாமல் இருப்பதும் ஒரு முறைமை தான் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது -சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும் அவள் ஒரு பெண் அன்றோ இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது ஓ ஒரு கொடுமையே–இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்–அறையோ என நின்றதிரும் இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி நிலை நின்று கோஷியா நிற்கும்–கருங்கடல்-இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில் கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது–ஈங்கிவள் தன் நிறையோ-இவ் விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது-வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய் ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ–முறையோ என்று க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி–1-ஸ்ரம ஹரமாய்–2-தர்ச நீயமாய்–3-உதாரமான வடிவை யுடைய நீ-இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு விளித்து யுரைத்தாள் யாயிற்று-இது செவிலி இரங்கல் யாகவுமாம் –(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )இத்தால் அநந்த க்லேச பாஜனமாய் கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய தசையைக் காட்டாச் செய்தேயும் புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும் ஏக தேசமும் இரங்குகிறது இல்லை பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே-அறையோ என நின்றதிரும்-இங்கனே வெளியில் புறப்படாயோ என்று அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –கருங்கடல் ஈங்கிவள் தன்நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது –இவ் வவஸ்தையில் இவள் நிறை அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு உன்னருளால் அன்றி இல்லையே அத்தால் அவ்வவஸ்தை யானானாள் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமைக்கு வருந்தும் பாகவதர்கள் -சம்சார சாகரம் பயங்கரம் -இவள் ஸ்வரூபத்தை உன் திருவருளால் அன்றி பாதுகாக்க ஒண்ணாது -ஆதி சேஷன் இடம் கைங்கர்யம் பெறுவது போலே இவள் இடமும் அருள் காட்ட வேணும் உமது இனிய வடிவை இவர் அனுபவிக்கப் பெறும் படி செய்வதே உமக்குத் தகுதி –

ஸ்வாபதேசம் –
இப் பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது – கருங்கடல் இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ  இரங்காது  -அறையோ என நின்று அதிரும்- இனி ஈங்கிவள் தன் நிறையோ உன் திருவருளால் அன்றி காப்பது அரிது – அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -முறையோ -என்று அந்வயம்-
ஒ ஸ்வாமி  -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது- இவள் ஜீவிக்க உபாயம் இல்லை – ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –

தாத்பர்யம்
கீழ் அனுசந்தித்த கிருஷ்ண அனுபவ ஸுலப்யம் அனுபவிக்கப் பெறாமையால் நம்மிறை என்றாரே -ஸ்வாமித்வம் ஒழிய ஆயர்கள் போல் அனுபவிக்க வில்லையே அத்தாலே கலங்கி அதுக்கும் மேலே
சம்சார கடல் ஓசையும் நலிவதை ஸூஹ்ருத்துக்கள் சொல்லும் பாசுரம்-கடலைச் சரணம் புகுந்தால்
அது சரணாகதி தர்மம் அறியாது என்பது பிரசித்தம் அன்றோ பெருமாளும் சரண் புகுந்து பாலியாதே அம்பை எடுக்க வேண்டிற்றே-இவள் ஒரு அபலை தாங்க மாட்டாள் என்றால் அதுவே ஹேதுவாக மேலும் நலிந்து ஜெயகோஷம் பண்ண இவள் இப்படி இருக்க நீ அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுவதே
ஓ ஸ்வாமி உனது அருளாலே தான் இவள் தரிக்க முடியும் நீ நேரே வந்து தோற்ற வேண்டும்
இத்தால் தலைமகன் மறைந்து இருந்தான் என்றும் அவன் முன்னிலையாகச் சொன்னது என்றும் இரண்டு நிர்வாஹங்கள் உண்டே –

8-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-ப்ரவேஸம்-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் -அந்த களை அறுக்கப் பட்ட கைங்கர்யம் ஆனது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தல் விரோதிகளைப் போக்குமவனான சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புகுந்தார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவு பட்டார் –
இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தகத பட நியாயம் போலே நம்மை விடாமலே தொடருகிறது –
நமது ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அறாத படியாலே என்று பார்த்து
அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார் இந்த எட்டாம் பத்தில்

சர்வ சக்தன் -ஏழாம் பத்தில்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
ஆபத் சஹத்வம் ஆர்த்தி ஹரத்வங்கள் -9/10-பத்தும் பத்தாக்கி –
ஞப்தி பல முக்தி பல வ்ருத்தி -முதல் மூன்றும்
விரக்தி -நாலாம் பத்தில்
பக்தி ராகம் கழிய மிக்கு -பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
பிரபத்தி ஆறாம் பத்தில்
சக்தி வெளியிட்டு ஏழாம் பத்தில்
பிராப்தி -எட்டாம் பத்தில்
பூர்த்தி -ஒன்பதாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தில்

கிருதஞ்ஞாதா பலம் பிரதி க்ருதமானம் உணர்ந்து – -நின்ற உன்னை உணர்ந்தேன் –
தோள்களை ஆரத் தழுவி தாள்களை –பேர் உதவிக்கு கைம்மாறா –
கண்கள் சிவந்து –நின்ற உன்னை உணர்ந்தேன்-8-8- -அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் உள்ளான்-சேஷம் பிரதானம்

பிராட்டிமாரோடே நித்ய பரிகரம் சேவிக்க
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வனந்த ஆழ்வான் மேலே சர்வேஸ்வரன் நாம் பாடின திருவாய்மொழி
கேட்க்கைக்காக திரு வாறன் விளையிலே எழுந்து அருளி இருந்தான்
நாம் அங்கே சென்று திருவாய்மொழி கேட்ப்பித்து அனுகூலமான கைங்கர்யங்களையும்
செய்து அனுபவிப்போம் என்று பாரித்தார் –

அது எண்ணம் மாத்ரமேயாய் நினைத்தபடி தலைக்கட்ட பெற்றது இல்லை –
1-பிராட்டிமார் -எழில் மலர் மாதரும் -அருகே எழுந்து அருளி இருக்க-தேவிமார் ஆவார் திருமகள் பூமி
2-நித்ய ஸூரிகள் -யாவரும் வந்து வணங்கும் -உளராய் இருக்க-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
3-நினைத்த படி கார்யம் செய்து தலைக் கட்டுக்கைக்கு தகுதியான ஐஸ்வர்யம் குறைவற்று இருக்க-மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
4-அடியார்கள் உகந்தனவற்றை தனக்கு திரு மேனியாக கொண்டு உதவும் தன்மையனாய் இருக்க-வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-
5-நான் ருசியில் குறைவற்றவனாய் இருக்க -காணுமாறு அருளாய் –
நினைத்த கார்யம் பெறாமல் ஒழிவோமே என்று வெறுத்தார் –

இவர் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தமக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டு ஸ்வ பாவங்களை -தன்மைகளை –
அவை –
1-அடியார்களுக்கு பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பும் –உமர் உகந்து உகந்த உருவம் –
2-தனக்கு வேறு பட்ட எல்லா பொருள்களும் தனக்கு பிரகாரமாய்–தான் பிரகாரியாய் –
இவற்றுக்கு வந்த வ்யசனம் தனக்கு வந்ததாக நினைக்கும் சம்பந்தமும்

(இறந்ததும் நீயே -இத்யாதி -பூத பவ்ய பவிஷ்ய பிரபு)

வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா 2-40-
அவை இரண்டும் தனக்கு கார்யகரமாக கண்டிலர்

நான் ஒருவன் தோன்றி சர்வேஸ்வரனுக்கு இவையும் பொய்யாக புகுகின்றனவோ -என்று ஐயம் கொண்டார்
குண ஞானத்தாலே ஜீவிக்குமவர் குணங்களில் –அதி சங்கை -ஐயம் கொண்டால் ஜீவிக்க மாட்டாரே
இவர் தம்மை நாம் இழக்க ஒண்ணாது
இவரை சமாதானம் செய்யும் விரகு ஏதோ -என்று பார்த்து

வாரீர் -நீர் கண்டது எல்லாவற்றிலும் –அதி சங்கை -ஐயம் கொள்கிறது என்
நாம் உமக்கு ஒன்றும் செய்திலமோ
இவ்வளவாக உதவிய நாம் மேலே உள்ளனவற்றையும் செய்வோம் காண்
நீர் இங்கனே ஐயம் கொள்ள வேண்டா என்று
நம்பத் தக்கவனாக இருக்கை முதலான தன்னுடைய கல்யாண குணங்களையும் -பெரிய அப்பனை -பாசுரம்
தான் இவ்வளவாக செய்த உபகாரங்களையும் காட்டி -தாள்களே எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவி –
இவருடைய ஐயத்தை தீர்த்து சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்தவராய்
அதனை அனுசந்தித்து – இனிதர் ஆகிறார்

ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13-

ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ

அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –

இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது-

எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –

இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் –
அந்த ரட்ஷணத்துக்கு வேண்டின வேண்டின உருவம் நின் உருவம் –
அன்றிக்கே
இச்சையால் கொள்ளப்படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல் –
அன்றிக்கே
அடியார்கள் உகந்தவற்றையே தனக்கு திருமேனியாக கொள்ளும் உருவம் நின் உருவம் என்னுதல் –

இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அன்று –
நாய்ச்சிமாரோடும் நித்ய ஸூரிகளோடும் கூடிய கண்ணும் வாயும் வடிவும் ஆயிற்று–இவருடைய உயிர் இருப்பது

காணுமாறு அருளாய் –
எனக்கு கடல் கடைய வேண்டா–அவ்வடிவைக் காட்ட அமையும்—வடிவை காண்கை பிராப்யம்
அருள் பிராபகம்
பிராப்ய பிராபகங்கள் நீயே -என்று இருப்பார் கார்யம் செய்யலாகாதோ

————

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காண வேண்டும் -என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்பேயோ -என் திறத்து செய்து அருளப் பார்த்தது –
நான் இங்கனம் படாமே உன்னைக் காணும்படி திருவருள் செய்து அருள வேணும் –என்கிறார் –

இவருக்கு வகுத்த விஷயம் விருப்பமாய் இருக்கும் –கடமை இனிமை இரண்டும் ஒன்றே –

உன்னை நீ பிரிந்து அறியாய் –
பிரிந்தாரை கண்டு அறியாய் -என்றது
நித்ய ஸூரிகள் பிரிந்து அறியார்கள் –சம்சாரிகள் பிரிவு அறியார்கள் –
ஆதலால் இந்த ஆற்றாமை உடையவன் நான் ஒருவனே ஆயிற்று -என்ற படி
சேஷத்வம் மறந்தால் நம்மை நாம் பிரியலாம் -சேஷித்வம் மறவானே அவன் –

உன்னை ஆசைப்படுதல் ,ஆபத்தை அறிவித்தல் செய்ய மாட்டாத உலகத்தை அன்றோ காத்தாய் -என்றது
அதாவது
நீ அறிய ஆபத்து உண்டாம் அத்தனை அன்றோ காத்தற்கு வேண்டுவது –
இரட்ச்சகனுடைய பாரிப்பு இரட்சிக்கப் படுகின்ற பொருள்களின் அளவுக்கும் விஞ்சி இருத்தலின்
பேராளா -என்கிறார்-

———–

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

அடியாருக்கு எளியனாய் இருக்கிற நீ –
இன்று வந்து என் ஆபத்தை நீக்காது ஒழியின்–உன் குணமே ஜீவனமாக இருக்கும் அடியவர்கள்
உன்னை எங்கனே நம்பும்படி -என்கிறார்

நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது
அடியேன் என்று நான் சொல்ல நீ ஈச்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

——

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

உன்னை அடியார்கள் இட்ட வழக்கு ஆக்கி வைப்புதி -என்னும் அறிவு ஒன்றாலுமே தரித்து இருக்கிற
அதுவும் பொய்யோ என்று ஐயப்படா நின்றேன் -என்கிறார்

அமர்ந்த செய்கை உன் மாயை –
ஒருவகையான பிரயோஜனத்தையும் விரும்பாமலே கிட்ட வேண்டும் செயல்கள்-உன்னுடைய ஆச்சர்யமான செயல்கள்-
அநந்ய பிரயோஜனராக தூண்டும் அவன் சேஷ்டிதங்கள் எல்லாம் –
(ப்ரயோஜன நிரபேஷமாகவே நம்மை செய்விக்கும் படி தூண்டும் அவனது ஆச்சர்யமான சேஷ்டிதங்கள் )

அறிவு ஒன்றும் சங்கிப்பன் –
இந்த ஒரு குணத்தையும் பற்றின அறிவு ஆயிற்று இவர் உடைய -சத்தா ஹேது -இருப்புக்கு காரணம்-
அதிலே ஆயிற்று இவர்க்கு இப்போது ஐயம் தொடர்கிறது –

என்னுடைய ஆர் உயிரேயோ-
நான் தரித்து இருப்பதற்கு காரணம் ஆனவனே-
தேவர்களுக்கு இனியனாய்–அசுரர் கூட்டத்துக்கு நஞ்சாய் இருக்கிற இருப்பு-
தம்முடைய இருப்புக்கு காரணமாய் இருக்கிறபடி-

———

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ ! (சீரியரேயோ) மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

நான் முயற்சி செய்து வந்து காண என்று ஒரு பொருள் இல்லை -காண் என்கிறார் –

பேறும் என்னது இல்லையே -உம் பேற்றை நீர் அடையாததால் தான் கதறுகிறேன்-சேதனன் என்பதால் –
ஞான கார்யம் -சரணாகதி -உபாயம் இல்லை -ராஜ்யஞ்ச அஹஞ்ச -பரதன் -சொல்லாது ராஜ்யம் -சொல்லுவது சேதனன்

இங்கே சீர்மை என்றது –
பிராட்டியாரோடு அல்லாதாரோடு வாசி அற அங்கீகரிக்கும் தன்மையினை –

ஆத்துமா சரீரத்துக்கு வேண்டிய ஹிதம் சிந்தனை செய்யுமது ஒழிய-
சரீரம் தன்னை தான் காத்துக் கொள்ளுவது என்று ஓன்று உண்டோ-
ஆதாரமாய் -நியமிக்கிறவனாய் -சேஷியாய் இருக்கிற நீ ஒழிய-
ஆதேயமாய் நியமிக்கப் படும் பொருளாய் -சேஷமான இது தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளவோ –
ஆதார ஆதேய -நியந்த்ரு நியாமய – பாவங்களால் சரீர லஷணம் இந்த உலகுக்கு உண்டான பின்பு-
சிறிது அறிவும் -நீயே கடவாய் -என்கிற எண்ணத்துக்கு கண்ட இத்தனை அன்றி-
ஒரு சாதனத்தைச் செய்யக் கண்டதோ –

——–

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

இதனால் என் சொல்லியவாறோ எனின் –
காரிய நிலையோடு -காரண நிலையோடு -முக்தனான நிலையோடு
வாசி அற உன் கை பார்த்து இருக்க வேண்டின பின்பு
நான் என் கார்யத்துக்கு கடவேன் ஆதல் எனபது ஒரு பொருள் உண்டோ -என்பதனைச் சொல்லியபடி –

——–

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

எல்லா பொருள்களும் பிரகாரமாய் இருப்பதனால் சேஷமாய்–நீ பிரகாரியாய்-
நீயே அவற்றுக்கு நிர்வாஹகன் என்னும் அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான்-
என் பாவத்தால்
அதிலும் ஐயம் கொள்ளா நிற்கிறேன் -என்கிறார்-

நாலாம் பாட்டில் ஐயப் பட்டத்துக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு
அடியாருக்கு பரதந்த்ரப் பட்டவன் என்ற தன்மையிலே ஐயப்பாட்டால்
திருவருள் செய்யாமை நம்முடைய ஆஸ்ரயணத்தில் குறையாலே என்று நினைத்து இருக்கலாம்-ஸ்வபாவ சங்கை அது –

இப் பாசுரத்தில் அவனுடைய சத்பாவத்தில் அன்றோ ஐயம்-ஸ்வரூப சங்கை இது –
பிரகாரியாய்க் கொண்டு அன்றோ அவனுடைய சத்தை-
அவன் நின்றும் வேறு பட்ட பொருள்கள் அவனுக்கு பிரகாரமாய்க் கொண்டே அன்றோ உண்டாவது-

இத்தால்
பிரியில் உலகம் அழியும் என்று நினைக்க வேண்டும்படியான
அவனது இனிமையின் மிகுதியே ஐயத்திற்கு காரணம் என்பதாயிற்று –

——–

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும் உன் அதீனமான பின்பு
என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே பாதுகாக்க வேண்டும் -என்கிறார்-

மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –
எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு-
வணங்கும் வகை அறிகின்றிலேன் –

———-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

எல்லா பொருள்களும் நீ இட்ட வழக்கு -என்கிற ஞானத்தோடு இருக்கும் இடத்தில்-
சம்சாரத்தோடு பரமபதத்தோடு வாசி இல்லை ஆகிலும்-
இந்த ஞானத்துக்கு விரோதியான சம்சாரத்தில் இருக்க அஞ்சுகிறேன் –
இதற்க்கு தகுதியான பரம பதத்தில் என்னைக் கொண்டு போக வேண்டும் என்கிறார் –

வான் உயர் இன்பம்,மன்னி வீற்று இருந்தாய் –
நின் தாள்களை எனக்கு அருளு -இதுவே அன்றிக்கே–
நித்ய விபூதியிலே நிரதிசய ஆனந்தத்தை உடையனாய்–உன்னுடைய சேஷியாம் தன்மைக்கு உரிய வேறுபாடு தோற்ற
இருப்பதோர் இருப்பு உண்டு -அவ் இருப்பில் என்னை அழைத்து–அசாதாரணர்களுடைய கைங்கர்யத்தை எனக்குத் தர வேண்டும்

——–

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

தாம் நினைத்த படியே திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக-
இந்த ஆத்ம வஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது-
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்-தன்னை ஒழிய செல்லாத படியையும்-
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிக்கை-

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
முன்பு இழவாலே கூப்பிட்டவர் தரித்து பிரத்யுபகாரத்தில் இழிந்ததைக் கண்டு
அதனாலே அவனுக்கு பிறந்த பௌஷ்கல்யத்தை பேசுகிறார் –

உபகாரத்தின் நினைவாலே இவர் உடைய ஆத்ம வஸ்து தாளும் தோளுமாக தளிர்த்தாப் போலே
எப்பொழுதும் ஒரே தன்மையான அவன் வடிவும் நூறு கிளைகள் ஆயிற்று

அவாப்த சமஸ்த காமனாய் இருக்கும் தன்மையும் பிரமாணத்தால் சித்தித்ததாய்-
அடியார்கள் இடம் வாத்சல்யமும் பிரமாண சித்தம் ஆனால்-அப்படியே கொள்ளுமத்தனை அன்றோ –

எனக்கு உவகையைப் பிறப்பித்து-அந்த உவகையைக் கண்டு அதனாலே தான் இப்படி-
விரிந்தவன் ஆவதே -என்று கொண்டாடுகிறார் –

——–

பெரிய வப்பனைப் பிரம னப்பனை உருத்திர னப்பனை முனிவர்க்
குரிய வப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால்
அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் தன்மையை சொல்லுகிறது-சாமீப்யம் –
ஸ்வ பாவம் சங்கை உரிய சேஷி என்பதால் தீர்ந்தமை -பெரிய அப்பன் இத்யாதியால் ஸ்வரூபம் சங்கை தீர்ந்தது –

ஸ்வரூப சங்கை தீர்ந்தமையை ஸ்பஷ்டம்
ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸ்வ பாவ சங்கை அஸ்பஷ்டம்
பரம சேஷீ
உபய பாவனையில் இல்லாத சனகாதிகளுக்கு அசாதாரணம் -உரிய விசேஷணம்
இதனால் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களுக்கு உரிய -பாரதந்த்ரம் காட்டுபவன்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –பிறந்தவாறும் -5-10-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

உபய விபூதி நாயகன் -நித்ய ஸூரி நாயகன் -ப்ரஹ்மாதிகளும் ஆஸ்ரயிக்கும் படி –-நம் இறை -மநுஷ்யர்களுக்கும் ஸ்வாமி அன்றோ அவனே உலகு அளந்தான் -உலகமாகத் தொட்டு
வேய் மூங்கில் -குத்தும் இடமும் இல்லாமல் முழுவதும் அளந்தவன் அன்றோ-தாயவன் -தாவி அளந்தவன்-பரத்வ வாசகம் முதல் மூன்று அடிகள்-ஸுலப்யம் அடுத்து -கண்ணனாக ஊராகத் தொட்டு
பெரியவன் எளிமை சொல்ல முடியுமோ -வாசகம் செய்வது நம் பரமோ என்கிறார் –பரமே -எதிர்மறை ஏகாரம் -நம் பரம் அல்ல-இரண்டே அடியால் -பிரிவினை ஏகாரம்-தோன்றிற்று இறந்த காலம் தொழில் பெயர் -வந்து அவதரித்த படியை –-இரண்டாம் வேற்றுமை -தோன்றின படி என்றபடி–துறை
தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —-பிறந்தவாறும் -5-10-இதன் விவரணம்
கிருஷ்ண அவதாரத்தில் சரணாகதி-நோற்ற நான்கும் -முதல் மூன்றும் அர்ச்சையில் சரணாகதி
அதி ஸூலபனாக அவதரித்தவன் அன்றோ-

அவதாரிகை –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று
இவள் சொன்ன அநந்தரம்-(கற்கின்ற -வாசகம் -வர்த்தமானம் -நிகழ் காலம் -வேங்கடம் என்றே அப்யசிப்பாளே-மயங்கிய நிலையிலும் -தேறியும் தேறாமலும் இதே தானே வாசகம் இவளுக்கு )திருத் தாயார் (செவிலித்தாயார் )அத்தை அநுபாஷிக்கையாலே  – அத்தைக் கேட்டு –பிராட்டியான தசை போய் தாமான தசையாம் படியாய் தரித்தார் –(இது இரண்டு பாசுரங்களுக்கு நடுவில் உள்ள நிலை
திருத் தாயார் சேர்த்து வைப்பாள் என்று உணர்ந்து தரித்தார்-மீண்டும் தோழி பாசுரமாக இருப்பதால் இது நடுவில் உள்ள அவஸ்தை என்றபடி )இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம்  இறே –-அங்கே  புக்கு -எத்திறம் -என்கிறார் – தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்-வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார் அநு பாஷித்த இத்தைக் கொண்டு பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்-இவர் தம்மைத் தாம் உணர்ந்தால் பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே அங்கு புக்கு எத்திறம் -என்கிறார்

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே
– -61 –தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு
–50–கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும் நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் – ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில் அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார்–தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –மனசே தங்கிப் போரு-அவருக்கு நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

வாசகம் செய்வது நம் பரமே–எத்திறம் -என்று மோஹித்து கிடக்கும் இதுக்கு மேற்ப்பட பாசுரம் இட்டு சொல்லுமது நம்மால் செய்யவாவது ஒன்றோ –என் தான் –-பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது ஒழிகிறது என் என்னில் –தொல்லை வானவர் உண்டு –யத்ர ருஷய ப்ரத்ம ஜாயே புராண -என்கிறவர்கள்-(முன்னில் முன்னவர் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்ய ஸூரிகள் ) அவர்களுக்கு நிர்வாஹனானவன் –ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே -என்கிறார் –
வேதங்களோடு வைதிக-புருஷர்களோடு வாசி இல்லை ஆயிற்று பாசுரம் இட்டு சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆநந்த குணத்தை சொல்ல புக்க மாத்ரத்திலே இறே – யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டது –தொல்லை வானவர் தம் நாயகன் -வாசகம் செய்வது நம் பரமே-நாயகர் எல்லாம் தொழுமவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று -வாசகம் செய்வது நம் பரமே நம் மிறையே-வாசகம் செய்வது நம் பரமே என்று தனித் தனியாகவும்தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே-வாசகம் செய்வது நம் பரமே சேர்த்தும் அந்வயிக்கலாமே

தஸ்ய தீர பரிஜானந்தி யோநீம் –தஸ்ய யோநீம் –அகர்ம வச்யனாய் இருக்கிறவன் – பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க –வந்து பிறந்த-நீர்மையை –தீர–தீமதாமக்ரேசராய்-அது தன்னில்-(நீர்மையில்) இழிந்து அறியப் போகாமையாலே –அத்தை-பரிஜானந்தி யோநீம் – சுற்றும் வந்து
ஆழங்கால் படா நிற்ப்பார்கள் –சர்வஞ்ஞனான தான் சொல்லிலும் –-ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்றும் –
பரம்பாவம் -என்றும் -சொல்லும் இத்தனை –இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை
பிரகிருதி (ஸ்வ பாவம் )இறே –ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:-த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9--எனது தெய்வத் தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,அறிந்து கொள்ளாமல்,புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்றுமனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–

தொல்லை வானவர் தம் நாயகன் –-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் – நாயகர் எல்லாம் தொழுமவன் –(விரஜைக்கு )இவ்வருகிலாக்கரான  ப்ரஹ்மாதிகளும்-சதுர் தச புவனத்துக்கும் கடவோம் – என்று இருக்கும் அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள் –பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –
(நியமன சாமர்த்தியம் உள்ளவன் என்பதால் கண்ணன் என்று சொல்லாமல் ஈஸ்வர பத பிரயோகம் )
மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் – ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்தானே -தனது இச்சையால் பிறக்கும் ஈஸ்வரனை பிறக்காத ஈஸித்வயர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-இப்படிச் சேராச் சேர்க்கை வாழி
நரர்கள் கண்ணுக்குத் தோற்றாமல் வானரர்களுக்கு தோற்றும் படி உண்டே-

ஞாலம் இத்யாதி –பூமிப் பரப்பை அடைய ஓர் கோல் குத்தும் விடாதே இரண்டடியால்-அளந்து கொண்டவன் –துரியோத நாதிகள் பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் விடோம் -என்று
அபிமானித்ததால் போல் ஆயிற்று – இவனும் இந்த்ரனுக்காக மகா பலி இடம் ஒரு கோல் குத்து-நிலமும் விடேன் என்றபடி –இரண்டே அடியால் தாயவன் – மூவடியை இரந்து ஓர் அடியால் அவனை சிறை-இட்டு வைக்கைக்காக இரண்டு அடியால் அளந்து கொண்டவன் –ஆய்க் குலமாக வந்து தோன்றிற்று –பூமிப்-பரப்படைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் –தன் காலின் கீழே துகை உண்ட ஒரு-பதார்த்தத்துக்கு தான் புத்ரனான இது – நம்மால் பாசுரம் இட்டு சொல்லலாவது ஓன்று  அன்று இறே  –ஆய்க் குலமாய் –சம்சாரிகளில் ஒருவனுக்கு அல்பம் விவேகம் உண்டானால் – பால்யேன திஷ்ட்டா  சேத் -என்று அபிஜன வித்யா வ்ருத்தாதிகளாய் வந்த அபிமானத்தை பொகடா நின்றான் இறே –(ப்ரஹதாரண்யம் சொல்லுமே-தஸ்மாத் பாண்டித்யம் நிர்வித்யே –மறைத்துக் கொண்டு இருக்கக் கடவன் )-அல்பம் விவேகம் உண்டாய் இருக்கிற இவன் அகப்பட இத்தை பொகடா நிற்க –
சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதனாய் வந்து பிறந்தான் –அர்த்தித்தோ மானுஷ்ய லோகே –ஜஜ்ஞ்ஞே விஷ்ணு சநாதன-என்கிறபடியே –தன்னைப் பற்றினாரும் பழையருமாய்  பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப் போமோ –வந்து தோன்றிற்று –ஆவிர்பூதம் -என்னக் கடவது இறே –
(கிழக்குத் திக்குக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் கர்ப்பத்துக்கு சம்பந்தம் )இரண்டே அடியால் தாயவனாய்-நம் இறையாய்ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது-
நம் பரமே -என்று அந்வயம் –
வேயகமாயினும் –வேய் -என்று மூங்கில் கோலை சொல்லுகிறது –
அகம் -உட்பட்ட அளவாய் –கோல் குத்தும் -என்றது-தாயாரும் அநு பாஷித்து – இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் சிந்தித்தாய் -அவனைக் கேட்டு கூட்டுகிறாள் என்று தேறி இருந்து தானான தன்மை பிறந்து வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –

அவன் ஸுலப்யன் என்று சொல்லி தோழி தலைவியை ஆசிவசிப்பிக்கிறாள்
வாசகம் செய்வது நம் பரமே-யதோ வாசோ நிவர்த்தக்கே -என்று வேதங்களே மீண்டனவே –
வேயகமாயினும்-ஒரு மூங்கில் நடும் சிறு இடங்களையும் விடாமல் அன்றோ அளந்தான்
இரண்டே யடியால்-தாயவன்–ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக என்னா-மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் –என்றபடி இரண்டு அடிகளாலாயே அளவிட்டு முடித்தவன் –-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று–அரசர் குலத்திலே ஒருத்தி மகனாய் வந்து பிறந்து இடையர் குலத்திலே-ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த எளிமை -வாசகம் செய்வது நம் பரமே–ஆஸ்ரித ஸூலபனாய் கண்ணனாய் வந்த நீர்மை யுடையவன் -உம்மை விரைந்து வந்து சேர்த்துக் கொள்வான்-இந்த நீர்மை -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணும் -அது ஒழிய புகழ சாத்தியப் படுமோ –

வாசகம் செய்வது நம் பரமே-அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ–தொல்லை வானவர் தம் நாயகன்-நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லிற்று-மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்–ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை-ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும் குழற் குத்தும் சோராத படி–இரண்டே யடியால் தாயவன்-அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்–இப்படி-1-ஸூரி போக்யனுமாய்-2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்-3-நிருபாதிக பந்துவுமானவன்-4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக–ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று–இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு ஆவிர் பவித்தது–நம்மிறையே-நமக்கு ஸ்வாமி யானவன்–நம் இறை வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்
இத்தால் பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை ஸூஹ்ருத்துக்கள் ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாசகம் செய்வது நம் பரமே எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–என் தான் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன–தொல்லை வானவர்-நித்ய ஸூரிகள் உண்டு- யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்–தம் நாயகன்–அவர்களுக்கு நிர்வாஹகனானவன்-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்-வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே —யதோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை-தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள் அது தன்னிலும் இழியப் போகாமையாலே அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்-ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,-அறிந்து கொள்ளாமல்,-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று மனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–என்றும் சொல்லும் அத்தனை-இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே–தொல்லை வானவர் தம் நாயகன்-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்–நாயகர் எல்லாம் தொழுமவன்-இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள் சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்-பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே–ஞால முற்றும் வேயகமாயினும் சோரா வகை-பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று -இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி–இரண்டே யடியால் தாயவன் மூன்று அடியை இரந்து இரண்டு அடிக்காக்கி ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டதுஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன் காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன் இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே–ஆய்க்குலமாய்— ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்-பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு இக் குல அபிமானத்துக்கு அவ் வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்–ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந –அயோத்யா -1-7-என்றபடியே தன்னைப் பற்றினாரும் பழையாரும் பிறவாதாருமாம் படி இருக்கிறவன் வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப் போமோ-வந்து தோன்றிற்று நம்மிறையே ஆவிர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே–இரண்டே அடியால் தாயவனான நம் மிறை ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம் வாசகம் செய்வது நம் பரமே-வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ அவன் பர ஸானத்தைக் கேளாய்–தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம் நித்ய நிர்வாஹக சேஷி யானவன் சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்-இப்படிப்
பரனே ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் பூ லோக உபரித லோகங்களில் ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியால் அளந்து கொண்டவன்-இப்படியான நம்மிறையே அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று – இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்-இவனுடைய-1- பரத்வ 2-ஸுசீல்ய 3-ஸுலப்யங்கள் வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

தாத்பர்யம்--கீழே திருவேங்கடம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து தாமான தன்மை அடைந்து தமது பாழியான கிருஷ்ண அவதாரத்தில் இழிகிறார்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான அபரிச்சின்ன வைபவம் உள்ள நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன்
இந்த விபூதியில் ஆக்கரான ப்ரஹ்மாதிகளும் வணங்கும் ஸர்வேஸ்வரன் ஓங்கி உலகு இரண்டு அடியால் அளந்த நமது ஸ்ரீ யபதி நமது இறை -ஸ்வாமி -மிதுன சேஷித்வம் தானே
இப்படியுள்ள தனது மேன்மையும் பாராதே இடைக்குலத்தில் வந்து பிறந்த ஸுலப்யம் சொல்லப் போமோ முடியாதே என்றபடி

5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-

திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோ ரதித்துக் கொண்டு போக, கால் நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;

இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அது தானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று
குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

மோஷத்துக்கு சரணாகதி பண்ண வில்லை -தரிக்கவே -இது -வேற நான்கும் வேற ரீதியில் –

கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச் செய்கிறார்.
‘குணாநுபவம் பண்ணியாகிலும்’ என்ற இவ்விடத்திலே
“கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.

இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யா நிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியா நிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது.
“இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று,
நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.

லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளைய பெருமாள்.
“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று,
திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.

இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்;
விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு,
‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை,
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய,
குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக்
கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,
“கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன,
‘ஆழ்வான் திரு மதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
உடையவர் ஓடிச் சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரம பதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக் கொதிப்பாலே மறந்தேன்’ என்ன,
‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சில நாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திரு வாசலளவும் சென்று,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற
சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது,
நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
‘அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.
என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய
கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்னும்

கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்,
இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க,
ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலே யாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.

இனித் தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனனாய்- கொன்றவனாய் – ஏக வீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள் தாம் ஆண் புலிகள், குடி தானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி,
குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன் அன்றிக்கே,
தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக் கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படி யாயிற்று இவன் தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்;

அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள்,
அவ்விழவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடி யன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.-என்பது, பெரிய திருவந்தாதி. 82.

புலையாம் பிறவி பிறந்தென் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

மாயா மிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடி சுட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
‘பாவியேன்! அன்று உதவி அத் திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.

‘திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.
“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு
என் மனம் சூழ வருவாரே.”- என்பது, திருவாய். 8. 3 : 6.

சங்கர மங்கலம் -பெண்மணி திரு வல்ல வாழ் வந்து -ஏகாதசி விரதம் -இருந்து த்வாதசி -சேவிக்க வருவாளாம்
தொலகாசுரன் தடுக்க -பிரமச்சாரி -வேஷம் கொண்டு அழித்து-மூன்று கூறாக்கி
தலைப்பகுதி – -தலையாறு -இடைப்பகுதி -கால் பகுதி -வெவேற இடங்களில் போக -இவன்
பிரமச்சாரி -அங்கி அவிழ -பெண் மணி -திருமார்பில் பிராட்டியைக் கண்டு -திருமார்பை மறைத்து –
திரு இருப்பைக் காட்ட -திரு வல்ல வாழ் -திரு வாழ் மார்பன் –திருவல்லா –என்றே இங்கே பழக்கம்
கண்ட கர்ணன் தபஸ் இருந்த திவ்ய தேசம் இது என்பர்-
கிருபையைக் காட்டி அருளினான் இங்கு –

‘இவர் அவனுடைய அவதாரங்களையும் உலகைப் படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடி யிட்டு அப்படி வளர்ந்தருளின
கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர்,–
1-தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று
ஆழ்வான் பணிக்கும். -தரித்து நின்று அநுசந்திக்க–மானஸ அனுபவம்

அன்றியே,
2-‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி
செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.–
உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்

அங்ஙனம் அன்றிக்கே,
3-“சர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தருளா நின்றான்’ என்று கேட்டு,
‘அங்கே மநோ ரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று தெற்குத் திருவாசலாலே சென்று புக,
‘இப்போது இங்ஙனே வடக்குத் திரு வாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதி யேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று
பிள்ளான் பணிப்பர் என்று அருளிச்செய்வர்.-பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே -வருத்தம் —

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–கடாக்ஷித்து ஸ்ருஷ்டிகள்
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–கடாக்ஷித்து பகைவர்களை அழியச் செய்ய
“நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம்.

எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

“செய்து போன மாயங்களும்” என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.

கோ கோபிரளர் மக ரிஷிகள் –வாசு தேவர் மூலவர் -சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உத்சவ சேவை –
இருந்த இடமே- 32-சேவை பெற்றார்களே -மன்னார்குடி சேவை-

பத்தாம் திருவாய் மொழியில் இப்படி திரு வல்ல வாழிலே யநுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ஆர்த்தராய்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்கிறபடியே
அவனுடைய ஸர்வ அவதார ஸித்தமான குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து தரிக்கப் பார்த்து –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாராதி வ்ருத்தாந்தத்தையும்
அபிமத விஷய வியாபாராத்தையும்
பால சேஷ்டிதங்களையும்
திரிபுர வாசிகளான அஸூர வர்க்கத்தினுடைய அந்தர் பேதத்தையும்
அதி மானுஷ சேஷ்டிதங்களையும்
ஸ்த்தித் யாஸன சயநாதி வியாபாரத்தையும்
ஆந்தரமாகவும் பாஹ்யமாகவும் பிரகாச அப்பிரகாச கரத்வத்தையும்
சர்வாதிகத்வ ஸூ சகமான ஸ்ருஷ்ட்டி வ்யாபாரங்களையும்
அர்த்தியாயும் தன் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் யரும் தொழில் செய்து அபகரிக்கும் படியையும்
அனுசந்தித்து அவை தானே அபிராப்தி தசையில் சையில்யாவஹம் ஆகையால் ஆர்த்தராய்
உன்னுடைய சேஷதீதாதிகளை நான் நிலை நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்று அபேக்ஷித்து
அவன் திருவடிகளில் பிறந்த உபாய விசுவாசம் யாவத் பிராப்தி அனுவர்த்திக்கும் படியை அருளிச் செய்து
இப்படி உபாய பூதனுடைய ஸ்வரூப யாதாம்யத்தை நிரூபித்துத் தலைக் கட்டுகிறார் –

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–
5-10-1-

பிறந்தவாறும் – தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படி யன்றோ பிறந்தது. -பாசம் அறுத்து —-தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ.‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்;
அது பொறுக்க மாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்க மாட்டேன்’ என்று விட்டான்.தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று-நானும் பிறந்து அர்ஜுனா நீயும் பிறக்க வேண்டுமோ –பிள்ளாய்! பிறக்கிற போதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, தானே விளக்காக அன்றோ பிறந்தது.-ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ.-கர்மங்கட்குக் கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது,-பிறந்தால் -ஆஸ்ரித சம்ரக்ஷணமே -அடியார்களைப் பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது,-அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் காலமாவது,-பிறவா நின்றால் தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றும் குறையாமற் பிறப்பது,-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை -பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது,-தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக இருப்பது, இவை யெல்லாவற்றையும் நினைக்கிறது. – நமக்காக இவர்கள் பிணை பட்டுச் சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று ஈடுபடா நிற்பனவான படிகளை யெல்லாம் நினைக்கிறது.-பிறந்தார் பால் குடித்தார் நினைத்தால் பிறக்காமல் பால் குடிக்க வேண்டாமல் போவதே –-அவதார ரகசியம் நான்கு ஸ்லோகங்கள் -ஆறு விஷயங்கள் –-1-மெய் 2-பெருமைகள் குறையாமல் -3-சுத்த சத்வ மயம்
4-இச்சையால் பிறக்கிறான் -5- சாது சம் ரஷணம் -தர்ம சம்ஸ்தாபனம் -6-துஷ்ட நிக்ரகம் 

அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவு படுகையாலும்,
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார்.-பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர்,
அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி.
‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ!
ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே,-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-

வளர்ந்தவாறும் – வளர்ந்தபடியை அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால் வாங்கி இளைப்பாற வேண்டும்படி யன்றோ இருப்பது.-பிறக்கிற போது சிறைக் கூடத்திலே தான் பிறந்தால், வளருகிற போது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
விபவத்தில் ஓர் அந்தர்யாமி பட்டது அன்றோ பட்டான் –பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது.-இவன் கால் நெடுக நெடுக, பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது;-திறங்கள்’ என்றது, தூது சென்றும், தேரை ஓட்டியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும், எதிர்கள் உயிர் நிலைகளைக் காட்டிக் கொடுக்கை தொடக்கமானவற்றை யெல்லாம் சொல்லுகிறது.நிறந்தனூடு புக்கு--தோல் புரையே போமதன்று, மர்மத்திலே நலிகிறபடி.-

உன்னை என்று கொல் சேர்வதுவே – நான் தரித்து நின்று அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேண்டும்.என்கிறார். –-மானஸ -கூரத் ஆழ்வான் நிர்வாகம் –அன்றிக்கே, சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து உன்னைப் பிரியாதபடி கிட்டப் பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.– காயிக -எம்பார் நிர்வாகம் –ஒரு தமிழன் -பிறந்த வாற்றாலும் என்று தொடங்கி –செய்து போன மாயங்களாலும்–உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே -என்று அவன் பக்கலிலே யாக்கி நிர்வஹித்தான்-

———

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?
–5-10-2-

என்னை உன் செய்கை நைவிக்கும் – அச் செயலாகவுமாம், இச் செயலாகவுமாம், உச் செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை;-உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது.
“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப் பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்;
இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.

முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?
பிரவாஹா ரூபேண நித்தியமாய் -பிரளய காலத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினவனே -அழிந்த வஸ்துவை உண்டாக்கின அருமை -உண்டோ உள்ள வஸ்துவை தரிப்பிக்கைக்கு –அழிந்த வஸ்துவை உண்டாக்கினால் போலே சிதிலனான என்னை தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் –உன்னை என்று கிட்டுவது -என்றுமாம் 

இத் திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம், ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தான பரங்கள் என்றும் எம்பார் நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.-

————

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே
.–5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளை--பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று ‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.-பிள்ளைத் தேற்றம் – ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,-யசோதைப் பிராட்டி முலை கொடுக்கும் போது பிரீதியினாலே செய்யும்-முக்த ஜல்பிதங்களை – மழலைச் சொற்களை-இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக் கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.

செய்த நின் சிறுச் சேவகமும் – நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப் பயிற்சி செய்து, வசிஷ்டர் முதலியவர்களைப் பின் சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவை யெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும் வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும். இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடி கட்டி வைக்கிறது.

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும் படியும்.

நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க –-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட் புக்கால் பொறுக்கப் போமோ.-கோட் புக்கால்-நூதனமாக அலர்ந்தால்–வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.-“துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம் ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா–

நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
நெய் யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே
நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்-பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன-

———–

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.
–5-10-4-

சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக் கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.-சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.-காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.-

வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –-“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் – சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,
இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.

அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.-சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடி வந்து இழிகிறபடி.-அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும்–கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்

உள்ளம் உள் குடைந்து –என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –ஆத்மாவைப் புக்கு அழித்து நோவு படுத்தா நின்றன.-ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.-

———-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே
.–5-10-5-

இவன் தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;-இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;-அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,-மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவே யன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக் கொண்டு திருப்தனாக இருக்க, இதனைத் தான் கைக் கொண்டானாயிற்று.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –-அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.-

—————

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!
–5-10-6-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-திரு ஊரகம்-திருப் பாடகம் -திரு வெக்கா -இவற்றிலே நின்றபடியும் இருந்த படியும் கிடந்தபடியும்
அப்படியே ஆஸ்ரிதர் ஹிருத்யங்களிலே பிராமண சித்தமாம்படி வர்த்தித்த படியாகவும் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் திருத் தொட்டிலிக்குள்ளே நின்று இருந்து கிடந்த படியையும் சொன்னபடி ஆகவுமாம்-இவர் இவ் விஷயத்தில் படுகிற பாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ. இவ் விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை.

நின்ற வாறும் –-இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;-இருந்தவாறும்-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-கிடந்தவாறும்-
“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு-கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே;-“கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ-நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச் சொல்ல அமையுமாயிருக்க, ‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ,
தனித் தனியே உளுக்கினபடி.-நின்றானாகில் ‘நிலையார நின்றான்’-இருந்தானாகில், “பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்படி இருக்கும்-கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள்.-

நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் கிடக்க -நம் பெருமாள் -நாச்சியார் திருக்கோலம் இருந்து-திருவல்லிக்கேணி -நின்றும் இருந்தும் கிடந்தும் -பரந்தும் -நடந்தும் -சேவிக்கலாம்-
திரு நீர் மலையிலும் நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான் –

கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்து நின்ற நிலையாதல்,-திருக் குரவைக்கு முற் ஜாமமாகப் பெண்களோடே கழகம் இருந்த இருப்பாதல்,-ஓரொருத்தர் மடியிலே சாய்ந்த படியாதல்.

அன்றிக்கே-“நிற்பதும் ஒர் வெற்பகத் திருப்பும் விண் கிடப்பதும், நற் பெருந் திரைக் கடலுள்” என்கிறபடியே,-திருமலையிலே நின்றபடியும்,-பரம பதத்திலே இருந்தபடியும், திருப் பாற் கடலிலே திருக்கண் வளர்ந்தருளின படியுமாகவுமாம்

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பாடா நிற்க,-‘இவை யெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச் செய்தார் எம்பெருமானார்.
தொட்டிற் பழுவைப் பிடித்துக் கொண்டு நிற்கும்படியும்,
தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும்,
அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது.

அன்றிக்கே,-போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி-சிறிய திருமடல். கண்ணி. 31.-அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும்,-அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும்,-நிழல் ஆடினவாறே முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தவாறும் என்றுமாம்.

போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,வடக்கு நின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று-தீர்த்தவாரி உத்சவம் அன்று –
இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்துப் பெருமாளை
மத்த கஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிக் கணிசம்-சபதம் – கொண்டு,
“நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருத்தன், எழு நூற்றுக் காதம் ஆறு உண்டு
தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை செய்தருள வேண்டும்” என்ன
பெருமாளும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு,
திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தளவும் செல்ல நாலு கோல் தறை திருக் கைத்தலத்திலே எழுந்தருளி
விண்ணப்பஞ் செய்வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு,
‘வாரீர் கோள், இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்’ என்று திருவுள்ளமானார்.
இப்படியே யன்றோ நம்மிழவுகளும் திருவுள்ளத்திலே பட்டவை யெல்லாம் ஆறும்படிக்கு ஈடாக முகம் தந்தருள வல்லபடியும்.
இதுவே யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு –

ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் திருப் பரிவட்டங்களை அழகிதாக வாட்டி எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட,
போரத் திருவுள்ளமுகந்தாராய் இவனையும் கூடக் கொண்டு பெருமாள் பாடே புக்கு,
‘நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி-வெளுத்த படி- பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட,
கண்டு போர உகந்தருளி எம்பெருமானாரை அருளப் பாடிட்டு,
‘இவனுக்காக, கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்திற் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்.

ஆகவே பக்தனுக்காகவும் அபக்தனுக்காகவும் செய்து அருளினார் என்பதைக் காட்டிய வாறே-அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் அன்றோ –

ஒன்று நன்கு உரையாய்-ஆத்ம ஸ்வரூபத்தின் சித்தி யன்றோ பேறு ஆகிறது. பேற்றின் பலமான கைங்கரியம் சொல்ல வேண்டாவே,-பேற்றின் அளவுமன்றோ பிரமாணம் சொல்லுவது. அதற்கு அப்பாலுள்ளது பிரமாணத்துக்கு விஷயம் அன்றே.
வாசா மகோசரம் அன்றோ அது–அப்படியே ‘உனக்கும் நானே கடவேன்’ என்று ஒரு வார்த்தை சொல்ல வல்லையே.

உலகம் உண்ட ஒண் சுடரே!-உண்டி உடல் காட்டுமே. நினைக்கை குற்றமாய் விட்டதோ. நினைவுங்கூடத் தேட்டமானால் நீயே செய்து தலைக் கட்ட வேண்டாவோ.
(நினைக்கின்றேன் என்று சொன்னதே குற்றம் -நீயே அறிந்து செய்ய வல்லை அன்றோ )
இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி,இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன் பேறு’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ.-‘உன் பேறாக ரக்ஷித்தாய்’ என்பதனை மெய்யே யன்றோ சொல்லுகிறது- மெய்யே -சத்தியமாக -சரீரமே லோகம்-
(ஜகம் சரீரமான படியால் நீயே ரக்ஷித்தாய் என்றபடி )-இங்கிதம் நிமிஷிதம் -தாவகம் -உன் செயல் எல்லாம் நைவிக்கும் –

—————

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே
.–5-10-7-

உண்மையோடு இன்மையாய் வந்து ஒண் சுடரோடு இருளுமாய் நின்றவாறும் 
எனக்கு உண்மையோடே ஒண் சுடராய் நிற்கும் மனத்தின் கண்ணே;-இன்மையோடு இருளாய் நிற்கும் புறத்திலே காண்கையில்.
அன்றிக்கே,-அடியார்கட்குத் தன் படிகளில்-சேஷித்வம்- ஒன்றும் குறையாதபடி காட்டிக் கொடுத்து, அவர்கட்கு ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறியும்படி பிரகாசித்து நின்றபடியும்,
அடியரல்லாதார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் தெரியாதபடி செய்து, அதனாலே அவர்களுக்கு ‘இல்லை’ என்னும்படி இருளச் செய்து கொண்டு நின்றபடியும் என்னுதல்;
அடியார்கட்கு ஒண் சுடரோடு உண்மையாய் நின்றும், அடியரல்லாதார்க்கு இருளோடு இன்மையாய் நின்றும் 

வந்து என் கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன – இவை யெல்லாம் தவிர, என் பக்கல் பரிமாறுகிற வேறுபாடும்.-ஒண் சுடராதல், இருளாதல் இரண்டத்தில் ஒன்றாகப் பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியா நின்றேன்.
முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர் தாம்.-என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும்.

ஒரு நாள் அருளாய் – ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய் கொண்டவன் ‘ஒரு கால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும் படி சொல்லுகிறோம் என்று.

உன் திரு உருவே – இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக் கொண்டு கிடக்கைக்கு;
“உன் திரு மேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ
பிரிநிலை ஏவகாரம் இது உனது திரு உருவமே அன்றே என்னது அன்றோ பக்தானாம்-

———

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே
.–5-10-8-

ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலை நெகிழ்ந்தாற் போன்று நெகிழ்ந்து, கண்ண நீர் அருவியாய்ப் பாயா நின்றது.-என் செய்கேன் அடியேனே – பர தந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ,-வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ,-நான் எதனைச் செய்வேன்?ப்ராப்தியை உணர்ந்த வாறே விட்டுத் தரிக்கப் போகிறது இல்லை –பரதந்த்ர வஸ்து யாகையாலே பேற்றுக்கு யத்னம் பண்ணப் போகிறது இல்லை —

——————-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.
–5-10-9-

ஆழ் கடலும்-இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.-பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து-தலைக் கட்டிக் கொண்டபடியும்.-மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன்,
இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன்,
என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.-என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் அவாப்த ஸமஸ்த காமனான நீ ஆஸ்ரித அர்த்தமாக அர்த்தியான நீர்மையை அனுசந்தித்து -என் மனஸ் ஸூ இது என்ன நீர்மையே என்று த்ரவித்து சிதிலமாகா நின்றது

கொடிய வல் வினையேன் –பிராயச்சித்த சாத்தியம் அன்று -அனுபவ விநாஸ்யம் அன்று -சைத்திலய ஹேதுவான பிரமத்தை இ றே பாபம் என்கிறது -திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி – நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-உன்னை என்று கொல் கூடுவதே – நான் தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்றோ? அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?-

—————

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!
–5-10-10-

ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்

நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!-தரித்து அநுபவிக்கும்படி நல் விரகு சொல்ல வேண்டும்.–உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன, ‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது,-ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப் பண்ணிக் கொடுத்திலையோ;-அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும் –

————-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.
–5-10-11-


‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.–ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே –
ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –
அன்றிக்கே,-சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.-மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.

நாடொறும் ஏக சிந்தையனாய் – புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,-பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் -தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

வைகலும் மகிழ்வு எய்துவர்- காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்.-‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணி யருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும் படியான சம்சாரத்தை விட்டு, பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.–மாக வைகுந்தத்து-‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –அறுக்கும் வினையாயின -9-8-

February 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

திருத்துழாய் அங்குரிக்கும் போதே பால்ய பிராயத்தில் ஸஹஜ பக்தி உடையவள் செவிலித்தாயார் இரங்கி –தலைமைகளின் இளமைக்கு-குறுக்கும் வகை -திருநாவாய் -ஆழ்வார் -ஆளவந்தார் உகந்த திருவாய்-ஆகத்து அவனை நிறுத்தும் மனம் -ஆகத்து வினையை அறுப்பானே
ஓ -என்று கிட்டுமோ -அங்கும் உண்டே-இங்கு திருவேங்கடம் கிட்டுமோ-இங்கு–ஐந்து ஓங்காரங்கள்

முலையோ என்னில்-கலையோ என்னில் நாவோ என்றால் தெரிநிலை ஓங்காரம் -இவை மூன்றும் -ஆச்சர்யம்-விலையோ -விலை ஆகாதே -கண்கள் பெருத்து உள்ளனவே-மலையோ -கேட்டால் திருவேங்கடம் என்று இத்தையே சொல்லிக் கொண்டே இருப்பாள்-இத்தையே அப்யஸித்துக் கொண்டே இருப்பாளே-இவை இரண்டும்-ஒரு ஏவகாரம் இவள் பரமே-எதிர்மறை ஏவ காரம்

அவதாரிகை –தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் – என்றாளே –ப்ராப்த யௌ வநையாய்–பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ – பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் – தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை தலைவி ஈடுபாடு கண்ட தோழி அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்-இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார் அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளேப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
– 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்
—88–இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு அவ் வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் 

முலையோ இத்யாதி –இவை எல்லாம் நிரம்பினால் சொல்லுகை பிராப்தம் -இறே –இவை எல்லாம் -ஓங்காரம்-இவை இருந்தால் திருவேங்கடம் -திரு நாமம் சொல்லுகை பிராப்தம்-முலை வளர்ந்து கலை நின்று நா குழறாமல் இருக்க வேண்டுமே -முலையோ முழு முற்றும் போந்தில – முலைகள் சமைய வளர்ந்தன வில்லை என்று சொல்லும் அளவல்ல –முலை எழும் எல்லை இன்னது என்று கொண்டிக் கோல் நாடிற்றும் இல்லை –மொய் பூம் குழல் குறிய –செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்கள் ஆனவை –குறிய –நாயகன்-பேணி சூழி யஞ்சுற்றினால்-கொண்டை(க் கோலால் ) முடிந்தால் —
இவள் வினை கேட்டாலே செயல் அறுதியால் அழகு இல்லை என்று )குலைத்தால் அதுக்கு அவன் கால் பிடிக்கும் அளவு அல்ல –  கொண்டை முடிக்க நீளம் போராது என்னுதல்–கலையோ அரை இல்லை
உடுக்கும் இடம் அறியாள் –நாவோ குழறும் –தாய்மார் உருச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்கும் இத்தனை –(அவள் -தாய் பக்கம் என்றும் மகள் பக்கம் என்றும் ) ஐயர் ஆச்சி என்று சிலவற்றை கற்பிப்பர்கள் இறே அவர்களுடைய தெளிந்த சொற்களில் காட்டில் இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும்-

கடல் இத்யாதி –இவ் விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க – அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து  இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும்  இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-

கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அடங்கலும் விலையாகப் போகும் என்னும் படிக்கு-ஈடாக வாயிற்று
கண்கள் மிளிருகிறபடி –மிளிரும் –திரை மோதிக்கரையாலும்-வழிப் போக ஒண்ணாதபடி இரா நின்றது களவு கலந்து -(யௌவனம் குடிபுகுந்து -என்றபடி )நாயகனை ஒதுக்கிப் பார்க்குமது அன்றியிலே
சர்வ சாதாரணமாக ஜனனியோடு காந்தனோடு-வாசியற பார்க்கிறவள் ஆயிற்று–இவள் பரமே –
இவள் பருவத்துக்கு தகுதியோ – இது இவள் பரம் அல்ல –இணக்கத்தின் பொல்லாங்கு -(சஹவாசத்தாலே வந்தது -என்றபடி ) சாய்விலாத குறுந்தலை -(பெரியாழ்வார் -ஸஹ வாஸ தோஷத்துக்கு இப் பாசுரம் )பெருமான் மலையோ திருவேங்கடம் என்று –பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே   திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம் இவள் பருவத்துக்கு தகுதியோ –பரத்வாதிகளையும் விட்டு அர்ச்சை அளவும் சென்று மேலே திவ்ய தேசமே பிராப்தம் என்கிறாளே-அதுவே சாம்யா பத்தி கொடுக்கும் -சமன் கொள் தடம் குன்றமே-அளவிட முடியாத திருமலையின் ஸுலப்யாதிகளை அன்றோ பேசுகிறாள் 

ஆனந்த குணத்தை பேசப் புக்கவாறே வேதங்கள் நிலம் அல்ல என்று மீண்டது – இங்குத்தை சீல பிரசுர்யம்  நிலமல்ல என்கைக்கு நிலம் இல்லை இறே- அபரிச் சின்ன-வஸ்துவை -அர்ச்சாவதாரத்தில் சௌலப்யம் -பேசப் புக்கவாறே – அவை நிலம் அல்ல என்று கை வாங்கிற்று –கற்கின்ற வாசகம்
சொல்லுகிற பாசுரம் என்னுதல் –அன்றிக்கே-இவள் வாயாலே சொல்லும்படி-கேட்கைக்காகவே –
தாங்கள் இவை தன்னை கற்பியா நிற்பர்கள் இறே –-இவள் வாயனகள் திருந்தவே -என்னக் கடவது இறே –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே -என்னுதல் –அன்றிக்கே-பெருமான் மலையான திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –-ஒ  இவள் பரமே -என்னுதல் – ஒ -இது என்ன ஆச்சர்யம் –

உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது–செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் –வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்று இல–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே –கொங்கை இன்னம் குவிந்து எழுந்திலே –போன்ற பெரியாழ்வார் பாசுரங்களும் – முள் எயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா- தெள்ளியள் என்பதோர் தேசு இலள் –திரு மங்கை ஆழ்வார் பாசுரமும் காண்க –கடல் மண்ணெல்லாம் விலையோ -ரத்நாகரமான கடல்களும் பூ லோகமும் மற்று எல்லா உலகங்களும் விலை போதா –பருவத்தின் மிக்க இளமையை சொன்னவாறு-நாயகனை வசப்படுத்தும் சாதனங்கள் இல்லை என்றவாறு-

முலையோ முழு முற்றும் போந்தில-யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை- முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறதுமொய் பூம் குழல் குறிய-செறிந்த பூவை யுடைத்தான குழல்-பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய முடி கூடின வில்லை-கலையோ அரையில்லை–பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று-நாவோ குழறும்-நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்–கடல் சூழ்ந்த பூமியும் மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்–இவள் பரமே-இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –நாயகனை வசீகரித்து-முலை அழகாலே யாதல்-மயிர் முடி அழகாலே யாதல் உடை அழகாலே யாதல் உக்தி சாதுர்யத்தால் யாதல் ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க-(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல் கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )முலையும் அரும்பாதே குழலும் முடி கூடாதே பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே சொல்லும் மழலையாய் கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல் என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று–பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே-ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று-

இத்தால்-பரிவரானவர்கள் – பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ் வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது–முலையானது-போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி–குழல் குறிய -என்று முடி அழகில்லை என்றபடியாலே நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி–உடை அழகில்லை என்கையாலேபந்த பரிகரஸ் தஸ்ய –ஹர்யஷ்டகம் -என்னுமா போலே-யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி–ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:-நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-திடவிரதத்துடன்,இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,முயற்சி புரிவோராகவும்,என்னைப் பக்தியால் வணங்குவோராய்,நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.–மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்திய யோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்-மிளிரும் கண் -என்கையாலே-ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி–இவள் பரமே -என்கையாலே-கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு சாதனம் இல்லாமல் த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று வ்யதிரேகம் சொன்னபடி–பெருமான் மலை -இத்யாதியாலே-அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்கிறபடியே அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போக ஸ்த்தானம் என்றதாயிற்று (கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-முலையோ முழு முற்றும் போந்தில-இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்-முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல-முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை–மொய் பூம் குழல் குறிய— செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால் இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல–கலையோ அரையில்லை— தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான் திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை–நாவோ குழறும்-சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று-இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம் ––முலையோ முழு முற்றும் போந்தில-முழு முற்றும்
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை–மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்-கலையோ அரையில்லை-கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்-நாவோ குழறும்-நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ-என்னும்படியான கண் பார்வையள்–இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே ––என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய் அப்போது சொல்லும் வாக்யமாவிது–இவள் பரமே-இவளுக்குத் தக்கதோ-இத்தால் அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும் பிரிவில் அத்யாவசன்னதையும் ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று-இதுக்கு வல் வினையேன் என்று நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

ஸ்வாபதேசம் –
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் –எம்பெருமானை அடைய பக்தி முதலியன நிறையாமல் இருக்க -த்வரிப்பது ஏனோ –-முலை -பக்தி முதிர்ந்து பேற்றுக்கு சாதனமான பரம பக்தி அடைய வில்லை-மொய் பூம் குழல் குறிய-தலையால வசப்படுத்தும் பிரணாமம் பூர்ணமாகத் தோன்ற வில்லை-கலையோ அரையில்லை-மடிதற்று தான் முந்துறும் -திருக் குறள்-அரையில் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துற்று-கிளம்பும் முயற்சியில் இல்லை -முயற்சியை அதன் காரணத்தால் கூறின படி-நாவோ குழறும் -இடை விடாத பகவத் திரு நாம சங்கீர்த்தனம் இல்லை-கடல் மண்ணெல்லாம்-விலையோ வென மிளிரும் கண் -ஞானத்தின் சிறப்பு -மிளிரும் -த்யானம் -அவ்வறிவை-ஓர் இடத்தில் நிலை நிறுத்தி -த்யான ரூபமான ஞானம் இல்லை-இவள் பரமே-பரதந்த்ரராய் இருப்பார்க்கு -சாதனம் ஒன்றுமே இன்றி இருக்க இத்தனை விரைவு த்வரை கூடுமோ –-பெருமான்-மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – வெருவதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
என்கிறபடியே திருமலையையே வாய் புலத்தும் – ஆழ்வார் திருவவதரித்தது முதலே எம்பெருமானால் அல்லது தரியாமையைச் சொன்னவாறு –

ஸ்வாபதேசம்-பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் – அறியாக் காலத்துள்ளே -என்றும் -சொல்லுகிறபடியே-இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி -சொல்லுகிறது-முலையோ முழு முற்றும் -மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —

தாத்பர்யம்–கீழ்ப் பாட்டில் யவ்வன அவஸ்தை ப்ராப்தமான இவள் சர்வேஸ்வரனையே கூப்பிடா நின்றாள்-இது பால்யாத் ப்ரவ்ருத்தி அன்றோ – ஸ்வதஸ் சித்தம்-நாயகன் விரும்பும் ஸ்தனங்கள் வளர வில்லை-அரையில் களையும் நிற்க வில்லை-நாவால் குழறுகிறாள்-நாயகனையும் மாதா பிதாவையும் ஒன்றாகவே வெட்கம் இல்லாமல் பார்க்கிறாள்-இவ்வளவு சிறிய பருவத்திலேயே திருவேங்கடமே என்றே அப்யஸியா நிற்கிறாள்-இத்தால் கீழே சொன்ன சர்வேஸ்வரத்வமும் விரோதி நிரசனத்வமும் – ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் என்றும் மது சூதனன் என்றதும் ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள்

9-8-அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ப்ரவேஸம்-

திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது-மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த
எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ-ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ராமபிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த சீதைப் பிராட்டி போலே
மேல் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத்தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே-நடுவில் இவர்க்குப் பிறந்த
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –

இப்படி தம்முடைய துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்-அப்போதே வரக் காணாமையாலே துயர் உற்றவர்
தூது விடுகையாலும்
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை அங்கீ கரித்து-அமர்ந்த நிலமான திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம்
என்று அறுதி இட்டு-
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி-அங்கே புக வல்லேனே-புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே-குறுக்கும் வகை உண்டு கொலோ –
என்று இப்படி பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –

உபாயமும் உபேயமும் இரண்டும் ஈஸ்வரனே -என்று அறுதி-இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்-
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ-

இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்-அது தான் இனியதுமாய்-
இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்து இருப்பதுமான-ஓன்று அன்றோ –
பெரிய முதலியார் -ஆளவந்தார் –பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே-
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –ஆளவந்தார் மிகவும் உகந்த திருவாய்மொழி –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை-பெரிய முதலியார் திருமொழி -என்று ஆயிற்றுச் சொல்லுவது –
அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று-தாமே அவன் எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் –என்பாரும் உளர் –

மூன்று அடுத்து அடுத்து வரும் திருவாய் மொழிகள் மலையாள திவ்ய தேசங்களுக்கு –
தாயாருக்கு தனி சந்நிதி -திரு நாவாய் முகுந்தன் -ஸ்ரீ விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழல்கின்றேன் -விபு -இவன் -அதனால் -இந்த தோனி -இக்கரைக்கு அக்கரைக்குமாக விபுவாக –
லீலா விபூதியில் இருந்து நித்ய விபூதி வரை பரந்து இருக்க – -நாமே -அனுபவித்து -விஷ்ணு போதம் -நாவாய் நாராயணன் -நாவாய் முகுந்தன்-
நவ யோகி ஸ்தலம் -எட்டு பேர் முத்தி ஒன்பதாவது யோகி வேண்டி சேவை நவ யோகி மருவி நாவாய்
திருவடி சேவை இல்லை -கால் வாசி உள்ளே -வற்கலை திருக்கையால் ஆசமனம்
இங்கு வேத விமானம் செங்கமல சரஸ் -பாரத புழா நதிக் கரையில்
பிண்ட பிரதானம் செய்வது இங்கே பிரசித்தம் -கடத்த -துன்பக் கடன் பித்ரு கடன் தீர்க்கவும் இந்த ஸ்தலம்
மு மோக்ஷம் கு பூமி த ததாதி முகுந்தன் –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு ஸம்ஸயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-

எட்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக முகத்தால் பிராபிக்க அபி நிவேசித்தவர் -ப்ராப்ய த்வர அதிசயத்தாலே –
அவன் பரிபூர்ணனாய்க் கொண்டு திரு நாவாயிலே எழுந்து அருளி இருக்கிற படியை பிரகாசிப்பித்துக் கொண்டு அவனுடைய
அனுபவ விரோதி நிராசக தேச வர்த்தித்வத்தையும்
அனுபாவ்யத்வ வைபவத்தையும்
அசாதாரண ஸம்பந்தத்தையும்
நித்ய கைங்கர்ய விஷயத்வத்தையும்
பத்னீ பரிஜன ஸ்தாந அநு பூர்த்தியையும்
ஆஸ்ரித பவ்யதையும்
சேஷித்வ ரக்ஷகத்வ ஆகார பூர்ணதையையும்
அனுபவ ஞான பிரதத்வத்தையும்
ஸூ ர வஸ்ம ஸர்வேஸ்வரத்வத்தையும்
அதி ரமணீய விக்ரஹ யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகாரனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தைக்கிட்டி அனுபவிப்பது
ஒரு நாளே என்று பஹு முகமாக மநோ ரதிக்கிறார்-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின–வினையாயின -அறுக்கும் – வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது-ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்-பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன-நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று- அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –

அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமேநாளேல் அறியேன் என்பார்-மேல் இப்பதிகத்திலே

நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் – உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது-கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —அனைத்து உள்ளத்திலும் இருந்தாலும் அவர் இருக்கிறார் என்ற உணர்வே வேண்டுவது

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –மனத்திலே அவனை 1-நிறுத்த வேண்டும் என்னும் 2-உறுதியிலே-3-ஒருமைப் பட்ட-4-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-மநோ ரதம் மட்டுமே –தத் அபி சந்தி விரோதமாத்ராத் கூரத்தாழ்வான்-ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க -இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

————–

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் –கூரிய வேல் போன்று-ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய் -நோக்காலே அகப்படுத்தி கொள்பவள் –
அனுபவிக்கின்ற்றவன் அளவு அல்லாத இனிமையை உடைய-கண்களை உடையவளாய்-ஆத்தும குணங்கள் நிறைந்தவளுமான
நப்பின்னை பிராட்டி உடைய செவ்வி நுகர்வதற்கு இட்டுப் பிறந்தவன் ஆயிற்று –வடி -மா வடுவாய் பிளவு போலேயும்-என்றுமாம் –

நெடியான்-இப்படிப் பட்ட தேவிமார் முதலிய பரிகரங்களால்-எல்லை காண ஒண்ணாதவன் –

அடியேன்- பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஒருத்தியுமே அன்றோ அங்கு இங்கு அதை விட ஏற்றம் உண்டே –

———

எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள்–நிருபாதிக பந்து-அசாதாரண சம்பந்தம் -நாராயணன் -எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-ஸூலபனானவன்–வர்த்திக்கும் ஓலக்கத்தில் புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று ஆசைப் பட்ட நான்-அத்திரளிலே சென்று கூடப் பெரும் நாள் என்று-என்று அறிகிலேன் –

கவை யில் மனம் இன்றி–ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு-கவை -கார்யம் -வேறு விஷயம் –-பரந்து திரி தரினும் –மறந்தும் பிரித்து ஒன்று அறிய மாட்டா -என் ஒரு நா வாய் -வாழ்த்தாது நாவோ வாயோ பாடாது -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

———–

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் – ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த-சோலைகளை உடைத்தான தேசம் -என்றது
அடிமை செய்கைக்கு பூக்கள் முதலான சாதனங்கள்-குறைவற்ற தேசம் -என்றபடி –
அன்றிக்கே –
நப்பின்னை பிராட்டியும் தானுமாக மலர்களைப் பறித்து குவிக்கலாம் தேசம் -என்பதனைத் தெரிவித்தபடி -என்னுதல்-
பிராட்டியும் கஜேந்திர ஆழ்வான் போலே தாமும் சேர்த்துக் கொள்கிறார் –

மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே-ஆத்தும குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு-கணவன் ஆனவனே-
வேறு தேசத்துக்கு சென்று இருந்த குழந்தை ஊர்-அணித்தவாறே-தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே-
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை-அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –

————

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்–புருஷகாரம் ஆவாரும் பொறைக்கு உவாத்து ஆவாரும்-உபாத்தியாயர் – உளராய் இருக்க இழக்க வேண்டுமோ -என்கிறார் –

கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்–எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவன்-இதனால் அவர்கள் உடைய படுக்கைப் பற்று -சீதனம் –நோக்குகிற படியைத் தெரிவித்த படி

விண்ணாளன் –படுக்கை தான் இருக்கிறபடி -என்றது-பிராட்டிமாரும் தானும் -தனக்குத் தகுதியான பரமபதத்தில்-திவ்யமான கட்டிலிலே இருந்து-நித்ய ஸூரிகளை நிர்வஹிக்கிறவன் -என்கிறபடி –

பத்னி – பரிஜன -ஸ்தாநாதி– பரிபூர்ணன் –விரும்பி உறையும் திருநாவாய் –உபய விபூதி நாதன்-பெறாப் பேறாக விரும்பி வர்த்திக்கிற தேசம்–திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு-அனுபவிப்பது என்று-என்கிறார்-

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே –காண்பது நிச்சயம் -என்னும் நம்பிக்கையாலே-களிக்கை அன்றியே–ஏவகாரத்தாலே –கண்டே களிப்பது என்றோ

———-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–ஊரை அன்றிக்கே-ஊரில் நின்று அருளின–ஆஸ்ரித ஸூலபன் -உன்னைக் கண்டு களிப்பது என்றோ-என்கிறார்

திருநாவாய் கொண்டே உறைகின்ற–நமக்கும் நம்மை உகந்தாருக்கும் நினைத்த படி செய்து-அனுபவிக்கலாம் தேசம் -என்று
திரு உள்ளத்திலே ஆதரித்துக் கொண்டு வசிக்கிற தேசம் ஆயிற்று – -உகந்து அருளினை திவ்ய தேசம் அன்றோ-என் கோ கோவலர் கோ -எம் கோவலர் கோவே –கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-ஆயர்கட்கு சுலபன் ஆனால் போலே-திரு நாவாயிலே வந்து -எனக்கு சுலபன் ஆனவனே –

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-கரணங்கள் தனித் தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே-கீழ் தமக்கு இங்கு அசேதனமான கண்களுக்கு

———–

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அடியார்களுக்காக திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று
என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –மதீயையா கிருபையா -கேவலம் கிருபையையா –அருளால் -மட்டுமே பெறுவோம் –

சேஷித்வ-கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் ரக்ஷகத்வ-தேவா சுரம் செற்றவனே திருமாலே பிராப்யத்வ –ருமாலேநாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ-திரு மந்த்ரார்த்தம் -திருமாலே திரு -இருந்தும் அடியேன் இழப்பதே -ஆகார பூர்த்தியை உடைய -ஆகார த்ரய சம்பந்தனாம் -அரவிந்த நிவாஸினி கூடி இருப்பதால் -வந்தே வரத வல்லபம் –

நாரண நம்பீ-ஸமஸ்த குண விபூதி விசிஷ்டத்தால் வந்த நாராயணன் – -நாராயணத்தவத்தால் வந்த பூர்ணம் —என் நாரண நம்பீ-அடியார்களை பாதுகாப்பதே நோக்காக-எல்ல பொருள்களிலும் அந்தராமியாய் இருப்பவன்-அதற்கு உறுப்பாக அடியார்கள் இடத்தில்-அன்பு உள்ளவனாய்-அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் என்றதனாலே-பரி பூரணன் ஆனவனே -என்பார் -நம்பீ -என்கிறார் – பஹு வரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் -வாத்சல்யம் ஸுலப்யம் இவற்றால் பூர்ணன்-

ஆவா அடியான் இவன் என்று அருளாயே-ஆஹா ஆஹா என்று ஆராய்ந்து -சேஷ பூதன் என்று -ஆகார த்ரய விசிஷ்ட சம்பந்தம் பார்த்து இரங்கி அருள வேணும்-அவன் அருளுகைக்கும்-இவன் அருள் கொள்கைக்கும்-சம்பந்தம் சொல்லுகிறது-அடியான்

————-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார் அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –-பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே–அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அஞ்ஞான கந்தமே இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்- உன் திரு உள்ளம் ஆன படி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

———

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

இனி அந்தோ-இப்படி சொன்ன இடத்திலும்-ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே-நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற-யாவர் அணுகப் பெறுவார் –மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

எனக்கு உள்ள ஆற்றாமை அபி நிவேசம் அவனுக்கு உண்டாக பெறாது ஒழிவதே -என்பார் அந்தோ –என்கிறார் –

மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் – இப்படி எல்லா பொருட்கட்கும் நிர்வாஹகன் ஆனவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதவன் ஒருவன் குடி இருப்பு பெற்றால் போலே-அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம் என்று மிகவும் விரும்பி வர்த்திக்கிற தேசத்தை –

————

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–பரமபதாதிகளை விட்டு -திருப்  பாற் கடல் -சூர்ய மண்டலம் -விட்டு -நீல ரத்னம் போலே -விட ஒண்ணாத ரமணீய விக்ரகம் கொண்டு-நித்ய வாசம் செய்யும் உன்னைக் காணப் பெறாமையாலே-நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்-என்கிறார்-அணுக பெருநாள் எவை கொலோ அந்தோ என்று சொல்லப் பலம் இல்லாமல் –அந்தோ

என்று எப்போதும் –ஒருகால் சொல்லப் புக்கு இளைத்தால் விடுகை அன்றிக்கே-எல்லா காலத்திலும் –சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – மனம் கலங்கி-துயர் உற்ற பிள்ளைகள் தாய் தந்தையர் கல் பெயரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே –திருமால் என்று அழைப்பன் –

————-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே--9-8-11-

இத் திருவாய் மொழி கற்றார்—உபய விபூதியில் உண்டான ஆதரணீயத்தையை -பலமாக-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும்-எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர்-என்கிறார்

மண் ஆண்டு–இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மணம் கமழ்வர் மல்லிகையே–மல்லிகை மணம் கமழ்வர் –-மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்-
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்- இவருடைய எண்ணம்-அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

மல்லிகை போலே பரிசுத்த -அழுக்கு இல்லாமல் -அனுபவிக்க பரிமளம் -கொண்டு -கமழ்தல்–யசஸ் கீர்த்தி உடையவர் ஆவார்

நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே -ஆழ்வார் மநோ ரதம் திருமங்கை ஆழ்வார் பெற்றார் -தீர்த்தம் சடகோபர் பிரசாதம் பெற்று உஜ்ஜிவ்விப்போம் –

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்–சர்வேஸ்வரனுக்கு செல்வம் ஆழ்வார் ஆகையாலே- செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –ஆழ்வார் பரியவே அப்பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –