ஸ்ரீ கிருஷ்ணாவதார திவ்ய சேஷ்டிதங்களின் ஸ்வாபதேச அர்த்தங்கள் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

பிறப்பிலி அன்றோ
என்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான்
சாது சானத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதி யம் யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
கம்ச சிசுபாலாதிகளைக் களைந்து
மாலா காரர் விதுரர் அக்ரூராதிகளுக்கு தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை காட்டி வாழ்வித்து அருளி
கலி கஷ்மங்களைக் கழித்து க்ருத யுக தர்ம பிரசாரம் செய்யவே ஸ்ரீ கீதாச்சார்யனின் திவ்ய அவதாரம்

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா-திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 50-
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்-
திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணாவானனான ஸ்ரீ கிருஷ்ணனே -நல்லருள் நம்பெருமான் –நிரவதிக தயாவானவன்

ஸ்ரீ கீதாச்சார்யன் திரு அவதரிக்கும் இடம் சிறைக்கூடம்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி யம் சிறையே -சம்சார மண்டலமே சிறைக்கூடம்
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இருள் மலிந்த இடத்தில் ஆச்சார்யன் வந்து பிறக்கிறான்
இருள் நாள் பிறந்த அம்மான் -கலியன்
வேண்டித் தேவர் இரக்க –வீங்கிருள் வாய் வந்து பிறக்கிறான்
ஆச்சார்யர் திரு அவதரிக்கும் இந்நிலத்திலே பலரும் வந்து பிறந்தாலும் அவர்கள் பிறப்பும் இறப்பும் மட்டும் அறிவது போல்
மக்கள் அறு வரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து
அனைத்தையும் செய்து முடித்து கிருதக்ருத்யனாய் -இன்னார் தூதன் என நிற்கிறான்
பழுதே பிறந்து இறந்தார் இடைத் தான் வீறு பெற்று
ஸ்ரீ பாண்டவர் தூதனாகவும் ஸ்ரீ பார்த்த சாரதியாகவும் இன்றும் இருந்து நிலை நின்று அருளுகிறான்

திரு அவதரிக்கும் பொழுதே சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாகவே சுடர் விளக்கத்துடன் திரு அவதரித்தான்
ஆச்சார்யர்கள் பிறக்கும் இடம் ஒன்றாய் வளரும் இடம் வேறு ஒன்றாய் தானே இருக்கும்
திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பது போல்
திரு வடமதுரையில் பிறந்து திரு ஆயர்பாடியில் வளர்ந்து -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் என்று
அறிவுடையார் எத்திறம் என்று மோஹிக்கும் படி பிறந்து வளர்ந்தான் ஆயிற்று –

வட மதுரையில் இருந்து திரு ஆய்ப்பாடிக்கு எழுந்து அருளும் போது பேர் ஆழமாக இருந்த தூய யமுனையும் முழந்தாள் அளவும் வற்றி
ஆச்சார்யர்கள் சஞ்சரிக்கத் தொடங்கும் போதே -பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -போல்
சம்சார ஸாகரமும் வற்றத் தொடங்கி -வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
பெருமைகளை அடக்கிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு ஆகி இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் கொழுந்தாய் வளர்வது போல்
மிகு ஞான சிறு குழவியாய் -சிறு மா மானிடராய் -அறிவில்லா மனிதர்களோடு கலந்து பழகுவது ப்ரத்யக்ஷம் –

தீய புந்திக் கொஞ்சநாள் ஏவப்பட்ட பூதநா ஸ்தனங்கள் -மாயா பிரகிருதி –சப்தாதி விஷயங்களைக் காட்டி
மோஹிப்பிக்கும் கண்டு கேட்டு மோந்து உண்டு உழலும் சிற்றின்பங்களை வேரற அறிந்து
தனக்கு அபாய லேசமும் இன்றி விளங்கும் ஆச்சார்யர் படிக்கு ஸூ சகம்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
நல்ல சங்கடமும் இருப்பதாலே கள்ளச் சகடம் என்றது
சுக்ல கதி அர்ச்சிராதி மார்க்கமும் –கிருஷ்ண கதி என்ற தூ மாதி மார்க்கங்களும் உண்டே
ஆச்சார்யன் திருவடி ஸ்பர்சத்தாலே கள்ளச் சகடத்தை -தூமாதி கதி த்வம்ஸம்
உண்டாகியே தீரும் என்பதைக் காட்டியபடி

யாமளார்ஜுன பங்க விருத்தாந்தம்
இணை பிரியாதே இருக்கும் இரட்டைகள் -ஸூக துக்கங்கள் ஸீதோ உஷ்ணம் -அஹங்கார மமகாரங்கள்
காம க்ரோதம் புண்ய பாபங்கள் ஆகிய த்வந்தங்கள் ஆச்சார்ய திருவடி ஸ்பர்சத்தாலே இற்று ஒழியுமே
குபேர புத்ரர்கள் நள கூபரன் மணி க்ரீவன் -நாரத ரிஷி சாபத்தால் இரட்டை மருதுகள்
உபாதியால் இரட்டைகள் நம்மை நலிகின்றன என்பதுக்கு எடுத்துக் காட்டு
காமக்ரோதங்களுக்கு உத்தேச்ய ஆகாரமும் ஹேய ஆகாரமும் உண்டே
சேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்
கோபஸ்ய வசமாயும் ஜிதக்ரோதனாயும் தானே பெருமாளும்
சிற்றின்பம் ஹேயமாய் அந்தமில் பேரின்பம் உபாதேயமாயும் இருக்குமே
துக்கமும் சம்சார அளவில் ஹேயமாய்
சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான்
ஆடி ஆடி அகம் கரைந்து
நோயும் பசலையும் மீதூர -என்கிறபடி பகவத் விஷயத்தில் உபாதேயமுமாயும் இருக்கும் அன்றோ –

ஐந்தலை வாய் காளியன் யமுனை ஆற்றைக் கலக்கியது அபார்த்தங்களாலே வேதங்களையே கலக்கியத்துக்கு த்ருஷ்டாந்தம்
அத்தை நீக்கி யமுனையை சர்வ உஜ்ஜீவன மாக ஆக்கி
தூய பெரு நீர் யமுனைத்துறைவன் -இடையறாத பகவத் சம்பந்தம் -வேதைக சமைதி கம்யன் –
மறை நான்கின் உளாயோ
மாதாந்தரஸ்தர்கள் ஐந்து வித துர்வாதங்கள்
1-ஈஸ்வரனே இல்லை என்றும்
2-ஈஸ்வரன் உண்டு அவன் ஆனுமானிகனே -சாஸ்த்ர சித்தன் அன்று என்றும்
3-ஸாஸ்த்ர சித்தன் என்று அங்கீ கரித்தும் அவனுக்கு குண விக்ரஹாதிகள் இல்லை என்றும்
4-ஈஸ்வரன் ஒருவனே என்பது இல்லை -பல ஈஸ்வரர் உண்டு என்னுதல்
5-பிரபஞ்சம் எல்லாமே மாயைத் தோற்றமே என்னுதல்
காளியன் தலையிலே அடி இட்டு நட்டம் ஆடினால் போல்
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னப் பண்ணுவார் ஆச்சார்ய திருவடி சம்பந்தத்தாலேயே –

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆச்சார்யர்கள் திரு வாக்கில்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
இதிஹாஸங்கள்
புராணங்கள்
பாஞ்சராத்ர ஆகமங்கள்
அருளிச் செயல்கள்
பூர்வாச்சார்ய ஸ்ரீ வசன பூஷணங்கள் –ஆகிய ஏழையும் ஆஸ்ரிதர்க்குக் காட்டி அருளுவார்கள்

விளவின் காய் கன்றினால் வீழ்த்தி
புற மத நிரசனங்களை பரஸ்பர விரோதங்களைக் காட்டி ஆச்சார்யர்கள் நிரசனம்
அனைத்தும் பொய் என்று சொல்கிறீர்களே நீங்கள் சொல்லும் இந்த வார்த்தை மெய்யா பொய்யா
இதுவும் பொய்யானால் உங்கள் பஷமும் பொய்யாகுமே
இப்படி எதிரியைக் கொண்டே எதிரியை முடித்தமை உண்டே

கோவர்த்தன உத்தாரணம்
தேவதாந்த்ர பஜனம் கூடாதே
மறந்தும் புறம் தொழா மாந்தர்
திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தவனுக்கே பூவும் பூசனையும் தகும்
குற்றம் செய்தவர் பக்கல் கிருபையும் பொறையும் உகப்பும் சிரிப்பும் கிருதஜ்ஜா அனுசந்தானமும் நடக்க வேணுமே
குன்றம் எடுத்து ஆநிரை காத்த குணம் போற்றி
ஏழு நாள் பெரு மழையில் இருந்தும் காத்து அருளினான் கண்ணபிரான்
ஆச்சார்யர்களோ அநந்த சம்சார சாகரத்தில் இருந்தும் உத்தரித்து அருளுகிறார்

கேசி வதம்
ஜிதேந்த்ரியராக ஆச்சார்யர் நம்மைத் திருத்திப் பணி கொள்வார்கள்

இரண்டு மல்லர் நிரசனம்
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
குவலயா பீட மதக்களிற்றை நிரசித்தது
மதக்களிற்று ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -பொய்கையார்

மாலாகாரர் சூட்டிய புஷ்பத்தை உகந்தது
செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதம புஷபம் இத்யாதி

ஏழு எருதுகளை அடக்கி ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை கடிமணம் புரிந்து அருளினான்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது ஒரு மங்கள ஸூத்ரம் போல் திருமந்திரம் கொண்டு
1-காமம்
2-க்ரோதம்
3-லோபம்
4-மோஹம்
5-மதம்
6-மாத்சர்யம்
7-அஸூயை –ஆகிய ஏழு விரோதிகளை தொலைத்து அருளுகிறார்

சிசுபாலாதிகளை முடித்து பாண்டவர்களை வாழ்வித்தது போல்
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் என்னும்படியாக நாட்டிய நீசச் சமயங்களை மாள்வித்து
அர்த்த பஞ்சகம் போன்ற விசேஷ அர்த்தங்களை எங்கும் விளங்காகி செய்து அருளும் ஆச்சார்யர்கள்படியே
ஸ்ரீ கீதாச்சார்யரின் அனைத்து சேஷ்டிதங்களும் என்றபடி
இங்கனம் அநேக விஷயங்கள் எங்கும் கண்டு கொண்டு களிப்புறுவோமாக

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading