Archive for the ‘இரண்டாம் திருவந்தாதி’ Category

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக் கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழி யானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் –

காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை
வளர்த்து அருளின காலத்தில்

இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த
விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுண்ணவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க –

திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று நெருப்பை உமிழா நின்று கொண்டு
சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து –
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற  அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப்
பரப்பு மாறாப் பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு

(தலை முழுகி ஸ்நானம் கால் தரையில் இருக்க வேண்டும்)

அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல் அன்றிக்கே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் –

மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம்
திரு வேங்கடமுடையானுடைய சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு –
நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே
அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–(மணி வேங்கடம் மோனைக்குச் சேரும் )

அன்றிக்கே
சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -(அணி வேங்கடம்)
வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் -(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -_

————————————————————————————————

சர்வ ஸமாஸ்ரயணீயன் (தேவர்கள் அரசர்கள் திர்யக்குகள் மூன்று பாசுரங்களில் )ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்)

(துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்)

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின
சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு(பாகவதரின் அவயவங்களும் உத்தேச்யம் )

அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –

(அத்யவசித்த-மாநஸம் –பணிமாறி-காயிகம் -அனுசந்தித்து-வாசிகம்0

அன்றிக்கே
சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் –
அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்

மற்றப் போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் –
அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –

(ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார்)

————————————————————————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் -(ஸூஹ்ருத தேவதை நம்பெருமாளே தானே )

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

(ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே )

இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –

பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே —
அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில் குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் –
சர்வாதிகாரமாய் –
அத்யந்த விலக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –

திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-என்று
பாங்கான நிலத்திலே இருந்து பாடி யாடி அடிமை செய்யக் கடவ நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே
இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப் பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

———————————————————————————————–

பெரும் நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானை யானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல ஸ்லாக்யமான பிடிக்கு –
நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று
விநயம் தோற்ற முன்னே வந்து நின்று

இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச்
செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில் மலை முழைஞ்சுகளில் கூட்டிலே
நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க –

இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –

(இப்பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப்பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ்வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

——————————————————————————————————

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ் வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு

இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் –
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
வாயார ஸ்தோத்ரம் பண்ணி
தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

—————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் –

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும்
சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி சொல்லுகை யாகிற தபஸ்ஸூ –
ஸூ ஸூகம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –

திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

———————————————————————————————-

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து (த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை –
க்ருஹீத்வா தர்ம பாநீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி –
அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும் வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித்
தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப் பூர்ணமாம் படி யாக விளக்கினான் –

திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச்
சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இறே –

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

———————————————————————————————-

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்—பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் –

அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே
முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூகுமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க–அத்தையும் கேளாதானாய் –

தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று-தோளை யுடையனாய் –

ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி-பிரதானனுமாய் இருக்க –

இவை இத்தனையும் (மூன்றையும்)பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-

தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது
1-மாத்ரு வசனத்தை மறுத்துப் -2-பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -3-தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
4-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு

இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
1-அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும்
2-தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -3-காடுமோடையுமான அளக்கிற பூமியினுடைய கொடுமையையும் –
4-ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல்
ஆஸ்ரிதரான இந்திரன் பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக்(இதிலும் சாம்யம் -வேண்டித் தேவர்கள் இரக்க செய்த செயல்கள் )
கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆன படியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற் காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக (அடிமைத்தனம் இவ்வளவு வியாக்யானம் )நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் –

நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –

ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி –
திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று
திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்கலும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-

இந்திரன் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு திருவடிகளில் வந்து விழுந்த அன்று
ஸ்ரமஹரமான கருத்த நிறமும் இரப்பிலே தகண்
ஏறின ப்ரஹ்மச்சாரி வேஷமும் உடையனாய்க் கொண்டு மகாபலியை சர்வ ஸ்வ அபகாரம் பண்ணின கிருத்ரிமனே
உன்னை அழிய மாறி மஹா பாலி பக்கலிலே கிடந்த பூமியை மீட்டுக் கொண்ட செயல் உன்னிடத்தில் தங்கள் பரத்தைப் பொகட்டு நியஸ்த பரராய் உன்னை விஸ்வசித்து இருந்த ஆஸ்ரிதர் ஆணவர்னர்கள் நிர்ப்பரராய் மார்பிலே கை வைத்து உறங்கும்படி பெற்ற பேறு அன்று
அவர்களுக்கு வைத்த தண்ணீர் பந்தல் என்றபடி
த்ரிவிக்ரம வடிவுடன் செய்த செயல் இது
தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது
இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் –
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் –
அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் –
இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ)

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறி பட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறி யிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக் கையாலே கீறியெடுத்து அளித்த–

ஒண் குருதி -அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள் அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமியான கிருஷ்ணன் –
நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத வடிவை யுடையனாய் –
செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து
பின்பு குபிதனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க

சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ்புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி –
சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –

ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –

ஒண் குருதி -என்றது
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பரு மொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –
உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –

உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை
இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில்
கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப் பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன்)

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

ந நமேயம் (வணங்க லில் அரக்கர் )என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே (சேஷத்வ )ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –

அடிமை செய்யா விடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –

எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து
உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி
இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

அங்கன் இன்றிக்கே –
புகலிடம் -என்கிறது –
அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே –
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே அத்யவசித்தேன் என்னவுமாம் –
இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————————————

பகவத் ப்ராவண்யம் பெற்ற அளவு அமையும் -(அன்பால் பைங்கமலம் திருவடிகளில் சாத்தினேன் -என்றாரே கீழே )
அத்தை விட அநர்த்தா வஹமான விஷயாந்தரங்களில் -தோஷத்தை அனுசந்தித்து அருசி பிறக்கையே வேண்டுவது என்கிறார் –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப் பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

*நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே –
இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே –
பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான இந்த சம்சாரம் ஆகிறது –
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்

முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே
நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –

வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு (ஆதி -சேஷ்டிதங்கள் )வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி
சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும்
அஸ்திரத்தவாதி (ஆதி அல்பம் )தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம் பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ் ஜன்ம சம்பந்தம் கிடாய் –

மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில்
நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய  மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறு கிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே
ஸ்வப்ன கல்பமாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில்
அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

அப்படிப்பட்ட அழகை யுடையவன் திருக் கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள
தேஜோ ரூபமான திரு வாழியைக் கண்டேன் –

துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும்
துரத்தி விட்டுப் பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் –
துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும் செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளியவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் –
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூர பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான

தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் –

இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப்பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூ மண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப் பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம் கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திரு நாபியிலே யுடையனாய் -(பூ புஷ்ப்பம் என்றும் இனிமை -போக்யதை என்றும் )

அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த
ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய (ப்ரஹ்மாதிகளுடைய )தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் –

பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -(எதுகைக்கு இது பொருந்தும் )
பூக்கள் தள்ளும் படியான (வெட்கப்பட்டு ஒதுங்கும் படி )செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

(ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி
ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம் )

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு -பெருமாள் கோதண்ட பாணி சக்ரவர்த்தி திரு மகன் –இருப்பிட மென்பர்.

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான கோவில்
திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணவர் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை –

ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-

ஏ வல்ல வெந்தை-
எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் –
நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப் போல் கலங்கி தளராதே
அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-

மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப் பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப் பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

நெஞ்சே நீல மணி போலே இருந்து குளிர்ந்த வடிவை யுடையவன் திருவடிகளை புத்தி பண்ணு கிடாய் –
அதுக்கு மேலே அந்த சர்வேஸ்வரனுடைய அவ்வடிவழகுக்கு வாசகமான திரு நாமங்களை புத்தி பண்ணு கிடாய் –

தன் படுக்கையான பெரிய திருப் பாற் கடலில் நின்றும் பெயர்ந்து எழுந்து இருந்து நின்று –
பிரயோஜனாந்தர பரருக்கு அபேக்ஷித சம் விதானம் பண்ணுகைக்காக அந்தக் கடலைக் கடைந்தவனாய் –
அப்போது ஒரு வெண் கடலைக் கருங்கடல் கடைந்தால் போலே ஆகர்ஷகமாய் தோற்றுகிற
நிறைந்த நீரை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவன்
திரு நிறத்தை தேவர்களைப் போலே உப்புச் சாற்றை நச்சாதே
புத்தி பண்ணி அனுபவிக்கப் பார் கிடாய் –

(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)

(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் -)

——————————————————————————————————–

திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதி யுடைய வடிவு அழகையும்
பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து
இது ஓருவருக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்

(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்

ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்

யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )

ஆஸ்ரிதருடைய சகல தாபங்களும் போம் படி ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடையவனாய் –
அந்நிறத்துக்கு பரபாகமான -சிவந்த நிறத்தை யுடையவளாய் -பெரிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனாய் -அவளோட்டைத் தோயல் வாசியாலே ஆன்ரு சம்சயம் மிக்கு இருப்பவனாய்

திருவினைப் பிரிக்கை யாகிற குரூரமான செயலைச் செய்த சாயுதனான ராவணனோடு ஒத்து இருந்துள்ள மஹா பலியை
அழியச் செய்யாமல் அவனுடைய உதார குணமே பற்றாசாக -ராஜ்ய ஸ்ரத்தை பண்ணினவன் இழக்கிறது என் என்று

தன்னுடைய ஆன்ரு சம்சயத்தாலே தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்திரனுடைய ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமாய் இருக்கும்
பாதாள லோகத்தில் -அவனைப் போலே பரி கொடுத்து கண் பிசைய வேண்டாத படி –
நெடும் காலம் இருக்கைக்குப் பண்ணிக் கொடுத்த சர்வேஸ்வரனுடைய அந்த கிருபா பிரகாரத்தை –
ஆர் தான் அறிவார் -ஒருவராலும் அறியப் போகாது -என்று கருத்து –

(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப்பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்

அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –

சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-

யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதாதலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ்வுலகக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )

———————————————————————————————————–

இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –

(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

நெறியார்-இதுவே நிரூபகம் கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே)

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.

திருமலை ஆழ்வார் உத்தேச்யமாக அனுசந்தித்து -மற்று ஓன்று அறியாதே (சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -ஏவகாரம் -அவனும் வேண்டாம் )-வழி பட நெடும் காலம் ஆஸ்ரயிக்கிறவர்களுடைய
குழல் கற்றையிலே முன்னே முளைத்துப் பின்னளவும் வர வளர்ந்து -தாழ விழுந்து –
மூச்சு விடுதல் உடம்பு அசைத்தல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு –
சில சேதனர் என்று அறியாதே சிறு மலைகளாய் இருக்கும் என்று புத்தி பண்ணி
அவ்விடத்தை விட்டு நீங்காதே -கண்ட இடம் எங்கும் பரந்து பூத்த கொடிகளானவை -நித்ய வாசம் பண்ணும் ஸ்தலமாய்
தன்னில் தான் திரை பொரா நின்றுள்ள (பொரு புனல் வேங்கடம் )ஜல ஸம்ருத்தியை யுடைத்தாய் அதி பிரசித்தமான
திருமலையே நாங்கள் பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-

(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)

—————————————————————————————————–

இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே
இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத்
தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –

(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)

திருமால் இருஞ்சோலை மலை என்றும் திரு வேங்கடம் என்றும் திரு நாமத்தை யுடைத்தான
பெரிய திருமலை என்றும் சொல்லப் படுகிற இரண்டு ஸ்தானமும்
நாம் உகந்து வர்த்திக்கிற வாசஸ் ஸ்தானம் என்று நீ புத்தி பண்ணும் ஆதரிக்கும் ஸ்வ பாவம் போலே –

என்னுடைய ஹ்ருதயம் என்கிற வாசஸ் ஸ்தானமும் நீ உகந்து நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் என்று
புத்தி பண்ணி என்னுடைய ஹிருதயத்தில் பண்ணுகிற அபிநிவேச அதிசயம் இருந்த படியால் அவ்வவ திருமலைகளில்
நிலை நிற்கும் படியும் -என் ஹிருதயம் திருந்தும் அளவும் வாசஸ் ஸ்தானமாக கர்ப்பித்ததான திருப் பாற் கடலாகிற
பாலாலயத்தையும் விடாத தேடுகிறாயோ என்று நினைத்து –

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின அவ்விடத்தை
க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-உன் உகப்பைப் பற்றவும் –
பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-

அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-)

—————————————————————————————–

இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–55–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)

(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

பிரபல பிரதிபந்தகங்களை அநாயாசேன போக்குகையாலே –
வரும் வெற்றி பெற்று யுடையனாய் யுத்த உன்முகனான திரு வாழியை -விரோதி நிரசன தவரையால்
எப்போதும் கையிலே கொண்டு இருக்குமவனாய் –
அஞ்ஞான அசக்தியாதிகளுக்கு கொள்கலமான என்னால் உன்னைப் பெற ஒண்ணாது –

ஞான சக்தி யாதிகளாலே குறைவற்ற உன்னாலே
உன்னைப் பெற வேணும் என்னும் இடத்தை பத்தும் பத்தாக அறிந்து இருக்கும் சர்வஞ்ஞனே–
இப்படி இருக்கிற நீ எல்லா ஜென்மங்களிலும்
எல்லா அவஸ்தைகளிலும் எதிர் சூழல் புக்கு இவன் நம்மை மறவாமல் பெற்றிடுவானுக்கு –

என்று நினைக்கும் நினைவு ஒருநாளும் மாறாதே
போருகிற ஸ்வ பாவத்தால் சர்வ காலத்திலும் தேவரீரை மறந்து அறியேன் —
இப்படி பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீ
ஞான பலமாக ஒரு தேச விசேஷத்திலே போந்து பரி பூர்ணமாக உன்னை அனுபவித்து விளையக் கடவ
அபரிச்சின்னமான ஆனந்த சமுத்திரத்தை தந்து அருள வேணும் காண் —

கடல் என்றும் ஆழி என்றும்
மீ மிசைச் சொல்லாய்
மிகவும் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி –

(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான் )

—————————————————————————————————————-

இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் (அருளுவாய் )என்று கொண்டு வடிம்பிட்டு (மடி பிடித்து )நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி (நமக்கோ அஞ்ஞானம் அடியாக வந்த இருட்சி )உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால்
அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே

காணக் காண பழைய நிலை கழிந்து மேன்மேல் என வளர்ந்து வருகிற ப்ரேமமானது என்னால் அமைக்க ஒண்ணாதபடி
கை கழிந்து விட்டால் -அவனே வந்து மேல் விழும் அளவும் நாம் பதறுகை ஸ்வரூப ஹானி என்று லஜ்ஜித்து
ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்க வேணும் என்று விசாரித்தால் –

அப்படி முறை (ஸ்வரூபம்)பார்த்து -தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கப் போமோ –

அதுக்கு மேலே ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடைய சர்வாதிகனாய் ஸ்ரீயபதியானவனை-
அத்யுஜ்ஜ்வலமாய் -ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதுக்கு முன்னே

நமக்கு ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் -ஆதரித்துக் கொண்டு வந்து காட்டும் –

நகச்சின் நபராத்யதி -என்று மேல் விழுந்து சேர்க்கும் பிரபல புருஷ காரம் உண்டான பின்பு –
முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ -என்கிறபடி –

கண்டு அல்லது கழியாத காதல் -என்னவுமாம் –

(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)

(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)

————————————————————————————————–

இப்படி பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாஸ்ரயணீயன் -என்கிறது –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

ஸ்வ சம்பந்தத்தாலே அவனுக்கு சர்வ உத்கர்ஷத்தையும் யுண்டாக்க வல்ல ஸ்வ பாவத்தை யுடையளாய்
போக யோக்கியமான பருவத்தையும் யுடையளான -பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் என்று
இடைவிடாமல் உறையும்படி இருக்கிற சர்வாதிகனானவனை –
நாவால் ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற கார்யத்திலே ஒருப்படுங்கோள் கிடிகோள் –

முறை அறிந்த மாத்திரம் ஒழிய அவ் விஷயத்தைப் பற்றுகைக்கு ஈடான நன்மைகள்
ஒன்றும் அற்ற அயோக்யரான நாம் –
பணைத்து வளர்ந்த திருத் தோள்களை யுடைய என் ஸ்வாமி யானவனுடைய திருவடிகளை
நமக்கு வகுத்த சேஷி யன்றோ -என்கிற பிராப்தியாலே அவன் திரு நாமங்களைக் கொண்டு ஏத்தினோம் –

இவ் வர்த்தத்தை நாலு வகைப்பட்ட திக்கில் உள்ளார் எல்லாரும் கேட்டீர்களே –
கடைப் பிடிமின் கண்டீர் –

இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள் கிடி கோள் -என்னவுமாம் –

(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதா யத்யர்த்தி த்வேப்ய பவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவமஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)

———————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து -சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து  நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

வேம்பாகிற பதார்த்தத்தினுடைய ஸ்வ பாவம் போலே -இவ் விஷயத்தை ஏத்துகை யாகிற இது
அத்யந்த விரசமாய் இருந்ததே யாகிலும்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியும் கையுமான சேர்த்தி அழகை ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடு -என்று
சரஸ்வதி யானவள் – நமக்கு இருந்து திருத்துகைக்கு நல்ல ஸ்தலமாய் இருந்தது என்று ஆதரிக்கும் படி
விலக்ஷணமான நெஞ்சிலே முகம் கருக நியமியாமல்
நம் நினைவிலே தன்னை அமைத்து ராஜ புத்திரர்களை பள்ளி ஓதுவிப்பாரைப் போலே
அனுவர்த்தித்துக் கொண்டு இருந்து நம்மை சந்தையிட்டு ஓதுவித்து நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வ பாவமாக யுடையனான சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
சர்வ ஸ்வதானம் பண்ணின பிரசாதம் அடியாக வந்ததாய் இருக்கும் –

(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )

——————————————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே –

அருளி அல்லது நிற்க ஒண்ணாத படி அருளிலே நோக்கான தேவருடைய திரு உள்ளத்தை -அருளுகைக்கு அடியான
சேஷத்வ ப்ராப்தியை யுடையரான -எங்கள் மேலே பரிபூர்ணமாக வைத்து -எங்களை ஒரு வஸ்து பூதராக நிரூபித்து
கடாக்ஷித்து அருளுகிற அந்த க்ஷணத்தில் அஞ்ஞானம் ஆகிற இருள் அடங்கலும் போன வழி தெரியாத படி சிதறிப் போய்
தேவர் சேஷீ நாம் சேஷம் -என்று இவருடைய ஸ்வரூபத்தையும் தெளியக் கண்டேன் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்றும்
அர்த்த பஞ்சக ஞானம் வந்த பின்பு என்றும்)

இப்படி இரண்டு தலையையும் யதாவாக தரிசித்து -தேவருடைய அழகிய தாமரை போலே நிரதிசய போக்யமான
அந்தத் திருவடிகளையே பரம பிராப்யமாக அனுசந்தித்தேன்
என்னோடு எனக்கு உரிமை இல்லாதபடி தேவர்க்கே அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற படியை உள்ளூற நிரூபித்து
ஸ்வ ரக்ஷணத்தில் இறங்குகைக்கு அநர்ஹனான என்னையும் தன்னைப் பெறுகைக்குத் தானே உபாயமான
அந்தத் திருவடிகளிலே நிஷேபித்தேன் -(நிஷேபம் ந்யாஸம் சரணாகதி பர்யாய சொற்கள் )
உபாயமும் தேவரீர் திருவடிகளே என்று அத்யவசித்தேன் என்றபடி

இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

அருளிலே நோக்கான திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது என்னவுமாம் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக்கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டானபடியை அருளிச் செய்தார் ஆயிற்று )

——————————————————————————————-

இப்படி சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிராங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –

(பிராட்டி புருஷகாரம் செய்யும் போது ஸ்வாதந்தர்யம் தலை சாயும் -ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்கும்

எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்)

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆஸ்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

உன் படி பார்த்தால் என்றும் ஒருபடிப்பட ஸ்வ தந்திரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை யுடையை அல்ல –
பக்தாநாம் தவம் பிரகாசாசே-என்கிறபடி
உன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி -அத்தாலே புகர் பெற்று
உஜ்ஜவலமாய் இருக்கிற ஸ்வரூபம் உனக்கு நிலை நின்ற ஸ்வரூபம் –

இப்படி இருக்கிற உன்னை இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தின் ஏற்றம் அறியாத மஹா பிரத்வியில் உள்ள வாய்கரையர் ஆனவர்கள்
நிராங்குச ஸ்வாதந்திரம் ஆகிற பெரிய ஸ்வரூபத்தை யுடையவன் -என்று இத்தை பெரிய ஏற்றமாகச் சொல்லா நின்றார்கள் –

ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே -என்னும் படி
ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகிற ஒருபடிப்பட்ட ஸ்வரூபமே சர்வ சத்தா ஹேதுவாய்க் கொண்டு
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருக்கும் பிரகாரத்தை உள்ளபடி அறிந்து இருக்கும் மஹாத்மாக்களான அவர்கள் கிடீர்

ஈஸ்வரன் அரியன் -என்று ஜகத்தை வழியடித்து உக்கிர வாய்கரையரைப் போலே அன்றிக்கே
அவன் நீர்மையின் ஏற்றத்தைச் சொல்லி எல்லாரையும் பகவத் பிரவணராம் படி திருத்துகிற நியாயத்தாலே உருவ நின்று
ஜகத்தை தளிரும் முறியுமாம் படி ரக்ஷிக்கிறவர்கள் —

அன்றிக்கே
பஹுதா விஜாயதே -என்கிறபடி
ஆஸ்ரிதார்த்தமாக அவதரித்த தசையில் அநேகம் திரு மேனியை யுடையை யாகையாலே
ஒரு படிப்பட்ட விக்ரஹத்தை உடையை யல்லை-

(இந்த இரண்டாம் நிர்வாகம் இவர் வியாக்யானத்தில் மட்டும் உண்டு –
விபவம் தொடங்கி அர்ச்சாவதார பர்யந்தமாக கிருஷி பண்ணினவன் நீ அன்றோ என்கிறார்)

ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
இப்படி பல வடிவு எடுத்துக் கொண்டு பிறந்த இடத்திலும் ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திரு மேனி –

இப்படி அசாதாரண விக்ரஹமும் -அவதார விக்ரஹமும் ஆகிற
இரண்டு விக்ரஹத்தையும் யுடையையாய் இருப்புதி-என்று
உன்னை நாட்டில் அறிவுடையார் சொல்லா நின்றார்கள் –

இதர சஜாதீயமாய் அவதரித்த அந்த அவதார விக்ரஹம் ஒன்றுமே
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி ராபிசாப்யய -என்கிறபடியே
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் ஜகத்தை எப்போதும் ரக்ஷிக்குமவர்கள் -என்றுமாம் –

(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிககிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே –
தம் வைஸ்யத்துக்கு (தெளிவுக்கு )உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் –

(காமத்தால் பயன் இல்லை கீழ் -பொருளால் பயன் இல்லை இதில்
காமத்தாலும் பொருளாலும் பயன் இல்லை கீழ்
தர்மமும் அதன் பலனும் அவன் அதீனம் இதில்)

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–ஸ்வர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான ஸ்வர்க்க லோகத்தை-அஜத லக்ஷணை -விடாத லக்ஷணை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு-மறையோற்கு -ஒருமை
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீல மணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

சாஸ்திர சித்தம் ஆகையால் மோக்ஷத்தோ பாதி இதுவும் ஒரு புருஷார்த்தம் அன்றோ என்று புத்தி பண்ணி
ப்ரஹ்மாதி லோகங்களில் புக்கு அனுபவிக்க வேணும் என்று அதுக்கு ஈடாக யத்னிக்கலாகாது-

அதுக்கு அடி( அதற்குக் காரணம் -அருளான் -அருளாளன் -நிரவதிக கிருபாவான் )
நிரவதிக கிருபாவான சர்வேஸ்வரன் தர்ம பலமான ஸ்வர்க்காதிகளைத் தந்து அருளுமவன் அன்றோ –

ஆன பின்பு சம்சார போகங்களில் விரக்தராய்த் தன்னைப் பெற்று அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
ஸூக வாம தேவாதிகளான பரம வைதிகருக்கு –
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி
தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்

அவர்களுக்கு அனுபாவ்யமாய் -நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய
சர்வேஸ்வரனுடைய -திருவடிகளையே
அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சே நீ மறவாதே கொள்-எப்போதும் நினைத்த படியே இரு –

அறம் என்று லக்ஷணையாலே தத் பலத்தை நினைக்கிறது –
அன்றிக்கே அர்த்தத்தை சாதனமாக்கிக் கொண்டு நித்ய ஸூரிகள் நிரந்தர அனுபவம் பண்ணி வாழுகிற
பரம பதத்திலே போய்ப் புக ஒண்ணாது –

ஸ்வர்க்க அபவர்க்கங்கள் இரண்டும் தன் கிருபையால் கொடுக்கும் சர்வேஸ்வரனை மறவாதே கொள் -என்றுமாம் –

இப்போது இவ்வுடம்போடே அவனை மறவாதே அனுபவிக்கப் பெறில்
பரமபதம் அநபேஷிதம் -என்று கருத்து –

அன்றிக்கே
மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
தத்ரூ ஸூர் விஸ்மிதாகாரா –என்னும்படி
தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –

மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது
மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது –

(கீழே போகத்தால் இல்லை பொருள் என்று காம புருஷார்த்தத்தால் பயனில்லை என்றார்
இதில் அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –
அறம் தர்மம் இங்கு அஜஹல் லக்ஷணையாலே தர்ம பலனைச் சொல்லும் -தர்ம மோக்ஷ புருஷார்த்தங்கள் அவன் அதீனம் என்கிறார் –
அருளாலே -கிருபையே ஏக ஸஹகாரி நிரபேஷ ஹேது
ரூப ஸம்ஹ நநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரூஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸிந -ஆரண்ய -1-13-
அவனது பாதமே என்றுமே மறக்காமல் நினைத்து இருப்பாய்
இப்போது இருக்கும் உடம்புடன் மறக்காதே அனுபவிக்கப் பெறுவோமாகில் பரமபதமும் வேண்டா
ஸதா பஸ்யந்தி இங்கேயே கிடைக்கப் பெற்றால் போதுமே –
நெஞ்சே -அறிவு பெருகும் இடமாய் இருக்கும் நீ அறிவாளிகள் செயலைச் செய்ய வேண்டுமே -)

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –-முதல் திருவந்தாதி –94-

ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –
(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

———————————————————————–

(பகவானுக்கு )புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே
ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பன்–(அவனது) சிறந்த திருத் தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத் தோள்–அந்தத் திருத் தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்-வைராக்கியத்துடன் இருப்பர் .- (பேர்இன்பம் என்றது -விபரீத லக்ஷணை )

இவ் வாத்மாவுக்கு பிரிய ஹிதங்கள் தானும் அவனுமாய்க் கொண்டு நடத்திக் கொண்டு போரும் பெரிய பிராட்டியாரோடு
கூடிக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரனை –
அவளோட்டைக் கலவியாலே -அளவிறந்த போக்யதையை யுடைத்தான
திருத் தோள்களைக் கண்டு அனுபவிக்கைக்காக நினையா நின்றேன் –

இப்படி நினைக்குமவர்கள் -இவ் வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-
அந்த அழகிய தோளைத் தொழுவார்கள் ஒரோ மனையிடத்துப் பிறந்தவர்கள்
பிறந்து பிராபிக்கும் நிரவதிக ஸூகம் எல்லா வற்றையும் பரித்யஜித்த வர்களானவர்கள் கிடீர் –
தோள் அழகு தானே மற்றுள்ள இன்பங்களைத் துறக்கும் படி பண்ணும் என்கை

பேர் இன்பம் எல்லாம் துறந்தவர்கள் இறே -அது தோள்கள் தொழுவார் ஆகிறார் என்னவுமாம் –
அன்றிக்கே –
ஒரு ஸ்ம்ருதி மாத்திரமே பற்றாசாக அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டுமது ஒழிய ஆர் தான்
இவற்றைத் துறந்து அது தோள்களை தொழுவார் என்றுமாம் –

(விபரீத லக்ஷணம் என்றும் -அனுபவிக்கும் அவன் நினைவால் பேர் இன்பம் என்கிறார்)

பிறப்பென்றும் நேரார்-என்ற பாடமான போது –
எல்லாக் காலத்திலும் ஜன்மத்தைக் கிட்டார்கள் -என்று பொருளாகக் கடவது –

(நினைப்பன் திருமாலை -இவளை முன்னிட்டுக் கொண்டு அவனைப் பற்றுகிறவர்களுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டுமே ஸித்திக்கும் என்றதாயிற்று –
நீண்ட தோள் காண -உத்த்ருதாஸி வராஹேண கிருஷ்ணேந சத பாஹு நா -தைத்ரியம் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் யார் காண்பாரே -திருவாய் -2-8-7-
ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -ஸ்தோத்ர ரத்னம் –44-
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் -14-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
நினைப்பான் என்ற நினைவையே பெரிதாகக் கொண்டு-அப்பரம புருஷன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்ட வேண்டுமது ஒழிய
யார் தான் த ங்கள் முயற்சியால் சிற்றின்பங்களை ஒழித்து அத் தோள் அணைப்பைப் பெறப் பெறுவார் -என்று பரகத ஸ்வீ கார பரமான பொருள் தேறுகிறது)

———————————————————————————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் –
அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்-வெட்ட வெட்ட முளைக்கும் அதனால் பிரித்து அருளிச் செய்கிறார்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)-எத்தனை சண்டாளராகிலும் -தாள் தொழுவாராக இருந்தாலே போதும் –
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.-பிடித்தார் பிடித்தாரைப் பற்றுமதே சிறப்பு

பிராட்டியைத் தனிச் சிறை வைத்து (தனிச்சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள் )நலிந்த ராவணனுடைய இருப்பது தோள்களும் –
அறுக்க அறுக்க முளைக்கையாலே -ஒரு சங்க்யையில் அடங்காத தலைகளும் –
இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான கால்கள் இரண்டும் அறுப்புண்ணும் படிக்கு ஈடாகத்
திருச் சரங்களை ப்ரேரித்து நடத்தின பெரு வீரரான சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள்
இரண்டையும் தொழுமவர்களாய்

அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

(அவர்கள் பகவத் சேஷபூதர்கள்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையவர்கள்
அடியேன் ததீய பாகவத சேஷ பூதன் -குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்தறியும் மதுரகவி நிலை
இதுவே வ்யாவ்ருத்தம்)

(சித்திர் பவதி வா நேதி ஸம்சய அச்யுத ஸேவி நாம்
ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யாரதாத்மநாம்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-
அவன் அடியார்களைத் தொழ நினைத்தால் பூரித்து எழுமே அவனுடைய திருத்தோள்கள்
செய்யும் சிறப்பு -அவனுடைய தோள் தொழுவாருடைய தாள் தொழுவதே என் தோள் எனக்குச் செய்யும் உபகாரம் -)

———————————————————————————

இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே(பற்றினவரைப் பற்றாமல் )
மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(அன்பினால் ஆள் செய்பவரை ஆதரித்தது கீழ்
அன்பிலாதவரை நிந்தித்து இது
எம்மானை –சொல்லிப்பாடி துள்ளாதார் பதிகம் போல்
பற்றினவனை தொழுவாரை அமரர் தேவர் தொழுவர்
பற்றாதவரை நிந்திக்க அடியேன் என்றார் அங்கே ஆழ்வார்)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு–பிடித்தார் பிடித்தாரைப் பற்றும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற(வழித்துணை பெருமாள் திரு மோகூர் ஆப்தன் )
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

ஞானீ த்வாதமைவ மே மதம் –என்று(என்னது உன்னதாவியில் அறிவார் ஆத்மாவார் அவன் மதம் தோன்றுமே )
தான் உகக்கும் படி தன் திரு உள்ளத்துக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சம்சார சம்பந்தத்தை அறுத்து ஞான விகாச உடையவராய்
உஜ்ஜீவிக்கைக்குப் போம் அர்ச்சிராதி மார்க்கத்துக்கு ஆதி வாஹிகர் முன்னே
நயாமி -என்கிறபடியே
துணையாமவனாய் -அவர்கள் விஷயத்தில் வாத்சல்யத்தால் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடைய
வியாமுக்தனாவனுடைய வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
விஸ்மரித்து இருக்குமவர்களை சாஸ்திர வஸ்யமான மனுஷ்ய ஜென்மத்தில்
பிறந்தவர்களாய் என் மனசில் நினைத்து இரேன் –

ஆன்ரு சம்சயம் ஆகிற பரம தர்மத்தை தரியா நிற்கும் ஸ்ரீ யபதியானவனே -என்று
ஆதரிக்கும் புத்தியை உண்டாக்கிக் கொண்டு
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியானவனுக்கு வாசக நாமமான த்வயத்தை நாவால் சொல்லுகையிலே மனசே அநுஸந்தி –

மனஸை அத்யாஹரித்துக் கொள்வது –
கீழே பாகவதர்களை விரும்பினார் –
இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

(த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –விஷ்ணு ஸூக்தம் -விஷ்ணுவை சங்கீர்த்தனம் செய்பவர் நிலையாய் இருப்பார்கள் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் -கீதை -7-18-ஞானிகள் எனது உயிர் நிலை -அறியார் உயிராவாய்
நயாமி பரமாம் கதிம்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –பெரிய திருமொழி -11-7-9-
ஆன்ரு சம்ஸ்யம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந் த்தர -38- 41-
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -ஸ்ரீ குணரத்னகோசம்
மா தவன் -அவள் சம்பந்தத்தாலேயே இவன் அறம் தாங்குபவனாகிறான்
அவன் பேர் நாவினால் ஒத்துவதே உள்ளு -த்வயத்தை நாவால் சொல்வதையே நினைப்பாய் மனமே என்கிறார் -)

————————————————————————————————————————

இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும்
ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 27 –இப்பாசுரம் அடி ஒற்றியே
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1- ​-தனியன் இப்பாசுரம் அடி ஒற்றியே)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அநந்தாய வேத  அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

ஆர்க்கும் அளவிட ஒண்ணாத படி அபரிச்சின்னமான வேதங்களாலே பரம தனமாக பிரதி பாதிக்கப் படுமவனாய் –
இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து
சந்நிஹிதனான ஸுலப்யத்தை யுடையனாய்

பரத்வ அனுபவத்தில் பழுத்து இருக்கும் பரம பத ஸ்தானரான நித்ய ஸூரிகள்
அவன் நீர்மைக்குத் தோற்றுத் தாங்கள் திரு முடியைத் திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
இடைவிடாமல் செறிந்து வைத்து ஜென்ம தரித்ரனாய்-திரியச் செய்தே–
நடுவே வந்த திரண்ட தனத்தைக் கண்டு இது நமக்கு உண்டாகப் பெற்றது-என்று
பிறர்க்கு சஞ்சரிக்க ஒண்ணாதபடி கார்வோத்தரராய் இரார்கள்-(இராமல் மட்டும் இன்றிக்கே )

சில நாள் குறைவற ஜீவித்த பின்பு வெறுவியரான அன்று அங்கனே நமக்கு இது உண்டாய்த்து-
இன்று இங்கனே இல்லையாய்த்து –என்று சோகித்து
தறைப் படுகை யாகிற அதன் அருகும் கூட கிட்டார்கள் –

(நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி ஆர் நிகர் நீள் நிலத்தே -திருவாய் -6-4-7-
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-விஸ்லேஷ கண்ணீருக்குப் பல்லாண்டு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் –ஸூ ந்தர –33-4-
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-தளர்ச்சியையும் பாக்கியமாக ஸ்லாகித்துப் பேசினாரே
பீமசேனன் திருவடியைக் கண்டு அவன் திருமேனியில் துவட்சியாலே பகவத் சம்பந்தமுடையவன் என்று அறுதியிட்டு
நிர்க்குண பரமாத்மா சவ் தேஹம் தே வியாப்ய திஷ்டதி -வன பர்வம் -14-68-
அநந்தா வை வேதா யஜுர் கடகம் -1-11-
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
அநந்த ஸ்திர பலமாய் இருப்பவனுடைய திருவடிகளிலே இடைவிடாமல் சேர்ந்து இருப்பவர்கள் அல்ப அஸ்திரமான இவ்வுலகச் செல்வங்களை இழப்பதாலும் பெறுவதாலும் துன்ப இன்பங்களை அடைய மாட்டார்களே -)

(துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –-ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —4-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-)

————————————————————————————————————

இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத்
தன்னைச் செறிந்து அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி
பல திருப்பதிகளிலும் அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் -(கிருஷி -பக்தி உழவன் அன்றோ )

(அரங்கம் திருவேங்கடம் -சயனம்
வேங்கடம் -நின்ற
திரு நீர் மலை -ஒரே திவ்ய தேசத்தில்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -அன்றோ
எனவே பிரித்து அருளிச் செய்கிறார்-

நான்கு திவ்ய தேசங்களை அருளிச் செய்தது -நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் சேவை சாதிக்கும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் )

(சாமான்ய ரஷணம் -ஆஸ்ரித விசேஷ ரக்ஷணம் -கை கூப்பி முதல் -மேல் அவனது ஆஸ்ரித விசேஷ ரக்ஷணத்துக்கு நாமும் அனைத்தும் செய்ய வேண்டுமேமற்று அல்லால் -விசேஷ ரஷணம் -அவன் பரம் -நமக்கு கை கூப்புச் செயலுக்கு மேல்)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணி போல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்-சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் உடையவன்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

நீல மணி போலே ஸ்ரமஹரமாய் ஒளி விடுகிற வடிவையும் –
அவ்வடிவை சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகிற
சுற்றுடைத்தான திருக் கைகளையும் உடையனான சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நித்ய வாசம் பண்ணி அருளிற்று கோயில் திருக் கோட்டி யாகிற திருப்பதிகளில் –
சிர காலம் செறிந்து வர்த்தித்ததுவும் திரு மலையிலே

இப்படியே சிர காலம் நெருங்கி வர்த்தித்ததுவும் அழகு விளங்கா நின்றுள்ள சோலைகளை யுடைத்தாய்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே –
இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் -என்கை –

(கிடை அழகையும் நின்ற அழகையும் ஒவ்வோர் இடத்திலே காட்டி இருப்பதில் திருப்தி உறாமல்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -பெரிய திருமொழி -2-4-1-
சேதனர்களை வசீகரிக்க உபகரணங்களாக திருமேனி அழகையும் குணங்களையும் உடையவன்
என் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ
நீல மணி போலே கண்டார் களைப்பை ஆற்றும் படி ஒளி விடும் திவ்ய மங்கள விக்ரஹம் யுடையனாய்க் கொண்டு
அந்தத் திருமேனியை சர்வருக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணி அருளும் உதார குண பூர்ணனாய்
கொடுத்துக் கொடுத்துப் பூரித்து இருக்கும் திருக்கைகளை யுடையவன் அன்றோ -)

—————————————————————————————————————-

அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும்
ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கை கோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

பூமிப் பரப்பு அடங்க லும் அநாயாசேன அளந்து அழிந்த தசையில் இடந்து எடுத்து –
அழிவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி
பின்பு வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்து –
இப்படி ஜகத்தை பஹு முகமாக ரஷித்தவனாய் –

இவ்வோ செயல்களால்
தானே சர்வ ஸ்வாமி என்று தோற்ற இருக்கிறவனை –
இப்படிப் பொதுவாகப் பண்ணும் வியாபாரங்கள் ஒழிய
மற்றும் ஆஸ்ரித விஷயமாகச் செய்தவையாய் –

அவர்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உளுக்கும் படி
ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற குண சேஷ்டித்த பிரகாரங்களோடு கூட அறிந்து
அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரிதனுக்காக தன்னை அழிய மாறிக் கொண்ட
நரசிம்ஹ வேஷத்தை உடையனானவனுடைய திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே
கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –

(அந்தியம் போதில் அரியுருவாகி
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடே வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -திருவாய் -4-5-10-
அடியார்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உருகும்படி அவர்களுடைய நெஞ்சைப் பற்றிக் கிடைக்கும்
குணம் -செயல் -பிரகாரம் -முதலியவற்றின் கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு
அடியேனுக்கேயான நரசிங்கனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்றதாகிறது -)

————————————————————————————–

உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான்
ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் –

(கீழ் வட திருவேங்கடம் -இதில் தென் திருவேங்கடம்)

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேஸ்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்-உரைத்தாய் அல்ல -அப்ருவஷேயம்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்-

பிரளய தசையில் சங்கோசித்து ஸம்ஸ்கார ரூபேண கிடந்த நாலு வேதங்களையும் –
ஸூப்த ப்ரப்த்தா நியாயத்தால்
பத வர்ண அநு பூர்வி தப்பாதபடி உணர்ந்து அருளிச் செய்தாய் –

அந்த வேதார்த்தங்களை சம்சய விபர்மயம் அற நயிப்பித்து
விஸதீ கரிக்கக் கடவ ஸ்ம்ருத்யாதி உப ப்ரும்ஹணங்களை மன்வாதிகளான
முனிவர்களை யுண்டாக்கி நின்று அருளிச் செய்தாய்(முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணானாயும் வெளியிட்டு அருளினான் அன்றோ )

அந்த வேதங்களுக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் பிரதான ப்ரதிபாதயையாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளான பெரிய பிராட்டியாருடைய திருத் தோளோடு –
வைகுண்டே  து பரே லோகே –ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்னும் படி ஒரு தேச விசேஷத்திலே
நித்ய சம்ஸ்லேஷம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தாய் –
அவள் பக்கலிலே பெரும் பிச்சானவனே

ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் படி எட்டாத நிலத்திலே அவளோடு கலந்து வர்த்திக்கிற அளவன்றிக்கே
சம்சாரிகளோடே கலந்து பரிமாறும் படி -மூங்கில்கள் நிறைந்த பர்யந்தங்களை யுடைத்தாய் -விஸ்மய நீயமாய்
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளவர்களால் சூழ்ந்து ஆஸ்ரயிக்கப் படுமதாய் –
உயர்ந்து பரந்த சோலைகளை யுடைத்தான திருமலையை உகப்புடனே போய்க் கலந்தாய் –

(நயதீதி நீதி –வேதார்த்தங்களை நியாயங்களாலே நயப்பித்துத் தெளிவு படுத்துகையாலே உப ப்ரும்ஹணங்கள் நீதி எனப்படுகின்றன
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதை சஹ-
பித்தர் பனி மலர்ப்பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-
மாலிருஞ்சோலை வளம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -திருவாய் -2-10-8-
அடியார்கள் மறக்க ஒண்ணாதபடி நீ செய்து அருளின செயல்களுக்கு எல்லையே இல்லையே -)

————————————————————————————————

நெஞ்சே அவன் இப்படி திருமலையிலே சந்நிஹிதன் ஆன பின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று
அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் –

(பாபங்கள் அநேகம் என்கிற சந்தேகம் -வர -அதுக்கு சமாதானம் இப் பாசுரம் -திருநாம சங்கீர்த்தனம் பலமாக செய்ய அனைத்தும் தீருமே
எங்கும் அதிரும்படி கூக்குரல் – பூதநா ஸம்ஹாரம் செய்து அருளிய கண்ணனே –
பூதனை பட்டது அவை படுமே)

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு–

பூமிக்கு ஆதாரங்களான சப்த குல பர்வதங்களும் -பரப்பை யுடைத்தான சப்த த்வீபங்களும் -கரையாலே சூழப்பட்டு
அத்தை அதிக்ரமியாதே அதுக்குள்ளே கிடந்தது கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும் அதிரும்படி-
முலையிலே எங்கும் வியாபித்த விஷத்தால் உண்டான மிடுக்கை யுடைய பேய்ப் பெண்ணை க்ருதஜ்ஜதை தோற்ற
நடு நடுவே சில முக்த ஜல்ப்பிதங்களை சொல்லிக் கொண்டு முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று-
எனக்கு விதேயமான நெஞ்சே பிரதிபந்தகத்தை நினைத்து அஞ்சாதே வாய் விட்டுக் கூப்பிடு –

(ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட -திருவாய் -1-9-5-
பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயம் -பெரிய திருமொழி -1-8-1-
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி -1-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -திருவாய் -1-7-8-
உலகு எல்லாம் எதிர் ஒலிக்கும் படி அழைப்பாயாக -என்று அந்வயம்)

——————————————————————————————————-

இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-
அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களை-(பிரேம பாரவஸ்யத்தால் தளர்ந்து தோற்றச் சொல்லுமா போல் நெஞ்சுக்கு முன்னே தாமே கூப்பிட )ஓயாமல் பரவி அனுபவிக்கும் படி செய்து அருளினாய் என்கிறார்-

(கோபிகள் -அங்கு அப்பறை கொண்ட வாற்றை அனுகரித்து நாச்சியார் ஸ்ரீ ஸூக்திகள் போல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசி
பெரும் பெயர் -அறியாத பிள்ளைகளாய் முன்பு பேசிய நாராயணாதி நாமங்கள் போல் அல்லவே கோவிந்தன் -கோபாலன் -யாதவன் -போன்றவை -இவை அன்றோ குற்றம் அற்ற பெரும் பெயர்கள்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -உன் தன்னை சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே )

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸு தேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல் பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் நினைக்க அரியனாய் பெண்பிறந்தாரை புண் படுத்தும் இடையனானவனே –
என்றும் யது குலத்திலே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் பிறந்தவனே -என்றும் –
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனானவனே என்றும் –
புத்தி பண்ணிக் கொண்டு நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவன்-என்று
ப்ரஸ்துதமான அந்த திரு வாய்ப்பாடியில் உள்ள இடைப் பெண்களானவர்கள் சொன்னதாய்
உள்ளீடான குண சேஷ்டித்த சாரஸ்யத்தையாலே அனுசந்திப்பார்க்கு பிழைக்க ஒண்ணாதா படியாய் இருப்பதாய்
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லி -(கல் எடுத்து கல் மாரி காத்தது அவலீலை அவனுக்கு -இவளுக்கோ சொல் எடுத்து சொல்வது அரிதானதே )
உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீ யபதியான அந்த சர்வேஸ்வரனை –
அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் –

(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே
அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

இப்படி (பூமியை இடந்து )ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி (ஆதி -தூபம் தீபம் இத்யாதி )உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

(அர்ச்சனைக்குப் பலம் தர்சனம் என்று -பலத்தாலேயே பலத்தைப் பெற்று மகிழலாம் –நன்றி செலுத்தவே பூக்களைக் கொண்டு அர்ச்சித்து –ஸ்வயம் பிரயோஜனம் -ஸ்ரம ஸாத்யம் அல்லவே

பெரிய உபகாரகங்கள் செய்தார்
அதுக்கு பிரானே என்று கொண்டாடி
பூக்களைக் கொண்டு அர்ச்சித்து திருவடி வணங்கி
திவ்ய மங்கள விகிரஹம் உகப்புடன் சேவிக்கப் பெறலாம் -இப்படி நான்கும் இதில் –

தன்னையே வணங்கும் படி செய்து அருளியதும் மஹா உபகாரம் தானே
சென்னாள் –அந்நாள் உன பாதம் பிடிக்கும் நாளே )

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)-புலர்தல் -விடிவு –
நாளும்–நாள் தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப் பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

பெரும் புலரி என்றும்-இன்றே நல் விடிவு என்றும்
நல் செழு குரா போது கொண்டு -மணம் மிக்க அழகிய –குரா மரப் புஷ்பங்களைக் கொண்டு –

இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியானவனே -என்றும் -(பிரான் -உபகாரகன் கீழே -இங்கு சேஷி -சேஷபூதனுக்கு நல்லது செய்ய வேண்டுமே )
இதர விஷய அனுபவத்துக்கு உறுப்பாய்க் கொண்டு பாழே கழிகிற நாளிலே-
ஸூ ப்ரபாதா ச மே நிசா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு யோக்யமாய்க் கொண்டு -அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற
பெரிய தொரு நல் விடிவு உண்டாவதே -என்றும் ஆதரித்துக் கொண்டு –

குராவினுடைய அழகியதாய் விலக்ஷணமான செவ்வியை யுடைத்தான பூவை சம்பாதித்திக் கொண்டு
வராஹ சஜாதீயமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை
பக்ந அபி மானராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

(ஸூ ப்ரபாதா ச மே நிஸா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-எனக்கு இன்று இரவு நன்றாக விடிந்தது
காட்டில் உள்ள குரா மலரைக் கொண்டே அர்ச்சிக்கலாம் படி ஸ்ரீ வராஹ உருவைக் கொண்டான்
ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2- சாதன தசையோடே ஸாத்ய தசையோடே வாசி யற இனிதாய் இருக்குமே -பலத்துக்கு பலமாகுமே -)

—————————————————————————————————–

இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

(முடியானே கரணங்கள் போல் – ஒவ்வொன்றும் மற்றவற்றை ஆசைப்பட்டன- 1-சிந்தை -2-மற்றும் -வாக்கு -ஆகம் -சரீரம்-மூன்றுக்கும் தனித்தனியாக மகிழ்ந்தது ஸப்த பிரயோகம் -சிந்தை மகிழ்ந்தது வாக்கு மகிழ்ந்தது -உடல் காயம் மகிழ்வது எப்படி என்னில் -ஆத்மா தானே மகிழும் -பகவத் விஷயத்தில் எல்லாம் பொருந்தும்
ஞான பிரசரம் மனம்-வாக்கு பாட பாட ஞானம் அது வழியாகப் போகுமே -உடல் மயிர் கூச்செரித்து -நடுங்கி கை கால் தள்ளாடி -கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலுமே )

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடி ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

இச் சேர்த்தி அழகாலே அனுசந்தித்தவர்களை மகிழப் பண்ணும் ஸ்ரீ யபதியானவனே —
ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத
என் மனஸ்ஸானது உன்னை அனுசந்தித்து ப்ரீதி யுக்தமாய்த்து –

மன பூர்வோ வாக் உத்தர -என்னும் படி அநந்தரம்
எண்ணப்படும் என் வாக் இந்த்ரியமானது ஸ்ரீ யபதியான
உன்னுடைய திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது-

என் ஹிருதயமானது (காயமானது )பிரதிபக்ஷத்தின் மேலே –
அழலை உமிழா நின்றுள்ள திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
இவற்றைப் பாடி ஆடுகை ஆகிற தொழிலிலே வியாப்தமாய்க் கொண்டு
அத்யவசித்து உகக்கப் பெற்றது –

(அந்வயம் மாற்றி இங்கு வியாக்யானம் -பாடி துணிந்தது-அங்கு பெரியவாச்சான் பிள்ளை -துணிந்து மகிழ்ந்தது இவர் -)

(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க் கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)

——————————————————————————————-

கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(இதிலும் முக்கரணங்கள் -மகிழ்ந்தது கீழ் -துணிந்தது இங்கு
வறட்டு ஞானத்தால் அத்யாவசியம் -ரிஷிகள்
ஞானம் முதிர்ந்து பக்தியாய் இனிமையால் துணிந்தது -அனுபவத்தாலேயே -மகிழ்ச்சியாலேயே வந்த துணிவு ஆழ்வார்கள் பரம் -_

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விரல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனுடைய ஒப்பனை அழகுக்கு வாசகமான திரு நாமங்களை ஹிருதயத்திலே
மநோ ரதமானது உத்தர உத்தரம் அனுசந்திக்க வேணும் என்று அத்யவசித்தது –

இனி சரீரமானது சர்வ காலமும் வணங்குவது
மூங்கில்கள் மிக்கு இருந்துள்ள பர்யந்தத்தை யுடைய திருமலையிலே வர்த்திக்கிற அழகாலே
நம்மை எழுதிக் கொள்ளும் மிடுக்கை யுடைய திருவேங்கடமுடையானை

என்னுடைய வாக் இந்த்ரியமானது -அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளான
ஸ்வ பாவங்களைச் சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்து –

(உள்ளத்து என்றது உள்ளுகை என்றும் மனத்திலுள்ள மநோ ரதம் என்றுமாம்
வேங்கடவனையே -ஏவ காரம் அத்யவசாயத்தைக் காட்டும்
வாக்கானது அவனுடைய ஸத்யத்வ ஞானத்வாதி ஸ்வரூப நிரூபிக்க குணங்களையும் –
ஸுசீல்ய வாத்சல்யாதி நிரூபித்த ஸ்வரூப விசேஷணமான குணங்களையும் சொல்லும் வகைகளிலே உறுதி பூண்டது –
துணிந்தது என்னும் சொல் சிந்தைக்கும் வாக்குக்கும் கூட்டிக் கொள்ள வேண்டும் -)

———————————————————————————————–

ஏவம் விதமான இப் பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –

(ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் தானே என் பாக்யம் -தானும் அறியாதே சாஸ்திரமும் சம்மதியாதே – அவன் நினைவாலே –
ஸூஹ்ருத தேவர் நம் பெருமாளே தானே -அவரையே என் பாக்யம்
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -மாற்ற முடியாத ஓன்று தானே இது த-அதுவே அவனது நிர்ஹேதுக கடாஷம் -கிருபா விசேஷம் –
அவனது கிருஷி பலனாகவே இவை பெறப்பெற்றேன்-அன்பே தகளி -தொடங்கி இதில் மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ )

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற் காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக் கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹரமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே –
ஆஸ்ரிதனான இந்திரன் திருவடிகளிலே வந்து விழுந்த முற்காலத்திலே
பூமியை மஹா பலி பக்கலிலே ஸ்ரீ யபதியான பெருமையை அழிய மாறிச் சென்று
அர்த்தித்து அளந்து கொண்டாயான-உன்னுடைய திருவடிகளை

(வகையால்–உபாயத்தினால்-நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை)

தூபத்தால் செவ்விய பூ முதலான உபகரணங்களைக் கொண்டு முடிக்கவும் செறிந்த ப்ரேமத்தை யுடையனாய் –
ஸுந்தர்ய சீலாதிகளுக்குத் தோற்று ஸ்துதித்து -வகுத்த சேஷியான தேவர்க்கு
இனி மேல் உள்ள காலம் -தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால்
அடிமை செய்யுமவனாய் விட்டேன்

என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல் —

முன்னே -சந்நிதியில் என்னுதல்-(முப்பத்து மூவர் –முன் சென்று -பயப்படும் முன் -இடம் முன் இரண்டும் உண்டே அதே போல் இங்கும் )

(முன்னே -முற் காலத்திலேயே என்றும்
உனது ஸந்நிதியில் என்றும்
புகை நறு மலர்களைச் சொன்னது மற்ற ஆராதன உப கரணங்களுக்கும் உப லக்ஷணம்
என் பாக்யத்தால் என்றது -உனது நிர்ஹேதுக கிருபை என் பாக்கள் வெள்ளம் இட்ட தாகிற அத்ருஷ்டத்தால் என்றும்
என்னுடைய அப்ரதிஷேதத்தால் என்றும்
இப் புண்ணியத்துக்கும் மூல காரணம் நீ அவதாராதி முகத்தாலே பட்ட பாடுகளே என்பதையே -வகையால் அவனி இரந்து அளந்தாய் -என்னும் விளியாலே காட்டி அருளுகிறார் -)

———————————————————————————————–

இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்வர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

எல்லாம் கண்ணன் -என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே –
அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப்தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு ஸ்ரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்

விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே –
அந்த விஷயங்களில் காட்டிலும் மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –

பரீக்ஷகர் (விவேகிகர் )ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் (விஷயாந்தரங்களையும் )தண்ணீரையும்
அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று புத்தி பண்ணி –
அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே

ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – -நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை
ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ்வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –

(ஆப ஏவ ஹி ஸூ மனச -ஸாஸ்த்ரமும் தண்ணீரில் அனைவரும் அபேக்ஷை யுடையவர்களாயே இருப்பார்கள் –
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -தாரக போஷக போக்யங்கள் -எல்லாமே கண்ணனே
ததேவ ப்ரீதயே பூத்வா புனர் துக்காய ஜாயதே
ததேவ கோபாய யதஸ் ப்ரஸாதய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-47-
ஒரே விஷயமே இன்பமாயும் பின்பு துன்பமாயும் இருக்குமே -எனவே இயற்கையில் துன்பமயமாயும் இன்பமயமாயும் இருப்பது ஒன்றும் இல்லை
ஆத்ம நஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவது -ப்ருஹதாரண்யம் -6-5-6-பகவத் சங்கல்பத்தால் ஏற்படும் இனிமையும் அல்பமாயும் அஸ்திரமாயுமே இருக்கும்
சிறிது வேட்பரேல் -இவற்றில் வைக்கும் ஆசையில் சிறிது உன் பக்கல் வைத்தாலே உஜ்ஜீவனம் ஆகுமே

யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷ யேஷ்வநபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் சா மே ஹ்ருதயான் மாப சர்ப்பது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-ஸ்ரீ ப்ரஹ்லாதனின் பிரார்த்தனை

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்-முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

சப்தாதி விஷய ப்ராவண்யமே அழிவையே உண்டாக்கும்-படிக்கட்டு காட்டி அருளுகிறார் இந்த இரண்டு ஸ்லோகங்களால்

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-

எல்லா ஆசையும் உண்டானாலும் சப்தாதி விஷயங்கள் இவன் விரும்பும் அளவு கிடைக்க மாட்டா
அல்ப ஆசை யுண்டானாலும் பரமபுருஷன் இவனுக்கு கையாளாக நிற்பானே –
இந்த அரிய கருத்தை உள்ளடக்கிய பாசுரம் இது -)

———————————————————————————————————–

நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே –
நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை-(சேஷ்டிதங்களை )
அனுசந்தித்திக் கொண்டு ஸூகமே இருக்கப் பார்–என்கிறார் –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈஸ்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் இல்லாத -அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்ய கரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப் பரனாக இருப்பாயாக.

ஸ்வத உத்கர்ஷ கந்தம் இன்றிக்கே -அதி ஷூத்ரராய் இருக்கிற சம்சாரிகளுடைய –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானத்தாலே வந்த பெருமையானது –
ஸ்வத ப்ராப்தமான பழைய ஷூத்ரதையில் சென்று பர்யவசித்து விடும்

(மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -சாத்விக அஹங்காரம் ஆழ்வாரது
இவனுக்கோ துரபிமானம்)

ஸ்வத க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ண ஷமர் இன்றிக்கே இருக்கிற அறிவு கேடரானவர்களும்
தங்கள் நினைவாலே சர்வஞ்ஞராக அபிமானித்து இருந்தார்களாகிலும் –
பழைய அறிவு கேட்டை உடையாராயே விடுவர்கள்

நான் அவன் படிகளை சொன்னால் -அறிகைக்குப் பாங்கான என் மனஸ்ஸே –
நீ அறிவு கேடரான நாட்டார் படியைக் கை விட்டு
ஸ்ரீ யபதி இப்படி இரப்பாளனாய் வந்தான் என்று ஒருவரும் அறியாத படி பூமியை இரந்து அளந்து கொண்டு
பிரளயத்தில் அழியாதபடி அந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
அநந்தரம் உள்ளுக் கிடந்து தளராதபடி அந்த பூமியை வெளி நாடு காணப் புறப்பட விட்டனாய் –

இவ்வளவு அன்றிக்கே
ஆஸ்ரிதர் விஷயத்தில் பண்ணும் ரக்ஷணத்துக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுமாய் இருப்பான்
ஒருவன் என்று அநவரதம் அனுசந்தித்திக் கொண்டு –
அவனைப் பற்றின நமக்கு இனி ஒரு குறை யுண்டோ -என்று நிர்ப் பயமாய் இரு-

(ஈஸ்வரோஹம் அஹம் போகீ சித்தோஹம் பலவான் ஸூகீ
ஆட்யோ அபி ஜநவாநஸ்மி கோ அந்யோ அஸ்தி சத்ருஸோ மயா -ஸ்ரீ கீதை -16-14-15-என்கிறபடி அபிமானித்து இருப்பது –
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாஸ் சான்யா தேவதா ஸ்ம்ருதா
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்-சாந்தி பர்வம் -350-86-
திருவுக்கும் திருவாய் இருப்பவன் மாணியாய் இரந்த பேராளன் பேர் ஓதும் பெரியோர் -பெரிய திருமொழி -7-4-4-
மாஸூச என்று தனது நெஞ்சுக்கு பயம் அற்று வாழ வழி காட்டுகிறார் -)

(மண் அளந்து மண் உண்ட உமிழ்ந்த -மூன்றிலும் எல்லாத் தேவதைகளும் உண்டே –

இதனாலேயே -தேவதாந்த்ர சம்பந்தத்துக்கு வழியே இல்லையே என்கிறார்)

———————————————————————————————-

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –

(சர்வேஸ்வரன் -ஸர்வ சமாஸ்ரயணீயன் -என்று அறிந்தும் இழந்து போகிறார்களே)

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பதவுரை

இரு–அளவில் பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திரு நாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–இரு -பெருமையில் பெரிய -பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற-பிரமனும் பொருந்திய பாதங்கள் -பெருமை -நாம் விலக ஆரானும் பற்றிய நீங்கி விரதம் கொள்வோமே என்று எல்லாரும் பொருந்தும்படி எளியவன் என்கிறார்
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு-எங்களுக்கு என்று -சம்சாரிகளுடைய இழவு தங்களாதகாகக் கொள்ளும் ஆழ்வார் -பர துக்க துக்கித்தவம் கொண்டவர்கள் அன்றோ
பல் பிறப்பும் எல்லாம்–பல வகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

பரந்து குளிர்ந்த -திரு நாபீ கமலத்தினுடைய விஸ்தீர்ணமான பூவினுள்ளே -மறுத்துக் கேள்வி கொள்ளாதே சொன்ன கட்டளையிலே
ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு சமர்த்தனான சதுர்முகனை ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் எனக்கேயாம் படி உபகரித்து அருளினவனே –

அசேஷ லோக சரண்யனாகக் கொண்டு எல்லோரோடும் பொருந்தி இருக்கிற உன்னுடைய திருவடிகளை வாயார ஏத்தித்
தலையார வணங்கி ஆஸ்ரயியைக்கு உறுப்பு அல்லவாமாகில் –
எங்களுக்கு கர்ம அனுகுணமாக மேலே மேலே
உண்டாயச் செல்லுகிற ஜென்மங்கள் அடங்கலும் வியர்த்தங்கள் –

ஜன்மத்துக்கு பிரயோஜனம் உன்னை ஆஸ்ரயிக்கை இறே-
அதுக்கு உறுப்பு அல்லாத போது அவை அடங்க நிஷ் பிரயோஜனம் என்கை –

(புஷ்கர பர்ணே ஸம்பவத் -நாபியில் நான்முகனைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வேதர -6-18-
பர துக்க துக்கித்தவமே கருணையில் மேல் எல்லை
நீ சம்சாரிகளை பெற முயலும் அவற்றை அறிந்தும் சம்சாரிகள் உன்னை இழந்து உழல்வதே என்று வருந்துகிறார் -)

(ஆஸ்ரயித்தால் கிருபைக்கு விஷயம் ஆவோம்
ஆஸ்ரயிக்கா விடில் கர்மத்துக்கே விஷயம் ஆவோமே)

———————————————————————————————

அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –

(செல்வத்தின் மேல் உள்ள ப்ராவண்யம் செல்வ நாராயணன் -திரு நாராயணன் -மேல் வைத்து உஜ்ஜீவிக்கலாமே)

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளை யடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக் காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

பிறர் -இடம் பார்த்து அறிந்து விநியோகம் கொள்ள வேணும் என்று கருதும் படி –
தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கிற மஹா தனத்தை-
துர் வாசனையாலே நமக்கு வேணும் என்று அபிமானித்துக் கொண்டு –
ந பிபேதி -என்னும் விஷயத்தைப் பற்றினால் போலே –
அறிவு கெட்டு நிர்ப் பரனாய் இராதே –
தம் தாமுக்கு அறிந்த போதோடு அறியாத போதோடு வாசி யற சர்வ காலத்திலும்
நித்தியமான அபாஸ்ரயம் -ஓன்று -என்று –
சாஸ்திர அப்யாசாதி களாலே அறிந்து –
இனி நமக்கு கால தத்வம் உள்ளதனையும் ஸ்ரீ யபதியானவனே
ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய
அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களைச் சொல்லுகையே
வாக் இந்த்ரியத்தால் உச்சரிக்கப்படும் –

(புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்)

(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -திருவாய் -4-9-4-
ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக்கொம்பு தானே அவன்
எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன்
மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -)

—————————————————————————————————

நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்

அது மாட்டாதார் -(ஸ்வரூப ஞானம் -அசத்தி அப்ராப்தம் -பக்தி பாரவசயத்தால் -மூன்றாலும் மாட்டாதார் )த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-
அதிகார அநு குணம் விதிக்கிறார் –

(உயிரான பாசுரம் -மேம் பொருள் பாசுரம் போல்)

(சாதன பக்தி -திருமந்திரம் கொண்டு -அதுவே வேதம்
அது மாட்டீராகில் த்வயம் படி சரணாகதி பண்ணுங்கோள் என்கிறார்
ஓம் இத் ஆத்மாநாம் உன்ஞீதே –
வியாபக மந்த்ரங்கள் மற்றவற்றில் ஏற்றம் -அவற்றுள் நாராயணா -அபூர்த்தி இல்லா குறை -அஸிஷ்ட பரிக்ரஹம் -உபாயாந்தர பரர்களும் திருமந்திரம் கொண்டு ஸ்துதிப்பார்கள் அன்றோ
இந்த அர்த்தம் கொண்டு அப்பிள்ளை உரை)

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

வகுத்த விஷயத்தை இழந்து -இதர விஷயத்தில் பிரவணராய் திரிகிற சபலர்காள் –
சங்க வேத அத்யயனம் பண்ணி
அதில் சொல்லுகிற -அர்த்தங்களையும் அறிந்து
அறிந்த படியே சாஷாத் கார ரூபமான பகவத் பக்தியைப் பேற்றுக்கு
உபாயமாக அனுஷ்ட்டிக்க வல்லி கோளாகில்-

சர்வ வித ரக்ஷகனாய் -சர்வ பிரகாரியான புருஷோத்தமனுடைய
சர்வ ரக்ஷகத்வ வாதியான சகலார்த்தங்களுக்கும் வாசகமான திரு மந்த்ரம் ஆகிற திரு நாமத்தைச் சொல்லி(அவ ரக்ஷண -நாரங்களுக்கு அயனம்-ஆதி என்பதால் ஸ்வாமி சேஷி காரணம் ஆதாரம் இத்யாதி )
ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரமான இத்தனையே வேதத்தில் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாவற்றிலும்
தாத்பர்யமாக நிர்ணயித்துத் தலைக் கட்டின அம்சம் –

இப்படி நன்றாக அத்தை அறிய மாட்டிற்றிலி கோளாகில்
ஸ்ரீ யபதியினுடைய திரு நாமத்தை சொல்லுகையே –
அந்த வேதப் பரப்பு எல்லா வற்றிலும் கூட சங்ஷேபித்துத் தலைக் கட்டும் –

இவ் வர்த்தம் பகவத் பிரசாதத்தாலே தெளியக் கண்ட நான் சொன்ன வார்த்தை யாகையாலே
இத்தைத் தப்பாது என்று விஸ்வஸித்து அறியுங்கோள் –
இத்தைச் சுருக்கு என்கையாலே
கீழ்ச் சொன்னது வேதத்தில் பரக்கச் சொன்ன பொருள் -என்று தோற்றுகிறது –

(அவரவர் விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாக இவன் உண்டே -நின்று பலன் கொடுக்க- நியமிக்கிறவன் புருஷோத்தமன் தானே)

(மாநஸமே சரணாகதி -சொல்லுவதே -வாய் வார்த்தையாக -புத்தியில் படாமல் சொன்னாலும் -அதுவும் உனது ப்ரஸாதத்தாலே)

(வேத அக்ஷராணி யா வந்தி படிதாநி த்விஜாதிபி
தா வந்தி ஹரி நாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
திருமாலின் பெயரைச் சொல்வதே வேத சாரம் திருமந்த்ரத்தைச் சொல்லியும்
‘த்வயத்தைச் சொல்லியும் ஆஸ்ரியிப்பார்
வல்லீரேல் -அர்த்த ஞானமும் அனுஷ்டானமும் துர்லபம்
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவருக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும் –
திருமந்திரம் பக்திக்கு அங்கம்
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் –
அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் அஸ்மதாதிகள்
ஞானாதிக்யத்தாலே ப்ரபன்னர் பூர்வாச்சார்யர்கள்
பக்தி பாரவஸ்யத்தாலே ப்ரபன்னர் ஆழ்வார்கள்
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு – )

———————————————————————————————————

இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்கா முன்–(உயிர் போகும் போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலே விளங்குகின்ற திரு மார்பை யுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்ய வல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

(ஞானத்தை அனுஷ்டான பர்யந்தமாக ஆக்க போகம் தடுக்கும் -ஆகவே பாதம் அறிந்தும் -போகாததால் அறியாத என்கிறார்

நினைமின் -போகாததால் லாபம் இல்லை என்று நினைமின்
சரீரம் ஸ்பஷ்டமாக இருக்கும் போதே நினைமின்)

சரீரம் எங்கும் ஓக்கப் பூர்வத்தில் வியாபித்து நின்ற ஸ்லேஷமாவானது -சரீர விஸ்லேஷ தசையில் கண்ட ஸ்தானத்தில் வந்து
செறியத் தக்கதாகச் சுருங்க வழித்து இழுத்துக் கொண்டு -வாக் வியவஹார யோக்யதை இல்லாத படி மிடற்றை அடைத்து
மிறுக்குப் படுவதுக்கு முன்னே(உடம்பு சுருங்கி கீழே பார்த்தோம் –இங்கே ஸ்லேஷ சுருக்கம் )

பெரிய பிராட்டியாராலே சம்ருத்தமாய் விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை நீங்கள் அனுசந்தித்துக் கொண்டு நில்லும் கிடிகோள்

பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதார் கணக்காம் படி பண்ணக் கடவ
சப்தாதி போகங்களால் வரக் கடவ பிரயோஜனம் இல்லை –

சுலாவி நின்று ஐயார்–சுருக்காக வாங்கி–நெருக்கா முன் — –
திருப் பொலிந்த-ஆகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் –
என்று அந்வயம் –

(ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தைர் கண்டா வரோதந விதவ் ஸ்மரணம் குதஸ்தே -முகுந்தமாலை
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
உத்தம ராஜ கன்யயாஸமே யிவான் அதீவ ராம ஸூ ஷுபே விபு ஸ்ரியா விஷ்ணு ரிவாம ரேஸ்வர-பால -77-99-
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்–திருவாய் -10-6-9-
விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -)

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

எம்பெருமானை பஜிக்கைக்கு (பக்தி செய்ய )ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)-புருஷ சா பேஷமும் புருஷகார சா பேஷமுமாய் இருக்குமே –
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;-சேதனர் அறிவுடைய -முமுஷார்த்தியாக இருப்பதே அறிவின் பிரயோஜனம் –
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தத் தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத் தக்க அருமையான செயலாயிருக்கின்றது.(சம்சார சூழலில் சிக்குவது அரிது என்றுமாம் )

ஆஸ்ரயண உபகரணமான கரண களேபர விசிஷ்டரான தாங்கள் முந்துற முன்னம் உளராய் இருந்தார்கள் –
அனுசந்தான பரிகரமான தம்தாமுடைய மனஸ்ஸூ புறம்பே தேட வேண்டாத படி உண்டாய் இருந்ததே –

திருவடிகளிலே பணிமாறுகைக்கு உறுப்பான கைக்கு எட்டின தாமரைப் பூ உண்டாய் இருந்ததே –

வாய் விட்டுப் புகழுகைக்கு ஈடான காலம் உண்டாய் இருந்ததே –

தன் உடமை பெறுகைக்குத் தன்னை இரப்பாளனாக்கும் நீர்மையை யுடையனான சர்வேஸ்வரனுடைய
ஐஸ்வர்ய ப்ரகாசகமாய் த்விஜ அரவிந்தாதி சிந்நிஹிதமான திருவடிகளிலே
சேஷத்வ அனுரூபமாகச் சேருகைக்கு அனுரூபமான தலையை உடையராய் இருந்தார்கள்-

இப்படி இருக்க நேர் கொடு நேரே கொடிதான சம்சாரத்தைச் சென்று கிட்டுகை அரிது –
இங்கனே இருந்த பின்பு இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு திரிகிற படி எங்கனேயோ –
என்று ஆச்சர்யப்படுகிறார் –

(நாமோ பரமபதம் செல்வதே அரிது என்று நினைத்து உள்ளோம் -ஆழ்வார்கள் இதுக்கே நேர் மாறாக சம்சார சூழலில் சிக்கித் தவிப்பதே அரிது என்கிறார் -)

(நா வாயில் யுண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை யுண்டே -மூவாத
மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவர்
தீக் கதிக் கண் செல்லும் திறம் -முதல் திரு -95- அடி ஒற்றியே இப்பாசுரம்-
விசித்ரா தேஹ ஸம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -6-
இங்கே தாமரையின் பூ என்றது
கள்ளார் துழாயும் கண வலரும் கூ விளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் -பெரியாழ்வார் -2-7-10-
என்னும் பூக்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
பத்ரம் புஷ்பம் -கீதை -9-26-
புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1- என்கிறபடி
எம்பெருமானுக்கு ஆகாத பூவே இல்லையே –
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநி வேதயத்-என்று தள்ளியதும் ஆஸ்ரிதன் கையில் முள் தைக்காமக்கைக்குத் தானே
அவனுடைய புஷ்ப ஹாஸ திருமேனிக்கு இது ஸத்ருசம் அன்று என்று இவன் நினைவாலே என்றுமாம்
நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வச வர்த்தி நீ
ததா அபி நரகே கோரே பதந்தீத்யே ததத்புதம் –
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95- என்றபடி
மற்ற உபகரணங்களும் உப லக்ஷணம்
திரு மருவு தாள் -வடிவிணை யில்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-
புருஷகார பூதையும் அருகிலே உண்டே
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்ஜனம் த்ரி விக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்று
திரு -ஐஸ்வர்யம் காட்டும் திருவடிகள்
அவனை அடைய அருளிய உபகரணங்களைக் கொண்டே அவனிடம் இருந்து விலக உறுப்பு ஆக்கிக் கொள்வதே என்று ஆச்சர்யப்படுகிறார் -)

——————————————————————————————-

தங்களுக்கு ஒரு பரிகர சம்பத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்-

(சார்வே தவ நெறிக்கு -பக்தி பிரபத்தி இரண்டாலும் -என்றே நிர்வாஹம் -அதே போல் இப்பாசுரமும்
ஸ்வ தந்த்ர பிரபத்தி- பக்தி இருக்கும் நாள் கைங்கர்யத்துக்கு வேண்டுமே -மரணமானால் வைகுந்தம் தருபவன் -மரணமாக்கி அல்லவே
பக்தி மூலம் போனாலும் அங்க பிரபத்தி செய்து தடங்கல் போக்கி பக்தி செய்து உபாசகர் பேறு பெறுவர்)

(பெறுக முயல்வான் -பக்தி உழவன் -பிரபத்தி பரம் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஸ்வ தந்த்ர பிரபத்தி
ஈஸ்வர ப்ரவ்ருத்திக்கு விரோதமாய் இருக்கும் ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி –
உபாயாந்தர நிஷ்டனும் பெறுக முயல்வானாகக் கொண்டு பக்தி பரம் -இதுக்கும் அநிஷ்டம் போக்க அவன் இதன் பிரபத்தி வேண்டுமே)

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

அகடி தகடநா சாமர்த்தியம் உள்ளவனே ஆற்றல் உடையவன் -அவனே பெறுக முயல்கின்றவன் -கிருஷி பண்ணும் பக்திஉழவன்

வஸ்துவை வஸ்தாந்தரம் ஆக்க வல்ல சக்தி யோகத்தாலே –
உன் பேற்றுக்கு உறுப்பாக நீ ஒன்றும் யத்தனித்துச் செய்ய வேண்டா என்று ஸ்வ ரக்ஷண அர்த்தமாக –
இவன் பண்ணும் ப்ரவ்ருத்திகளை அடைய மாற்றி –
ஞானம் ப்ரேமம் முதலாகக் கைங்கர்ய பர்யந்தமாக இவனுக்குச் செய்ய வேண்டும் சர்வ காரியமும்
தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவன் பக்கலிலே அந்வயமாம் படி –

(பல ப்ரதாதாகவும் பல கரணங்களாகவும் அவனே ப்ரபன்னனுக்கு -பலம் அனுபவமே இவனுக்கு கர்தவ்யம்
பக்தி யோகனுக்கு பக்தி தானே கருவி)

தன் பேறாக சர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையிலே மிகவும் உத்ஸாஹியா (பெறுக முயல்வான் )நிற்கும் மஹா புருஷரைப் பெற்றால் –
பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் எளிதாகா நிற்கும் -அது எங்கே கண்டோம் என்னில்-

கறுத்த நிறத்தையும் -வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் யுடைத்தான ஆனையானது –
அடிமைக்கு கால் கட்டான முதலையை ஜெயித்து அழியச் செய்தன்றே-(தானாக அழியாச் செய்ய வில்லையே )

குளிர்ந்த பொய்கைக் கரையிலே ஸ்லாக்யமான தாமரைப் பூக்களைக் கொண்டு –
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி
விரோதியைப் போக்கி ரக்ஷித்து அருளின அவன் திருவடிகளிலே தாழ்ந்து
அடிமை செய்யப் பெற்றது -(அவனே அநிஷ்டத்தையும் போக்கி இஷ்டபிராப்தியையும் தந்து அருளி கைங்கர்யமும் கைக்கொண்டான் அன்றோ )

தாழ்ந்து என்றது தாழ்ந்தது என்றபடி –
கோடு என்று கரைக்குப் பேர் –
தட்டம் குளிர்த்தி
குளிர்ந்த பொய்கை கரையிலே என்றபடி –

தண் தோட்டு மா மலர் -என்ற பாடமான போது –
குளிர்ந்த இதழை யுடைத்தான பெரிய புஷ்ப்பத்தாலே-என்று பொருளாகக் கடவது –

(பிரபத்தி பரமாகவும் பக்தி பரமாகவும் இரண்டு நிர்வாகங்கள் இப்பாசுர வியாக்யானத்தில் உண்டே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்று அன்றோ பிரபத்தியின் லக்ஷணம்
நெறி காட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -6-
நஹி கச்சித் ஷணமபி ஜாது திஷ்டத் யகர்மக்ருத் -கீதை -2-5-என்கிறபடி நிவ்ருத்தியும் தன்னாலே சாதித்துக் கொள்ள முடியாதது ஒன்றே
அதுவும் அவனது இன்னருளே என்று அவனாலேயே பெற வேண்டும்
இத்தை எங்கே கண்டோம் என்ன -கஜேந்திர ஆழ்வானைத் த்ருஷ்டாந்தமாகக் காட்டி அருளுகிறார் –
பரமா பதமா பந்ந மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -68-
தாழ்ந்து வென்றி முடித்ததன்றே -என்று திருவடிகளில் மலரை இட்டு பக்தியைப் பூர்த்தி செய்து
பேறு பெற்றது என்று பக்தி பரமாகவுமாம்
பகவத் பக்தியாகிய தனது முயற்சியே சரணாகதியில் மூட்டி பக்தியோகத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது

அஞ்ஞானத்தாலும் -ஞாநாதிக்யத்தாலும் பக்தி பாரஸ் யத்தாலும் பிரபன்னர்கள் மூ வகை உண்டே –
பக்தியும் சரணாகதியிலே மூட்டும்
அங்க பிரபத்தி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க வேணுமே

இப்படி இரண்டு நிர்வாஹங்கள் இருந்தபோதிலும்
நாராயண பராயண-என்ற ரிஷி வாக்யத்துக்கும்
பிடி சேர் களிறு அளித்த பேராளா -முதல் திரு -95- என்றபடி
பக்திக்கு அங்கமான வைராக்யம் அற்று இருந்தான் என்பதால்
முதல் நிர்வாஹமே சாலப் பொருந்தும் -என்று ஆச்சார்யர்களால் மிகவும் ஆதரிக்கப் பட்டதாகும் )

——————————————————————————————

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

(பிரதிபந்தகங்கள் விளாம்பழமும் கன்றும் பட்ட பாடும் மஹா பலியுடைய துரபிமானமும் பட்ட பாடும் படும் என்று காட்டவே இந்த த்ருஷ்டாந்தங்கள்)

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று-வரம் -ஸ்ரேஷிடம் என்றபடி –
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐஸ்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

கனியப் பழுத்துக் கிடக்கையாலே தரை அளவும் வரத் தாழ்ந்து கிடக்கிற அஸூர மயமான விளாவினுடைய பழங்களுக்கு
அஸூர மயமான கன்றை எறி கோலாக எடுத்து எறிந்து-

ஸ்ரீ யபதியான தன் உருவை விட்டு -அர்த்தியான வாமன ரூபத்தை
உடையனாய்க் கொண்டு -பூமியை அளந்து -தன் கால் கீழே இட்டுக் கொண்ட –
அந்த சர்வேஸ்வரன் –

ந நமேயம் -என்கிற ஸ்வாதந்தர்யத்தைப் பொகட்டுத் தன் திருவடிகளிலே வணங்கி –
எங்கள் அபிமதம் நீயே பண்ணித் தர வேணும் என்று
தன் பிரசாதத்தைக் கை தொடுமானமாகப் (பற்றுக் கொம்பாக )பிடித்துக் கொண்டு
தம் தாமுடைய அதிகாரங்களுக்குத் தகுதியாக இருந்த பிரகாரங்களாலே(ததாமி புத்தி யோகம் -அத்தையே பற்றிக் கொண்டு அடைகிறான் என்றானே )

ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -ஸ்வ பிராப்தி ஆகிற ஸ்வ ஸ்வ அபிமதங்களைப் பெற்று
ஸூக உத்தரராய்த் தலைக் கட்ட வேணும் என்று இருக்கும் அவ்வவ அதிகாரிகளையும் –
அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

(தன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
ப்ரபன்னராகவுமாம்
உபாயாந்தர நிஷ்டர்களாகவுமாம்
அநந்ய ப்ரயோஜனராகவுமாம்
ப்ரயோஜனாந்தர பரராகவுமாம்
அவர்களுக்குத் தானே எளியனாகி -விரோதியையும் போக்கி -இஷ்ட ப்ராப்தியையும் செய்து கொடுத்து
அவரவர்கள் விருப்பத்துக்குத் தக்கபடி அவரவர்களே ரக்ஷித்து அருளுகிறான் –

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹ ஜோ தோஷஸ் ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த -36-11-என்கிறபடி
ஸ்வா தந்தர்யத்தைக் கை விட்டு -பக்தி பிரபத்தி மூலம்
அவன் அருளையே பற்றாசாகக் கொண்டு வணங்கி
வாழ்விக்கும் -அந்தவந்த அதிகாரிகளுக்குத் தக்க பலன்களை அளித்து
இதற்குத் தடைகள் ஏற்பட்டால் விளங்கனி பட்டதும் -மஹாபலி அஹங்காரம் பட்டதும் படும்
தன்ன தானே பூமியைத் தானே அளந்து தன் அடிக்கீழ் ஆக்கிக் கொண்ட அந்த ஸர்வேஸ்வரன் வாழ்விக்கும் என்று கீழோடே அந்வயம் -)

————————————————————————————————

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

(படைக்கிறவனே ரக்ஷிக்க வேண்டுமே -இத்தகி செய்தவன் எத்தைச் செய்ய மாட்டான் -உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்-காரண வாஸ சப்தத்தால் கார்யம் குறிக்கப்படுகிறது -அனுக்ரஹத்தாலே தானே மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான-மனசுக்கும் இவை உப லக்ஷணம்
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்–வைச்வானர அக்னி நமக்குள்ளளே -பாடவாகினி கடலுக்குள்ளே
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

பகவத் வைபவம் கேட்டால் உகக்கும் நல்ல நெஞ்சே –
பரி பூர்ணமான கிருபையால் உண்டாகக் கடவ மோக்ஷமும் –
நிக்ரஹ காரியமாய் வரக் கடவ சம்சாரம் ஆகிற மஹா அநர்த்தமும் ஆகிற இவற்றுக்கு நிர்வாஹகன் அவனே கிடாய் –

இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்பகமான வாயு அக்னி ஜலம் ஆகாசம் பூமிகள் ஆகிற பூத பஞ்சகம்
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற இவற்றை அடியிலே உண்டாக்குவானும் அவன் கிடாய் –

சம்சார காலத்திலே இவற்றை அழிக்க ஒருப்பட்டுத் திரு உள்ளம் சென்று -அதுக்கு உபகரணமாய் –
கறுத்த கடலைச் சீறிச் சுடக் கடவ படபாமுக அக்னிக்கு நிர்வாஹகனாய் இருப்பவனும் அவன் கிடாய்-

ஆக
த்யாஜ்ய உபேதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் என்றபடி –

ஆர் அருள் என்று
அருளின் கார்யமான மோக்ஷத்தை லஷிக்கிறது

அன்றிக்கே
அநுக்ரஹ ஹேதுவான புண்யத்தையும் –
நிக்ரஹ ஹேதுவாய் -அநர்த்த கரமுமான பாபத்தையும் சொல்லவுமாம் –

(மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –கீதை -7-14-
ஆர் அருள் -அருளுக்கு காரணமான புண்யமும்
கேடு -நிக்ரஹ காரணமான பாபமும்
ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேது -ஸ்வே தாஸ்வர
கர்ம காரயதி-கௌஷீக
அனைத்தும் இவனாலேயே -நிர்வாஹக நிர்வாஹ்ய பாவ ஸம்பந்தம் -இருப்பதால் ஒரே வேற்றுமையில் படிக்கிறார்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
மனத்துக்கும் இந்திரியங்களுக்கு நிர்வாஹனன் ஹ்ருஷீகேசனான அவனே
ஹ்ருஷீ காண் இந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான்
ஹ்ருஷீ கேஸஸ் ததோ விஷ்ணு க்யாதோ தேவேஷு கேஸவ -ஸ்ரீ ஹரி வம்சம்
சத்தை தொடக்கமாக சம்ஹாரம் ஈறாக சமஸ்தமும் அவன் அதீனமான பின்பு
தன்னை ஆஸ்ரயித்தாற்கு அபீஷ்டங்களை அளித்து அருளுவது வியப்போ -என்கிறார் -)

—————————————————————————————

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

(பொதுவான ரக்ஷணம் கீழே -இதில் ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஆஸ்ரித பக்ஷ பாதன் -விசேஷ ரக்ஷணம் என்றுமாம்
படைக்கப் பட்டவை எல்லாம் ரக்ஷிப்பவனும் அவனே -வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்தான் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -இங்கு கோபத்தால் -)

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்க வேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலை யுடைய திருவேங்கடமலையேயாம்.

பரமபத வாசிகளான நித்ய ஸூரிகள் தாங்கள் வாய் விட்டு ஏத்துகைக்கு விஷயம் ஆகையால்
உத்துங்கமாய் -ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –
அங்கு நின்றும் வந்து அவதரித்து -சங்கல்பத்தால் அன்றிக்கே
நேர் கோடு நேரே -அபியாதா -என்னும் படி
எடுத்து விட்டுச் சென்றது

இந்த்ராதிகள் கேட்கவே வயிறு பிடிக்கும் படியான லங்கையில்
ப்ரஹர்த்தா ச -என்கிறபடியே
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே அபேக்ஷித சமயத்திலே உதவி முகம் காட்டக் கடவதான
கோபத்தால் கொன்று விழ விட்டது -அவத்யனாக வரம் பெற்றுடைய ராவணனை –

(ஜித க்ரோதன்-கோபத்தை வென்றவனும் குணம் என்னும் குன்று ஏறி நின்றவன் கோபிக்க யார் நிற்க முடியும் -ஜிதம் வந்தால் யாரும் எதிரே நிற்க முடியாதே -கோபஸ்ய வஸமே ஆனானே)

அவன் படிகளை சொல்லப் புக்கால் அவதார காலத்தில்
இழந்தவர்கள் இழவைப் பரிஹரிக்கைக்காக எழுந்து அருளி நின்றதுவும்
மூங்கில் வளர்ந்து இருக்கிற குளிர்ந்த பர்யந்தங்களை யுடைத்தான திருமலையிலே –

விண்ணவர் -இத்யாதிக்கு
ராவண வத சமனந்தரம்-ப்ரஹ்மாதிகளால் ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்று பொருள் ஆகவுமாம் –

(க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59–136-
அபியாதா ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29-படை எடுத்துச் சென்று அடிப்பவன்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -திருச்சந்த -56-
ஓங்கு -குணங்களின் உயர்த்தி
தொல் புகழ் -வந்தேறி அல்ல -ஸ்வாபா விகம்
வந்து -நித்ய ஸூரி நாதன் வந்து அவதரித்து பின்னானார் வணங்கும் ஜோதியாக இங்கே நித்ய ஸேவை சாதித்து அருளுகிறான் )

—————————————————————————————————

கீழ் ப்ரஸ்துதமான திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

(கீழே -25 திருமலைக்கு என்றே காட்டி
இதுவும் 26-திருமலைக்குத் தான் -இதில் திருமலை திரு வேங்கடம் சொற்கள் இல்லை என்றாலும்
வாழும் பதி என்றே இருப்பதால் -திருமலை வைபவ தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும் –பெரியவாச்சான் பிள்ளை இதுக்கு சேர்த்து அருளினார்
கபிஸ்தலம் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -என்றே இருந்தாலும்)

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்ய வாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆஸ்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம் பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் -அஞ்ச வேண்டும்படியான -பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

அபிமான ஸூன்யராய்க் கொண்டு –திருவடிகளிலே தலை மடுத்து -அவனை ஆஸ்ரயித்து –
(அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே )தத் பிராப்தி பிரதிபந்தகங்களாய்க் கொண்டு
நடுவே நின்று தகைகிற பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் -ஸ்ரோத்ராதிகளான இந்திரிய பஞ்சகத்தையும் ப்ரத்யகர்த்த ப்ரவணமாம் படி
நியமித்து அவன் பக்கலிலே அபிநிவேசத்தை உடையராய்க் கொண்டு ஒருவர்க்கு ஒருவர் முற்கோலி வந்து ஆஸ்ரயிக்கும் படி
ப்ரஹ்மாதி தேவர்களுக்காகத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவ -என்னும்படி முற்பாடரான நித்ய ஸூரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே கொடுத்து அருளிற்று
பூஸூராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுபவித்து அடிமை செய்து வாழ்கிற திருமலை முன்பு நித்ய ஸூரிகளுக்கு கொடுத்தது என்றுமாம் –

(மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்
தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன் -45-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –திருவாய் -1-8-3-
படி -உலகு -படி அமரர் -முக்த பிராயரான நிலத்தேவர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பதி -கீழ் ப்ரஸ்துதமான திருமலை)

————————————————————————————————————-

இப்படி திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் பரம பதத்திலே இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை-மிகவும் வளர்ந்து மேற் கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

திருமலை யாகிற ஸ்தானத்தில் வேரூன்றி நின்று அபிநிவேசம் தோற்ற -எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் –

(இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -குண பூர்ணம் உள்ள இடம் அர்ச்சையே -நினைத்தபடி பரிமாற்ற நமது ஞான சக்திகளின் குறையே -மந்திபாய் வடவேங்கட மா மலை -ஸ்ரீ ரெங்கம் அனுபவத்தில் -வரத்து தேசம் தேடித் போனது போல் இங்கும் வரத்து தேசம் ஓடிப்போகுமே-சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -திருமங்கை ஆழ்வாரோ சர்ச்சை தேசங்கள் தேடி ஓடுவார் -)

சந்த்ர பதத்தையும் உரோஸிக் கொண்டு
அவ் வருகு பட்டு -அண்ட பித்தியில் செல்லக் கடாக்ஷித்து -ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு
பரம பதத்திலே தம் மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடி விட்டவிடத்தில் விடாதே
பற்றிச் செல்லுகிற என்னுடைய நெஞ்சானது கமன சைக்ர்யத்தை (கதி மிகுத்து )உடைத்தாய்க் கொண்டு அழகிய கொம்பைத் தேடி
பரந்து செல்லுகிற கொழுந்து போலே இரா நின்றது –மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமா போலே -)கம் மே கம் ஆகாசம் சுகம் -பரமாகாசம் -மா கம் )

(மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -திருவாய் -9-3-7-
கொடியானது அழகிய கொள் கொம்பைத்தேடி மேல் நோக்கி விரைந்து செல்வது போலே
மனமானது அழகியானான ஸர்வேஸ்வரனைத் தேடிப் பரமபதத்தளவும் விரைந்து செல்கிறது என்பதே திரண்ட பொருள் -)

——————————————————————————————-

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு(என்னில் முன்னம் பாரித்து -அபி சப்த்தார்த்தம் )
கோயில் திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

(பரத்வம் -வ்யூஹம் -விபவம் – -இரண்டு சர்ச்சை -ஆச்சார்யனுக்கு இரட்டை சம்பாவனை -அந்தர்யாமி மனதுள்ளான் -அவன் வந்த வரிசையில் அருளிச் செய்கிறார்-வேங்கடத்தான் -என்றே உள்ளது வேங்கடத்துள்ளான் இல்லையே -வந்து கிளம்பி கோயிலிலே கிடந்ததால் அங்கு உள்ளான்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஷீராப்தி நிகேதன்-ஆகதோ மதுராம் புரிம்
கீழ் ஆழ்வார் மனம் மேலே சென்றதை அருளிச் சொல்லி
இதில்
என்னில் முன்னம் பாரித்தது இதில்
ஒவ்வொரு இடமும் தாண்டி மனத்துள்ளான்
தேவாதி தேவன் எனப்படுவான் -அத்தை விட்டு வந்தான்
இளம் கோயில் கைவிடேல் இவர் பிரார்த்தித்து தானே அங்கும் இருப்பான் -)

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

அசங்க்யாதரரான வேத வைதிக புருஷர்கள் பலரும் -நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான -பெரிய மேன்மையை யுடையவன்
என்று சொல்லப் படா நிற்பானாய் -ஜகத் ரக்ஷண அர்த்தமாக -அங்கு நின்றும் வந்து -பரப்பை யுடைத்தான
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளா நிற்பானாய் -முன்பே ஒரு நாளிலே கிருஷ்ணனாய் வந்து
அவதரித்துக் கேசி வாயை அநாயாசேன பிளந்து புகட்ட சிறு பிள்ளையாய் -அதுக்கு மேலே நினைக்க அரிதான
நீர்மை ஏற்றத்தை யுடையனாய்க் கொண்டு போக்யதை மிக்கு இருக்கிற கோயிலிலே -சம்சாரிகளை ரக்ஷித்து அல்லது பேரேன் -என்று
கண் வளர்ந்து அருளுமவனாய் -திருமலையிலே சர்வ ஸூலபனாய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவன்
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

(யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோ ஹித– புருஷ ஸூக்தம்
ஸதா பஸ்யந்தி ஸூரய
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
இமையோர் தலைவன்
த்ரிபாத் தூர்த்தவ உதைத் புருஷ பாதோஸ் யேஹா பவாத் புநா -புருஷ ஸூக்தம் -மூன்று வ்யூஹங்களை யுடைய
பர வாஸூ தேவன் சங்கல்பிக்க அவனுடைய ஒரு வ்யூஹமான அநிருத்தன் ஷீராப்தி நாத்தனாக அவதரித்தான் –
அம்பஸ்ய பாரே
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி
சமுத்ரேந்தம் விஸ்வ ஸம்புவம்
ததோ விஷ்வங் வ்யக்ராமத் சாசநாந ஸேநே அபி –புருஷ ஸூக்தம்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினங்கள் கூவும் சோலை
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்து அல்லது பேரேன்
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று -இரண்டாம் திரு -54-

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்-பெரியாழ்வார் -5-4-8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

பாட க்ரமத்தை விட அர்த்த க்ரமம் பலமுடையதாகையாலே –
எனைப்பலரும்-தேவாதி தேவன் எனப்படுவான் –
மா கடலான் –
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —
வேங்கடத்தான்
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
மனத்துள்ளான் -என்று அன்வயித்து பர வ்யூஹாதி க்ரமத்திலே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும் -)

——————————————————————————————————-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவு காட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.

(ஆசை யுடன் பூதனை இடம் குடித்தான் அன்றோ -தன்னிடம் போல் அங்கு இல்லை -அங்கு போல் இங்கும் -என்ற பயம் இவளுக்கு-அஸ்தானே பய சங்கையால் -கௌசல்யைக்கு நம்பிக்கை போகாதபடி-மார்பிலே கை வைத்து உறங்கும் படி இலங்கை சென்று செற்றாய் -எனக்கு அப்படி இல்லையே -)

பக்குவமான தசையில் கட்டளைப் பட்ட லங்கையை பஸ்ம சாத்தாக மனஸுக்கு ஏகாந்தமான திரு வில்லாலே
திருச் சரங்களை நடத்தி முடித்துப் பொகட்டவனே –
இப்படி இருக்கிற நீ பருவம் நிரப்புவதற்கு முன்னே யசோதை பிராட்டியை போலே புத்ரனாகவே புரையற ஸ்நேஹித்துக் கொண்டு
பரிவு தோற்ற ஒசழக்காகத் தூக்கி எடுத்த பூதனையுடைய பாலின் கனத்தாலே விம்மி ஒளி விடுகிற முலையை
வயிறு நிறையத் தக்கதாக உண்பான் என்று அபிநிவேசம் தோற்ற பாலோடு பிராணனும் போம்படி அமுது செய்து
புத்திரனான உன்னைத் தாயாரான யசோதை பிராட்டி விஸ்வசியாதே துணுக்கு துணுக் என்று வயிறு மறுகும் படி சிஷித்து விட்டாய் –

(மாத்ரு ஸ்நேஹத்துக்கும் புத்ர ஸ்நேஹத்துக்கும் எல்லை நிலம் கண்ணனும் யசோதையும் என்பதால் மகன் தாய் என்று நிர்த்தேசிக்கிறார் –
கீர்த்தி பூதாம் பதா காம் யோ லோகே ப்ரமயதி ப்ரபு கிந்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7-)

—————————————————————————————————-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே-உலகு அளந்த நீட்சியை விட எண்ணுவது நீட்சியாயே இருக்கும்
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹா வராஹமாகி) அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

பெரிய கடல் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியை யுடையனாய் -அவ் வழகை முற்றூட்டாக என்னை அனுபவிப்பித்த
உபகாரகனாய் -அபரிச்சேத்ய வைபவனான ஸ்ரீ யபதியே -இப்படி சர்வாதிகனான நீ ஆஸீரிதரான இந்திரன்
ஐஸ்வர்யத்தை இழந்து கண்ணும் கண்ண நீருமாய் திருவடிகளிலே விழுந்த அன்று -மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
இரந்து -ஜகத்தைத் திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்றும் -பூமியானது பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே சென்று
ஒட்டின அன்று -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு ரக்ஷகனான நீ அந்த பூமியை பிரளயத்தில் முழுகி
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினாய் என்றும் -துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய்க் கொண்டு இந்த்ராதிகள்
சரணம் புக்க வன்று சர்வ சக்தியான நீ கறுத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
பின்பு ஒரு காலத்தில் அவள் முக மலர்ச்சி காண் கைக்காக -தத் சஜாதீயமான பெரிய கடலை அடைத்து அருளினாய் என்றும்
உன் படியை அறியக் கடவ பிராமாணிகரான ரிஷிகள் சொல்லா நின்றார்கள்
இவை சில சேஷ்டிதங்கள் இருக்கும் படியே என்று வித்தாராகிறார் –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20 – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை(சர்வேஸ்வரன் ஸர்வ நியந்தா -சர்வாதிகன் -பரமன் மேம்பட்டவன் )அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

(ஆரோக்யம் இச்சேத் பாஸ்கரன் -ஸ்ரீ இச்சேத் செல்வம் அக்னி – சங்கரம் இச்சேத் ஞானம்  –மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தனன் –சகல பல பிரதன் விஷ்ணு-குலம் தரும் -செல்வம் தரும் நீள் விசும்பு அருளும் -)

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று-அமரர்களும் தேவரீர் கடையிலே நின்று பிரயோஜநாந்தரங்களைப் பெற்றுப் போகிறார்களே
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)-தேவதாந்தரங்கள் உனது திருவடிகளைப் பற்றி -அதன் பிரபாவம் முழுவதும் அறியாமலேயே -ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்றுப் போவார்கள் என்றுமாம் -கடலுக்குள் உள்ள திமிங்கலம் போல் அவர்கள் ஆளவந்தார்
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (-ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனே!,-இரண்டாலும் திருமேனி -ஸ்வரூபம் இரண்டையும் சொன்னபடி
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப் பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய கால்களை -(ந காலம் தத்ரைவ பிரபு  அங்கு -அத்தை ஒப்பிட்டால் இது பரணில் இருப்பது போல் நாலு நாள்கள் தானே )
துராராதரானவர்கள் (அரியன் அலன் ஆராதனைக்கு -இவன் ஸூ ஆராதனன் ) இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து
அங்கே வந்து உன்னை அனுபவித்தல்- இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல்-
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் )
ஸ்வர்க்காதி ஸூகத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –

சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே –

(நெடுமாலுக்கு இங்கு மூன்றாவது அர்த்தம் -அளவிட்டு அறிய முடியாதவன் -த்ரிவித பர்ச்சேத ரஹிதன் –
கீழே சர்வாதிகன் என்றும் ஸர்வேஸ்வரன் என்றும் பார்த்தோம்)

இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை ஸ்தோத்ராதிகளைப் பண்ணி –
ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –

அன்றிக்கே
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –

(ந ப்ரஹ்மா ந ஈஸாநா -ஸ்ருதி அர்த்தம் அறியாமல் என்றுமே சாகாது இருப்பவர்கள் என்று தப்பாக நினைக்கிறார்கள் –
பையனை அறுத்துத் தா போல் ஆராதனைக்கு அரியவர்கள் அன்றோ இவர்கள் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –ஸ்ரீ கீதை -9-26- என்னுமவனைப் போல் அல்லரே
இடை நின்ற இன்பம் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கம் போல் கால்  கட்டாகவே இருக்குமே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -முதல் திருவந்தாதி -56
ப்ரஹ்மாவால் இழந்தே போவது
உன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கவும் வழி இல்லாமல்
கழுத்துக்கு கட்டியாயே இருக்குமே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப-7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் என்னும் மஹாத்மா கிடைத்தற்கு அரியவர் அன்றோ
கற்பக வ்ருக்ஷத்திடம் கௌபீந பிக்ஷை கேட்டுப் பெறுவாரைப் போலே அன்றோ இவர்கள்
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றும் காணலுமாம் கொலோ என்றே வைகல் காலையும் மாலையும் -திரு விருத்தம் -92-)

——————————————————————————

ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆஸ்ரயிப்பவர்கள், இன்னார் ஆஸ்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–ஸ்துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திரு நாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள் தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

ஆஸ்ரயணீயரான-அந்த தேவர்கள் -அவர்களை ஆஸ்ரயிக்கிற இந்த மநுஷ்யர்கள் என்ன ஒரு வாசி இல்லை –

திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனுடைய திருவடிகளைத் தலையாலே வணங்கி வாயாலே ஏத்தி
எவர் தான் ஆஸ்ரயியாதவர்கள் -ஆராய்ந்து பார்க்குமளவில் பரம்பின அழகிய கிரணங்களை யுடையனான ஆதித்யனும்
அழகிய திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய ப்ரஹ்மாவும் -லலாட நேத்ரனான ருத்ரனும் ஆகிற நாட்டுக்கு
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான இவர்கள் அன்றோ நாள் தோறும் அவன் புக்க இடம் புக்கு பின்பற்றி
ஆஸ்ரயிக்கையே ஸ்வபாவமாக உடையராய் இருக்கிறார்கள் –

(கீழ்ப்பாட்டில் -நெடுமாலே நின்னடியை யார் ஓத வல்லாரவர் -என்று சொல்லி வைத்து
இதில் -அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்-எவர் வணங்கி ஏத்தாதார்-என்று அருளி இருப்பது முரண் அல்லவோ
எனில் முரண் ஆகாது
சென்ற பாசுரத்தில் பரம புருஷனுடைய திருவடிகளை ப்ராப்யமாக அறிந்து அவனை ஸ்துதிப்பவர்கள் அருமைப்பட்டு இருப்பர் என்று அருளினார்
இப்பாசுரத்தில் இதர பலன்களுக்காக ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் வாசி இல்லாமல் அனைவருமே அவனை ஸ்துதிப்பவர்கள்
ஆகையால் ஒரு முரணும் இல்லை -)

(நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான் -ஸர்வ காரணத்வம் சொல்லி
ஸர்வரும் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள் -என்றாலும்
எழுவார் விடைகொள்வாருமே மிக்கு
வைகல் தொழுது உன் இடமே இருப்பார் சிலரே என்கிறார்

பவான் நாராயண ஸ்ரீ ராமாயணம்
உவராய் வந்து நிற்பார்கள்
அந்திக்காப்பு இடுகிறோம் -)

———————————————————————————————-

இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

(தேவர்கள் அன்றோ பற்றினார் என்று நாம் விலக
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பற்றி அருள
நாங்கள் விலங்கு இல்லையே என்று யாதானும் பற்றி விலக அன்றோ பார்க்கிறோம்)

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது(ஸ்துதிக்கையே ஸ்வரூபமான துதிக்கை அன்றோ )
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு-தொழும் காதல் களிறு அன்றோ
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ-நாராயணா மணி வண்ணா என் ஆர் இடரை நீக்காய்
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.(ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பிரசித்தம் அன்றோ )

இட்ட விலங்கை ஒடித்துக் கையிலே கொண்டு ஸ்வைரமாகத் திரிகிற மத்த கஜமானது தன்னால் கரை காண ஒண்ணாத
பரப்பை யுடைத்தான பொய்கையில் அத்யபி நிவிஷ்டமாய் சென்று புக்கு -விகசிதமாய் ஓங்கி இருந்துள்ள அழகிய
தாமரைப் பூவை சாதரமாகப் பிடித்துக் கொண்டு -அத்தசையிலே முதலையின் வாயிலே அகப்பட்டது-

தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துக்கம் பிரஸ்த்துதமாகப் பதறி -பூ செவ்வி அழிவதற்கு முன்னே
திருவடிகளிலே பணிமாறப் பெறுகிறிலோம் என்று பயப்பட்டு –

முதலையைத் துணிக்கைக்குப் பரிகரமான திருவாழியை
யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ –
முன்பு ஒரு நாளிலே (க்ருத யுக சரித்திரம் அன்றோ )அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனுடைய பரமபதம் ஆகிற ஸ்தானம் தன்னை பிராபித்தது –

ஆன பின்பு அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்னும் நியதி இல்லை என்று கருத்து –

(கஜ ஆகர்ஷ தீரே –க்ராஹ ஆகர்ஷதே ஜலே -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-

நாஹம் கலே பரஸ் யாஸ்யா த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலாந்யேவ பாதயோ ரர்ப்பிதம் தவ –

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -32-)

—————————————————————————————-

இப்படி அவன் சர்வ ஸமாஸ்ரயணீயன் ஆன பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை-அநாதி காலம் இருக்கும் சம்சாரம் ஆக்கி வளர்த்து என்றுமாம் -ஆக்கியவர்-ஸ்ருஷ்டித்த கரம் நான்கு உடையவன் -என்றுமாம்
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து(பண்டி -பண்டு -யை பண்டு இப் பெரும் பதி ஆக்கி –பண்டியை )
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு-செய்யாத குற்றத்தை ஏறிட்டு சொல்வது பழி -பண்ணுவதை நிரூபித்து சொல்வது பாவம் என்றுமாம் –
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்  போடும்படி-வியாபித்து
விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆண்டாள் சுலபமாக அருளிச் செய்தாள் அன்றோ -ஸ்வயம் பிரயோஜனமாக என்பதால் ஓதி -சொல்லி பாடி என்று இல்லாமல்
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

வயிற்றைப் பெரிய ஊர் போலே கண்ட அன்னலும் துன்னலுமாக இட்டு வளர்த்து -அதுக்கு உறுப்பாகத் தான்
அறியாதே பிறர் அறிந்து ஏறிடும்படி -அபுத்தி பூர்வகமாக செய்யப்படும் பழியையும் -புத்தி பூர்வகமாகத் தான்
அனுஷ்ட்டித்துப் போரும் நிஷித்தா சரணம் ஆகிற பாபத்தையும் உத்தரோத்தரம் வளர்த்துக் கொண்டு
இஹ லோகத்தில் பர லோக ஸூகம் கனாக் கண்டு- அறியாதவர்கள் ஆகையால் -இத்தை பெரிய வாழ்வாக
நினைத்துக் களித்துத் திரியும் ஹேயரான சம்சாரிகளை -(பேதைகாள் )உனக்கு ஒரு பழி யுண்டோ -பாவம் யுண்டோ -என்று புகழாதே-கண்டது அல்லது அறியாத அறிவு கேடர்காள் —

திரு வுலகு அளந்து அருளின போது எட்டு திக்குகளையும் பேர்த்துப் பொகடும்படி
விம்ம வளர்ந்த நாலு திருத் தோள்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை
இடை விடாமல் சொல்லிக் கொண்டு –

தீதில் நன்னெறி காட்டி (குலசேகராழ்வார் )எங்கும் சஞ்சரித்து -உங்கள் ஸஞ்சாரத்தாலே
நாட்டை இருந்ததே குடியாகப் பரி சுத்தராம் படி பண்ணுங்கோள் –

பண்டிப் பெரும் பதி-என்று முன்பு
இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து என்னுதல் –
பழையதான சம்சாரத்தைச் சேர்த்து -என்னவுமாம் –

(தீர்த்தம் கரோதீதி தீர்த்த கர -பிறரைப் பரிசுத்தப் படுத்துபவர்

அதி பாதக யுக்தோபி த்யாயன் நிமிஷம் அச்யுதம்
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்தி பாவந பாவந
மஹா பாவங்களை செய்தவனாயினும் -அச்யுதனை ஒரு க்ஷணம் நினைத்தாலே மஹா தபஸ்ஸைச் செய்தவனாயும்
தன் ஸம்பந்தத்தாலேயே ஒரு பங்க்தி-வரிசை முழுவதையும் பாவனம் செய்யும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தப் படுபவனாயும் ஆகிறான்

ஞானதோ அஞ்ஞானதோ வா அபி வாஸூ தேவஸ்ய கீர்த்த நாத்
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா
தெரிந்து தெரியாமலோ வாஸூ தேவனை சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் மனிதனுடைய பாபம் எல்லாம்
தண்ணீரில் உள்ள உப்பு போலவே கரைந்து விடும்

யன் நாம கீர்த்தனம் பக்த்யா விலாயநம நுத்தமம்
மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூ நாமிவ பாவக
மைத்ரேயரே -என்னுடைய நாமத்தை அன்புடன் கீர்த்தனம் செய்வது தாதுக்களை அழிக்கும் நெருப்பு போலவே
எல்லா பாபங்களையும் அழித்து ஒழிப்பதாய் இருக்குமது அன்றோ

ஸமா யாலம் ஜலம் வஹ்நேஸ் தமஸோ பாஸ்கர உதயா
சாந்தி கலேர கௌ கஸ்ய நாம சங்கீர்த்தனம் ஹரே
நெருப்பை அணைக்க நீரும் -இருட்டை நீக்க ஸூர்ய உதயமும் போதும் அன்றோ
அதே போலவே கலியின் பாபக் கூட்டங்களை அழிக்க ஹரியின் திரு நாம சங்கீர்த்தனத்தாலேயே இயலும் –
என்று சாஸ்த்ரங்கள் கோஷிக்குமே

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –பெருமாள் திருமொழி -2-6-)

(மழை மேகம் போல் முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் சென்று உலகத்தை திருத்தி அருளினார்கள் அன்றோ கொண்டல் அனைய வண்மையாலேயே -)

————————————————————————————–

இவர்கள் இப்படி தங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய –
இவர்களுக்காக கிருஷ்ணனாவது -ராமன் ஆவதாக கொண்டு
அதி ஸூ குமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –

(த்ரிவிக்ரமன் ராமன் கிருஷ்ண -மூன்று அவதாரங்களும் திருப்பாவையில் போல் முன் பாசுரத்திலும் -இப் பாசுரத்திலும் மூன்றும் உண்டே-அருகில் உள்ள அவதாரமான கிருஷ்ணாவதாரம் சொல்லி ராமாவதாரம் –
தேஹ போஷணம் பண்ணும் சம்சாரிகளுக்காகவாச இப்படி அவதாரம் செய்வது -என்கிறார்-இப்படி இரண்டு சங்கதி )

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண் பள்ளி கொள்ள —தரையிலே பள்ளி கொண்ட தலை சயனப்பெருமாளை அனுசந்தித்து என்றும்
பெருமாள் தரையிலே பள்ளி கொண்டதுவும் என்றதுவாம்

கொடிதான யுத்தத்திலே எதிரிகள் விடுகிற அம்புகள் தன் மேலே படும்படி உடம்புக்கு ஈடு கொடாமல் -சாரதியாய்க் கொண்டு
அர்ஜுனன் சொன்ன இடத்திலே தேரை நடத்திக் கொண்டு திருமேனி அலசும்படி இதஸ் தத்ஸ சஞ்சரித்ததுவும்(சித்திரத்தேர் வலவா -மாயப்போர் தேர்ப்பாகனாய் )

வன வாஸோ மஹோதய -என்று
சொல்லும்படி உகப்புடன் காட்டிலே சஞ்சரித்துத் திரிகிற அன்று மாயா மிருகத்தின் பின்னே போய்
நித்யம் ப்ராணசமையான பிராட்டியைப் பிரிந்து அலைச்சல் பட்டதும் –

அதி கடினமான பூமியிடத்திலே பள்ளி கொண்டு அருள
ஆதரித்ததுவுமான இவ்வோ செயல்கள் எல்லாம்

மென்மை குளிர்த்தி நாற்றங்களை பிரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டு
அருளக் கடவ அதி ஸூகுமாரனான தனக்குச் சால அழகியதாய் இருந்தன என்று வயிறு பிடிக்கிறார் –

கண் பள்ளி கொள்ள -என்றது(கண் வளர்ந்த என்ற அர்த்தத்தில் இல்லையாய் )
கண் -என்று இடமாய் –
தரைக் கிடை கிடக்க என்றபடி –

(தேர் கடாவி –
ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மனஸ் ப்ரக்ரஹ மேவ ச
இந்திரியாணி ஹயாநா ஹுர் விஷயாம்ஸ் தே ஷு கோசரான் –கடவல்லி -1-3-34-
அனைவரையும் நடத்தி செல்பவன் அன்றோ இங்கு ஒரு ரதிக்கு அடங்கி சாரதி யாகிறேனே

ராமாவதாரத்தில்
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே
ராஜ்ஜியம் வா வன வாஸோ வா வன வாஸோ மஹோதய –ஆரண்ய 2-29-
வனவாசமமே அரசாள்வதை விட சிறந்ததாகும் என்றானே
மேலும் பிராட்டியைப் பிரிந்து
ராஜ்யாத் ப்ரம்சோ வன வாஸ ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்த ஹேதபி பாவகம் -ஆரண்ய -67-24-
இப்படி வந்த துன்பங்கள் எல்லாம் நெருப்பையும் எரிக்கும்படி அன்றோ)

———————————————————————————

இப்படி நம்மைப் பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார் –

(பர கத ஸ்வீ காரம் அருளிச் செய்ய வந்த பாசுரம்)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–பொருந்தி அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருந்தாலும்–யானே என்னை அறியகில்லாத -அடிமைப்பட்டது -சேஷத்வம் -ஆத்மாவை சேஷத்வமே என்று ஆதரிக்கும்
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி போல்-
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்-சொத்தை தேடி ஸ்வாமி வந்த அளவிலே
மாலை–அப்பெருமானை-மால் -ஆஸ்ரித வ்யாமோஹம் -பித்தன்–மால் பெரியவன் கருமை -அழகன் -பாலைக் குடிக்க காலைப்பிடிக்க வேண்டுமோ –
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;-இத்தால் ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது -அதிகாரி விசேஷணம் இது –
(இவனுக்கு -யானே என்னை அறிய கில்லாமல் இருந்தாலும் -இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்–ந்யாஸ இதி ப்ரஹ்ம -சரணாகதி பிரபத்தி செயல் அல்ல -அவனே -ஈஸ்வரனே உபாயம் என்னும் திட அத்யவசாயம் போஜனத்துக்கு ஸூத்து போல் பசி போல்-வைப்பது ஆம் -இதுவே பொருத்தம் -பல அனுபவ யோக்யதா ஆபத்வம்-பசி போல் விலக்காமை -வைப்பதாம் -என்கிறது )
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.)

ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மர-என்று
எம்பெருமானுக்கு சேஷித்வம் கூறப் பட்டால் போலே
தனக்கு சேஷத்வம் கூறப் பட்டது என்னும் இடத்தை
பிராமண பிரசித்தி யாலும் –
ஆச்சார்ய சேவையாலும்
தான் உள்ளபடி அறிய மாட்டாதவனாய் இருந்தானேயாகிலும் –

நம் உடைமையை நாமே பெற வேணும் -என்று மேல் விழுகிற வியாமுக்தனானவனை –
திரு வாணை இட்டுப் புகாத படி தடுக்கை யன்றிக்கே மனசிலே வந்து
சேரத் தக்கதாகத் தான் பொருந்தி இடம் கொடுத்து வைத்துக் கொள்ளுவது –

இத் தலையிலே இவ்வளவு ருசி மாத்திரம் உண்டானால்
விரோதியைப் போக்கித் தன்னைத் தருகை அவனுடைய பரம் இறே —
அது எங்கனே என்னில் –

காடு எழுந்து கிடக்கிற அதி கடினமான திடரை-
வருகிற வர்ஷ ஜலம் புறம்பு போகாதே தடை யற வந்து புகுரும்படி
ஏரியாம் பிரகாரம் யத்தனித்து வெட்டுவிக்கும் இத்தனை ஒழியப் பின்னை வர்ஷத்தைப் பெய்விப்பார் ஆர்
அதுக்கு கடவனான பர்ஜன்யன் அன்றோ –

ஏரி வர்ஷத்தை உண்டாக்கிக் கொள்ளும் அன்று அன்றோ
பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளல் ஆவது
ஆன பின்பு இத் தலையில் விலக்காமையே பற்றாசாகத் தானே
விரோதியைப் போக்கி
ப்ராப்தியைப் பண்ணித் தரும் என்றபடி –

(ஸ்வீ காரம் -ஏற்றல் -அவன் இடம் இருப்பது பர கத ஸ்வீ காரம் -நம்மிடம் இருப்பது ஸ்வ கத ஸ்வீ காரம்-குரங்கு குரங்குக்குட்டி பூனை பூனைக்குட்டி –
புல் மண்டி இருக்கும் காட்டுப் போல் மனஸ்ஸூ -காம க்ரோதாதிகளால் மண்டி இருப்பதை மாற்றுவதும் அவன் கிருபையால் தானே முடியும் )

அங்கன் அன்றிக்கே —
மனத்தடையே வைப்பதால் மாலை –
அவன் சேஷி தான் சேஷம் என்னும் இடத்தை சேதனன் தான் அறிய மாட்டானே யாகிலும் –
யத்ய தாசரதி ஸ்ரேஷ்டம்-என்கிறபடியே
தனக்கு ருசி இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
செய்வார் செய் முறை பாடு காண்டாகிலும் சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைத்துக் கொள்வது –

இவ்வளவு கொண்டே
அவன் தானே விரோதியையும் போக்கி ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கும் –
அதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறது –

வனத்திடரை -இத்யாதி –
காட்டுத் திடரை ஏரியாம் படி கல்லுகை ஒழிய
மற்றும் மழை பெய்விப்பார் ஆர் -என்று யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
மாலை மனத்திடை வைப்பதாம்-சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே கொண்டு வந்து
சர்வ சக்தி வையானோ என்று ஷேபம் -( வெறுப்பில்-உன்னால் செய்யப்போமோ மனத்தடைய வந்தவனே வைப்பான் அன்றோ )

(அதுக்கு த்ருஷ்டாந்தத்தில் விளக்கி -அனைத்துக்கும் அந்தராத்மாவான அவனே வெட்டுவித்தகு -மழை பெய்வித்து -செய்து அருள்குபவன் அன்றோ)

வனத்திடரை இத்யாதி –
மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை இடுவித்து மழை பெய்விப்பானும்
அவன் தானே யன்றோ என்கிறார் –

அப்படியே மனத்திடரில்-
அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி ருசி உண்டாக்குவானும் –
தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும்
அவனே யன்றோ என்னவுமாம் —

முற்பட்ட யோஜனை திருமலை நம்பியது –
இரண்டாம் யோஜனை ஆழ்வானது-

(ருசியை விளைவிப்பானும் அவனே -கூரத்தாழ்வான் நிர்வாஹம் -அஹம் ஹி ஸர்வ யஞ்ஞானாம்–போக்தா ச பிரபு -செய்யும் கிரிசைகளும் – செய்வார்களைச் செய்வானும் யானே என்னும் -இத்யாதி)

(ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் –திருக்குறுங்குடியில்
ருசி விவசர்க்கு -உதார குணம் -பாதத்தையே சரண் ஆக்கி அருளுபவர் -பிராப்தி வானமா மலை
நடுவில் கடல் ஞாலம் -)

(அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்
இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்
ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்–என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே –

மனத்தடைய –மேல் விழும் முயற்சி மாலது அவனது-பக்தி உழவன் அன்றோ
வைப்பதாம் –இதுவே நமது கர்தவ்யம்

அருள் மழையைப் பொழிய வரும் போது -அஞ்ஞானம் கர்மா வாசனை போன்ற புதர்களை அழித்து
ருசியாகிய விதையை விதைத்து
அத்தை பேர் அமர் காதல் பின் நின்ற காதல் -கடல் புரைய -அதனிலும் பெரிய அவாவாக்க தனது கல்யாண குணங்களாகிற மழையைப் பொழிந்து
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் பழம் புனத்து -நான்முகன் -23-
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்துவம் ந து குணவ் -ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-உபாயத்வமும் உபேயாத்வமும் உனக்கு ஸ்வரூப நிரூபனம்
மற்றவை போல் நிரூபித்த ஸ்வரூப குணங்கள் அல்ல -ஞான பலாதி ஆறு குணங்களும் ஸ்வரூப நிரூபக குணங்கள்
பெரிய பெருமாளை நிரூபிக்கவே உபாயத்வமும் உபேயத்வமும் – என்கிறார் பட்டர் -)

———————————————————————————

இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆஸ்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓரு கலா மாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆஸ்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு யாவர்?

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனான இந்திரனும் –
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தை வாசஸ் ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மாவும் –
நேர் கொடு நேரே சென்று கிட்ட மாட்டாமல் பாடே பக்கே நின்று திருவடிகளிலே பின்னாபிமானராய் (பக்ந அபிமானராய் )விழுந்து
ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான ஸுந்த்ர்யாதி சீலாதி குண சேஷ்டிதங்கள் ஆகிற பிரகாரங்களை யுடையனாய் –
சர்வாதிகனானவனை

(விரோதி நிரசன சாமர்த்தியம் குணம் -கேசி அழித்தவன்-சேஷ்டிதம்
சர்வ ஆதாரன் குணம் – -கோவர்த்தந தாரி -சேஷ்டிதம் போல்)

கலா மாத்ர மான சந்திரனை தரித்து இருக்கிற சிவந்த ஜடையை யுடையனான ருத்ரன்
தன் ஹிருதயத்திலே அனுசந்தித்திக் கொண்டு இருந்த துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து –
அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆன பின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாஸ்ரயணீயனாய் இருப்பர் –

(அபிதஸ் பாவ கோபமம் -அயோத்யா -99-26- சுற்றிலும் தீயைப் போல அணுக ஒண்ணாதவன்
கடிக்கமலத்துள் இருந்தும் காண் கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56-
பின் சென்று -நேராக விழிக்க ஒண்ணாமையால் என்றும்
நெஞ்சிலே உள்ள துற அகங்காரத்தை விட்டுப் பின் பற்றி அனுவர்த்தித்து -என்றுமாம்
ப்ரஹ்மாதி தேவர்களும் இவனை ஆஸ்ரயித்து குறைகள் தீரப் பெற்றார்கள் -எனவே
இவனைப் போல் ஆஸ்ரயிக்கத் தக்கவர் வேறே யார் என்று கீழோடே அந்வயம்)

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஸ்தோத்ர ரத்னம் -13

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

————————————————————————————————————–

இப்படி ஸமாஸ்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் (ரக்ஷிக்கும்)ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம்–பூமி முதலிய லோகங்களை
கொண்டது–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒரு காலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திரு வயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்-வான் -பரமாகாசம் -லக்ஷனையால் -நித்ய ஸூரிகள் மநோ ரதங்களைக் கடந்தவன் என்றுமாம்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்-பிராப்தம் -சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -அன்றோ எனவே வகுத்ததே

ஆகாசத்தை அளவிடிலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -இவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இடத்தை
கோள் சொல்லித் தருகிற தாமரை போன்ற கண் அழகை யுடையனான சர்வேஸ்வரன் –

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

நம்முடைமையை நாமே நம்மை
அழிய மாறி ரஷிக்கை நமக்கு ஸ்வரூப பிராப்தம் அன்றோ -என்று நியாயமாகச் செய்த செயல்கள் இருந்த படி –

ஸ்ரீ வாமனனாய் தன்னை அழிய மாறி அர்த்தித்து பூமி முதலான லோகத்தை வாங்கிக் கொண்டதும் –

மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ ரூபியாய்க் கொண்டு அழகிய மிடுக்கை யுடையனான ஹிரண்யனுடைய
மார்விலே -திரு உகிரை நாட்டிப் பிளந்து பொகட்டதுவும்

ஒரு நாளிலே தான் அளந்து கொண்ட சப்த லோகங்களையும் தர தம விபாகம் பாராதே திரு வயிற்றிலே எடுத்து வைத்து
நோக்கியும் செய்த செயல்கள் இவைகள் கிடீர்

வழக்கு -நியாயம் -பிராப்தம் -என்றபடி –

பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே
தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –
உடையவன் உடமையை ரஷிக்கை பிராப்தம் இறே –

(சேஷ பூதனுக்கு கைங்கர்யம் வகுத்தது போல் சேஷிக்கு ரக்ஷணமே பிராப்தம் அன்றோ
அவனுக்கு பரீஷை களே -திரௌபதி கஜேந்திரன் விபீஷணன் -பிரகலாதன் விருத்தாந்தம்)

(தாமரைக் கண் மால் –
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஸர்வ ஸ்வாமித்வத்தையும் கோட் சொல்லும் திருக்கண்கள்
வான் கடந்தான் –
அங்குள்ள நித்ய ஸூ ரிகளாலும் அளவிட முடியாதபடி இருப்பவன்
ஒரு நாள் வான் கடந்தான்
உலகு அளந்த வ்ருத்தாந்தம் என்றும் கொள்ளலாம்
அடியார்களுக்காகச் செய்தவையானாலும் தனது காரியமாகவே உகந்து செய்து அருளினான்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராக்ஷ ஸே ந்தரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோத ஹ
உடைமையை ரக்ஷிப்பது உடையவனுக்கே அன்றோ ப்ராப்தம்)

———————————————————————————-

நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-(உனது திருமேனி உன்னதே அல்லவே -பக்தா நாம் ப்ரகாஸதே அன்றோ )

(கொண்ட பெண்டிர் மக்களே -உத்தேச்யம் என்று முடித்து -அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர் த்யாஜ்யம் என்று மாற்றி அருளிச் செய்தது போல்
வழக்கு பிராப்தம் என்று முடித்து அடுத்த பாசுரத்தில் தகுந்தது அல்லவே என்கிறார்)

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது-இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் )
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

பெரிய பிராட்டியார் -என் புகுகிறதோ -என்று வயிறு எரிந்து-
மங்களாந் யபி தத்யுஷீ –என்று (சீதாப்பிராட்டி திக் பாலர்கள் ரக்ஷிக்க -மங்களா ஸாஸனம் )மங்களா சாசனம் பண்ணி
நோக்க வேண்டும் படி நிரதிசய ஸூ குமாரமானவனே –

இப்படி இருக்கிற நீ சிறு பிள்ளையாய்க் கொண்டு அதி ஸூகுமாரமான திருவடிகளாலே அதி பிரபலமான சகடத்தை
உதைத்து முறித்து விழ விட்டாய் –
பிரானே இது பிராப்தம் அன்று கிடாய்

ரக்ஷகனான நமக்கு விரோதிகளை போக்கி நோக்குகை பிராப்தம் அன்றோ என்று
இந்த ஸாஹஸ பிரவ்ருத்தி யிலே அனுதாபம் கூட அற்று இருக்கிற நீ புத்தி பண்ண வேண்டா –

அதுக்கு மேலே
அஸூரனான குழக் கன்றைக் கொண்டு அஸூர வடிவாயத் தீதான
விளாவின் காய்க்கு எறிந்த இந்த தீம்பான செயலானது பூமியிலே பிரகாசிக்கும் படியாக தப்பாகச் செய்தாய் –

அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் –
விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

(பிறந்த எழு திங்களில் –சேடன் -திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் -மலை போல் ஓடும் சகடத்தை -பெரிய திருமொழி -10-7-9-இங்கும் திருமாலே –
தலை நீர்ப்பாட்டிலே இருந்து சர்வேஸ்வரனுடைய பெருமை எல்லாம் அறியும் பிராட்டியே அஸ்தானே பய சங்கையாலே வயிறு பிடித்தாள்
முலை வரவு தாழ்த்து உதைத்தாய் போலும் -பொன்றச் சகடம் உத்தரித்தாய் புகழ் போற்றி என்ற அநந்தரம்
அதிலும் சாஹசம் மிக்க -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
பழி -அவன் புகழ் என்று எண்ணி இருப்பதை பய சங்கையால் பழி என்கிறார் –

மார்பில் கிடக்கிறவர்கள் -மண்ணில் இருப்பவர்கள் வாசி இல்லாமல் இருவரும் தவிக்கும் படி செய்த செயல்கள் அன்றோ -திருப்பாவை வியாக்யானத்தில்
கிருஷ்ணாவதாரத்தில் மாதா பிதாக்கள் சாது இடையர்களாய்
ஊர் இடைச்சேரியாய்
கம்ஸாதிகள் எதிரிகளாய்
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்து எழும் பூண்டுகள் எல்லாம் அஸூரர்களாய்
தமையன் ஒரு கணம் தப்பில் தான் பாம்பின் வாயில் விழும் தீம்பனாய்
பூதநாதிகளால் பிறந்த அபாயங்களை ஓர் எல்லை இல்லாமையால் மங்களா சாசனம் ஒழியக்
காவல் இல்லாமையாலே ஆழ்வார்கள் கண்ணனுக்கு மங்களா ஸாஸனம் செய்வதிலேயே மண்டி இருப்பர்கள் என்பர் பட்டர் )

————————————————————————————————-

பகவத் ஸமாஸ்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு –
முடியாத தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற
க்ருதக்ருத்யர் -என்கிறார் –

(ஸ்ரீ பாஷ்யம் -கற்று -மாட்டிற்றிலன் ஆகில் -கீழே கீழே போனால் போல் -எல்லா படிகளில் உள்ளாருக்கும் ஒரே பூர்ண பலன்)

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு -ஸாஸ்த்ர வழியில் பூர்ணமாக -ஆஸ்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்-அத்வேஷம் ஆபி முக்கியம் பாகவத சமாஹம் போன்ற காரணங்கள்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்வராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).ஆச்சர்யம் என்றுமாம்

தங்கள் அறியாது இருக்கப் பிறர் அறிந்து ஏறிடும் அபகீர்த்தியையும்
அறிந்து அனுஷ்ட்டிக்கப் பட்ட பர ஹிம்சாதி ரூபமான பாபத்தையும் கை கழிய விட்டு
சர்வ காலமும் யுன்னை ஸாஸ்திரங்களில் சொல்லுகிற கட்டளையிலே வழி பட்டு நின்று
போக ரூபமாக ஆஸ்ரயிக்குமவர்களும் -(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

நாராயண சப்த வாசகன் ஆகையால் சர்வ ரக்ஷகனாய் இருக்கிற உன்னுடைய திரு நாமங்களை
விச்சேதம் இல்லாத படி ப்ரேம யுக்தராய்க் கொண்டு அழகிதாக அறிந்து ப்ரேம பரவசராய்க் கொண்டு
அழகிதாக ஏத்துகைக்கு ஹேதுக்களான ப்ரேமம் –
தத் ஹேதுவான உத் (மிகுதியான)பஜனம் –
தந்நிதானமான ருசி –
தந்நிதானமான ஸூ ஹ்ருதம்
அதுக்கு அடியான உன் கடாக்ஷம் -என்றால் போலே சொல்லுகிற
இவற்றைத் தாங்கள் பெற்று உடையராய் இருக்குமவர்களான
இவ் விரண்டு அதிகாரிகளும் ஸூகோத்தரராய் வாழப் பெறுவார்கள்

மாதோ என்கிற இது
ஓர் அவ்யயமாய் –
இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

(ராஜ வித்யா –ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2-பக்தி யோகம் அனுஷ்ட்டிக்கவே இனியதாய் இருக்கும்
வாழ்வராம் -நல்ல பாதத்தால் மனை வாழ்வார் கொண்டபெண்டிர் மக்களே -திருவாய் -8-10-11-
இங்கும் வாழ்ச்சி பெற்று பின்பு பேர் இன்பமும் பெறப் பெறுவர்
ந ஸூ கால் லப்யதே ஸூகம் -இன்பத்துக்குப் பின் எப்போதுமே இன்பமே உண்டாகும் என்பது இல்லை என்னும் லௌகிக விஷயம் போல் அல்லவே பகவத் விஷயம்
மாதோ -ஆச்சார்யம் -ஸர்வ காலமும் ஆஸ்ரயிப்பார் பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயிக்கத் தொடங்கி இருப்பாராம் பெறும்படி இருப்பதே –
பரிபூர்ணமாக ஆஸ்ரயித்தவர்களைப் போலே இவர்களும் பேறு பெறுவது நிச்சயமே
நேஹாபி க்ரம நாஸோஸ்தி –ஸ்ரீ கீதை -2-40-இட்ட படை கற் படை என்று கண்ணன் தானே அருளிச் செய்தான் அன்றோ –
காரணங்கள் என்று காரண பரம்பரைகளைச் சொன்னவாறு –
தாரணங்கள் பாட பேதம் -த்ருதி என்னும் மன உறுதியை யுடையவர் அவனை அடைவது நிச்சயம் என்றவாறு –
நாயமாத்மா பல ஹீநேந லப்யா -மநோ பலம் அற்றவனால் இவன் அடையப்பட மாட்டான் என்பதையே
தாரணங்கள் தாமுடையார் தாம் வாழ்வாராம் -என்று அந்வய முகத்தால் அருளிச் செய்கிறார் -)

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே —
ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

தநிஷ்டா-அவிட்டம்–கௌமோதகீ -ஆனந்தம் கொடுக்கும் கதாம்சம் –

துலா தநிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே புல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம்சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

எவர் ஒருவர் பரம புருஷனுக்கு ஞானச் சுடர் விளக்கை ஏற்றினாரோ
கடல் மல்லையின் தலைவராய் -மாதவீ-குருக்கத்திப் பூவில் திரு அவதரித்து அருளினை பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

———

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

———-

மூவரும் அடுத்த அடுத்த திரு நக்ஷத்திரத்தில் திரு அவதாரம்
எங்கும் தீர்த்தாரராய் திரிந்து -திருக்கோவிலூரில் -நெருக்கு உகந்த மிதுனம்
பா மாலை பாடி கைங்கர்யம்
மூவரும் பூவில் அவதாரம்
கார்ய காரண பாவம் மூவருக்கும் -மூவருக்கும் -பூ காய் பழம் போல்
பர பக்தி -பர ஞானம் -பரம பக்தி
ஞான -தர்சன -பிராப்தி -ஞானம் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும் -கீதை
மூன்றுமே மூவருக்கும் உண்டு –
பூவே காயாகி பழம் -உலகில் ஒன்றே தான் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே -மூவரும் கூடவே இருந்து -மூன்று மநோ நிலைகளும் உண்டு –

உபய விபூதிநாதன் சர்வேஸ்வரன் -அடையாளம் மட்டும் சொல்லி –
அடுத்தவர் -நாரணற்கு -என்று வியக்தமாகக் காட்டி அருளி –
அடுத்தவர் -மிதுனம் -ஸ்ரீ யபதி -கண்டு பாடி அருளினார்
நம்மாழ்வார் இவற்றை விளக்காகக் கொண்டு -முதல் பத்தில் உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
உபய விபூதி நாதன் ஸர்வேஸ்வரன் என்று காட்டி அருளி
அடுத்த பதிகம் வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே என்று அருளி
மலர்மகள் விரும்பும் நம் திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பதிகத்தில் மிதுனம் -ஸ்ரீ யபதி காட்டி அருளினார்
திருமழிசை ஆழ்வார் -உறை இடாமல் -திரு வில்லாத் தேவரை தேறேல் மின் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -ஆழ்வார்கள் வரிசை
அத்புதம் பாலகம் சங்கு கதை காட்டிய ஸ்லோகம் உண்டே-

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – இராமானுஜ நூற்றந்தாதி -9-

இதயத்து-ஸூத்தமான மனஸ்ஸூ தானே -இறைவனைக் காணும் கருவி –
பாபங்கள் காமம் க்ரோதம் -இந்திரியாணி -மனம் புத்தி -ஞானம் மூன்றையும் தாக்கும்
ஞான தீபேண பாஸ்கர -ஆதித்ய வத்-அஞ்ஞானம் இருளை நாசமாக்கி -உள்ளத்தில் இருந்து ஒளி விளக்கு ஏற்றி –
ஆதித்யவது-முதல்திருவந்தாதி – ஞானம்-இரண்டாவது – – ப்ரகாசயத்தி -மூன்றாவது -தத் பரம் -கீதை மூன்று சப்தங்கள்
கீதாச்சார்யன் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
தேஷாம் -அங்கு சொன்னது முதல் ஆழ்வார்களையே –

இராமானுசன் புகழோதும் நல்லோர்-நம்மாழ்வார் நாதமுனிகள் முற்பட்டவரையும் குறிக்கும்
மறை -சம்ஸ்க்ருத -கூரத்தாழ்வான்
மறை -அருளிச் செயல் -பிள்ளான் முதலோர்-

——————————————————————————————

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

என் பிறவி தீர இன்னமுதா-இனிய அமுதம் -சாகா அம்ருதம் போல் அல்லவே -மீளாத பேர் இன்பம் அளிக்குமே
அன்பே தகழி யளித்தானை –
நன் புகழ் சேர்-நல்ல கீர்த்தி சேர்ந்த -பெருமாள் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சேர்ந்த
சீதத்தார் முத்துக்கள் சேரும் -குளிர்ந்த -கடல் முத்துக்கள் தண்ணீர் ஸ்பர்சம் –
கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் -ஸ்ப்ருஹணீயம் -விரும்பத்தக்க அழகிய திருவடிகள் -பாவன போக்யத்வங்கள் இரண்டும் உண்டே –
இறைஞ்சினேன்-முக் கரணங்களாலும் ஸ்துதித்தேன்

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி (முக்கரணங்களாலும் )பஜித்தேன் என்கிறது –

(திருமங்கை ஆழ்வார் பாகவத சேஷத்வம் அருளிச் செய்த நன்மை
பொன் முத்துக்கள் சேரும் –பெருமாளும் – முக்த பிராயரும் சேர்
கடல் மல்லை பூதத்தார் -கடல் மல்லை தலை சயனப்பெருமாள் -சேஷி சேஷன் இருவருக்கும் நிரூபகமான நன்மை
கடல் வண்ணன் பூதங்கள் -மலிய-கலி கெடுமே )

இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தாருமாய் –
நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

என் பிறவி தீர இறைஞ்சினேன்
என் பிறவி யாவது -இவர் தாம் -இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது -66-என்று அருளிச் செய்தபடியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(திருவாய் -2-6-8-)
பல் பிறவியில் படிந்து (படிக்கின்ற யான் -திருவாய் -3-2-2-)
பிறவிப்  பெரும் கடலிலே (பெரிய திருமொழி -8-9-8-)
உடலாழி பிறப்பிலே (திருவாய் -1-4-10)புக்கு உழலுகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள்(புனரபி ஜனநம் புனரபி மரணம் என்று ) தீரும்படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னம் கழலை இறைஞ்சினேன் என்கிறது
இறைஞ்சுதல் -பஜிக்கை -அதாவது சேவிக்கை என்றபடி (முக்கரணங்களாலும் வணங்குகை )

பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் களாலும் முடிந்து -(மூன்றாம் திருவந்தாதி -88)என்னுமா போலே
பூதத்தாழ்வார் பொன்னம் கழற்கு ஆன ஜன்மம் (அத்தாள்களை நெஞ்சத்து உறைத்து இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்புக்கள் )கழலும் இறே

இனி அவர் உபகாரத்வ வைபவம் சொல்லுகிறது-

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது-

(அளிக்கை யாவது கொடுக்கை -அதாவது
விலை மதிப்பற்ற மாணிக்கத்தைக் கூவிக் கொடுப்பாரைப் போலே
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -39-என்று மேல் விழுந்து உபகரிக்கை)

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-(இரண்டாம் திருவந்தாதி -85)(தொண்டர்க்கு அமுது என்ன சொன் மாலைகள் சொன்னேன் -திருவாய் -9-4-9 )
இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் (14)-என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)- என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின்(39) -என்னும்படி உபகரிக்கை –

அன்றிக்கே
கொடுக்கை –

கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே-நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்-என்று
அதாவது -ஸ்லாக்யமான யஸஸ்ஸூ சேரும் ஊருமாய் –
சீதள அதிசய முக்தாமணிகள் சேரும்படியாய் இருக்குமூர் -சீதக் கடலில் பிறந்த முக்தாதிகளும் சீதளமாய் இருக்கும் இறே
சீதக்கடல் -(பெரியாழ்வார் -1-2-1)என்று குளிர்த்தி நிறைந்த கடலில் தோன்றும் முத்துக்கள் சீதத்தார் முத்துக்களாய் இருக்கும் அன்றோ

நன் புகழ் ஆவது –
(பெருமாள் -புண்டரீக மஹ ரிஷிகள் -ஆழ்வார் -ஆச்சார்யர்கள் சேரும் திவ்ய தேசம் )
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் யசஸ் சைக பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன் ராமபிரான் கிஷ்கிந்தா -15-19-)
சேரும் கொடை புகழ் எல்லை இலானை(திருவாய் -3-9-7)
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே(திருவாய் -3-3-2)
எண்ணிறந்த புகழினானை (பெரிய திருமொழி -2-5-8) -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-(தல சயனப் பெருமாளையும் )
எப் புவியும் பேசும் புகழ் (உபதேச ரத்ன மாலை -6)பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் – உண்டான முத்துக்கள்

(சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை (திருவாய் -5-8-9-)என்கிறபடியே
முத்துக்களும்
மணிகளும்
ஸ்வாபதேசத்தில்
ஞானச் சிறப்பாலே உலகம் எங்கும் ஒளி வீசும் பாகவத உத்தமர்களை குறிக்கின்றன
சம தமாதி குணங்களை யுடையவராகையாலே அவர்களையும் சீதத்தார் முத்துக்கள் என்னலாம்
சீதத்தார் முத்துக்கள் சேரும் -இந்நிலத்திலே உண்டான முத்துக்கள்)

இதன் கரையிலே
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை(மூன்றாம் திருவந்தாதி -16)
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-(திரு நெடும் தாண்டகம் -9)

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –

(சங்கிடம் கொள் முத்து ஒன்றும்-சங்கை இடக்கையில் கொண்ட எம்பெருமான்
சங்கில் முளைத்த முத்து என்றுமாம்
கரை கடந்த முத்தாகிற ஆழ்வார் -இருவரும் சேரும் இடம்)

இக்கரை ஏறி -என்னக் கடவது இறே(அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்திக் கிடந்தேனை உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் -5-3-7))
கரை கண்டார் (திருவாய் -8-3-10)என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்

கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லை (யுள் கிடந்தாய் -பெரிய திருமொழி-2-5-8 ) இறே
மா மல்லை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது

(திருமங்கை மன்னன் அருளிச் செய்த பெருமையால் இவரும் தமர் உள்ளும் மா மல்லை (70 )-என்று ஈடுபட்டார் )

கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -(பெரிய திருமொழி -2-6-5 )என்று (கச்சியையும் கடல் மல்லையையும் )அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

(பொய்கையார் பூதத்தார் -அடுத்து அடுத்து அவதாரம் -அவன் படுகாடு கிடந்தது இவர்களை அவதரிப்பித்து நம்மை அடைய கோர மா தவம் செய்கிறான்)

கடல் மல்லை  பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதம் -(திருவாய் -5-2-4)
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -(திரு விருத்தம் -79)என்னக் கடவது இறே
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் (பெரிய திருமொழி -2-2-10)என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான (பெரிய திருமொழி-11-1-9)புண்டரீகர் –
வண்டு கிண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு (பெருமாள் திரு மொழி -2-8)சாத்தக் கிடந்த இடம் இறே

கடல் மலை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசி அவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் (74-புண்டரீகர் பூ மாலை சூட்ட )இறே –
அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -( பெரிய திருமொழி -2-6-4)என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி (கண்ணி-2)-என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி (இராமானுச -10 )-என்னக் கடவது இறே

பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

இத்தால்
பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி நாதனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய்
பரபக்தி தசா பன்னமான ஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே
ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும்(வாய் அவனை அன்றி வாழ்த்தாது இத்யாதியால் )
சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும் அவன் திருவடிகளே என்னும் இடத்தையும்
அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் பூதத்தார் –
வையம் தகளியில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது
பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து
அனுசந்தித்துத்
தாம் அனுபவித்த பிரகாரத்தை நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி
நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக
ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –

இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ் விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக
ப்ரத்யக் வஸ்துவான ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பர பக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை தலையெடுத்து –
அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் –

1-பர ஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும் படியே பர பக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு –

2-பர பக்தி முற்றிப் பக்வமானதாய் -பரம பக்தி சிரஸிகமான (தலையாகக் கொண்ட )பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு

3-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றை யவருக்கு –

பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –

பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பர பக்தி–
சாஷாத் காரம் பர ஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரம பக்தி –

சம்ஸ்லேஷத்தில் ஸூகித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பர பக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று
அருளிச் செய்யும் படி –

நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் –
இவை பிராமாணிகருக்கு முக்தி அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –

இனி –
பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வ பாவம் மாம் குருஷ்வ (சரணாகதி கத்யம் )-என்று பிராமாணிகருக்கு
அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் -(இவை உபாயம் என்றால் அவை அங்கே வேண்டாமே
அங்கும் பிரார்த்திப்பது – கைங்கர்யம் தூண்ட ப்ராப்ய ருசி வர்த்திக்க பக்தி வேண்டுமே )

ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –

ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -54-என்று இறே கீதாச்சார்யன் வார்த்தை

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

ஸம் ஞ்ஞாயதே சந் த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஞானம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –

——————————————————————————————-

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக
நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி
அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.-பேர் ஊர் சொல்லிக் கொள்ளாத ஆழ்வார் அன்றோ இவர்  —

அன்பே  தகளி ஆ (பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஞானம் என்றே சொல்லலாம் படி ஞான ஸ்வரூபமான  ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அகல் -அன்பு தொடக்க நிலை பக்தி ஆதாரம் -அதில் தான் பர பக்தி -அது வளர்ந்து பர ஞானம் ஆக வேண்டுமே

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பர பக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது –
மேல் சொல்லுகிற நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று
பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த ப்ரேம அவஸ்தைகளுக்கு
வாய்த் தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பர ஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –

(நன்பு -ஞானம் -நன்மை )–ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால்
அத்யந்த விலக்ஷணமான ஆத்ம வஸ்துவானது பகவத் குண ஆஸ்வாத ரசத்தாலே-
த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
(ஞானத் தமிழ் புரிந்த நான் ஏற்றினேன் )பகவத் தத்வ யாதாத்ம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை
லோக உபகாரகமாகப் பண்ணின நான்-
சர்வ சேஷியான நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் –
பேசித் தலைக் கட்டி யல்லது தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் –
சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –

(பகவத் குணாம்ருதமான மதுவைப் பருகி -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –பெரிய திருவந்தாதி -34- என்னும் நிலைக்கும் மேலே சென்று
எரிக்க முடியாத ஆத்மா நீர்ப்பண்டமானதே –
ஆர்வமான நெய்யும் உருகிற்று
சிந்தையும் உருகிற்று
அனைத்துக்கும் ஆதாரமான ஆத்மாவும் உருகிற்று –
பகவத் குணங்கள் படுத்தும் பாடு இது –
நாரணற்கு -விளக்கு ஏற்றத் தகுந்தவனுக்கு -ஸமஸ்த ஸகல பதார்த்தங்களையும் தன்னுள் கொண்டவனை
ரத்தினங்கள் அடங்கிய பெட்டியை விளக்கு ஏற்றிக் கண்டு அனுபவிப்பாரைப் போலே அனுபவித்தேன்
ஞானத்தமிழ் -பகவானின் யாதாத்ம்ய அறிவை விளைக்கும் -அனைவரும் கற்கலாம் படியான அமுதினிலும் இனிய தமிழ் நூல்
அம் தமிழ் இன்பப்பாவினை அவ்வடமொழியை -பெருமாள் -1-4-என்றும்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி -திரு நெடும் தாண்டகம் -4-
புரிந்த -விரும்பிச் செய்கை -தனது பேறாக உபகரிக்கை –
புரிந்த -உபக்ரமத்திலேயே முடிந்தது போல் -ஸத்ய ஸங்கல்பன் பேசுவிப்பதாலும்
பிரபந்தத்தை முடிக்காமல் நிற்க மாட்டாத தனது ஸ்வ பாவத்தாலும்
இயற்றிய -என்று இறந்த கால பத பிரயோகம் )

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் –
சூடுதற்கு அவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று
பர பக்தியால் உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –

(சூடுதற்கு அவாவு ஆர் உயிர்
சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –
உருகி யுக்க
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச் சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்
நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமானதொரு சங்கத்தையும் பிறப்பித்தது)

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்

பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே –
அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –

பரபக்திக்கு
ஆவல் -ஸ்ரத்தை ஈரம் ஆகியவை தொடக்க நிலை
அன்பு வேட்கை பேர் அமர் காதல் -முடிந்த நிலை

சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே திருவடியும் –
ஆகையால் பர பக்த்ய அங்குர ரூபமான அன்பே தகளி என்றும் —

அத் தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் –
நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று
ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி விழும்படியான பர ஞான அவஸ்தையை
விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று
பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –

உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று
பர பக்த் யவஸ்தையில்
கரணமான நெஞ்சும் உருகும்

பர ஞான அவஸ்தையில்
கரணமான நெஞ்சும் –
கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

—————————————————————————————

பக்தி பரவசர்களாய்க் கொண்டு அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார் (சததம் கீர்த்த யந்த நித்ய யுக்த -கீதை )

நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர்
பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம்
அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம்
வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -45-

கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும்
பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய்
மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட
ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே-அன்பே உருவான அறிவாலே -பக்தியால் -அறிவும் அன்பும் கலந்தால் பக்தி ஆகுமே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களாயும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

(இங்கே இருக்கும் பொழுது திரு நாமங்களை முறை கெட்டு பிதற்ற– முறையுடன் சொல்லும் -நீதி வானவர்-கோஷ்ட்டியில் ஒரு கோவையாக்குமே-கண்ட பேர் முன் பணியாத அமரர் நித்யர் )

வகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் –
அசாதாரணமான திரு நாமங்களையும்

(பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே )
ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல
உள்ளபடி அறிந்து -(இதுவே நன்கு உணர்தல் )
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய்-3-5-8-என்கிறபடியே
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி
தலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –

(சாற்றினால் –
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்)

பரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான
ஸூரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –

நமக்கு நிருபாதிக பந்துக்களாய் –
நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே
கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே
நித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேயாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு
நிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் –

(நங்கள் அமரர் -ஸ்வா பாவிக ஸம்பந்தம் உடையவர்
பணி அமரர் -கைங்கர்யம் செய்வதையே யாத்ரையாகக் கொண்டவர்
என்பதால் நித்ய ஸூரிகளைச் சொன்னவாறு)

இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே
அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் என்றபடி –

——————————————————————————

அடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் –
பரம பதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

(கீழ்ப் பாட்டின் விவரணமாக இப் பாசுரம் -நல்லமரர் கோமான் நகர் நமக்கு பரிசாகக் கிடைக்கும்
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் -இதுக்கே இப்பலம்-புகப் பெறுவர் போலாம்-என்ன ஆச்சர்யம் )

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

செவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை (விரஜைக்கு )அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே
முற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் –

முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது -தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்
அவனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் –
சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்
காண ஒண்ணாதே என்றும் –
கேட்டே போம் இத்தனையாய் –
நிரவதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு பிரகாசிக்கக் கடவதாய் இருந்து –
பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நாயகனான
சர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –

(கேள்வி நகர்
யந் ந தேவா ந முநயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேஸஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளாலும் கேட்டே போகுமது -காண முடியாதது அன்றோ –

ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யா -பிறந்த குழந்தை நான்முகன் உளறுகிறது -ஜல்பிக்க -யாரும் பார்த்தது இல்லை -கேட்டு உய்க்கும் அனந்தஸாயி -தேசிகன்

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை -பாரதம் -ஆரண்ய -186-18-

நல் அமரர்
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா -அயோத்யா -53-31-என்கிறபடியே
அக்குளத்தில் மீன் போல் க்ஷணம் விஸ்லேஷம் வந்தாலும் சத்தையை இழப்பவர்கள்
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -நித்ய ஸூரிகளே நல் அமரர்கள்
ப்ரபன்னர்களுக்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமல் பரம புருஷார்த்தத்தை தனது பேறாகவே அளிக்கிறான்)

———————————————————————————–

அன்பே தகளி என்று தொடங்கி –
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தாதுமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-(அது பிரகாசம் இங்கு பரிமளம் )

(நகரம் நித்திலம் மணியான மாணிக்கம் வயிரம்
நாள் மலர் -பைம் கமலம் -புற இதழ் -உள் இதழான அல்லி -தாது
ஆழ்வார் திரு உள்ளம்-நெஞ்சம் -ஸ்நேஹம் சங்கமாகிய பற்று -காமம்
விதிப்படி ஸ்வாமி சேஷி அறிந்து பற்றி இனிமை அறிந்து காதல் அபி நேசம் -ரூபக அதிசய யுக்தி )

(ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் நம — பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி பைங்கமல மேந்திப் பணிந்தேன்)

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக் கூடிய திரு மண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புற விதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

பக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை
ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து –
விஸ்வதோ ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகர் -5-8-2-
அந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் ( ஸ்நேஹம் )யுண்டாய் –

(உபமேயத்தை மறைத்து உபமானமாகவே சொல்லுகையாலே ரூபாய் அதிசயித்த யுக்தி -அணி அலங்காரம் ஆகும்)

ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து
சர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே பரிமளிதமாய்-
ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு

(சாதன பக்தி நிஷ்டர்களின் ஸ்நேஹம் -ஸ்வா தந்தர்யமாகிய வெப்பத்துடன் இருக்கும்
இங்கோ பாரதந்தர்யமாகிய தண்மை குளிர்த்தி இருப்பதால் பக்தியின் தொடக்க நிலையான -(இதனாலே புற இதழ் )ஸ்நேஹத்தைக் குளிர்ந்த முத்தாலே கூறுகிறார் -)

ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து (பிராப்தி அறிந்து சங்கம் வருமே -வை லக்ஷண்யம் அறிந்து காமம் வருமே  )இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற
உஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து
இப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான
இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே
உபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு

குளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான (மென்மை நறுமணம் இத்யாதியால் மலராள் ) பெரிய பிராட்டியாரைத்
திரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே
நிர் மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –

நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-
நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –

பைங்கமலம் ஏந்தி -என்று
பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை
அதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –

பக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக –
அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –

(ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து -ஸ்நேஹம் -அடுத்து -சங்கம் -காஜாமம் –
சர்வேஸ்வரன் வகுத்த ஸ்வாமி என்று அனுசந்திக்க சங்கம் ஏற்படும்
அவனது போக்யதையை அனுசந்திக்க காமம் எனப்படும் பக்தி நிலை – ஏற்படும் –
இரண்டும் சேர்ந்து அபி நிவேசம் காதல் ஏற்படும்
பர ஞான பக்தி தசையே நிகர் இல்லா பைம் கமலம்)

நெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது –
கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக -(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ )

(நகர் முத்து மாணிக்கம் வயிரங்களை யுடைத்தால் போலே நெஞ்சில் பக்தியின் முன் நிலைகளை -ஸ்நேஹம் சங்கம் காமம் யுடையதாய் இருக்குமே –
நெஞ்சை நீள் நகரம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தி திவ்ய தேசங்கள் அனைத்துடன் ஸ்ரீ பூமி நீளா தேவிமார்களுடனும் நித்ய ஸூரிகளுடன் புகுந்து
அவை எல்லாம் இளம் கோயில் என்னும் படி பெரிய விசாலமான நகரமாய் இருக்குமே
பக்தி பகவத் அனுபவ உபகரணமாகவும் -தானே ஸ்வயம் பிரயோஜனமாக அனுபவிக்கத் தக்கதாயும் –
பிற இன்பங்கள் அனுபவிக்கத் தக்கதாயும் இருப்பதால் தாமரையாக உருவகம்)

—————————————————————————-

ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

(பணி அமரர் -நித்ய ஸூரிகளில் ஒருவராக இருந்தாலும் ஏவம் விதமான அவனது நீர்மை யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதே
என்னும் இடத்துக்கு உலகு அளந்த விருத்தாந்தம் காட்டி அருளுகிறார்-

நன்கு உணர்ந்து பேர் சாற்றினால் -2- என்றும்
பாதம் புரிவார் புகப்பெறுவர் -3-என்றும்
அடி பணிந்தேன் -4-என்றும் என்று உரைத்தீரே
நீர் நம்மை நன்கு உணர்ந்து பணிந்தீரோ என்ன
உன்னை முழுவதும் அறிய ஒருவராலும் முடியாதே
உனது மேன்மையைச் சிறிது அறிந்தாலும் நீர்மையை யாவராலும் அறிய முடியாதே என்கிறார் )

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

பதவுரை

படி நின்ற–அத்யந்த ஸூ லபனாய் -தேவர்கள் கால் பாவாத -பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட சர்வ ஸூ லபனான உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர்–பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

சால தூர (தீர்க்க )தர்சியாய்க் கொண்டு –
இரண்டு அடியாலே அளந்து –
ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –
மூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் –

(அளந்து கொண்டாய் என்றும் அளந்து கொண்டவனே -என்று சம்போதகம் ஆகவுமாம்)

அளந்து கொள்ளுகிற அக் காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது
அத்தனை போக்கி –
மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –

(மாவலியை சிறையில் இட்டு வைக்கவே இச்செயல் என்று நிந்தா ஸ்துதி என்றுமாம்)

பூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –

(மற்ற தேவதைகளை போல் இங்கு தண்மையால் கால் பாவாமல் நிற்கை அன்றிக்கே
தேவாதி தேவனான நீ -தனது உடைமையான இதன் இடம் உள்ள அதி வ்யா மோஹத்தாலே
இதுவே இவனுக்கு வந்தேறியாக இல்லாமல் இயற்கையான இருப்பிடம் என்று காண்பார் கருதும்படி கால் தோய்ந்து நின்றமையால் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்)

(படி நின்ற நீர்-நீர்மை என்றும்
நீரோதம் -நீர் நிறைந்த கடல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள்)

ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –

இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை –
என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி
நேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –

(இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய
அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்)

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-

பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-

பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-

ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே
பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்
அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்
என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் ஆகவுமாம்)

—————————————————————————————————

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில்
அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளைப் பெறுவார் -என்கிறார் –

(கீழே அவனை ஆறும் அறியார் என்றது -எத்தனை அளவுடையராய் இருந்தாரே யாகிலும் அவனை அளவிட்டு அறிய முடியாது என்றார்
இதில் அன்புடன் அவனை ஆஸ்ரயிப்பவர்களுக்குத் தானே தன்னைக் காட்டி அருளுவான் என்கிறார்
ஆகையால் யாதும் விரோதம் இல்லை
யாதும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே
யாதும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் அன்றோ)

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டி மேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்தி மிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள -சேஷ சேஷி பாவத்தை -முறைமையை) நன்றாக அறிந்து
அவன் தன் பேர்–அப்பெருமானது திரு நாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹா பாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.

பகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி
ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து

(கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-

சப்தாதிகள் -இந்திரியங்கள் -மனஸ் -புத்தி ஆத்மா -மேல் மேல் உயர்ந்த நிலை )

அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற  (த்ரிவித தியாகங்கள் உடன் )ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு
அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் –

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து
குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் —

(புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூ விளையும் முள்ளார் முலரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-என்று இருந்தாலும்
பொங்கும் பரிவாலே அசாரமான பூக்களைக் கழித்து ஸூ குமாரமான திருமேனிக்குத் தக்கதாய் அன்று அலர்ந்தபூக்களைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமே
இத்தையும் விஹிதம் என்று எண்ணாமல் -பெரும் காதல் நிறைந்த மனத்தோடு இதினிலும் இனியது இல்லை என்ற எண்ணத்துடன் –
உபாய புத்தியைச் சிறிதும் வைக்காமல் -நம் கார்யம் செய்பவன் ஸ்வாமியான அவனே என்ற எண்ணத்துடன்
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கீர்த்தனை பண்ணி
நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிக்ரிதமாஹு -என்று
சரணமாகப் பற்றுகிறவர்கள் பாக்கியசாலிகள் என்கிறார் )

கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

(திருவடிகளையே உபாயமாகப் பற்றி திருவடிகளையே அடைவார்கள் என்கிறார்)

————————————————————————————————————

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக
நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழி நெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பை யுமிழ்கிற போர் செய்ய வல்ல திருவாழி யாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர் போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

ஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின
ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு -(பயமே அக்னியாக இவர்களுக்கு )

(கழல் எடுத்து -நமுசி பிரக்ருதிகள் அஞ்சும்படி பூமி அதிரும்படி என்றும்
அடியார் வாழும்படி திருவடியைத் தூக்கி உலகு அளந்தான் என்றும் கொள்ளலாம்)

பல்லிறுகி -நா மடித்துக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து
நடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற
யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த (ஏந்தினான்-தூக்கினான் இல்லையே )சர்வேஸ்வரனுடைய
பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே

அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —

வாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு
மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –

(வாமனனுக்கு ஆழி உண்டோ என்னில் திரிவிக்ரமனுக்கு உண்டே -ஆழி எழ இத்யாதி )

(ஆழி நெஞ்சே -கடல் போலே ஆலமுடைய கம்பீரமான நெஞ்சே -உனது ஆழத்தை எந்நாளும் அறிய முயல் அன்றோ
முந்துற்ற நெஞ்சான உனக்கு நான் உபதேசிக்க வேண்டுகிறது
பொன் மலர்ச் சேவடியே உகந்து ஓர் -இது கடன் விதி என்ற புத்தி இல்லாமல் அன்புடன் ப்ரீதி மண்டி
கைக் குழந்தைக்குத் தாய் முலை போலே சேஷபூதனுக்கு இனிதாய் தாரகமாய் இருக்கும் சேஷியுடைய திருவடிகளைப்
பற்றச் சொல்லி நான் உபதேசிக்க வேண்டுமோ
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுமோ
என்னிலும் முந்துற்று நீயே உகந்து பற்ற வேண்டிய விஷயம் அன்றோ திருவடிகள் என்கிறார் – )

—————————————————————————————————

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் —
பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்ற அவளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றாள்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

(பொத்த உரலும் பூதனை விஷப்பாலும் அவனுக்கே என்று அற்று தீர்ந்து இருப்பதால் திரு உள்ளம் உகப்பானே
விஷமே அம்ருதமான வேளையில் திரு அவதாரம் அன்றோ

அலை பண்பால்-கண்ணனுக்கும் பூதனைக்கும் -அலைகிற பண்பு -அலை எறிகிற குணத்தால் -குழந்தைத் தனம் -தாழ்ந்த குணம்

கையார் சக்கரத்து–போனாய் மா மருதின் நடுவே -தேனே இன்னமுதே என்று என்று சில கூத்துக்கள் சொல்ல
மெய்யே பெற்று ஒழிந்தேன்

பாசுரத்தில் உகந்து இரண்டு தடவை -அவளும் இவனும் )

பூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக
உன்னை உறக்கத்தில் தூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை
ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –

ஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு
மெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –

அலை பண்பால்-என்று
அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் —
ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை  யுண்பாய் போலே
முனிந்து ஆவி உண்டாய் –
என்று அந்வயம் –

(மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் -என்கிற நீ
வெளி வேஷ அன்பை யுடையாளாய் வந்த பூதனையையும்
ரக்ஷித்து உன்னிடம் சேர்த்துக் கொண்டு இருப்பாய்
அப்படிச் செய்யாமல் அவளை அழித்தது -உன்னை ஒழிய சத்தை நிலை இல்லாத அடியார் இடம் உனக்குள்ள பக்ஷ பாதத்தால் அன்றோ )

————————————————————————————————————–

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ் விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலை யுண்டு அவளுயிரை முடித்த) அக் காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன் முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அவள் பிணமாய் விழும்படி நீ முலை யுண்டு முடித்த அன்று –
முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என் -என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் –
உனக்கு ஏது விளையத் தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து
தளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு

மஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ
அந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே
சூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் –
இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ
அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –

(இவ்வுலகம் எல்லாம் யசோதைப் பிராட்டியின் இந்த குணத்துக்கு ஒப்பாகுமோ

பொங்கும் பரிவாலே கொழு மோர் காய்ச்சி ஐம்படைத்தாலி போல்வன சாத்தி பின்பு தானம் முலை கொடுத்து-பரே சப்தம் கௌஸ்துபம் போல்வன பறை சாற்றை -கூர்ம வியாக்ரம் -ஸுலப்யம் பறை சாற்றுமே –
அப்ராக்ருத குணக்கடலான உனது பெருமையும் பிராகிருத சம்பந்தம் யுடையவளாய் இருந்தும் இப்படிச் செய்த இவள் குணத்துக்கு ஒப்பாகுமோ
இத்தால் யசோதை பிராட்டிக்கு கண்ணன் மீது உள்ள அன்பின் மஹாத்ம்யம் சொல்லிற்று )

—————————————————————————————————-

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் –
ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆஸ்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னை ஸ்துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–காப்பாற்று -போக்கி யருள வேணும்.

வளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு
பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –
சர்வ ரக்ஷகன் ஆனவனே –

அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் (முன்னிட்டுக் )கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக
பூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்டு -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்

இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாஸ்ரயணீயன் என்று
அனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –

காயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்பங்களை யுடையேன் ஆனேன் –
உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான்
அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே
தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

(நீ ஸர்வ ரக்ஷகன் என்பதை உனது ஒவ்வொரு செயலும் பறை சாற்றுகிறதே -உன்னால் அத்தை மறைக்கப் போமோ
பிள்ளையாய் ஆன திசையிலும் ஸர்வ ரக்ஷகத்வத்தை மறைக்கப் போமோ
ஸர்வ ரக்ஷகத்வம் ஸ்வா பாவிக ஸ்வரூபம் அன்றோ உனக்கு
இதனால் அன்றோ பல பிரதனான உனது ஸ்வரூபத்தை மாற்றிக் கொண்டு மாணியாய் இரந்து
அத்தை வியாஜ்யமாக்கி -தாய் பிரஜையை தனது பேறாகவே அணைத்துக் கொள்வது போல் அன்றோ
நீ ஸமஸ்த லோகங்களையும் அளந்து அருளினாய்
இந்த ரக்ஷகத்வத்தை அனுசந்தித்து
என்னிலும் முந்துற்ற கரணங்கள் -உன்னி -ஏத்திய நா -பூ உடையேன் -என்பதால் மநோ வாக் காயங்கள் மூன்றும்
பகவத் விஷயத்தில் ஈடுபட்டமையை வெளியிட்டு அருளுகிறார் –
அடியேன் பட்ட கடை கா
இவ்வாறு உனக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான அடியேன் முன்பு அநாதி காலம் தாழ்ந்த -கடை என்றது தாழ்வைக் குறிக்கும்
அடுத்த பாசுரத்தில் -அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற இன்பத்தராவர்-என்று தேவதாந்த்ர பஜநம் சொல்வதால்
இங்கும் கடை என்று அத்தையே சொல்லிற்று எனக் கொள்ளலாம்
கா -ஸர்வ ரக்ஷகனான நீயே இப்படிப்பட்ட தாழ்வுகளை -அல் வழக்குகளை -இனிப்படாமல் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் )

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -91-100– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 27, 2015

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சிசெய்யுங்கள்.

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்-
சரீர விஸ்லேஷ சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது நரகம் –
ஆகையாலே சம்சாரம் வடிம்பிட்டுக் கொண்டு திரிகிறபடி –

பேதுறுவீர்-
முன்னடி தோற்றாதே பாபத்தைப் பண்ணிப் பின்னை அனுதாபம் பிறந்து பேதுற்றுத் திரிகிற நீங்கள் –

முன்னால் வணங்க முயல்மினோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
முற்பட வணங்கிப் பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கள் –
பால்யம் இறே பின்னை வணங்கச் செய்கிறோம் என்னுதல்-
யௌவனம் இறே இப்போது என் என்னுதல் -வார்த்தகம் இறே இனி என் என்னுதல் செய்யாதே
ஒரு ஷண காலமாகிலும்  முற்பட்டுக் கொண்டு
ஒரு கை கால் முறிய வாகிலும் சென்று விழுங்கள் –
ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-இதுக்கு பிரமாணம் என் என்னில் –

பன்னூல் அளந்தான்-
எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –
அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
சர்வ  வேதா யத்ரைகம் பவந்தி -யஜூர் ஆரண்ய -3-11-

இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமதி கம்யனாய்  அரிதாய் இருக்குமோ என்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்க அடியை வைத்து ஸூ லபனானவனுடைய திருவடிகளை –

கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
கருத்த கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் –

ஞாலத்தை எல்லாம் அளந்தான் –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –

அளந்தான் –
முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே  வேண்டுவது –

சேவடி –
பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –
முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே –
அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-

பேதுறுவீர் –
செய்வற்றைச் செய்து இப்போதாக அஞ்சினால் லாபம் யுண்டோ –

பன்னூல் அளந்தானைக்
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான்
அவன் சேவடி பின்னால்
அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -என்று அந்வயம்

—————————————————————————

அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள்  என்கிறார்  –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேச்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

அடியால் முன் கஞ்சனைச் செற்று –
திருவடிகளாலே மார்பிலே ஏறி மிதித்த்வன் –
அழகிய ஸூ குமாரமான திருவடியாலே கம்சனைப் பாய்ந்து –
என் தலையிலே வைக்க வேண்டாவோ –

கம்சன் வஞ்சிக்க நினைத்ததை அவனுக்கு முன்னே கோலிச் செற்று-
அவன் நினைத்ததை அவனோடு போம்படி பண்ணி –

அமரர் ஏத்தும் படியான்-
குடியிருப்பு பெற்றோம் என்று ப்ரஹ்மாதிகளால் ஏத்தும் ஸ்வ பாவத்தை யுடையவன் –
கம்சனாலே குடியிருப்பை இழந்த தேவர்கள் இறே-

கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன் –

கொடி மேல் –
கருடத்வஜன்-என்னும்படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய் இருக்குமவன் –
தன்னை ஆஸ்ரயித்தாரைத் தனக்கு வ்யாவர்த்த விசேஷணமாகக்  கொள்ளுமவன் –

நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் –
ஒருகால் திரு நாமம் சொன்னால் -அவர்கள் மறக்கிலும் தான் அவர்களை ஒரு நாளும்
மறவாதவனுடைய திரு நாமங்களையே  ஏத்துங்கோள்
ருணம் ப்ரவ்ருத்தம் -பார உத் -47-22-என்று இருக்குமவன் —
சர்வேஸ்வரன் என்றுமாம்

ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது-
உந்தாம் அபேஷிதமான பிரயோஜனங்களையும் கொடுக்கும் –
பிரதிபந்தகம் போக்குகை -ஐஸ்வர்யம் -ஆத்மானுபவம் -தன்னைத் தருகை -எல்லாம் கிடைக்கும் –

கடிது –
தேவதாந்திர பஜனம் போலே பலத்துக்கு விளம்பம் இல்லை –
கடிது ஏத்துமின் -என்றுமாம் –

—————————————————————

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே
நிரதிசய போக்யனாய்-பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள்  என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடுநரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

கடிது கொடு நரகம் –
கொடிதான நரகம் தர்சனமே கடிது -அதுக்கு மேலே –

பிற்காலும் செய்கை கொடிது –
பின்பு அது செய்யும் செயல்களோ கடிது –
ருதிர ஆறுகளிலே பொகடுகை -வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை –

பிற்காலும் செய்கை கொடிது –
அத்தைக் காண்கைக்கு மேலே -அவர்கள் செய்வன பொறுக்கப் போகாது –
அன்றிக்கே
அவர்கள் வேஷம் காண்கையே போரும் -அதுக்கு மேலே -என்றுமாம் –

தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றி பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-என்னக் கடவது இறே –

கொடிது என்று –
இவற்றை அனுசந்தித்து

அது கூடா முன்னம் –
அவை கிட்டுவதற்கு முன்னே –

வடி சங்கம் கொண்டானைக் –
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே ஆயுதமாகக் கொண்டவனை -ஆயுதம் இறே –
கூர்மைக்குச் சொல்ல வேணுமோ -அன்றிக்கே –
அதுக்கு கூர்மையாவது –
த்வநியிலே உகவாதார் முடிகை —
அன்றிக்கே
அழகாகவுமாம் –

கூந்தல் வாய் கீண்டானைக்-
கேசியின் வாயைக் கிழித்தவனை-கூந்தல் மா இறே –
கூந்தல் யுடையத்தைக் கூந்தல் என்கிறது –

கொங்கை நஞ்சு உண்டானை –
பூதனையை முடித்தவனை –பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் –
விரோதி நிரசனம் சத்தா பிரயுக்தம் –

ஏத்துமினோ உற்று-
நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க -விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம்  –

கடிது கொடு நரகம் –
தர்மபுத்திரன் கண்டு மோஹித்தான் இறே

வடி சங்கம் –
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்-ஸ்ரீ கீதை -1-19-

—————————————————————

என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்து கிறபடி –
அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண  ஸ்வ பாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே –
சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.

உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அதிகாரிகள் அல்லோம் என்று அகலாதே நெருங்கி –
அபிமான ஸூ ந்யராய் திருவடிகளினாலே தொழுங்கள் –
திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயியுங்கள்-

உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் –
பூம்யாதிகளானசகல லோகங்களையும் ஒன்றையும் பிரிகதிர் படாதபடி
திரு வயிற்றிலே வைத்து ஆபத்தே பற்றாசாக ரஷிக்கும்-

முகில் வண்ணன் –
ஜல  ஸ்தல விபாகம் இன்றிக்கே ரஷிக்குமவன் —
பிரஜைக்குப் பால் கொடுத்தால் தாய் யுடம்பு நிறம் பெறுமாப் போலே –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய்-பரம உதாரனானவன் -ரஷை வடிவிலே தோற்றுகை-

பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பொருந்தாத ஹிரண்யனைப் பிடித்தபடி பிணமாம்படி பிடித்து –
அவனுடைய மார்வி இடந்து –
அன்றிக்கே –

பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பிடித்த பிடியிலே துணுக் என்று திருவடிகளில் விழுமோ என்று பற்றி –
அவன் பொருந்தான் என்று அறிந்த பின்பு இடந்தான் என்றுமாம் –

பூம் பாடகத்துள் இருந்தானை –
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று போக்யதை யுடைத்தான திருப் பாடகத்திலே 
எழுந்து அருளி இருக்கிறவனை –

பூம் பாடகத்துள் இருந்தானை –
ஆஸ்ரிதருடைய பிரளயங்களை நீக்கி விரோதிகளுக்கு பிரளயம் யுண்டாககுமவன் வர்த்திக்கிற தேசம் –
ஹிரண்யர்கள் பலர் யுண்டாகையாலே சந்நிஹிதனானான் –

ஏத்தும் என் நெஞ்சு-
என் நெஞ்சானது ஏத்தா நின்றது –
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானில் இவருக்கு வாசி –
தீர்த்தம் பிரசாதியாதே அர்ச்சாவதாரத்தில் இழிகிறார் –

ஏத்தும் என் நெஞ்சு –
நீங்களும் ஏத்துங்கள் என்கிறார் –

பூம் பாடகம் -இத்யாதி
சிறுக்கனுக்கு உதவினபடி எல்லோரும் -எப்போதும் – காண வேணும் என்று இருக்கை  –

—————————————————————————

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி
என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

என் நெஞ்சமேயான் என் சென்னியான் –
அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க 
அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் -சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் —
என் நெஞ்சில் உள்ளான் –
தலைமேல் தாள் இணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான்
என் நெஞ்சத்து எப்பொழுதும் -திருவாய் -10-6-6-என்னுமா போலே –

தானவனை வன்னெஞ்சம் கீண்ட-
ஈஸ்வரோஹம் என்று திண்ணிய  நெஞ்சை யுடையனான ஹிரண்யன் யுடைய நெஞ்சைக் கீண்ட –

வன்னெஞ்சம் –
தான் என்றாலும் ததீயர் என்றாலும் இரங்காத நெஞ்சு –
பகவத் பாகவத விஷயங்களில் ப்ராதிகூல்யத்தில் நெகிழாத நெஞ்சு –
நர சிம்ஹத்தின் யுடைய வடிவு கண்டத்திலும் நெஞ்சு நெகிழாதவன்-
திருவாழி வாய் மடியும்படி இருக்க -என்றுமாம் –

மணி வண்ணன் –
சிறுக்கனுக்கு விரோதி போகப் பெற்றது என்று நீல மணி போலே குளிர்ந்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
அதி ஸூ குமாரமாய் -ஸ்லாக்யமாய்-இருக்கை –

முன்னம் சேய் ஊழியான் –
சதேவ  சோம்யேத மக்ர ஆஸீத் –சாந்தோக்ய -என்கிறபடியே
ஸ்ருஷ்டே -பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை
ஸ்ருஷ்டிக்கைக்காக காலோபல சித்தமான ஸூ ஷ்ம சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவன் –
தன்னாலே ஸ்ருஷ்டமான  ஜகத்திலே யுள்ளான் —
ஸ்ருஷ்ட்யர்த்தமாக பிரளய காலத்திலே உளனானவன் -என்றுமாம் –

ஊழி பெயர்த்தான் –
அவற்றை சம்ஹரித்தவன் -ஸ்ருஷ்டித்ததால் உள்ள கார்யம் பிறவாமை யாலே சம்ஹரித்தவன் –
கால நியதி அழிப்பானும் இவனே –

ஊழி பெயர்த்தான் –
காலோபல ஷித சகல பதார்த்தத்தையும் உண்டாக்கினவன் -என்றுமாம் –

உலகு ஏத்தும் ஆழியான் –
எல்லாரும்  ஏத்தும் படித் திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவன்-அன்றிக்கே
எல்லோரும் ஏத்தும் படித் திரு வாழியை யுடையவன் -என்றுமாம் –

அத்தி ஊரான் –
திரு வத்தி யூரிலே நின்று அருளினவன் –

அத்தியூரான் என் நெஞ்சமேயான் –
திருப் பாற் கடலோடு ஒத்தது  திரு வத்தி யூரும் –
ஆழியான் அத்தியூரான்  என்னெஞ்சமேயான் –
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –

—————————————————————————————–

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

அத்தி யூரான் புள்ளை யூர்வான்-
அவனே கருட வாஹனன் –

அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –
அணியப்பட்ட மணிகளையும்  துத்தி என்று  பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுமவன் –
அனந்த சாயி –
இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –

முத்தீ மறையாவான் –
மூன்று அக்னியையும் சொல்லா நின்றுள்ள வேதத்தாலே சமாராத் யதயா பிரதிபாதிக்கப் பட்டவன் –
பகவத் சமாஸ்ரயண கர்மங்களை பிரதிபாதியா நின்றுள்ள வேதங்கள் –
அன்றிக்கே –
முத்தி மறையாவான் -என்றதாகில் மோஷத்தைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே பிரதிபாத்யன் ஆனவன் –

மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –
அரியன செய்து அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரனும் ஆனவன் –
பெரிய கடலிலே பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை ஈஸ்வரனாக அபிமானித்து
இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன் –
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் –
தேவ ராஜன் -என்றபடி –

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் –
எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

——————————————————————-

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து
பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்கள் பெருமான் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு நாயகன் –

இமையோர் தலைமகன் நீ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

செங்கண் நெடுமால் திரு மார்பா –
இவை எல்லாம் நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானபடி –

செங்கண் நெடுமால் –
ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –

திரு மார்பா –
ஸ்ரீ யபதியே -இமையோர் தலைமகனாய் வைத்து எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடி -பிராட்டி சம்பந்தம் –

பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்-
விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட
ஆயிரம்  வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –

குட மூக்கில் கோயிலாகக் கொண்டு-
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே –
குடமூக்கில்   கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –

————————————————————————————–

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-
தன்னைச் சிலர் எடுத்து வளர்க்க வேண்டும் குழவியாய்த் தான் வளர்ந்து –
பிள்ளையாய் வர்த்தியா நிற்கக் கிடீர் -ஸ்வ ரஷணம் தான் அறியாத யசோதா ஸ்த நந்த்யனாய்க் கிடீர் யுலகுண்டது –

உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் –
அப்படி ஸ்த நந்த்யமாய் இருக்கிற  அவஸ்தையிலே வயிற்றிலே யடங்க வைத்தது யுலகு ஏழும்-
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற தசையிலே ஜகத்துக்கு ரஷகன் ஆனவனை –

கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை-
இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன் –
என் நெஞ்சம் இடமாகக் கொண்டு குடமாடின படியே வந்து
என் நெஞ்சைத் தனக்கு இருப்பிடமாக  கொண்டவன் யுண்டது யுலகு ஏழும் உள்ளொடுங்க –

—————————————————————————–

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

இறை எம்பெருமான் அருள் என்று –
அஸ்மத் ஸ்வாமியான ஈச்வரனே அருள் என்று –இறை யருள் -ஏக தேசம் அருள் என்றுமாம் –

இமையோர்-
அரசு என்று இருந்தவர்கள் ஆபத்து வந்தவாறே -பராவரேசம் சரணம் வ்ரஜத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-35-என்னும்படியே
ஓன்று கெட்டவாறே அங்கு ஏறப் பாடி காப்பரை வளைப்பாரைப் போலே  ஈச்வரோஹம் என்று
ஊதின களங்களை  பொகட்டு-

முறை நின்று –
முறையை யுணர்ந்து -முறை தப்பாமே என்றுமாம் –

மொய் மலர்கள் தூவ –
தேவர்கள் அழகிய புஷ்பங்களைத் தூவி ஆஸ்ரயிக்க –

அறை கழல சேவடியான் –
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடியை யுடைய சர்வேஸ்வரன் –
அறை கழல் என்று 
எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம் -ஆபரண ஒலி-

செங்கண் நெடியான்-
புண்டரீகாஷன் -ஆஸ்ரித வ்யாமுக்தன் –

குறளுருவாய்-
ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இறே –

மாவலியை மண் கொண்டான் மால் —
மகா பலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன் –

மா வடிவு –
பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –

இமையோர் முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல் சேவடியான்
செங்கண் நெடியான் —
மால் குறள் யுருவாய் மாவடிவில் மண் கொண்டான் –
என்று அந்வயம் –

————————————————————————————

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில்அடங்கி நிற்பதன்று.

மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –

நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –

கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-

விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –

என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ச்நேஹம் —
இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ச்நேஹோ மே பரம -உத்தர -40-16-

அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்

அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.