சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-
பதவுரை
விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக் கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழி யானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று
பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் –
காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை
வளர்த்து அருளின காலத்தில்
இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த
விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுண்ணவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க –
திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று நெருப்பை உமிழா நின்று கொண்டு
சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –
(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)
(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)
(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)
————————————————————————————
அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து –
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –
(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-
பதவுரை
வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்
குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப்
பரப்பு மாறாப் பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு
(தலை முழுகி ஸ்நானம் கால் தரையில் இருக்க வேண்டும்)
அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல் அன்றிக்கே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் –
மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம்
திரு வேங்கடமுடையானுடைய சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு –
நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே
அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–(மணி வேங்கடம் மோனைக்குச் சேரும் )
அன்றிக்கே
சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -(அணி வேங்கடம்)
வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் -(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )
(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-
அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -_
————————————————————————————————
சர்வ ஸமாஸ்ரயணீயன் (தேவர்கள் அரசர்கள் திர்யக்குகள் மூன்று பாசுரங்களில் )ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
(துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்)
(துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்)
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-
பதவுரை
பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து
பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின
சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு(பாகவதரின் அவயவங்களும் உத்தேச்யம் )
அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –
(அத்யவசித்த-மாநஸம் –பணிமாறி-காயிகம் -அனுசந்தித்து-வாசிகம்0
அன்றிக்கே
சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் –
அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்
மற்றப் போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் –
அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –
(ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்
ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார்)
————————————————————————————————-
இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் -(ஸூஹ்ருத தேவதை நம்பெருமாளே தானே )
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-
பதவுரை
எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே
(ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே )
இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –
பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே —
அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில் குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் –
சர்வாதிகாரமாய் –
அத்யந்த விலக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –
திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-என்று
பாங்கான நிலத்திலே இருந்து பாடி யாடி அடிமை செய்யக் கடவ நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே
இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –
(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப் பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )
(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)
———————————————————————————————–
பெரும் நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )
(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-
பதவுரை
பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானை யானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.
திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல ஸ்லாக்யமான பிடிக்கு –
நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று
விநயம் தோற்ற முன்னே வந்து நின்று
இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச்
செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில் மலை முழைஞ்சுகளில் கூட்டிலே
நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க –
இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –
(இப்பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப்பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ்வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )
——————————————————————————————————
இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ் வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –
(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)
வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-
பதவுரை
வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.
நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு
இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் –
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
வாயார ஸ்தோத்ரம் பண்ணி
தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-
(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)
—————————————————————————————–
இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-
பதவுரை
நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.
எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் –
(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)
வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும்
சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி சொல்லுகை யாகிற தபஸ்ஸூ –
ஸூ ஸூகம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –
திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-
(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-
இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)
(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )
———————————————————————————————-
இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து (த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-
பதவுரை
தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )
(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)
உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்
பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை –
க்ருஹீத்வா தர்ம பாநீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி –
அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும் வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித்
தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப் பூர்ணமாம் படி யாக விளக்கினான் –
திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச்
சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –
இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இறே –
(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )
———————————————————————————————-
ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –
(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்
திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )
பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-
பதவுரை
தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்—பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.
தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் –
அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே
முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூகுமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க–அத்தையும் கேளாதானாய் –
தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று-தோளை யுடையனாய் –
ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி-பிரதானனுமாய் இருக்க –
இவை இத்தனையும் (மூன்றையும்)பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-
தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது
1-மாத்ரு வசனத்தை மறுத்துப் -2-பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -3-தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
4-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு
இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
1-அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும்
2-தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -3-காடுமோடையுமான அளக்கிற பூமியினுடைய கொடுமையையும் –
4-ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல்
ஆஸ்ரிதரான இந்திரன் பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக்(இதிலும் சாம்யம் -வேண்டித் தேவர்கள் இரக்க செய்த செயல்கள் )
கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –
(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)
(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)
(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –
பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)
————————————————————————————–
இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆன படியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –
(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் -80-
பதவுரை
அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற் காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)
தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக (அடிமைத்தனம் இவ்வளவு வியாக்யானம் )நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் –
நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –
(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)
பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –
அன்றிக்கே –
ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –
ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி –
திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று
திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –
(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.