வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்
வைகுண்ட வர்தித பலோ அத பவத் பிரசாதா
தம்போஐ யோநிர ஸ்ருஜத் கில ஜீவ தேஹாந்
ஸ்தாஸ் நூநி பூருஹ மயாநி ததா திரஸ் சாம்
ஜாதிம் மநுஷ்ய நிவஹா நபி தேவ பேதாந் —-1 –
ஸ்ரீ வைகுண்ட நாதா உனது திரு அருளால் பிரம தேவன் மிகுந்த சக்தியை அடைந்து பல ஜீவ ராசிகளையும்
மரம் செடி கொடி பறவை மிருகம் முதலியவற்றையும் மனிதர்களையும் தேவர்களையும்
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்காதிகளையும் படைத்தாராமே –
——————
மித்யாக்ரஹ அஸ்மி மதி ராக விகோப பீதி
ரஜ்ஞாந வ்ருத்தி மிதி பஞ்ச விதாம் ச ஸ்ருஷ்ட்வா
உத்தாம தாமச பதார்த விதாந அதூந
ஸ்தேந த்வதீய சரண ஸ்மரணம் விஸூத்த்யை –2-
அறிவு மயக்கம் அஹங்காரம் மமகாரம் ஆசை கோபம் பயம் முதலான பஞ்ச அஞ்ஞான கார்யங்களை உண்டு பண்ணினார்
தமோ குணமான கார்யங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார்
அத் துயரம் விலக உனது திருவடிகளைத் த்யானம் செய்தாராம்-(விஸூத்த்யை–தூய்மை ஆக்கிக் கொள்ள )
——————
தாவத் ச சர்ஜ மனஸா சனகம் சநந்தம் பூயஸ் ஸநாதன முனிம் ச ஸனத் குமாரம்
தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்ய மாநாச த்வத் பாத பக்தி ரசிகா ஜக்ருஹுர் ந வாணீம் –3-
சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் ஆகியோரை மனத்தினால் படைத்தார் –
ஸ்ருஷ்டியில் ஈடுபடும் படி அவர்களுக்கு ஆணை இட்டார்
ஆனால் அவர்கள் தங்கள் சேவையில் நாட்டம் கொண்டு ப்ரம்மாவின் வாக்கை ஏற்க வில்லை –
(சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் -இந்த நால்வர் தான் ஜய விஜயர்களுக்கு சாபம் கொடுத்தவர்கள்)
——————-
தாவத் ப்ரகோப முதிதம் ப்ரதி ருந்ததோ அஸ்ய ப்ரூ மத்யதோ அஐநி ம்ருடோ பவத் ஏக தேச
நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சே த்யாதவ் ருரோத கில தேந ச ருத்ர நாமா –4-
அப்போது பிரம்மாவுக்கு கோபம் உண்டாயிற்று -அதை அடக்கினார் –
அப்போது அவருடைய புருவங்களின் நடுவில் இருந்து ஸ்ரீ ருத்ரன் தோன்றினார்
அவர் பிரம்மனிடம் தனக்கு பெயரையும் இருப்பிடங்களையும் வேண்டினார்-ருததீ ருத்ரர் -அழுததால் ருத்ரர்
——————–
ஏகாதஸாஹ் வய தயா ச விபின்ன ரூபம் ருத்ரம் விதாய தயிதா வனிதாஸ் ச தத்வா
தாவந்த்ய தத்த ச பதாநி பவத் ப்ரணுந்ந ப்ராஹ ப்ரஜா விரச நாய ச சாதரம் தம் –5-
உன்னால் ஏவப்பட்ட படி அந்த பிரம தேவன் ருத்ரனுக்கு பதினோரு பெயர்களையும் பதினோரு மனைவி மார்களையும்
தனித் தனி இருப்பிடங்களையும் அளித்தார்
பின்பு உயிர்களைப் படைக்கும் படி அன்புடன் கட்டளை இட்டார் –
————–
ருத்ராபி ஸ்ருஷ்ட பயதா க்ருதி ருத்ர சம்க சம் பூர்ய மாண புவன த்ரய பீத சேதா
மா மா ப்ரஜா ஸ்ருஜ தபஸ் சர மங்கலாயே த்யா சஷ்ட தம் கமல பூர் பவதீரி தாத்மா –6–
ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் பயங்கரமான உருவங்களுடன் மூ வுலகிலும் நிரம்பியதைக் கண்டு பயந்தார்
பிறகு ருத்ரனைப் படைக்க வேண்டாம் -உலக நலத்திற்காக தவம் செய் என்று சொன்னார்-
——————
தஸ்யாத சர்க ரஸி கஸ்ய மரீசி ரத்ரிஸ் தத்ராங்கரா க்ரது முனி புலஹ புலஸ்த்ய
அங்காத ஜாயத ப்ருகுஸ் ச வசிஷ்ட தஷவ் ஸ்ரீ நாரதஸ் ச பகவன் பவ தங்க்ரி தாஸ –7-
பிரமன் தனது ஸ்ருஷ்டியில் ஈடுபட்டார் -அவரது உடலில் இருந்து ஒன்பது பிரஜாபதிகளும்
உனது திருவடியில் பற்று உடைய ஸ்ரீ நாரத முனிவரும் உண்டானார்கள்
மரீசி அத்ரி அங்கிரஸ் க்ரது புலகர் புலஸ்த்யர் பிருகு வசிஷ்டர் தக்ஷன் ஸ்ரீ நாரதர்
ஆகியவர்கள் உண்டானார்கள்
—————
தர்மாதி காநபி ஸ்ருஜந்நத கர்தமம் ச வாணீம் விதாய விதி ரங்கஜ சம்குலோ அபூத்
த்வத் போதிதைஸ் சனக தக்ஷ முகைஸ் தநூஜை ருத் போதிதஸ் ச விர ராமோ தமோ விமுஞ்சன் –8-
அங்கஜசம் -மன்மதன்-
பிறகு பிரமதேவர் தர்மம் முதலியவைகளையும் கர்த்தமரையும் படைத்தார் -சரஸ்வதியைப் படைத்து காமத்தை அடைந்தார்
தாங்கள் ஸநகாதிகளை ஏவி அறிவுரை கூறச் செய்தீர்-அதனால் பிரம்மதேவரின் அஞ்ஞானம் விலகியது
வேதம் புராணங்களையும் வெளியிட்டு தனது புதல்வர்களுக்குக் கற்பித்தார்
————————-
வேதாந் புராண நிவஹா நபி ஸர்வ வித்யா குர்வன் நிஜாநந கணாச் சதுரா நநோ அசவ்
புத்ரேஷு தேஷு வினிதாய ச சர்க வ்ருத்தி மப் ரானுவம் ஸ்தவ பதாம் புஜம் ஆஸ்ரிதோ பூத் –9-
பிறகு அவர் நான்கு வேதங்களையும் அங்கங்களையும் புராணங்களையும் வித்யைகளையும் எல்லாக் கலைகளையும்
வெளியிட்டு அவற்றை தனது புத்ரர்களுக்கு உபதேசம் செய்தார் -ஆனாலும் ஸ்ருஷ்ட்டி வளர்ச்சி அடையவில்லை
தங்களுடைய திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தார்
உலகம் ஒரு நாளில் படைக்கப்பட வில்லை
மீண்டும் மீண்டும் தடைகள் வர
மீண்டும் மீண்டும் சரண் அடைந்து
அவற்றை விலக்க பிரார்த்திக்கிறார்
—————
ஜாநந் நுபாய மத தேஹ மஜோ விபஜ்ய ஸ்ரீ பும்ஸ பாவமப ஜன்மனு தத்வ தூப்யாம்
தாப்யாம் ச மாநுஷ குலாநி விவர்தயம் ஸ்த்வம் கோவிந்த மாருத புரேச நிருந்தி ரோகாந் –10-
அதன் பிறகு ஸ்ருஷ்டிக்க வழியைக் கண்டார் -தனது சரீரத்தைப் பிரித்துக் கொண்டு
ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையைப் படைத்தார்
அந்தத் தம்பதிகள் மூலம் ஸ்ருஷ்டியைப் பெறுகச் செய்த தாங்கள் அடியேனது ரோகங்களைப் போக்கி அருள வேண்டும்
என்று வேண்ட ஸ்ரீ அப்பனும் அங்கீ கரித்து அருளினார்
முதலில் தோன்றிய ஆணும் பெண்ணும் -ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையை-இவர்களே
கீழே முனிவர்கள் உண்டே என்னில்
இவர்கள் தான் மனிதர்கள்
ரிஷிகள் தனி தானே
——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply