ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-2-

திருப் புளிப்‌ படலம்‌

பருமா னிலத்தி லடர்நீச முற்ற பரவாதி யர்க்கியமனாய்க்‌
திருமாதிருக்கு மணிமார்பருக்க திக நேசருக்கினியவாங்‌
குருவாயுதித்த வெிராசன்‌ மெச்சு குண சீல னித்தனடியா
மிரு தாமரைச் செம்‌ மலரே மனத்து ளெளியே மிருத்தி நினைவாம்–1-

மதியோடருக்க ரிருபாடு முற்று மருமாமரைச்‌ செம்மலரே
பொதிநீல்வரைக்கு நிகராகி நின்ற பொருவான தற்ற பெருமா
னெதிரே திருக்கு முதவாய் முகிழ்த்த வெழில் கால்‌ கிடத்தி யிறையும்‌
நிதியாலிழைத்த கடமாமுலைப்‌ பெணிதியோடு மெச்சு பொழுதில்–2-

இமையோர் வணங்க முனிவோரிறைஞ்ச விறையோரிதென்கொல் விபரீ
தமதாயதென்று வகையோடிரங்க வடியார்கள்‌ சங்க மறை சொல்‌
விமலாதிமன்‌ற னருளானதின்‌று வெளியானதென்று மகிழக்‌
கமமாய துன்ப நிறை வாரி நின்று கரை காண வன்பர் கணமே–3-

மிடியே மிகுப்ப வதினோ மவர்க்கு மிளிர்மா னிதிக்‌ குவையுமே
னெடுநாடிருக்‌ லெயர்‌ வோடிருக்கு நிலமானிடர்க்‌ கிருகணு
மிடைசேர்‌ தரக்கொ ளவரோகை தற்கு மினிதே யிரட்டி யயில்வே
லுடையானொடுற்ற விள வாணகைக்கு மொழியா மகிழ்ச்சி எழவே–4-

தரைமீது சற்று மசையாது வைத்த தலமே கிடக்கு முளைதான்‌
புரை தரு மத்த வளையாதி மைத்த புகழ் சாயல்‌ கண்டு மகிழ்வான்‌
மரைநே ரரிக்க ணுறவே விழித்து மணி வாய்‌ திறந்து பொதுவர்‌
நிரையே களிக்க வவர்பாலுதித்து நெடு நா டவழ்ந்த தெனவே–5-

இருதோள்‌ குலுங்க விருகா தணிந்த வெழிலே மிகுந்த மணி சேர்‌
தருநீடு குண்டலமராக வொண்வி றரலோடிலங்க வவிருந்‌
திருமார்‌ பணிந்த வணியே சரிந்து செகமீ திழிந்து புரளச்‌
சுருணாறு குஞ்சி மிசையார் கலன்‌கடொடை யோடசைந் தொளிரவே–6-

பிறையோ டிகற்றரு மனோகரத்தின்‌ பிழை தீர்‌ நுதற்க ணணியு
நிறைவா லொளித்‌ தரளமே யிழைத்த நெடிதாய சுட்டி யலைய
விறையா மடிச்செ நறையோடு புத்து றிரு தாமரைச்செ மலர்மே
லுறை யோதி மத்தண்‌ சிறை யோதி மப்புள்‌ ளொலீயே தரக்க லெனவே–7-

எணிலாத தன்மை யுறுபார வண்ட மிசையா வடங்கு மிடமா
மணிமேவு பண்டி யரைசேர்‌ சதங்கை யொடு கீழ்‌ சரிந்து புரளப்‌
புணராய செந்துவரை நேரிலங்கு புகழ் தாளி னங்குலிகளொ
ணிணர்கோடை யங்கையுடன்‌ மாமுழந்து மிடவே சிவந்த நிறமே–8-

திருமாமடந்தை புவிமாது செவ்வி திகணீளை தங்களுடனே
யொருநீல விண்டு நிகராக நின்ற வொளிராதி தன்னை வலமா
யருகே தவழ்ந்து வரு போதிலய் யனனையோடு தந்த மரெலாம்‌
பெரு கோகை மண்டி யெழ நீடு கண்டு பினிலே தொடர்ந்‌து வரவே–9-

எழிலே மிகுந்த மதவேளு மண்டி. யெதிர்காணுறிற்றன்‌ வடிவவ்
வுழியார வெள்ளி யணை வானோர்‌ பெண்மை யுறவே விருப்புளடையக்‌
கழிதே லங்க வருளாதி நின்று களி நீடிடத்தின்‌ வடபால்‌
வழியாகி நின்ற மதி மேவு திந்திரிணி நீழலுற்‌ றனனரோ–10-

மாக னகக் கலை சூழரையிற்புனை மாறனணைத் தலமா
நாக மதைக்கலி யேகுது முற்பட ஞாலமடுத்‌ தெகின
மாகி யுதித்திடு போதி யெனச்சொல வார வழுத்‌தி விரைந்
தேகி யுரைப்படி. யாய திருப்புளி யேர்தகை சிற்பகர்வாம்‌.–11-

கஞ்ச மலர்த்தவி சந்தர முற்றெழு கண்ணோரு வெட்டனொடு
மஞ்சி னிறத்தடை கண்டர்‌ தமக்கு மகிழ்ந்தினி தெட்டரிதா
யெஞ்சலினித்திய வும்பரிலுற்றிட மெங்கும்‌ விரிந்‌ திடலா
லஞ்சயினற்படை யங்கை தரிக்கு மரிந்தம னொக்குமரோ–12-

வானக மண்டல மோர்கையின்‌ மன்னிய வாணி தனத்‌ திசையா
மேனனிகொண்டிடு மோதி மனண்ணிய வேலை யுயிர்ப் படையா
நானன்‌ முகங்களு நாடி யிரும்மரி தாமரை பெற்றிடலாற்‌
றானவருங்‌ கமலாலய மன்னு பிதாமக னொக்குமரோ.–13-

வானதி தன்னுடன்‌ மீத விரும்பிறை வான்முக மஞ்சுறலா
லூனமிலங்கமலாதன மன்னய னோர் தலை தங்குறலாற்‌
றூனகு கொன்றையு மாடரவுந் தலை சூடியை யொன்றுமதே
ஞானமிகுந்தந மாறனுகந்தன னாடிய திந்த்ரிணியே.–14-

வென்றிமிகுத்திடு மங்கதமுற்று விளங்கு பதிக்குமடி
நின்றெவருக்கு மகிழ்ந்தினி தெட்டி னிமிர்ந்து சலிப்படையா
வன்றிறலிற்படுமண்ட முகட்டிடை மன்னி யுணிற்குமதை
யென்ற முறச்சரிவின்றி நிறுத்தெழு வென்னு முரைக்குறழா–15–

கொண்டபசுஞ்சுடர்‌ விண்டுவையுஞ்‌ சிறுகுன்‌று கடம்மையுமே
கண்டதை யொன்று மணங்கையினன்‌ கவிகை யெனும்‌ வண்ணமுற
வண்ட மடங்க லு மண்டி விரிந்தெழு மந்தர மாந்தனையும்‌
வண்டலையும்‌ பல தண்டலைதம்மையு மன்னவே கண்டிடிலே.–16-

காயொடடை திரள்‌ சேர்தரு நற்கனி காண மிகுக்குமலர்‌
தூயமிகக்கெழு காலடி பட்டுயர் சோர்வி றிசைத்‌ திசைப்போ
யோயடை யுற்றிடு மோவல துக்கு விணோடுநதிக்குள்‌ விழா
மேயலை கிட்டுமோ வோர்கில மித்தரை வீழ்தரலற்றனவே–17-

ஆருமலர்க்கணணாலு மளப்பரி தாய் முடிவற்றி மிருஞ்‌
சாருமெணற்றப லாயிர மற்படு சாகை தழைத்திடலா
லாரணமொக்கு மலாமலு மற்று வலாரி நிகர்க்குமதே
சேருமை யுற்றொளி சேர்சசி தொட்டுயர்‌ சேணகருற்றிடலால்‌–18-

வாரிகலிங்க மெனா வரை கொண்டிடு மானில மண்டிமிரு
மாரிருள்‌ வெம்பகை போழ்தர வெங்கதி ராமசி கொண்‌ டெழுகுஞ்‌
சூரிய னொன்றினராவித னுண்ணுழை தோறு மெஞ்ஞான ரவி
சாரொளியா லொரு தீபமெனும்படி. தானொளி தந்திடுமால்‌–19-

பாயுமிதிற்‌ சிறிதேனு முரைத்திடில்‌ பாருள மட்டுமிழி
வாயுவுடற்படு நோய்களனைத்தும்‌ வராமலடர்த்திடமாற்‌
றீயகனற்‌ கணுவேனுமிதிற்‌ படில்சேகுரு கப்‌ புனல்க
ளேயது வெத்தல மோவவ்விடத்தினி லேற விடுத்திடுமால்‌–20-

யோகவருங்‌ கொடி தாய தொழில் புரிவோர்களு மிவ்வழியா
யேக வரும் பொழு தீதவர்கண்படி லேய பவந் தொலையும்‌
ஆகவ நன்னகர்‌ மேவி விளங்குவராகில்‌ விளம்புவர்‌ யார்‌
தாகமொடும்‌ வழிபாடு செயும்‌ மவர் தாமடையும்‌ திறனே-21-

தாறுபடுங்கமுகேர்பெறு தெங்கொடு சாமரையிற்‌ பொலியச்‌
சீறி மலர்ந்தகல்‌ வானுயருங் கவிர்தேரின்‌ விளக்கொளிரச்‌
சூறடி விண்டவழ்‌ சோலையெறுழ்‌ மனர்தாழ்ம்‌ தயனிற்பவன
மாறனெனும்படி பூவரசுற்றிடும்‌ வாளர வப்புளியே–22-

அத்தனறா மாவலி பான்‌ மூவடி. மண்‌ வாங்ய நாள னைத்துந் தள்னுள்‌
வைத்தடக்கு மலரடியே மானவிரு வானமெலா மலர்ந்து நீண்ட
இத்தகைய புளிநீழற்ற வழ்ந்‌ தோடிச் சென்‌ றணைந்‌ தவிள வலாய
முத்தி நிலமடி தொழுவோர் தமக்கருளும் பரன தன்‌ றன் மூலம் சேர்ந்தான்–23-

பாரடையிற்‌ பரகதியிற்‌ சேர்த்தருள்வாம்‌ வடபாற்கட்‌ பரிந்துமுன்‌ போய்‌ ஓரடியிட்டினிவரவின் றொழுதிரெனத் தென் புறத்துற்‌றுறையும்‌ தீய
காரடமற்படு முடலத்தே மனருங்‌ கொடுந்‌ தமரைக்‌ காய்வான்‌ போலச்‌
சீடரப்புளி வேரிற் சென்ற பரன்‌ றெக்கண மாந் திசையை நோக்கா–24-

ஐம்புலமாயந்தனை நிராகரிக்கும்‌ யோகியர்கட்‌ ௧ றிவிப்பான்‌ போற்‌
செம்பது மாதனந்தரித்‌துட் கரிகாப் புடையகலாச் செழித்து நீண்டு
வம்புறுமற்கமல நறும் போதெனவே யிடையிடைசெவ்வரிகளோடிப்‌
பம்பருட்‌ கணிணைபிறழா தெழிலாரு நாசி நுனி பார்த்துமாதோ–25-

வடமேருப்‌ பொன்கிரி நின்றிழிதரு பல்லருவியென வயங்குமார்பி
னிடமே வொண்ணிலவு மிழும்‌ வெண்டரள மணியார மிலங்கவே நேர்
படமேலி நிமிர்ந்த மிருமரகத நல்வரைய தனுட்‌. படிர்த சோதித்‌
தடமேய செங்க தரிற்‌ றிருமேனி யொளி செய்யச்‌ சலியானாகி–26-

பல்லாயிரங்கோடி யண்டமு மவ் வண்டத்துட்‌ பரந்து வாழு
மெல்லாமுந் தானாகி நின்றருளு முதலாய வெழில் கொள்‌ சோதி
வில்லாரைம்படையாதி நிர்மலனே பரமாயவிமல னென்ன
மல்லாரும்‌ வலது கரத்தில்‌ குசின்முத்திரை தரித்து வயங்கிமாதோ–27-

மற்றோர்‌ செங்கர கமல முன்னொரு நாட்‌ டோன்றிய வம் மலரே யன்னப்‌
பொற்றோ யுமப் போதிற்‌ புடை பரந்த வுந்தியின் மேற்‌ பொருந்தச்‌ சேர்த்தி யுற்றோடும் பேருயிர்ப் புள்ளு ற வடக்கி யாம்பலம்போ துறழ்வாய்மூடி
முற்றோகை யொளி பரந்‌து வாண் முக நின்றொளி செய்ய மோனமாகி.–28-

அகலுகில்லேனிறையு மெனத்‌ திருமாதுள்ளுற மகிழ்வுற்ற மருமார்‌ சகமுழுதுந் தன்னுளுறக்‌ தானடக்குந் தாட் கமலத் தார்வம்‌ வைத்துப்‌ பன்
பகர்தரக்‌ கண்ணகத்‌ துழலு மிரு வினையாம்‌ பவந் தொடைத்துப்‌ பாநாடீயும்‌
நிகரிலருர்‌ தகைய வட்டாக்‌ கரப்பொருளே தாரகமாய்‌ நெஞ்சுட்‌ கொண்டு–29-

உருகிய பேரன்பினொடும் வந்தணைந்தா ரிருவினை யீர்த்‌து யர்வானீயத்‌
தருமுதலே மெல்லணையா யந்நிழலே மேனிழற்றுஞ்‌ சத்திரமாகப்‌
பெருகிய மெய்ஞ்ஞானச் செங்கோலோச்சி வீற்றிருந்து பிறங்னானா
லிரு நிலங்கொள்‌ மருளகலச்‌ செங்கதர் போற்‌ றென்பாலி லெழுந்தானம்மா–30-

இவ்வணம்‌ வீற்றிருந்‌ தருளுமேந் தறனைக் கண்‌ டெளிதி னெடுப்பா னெண்ணிப்‌
பவ்வங்கொளலை வாரி தன்னிலும்‌ பேருவகை வெள்ளம் பம்பி யோங்‌கச்
செவ் வண்ணந் திகழ் சுடரோன்றனை மின்சேருந்‌ தகையிற்‌ றழுவினாளான்‌
மைவ்‌ வண்ணந் திகழோதிப்‌ பொன்னுடைய நங்கை யெனு மடந்தை தானே—31-

கையாரத்‌ தழுவியணைத்‌ தெடுத்தளவிற்‌ பேர்வரைபோற்‌ கனப்ப நோக்கி
யையோ வீதென்கொலெனப்‌ பதைபதைப்புற்‌ றசைத்‌ தெடுத்து மசையா னாகி
மெய் சோரக் கை சோர மாழாந்து வாய் குழறி மிகவே விம்மி
மையோதி யெழுதியவோர்‌ சித்திரம் போலத்‌ தனையு மறந்தான் மன்னோ–32-

மருவிரியுங் குழலுடைய நங்கை யெனும் மட மாதோர் வண்ணந்தேறிப்‌
பொருமலொடு விம்மலு மென்மே லெழவுள்ளுற வடக்கிப்‌ பொரு வேற்‌ கண்ணின்‌
றருவியெனப்‌ புனல்சோர வாம்பலென வாயங்‌ காந்தறைந் தாண்‌
விரு நிலனும்‌ பெரு வானுங்‌ கருதுறவே யிசை வாய்ந்த விறையோற்‌ கன்றே–33-

போதகமோடிகல்‌ வேடற்‌ இருவானமீந்து முகிற் பொலிந்‌து நின்ற நாதனருட்‌ பல்காற்‌ சிந்தித்‌ தோகை மீக்கிளர்‌ நனியுந்தேசார்‌காதலனின்‌ றிங்கோடி த்‌ தவழ்ந்ததுவே பெறும் பேறாய்க் கருதி நின்ற சீத நறுங்‌ களி வண்டு பாண் முரலுந்‌ தொடை யகலத் திறல் வேற்‌ கோமான்‌–34-

பருந்தாரயில் வாட்‌ படை விழியாள்‌ பரிவிற்‌ சோர்வுற்‌ றுரைத்த
திருந்தாரங்கை வேனுதி போற்‌ செவியினாடே நுழைதரலும்‌
வருந்தா நின்றுள்ளினி திரங்கி மாழாந் தீ தென்‌னதிசயமென்‌
றருந்தாட்‌ கமலத்‌ தவிர் கழல்‌ களதிரக் கடிதிற்‌ குறுகினனால்‌–35-

மழஞ்சே றொளிவிட் டெழுங் கதிரை வளையுமூர்‌ கோள்‌ சூழ்ந்ததெனக்‌ குழைஞ்சேயுள்ளந் திருந்தலர்க்குக்‌ கொடுமை கூருங் கொலைவேலான்
பழஞ்சேயாம்பற்‌ றுவர்‌ வாய பாலனாமப்‌ பரனைத் தன்‌
முழைஞ்சேயேம வரை யன்ன மொய்ம்பாற்‌ றழுவி யெடுத்தனனால்–36-

தண்ணென்‌ நதி சூடிறையன்னான்‌ றாதையாய தாட்கமலத்‌
தண்ண றன்னோடும்ப ரெல்லாமறியச்‌ சுடரை யெடுத்தளவிற்‌
றிண்ணஞ்‌ சிகரம் போற்‌ கனப்பச்‌ செழியர்‌ கோமான் றிறலழிந்து
கண்ணிலாதான்‌ பெற்றிழந்த காட்சி யண்ணலா யினனால்‌–37-

மன்னர்கோமா னெடுத்ததற்‌ பின்‌ மாழாந்துருகிக்‌ தமர்குழுவுந்‌
துன்னுங்‌ கதிர் வேன ராதிபருந்‌ துணைமென்கொங்கை நுண்மருங்கு
லின்னல்கூரப்‌ பணைத் தண்ணாந் திறுமாந்திருக்குங்‌ குவடிணையா
மன்னம் போலு நடையாரு மசைத்‌ தசைத்துப்‌ பார்த்தனரால்‌,–38-

தம்மாலாகுந் திறத்தினொடுந்‌ தழுவி யசைத்‌ துப்‌ பார்த்தளவிற்‌
செம்மா மேனித்‌ தனி முதல்வன்‌ சிறிதுஞ்‌ சலியாலகை நோக்கா
நம்மாலாகா வகையன்றி தாறுங்கதிர்காலிப்‌ புதல்வன்‌
செம்மாந்‌ திருக்கும்‌ களியானைத்‌ திரட்குமசையா னென்றனரே–39-

சனித்தநாட்‌ டொட்டின்‌ றளவுஞ்‌ சலியாத ணுவுமதி விரைவி
லினித்த செவ்வாய்‌ கண்டிறந்‌ தின்றெளி திற்றவழ்ந்திங்‌ கோடியதால்‌
பனித்த நெஞ்சில்லாதார்‌ தம்‌ பார்வை யெச்சிலெய்தியதோ
தனிச் செஞ்சுடரே யெனவொளிரித்தனைய ற் கென்பார் சிலரன்றே–40-

மருந்தனின்சொற்‌ நிருமாது வளரு மணிமார்பன்‌ கொல்லோ
திருந்து, தனிச்‌ செங்கோ னடத்துஞ்‌ சேனை முதல்வன்‌ தான்‌ கொல்‌லோ
கருந்தண்ணீர்‌ மண்ணிடத்தேதோ காரண த்தின்‌ பொருட்டாக
அருந்தவத்‌ திம்மன்னவன்‌ பா லடைந்தார்‌ கொல்லோ வென்பாரால்‌–41-

தேனார்கமலத்‌ திருமகட்குந் திரைப்பார்‌ மகட்குந் தனிச்‌ செல்வக்‌
கோனாதனுக்குக்‌ குடிகுடியாட்‌ சேய்யுஞ்‌ செழியர்தங்‌ கோமான்‌
மேனாளிழைத்த மெய்த்‌ தவங்கள்‌ விளங்க முற்று முடித்திலனோ
ஏனாமிவ்வாறிப்‌ புதல்வற்‌ இருக்கும்‌ திறனென்பார்‌ சிலரே—42-

வாளை கமுகு மடல்‌ கீறு வயல்சூழ்‌ குருகாபுரி யளிக்குங்‌
காளையன்னா னிம்மை தனிற்‌ கணமும்‌ தீமை நினையானாய்‌
வேளை மூன்று மெய்யறமே விளங்கச்‌ செய்தான்‌ யாம றநிவோங்‌
கோளை யெய்திக்‌ கொடுமை யன்னன்‌ கொண்டதிறனெ னென்பார்‌ சிலரே–43-

வியனார்ப தம மென்போதே மிளிருங்‌ கண்கால்‌ கரமாயு
முயர்வா னிலவினேர்‌ மதியே யொளிமா முகமாயும்‌ படைத்தே
யியலாரிப்‌ பாலகன்‌ றனக்கங்‌ கிவ்வாற ளித்தவீர்ங்கமலத்‌
தயனே கொடிய பாவியென வறைவா ருள்ளங் கரைவால்-44-

என்று கூறுமொழிகளைக்‌ கேட்டி றுமாந்‌ திணைந்த வன்னமுலை
துன்றுங்குழ னங்கை மாதுர்‌ தோன்ற றானு முள்ளுடைந்து
கன்றிமாழாற்‌ தனராடிக்‌ கண்ணீர்‌ தமை மஞ்சன மாட்டக்‌
குன்றுபோலப்‌ பொலிந்து நின்ற கோமான்‌ முன்னரிவை சொல்‌வார்–45-

கொண்டலிற்‌ பொலிந்து நின்ற கொழுஞ்சுடர்ப்‌ பரிதி வேந்தே
வண்டர்தந்‌ துயரந்திர வகலிடத்து தித்த கோவே
பண்டொரு விலங்கிற்கோடிப்‌ பாலனம்‌ புரிந்த வுன்றன்‌
மண்டரு ளினையின்‌ றெங்கண்‌ மறைத்தனை யெம்பான்‌ மன்னோ–46-

வழிவழி நினக்காட்‌. செய்து வர்த வல்வினையே மின்று
கழிபெருங்‌ கொடிய துன்பக்‌ கடலிடையாழ்த னன்றே
பழிவழி யொழுகா வன்பர்‌ படுந்‌.துயர்‌ காப்பா யென்று
மொழிவது பொய்யதாமோ முதற்பரம்‌ பொருளிரங்காய்‌–47-

அறிவிலாச்‌ சிறியரே போலெதுவு நின்னடியலாது
பிறி துயர்‌ நினைந்ததுண்டோ பெருந்துய ருழன்று வாடுங்‌
குறியினைப்‌ புரிவதென்னோ குணப்பெருங்‌ கடலேநாவி
செறிகுழற்‌ றிருமணாளா செழிக்க வின்னருள்‌ செய்வாயே–48-

அருளிழிந் தொழுகு தாதை யன்னை மெய்ஞ்ஞான மோதுங்‌
குருமுத னைத்து நீயாய்க் கொண் டினிதிருக்கு மெம்பாற்‌
பெருகிய வருள்‌ செய்யாதே பிறங்கு மெய்ப்பொருளே மேன்மேல்‌
வருதுய ரதனின்‌ மூழ்க வைக்தனை யென்கொலின்றே–49-

வன்புறு மனத்தேன்‌ நின்பான்‌ மனிமக வருள்வா யென்ன
வன்புடன்‌ வேண்டுங்காலை யளித்திடா தொழியின்‌ மேவுந்
துன்பமொன்‌ றதுவே யாகுந் தூய்மறைப் பொருளே யன்றி
யின்ப மதருள்வான்‌ போல விடர்‌ பல விளைத்ததென்னோ–50-

மூல மென்றொருகாற்‌ கூவு முன்னரே யடைந்தோர் மாவி
னேலஞரொழிந்தா யின்றிவ்விளி வரலிடரின்‌ மூழ்கச்‌
சாலவு முழன்‌ற நேகந் தர முனை யழைத்து மென்னோ
வாலடை துயின்ற கோவே யருள் செயா திருந்தவாறே–51-

உள்ள நெக்குருகி யிவ்வாறொலி திரைப்‌ பரவை ஞாலத்‌
தெள்ளருஞ்‌ சிறப்பு வாய்ந்த வெரி மணிப்‌ பூணாரேத்தப்‌
புள்ளுயர்‌ கொடியனாங்குப்‌ பொலிந்தருள்‌ புரியானாகத்‌
தள்ளருந்துயரவாரி தன்னுளாழ்ந்‌ திருந்தாரன்றே–52-

வரிசிலைச்சுவடு தோய்ந்த வரை பொருவயிர த்திண்டோட்‌
குரிசிலாண்‌ டகைமையாலுட்‌ கொள்ளஞ ரடக்கா நின்றான்‌
பெரிய வாட்டடங்கணல்லாள்‌ பேதைமைக்‌ குணத்தாலன்ன
துரியனைக்‌ கண்டி கண்டு துயருளாழ்ந்தினைய சொல்வாள்‌-53-

நஞ்சிற்‌ பொலிகண்‌ ணங்கையர்‌ நகை கண்டயல்‌ சூழ்ந்தே
கொஞ்சத்தனி மஞ்சத்திடை குலவித்துயில்‌ வளர்ந்தென்‌
நெஞ்சத்‌ துயரகலக்‌ களிநிலைபெற்றிட வருளா
விஞ்சுற்றுயர்தருமித்தரு வேருற்ற தென் மதலாய்‌–54-

தளிர்மெல்லடி தனவைப்‌ பழி நுதலாய்‌ குல மதலாய்‌
மிளிரொண்மணி மனைவாய்ப்‌ பவ வினையாள்‌ செயவிழைவா
லொளிமேனி சற்றசையா விடு முழையே கிடந்தனையே
யெளிதாயிவனுறவே யெழுமிகல்‌ வந்த தெனிறையோய்‌–55-

இருகட்புல னில்லாதவர்க்‌ கிடையே யளித்‌ தன்றே
பருகுற்றிடு வகைபோ லொளிர்‌ பனிமாமதி நுதலாய்‌
மருவுற்றெழு களியுட்கொளும்‌ வகையே தவழ்‌ நடைசெய்‌
துருகித்‌ துயருற வென்னதை யுடனே கரந்தனையே–56-

பழுமாமர விலைமேலோரு பகலோர்‌ சிறுமகவாய்த்‌
தழுவாவிழி துயில்வோனருட்‌ டகையால் வரு மகனே
யெழுநீள்பசியதனான்மல ரெழில் வாய் திறந்‌ தினிதா
யழு மோசையை யெளியேன் செவி யடையுந் திற னென்றே–57-

துனியே மிகு மா பாதகத்‌ தொழிலே யரு வினையே
னினிதாய்‌ மடிமிசை வைத்‌ தம மிழிபானிறை வூட்டக்‌
கனிவாய் திறந்‌ துண வென்றுகொல்‌ களியோடது காண்பேன்‌
பனிமாமதி மரபூடெழு பகல்‌ போலொளிர்‌ மகனே–58-

இங்குன்றன தணியும்‌ பெருவெழிலார்மதி முகமும்‌
பொங்குஞ்செழு வகுளப்புயம்‌ பொருவு நயநயுக
முங்கண்டவர்‌ கண்ணெச்‌ சிலதுடையப்பல காப்புத்‌
தங்கும்படி செயவென்றெழு தருவா யொளி யுருவே–59-

கோடுஞ்சிலை நுதலாயணி குழையார்கன மரும்பப்‌
பாடுள்ள விர்‌ பனி தூங்கவே செங்கீரைய தொன்றி
யாடும் பருவ மிதாகலினரிதாய தொல் வினை யேன்‌
நீடுந்துயரது தீர்தர நீ யென்று புரிவாய்‌.–60-

துன்றுங் குழன் மட மங்கையர்‌ சூழ்வுற்றனர்‌ தாலோ
வென்றுன்றனை யாட்டச்சுட ரெறிமா மணியதனா
லொன்றும்படியிழை தொட்டிலிலோடித்‌ தவழ்ந்தேறி
மின்‌ றுன்றிய கழலாய் மலர்‌ விழி யென்று கொ றுயில்வாய்‌–61-

என்றென்‌ வயிறிடை நின்று நீ யிவண் வந்‌ துதித்தனையோ
வன்றொன்றியே யிது நாள் வரை யஞரிற்பட மூழ்கு
முன்றன்றவ முது தந்தையு முறவோர்களு மியானுங்‌
குன்றில்‌ களி கொள வென்று கொல்‌ சப்பாணி கொட்டுவையே—62-

சித்தந் தனிலுறு வெந்துயர்‌ தீரக்களிசேரக்‌
கத்துந் திறலதுகண்டு நீயினியாகிலுங் கனிவாய்‌
முத்தந் தர வெழுவாய் தரு மூலத் துறைவோ யென்‌
புத்தென்‌றுரை நரகப்பிணி போகப்பணி மகனே–63-

விட்டுக்கதிர்‌ பொலியுஞ்சுடர்‌ மிளிரும்‌ பசுமுகிலு
மெட்டிக்கு மகிழ வந்தென விவரிம்மர முறை வோய்‌
வட்டச்‌ சிறு பறை கைக்கொடு வரு சிற்ற வருடனே
கொட்டித்‌ திரிதரலென்‌று கொல்‌ கொடியே னிடர் கெடவே–64-

தாராகண நடு நின்றோளிர்‌ தருமாமதி யெனவே
வேரார்‌ தருசிறு பாலகரிடை மன்னுற வெய்தி
வாரார் முலை மடவார் மலி மறு கூடொளிர்‌ சிறிய
தேரார விடுத்‌ தென்று கொறிரிவா யொளியுருவே–65-

வரமாமலரிணை நேரடி மணி நூபுரமொலியே
தரநாடொறும்‌ விரைவோடியே தள வெண்ணகை யிளையார்‌
பரவாவகன் மறு கூடிழை பயில்‌ சிற்றில் கண்‌ முழுதுந்
திரமாக வெனொரு பாலக சிதைத் தென்று கொல்‌ வருவாய்‌.–66-

அணிமாநகருறைவோர்‌ பல ரடையா வெனதிடையே
மணிவார்‌ குழையுடையாயுனன்‌ மகனா டொறுமளவில்‌
திணியோடின றருவம்புகள்‌ செய்கின்றன னெனவே
பணியாவெழ விறை யென்ற.கொல்‌ பயில்வாய்‌ மறுகிடையே–67-

பெருநீருலகிடை மாமகள்‌ பெருமானுயர்‌ மதமே
மருவாமலி, தரவே செயுமனர்‌ கோனளி மகனே
திருமாதுறுமணி மாளிகைத்‌ திருவே முதன் மருவா
திருமாமரநிழல்‌ வைகுறுமிதுவோவுன விதியே–68-

கடல்வேலை கடந்தாலென விழிநீரிருபுடையும்‌
விடவே யெரிதரு வெங்கனலிடைமென்றளி ரெனவே
யுடல்சோர்‌ தரமாழாந்தினி துருகுஞ்‌ செயல் கண்டு
மிடரேனென வுரையாடலை யிதுவோ வுன தறமே–69-

மிகவே நறை யுகு மாலுகவிரி மாலையினிறையோய்‌
மகனே யருமகனேயென மதசோர்தரல்‌ கண்டே
யுகவாவெனதனைநீ யினி யுருகே லென வுரையா
வகமேவிய துயர் தீர் தர வருளாதது தகவோ–70-

நகுமின் சுதரிசனன் பத நளினங்களை மறவேந்
தகவெந் துயர் கொள மன்னுயிர் தமை யெங்‌ கணு நலியே
மிகு நல்லற வினை யன்‌றியே புரியோ மொரு வினையுஞ்‌
செகுவெந் துயரிடை மூழ்குறு செயலென்ன கொல் விதியே–71-

கொலை பழுத்தொழு கூன்‌ வைவேற் கொற்றவர்‌ குழுமி நந்தந்‌
தலைமகனிவனே யென்று தாங்கருந் திறைகள்‌ கொண்டு
சிலை நுதற்றிருவே யுன்றன்‌ நிருவடி போற்றா நின்றார்‌
உலைவு றென்‌றுயரந் தீர வுகந்ததைக் கண்ணாற் பாராய்‌-72-

சிற்றிடைக் கன்னிமாருன்‌ சீரடிச்சுவடு காண்பான்‌
முற்றிலந் தூதை கொண்டிம்‌ மூதெகினத்தி னீழற்‌
சுற்றிலுஞ் சிற்றில் செய்து துன்னி நின்றார்‌ நீயத்தைப்‌
பற்றுமென்‌றுயரந்‌ தீரப்‌ பணி மலர்க் கண்ணாற்‌ பாராய்‌-73-

செவ்விய வொளி கொள் மேனிச் செல்வனோர்‌ வளர் வெண்டிங்கட்‌
கொவ்வ நாடொரும்‌ பூரித்து முடல்‌ சிறி தசையானாக
வவ்வணமிருப்பக் கண்டே யறற் குழஞரிலாழ்ந்தாங்
கிவ்வணம் பருவந்தோறு மிரங்கி யுள்ளுருகா நின்றார்‌—74-

எல்லியும் பகலு நீங்கா தியாவருமிருப்பச்‌ செம்பொற்‌
சில்லியங் குழலாணங்கை செவ்வி யிற்றினங்கடோறு
மில்லகந்தனிலே முன்னரியற்றிய வாறு போல
வல்லியல் கமலக் கண்ணாற்‌ கவ்விடத்தி யற்றா நின்றாள்–75-

வண்டலைந்திழி தேனுண்டு மருவுதாரிமிரு மார்பக்‌
கொண்டலைப் பொருவும்‌ வண்கைக் கோமகன்‌ குழவி தன்னைக்‌
கண்டு கண்டுருகித்‌ துன்பக் கடற்கரை காணானாகிப்‌
பண்டருங் குறுங்கை வாழும்‌ பரமனதுரை மறந்தே-76-

நச்சினர் வினையை நீக்கும்‌ ஞான தேசிகனெடுப்பான்‌
வைச்ச பண்டிதர்களாலு மந்திரத் தலைவராலும்‌
வெச்சுறு முத்தீ யோம்பும்‌ வேத வந்தணர்களாலும்‌
பச்சிலை வகை யினாலும்‌ பார்‌த்தனனிருந்தா னன்றே-77-

நீருலாம்பொருனை நாடனெஞ்சிடர்‌ நிறைய நாளு
மேருலாங்குழவி தன்னை யெடுத் தினி தளிப் போர்க்கென்றன்‌
சீருலாந் தரணியாவுஞ்‌ சிறப்புடன ளிப்பேனென்ன
வோருரைவழங்கி யன்னோரு றும்‌ வழி பாரா நின்றான்‌-78-

ஞானவாரமுத முண்டு நாடொறு மவயவாதி
வானவாந் தருக்களே போல்‌ வளர்தரத் தருவின் மூலத்
தேனலம் பொருந்த யோகி யென வினி தமர்ந்‌து வாமு
மூனமிலாத வெந்தை யொளித்திர மேனி தன்னில்‌-79-

விரைக்கருங்குழலாணங்கை வேந்தர் கோன்‌ முதலயாரு
நிரைக்குலந் தமது கன்றை நீங்கிலா வகை போற் சூழ்ந்தே
யுரைக்கரும் பதினாருண்டீ யுடனெறும்‌ பணுகா வண்ண
மரைக் கணப் பொழுது நீங்கா தன்னவ ரிருந்தா ராங்கே–80-

திருப் புளிப் படல முற்றும்‌-

திரு மதுரகவிப்‌ படலம்‌-

பைத்தலை யாவந்‌ தாங்கும்‌ பாரிடத்‌ துயிர்கட்‌ கெல்லா
மெய்த்தகு முகலேய்‌ மேனி மாயனெம்‌ பெருமான்‌ றன்னைக்‌
கைத்தலத்‌ தமர்ந்த நெல்லிக்‌ கனி யெனக்‌ காட்டித்‌ தந்த
மெய்த்தவ னெதிராசன்‌ றன்‌ விரை மலரடி யுட்‌ கொள்வாம்–1-

கர கமலங்கள்‌ கூப்பிக்‌ கை தொழு மவர் தம்‌ தீய
நரகவித்‌ தருள்வான்‌ ஞான நாதனிவ்‌ வாறிருக்க
குரகத முகத்தாற்‌ கன்பாங்‌ குமுத கணாம்சராம் ம
துரகவிப்‌ பெருமாள்‌ வந்து தோன்றிய விபரஞ் சொல்வாம்‌–2-

உலகெனு மடந்தைக்‌ கோங்கு முருவமை யவயவாதி
யலகிலா வளஞ் சேர்‌ தேய மவற்றுளிப்‌ பாண்டி நந்நா
டிலகொளி வதன மந்த வெழின் முகங்‌ கவினத்‌ தீட்டும்‌
திலகம தென்னகத் தோன்றித்‌ திகழ்தருந் திருக்கோளூரே-3-

அத்தமா னிறத்து வேதத்‌ தந்‌தணன்‌ முதலாந்‌ தேவர்‌
தத்தமானியை யெடுத்துச்‌ சாற்றிடக்‌ கமல மென்போ
துய்த்தமா னிலமான்‌ செய்ய வொளியடி வருடப்‌ பாம்பில்‌
வைத்தமா னிதி மலர்க்கண்‌ வளர்தருந் திருக்கோளூரே–4-

மாகய மருப்புமாய்த் தான்‌ மலரடி. வணங்குந் தூயோ
ரேகய வேள்வி யாற்ற வெழுந் தடர்‌ கரிய தூமம்‌
ஆகயம்‌ படரக்‌ கண்டே யணி முகிற்‌ குலங்களென்னாக்‌
கேகயம்‌ பல நின்‌ றாடிக்‌ கிளர்தருந் திருக்கோளூரே –5-

அமலமுற்‌ நிடலான்‌ மீதி லணிமை தங்குறலான்‌ மீவான்‌
கமலக ணுறலா னற்பொற்‌ கலை தரித்‌ திடலான் மண்ணின்‌
குமரர் கண்‌ணிணைக்கு மெட்டாக்‌ கொள்கையா லொளிரு மாடம்‌
விமல விண்டு வினை யொப்பாய்‌ விளங்ககுறுந் திருக்கோளூரே –6–

எங்கண்மா னகர் போந்‌ தெந்த மிறையடி வண்டி யேகுஞ்‌
சங்கரன்‌ றனைநீ தாகத்‌ தருக்குட னெம் போனிற்குந்‌
துங்க நன்‌ றெனவான்‌ கைலைத்‌ தொல் கிரி யினை நக்கென்னாத்‌
திங்களஞ்‌ சவீசேர்‌ மாடம்‌ திகழ் தரும்‌ திருக்கோளூரோ–7-

இத்திரு நகரில்‌ வேத வெழிற்‌ பெருங் குலத்துட்டு வாப
ரத்தின தந்த மாகு மணிய விக்கிரம வாண்டிற்‌
சித்திரை மாதத்‌ தோடு சேர்ந்த சுக்கில பக்கச்‌ச
துர்த்த சித்‌ திதியுஞ்‌ சுக்ர வாரமுங்‌ கலந்ததாகும்‌–8-

சித்திரை நாளி லாசான்‌ சிச்சரி னியல்பு மன்னோர்‌
பத்தியும்‌ விசுவாசத்தின்‌ பான்மையு நிலத்‌ து வாமும்‌
புத்தியி லுயிர்கட்‌ கன்பாய்ப்‌ புகழ் பெறக்‌ காட்டித்‌ தூய
முத்தியின்‌ விளைவை நல்க முதற் பரம்‌ பொருளா லன்றே–9-

இருணலி தரக்கால்‌ சோதி யிளங்கதி ருதையமுன்ன
ரருணனா ருதிந்குந் தன்மை யாமெனப்‌ பரவை ஞால
மருணசிப்‌ படைய ஞான வாரமு தருளுஞ் செம்பொன்‌
வருணநங்‌ காரிமாறன்‌ வருமுன்‌ மெழுந்த வள்ளல்‌.–10-

முடிவிலின்னவனால்‌ வேத முற்றணர் திறத்தைக்‌ கூறிற்‌
கடிமலர்‌ கமலச் சேக்கைக்‌ கண்ணவற் கிழுக்குண்டாமா
லொடி திரைப்‌ பரவை ஞாலத்‌ துயிர் கண் மேல்‌ வைக்கு மன்பாற்‌
படி முழு தளந்து கொண்ட பரமனே யனை யனாவான்‌–11-

பண்டரும்‌ பரம வேதவிதிப்படி பரித்த முந் நூல்‌
விண்டலத்‌ தெழுந்துலாவு மின்னெனப்‌ பிறழு மார்பன்‌
வெண்டிக ழூர்த்த புண்ட்ர மேவிய னுதலான்‌ சேந்த
மண்டு பொற்‌ சடிலத்‌ தாலே வயங்கு சேகரத்தினானே–12–

பரந்த வணையான்‌ செய்ய பத கமலங்க ளல்லாற்‌
புரந்தர னீறாய்‌ வேதப் புனிதனே முதலாந் தேவர்‌
வரந்தர வல்லே மென்ன வந்து முன்‌ னிற்பாரேனுங்‌
கரந்தலை குவித்துச்‌ சற்றுங்‌ கணித்திடாக்‌ கருத்தனம்மா–13-

கொல்லு நஞ்‌ சடக்கு கண்டக்‌ குழகனு மறை வலானும்‌
வெல்லுதற்‌ கரிய காம வெகுளிக ளவிக்கு நீரான்‌
புல்லிய நெறியி னாளும்‌ பொறி புலன்‌ றமைப் போக்‌காது
சொல்லிய வறத்தினிற்குந்‌தூய நன்மனத்‌ தனம்மா.–14-

சென்னிகழ்‌ வடைத லாகச்‌ செப்பிய கால மூன்று
முன்னி யுள்‌ ளறியும்‌ ஞானத்‌ துறுதி கொண்‌ டுயர்வு பெற்றோன்‌
பன்னுதற்‌ கரியவாய பதும வாதனத்‌ தட்டாங்க
மன்னிய யோகத்‌ தின்‌ கண்‌ வரம்பினான்‌ மகிழ்வு கொண்டோன்‌–15–

இன்ன தன்மைய மதுரகவிப் பெருமா னெண்ணுதற்கரிய வேதாந்தத்‌
தன்னியல் புணரு நிபுணனாய்ச் சத்வந் தலை யெடுத் தெவருமோர் தரமு
ளுன்னிய வளவிற்‌ பரகதி யுதவயோத்தியே முதற் றிரு மடந்தை
மன்னியோ ரிறையு மகல்கிலா மருமன் வளர்தரும்‌ பத தொறுஞ்‌ சென்றே–16-

விழுத்தகு மூவகை யுள்ள நெக்‌ குருகி விரைமல ரருச்சனைபுரியா
வழுத்தியாங்‌ குளவாம்‌ புனித நற்‌ றிவலை வானக முகடு தைவரவே
கொழுத்தலை யெறியுங் கங்கையை முதலாக்‌ கொண்ட பற்பல நதிபடிந்து
பழுத்த மெய்ஞ்ஞான நிலை யுணர்ந்‌ தநேகம் பகல் வட புலத்திருந்தனனால்‌.–17-

அங்கரு முனிவ னிவ்வண மிருப்ப வணிய வைகுந்த நன்னாட்டிற்‌
பொங்கருட்‌ பரம வுருவினித்தியர்கள்‌ புடை பரந்‌ திறைஞ்சினர்‌ பொலிய
சங்குடன்‌ றிகரி வாள் கதை வரிவிற்‌ றாங்கி வீற்றிருந்தரு ணிமலன்‌
செங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி நன்களிக்குஞ்‌ சேனையர்‌ தலைவனைக் கூவி–18-

இன்றெழும்‌ துலூற்‌ றீ யிருட்‌ பிழம்பை யிகலறத்‌ துடைத்தருள்‌ புரிவான்‌
சென்றுந மமிசைபூதரா யுதித்துத்‌ திருப்புளியடியில் யோகியரா
யொன்றிய பதமாசனந்தரித்‌ திருக்கு மொப்பிலா மாறனுக்கின்றே
பொன்மக ளிடமுன்னீர்ப் பெரும்‌ தகையைப் போற்றிரு விலச்சினை முதலா–19-

மந்திர வுபதேசமும்புரிந் திவணீர்‌ வருதிரென்‌ றுரைத்திட விரைவிற் சிந்தையுள்‌ ளுவகை கொண்டன னிவணந் திந்த்ருணி யடியில்‌ வீற்‌றிருக்கும்‌ நந்த மதிறையாங் கொந்தவிழ்‌ குழலி னங்கை தன்‌ திரு வயிறுதித்த சுந்தர வதநற்‌ கவ்வணம்‌ புரிந்து தொன்னக ரடைந்தனன்‌ றூயோன்-20-

சங்கொடும்‌ புனிதத்‌ திகிரியும்‌ தாங்கித்‌ தயங்குறு மூர்த்த புண்டரனாய்‌
மங்கலி லதிதேயோ மயனாய்‌ நின்மலனுமாய் வீற்றிருந்தனனால்‌
பொங்கலைப்‌ புணரி நிலந்தனி புரக்கும்‌ புரவல னியற்றருந் தவத்தில்‌
வெங்கலி கரப்ப வந்தெழுந்தருளும்‌ விமல மெய்ஞ்‌ ஞான நாயகனே–21-

இருந்தரு டரவிங்கணை யிலான்‌ முன்ன ரெழுந்தன னுத்தரதிசை யிற்‌ றதா
பொருந்திய மதுர கவியெனும்‌ பெயர் கொள்‌ புனித மெய் யற நிலை பிறழா
வருந்தவ முனிவ னொருபக லிரவி லனை பிரிந்த லமருகன்‌ றின்‌
வருந்தியுள ளுருகி யணி திருக்கோளூர் வணங்கினன்‌ தென்றிசை நோக்கா–22-

நோக்கலு மிவணந் திருப்புளி யடியி னுவலருந் தகையின்‌ வீற்றி ருக்கு
மாக்கவி னிமல மாறனன்னவன்றன்‌ மணி விழி யிணையினுக்‌ கல்‌லாற்
றாக்குற வெவர்க்குந் தோற்றில னாகித்‌ தள தளப்‌ புடனெழுமுதைய
நீக்கருஞ்‌ சவி கொள்‌ கதிரெனப்‌ பொலிந்து நின்றிடக்‌ கண்டனன வனும்‌–23-

காண்டவச்‌ செழுமி னொளியிடுஞ்‌ சுடரைக்‌ கடிய வெங்கானக மதனிற்
றாண்டி நின்‌ றெரியு மங்கி கொ லலது தட நகர்‌ வேவுறக்‌ கனன்று
நீண்டு பற்றிடு செங்‌ கனல்‌ கொலோ வென்ன நெஞ்சயிர்ப்‌ புடனி ருந்தனனால்‌
மாண்டகு மினிய தமிழ் மறை யுரைத்த வன்றன தடி பணிந் துய்ந் தோன்‌–24-

இவ்வண மிரண்டு மூன்று நா ளளவா யெண்ணியு மவ்வொளி மழுங்கா
தவ்வண மிருப்ப வென் விழிப்‌ புலனுக்‌ கன்றிமற்‌ றியாவர்‌ கண்ணிணைக்கு
மொவ்வுத லின்றி யொளி யுட னிலங்க லென்னகொ லிதுவெனக்‌ கலங்கிச்‌
செவ்விய நெறிகொண்‌ முனிவரன்‌ பின்னுர்‌ திரு வினாயகன்‌ செய லென்னா.–25-

நன்றுகொ லிதனைக்‌ கண்ணுறி லழியா நவையிலா வொளியதா யிலங்கு
கின்றது கணமுந் தங்குறா விரைவிற்‌ கிளம்பியான்‌ சோதனை
சென்‌றிவ ணடைவ னெனத்திரங்‌ கொடுதொ றென்முக நோக்‌கின னெழுந்தான்‌
மன்றலந்‌ துளவத்‌ தாரினா னடியர்‌ மலரடி யன்‌றி மற்றுன்னான்‌–26-

உதைய வெங்கதிரி னொளி விடுஞ்‌ சுடரை யொன்றுற நோக்கியச்‌ சுடரே
சிதைவினன்‌ னெறியாக்‌ கொண்டிரா முழுதுஞ்‌ சென்று சென்றரும்பக றொருங்கண்‌
டதைமலர்‌ வளரச்‌ செயதிடை யுறு நற்‌ றலந் தொறுஞ்‌ சோதனை புரிந்து
புதை யிருட்‌ பிழம்பு சீத்தொளிர்‌ மாடம்‌ பொலி திரு வரங்கம் வந்தடைந்தான்–27-

அத் திரு நகரி லரங்கனை வணங்கி யற்றைய பகலினைக்‌ கழித்து
நத்தம் வந்தடைய வாய்ந்தன னவணந்‌ நகை விடுஞ்‌ சோதியே பின்னு
மத்திசை யொளிர வெழுந்தனன்‌ விரை விலடவி வெற்பகன்‌ றிருங் கரையைக் குத்திரு்‌ந் திரை கொள்‌ பொருனை சூழ்‌ தருமிக்‌ குருகை மானகரம்‌ வந்தடைந்தான்‌-28-

எழுந்தரு டரவு மவ்வொளி மறைய விரும்பல தருவினான்‌ மறைந்து
மழுங்கியது கொலோ வெனும்பினுந்‌ தென்பால்‌ வந்தனன்‌ வட புலத்‌ தொளிரத்‌
தொழுந்தகை யுடையவ்‌ வருந்தவ முனியித்‌ தொன்னக ரிடத்ததீ தென்ன
வழுந்தினன்‌ களியி லடைந்தன னிவணே யடைதலு மறைந்த தவ்‌ வொளியே–29-

வந்த வருந்தவ மாமுனி வோனு
மிந்த நகர்க்கு ளேதேனும்‌ விசேடம்‌
விந்தையி னுண்டுகொ லென்ன வினாவச்‌
சிந்தை யுவந்தனர்‌ செப்புவர்‌ மன்னோ,–30-

எந்தம்‌ விளங்கயி லேந்திறை வோனே சந்தத முஞ்செய்‌ தவத்தினின்‌ மாயோ னந்தமிலண்ணறன்‌ னின்னரு ளாலே மைந்தனும்‌ வந்து பிறந்தன னன்றே.–31-

தோன்றிய வன்று தொடங்கியி தீறா யான்ற வரும் பதி னாறெனு மாண்டாய்‌
வான்றழை வெஞ்சுடர்‌ வானவ னே போற்‌ கான்ற கவின்றிகழ்‌ காண்டகு மேனி,–32-

சற்றுமசைத்திலன்‌ றாமரை யங்க ணுற்று விழித்தில னொள்ளிய செம்மை
முற்றியவாயது மூடுத லின்றிப்‌ பற்றிழையான்‌ முலைப் பாலு மருந்தான்‌–33-

தீண்டரு மெய்த்தவ செப்பிய தன்றி யாண்டு தோறுங்கவி னங்கம்‌ வளர்ந்தே
நீண்டிட வோர்தரு நீழ லிடத்தே மாண்டக வைகினன்‌ மைந்தனு மன்றே.–34-

அன்றுமுதற்கொ டருந்திறல்‌ வேலோ னின்றள வாக வெழுந்தரு ளூன்போற்‌
சென்றவ ராய செழுந்தவர்‌ தம்மாற்‌ குன்றி னிதிக்குவை கொள்ள வளிப்பேன்‌.–35-

என்னவுரைத்தன னிந்நெடு நாளாய்த்‌ துன்ன வருட் கொடு பார்த்தனன்‌ றுய்ய
வன்னவ ராலு மசைந்தில னாக மன்னிய வின்னலின்‌ மாழ்கின னன்னோன்‌–36-

என்றுரை செய்தன ரின்றத னைப் போய்‌ நன்றறி வேனென நாறிய மாடங்
குன்றென நின்றொளிர்‌ கோமறு கின்கண்‌ சென்று நடந்தனன்‌ றீதில் குணத்தோன்‌–37-

வருந் தவனைச் செழு மாமறு கிற்கண்‌ டரந்தை யழுங்கினனன் னவர்காணா
இருந்தவெழிற் புயவேந்தலிடம் போய்‌ விரைந்தனர் சென்‌ற விளம்பினரன்றே.–38-

கேட்டள விற்பொன்‌ கிரிப்பெரு மொய்ம்பின்‌ வாட்டகை மன்னன்‌ மதிக்கடலாய
கூட்டவமைச்சர்கள்‌ கூட்டி வரத் தீ வீட்டிய லற்கெதிர்‌ மேவின னன்றே–39–

இந் நக ருக்குணி யெய்துற வென்றன்‌ முன்னரிழைத்த முதற்றவ மேயென்‌
றன்ன முனிப்பர னாய்மல ரன்ன மன்னுமடித்‌ துணையார வழுத்தி–40-

ஆக்கமு றும் முடை யார வொடுக்கி நீக்கரும்‌ வெந்துயர்‌ நீடின னிற்கும்‌
வீக்கவடற்புய வேந்தனை யன்னோ னோக்கின னின்று நுவன்றிட லுற்றான்–41–

நெய்கதழ்‌ வேலநின்‌ னெஞ்சிடர்‌ கொள்ளுஞ்‌ செய்கை யதென்ன கொல்‌ செப்பு தி யென்னப்‌
பொய்கை தனிற்பல புட் செறி பாண்டி மொய் கவினுற்று முதிர்ந்திடு நாடன்‌.–42-

மைந்த னிலாது வருந்திய தாதி யந்த மராத்தி லடைந்ததை யீறாய்‌
விந்தை யினங்கிடை மேவிய வெல்லாஞ்‌ சிந்தை மயக்கொடு செப்பினனன்றே.–43-

இந்த வாறிரு நிலந்தனி புரந்தரு ளிறையோன்‌ சந்த மாமுடி மன்னவன்‌ சாற்றின னிற்ப
வந்த மாமுனி யருண்முக நோக்கினராகி அந்த மாமதி யமைச்சர் நின்‌ றறைகுவர்‌ மாதோ,–44-

அரிய மாமறைப்‌ பொருளெலா மினிதுணர்ந்‌ தரியாந்‌ துரிய மால்பத மன்றி மற்‌ றுணர் தராத்‌ தூயோய்‌
விரிய காதமென்‌ மேலெழுந் துயரெனு மிகுந்த கரிய வார் கலிக்‌ கரை பெறாதுழன்றுயர்‌ கடையோம்‌–45-

களிப்பெனும்பெரு மதுக் கட லாழ் தரக்‌ கமலத்‌ தளிர்க்கு மெல்லடிக்‌ குமரனத் தருநிழல்‌ விட்டெங்‌
களிக்குலம்படு மாம்பலம்‌ போதினுக்‌ கரிய நளிக் கனிக்கிணை வாய்‌ திறந்‌ தொரு மொழி நவில–46-

விருப்புளிப்புரிரந் தருளுவ தன்‌ றிமேல்‌ வேங்கைப்‌
பொருப்பு விட்ட பைங்‌ரியெனத் தனியிடை பொலியுந்
திருப்புளித் தலத்‌ திருந்தெடுத்‌ தன்னை தன்‌ செமுலை
யருப்புளிற்பெரு கமுதுண வருள்‌ செய வேண்டும்‌–47-

இவ் வணம்புரி்‌ந் திடிலொரு சூச்சியு மேறாச்‌
செவ் வணந்திகழ்‌ சடிலசேகர வருந் திறலோய்‌
பவ்வ வெண்டி ரைப்‌ பரவை மா னிலந்தனி புரக்குங்‌
கவ்வை யின்னக ரன்புட னளித்தகங்‌ களிப்ப–48-

மண்டலேசுர ரனை வரு நின்னடி வணங்கப்‌
பண்டை யாய்வழி வருமுடி சூட்டினர்‌ பரவுக்‌
கொண்ட தோரரி யணைமிசை யிருத்தினங்‌ கொடியேந்
தொண்டு செய்தனம்‌ வருகுவ மென்றுபு சொற்றார்–49-

சொற்ற வம்மொழி யிரு செவி வெதுப்புறத்‌ தூய்மை
யுற்ற மாமுனி வரனவ னுறைவிட மதனை
யிற்றை நீரது காட்டுமி னிவ்வண மியற்றிப்‌
பிற்றை யானது கொள்ளுவ னென்மொழி பெய்தான்‌–50-

என்ற மாமுனி வரன்றனை மிறையவர்க்‌ இறையோன்‌
துன்று பற்பல மங்கல முரசினந் தொனிப்ப
நன்று கொண்டினி தேகியத்‌ தருநிழ னவையின்‌
றொன்றி வைகிய வொளியினைக்‌ காட்டின னுகந்தே,–51-

முன்னம்‌ தாயினை நீங்கிய முலை விடாக்‌ கன்று
பின்னம்‌ காண்குறு வகை யெனப்‌ பெய்யொளி பிறங்க
மன்லுர்‌ தாரு நன்‌ னிழலிடைக்‌ கதிரென வைகும்‌
பொன்னந் தேசினம்‌ மாறனைக்‌ கண்டனன்‌ புனிதன்‌-52-

வண்டு சூழ் மகிழ்‌ மாறனைக்‌ காண்டலும்‌ வதநம்‌
விண்டலர்ந்திட லாலவன்‌ முகமது விளங்கும்‌
புண்டரீகமென்‌ பத ற்குமம்‌ மாறனைப்‌ பொருவி
லண்ட யோனி யென்‌பதற்கு மிங்கைய மில்லம்மா–53-

மோன மாகியோகத்தினி திருந்தருண்‌ முதல்வ
னான நாதனைக்‌ காண்டலு மன்னவ னருளால்‌
ஞான முன்னைய துதயமா குற முனி நளினத்‌
தேனவாமலர்த்‌ தாட்டுணைச்‌ சடை முடி தீண்டி –54-

இப்பெருந்தனிச்‌ சோதியோ வென்றன திதயற்‌
துப்பனன்‌ மெழு கெனவுருக்‌ கியதெனுந் தூய
முப்பரஞ்சுடர்‌ தம்மிலு முதற் சுட ரிதுவென்‌
றப் பராங்குசன்‌ குணனெலா மெடுத்தெடுத்‌ தறையும்‌.–55-

கண்ணுகர்ந்தவர்‌ தம்மிலுங்‌ களி நறா வருந்தி
யுண்ணெகிழ்ந் து நின்‌றாடுறும்‌ பாடுறு முயர் யாழ்ப்‌
பண்னுலாமொழி நங்கை கொண் மகிமை யிப்‌ பரவை
நண்ணு மானிலத்‌ துற்றவர்‌ யாரென நவிலும்‌.–56-

அங்கு மிங்குமா யெழுந்தெழுர்‌ தேமுறு மமல
னிங்கு தோன்றுதற்‌ கெத்தவ மிழைத்த திவ்‌ வெறிநீர்‌
தங்கு மானில மென்னுமியான்‌ பெற்றிடுந்‌ தகையிற்‌
பொங்கு பேறியார்‌ பெற்றவ ரெனத்தனைப்‌ புகழும்‌.–57-

மருப்படுங்கம லாநந மலருமாநதந்தப்‌
பெருக்கி னீடுகட்‌ புனலிடை மூழ்குறும்‌ பிதிருந்
திருத்தகும்புய வரைகள்‌ பூரிப்புடன்‌ றிகழ
விருப்பினாற் புள காங்‌கித மடைதர வியக்கும்‌–58-

இத்தரைக்குள் யா னியற்றிய தவப் பல னின்றே
முத்தி யின்விளை யதனை யீந்தது வென மொழியும்‌
பித்தடைந்தவ ரென்ன மெய்‌ மறந்தளி பிதிருங்‌
கொத்து நன்மலர்‌ கொய்து கொய்‌தெறி தரு மன்றே.–59-

இவ்வணம்பர மானந்தக்‌ கடலத னிடையே
யவ்வரந்தரு முனிவரன்‌ மெய் மறந்‌ தாழ்ந்து
செவ்வை யின்னகந் தெளிந்து பின்‌ றோத்திரஞ்‌ செய்வான்‌
கொவ்வை வாயுடை நங்கை தன்‌ குலக்கொழுந் தனையே,–60-

செஞ்சுடர்‌ போலொளி செய்‌தே சுறு மெய்ப் பொருளே
மஞ்செனவே யணி சேர்‌ மானிற மெங்குரையாய்‌
விஞ்சகல் மார்பிடையே மேவி விளங்குறு பொற்
கஞ்சமலர்த் தவிசார் காரிகை மெய்த்‌ தவனே-61-

பொங்கட லாரவுணர்‌ பொயொழியப்‌ புவியில்‌
வெங்கதழ்‌ வாளமரில்‌ வீசு செழுந்திகிரி
சங்குட னொண் கதை வாள்‌ சார்ங்க மெனுந்தவர் மற்‌
றெங்கிவை வைத்தனையோ வென்றனை யாளொளியே–62-

மந்தர மாமலையின்‌ வாகொரு நான்கிலுனுங்‌
சுந்தர மோடடல்சேர்‌ தோளிணை பெங்கு கொலோ
இந்தள ராகமிசைத்‌ தின்னளி பல்லடருங்‌
கந்தமுறுந் துளவக்‌ கண்ணிகளெங்கு கொலோ–63-

பாதக வெவ்வீனைகள்‌ பாரிடம்‌ விட்டகலத்‌
தீதறு மெய்யறிவார்‌ தேசிடு மாதவனே
மாதக வாயுறுசீவத்ச மெனும் மருவும்‌
பீதக மெய்யொளி சேர்‌ பீடுடை யெங்கு கொலோ—64-

செஞ்சரண்‌ வீழ்சுரர் நோய்‌ தீர் தர மண் கொளு நாள்‌
விஞ்சகல்‌ வான்முகடுமே வர நின்றது தான்
எஞ்சலி னன் மணியா லிழை பல பூண்டிகழிக்‌
குஞ்சி கொலோ வழுதிக்‌ கோமகனே யுரையாய்‌—65-

நாடிய வாசமுறு நான நறுந் திலகம்‌
பீடிய லாவணியப்‌ பெய்யொளி செய்வது தான்‌
நீடிய வெண்ணிலவி னேரவிர்‌ புண்டரமரர்‌
கோடிய செம்பிறை நேர்‌ கொண்டொளிரிந் நுதலே—66-

அண்டர்‌ தொழக்குளிர வன்றருள்‌ செய்தது தான்‌
வண்டலர்‌ செங்கமல மான மிளிர்ந்தரிகள்‌
கொண்டு பரந்தணிசேர்‌ குழைகளி னோடி சலிக்‌
கண்டவர்‌ கண் கவரிக்‌ கண்ணிணையே கொலரோ–67-

கோவியர்‌ மத்தளைபால்‌ கொண்டினி துண்டது தான்‌
காவிய நீள் விழி நங்கைக்குயர்‌ மாமதலாய
தூவிய னற்பவளத்‌ துண்ட மிரண்டதனைச்‌
சீவியிணை த்ததெனத்‌ திகழுமிவ்‌ வாய் கொலரோ–68-

முன்னொரு வாரணமே முலமெனுஞ் சொலையே
மன்னுற வேற்றத தான்‌ மா மறை யாலுணராய்‌
நன்னய நான் மகர குண்டல நின்றினிதூ
சன்னளி யாடுறமிக்‌ காது கொல்‌ சற்றுரையாய்‌–69-

விழுத்தகு வால் வளையை வென்‌று பசுங்கமுகிற்‌
பழுத்தணி கொண்டு பள பளப் புட னோங்குறுமிக்‌
கழுத்து கொ லண்டமெலா முண்டு களித்ததுவே
கொழுத்தலை மண்டு புனற்‌ கூர் பொருனைத் துறையாய்‌–70-

விண்ணவருக்கனிய வெண் சுதை யீந்தருள்வான்‌
தண்ணலையைக் கடையுஞ்‌ சார் தகை யுற்றது தான்‌
வண்ணமுறுங் கிரிபோன்‌ மல்லோடு பேரணியு
தண்ணிய விப்புயமோ நங்கை கண்‌. மா மணியே,–71-

சந்தமுறும்பசிய தாமரை யோடிகல
விந்தை சின்‌ முத்திரையை மேவிய விக்கரமோ
நொந்தக நைந்தரனார்‌ நுன் சரணே சரணாய்‌
வந்தடி வீழ்தருமுன்‌ மாபலி யிட்டதுவே,–72-

துண்ட நறுந்துவரோ தூய்மை யருங் கமலம்‌
விண்டிதழோ வெனவே விளங்கணி யிவ் விரறான்
மண்டு நிரைக்குலம் விண்‌ மாரி நெருங்குதலைக்‌
கண்டழு கால் வரையைத்‌ தாங்கி யளித்ததுவோ–73-

நிம்பவலங்கலொடு நீண் மணி யார முநி
ரம்பி நிதிக் கிரிபோ லகன்றொளி ரிம் மருமப்‌
பம்பிடமேகொலரும்‌ பைங் கமலத்திடை வாழ்‌
வம்பு மலர்க் குழலாள்‌ வாழ்வினுகக்குமிடம்‌–74-

குயிற்றிட மேதினியிற்‌ கோதறு மெய் யறிவைப்‌
பயிற்றிட வேவிய வெம்‌ பரம்பொருண்‌ முத்திரையைக்‌
கயிற்றிட மேகொளிறை கவின்மிக வார்ந்தொளிரிவ்‌
வயிற்றிட மேகொலுயிர்‌ வைத்து வளர்த்ததுவே–75-

அங்கம லாதனனை யன்றருள்‌ செய்தது தான்‌
துங்கம லாதவனார்‌ தோன்றின ரென்ன வொளி
பொங் கமலாதடையிற்‌ பூம் புனலிற் சுழிபோற்‌
பங்கம லாதளிசேர்‌ பாவுமிவ்‌ வுந்தி கொலோ–76-

பார்த்தனணிந்த செழும்‌ பைந் தொடை யுங்கனத
தீர்த்தமு மன்றரனார்‌ செஞ்சடை மீதுறவே
சேர்த்தது தானெழிலச்‌ செய்ய மலர்க் கழலோ
நீர்த்தல மேழிலுமே நின்ற புகழ்ச்சுடரே.–77-

ஏறுட னம்பதும விரேகை பரந்த மலர்‌
வீறுகெடுத்து மணி மேவி யடைந்தவர் நோய்‌
மாறுபடுத்தி யருண்‌ மா மலரிவ்வடியோ
வீறிலிரும் புவி மண்‌ டாவி யளர்ந்த துவே,–78–

சேய மணிச் சடிலச்‌ சேகர னிவ்வனமா யேயரியன்‌றி விழி யேனெனு மக்குறியே மேயவனாகிய நா வீறனை யுன்றனரு மாயமதைத் தெரியும்‌ வல்லவர்‌ யார் கொலெனா-79-

பற்பல தோத்திரமுஞ்‌ செய்து பரன் செயலைக்‌
கற்புடை நங்கை முதல்‌ கண்டு மகிழ்ந்திடுவான்‌
சிற்பரனுக்கணிசேர்‌ செவிப்புல னுண்டுகொலென்‌
றற்பக நின்றெழவே யம்முனி வோரிறையே–80-

அடுத்த திரைக்கடன் மண்‌ ணதிர்ச்சி மிகுந்திடவே
யெடுத்தோரிருங்கலை முன்‌ னே யெறியக்‌ குணமே
கொடுத்தருள்‌ செய்தெளியேங்‌ கோது தொலைப்பவனுந்‌
திடுக்கென வேவிழிக டிறந்தன னோக்கினனால்‌–81-

நீக்கமருங்களியி னாழ்ந்தன னின்றெ வரு
நோக்கினர்‌ மன்னுறவே நோன்மையி னேழுலகு
மாக்கிய நல்லிசைகொ ளவ்வரு மா முனிவன்‌
வாக்கிவ னுக்குள கொலென்‌று மகிழ்ந்தனனாய்‌-82-

சித்தின் வயிற்றிடையே சிறிய துதித்திடிலே
யெத்தை யருந்தியது வெங்கு கிடக்குமென
வத்தை யருந்தியது வங்கு கிடக்குமென
வித்தக னன் பொடுவாய்‌ விண்டுரை செய்‌ தனனால்‌ -83-

அதுல னுரைத்திடு மம்மொழி தன்செவி யடையா முன்‌
மதுர கவித்தவ னெந்தை யடித் துணை மலர் வாழ்த்திச்‌
சதுமறை யுட்பொருண்‌ முற்றுமோ ரிம்மொழி தனிலொன்றி
யது வென வுட்கொடு கந்தன னங்ங னிருக்குங்கால்‌–84-

வந்தடி சென்னி புனைந்தவர்‌ வெவ் வினை மருவாதே
விந்தையி னின்ப முகந் தரு ணன் மகிழ்‌ விரை மார்பன்‌
இந்தை யுவந்து விளம்பிய வம்மொழி செவியோரா
வந்தர நின்று பொழிந்தனர்‌ விண்ணவ ரலர்மாரி-85-

மல்லட ரும்புய நின்மல னன்று மகழ்ந்தீயு
நல்லமு அண்டு வியந்தவி ணும்பரி னனியேயு
மல்லலெனுங்கட றன்னி லழுங்கிய வனைவோருஞ்‌
சொல்லமு தஞ்செவி யுண்டு களித்தனர்‌ துணிவுற்றார்‌–86-

எத்திசை யுந்தனி நின்று புரந்தரு ளிறையோனோ
டுத்தி யுறும் பணி நுண்ணிடை நங்கையு முடனாகப்‌
பித்தரெனும்படி தம்மை மறந்தனர்‌ பேரோகை
யத்தி யழுங்‌கி மயங்கி யுணர்ந்தனராய் நின்றே-87-

அங்கை யெனும் மலர்‌ சென்னி புனைந்தன ராயம் பொன்‌
றங்கிய செஞ்சடை கொண்டெழுமம்முனி தனையார
வெங்கடம்‌ வெந்துயர்‌ மங்க வெழுந்தரு ளிறைபோற்றி
யங்கச னுந்திய வெஞ்சரம்‌ வெனறவ வருள் போற்றி–88-

வய்யக மெங்கு மலிந்து பிறங்கிசை வளர்ந்தோங்கப்‌
பொய்யிலருந்தவ மெண்ணில்‌ புரிந்த புனித போற்றி
வெய்ய கொடும் பவ மெவ்வுயிரும் விட மேவாவந்
தய்யமறும்படி மெய்யறி வின்‌றருளடி போற்றி-89-

என்று வணங்கெ ருள்ள நிரம்பி யெழுந்தோகை
யொன்றுற நின்றிட மன்ற லுறுங்குழன்‌ மட மாதர்‌
வன்றிறலின் மணி மண்டபமெங்கு மலிந்தோங்கிக்‌
குன்றின் மிகுந்தெரு வெங்கு முளங்களி கொண்டாராய்‌–81-

விந்தையலங்கிர்த நன்கு புரிந்தனர்‌ மென்மேலுஞ்‌
சந்தன நன்புனு கின்பணி நீர் மலர்‌ தயிர் நெய் பால்‌
புந்தியிலன்பு மிகுந்து பொழிந்தனர்‌ பொருவில்லா
மைந்தனுதத்தரு ளன்றினு மினறெண்‌ மடங்காக,–82-

இவ்வண மெண்ணி லருந்தகை யந்நக ரெல்லோரு
மெவ்வமி லுள்ள மகிழ்ந்தனர்‌ வைகுற விகல் சேருந்‌
தெவ்வர் கடம்முயிர்‌ தனஜொளி மண்டிய திறல்வேலான்‌
முவ்வுல கும்புகழம் முனி தன்னடி. முடி தாழ்ந்தே–83-

மின்னவிருஞ்சடை மன்னு மருந்தவ வினையேன் முன்‌
சொன்ன வணந்திரை மண்டி யெழுங்கடல்‌ சூழும் பரர்‌
நின்னததன் கண்‌ மலிந்து பிறங்கிய நிதி யெல்லா
முன்னது வின்று நீ கொள்ளுதி யென்றவனுரை செய்தான்‌–84-

அவ்வுரை தன்னை யுணர்ந்து மறிந்தில னெனவே யவ்‌
வெவ்வமி னன்னெறி கொண்ட வருந்தவ னிடை வைகப்‌
பவ்வவருங்கடன்‌ மண்டனி நின்றளி பகல் வேலான்‌
செவ்விய வன்னவன்‌ முன்பினு மின்னுரை செய்வானால்‌–85-

இன்று கொடும்பவ வல் வனை யேன் சொலை யேறாதே
யொன்றிய தென்னென வன்பு மிகுந்தன னுரைசெய்யத்‌
துன்றிய மின்னவி ருஞ்சடை கொண்டு துறந்தெல்லாம்‌
பின்றவ நல்விர தங்கொ டெழுந்தவர்‌ பிழை யில்லோய்‌–86-

மன்னவர்‌ தம் வினை கொண்டு மகிழ்ந்திட வகை நன்றோ
வின்னமு துண்டவர்‌ வெங்கடு வுண்பர் கொலெனவே முன்‌
றென்ன முகந் தனில்‌ வெங்கதர்‌ கண்டெழு சீராளன்‌
சொன்ன துணர்ந் தெழின்‌ மன்னவர்‌ மன்னவன சொல் வானால் –87-

சங்கென வெண்ணில வுந்தி யிலங்கு பறவ யோகி
ருங்குல தன்மமி தென்னிலெ மைந்தனை யுற நன்றாய்ச்‌
செங்கனி மென்றுவ ரென்ன விளங்குறு செவ்வாயை
யிங்கு திறந்து சொ னன்கு மொழிந்திட விறை செய்யா–88-

அப்புமலர்க்சண்‌ விழித்திட வின்னுமதருள் செய்தே
யொப்பிலிவன்‌ றனை யன்னை முலைப்பய முண வோங்கு
மிப்புளி நின்று மெடுத்தெமிடந் தனி லினி தீந்து
செப்பரு வாழ்வை யளித்தரு ளென்றுரை செய்தானால்‌-89-

திரு மதுரகவிப்‌ படலம்‌ முற்றும்‌.

பதின்மர்‌ திரு வரன் முறைப்‌ படலம்‌

ஆடரவத்‌ தமளி துயி லரங்கன் செய்ய வடி பரவக்‌ கூரேச னடைய மேலை
வீடுமக்கின்‌ றளித்தனமென்‌ றரங்கன் சொல்ல விபுதனென்‌ சம்பந்தா சம்பந்திகட்குன்‌
நாடிடந் தந்தருடி யென வுரைத்‌துக்‌ கைக் கொ ணன்மையிற்‌ காடாயமுயர்‌ நனிவீ செந்தை
சேடமுனி கழல் பணிந்து பதின்மர் தங்க டிரு வரன்முறைப்‌ படலஞ்‌ செப்புவாமால்‌–1-

இன்னணங்‌ குரிசி லுரை செவி யுணர்ந்தாங்‌ கேதிலாத்‌ தவமுனி யுகந்து
தென்னனின்‌ மகவென்‌ றுள்ளினை யதுவோர்‌ தேவரா சியமெனத்‌ திரண்ட
கன்னவிறிறற்‌ றோட்‌ காளைமன்‌ மதுர கவி யடி பணிந்ததை யருடி
யென்னலு முன்னாண்‌ டறிந்தவை முழுது மியம்பின னெவர்களு மறிய–2-

தாதளைந்தின வண்‌ டூது பைந் துளபத்‌ தாரினன்‌ கரைக்கள னூர்திப்‌
போதவற்‌ கரு நான்‌ மறையன வடிவிற்‌ போதமுற்‌ றிடவருள்‌ புனிதன்‌
ஆதவனெளி கெட்‌ டிர வுறப்‌ பகலி லாழி கொண்‌ டெறி தருக படன்
வாத முண்‌ ணரவப்‌ பணாடவி நடித்த மாயவன்‌ பர வாசு தேவன்–3-

செங்கதிர்‌ மதிமின்‌ மினியென வொளி கொள் சேணுறு நித்தியரான்றிப்‌
பங்கய னரனிந்‌ திரன் முத லறியாப்‌ பதத்தவ னுள்மகிழ்ந்‌ து லகோர்‌
நங்கழ னிலைபெற்‌ றின்புற வவர்த நவை கொள்வெவ்‌ வினைத் தொட ரகலச்‌
சங்கையி லவதாரங்கள்‌ செய்துரைத்த சது மறை விதி வழி யனைத்தும்‌-4-

கற்றிடற்‌ குரிய ரெவர்க்கு முட்‌ பொருள்கள்‌ கசடற வெளிப்பட லரிதாய்‌
மற்றுளோ ருள்ளற்‌ கறமில தாகி வழங்கலி லவரெவாறுய்வார்‌
இற்றை நாடொடங்கி யாவரு மஃதை யெளிதினி லறிவதற்‌ கினிய
சொற்றருந் தமிழி லருமறைப்‌ பொருளைச்‌ சொற்றிடி லுய்வரென்‌ றெண்ணி-5–

பைத்தலை யரவுக்‌ கரசனோ டினிய பரிகர மனைத்தையும்‌ விளித்தங்
கத்திசூழுலகின்‌ முன்பினு மமிச மவதரித்‌ திடப்புரிந் தறநூன்‌
முத்தமிழதனிற்‌ றெளிதரப்‌ பொருளை மொழிந்து வெம்‌ பிறமத நெறிகொள்‌
சித்தர்களெளிதிற்‌ பரமிதென்‌ றறியச்‌ செய்திடச்‌ செவ்லியிற்‌ செய்மின்‌–6-

என்றவர்க்‌ குரைத்திவ்‌ வுலகுயக்‌ கருது மெம்பிரான்‌ சரபசங்கார
வென்றி கொளுகிரி னரகரி யெனுமம்‌ மேதகு விமலனுள்‌ ளுகந்தே
இன்று நீ செய்த தவத்தினு முன்னா ளெய்து மாதவத்தினு முனக்கு
மன்றலங்‌ குழவி யெனப் புகழுடைபோய்‌ மலடற வுதித்தன னென்‌றான்‌–7-

மாமுனி யுரைத்த வுரை செவி யுணரா வாம்பரி மன்னர் கோனயந்து
தேமலர்த்துள வினானருட்‌ பெறுமச்‌ சேடன் மற்‌ றுள பரிகரங்க
டாமினி துதித்த தெவ்விட மவர்கள்‌ சாற்றிய நூல்கள் யா வெனவும்‌
நாமவேன்‌ மன்னா நினக்கறி வுறயா னவில் குவ னென நவில்குவனால்‌-8–

முதலாழ்வார்கள்‌

தண்டுழாய்‌ மார்பன்‌ பாஞ்ச சன்னி யாழ்‌ வானு மிந்தத்‌
தொண்டை மானிலப்‌ பெண்‌ கண்டந் துலங்கு மங்கலமே யென்ன
வண்ட மொடிலகு மிஞ்சி யத்திமா நாகந் தன்னுட்‌
கொண்டலார் கலியென்‌றுள்ளிக் குளிர் புனற் பருகும் பொய்கை–9-

தோடலவிழ்ந் தொழுகு செந்தேன்‌ றும்பிதங்ளேயோ டுண்டு
பாடொலி கறங்குஞ்‌ செய்ய பங்கய மலரினுள்ளே
கேடி றுவா பராந்தங்‌ கெழு முசித்தார்த்தி தன்னி
னாடுமைப் பசியிற் சுக்ல பக்கமு நயந்த காலை–10-

ஓணமோ டார னன்ன ளொன்றிய தினத்தி லாங்கு
மாணமர்‌ குழவி யாயவ்‌ வளநகர்‌ வதிந்து நாம
நீணிலத்தவர்கள்‌ பொய்கை யாரென நிகழ்த்த மேலோர்‌
பேணிய புவிகள்‌ முற்றும்‌ வலஞ் செய்வான்‌ பெயர்ந்தான ன்றே–11-

திண்டிறற்‌ கதையு முன்னஞ்‌ செப்பிய திருநா டுள்ளே
வெண்டிரைக்‌ கரங்கண்‌ முத்தம்‌ வீசுமம்‌ புதிக்கங்‌ குற்ற
துண்ட வெண்‌ பிறை யோனென்னச்‌ சுதையவிர்‌ மாட மல்லை
வண்டிமிர்ந்‌ தடருத்யான வனத்துறு குருக்‌கத்திக் கண்‌–12-

வாய்ந்த பொன்‌ மலரிலக்த யுகமொடு வருட மாதத்‌
தேந்திடு புதன விட்டத்‌ திளமக வுருவாய்‌ நாம
மாய்ந்த பேருலகர்‌ பூதத்‌ தய்யனென்‌ றழைக்க முன்னீர்‌
தோய்ந்த மாநில மன்னோனும்‌ வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–13-

நாந்தக மதுமுன்‌ சொன்ன நாட்டெறி கடற்‌ கரைக்கண்‌
மாந்தளி ரனைய மேனி மாதரார்‌ மயிலை தன்னிற்‌
பாந்தளிற்‌ பயிலு மாதி கேசவப்‌ பெருமாள்‌ கோயி
லேய்ந்த நீள்‌ புனல் கொள்‌ கூபத்‌ திருந்த செவ்‌ வல்லிப் போதில்‌–14–

முன்னிருவருக்கு மாங்கு மொழி யுக வருட மாதம்‌
தன்னிலந்‌ தசமி பொன்னாட்‌ சதையம்‌ வந்‌ துதித்த நாம
மின்னிலத்‌ தவர்கள்‌ பேயரென்றிட முதிர்ந்த ஞான
மன்னியவாறு பூமி வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–15-

முனம் புவி வலஞ் செயச் சென்‌ மூவரிற்‌ பெரியோன்‌ செய்யி
லனம்பயில்‌ கோவ லற்றோ ரம்மையார்‌ மனைக் கண்‌ சென்றித்‌
தினந்துயில்‌ வுறவெற்‌ கும்மி லிடமருள்‌ செய்வீ ரென்ன
மனமகிழ்ந் தவளத் தொண்டன்‌ மலரடி பரவிச்‌ சொல்வாள்‌–16-

அய்யவிக்‌ குடிற்கு டிண்ணை யொருவருக்‌ கணையா மற்று
மெய்யவரிருவராகில்‌ வீற்றிருந்‌ திடலா மூன்று
துய்யவராகின்‌ மாயன்‌ றொடர நிற்றிடலா மென்னப்‌
பொய்யிலாள்‌ மனைக்கு ளன்பிற்‌ புகுந்து கண்டுயிலுங்‌ காலை–17-

பூதமா முனிவ னின்னோன்‌ போலவே வினவி வந்தம்‌
மேதகு விமலனோடு வீற்றிருந் தருள மற்றும்‌
கோதிலா னொருவ னன்னோன்‌ போல மேய்‌ வினவிக்‌ கூட
வேதிலார்‌ மூவராகி யிசைந்து நின்‌றிடு மவ்வேலை–18-

நள்ளிருட்‌ பிழம்பி னாங்கு நனிபடர்‌ தர வவ்வேலை
கள்ளிருந் தொழுக வண்டர்‌ காமரு பெடையோ டுண்டு
கொள்ளரும்‌ பார்ப்பு முண்ணக்‌ கொடுத்‌து வாழ் துளவக்‌ தெந்தை
ஜெள்ள லாரிடைக்க ணின்று நெருக்கிட வவருஞ்‌ சொல்வார்‌-19-

அய்ய மூவரின்‌ முன்னோனங்‌ கடை தரு மிருட்குலங்க
ணைய வென்‌ றாழி யான்ற னளீரடிக்‌ கமலப்‌ போதில்‌
வையமோர்‌ தகழி யாக வாரிதி நறு நெய்‌யாக
வெய்யவன்‌ விளக்கதாக விருப்புட னேற்றினானால்‌–20-

பின்பிரு வருக்குண்‌ முன்னோன்‌ பேரிருட்‌ பிழம்பு துஞ்ச
வன்பொரு தகழி யாக வார்வமே நறு நெய்‌யாக
வின்புறு சித்தை யந்நெய்‌ யிடுதிரி யாகப்‌ போத
நன் மணி விளக்கதாக நாரணன்‌ கழலிற்‌ சூட்ட–21-

துன்னிய விருள் கணீங்கித்‌ துளவினான்‌ கலுழன்‌ மீதங்‌
கன்னவர்க்கெதிரில்‌ காட்சி யளித்திட வவருட்‌ பின்னோன்‌
மன்னிய திருவைக்‌ கண்டேன்‌ மாசில் பொன்‌ மேனி கண்டேன்‌
பின்னுமைம்‌ படை கைக்‌ கண்டேன்‌ பேரருட்‌ கடலென்றோதி –22-

மூவரொன்‌ றாகி யார்க்கு முதல்வனை வித யீசற்குந்
தேவனைக்‌ கமலவீட்டுச்‌ செல்வி நாயகனை வாழ்த்தி
மேவுபு வணங்க யன்னோன்‌ விரிபுகழ தனினெஞ்ச
வாவுற வேதாந்தார்த்தம்‌ வண்டமிழ்த்‌ தொடை செய்தாரால்‌–23–

அத்திரு நாட்டில்‌ மாயன்‌ நிருவாழி யாழ்வான்‌ மெய்யர்‌
நித்தமைந்‌ தழலை யோம்பு நீணகர்‌ மழிசை தன்பாற்‌
பத்துடை யடியர்‌ மேலாம்‌ பார்க்கவ ரிடி தன்றேவி
மைத்தகோ திசுக வின்சொற்‌ கனகாங்கி மணி வயிற்றில்‌–24-

செப்புறு விபவாப்தத்துட்‌ செயிரறு மகர சுக்லத்‌
தொப்பறு தசமி பொன்னா ளுற்றிடு மக நாளெங்கு
மற்புத மெனவோர்‌ பிண்ட மாய வதரிக்க நொந்தம்‌
மைப்படி குழலியோடவ்‌ வரமுனி யதை யெடுத்தே–25-

வனத்துறு யிரப்புத்‌ தூற்றில்‌ வைத்தவ ரேகப்‌ பின்பு
வனத்துளோர்‌ தமைப்புமக்கு மலரவ ளருளினாலே
வனத்துறு புணரி சூழ் குவலயமா ததனைக்‌ காக்க
வனப்புறு குழவி போல வடிவமைந்‌ தழுமவ்‌ வேல்வை -26-

அந் நக ருறையு நெய்யா ராழியா னறிந்து சென்று
தன்னிரு கண்களாரத்‌ தழிஇய ருளமுத மூட்டி
மன்னு தன்‌ வடிவு காட்டி மாயனுண்‌ மகிழ்ந்து போய
பின்னரம்‌ மகவு தாயைப்‌ பிரிந்த கன்‌றனைய வேங்க -27-

அற்றைநா ளரிதா சென்னு மருட்டிரு வாள னென்னும்‌
வெற்றி வேந் தொருவ னன்பின்‌ மேவவவ்‌ வனத்து முன்செய்‌
நற்றவ மதனாற்‌ கண்ட நாகிளங்‌ குழவி செங்கை
பற்றி யுண்‌ மகிழ்தன்‌ றாரப்‌ பங்கயச்‌ செல்விக்‌ கீந்தான்‌ -28-

கொந்தவி சளக பாரக்‌ குவிமுலை மடமா னோக்கி
வந்தியா கையிலன்‌ போடு வாங்கி யுள்‌ளு வகை பொங்கக்‌
கந்துக நகிலங்‌ கொண்டு கான்முளை மலர்‌ வாய்‌ வைக்கச்‌
செந்தளிர்‌ மேனி கொள்ளச்‌ செல்வனும்‌ பருகா துற்றான்‌ –29–

என்ன காரணமோ வென்றங்‌ கிருவரும்‌ வருந்தா நிற்க
மன்னுமவ்‌ வூரினான்காந் வருணத்தோர்‌ திருமா னேய
னுன்னி யிப்‌ புதுமை கேளா வுளங்கனிந் தினிய தீம்பால்‌
கன்னியங்‌ குழவிக்‌ கென்று காய்ச்சிவந் துதவ வுண்டான்‌–30-

நாடொறு மன்பி னன்னோ னல்க வுண்‌ டிடுமோர்‌ நாளிற்‌
கோடிலா னுளமீ தென்றுட்‌ குறித்ததி லிறையுட்‌ கொண்டிச்‌
சேடமுண்‌ டிடினிற்‌ கொன் போற்‌ சிறுவனுண்‌ டாகு மென்ன
நீடிய களி கூர்ந்‌ துண்டந் நேயனுங்‌ குழவி யீன்றான்‌ –31–

மண்ணுளோர்‌ புகழப்‌ பன்னீ ராண்டவண்‌ வதிந்து வெவ்வே
றெண்ணமுற்‌ றிதர மாய சமயம தியல்பு கோக்க
நண்ணியங்‌ குளதே வெல்லா நலிதர வறிதல்‌ காணப்‌
பண்ணவ னாழி யானே பரமென வுறுதி கொண்டே –32–

மருமலர்‌ நறவ மாந்தி வண்டிமிர்ந்‌ தடருஞ்‌ சோலைத்‌
திருவலிக்‌ கேணி தன்னிற்‌ சென்ற மெய்ப்‌ பொறி யடக்கிக்‌
குருமணி வண்ண னுன்னிக் கொடுந்தவ முஞற்று நாளி
லெருது வெந் கொடு முக்‌ கண்ணா னெய்தின னுமை யோடன்றே–33-

வெறுமையா லறுவை கீறி வேளை போக்கிடப்‌ பொருத்து
மறிஞரை யுமைகாண்‌ குற்றிவ்‌ வறியனுக்‌ கருள்வா யின்று
தறுகண்வெங்‌ கயத்தோ லன்பா சார்ந்தென மறுக்கத்‌ தாழ
மறுவிலான்‌ முனவன்‌ நண்ண மதித்திடா திருந்துந் தேறான்‌ –34-

மாசிலாய்‌ நினது ளென்சொல்‌ வழங்குவ னெனவீ டென்ன
வாசிலா ததற்கு நாமோ ரதிகாரி யில்லை யென்னத்‌
தேசிக னகைத்தாங்‌ கேநின்‌ சீர்மை யிக்கலை பொருத்து
மூசிபோம்வழி நூலேனு முடன்‌ செலற்‌ குதவா யென்ன –35-

முக்கணான்‌ பரிகசித்தா னிவனென முனிந்து வெய்ய
வக்கனிக்‌ கணை விழிப்ப வவன்றவத்‌ தழலை யேவ
விக்கி நொந்‌ துயரேழ்‌ மால் பெய்‌ வித்‌ தும தவியா தெண்ணி
நக்கனும்‌ பக்தி சார நாமமிட்‌ டேகினானால்‌–36-

இத்தகை மழிசை வேந்த னிணைமரு திறுத்த வேந்தே
மத்தளை தயிர் பாலுண்ட மாயனே பரனென்றோ துந்
தத்துவப்‌ பொருளு மாறு சாத்திரப்‌ பொருளு மோர்ந்து
முத்தமிழதனில்‌ யாரு மொழி தரப்‌ புகன்றான்‌ மாதோ –37–

காரமர்‌ மேனி நங்கள்‌ கண்ணனின்‌ கவுத்துவாம்சத்‌
தார் கலி பரசு ராம னாணையி லொதுக்கித்‌ தந்த
கேரள நாட்டு மாதர்‌ கிளரொளி வதன நோக்கி
மாரவேண்‌ மயல் கொள்‌ வஞ்சிக்‌ களநக ரரசுகந்து–38-

அகனில முழுதுமோச்சு மரசனாங்‌ கொருவன் பால
வுகமுறு பராபவத்து ளோங்கிய மாசிச் சுக்லத்‌
திகல் கெடு தசமி பொன்னா ளெய்திய புனர் பூசத்திற்‌
பகலவ னொளியே யன்ன பைங் கதிர்க்‌ குழவியானான்‌–39-

சேரனுக்‌ கிள வலாகச்‌ செனித்‌ துவெண்‌ டிருமண் காப்பு
நேர்கொள் வைணவர்க ளோடு நித்தலும்‌ ராம காதை
யோரு நாட்‌ கரனோடெந்தை யொருவனாய்ப்‌ பொருதுங்‌ காதை
போரவு மொழியக்‌ கேட்டுப்‌ பொருதுவன்‌ கரனோடென்‌றே –40-

வழிகொடு கடந்த போத மைச்சரான்‌ மறை வலார்கள்‌
பழிபடு கரன் மற்‌ றுள்ள பரிகர மழிந்தாரென்று
மொழி தரு காதை சொல்ல முழக்கு பேரிகையை யென்‌ று
கழுகுலா மயிற்கை வேந்தன்‌ களிப்புடனிருந்தானம்மா–41-

இன்னவா றியைந்த வாய்மை யேதிலா வுழைய ரோர்ந்து
மன்னனுக்‌ கிவ்வா றோதும்‌ வைணவர்‌ நீக்க வென்று
ளுள்ளியவ்‌ வினன் செய்‌ பூசைக்‌ குரிய தென்‌ னரங்கன் சாத்தும்‌
பொன்னணி யாரந் தாமே கவர்ந்து பின்‌ புகலலுற்றார்‌–42–

கடகரி மருப்பொசித்த கண்ணன்‌ முத்தாரந்‌ தன்னை
மட மிலா விபுதராநின்‌ வைணவர்‌ கவர்ந்தா ரென்ன
வடலரசவர்கள்‌ செய்யா ரென்றுரை யாடிப் பாந்தட்‌
குடமதுட்‌ கையிட்‌ டன்னோர்க்‌ குறுதியே கூறினால்‌–43-

இனையன விழைத்த பேர்க ளுழையரென்‌ நினனுளெண்ணி
வனமணி மார்ப னெந்தை மாமதி லரங்க மேவித்‌
தனைக் குல சேகராழ்வா ரென்று பேர்‌ சாற்றப்‌ பெற்று
முனமுள ராம காதை மொழிந்தனன்‌ றமிழி லன்றே–44-

கள்ளவி ழளகபாரக்‌ கடைசியர்‌ களை கொய்‌ வேலை
பள்ளநீர்ப்‌ பழன முற்றும்‌ பங்கயல்‌ குமுத நீலத்‌
தொள்ளிய வுருவிற்‌ காட்ட வோதையிட்‌ டலமார்ந் தெங்குங்‌
கொள்ளை வண்‌ டுள மயங்குங்‌ கோமகன்‌ வழுதி நாட்டில்‌–45–

அல்லியங்‌ கோதை மாதரகனிலா மணி மாடஞ் சேர்‌
வில்லிபுத்தூரின்‌ மெய்ய விப்பிரர்‌ குலத்து முன்னஞ்‌
சொல்லு நற்‌ குரோதனத்திற்‌ றோன்‌றிய மிதுன சுக்லச்‌
செல்வ நற் பலகோளேகாதெசிகொள்‌ ஞாயிறு நன்னாளில்‌–46-

சோதிநாட்‌ கருடன்‌ சேயாய்ச்‌ தோன்றியப்‌ பருவஞ்‌ சென்று
நீதி நூ லனைத்தும் மோர்ந்து நிலமலர நந்தனான
வாதிமா லடியர்‌ தம்பா லன்பு பூண்‌ டவன் பதத்திற்‌
போது நந்தவனம்‌ வைத்துப பூந் தொடை யளித்து வந்தான்‌–47-

ஆவலிற்‌ றுளபமற்று மமுதுகு மலர்கள்‌ கொய்து
மாவல மார்பன்‌ செய்ய மலரடி சூட்டு நாளிற்‌
சீவல தேவனென்னுந் தென்னர்கோன்‌ பரமதாய
தேவினைத்‌ தெரிவா லுள்ளந்‌ திகைத்திருங்‌ கவலை பூண்டே–48-

ல்வியின்‌ முதிர்ந்து ஞானக்‌ கடலெனக்‌ கருணை பூத்த
செல்வ நம்‌ பியினைக் கூவித்‌ தேவினுட் பரமீதென்று
சொல்வதற்‌ குலகுளோரிற்‌ றுளக்கறு மறை மற்‌றுள்ள
பல்வகை நூல்களாய்ந்த பாவலர்த்‌ தேர்மினென்றான்‌–49-

இன்னிலத்‌ தியாவரேனு மிணையிலாப்‌ பரமீதென்று
நன்னெறி மநு நூன்‌ மற்று நான் மறை யெவையாலேனு
மன்னிடப்‌ பிரதிபாதிக்க வல்லரே லளவிலிந்தப்‌
பொன்னுறு கிழி யறுத்துப்‌ போவரென்‌ றறிவித்தானால்‌–50-

கற்றறிவாளர்‌ பல்லோர்‌ கசடற வறிந்தீ தென்று
சொற்றிடற்‌ கரியதாகச்‌ சோர்வுறப்‌ புதுவை வாழு
மற்றுறந்‌ திடவென்‌ றோட்டும்‌ வடபெருங்‌ கோயிலுள்ளா
னற்றை நா டொடையல்‌ சூட்டவ்‌ வன்பனின்‌ கனவிற்‌ சொல்வான்‌–51-

வார்ந்த வேல்‌ வழுதி கூடன்‌ மன்னர் கோன்‌ பரமீதென்‌ று
தேர்ந்திட வறிவிப்‌ போரிக்‌ கிழியறச்‌ செய்வாரென்‌ று
நேர்ந்தவ னாற்றி னான்‌ நிருபன தவைக்க ணீயுஞ்‌
சார்ந்திதென்‌ றறிவித்துப் பொன்‌ றனை யறுத்‌ திவணேகென்றான்‌–52-

கொழுஞ்சுட ரனைய நேமிக்‌ கோவல னுரைப்பவன்னோன்‌
அழுங்கி யு னடியிலன்பி னாய் மலர்‌ த்‌ தொடையல்‌ சூட்டுந்
தொழும்பல தறியா யான் மெய்ச்‌ சொரூபமீ தென்பான்‌ கொட்டுத்‌
தழும்பினைக்‌ காட்டி வீட்டத்‌ தக்கதோ கிழியை யென்றான்‌–53–

மெய்ய நின்‌ கவலை மாற்றி வேந்தன தவைக்கண் வாதஞ்‌
செய்யு நா ளெழுந்து யானுன்‌ சிந்தை வந் திருப்ப னஞ்ச
லய்யவென்‌ றிட வவ்‌ வன்ப னரசர் கோணவைக் கண் சென்று
பையராத்‌ துயிலு மாலே பரமென வறிவித்தானால்‌–54–

கொய்யுளைப்‌ பரிவேந் தன்னோன்‌ கூறிய தோர்ந்து பின்னுங்‌
கையிலங்‌ காழி மாலே பரமெனக்‌ கழறும்‌ வாய்மை
மெய்யெனில்‌ கிழி யறுந்து விழுமெனச்‌ சமையமெல்லா
நைய வீழ்ந்தது வெல்லோர்க்கு நாரணன்‌ பரமனென்ன–55-

மீனகேதனனுகந்தவ்‌ விபுதனைக்‌ களிற்றி லேற்றித்‌
தானைபின்‌ றொடர வீதி தனை வலம்‌ வருங் காலத்தில்‌
வானினான்‌ முகன் வேய்‌ முத்தன்‌ வார் தொழக்‌ கலுழன்மீது
தேனிறை துளவத்‌ தெந்தை சேவை தந் தருளக் கண்டே–56–

கூடினான்‌ களிதுலங்கக்‌ குணமிகு பரமன்‌ தாளைச்‌
சூடினான்‌ றுதி பல்காலுஞ்‌ சொல்லினான்‌ றுளங்‌கி நெஞ்சம்‌
வாடினா னிவர்கண்‌ ணீறு வருமெனத்‌ திருப்பல்லாண்டு
பாடினா னெவர்க்கு நீயே பரமெனத்‌ தொழுதான் மாதோ–57-

பொன்னவள்‌ கொழுநன்‌ வாழ்த்திப்‌ போனபின்‌ புனிதனாகும்‌
பின்னமி லிவர்க்குப்‌ பட்டர்‌ பிரானென நாமஞ்‌ சாத்திக்‌
கன்னவி றிரடோட்‌ காளை கனிந் திவர்க்‌ கடிமையாக
மன்னுமிவ்‌ வுலகிற்‌ பாக வத மியற்‌ றமிழ்செய்தானால்‌-58-

இளையவன்‌ புதுவை சென்றாங்‌ கெந்தைபான்‌ முன்னினந்தா
வனமதுபுரந்து செய்ய மலரளித்‌ திடுமோர் நாளிற்‌
கனவண னருளா னீளை கடிவனத்‌ துளவத் தூற்றிற்‌
சினமக ளுருவதாகத்‌ திருவின் வந்‌ தவதரித்தாள்‌–59-

மண்டமர்‌ கடந்த வாழி வடபெருங்‌ கோவிலார்க்குத்‌
தண்டுள வெடுக்குங்‌ காலத்‌ தளிர் நிறக்‌ குழவி தன்னைக்‌
கண்டுட னெடுத்து வந்து கனிவுடன்‌ வளர்க்க வன்னாள்‌
கொண்டலிற்‌ சுருளுங்‌ குஞ்சிக்‌ குழவி போய்ப்‌ பருவமுற்றான்‌–60-

ஒடரித்‌ தடங்கணாளவ்‌ வொளிமணி வண்ணற்‌ கன்னோன்‌
ஜோடவிம்‌ மலர்கள்‌ கொய்து தொடுத்து வைத்‌ தயல்‌ போங்‌ காலை
நாடியுள்‌ ளுகந்து நீண்ட நள்ளிரு ளளகந் தன்னிற்‌
சூடிநீர்க்‌ கிணற்றிற்‌ பார்த்துச்‌ சுற்றி வைத்‌ திடுமோர் நாளில்‌–61-

தார்வட பத்திரற்குச்‌ சாத்தவன்‌ னோனெடுக்க
வார்குழலிருப்ப நோக்‌கி மதி மலைந்‌ துழன்‌ று கெட்டுச்‌
சீர்கெழிம்‌ மடமான்‌ செய்த செய்கை யென்‌ றறிந்து மற்று
மேர் கொடே மலர் கொய்‌ தெந்தை யிணை யடி புனைந்தான்‌ மன்னே–62-

அம்மல ரணிந்த மாலவ்‌ வடியனின்‌ கனவிற்‌ சென்றப்‌
பொம்மல் வெம்‌ முலையாள்‌ சூடும்‌ போதுகந்‌ தளித்திடாதிச்‌
செம்மல ரளித்த தெற்குத்‌ திருவுள மிலையென்றேக
விம்மறை யோனு மன்னா ளிந்திரை யாமென் றெண்ணி–63-

படத்தர வணையானுள்ளப்‌ படிமல ரளித்துச்‌ சூடிக்‌
கொடுத்தவ ளென்று காமங்‌ கொழுங்கயற்‌ கண்ணிக் கீந்தான்‌
மடக்கொடி யுகந்‌து பொன்னி யரங்கனை மணந்து முன்னீ
ரிடத்‌ துப நிடதார்த்தத்தை யிசைத்தன டமிழிலன்றே–64-

கடி கொள் சந்தகிலுருட்டுங்‌ காவிரி நதிநீர்‌ சூழத்‌
தொடுநிரை விளைவாஞ்‌ சாலிச்‌ சோழநாடதனுள்‌ மண்டங்
குடிநக ருறையும்‌ விப்ர குலத்திலோர்‌ வனமாலாஞ்சத்‌
தடியர்பாற்‌ கலியுகத்தி லழகிய தனுமாதத்தில்–65-

கேட்டை நாளவதரித்‌துக்‌ கிளரொளி மகவாய்‌ ஞான
நாட்டமார்‌ விப்ர நாரா யணனென நாமம் பெற்று
வாட்டமின்‌ மறை கண்‌ மற்றை மனு முத னூல்க ளோர்ந்து
கோட்டமின்‌ மனத்தா னென்று கூறிட வதியுமெல்லை–66-

மஞ்சுயர்‌ மாட நீண்ட மாமதி லரங்கஞ்‌ சென்றோ
ரஞ்சன வண்ணன்‌ செம்பொ னடி யிணை வணங்க மாயோன்‌
கஞ்ச நீண்‌ மலரரிக்கட்‌ கடையரு ளளித்தன்‌ னோன்ற
னெஞ்சினைக்‌ கவர்ந்து தன்பா னே யவா னாக்கினானால்‌–67–

அற்றைநாண்‌ முதலன்னோ னெம்‌ மரங்கனே யரணென்‌
றுள்ளிற்‌ பற்றிமா மலர் கொணந்தா வனமது பரிவாய்‌ வைத்து
நற்றொடை யளித்துச்‌ செல்லு நாளொரு தினத்திலந் நா
டுற்றிடு திருக் கரம்ப னூரில் வாழ்‌ கணிகைமானாள்‌–68-

காவிவென்‌ றகன்று நீண்ட கயற்கணர்‌ துவர் வாய்த் தேவ
தேவகி யெனும் பேர்‌ கொள்ளுந்‌ தெரிவையு மிகுளை மாரு
மாவலி னிசளை யென்றோ ரணி நகர்க்‌ கரசன் பாற் சென்‌
றேவல்கள்‌ புரிந்து தன் பொ னெழினகர்க்‌ கெய்துமாறில்‌–69-

இவ்வெழில்‌ வனங்கண்‌ டுட்சென்‌ றெய்திரு வளநோக்‌ குங்கா
னவ்விகொணயரநி விப்ர காரணன்‌ றன்னைக்‌ காணச்‌
செவ்வியோ னிவளை யோர் கண்‌ டிரும்பியும்‌ பாரா நிற்க
வவ்வணி மாதுக்‌ குற்ற பின்னவ ளறை கின்றாளால்‌–70-

மைப்படு குழலி யிந்த வையகத்‌ தெவரையும் யான்‌
கைப்படுத்‌ துவனென்‌ நென்பாற்‌ கழறினை யலவோ விந்தத்‌
துப்பனை வசஞ்செயின்னீ தொழில் வல வேசி யென்ன
வெப்படி யேனு நங்கா யிவனை யென்‌ வசப்படுப்பேன்‌–71-

சூளென வுரைக்க மற்றோர்‌ தொன்னக ரடைய வீண்டு
வாளரி மதர்க்கட்‌ டேவ தேவகி வஞ்சமுற்று
நீளலர்‌ வனத்‌துக்‌ சுன்னோன்‌ பரிவுட னீரிறைக்கும்‌
வேளை பார்த்‌ திவளங்‌ குற்றம்‌ மடையினை விலக்கி வந்தாள்‌ –72-

இன்னணஞ்‌ சிலநாட்‌ சென்றவ்‌ வேதிலா னீயாரென்ன
நன்னய நிதி வெறுத்து நாயினேன்‌ பரனைக்‌ காண்பா
னுன்னடி பணிந்து சந்ம முய்ந்திட வந்தேனென்ன
வன்னவ னிசமென்‌ அள்ளி யவ்வனம்‌ பயிலுங் காலை–73-

வருடமோ ரிரவிற்‌ பெய்ய மறைவலான்‌ சிறுகுடிற்கு
ளிருடிபோல்‌ வேடங்கொண்ட விவளையான்‌ அழைக்க வந்தெ
னருடருக்‌ தவனே நின்றன டியினை வருடல்‌ செய்வேன்‌
முருடனே னென நயந்து முனிவனை வசஞ் செய்தாளால்‌–74-

அன்றுதொட்‌ டவளை யின்னே னிறையள வகலானாகிப்‌
பின்றொடர்ந்‌ தேக வன்னாள்‌ பின்னவள்‌ வியந்த பின்னர்ப்‌
பொன்தரத்‌ தரமிலாய்நீ போவெனப்‌ புகல மின்னாண்‌
முன்‌ றில்வற்‌ தணுகி யென்னோ முடங்கி நெஞ்‌ சுருகுங் காலை–75–

வாவிசூழரங்கன்‌ றன் பொன்‌ வட்டிலை யெடுத்தன்னோனா
லேலிய தூதன்‌ போல வெய்திய வேசி தன் முன்‌
மேவி வட்‌ டிலை யுன்‌ விப்ர நாரணன்‌ கொடுத்து விட்டா
னாவியி னவனைக் கூவி யணை கெனக்‌ கொடுத்த கன்றான்‌–76–

அன்னவன்‌ கொடுத்தகன்ற வனந்தர மவனைக்‌ கூவிப்‌
பின்னமி லணைந்து மற்றும்‌ பிற்றை நாள்‌ வெறுக்க வாங்கு
பொன்னரங் கேசன்‌ கோயிற்‌ பொலன் கொள்‌ வட்டிலைக்‌ காணாதீ
தென்ன காரண மென்றேங்கி யிறைவனுக்‌ கறிவித்‌ தாரால்‌–77-

செம்பியன்‌ சினத்தக்‌ கோயிற்‌ சேவக ரனைவோர்க் கூவி
யெம்பிரான்‌ வட்டி றன்னைக்‌ கவர்ந்த தாரியம்பீ ரென்று
வெம்பிட வருத்துங்காலவ்‌ வேசையின்‌ றூதி சென்றெம்‌
வம்பவிழளகத் தேவதேவகி மடமான்‌ கண்ணே—78-

அடுத்தவ னொருவன்‌ விப்ர நாரண னவன் றன்‌ றூதாய்‌
விடுத்தவ னொருவ னோர் பொன்‌ மேய வட்டிலைக் கைக்‌ கொண்டு
கொடுத்தன னதுவோ வென்று கூறு முன்‌ படை திரண்டவ்‌
வடுக்கணி மனைசோதித் தவ்‌ வட்டிலை யெடுத்தாங் கெய்தும்‌–79-

துப்பனை யழைத்து நின்றன்‌ றாதனார்‌ கவர்ந்த தென்னீ
செப்புவா யெனவுமன்னோன்‌ செப்பலென்‌ றூதுமில்லை
யிப் பொன்‌ வட்டிலையும்‌ யானிங்‌ கெடுத்ததி லென வேந் துள்ளம்‌
வெப்பியன்‌ னோனைக்‌ காவற்‌ படுத்திட விளம்பிச்‌ சென்றான்‌–80-

பொன்னிசூழரங்கனிந்தப்‌ புனிதனொன்‌ றறியான்‌ யானே
யன்னவ ளிடத்திற்‌ சென்றிவ்‌ வட்டிலை யளித் தன்னோன்ற
னன்னயத்‌ தூதனென்று நவின்றன னென்று வைவேன்‌
மன்னவ னருகிற்‌ சென்று கனவுரை வழங்கனானால்–81-

கேட்டமன்‌ னவனாமென்ன கேடிழைத்‌ தனமென்‌ றுள்ளம்‌
வாட்டழுற்‌ றவணெழுந்தம்‌ மறை வலான்‌ சிறையை நீக்‌கிக்‌
கோட்டமின்‌ மனத்தனோ யென்‌ கொடும்பிழை பொறுத்தி யென்று
தாட்டுணை தழுவ வன்னோன்‌ றன்பிழை குறித் தயர்ந்தே–82-

முன்னினந் தவனம் வைத்தம்‌ முகிழ் மலர்த்‌ தொடையல்‌ சூட்டித்‌
தென்னரங்‌ சேசன்‌ மெய்ய திருவடித்‌ தொழும்பனாகி
யன்னவ னடியவர்க்கு மடியர்காற்‌ றுகணாமங்கொண்
டின்னியல்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–83-

ஒதமா னீர்கொள்‌ பொன்னி யுலவு தண்‌ சோழ நாட்டின்‌
மாதவர்‌ வேள்வி நாளும்‌ வளர்த்திடு முறந்தை தன்னிற்‌
சீதவா ரங்கொழிக்குஞ்‌ செய்யுறு கதிரினுளளே
கோதறு கலி யுகத்திற்‌ கூறு துன்‌ மதியப்தத்தில்‌–84–

விருச்சிக மதியிற்‌ புந்தி விமாநநாள்‌ ஸ்ரீவத்ஸாஞ்சத்‌
துருக்கிளர்‌ மதலை யாயங்குதித்தழ வுழவன்‌ காணாத்‌
தருக்குடனெடுத்தச் சேயைத்‌ தன் மனை வளர்க்கச் சேயுந்‌
தெருட்சியின் முதிர்ந்த ஞானச்‌ சிந்தையாய் வளர்ந்து பின்னர்‌–85-

நித்தனு மரங்கத் துற்றுத்‌ திரு முகத்‌ துறைக்கு நேர் நின்‌
றத்தனை மனத்துட்‌ கொண்டம்‌ கவன் குணம்‌ பலவும்‌ சொல்லிப்‌
பித்தரிற்‌ கடையனேனென்‌ பிறப்பறுத்‌ தருள்வா யென்று
புத்தல ரடிவணங்கிப்‌ போரு நாளொரு நாளாங்கே–86–

போதுலாம்‌ பொதும்பர்‌ சூழும்‌ பொன்னரங் கேசனாரக்
கோதிலாற்‌ கருள்வானெண்ணிக்‌ குண மிகு முனிவனாகும்‌
வேத சாரங்கன்‌ றன்பான்‌ மேவு புகன வினீநஞ்‌
சீதவார்‌ புனலலைக்குந் திரு முகத்‌ துறைக் கண்‌ சென்று –87–

அங்கிருந் தொரு வனம்பா லன்பினின்‌ றகலா னாடகிச்‌
செங்கர முடி மேல்‌ வைத்தித்‌ திசை தொழு திறைஞ்டு நிற்கும்‌
புங்கவன்‌ றனை நின்றோளிற்‌ பொலிய வைக்‌ திவண் வாவென்‌று
வங்கமா கடல் கடைந்த மாயவனருளிச்‌ சென்றான்‌–88-

அவ்வுரை முனிவன்‌ கேளா வன்புடனெழுந் தாங்குற்ற
செவ்வியோன்‌ றனை யழைப்பச்‌ சிறியனான்‌ புலை யனையா
எவ்வண மெழுவேனென்ன விசைத்தனன்‌ றிருத் தோளேற்றிப்‌
பவ்வநீ ரணை படுத்த பாழியான்‌ றிருமுன்‌ புய்த்தான்‌–89-

வண்டின முரலுந்தாம வனமணி மார்பன்‌ றன்னைக்‌
கண்டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
வண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுத மாந்திப்‌
பண்டு போம்‌ பொருள் கிடைத்த படி யுள மகிழ்ந்தா னன்றே–90-

மாட மாளிகை யரங்க மறைவலா ரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப் பரனுக்குற்ற குணங்களி லீடுபட்டுப்‌
பாடலி லுனக்கு நாமம்‌ பாண் பெரு மாளென்‌றோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–91–

கொல்லுலைப்‌ படுவே லங்கைக்‌ கோமகன்‌ வதி சோணாட்டுட்‌
சில்லரிச்‌ சிலம்பு மாதர்‌ செறி தரு குறையலூரி
லல்லி நற்‌ கமலக் கண்ண னழகிய தனு வஞ்சத்தின்‌
மல்லலங்‌ கலி யுகத்தில்‌ வரு நள வருடமன்னோ–92-

பொங்கு கார்த்திகை யுவாவிற்‌ பொன்னெரி நாளினல்ல
மங்கல யோக நான்காம்‌ வருணம துதித்து நாமம்‌
நங்குல நீல னென்று நவின்றிட வளவன்‌ றன்னாற்‌
சங்கையி னிதிபடைத்தோர்‌ தரணியும்‌ புரந்து வந்தான்‌–93–

ஆவியி லுலக மோம்பு மவன் றிரு நகரி லுள்ளோர்‌
வாவியி லரம்பை மாதர்‌ வைகலு மாட வோர்நாட்‌
கூவிளங்‌ கனி மென்‌ கொங்கைக்‌ கொடி யிடைக்‌ கமல மாது
மேவியிப்‌ புவிமானென்ன வியந்து நீராடி னாளால்‌–94–

அன்னவ ளடைதலோடு மரம்பைய ரகலக்‌ கண்டார்‌
பொன்னவ டனிக்க வாங்கோர்‌ புனிதன் வந் திவளை நோக்கா
நின்னிட மெவணின்‌ பேரென்‌ னிற்றலென்‌ றனித்திங்‌ கென்னக்‌
கன்னலிற்‌ கனிந்த தீஞ்சொற்‌ கன்னியும்‌ கழறு வாளால்‌-95-

நாக மங்கையரோ டிங்கு நணுகின னெனை யன்னோர் விட்‌
டேகின ரினியுன்‌ பண்டி யெய்திய மகள் யா னென்னக்‌
கேகையச்‌ சாயன்‌ மாதைக்‌ கிழத்தி பா லளித்து நாளும்‌
பாகமா ரமுத மூட்டிப்‌ பரிவுடன்‌ வளர்க்குங்‌ காலை–96-

நீலனவ்‌ வநகன்பாலோர்‌ நேரிழை யியைந்‌து வாழுஞ்‌
சீலம தறிந்தனாளைத்‌ திருமணஞ்‌ செய்ய வென்று
கோலியாங்‌ கணுகிச்‌ செம் பொன்‌ குறை வறக்‌ கொடுக்க வன்னோன்‌
னேலவார்‌ குழலி யுள்ள மென்றவ னியம்பப் பின்னர்–97-

குருகுலாமயிற்கை வேந்தன்‌ கோகில மொழியைக் கேட்கத்‌
திரு விலச்சனை யுண்டாகிற்‌ செய்வனென்றுரைப்பச் சென்று
மருமலர்ப் பொதும்பர் சூழு மாமதி னறையூர் நம்பி
யருளினன்‌ றிருமுன் பெற்றீண்ட டைதலு மவள் பின்‌ சொல்வாள்‌–98-

வான்றொடை புனை நாட்‌ டொட்டோர்‌ வருடமதளவுமெற்கோர்‌
நோன்பது வைணவர்க்கு ணூறு பேரழைத்து நித்தம்‌
பான்மிசை கருனை மற்றும்‌ பல மளித்‌ தவருண்பிக்கி
னானுனை மணப்பே னென்ன நன்றென மணஞ் செய்தானால்‌–99-

மன்றலா னது தொட்‌ டன்னோன்‌ வைணவர்க் களித்துக் காணாக்‌
குன்றிய நிதியோ னாயுட்‌ குழைவது வளவன்‌ கேட்டு
யின்‌று நந் நிலுவை வாங்க யேகு மென்‌ றுரைக்கத் தூதர்‌
சென்றிட முனிந்தி லென்னச்‌ செம்பியன்‌ சிறையிலிட்டான்‌—100-

வெம்பிய சிறையி லன்னோன்‌ வெதும்ப நும்‌ வேக்கிறைக்கும்‌
வம்பவிழ்‌ கமலத் தொங்கல்‌ வைணவர்‌ வேழ்விக்கும் யான்‌
அம் பொன தளிப்பே னென்றங்‌ கத்தி மா நகரத்‌ தெம்மா
னெம்பதிக்‌ கேகென்‌ றன்னோற்‌ கியம்பினன்‌ கனவிலன்றே–101-

அக்கன வறியா நீல னத்திமா நரகம்‌ வந்து
மிக்க நும்‌ பகுதி கோடி வேந்தென விசைந்தவ்‌ வூருட்‌
புக்க நன்‌ னிதி காணாது புலர்ந்திடக்‌ கனவில்‌ வந்து
சக்கரத்‌ தெந்தை காட்டுந் தனத்தவர்க்‌ குளதளித்தான்‌–102-

மற்ற நன்னிதியு முன் போல்‌ வைணவர்க் களிக்கக் காணா
துற்றிட வழிப் பறி செய்‌து,தவவவ்‌ வேள்விக்கோர் நாள்‌
சொற்றெரி வீழி துயின்ற மாயவன்‌ றிருவினோடு
விற்றிரட்‌ பணி பூண்‌ டாற்றின்‌ மேவினன்‌ கிழவோரன்ன–103-

அன்னவ ரடைய நீல னகமகிழ்ந் தணுகி வல்லை
பொன்னணி பறித்தன்‌ னோர்தம்‌ பொற் கலை விரித்து வைத்து
பன்னக நடித்த பொற்றாட்‌ பவள மெல்‌ விரலின்‌ மிஞ்சி
தன்னை வெள்‌ ளெயிற்றால்‌ வாங்கித்‌ தானைவைத்‌ தெடுக்குங் காலை–104-

அந்தர மசைபட்டாலு மசை படா விதனை யோர்ந்து
கந்துகக்‌ களினு போல்வான்‌ காய்சினத்‌ தவனை நோக்கி
மந்திர முணர்ந்தாய்‌ கொல்லோ மறை வலா வதையான்‌ றேறத்
தந்திடில்‌ விவெனென்னச்‌ சக்கரத்‌ தெந்தை சொல்லும்–105-

வழிப்பறிக்‌ கபடர்‌ மேலாம்‌ வள்ளலிம்‌ மந்திரந் தான்‌
விழுமிய ததினாலிந்த மென் மலர்‌ வாவி யுண்ணீ
முழுகி நாமமு மணிந்‌துண்‌ மொய்த்தவன்‌ பகலத்‌ தென்னை
தொழுது பின்‌ வினவிற்‌ சொல்வன்‌ றூய வென்னலு மிசைந்தான்‌–106-

மாதவ னடியை வாழ்த்தி வலச் செவி கொடுக்க வன்னோன்‌
கோத றட்டாக் கரத்தைக்‌ கூறவு மிருளகன்று
போதமுற்‌ றெனை யிவ்‌ வாறிற்‌ போந்துனதடிக் காட் செய்த
நாதனே கண்டு கொண்டே னாரண னாமமென்றே–107–

சூடினான்‌ மடி மாங்காயிட்‌ டடியனை வழித் தொண்‌ டாக்குங்‌
கோடுளாய்‌ மாதரார்தங்‌ கூர் விழி வலையிற்‌ பட்டு
வாடினேன்‌ வாடி யென்றும்‌ வருந்தினே னெனப்‌ பாமாலை
பாடினான்‌ பரமீதென்று பாருளோர்‌ தெளிய மாதோ–108-

பொன்வரைக்‌ குடுமி மீதூர்‌ புயலெனக்‌ கலுழன்மீது
கன்னியர்‌ அளவினானுங்‌ காட்சி தந்தருளிப்‌ பின்னர்‌
மன்னு நங்‌ கலிய னென்று நாமமும் வழங்கிச்‌ செல்ல
வின்னவ னுகந்தம்‌ மாயன்‌ பதிதொறு மிறைஞ்ச வென்றே–109-

நாடிப்பல்‌ பதிகஞ்‌ சொல்லி நாற் கவிப்‌ புலவனென்று
நீடிய விருது பெற்று நிகழுறும் பொழுது கொன்றை
சூடியின்‌ கழல் சம்பந்த தூதனாங் கொருவன்‌ செல்லா
ஏட வெம்‌ மிறை போலிந்த விருதுனக்‌ கிசையாதென்ன–110-

கலியனீ தறிந்திவ்‌ வண்ணம்‌ விருது கொள்‌ கவியின்‌ மிக்க
வலியன தவைக்கண்‌ சென்றியாம்‌ வாதமே புரிவ மென்று
சொலிவரு மிவனை யன்னோன்‌ றூயனென்‌ றறியானாி
வெலுவமென்‌ றெண்ணி நீயோர்‌ குறளினை விளம்பென்றானால்‌–111–

இந்தவா றுரைப்ப நெஞ்சத்‌ தேதிலாக்‌ கலியனோர்ந்தே
யந்தமா நகர்க்குள்‌ வைகும்‌ வைணவத்‌ தம்மை யாரை
யெந்தமக்‌ குமது பூசை யெம்பிரான்‌ றனை நீர் சற்றே
தந்திடு மெனக்கைக்‌ கொண்டச்‌ சார்ங்கனை யெதிரில்‌ வைத்தே–112-

ஒருகுற ளென்றெடுத்துப்‌ பதிகமொன்‌ றுரைத்துத்‌ தான்கொள்‌
விருதுகள் அனைத்தையும் கூறி வென்ற பின் இவனை யன்னோன்
திருவடி வணங்கி நாயேன்‌ செய் பிழை பொறுத்தி யென்று
பருதி முன்‌ சசியினின்று பரகால னென்று போனான்–113-

நாரணன்‌ பதிகடோறு நாடியன்‌ னவனும்‌ வாழ்த்தி
யாரணப்‌ பொருளீ தென்றுள்‌ ளறிந்து பற்‌ பதிகமாக
பாரணு முயிர்கள்‌ செய்ய பழ வினை யறுத்துய்தற்‌குக்‌
காரணமாகச் செய்தான் கலியனும்‌ தமிழின் மன்னோ–114-

திருப் புளி யாழ்வார்‌

நன்னய துவாபர சயத்தினலி வில்லா மன்னு மிதுநத்தில்வரு மாசிறிரு மூலம்‌
பன்னக வரோதய னுகந்து பனி மாலூ ரின்னறு மலர்ப் புளி யுருக் கொடி வனுற்றான்‌-115-

இங்கன முரைத்தடு ப்ர பந்நர்களிவர்க்கே
யங்கமென வுற்றிடுவ ரண்ணலினி நீ யிப்‌
புங்கவனை நம் புதல்வ னென்று புகலாது
வங்கமவி பவ்வமதி மாயனென வெண்ணீ -116-

கற்றின மறித்ததோர்‌ கழைத்தலை யிடத்தும்‌
புற்றரவ மீதும் விழி போதவள ரெந்தை
சிற்‌றுருவினேரிலிவன்‌ சென்‌று தனடிக்காட்‌
பற்றிய நின்‌ பேரினுயர்‌ பாரிலெவருள்ளார்‌–117-

வாரிச நிகேதனன்‌ மலைத் தெரிவை பாகன்‌ ஈரிமு மறைக்குவடு மின்னு மறியாத
சூரிகள்‌ பராவுமிவன்‌ றொண்டு புரிகின்ற வாரிய நினாது புக ழாருரை செய்கிற்பாற்‌,–118-

வெஞ்சமர்‌ கடந்தவிறல்‌ வேக்தென விளம்ப
நெஞ்சிரு ளகன்‌ றுவகை நீள்கடலழுந்தா
வெஞ்சலிலிவன்பர னெனும்வகை தெரிந்தே
வஞ்சலி புரிந்திறைவ னம்முனி பணிந்தான்‌-119-

இத்தகைமை யுற்றபுக ழெய்து முதிர்‌ ஞானத்‌
தத்துவ முனிப்பர னடித்துணை யிறைஞ்சா
நத்தியுல காய சட நாசனென நாமம்‌
முத்தி தருகானரு முதற்கினி தளித்தே–120-

எம்பிறவி வெவ்வலை யிறக்கருணை கூரும்‌
நம்பி யருள் செய்த மொழி நாயினன்‌ மறந்தே
வம்புலவு பைந் துளவ மாலை யணி மார்பா
கொம்புலவு திந்தரிணி கொண்ட சடகோபா–121-

கண்ண நினை யிவ்வுலகர்‌ காள்‌ முளையினெஞ்சத்‌
தெண்ணி யடியன் பிழை யிழைத்தது பொறுத்தி
விண்ணவிர்‌ திருப்புளி வியந்த பெருமானே
தண்ணளி யெனுங்கட றதும்பு சடகோபா–122-

என்‌றுபல வாறுள மியைந்து பணி மாறி நன்‌று புரி யாத பவ நாடி நனி செய்யுந்
தன்றனைய னாயவன்‌ சனித்த வரு ளோரா நின்று பு திகைத்து பு நினைந்து பு மகிழ்ந்தே–123-

என்னை யுல கோர்பொரு ளெனத் திரு வுளத்தி
துன்னி யருள்‌ வான் வயி றுதித்த பெருமானா
நின்னை மக வென்ற பிழை நீ பொறு வெனத்தார்‌
மன்னவ னிரந்‌து பு மலர்க்கழல்‌ பணிந்தான்‌–124-

அன்னவ னிறைஞ்சலு மருட்கொடளி சூழாத்‌
தென்னவெனு மாலையன்முன்‌ செய்யு மவதாரந்‌
தன்னை முழு தும் மவன்‌ றனா துளம்‌ வியப்பப்‌
பின்னமி லளித்தனன்‌ பிறப்பினை யறுப்பான்‌–125–

தாறுகொள்‌ மதக்கரி தடிந்த விறை தந்த
வீறிலவ தாரமதி லின்புற வுளங்கண்‌
மாறில் வகை பற்றவுடன்‌ வாய் புகழ வென்போற்
பேறுறுவ ரார் கொலெனவே பெரிதுவந்தான்‌.–126-

இன்னண நவின்‌ றுவல மெய்தியிம மால்கொண்
மின்னெனு நுடங்கடை விழிக்கரு விளைப்பூ
கன்னியுட னப் பரன்‌ கழற்றுணைபணிந்தே
நன்னக ரடைந்து நித நாடுவர் தொழற்கே–127–

பதின்மர்‌ திரு வரன்முறைப்‌ படலம் முற்ரம்

நூற்றெட்டுத்‌ திருப் பதிப்‌ படலம்‌

திரு மகழ்‌ மார்பரங்கன்‌ நிருவடித்‌ துணையதாகு
மருமகிழ்‌ மாலை மாறன்‌ மலர்ப் பதத்‌ தினிதுவாழு
மிருமகி தலத்துளோங்கு மெதிபதி சரணம் போற்றி
யருமகிமைய நூற்றெட்டா மரும்பதிப்‌ படலஞ்‌ சொல்வாம்‌–1-

குருதிகொப்பளிக்கும்‌ வைவேற்‌ கொற்றவன்‌ றேவிசேரப்‌
பருதியிற்‌ றிகழு மேனிப்‌ பரமனை யிவ் வாறாகக்‌
கருதிநித்தமும்‌ போந்தன்னான்‌ கழறொழு தினிய செய்யுட்‌
டருதவத்‌ திறையை நீ கொள்‌ தகையார் பெற்றாரென் றேத்தி–2-

அண்டமு மண்டத்துற்ற சராசர மனைத்து மாகும்‌
புண்டரீகக்கண்‌ ணாழிப்‌ புங்கவன்‌ போந்து போந்திவ்‌
வெண்டிசை போற்றச்‌ செய்த வெழில் விபவாவதாரந்
தண்டரை யின்றர்ச்சாவதாரமாய் விளங்கலாலே–3–

அன்னது நிகர்ப்ப நம்பா லடைந்தவதாரஞ்‌ செய்த
பன்னருஞ்‌ சிறப்புற் றோங்கிப்‌ பரமனு மிவ்வாறாவா
னென்ன மண்ட லங்கள்‌ காக்கு மெழின் முடி மன்னர் போந்தே
சென்னி தாழ்ந்‌ திறைஞ்சும்‌ வேந்தன்‌ றிருவுளத்‌ தெண்ணா நின்றே–4-

பொனனக ரிமையோர்‌ போற்றப்‌ பொலிந்து நின்‌ றருளுமாதி
சினகரத்தினுக்குத்‌ தெற்கிற்‌ றிகழ் திருப்‌ புளியின்‌ கீழ் பா
லன காற்‌ புளத்து வாழு மனைய மாறனுக்குக்‌ கோயில்‌
கனக ரத்தினத்தினாலே கவின் பெற வமைத்துப்‌ பின்னர்‌–5–

சங்கராசனுக்கு முத்தித்‌ தலமுகந் தளித்த வாதிப்‌
புங்கவன்‌ மிக்க வாதிப்‌ புனிதன்‌ றன்பாற்‌ றனாது
தங்கு நீர்‌ வளங் கொண்டோங்குந் தரை யெழி னகராங்குள்ள
மங்கல நிதிபூண்‌ மற்றும்‌ வளமெலா முகந்து நல்கி–6–

பாட்டளி துதைந்து பாடும்‌ பனிவளர்‌ வகுளத்‌ தெம்மான்‌
றாட்டுணை கருதியன்னோன்‌ றழை விழிக்‌ கருணையாலே
வாட்டடங்‌ கண்ணாணங்கை மாதொடுஞ்‌ சின்னாளீங்கு
வேட்டனன்‌ வைகி வேந்தன்‌ விளம்பரும்‌ பதியிற் சேர்ந்தான்‌–7-

அனையவ ரிவ்வாருக வணி பெருஞ்‌ சுடர் கொள்‌ மேனி
புனை தரும்‌ வகுளத்‌ தெம்மான்‌ பொற்றிரு வடித் துணைக்கே
தனை நிகர்‌ மதுரச்‌ செய்யுட்‌ டவப்பிரான்‌ பலவாறாய
நினைவரு மடிமை செய்யா நின்‌று முன்‌ னினைய சொல்வான்‌–8-

எளியனா மடியேற்‌ ஒன்று ஹித புரு டார்த்த தத்வங்‌
களை விளக்‌ குறு விசேடார்த்‌ தங்களை யெல்லாங்‌ கைசே
ருள மயக்‌ கறவே யுள்ள முகந்துரைத்‌ தருடி. யென்றே
வள மலர்க்‌ கரங்கள்‌ கூப்பி வணங்‌கினன்‌ வழங்கினானால்‌–9–

இன்னணம்‌ பரமன்‌ முன்ன ரிசைத்தன னிற்குங்காலை
அன்னு மெய்ஞ்ஞான நித்ய சூரி கடமக்கிலாது
பின்னெவர்களுக்கு மெட்டாப்‌ பேறுரித்‌ தாகி யோங்கும்‌
தன்னிக ரில்லா வைகுந் தத்தினிற்‌ பொலிந்து வாழும்‌–10-

திரு வினாயக னொண்போதின்‌ செல்வனன்‌ றிட்ட சாப
மிருவிநாயகன்‌ றாதைக்கன்‌ றீர்த்தவன்‌ கமல பாத
மருவினாய கருவோட்டி வானுகந் தளிக்கு மெம்மான்‌
பொரு வினாயக மாறற்குப்‌ புகழ்ந் தெதிர்‌ விழி கொடுப்பான்‌–11–

கருத்தினிற்‌ கருதா முன்னர்க்‌ கலுழனு முன்னர்‌த் தோன்ற
வெருத்தமீ தலரின்‌ மேன்மா திரு நில மாது நீளை
யருத்தி யி னுடன் வந்தேற வவிர் பொலன்‌ கிரியின் மீது
கருத்ததோர் வெற்‌ புவந்து கலந்தெனத்‌ திகழத் தோன்றி–12–

இருமருங் கினிது வாழு மிந்திரை முதலா மூவர்‌
கரு விழி யெனுங்கார்‌ வண்டின்‌ கண் முக மலரின் வீழப்‌
பொருதயிற்‌ றிகிரி யாதி பூங்கரத்‌ தடக்குந்துய்ய
செருவிகற்‌ படை களைந்து முறை முறை திகழ்மின் காட்ட–13–

அங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி யண்டாண்ட முழுதுங்‌ காக்கும்‌
பொங்கருட்‌ சேனை நாதன்‌ புகழ்ந்தனன்‌ முன்னரேகத்‌
துங்கலில்‌ வினை தீர்‌ நித்ய சூரிகள்‌ நெருக்கிப் பக்க
மெங்கிலுஞ்‌ சூழ்ந்து சென்னி யெழிற்கா முகிழ்த்தாராகி –14–

பாயிர மறைகணான்கும்‌ பாடுறப்‌ பலர்கள்‌ சில்லோ
ராயிர ஈாமங்‌ கூறி யடியினை பணிந்தாரேத்த
தூயவர்‌ சிலர் ப்ர தாபஞ்‌ சொல்லியங் கர முகிழ்த்தா
ராயவண்‌ வெகுபராக்கென்‌ றன்னவ ரெழுச்சி கூர–15–

தாணுவயனே முதலர்‌ காணரிய மாயன்‌ றனக்கு விழி யிற்றுறு மெனத்தமதுளத்தே |
பூணரிய சங்கைகொடு மாணுறு மநேகர்‌ பொங்கு பல வாழியொடு மங்கள முரைப்பச்‌
சேணிமிரு வெண்மதியின்‌ வாணில வெறிக்குஞ்‌ சித்திர மிழைத்தபல சத்திர மெடுத்தே
யேணுடைய இற்சிலர்க ணீணசையி னொடு மெழிற்றிரு வொண்‌ மேனி யினிழற்றினர்கள்‌ செல்ல–16-

ஆமவர்க ளிற்சிலர் க டேமருவுமென்பூ வாசறுமி னாசை யுறு தூசி னொடு சுண்ணம்‌
பூமருவு மங்கை கொட மா மணமும்‌ வீசப்‌ போதமிக வுற்ற சிலர்‌ போதவு மிரட்டும்‌
காமரொணி லாவுலவு சாமரைக ளன்னான்‌ காயமெனு மார்கலியின்‌ மேயகவினங்கத்‌
தாமரையை நாடி வரு கோமள மிகும்புட்‌ சாதியி னுயர்ந்த பல வோதிமநிகர்ப்ப–17-

மந்தவிள மாருத மிகுந்தடைய வால வட்டமல ரங்கைகொடு சிட்டர் பலர் வீச
விந்தை யுறு பற்பலர்கள்‌ சிந்தை மகிழ்‌வோடும்‌ விசித்திர விநோத வொண்‌ விசுத்த விருதுக்க
ளந்தமற வங்கை கொடு முந்தினர்‌ நடப்ப வற்புத மிகுந்தணிய பொற் புலவு மின்னா
ரெந்தையி னருங்குண முகந்‌ தினி துரைத்தே யின்னிசை யிசைத்‌தனர் கண்‌ முன்னுற நடப்ப–18-

௮ண்ட பகிரண்டமுமு துண்ட விறை வந்தா னக்கனய னுக்கரிய விக்கிரமன்‌ வந்தான்‌
முண்ட கமின்‌ மார்பினிடை கொண்டபரன்‌ வந்தான்‌ முற்றுமுயிர்‌ தானாக வுற்றவ னடைந்‌தான்‌
பண்டைமறை நாலினிலுங்‌ கண்டறிய கில்லாப்‌ பராதீன மற்றிலகு புராதன னெழுந்த
னெண்டிசையு மண்டிசைகொள்‌ கொண்டல் வணன்‌ வந்தா னென்று பல நற்கின ஈயின்‌ றன கறங்க–19-

ஆடக மணிக் குழைகள்‌ பாடலை தரப்பொன்‌ னரத்தவொ ணரிப்பரி புரத்தொலி கறங்க
பாடக வடித்துணையி டக ஈடித்தே பான்மொழியர்‌ சிற் சிலர் கண்‌ மேன்மையி னடப்ப
மாடக முடுத்ததிரை நாடிய முழக்கோ மாறரிய கோடையிடி யேறது கொலென்ற
நீடக மயிர்ப்புறவே கோடணிய காள நிகழ்த்தரிய பல்லிய மிகுத்தன கறங்க-20-

இன்னன வளங்களய முன்னின நடப்ப வெங்கிலு நிறைந்‌ துறையு மங்கள முகுந்தன்‌
பன்னக முடித்தலய னின்னலொழி யெம்மான்‌ பங்கய வரும் பனைய கொங்கை யயிராணி
மன்னவன்‌ முதற்சுரர்க டன்னடி வணங்க வந்தருள்‌ புரிக சவ னெழுந்தனன்‌ விரைந்தே)
தன்னை நிகராய சுட ரென்னவொளி பொங்கிச்‌ சந்தமுறு மாறனெதி ரந்தர நிறைந்தான்‌–21-

வாரண மளித்தருளு நாரணனிவ்‌ வாறு வானக மிசைப் பொலிய வானகு மகழ்ப்பூந்
தாரணியு மார்பனிசை தாரணி யுயர்ந்தோன்‌ றன்னடி வணங்குமவர்‌ துன்னு வினை தீர்ப்பான்‌
சீரணிய பொற் கமல வேரணிப கண்கடிறந்து வகை நீர் மடை திறந் தொழுக நீல்வா
ணேரணவு குஞ்சி மிசை யாரமலரங்கை நிகழ்த்தரிய வன்பொடு முகிழ்த்தன னுவந்தே –22-

செங்கவி னுறு பைங்‌ கமலம் வீற்‌றிருக்குந் திருமக ணாயக னெம்மான்‌
சங்குடன்‌ பதும விரேகைகள்‌ பரந்து தாமரை மலரொடு மிகலிப்‌
பொங்குமெய்‌ யுளவன்‌ பொடு தொழு மவர்கள்‌ பொருந்‌த வெம்‌ பவப் பிணி மருந்தா
யங்கண் மா ஞால மகலிரு விசும்பு மளந்த பொற்‌ றிருவடித்‌ துணையும்‌ –23-

வானகத்‌ தவிருஞ்‌ செக்களை யனைய வயங்குமாற்‌ றுயர்ந் தொளிர்‌ பசும்பொன்‌
னான நற்‌ கலையை நன்மருங்‌ கலைப்ப வணிந்தெழிலுறுதிரு வரையு
மூனமி லொருநான்‌ முகத்தனை யளிக்கு மொளி கொள் பைங் கமல முன்‌ னளித்த
கானகு மலரிற்‌ புடைபரந்‌தகன்று கவினுறு நாபிநற்‌ றலமும்‌ –24-

அழிவுறு முடிவி லெண்ணிலண்‌ டாண்ட மதனுள சராசரத்‌ தொகை கண்‌
முழுமையு நெருங்கி யடங்குறு மிடமா மொய்யொளி யுதர பந்தனமும்
வழுவறுஞ்‌ சரச வீட்ட ர சுகந்த மாணிழை மடந்தையுள்‌ ளூகந்தெப்‌
பொழுது முள்‌ வதியு மஞ்சன வரையிற்‌ பொற்புறு மார்பின திடமும்‌ –25-

அத்திரு மருமத்‌ துற்றினி திவகு மணியபொன்‌ முப்புரி யிழையும்‌
நத்திவண்‌ மனக்க ளிணைந்திசை முரன்று நறைத் துளி யுண்டடை கிடக்கப்‌
பத்தெனும்‌ இசையு மணம் புகுந் தொளிரப்‌ பரவு வண்‌ டிருத் துழாயணியு
மத்தியி னிலகுங்‌ கெளத்துவ மணியும்‌ வற்சமென்‌ றுரை திரு மருவும்‌ –26-

ஒன்னல ருதிர மலகையுண்‌ டுவப்ப வுதவிய திதிரியை முதலா
மன்னுமைம்‌ படைக டாங்கி நன்‌ கமல மலரெனச்‌ சிவந்தொளிர்‌ கரமு
மின்னொளி கதுவு மங்கத மணிந்து வெற்பிரு நான்கொடு மிகலிப்‌
பொன்னக ருவப்பப்‌ புணரி முன்‌ கடைந்து பொற்புறு மீரிரு புயமும்‌ –27-

அண்டமுண்‌ டுகந்த கண்டமுங்‌ கரந்தன்‌ றாய்ச்சியர்‌ மத்தளை தயிர்‌ பா
லுண்டு விண்‌ டிலகு முண்டக மலரி னொளிர்ந்தனி யரக்கெனச்‌ சிவப்புட்‌
கொண்டு கண்‌ டவர் கண்‌ கவர்ந்திடு வாயுங்‌ கோமள மிகுந்தகன்‌ றருளுண்‌
மண்டு செங்‌ கமல மலரினுக்‌ கிணை செவ்‌வரி பரந்‌ துயர்ந்த கணினையும்‌–28-

வாமவிற்‌ புருவத்‌ துணையும் வெண்‌ பிறையின்‌ மலிந்த நன்‌ நுதற்றிகழ் நான
நாமமுங் கமல மலரெனப்‌ பொலிந்து நவை யிலா வட்ட வொண் மதியிற்
றூமலி கவினுற்‌ றிலகு மாநநமுந் துன்றிய கதிர் மணி முடியு
நீமநற்‌ பசிய மரகத மலையை நிகர்த்தில கருந் திரு வுருவும்‌ –29-

இரு மருங்கிலு மஞ்‌சலி புரிந்தனர் வீற்‌ றிருந்தரு ளினியசொற்‌ கனி வாய்த்‌
திருமகண்‌ முதலா மூவர் தங்‌ கனகந்‌ திகழு சுந்தரமு மன்னவர் தம்‌
பெருகிய வணியின்‌ விநோதமு நிமலன்‌ பிழை யறு குணத்தினி தியல்பும்‌
பொருவரும்‌ வகுள பூடண னுகந்து புகழ்ந்தனன்‌ கண்டு கண்டுருகா–30-

இவ்வண மாநந்‌ தத்துட னிமல னெண்ணிறிவ்‌ யாத்தும ஸ்வரூப மம்மா
திவ்ய மங்‌கள விக்கிரக திவ்ய தேவி பூடணா யுத திவ்ய
வெவ்வமில்‌ குண சேட்‌டி தங்களை யுமுளஞ்‌ சிறந்தநு பவித்துந
னவ்வநு பவத்தை வெளியிடுஞ்‌ சர்வ வாரணத்‌ தந்த சாரமதாம்‌–31–

அருந்தகைய திருமந்திரார்த்‌ தத்தை யடக்கி நால்‌ வேதசாரமதாந்
துரிதமி லீரிரண்டு ப்ரபந்தத் தொடர்பினால்‌ விளக்கிட மனத்துட்‌
கருதுமு னனைய மாறனுக்குகந்து கருணையிற்‌ சேவை சாதிப்பான்‌
றிருவளர்‌ நித்ய சூரிகளெ வருஞ்‌ சென்றனர்‌ திருப்புளி மருங்கே–32-

இருவி னைத் தொடரின் செய லற்றுயர்‌
திருவுறக் கடை சென்றவ ருமிவ்வூர்‌
வருத லுற்றன ராயினம்‌ மன்னகர்‌
பெருகு சீரெவர்‌ பேசுக்‌ தகையரே-33–

அந்த நித்திய சூரிக ளன்னவே
மிந்த மானிலத்‌ தேய்பதி தோறும் வாழ்‌
கந்த மார்வனக்‌ கண்ணி கொள்‌ யாவரும்‌ ்‌
வந்து சேவை வழங்கிட லாயினார்‌–34-

பெருவரங்கள்‌ கருது மன்பர்‌ பெற வழங்கு வகுளநங்‌
குருவரங்கொள்‌ கவியிலன்பு கொடுவ வண்‌ முனரனய
னிருவரங்க ளமுதமண்டி யெழுகு பொன்னி வலம்‌ வருந்‌
திஸருவரங்க ந௧ருறங்கு திருவரங்க னெய்தினான்‌ –35–

மருவரு நூறிதட் கமல மன்னி கர்மா றன்‌றருவின்‌
மருவரு நூலினிதுணர்வான்‌ வந்தனனன்‌ னானெதிரே
திருவுறையூ ரியறுளவந்‌ திகழ்ந்தலையு மணி மார்பத்‌
திருவுறையூ ரெனும் பதியிற்‌ சிறந்துறையு மிறையோனும்‌–36-

கருத்தஞ்ச வானோ ருருக்கும் பொ னாமன்‌ கணத்தின் மு னேதுஞ்சவே
வருத்தஞ்செய்‌ மாய னருக்கன் குலாவு மணிப் பொன்னின்‌ மாடங்கள்‌ சேர்
திருத் தஞ்சை யாய நகர்க் கண்ண மாலுஞ்‌ சிறைப் புள்ளின்‌ மேனாடின
னிருத்தஞ்செ யாகன்‌ றமிழ்ச் செஞ்சொன்‌ மாறன்‌ றமர்க்கன்பர்‌ நேயன் முனே–37-

அருவன்‌ பிலியா மரவின்‌ றலை மேற்‌ பெருவன்‌ பினினா டிய நம்‌ பெருமான்‌
திரு வன்‌பிலில் வாழ்‌ தேவு முவண வொருவன்‌ பிடர்மே லுற்றானிவணே—38-

கருக்க ரும்படர்‌ கண்ட னாதிதே வருக்க ரம்பட வாண னாயிரங்‌
குருக்க ரம்பக லாழி கொண்டரி திருக் கரம்பனூர்த்‌ தேவு மெய்தினான்‌.–39-

புள்ளறை யும் பொழில்‌ பொன் மதில்‌ வானை நள்ளறை கூவவி ணாமய வெனவாம்
வெள்ளறை மாயனு மேவின னம்பொற் கள்ளறை வந்த கருங்குழலோடு–40-

பொருப்புள்ளம்‌ பூதப்‌ படையாற்கெட்‌ டாதென்றும்‌ போற்றடியார்‌
விருப்புள்ளம்‌ பூதல மாதின்‌ விளங்கவினார் முகமாந்‌
திருப்புள்ளம்‌ பூதங்‌ குடிவிற்‌ றிகழ் ராமனும் பொழிலிற்
கருப்புள்ளம்‌ தங் குரு கைம் மாறற்‌ கீந்தனன்‌ காட்சியதே–41-

திருப்பே ரொருக்கா னினைப்போர்‌ திருக்கே திரித்தாண்மகிழ்‌
மருப்பே ரளித்தா ருடைக்கோ னெதிர்க்கே வரத் தேறினான்‌
திருப்பேர்‌ நகர்க்கோ ரிறைச்சேர்‌ தடத்தே திகைத்தே யழை
மருப்பேர்‌ கரித்தோ மொழித்தா னிருக்கே வழுத்தாதியே–42-

மருவாத வல்வினை மாறருளாத்‌ திருவாத வனேரணி கொண்டவன் முன்‌
திருவாதனூர்‌ மேவிய சீதரனும்‌ பெருவா தமோடு பிறங்கனனால்‌–43–

செருவழுந் திறலுடைய ராகிடுந் தீய பிணி மருவழுந்‌ திட வவுணர்‌ வளை திரிக்‌ தெறியு மணி
திருவழுந்‌ தூரிறையு மேயினன்‌ செய்ய மகிழ்‌ மருவழுந்‌ திய வணி கொண்‌ மார்பினன்‌ முனரரோ–44-

தருச்சினை மலராற்‌ செய்ய தாட்டுணை மலரின்‌ மீதே
யருச்சனை புரிந்து வானோ ரக மகிழ்ந் திறைஞ்சி யேகத்‌
திருச் சிறு புலியூர்‌ வாழும்‌ தேவனெம்‌ பெருமான்‌ றானு
முருச்சிறைப்‌ புட்பான்‌ மாறற்‌ குதவினன்‌ சேவை மன்னோ –44-

சூறை யாகத்‌ துதைந்தெழு தீயவர்க்‌ கிறை யாக்கி யிருந்தவனாந் திருச்‌ சேறை
யாயனுஞ்‌ சென்‌றன னந்தமிழ்‌ வீறை யாரும்‌ விமலன்‌ றிருமுனம்‌–45–

உருத்தலைச் சங்‌கம் புதிய வொன்றால் எரித்தரக்கர்
கருத்தலைச் சங்கவர் திறளைக் கண்டனஞ் செய்‌ தினிதுகந்த
திருத்த லைச் சங்‌ க நாண்மதியத்‌ தேவர் பிரா னும் மடைந்தான்‌
குருத்த லைச் சங்கப்புலவோர்‌ கொண்ட செருக்‌ கடர்ப்பான் முன்‌-46-

சீர்‌ திருக்‌ குடந்தை மானகர்க்‌ கமர்ந்த தேவனற்‌ புளென்ற வாகன
வூர் திருக்‌ குடந்தை யோர் கணத்‌தின் முன ரோகை யுற்றெழுந்து நாடினான்‌
பார் திருக்‌ குடந்தை யானவர்‌ கருதும் பராங்குசற்‌ குறுண்‌ மைசேரிடை
வார் திருக்குடந்தை மாதனத்து நங்‌கை வாழ்வினுக்‌ குகந்து முன்‌னரோ–47-

தருக்கண்டி யானை யிடர்‌ தந்துகன்‌ மடந்தை யுருக்கண்டி யாரதிவ ளோதுமுனி யென்ற
திருக்கண்டி யூரிலுறை தேவனு முகந்தெங்‌ கருக்கண்டி மாறனுயர்‌ கண் முன மடைந்தான்‌–48-

மண்ணக முறும் வினை வரைந்தருளு மாறன்‌ கண்ணக முன்‌ னண்ணினன கங்களி சிறப்ப
விண்ணகர மெண்ணறிரு விண்ணகர நண்ணுந் தண்ணகமலம் புரை தடங்கணிறை யோனும்‌ –49-

கருதிருக்‌ கண்ணறனை நில வுயிர்க்‌ கங்கை யுறு கனி யெனத் தந்த மகிழ்தேன்‌
றரு திருக்‌ கண்ணி புனை யளி புயத்‌ தெந்தை யெழு தளவிரைச்‌ செங்‌ கமல நே
ரிரு திருக்‌ கண்ணவுயர்‌ கருடனற்‌ கந்தர முளிசை கரப்‌ பொன்னி னோடு சென்‌
றொரு திருக் கண்ணபுர வள நகர்க்‌ கண்ணவனு முயர்புளிக்‌ கண்‌ மருவினான்‌.–50-

அருவாலில்‌ வளர்ந் தொ ணடி.ப்பொடியா லுருவா லிகைதற்‌ குதவுற்‌ றெணிலாக்‌
குருவா லிபர்‌ தங்கள்‌ குழா மலியுந்‌ திருவாலி வாழ் தேவனுஞ்‌ சென்றனனால்‌.–51-

பாகை யினிப்படு பான்மொழி மின்னா ரோகை யின் மாளிகை யும் பரு லாவ
வாகையின்‌ மின்னென லாகும்‌ வளங் கொள்‌ நாகையி னாதனு நாடின னம்மா–52-

மறையூ டு வதிந்‌ தருளெம்‌ பெருமானறையூ ருறை நம்‌பியுமெய்தினனாற்‌
நிறையூ கமனேரலருக்‌ கயிலிற்‌ கறை யூறிய காரிகுலச்‌ சுதன்முன்‌–53-

வெந்திற லுறுந் திதிரி நந்துவி லருங்கதை விளங்கு வடிவாள்‌
சந்தம லரங்கைக டயங்கமரு வண்டுமுர றண்டுளவமுஞ்‌
செந்திரு மடந்தையு முரந்தனில்‌ வயங்க நொடி சென்‌ றனனரோ
நந்திபுர விண்ணகர வெந்தையு மினங்கையரு நந்தனெதிரே–54-

அருவிந்தள மளிபாடுசெ யடருங்களை கடியு மிருவிந்தள முலையார்மரை யெழில் செந் துவர்‌ குவளை
வருவிந்தன முகம் வாய்விழி யென வேகரை மருவுந்‌ திருவிந்தளூருறை மாயனுஞ்‌ சென்றானவன் முனமே–55-

குருச்சித்‌ தரமா ளிகை மிசையே கொண்டல்‌ வந்து கண் படுக்குந்‌
திருச்சித் திர கூடத்தமர்ந்த சீமானும் போந்தான் மலரா
லருச்சித்‌ திரவெ ணீங்காத வன்பர்‌ கொண்ட வெவ்வினையை
வருச்சித்‌ திரங்கு நங்கோனாம்‌ வகுளாபரணன்‌ றிரு முன்னர்‌-56–

காரா மணிச்சுனை கலக்க முகை விண்டே வாரா மதுத்தளி மலர்த்தவி சுகந்த
தாரா மடுத்தன தழைத்திடு வளஞ்சேர்‌ சீராம விண்ணகரச்‌ சீதரனுமுற்றான்‌–57-

ஏடலார் குழ னங்கை தன் சுத னெந்தை யஞ் சட கோபனின்‌
பாட லார் தமி ழாசை யான் மிகு பரிவதோடு முன்‌ மருவினா
னாட லாருர காசனன்பிட ராரவேறியே நேரிலாக்‌
கூட லூரெனு மாவளப்பதி கொண்டவன்‌ றுயர் விண்டவன்‌–58-

வண்ணங்‌ குலையா தமடந் தையர்மா றிண்ணங்‌ குலை யன்‌பர் செருக்‌ கருவா
னெண்ணங்‌ குடியா னுமுனெய்‌ தினனாற்‌ கண்ணங்‌ குடி நின்று ககப்‌ பிடர்மேல்–59-

வண்ண மங்கல மாமலர்‌ மேவிய வெள்ளை யன்ன விராசிக ளாதவ
மன்னை வெஞ்சமர்‌ வேளையி லே மறை மாயோனின்‌
றண்ண மங்கையி னாமயவால்வளை யென்ன நன்கணி யோடு முலாவிடு தங்கு பல்வள நீள் பணை சூழ் தரு தாரார்‌ சீர்க்‌
கண்ண மங்கையி னோகையினோடுறை யன்பர்‌ தங்களி னாவியுமேவன கன்கணண்ணபி டேகமனாளொடு கானாரும்‌
விண்ண மங்கைகு லாவிய காவின மன்னுமங் குரு காபுரி மாறனின்‌ மென் கண் முன்னணி சேவை தரா புளின்‌ மேலானான்‌–60-

உருக்கவித்‌ தலத்‌ துளோடு மும்பரு நடுங்கவே
செருக்கவித்‌ தலங்கைமன்‌ செருக்கழித்த வாதியாந்‌
திருக்கவித்‌ தலத்‌ துகந்த தேவுமெய்தி னம
தருக்கவித்‌ தலங்கெடுத்த தன்னிகர்க்கு மாறன் முன்‌–61-

வள்ளி யங்குழை யின்சொன்‌ மடந்தையர்‌ கள்ளி யங்குங்‌ கவின் குரு காரின்முன்‌ பள்ள யங்குடி கொண்ட பரவைசெய்‌ வெள்ளி யங்குடி மாயனு மேவினான்‌–62-

அணிமாடத்‌ திடை யிருந்த லைம்பால் கொண்‌ மாதர் செயுந்‌
திணி மாட கத்தியாழ்ப் பண்‌ செவியின் மடுத்‌ தகணமெலா
நணி மாட கத்துலவு நாரியர் கண்‌ டினிதுவக்கு
மணி மாடக்‌ கோயிலுறை மாமகணாதனு மடைந்தான்‌–63-

நந்தமர்‌ முன்கை மின்னிடை மாதர்‌ நடை கண்டே
வந்‌துறை யும்ப லஞ்சம னத்தே வட்கிப்போம்‌
விந்தை வைகுந்த விண்ணகரத்தே விளைவோடா
ரந்தமி லானு மிந்திரை யோடடைந்தானால்‌–64-

வரிமேய விளமுசுவு முழவோர்‌ கண்டார்‌ வளைகொடெறி தரவது தென்‌ மரமேறாவெண்‌)
கரிமேய விண்ணகர மிசையிற்‌ றாவிக்‌ கற்பகக்கா வூடொளியுங்‌
லரிமேய விண்ணகரத்‌ திறையும்‌ போந்தா னன்பர் குழா மிடுபதக மாகும் பாரப்‌ பரிமேய விறை யளவுஞ்‌ சகியா நம் பராங்குசன் நன்‌ குரைசெய்தமிழ்‌ பரிந்துளோர்வான்‌–65-

ஆவனார்தொக லார்மன வன்பர் தங்‌ காவ னார் தொடு கண்ணி மகிழன் முன்‌
மாவ னார் தொகை யுற்று மகிழ்ந்து வாழ்‌ தேவனார் தொகைச்‌ செல்வனு மெய்தினான்‌–66-

வருடோத்தவ மாதோத்தவ மகிழ்வோடு செ யது விண்‌
வருடோத்தரம்‌ புரியப் பசு மலை யிற்றி கழுறு வண்‌
புருடோத்தம மெனவே யுரை பொரு வின்னக ரிடை வாழ்‌
புருடோத்தம னுஞ்சென்றனன்‌ பொலிவா ருவணத்தே–67-

பம்பு செங் கதிரோன்‌ றன்னைப்‌ பாயிரு ளனைத்து மொன்றி
வம்பற வுறவு செய்வான்‌ வருந்தகை யனைய மாற
னம்பொன்செ யுருவந் தாங்கு மமலனின்‌ றிரு முன்‌ பாகச்‌
செம்பொன்செய்‌ கோயில்‌ வாழும்‌ திரு வினாயகனும்‌ போந்தான்‌–68-

வெற்றி யம்பலத்‌ தாடும்‌ விளங்கனல்‌ நெற்றி யம்பலர்‌ நேர் சடை யாற் கருள்‌
பெற்றி யம்பலரும் பரன்‌ பேரருட்‌ டெற்றி யம்பலத்‌ தேவனு மெய்தினான்‌-69-

அருமணிக்‌ கூட லுற்ற விர்தரத்‌ துடைய நங்கைக்‌ கொரு மணிக்‌ கூடற்‌ சங்க மொழிப்பவ னுரை நூலோர்வான்‌
பெருமணிக்‌ கூடத்‌ தோடும்‌ பிறங்கு மாடங்களோங்குந்‌ திருமணிக்‌ கூடத்‌ தானுஞ்‌ சென்றனன்‌ கடிதினம்மா–70-

நெருக்கா வளவில்‌ நிரை மேய்த்து நேர்ந்தங்‌ கிகலுந்‌ தீ யோரைக்‌
கருக்கா வளவிற்‌ சென்றாயர்‌ கன்னி மாரோ டினிதாடும்‌
திருக்கா வளம் பாடிக் குறையுஞ்‌ செங்கட்‌ டிருமாலும் போந்தான்‌
பெருக்கா வளமார்‌ தென் குருகைப்‌ பெருமான்‌ வகுளப்‌ பரன்‌ முன்னே –71-

எள்ளக்‌ குளத்தினை யினித்த சொலரும்பிக்‌
குள்ளக்‌ குளத்தியர்‌ குருடேந் திட வரால்கள்‌
பள்ளக்‌ குளத்திடை பரந் துயர்‌ குதிக்கும்‌
வெள்ளக்‌ குளத்திலுரை மெய்யனு மடைந்தான்‌.-72-

சுருப்பார்த்‌ தலம்பு பொழில்‌ சூழ் குருகை மாறன் பால்‌
விருப்பார்த்‌ தநெஞ்சடியார்‌ வெவ் வினை தீர்ப்‌ பான் முன்னர்‌
மருப்பார்த்‌ ததண்டுளவ மாலையணி மார்பிலங்கத்‌
திருப் பார்த்தன்‌ பள்ளி யுறை தேவ பிரானும் மடைந்தான்‌–73-

இருமா னிலம்பரவு மகிழ் மார்ப னின் வாயி லினிதாயெழு
மொருமா வளங் கொள் கவி பெற வேணு மென்றேகி யுயர் மேவு தண்‌
முருகா ரரும்பு விரி புளி மேவி னன் கரிய முகின் மேருவின்‌
வருமாறு புண் மீது திருமா லிருஞ்சோலை வளர் மாயனே–74-

சினத் திருக் கோட்‌ டிபமலற மருப் பொசித்த திருக்கரன்ற னடிபரவு்‌ந் திறத்தினோருண்‌ மனத் திருக்கோட்‌ டிடுங் கருணை வரதன் செய்ய மரைத் திருமா மகளுகந்த வரை நேர் மார்பன்‌
முனத் திருக்கோட்‌ டினை யுறுவெற்‌ பெடுத்தானுய்ய முகிறடுத்தோன்‌ பழமறை தேர்‌ முதுவோர் வாழுந்‌
தனத் திருக்கோட்‌ டி யெனு மணி நகர் வாழெந்தை செளமிய நாராயணனுஞ்‌ சார்ந்தான்‌ மன்னோ–75–

வையமுறு மாருயிர்கள்‌ செய்யும் வினை யோடி யுயர்‌ வானி லடையா
வுய்யும் வகை யாக வரு மய்யனருண்‌ மாறனுரை யொன்று பெறவே
பையரவ மீது துயின்‌ மைய வரி மூசி யடர்‌ பாசொளி துழாய்‌
மெய்ய மலை யாளனிவண்‌ செய்ய மலர்‌ மாதினொடு மேவினனரோ–76-

செல்லாரு மாறுறுவ ரெல்லாரு மேபரவு தீந்தாமமார்‌
சல்லாப மாறனுரை யில்லார்வ மொடுகட றான்றீய வெய்‌
வில்லாளி யேழிடப மல்லோடு காயும் வலி வேந்தாகு மெம்‌
புல்லாணி மாயவனும்‌ மல்லாரு மோதியொடு போந்தனரோ–77-

எருத்தண லமரர்‌ யாரு மியாங்களுச்‌ சீவித்தற் கெங்‌
கருத்தண்கா வென நின்‌ றேத்தக்‌ கருணை கூர்ந் தருளினானை
மருத்தண்கா வுகு செந் தேனால்‌ வானுற வளருஞ்‌ செந்நெற்‌
றிருத்தண்கா லுறையு மம்பொற் றிருமகட்‌ கிறை வந்தானால்‌–78-

குன்றுறழ்‌ மாடம்‌ பம்பிய வீதிக்‌ குருகூரில்‌ வென்றி கொண்‌ மாறன்‌ செந்தமிழ்‌ தானும்‌ வியந்தே விண்‌
பொன்றல மேவர்‌ தண் புளி நீழற்‌ பொலிவானான்‌ றென்றிரு மோகூ ரம்பதி வாழும்‌ திருமாலே–79-

தோடவிழும்‌ நிம்பத்‌ தொடைசூழ்‌ வழுதியர் முன்‌ டிப்‌ பரம்பொருணந் நாரணனா மென்றுரை த்தோன்‌
பாட லுகந்தருளும்‌ பானீய மாலுருவோன்‌ கூடலழகன்‌ கருடன்‌ கூடி யிவண்‌ சென்றனனால்‌–80-

சழக்கறு நீருலவு பெரு வராற்க டுள்ளிச்‌ சாடிடத்தீம்‌ பல வுதிர்க்‌கத்‌ தகர்ந்து வீழும்‌ பழப்பொறைகங்‌ குறுவேழ நுதியிற்‌ றூங்கும்‌ பைந்தேனி ரூலு டையப்‌ படியமேதி
வழுக்குற வண்‌ டர் மிகு பூங்‌ கழனி சூழ்ந்த வண் புதுவா புரி வளரு மலர் வாவிக் கண்‌ புழைக்கை யிடர்‌ கெட வஞ்ச லென்று வந்த பொன்னவள் சேர்‌ வடபத்ர சயநன்‌ போந்தான்‌–81-

சிலைவில்லி மங்கலமை நுதலோதி நங்கை யருள்‌ சிறுவோனருள்‌
கலைவில்லி மங்கல நகரில் வந்தனன் கரிய களனென்‌ ற பொன்‌
மலைவில்லி மங்கலம ழிய வென்ற செம்பதும மகள் மொய்ம்பனார்‌
தொலைவில்லி மங்கலம தனிலொன்று தும்பியிசை துளவத்தனே–82-

௮ரமங்கை நிகர் கொங்குண்‌ குழனங்கை சுதனன்பு ளடியர்க்குவிண்‌
சரமங்கை தருமின்ப னொரு செஞ்சொல்‌ பெறவென்று தனிவந்தனன்‌
வரமங்கை நகரொன்று திரு நண்ப னென தென்‌ று வரு பொன்னவன்‌
னுரமங்கை கொடு விண்ட நரசிங்கன்‌ வலி கொண்ட வுவணத்தனே–83-

தென்றிருப்பே றையில்வளர்‌ சீதான்‌ றன்றிரப்பே ருரைப்பவர்‌ தங்களுக்‌
கொன்றிருப்பே யுதவுவன்‌ மாறன் வாய்‌ துன்றிரும்பே ருரை பெறத்‌ தோன்றினன்‌.–84-

மருவை குந்தளம னுடைய நங்கைவயின்‌ வந்தவன்‌ னினிய சந்தமா
குருவை குந்தமிளிர்‌ நறுமை கண்டகுதை யுள்ளியே மிகவு நள்ளிடார்ப்‌
பொருவை குந்தனருள்‌ சிவனிரந்த பலி பொன்றிடக்‌ குருதி தந்தவன்‌
றிருவை குந்தநக ருறைவை குந்தனிவன்‌ சென்றனன்‌ கருட னொன்றியே-85-

மருப்புளிக்கண்‌ வளர்பவன்‌ பாவினில்‌ விருப்புளித்தன்‌ விறற்புய மால் வரை
யுருப்புளின்‌ மிசை யொன்றி மிக் கொல்லையிற்‌ றிருப் புளிங்குடிச்‌ சீதரன்‌ சென்றனன்‌–86-

மருமலர்‌ நிம்பத்‌ தொடையணி தென்ன வரேரதயனாங்‌ குருகுல வங்கைப்‌ படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ் பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக ளன்பன்‌ வர குண மங்கைத்‌ திருமாலே–87-

மருக்கு லாமகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டிருக்கு ளுமெந்தை யின்புறுந் தொண்டதாய்க்‌
கருக்குளன்றிக்‌ கடத்துங்‌ கருணையோன்‌ றிருக் குளந்தைப்‌ பதியவன்‌ சென்றனன்‌–88-

மன்றன்‌ மா மகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டொன்றி னன் புளி யொள்ளயில்‌ வேற்கலி
கன்றி விண்ணகர்‌ கண்ட குறுங்குடி நின்ற நம்பியு கந்து நிகழ்ந்தரோ-89-

மஞ்ச னந்தவழ்‌ தண்டலை வாவி சூழ்‌ மாட மார் திருக்‌ கோளூ ரகந்தனி
னஞ்ச னந்தன்‌ றுயிறரு மாமுகி னாயகன் வைத்த மாநிதி நாதன்‌ வெங்‌
கஞ்ச னந்த வுதைத்தவன்‌ பிங்கலற்‌ கான செம்பொ னளித்தினுங்‌ காணுவா
னஞ்ச னந்தங்‌ கரங்கொடு நோக்குவா னவலோடிங் கடைந்த னன்‌ மாதரோ –90-

திருவ னந்த புரமுகந்த செமலருந்தி யிறைவனா மருவ னந்த ழுவுமலங்க லணி முகுந்த னணுகினான்‌
கருவ னந்த வெமையுகந்த கருணை நங்கை யென வுரை யொருவ ளந்த னருமை நந்த னெளி சுதந்த்ர னெதிரரோ–91-

திண்பரி சாரங்‌ கங்கர மேவுந் திறலோனேர்‌
வண்பரி சார மன்னிறை யோனெம்‌ மன மேவு
நண்பரி சாரங்‌ கொண்டுயர்‌ பாவி னசைவைய்யா
வெண் பரி சாரர்‌ தந் திகழ்‌ மாற னெதிரானான்‌–92-

பனித் திருக் கார்த்‌ தொலி கெழு தண்‌ பரவை யூடே யினிது வளர்‌
தனித் திருக்காட்‌ கரையோனுந்‌ தந்தான் சேவை யுகந்தடியார்‌
துனித் திருக்கா றலைத்தரிய துணைத்தா ளருளு மணித்தான் வாய்க்‌
கனித் திருக்காரக மேவிக்‌ கவினார் குருகாபுரிச்‌ சுடர்க்கே–93-

காழிக்‌ கடாபணை சூழத்‌ திகழ் குருகாபுரிவாய்‌
வாழிக்‌ கலியடன்‌ மாறற்‌ கருள்புரி வானுகவா
முழிக்‌ கள நக ராழிக்‌ கரனளி மூசழகார்‌
சூழிக்‌ கமலவ ளோடுற்‌ றனனுயர்‌ தூய்ப்புளியே–94-

குருப்புலி யோநி வழிப்பிறவாது குலைத்தெமை யாளு மகிழ்‌
மருப்புலி யூறு மதுத் தொடைமார்பன்‌ வழுத்திடு பாவுணர்வா
னிருப்புலி யானை யுரித்தணி யாடை யிடைக்கணி வோனயர்‌ தீர்‌
திருப்புலி யூரனிவற்கு முனேர்பு திருப்புளி நாடினனால்‌-95-

இங்குன்‌ ரூளே சரணமென்று ளெண்ணா வந்திங்‌ கடிதொழுவோர்‌
வெங்குன்‌ றாத வினை தீர்ப்பான்‌ விரையார்‌ வகுளத்‌ தார்க்கோ முன்‌
செங்குன்‌ றூரென்‌ றுரை சேருந் திருவாழ்‌ நகரு ளினிதுறையு
மங்குன்‌ றூராற்‌ கரியானும்‌ மடைந்தான்‌ பாக்க ணசை கொண்டே-96-

காவாயென வணிவானவர்‌ கண மோடினி தடையா
பூவாயடி தொழவே யவர்‌ புரை தீர் வருட்‌ டருபுள்‌
நாவாயிடை யமர் மாயனு நலமார் தமிழ்‌ நசையாற்‌
றேவாயந மகிழ் மாலை சொல்‌ செவியோன் முன நணினன்‌–97-

குருவல்ல வாவு முலை யுடை நங்கை பாலனுயர்‌ குணமொன்று பாவி னசையாய்ப்‌
பொருவல்ல வால் வகுள வணிகொண்ட, மாறனெதிர்‌ பொதி யன்பி னாடினனரோ
வொருவல்ல வாவெமைமு னருள்செய்த வாவெனவிண்‌ ணுளர்வந்‌து தாழ நிதமுந்‌ திருவல்ல வாழுறையு முகிலெள்ளு மேனியிறை திரை பொக்கு வாரி யணையான்‌–98-

தண்டா தரிக்கமல வண்டான முற்றதிரு தன்மார்‌ பிருக்கு மிறை யோன்‌
மண்டா தரிக்கமுகில்‌ விண்டாற டுத்தவன்வண்‌ வண்டூரி னித்த மிமையோர்‌
விண்டா தரிக்கவருள்‌ கொண்டா தரித்தவன்வி ரைந்தேக மைப்பு னலிதா னண்டா தரிக்கமல ரொண்டாள ளிக்கு மகிழந் தாரன்‌ முற்கணினனால்‌.–99-

சூட்டோதி மந்தமது போட்டோடிணைந்‌ அலவு தோட்டோ டவிழ்ந்த மலர்நீர்‌ மாட்டோதி மங்கையர்கள்‌ வேட்டாடு கின்ற திரு வாட்டாற தென்‌றுரை செயுந்‌
கோட்டோதி மந்நிலவு நாட்டானு மம்மமவிர்‌ கோட்டானை நங்கை புதல்வன்‌
பாட்டோது வன்னமது பாட்டே யுகந்தெனவுப்‌ பாட்டோ னடைந்தனனரோ.–100-

பெருவித்து வக்கோட்டி பெருகித் தமிழ்ச் சூட்டு குருகைப்ப ரற்கேத்து மடியர்க்கு நோய்க்‌
கருவித்து வக்கோட்டி யழிவிற்‌ கதிக்காட்டு கருணைக்கடற்கேற்ப வெதிருற்றனன்‌
றிருவித் து வக்கோட்டிலிறை யுட் கருக்கோட்டன்‌ செருவிற்‌ றலைக்‌ கோட்டு மதவெற்பினை
மருவித்து வக்கோட்டி கலி முற்ப றித்தாட்ட மதுமுற்றளிப்பாட்ட துளவத்தனே–101-

துருக்கடித்‌ தானத்த வரைக்கு முற்‌ காலத்தி றொனித்தழைக்‌ காமுற்று யரையட்டவன்‌
திருக்கடித்தானத்தன்‌ வனத் தனித்‌ தாமத்தன்‌ சிறைக்ககத் தேறித்த ணெகினத்துவேர்‌
நெருக்கடித்‌ தானத்த மருக்கனைப்‌ போலுற்ற நிதிக்கருத்‌ தேவைக்கு மடி யர்க்குறுந்‌
தருக்கடித்‌ தானத்தன்‌ மகிழ்ப்பனித்‌ தாமத்தன்‌ சடத்தினைக்‌ காய்நித்த னெதிருற்றனன்‌–102-

மாறன் விளை யாடி மலர்‌ மாதுவள சேர் குருகை மான கருணா
வீறன்விளை சாரமுறு பாவினசை யோடவன்முன்‌ மேவினனிலா
நீறன்விளை யாநநச ரோருக நிகேதனனு நேடரியனா
மாறன்விளை யாகுநகர்‌ நாடிநிதம்‌ வாழுமுத லாயபரனே–103-

இருவிசும்பிடை யமரரும்பர வெம துநம்பிமெய்‌ வாதனால்‌
பொருவிலின்கவீ பெற வெழுந்‌துயர்‌ புளியிலொன்‌ றின னளிகுலா
மருவிரிந்து நறவுகும் புது மலரடர்ந்திவர்‌ சோலை சூழ்‌
திருவயிந்திர புரமெனும் பதி திகழுமம்புய லொருவனே–104-

மாவ டம்பமொளி ரோவி யத்‌ துலவு:மங்கை யாருடைய நங்கை சேய்‌
பாவ லம்பெறவு ளாவ லின் வினதை பால னேறிமிக வோலமாய்‌
நாவ லம்புவியுண்‌ மேவு முவர் முன நண்ணியே கிருபை பண்ணினேன்‌
கோவ லம்பதியின்‌ மாவலன்‌ கருணை கூடினோன்‌ புளியி னாடினான்‌—105-

மச்ச விழி நங்கையருள் எச்சமொரு செந்தமிழ் வழ ங்குமெனவே
யிச்சையொடு கந்துமதிர்‌ கச்சணி குறுங்கணுறு மிந்திரையொடு
கச்சி நகர் நின்று அருளும் அச்சுதன் அன்று துயர்‌ கடிந்த வலியோ
னச்சரவ மீது துயில்‌ பச்சை முகிலும் புளியி னண்ணினனரோ–106-

பெருவட்ட புயகரனங்‌ கமல னாதிப்‌ பெரும் தேவ ராசுரர் தமைப் பிலத்தில்‌ வீழ்த்தப் பொருவட்ட புயகரம்ய வணையா யென்றே போந்தனர்க ளனுதினமும்‌ போற்றி யேகத்‌
திருவட்ட புயகரமென்‌ றுரை சேர் திவ்ய தேசமகிழ்ந் தினிதுறையுந் திருமால்‌ வந்தான்‌
கருவட்ட புயகரலா வன்பர்‌ தம்பாற்‌ கண்ணருள் செய்‌ தருண் மாறன்‌ கண் முனம்மா–107-

பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌ தொளிர் மாடப்‌ பருப்பதஞ்சூழ்‌
பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌
தண்காவி னின்றருளெம்‌ பெருமா னொல்லைச்‌ சழக்கறு புட்‌ பிடரேறிச்‌ சார்ந்தான்‌ மிக்கு
வண்காரி மாறனுரை யாரணத்தின்‌ வண்டமிழ் கேட்‌டுகந்திடமின் மருவி மாதோ–108-

மஞ்சினம் தெண்‌ முதிர்ந்துளையா வுயிர்க்கு முத்த மல்கு மணி மாட மிசை மடவார்‌ நின்று
நஞ்சினுங்கா ரளகமுண வூட்டுந் தூம நனி கெழுமி யாசை யெலா நறைய தாக்கும்‌
வெஞ்சினமற்‌ றற நெறிக்கண்‌ ணகலார்‌ வாழும்‌ வேளூரை யாளரியு மேவினானால்‌ செஞ்சிலம்பா ருடைய நங்கை வயிறு வாய்த்தோன்‌ செந்தமிழ் கேட்‌டுகந்திடப் புட்‌ செலுத்தி மாதோ–109-

உருப்பாட கத்தடிய நங்கைக்‌ குயர்மகவாய்‌
விருப்பாடகத்தடியார்‌ வெவ் வினை தீர்‌ மாறனெ திர்‌
பொருப்பாடகத்தனுவான்‌ சிலை யிறுத்த புங்கவனாந்‌
திருப்பாடகத் துறையுஞ்‌ ஸ்ரீதரனுஞ் சென்றனனால்‌–110-

சூர கந்தடிந்‌ தோனுயிர்த்‌ தோன்றனைச்‌
சேர கந்தணித்‌ தோன்செழுஞ்‌ சோலை சூழ்
நீர கந்தனி நின்றருள மால் குரு
கூர கந்தனிற்‌ கூடினன்‌ மாதரோ–111-

முத்தனைய வெண்ணகை செம்‌ பவளவாய் கொண்‌ முகிழ்‌ மலர்க்‌ கைக்‌ கடைகியர்தமுகமாய்‌ நின்று
மத்தமுடன்‌ களைகடிய வவர் முகந் தா மரை யெனவோ திம மயங்கு வளைமென்‌ சாலி
நித்கிலமார்ந் திலகு பழ னங்களார்ந்த நிலாத்திங்கட்‌ டுண்டத்து நெடுமால் முன்ன
மத்திவிளித்‌ திடுமுனஞ் சென்‌ றருள்வோன் மாற னாரணச் செந் தமிழ் தருமென்‌ றடைச்தான்‌ மாதோ–112–

வம்பு லாவு மகிழ் மலர்த்‌ தாரினான்‌ பம்பு மாமறைப்‌ பாவில வாவியே
உம்பர்‌ போற்று நம்‌ மூரக மால்‌ முனம்‌ தும்பி காத்தவன்‌ றோன்றினன்‌ மாதரோ —113-

வண்ணமுறு மாதவர்செய்‌ வேள்வி தோறும்‌ வழங்குறுமா குதிய வியை வாங்க நாளும்‌
விண்ணவர்தங்‌ குழூஉக்கணிரைந் தணி கொண்‌ மாட வெஃகாவிற் துயிலமரும்‌ வேந்தன்‌ வாசச்‌
சுண்ணமனைர்‌ தளி பெடையோ டமுதமுண்ணுந்‌ துளவலங்க லாடுதிருத்‌ துலங்கு மார்ப
னண்ணலரு ளிலகு மயிற்‌ காரி சூனு நாவீறற்‌ கருள்புரிவா னண்ணி னால்‌,–114-

இருக்கார கங்கனியாப்‌ புல்லரிடந் தன்னடியே யிறைஞ்சு மெய்யன்‌
பருக்கார கங்கடிவார்‌ தானெனதென்‌ றிடுங்கனகன்‌ பருமார்‌ பத்துட்‌
பெருக்கார கங்கலுழக்‌ ண்டவன் சேயினை மருவும்‌ பெற்றி யோர்‌ தென்‌
றிருக்கார கங் கருதும்‌ பொன்னவள் காந்தரு முகந்து சேர்ந்தாரன்றே–115-

உருக்கார்வா னந் தணிவார்‌ தன்னடியார்‌ செய்த பிழை யுகந்தன்‌ னோரைத்‌
கருக்கார் வானந் தருவார்‌ மறந்தொரு காற்‌ றமை யெணினுங்‌ கருணை செய்வார்‌
மருக்கார்வா னந் தவழுந்‌ தண்டலைசூழ்‌ மணிமாட மல்க யோங்குந்‌
திருக்கார்வா னந் தனில் வாழும் பரந்தா மரும் புளிக் கண்‌ சேர்ந்தார்‌ மாதோ–116-

அண்டர்‌ நாய கன் கபாலி யம்புயத்தி னன்றொழும்‌
புண்ட ரிக மந்திரங்கொள்‌ பூவை வாழு மார்பினான்‌
கண்டல்‌ வேலி நின்றிலங்கு கள்‌ வனூரு மாயவன்‌
வண்டு லாவ லங்கலாட வந்தனன் புள்‌ ளொன்றியே–117-

குருப்பவள வண்ணவத ரத்துடைய ஈங்கையருள்‌ குமரன்‌ செஞ்‌ சொல்‌
விருப்பவள வண்ண றனை முப்போதும்‌ வந்தனை செய்‌ விபுதர்‌ தாயர்‌
கருப்பவள வண்ணவிடா தருள்புரிவோன்‌ கனக மதிற்‌ ககனமோங்‌குந்
திருப்பவள வண்ண நக ருறை கருமா முகலுருவன்‌ சேர்ந்தானன்றே–118-

வண்டொடுதே னினமுல்கே சர நறுந்தா ரிலகு புய மாறன்‌ செஞ்‌சொற்‌
ணுற்றான்‌ தண்டமிழ்கேட்‌டுகந்திடப் புட்‌ பிடரேறி யரவெகினைத்‌ தருக்க
புண்டரிகத்‌ தாளிறை மெய்‌ யடியர் பணிக்‌ குடனுருகப்‌ புரக்கும்‌ போதத்‌
திண்டிறலார்‌ பயில் பரமேச்‌ சுரவிண்ண நகரில் வரு திருமான்‌ மன்னோ-119-

உட்புல னெனுமோர்‌ பாகனூ ணுதிர வுடலெனு நாப்பணி லுறச்‌ சேர்
கட்செவி நாசி வாயெனு நான்கு கற்கி வாய்‌ மதிக்கருள்‌ பூட்டி
நுட்ப நூலுரைக்கு மறநெறி செலுத்து நுவலரு மறையவர்‌ வளர்‌ சீர்ப்‌
புட்குழி நெடுமால்‌ சடகரிக்‌ கருள்வான்‌ போந்தனன்‌ போரகெஞ்‌சுகந்தே–120-

நன்றி யோர் தொழு நாயகன்‌ வெஞ்சட வென்றி மாறன்‌ விழுத்தமிழ்‌ வேட்டி வண்‌
சென்ற னன்னறை சேர் மலர்க்‌ காவொளிர்‌ நின்ற வூருறை நின்மல மாயனே–121-

பருமணி யிமைக்குஞ்‌ செஞ்சூட்‌ டராவணைப்‌ பரம னீலக்‌
குருமணி வண்ண னெவ்வுட்‌ கோவல’ னடைந்தா னொன்னார்‌
மருமமுண்‌ டொளிரும்‌ வைவேற்‌ காரி சேய்‌ மாறனாவா
லொருகவி பெற வென்‌ றுன்னா வுவணன்‌ மொய்ம்‌ புந்தி மாதோ–122-

கார்மலை மேனி வேங்கட்‌ கடகரி மருப்பொசித்துப்‌
போர்மலை முனிந்த சீற்றப்‌ புயவலிக்‌ குரிசில்‌ வண்மை
நீர்மலை யாதி செல்வி நீளையுற்‌ றெழுந்தான்‌ முத்து
வார்மலை யுடைய நங்கை மகவினுக்‌ கருள வென்றே-123-

கொந்து லாநெடுங்‌ குந்தள நங்கை சேய்‌ செந்த மிழ்த் தொடை சிந்தை யுள்‌ ளுன்னியே
யந்த ணாளரமருந் திருவிட வெந்தை வாழ் தரு விண்டுவு மெய்தினான்‌–124-

இருக்கடன்‌ மல்லைந் திலக கணந் திகழ் மா றன் கவிவேட்‌ டிசைக்கு மென்றுட் டருக்கடன்‌ மல்லைப்‌ பொருவா குவலியுளோ யனநடைப் பொன் றரப்‌ பெண்ணாள் பா
கருக்கடன்‌ மல்லைத்‌ தொலைத்தா யருளெமக்கென்‌ றும்பர்தொழுங்‌கடிகொள்‌ செம்பொன்‌
றிருக்கடன்‌ மல்லைப்‌ பதி வாழெம்‌ பெருமா னெகின நிழற்‌ சென்றான்‌ மாதோ–125–

மருவல்லிக்‌ கேணிளநீ ரளக மொழி முலை நங்கை மடமா னென்னு
மொருவல்லிக்‌ கேசுதன் மா றன் கவி வேட்‌ டளைசுவைப்பா லுடனே வெண்ட
யிருவல்லிக்‌ கேகி யுறிக்‌ கண்கவர்வோன்‌ மணிமாட மிலங்கும்‌ வண்‌மைத்
திருவல்லிக்‌ கேணி வள ரெம் பெருமான்‌ புட்கடவிச்‌ சென்றான் மாதோ-126-

முடிகை கூப்பு முள்கனிந்த மொய்த்த வன்பி னோர்கள் பால்‌
மடிகை யோடு யிர்ப்பறுக்கு மாறனின்‌ சொல் வாவியே
சுடிகை யோதி மத்தனன்ன வேதியர்கள்‌ சூழ்‌ திருக்‌
கடிகை மாநகர்க்குள்‌ வாமுங்‌ கண்ணனெய்தினனரோ-127–

சஞ்ச ரீகவிழி நங்கை பாலிலவ தரித்தவன்‌ சடமரித்தவன்‌
செஞ்சொ லாயதமி ழொன்ற வாவியுயர்‌ சிற்றி லைப்புளியு ளுற்றனன்‌
வஞ்ச மாயை யொரு கஞ்ச னே வுமத மத்த கக்கரியு தைத்தவன்‌
கஞ்ச மாதுவளர்‌ நெஞ்சி னானடியர்‌ கற்பகன்‌ னரவ வெற்பனே-128-

நங்கையார்‌ குழவி யின் சொ னாடி வந் தடைந்தா னும்ப
ரெங்கணா யகவென்‌ றேத்து மிகன்மதக்‌ கரியி னீட்டம்‌
தங்க நாயகி களோடு தனித்தனி வதுவை யாற்றும்‌
சிங்க வேழ்‌ குன்றில்‌ வாழுந் தெய்வ நாயகனு மாதோ–129-

மற்புனை யிலங்கை மூதூர்‌ வள்ளல்கம்‌ பத்துவீழ
விற்புனைந் தெழில் கொள்‌ தோளான்‌ மிளிர் நிலா மணி மாடத்தி
னற்புத மிகுமயோத்தி யாண்டகை யடைந்தா னின்பா
கற்பழ மொழிச்சி நங்கை கண்மணி கவி வேட்‌ டன்றே–130-

பொருந்தலரூ ணுண்டொளிரு மயில் வேற்காரி பு.தல்வனடி.யார்க்கு வினை பொருந்தா தேக
மருந்தனைய திருவடியோ னெகினத்‌ தங்கா வணனிறைக் கீழ்ச் சடவைரி மலர்வாய்ச்‌ செஞ்சா
லருந்தமிழ் வேட்‌டிந்திரையோ டெழுந்தா னக்கன்‌ ௮டற்பதுமா சுரற்குழலா வலைய வாங்கோர்‌
திருந்கணிமா தாகியனோன்‌ முனிந்த சோலை சேர் நைமி சாரணியத் திருமால்‌ மன்னோ–131-

நள்ளிரு ளளகபார நங்கையார்‌ மகவின்‌ சொற் கொண்
டுள்ளுகர்‌ தருள்வான்‌ புள்ளி னொல்லையி னெழுந்தான்‌ றொல்லை
பொள்ளனால்‌ கரவெற்‌ பாண்ட புங்கவன்‌ பவளத்‌ துண்டக்‌
கிள்ளை சேர்‌ பொழில் கொள்‌ சாளக்‌ கிராம நின்‌றருள் வோனன்றே–132-

மதரிரு விழிக்க ணங்கை மதலை வாய்ப்‌ பனுவல்‌ வேட்டுச்‌
சிதறியாச்‌ சியத்தை யுண்ட சீதரன்‌ பெரு மழைக்குப்‌
பதறியாச்‌ சிரமத்‌ தெய்தப்‌ பருமலை யெடுத்துக்‌ காத்த
வதரியாச்‌ சிரமத்‌ துற்ற மாயவ னெழுந்தான்‌ மன்னோ–133-

கொண்டலைந்‌ தரு நே ராங்கைக்‌ குரிசினன்‌ னெறிவாய்‌ நின்று
விண்டிலான்‌ காரி சூனு விளம்புறு பனுவல்‌ வேட்டீண்‌
டண்டின திரைக டோறும்‌ ஆரமீன்‌ றிடு கங்‌கைக் கண்‌
கண்டமா நகரின்‌ வாழுங்‌ கண்ணனு மெழுந்தான்‌ மன்னோ–134-

குருதிதோ யயில்வே றாங்குங் கொற்றவன்‌ காரி சூது
சுருதிதோய்‌ தமிழ் வேட்‌ டைவர்‌ தூதனாம்‌ விசையன்‌ போரில்‌
பரிதோ யிரத மூரும்‌ பாகனா மறையோர்‌ வாழும்‌
பிரிதிதோ யிலங்கை செற்ற பீடுளோ னெழுந்தா னம்மா–135-

விடமெனக்‌ கருத்து நீண்ட வேல் விழி யுடைய நங்கை
யிடமவ தரித்த செல்வ னின்னுரை கழறு மென்றே
குடவர்தம்‌ மனையில்‌ ரெய்பால்‌ கொள்ளை கொண்‌ டறியே னென்னும்‌
வடமது ரையினில்‌ வாழும்‌ மாயவ னெழுந்தான்‌ மாதோ –136-

கண்டு வரார்தமை யண்டகிலார் வினை கண்டிந மாறனெரி
பண்டு வராடை மண்‌ மண்டிசை யானுரை பண்டறு பாவினசை
கொண்டு வராலினம்‌ விண்டல மூடு செல்‌ கண்டுறு நீர் புடை சூழ்
வண்டு வராபதி விண்டுவும்‌ மேவினன்‌ மண்டல மேழ்புகழ–137-

ஆடி நேர்‌ கொடி றிரண்டு மணி செய்யு முடைய நங்கை
தோடவள்‌ கமலப் பண்டி தோன்றிய சிறுவன்‌ செஞ்சொல்
நாடி நன்‌னெறி வாய்‌ நின்‌ற நந்தர் கோன்‌ மதலை யாயர்‌
பாடி வந்‌ தருள்வோன்‌ யார்க்கும்‌ பரமனு மடைந்தான்‌ மன்னோ -138-

சேற்கடல்‌ விளக்கு முண் கட்‌ சேயிழை யுடைய நங்கை
சூற் கடங்‌ குறவெ ழுந்த தோன்றனல்‌ லுரைவேட்‌ டங்கை
வேற்கட மதமா வாணன்‌ விறற் புயந்‌ துணித்தம்‌ பைவாய்ப்‌
பாற்கடல்‌ துயிலு மாதிப்‌ பரமனு மெழுந்தான்‌ மாதோ–

நூற் றெட்டுத்‌ திருப்பதிப்‌ படலம்‌ முற்றும்‌-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading