உலக மீரேழினுள்ளவும் பரூர்வன வேயாதி
யலகிலா வுயிர்கட்கெல்லா மக மொடு புறமாய் நின்றங்
கிலனுளனெனு முரைக்கு மிசைந்து சாத்விகர்கள் போற்றும்
வலமுறு திரு வைகுந்த மாயவனுகந்து முன்னாள்–1-
அரவரசழைத்து நீ யிவ்வவனி போயிரு நூறாண்டு
பரமதங்களைக் கடிந்து பாடிய முரைத்து வாவென்
றுரை செயப் பெரும்பூதூர் வந்துதித்து நூற்றிருபதேழிற்
பரன் றணவாற்ற கல்லாப் பரமனோடெழுந்த வேலை -2-
குரகதக் கயவாய் விண்ட கோவலனெதியை நோக்கித்
திரை கடலுலகில் முன்போற் சென்றவதரித்து நும்மை
மருவிய நிலுவை நீக்கி வாருமென் றுரைப்ப நாமம்
வரா வர முனியென்றோத வைணவர் குலத்து மன்னோ-3-
தாதுரு நறை வண்டுண்டு ததை மலர்ப் பழனஞ் சூழுங்
கோதிலா மறையோர் வாழ் தென் குருகை வந்தவதரித்து
மாதுலர் க்ரகம் போய் வாழ்ந்து மற்ற மீண்டணுகிமாற
னோது செந்தமிழ் வேதார்த்த முரைத்தரும் பொருட்டே னுண்ணும்-4-
காலையோர் புனிதன் ஞாதில் காரனாண்டிறந்த வாய்மை
சீலே மாதவனுக் கோதத் தீம் பயனுகருங் கன்றைக்
கோல வானினத்தினின்று கூட்டறப் பிரித்ததே போற்
சால நொந்திறந்தோர்க் காகுஞ் சடங்கினைக் கழித்த பின்னர் -5-
இல்லறத் தியலிலின்ன மியைந்திடிற் பரநாடேகத்
தொல்லை மிக்குறு மென்றெண்ணித் துரியமா மனுநூலாதி
வல்ல மெய்ப் புனிதனாயெண் வாரணமெனவும் போதத்
தெல்லையில் குணத்தின் மிக்க வெண்மரோ டியையுங் காலை -6-
கனிந்தள முருக யட்டக சங்களம் முனிதாள் சென்னி
புனைந்து நாவீறன் மற்றும் புனிதர் வைபவங்கள் கேட்க
நினைந்தன முரைத்தியென்ன நிமலனவ் வடியர் தங்கள்
மனங்களி துளங்கச் சொன்னான் மணிப் பிரவாளம் தன்னில்–7-
என்ன மாதவத்து வைகும் மணவாள வெதியும ப
னன்னிலை யுணருமட்ட கசங்களு நனியுகப்பச்
சொன்ன செஞ்சொற்களாய குரு பரம்பரையைக் கேட்டல்
கன்னவ ராகந்தானந்த வார்கலி படிந்தாரன்றே –8-
கோதி லந் நூற்கு நாமங் குருபரம்பரை யென் றோதி
மாதவ னுரைத்த வாய்மை மறையொடுந் தமிழுஞ் சேர்ர்த
தாதலி னுணரவல்ல வதிகாரிக்கன் றி மற்றோ
ரோத வொண் ணாததாலு முகமற்றி ருத்தலானும்–9-
உயக்கருத் துடையரா ய்வறந் துளங்களிந் துணர்வோர்க் கெல்லா
மயக்கறவ குளமாலை வரதனா வீறன் மற்றுந்
துயக்கறு பதின்மர்தங் கடூய நற் காதை முற்று
மியற்றமிழ் தன்னிற் பேர்த்திங் கின்புற விசைப்பீ ரென்ன–10-
பத்துநூற் றொருநாற்பத் தேழாண் டிடபமதாந் திங்க
ளூத்திரட்டாதி நன்னாளந் நகருறு தேவேச
வித்தகன் சடகோபன் றிவ்விய சரித்திர மென்றோதி
அத்தனங் கூரத்தாழ்வான் றளியாங் கேற்றினானே–11-
மேதகு சடகோபன் திவ்விய சரித்திரத்தைக் கேட்போர்
மாதகவுடை யோராக மாநிலமிருந் திகத்தி
லேதமில்குண ராய்மக்க ளிரு நிதிபெற்று மாற
னோதிய தமிழ் வேதத்தாற் பரத்தினில் உய்குவாரே-12-
கேட்டவர் படித்தோர் முற்றுங் கிளத்தினர் வரைந்தோ ருள்ளங்
கோட்டமில் குணராய்ச் செல்வங் கொடுத்ததைப் படிப்பித்தோரிவ்
வேட்டினைப் பரிபாலித் தோரேனு நான்முகன் போற்றெந்தை
தாட்டுணை பரவிச் செய்யாடன்னொடும வாழ்வர் அன்றே–13-
–
நீர்மைகொண் மெய்யடியர் பரவடியுஞ் செய்ய நிறங்கொடு பொற்றிருவரை யினிலவுந் தூசும்,
மார்பிலகு மணிவடமும் திகழ்மு நூலும் மரை மலர்ச் செங்கரத்தனிடை வளர் முக்கோலுஞ்
சீர்கெழு பாடிய முரைத்த பவளவாயுஞ் சேதனர் பாலருளொழுகு திருக் கணோக்கும்,
ஏர்கொடிரு முகத்தொளியு மிலங்கநின்ற வெதிராசன் விரை மலர்த் தாளிறைஞ்சி வுய்வாம்–1-
மதுரவின் கதையின் மேலாய் மறைத்தமிழுரைத்த ஞான,
அதுலன்றன் சரிதை கூற அருந் துணையாகும் வாசப்,
பதுமமேலயற்கு மேனாட் பாலனத் துருவமகிச்,
சதுமறை நவின்ற மாயோன் றாட்டுணைக் கமலப் போதே–2-
மணிகொள் நெடும் திரையாழிப் புடவிமாது மதிமுகவொண்டிலத மென வயங்கு மாடத்,
தணிதிகழ் தென் குருகை யினாவீற மாற னருண் மாரி வைபவமெம் மறிவாற் சொல்லத்;
துணிகுவ மின்னமுதி லெழு திருவே பிம்பத்து வரிதட் செந் தாமரை மேற் றுலங்குமானே
பணிமொழி மென்குமிழ் மறிந்து குழைபாய்வை வேற்படை மதர்க்கட் கடையருணீ பாலிப்பாயே–3-
தேனுகும் பொழிற் றென் குருகாபுரி,
ஞான தேசிகனன் புகழோத மீ
வான நாடுறை மாமகிழ் காற்றுணைச்
சேனை நாதன் றிருவடி யுன்னுவாம்–4-
அற்றவ னுருவமாகி யனேக நூலுலகுக் கீந்து,
மற்றடந் திரடோள் வேந்தாய் வனம் புகுந்தரக்க ரீட்டஞ்
செற்ற பினைவர் கட்காய்ச் சிறிய தூதெழுக்து பின்னர்ச்
சிற்றிலைப் புளிக்குள் வந்த செல்வனை மனத்துட் கொள்வாம்–5-
சீராரும் பொய்கையர் பூதத்தார் மபயார் திருமழிசைப் பரன் வகுளச் செல்வன் கோளூர்
ஏராரும் மதுரகவி முனிவன் சேரர்க் கிறைவனருட் பாகவத ரிரு தாட்டூளி,
பாராரும் வழுதியர் முன் கிழி யறுத்த பட்டர் பிரான் கோதை யருட் பாணன் கையிற், கூராரும் வேற் கலியனின்னோர் செய்ய குரைகழலெம் முடிக் கணியாய்ச் கூட்டுவாமால் -6-
கண்ணினுண் சிறுத்தாம்போதிக் காரி சேயருள் பெற்றுய்ந்த
அண்ணன் மெய்ப் போத நாதமுனி திருவடியுஞ் ஞானம்,
நண்ணிய வுய்யக் கொண்டார் நலந்திகழ் மணக்கால் நம்பி,
தண்ணிய வாள வந்தார் தாளிணை மலருங் கொள்வாம்–7-
நறைத்துள வலங்கன் மார்பன் நாண்மல ரடியினான்கு
மறைத்தமி ழுதவு ஞான வகுளபூ டணனை வாழ்த்தக்
கறைத் தலைப் பணிமன்னேயிக் காசினியதனின் முக்கோல்
இறைத்தவ னாகி வந்த வெதிபதி கழலுட் கொள்வாம்–8-
எண்டிசையோரும் புகழப் பணிமன்னே யிங் கெதிபதியாய்ப் பர சமயத் திருளை வென்று
புண்டரத்தை நிலை நிறுத்தச் கிரிமி கண்ட பூபதியும் சிவமலதோர் பொருளிலென் று மண்டலத்துள் ளோர்களிடத் தொப்பம் வாங்கி மாமுனிவன் பாலனுப்ப மகிழ்ந்து நோக்கிக்
கொண்டல் வண்ணனே பரமாய்க் குறித்தனுப்புங் கூரத்தாழ் வானடியே கூடுவாமே–9-
வாரிதிகலையிற் சூழிம்மானில மாந்தருள்ளக்
காரிருட் பிழம்பு தஞ் சக்கதிர் பதினெட்டு நேரச்
சிர்கொளட் டா தசத்துள் சிறப்புறு ரகசிய மோதெம்
மாரியன் பிள்ளைலோகா சாரிய னருட்பெற் றுய்வோம்–10-
வண்டின முரன் றிந்தள விசை பயிலு மருமலர்த்துள வினான் மதக் கூழ்த்
தெண்டிரை கொ ழிக்குங் கருங்கடற் புவியாஞ் செறு விடைப் பரமதக் களையைக்
கண்டறக்களைந் தின்னருட் புனல் விடுத்துக் கணந் தளர்வடை வுறா வளர்ப்பான்,
தண்டலை யுடுக்குற் தூப்பில் வந்துதி வேதாந்த தேசிகனடி தாழ்வாம்–11-
தேனினமுரன்றுபாடும் மடிழ் மலர்த் தெரியல் வேய்ந்த,
ஞானதேசிகனுரைத்த நான்மறைத் தமிழ்ச் சுடர்க்கு,
மேனியைத் தகழியாக்கி மெய்யறி விடு நெய்யாக்கி,
மானிலம் விளங்கச் செய்த வரவர முனி தாட்கொள்வாம்–12
–
நந்தணிமகர யாழ்க்கை நங்கையார் குழவீ சீர்த்தி,
செந்தமிழதனினாயேன் செட் புவானெடுத்துக் கொண்ட
தந்தகன் ககனமீனை யய்ய மற்றெணுவே னென்ன,
வந்த வாறமையுமுன்னீர் வையக மதினின்மாதோ–1-
நூற்றிதழ்க் கமலத்தோனு னுவலுதற் கரியதான,
மாற்றருந் தகை கொண்டோங்கு மாறன் றன் சரிதை தன்னைத்,
தேற்றமின் மனத்து நாயேன் செப்புவான் றொடங்கலீங்கோர்
ஆற்தினுண் மணலையோர் சேயளப்பதற்க் கெழு தலேய்க்கும்–2-
விண்ணவர்க் கரிய மாறன் மேம்படு புகழைப் பாரில்,
னுண்ணியல் புடைய நாயேனு வலுவானெடுத்துக் கொண்ட
தெண்ணியார் கலி நீர் முற்று மேந்திளங் குழவி யொன்று
அண்ணி நுண் மூழை தனைனா லளப்பதை நிகர்க்கு மாதோ–3-
கரும்பினுரு வங்கோணி லதினுள் ளாருங் கனிந்த சுவையினை யறிந்தோர் களைவார் கொல்லோ ,
விரும்பிய கண்டுருக் கரடு முரடதென்று, விலக்குவரோ வறிவுடையோ ரவைகள் போல,
விரும்புவி யிற்றமியே னாலுரைக்கும் பாக்களிழி வெனினு மகிலுறைந்த வேதிலாவண்
பெரும் புகழ் நஞ் சடகோபன் காதை கண்டு பேணுவரே புலமை கொணற் பெருமை யோரே–4
—
பாண்டி நாட்டு திருப்பதிப் படலம்
சீர்வள ரெதிராசன் பொற் றிருவடிக் கமலம் போற்றிக்
கார்வளர் மேனியெம்மான் கண்ணை யுற்றுயிர்களுய்ய
ஏர் வளர் மாறனாக வெழுந் தவதாரஞ் செய்யும்
பார் வளரிசை கொள் செல்வப் பாண்டி நாட்டணி விரிப்பாம் -1-
உலகெலாந் தனிபுரக்குமுயர் மழை முகிற் குழாங்கள்
அலைவிலாதரியதீம் பயோததி யென வானார்ந்து
பலவளம்பெருகு தெண்ணீர்ப் பரவை நீர்பருகிச் சூலாய்
நிலவிய தரள மீனுநீனிறக் கடல்போன் மீண்ட-2-
திரு மகிழலங்கன் மார்பன் றிருவடித் துணைக் காட் செய்வான்
கருமிடற்றரனார் வாழ் வெண் கையிலை யென் கிரி யெழுந்து
வருவபோன் முகிற் குழாங்கள் வானிடை. யடர்ந்து வாரிப்
பொரு திரை யருந்தி நீலப் பொருப்பென மீண்டவம்மா–3-
அலம்பு வண்டிருந்த தார் நம்மரிந்த மனலரே யங்கைத்
தலமமர் திகிரி மானத் தடித்தியங்க வன்றனாம
வலம்புரித் தொனியே யென்ன வாணிடை யதிர்ந் திளங்காற்
சிலம்பிடை யவன்றன் சாபமுமிழ் கணைத் திரள் போற் பெய்த–4–
மந்தர கிரியை வென்று மல்லடர்த் துயர்ந்து நீண்ட,
சுந்தரத் திருத்தோளண்ணல் சுடு சரந் துரந்து மேனாட்,
கந்தர வடி.வரக்கர் களைகளைக் களையக் கண்டே,
யந்தரத் திமையோர் தூற்று மலர் மழை யென வான் பெய்த–5-
விரிதரு முகட்டின் மீது விடாதுறப் பொழியும் தாரை
அரிய விண்ணுலகத்தான வமரரிவ் விளங் கானச்சி
யுரிய தன்னகர்க்குச் சேர வுயரு மிம் மலையைக் கொள்வான்
சொரிதரு வடங்கள் போலத் துலங்கின துதைந்து மாதோ–6–
துவளிலாடக முகட்டிற் றோன்று பல்லருவி யீட்டங்
கவளமும் மதப்புழைக்கைக் கரிகட மருப்பு குக்குறந்
தவள வொண்டராள மீர்த்துச் சங்கையி றருக்கள் சாடிக்
குவலயத் திளஞரோகை கொள்ள வந்திழித்த வம்மா–7-
மண்ணிடை யிழிந்த தோயம் வாரணத்தினமு மானு
மெண்ணிடற் கரியதாய விடபத்தின் குழுவு மீர்த்துப்
புண்ணியம் புரிவார் நெஞ்சம் போலெங்கு நிரவி வந்து
தண்ணிய திரைகண் மோதுந் தாம்பர வன்னி சேர்ந்த–8-
தடந்திரைக் கரத்தின் வாரித் தரளமா மணிகள் வீசி
யடர்ந்த வன்னீத்தத் தூடே யமிழ்ந் தெழு மரத்தின் றோற்றம்
மிடைந்த வைம் படைகளேந்தும் விமலன் பாற் கடலை வேண்டிக்
கடைந்திடுங் காலத்துற்ற கற்பகத் தருவைப் போன்ற–9-
கோடி னோடந் திகிரியுங் கொண்டுமால்
ஈடி றாமரைக் கண்ணிடை யிற்பசு
மாடு மேவி மறிகடற் சேர்தலால்
ஓடுமப் புனல் நாரண னொக்கு மால்–10-
மலை களைந்திடை மாதரைச் சேர்ந்து மீ
துலை குருந்த மொசித்து மருதிற் போய்
விலை யுயர்ந்திடு மான்பின மேவலால்
அலை கொளப் புனல் கண்ணனை யன்னதே–11-
ஆன வெள்ள மரி புலி வேங்கை மான்
றான வாரணஞ் சம்பு எண் கேனமே
ஏனல் சந்தக லின்வகுளஞ் செருக்
கூனமில் பல வோங்கும் வளை புனை–12-
குங்குமம் சண்பகம் பனை கோங்கில
வங்க மேலம் வசம் பொடு சாதி மா
பங்கம மற்றிடு பற்பல பாதவ
முங்கணிப்பில் விலங்குகளுங் கொடு–13-
ஏக்க மொடு மெயின ரெயிற்றியர்
தாக்கருந் துயர் தன்னிலழுங்கிட
வாக்கு செந்தினை யாரிடி தன்னெடுந்
தேக்கிலைக் குடில் சேரவரன்றியே–14-
செறிந்து பற்பல நல்வளஞ் சேர் தரும்
குறிஞ்சி விட்டுக் கொடுங்க ணரவமும்
நெறிந்திரிந்திட நின்றெரி வீசியுள்
வறண்ட பாலையில் வந்து கலந்ததே–15-
அன்னிலத்தைக் குறிஞ்சிய தாக்கியே
மன்னு மாங்குள யாவும் வரன்றியே
துன்னு முல்லை நிலத்திடைச் சூழ்ந்ததாற்
தன்னிகர்த்திடும் தாம்பிர வன்னியே–16-
அண்டர்வெள்ள மலமர வன்னவர்
மண்டுபாடி வயின்புகுந் தாங்குள
தண்டுளித் தயிர்த்தாழி யளை நெய் பால்
கொண்டு வெண்ண திக் கோலந் திகழ்ந்ததே –17-
மல்லலான் விடை மற்றிளங் கன்றுடன்
முல்லையங் குழலாயர் முகிழ் முலை
வல்லிமார்கள் வனையும் பணி துகில்
மெல்ல மெல்ல வுண் மேவி வரன்றியே–18-
மற்றுமுள்ள வளங்களை வாரியே
கொற்ற வெண் குடைக் கோமகன் காரிதன்
நற்றவத்துதி நந்தன் புகழென
வெற்றுநீர் மருதத்திடை யேய்ந்ததே–19-
மருப்பொடிக் கமழுஞ் சோலை வான்றருக் குலங்கள் சாடிச்
சுருப்பொடு மயில்களாங்குச் சூழ் தரும் பறவை பாய
விருப்பொடு காக்கு மள்ளர் வெள்ளங்கள் வெருக் கொண் டோடக்
கருப்பொடித் தயல் சூழ் வாளை கம்புளாரங் களீர்த்து–20-
மள்ளர் தம் சேரி யன்னோர் வளர்த்திடு மெகினங் கோழி
புள்ளின மிடப மேடம் பூங்கிடிக் குருளையோடு
விள்ளு முக்கனிகளீர்த்து வேரி முண்டகக் காடூடுற்
அள்ளிதழ்த் தேனினோடு மொன்றிச் செந்நிறத்ததாகி–21-
கொங்க விழி ரதத்தேனைக் கொள்ளை கொண்டளிகள் பாடும்
பங்கய வாவி தோறும் பரந்து நித்திலங்க ளீனுஞ்
சங்குலாம் பணை கடோறுந் தடையறப் படிந்து நீலத்
துங்க வெண்டிரை கண் மோதுந் தூய நீர்க் கடலுட் சேர்ந்த–22-
தேர்ந் துணர்ந்தோர்த நெஞ்சிற் றெளிவுறக் நீத்த நீடு
வார்ந்தலை யகடு கீண்டு வகிர் தர வொதுக்கல், வெம் போர்
ஆர்ந்த தோள வுணன்றன்னை யரி யுருவாகி யெம்மான்
ஈர்ந்தணி பூண்ட மாலை யெழிலினைப் பொருவு மாதோ–23-
நாடுகடோறம் பாய்ந்த நறம் புன றடையாயுள்ள
கோடுக ளனைத்துஞ் சாடிக் குமுறிடு மொலியுஞ் செந்தேன்
ஓடு தண்டலைகள் யாவு மொண் சிறை யறு காற் றும்பி
பாடு மத்தொனியு மாங்குப் பரந்தன வெங்கு மாதோ–24-
கட்கடை குழையைத் தாவுங் கடைசியர் குழுவினோடும்
உட்களி தூங்க மள்ள ருண்ணுதற் கமைத்த வூனை
மட்கலத் தெடுத்து மீது வைத்தல ரணையின் மேய
புட்குல மிரிய வந்து புகுந்தன ரனந்தர் மாதோ,–25-
வெட்டுவர் சுமப்பர் வாரி வீசுவர் வரம்பை நேராய்க்
கட்டுவர் மிதிப்ர் கோட்டுக் கரு நிறப் பகட்டினத்தை
மட்டறப் பூட்டிச் சாறு வார்கரும பொடித் தனேகர்
எட்டு மாதீரமுமஞ்ச வேரடித் துழுவர் மாதோ–26–
முருகவிழ் கமலப்போதின் முத்தனம் வளைகளீனக்
குருகு தன் கருவாமென்றே குறித்து வெண் சிறகான் மூடி
அருகிருந் தடை கிடக்கு மகன பணைத் தலத்து வானெற்
பெருக வென் றகத்திலுள்ளிப் பெய்குவ ரெங்கும் வித்தே–27-
பருமருங் குடை நற் பாகற் பழங் கனிந்திழிந்த தேனும்
மரு,மலர் விரியுஞ் சூத வார் கனித் தேனு மீத
விரு மரம்பையின் பலங்கள் வீழ்ந்திழி தேனும் பாயத்
திரு மகிழலங்கன் மார்பன் கீர்த்தி போல் வளருஞ் செந்நெல்–28-
இற்றொடி னுழை நுசுப்பு மிரணியத் துகளை நேர்தே
மற்றொடு தனப் பொருப்பும் வாள் பொரு விழியும் பெற்ற
பொற்றொடிக் கடைசி மார்கள் பூந் துகிற் கொடிமென் பூவி
வற்றொடு களைகள் யாவும் வரைந்து பின் குரவை செய்வார்–29-
வரி வளை யலறி யீன்ற மணிதிகழ் கழனி தோறும்
விரிகளை கடியு மாதர் விளங்கு நன் முகத்தை நோக்கி
உரிய மா மதியமென்ன வுண்ணெகிழ்ந் தலரு மாம்ப
றரியல னெழுந் தானென்னத் தாமரை மலர் வாய் மூடும்–30-
அந்தரத் தடர்ந்த வாச வைந்தரு நீழல் வைகுஞ்
சந்த வானினங் கறிக்கச் சலிப்புறு தோங்கித் திண்டோள்
மைந்தரைக் கண்ட கற்பு மகளிர் தங் குழுக் கணாணிக்
கந்தரஞ் சாய்ப்பதே போற் கவிழ்ந்தன சாலி யெங்கும்–31-
அகட்டிரசித மீன்றாவ வரிந்தரி யனைத்தும் வாரிச்
சகட்டினு மெருத்தின் மீதுந் தலையினுக் கொடு போ யண்ட
முகட்டினிற் படியப் பல் போர் மூட்டியே பிணை யனீலப்
பகட்டின மனந்தம் பூட்டிப் பற் பலர் தெழிப்பர் மாதோ–32-
உளங்களி தூங்கவாரு மொண்டொடித் திரளினோடுரந்
தளந்தளமாக வெங்குஞ் சார்ந்த நெற் பொலியை வாரிக்
களங்களைப் புதுக்கித் தூய காற்றினிற் றூற்றிப் பின்ன
ரளந் தளந் தவர் கடங்க ளகத்தினிற் கொணர்வர் தாமே–33-
காவியும் கடையு நேமிக் ககமுமென் கமலப் போதுந்
தா விடுஞ் சினை வராலுஞ் சைவலத் துணரு ஞண்டு்ந்
தூவியவனமு மீனுந் தூய தெண் டிரையுங் காட்டி
வாவிக ளனைத்து மாதர் வடிவெனப் பொலியு மாதோ–34-
தாதினி னிறையு மம்பொற் றடத்தினிற் றிகழ் வெண்கஞ்சப்
போதினி லினிதமர்ந்து பொலிவுறு மனத்தின் றோற்ற
நீதி நின் றுயர்ந்த மாற னிகழ்த்து மத் தமிழை யோர்வான்
மேதினி தன்னில் வாணி மெய்த்தவம் புரித லொக்கும்–35-
வெடித்திடுஞ் சினைவரால் போய் வெண் மதிச் சசத்தைக் கீறி
வடித்திடு மமுதத்தோடும் வாரணிந் தடர்ந்த கொங்கைத்
தொடிக்கைய ரிருண்ட கூந்தற் சொரிந்தடு நறவு மொன்றி
மடித்தலை யெறிந்தனேக மாநதிக் கிணையா யோடும்–36-
கயமெலாம் பறவை கூடும் காவெலா மயில்களாடும்
வயலெலாங் கரும்பு நீடும் வரம்பெலாந் தேன்களோடும்
வியன்றருக் குலங்களெல்லாம் விளரி வண்டினங்கள் பாடும்
அயலறப் பெருகி நாடு மரும்புனல் குவடு சாடும்–37-
கணையினுங் கொடியதாகுங் காவியம் கருங்கட் செவ்வாய்த்
துணையிள முலைக்கரும்பொற் றொடி யுழத் தியரின் வெள்ளம்
பணையிடத் தடர்ந்து செய்யும் பணை யிகழ் குரவையோடு
இணை தட வொலிகளெங்கும் கெழுமியார் கலி போலார்க்கும்–38-
வாளை விண் முகடு தாவு மாமரங்கனிக டூவும்
வேளை மாங்குயில்கள் கூவும் வெள்ளனம் வயல் கடாவு
நீளரி மலர்த் தேனுண்ணு நீர்முகில் பொழின் மேனண்ணும்
பாளைகள் மிகவுமொன்றும் பனி வளர் கமுகின் கண்ணும்–30-
தாமரைத் தடங்கடோறும் தடமுலை மடவாரீட்டம்
பூமலர்க் கழனி தோறும் பூங்கரு வண்டுப் பாட்டம்
தேமரு பொழில் கடோறும் செழிப்புறு மயில்களாட்டம்
தோமறநோக்கும் பக்கந் தோறும் பன் மலர் சேர் தோட்டம்–31-
குடங்கையினகன்று கொலைத் தொழில் புரியுங் கூற்றினைப் பழித்த வெவ் விழிகொண்
மடந்தையரிருண்ட குழற்றிரட் கருத்து மணந் திகழகிற் புகை ககனத்
தடர்ந்தன விமையா தவர்கள் கண் ணெச்சின்னாட்டணி யழித்திடா நீலப்
படந்தனை விரித்து மறைத்தன கடுப்பப் படர்ந்தன விண்ணிட மெல்லாம்–32-
வண்டலம்பிடு பூந்தண்டலை யுகுதேன் வழிந்து பாய்வுற வளர் கன்னல்
அண்டர் தம்பதியிலடைய வாங்குலவு மானினங் கறித்திடச் சிதறி
எண்டிசை யிடங்கண் முழுவது மறைய வெழின் மணி யினங்கள் வீழ் தோற்றம்
விண்டலத் திரவி தனக் குடைந் துடுக்கள் வெடித்து வீழ்ந்திடுதலைப் பொருவும்–33-
போதலர்ந்திரத நறவிழிந்தொழுகு புனிதமா முல்லைய நிலத்தில்
யாதவரியற்றுல் குழலிசை யினைக்கேட்டைம் பொறி வழி யுளஞ் செலுத்தா
மேதகு தவரு மெய்யறி விழந்து மேலை நாளி ருந்தமை கருதி
மாதவ னெழுந்தா னெனவவன் றனையே மருவியின் புறுவமென் றெழுவார்–34-
எழலிகண் படுக்குந் தண்டலை யரங்கி லிவர் முருக் கலரொளி விளக்கவ் வுழிவிளங் கிட வொண் சிறை யறு பதங்களுறு அமளிக் குலங்கள் பண்ணியற்ற
பழியிலன் புறு மேன்மையரென விருந்தொண் பறவை கண் மகிழ்வுற விமையா
விழி கொளுஞ் சிகிகள் பயிலின மடவார் விழைவொடு நடிப்பன நடிக்கும்–35–
அஞ்சனமணிந்து விடத்தினிற் கருத்தை யரி பரந் தகன்ற கண் மடவார்
மஞ்சனம் புரிநீ ரருவி பாய்ந்திட நெல் வளர்வன வகன் பணை முழுதும்
பைஞ்சிறைக் கிளியும் பூவையுமிருந்து பாடுவ சோலை கடோறும்
கஞ்ச நன் மலருங் காவியுந் திகழ்வ கயந் தொறும் வழுதி நாட்டகத்தே–36–
காவினிற் றிகழும் பலவினற் கனியைக் கறித்தொரு
பாகமாய்க் குரங்கொன் றாவலிற் புசித்து விட்டிட வதனை யருகெழுந் தொருகரு முசுவும்
வாவிமுன்கறித்த விடத்தினைப் பிடித்து வாயை வைத் தருந்துதல் கதிர்கா
றேவிருட் பகையைக் கரும்பை யிராகு சினங் கொடு தீண்டுதல் கடுக்கும்–37-
அற்புத மிகுந்த விரு நிதி யுறலா லம்புயத் திருமகிழ் வுறலால்
பற்பல வண்ட ருகப்புடன் மிடைந்து பரிந்துரை பான்மையான் மின்னார்
கற்பக மருவுந் தன்மையா லெவருங் கணிப்பரு முயர்ச்சி யினாலும் பொற்பினின் மிகுந்த பொன்னகர்க் கிணையாய்ப் பொலி தரும் பாண்டி நன்னாடு–38-
உந்திமே லொருநான் முகனை முன் படைத்தன் னோன் றனைக் கொண்டு வெண்ணீற்றா
னிந்திரன் முதலாந் தேவரை யுலகத் செண்ணருஞ் சராசரத் தொகையைத்
தந்திடப் புரிந் தங்கவை தொறு நிறைந்து சாக்ஷியா யிருந்தருள் பெருமான்
வந்து தித்தருளும் பாண்டி நாடதனுள் வளத்தினை யுரைத்திடற் பாற்றே–39-
பாண்டிய நாட்டுத் திருப்பதிப் படலம் முற்றும்
—
திருநகரப் படலம்
தண்டலை சூழ்ந்தில குறு சாளக்கிராமஞ் சார்ந்துழியோர் பதினூறு சயினர் வந்தாங்
கண்டியெம்மோ டடல்வாதம் புரிவீ ரென்ன வன்னவர்க்கா யிரம் பணங்கொளரவாய் நின்று
புண்டரிகத்தாளவனைப் பரமதாக்கி போதவலர் தன்னடிக்கட் பொருத்து ஞானத் திண்டிறல் கொளெ திராஜன் கழலை வாழ்த்தித் திருநகரப்படல மதைத் தெரிவிப்பாமால் –1-
சங்கமீனுந்தரள நிலவுல
கெங்கு மாரகழின்புடை யேய் பொலன்
றுங்க நீளெயில் சூழ் குருகாபுரி
பொங்கு வாசவன் பொன்னக ரொக்குமால்–2-
வச்சிரத்தி னிடைக்கிடை மாடுபெய்
மச்சிவர்ந் தொழிர் மாளிகையும் பளிக்
குச்சிமேய வுயர் மணி மேடையும்
பச்சையாமறையும் மடைப்பள்ளியும்–3-
பம்பரத்தை நிகர்த்த பயோதரக்
கொம்பனார்கந்து கம்பயில் கூடமும்
வம்புலாந் அணர் மஞ்சமு மாமணித்
தம்பநாட்டுஞ் சயனத் தலங்களும்–4-
பீதகத்திற் சமைத்தொளிர் பித்தியுங் கோதறும் வயிடூரீய கும்பமுற்
றாதவன் றொட்டவிர்ந்த சிகரியும் மேதகத்தின் விமானமுங் கோயிலும்–5-
கள்ளலம்பு,கருங்குழல் வாணுதல்
அள்ள யிற்க ணடர்க்தெழு மா முலை
கிள்ளையின் சொற்கிளவிநன்மாதர்க
டுள்ளீயாடிடு தோரண வாயிலும்–6-
வானிறாவு கயற் கொடி வைகிய பானிலாமணி மேடையின் பந்தியுந்
தூனிறத் தண் மதி முகத் தோகைமார் கானிசைக்குங் கருமணிச் சாலையும்–7-
பன்னிறக் கதிர்வீசும் பரப்பினாற் றுன்னிராவும் பகலும் துலங்கிடா
நன்னகர்த் தெருவீதி நலத்தையா மின்னதென்றிங் கெடுத் துரைப்பாமரோ–8-
விந்தையிற் சிறவோர் விளையாடிடத் தந்தவாழி சமைத்து று தேரினிற்
பந்தனஞ்செய் பரியின் விலாழிநீர் சிந்தவீதியிற் சேறுறு மாதரோ–9-
சீதவாரம் திமிர்ந்த சிமிழ்முலை மாதர் வீணை மலர்க் கைபிடித்து நற்
கீதமோ தொலியுங் ளர் மாதவர் வேத கோடமு மேய தவ் வீதியே–10-
தூலை யுற்று நுடங்கிடை மாதரை வேலை யுற்று மிளிர்க்தகை வீரர் கண்
மாலையிட்டு மணம்புரி பல்லிய மோலை யுற்ற கடலொலி யொக்குமே–11-
கெண்டையொண் கட்கிளி மொழிமா தரின் கொண்டை கொண்டவிர் கோதை நறவுக வண்டலிட்டு மறுகு வழுக்கமே வொண்டொடித் திரள்யாஞ் சொல வொண்ணுமோ-12-
நீனிறக்கற் சகர நிறைத்தெழு மேனிலைக் கண் மிளிர் கயற் கேதனர்
தேனினின் சொற்றெரிவையர் கட்கிணை தானிருக்கத் தவஞ்செயன் மானுமே–13-
ஒள்ளிருஞ்சுதை மாட த்தினுற்றவிழ் நள்ளிருட் குழனங்கை முகத்தொளி
வெள்ளி வெற்புயர் வெண்மதி மாமுகிற் குள்ளிருந்து வெளிப்பட லொக்குமோ–14-
பூவணத்தரளத்திற் பொலிந்தடர் காவணத்தின் கவின்றிகழ் பற்பல
வாவணத்துளமைந்த சிறப்பையிப் பாவணத்திற் பகர்ந்திடற் பாலதோ–15-
ஆரநானமலர்ந்த நறைகொள்கர்ப் பூரநீள்விலைப் பொற்றுகி றாவுழைக்
கோரமா னிடபங் கலை கோரதம் வாரணங்கண் மலிந்தது கூலமே–15-
சிந்தியாது பொய் செப்பு தலில்லரிச் சந்திரன் றனிற்றாழ் குனரின் மதி
மந்தராய்த் திரிவாரிற்சுரகுரு வந்தணன் றனிற்றாழ் குனரற்றதே–16-
இன்னலுற் நிரப் போர்க்கிறை யீ விலாப் பொன்னை வைத்துப் புகல் சொல்லும் புல்லரி
லன்ன முற்றுறங்கும் பணை யங்கர் கோன் கன்னனுக்குக் கடையின ரில்லையால்–17-
விட்பரந்த புகழ்ப்பெரு மேன்மையர் திட்புயச் சிறுவோர் சிலர் சேவறாள்
முட்பொரும் படைகட்டி முயலொலி மட்கலைக் கெதிர் மாறுகொ ளோலமே–18-
மின்னி னுண்ணிடை மெல்லியலார்கடம் மன்னனோடு மகிழ்ந்து புணர்ந்திட
வன்னை யில்விட் டவரவ ரிற் புகல் பொன்னினாள் வந்து புக்கது போன்றதே–19-
காதலன் பொற்கலையை நெகழ்த்தமெல் லோதிநாணி விளக்கை யொளிக்கவம்
மாது பூணு மணியொளி வீசிடப் போத வெட்கிக் கரங்கண் புதைக்குமால்–20-
மானறுங்குழல் மங்கைய ரன்பரோ டானவின்ப மனைத்து மிகுளையர்
பானவில்கப்பசியுறு மிற்புலி மோனமோடுண் முழுமையும் நோக்குமே–21-
காவி நோக்கியர் காதல ரூடலின் மேவுமாமணி மேடை யொளித்திட
வாவலோடெழுந்தாட வரன்னரென் றோவியந்தொழ வுன்னி நகைப்பரால்–22-
வற்றனத்து மடந்தையர் மாடமூ டுற்றுநாளு முடுபதி தான்செலப்
பெற்றதாலவட் பெய்விளக் காவியாற் கற்று மெய்யைக் களங்க மென்பார்களே–23-
கோலமாடக் குழுக்குண் மடந்தையர் சாலவாயற் றிறந்து தனித்தனி
வேலினேர் விழிநோக்கொளி வீதிவாய் நீல மா மலர்த் தோரண நேர்ந்தவால்–24-
அஞ்சினாறும் புனுகு மணிந்து வா சஞ் சிறந்த குழலியர்தத்தை பாற்
செஞ்சொனாமம் பயிற்றச் செலற்கது பஞ்சரத்துட் பதுங்கு மணத்தினால்–25-
தென் றமிழ் வட நூறெரி வோர்கடம் முன்றிறன்னிற் புராண முதுப்பொருள்
பொன்றிலாது புகன்றிட மாந்தர்கள் சென்று கேட்டுத் தினமு மகிழ்வரால்–26-
மானநீர்ப் பொருணா நதியின் வடக் கானினேறரன் கோயிலமைந்ததான்
மேனிலைத் தென் விரசைக் கவாசியா ஞான நாடெனலா மிந் நகரையே–27-
ஏறுமிவ் வளங்கொள்குரு காபுரியி னூடே யீறிலொளி வீசு பொனியற்றெழு நிரைத்த
வீறணியு மண்டபமுண் மேவி யருள் காரி மாறனரி யாதன மகழ்ந்தினி திருந்தான்–28-
வாமரைநிகர் த்தவீழி மங்கைய ரனேகர் சாமரையிரட்ட வெகுதாதியர்கணின்று தாமரையலர்க்கு நிகர் தாளிணை பெயர்ப்பத் தூமறை நல் வேதயாக டோததிர மியம்ப–29-
வைரமுடி சூடுதிணி மன்னவர் கடங்கள் செயிரினை யெடுத்தினிது செப்பிட மருங்கே
யுயிரனைய மந்திரிக ஞற்றவை யுரைப்ப மயினிகர் கருங்குழல் கொண் மங்கையர்கள் பாட–30-
வலங்கொள் தட மார்பினிடை வண்டிமிரு நிம்ப வலங்கலொடு வெண்டரள வாரமு மிலங்க
விலங்கரிக ளொண்புய மிடைந்த வலயங்கள் இலங்குற வெண் மண்ணுத லிருந்தொளி தயங்க–31
அளக்கரு மளக்கரி னதிர்முரசொலிப்ப விளக்கொளி யயிற்படை விரற்பதுமமின்ன தளத்துள வலங்கலணி தாயமுகிலே வந் துளத்தினிதுறக் குழைகளொண் சுடரெறிப்ப–33-
கொந்தலரு மோதியர்கள் கும்பமொடு தீபம் வந்தினிதெடுப்ப மதி வாணில வெறிக்கும்
சுந்தர மணிக் கவிகை சூழவதனீழல் இந்திரனெனப் பெரிதிருந்தனன் மகிழ்ந்தே–34-
வாசமலர் கொண்டடரு மங்குலினிருண்ட கேச மட மங்கையர் கிளர்ந்தொளிருமம்பொற்
றூசுடனெய் வாசமணி சுண்ணமு மெடுத்தே வீசவடன் மைந்தர் பலர் மெல்லடியில் வீழ–35-
பட்டமறு வற்றருள் பரந்தெழு நிலாவின் வட்டமதி யொத்தொளி செய் வத்திர மிலங்க
மட்டுறுமலர்க்கமல மானவிரு கண்ணின் றெட்டிசை தழைத்திட வருட்டிரை யெறிப்ப–36-
இவ்வண மகிழ்ந்தினி இருந்தருள் சுரந்து நவ்விநயநத்துடைய நங்கை யொடு நீலப்
பவ்வவலை சூழ்புவி பரித்து முறை செங்கோற் செவ்விதினி யற்று பொழு துற்ற துரை செய்வாம்–37-
திருநகரப்படல முற்றும்
–
திருக்குறுங்குடிப் படலம்
வெண்டி ரை கறங்குங் கடனிலவரைப்பின் மிடைந் துயிர்ப்பயிர் கொடுங்க கலியாம்
அண்டு வெம் கதிரான் மிக்குடல் வெ தும்பி யழிதரா தல் கலின்ஞான
மண்டு விண் மாரி பெய்தருளியரா மானுசன் றாட்டுணை வணங்கி கொண்டல் கண் படுக்கும் தண்டலை யுடுத்த குறுங்குடிப் படலமின் றுரைப்பாம்–1–
பொங்கு நீ டிரைகொ ளு வரியந்தானைப் பூவை மெய் வழியிலோர் குடைக்கீழ்த்
தங்க வைத் தனேக நாளர சியற்றித் தனையனில்லாமையின் மெலிந்து
கங்குலிற் கரிய கூந்தலந் துவர் வாய்க் கயற் கணங் கற்பு று நங்கை
பங்கய மலரின் முகமதி நோக்கிப் பார்த்திபன் மொழி சில பகர்வான்–2-
இழையிடை புகுதற்கிட மிலா தடர்ந்த . விளமுலை துடி யினே ரிடைநால்
புழை நெடுங் கரமென் பிடிநடைத் திருவே பொற் கலத் தடிசிலிற் சிறுகை
தழைவுற வளைந்தங் கிளநகை புரிந்து தவழ்நடை பயிற்றிடு மழகார்
மழவிளஞ் சேய்க டமைப் பெ றாதுற்ற வாழ் விருந் தென் பய னென்றான்–3-
சிற்றெரும் பணியி னடப்பன கடுப்பச் சிறுமயி ரொழுங்குமே கலைசூழ் புற்றரவல் குற் றமனியக் கொடியே பொன்னக ரமிழ்தினு மினிமை-யுற்றமென் குதலைச் சிறுவர் கண் மிழற்று மொருசொலிச் செவிப் புலத் தேர்க்கப் பெற்றில ரன்றோ மகர யாழ் முழலைப் பேசு வரினிதெனப் பிறர்க்கே–4-
துப்பித டளவின் முகை யணி முறுவற் றோகை நன் னெறியிலோர் மகவைக்
கைப்பெறினேழு பிறப்பினு , மியற்றுங் கடும் பவந் தொலைத்து மா விரசைக்
கப்புற மிருத்து மெனிற்புவி துறந்தா ரணிய முற் றைம்பொறி யடக்கித்
தப்பில துடலங் கருக வைம் தழலுட் டவஞ் செய றரும் பய னெவனோ.–5-
ஐங்கணைக் குறிசில் வசந்த மண்டபமுற் றணிசெயு மரம்பையங் குறங்கும்
பங்கய மலரின் மிதிக்குமுன் சிவக்கும் பதமுநின் றொளிகொள் பெண் மயிலே
செங்கர மதனா லபனருள் கொடு நஞ் சென்னியிற் பொறித்தடும் பொழுது
சங்க நன்னிதியுந் தரணியும் பெறுவீர் தனைய ரில் லென வெமுதினனோ–6-
இந்திர தனுவை நிம்பபத் திரத்தை யிகல் செயும் புருவ நற் கமுகின்
கந்தரம் வருக்கைக் கனி மொழித் திருவிக் காசினி யதனுணம் மரபில்
வந்த திண் டிரடோள் மன்னரி லெவரு மகவின் நல் வாழ்வுற நமக்குச்
சந்ததி யிது நாள் வரையிலா ததற்கென் றாழ் வினைப் புரிக்தன மென்றான்–7-
வண்டினம் பெடைக ளுடனிரும் தமுதுண் மருமலர்த் தொடை யணி குழலாய்
கண்டினு மினிய மழலை மென் மொழி கொள் கான்முளைப் பொருளிது நாளுங்
கொண்டிலா துணவு முறக்கமும் பெரிதாய்க் குவிமுலைப் போகமே நுகர்ந்து
தெண்டிரைக் கடல் சூழ் புவியு நன் னிதியுசந் திறமென வாழ்ந்தன மென்றான்–8-
இவ்வின மெலிந்து பகையின ருதிர அம் மிருஞ் சிறைப் புள்ளினுக் கிரையாய்
வவ்வு மொள் ளயில் வேற் படை யுறு மங்கை மன்னவனுரைத்த சொல் வினவி
நவ்வியை னச் சுணங்கணிர் தடர்பொன் னக கெனத் திமிர் முலை வனசச்
செவ்வி கொள் வதன வனநடைத் தெரிவை செப்புவள் சில மொழி யன்றே -9-
இன்னல ரெனுமும் மதமுகும் புழைக்கை யிபமெனுங் குழுவினுக்கரியாம்
மன்ன வெவ் வுலகு மகவிலார் தமக்கு வலி கொள் புத் தெனு நர கென்று
நன்னெறி யுணரு மறிஞர் நின்னவை யினவில் வதைக் கேட்டு நாமிதுநா
ளுன்னின மிலையப் பொருளிலா தெவ்வாழ் வொன்றினும் பயனிலை யென்றாள்–10-
என்று மன்னவனு மங்கையுள் சிலநா ளிரங்யிந்நாள் வரை யினுநாஞ்
சென்றமுப் பொழுது மிடைவிடா திழைஞ்சுஞ் செழுங்கரு முகிலெனப் பொலிந்து
நின்ற நம் பெருமான் றனதடிபரவி நிகழ்த் துவ மின்றவ னமக்கு
மன்றலங்குழலா யஞ்சலென்றருளி மகவர மளித்தருள் குவனேல்–11
வந்தரசியற்றி வாழ்குவ மாங்கம் மகவர மளித்திடா னெனினாஞ்
சுந்தரவதனத் தெரிவை யந்கெறியே சூழிருஞ் சடைமுடி. தாங்கிச்
செந்த ழலிடை நின்றருந்தவம் புரிவோர் செறியுமக் கான மேகுவமென்
றந் தமன் னவர்கோன் மங்கை பாலுறுதி யறைந்தவ ளுடன் றளிக் கெழுந்தான்–12–
கஞ்ச நன் மலரை யனைய வானனத்துக் கன்னிய ரிருவர் முன் னெதிர
மஞ்சினு மிரட்டி யதிர் குரன் முரசும் வலம் புரிச் சங்கமு மொலிப்ப
வெஞ்சலி னிறை நீர்த் தசம்புடன் மலரு மினிய நற் கனிகளும் வரமுன்
அஞ்சுக மொழிமின் னணங்குமன் னவனு மறிந்தறிந் தக மதிழ்ந்தனரால்–13-
பன்னகமிசை நின்றெழுந்து மேனிவந்த பருமணிப் புரிசையும் பரந்த
மின்னொளி விரிக்கு மாட மண்டபங்கண் மிடைந்த பன் மறுகையுங் கடந்து
கன்னலி னமிழ்திற் கனிந்த மென் றீஞ்சொற் கரும்புய னிகருமொண் கூந்த
லன்ன மென் னடையி னணங்கு மன்னவனு மன்பினத் தளிவலம் வந்தார்–14-
செய்ய வொண் கமல மலர்த்தவி சுகந்த திசைமுகத் தயனுறு மிடர்தீர்ந்
துய்ய விண் ணமரர் மஞ்சன முதலா வுள்ளன வெடுத்தினி தளிப்ப
மெய்யவன் பொடுமா ராதன மியற்ற விண்டொட ராசையங் கிரியோர்
துய்ய வண் டினங்க ளிசை செய் பைந் துளவத் தொடையல் கொண் டடியிணை பணிய–15-
ஒன்னல ரெனும்வெற் திரைக்கட லினை யுண் டொளிருமொண் டிகிரி முன்னடையின்
இன்னொளி மழுங்கிப் பரிபவ முறுவ மென்றுரு மாறி வந் தருக்கர்
பன்னிரு வருமுள் ளுவந்திறைஞ்சி யடர் பவரையோ லக்கமா யிருமின்
என்னவொ ரிருகை குவித்து வேகு பராக் கென்றவர் கட்டியம் மியம்ப–16-
புகரில் யாழெடுத்து மாடக முருக்கிப் புரிரரம பிசைத்திசை நிறுவப்
பகரெழு வகையி னிசைகளை முறையிற் பாணியிற் சுதையினு மினிதாய்
அகமகிழ் வொடுமக் கின்னா ரியற்ற வவிர்ந்த செஞ் சடை முடி தரிக்கு
நிகரிலாப் ப்ருகு மார்க்கண்டரு மருங்கி னெடிய மா மறையினிற் புகழ-17-
முருகு கொப்பளிக்க நறவுகுந் துளவ முடியினிற் புடைபரந் தளிக
டுருவிமுன் னடிக்கு மரமபையர் தமக்குச் சுருதியி னின்னிசை பயில
விருவிசும் பகட்டூ ரிருளினிற் கிளர்வுற் றெழுந்த வெண் பிறை திகழ் மறுவின்
றிரு நுதற் றலத்துட் செழு மணங் கமழுந் தென் கலைப் புண்டரா மொளிர–18-
செவ்வரியோடிப் புடை பரந் தெழுந்து செவி யொடும் பொருதிக் காண்பவர் கண்
வவ்வுறு நீரதாகி நீண்டகன்று மானிலத் துறு முயிர்ப் பயிர்கள்
வெவ் வினை யொழியத் தண்ணளி கொழித்து வீளங்கிருங் கண்ணிணை விமலன்
பவ்வவார் கலியுட் கிளர்ந் தெழுந் தகையோ பங்கயமோ வெனத்திகழ.–19-
வாட்டடம் பொருந்து மதிமுக மதனுண் மலர்ந்த செலங் கமலமோ வதனுட்
காட்டிடும் பவளக் கடிகையோ வெனக் கண் கவர்ந்திடு வாயித ழிலங்க
கோட்டிரு மலையிற் சினந்தெதிர் பொருதக் கொழுஞ் சுட ரருக்கரோ ரிருவர்
ஈட்டு வெவ்வினையி னெழுந்தனர் கடுப்ப விலங்கிட மகர குண்டலமே–20-
பொங்கலைப் புணரி நிலந்தனைக் கவர்வான் பொதிந்தெழுங்காலையிற் கிளரும்
வெங்கனல் கடுப்பத் திகிரியு மொளிர் வெண் விதுவெனச் சங்கமும் விளங்கக்
கங்குலிற் கரிய மலை யெனப் பரந்து கவினுறு மார்பிடைச் செழுநீன்
மங்குலிற்றிகமு மின்னெனத் துவளும் வயங்கு முப்புரி யிழை யிலங்க -21-
துங்க முற்றமர்ந்த குடக்கெனும் திசையிற் றோன்றி யம் புயலின்கீ ழுதிக்குஞ் செங்கணிற்றுலங்குஞ் செக் கரினரை யிற் செழும் பொற் பீதாம்பர மிலங்க
விங் கருமுகிலினிவ்வணம் பொலிந்த நின்ற மெய்ப் பரன்றிரு முன்னர்
௮ங்கடற் றழைத்த வருள் கொண் மன்னவனு மரிவையோ டினிது வந்தடைந்தான்–22-
அண்ட மா யண்டத்துட் பொருளாகி யரிய நான் மறைக்கு மெட்டாத
புண்டரீ கங்கொ ணயன வெம் பெருமான் பொலிந்து நின் றருள் பிரான் றிருத்தாள்
கண்டவர் தாளுந் தடக்யைக் கூப்பிக் கவினொளி விரித்திடும் பல்பூண்
மண்டல மாது புனை தர வீழ்ந்து வணங்குபு நின்றன ரன்றே–23-
கருந்தட மலையிற் பொலிந்து நின்றருளுங் கருணை யங் கடலினை நோக்கிப்
பொருந்தல ருரத்தி னுதிரமுண் டொளிரும் பொரு வயிற் படை கொண் மன்னவனு
மருந்தினு மினிய மொழி நெடுங் கருங்கண் மங்கையு மிருகணீர் பொழிய
வருந்தி நின் றிரங்கி யிரு கை மேற் குவித்து வழுத்துவர் விழுத்தகு மொழியே–24-
அண்டமு மீரேழுலகும் படைத்த னாளி லதிர் சனா யிப்பதியு ளமர்ந்தாய் பின்பு
முண்டகத்தி னான்முகனைப் படைத்தன்னோனை முன் படைத்த வுலகளிக்க முதல்வனாக்கத்
திண்டிறமில் லாதவனுன் னடியை யுள்ளித் திருவட்டாக் கரப் பொருளை சிந்தை செய்ய
வண்டிமிருந் துளவலங்கன் மார்பிலங்க மா மகள் பூ நீளையுடன் வந்த கோவே–25-
வெந்தறுக ணால் வாய்மும் மதப் புழைக்கை வேழத்தை விற் படைக்கை வேடன் சீறி
வந்தடரக் கடமகன்று நெடுந் தூரங் கொள் வழி துரத்தி யிப்பதிக்கண் வர வன்னோனைத்
தந்த மதனாலுறுத்த வவனுங் குத்தத் தந்தியுமக் குறவனு மித் தலத்தின் மாள
விந்திர னந்தகன் றூதர்க் கலை யென்றுந் தனிணை யடிக் காட் செய்து கந்த வெழிலிண்ணா–26-
வேதங்க ளீரிரண்டுஞ் சிச்சர்கட்கோர் விப்பிரர் பன் னாள் வரையும் விளம்பிப் பின்னும்
போதமிலா னதிலொருவ னிருக்கை நோக்கிப் புங்கவனும் புன் பிறப்பிற் போவாய் நீ யென்
றோதவவ னூரினம் விட் டயலூர்க்கேதி யுன்றளி சூழ் புறம் பிடுங்கி யுடலம் பேணப்
பேதமிலா தென தடிய னவனென றுன்னிப் பின் பிறப்பில் வீடளித்த பெருமையோனே–27-
வானவரும் தவளமத வாரணங்கொள் வாசவனும் புயவலி போய் வதியுநாட்டைத் தானவர் முன் பறி கொடுத்தங் கமல யோனி தனைத் தொழ வங் கவனவர் கடம்மை சோக்கி
மானிலத் திற்றிரை கொள் பொருனைக் கவாசி வனமதில் நம்மா லுகந் து வளர்கின்றானீர்
தேனின் மலர் கொடுதொழுமென் றுரைக்க வந்து தேவர் தொழ வவர்க்கருளுஞ் செவ்வியோனே–28-
சங்கனெனு மறையோன்றே விருவரோடுன் றனைச் சரியென் றெணியாசை தன்னைக் காக்கப்
பொங்கு தவஞ் செய்திட நாரதனுழன்று போந்தவனை வாரணமாய்ப் போவாயென்ன
வங்கவனம் முனிவனை யேத்திட மெஞ்ஞான வறிவுணர்வாய் நீ யென்ன வவனும் பின் போய்
வங்கமலி யார் கலியுட் சங்கமாயுன் மலரடி வந்தேத்த வருண் மனத்தினானே–29-
அண்டமு மவ்வண்டத்து ளுலவுந் தீயு மலைகடலு மனிலமுமோ ரணுவின்மான
வுண்டு வந்தோ ராலடையிற் பாலனாகி யோகந பநந் துயில வுந்தி தோன்று
முண்டக மென்மலரதி னான்முகத்தோன் றன்னை முன் படைத்தாங் கவற்குனையே மூல மென்னும்
பண்டை யிருக்காதிய நான்மறை யனைத்தும் பானிறங் கொளோதிமமாய்ப் பகர்ந்த கோவே–30-
பன்றி யுருக் கொண்டு திரைக்கடல் சேர் மண்ணோர் பருமருப்பிற்றுகளினைப்போற் பரித்து வந்தாய்
வென்றி கொளும் வழுதி வள நாடன்றுய்ய மெய்மை யறற்தாங்கி சக்ர பாணியாருள்
துன்றொளிர் வேலச்சுதர் தாமரைக் கண்ணர் பொற் செங்கணர் பொற் காரிகையா ரெந்தை முன்னோர்
குன்றலிலா வழி வழி சந்ததிகளன்பிற் கொடுத் தடிமை கொண்ட பெருங்குணக் குன்றோயே–31-
பொங்கலை நீராழியினைப் புடையுடுக்கும் புவி மகளைக் குடை நிழலிற் புரக்குங் கோவும்,
புங்கவிழித் தெரிவையு மித்துதி மொழிந்து புத்தெனு மக்கொடு நரகப் புவியிலெம்மைத்
தங்கவிடா தீடேற்றிக் கதி யளிக்குந் தனையரெமக் கருளென வஞ்சன வெற்பூடே
செங்கமலக் காடுடனோர் மதியுங்கூடிச் செறிந்ததென நின்றவன் முன் செப்பினாரே–32-
தன்னெறிவா யுலகமெலா மோச்சுஞ் செங்கோல் நலமுறு வேந் தினைய மொழி நவிலப் போதின்
மின்னுறையு மார்பனணி யாழி சங்கு வில் கதை நாந்ககப் படை கொள் விமலன் கொண்மூ
வன்ன வருள் சுரந்து பொலிந்தோங்கி நின்ற வாதிமா லதரிச வாக்காகச் செம்பொன்
மன்னு மணி மாடத் தென் குறுங்கை செல்வீர் மகவளிப்போமென வொருசொல் வழங்கினானே–33-
என்னவெழு மம்மொழி கேட்டிரு புயமு மிருவரையை
மன்ன நெடி தோங்கி யிவண் மனமகிழ்வுற் றிறைஞ்சினனாய்
கொன்னவிலு மயிற்படையைக் கொடு மடையா ரிகலடக்கம்
மின்ன விரு மணிமுடியான் மின்னினை நேரிடையினொடு–34-
அருமறையு மளவிடுதற் கரிய வொரு தனிப்பொருளாய்க்
கரு முகிற்போற் பொலிந்து நின்ற கருணை யமுதினை வலமாய்
மருமலரு நிம்பமணி மதர் நெடுந்தோண் மன்னன் மனத்
தெருமர லற்றெழில் விரச சினகர முன்றிலி லணைந்தான்–35-
உலகமெலாம் பொது நீக்கி யொரு தனி நாயகம் புரக்கு
மிலகுமணிப் பூண்டிகழு மெழில் கனகத் தடவுரக்கா
வலன முறை யிற் கடிது வருதிரெனச் சாற்றிடலு
மலகிலற நெறி யமைச்ச ரனைவரும் வந்தடைந்தனரால்–36-
வந்தடைந்த வமைச்சரனை வருமரசர் கோனொலிக்குஞ்
சந்தமுறு மொண் கழல்க டயங்குமலர்த் தாடொழுது
சிந்தையுவந் துடை யொடுக்கித் திகழ் கரத்தின் வாய் புதைத்து
முந்து நிற்ப மன்னனவர் முக நோக்கி விளம்ப லுற்றான் -37-
வண்டினங்க ளிசைபாட மஞ்ஞையெலாம் கண்ணுளர் போற்
றண்டலைவாய் நடனமிடுந் தண் குறுங்கை மா நகரு
ளெண்டிசையும் போற்றி செயு மெம்பெரு மானெந்தமை யாட்
கொண்டு வழி வழி யருளுங் கோதிலாச் சுடர் மூர்த்தி–38-
அண்ட மெலா மளித் தருளின் னருளாழி யண்ணறனைக்
கண்டுதெரி சித்திருகண் களிப்புறயாஞ் செல்வதினான்
மண்டு திரைக் கடலனைய வரும் படைகளைக் கடிது
கொண்டூ வருகுதிரென்னக் கோமானு முரைத்தனனால்–39-
ஒன்னலர் தம் மணி முடிக ளூரஞ்சுதா ளரசர்பிரான்
சொன்ன வுரை கேட்டிருதாட் டுணையுமுடியிற் புனைந்து
நன்னெறியிற் றிகழமைச்சர் நவையிலா விரைவினொடு
மின்னவிரச் சினகரத்தை விட் டினிது சென்றனரால் -40-
கூம்போடி வான்முகடு கூடு நெடுந் தேர்முதலா
யாம் பேர் படைக்கலங் கொண் டரசர் பிரான் திரு முன்னர்த்
தாம் போய் வணங்கி நன்கு சாற்ற வவர்முக நோக்கித்
தேம்பாடு வண்டிணை தார்த் திருமார்பன் செப்பலுற்றான்–41-
இப்பெருநம் படையொடு முன் னேகுதிரென் றவர்க்கருளி
ஒப்பில்லாப் பரிபூட்டி யுயர் மணித் தேர் கொணர்தி யெனச்
செப்பிடச் சாரதி நொடியிற் சென் றிறைவர் கோனுரைத்த
வப்படியம் பொற்றேர் கொண் டரசர் பிரானடி தொழுதான்–42-
மஞ்செனவள் வார்முரசும் வால்வளையு நின்றதிரத்
தஞ்சமென வந்தடைந்தார் தமக்கருளுங் கருணை வள்ளல்
பஞ்சினை நேரடித் துவர் வாய்ப் பணி மொழி யன்னாளினொடு
விஞ்சொளிருந் தேரேறி விரைந்து பெரும்படை கலந்தான்–43-
மின்னொளி ததும்பியணி கொண்டவிர தந்தனை விரைந்து கொடுபோய்
மன்னவ னரும்படையி றன்ன விரு பங்கிலும் வளைந்து வருமால்
சொன்ன பணி செய்யுமதி மந்திரி யருந்திய துரங்க கணமு
முன்னத மிகுந்த புய மைந்தர் நடவும் திகிரியும் பலவரோ–44-
சுந்தர ரதந்தனை விரைந்தரசியங்க வயறுன்னி மயில்போற்
கந்தர நறுங்குழல் மடந்தைய ரடர்ந்தரிய கவரிவிசிற
வந்தவ னுகந்த பணி தந்தடி பணிந்து வரு மைந்தர் பலர் சூழ்ந்
தந்தர மெழுந்தணி புரந்தரன் வருங்கவி னடைந்தனனரோ–45-
முத்தின நிறைத்தொளிர் மணிக்குவை யழுத்தி வெளி முற்று மொளிரும்
சத்திர மெடுப்பவர்கள் சுற்றிலு நிழற்றவய றத்ததிமென
மத்தள மடிக்கவின் மொழிச்சியர் நடிக்க விதழ்வைத்து வெகு பேர்
நத்தின முழக்க வமுதத்தினி தொலிக்குமுயர் நாகாசுரமே–46-
வெண்டரள மண்டியணி கொண்டொளிரு தண்டிகையுண் மென் சிறைகொளும்
வண்டர் நற வுண்டுகுதி கொண்டுலவு தண்டெரியல் மந்திரிகள் சூழ்ந்
தண்டை தனின் மிண்ட வுயர் புண்டர மணிந்திலகு மந்தணர் குழாங்
கொண்டனிற வெந்தறுகண் தந்திமிசை யுந்தி வரல் கோடி யுளவே–47-
குந்தமொடு சூலமயி றண்டு சிலை வாளி கதை கொண்டெ றிதிரைச்
சிந்து வென லாகவெழு கம்பலை கொள் சேனை பல சென்றடருமா
லிந்து முறி வாணுதன் மடந்தையர் விலோசன மிருந்தொளிசெய
வந் துலவு மீனென விருங்கயல்கொள் கேதன மலிந்தனவரோ–48-
சித்திர மிழைத்த கனகப்படமுகக் கரி கதித்த திரளி
றத்தி வருமொப்பில வெணற்ற தவளத் துரகதத் தொகுதிகள்
அத்திரவிழிப்புவி மகட்குடை யெனப் பொலியு மற்புதமிகு
நத்தின மிகச்செ றியு மத்தியிடை. யெற்றலை யினைப் பொருவுமால் -49-
சந்திர விருங்கவிகை யின்னிழலிறங்குறு மதன் றனணியார்
தந்தமடமங்கையருடன் கரியினந்தர மிசைந்து வருவோர்
சுந்தர மிகுஞ் சசி மடந்தையருடன் கரிய துன்னி யெழு சூழ்
கந்தர மமர்ந்து வரு மிந்திர ரனந்தரி னிகர்ந்திடுவரால்–50-
முத்தின மிகுத்தடு கடற் புவியினைப் பொதுவின் முற் றுமளிகோன்
சுத்தமரையைப் பொருமடித் துணையினைத் தொழுது சுற்றி வருமின்
பத்தியினயிற் படையினைக் கரமதிற் கொணிரு பத்திறலினோ
ரத்தமு ளிரத்தின மிழைத்த சிவிகைக்குழு வெணற்றவையரோ–51-
சுத்தவமுதத்தினு மினித்தமொழி வைத்த பல சொற் கவிகளால்
வித்தகமிகுத்திடு குணத்தரசனைத் துதி செய் விற்பனர்களைக்
கைத்துணை குவித்தவனெழுச்சியை யுரைத்து வரு கட்டியர்களை
யித்தனை யெனத் தெரித லுற்றினி துரைக்கும் தெமக்கரிதரோ–52-
எண்டிசையு மண்டி வருகின்ற விவரும் படை யெழுந்து களெலாம்
விண்டல மடர்ந்திட மிகுங்கதிர் மறைந்திட விரிந்தொளிசெயும்
வெண்டரள மென்னகை மடந்தையர் கலன்களு மிடைந் திருமணி
கொண்ட விரதங்களு மனந்தமரி யின்னொளி மிகுந் திடுமரோ–63-
பங்கய வரும்பினொ டெதிர்ந்தடி பரந்தணி செய் பம்பரநிகர்
கொங்கையர் கமுங்குழலிழிந்த மகரந்த மிரு கும்ப மிசையார்
துங்கமுறு தந்திகள் பொழிந்திடு மதங்களொடு துன்றிவிரவி
யெங்கு மிகு பங்கமிடு மென்னிலவை யின் கண மியம்ப வெளிதோ–64-
தண்டிரை கொ ளங்கடலை யன்ன விரு பங்கில் வரு தண்டுகளு நீர்க்
கொண்டலி னிருண்டுவரு தந்தமுறு தந்தியின் மிகுந்த குழுவும்
விண்டொடர் பொலன் குவடை யன்ன விரதங்களு மிசைந் து வரவி
வண்டமுழு துந்துதி குறுங்கை நகரந் தனை யடைந்தனனரோ–65-
நனை விண்ட நறுங் கமலப் பிரசஞ் சினை கொண்ட செழுங் கய லுண்டுகளுங்
கனை கொண்ட கருங்கடனேரகழைப் புனைகின்ற பொலன் மதில் வானுறுமே-66-
புயலுற்ற பொலன்மணி மாளிகைகள்
கயலுற்ற கருங்கணுடங் கிடையார்
மயலுற்ற மதன் சமர் வென்றும௰ழ்
செயிரற்றொளிர் மேனிலை சேணுறுமே–67-
பண்ணுற்ற மொழிச்சியர் பற்பலர்க
ணண்ணித்தின நற்கழல் பந்துபயில்
விண்ணுற்று மிளிர்ந்தடர் கூடமிகுந்
தெண்ணற்ற திருந்தணி செய் திடுமால்–68-
வாரூடு கிழிக்கு மதர் முலைமின்
னாராடிடு நாடக சாலைகளுங்
காரான கருங்குழலார்களிசை
யாராயு மரண்மனையும் பலவே–59-
அமிழ்தத்துமினித்த வருஞ்சுவை முத்
தமிழ் கற்றிடு சாலையுமால்புகழோ
து மறத்தினுருக்கிளர் தூய் மறை நான்
குமுணர்த்திடு கூடமுமாயிரமே–60-
மணிவார் கொடிறுக்கிய மாமுரசைக்
குணிலாலே துவைத்திடு கோடணையு
மணியாழிசை யார்வமு மார்ந்திலகுந்
துணி வீசிய தோரண வாயிலெலாம்–61-
கஞ்சப் பெணுளங் களிசெய் கணவன்
விஞ்சக் கதிர் வீசுபொ னிஞ்சயும் வெம்
நஞ்சத்தனரன் முடிகாணரிதாய்
விஞ்சித் திகழ் கோபுர மேலுறுமே–62-
மீனந்தவழ் மாடமிசைத் திமிர்பாற்
றூ நன்கொடியாடுத றொன்னகர் வாழ்
மானின் மகவாமென வெண்கையினால்
வானொன்றுவர் கூவுதல் மானுமரோ–63-
முருகூரு நிம்பமல ரணியா னெழுந்தருளன் முனமே யறிந்திநகர்வாழ்
இருநாக மன்ன விரு தனபார மங்கை யரு மிகலாரு மைந்தர் குழுவுந்
திருமா துறுந்தவள மணிமாட மண்டியணி செயும் வீதியெங்கு நடுவார்
மருவேரி யம் மடல்களொடு பூக முங்கழையு மதியேற ரம்பைகளுமே–64-
கருமா முகிற் படியு மிருவான கட்டுற மகர தோரணங்க ளிடுவார்
பருவா னிறத்தரள மணிவா யமைத் தொளிகள் பரிகா வணங்க ளிடுவார்
அருமா டகத் தகழி யிடையா நெயிட்டு வெயிலளி தீப மெங்கு மிடுவார்
விரிவா னகர்க்குமிடர் தருவீதி முற்றவுமி விதமா யியற்று பொழுதில்–65-
உலகேழுமுற்ற முடிவுறு நாளினிற் கிளரு முவராழி கட் கிணை யெனப்
பலமாரு மப்படைக ளிருநா றிசைக் கண் வரை பரவா வரச் சுடர் கொளுஞ்
சலமா றையிற் படை கொள் வயவார் முதற் றலைவர் தமை யிடழித்திடு புர
வலனீ டிரத்னமணி யதனா லிழைத்த நகர் மதில் வாயினிற் குறுகினான்–66-
இனனீதி யுற்ற வறு தொழிலோ ரிருக்கொலியொ டெதிர் காண் வரக்கரிய சூற்
கனமீதினிற் படியு மணிமாட மட்டில் பல கவின்வீதி பிற்பட வொளிர்
முனமே யுரைத்த நெடுமதி லாலையத்தினகன் முது வாயிலிற் சிகர வொண்
டன மேருவைப் பழி செயணி தேர் நடத்தி யடறளமோடு முற்றனனரோ–67-
அடலாழி யுற்ற கர னடியா ரடிக்கமல மகலா மனத்தி னிறையோன்
கடனீ டிரட்டியக லிகறானை கட்கவணி கவின் வாயி னிற்பவருளி
விட தேர் நிறுத்தி நிலவுமிழ் மாமதிக்கு நிகர் விரியான னத்தினணியார்
மடமாது பிற் செலமி னொளி வீசுமத்தளியை வலமாக வுற்றனனரோ–68-
மரையா தனத்திலுறை யொருநான் முகத்தவனு மறையோதி நிற்பவடல்கொ
ளுரையோதி மத்தனைவிலெனவே பரித்தவர னுறுகாதன் மக்களுடனே
விரையாரலர்த்துளவ முடியாயெமக்கருடி வினையே மடைக்கலமெனத்
தரைமீதினிற் றொழுது பலவாய நற்றுதிக கடகையோடி யற்றி மகிழ–69-
அகல்வா னகத் துறையு மிமையோர் கணத்தி னெடு மயிராவதத்தின் மிசையூர்
இகன்மா மலைச்சிறைகடுணி தூ றையிற் குவிச மெழிலார் கரத்திற் திகழ
மகவானடுத்தினிய நறையோடு கற்பகமென் மலரா லருச்சுனை செயத்
தகவாத ரத்தினொடு விரிசாம நற் சுருதி தனை யோதிடத்தவர்களே–70-
மருவார் கமலங்கள் மலர்ந்த நெடுங் கருமாமுகின்மீது கவின்றிகழ
வொருகோடி யருக்க ருதி த்தனெரென் திருமா முடியொன்று திகழ்ந்திடவே–71-
வருசூரிய மண்டல மத்தியனென் றருமாமறையான தறைந்தவெனப்
பெரியோர்க ளுரைத்திடு பெற்றியையா முருவாக முனந்தெரி வுற்றன மால்-72-
செடியாதுமிலாது செழித்த நுதற் கடி நான முறுந்தில கத் தினொடும்
வீடுதண்சுடர் வெண்பிறை யொன்றுளதேல் வடிவேறெனை மானுமென திகழ–73-
மாசற்றமுண் மேவி மலர்ந்த விருந் தே சுற்றணி கொண்ட செழும் முகமெம்
மீசற்கிணை யுண்டெனி லென்றனை நேர் பேசத் தகுமென்று பிறங்டவே–74-
மரைமா மலரென்ன மலர்ந்தவிர்செவ் வரிமீது பரந்த வருட்கணிணை
தரைவாழு முயிர்ப்யிர் தான் வளரப் புரைதீ ரருண் மாரி பொழிந்திடவே–75-
நகுவொண்கதிரம் பொனின்மாமணியால் வகுவங்கத மிட்டுயர் மாநகருட் டகுவைந்தருவின் றிகழ்சாகை நிரை நிகரென்னவே நாற்புய நின்றொளிர–76-
வாடாதமரைத்திரு மாமலரை சாடா விலகங்கை கடம்மிலக
லாடாழியொ டொண் கதை யந்தனுவா ணீடாய வலம்புரி நின்றொளிர–77-
சிறையோதிமமேல் வருசேவனொடுங் கறையாய களத்தரனே முதலோர்
அறியாது விளங்கு மடித்துணையா நெறியாக நிகழ்த்துவ தெவ்வினையே–78-
அந்தப் படிகத் தமையத் தளியுள் ளிந்தப்படி யேய்ந்திடு நம்பிமுனஞ்
சிந்தப்படி கண்ணொடு தெவ்வரெலா மந்தப்படி யாளிறை வந்தனனால்–79-
காசத்த மனத்தரி காணமுன மாசத்த மனத்தி சூழ் மானிலமு
ணேசத்த மனத்திறை நேரவுமெற் றேசத்த மனத்தி றிகழ்ந்ததுவே.–80-
ஓலைப்புனல் சூழ் புவியோம்பிடு செங் கோலைத் தரிகோன் பவனிக் கெழுமக்
காலைக்குமுனே குறு கட்டியரின் மாலைப் பொழு தெற்கு முன் வந்ததுவே–81-
கூவற்ற குயின்னட மற்ற மயில் வாவற்றிர ளூண்ணிரை வைகுமிட
மேவச் செல்லுற்றன மென் கவிக டாவற்ற தடம்பொழி றன்னிலரோ–82-
வீசக்கரவாக விரும்பியணை நேசப்பெடை நீங்க மென்குமுத
மாசைத் தனி யன்பர்வரக் களிகொள் வாசக் குழலாரின் மலர்ந்தனவே–83-
பரிவிற் புணர்பான்மைய வன்பர் தமைப் பிரிவுற்றவர் பேது ற வெங்குள ரென்
றரிபற்று மலர்க்கணை யைந்துகொடு திரிவுற்றனன் சித்தச னெங்குமரோ–84-
இவ்வாறு தூலங்குறு மெல்லிலடற் றெவ்வானவர் சிந்தை கலங்க வொளிர்
வெவ்வாழி விளங்குகை நம்பியம ரவ்வாயி னிகழ்ந்த தறைந்திடுவாம்.–85-
திருக் குறுங்குடிப் படலம் முற்றும்,
—
வரம் வேண்டுகோட் படலம்
தேனுகு பூம்பொழி லிடைமாடக் களாருத் திருநாராயணபுரத்திற் சிச்சர்கூடி
ஞானமுனி நின்னுருப் போலர்ச்சை யொன்று நாங்களியற்றியதினடி நாளுந் தாழ்ந்தெம்
மூனமற வேண்டுமெனப் பணியச் செய்வித் துடையவரோ வென்றதை மாற் றுரைக்கச் செய்ரா
மானுசன்றாளிணை மலர்நஞ்செ ன்னி சூடி வரம்வேண்டுகோட் படலம் வருவிப்பாமால்–1-
கொந்துற்ற குழற்கொடி நேரிடையு வந்துற் றமரு மரைமாமலரின்
பந்திச் செழு மாமுகில் பார்த்தனரால் வந்திக்கு மறைப் பொரு டன்னைமுனே–2-
வெண்ணித்தில வொண்வட பேழுதலா மண்ணிற்பட வீழ்ந்து வணங்கி யிரு
கண்ணிற் புனலோடு கனிந் துருகி நண்ணிப் பறுதிப்பை நவின் றிடுவார்-3-
அற்புக்கொரு வாழியினான வளாய்ப் பற்பத் தளிமேவிய பாலின்மொழி
கற்புத் திருமங்கை கவின்றிகழ விற்பத்தொடு மெய்மணிமார் புடையாய்–4-
மஞ்சிற் கரிவாவென வந்தருள்வான், கஞ்சத் தடமேவிய வெங்கரவைத்
துஞ்சக்கனனின் றெரி தூய்மை யுறும்அஞ்சக் கரம் வீசி யறுத்தவனே–5-
அரிதாய பலாயிர வண்டமெலாம் விரிவாக வீடுத்தி டுனக் கடியேந்
தரிகான்முளை தன்னை யெமக்கருளல் பெரிதோ விது வென்று பிறழ்ந்தனனே–6-
இன்னவாறுள மின்புற் நிறையுமா றன்னை வாழ்த்திக் தளிவலமாய் முகின்
மின்னையே மிடை மெல்லியலோடுதான் மன்னி கேதனம் வந்தணைந் தானரோ–7-
மாலதிக்கிணை யாதிய வாலனம் பால சர்க்கரை நெய்யொடு பாகமாய்
வேலை மாய னமுது செய் மிச்சிலை கோலமோடுண் டருந் துயில் கொண்டனன்–8-
அனனடைப் பொன்னணங்குறு நம்பியவ் வினனிடங் கனவிலுனக் கஞ்சவா
கனனரும் பொருடந்தவன் காதலார் தனைய னற் பொருடந்தில னென்றனன்–9-
சொன்ன வாய்மை துளைச் செவி யேறுமுன் மன்ன னுள்ள மலங்கி
பொன்னினோடு புலரி நீராடிமால் சந்ததிக்குட் புகுந்தினல் சாற்றுமால்–10-
மெச்சயன் மதமேவ மறையை நின் னிச்சையா லசைரர் சென் றெடுத் தெழற்
கச்சமுற்ற வவன் றுயராற்றுவான் மச்ச ரூப மெடுத்தருள் மாயனே–11-
இமையவர் திரண்டின்புற வின்சுவை யமுதமீயெமக் கண்ணலெனச் சொலச்
சிமையம்வெந்நறச் சேர்த்திட வாரியுட் கமடமாதிய கார் முகில் வண்ணனே–12-
இரணியாக்க னுயிர்க்கிடர் செய்குவான் தரணியைக் கொடு பாதலந்தான் செல
வரணியாவெனு மன்பர்க்கருள் செய முரணியங்டியாய் வரு முர்த்தியே–13-
பாரினுட் பரநா மலதில்லை யென்றாருயிர் முன்னறைந் துரையீரெனுங்
கூரயிற் கனகன் னுயிர் கோறவே நாரசிங்கம தாய் வரு நம்பியே–14-
திறமிலா மையிற்றேவ ருலகையும் மறமுறும் புயமாவலிகைக் கொளத்
தறையும் வானு நின்றாளிணையே தொழக் குறளுருக் கொண்டருளிய கொண்டலே–15-
அத்தி சூழு மிலங்கை யரசனான் மெத்தவாற்றன் மெலிந்துள சந்துமா
கத்துளோருன் கழறொழவன் றுகா குத்தனாய் வந்தருளிய கொண்டலே–16-
மண்ணகப்பெண் வருந்த நினைத்தொழு தண்ணலென் பொறை யாற்றுவை யென் றலும்
மூண்ணெகிழ்ந்தம் குகந்தெழிலான் மிகும் கண்ணனாகி யருளிய கர்த்தனே–17-
பாருளோர் வெம்பவத்தளை பூண்டுனைச் செர்கிலாது புன்றீய மதாந்தராய்
நீர்மை குன்றிட நீயவர்க் கின்னருள் கூரவே கற்கியாய் வரு கொண்டலே–18-
பழுதி லெண்டிசையோர் புகழ் பண்பறா வழுதி மன்னர் மரபிலுதித்த யான்
எழுதலை முறையா யுனையே தொழ மழலை நன்மக வில்லெனன் மாட்சியோ–19-
ஊழ்வினைப் பயனோ வலதும்பர் பாற் றாழ்வு செய்தனனோ பற்றளிகளாம்
வாழ்வகற்றி வதிந்தனனோவல தேழை மாந்தர்க்கிட ரிழைத்தேனரோ–20-
பொம்மலுண்ணக் கலத்துறு பூசுரர் தம்மையேகக் கடிந்தனனோ தமிழ்ச்
செம்மலார்ந்த கொழுநனைச் சேர் தருமைம் முகிற் குழல் வாழ்வறித்தேனரோ–21-
மண்டலத் துண்மகவுறு மாந்தரைக் கண்டு நெட்டுயிர்ப் புற்றனனோகரங்
கொண்டு பாலிறையேனுங் குழவி கட் குண்டுகக்க வுதவின னில்லையோ–22-
வேதியர் பெரியோர்கள் வியந்ததங் காதலாரைக் கருதினனோ வயல்
மாதரோடு மருவிக் கருவையுந் தீதெணாது செகுத்தனனோ கொலோ–23-
ஊதியத்திலவாவி யுலகமொவ்வாத பொய்மை வழங்னெனோபலி
யாதுலர் முன்னளிக்குவ னென்றலைத் தேதுமில்லு மக்கேகுமினென்றெனோ–24-
கொஞ்சமேனு மிரக்கங் கொளாதுயி ரஞ்ச வீண் கொலை யாற்றினனோ வெனைத்
தஞ்சமாகுற் தமர்க்கருள் செய்வபோல் வஞ்சமே செய் மனத்தினனே கொலோ–25-
பெற்ற வின்பயம் பேரிளங் கன்றுணச் சற்று மின்றித் தகைந்து கறந்துவாக்
குற்றசங்க மொழித்து மதுவினைக் கற்றிலாரிற் கருதி யுண்டேன் கொலோ–26-
மெய்வருந்த விழைத்திடு வேலையர்க் கெய்து கூலி கொடுத்தன வில்லையோ
செய்யெனாமுனஞ் செய்தவர் நன்றி யுண்மையிதாக மறந்தனனே கொலோ–27-
ஆறிலொன் று கொளா துறுத் தாசையால் ஊறு செய்துல கோம்பினனோதவத்
தேறுபோல்வர்க ளெய்திடில் யான் கொடுஞ் சேறு சேர வெழாதிருந்தேன் கொலோ–28-
முன்னியற்றுக் தவமுடி வில்லையோ பின்னிழைத்திடும் பேறுங் குறைந்ததோ
வின்னிலத்திலி யாங்கள் மலடராய் மன்னவென்று வரங்கொணர்ந் தேமரோ–29-
அன்று வேழ மழைக்கு முனாவலாய்ச் சென்று றூஉகண் செகுத்துத் துரோபதைச்
கொன்றவாடை வுதவிய நின்னருளின் றெமக்கிலதாயதெ னேந்தலே–30-
இப்படிக் குரிசி லுள்ள த்திருந்த வெந் துயரமெல்லாம்
மைப்புயலுரு வோனக்கன் மலமறக் குருதி யீந்த
நப்பின யணங்கு கேள்வ னம்பி காற்றுணையில் வீழ்ந்து
செப்பினனழுங்கிப் பல்காற்றிருக்கு நீர் கலுழமாதோ–31-
மண்ணினன் களைகணீ யென் றலமரு மாண்பு நோக்கிப்
புண்ணியவெதவேந் தன்பிற் பொறிக்கும் புண்டரமிலங்கத்
தண்ணளிக் கடலா னம்பிதனாதுள மகிழ்ந்திவ் வேந்தின்
கண்ணினுக் கணியனாய் நின் றீனிய சொற் கழறுவானால்–32-
மானிலத் துறவிலார் தம் மண்டமர்கடந்த வொள்வேல்
மீனவன் மரபுட்டோன் றும் வேந் துனக்குரிய சேயாய்
நானடைகுவனின் சோக நவையற மகிழ்ந்தெல்லீருந்
தேனின முரலுஞ் சோலைக் குருகை சென்றிடுமின் என்றே–33-
மாயவனுரைத்த மாற்றம் வள்ள றன் செவியுறாமுன்
வேயுறழ் புயமிரண்டு மேருவினிமிரச் செய்யாள்
நேயனேவன்மீ னட்ட நேமியா யுலகமுண்ட
தூய கந்தரத்தா யென்றே துதிபல வியம்பி நின்றான்–34-
பாடினா னாடினான் செம்பதமலரணி முடிக்கட்
சூடினா னாழியானின் சுதனெனுங் கருணையே கொண்
டாடினானணியனா மவ்வாண்டகை வடிவு நோக்கங்
கூடினான் றொழதா னின்பக் குளிர் கடல் முழுகி நின்றான்–35-
விஞ்சை யரியக்கர் விண்ணோர் விரை கொளைந் தருவின் பூவான்
மஞ்சன மாரி பெய்ய மண்ணுளோரிறைஞ்சி யேத்த
கஞ்ச மின்னிலகும் திண்டோட் காரியார்க் கருளீந் தன்று
குஞ்சரத்து றுகணீத்த கோவலன் கோயில் புக்கான்–36-
மாமனங் கதர்சனாக மறைந்த பின் குருதி தோய்ந்த
நாம வேலிறையுங் காதனங்கையு மிக மகிழ்ந்து
தேமலர்த் துளவினான் றன் சினகரம் வலமதாய்த்தன்
றாமமுற்றடிசி லுற்றுத் தளத்துடனிருந்த பின்னர்–37-
பிழையறப் புவிபுரக்கும் பேரருட் ஞரிசினீதி
யுழையரை விளித்து யூகமொலி கடற்றிரளே யின்பந்
தழை வுறச் செய்து பிற்றைப் புலரியிற்றருதிர் நீவிர்
குழை பொரு கயற் கணார் வாழ் குருகையா மடைதற் கென்றான்–38-
ஆங்கரசியம்பா முன்னரறிவின்மிக் கமைச்சரெல்லாம்
பாங்குறு மிரதமியானை பாய் பரி படைக் குழாங்க
ளீங்கு வந்தடைந்த தெந்தாயினி யருளென்னே யென்று
வீங்கிய குவவுத் திண்டோள் வேந்தனுக் கறிக்கை செய்தார்–39-
மந்திர மறையோர் வாழ்த்த மங்கள வியங்களார்ப்ப
பந்தையொத் தெழுந்த கொங்கைப் பரத்தையர் நடிப்ப மன்னன்
பைநதுள வலங்க னம்பி பங்கயப் பதமுட்கொண்டு
வந்தனை புரிந்து பொற்றேர் மங்கையோ டேறினானால்–40-
வாளரி மதர்க்க ணல்லார் வயங்கு சாமரமிரட்ட
காளமும் முரசு சங்குங் கறங்க வானிலவு காலுங்
கோளகை கவிகை யேந்திப் படைகளின் குழு முன் செல்ல
வாளி மொய்ம்பினனும் பொற்றே ரணி கொள் வாம் பரி நடாத்தி–41-
குதி தோய்ந்தொளிரும் வெற்றிக் கொற்ற வேற் கலியனன்பர்க்
கருணிதியமரு மவ்வூர்க் கண் மறுகதனைத் தாண்டி
இரு விசும்பணவு செம்பொனெயில கழியையு நீங்கித்
திரு மகிழ்ந் துறையு மார்பன் செழும் பணைத் தலமடைந்தான்–42-
தூய தாமரைத் தடத்தையு மத்தடந் தோயு
மாயந் தன்னையு மணிமலர்க் காவையு மயலி
னேய தண்பணை களையு மற்றுள வள மெல்லாம்
ஏயவோகையி னணங்கிலுக் கிறையவன் காட்டும்–43-
அங்கயத் தடைந் தரிவையர் தேர் நிமிர்ந் தாடச்
செங்கயத்தடி முகத்தொரு தனமு மேற்றெரிதல்
வெங்கயத்தடர் முலையினா யாங்கதில் விளங்கும்
பங்கயத் தட மலர் முகை போன்றன பாராய்–44-
வடு வகிர்க் கிணையாய கண் ணணங்குசின் மடவார்
இடுபுனற் குடைந்தேந்து பின் குழலில் வைத்திடு தேன்
விடு வெண் டாமரைப் போது சூற் கொண் முகின் மீதில்
படுமுடுக்கணம் போன் றினி திலங்குவ பாராய்–45-
மாங்குயிற் சொலி னன்னவர் குடைந்தெழ மறைக்குந்
தேங்குழற்றிர ளொதுக்கிடத் தெரியும் வத் திரந்தான்
ஈங்கெழிற் கொடியிடையினாய் மேற்பட ரெழிலி
நீங்க வுட் டெரி வெண்மதி நிகர்த்தன பாராய்–46-
அனிச்சப்போது மெனஞ்சத்தின் றூவியுமழுத்தி
நனிச் சிவப்புறும் மடியினாய் நாரந் தோய்வான் செல்
கனிச் செவ்வாயினர் சிலம்பொலி கேட்டனக் கணங்கள்
பனிச்சையோடு தம் மினமெனத் தொடர்வன பாராய்–47-
கருமுகிற்குழலா யொரு கன்னி செங்கமல
மருவை யோருவானாசி வைத்திட முக மதி யென்
றருகு கூம்புமம் மலரினைக் காணி லதன்னார்
திருமுகத்தினுக் கடையு நாணென்னலாந் தெரிவாய்–48-
கோங்கு கொங்கைகள் காட்ட நன்முருக் இதழ் காட்ட
மாங்குயின் மொழி காட்ட மாவடு விழி காட்டத்
தேங்குழைத் தளிர் திருவுருக் காட்டிடச் சிறந்து
பாங்கரும் பொழின் மடந்தையர் போன்றன பாராய்–49-
விரியறத்தின ரரும்பொருள டையுமவ்வேலை
யரியதாயதம் முறவினை த் தழுவுத லனையக்
கரியவாயசந் தானுணும் மிரையினைக் கண்டே
யுரியதன் கிளைகூவுவ காண்டி யொண்டொடியே–50-
தேகி யென்றவர்க் கிம்மியு மளித்திடாச் சிறிய
ராகி நின்றவ ரரும் பொருளாக்கிக் காப்பது போல்
கோகிலத்தினன் மொழி மினாய் தேன் கணங் கொழுந்தே
னேகி யெங்கனு மீட்டி வைத் திருப்பன பாராய்–51-
வயற்றலந் தொறு மடர்ந்த பைங் களைகளை மாய்க்கும்
புயற்றருங்குழலுழத்தியர் கண்ணெழிற் பொலிய
வயிற்றிரிந் திடும் புட் குலமவாவொடு மடைந்து
கயற்றிரள்களென் றேங்கி யங் கிருப்பன காண்டி–52-
இன்ன தன்மைய வளனெலா மெடுத்தெடுத் தொளிரும்
பொன்னின் மா மெளலி மன்னவன் புயற் கருங் குழற்பைங்
கன்னனன் மொழிக் கனி யிதழ்க் குரைத் துரைத் துகந்து
செந்நென் மன்னிய பணை பொழிற் பின்னிடச் சென்றான்–53-
பெருகு மார்கலிக் கணை யெனப் பெருந் தவப் படைகள்
வருக நாற்றிசைப் புறத்தினு நண்ணி வெண் மருப்பார்
பொருகை மாமதக் குஞ்சரம் புரை பவனுயர்ந்து
குருகை மா நகரர் தனைக் குறுகினனன்றே–54-
ஆதி நான்மறை யந்தண ரோதிட மடவார்
வீதி யெங்கணு மயினிநீர் சுழற்றிட வினிதன்
மாதினோடு பன்மாமணி மறுகெலாங் கடந்து
கோதிலாத தன் கோயிலைக் குறுகினன் கோமான்–55-
இருந்ததானைகட் கொருவிடை கொடுத்தினி திறையோன்
பொருந்து நீண் முகிற் பொலிந்து நின்றருளிய பெருமான்
றிருந்து சேவடி யனு தினந் தொழுது மண் சிறிதும்
வருந்து றாதுள மகிழ்ந் தரசி யற்றியே வந்தான்–56-
கந்தமாலுகக் கண்ணி கொள் காவலனினிதின்
இந்தவா றரசியற்றி நுண்ணிடையிற விணைந்த
சந்தவார் முலைத் தையலோடினிது வாழ்வுறு நாள்
வந்தவாறெடுத் தியம்பிட லுற்றனன் மன்னோ
வரம் வேண்டு கோட் படலம் முற்றிற்று
—
திரு வவதாரப் படலம்
வாதினான் மிகு வாதியர் தங்களை
நீதி நூல் கொடுவென்று நினைப்பருஞ்
சேதி நீளெர்திரத்தினி லிட்ட நங்
கோதில் ராமானுசன் பதங் கொள்ளுவாம்–1-
ஆரஞ் செய்ய வலரனமோடுச
கோரஞ் செய்மன் குருகையுண் மாறனாய்
நீரஞ் சேயவ ணேய னடைந்தவ
தாரஞ் செய்படலந்தனைச் சாற்றுவாம்–2-
வையமோர்குடை நீழலிற் வைத்தெழிற்
றையலோடு தருக்குற வாழுநாட்
பொய்யிலா தவப் பூவை வயிற்றிடை
துய்ய சூற்குறி தோன் றிய தற்பமே–3-
மங்கலஞ்செய மாமல ரன்னவே ,
பொங்கருட் பொலிவுற்ற பொலன்முக
மெங்கும் வெள் ளியவாகி யிலங்கு மொண்
திங்களென்னத் திகழ்ந்தது மாதரே–4-
மட்டுவாரு மரையின் முகையெனப்
பட்ட வார் கொ டணிந்த பயோதரங்
கட்டலிழ்ந்த வக் கானின் மலரென
வட்டமிட்டு மணிக்கண் கறுத்ததே–5-
துங்க வேலைச் சுடுசரந் தன்னை யொண்
கொங்கவிழ்ந்த குவளை யம் போதை வெல்
லுங் கருங்கண் குழைந்து டல் ரோமமெய்
௮ங்கமெங்கு மழகிற் பொடித்ததே–6-
ஒது மோகை யடக்க வடங்ககில்
லாது மேற்க சிவார்ந்தது போலவே
கோதினீலக் குழற் கொடி நேரிடை
மாதின் மேனி வெளிர்ப்பு மலிந்ததே–7-
தொன் மரத்தி னிலையிற் றுலங்குறு நன்மைப் பண்டி நலத்திற் கனத்ததவ்
வின் மலிந்த நுதற் கொடி மின்னெனுந் தன்மையான விடையுந் தடித்ததே–8-
தண்ணிலாவின் தரள மணி யென வண்ணி யெங்கும் சுவேத மரும்பிய
துண்ணி வந்த நரம்புடம் பெங்கிலும் மண்ணுவப்ப மலிந்து பசுத்தவே–9-
நலந்தருங்கொடி நைந்த விடைச்சிதன்
புலங்கொண் மேனியிற் போர்த்த பசுநரம்
பிலங்கு பொற்றிருப் பாவை யிடையிடை
துலங்கிழைத்த மரகதந் தோன்றுமால்–10-
செயிரறும் பலதேசிக நற்கலன்
பயில் வுறுந்தன பார வரைமிசை
யயர்விலேற வமைத்த படியெனும்
வயிறணிந்த மடிப்பு மறைந்தவே–11-
அண்டமு மதனுட் பொருளி யாவையும்
உண்டகட்டிலடக்கு மொருவனே
கொண்டன் மைக்குழற் கோற்றொடி மாது தன்
பண்டி வந்து படிந்தன னென்பரால்–12-
தேங்கொள் செங்கம லாதனன் றேடரும்
பூங்கழற்றனிப் போற்றிருந்தான் றனை
பாங்கு பெற்ற பசுங்கொடி. மாது தான்
றாங்கி நிற்கத் தவமென் செய்தாளரோ–13–
கன்னி பண்டியைக் கான வடமாகவே
முன்னரே யுவமிப்பர் முறைமையால்
பொன்னுடைப் பரன் போந்தனன் வைகலா
லன்னதேதிரமாக வமைந்ததே–14-
வேதமோதிய வேதி யருந் தவப்
போத ஞானப் புனிதரும் போந்து போற்
தோது மன்னவர்க்குற்ற சடங்கெல
மாதந்தோறு மடவரற் காற்றினார்–15-
குமுதவாய்க் கொடிக் குற்றிடைப் பாங்கிமா
ரமுதினுமினிதாக வமை பல்வி
தமுதிருண்டிதர வெறுத்தும் முணா
துமுதகங் கணந்தோறு மருந்தியே–16-
மாத மைந்தினோ டைந்து மலிந்த பின்
றீதமைந்தித் திரை நெடு மண்ணெலாம்
பேதமைய்யிற் பிழைப்பரிதாமெனப்
போதமைந்த னுருக்கொடு போந்தரோ–17-
பேதியாது பிறங்குமெய்ஞ் ஞானத்தைப்
போதியா நற்பதந் தனிற் போக்குவா
னோதிருக்கு மறத்தெரிந்தோர்கிலா
வாதியான பரஞ்சுடரண்ணலே–18-
சந்த நீண்முடி மன்னன் றவத்தனால்
இந்தமாதி னெழில்மிகு பண்டியில்
வந்தடங்கி யிருக்கு மகிமையாம்
விந்தை தன்னை வியப்பொடு நோக்குவான்–19-
கந்தரத்திற் றுலங்கு களத்தனொ
டுந்திமா மலரோனை முதலவா
னந்தரத்திறை யோனொ டமரரும்
வந்துநாளும் வணங்கித் துதிப்பரால்–29-
வானக முகட்டின் மீது வயங்கு பொன் முடிகளோங்கத்
தேனக மலர்த்தாட் சேடன் செகத்துறப் பொலிந்து நின்ற
நீனக முலையிம் மாதின் நெருங்குறு வயிற்றிற் போந்த
தீனரைக் கலவாச்சோதி யெவ்வண முரைத்தி யென்பார்–21–
அண்டமு மதனுள்ளான வலை புனற் ககனநேமி
மண்டெரி யனிலமற்று மனிதர் புள் விலங்கி யாவும்
உண்ட கட்டிடையே வைத்த வொருவனே மடமினாடன்
பண்டியுளடங்கி நிற்கும் பரிசெவன் பகரா யென்பார்–22–
தொலைவறு நிலையதாகத் துலங்குறு பூதமைந்து
நிலை திரிந் திருக்கு மூழி நெருங்கிய வேலை தன்னில்
உலை வுருவனைத்தும் பண்டி யுள்ளுற வடக்கியாலி
னிலையதன்மீ வளர்ந்தார்க் கீதென வரிதோ வென்பார்–23–
திங்களின் மரபிற் றோன்றித் திரை நெடு நேமி யாண்ட
பொங்கு வேல் வழுதி மன்னர் புரிந்த மெய்த்தவமோ வென்பார்
இங்கணீவ் விறையோன் செய்த வெழிற்றவப்பேரே யென்பார்
மங்குனேர் குழலாள் பெற்ற மகிமையே மகிமை யென்பார்–24–
எம்மை யாளுடைய வீசனிங்கு வந் துதித்தலாலே
விம்மூநீர்ப்பொருனை யேயவ் விரசையா மென்பாரீங்கே
இம்மியுமகலா வாழ்வுற்றிருந்திடு மவரே நித்யர்
பொம்மலி நகரே யந்தப் புனித வைகுந்த மென்பார்–25–
கோதகமுடையராகிக் கொடுந் தொழில் கொலைகளாதி
பாதகம் புரி்ந்து நாளும் பழிப்புறு நிலையரேனுந்
தீதகற்றிடு மித்தூய திருநகரடையி லன்னோர்
மாதக வுடையராகி வாழ்வர் விண்ணாட்டி லென்பார்–26–
மண்ணிழை தவமோ மற்ற மானிடர் தவமோ மீதின்
விண்ணவர் தவமோ வேள்வி வேதியர் தவமோ தென்பால்
நண்ணினர் தவமோ விந்த நகரிழை தவமோ யாரும்
எண்ணரிதாய சோதி யிங்கு வந் துதிப்ப வென்பார்–27–
இவ்வணமடைந்து நாளுமிமையவர் வணங்கி யேகப்
பவ்வமைக்கடனே ரங்கட் பனிமொழிக் கரியகூந்தற்
கொவ்வை வாய்த் தெரிவை யாகங் குழையெனக் குழைந் துவாடி
வவ்வி நேர்விழி கொள் பாங்கிமா ரிருபுறமும் தாங்க–28-
மெலமெல நடப்பாளொல்கி மீளவுமடைந்து சோர்வாள்
அலணை யொண் கூந்தல் சோர வலமரலடைவாள் யாருஞ்
சலம் வர முனிவா ளன்னாள் சார்துய ருரைக்கலாமோ
தலமிசை யிருந்திவ்வாறு தளர்வொடு வருந்து மெல்லை–29–
விண்டல வெளியி னின்று விளம்பிய வமர ரெல்லாம்
கண்டரு மறைக ணின்றுங் கருது தற் கரியசோதி
மண்டலத் துதிக்கும் வேலை வந்ததின் றெனவுள் ளோகை
கொண்டு நம் வினைக ளெல்லாம் குடியொடுந் தொலைந்தது என்னா–30-
அடக்கருமுவகை வெள்ளத் தாழ்ந்தன ராகப் பாவத்
தொடக்கறுத் துய்ந்தோமென்னத் துணைக் கர முடியிற்கூப்பி
யிடக்கறத் தொழுவ ரோரா யிரமறை நவிலு நாமம்
விடக்கருத் திலர்களாகி விளம்புவர் குணங்களெல்லாம்–31–
ஆடுவர் கள்ளுண்டாரின் மெய் மறந் தறிவுசோர்ந்து
பாடுவர் மறைகணான்கும் பற்பல தரமானந்தத்
தோடுகட்புனலில் மூழ்கி யுருகுவ ரினிதி னுள்ளம்
பீடுற விமையா நாட்டம் பெற்றமை பலித்த வென்பார்–32–
இருவிசும் பகட்டுள் வானோ ரிவ்வண்ண மாடிப் பாடி
மருவிரி தருமந்தார மலர் கொடு சொரியச் சோதித்
திருமுகத் தரம்பை மாதர் செருக்குடனடிப் பயாரு
முருகயா ழெடுத்தியக்க ருகந்தன ரிசைகள் பாட–33–
அடல்கெழு வாணனாரோ ராயிரங் கரங்களாலுந்
திடமுட னடிப்ப வார்க்கு மொலியெனத் தெருவிலூடே
குடமுழாத் தொனி முழங்கக் கொடும் பவத் தொடரறுத்துக்
கடம்படு முனிவோ ருள்ளக் கவலை யற்று வந்து வாழ்த்த–34–
நவமணிக் காளஞ் சின்ன நவையிலா முரசத்தோடும்
தவள வொணிலவு காலுஞ் சங்கமு முகிலினார்ப்பப்
பவள வாய்க் கரிய கூந்தற் பைந்தொடி சுதையி னின்சொற்
குவளை யொண் கண்ணா ருள்ளங் குளிர்ந்து மங்கலங்கள் பாட–35-
வழக்கிடப் பலநூ லாய்ந்தும் வாய்மை கொ ணிலையைத் தேறாச்
சழக்குறு புலவோ ருள்ளந் தன்னின் மெய் யறிவு தோன்ற
இழக்க வெவ் வினைகளெல்லா மெத்திற முடையாரேனுந்
தொழக் கருத் துடையராகுந் துணிவரு டேவேயாகி–36–
நண்ணிய கலியி னாற்பத்து மூன்றா நாளென நவில்பிர மாதிப்
புண்ணிய வாண்டிற் புனித வைகாசிப் பூரணை வெள்ளியுங் கலந்த
வெண்ணிய திருவிசாக நன்னாளி லெறி திரை யறி துயின் மாலே
விண்ணெழுமுதைய விரவி போன் றுலதில் விளங்கிழை வயிற்றினின் றுதித்தான்–37–
பொங்கு வெண் டிரை கொ ளிருநில வரைப்பிற் போற்றுறு மடியவர் முகமாம்
பங்கயமலர்கள் விகசித மடையப் பரமத விருளின மிரிய
விங்குழலுயிர்கள் பவப் புனல் சுவற வெண்ணரு மளிமுரன் றிருந்தேன்
சங்குறும் வகுள பூடண பாஸ்கரோதய மாயது பாரீர்–38-
கணிப்பெரு நிலைய வாரண நான்குங் கருதி நின் றளவிடற்கரிய
திணிப் பெருந் திரடோடிரு முத றலைவன் செழியனன்னுதற் சிறு மகவாய்ப்
பணிப்பெருஞ் சுடிகை மிசையுறக் கிடந்த பாரிடத் துதித்தன னென்றான்
மணிப் பெரு முடிய மன்னர் கோ னிழைத்த மாதவ மியம்பிட லெளிதோ–39-
மதித்திட வெவரு முதித்தவக் கணமே வருசட வாயுவைத் தடுத்துக்
கதித்த மெய்ஞ் ஞானக் கடலிடை முழ்கிக் கண்ணிணை யுற விழி யாதுஞ்
சதிர்த்திருப் பவளவாய் திறவாதுந் தரையிடை யசை வறக் கிடந்த
வெதிர்த்த செஞ் சுடரின் றேசுறுங் குழவிக் கிகுளைய ரினை யன புரிவார்–40–
இள நிலவெறிக்கும் பிறையினைப் பழித்தங் கிலங்குறு நுதற்றலந் திருத்தித்
தளதளப் புடனுட் டிரண்டழ கொழுகித் தயங்கிடு நாசியை யுறுவி
வளமை நற் கரமு மணி முழந் தாளும் வகை யுறக் கை கொடு முறுக்கிக்
கிளர்தரு மம்பொற் கோடிகத் தேந்திக்கெழீ இயபொற் சுண்ண நீராடி–41–
நறிய பொற் கலையின் மெய்யது துடைத்து நாபிநற் றலமுற நோக்கிச்
செறி மயிர் மணி யுச்சியினெயும் பொத்தித் திகைத்தயர் வதிகரித்திருந்த
மறிமரு ணோக்கின் மடவர றன்பால் மைந்தனை மலர்க்கரத் தேந்தி
வெறி மலர்க் கூந்தற் குவளை யொண் கண்ணார் விழைவொடு மளித்தனரன்றோ–42-
வாங்கிய வளவிற் படுதுய ரனைத்து மாள மென் மேலறப் பெருகித்
தேங்கிய வுவகைக் கடலிடை யாழ்ந்து செழிய தன் மடித்தலத் திருத்திப்
பூங்கரும் பனுக்கு மொழிச் சிறு விடைவிற் புருவமெல் லியலுறுமணங்கு
கோங்கரும் பனைய விள முலை பிடித்தக் குழவி தன் வாயிடை வைத்தாள்–43–
வைத்தவார் தனத்துக் கலசம தருந்தா வரவாப் பருமிதமடைய
வித்தகைக் குழவி யிருநிலவரைப்பி லிருப்பது முளது கொல் லென்னப்
புத்தகமனைய புறவடித் துவர் வாய்ப் பூவை யுண் மழுங்கி யிங் கிருப்ப
மத்தகக் களிற்ற மன்னர் கோ னுணர்ந்த வண்ணமு மிழைத்தது முரைப்பாம்–44-
அடன்மிகுந்திகலு மவுணரை யடர்த்த வைம்படை தாங்கிய பெம்மான்
மடலுறுங் கமல மலரடியகலா மனத்திறை யவனிடம் பகர்வான்
றடமுலை வரையின் வடமணிந்திலகு தையலாளி குளையர் விரைந்தே
திடமிகுந்தொளிரும் புயவலி யரசர் திரண்டு சூழவை யிடை யடைந்தார்–45–
கொண்டலும் தருவு நாணநன் னிதி கைக் கொண்டுகந் திரவலர்க் களிக்கும்
வண்டின நெருங்கி யின்னிசை முரல மதுவிழி நிம்ப நற் றாரான்
புண்ட ரீகங் கொள் ளடியினை போற்றிப் பொற் புறும் சுணங்கவிர் நகில
மிண்டை கொண் டிலகுங் கருங்குழல் மடவா ரெதிர்வியந் தினிது நின்றனரால்–46–
வந்து தன் கமலமலரடி வணங்கி வணக்கமோ டெதிருறு மடவார்
இந்து நன் முகங்கண் டிங்கெழுந் தடைந்த தென்ன கொல் விளம்பு திரென்ன
விந்தையி னிலகு மணிமுடி வழுதி வேந்தர் கோன் வினவு தன் முன்னர்
அந்த மன்னனுக் கவ்விடைக் கருங் கூந்த லணங்கினர் விளம்பலுற்றனரால்–47-
வெஞ்சமத் திகலு மடையல ராவி வேலினிற் பறித்திடு மிறையோய்
மஞ்செனக்கரிய மலர்க்குழன் மடந்தை மணிவயிற்றிடையி னின்றின்றே
செஞ்சுடர் விரித்து வான்முகட்டொளிருந் தினகரர் கோடி யென் றுரைப்ப
அஞ்சுடர்விரிக்கு மாண் மகவாகி யகலிடத் தினி துதித்த தம்மா–48-
கண்ணிணை சிறிதும் விழித்திலை வாயங் காந்தினி தரற்றவுமில்லை
யண்ண லஞ்சுடரி னணிதிருமேனி யசைத்திலை யஞ்சனின் மகவு
முண்ணிகழ்ந் தொளிரு மாவியினோடு முற்றுறைகின்றது வென்னா
வெண்ணிகர் குமிழ்மூக் கன்னிய ருரைத்தாங் கேகினை ரிறைவனைத் தொழுதே–49-
கொடியென நுடங்கு மிடைக்கனித் துவர்வாய்ச் கோதைய ராண்மகவெனுமுன்
படியொடு கனகமணியிழை வலையம் பரித்தெழு வெனத் திரள் புயங்கள்
வடிவு மிக்குயர்ந்த மேரு வென்றுரை செய்வரையென மிக்கினிதுயரக்
கடியயிற் படைகொ ளிறையவ னோகைக் கடலிடையாழ்ந் தனனாகி–50-
காதல னில்லாத் தன்மையிற் றுயரகே கடலிடை யாழ்ந்துளம் வருந்தி
யீதள வாகக் காலம தகற்றி யிருந்துமிக் குழலுறு மெம்பாற்
போதவு மொளிரு மாண்மக வீந்த புனிதமைம் முகனிறத் தாதி
நாதனிங் கதற்குண்டாய செய்கைகளு நல்கிலா திருப்பவ னல்லன்–51-
அன்றிநந் தமக்கோரருங் கொடுந் துயர்க ளடைந்திடி லன்னவ னல்லால்
சென்றினி தொழுக்குந் தன்மைய ருளரோ செறி திரைப் பரவை சூழுலகில் என்றொளி விரிக்கு மயிற்படை தரித்த வெழின் முடி மன்னவர் வணங்கக்
குன்றெனப் பணைத்த புய வலி படைத்த கோமகன் நிருவுளத் தெண்ணா–52-
அருமறைக்குரிய வேள்வி யந்தணர்களாசிகள் பற் பல நவிலத்
திருமுடி தரிக்கு மன்னவர் தாழ்ந்து திரண்டு நான்மருங்கினு மேக
மருமலர்க் கூந்தற்குவளை யொண் கண்ணார் வானிறக் கவரிகா லசைப்ப
வுருமெனத்தவள வலம்புரிக்குலமு முயர் முரசினங்களுங் கறங்க–53-
மிடைந்தொளிர் தரளமணி யெடுத்தெறியும் வெண்டிரைக் தாம்பரவன்னி
யடைந்தரும் புனலி லாடியுள் ளுகந்து தென்கலைப் புண்டரமணிந்து
குடைந்து வண்டிமிரு மருமலர்த் தொடையல் கொண்டகன் றொளிருமார் பிறையோ
னடைந்தனன் விரைவில் லுதையனைப் பொருந்த னையனற்றிருமுகங் காண்பான்–54-
செப்பெனப் பரந்து மார்பிடம் கவர்ந்து திரண்முலை மடமினா ருகந்தங்
கொப்பருங் குழவிதனை யெடுத் தளிக்க வொன்னல ருடறடி யிறையோ
னப்பரன் றனது திருவுருவனைத்து மன்பொடு கண்டு கண்டுருகித்
துப்புறுஞ் சுடர்கொளுதையனைக் கண்ட தூய செங்கமல மொத்தனனால்–55-
உருமினு மிரட்டி மும்முரசினமு முயரிய சங்கமும் பிளிற
௮ருமறைக்கிழவர வாவின தளவா யகத்திடைப் பெருங்களிதுளும்பப்
பொருவிலுன் சனகப் பொருப்பெனக் குவித்து வித்தினற்றானமும் மிமிரு
மிரு நிதிக் குவையு மெண்ணிலா நிரையுமிசை பெறப் புனலொடு மளித்து–56-
மெய்வகையுணரு முழையரைக் கூவி விளங்கு நம்மரபினுக்குரிய
தெய்வமா மாதி நாயகனமருந் திருத்தளியே முதலாய
பொய் வகையொழி நன்னாட்டினிற் சிறந்து பொலியுமால் சன்னதி தோறும்
மெய்வகை இருத்தி யாடை பூணிதிய மிகுநில முதற் சிறப் பளிமின்–57-
ஆனினமுதல பற்பல வுயிர்க ளருந்திமெய் விடாயது தணிப்பா
னீனிறக் கடலினிரட்டிய தடமும் நிகமநற் சாலையுஞ் சிகரம்
போனிகழ் தருமாலயங்களு மெவரும் புகழ்தரு மன்ன சத்திரமும்
மானயிவ வகையி னாயபோ லினும்ப லாயிர வறத்துறை யிழைமின்–58-
சிறையது விடுமின் சிறைக்கள மெடுமின் றிகழ் முடி மன்னவரளக்கும்
இறை விடு மீரேழாண்டயனிதிய மீட்டு மாயத் துறை விடுமின்
குறைவிலா நிதியவரையது திறந்து கோதறப் பலவரு மெழுநா
ணிறை தருமளவும் வெறுத்திட வகத்துணோ்ந்தவை யெடுத் யெடுத் தளிமின்–59-
நண்ணிய தடந்தோட் கொற்றவ ரிழைத்த நவையெலாம் பொறுத்துறப் பிணித்த
திண்ணிய கழல்யாப் பற விடுத் தவர் தந் திரு நக ரடை தரச் செலுத்திப்
பண்ணியற்றமிழின் வகை நல முணரும் பான்மை நம் பேரவைப் புலவோர்
உண்ணனி மகிழத் துன்னெனக் கலையு முரையுடன் பணிகளு மளிமின்–60-
வெண்டிரை கொழிக்கும் கருங்கட லுடுத்த மேதினியதனிடைச் சிறந்த
திண்டிறற் புயத்த மன்னவ ருணர்வான் றிருமுகங் கடிதினி லனுப்பிக்
கொண்டல் கண் படுக்கு மாட மா நகரங் கோதற வலங்கரித்திடுவான்
அண்டுறுமாந்த ரறிதரமுரச மறைதரச் செய்மினென் றரைத்தான்–61-
இடியெனக் கறங்கு மணிமுரசோதை யெழினகர் மாந்தர்தஞ் செவியிற்
கடிதினிற் படுமு னளவிலா வோகைக் கடலிடை யாழ்ந்தன ராகி
வடிவுறு மயில் வேலனைய கண் மடவார் மைந்தரோ டிணைந்திர வகற்றும்
படிமருத் தொடையும் யாயொளி விரிக்கும் பற்பல வணிகளுமகற்றி–62-
மங்கையர் நகிலப் பொருப்பினுக் கணிந்த வாச நற் கலவையின் றுகளும்
கங்குலிற் கரிய கூந்தனின் நிழிந்த கான் மகரந்தமு மடங்க
வங்கமுன்றி றொறுங் குங்குமச் செழுஞ் சேறது கொடு வழுக்குறத் தெளிப்பார் பொங்கிய சுடர்வே லிறை மகன்றன்பாற் புதல்வன் வந் துதித்திடு மதிழ்வால்–63-
பத்தி யினிவந்து விசும்பக டுரஞ்சும்பரூ௨ மணிமாட பந்தியினற்
பித்தியின் புறத்து மகத்திலும் புதுவெண் மெய்யொளிச் சுதைகள் தீற்றிடுவார்
நித்தில முறுவற் கமலைவா ழகல நிருமலன் றிரு வவதாரச்
சித்திர வகையே முற்றிலு முவந்து தீட்டுவர் கவின் பெறமாதோ–64-
வெண்ணில வெறிக்குங் கையிலையின் கிரியின் மிசைப்பலகதிரெழுவனபோல்
திண்ணிய மாடமுகட்டிடையனந்தஞ் செறி சுடர்த் தூபிக ணிரைப்பார்
நண்ணிய குலிசத் துவசமு முழுவை நாடிய கொடிகளு நடுவார்
தண்ணியவிதை வித்தரிய பாலிகைகள் சதிருற வயின்வயி னிறைப்பார்–65-
மங்கல மகலாமறுகிட மெங்கு மணிநடைக் காவண மிடுவார்
துங்கமென்பாளைக் கமுகொடு சுவை கொள் கன்னலுமினிமையிற் கனிந்த
செங்கனித்தாறு படு விரிதலையுஞ் சேட்பட வெழுத் தொறு மமைப்பார்
சங்கையின் மகர தோரண நிரைப்பார் தமனியப் பாவைகள் தொடுப்பார்–66-
தேனினமுரன்றிந்தள விசை பயில செழு மணித் தாம நாற்றிடுவார்
வானில வெறிக் குமார வாரமுமொண் மரகதக் கோவையும் தொடுப்பார்
ஆனிழு துறப்பெய் தருஞ் சுடர் தருமொ ணஞ்சர விளக்கினமிடுவார்
கானிடு மலருந் தண் பனி நீருங் கலவையுங் குழம்பொடு மிறைப்பார்–67-
கரிய சூன்முகி லனையமும் மதம் பொழி கரிகட் குரிய வோடையு மேற்றவிசையு முறவமைப்பார்
விரியும் வான் முக டிடிதரத் தாவியு மீளும் பரிகள் பல்லணங் கால் கழுத்தணிகளும் படுப்பார்–68-
திவிய மாமணி யணிபெறக் குயிற்றிய திகழும்
சவி கொண் மாவிரதங்க ளெண்ணில நிரை தயங்க
விவுளி சேர்த்திரு மறுகிடை நிரைப்பரா லிரும்பொன்
அவிரு மேருபல் லொரு வழிச் சேர்ந்தன வனைய–69-
தவள வானில வுமிழ் மணிமாட மேற்றாவத்
துவளிலாநறு மதிற்புகை வயின்வயின் றொகுப்பார்
பவள வாய்க்கொடி நுண்ணிடைப் பனிமொழிக் கரிய
குவளை யொண் கணார் குரவையாட் டயருவர் கூடி–70-
முருகு சேரு மாலதிக்கலிகைக் கிணை மூரல்
குருகு சேருமால் வரையெனப் பொலி தரக் குவிப்பார்
கருணையோடு மற் றரிய நற் கனிவருக்க முநேர்
௮ருகுதோறஞ் சிற்குன்றென வமைப்பர்க ளன்றே–71-
இனியவாய முக்கனிகளு மிடையிடை நிறைப்பார்
புனிதவாதர நிறைந்த வுள்ளத்தினர் பொருந்தி
தனிவிருந்தினர்க் கெதிர்கொடு சென்று நற்றகையாய்
மனி யுமக்கெமக் கென்றுத மகங்கொடு வருவார்–72-
சேயதேறலி னறுகெய்பால் தயிருடன் சேர்ந்து
தூயமாமறுகெங்கணுந் தொனியுறத் துதைந்து
பாயவென்ன று மாகனகக் கலம் பரப்பி
யேய நாரண னடி யருக் கின்னமு திடுவார்–73-
தழனிறத்த நற் நிகிரியு மிவுளியுந்தான
மழவிருங்கரிகளு முலைத் தவரவர் வருவார்
பழமை யாய பொற் கலன்களை வெறுத்தலைம் பாலார்
௮ழகினீடிய கலன்களைப் புனைகுவரன்றே–74-
ஊறு தேன் பொழி மாலிருஞ் சோலை வெற் புயிர்த்த
நாறு சந்தன வரியமென் றேய்வையின் றீய
சேறு நூலிடை தேம்புறப் பணைத்தருஞ் சிகர
வீறு வாய்ந்தணைக் தடர் தரு முலை முகட் டணிவார்–75-
ஓங்குமாமதி வடந்தனைப் புனை குவ ரொழுகுந்
தேங்கொள் வண்டின மலை தர வோச்சி நீர் செழுஞ்சூ
றாங்குமால் குழல் திருத்தியத் தலைப்பணி சாத்தி
பூங்கொண் மாலதி செவந்திநற் பிச்சியும் பொறுப்பர்–76-
ஏர வாணுதற் சுந்தரத் திலகம் திடுவார்
போர வானில வெறியுநித் திலச் சுட்டி புனைவார்
சூரவேளி கரம்பகத் தஞ்சனந் தோய்ப்பார்
ஆரவாரவம் புதிக்கிரு வரம்பிட லனைய–77-
பொய்யமைந்க நுண்ணிடைக் கணிமேகலை புனைவார்
துய்ய நற்பசுங் கழையெனத் திரளுறுந் தோளிற்
செய்யமாமணி குயிற்றிய வொண்கலன் றிருத்திப்
பெய்யுமம்பொனிற் றொடிபல முன் கையிற் பெய்வார்–78-
கடி தினிற்றழ னிறத்த நற் றளிர்நிறங் கவற்று
மடிமிசைச் செழுஞ்செய்ய பஞ்சின் குழம் பணிவார்
வெடி கொளம்புய மிசையனஞ் சிலம்புவ வனைய
படிவுறுஞ் சிலம்பொலி தரப் பதமிசை யணிவார்–79-
மாடகத்த நன்மகரயா ழெடுத்திசை வகுப்பார்
பாடகத்தொடும் பரிபுரத் தொலியெழப் பதம்பேர்த்
தாடகக்குழை யலைதரத் தனித்தனி யரிய
நாடகத்தொழில் நலந்தெரி மடந்தையர் நடிப்பார்–80-
அந்த மாடவின் னெழினகர் மாந்தறா மடர்ந்த
சந்த வார்முலை மாதரு மகங்களி ததும்ப
இந்த வாறியற்றிய பின்ன ரக்கொடி யிடையார்
விந்தையோடு பொற் சுண்ண நீராடுற விழைவார்–81-
சாடிகொப்பரி சாருங் குழிசியிப்
பீடியற்கலம் பெய்திடி லற்பமே
நாடுமென்ன நளியும் பொழிபுனல்
ஓடிடாம லொருங்குறத் தேங்கவே–82-
பண்ணுலாவிய பாவினு மின்மொழி
விண்ணுலாவிய மின்னிடை மாதரார்
எண்ணிலாதவரேர் மறுகெங்கணும்
வண்ண நீடு வரம்புகள் கட்டினார்–83-
தமனியத்திற் சமைத்த தளங்களாற் கமவசந்தக் கலவைக் குழம்பினோ
டிம நறும்புன னெய்நல்லெண்ணை சுணம் அமரு மத்தர் புனுகு மென்னானமே–84-
வண்ணமுற்ற பொற்சுண்ண வனநறுந் தண்ண நீரிற் றகையன மட்டிலா விண்ணின் மா நகரெங்கும் விடுத்தனர் பண்ணினின் சொற் பனிக் குழன் மாதரே–85-
சத்தவார்கட றானொருங் குற்றபோற்
சுத்த வீதிகடோறு நன் மஞ்சனம்
பத்தியோடு பொழிந்த பின் பான் மொழிக்
கொத்தலர்க் குழற்கோதையர் கூடியே–86-
இழையினுண்ணிடை நீவியிறுக்கி மென்
றழைசுணங்கின் றனங்கள் குலுங்குறாப்
பிழையில் வம்பு பிணித்து மழைக்கரும்
குழறிருத்திற் கொண்டை யணிந்தரோ–87-
தந்ததாரைக் குழலுச் தமனிய
விந்தை தேர்கட் சிவிறியு மின்ன்போ
லந்தமில் புனலாடுங் கருவியோ
டிந்து வின்னுத லேழையர் தோன்றினார்–88-
இடக்கை பேரிகை யேய்ந்திடு திண்டிம
முடுக்கை பம்பை யுறுமி முரசொடுந்
தடக்கு தோறவில் தமரவலம்புரி
திடத் திருச்சினந் தேதிகக் காளாமே–89-
கூறிவாச்சியங் கொண்டு குணில்களா
லேறு சூன் முகிறன்னி லிரட்டியே
நாறிசைக் கணு நண்ணி முழக்கிடச்
சாறினோதியர் தாம் புனலாடுவார்–90-
கள்ளலம்புங் கருங்குழன் மாதரார்
உள்ளலம்பிய வோகை கிளர்ந்தெழ
வெள்ளிடற்கிடனின் நி மறுகடர்ந்
தள்ளி யள்ளியவர் புனலாடுவார்–91-
கூந்தல் சோரக் கொடியிடை சோர்தர்க்
காந்தளென்னக் கரஞ்சிவப் பேறவே
சாந்தணிந்த தனங்கள் குலுங்குற
வாந்துருத்தி கொண்டாடுவர் நீரரோ–92-
கலை நெகிழ்ந்தது காண்கிலர் கச்சுமென் முலை நெகிழ்ந்தது மோர்கிலர் மொய்யொளி
யலையு மார மகன்ற துணர் கிலார் தலைமை சேர் புன் லாடுந் தருக்கினால்–93-
அத்தர் பன்னீர் புனுனோ டாரரெய்
யொத்து வாரி யொருவ ரொருவர்மேல்
லத்த நற்குழ லாலினி தாடுவார்
புத்தகத்தின் புறவடி மாதரே–94-
அருத்தி யோடொ ரரிவைநன் னெய்யைமா றொருத்தி வாயி லொழுக்க வுமிழ்ந்திட
றிருத்தன் வாயெனுஞ் செவ்வித ழாம்பல் பெய் மருத் தண்டேற றனை நிகர் மானுமால்–95-
கூந்தன்மீதிற் குழல்கொடு பிச்சுநீ
ரேந்தி ளந்தனற் தன்னி லிழிதரல்
சேந்த மேருத் திரியின் மீமிசை
போந்து மேகம் பொழிதலை மானுமால்–96-
மாதர்பல்லோர் மடந்தையின் வான்முக மீதருங்குழல் கொண்டு வீடும் புன
லோது வானெழு மொண்மதி வீசிய சீத வெண் கதி ரென்னத் திகழுமால்–97-
விடவெண் பால் கொடோர் மின்னிடை மாதின் மேல் லுடல் வெழுப்பினை யுற்றுடன் றீர்தலாற் புடவி யிற்பசும் பொன்னினற் பாவையைப் படம் படுத்து பறிப்பதை யொக்குமால்–98-
நெஞ்சினிற் பொழி நீரிரு கொங்கைமே லெஞ்சலான தற் றேயிழிந் தோடுறல் விஞ்சடர்ந்தெழு விண்டுவின் மேல் வழி யுஞ்சிறுதண் ணருவியை யொக்குமால்–99-
படைக்கண்மங்கை பனிமுகம் வீசுநீர் தடுப்பவங்கைத் தலம்பொதி தன்மரை
யிடக்குள்வீழு வெமைவருகத் தேன்மதி யடைக்கலம்மென் றடைதலை மானுமால்–100-
சோதிமாமணி மாடங்க டுன்றிய
வீதி தோறும் விழைவி னடர்ந்து முப்
போதுமீரறு வைகல் புனலிடை
மாதராடி. மனக்களி யுற்றபின்–101-
வண்ணமாமறு கெங்கும் வதிந்தபொற்
சுண்ணநீர் தலைப்பெய்து துவன்றியே
தண்ணரும் பொருனாநதி சார்ந்திரும்
பண்ணைவாயிட மெங்கும் பரந்து போய்–102-
நலிகொள் வெண்டிரை நண்ணி யதினுள
புலவு நீக்கிப் புதுமண மீந்தவன்
சுலவு மிப்பி சரிமுக முண்ணச் செய்
உலவுமார முயிர்த்திடச் செய்யுமால் –103-
திரு வவதாரப் படலம் முற்றும்
-
நாம தேயப் படலம்
கற்றவ னீராடவெழ முதலியாண்டான் கையும் பின் வடுகநம்பி கரமென்போதும்
பற்றியெழற் காண்டானுள் வெதும்ப வத்தைப் பரிகரிக்க வவர்க்கிருதாம் பரச்செம் பீந்தாங்
கற்றநதிப்புனல் கொணர்வித் தஃதா னம்பி யாந்தரிகப் பத்தி வெளி யறியச் செய்த
நற்றவனெம் மெதிராச னடியை வாழ்த்தி நாமதேயப் படல நல்குவாமால்–1-
மீனவன்குல வேந்தன் வியந்துபஃ றான மந்தணர் தாமுகக்கக்கொடுத்
தானபின் பேரவை யெழுந்தாக்கொளிர் வானரியணை மன்னினன் மாதரோ–2-
ஆரியர்க ளறிஞர் கணிதநூ
லோருவோர் மெய்யுறுதிகொ ளாரணஞ்
சோர்விலா துணர் தூய்மறை யாளர் மற்
றே ரறா தொளி ரேந்தலுழையரே–3-
மற்ற நுட்ப மதியின ரானிறை
வுற்ற சங்கத் துறவிலர் மெளலிதோய்
பொற்றிருக்கழற் பூப னுவகையாற்
சொற்றிடுஞ்சில தூய்மொழி யன்றரோ-4-
மன் றுளோரெம் மனமரை யின்முகை
யின்றலர்ந் தொளி யெய்திட வெல்லிளங்
கன்றை நேர் வருகான் முளைக்கியாது நா
மின்று நாம மிடுத லியம்புவீர்–5-
கொக்குமீதுறு கோகிலவின் சொலார்
செக்கர்மாடத் திருக்குருகாபுரி
புக்க நும்மைப் புரக்கும் புயலுக்கு
மிக்க வாதிப்பிரான் றளிமேவியே–6-
பரவை சூழுல கோரடி பற்றிடக்
கரவினாலளந் தின்பருள் கான்மலர்
சிரமணிந்தவன் சீரருட் பெற்றுடன்
மரபினாமம் வழங்குதன் மாண்பரோ–7–
பாதுகாத்துயிர்ப் பாலருள் கூர்ந்து நன் னீதியாலுலகோச்சு நிருப நின்
றீதிலாத திருவுரை யுட்கொடீ தோதனோ மற்றுளப்படி செய்குதி–8-
இவ்வண மன்றுளார்சொல் லியல்பினை யிறைவ னுள்ளிற்
செவ்வியி னமைத்து நந்தஞ் செய்தவத் துதித்த சேய்க்குக்
கொவ்வையின் கனிவா யின் சொற் கோங்கரும் பனைய கொங்கை
நவ்விநேர் விழியாய் யாது சாற்றலா நாமமென்றான்–9-
நம்மகவெனவுமன்ன னவின்றிடப் பெற்றோமென்று
செம்மலங் கடலுளாழ்ந்து திரு முக மலர்ந்து நீருண்
மைம் முகிற் குழலி வேந்தன் மலரடி பரவி யின்பம்
விம்மியாழ் குழலே யின்சொல் விளம்புவள் சிலது மன்னோ–10-
புத்தெனுங் கொடிய சேறிற் புகுந்துழன் றழலுகின்ற
தத்தினை யறுத்து நம்பாற் றனய சம்பத்தை யிந்த
வித்தகன் பொலிந்து நின்ற மெய்ப்பர னமரரஞ்ச
நத்தினை முழக்கு மாதி நாதர் சன்னதி முன் சென்றே–11-
வஞ்ச மற்றுள த்தை யைவர் வழி செலுத்தாது வாழ்த்து
நெஞ்சினர் நாற்பொருட் குணினைத்த தங்குவந் தளிக்கும்
கஞ்சனன் மலர்த் தாட்கீழிக் கான்முளை வணங்கச் செய்து
விஞ்சுநம் மரபினாமம் விளம்பலே விதி யென்றாளே–12-
கொங்கலர்க் கருத்து மைம்பாற் குவளை வாண் மதரரிக்கண்
நங்கையா ருரைத்த வாய்மை நங்கருத்தியைந்த தென்றப்
புங்கவ னமைச்சர்க் கூவிப் பொரு கடற் றானை சூழ
விங்கடைந் திடுவீர் பூமா திறைவனைத் தொழச் செலற்கே–13-
ஆண்டகை யியம்பாமுன்ன மரும்பொருண் முகத்தி னோக்காற்
காண்டக விரைவிற் செய்யுங் கருணை கூருழையர் சேனை
யீண்டவந் தறிக்கை செய்தவ் வின்னடி பரவ வண்டு
பாண்டருற் துளவினானைப் பணிந்திடற் கெழுச்சி யானான்–14–
தண்ணுமை படகம் பிலி தக்கை திண்டிமறந் தடாரி
மண்ணமை முழவு கேட்போர் வள்ளின முவந்து கீதக்
கண்ணுகர்ந் திடுபன் னாகசுரமோ டெக்காளஞ் சின்ன
மெண்ணில் பல்லி யங்களெங்கு மெறி திரைக் கடலினார்ப்ப–15-
கருவிளை குமிழி னொண்பூக் கயிரவ மலர்களுட் கொண்
மருமலர்க் கமலமோர் பொன் கொடி மிசை மலர்ந்த தன்ன
திருமுகத் தரிவை மார்வெண் கவரியின் சிறு கால் வீசக்
குருமணி நிலவு காலும் குழுஉக் கொள் வெண்குடை நிழற்ற–16-
மட்டவிழ் குமுத வேந்துள் வதியிரு முயனீத் தூர்வான்
விட்டதி வெளிவந்தாக மீ திரு கயல் கடாங்கி
யிட்டமோடுல வலன்ன வெழின்முக மடவாரால
வட்டமீயோட்டிகொண் டுண் மகிழ்ந்தரு கசைப்பர் மன்னோ–17-
மாசுறுங் கலியின் றீயவலிகெடு மெனவே வெள்ளை
வீசு தலனைய வான்மீ வெண்டுகிற் கொடிகளாட
வேசி விண்ண ரம்பை மாதர்க்கின்புறு பரதங்காட்டுந்
தாசியரிசையினேர்ப் பச்சதியிடை யடிகள் பேர்ப்ப–18-
தேங்கமழ் கமலப் புத்தேள் சேணிறை கலச யோனி
யாங்கவிர் வேத நாவரரசர் முத்தமிழ் தேர் வாணர்
பாங்குட னருகிலாரப் பரவு பொற் சிவிகை பம்ப்
வீங்குதிண் குவவுத் தோளார் கட்டிய மியம்ப மன்னோ–19-
கங்குல வயிற்கை யொன்னார் கணங்களின் வலி மலைக்குத்
தங்கிய குலிகத்திண்டோட் டானை முன் மிடைந்து செல்லப்
பொங்கு செந்துக ளிவர்ந்து புயலெனப் படரத் தீய்க்கும்
வெங்கதிரவிந்து வானஞ் செக்கரில் விளங்கித் தோன்ற–20-
தூயதீப் புடத்திற் பல்காற் சுட்டசெம் பொன்னிலும்பர்
மேயயாணரினாற்.செய்ய வில்லுமிழ் மணியிடைக் கண்
ணேயவிட் டடைத்த தொட்டி லேற்றி யக்குழவி சூழ்ந்தாங்
காய மிண்டேகலென்மு னம்புலிக் கண நேராமல்–21–
கோதில்பூற் தொட்டி லூடு குயிற்று செம் மணிவிற் றோற்றம்
மாதவ னரசன் சேயா வந்தவா றறிந்து போற்றப்
பாதலத் தனந்தன் றன்மெய்ப்படிவத்தை மறைத்தீண் டேகச்
சோதி கொள் சுடிகைநாறு மாமணிச் சுடரி னேர்த்த–22-
இன்னணங் குழவி தன்னோ டிறைவனு மெழுந்து செங்காற்
பொன்னனந் துயிலுஞ் சேக்கைப் பூம்பணைக் குருகை மேவிக்
கொன்னவில் படைக்கணார்தங் குழற்கிடு புகையின் வாச
மன்னிய மறுகி லூடுண் மதிழ்த. வலம் வந்தானால்–23–
கூன்சுரி முகங்க ளீனுங் கோதினித்திலங்க ணாற்றித்
தேன்பயி லலரி னாற்றுஞ் செழிய காவண முகப்பில்
வான்றட வரம்பை நாட்டும் வாயினின் றயினிநீரைக்
கான்படு மழலைத் தீஞ்சொற் கன்னியர் சுழற்றினாரால்–24–
கருமணி குயிற்று செம்பொற் றகட்டுறம் கடிகொண் மாத
ரிருவரோ ரிருவராய்த் தம்மின் முனந்திக் காப்பிட்டுப்
பருகவின் னமுதிற் சேயின் படிவத்தி னெழினோக் காற்பின்
றிருமினார் சிலர் கர்ப்பூர வாரத்தி தெரியச் செய்தார்–25-
ஆரண மொருநான் கோது மயனன வ றிஞரெல்லாம்
நாரணனாம. நாவின வின்றிறா கரத்திற் செம்பொற்
பூரண கும்பங் கொண்டிப் பூதலத் துயிருயச்செய்
காரணன் மகவிற் றோன்றப் பெற்ற காவலனைக் கண்டார்–26–
மட்டலிழ் நறவமாந்தி வண்டிமிர்ந் தடரு மைம்பாற்
கட்டழ கரம்பை மாதர் கடுப்பவரடிகள் பேர்ப்பக்
கொட்ட மிட்டமர ரீட்டங் குல்யவென றமுதைத் தால
வட்டம் வைத்திடு புட்டோன்றல் வாகனன்றளிக்குட் சென்றான்–27-
அத்தினா புரத்து வாழருச்சுனற் கறத்தினூல்
தத்துவத் தரும்பொருள் ரதத்தினிற் றெரித்தவன்
மெத்தவுட் புறத்துறிக் கிடைச்சி வைத்த வெண்ணை பா
னத்தி யுண்ட பூரணத்தி தேச லோக நாதனே–28-
எருதோ ரேழடர்த்து மாதொருத்தி பாலிணங்கினாய்
மருதினூடு போயிறுத்து மாயமாய் வருந்தினாய்
குருதி தோயிபப் பதிக்கிழிந்த தூது கூறினாய்
கருதி நின் குணத்தை யார் கணிக்க வல்ல வல்லரே–29-
தாலமீது நாத கேதனன் முனந்தளர்ந்த பாஞ்
சாலி நாணழிந்திடாது தானை முன் னளித்தனை
சில வேத வாணனெஞ்சு தேற வாக மோடவன்
பாலனீ நினாது தன்மை பார் மதிக்க வல்லதோ–30-
இச்சையா லுளங்கனிச் தெழுந்த வன்பினோடு நீ
மெச்சவே சுவைத்தடுங் கனிக்குளின்பு விஞ்சினா
லச்சுதற் கெனப்புறத் தமைத்த செளரி யங்களை
யெச்சிலுண்டு வானளித் தெழுந்த புண்டரீனே–31-
இன்னணம் பொலிந்து நின்ற வெம்பிரா னிணைப்பதஞ்
சென்னியிற் புனைந்து பின் றுதித்துளஞ் சிறப்புறத்
தன்னருங் குலப்பெருஞ் சுடர்ச்சுதன் றனைப்புவி
மன்னனுண் மழ்ந்தவன பொலன் கழல் வணக்கியே–32-
புத்தெனுந் நராலையைப் புடைத்தெமைப் புறந்த வேய்
முத்தனோ டயன் பராவு மூர்த்தி யாதி மூலமென்
றத்தனைப் பழிச்சி மன்னவன் றிருவருட் கொடுண்
ணத்தியே மகற் குகந்து நாம மோத லாயினான்–33-
தங்குலப் புரோகிதன் றனைக் கோடேத மின்றியா
றங்கமைந்து வேள்வி நான் மறைக்குடே ரகங்கொணற்
புங்க வேத வாணர் கூய்ப் பொலிந்த பின் விதிப்படி
மங்களத்தி யங்கறங்க மாதவர்க் களிப்பனால்–34–
செம்பொனே ரிலங்கு பூணிவர்ந்து விண் செறிந்தவிற்
பம்பு மாட கூட மாளிகைச் செடெற் பணைத்தல்
மம்பரஞ் சுவைப்பயஞ் செழித்தவா னிதிக் குவை
இம்பரைந் தருக்கு நேர பீட்ட தான மீந்தனன்–35-
பொங்குவெண் முனூலிலங்கு பூ சுரர்க்களித்த போழ்
தங்கை விட்ட நீருகுந் துலாயியாறு பாய்ந்தவண்
எங்கணும் பரந்து தாம்ப்ரவன்னி யாயிழிந்ததே
லங்கவன் செய்தான நேரிதாகு மென்ன லாகுமே–36-
எண்ணிறான மாதவர்க் களித்து லோப மொன்றிலா
துண்ணெகிழ்ந்து நீதி நாலிலோது நேம கப்படி
நண்ணியே சடங்கினை நடத்தியன்பின் வந்தெழுந்
தண்ணளிக் கடற்கு வள்ளல் சாத கர்ம மாற்றியே–37-
எறெறெருத்த மீதுறீச னுக்கய னிழைத்ததத்
தூறரித்த மால் பதத்தி லொண்டமிழ்ப் புனைந்து நா
வீறனாகு மெய்ப் பரன் றனக்கவன் குலப்பெயர்
மாறனென்று நாமமன் வரோ தயன் வழங்கனான்–38-
அந்தரத்தி னன்பனா யம்புயத் தவன் மறை
யெந்தை தாளுறற் கொணாம லின்னு மேத்த நின்றவன்
றந்தையாகி மன்னவன் றனக்கு நாம் முந்தரில்
விந்தை சேரவன் புகழ் விளம்ப யாவர் வல்லரே–39-
இன்னண நராதிபன் பொலிந்து நின்ற வெம்பிரான்
றன்னருட் கொடேதமார் சடத்தினைச் சினந்த தீங்
கன்னலின் சொனங்கை கான்முளைக் க நாம மோது நாள்
பொன்னகர்க்கு ளோருகந்து பூவின் மாரி பெய்தனர்–40-
மண்ட லேசுரன் கனிந்து மாறனைத் த ழீ இயெணி
லண்ட முண்டு மிழ்ந்த மாயனம் புயப் பதம்பராய்
விண்டடைந்த மாடமார்த மாளிகைக்குண் மேவியே
கெண்டை யொண் கண் மாதினோடு கேண்மை யுற் றுறைந்தனன்–41-
நாமதேயப் படல முற்றும்,
–
ஆதிமால் தரிசனப் படலம்
பொன்பதி யெனவாம் கோட்டிப் புங்கவ நம்பி பாலீ
ரொன்பது தடவைக் கப்பா லோதியந் நூலையார்க்கு
மின்புற வளித்து நாம மெம்பெருமானா ரானோன்
றன்பத மலரைச் சூடித் தரிசனப் படலஞ் சொல்வாம்–1-
இன்னண முவகை மீதூ ரேந்தறம் சேமக் கோயின்
மன்னியந் தமரினோடு மறுவிலா தறு சுவைக்க
ணன்னய மூரலுண் டனந்தர முடைய நங்கை
தன்னருஞ் சுதனைத் தொட்டி லிடுதரத் தலைமை சான்றாள்–2-
கொண்டலிற் சுருளும் குஞ்சி நித்திலக் கொண்டை சேர்த்துத்
துண்டவெண் பிறைநுதன்மீத் துராயொளி துலங்கச் சாத்திப்
பண்டமார் சுடிகை யோடைப் பற்பல மணி யிழைத்த
குண்டலம் பிடிகஞ் சாத்திக் குலவு கண்டிகையும் பூட்டி–3-
அம்புயத் தொளிரும் வைரத் தழுத்து மங்கதமுஞ் சாத்தி
வம்புறு நிம்ப மாலை மார்பிடை மதாணி சாத்தி
பம்பு மொண் கதிருலாய காஞ்சியும் பரிவிற் பூட்டிச்
சம்பய னறியாத்தாளிற் பரிபுரச் சதங்கை சாத்தி–4-
பாடகங் கொலுசு பாதப் பவளமென் விரலின் மிஞ்சி
யாடகத் தமைத்துப் பூட்டி யங்குலிக் காழி சேர்த்துக்
கோடு புன்னகமுஞ் சாத்திக் குதலைக் ண்ணிக் காயொடு
நீடர வடமும் பூட்டி நிலவ மண் டிலத மிட்டு–5-
அஞ்சன மகன்று நீண்ட வையரி விழிமேற் றீட்டிக்
கஞ்ச மெல்லடியிற் செய்ய மஞ்சொளி கதுவக் கோட்டி.
வஞ்சர் கண்ணீறு தையா வகை வலக்கதுப் பினீல
நஞ்சிலுங் கரிய மையா னலம் பெறக் குறி யொன்றிட்டு–6–
காசறொண் பிரவாளத்தாற் கவின் பெறக் கடைந்த காலுட்
டேசிகத் திடைசலாகை சேந்த மாமணி குயிற்றிப்
பாசொளி பரந்த சட்டம் பணித்துமா மரகதத்தில்
வீசுவிற் றொடரு நாற்றி வீசித்த பொற்றொட் டிலேற்றி–7–
பற்பல நிலவு காலுஞ் சூரிய படத்திற் செய்ய
விற்புனை யேழடுக்கு மெத்தை மேல் விரித்து வெண்பட்
டற்புத மலர்களாற்செய் தணிகொண்மே லாப் பமைத்துய்
பொற்புறு தொட்டி லேற்றிப் பூவை தாலாட்டு வாளால்–8-
பண்ணைவாய் வளையு குத்த பன்மணி நிலவு காலுங்
கண்ணகன் றொளிரு கூடற் கா வலன் மரபுளோரை
நண்ணுதற் கரிய வைதரணிக் கரை கடத்த வென்றிம்
மண்ணிடை யுதித்த வென்கண் மணியே தாலோ தாலேலோ–9-
உலைபடா தொளிருஞ் செம்பொ னுதயனாற் கருகாமாலை
யலைபடா வமுத மாலை யடைதரா வினிய கன்னல்
கலைபடா மதியம் வண்டர் கவர்ந்கடா திஸ்னிய செந்தேன்
விலைபடா மணியேர் நந்தா விளக்கே தாலோ தாலேலோ–10-
கோடரங் குழையிற் பாயக் கூனிருலுடையத் தேனூர்
மாடவிர் முகடார் மந்த மாருத வரையாள் கோவே
நீடிய திரைவாய் முத்தை நேமியம் பறவை காக்குந்
தோடவிழ் கமல வைகைத் துறைவ தாலோ தாலேலோ–11–
அள்ளலங் கருஞ்சே றுற்ற வகன்பணை யுழவின் மள்ளர்
உள்ளடி யுறுத்த நீல முகுமதுக் குருகூர் நம்பி
வெள்ள நீர்க் கயல்க ணாக மேய வைந்தருவைச் சாடித்
துள்ளூநீர்ப் பொருனற் சங்கத் துறைவ தாலோ தாலேலோ–12-
இருநிலத்தறு விசிட்டாத் துவைத முற்றிட வுயர்ந்த
திருமிகு மகர கேதுச் செல்வனே வாசு தேவ
தருநிழ லண்ட முற்றுந் தங்கிய தன்ன முன்னீர்
வருபுவி யோர் குடைக்கீழ் வளர்க்க வந்தவ தாலேலோ–13-
வாட்டடமங் கண்ணி யிவ்வாறுல கெலாம் வயிற்றடக்கி
மீட்டுமிழ்ற் தளித்தழிக்கும் விருப்பு மாத்திரத்தி லோரும்
பாட்டுடைப் பரனை முன்னாட் பயிற்றிடு தவத்தி னாற்றா
லாட்டியுள் ளுவகை பொங்க வங்கையி லெடுத்துப் பின்னர்–14-
முன்னுளபடி மலர்க்கண் முகிழ்த்தி யாம் வீட்ட வாறே
நன்னய வணைகிடந்து நகிலமு முண்ணா தங்கந்
தன்னிலே யசைவு மெய்யிற் றளர்ச்சியோ டழுகையின்றி
மன்னுநம் மதலை போலே வையகத்துளதோ வென்றே–15-
அம்மமுண் ணெனவே யங்கை யனகனை கிடத்தி வார்கொள்
கொம்மை வெம்முலை பிடித்துக் குமுத வாய் பொருத்த வப்பால்
செம்மையங் கடைவாய் முன்போ லோடுறத் திகைப்புற் றந்தோ
மைம்முகி லளகத்திரீ தென்னென வருந்தா நின்றாள்–16-
சுவர்க்க பூதலத்திற் றோன்றி தூம்பயல் வளைந்த தன்ன
விவர்தரு திருத்தோணல்லீ ரென்ன காரண முனான் செய்
பவமதின் குறையோ வன்றிப் பயிற்றிய தவத்துட் கோதோ
வவனிமீ திவ்வாறெச்ச மாரேனும் பெற்ற துண்டோ -17-
சசியலை தரவே செய்வ தனமுறு மடவீர் சற்றும்
பதியினா லழவு மின்றிச் சேனையும் பருகாதாகி
அசதியு மில்லா தங்க மதிவளம் பெருக முன்னீர்
வசுந்தரை பிறந்த மாதர் மக்களைப் பெறலு முண்டோ–18-
மைப்படு குழலீ ராயு மலரணை மீதியானங்
கெப்படிக் கிடத்தினேனோ விசைந்து நாளெட்டானாலும்
அப்படி யிருக்க லல்லா லங்கமொன் றசைவ மில்லா
திப்படி மீது மாத ரிளமக வுயிர்த்த லுண்டோ–19-
இண்டை கொண்டிலகு மைம்பா லிழைநுசுப் பரிவையீர் பொற்
றண்டை கிண்கிணி கறங்கத் தவழ்ந்தடு சிறுசே யென்னைக்
கண்டு முன்வர வன்போடு கைகொடுதழா௮ தழுக்கா
றுண் டெரிசின முள்ளோங்க வுற்றெடா திஸ்ருந்திட்டேனோ–20-
பல்லமம் பகமொண் மெளவ்வற் பசிய கோரக வெயிற்றீர்
தொல்லை நாளளவுஞ் சேயாற் றுன்புறப் பின் றவத்தான்
மல்லலங் குழவி தந்த மாமகணேய னிவ்வா
றல்லலுற் றழுங்கச் செய்ய வடிமையிற் பிழையென் னோவால்–21-
ஒரு குறங்கணை வாய் வைத்தாங் கொரு குறுங்கணை நெரூ உடித்
திருமுக மலர நோக்கிச் சிறு நகை புரியாச் சேயைக்
குருமணி கொழிக்கு முன்னீர் குலவு மானிலத் துளோர்கண்
மருமல ரளகபார வனிதையீ ரறிந்த துண்டோ-22–
வண்டு நாணுடைய வீரன் வாளிபாய் செம்புணாரச்
செண்டு மாமுலை கொண்டொத்திச் செழிக்க வன்பரைச்சேர் நல்லீர்
யெண்டிசை யிடத்திலுள்ளே குழவிகட் கென்சேய் நோய் போ
லுண்டு கொல் யான் செய் பாவத்துறுதி கொலறைதி ரென்றாள்–23-
பொற்றொடி கறங்கு முன்கைப் பூவை யீரரியின்றாளுட்
பற்று மிவ்வுலகர் செய்ய பாலனில்லா தழுங்கிப்
பெற்ற பினுவகை கொள்வர் பேதையே னளவுமச்சே
யுற்று நீயழுங் கென்றெம்மா னுந்தி யோன் வகுத்திட்டானோ–24–
தையலார் முழுகு சீறு தைத்ததோ வன்றி வேலன்
வெய்ய கண்ணோக்கோ வத்தி மேய புட் சீரோ வென்று
வையுற விதற்குமுன் னிவ்வன்கறுப் பாடினானோ
தொயயில் வெம்முலையீ ருற்ற சூழ்ச்சியை யறிந்திலோமால்–25–
கொங்கையின் பொறை கண்டேங்கு கொடியிடை மடவீர் சற்றுஞ்
சங்கை வேறுளவென் றெண்ணிற் றனுவிடை வாட்ட மில்லை
யங்கை யுள்ளங்கால் வெப்ப மாறிலைச் சரந்தாழ்வில்லை
விங்குள முச்சி தாழ்வு மெய்தில தென்னோ வென்றாள்–26-
மெதகு முனிவன் பின்பேர்ய் விறல் கொடா டகையும் அம்மம்
போத வந்துதவு சீற்றப் பூதனை யாளையும் பார்த்
தேதிவர் பெண்பா லென்றங் கெண்ணிடா தவர் கடுஞ்ச
மோதுகன் மனனோ நங்கை மொழியினுக் கிரங்குவானே–27-
இன்னண முடைய நங்கை யுண விலாதிளைப் புற்றோர்க
ணன்னய மூர றீம்பா னண்ணியு முணற் கில்லாயி
னன்னவ ருறுக ணெவ்வா றடைவரோ வஃதினொந்து
மன்னனுக் குரைப்ப வன்னோன் வருந்தி யீ துரை செய்வானால்–28-
கொந்தார் குழலெழி றோடணி குழையாய் கலை குறையா
விந்தார் முக மகவார்கலி மிரு மானிலர் முளை போற்
செந்தாமரை விழிவா யவிழ் செயுமென றெணி யிதுநாள்
வந்தோமினி முனமீ பெருமானே சரணெனவே–29-
என்போடுள முலைவாய் மெழுகெனவே கரை தரவுள்
ளன்போடவ னிணைமாமல ரடி மீதினி லமரப்
பொன் போலொளி ரிளமாறனைப் புகவித்தடி பரவி
மின்போதரு முரனே யெனவினை செய்தன முனமே–30-
அடியோ மிது தரமோ நினையருளார் கலியெனவிப்
படியோ டமரரு மாமறை பகரும் முரை கெடுமே
அடிவார் மரையுறைவோன்கடுக் களனோடடி யறியா
வடிவாகிய முதலேயறு மனமேவிய துயரே–31-
என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்
அன்றே யருள் புரிவா னிதிலயமே தவனடி வாய்
சென்றே அயர் களைவோ மெழு தெரிவாயென விறைவன்
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–32-
என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்
அன்றே யருள் புரிவா னிதிலயமே தவனடி வாய்
சென்றே அயர் களைவோ மெழு தெரிவாயென விறைவன்
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–33-
மெய் யொன்றிய மதயோருளை வீறன் மாவணி திகழும்
வையந்தனை மறி தெண்டிரை மடைநின்றெழு புனனேர்
மொய்யன் புறுபடை பல்லிய முழவார்ப் பெழவுதவ
வய்யன்மன மகிழாவவ ணடைவான் மிசை யேறி–34-
தனையன் றனையி பவென் கொடுதளிர் மெல்லடி மடமான்
மனனம் தணிகர நங்கையு மதமந்திரி யுடனே
கனமொன் றயரணி மேடைகள் கவினா ரெயில் சிகரி
யினமொன் நியமற: கோடிறை யெய்தாச் சினகரமே–35-
திதி மைந்தரின் வலியால்வரர் சேணாடரசிழவா
விதியே வலினிவண் வந்தடி மேவும்பொழு துருவா
யெதிர் வந்தவர் வலியொன்றிட வினல் வென்றிட வருளும்
புதுமென் மரை மலராளிறை முன் போய்த் துதி புரிவான்–36-
கண்ணனின் னருளா லென்றுய ரறமுன் கான்முளை யளித்தனை யதுவிம்
மண்ணக மடவார் சிறுவரிற் கருணை வார்விழி யவிழ் தரா தம்ம
முண்ணிலா தவயவங்களு மசையா தொளி கொள் செம் பவள வாய் திறவா
தண்ணலிப் புதுமை யெற்கென நினைந்தோ வருளினை கருணை வாருதியே–37-
பாட்டளிமுரலின் றளவணி முறுவற்பாசிழைக் கமலவீட் டரசி
மோட்டிள நூலமுழுந்திரு வரைகொள் மொய்ம்பநன் மசுவருளென்று
வேட்டிடக் களப குங்குமஞ் சுமந்த வேசரி யாக்கனிற் கறமோ
வோட்டரும் பிரசத் துளவணி புயவீண் டுனையலாற் களை க ண்வேறி லையே.–38-
செப்புறழ் நகில முருந்திள முறுவற் சேலிணைக் கண்டுடி யிடைகொ
ணப்பினை பொருட்டேழ் விடையட ராதி நாதனே யருள் மழை முகிலே
மைப்படு வரை செங்கதிர் மத யிருபால் வயங்க நின்றது வனவுருவத்
தப்பனே களைக ணீயலா தெற்கீங் காருளார் கருணை வாரிதியே–39-
கோதறு மறைகணான்கின மறியாக் குணமிகும் பரமதாய் விழியின்
சோதியா லெவரு மறிவதற் கரிதாய்த் துளக்கறு மன த்தினுக் கெளி தாய்
நீதிகொ ளதமா யவைசெயும் பொருளாய் நிறைதரும் குணமழை முகிலே
ஆதியே களைக ணீயலா தெற்கிங் காருளார் கருணை வாரிதியே–40-
அண்டமாயண்டத் தயனரன் குலிசத் தரசனா யவனவனுலகாய்ப்
பிண்டமாய் விரிவாய்ப் புலனொடு நிலனாய்ப் பிறங்கன லொலியொடு விசும்பாய்ப்
பண்டமா யணுவுக் கணுவதா யிவரும்பருப்பத மதற்கத னுருவாய்
மண்டல முழுதும் நிறை தரும் பொருளே மாயனே கருணை வாரிதியே–41-
கண்ணிலா னொருவன் நின்னடி. நிழற் கீழ்க் கடுந்தவமுஞ்ற்றியெற் இருகண்
நண்ணிட வருளென் நிறைஞ்சிட வுருக்க ணல்கிய தொளிகொடா தனைய
வண்ணனின் னருள்கொ டுதவுநம் மகவீண் டனை யதாயு றிலெவ ணருள்வாய்
வண்ணமால் வரைசெங் கரநுதி பரித்த மாயனே கருணே வாரிதியே–42-
கண்ணகன் ஞாலத்தொரு பொறியிலிமால் கருணையாற் பசுங்கனி
டுண்ணு நாட் சுவையில் லாகிலாங் கஅவுற் றுளபயனெவணது சிவண கைக்கொண்
வெண்ணுதற்கரிய மாமையங் குழவி யீண்டெனக் களித்தையதினைய
வண்ணமுற்றிடி லென் பயனதற் கருள்வாய் மாயனே கருணை வாரிதயே–43-
வட்டவா ௬லகத் தொருபசுங் கொடிபன் மகவுயிர்த்தட வதிலொரு வன்
துட்டனாயிடினு மாங்கவற் குறுகண் டோன்றிமிக் குழல்பொழு தனை நெஞ்
சொட்டுமோ கடிய வதுவியல் பன்றியோதநீர் வண்ண நின் னடியை
யெட்டுணைப்பொழுது நயந்துள முன்னா திருந்தெனோ கருணை வாரிதியே–44-
புத்தமு தூறுங் கூபமு மடவார் புனிதமாங் கற்பினின் றகலாச்
சித்தமு மாலே பரமெனக் கருதிச் செபதப கோம கேமனமு
மத்தமும் படையு மடல்கெழு புயமிக் காண்மையும் படைத்து நின் னடி சேர்
பத்தர்கணிடை யூறளித்திடுங் கொடிய பாகுபா டொன்று றுமதனால்–45-
இஞ்சிசூழவரை வெல்வதற் கெணிநா மெதிருநில் வல்லைநங் கழல் வாய்த்
தஞ்சமென் றடைவ ரருள்செய வேண்டுஞ் சரியல வாங்கவர் செயலை
வஞ்சமா யழிவுசெய்ய வென்றுன்னி மாவுரு வெடுத்தமு தனைத்துந்
துஞ்சிடப் பருக யாசதாய் மடவார் தூய கற் பதனையு மழித்தே–46-
போதவோர் புத்தனாயவர் பக்தி போக்கி யிவ் வுலகிரதமதாய்
ஆதவன் மதியந் திகிரியா யொருநான் காரணம் பரியதாய்ச் சூதன்
வேதனா யரனு மெதிரியாய் மேரு வில்லதாய் நாணும் வாசுகியாய்
தீதறுவாளி நீயதாய் வென்ற தேவவென் பிழையதிற் கொடிதோ–
தனியாழி சூழ வனியாளு மெந்தை சர ராம னான பொழுதோர்
முனிவாலிலக்கு வனை நீ முகத்து முனிலேன் முனங்குருகைபோ
யினிதாயடர்ந்த புளியாவை நின்க ணெழுவாம்பி னென்ற வுரையே
யுனிமாயனம்பொன் னடிவாய் கிடத்து மொளி சேய் செய் வாய்மை யறைவாம்
ஆதிமால் தரிசனப் படலம் முற்றும்
—
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply