இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

எம்பெருமானை பஜிக்கைக்கு (பக்தி செய்ய )ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)-புருஷ சா பேஷமும் புருஷகார சா பேஷமுமாய் இருக்குமே –
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;-சேதனர் அறிவுடைய -முமுஷார்த்தியாக இருப்பதே அறிவின் பிரயோஜனம் –
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தத் தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத் தக்க அருமையான செயலாயிருக்கின்றது.(சம்சார சூழலில் சிக்குவது அரிது என்றுமாம் )

ஆஸ்ரயண உபகரணமான கரண களேபர விசிஷ்டரான தாங்கள் முந்துற முன்னம் உளராய் இருந்தார்கள் –
அனுசந்தான பரிகரமான தம்தாமுடைய மனஸ்ஸூ புறம்பே தேட வேண்டாத படி உண்டாய் இருந்ததே –

திருவடிகளிலே பணிமாறுகைக்கு உறுப்பான கைக்கு எட்டின தாமரைப் பூ உண்டாய் இருந்ததே –

வாய் விட்டுப் புகழுகைக்கு ஈடான காலம் உண்டாய் இருந்ததே –

தன் உடமை பெறுகைக்குத் தன்னை இரப்பாளனாக்கும் நீர்மையை யுடையனான சர்வேஸ்வரனுடைய
ஐஸ்வர்ய ப்ரகாசகமாய் த்விஜ அரவிந்தாதி சிந்நிஹிதமான திருவடிகளிலே
சேஷத்வ அனுரூபமாகச் சேருகைக்கு அனுரூபமான தலையை உடையராய் இருந்தார்கள்-

இப்படி இருக்க நேர் கொடு நேரே கொடிதான சம்சாரத்தைச் சென்று கிட்டுகை அரிது –
இங்கனே இருந்த பின்பு இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு திரிகிற படி எங்கனேயோ –
என்று ஆச்சர்யப்படுகிறார் –

(நாமோ பரமபதம் செல்வதே அரிது என்று நினைத்து உள்ளோம் -ஆழ்வார்கள் இதுக்கே நேர் மாறாக சம்சார சூழலில் சிக்கித் தவிப்பதே அரிது என்கிறார் -)

(நா வாயில் யுண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை யுண்டே -மூவாத
மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவர்
தீக் கதிக் கண் செல்லும் திறம் -முதல் திரு -95- அடி ஒற்றியே இப்பாசுரம்-
விசித்ரா தேஹ ஸம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -6-
இங்கே தாமரையின் பூ என்றது
கள்ளார் துழாயும் கண வலரும் கூ விளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் -பெரியாழ்வார் -2-7-10-
என்னும் பூக்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
பத்ரம் புஷ்பம் -கீதை -9-26-
புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1- என்கிறபடி
எம்பெருமானுக்கு ஆகாத பூவே இல்லையே –
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநி வேதயத்-என்று தள்ளியதும் ஆஸ்ரிதன் கையில் முள் தைக்காமக்கைக்குத் தானே
அவனுடைய புஷ்ப ஹாஸ திருமேனிக்கு இது ஸத்ருசம் அன்று என்று இவன் நினைவாலே என்றுமாம்
நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வச வர்த்தி நீ
ததா அபி நரகே கோரே பதந்தீத்யே ததத்புதம் –
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95- என்றபடி
மற்ற உபகரணங்களும் உப லக்ஷணம்
திரு மருவு தாள் -வடிவிணை யில்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-
புருஷகார பூதையும் அருகிலே உண்டே
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்ஜனம் த்ரி விக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்று
திரு -ஐஸ்வர்யம் காட்டும் திருவடிகள்
அவனை அடைய அருளிய உபகரணங்களைக் கொண்டே அவனிடம் இருந்து விலக உறுப்பு ஆக்கிக் கொள்வதே என்று ஆச்சர்யப்படுகிறார் -)

——————————————————————————————-

தங்களுக்கு ஒரு பரிகர சம்பத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்-

(சார்வே தவ நெறிக்கு -பக்தி பிரபத்தி இரண்டாலும் -என்றே நிர்வாஹம் -அதே போல் இப்பாசுரமும்
ஸ்வ தந்த்ர பிரபத்தி- பக்தி இருக்கும் நாள் கைங்கர்யத்துக்கு வேண்டுமே -மரணமானால் வைகுந்தம் தருபவன் -மரணமாக்கி அல்லவே
பக்தி மூலம் போனாலும் அங்க பிரபத்தி செய்து தடங்கல் போக்கி பக்தி செய்து உபாசகர் பேறு பெறுவர்)

(பெறுக முயல்வான் -பக்தி உழவன் -பிரபத்தி பரம் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஸ்வ தந்த்ர பிரபத்தி
ஈஸ்வர ப்ரவ்ருத்திக்கு விரோதமாய் இருக்கும் ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி –
உபாயாந்தர நிஷ்டனும் பெறுக முயல்வானாகக் கொண்டு பக்தி பரம் -இதுக்கும் அநிஷ்டம் போக்க அவன் இதன் பிரபத்தி வேண்டுமே)

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

அகடி தகடநா சாமர்த்தியம் உள்ளவனே ஆற்றல் உடையவன் -அவனே பெறுக முயல்கின்றவன் -கிருஷி பண்ணும் பக்திஉழவன்

வஸ்துவை வஸ்தாந்தரம் ஆக்க வல்ல சக்தி யோகத்தாலே –
உன் பேற்றுக்கு உறுப்பாக நீ ஒன்றும் யத்தனித்துச் செய்ய வேண்டா என்று ஸ்வ ரக்ஷண அர்த்தமாக –
இவன் பண்ணும் ப்ரவ்ருத்திகளை அடைய மாற்றி –
ஞானம் ப்ரேமம் முதலாகக் கைங்கர்ய பர்யந்தமாக இவனுக்குச் செய்ய வேண்டும் சர்வ காரியமும்
தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவன் பக்கலிலே அந்வயமாம் படி –

(பல ப்ரதாதாகவும் பல கரணங்களாகவும் அவனே ப்ரபன்னனுக்கு -பலம் அனுபவமே இவனுக்கு கர்தவ்யம்
பக்தி யோகனுக்கு பக்தி தானே கருவி)

தன் பேறாக சர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையிலே மிகவும் உத்ஸாஹியா (பெறுக முயல்வான் )நிற்கும் மஹா புருஷரைப் பெற்றால் –
பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் எளிதாகா நிற்கும் -அது எங்கே கண்டோம் என்னில்-

கறுத்த நிறத்தையும் -வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் யுடைத்தான ஆனையானது –
அடிமைக்கு கால் கட்டான முதலையை ஜெயித்து அழியச் செய்தன்றே-(தானாக அழியாச் செய்ய வில்லையே )

குளிர்ந்த பொய்கைக் கரையிலே ஸ்லாக்யமான தாமரைப் பூக்களைக் கொண்டு –
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி
விரோதியைப் போக்கி ரக்ஷித்து அருளின அவன் திருவடிகளிலே தாழ்ந்து
அடிமை செய்யப் பெற்றது -(அவனே அநிஷ்டத்தையும் போக்கி இஷ்டபிராப்தியையும் தந்து அருளி கைங்கர்யமும் கைக்கொண்டான் அன்றோ )

தாழ்ந்து என்றது தாழ்ந்தது என்றபடி –
கோடு என்று கரைக்குப் பேர் –
தட்டம் குளிர்த்தி
குளிர்ந்த பொய்கை கரையிலே என்றபடி –

தண் தோட்டு மா மலர் -என்ற பாடமான போது –
குளிர்ந்த இதழை யுடைத்தான பெரிய புஷ்ப்பத்தாலே-என்று பொருளாகக் கடவது –

(பிரபத்தி பரமாகவும் பக்தி பரமாகவும் இரண்டு நிர்வாகங்கள் இப்பாசுர வியாக்யானத்தில் உண்டே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்று அன்றோ பிரபத்தியின் லக்ஷணம்
நெறி காட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -6-
நஹி கச்சித் ஷணமபி ஜாது திஷ்டத் யகர்மக்ருத் -கீதை -2-5-என்கிறபடி நிவ்ருத்தியும் தன்னாலே சாதித்துக் கொள்ள முடியாதது ஒன்றே
அதுவும் அவனது இன்னருளே என்று அவனாலேயே பெற வேண்டும்
இத்தை எங்கே கண்டோம் என்ன -கஜேந்திர ஆழ்வானைத் த்ருஷ்டாந்தமாகக் காட்டி அருளுகிறார் –
பரமா பதமா பந்ந மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -68-
தாழ்ந்து வென்றி முடித்ததன்றே -என்று திருவடிகளில் மலரை இட்டு பக்தியைப் பூர்த்தி செய்து
பேறு பெற்றது என்று பக்தி பரமாகவுமாம்
பகவத் பக்தியாகிய தனது முயற்சியே சரணாகதியில் மூட்டி பக்தியோகத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது

அஞ்ஞானத்தாலும் -ஞாநாதிக்யத்தாலும் பக்தி பாரஸ் யத்தாலும் பிரபன்னர்கள் மூ வகை உண்டே –
பக்தியும் சரணாகதியிலே மூட்டும்
அங்க பிரபத்தி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க வேணுமே

இப்படி இரண்டு நிர்வாஹங்கள் இருந்தபோதிலும்
நாராயண பராயண-என்ற ரிஷி வாக்யத்துக்கும்
பிடி சேர் களிறு அளித்த பேராளா -முதல் திரு -95- என்றபடி
பக்திக்கு அங்கமான வைராக்யம் அற்று இருந்தான் என்பதால்
முதல் நிர்வாஹமே சாலப் பொருந்தும் -என்று ஆச்சார்யர்களால் மிகவும் ஆதரிக்கப் பட்டதாகும் )

——————————————————————————————

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

(பிரதிபந்தகங்கள் விளாம்பழமும் கன்றும் பட்ட பாடும் மஹா பலியுடைய துரபிமானமும் பட்ட பாடும் படும் என்று காட்டவே இந்த த்ருஷ்டாந்தங்கள்)

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று-வரம் -ஸ்ரேஷிடம் என்றபடி –
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐஸ்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

கனியப் பழுத்துக் கிடக்கையாலே தரை அளவும் வரத் தாழ்ந்து கிடக்கிற அஸூர மயமான விளாவினுடைய பழங்களுக்கு
அஸூர மயமான கன்றை எறி கோலாக எடுத்து எறிந்து-

ஸ்ரீ யபதியான தன் உருவை விட்டு -அர்த்தியான வாமன ரூபத்தை
உடையனாய்க் கொண்டு -பூமியை அளந்து -தன் கால் கீழே இட்டுக் கொண்ட –
அந்த சர்வேஸ்வரன் –

ந நமேயம் -என்கிற ஸ்வாதந்தர்யத்தைப் பொகட்டுத் தன் திருவடிகளிலே வணங்கி –
எங்கள் அபிமதம் நீயே பண்ணித் தர வேணும் என்று
தன் பிரசாதத்தைக் கை தொடுமானமாகப் (பற்றுக் கொம்பாக )பிடித்துக் கொண்டு
தம் தாமுடைய அதிகாரங்களுக்குத் தகுதியாக இருந்த பிரகாரங்களாலே(ததாமி புத்தி யோகம் -அத்தையே பற்றிக் கொண்டு அடைகிறான் என்றானே )

ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -ஸ்வ பிராப்தி ஆகிற ஸ்வ ஸ்வ அபிமதங்களைப் பெற்று
ஸூக உத்தரராய்த் தலைக் கட்ட வேணும் என்று இருக்கும் அவ்வவ அதிகாரிகளையும் –
அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

(தன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
ப்ரபன்னராகவுமாம்
உபாயாந்தர நிஷ்டர்களாகவுமாம்
அநந்ய ப்ரயோஜனராகவுமாம்
ப்ரயோஜனாந்தர பரராகவுமாம்
அவர்களுக்குத் தானே எளியனாகி -விரோதியையும் போக்கி -இஷ்ட ப்ராப்தியையும் செய்து கொடுத்து
அவரவர்கள் விருப்பத்துக்குத் தக்கபடி அவரவர்களே ரக்ஷித்து அருளுகிறான் –

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹ ஜோ தோஷஸ் ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த -36-11-என்கிறபடி
ஸ்வா தந்தர்யத்தைக் கை விட்டு -பக்தி பிரபத்தி மூலம்
அவன் அருளையே பற்றாசாகக் கொண்டு வணங்கி
வாழ்விக்கும் -அந்தவந்த அதிகாரிகளுக்குத் தக்க பலன்களை அளித்து
இதற்குத் தடைகள் ஏற்பட்டால் விளங்கனி பட்டதும் -மஹாபலி அஹங்காரம் பட்டதும் படும்
தன்ன தானே பூமியைத் தானே அளந்து தன் அடிக்கீழ் ஆக்கிக் கொண்ட அந்த ஸர்வேஸ்வரன் வாழ்விக்கும் என்று கீழோடே அந்வயம் -)

————————————————————————————————

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

(படைக்கிறவனே ரக்ஷிக்க வேண்டுமே -இத்தகி செய்தவன் எத்தைச் செய்ய மாட்டான் -உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்-காரண வாஸ சப்தத்தால் கார்யம் குறிக்கப்படுகிறது -அனுக்ரஹத்தாலே தானே மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான-மனசுக்கும் இவை உப லக்ஷணம்
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்–வைச்வானர அக்னி நமக்குள்ளளே -பாடவாகினி கடலுக்குள்ளே
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

பகவத் வைபவம் கேட்டால் உகக்கும் நல்ல நெஞ்சே –
பரி பூர்ணமான கிருபையால் உண்டாகக் கடவ மோக்ஷமும் –
நிக்ரஹ காரியமாய் வரக் கடவ சம்சாரம் ஆகிற மஹா அநர்த்தமும் ஆகிற இவற்றுக்கு நிர்வாஹகன் அவனே கிடாய் –

இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்பகமான வாயு அக்னி ஜலம் ஆகாசம் பூமிகள் ஆகிற பூத பஞ்சகம்
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற இவற்றை அடியிலே உண்டாக்குவானும் அவன் கிடாய் –

சம்சார காலத்திலே இவற்றை அழிக்க ஒருப்பட்டுத் திரு உள்ளம் சென்று -அதுக்கு உபகரணமாய் –
கறுத்த கடலைச் சீறிச் சுடக் கடவ படபாமுக அக்னிக்கு நிர்வாஹகனாய் இருப்பவனும் அவன் கிடாய்-

ஆக
த்யாஜ்ய உபேதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் என்றபடி –

ஆர் அருள் என்று
அருளின் கார்யமான மோக்ஷத்தை லஷிக்கிறது

அன்றிக்கே
அநுக்ரஹ ஹேதுவான புண்யத்தையும் –
நிக்ரஹ ஹேதுவாய் -அநர்த்த கரமுமான பாபத்தையும் சொல்லவுமாம் –

(மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –கீதை -7-14-
ஆர் அருள் -அருளுக்கு காரணமான புண்யமும்
கேடு -நிக்ரஹ காரணமான பாபமும்
ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேது -ஸ்வே தாஸ்வர
கர்ம காரயதி-கௌஷீக
அனைத்தும் இவனாலேயே -நிர்வாஹக நிர்வாஹ்ய பாவ ஸம்பந்தம் -இருப்பதால் ஒரே வேற்றுமையில் படிக்கிறார்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
மனத்துக்கும் இந்திரியங்களுக்கு நிர்வாஹனன் ஹ்ருஷீகேசனான அவனே
ஹ்ருஷீ காண் இந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான்
ஹ்ருஷீ கேஸஸ் ததோ விஷ்ணு க்யாதோ தேவேஷு கேஸவ -ஸ்ரீ ஹரி வம்சம்
சத்தை தொடக்கமாக சம்ஹாரம் ஈறாக சமஸ்தமும் அவன் அதீனமான பின்பு
தன்னை ஆஸ்ரயித்தாற்கு அபீஷ்டங்களை அளித்து அருளுவது வியப்போ -என்கிறார் -)

—————————————————————————————

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

(பொதுவான ரக்ஷணம் கீழே -இதில் ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஆஸ்ரித பக்ஷ பாதன் -விசேஷ ரக்ஷணம் என்றுமாம்
படைக்கப் பட்டவை எல்லாம் ரக்ஷிப்பவனும் அவனே -வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்தான் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -இங்கு கோபத்தால் -)

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்க வேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலை யுடைய திருவேங்கடமலையேயாம்.

பரமபத வாசிகளான நித்ய ஸூரிகள் தாங்கள் வாய் விட்டு ஏத்துகைக்கு விஷயம் ஆகையால்
உத்துங்கமாய் -ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –
அங்கு நின்றும் வந்து அவதரித்து -சங்கல்பத்தால் அன்றிக்கே
நேர் கோடு நேரே -அபியாதா -என்னும் படி
எடுத்து விட்டுச் சென்றது

இந்த்ராதிகள் கேட்கவே வயிறு பிடிக்கும் படியான லங்கையில்
ப்ரஹர்த்தா ச -என்கிறபடியே
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே அபேக்ஷித சமயத்திலே உதவி முகம் காட்டக் கடவதான
கோபத்தால் கொன்று விழ விட்டது -அவத்யனாக வரம் பெற்றுடைய ராவணனை –

(ஜித க்ரோதன்-கோபத்தை வென்றவனும் குணம் என்னும் குன்று ஏறி நின்றவன் கோபிக்க யார் நிற்க முடியும் -ஜிதம் வந்தால் யாரும் எதிரே நிற்க முடியாதே -கோபஸ்ய வஸமே ஆனானே)

அவன் படிகளை சொல்லப் புக்கால் அவதார காலத்தில்
இழந்தவர்கள் இழவைப் பரிஹரிக்கைக்காக எழுந்து அருளி நின்றதுவும்
மூங்கில் வளர்ந்து இருக்கிற குளிர்ந்த பர்யந்தங்களை யுடைத்தான திருமலையிலே –

விண்ணவர் -இத்யாதிக்கு
ராவண வத சமனந்தரம்-ப்ரஹ்மாதிகளால் ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்று பொருள் ஆகவுமாம் –

(க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59–136-
அபியாதா ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29-படை எடுத்துச் சென்று அடிப்பவன்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -திருச்சந்த -56-
ஓங்கு -குணங்களின் உயர்த்தி
தொல் புகழ் -வந்தேறி அல்ல -ஸ்வாபா விகம்
வந்து -நித்ய ஸூரி நாதன் வந்து அவதரித்து பின்னானார் வணங்கும் ஜோதியாக இங்கே நித்ய ஸேவை சாதித்து அருளுகிறான் )

—————————————————————————————————

கீழ் ப்ரஸ்துதமான திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

(கீழே -25 திருமலைக்கு என்றே காட்டி
இதுவும் 26-திருமலைக்குத் தான் -இதில் திருமலை திரு வேங்கடம் சொற்கள் இல்லை என்றாலும்
வாழும் பதி என்றே இருப்பதால் -திருமலை வைபவ தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும் –பெரியவாச்சான் பிள்ளை இதுக்கு சேர்த்து அருளினார்
கபிஸ்தலம் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -என்றே இருந்தாலும்)

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்ய வாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆஸ்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம் பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் -அஞ்ச வேண்டும்படியான -பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

அபிமான ஸூன்யராய்க் கொண்டு –திருவடிகளிலே தலை மடுத்து -அவனை ஆஸ்ரயித்து –
(அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே )தத் பிராப்தி பிரதிபந்தகங்களாய்க் கொண்டு
நடுவே நின்று தகைகிற பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் -ஸ்ரோத்ராதிகளான இந்திரிய பஞ்சகத்தையும் ப்ரத்யகர்த்த ப்ரவணமாம் படி
நியமித்து அவன் பக்கலிலே அபிநிவேசத்தை உடையராய்க் கொண்டு ஒருவர்க்கு ஒருவர் முற்கோலி வந்து ஆஸ்ரயிக்கும் படி
ப்ரஹ்மாதி தேவர்களுக்காகத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவ -என்னும்படி முற்பாடரான நித்ய ஸூரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே கொடுத்து அருளிற்று
பூஸூராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுபவித்து அடிமை செய்து வாழ்கிற திருமலை முன்பு நித்ய ஸூரிகளுக்கு கொடுத்தது என்றுமாம் –

(மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்
தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன் -45-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –திருவாய் -1-8-3-
படி -உலகு -படி அமரர் -முக்த பிராயரான நிலத்தேவர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பதி -கீழ் ப்ரஸ்துதமான திருமலை)

————————————————————————————————————-

இப்படி திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் பரம பதத்திலே இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை-மிகவும் வளர்ந்து மேற் கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

திருமலை யாகிற ஸ்தானத்தில் வேரூன்றி நின்று அபிநிவேசம் தோற்ற -எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் –

(இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -குண பூர்ணம் உள்ள இடம் அர்ச்சையே -நினைத்தபடி பரிமாற்ற நமது ஞான சக்திகளின் குறையே -மந்திபாய் வடவேங்கட மா மலை -ஸ்ரீ ரெங்கம் அனுபவத்தில் -வரத்து தேசம் தேடித் போனது போல் இங்கும் வரத்து தேசம் ஓடிப்போகுமே-சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -திருமங்கை ஆழ்வாரோ சர்ச்சை தேசங்கள் தேடி ஓடுவார் -)

சந்த்ர பதத்தையும் உரோஸிக் கொண்டு
அவ் வருகு பட்டு -அண்ட பித்தியில் செல்லக் கடாக்ஷித்து -ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு
பரம பதத்திலே தம் மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடி விட்டவிடத்தில் விடாதே
பற்றிச் செல்லுகிற என்னுடைய நெஞ்சானது கமன சைக்ர்யத்தை (கதி மிகுத்து )உடைத்தாய்க் கொண்டு அழகிய கொம்பைத் தேடி
பரந்து செல்லுகிற கொழுந்து போலே இரா நின்றது –மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமா போலே -)கம் மே கம் ஆகாசம் சுகம் -பரமாகாசம் -மா கம் )

(மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -திருவாய் -9-3-7-
கொடியானது அழகிய கொள் கொம்பைத்தேடி மேல் நோக்கி விரைந்து செல்வது போலே
மனமானது அழகியானான ஸர்வேஸ்வரனைத் தேடிப் பரமபதத்தளவும் விரைந்து செல்கிறது என்பதே திரண்ட பொருள் -)

——————————————————————————————-

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு(என்னில் முன்னம் பாரித்து -அபி சப்த்தார்த்தம் )
கோயில் திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

(பரத்வம் -வ்யூஹம் -விபவம் – -இரண்டு சர்ச்சை -ஆச்சார்யனுக்கு இரட்டை சம்பாவனை -அந்தர்யாமி மனதுள்ளான் -அவன் வந்த வரிசையில் அருளிச் செய்கிறார்-வேங்கடத்தான் -என்றே உள்ளது வேங்கடத்துள்ளான் இல்லையே -வந்து கிளம்பி கோயிலிலே கிடந்ததால் அங்கு உள்ளான்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஷீராப்தி நிகேதன்-ஆகதோ மதுராம் புரிம்
கீழ் ஆழ்வார் மனம் மேலே சென்றதை அருளிச் சொல்லி
இதில்
என்னில் முன்னம் பாரித்தது இதில்
ஒவ்வொரு இடமும் தாண்டி மனத்துள்ளான்
தேவாதி தேவன் எனப்படுவான் -அத்தை விட்டு வந்தான்
இளம் கோயில் கைவிடேல் இவர் பிரார்த்தித்து தானே அங்கும் இருப்பான் -)

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

அசங்க்யாதரரான வேத வைதிக புருஷர்கள் பலரும் -நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான -பெரிய மேன்மையை யுடையவன்
என்று சொல்லப் படா நிற்பானாய் -ஜகத் ரக்ஷண அர்த்தமாக -அங்கு நின்றும் வந்து -பரப்பை யுடைத்தான
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளா நிற்பானாய் -முன்பே ஒரு நாளிலே கிருஷ்ணனாய் வந்து
அவதரித்துக் கேசி வாயை அநாயாசேன பிளந்து புகட்ட சிறு பிள்ளையாய் -அதுக்கு மேலே நினைக்க அரிதான
நீர்மை ஏற்றத்தை யுடையனாய்க் கொண்டு போக்யதை மிக்கு இருக்கிற கோயிலிலே -சம்சாரிகளை ரக்ஷித்து அல்லது பேரேன் -என்று
கண் வளர்ந்து அருளுமவனாய் -திருமலையிலே சர்வ ஸூலபனாய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவன்
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

(யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோ ஹித– புருஷ ஸூக்தம்
ஸதா பஸ்யந்தி ஸூரய
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
இமையோர் தலைவன்
த்ரிபாத் தூர்த்தவ உதைத் புருஷ பாதோஸ் யேஹா பவாத் புநா -புருஷ ஸூக்தம் -மூன்று வ்யூஹங்களை யுடைய
பர வாஸூ தேவன் சங்கல்பிக்க அவனுடைய ஒரு வ்யூஹமான அநிருத்தன் ஷீராப்தி நாத்தனாக அவதரித்தான் –
அம்பஸ்ய பாரே
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி
சமுத்ரேந்தம் விஸ்வ ஸம்புவம்
ததோ விஷ்வங் வ்யக்ராமத் சாசநாந ஸேநே அபி –புருஷ ஸூக்தம்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினங்கள் கூவும் சோலை
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்து அல்லது பேரேன்
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று -இரண்டாம் திரு -54-

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்-பெரியாழ்வார் -5-4-8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

பாட க்ரமத்தை விட அர்த்த க்ரமம் பலமுடையதாகையாலே –
எனைப்பலரும்-தேவாதி தேவன் எனப்படுவான் –
மா கடலான் –
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —
வேங்கடத்தான்
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
மனத்துள்ளான் -என்று அன்வயித்து பர வ்யூஹாதி க்ரமத்திலே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும் -)

——————————————————————————————————-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவு காட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.

(ஆசை யுடன் பூதனை இடம் குடித்தான் அன்றோ -தன்னிடம் போல் அங்கு இல்லை -அங்கு போல் இங்கும் -என்ற பயம் இவளுக்கு-அஸ்தானே பய சங்கையால் -கௌசல்யைக்கு நம்பிக்கை போகாதபடி-மார்பிலே கை வைத்து உறங்கும் படி இலங்கை சென்று செற்றாய் -எனக்கு அப்படி இல்லையே -)

பக்குவமான தசையில் கட்டளைப் பட்ட லங்கையை பஸ்ம சாத்தாக மனஸுக்கு ஏகாந்தமான திரு வில்லாலே
திருச் சரங்களை நடத்தி முடித்துப் பொகட்டவனே –
இப்படி இருக்கிற நீ பருவம் நிரப்புவதற்கு முன்னே யசோதை பிராட்டியை போலே புத்ரனாகவே புரையற ஸ்நேஹித்துக் கொண்டு
பரிவு தோற்ற ஒசழக்காகத் தூக்கி எடுத்த பூதனையுடைய பாலின் கனத்தாலே விம்மி ஒளி விடுகிற முலையை
வயிறு நிறையத் தக்கதாக உண்பான் என்று அபிநிவேசம் தோற்ற பாலோடு பிராணனும் போம்படி அமுது செய்து
புத்திரனான உன்னைத் தாயாரான யசோதை பிராட்டி விஸ்வசியாதே துணுக்கு துணுக் என்று வயிறு மறுகும் படி சிஷித்து விட்டாய் –

(மாத்ரு ஸ்நேஹத்துக்கும் புத்ர ஸ்நேஹத்துக்கும் எல்லை நிலம் கண்ணனும் யசோதையும் என்பதால் மகன் தாய் என்று நிர்த்தேசிக்கிறார் –
கீர்த்தி பூதாம் பதா காம் யோ லோகே ப்ரமயதி ப்ரபு கிந்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7-)

—————————————————————————————————-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே-உலகு அளந்த நீட்சியை விட எண்ணுவது நீட்சியாயே இருக்கும்
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹா வராஹமாகி) அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

பெரிய கடல் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியை யுடையனாய் -அவ் வழகை முற்றூட்டாக என்னை அனுபவிப்பித்த
உபகாரகனாய் -அபரிச்சேத்ய வைபவனான ஸ்ரீ யபதியே -இப்படி சர்வாதிகனான நீ ஆஸீரிதரான இந்திரன்
ஐஸ்வர்யத்தை இழந்து கண்ணும் கண்ண நீருமாய் திருவடிகளிலே விழுந்த அன்று -மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
இரந்து -ஜகத்தைத் திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்றும் -பூமியானது பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே சென்று
ஒட்டின அன்று -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு ரக்ஷகனான நீ அந்த பூமியை பிரளயத்தில் முழுகி
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினாய் என்றும் -துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய்க் கொண்டு இந்த்ராதிகள்
சரணம் புக்க வன்று சர்வ சக்தியான நீ கறுத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
பின்பு ஒரு காலத்தில் அவள் முக மலர்ச்சி காண் கைக்காக -தத் சஜாதீயமான பெரிய கடலை அடைத்து அருளினாய் என்றும்
உன் படியை அறியக் கடவ பிராமாணிகரான ரிஷிகள் சொல்லா நின்றார்கள்
இவை சில சேஷ்டிதங்கள் இருக்கும் படியே என்று வித்தாராகிறார் –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading