Archive for the ‘கிருஷ்ணன் கதை அமுதம்’ Category

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆச்சார்யர்களும் —

September 9, 2020

கடவுளே -அருளிச் செயலில் சப்த பிரயோகம் கண்ணனையே –

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே -ஸ்ரீ பெரிய திருமொழி–4-6-5-

கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-
கண்ணன் அனுபவத்திலேயே மண்டி இருப்பார்களே

——————

ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் ஸ்ரீ கண்ணனும் -ஸ்ரீ கிடாம்பி வெங்கடேசன் ஸ்வாமிகள் –

கிடந்தது பூமி எடுத்தது குன்றம் கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா
காணாக் கண் கேளாச் செவி -சேர்ந்தே அனுபவம்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது –பேய் முலை நஞ்சூணாக உண்டான்
பூதனா நிரசனத்துடன் அனுபவம் தொடங்கும்
புள்ளின் வாய் கீண்டானும் -மருதிடை போய் மண் அளந்த மால்
கடை வெண்ணெய் உண்டாய் –
அறியும் உலகு எல்லாம் -உவணம் ஊர்ந்தாய்-பரத்வ ஸூசகம் –
தாம்பின் தழும்பு ஸுவ்லப்யம் பறை சாற்றும் –
கண்டு பற்றுகைக்கு ஸுவ்லப்யம்-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு -களவாடிய செயலைக் காட்டி
குரல் ஓவாது ஏங்கி அயலார் காண இருந்த ஓங்காத வண்ணா உரை
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த
செங்கண் அவன் -நிரை நிரை அணி –10 சேஷ்டிதங்களை ஒரே பாசுரத்தில் அனுபவம்
தோள் கார்யங்கள் -62–
மருதினூடு போய் -பூம் குறுந்தம் சாய்த்து -மண மருவ மால் விடை ஏழு செற்று –
ஏழு உலகம் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவ பொங்கு அணையான் தோள்
87-இனி யார் புகுவார் எழு நரக வாசல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் போல்
ஓர் அடியும் -சாடு உதைத்த –கேசவனை -ஈர் அடியும் காணலாம் –
கேசவனை மாயவனையே மனத்து வை -100 நிகமனம்

——————

*ஸ்ரீ பூதத்தாழ்வாரும் கண்ணனும்* *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* ஸ்ரீ க்ருஷ்ணானுபவத் தொடர்

ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் -ஆவணி ரோஹிணி -கிமு 3102-125 ஆண்டுகள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
ஸூகாதிகளும் முதல் ஆழ்வாரும் பரத்வத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் –
காலத்தால் முன்னால் -பக்தியில் முதிர்ந்த முதல் ஆழ்வார்கள்

அத்புதம் பாலகம் -பரத்வம் தோன்றவே அவதாரம்
அம்புஜ அக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதாயுதம் –
செய்ய சுடர் ஆழி
அன்பே விஷயமான திருவந்தாதி
வேணு கோபாலன் ஷேத்ராதிபதி
ஆயனர் -திருவிக்ரமன் -பரத்வம் பொலிய இருக்கும் திவ்ய தேசம்
முத்துக்கள் சேரும் கடல் மல்லை
கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு –
கிருபா சாகரம் கடல் மல்லை பூதத்தாழ்வார்-இதுவே நிரூபகம்
கடல் மல்லை தல சாயனத்து உறைவார் -அவனுக்கும் இதுவே நிரூபகம்
கதையின் பெரும் பொருளும் கண்ணா -நின் பேரே-இதயம்-64-
இதிஹாச புராணங்கள் கண்ணனையே சொல்லும்
திரு நாம சங்கீர்த்தனமே சார தமம் –
வேதைஸ் சேர்வை அஹம் ஏவ போல் –
இருந்தவையே ஏத்தில் – கதையின் திருமொழியாய் நின்ற திரு மாலே
உன்னைப் பரு மொழியால் காணப் பணி -ஸதா பஸ்யந்தி பண்ணப் பண்ணி அருள்

———————

பேயாழ்வார் அனுபவித்த கண்ணன் -ஸ்ரீ உ வே M A மதுஸுதனன் ஸ்வாமி-

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பரத்வத்தில் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய கேள்வன் –
குறும்பு யோசித்த கோபாலகனே பாற் கடலிலும் வேங்கடத்திலும் பனி விசும்பிலும் மனத்துள்ளும்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -முதல் நாயகி தாயார் பாசுரம் -மல் போன்ற நீண்ட தோள் மால் கிடந்த
கண்ணனே -மேகங்களைக் காணிலும்
அடைந்தது அரவணை மேல் -ஐவர்க்காய் –பேய்ச்சி பால் உண்ட பிரான் யசோதை மத்துக்கு அஞ்சி
அஞ்சாதவன் பீஷ்மாதிகளுக்கு-ப்ரஹ்மாஸ்திரத்துக்கும் அஞ்சாதவன் மத்துக்கு பீதனானான்
அவர்களும் வில்லை போய்ட்டு மத்தைக் கையில் கொண்டு இருந்தால் வென்று இருப்பார்கள்
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் ஆய்ச்சியால் வெண்ணெய் உண்டு ஆப்புண்டவன்
அம்மனே -இது இவருடைய எத்திறம் இருந்தபடி
மண்ணுண்டும் -பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் உண்டு -வயிற்றினொடு ஆற்றா மகன்
திருமழிசை மூன்றும் அருளிச் செய்தது போல் இவரும்
வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ -வண்ணான் சாலில் எவ்வளவு போட்டாலும் ரொம்பாதே
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் -மகனாம் –
லோக பிதா பித்ரனைத் தேர்ந்து எடுத்து பிதாவாகக் கொண்டான் வேதம் காடகம்
மகன் தன் காதல் மகனை -அநிருத்தனுக்காக வாணனை கர வனம் அழித்து
திரு வேங்கடத்திலும் ஊன்றி-
அவனே திருவல்லிக் கேணியான்
கண்ணனாகவே திருவேங்கடத்தானை அனுபவிப்பார் பெரும்பாலும்
அவர் திருவவதாரம் -வேங்கட கிருஷ்ணனே அவர் மனத்தில் இருந்து அனுபவிப்பிக்கிறான்

உம்பர் கோமானே உறங்காது -கண்ணனை எழுப்ப -ஆண்டாளும்
பேயாழ்வார் சந்நிதியில் கண்ணன் எழுந்து அருளி சேர்ந்தே சேவை திருவல்லிக் கேணியில்

————-

திருமழிசைப்பிரானும் கண்ணனும் ஸ்ரீகோயில் தேவராஜன் ஸ்வாமி

கோயில் ப்ராதான்யம் போல் கண்ணன் ப்ராதான்யம்
பன்னிரு ஆழ்வார்களும் மங்களா சாசனம் கண்ணனுக்கும் கோயிலுக்கும்
ஒரு பிறவியில் இரு பிறவி இருவரும்
யது குலம் கோப குலம்
ரிஷி குமாரராக பிறந்து பிரம்பு அறுத்தவனால் வளர்க்கப்பட்டு
அக்ர பூஜை சாம்யம்
கூனி -கூன் போக்கி பால் கொடுத்த தம்பதிக்கு இளமை
மன்னு திரு மழிசை -மன்னு வடமதுரை
கால நேமி
காசி ராஜன்
பவ்ண்ட்ர வாசுதேவன் இவர் மட்டுமே அனுபவம்
ஆதி ஆதி ஆதியான -முக்காரணங்களும் –ஆயனாய மாயம் என்ன மாயமே–35- –
சிசுபாலாதிகளும் அகப்பட உஜ்ஜீவிக்கும் படி –
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ –36-
சர்வ நியாமகன் நியமிக்கப் படுவதே
குரூரமான முலைகள் குரூரமான பால் –
விஷப்பாலை குடித்ததுக்கு கோபிகள் வாய் அமுதம் பரிகாரம்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் மாயன் -கபிஸ்தலம்

——————

ஸ்ரீ குலசேகராழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் ராமானுஜன் ஸ்வாமி

வால்மிகி பகவானும் குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பூர்ண அனுபவம்
முகுந்தா மாலை தனி பிரபந்தம்
ஸ்ரீ ரெங்க யாத்ரா தினே தினே –
தோய்த்த தயிர் -அரங்கன் -அடியார் -பெரிய பெருமாளும் கண்ணனே –
ஊடல்-வாஸூ தேவா உன் வரவு பார்த்தேன்
ஒன்பது பெண்களை வஞ்சித்தது
தேவகி புலம்பிய புலம்பல்
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி அழுகையும் அஞ்சின நோக்கும் -தொழுத கையும் –
எழில் கொள் தாம்பு -அசேதனமும் எழில் இவன் சம்பந்தத்தால்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

——————

பெரியாழ்வாரின் க்ருஷ்ணானுபவம் – விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா அம்மங்கார்

வண்ண மாடங்கள் கண்ணன் கேசவன் நம்பி
கண்ணன் கேசவன் கிலேச நாசகன்
ஏகோ ப்ரஹ்ம ஆனந்தம் -நம்பி -ஸமஸ்த கல்யாண குண சாகரம்
பண்புடைப் பாலகன் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மாயன் -ஆத்ம மாயயா-பாதக் கமலங்கள் காணீரே -மாம் ஏகம் சாதனம் வ்ரஜ –
திண் கழல் அன்றோ
பரம் பரனே ஆடுக செங்கீரை -அங்கே அவாக்ய அநாதர-
மன்னு குறுங்குடி திரு வெள்ளறை கண்ணபுரம் அவனே இங்கும்
அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பமாக்கி அன்றோ ஆய்ப்பாடியில்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அரு மருந்து பிறவிக்கும் போகம் குறையாமைக்கும்
பந்தம் அறுப்பதற்கும் போகம் வளர்க்கைக்கும்
பத்து மஞ்சள் -பூசி பாவை மாருடன் பாடியில்
பாதம் நண்ணாத நாள் பட்டினி நாள்
உபவாச திவசம் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் –
மாயன் மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே

——————

ஸ்வாமி நம்மாழ்வாரும் கண்ணனும்–ஸ்ரீ உ வே பள்ளிகரணை திருமாலை நடாதூர் சேஷாத்ரி ஸ்வாமி–

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பராசராதிகள் போல் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி
திருவரங்கம் த்ரித விபூதி போல் தத்வ த்ரயங்களை விட இது தனி தத்வம்
ஆராமங்களில் ராஜ நீதி –
ஸ்ரவணம் –தாஸ்யம் -நவவித பக்தி
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இதிலே ஆழ்வார் ஊன்றி
சேமம் குருகையோ –நாரணமோ -அத்விதீயம்
பூ பாரம் -மண்ணில் பாரம் நீக்க -தர்ம ஸம்ஸ்தானம் -ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கவே
சாஷாத் தர்மம் இவனே காட்டவே அவதார நோக்கம்
எத்திறம் மூ ஆறு மாதம் மோகித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
திருவாய்மொழி என்னும் தேன்
ஒரு நீராக ஆக்கினான்
கரண கலக்கத்தை -ஒருபடிப்படுத்த கண்ணன்
சீலமில்லா சிறியன்–சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மடலூர ஒருப்பட -கண்ணன் வந்து கலவாமையால்
பேர் அருள் -கண்ணன்
கோபிமார் ஆகாரம் ஏறிட்டு மின்னிடை மடவார்
குரவை முதலான கோலச் செயல்கள்
கிருஷி பூ வாசகம் -கிருஷ்ணன் பூமிக்கு சுகம் திவ்ய தேசங்கள் -அர்ச்சாவதாரமே தாரகாதிகள்
கண்ணன் அடி இணையில் காதல்-சுருங்க செப்பி -உபதேசம் நிகமனம்
அத்தனை பதிகங்களில் கண்ணன் -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அன்றி மற்றும் கேட்ப்பாரோ

———————

ஸ்ரீ மதுரகவியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே தென்திருப்பேரை பார்த்தசாரதி ஸ்வாமி

தேவு மற்று அறியேன் என்பவரும்
முதலிலே ஆழங்கால் பட்டு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட பெரு மாயன் என் அப்பனில்
எடுத்துக் கழிக்கவும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் விளக்க கிருஷ்ண அனுபவம்
எத்திறம் என்று ஆழ்வார் ஆழங்கால் பட்ட இதுவே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு நெருக்கமாக இருக்குமே

———————-

திருப் பாணாழ்வார் அனுபவிக்கும் கண்ணன் -பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி-

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போல்
லோக சாரங்க முனிவரால் எழுந்து அருளப் பண்ணி -முனி வாகன போகம்
ராமனாகவும் நரசிம்மனாகவும் உலகு அளந்தவனாகவும் பாடி -தப்பைச் செய்தோம்-கண்ணனே இவன்
கோவலன் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் -ஆயர்களுக்கு நாயகன்
கொண்டல் வண்ணன் -முகில் வண்ணன் -தானே இவன் சீதள காள மேகம் பட்டர் –
மின்னல் இந்த்ரியா -பெரிய பிராட்டியார் -பூஷா மணி இந்திர தனுஸ் வானவில் -தயா ரசம் விஞ்சி –
மேகம் கீழே வருமோ இவனோ கோவலனாய் அண்டர் கோனாய் நமக்காக
அவதார பிரயோஜனம் கோவலனாகைக்கும் அண்டர் கோன் ஆகைக்கும் வெண்ணெய் உண்ணவுமே
வெண்ணெய் உண்டது எனது உள்ளத்தைக் கவரவே என்கிறார்
வெண்ணெய் உண்டது அப்யாசம் இதுக்காகவே
அணி அரங்கன் இவனே தான் என்கிறார்
அபேச்சேத நியாயம் -இறுதி சொன்னதே கொள்ளத் தக்கது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் -கண்ணனை அரங்கமாலை என்று நிகமிக்கிறார் –

——–

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி

மதுர வாறே -மழைக்கு அன்று வரையை ஏந்திய ஆறே திருவரங்கத்தில்
பண்டு அவன் செய்த க்ரீடை தான் கிருஷ்ணாவதாரம் -பெரியாழ்வார்
பிரபந்த தாத்பர்யம் உபக்ரம உப சம்ஹாரம்
திருமாலையில் –அச்யுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
கண்ணனை அரங்க மாலை உபஸம்ஹாரம்
தனியனிலும் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் பாடப் பெற்றதாகவே
கற்றினம் மேய்த்த கழலிணை ஆழ்வாரும்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உபத்தி
கன்றுகளை மேய்த்து இனிது உகப்பவன்
பட்டரும் பிருந்தாவனம் பண்டிதன் இவனே பெண்களையும் வெண்ணெயும் ஒளித்து வைத்தாலும்
அறிய வல்ல பண்டிதன்
தாண்டவம் கற்றதும் தயிர் கடையும் ஓசைக்கு ஆடிக் கற்றுக் கொண்டான்
மொசு மொசுப்பு எல்லாம் இன்றும் காணலாம்
கார் ஒளி வண்ணனே கண்ணனே
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
காக்கும் இயல்பினன் கண்ணபிரான்
கோயில் சாந்து அழியாத திரு மார்பு
ஆமைத்தாலி அச்சுத்தாலி புலி நகம் பஞ்சாயுத மாலை-
கவள மால் யானையைக் கொன்ற கண்ணனை
திருப்பள்ளி எழுச்சியிலும்
ப்ரஹ்மாதிகள்
அயோத்தி அம் அரசே
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும்
இதுக்கு எல்லாம் அசையாமல்
துகில் உடுத்து ஏறினாய் கண்ணனை அருளிச் செய்தே நிகமிக்கிறார் –
சூழ் புனல் அரங்கா -ரசம் இழக்கப் போகிறாய்
துடி இடையர் சுரி குழல்-துகில் உடுத்து ஏறுகிறார்களே
பள்ளி எழுந்து அருளாய் -கேட்டதும் பதறி எழுந்தானாம்

——————

திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

பிடி தோறும் நெய் போல் அடி தோறும் அர்ச்சையிலே இருந்தாலும் –
காதில் கடிப்பிட்டு ஊடல்
பிள்ளைத் தமிழ் பதிகங்கள்
எங்கேனும் இது ஒப்பதோர் மாயம் உண்டோ
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -பசு நிரை மேய்ப்பு உவத்தி
நீரூட்டி -தடம் பருகு கரு முகிலை
சொல்லுண்டான் காணேடீ –சாழலே
பார்த்த சாரதி அனுபவம் பெரிய திருமொழி பதிகங்கள் தோறும் கலியன்
4-10-5-/ஆழியால் அங்கு மறைத்து /6-5-9-/9-9-8 /10-/11-காணேடீ
ஆஸ்ரித ரக்ஷணம் ஆழங்கால் பட்டு அனுபவம்
ஆஸ்ரித பக்ஷபாதன் தெளிவாகக் காட்டி
பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பண்ணினவை –
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்தைக் காண மாட்டான் அன்றோ

———-

கீதாச்சார்யரும் ஜெகதாச்சார்யரும் – திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவியை ஆசைப்பட்டு இருக்கும்
அவதார சம்பந்தமும் அருளிச் செயல் சம்பந்தமும் உண்டு
அநந்தன் பிரதம ரூபம் -பார்த்த சாரதியே -என்றும் உண்டே
பலராமாநுஜனே இளையாழ்வார்
எம்பெருமானார் -அவரோ நீர் -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கேட்ட ஐதிக்யம்-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம்
லோக ரக்ஷணத்தில் பாரிப்பு மிக்கு
சமிதோதிதய சங்கர கர்வம் அடக்கி பாணாசுரன் சங்கர பாஸ்கர இத்யாதி –
யாதவ பிரகாச–உஜ்ஜீவனம் -யது குலம் உத்தரிக்க – –
ஸ்ருதோ அபார்த்தான் -அபார்த்தங்கள் நிரசித்து ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் -மூன்று சாம்யங்கள் தேசிகன் –

அருளிச் செயல் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ கீதா பாஷ்யம் சம்பந்தமும் உண்டே
செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் அருளிச் செய்து –
அவதார ரஹஸ்ய ஞானம் -சம்பவாமி ஆத்ம மாயயா -அஜஹத் ஸ்வபாவம் -மாயம் சங்கல்பம் இச்சையால் –
எத்திறம் என்று மொஹித்த மாறன் அடி பணிந்தவர் ஸ்ரீ கீதா பாஷ்யம்
சாதுநாம் -ஸ்வாமி வியாக்யானம் மிக ரசமாய் இருக்குமே
கம்பீர -மதுர –
யுக்த லக்ஷண தர்ம சீல -வைதிக அக்ரேஸர் -நம்மாழ்வார் நிலையையே விளக்கி வியாக்யானம்
தொழுது எழு என் மனனே
என் சொல்லிச் சொல்லுகேன் நான்
வெண்ணெய் உண்ணும் ஈனச் சொல்லே
உண்டோ கண்கள் துஞ்சுதல்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
முக்கிய பிரயோஜனம் சாது சம்ரக்ஷணமே மற்றவை ஆனு ஷங்கிகம் -சங்கல்பத்தாலே அவையை செய்ய வல்லவன் அன்றோ
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்தது போல் இங்கு அவதரித்து
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினாயே
மழுங்காத ஞானமே படையாக இருந்து இருந்தால் –சோதி மறைந்து இருக்குமே
கரஸ்த கமலம் பாதயோஸ் அர்ச்சிக்கவே அழைக்கவே அந்தர்யாமியாய் அறிந்து அவதரித்து
அரை குலைய தலை குலைய வந்த த்வரைக்கு நமஸ்காரம்

கண்ணன் ஸ்ரீ ஸூக்திகளை கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே வியாக்யானம்

————–

ஆழ்வானும் கண்ணனும் -ஆழ்வானும் கண்ணனும் …. ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
மொழியைக் கடக்கும்
சிஷ்ய ஆச்சார்ய பூர்த்தி
உபய காவேரி மத்யத்தில் விண்ணப்பிக்கவோ -மேதா விலாசம் -பாவஜேன கிருதஞ்ஜேனே தர்மஜ்ஜேன–
உமது ரூபத்தில் ஆளவந்தார்-ராமானுஜர்
அதி மானுஷ ஸ்தவம் -துயரறு சுடர் அடி -எத்திறம் மோஹித்து -ஆழ்வான்
கேள்விகள் -பால்ய உசித சேஷ்டிதங்கள் ஆகிற -நெருப்பு பொறியில் விழுவார்கள்
தயரதன் பெற்ற மணி தடாகத்தில் புக்கு அழுத்துவது போல்
கம்ச பீதியால் போனது எதனால்
பஞ்சியன்ன மெல்லடியால் சகட நிரஸனம் –
யோக அப்யாஸத்தால் கூட பிடிக்க முடியாத நீ வெண்ணெய் களவு -பிடிபட்டு அடி பட்டு என்ன நீர்மை
ஒளித்து வைத்த வெண்ணெய் மட்டுமே களவு கண்டு
திருமேனியில் பூசி -மறைக்க சாதனம் -என்ன மதி உடைமை
நிர் பயனாக இருந்து -என்ன நீர்மை
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
வெண்ணெய் போல் ஹிருதயம் வெண்மை உருகும் உயர்ந்த ஸ்தானம்
நீர் பண்டமா -சொல்ல முடியாமல்
மோர் குடத்தை உருட்டி
ஆர்ய ஜன -ஆழ்வார் போல்வாரை மோஹிக்க செய்வதற்கே
தாமத்தால் இல்லாமல் பிரேமத்தால் கட்டி வைத்து
கனைத்து இளம் -அத்தாணிச் சேவகத்தில் பொதுவான தர்மங்கள் நழுவும்
ஜீயர் புரம் -எழுந்து அருள -உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவும்
உரலில் கட்டி வைப்பதே ஸூ வ ஸ்தானம்
பின்பே ஆக்களைப் பார்க்கப் போகிறாள்

———————–

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் கீதாசார்யனும் லோகாசார்யரும் .. Sri U Ve Aththangi Srinivasacharyar
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் ஆறாம் நாள் -மூலம் நக்ஷத்ரம்
ஸ்ரீ கண்ணனாகவே ஸ்ரீ தேவப்பெருமாள் சேவை
அவரே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராக
ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
இவரும் ஸ்ரீ லோகாச்சார்யார்
பிள்ளை என்று புகழப் படுபவர்கள்
ப்ரஹ்மசர்யம் -பரிஷத் விஷயம்
சத் பிராதா
பிராமண ரக்ஷணம் இருவரும் அஷ்டாதச ரஹஸ்யம் அஷ்டாதச அத்யாய ஸ்ரீ கீதை உபநிஷத்
ப்ரமேய ரக்ஷணம் இருவரும்
ராம பிரியன் -அரங்கன் ஜோதிஷ்குடி
தன்னுடைச் சோதி தனியாகவே இருவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் ஜோதிஷ்குடி
ஸ்ரீ கீதா பாஷ்யம் யதி புனர் அவதாரம் ஆதி சேஷனே -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் இவற்றுக்கு

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ண திரு நாமங்கள் –

September 8, 2020

ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகுதேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குணசீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துாதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி
ஓம் க்லீம் கிருஷ்ணாய க்லீம்

———–

1. சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்:
தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி:
கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன்
(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்:
அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி:
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணன் வந்தான்-ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

September 2, 2020

மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டித்
திண்ணமுடன் வேதமதை விரிக்க வேண்டிச்
சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி
இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்–எட்டு காரணங்கள்

1-மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் –நறையூரில் கண்டேன்
பசு வடிவம் பூமி பிரார்த்தனை ஸ்ரீ மத் பாகவதம் -அதுக்காகவே பசு மேய்ப்பவனாக அவதாரம்
கிருஷ்ணன் -கருமை -க்ருஷிக்கு பூமிக்கு ஆனந்தம் தரவே
நல்லவர் இருக்க இருக்க பஞ்சு போல் -தீயவர் இல்லாமல் இருக்கவே -அழித்து அவருக்கும் சுவர்க்கம் நல்கிய பிச்சன்
touch stone -உரை கல் –உடைக்க இரும்பை தங்கமாக்கிய கதை -பூதனா மோக்ஷம் -வதம்

2-மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டி
குலத்தை உத்தரிக்க
யதுகுலம் -யது மஹா ராஜர் தானத்தில் சிறந்த -முதலில் வாங்கியவன் -தானே கொடுத்து –
வேறே யாருக்கும் யது கொடுக்க முடியாதபடி -அபுன பிரார்த்தனை பண்ண வேண்டாத படி -தேசிகன் யாதவாப்யுதம்
அதற்காக வாஸூ தேவ புத்ரன்
நந்தகோபன் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -ஏகார சீமாட்டி திருக்குடந்தை ஆண்டவன் கொண்டாடும் ஆண்டாள் –
திரௌபதி வஸ்திரம்
இஷ்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட் டி
கீதா சாஸ்திரம்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

3-வேதங்கள் சாரம் விளக்கவே அவதாரம்
கர்ம -ஞான -பக்தி -மூன்றையும் -முக்கியம் காட்டி அருளி -ஸ்ரீ கீதை
பக்திக்கு அங்கமாக கர்ம யோகம் -அதில் உள்ளடக்கி ஞான யோகம்
சரணாகதி -சரம ஸ்லோகம் –
நான்கு திருத்தோள்களுடன் அவதாரம்
விஸ்வரூபம் தர்சனம்
கம்ச வதத்துக்குப் பின்பு சதுர் புஜம் கொண்டே –10-வயசு பின்பு 120 வரை –
நவநீதம் -திருடி -கீதை வெண்ணெய் திரும்பி -ஆயர் படியில் எடுத்து குருஷேத்ரம் கொடுத்து

சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அந்தர் அதிகரணம்
பரித்ராணாயா சாதூனாம் -இதுவே முக்கிய காரணம்
மற்றவை -ஆனு ஷங்கிகம் -சங்கல்பம் -கருதும் இடம் பொருது சக்கரக்கையன் அன்றோ
பக்தனுக்கு குணங்கள் லீலைகளைக் காட்டி ஸம்ஸ்லேஷிக்கவே அவதாரம்
மண்ணை -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அனைத்தும் இவனது
கட்டுண்டான் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
காமம் க்ரோதம் -அவனை மனசில் தவழ விட்டுப் போக்கிக் கொள்ளலாம்
காளியன் -மனஸ்ஸூ -புஜங்கம் சமஸ்க்ருதம் -வளைந்தே போகும் -அவனை கூட்டு நட்டம் இட
வைத்தால் அலை பாயுதே கண்ணா பாடலாம்
கோபிகள் -ஒரே புருஷோத்தமன் அவனே
இதுவே முக்கிய காரணம்

அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
ஸூர்ய வம்சத்தில் சந்திரனாக -சந்திரன் வருத்தம்
ஸூ ர்ய மகன் ஸூ க் ரீவன் -வாலி அப்பா இந்திரன் வருந்த
ரிஷிகள் ஆலிங்கனம் பண்ணாத குறை
கருடன் வருத்தம் -ஆஞ்சநேயர் ஆலிங்கனம் பெற்றார்
இந்திரஜித் -கட்ட -பாசம் விட -ஆலிங்கனம் தானே பண்ணிக்
கொள்ள -தாத்தா அஜன் காட்டியது போல் என்றார் பெருமாள்
ஸூமேரு கோவர்த்தனம் -மலைக்கு வருத்தம்-கொண்டு வந்த ஆஞ்சநேயர் திரும்பி அங்கெ வைக்க –
அணை -கட்ட முடியாமல் திருவடி ஸ்பர்சம் கிட்டாமல்
திருவடி -முத்து மாலை பெற்றாலும் வருத்தம்
ஜாம்பவான் மாமனாராக ஆசை பட்ட குறை —
ராமன் தூது போகாத குறை –இப்படி அஷ்ட குறைகள்

சந்த்ர கோலத்தில் ஆயர் குளத்தில் அச்சித்த பானு ஸூ ர்யான்
இந்திரா மகன் அர்ஜுனன் -கர்ணன் ஸூ ர்ய புத்ரன் கொன்று
ரிஷிகள் கோபிகள்
சீதா தூதன் ஆலிங்கனம் -ருக்மிணி அந்தணர் கருடன் தான் மகிழ்ந்து ஆலிங்கனம்
கோவர்த்தன மலைக்கு கர ஸ்பர்சம் கொடுத்து குறை
ஆஞ்சநேயர் -வெண்ணெய் குரங்குக்கும் கொடுத்து -செவிக்கு -அர்ஜுனன் தேரில் -கீதை வெண்ணெய் கொடுத்தான்
செவிக்கும் உணவு வெண்ணெய் காப்பு ஆஞ்சநேயர் பிரசித்தம் இதனாலே
ஜாம்பவதி திருக்கல்யாணம்

இன்னார் தூதன் என நின்றான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா இதனால் தான் -மறை மூர்த்தி கண்ணா

அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
சேஷ்டிதங்களில் பிரதானம் தனித்து இ பானை உடல் -வெண்ணெய் ஜீவாத்மா
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான்
அனைத்தும் அவன் சொத்து
திருடன் -பாபங்களை திருடி -இது தானே நம் சொத்து
சேஷ்டிதங்களைக் கேட்டவர் பாபங்கள் திருடப்படும்

இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி

ஆச்சார்ய வைபவம் காட்டவே
சாந்தீபினி –64 நாள்களில் 64 கலைகள்
அனைத்தும் கைங்கர்யம் ஆச்சார்யருக்கு -குசேலர் உடன் சமித் கொண்டு வர –
குரு தக்ஷிணை
ருக்மிணி திருக் கல்யாணம் வைபவம் –கூடப்பிறந்த மெய் வாய் கை கண் செவி –
ஜீவன் பரமாத்வை -ப்ரயோஜனாந்தரங்கள்
ஆச்சார்யர் மூலம் பற்றி -அந்தணர் -இத்தைக் காட்டவே
கீதாச்சார்யர் –
ஸ்ரீ லஷ்மீ நாதன் -பதவியை விரும்பி ஸ்ரேஷ்டம்

இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்
அஷ்டமி தேவதை பிரார்த்தனை
நவமி தேவதை ஸ்ரீ ராம நவமி போல்
இருவர் குறை தீர்க்க
கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி பெருமை

ஆவணி ரோஹிணி அஷ்டமி சேர்ந்த ஸ்ரீ ஜெயந்தி -அத்புதம் பாலகம் –

சூட்டு நன் மாலைகள்

வண்ண மாடங்கள்

ஒருத்தி மகனாய்

பஞ்ச க்ருஹங்கள் -சந்திரோதயம் ஆன பின்பு -தேவகி பூர்ண சந்த்யா
சந்திரன் ரிஷப ராசி –செவ்வாய் மகர ராசி-புதன் கன்னி ராசி-குரு கடக ராசி –
சனி துலா ராசி -ரிஷப லக்கினத்தில் -திரு அவதாரம்

ஸ்ரீ வித்யா ராஜ கோபாலனாக சேவை -முண்டாசால் அனைவரையும் மயக்கி
கருணை ரசம் வழிய

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ணனின் திரு நாமங்கள் —

August 15, 2020

ஸ்ரீ ஹரி – இயற்கையின் அதிபர்
ஸ்ரீ கேசவன் – அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
ஸ்ரீதரன் – இலக்குமியை மார்பில் கொண்டவன்
ஸ்ரீ வாசுதேவன் – அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
ஸ்ரீ விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.

ஸ்ரீ மாதவன் – பெரும் தவம் செய்பவன்.
ஸ்ரீ மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ புண்டரீகாட்சன் – தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
ஸ்ரீ ஜெனார்தனன் – தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல்
இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;

ஸ்ரீ விருபாட்சணன் – “விருசபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இச்சணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும்.
இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள்
என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
ஸ்ரீ அஜா – எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ தாமோதரன் – தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும்,
சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ ரிஷிகேசன் – “என்றும் மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள்.
இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
ஸ்ரீ மகாபாகு – தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ அதாட்சன் – எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ நாராயணன் – மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
ஸ்ரீ புருசோத்தமன் – ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சர்வன் – அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீ சத்யன் – கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.

ஸ்ரீ ஜிஷ்ணு – தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் ஜிஷ்ணு என அறியப்படுகிறான்.
ஸ்ரீ அனந்தன் – அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
ஸ்ரீ கோவிந்தன் – கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.[5]
ஸ்ரீ அச்சுதன் – என்றும் நழுவாதவர்
ஸ்ரீ பத்மநாபன் – தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

ஸ்ரீ கிருஷ்ணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய
இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான்.
( “க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள்.
“கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).
ஸ்ரீ கீதாச்சார்யன்
ஸ்ரீ அச்சாலன் தற்போதும் உள்ளவர்
ஸ்ரீ அச்சுதன் நழுவாதவர்
ஸ்ரீ அற்புதன் வியக்கத்தக்கவன்

ஸ்ரீ ஆதிதேவன் உண்மையான இறைவன்
ஸ்ரீ ஆதித்தியன் அதிதியின் மகன்
ஸ்ரீ அஜென்மா பிறப்பில்லாதவன்
ஸ்ரீ அஜெயன் பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
ஸ்ரீ அட்சரன் என்றும் நிலையானவன்

ஸ்ரீ அமிர்தன் மரணம் அற்றவன்
ஸ்ரீ ஆனந்தசாகரன் பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
ஸ்ரீ அனந்தன் அளவிட முடியாதவன்
ஸ்ரீ அனந்தஜித் என்றும் வெற்றியாளன்
ஸ்ரீ அனயன் தலைமை அற்றவர்

ஸ்ரீ அனிருத்தன் தடுத்து நிறுத்த முடியாதவன்
ஸ்ரீ அபாரஜித் வெல்லப்பட முடியாதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் படிகம் போன்று தூய்மையானவன்
ஸ்ரீ பிகாரி எங்கும் பயணம் செய்பவன்
ஸ்ரீ பாலகோபாலான் அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்

ஸ்ரீ பாலகிருஷ்ணன் குழந்தை கிருஷ்ணன்
ஸ்ரீ சதுர்புஜன் நான்கு கைகள் கொண்டவன்
ஸ்ரீ தானவேந்திரன் செல்வங்களை அருள்பவன்
ஸ்ரீ தயாளன் இரக்கத்தின் களஞ்சியம்
ஸ்ரீ தயாநிதி இரக்கமுள்ள அருளாளன்

ஸ்ரீ தேவாதிதேவன் தேவர்களின் தலைவர்
ஸ்ரீ தேவகிநந்தன் தேவகியின் மகன்
ஸ்ரீ தேவேஷ்வா அவதார புருஷன்
ஸ்ரீ தர்மாதியட்சர் தரும தேவன்
ஸ்ரீ திரவின் எதிரிகள் அற்றவன்

ஸ்ரீ துவாரகாபதி துவாரகையின் தலைவர்
ஸ்ரீ கோபாலன் ஆவினங்களுடன் விளையாடுபவன்
ஸ்ரீ கோபாலப் பிரியன் ஆவினங்களை நேசிப்பவர்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
ஸ்ரீ ஞானேஸ்வரன் அறிவுக் கடவுள்

ஸ்ரீ ஹரி இயற்கையின் அதிபர்
ஸ்ரீ இரண்யகர்பன் “அனைத்தையும் படைப்பவர்”
ஸ்ரீ ரிஷிகேசன் அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
ஸ்ரீ ஜெகத்குரு பிரபஞ்சத்திற்கு குரு
ஸ்ரீ ஜெகதீஷ்வரன் பிரபஞ்சத்தின் இறைவன்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்திற்கு தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரங்களை வழங்குபவர்
ஸ்ரீ ஜெயந்தன் அனைத்துப் பகைவர்களை வெல்பவன்
ஸ்ரீ ஜோதிராதித்தியன் சூரியனில் ஒளியாக விளங்குபவர்
ஸ்ரீ கமலநாதன் இலக்குமியின் நாதர்

ஸ்ரீ கமலநயனன் தாமரை வடிவக் கண்களை கொண்டவர்.
ஸ்ரீ கம்சந்தகன் கம்சனை கொன்றவர்
ஸ்ரீ காஞ்சலோசனன் தாமரைக் கண்ணன்
ஸ்ரீ கேசவன் நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
ஸ்ரீ கிருட்டிணன் அனைவரையும் கவர்பவன்

ஸ்ரீ இலக்குமி காந்தன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ லோகாதியட்சன் மூவுலகின் நாயகன்
ஸ்ரீ மதனன் அன்பிற்கினியவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் கணவர்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்

ஸ்ரீ மகேந்திரன் இந்திரனுக்குத் தலைவர்
ஸ்ரீ மன்மோகன் தடுமாறத மனம் உடையவன்
ஸ்ரீ மனோகரன் அழகின் அதிபதி
ஸ்ரீ மயூரன் மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன்
ஸ்ரீ மோகனன் வசீகரமானவன்

ஸ்ரீ முரளி புல்லாங்குழலை இசைப்பவன்
ஸ்ரீ முரளிதரன் புல்லாங்குழலை கையில் கொண்டவன்
ஸ்ரீ முரளி மனோகரன் குழல் ஊதி மயக்குபவன்
ஸ்ரீ நந்த குமாரன் நந்தகோபரின் வளர்ப்பு மகன்
ஸ்ரீ நந்த கோபாலன் பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன்

ஸ்ரீ நாராயணன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவர்
ஸ்ரீ நவநீதசோரன் வெண்ணெய் திருடி உண்பவன்
ஸ்ரீ நிரஞ்சனன் அப்பழுக்கற்றவன்
ஸ்ரீ நிர்குணன் குணங்களைக் கடந்தவன்
ஸ்ரீ பத்மஹஸ்தன் தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்

ஸ்ரீ பத்மநாபன் தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் முற்றான முழுமையான உண்மையானவன்
ஸ்ரீ பரமாத்மா அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன்
ஸ்ரீ பரமபுருஷன் மேலான புருஷன்
ஸ்ரீ பார்த்தசாரதி அருச்சனனின் தேரை ஓட்டியவன்

ஸ்ரீ பிரஜாபதி அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
ஸ்ரீ புண்ணியவான் தவத்தால் அடையத்தக்கவன்
ஸ்ரீ புருசோத்தமன் ஜீவாத்மாக்களில் மேலானவன்
ஸ்ரீ ரவி லோசனன் சூரியனைப் போன்ற கண்களை உடையவன்
ஸ்ரீ சகஸ்ராட்சகன் ஆயிரம் கண்களைக் கொண்டவன்

ஸ்ரீ சஹஸ்ர ஜிதன் ஆயிரம் பேர்களை அழித்தவன்
ஸ்ரீ சாட்சி அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
ஸ்ரீ சனாதனன் தொன்று தொட்டு விளங்குபவர்
ஸ்ரீ சர்வ ஜனன் அனைத்தும் அறிந்தவர்
ஸ்ரீ சர்வ பாலகன் அனைத்தையும் காப்பவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் அனைத்திற்கும் தலைவர்
ஸ்ரீ சத்திய வசனன் சத்தியம் மட்டும் பேசுபவர்
ஸ்ரீ சத்திய விரதன் உண்மையையே இலக்காகக் கொண்டவர்
ஸ்ரீ சாதனன் அனைத்தறிவுக்கும் கருவியானவன்
ஸ்ரீ ஸ்ரேஷ்டன் மிகவும் புகழ்பெற்றவன்

ஸ்ரீ காந்தன் இலக்குமியின் பிரியமானவன்
ஸ்ரீசியாம் கருநிறத்தவன்
ஸ்ரீ சியாமசுந்தரன் கார்மேக அழகன்
ஸ்ரீ சுதர்சனன் சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்.
ஸ்ரீ சுமேதா நுட்பமான அறிவினன்

ஸ்ரீ சுரேஷ்வரன் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
ஸ்ரீ சுவர்க்கபதி சொர்க்கத்தின் தலைவர்
ஸ்ரீ திரிவிக்கிரமன் மூவுலகையும் அளந்தவன்
ஸ்ரீ உபேந்திரன் இந்திரனின் நண்பர்
ஸ்ரீ வைகுந்த நாதன் வைகுந்தத்தில் உறைபவன்

ஸ்ரீ வர்தமானன் அருவமான (உருமற்ற) இறைவன்
ஸ்ரீ வாசுதேவ புத்திரன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ விஷ்ணு பிரபஞ்சத்தின் இறைவன்
ஸ்ரீ விஸ்வதட்சினன் திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
ஸ்ரீ விஸ்வகர்மன் அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர்

ஸ்ரீ விஸ்வமூர்த்தி அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
ஸ்ரீ விஸ்வரூபன் பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர்
ஸ்ரீ விஸ்வாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மா
ஸ்ரீ விருசபர்வா அறத்தின் நாயகன்
ஸ்ரீ யாதவேந்திரன் யாதவ குல தலைவர்

ஸ்ரீ யோகி யோகியானவன்
ஸ்ரீ யோகினாம்பதி யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)
ஸ்ரீ அச்சலன் குழந்தை
ஸ்ரீ அச்சுதன் தவறிழைக்காதவன்
ஸ்ரீ அவ்வியக்தன் தெள்ளத் தெளிவான மனதுடையவன்

ஸ்ரீ பங்கே பிகாரி (வனத்தின் விகாரி என்பதன் திரிபுச் சொல்) பிருந்தாவனக் காடுகளில் விளையாடுவதை நேசிப்பவன்
ஸ்ரீ பிகாரி விளையாட்டை நேசிப்பவன்
ஸ்ரீ பக்தவத்சலன் பக்தர்களை தூக்கி விடுபவர்
ஸ்ரீ பிரஜேஷா விரஜ மக்களின் தலைவன்
ஸ்ரீ சக்கரதாரன் கையில் சக்கரத்தைக் கொண்டவன்.

ஸ்ரீ தாமோதரன் அன்னை யசோதையால் இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன்.
ஸ்ரீ தீனபந்து துன்பத்திலிருப்போரின் உறவினன்
ஸ்ரீ தீனநாதன் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தருபவர்
ஸ்ரீ துவாரகாதீசன் துவாரகையின் தலைவர்
ஸ்ரீ துவாரகாநாதன் துவாரகையின் தலைவர்

ஸ்ரீ கண்ஷியாம் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ கிரிதாரி கோவர்தன மலையை கையால் உயர்த்தி பிடித்தவன்
ஸ்ரீ கோபாலன் இடையன், பசுக்களை காப்பவன், (குறிப்பாக அனைத்து சீவராசிகளை காப்பவர்).
ஸ்ரீ கோபிநாதன் கோபியர் உளம் கவர் கள்வன்
ஸ்ரீ கோவிந்தன் ஆவினங்களை காப்பவர்

ஸ்ரீ கோவிந்தராஜன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ குருவாயூரப்பன் குருவாயூர் கோயிலில் குடி கொண்டவன்
ஸ்ரீ ஹரி பாவங்களை நீக்குபவர், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுவிப்பவர்.
ஸ்ரீ ஈஸ்வரன் இறைவன்
ஸ்ரீ ருஷீகேசன் உணர்வுகளின் தலைவர்

ஸ்ரீ ஜெகன்நாதர் பிரபஞ்சத்தின் தலைவர்
ஸ்ரீ ஜெனார்தனன் வரம் தருபவர்
ஸ்ரீ காலதேவன் காலத்திற்கு அதிபதி
ஸ்ரீ கல்மஷாஹீனன் பாவமற்றவன்
ஸ்ரீ கண்ணையா பக்தர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்பவர் அல்லது பக்தர்களிடம் நெருக்கமாக இருப்பவர்

ஸ்ரீ கேசவன் நீண்ட முடியை உடையவன்
ஸ்ரீ மதன மோகனன் தன் அழகால் கலக்கமடையச் செய்பவன்
ஸ்ரீ மாதவன் இலக்குமியின் நாயகன்
ஸ்ரீ மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ மணிகண்டன் கௌஸ்துபம் எனும் மணிமாலையை அணிந்தவன்

ஸ்ரீ முராஹரி முரா எனும் அரக்கனை கொன்றவர்
ஸ்ரீ முகிலன் கார்மேக நிறத்தவன்
ஸ்ரீ முகுந்தன் வீடுபேற்றுக்கான ஆன்மீக அறிவொளியை அருள்பவர்.
ஸ்ரீ நந்தகோபாலன் இடையர்களுக்குப் பிரியமானவன்
ஸ்ரீ நந்தலால் நந்தகோபனுக்குப் பிரியமானவன்.

ஸ்ரீ பாண்டுரங்கன் பண்டரிபுரத்து வெள்ளை நிற கிருஷ்ணண்
ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் அனைத்திற்கும் மேலான பிரம்மம்
ஸ்ரீ பரமேஸ்வரன் மேலான ஈஸ்வரன்
ஸ்ரீ பார்த்தசாரதி குரு ஷேத்திரப் போரில் அருச்சுனனுக்கு தேரோட்டியவர்.
ஸ்ரீ பிரதிபாவனன் பாவத்தில் வீழ்ந்தவர்களை தூய்மைப்படுத்துபவர்

ஸ்ரீ இராதாவல்லபவன் ராதையின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ இராஜகோபாலன் இடையர்களின் அரசன்
ஸ்ரீ ரண்ச்சோதரை அமைதி காக்கும் பொருட்டு போரை மறுத்து துவாரகைக்கு ஓடியவன்
ஸ்ரீ ஸ்யாமசுந்தரன் கருப்பழகன்
ஸ்ரீ சந்தானம் அன்பானவன்

ஸ்ரீ சந்தானசாரதி வானுலக ஆன்மீக தோரோட்டி
ஸ்ரீ சௌரி சூரசேனரின் வழித்தோன்றல்
ஸ்ரீ வாசுதேவன் வசுதேவரின் மகன்
ஸ்ரீ யதுநந்தனன் யதுக்களின் அன்பிற்குரியவன்
ஸ்ரீ யோகீஸ்வரன் யோகிகளின் தலைவர்
ஸ்ரீ யசோதா நந்தனன் யசோதையின் வளர்ப்பு மகன்

——————–

ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ
ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ
ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ
ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ
ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ
ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஶ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் வேதவேத்யாய நமஹ
ஓம் தயாநிதேயே நமஹ
ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ

—————

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்–

August 12, 2020

சர்க்கம் -பிரதி சர்க்கம் -வம்சம்-மன் வந்த்ரங்கள் -வம்ச அநு -கிளைக் கதைகள் -புராண பஞ்ச லக்ஷணங்கள்
புராதனம் -அபி நவம் -புராணம்

ஸ்ரீமத் பாகவதம் தியான ஸ்லோகம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்னம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ரமாபதி பதாம் போஜ பரிஸ்புரித மானஸம்
ஸேநாபதிம் அஹம் வந்தே விச்வக்ஷேனம் நிரந்தரம்
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வமங்களா!!
ஜனக: சங்கரோ தேவ: தம்வந்தே குஞ்ஜராரனனம்

பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்ய விக்ரஹம்
ஸ்ரீமத் போதேந்த்ர யோகேந்த்ர தேஸீகேந்த்ரம் உபாஸ்மஹே!
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ ஸுக ஸௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத அர்ஜுன வஷிஷ்ட விபீஷனாதீன் புன்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி!!

ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி

தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே (அ)த்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்

நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:

யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி!!

ய:ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயா(ஆ)ஹ புராண குஹ்யம் தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்

கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

நம: பங்கஜ நாபாய நம : பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே

ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்!!

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம: ஸ்ரீ ஹரயே நம:

—————————

கடன், சத்ரு பயம், வியாதி முதலிய கஷ்டங்களைப் போக்கி, பிரிந்த சொந்தங்களைத் திரும்பவும்
ஒன்று சேர்க்கவைக்கும் அற்புத ஸ்லோகம் இது…

காயந்தி தே விசதகர்ம க்ருஹேஷு தேவ்யோ
ராக்ஞாம் ஸ்வ சத்ருவதமாத்ம விமோக்ஷணம் ச
கோப்யஸ்ச குஞ்சரபதேர் ஜனகாத்மஜாயா:
பித்ரோஸ்ச லப்த சரணா முனயோ வயம் ச–உத்தவர் ஸ்ரீபகவானை வேண்டுவதாக அமைகிறது இந்த ஸ்லோகம்.

சங்கசூடன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றப் பட்ட கோபிகைகள் தங்களை எப்படி கானம் செய் கின்றனரோ
மேலும், கஜேந்திரன் எனும் யானையைத் தாங்கள் காத்தது,
ஸ்ரீராமாவதாரத்தில் சீதையைக் காப்பாற்றியது,
வசுதேவர்- தேவகியை கம்சனின் கொடுமையில் இருந்து காப்பாற்றியது ஆகியவற்றைச் சொல்லி,
தங்களைச் சரணடைந்த நாங்களும் முனிவர்களும் எப்படித் துதிக்கிறோமோ…
அதே போன்று, ஜராசந்தனால் சிறையில் அடைக்கப் பட்ட அரசர்களின் மனைவிகள் தங்களின் குழந்தைகளை
(கண்ணனின் புகழ் பாடி) சீராட்டும்போது, அவர்களின் தந்தையரை ஸ்ரீபகவான் விடுவித்துக் காப்பாற்றுவார்.

—————–

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும்.
அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
இதையே பாகவதத்தில்
நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:
என்ற ஸ்லோகத்தில் காணலாம். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும்.

ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும் யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக்கொண்ட
சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன்.
பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரியை எனக்குக் காட்டிவிட்டீர்களே. வேறு என்ன வேண்டும்?
என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும்
துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை என்றான்.. அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார்.
அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து
கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

thiruvonum.wordpress.com/2019/09/08/——ஸ்ரீ பாகவத புராண ஏற்றம் —

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்–ஸ்ரீ நாரதர் சதுஸ் ஸ்லோகி —

August 11, 2020

ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும் திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்

யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-

யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்

அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத் அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-

ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத் ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-

ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்

யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்

ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள -தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்

—-

சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்

வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம் ஸூப தர்சனே சாத்விகானி புராணி
விஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே

யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் -மஹா பாரத சாரம் -காயத்ரி பாஷ்யம் -வேத விவரணம் –
புராண ஸ்ரேஷ்டம் –12 ஸ்கந்தங்கள் –100 அதிகாரங்கள் –18000 ஸ்லோகங்கள்

பதவ் யதியவ் பிரதம த்வித்யவ் த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்

முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ

————–

அஹம் வேத்மி சுகோ வேத்தி வ்யாசோ வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ரஹ்யம் ந புத்தியா ந ச திகய –சிவன் சொல்வது -பக்தி ஒன்றாலே பாகவதம் அறியலாம்

ஸ்வயம்புர் நாரத சம்பூ குமாரவ் கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்

நாரதர் சம்பு வையாஸகிர் என்னும் சுகதேவர் -ஸ்ரீ பிருந்தாவன் மதுர ரசம் அனுபவித்தவர்
சுகதேவரே பிராட்டி கையில் கிளி
நாரதர் சிவன் கோபி ஸ்வரூபம் பெற்றவர்கள்

——————

12 ஸ்கந்தங்கள் –18000-ஸ்லோகங்கள் –

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -1-

May 22, 2020

ஸ்ரீ ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவை கொடுப்பது. அதனால் அடையும் பலன் மோட்சம்..

யதா3த்த2 மாம் மஹாபா4க்3 தச்சிகீர்ஷிதமேவ மே |
ப்ரஹ்மா ப4வோ லோகபாலா: ஸ்வர்வாஸம் மேSபி4காங்க்ஷிண: || 1 ||

ஹே உத்தவா! என்னுடைய விஷயத்தில் என்ன பேசினாயோ அது என்னால் விரும்பபட்டதுதான்
(யது குலத்தின் நாசம், அவதார தோற்றத்தை விட்டு விடுதல்). பிரம்மாவும் சிவனும் மேலும் மற்ற தேவர்களான இந்திரன்
போன்ற லோக பாலகர்களும் நான் வைகுண்டத்துக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மயா நிஷ்பாதி3தம் ஹயத்ர தே3வகார்யமஶேஷத: |
யத3ர்த2மவதீர்ணோSஹமம்ஶேன ப்3ரஹமணார்தித: || 2 ||

பூலோகத்தில் என்னால் தேவ காரியங்களும் குறைவில்லாமல் முடிக்கப்பட்டுவிட்டன.
என்னுடைய ஒரு அம்சமான பலராமனுடன் சேர்ந்து, பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி
எந்தக் காரணத்திற்காக நான் அவதாரம் எடுத்தேனோ அது முடிவடைந்துவிட்டது.

குலம் வை ஶாப நிர்த3க்3த4ம் நங்க்ஷ்யத்யன்யோன்யவிக்3ரஹாத் |
ஸமுத்3ர: ஸப்தமே ஹயேனாம் புரீம் ச ப்லாவயிஷ்யதி || 3 ||

அந்தணர் சாபத்திற்கு ஆளாகிவிட்ட இந்த யதுகுலம் பரஸ்பர சண்டைகளினால் முற்றிலுமாக அழிந்துவிடப்போகின்றது.
இன்றிலிருந்து ஏழாவது நாளில் சமுத்திரமானது இந்த நகரை மூழ்கடிக்கப்போகிறது.

யஹர்யேவாயம் மயா த்யக்தோ லோகோSயம் நஷ்டமங்க3ல: |
ப4விஷ்யத்யசிராத்ஸாதோ4 கலினாபி நிராக்ருத: || 4 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த நகரமானது தர்மத்தை இழந்து விடும்.
இது உடனடியாக நடக்கப்போகிறது. பிறகு உலகமானது கலியினால் வியாபிக்கப் போகின்றது.

ந வஸ்தவ்யம் த்வயைவேஹ மயா த்யக்தே மஹீதலே |
ஜனோSப4த்3ர்ரூசிர்ப4த்3ர ப4விஷ்யதி கலௌ யுகே3 || 5 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பின், நீ இங்கே இருக்கத்தகாது.
ஹே உத்தவா! கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்

த்வம் து ஸர்வம் பரித்யஜ்ய ஸ்னேஹம் ஸ்வஜனப3ந்து4ஷு |
மய்யாவேஶ்ய மன: ஸம்யக்ஸமத்3ருக்3விசரஸ்வ கா3ம் || 6 ||

நீ அனைத்தையும் ( பொருட்களையும், உறவினர்களையும் ) துறந்து விடு, முழுமையாக தியாக செய்துவிடு.
உன்னுடைய உற்றார், உறவினர்களிடம் கொண்டுள்ள பற்றை தியாக செய்து விடு. என்னிடமே மனதை நன்றாக நிலைநிறுத்தி,
எல்லா பிராணிகளிடத்திலும் சமநோக்குடன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிரு.

யதி3த3ம் மனஸா வாசா சக்ஷுர்ப்4யாம் ஶ்ரவணாதி3பி4: |
நஶ்வரம் க்3ருஹ்யமாணம் ச வித்3தி4 மாயாமனோமயம் || 7 ||

யத்3 இத3ம் – நாம் பார்த்து அனுபவிகின்ற இவைகள்
க்3ருஹ்யமாணம் – அனுபவிக்கப்படுகின்றதோ, கிரகிக்கப்படுகின்றதோ
நஶ்வரம் – அழியக்கூடியது
மாயா மனோமயம் – ஜாக்ரத் உலகத்தில் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஈஸ்வரனின் மாயையினால்
தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

பும்ஸோSயுக்தஸ்ய நானார்தோ2 ப்4ரம: ஸ கு3ணதோ4ஷபா4க் |
கர்மாகர்மவிகர்மேதி கு3ணதோ3ஷதி4யோ பி4தா3 || 8 ||

பும்ஸஹ – ஜீவனுக்கு;
அயுக்தஸ்ய – சேராதிருப்பவன், ஞானமில்லாதவன், ஆத்ம ஞானத்துடன் இல்லாத ஜீவனுக்கு, அஞானத்துடன் கூடியிருப்பவனுக்கு
நானார்த2: ப்4ரமஹ – அப்ரஹ்மாத்மகமாக ஒன்றுமே இல்லையே
ஸ கு3ணதோ3ஷ பா4க்3 – இது நல்லது, இது கெட்டது என்ற பாகுபாடும் தோன்றுகின்றது
பொருளிடத்தில் குணதோஷம் இருக்கிறதா அல்லது மனதிலிருந்து வருகின்றதா என்று பார்க்கும் போது
இது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது என்று அறியலாம்.
மனதிலிருந்தால் ராக-துவேஷம் என்றும், பொருட்களிலிருந்தால் அதுவே குண-தோஷம் என்றும் அழைக்கப்படுகின்றது.
கு3ணதோ3ஷதி4யஹ – முக்குண வசப்பட்டு
பி4தா3 – கர்ம – செயலில் ஈடுபடுதல்
அகர்ம – செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருத்தல்
விகர்ம – செய்யக்கூடாத செயலை தவறாக செய்தல்
புத்தியில் குண-தோஷம் உள்ளவனுக்கு மேலே கூறப்பட்ட செயல் வேறுபாடுகள் தோன்றுகிறது.
செயல்களினால் பாவ-புண்ணியங்களை அடைகின்றோம். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்துத்தான் தீரும்.
எனவே அதற்கேற்ற உடல் எடுத்தாக வேண்டும். இவ்வாறு பிறப்பு எற்படுகின்றது.
மீண்டும் கர்மம்àபாவ-புண்ணியங்கள்àபிறப்பு இவ்வாறு சம்சார சக்கரத்தில் ஜீவன் சுழன்று கொண்டிருப்பான்

தஸ்மாத3 யுக்தேந்த்3ரியக்3ராமோ யுக்தசித்த இத3ம் ஜகத் |
ஆத்மநீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யாதீ4ஶ்வரே || 9 ||

இதில் ஶமஹ (மனக்கட்டுபாடு), த3மஹ – இந்திரியக் கட்டுப்பாடு என்ற சாதனங்களைப் பயன்படுத்தி
ஞானத்தை அடைய வேண்டும் என்று பகவான் கூறுகின்றார்.
தஸ்மாத்3 – ஆகவே, சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும்.
யுக்த இந்திரிய கி3ராமஹ – அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்தியவனாக இரு, உன் வசத்துக்குள் கொண்டு வா.
ஞான இந்திரியங்கள் பிரத்யக்ஷ பிரமாணமாகவும், போகத்தை அனுபவிக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றோம்.
யுக்த சித்த – மனமும் உன் வசத்துக்குள் இருக்க வேண்டும்.
விததம் ஆத்மானாம் – எங்கும் வியாபித்திருக்கின்ற உன்னை
ஆத்மனீக்ஷஸ்வ – உன்னிடத்திலே காண்பாயாக.
மயி அதீ4ஶ்வரே – அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற என்னிடத்திலும் பார்.

கனவில் தோன்றியிருக்கும் அனைத்தும் என்னால் தோற்றுவிக்கப்பட்டது. என்னாலே அழிக்கப்பட்டு,
என்னிடத்திலே லயமடைந்திருக்கின்றது. அதேபோல ஜாக்ரத் அவஸ்தையில் இந்த உலகம் பிரம்மனான என்னால் தோற்றுவிக்கப்பட்டது.
என்னாலே அழிக்கப்படும், என்னிடத்திலே லயமடைகின்ற என்ற உணர்வு பூர்வமான அறிவை அடைய வேண்டும்.

ஞானவிக்ஞான ஸம்யுக்த ஆத்மபூ4த: ஶரீரிணாம் |
ஆத்மானுப4வதுஷ்டாத்மா நாந்தராயைர்விஹன்யஸே || 10 ||

ஞான விக்ஞான ஸம்யுக்த – ஞானத்துடனும், விக்ஞானத்துடனும் (ஞான நிஷ்டையில் இருக்கும் நிலை) இருப்பவன்,
ஞான நிஷ்டையை அடைந்திருக்கும் ஞானியானவன்.
ஆத்மபூ4த ஶரீரிணாம் – சரீரங்களையுடைய எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னையே பார்க்கின்றான்
ஆத்ம அனுப4வ துஷ்ட ஆத்மா – ஆத்ம ஞானமே அனுபவமாக கொண்டதினால், ஆத்ம அபரோக்ஷ ஞானத்தை அடைந்திருப்பதால்
மன திருப்தியை அடைந்திருப்பான் ஞானி
ந விஹன்யஸே அந்தராயஹ – பிராரப்தத்தினால் உனக்கு வரும் கஷ்டங்களினாலும், தடைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பாய் உத்தவா!

தோ3ஷபு3த்3யோ ப4யாதீதோ நிஷேதா4ன்ன நிவர்ததே |
கு3ணபு3த்3த்4யா ச விஹிதம் ந கரோதி யதா2ர்ப4க: || 11 ||

யதா2 அர்ப4கஹ – ஞானியானவன் சிறு குழந்தையைப் போல
உப4யாதீதஹ – இரண்டையும் கடந்தவன், நன்மை-தீமை, தர்ம-அதர்மம் போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவன்,
இருமையை கடந்தவன்
தோ3ஷ புத்3தி4 – தோஷ புத்தியினால், அதர்மம், கோபம், வெறுப்பு போன்ற தீயகுணங்களுடைய புத்தியிருப்பதால்
நிஷேதா4த் ந நிவர்த்தே – செய்யக்கூடாததை செய்யாமல் விலகுவதில்லை
குணபுத்3த்4யா – குண புத்தியால், நல்லது, தர்மம்
ச விஹிதம் ந கரோதி – செய்ய வேண்டியதை செய்வதும் இல்லை
இவனுக்கு விதி நிஷேதம் எதுவும் கிடையாது

ஸர்வபூ4தஸுஹ்ருச்சா2ந்தோ ஞானவிக்3ஞான நிஶ்சய: |
பஶ்யன்மதா3த்மகம் விஶ்வம் ந விபத்3யேத வை புன: || 12 ||

ஸுஹ்ருத் – நண்பன் – எதிர்ப்பார்ப்பின்றி நட்புடன் பழகுபவன்
ஸர்வபூத – எல்லா ஜீவராசிகளினுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்திருப்பான்–மனம் சாந்தத்துடன் இருப்பான், மனம் மென்மையாக இருக்கும்
ஶாந்தஹ – அவனுடைய மனம் என்றும் அமைதியுடன் இருந்து கொண்டு இருக்கும். அவனுடைய சித்தமும் அமைதியாக இருக்கும்
ஞான விக்ஞான நிஶ்சய – ஞானத்திலும், ஞான நிஷ்டையிலும் உறுதியை அடைந்து விட்டான்.
பஶ்யன் மதா3த்மகம் விஶ்வம் – இந்த உலகத்தை என் ஸ்வரூபமாகவே பார்க்கின்றான்
ந விபத்3யேத வை புன: – இதனால் சம்சாரத்தில் மீண்டும் வீழ்ந்து விட மாட்டான்

ஶ்ரீஶுக உவாச
இத்யாதி3ஷ்டோ ப3க3வதா மஹாபா4க3வதோ ந்ருப |
உத்3த4வ: ப்ரணிபத்யாஹ தத்3 த்வம் ஜிக்3ஞாஸுரச்யுதம் || 13 ||

ஶ்ரீஶுகர் கூறுகிறார்
கிருப – ஹே பரீக்ஷித் ராஜனே!
இதி ஆதி3ஷ்டஹ – இவ்விதம் உபதேசிக்கப்பட்டபின்
மஹாபாகவதஹ – பரமபக்தரான, பக்தர்களுக்குள் மேலானவரான, மோட்சத்தை அடைய விரும்புகின்ற பக்தனான
உத்தவ – உத்தவர்
தத் த்வம் ஜிக்ஞாஸு – ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புபவனாக
ப்ரணிபத்யாஹ அச்யுதம் – அச்சுதனான ஸ்ரீகிருஷ்ண பகவானை பணிவுடன் வணங்கிக் கேட்டார்.

ஶ்ரீஉத்3த4வ உவாச
யோகே3ஶ யோகா3வின்யாஸ யோகா3த்மன்யோக3ஸம்ப4வ |
நி:ஶ்ரேயஸாய மே ப்ரோக்தஸ்த்யாக3: ஸன்னயாஸலக்ஷண: || 14 ||

உத்தவர் கேட்கிறார்
யோகே3ஶ – யோகத்திற்கு தலைவரே! எல்லா சாதனங்களுக்கும் பலனை தருபவரே
யோகவின்யாஸ – சாதகர்களை காப்பாற்றுபவர்; பக்தர்களை ரக்ஷிப்பவர்
யோகா3த்மன் – சாதனங்களின் ஸ்வரூபமாக இருப்பவரே
யோக3ஸம்ப4வ – சாதனங்களின் தோற்றத்திற்கும் காரணமானவரே1
ஸந்ந்யாஸ லக்ஷண – சந்நியாஸ ஸ்வரூபமானது
தியாகஹ – தியாகமானது
நிஶ்ரெயஸாய – மோட்சத்தைப் பற்றி, ஆன்மீக மேன்மைக்காக
மே ப்ரோக்தஹ – எனக்கு உங்களால் உபதேசிக்கப்பட்டது

த்யாகோ3Sயம் துஷ்கரோ பூ4மன்காமானாம் விஷயாத்மபி4: |
ஸதராம் த்வயி ஸர்வாத்மன்னப4க்தைரிதி மே மதி: || 15 ||

பூமன் – எல்லையற்றவரே! பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவரே!
காமானாம் விஷயாதமபி4: – புலனுகர் இன்பங்களில் பற்றுக் கொண்டு பற்பல விஷயங்களில் சிக்கியுள்ளவர்களால்
அயம் த்யாக3ஹ – இந்த தியாகத்தை செயல்படுத்துவது மிகவும் கடினம்
த்வயி அபக்தைஹி ஸுதராம் – அதிலும் தங்களிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் கடினம்.
ஸர்வாத்மா – அனைத்துமாக இருக்கின்றவரே!
இதி மே மதி: – இது என்னுடைய கருத்து

ஸோSஹம் ம்மாஹமிதி மூட4மதிர்விகா3ட4ஸ்
த்வன்மாயயா விரசிதாத்மனி ஸானுபந்தே4 |
தத்த்வஞ்தஸா நிக3தி3தம் ப4வதா யதா2ஹம்
ஸம்ஸாத4யாமி ப4க3வன்னனுஶாதி4 ப்4ருத்யம் || 16 ||

ப்4ருத்யம் – உங்கள் சேவகனான எனக்கு
ப4வதா நிக3தி3தம் – உங்களால் உபதேசிக்கப்பட்ட தியாகத்தை
யதா2 அஹம் – எவ்விதம் நான்
அஞ்ஜஸா ஸம்ஸாத4யாமி – உடனடியாக, நன்கு அடையமுடியுமோ
பகவன் அனுஶாதி4 – பகவானே அதை உபதேசித்து அருளுங்கள்
மூ4டமதிஹி – தவறான புத்தியுடையவனாக, அறியாமையுடனும், மோகத்தில் இருக்கின்றேன்
ஸஹ அஹம் – இப்படிபட்ட நான்
அஹம மம இதி = நான் என்னுடையது என்று புத்தியை உடையவனாக, இந்த அனாத்மாவான உடலில்
நான் என்னுடையது என்ற மதிமயக்கத்தில் மூழ்கி இருக்கின்றேன்.
த்வன் மாய்யா விரசித ஆத்மனி – உங்களுடைய மாயையினால் உருவக்கப்பட்ட இந்த சரீரத்தில்
விகா3த4 – மூழ்கி இருக்கின்றேன்
ஸானுப3ந்தே4 – உற்றார்-உறவினர்களிடத்திலும் நான், என்னுடையது என்ற பற்றில் மூழ்கியவனாக இருக்கின்றேன்.

ஸத்யஸ்ய தே ஸ்வத்3ருஶ ஆத்மன ஆத்மனோSன்யம்
வக்தாரமீஶ விபு3தே4ஷ்வபி நானுசக்ஷே |
ஸர்வே விமோஹித்தி4யஸ்தவ மாய்யேமே
ப்3ரஹமாத3யஸ்தனுப்4ருதோ ப3ஹிர்ர்த2பா4வா: || 17 ||

இதில் உத்தவருக்கு பகவானிடத்தல் இருக்கும் சிரத்தையை எடுத்துக் காட்டுகின்றது.
ஈஶ – ஈஶ்வரரே
ஆத்மனஹ – எனக்கு
விபு3தே4ஷ் அபி – தேவர்களுக்குள்ளும் கூட
அன்யம் வக்தாரம் – உங்களைத் தவிர உபதேசிப்பவர் வேறொருவரை
ந அனுசக்ஷே – பார்க்கவில்லை
ஸத்யஸ்ய – என்றும் இருக்கின்ற
ஸ்வத்3ருஶ – சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாக
ஆதமன – ஆத்ம தத்துவமாக இருக்கின்ற பகவானே
மாயயா – உங்களுடைய வசத்தினால்
ஸர்வே விமோஹித தி4ய – எல்லா ஜீவராசிகளும் ஆத்மா-அனாத்மா விஷயத்தில் மோக வசப்பட்டுள்ள புத்தியை
உடையவர்களாக இருக்கிறார்கள்
தனுப4ருதோ – உடலைத் தாங்கியுள்ள
ப்3ரஹ்மாத4யஹ – பிரம்மா முதலிய எல்லோரும்
ப4ஹிரர்த2பா4வா – எல்லா ஜீவராசிகளும் வெளி விஷயத்தையே பார்க்கும் உணர்வு உடையவர்களாக
இயற்கையாகவே இருக்கிறார்கள். யாருமே உட்புறமாக மனதை திருப்பி விசாரம் செய்வதில்லை

தஸ்மாத்3 ப4வந்தமனவத்3யமனந்தபாரம்
ஸர்வக்3ஞமீஶ்வரமகுண்ட2விகுண்ட2தி4ஷ்ண்யம் |
நிர்விண்ணதீ4ரஹமு ஹே வ்ருஜினாபி4தப்தோ
நாராயணம் நரஸக2ம் ஶரணம் ப்ரபத்3யே || 18 ||
ஶரணம் ப்ரபத்3யே – நான் சரணடைகிறேன்.

தஸ்மாத்3 ப4வந்தம் – ஆகவே உங்களை
அனவத்யம் – குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர், வஞ்சகமற்றவர்
அனந்தபாரம் – காலத்தாலும், தேசத்தாலும் வரையறுக்கப்படாதவர், நித்யமானவர். இது குரு அடைந்துள்ள ஞானத்தை குறிக்கின்றது)
ஸர்வஞம் – அனைத்தையும் அறிந்தவர், ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க தேவையான அனைத்து அறிவையும் கொண்டவர்.
இது பகவானுக்கு பொருந்தாது மற்ற ஸத்குருவிற்கு பொருந்தும்.
ஈஶ்வரம் – பகவானைக் குறிக்கும் போது இது ஸ்துதியாக இருக்கின்றது.
குருவைக் குறிக்கும் போது சாமர்த்தியம் உடையவராக இருப்பதை குறிக்கும்.
மன்னிக்கும் குணமும், பொறுமையும் உடையவர். சிஷயனிடத்தில் இருக்கும் குறைகளை நீக்கி
அரவனைத்து உயர்த்தும் சாமார்த்தியம் உடையவர்
அகுண்ட2விகுண்ட2 த்4ருஷ்ன்யம் – அழிவில்லாத வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவானே!
பிரம்ம நிலையில் குரு இருக்குமிடம் அழியாததாகும். அதாவது பிரம்மனாகவே இருக்கின்றவர்.
நாராயணம் – பகவானை குறிக்கும் போது நீங்கள் நாராயணனாக இருக்கிறீர்கள்.
நாரம் என்ற சொல்லுக்கு மனித சமூகம், அயணம் என்பது இருப்பிடம், லட்சியம் குறிக்கின்றது.
எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபமாக இருப்பவர்
ஜீவர்கள் அடைய வேண்டிய லட்சியமாக இருப்பவர்
நரஸக2ம் – எல்லா மனிதர்களுக்கும் நண்பராக இருப்பவர், அஜாதசத்ருவாக இருக்கும் தங்களை நான் சரணடைகின்றேன்.
நிர்விண்ணதீ4ரஹம் – நான் துயரமடைந்த மனதுடையவனாக இருக்கின்றேன்
வ்ரஜின அபிதப்தஹ – பாவத்தினால் கூட நான் வாடிக் கொண்டிருக்கின்றேன்.
மனதிலிருக்கும் விருப்பு-வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்களினால் வதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றேன்.

ஶ்ரீப4கவான் உவாச
ப்ராயேண மனுஜா லோகே லோகதத்த்வ்விசக்ஷணா: |
ஸமுத்3த4ரந்தி ஹயாத்மானமாத்மனைவாஶுபா4ஶயாத் || 19 ||

ஶ்ரீபகவான் கூறினார்.
மனிதர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய முன்னேற்றத்திற்கு அவனே தான் காரணமாக இருக்கின்றான்.
ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ப்ராயேண – பொதுவாக எப்பொழுதும்
லோகே மனுஜா – இந்த உலகத்திலுள்ள மனிதர்கள்
லோகதத்த்வ விசக்ஷணா: – இந்த உலகத்திலுள்ள விஷயங்களை, தத்துவங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.
அஶுப4 ஆஶயாத் – அவர்களிடத்திலிருக்கும் விஷய, அசுப வாஸனைகளிலிருந்து, எல்லாவித தீய குணங்களிலிருந்து
ஆத்மானாம் ஆத்மனா ஏவ – தன்னை தன்னாலேயே
ஸமுத்3த4ராந்தி – உயர்த்திக் கொள்கிறார்கள்
நிகழ்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் வருங்காலத்தில் ஊழ்வினையாக வருகின்றது.
எனவே ஆராய்ந்து அறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மனோ கு3ருராத்மைவ புருஷஸ்ய விஶேஷத: |
யத்ப்ரத்யக்ஷானுமானாப்4யாம் ஶ்ரேயோSஸாவனுவிந்ததே || 20 ||

ஆத்மனஹ – ஜீவனான எனக்கு (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை உடையவன்)
ஆத்மா ஏவ குரு – புத்தியானது குருவைப்போல உள்ளது. எல்லா பிரமாணங்களுக்கும் பின்னால் மனம்
இருந்து கொண்டு இருக்கின்றது. புத்தியானது அறிவைக் கொடுக்கும் பொதுவான பிரமாணமாக இருக்கின்றது.
யத் – எப்படி குருவாக இருப்பது என்றால்
பிரதியக்ஷ, அனுமானம் இவைகளின் மூலமாக தனக்கு தானே நன்மையை தேடிக் கொள்கின்றான்-
குருவினுடைய கிருபையை பணிவு மூலம் அடைய வேண்டும். சாஸ்திரத்தின் கிருபையை அடைய வேண்டும்.
ஆத்ம கிருபையை அடைய வேண்டும். அதாவது நம்மிடத்தில் நமக்கே கிருபையிருக்க வேண்டும்.
ஈஸ்வர, குரு கிருபை அடைந்தவர்களுக்கு இந்த ஆத்ம கிருபை நிச்சயமாக கிடைக்கும்

புருஷத்வே ச மாம் தீ4ரா: ஸாங்க்2ய்யோக3விஷாரதா3: |
ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் || 21 ||

இதில் பகவான் மனிதப்பிறவியின் மதிப்பைக் கூறுகின்றார்.
புருஷத்வே – மனிதனுடைய ஜென்மத்தில்தான்
தீ4ரா: – விவேகமுடையவர்கள்
ஸாங்க்2ய யோக3 – சாங்கியத்திலும், யோகத்திலும்
விஶாரதா3: – தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதால்
ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் – அனைத்து ஆற்றலும் கொண்ட பரமாத்வான
மாம் ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி – என்னை அடைகின்றார்கள்

ஏகத்3வித்ரிசதுஸ்பாதோ3 ப3ஹுபாத3ஸ்ததா2பத3: |
ப3ஹவ்ய: ஸந்தி புர: ஸ்ருஷ்டாஸ்தாஸாம் மே பௌருஷீ ப்ரியா || 22 ||

படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளில் மனிதப்பிறவிதான் எனக்கு பிடித்தமானது.
ஒரு கால்களுடையவைகள், இரண்டு கால்களுடையவைகள், மூன்று கால்களுடையவைகள், நான்கு கால்களுடையவைகள்,
பல கால்களுடையவைகள், கால்களே இல்லாதவைகள் என பலவகைப்பட்ட படைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
அவைகளிலே எனக்கு மனித சரீரம்தான் பிடித்தமானது

அத்ர மாம் ம்ருக3யந்த்யத்3தா4 யுக்தா ஹேதுபி4ஶ்வரம் |
க்3ருஹயமாணௌர்கு3ர்ணௌர்லிங்கை3ர் க்3ராஹயமனுமானக்த: || 23 ||

மனித சரீரத்திலிருந்து கொண்டு புத்தியின் துணைக்கொண்டு என்னை அறிகின்றார்கள்.
சரியான பிரமாணத்தை பயன்படுத்தி புத்தியில் என்னை அடையும் வழியை அறிகின்றார்கள்.
வெறும் புலன்களைக் கொண்டு என்னை அறியமுடியாது.

அத்ராப்யுதா3ஹரந்தீம்மிதிஹாஸம் புராதனம் |
அவதூ4தஸ்ய ஸ்ம்வாத3ம் யதோ3ரமித்தேஜஸ: || 24 ||

இந்த விஷயமாக மிகப் பழமையான ஒரு இதிகாசத்தை, கதையை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள்.
அது யது மகராஜாவுக்கும், மிகுந்த தேஜஸ்வியான அவதூதருக்கும் இடையே நடந்த உரையாடலாக இருக்கின்றது.

அவதூ4தம் த்3வியம் கஞ்சிச்சரந்தமகுதோப4யம் |
கவிம் நிரீக்ஷ்ய தருணம் யது3: பப்ரச்ச2 த4ர்மவித் || 25 ||

த்3விஜம் – இருபிறப்பாளர் (பிராமணர்), ஞானத்தினால் வேறொரு பிறப்பை எடுத்த
கஞ்சித் சரந்தம் – யாரோ ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்
அகுதோப4யம் – எதனாலும் பயப்படுத்த முடியாதவர்; எதைக் கண்டும் பயப்படாதவர்
கவிம், தருணம் – ஆத்ம ஞானி, அறிவாளி, இளம் வயதுடையவர்
நிரீக்ஷ்ய – இப்படிப்பட்டவரை பார்த்து
த4ர்மவித் – தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த
யது3: – யது3 என்ற அரசன்
ப்ப்ரச்ச2 – கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்

ஶ்ரீயது3ருவாச
குதோ பு3த்3தி4ரியம் ப்3ரஹ்மன்னகர்து: ஸுவிஶாரதா3 |
யாமாஸாத்3ய ப4வால்லோகம் வித்3வாம்ஶ்சரதி பா3லவத் || 26 ||

யது மகராஜன் கேட்டான்.
அவதூ3தர் – சந்நியாஸ ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வகையினர். இதற்கு நன்கு அனைத்தையும் துறந்து விடுதல் என்று பொருட்படும்.
அ – அக்ஷரத்வாத் – அழியாத ஞானத்தை உடையவர்
வ – வரேன்யாத் – நாடப்பட வேண்டியவர்
தூ3 – தூ3த சம்சாராத் – சம்சாரத்தை விட்டவர்
த – தத்வமஸி என்ற வாக்கியத்தை உணர்ந்தவர்.
குதஹ இயம் ஸுவிஶாரதா3 புத்3தி4 – எங்கிருந்து இந்த மிகமிக நுட்பமான, ஆழ்ந்த, தெளிவான அறிவை அடைந்தீர்கள்?
ப்ரஹமன் ப4வான் – ஹே பிராம்மணரே, தாங்கள்
யாம் ஆஸாத்3ய – எந்த அறிவை அடைந்து
பா4லவத் சரதி – பாலகனைப் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
அகர்து – எந்த செயலையும் செய்யாமல், செயல் எதுவும் செய்வதில்லை, இன்பத்திற்காகவும்,
அறிவை அடைவதற்காகவும் எந்தச் செயலும் செய்வதில்லை
லோகம் வித்3வான் – இந்த உலகத்தின் தன்மை நன்கு அறிந்து கொண்டு, இந்த உலகத்திற்கு இன்பத்தை,
சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது- நிலையற்றது என்று தெரிந்தும் சந்தோஷமாக எப்படி இருக்கின்றீர்கள்.

ப்ராயோ த4ர்மா4ர்த2காமேஷு விவித்ஸாயாம ச மானவா: |
ஹேதுனைவ ஸமீஹந்த ஆயுஷோ யஶஸ: ஶ்ரிய: || 27 ||

ப்ராயஹ – பொதுவாக
தர்ம அர்த்த2 காமேஷு – புருஷார்த்தமான அறம், பொருள், இன்பம் இவைகளை அடைவதற்கு,
புண்ணியத்தை அடைவதற்கான தர்மத்தைக் கடைப்பிடித்தும், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அடைவதிலும்,
சுகத்திற்கு தேவையான பொருட்களை அடைவதிலும் செயல்படுகிறார்கள்
விவித்ஸா – இவைகளை அடைவதற்கு தேவையான அறிவை நாடுகிறார்கள்
மானவா ஹேதுனா ஏவ – மனிதர்கள் இதற்காகவே
ஸமீஹந்த – முயற்சி செய்கிறார்கள்
ஆயுஶஹ, யஶஹ, ஶ்ரியஹ – நீண்ட ஆயுளோடும், புகழோடும், செல்வ செழிப்போடும்
இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

த்வம் து கல்ப: கவிர்த3க்ஷ: ஸுப3கோ3 அம்ருதபா4ஷண: |
ந கர்தா நேஹஸே கிஞ்சிஜ்ஜடோ3ன்மத்தபிஶாசவத் || 28 ||

த்வம் து கல்ப: – நீங்கள் செயல்திறன் படைத்தவர், அறிவு திறன் படைத்தவராக இருக்கிறீர்கள்,
சாஸ்திர ஞானமும் இருக்கிறது, சாமர்த்தியம் கொண்டவர்
ஸுப4க3: – பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறீர்கள்
அம்ருதபா4ஷண – நல்ல பேச்சாற்றல் உடையவராக இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்
பேசும் திறன் உடையவராக இருக்கிறீர்கள்
ந கர்தா – ஆனால் எதையும் செய்வதில்லை
ந ஈஹஸே கிஞ்சித் – எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறீர்கள்
ஜ்ட3ம் – உயிரற்ற பொருள் போலவும்
உன்மத்த – சித்தம் கலங்கியவரைப் போலவும்
பிஶாசவத் – தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போலவும், பிசாசைப் போலவும் இருக்கிறீர்கள்.

ஜனேஷு த3ஹயமானேஷு காமலோப3த3வாக்3னினா |
ந தப்யஸேSக்3னினா முக்தோ க3ங்கா3ம்ப4:ஸ்த2 இவ த்3விப: || 29 ||

கங்கையின் நீருக்குள் இருக்கும் யானையானது சுற்றி எரியும் காட்டு நெருப்பால் பாதிக்கப்படாதது போல
இந்த உலகிலிருக்கும் மனிதர்கள் காமம், லோபம், என்கின்ற காட்டுத் தீயினால் எரிக்கப்படுகிறார்கள்.
காமம், கோபம், மதம், மோஹம், மாத்ஸர்யம் போன்ற துன்பத்தைக் கொடுக்க்க்கூடிய உணர்வுகளால், எண்ணங்கள் –
காட்டு தீக்கு உவமையாக கூறப்படுகிறது-ஆனால் இந்த அக்னியால் எரிக்கப்படாமல் முற்றிலும் விடுபட்டவராக நீங்கள் ஆனந்தமாய நிற்கிறீர்கள்.

த்வம் ஹி ந: ப்ருச்ச2தாம் ப்3ரஹ்மன்னாத்மன்யானந்தகாரணம் |
ப்3ரூஹி ஸ்பர்ஶாவிஹீனஸ்ய ப4வத: கேவலாத்மன: || 30 ||

ஹே பிரம்மனே! கேட்கின்ற எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும்.
உங்களிடத்திலேயே நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கும், எந்த பொருட்களில்லாமல் தனிமையிலே இருந்து கொண்டும்,
சுகம் தரும் விஷயங்களை எதுவும் இல்லாமல் இருந்து கொண்டும் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறீர்கள்.
எங்களுக்குத் தாங்கள் தயவு செய்து உபதேசித்தருள வேண்டும்.

ஶ்ரீபகவான் உவாச
யது3னைவம் மஹாபா4கோ3 ப்3ரஹ்மண்யேன ஸுமேத4ஸா |
ப்ருஷ்ட: ஸபா4ஜித: ப்ராஹ ப்ரஶ்ரயாவனதம் த்3விஜ: || 31 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஹே உத்தவா! வேதத்தையும், குருவையும் மதிக்கின்றவரும், புரிந்து கொள்ளும் ஆற்றலமுடைய யது மன்னனால்
பணிவுடனும், பக்தியுடனும் வணங்கிக் கேட்கப்பட்டதும் அவர் கீழ்கண்டவாறு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பகவான் இங்கு குறிப்பால் உணர்ந்து இருக்கின்றார்.

ஶ்ரீப்3ராஹ்மண உவாச
ஸந்தி மே கு3ரவோ ராஜன் ப3ஹவோ பு3த்3த்4யுபஶ்ரிதா: |
யதோ பு3த்3தி4முபாதா3ய முக்தோSடாமீஹ தான்ஶ்ருணு || 32 ||

ஶ்ரீபிராமணர் பதிலளிக்கிறார்.
ஹே அரசே! எனக்கு பல குருமார்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றேன்.
இவர்கள் என்னுடைய புத்தியினால் அடையப் பெற்றவர்கள். அந்த குருமார்களிடம் இருந்து ஞானத்தை அடைந்து
இந்த உலகத்தில் முக்தனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்த குருமார்களை பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக!

ப்ருதி3வீ வாயுராகாஶமாபோSக்3னிஶ்சந்த்3ரமா ரவி: |
கபோதோSஜகர: ஸிந்து4: பதங்கோ3 மது4க்ருத்3க3ஹ: || 33 ||
மது4ஹா ஹரிணோ மீன: பிங்க3லா குர்ரோSர்ப4க: |
குமாரீ ஶரக்ருத்ஸர்ப ஊர்ணனாபி4: ஸுபேஶக்ருத் || 34 ||

இந்த இரண்டு ஸ்லோகங்களில் அவருடைய குருமார்களாக யார் யார் என்று கூறியிருக்கின்றார்.
நிலம், வாயு, ஆகாஶம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா(கபோதஹ), மலைப்பாம்பு (அஜகர), ஸிந்து4-கடல்,
பதங்க3-விட்டிற்பூச்சி, மது4க்ருத்-தேனி, க3ஜ-யானை, மது4ஹா-தேனெடுப்பவன், ஹரிண-மான், மீனஹ-மீன்,
பிங்க3லா-வேசி, குரா-ஒருவிதமான பறவை, அர்ப4கஹ-குழந்தை, குமாரீ-இளம்பெண், ஶரக்ருத்-அம்பு தொடுப்பவன்,
ஸர்பஹ-பாம்பு, ஊர்ணநாபி4-சிலந்தி, ஸுபோஶக்ருத்- குளவி.

ஏதே மே கு3ரவோ ராஜன் சதுர்விஶதிராஶ்ரிதா: |
ஶிக்ஷா வ்ருத்திபி4ரேதேஷாமன்வஶிக்ஷமிஹாத்மன: || 35 ||

அரசே! இந்த 24 குருமார்களிடமிருந்து எந்தெந்த அறிவைப் பெற்றேன் என்பதைச் சொல்கிறேன்.
இவைகளின் செயல்களை கவனித்து படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.

யதோ யதனுஶிக்ஶாமி யதா2 வா நாஹுஷாத்மஜ |
தத்ததா2 புருஷவ்யாக்4ர நிபோ3த4 கத2யாமி தே || 36 ||

எந்த குருவிடமிருந்து எந்த அறிவை நான் கற்றுக் கொண்டேனோ எவ்விதம் கற்றுக் கொண்டேன்.
ஹே நாஹுஶாத்மஜ! யயாதி மகராஜனின் மகனே! யயாதி குலத்தென்றலே!
அதை அவ்விதம் உனக்கு நான் சொல்லப்போகிறேன். வீரபுருஷனே! கவனமாக கேள்.

பூ4தைராக்ரம்யமாணோSபி தீ4ரோ தை3வ வஶானுகை: |
த்த்3வித்3வான்ன சலேன்மார்காதன்வஶிக்ஷம் க்ஷிதேர்வ்ரதம் || 37 ||

இதில் பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
பொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம்.

ஶஶ்வத்பரார்த2ஸர்வேஹ: பரார்தை2காந்தஸம்ப4வ: |
ஸாது4: ஶிக்ஷேத பூ4ப்4ருத்தோ நக3ஷிஷ்ய பராத்மதாம் || 38 ||

மரங்களும், மலைகளும் பரோபகார சிந்தனையைக் கற்பிக்கின்றன. பூமியின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றன.
இவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது

ப்ராணவ்ருத் த்யைவ ஸந்துஷ்யேன்முனிர் நைவேந்த்3ரிய ப்ரியை: |
ஞானம் யதா2 ந நஶ்யேத நாவகீர்யேத வாங்மன: || 39 ||

புலன்களை சந்தோஷப்படுத்தும் உணவை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. \
நம் அறிவுத்திறன் இழந்துவிடாத அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வாக்கும், மனமும் அறிவையும், சக்தியையும் இழக்காதவாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயேஷ்வாவிஶன்யோகீ3 நானாத4ர்மேஷு ஸர்வத: |
கு3ணதோ3ஶவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத் || 40 ||

ஒரு மனிதன், சாதகன் விஷயங்களை அனுபவிக்கும் போது, எதிர்நோக்கும் போது
ஆவிஶன் – விஷயங்களை சந்திக்கும் போது
நானாத4ர்மேஷு – விதவிதமான தர்மத்தையுடைய, குணத்தையுடைய விஷயங்கள்
ஸர்வதஹ – எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும்
ஆத்மா – அந்தக் கரணம்
குண-தோஷ வ்யபேதா – அந்தந்த விஷயங்களில் உள்ள இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாமல்
வாயுவத் – காற்றைப் போல
ந விஷஜ்ஜேத – பற்றற்று இருக்க வேண்டும்.
காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருந்தாலும் எதனுடன் ஒட்டுறவு கொள்வதில்லை.
பிற பொருட்களின் மணத்தை தாங்கிச் சென்றாலும் பிறகு விட்டுவிடுகின்றது.

பார்தி2வேஷ்விஹ தேஹேஷு ப்ரவிஷ்டஸ்தத்3 கு3ணாஶ்ரய: |
கு3ணைர் ந யுஜ்யதே யோகீ3 க3ந்தை4ர்வாயுரிவாத்ம த்3ருக் || 41 ||

இந்த ஸ்தூல சரீரத்தில் நான் என்று அபிமானம் வைக்காமல், இது நான் பயன்படுத்தும் கருவி என்று நினைக்க வேண்டும்.

பார்தி2வேஷு இஹ – பஞ்ச பூதங்களால் உருவான இந்த
தே3ஹேஷு ப்ரவிஷ்டஹ – உடலுக்குள் பிரவேசித்தவர்கள், ஜீவர்கள்
தத்3 குண ஆஶ்ரயஹ – அதனுடைய குணங்களை சார்ந்திருந்தாலும் கூட
க3ந்தை4வாயுஃ இவாதி – காற்று எப்படி வாஸனைகளுடன் எப்படி ஒட்டுவதில்லையோ,
கு3ணைஹி ந யுஜ்யதே யோகீ – யோகியும் நான் என்ற புத்தியை உடல் மீது வைப்பதில்லை
ஆத்ம த்3ருக் – ஆத்மாவை அறிந்த ஞானியும் இதே மாதிரி இருப்பான்
அக்ஞானி உடல் மீது அபிமானம் வைக்கின்றான், சாதகன் அதை ஒரு கருவியாக கருதுகின்றான்.
ஞானிக்கு அதுவே வேடிக்கைப் பொருளாக இருக்கின்றது.

அந்தர்ஹிதஶ்ச ஸ்தி2ர ஜங்க3மேஷு
ப்3ரஹ்மாத்ம பா4வேன ஸமன்வயேன |
வ்யாப்த்யாவ்யவச்சே2த3மஸங்க3மாத்மனோ
முனிர்னப4ஸ்த்வம் விததஸ்ய பா4வயேத் || 42 ||

ஆகாசத்திடமிருந்து ஆத்மாவின் சில லட்சணங்களைக் கண்டு கொண்டார். இதில் ஆத்ம தியானத்தை கூறுகின்றார்.
ஆத்மாவிற்கும், ஆகாசத்திற்கும் பொருந்திவரும் லட்சணங்கள்
அந்தர்யாமி – அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருப்பது
ப4ரஹ்மன் – பெரியது
வியாபித்தல் – எல்லா இடத்திலும் வியாபித்திருக்கின்றது
பூரணஹ – முழுமையாக இருப்பது
அஸங்காஹ – எதனோடும் ஒட்டாமல் இருப்பது
ஸ்தி2ரஜங்க3மேஷு – அசைவதும், அசையாமல் இருப்பதுமான படைப்புக்கள் அனைத்துக்கும்
அந்தர்ஹிதஹ ச ஆத்மா – உள்ளே வீற்றிருப்பது ஆத்மா;
பிரஹ்மாத்ம பா4வேன – பிரம்ம ஸ்வரூபமாக நான்
ஸமன்வயேன – வெற்றிடம் இல்லாமல் முழுவதுமாக
வ்யாப்த்யா – அனைத்தையும் வியாபிப்பவன்
அவ்யவச்சேதம் – பிளவுப்படாதவன், பூரணமானவன்
அஸங்கம் – எதனுடனும் ஒட்டுதல் இல்லாதது, சம்பந்தப்படாதது
விததஸ்ய ஆத்மா – எங்கும் நிறைந்திருக்கின்ற ஆத்மா
முனி நப4ஸ்த்வம் – ஆகாசத்தின் இந்த லட்சணமாக ஆத்மாவில்
பா4வயேத – இருப்பதாக பாவிக்க வேண்டும்.

தேஜோSப3ன்னமயைர்பா4வைர் மேகா4த்3யைர் வாயுனேரிதை: |
ந ஸ்ப்ருஶ்யதே ந ப4ஸ்த த்3வத்காலஸ்ருஷ்டைர் கு3ணை: புமான் || 43 ||

தேஜோ, ஆப அன்னம் – நீர், நெருப்பு, அன்னம் இவைகளைப் போன்ற பஞ்சபூதங்களை
பா4வைஹி – உருவாக்கப்பட்ட இந்த உடல்
மேகா4த்3யைஹி வாயுனஹ ஈரிதை: – காற்றினால் அலைக்கழிக்கப்படுகின்ற மேகங்கள்
ந ஸ்ப்ருஶ்யதே – ஆகாசத்தில் ஒட்டுவதில்லை
தத்3வத்3 – அதைப்போல
காலஸ்ருஷ்டை கு3ண: – பிராரப்தத்தினால் உருவான உடலினால்
புமான் ந ஸ்ப்ருஶ்யதே – மனிதன் என்று பாதிப்பதில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வச்ச2: ப்ரக்ருதித: ஸ்னிக்3தோ4 மாது4ர்யஸ்தீர்த2பூ4ர் ந்ருணாம் |
முனி: புனாத்யபாம் மித்ரமீக்ஷோபஸ்பர்ஶகீர்தனை: || 44 ||

நீருக்குள் நான்கு குணங்களை ஞானியிடத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அவைகள்
ஸ்வச்ச2: ப்ரக்ருதித – .தூய்மையானது இயற்கையில்
ஸ்னிக்3தோ4 – இணைத்து வைக்கும் குணத்தையுடையது, ஒன்றையொன்றுடன் சேர்க்கும் குணம்,
மாது4ர்யஸ் – இயற்கையிலே சுவையென்ற குணத்தையுடையது
தீர்த2பூ3ர் ந்ருணாம் – மனிதர்களை தூய்மைப்படுத்துவது (ஸம்ஸ்கார ரூபமாக நீரை தூய்மைபடுத்துதல் )
ஈக்ஷணம் – புனித நீரை பார்த்தாலே நம்மிடத்திலே உள்ள பாவங்கள் குறையும்
உப ஸ்பர்ஶ – புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளுதல், நீராடினால் புண்ணிய கிடைக்கும்
கீர்த்தனம் – புனித நீரை புகழ்ந்து பாடுதல்,
இவைகள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. நீரினுடைய குணங்கள் தன்னிடத்திலே கொண்டுள்ள
ஞானி மக்களை தூய்மைப்படுத்துகிறார்.

ப்ரக்ருதித: – ஞானியானவன் முழுமையாக, சுபாவமாக
ஸ்வச்சஹ – தூய்மை அடைந்தவன். குழந்தையைப் போல யாரையும் வஞ்சிக்காத குணமுடையவன்,
தர்மவான்- யாரிடமும் விருப்பு-வெறுப்பு கொள்ளாதவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்
நல்ல ஸம்ஸ்காரத்தினால் நல்லவனாக இருப்பவன் கெட்டவனாக மாறிவிடலாம்.
ஆனால் ஞானத்தினால் தூய்மை அடைந்து இருப்பதால் அவன் எப்பொழுதுமே அப்படியேதான் இருப்பான்.
ஸ்னிக்4த4ஹ – இணைப்பது, நட்புணருவுடையவன், யாரிடமும் வெறுப்பு கொள்ள மாட்டான்
மாது4ர்யஹ – சொல்லிலும், செயலிலும் மென்மையானவன், மற்றவர்களை சொற்களாலும், மனதாலும் துன்புறுத்தமாட்டான்.
தீர்த2பூ4ஹு ந்ருணாம் – மற்றவர்களையும் தூய்மைப்படுத்துகிறான்
அபாம் மித்ரம் – நீருக்கு நண்பனாக இருப்பதால் நீரைப்போல மூன்று விதத்தில் மற்றவர்களை தூய்மைப்படுத்துகிறான்.
ஞானியைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். அவருடைய ஆசிர்வாததை பெறுவதாலும், தொடுவதாலும், புகழ்வதினாலும் நாம் தூய்மை அடையலாம்.

தேஜஸ்வீ தபஸா தீ3ப்தோ தீ3ப்தோ து3ர்த4ர்ஷோத3ரபா4ஜன: |
ஸர்வப4க்ஷ்யோSபி யுக்தாத்மா நாத3த்தே மலமக்3னிவத் || 45 ||

இனி அக்னியை ஞானியுடன் ஒப்பிட்டு கூறுகின்றார். இதில் நெருப்பினுடைய ஐந்து குணங்களைக் கூறி
அதை ஞானியிடத்து இருக்கும் சில குணங்களோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.
அக்னியின் 5 குணங்கள்
தேஜஸ்வீ தபஸா = அக்னியிடம் இருக்கும் உஷ்ணத்தன்மை, உஷ்ணத்தால் உருக்கும் தன்மை
தபஸா தீ3ப்தஹ – வெளிச்சம்
து3த4ர்ஷஹ – நெருங்க முடியாது; அருகில் செல்ல முடியாது
உத3ரபா4ஜனஹ – வயிற்றையே பாத்திரமாகக் கொண்டுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் தீயில் எதைப் போட்டாலும் பொசுக்கி விடும்
ஸர்வ ப4க்ஷ அபி மல மத்3னிவத் நாத3த்தே – யாகத்தில் இருக்கும் அக்னியின் போகும் பொருட்கள் நல்லதாக இருந்தாலும்,
கெட்டதாக இருந்தாலும் அதனால் அக்னிக்கு தோஷம் வராது, அசுத்தம் வராது (மலம் அக்னிவத் ந ஆதத்தே)
ஞானியின் லட்சணங்கள்
தேஜஸ்வீ தபஸா = தவத்தால் வைராக்கியம் உடையவர்; வைராக்கியத்தையே காட்டிக் கொள்ள மாட்டார்
தபஸா தீ3ப்தஹ – விவேகம், ஞானத்தினால் ஓளிர்ந்து கொண்டிருப்பவர்
து3த4ர்ஷஹ – சம்சாரம் ஞானியை நெருங்காது; அசுர குணங்கள் இவனை நெருங்காது, தன்னைத் தானே சந்திக்கும் சக்தி உடையவன்
உத3ரபா4ஜனஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான்
ஸர்வ ப4க்ஷ்யோ அபி அக்னிவத் – அஸத் ப்ரதிக்ரஹம் தோஷம் – பாவிகளிடம் இருந்து உணவை பெற்றுக் கொண்டால்
வரும் தோஷம் இவருக்கு கிடையாது. அதர்மமான வழியில் சேர்த்து செல்வத்தை பெற்றாலும் தோஷம் வரும்,
தீயவர்கள் கொடுக்கும். உணவும் பாவத்தைக் கொடுக்கும். ஞானிக்கு இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் கிடையாது.

க்வசிச்ச3ன்ன: க்வசித ஸ்பஷ்ட உபாஸ்ய: ஶ்ரேய இச்ச2தாம் |
பு3ங்க்தே ஸ்ர்வத்ர தா3த்ருணாம் த3ஹன்ப்ராகு3த் தராஶுப4ம் || 46 ||

அக்னியின் குணங்கள்
க்வசிச்ச2ன்னஹ – சாம்பலால் மறைக்கப்பட்டிருக்கும் அக்னி
க்வசித ஸ்பஷ்ட – சில இடங்களில் தெளிவாக தெரியும்
உபாஸ்யஹ – வணங்கதக்கது
ஶ்ரேய இச்ச2தாம் – மேன்மையை விரும்புபவர்களால்
தஹன் – எரித்து விடுதல்
ஞானியிடத்து இருக்கும் இந்த குணங்கள்
சில ஞானிகள் தன்னை மறைத்துக் கொள்வார்கள்
சில ஞானிகள் தன்னை உள்ளபடிக் காட்டிக் கொள்வார்கள்
ஞானிகள் வணங்கதக்கவர்கள், யாருக்கு நன்மை வேண்டுமோ அவர்களால் வணங்கத்தக்கவர்கள்
ஞானிக்கும் பிறருடைய பழைய, புதிய, வரப்போகின்ற பாவங்களை எரித்து விடும் சக்தி உடையவர்.
யார் அவரை வணங்குகின்றார்களோ அவர்களுடைய பாவங்களை எரித்து விடுவார்கள்

ஸ்வமாயயா ஸ்ருஷ்டமித3ம் ஸத3ஸல்லக்ஷணம் விபு4: |
ப்ரவிஷ்ட ஈயதே தத்தத் ஸ்வரூபோSக்3னிரிவைதா4ஸி || 47 ||

விபு: – பரமாத்மா, பரம்பொருள்
ஸ்வமாயயா – தன்னிடம் இருக்கின்ற மாயையின் துணைக்கொண்டு
இத3ம் ஸ்ருஷ்டம் – இந்த உலகத்தை படைத்தார்.
ஸத் – புலன்களுக்கு புலப்படுவது, காரியம் – உருவம்
அஸத் – புலன்களுக்கு புலப்படாதது – காரணம் – அருவம்
லக்ஷணம் – தன்மையுடைய
ப்ரவிஷ்டஹ – இந்த உலகத்தினுள் பரமாத்மா நுழைந்திருக்கிறார்
தத் தத் ஸ்வரூப ஈயதே – அந்தந்த உருவமாக இருப்பதாக தோன்றுகின்றது. இந்த உலகமாகவே அவர் இருப்பதாக நினைக்கிறேன்
அக்னி இவ ஏதஸி – அக்னி எந்தப் பொருளோடு சம்பந்தம் வைக்கும்போது அதன் உருவமாக காட்சியளிப்பது போல இருக்கிறது

விஸர்க3த்3யா: ஶ்மஶானாந்தா பா4வா தே3ஹஸ்ய நாத்மன: |
கலானாமிவ சந்த்3ரஸ்ய காலேனாவ்யக்தவர்த்மனா || 48 ||

காலேன – காலத்தினால் இவ்வாறு
கலானாமிவ சந்த்ரஸ்ய – சந்திரனுடைய பகுதிகளாக தோன்றுவது
சந்திரனின் வளர்பிறை; தேய்பிறை இவைகளெல்லாம் நாம் நிலவின் மீது ஏற்றி வைத்திருக்கும் கற்பணையான எண்ணம்.
உண்மையில் நிலவு எப்பொழுதும் முழுமையாகத்தான் இருக்கிறது
அவ்யக்த வர்தமனா – கண்ணுக்கு புலப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல்

தேஹஸ்ய – இந்த உலகினுடைய
விஸர்கா3த3யா – பிறப்பில் ஆரம்பித்து
ஶ்மஶானாந்தா – மயானத்திற்கு செல்லப்படும் வரையில்
பா4வா – வருகின்ற மாற்றங்கள் (இருத்தல், பிறத்தல், வளர்தல்)
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய எனக்கல்ல
நம் உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள், மாற்றங்கள் அனைத்தையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவைகள் ஆத்மாவான எனக்கு ஒரு சம்பந்தமில்லை என்று தியானம் செய்ய வேண்டும்.

காலேன ஹயோக4வேகே3ன பூ4தானாம் ப்ரப4வாப்யயௌ |
நித்யாவபி ந த்3ருஶ்யேதே ஆத்மனோSக்3னேர்யதா3ர்சிஷாம் || 49 ||

காலேன ஹயோக4வேகேன – கால வெள்ளத்தைப் போல
பூதானாம் – எல்லா ஜீவராசிகளின்
ப்ரப4வாப்யௌ – பிறப்பு-இறப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
நித்யா அபி – எப்பொழுதும் இருந்தாலும் கூட
ந ஆத்மத்3ருஶ்யதே – ஆத்மாவுக்கு இது சம்பந்தமில்லை
அக்னேர்யதா2ர்சிஷாம் – அக்னியிலிருந்து புறப்படும் ஜுவாலைகள் தோன்றினாலும் மறைகின்றன.
ஆனால் அக்னிக்கு இதற்கு சம்பந்தமில்லை.

கு3ணைர்கு3ணானுபாத3த்தே யதா2காலம் விமுஞ்சதி |
ந தேஷு யுஜ்யதே யோகீ3 கோ3பி4ர்கா3 இவ கோ3பதி: || 50 ||

கோ3பதி – ஒளிப்பொருந்திய சூரியனுடைய
கோ3பி4ஹ – கிரணங்களின் மூலம்
கா3 இவ – நீரை உறிஞ்சி
யதா2காலம் விமுஞ்சதி – தண்ணீரையே சில காலம் கழித்து மழையாக பொழிகிறது
யோகீ3 – அதுபோல ஒரு சாதகன்
குணைஹி – இந்திரியங்களின் மூலம்
குணான் – விஷயங்களை
உபாத3த்தே – அனுபவிக்கின்றோம்
யதா2 காலம் – சரியான நேரத்தில், தேவையான காலத்தில்
விமுஞ்சதி – விட்டுவிட வேண்டும்
ந தேஷு யுஜ்யதே – தன்னிடத்திலே வைத்திருக்க கூடாது

பு3த்4யதே ஸ்வே ந பே4தே3ன வ்யக்திஸ்த2 இவ தத்3 க3த: |
லக்ஷ்யதே ஸ்தூ2லமதிபி4ராத்மா சாவஸ்தி2தோSர்கவத் || 51 ||

நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பயன்படுத்துகின்ற மனிதர்கள், பொருட்கள் மீது பற்று வைக்கக்கூடாது.
அர்கவத் ஆத்மா – சூரியனைப் போல ஆத்மாவானது
வியக்திஸ்த2 – அந்தந்த உடலில் தனித்தனியான உடலில்
ச அவஸ்தி2தஹ – இருந்து கொண்டிருக்கின்றது
இவ தத்3க3தஹ – அதற்குள் இருப்பது போல தெரிகின்றது
லக்ஷ்யதே – இவ்விதம் கருதப்படுகிறது
ஸ்தூ2லமதி பிஹி – ஸ்தூல புத்தியையுடையவர்கள், சூட்சுமமான அறிவில்லாதவர்கள்,
அனுபவத்தை மட்டும் வைத்து முடிவு செய்பவர்கள்.
ஸ்வே ந பே3தே3ன – தானே ஒவ்வொரு உடலிலும் பிளவுபட்டதாக, ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாக அறிவதில்லை.

நாதிஸ்னேஹ: ப்ரஸங்கோ3 வா கர்தவ்ய: க்வாபி கேனசித் |
குர்வன்விந்தே3த ஸந்தாபம் கபோத இவ தீ3னதீ4: || 52 ||

அதி ஸ்னேஹம் – அதிகமான பற்றுடைய உறவு
ப்ரஸங்கஹ – ஸ்தூலமாக அது இருக்க வேண்டும் என்று அதிகமன பற்றும்
க்வாபி கேனசித் – எந்த மனிதர்களிடனும், பொருட்களிடனும் ஜடப்பொருளான வீடு, இடம், உறவுகள் மீது வைத்திருக்கும்
அதிகமான பற்று வைக்கக்கூடாது.
குர்வன் – அப்படி வைத்தால்
விந்தே3த ஸந்தாபம் – துயரத்தை அடைவாய்
கபோத இவ – புறாவைப் போல
தீ3னதீ4: – அடிமைப்பட்ட மனதையுடையவன்; தாபத்தை அடைவான்
அஶக்தி – யாரும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
அனபிஷிவங்கஹ – நாமும் யாரையும் சார்ந்திருக்க கூடாது.

கபோத: கஶ்சனாரண்யே க்ருதனீதோ3 வனஸ்பதௌ |
கபோத்யா பா4ர்யா ஸா4த4முவாஸ் கதிசித்ஸமா: || 53 ||

கபோதஹ க்ருதனீடோ3 – காட்டில் ஒரு புறா
கபோத்யா பா4ர்யயா ஸார்த4ம் – மனைவியான பெண் புறாவுடன்
கதிசித்ஸமா: உவாஸ – சிலவருடங்கள் வசித்து வந்தது.

கபோதௌ ஸ்னேஹகு3ணித ஹ்ருதயௌ கு3ஹத4ர்மிணௌ |
த்3ரிஷ்டம் த்3ருஷ்த்யாங்க3மங்கே3ன பு3த்3தி4ம் பு3த்3த்4யா ப3ப3ந்த4து: || 54 ||

நட்பு என்பது மனதளவில் பற்று வைத்திருப்பது.
இரண்டு புறாக்களும் அன்பினால் சேர்ந்துள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு புறாக்களுக்கும் இடையே
அன்பு வளர்ந்து கொண்டே வந்தது. பரஸ்பர மரியாதையுடனும் இருவருடைய ஒரே குறிக்கோளையும்,
இப்படிபட்ட ஒரே பண்புகளூடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தன.

ஶய்யாஸனாடனஸ்தா2ன வார்தா க்ரிடா3ஶனாதி3கம் |
மிது2னீபூ4ய விஶ்ரப்3தௌ4 சேரதுர்வனராஜிஷு || 55 ||

ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஒரே கூட்டில் ஒன்றாக படுத்து உறங்கின.
அமர்ந்திருந்தன, பேசிக் கொண்டிருந்தன, சாப்பிடுவார்கள், சுற்றித்திரிந்தன.

யம் யம் வாஞ்ச2தி ஸா ராஜன் தர்பயந்த்யனுகாம்பிதா |
தம் தம் ஸமனயத்காமம் க்ருச்ச்2ரேணாப்யஜிதேந்த்3ரிய: || 56 ||

ஹே ராஜன்! ஆண்புறாவால் அரவனைக்கப்பட்ட ஆண்புறாவை திருப்திபடுத்திய பெண்புறா எதையெல்லாம் விரும்பியதோ
அவைகளனைத்தும் இந்திரிய சுகத்திற்கு அடிமையாகிவிட்ட ஆண்புறா நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
இதிலிருந்து ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு சென்று விட்டன. அதில் தர்ம-அதர்மத்தை விட்டுவிட்டார்கள்.

கபோதீ ப்ரத2மம் க3ர்ப4ம் க்3ருஹணந்தீ கால ஆக3தே |
அண்டா3னி ஸுஷுவே நீடே3 ஸ்தபத்யு: ஸன்னிதௌ4 ஸதீ | 57 ||

உரிய காலத்தில் பெண்புறா கருவுற்று ஆண் புறா இருக்கும்போதே முட்டைகளை போட்டது.

தேஷு காலே வ்யஜாயந்த ரசிதாவயவ ஹரே: |
ஶக்திபி4ர்து3ர்விபா4வ்யாபி4: கோமலாங்க3தனூருஹா: || 58 ||

உரிய காலத்தில் அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்தன. இறைவனின் சக்தியால் உருவாக்கப்பட்ட உடலுறுப்புக்களுடன்
நம்மால் புரிந்து கொள்ளாத வகையில் குஞ்சுகள் தோன்றின. அவைகள் மென்மையான அங்கங்களையும், இறகுகளுமுடையதான இருந்தன.

ப்ரஜா: புபுஶது: ப்ரீதௌ த3ம்பதீ புத்ரவத்ஸலௌ |
ஶ்ருண்வந்தௌ கூஜிதம் தாஸாம் நிர்வ்ருதௌ கலபா4ஷிதை: || 59 ||

புறாத் தம்பதிகள் தம் குஞ்சுகளிடம் மிகுந்த அன்பு கொண்டு மகிழ்ச்சியோடு சீராட்டி வளர்த்தன.
அவைகளின் குரலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்தன.

தாஸாம் பதத்ரை: ஸுஸ்பர்ஶை: கூஜிதைர்முக்3த4சேஷ்டிதை: |
ப்ரத்யுத்3க3மைரதீ3னானாம் பிதரௌ முத3மாபது: || 60 ||

புறா பெற்றோர்கள் தன்னையே சார்ந்துள்ள தம்முடைய குஞ்சுகளினுடைய மென்மையான சிறகுகளை தொட்டுப் பார்த்தும்,
கலகலவென்ற மழலை குரலையும், வேடிக்கையான விளையாட்டையும், தத்தி தத்தி நடந்து வருவதைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தன.

ஸ்னேஹானு ப3த்3த4 ஹ்ருத3யாவன்யோன்யம் விஷ்ணுமாயயா |
விமோஹிதௌ தீ3னதி4யௌ ஶிஶூன்புபுஷது: ப்ரஜா: || 61 ||

ஸ்னேஹம் – பாசம், பற்று; மோஹம் – தீ3ன பா4வம்

ஏக்த3 ஜக்3மதுஸ்தாஸாமன்னர்த2ம் தௌ குடும்பி3னௌ |
பரித: கானனே தஸ்மின்னர்தி2னௌ சேரதுஶிசரம் || 62 ||

ஒரு நாள் அந்த இரண்டு பறவைகள் குஞ்சுகளுக்கு உணவை தேடி கூட்டை விட்டு, காட்டில் வெகுதூரம் சுற்றித் திரிந்தன.

த்3ருஷ்ட்வா தான்லுப்3த4க: கஶ்சித்3யத்3ருச்சா2தோ வனேசர: |
ஜக்3ருஹே ஜாலமாதத்ய சரத: ஸ்வாலயாந்திகே || 63 ||

ஒரு சமயம் வேடன் ஒருவன் தற்செயலாக புறாக்கூடு இருந்த மரத்தின் பக்கமாக வந்தான். அந்தக் குஞ்சுகளை வலைவீசி பிடித்தான்.

கபோதஶ்ச கபோதீ ச ப்ரஜாபோஷே ஸ்தோ3த்ஸுகௌ |
க3தௌ போஶணமாதா3ய ஸ்வனீட3முபஜக்3மது: || 64 ||

அந்த ஆண்-பெண் புறாக்கள், தம் குஞ்சுகளின் பராமரிப்பில் ஆர்வமுடையதாக இருந்து கொண்டு
அவைகளுக்கு உணவை எடுத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பி வந்தன.

கபோதீ ஸ்வாத்ம ஜான்வீக்ஷ்ய பா3லகான் ஜாலஸம்வ்ருதான் |
தானப்4யதா4வத் க்ரோஶந்தீ க்ரோஶதோ ப்4ருஶ து3:கி2தா || 65 ||

வலையில் சிக்கியிருந்த தன் குஞ்சுகளை கண்ட பெண்புறா முனகிக் கொண்டிருக்கும் அவைகளை
மிகவும் துயரத்துடன் அரற்றிக் கொண்டு ஒடிற்று.

ஸாஸக்ருத்ஸ்னேஹகு3ணிதா தீ3னசித்தாஜமாயயா |
ஸ்வயம் சாப3த்4யத ஶிசா ப3த்3தா4ன்பஶ்யந்த்ய பஸ்ம்ருதி: || 66 ||

பாசக் கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டதும் பந்த த்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்புறா, பகவானுடைய மாயையினால்
தன் நினைவு, அறிவை இழந்த துமான பெண்புறா, குஞ்சுகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் வலையில் விழுந்தது.
மோக வலையில் வீழ்ந்து விட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது.

கபோத: ஸ்வாத்ம ஜான்ப3த்3தா4னாத்மனோSப்யதி4கான் ப்ரியான் |
பா4ர்யாம் சாத்மஸமாம் தீ3னோ வில்லாபாதி து3:கி2த: || 67 ||

தன் உயிருக்கும் மேலான குஞ்சுகளும் தன் உயிருக்கு உயிரான மனைவியும் வலையில் மாட்டிக் கொண்டு விட்டதைப் பார்த்து,
உள்ளம் கலங்கிய ஆண்புறா மிக்க துயரத்துடன் புலம்பத் துவங்கியது.

அஹோ மே பஶ்யதாபாயமல்ப புண்யஸ்ய து3ர்மதே: |
அத்ருப்தஸ்யா க்ருதார்த2ஸ்ய க்3ருஹஸ்த்ரைவர்கி3கோ ஹத: || 68 ||

அய்யோ! எனக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள். நான் அற்பமான புண்ணியத்தை உடையவன். கெட்ட மதியுடையவன்,
அறிவில்லாதவன், வாழ்க்கையில் மனத்திருப்தி ஏற்படவேயில்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாதவன்.
ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை. இல்லற ஆசிரமத்தில் மூன்று லட்சியங்களான தர்ம-அர்த்த-காமம் இவைகள் அழிந்து போய்விட்டதே

அனுரூபானுகூலா ச யஸ்ய மே பதிதே3வதா
பூ4ன்யே க்3ருஹே மாம் ஸந்த்யஜ்ய புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: || 69 ||

அனுரூபா – ஒரே மாதிரியாக சிந்திப்பவன், என் விருப்பபடி நடப்பவன்
அனுகூலா – எல்லா வகையில் எனக்கு இணையாக இருந்தாள்
ச யஸ்ய மே பதிதே3வதா – மேலும் என்னுடைய மனைவிக்கு நானே இஷ்ட தேவதை
ஸூன்யே க்3ருஹே மாம் ஸந்த்3யஜ்ய – பாழடைந்த கூட்டில் என்னை தவிக்க விட்டுவிட்டு
புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: – நல்ல குஞ்சுகளுடன், அவள் மேலுலகம் செல்லப் போகிறாள்

ஸோSஹம் பூ4ன்யே க்3ருஹே தீ3னோ ம்ருத்தரோ ம்ருதப்ரஜ: |
ஜிஜீவிஷே கிமர்த2ம் வா விது4ரோ து3:க2ஜீவித: || 70 ||

இப்படிபட்ட நான் பாழடைந்த வீட்டில் நான் இப்பொழுது பரிகாபத்திற்குட்பட்டவனாக இருக்கிறேன். மனைவியை பறிகொடுத்தவன்.
குழந்தைகளையும் பறிகொடுத்தவனாக, இனி எதற்காக நான் வாழ வேண்டும் அனாதையாகி விட்டேன். எனது வாழ்க்கையே துயரமாக மாறிவிட்டது.

தாம்ஸ்ததை2வாவ்ருதான்ஶிக்3பி4ர்ம்ருத்யுக்ரஸ்தான்விசேஷ்டத: |
ஸ்வயம் ச க்ருபணா: ஶிக்ஷு பஶ்யன்னப்யபு3தோ4Sபதத் || 71 ||

வலையில் சிக்கிக் கொண்ட புறாக்கள், மரணத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும்,
மதி கேட்டுப் போன ஆண்புறா அறிவை இழந்து வலையில் விழுந்தது.

தம் லப்3த்4வா லுப்3த4க்: க்ரூர்: கபோதம் த்3ருஹமேதி4னம் |
கபோதகான்கபோதீம் ச ஸித்3தா4ர்த2: ப்ரயயௌ த்3ருஹம் || 72 ||

மனைவி குழந்தைகளோடு கூடிய இல்லறத்தில் இருந்த சம்சாரியான அந்த ஆண்புறாவை குரூரமான வேடன்
எடுத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்

ஏவம் குது3ம்ப்3யஶாந்தாத்மா த3வந்த்3வாராம: பத்த்ரிவத் |
புஷ்ணான்குது3ம்ப3ம் க்ருபண: ஸானுப3ந்தோ4Sவஸீத3தி || 73 ||

இவ்வாறுதான் இல்லறத்தில் இருக்கும் மூட மனிதன், மனம், புலன்கள் கட்டுப்பாடு இல்லாதவன் இருமைகளில் மூழ்கியிருப்பவனாக,
புறாக்களைப் போல தன் குடும்பத்தினரின் பராமரித்துக் கொண்டு, சுயநலத்துடன் இருந்து கொண்டு,
குடும்பத்துடன் சேர்ந்து அழிந்து போகிறான். இல்லறத்தில் இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்க கூடாது.
மனம் விரிவடைந்திருக்க வேண்டும். தூய்மை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் நீதி.

ய: ப்ராப்ய மானுஷம் லோகம் முக்தித்3வாரமபாவ்ருதம் |
க்3ருஹேஷு க2த3வத்ஸக்தஸ்தமாரூட4ச்யுதம் விது3: || 74 ||

இதில் மனிதப்பிறவியின் மகத்துவத்தை கூறுகின்றார்.
மனிதனுடைய உண்மையான இறுதி லட்சியம் எது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

எவனொருவன் மனித சரீரத்தை அடைந்து, முக்தி அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்றது.
புறாவைப்போல உலகப் பற்றில் ஆழ்ந்திருப்பவர், ஆன்மீக உன்னதப் படிகளில் ஏறி வழுக்கி விழுந்தவர் ஆவார்.
அடைந்த மனித சரீரத்தை வீணாக்கி விட்டவனாக இருக்கிறான்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யாதவாப்யுதயம்–இரண்டாம் சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்-

January 20, 2020

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———-

இந்த ஸர்கத்தில் தேவகீ வர்ணனம், மற்றும் கிருஷ்ண ப்ராதுர் பாவம் முதலானவற்றை ஸ்வாமி தேசிகன் விவரிக்கிறார்।
இதில் தொண்ணூற்றேழு ஸ்லோகங்கள் உள்ளன.

1. அத ஆகமாநாம் அநகேந பூம்நா தர்மஸ்ய பூர்ணேந தநாகமேந
திவௌகஸாம் தர்சயதா விபூதிம் தேவீ பபௌதௌ ஹ்ருத லக்ஷணேந

தேவியான தேவகி கர்ப்பவதி யானாள். அதன் அடையாளம் தோன்றுகிறது.
ஆகமங்களின் தூய்மை கலந்த நிறைவோ தர்மத்தின் பூரணமான பணப் பெருக்கோ
தேவர்களின் வைபவத்தைக் காண்பிக்கும் குறியோ எனலாம் படி இருக்கின்றது இந்த கர்ப்ப லக்ஷணம்.

அத-அகார மங்களம் -ஜகன் மங்களம் அச்யுத அம்சம் ஸமாஹிதம் ஸூர ஸூதேந தேவீ –என்பர் ஸூகர்
அதற்குப் பிறகு -தேவகிப் பிராட்டியார் கர்ப்பத்தில் பெருமாள் எழுந்து அருளின பிறகு
அத ஸப்த அநு ஸாஸனம்
ஏழு கர்ப்பங்கள் தரித்தவள் முன்பு இல்லாத சோபை யுடன் விளங்குகிறாள்

பகவத் திருவவதாரத்துக்கு முன்பு சர்க்கம் உபோத்காதம்
ஆகமாநாம்-ஆகமங்கள் -பன்மை -வேதங்கள் பாஞ்சராத்ராதி ஆகமங்கள்
தர்மஸ்ய -ஏக வசனம்
வேதஸ் ச சர்வை அஹமேவ வேத்ய
இவளுடைய கர்ப்ப சிஹ்னங்கள் எம்பெருமானைக் காட்டும் ஸாஸ்த்ரங்கள் ஆகலாம்
அர்ச்சையில் எம்பெருமான் நித்ய ஸந்நிதியை கர்ப்ப க்ருஹம் என்கிறோம் -தேவகியே தேவ ஸந்நிதி யானாள் என்பதைக் காட்டவே ஆகமாநாம் பத ப்ரயோகம்
சதுர்புஜனாகவே ப்ரதிஷ்டை அர்ச்சையிலும் இங்கும் –
ஆகமாநாம் அநகம் –வேதங்கள் குற்றம் அற்று அழகு பெற்றன

ஸர்வ வேதா யத் பதம் ஆமநந்தி -ஆகிய தூய்மை
இதற்கு முன் சர்க்கத்திலும் கடைசி மூன்று ஸ்லோகங்களிலும்
அநேகாதேச
ப்ராதுர் பு பூ ரக்ஷக அநக
தர்மஸ்ய ஸ்திதம் அநகாம் -என்று
ஆதேசம் அநகம்
தான் அநகன் —
தர்மத்தின் ஸ்திதி அநகம் -என்று அருளிச் செய்து
இங்கு ஆகமங்களின் மிகுதி அநகம்

பூம்நா -நிறைவு -ஆகமங்களின் நிறைவு -இவன் ஆவிர்பாவத்தாலேயே
ஆதேசம் இல்லாமல் ஆகமம் -மென்மை -அறுவரை பெற்று இழந்த திருவயிற்றுக்கு இப்பொலுது ஆகமம் நல் வரவாயிற்றே

தர்மஸ்ய பூர்ணேந தநாகமேந-தர்மோ ரஷதி ரஷித
பவித்ராணாய –தர்ம ஸம்ஸ்தாநம்
தர்மம் சர -வேதம் ஆதேசம் செய்ததே
கோ தர்ம ஸர்வ தர்மாணாம் -என்று கேட்டுக் கொண்டு ஏஷ மே ஸர்வ தர்மாணாம் -தர்மோதி கதமோ மத-என்றார் பீஷ்மர்
தர்ம ஜிஞ்ஞாஸா –பூர்வ மீமாம்ஸா
ஆகமாநாம் அநகேந பூம்நா என்பது –உத்தர மீமாம்ஸா
இரண்டும் ஒன்றியது
அந்த 20 அத்யாய ஸ்ரீயாக விளங்கியது தேவகிப் பிராட்டியாரின் கர்ப்பம் –
வேத அகில தர்ம மூலம் என்பதால் வேதத்தை முன்பும் பின்பு தர்மஸ்ய என்பர்
தக்ஷிணா ஸம்ருத்தியை என்பதால் தர்மத்துக்குத் தனம் தேவை –
வேதா மே பரமம் சஷு -வேதா மே பரமம் தனம் -பைதாமஹம் தனம் -தனக்குஉள்ளது என்கிறார் -ஸ்வாமி –
தேவகி திருமேனி சம்பந்தம் கிடைக்காவிடில் தனம் இல்லாதவனாகத் தான் நினைந்து இழவோடே இருப்பானே
வேதமார்க்க ப்ரதிஷ்டாபந அர்த்தமாகவே இவன் திருவவதாரம்

திவௌகஸாம் தர்சயதா விபூதிம்-உபய விபூதி நாதனே தனதுபரத்வத்தை மறைக்காமல் திருவவதாரம்
இங்கு விபூதி-ஐஸ்வர்ய -விபவ அவதாரம் என்றுமாம்

தேவீ பபௌதௌ ஹ்ருத லக்ஷணேந-தேவகி -தேவ்கனுடைய பெண் -எம்பெருமான் எழுந்து அருளிய படியால் தேவி -தேவனைத் தரித்து தனி நிறம் பெற்றதால் தேவி -தேவ ரூபிணீ -தனிப்பட்ட ஒளி தேஜஸ்

——

2. ஸ்ருங்கார வீராத்புத சித்ர ரூபம் கர்ப்பே த்ரிலோகைக நிதிம் வஹந்த்யா:
பராவர க்ரீடித கர்புராணி த்வேதா பவந்தௌ ஹ்ருத லக்ஷணாநி

இதற்கு முன் ஸ்லோகத்தில் கர்ப்ப சின்னங்களைக் கூறும் பொழுது மூன்று பெருமைகளைக் கூறினார்.
இங்கு அவைகளை இரண்டு கூறாக பகுத்து அறியலாம் என்கிறார்.
ஸ்ருங்காரம்,வீரம்,அத்புதம் என்ற மூன்று வகையான ரஸங்களை கலந்த சித்திர மேனி யுடையவனான்.
மூவுலகங்களுக்கும் ஒரே நிதியாய் விளங்குபவன். இத்தகைய எம்பிரானை தேவகி கர்ப்பத்தில் தரிக்கிறாள்.
பரத்துவத்தைக் காண வல்ல குறிகளும், சாதாரணத்துவம்(அவரத்துவம்) காண வல்ல குறிகளும் இணைந்து விளங்கின.
இரண்டு விதமான விளையாட்டைச் செய்பவனாக விளங்கினான்.

ஸ்ருங்கார வீராத்புத சித்ர ரூபம் கர்ப்பே
அவன் விசித்திரம் -அவனது ரூபமும் விசித்திரம் –
இன்ன வண்ணம் என்று என்று காட்டீர் இந்தளூரீரே
கல்யாண தமம் ரூபம் -ஈஸா வாஸ்யம்
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த -ரஸ மயன் -போஜனத்தின் ஷட் ரஸம் மட்டும் இல்லாமல் தச ரஸ -ஸ்ருங்கார -வீரம் -அத்புதம் ஷாந்தி போல்வன –
பக்தியும் ஸ்ருங்கார விருத்தியாக பரிணமிக்கும் –
24 சர்க்கம் ஸ்ருங்கார ரசத்துக்காகவே அமைத்துள்ளார் -ஸ்ருங்கார பூமா என்கிறார்-அதில் 90-ஸ்லோகத்தில் –
சித்ர என்று நாநா ரூபம் என்றும் சொல்வர்

த்ரிலோகைக நிதிம் வஹந்த்யா:
அனைத்து லோகங்களுக்கும் வைத்த மா நிதி இவன்
லோக த்ரய அபி அப்ரதிம ப்ரபாவ
அனுகூலருக்கு ஸ்ருங்காரமுமாய்
பிரதிகூலருக்கு வீரனுமாய்
உதாசீனருக்கு அத்புதமாய் -இருக்கும் இவன் தேவகி கர்ப்பத்துக்குள்
நிதியினை பவளத்தூணை -கலியன்
தேவகி கர்ப்பம் ரஸ கர்ப்பம்

பராவர க்ரீடித கர்புராணி
பராவரன் –உயர்வற உயர்நலம் உடையவன் அன்றோ
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே
க்ரீடித –விளையாட்டு
கர்புராணி –சித்ரமானவை -வெவ்வேறு வகை -பரத்வம் ஸுலப்யம் -போன்றவை
பரர்களோடும் ப்ரஹ்மாதிகளோடும் விளையாடினான்
அவரர்களோடும் விளையாடினான்

த்வேதா பவந்தௌ ஹ்ருத லக்ஷணாநி
இரண்டுவித லக்ஷணங்களும் பொருந்தி உள்ள கர்ப்ப சிஹ்னங்கள்-

———-

3. அசேஷ வேதைர் அதிகம்ய பூம்நா ஸித்தேந ஸித்தைஸ் ச நிஷேவிதேந
அமாநுஷீ நூநம் அபூத் அயத்நாத் க்ருஷ்ணேந கேநாபி ரஸாயநேந

எல்லா வேதங்களாலும் போற்றப் பெற்ற பெருமை யுடையதும், எப்போதுமே ஸித்தமாயிருப்பதும்,
ஸித்த புருஷர்களாலே உபயோகிக்கப் பெற்றதுமான கருப்பு நிற ரசாயனம் ஒன்றை தேவகி உட் கொண்டு விட்டாள் போலும்.
வேறு ஓர் முயற்சியுமின்றி அவள் அமாநுஷியாகி விட்டாள்.

முதல் ஸ்லோகத்தில் தேவீ -ஒளியுடன் விளங்கும் தேவகி என்றார்
அதற்கு ஹேது இதில் அருளிச் செய்கிறார்
அசேஷ வேதைர் அதிகம்ய பூம்நா
வேதேஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -கீதை
பும் ஸூக்தம் ஸர்வ வேத ப்ரபடனம்–தத்வ முக்த கலாபம்
பாரதம் பஞ்சமோ வேதத்தில் இந்த ராஸாயன விளக்கம் உண்டே –
ஸித்தேந
நித்ய ஸித்தே ததாகாரே

ஸித்தைஸ் ச நிஷேவிதேந
ஸித்தர்களானவர்களால் ஸேவிக்கப்படுபவர்
ஸித்த கந்தர்ய யஷாஸ் ச ததாஸ் த்வம் சரணம் கதா வால்மீகி

அமாநுஷீ நூநம் அபூத் அயத்நாத்
அதி மானுஷ சேஷ்டிதங்களைச் செய்பவனைத் தரித்து அயத்நாத்-யத்னமே இல்லாமல் அமானுஷீ ஆனாள்
நூநம்-உறுதி
அயத்நாத்-அகார வாஸ்யனான அவனது யத்னத்தாலே என்றுமாம்

க்ருஷ்ணேந கேநாபி ரஸாயநேந
சரு போல் இன்றிக்கே சாருவான ரஸாயனம்
கேநாபி-அபரிமித சக்தி
ருஷ்ணேந–பூமிக்கு மகிழ்ச்சி அளிப்பவன்
மருந்தும் பொருளும் அந்தமும் தானே
வரு நரகம் தீர்க்கும் மருந்து
அரு மருந்து ஆவது அறியாய்
அபர்யாப்த்த அம்ருதம்

ஸாஸ்த்ர ஏவ வேத்யத்வம் -முக்த ப்ராப்த்யத்வம் -ஆனந்த மயத்வம் மூன்றையும் காட்டும் மூன்று பதங்களும் –

————–

4.ஸத ஹ்ரதா பந்துரயா ஸ்வ காந்த்யா ஸஞ்சாரி ஜாம்பூநத பிம்ப கல்பா
த்ரய்யந்த ஸித்தேந ரஸாயநேந காலேந பேஜே கலதௌத லக்ஷ்மீம்

முன் ஸ்லோகத்தில் பரத்வத்தைக் காண்பிக்க வல்ல கர்ப்ப லக்ஷணத்தை விளக்கினார்.
இதில் வெளிப்படையான உலக ரீதியில் கர்ப்பவதிகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அதன் பொலிவையும் விளக்குகிறார்.
தேவகியின் திருமேனி தனிப் பொலிவுடன் விளங்கியது. அவளது காந்தி மின்னல் போன்றதொரு அழகைப் பெற்று விட்டது.
தங்கப் பதுமையும் நடந்து வருமோ என்று எண்ணவல்ல நிலை.
அவள் வேதாந்தங்களில் ஏற்பட்டதொரு ரஸாயனத்தை உள்ளே கொண்டுள்ளாள்.
அதனாலே அவள் கால க்ரமத்தில் மேனியில் வெண்மையைப் பெற்றுள்ளாள். இதுவும் எவ்வளவு லக்ஷ்மீகரமா யிருக்கிறது.

ஸத ஹ்ரதா -மின்னல்
பந்துரயா —அழகான -மேல் இரண்டும் ஸ்வ காந்த்யா -தனது காந்தியாலே -என்பதற்கு விசேஷணங்கள்
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா –

ஸஞ்சாரி ஜாம்பூநத பிம்ப கல்பா
ஜாம் பூதநம் -ஸூவர்ணம்
மேரு-நான்கு பக்கத்திலும் நான்கு மலைகள் -அவஷடம்ப மலைகள் -மந்த்ரம் -மேரு மந்தரம் -ஸூ பார்ஸ்வம் -குமுதம் என்பவை
இவற்றில் ஜய ஸ்தம்பங்கள் போல் மரங்கள் –
மந்திரத்தில் மா மரங்கள்
மேரு மந்திரத்தில் நாவல் பழங்கள்
ஸூ பார்ஸ்வத்தில் -கதம்ப மரங்கள்
குமுதத்தில் அரச மரங்கள்
இவற்றில் பழங்கள் கீழே விழுந்து சாறு ஆறாகப் பெருகி ஜம்பூ நதி இலாவ்ருதம் பகுதியில் விழுந்து ஸூவர்ணம் ஆகிறதாம் –
இதனாலே ஜாம்பூநதம் -என்பது ஸூவர்ணம் ஆகிறது
பிம்பம் -தங்கப்பதுமை போல் ஆனாள் தேவகிப் பிராட்டியார்
இவள் கர்ப்ப வாசத்தால் நாவல் பழத்தில் இவன் அவதரித்து ஆதரம் காட்டினான்

த்ரய்யந்த ஸித்தேந ரஸாயநேந
உபநிஷதங்களில் காட்டும் ரசாயனம் -கிழே அசேஷ வேதை என்றாரே –

காலேந பேஜே
கால க்ரமத்தில் உசித காலத்தில் பெற்றனள் -கருப்பு நிறத்தனன் என்றுமாம்
அஹமேவ அஷ்ர காலயா -கீதை தன்னையே காலம் என்கிறான்

கலதௌத லக்ஷ்மீம்
கலதௌதம் -வெள்ளி -தங்கம் கருப்பின் சேர்க்கையால் வெள்ளியாயிற்று
கர்ப்பவதியின் உடல் வெளுக்கும் அன்றோ

—————–

5. மயூர பிஞ்ச்ச த்யுதிபிர் மயூகை:தத் காந்திர் அந்தர் வஸதஸ் த்ரிதாம்ந:
ச்யாமா பஹிர் மூலஸிதா பபாஸே மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் ஒரு பொலிவு ஏற்பட்டுள்ளது. அந்த சோபையை கவி தனது கண்களால் பார்க்கிறார்.
கருவுக்குள் வசிப்பவன் மூன்று வகையான சோதி வடிவுடையான். அவ்வொளி வெளியில் தோற்றம் அளிக்கிறது.
மயில் தோகையின் நிலையும் நிறமும் எனலாம்படி இருக்கிறது. திருமேனி வெளுப்பு.
ஆனால் அதன் பளபளப்பு கறுப்பு எனும்படி உள்ளது. மங்கல கார்யங்களுக்கு சுப ஸூஸகமாக பாலிகை வளர்ப்பார்கள்.
அது முளைக்கின்ற போது அடியில் வெளுத்தும் நுனியில் கருத்தும் இருக்கும்.
அது போல் தேவகியின் திருமேனி வெளுப்பு நிறம் பெற்று அதன் மேலும் கறுப்பு நிறமும் ஓடுகிறது.
கர்ப்ப ஸ்திரீகளின் காந்தி மாற்றம் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கே விளங்கும்.

த்ரிதாம்ந:ஸூர்ய மண்டலம் -ஷீராப்தி ஸ்ரீ வைகுண்டம்
பிருஸ்னி கர்ப்பன் -வாமனன் -கிருஷ்ணன் மூவரையும் பெற்றவள்
ஆத்மாவில் அந்தர்யாமி -இருதயத்தில் ஆநந்த மயன் -கர்ப்பத்தில் புத்ரன்

ஓளி மயமான ஸ்லோகம்–த்யுதிபிர் மயூகை–த்ரிதாம்ந பபாஸே-சொற்களின் சேர்க்கை அழகு

மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ-மங்களகரமான ரத்தினங்கள் ஆகிய முளையில் உதிக்கும் பாலிகை
தேவகியின் திருமேனி காந்தியே பாலிகை -அந்தக் காந்தியையும் விஞ்சிய மயில் தொகை ஒளி அவனது
ஐந்து பாலிகைகள் வைப்பர் -இது ஐந்தாவது ஸ்லோகம்
நவ தானியங்கள் வைப்பர் -இங்கு நவ ரத்னங்களும் தானிய ஸ்தானங்கள்

—————

6. காலே பபாஸே வஸுதேவ பத்ந்யா: கர்பூர லிப்தேவ கபோல சோபா
சசி ப்ரபா ஸப்தம கர்ப்ப காந்தி:ச்யுதா வசிஷ்டே வசநைர் உதீர்ணா

தேவகியின் கபோல பாகம்(கன்னம்) மிகவும் அழகாக விளங்கியது.கர்ப்பம் வளர வளர இத்தகைய சோபை ஏற்படுவது இயற்கை.
கர்ப்பூரத்தினால் பூசப்பட்டதோ என்று சொல்லத் தக்கதான காந்தி. ஏழாவது கர்ப்பத்தில் ஏற்பட்ட வெளுப்பு ஏற்கனவே மிஞ்சி யிருந்தது.
இப்பொழுது அது மெல்லியதாக தோன்றும் படியானதாக தற்போதைய காந்தி இருந்தது.
இந்த வெளுப்பு சந்திரனின் ஒளியை ஒத்திருந்தது. இது சந்திர வம்சத்தின் அம்சம் எனும்படியாக இருந்தது.

————–

7. நவேந்து நிஷ்யந்த நிபஸ்ச காஸே வர்ண: ப்ரதீகேஷு மதுத்ர வாங்க்யா:
அந்தஸ் ஸ்த்திதேந ப்ரதமேநபும்ஸா ப்ரவர்த்திதம் ஸத்வம் இவாவதாதம்

தேவகியின் திருமேனி மதுமயமாயிற்று.அவளது அங்கங்களில் ஒரு அழகான வர்ணம் ஓடுகிறது.
புதியதான சந்திரனிடமிருந்து பெருக்கெடுத்த அமுதத்தின் பெருக்கோ என்று சொல்லும் படியான அழகு!
உள்ளே ஆதிபுருஷன் அமர்ந்து இருக்கிறான். அவன் தான் மேலே ஸத்வ குணத்தை ப்ரவர்த்தனம் பண்ணுகிறான் போலும்.
(ஸத்வம் என்பதற்கு வெளுப்பும் பொருளன்றோ).

—————-

8. கரம்பிதா கிஞ்சிதிவ ப்ரஸ்ருப்தை:தேஜோபிர் அந்தர் வஸதஸ் த்ரிதாம்ந:
மரீசிபி: ஸ்வைர பவத் ப்ரஜாநாம் மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ

தேவகியின் திருமேனியில் தனித்ததொரு ஒளி படர்ந்திருக்கிறது. மேற் புறம் சிறிதே படர்ந்தததால் நிறங்கள் கலந்தே நிற்கின்றன.
உள்ளே வசிக்கும் த்ரிதாமாவினால் ஏற்பட்ட ஒளிகள் இவை. தேவகியின் திருமேனி காந்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன.
அப்பொழுது மங்கள காரியத்திற்கு அமைக்கப் பெற்ற பாலிகை போல் அவள் திருமேனி விளங்கியது.
(தேவகியின் திருமேனியை ஐந்தாவது ஸ்லோகத்தில் வர்ணித்தார் ஸ்வாமி. இப்பொழுதும் அந்த அனுபவம் கண்ணை விட்டு அகலாததாலும்,
மங்கல பாலிகை மனதை விட்டு அகலாததாலும் மேன்மேலும் அந்த தாத்பர்யத்தையே திருவுள்ளத்தில் இறுத்தி உவந்து விவரிக்கிறார்)

—————

9. தஸ்யாஸ் ஸுதோல்லாஸ ஜுஷ:கடாக்ஷா:ஸங்க்ஷுப்த துக்தோததி ஸௌம்ய பாஸ:
ஜகத் த்ரயீ ஸௌதவிலேபநார்ஹாம் விதேநிரே வர்ணஸுதாம் அபூர்வாம்

ரஸ ரூபியாகவும், தேஜோ ரூபியாகவும் எம்பெருமான் கர்ப்பத்தில் எழுந்தருளி இருக்க தேவகி பெற்ற திருமேனிப் பொலிவை
பல கோணங்களில் ஸ்வாமி வர்ணித்து வருகிறார். தேவகியின் கடைக் கண் பார்வைகள் திருப்பாற் கடல் அமுதம் போல் விளங்குகின்றன.
பார்வைகள் விழும் இடமெல்லாம் அபூர்வமான வர்ணம் பூசப்பட்டது போல் காட்சி யளிக்கிறது.
மூன்று உலகங்களின் உப்பரிகைகளும் சுண்ணாம்பு அடிக்கப் பெற்றது போல காட்சி அளித்தது.
(மூன்று உலகங்களும் தனி நிறம் பெறப் போகின்றன என்பது ஸ்வாமியின் திருவுள்ளம்).

————–

10.ரக்ஷாவிதௌ ராக்ஷஸ தாநவாநாம் காராக்ருஹே கம்ஸ நியோகபாஜாம்
ஸம்பச்யமாநா ஸக்ருதீக்ஷிதாவா ஸங்க்ஷோபயாமாஸ மநாம்ஸிஸைஷா

இவள் காரா க்ருஹத்தில் ரக்ஷைக்காக கம்சனால் அமர்த்தப்பட்ட அஸுரர், மற்றும் ராக்ஷதர்களுக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாள்.
ஒரு முறை இவள் பார்த்தாலும் சரி, அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலும் சரி, அவர்கள் நடுங்கலாயினர்.
9 ஸ்லோகம் வரை தேவகியின் கர்ப்ப லக்ஷணத்தை விவரித்தார். இதில் அவளைக் காண்பவர்களின் நிலையைக் கூறுகிறார்.

ந ஸேஹே தேவகீ த்ரஷ்டும் கஸ்சிதப்யதி தேஜஸா ஜாஜ்வல்ய மாநாம் தாம் த்ருஷ்ட்வா மநாம்ஸி ஷோபம் ஆயயுஸ் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸங்க்ஷோபயாமாஸ மநாம்ஸி-தேஜஸ் மிக்கு இருப்பதால் ஒருவராலும் காண இயலவில்லை என்கிறார்

—————-

11. புக்தா புரா யேந வஸுந்தரா ஸா ஸ விச்வ போக்தா மம கர்ப்ப பூத:
இதி த்ருவம் ஸூசநம் ஆசரந்தீ தத் தாத்ருசம் நாடிதகம் ததாந

இதற்கு முன் எவனால் பூமி அனுபவிக்கப் பெற்றதோ அவனே(உலகத்தை அனுபவித்தவனே) எனது கர்ப்பத்தில் எழுந்தருளி விட்டான்.
இந்த உண்மையை குறிப்பிடும் வகையில் விலக்ஷணமானதொரு செயலைச் செய்தாள்.
கர்ப்பிணிகள் இயற்கையாகவே மண்ணை ருசித்து சாப்பிடுவதுண்டு. இந்த நிலையை தேவகி அடைந்தாள்.
மேலும் தேவகி மண்ணை யுண்டாள் என்றால் அதன் காரணத்தை ஊகித்துக் கொள்ள வேண்டும்.
(ஆதி வராஹாதி ரூபேண தேவதா ரூபா வா, ரகுநாதாதி ரூபேண கோலக ரூபா வா உப பக்தா)
ஆதி வராகனாயிருந்து கையில் மண்ணை ஏந்தி வந்ததும், பண்டு ஆலிலையில் துயில் கொண்ட பொழுது வயிற்றில் பூமியை
வைத்திருந்தவனுமான பெருமான் என் வயிற்றில் பிறக்கப் போகிறான், ஆதலால் தான் மண் வாசனை தேவகியை ஈர்த்தது போலும்)

—————

12. ஸமாதி ஸுக்ஷேத்ர க்ருஷீ வலாநாம் ஸந்தோஷ ஸஸ்யோதய மேக காந்த்யா
சகாஸ தஸ்யா ஸ்தந சூசுகாபா கர்ப்ப த்விஷா காடம் இவாநுலிப்தா

ஸமாதி என்பது நல்ல நிலம். அதில் க்ருஷி செய்பவர்கள் யோகிகள். அவர்களுக்கு ஏற்படும் ஸந்தோஷம் என்கிற பயிருக்கு
மேகம் போல் ஒளிபெற்றது கர்ப்ப காந்தி. அந்த காந்தியினால் ஓர் வகையான பூச்சைப் பெற்றதோ என்று சொல்ல வல்லதாய் இருப்பது
தேவகியின் ஸ்தனங்களின் நுனி பாகம். மேகம் எவ்வளவு கறுத்திருக்கிறதோ அவ்வளவு ப்ரகாசம் உண்டு.
அதே போல் ஸாலம்பந யோகத்தால் இந்த கர்ப்ப காந்தி மேகத்தை ஒத்து விளங்கியது.

தஸ்யைவ கல்பநா ஹீநம் ஸ்வரூப க்ரஹணஞ்ச யத் மநஸா த்யாந நிஷ் பாத்யம் ஸமாதி ஸோபி தீயதே –பராசரர் ஸமாதிக்கு விளக்கம்

————–

13. கஸ்தூரிகா காம்ய ருசிஸ் ததீயா ரம்யா பபௌ சூசுக ரத்ந காந்தி:
தத் கர்ப்ப ஸந்தர்சந லோலுபாநாம் அந்தர் த்ருசாம் அஞ்சந கல்பநேவ

அந்தர் த்ருஷ்டியுடன் சேவிக்க வேண்டிய ஸ்லோகம்-ஒளி மயமான ஸ்லோகம். கஸ்தூரியே விரும்ப வல்ல காந்தி என்று பொருள். கஸ்தூரியின் நிறம் கறுப்பு.
கறுப்பின் அழகு வேறெதிலும் இல்லை. கறுப்புக்கு வேறு உதாரணம் கூறலாம். ஆனால் இங்கு இவ்வாறு கூறியதில் பல ரஸமுண்டு.
கஸ்தூரி விலை உயர்ந்த வஸ்து. எம்பெருமான் திலகம் தரிப்பது கஸ்தூரியினால் தான். கஸ்தூரி திலகம் லலாடபாகே என்று கூறுவர்.
தேவகியின் முலை நுனி இந்திர நீல மணிகளின் காந்தி போன்று இருந்தது. கஸ்தூரியே அந்த காந்தியைப் பெற விரும்பியது போல இருந்தது.
அவளது கர்ப்பத்தினால் ஏற்பட்ட நிலை அது. எம்பெருமானை சேவிக்க வேண்டும் என விரும்பியோர்க்கு அஞ்சனம் பூசியது போன்று அது திகழ்ந்தது.
பூமியின் உள்ளிருக்கும் புதையலை காண நேத்ராஞ்சனம் இடுவது போல் அஞ்சன வண்ணனை காண வேண்டும் என்ற
உள் நோக்கு உடையோர்க்கு மைப்பூச்சாக அமைந்ததோ!

—————–

14. பராவராணாம் ப்ரபவஸ்ய பும்ஸ: ப்ரகாசகத்வம் ப்ரதிபத்யமாநாம்
அபாவயந் பாவித சேதஸஸ் தாம் வித்யாமயீம் விஷ்வ பிதாமஹீஞ்ச

பரிபக்குவமான நிர்மலமான உயர் மதிநலம் படைத்த மஹான்கள் அண்ட சராசரங்களுக்கெல்லாம் காரணமான பரம புருஷனை
வெளிப்படுத்தும் சிறந்த நிலையில் உள்ள அத் தேவகியை வித்யையாகவும் விச்வங்களுக்கெல்லாம் பிதாமஹியாகவும் கண்டு கொண்டனர்.
பகவான் இவ் வுலகத்திற்கெல்லாம் தந்தையாக விளங்குபவன். அவனுக்கே தாயென்றால் மற்றவர்களுக்கு பிதா மஹிதானே!

விஷ்வ பிதாமஹீஞ்ச–கர்ப்பிணிகளைப் பார்த்த்து நீ அம்மாவாகப் போகிறாய் உலகில்
இங்கு இவளோ பாட்டியாகப் போகிறாள் அன்றோ

————

15. லிலேக விச்வாநி ஜகந்த்யபிக்ஞா லீலாஹ்ருதே சித்ரபடே யதார்ஹம்
ப்ராய: ப்ரஜாநாம் பதய: ப்ரதீதா: யந் மாத்ருகா: ஸ்வேஷு விதிஷ்வபூவந்

எல்லாம் நன்கே அறிந்து வைத்திருந்த தேவகி லீலைக்காக கொண்டு வரப்பட்ட சித்திர படத்தில் ஓவியம் தீட்டவல்ல துணியில்
உலகங்கள் அனைத்தையும் ஏற்றவாறு வரைந்தாள். ப்ரஜாபதிகள் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ருஷ்டிகர்த்தர்கள் இந்த சித்திரத்தையே
மனதில் கொண்டு அமைந்தனரோ -அல்லது தங்கள் தங்கள் செயல்களில் இவற்றையே மாத்ருகையாக கொண்டனரோ
என்று சொல்லும் பாங்கில் அமைந்தது தேவகி தீட்டிய ஓவியம்.

க்ரீடார்த்தம் அபி யம் ப்ருயஸ் ஸ தர்ம பரமோ மத -பெரியோர் லீலைக்காகப் பண்ணுவதும் பரமதர்மமாகவே ஆகுமே
விதிஷு -பிராமனையும் விதிப்பவன் இவன் அன்றோ
இவள் வரைந்த சித்திரமே பிரமனுக்கு மாத்ரிகை யாயிற்று

——————

16. நிராசிஷாம் பத்ததிம் ஆததாநா நைச்ரேயஸீம் நீதிம் உபக்நயந்தீ
புண்யாசயா பூர்வ யுகப்ரரோஹம் இயேஷ தேவீ புவநே விதாதும்:

எதிலும் அபிலாஷை இல்லாத விரக்தர்களின் மார்க்கத்தை அடைந்தவளான தேவகி முக்திக்கு உபயோகமானதொரு நீதியை அடைந்தவளாயும்,
வெளியில் மனத்தைச் செலுத்தாத நிலையை பெறுகின்றவளாயும், நல்ல உள்ளம் படைத்தவளாயும் விளங்கினாள்.
உலகின் முந்தைய யுகத்தின்(க்ருத யுகம்) முளைத்தலாகிய தோற்றத்தை ஏற்படுத்த விளங்கினாள்.

———-

17. அநாப்த பூர்வம் கிம் அபேக்ஷிதும் தே கிம் வோபதத்யாம் அதவாதுநேதி
வயஸ்யயா பாவவிதாநுயுக்தா ந கிஞ்சித் இத்யேவ ஜகாத நாதா

இதுவரை நீ அடைந்திராத ஏதாகிலும் வேண்டும் என்று நினைக்கின்றாயோ அல்லது இதுவரை நீ அநுபவித்ததில் உனக்கு மிகவும்
பிடித்தமானது ஏதாகிலும் வேண்டுமா? என்ன வேண்டும் என்று சுவடறிந்த தோழி கேட்கின்றாள்.
ஒன்றும் வேண்டாம் என்று பதில் கூறினாள் தேவகி. அவள் நாதையன்றோ! அவளை வற்புறுத்த இயலுமோ?

—————

18. அநாதரே தேவி ஸகீ ஜநாநாம் கதம் ந தூயேத தயா தவேதி
உபஹ்வரே ஸல்லபிதா மநோக்ஞை:ஆலோகதை: உத்தரம் ஆசசக்ஷே

தேவகியின் ஸகிகள் பலர்.அவளது அன்பிற்கு அடிமையானவர்கள். தேவகி தேவியாகின்றாள். அவளது அந்தஸ்து மிகப் பெரியது.
அதைப் பெறும் பேறாக நினைப்பவர்கள் அவள் தோழிகள். அவர்களிடம் சுள்ளென்று ஒன்றும் வேண்டாம் என சொல்லலாமோ?
அதனால் தோழிமார்களுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. தோழிமார்களை இவ்வாறு அநாதரம் செய்யலாமோ?
அப்பொழுது அழகு ததும்பும் பார்வையால் அவள் பதிலளித்தாள். வாயினால் தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை.
கர்ப்பத்தின் வளர்ச்சியாலும் சரீரத்தின் தளர்ச்சியாலும் வாயால் சொல்லாமல், எனக்கு ஏன் தயை யில்லை?
என் வயிற்றில் இருப்பவன் தயைக்கு சொந்தக்காரன் ஆயிற்றே! அவனைச் சுமப்பவளான நானும் அதே போல் தயை செய்வேன் என்று
அழகாக அவர்களைப் பார்த்தாள். இதுவே அவர்களுக்கு பேரின்பத்தை அளித்துவிட்டது.

இங்கு கர்ப்பத்தினால் ஏற்பட்ட நலிவு துர்பலத்வம் காட்டப்படுகிறது
தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் உள்ளே இருக்க இவள் அநாதரித்து இருப்பது நலிவின் காரணமே

———

19. அசேத ஸா காமம் அஜாத நித்ரா மாதும் ப்ரவ்ருத்தேவ பதாநி சக்ரே
அத்யாஸ்த லோகாந் அவதீரயந்தி பத்ராஸநம் பாவித பாரமேஷ்ட்யா

இந்த ஸ்லோகத்தில் கர்ப்பிணிகளின் அவஸ்தைகளை விவரிக்கிறார். மூன்று அவஸ்தைகள். சயனம், கமநம், ஆசநம் முதலியன.
கமநம் என்பதற்கு விருப்பம் போல் என்று பொருள். தூக்கமேயில்லாத தேவகி எப்பொழுதும் சயனித்து இருந்தாள்.
சில சமயங்கள் மெள்ள மெள்ள அடி மேல் அடி வைத்து நடந்தாள். யாருமே அவளுக்கு லக்ஷியத்தில் இல்லை. யாரையும் மதிக்கவில்லை.
எங்கு தோன்றுகிறதோ அங்கு உட்காரலானாள். உலகை நடத்தும் பெரிய ராணி மாதிரியே உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்தாள்.
இவையெல்லாம் கர்ப்பவதிகளின் அவஸ்தைகள்.

அம்பஸ்ய பாரே -சயனத் திருக்கோலம்
புவநஸ்ய மத்யே -நடந்த திருக்கோலம்
நாகஸ்ய ப்ருஷ்டே –இருந்த நிலை
பரமேஷ்டி -பரத்வம்
மாதும் ப்ரவ்ருத்த -விபவ நிலை
அஜாத நித்ரா -வ்யூஹ நிலை
பாவித -அந்தர்யாமி
கர்ப்பம் -அர்ச்சா நிலை
முன்பு பிருஸ்னியாய் -பிருஸ்னி கரப்பன் -பின்பு அதிதியாய் வாமன திருவவதாரம் -இப்பொழுது தேவகி -கிருஷ்ண ப்ராதுர் பாவம்

—————

20. பரிக்ரம ப்ரேக்ஷித பாஷிதாத்யை: அந்யாத்ருசை: ஆப்த விபாவநீயை:
மதோப பந்நா மதலாலஸா வா ஜித ச்ரமாவேதி ஜநை: சசங்கே

சுற்றிச் சுற்றி வருதல், கூர்ந்து கூர்ந்து பார்த்தல், கச்சிதமாகப் பேசுவது முதலான செயல்கள் விலக்ஷணமாய் இருந்தன.
இதைக் கண்ட மற்றவர்கள் பலவாறு எண்ணத் தொடங்கினர். இவளுக்கு மதம் ஏற்பட்டுவிட்டதோ, அல்லது ச்ரமம் தெரியாமல் இருக்க
மத்யபானம் பண்ணியிருப்பாளோ! மதலாலஸையோ! அல்லது ச்ரமத்தை வென்றிருப்பாளோ?
(லாலஸா- கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பெரிய ஆசை உற்சாகம் எனக் கொள்ளலாம்).

கீழ் ஸ்லோகத்தில் வைதிக கதி
இதில் லௌகிக கதி

———-

21. சேஷே சயாநாம் கருடேந யாந்திம் பத்மே நிஷண்ணாம் அதி ரத்ந பீடம்
ஹயாநநை: ஆச்ரிதவந்தி க்ருத்யாம் ஸ்வாம் ஆக்ருதிம் ஸ்வப்ந த்ருசா ததர்ச

இதற்கு முன் ஸ்லோகத்தில் தூக்கமே இல்லாமல் சயனித்திருந்தாள். இப்போதோ ஆதி சேஷனில் சயனித்திருப்பதாகவும்,
கருடனுடன் செல்வதாகவும் ரத்ன சிம்ஹாசனங்களில் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாகவும் கின்னரர்களால் துதிக்கப்படுவதாகவும்
தனது உருவம் இருப்பதாக கனவு கண்டாள். எப்பெருமானைத் தவிர வேறு எவரையும் சுமக்காத கருடன்
தன்னைச் சுமப்பதாக தேவகி கனவு கண்டாள்.
உள்ளே இருக்கும் எம்பெருமானுக்கே யுரிய வாஹந கமநாசன ஸுகத்தை தமக்கே அமைந்து விட்டதை உணர்ந்தாள்.

கீழ் ஸ்லோகத்தில் வைதிக கதி
இதில் லௌகிக கதி

————-

22. அந்த ஸ்திதம் யஸ்ய விபோ: அசேஷம் ஜகந் நிவாஸம் தததீதம் அந்த:
ததாத்மநோ விச்வம் அபச்யதந்த: தர்காதிகம் தாத்ருசம் அத்புதம் ந:

எந்த எம்பெருமானின் உள்ளே அசேஷமான உலகமும் அமைந்துள்ளதோ அத் தகையவனை தன்னுள்ளே தரிக்கின்றாள் தேவகி.
அந்த க்ருஷ்ணனின் வயிற்றில் இருக்கும் ப்ரபஞ்சத்தை தன்னுடைய வயிற்றில் கண்டாள். இது எப்படி பொருந்தும்?
இது நமது தர்க்கத்திற்கும் விஞ்சிவிட்ட அத்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.

————

23. ஸுராஸுராதீச்வர மௌளிகாதாத் விசீர்ண ஜாம்பூநத வேத்ர ச்ருங்கம்
ஆலக்ஷ்ய ஸந்தோஷம் அலக்ஷ்யம் அந்யை:அநீகநேதாரம் அவைக்ஷதாராத்.

விஷ்வக்ஸேநர் தன் அருகில் இருப்பதைக் கண்டாள். அவரும் எம்பெருமானை ஸேவிக்க திரண்டு வந்து மேலே விழும்
தன்மையுடைய தேவர்களின் தலைவர்களையும், அஸுரர்களின் தலைவர்களையும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பிரம்பினால் கிரீடங்களில் அடிப்பார்.
அவ்வாறு அடிப்பதாலேயே அவர் கையில் இருந்த பிரம்பின் பொன் நுனி சிதறி இருக்கிறது. அடிபட்டவர்கள் அழவில்லை. அழியவில்லை.
ஆனால் எங்கும் சந்தோஷம் தான் தென்படுகிறது. இவரை பிறரால் காண முடியாது. இவர்தானே ஸேநாபதி.
இத்தகைய விஷ்வக்சேனரை தன் அருகில் கண்டாள்.

மூன்று ஸ்லோகங்களும் தர்சன பிரகாரம்
20-ஸ்ருதியின் படி
21-ஸாஸ்த்ரங்களின் படி
23- ஆகமப்படி -ஆகமங்களில் தானே விஷ்வக்சேனர் பிரசங்கம் உண்டு
மூன்று வித பார்வைகள் இவற்றால்

—————-

24. த்ரிலோக மாங்கல்ய நிதேஸ் த்ரிவேத்யா: ஸஞ்சீவநீம் வாசம் உதீரயந்தி
நியோக யோக்யாந் அநக ப்ரஸாதா நாகௌகஸாம் நாமபி: ஆஜுஹாவ

மூன்று உலகங்களுக்கும் உயிர்ப்பிக்க வல்ல மூன்று வேதங்களுக்கும் நிதி போல் அமைந்ததான வகையில் பேசுகின்றாள் தேவகி.
அங்கு தனது பரிஜனங்களை அனுக்ரஹிப்பவளாய் தேவ லோக வாஸிகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கலானாள்.
இவர்கள் பெயர் மறந்துவிட்டதா? இவர்களை பெருமையுடன் அழைக்கிறாளா! செல்லமாய் அழைக்கிறாளா? குழப்பத்தினால் அழைக்கிறாளா?
அல்லது தனது பரிஜனங்களுக்கு அந்த அந்த அந்தஸ்தை அளிக்க அழைக்கின்றாளோ என்ற கேள்விகள் எழுகின்றன.

அநக ப்ரஸாதா நாகௌகஸாம் நாமபி: ஆஜுஹாவ–நாகம் ஸ்வர்க்கம் என்றும் ஸ்ரீ வைகுண்டம் என்றும் கொண்டு
பரிஜனங்களை இந்திரா சந்திரா –என்றும்
கருடா -சேஷா- ஸூதர்சனா-என்றும் அழைக்கிறாள்
ப்ரமாதத்தால் -கவனக்குறைவால் அல்ல -ப்ரஸாதத்தால் அழைக்கிறாள்

—————–

25.யத்ருச்சயா யாதவ தர்ம பத்நீ யாமாஹ தர்மேஷூ பராவரேஷு
அத்ருஷ்ட பூர்வாபரயாபி வாசா ப்ரதிச்ருதா நூநம் அபாவி தஸ்யா:

முன் ஸ்லோகத்தில் வேதங்களையும் இவளுடைய வார்த்தை உயிர் பெறச் செய்கின்றது என்றார்.
இதில் இவள் வார்த்தைகளை வேதங்கள் ப்ரதி த்வனிக்கின்றன என்கிறார்.
யாதவ தர்ம பத்நியான தேவகி தனக்குத் தோன்றியபடி சிறியதும், பெரியதுமான தர்மங்களில் என்னென்ன சொன்னாளோ
அதெல்லாம் வேத வாக்கியம் எதிரொலிப்பது போலவே இருந்தது.

————–

26. க்ரியாம் உபாதித்ஸத விச்வ குப்த்யா க்ருதாபராதேபி க்ருபாம் அகார்ஷீத்
முநீந்த்ர வ்ருத்யா முகரீ பவந்தீ முக்தி க்ஷமாம் வக்தும் இயேஷ வித்யாம்

உலக ரக்ஷணத்திற்கு ஏற்றதையே செய்ய நினைத்தாள். தவறு செய்தவரிடத்தும் க்ருபை பண்ணினாள்.
வேதாந்த விசாரமுடையவளாய் ஏதோ சொல்பவளாய் முக்திக்கு ஏற்றதான வித்யையை சொல்ல விரும்பினாள்.
இதற்கு முன் ஸ்லோகங்களில் வேத த்ரய ஸஞ்சீவனமான வாக்கு என்றவர்
இதில் உபநிஷத் ரூபமாய் அவள் வாக்கு அமைந்தது என்று கூறுகிறார்.

—————–

27. ஸதாம் சதுர்வர்க பல ப்ரஸூதௌ நாராயணே கர்ப்பகதே நதாங்கீ
அபங்குராம் உந்நதிம் ஆச்ரயந்தீ ஸர்வஸ்ய ஸாதித்ஸத ஸர்வம் ஏகா

நல்லோர்க்கு நான்கு விதமான புருஷார்த்தங்களையும் நல்குமவனான நாராயணன் கர்ப்பத்தில் நேர்த்தியாய் எழுந்தருளிவிட்டபடியால்
நதாங்கியாய் ஸ்தன பாரத்தால் குனிந்து வணங்கின அங்கமுடையவளாய் இருந்தாள்.
அவள் உடல் வணங்கியதே யன்றி உள்ளத்தில் சிதறாத உயர்வினைப் பெற்று விட்டாள்.
தான் ஒருத்தியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்க விருப்பங்கொண்டாள்.

கீழ் மூன்று ஸ்லோகங்களில் வாசிக வியாபாரங்கள்
இதில் செய்கைகள்

———————-

28. க்ருசோதரீ கார்ச்யம் அதீத்ய காலே கேநாபி தாம்நா க்ருத வ்ருத்தி யோகா
பராம் அபிக்யாம் க்ரமச: ப்ரபேதே தாராபிநந்த்யா தநுரைந்தவீவ

இயற்கையாகவே மெல்லிய மேனியுடையவள். இடையும் அப்படியே. கர்ப்பம் வளர வளர மெல்லிய நிலை மாறிவிட்டது.
ஏதோ ஒரு தேஜோ விஷேசத்தினால் நாளுக்கு நாள் வ்ருத்தியாகிக் கொண்டு இருக்கிறது.
நாளடைவில் உயர்ந்த அழகினைப் பெற்று பொலிவுடன் விளங்குகின்றாள்.
இவளது மேனி தாரை கொண்டாடும் சந்திரனின் மேனி போலன்றோ இருக்கின்றது.
இங்கு தாரா என்பது கண்ணில் உள்ள தாரை என்று பொருள். எந்த கண் தான் இவளது திருமேனியை பார்த்து மகிழாது.
பல நக்ஷத்ரங்கள் இருந்தாலும் ஒரு சந்திர பிம்ப சோபை ஏற்படுமோ! நக்ஷத்திரங்களால் கொண்டாடப் பெற்றது எனவும் சொல்லலாம்.
அவனாலும் அபிநந்தனம் பண்ணப்படும் மேனிப் பொலிவு எனவும் சொல்லலாம்.

———————-

29. நிகூடம் அந்தர் தததா நிவிஷ்டம் பத்மா பரிஷ்கார மணிம் ப்ரபூதம்
மத்யேந தஸ்யா: ப்ரசிதேந காலே மஞ்ஜூஷயா ரூப்ய புவா பபூவே

உள்ளே மறைந்ததாய் இருப்பதும் உன்னதமானதும் லக்ஷ்மிக்கு அணிகலனான ரத்னம் போன்று இருப்பதுமான
பெருமானை தரிக்கின்றது தேவகியின் இடை. அதுவும் காலத்தோடு புஷ்டமாய் வளர்ந்துள்ளது.
அவ் விடை வெள்ளிப் பேழையோ என்னலாம்படி அமைந்துள்ளது. எம்பெருமானை மணியாக நிரூபணம் பண்ணுவது ஸர்வ ஸம்மதம்.
பொன்னை மாமணியை என்றும்,
சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய் என்பதும்,
பச்சை மாமலை போல் மேனி என்பதும்
மாணிக்கமே என் மணியே என்றும்
கருமாணிக்கமே என்றும் பலவிதமாக ஆழ்வார்கள் அனுபவித்துள்ளனர்.
மஞ்சூஷிகா மரகதம் பரிசிந்வதாம் த்வாம் என்கிறார் வரதராஜ பஞ்சாசத்தில். வரை மேல் மரகதமே என்கிறார்.
இங்கு தேவகியின் இடையை உபநிஷத் சாம்யத்தினைப் பெறுகிறது.
ஸாலக்ராமங்களை வெள்ளி கோயிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணுவது போல் அவளின் இடையில்
(ரூப்யம்- வெள்ளி-அழகு)பெருமான் எழுந்தருளப் பண்ணுகிறார்.

——————–

30. ஸநை: ஸநைஸ்தாம் உபசீயமாநாம் தர்சாந்த தீப்தாம் இவ சந்த்ர லேகாம்
அந்தஸ்த்த க்ருஷ்ணாம் அவலோகயந்த:சக்ருஸ் சகோராயிதம் ஆத்ம நேத்ரை:

அமாவாஸ்யை கழிந்த பிறகு சந்திரனின் கலை ஒளி பெற்று மெள்ள மெள்ள வளர்ச்சி யடையும்.
வளர வளர சந்திரனின் கலைகளில் கறுப்பு நிறம் தெரியும். அம்மாதிரி வளர்ச்சி யடைந்து வரும் தேவகியை சகோர பக்ஷிகள் போல்
தங்கள் கண்களால் கண்டனர்.க்ருஷ்ணாம் என்பது சந்திரனின் காணப்படும் கறுப்பு நிறம். க்ருஷ்ணம்ருகம் என்றும் கூறுவர்.
உள்ளே இருப்பவன் கண்ணன். இந்த ரஹஸ்யத்தை தெரிந்து கொண்டனர் போலும்.
சந்திரனின் கிரணத்தினை நுகர்வது போல் தேவர்கள் க்ருஷ்ணாம்ருதத்தை உண்டனர்

————-

31. மயி ஸ்திதே விச்வகுரௌ மஹீயாந் மாபூத் புவோ பார இதீவ மத்வா
ஸகீ ஜநாநாம் அவலம்ப்ய ஹஸ்தாந் ஸஞ்சார லீலாம் சநகைஸ் சகார

அவன் பெருமான், விஸ்வ குரு என்னிடம் வஸிக்கிறான். அவன் அவனையும் என்னையும் தாங்க வேண்டுமானால்
பூமிக்கு எவ்வளவு பாரம் அதிகமாகும் என்று எண்ணுவாள் போல் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு
மெல்ல சஞ்சாரம் செய்தாள். இதுவும் ஒரு லீலை யன்றோ!

—————-

32. முகுந்த கர்ப்பா முகுரேஷு தேவீ நாபச்யத் ஆத்மாநம் அவாப்த பூஷா
நாதத்விஷா நந்தக தர்பணேந அதி த்ருக்ஷத் ஆத்மாநம் அத்ருச்யம் அந்யை:

முகுந்தனை கர்ப்பத்தில் கொண்டுள்ள தேவகி நன்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்று தன்னை கண்ணாடிகளில் காணவில்லை.
பெண்டிர் தம்மை நன்கு அலங்கரித்து அதுவும் இது போன்ற கர்ப்ப நிலையில் ஆபரணம் பூண்ட பெண்டிர் தங்களைக் கண்ணாடியில் பார்ப்பது இயல்பு.
ஆனால் அவளோ முகுந்தனையே தன் ஆபரணமாக தரித்துள்ளவள். அவள் பல ஆபரணங்கள் அணிந்திருந்தும் அதை பெரிதாக நினைக்கவில்லை.
ஆனால் முகுந்தனை தரித்துள்ளதால் அவள் தன்னைப் பார்க்க விரும்பினாள்.
ஆகவே நாதனின் ஒளியான அவனுடைய வாள் என்ற கண்ணாடியின் மூலமாக தன்னைக் காண விரும்பினாள்.
நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம் கட்கம் என்பர். ப்ரதீப்தம் என்றால் அது கண்ணாடி போல் பளபளக்கும்.
கண்ணனையே ஒளியாகக் கொண்ட நந்தகத்தில் பார்த்தால் கண்ணனையும் பார்க்கலாம் என எண்ணினாள் போலும்.

————

33. ஸ்ரஜ: ப்ரபூதா ந ச(ஷ)ஷாக வோடும் தூரே கதா ரத்நவிபூஷணாநாம்
பவிஷ்யதி க்ஷோணி பராபநோதே ப்ரத்யாயநம் ப்ராதமிகம் ததாஸீத்

முதல் ஸ்லோகத்தில் ஆபரணங்களை அணியவில்லை என்றார்.
இதில் ஆபரணங்களைக் காட்டிலும் மெல்லியதான மாலைகளை கூட அணிய இயலாதவளாக ஆகிவிட்டாள்.
பண்டைய நாட்களில் மாலைகளை அணிந்து சஞ்சரிப்பது வழக்கம். கர்ப்ப பாரம் தவிர்க்க முடியாது. மாலைகளின் பாரம் வேறு வேண்டுமா?
இது எவ்வாறு இருக்கின்றது எனில் பிறக்கப் போகும் மகனால் பூமியின் பாரம் குறையப் போகிறது.
அதை முன்கூட்டியே உறுதிப் படுத்தும் அடையாளமாக இருந்தது என்பதாம்.

————

34 திவௌகஸோ தேவக வம்ச லக்ஷ்மீம் விலோக்ய தாம் லோகநி தாந கர்ப்பாம்
விபூதிம் அக்ரேஸர வேத வாதா: வ்யாசக் யுரஸ்யா விவித ப்ரகாராம்

தேவ தேவன் கர்ப்பத்தில் எழுந்தருளி விட்டான். இதை உணர்ந்த தேவர்கள் தேவக வம்சத்தின் லக்ஷ்மியெனத் திகழ்ந்த தேவகியை
உலகங்களின் ஆதி காரணமான வஸ்துவை கர்ப்பத்தில் கொண்டிருப்பதைக் கண்டு வேத வாக்கியங்களை
முன் மொழிபவர்களாய பலவகையான இவளுடைய வைபவத்தை துதிக்கலாயினர்.

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தேவர்கள் புகழ்வதை 15 ஸ்லோகங்கள் உண்டு
ப்ரஹ்ம கர்ப்பா
வேத கர்ப்பா
ஸ்ருஜ்ய ஸ்வரூப கர்ப்பா
யஜ்ஞ கர்ப்பா
பல கர்ப்பா
வஹ்னி கர்ப்பா
தேவ கர்ப்பா
தைத்ய கர்ப்பா
வாஸர கர்ப்பா
தைத்ய கர்ப்பா
ஞான கர்ப்பா
நய கர்ப்பா
காம கர்ப்பா
க்ரஹர்க்ஷ தாரகா கர்ப்பா
விஷ்ணு கஸ் கர்ப்பஸ் -தவ -17 விதங்களில் ஸ்துதித்தனர்

————–

35. பதி: ஸ ஸத்வாம் அபி தத் ப்ரபாவாத் அதுக்கசீ(sh)லாம் ஸமயே பவித்ரீம்
ஸுகைகதாநாம் அவலோக்ய தேவீம் ஸ்வ ஸம்பதம் ஸூசயதீதி மேநே

இதுவரை தேவகியின் கர்ப்ப லக்ஷண ப்ரபாவங்கள் கூறப்பட்டன.
இதில் பூரண கர்ப்பிணியாய் ப்ரஸவ காலம் நெருங்கும் சமயத்தில் தேவகியின் மநோ நிலையும் அப்போது
வஸுதேவரின் மனோநிலையும் எப்படி இருந்தன என்று கூறுகிறார்.
தேவகியின் பதியான வஸுதேவர் பூரண கர்ப்பிணி யாயிருந்தும் அந்த கர்ப்பத்தின் ப்ரபாவத்தினால் எந்த விதமான
ச்ரமமோ துக்கமோ இல்லாமல் இருந்து ப்ரஸவ சமயத்தில் ஸுகமாக இருப்பாள் என்றும் கண்டு
தனது பவித்திரமான செல்வத்தை அது காண்பிப்பதாக உணர்ந்தார்.

————

36. பித்ருத்வம் ஆஸாத்ய ஸுராஸுராணாம் பிதாமஹத்வம் ப்ரதிபத்ஸ்யமாத:
அநந்த கர்ப்பாம் அவலோக்ய தேவீம் அதுஷ்யத் அந்யேஷு கதாபிலாஷ:

முன்னம் கச்யபராக இருந்தவர் இப்பொழுது வஸுதேவர். திதி, அதிதி மூலம் அவர்களுக்கு பிறந்தவர்கள் தேவர்களும் அசுரர்களும்.
பகவான் உபேந்திரனாக அவதரித்ததும் கச்யபருக்குத்தான்.
வாமனனுக்கோ, த்ரிவிக்ரமனுக்கோ க்ருஹஸ்த தர்மமோ, சந்ததியோ சிந்திக்கப்படுவதில்லை.
ஆனால் கண்ணன் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. முன்பு அவர் தேவர்களுக்கு பிதாவாக இருந்தார்.
இப்போது பிதாமஹத்வம் பெற்றுவிட்டார். அனந்தனை கர்ப்பத்தில் கொண்ட தனது தேவியை பார்த்து
வேறு எதிலும் அபிலாஷை இல்லாதவராய் அகமகிழ்ந்தார் வஸுதேவர்.

—————–

அந்திப் பொழுது வர்ணனம் (37-43)

37. தாபோபசாந்திம் ஜகதாம் திசந்தீ ஸந்த்யாபரா ஸாதுஜந ப்ரதீக்ஷ்யாம்
தாம் ஈத்ருஷீம் விச்வபிது: ப்ரஸூதிம் ஸம்வேதயந்தீவ ஸமாஜகாம

இது வரை தேவகியின் கர்ப்ப லக்ஷணங்களை தெரிவித்தார்.
இனி சாயங்காலம் தொடக்கமாக நள்ளிரவு வரையிலான வர்ணனங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.
உலகங்களின் தாபத்திற்கு சாந்தியை அளிப்பதான, ஸாது ஜனங்களால் எதிர்பார்க்கப்படுவதாய் உள்ள மாலை வேளை
விச்வ பிதாவின் இத்தகைய அவதாரத்தினைக் காண்பிப்பது போல வந்து சேர்ந்தது.

—————–

38. ஸுவர்ண பீதாம்பர வாஸிநீ ஸா ஸ்வதாம ஸஞ்ச்சாதித ஸூர்யதீப்தி:
உபாஸநீயா ஜகதாம் பபாஸே முரத்விஷோ மூர்த்திரிவ த்விதீயா

முந்திய ஸ்லோகத்தில் ஸாயம் ஸ்ந்த்யையின் வருகையை வர்ணித்தார்.
இதில் ஸ்ந்த்யா என்பவளைப் பெண்ணாகவே அழகான முறையில் வர்ணிக்கிறார். அழகான பீதாம்பரத்தை அணிந்திருக்கிறாள்.
மனோஹரமான ஸுவர்ணத்தோடு கூடியதான (அந்தி போல் நிறத்தாடை) பட்டுப்புடவை எனக் கொள்ளலாம்.
ஸந்த்யா ப்ரகாசத்திலே சூரிய ப்ரகாசம் மறைவது இயற்கை. தனது ப்ரகாசத்தினால் ஸூரியனுடைய ஒளியை மறைப்பவளாய்
முரன் என்ற அசுரனைக் கொன்ற பகவானின் இரண்டாவது உருவமோ என்னும் வகையில் அமைந்தவளாய்
உலகங்களுக்கு உபாஸிக்க வேண்டியவளாகி விட்டாள்.
( இன்னும் பெருமான் அவதரிக்கவில்லை. எப்படி இருப்பான் என தெரியாது) அதனால் ஸந்த்யையே இரண்டாவது ரூபமாக இருந்தாள் என்கிறார்.

————–

39. ப்ரஸக்தபாதஸ் சரமாம்புராசௌ ரக்தோருபிம்போ ரவி: அஸ்தசைலாத்
திநாந்த நாகேந த்ருடப்ரணுந்நம் மநஸ்ஸிலா(manashshila) ச்ருங்க மிவாப பாஸே

சூரியன் மாலையில் அஸ்தமன மலையில் இருந்து (சரம அம்புராசௌ-)மேற்கு கடலில் சிவந்த பெரிய உருவத்துடன் விழத் தொடங்கினான்.
பகலின் முடிவு- மாலை என்றொரு யானையினால் வேகமாக எறியப்பட்ட மநஸ்ஸிலா ச்ருங்கம் போலிருந்தது என்கிறார்.
( மநஸ்ஸிலா அல்லது மனshஸிலா – மலையில் ஒரு விதமான தாதுப்பொருள் உண்டு. அது சிவந்த நிறத்தில் இருக்கும்.
பெரிய பெரிய குன்றுகளாக இருக்கும். மாலையை யானை என வர்ணிக்கிறார்.
கறுப்பு நிறம். மலைச் சிகரத்தையே வீழ்த்தும் யானை என்று வர்ணிக்கிறார் காளிதாசன்.
அத்தகையதைப் போன்ற மாலையானது ப்ரகாசத்தின் அதிபதியான சூரியனை திடமாக எழுந்திருக்க முடியாமல் தள்ளியது என்கிறார்.
ஆஹா! ஆஹா!

—————

40. நிமஜ்ஜதா வாரிநிதௌ ஸவித்ரா கோ நாம ஜாயேத கரக்ரஹீதா
ததேதி ஸம்பாவநயைவ நூநம் தூராத் உதக்ஷேபி கராக்ரம் உச்சை:

பெருங்கடலில் சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் ஆகாயத்தில் அவனுடைய கிரணங்கள் தெரிவிக்கப்பட்டன.
தனக்கு யாராவது கை கொடுத்து தூக்கிவிட மாட்டார்களா என்று எண்ணி தனது கைகளை வெகு தூரம் வரை மேல் நீட்டுகிறான் போலும்.

——————–

41. ஸ்ப்புரத் ப்ரபா கேஸரம் அர்க பிம்பம் மமஜ்ஜ ஸிந்தௌ மகரந்த தாம்ரம்
ஸந்த்யாகுமார்யா ககநாம் புராசே: க்ரீடாஹ்ருதம் க்ஷிப்தமிவாரவிந்தம்

கேஸரங்கள் பூவின் தாதுக்கள். அவைபோல் விளங்குகின்ற ஒளியுடைய சூரிய பிம்பம். அது தாமரை மலர் போல் சிவந்த நிறமுடையது.
அது கடலில் மூழ்கிவிட்டது. ஸந்த்யை என்ற சிறுமி ஆகாயம் என்ற கடலிலிருந்து விளையாட்டாகப் பறித்து எறிந்து விட்ட
தாமரைப் பூப் போலே ஆயிற்று. இது ஒரு அத்புதமான ஸ்லோகம்.
ஸந்த்யா காலத்தினைக் குமாரியாகவும், சூரியனைத் தாமரைப் பூவாகவும் ஆகாயத்தைக் கடலாகவும் நிரூபணம் செய்வது ஸ்வாமியின் தனிப்பாங்கு.
சூரியன் மறைந்தால் தாமரைப்பூ மூடிக் கொள்ளும்.சூரியனே தாமரைப் பூவானால் மூழ்குவது என்ற நிலையாம்.
முந்தைய ஸ்லோகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிற என்றும் இதில் மூழ்கிவிட்டது என்றும் தெரிவித்ததை கவனிக்க வேண்டும்.

—————–

42. பணாமணி ப்ரேக்ஷ்ய கராம்சுபிம்ப: ஸந்த்யா ஸுபர்ணிம் அவலோக்ய பீத:
தாபாதிகோ வாஸர பந்நகேந்த்ர: ப்ராயேண பாதாள பிலம் விவேச

பகல் என்கிற பெரியதொரு பாம்பு தாபம் அதிகமாகி தனது தலையில் உள்ள மணியினால் கதிரவனோ என பயந்து
ஸந்த்யை என்ற கருட பக்ஷியின் தாயைக் கண்டு நடுங்கி பாதாளம் என்ற பொந்தில் புகுந்துவிட்டது போல் ஆயிற்று.
ஸந்த்யா காலத்தை ஸுபர்ணீம் என்கிறார். ஆகவே பெண்பாலாக வர்ணித்து விட்டமையால் கருடனுடைய தாய் என்கிறார்.
சூரியன் மூழ்கும் போது அவனுடைய உருவம் தலை போல் இருக்கும். உடனே இருட்டிவிடும். இதை அழகாக விவரிக்கிறார் ஸ்வாமி.
அதிகமான தாபத்தை உடையது பகல். அதை போக்க வேண்டுமே. விஷத்தை அதிகமாக பெற்றிருப்பதால் கொதிப்பு அதிகம் உடையது பாம்பு.
(வாஸரம் – பகல்). வாஸர என்பது பாம்பின் வகை. (பந்நகம், வாஸர போன்ற பாம்புகள் ஜனமேஜயனின் யாகத்தில்
வந்து விழுந்ததாக பாரதம் குறிப்பிடுகிறது. ஆகவே தாபத்தை தணித்துக் கொள்ள பாதாளத்தில் ஒளிந்து விட்டதாக கூறுகிறார்.

—————–

43. ப்ரதோஷ ராகாருண ஸூர்ய லோகாத் திசா கஜோ த்ருப்த இவாதிகோர:
காலோபநீதம் மதுநா ஸமேதம் அபுங்க்த மந்யே கபலம் பயோதி:

மாலை வேளை-சிவந்த நிறம். அப்பொழுது கதிரவன் கடலில் மூழ்கி மறைகின்றான். இதை வர்ணிக்கிறார்.
கடல் என்கிற ஒரு பெரிய மதம் தோய்ந்த திக்கஜமொன்று காலம் கொடுத்த தேனில் தோய்ந்த கவளம் போலே
சூரியனை விழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படியாக மாலை வேளையை வர்ணிக்கிறார்.
கதிரவன் கடலில் மூழ்கும் நிலையை வர்ணிக்கிறார். அதிகோரமானதும் மதம் பிடித்ததுமான திக்கஜம் என்கிறார்.
மாலையானதால் மேற்குத் திக்கில் இருக்கும் யானைக்கு அஞ்சனம் என்று பெயர். (கிழக்கில் ஐராவதம்). அஞ்சனம் கறுப்பு நிறம்.
உருவத்தாலும் செயலாலும் கொடூரமானது. மேலும் காலோபநீதம் மதுநா என்கிறார். மது சிகப்பாயிருக்கும். சூரியனும் சிவப்பு.
திக்கோ வாருணீ. யானையோ அஞ்சனம். ஆகவே கடல் கபலத்தை விழுங்கிவிட்டது என்று பொருளாகும்.

—————–

44. ததா தம: ப்ரோஷித சந்த்ரஸூர்யே தோஷாமுகே தூஷித ஸர்வ நேத்ரம்
வியோகிநாம் சோகமயஸ்ய வந்ஹே: ஆசாகதோ தூம இவாந்வபாவி

அந்த சமயத்தில் சூரியனும் இல்லை. சந்திரனும் இல்லை. இரவு தொடங்குகிறது. தோஷாமுகம் என்பது இரவின் தொடக்கம்.
எல்லோருடைய கண்களையும் மறைப்பது தோஷாமுகத்தின் ப்ரபாவம். வஸ்துக்களும் உள்ளன. கண்களும் உள்ளன.
ஆனால் அக் கண்களால் வஸ்துக்களைக் காண இயலவில்லை. இருள் சூழ்ந்து கொண்டது.
தம்பதிகள் அல்லது காதலர்கள் கால வசத்தால் பிரிந்து இருக்கின்றனர். அவர்களுடைய சோகம் பெருகி பாதிக்கிறது.
சோகம் பெருகி நெருப்பு போல் எரிகிறது. வெளியில் ஜ்வாலை படராத நெருப்பு என கவி வர்ணிக்கிறார்.
வெளியில் தெரிந்தால் தணிக்கலாம். ஆனால் அது வெளிக் கிளம்புமா? உள்ளேயே புகைக்க ஆரம்பித்துவிட்டது.
புகையே இருள். இரவு தொடக்கமாதலால் இரண்டு எதிர் திக்குகளில் கிளம்பின சோகப் புகையே
எங்கும் பரவி விட்டதோ என்னலாம் படியுள்ளது.

—————-

45. ஸதாரபுஷ்பா த்ருதபல்லவஸ்ரீ: ப்ரச்சாய நீரந்த்ரதம: ப்ரதாநா
விச்வாபிநந்த்யா வவ்ருதே ததாநீம் வைஹாயஸீ காபி வஸந்த வந்யா

முன் ஸ்லோகத்தில் இருள் பரவியதைக் கூறினார். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நக்ஷத்திரங்கள் தோன்றுவது
முதலான அழகினை வர்ணிக்கிறார். ஸந்த்யையின் ஒளியினால் சிவப்பு நிறமும் கறுத்தும் இருக்கும் தளிரின் ஒளி போன்ற ஆகாயம்.
அது ஒரு வனம் போல விலக்ஷணமான வசந்த வன சோபையுடன் திகழ்கிறது. அதில் நக்ஷத்திரங்கள் பூக்கள் போல திகழ்கிறது.
வனத்தின் சோபையை வானத்திலிருந்து தான் பார்க்க இயலும். ஆனால் வானத்தின் வன சோபையை இங்கிருந்தே நாம் அனுபவிக்கலாம்.

—————

46. அலக்ஷ்யத ச்யாமலம் அந்தரிக்ஷம் தாராபிர் ஆதர்சித மௌக்திகௌகம்
நிவத்ஸ்யதோ விச்வபதேர் அவந்யாம் காலேந ப்ருத்யேந க்ருதம் விதாநம்

வானம் கறுத்து காணப்பெற்றது.கறுநிறமுள்ள ஆகாயம் விதானமாக காட்சியளித்தது.அங்கு முத்துக்களைக் குவித்தது போல்
நக்ஷத்திரங்கள் காட்சி யளிக்கின்றன.விதானத்தில் மேற்பரப்பில் அழகான முத்துக்களை அமைப்பது உண்டு.
இங்கு காலம் என்ற பணியாள் வானத்தையே விதானமாக்கி முத்துப் பந்தல் அமைக்கிறது!
ப்ரபு வருவதற்கு முன்னம்தான் பந்தல் போடுவது,விதானம் கட்டுவது வழக்கம். இங்கு பூமியில் வாசம் செய்ய விச்வபதி வருகிறான்.
பூமியில் வசிக்கப் போவதால் வானமே விதாநம் ஆயிற்று.

——————-

47. அப்ருங்கநாத ப்ரதிபந்ந மௌநா நிமேஷபாஜோ நியதம் வநஸ்த்தா:
தூரம் கதே ஸ்வாமிநி புஷ்கரிண்ய: தத் ப்ராப்தி லாபாய தபோ விதேநு:

சூரியன் மறைந்ததும் இயற்கையாகவே தாமரை மலர்கள் வாய் கூம்பும். மலர்கள் மூடி விட்டதால் வண்டுகள் முரலாமல் அடங்கி விட்டன.
இனி நாதம் இல்லை. மௌனம் முனிவரின் செயல். தவம் புரிவோர் கண்களை மூடிக் கொண்டு இருப்பர். அசைவில்லாமல் இருப்பர்.
சிலர் நீரில் நின்றும் அசைவற்று இருப்பர்.அதே போல் தனது கணவனான சூரியன் வெகுதூரம் சென்று விட்டபடியால்
தாமரையானது தவக் கோலத்தில் இருக்கிறதாம். தாமரைக்கும் சூரியனுக்கும் பதி-பத்னி பாவம். ஸ்வாமி எங்கோ சென்றுவிட்டார்.
அவரை அடைய கடுந்தவம் புரிந்து தான் ஆகவேண்டும்.
(சுத்தமான தீர்த்தத்தை புஷ்கரிணி என்பார்கள். தூய்மையும் தவமும் கொண்ட படியால் தாமரை ஓடைகளை ஸ்வாமி புஷ்கரிணி என்பார்கள். )

————–

48. நிமீலிதாநாம் கமலோத் பலாநாம் நிஷ்பந்த ஸக்யைரிவ சக்ர வாகை:
விமுக்த போகைர் விததே விஷண்ணை: விபோத வேலாவதிகோ விலாப:

தாமரை மலர்களும் கரு நெய்தல்களும் கண்களை மூடிக்கொண்டு விட்டன. இரவில் கருநெய்தல் மலரத் தானே வேண்டும்.
ஆனாலும் மலரவில்லை. இதைக்கண்டு சக்ரவாக பக்ஷிகள் தமக்குள்ளே பிரிந்து அழுகின்றன.இரவில் சக்ரவாகம் பிரிந்தே இருக்கும்.
விடியும்வரை அவை வாய்விட்டு அழுத வண்ணம் இருக்கும். இதன் காரணம் வேறாயிருந்தும் ஸ்வாமி அழகான கவிமரபால் விளக்குகிறார்.
தாமரை மலரும் கருநெய்தல் மலரும் பதியைப் பிரிந்த துக்கத்தில் கண்மூடிக் கிடக்கின்றனவே,
தாம் மட்டும் போகத்தை அனுபவிக்கலாகது என்றெண்ணி அவை உயிர் பெற்று எழவேண்டும் என்று வாய் ஓயாமல் கூவுகின்றன போலும்.

————-

49. தமிஸ்ர நீலாம்பர ஸம்வ்ருதாங்கீ ச்யாமா பபௌ கிஞ்சித் அதீத்ய ஸந்த்யாம்
ப்ராசீநசைலே ஸமயாந் நிகூடம் ஸமுத்யதா சந்த்ர மிவாபிஸர்தும்

இருளாகிற கறுப்பு சேலை அணிந்து அதனால் தன்னைப் போர்த்திக் கொண்டு ச்யாமா(நல்ல வயதுடைய பருவப் பெண்)
ஸந்த்யா காலம் கழிந்ததும் தன் ஆசைநாயகன் கிழக்கு மலையில் ஒளிந்திருக்க அவனிடம் காதல் கொண்டு குறிப்பிட்ட சமயத்தில்
குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் அபிஸாரிகையை போல் சந்திரனை அணுக முயற்சி செய்தாள்.
(கிழக்கு மலையில் ஒளிந்திருப்பவன் சந்திரன். அஷ்டமியாதலால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னே தான் தோன்றுவான்.)

—————-

50 நிசாகரேண ப்ரதிபந்நஸத்வா நிக்ஷிப்ததேஹேவ பயோதிதல்பே
ஜகத் ஸமீக்ஷ்யா ஜஹதீச கார்ச்யம் ப்ராசீ திசா பாண்டரதாம் அயாசீத்

சந்திரனோடு சேர்ந்துவிட்டாள் ஒரு பெண். பும்யோகம் ஏற்பட்டால் கர்ப்பம் தரிக்க நேரமாகுமோ!
கடலெனும் படுக்கையில் கிடக்கிறாள் போலே இருக்கிறாள்.சந்த்ரோதயம் ஆகப் போகிறது.
அதனால் தனது க்ருசத் தன்மையை விட்டுவிட்டு உலகமெலாம் காணத் தகுந்தவளாய் ஆகப் போகிறாள்.
எவ்வளவு உடல் வெளுத்துவிட்டது. அது வேறு யாரும் இல்லையாம். கிழக்கு திக்கு என்பதேயாம்.

————–

51. தம:ப்ரஸங்கேந விமுச்யமாநா கௌரப்ரபா கோத்ரபிதாபி நந்தயா
விதூதயாரம்ப விசேஷத்ருச்யா ப்ராசீ திசா பாஸத தேவகீவ

கீழ் ஸ்லோகத்தில் கிழக்கு திக்கு கர்ப்பவதியாயிற்று என்றார். இதில் மேலும் கிழக்கு திக்கு அடைந்த பெருமைகளைக் குறிக்கிறார்.
கோத்ரம் என்றால் மலை என்றும் வம்சம் என்றும் பொருள். மலைகளை பிளந்தவன் இந்திரன். அவனது திசை கிழக்கு.
க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் தான் சந்திரன் உதயமாகும்
அப்பொழுது இருள் அகன்று கிழக்கு தனி ஒளியைப் பெறுவது இயற்கை.
சந்திரன் உதிக்க ஆரம்பித்ததால் கிழக்கு வெளுத்த ஒளி உடையதாய் , அதற்கு அதிபதியான இந்திரனால் கொண்டாடப்படுவதாய் உள்ள
கிழக்கானது தேவகி போல் விளங்கியது. இந்த ஸ்லோகத்தில் கூறப்படும் ஒவ்வொரு விசேஷணமும் இரண்டு அர்த்தங்கள் கொண்டது.
தேவகியைப் போலே கிழக்கு திக்கு ஒளிமிக்கதாயிருந்தது. எம்பெருமான் கர்பத்தில் எழுந்தருளி விட்டபடியால்
தமோ குணத்தின் பலிதமான சோகமோ பயமோ இல்லாமல் இருந்தாள் தேவகி.
கோத்ர பிதா என்பதற்கு கண்ணனால் என்று பொருள்.
(ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வாழ்ந்ததால் கோத்ரத்தை பேதித்து வாழ்பவன்).
விது என்றால் ஹ்ருஷிகேசனையும் விதூதயம் சந்திரனையும் குறிக்கும்.
விதூதயம் என்பதற்கு சமீபத்தில் அவதரிக்கப் போவதால் மிகுந்த அழகுடையவளாய் இருந்தாள் எனவும் கொள்ளலாம்.
ஆகவே தேவகி கிழக்கு திக்கு போல் இருந்தாள் எனக் கூறாமல் கிழக்கு தேவகீ போல் இருந்தது என்கிறார்.

—————–

52. அபத்யலாபம் யது வீரபத்ந்யா: மஹோததௌ மக்ந ஸமுத்திதேந
தத்வம்சமாந்யேந ஸமீக்ஷ்ய பூர்வம் ப்ராப்தம் ப்ரதீதேந புரோதஸேவ

யதுவின் வம்சத்தில் மிகவும் சிரேஷ்டராய் விளங்கும் வஸுதேவரின் பத்நியான தேவகிக்கு புத்திரன் பிறக்கப் போகிறான்
என்பதை அறிந்து கொண்டு கடலில் நீராடிவிட்டு வெளியே வரும் சந்திரன் முன்னமே விஷயம் தெரிந்து வரும்
புரோஹிதன் போல் வந்து விட்டான். யதுவம்சம் சந்திர வம்சம் தானே.
அதில் கௌரவத்துடன் விளங்குவதால் அவனே வருவது பெருமை எனப்பட்டது.

——————-

53. க்ஷ்வேலோபமே ஸந்தமஸே நிரஸ்தே ஸோமம் ஸுதாஸ்தோமம் இவோத்வமந்தீ
துக்தோத வேலேவ துதோஹ லக்ஷ்மீம் ஆசா மநோக்ஞாம் அமரேந்த்ரமாந்யா

விஷம் போன்றதொரு காரிருள் நீங்கி விட்டது. சந்திரன் தோன்றி விட்டான். இது அமுதப் பெருக்கு என்னலாம்படி உள்ளது.
க்ஷீர ஸமுத்திரத்தின் கரை போன்ற அழகான கிழக்குதிக்கு அழகான சோபையை பொழிகிறது.
ஒருக்கால் கிழக்கு சந்திரனை உமிழ்ந்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

————-

சந்திரோதய வர்ணனை (53-67)

54. தமஸ் ஸமாக்ராந்தி வசேந பூர்வம் ஜக்ஞே நிமக்நைரிவ பூததாத்ர்யம்
ததஸ் துஷாராம்சுகராவகூடை: உத்தப்யமாநைரிவ சைல ச்ருங்கை:

முன்னம் இருள் பரவியதன் காரணமாக பூமியில் மலைகளின் சிகரங்கள் மூழ்கிவிட்டது போல் இருந்தன.
பிறகு சந்திரனின் கிரணங்கள் படிந்த பொழுது மறுபடியும் அவை வெளிக் கிளம்புவன போல் ஆயின.

ஸங்க்ராந்தி என்னாமல் ஸமக்ராந்தி -ஸம்யக் ஆக்ரமணம் -இருள் ஆக்ரமித்து அட்டூழியம்

————-

55. திசஸ் ததாநீம் அவநீதராணாம் ஸகைரிகை: பாரத பங்க லேபை:
சகா சிரே சந்த்ர மஸோ மயூகை: பஞ்சாயுதஸ்யேவ சரை: ப்ரதீப்தை:

அப்பொழுது திக்குகள் எல்லாம் மிகவும் பொலிந்து விளங்கின.காரணம் சந்திரனின் கிரணங்கள் மலைகளின் சிகரங்களில்
படிகின்றன.கைரிகம் என்பது தாதுப்பொருள். கைரிகம் என்பது தங்கத்தையும் குறிக்கும். பாரதம் என்பது பாதரஸத்தைக் குறிக்கும்.
பாதரஸத்தில் கலந்து தங்கம் பூசப்பட்டது போல கிரணங்களினால் சிகரங்கள் விளங்கின.
அப்போது அவை மன்மதனின் பாணங்கள் போல் ஜொலித்தன.திக்குகளாகிற பெண்கள் சந்திர கிரணங்களாகிற பூக்களை சூட்டி
மகிழ்வது போலும், சந்திர கிரணங்கள் மன்மத சரங்களைப் போலவும் தோற்றமளித்தன.

——————–

56. ஸமுந்நமந்தீ குடிலாயதாத்மா சசாங்க லேகோதய த்ருச்யகோடி:
வியோகிசேதோலவநே ப்ரவீணா காமோத்யதா காஞ்சந சங்குலேவ

சந்திரனின் ரேகை, உதயமாகும் போது அழகான நுனி தோன்றுகின்றது. வளைந்தும் நீண்டும் வெளிக் கிளம்புகின்றதாய்,
சந்திரன் கோடு தோன்றும் போது தோன்றும் அழகான நுனி, பிரிந்த காதலர்களின் மனதை அறுப்பதில் கை தேர்ந்தவனான
காமனால் ஏந்தப்பட்ட தங்க அரிவாள் போல் இருந்தது.

——————-

57. தமாம்ஸி துர்வாரபலஸ் ஸ கால: ப்ராயோ விலோப்தும் ஸஹஸா திசாம் ச
மநாம்ஸி காமஸ்ச மநஸ்விநீநாம் ப்ராயுங்க்த சைத்யாதிகம் அர்த்தசந்த்ரம்

காலத்தின் பலத்தை எவ்வாறு அறிய இயலும். அதன் பலத்தை தடுத்து நிறுத்த யாராலும் இயலாது. அது விரைகிறது.
திக்குகள் வரை படர்ந்துள்ள இருட்களை முழுதுமாக போக்கிட முனைந்து விட்டது. அதுமட்டுமல்ல. காலத்தைப் போலவே காமனும் பலசாலி.
தைரியசாலிகளான ஸ்தீரிகளின் உள்ளங்களை அடக்குவதற்கும் முனைந்து விட்டான். இருவரும் செய்வது என்ன?
அர்த்த சந்திர ப்ரயோகம் தான். தோன்றியது அஷ்டமி சந்திரன். அர்த்த சந்திரனானபடியால் வர்ணனம்.

————-

58. கரேண ஸங்கோசிதபுஷ்கரேண மதப்ரதிச்சந்த கலங்கபூமா
க்ஷிப்த்வா தமஸ்(sh) சைவலம் உந்மமஜ்ஜ மக்நோ திசாநாக இவேந்து: அப்தே:

சந்திரன் கடலிலிருந்து தோன்றுகிறான். அவன் திக்நாகம் போல் இருக்கிறான். திக்கஜம் கடலில் மூழ்கி வெளிவருவது போல் உள்ளது.
இருள் கடலில் படர்ந்த பாசி போல் உள்ளது. அவற்றை விலக்கிக் கொண்டு வருவது போல் சந்திரனுக்கும் யானைக்கும் அவ்வளவு பொருத்தம்.
சந்திரன் தனது கையினால்(வருகை) தாமரை மலரை மூடச் செய்கிறான். யானையும் தனது தும்பிக்கையை மடக்கி கிளம்பும்.
யானைக்கு மதஜலம் பெருகும். சந்திரனின் களங்கம் மதஜலம் போல் தோன்றும்.

திசாநாக இவேந்து-திசா நாகம் –ஐராவதத்தைக் குறிக்கும் -அதுவும் வெளுப்பு -சந்திரனும் வெளுப்பு

————

59. மதோதயா தாம்ர கபோலபாஸா சக்ரஸ்ய காஷ்ட்டா சசிநா சகாஸே
உதேயுஷா வ்யஞ்ஜயிதும் த்ரிலோகீம் நாதஸ்ய ஸா நாபிரிவாம்புஜேந

இந்திரனுடைய திக்கான கிழக்கு மூன்று உலகங்களையும் விளங்கச் செய்யத் தோன்றிய சந்திரனால் மிகவும் ப்ரகாசித்தது.
மேலும், தோன்றும் போது கொஞ்சம் சிவப்பு நிறம் கலந்திருக்கும். ஆஸவம் போன்ற மதுவின் சேர்க்கையினால் கொஞ்சம் சிவந்து
ஒளி பெற்ற கன்னமுடையவனாகத் தோன்றினான். அவனால் கிழக்கு விளங்கியது. இது எப்படி இருக்கிறது என்று வர்ணிக்கிறார்.
பத்மநாபனுடைய நாபியானது தாமரைப் பூவால் எத்தகைய சோபை அடையுமோ அத்தகையது என்பதாம்.
நாபி கமலமானது ப்ரம்மனைத் தோற்றுவித்து அவன் வாயிலாக மூன்று உலகங்களையும் தோற்றுவிக்குமோ
அத்தகைய தாமரை போல சந்திரன் விளங்கினான்.

—————-

60. ஸமீபத: ஸந்தமஸாம்புராசே பபார சங்காக்ருதிர் இந்துபிம்ப:
பித்தோபராகாதிவ பீதிமாநம் தோஷாவில ப்ரோஷித த்ருஷ்டிதத்தாத்

இருள் என்ற பெருங்கடலில் சங்க வடிவில் உள்ள சந்திர பிம்பம் மஞ்சள் நிறத்தை ஏந்தி நின்றதாம்.
இந்த மஞ்சள் நிறம் பித்த சம்பந்தத்தினால் ஏற்படுவதாம். பிரிந்து வாழும் காதலர்கள் கண்கள் விழித்து அதனால்
கண்களில் தோஷங்கள் ஏற்பட அதன் காரணமாக பித்த சம்பந்தம் அதிகமாக சந்திரபிம்பமும் மஞ்சள் நிறமாகத் தோன்றுகிறது.

————-

61. க்ருசோதரீ லோசந க்ருஷ்ணலக்ஷ்மா ராத்ர்யாஸ் ஸமித்தோதயராக இந்து:
கஸ்தூரிகா குங்கும சித்ரிதாத்மா கர்ப்பூர விந்யாஸ இவாந்வபாவி

மெல்லிய இடையுடைய மங்கைகளின் கண்கள் போல் கறுத்து இருப்பதையே அடையாளமாகக் கொண்டவனும்
உதய காலத்தில் ஒரு விதமான சிவப்பு நிறமுடையவனுமான சந்திரன், கஸ்தூரியும் குங்குமமும் இழைத்து
ராத்திரி என்கிற் பெண்ணுக்கு இடப்பட்ட கர்ப்பூரதிலகம் போல காட்சியளித்தான்.
ஸாமுத்ரிகா லக்ஷணத்தில் க்ருசோதரீ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் கண்கள் கறுத்து இருக்கும்.
அதேபோல் சந்திரனின் களங்கம் தெளிவாகத் தெரிவதாம். க்ருஷ்ணதாரை என்றும் கூறுவர்.
தனது வம்சத்தின் அடையாளமாக க்ருஷ்ணனையே பெற்ற பெருமை சந்திரனையே சேரும் எனக் கொள்ளலாம்.
உதய காலத்தில் ஒரு வகையான சிவப்பு நிறமாயிருக்கும். கஸ்தூரி குங்குமம் ஆகிய இரண்டும் சேர்த்து விசித்திரமாக அமைந்தது.
சந்திரன் வெளுப்பான கர்ப்பூரமானான். சந்திரனுடைய களங்கம் கஸ்தூரியாயிற்று.
இரவு கறுத்த நிறப்பெண்ணான படியால் சந்திரனைத்தான் திலகமாகப் பெற்றாளோ?

———-

62. ப்ரஸாதம் அந்தக்கரணஸ்ய தாதா ப்ரத்யக்ஷயந் விச்வமிதம் ப்ரகாசை:
தமஸ்ச ராகஞ்ச விதூய சந்த்ர: ஸம்மோதநம் ஸத்வமிவோல்லலாஸ

முன் ஸ்லோகத்தில் சந்திரன் இரவென்னும் பெண்ணுக்கு திலகமாகத் தோன்றினான். சிவப்பும், கறுப்பும் கலந்த நிலை.
இங்கு நல்ல வெளுப்பான நிலையை அழகாக வர்ணிக்கிறார். இருளையும், சிவந்த நிறத்தையும் உதறித் தள்ளிய சந்திரன்
ஆனந்தத்தை அளிக்கும் ஸத்வகுணம் போல் விளங்கினான். ஸம்மோதநம் என்பதற்கு ஸத்துக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் என்று கொள்ளலாம்.
அன்றியும் ஸத்துக்கள் என்பதற்கு நக்ஷத்திரம் என்றும் பொருள். சந்திரன் நன்றாகத் தோன்றியதும்
நக்ஷத்திரங்கள் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தன என்பதாம்.
வ்ருத்தி யடைந்த ஸத்வம் விச்வத்தை தனது ஞானப் ப்ரகாசத்தாலே காணச் செய்கிறது என்று கொள்ள வேண்டும்.

————–

63. நிசாகரோ வாரிதி நிஸ்வநாநாம் நிஷ்பாதக: குந்தருசிஸ் சகாசே
உதேஷ்யதஸ் சக்ரப்ருதோ நியோகாத் ப்ராதுர்பவந் ப்ராகிவ பாஞ்சஜந்ய:

சந்திரனின் உதயத்தால் கடலில் ஓசை கிளம்புகிறது. இத்தகைய நிசாகரன் குருக்கத்திப்பூ போல் விளங்கினான்.
குருக்கத்தி வெண்மையானது. அதன் வெண்மை நிறம் போன்று ஒளி பெற்று விளங்கினான்.
60 வது ஸ்லோகத்தில் சங்கின் வடிவொத்த சந்திரன் என்றார். இதில் சந்திரன் பாஞ்சஜன்யமாகவே இருக்குமே என்கிறார்.
சக்ர தாரி பிறக்கப் போகிறான் என்பதை அறிந்து கொண்டு ஞான சாரமான சங்கம் முன்னமே தோன்றிவிட்டது.
நித்ய யோகத்தை உடைய சங்கம் இப்படி பிரிந்து வரலாமோ என்றால் அதற்கு விடையாக நியோகாத் என்கிறார்.
அதுவும் அவனுடைய ஆக்ஞையே என்றார். அவனுடைய கையில் உள்ள பாஞ்சஜன்யம் போல் தோன்றினான் என்கிறார்.
பாஞ்சஜன்யம் ஒலித்த வண்ணம் இருக்கும். கடலும் அவ்வாறேயாம். கடலில் பிறந்தவன் பாஞ்சஜன்யன் என்ற நிலையும் உண்டு.
அந்த சங்கை கண்ணனே தேடி எடுக்கிறார் அல்லவா? அதேபோல் நித்ய யோகமுடைய பாஞ்சஜன்யம் நியோகத்தினால் முன்னம் தோன்றியது.
இப்போது சந்திரனை வர்ணிப்பதால் அதனையே உபமானமாக்கி யிருக்கிறார்.

————–

64. ம்ருகேண நிஷ்பந்ந ம்ருகாஜிநஸ்ரீ: ஸ்வபாத விக்ஷேப மிதாந்தரிக்ஷ:
முரத்விஷோ வாமநமூர்த்திபாஜ:பர்யாயதா மந்வகமத் சசாங்க:

சந்திரனில் ஒருவகையான கறுப்பு தென்படுகிறது. பார்ப்பதற்கு முயல் போல் இருப்பதால் சசாங்கன் என்று சந்திரன் அழைக்கப்படுகிறான்.
அந்த மிருகம் போர்வை போல் அமைந்திருக்கும். கறுப்பாய் இருப்பதால் க்ருஷ்ண அஜினமாய்த் தோன்றும்.
முயல் வெண்மையாய் இருப்பினும் சந்திரனுடைய காந்தியில் அது கறுப்பு நிலையை அடைந்துவிட்டது.
நோக்கும் போது அது க்ருஷ்ணாஜினத்தை மார்பில் போர்த்தியிருப்பது போல் தோன்றும்.
வாமனனும் க்ருஷ்ணாஜினத்தை தரித்து யக்ஞவாடத்தில் தோன்றியது போல் சந்திரனும் தோன்றினான்.
தனது கிரணங்கள் எங்கும் படுவதால் ஆகாசம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் இருந்தான்.
வாமன மூர்த்தி இவ்வுலகை அளந்த போது அவர் திருவடி படாத இடமே இல்லை என்பது போல் சந்திரனும் ஆகாசத்தில்
அடி வைத்த போதே ஆகாசம் முழுவதையும் வ்யாபித்து விட்டான். இவ்வாறு சந்திரனும் வாமன ஸாத்ருச்யத்தை அடைவான் போலும்.

பொதுவாக கிரணங்களை கரங்களாக வர்ணிப்பர்
இங்கு பாதங்களாக வர்ணனை

——————-

65. ஜிகாய சங்காச்ரித சைவலாப: சாருத்யுதேஸ் சந்தரமஸ: கலங்க:
உதீயமாநஸ்ய மஹோர்மி யோகாத் ஸாமிச்யுதம் ஸாகரமூலபங்கம்

சந்திரன் எவ்வளவு ஒளியுடன் இருக்கிறான். அவன் உதயமாகும் போது களங்கத்துடனேயே தோன்றுகிறான்.
முன்பு அவனை சங்கெனக் கூறினார். இப்போது களங்கத்துடன் கூடிய சந்திரன் பாசையுடன் கூடிய சங்கம் போல் உளன் என்கிறார்.
மேலும் களங்கத்தினை ஒரு போதும் அழிக்க முடியவில்லை. எவ்வளவு அலைகளைக் கொண்டு அலம்பினாலும் அதைப் போக்க இயலவில்லை.
பாதாளத்திலிருந்து உண்டான சேறு சந்திரன் மீது படிந்து விட்டது. எந்த அலைகளாலும் அழிக்க முடியவில்லை.
பாதி தான் போயிருக்கிறது. மீதி வெற்றியோடு விளங்குகிறது.

————-

66. உதேத்ய துங்காத் உதயாத்ரி ச்ருங்காத் தமோகஜாந் அக்ர கரேண நிக்நந்
நிசாகரஸ் தந்மத லேப லக்ஷ்மா ஸிதாபிசு: ஸிம்ஹதசாம் அயாஸீத்

உதயமலையில் உன்னதமான சிகரத்தை அடைந்த சந்திரன் தனது கிரணங்களைப் பரப்பி இருளாகிற யானைகளை அழிக்கலானான்.
அந்த யானைகளின் மதஜலமானது சந்திரன் மீது அழியாத களங்கமாகப் பதிந்துவிட்டது.
அதனால் அவன் ஓர் வகையான சிங்கத் தன்மையைப் பெற்று விட்டான். சூரியனுக்கு உதயாஸ்த சமயங்கள் உண்டு.
ஆனால் சந்திரனுக்கு அப்படிச் சொல்ல இயலாது. பௌர்ணமி தொடக்கமாக கிழக்கும் சுக்ல பக்ஷத்தில் மேற்கும் தோற்றமாகும்.
இப்போது க்ருஷ்ண பக்ஷம் ஆனபடியால் சந்திரனுக்கு உதயாத்ரி. சிங்கம் சிகரத்தில் ஏறி வேரி மயிர் முழங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து புறப்படுமாப்போலே உலகில் உள்ள இருளனைத்தும் போக்க சந்திரன் இருளாகிற யானைகளைத்
தனது நுனிக் கரங்களால் பிளப்பது போல் புறப்படுகிறான்.

————

67. நிசீத லக்ஷ்ம்யா இவ புண்டரீகம் நிர்வேச ஸிந்தோரிவ பேநசக்ரம்
தம் அந்வவைக்ஷந்த விலாஸ தந்த்ரா: தாராமணீநாமிவ ஸூதி சுக்திம்

அழகான அர்த்த ராத்திரி என்ற லக்ஷ்மியின் கையில் விளங்கும் வெண்டாமரையோ என்கிறார்.
லழ்மியின் கையில் இருக்கும் தாமரை சிவந்ததாயிற்றே. நான்முகனுக்கும்,கலைமகளுக்கும் அல்லவா வெண் தாமரை என்று கேட்கலாம்.
இங்கு புண்டரீகம் என்கிறார். இதற்கு வெள்ளைக் குடை என்றும் பொருளாகும்.
ஆகவே லக்ஷ்மிக்கு பிடிக்கப்பட்ட வெண் குடை என்றும் கொள்ளலாம். ஆனந்தம் என்ற கடலின் நுரைக் குவியலோ,
நக்ஷத்திரங்களாகிற முத்துக்கள் பிறக்கும் முத்துச் சிப்பியோ என்று சந்திரனை பலவாறு ரசித்தனர்.

———————

உச்சிக்கு வந்த அஷ்டமி சந்த்ர வர்ணனை 68-88

68. உதார தாராகண புத்புதௌக: சந்த்ரேண ஸம்பந்ந ஸுதாப்ரஸூதி:
அசேஷத்ருச்யாம் அதிகம்ய லக்ஷ்மீம் ஆலோக துக்தோததிரா பபாஸே

சந்திரனின் ஒளி எங்கும் பரவிவிட்டது. அவ்வொளிப் பரப்பே பாற்கடலோ என்னும்படியாக இருந்தது.
பாற்கடலின் தன்மைகள் பல இதில் காணப் பெற்றன. கடலெனில் குமிழிகள் இருக்கும்.
இங்கும் நக்ஷத்திரங்களின் கூட்டங்கள் குமிழெனக் காணப்பட்டன. அமுதம் தோன்றியது.
சந்திரனே அக்கடலில் தோன்றிய அமுதெனக் காணப்பட்டான். அங்கு கமலை பிறந்தாள்.
இங்கும் உலகெலாம் நேரிடையாகக் கண்டு களிக்கும் சோபை-அழகு-லக்ஷ்மீகரம் நிலைத்திருந்தது.

————

69. ப்ரகாசயந் விச்வமிதம் யதாவத் சந்த்ரோதயோத்தீபித ஸௌம்யதார:
ஆஸீந் நிசீதோ ஜகத: ப்ரபூதாத் அந்தஸ்ய தைவாதிவ த்ருஷ்டிலாப:

இரவு ஒளி பெற்று விளங்குகிறது. உலகத்தையே விளங்கச் செய்கிறது. சந்திரோதயத்தினால் மேலும் பளபளப்பு பெற்ற
நக்ஷத்திரங்கள் உலகின் சிறந்ததொரு அத்ருஷ்டமே. குருடனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்?
அவ்வண்ணமே அந்நள்ளிரவு திகழ்ந்தது.

————-

70. விசோதிதாத் விஷ்ணுபதாத் க்ஷரந்தீ விஷ்வங்முகீ ஸாகர வ்ருத்தி ஹேதோ:
தமோமயீம் ஸூர்யஸுதாம் நிகீர்ய ஜ்யோத்ஸ்நா நதீ சோணமபி வ்யமுஞ்சத்

நிலவின் பெருமையை இங்கு ஆறாக நிரூபணம் பண்ணுகிறார். விஷ்ணு பதம் என்கிற ஆகாயத்தில் பெருகிய கங்கை போல்
ஸமுத்ரம் வ்ருத்தியடைய வேண்டுமென்று விரும்பிய சந்திர நதி நாலா புறமும் பாய்ந்ததாம். மேலும் கறுப்பான யமுனையை விழுங்கி விட்டு
சிவப்பு நிறமான சோணையை விட்டு விட்டது. சந்திரன் வெளுத்திருப்பதால் ஸத்வமயம். யமுனை கறுத்திருப்பதால் தமோ மயம்.
ஸத்வம் பாய்கிற போது தமஸ்ஸும் ரஜஸ்ஸும் நிற்பதில்லை.
கங்கை யமுனையோடும், சோணையோடும் கலந்தும், பிரிந்தும் செல்வது நாம் அறிந்ததே!
சந்திர நதி ஓடுவதால் இருளும் இல்லை. சிவப்பு நிற்மும் இல்லை.(சோணா தற்போது சோன் என்று அழைக்கப்ப்டுகிறது).

————-

71. ப்ரியாமுகை ஸ்தோமயது ப்ரதிஷ்டம் பீத்வா நவம் ப்ரீத இவாம்புராசி:
ஸமேத்ய சந்த்ரயுதி நர்த்தகீபி: தரங்கிதம் தாண்டவம் ஆததாந

நிலவினை கங்கையாகவும்,யமுனை,சோனையைக் கடந்து பின் கடலோடு கலந்தது என்று கூறுகிறார்.
இங்கு ஆறுகள் புகுந்தபின் கடலில் ஏற்படும் பரம் போக்யமான நிலையை வர்ணிக்கிறார்.
பிரியையான ஆறுகள் கொடுத்த நீரை மதுவாக வர்ணிக்கிறார். ப்ரியை கொடுத்த தோயமும் மதுவாகலாம்.
கடலை புருஷனாகவும், நதிகளை பெண்களாகவும் வர்ணிப்பது மரபன்றோ!. இங்கு சமுத்திர ராஜன் தனது ப்ரியைகள் கொடுத்த
மதுவை நன்றாக குடித்துவிட்டு சந்திரனின் கிரணங்களாகிற நாட்டியக்காரிகளுடன் கூடி தானும் அலை மோதும் தாண்டவத்தைச் செய்யலாயிற்று.

———

72. கலங்க சித்ரீக்ருதம் இந்துகண்டம் தமஸ் ஸமத்யாஸித ஸத்வகல்பம்
அசுஷ்க சைவாலமிவாபபாஸே ஸித்தாபகா ஸைகதம் அர்த்தத்ருச்யம்

சந்திரனின் பாதியுருவம் கலங்கத்தினால் நன்றாகவே தோற்றம் அளிக்கிறது. தமஸ்ஸும், ஸத்வமும் கலந்ததாய் தோன்றுகிறது.
உலராத பாசியை யுடைய ஆகாச கங்கையின் மணற்பரப்போ என்று சொல்லும்படி விளங்குகின்றது.

————–

73. ஸ்வமத்ய ஸம்பந்ந விசுத்ததாமா ச்யாமாச ஸா தேவகநந்திநீ ச
தம: க்ஷிபந்த்யௌ ஜகதாம் த்ரயாணாம் அந்யோந்ய ஸம்வாதம் இவாந்வபூதாம்

ஸ்வ சப்தம் ஸ்யாமா என்பது இரவைக் குறிக்கிறது. இரவின் மத்யம் நள்ளிரவு. அப்போது ஒரு விசுத்தமான தெளிவு.
ஆயிரம் ஆயிரம் நக்ஷத்திரங்கள் இருந்தாலும் ஒரு சந்திரன் இருந்தால் எவ்வளவு சோபை ஏற்படுகிறது.
அஷ்டமி சந்திரன் ஆனாலும் பாதி தான் படும் என்பதில்லை. இவ்வாறு தனது இடையிலேயே விசுத்தமான ஒளியை உடைய அந்த இரவும்,
தனது இடையிலேயே விசுத்தமான தேஜஸ்ஸையுடைய தேவகியும் மூவுலகங்களில் இருக்கும் இருளை அகற்றியவாறு
ஒருவருக்கொருவர் நிகரோ என்று சொல்லலாம்படி அனுபவிக்கப் பெற்றது.

————-

74. சாகாவகாசேஷு க்ருதப்ரவேசை: சந்த்ராதபை: ஆச்ரித சாருக்ருத்யை:
ஹதாவசிஷ்டாநி தமாம்ஸி ஹந்தும் ஸ்தாநம் ததாக்ராந்தம் அம்ருக்யதேவ

கிளைகளின் இடையே சந்திரனுடைய கிரணங்கள் விழுகின்றன. இலைகளின் நிழலும் அங்கு தென்படுகிறது.
கிளைகளின் வழியாகச் சென்ற அந்த கிரணங்கள் அழிந்தது போக மிச்சமுள்ள இருளை தேடி அலைகிறது.
சந்திரனால் விரட்டப்பட்ட இருளானது எங்கெங்கு ஒளிந்து கொள்ள அவகாசம் கிடைக்குமென தேடி கிளைகளின்
அந்தரங்களில் வந்து ஒளிந்து கொண்டன. இந்த இருளினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க ஒற்றர்கள் போல்
கிரணங்கள் செயல்பட்டு அவை சென்றவிடத்தில் சென்று தேடுகின்றன போலும்.

————

75. பராக்ருத த்வாந்த நிகாய பங்கை: பர்யாப்த தாராகண பேந புஞ்ஜை:
அசோபதத்யௌ ரஸமாயுதஸ்ய யச:ப்ரவாஹைர் இவ சந்த்ரபாதை:

ஆகாயம் மிகவும் அழகாக விளங்கிற்று. சந்திரனின் கிரணங்கள் அவ்வாறு படிகின்றன. அவை சாதாரணமானவை அல்ல.
இருளான சேற்றை அறவே அழித்துவிட்டன. எங்கும் குவியல் குவியலாக இருக்கும் நக்ஷத்திரங்கள் நுரையின் குவியல்களோ
என்னலாம்படியாக உள்ளது. மேலும் மன்மதனின் புகழ் என்னும் ப்ரவாகமோ என்பது போலவும் இருக்கிறது.
அஸமாயுதஸ்ய என்பதற்கு மன்மதனுடைய என்று பொருள். ஐந்து பாணங்களை உடையவன். மலரையே பாணமாகக் கொண்டவன்.
அம்மாதிரி பிறர் வைத்துக் கொள்ள இயலாது.மேலும் அஸம என்பதற்கு நிகரற்ற என்றும் கொள்ளலாம்.
இங்கு அஸமாயுதன் என்பது பகவானையும் குறிக்கும். அவனுடைய ஆயுதங்கள் எல்லாம் நிகரற்றவை.
ஆதலால் கர்ப்பத்திலேயும் தரித்து வருவான் போலும். தனக்கு சரியில்லாத வேல் முதலானவற்றை கொண்டு
கோஸஞ்சாரம் பண்ணுவானாதலால் இவன் அஸமாயுதன்.
அவன் வருவதற்கு முன்பே அவன் புகழ் ப்ரவஹித்துவிட்டது போன்று சந்திர கிரணங்கள் இருந்தது.

—————

76. ததாநயா திக்ஸரிதாம் ப்ரஸாதம் ப்ரஸக்த ஹம்ஸாகமயா ஸ்வகாந்த்யா
அபாக்ருத த்வாந்தகந ப்ரவ்ருத்யா சரத்த்விஷா சந்த்ரிகயா சகாசே

நிலவு மிகவும் ஒளி பெற்றிருந்தது. சரத்ருதுவில் எத்தகைய ஒளி இருக்குமோ அத்தகையதாக இருந்தது.
ஆறு போன்ற திக்குகள் எல்லாம் தெளிவைப் பெற்றன. அன்னங்களும் வரத் தொடங்கிவிட்டன-
இருள் அறவே அகன்று விட்டபடியால் காரிருளோ, கருமேகமோ வர வாய்ப்பில்லை. ஹம்சாகமயா என்கிறார்.
அன்னங்கள் வந்து சேரும்படியான தனது ஒளியினால் என்று கொள்ளலாம்.

————

77. கலாவதா காம விஹார நாட்யே காலோசிதம் கல்பயதேவ நர்ம
அமோக மாயாபலிதங்கரண்ய: ப்ராயோ திசாம் தீதிதய: ப்ரயுக்தா:

கலைகளில் வல்லவன் சந்திரன்.அவன் மன்மத லீலைகள் என்பதொரு நாட்டியத்தில் அக்காலத்திற்கேற்ப ஒரு கூத்து நடத்துவான் போலும்.
அவனுக்கு பிறரைப் பரிஹஸிக்கும் தன்மையும் எதையும் மாற்றிச் சொல்லும் பெருமையும் உண்டு.
நாட்டியஸில்பம் தெரிந்த சூத்ரதாரன் அவன். திக்குகளில் அவன் கிரணம் படிகிறது. அவை வெளுத்துக் காணப்படுகின்றன.
திக்குகளாகிற பெண்களின் தலை மயிர்கள் எல்லாம் நரைத்து விட்டன போல் செய்து விட்டான்.
இது காமவிஹார நாட்டியத்தில் சந்திரன் செய்த கேலிக் கூத்தாக அமைந்தது.

————–

77. கதம்பமாலாபி: அதீதலாஸ்ய: கல்யாண ஸம்பூதிர் அபூத் ப்ரஜாநாம்
ப்ரியோதயஸ்பீதருசோ ரஜந்யா: ஸந்தோஷ நிச்வாஸ நிப: ஸமீர:

இந்த ஸ்லோகத்தில் சந்திர கலையும், சுகமான காற்றும் கலந்து அதனால் ஏற்படும் சோபையை சொல்கிறார்.
கடம்ப மரங்கள் வரிசை வரிசையாக இருந்து ந்ருத்யம் பயில்கின்றனவோ! இது காற்றின் விசேஷணத்தினைக் குறிக்கிறது.
ஆட்டம் கற்பது கதம்பம். ஆட்டி வைப்பது காற்று. இதனால் மக்களுக்கு ஒருவிதமான ஆனந்தோதயம் ஏற்பட்டது.
தனது ப்ரியனான சந்திரனின் உதயத்தால் வெளிச்சம் மிகப்பெற்ற இரவென்னும் மங்கையின் ஸந்தோஷமென்னும்
மூச்சுக் காற்றுக்கு நிகராக தெள்ளிய இரவின் மெல்லிய காற்று அமைந்தது.

ஸ்ரீ மத் பாகவதம் -திஸஸ் ப்ரசேதுஸ் ககநம் நிர்மலோடு கணோதயம் வவவ் வாயு ஸூக ஸ்பர்ச புண்ய கந்த வஹஸ் சுசி -என்றதை அனுபவித்து
மாலை கல்யாணம் பிரியம் உதயம் ருசி ஸந்தோஷம் -இரவு என்னும் பெண்ணுக்கும் நமக்கும் ஸந்தோஷ நிச்வாஸ நிபம்

————

79. ப்ராயேண ஹம்ஸை: அவதூதஸங்கா சாருஸ்மிதா ஸம்ப்ருத ப்ருங்கநாதா
ஸர்வோபபோக்யே ஸமயே ப்ரஸுப்தம் குமுத்வதீ கோகநதம் ஜஹாஸ

இரவில் தாமரை உறங்கும்.ஆம்பல் அலரும்.அன்னங்கள் தாமரையில் நாட்டமுடையவை. ஆதலால் அவை இரவில் ஸஞ்சரிப்பதில்லை.
ஆம்பல் ஓடைக்குத் தான் இரவின் பெருமை எல்லாம். ஹம்ஸங்களால் உதறித் தள்ளப்பட்ட ஆம்பல் ஓடை வண்டுகளின் ரீங்காரமும்,
சந்திரனின் கதிரும் பெற்று புன்னகை செய்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் கமலம் உறங்குவதேனோ!.
ஆம்பல் தன்னொளியால் தாமரையைப் பார்த்து நகைக்கிறது.

———-

80. கலங்க லக்ஷேண ஸமைக்ஷி காசித் கஸ்தூரிகா பத்ர விசேஷகாந்தி:
ஸுதாம்சு பிம்ப வ்யபதேச த்ருச்யே முக்தே ரஜந்யா முக புண்டரீகே

இவ்வளவு வர்ணித்தும் சந்திரனின் களங்கம் மனதை ஈர்க்கிறது. அதுவும் ஒரு அழகாகத்தான் உள்ளது.
ஒரு பெண்ணின் நெற்றியில் அணிந்த கஸ்தூரிகா பத்ரம் போலுள்ளது. இரவு என்ற பெண்ணின் அழகான,
தாமரைப்பூ போன்ற முகத்தில் இடப் பட்டதாம். சந்திரபிம்பம் இங்கு முகமாகி விட்டது.

———

81. தலேஷ்வவேபந்த மஹீருஹாணாம் சாயாஸ் ததா மாருத கம்பிதாநாம்
சசாங்கஸிம்ஹேந தமோகஜாநாம் லூநாக்ருதீநாமிவ காத்ரகண்டா:

இதில் சந்திரனை சிங்கமாகவும், நிழலை யானைகளாகவும் குறிப்பதோடு நிற்காமல் மரத்தடிகளில் ஏற்படும் அசைவுகளை
அழகாக வர்ணிக்கிறார். சந்திரன் சிங்கமானான். அவன் இருளென்னும் யானைகளைக் கொன்று தோலை உரித்து எறிந்துவிட்டான்.
கீழே விழுந்த யானையின் அறுபட்டு விழுந்த பாகங்கள் துடிப்பது போல மரங்களின் கீழ் பகுதிகளில்
வெளுப்பும் கறுப்புமாக அசைவுகள் ஏற்படுகிறதை வர்ணிக்கிறார்.

———–

82. தமஸ் தரங்காந் அவஸாதயந்த்யா ஸமேயுஷீ சந்த்ரிகயா மஹத்யா
ச்யாமா பபௌ ஸாந்த்ர நவோத்பலஸ்ரீ:ஸுரஸ்ரவந்த்யேவ கலிந்த கந்யா

முந்திய ஸ்லோகத்தில் நிழல்களின் அசைவுகளைக் கூறினார். இப்போதோ கங்கையும் யமுனையும் கலந்ததோ என்பது போன்று
அந் நிலவுடை இரவு விளங்கியதாம். இரவு ய்முனையைப் போன்று கறுத்தும் நிலவு தேவ கங்கையைப் போன்று வெளுத்தும் இருக்கிறது.
நிலவின் ஒளியில் இருள் அடங்கிவிட்டது. கங்கையின் வெளுப்பு கலந்தபோது யமுனையின் கறுப்பு அடங்கிவிடும்.
சந்திரிகையோடு கலந்த ச்யாமா கங்கையோடு கலந்த யமுனை ஆயிற்று. ச்யாமா – நல்ல வயதுடைய பெண்ணாக இருளை வர்ணிக்கிறார்.
இருளாகிற அலைகளை அடக்குவதாயும், மிகப் பெரியதாயும் உள்ள தேவகங்கை போன்றதொரு நிலவுடன் கறு நெய்தல்கள் பூத்துத்
தனிச் சிறப்புடைய இரவு என்ற யமுனை கலந்து ஒரு பெண்ணுக்கு அடங்கின மற்றோர் பெண் போல விளங்கினாள்.

————-

83. ஸ்வவிப்ரயோக வ்யஸநாத் நிபீதம் ப்ருங்காபதேசேந குமுத்வதீபி:
ஸுதாபிராப்லாவ்ய கரஸ்திதாபி:ப்ரச்யாவ யாமாஸ விஷம் ஸுதாம்சு:

தனது பிரிவினால் துயருற்று, ஆம்பல் ஓடைகள் வண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு விட்டன.
வாழமுடியாது என்றெண்ணி விஷத்தையும் குடித்துவிட்டன.
(பகலில் ஆம்பல்கள் மலருவதில்லை. மொட்டித்தே இருக்கும். அப்பொழுது அதில் வண்டு சிக்கிக்கொண்டு அதிலேயே இருக்கும்.
ஆம்பல் வண்டெனும் விஷத்தைக் குடித்துவிட்டன போலும்). சந்திரன் தோன்றினான். தனது காதலிகள் விஷம் குடித்துவிட்டதை அறிந்தான்.
தனது கையில் உள்ள அமுதத்தை அவர்கள் மீது கொட்டினான். குமுதங்கள் வாய் திறந்தன.
அப்பொழுது வண்டுகள் வெளியேறிவிட்டன. ஓஷதீசன் ஆனபடியால் விஷத்தைக் கக்க வைத்துவிட்டான் போலும்.

————

84. சகாசிரே பத்ர கலா ஸம்ருத்யா வ்யோமோபமே வாரிணி கைரவாணி
கலங்க த்ருச்ய ப்ரமராணி காலே ஸ்வநாத ஸாதர்ம்யம் உபாகதாநி

ஓடைகளில் நீர் ஆகாயம் போலுள்ளது. அதில் ஆம்பல் மலர்கள் மலர்ந்துள்ளன.
அம் மலர்களிலும் இதழ்கள் கலைகள் போல் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் வண்டுகள் அமர்கின்றன.
வெளுத்த அம்மலர்களில் கறுத்த அவ்வண்டுகள் அமரும்போது ஆம்பல்கள் இரவில் தனது கணவனான சந்திரனோடு நிகரான
தன்மையையும் பெற்றுவிட்டது போல் இருக்கிறது. ஆகாயமும் நீரும் ஒன்று. சந்திரனும் ஆம்பல் மலரும் ஒன்று.
சந்திரனில் உள்ள கலங்கமும் மலரில் உள்ள வண்டும் ஒன்று. ஆக ஆம்பல் சந்த்ரஸாம்யம் பெற்றுவிட்டது.

————-

85. ஸரிந் முகோபாஹ்ருதம் அம்புராசி:பீத்வேவ தோயம் மது ஜாதஹர்ஷ:
சகார சந்த்ரப்ரதிபிம்பிதாநாம் கரக்ரஹை:காமபி ராஸலீலாம்

ஆறுகளின் வாயிலாக அளிக்கப்பெற்றதான இனிய நீரினை மது அருந்துவது போல் அருந்திவிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த
கடலானது சந்திரனின் ப்ரதிபிம்பங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு விலக்ஷணமான ராஸலீலை புரிந்தது.

————–

86. ப்ரஸாத பாஜோரு பயோரபூதாம் உபாவநிர்த்தார்ய மிதோ விசேஷௌ
நபஸ் ஸ்தலே சீதருசிஸ் ஸதாரே ஸகைரவ தத்ப்ரதிமா ச தோயே

இரண்டு இடங்களிலும் தெளிவு உள்ளது. எது உயர்ந்தது, எது தாழ்ந்தது? என்று உறுதியாகச் சொல்ல இயலாது!.
வானில் சந்திரன். அவனைச் சுற்றி நக்ஷத்திரங்கள். அவ்வாறே நீர்நிலையில் ஆம்பல் கூட்டம். அதன் நடுவில் சந்திரன் ப்ரதி பிம்பம்.
பிம்பம் நன்றாக உள்ளதா? ப்ரதிபிம்பம் நன்றாக உள்ளதா? தீர்மானிக்க இயலாத வகையில் அமைந்துவிட்டது.

———–

87. நபஸ் துஷாராம்சு மயூக யோகாத் தமிஸ்ரயா மோக்ஷம் அவிந்ததேவ
அத்ருப்யத: தத்வ விதோ நிசாயாம் அந்தர் முகம் சித்தம் இவாத்ம யோகாத்

ஆகாயம் சந்திரனுடைய கிரணம் பெற்ற யோகத்தினால் இருளிலிருந்து விடுதலையை அடைந்தது போலிருந்தது.
இதற்கு ஓர் உதாரணம். தத்வஞானிக்கு புற விஷயங்களில் திருப்தி ஏற்படுவதில்லை.
ஆத்மாவில் ஏற்பட்ட யோகத்தினால் இரவிலும் அவருடைய உள்ளம் அந்தர்முகமாகவே உள் நோக்கியே இருக்கும்.
அந்த அஞ்ஞானம் அவரை அண்டுவதில்லை.

————–

88. ஸஹோதிதா சந்த்ரமஸா பபாஸே ஜ்யோத்ஸ்நா பயோதேர் உபஜாதராகா
ததாதநே ஸஞ்ஜநநேபி சௌரே:ஸஹாயிநீ ஸாகர ஸம்பவேவ

சந்திரன் உண்டானான். அவனோடு அவன் ஒளியும் தோன்றியது. அப்பொழுது அது சிவப்பு கலந்திருந்தது.
உதயமாகும் பொழுது அந்த ராகம் இருந்தே தீரும். நிறம் மாறினாலும் நிலவில் அதன் குணம் மாறுவதில்லை.
இதுதான் ஜ்யோத்ஸ்னா என்ற நிலவு. இப்போது சௌரி பிறக்கப் போகிறான். ராகமுடைய நிலவு அப்போது ஸஹாயமாகவே தோன்றியது.
இந்த நிலவு ஸமுத்திரத்தில் தோன்றிய லக்ஷ்மி போல் விளங்கியது. அவளும் சந்திர சஹோதரி.
பிறக்கும்போது அனுராகத்துடன் பிறந்தவள் என்பதாம். வக்ஷஸ்தலத்தை அடைந்ததும் வித்யில்லேகை போலானவள்.
கிருஷ்ணனாக பிறக்கும்போது அவள் ருக்மிணியாக வருவாள் என்பர். இங்கு ஸஹாயினி என்பதற்கும் அதே பொருள்தான்.

விஸ்லேஷம் இன்மை அநபாயினி
எப்போதுமே கூட இருத்தல் -சஹாயிநீ

——————

89. ப்ரபுத்த தாரா குமுதாப்தி சந்த்ரே நித்ராண நிச்சேஷ ஜநே நிசீதே
ஸ தாத்ருசோ தேவபதே: ப்ரஸூதிம் புஷ்யந் பபௌ புண்யதமோ முஹூர்த்த: (ஸ்ரீமத் பாகவதம் 10/3/2)

நக்ஷத்திரங்கள், ஆம்பல், கடல், சந்திரன், ஆகியவை விழிப்புடன் உள்ளன. மற்றைய உலகெல்லாம் உறங்குகிறது.
அத்தகைய நள்ளிரவில் அவ்வளவு சிறப்பான ஒரு முஹூர்த்த வேளை.
தேவநாதனின் ப்ரஸவத்தை பலப்படுத்திக் கொண்டு ஏற்பட்டுவிட்டது. இதல்லவோ புண்யதமமான முஹூர்த்தம். பகவதவதார ஸமயம்.

ஸர்வ குணோ பேத –கால -பரம ஸோபந -ஸூகர்

————–

90. பாகேந பூர்வேண தமோமயேந ப்ரகாச பூர்ணேந ச பஸ்சிமேந
ததா நிசீத: ஸ ஸதாம் ப்ரஸத்யை ஸம்ஸார முக்த்யோரிவ ஸந்திர் ஆஸீத்

முன் பகுதியில் இருள் மயமானது.பின் பகுதியில் விசேஷமான ப்ரகாசம் உடையது.
இத்தகைய இரவு ஸத்துக்களின் உள்ளம் தெளிய அமைந்துவிட்டது.
மேலும் இதை ஸம்ஸாரம்- முக்தி இவைகளின் இணைப்பு வேளை என்றே சொல்லலாம்.

———-

91. ப்ராகேவ ஜாதேந ஸிதேந தாம்நா மத்யோபலக்ஷ்யேண ச மாதவேந
ப்ரகாமபுண்யா வஸுதேவபத்ந்யா ஸம்பந்நஸாம்யேவ நிசா பபாஸே

இந்த இரவு சாதாரணமானதல்ல. முதலிலேயே வெளுப்பு தோன்றியது. இடையில் மாதவனையும் காண்பிக்கிறது. எவ்வளவு புண்யம்.
வஸுதேவரின் மனைவியோடு இது ஸாம்யத்தையும் பெற்றுவிட்டது. இது எப்படி விளங்காமல் இருக்கும்?
பெருமாளுக்கு முன்னமே தோன்றினான் சந்திரன். ஜோதி வெளுப்பாகத் தானே இருக்கும்.
க்ருஷ்ணன் என்ற ஜோதி கறுப்பாக அல்லவோ இருக்கும்! அவ்வாறில்லை.
இங்கு தாம்நா என்பது பலராமனைக் குறிக்கும். சந்திரன் பலராமன் லக்ஷ்யமாகிறான்.

————-

92. ஸஹ ப்ரதிச்சந்த சசாங்க பேதை: ஸரஸ்வதாம் தாண்டவிந: தரங்கா:
அவேக்ஷ்ய சௌரேர் அவதார வேலாம் ஸந்தோஷ நிக்நா இவ ஸம்ப்ரணேது: (ஸ்ரீமத் பாகவதம் 10/3/7)

இதற்கு முன் ஸ்லோகத்தில் நள்ளிரவினை தேவகியோடு ஒப்பிட்டார். இப்போது அவதார காலம் நெருங்குவதால் நீர் நிலைகளில்
ஏற்படும் பூரிப்பினை வர்ணிக்கிறார். கடல்களில் கிளம்பும் அலைகள் அவதார வேளையை அறிந்து கொண்டு
ஸந்தோஷம் தாங்க முடியாதவைகளாய் சந்திரனின் ப்ரதிபிம்பங்களோடு கலந்து குதிப்பும் கும்மாளமுமாக இரைச்சலிடுகின்றன.

————–

93. அவாதிதோதீரித வாத்ய கோஷம் திசாபிர் ஆம்ரேடித திவ்ய கீதம்
ஸதாம் உபஸ்தாபித ஸத்வலாஸ்யம் ஸங்கீத மங்கல்யம் அபூத் ததாநீம்

ஒரு அழகான சங்கீத விழாவே அப்பொழுது நடைபெற்றது எனலாம்.வாசிக்காமலேயே வாத்ய கோஷம் ஏற்பட்டது.
திக்குகள் எல்லாம் சேர்ந்து பாட்டின் ஒலியை ப்ரதிபலிக்கின்றன. ஸத்துக்களுக்கு ஸத்வகுணம் நடமாடுகிறது.
மூன்றும் சேர்ந்துதானே சங்கீத விழா.

———–

94. ப்ரதீபிதை: கம்ஸக்ருஹேஷு தீபை:தாபைஸ்ச பாவேஷு தபோதநாநாம்
அலப்யத க்ஷிப்ரம் அலப்தபங்கை:அஹேது நிர்வாண தசாநுபூதி:

முன் ஸ்லோகத்தில் வாத்ய கீதங்களை வர்ணித்தார். இங்கு கம்சனுக்கு ஏற்பட்ட அநிஷ்டங்களையும் அதனால் ஸாதுக்களுக்கு
ஏற்பட்ட நன்மைகளையும் வர்ணிக்கிறார்.கம்ஸனுடைய மாளிகைகளில் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகள் யாவும்,
தபஸ்விகளின் உள்ளங்களில் அணையாது பெருகி வந்த தாபங்களும் காரணமேயில்லாமல் அணையும் தன்மையை அடைந்துவிட்டன.

——————-

95. அஜ: ஸ்வஜந்மார்ஹதயாநுமேநே யாம் அஷ்டமீம் யாதவபாவமிச்சந்
த்விதீயயா பாவித யோகநித்ரா ஸாபூத் ததாநீம் ப்ரதமா திதீநாம்

அஜன் இப்போது யாதவனாகப் பிறக்கப் போகிறான். தனது பிறப்பிற்கு ஏற்றதாக அஷ்டமி திதியை ஸங்கல்பித்துக் கொண்டான்.
அஷ்டமி இதனால் ப்ரதமையாகி விட்டாள். ஆதலால்தான் யோக நித்ரை நவமியில் தோன்றினாள். நவமி த்விதியை ஆகிவிட்டது.
எட்டாவது கர்ப்பம் கொல்லப்போகிறது என்ற ஆகாச வாணியை ஸத்யமாக்க எட்டிலேயே பிறக்க எண்ணினார்.
எட்டாவதாகப் பிறக்கப் போவதாலும் அஷ்டமியை வரித்தார். அஷ்ட வஸுக்களுக்கும் வஸுதேவர், தேவர் என்பதால்
அந்நிலையை உணர்த்த அஷ்டமியை விரும்பினார்.
எட்டு எட்டு என்று எண்ணியே கம்சன் எட்டாத இடத்தை அடையப் போகிறபடியால் அஷ்டமியை தனது ஜன்மத்திற்கு ஏற்றதாக்கினார்.
அந்த அஷ்டமி திதிகள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கியது. அஷ்டமி ப்ரதமையாவதும் நவமி த்விதியை ஆவதும் ஆச்சர்யம் தானே!.

————–

96. அத ஸிதருசிலக்நே ஸித்த பஞ்சக்ரஹோச்சே வ்யஜநயத் அநகாநாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவந பத்மக்லேச நித்ராபநுத்யை திநகரம் அநபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா (ஸ்ரீமத் பாகவதம் 10/3/8)

பிறகு சந்திரலக்னத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கும்போது நல்லவர்களுக்கு வெற்றியை அளிப்பதும் அதனாலேயே
ஜயந்தி என்ற பெயர் பெற்றதுமான வேளையில் தேவகி என்ற கிழக்கு ஸந்த்யை அழிவில்லாத சூர்யனை உண்டாக்கிவிட்டது.
ஸிதருசி- சந்திரன் அவனும் அப்போதுதான் உதயம் ஆகவே லக்னம் வ்ருஷபமாயிற்று.
சந்திரன், செவ்வாய், புதன், குரு,சனி ஆகிய ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருக்கின்றன.
ரிஷபம், மகரம், கந்யா, கடகம், துலாம் ஆகியவை உச்ச ஸ்தானங்கள்.
ஐந்து க்ரஹங்கள் உச்சமானால் அவன் லோகநாயகன். அத்புதமாக அவதரித்த அவதார ஸ்லோகம்.

அத-மங்கள வாஸ்யம் -திருவவதாரம் அருளிச் செய்யும் ஸ்லோகம்
ஆவணி மாதம் கிருஷ்ண பஷ அஷ்டமியும் ரோகிணியும் சேர்ந்த காலமே ஜயந்தீ
வி அஜ நயத்-ஈன்று எடுத்தாள் -அஜாயமாநோ பஹுதா விஜாயதே -ஆவிர்ப்பூதம் -விலக்ஷணமாக ஈன்று எடுத்தாள் -பிறந்த மாயா –
அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநுநா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்
ஸூர்ய வம்சத்தில் ராம சந்திரன்
சந்த்ர வம்சத்தில் கிருஷ்ண ஸூர்யன்

————-

97. அவதரதி முகுந்தே ஸம்பதாம் ஏககந்தே ஸுரபித ஹரிதந்தாம் ஸ்வாது மாத்வீக திக்தாம்
அபஜத வஸுதேவ ஸ்த்தாநம் ஆனந்த நிக்நை: அமர மிதுந ஹஸ்தைர் ஆஹிதாம் புஷ்பவ்ருஷ்டிம்

முகுந்தன் அவதரித்து விட்டான். ஸகல விதமான ஐஸ்வர்யங்களுக்கும் ஒரே காரணமாயிருக்கும் முகுந்தன் அவதரித்து விட்டான்.
முகுந்தன் எனபதற்கு போகங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன் என்று பொருள். கிழங்கு போன்றவன். மூலகந்தே எனபர்.
முதற்கிழங்கு என்றும் கொள்ளலாம். முகுந்தன் தான் மூலகந்தம். அவன் அவதரித்தபோது எங்கும் மணம் கமழ்ந்தது.
இனிமையும் எங்கும் தோய்ந்தது. ஆனந்த பரவசர்களான தேவர் குழாமெல்லாம் மிதுனங்களாக சொரிந்த மலர் மழையை
வஸுதேவ ஸ்தானமானது ஏற்று ஏற்றம் பெற்றுவிட்டது. கம்ஸனின் காராக்ருஹமாக இருந்த போதிலும் வஸுதேவ ஸ்தானமாதலால் புஷ்பவ்ருஷ்டி.
தேவ புஷ்பங்களானதால் கம்ஸாதிகளுக்குப் புலப்படுவதில்லை.
இப்போது ஆனந்த நிக்னர்கள் பரவசத்துடன் தம்பதிகளாய் இணைந்து தமது நான்கு கரங்களாலும் மலர்மாரி பொழிந்தனர்.

புஷ்ப வ்ருஷ்டியுடன் இந்த ஸர்கம் இனிதே நிறைவுற்றது.

முமுகர் முதயோ தேவா ஸூமநாம்ஸி முதாந்விதா -என்றார் ஸ்ரீ ஸூ கர்

———–

ஸ்ரீ கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண /ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன / ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ/ தச அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்

July 31, 2018

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கிய அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய
அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையாலே சப்பாணி –1-6-8-

மின்னிடச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை யடைத்தார்க்கு ஒர் கோல் கொண்டு வா -2-6-8-

தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னளங்காரர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-9-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

நந்தன் முதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பரந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே –3-9-11-

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்று இருந்தானை அங்குத்தைக் கண்டாருளர் –4-1-3-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

——-

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்—-திருப்பாவை 13

———————-

நாச்சியார் திருமொழி

சீதை வாயமுதமுண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று — –2-10-

——————————-

பெருமாள் திருமொழி –

தோடுலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து -2-2-

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்தத்தும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி —-2-3-

மன்னு புகழ் பதிகம் —கண புரத்தென் கரு மணியே –இராகவனே தாலேலோ -8

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரையலைக்கும் கண புரத்து என் கருமணியே -8-7-

தயரதன் தன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –கண புரத்து என் கரு மணியே -8-9-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன் -8-11-

——————————————————

திருச் சந்த விருத்தம் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய் ஞாலம் எழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தவிர நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே –31-

மின்னிறத்த எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன்நிறத் தொரின் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தன தனக்கு உதவவந்திராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ –81-

விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்த முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே –92-

கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம்மவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –104-

கறுத்து எதிர்ந்த கால நேமி காளனோடு கூட அன்று –வில்லும் வாளும் ஏந்தினாய் –
-குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –106-

காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுந்திரன் மா சினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –107-

———————–

பெரிய திருமொழி

கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கனை ஒன்றினால் மடிய விலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடுடன் துணித்த பெம்மான் தன்னை -2-10-5-

கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய விடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-

ஆநிரை மேய்த்து அன்று கடலை அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிறை மேகம்
கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-2-

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே -5-1-3–

வெற்பால் மாரி பழுதாகி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில்லி ராமனிடம் –புள்ளம் பூதம் குடித்தான் -5-1-4-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவில் நின்றான்
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே -6-10-5-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணர்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி
முன் கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8-6-6-

சூரிமையிலாய பேய்முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மையில்லாத தாடகை மாள நினைத்தவர்
மனம் கொண்ட கோயில் –திருமாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-4-

குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-7-

புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள் எரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ -10-9-1-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

—————————–

திருவாய் மொழி –

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா -1-5-6-

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே -2-5-7-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஓசித்தாய்-4-3-1-

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -6-10-5-

—————————

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானை போர்க்கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்ந்தனவும்
கார்க்கோடு பற்றியான கை–முதல் திருவந்தாதி -27-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்–இரண்டாம் திருவந்தாதி -15-

——————————————————————————————————————–

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள் –1-4-8-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்னென்று தானம் விலக்கிய சுக்கிரன்
கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச்சோ –1-8-7-

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ –1-8-8-

வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-

மா வலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூ வடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாம் அடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றும் –2-10-7-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை யுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-1-

——————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும் –நாச்சியார் -12-9-

—————

பெரிய திருமொழி

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்
தூய அரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயானிரப்ப-1-5-5-

வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8-5-

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை -படு மத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்
பாரிடத்தை எயிறுகீற விடந்தானை -வளை மருப்பின் எனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை —
எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலை சயனத்தே -2-5-6-

ஆங்கு மா வலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் –திருவயிந்த்ரபுரமே -3-1-5-

ஏனாகி யுலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய் பெருமானை —
ஆனாயனானானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

துள்ளா வருமான வீழ வாளி துரந்தான் இரந்தான் மா வலி மண் -6-7-3-

விடம் தானுடைய வரவும் வெருவச் செருவில் முனை நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
கிடந்தான் வையம் கேழலகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-2-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழு உலகும் ஈரடியாகப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-5-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஓளி விசும்பில் ஓரடி வைத்து ஓர் அடிக்கும் எய்தாது
மண் என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-8-

———————————-

திருவாய் மொழி

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் -3-3-8-

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே -3-8-9-

தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா வென்று வென்று கூவிக் கூவி நெஞ்சு உருகிக் கண் பனி சோர நின்றால்-4-7-3-

——————–

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை ஓசித்து
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால் மா வலியை
மாணி யாய்க் கொண்டிலையே மண் –இரண்டாம் திருவந்தாதி -89-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-

பெரியாழ்வார் திருமொழி –

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்ததுண்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் –1-2-5-

கோளரியின் இன்னுருவம் கொண்ட அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூறுகிறாள்
குடை வாய் மீளவவன் மகளை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வர காள நன்மேகமவை
கல்லோடு கால் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1-5-2-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு
இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல வெம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த வெங்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் –2-7-7-

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க -3-6-5-

கொம்பினார் பொழில் வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதில் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே –4-4-9-

தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே –5-1-9-

பெரிய திருமொழி

மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துரவோன்
உன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நிதி மடுத்து -1-4-8-

தங்காததோர் ஆளறியாட் அவுணன் தன்னை வீட முனிந்தவனால் –சமரில் பங்காக முனைவரோடு அன்பளவிப்
பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-4-

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய்விடைகள் ஏழு அடர்த்துப்
பொன்னம் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி யுக யுகிர் வேலாண்ட நின்மலன்–காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-4-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்த அரி
பரி கீறிய அப்பன் வந்துறை கோயில் -வண் புருடோத்தமமே-4-2-7-

திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப்
பொன்னாகத்தானை நக்க அரியுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் -5-9-5-

அரியைப் பரி கீறிய அப்பனை –கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-7-

பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-

மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-

வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் ஆப்புண்டு இருந்தவனே–10-6-3-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-

———————–

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
மேவி அரியுருவமாகி இரணியானதாகம் தெரி யுகிரால் கீண்டான் சினம் –மூன்றாம் திருவந்தாதி -42-

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-

——————————————————

பல / தசாவதார பாசுரங்கள் –

தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-

அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-

ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-

—————————–

திருவாய் மொழி –

ஆனானானாயன் மீனோடு ஏனமும் தானானான் எண்ணில் தானாய சங்கே -1-8-8-

ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் மூவாத தனி முதலாய் மூ உலகும் காவலோன்
மாவாகிய யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கோடு சக்கரம் வில்
ஒண்மையுடைய யுலகை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து
உலகில் வண்மையுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மையுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே -3-10-1-

மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-மூன்றாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 24, 2017

அஸ்தி ஸ்வஸ்தி யனம் ஸமஸ்த ஜகத மதஸ்த லக்ஷ்மி ஸ்தனம் வஸ்துர் த்வஸ்த ரஜஸ் தமோ பிரினிசம் ந்யஸ்தம் புரஸ்தாத் இவ
ஹாஸ்தோதஸ்தா கிரீந்த்ர மஸ்தக தரு பிரஸ்தர விஸ்தரித ஸ்ரஸ்த ஸ்வஸ்தரு சூனஸம்ஸ்தர லஸத் பிரஸ்தாவி ராதா ஸ்துதம் -3–1-
மலராள் ஸ்தனத்துள்ளான் கோவர்த்தன தாரி -ஸ்ரீ ராதா ஸ்துதிக்கும் தன்னையே நல்கும் நம் கற்பகம் –

ராதா ரதித விப்ரம் அத்புத ரசம் லலித்ய ரத்நாகாரம் சதரண்ய பத வ்யதீத சஹஜ ஸ்மேரநன் அம்போருஹம்-
ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா சர்வஸ்வ நிவாபனம் -பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷேகம் மஹ -3–2-
அழகு கடல் அப்போது அலரும் செந்தாமரை திரு முகம் -பால கிருஷ்ணன் தேஜஸ் நம்மை ரக்ஷிக்கட்டும் –

கரிணாமலா ப்ருகதி வைபவம் பஜே கருண வலம்பித கிசோர விக்ரஹம் யாமி நமநரத விஹாரி மனசே யமுன வநதரசிகம் பரம் மஹா -3–3 –
யமுனா தீரத்தில் வாரணம் போலே நடக்கும் கருணைக் கடலை வணங்குகிறேன் –

நியந்த்ர யத் சகல ஜகத் விரஜ அங்கன -நியந்தரிதம் விபுல விலோச்சனாஜ் நயா நிரந்தரம் மம ஹ்ருதயே விஜ்ரும்பதாம் சமந்ததா சரஸ தரம் பரம் மஹ -3–4-
ஸமஸ்த நியந்தா -விரஜ கோபிகள் கண் வீச்சில் அடங்கி உள்ள பால கிருஷ்ணன் தேஜஸ் மனசில் நித்தியமாக ஒளி விடட்டும் –

கந்தர்ப்ப பிரதி மல்ல காந்தி விபவம் கதம்பிநீ பாந்தவம் விருந்தாரண்ய விலாஸிநீ வியசினனாம் வேஷேண பூஷ மயம்
மந்தஸ்மேர முகாம்புஜம் மதுரிமா வியம்ருஷ்ட பிபாதரம் வந்தே கந்தலி தர்த்த யவ்வன வனம் கைசோரகம் சம்ஞிந -3–5-

ஆ முக்த மனிஷா முக்த நிஜ அனுபவ மா ஓத விக்ரக மகோத விதக்த லீலம் –
ஆம்ருஷ்த யவ்வன மனஷ்த கிசோர பாவ மாத்யம் மஹ காமபி மாத்யதி மனசே மம -3–6-
வேண்டித் தேவர் இரக்க அன்றோ இங்கு ஆவிர்பாவம் -அவன் லீலைகளையே மனசில் வைப்போம் –

தே தே பாவ சகல ஜகதி லோப நீய பிரபாவா நானா த்ருஷ்ணா ஸூ ஹ்ருதி ஹ்ருதி மே காமம் ஆவிர்பவந்து
வீணா வேணு க்வனித லசித ஸ்மேர வக்த்தரவிந்தா நாஹம் ஜானே மதுரமபரம் நந்த புண்யம்பு ராஸே-3–7-
வேணு கான அனுபவம் –

ஸூ ஹ்ருதிபி ராத்ருதே சரஸ வேணு நநாத ஸூதா ரசலா ஹரீவிஹார நிரவ கிரஹ கர்ண புய
விரஜ வர சுந்தரி முக்த சரோருஹா சன்மதுபே மஹஸி கதா நு மஜ்ஜதி மதீயமிதம் ஹ்ருதயம் -3–8-
மது பருகும் வண்டு போல வேணு நாதம் அனுபவிக்கும் காதுகள் –

த்ருஷ்ணதுரே சேதேசி ஜ்ரும்ப மானம் முஷ்ணம் முஹுர்மோக மஹந்தகரம் புஷ்னது ந
புண்ய ததைக ஸிந்தோ -கிருஷ்ணஸ்ய கருண்ய கடாக்ஷ கேளி -3–9-
கருணைக் கடலின் கடாக்ஷத்தில் வாழ்வோம் –

நிகில நிகம மௌலி லலிதம் பாத கமலம் பரமஸ்ய தேஜஸா விரஜ புவி பகு மன்மஹேதராம் சரஸ கரீஷா விசேஷம் ரூஷிதம் -3–10-
வேதாந்தத்தில் ரிஷிகள் தேடுமவனை இங்கே ஈரமான பசுக்களில் காணலாமே –

உதார ம்ருதள ஸ்மித வ்யாதிகராபி ரமாணனம் முதா முஹுர் தீமயா முனி மனோம்புஜாம் ரேதிதம்
மதல சவி லோசன விரஜ வதூ மஹாஸ்வதீதம் கதா நு கமலேக்ஷணம் கமபி பால ஆலோகயே-3–11-
கோபிகள் அனுபவிக்கும் பால கிருஷ்ணனை காண்பது என்றோ –

விரஜ ஜனமத யோஷி லோசனோ சிஷ்ட சேஷி க்ருத மதி சபலாப்யாம் லோசனாப்யம் முபப்யாம்
ஸக்ருத் அபி பரி பதும் தே வயம் பரயம குவலய தள நீலம் காந்தி பூரம் காது நு -3–12-
கோபிகள் அனுபவித்த அவன் தேஜஸ் நாம் அனுபவிப்பது என்றோ –

கோஷைசி தனு கீதா யவ்வனம் கோமள ஸ்தானித வேணு நிஸ்வனம் -சார பூத் மபீராம சம்பதாம் தர்ம தமரச லோசனாம் பஜே -3–13-

லீலையா லலிதய வலம்பிதம் மூல ஜஹ்மிவ மூர்த்தி சம்பதாம் நீல நீரத விலாச விப்ரமம் பாலம் ஏவ வயம் அத்ரியமஹே-3–14-

வந்தே முராரேஸ் சரணரவிந்த த்வந்த்வம் தயா தர்ஷித சைஸவ -வந்தரு வ்ருந்தரக வ்ருந்த மௌலி மந்தர மாலா விநிமர்த்த சரு -3–15-

யஸ்மின் ந்ருத்யதி யஸ்ய ஷேகர பரை கிரௌஞ்ச த்விஷ சந்த்ரகீ -யஸ்மி த்ருபுதி யஸ்ய கோஷா சுரபேம் ஜிக்ரன் வ்ருஷோ தூர்ஜதே
யஸ்மின் ஸஜாதி யஸ்ய விப்ரம கதிம் வஞ்சன் ஹரே சிந்துர ஸ்தத் வ்ருந்தாவன கல்ப த்ரும வனம் தம் வா கிஸோரம் பஜே -3–16-
தன்னைத் தந்த கற்பகம் -கேசபாசம் கண்டு முருகன் மயில் ஆடும் -நந்தி பசுக்களை பின் தொடரும் -ஐராவதம் நடை கற்கும் –

அருணதர அம்ருத விசேஷித ஸ்மிதம் வருணாலயானு கதா வர்ண வைபவம்
தருணரவிந்த தீர்க்க லோசனம் கருணாலயம் காம அபி பாலம் ஆஸ்ரயே-3–17-

லாவண்ய வீசீரா சித்தங்க பூஷணம் -பூஷா பதரோபிதா புய பர்ஹாம்
காருண்ய தரள கடாக்ஷ மாலாம் பாலாம் பஜே வல்லவ வம்ச லஷ்மிம் -3–18-
கோபால சுந்தரி அனுபவம் –

மதுரை கரசம் வபுர் விபோர் மதுரா வீதி சரம் பஜம் யஹம் -நகரீ ம்ருகஸ்ஸா பலோசன நயநீந்திவர வர்ஷ ஹர்ஷிதம்-3–19-

பர்யா குலேன நயனனஹ விஜிரும்பிதேன வக்த்ரேன கோமல் ம்ருது ஸ்மித விப்ரமேன-
மந்தரேன மஞ்சுள தரேன ச ஜல்பிதேன நந்தஸ்ய ஹந்த தனயோ ஹ்ருதயம் துநோதி-3–20-
நந்த கோபன் குமரன் -கடாக்ஷம் -மந்த ஸ்மிதம் -யாதவ ஸிம்ஹம்-ஜல்பிதம் -கொண்டு உள்ளம் கவர்ந்தான் –

கந்தர்ப்ப கண்டூல கடாக்ஷ வீசீர் இந்திவரக்ஷீர அபிலாஷா மானன் -மந்த ஸ்மித அதர முகாரவிந்தன் வந்தமஹே வல்லவ தூர்த பாதன்-3–21-

லீலாதோப கடாக்ஷ நிர்பர பரிஷ்வங்க பிரசங்கதிக ப்ரீதே கீத விபங்க சங்க தலசத் வேணு ப்ரணத அம்ருதே
ராதா லோசன லலிதஸ்ய லலித ஸ்மேரே முராரீர் முதா மத்ர்யைகரசே முகேந்து கமல மனம் மதியம் மன -3–22-
கோபி வல்லபன் -ராதா சமேதன் -வேணு நாதம் -மனம் இழந்தேன் –

சரணாகத வஜ்ர பஞ்சரே -சரணே சம்கத் ஆஸ்ரய வைபவே -க்ருபயா த்ருத கோப விக்ரஹே கரி தன்ய காயாமஹே வயம் -3–23-

ஜெக த்ரய காந்த மநோஞான பூமி ஷேதாஸ்ய ஜஸ்ரம் மம சந்நிததம்-ராமாசமா ஸ்வதித ஸுகுமார்யம் ராதா ஸ்தன போக ரஸஞாமோஜ-3–24-

வாயமேத தவிஸ்வ சீம கருணாகர கிருஷ்ண கிம் வந்தந்தீம் தே அபி ச விபோ த்வ லலிதே சபல தரா மதிரியம் பால்யே-3–25-

வத்ஸ பலசர கோபி வத்ஸ ஸ்ரீ வத்ஸ லாஞ்சன உத்ஸ்வய கதா பாவித் யுத் சுகே மம லோசன-3–26-

மதுரிமா பரிதே மநோபிராமே ம்ருதுள தர ஸ்மித முத்ரிதன் நேந்தவ்-த்ரி புவன நாயநைக லோபனீய மஹஸி வயம் வ்ரஜ பஜி லலசஸ்ம -3–27-

முகாரவிந்தே மகரந்த பிந்து நிஷ்யந்தி லீலா முரளி நினதே -வ்ரஜங்கன பங்க தரங்க ப்ருங்க சங்கரம பூமவ் தவ லாலஸ ஸ்ம -3–28-

ஆதமரயத லோசனம் சீல ஹரே லீலா ஸுதாப்யதிதைர் கேதமேதித திவ்ய கேளி பரைதை ஸ்பீதம் விரஜ ஸ்த்ரீ ஜனை
ஸ்வேதம்ப கண பூஷிதேன கிமதி ஸ்மரேண வக்த்ரேந்துநா பதாம்புஜ ம்ருது பிரசர ஸுபகம் பஸ்யாமி த்ருஸ்யம் மஹ -3–29-
கோபிகள் ஆழ்ந்த தேஜஸ் -கண்டேனே –

பாணவ் வேணு ப்ரக்ருதி ஸூகுமார க்ருதவ்பல்ய லஷ்மி பார்ஸ்வே பாலா ப்ரணய சரஸ லோகிதா பங்க லீலா –
மௌலவ் பர்ஹம் மது வதனாம் போருஹே முஃத்ய முத்ரே த்ரயர்த்ரகாரம் கிம் அபி கிதவம் ஜ்யோதிர் அன்வேஷயம -3–30-

ஆரூட வேணு தருணாதர விப்ரமேன-மதுரா சலி வதாம்புஜ முத்வஹந்தி-
ஆலோக்யதாம் கிமனயா வன தேவதா வ கைசோரகே வயஸி காபி ச காந்தி யஷ்டி-3–31-
வேணு கானம் -தாமரைக் கண்ணன் –வாசா மகோசர கரியான் ஒரு காளை -இல்லாத வனத்தால் என்ன பிரயோஜனம் –

அநந்ய அசாதாரண காந்தி காந்த மகரந்த கோபீ நயன அரவிந்தம் -பும்ஸ புராணஸ் யனவம் விலாசம் புண்யேந பூர்மேந விலோகயிஷ்யே-3–32-
மனம் கவர் கள்வன் கண்ணன் லீலைகளை காட்டாக கண்டேனே –

சாஷ்டாங்க பதமபி வந்த்ய ஸமஸ்த பாவை சர்வான் சுரேந்த்ர நிகரா நிதமேவயசே மந்த ஸ்மிதார்த்த
மதுரானன சந்த்ர பிம்பே நந்தஸ்ய புந்த நிச்சயே மம பக்தி ரஸ்து -3–33–
கண்ணன் கழலிணை மறவாமல் இருக்கும் மனசை பிரார்த்தித்து அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவேன் –

ஏஷு ப்ரவஹேஷு ச ஏவ மன்யே ஷனோபி கன்ய புருஷயுசேஷு ஆஸ்வத்யதே யத்ர கயபி பக்த்ய நீலஸ்ய பாலஸ்ய நிஜம் சரித்ரம் -3–34-

நிஸ்ஸர்க ஸரஸாதரம் நிஜ தயர்த்ராதிவ்யேக்க்ஷணம் மநோஞான முக்த பங்கஜம் மதுர சர்தர மந்த ஸ்மிதம் –
ரஸஞான ஹ்ருதயாஸ்பதம் ரமித வல்லவி லோசனம் புன புன ருபஸ்மஹே புவன லோப நீயம் மஹ -3–35-

ச கோபி பால சரசிருஹாக்ஷ ஸா சா விரஜ ஜன பாத தூளி -மஹூஸ்த்ததேதாதியுகளம் மத்யே மாமுஹ்யமானேபி மனாஸ் யுதேது-3–36-

மயி ப்ரயண பிமுகே ச வல்லவீ ஸ்தன த்வயீ துர்லலிதஸ் ச பாலக சனை
சனை ஸ்ரவித வேணு நிஸ்வனோ விலாச வேஷேண புர ப்ராதீயதம்-3–37-
அந்திம திசையிலும் கோபீ வல்லவன் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேவை சாதித்து அருள வேன்டும் –

அதி பூமிம பூமிமேவ் வா வசசாம் வசித வல்லவீ ஸ்தனம் மனசாமபரம் ரசயனம் மதுரத்வைதம் உபாஸ்மஹே மஹ -3–38-

ஜனந்தரேபி ஜெகதேக மந்தனே கமநீய தாம்நி கமலய தேக்ஷனே வ்ரஜ சுந்தரி ஜன விலோசன அம்ருதே சபலானி சந்து ஸகலேந்த்ரியனி மே -3–39-
பிறவிகள் தோறும் அடியேன் இந்திரியங்கள் கோபீ வல்லவன் இடமே ஆழ்ந்து இருக்க அருள வேன்டும் –

முனி ஸ்ரேணி வந்த்யம் மதுரள சத் வல்லவ வதூ ஸ்தன ஸ்ரேணி பிம்ப ஸ்திமித நயனோம்போஜ சுபகம் –
புன சில குஹா பூமிம் புளகித கிராம் நைகம கிராம் கனஷ்யமம் வந்தே கிமப் மஹ நீய க்ருத மஹா -3–40-

அநு சும்ப தம் விசலனே சேதச மனுஜா க்ருதர் மதுரிம் ஆஸ்ரியம் விபோ
ஆயி தேவ கிருஷ்ண தயிதேதி ஜல்பத மபி நோ பவேயுராபி நம தாத்ருஸ-3–41-

கிஷோர வேஷேண கிஸோ தரீ த்ருசம் விசேஷ த்ருஸ்யேன விசால லோசனம்
யசோதயஸ் லப்த யசோதனாம்புதேர் நிஸமயே நீல நிசா கரம் கதா -3–42-

ப்ரக்ருதி ரவது நோ விலச லக்ஷ்ம்யா ப்ரக்ருதி ஜடம் ப்ரணதபரத வீதியாம் ஸிக்ருதி க்ருத பதம்
கிசோர பாவே சுக்ருதி மனப்பிரணிதன பித்ர மோஜ-3–43-
சரணாகத ரஷணன் –சத்துக்கள் மனத்துள்ளான் -பால சேஷ்டிதங்கள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

அபஹசித ஸுதாமதாவே லேபை ரதிக மநோஹர மர்த்ர மந்தஹாசி வ்ரஜ யுவதி விலோச்சா வலேயம் ரமயது தாமரம வரோதனம் ந–3–44-
ஆராவமுதன் -கோபி ஜன வல்லபன் –

அங்கோரோத ஸ்மேரதச விசேஷ ரஸ்ராந்த ஹர்ஷம்ருத வர்ஷ மக்ஷ்ணாம் சம்கீதிதம்
சேதஸி கோப கன்ய கண ஸ்தன ஸ்வஸ்தயயனம் மஹோ ந -3–45-

ம்ருக மத பங்க சங்கர விசேஷித வந்த்ய மஹா கிரித கண்ட கைரிக நத்ரவ வித்ருமிதம்-
அஜித புஜாந்தரம் பஜத ஹே வ்ரஜ கோப வது ஸ்தன கலச ஸ்தலீ குஸ்ரன மர்தன கர்தமிதம் -3–46-

ஆமூல பல்வீத லீலா மபங்க ஜலை மாசிஞ்சதி புவன அத்ரியுத கோப வேஷம்
பலாக்ருதிர் ம்ருதள முக்த முகேந்து பிம்பா மதுர்ய சிதி ரவதன் மது வித்விஷோ ந -3–47-
கோப வேஷம் கொண்டதே நம் பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவதற்கே –

விரணன் மணி நூபுரம் வ்ரஜ சரணாம்போஜம் உபாஸ்ய சம்ஞின -சரசே ஸரஸி ஸ்ரீ ஆஸ்ரிதம் கமலம் வா கலா ஹம்சா நதிதம்-3–48-
கனை கழல் பணிவோம் –

சரணம் அநு சரண நாம் சரத் அம்போஜ நேத்ரம் -நிரவதி மதுரிமநா நீல வேஷண ரம்யம் –
ஸ்மர சர பரதந்த்ர ஸ்மேர நேத்ராம்புஜாபி வ்ரஜ யுவதி பிரவியத் ப்ரஹ்ம சம்வேஸ்திதம் -3–49-
அசரண்யர்களுக்கு சரண்யன் -கோபீ ஜன வல்லபன் –

ஸுவியக்த காந்தி பர ஸுரப திவ்ய காத்ர மவ்யத் யவ்வன பரீத கிசோர பாவம்
கவ்யனு பலன விதவனுசிஷ்ட மவ்யா தவியாஜ ரம்ய மகிலேஸ்வர வைபவம் ந -3–50-
திவ்ய ஆபரணங்கள் கொண்டு அழகை மறைக்காத கோ பாலனே நம் ரக்ஷகன் –

அநு கதம மரீனாம் மம்பராலபினாம் நயன மதுரிமா ஸ்ரீ நர்மனிர்மன ஸீம்நாம் –
விரஜ யுவதி விலச வ்யப்ருத பங்கம வியத் த்ரி புவன ஸூகுமராம் திவ்ய கைசோரகம் ந -3–51-
கோப ஸ்த்ரீகள் கண்ணுக்கு விருந்தாக பால கிருஷ்ணனே நம் ரக்ஷகன் –

ஆபதமா சூட மதி ப்ரக்தி மாபீயமான யமினாம் மநோபி கோபி ஜன நாத ரசவதம்த்வோ கோபால பூபால குமார மூர்த்தி -3–52-

திஷ்டியா வ்ருந்தாவனம் அத்ருசம் விப்ர யோகா குலானாம் ப்ரத்யஸன்னாம் ப்ரணய சபலா பங்க வீசீ தரங்கை
லஷ்மி லீலா குவலய தள ஷ்யாமளன் தம கமான் புஷ்ணியாத்வா புலக முகுளா போக பூஷா விசேஷம் –3–53-

ஜயதி குஹ சிகீந்த்ர பிஞ்ச மௌலி சுர கிரி கைர்க கல்பிதங்க ராக
சுர யுவதி விகீர்ம ஸூநு வர்ஷ ஸ்நபித விபூஷித குந்தள குமார -3–54-

மதுர மண்ட சுசி ஸ்மித மஞ்சுளம் வதன பங்கஜ மங்கஜ வெள்ளிதம் விஜயதாம் வ்ரஜ பால வதூ ஜன ஸ்தன ததீவிலுத நயனம் விபோ -3–55-

அலசவிலஸ முக்த ஸ்நிக்த ஸ்மிதம் வ்ரஜ ஸுந்தரீ மதன கதன ஸ்வினாம் தன்யம் மகத் த்வதனாம்புஜம்
தருண மருண ஜ்யோத்ஸ்னா க்ருத் ஸ்நஸ்மிதஸ் நபிதாதரம் ஜயதி விஜய ஸ்ரீநீ த்ருஸாம் மதயன் மஹ -3–56-

ராதா கேளி கடாக்ஷ வீக்ஷித மஹா வ்ருக்ஷ ஸ்தலீ மதன ஜீயாசு புளகாங்குராஸ் த்ரி புவன ஸ்வதீயஸ் தேஜச
க்ரீதந்த பிரதி சுப்த துக்த தனயா முக்தபா போதக்ஷணா-த்ரஸா ரூடா த்ருதப கூஹன கான சம்ராஜ்ய ராஜ்ய ஸ்ரீ யா -3–57-

ஸ்மித ஸ்நுத ஸுதா தாரா மத ஷிகண்டீ பர்ஹங்கித விசால நாயனாம்புஜ வ்ரஜ விலசிநீ வசிதா
மயஞா முக பங்கஜ மதுர வேணு நாத த்க்ரவா ஜெயந்தி மம சேதச ஸ்சிரம் உபாசிதா வாசநா-3–58-

ஜீயதசவ் ஷிகி ஷிகண்ட க்ருதவதம்ச சாம் சிதிகீ சரஸ காந்தி ஸூதா ஸம்ருத்தி
யத் பிந்துலேச கனிகா பரிணாம பாக்யத் ஸுபாக்ய சீம பாத மஞ்சதி பஞ்ச பாண-3–59-
மயில் பீலி தரித்த பால கிருஷ்ண அமுதம் ஏக கேசம் கொண்டே மன்மதன் பெற்ற அழகு –

ஆயாமேன த்ருசோர் விசால தரயோ ரக்ஷயை மர்தர ஸ்மித சய தர்ஷித சரதேந்து லலிதம் சபலய மாத்திரம் ஷிஸோ
ஆயாசன பரான் விதூய ரசிகை ரஸ்வத்யமானம் முகூர் ஜேயா துன்மத வல்லவி குச பரா தரம் கிஸோரம் மஹா -3–60-

ஸ்கந்த வர சதோ பிரஜா கதிபயே கோபா சஹாயாத்ய -ஸ்கந்த லம்பினி வத்ஸ தம்னி தனதா கோபங்கனா ஸ்வாங்கனா
ஸ்ருங்கார கிரி கௌரிகம் ஷிவ ஷிவ ஸ்ரீ மந்தி பர்ஹானி ச ஸ்ருங்க க்ராஹிகய ததாபி ததிதம் ப்ரஹு ஸ்த்ரிலோஜ் கேஸ்வரம் -3–61-
மயில் பீலி தரித்த கோபாலனே நம் ஸ்வாமி –

ஸ்ரீ மத் பர்ஹி ஷிகந்த மந்தன ஜூஷே ஷ்யமபி ரம த்விஷே லாவண்ய கர சவ சிக்த வபுஷே லஷ்மீ சர பிராவ்ருஷே-
லீலா க்ருஷ்ட ரஸஞா தர்ம மனசே லீலா ம்ருத ஸ்ரதஸே -கே வா ந ஸ்ப்ருஹயந்தி ஹந்த மஹஸே கோபி ஜன பிரேயஸே -3–62-

ஆபத்தலதர மதீர விலோல நேத்ர மாமோத நிர்பரிதம் அத்புத காந்தி பூரம்
ஆவிஸ்மிதம் ருதமனுஸ்து திலோப நீய மமுத்ரி தனனமஹோ மதுரம் முராரே -3–63-

ஜஃருஹி ஜஃருஹி சேதஸ் சிராய சரிதர்தத பவத-அநு பூயதா மிதம் மிதம் புர ஸ்திதம் பூம நிர்வாணம் –3-64-

சரண்யோர் அருணம் கருணர்தயோ கச பரே பகுளம் விபுலம் த்ருசோ –
வபுஷி மஞ்சுள மஞ்சன மேசகே வயஸி பலம் அஹோ மத்ரம் மஹ -3–65-

மாலபர்ஹ மனோஞ குந்தள பரம் வன்ய ப்ரஸூ நோக்க்ஷிதாம்-ஷைலி யத்ரவ க்லிப்த சித்ர திலகாம் சஸ்வன் மநோஹாரி நீம்
லீல வேணு ரவமயதைக ரஸிகாம் லாவண்ய லஷ்மி மயீம் பாலாம் பல தமள நீல வபுஷம் வந்தே பரம் தேவதாம் -3 -66–
மயில் பீலி தரித்த கேசா பாஸம் -கஸ்தூரி திலகம் -வேணு நாத அமிர்தம் -லாவண்யம் மிக்க திரு மேனி -பால சுந்தர கோபாலனை வணங்குவோம் –

குரு ம்ருது பாத கடம் குல்பே கணம் ஜெகனே ஸ்தலே -நளின அமுதரே தீர்கம் பாஹ் வோத்ர் விசாலமுர ஸ்தலே
மதுர மதுரே முக்தம் வக்த்ரே விலாஸி விலோசனே -பஹு குச பரே வன்யம் வேஷே மனோஞ மஹோ மஹ -3–67-
மெல்லடி -தடித்த இடை -நாபி கமலம் -அகன்ற மார்பு -நீண்ட கைகள் -மந்தஹாசம் -கேசாபாசம் -மிளிர்ந்த திருக் கண்கள் -ஆராவமுதம் –

ஜிஹானாம் ஜிஹானாம் சுஜானேன முஃத்யம் துஹானாம் துஹானாம் ஸூத வேணு நாதை –
லிஹானாம் லிஹானாம் சுதீர்கைரபங்கை மஹானந்த ஸர்வஸ்ய மேதன் நமஸ்த்தாம் -3–68-
வேணு நாதம் கடாக்ஷம் அம்ருத வெள்ளம் வணங்குவோம் –

லஸத் பர்ஹ பீடம் லலித லலித ஸ்மேர வேதனம் -ப்ரமத் கிரீதா பங்கம் ப்ரணய ஜனதா நிவ்ருத்தி பதம்
நவம்போத ஷ்யாமம் நிஜ மதுரிமா போக பரிதம் பரம் தேவம் வந்தே பரிமிளித கைசோரக ரசம் -3–69-

சரஸ்ய சம்க்ரயமி வாண் நேந மதுர சதுரியம் இவ ஸ்மிதேந தருண்ய கருண்ய மிவேக்ஷிதேன சபல்ய சபால்ய மிதம்த்ருசோர்மே -3–70-

அத்ர வா தத்ர வா தேவ யதி விஸ்வஸி மஸ்தயி -நிர்வாணம் அபி துர் வார மர்வா ஷீணாநி கிம் புன -3-71-

ரகாந்த கோபி ஜன வந்தித அப்யாம் யோகீந்த்ர ப்ருங்கேந்திர நிஷேவிதாப்யாம் –
ஆதம்ர பங்கேருக விப்ரமப்யாம் ஸ்வாமின் பதாப்யாம் மயம் மஞ்சலிஸ்மே -3–72-

அர்த்தா நுலாபான் விரஜ சுந்தரிணாம் அக்ரித்ரி மநாஞ்ச சரஸ் வதீனம் -அர்த்ரா சயேந ஸ்ரவஞ்சலேந சம்பவயந்தம் தருணம் க்ரநீமா–3–73-

மனசி மன சந்நிததாம் மதுர முகா மந்தரா பங்கோ கர கலித லலித வம்சா காபி கிஸோரா க்ருபா லஹரி -3–74-

ரக்ஷந்து ந ஷிஷித பாசு பால்ய வ்ருதா பர்ஹகி ஷிகவதம்ஸா-பிராண ப்ரியா ப்ரஸ்துத வேணு கீதா சீதா த்ரூஸ்ஸோ சிதால கோப கன்யா -3–75-

ஸ்மித ஸ்தபகிததரம் சிசிர வேணு நாதம்ருதம் முஹுஸ் தரள லோசனம் மத கடாக்ஷ மல குலம் –
உரஸ்துல விலீநயா கமலயா சமலிங்கிதம் புவஸ்த்துல முபாஹதம் புவன தைவதம் பது ந -3–76-

நயனம்புஜ பஜத கமதுஹம் ஹ்ருதயாம்புஜ கிமபி கருணீகம்-சரணாம்புஜே முனி குலைக தனம் -வதனாம்புஜே விரஜ வதூ வைபவம் -3–77-

நிவசனம் ஹந்த ராசந்தராணாம் நிர்வண சம்ராஜ்ய மிவவ தீமம்-அவ்யஜ மதுர மஹ நிதான மவ்யத் விரஜ நம அதி தைவதம் ந -3–78-

கோபிநாம் அபி மத கீத வேஷ ஹர்ஷாத்-ஆபீன ஸ்தான பர நிர்பரோப கூடம் –
கேளி நம்வது ரசை ரூபஸ்ய மனம் களிந்தி புளினச்சரம் பரம் மஹோ ந -3–79-

கேளதம் மனசி கேசர அங்கன மனநீய ம்ருது வேணு நிஸ்வனை -கணநே கிமபி ந க்ருபஸ்பதம் காள மேக கலோகத்வஹம் மஹ -3–80-

ஏனிஷபா விலோசன பிர லச ஸ்ரேணீ பர ப்ரோவ்திபிர்-வேணி பூத ரஸ க்ரமா பிர பித ஸ்ரேநீ கிரதபீர் விதா –
பணீ த்வ் ச வினோதய த்ரதிபதே ஸ்த்தூணிசயை சயகைர் -வாணி நாம பதம் பரம் விரஜபதி ஷோநீபதி பது ந -3–81-
சரஸ்வதியாலும் வாசா மகோசர அழகன் கோபீ ஜன வல்லபன் நம்மை ரக்ஷிக்கட்டும் –

காளிந்தி புலிநே தமாலா நிபிதச்சய புர சஞ்சரத்-தோயே தோயஜ பித்ர பாத்ர நிஹிதம் ததஜ்யன் நமஸ் நோதி யா —
வாமே பாணிகலே நிதய மதுரம் வேணும் விஷானாம் கதீ பிரந்தே ஹாஸ்ச விலோகயன் பிரதிகலம் தம் பாலம் ஆலோகயே-3–82-
யமுனா தீரத்தில் தாமரை இலைமேல் தயிர் சாதம் உண்டு -வேணு கானம் பாடி ஆ நிரைகளை மேய்க்கும் பால கிருஷ்ணனை மனசால் காண்கிறேன் –

யத் கோபி வத நேந்து மண்டல மபுத் கஸ்தூரிகா பத்ரகம் யல் லஷ்மி குச சத கும்ப கலச விகோசமிந்தே வரம் –
யன் நிர்வண நிதான சாதன விதவ் சிதஸனம் யோகிநாம் -தன்ன ஷ்யாமள மாவிரஸ்து ஹ்ருதயே கிருஷ்ண அபிதானம் மஹ -3–83-
திவ்ய தேஜஸ் -கோபிகள் திலகம் -மலராள் தனத்துள்ளான்-முனிவர்களுக்கு தன்னை காட்டும் அஞ்சனம் –

புல்லேந்தீவர மிந்து காந்தி வதனம் பர்ஹவதம் ச பிரியம் -ஸ்ரீ வத்சாங்க முதார கௌஸ்துப தரம் பீதாம்பரம் சுந்தரம்
கோபீனாம் நயனோத்பலர்சித்த தனும் கோ கோப சங்க வ்ருதம் கோவிந்தம் கல வேணு நாத ரசிகம் திவ்யங்க பூஷம் பஜே -3–84-
திவ்ய ஆபரண தாரி -மயில் பீலி தரித்த கேசபாசம் -ஸ்ரீ வத்சாங்கம் -கௌஸ்துபம் -கோப கோபீ ஆநிரை கூட்டத்தில் -கோவிந்தனை வணங்குவோம் –

யன் நாபி ஸரஸிர் ருஹாந்தர புதே ப்ருங்கயமனோ விதிர் -யத் வாஷ கமல விஹார பவனம் யச் அக்ஷுஷி சேந்த்வினவ்-
யத் பதாப்ஜ விநஸ்ருத சுர நதி ஷம்போ ஷிரோ பூஷணம் -யான் நாம ஸ்மரணம் துநோபி துரிதம் பயாத் சவ கேசவ -3–85-
நாபி கமலத்தில் நான்முகன் -திருவடி தீர்த்தம் கங்கா சிவனுக்கு ஸீரோ பூஷணம் -கேசவன் நம் ரக்ஷகன் –

ரஷந்து த்வாமசித ஜலஜை ரஞ்சலீ பாத மோலே மேனா நபி ஸரஸி ஹ்ருதயே மாரபணா முராரே –
ஹார கண்டே மணி மா வக்த்ர பத்மே த்விரேபா -பிஞ்சா பூஷஸ் ஷிகரே நிச்சயே கோஷா யோஷின் கடாஷா -3–86-
கோபிகள் -திருவடி மேல் சூடும் புஷ்ப்ப மாகவோ -திரு மார்பில் மாலையாகவோ -திரு முடியில் -மயில் பீலியாகவோ -இருக்க ஆசை படுவார்கள் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –

பிரத ஸ்மரமி ததி கோஷ வினீத நித்ர-நித்ரவசன ரம நீய முகாரவிந்தம் -ஹ்ருதயன் வத்ய வபுஷம் நயநபி ரம -முன்நித்ரே பத்ம நயனம் நவநீத சோரம் -3–88-

புல்ல ஹல்லாக வதம் ச கோலாலசத் -கல்பமகம வீக வேஷிதம்-வல்லவீ சிகுர வசித அங்குலீ பல்லவம் கமபி வல்லவம் பஜே -3–89-

ஸ்தேயம் ஹரே ஹரேதி யான் நவநீத சோவ்ர்யம்-ஜரத்வ மஸ்ய குரு தல்ப க்ருதா பரதம் –
ஹத்யாம் தசனனா ஹதிர் மது பண தோஷம் யத் பூதன பய ச புனது கிருஷ்ண -3–90-

மார மா மதீய மனசே மாதவைக நிலயே யாத்ருச்சிய ஸ்ரீ ரம பதி ரிஹாக மேதசவ் க சஹேத நிஜ வேஸ்ம லங்கனம் -3–91-

ஆ குஞ்சிதம் ஜனு கரம் ச வமம் நியாஸ ஷிதவ் தக்ஷிண ஹஸ்த பத்மே ஆலோக யந்த-3–92-
தவழும் நவநீத கண்ணனை தியானிப்போம் –

ஜனுப்யம் அபித வந்தம் பணிப்யாம் அதி சுந்தரம் ச குந்த லலகம் பாலம் த்யோயோம் யுஷாஸ்சி பாலகம் -3–93-

விஹாய கோதண்ட சரவ் முஹூர்த்தம் கிரஹண பாணவ் மணி சரு வேணும் மாயூர பர்ஹஞ்ச நிஜோதமங்கே-சீதா பதே த்வம் ப்ரணமாமி பஸ்சத் -3–94-

அயம் ஷீரம் போதே பதி ரிதி கவாம் பலக இதி ஸ்ரீதோ அஸ்மபி ஷீரோப நயன தியா கோப தனய-
அநேநா ப்ரத்யூஹோ வ்யரசி சததாம் யேந ஜனனி ஸ்தனா தபயஸ் மாகம் ஸக்ருத் அபி பயோ துர் லபம் அபூத்-3–95-
நம் பிறவி அறுக்க அன்றோ அவன் அவதாரம் –

ஹஸ்த மக் ஷிப்ய யாதோ அசி பால கிருஷ்ண கிம் அத்புதம் ஹ்ருதயாத்யதி நியாசி பவ்ருக்ஷம் ஞானயாமி தே -3–96-

தம்சி ரவி ரிவோத்யம் மஜ்ஜதா மம்பு ராசவ் ப்லவ இவ த்ருஷிதானாம் காது வர்ஷின மேக-
நிதிர் இவ விதானானாம் தீர்க்க தீவ்ராம் அயனாம் பிஷகி வ குசலம் நோதது மாயது ஸுரி-3–97-
இருள் போக்கும் ஆதித்யன் -பொழியும் கார் மேகம் -மருத்துவனாய் நின்ற மணி வண்ணன் –

கோதண்டம் மஸ்ருனம் சுகந்தி விஷிகம் சக்ரப்ஜ பாசங்குசம் ஹைமிம் வேணு லதம் கரைச்ச சிந்தூர உஞ்சருணம்
கந்தர்ப்பதிக சுந்தரம் ஸ்மித முகம் கோபங்கன வேஷ்டிதம் கோபாலம் ஸ்ததம் பஜாமி வரதம் த்ரை லோக்ய ரஷா மணிம் -3–98-

சாயங்காலே வந்ததே குசிமித ஸமயே சைகதே சந்த்ரகயம் த்ரை லோக்ய கர்ஷணங்கம் சுர வர கணிக மோஹன பங்க மூர்த்திம்
சேவ்யம் ஸ்ருங்கார பவைர் நவ ரஸ பரிதை கோப கன்யா சஹஸ்ரை-வந்தேஹம் ரசகேலிரத மத சுபகம் வஸ்ய கோபால கிருஷ்ணன் -3–99-

கதம்ப மோலே க்ரீதந்தம் வ்ருந்தா வனம் நிவேசனம் பத்மாசன ஸ்திதம் வந்தே வேணும் காயந்த சியுத்ஜம்-3–100-

பாலம் நீல அம்புதாபம் நவ மணி விலஸத் கிண்கிணி ஜால பாதம் -ஸ்ரோநி ஜன்கந்த யுகம் விபுல குரு நகப் ரோல்லஸத் கண்ட பூஷணம்
புல்லம்போஜ வக்த்ரம் ஹத சகத மருத் பூதநாத்யம் பிரசன்னம் -கோவிந்தம் வந்திதேன் த்ராத்யமரவர மஜம் பூஜயேத் வசரதவ்-3–101-
நீல மேக ஸ்யாமளன் -கழுத்திலே புலி நக பூஷணம் -விரோதி நிரசனன் -தேவர்களுக்கும் தேவன் -கோபாலனை வணங்குவோம் –

வந்தயம் தேவைர் முகுந்தம் விகசித குரு விந்தப மிந்தி வரக்ஷம் கோ கோபி வ்ருந்த வீதம் ஜித ரிபு இவஹம் குந்த மந்தார ஹாஸம்
நீல க்ரேவா க்ரபிஞ்ச கலன சுவிலஸத் குந்தளம் பாணு மந்தம் தேவம் பீதாம்பரத்யம் ஜெப ஜெப தினசோ மத்யமஹநே ரமயை-3–102-

சக்ரந்த த்வஸ்த வைரீ விரஜ மஜித மபாஸ்த்வநீ பர மத்த்யை -ரவீதம் நரதத்யை உனிபிர பினுதம் தத்வ நிமோதி ஹேதோ
சயனே நிர்மலங்கம் நிருபம ருசிரம் சிந்தயேன் நில பாசம் மாத்ரீ விஸ்வோதயஸ்திதி யபஹரண பதம் முக்திதம் வஸுதேவம்-3–103-

கோதண்ட மைக்ஷ்வ மகந்த மிஷும் ச பவ்ஷ்பம் சக்ரப்ஜ பாச ஸ்ருணி காஞ்சன வம்ச நாளம்
பிப்ரண மஷ்த வித பஹுபிர் அர்க வர்ணம் த்யயேத்வரிம் மதன கோப விலாச வேஷம் -3–104-
அஷ்ட புஜ கோபால சுந்தர மந்த்ரம் இது –

அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ -கிம் வசந்தோ -நோ சக்ரி கிம் குலலோ -ந ஹி தரணி தர கிம் தவிஜித்வ-பாணீந்த்ர
நாஹம் தரஹி மர்திம் கிமஸி-ககபதிர் -நோ ஹரி கிம் கபீந்த்ர இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -3–105-
அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ –யார் கதவை தட்டினது–கோபி கேட்க -மாதவன் என்றான் இவன்
-கிம் வசந்தோ -நோ சக்ரி-இது வசந்தமா -இல்லை-மாதவன் என்பது வசந்த காலத்துக்கும் உண்டே – சக்ரதாரி
கிம் குலலோ -ந ஹி தரணி தர–சக்கரம் கொண்டு மன் பானை செய்யும் குயவனா -இல்லை பூமி தாங்குபவன்
கிம் தவிஜித்வ-பாணீந்த்ர நாஹம் தரஹி மர்திம்-இரண்டு நாக்கு உள்ள பாம்பா -இல்லை காளியனை கொன்றவன்
கிமஸி-ககபதிர் -நோ ஹரி-பறவை அரசன் கருடனா -இல்லை ஹரி
கிம் கபீந்த்ர-குரங்கா -என்றாள் கோபி
இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -இப்படி பிரதிவசனம் -செய்து கோபி இடம் தன்னை
தோற்பிக்க வைத்துக் கொண்ட கண்ணனே ரக்ஷகன் –

ராதா மோஹன மந்திர அத்புத கதஸ் சந்த்ர வலீ மூசிவான் -ராதே ஷேம மயே அஸ்தி தஸ்ய வசனம் ஸ்ருத்வா சந்திரவளி-
கம்ச ஷேம மயே விமுக்த ஹ்ருதயே கம்ச க்வ த்ருஷ்டத்வய -ராதா க்வேதி விலஜிஜித்தோ நாத முக ஸ்மேரோ ஹரி பது ந -3–106-
ராதாவுடைய வீட்டில் இருந்து வந்த கிருஷ்ணன் சந்திரவளி பார்த்து -ராதா எப்படி இருக்கிறாய் –
பதிலுக்கு அவள் -கம்சா நி எப்படி இருக்கிறாய்
இவன் -பெண்ணே உனக்கு மதி இல்லையா -கம்சனை எங்கே கண்டாய்
நீ ராதையைக் கண்ட இடத்திலே கண்டேன் -என்றதும் வெட்க்கி தலை குனிந்தான் –
அந்த கிருஷ்ணனே நமக்கு ரக்ஷகன் –

ய ப்ரேர்திர் விதுரர்பிதோ முரரிபோ -குந்தி யர்பித்தே யா த்ருசீ –யா கோவர்த்தன மூர்த்தினி யா ச ப்ரதுகே ஸ்தன்யே யசோதர்ப்பிதே
பரத்வாஜ சமர்பிதே சபைர்காத தோதரே யோஷிதாம் -யா ப்ரீதிர் முனி பத்னி பக்திர் ரஷிதே அப்யத் ரபி தாம் தாம் குரு -3–107-
விதுர போஜனம் -குந்தி போஜனம் /கோவர்த்தன -கோபர் போஜனம் -குசேலர் அவல்/ யசோதை முலை பால் / பரத்வாஜர் விருந்து /சபரி கனி /
கோபிகள் அதரம் / ரிஷி பத்னி இட்ட அடிசில் -போலே இந்த பிரபந்தம் உனக்கு சமர்ப்பிக்கிறேன் –

கிருஷ்ணவ் ஸ்மரண தேவ பாத சங்கத பஞ்சர சதத மேதா மாயதி கிரிர் வஜ்ர ஹதோ யாத -3–108-
கிருஷ்ணன் பற்றி சதா சிந்தனை வஜ்ராயுதம் போலே நம் வினை கூட்டங்கள் ஆகிய மலையை தூளாக்கி -நசிப்பிக்கும் –

யஸ்யத்மா போதஸ்ய குரோ பிரசாத தம் விமோக்தோஸ்மி சரீர பந்தனாத்-
ஸர்வோபதேஷ்த்து புருஷோத்தமஸ்ய ஹஸ்யங்கிரி பத்மம் ப்ரணதோஸ்மி நித்யம் -3-109–

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .