Archive for the ‘கிருஷ்ணன் கதை அமுதம்’ Category

ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரப்படி –ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை —

August 11, 2021

ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

தந்தை தளை கழலத் தோன்றி
பிறந்தவாறும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
பிறந்த மாயா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன்
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –

———

ஸ்ரீ கிருஷ்ணன் போய் ஆய்ப்பாடி புக்கதும்

போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –

————-

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை
ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும்
நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல-1-3-2-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-

—————————-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

(ஸ்ரீ கொல்லா மாக்கோல் — ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்–

May 6, 2021

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–திருவாய்மொழி -3-2-3-

கொல்லா–கொல்லுகைக்குக் கருவி யல்லாமல்
மா–குதிரையை நடத்துவதான
கோல்–சாட்டையே கருவியாக
கொலை செய்து–(எதிரிகளை) முடித்து
பாரதம் போர்–பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்–(பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து–இப் பெரிய பூமியில்
அவித்த–தொலைத்த
எந்தாய்–ஸ்வாமியே!
பொல்லா–துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்–சரீரத்தினுடைய
புணர்வினை–சம்பந்தத்தை
அறுக்கல் அறா–அறுக்க எண்ணினாலும் அது அறு படாது:
யான்–(இதிலே அகப்பட்ட) நான்
உன்னை–(ஸர்வ சக்தனான) உன்னை
சார்வது–கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி–ஒரு உபாயத்தை
சொல்லாய்–சொல்லி யருள்-

கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது,
அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார்.
கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார்.
கண்ணபிரானது கையிலிருந்த கோல் எதிரிகளின் கொலைக்கு உபகரணமன்றியே
குதிரையை நடத்துகிற கோலாகவே யிருந்ததென்று இங்கு ஆழ்வார் அருளிச் செய்தாராயிற்று.

கொல்லா மாக்கோல் கொலை செய்து –
துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில் படைத்துணை வேண்டி வந்து,
துரியோதனன் திருமுடிப் பக்கத்தே யிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலே யிருந்தான்;
பள்ளி யுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,
‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று,
அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன,
‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன,
‘ஆகில், நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, –
அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக,
வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன,
அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன,
‘அப்படியே யாகிறது’ என்று சொல்லி விட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு முடித்துப் போகட்டான்.

———

நம் அழகனின் கையில் விதம்விதமான கோல்கள்- செங்கோல் முதற்கொண்டு பலவிதமான கோல்கள் உள்ளனவே
என ஒரு புலவரின் கற்பனை எழுகிறது; அழகான கவிதை ஒன்று விரிகிறது;
படிப்போர் உள்ளம் பரவசத்தில் புள்ளெனச் சிறகடிக்கின்றது.

கடலாகிய ஆடையை உடுத்த உலகினைக் காவல் பூண்டு அரசிளங்கோமகன் இராமனாகிக் கையிலெடுத்த செங்கோல் ஒன்று!

இலங்கை மாநகரில் சூரியன் இராவணனுக்கு அஞ்சி வாழ்ந்தானாம்; அழகர் இராமாவதாரம் எடுத்தபோழ்தில்,
இராவணனை வதம்செய்து, சூரியனை அச்சமின்றி இயங்கச் செய்தார்.
ஆகவே அவனுடைய ஏழுபரிதிகள் (குரகதம்) பூட்டிய தேரை அஞ்சாது செலுத்தும்வகையில் அவன்,
குதிரைகளைத் தூண்டும் ஒரு முட்கோல் இரண்டாவது கோலாயிற்று.

ஐராவதம் எனும் யானையைச் செலுத்துபவனாகிய தேவேந்திரனை அவன் அடைபட்டிருந்த சிறையினின்று விடுதலை செய்வதற்காக
அச்சிறையின் கபாடங்களை (கதவுகளை) திறக்கும் திறவுகோல் மூன்றாவது கோல்!
இந்திரனைச் சிறைவீடு செய்தவர் அழகர்.

தேனொழுகும் (நறவொழுகு) செந்தாமரையில் வீற்றிருப்பவள் கமலமகளான திருமகள்.
அவள் தனது கண்களுக்குத் தீட்டி அழகு செய்துகொள்ளும் அஞ்சனத்தைத் தீட்டும் அஞ்சனக்கோல் அழகரின் நான்காம்கோல்.

பிலம் எனும் பாதாளத்தில் வீழ்ந்து வழக்கொழிந்துபோன வேதங்களை, நான்மறைகளைத் திரும்ப
நடமாடவிடுத்த ஊன்றுகோல் இன்னொருகோல்.

மறைந்துகிடந்த நான்மறைகள் அழகர் அருளால் விளக்கம் பெற்றன என்பது உட்கருத்து.
இது ஐந்தாம்கோல்.

கள்வனான இராவணன் சீதையைத் திருடிச்சென்றான். அவனுடைய பத்து தலைகளையும் தாக்கி வீழ்த்திய
தண்டிக்கும் கோல் ஒப்பற்ற – நிகரற்ற, வலிமை பொருந்திய -ஆறாவதுகோல்.

இவ்வாறு பலவிதமான கோல்களைக் கைக்கொண்டு பூஞ்சோலைகள் நிரம்பிய இடபகிரியெனும் அழகர்மலையில் இருப்பவனே!
செங்கீரையாடியருளுக! தேவருக்கும், தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் நாயகனே!
செங்கீரையாடியருளுக! எனப்பாடல் அமைகின்றது.

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங் கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ் குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட கடுஞ்சிறை கிடந்தகூடக் கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய் உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்
பிலத்துள்வீழ் நான்மறைக்கும் ஊன்றுகோ லாக
முடி பத்துடைய கள்வன்மே லொருகோ லெடுத்து
முகிலைத் திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்ற முகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன் செங்கீரை யாடியருளே.
(அழகர் பிள்ளைத் தமிழ்- செங்கீரைப் பருவம்:- கவி காளருத்திரர் இயற்றியது)

இப்பாடலில் ‘கோல்’ எனும் சொல்லைப் பலபொருட்களில் எடுத்தாண்டு வியக்கத்தக்க முறையில்
பலவித நயங்களையும் தொன்மங்களையும் இணைத்துப் பாடியுள்ளது ரசிக்கத்தக்கது.
பிள்ளைத்தமிழ் நூல்களின் இனிமைக்கு இத்தகைய யாப்புகளும் ஒரு காரணமாகும்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கீர்த்தனைகள் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–என்று போற்றப்படுகின்றது
1650 குண்டூர் அருகில் காஜா கிராமத்தில் தோன்றியவர்

12 தரங்கங்கள் கொண்டு இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இதன் அமைப்பின் படி ஒவ்வொரு தரங்கத்திலும்
பல சுலோகங்களும் அவற்றையடுத்து கீதங்கள், என்ற கீர்த்தனைகளும் தொடர்ச்சிக்காக சில வசனப்பகுதிகளும் வருகின்றன.
இது ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல், பாகவதத்தின் தசமஸ்கந்தத்தின் 1 முதல் 58 வரையிலுள்ள
அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணன் பிறப்பிலிருந்து ருக்மிணி கல்யாணம் முடிய கண்ணனது கதையை
தேனென இனிக்கும் இன்னிசைப் பாடல்களாக தந்திருக்கிறார் நாராயண தீர்த்தர்.

தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து
மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது.
மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில்
அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றிப் பாடிய பில்வமங்களர் எனும் மகான், இடைச் சிறுவனான கிருஷ்ணனைப் பற்றிய
இன்னொரு அழகிய காட்சியைக் கண் முன் நிறுத்துகிறார்:
சூரியன் அஸ்தமிக்கும் பொன் மாலைப் பொழுது. இடையர்கள் எல்லாரும் மேய்ச்சலிலிருந்து திரும்புகின்றனர்.
மாடுகள் எல்லாம் வயிறு நிரம்பிய ஆனந்தத்தில் மடிகனத்து நிற்க, கன்றுகள் தாய்ப் பசுக்களின் மடியை அருந்தும் ஆசையில் துள்ள,
அவர்கள் தம் வீடுகளை அடைகின்றனர். அவரவர்கள் வீட்டுத் தொழுவங்களில் மாடுகன்றுகளைக் கட்டுகின்றனர்.
தன்னைத் தொடர்ந்துவரும் நூற்றுக் கணக்கான இடைச் சிறுவர்களுக்கெல்லாம் (கோபால-பாலக-சதை) தலைவன் நமது கிருஷ்ண சந்திரன்.
அவனும் வீடுவீடாகப்போய் பசுக்களைக்கட்ட உதவுகிறான் (பசுபந்தனார்த்தம்). பின் என்ன?
அவற்றின் பாலையும் அதனைத் தோய்த்த தயிரையும், அதிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயையும் வீடுவீடாகப்புகுந்து தின்றவனாயிற்றே!
தானும் இந்தச் சிறு உதவிகளைச் செய்யலாமே எனச் செய்கிறான் குழந்தை! ஏழெட்டு வயது இளம்பிள்ளை!
பசுக்கூட்டங்களினிடையே கன்றுகளுடன் விளையாடியபடி நடந்துவந்ததனால் அவற்றின் குளம்படிகள் எழுப்பிய
அத்தனை புழுதியும் (கோதூலி)இவன்மேல் அப்பிக்கிடக்கின்றது. ஏற்கெனவே கருமைநிறம் கொண்ட கடல்வண்ணன்.
இப்போது புழுதியும் அப்பிப் பார்க்க எப்படி இருந்தானாம்? அழுக்காகவா? இல்லவே இல்லை!
அதுவும் ஒரு அழகாக, அவனுக்கே அமைந்த சிறப்பாகப் பொலிகிறானம் இந்தக்குட்டன்!-
இது அவன் பூண்டுள்ள மாடுமேய்க்கும் அலங்காரம்- கோபவேஷம்!

கோதூலி- தூஸரித- கோமல- கோபவேஷம்
கோபால-பாலகசதை-ரனுகம்யமானம்
ஸாயந்தனே ப்ரதிக்ருஹம் பசுபந்தனார்த்தம்
கச்சந்த- மச்யுதசிசும் ப்ரணதோஸ்மி நித்யம்–(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.44)

அட! இந்த இளம்பிள்ளை மாட்டையெல்லாம் தொழுவில்கட்டி, இவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே எனவெல்லாம்
எண்ணிக் கொண்டுவிட வேண்டாம்! இவன், இந்தக் கள்ளக்கிருஷ்ணன் தனது விளையாட்டுகளை இன்னும்
விட்டொழித்தபாடில்லை எனத்தான் தென்படுகின்றது!

ஒரு இடைப்பெண்ணின் வீட்டில் நுழைந்து தனது வெண்ணெய்த்திருட்டினை நடத்திக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டும் விட்டான். அவளிடம் குட்டனின் உரையாடலைக் கேட்போமா?
பெண்: குழந்தாய்! நீ யாரப்பா?
கிருஷ்ணன்: நான் பலராமனுடைய தம்பி.
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக் கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக் கொள்ளாதீர்கள்!

கஸ்த்வம் பாலா பலானுஜ: கிமிஹ தே
மன்மந்திராசங்கயா
யுக்தம் தந்நவநீத- பாத்ரவிவரே
ஹஸ்தம் கிமர்த்தம் ந்யஸே:
மாத: கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மாகா விஷாதம் க்ஷணா-
தித்யேவம் வரவல்லவீ-ப்ரதிவச:
க்ருஷ்ணஸ்ய புஷ்ணாது ந: (ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.81)

———

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம் ப்ரயாகே
காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே
திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே
ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே
ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே
யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே
வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே
ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே
ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே
ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம்
தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம்
யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா
பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே
ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண
தத் காரனே ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே
சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே–இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச தரங்கம்–

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயாகே காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே –
அலஹாபாத் பக்கத்துல ப்ரயாகை இருக்கு. திரிவேணி சங்கமம். இவர் நாராயண தீர்த்தர் சொல்றார்,
ராம கிருஷ்ண கோவிந்த அப்படீன்ன்னு இந்த மூணு நாமங்கள் இருக்கே இதோட சேர்க்கையே சர்வோத்தம ப்ரயாகை.
இதுல ஆனந்தமா எப்ப வேணும்னாலும் ஸ்னானம் பண்ணுவோம் அப்படீங்கறார்.

திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே –
இந்த ஸ்னானம் பண்றதுக்கு தேசமா, காலமோ, திக்கோ எதுவும் condition கிடையாது.
எப்ப வேணும்னா, எங்க வேணும்னா, எப்படி வேணும்னா இந்த ராம கிருஷ்ண கோவிந்த அப்படீங்கற நாமங்களை ஜபிக்கலாம்.
ஸர்வ சுலபே – எல்லாருக்கும் சுலபமானது, இதுக்கு பண்டிதனான இருக்கணும், ஆணாக இருக்கணும், பெண்ணாக இருக்கணும்
எந்த condition-ணும் கிடையாது. நாக்கு இருந்தா போதும் இந்த நாமங்களை ஜபிக்கலாம்.
ஒரு நதினா கடல்ல போய் சேருமே, அதுமாதிரி இந்த த்ரிவேணி சங்கமம் எங்க கூட்டிண்டு போகும்னா,

ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே –
ஸத்குருவுடைய க்ருபா ஸமுத்ரம் அப்படீங்கற அந்த சங்கத்துல கொண்டு விட்டுடும் அப்படீங்கறார்.

ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே –
ராம-ங்கற நாமம் தான் கங்கை,
கிருஷ்ண-ங்கற நாமம்தான் யமுனை
கோவிந்த நாம சரஸ்வதி ப்ரதீதே – கோவிந்த நாமம் தான் சரஸ்வதி, இந்த மூணும் சேர்ந்த ப்ரயாகை இது

யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே –
ஒரு ஜலம்ன்னா ஹம்ஸங்கள் இருக்கணும் இல்லையா,
இங்க இந்த நாமத்துல பரம ஹம்சர்களுடைய மனம் குதூகலிக்கறது.

வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே –
ஒரு நதியின்னா அதுல அலைகள் இருக்கும், வாகீச ர்னா ப்ரம்மா, விஷ்ணு ருத்ரர் இவாள் இந்த நாமங்களை ஜபிக்கறா.
அந்த அழகான அலைகள் தான் இந்த ப்ரயாகைல இருக்கு.

ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே –
இந்த உலகம், மேல் உலகம் இங்க இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் இந்த நாம ஜபம் பூர்த்தி பண்ணும்.

நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே –
இந்த உலக ஆசைகள் மட்டும் அல்ல, நித்யானந்தமான மோக்ஷ லாபத்தையும் கொடுக்கும்.

ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே –
ருக் யஜு சாமம் என்கின்ற வேதங்களின் சாகையிலும் இருக்கு, மூலத்திலும் இருக்கு.
வேதங்களுக்கு மூலமே இந்த நாமங்கள் தான் என்கிறார்.

ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே –
ராகம், லோபம், ஸந்தாபம் இதெல்லாம் போக்கக் கூடிய மஹா மந்த்ரம்.

ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே –
இந்த நாமங்களை ஜபிக்கறதுக்கு ஒருத்தன் ஸ்னானம் பண்ணியிருக்கணும், சந்தியாவந்தனம் பண்ணியிருக்கணும்,
ஜபங்கள் பண்ணியிருக்கணும், ஹோமங்கள் பண்ணியிருக்கணும், தர்ப்பணம் பண்ணியிருக்கணும்
என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,

ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே –
இது அகண்டமான பேரானந்தத்தை கொடுக்கும். அந்த பேரானந்தம் குறையவோ, அதிகமோ ஆகாத ஒரு சந்தோஷம்.
எந்த ஒரு சந்தோஷம் ஆனாலும் அது குறையும், ஜாஸ்தி ஆகும். அப்படி ஆகாத சுகம்,
இந்த நாம ஜபம் கொடுக்கக்கூடிய இந்த ஆனந்தம், அப்படியே இருக்கும். infinite அகண்டமான ஒரு சுகத்தை கொடுக்க கூடியது.

ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம் –
மனசுல இந்த நாமங்களை ஸ்மரணம் பண்றது தான் மானசீகமான ஸ்னானம்.
வாசனிகம் கீர்த்தனம் – வாயால பண்ணக் கூடிய கீர்த்தனம் தான் இந்த வாய்க்கு ஸ்னானம்,

தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம் –
இந்த ராம கிருஷ்ண கோவிந்த நாமங்களை பாடிண்டு அதுக்கு நர்த்தனம் ஆடறது தான் உடம்புக்கு பண்ணக் கூடிய ஒரு ஸ்னானம்
இப்படி உடம்பு, மனசு, வாக்கு இப்படி எல்லாத்தையும் தூய்மை படுத்தக்கூடியது.

யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா –
இந்த நாம ஜபம் பண்றதுக்கு நீங்கள் யாகம், யோகம், மூச்சை அடக்கித்தான் நாம ஜபம் பண்ணணும் அப்படியெல்லாம் கிடையாது.
ராகம், பகவான் கிட்ட பக்தி இருக்கணும், ராகம் இருக்கணும், போகம், த்யாகம் இல்ல நீங்க பகவானுக்காக தியாகம் பண்ணணும்,
எதுவுமே எதிர் பார்க்காமல்.

பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே –
இந்த நாம ஜபம் பண்ணிண்டே இருந்தாலே பக்தியும் வரும், விரக்தியும் வரும், ஞானமும் வரும்,
முக்தியையும் கொடுக்கும்

ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண தத் காரனே –
ப்ரஹ்ம வித்யை கொடுக்கும், கோரமான சம்சாரத்தை தாண்ட வைக்கும்.

ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே –
கடுமையான பாபங்கள் என்ற இருட்டிற்கு இது ஸூர்ய மண்டலத்தை போன்ற வெளிச்சத்தை கொண்டு வந்து,
பாபங்கள் எல்லாத்தையும் போக்கிடும்.

சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே –
நாராயண தீர்த்தர் சொல்றார் – தூய்மைப் படுத்தக் கூடிய எல்லா தீர்த்தங்களிலும்,
இந்த ராம கிருஷ்ண கோவிந்த என்ற இந்த சர்வோத்தம ப்ரயாகை தான் தீர்த்த ராஜா –
இப்படி நாம பக்திக்கு ஒரு அற்புதமான ஒரு கீர்த்தனை.

————–

பில்வ மங்களரின் ஒரு அழகிய ஸ்லோகம் இது போலவே ஒரு நிகழ்வை யசோதை-கிருஷ்ணனிடையே நிகழும் உரையாடலாக்கி,
படிக்கும் நம்மைப் புன்னகைபுரிந்து சிலிர்க்க வைக்கிறது.
யசோதை சொல்கிறாள்: “கிருஷ்ணா! உன் அண்ணன் பலராமன் யமுனையாற்றின் மணல் குன்றுகளிடையே விளையாடப் போயிருக்கிறான்;
உனக்கு நான் பொற்கிண்ணத்தில் பால் வைத்திருக்கிறேன் பார்!
அவன் திரும்பிவருவதற்குள் நீ அதனை சமர்த்தாகக் குடித்து விடவேண்டும். தெரியுமா?”
கிருஷ்ணன், “ஏனம்மா?” எனக்கேட்க, யசோதை சொல்கிறாள்:
“அப்போதுதான் உனக்கு குடுமி வளரும் (சிகா வர்த்திஷ்யதே).”
குழந்தை கிருஷ்ணன் பாவம், நம்பி விடுகிறான்.
கிண்ணத்துப்பாலை ஒரே மூச்சில் பாதி குடித்துவிட்டு, தனது குட்டிக் குடுமியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு ,
“அடடா, இத்தனை வளர்ந்துவிட்டதா?” என மகிழ்ச்சி கொள்ளுகிறானாம்.
நாமும் இந்த ஸ்லோகத்தைப் படித்து மகிழ்கிறோம்.

காளிந்தீ- புலினோதரேஷு முஸலீ
யாவத்கத: கேலிதும்
தாவத்கார்ப்பரிகம் பய: பிப ஹரே
வர்த்திஷ்யதே தே சிகா
இத்தம் பாலதயா ப்ரதாரணபரா:
ச்ருத்வா யசோதா-கிர:
பாயாந்ந: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித:
க்ஷீரேர்த்தபீதே ஹரி:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.60)

நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை
பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் –
அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

இளம் குழந்தைகள் அன்னை சொல்வது அத்தனையையும் நம்பி விடுகின்றனர்.
ஆகவே கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாகிவிடுகின்றது!

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழு நம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப் பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள் தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் -19–ஸ்ரீ ப்ருது மஹா ராஜரின் அவச மேத யாகம்-

November 8, 2020

மைத்ரேய உவாச
அதா²தீ³க்ஷத ராஜா து ஹயமேத⁴ஶதேன ஸ꞉ .
ப்³ரஹ்மாவர்தே மனோ꞉ க்ஷேத்ரே யத்ர ப்ராசீ ஸரஸ்வதீ .. 1..

தத³பி⁴ப்ரேத்ய ப⁴க³வான் கர்மாதிஶயமாத்மன꞉ .
ஶதக்ரதுர்ன மம்ருʼஷே ப்ருʼதோ²ர்யஜ்ஞமஹோத்ஸவம் .. 2..

யத்ர யஜ்ஞபதி꞉ ஸாக்ஷாத்³ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .
அன்வபூ⁴யத ஸர்வாத்மா ஸர்வலோககு³ரு꞉ ப்ரபு⁴꞉ .. 3..

அன்விதோ ப்³ரஹ்மஶர்வாப்⁴யாம்ʼ லோகபாலை꞉ ஸஹானுகை³꞉ .
உபகீ³யமானோ க³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .. 4..

ஸித்³தா⁴ வித்³யாத⁴ரா தை³த்யா தா³னவா கு³ஹ்யகாத³ய꞉ .
ஸுநந்த³னந்த³ப்ரமுகா²꞉ பார்ஷத³ப்ரவரா ஹரே꞉ .. 5..

கபிலோ நாரதோ³ த³த்தோ யோகே³ஶா꞉ ஸனகாத³ய꞉ .
தமன்வீயுர்பா⁴க³வதா யே ச தத்ஸேவனோத்ஸுகா꞉ .. 6..

யத்ர த⁴ர்மது³கா⁴ பூ⁴மி꞉ ஸர்வகாமது³கா⁴ ஸதீ .
தோ³க்³தி⁴ ஸ்மாபீ⁴ப்ஸிதானர்தா²ன் யஜமானஸ்ய பா⁴ரத .. 7..

ஊஹு꞉ ஸர்வரஸான் நத்³ய꞉ க்ஷீரத³த்⁴யன்னகோ³ரஸான் .
தரவோ பூ⁴ரி வர்ஷ்மாண꞉ ப்ராஸூயந்த மது⁴ச்யுத꞉ .. 8..

ஸிந்த⁴வோ ரத்னநிகரான் கி³ரயோ(அ)ன்னம்ʼ சதுர்வித⁴ம் .
உபாயனமுபாஜஹ்ரு꞉ ஸர்வே லோகா꞉ ஸபாலகா꞉ .. 9..

இதி சாதோ⁴க்ஷஜேஶஸ்ய ப்ருʼதோ²ஸ்து பரமோத³யம் .
அஸூயன் ப⁴க³வானிந்த்³ர꞉ ப்ரதிகா⁴தமசீகரத் .. 10..

சரமேணாஶ்வமேதே⁴ன யஜமானே யஜுஷ்பதிம் .
வைன்யே யஜ்ஞபஶும்ʼ ஸ்பர்த⁴ன்னபோவாஹ திரோஹித꞉ .. 11..

தமத்ரிர்ப⁴க³வானைக்ஷத்த்வரமாணம்ʼ விஹாயஸா .
ஆமுக்தமிவ பாக²ண்ட³ம்ʼ யோ(அ)த⁴ர்மே த⁴ர்மவிப்⁴ரம꞉ .. 12..

அத்ரிணா சோதி³தோ ஹந்தும்ʼ ப்ருʼது²புத்ரோ மஹாரத²꞉ .
அன்வதா⁴வத ஸங்க்ருத்³த⁴ஸ்திஷ்ட² திஷ்டே²தி சாப்³ரவீத் .. 13..

தம்ʼ தாத்³ருʼஶாக்ருʼதிம்ʼ வீக்ஷ்ய மேனே த⁴ர்மம்ʼ ஶரீரிணம் .
ஜடிலம்ʼ ப⁴ஸ்மனா(ஆ)ச்ச²ன்னம்ʼ தஸ்மை பா³ணம்ʼ ந முஞ்சதி .. 14..

வதா⁴ந்நிவ்ருʼத்தம்ʼ தம்ʼ பூ⁴யோ ஹந்தவே(அ)த்ரிரசோத³யத் .
ஜஹி யஜ்ஞஹனம்ʼ தாத மஹேந்த்³ரம்ʼ விபு³தா⁴த⁴மம் .. 15..

ஏவம்ʼ வைன்யஸுத꞉ ப்ரோக்தஸ்த்வரமாணம்ʼ விஹாயஸா .
அன்வத்³ரவத³பி⁴க்ருத்³தோ⁴ ராவணம்ʼ க்³ருʼத்⁴ரராடி³வ .. 16..

ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்மா அந்தர்ஹித꞉ ஸ்வராட் .
வீர꞉ ஸ்வபஶுமாதா³ய பிதுர்யஜ்ஞமுபேயிவான் .. 17..

தத்தஸ்ய சாத்³பு⁴தம்ʼ கர்ம விசக்ஷ்ய பரமர்ஷய꞉ .
நாமதே⁴யம்ʼ த³து³ஸ்தஸ்மை விஜிதாஶ்வ இதி ப்ரபோ⁴ .. 18..

உபஸ்ருʼஜ்ய தமஸ்தீவ்ரம்ʼ ஜஹாராஶ்வம்ʼ புனர்ஹரி꞉ .
சஷால யூபதஶ்ச²ன்னோ ஹிரண்யரஶனம்ʼ விபு⁴꞉ .. 19..

அத்ரி꞉ ஸந்த³ர்ஶயாமாஸ த்வரமாணம்ʼ விஹாயஸா .
கபாலக²ட்வாங்க³த⁴ரம்ʼ வீரோ நைனமபா³த⁴த .. 20..

அத்ரிணா சோதி³தஸ்தஸ்மை ஸந்த³தே⁴ விஶிக²ம்ʼ ருஷா .
ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்தா²வந்தர்ஹித꞉ ஸ்வராட் .. 21..

வீரஶ்சாஶ்வமுபாதா³ய பித்ருʼயஜ்ஞமதா²வ்ரஜத் .
தத³வத்³யம்ʼ ஹரே ரூபம்ʼ ஜக்³ருʼஹுர்ஜ்ஞானது³ர்ப³லா꞉ .. 22..

யானி ரூபாணி ஜக்³ருʼஹே இந்த்³ரோ ஹயஜிஹீர்ஷயா .
தானி பாபஸ்ய க²ண்டா³னி லிங்க³ம்ʼ க²ண்ட³மிஹோச்யதே .. 23..

ஏவமிந்த்³ரே ஹரத்யஶ்வம்ʼ வைன்யயஜ்ஞஜிகா⁴ம்ʼஸயா .
தத்³க்³ருʼஹீதவிஸ்ருʼஷ்டேஷு பாக²ண்டே³ஷு மதிர்ந்ருʼணாம் .. 24..

த⁴ர்ம இத்யுபத⁴ர்மேஷு நக்³நரக்தபடாதி³ஷு .
ப்ராயேண ஸஜ்ஜதே ப்⁴ராந்த்யா பேஶலேஷு ச வாக்³மிஷு .. 25..

தத³பி⁴ஜ்ஞாய ப⁴க³வான் ப்ருʼது²꞉ ப்ருʼது²பராக்ரம꞉ .
இந்த்³ராய குபிதோ பா³ணமாத³த்தோத்³யதகார்முக꞉ .. 26..

தம்ருʼத்விஜ꞉ ஶக்ரவதா⁴பி⁴ஸந்தி⁴தம்ʼ
விசக்ஷ்ய து³ஷ்ப்ரேக்ஷ்யமஸஹ்யரம்ʼஹஸம் .
நிவாரயாமாஸுரஹோ மஹாமதே
ந யுஜ்யதே(அ)த்ரான்யவத⁴꞉ ப்ரசோதி³தாத் .. 27..

வயம்ʼ மருத்வந்தமிஹார்த²நாஶனம்ʼ
ஹ்வயாமஹே த்வச்ச்²ரவஸா ஹதத்விஷம் .
அயாதயாமோபஹவைரனந்தரம்ʼ
ப்ரஸஹ்ய ராஜன் ஜுஹவாம தே(அ)ஹிதம் .. 28..

இத்யாமந்த்ர்ய க்ரதுபதிம்ʼ விது³ராஸ்யர்த்விஜோ ருஷா .
ஸ்ருக்³க⁴ஸ்தான் ஜுஹ்வதோ(அ)ப்⁴யேத்ய ஸ்வயம்பூ⁴꞉ ப்ரத்யஷேத⁴த .. 29..

ந வத்⁴யோ ப⁴வதாமிந்த்³ரோ யத்³யஜ்ஞோ ப⁴க³வத்தனு꞉ .
யம்ʼ ஜிகா⁴ம்ʼஸத² யஜ்ஞேன யஸ்யேஷ்டாஸ்தனவ꞉ ஸுரா꞉ .. 30..

ததி³த³ம்ʼ பஶ்யத மஹத்³த⁴ர்மவ்யதிகரம்ʼ த்³விஜா꞉ .
இந்த்³ரேணானுஷ்டி²தம்ʼ ராஜ்ஞ꞉ கர்மைதத்³விஜிகா⁴ம்ʼஸதா .. 31..

ப்ருʼது²கீர்தே꞉ ப்ருʼதோ²ர்பூ⁴யாத்தர்ஹ்யேகோனஶதக்ரது꞉ .
அலம்ʼ தே க்ரதுபி⁴꞉ ஸ்விஷ்டைர்யத்³ப⁴வான் மோக்ஷத⁴ர்மவித் .. 32..

நைவாத்மனே மஹேந்த்³ராய ரோஷமாஹர்துமர்ஹஸி .
உபா⁴வபி ஹி ப⁴த்³ரம்ʼ தே உத்தமஶ்லோகவிக்³ரஹௌ .. 33..

மாஸ்மின் மஹாராஜ க்ருʼதா²꞉ ஸ்ம சிந்தாம்ʼ
நிஶாமயாஸ்மத்³வச ஆத்³ருʼதாத்மா .
யத்³த்⁴யாயதோ தை³வஹதம்ʼ நு கர்தும்ʼ
மனோ(அ)திருஷ்டம்ʼ விஶதே தமோ(அ)ந்த⁴ம் .. 34..

க்ரதுர்விரமதாமேஷ தே³வேஷு து³ரவக்³ரஹ꞉ .
த⁴ர்மவ்யதிகரோ யத்ர பாக²ண்டை³ரிந்த்³ரநிர்மிதை꞉ .. 35..

ஏபி⁴ரிந்த்³ரோபஸம்ʼஸ்ருʼஷ்டை꞉ பாக²ண்டை³ர்ஹாரிபி⁴ர்ஜனம் .
ஹ்ரியமாணம்ʼ விசக்ஷ்வைனம்ʼ யஸ்தே யஜ்ஞத்⁴ருக³ஶ்வமுட் .. 36..

ப⁴வான் பரித்ராதுமிஹாவதீர்ணோ
த⁴ர்மம்ʼ ஜனானாம்ʼ ஸமயானுரூபம் .
வேனாபசாராத³வலுப்தமத்³ய தத்³தே³ஹதோ
விஷ்ணுகலாஸி வைன்ய .. 37..

ஸ த்வம்ʼ விம்ருʼஶ்யாஸ்ய ப⁴வம்ʼ ப்ரஜாபதே
ஸங்கல்பனம்ʼ விஶ்வஸ்ருʼஜாம்ʼ பிபீப்ருʼஹி .
ஐந்த்³ரீம்ʼ ச மாயாமுபத⁴ர்மமாதரம்ʼ
ப்ரசண்ட³பாக²ண்ட³பத²ம்ʼ ப்ரபோ⁴ ஜஹி .. 38..

மைத்ரேய உவாச
இத்த²ம்ʼ ஸ லோககு³ருணா ஸமாதி³ஷ்டோ விஶாம்பதி꞉ .
ததா² ச க்ருʼத்வா வாத்ஸல்யம்ʼ மகோ⁴னாபி ச ஸந்த³தே⁴ .. 39..

க்ருʼதாவப்⁴ருʼத²ஸ்னானாய ப்ருʼத²வே பூ⁴ரிகர்மணே .
வரான் த³து³ஸ்தே வரதா³ யே தத்³ப³ர்ஹிஷி தர்பிதா꞉ .. 40..

விப்ரா꞉ ஸத்யாஶிஷஸ்துஷ்டா꞉ ஶ்ரத்³த⁴யா லப்³த⁴த³க்ஷிணா꞉ .
ஆஶிஷோ யுயுஜு꞉ க்ஷத்தராதி³ராஜாய ஸத்க்ருʼதா꞉ .. 41..

த்வயா(ஆ)ஹூதா மஹாபா³ஹோ ஸர்வ ஏவ ஸமாக³தா꞉ .
பூஜிதா தா³னமாநாப்⁴யாம்ʼ பித்ருʼதே³வர்ஷிமானவா꞉ .. 42..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ப்ருʼது²விஜயே ஏகோனவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 19..

———————————–

ப்ருது 1௦௦ அஸ்வமேத யாகங்கள் செய்ய விரும்பி சரஸ்வதி நதிக்கரையை தேர்ந்தெடுத்து யாகத்தை ஆரம்பித்தார்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவ இனத்தைச் சேர்ந்தவரும் ரிஷிகளும் பாகவதர்களும் அங்கு குழுமினர்.
மலைகள் கடல் இவைகளில் இருந்து ரத்தினங்களும் மற்றப் பொருள்களும் வந்து சேர்ந்தன.
பூமியிலிருந்து யாகத்திற்குத் தேவையான எல்லா திரவியங்களும் கிடைத்தன

இவ்வாறு ப்ருது மகாராஜா 99 யாகங்கள் செய்து முடித்தபின் இந்திரன் , அவர் நூறு யாகங்கள் செய்து முடித்தால்
தன் பதவிக்கு தகுதியாவார் என்ற பொறாமையால் இடையூறு .விளைவிக்க எண்ணி ,
வெவ்வேறு வேடம் கொண்டு யாகக் குதிரையை அபகரித்தான்.

ஒவ்வொரு முறையும் ப்ருதுவின் மகன் இந்திரனை வில்லும் கையுமாகத் துரத்தியதால் இந்திரன் குதிரையையும்
தன் வேடங்களையும் விட்டு மறைந்தான். இந்திரனின் வெவ்வேறு வேடங்களே வேத விரோத மதங்களாயின.

இதனால் கோபம் கொண்ட ப்ருது இந்திரனைக் கொல்ல நிச்சயிக்க ரித்விக்குகள் தடுத்து யாக பூமியில் வதம் செய்வது
கூடாதென்று கூறி மந்திரம் மூலம் அவனை வரவழைத்து யாகாக்னியில் ஆஹுதி செய்ய முயன்றனர்.

அப்போது பிரம்ம தேவர் அவர்களைத் தடுத்து , இந்திரன் தேவர்களின் பிரதிநிதி என்றும் ,
ஆகூதிக்கும் ருசிக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் அம்சமான யக்ஞன் என்பவனே அப்போதுள்ள இந்திரன் என்றும் கூறி
அவனை வதம் செய்வது தகாது என்றார்.

மேலும் ப்ருது 99 யாகங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தெய்வ ஆக்ஞை என்று கூறினார்.
அதன்படி ப்ருது யாகத்தை நிறுத்திக் கொண்டு புரோகிதர்களுக்கு தக்கபடி சம்பாவனை செய்து அவர்கள் ஆசியைப் பெற்றுக் கொண்டார்

—————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-4- அத்யாயம் -2–தக்ஷன் சிவனுக்கு சாபம் –

November 7, 2020

விது³ர உவாச
ப⁴வே ஶீலவதாம்ʼ ஶ்ரேஷ்டே² த³க்ஷோ து³ஹித்ருʼவத்ஸல꞉ .
வித்³வேஷமகரோத்கஸ்மாத³நாத்³ருʼத்யாத்மஜாம்ʼ ஸதீம் .. 1..

கஸ்தம்ʼ சராசரகு³ரும்ʼ நிர்வைரம்ʼ ஶாந்தவிக்³ரஹம் .
ஆத்மாராமம்ʼ கத²ம்ʼ த்³வேஷ்டி ஜக³தோ தை³வதம்ʼ மஹத் .. 2..

ஏததா³க்²யாஹி மே ப்³ரஹ்மன் ஜாமாது꞉ ஶ்வஶுரஸ்ய ச .
வித்³வேஷஸ்து யத꞉ ப்ராணாம்ʼஸ்தத்யஜே து³ஸ்த்யஜான் ஸதீ .. 3..

மைத்ரேய உவாச
புரா விஶ்வஸ்ருʼஜாம்ʼ ஸத்ரே ஸமேதா꞉ பரமர்ஷய꞉ .
ததா²மரக³ணா꞉ ஸர்வே ஸானுகா³ முனயோ(அ)க்³னய꞉ .. 4..

தத்ர ப்ரவிஷ்டம்ருʼஷயோ த்³ருʼஷ்ட்வார்கமிவ ரோசிஷா .
ப்⁴ராஜமானம்ʼ விதிமிரம்ʼ குர்வந்தம்ʼ தன்மஹத்ஸத³꞉ .. 5..

உத³திஷ்ட²ன்ஸத³ஸ்யாஸ்தே ஸ்வதி⁴ஷ்ண்யேப்⁴ய꞉ ஸஹாக்³னய꞉ .
ருʼதே விரிஞ்சம்ʼ ஶர்வம்ʼ ச தத்³பா⁴ஸாக்ஷிப்தசேதஸ꞉ .. 6..

ஸத³ஸஸ்பதிபி⁴ர்த³க்ஷோ ப⁴க³வான் ஸாது⁴ ஸத்க்ருʼத꞉ .
அஜம்ʼ லோககு³ரும்ʼ நத்வா நிஷஸாத³ ததா³ஜ்ஞயா .. 7..

ப்ராங்நிஷண்ணம்ʼ ம்ருʼட³ம்ʼ த்³ருʼஷ்ட்வா நாம்ருʼஷ்யத்தத³நாத்³ருʼத꞉ .
உவாச வாமம்ʼ சக்ஷுர்ப்⁴யாமபி⁴வீக்ஷ்ய த³ஹன்னிவ .. 8..

ஶ்ரூயதாம்ʼ ப்³ரஹ்மர்ஷயோ மே ஸஹ தே³வா꞉ ஸஹாக்³னய꞉ .
ஸாதூ⁴னாம்ʼ ப்³ருவதோ வ்ருʼத்தம்ʼ நாஜ்ஞானான்ன ச மத்ஸராத் .. 9..

அயம்ʼ து லோகபாலானாம்ʼ யஶோக்⁴னோ நிரபத்ரப꞉ .
ஸத்³பி⁴ராசரித꞉ பந்தா² யேன ஸ்தப்³தே⁴ன தூ³ஷித꞉ .. 10..

ஏஷ மே ஶிஷ்யதாம்ʼ ப்ராப்தோ யன்மே து³ஹிதுரக்³ரஹீத் .
பாணிம்ʼ விப்ராக்³னிமுக²த꞉ ஸாவித்ர்யா இவ ஸாது⁴வத் .. 11..

க்³ருʼஹீத்வா ம்ருʼக³ஶாவாக்ஷ்யா꞉ பாணிம்ʼ மர்கடலோசன꞉ .
ப்ரத்யுத்தா²நாபி⁴வாதா³ர்ஹே வாசாப்யக்ருʼத நோசிதம் .. 12..

லுப்தக்ரியாயாஶுசயே மானினே பி⁴ன்னஸேதவே .
அனிச்ச²ன்னப்யதா³ம்ʼ பா³லாம்ʼ ஶூத்³ராயேவோஶதீம்ʼ கி³ரம் .. 13..

ப்ரேதாவாஸேஷு கோ⁴ரேஷு ப்ரேதைர்பூ⁴தக³ணைர்வ்ருʼத꞉ .
அடத்யுன்மத்தவந்நக்³னோ வ்யுப்தகேஶோ ஹஸன் ருத³ன் .. 14..

சிதாப⁴ஸ்மக்ருʼதஸ்னான꞉ ப்ரேதஸ்ரங் ந்ரஸ்தி²பூ⁴ஷண꞉ .
ஶிவாபதே³ஶோ ஹ்யஶிவோ மத்தோ மத்தஜனப்ரிய꞉ .
பதி꞉ ப்ரமத²பூ⁴தானாம்ʼ தமோமாத்ராத்மகாத்மனாம் .. 15..

தஸ்மா உன்மாத³நாதா²ய நஷ்டஶௌசாய து³ர்ஹ்ருʼதே³ .
த³த்தா ப³த மயா ஸாத்⁴வீ சோதி³தே பரமேஷ்டி²னா .. 16..

மைத்ரேய உவாச
வினிந்த்³யைவம்ʼ ஸ கி³ரிஶமப்ரதீபமவஸ்தி²தம் .
த³க்ஷோ(அ)தா²ப உபஸ்ப்ருʼஶ்ய க்ருத்³த⁴꞉ ஶப்தும்ʼ ப்ரசக்ரமே .. 17..

அயம்ʼ து தே³வயஜன இந்த்³ரோபேந்த்³ராதி³பி⁴ர்ப⁴வ꞉ .
ஸஹ பா⁴க³ம்ʼ ந லப⁴தாம்ʼ தே³வைர்தே³வக³ணாத⁴ம꞉ .. 18..

நிஷித்⁴யமான꞉ ஸ ஸத³ஸ்யமுக்²யைர்த³க்ஷோ
கி³ரித்ராய விஸ்ருʼஜ்ய ஶாபம் .
தஸ்மாத்³விநிஷ்க்ரம்ய விவ்ருʼத்³த⁴மன்யுர்ஜகா³ம
கௌரவ்ய நிஜம்ʼ நிகேதனம் .. 19..

விஜ்ஞாய ஶாபம்ʼ கி³ரிஶானுகா³க்³ரணீ꞉
நந்தீ³ஶ்வரோ ரோஷகஷாயதூ³ஷித꞉ .
த³க்ஷாய ஶாபம்ʼ விஸஸர்ஜ தா³ருணம்ʼ
யே சான்வமோத³ம்ʼஸ்தத³வாச்யதாம்ʼ த்³விஜா꞉ .. 20..

ய ஏதன்மர்த்யமுத்³தி³ஶ்ய ப⁴க³வத்யப்ரதித்³ருஹி .
த்³ருஹ்யத்யஜ்ஞ꞉ ப்ருʼத²க்³த்³ருʼஷ்டிஸ்தத்த்வதோ விமுகோ² ப⁴வேத் .. 21..

க்³ருʼஹேஷு கூடத⁴ர்மேஷு ஸக்தோ க்³ராம்யஸுகே²ச்ச²யா .
கர்மதந்த்ரம்ʼ விதனுதே வேத³வாத³விபன்னதீ⁴꞉ .. 22..

பு³த்³த்⁴யா பராபி⁴த்⁴யாயின்யா விஸ்ம்ருʼதாத்மக³தி꞉ பஶு꞉ .
ஸ்த்ரீகாம꞉ ஸோ(அ)ஸ்த்வதிதராம்ʼ த³க்ஷோ ப³ஸ்தமுகோ²(அ)சிராத் .. 23..

வித்³யாபு³த்³தி⁴ரவித்³யாயாம்ʼ கர்மமய்யாமஸௌ ஜட³꞉ .
ஸம்ʼஸரந்த்விஹ யே சாமுமனு ஶர்வாவமானினம் .. 24..

கி³ர꞉ ஶ்ருதாயா꞉ புஷ்பிண்யா மது⁴க³ந்தே⁴ன பூ⁴ரிணா .
மத்²னா சோன்மதி²தாத்மான꞉ ஸம்முஹ்யந்து ஹரத்³விஷ꞉ .. 25..

ஸர்வப⁴க்ஷா த்³விஜா வ்ருʼத்த்யை த்⁴ருʼதவித்³யா தபோவ்ரதா꞉ .
வித்ததே³ஹேந்த்³ரியாராமா யாசகா விசரந்த்விஹ .. 26..

தஸ்யைவம்ʼ த³த³த꞉ ஶாபம்ʼ ஶ்ருத்வா த்³விஜகுலாய வை .
ப்⁴ருʼகு³꞉ ப்ரத்யஸ்ருʼஜச்சா²பம்ʼ ப்³ரஹ்மத³ண்ட³ம்ʼ து³ரத்யயம் .. 27..

ப⁴வவ்ரதத⁴ரா யே ச யே ச தான் ஸமனுவ்ரதா꞉
பாக²ண்டி³னஸ்தே ப⁴வந்து ஸச்சா²ஸ்த்ரபரிபந்தி²ன꞉ .. 28..

நஷ்டஶௌசா மூட⁴தி⁴யோ ஜடாப⁴ஸ்மாஸ்தி²தா⁴ரிண꞉ .
விஶந்து ஶிவதீ³க்ஷாயாம்ʼ யத்ர தை³வம்ʼ ஸுராஸவம் .. 29..

ப்³ரஹ்ம ச ப்³ராஹ்மணாம்ʼஶ்சைவ யத்³யூயம்ʼ பரினிந்த³த² .
ஸேதும்ʼ விதா⁴ரணம்ʼ பும்ʼஸாமத꞉ பாக²ண்ட³மாஶ்ரிதா꞉ .. 30..

ஏஷ ஏவ ஹி லோகானாம்ʼ ஶிவ꞉ பந்தா²꞉ ஸனாதன꞉ .
யம்ʼ பூர்வே சானுஸந்தஸ்து²ர்யத்ப்ரமாணம்ʼ ஜனார்த³ன꞉ .. 31..

தத்³ப்³ரஹ்ம பரமம்ʼ ஶுத்³த⁴ம்ʼ ஸதாம்ʼ வர்த்ம ஸனாதனம் .
விக³ர்ஹ்ய யாத பாக²ண்ட³ம்ʼ தை³வம்ʼ வோ யத்ர பூ⁴தராட் .. 32..

மைத்ரேய உவாச
தஸ்யைவம்ʼ வத³த꞉ ஶாபம்ʼ ப்⁴ருʼகோ³꞉ ஸ ப⁴க³வான் ப⁴வ꞉ .
நிஶ்சக்ராம தத꞉ கிஞ்சித்³விமனா இவ ஸானுக³꞉ .. 33..

தே(அ)பி விஶ்வஸ்ருʼஜ꞉ ஸத்ரம்ʼ ஸஹஸ்ரபரிவத்ஸரான் .
ஸம்ʼவிதா⁴ய மஹேஷ்வாஸ யத்ரேஜ்ய ருʼஷபோ⁴ ஹரி꞉ .. 34..

ஆப்லுத்யாவப்⁴ருʼத²ம்ʼ யத்ர க³ங்கா³ யமுனயான்விதா .
விரஜேனாத்மனா ஸர்வே ஸ்வம்ʼ ஸ்வம்ʼ தா⁴ம யயுஸ்தத꞉ .. 35..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ த³க்ஷஶாபோ நாம த்³விதீயோத்⁴யாய꞉ .. 2..

———————

ஸ்ரீ விதுரர் கூறினார்.
பெண்ணிடம் அன்பு கொண்டவரான தக்ஷன் ஏன் தன் பெண்ணான ஸதி தேவியை அலட்சியம் செய்தார்?
உலகம் போற்றும் தெய்வமான மகாதேவனிடம் ஏன் பகைமை கொண்டார்?
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்.
முன்னொரு காலத்தில் தேவர்களும் முனிவர்களும் பிரஜாபதிகளும் சேர்ந்து செய்த ஸத்ர யாகத்தில் தக்ஷ பிரஜாபதி
பிரவேசித்த போது அவருடைய் ப்ரகாசத்தால் கவரப்பட்டு அனைவரும் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்தனர்.
பிரம்மாவும் மகாதேவனும் மட்டும் எழுந்திருக்க வில்லை.
தக்ஷ பிரஜாபதி பிரம்ம தேவரை ( அவர் பிதாவானதால்)வணங்கி தன் ஆசனத்தில் உட்கார்ந்து அங்கு முன்னே இருந்த
மகாதேவனைக் கண்டு அவர் தனக்கு மரியாதை செலுத்தாததைக் கண்டு கோபம் கொண்டு நிந்தித்தார்.
“என் பெண்ணை மணம் செய்து கொண்டதனால் இவன் என் சிஷ்யனாகிறான்.
ஆனால் எனக்கு வாய் வார்த்தையால் கூட மரியாதை காட்ட வில்லை.
இவனுக்கு பிரம்ம தேவர் தூண்டுதலினால் தான் பெண்ணைக் கொடுத்தேன் “ என்று கூறி,
சிவனை சுடு காட்டில் திரிபவன், தமோ குணம் மிக்கவன் பூத கணங்களுக்கு பதியானவன்.
சிவன் என்ற மங்கள நாமத்திற்கு பொருத்தமில்லாதவன் என்று கூறிப் பலவாறு நிந்தித்தான்.
ஆனால் மகாதேவன் அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக வீற்றிருந்தார். அதைக் கண்டு மேலும் கோபம் கொண்ட தக்ஷன்
யாகங்களில் சிவனுக்கு ஹவிர்பாகம் இல்லாமல் போகக்கடவது என்று சாபமிட்டான்.,
இவ்வாறு அங்கிருந்த பெரியோர்கள் தடுத்தும் காரணமின்றி சிவனை நிந்தித்து விட்டு சாபம் கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டகன்றான்.
அதைக் கண்ட சிவனடியார்களுக்குள் சிறந்தவரான நந்தி தேவர் தக்ஷனுக்கும் அவனைச் சேர்ந்த அந்தணர்களுக்கும் பிரதி சாபம் இட்டார்.
மூடனும் அகந்தை கொண்டவனுமான் தக்ஷன் தத்துவ மார்கத்தை அறியாமல் கர்ம மார்கத்திலேயே உழன்று நாசம் அடையட்டும் என்றும் ,
விரைவிலேயே அறிவற்ற அவன் ஆட்டுத்தலை பெறுவான் என்றும் அவனுக்கு சாதகமாக இருந்த அந்தணர்களும் தவம் கெட்டு
விஷய சுகத்தில் உழலட்டும் என்றும் சாபம் கொடுத்தார்.
அதைக் கண்ட அந்த யாகத்தின் தலைமை புரோகிதரான ப்ருகு , சிவனை பின் பற்றுவோர் பாஷாண்டிகளாகத் திரியட்டும்
என்று சாபமிட்டார். இதையெல்லாம் பார்த்த மகாதேவன் வருத்தத்துடன் அந்த இடம் விட்டகன்றார்.
பிறகு ஹரியைக் குறித்து செய்யப்பட அந்த யாகத்தை ப்ரஜாபதிகள் அனைவரும் சேர்ந்து பூர்த்தி செய்து சுத்த மனத்தினராய்
கங்கை யமுனை இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் அவப்ருத ஸ்நானம் செய்தனர்.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம்-33–

November 7, 2020

இவ்விதம் கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் கபிலரைத் துதித்தாள்.

“ தங்கள் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள் சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டைவிரலை வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமேயில்லை அல்லவா?

துஷ்டநிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக்கொள்கிறீர்களே அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.எவருடைய நாமஸ்மரணம், கதாஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும், ஒருமுறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத்தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம் ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

நான் வேதங்களின் சாரமானவரும், பரப்ரம்மமும், பரமபுருஷனும், ஒருமுகப்பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும், கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்.”

கபிலர் கூறினார்.

“தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். “

மைத்ரேயர் கூறினார்.

இவாறு தேவஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார். தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.

முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த தேவஹூதி புத்திரனும் சென்றபின் சிலகாலம் வ்யாகுலத்தில் ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவபாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள். இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.

அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்திபதம் என்ற பெயருடன் ஒரு புண்யக்ஷேத்திரமாயிற்று.

கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வடகிழக்கு திசை நோக்கிச்சென்றார். சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் துதிக்கப்பட்டு சமுத்ரராஜனால் இடமளிக்கப்பெற்று மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோகநிஷ்டையில் இருக்கிறார்.

எவன் ஆத்மயோகமாகிய இந்த கபிலோபதேசத்தை ச்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ அவன் பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி மைத்ரேயர் கபிலாவதாரத்தை முடிக்கிறார்.

ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக்குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு கபிலர் அருகில் அதைக் கண்டு கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள். பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.

—————

ஏவம்ʼ நிஶம்ய கபிலஸ்ய வசோ ஜனித்ரீ
ஸா கர்த³மஸ்ய த³யிதா கில தே³வஹூதி꞉ .
விஸ்ரஸ்தமோஹபடலா தமபி⁴ப்ரணம்ய
துஷ்டாவ தத்த்வவிஷயாங்கிதஸித்³தி⁴பூ⁴மிம் .. 1..

தே³வஹூதிருவாச
அதா²ப்யஜோ(அ)ந்த꞉ஸலிலே ஶயானம்ʼ
பூ⁴தேந்த்³ரியார்தா²த்மமயம்ʼ வபுஸ்தே .
கு³ணப்ரவாஹம்ʼ ஸத³ஶேஷபீ³ஜம்ʼ
த³த்⁴யௌ ஸ்வயம்ʼ யஜ்ஜட²ராப்³ஜஜாத꞉ .. 2..

ஸ ஏவ விஶ்வஸ்ய ப⁴வான் வித⁴த்தே
கு³ணப்ரவாஹேண விப⁴க்தவீர்ய꞉ .
ஸர்கா³த்³யனீஹோ(அ)விததா²பி⁴ஸந்தி⁴-
ராத்மேஶ்வரோ(அ)தர்க்யஸஹஸ்ரஶக்தி꞉ .. 3..

ஸ த்வம்ʼ ப்⁴ருʼதோ மே ஜட²ரேண நாத²
கத²ம்ʼ நு யஸ்யோத³ர ஏததா³ஸீத் .
விஶ்வம்ʼ யுகா³ந்தே வடபத்ர ஏக꞉
ஶேதே ஸ்ம மாயாஶிஶுரங்க்⁴ரிபான꞉ .. 4..

த்வம்ʼ தே³ஹதந்த்ர꞉ ப்ரஶமாய பாப்மனாம்ʼ
நிதே³ஶபா⁴ஜாம்ʼ ச விபோ⁴ விபூ⁴தயே .
யதா²வதாராஸ்தவ ஸூகராத³ய-
ஸ்ததா²யமப்யாத்மபதோ²பலப்³த⁴யே .. 5..

யந்நாமதே⁴யஶ்ரவணானுகீர்தனா-
த்³யத்ப்ரஹ்வணாத்³யத்ஸ்மரணாத³பி க்வசித் .
ஶ்வாதோ³(அ)பி ஸத்³ய꞉ ஸவனாய கல்பதே
குத꞉ புனஸ்தே ப⁴க³வன் நு த³ர்ஶனாத் .. 6..

அஹோ ப³த ஶ்வபசோ(அ)தோ க³ரீயான்
யஜ்ஜிஹ்வாக்³ரே வர்ததே நாம துப்⁴யம் .
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு꞉ ஸஸ்னுரார்யா
ப்³ரஹ்மானூசுர்நாம க்³ருʼணந்தி யே தே .. 7..

தம்ʼ த்வாமஹம்ʼ ப்³ரஹ்ம பரம்ʼ புமாம்ʼஸம்ʼ
ப்ரத்யக்ஸ்ரோதஸ்யாத்மனி ஸம்ʼவிபா⁴வ்யம் .
ஸ்வதேஜஸா த்⁴வஸ்தகு³ணப்ரவாஹம்ʼ
வந்தே³ விஷ்ணும்ʼ கபிலம்ʼ வேத³க³ர்ப⁴ம் .. 8..

மைத்ரேய உவாச
ஈடி³தோ ப⁴க³வானேவம்ʼ கபிலாக்²ய꞉ பர꞉ புமான் .
வாசா விக்லவயேத்யாஹ மாதரம்ʼ மாத்ருʼவத்ஸல꞉ .. 9..

கபில உவாச
மார்கே³ணானேன மாதஸ்தே ஸுஸேவ்யேனோதி³தேன மே .
ஆஸ்தி²தேன பராம்ʼ காஷ்டா²மசிராத³வரோத்ஸ்யஸி .. 10..

ஶ்ரத்³த⁴த்ஸ்வைதன்மதம்ʼ மஹ்யம்ʼ ஜுஷ்டம்ʼ யத்³ப்³ரஹ்மவாதி³பி⁴꞉ .
யேன மாமப⁴வம்ʼ யாயா ம்ருʼத்யும்ருʼச்ச²ந்த்யதத்³வித³꞉ .. 11..

மைத்ரேய உவாச
இதி ப்ரத³ர்ஶ்ய ப⁴க³வான் ஸதீம்ʼ தாமாத்மனோ க³திம் .
ஸ்வமாத்ரா ப்³ரஹ்மவாதி³ன்யா கபிலோ(அ)னுமதோ யயௌ .. 12..

ஸா சாபி தனயோக்தேன யோகா³தே³ஶேன யோக³யுக் .
தஸ்மிந்நாஶ்ரம ஆபீடே³ ஸரஸ்வத்யா꞉ ஸமாஹிதா .. 13..

அபீ⁴க்ஷ்ணாவகா³ஹகபிஶான் ஜடிலான் குடிலாலகான் .
ஆத்மானம்ʼ சோக்³ரதபஸா பி³ப்⁴ரதீ சீரிணம்ʼ க்ருʼஶம் .. 14..

ப்ரஜாபதே꞉ கர்த³மஸ்ய தபோயோக³விஜ்ருʼம்பி⁴தம் .
ஸ்வகா³ர்ஹஸ்த்²யமனௌபம்யம்ʼ ப்ரார்த்²யம்ʼ வைமானிகைரபி .. 15..

பய꞉பே²னனிபா⁴꞉ ஶய்யா தா³ந்தா ருக்மபரிச்ச²தா³꞉ .
ஆஸனானி ச ஹைமானி ஸுஸ்பர்ஶாஸ்தரணானி ச .. 16..

ஸ்வச்ச²ஸ்ப²டிககுட்³யேஷு மஹாமாரகதேஷு ச .
ரத்னப்ரதீ³பா ஆபா⁴ந்தி லலநாரத்னஸம்ʼயுதா꞉ .. 17..

க்³ருʼஹோத்³யானம்ʼ குஸுமிதை ரம்யம்ʼ ப³ஹ்வமரத்³ருமை꞉ .
கூஜத்³விஹங்க³மிது²னம்ʼ கா³யன் மத்தமது⁴வ்ரதம் .. 18..

யத்ர ப்ரவிஷ்டமாத்மானம்ʼ விபு³தா⁴னுசரா ஜகு³꞉ .
வாப்யாமுத்பலக³ந்தி⁴ன்யாம்ʼ கர்த³மேனோபலாலிதம் .. 19..

ஹித்வா ததீ³ப்ஸிததமமப்யாக²ண்ட³லயோஷிதாம் .
கிஞ்சிச்சகார வத³னம்ʼ புத்ரவிஶ்லேஷணாதுரா .. 20..

வனம்ʼ ப்ரவ்ரஜிதே பத்யாவபத்யவிரஹாதுரா .
ஜ்ஞாததத்த்வாப்யபூ⁴ந்நஷ்டே வத்ஸே கௌ³ரிவ வத்ஸலா .. 21..

தமேவ த்⁴யாயதீ தே³வமபத்யம்ʼ கபிலம்ʼ ஹரிம் .
ப³பூ⁴வாசிரதோ வத்ஸ நி꞉ஸ்ப்ருʼஹா தாத்³ருʼஶே க்³ருʼஹே .. 22..

த்⁴யாயதீ ப⁴க³வத்³ரூபம்ʼ யதா³ஹ த்⁴யானகோ³சரம் .
ஸுத꞉ ப்ரஸன்னவத³னம்ʼ ஸமஸ்தவ்யஸ்தசிந்தயா .. 23..

ப⁴க்திப்ரவாஹயோகே³ன வைராக்³யேண ப³லீயஸா .
யுக்தானுஷ்டா²னஜாதேன ஜ்ஞானேன ப்³ரஹ்மஹேதுனா .. 24..

விஶுத்³தே⁴ன ததா³(ஆ)த்மானமாத்மனா விஶ்வதோமுக²ம் .
ஸ்வானுபூ⁴த்யா திரோபூ⁴தமாயாகு³ணவிஶேஷணம் .. 25..

ப்³ரஹ்மண்யவஸ்தி²தமதிர்ப⁴க³வத்யாத்மஸம்ʼஶ்ரயே .
நிவ்ருʼத்தஜீவாபத்தித்வாத்க்ஷீணக்லேஶாப்தநிர்வ்ருʼதி꞉ .. 26..

நித்யாரூட⁴ஸமாதி⁴த்வாத்பராவ்ருʼத்தகு³ணப்⁴ரமா .
ந ஸஸ்மார ததா³(ஆ)த்மானம்ʼ ஸ்வப்னே த்³ருʼஷ்டமிவோத்தி²த꞉ .. 27..

தத்³தே³ஹ꞉ பரத꞉ போஷோ(அ)ப்யக்ருʼஶஶ்சாத்⁴யஸம்ப⁴வாத் .
ப³பௌ⁴ மலைரவச்ச²ன்ன꞉ ஸதூ⁴ம இவ பாவக꞉ .. 28..

ஸ்வாங்க³ம்ʼ தபோயோக³மயம்ʼ முக்தகேஶம்ʼ க³தாம்ப³ரம் .
தை³வகு³ப்தம்ʼ ந பு³பு³தே⁴ வாஸுதே³வப்ரவிஷ்டதீ⁴꞉ .. 29..

ஏவம்ʼ ஸா கபிலோக்தேன மார்கே³ணாசிரத꞉ பரம் .
ஆத்மானம்ʼ ப்³ரஹ்மநிர்வாணம்ʼ ப⁴க³வந்தமவாப ஹ .. 30..

தத்³வீராஸீத்புண்யதமம்ʼ க்ஷேத்ரம்ʼ த்ரைலோக்யவிஶ்ருதம்ʼ .
நாம்னா ஸித்³த⁴பத³ம்ʼ யத்ர ஸா ஸம்ʼஸித்³தி⁴முபேயுஷீ .. 31..

தஸ்யாஸ்தத்³யோக³விது⁴தமார்த்யம்ʼ மர்த்யமபூ⁴த்ஸரித் .
ஸ்ரோதஸாம்ʼ ப்ரவரா ஸௌம்ய ஸித்³தி⁴தா³ ஸித்³த⁴ஸேவிதா .. 32..

கபிலோ(அ)பி மஹாயோகீ³ ப⁴க³வான் பிதுராஶ்ரமாத் .
மாதரம்ʼ ஸமனுஜ்ஞாப்ய ப்ராகு³தீ³சீம்ʼ தி³ஶம்ʼ யயௌ .. 33..

ஸித்³த⁴சாரணக³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .
ஸ்தூயமான꞉ ஸமுத்³ரேண த³த்தார்ஹணநிகேதன꞉ .. 34..

ஆஸ்தே யோக³ம்ʼ ஸமாஸ்தா²ய ஸாங்க்²யாசார்யைரபி⁴ஷ்டுத꞉ .
த்ரயாணாமபி லோகாநாமுபஶாந்த்யை ஸமாஹித꞉ .. 35..

ஏதன்னிக³தி³தம்ʼ தாத யத்ப்ருʼஷ்டோ(அ)ஹம்ʼ தவானக⁴ .
கபிலஸ்ய ச ஸம்ʼவாதோ³ தே³வஹூத்யாஶ்ச பாவன꞉ .. 36..

ய இத³மனுஶ்ருʼணோதி யோ(அ)பி⁴த⁴த்தே
கபிலமுனேர்மதமாத்மயோக³கு³ஹ்யம்ʼ .
ப⁴க³வதி க்ருʼததீ⁴꞉ ஸுபர்ணகேதா-
வுபலப⁴தே ப⁴க³வத்பதா³ரவிந்த³ம் .. 37..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே
த்ரயஸ்த்ரிம்ʼஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 33..

.. இதி த்ருʼதீயஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 10-ஸ்ருஷ்ட்டி வைவித்யம் -படைப்புகளின் விவரணம் –

September 18, 2020

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைகுண்ட வர்தித பலோ அத பவத் பிரசாதா
தம்போஐ யோநிர ஸ்ருஜத் கில ஜீவ தேஹாந்
ஸ்தாஸ் நூநி பூருஹ மயாநி ததா திரஸ் சாம்
ஜாதிம் மநுஷ்ய நிவஹா நபி தேவ பேதாந் —-1 –

ஸ்ரீ வைகுண்ட நாதா உனது திரு அருளால் பிரம தேவன் மிகுந்த சக்தியை அடைந்து பல ஜீவ ராசிகளையும்
மரம் செடி கொடி பறவை மிருகம் முதலியவற்றையும் மனிதர்களையும் தேவர்களையும்
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்காதிகளையும் படைத்தாராமே –

——————

மித்யாக்ரஹ அஸ்மி மதி ராக விகோப பீதி
ரஜ்ஞாந வ்ருத்தி மிதி பஞ்ச விதாம் ச ஸ்ருஷ்ட்வா
உத்தாம தாமச பதார்த விதாந அதூந
ஸ்தேந த்வதீய சரண ஸ்மரணம் விஸூத்த்யை –2-

அறிவு மயக்கம் அஹங்காரம் மமகாரம் ஆசை கோபம் பயம் முதலான பஞ்ச அஞ்ஞான கார்யங்களை உண்டு பண்ணினார்
தமோ குணமான கார்யங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார்
அத் துயரம் விலக உனது திருவடிகளைத் த்யானம் செய்தாராம்-(விஸூத்த்யை–தூய்மை ஆக்கிக் கொள்ள )

——————

தாவத் ச சர்ஜ மனஸா சனகம் சநந்தம் பூயஸ் ஸநாதன முனிம் ச ஸனத் குமாரம்
தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்ய மாநாச த்வத் பாத பக்தி ரசிகா ஜக்ருஹுர் ந வாணீம் –3-

சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் ஆகியோரை மனத்தினால் படைத்தார் –
ஸ்ருஷ்டியில் ஈடுபடும் படி அவர்களுக்கு ஆணை இட்டார்
ஆனால் அவர்கள் தங்கள் சேவையில் நாட்டம் கொண்டு ப்ரம்மாவின் வாக்கை ஏற்க வில்லை –

(சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் -இந்த நால்வர் தான் ஜய விஜயர்களுக்கு சாபம் கொடுத்தவர்கள்)

——————-

தாவத் ப்ரகோப முதிதம் ப்ரதி ருந்ததோ அஸ்ய ப்ரூ மத்யதோ அஐநி ம்ருடோ பவத் ஏக தேச
நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சே த்யாதவ் ருரோத கில தேந ச ருத்ர நாமா –4-

அப்போது பிரம்மாவுக்கு கோபம் உண்டாயிற்று -அதை அடக்கினார் –
அப்போது அவருடைய புருவங்களின் நடுவில் இருந்து ஸ்ரீ ருத்ரன் தோன்றினார்
அவர் பிரம்மனிடம் தனக்கு பெயரையும் இருப்பிடங்களையும் வேண்டினார்-ருததீ ருத்ரர் -அழுததால் ருத்ரர்

——————–

ஏகாதஸாஹ் வய தயா ச விபின்ன ரூபம் ருத்ரம் விதாய தயிதா வனிதாஸ் ச தத்வா
தாவந்த்ய தத்த ச பதாநி பவத் ப்ரணுந்ந ப்ராஹ ப்ரஜா விரச நாய ச சாதரம் தம் –5-

உன்னால் ஏவப்பட்ட படி அந்த பிரம தேவன் ருத்ரனுக்கு பதினோரு பெயர்களையும் பதினோரு மனைவி மார்களையும்
தனித் தனி இருப்பிடங்களையும் அளித்தார்
பின்பு உயிர்களைப் படைக்கும் படி அன்புடன் கட்டளை இட்டார் –

————–

ருத்ராபி ஸ்ருஷ்ட பயதா க்ருதி ருத்ர சம்க சம் பூர்ய மாண புவன த்ரய பீத சேதா
மா மா ப்ரஜா ஸ்ருஜ தபஸ் சர மங்கலாயே த்யா சஷ்ட தம் கமல பூர் பவதீரி தாத்மா –6–

ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் பயங்கரமான உருவங்களுடன் மூ வுலகிலும் நிரம்பியதைக் கண்டு பயந்தார்
பிறகு ருத்ரனைப் படைக்க வேண்டாம் -உலக நலத்திற்காக தவம் செய் என்று சொன்னார்-

——————

தஸ்யாத சர்க ரஸி கஸ்ய மரீசி ரத்ரிஸ் தத்ராங்கரா க்ரது முனி புலஹ புலஸ்த்ய
அங்காத ஜாயத ப்ருகுஸ் ச வசிஷ்ட தஷவ் ஸ்ரீ நாரதஸ் ச பகவன் பவ தங்க்ரி தாஸ –7-

பிரமன் தனது ஸ்ருஷ்டியில் ஈடுபட்டார் -அவரது உடலில் இருந்து ஒன்பது பிரஜாபதிகளும்
உனது திருவடியில் பற்று உடைய ஸ்ரீ நாரத முனிவரும் உண்டானார்கள்
மரீசி அத்ரி அங்கிரஸ் க்ரது புலகர் புலஸ்த்யர் பிருகு வசிஷ்டர் தக்ஷன் ஸ்ரீ நாரதர்
ஆகியவர்கள் உண்டானார்கள்

—————

தர்மாதி காநபி ஸ்ருஜந்நத கர்தமம் ச வாணீம் விதாய விதி ரங்கஜ சம்குலோ அபூத்
த்வத் போதிதைஸ் சனக தக்ஷ முகைஸ் தநூஜை ருத் போதிதஸ் ச விர ராமோ தமோ விமுஞ்சன் –8-

அங்கஜசம் -மன்மதன்-

பிறகு பிரமதேவர் தர்மம் முதலியவைகளையும் கர்த்தமரையும் படைத்தார் -சரஸ்வதியைப் படைத்து காமத்தை அடைந்தார்
தாங்கள் ஸநகாதிகளை ஏவி அறிவுரை கூறச் செய்தீர்-அதனால் பிரம்மதேவரின் அஞ்ஞானம் விலகியது
வேதம் புராணங்களையும் வெளியிட்டு தனது புதல்வர்களுக்குக் கற்பித்தார்

————————-

வேதாந் புராண நிவஹா நபி ஸர்வ வித்யா குர்வன் நிஜாநந கணாச் சதுரா நநோ அசவ்
புத்ரேஷு தேஷு வினிதாய ச சர்க வ்ருத்தி மப் ரானுவம் ஸ்தவ பதாம் புஜம் ஆஸ்ரிதோ பூத் –9-

பிறகு அவர் நான்கு வேதங்களையும் அங்கங்களையும் புராணங்களையும் வித்யைகளையும் எல்லாக் கலைகளையும்
வெளியிட்டு அவற்றை தனது புத்ரர்களுக்கு உபதேசம் செய்தார் -ஆனாலும் ஸ்ருஷ்ட்டி வளர்ச்சி அடையவில்லை
தங்களுடைய திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தார்

உலகம் ஒரு நாளில் படைக்கப்பட வில்லை
மீண்டும் மீண்டும் தடைகள் வர
மீண்டும் மீண்டும் சரண் அடைந்து
அவற்றை விலக்க பிரார்த்திக்கிறார்

—————

ஜாநந் நுபாய மத தேஹ மஜோ விபஜ்ய ஸ்ரீ பும்ஸ பாவமப ஜன்மனு தத்வ தூப்யாம்
தாப்யாம் ச மாநுஷ குலாநி விவர்தயம் ஸ்த்வம் கோவிந்த மாருத புரேச நிருந்தி ரோகாந் –10-

அதன் பிறகு ஸ்ருஷ்டிக்க வழியைக் கண்டார் -தனது சரீரத்தைப் பிரித்துக் கொண்டு
ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையைப் படைத்தார்
அந்தத் தம்பதிகள் மூலம் ஸ்ருஷ்டியைப் பெறுகச் செய்த தாங்கள் அடியேனது ரோகங்களைப் போக்கி அருள வேண்டும்
என்று வேண்ட ஸ்ரீ அப்பனும் அங்கீ கரித்து அருளினார்

முதலில் தோன்றிய ஆணும் பெண்ணும் -ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையை-இவர்களே
கீழே முனிவர்கள் உண்டே என்னில்
இவர்கள் தான் மனிதர்கள்
ரிஷிகள் தனி தானே

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்–21 st சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்-

September 16, 2020

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

——–

யாதவாப்யுதயம்

1. காவ்யாரம்பம்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

—————-

யாதவாப்யுதயம் ( சர்க்கம் 21) 2171 – 2240 = 70–
பெவ்ண்ட்ரக வாசுேதவன் வதம், காசி தஹநம், த்விவித வானர வதம், (நாராய- தசகம் 83)

1. வாஸுேதவ இதி நாம ததாந: பெவ்ண்ட்ரகஸ் ததநு பூ மதாந்த: மாநுஷத்வ
கவசாந்ததேந ஸ்பத த ஸ்ம ஹணா ஹத சித்த: ஸ்ரீமத் பாகவதம்(10/66/1-21)

பிறகு ஸ்ருகாலன் என்கிற பவ்ண்ட்ரகன் அதிக மதத்தால் அறிவற்று வாசுேதவன் என்ற பெயர் சூடி மானுட உருக் கொண்டதால்
ஹரி என்ற அறியவாகாது இருக்கும் கண்ணேனாடு கலஹம் செய்யலானான்

2. ஹேதி பஞ்சகம் அதாரயத ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முகாநி ச மூட:
ஐச்வராணி சrதாநி ச பூவாணி ஆத்மந: ஸ்வயம் அஜூகுஷத் ஆப்தை :

மூடன், பாஞ்ச சன்னியம், சார்ங்கம், கௌமோதகி, நந்தகம், ஸுதர்சனம் முதலான பஞ்சாயுதங்கைளயும்
ஸ்ரீவத்ஸ கௌஸ்துப லக்ஷணங்களை தரித்துத் தானே பண்டைய ஈஸ்வர சரித்திரங்களான பூமியை இடந்தது,
மது கடைப ஸம்ஹாரங்கைளச் செய்ததாய் பறை சாற்றி வந்தான்

3.இந்த்ரஜால குஹநாதிஷு தாக்ஷ்யாத் ஈஷ ஏஷ இதி மோஹிதேலாக:
அத்யேசத புஜேகச்வரசய்யாம் ஆருேராஹ விஹேகந்த்ர விவத்தம்

பிறரை மயக்கும் இந்த்ர ஜால வித்யை மாறு வேஷம், மற்றவர் களைக் கொண்டு தன்னைப் புகழச் செய்வது போன்ற
செயல்களிலுள்ள சாதுர் யத்தினால் கொண்டு தானே ஈச்வரன் என்று உலகத்தை நம்பச் செய்து
ஆதி சேஷனில் பள்ளி கொள்வது, கருடன் மேல் ஏறிச் செல்வது போன்றவற்றைச் செய்தான்

4. அந்வஹம் ச மஹத’ம் வநமாலாம் மால்யக்ருத்பி உபகல்ப்ய ப பார நாமேதயம்
அதிசத் ஸசிவாநாம் நாக நாயக விசேஷ நிரூடம் மாலையானே

மாலா காரனிடம் ஆணை யிட்டு தினம் மிக நீண்ட வன மாலையை அணிந்து வந்தான்.
தன் மந்திrகளு க்கு இந்திரன் சந்திரன் என்று பெயரிட்டு அழைத்தான்

5. பத்த க்ருத்ர்ம புஜாந்தர யுக்மம் சஸ்யமாநம் அநுஜ’வி ஜேநந விச்வகத்து
அவதார இதி ஸ்வம் பஹ்வமம்ஸ்த பதிரோ நிகமேஷு

இயற்கையான தன் இரு புஜங்களுக்கு மேலும் இரண்டு புஜங்கைள வைத்துக் கொண்டு தன்னை அண்டிப் பிழைப்பவர்களால்
தான் நாராயணன் அவதாரம் என புகழப்பட்டு அத்தை நம்பவும் செய்தான். மற்றபடிக்கு பகவான மஹிைமகள் என்ன என்பதே
வேதம் ஓதாத அவனுக்குச் சிறிதும் தெரியாது. வேறுபாட்டுக்கான அம்சங்கள் அவன் காதில் விழுவதுமில்லை –

6–இத்தம் ஈஸ்வர விடம்பந ரூபம் நாடகீ யம் அநுருத்ய விஹாரம் சோச்யதாம் அபி பராவரவித்பி:
ஹாஸ்யதாம் அபி ஜகாம ஜகத்பி: நடிககள் தைமேதவனாய்

நாடகத்தில் நடிப்பவர்கள் தன்னைத் தேவனாய் காட்டுவாகள். இவேனா நடிப்பில்லாமல் அப்படியே தன்னை ஈஸ்வரனாக
காண்பித்ததால் பெரியோர்கள் ஐயோ என்று சோகிக்கவும் உலகத்தினர் பரிஹஸிக்கவும் செய்யலானான்

7–மஸ்தகஸ்தித துரத்யய ம்ருத்யு: தஸ்ய தூத உபஸ்ருத்ய ஜகாத க்ருத்யேசஷ விநிேவஷித
சித்தம் நிபயோ ந்ருபதி ஸம்ஸதி நாதம்

தலைக்கு ஏறின மிருத்யுவிடமிருந்து தப்பிப் போகவாகாத நிலை வந்து விட்டபடியால் ஒரு தூதைன அவன் கண்ணனிடம் அனுப்ப,
அவனும் இவ்வுலகில் இன்னம் செய்ய வேண்டியது என்ன என்று ஆராய்ந்து வரும் லோக நாதைன நெருங்கி,
ராஜ சபையிலே அஞ்சாமல் பேசலானான்.
[பின்வரும் நான்கு பாசுரங்கள் தூதனுைடய சொந்த உபேதசம். அதற்கு மேல் வருவன பவ்ண்டிரகனின் ஆதேசம்]

8-க்ருஷ்ண க்ருஷ்ண கததோ கிரம் அத்யாம் ஸம்ச்ருணுஷ்வ மஹத’ம் இஹ மத்த:
அப்ரமத்த மதிபிஸ் ஸஹ மித்ரைஸ் ஆப்த வாக்யம் அவத’ய ந ஸித் தி:

கிருஷ்ணா! கவனமுள்ள புத்தியை யுடைய ஸ்நேகிதிகள் உடன் கூடின உண்மையான பொருள் பொதிந்து மதிப்பான
வார்த்தையைச் சொல்லும் என்னிடமிருந்து கேட்பாயாக.
ஹிதத்தை விரும்புகின்றவர்களின் வார்த்தையை அலட்சியம் செய்தால் பலன் பெறலாகாது.

தூதனுைடய சொந்த உபேதசம் – 4 ஸ்லோகங்கள்
9. அஸ்தி கஸ்சித் அவதாரத பூமா பூருஷ: ச்ருதிகணேஷு புராணா:
ஸ க்ஷிதிம் பரக்ருஹ’த விஹார: பவ்ண்டரகத்வம் அதிகம்ய புநக்தி

திரள் திரளான வேதங்களால் அறுதியிடப்பட்ட மேன்மைகளை யுடைய ஒப்பற்ற புருஷனே
பவ்ண்ட்ரகனாய் பூமிையக் காத்து வருகிறான்

10–தஸ்ய நித்ய நிருபாதிக பூம்நோ விச்வேபாக்து அதிகம்ய திதிக்ஷாம் புஜ்யேத
நியத கமவிபாைக: யுஷ்மதாதிபி இலா பஹுபாகா மறையாததாம்

அழியாததும் ரக்ஷகனுமான அனாதியானதுமான பவ்ண்டரக ராஜனின் மேன்மையை யுடையவனும்
பொறுமைக்குப் ஸ்வ பாத்திரமாகிய பல பாகம் கொண்ட பூமிையப் பல பேரான தங்கள் பாக்கியத்தின்
பல தசைகளுக்கு ஏற்ப அனுபவித்து வருகிறார்கள்.

11. அத்த தத்வம் இதம் அச்ருதபூவம் ச்ருண்வதாத்ர பவதா பவிதவ்யம் நிச்ச க்ருத
ஹிதாஹித ஸ்ம்நா ஜிஷ்ணுநா யதுகுலஸ்ய விபூத்யை

இது வரையில் கேட்காத இவ்வுண்மையை இங்கே கேட்கும் நாம் (யது குலத்தின் ஷேமத்திற்காக ஜெயம் பெறுபவனாகி)
இது ஹிதம் இது அஹிதம் என நன்மை தீமைகளின் வரம்பை அசைக்காமலிருக்க வேண்டும்.
(யதுக்களின் ஷேமத்திற்காக பவ்ண்டரகைன வெல்ல வேண்டும் என்ற பொருளும்
தூதனின் வாயில் இருந்து அவனறியாமல் வந்து விட்டது)

12–ஆதிசத்யகில லோக நியந்தா த்வாம் அஸவ் பஜநெஸௗ ஹ்ருத நிக்ந: ஈஷிதவ்ய கணநா
லிகிதஸ் த்வம் மா க்ருதா விததம் ஈஸ்வரமாநம்

ஸர்வ லாேகேஸ்வரனான பவ்ண்டரக மஹாராஜர் தம்மை பஜனம் பண்ணினால் ஸ்நேகம் கொண்டு ஆணை யிடுகிறார் .
என்ன வெனில் தம்மால் ஆளப்பட்டவரின் பட்டியிலே எழுதப் பட்டிருக்கும் நரனான உன்னை ஈஸ்வரன் என்று நினைக்காதே !

13. பாஹ்யவத்மநி பராவர தத்த்வ – வ்யத்யேயந விநிவ்ருத்தஸ தத்வே நித்தவ்ருத்திம்
அதிரோப்ய விமூட: ஸ்ரேயஸோ ஹி பஹி ஏவ பவந்தி “

மேல் கீழ் தத்துவத்தின் மாறாட்டத்தினாலே உண்மைக்கு விலக்கான வேத பாஹ்யரின் வழியிேல
மனதை வைத்து மூடர்களானவர்கள் நன்மைக்கு வெளியே அல்லவோ நிற்பர் –

14. ஈச்வரஸ்த்வம் அஸி சேத் குத ஏவம் ந த்வத் அக்ரஜ இதி ப்ரமிதி:
ஸ்யாத் த்வவ் யுவாம் பரம இத்யபி து:ஸ்தம் கஸ்தேதா விஷம ஏவ ந சாந்ய: “

நானே ஈஸ்வரன் என்கிறாயாகில், இவ்வாேற உன் அண்ணன் ஈஸ்வரனாகான் என்ற புத்தி எவ்வாறு உண்டாம்?
இருவரும் ஈஸ்வராகக் கூடாதே ! பரமனல்லவோ ஈஸ்வரனாவான்.
தன்னை விட்டு மற்று எல்லோராலும் சிறந்தவனே ஈஸ்வரன்.
ஆக உங்கைளக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் ஈஸ்வரனாக வேண்டும்.

15–அதவாத குஹநாபி அபி ஸ்வாந் ஈஸ்வராந் விகணயந்தி ஸுேரந்த்ரா:
நிஷ் ப்ரமாணஜநுேஷா ஜநவாதாத் க:ஸ்வித’ச இதி விச்வஸிதி ஸ்வம் “

உண்மையை மறைத்து ஸ்துதிக்கும் வேதங்களிலே பலவிடங்களில் அக்னி இந்திரன் போன்ற பலரை சர்வேஸ்வரனாக
வருணித்திருந்தும் தேவர்கள் அவர்களை ஈஸ்வரனாக எண்ணுவதில்லை , இப்படியிருக்க ப்ரமாணமில்லாமலே
பிறந்த ஊரைப் பேச்சைக் கேட்டுக் கொண்டு எவன் தன்னை ஈஸ்வரனாக எண்ணக்கூடும்.

16–கோபிகாபி அபி கமபி ஆஸ்தாம் பத்த ஏவ யதி முக்திவிதாதா அத்பு தஸ்திதி
அநாந்தரபாஹ்ய: ஸப்தமஸ் து ஸமேயாயம் அபூவ: “

புண்ய பாப கர்மங்களால் கண்டுண்டவன் என்பது இருக்கட்டும். இடைச்சிகளிடம் கட்டுண்டவன் வீடு பேறு பெறுவிப்பவன்
என்றால் இதற்கு முன் இல்லாத இந்த மதமானது, வைதிகம் அவைதிகம், ஒன்றிலும் சேராத ஏழாவது அற்புதமாய் இருக்கும்.

17–இஷ்ட ஏவ து மத’ஸ்வரபாவ: த்வத் முைக ந கலு சக்யநிரோத: மத்ஸுகாதிஷு
கதம் விஷயாைந: மத்பரத்வம் அபதம் ப்ரதிேஷத்யம்

நான் ஈஸ்வரன் என்பது முற்றிலும் இசைவானதே ! உன்னைப் போன்றவர்களால் இதை நிராகரிக்க முடியாது.
ஒரு ஆத்மாவிற்கு மற்ற ஓரு ஆத்மா புலப்படாமலிருப்பதால் என்னிடத்திலுள்ள ஸுகம் முதலிய குணங்கைளையே
நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத என்னிடமுள்ள பரத்துவத்தை
எவ்வாறு மறுக்கக் கூடும். நான் பரமாத்மா! நானும் நீயும் வேறு!

18–நாமேதயம் அநபாயி மத’யம் த்யஜ்யதாம் ப்ரதய தாஸதயா வா சிஹ்நதாரணம்
அநேந கதாத்தம் கல்பேநந கதம் ஈஸ்வரபாவ: “

எனக்கே நிலையாய் இருக்கிற வாஸுேதவன் என்ற பெயரை நான் விட்டு விடவும். அல்லது எனக்கு அடிமை என்று
அறிவித்துக் கொள்ளவும் சங்கு சக்ராதி சின்னங்கைள தரிப்பதையும் விட்டு விடலாம்.
வேஷத்தினால் ஈஸ்வரத் தன்மை எப்படி உண்டாகும்?

19–தாதத’ந்ய நியமம் யதி புத்த்வா ஸோமித்யநுபுபூஷஸி தத் ஸ்யாத் அந்யதா து
நிக்ருஹ’தி: அலங்க்யா ராஜபாவத்ருஷிைத இவ ப்ருத்யை

வாஸு தேவனுக்கு எப் பொழுதும் பவ்யப் பட்டவன் என்கிற கருத்துடன் நான் ஈஸ்வரன் என்கிற விசிஷ்ட அத்வைத
நிலையில் பஜனம் பண்ண விரும்பினால் அது தகும். இல்லையேல் தம்மையே அரசராக எண்ணும்
வேலைக்காரர்களுக்கு கிட்டும் தண்டனையில் இருந்து மீளலாகாது!

20– பாப்மநாம் தமஸி பாதயித்ருணாம் ஆத்ம சவ்யம் அதிராஜ பதஸ்தம் சோதிசேந
நியேதாபி ஹ்ருதாத்மா ஸோரதண்டம் அவசாத் உபயாதி

இருளில் ஆழ்த்தும் வல் வினைகளுக்குள் ஆத்ம சவ்யம் என்பது தலைமையானதாம். சாஸ்திர வரம்புக்கு
உட்பட்டவனாயிருப்பினும் ஆத்ம சவ்யம் செய்பவனாகில் தண்டைனக்கு அவசியம் உட்பட்டவனாகிறான்.

21–அப்யுேபத படிசாமிஷ ந’ திம் ப்ராப்துமிச்சு அதிகாரம் அயோக்யம் இஷ்டம் அதம்
அநவாப்ய வராக: ப்ரத்யைவதி ஸஹஸா பரதந்த்ர:

தூண்டில் முள்ளில் செருகப்பட்ட மாமிசம் போலே இருக்கின்றதும், தனக்குத் தகாத அதிகாரங்கைளப் பெற
விரும்பும் மனிதன் தான் விரும்பிய பலைனப் பெறாததோடு பர ஆபன்னனாய் விரைவில்
அநர்த்தங்கைளயும் பெறுகிறான்.

22 –நாபராத்யதி க ஏவ நியத்யா பண்டிதஸ்து விநிவ்ருத்ய ஸமிந்தே அஸ்தி சாத்ய
சரணாகதி அத்யா மத்பரஸ்ய தவ ஜ’விதும் இச்சோ “

விதிக்கு வசப்பட்டிருப்பதால் குற்றம் செய்யாதவன் யாருண்டு? விவேகியானவன் பிறகாவது குற்றத்தினின்று விலகி
மேன்மையை அடைகிறான். என்னிடம் சரணாகதி செய்து பயன் பெறு என்ற பவ்ண்ட்ரனின் வாக்கை
பகவானிடம் தூதன் கூறினான்

23–இத்யுத’ரதவதி ப்ரணிெதௗ தம் ப்ரத்யுவாச விஹஸந் ப்ரபுராத்ய: பத்யம் அத்ய வசநம்
தவ மந்யே யத்ப்ரவஷி ‘ சிரலிப்ஸிதம் ஏதத் பவ்ண்டரக

தூதன் கூறியதைக் கேட்டதும் கண்ணன் சிரித்துக் கொண்டே கூறுவதாவது இப்பொழுது உமது பேச்சானது
முறை தவறு ஆனதே என்றே நினைக்கிறேன் –
நான் சொன்ன விஷயம் வெகு காலமாகப் பெற விரும்பப்பட்டதாகும்.

24–உக்ர ஸேந ப்ருதகா வயேமேத நேஷிதார இதி விப்ரமவந்த: ஸம்ப்ரதி த்வத்
உபேதச மஹிம்நா பாவேயமஹி தேவஸ்வரபாவம் –

உக்ரேசனருக்கு பணியாளாக உள்ள நாங்கள் ஈஸ்வரெனன்ற மனப் பிராந்தியை உடையோம் அல்லோம்
இப்பொழுது உமது வார்த்தைகளில் இருந்து உம்மை ஈஸ்வரராக பாவிப்பவர்கள் ஆனோம் .
மற்ற ஓரு பொருள்–
உக்கிரமான இந்திரயங்களாகிற சேனைகளை யுடைய எல்லா ஜீவர்களையும் அடிமையாக உடைய ஈஸ்வரரான நமக்கு
ஈஸ்வரன் என்கிற விபரீத ஞானத்திற்கு இடமில்லை –
இனி உனது பேச்சு காரணமாக எமது ஈஸ்வரத் தன்மையை அறிவிப்போம்.

25–த்வய்யந ஸ்வரமதிம் ந ச கும: த்வம் பேராஸி நியேமந பரஸ்மாத் த்வாம் தித்ருக்ஷவ
இமே வயமாசு த்வத்பதம் கதபிய: ப்ரதியாம: ஈஸ்வரரல

உம்மை அநீஸ்வராக நாங்கள் நினைக்கிறோம் அல்லோம் – நாம் பரனுக்கும் எப்பொழுதும் பரராகிற நாங்கள் உண்மை
அறிந்திருப்பதால் அச்சமின்றி உம்மைக் காண விரும்பி உம்முைடய பதத்தில் சேர்வோம் !
தனக்கு மேல் ஈஸ்வரனை பரனுக்கும் பரன் நானே இருப்பிடத்தை உடையாத பரனுக்கு நாம் அடைவதும்
ராெயண்ணிைல“ விரோதியாவர் ! அப்பதத்தைப் பறிப்பதுவாம் உன்னை அநீஸ்வரராக நான் நினைக்கவில்லை —
அதாவது பதம் என்பது !
நாமே பரனுக்குப் பரன் . .ஆகவே உம் பதத்தை அடைவோம் – பரமாத்மாவுக்கு விரோதி வாஸு தேவன் என்ற
பெயரைப் அவனிருப்பிடத்திற்குச் சேர்வதும் திருவடி யல்ல -பறிப்பதும் ஆகும்

26–த்வாத்ருசம் ப்ரமிதிமத்தம் அத்ருஷ்ட்வா த்வய்யநாத ரவதாம் அதேதிலாேக யாம் இமாம்
வதஸி வாசம் அநூசீம் பாகதே யம் இவ பக்கம் இதம் ந:

இப்படி அளாவுகின்ற உம்மைப் போன்றவரைக் காணாமல் லோக விலக்ஷணமான உம்மிடத்தில் அன்பில்லாதவர்கள்
விஷயமாக நாம் உபதேசித்த அனுகூலமான இவ்வார்த்தைகள் எங்களுக்கு பயன் தரும் உபாயமாகும்.
அற்பனாயிருந்தும் கொழுத்திருக்கும் உன்னை இது வரையில் காணாமல் உபேக்ஷித்த எமக்கு நான் ஆள் அனுப்பியது அனுகூலமே !
உன்னைப் போன்ற என்னைக் கண்டு உன்னை உபேக்ஷிக்கும் ஜனங்களுடைய உயர்ந்த உலகில் நான்
இவ்வாறு பேசியது இனி எமது பெருமையை உலகறிய அனுகூலமாகும்.

27–த்ரக்ஷ்யேத சரணேமத்ய விபுஸ்தே ஷேப்ய(பஸ்ய) தேச ந மையவ ந சக்ரம் கச்ச
சீக்ரம் அபிதத்ஸ்வ தம் ஈசம் த்வாம் உபைதி குகுரத்வஜிந’ தி

நான் உனது ப்ரபுவின் இடத்திற்கே வந்து பார்க்கிறேன். அதற்காக என்னுைடய திரு வாழியை விடுகிறேன்
என்கிறதில்லை — யாதவ சேனை வரப் போகிறது என்று உன் ப்ரபுவிடம் சொல்.

28–ஆத்த ஹேதி அபஸப நிவ்ருத்தவ் சிந்திதாப்தம் அதிருஹ்ய ஸுபணம் ப்ராஸ்தித
ப்ரதிபலாவஸதாய ப்ராணித த்ர்தசபூதி அநந்த:

தூதன் சென்ற பிறகு ப்ரபு தன் ஆயுதங்கொண்ட பவ்ண்டரகனிடம், தன் ஆயுதங்கைள எடுத்துக் கொண்டு
கருடன் மேல் ஏறி நினைத்த மாத்திரத்தில் பகைவர்களின் இடத்திற்கு புறப்பட்டான் –

29–ஸாஹைஸக ரஸிேகந தேதாெஸௗ பவ்ண்ட் ரேகண யுயுேத யதுவர: ‘
தத் ஸகித்வம் உபகம்ய ச பாஷ்ணிம் க்ருஹ்ணதா ஸபதி காசிந்ருபேண

பிறகு க்ருஷ்ணன் அவிவேகியாய் சாகஸத்திலே இழிந்த பவ்ண்டரக னோடும் அவனுடன் தோழமை கொண்டதால்
பின் பக்கமாக தொடர்ந்த அவன் தோழனான காசி ராஜனோடும் போர் புரிந்தான்

30–தத்ர வைர்ப்ருதேந ஸமகாலம் பூவ பஸ்சிமதயா ப்ரபதந்த்யவ் பாவயந்
உபயேதா முக பாவம் ப்ரத்யவித்யத் அதிஸாயக தந்வா

பெருமான் வில் வளைத்து ஒரே சமயத்தில், இரு முகம் கொண்டவன் போல் முன்னும் பின்னும்
அம்புகள் எய்து சேனைகளை அழித்து ஒழித்தான் [அம்பு — சல்லியம்]

31–வைர ஸைந்ய விதேதஷு ஸமந்தாத் திங்முேகஷு ஸமேமவ ப்ருஷத்கை :
தஸ்ய த’ப்தருசிபி : விநிபேத மத்யகஸ்ய கிரைண இவ பூஷ்ண:

கண்ணனின் அம்புகள் ஒரே சமயத்தில் சத்ரு ஸைந்யம் பரவி இருக்கும் திசையில் எல்லாம் விழுந்து
வானத்தில் நடு உச்சியில் இருக்கும் சூர்ய கிரணங்கள் போ லே ஒளி வீசின

32–வித்விஷவ் யுகபத் உத்திதவந்தவ் ஸாகரவ் இவ விலங்கித வேலவ் ரூபிண ‘
இவ ரஜஸ் தமஸி த்வே ஸத்த்வவருத்தி அநக: ஸ ஜகாந

அதே சமயத்தில் கரை கடந்த இரு கடல்கள் போல் எதிர்த்த, ரஜஸ் தமோ குணங்கள் போன்ற
காசி ராஜைனயும் பவ்ண்டரகனையும் ஸத்த்வ குணம் நிறைந்த கண்ணன் அழித்தான்

33–அஸ்தேமவமநயத் யதுபாஸ்வாந் தாவுபவ் ஜகத் உபத்ரவேஹதூ பூவதச்ச
பரதச்ச பவந்தவ் துக்ரஹவ் இவ துராஸத த’ப்தி:

கண்ணன் – கதிரவன் போல் நெருங்கவாகாத உத்தமமான ஒளி உடையவனாய், முன்னும் பின்னுமாக நெருங்கிய
துஷ்ட க்ரஹங்கள் போன்ற உலகின் உபத்ரவத்திற்கு காரணமான பவ்ண்ட்ரகன், காசிராஜன், அவகைள அஸ்தமிக்கச் செய்தான்

34–தஸ்ய தவ் உபயேதா நிபதந்தவ் பக்நபாஹு விடபாயுதபுஷ்பவ் ஜக்மது:
ப்ருதுகபாவ விஹார க்ஷிப்யமாண யமலார் ஜுந கக்ஷ்யாம்

கண்ணனின் இருபக்கங்களும் அவர்கள் இருவரும் கைகளும் முறியடிக்கப்பட்டு வீழ்ந்தது,
இளமையில் கண்ணன் முறித்த மருத மரங்களுக்கு ஒப்புமை யானது.

35–நாம சிஹ்ந வசநாபரணாத்ய: நாத ஸம்பத் அநுகார நிரூடை பவ்ண்ட்ரக ஸ்திதிம்
அவாப்ய ஸ்ருகாேலாபி அந்வபூத் கில கதிம் ச தத’யாம்

ஜகந் நாதனான கண்ணனுடை ய தன்மையைக் காட்டுவதற்கேற்ப பெயர் , மறு, ஆடை , ஆபரணம்
முதலியவைகளால் ஸ்ருகாலன் என்ற பவ்ண்டிரகன் கண்ணனுைடய ஸ்திதியை முன் ஒருவாறு அடைந்து
இப்போது கண்ணனுடைய கதியையும் அடைந்திட்டான்.

36–வித்.விஷாம் விஹித வரக ‘ த’நாம் த்வாரேகாபகமிதை த்விரதாத்யை :
கௌரவாத்யுஷித பாக விபக்தே : ஆஹித ப்ரதிபரா க்ஷிதி ஆஸ்த்

பவ்ண்டரகன் வரையிலானவர் ஸ்வர்க்கம் அனுப்பப்பட்ட விரோதிகளின் சதுரங்க சைன்யங்கள் துவாரகைக்கு
அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சைன்யம் நீங்கலாக கௌரவ ராஜ்ஜியம் எனப்படும் பெரும் பூ பாகத்தில்
அவர்களுக்காக வகுக்கப்பட்ட சைன்யம் அளவில் இந்த படையும் பூமியில் இருந்தனவாம்.

37–பாதிேதஷு விமேதஷ்விதி நாம ப்ராப்ய யாதவபுரம் பரேமஷ்டீ ப்ரயேபி4
அவிப4க்தரஸாபி4: வதராக ‘ 3ஸுப4 கோ 3 விஜஹார

இவ் வண்ணம் விரோதிகள் வதைக்கப்பட்ட பிறகு பரமபத நாதன் யாதவபுரம் சென்று அங்கு ஏற்றத்தாழ்வு
போன்ற வேறுபாடற்ற பரமானந்தமுற்ற தன் மனைவிமார்களோடு, வைராக்யம் நிறைந்த
யோகிகளுக்கு சுலபனாய், விளையாடி வந்தான்.

38–ஜ’வயுக்தம் இதரத் ச விசித்ரம் த்யூதம் அப்பித பணம் விததாந:
பாவிபாரத மஹாஹவ ஸித்தே : ஸூசநம் விதநுேத ஸ்ம சுபம்யு:

ஸூபங்களுக்கு எல்லாம் குடியிடமான கண்ணன் தன் ஆனந்தத்திற்குப் போக்குவீடாக ஆடு கோழி சண்டை
போன்றவையையும் சூதாட்டங்கைளயும் நடத்தி , .இது வரப் போகும் பாரதப் போருக்கு அறிகுறியாயிற்று .வந்தான்

39–தோஷித த்ர்நயநஸ்ய ந்ருசம்ஸ: காசிராஜ தநயஸ்ய புரோதா: கல்பிதாஹுதி அஜ’ஜநத்
உக்ராம் காலவஹ்நி பதவம் ‘ இவ க்ருத்யாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/66/26-43)

இத்தகைய சமயத்திலே பவ்ண்ட்ரகனுடன் உயிரை விட்ட காசி ராஜனின் புதல்வன் சிவனின் அருள் பெற்ற
புரோஹிதனை ஏவ அவன் தன் வர பலத்தாலே அபிசார ஹோமம் செய்து ப்ரளய நெருப்பின் ஜ்வாைல
போன்ற ஒரு பூதத்தை கண்ணன் மேல் ஏவினான்

40–ஸாபிபத்ய யதுவரஸகாசம் ‘ ஹேதிராஜ விபவநே ஹதாசா ஜந்மதாமநி
நிஜே நியமஸ்தம் ஜஞ்ஜபூகம் அபிஸ்ருத்ய ஜகாந

சூதாட்டத்தின் போது அப் பூதம் கண்ணனின் அருகில் வர, உடனே திருவாழி எழ, அதன் மஹிமையால்
அப் பூதம் தன்னைச் செகட்டு , தான் பிறந்த காசி யாக சாைலக்கு சென்று அங்கே விரதத்தில் ஆழ்ந்திருந்த
அப் புரோஹிதனைக் கொன்றது.
(பிறரைக் கொல்ல ஏவின பூதம் அங்கே கொல்ல மாட்டாத போது ஏவினவனைக் கொன்று விடும் என்பது அபிசார சாஸ்திர முறை )

41–நிததாஹ நகரம் அத காசீம் விஸ்புலிங்கம் இவ மாதவத’ப்தே : யாதவ க்ரஸந
கௌதுகவத்யா க்ருத்யயா ஸஹ ரதாங்க க்ருசாநு: மாதவனாம் நெருப்புக்கோ

கண்ணைன விழுங்கும் நோக்கத்தோடு இருந்த பூதத்தோடு சேர்த்து முழு காசி நகைரயும் எரித்து அழித்தது

42–ஸ்யந்தந த்விரதவாஜி பதாதி ப்ராஜ்ய சவ்த பrபாடி ஸம்ருத்த்யா சக்ரவஹ்நி
விபவனே ததாபூத் சந்த்ர சேகர விலேபந பூமா காசிநகரால் தே

ரத கஜ துரக பதாதிகள் பெரிய பெரிய மாட மாளிைககள் அனைத்தையும் திருவாழி அழித்தது.
இதனால் வரம் தந்த ருத்ரனுக்கு மேனியில் பூசிக் கொள்ள நிறைய பஸ்மம் கிடைத்தது

43–ஷேத்ரம் ஏதத் அவிமுக்த ஸமாக்யம் முக்தியோக்யம் உபஸ்ருஷ்டம் அயோக்யை :
இத்யேவக்ஷ்ய தஹநேந ததஹாம் ஸம்ஸ்க்ரயாம் இவ சகார ஸுத்ருஷ்டி:

இந்த வாரணாஸி ஷேத்ரத்திற்கு அவிமுக்தம் என்கிற பெயர் உபநிஷத்திலும் ப்ரஸித்தமானது. முக்தி ஷேத்ரமான இது
பக்தர்களால் விடப்படாதது போல், அயோக்யர் களாலும் ஆக்ரமிக்கப்பட்டு கெட்டது என்று கண்டு எம் பெருமானின்
ஸுதர்சனாழ்வான் அக்னியினால் சுட்டுச் சுத்தமாக்கினார் போலும்.
(ஸ்தலம் அசுத்தமாகிவிட்டால், அலம்புவது, சிறிது பெயர்த்து எறிவது சுடுவது, பசு மாடுகைள விட்டு மிதிக்கச் செய்வது
என்று சுத்திகள் செய்யப்பட்டுள்ளன. )

44–அப்ரசாந்தருஷம் அத்புத த’ப்தம் தக்தவைர புரம் ஆயுதராஜம் நிஜரா:
ப்ரதிநிசாமயமாநா: பிப்யதி ஸ்ம ஜகதுச்ச ஜேயாக்திம்

[அடங்காதனல் – அடங்காது அநல] காசியைக் கொளுத்தியும் கோபம் தீராமல் கனன்ற
திருவாழி யானைக் கண்டு அமரகள் அஞ்சி ஜய விஜயீபவ என்றனர்

45–தைவைத அபி சதுமுக முக்யை : தத்த ஸத்க்ருதி அஸவ் ஜிதகாசீ இஷ்ட
நிவஹண நிவ்ருத சித்தம் விஷ்டரச்ரவஸம் அப்யுபேபேத

காசியை – ஜெயித்தவன் என்ற பெயர் பெற்ற நான்முகன் முதலான தேவர்களால் நன்கு கௌரவிக்கப் பட்டு
வெற்றி பெற்றோம் என்பது வெளிப்படும்படி நடப்பதாய் திருவாழி மகிழ்ச்சியுற்ற மனத்துடன் இருக்கும்
கண்ணபிரானிடம் கூடியது. (ஜிதகாசி – காசியை ஜெயித்தவன்)

46–ஆஸுர ப்ரக்ருதிகேஷு நிரஸ்தேஷு ஏவம் ஏபி4: அநுபாலிதஸக்ய: வாநேரா புஜபலேந
பபாதே துமதி ஜகதிதம் த்விவிதாக்2ய: (ஸ்ரீமத் பாகவதம் (10/67/1-28)

அசுர அம்சங்களான ப்ரஜைகள் அழிக்கப்பட்ட பின் இவர்களுடன் தோழமை கொண்ட, ஸ்ரீ மத் ராமாயணத்தில்
ப்ரசித்தமான மைந்த த்விதகளில் ஒன்றான த்விவிதன் என்ற வானரம் புத்தி கெட்டு புஜ பலத்தால் பல தீமைகள் செய்து வந்தது

47–பூதராந் உதஹரத் புஜசாl ப்ரக்ஷிபம்ச்ச நகராணி மமத ஷோபயந்
ஜலநித’ந் அநுவேலம் ப்லாவயம்ச்ச வஸுதாம் ப்ரஜஹஷ

திரண்ட புஜங்கைளக் கொண்ட அவ்வானரம் மலைகளைப் பெயர்த்து நகரங்கைள அழித்தது.
கரை ஓரங்களில் உள்ள கடல்கைள கலக்கி பூமிைய இடித்து நீரைத் தள்ளியும் களித்தது.

48–அந்ய வரரஹிதாம் ‘ இவ மத்வா வாரி ராசிரசநாம் அவலிம்பந் ஆத்மந: ஸத்ருசம்
ஆத்ரியைதகம் தேநுக ப்ரமதேநந நியுத்தம் முந்நரைக் கவசமாயுை

முந்நீரை தன் மேகலை யாய் யுடைய வையகத்தில் எங்கும் வரன் வேறே ஓருவன் இல்லை என்று நினைத்து
கர்வமுற்று, தேனுகைன அழித்த பலராமனே தன் வலிமைக்கு ஈடாவான் என்று எண்ணி
கர்வமுற்று அவனுடன் போர் புரிய எண்ணியது

49–ஏகதா ஹலதரஸ்ய விஹாேர ஸம்பதந் அபிதசாபல சேஷ்ட:
த்வாரேகா பவந பாதபேபத’ விச்வத: கிலகிலாம் விததாந

ஒரு சமயம் பலராமன் விளையாடும் உத்யான வனங்களில் புகுந்து தன் சேஷ்டிதங்கைளச் செய்தபடி
மரங்கைள முறித்து கிலகில வென்று கத்துவதாயிற்று.

50–தாலேகது யுவத’ விஹரந்த’: த்ராஸயந் முக விகார விசைஷ:
க்ரீடநோ பகரணாநி விபிந்தந் க்ஷ்வேடி தாநி விததே விதிலூந:

கேடு பெறுவிக்கும் விதியினால் வதைக்கப்படும் அக்குரங்கு பனைமரத்தை கொடியாக உடைய பலராமனின்
மனைவிகள் விளையாடிக் கொண்டிருக்கையில் அக்குரங்கு தன் முக விகாரங்களால் பயமுறுத்தி
விளையாட்டுக் கருவிகைள உடைத்து அட்டஹாஸம் செய்தது

51–தம் ப்ரவ்ருத்த கபிக்ருத்யம் அதூராத் பாதித ப்ரதிபலோ பலதேவ:
ஜங்கம ஸ்படிக பூ தரகல்ப: ருக்மைசல ருசிரம் நிருேராத

குரங்குத் தன்மைக்கு ஏற்ற துஷ்டத் தனங்கைளச் செய்து வந்த அக்குரங்கின் சேஷ்டைகளைக் கண்டு,
பொன் மலை போன்ற அதை , பகைவர்கைள அழிக்கும் ஸ்படிக மலை போன்ற வெளுத்த பலதேவன்
எங்கும் செல்ல முடியாத படிக்கு தடுத்தான்

52–வாநேரண ஸுஹ்ருதா தநுஜாநாம் யாதுதாந ஸமர ப்ரதிதேந ப்ரேஷிதாம்
த்ருமசிேலாச்சய வ்ருஷ்டிம் நிஷ்பிபேஷ முஸேலந ஹலாஸ்த்ர:

முன்பு அசுரகைள அழித்ததாய், தற்போது அசுரர் களுக்கு மித்திரனான அவ் வானரம் பொழிந்த
மரம் பாறை எல்லாவற்றையும் பலராமன் உலக்கையினால் உடைத்து ஓழித்தார் .

53–ஆபதந் அபஸரந் அபி பேஜே க்ராஹ்யதாம் இவ ச துக்ரஹதாம் ச
அக்ரேதாபவத லக்ஷ்யத பஸ்சாத் அப்ரதக்யரபஸோ ஹரி வர: ‘

வர வானரம் ‘ அகப்படுவது போல் நெருங்கியும், பிடிக்க வரும் போது விலகியும்
நொடியில் முன்னும் பின்னுமாக மாறி வந்தது.

54–தவ் பரஸ்பர கவேஷித ரந்த்ரவ் காமபால கபி ஸைநிகபாலவ் யோஜிதோத்
தத கெரௗ யுயுதாதே தப தாருண திசாகஜ ஸத்வவ்

ஒருவரை யார் ஓருவர் தோற்கடிக்கும் தருணம் எது என்று நோக்கியபடி, பலராமனுக்கும் அவ்வானர தளபதிக்கும்
இடையே இரு பெரும் திக் கஜங்களின் வலிவுடன் கை கலந்து த்வந்த்வ யுத்தம் தொடங்கியது.

55–தம் ப்ரலம்ப தமந: ப்லவேகந்த்ரம் விப்லுதம் புநரபி ப்லவமாநம் காலபாச
நிக்ருஹ’தம் அராதிம் கல்பமாநம் அபவாய விவேத

பிரலம்பைன அழித்த பலராமன் ஒரு நிமிடம் நெருங்குவது போலவும் மறு நிமிடம்
தள்ளிப் போவதுமான வானரத்தை ஒழிக்கும் தருவாய் நெருங்குவதை உணந்தான்.

56–ஸவ்ய தக்ஷிண பரக்ரமணாப்யாம் த்ராக் அலாத மய சக்ர நிரிக்ஷ்ய:
ஆததாந ஹல பாணிம் அதூராத் அக்நிஸாலவலயஸ்தம் இவார் :

அவ் வானரம் இடமும் வலமும் சுற்றி கொள்ளி வட்டம் போல் தோன்றி பல ராமைன
நெருப்புக் கோட்டையில் நடுவில் அகப்பட்டவைன போலாக்கிற்று

57–தம் க்ருஹ’த கருடாநில வேகம் ஸவேதா யுகபேதவ ஸமீ க்ஷ்ய லாங்க
ஜல திலங்கந தக்ஷம் லாகவேந லகயந் விசசார

கடலைக் கடக்க வல்லதாய், வேகத்தில் கருடைனயும் காற்றையும் ஒத்ததான வேகத்தால் ஒரே சமயத்தில்
எங்கும் காண்கின்றதான அவ்வானரத்தை அடக்க பலராமன் அதற்கு மேலான விரைவினால் செய்ய சித்தம் கொண்டான்

58–அந்தகாரம் இவ தம் ப்ரதிருந்தந் அயேமவ முஸl நிஜத’ப்த்யா திங்முகாந்ய
கலுஷாணி விதந்வந் விச்வத்ருஷ்டி விபவாய பபூவ

எல்லாத் திக்குகளும் கலங்கி ஒன்றும் காண வாகாத காலத்திலே கதிரவன் தன் ஒளியினால் கார் இருளை
விலக்குவது போல் பலராமன் தன் தேஜஸ்ஸினால் அவ்வானரத்தை விலக்கி எல்லாரும் களித்துக் காணும்படியானான்.

59–கூணிதாகுலித கௌரவ தாம்நா லாங்கலேந லலிதோத்தத ல:
யூதநாதம் அவருத்ய கபீநாம் மௌலிகாதம் அவத’ந் முஸேலந

முன்பு ஹஸ்தினா புரத்தே கங்கையில் தள்ள தன் கலப்பையால் பெயர்த்த அழகும் அகங்காரமும் உடைய
பலராமன் அவ் வானரத்தை மண்டை உடையும்படி உலக்கையால் அடித்தான்

60–வஜ்ர பாணி மஹிதாத்பு த பூம்நா வாநேரண நிஹேதந ஸ ராம:
வ்யாசகார விநதாப யதாதா பூவராம சரிதம் புநருக்தம்

வணங்கினார்க்கு அபயம் அளிக்கும் ராமன் வச்சிராயுதம் ஏந்துகின்ற இந்திரனால் கொண்டாடப்பட்ட பெருமயை யுடைய
வானரத்தை வென்று பண்டைய இராம வரலாற்றை மீண்டும் உண்டாக்கினான்
அதாவது ராமன் இந்திரனால் மதிக்கப்பட்ட வாலியை இவ் வானரமும் ராவணேனாடு செய்த பெரும் போரிலே
பெருந்தொழில் . .கொன்றான் த்விவி) செய்திருப்பதால் இந்திரனால் மதிக்கப்பட்ட தேதன் தாரையின் உடன் பிறப்பாவான்
(வாலியின் மைத்துனன் ஆகையால் மிகவும் மதிக்கப்பட்டவன் )
இரு வானரங்களுக்கும் துர் குணம் ஒத்திருப்பது போல்
இரு ராமன்களுக்கும் அரணாகப் பற்றினார்க்கு அஞ்சேல் என்றருளுதல் ஒத்திருக்கும் –

61–தம மமபிதி தை வ விபாகாத் உத்ததே த்விவிதநாமநி சல்யே ரேவத’ரமண
ரேசித கே தா நாகிநச்ச முநயச்ச நநந்து:

சுகத்தைப் பெறுவிக்கும் ஸம்சாரமாம் தேகத்திற்கு தமமே மம ஸ்தானம் 0அதனைப் பிளந்து எறியும் சஸ்திரமாக
ஆயிற்று த்விவிதன் என்னும் அந்த வானரம்
பாக்கியம் பலிக்கும் தருணத்தால் அந்த சஸ்திரம் எடுத்து எறியப்பட்டது இப்படி ரேவதி காந்தனான பலராமனால்
கஷ்டங்கள் கழிக்கப் படவே தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சி யுற்றனர்

62–த்ராஸிேதஷு விபுதே ஷு ததக்ரே பீதவந்தம் அம்ருதம் பலபத்ர:
ப்ராபயத் ப்லவகமுக்யம் இத’வ ஸ்வகிபிஸ் ஸஹ ஸுதாசந பாவம் .

த்விவித வானரம் ஒரு முறை தேவர்களை விரட்டி அமுதத்தை விழுங்கிற்று . சேர்ந்தே உண்ணலாமே என்று
பலராமன் உதவினான் போலும் ஏன் அச்சமுறுத்தி உண்ண வேண்டும் —
போரால் மாண்டு அது வீர ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டதாம் —

63–பூதேல ஹலதராஹித குப்தவ் ஸாரபூத ஸுபட க்ரஹேணந உஞ்சவ்ருத்தி
உதரம்பர ஆஸ் த் தாத்ருேசந தபைஸவ க்ருதாந்த:

நமன் ஒரு ஏழை வைதிகன் -வயல்களில் அவன் உஞ்ச விருத்தி செய்து . அறுவடை யான பிறகு மீ தமுள்ள
சிதறியிருக்கும் நெல் மணிகைளக் கொணர்ந்து அவன் இப்படி தவம் புரிந்த .ஜீவித்து வந்தான்
(அரிசியைச் சமைத்து பகவானை ஆராதித்தல் காத்து வர (பலராமன்) மேன்மையால் கலப்பையை உடைய
குடியானவ னுடைய இடத்திேலேய ஸாரமான வஸ்து கிடைக்கலாயிற்று . பலராமன் முன்பு கொன்ற பிரலம்பன் போன்றோ –
உஞ்சம் போல அற்பம் த்விவிதன் (அன்னக் குவியல் போல் அபாரமானவன் )

64–ஏவம் ஈஷத் அவேராபித பாராம் பாவயந் புவம் அதோஷயத் ஆயாந் பூவ தேவே
ஜநிதாந் அபிநிக்நந் பூவேஜந ஸஹிேதா யதுநாத:

இவ்வாறு கண்ண பிரான் அண்ணனுடன் சேர்ந்து சில தேவர்களால் அசுராம்சமாக பிறப்பிக்கப்பட்ட
அசுரர்களைக் கொன்று பூமியின் பாரத்தைச் சிறிது குறைத்து நல்லோர்களைச் சந்தோஷிக்கச் செய்தான்

65–பாகவாதிபி: அவாதிதபூம்நாம் நிமேமஷ்வபி நிகாரபராணாம் சவ்ப ஹம்ஸ
டிபிக ப்ரப்ருத’நாம் ஸூதநை அலகயச்ச தரித்ரம்

முன்பு பரசு ராமருடன் சால்வன் போர் புரிந்த போது இவன் கண்ணனின் , திருவாழிக்கு இரையாக வேண்டியவன்
என தேவமகளிர் சொல்லக் கேட்டு விடப்பட்ட ,ஸால்வன் மமகாரமின்றி இருந்தது வாஸ மஹரிஷியை பரிபவித்த
ஹம்சன்திபிகன் மற்றும் பல மாற்றாரையும் மாள்வி ,என்ற இருவர்களையும் மாய்த்து பூமியை பாரமற்றதாக்கினான் .

66–உக்ரஸேந விநிவேசித ராஜ்யாம் உந்நமய்ய யதுவம்ச விபூதிம் தஸ்ய திக்விஜய
கௌதுகம் ஆத்ய: ஸப்தலோக திலேகா விததாந

[முதலடி கண்ணைனக் குறிக்கிறது] ஏழுலகுக்கும் திலகமான கண்ணன் உக்ரசேனனிடம் ராஜ்யத்தை வைத்து
யது வம்சத்திற்கு ஐஸ்வர்யத்தை வளர்த்து அவருக்கு திக் விஜயத்தில் ஆவலை அதிகப் படுத்தினான்

67–தந்நி யோகம் அத சேகரயித்வா ஸ்வப்ரசாஸந வசம்வத விச்வ:
யாவதுக்த நியதாகில வ்ருத்த’ந் யாதவாந் உபநிநாய ஸுதமாம்

உலகம் எல்லாம் தன் ஆஜ்ஜைக்கு வசமாகக் கொண்ட பெருமான் உக்ரசேனனின் ஆஜ்ஜைக்கு இணங்கி
மற்ற யாதவர்களை ஸுதமை என்ற சபைக்கு வருவித்தான்

68–ஆத்ம கல்பித த்ருதே அத ராஞ்ஜ: ஸந்நிதவ் ஸசிவபீ ட நிவிஷ்ட:
மந்த்ரணாய மஹேதா யது முக்யாந் ஸம்முகாந் ப்ரதிநநந்த முகுந்த:

மோக்ஷம் அளவிற்கு பலன்கைள அளிக்கும் பெருமான் தன்னால் ஸ்திரமாக ஆள்கையைப் பெற்றிருக்கும்
உக்ரசேனனின் ராஜ்ய சைபயில் மந்திரிகளின் இருக்கையில் அமர்ந்தவனாய் மந்த்ர ஆலோசனைக்காக
மற்ற யது ஸ்ரேஷ்டர்களைப் பார்த்தான் –

69–அபஜத நரபாலம் உக்ரஸே நம் பஹுமநுதே ஸ்ம யதூம்ஸ்ததாபி துங்க:
க்வசித் அபிலபேந விபக்தி சக்த்யா ஸ்வகுண விபூதி குண ‘பவந் இவைக:

உக்ரஸேனனுக்கு சேவை புரிபவன் ஆனாலும் யதுக்கைளத் தனக்கு மேலாக புகழ்பவன் ஆனாலும்
கண்ணனே மேம்பட்டவன்

70–அதிகுண ஹரி வம்சவர’ ஸங்காத் அபசித வாஸவ ஸங்கமாபிலாஷா அதிசய ருசிராம்
வஹந்த்யபிக்யாம் அசகமேதவ ஸபா (ஸதா?) தத்

ஸுதமை என்ற சபையையும் சிறந்த குணங்களை யுடைய ஹரி என்ற எம்பெருமானுடன் அவன் உதித்த
வம்சத்திலுள்ளவர்களின் சேர்க்கையால் இனிதான காந்தியுற்று, இந்திரன் என்ற ஹரி யுடனான சேர்க்கையில் விருப்பமற்று,
இந்த ராஜ்ஜியத்தில் தன் இருப்பின் நீட்டிப்பை விரும்பும் ஸபையைக் காணும் போதே திக் விஜயம் திண்ணம் என்று தெளியலாயிற்று

இதி ஸ்ரீ கவிதாக்கிக ஸிம்ஹஸ்ய ஸவதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய
க்ருத’ஷு யாதவாப்யுதய காவ்யம் ஏகவிம்ச: ஸர்க: பவ்ண்டரக வதத்தில் ஆரம்பித்து
திக் விஜய ஆலோசனையில் நிறை வுற்றது சுபம் (2171 – 2240 = 70 )

——————–

ஸ்ரீ கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ணாவதார திவ்ய சேஷ்டிதங்களின் ஸ்வாபதேச அர்த்தங்கள் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

September 13, 2020

பிறப்பிலி அன்றோ
என்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான்
சாது சானத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதி யம் யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
கம்ச சிசுபாலாதிகளைக் களைந்து
மாலா காரர் விதுரர் அக்ரூராதிகளுக்கு தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை காட்டி வாழ்வித்து அருளி
கலி கஷ்மங்களைக் கழித்து க்ருத யுக தர்ம பிரசாரம் செய்யவே ஸ்ரீ கீதாச்சார்யனின் திவ்ய அவதாரம்

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா-திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 50-
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்-
திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணாவானனான ஸ்ரீ கிருஷ்ணனே -நல்லருள் நம்பெருமான் –நிரவதிக தயாவானவன்

ஸ்ரீ கீதாச்சார்யன் திரு அவதரிக்கும் இடம் சிறைக்கூடம்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி யம் சிறையே -சம்சார மண்டலமே சிறைக்கூடம்
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இருள் மலிந்த இடத்தில் ஆச்சார்யன் வந்து பிறக்கிறான்
இருள் நாள் பிறந்த அம்மான் -கலியன்
வேண்டித் தேவர் இரக்க –வீங்கிருள் வாய் வந்து பிறக்கிறான்
ஆச்சார்யர் திரு அவதரிக்கும் இந்நிலத்திலே பலரும் வந்து பிறந்தாலும் அவர்கள் பிறப்பும் இறப்பும் மட்டும் அறிவது போல்
மக்கள் அறு வரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து
அனைத்தையும் செய்து முடித்து கிருதக்ருத்யனாய் -இன்னார் தூதன் என நிற்கிறான்
பழுதே பிறந்து இறந்தார் இடைத் தான் வீறு பெற்று
ஸ்ரீ பாண்டவர் தூதனாகவும் ஸ்ரீ பார்த்த சாரதியாகவும் இன்றும் இருந்து நிலை நின்று அருளுகிறான்

திரு அவதரிக்கும் பொழுதே சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாகவே சுடர் விளக்கத்துடன் திரு அவதரித்தான்
ஆச்சார்யர்கள் பிறக்கும் இடம் ஒன்றாய் வளரும் இடம் வேறு ஒன்றாய் தானே இருக்கும்
திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பது போல்
திரு வடமதுரையில் பிறந்து திரு ஆயர்பாடியில் வளர்ந்து -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் என்று
அறிவுடையார் எத்திறம் என்று மோஹிக்கும் படி பிறந்து வளர்ந்தான் ஆயிற்று –

வட மதுரையில் இருந்து திரு ஆய்ப்பாடிக்கு எழுந்து அருளும் போது பேர் ஆழமாக இருந்த தூய யமுனையும் முழந்தாள் அளவும் வற்றி
ஆச்சார்யர்கள் சஞ்சரிக்கத் தொடங்கும் போதே -பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -போல்
சம்சார ஸாகரமும் வற்றத் தொடங்கி -வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
பெருமைகளை அடக்கிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு ஆகி இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் கொழுந்தாய் வளர்வது போல்
மிகு ஞான சிறு குழவியாய் -சிறு மா மானிடராய் -அறிவில்லா மனிதர்களோடு கலந்து பழகுவது ப்ரத்யக்ஷம் –

தீய புந்திக் கொஞ்சநாள் ஏவப்பட்ட பூதநா ஸ்தனங்கள் -மாயா பிரகிருதி –சப்தாதி விஷயங்களைக் காட்டி
மோஹிப்பிக்கும் கண்டு கேட்டு மோந்து உண்டு உழலும் சிற்றின்பங்களை வேரற அறிந்து
தனக்கு அபாய லேசமும் இன்றி விளங்கும் ஆச்சார்யர் படிக்கு ஸூ சகம்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
நல்ல சங்கடமும் இருப்பதாலே கள்ளச் சகடம் என்றது
சுக்ல கதி அர்ச்சிராதி மார்க்கமும் –கிருஷ்ண கதி என்ற தூ மாதி மார்க்கங்களும் உண்டே
ஆச்சார்யன் திருவடி ஸ்பர்சத்தாலே கள்ளச் சகடத்தை -தூமாதி கதி த்வம்ஸம்
உண்டாகியே தீரும் என்பதைக் காட்டியபடி

யாமளார்ஜுன பங்க விருத்தாந்தம்
இணை பிரியாதே இருக்கும் இரட்டைகள் -ஸூக துக்கங்கள் ஸீதோ உஷ்ணம் -அஹங்கார மமகாரங்கள்
காம க்ரோதம் புண்ய பாபங்கள் ஆகிய த்வந்தங்கள் ஆச்சார்ய திருவடி ஸ்பர்சத்தாலே இற்று ஒழியுமே
குபேர புத்ரர்கள் நள கூபரன் மணி க்ரீவன் -நாரத ரிஷி சாபத்தால் இரட்டை மருதுகள்
உபாதியால் இரட்டைகள் நம்மை நலிகின்றன என்பதுக்கு எடுத்துக் காட்டு
காமக்ரோதங்களுக்கு உத்தேச்ய ஆகாரமும் ஹேய ஆகாரமும் உண்டே
சேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்
கோபஸ்ய வசமாயும் ஜிதக்ரோதனாயும் தானே பெருமாளும்
சிற்றின்பம் ஹேயமாய் அந்தமில் பேரின்பம் உபாதேயமாயும் இருக்குமே
துக்கமும் சம்சார அளவில் ஹேயமாய்
சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான்
ஆடி ஆடி அகம் கரைந்து
நோயும் பசலையும் மீதூர -என்கிறபடி பகவத் விஷயத்தில் உபாதேயமுமாயும் இருக்கும் அன்றோ –

ஐந்தலை வாய் காளியன் யமுனை ஆற்றைக் கலக்கியது அபார்த்தங்களாலே வேதங்களையே கலக்கியத்துக்கு த்ருஷ்டாந்தம்
அத்தை நீக்கி யமுனையை சர்வ உஜ்ஜீவன மாக ஆக்கி
தூய பெரு நீர் யமுனைத்துறைவன் -இடையறாத பகவத் சம்பந்தம் -வேதைக சமைதி கம்யன் –
மறை நான்கின் உளாயோ
மாதாந்தரஸ்தர்கள் ஐந்து வித துர்வாதங்கள்
1-ஈஸ்வரனே இல்லை என்றும்
2-ஈஸ்வரன் உண்டு அவன் ஆனுமானிகனே -சாஸ்த்ர சித்தன் அன்று என்றும்
3-ஸாஸ்த்ர சித்தன் என்று அங்கீ கரித்தும் அவனுக்கு குண விக்ரஹாதிகள் இல்லை என்றும்
4-ஈஸ்வரன் ஒருவனே என்பது இல்லை -பல ஈஸ்வரர் உண்டு என்னுதல்
5-பிரபஞ்சம் எல்லாமே மாயைத் தோற்றமே என்னுதல்
காளியன் தலையிலே அடி இட்டு நட்டம் ஆடினால் போல்
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னப் பண்ணுவார் ஆச்சார்ய திருவடி சம்பந்தத்தாலேயே –

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆச்சார்யர்கள் திரு வாக்கில்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
இதிஹாஸங்கள்
புராணங்கள்
பாஞ்சராத்ர ஆகமங்கள்
அருளிச் செயல்கள்
பூர்வாச்சார்ய ஸ்ரீ வசன பூஷணங்கள் –ஆகிய ஏழையும் ஆஸ்ரிதர்க்குக் காட்டி அருளுவார்கள்

விளவின் காய் கன்றினால் வீழ்த்தி
புற மத நிரசனங்களை பரஸ்பர விரோதங்களைக் காட்டி ஆச்சார்யர்கள் நிரசனம்
அனைத்தும் பொய் என்று சொல்கிறீர்களே நீங்கள் சொல்லும் இந்த வார்த்தை மெய்யா பொய்யா
இதுவும் பொய்யானால் உங்கள் பஷமும் பொய்யாகுமே
இப்படி எதிரியைக் கொண்டே எதிரியை முடித்தமை உண்டே

கோவர்த்தன உத்தாரணம்
தேவதாந்த்ர பஜனம் கூடாதே
மறந்தும் புறம் தொழா மாந்தர்
திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தவனுக்கே பூவும் பூசனையும் தகும்
குற்றம் செய்தவர் பக்கல் கிருபையும் பொறையும் உகப்பும் சிரிப்பும் கிருதஜ்ஜா அனுசந்தானமும் நடக்க வேணுமே
குன்றம் எடுத்து ஆநிரை காத்த குணம் போற்றி
ஏழு நாள் பெரு மழையில் இருந்தும் காத்து அருளினான் கண்ணபிரான்
ஆச்சார்யர்களோ அநந்த சம்சார சாகரத்தில் இருந்தும் உத்தரித்து அருளுகிறார்

கேசி வதம்
ஜிதேந்த்ரியராக ஆச்சார்யர் நம்மைத் திருத்திப் பணி கொள்வார்கள்

இரண்டு மல்லர் நிரசனம்
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
குவலயா பீட மதக்களிற்றை நிரசித்தது
மதக்களிற்று ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -பொய்கையார்

மாலாகாரர் சூட்டிய புஷ்பத்தை உகந்தது
செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதம புஷபம் இத்யாதி

ஏழு எருதுகளை அடக்கி ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை கடிமணம் புரிந்து அருளினான்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது ஒரு மங்கள ஸூத்ரம் போல் திருமந்திரம் கொண்டு
1-காமம்
2-க்ரோதம்
3-லோபம்
4-மோஹம்
5-மதம்
6-மாத்சர்யம்
7-அஸூயை –ஆகிய ஏழு விரோதிகளை தொலைத்து அருளுகிறார்

சிசுபாலாதிகளை முடித்து பாண்டவர்களை வாழ்வித்தது போல்
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் என்னும்படியாக நாட்டிய நீசச் சமயங்களை மாள்வித்து
அர்த்த பஞ்சகம் போன்ற விசேஷ அர்த்தங்களை எங்கும் விளங்காகி செய்து அருளும் ஆச்சார்யர்கள்படியே
ஸ்ரீ கீதாச்சார்யரின் அனைத்து சேஷ்டிதங்களும் என்றபடி
இங்கனம் அநேக விஷயங்கள் எங்கும் கண்டு கொண்டு களிப்புறுவோமாக

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை –

September 11, 2020

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா -ஸ்ரீ தசாவதார ஸ்லோகம் –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப் பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————————-

ஸ்ரீ கிரீடா வல்லபன் -அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் -லீலைகளுக்காகவே அவதாரம்
அவதாரமே லீலை
கோகுல லீலை
பிருந்தாவன லீலை
வடமதுரை லீலை
விவாக லீலை
ஸ்ரீத்வராகா லீலை
மஹா பாரத லீலை
யது குல திலகம்

——————-

வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அவன் -கிறிக் கொண்டு -உள்ளம் புகுந்து –
விசித்ரமான லீலைகள் -அநேக லீலைகள் –
கீதா சாஸ்திரம் யுத்த களத்திலே அருளிச் செய்த லீலை
ஓர் நகையுடன் உண்மை உரைக்க அடி சேர்ந்த விஜயனுக்கு -லோகத்துக்காக கீத உபநிஷத் –
ரதி-சாரதி –
மோக்ஷ பிரதத்வத்திலும் லீலை -ததி பாண்டவனுக்கும் தயிர் தாழிக்கும்
சரணாகதி சரம ஸ்லோகமும் லீலையாக அருளி
பவந்தி லீலா -ஆளவந்தார்
பூதனாவுக்கும் மோக்ஷம் பால்யத்திலே
கண்டா கர்ணனுக்கும்
கைலாசம் புத்ர வரம் -கள்வா
கிருஷ்ணாஸ்ரய -நாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி – மாம் -அஹம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்

—————

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-

ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –

—————

திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-

இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள்

—————–

வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6-

பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி -அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

————–

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-

இவள் கண்ட அநந்தரம்-அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூஸ்சை கொடுத்து காட்ட கூடும் -இறே
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
ஆச்சர்ய சக்தன் என்று இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள்

—————

திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-

அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரம்-

திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

திருக் கையாலே பிடித்து திருப்பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல்

————–

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

————-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான-தானும் மதலையாய் இருக்கச் செய்தே –
அத்தனை பேரும் ஒருதலை – தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த இள யானை போலே
தானே பிரதானனாய் விளையாடும் -இப்படி திரியா நிற்க செய்தே -ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவன்-

—————-

மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

திரு ஆழியும் -கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -நிரந்தரமாக
வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான சேர்த்தியை ஒரோ தசைகளிலே இவன் தான்
இவளுக்கும் காட்டக் கூடும் இறே

————–

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு -இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –
அண்டத்தையும் அண்டாந்த வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கினவன் –

—————

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாக
உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து -தன்னை பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து -பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே -பருவம் நிரம்புவதுக்கு முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –
லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

———–

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

—————–

மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான –
நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

——————–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-

மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே -என்கிறபடியே கம்சன் முதலான
துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி -அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
ஜானாதுமாவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –
போய் -வீங்கு இருள்வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே அந்த செறிந்த இருளிலே பெற்ற
தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதரா நிற்க திரு ஆய்ப்பாடியிலே போய் –

—————-

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-

இருந்ததே குடியாக உஜ்ஜீவிக்கும்படி -இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து -அது தானே உனக்கு மிகவும்
தேஜஸ்சாம்படி இருப்பானாய்-வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

————–

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-

அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின் அழகை உடையவன்
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

—————–

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-

கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை மைப்படி மேனி இறே
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வநியையும் -திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் -திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் குலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –
அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் -ஆயர் கொழுந்தாய்-என்றார் இறே ஆழ்வார்

———–

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –
தேவகிப் பிராட்டிக்கு அஷ்ட கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் –
கால நேமியோடே சம்பந்தம் உடையராய் -ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே
வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க -தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை
கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது
இழந்தவள் தன் வயிற்றில் அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் –அங்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -இங்கு ஸ்வாமித்வம்
தேவகி பிராட்டியார் வயிற்றில் ஸ்ரீ கிருஷ்ண எழுந்து அருளி இருந்த இருப்பு போலே இறே
பூடுறை ஸ்ரீ கோயிலில் ஸ்ரீ அழகர் எழுந்து அருளி இருந்த இருப்பும் இவர்க்கு-

——————————-

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நாரணன் நம்பி திரு வோணத்தான்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் சித்தம் பிரியாத திருவின் வடிவு ஒக்கும் தேவகி தன் வயிற்றில்
சிக்கனே இருட்டில் வசுதேவன் தம் மகனாய் வந்து பிறந்த அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் கோவலர் குட்டன் நந்தன் மதலை மைத் தடம் கண்ணி யசோதை
வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தாய் போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து
திண் கொள் அசுரரை தேய தந்த களிறு போல் தானே விளையாடும் ஆய்ச்சி மகனாக வளரும்
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் பேதை குழவி
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள்
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் உய்ய இவ் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-