Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஆங்கு மலரும் குவியும்-

September 18, 2025

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் -ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்-இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி–67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்-
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது -ஓர் அவஸ்தையிலே அலருவது குவிவதாக நிற்கும் –

திரு நாபியிலே ஓங்கின தாமரையிலே உண்டான செவ்வி குன்றாத வழகிய பூவானது –அவன் கையில் உண்டான திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –மற்றைத் திருக்கையில் உண்டான வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் என்று பார்த்து – இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே  இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும்  செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்-அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும் உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் – இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது-சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று-ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்-இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திருவட்டாறு போல்)

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

—————-

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.-தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.-ஜிதந்தே புண்டரீகாஷா –-செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அது தன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.-ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும்  எந்தி யிராநின்ற
பச்சை மா மலை போல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்ய சந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரிய மலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.

ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய்,
ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்
பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

———–

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்-எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்-அல்லாதார்க்கு தோற்றாது-இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்-ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்-கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே-ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை
ஆசைப்படப் பண்ணுமதுவும்-அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –ஆங்கு மலரும் குவியும் என்கிற-திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் – எப்போதும் உண்டு – அது பெண்களுக்குத் தோற்றும் – ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்-கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே – இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,-‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க, இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

—————–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே-எங்கள் ஆற்றாமைக்கு
அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

கிங்கிணி வாய்ச் செய்த-அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்-அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –

கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-

காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –

ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்

தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90
(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் –
சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )

————-

செங்கண் –வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

செங்கண்-உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் – உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே-தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே

அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே

க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே

பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே

அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே

அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே

ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே
சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –

சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )

சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே
பிடித்துக் காண வேணும் என்கை

———–

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –
விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே

எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –

அதுக்கு வந்தது என் என்ன

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே -விழியாவோ -என்று மநோ ரதம்

———–

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும்
அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும்
என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்

திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –

(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கு இருக்கையும் என்றுமாம் –
பிரதாபமும் தண்ணளியும்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்(குளிர்ந்த ஆதித்யன் ஒளி மஹாபாரதம் )

—–

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் -(சந்திரன் போல் என்று தப்பச் சொன்னோம் -அதீவ பிரிய தர்சனம் அதுக்காக )
முழு நோக்குப் பொறுக்கும் படியால் உன் அழகிய இரண்டு கண்களையும்
இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க -என்கை –

அம் கண்
தாமரைப் பூ என்ற போது விகஸிக்கைக்கு தாமரை ஒப்பு இல்லாதாப் போலே –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-

———–

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்

எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே

எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி

தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )

ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)

விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை

நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும்
விஸ்லேஷ வ்யசனமே படுகிற
எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –

அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே
அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்

ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழியும்
என்று அந்வயம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானத்துக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண்-இத்யாதி –
சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
சுக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

எம் மேல் -செங்கண்
எங்கள் மேல் –
எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.-கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்-என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

———–—————————

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;–சங்கு சக்கரங்கள் என்று அவற்றைச் சொல்லி -வந்தால் பண்ணும் அஞ்சலியைப் பண்ணா நிற்கும் –
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;–வந்தால் குளிர நோக்கும் திருக் கண்களை நினைத்து
தாமரை போன்ற திருக் கண் என்றே சொல்லி -அது பெறாமையாலே தளரா நிற்கும் –
இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் 

------------
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,-வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

————–

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

மின்னும் ஆழி இத்யாதி –சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்-வேதைக சமைதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-மின்னும் ஆழி அம் கையவன்- மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –செய்யவள் உறை தரு திரு மார்பன் –அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று

———–

‘நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை’ என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல,
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை–கலித்தொகை 130

நயம், வாய்மை, நடுவுநிலைமை ஆகியவை இவை என நாடி நன்கு ஆராய்ந்து பொய்யை விலக்கி நாட்டை இனிது ஆண்ட அரசனோடு நல்லூழிச் செல்வம் மாண்டுபோனது போல, ஒளிச் செல்வன் கதிரவன் மறையப் பகலும் மறைந்தது. கல்லாது முதிர்ந்தவனின் இரக்கமற்ற நெஞ்சம் போல இருள் பரவிக்கொண்டிருக்கும் மாலைக்காலம்.

—————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருக்கிற இரண்டு கையிலும் ஆழ்வார்களைத் தரித்து -பலவாய் தூரப் போய் எங்கும் வ்யாபிப்பனவான ஒளிகளை யுடைய ஆதித்யனோடே கூட அவனோடே ஒத்த தேஜஸ் ஸை யும் வெண்மையையும் உடைய சந்திரனை ஏந்தி அத் தேஜஸ் ஸூ க்களுக்கு பரபகமாய் இதர விஸஜாதீயமாய்-தர்ச நீயமாய் -கண்டார் கண் குளிரும்படி நீலமாய் மற்றும் அனுக்தமான அழகுகளை யுடைத்தாய் -அபரிச்சேதயமாய் இருபத்தொரு மலை நடந்து வருமா போலே யாயிற்று ஆழ்வார்களைக் கொண்டு உலாவும் படி-

———-

அர்ச்சிராதி–த்ருதீய பிரகரணம் –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வ ஆஸ்ரய மயமான கோப்புடைய சீரிய சிங்கா சணத்திலே பன்னிரண்டு இதழாய்-நாநா சக்தி மயமான திவ்ய கமலமாய் -அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய் –அதின் மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் –கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும் -சர்வ வித கைங்கர்ய பரற்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலும் அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய் -பகவத் அனுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய் – விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே ராஜதகிரி சிகரத்திலே அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா தத்வ உபதேசமும் -ஸ்ரீ ஆழ்வார்கள் -தத்வ தர்சன- ஸ்ரீ ஸூக்திகளும்-ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

September 16, 2025

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி-71–

(எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு-நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-மெய்யான ஞானம் இல்லாதாராய் –உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவ ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.-‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால்-காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து -‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்-தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;அதனை அருளிச் செய்கிறார்.

முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எல்லை இல் ஞானத்தன் – மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்-மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும்
உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
–10-10-10-

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
.–4-7-7-

பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-குற்றம் அறும்படியாக நினைத்து.-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே -நமக்காக -ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே-உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை-நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
.–4-10-9-

உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே-பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்
–5-

தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே, கலங்கி நிற்பவனாய், சரணமடைந்தவனான, அர்ஜுனனைக் குறித்து,
கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது நாடு திருந்த ––சூரணை-229 –தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –என்னும்படி திருந்துகைக்காகவும் —

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.
–4-8-6-

சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்ம பிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –
ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

————

1-தத்வ விவேக

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்
—৷৷2.12৷৷

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –எப்போதும் நான் உள்ளவனே யாவேன்-நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்-இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே-நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—
৷৷2.13৷৷

இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான்-என்னுள்ளான் -என்ன வேண்டும் இடத்திலே அடியேன் உள்ளான் என்றது -அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –-உடல் உள்ளான்-சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே
–8-8-5-

தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை

—————-

2-நித்யத்வாநித்யத்வ

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷
1.2.19 ৷৷

இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.-கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
—৷৷2.20৷৷

ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை – இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் –அழிவற்றவன் –பரிணாமம் அற்றவன் –பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை -விகாரங்கள் -சரீரத்துக்கு – வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ
—৷৷2.22৷৷

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் – அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே – நல்ல சரீரம் தான் கிட்டும் –

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக-அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக–திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,-‘உயிர் யாக்கைகள்’ என்கிறார்.மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-அது தோற்றி நசிக்கும் இது கர்ப்பத்தில் நசிக்கும் தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

————
3-நியந்த்ருத்வ

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும் மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷

தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –
ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக 

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்-அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
–1-1-7-

சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது – ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல்லிற்று-ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று  யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும்

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்-பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –அதி ஷூத்ர சரீரங்களிலும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-அன்யைரத்ருஷ்டனாய்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்-இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்-இப்படி த்ருட பிரமாண சித்தன்-இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும்-தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்-ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் – ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே-அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்-என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்-எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது 

———–
4-சௌலப்ய

சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில் சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம் ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பெறற்கு அரிய ஸ்வாமிகள்-ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை-உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –-எதிர் சூழல் புக்கு -என்றும் -என்னில் முன்னம் பாரித்து-சேதனர்களுடைய அத்வேஷ மாத்திரமே தேடித் திரிபவன் -சுக்ரீவம் நாதம் இச்சதி –கிம் கார்யம் ஸீதாயா மம -என்று இருக்குமவன்-ஆஸ்ரிதற்கு ஸர்வ ஸூலபனாய்-இன்னார் தூது என நின்று சாரத்யாதி இழி தொழில்கள் செய்து நின்றவனே பரத்வம் தோன்ற விஸ்வரூபம் காட்டி அருளினவன் –

—————
5-சாம்ய

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்-எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை-எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்-தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

பற்று -உண்டு சங்கம் –அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்று இலான்
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி -ஈஸ்வரனும்
ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்–நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்-அவனுடைய முற்றிலும் அடங்கு – எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி-நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து – நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது-அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு – அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று- மாதா மிதா ப்ராதா —-வா ஸூ தேவஸ் சர்வம் – உண்ணும் சோறு பருகும் நீர்-சேலேய் கண்ணியர்-

—————-

6-அஹங்கார இந்திரிய தோஷ பல-(அஹங்கார தோஷ)-(இந்திரிய பல)

ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ-
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
—৷৷3.27৷৷

தேகமே ஆத்மா எனும் அஹங்காரத்தால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன்
பிரக்ருதியைச் சேர்ந்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாகிற குணங்களால் பல வகைகளில் செய்யப்படும் கர்மங்களைக் குறித்து -நானே செய்கிறேன் -என்று மயங்குகிறான் 

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3-

அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-இவற்றை சவாசனமாகப் போக்கி-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

குந்தீ புத்திரனே அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும் மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன-இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் — பிரத்யனம் செய்தாலும் — இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
–7-1-6-

அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இறே -ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள் விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? 

—————-

7-மன பிராதான்ய

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்
–৷৷6.34৷৷

மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் – வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது-அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம்ஸயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் —
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
—৷৷6.35৷৷

பகவான் கூறினார் -நீண்ட கைகளை உடையவனே -மனம் அடக்க அரிது – அலை பாய்வது என்பதில் ஐயம் இல்லை -குந்தீ புத்திரனே – அதனைப் பயிற்சியினாலும் வைராக்யத்தாலும் கட்டுப்படுத்தலாம் –

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
–5-1-4-

பரமை காந்திகளே போலே -உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தை கொள்வன்-என்று சொல்லா நின்று வைத்து-வலிய களவாவது -சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார்-உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்–இப்படி நீ என்றால் உடை குலைப் படாத படி உன்பக்கலிலே நெருங்கும் படி சேர்த்து-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் 

————–

8-கரண நியமன

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –

தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–
৷৷6.12৷৷

பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் – மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால் மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் – சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

ஸர்வ த்வாராணி ஸம் யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச.–
மூர்த் ந்யாதா யாத்மந ப்ராணமாஸ்திதோ -யோக தாரணாம்—৷৷8.12৷৷

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநு ஸ்மரந்.–
யம் ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷

அறிவு வெளிப்படும் த்வாரங்களாய் இருக்கும் எல்லா ஞான இந்த்ரியங்களையும் -தமது தொழிலைச் செய்யாத படி –அடக்கி -மனத்தை ஹ்ருதய கமலத்தில் இருக்கும் அக்ஷர புருஷனான என் இடத்திலே அசையாத நிலையை அடைந்தவனாய் -ப்ரஹ்மம் ஆகிற எனக்கு வாசகமான பிரணவம் ஆகிற முக்கிய அக்ஷரத்தை சொல்ல நிற்பவனாய் -அதற்குப் பொருளான என்னை அநுஸந்தியா நிற்பவனாய் – தன்னுடைய பிராண வாயுவை தனது தலையிலே -தலையில் இருக்கும் ஸூஷ்ம்நா நாடி -வழியாகப் பிரவேசிக்கச் செய்து -சரீரத்தை விடுகின்றவன் எவனோ அவன் சம்சாரத்திற்கு திரும்பி வருதல் இல்லாத
ப்ராப்யமான ப்ரக்ருதி வியுக்தமான தன் ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறான் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்-ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து-வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்-

———–
9-ஸூஹ்ருதி பேத

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –(அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷-தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக
ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக –)ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
–4-1-1-

ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.
–4-1-8-

பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.
–4-1-10-

ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன – கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
இவை பத்தும்அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

————-

10-தேவாஸூர விபாக-

தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷

குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு-தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு –அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே )தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

த்வௌ பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு--৷৷16.6৷৷

குந்தீ புத்திரனே இந்த கர்ம லோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே
.–6-3-8-

தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
–10-7-5-

விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

———

11-விபூதி யோக

ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே–—৷৷10.19৷৷

குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே — ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

ஆதித்யாநா மஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவி ரம்ஸூமாந்.—–
மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்ராணா மஹம் ஸஸீ-–৷৷10.21৷৷

துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷

வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்-தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-

யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் ) அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ்நம் ஏகாம் ஸேந ஸ்திதோ ஜகத்-—৷৷10.42৷৷

அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன் நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—

புகழும் நல் ஒருவன் என்கோ!-(3-4)பிரவேசம்-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ்ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு –முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்- இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துஅதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-தமக்கு அவனால் அல்லாது செல்லாத படியும் அவனுக்கு தம் ஆர்த்தி தீர்க்க சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் தம் அபேக்ஷிதம் செய்யாமைக்கு அடி தம்மை இங்கே வைத்து தான் நினைத்த கார்யம் தலைக் கட்டுவானாக நினைத்தது என்றும் அறியாதே எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே -ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –

புகழும் நல் ஒருவனில் சம்சயம் -நல்குரவிலே விருத்த விபூதி-மாயா வாமனன் ஆச்சார்ய விபூதி ஆகாரம்

————-

12-விஸ்வரூப தர்சன

ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் – மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய் -பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

அர்ஜுந உவாச-
பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்-–৷৷11.15৷৷

அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
அவ் வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் – உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும் ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-

ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும்-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.-பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –கீழ் தூது விடுகிறவற்றுக்கு அங்குப் போனால் சொல்லும் வார்த்தையாக இவள் சொன்ன பாசுரத்தால் வந்த-ஆர்த்த நாதத்தாலே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தெல்லாம் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை அறிவிக்கைக்கு ஷமர் இல்லை என்று பார்த்து தம்முடைய ஆர்த்த த்வனியாலே அழைத்துக் கொள்வாராக நினைக்க
தம்முடைய ஜகதாகாரத்தையைக் காட்டி யருளி -நீர் என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று அருளிச் செய்ய ஜகத் சரீரியாய் இருக்கிற இந்த ஞான லாபத்தால் போராது -உன்னுடைய அசாதாரண விக்ரஹத்தை எனக்கு காட்டி அருள வேணும் என்று வைஸ்வரூப்யத்தைக் கண்ட அர்ஜுனன் -சதுர் புஜமாய் பிரசன்னமான வடிவைக் காண வேணும் என்று அர்த்தித்தால் போலே விடாய் எல்லாம் கெட சங்க சக்ராதி பூஷிதமான அப்ராக்ருதமான வடிவோடே தோற்றி அருள வேணும் என்று பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் இருப்பும் நிலை குலைந்து வந்து முகம் காட்ட வேண்டும் படி கூப்பிடுகிறார் – என்னுடைய ஆர்த்த த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் அழியப் புகா நின்றது -என்னுடைய ரக்ஷணத்துக்காக வந்திலையாகிலும் உன்னுடைய விபூதி ரக்ஷணத்துக்காக வாகிலும் வர வேணும் என்று கூப்பிடுகிறார்

————–

13-சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக – அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா -என்னை வணங்குவாயாக என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

(இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

இனி ஒப்பனை அழகு விவரணம்
அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

இனி கல்யாண குண விவரணம்

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

(இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

வேதாந்தேஷு — ‘வேதாஹமேதஂ புருஷஂ மஹாந்தம் ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (ஷ்வே0 உ0 3.8)‘தமேவஂ வித்வாநமரித இஹ பவதி.”நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ (ஷ்வே0 உ0 3.8)இத்யாதிஷு விஹிதஂ வேதந த்யாந உபாஸநாதி (ஆதி- நிதித்யாஸன )ஷப்த வாச்யஂ தர்ஷந ஸமாநாகாரஂ ஸ்மரிதி ஸஂஸந்தாநம் அத்யர்த ப்ரியம் இஹ’மந்மநா பவ’ இதி விதீயதே.மத் பக்தஃ அத்யர்தஂ மத் ப்ரியஃ அத்யர்த மத் ப்ரியத்வேந
ச நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதி ஸஂததிஂ குருஷ்வ இத்யர்தஃ. மத் யாஜீ தத்ராபி மத் பக்த இதி அநுஷஜ்யதே.யஜநஂ பூஜநம்? அத்யர்த ப்ரிய மத் ஆராதந பரோ பவ. ஆராதநஂ ஹி பரிபூர்ண ஷேஷ வரித்திஃ.

மாஂ நமஸ்குரு நமோ நமநஂ மயி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவம் அத்யர்த ப்ரியஂ குரு இத்யர்தஃ. ஏவஂ வர்தமாநோ மாம் ஏவ ஏஷ்யஸி இதி ஏதத் ஸத்யஂ தே ப்ரதி ஜாநே தவ ப்ரதிஜ்ஞாஂ கரோமி? ந உபச்சந்த மாத்ரஂ யதஃ த்வஂ ப்ரியஃ அஸி மே’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத் யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ (கீதா 7.17) இதி பூர்வம் ஏவ உக்தம். யஸ்ய மயி அதி மாத்ர ப்ரீதிஃ வர்ததே மம அபி தஸ்மிந் அதி மாத்ர ப்ரீதிஃ பவதி(என்னதுன்ன ஆவியில் -அறிவார் உயிரானாய் -அவன் மதம் தோன்றும்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்திலே பூரிக்கும் )இதி தத் வியோகம் அஸஹ மாநஃ அஹஂ தஂ மாஂ ப்ராபயாமி? அதஃ ஸத்யம் ஏவ ப்ரதிஜ்ஞாதஂ மாம் ஏவ ஏஷ்யஸி இதி.

(அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் -அறிந்தேன் அவனை நான் -வேத்யம் -இது ஒன்றே உபாயம் வெறும் அறிவு மட்டும் போதாதே –மனனம் த்யானம் அவிச்சின்ன தைலதாராவத்  நிதித்யாஸனம் மூலமே மானஸ ப்ரத்யக்ஷம் -தர்சன சமானாகாரம் -நினைவின் தொடர்ச்சியே தர்சனம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய இவை எல்லாம் ராக பிராப்தி இடைவிடாமல் சிந்திப்பதே விதி ஸ்ம்ருதி சந்தானம் நினைவு எதில் தொடர்கிறது அதுவே -நினைவின் தொடர்ச்சியே அவனைக் காட்டிக் கொடுக்கிறது மனன் உணர் அவை இலன் -மனசாது விசுத்தேனே –அறிய முடியாதவன் என்றே அறியலாம் -நின் புகழின் வைகும் சிந்தை -என்றதே இது நீ அருளும் வைகுந்தத்தை விட இதுவே இனிது -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -புகுந்தத்தின் பின் வணங்கும்  என் சிந்தனைக்கு இனியாய்-மத் பக்த வேட்க்கை மீதூறி -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் -)

(மத் பக்தோ மந்மநா பவ –மத் பக்தோ மத் யாஜீ –மத் பக்தோமாம் நமஸ்குரு.-பக்தியே ஒரே உபாயம் -அன்புடனே அனைத்தும் செய்ய வேண்டும் -பக்தி செய்ய அதே பத பிரயோகம் –இங்கு பக்தி அன்பு அத்வேஷ மாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்)

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய் இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்--৷৷18.62৷৷

அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

இவ்வண்ணமாக ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான மோக்ஷத்திற்கு உறுப்பான அறிவு உனக்கு என்னாலே சொல்லப்பட்டது – இதை முழுவதும் ஆராய்ந்து -உன் தகுதிக்கு ஏற்றவாறு எதை விரும்புகிறாயோ அதை அனுஷ்டிப்பாயாக –

ஸ்ரீ பகவான் உவாச —
இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே
ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-

ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்புற நெறிகளை கட்டு இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யறபறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தேதத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.
–5-2-9-

ஞான விதி பிழையாமே-வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது – பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று – கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
–9-1-7-

இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –-ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை –யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும்-வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

பக்தி உக்தராய் சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை -திகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் -சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

ச அங்க பக்தி –பிரபத்தி -ஆதிகள் -அவதார ரஹஸ்யம் -புருஷோத்தம வித்யை -நாராயணனுக்குக்கே எளியவன் போக்யன் இத்யாதிகள்

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந
—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

எவன் ஒருவன் இலையையோ பூவையோ பழத்தையோ நீரையோ எனக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறானோ – பரிசுத்தமான நெஞ்சுடைய அவனுடைய அத்தகைய அன்பால் இடைப்பட்ட அப் பொருளை நான் உண்கிறேன்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-

ஈசனை –இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது -எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்-நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘-கேவலம் தண்ணீரும் அமையும்-அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்-இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

——————

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

——

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –நின்மலமாக வைத்தவர் –எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து –என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது
-திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிணஅநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வபூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே-சேதன அசேதன சரீரியாய் –-சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா
-18-61- -என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று –சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

6 -சௌலப்ய –தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும் பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ -அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 –இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம் அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும்

11 -கரண நியமன –தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பரவசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 –தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும் தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று தேவாசுர விபாகத்தையும்

14 –விபூதி யோக –ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான்-10-21- –இத்யாதியால் விபூதி யோகத்தையும்

15 -விஸ்வரூப தர்சன –பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான் ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15-இத்யாதியாலே-விஸ்வரூப தர்சனத்தையும்

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -18-66- –ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

இவரும்–1-2 -3–ஜீவ பர பேதமும்-ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்-ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும் மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் –சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்-சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

6 –அவனுடைய சௌலப்யத்தையும் பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும் -பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 –அஹங்கார தோஷத்தையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

9 –இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

10 –மனோ பிரதான்யத்தையும் மனத்தை வலித்து –5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும் உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

12 –ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்-இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன்குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன் –திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 –தேவ அசுர விபாகத்தையும் அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்

14 –விபூதி யோகத்தையும் புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் –இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 –விஸ்வரூப தர்சனத்தையும் –நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

16 –சாங்க பக்தியையும் வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று-அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்-ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும்
உபதேசிக்கையாலே

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன –9-26– என்றார் போலே –பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில் வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

———————————-

அது தத்வ உபதேசம்-இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..

இப் பிரபந்தம் –தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

(தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
—৷৷4.34৷৷நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை ஞானிகள் இடம் அறிவாயாக – ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –)

இத்தால் சொல்லிற்று ஆய்த்து -அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும் மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும் இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..

(ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷)-இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்சேஷியாகவும் இருக்கிறேன்)

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷)எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

(திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
–2-2-1-)பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் – களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே-வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் )

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா -கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம் இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் )

(கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
–9-1-10-)கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் -அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –)

—————

அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச் சொன்னது-இது நாடாக தோற்றோம் என்று ஐ ஐந்து முடிப்பான் சொன்னது –அதாவது -அந்த பிரபந்தம்-அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று-ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே –ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

(ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—
৷৷1.32৷৷)கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை-கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ)

(அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது – உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று
நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது –ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்ககு தானே இவ்வளவும் அருளினான் )

(தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
மா மலையாவது நீர் மலையே–2-4-4-)வென்றி கொண்டு அல்லது மீளக் கடவது அல்லாத மதிப்புடைய பூசலிலே-தான்  ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும்-ஐவரோடும் – பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு-அவர்களோடு உறவு பண்ணி கலந்து –அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –)

இந்த பிரபந்தம் –தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..

(தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-)அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு -ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம்

(சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும்
தன் கண்கள் சிவந்தே–8-7-11-)சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து-ஜென்ம சம்பந்தம் அறும்படி இப்பத்தும் தன் கண்கள் சிவந்து நோக்கும் -அதாகிறது ஜென்மத்துக்கும் இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை -ஜென்மத்துக்கும் இப்பத்துக்கும் சஹா நவஸ்த்தான லக்ஷண விரோதம் உண்டு என்கை –)

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும்–கர்ம இந்திரியங்கள் ஐந்தும்-பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –)

இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

—————————————–

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது-இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது-..-சூரணை -192 ..-அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரியாழ்வார் திருமொழி –1-9-4-என்கிறபடியே ,சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்துநூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று

(நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி
தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக-அர்ஜுனனுடைய அழகியதாய் –திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான் –இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே – என்னைப் புறம் புல்குவான் )

(கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
—৷৷2.7৷৷)மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ-அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக)

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –உபதேச உபக்ரமத்தில் ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று மங்களாசாசனம் பண்ணி –உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை -இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

(ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
–2-2-2-இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் – என்றது என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால்போக்கி ரக்ஷிப்பார் யார் –ரக்ஷிப்பார் இன்னார் என்னாதே ஆர் என்கிறது பிரதிவாதிகளும் இசையை வேண்டும்படியான பிராமண சித்தி-தலை அறுப்புண்டும் தலையை அறுத்து பாதகியாயும்
நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே)

——————————————-

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –

அதில் சித்த தர்ம விதி -இதில் விதி அனுஷ்டானங்கள் -சூரணை -193

அதாவது-அந்த கீதையில் –மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது -இந்த பிரபந்தத்தில் –திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும்அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-இரண்டும் காணலாம் என்கை -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய் நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

(ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-)ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’-தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ-அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –

(அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)“அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், ஸ்வரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச் செய்கிறார்;-அமர்ந்து புகுந்தேனே –-“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே-ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்ய வேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார்-புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வ ஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம பாவத்தையும் ஸர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து,‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்-முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

——————————————–

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்-சூரணை -194- –

அதாவது அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து –இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே -ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் -இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..-ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

(பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-)தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை -வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்)

(மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-)பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை

(கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-)நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே -மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

———————————————–

ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம் –
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு ——–41-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி-

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அறியாததும் அறிந்ததும் -அறிவு பற்றி ஸ்ரீ அருளிச் செயல்களும் வியாக்யானம் ஸ்ரீ ஸூக்திகளும்-

September 4, 2025

இன்னார் என்று அறியேன் (10-10-9-)என்றவரே அறிந்தேன் நான் (11-3-3-)என்கிறார்

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன்
—10-10-9-

சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள் ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு -தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும்
மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே-அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-

நெருங்க கலந்த போதாக – இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –
காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது- ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி
நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன – ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –
யதோ வாசோ நிவர்த்தந்தே – யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே-பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )-திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் – நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்-இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ –நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –என் ஸ்வாமி யானவனே –ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்

அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும் இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?

அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி
இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,
உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே,
அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய்
ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,
அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்
கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய,
அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

உன்னுடைய கிரித்ருமங்கள் ஆக்கனான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே -நித்ய ஸூ ரிகளும் அறியார்கள் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திக் கொடு நிற்கச் செய்தே ஈட்டிய வெண்ணெய் தொடு உன்னைப் போருமவன் அல்லையோ-அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். -பழையாரை விடுகை உனக்கு பழையதாய் போருவது ஓன்று அன்றோ –நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.-நித்ய ஸூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த

ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காணப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது-அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? ‘நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே–ஸ அஷர பரம ஸ்வராட் – அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே பிரதானரோடு-பிரதானம் இல்லாதாரோடு-வேற்றுமை இல்லாதபடி சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை-இரண்டு பாசுரங்களாலும் திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார் –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
-9-3-3-நாலாயி:3805

அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –அன்றிக்கே-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும் ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-(என்றும்)ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி தைத்ரியம் -என்றும் -யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி (என்றும்) வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது என்னும் இவ்வளவே அறிந்தது –மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்-க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர – சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள் கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள் -அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே-வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்-வேதங்களும் வேத வித்துக்களும் போலே அன்றிக்கே தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்

—————————————————————

நாடும் நகரமும் நன்கு அறிய நமோநாராயணாய என்று – நாலாயி:4/3

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது – ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்
நன்கறிய –நன்றாக அறிய –-பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக-விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்

———————————

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே – நாலாயி:57/3

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறுதியேல்  சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் -1 4-4 –

உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3

மொய் செறிவு காயா மலர் நிறவா! கரு முகில் போல் உருவா! கானகம் மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா! துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயம் அறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – 1-5-6-

மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து-உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்த-மல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த-இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம்
அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் – நாலாயி:79/2,3

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பத்ம நாபா கொட்டாய் சப்பாணி -1 6-5 –

ஓடிப் போய் உள்ளே புக்கு – வைத்த நான் அறியாதபடி – சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் – தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன – நாலாயி:104/1,2

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து – இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/1,2

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – 

உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்
பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7- 8-

சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:198/3

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-223-232/(3-1)

அவனுடைய பருவத்தின் இளமையையும் – அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான  அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு – அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசந்தித்து – அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி – உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –தத் அவஸ்தா பன்னராய் கொண்டு – தாமும் அப்படியே பேசி –அந்த ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –

முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை-உனக்கு தாரகாதிகளாகவும்  நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன் நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –-என் மகன் அன்று -என்றும் – எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் – என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது – இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – நாலாயி:289/4

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை  உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே – 3-7- 4-

இவள் படி பார்த்தால் – முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்-அதாவது –
தாங்கள் கலந்து பரிமாறுகிற விஷயத்தின் ரசம் அறியாதாரை – உப்பறியா மூழையாய் – என்று லோகம் சொல்லும் பழ மொழிக்கும் யோக்யதை இல்லாதவள் காணும் இவள்-

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் – நாலாயி:290/1

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவ னோடிவளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்- அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே –திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் –இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்-சம்ஸ்லேஷத்தால் பிசகின திருத் துழாய் மாலையை சூடிக் கொண்டு –நாராயணன் என்னும் திரு நாமத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்(ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரிம் –கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )வியாபாரிக்கும் இடம் பல உண்டாகையாலே அவன் போம் இடமெல்லாம் –அவனைக் காண்கைக்காக ஆராய்ந்து திரியா நின்றாள் –அதாவது –
பசு மேய்க்கை –  பெண்களோடு கலக்கை –விளையாடுகை -தொடக்கமான வற்றுக்கு
அவன் வியாபாரிக்கும் இடங்கள் எங்கும் தேடித் திரியா நின்றாள்

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தித்
தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதி உடைத் தேவி யரசாணியை வழி பட்டு
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும் கொலோ -3- 8-3 –

பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி தாமோதரன் -என்றது – மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன்

நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து – நாலாயி:302/3

வேடர் மறக் குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழும் கொலோ
நாடு நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்  பற்றும் கொலோ – 3-8-6-

இரண்டு குடிக்கும் பழி வாராதபடி திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய்
அத்வீதியமான கல்யாணத்தை செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே – பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க-தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் – ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – நாலாயி:386/1

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு 
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த  தலைவா தாமோதரா என்று 
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் – இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு  அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த  குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே 

ஒற்றை விடையனும் நான் முகனும்  உன்னை அறியா பெருமையோனே-நாலாயி:426/1

ஒற்றை விடையனும் நான் முகனும்  உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

நுண் உணர்வில் நீலார் கண்டத்தானும் (6-10-10 )-என்கிறபடியே –ப்ரஹ்ம பாவனை தலை எடுத்த போது –அல்லாதாரைப் போல் அன்றிக்கே -தத்தவத்தை யதாவாக தர்சிக்க வல்ல –
ஸூஷ்ம ஞானத்தை உடையனான அத்வதீய ரிஷப வாகனனும் –யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை – (ஸ்வேதாஸ்வர ) என்கிறபடியே-அவ்யவதானேன திரு நாபி கமலத்திலே பிறந்து – பிதாவான தேவரீர் தம்மால் கொடுக்கப் பட்ட நாலு வேதங்களை உடையவனாய் – அமரர்க்கும் அறிவு இயந்து -என்கிறபடியே-இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் ஞான பிரதனுமாய் இருக்கும் ஏற்றத்தை உடைய சதுர் முகனும்-சர்வ காரண பூதனாய்- சர்வ ரஷகனாய் – சர்வ சேஷியாய் – சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 8-

அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்-(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது –போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர்  தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து  என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் -என்னுதல்(முந்நீர் ஞாலம் –முகில் வண்ணன் என்பதாலே – ச விக்ரஹனாயக் கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான் -என்றதாயிற்று ஆதியான உன்னுடைய ஜோதி என்றுமாம்
திருமேனிக்கும் சர்வ காரணத்வம் உண்டு என்றவாறு )

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த – நாலாயி:430/1

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:431/2,3

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )-அத்தால் வரும் குற்றமும் உம்மதன்றோ -என்ன –-அது விஷய தோஷம் – அகலகில்லேன் -என்றது -மார்வின் குற்றமானால் போலே –

உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன் – நாலாயி:435/3

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

மெய்ம்மை பெரு வார்த்தை கேட்டும் கேளாதானாய் போனான் அவன் கேட்டு விச்வசித்து இருந்தேன் நான் அன்றோ -என்ன-உம்முடைய விசுவாசத்தை நாம் அறியும் படி  என் -என்ன –-அறிதி அன்றே –சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –அரவத் தமளி

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே – நாலாயி:464/4

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

அமுதம் -ஜலம்- ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது -அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி-அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம்-வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே-(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் – அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் – இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை-என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது –

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்

கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த-எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே-எம்பெருமான் நந்த கோபாலா என்று ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லக் கடவதானால்- எம்பெருமாட்டி என்பது இவளை இறே-அந்த மிதுனத்தில் சொல்லுகிறது எல்லாம் இங்கே சொல்லுகிறார்கள் -ஸ்ரீ பூமி வல்லபன் ஆகையால் பிரதான மஹிஷிகளும் கும்பிடும் படி அன்றோ உன்னுடைய ஏற்றம் இருப்பது –ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே – ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும்
பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –சஜாதீயை யாகையாலே
வியதிரேகத்தில் தங்கள் நோவு அறியும் என்கிறார்கள்-நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்-கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவள் அன்றோ -நீ

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் – நாலாயி:494/3,4

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே-கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது – கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும்
உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்-பரம பதத்தில் வந்தோமோ –
வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ-இவனுக்கு உணர்த்தி யுண்டானாலும் பலத்தில் விளம்பம் இல்லை – வ்யபிசாரமும் இல்லை என்று இருக்கிறார்கள்-அறியாத போது இறே இத்தலைக்கு இழவும் வியசனமும் –அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே-அறிவுடையார் கார்யம் ஒரு பரம சேதனன் கையது இறே

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி-வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை –
ஸ்மாரகமாய் இருக்கை –உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே-ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்-நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-சீரிய சிங்கம் என்றதோடு – அறிவுற்று என்றதோடு – தீ விழித்து -என்றதோடு – வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –அறிவுற்றுத் –பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –சம்சாரி உறங்கும் போது தமோ அபி பூதனாய் -உணர்ந்தால் பராக் அர்த்த அனுபவமாய் இருக்கும்-இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து –

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

அறிவொன்றும் இல்லாத –இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –ஒன்றும் – பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை –
தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை – பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே – இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் – அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்-ஆக-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை – ந தர்மோஷ்டமி ந பக்திமான்-நோன்ற நோன்பிலேன்-குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி – இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை=அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –அறிவொன்றும் இல்லாத –என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது – நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்-1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை-3-அறிவு ஒன்றும் இல்லை-1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –-3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாகயுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –(கர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு)

அறியாத -இத்யாதி-கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –-அறியாத அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –பிள்ளைகள் -பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –

யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் – நாலாயி:520/2

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-

சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் –சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய பலத்தைப் பலிப்பதாக சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – நாலாயி:521/4

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-

கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே –கடல் வண்ணனே –-கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து – கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் – அப்படியே யன்றோ நீ 

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/4

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-

நீ மரம் ஏற வல்லாருக்கு முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் காண்-
அன்றிக்கே-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –-குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் – கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-
நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம்-மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய
சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் –

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே – நாலாயி:548/3

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –-சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில்-விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்-தன்னோடு கலந்த போது பொன் போலே திகழ்கிற வடிவும் தானுமாக நின்ற நிலை-பிரிந்த போதும் அவன் இருக்கும் படி தான் அறியாளே

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/2,3

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை – அதாகிறது -இன்றியமையாமை –ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம்-நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்-கச்சங்கம் –பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை-இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்–நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே – அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/2,3

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்12-1-

வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-ஏக தேச வாசமே போராது காணும் கோள்- எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு– நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- – தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது -சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது-தர்மி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ- இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-

உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி 

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் – நாலாயி:642/1

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே -14-6-

ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்-இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் – நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது – இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ-அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் 

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/2,3

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – நாலாயி:689/2

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று -குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – நாலாயி:698/2

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் – உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –உன்னை யல்லது நான் அறிவேனோ – என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே – நாலாயி:821/4

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவச்யமும்
போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவச்யமும்-பாரவச்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும் க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரிசம் பரமாத்மாந ம நா தி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி
நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –
ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து -அத்திருவடிகளில்-ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை
வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை-அறிந்து அறிந்து -என்று
சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் 

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து -பரம பக்தி உக்தனாக -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ ––சர்வாதிகனான தன்னிடையாட்டத்து –அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே –அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத நான் –

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம்
ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று
அறிந்து கொண்டேன் –

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே

புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –புறஞ்சுவர் -என்கிறது இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில் அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே சொல்லுகிறார் –ஓட்டை மாடம்
ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-(ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.) நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே க்ரமத்தில் செய்கிறோம் -என்ன
புரளும் போது அறிய மாட்டீர் – ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்–மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது – க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை  பணிமின் நீரே-9-

அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட
தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –
வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்
வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே-அவனை ஒழிந்த தேவதை களுடைய சத்பாவத்தை இல்லை என்கிறார் அல்லர் ஈஸ்வரனுக்கு பிரகாரமாய்க் கொண்டு அத் தேவதை களும் உளார் ஆஸ்ரயணீயர் அல்லர் என்கிறார்

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/2

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்-22-

ஆசு -குற்றம்-இனி இத்தை விஷய விபாகம் பண்ணிக் கொள்ளும் இத்தனை
அதாகிறது-உபாய விஷயமாக வரும் குற்றம் –அதாகிறது1-பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
2-அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –தான் உபாயமாம் இடத்தில் சஹாயாந்தர அபேஷை இல்லை –இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – நாலாயி:899/1

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே-28-

ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –அதயதத பரோ திவோ ஜ்யோதிர்த் தீப்யதே -என்றும் அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மகாத்மான -என்றும் -சொல்லக் கடவது இறே-ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று-அறியவும் முடியாது என்கை –

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய – நாலாயி:903/3

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய

மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே-32-

உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன – கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம் புண்ய ஷேத்திர வாஸம் இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் – இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34-

நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் கூட இருந்து அறுதி என்று –ஏகோ ஹமஸ் மீதி சமன்ய சேத்வம் -இத்யாதி
சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே இருக்கவா-நான் இவ்வமணக் கூத்து எல்லாம் ஆடிற்று -என்கிறார் –

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று-ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –
1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்
5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து-மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும் ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –-ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய்-ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –மேம் பொருள் மெய்ம்மை ஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் – நாலாயி:912/1

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே-ஆகா -என்கிறது-சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ –
மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சன அநந்ய கதி – என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் – என்று இருப்பார்க்கு அறியலாமோ –ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவனும் அல்லன் -என்னக் கடவது இறே-நீஞ்ச வல்லவனோடு நீந்த மாட்டாதவனோடு வாசி அற கடலை நீந்த ஒண்ணாதாப் போலே சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே அசாத்தியம் ஆய்த்து பகவத் வைபவம் இருப்பது – அநந்ய சாத்யே -என்னக் கடவது இறே –அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாய் – ஸூத்த சத்வமயமான விக்ரகத்தை உடையவனாய் இருக்கிறவனுடைய பெருமையைப் பார்த்தாலும் அவனே உபாயம் ஆக வேண்டும்-குண த்ரய வச்யனான இவன் சிறுமையைப் பார்த்தாலும் அவனே உபாயம் ஆகவேணும் – ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் அவனே உபாயமாக வேணும் 

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3

எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன் எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம் மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார் -ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார் அறிய இயம்புகேன்-நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும் தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடைந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம் –7–

அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் –-அவர்கள் ஜன்மம் அறியிகோள்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –அன்றிக்கே இவர் அவர் என்னீர்  -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி – நாலாயி:970/3

உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் யாயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –பரிமளத்தை வகுத்தாப் போலே இருக்கிற வண்டுகள்-முக்தர் சாம கானம் பண்ணுமா போலே அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடுகிறன வாயிற்று –

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –-ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம்-அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –-ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – நாலாயி:1030/2,3

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே—1-10-8-

நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்

குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள்என்ன ஒண்ணாதே –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க-அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே-பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம்

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/2,3

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து – நாலாயி:1121/2,3

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்

வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-

இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும்-ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-

——————————–

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-

ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை -அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை

நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/3,4

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் – அது ஒரு உக்தி மாதரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ – அறிகிறிலேன்

பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4

கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே – நாலாயி:1200/4

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய  நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-

அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் –
நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம்
அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –
மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-கூர்வாய சிறு குருகு ஆச்சார்யர் உபதேசம்-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்-நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் –
நாம் முடிந்து பிழைக்கும் படி —

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-

கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து – நாலாயி:1208/1

தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/2,3

திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே – அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை-நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு (சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் ) அன்றிக்கே அறியச் சென்று உரை –உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு – நாலாயி:1331/2

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி-வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்- இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ (அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் – நாலாயி:1333/1எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
—4-9-6-

விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன்-சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே
இப்படி இருக்க மாட்டு கிறிலேன்-அறிந்தவற்றைச் சொல்லில்-முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்—-தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்–தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் ––சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/1,2

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே

காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் ) இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே -அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

தாம் தம் பெருமை அறியார் தூது – நாலாயி:1358/1

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே  –5-2-1-

ஸ்வதஸ் சர்வஞ்ஞராய் இருந்தாரே யாகிலும் யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -( முண்டகம் ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை அறிந்தவர் -) பராஸ்ய சக்திர்  விவிதைவ ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல கிரியா ச -( ஸ்வேதாஸ்வரம் )-என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஓதா நின்றனவே யாகிலும்-ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-

தூரஸ்தனாய் சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி
இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-

பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   – அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/3

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய்  என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-

அனுசந்தேய பதார்த்தம் இன்னது என்று லோக யாத்ரையில் ஒன்றும் அனுசந்திக்கிறிலள்-அதில் மனஸ் சஹகாரமும் வேண்டுகிறது இல்லை-(ஏக தேசமும் -பெருமானையும் லோக யாத்திரையும் எண்ண மாட்டாள் ஆனால் திருவரங்கம் -மனஸ் ஸஹகாரம் வேண்டாதபடி வாயே கேட்க்கும் மனோ பூர்வ வாக் உத்தரம் நிலை கடந்து மனாஸ் அவன் இடம் போனதே

ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது (தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )-நாம்  அறிய இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ (தூறு வார வேண்டுமோ ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர் ஆஷேபமே இல்லையே)

அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-

நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –-என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே – இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது  –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால் இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ

அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-

ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ-வந்து – இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய் உபேஷிப்பானும் தானே யாவதே –
(பரம பக்தியை அன்றோ தீமை என்கிறாள் இத் தசை இருப்பதால் )

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-

அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – நாலாயி:1420/3

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

முதலை ஆனையின் காலை அன்றோ பற்றிற்று-புண் படுகிறது திரு உள்ளம் இறே
ஒரு வைஷ்ணவனுக்கு வந்த ஆபத்து தனக்கு வந்ததாக நினையாத அன்று வைஷ்ணத்வம் இல்லை என்று இருக்க அடுக்கும் – புத்ராதிகளுக்கு வந்த விரோதம் தனக்கு வந்ததாக நினையாத போது தேஹாபிமானத்துக்கு கொத்தையாமா போலே  –தேஹமாதல் இந்த்ரியமாதல் அன்றிக்கே பிராண ஸ்தானம் அகப்பட மலங்க-சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே-க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம் தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால் சரீரி பேசாது இரானே வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே-அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது – ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள் விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – நாலாயி:1421/2,3

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-

இத்தனை  தண்ணியனாய் இருக்கிறவனுக்கு நாம் அல்லது வேறு புகல் இடம் இல்லை
என்று நெஞ்சில் கொண்டு –-அதிகார பூர்த்தியும் சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது-சரண்யன் உடைய நினைவே இறே-இங்கன் அல்லாத அன்று -ஸ்ரீ பரத ஆழ்வான் பிரபத்தியும் பலிக்க வேணுமே –பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து-அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது-ந ஷமாமி-நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு-அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –உணர்ந்து நோக்கும்படி பண்ணி

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-

அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி
குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது
(பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே-திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் – நாலாயி:1435/1

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்  –

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/2,3

வங்க மலி பௌவ மது மா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்

நங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள் பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன்-ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –இவ்வருக்கு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே-என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று-நீயோ புத்ராதிகளோ ரக்ஷகம் என்கிற சம்சயம் தீர்ந்தேன்-சத்ருக்களை தமது வாள் வீசும் ஆழ்வார்-இப்பொழுது இவர் பெற்ற வாள்-ஐயத்தை வெட்டும் வாள்

தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே – நாலாயி:1473/4

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் – நாலாயி:1561/3

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்-சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே-பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )-திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7

ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு  –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் – அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை – அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/3,4

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் கரும மாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-
7-7-5-

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/3,4

உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே
–7-9-3-

சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே – நாலாயி:1631/4

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—
7-9-7-

உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –
அடியேன் அறிகிறேன் இல்லை – எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆயத்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான்

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் – நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் – தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ -அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –
அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்- இனி எத்தைச் செய்வது –

கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே – நாலாயி:1693/4

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே
 —8-5-6-

லோக த்ருஷ்டியான தான் கண் உறங்கினால் என் கண் உறங்க ஆகாதோ
(த்யுமணி -ஆகாசம் உலகம் இவற்றுக்கு கண் ஸூரியன் )தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே அந்த சந்த்யா காலமானது –-கரிய நாழிகை -அந்தி  காலம் –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  – இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே – நாலாயி:1695/4

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனி வெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும் கொடியதோர் கடு வினை அறியேனே –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-

பிராப்த யௌவனைளான திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் திருவடிகளை ஆசைப் பட்டு கிட்டாமையாலே –அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீடை புத்தி பண்ணி-அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்-இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ –நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –என் ஸ்வாமி யானவனே –ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/4

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது –சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபட(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )
கண்டேனுக்கு-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் 

தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/1,2

மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – நாலாயி:1766/2,3

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா —-9-2-9-

மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் – கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல்
நித்திலங்கள்
பவ்வத் திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே–9-4-3-

நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு
இத்தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில்-ஆசை அற்று வந்தால் அன்றோ-நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ – நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் – நாலாயி:1794/3,4

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்
–9-5-7-

அவன் பிரிவை உணர்த்தினான் –காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்
வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் – நாலாயி:1795/4

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை மநோஹாரி சேஷ்டிதங்களாலேஎழுதிக் கொண்டு  இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/2

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

வாக்யம் உக்தம்  தசாநன-என்கிறபடியே உனக்கு அவர் காலிலே விழ பத்துத் தலை உண்டு
அஞ்சலி பண்ணுகைக்கு இருபது கைகள் உண்டு அவரைச் சரணம் புக வல்லையே -என்றான் இறே விபீஷண ஆழ்வான் பத்துத் தலையையும் -வலியையும் -பெருமையும் உடையனாய் இருபது தோளையும் உடையனானவன் விஷய பிரவணனாய் தன் சம்பத்தை அழித்தான் – செய்வதொன்று அறியா வடியோங்கள்-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் – அறிவு கேடரான நாங்கள் –

யாயும் பிறரும் அறியாத யாமத்து – நாலாயி:1895/1

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப்  பெண் வந்து முலை தர
பேய் என்று அவளைப் பிடித்து உயிரை உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

பெற்ற தாயும் மற்று உள்ளவாள் ஒருவரும் இவர்கள் ஒருவரும் அறியாத நடுச்  சாமத்திலே –

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –உம்மை நீர் அறிய வேண்டாவோ – எங்களை அறிய வேண்டாவோ –

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2

அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான  மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-

ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –

இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/4

என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-

ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் – யதோ வாசோ நிவர்த்தந்தே –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் –
பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு

முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/1,2

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது-அஞ்ஞான அந்தகாரம் -உள் இருளும் வெளி இருளும் வந்ததும் விடுவதும் அறியாத காலத்தில் -முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ  என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட –

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1995/1

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே  —11-5-4-

மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே  சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று- மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-சர்வேஸ்வரன் பிரளயம் சென்று அடராத படி தன் திருக் கையாலே பரம பதத்தை
தன் கைக் கீழே இட்டுக் கொண்டு நின்ற காலம் -என்னவுமாம் –இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம் என்னும் இடம் அறியீர்களோ –(பத்து மாதம் தாய் வயிற்றில் இருந்து நாட்டார் சொல்வதால் தாய் என்று பிரதிபத்தி பண்ணுகிறீர்கள்-அவன் திரு வயிற்றில் நெடும் காலம் இருந்தும் அறியாதே இழந்து போகிறீர்கள் அவாந்தரா ப்ரளயத்தையும் மஹா ப்ரளயத்தையும்
அருளிச் செய்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் இத்தால்

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – நாலாயி:2011/2

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே  —11-6-10-

இப் பாட்டுக்கு இடையே பொருள்-திரண்டு பரந்த சோலைகள் உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –-இடையே பொருள் -த்வயத்தின் க்ரமத்திலே பல ஸ்ருதி அருளுகிறார் – (திரு மகளால் அருள் பெற்று பிராட்டியாலே பேறு -த்வயார்த்தம்
இடை -த்வயம்-இப்பாட்டுக்கு வியாக்யானத்துக்கு அவகாசம் காணாமல் இடம் இல்லாமல்
இடையே -த்வயம் -அர்த்தம் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார் )-சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் – உபக்ரமித்து –தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/4

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி-ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –

(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்  இறந்தேன் எத்தனையும்  அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!  சிறந்தேன் நின் அடிக்கே  திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/3

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே

ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை – யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும்  உண்டு அறியாள் உறக்கம் பேணாள்

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பி என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அம்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழி என்னும்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ! பாவமே–12-

என் கார்யத்தில் இவள் நின்ற நிலை -உண்ணாது உறங்காது– இவள் ஊனும்  உறக்கமே தாயின் உத்தேசம்–தன் ஜீவனம் தேடி போனாள் என் ஜீவனம் பறித்து போனாள்-திண்ணம் இவள் புகும் ஊர் -பராங்குச -உண்ணும் சோறு–எல்லாம் கண்ணன்  என்கையால் –
உண்டு அறியாள்- மறந்தாள்–சேர்ந்து இருந்தால் அவன் திரு நாமமே –

பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ அளவு கண்ட நெறி – நாலாயி:2084/3,4

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
———3–

நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/2,3

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி – நாலாயி:2095/1

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே –அவர் அவர் -என்று
அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும்
அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே
ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

———-
அடை ஆழி நெஞ்சே அறி – நாலாயி:2102/4–முதல் திருவந்தாதி -21-

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் – நாலாயி:2103/1

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு —22-

இது ஜகத் பிரசித்தம் அன்றோ நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –நாநா வர்ணமான சிறகை யுடையனான பெரிய திருவடியை நடத்தும்-ஸ்வ பாவனான யுன்னை –நிரபேஷரை நியமிக்கப் பிறந்தவன் நீ யன்றோ –

நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/2

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய

மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ-அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த் தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில் விழுந்த ராவணானவன் இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத் தன் திருவடிகளாலே கீறிக் காட்டி அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்-இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு  குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து – பாதமத்தால் எண்ணினான் பண்பு – எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று-தனக்கும் கூட ஹிதம் அறியாதே சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் – நாலாயி:2136/3

அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட் பட்டார் பேர் —
—-55-

அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இறே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத் தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த உலகு – நாலாயி:2141/3,4

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு
— முதல் திருவந்தாதி-60–

ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான
உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது-ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்-மூடோயம் நாபி ஜா நாதி – ஆப்பான் ஜீயரைக் கேட்க பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
பட்டர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-ந அஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோக₃மாயா ஸமாவ்ருத: ।மூடோ₄யம் நாபி₄ஜாநாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் ॥ –25-மனித உருக் கொண்டு இருக்கை யாகிற மாயையால் மறைக்கப் பட்ட நான் -உலகில் பலருக்கு –
பரமாத்மாவாக பிரகாசிப்பது இல்லை –

அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:2166/1
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – நாலாயி:2166/2

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே
கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே படி -என்று-திரு மேனிக்கு பேர்-இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-புட்கொடி கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு – நாலாயி:2168/4

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

யார் ஓத வல்லார் அறிந்து – நாலாயி:2186/4

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

கடலோதம் போலே இருந்து உள்ள திருமேனியை உடையனாய் வளர்ந்தவனே –
வ்யாமோஹத்தை உடையவனே-உன்னுடைய சௌலப்யத்தை அறிந்து-சிலராலே ஆஸ்ரயிக்க போமோ-இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்-த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-

பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே-பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்-அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்-என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் 

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

சப்தாதிகள் த்யாஜ்யம் என்று அறிந்து-விஷயங்களில் நின்றும் இந்த்ரியங்களை மீட்டு
பிரத்யக்காக்கி-கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-செவ்விப் பூ கொண்டு-அபிநிவேசம் நெருங்கின மனசை உடையராய்-நாம் சேஷம் -அவன் ஸ்வாமி என்னுமிடத்தை அறிந்து-அவனுடைய திரு நாமங்களை சொல்லி
ஏத்துகிற பாக்யவான்கள்-

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/1,2

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்-என்னும்படி விசதமாக அறியான் ஏலும்-அறிந்து அனுஷ்டான பர்யந்தமாக செய்து -அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்-இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்-ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்-என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/2,3

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

தேவதாந்த்ரங்களிலும் விஷயாந்தரங்களிலும் நன்மை தீமை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பவர் இடம் நமக்கு சம்பந்தம் வேண்டாமே-நெஞ்சே நீ பெரியார் கோடியிலே இரு
பேராளன் பேரோதும் பெரியோரை -என்னும்படி ஒருவனோ என்கிறது-மாஸூச -என்னும்படியே-சிறியராயும் அறியாதாராயும் இல்லாமல்-பெரியவராயும் அறிந்தவனாயுமே இரு என்று உபதேசிக்கிறார்)

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/2

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து –நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

கழஞ்சு பொன் உண்டு என்று அறிந்து சர்வேஸ்வரனைப் பற்றி நிர்ப் பரராய் இருப்பாரைப் போலே இராதே-தமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து-நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீயபதி என்னும் நெஞ்சைப் படைத்தது அம் மிதுனத்துக்கு வாசகமான
சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது-

ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை – நாலாயி:2220/2

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம்
லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத – நாலாயி:2221/3

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

அர்த்த சுகம் சுகம் உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும் சர்வேஸ்வரனுடைய திருவடிகளை அறிந்து இருக்கச் செய்தே அறிந்ததாக ஒட்டாத போகத்தால்-பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் –மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52

ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் நீல மேகத்திலே மின்னற் போலே பிராட்டியை திரு மார்பிலே உடையவனாய்-அவளோட்டை கலவியாலே ஆன்ரு சம்சய பிரதானனான் ஆன படியை யார் அறிவார்-யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்-அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்-மிதுனத்தில் அழகை யார் அறிவார்-ராவணனோ பாதியும் வதத்துக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும் இவன் பக்கலிலே ஔதார்ய குணம் கிடந்தது என்று
மன்வந்தரம் பூர்ண மபேத சத்ரு -என்னும்படியே மேல் இந்திர பதம் செலுத்துவதாக வைத்தவனுடைய ஆன்ரு சம்சயத்தை யார் அறிவார்-

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

ஆஸ்ரயித்தவர்கள் உடைய முன்னின்று பின் தாழ்ந்த குழல் கற்றையை அறியாதே
ஒரு சிறுமலை என்று எண்ணி மூச்சு விடுதல் உடம்பாடுதல் செய்யாமையாலே
இன்ன மலை என்று அறியாமையாலே பூக்களை உடைத்தான கொடிகள் தங்குகிற
பொரா நின்ற புனலை உடைத்தாய் இருந்துள்ள மலை என்கிற திருவேங்கடமே நாம் ஆசைப்படும் மலை ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

(ஓர் -ஒப்பற்றது ஆஸ்ரித பாரதந்த்ரத்தால் அத்விதீயம் )எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்பூமியை முறை குலையாமல் காப்பார்

பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் – நாலாயி:2243/1

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று சத்வோத்தர காலம் அறிந்து-குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு அதில் செவ்விப் பூவை அரிந்து கொண்டு ஏத்தா நின்றது

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை
-அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இன்றாக அறிகிறேனோ – இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் – பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ –பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –பண்டே சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதையும் இல்லாத அன்று –கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்த கண்டேன் –அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அன்வயிக்கப் பெற்றேன் -திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே   பூரணமாகக் கண்டேன் –அறியாக் காலத்துள்ளே -அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3-கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்ய -1-21-
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -பார -சாந்தி -358-73-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை நீக்கிச் செல்லுமவர்களுக்கு நித்ய ஸூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் – தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்-மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்-

நூல் கடலான் நுண் அறிவினான் – நாலாயி:2292/4

நன்கோது நால்  வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —மூன்றாம் திருவந்தாதி-11-

வேதத்திலே மிகவும் வாசனை யுடையாராய் உள்ளவர்கள் உடையஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே பிரதிபாத்யனாய் உள்ளான்-ஆதரமாக உரைக்குமவர்களாலே இதிஹாஸ் புராணங்களாலே பிரதிபாதிக்கப் படுமவன் -கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் -என்றுமாம் –

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் –நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

இறையினுடைய வடிவானது வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம்-இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும்
கருத்து இருக்கும் பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது-பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –இது தான் நம்முடைய ஞான வைகல்யத்தாலே வந்தது ஓன்று அன்று –

வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் – நாலாயி:2340/1

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

அழகும் சம்பந்தமும் பிராப்தியும் புருஷகாரமும் இருக்க இங்கேயே வாழ்ச்சி உண்டே-
திருவேங்கடத்தானையும் திரிவிக்ரமனையும் சொன்னவாறு

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை – நாலாயி:2382/3

ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் – நாலாயி:2383/2

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை –ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –-நான்முகன் திருவந்தாதி2-

நிரூபித்தால் ஈஸ்வரன் ஒருவனே என்று சொல்லா நிற்பார்கள் –
எத்தனையேனும் அளவுடையாரும் அவன் பெருமையை யுள்ளபடி அறியார்கள் –
ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும்
எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

அரு பொருளை யான் அறிந்த ஆறு – நாலாயி:2384/4

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை -சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –

————–
அரு நான்கும் ஆனாய் அறி – நாலாயி:2386/4

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் – நாலாயி:2387/1

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

சமணர் என்றும் அறியார்

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-நான்முகன் திருவந்தாதி -13-

மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும்
வேதை க சமதி கம்யனுமாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-நற்பொருள் ப்ராப்யம்-மெய்ப்பொருள் பிராப்பகம்
பெற்றி பிரகாரம்

மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் – நாலாயி:2431/2

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் -திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது – திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் -எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும்
கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –

உன்னை பிறர் அறியார் என் மதிக்கு – நாலாயி:2432/3

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பகவத் ஏக போகனான என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை-எம்பெருமானும் தன் ஐச்வர்யத்துக்கு தானே ஒப்பாம் இத்தனை யல்லது ஜ்ஞானத்துக்கு என்னோடு ஒவ்வான் -தன்னிலத்தில் நின்ற காயம் பூப் போல நிரதிசய போக்யமான திரு நிறத்தை யுடைய வுன்னை வேறு அறிவார் இல்லை –உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக-நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்-இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-இதம் விஷ்ணோர் விசக்ரமே-த்ரீணி பதா விசக்ரமே-விசக்ரமே பிருத்வீ மேஷா ஏதாம் ஷேத்ராய விஷ்ணு-த்ரிர் தேவ ப்ருதிவீ மிதி ப்ரவிஷ்ணு விஷ்ணோர் நுகம் –விசக்ரமாணஸ் த்ரே தாருகாய உபே தே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே
ஸம் நோ விஷ்ணு ருருக்ரம விஷ்ணு க்ராந்தே வஸூ ந்தரே உத்த்ருதா அஸி வராஹேண கிருஷ்ணேந -என்ற வேத கோஷங்கள் உண்டே )

தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் 

பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –அது எங்கனே என்னில்-போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே  முடிக்கிறார்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்-சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும் அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே – நாலாயி:2484/4

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – நாலாயி:2485/2,3

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

ஹர்ஷ ஹேதுக்கள் எல்லாம் நிற்க நெஞ்சு தடுமாறுவது-அஞ்சலி பண்ணுவது
பாத உப ஸங்க்ரஹணம் பண்ணுவதாகத் தொடங்கினான்-அதைக் கண்டு -நீர் தாம் இப்போது எங்கு இருந்து தான் இவை எல்லாம் செய்கிறது தான் -என்னுமே இவள்
பிறருக்கு சேஷ பூதராய் இருப்பாருக்குப் போக்கு உண்டோ-பிரியேன் பிரியில் தரியேன் -என்றால் போலே சொல்லத் தொடங்குமே இவன்-தாத்ருசமான சேஷ்டிதங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே-இத்தால் சொல்லிற்று ஆயிற்று-நித்ய அனுபவம் ஆனாலும் பிரிவுக்கு சம்பாவனை இல்லை என்றாலும்-பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

ஓர் ஆனை இங்கனே போந்ததோ என்று சொல்ல ,மனோ ரதித்து  கொண்டு,வந்த இவன்
இவர்களை கண்டு கலங்கி ,-உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போல,இக் கண்களை கயலோ என்கிறான்..-முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,
இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் , வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த  படி..இது இவனுடைய மற்று ஒன்றைக் காணாவே-தன்னையும் அறியாதே விஷயத்தையும் அறியாது இருப்பார்கள் என்று சொல்லுமா போல,-(முதல் வார்த்தை கயலோ நும் கண்கள்-இரண்டாம் வார்த்தை களிறு வினவி-மூன்றாம் நிலை ஸ்தப்த்தோஸி -பேச முடியாத நிலை-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் —பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது(தாத்பர்யத்தால் இவர்கள் அவனுக்கே அற்று அநன்யார்ஹை என்கிறார்கள் )அறியிலும்-அறியக் கூடாது என்று இருக்கிறாள்-இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –இன்னார் என்று அறியேன் என்பாரை போலேகிட்டின போது சம்சயமாய் ,உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்-இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது-ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம் அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து-தோழி அசல் அறியில் செய்வது என் -என்று துணுக்கு என்ன அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை என்கிறார்

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை – நாலாயி:2551/2

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

ஸ்ரீ மத்தாய் அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்-அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்-ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4

கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து – நாலாயி:2578/11

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற கடலிலே-அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி –அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்–சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும்-இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –-ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் –திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல்
தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–

பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/2,3

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்
கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

பழையதாக அறியாதே போருகிற என்னை-ஒருத்தனுக்கு திங் மோஹம் பிறந்தால்
வழி அறியுமாவன் நீயேயோ என்னக் கடவதோ-வழி காட்டி விடக் கடவனோ
பதஸ் ஸ்கலிதம் (நல்ல மார்க்கத்தில் இருந்து நழுவும்படி ) என்னும்படி இறே
என்னுடைய அவஸ்தை-மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ-

தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் – நாலாயி:2598/3

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்
(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் )
ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்-பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே

ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து(வெட்டவும் நினைக்கவும் முடியாது -அநர்த்தத்தை-ஸ்வரூப நாசம் அடையுமே ) அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து
அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை

சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – நாலாயி:2600/4

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

நீ இப்படி எளியையாய் அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்-ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால் ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை-வேதமும் பேசப் புக்கால் தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் – சூழ்ந்து -விசாரித்து

சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே – நாலாயி:2603/1

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பகவத் விஷயத்தைப் பேசப் புக்கால் பேச்சில் குறையில்லை-பேசி முடியாது-எத்தனை பேசினாலும் விஷயத்தைப் பரிச் சேதிக்கப் போதாது என்றபடி (பேசினார் பிறவி நீத்தார் பேருளார் பெருமை பேசி யதோ வாசோ நிவர்த்தந்தே )பகவத் விஷயம் நன்று என்றும்
விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே சூது -விரகு
(விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/4

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று -பெரிய திருவந்தாதி—27-

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் – நாலாயி:2615/1

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு– பெரிய திருவந்தாதி31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்(அடி தாறு -பாதுகை யாதல் -பாத ரேகை யாதல்
பாதுகை யானது எப்படி என்ன அருளிச் செய்கிறார்-இரண்டுமே திருவடிக்கு அளவாகவே தானே இருக்கும் )அடி தாறு -அடிக்கு அளவாய் இருக்குமது

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ – நாலாயி:2617/1

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –-இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே – நாலாயி:2621/1

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே-யுக்தமான அறிவுடையாராகை கிடையாது
ஆமாறு -ஆறு -வழி-நாமே யதுவுடையோம்-நாம் நல்ல அறிவுடையோம்(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு

அறியும் தன்மையை முக்கண் நால் தோள் – நாலாயி:2672/19—-ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை – நாலாயி:2672/28
-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45

சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் – பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே-திருவடிகளை வருட – ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட பணங்களை யுடைய -திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே தூங்கு தொட்டிலைப் போலே-ஆகிற படுக்கையில் ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3

தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்-இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க-தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன்-இந்த்ரன் படி கேட்கிறாய் -வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே-அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/3

ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே-அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –

கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684/4

அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி
எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள்-இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும்
நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-

என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5

இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை –
நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை-ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –ஆரேனும் ஒருவர் இப் புருஷார்த்தத்தைப் பெற்றார் என்று கேட்டு அறிவது இல்லை –பிரமாணங்கள் சொல்லக் கேட்கும் அத்தனை –
ஸூ கோ முக்தோ  வாமதேவோ முக்த -என்று வசனங்களைப் படிக்கும் இத்தனை அல்லது-கண்டு போந்தார் உண்டாகச் சொல்லுவார் இல்லை – இன்னார் பெற்றார் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – ஸூ க வாம தேவாதிகள் முக்தர் என்று சொல்லா நின்றதே
கேட்டு அறியத் தட்டென் என் என்னில் -நான் போனேன் இன்னபடி அனுபவித்தேன் என்று அங்குத்தை  யாவர் படியைக்-கண்டு வந்தார் சொல்லக் கேட்டு அறிவது இல்லை –

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2

அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18

தந்தாமுக்கு என்ன ஒரு விவேகம் இல்லாத அறிவு கேடர்-இப்போது அறிவில்லை யாகிலும் மேல் அறிவு உண்டாகைக்கு ஈடான நெஞ்சில் அகலமும் இல்லை-அவ் அவஸ்தா பன்னர் ஆனவர்களை கற்பிக்கை நமக்கு பரமாவதே – கையிலே மடலை எடுத்துக் கொண்டு-இரண்டு அருகு உள்ளாறும் மலைக்க பெரிய திரு நாளில் போலே உலாவித் திரியலாய் இருக்க-அவ்வறிவு கேடரை அறிவிக்கை நமக்கு பரமாவதே –

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4

அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –அப்படிப் பட்ட அது தன்னை நாங்கள் இகழ்ந்த மிலேச்ச ஜாதிகளிலே அப்பாஷையிலே கேட்டுப் போருவது உண்டு அத்தை  அபிமத விஷயத்தைப் பெற்று அல்லது தரியாத நாம்
அனுஷ்டேயமாகத் தேறோம் –

முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3

ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/4,5

மின்னாய் இளவேய்   இரண்டாய்    இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79 அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80

மௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை-அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம்-இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் -கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-

மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர்   இல்லையே -மால் விடையின்  ———92

போக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே எனக்கே  தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும்   படி –இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –தப்பாத மருந்து –அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ  -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இ றே-இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான  பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இறே –மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1

தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108

ஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும் தன்னுடைய ஐஸ்வர்யமான மேன்மையில் ஒன்றும் குறையாமல் செய்தது இறே அது – இது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இறே-அந்நீர்மையும் அழிய விறே புகுகிறது-அதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக-கோசஹச்ர  ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –பிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு

தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2

தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121

சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்-
பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-ஸ்ரமஹரமாயிருக்கிறவனை –

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4

உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1

உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148 மன்னிய பூம் பெண்ணை மடல் –

நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி –எனக்கு –உற்ற -சித்தித்த பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் – ஓன்று அறியேன் – எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் – முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வு -விரகு –

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின -இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின-அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் –

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு – நாலாயி:2815/2

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – 

தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- 

எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம –  பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யட்ஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் – நாலாயி:2875/2

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர் பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு   யாதொன்றும் பற்று இல்லையே – – 85- 

வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் -வேத வேத்யே பரே பும்சி -என்றும் -வேதே ராமாயனே புண்யே  -என்றும்-ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் – உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே-என்றும் சொல்லுகிறபடியே- வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் -ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் –-என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை -பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே 

தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – நாலாயி:2887/3,4

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே
– – -97 –

தம்மை ஆஸ்ரயித்து இருக்குமவர்களை காட்டில் – ஸ்வ சம்பந்த சம்பந்திகள் விஷயத்தில் கிருபை- அதிசயித்து செல்ல வேண்டும்படியாய் இருக்கும் -ஆகையால் இறே –
த்வத் தாஸ தாஸ கண ந சரமாவதவ் யஸ் ஸ்வத்தா-சதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஸ்ரீ ஜீயரும் பிராரத்து அருளினார் இறே – இப்படிப் பட்ட ஸ்வபாவத்தை அறிந்து ஆஸ்ரயித்தார் உடைய-தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே – பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து –இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –

அவரவர் தமதமது அறிவு அறி வகை வகை – நாலாயி:2903/1

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே
அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என
அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்
அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/3,4

ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி
பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து
இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி-அன்றிக்கே – வியத்தில் – கடத்தலும், கொடுத்தலும் ஆகையாலே, அறிவைக் கொடுத்து என்னவுமாம்.-யோ ப்ராஹ்மணம் விதாதா பூர்வம் -(‘நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்;-அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்

அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே – நாலாயி:2923/4

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ
பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி
நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்
ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள்
சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்
இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

ஏகாத்ம பிரகாரம் என்றும் -அநேகாத்மாதிஷ்டிதம் என்றும் -ஒருவன் பிரதானன் என்றும் தனித்தனியே பிரதானர் என்றும்-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற-மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே- அதிஷ்டித்துக் கொண்டு – நிலை பெற்று நிற்கிறானோ, அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலை பெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளை யுடையராய் நிற்கிற.-இனி,ஏகாத்ம அதிஷ்டிதமோ – ‘ஓர் ஆத்துமாவின் நிலை பேறோ,-அநேகாத்மா அதிஷ்டிதமோ – பல ஆத்துமாக்களின் நிலை பேறோ? என்று அறிய அரிதான தன்மையினை யுடையராய் நின்ற என்னுதல்.

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்-அவ்யவதாநேந- நேரே தன் பக்கல் பிறந்து, தான் ஓதுவிக்க ஓதி, அவற்றாலே ஞானத்தில் குறைவு அற்று
இருக்கிற பிரமன் முதலானவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருப்பான்.

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை 1-5-7- நாலாயி:2949/1

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார் சிறிய ஞானத்தன் அல்ப ஜ்ஞானத்தை யுடையவன் அறிதலார்க்கும் அரியானை ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன் ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறேபர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே –

அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து – நாலாயி:3032/3

சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஆசாரியனாய் இருந்து விரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து –சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத -ச ஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும்,
ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின்,
தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-

அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து – நாலாயி:3033/1-அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – நாலாயி:3033/2
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று – நாலாயி:3033/3
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/4

பால்யாத் பரப்பிருதி ஸூஸ் நிக்த ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, -அறிவு நடையாடாத பருவத்திலே —அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற – அசித் ஸம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற -அடியேனை வைத்தாய்.-இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார்,‘அடியேனை’ என்கிறார். -தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு -நிதர்சனம் -எடுத்துக்காட்டு ஒன்று அருளிச் செய்கிறார் மேல்:
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று –
நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 
‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே,
‘நிலம் மாவலி மூவடி’ என்ற-அன்வித பாஷாணம் இல்லாத – பொருத்தம் அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது?-சுக்கிரன் முதலியோர் ‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்;-உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’ என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய்.-அப்படியே, எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.-‘அறியாமையிற் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா மாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்று அந்வயம் –

பட்ட போது எழு போது அறியாள் விரை – நாலாயி:3050/1

உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில்,-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.-ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள்.

பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–2-6-2-

பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான-அதிமாத்ர ப்ராவண்யத்தை – அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’
என்று அருளிச்செய்தார்.

தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இ றே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –

ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழிவண்ணனையே – நாலாயி:3086/4

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

ப்ரஹ்மாதிகள் சொல்லுவது-அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ-உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்-யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் – ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ-அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது – ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் – நாலாயி:3107/1,2

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

ஆத்மா ஸ்வரூபம் அறியாமல் -யாதாம்ய ஞானம் இல்லாமையாலே-ஸ்வ தந்த்ரன் -என்னை ஒழிந்தவை என்னுடைமை என்றும் அடியேன் உனக்கு -இவை எல்லாம் உனது என்று இல்லாமல்-இருந்தேன் -முடிந்தேன் -சொல்லாமல் -இன்னும் இருக்கிறேன் -ஆத்மா அழியாதே -ஆத்மா நித்யத்வமும் -அனர்த்தமாம் படி ஆனதே-

இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ
உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ -ஜடை கழற்றாதே சாதக வேஷத்தோடு இருக்கச் செய்தே கலா மாத்ரமான சந்த்ரனைத் தரித்துக் கொண்டு சுப பிரதானனாய் இருக்கிற ருத்ரனும்
அவனுக்கும் கூட ஜனகனான சதுர்முகனும்-இவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்கிற இந்த்ரனும் நீ ஸ்வாமியான முறை அறிந்து ஏத்த -அத்தாலே என்னுடைய வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தாய் என்றால் இது உனக்கு விஸ்மயமோ –
ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-

கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ – நாலாயி:3155/1

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2-

பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் –
இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்-பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச் சொல்லுகிறாரல்லர்;
பகவானுடைய திருவருளால் வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய அறியக் கூடியவாயிராநின்றன. ‘பின்னை என்னை?’ எனின், பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன் என்கிறார்.-கூவ கூவ நீ போதியேல் -பெரியாழ்வார் –
அன்றி, ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால் பேச மாட்டுகின்றிலேன் என்கிறார்,’ என்னுதல்.

எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-

இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-யாவையும் எவரும் தானே.– சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்-உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார்.-அருவாகி நிற்கும் – அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-
சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –அவர்கள் பிரதம ஜாயே புராணா-என்னும் படி இறே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.– இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் – பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே-மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்-

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/4

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

எனக்கு அந்தராத்மா பூதனாய் தாரகனானவன் -தனக்கு சரீரமான என்னுடைய ஆத்மாவை
ஸ்துதிப்பித்து உகப்பித்து விரும்புகிற பிரகாரம்-நான் பரிச்சேதித்து அறிய மாட்டு கிறிலேன்
அறிவும் ஆழங்கால் படுகைக்கு உறுப்பாயிற்று -என்று கருத்து –விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்
ஏஷ ஹ் யேவா நந்தயாதி –வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் –சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப்பேறாகத் தலையால் சுமப்பதே-உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ-உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம்–வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, -தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே-இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,-நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,-தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,
‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,-எப்பொழுதும் உடனிருத்தலை யுடையனாவது;-இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய்-நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல்.-1-நாராயணா -பிராப்தம் உண்டு
2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்-3-துப்பன் -சர்வசக்தன்-4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்-5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்-அவி நீதம் நிர் லஜ்ஜம் நீர் தயம் பரம புருஷம் -ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் -இந்த பாசுரம் அடியாக அருளிச்ச செய்தது

அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும் இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?

அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி
இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,
உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே,
அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய்
ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,
அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்
கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய,
அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே – நாலாயி:3312/4

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
-4-8-5-

பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படியன்றோ இங்கேவேரூன்றினபடி?’ என்றவாறு. கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம். 1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது? 

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/1,2

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –
அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இ றே இருப்பது-இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த-சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று
கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லு முகத்தாலே அவதார ரஹஸ்யத்தை உபதேசித்து,
பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு
பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று,
பின்னர், ‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், ‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து, என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, ‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி, அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி, இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி, அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும் தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.

ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே – நாலாயி:3320/3

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன்-நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
றப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார்-தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு;
நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து. ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள். -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம் ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார் -அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் -பொருளை -சொத்தை -அற அறிந்து -நன்றாக அறிந்து என்று கொண்டு – செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’– இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்-மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து.-சத்ய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச் செய்து வைத்தான்; அதனை அறிந்து, அவ் வழியாலே அவனைப் பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது, ‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில், அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’ என்றபடி.

மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

அபிமதர் வாரா விட்டால் முடிகை இறே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன்-இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்து போதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன். -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான – பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுதுமுடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/4

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம். வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ. இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே, தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.

இதனைக் கற்று அறிய வல்லவர்.-அறியக் கற்கையாவது, ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய சூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள். வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.-மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய சூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் —தன் பேறாக அவன் நினைக்க -இவரும் தன் பேறாக என்னை அடிமை கொள்ள அங்கு வந்து இருந்தாய் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –நீ இவ்வளவாக செய்த உபகார பரம்பரைகளுக்கு நான் ஒன்றும் செய்ததாக அறியேன் -பண்ணுவதற்கு ஏதும் இல்லை-ஏதும் இல்லை முன்னும் பின்னும் -குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் போலே காரணமாகவும் ஏதும் பண்ண வில்லை பிரதியுபகாரமாகவும் ஏதும் பண்ண வில்லை முன்பு உபகரித்ததுக்கு ஹேது என் பக்கல் கிஞ்சித் உள்ளது என்று சொல்ல முடியாதே ஆகவே நீயும் மேலும் நிர்ஹேதுகமாக அருள வேண்டும்-ஹேது இல்லை -ஆனால் -வாங்கிக் கொள்ள நீர் இருந்தீரே -என்றும் சொல்ல முடியாதே வஸ்துவாகவே நான் இல்லையே -நீர் தான் வஸ்து ஆக்கி அருளினீர் மேல் உள்ளவற்றையும் நீயே செய்து அருள வேண்டும் என்கிறார்

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

அனுபவிப்பாருடைய சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கிற படி -மிடற்றோசை கர்ம அனுகுணமாக போது செய்யும் -அத்தை வ்யாவர்த்திக்கிறது-ரசனைக்கு போக்யமாய் இருக்கிற படி-ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி-கண்ணுக்கு முகக்கொள்ள ஒண்ணாத போக்யதையை யுடையவனே
இங்குள்ளாருக்கும் அங்குள்ளாருக்கும் உன்னை அனுபவிக்கக் கொடுத்து நிரதிசய போக்ய பூதனாய் இருக்க -நான் இந்திரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம் அகன்று இருக்கக் கட வேன் –

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே-. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு
அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

முதலிகள் என்னா -அபிபவித்து வார்த்தை சொல்லாதே கொள்ளும் -நெஞ்சில் மறமுடையார் சொல்லுமது வார்த்தை என்று -உங்களை ஒழிய சாக்ஷி உண்டோ –என்ன –உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல் –சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ. மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.
‘இவ் விடையாட்டம் இரண்டும் அறியாதாரையோ சான்றாகச் சொல்லுவது?
அறிவினால் குறையில்லாத அகல் ஞாலம் அன்றோ இது!’-திருவாய். 4. 8 : 6.-என்றான்.
‘விண்ணும் நன்கு அறியும்’ என்கிறார்கள்.இது எல்லாம் வேண்டா -நான் பொய்யன் என்னும் இடத்துக்கு ஒரு சாக்ஷி காட்டிக் காண் என்ன

மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

உன்னுடைய கிரித்ருமங்கள் ஆக்கனான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே -நித்ய ஸூ ரிகளும் அறியார்கள் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திக் கொடு நிற்கச் செய்தே ஈட்டிய வெண்ணெய் தொடு உன்னைப் போருமவன் அல்லையோ-அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். -பழையாரை விடுகை உனக்கு பழையதாய் போருவது ஓன்று அன்றோ –நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.-நித்ய ஸூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.–6-9-7-

சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ.–ஆகிஞ்சன்ய புத்தியை அறிவில்லை என்கிறார் –ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்-

பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/4

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்-அநந்ய கதியாய் உன்கை பார்த்து இருக்கிற நான் -நெஞ்சு கலங்கும்படியாக-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ -புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இ றே

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது;-ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,-‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.-‘இவள் கலந்த அன்று உறங்கினாலும், இவள் இப்போது படுகிற நோயினை அனுபவித்த
திருத் தாயார்க்கு அது ஒன்றாகத் தோற்றாதே!’ என்றது,
‘இந்த நோய்க்குப் பூர்வாங்கமாய் வந்தது ஒன்றாகையாலே அதனை ஒன்றாக நினைக்கின்றிலள்’ என்றபடி. பூர்வ ரெங்கம் -ஒத்திகை போலே -பாவி நர்த்தன ஸூசக பூர்வ பாவி – பொம்மலாட்டம் போலே –-என்றும் சிறைக் கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவே காணும் இவள் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது.உறக்கம் ஒக்க இருக்கச் செய்தே‘கைங்கரிய விரோதி’ என்று கை விட்டவரைக் காட்டிலும் இவளுக்கு உண்டான வாசியைத் தெரிவிப்பாள், ‘அறியாள்’என்கிறாள்.-முன்பு இல்லை யாகிலும் இப் பிறவியில் மெய்ப்பாட்டால் பற்றி விட வேண்டிற்று.-ஆதி சேஷன் நித்ய ஸூரிகளில் தலைவர் – அநிமிஷர் அதனால் முன்பு நித்திரை இல்லை யாகிலும் – இந்த லஷ்மண ஜென்மத்தில் மெய்ப்பாடு -மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்து 24 வருஷம் தூங்க வேண்டும் –
மனுஷ்ய கிங்கரர் என்று காட்ட -என்ற படி

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – நாலாயி:3581/1

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –பெண் பிள்ளை வார்த்தையைத் திருத் தாயார் அநுபாஷிக்கையாலே, ‘இவள் – தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல் -அன்றிக்கே, ‘ முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/4

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

சர்வ ஸ்வாமி யுடைய பாத பார்ஸ்வத்தை பிரா பித்த -இத்தை இ றே -சாயுஜ்ய தோ அபூ -என்கிறது -சாயுஜ்யம் ப்ரதி பன்னாயே-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்-–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது, அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ? இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3608/1

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

-தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமாவார்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்-அந்த காரண வஸ்துவுக்கு ஆளாமது ஒழிய வேறு சிலர்க்கு ஆளாகக் கடவரோ -இவனுக்கே ஆளாக வேண்டுகிறது என் என்னில் -இது அடங்க அழிந்து கிடக்க தன்னை ஆஸ்ரயிக்கைக்கு கரணங்களை கொடுத்தவனை ஒழிய புறம்பே சிலரை பற்றவோஇதனுடைய படைப்பு அவனுக்காகக் கண்டது என்று இருக்குமவர்கள்’ என்றபடி;-‘அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்றபடி-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன் -மல்லல் என்று செல்வமாய், அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்; ‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே அன்றோ? நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை. அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?–வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக் காலத்திலே தோற்றி,
இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ் வாச்சரியமான செயலை அறிந்தும்.-ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்.-பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.- என்கிறபடியே வந்து பாதுகாத்த குணம் அன்றோ

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ -அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின் பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள்-அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?

சர்வாதிகன் தாழ்ந்த செயலை செய்யா நின்றால்-அப்ரஸித்தமாக செய்யிலுமாம் இ றே -அங்கனம் அன்றிக்கே சர்வ லோக சாஷிகமாக இச் செயலை அனுசந்தித்தார் எல்லாரும் நிர்ப்பரராய் இருக்கலாம் படி இ றே செய்தது -பார்த்தம் ரதின மாத்மா நஞ்ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகார-அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே-உலகத்தில் ஸ்வாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் ரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன?கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் ரஹஸ்யத்திலே அன்றோ?-இப்படி இருக்கச் செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?

தன் க்ருஹத்திலே புக கொண்டு சிறை செய்யத் தேடும் துரியோதனாதிகள் போல்வார் இருக்கிற தேசத்தை விட்டு எல்லாரும் ஓக்க பரியும் தேசத்திலே நிரபாயமாக எழுந்து அருளின படியை பேசின பிராமண ஸ்ரேஷ்டமான மஹா பாரதத்தை அறிந்து வைத்தும் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா –தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார்
இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.
‘நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,
துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1,2 சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/2,3

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்

சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறா விடில் தரிக்க மாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே -பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே–தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!-தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?-கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -‘‘அறியேன்’ என்பான் என்?
‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில், கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!
‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ?
அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது-உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது -பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்-தாமரைக் கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-விஷ்ணோர் கடாக்ஷம் -அல்வழக்கை ஒழித்து படிப்படியாக -அனைத்தையும் பண்ணுமே திருக் கண்கள்–முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே – நாலாயி:3628/2,3

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/2,3

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினை யுடைத்தான முறியோ? அறிகிலேன். புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது; முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ?-நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4

ன்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

தோன்றி மாயாதே நித்தியமாய் நின்று விளங்கா நிற்பதாய் சிவந்த சுடரை ஈனா நின்ற வெள்ளை மின்னோ -அசிராம்சு -என்னா நிற்பார்கள் இத்தை -என்னை நலிகைக்கு உறுப்பாக நித்யத்வத்தை ஏறட்டுக் கொண்டது -திரு முத்தின் நிரை திரு வதரத்தில் பழுப்பை ஈனுகிறாப் போலே யாயிற்று சேர்த்தி அழகு இருப்பது-அங்கனம் இன்றியே என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் – நாலாயி:3633/1,2

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இறே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இறே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே – நாலாயி:3635/4

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1 ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/2

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த

ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காணப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது-அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? ‘நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/1,2

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.-பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.-‘இது தான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,
‘அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’ என்று இங்ஙனே அருளிச் செய்வர் சீயர்.
அன்றிக்கே,
‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?-அவன் பரம பதத்தைத் தரிலோ?’ என்ன,
‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறி லேன் –உமக்கு மநோ வாக் காயங்கள் உண்டு -அவற்றுக்கு ஆஸ்ரயமான நீர் உண்டு -வணங்கத் தட்டு என் என்ன-அவற்றினுடைய ஸத்பாவமே அமையுமோ -அவை ஸ்வ அதீனமாக வேண்டாவோ -மநோ வாக் காயங்களினுடைய சத்தை நீ இட்ட வழக்கு அன்றோ –எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்- எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு- வணங்கும் வகை அறிகின்றிலேன் –

ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -இன்றோ நான் பழி சுமந்தது- நாடும் இரைக்கவே-திருவாய்மொழி -5-3-10-என்ற அன்றே பழி சுமந்திலேனோ-

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இறே இவர் நினைத்து இருப்பது-அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்-பிரதிகூலர் பரிய யோக்யதை உண்டோ என்னில்-யோக்யதை உள்ள தேவர்கள் பரியாதது போலே-இவர்களும் பரிய வில்லை -என்று அருளிச் செய்கிறார் – பரிந்த அசுர ராக்ஷஸர்கள் உண்டே பிரகலாதன் விபீஷண ஆழ்வான் போல்வார் உண்டே

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/2

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ–சொல்லி என்ன பிரயோஜனம் உண்டு -அவர்களை பரிவர் ஆக்கவோ -உன் ஸுகுமார்யத்தை பரிச்சின்னம் ஆக்கவோ –

அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக -மாஞ்சா க்ரோசந்தி வத் -ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-என்றும் – ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12–என்றும் -நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –அவன் திருவடிகள் அல்லது ஒரு பாதுகாவல் இல்லை –
அடி இணை அல்லது ஓர் அரண் பிறிது இல்லை எனக்கு —

புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச் செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே – விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே – ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –ஆதலின் -கொடுத்த என்னாது -தரும் -என்கிறார்––எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் /அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் /முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -/அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே /முதலை ஐந்து –-இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -பெறாப் பேறு பெற்றானாய்–அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற –முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கும் வாசி உண்டே –மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

வேறு ஒரு அருள் அறியேன் –அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்-என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே-தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் – விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –-அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே–ஸ அஷர பரம ஸ்வராட் – அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே பிரதானரோடு-பிரதானம் இல்லாதாரோடு-வேற்றுமை இல்லாதபடி சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை-இரண்டு பாசுரங்களாலும் திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார் –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
-9-3-3-நாலாயி:3805

அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –அன்றிக்கே-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும் ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-(என்றும்)ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி தைத்ரியம் -என்றும் -யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி (என்றும்) வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது என்னும் இவ்வளவே அறிந்தது –மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்-க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர – சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள் கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள் -அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே-வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்-வேதங்களும் வேத வித்துக்களும் போலே அன்றிக்கே தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்

தழுவுமாறு அறியேன் உன தாள்களே – நாலாயி:3811/4

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் – இப்பாட்டால் அயோக்கிய அனுசந்தானம் பண்ணுகிறார் என்பாரும் உண்டு -கண்கள் சிவந்ததின் பின் அது இல்லை -அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து இத்தலையால் ஓன்று செய்கையை மிகையாய் இருக்கிறபடி சொல்லுகிறார் -என்பாரும் உண்டு -இவை பக்ஷம் அன்று –

அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் – நாலாயி:3838/4

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

என்னோட்டை கலவியாலே கடலை முழுகப் பருகின காள மேகம் போலே யாயத்து அவன் வடிவில் செவ்வி இருப்பது -தூ நீர் முகில் போல் தோன்றாயே -என்று இவர் ஆசைப் பட்ட படியே தோற்றி -அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு அத்தலையில் செவ்வி இருந்த படி –முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை–சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – நாலாயி:3839/1

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –-சேஷியான முறை -தப்பாமே அவற்றின் நடுவே நிற்கும் தானும் -என் ஒருவன் பக்கலிலும் கிடீர் முறை கெடப் பரிமாறுகிறது –என்னை ஒழிந்தார் விஷயத்தில் உபகாரகன் கிடீர் என்னை அழிக்கிறான் -எதிரிகளை அம்பால் அழிக்கும் -என்னை குணத்தால் அழித்தான் -மத்தியஸ்தராக வேணுமாகாதே ரக்ஷிக்கும் போதைக்கு -அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து இட்டு ஆற்றலாம் -குணத்தால் வந்த புண்ணுக்கு பரிஹாரம் இல்லை –தான் தலைவனான முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிறவன்-மிகச் சிறியேனான என் பக்கல் செய்த காதல்-எனக்கு அறிய நிலம் அன்று –என்கிறார்

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/4

எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத் திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன்-அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார் –

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் – நாலாயி:3861/1

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் / பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் -ஒரு பிரயோஜனத்தைக் கொள்ளக் கிட்டினவனாய்-ஆறி இருக்கிறேனோ-அடிமைப் பணியினுடைய வாசனையின் இனிமை-அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ –நித்ய ஸூரிகள் செய்யும்-உயிர் உள்ள வரையிலும் செய்யப் படும் அடிமையிலே அன்றோ நானும் அதிகரித்தது

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/3

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

இப்படி உபய விபூதியையும் நிர்வஹிக்கிறவன் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாக தன் செல்லாமையாலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நிரதிசய போக்யமான திருவனந்த புரத்தை-ந ச புனராவர்த்ததே-என்கிறபடியே மீட்சி இல்லாத ருசியோடே போய்ப் புகுவுதி கோள் ஆகில் -துக்கங்களும் துக்க ஹேதுக்களான பாபங்களும் போம் –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை -பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் ஆயிரத்திலும் ஒரு திரு நாமத்தைச் சொல்லி அனுபவியுங்கோள்-

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/3

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் – நாலாயி:3909/4

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8

என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

நாம் உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன – நாலாயி:3910/1

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து -தஸ்மிந் நஸ்தமிதே பீஷ் மே-என்று அவன் தான் சொன்ன வார்த்தையை இவர் சொல்லுகிறார் –

நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-

சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து –இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –-ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

அதி லோகமான வடிவு அழகைக் காட்டி -என்னை ஈடுபடுத்தினவனே -துளையாத மாணிக்கம் -அநுபபுக்தமான மாணிக்கம் என்னுதல் -நாட்டு ஒப்பான அழகு இன்றியே விசஜாதீயமாய் இருக்கையாலே -பொல்லா -என்கிறது என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ பரிஹாரமாக -என்னுதல் -வி லக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் 

————————————————————————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வாராதிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களும்-நவவித சம்பந்தமும்

August 28, 2025

மாறன் பராங்கதி தந்தடியேனை மருட்பிறவி
மாறன் பரான குழத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கோர்
மாறன் பராமுகம் செய்யாமல் என் கண் மலர்க்கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-
–திருவரங்கத்தந்தாதி காப்பு (நம்மாழ்வார்- துதி) பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்; நாரணனே? நீ என்னை அன்றி இலை — நான்முகன் திருவந்தாதி

அகாரந்தான் எழுத்துமுதல் ஆதல் போல
அச்சுதனே அனைத்துயிர்க்கும் அப்பன் ‘ ஆவான் ;
அகாரந்தான் எழுத்தொலிக்க உதவல் போல
அவன்தானே உயிர் வாழக் ‘காப்போன் ‘ ஆவான் ;
அகாரந்தான் இறுதியிலே மறைந்த நான்கன்
உருபால் கைங் கரியம் அறி வித்தலாலே
அகாரந்தான் பெயரானோன் உயிர்கட் கெல்லாம்
ஆண்டை எனும் ‘சேஷி.என அறிகின்றோமே.

ஓங்காரத்து இடையில் எழுத்து உகாரம் ஆகும் ;
ஒருவாத அநந்யம் எனும் தேற்றேகாரம்
பாங்கான உயிர் அனைத்தும் மகளிர் ஆவார் :
பகவன் அவன் பிரிக்க வொண்ணாக் ‘கணவன்’ என்னும்;
நீங்காத உயிர்ப் பெயராம் மகாரந்தானே
‘நினைந்தறியத் தகும் பிரமம் ‘ அவனே என்னும் ;
ஆங்காரம் அழிக்கின்ற நமஸ்ஸினாலே
அவன்’ உடையான் ‘: நாம் ‘ உடைமை’ என்று தேர்வோம்.

நாராய ணாய எனில் சொற்கள் மூன்றாம்;
நாரந்தான் அசித்துச் சித்துஅனைத்தி னுக்கும்
பேராகும் ; அவற்றினையே உடலாய்க் கொண்டு
பிரியாமல் இயக்குதலால் அவன் சரீரி ‘;
வேராகும் அயனம் எனல் இருக்கும் தானம் ;
விருப்பிடமாம் இருப்பிடத்துக்கு அவள்’ஆதாரம்
ஆராயின் எட்டெழுத்தே அதில் அடங்கும்;
ஆழ்பொருளோ அளவிலவாம் வியப்பு ஈதன்றோ?

ஆய எனல் நான்கள் உரு பாகும் ; இங்கே
அவ்வுருபை ‘ பொருட்டு ‘ என்றும் சொல்லு வார்கள்;
தூயன் அவன் அநுபவிக்கும் பொருட்டே, சித்து
தோன்றியுளது எனப் பொருளை விரித்து நோக்கின்
மாயவனே அனுபவிக்க உரியன் ; அந்த
மாண் உரிமை வாய்த்தவன் பேர் போக்தா ‘ ஆகும்;
நேயமொடு ஒன்பது வகையில் உயிர்கட் கெல்லாம்
நீங்காத உறவாகி நின்றான் ஈசன்.

இவ்வுறவை அவன் அறுக்க முனைந்திட் டாலும்
இயலாது ; நாம் அறுக்க இயல்வ துண்டோ?
எவ்வுறவும் அவன் ஆன தாலே அன்றோ
எம்முடனே ஒருவனாய்த் தோன்று கின்றான்?
தவ்வுறவே சேய்குழியில் வீழ்ந்த தென்றால்.
தாய் உடனே அக்குழியில் தாவி மீட்பாள் :
ஒவ்வுறவே பரன் அந்த வண்ணம் நம்முன்
உறவு நினைந்து அர்ச்சை வடி வாயினானே !

ஐந்நிலைகள் தனக்குரிமை யாகக்கொண்ட
அமலனுக்குப் பணிபுரியக் கடன்பட் டுள்ளோம் ;
மெய்நிலைய மாம்அவன் அக் கடனைக்கொள்ள
விழி எதிரே நிற்கின்றான்; நாம் ஒப்போமேல்
நம்நிலையத்தூடுஅவனே அமர்ந்து கேட்பான் ;
நாம் அதற்கும் இசையோமேல் நமை விடாமல்
பைந்நிலையைப் பாயலிலே படுத்துக் கொண்டு
பார் என்பான் என் கடனைத் தீர் என் பானே!

வணிகள் கடல் கடந்துபொருளைத் தேடி)
ஓர் இருப தாண்டின் பின் திரும்பி வந்தான்;
பொருள்களைத் தன் இடத்தினிலே இறக்க லுற்றான்;
போந்தொருவன் இடை மறித்து என்இடம் இது’ என்றான்;
இருவருமே பூசலிட்டார் ; ஆங்கோர் ஆன்றோர்.
“ஏன் பூசல் ‘? ‘ நீர் தந்தை – மகனே ‘ என்றார்
பொருது பெரும் பூசலிட்ட கை தளர்ந்து
பூசல் மறந்து உடல் நழுவிப் புளகுற்றாரே

இப்படித் தான் பவக் கடலில் மூழ்கி மாழ்கி
இறை உறவை மறந்துகயிங் கரியம் விட்டுத்
தப்படி நாம் இருக்கின்றோம் ; ஒரு நல் லாசான்
தனி யுறவு நுமக்குண்டு என்று உபதே சிக்க
மைப்படியும் மேனியன் நம் தலைவன் என்று
வாஞ்சையினால் அறிந்து கொண்டு சரண் அ டைந்தே.
“எப்படியும் பயன்படுத்து கென்போம்” ஆயின்
இப்படியில் பவக்கடல் தான் வற்றிடாதோ?

நவவித சம்பந்தத்தை நாம் அறிந்தால்
ஞாலத்தார் சகோதரத்வம் சமத்வம், கொண்டே
அவ்விதம் ஒன் றில்லாமல் ஒருமைப் பாட்டை
அடைந்திடுவோம் : உயிர்த் தொண்டே அரி தொண்டாகும்
பவவிதனம் பறந்துவிடும் ; வீடு பேறு இப்
பாரினிலே இக் கணமே பலிக்க லாகும் ;
தவஇதம் மிக்கெளிதாகும் ; சமயம் சாதி
சச்சரவாம் நச்சரவம் சாம்பிச் சாகும்.

ஆழ்வார்கள் தாம் அருளிச் செயல் என் கின்ற
அமுதொழுக விட்டனர், நாம் அமரர் ஆக ;
ஏற்பாரும் புகழ் தரும் நம் பிள்ளை ஆதி
எண்ணிலர் நல் உரைஎழுதி உபக ரித்தார்
தாழ்வாதும் இலாத மணிப் பவளமாய்,அத்
தனை உரையும் இருப்பதனால், அதனைத் தேர்ந்தே
வாழ்வார விரும்புவர் பல கால் கற்றும்
மலைமுட்டும் குருவி என மருண்டார் அம்மா!

ஆசார்ய இருதயமாம் மாறன் நெஞ்சை
அருளானராம் இளவல் அருளிச் செய்யத்
தேசார் ஸ்ரீ வசன பூ டணத்தி னோடு
தெய்விக்கல் இரகசியம் ஈரொன் பானும்
நேசானு கூடிமுடன் உலகா சார்யர்
நிலத்து மர்க்குக் கொடையாக நேர்ந்து தந்தார்
வாசம கோசரமாய் அதனுள் நுட்பம்
மன்னுலகில் முடவனுக்குக் கொம்புத்தேனே!

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்தமாயன்” (திருவாய். 7.9:2) என்னுள்ளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான். என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளி விருந்து கொண்டு எனக்கு எல்லா நலங்களையும் ஈந்துவரும் வேங்கடம் மேவிய விளக்கு’ இந்நூல் வெளிவரவும் ஓரளவு துணை செய்தான். அப்பெருமான் திருவடிகளைப் போற்றிச்
சரண் அடைகின்றேன்.

பிதா ச ரஷக சே பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி :
ஸ்வாயாதாரோ மமா மாச போக்தா ச ஆத்யமநூதிநே
:” ஆத்ய மநுவாவது மூலமந்திரம். அதில் ப்ரதிபாதிக்கப்பட்ட ரமாபதி :-ஸ்ரீய : பதியானவன் பிதாவாயும் ரக்ஷகனாயும் சேஷியாயும் பர்த்தாவாயும் ஜ்ஞேயனாயும் ஸ்வாமியாயும் ஆதாரனாயும் ஆத்மாவாயும் போக்தாவாயுமுள்ளான்- அவன் பிதாவானால் நாம் புத்திரனாகிறோம். அவன் இரக்ஷகளானால் நாம் இரக்ஷயனாகிறோம். அவன் போக்தாவானால் நாம் போக்யனாகிறோம். ஆக, இவை ஒன்பது வகையான உறவுகள்

உன் றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்’ ‘உன்றன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாதுபாரார்த்தயம் ஸ்வம் ஸ்ருதி சத ஸிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’

அகாரத்தில்–அகாரோவை ஸர்வா வாக்’” என்றும் “அகரமுதலவெழுத்தெல்லாம்” என்றும் -ஜன்ய-ஜன்க பாவம் அல்லது பிதா – புத்ரபாவம் என்பது பிதா -புத்ர பாவமும்–அவ ரக்ஷணே” என்கிற தாதுவிலிருந்து தேறினதாகையாலே ரக்ஷ்ய -ரக்ஷக பாவமும்,லுப்த சதுர்த்தியாலே அவனுக்கே –தாதர்த்தே சதுர்த்தியாலே சேஷ-சேஷி பாவம் என மூன்று உறவுகளும் தோன்றும்.உகாரமானது அவதாரணப் பொருளதாய் எம்பெருமானுக்கே சேஷப் பட்டது என்று காட்டுதலால் ‘ கொண்டானை யல்லா லறியாக் குலமகள் போல் ” என்கிறபடியே பதி-பத்னீ பாவமாகிய உறவு தேறுகின்றது.மகாரமானது ” மரு ஜ்ஞானே” என்கிற
தாதுவிலிருந்து தேறினதாகையாலே ஜ்ஞாதாவான ஆத்மாவைச் சொல்லுதலால் ஞாத்ரு-ஜ்ஜேய பாவம் என்கிற உறவு தேறிற்று. எம்பெருமான் அறியப்படுபவன்; ஆத்மா
அறிகிறவன் என்றவாறு ” ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குணர்வு ” என்கிற பொய்கை யாழ்வார் பாசுரம் இங்கு காணத் தக்கது.மகாரத்திற்குப் பிறகு உள்ள நம : பதத்தினால் தன்னை இரக்ஷித்துக் கொள்வதில் தனக்கு எவ்விதமான உரிமையுமில்லை என்று காட்டுவதால் ஆன்மாக்களெல்லாம் எம்பெருமானுடைய ஸொத்து என்று ஏற்படுகிறது. இதனால் ஸ்வ ஸ்வாமி பாவம் என்கிற உறவு தேறுகிறது.எம்பெருமான் ஸ்வாமி; நாம் அவன் சொத்து .நாராணாம் அயனம் என்கிற தத் புருஷ ஸமாஸத்தால் ஆதாராதேய பாவம் என்கிற உறவு தேறுகின்றது-நாராயண சப்தத்தில் நாரங்கள் பகவானிடத்திலே இருக்கின்றன என்பது தத் புருஷனால் ஸித்திக்கிறது. நாரங்களிலே பகவான் உளன் என்பது பஹிர் வ்ரீஹியால் ஏற்படுகிறது. அவற்றிலே இவன் இருப்பதாவது அவற்றை உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு உயிராக இருப்பதே யாதலால் சரீர-ஆத்ம பாவம் ஸித்திக்கிறது. ஸகல சேதந அசேதங்களும் சரீரம்; அவன் சரீரி-ஒன்பதாவது உறவு போக்த்ரு – போக்ய பாவம் . இது நாராயண பதத்திலுள்ள நான்காவது வேற்றுமையால் ஏற்படுகிறது. நாராயணனுக்குச் செய்யப்படுகின்ற கைங்கர்யத்தின் போகமும் அவனுக்கே யன்றி இந்த ஜீவனுக்கில்லை. என்று காட்டுதலால் போக்த்ரு – போக்ய பாவம் என்கிற உறவைத் தெரிவிக்கின்றது . எம்பெருமான் போக்தா; ஜீவாத்மா போக்யன். ஜீவாத்மாவை போக்தாவாகவும் எம்பெருமானை போக்யனாகவும் கொள்வதும் ஒருபுடை உண்டெனினும் திருமந்திரத்தில் வடிகட்டின பொருள் முந்துறக் கூறினதேயாரும் என்பர்.
ஆக, திரு மந்திரத்தினால் நவவித (ஒன்பது விதமான) ஸம்பந்தங்கள் தெரிய வந்தன.

வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடு ஆக்கி
நிற்கின்றேன்; நின்றுநினைக் கின்றேன்; கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்!

நின்ற தெந்தை ஊர கத்து இருந்த தெந்தை பாட கத்து
அன்று வெஃக ணைக்கி டந்த து என்னி லாத முன்னெ லாம்
அன்று நான் பிறந்தி லேன் பிறந்த பின் மறந்தி லேன்
நின்ற தும்இ ருந்த தும் கிடந்த தும் என் நெஞ்சுளே

எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாதகாலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குகை
அவனுக்குச் சாத்தியம் (பலன்) ; அதற்குச் சாதனம் (வழி முறைகள்) நிற்றல், இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கைபுகுந்த மாத்திரத்தில் — என்னிடம் ருசி பிறந்ததும் –
அவன் திவ்விய தேசங்களில் நிற்றல்,இருத்தல், கிடத்தல் களைத் தவிர்த்து,-அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-அந்த விருப்புகளையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான் ” என்கின்
றார்

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்-அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.-இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம், எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்-ஆசாரிய ஹிருதயத்தின்,
ஒன்று கூடின தாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே
ஒழிக்க ஒழியாது ‘
(12)

இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒருகாலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால், என்றும் உளதாயிருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி’ என்று சொல்லுவது பொருந்துமோ? என்ற வினா
எழுகின்றது. அதற்கு மணவாள மாமுனிகள் வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் அநாதி என்று பிரமாணங்சுகள் சொல்லுவதாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். “ஒரு காலவரையில் அஃது இறைவனுடைய திருவருளால் அது மறையக் காண்கையாலே வந்தேறி என்பது
ஒருதலை” என்று கூறுவர்.

நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலேஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும்(முமுஷுப்படி-சூரணை -102)(பிரான் – உபகாரகன்; சுற்றம் – சகலவித பந்துவும்;அரசு – ஆண்டவன்; வாழ்நாள் – பிரான பூதன்]என்ற பாசுரத்தில் நான்கு விதமான சம்பந்தத்தைக் கூறி திருமந்திரத்தின் பொருளை விளக்கி மகிழ்கின்றார்.

குலசேகரப் பெருமாள் வித்துவக் கோட்டம்மான் திருப் பதிகத்தில் (5-ஆம் திருமொழி) இந்த நவவித சம்பந்தமும் அடங்கிக் கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயுள்ளனர்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக் கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
-5-1-பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே-பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்-மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவக் கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
— 5-2-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
5-3-என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை – நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
— 5-4-பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக-இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக் கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
— 5-5–சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம் அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக் கடல் போலே இறே-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்துக் கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
—5-6-கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவக் கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
—5-7-அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து இருக்கிற நீ அது செய்திலை யாகிலும் என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவக் கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
—5-8-புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
–5-9-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய் என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து
காற்கடைக் கொண்டாயே யாகிலும் தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

வித்துவக் கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
– 5-10-இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

ஆழ்வார்பெருமக்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக்கூடிய இடங்கள் எண்ணற்றவை.-திருவேங்கடத்து என் ஆனை என் அப்பன் (3.9:1)
என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை,… குறுங்குடி மெய்யம்மையே உளனாய எந்தையை (3.9:2)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்ப ராவு நுண் ணேரிடை மார்புனை (1.10:3)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் எம்பிரானை”என்று அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம்பெருமான் ‘இப்படி ஏத்துகின்றவன் ஆர் ?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் தண்டாமரைக் கண்ணனை ” என்று மேலும் சிறப்பிக்கின்றார், குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணமில்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார். கடாட்சிக்கச் செய்யவல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து, ‘ கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை என்று மேலும் சிறப்பிக்கின்றார். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை – என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்அப்பனே (6. 3.8)என் அப்பன் எனக்காய் இகுளாய என்னைப் பெற்றவளாய்,பொன் அப்பன் மணி அப்பன்; முத்தப்பன் என்னப்ப னுமாய் தன் ஒப்பார் இல் அப்பன் (6.3:9)(இருளாய்-செவிலியாய் என்று கூறுவதைக் காணலாம்-இந்த ஆழ்வாரே,பொழில்ஏழும் உண்ட எந்தாய் : (2,3:4)எள்கல் தந்த எந்தாய் ! (2.5:4)-எந்தாய் ! தண்திரு வேங்கடத்துள்
நின்றாய்
(2:6:9)எக்காலத்தும் எந்தையாய்ப் என்னுள் மன்னில் மற்று எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன் (2.9:8) எழில்கொள சோதி எந்தை தந்தை தந்தைக்கே ! எந்தை தந்தைதந்தை (3.3:1) தந்தை தந்தைக்கும் முந்தை (3.3:2) ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் (3.4:4)வார்ப்புனல் அந்தண் அருவி வடதிரு வேங்கடத் தெந்தை (3.5:8) தாவி ைையம் கொண்ட எந்தாய்! (4.7:3) ஆணி செம்பொன் மேனி எந்தாய் ! (4.7:4) ஏன மாய்நிலம் கீண்டஎன் அப்பனே ! (5.7:6) அகல்கொள் வையம் அளந்த மாயன்என் அப்பன் (6.4:6) புனத்து மாய்முடி மாலை மார்பன்என் அப்பன் (6.4:6) மாணி யாய்நிலம் கொண்ட மாயன்என் அப்பன் (6.4:6)
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன் | வாய்முதல் அப்பனை (7.9:3)
என்னால்தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு (7.9.10)பதவிய – மதுரமான]
திருக்குறன் அப்பன் (7.10:2)-பாம்பணை அப்பன் (7.10:5)தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய்நீ நின்ற வாறு இவைஎன்ன நியாயங்களே (7.8:1) பெரிய அப்பனை, பிரமன் அப்பனை;உருத்திரன் அப்பனை, முனிவர்க்குரிய அப்பனை, அமரர் அப்பனை,உலகுக்கோர் தனியப்பன் தன்னை (8,1:11)என்று எம்பெருமானை அப்பனாகப்-தந்தையாகப்-பாவித்துப் பாசுரங்கள் அருளியுள்ளதைக் காணலாம்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த
திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய், இறப்பதற்கே
எண்ணாது என்றும்
பொன்னுருவாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய், அனலுருவில்
திகழும் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி லூடுபோய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி, அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

திருமங்கையாழ்வாரின் திருநாங்கூர்த்திருமணிக் கூடம் திருமொழி ஒன்றின் (4.5) ஒவ்வொரு பாசுரத்திலும் இந்தத் தந்தை- தனயன் உறவு முறை அமைந்திருப்பதைக்
கண்டு அநுபவித்து மகிழலாம்.
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை (1)
வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துகந்த எந்தை (2)
வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை (3)
பூங்குருக் கொசித்துப் புள்வாய் பிளந்தெரு து) அடர்ந்த எந்தை (4)
வருமவள் செவியும் மூக்கும் வானினால் தடிந்த எந்தை (5)
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை (6)
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எக்தை (7)
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை (8)
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை (9)
என்ற பாசுரப் பகுதிகளைக் காண்க.

நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத் – 95)
மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே (திருவாய்.5.1:8)தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவா
[ஓங்கும்-விஞ்சியிருக்கும் ஒளிதேசு ] – திருமாலை – 37-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்‘ (திருச்சந்.115)தாயும் தந்தையும் ஆய்இவ் வுலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன், எந்தையே (1-10:6)வாயும் அவதரித்தவன்?எந்தை யே!என்றும், எம்பெரு மான்! என்றும் சிந்தையுள் வைப்பன்; சொல்லுவன் (1-10:7)” என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
(2.3 2)தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானுமாய் (3.6:9)

தாய் நினைந்து கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய்நினைந்து அருள் செய்யும் அப்பனை
(பெரி. திரு.7.3:2)உயிர்க் கெல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
!- பெரி . திரு. 7:19-பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ; மற்றையார் ஆவாரும்நீ; (பெரி .திருவந்- )

———–

இரட்சக – இரட்சய சம்பந்தம்

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இதுசொல், என் ஏழை நெஞ்சே
! (6)

திரு மந்திரத்தில் தேறுகின்ற ஒன்பது வகையான உறவுகளையும் உடையவன் எம்பெருமான் என்பது ”உற்றானாய் நின்று வளர்த்து என் உயிராகி நின்றானை” என்ற அடியால் பெறப்படுகின்றது.

உலகைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறும், பெரிய திருமொழியிலுள்ள ‘மை நின்ற (11.6) என்ற பதிகத்தில் திருமங்கையாழ்வாரின் திருவாக்கு
கள் (ஒன்பது பாசுரங்கள்) இரட்சக-இரட்சய உறவினை மிகத் தெளிவாக விளக்குகின்றன. மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம்
-11-6-1-

வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே
–11-6-2-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே
–11-6-3-

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே  யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –
11-6-4-

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே
 -11-6-5-

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே
—11-6-6-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே
–11-6-7-

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர்  உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே
–11-6-8-

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே
–11-6-9-

மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் (திருமாலை-1)
‘பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து’ (பெரி . திரு. 4.10:5)
‘உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு(திருவாய்- 1.5:8)

ஓவாத் துயர்ப் பிறவு உட்படமற் றெவ்வவையும்
மூவாத்தனிமுதலாப் மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையாய்மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
(2-8-5)

சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! ‘ (பெரிய திருவந்.18,

களைவாய் துன்பம்; களையா (து) ஒழிவாய்; களைகண் பற்றிலேன்;
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா உடலம் என்ன (து) ஆவி சரிந்து போம்போது
இளையா(து) உன்தாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே
-5-8-8-

நலந்தான் ஒன்றுமிலேன் நல்ல தோரறஞ் செய்துமிலேன் -பெரி . திரு .1.9:4-ஆகிஞ்சன்னியம்”, அநக்யகதித்துவம்

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொரு கூட்டிய என்
அப்ப
!(பெரியாழ். திரு.1.6:7)பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுநில் கொணர்ந்து கொடுத்து ஒருப்பகுத்து உறைப்பன்
(பெரியாழ். திரு.4.8:2) வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின்சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருன் அவற்குச் செய்து உன்மக்க மற்றுஇவர் என்று
கொடுத்தாய்
(பெரி.திரு. 5.8 8)படர் புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடுங் கொண்டு கொடுத்தவன்
(திருவாய்.3.10:5)மாதவத்தோன் புத்திரன்போய்
மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்
.-பெரியாழ். திரு .4.8:1-ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த| அந்தணன் ஒருவன்
‘ காதல் என் மகன் புகலிடங் காணேன் ; கண்டு நீ தரு வாயெனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
-பெரி. திரு. 5.8-7

அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் (4-10-3) அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் (4-10-4)ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் (5) அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும் (6) அஞ்சலை என்றுஎன்னைக் காக்க வேண்டும் (7)ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் (8)

————

4-சேஷீ -சேஷ உறவு-சீவான்மாவுக்கு அவனுடைய கை, கால்கள் முதலான உறுப்புகள் கூடிய உடல் சேஷமாவது போன்று, பரமான் மாவுக்குச் சரீரமாக நிற்கும் இந்தச் சீவான்மா சேஷபூதன் (அடிமை) ஆகின்றான். சர்வேசுவரன் தன்னுடைய திருவுள்ளத்தின் சங்கல்பா குணமாய்த் தனக்கே உரிய விருப்புப் பொருளாய் உரிமையாக்கிக் கொள்ளுகின்றான்.
அதனால் பரமான்மா (ஆண்டான்) ஆகின்றான்.

சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் ; நீள்கடலுள் என்றும்
புணையாம் ; அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்,
அணையாம் திருமாற்கு அரவு

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று

திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே—1-9-1-திருவேம்கட மா மலை என் ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5- விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-கன மா மலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும்கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-பிராட்டி சம்பந்தம் கூறப் பெற்றிருப்பதனால் ‘புருஷகாரம்‘ தெளிவாகின்றது.

விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா வடியேன்இடரைக் களையாயே1 10-விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-நில மீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே6-தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-நாங்கை மேய
கடவுளே காவளந்தண்  பாடியாய் களை கண் நீயே -4-6-5-நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-

முட்டில்பல் போகத் தொரு தனி நாயகன் மூவுல குக்குரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்புதன்னை
மட்டவிழ் தண்ணக் துழாமுடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என் மனத்துப் பரிவலனே
(3-10-3)-தனி நாயகன்- ஒப்பற்ற தலைவன்;பட்டபின்னை–ஆட்பட்ட பிறகு

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத் தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே உலகென் நின்றான்தன்னை
வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே
(4-5-10)-தனதே உலகென நின்றான் தன்னை ‘ என்பதால் சேஷித்துவமும் ‘ வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

வாரா வருவாய் வரும்என் மாயா ! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் ! திருக்குடந்தை
ஊரா ! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
(5-8-10)’ஆண்டாய் ‘ என்பதால்
சேஷித்துவமும், உனக்காட்பட்டும்? என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டர் சடகோபன் (6-9-11)-திருமாலுக்கு’ என்பதால் சேஷித்துவமும்,–தொண்டர் தொண்டள்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

புண்ட ரீகக்கொப் பூழ்புனற் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (7-1-11)’புனல் பள்ளி அப்பன் ‘ என்பதால் சேஷித்துவமும் .தொண்டர் தொண்டன்’ என்பதால் சேஷத்துவமும் புலனாகின்றன.

என்அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தாம் பெருமான்
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள் கின்ற எம்பெருமான்
(8-4-3)’ என் அமர் பெருமான்… இருநிலம் இடந்த எம்பெருமான் ‘ என்பதால் சேஷித்துவமும், என்னை ஆள்கின்ற ‘ என்பதால் சேஷத்துவமும் அறியப்பெறுகின்றன.

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா !உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகம்குழைய மாட்டேனே
(5-6)ூரியன் நிலையில் எம்பெருமா
னையும் (சேஷி) தாமரையின் நிலையில் தம்மையும் (சேஷன்) வைத்துக் கூறியதனால் ஆண்டான்- அடிமை உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி, நாயக. நாயகிபாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒரு வகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான்-அடிமை உறவு தானே!

5-நாயக-நாயகி சம்பந்தம்
ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு-சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார்.
மகள் என்று பேர்
“ஞானாவஸ்தைகள்’ என்னாமல் பிரஜ்ஞாவஸ்தைகள்’-என்றது –அவஸ்தா திரய விருத்தி’-மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக.

தீர்ப்பாரை யாமினி -4-5-அநந்யார் சேஷத்துவத்தைத் தோழி வெளிப்படுத்துவது-
சின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம், இந்நோய் இனது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில்நீ
என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்| சொன்மொழி மாலை அம் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே (20)
‘துவளில் மணிமாடத்து'(6.5)-தலைவியின் அநந்யார்ஹத்துவம் தோழிக்கு தெரிவித்தவாறு.
‘கருமாணிக்க மலைபோல்’ (8.9)-‘இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாய் மணம் வீசுகின்றதோ? எம்பெருமான் திருமேனியில் அணைந்தாலல்லது இம் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?” என்கின்றாள் . “இராஜ புத்திரரை அணையாதாற்குக் கோயில் சாந்து நாறுவதற்கு விரகு உண்டோ?” என்பது ஈடு. இதனால் திருப்புலியூரில் நின்ற மாயப் பிரானுடையதிருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று கூறும் தோழியின் கருத்தில் தலைவியின் அநந்யார்ஹ சேஷத்துவம்’ பளிச்சிடுகின்றதன்றோ?

மண்ணையிருந்து துழாவி (4.4) என்ற திருப்பதிகத்தில்,-தாய்ப்பாசுரம்–தலைவியின் பாரதந்திரியம் வெளி யாகின்றது.
‘உண்ணும் சோறு’ (6.7) என்றபதிகம் தாய்ப் பாசுரம் -எல்லாம் கண்ணன் ‘ என்ற தாய்ப் பாசுரத் தொடர் தலைவியின் பாரதந்திரியத்தையும். உபாயத்தையும் காட்டுகின்றது.
கங்குலும் பகலும்’ (7.2)-பெரிய பெருமாளைத் தாய் வினவுவதில் ஆழ்வாரின் ஈஸ்வர பாரதந்திரியமும் உபாயத்தில் துணிவும் பளிச்சிடுவதைக் காண்லாம்
உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை யுடையவள் மகள்.-
திருக்குறுங்குடி பற்றிய ‘எங்ஙனேயோ’ (5.3)திருவாய்மொழியில்,-தலைவியின்
வாக்கு அவளது பதற்ற நிலையைப் பாங்குடன் தெரிவிக்கின்றது.
‘வெள்ளைச் சுரி சங்கொடு(7 3) என்று தொடங்கும் திருவாய்மொழியிலும் இன்னுயிர்ச் சேவலிலும் (9.5)அவனுடைய திருக் குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் நடைபெறுகின்றது -இப் பாசுரங்கள் ஆழ்ந்து ஓதி அனுபவிக்கும் போது தலைவியின் துடிப்பைப்- பதற்றத்தைத்- தெளிவாக உணர முடிகின்றது.

திருமங்கையாழ்வாரின் ‘தவள இளம்பிழை (9.5)என்று தொடங்கும் திருக்குறுங்குடி பற்றிய திருமொழியிலும் என்னுடைய ஆவி இனி தரிக்க விரகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால்,திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் ; அங்கே எழுந்தருளி யிருக்கின்ற கொண்டல் மணி வண்ணரைக் கண்டவுடன் என் வாட்டமெல்லாம் தீரும்;மேகத்தையும் மணியையும் கண்ட பின்னரும் வாட்டம் நிற்குமோ ? ஆகவே, பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவு படாமல் இவை யெல்லாம் அநுகூலங்களாகப் பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்” என்கின்றாள்.
நாச்சியார் திருமொழி(12) –
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே என்னை உய்த்திடுமின் (3)
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)
பத்தவிலோசனத்து (என்னை) உய்த்திடுமின் (6)
பாண்டி வனத்து என்னை உய்த்திடுமின் (7)
கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின் (8)
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)-இவற்றிலெல்லாம் “எம்பெருமானைக் கிட்டியல்லது தரியேன்” என்ற பதற்றம் தொனிப்பதைக் காணலாம். ‘சித்தோபாயம்’ நிழலிடுவதைக் கண்டு மகிழலாம்.

6-ஞாதா-ஞேயன் உறவு-அறிவன்- அறியப்படும் பொருள் உறவு-
மகாரம் இருபந்தைந்தாம் அட்சரமாய் ஞானவாசியுமா யிருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.(முமுட்சுப்படி.-66) -ஆன்மாவிற்கு சேஷத்துவம், ஞானத்துவம், ஞாத்ருத்வம் (அறிவுடையவனாய் இருக்கை) ஆகிய மூன்று தன்மைகள் உண்டு-
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு;ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும்;-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-பொய்கை யாழ்வாரின் திரு வாக்கு- 67)–இப் பாசுரத்தில் உணர்வு என்பது ஞான மயனான ஆன்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷ பூதன் என்பதை உணர்த்தும் –
சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன்விளையுறை தீர்த்தனுக் கற்ற பின்னே (7-10-10)–எம்பெருமானுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்பு என் மனம் வேறு ஒன்றினை உத்தேஸ்யமாக நினைத்திராத தன்மையை எம்பெருமான் அறிவான்; சிந்தையினால் நினைக்கப்படு வனவான வஞ்சனைகள் (மாயங்கள்) அவன் அறியாதன ஒன்றும் இல்லை -“ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே பிராவண்யம் (ஊற்று) முற்றி யிருந்தீராகிலும், பல காலும் பரம பதம், பரம பதம்’ என்று வாய் வெருவிக் கிடந்தீராதலால்,எம்பெருமான் . இதையே கொள்ளும்’ என்று நிர்பந்தித்துக் கொடுத்தானாகில் என் செய்வீர்?” என்று சிலர் உசாவியதாகக் கொண்டு அதற்கு விடை தருகின்றார் இப் பாசுரத்தில்,”அதனை,என் நினைவிற்கு மூலமாக இருக்கின்ற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். ”திருவாறன் விளையே பிராப்பியம் என்று இருக்கின்றீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ? அவன் பரம பதத்தைத் தரின் என் செய்வீர்!” என்ன, ” அவன் முற்றறிவினன் அல்லனோ? அவன் அறியானோ. என்கின்றார்’என்று பிள்ளான் பணிப்பர். “அவன் புருஷார்த்தப் பிரதன் என்று பிரசித்தி பெற்றவன் அல்லனோ? புருஷன் விரும்பியதை யன்றோ அவன் கொடுத்தருளுவன்! எனது சிந்தை திருவாறன் விளை தவிர மற்றொன்றையும் கணிசியாதிருக்கும் படியை அறிய ஆற்றலற்றவன் அல்லனே; அப்படி அறிந்து கொண்டும் எங்ஙனே மற்றொன்றினைக் கொடுப்பான்?” என்கின்றார். “மற்றொன்று என்கிறது பரம பதத்தின் பெயர் சொல்லுகையும் கூட அஸஹ்யமானபடி” என்பது ஈடு, இதனாலும் ‘ஞாதா -ஞேயன்” உறவு உறுதியாகின்றது.

7-(ஸ்வ-ஸ்வாமி)சொத்து – சொத்துக் குரியவன்
யானே என்னை அறிய கிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ ; என் உடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!(2-9-9)-இதனால் சொத்து-சொத்துக்குரியவன் ‘ என்ற சம்பந்தம் தெளிவாகின்றது.

ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் |அடிமை என்னும்
ஞானந்தனால் ஐம் பொறி வாசல்! சாத்தி நற்றாளைப் பற்றி
ஈனந் தரும் பற்றும் மற்றென்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்திருப்பார்க்கு இது | போல் இல்லை மாதவமே.–திருவரங்கக்கலம்பகம்

மாத வங்கள் என்(று) ஓத வங்களின் மருவு சீவன் என்று ஒருவ! நீபெரும்
பூதம் அல்லை; இந் திரியம் அல்லை;ஜம்புலனும் அல்லை;நற் புந்தி அல்லை காண்;
சீத ரன்பரம் தாமன் வாமனன்|திருவ ரங்கனுக் கு) அடிமை; நீயுனக்கு
ஏதும் இல்லை என்றறி; அறிந்தபின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே-திருவரங்கக் கலம்பகம்

8-சரீர- சரீரி பாவனை-அதாவது சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக
இருக்கும்-இங்ஙனமாக உடலைப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக் கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை -இதற்குக்காரணம் ‘பிரவேச ஹேது விசேடம்”
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய்அவை அவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்.
நீர்ஆய் நிலன்ஆய் தீ ஆய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டு ஆய் சிவனாய் அயன் ஆனாய்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்–அஹம் ‘ அர்த்தத்துக்கு ஞாநாநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபசும் என்ற ஸ்ரீவசனபூஷன ஸூத்திரத்திற்கு ‘அடியேன் உள்ளான் என்றாறிறே ஆழ்வார் ! திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆழ்வான் ஆறு மாதம் சேவித்து நின்று மகா நிதியாகப் பெற்ற அர்த்தமிறே இது” என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்
திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன்-திருமங்கையாழ்வர்
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றுஇலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே

9-ஆதார-ஆதேய சம்பந்தம்–ஆதாரம்- தாங்குவது-ஆதேயம்- தாங்கப் பெறுவது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன்பெருமை மாசுணாதோ? மாயோனே. (1-5-2)
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத தான்தோன்றி
முனிமாப் பிரம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வம் (8-10-7)–‘தோன்ற’ என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும், இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதால் வியஷ்டி சிருஷ்டியும் தெரிவிக்கப் பெறுகின்றன.
எங்குவந்துறுகோ, என்னை யாள் வானே ?ஏழுலகங்களும் நீயே;
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே ;அவற்றவை கருமமும் நீயே ;
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோநீ; இன்னே யானால்,
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே; வான் புலன் இறந்ததும் நீயே (8-1-6)-மங்கிய
அருவாம்நேர்ப்பம்’ என்பதற்குப் பத்த ஆன்மாக்களின் தொகுதி என்றும், ‘வான் புலன் இறந்தது ‘ என்பதற்கு முக்தாத்மாக்களைச் சொல்லுகிறது என்றும் பிள்ளான் பணிப்பர். அப்போது இல்லாததற்குச் சமமாய் ஸூஷ்மமான ஆன்மாக்களின் தொகுதி என்றும், பரம பதத்தில் கண்களுக்குப் புலப்படாத முக்தாத்ம ஸ்வரூபம் என்றும் பொருள் படும்-இந்தப் பாசுரத்தால் ஆதாரம் எம்பெருமான் என்றும்,ஆதேயம் ஆன்மாக்கள் என்றும் தெளிவாகின்றது.
இறந்ததும் நீயே; எதிர்ந்ததும் கீயே; நிகழ்வதோ நீ இன்னே ஆனால்,
சிறந்ததன் தன்மை அதுஇதுஉது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் (7)-பாவியாகிய அடியேன் அந்தச் சம்பந்த ஞானம் ஒன்றிலும் ஐயம் கொள்ளா நின்றேன்?” இதிலும் ஆதார- ஆதேய உறவு தெளிவாகின்றது –
நான்உன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே! நீஎன்னை அன்றி இலை. (7)-நீ எனக்கு ஆதாரம்; நான் உனக்கு ஆதேயம் ‘–இது தானே உண்மை? ” என்கின்றார் ஆழ்வார்.

போக்தா-போக்கிய சம்பந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (2-9-4)-அத்தியந்த பாரதந்திரியத்தைப் பயனாக அறுதி யிடுகின்றார் ஆழ்வார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்(து) என்னுயிராய் என் உயிர் உண்டான்
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்–அவன் அங்கீகாரத்திற்கு முன்பு இவர்
சரீரத்தையே விரும்பிப் போந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க அவன் இவருடைய சரீரத்தை விரும்பிப் புக்கான்.இவருக்கு
அவனுடைய சேர்க்கை ஸ்வரூப ஞானத்திற்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று’–அணுப் பரிமாணமான இவ் வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தா னென்கின்ற இது தனக்கு ஏற்றமாம்படி கௌரவியா நின்றான்”

    ————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு -ஸ்ரீ திருவாய்மொழி அவதாரிகை”– பாகம்-15-

    July 30, 2025
    முதற்பத்தில்‌ முதற்பதிகம்‌--உயர்வறவுயர்‌ நலம்‌ -இதில்‌, மஹோபகாரங்களைத்‌ தமக்குச்‌ செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத்‌ தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்‌! 
    புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான்‌ நிர்க்‌ குணனல்லன்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகன்‌ என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார்‌. இதனால்‌, எம்பெருமான்‌ தனது திருக்கல்யாண குணங்களைக்‌ காட்டி இவ்வாழ்‌வாரை ஈடுபடுத்திக்‌ கொண்டமை விளங்கும்‌,
    குணங்களுக்குத்‌ தோற்று அடிமைப்படுதல்‌ என்றும்‌ ஸ்வரூப மாகவே அடிமைப் பட்டிருத்தல்‌ என்றும்‌ இருவகைப்பட்டுள்ள தான அடிமையில்‌ குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும்‌ ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும்‌, ஆழ்வார்‌ தம்மை எம்பெருமான்‌ அகப்படுத்திக்‌ கொண்டது திருக்குணங்களைக்‌ கொண்டாதலால்‌. தாம்‌ இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும்‌ ஆழ்வார்க்குக்‌ குறைவற்ற தென்னுமிடம்‌ “ஆகிலுங்‌ சொடியவென்னெஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே என்ற
    பாசுரத்தால்‌ வெளியிடப்படுகின்றமை
    காண்க, மற்றும்‌ எம்பெருமானுடைய பரத்துவத்துக்கேற்ற பல தன்மைகளையும்‌, சரிதைகளையும்‌ அருளிச்‌ செய்து தலைக்கட்டுகிறார்‌ இப்பதிகத்தை. ஆகவே இப்பதிகம்‌ எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிடுவதாகும்‌,
    முதற்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌--வீடுமின்‌ முற்றவும்‌ -ஆழ்வார்‌ தாம்‌ அநுபவிக்கும்‌ பகவத் விஷயம்‌ தனியே அநுபவிக்கக்கூடிய தல்லாமையாலே *மச்சித்தா மத்கதப்ராணா : போதயந்த : பரஸ்பரம்‌* என்று கீதாசார்யன்‌ பணித்தபடியே பிறரோடு உசாவியே போதுபோக்கித்‌ தரிக்க வேண்டியவரான தாம்‌ அப்படிப்பட்ட அதிகாரிகளைப்‌ பெறுதற்காக நாற்புறமும்‌ கண்வைத்துப்‌ பார்த்தார்‌; எல்லாரும்‌ஸம்ஸாரிகளாயிருந்தனர்‌ தாம்‌ பகவத்‌ விஷயத்திலே ஊன்றியிருக்கிரிப்போலே அவர்கள்‌ விஷயாந்தரங்களிலே ஊன்‌றியிருக்கக்‌ கண்டார்‌ ஆழ்வார்‌, அன்னவர்களுடைய அர்த்தத்தைத்‌ தவிர்க்காமல்‌ நிற்கமாட்டிற்றிலர்‌. -அவர்களை எப்படி. மீட்கலாமென்று பார்த்தார்‌. “இவர்களோ சேதநராயிருந்தார்கள்‌ ; விஷயாந்தரங்களிலே வாசியறிந்து தீயவற்றைக்‌ கழித்து நல்லவற்றைக்‌ கைக்கொள்பவராயிரா நின்றார்‌கள்‌ ; காய்கறி முதலானவற்றிலும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லவற்றைப்‌ பரிக்ரஹிக்கவும்‌ தீயவற்றைப்‌ பரிஹரிக்கவும்‌ வல்லவரான இவர்கள்‌ இன்னமும்‌ சிறிது ஆராய்ச்சியைச்‌ செலுத்த மாட்டாதே யிராறின்றார்கள்‌ ; பகவத்‌ விஷயத்தின்‌ நன்மையையும்‌ விஷயாந்தரங்களின்‌ தீமையையும்‌ நாம்‌ எடுத்துக்‌ காட்டினால்‌ உண்மையை ஆராய்ந்து பார்த்து ஹேய விஷயங்களை விட்டு உபாதேய விஷயத்தைப்‌ பற்றக்‌ கூடுமே; ஆதலால்‌ அதை உபதேசித்துப்‌ பார்ப்போம்‌ '' என்று திருவுள்ளம்‌ பற்றி, எம்பெருமானுடைய நன்மையையும்‌, ஸம்ஸாரிகள்‌ பற்றிக்‌ கிடக்கிற விஷயாந்தரங்களின்‌ அற்பத்தன்மை, அஸ்த்ரத் தன்மை முதலிய வற்றையும்‌ அருளிச்‌ செய்யா நின்று கொண்டு விஷயாந்தரங்களில்‌ நசையற்று பகவத்‌ பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று உபதேசிக்க இழிகிறார்‌. 
    முதற்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--பத்துடையடியவர்‌ -முதற்றிருவாய்‌ மொழியில்‌ எம்பெருமானுடைய பரத்துவத்தைப்‌ பேசினார்‌. அங்ஙனம்‌ பரனான அப்பெருமானைப்‌ பஜியுங்கோளென்று இரண்டாந்‌ திருவாய்‌ மொழியில்‌ உபதேச ரூபமாக அருளிச்‌ செய்‌தார்‌. அங்ஙனம்‌ உபதேசித்த ஆழ்வாரை நோக்கி ஸம்ஸாரிகள்‌ “ஸ்வாமிந்‌! பஜியுங்கோள்‌, பஜியுங்கோள்‌ என்று பலகாலும்‌ அருளிச்‌ செய்கின்‌றீர்‌ ; இருகை முடவனை நோக்கி *ஆனையேறு, ஆனையேறு என்றால்‌ அவனால்‌ ஏறப்போமோ? அப்படியே, ஸர்வேச்வரனாய்‌. **நாகணை மிசை நம்பரர்‌ செல்வர்‌ பெரியர்‌!” என்னும்படி மிகப்‌.பெரியனாயிருக்கின்ற அவனை நீசரான ஸம்ஸாரிகளாலே பற்றப்‌ போமோ? என்ன, அவ்வானை தானே அவ் விருகை முடவனுக்கும்‌ ஏறலாம்படி படிந்து கொடுக்குங்கால்‌ ஏறத்‌ தட்டில்லையன்றோ | அப்படியே ஸம்ஸாரிகளுக்குப்‌ பஜிக்கலாம்படி அவன்‌ தன்னைத்‌ தாழவிட்டு எளியனாமாகில்‌ பஜிக்கத்‌ தட்டில்லையே," யென்கிறார்‌. எம்பெருமானுடைய: பரத்வத்தை எவ்வளவும்‌ பேசலாம்‌; எளிமையைப்‌ பேசுவதென்பது அரிது; அப்படிப்பட்ட பெரியவன்‌ இப்படித்‌ தாழ நின்றானே !' என்று *உள்ளெலாமுருகிக்‌ குரல்‌ தழுத்தொழிந்து உடம்பெலாங்‌ கண்ண நீர்‌ சோரப்‌ பேசவேண்டிய விஷயமாகையாலே தெளிந்திருந்து பேசப்போகாதே! ஆழ்வாரை ஆறு மாதம்‌ மோஹிக்கப்‌ பண்ணின விஷயமாயிற்று இது. 
    முதற்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌--அஞ்சிறைய -எம்பெருமானை அநுபவித்தல்‌ பலவகைப்பட்டிருக்கும்‌; அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லியநுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி யநுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அநுபவித்தல்‌, அவனுகக்தருளின திவ்யதேசங்களின்‌ வளங்களைப்‌ பேசியநுபவித்தல்‌, அங்கே அபிமானமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசியநுபவித்தல்‌, -- என்‌ இப்படி பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதநுபவம்‌, இவ்வகைகளில்‌ பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது - ஆழ்வார்‌ தாமான தன்மையை விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்‌ கொண்டு வேற்று வாயாலே பேசியநுபவித்தல்‌. இப்படி அதுபவிக்‌குந் திறத்தில்‌, தாய்பாசுரம்‌, தோழி பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு, அப்போது ஆழ்வாருக்குப்‌. “பராங்குசர்‌' என்ற ஆண்மைப்‌ பெயர்‌ நீங்கி. *பராங்குசநாயகி' என்று பெண்மைப்‌ பெயர்‌ வழங்கப்பட்டு வரும்‌, தாய் சொல்வது போலவும்‌, தலைமகள்‌ சொல்வது போலவும்‌, தோழி சொல்வது போலவும்‌ பாசுரங்கள்‌ வெளி வந்தாலும்‌ பாசுரம்‌ பேசுகிறவர்‌ ஆழ்‌வாரே யாவர்‌, ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப்‌ பெருகினாலும்‌ அவற்றுக்குப்‌ பிரதானமான பெயர்‌ ஒன்றேயா யிருக்குமா போலே, இம்மூன்று. நிலைமைகளாகச்‌ சொல்மாலை வழிந்து புறப்பட்டாலும்‌ “அமர்‌ பொழில்‌ வளங்குருகூர்ச்‌ சடகோபன்‌ குற்றேவல்கள்‌"' என்று ஆழ்வார்‌ பாசுரமாகவே தலைக்கட்டும்‌. ஆழ்வார்‌ தரமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக்‌ கொள்ளுதல்‌ ஏதுக்காக வென்னில்‌ ஆழ்வார்‌ தாமாக, ஏறிட்டுக்‌ கொள்கிறாரல்லர்‌; அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்‌மைக்கு முன்‌ உலகமடங்கப்‌ பெண்‌ தன்மையதா யிருக்கையாலும்‌, ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யின்‌றிப்‌ பாரதந்திரியமே. வடிவாயிருக்கையாலும்‌ இவ்வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவனை வந்தேறியன்று என்றே கொள்ளலாம்‌. நாயகி பாசுரமாகச்‌ செல்லுகிற இத்திருவாய்‌ மொழியில்‌ சில பறவைகள்‌ தூது விடப்படுகின்றன. அப்பறவைகள்‌ ஞானமும்‌ அனுட்டானமும்‌ நிரம்பிய ஆசாரியர்கள்‌ என்பதை வியாக்கியானங்‌களில்‌ விளங்கக்‌ காண்க. 

    முதற்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--வளவேழுலகு -ஆழ்வார்‌ ஒவ்வொரு திருவாய்‌ மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை வெளியிட்டுக்‌ கொண்டு வருகின்றாரன்றோ. -முதல்‌ திருவாய்மொழியில்‌ பரத்துவத்தைப்‌ பேசினார்‌. இரண்டாம்‌ திருவாய்மொழியில்‌ பஜநீயத்வத்தையருளிச்‌ செய்தார்‌. மூன்றாந்‌
    திருவாய்மொழியில்‌ ஸெளலப்யத்தை வெளியிட்டார்‌. கீழத் திருவாய்மொழியில்‌ அபராத ஸஹத்வத்தை ஆவிஷ்கரித்தார்‌. இத் திருவாய்மொழியில்‌ சீல குணத்தை விளக்கி யருளுகிறார்‌. எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களெல்லாவற்றினுள்ளும்‌ சீலகுணமென்பது மிகச்‌ சிறக்கும்‌, பராத்பரனான தான்‌: -நம் போல்வாருடைய அற்பத்தனத்தைச்‌ சிறிதுங்‌ கணிசியாது -தன்னைத்‌ தாழவிட்டுக்கொண்டு நம்மோடு புரையறக்‌ கலந்து, பழகுந்தன்மையே சீலமெனப்படும்‌, இது ஸெளசீல்யமென்றும்‌
    வழங்கப்பெறும்‌. “'மஹதோ மந்தைஸ்ஸஹ நீரந்த்ரேண ஸம்ச்லேஷ: ஸெளசீல்யம்‌' என வடமொழியாளர்‌ இக்குணத்திற்கு லக்ஷ்ணாங்‌கூறுவர்‌. மஹானாயிருப்பவன்‌ மந்தர்களோடு நெருங்கிப்‌ பழகுவதே சீலம்‌ என்றவாறு. அத்திருக்குணம்‌ இப்பதிகத்தில்‌ தம்முடைய அனுபவ முகத்தாலே விவரிக்கப்படுகிறது.

    முதற்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--பரிவதிலீசனை ஒவ்வொரு திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்‌வொரு திருக்குணத்தை அநுபவித்து வெளியிட்டுவருகிற முறைமையில்‌, இத்திருவாய்‌ மொழியில்‌ “ஆராதனைக்கெளியன்‌' என்கிற ஒரு திருக்குணத்தை வெளியிட்டருள்கிறார்‌. இக்குணம்‌ வடமொழியில்‌ “ஸ்வாராதத்வம்‌' எனப்படும்‌, சிரமமின்றி எளிதாகவே ஆராதிக்க உரியனாயிருக்குந் தன்மை என்றவாறு. இதர தெய்வங்களிற் காட்டில்‌ எம்பெருமான்‌ எத்தனையோ விதங்களால்‌ நெடு வாசி பெற்றிருப்பது போலே இவ் வகையாலும்‌ நெடு வாசி பெற்றிருப்பன்‌-“ஆடு பலிகொடு, கோழி பலிகொடு' என்று அருந் தேவைகளை யிட்டு மஹா பரிச்ரம ஸாத்யங்களான ஆராதனைகளை அபேக்ஷித்‌திருக்கும்‌ தேவதாந்தரங்கள்‌; எம்பெருமான் படியோ அப்படியன்‌று; -நாம்‌ இட்டது கொண்டு த்ருப்தி யடைவதே அவனது ஸ்வரூபம்‌, என்பது சாஸ்த்ரங்களில்‌ தேர்ந்த விஷயம்‌. அதுவே இத்திருவாய்‌மொழிக்கு ப்ரமேயம்‌.
    முதற்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--பிறவித் துயரற -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ எம்பெருமான்‌ ஆராதனைக்கு அரியனல்லன்‌, மிகவும்‌ எளியன்‌ என்பதை அருளிச்‌ செய்தார்‌, ஆராதனம்‌ எளிதாயிருந்தாலும்‌ ஆச்ரயணம்‌ இனிதாயிருந்‌தா லன்றோே நெஞ்சு பொருந்தும்‌; உலகில்‌ பல பேர்கள்‌ நரம்‌ இட்டது கொண்டு பரம திருப்தி யடையுமவர்களாய்‌ ஆராதனைக்கு எளியரா யிருக்கக் கூடும்‌; இருந்தாலும்‌ அவர்களுடைய ஆச்ரயணம்‌ நமக்கு இனிமை மிக்கதாயிருந்தா லன்‌றிப்‌ பயனில்லை யன்றோ : அப்படியே எம்பெருமானும்‌ ஆராதிக்க எளியனானாலும்‌ ஆச்ரயணத்தில்‌ ஸாரஸ்ய முடையனாயிருக்க வேண்டுவதொன்று உண்டாதலால்‌ அஃது அப்படியே உண்டென்பதை இத்திருவாய்மொழியிலருளிச்‌ செய்கிறார்‌. பகவத்‌ ஸமாச்ரயணமாகிறது தான்‌ இதுக்கு இட்டுப்‌ பிறவாத ஸர்வேச்வரனும்‌ ஆசைப்படும்படி போக ரூபமாயிருப்பதொன்றிறே” என்பது நம்பிள்ளை யருளிச் செயல்‌. தன்‌னுடைய வைலக்ஷண்யத்தை எம்பெருமான்‌ தானும்‌ பார்த்துத்‌ தனக்குத் தானே அடிமை செய்து கொள்ள விரும்பும்படியாயிருக்கு மென்று ஒரு அதிசயோக்தியாக இது அருளிச்‌ செய்தபடி. “இப்படியும்‌ இருக்குமா ? எம்பெருமான்‌ அவ்வளவு உன்மத்தனா?” என்று சிலர்‌ நினைத்துவிடக்கூடும்‌ ; “எம்பெருமானுடைய இனிமை ஒப்புயர்‌ வற்றது' என்று காட்டுவதில்‌ மட்டுமே இந்த ஸ்ரீஸூக்தி நோக்குடையதென்று கொள்க. 
    முதற்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--ஒடும்புள்ளேறி -ஒவ்வொரு திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை அநுபவித்துப்‌ பேசிவருகின்ற * ஆழ்வார்‌; 
    கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அவனது இனிமைக்குணமென்கிற பரம போக்யதையை அநுபவித்துப்‌ பேசினார்‌; இத்திருவாய்மொழியில்‌ அவனது ஆர்‌ஜவ குணத்தை அநுபவித்துப்‌ பேசுகிறார்‌. ஆர்ஜவமாவது- ௬ுஜுவாயிருக்குந்தன்மை. மனத்தி
    லுள்ளது ஒன்றும்‌, வாயாற்சொல்லுவது வேறொன்றும்‌, காரியத்தில்‌ நடத்துவது பிறிதொன்றுமாயிருக்கை யன்றியே மன மொழி மெய்கள்‌ மூன்றும்‌ ஒருபடிப்பட்டிருத்தல்‌ ஆர்ஜவமெனப்‌படும்‌. இதற்குத்‌ தமிழில்‌ செம்மை. என்று பெயர்‌, இக்குணம்‌ இத்திருவாய்மொழியில்‌ அநுபவிக்கப்படுகிறது. ஸம்ஸாரிகள்‌, நினைவும்‌ சொல்லும்‌ செயலும்‌ ஒருபடிப்பட்டிராமல்‌ பல வகைப்‌ பட்டிருத்தலால்‌, அன்னவர்களோடு எம்பெருமான்‌ தான்‌ பரிமாறுமிடத்தில்‌ அவர்கள்‌ போனவழியே தனக்கு வழியாம்படித்‌ தான்‌ அவர்கட்குச்‌ செவ்வியனாய்ப்‌ பரிமாறுகை இங்குச்‌ செம்மை எனப்‌ படுகின்றது,
    முதற்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-இவையுமவையும்‌ -எம்பெருமானிடத்தில்‌ [ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌] என்றொரு குணமுண்டு ; அதாவது, அடியார்‌களுக்குத்‌ தன்னை அநுபவிப்பிக்குமிடத்தில்‌ ஏககாலத்திலேயே பூர்ணாநுபவங்‌ கொடுத்‌துவிடுகையன்றியே பொறுக்கப்‌ பொறுக்கச்‌ சிறிது சிறியதாகக்‌ கொடுத்தலாம்‌, அங்ஙனங்‌ கொடாமல்‌ ஒரடியிலேயே பூர்ணாநுபவத்தைத்‌ தற்தருளினால்‌ அது தாங்கமுடியாதே போகும்‌, சிறு குழந்தைகட்கு. முதல்தன்னிலேயே சோறும்‌ சாறும்‌ கறியுமிடுவாரில்லையே ; பால்‌, கஞ்சி, சோறு என்று வரிசைக் கிரமமாக ஊட்டுகை யன்றோ வுள்ளது: அது போலவே மாணாக்கர்களுக்கும்‌ சிறு சிறு பாடங்‌களாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு போய்ப்‌ பெரும்‌ பாடங்கள்‌ கற்பிக்கும்‌ முறை காணா நின்றோம்‌. இங்ஙனமே எம்பெருமானும்‌ பொறுக்கப்‌ பொறுக்கப்‌ பரிமாறும் வகை யொன்றுண்டு: அஃது இத்திருவாய்‌ மொழியில்‌ விளங்கும்‌. அதாவது, ஆழ்வாருடைய திருமுடியிலே வந்து வீற்றிருக்க வேணுமென நினைத்த எம்பெருமான்‌ முதலடியிலே அது செய்தால்‌, நிதிகண்ட ஜன்ம தரித்ரன்‌ போலே ஸந்தோஷாதிசயம்‌ தாங்க மாட்டமே தளர்ற்திடுவர்‌ ; ஆதலால்‌, சற்றுப்‌ பக்கத்திலே நின்று, அருகே நின்று, கூட நின்று, ஒக்கலையிலே. வந்திருந்து, ஹ்ருதய ப்ரதேசத்திலே வந்திருந்து, தோளிலே வந்திருந்து, நாவிலே வந்து புகுந்து, கண்ணுள்ளே நின்று, நெற்றியிலே நின்று பிறகு உச்சியிலே நின்றான்‌ ; ஆக விங்ஙனே பொறுக்கச்‌ பொறுக்கக்‌ செய்த செயலை யநுபவித்து ஈடுபடுகிறாராழ்வார்‌ இத் திருவாய்மொழியில்‌,
    முதற்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--பெருமாநீள்படை-எம்பெருமானுடைய அநுக்ரஹம்‌ நிர்ஹேதுகம்‌ என்பது இத்‌ திருவாய்மொழியில்‌ அநுபவித்தருளிச்‌ செய்யப்படுகிறது. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ எம்பெருமான்‌ தம்மோடே அவயவங்கள்‌ தோறுங்‌ கலந்த கலவியை அருளிச்‌ செய்த ஆழ்வார்‌ அந்தத்‌ கலவியால்‌ தமக்குப்‌ பிறந்த அளவிலாத ஆனந்தத்தை இத்திருவாய்மொழி முகத்தால்‌ வெளியிடுகிறார்‌ என்று இங்ஙனே சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பதுண்டு. பட்டர்‌ விசேஷித்து நிர்வஹிப்‌பராம்‌--எங்ஙனே யென்னில்‌ ; கீழ்த்‌ திருவாய்‌ மொழியில்‌ “வந்து எனதுச்சி யுளானே” என்றும்‌ “உச்சி யுள்ளேறிற்குந்‌ தேவதேவற்கு?! என்றும்‌ தலைக் கொண்ட அநுபவம்‌ தமக்குக்‌ கிடைத்ததாக ஆழ்வாரருளிச்‌ செய்தார்‌. இனி அவ் வநுபவத்திற் காட்டிலும்‌ ஏற்றமாகச்‌ செய்து. கொடுக்கக் ௯டிய வேறு அநுபவம்‌ என்ன இருக்கிறது ? ஒன்றுமில்லை. அவ்வநுபவம்‌ இடையறாது தொடர்ந்து செல்லுமாறு செய்து கொடுக்க வேண்டுமத்தனையே யுள்ளது. அது எம்பெருமான்‌ திருவுள்ளத்தைப்‌ பொறுத்த விஷயம்‌. அது நிற்க. ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ தமக்குப்‌ பிறந்த பேற்றை ஆராய்ந்து பார்த்து இப்போது நமக்குக்‌ கிடைத்த பேறோமிகவுங்‌ கனத்திருக்கின்‌றது- இதிற் காட்டிலும்‌ உத்தமமான பேறு வேறொன்‌ றில்லை: இத்தகைய பேறு நமக்கு வந்த வழி என்ன ? என்று விமர்சிக்கத்‌ தொடங்கினார்‌. இப்‌ பேற்றிற்குத்‌ தகுதியா யிருப்பதொரு நன்மை, அதாவது *இதற்குத்‌ தக்க [ஸாதநாநுஷ்டாநம்‌] தம்மிடத்தில்‌ ஒன்றுமில்லை யென்பதைத்‌ தெரிந்து கொண்டார்‌; தம்‌ தலையில்‌ ஏதேனுமிருந்தாலும்‌, அத்வேஷமோ ஆபிமுக்யமோ இருக்குமே யன்‌றி வேறொன்‌றிருப்பதாகக்‌ காணவிடமில்லை, அவை ஸாதனமாக நினைக்க வொண்ணாதவை। இத்‌ தலையிலே பரமபக்தியளவும்‌ பிறந்தாலும்‌ தம்மிடத்திலே ஸாதனமாக மதிக்கலாவதொன்‌றில்லையே, ஆகவே இவ் வனுக்ரஹம்‌ றிர்ஹேதுகம்‌ என்று தலைக்கட்டுகிறார்‌. 
    இரண்டாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌ வாயுந்திரையுகளும்‌ ஸம்ஸாரிகள்‌ உலகத்திலுள்ளாரெல்லாரையும்‌ தங்களைப்‌ போலவே உண்டியே உடையே உகற்தோடுபவர்களாக நினைத்தல்‌ போலே ஆழ்வாரும்‌ உலகிலுள்ள ஸகல பதார்த்தங்களும்‌ தம்மைப்‌ போலவே எம்பெருமானைப்‌ பிரிந்த வருத்தத்தினால்‌ நோவு படுகின்‌்றனவாகக்‌ கொண்டு,-நாரை, அன்‌ றில்‌, கடல்‌, காற்று, சந்திரன்‌ முதலிய பதார்த்தங்களை நோக்கி அவற்றுக்குண்டான சில தன்மைகளை இயற்கையாகக்‌ கருதாது பகவத்‌ விச்லேஷ வ்யஸநத்‌தினா லுண்டானவையாகக்‌ கொண்டு அவற்றுக்குமாகத்‌ தாம்‌ அனுசோகிக்கிறார்‌. நாரை முதலியவற்றையும்‌ தம்மியல்வினவாக வெண்ணி ஒவ்வொன்றையும்‌ நோக்கி “நீயும்‌ என்னைப் போலே பகவத்‌ விஷயத்தில்‌ ஆசை வைத்து விருப்பத்தின்படி கிடைக்கப்‌ பெறாமையினாலே நோவுபட்டாயோ ? என்று பேசுகிறபடியாய்ச்‌ செல்லுகின்றது. இத்திருவாய்மொழி. அடியவர்களை இங்ஙனம்‌ பிச்சேறப்‌ பண்ணுமவன்‌ எம்பெருமானென்று இதனால்‌ அவனுடைய உன்மாதாவஹத்வமென்கிற குணம்‌ (பித்தேற்றுகை) சொல்லப்‌ பட்டதாகும்‌
    இரண்டாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌ -திண்ணன்வீடு -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்கு உண்டான நிலைமை லோக விலக்ஷணமாக விருந்தது. பேச்சுக்கு நிலமல்லாத ஆற்றாமையிலே இருந்தார்‌; ஆற்றாமை கரை புரண்டதாகுங்‌ காலத்திலே எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி ஆச்வஸிப்பித்தல்‌ முறைமையாதலால்‌ அவன்‌ அங்ஙனமே வந்து முகங்காட்டினன்‌1 உடனே அந்த ஆற்றாமை போனவிடந்‌ தெரியாமே போயிற்று. உடனே தேறுதலடைந்த ஆழ்வார்‌, எம்பெருமானுடைய பரத்வம்‌ ஸெளலப்யம்‌ என்கிற இரண்டு குணங்களிலே ஸெளலப்யமானது பேசப்‌ பேச உருகப் பண்ணுமாதலால்‌, “இப்போதுதான்‌ சிறிது தேறுதலடைந்த நாம்‌ அந்த ஸெளலப்ய குணத்தைப்‌ பேசி நெஞ்சழிய வொண்ணாது ; *நெஞ்சால்‌ நினைப்பரிதால்‌ வெண்ணெ யூணென்னு மீனச்சொல்லே *என்கிறபடி யல்லாமல்‌ தரித்து நின்று பேசலாம்‌ படியான பரத்வத்தைப்‌ பற்றிப்‌ பேசுவோம்‌! என்றெண்ணி! அதனைப்‌ பேசுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, *உயர்வறவுயர்றலம்‌ என்கிற முதல்‌ திருவாய்மொழியிலும்‌ பரத்வம்‌ பேசப்பட்டிருந்தாலும்‌ இங்குப்‌ பேசுகிறபடியில்‌ வைலக்ஷண்யமுண்டு. அங்கு ஸ்வாநுபவரூபமாகவே சென்றது; இங்கு உபதேச ரூபமாகவுமுள்ளது. அங்கு அந்வய முகத்தால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது ; இங்கு அந்வய வ்யதிரேகங்களிரண்டினாலும்‌ அருளிச்‌ செய்யப்படுகிறது. [எம்பெருமானே பரத்வமுடையவன்‌ என்று சொல்லுதல்‌ அந்வய முகத்தாலே சொல்லுதல்‌, எம்பெருமானைத்‌ தவிர்த்து மற்றை யோர்க்குப்‌ பரத்வம்‌ அஸம்பாவிதமென்று. நிரூபித்தல்‌ வ்யதிரேக முகத்தாலே சொல்லுதல்‌ அங்குப்‌ பெரும்பாலும்‌ உபஙிஷத்துக்களை அடியொற்றி அருளிச்‌ செய்தார்‌; இங்கு இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அருளிச்‌ செய்கிறார்‌. அங்குப்‌ பரத்வத்திலே பரத்வமருளிச்‌ செய்தார்‌; இங்கு அவதாரத்தில்‌ பரத்வமருளிச்‌ செய்கிறார்‌-என்று இங்ஙனம்‌ பல வாசிகள்‌ காண்க,
    இரண்டாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--ஊனில்‌ வாழுயிரே -இந்த மூன்றாம்‌ திருவாய்மொழியானது இரண்டாம்‌ திருவாய்‌ மொழியாக இருந்திருக்க வேண்டும்‌. முதல்‌ திருவாய்மொழியில்‌ [வாயுந்திரையுகளில்‌] பட்ட ஆர்த்தி தீர எம்பெருமான்‌ வந்து ஸேவை ஸாதித்து ஸம்ச்லேஷ ரஸாநுபவத்தையும்‌ கொடுத்தருள, அந்த ஆனந்தத்தைத்‌ தெரிவிப்பதான இந்தத்‌ திருவாய்மொழி முன்னமே அமைந்திருக்க வேண்டியதாயினும்‌, எம்பெருமானுடைய பரத்வாநுபவம்‌ இடையில்‌ ப்ராஸங்கிகமாக ப்ராப்தமாயிற்று. இப்படிப்பட்ட பராத்பரனன்றோ நம்மோடு இங்ஙனே கலந்தருளினானென்று முந்துறப்‌ பரத்வம்‌ அநுஸந்தான விஷயமானபடியாலே அது சொல்லிற்றாயிற்று கீழ்த்திருவாய்மொழியில்‌. அது பேசியானவாறே *வாயுந்திரையுகளில்‌ ஆர்த்தி தீர வந்து ஸம்ச்லேஷித்ததனா லுண்டான இன்பம்‌ இத்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்யப்‌ படுகிறது. இந்தப்‌ பேரின்பத்தை யநுபவிப்பதற்கு உசாத் துணை யாவார்‌ இந்நிலத்தில்‌ ஆரேனுமுளரோ? என்று பார்க்கையில்‌ *உண்டியே உடையே உகந்தோடுமிம்‌ மண்டலத்திலே அப்படிப்‌ பட்டாரொருவருங்‌ கிடையாமையாலே எம்பெருமானை நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளின்‌ திரளிலே போய்ப் புகுந்து அவர்‌களோடு ஒரு 'கோவையாக அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிற குறையோடே. இத்திருவாய்மொழி தலைகட்டுகின்‌றது. 
    இரண்டாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌- ஆடியாடி -கீழ்த் திருவரய்மொழியில்‌ “பரமன்‌ பவித்திரன்‌ சீர்‌ அடியேன்‌ வாய் மடுத்துப்‌ பருகிக் களித்தேனே” என்று ஆழ்வார் தாம்‌ பரமானமந்தமடைந்ததாக அருளிச்‌ செய்து, அந்த குணாநுபவம்‌ பாகவதர்‌களோடே கூடிப்‌ பெரிய கோஷ்டியாக இருந்து செய்ய வேண்டியதாகையாலே அப்படிப்பட்ட அதிகாரிகள்‌ இந் நிலத்தில்‌ விசேஷமாகக்‌ கிடையாமையாலே திருநாட்டிலே நித்ய ஸூரிகளின்‌ திரளிலே சென்று புகுந்து அநுபவிக்க வேணுமென்று பாரித்து அந்தப்‌ பாரிப்பைக்‌* களிப்புங்‌ கவர்வுமற்று* என்ற பாசுரத்திலே காட்டினார்‌. நினைத்த போதே அந்த நித்ய ஸூரிகளின்‌ திரளிலே போய்ச்‌ சேர்ந்து அநுபவிக்கப்‌ பெறாமையினாலே மிகவும்‌ வருத்தமடைந்‌தார்‌. அந்த வருத்தத்தைத்‌ தம்முடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ எம்பெருமானுக்கு அறிவிக்கிற வகையாக இத்திருவாய்‌ மொழியை அருளிச்‌ செய்கிறார்‌. ஆழ்வார்‌ இப்போது தாமான தன்மையை யிழந்து நாயகீ ஸமாதியிலே நிற்கிறார்‌. பராங்குச நாயகியான இவளுடைய நிலைமையைத்‌ தாய்மார்‌ முதலான அன்பர்கள்‌ பேசுகிற பேச்சாக இத்திருவாய்மொழி அமைந்திருக்‌கின்றது. நாயகீ ஸமாதியாலே அருளிச் செய்த திருவாய்மொழிகள்‌ கீழே இரண்டு சென்றன -- *அஞ்சிறைய மடநாராய்‌ என்பதும்‌ *வாயுந்திரையுகளும்‌ என்பதும்‌, அவை யிரண்டும்‌ நாயகி தானே பேசின பேச்சாக இருக்கின்றன. அஞ்சிறைய மட நாராயில்‌ தானே தூது விட்டாள்‌ ; வாயுந்திரையுகளில்‌--கண்ணாற் கண்ட பொருள்‌களெல்லாம்‌ எம்பெருமானைப்‌ பெறாமையினாவே நோவு படுகின்றனவாகக் கொண்டு அவற்றுக்குமாகத்‌ தான்‌ நோவுபட்டாள்‌, இத்திருவாய்மொழியிலோ வென்னில்‌ அங்ஙனம்‌ தன்‌ வாயினால்‌ பேச மாட்டாதபடி வேற்று வாயாலே பேசக் காண்கையாலே ஆற்றாமை கரை புரண்டமை விளங்குகின்றது. “ஸ்ரீராம க்ருஷ்ணாதிஅவதாரங்களைப் பண்ணி எல்லாருடைய ஆர்த்தியையும்‌ (போக்குவதையே இயல்வாக வுடையீராயிருந்த நீர்‌ உம்மிடத்திலே பெரும் பித்துக்‌ கொண்டிருக்கின்ற இப் பெண்பிள்ளை இப்படி நோவுபடுமாறு பார்த்‌திருத்தல்‌ தகுதியோ? இவள்‌ திறத்திலே நீர்‌ செய்ய நினைத்திருப்பது, என்ன ?” என்று எம்பெருமானை நோக்கித்‌ தாய்‌ கேட்கிற பாசுரமாக இத் திருவாய்மொழியுள்ளது. தாய்ப்‌ பேச்சாக இருந்தாலும்‌ பேசுகிறவர்‌ ஆழ்வாரே யன்றோ ; அவர்‌ ஏன்‌ இப்படிப் பேச வேண்டும்‌? என்று கேட்கலாகாது. வேணுமென்று ஆழ்வார்‌ இங்ஙனே பேசு கின்றாரல்லர்‌; அவருடைய அளவுகடந்த ஆற்றாமை உள்ளிருந்து வெளியே பேசும் போது இவ் வகையான பாசுரங்களாக வடிவு கொண்டதத்தனை. காவிரியாறு பெரு வெள்ளமாகப்‌ பெருகி வரும்‌ போது வெள்ளத்தின்‌ மிகுதியினால்‌ இடையிடையே உடைந்து வேறு சில வாய்க்கால்‌ வழியாகவும்‌ பெருகுவதுண்டு : அவையும்‌ திருக் காவேரித்‌ தீர்த்தமாகவே யிருக்கச்‌ செய்தேயும்‌ முடி கொண்டான்‌ முதலான வேறு சில பெயர்களைப்‌ பெற்று வழங்கா நிற்கக்‌ காண்கிறோம்‌. அதுபோலவே எல்லாம்‌ ஆழ்வார்‌ பாசுரமாகவே யிருக்கச்‌ செய்தேயும்‌ தாய் பாசுரம்‌, தோழி பாசுரம்‌ என்னும்‌ வேற்றுமைகள்‌ விளைகின்‌றன. 
    இரண்டாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--அந்தாமத்‌ தன்பு கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்குண்டான துயரம்‌ முதலையின்‌ வாயிலே யகப்பட்டுத்‌ துடித்த கஜேந்திராழ்வானுடைய துயரத்தோடு ஒப்பிடலாயிருந்தது. அந்த கஜேர்திராழ்வான்‌. “ஆதிமூலமே!” என்று கதறினபோது அக்‌ கூக்குரல்‌ கேட்ட வளவிலே **அதந்த்ரித சமூபதிப்ரஹிதஹஸ்‌ தம்‌ அஸ்வீக்ருதப்ரணீ த மணிபாதுகம்‌ கிமிதி சாகுலாந்த:புரம்‌ அவாஹறநபரிஷ்க்ரியம்‌ பதக ராஜ மாரோஹத: கரிப்ரவரப்ர்ம்ணதே பகவதஸ்த்வராயை நம: [ீரங்ராஜஸ்தவம்‌. ] என்னும்படியாகக்‌ கனவேகத்தோடே மடுவின்‌ கரையிலே அரை குலையத்‌ தலை குலைய ஓடி வந்து காட்சி தந்து தானும்‌ மகிழ்ந்து அவனையும்‌ மகிழ்வித்தவாறு போல, ஆழ்வாருடையவும்‌ “வலங்கொள்‌ புள்ளுயர்த்தாய்‌'? என்ற கூக்குரலைக்‌ கேட்டவுடனே (அந்தோ! நாம்‌ ஜகத்தை நிர்வஹித்தபடி வெகு அழகியதாச்சுது ! நாம்‌ ஆரானோம்‌!? என்று நொந்து, தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள்‌ அலங்காரம்‌ திவ்யாயுதங்கள்‌ சேர்ந்த சேர்த்தி இவை யெல்லாவற்றோடும்‌ வந்து கலவி தந்து அதனாலே அவன்‌ பரம ஸந்துஷ்டனாய்‌ க்ருதக்ருத்யனா யிருக்கிற இருப்பை ஆழ்வார்‌ அநுபவித்து அவ்வநுபவத்தி னாலுண்டான மகிழ்ச்சியின்‌ மிகுதி யினால்‌ இத்திருவாய்மொழியில்‌, தாம் பெற்ற பேற்றைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌.
    இரண்டாம் பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--வைகுந்தா --ஆடியாடி யென்னுந்‌ 'திருவாய்மொழியில்‌ ஆழ்வார் பட்ட ஆர்த்தி யெல்லாம்‌ தீர எம்பெருமான் வந்து ஸம்ச்லேஷித்தமை, கீழ்த் திருவாய்மொழியில்‌ சொல்லிற்று. அந்த ஸம்ச்லேஷத்தினால்‌ எம்பெருமான்‌ அளவு கடந்த த்ருப்தியை யடைந்தவனாய்‌ *இவ்வாழ்‌வார்க்கு என்னவுதவி செய்வேன்‌ றான்‌ !, இவர்க்கு என்ன கொடுப்‌பேன்‌ என்று தடுமாறி நிற்பவனாய்‌, இவ்வாழ்வார்‌ நைச்சியாநுஸந்தானம்‌ பண்ணி “இப்‌ பரமபுருஷனையா நாம்‌ அணுகுவது ? நம்மால்‌ இவனுக்கு நிறக் கேடு உண்டாகுமே! அஃது உண்டாகலாமோ? நாம்‌ இவனை விட்டு ஒதுங்கி நிற்பதே நன்று? என்று 
    நினைத்து, ஒருகால்‌ அகன்று போய்விடுவாராயின்‌, அலப்ய லாபமான இதனை நாம்‌ இழந்து விடுவோமே! இவ்வாழ்வார்க்கும்‌ நமக்கு முண்டான இக் கலவி நித்யமாயிருக்க வேணுமே! என்று அதி சங்கை கொண்டிருக்கையில்‌, அதைத்‌ தெரிந்து கொண்ட ஆழ்வார்‌ பிரானே ! இங்ஙனம்‌ அதிசங்கை கொள்ளவேண்டா ; உன்னை நான்‌ பிடித்த பிடி ஸாமான்யமன்று; இனி ஒரு நாளும்‌
    உன்னை நான்‌ விடமாட்டேனாம்படி திடமாகப்‌ பற்றிக்‌ கொண்டேன்‌ காண்‌? என்று கூறி எம்பெருமானைத்‌ தேற்றுகிறார்‌
    இத்திருவாய்‌ மொழியில்‌,
    இரண்டாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--கேசவன் தமர்‌ --கீழ்த்‌ திருவாய்மொழியில்‌, ““எமர்‌ கீழ் மேலெழு பிறப்பும்‌ விடியா வெந்ரரகத்து என்றுஞ்‌ சேர்தல்‌ மாறினர்‌?” என்று--எம்பெருமான்‌ தம்மிடதது வைத்த காதல்‌ முன்னும்‌ பின்னும்‌ வெள்ளங்கோத்த படியைச்‌ சிறிதளவாக ப்ரஸ்தாபித்தார்‌ ; அந்த மஹோபகாரத்தைப்‌ பெருக்கப்‌ பேச வேணுமென்று ஆழ்வார்க்கு அபிநிவேச முண்டாயிற்று. அஃது இத்திருவாய்மொழிக்கு முக்கியமான ப்ரமேயமாக எடுத்துக்‌ கொள்ளப்படுகிறது. எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களில்‌, இது வொரு மிகச்‌ சிறந்த குணம்‌: அதாவது-- ஒருவனை விஷயீகரிக்கத்‌ திருவுள்ளம்‌ பற்றினால்‌, அந்த விஷயிகாரம்‌ அவ்வொருதனளவிலே நில்லாமல்‌, அவனோடு ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்றாரளவிலும்‌ கொந்தளிக்குமது. இவ்விஷயத்திற்குச்‌ சார்பாக நம்பிள்ளே “மரணாந்தாஙி வைராணி நிர்வ்ருத்தம்‌ ௩: ப்ரயோஜறம்‌, க்ரியதாம்‌ அஸ்ய ஸம்ஸ்காரோ மமாப்யேஷ யதா தவ!” என்கிற ராமாயண ச்லோகத்தை யெடுத்துப்‌ பரம ரஸமாக வியாக்யானித்‌து அருளியுள்ளார்‌. அதன்‌ சாரமாவது: விபீஷணாழ்வானிடத்தில்‌ பெருமாளுக்கு உண்டான அன்பு ராவணனிடத்திலும்‌ பெருகிச்‌ சென்று, “இவனுக்கு நீ ஈமக்‌ கடன்‌ செய்தே யாக வேண்டும்‌' என்று வற்புறுத்தியது. இத்திருவாய்மொழியில்‌ இவ்விஷயம்‌ முக்கியமாகப்‌ பேசப்படுகிறது, அன்றியும்‌ இத்திருவாய்மொழியில்‌ மற்றொரு விசேஷமுண்டு: அதாவது-கேசவன்‌ முதலாகத்‌ தாமோதரனளவாகவுள்ள துவாதச  நாமங்களும்‌ பாட்‌ டுத்தோறும்‌ வரிசைக் கிரமமாகத்‌ தொடுக்கப்பட்டிருக்கின்‌றன வென்பதாம்‌, ஆனது பற்றியே, இப் பதிகம்‌ மாத்திரம்‌, மற்றைப்‌ பதிகங்கள் போல்‌ பதினொரு பாசுரங்கள்‌ கொண்டதன்‌றியே பதின்மூன்று பாசுரங்கள்‌ கொண்டதாயிருக்கின்றது. 
    இரண்டாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- அணைவதரவணை மேல்‌ எம்பெருமானுக்குத்‌ தம் பக்கலில்‌ உண்டான வ்யாமோஹம்‌ தம்‌முடைய ஸம்பந்த ஸம்பந்திகளளவிலும்‌ ஏறிப் பாய்ந்து அனைவரையும்‌ விஷயீகரித்த படியைக்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்தார்‌. அவ்வளவிலும்‌ எம்பெருமான்‌ பர்யாப்தி பெறாமல்‌, நித்ய முக்தர்களுடையதான ஐச்வர்யத்தையும்‌ தமக்கும்‌ தம்மைச்‌ சேர்ந்தவர்கட்கும்‌ தருவதாக அவன்‌ முயற்சி கொண்டிருக்கு மிருப்பை ஆழ்வார்‌ கண்டு மிகவுமுகந்து, “நம்மோடுண்டான ஸம்பந்தமே ஹேதுவாக எம்பெருமான்‌ இப்படி விஷயீகரிப்பவனா யிருக்கும் போது ஸம்ஸாரிகள்‌ இழக்கலாமோ? அவர்களுக்கும்‌ நம்மோடே ஒரு ஸம்பந்தத்தை யுண்டாக்கி, அவனுடைய விஷமீகாரத்திற்கு இலக்காக்குவோம்‌' என்று பார்த்து, அந்த ஸம்ஸாரிகளுக்கு உபதேசம்‌ செய்தருள 'இழிகிறார்‌, இத்திருவாய்மொழியில்‌, 
    எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை இதில்‌ உபதேசிக்‌கிறதாகச்‌ சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பர்கள்‌, அவனுடைய மோக்ஷ ப்ரதத்வத்தை உபதேசிக்கிறதாக பட்டர்‌ அருளிச்‌ செய்யும்‌ படி, இந்த நிர்வாஹ பேதத்தில்‌ விசேஷமான வ்யத்யாஸம்‌யாதொன்றுமில்ல; ஸர்வேச்வரனாயிருந்கால்தான்‌ மோஷ ப்ரதனாக முடியும்‌; மோக்ஷ ப்ரதனுக்கே ஸர்வேச்வரத்வம்‌ கூடும்‌, -ஆதலால்‌ இவை யிரண்டும்‌ ஒன்றையொன்று விட்டிராவாகையால்‌, எங்ஙனே நிர்வஹித்தாலும்‌ குறையில்லை, ஆனாலும்‌ “திண்ணன்‌ வீடு* என்கிற திருவாய்மொழியில்‌ ஸர்வேச்வரத்வம்‌ பிரதிபாதிக்‌க்‌ப்பட்டபடியால்‌, இத்திருவாய்மொழியில்‌ பிரதிபாதிக்கப்படுவது,மோக்ஷ ப்ரதத்வமா யிருக்க வடுக்கும்‌-என்று போலும்‌ பட்டர்‌ திருவுள்ளம்‌, **புணைவன்‌ பிறவிக்கடல்‌ நீந்துவார்க்கே”” என்றும்‌ *- வீடு முதலாம்‌?” என்றும்‌ ***நலமந்த மில்லதோர்‌ நாடு புகுவீர்‌”" என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளில்‌ அதிக நோக்காக பட்டர்‌ நிர்வஹிக்‌கும்படி யென்று கொள்க.
    இரண்டாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ எம்மாவீட்டு -புருஷார்த்த நிஷ்கர்ஷம்‌ பண்ணுகிற திருவாய்மொழியாமிது -அதாவது, கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ **நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌” இத்யாதிகளாலே ஆழ்வார்‌ திரு நாட்டைப் பற்றி ப்ரஸ்‌தாவஞ்‌ செய்தது கண்ட எம்பெருமான்‌, “இவர்க்கு மோக்ஷத்திலே ருசியாகில்‌ அதை இவர்க்குக்‌ கொடுத்து விடுவோமே! என்று திருவுள்ளம் பற்றி, *ஆழ்வீர்‌! நீர்‌ அபேஷிக்கிற மோக்ஷத்தைக்‌ கொள்ளும்‌' என்று அருளிச்‌ செய்ய, அதுகண்ட ஆழ்வார்‌, “எம்பெருமான்‌ இங்ஙனே 'சொல்லிக்‌ கொடுக்கிற மோக்ஷம்‌ நமக்கு ஏதுக்கு? நம்முடைய அபேஷிக்கிறத்தை நிறைவேற்ற வேணுமென்கிற திருவுள்ளத்தோடே அவன்‌ தந்தருளும்‌ மோக்ஷம்‌ நமக்குப்‌ புருஷார்த்தமாகுமோ? அவன்றன்னுடைய ருசிக்கீடாகக்‌ கொடுத்தருளினால்‌ அது பாங்கேயல்லது நம்முடைய ருசிக்காகக்‌ கொடுக்குமது நமக்கு நரகத்தோடொக்குமத்தனை? என்று திரு வுள்ளம்‌ பற்றி, “பிரானே! நான்‌ முக்தனாகி எல்லையிலின்பம்‌ அநுபவிக்கவுமாம்‌ ; கைவல்யாநுபவத்தைப்‌ பெறவுமாம்‌; ஆத்ம விநாசமே யாகவுமாம்‌ ; நரகாநுபவம்‌ பண்ணவுமாம்‌ ; இவற்றில்‌ எனக்கு ஒரு நிர்ப்பந்தமில்லை ; உன்னுடைய ருசிக்கீடாக வருமதாகில்‌ இவை யித்தனையும்‌ வரவுமாம்‌; எனக்காக வருமதாகில்‌ மோக்ஷமும்‌ வேண்டா ; ஆனபின்பு, தேவரீருடைய ருசிக்கு ஏற்றது எதுவோ, அதுவே எனக்கு ப்ராப்யமாம்படி பண்ணி யருள வேணும்‌,” என்கிறாராயிற்று. “எம்பார்‌ இத்திருவாய்மொழி அருளிச்‌ செய்‌யப் புக்கால்‌, இருந்தவர்களை யார்‌ என்று கேட்டுக்‌ கதவுகளையும்‌ அடைப்பித்து, குஹ்யமாகவாம்‌ அருளிச்‌ செய்வது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி யறிக.  இத்திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயத்திற்கு அதிகாரிகள்‌ துர்லபர்‌ என்று காட்டின படி, 
    இரண்டாம்‌ பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌- கிளரொளி -கீழ்த் திருவாய்மொழியில்‌ நிஷ்கர்ஷிக்கப்பட்ட பேற்றைப்‌ பெறுதற்குத்‌ திருமாலிருஞ்‌ சோலை மலையை ஆச்ரயிக்கிறார்‌ என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள்‌ அருளிச்‌ செய்யும்படி,எம்பெருமானார்‌ அதை இன்னமும்‌ இனிமைப்படுத்தி யருளிச்செய்வர்‌. -அதாவது-கீழ்த் திருவாய்மொழியில்‌ “ஒல்லை, ஒல்லை! என்றும்‌ 'காலக்கழிவு செய்யேல்‌! என்றும்‌, பகவத்‌ கைங்கரியத்திலே தமக்குண்டான பதற்றத்தை ஆழ்வார்‌ வெளியிட, அதுகண்ட எம்பெருமான்‌, ஆழ்வார்‌ இப்படிப்‌ பதறுவது இந்த சரீரத்தோடேயே கைங்கரியம்‌ செய்யவேணு மென்கிற விருப்பத்தாலே போலும்‌! என்றெண்ணி, இவர்க்கு நாம்‌ நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான ஸ்தலம்‌ ஏதோவென்று இந் நிலவுலகத்தில்‌ கடாக்ஷித்து வருகையில்‌, *வளரிளம் பொழில்‌ சூழ் மாலிருஞ்சோலையைக்‌ கண்டு, இது சாலவும்‌ பாங்கான இடமாயிரா நின்றது. என்று திருவுள்ளம்‌ பற்றி, அங்கே ஸந்நிதி பண்ணியருளி, “ஆழ்வீர்‌! நாம்‌ உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்‌ ; நீர்‌ இங்கே வற்து நினைத்தபடி யெல்லாம்‌ பரிமாறி யநுபவிக்கலாம்‌! என்று தெற்குத்‌ 'திருமலையிலே தானிருக்கிற படியைக்‌, காட்டிக் கொடுக்க, ஆழ்வாரும்‌ அதை அநுஸந்தித்து எம்பெருமான்‌. நமக்கு உபேயனானால்‌ அவன்‌ எழுந்தருளியிருக்குமிடமும்‌ நமக்கு உபேயந்தானே; ஆகவே, திருமலையோடு அதனோடு சேர்ந்ததொரு மலையோடு, . திருப்பதியோடு, போம் வழியோடு, போவோமென்கிற அத்யவஸாயத்தோடு வாசியற, எல்லாம்‌ நமக்கு ப்ராப்யமே' என்று கொண்டு அநுபவித்து இனியராகிறார்‌- என்பதாக,  
    மூன்றாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--முடிச்சோதியாய்‌ கீழ்த்‌ திருவாய்மொழியைத்‌ | தலைக் கட்டுமிடத்தில்‌ ஆழ்வார்‌ “பொருளென்‌ றிவ்வுலகம்‌ படைத்தவன்‌. புகழ் மேல்‌ மருளில்‌ வண்‌ குருகூர்‌ வண் சடகோபன்‌”' என்று தம்மைப் பற்றிச்‌ சொல்லிக்‌ கொண்டார்‌ | அஃதாவது எம்பெருமான்‌ விஷயத்தில்‌ தமக்கு அஜ்ஞானம்‌ ஒன்றுமில்லை யென்பதாகச்‌ சொல்லிக்‌ கொண்டார்‌--இப்போது பாசுரம்‌ தொடங்கும் போதே. தமக்கு ஒரு அஜ்ஞானம்‌ உள்ளதென்று காட்டுகிறார்‌. அஜ்ஞானம்‌ நான்கு வகைப்படும்‌ ;ஒரு வஸ்துவைப் பற்றி அடியோடு தெரிந்து கொள்ளாமையும்‌, நிச்சயமாகத்‌ தெரிந்து கொள்ளாமல்‌ ஸந்தேஹமாகத்‌: தெரிந்து கொள்ளுதலும்‌, விபரீதமாகவே நிச்சயித்துத்‌ தெரிந்து கொள்ளுதலும்‌, உள்ளபடி தெரிந்து கொண்டதை மறந்து போதலும்‌--ஆக நால்வகைப்பட்ட அஜ்ஞானங்களுள்‌ ஸந்தேஹ ரூபமான அஜ்‌ஞானம்‌ தமக்குளதென்பதை இங்குக்‌ காட்டிக்‌ கொள்கிறாராழ்வார்‌. கீழே தமக்கு மருள்‌ இல்லை யென்று சொல்லி விட்டு இப்போது மருள்‌ உள்ளதாகச்‌ சொல்லுவது பொருந்துமோ எனின்‌ ; நம் போல்‌வார்க்குக்‌ கருமம்‌ காரணமாக வுண்‌டாகின்‌ற மருள்‌ ஆழ்வார்‌ தமக்கு இல்லை என்றார்‌த்தனை யொழிய, விஷய வைலக்ஷண்யத்தால்‌ வருகிற அஜ்ஞானமும்‌ இல்லை யென்றதன்று,  எம்யெருமானுடைய வடிவழகிலே யீடுபட்டு “பிரானே! உனது முகச் சோதியே முடிச்‌ சோதியாய்‌ மலர்ந்ததுவோ? திருவடியின்‌ சோதியே நீ. நின்ற தாமரையாய்‌ அலர்ந்ததுவோ ?' என்று. கேட்பதற்குறுப்பான ஸந்தேஹம்‌ ஆழ்வார்க்கு விளைந்ததென்றால்‌ இந்த அஜ்ஞானம்‌ புருஷார்த்த கோடியில்‌ சேருவதாகுமன்றோ. ஜ்ஞான . விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம்‌ அடிக்கழஞ்சு பெறும்‌” என்கிற ஸ்ரீவசந பூஷண ஸ்ரீஸூக்தியுங்‌காண்க, நம்முடைய அஜ்ஞானம் போலன்றிக்கே இப்படி மிகவும்‌ விலக்ஷணமான அஜ்ஞானம்‌  ஆழ்வார்களுக்கு உண்டாவதே. அவர்‌களுடைய சிறப்புக்குக்‌ காரணமாக நிற்கும்‌, விலக்ஷண விஷயத்திலே கலக்கங்கொள்ளாதே தெளிந்தே நிற்பர்களாகில்‌ அவர்‌களுக்கொரு ஏற்றமில்லே யாகுமே. கீழ்த்திருவாய்மொழியில்‌ திருமாலிருஞ்சோலைமலையை அனுபவித்த ஆழ்வார்‌ அந்தத்‌ திருமலையில்‌ ஏகதேசமென்னலாம்படியாய்‌, கருபகத்தரு கப்புங்கிளயுமாகப்‌ பணைத்துப்‌ பூத்தாற்போலே நிற்பவரான அழகருடைய வடிவழகை யனுபவித்து, வேதங்களும்‌ வைதிகர்களும்‌ ப்ரஹ்‌ம ருத்ராதி தேவர்களுங்கூட நிலையிட மாட்டாதபடி யிருக்கிற விருப்பை அநுஸந்தித்து இனியராகிறார்‌ இத் திருவாய் மொழியில்‌.
    மூன்றாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- முந்நீர்‌ ஞாலம் படைத்த --மிக்க தாஹங்கொண்டவன்‌, நல்ல. தீர்த்தம்‌ ஸமீபித்திருக்கச்‌ செய்தே வாய் முடிக் கிடந்தால்‌ . துடிக்குமா போலே, ஆழ்வாரும்‌, தமக்குப்‌ பரம போக்யமான விஷயம்‌ ஸமீபித்ததாய்த்‌ தமக்கு ஆசையும்‌ மிக்கிருக்கச் செய்தே, விஷயத்தின்‌ பெருமையாலே அது தம்மால்‌ அநுபவிக்க அஸாத்யமாகவே, “ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ காரணமாக நம்முடைய கரணங்கள்‌ ஸங்குசிதங்களா யிருக்கையா லன்றோ பகவத்‌ விஷயத்தை நாம்‌ பரிபூர்ணமாக அநுபவிக்க முடியாமல்‌ துவள்கிறோம்‌? என்று கொண்டு வருத்த முற்றவராய்‌, “எம்பெருமான்‌ விசாலமான திருவுள்ளங்‌ கொண்டு செய்தருளின கரண களேபர ப்ரதானமும்‌,  ஜகத்தில்‌ அப்பெருமான்‌ பண்ணின பலபல திருவவதாரங்களும்‌ என்னளவில்‌ பயன்படவில்லையே! நான்‌ ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ கழிந்து எம்பெருமானைப்‌ பெற்று முற்றூட்டாக அநுபவித்து ஆனந்திக்க அவகாசமில்லை யாகிறதே!” என்று நினைந்து நைந்து உள்‌ கரைந்துருகி யிருக்க, அவ்வளவிலே எம்பெருமான்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பட்டவர்களும்‌ இழக்க வேண்டாதபடி நான்‌ திருவேங்கட மலையில்‌ நின்‌றருளின படியைக்‌ காட்டி ஆழ்வாரை ஒருவாறு ஸமாதானப்படுத்தத்‌ திருவுள்ளங்‌.கொண்டு, “ஆழ்வீர்‌! நீர்‌ ஏன்‌ துவள்கின்றீர்‌? நம்மைப்‌ பூர்ணமாக அநுபவிக்க முடியாமைக்குக்‌ காரணம்‌ கரண ஸங்கோச மென்று நீர்‌ நினைக்கின்‌றீர் போலும்‌ ; அங்ஙனம்‌ நினைக்க வேண்டா ; கரண ஸங்கோசமில்லாதவர்களான. அமரர்களும்‌ நம்மை அநுபவிக்குமிடத்து, அவர்களும்‌ உம்மைப்‌ போலவே யன்றோ துவள்வது ; விஷயம்‌ அளவிட முடியாததாகையாலே பரிபூர்ணாநுபவம்‌ செய்ய முடியவில்லையே யென்கிற தளர்ச்சி உம்மோடு அமரர்களோடு வாசியற அனைவர்க்கும்‌ பொதுவானதே காணும்‌; அது பற்றி நீர்‌ தளரவேண்டா ; நீர்‌ நினைத்தபடி யெல்லாம்‌ நம்மோடு. பரிமாறலாம்படி நாம்‌ வடக்குத்‌ திருமலையிலே நின்ற நிலையில்‌ கிட்டி யநுபவித்து மகிழ்வீர்‌ என்ன ; ஆழ்வாரும்‌ ஒருவாறு ஸமாதானமடைந்தவராய்‌ இனிமையோடே தலைக்கட்டுகிறார்‌. (பத்தாம்‌ பாட்டில்‌ இனிமை காணத் தக்கது.)  
    மூன்றாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌--ஒழிவில்காலம்‌ -“எம்பெருமானே ! உன்னை யநுபவிப்பதற்கு இடையூறான பிரகிருதியைப்‌ போக்கித்தர வேணும்‌' என்று கீழ்த்திருவாய்மொழியில்‌ பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்‌ “ஆழ்வீர்‌ ! 
    நம்மோடு பரிமாறுவதற்கு அந்தப்‌ பிரகிருதி உமக்கு இடையூறன்று காணும்‌; அநுகூலமேயாகும்‌. இந்தப்‌ பிரகிருதியோடே கூட உம்மை அடிமைகொள்ள வேணுமென்று விரும்பியன்றோ நாம்‌ திருமலையிலே நிற்கிறது; நீர்‌ இங்கேறப்‌ போந்து அடிமை செய்து வாழலாமே என்று தான்‌ திருவேங்கடமலையில்‌ நின்‌றருளுகிற. படியைக்‌ காட்டி யருளக் கண்டு ஸமாதானமடைந்தவராய்‌ அத்திரு மலையப்பன்‌ திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட வடிமைகளுஞ்‌ செய்ய வேணுமென்று பாரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌,
    மூன்றாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌--புகழு நல்‌-கீழ்த்திருவாய்மொழியில்‌ “*ஓழிவில்‌. காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டு நாம்‌!” என்று எம்பெருமானுக்கு ஸர்வதேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ ஸகலவிதமான கைங்கர்யங்களையும்‌ செய்யப்பெற வேணுமென்று மநோரதங்‌ கொண்ட ஆழ்வாருடைய பாரிப்பைக் கண்ட எம்பெருமான்‌ ஆழ்வார்க்குத்‌. தான்‌ அவர்‌ விருப்பத்தின்படியே செய்வதற்கு அநுகூலமாக எல்லாப்‌ பொருள்களிலும்‌ பிரவேசித்து எங்கும்‌ நிற்கிற நிலையைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. அதுகண்ட ஆழ்வார்‌, பெருங்காற்றில்‌ வீழ்ந்த பழங்களைப்‌ பொறுக்கி யெடுத்துக்‌ கொள்ளக்‌ கருதுமவர்கள்‌ “அந்தப்‌ பழத்தை எடுப்போமா? இந்தப்‌ பழத்தை யெடுப்போமா?' என்று அலமந்து கிடப்பதுபோல்‌ அத்தைச்‌ சொல்லுவேனோ? இத்தைச்‌ சொல்லுவேனோ ? என்று அலமந்து, எங்கும்‌ எல்லா வகைப்‌ பொருளாயும்‌ தோன்றுகின்‌ற. அம்பெருமானுக்கு வாசிகமான கைங்கர்யத்தைச்‌ செய்ய நினைத்து “ஸகல கல்யாண குணங்களுக்கும்‌ கடலான அவ்வெம்பெருமானுடைய தன்மையை யான்‌ என்னவென்று சொல்லுவேன்‌?" என்று நிர்வேதத்துடனே அவனது ஸர்வாத்மத்வத்தைப்‌ பேசுகிறார்‌-
    இத்திருவாய்மொழியில்‌

    மூன்றாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌--பொய்ம்மாம்‌ பூம்பொழில்‌ -ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ எம்பெருமானை மிகவும்‌ அற்புதமாக அநுபவித்தார்‌. அந்த அநுபவத்தினால்‌ அபரிமிதமான ஆனந்தத்தை யடைந்தார்‌. திருவுள்ளத்திலுண்டான ஆனந்தம்‌ வடிவிலே தொடை கொண்டது ; அதனால்‌ ஆடுவதும்‌ பாடுவதுமாகத்தாம்‌ ஆயினர்‌; இந்நிலவுலகத்திலே இங்ஙனே பகவத்‌ குணங்களில்‌ ஈடுபட்டுக்‌ களித்துப்‌ பரவச சரீரர்களாக இருப்‌பவர்கள்‌ எத்தனை பேருண்டு? என்று ஆராயத்‌ தொடங்கினர்‌ அன்னவர்‌ மிகச்‌ சிறுபான்மையராய்‌, பகவத்‌ குணங்களில்‌ ஈடுபடாத பாவிகளே பெரும்பான்மையராய்‌ இருப்பதைக்‌ கண்டு திருவுள்ளம்‌ மிக நொந்து, ஈடுபாடுடையாரைக்‌ கொண்டாடியும்‌ அஃது இல்லாதாரை நிந்தீத்தும்‌ செல்லுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, எம்பெருமானுடைய குணாதுபவம்‌ விஞ்சினால்‌, நின்றவிடத்தில்‌ நிற்க முடியாமல்‌ ஆடுவதும்‌ பாடுவதுமான நிலைமை பரவசமாக
    உண்டாகியே தீரும்‌. முக்தர்களும்‌ திருநாட்டில்‌ களித்துப்பாடுவர்‌களென்றது. நாரதமுனிவர்‌ முதலானாரும்‌ பகவத்‌ ஸந்நிதியிலே வந்தவாறே ஆடுவது பாடுவதாக நிற்பர்களென்று சொல்லப்‌ பட்டுளது. இதுவன்றோ நம்முடைய கர சரணாதி அவயவங்‌
    களுக்குப்‌ பயன்‌, இப் பயன் பெறாத பாவிகளைப்‌ பழிப்பதும்‌ இது பெற்ற பெரியாரைப்‌ புகழ்வதும்‌ பகவதநுபவத்திலே ஒருவகை யாதலால்‌ அவை இத்திருவாய்மொழியிற்‌ செல்லுகின்றன.
    மூன்றாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌--செய்யதாமரை -கீழ்த்திருவாய்மொழியில்‌, எம்பெருமானுடைய குணசேஷ்டிதங்களை நினைந்து கரைந்துருகி, நின்‌றவிடத்தில்‌ நிற்கமாட்டாமே நர்த்தனம்‌ முதலியன செய்து இதுவே போதுபோக்காக இருக்கும்‌ மஹான்களைக்‌ கொண்டாடியும்‌, இந்நிலைக்கு மாறாக இருக்கின்றவர்களை நிந்தித்தும்‌ பேசினார்‌. அங்ஙனம்‌ தம்மால்‌ நிந்திக்கப்பட்ட பாபிகளையும்‌ கைவிடமாட்டாத மிக்க கருணை வாய்ந்தவரன்றோ ஆழ்வார்‌. அக்கருணையினாலே அந்தப்‌ பாபிகளையும்‌ வழிப்படுத்துக்‌ கொள்ள வேணுமென்று திருவுள்ளம் பற்றி, அன்னவர்களுடைய கல்றெஞ்சிலும்‌ நன்கு பதியுமாறு எம்பெருமானுடைய சிறந்த திருக்குணங்களை எடுத்துக்கூற விரும்பிய ஆழ்வார்‌. இத்திருவாய்‌ மொழியில்‌ அப்பெருமானது ஸெளலப்ய குணத்தை யெடுத்‌துரைக்கின்றார்‌. 'முதற்பத்தில்‌ *பத்துடையடியவர்க் கெளியவன்‌ என்ற திருவாய்மொழியிலும்‌ எம்பெருமானுடைய ஸெளலப்ய குணம்‌ பேசப்பட்டிருற்தாலும்‌ இப்போது இங்குப்‌ பேசும்‌ ஸெளலப்ய குணம்‌ அதனிலும்‌ விலக்ஷணமானது.। அங்குச்‌ சொன்னது விபவாவதார ஸெளலப்யம்‌; இங்குச்‌ சொல்வது அர்ச்சாவதார ஸெளலப்யம்‌ * இந்த வாசியை மணவாளமாமுனிகளும்‌ நூற்றந்தாதியில்‌ விளக்கி யுள்ளார்‌; “பத்துடையோர்க்கென்றும்‌ பரனெளியனாம்‌ பிறப்பால்‌” என்றதையும்‌, **செய்ய பரத்துவமாய்‌... இந்நிலத்தில்‌ அர்ச்சாவதார மெளிதென்றான்‌'” ' என்றதையும்‌' நோக்குக... இப்பதிகத்திற்கு உயிரான பாசுரம்‌ - *தஞ்சமாகிய 'தந்தை தாயொடு” என்பதாம்‌, அர்ச்சாவதார வெளிமையை நிரூபிக்கும்‌ பாசுரம்‌ அதுவேயாம்‌. 
    மூன்றாம்‌ பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌. பயிலுஞ்சுடரொளி -கீழ்த்திருவாய்மொழியில்‌ - அர்ச்சாவதார ஸெளலப்யத்தை அருளிச்‌ செய்தவிடத்திலும்‌ நெஞ்சில்‌ ' நிகழ்ச்சி யின்‌றியே விஷய ப்ரவணராயிருக்கின்‌ற ஸம்ஸாரிகளின்‌ இயல்வைக் கண்டு வெறுத்து -அவ்‌ வெறுப்புக்குப்‌ பரிஹாரமாகத்‌ தாம்‌ ஒரு மஹாநந்தத்தை அநுபவிக்க விரும்பி ஸ்வ ஸ்வரூப காஷ்டையான பாகவத சேஷத்‌வத்தை 'அநுஸந்தித்து அம்முகத்தாலே தாம்‌ இனியராகிறார்‌. 
    ஒருவன்‌ ஒரு. வஸ்துவினிடத்தில்‌ அன்பு வைத்தால்‌ அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால்‌ அஃது அவ்வஸ்துவோடே நின்று விடாமல்‌ அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம்பெற்ற வஸ்துக்களிலும்‌ பெருகிச்‌ செல்லுமென்பதை அனைவரும்‌ தம்தம்‌ அநுபவத்‌ தாலறிவர்‌. அப்படியே பாகவத்‌ பக்தியென்பது பகவத்‌ பக்தியின்‌ எல்லை. நிலமாக உண்டாமது. பகவத்‌ பக்தியின்‌ உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும்‌: ஸ்வாமியினுடைய பாதுகை களிலே நாம்‌ ஆதரம்‌ வைத்து அவற்றைக்‌ கண்களில்‌ ஒற்றிக்‌ கொள்வதும்‌ தலைமீது அணிந்து கொள்வதும்‌ அலம்பித்‌ தீர்த்தம்‌ பருகுவதும்‌. செய்கிறோம்‌ ; இதனால்‌ ௩மக்கு ஸ்வாமியிடத்திலுள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்‌றது; அதுபோலவே இங்கும்‌. '“அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌. தமக்கடியாரடியார்தம்‌ அடியாரடியோங்களே?? . இத்யாதிகளால்‌ பாகவத - சேஷத்வாதிசயத்தைப்‌. பேசுவதெல்லாம்‌ பகவச்‌ சேஷத்வத்தின்‌ உறைப்பையே பேசின படியாகும்‌-
    மூன்றாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- முடியானே, -கீழ்‌ ஆறாந்திருவாய்மொழியான *செய்யதாமரைக்‌ கண்ணனில்‌ “அன்று தேர் கடவிய பெருமான்‌ கனை கழல்‌. காண்பதென்று கொல்‌ கண்களே” என்று பகவத்‌ விஷயத்திலே தமக்கு உண்டான 
    விடாயை வெளியிட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌. ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ காட்டிக்‌ கொடுத்து. ஒருவாறு ஸமாதானம்‌ பண்ணினபடி -கீழ்த்திருவாய்மொழியில்‌ சொல்லிற்று, அதில்‌ ஸ்ரீவைஷ்ணவர்களை அநுபவித்துப்‌ போந்த ஆழ்வார்‌ அவர்களுகந்த விஷயமான பகவத்‌ விஷயத்தின்‌ சிர்மையையும்‌. பாசுரந்தோறும்‌ முன்னடிகளால்‌ அநுபவித்து. வந்தாராகையாலே. அவ்வநுபவம்‌ பழைய விடாயை அதிகரிக்கச்‌ செய்தது. . “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே!!
    என்னும்படி கண்களுக்கு, மாத்திரம்‌. உண்டாகியிருந்த விடாய்‌ மற்றை யிந்திரியங்களெல்லா வற்றுக்குமாயிற்று. அதுதானும்‌ ஒரு விலக்ஷணமான படியிலே யாயிற்று. அதாவது. என்‌ னென்னில்‌; ஒரு. இந்திரியத்தினுடைய வ்ருத்தியை மற்றோர் இந்திரியம்‌ ஆசைப்படும்படியாயும்‌. நேர்ந்து, தம்மிலும்‌ விடாய்த்த கரணங்களும்‌ கரணங்களில்‌. காட்டிலும்‌ விடாய்த்த . தாமுமாய்‌ இப்படியொரு. விலக்ஷணமான நிலைமையைப்‌ பெறும்படியாயிற்று. -பஹுகுடும்பியான .. வொருவன்‌ க்ஷாமகாலத்திலே. . தன்பசிக்கு ஆற்றமாட்டாதே மக்கள்‌. பசிக்கு. ஆற்றமாட்டாதே அவற்றின்‌ வாயில்‌ சோற்றைத்தான்‌ பறித்து உண்பது, தன்‌.வாயில்‌ சோற்றை அவை பறித்துண்பதாய்‌ என்‌ பசிக்கு, என்‌ செய்வேன்‌? என்‌ மக்கள்‌. பசிக்கு என்‌ செய்வேன்‌”... என்னுமாபோலே. தாமும்‌ தம்முடைய. கரணக்ராமமுமாக நோவுபட்டுக்‌. கூப்பிடுகிறபடியை இத்திருவாய்மொழி பேசுகின்றது. இப்பதிகத்தினால்‌ ஆழ்வாருடைய பக்தி பரம விலக்ஷணம்‌ என்பது பெறப்படும்‌,
    மூன்றாமபத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌- சொன்னால்‌ விரோதம்‌ -ஆழ்வார்‌ சில ஸமயங்களில்‌ தம்முடைய இழவுக்கு வருந்துவர்‌ ; சில சமயங்களில்‌ ஸம்ஸாரிகளின்‌ இழவுக்கு வருந்துவர்‌. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ தம்முடைய கிலேசங்களுக்குக்‌ கதறினார்‌ ; இத்திருவாய்மொழியில்‌' ஸம்ஸாரிகளின்‌ கிலேசங்களுக்குக்‌ கதறுகிறார்‌. கவி பாடும்படியான திறமையைப்‌ பெற்று வைத்து அந்தத்‌ திறமையைப்‌ பகவத்‌ விஷயத்திலே செலுத்தாமல்‌ க்ஷுத்ர பலன்களை விரும்பி அற்ப மனிதர்‌ விஷயத்திலே செலுத்தி “நரஸ்துதி செய்பவர்கள்‌” என்று இழிவான டெயரைப் பெற்று உலாவுவாரைக் கண்டு வருந்தி, அவர்களையும்‌ உபதேசத்தாலே . திருத்தி பகவத்‌ விஷயத்தில்‌ கவி பாடுகின்‌றவர்களாக ஆக்கி உய்விப்பான்‌ வேண்டி அவர்களை விளித்து இப்படி நிங்கள்‌ உங்களது வாக்கை நிஹிந விஷயங்களில்‌ உபயோகித்து அதோகதி யடைவது தகுதியன்று ; உயர்வற வுயர்நல முடையவனான எம்பெருமான்‌ விஷயத்திலே உங்கள்‌ கவன சாதுரியத்தைச்‌ செலுத்துவதே நன்று என்று உபதேசித்தருளுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. உலகத்தில்‌ ஜஞாதாக்களாக இருப்பது அரிது; அது வாய்த்தாலும்‌ கவிபாடும்‌ படியான ஸாமர்த்தியம்‌ பெறுவது மிகவும்‌ அரிது. அந்த ஸாமர்த்தியம்‌ பெற்றவர்கள்‌ வகுத்த விஷயத்தில்‌ தங்கள்‌ வாக்கை 
    விநியோகப்படுத்தாமல்‌ க்ஷுத்ர ஈரஸ்துதிகளிலே விநியோகிப்பது மிகவும்‌ அருவருக்கத்தக்கதாகும்‌. வடமொழியில்‌ ப்ரதாப்‌ ருத்ரீயம்‌ என்கிற ஒரு க்ரந்தம்‌ மிகவும்‌ ப்ரஸித்தமானது. இதை இயற்றிய கவியின்‌ பாண்டித்யமும்‌ கவித்திறமும்‌ மிக வியக்கத்தக்கதே. ஆயினும்‌ இந்த க்ரந்தம்‌ எம்பெருமானுடைய குண கீர்த்தனத்தில்‌ அமைந்திருந்தால்‌ அழகிதாயிருக்கும்‌. அங்ஙனன்றியே, அல்ப ப்ரயோஜனத்தைக்‌ கணிசித்து ஒரு க்ஷுத்ர ப்ரபுவை விஷயீகரித்து இந்த நூல்‌ பிறந்ததாதலால்‌ பகவத்‌ பக்தர்கள்‌ ஜுகுப்ஸைப்படும்‌ படியாகவுள்ளது. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க க்ரந்தங்கள்‌ உலகிற்‌ பலபலவுள்ளன. இத்தகைய நூல்களை இயற்றும்‌ கவிகள்‌ பக்கலில்‌ ஆழ்வாருக்குண்டாகும்‌ சீற்றம்‌ அபாரம்‌. ஆழ்வார்‌, தம்முடைய திருவாக்கு பகவத்‌ விஷயத்திலே உபயோகப்படுகின்‌ற வளவுக்கு உகந்து, மற்றையோர்‌ எக்கேடு கெட்டாலும்‌ அதைப்‌ பற்றிச்‌ சிந்தியாமல்‌ *ஆரானுமாதானுஞ்‌ செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று பெரிய திருவந்தாதியில்‌ தாமே அருளிச்செய்தபடி ஸம்ஸாரிகளைப்‌ பற்றிக்‌ கவலை கொள்‌ளாமல்‌ இருக்கலாம்‌; அப்படியிருக்கும்‌ ப்ரக்ருதியன்‌று ஆம்வாரது, ஆகவே நர ஸ்துதி செய்து கவி பாடும்‌ கவிகளை நோக்கி உபதேசிக்‌கிறார்‌ இப்பதிகத்தில்‌.
    மூன்றாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ சன்மம்‌ பலபல -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌--துதிப்பதற்கு வாய்த்த ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டி தங்களையுடையனான எம்பெருமானைத்‌ துதிப்பது தவிர்ந்து க்ஷுத்ர நர ஸ்துதிகளிலே வாய் செலுத்தித்‌ திரியுமவர்களை உபதேசத்தாலே திருத்தப்‌ பார்த்தும்‌ அவர்கள்‌ திருந்தக் காணாமையாலே, இவர்களைப் போலே நாமும்‌ நர ஸ்துதியிலே யிழிந்து அநர்த்தப்படாதிருக்கப்‌ பெற்றோமே! என்று தம்‌ உகப்போடே தலைக்கட்டினார்‌. அந்தவுகப்பே விசேஷித்துப்‌ பெருகுகிறது இத்திருவாய்மொழியில்‌. நரஸ்துதிகளிலே செல்லப்பெறாத மாத்திரமே யன்றியே எம்பெருமான்‌ விஷயத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்துத்‌ தாம்‌ அநுபவிக்கப்பெற்ற பரிசைப்‌ பரக்கப்பேசி, குறை முட்டு பரிவு இடர்‌ துயர்‌ துன்பம்‌ அல்லல்‌. துக்கம்‌ தளர்வு கேடு ஒன்றும்‌ தமக்கில்லாமையை 'உள்குழைந்து பேசுகிறார்‌. 
    நான்காம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌ -ஒருநாயகம்‌ -கீழ்‌ மூன்றாம்பத்தின்‌ முடிந்த திருவாய்மொழி ஆழ்வார்க்கு அளவு கடந்த ஆனந்த மயமாய்ச்‌ சென்றது. தமக்கு. யாதொரு குறையுமில்லை யென்பதைப்‌ பன்னிப்‌ பன்னிப்‌ பகர்ந்தருளினார்‌. 
    மற்றுமுள்ள ஸம்ஸாரிகளையும்‌ தம்மைப்‌ போலவே குறையற்ற வர்களாக ஆக்குவதில்‌ மிக்க குதூஹலமுடையரான ஆழ்வார்‌ அவர்களையும்‌ திருத்திப்‌ பணிகொள்ள விரும்பி உபதேசம்‌ செய்யப்‌ புகுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. ஒவ்வொரு பத்திலும்‌ பரோபதேச ரூபமாக ஒவ்வொரு திருவாய்மொழி அவதரிக்கும்‌. முதற்‌ பத்திலே *வீடுமின்‌ முற்றவும்‌* என்கிற திருவாய்மொழியும்‌, இரண்டாம்‌ பத்தில்‌ *அணைவதரவணைமேல்‌* என்கிற திருவாய்‌ மொழியும்‌, மூன்றாம்பத்தில்‌ *செய்ய தாமரைக்‌ கண்ணன்‌, *சொன்னால்‌ விரோதமிது* என்கிற திருவாய்மொழிகளும்‌ போலே இந்த நான்காம்பத்தில்‌ இத்திருவாய்மொழி உபதேசபரமாய்ச்‌ செல்லா நின்றது. *சொன்னால்‌ விரோதத்தில்‌ அற்பர்களான மனிதர்களைத்‌ துதிப்பது பெருங்கேடு என்று உபதேசித்தார்‌. உலகில்‌ பலர்‌ நர ஸ்துதி செய்யப் புகுவது சில பிரயோஜனங்களுக்காகவாதலால்‌ அந்த ப்ரயோஜனங்கள்‌ அற்பமாயும்‌ அஸ்திரமாயுமிருக்கும்படியை நன்கு எடுத்துக் காட்டவே அவிவேகிகளும்‌ உணர்ந்து திருந்தக்‌ கூடும்‌ என்று பார்த்து, பகவத்‌ ப்ராப்தி தவிர மற்ற ப்ரயோஜனங்கள்‌ யாவும்‌ அல்பத்வம்‌ அஸ்திரத்வம்‌ முதலிய தோஷங்‌களினால்‌ துஷ்டங்களா யிருக்குமாற்றை விரித்‌துரைக்கின்றார்‌ இத்‌ திருவாய்மொழியில்‌.
     நான்காம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌ --பாலனாய்‌ --கீழ்‌ முன்றாம்பத்தில்‌ *முடியானே  திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்கு உண்டான அவஸ்தை ப்ராஸங்கிகமான மூன்று திருவாய்மொழிகளாலே. ஒருவாறு தலை மடிந்து கிடந்தது. இப்‌போது அது தலையெடுத்து நிற்கின்றது. ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ ராவணனுக்குச்‌ சொன்ன ஹிதம்‌ அவனுக்கு. உபயோகப்படாமல்‌ தனக்குப்‌ பெருமாளைப்‌ பற்றுகைக்கு்‌ உறுப்பானாப் போலவும்‌, ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான்‌ இரணியனுக்குச்‌ சொன்ன ஹிதம்‌ அவனது நெஞ்சிற் படாதே தனக்கு பகவத்‌ பக்தி மிகுதற்கு உறுப்பானாப்‌ போலவும்‌ ஆழ்வார்‌ செய்தருளும்‌  பரோபதேசங்கள்‌ பிறர்க்கு. உறுப்பன்றிக்கே தமக்கு எம்பெருமான்‌ பக்கலிலே அபிநிவேசம்‌ மீதூர்ந்து செல்வதற்கே. ஹேதுவாயிற்று. ஆகவே என்றைக்கோ கழிந்துபோன  எம்பெருமான் படிகளை அக்காலத்திற் போலவே இன்று அனுபவிக்கப் பெற வேணும்‌ என்கிற விடாய்‌ பிறந்தது ; ஆசைப்பட்டபடியே கிடையாமையாலே, எம்பெருமானோடு கலந்து பிரிந்தாளொரு பிராட்டியின்‌. நிலமையை யடைந்து தான்‌ மோஹித்துக்‌ கிடக்க, அவள் படியை அநுஸந்தித்த திருத்தாயார்‌ பெண் பிள்ளையின்‌ நிலைமையைப்‌ பேசுகிற முகத்தாலே தமது தசையை வெளியிடுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி, 
    
    நான்காம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌- -கோவைவாயாள்‌ -கீழ்த் திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ ஆசைப்பட்டபடியே எல்லாம்‌ பெறும்படி. எம்பெருமான்‌ இவரோடே கலந்து, தன்னுடைய பரம ப்ரணயித்வத்தை வெளியிட்டுக்‌ கொண்டான்‌ ; அது கண்டு மிகவும்‌ உவந்த ஆழ்வார்‌ அந்த பிரணயித்வ குணத்தை இத்திருவாய்‌மொழியிலே பேசுகிறார்‌. இத்திருவாய்மொழியை நம்‌ பூருவாசாரியர்கள்‌ மூன்றுபடியாக நிர்வஹிப்பர்கள்‌. 1. சந்திரனைப்‌ பிடித்துத்‌ தரவேணுமென்று அழுகின்ற குழந்தைக்குத்‌ தேங்காயைக்‌ கொடுத்து. அழுகையை. மாற்றுவதுண்டே ; அது போல, கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ தேச கால விப்ரக்ருஷ்டங்களைப்‌ பெறவேணு மென்று ஆசைப்பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌ ஒரு குணாநுபவத்தைப்‌ பண்ணி வைக்க அத்தாலே, கீழ்ப்‌ பிறந்த இழவை யெல்லாம்‌ மறந்து அந்த. குணத்தையே அனுபவிக்கிறார்‌ என்று எம்பார்‌ அருளிச்‌, செய்யும்படி, 2, காலத்தால்‌ தேசத்தால்‌ கை கழிந்தவற்றை யநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வாருடைய திருமுக மண்டலத்தை நோக்கி எம்பெருமான்‌ *ஆழ்வீர்‌ ! நீர்‌ அபேச்ஷித்த படியே செய்யக் கடவோம்‌” என்று ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்டுக்‌ களித்துக்‌ கீழிழவை மறந்து க்ருதார்த்தராகிறார்‌-என்று திருமலைநம்பி அருளிச்‌ செய்யும்படி, 3- எம்பெருமான்‌, ஆழ்வார்‌ அபேக்ஷித்தபடியே செய்து தலைக்கட்ட வல்லவனாகையாலே, (அதாவது) தானிட்ட வழக்காம்படி' கால நிர்வாஹகனாகையாலே, காலோபாதியைக்‌ கழித்து, அதீதகாலத்திற்‌ போகங்களையும்‌ நிகழ்‌ காலத்திற் போலே  ஒரு போகியாக்கிக்‌ கொடுக்க அவற்றை யநுபவித்து மகிழ்கிறார்‌-என்று பட்டர்‌ அருளிச்‌ செய்யும்படி -அபேக்ஷித்த. போகங்களைத்‌ தாராமல்‌ ஏதோவொரு குணத்தை யநுபவிப்பிக்க அதனாலே களித்துப்‌ பேசுகிறாரென்பது, எம்பாருடைய நிர்வாஹம்‌. அபேக்ஷித்த போகங்களைத்‌ தாரா விட்டாலும்‌ தருவதாக மூகம்‌ நோக்கி வாயினாற்‌ சொல்லி மாகிழ்வித்தானெம்‌பெருமான்‌ என்பது, திருமலை நம்பியின்‌ நிர்வாஹம்‌. அபேக்ஷித்த படியே அநுபவிப்பித்தருளினனென்பது, பட்டருடைய நிர்வாஹம்‌. -இங்ஙனே மூன்றுபடியாகவும்‌ நிர்வஹிக்க ஒளசித்யமுண்டு என்று. தெரிவித்தவாறு.  
    -----------------------
    நான்காம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- மண்ணையிருந்துதுழாவி ஆழ்வாருடைய பரம வைஷ்ணவத்வத்தை வெளியிடுவதாயிற்று இத்திருவாய்மொழி. எம்பெருமானுடைய ஸம்பந்தம்‌ பெற்ற பொருள்களையும்‌ எம்பெருமானுக்குப்‌ போலியான பொருள்களையுங்‌ கண்டு. அப்பெருமான்‌ றன்னையே கண்டதாகக்‌ கொண்டு களிதக்‌கையே பரம வைஷ்ணவத்வமாகும்‌; அந்த நிலைமையே ஆழ்வார்க்கு இத்திருவாய்மொழியில்‌ உண்டாயது. கீழ்த் திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய ப்ரணமித்வ குணத்தைப்‌, பேசிப்‌ பரமானந்தம்‌ பொலிய நின்றாராழ்வார்‌ ;அந்த நிலைமையைக்‌ கண்ட எம்பெருமான்‌ அந்த ரஸத்தை. அரையாறுபடுத்தி ஸாத்மிப்‌பிக்கைக்காக அந்த ஸம்ச்லேஷத்தைச்‌  சிறிது, குறைத்து நின்றான்‌- அதனால்‌ ஆழ்வார்க்கு ஆற்றாமை மீதூர்ந்தது. பணமுடிப்பைப்‌ போக்கடித்‌ தானொருவன்‌ அத்தோடு, போலியான முடிப்புகளெல்லாவற்றையும்‌ அவிழ்த்தவிழ்த்துப்‌ பார்க்குமா போலே அவனோடொத்த பதார்த்‌தங்களையும்‌. அவனோடு ஸம்பந்தமுள்ள. பதார்த்தங்களையுமெல்லாம்‌ அவனாகக்‌ கொண்டு ப்ரமித்துக்‌ கிட்டிப்‌ பார்த்துப்‌ பிச்சேறுகிற படியாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. இது தாய்‌ப் பாசுரமாகச்‌ செல்லும்‌ பதிகம்‌. 
    நான்காம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- வீற்றிருந்தேழுலகும்‌ -கீழ்த்திருவாய்மொழி பெரு விடாயோடே சென்றது. இங்ஙனே ஆழ்வார்‌ விடாய்க்க வேணுமென்பதுதானே எம்பெருமானுடைய திருவுள்ளம்‌! சோறு உண்பதற்குப்‌ பசி உபகரணமாப்போலே எம்பெருமானை யநுபவிப்பதற்கு அளவு கடந்த ஆசை யன்றோ உப கரணமாவது. அந்த ஆசை யுண்டானாலன்றித்‌ தன்னுடைய பரிபூர்ணாநுபவத்தைத்‌ தந்தருள எம்பெருமான்‌ திருவுள்ளம்‌! பற்றுவதில்லை. அத்தகைய ஆசை *முனியே நான்முகனில்‌ உண்டாகின்றது. ' “முடிந்த அவா? என்பது அங்குத்தான்‌. அதற்குக்‌ கீழுள்ளதெல்லாம்‌ அந்த அளவுக்குப்‌ பண்ணுகிற க்ருஷியாயிருக்கும்‌, எம்பெருமான்‌ இடையிடையே வந்து காட்சிதாராதொழியில்‌ ஆழ்வாரை இழக்க நேருமே,-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்னேன்‌ ” என்னும்படி பகவத்‌ குண ரஸிகர்‌களுக்குத்‌ தண்ணீர்‌ பந்தல்‌ வைக்கைக்காகவன்றோ ஆழ்வாரை இங்கு வைத்திருப்பது. ஸம்ச்லேஷ விச்லேஷங்கள்‌ மாறிமாறி நடந்தாலல்லது எம்பெருமானுடைய திருவுள்ளம்‌ நிறைவேற வழி யில்லை; றம்‌ போலியர்களின்‌ பாக்கியமும்‌ பரிபக்குவமாக வழி யில்லை, இத்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்க்குச்‌ செல்லுகிற. ஆனந்தம்‌ பேச்சுக்கு நிலமன்று. “இனி யென்ன குறை யெழுமையுமே?” என்றும்‌ “இனி யாவர்‌ நிகரகல்‌ வானத்தே” என்றும்‌ மார்பு தட்டிப்‌ பேசலாம்படி யாக்கி யருளினான்‌ எம்பெருமான்‌. இத்திருவாய்‌ மொழியின்‌ அமைப்பை நோக்குமிடத்து இதற்கு மேற்பட்ட பரிபூர்ணாநுபவம்‌ வேறில்லையென்றே சொல்லலாம்படி யிரா நின்றது , ஆனது பற்றியே இத்திருவாய்மொழி *தழ்விசும்பணி முகிலுக்கு அடுத்த திருவாய்மொழியாக இருந்திருக்கலாம்‌ என்று நஞ்சீயர்‌ ரஸோக்தியாக அருளிச் செய்வராம்‌. கீழ்த்திருவாய்மொழியில்‌ போலி கண்டு ப்ரமித்து மயங்கி ஆற்றாமை மீதூர்ந்த ஆழ்வாருக்கு எம்பெருமான்‌ உபயவிபூதி நாதனாயிருக்கிற தன்‌ படிகளில்‌ ஒன்றுங்‌ குறையாதபடி முற்றூட்டாகக்‌ காட்டிக்கொடுத்து “ஆழ்வீர்‌! நம்முடைய படிகளெல்லாங்‌ கண்டீரே; நமது இந்த ஐச்வர்ய மெல்லாம்‌ நிறம்பெற்றதாவது உம்முடைய திருவாக்காலே ஒழுங்கு படப்‌ பாடினாலாயிற்று, ஆகவே பாடிக்‌ காணீர்‌” என்று செல்லி ஆழ்வார்‌ திருக்கையிலே தாளத்தைக்‌ கொடுக்க, அவ்விருப்புக்குப்‌ பல்லாண்டு பாடி மசிழ்கிறாராய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி.
     நான்காம்பத்தில்‌ ஆறும்‌ பதிகம்‌-- தீர்ப்பாரையாமினி -கீழில்‌ சென்ற திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக இந்தத்‌ திருவாய்மொழி இருக்கத்‌ தகுதியில்லை யென்று நம்முதலிகள்‌ கூறுவர்களாம்‌, கீழ்த்திருவாய்மொழி எல்லை கடந்த ப்ரிதியோடே சென்றது; அதற்கு எதிர்த்தட்டாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்‌மொழி, கீழ்ப்பதிகத்திற்கும்‌ இப்‌ பதிகத்திற்கும்‌ ஸங்கதி அருளிச்‌ செய்யவேணுமென்று எம்பாரைச்‌ சிலர்‌ கேட்டார்களாம்‌; அதற்கு எம்பார்‌ “இதற்கு நான்‌ என்ன சொல்லுவேன்‌ ? அஸங்கதிரேவ ஸங்கதி: என்று கொள்ளுங்கோள்‌ ” என்றாராம்‌; இது இன்‌: சுவையே வடிவெடுத்த வார்த்தையாகும்‌. ஸங்கதி சொல்ல முடியாதென்று ஆபாத ப்ரதீதியிலே பொருளாம்‌ ; அஸங்கதி : என்றது அஸம்ச்லேஷ மென்றபடியாய்‌ விச்லேஷத்தைச்‌ சொல்லிற்றாய்‌, விச்லேஷந்தான்‌ இதற்கு ஸங்கதி என்கை பரமார்த்தம்‌, *மண்ணையிருந்து துழாவியில்‌ ஆழ்வார்க்கு உண்டான வியாமோஹத்தைத்‌ தணிப்பதற்காக வந்து கிட்டின வைகுந்தநாதன்‌ மறைய நிற்க, அந்தப்‌ பிரிவை ஆற்றமாட்டாமல்‌ இத்திருவாய்மொழி விஷாதத்‌திலேயாய்ச்‌ செல்லுகின்றது. வெறி விலக்குத்‌ துறையிலே அவதரித்ததாம்‌ இத்திருவாய்மொழி. ஆழ்வார்‌ தரமான தன்மையை யிழந்து ஒரு தலைமகளாம்‌ நிலைமையை எய்தி, அது தன்னிலும்‌ தம்‌ வாயாலே சொல்ல மாட்டாமல்‌ வேற்று வாயாலே சொல்லவேண்டித்‌ தோழியின்‌ பேச்சாகச்‌ செல்லுகின்றது. பிரிவாற்றாது மிக வருந்திய தலைமகளது வடிவு வேறுபாட்டினைக்‌ கண்ட தாய்மார்‌ “இவள்‌ இங்ஙனம்‌ மெலிதற்குக்‌ காரணம்‌ என்னோ ?' என்று கவலைப்பட்டுக்‌ கட்டுவிச்சியைக்‌ குறிகேட்க, அவளும்‌ தன்‌ மரபின்படி ஆராய்ந்து இவளுக்கு முருகக்‌ கடவுள்‌ ஆவேசித்ததொழியப்‌ பிறிதொன்றுமில்லை! என்று கூற, அது கேட்ட தாயர்‌ உடனே வெறியாட்‌டாளனை அழைப்பித்து அவனைக்‌ கொண்டு ஆவேசமாடு விப்பதும்‌ க்ஷுத்ர தெய்வங்களுக்கு உரிய ஸந்தர்ப்பணைகளை யிடுவிப்பதும்‌ செய்ய, அதற்குத்‌ தலைமகள்‌ மிக வருந்தாரிற்க அச்சமயத்தில்‌ அவளது. துன்பத்தின்‌ உண்மையான காரணமுணர்ந்த தோழி அந்தப்‌  ப்ரவ்ருத்திகளைக்‌ கண்டித்துக்‌ கூறுகிற பாசுரமாய்ச்‌ செல்லுகிறது. 
    நான்காம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌-- சீலமில்லாச்சிறியன்‌ -உலர்ந்து தரைப்பட்டுக்கிடந்த கொடியானது மழைத்துளி பட்டவாறே செழிப்புறுமாபோலே, கீழே மோஹித்துத்‌ தரைப்‌ பட்டிருந்த ஆழ்வார்‌, தோழிமார்‌ வாக்கில்‌ நின்றும்‌. வெளிவந்த சில திருநாமங்களைக்‌ கேட்கப்பெற்ற ப்ரஸக்தியாலே உணர்த்தி பெற்றார்‌. அத்தனையே யல்லது விரும்பினபடி எம்பெருமானோடே ஸம்ச்ிலேஷிக்கப் பெற்றிலர்‌ மோஹித்திருந்த நிலமை தானே நன்றாய்  யிருந்தது ஏனென்னில்‌, அப்போது உணர்த்தி யில்லாமையாலே துயரம்‌ தெரியாது: உறக்கத்தில்‌ பசி பொறுக்கலாம்‌ ; விழித்துக் கொண்டால்‌ உண்டாலல்லது தரிக்கப்‌ போகாதே. அப்படியே ஆழ்வாரும்‌ மோஹித்திருந்த நிலைமையிலே ஒருவாறு ஆறியிருந்து உணர்த்தி யுண்டான விப்போது துடிக்க வேண்டியவராயினார்‌. துடித்துக்‌ கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌. உலகத்திலே. நோயாளிகள்‌ மயக்கமுற்றிருக்கும்‌ போதுகளிலே பாதை தெரியாது யிருற்து, மயக்கம்‌ தெளிந்தவாறே பாடாற்ற வொண்ணாமல்‌ துடிப்பர்களே, அறத நிலைமையே யாயிற்று : ஆழ்வார்க்கு இப்போது--அவனோ ஆபத்துக்கு. உதவுமியல்வினன்‌ ; ஆபத்துக்கு: நிதானமறிந்து பரிஹரிக்கவும்‌ வல்லன்‌; பிரிந்தால்‌ பொறுத்திருக்க வொண்ணாத படியான அழகு படைத்தவன்‌) ஆபத்துக்களிலே விரோதியைப்‌ போக்கி உதவுகைக்குப்‌ போதுமான சக்திபடைத்தவன்‌ ; இப்படி யிருந்தும்‌ நம்‌ ஆற்றாமைக்கு. உதவவில்லையே, - என்று கன்த்த ஆர்த்தியோடே,  கேட்டாரெல்லாரும்‌ நீராய்க் கரையும்படி கூப்‌பிடுகிறார்‌..
    நான்காம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌ -ஏறாளுமிறையோனும்‌-கேட்டாரெல்லாரும்‌ நீராம்படியாகக்‌ கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ கூப்பிடச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டிற்றிலன்‌. அதனால்‌ எம்பெருமான்‌ தம்மை வேண்டாவென்று வெறுத்திருப்பதாக நிச்சயித்தார்‌. அவனுடைய வெறுப்புக்கு இலக்கான இந்த ஆத்மாவும்‌ ஆத்மீயங்களும்‌ நமக்கு ஏதுக்கு? அவனுக்கு வேண்டாதவை நமக்குத்தான்‌ வேணுமோவென்று ஆத்மாத்மீயங்களையெல்லாம்‌ உபேசுவிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ ஜநககுலஸுந்தரியோடே யொத்திருப்பர்‌ என்றாயிற்று நம்முதலிகள்‌ அறுதியிட்டிருக்கும்படி... அப்பிராட்டி அசோக வனத்திலிருந்தபோது *ந ஹி மே ஜீவிதேறார்த்த : நைவார்த்தைர்‌  பூஷணை : வஸந்த்யா ரக்ஷஸீமத்யே விறாராமம்‌ மஹாரதம்ர்‌, என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம்‌ வெறுத்தாள்‌. பெருமாள்‌ விரும்பாதே ராக்ஷ்ஸிகள்‌ நடுவே சிறையிருக்கின்‌ற வெனக்கு உயிர்‌ உடைமை முதலியவற்றால்‌ என்ன பலன்‌? என்றாள்‌. அந்த நிலைமை தானே இப்போது ஆழ்வார்க்கு முண்டாயது, இந்தத்‌ திருவாய்மொழி ஆழ்வார்‌ தாமான தன்மையிலே நின்று. அருளிச்‌ செய்வத்ன்று; நாயகீ ஸமாதியாலே. அருளிச்செய்த தென்னுமிடம்‌ “மணிமாமை குறைவிலமே” “மேகலையால்‌ குறைவிலமே” “வரி வளையால்‌ குறைவிலமே” என்பவற்றால்‌ விளங்கும்‌. திருமங்கை யாழ்வாரும்‌ பெரிய திருமடலில்‌ “கன்னவிலுங்‌ காட்டகத்தோர்‌ வல்லிக்கடிமலரின்‌ நன்னறு வாசம்‌ மற்றாரானு மெய்தாமே மன்னும்‌ வறுகிலத்து வாளாங்குகுத்ததுபோல்‌, என்னுடைய பெண்மையும்‌ என்னலனு மென்முலையும்‌, மன்னுமலர்‌ மங்கைமைந்தன்‌, கண் புரத்துப்‌ பொன்மலைபோல்‌ நின்றவன்‌ றன்‌ பொன்னகலம்‌ தோயாவேல்‌, என்னிவைதான்‌ வாளா வெனக்கே பொறையாகி, முன்னிரது. முக்கின்று மூவாமைக்‌ காப்பதோர்‌ மன்னுமருந்தறிவீரில்லையே* என்‌றருளிச்‌ செய்தது காண்க. 
    நான்காம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-- நண்ணாதார் முறுவலிப்ப --கீழ்த்திருவாய்மொழியில்‌, உடம்பு வேண்டா, உயிர்‌ வேண்டா, அது வேண்டா, இது வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம்‌ வெறுத்து உதறித்‌ தள்ளப் பார்த்தார்‌. தள்ளினால்‌ தள்ளுண்டு போமவையோ அவை? பேறு பெறுவதற்கு எப்படி. அவன்‌ கை பார்த்திருக்க வேணுமோ, அப்படியே முடிகைக்கும்‌ அவன்‌ கை பார்த்திருக்க வேண்டுகையாலே “எம்பிரானே ! என்னை நீதானே முடித்திடாய்‌! என்கிறார்‌.  ஆழ்வாருடைய ஆர்த்தி பேச்சுக்கு நிலமல்லாதபடி பெருகினமை இத்திருவாய்மொழியிலே விளங்கா நின்றது. ஆழ்வாருடைய ஆர்த்திக்கு முன்று ஹேதுக்‌களுண்டு; எம்பெருமானோடு கலவி பெறாமல்‌ பிரிந்து படும்‌ ஆர்த்தி ஒன்று ; ஸம்ஸாரிகளோடு ஸஹவாஸம்‌ பொறுக்க வொண்ணாதாய்‌ அத்தாலே வரும்‌ ஆர்த்தி ஒன்று; இந்திரியங்கள்‌ விஷயங்களிலே கொண்டுபோய்‌ மூட்டி அரர்த்தங்ககா விளைக்கையாலே அத்தாலே வரும்‌ ஆர்த்தி ஒன்று. இவற்றுள்‌ எம்பெருமானுடைய பிரிவினால்‌ வந்த ஆர்த்தி கீழ்த்திருவாய்‌ மொழியிலே கண்டது. இந்திரியங்‌களால்‌ வரும்‌ ஆர்த்தி மேலே *உண்ணிலாவிய வைவரால்‌* என்கிற திருவாய்மொழியிலே காணலாகும்‌. ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம்‌ பொறுக்க வொண்ணாமை யாலாகும்‌ ஆர்த்தி இத்திருவாய்மொழியில்‌ காண்பதாகும்‌, 
    நான்காம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ ஒன்றுந்தேவுமுலகும்‌ --கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ தமக்கு ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம்‌ பொறுக்கமுடியாமல்‌ பலவாறாகக்‌ கதற, ஒருவிதமாக அவருடைய ஆர்த்தியை மாற்றவேணுமென்று திருவுள்ளம்‌ பற்றின எம்பெருமான்‌, திருநாட்டிலே திருமகளும்‌ தானுமாக இருக்கிற இருப்பை இங்கே இவர்க்குக்‌ காட்டிக்‌ கொடுத்‌தருள, இவரும்‌ கண்டு ஒருவாறு களிக்கப் பெற்றார்‌. *கண்ணாளா கடல்‌ கடைந்தாய்‌ உனகழற்கே வரும்‌ பரிசு, தண்ணாவா தடியேனைப்‌ பணிகண்டாய்‌ சாமாறே* என்றும்‌ *ஆமாறொன்‌றறியேன்‌ நான்‌ அரவணையாயம்மானே !, கூமாறே விரைகண்டாய்‌. அடியேனைக்‌ குறிக்கொண்டே* என்றும்‌ கல்லும்‌ கரையும்படி ஆழ்வார்‌ கூப்பிடா நிற்கச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ இவரை இந்நிலத்திலேயே வைத்திருப்பதற்குப்‌ பலஹேதுக்கள்‌ உண்டு -ஆழ்வாரைக்‌ கொண்டு உபதேசங்கள்‌ பண்ணுவித்து நாட்டைத்‌, திருத்த வேணுமென்பது ஒரு ஹேதுவாகையாலே, அதனை எம்‌பெருமான்‌ ஆழ்வார்க்கு ஒருவாறு நினைப்பூட்டினன்‌ போலும்‌ ; ஆழ்வாரும்‌ எம்பெருமானுடைய நியமனத்தை நிறைவேற்றக்‌ கருதி, பிரகிருதத்தில்‌ எவ்விதமான உபதேசத்தைப்‌ பண்ணலாமென்று பார்த்தார்‌. உலகர்‌ பெரும்பாலும்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அறியப்‌ பெறாதவர்களாயும்‌ தேவதாந்தரங்கள்‌ பக்கலிலே வியாமோஹம்‌ கொண்டவர்களாயும்‌ காணப்படுகையாலே இவர்களுக்கு எம்பெருமானுடைய பரத்வத்தையும்‌ இதர தெய்வங்களின்‌ நிஹீநத்வத்தையும்‌ நன்கு உணர்த்தினோமாகில்‌ இவர்கள்‌ திருந்தி ஸம்ஸாரம்‌ அடியறக்‌ கூடும்‌ என்று திருவுள்ளம்‌ பற்றி அங்ஙனே உபதேசித்தருளுகிறார்‌ இத்திருவாய்மொழியாலே. கீழே *உயர்வற வுயர்நலம்‌ *திண்ணன்வீடு* முதலான திருவாய்மொழிகளிலும்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அருளிச்செய்திருந்தாலும்‌, இத்‌ திருவாய்மொழி அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை மூதலிக்கிற தாகையாலே வீறுபெற்றிருக்கும்‌. திருக்குருகூர்‌ என்கிற ஆழ்வார்‌ திருநகரியில்‌ கோயில்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமானுக்கு ஆதிநாத பெருமாள்‌ என்று திருநாமமாகையாலே, ஸகலஜகத்காரணபூதன்‌ என்கிற. அத்திருநாமத்தை வஹித்திருக்கின்ற இப்பெருமான்‌ பக்கலிலே பரத்வத்தை எடுத்துரைக்கப்‌  பாங்காயிருக்குமென்று திருவுள்ளம்‌ பற்றினாராயிற்று. 
    ஐந்தாம்பத்தில்‌ முதல்பதிகம்‌-— கையார்‌ சக்கரத்து --கீழ்‌ நாலாம்பத்தில்‌ *நண்ணாதார்‌ முறுவலிப்பவென்னும்‌ பதிகத்திலே ஸம்ஸாரிகள்‌ படுகிற வருத்தங்களை நினைத்து, அவ்‌ வருத்தங்கள்‌ அவர்களுக்குத்‌ தொலையும்படி எம்பெருமானுடைய பெருமையை உணர்த்துவோ மென்று பார்த்து அதனை யுணர்த்‌தினார்‌ கீழே *ஒன்றுந்தேவுமென்கிற திருவாய்‌ மொழியிலே. அவ்‌ வுபதேசம்‌ கேட்டுத் திருந்தினவர்கள்‌ இந்நிலத்திலே நிரம்பியிருக்கிற. படியைக்‌ கண்டவாழ்வார்‌ “பொலிக பொலிக?” வென்று அவர்கட்கு மங்களாசாஸக௩ம்‌ பண்ணுவதாக இருக்குமளவிலே தம்மைப்‌ பற்றிச்‌ சிறிது நினைத்துக்‌ கொண்டார்‌: *நாமும்‌ இவர்களைப் போலே ஸம்ஸாரத்திலே தோள்‌ மாறிக்கிடவாதே இவர்களுக்கு உபதேசம்‌ பண்ணும்படியாகவும்‌, இவர்களைத்‌ திருந்தும்படியாகவும்‌ எம்பெருமான்‌ நமக்கு அருள் புரிந்திருக்கின்றானே. இவ்வருளுக்கு நிதானம்‌ எதேனுமுண்டோ?”? என்று ஆராய்ந்து பார்த்தார்‌; அவ்வருள்‌ நிர்ஹேதுக மென்பதை நன்கறிந்தார்‌; உள் குழைந்து அதனைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, சப்தாதி விஷயங்‌களிலேயே நான்‌ மண்டிக்கிடக்க, பகவத்‌ விஷயத்தையும்‌ வாயாலே.சொல்லுபவன்‌ போல்‌ பாவனை செய்தவனே யல்லது உள்‌ கனிந்த ப்ரேமம்‌ சிறிதுமுடையேனல்லேன்‌ ; அப்படியிருந்தும்‌ க்ருத்ரிமமான அந்த உக்தி தன்னையே பற்றாசாகக்‌ கொண்டு எம்பெருமான்‌ என்னை விஷயீகரித்தவாறு என்னே ! என்று ஆச்சரியப்படுகிறாராயிற்று. 
    ஐந்தாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- பொலிக பொலிக பொலிக --இவ்விபூதியிலுண்டான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்திக்கு மங்களா சாஸநம்‌ பண்ணுகிறது இத்திருவாய்மொழி, இப்போது இந்த மங்களாசாஸனத்திற்கு ப்ரஸக்தி ஏதென்னில்‌; கீழே நாலாம்‌ பத்தில்‌ *நண்ணாதார்‌ முறுவலிப்ப வென்னும்‌ பதிகத்திலே ஆழ்வார்‌ ஸம்ஸாரிகளின்‌ கிலேசங்களை அனுஸந்தித்து, அதற்குப்‌ பரிஹாரமாக *ஒன்றுந்தேவு மென்கிற பதிகத்திலே எம்பெருமானுடைய பரத்துவத்தைப்‌ பரக்கப் பேசித்திருத்த, அத்தாலே திருந்தி, ஸம்ஸாரம்‌ பரமபதம்‌ என்கிற வேற்றுமையற்று அங்குள்‌ளாரும்‌ இங்கே வரலாம்படி யிருக்குமிருப்பைக்‌ கண்டு மங்களா சாஸனம்‌ பண்ணுகிறாராயிற்று, ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைக்‌ காண்பதற்காக நித்யஸூரிகள்‌ நித்ய விபூதியில்‌ நின்றும்‌ இந்நிலத்திலே. யெழுந்தருள அவர்களுக்கு மங்களாசாஸநம்‌ பண்ணுகிறார்‌ என்றும்‌ சில ஆசார்யர்கள்‌ நிர்வஹிப்பர்களாம்‌, 
    ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயாவது ஆழ்வாருடைய உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ ஸம்ருத்தியாகிற ஸ்ரீயாம்‌. இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸாக்ஷாத்தாக இத்திரு வாய்மொழியால்‌ மங்களாசாஸநம்‌ செய்வதாக ஒரு நிர்வாஹம்‌. இந்த ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ காண்கைக்காக லோகார்தரத்தில்‌ நின்றும்‌ வந்தவர்கட்த மங்களாசாஸநம்‌ செய்வதாக மற்றொரு நிர்வாஹம்‌. ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ “அடிமை புக்கரரையும்‌ ஆட்செய்வாரையுங்‌ காண வோக த்வீபாந்தரங்களில்‌ நின்றும்‌ போந்த தேவர்‌ குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு” என்றருளிச்‌ செய்ததும்‌ இங்கு அநுஸந்தேயம்‌.
    ஐந்தாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌-மாசறுசோதி -இத்திருவாய்மொழி மடலூர வொருப்படுவதாயிருக்கும்‌. கீழ்‌ நாலாம்பத்திலே *ஏருளுமிறையோனு மென்கிற திருவாய்மொழியில்‌ உண்டாயிருந்த காதலே மீண்டும்‌ கிளர்ந்து எம்பெருமானோடு ஸம்ச்லேஷிக்க விரும்பி அந்த விருப்பம்‌ நிறைவேறப்‌ பெருமையினாலே மடலூர்வேனென்று அச்சமுறுத்திக்‌ காரியம்‌ கொள்ளப்‌ பார்க்கிறார்‌. சக்ரவர்த்தி திருமகன்‌ ஸமுத்ரராஜனைச்‌ சரணம்‌-புகுந்து வழிவிட வேண்டின விடத்தும்‌ அக்கடலரையன்‌ இறுமாப்‌பையே பாராட்டி முகங்காட்டாமல்‌ அலக்ஷியஞ்‌ செய்துகிடக்க, பெருமாள்‌ சீறிச்‌ சிவந்த கண்ணினராய்‌-ஸாகரம்‌ ஸோஷமிஷ்யாமி, சாபமாநய ஸெளமித்ரே! பத்ப்யாம்‌ யாந்து ப்லவங்கமா : *' இதோ இக்கடலை வற்றச்‌ செய்துவிடப்போகிறேன்‌; லக்ஷ்மணா! சார்ங்க வில்லைக்‌ கொண்டு வா; வானர முதலிகள்‌ காலாலே நடந்து! செல்லட்டும்‌; ஒரு க்ஷணத்திலே இக்கடல்‌ படுகிறபாடு பாராய்‌” என்‌றருளிச் செய்து ஸமுத்ர ராஜனை அழிக்க முயன்றாப்‌ போலே இவவாழ்வாரும்‌. நமது அபேஷிதத்தை நிறைவேற்றாத எம்பெருமான்‌ ஏதுக்கு?” என்று பகவத்‌ தத்துவத்தை இல்லை செய்துவிடப்‌ பார்க்கிறார்‌. மடலெடுக்கையென்று தமிழிலே ஒரு முறைமையுண்டு, நாயகன்‌ வேட்டைக்குப்‌ புறப்பட்டானாய்‌, நாயகியும்‌ தோழியும்‌ பூக்கொய்து விளையாடவென்று புறப்பட்டவளவிலே ஒரு வியாஜத்‌தாலே தோழியும்‌ பிரிந்த ஸமயத்திலே நாயகனும்‌ தெய்வவசமாக அங்கே வந்து சேர, அங்கே அவனோடு கண்கலவியே கூட்டக்‌ கூடி ஊழ்வினை பிரித்தலால்‌ உடனே பிரியவும்‌ சேர்ந்திட, 'அந்தப்‌ பிரிவைப்‌ பொறுக்கமாட்டாத நாயகி அவனோடு கூடுதற்காகச்‌ செய்யும்‌ ஸாஹஸ ப்ரவ்ருத்திதான்‌ மடலூர்தல்‌ எனப்படுவது. நாயகனை ஒரு படத்திலேயெழுதி வைத்தகண்வாங்காமல்‌ அதனைப்‌ பார்த்துக்கொண்டு, புஷ்பம்‌ சந்தனம்‌ முதலிய போக்ய வஸ்துக்‌களையும்‌ விஷமாக உதறித்‌ தள்ளி, ஊணும்‌ உறக்கமும்‌ உடம்பு குளிப்பதுமின்‌ றியே, பனைமடலைக்‌ கையிலே ஏந்திக்கொண்டு அதனால்‌ உடம்பை மோதிக்கொண்டு, தலைமயிரை விரித்துக்கொண்டு. “இன்னபடுபாவி என்னைக்‌ காக்கமாட்டாதே கைவிட்டான்‌; அவன்‌ கண்ணற்றவன்‌; அவனிலும்‌ விஞ்சிய கொடியன்‌ இல்லை! என்று தெருவேறக்‌ கதறிக்கொண்டே கேட்டாரெல்லாரும்‌ நடுங்கும்‌ படியும்‌ இரங்கும்படியும்‌ திரிந்துழல்வதுதான்‌ மடலூருகையாவது: இங்ஙனம்‌. கதறிக்கொண்டு தெருவிலே புறப்படுவதற்கு ப்ரயோஜனம்‌ யாதெனில்‌; இந்த ஸாஹஸ ப்ரவ்ருத்தியைக்‌ கண்டு ராஜாக்‌களாயுள்ளவர்கள்‌ இவ்வார்த்தியைப்‌ பொறுக்க மாட்டாத கருணையாலே இருவரையும்‌ கூட்டிவைப்பர்கள்‌; உறவு முறையாராவது கூட்டி வைப்பர்கள்‌ ; தோழிமாராவது கூட்டி வைப்பர்கள்‌ ; பழிக்கு அஞ்சி நாயகனேயாவது வந்து கூடுவன்‌ ; இவையொன்றுமில்லை யாகில்‌ நாயகிதான்‌ முடிந்து பிழைத்துப்போவள்‌ ; இவையாயிற்று மடலூர்தற்குப்‌ பிரயோஜனங்கள்‌. ஆழ்வார்‌ இப்படி எம்பெருமானைப்‌ பழித்துக் கொண்டு ஸாஹஸம்‌ தோற்றத்‌ தெருவிலே கிளம்பினாரோ? எனில்‌, இல்லை; மடலூர்வன்‌ என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முடிய நடத்தினபாடில்லை. “தோழி! உலகு தோறலர்‌ தூற்றி ஆம்‌ கோணைகள்‌ செய்து குதிரியாம்‌ மடலூர்துமே” என்றும்‌, “யாம் மடமின்றித்‌ தெருவுதோறயல்‌ தையலார்‌. நாமடங்காப்‌ பழிதூற்றி நாடுமிரைக்கவேயாம்‌ மடலூர்ந்தும்‌ எம்மாழியங்கைப்‌ பிரானுடைத்‌ தூமடல்‌ தண்ணர்‌ துழாய்‌ மலர்கொண்டு சூடுவோம்‌'! என்றுமுள்ள பாசுரங்கள்‌ காண்க, 
    ஐந்தாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- 
    * ஊரெல்லாந்துஞ்சி --கீழ்த் திருவாய்மொழியிலே மடலூரும்‌ முயற்சி வலிதாய்ச்‌ சென்றது. மடலூரவேண்டுமானால்‌ நாயகனை ஒரு படத்திலே எழுத வேணுமே; அப்படி எழுதுவதற்கு அவகாசமில்லாதபடி கங்குலிருள்‌ வந்து புகுந்தது. *ஆழியாலன்றங்காழியை மறைத்‌தான்‌* என்றும்‌ *ஆழிகொண்டன்று இரவிமறைப்ப* என்றும்‌ சொல்லுகிறபடியே பண்டு பாரதப்‌ போரிலே ஜயத்ரதனுடைய வதத்திற்காக ஸூரியனை அஸ்தமிக்கச்‌ செய்ததுபோல இப்போதும்‌ அப்பெருமான்‌ தானே ஸூர்யனை அஸ்தமிக்கும்படி பண்ணினான்‌ போலும்‌. இவள்‌ மடலெடுத்தால்‌ அது தனக்கு அவத்யமாகுமென்று நினைத்து அதற்கு இடையூறு செய்யவொருப்படுவனே யெம்‌பெருமான்‌. அல்லது தைவயோகத்தாலே அஸ்தமித்ததாகவும்‌ இருக்கலாம்‌, இரவு வந்து புகுர்தது. அதுதான்‌ அந்தியம்போதன்றிக்கே சராசரங்களெல்லாம்‌ ஒடுங்கும்படி ஈடுறிசியாயிருந்தது. -பழி சொல்லுவாரோடு ஹிதஞ் சொல்லுவாரோடு வாசியற எல்லாரும்‌ உறங்கிப்போய்‌ உசாத்துணை யற்றிருந்தது. இவ்வளவிலே ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுஸந்தித்தாராழ்வார்‌.-இவ்வநுஸந்தானம்‌ ஸம்ச்லேஷ திசையிலன்‌றிக்கே விச்லேஷ தசையிலே யாகையாலே மிகவும்‌ ஆற்றாமைக்கு உறுப்பாயிற்று. அசோக வனத்திலே முடியத் தேடின பிராட்டியைப் போலே இவர்க்கும்‌ முடியவேண்டிய வளவாயிற்று. அந்த அவஸாதமெல்‌லாம்‌ இத்திருவாய்மொழியாய்‌ வெளிவருகின்றது. கிழ்த்திருவாய்மொழிபோலே இத்திருவாய்மொழியும்‌ நாயகி ஸமாதியாலே
    அருளிச் செய்கிறபடி..
    ஐந்தாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-எங்ஙனேயோ-கீழ்த்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ இருளுக்கும்‌ பனிக்கும்‌ வருந்தினபடி சொல்லிற்று. இது தான்‌ இருள் தருமா ஞாலமாகையாலே தமோ குணம்‌ மேலிட்டு நலிந்தபடியைச்‌ சொன்னதாக ஸ்வாபதேசப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஆளவந்தார்‌ ஸ்தோத்ர ரத்‌நத்தில்‌ *அவிவேககராந்ததிங்முகே பஹுதர ஸந்ததது: க்கவர்ஷிணி, பகவந்‌ பவதுர்தினே* என்‌றருளிச்‌ செய்ததும்‌ கீழ்த் திருவாய்‌மொழியின்‌ ஸ்வாபதேசார்த்தரூபம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. இருட்போது கழிந்து பகற்போது காண்கிறாப்போலே தமோ குணத்தின்‌ மேலீடுகழிந்து ஸத்வகுணத்தின்‌ தலையெடுப்பு காணத்‌ தொடங்கிற்று, அதனால்‌ நெஞ்சு தரிப்புற்றுத்‌ திருக்குறுங்குடி யெம்பெருமானுடைய வடிவழகையும்‌ திவ்யாயுத திவ்யாபரணச்‌ சேர்த்தியழகையும்‌ வாய்வெருவும்‌ படியாயிற்று, உருவெளிப்பாடு என்‌பதொன்றுண்டு ; அதாவது மாநஸ ஸாக்ஷரத்காரம்‌. கண்‌ணுக்கு ப்ரத்யக்ஷமாகத்‌ தோற்றாமே நெஞ்சுக்கு ஸாக்ஷாத்கார விஷயமாகை, அது இத்‌: திருவாய்மொழியில்‌ செல்லா நின்‌றது, இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசுந்‌ திருவாய்மொழி. தாய்மார்‌ தலைமகட்கு அடைவு சொல்லி மீட்கப்‌ பார்க்க, தலைமகள்‌ “எனக்கோ நீங்கள்‌ அடைவு சொல்லுவது? திருக்குறுங்குடி நம்பியின்‌ வடிவழகிலே நெஞ்சு பறியுண்டு கிடக்குமென்னை நிங்கள்‌ அடக்கப்‌ பார்ப்பது முறையல்ல? என்று சொல்லுகிறபடியைச்‌ சொல்லுகிறது, ‌
    ஐந்தாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌-கடல்ஞாலம்‌ --பிரிற்து வருந்துங்காலத்திலே “அநுகரித்துத்‌ தரித்தல்‌' என்று முறையுண்டு. அதாவது, எம்பெருமான்‌ தானாகவே தன்னை யநுகரித்துப்‌ பேசி இங்ஙனேயொரு போது போக்காலே தரித்‌திருக்கையாம்‌. திருவாய்ப்பாடியில்‌ திருக்குரவை கோத்தவன்று ப்ரிதிரஸம்‌ தலைமண்டை கொண்டு செல்ல, அது ஸாத்மிக்கைக்காகக்‌ கண்ணபிரான்‌ பிரிந்து தன்னை மறைத்திட, அப்போது திருவாய்ப்‌பாடியிற்‌ பெண்களெல்லாரும்‌ அநுகரித்துத்‌ தரித்தார்களென்னுமிடம்‌ ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரஸித்தம்‌. அதில்‌ (5-18-99) “க்ருஷ்ணே நிபத்தஹ்ருதயா இதமுசு : பரஸ்பரம்‌ க்ருஷ்ணோஹமேஷ ஸலிதம்‌ வ்ரஜாம்யாலோக்யதாம்‌ கதி; அற்யாப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதிர்‌ நிசம்யதாம்‌ துஷ்ட காளிய திஷ்டாத்ர க்ருஷ்ணோ ஹமிதி சாபரா”? -பாஹுமாஸ்போட்ய க்ருஷ்ஸஸ்ய ஸீலாஸர்வஸ்வமாததே அந்யா ப்ரவீதி ஹே கோபா: நிச்சங்கை: ஸ்தியதாமிஹ அலம்‌ வருஷ்டிபயேகாத்ர த்ருதோ கோவர்த்தநோ டீயா தேநுகோயம்‌ மயா க்ஷிப்தோ விசரந்து யதேச்சயா''என்றிவை முதலான சுலோகங்கள்‌ காண்க. (இந்த சுலோகங்‌களின்‌ கருத்தாவது-) கண்ணபிரான்‌ பிரிந்து சென்ற காலத்தில்‌ கோபிகள்‌ விருந்தாவனத்தில்‌ திரள்திரளாகக்‌ கூடி ஒருவர்க்‌கொருவர்‌ இங்ஙனே ' பேசிக் கொண்டார்கள்‌ ; * நான்‌ கண்ணன்‌, இதோ அழகாக நடை டைக்கிறேன்‌ பார்‌! என்றாள்‌ ஒருத்தி ; *நான்‌ கண்ணன்‌, செவிக்கினிதாகக்‌ குழலூதுகின்றேன்‌ கேள்‌! என்றாள்‌. மற்றொருத்தி; நான்‌ கண்ணன்‌, கொடிய காளிய நாகமே! நில்‌” என்றாள்‌ இன்னொருத்தி, தோளைத்‌ தட்டிக் கொண்டு கண்ண பிரான்‌ செய்யும்‌ லீலைகளையெல்லாஞ்‌ செய்தாள்‌ வேறொருத்தி, *கோபாலர்களே! நீங்கள்‌ மழைக்கு அஞ்சாதே நில்லுங்கள்‌, இதோ: நான்‌ கோவர்த்தனமென்னுங்‌ கொற்றக்குடையைத்‌ தூக்கிவிட்‌டேன்‌ பாருங்கள்‌” என்றாள்‌ ஒருத்தி. * தேனுகாசுரனை இதோ நான்‌ மாய்த்து விட்டேனாகையால்‌ இணி மாடுகளெல்லாம்‌ நிர்ப்பயமாக உலாவலாம்‌” என்றாள்‌ ஒருத்தி என்கை. அங்ஙனே அநுகரித்துத்‌ தரிக்கும்‌ விதம்‌ ஆண்டாள்‌ பக்கலிலுங்‌ கண்டதொன்றாகும்‌. நோன்பு நோற்பதாகக்‌ கொண்டு திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின்‌ அனுட்டானத்தை அநுகரித்த படியத்தனையிறே. இத்தகைய அநுகார ப்ரகாரங்கள்‌ உபநிஷத்துக்களிலும்‌ காண்பனவாகும்‌, ஆழ்வார்க்கு அந்த அநுகார ப்ரகாரமே இத்திருவாய்‌ மொழியில்‌ செல்லா நின்றது. அதுதானும்‌. தாய் பாசுரத்தாலே வெளிவருகின்றது. மகளின்‌ அநுகாரத்தைத்‌ தாய்‌ முறையிடுகின்றாளென்க. பராங்குச நாயகியானவள்‌ ஜ்ஞான முத்திரையும்‌ தானுமாய்‌ கீதாசார்யனைப்‌ போலே யிருந்து கொண்டு. *'கடல்ஞாலஞ்‌செய்தேனும்‌ யானே, கடல்ஞாலமா வேனும்‌ யானே, மலையெடுத்‌தேனும்‌ யானே, இனத்தேவர்‌ தலைவனும்‌ யானே” என்றாற்போலே பாசுரங்களைச்‌ சொல்லியிருக்கக்‌ கண்ட திருத்தாயார்‌ “இது என்ன நிலைமை!” என்று ஆராயத்‌ தொடங்கினாள்‌ : எம்பெருமானைப்‌ பிரிகையாலுண்டான ஆற்றாமையினாலே அநுகரித்துத்‌ தரிக்கிறாள்‌” என்று அறியமாட்டாதவளாய்க்‌ சுலங்கிக்‌ கிடந்தாள்‌ ; அப்போது! சில பந்து வர்க்கங்கள்‌ அங்கே வந்து சேர்ந்து, இது என்னென்று. வினவ, ஸர்வேச்வரன்‌ இவள்‌ பக்கலிலே ஆவேசித்தான்‌ போலே யிருக்கிறது! என்று விடை கூறுகிறபடியாய்‌ இத்திருவாய்மொழி செல்லுகின்‌றது. 
    ஐந்தாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--நோற்றதோன்பு --கீழ்த்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானாகவே' தம்மை அதுகரித்துப்‌ பேசினது ஒருவாறு தரிக்கைக்காகவன்றோ. அவ்வளவிலும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டாமையாலே பழைய ஆர்த்தியே தலையெடுத்தது. “சிறிது ஆர்த்தியுண்டானாலும்‌ கடுக வந்து முகங்காட்டி அருள்செய்வதையே இயற்கையாகவுடைய எம்பெருமான்‌ நம்மளவிலே இப்படி உபேகைஷயாயிருக்க யாது காரணமோ?! என்று பார்த்தார்‌ ஆழ்வார்‌ ; கருமயோகம்‌; ஞான யோகம்‌ முதலானவற்றிலே நமக்கு அந்வயம்‌ வேணுமென்று இருந்தானோ? அல்லது, அந்த உபாயாந்தரங்களில்‌ நாம்‌ அந்வயித்‌திருக்கிறாமென்று திருவுள்ளம்பற்றிக்‌ கைவிடப்‌ பார்த்தானோ? அவனது திருவுள்ளம்‌ இன்னதென்று தெரியவில்லையே? என்று தடுமாறின ஆழ்வார்‌ தம்முடைய உண்மையான நிலைமையை எம்பெருமான்‌ திருவடிகளிலே விண்ணப்பஞ் செய்ய வேணுமென்று கருதி வானமாமலைப்‌ பெருமாள்‌ திருவடிகளிலே தம்முடைய அநந்யோபாயத்வம்‌ முதலானவற்றை விண்ணப்பஞ்செய்து வேரற்ற மரம்‌ போலே விழுந்து சரணம்‌ புகுகிறாராயிற்று இத்திருவாய்மொழியில்‌, சிரீவர மங்கை என்றும்‌, சிரீவர மங்கலம்‌ என்றும்‌ வானமாமலை சேஷத்திரத்தின்‌ திருநாமம்‌, இது பாண்டி றாட்டுத்‌ திருப்பதிகள்‌ பதினெட்டினுள்‌ ஒன்று. இத்திருவாய்மொழியில்‌ ஆறாம்பாட்டில்‌ “'வானமாமலையே! அடியேன்‌ தொழவந்தருளே!” என்கிற ஸ்ரீஸூக்தியை நோக்குமிடத்தில்‌ 'வானமாமலை' என்கிற திருநாமம்‌ எம்பெருமானுக்கே உள்ளதென்றும்‌, அந்தத்‌ திரு நாமத்தையிட்டு திவ்யதேசம்‌ வழங்கப்பட்டு வருகிறதென்‌றும்‌ சொல்லும்படி யிராரின்றது. 
    ஐந்தாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- ஆராவமுதே --கீழ்த்‌ திருவாய்மொழியிலே வானமாமலை யெம்பெருமான்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்போலே விழுந்து மிகப்‌ பெரிய ஆர்த்தியோடே. சரணம்‌ புகச்‌ செய்தேயும்‌ அப்பெருமான்‌ முகங்‌ காட்டிற்றிலன்‌; இன்னார்க்கு இன்னவிடத்திலே முகங்காட்டுவது என்றொரு நினைப்பு உண்டே எம்பெருமானுக்கு; அதனாலே இவர்க்குத்‌ திருக்குடந்தையிலே முகங்காட்டுவதாக அவன்‌ நினைப்‌பிட்டிருக்கவுங்‌ கூடுமே, ஆழ்வார்‌ அப்படியே கருதினார்‌. நமக்குத்‌ திருக்குடந்தையிலே காட்சி தந்தருள்வதாக எம்பெருமான்‌ ஸங்கல்‌பித்திருக்கக்‌ கூடுமென்று எண்ணினார்‌. எண்ணி “அங்குச்‌ சென்று புகவே நம்‌ அபேஷிதம்‌ தலைக்கட்டும்‌; குறைகளெல்லரம்‌ தீரும்‌” என்று கனக்கப்‌ பாரித்துக்‌ கொண்டு திருக்குடந்தையிலே சென்று புகுந்தார்‌. சித்திரகூட மலைச்சாரலிலே வந்து சேர்ந்த பரதாழ்வான்‌ தான்‌ நினைத்தபடியான பரிமாற்றம்‌ ஒன்றும்‌ பெறாதாப்போலே, ஆழ்வாரும்‌ புக்க விடத்தில்‌ திருக்கண்களை அலர விழித்துக்‌ குளிர நோக்கி யருளுதல்‌, திருப்பவளத்தைத்‌ திறந்து ஒரு வார்த்தை யருளிச்‌ செய்தல்‌, அணைத்தல்‌ முதலானவற்றிலே ஒன்றுஞ்‌ செய்யக்‌ கண்டிலர்‌. அக்ரூரன்‌ கண்ணபிரானிடத்து வரச்செய்தே “மாம்‌ அக்ரூரேதி வக்ஷ்யதி* என்று கனக்கப்‌ பாரித்துக்‌ கொண்டு வந்து மனோ ரதித்தபடியே பெற்றானென்று கேட்டிருந்தோம்‌ ; அங்ஙனே ஒன்றும்‌ தாம்‌ பெறாமையாலே மிக வருந்தி, ஸ்தந்தய ப்ரஜையானது தாய்‌ பக்கலிலே கிட்டி முகம்‌ பெறாவிட்டால்‌ அலமந்து நோவுபடுமாபோலே அவன்‌ ஸந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு இன்னும்‌ எத்தனை திருவாசல்‌ தட்டித் திரியக்‌ கடவேன்‌! என்னு மார்த்தியோடே தலைக்கட்டுகிறார்‌. 
    ஐந்தாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌-- -மானேய் நோக்கு நல்லீர்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ திருக்குடந்தையிலே தளர்ந்தார்‌. அங்கு நின்றும்‌ திருவல்லவாழென்கிற மலைநாட்டுத்‌ திருப்பதி யேறப்‌ போக வொருப்பட்டு, அங்குப்‌ போகவும்‌ முடியாமே அவ்வூர்க்கு அருகிலிருந்த ஊரில்‌ சோலைகளும்‌, அங்குள்ள பரிமளத்தைக்‌ கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும்‌, வண்டுகளின்‌ இனிதான மிடற்றோசைகளும்‌, வைதிகாநுஷ்டான கோலா ஹலங்களும்‌, மற்றுமுண்டான ஸம்ப்ரமங்களுமெல்லாம்‌ தம்மை மிகவும்‌ நலிய, அவற்றாலுண்டான நோவுபாட்டைத்‌ தோழிமாரைக்‌ குறித்துத்‌ தலைவி சொல்லும்‌ பாசுரமாகப்‌ பேசுகிறது இத்திருவாய்‌ மொழி, 
    ஐந்தாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌-பிறந்தவாறும்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌--திருவல்லவாழிலே சென்று சேர்ந்து. அங்குறையும்‌ பெருமானோடே பரிமாற வேணுமென்று மநோரதித்துக்‌ கொண்டு சென்று கால்நடை தாராமல்‌ ஈடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்‌. *கோவிந்தன்‌ குணம்பாடி....ஆவி  காத்திருப்பேனே*என்கிறபடியே குணாநுபவம்‌ பண்ணித்‌ தரிப்ப தென்று ஒன்றுண்டே; அப்படியாகிலும்‌ தரிப்போமென்று பார்க்கையில்‌ அது தானும்‌ அரிதாய்‌ சைதில்யத்தை விளைப்பிக்க, “பிரானே ! உன்னைப்‌ பிரிந்து நோவு பட்டாலும்‌ தரித்து நின்று குணாநுபவம்‌ பண்ணவல்லேனாம்படி பண்ணியருள வேணும்‌" என்று அவன்‌ திருவடிகளிலே சரணம்‌ புகுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, அர்ச்சாவதாரங்களிலே தம்‌ அபேஷிதம்‌ பெற ஆசைப்பட்டவர்‌ அவ்வாசை நிறைவேறப்‌ பெறாமையாலே விபவாவதாரங்களிலே செல்லுகிறார்‌. இது பொருந்துமோ? விபவாவதாரங்களை மிழந்‌தார்க்கும்‌ இழவு தீரவன்றோ அர்ச்சாவதாரம்‌ அமைந்திராநின்றது; இங்கே யிழந்து வைத்து அங்கே செல்லுகையாகிறவிது என்னே! என்னில்‌; கேண்மின்‌; ; அர்ச்சாவதாரத்தில்‌ குளிர நோக்குதல்‌, வினவுதல்‌, அணைத்தல்‌ செய்யலாகாதென்று ஸங்கல்பித்திருக்‌கையாலே “ஸத்ய ஸங்கல்பனுடைய ஸங்கல்பம்‌ குலையும்படி அதிக நிர்ப்பந்தம்‌ பண்ணக் கடவோமல்லோம்‌! என்று அர்ச்சாவதாரத்திலே கையொழிந்தார்‌. விபவாவதாரத்தில்‌ அப்படியொரு நிர்ப்பந்த மில்லாமையாலும்‌ *ஸம்ஸ்ப்ருச்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸாகாடம்‌ பரிஷஸ்வஜே* என்னும்படி அக்ரூரன்‌ முதலானார்க்கு ஸர்வஸ்வதானம்‌ பண்ணினபடியை அநுஸந்திக்கையாலும்‌ அது கால விப்‌ரக்ருஷ்ட மென்பதிலே புத்தி செலுத்தாமல்‌ அங்கே போருகிறார்‌. 
    ஆறாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌-வைகல்‌ பூங்கழிவாய்‌ -கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *நோற்ற நோன்பு என்கிற திருவாய்மொழி தொடங்கி நான்கு திருவாய்‌ மொழிகளிலே ஆழ்வார்‌ அடுத்தடுத்து எம்பெருமான்‌ திருவடிகளிலே சரணாகதி செய்த பலன்‌ 
    கொடுத்தே தீரக்கடவதான அந்த சரணாகதியும்‌ பலிக்கவில்லை. -அதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌ நம்முடைய பாக்கியமேயாகும்‌. -ஆழ்வாருடைய திருவாக்கில்‌ நின்றும்‌ இன்னமும்‌” பாசுரங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்கத்‌ திருவுள்ளம்‌ பற்றின எம்பெருமான்‌, நமக்காகவே ஆழ்வாருடைய சரணாகதியையும்‌ நிஷ்ப்பல மாக்கினான்‌. கீழே *பிறந்தவாறும்‌ என்கிற திருவாய்‌ மொழியிலே *என்னையென்று கொல்‌ சேர்வதுவே* என்றும்‌ *உன்னையென்று தலைப்பெய்வனே* என்றும்‌ *உன்னையென்று கொல்கூடுவதே- என்றும்‌ இங்ஙனே பலவாறு கதறி எம்பெருமான்‌ பக்கலிலே கடுகச்‌ சேரவேணுமென்று பாரித்த ஆழ்வார்‌, அவ்வெம்‌பெருமான்‌ திருவண்வண்டூர்‌ என்கிற மலைநாட்டுத்‌ திருப்பதியிலே ஸந்நிதி பண்ணியிருக்கும்‌ படியை நோக்கி அங்கே தாம்‌ சென்று சேரமாட்டாதே தம்முடைய தசையை அப்பெருமானுக்குத்‌ தெரிவிக்‌கும்படி தூது விடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.. அதாவது ஆழ்வார்‌ தாமான தன்மையை யிழந்து பெண்‌ பாவனை பெற்றுச்‌ சில பக்ஷிகளை எம்பெருமான்‌ பக்கலிலே போகவிடுகிறார்‌. பகவத்‌ விஷயத்தில்‌ அந்வயிப்பிக்குமவர்களைப்‌ பக்ஷிகளாக ப்ரதிபத்தி பண்ணுகிறதென்று ஸ்வாபதேசார்த்த மறிவது. பறவையானது இரண்டு சிறகுகளாலே எப்படி உயர்‌ கதியை அடைகின்றதோ அப்படியே ஞான அனுட்டானங்களினால்‌ உயர்கதியை அடைகின்றவர்களான மஹான்களே பக்ஷிகளாக மறைத்துப்‌ பேசப்படுகின்றார்கள்‌.
    ஆறாம் பத்தில்‌, இரண்டாம்‌ பதிகம்‌ --மின்னிடை மடவார்கள்‌ ஆழ்வாருடையபடி பலவகைப்பட்டிருக்கும்‌. இத்திருவாய்‌ மொழியின்படி. விலக்ஷணமாயிருக்கும்‌. *என்று மொருகாளொழியாமை யானிரந்தால்‌, ஒன்று மிரங்கார்‌ உருக்காட்டார்‌* என்றும்‌ *ஒரு நாள்‌ காண வாராயே* என்றும்‌ இங்ஙனே பலகாலும்‌ கூப்பிடாநின்ற ஆழ்வார்க்கு இப்போது உண்டான நிலைமை மிக வேறுபட்டிராநின்றது, , எம்பெருமான்‌ வந்து நிற்க, “இங்கே ஏதுக்கு வந்தாய்‌? உனது அந்தரங்க விருப்பத்திற்கு இலக்கானவர்கள்‌ பக்கலிலே எழுந்தருளலாம்‌ ; இங்கே என்ன காரியமிருக்கிறது? கடுகச்‌ செல்வாயாக" என்று சொல்லிக்‌ கதவடைத்துத்‌ தள்ளுகிற. படியாயிருக்கிறது இத்திருவாய்மொழி. வடமொழியில்‌ ப்ரணய கலஹமென்றும்‌, தென்மொழியில்‌ ஊட லென்றும்‌ சொல்லப்படுவது! இது. தம்பதிகள்‌ பரிமாறா நின்றால்‌ இங்ஙனே ப்ரணய கலஹம்‌ நிகழ்ந்தே தீரும்‌. எம்பெருமானோடு நமக்குள்ள ஸம்பந்தங்கள்‌ ஒன்பது வகையென்று சொல்லப்படும்‌, *பிதா ச ரக்ஷகச்‌ சேஷி பர்த்தா ஜஜேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்‌தா ச ஆத்யமநூதிதர என்கிற ஸ்லோகத்தில்‌ அந்த நவலித ஸம்பந்தங்களும்‌ காணத்தக்கன. அந்த ஸம்பந்தங்களுள்‌ பர்த்ரு பார்யா ஸம்பந்தமும்‌ ஒன்றாகையாலே, எம்பெருமான்‌ பர்த்தா வாகவும்‌ ஆழ்வார்‌ பார்யையாகவும்‌ பரிமாறுகிற முறை ஸ்வரூபாநுரூபமே யாதலால்‌ இநத ப்ரணய கலஹமும்‌ அவர்ஜநீயமாயிற்று. கீழ்த்திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ எம்பெருமானுடைய பிரிவுக்கு ஆற்றமாட்டாது தூதுவிட்டார்‌. அந்த வ்யஸநத்தை யறிந்த எம்பெருமான்‌ ஆனைக்கு உதவ வந்தாப் போல அரை குலையத்‌ தலை குலைய ஓடிவந்து ஆழ்வார்க்குக்‌ காட்சி தரப்‌ பார்த்தான்‌ ; அவ்வளவிலே ஆழ்வார்‌ ப்ரணய ரோஷம்‌ தலை யெடுக்கப் பெற்று “ஸ்வாமிந்‌! இங்கே உமக்குப்‌ பணியில்லை; பணி போரு மிடத்தேற எழு்தருளிர்‌”' என்று கதவடைத்துத்‌ தள்ளுகிறார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌. கருஷ்ணாவதாரத்திலே கண்ணபிரானோடு பரிமாறின' கோபஸ்த்ரிகள்‌ இங்ஙனே ப்ரணய ரோஷத்தாலே ஊடல்‌ செய்தமை யுண்டு, அவர்களுடைய பாவபந்தமே இப்போது ஆழ்வார்க்கும்‌ ஆகி அவ்வநுகாரமே முற்றியிருக்கிறதாயிற்று. பெருமாள்‌ திருமொழியிலே *ஏர் மலர்ப்‌ பூங்குழல்‌* என்கிற திருமொழியும்‌, பெரிய திருமொழியிலே *காதில்‌ கடிப்பிட்டு* என்கிற திருமொழியும்‌ இந்த நடையிலே அவதரித்தவை யென்றுணர்க, 
    ஆறாம் பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌ - நல்குரவுஞ்செல்வும்‌ --*வைகல்‌ பூங்கழிவரயில்‌ தூதுவிட்டும்‌ தாமதித்து வந்த எம்‌பெருமான்‌ பக்கலிலே பராங்குச நாயகிக்கு ப்ரணய ரோஷம்‌ தலையெடுத்து “எங்கள்‌ கோஷ்டியிலே நீ வந்து புகவேண்டா? என்று தள்ளிக்‌ கதவடைப்பதாய்ச்‌ சென்றது கீழ்‌; அதுதான்‌ ஊடல்‌ என்பது. ஊடலுக்கு அடுத்த படியாகக்‌ கூடல்‌ நேர்ந்தே தீருமாதலால்‌, அந்தக்‌ கூடல்‌ நேர்ந்தபடியும்‌ ஒருவாறு கீழ் திருவாய்‌ மொழியிலே *நின்‌ நிலங்கு முடியினாய்‌* என்கிற பாசுரத்தினால்‌ ஸூசிப்பிக்கப்பட்டதாயிற்று. எவ்விதத்திலும்‌ இவனோடு கூடலாகாது! என்று மிக்க வுறுதியுடனிருந்த நம்மைக்‌ கூடும்படி யாக்கிக்‌ கொண்ட இவனுடைய வலிமை என்னே! என்று விஸ்மயப்‌பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான்‌ தன்னுடைய அகடித கடநா ஸாமர்த்தியத்தை நன்கு காட்டிக்கொடுத்து அத்தன்மையனா।ன தான்‌ திருவிண்ணகரிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கிறபடியையும்‌ காட்டிக்கொடுக்க, ஆழ்வார்‌ அது தன்னைப்‌ பேசி இனியராகிறார்‌ 
    ஆறாம் பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌-- -குரவையாய்ச்சியரோடு -கீழ்‌ ஐந்தரம்பத்தில்‌ *பிறந்தவாறும்‌ என்கிற திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய சேஷ்டித விசேஷங்களைச்‌ சிந்தித்து உருகி உள்குழைந்து அந்தோ! அநுபவிக்க முடிய வில்லையே யென்று தளர்ந்து பேசினார்‌; அக்குறை தீர்கின்றது இத்திருவாய்மொழியில்‌. எம்பெருமானுடைய பலபல சேஷ்டித் விசேஷங்களை வாயாரச்‌ சொல்லி நன்றாக அநுபவித்து அதனால்‌ தமக்குண்டான பூரிப்பைப்‌ பெரு மிடறு செய்து வெளியிடுகின்றாராழ்வார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌- இதில்‌ ஒவ்வொரு பாசுரங்களிலும்‌ முன்னடிகள்‌ பகவானுடைய சேஷ்டித விசேஷங்களைப்‌ பேசுவனவாகவும்‌ பின்னடிகள்‌ அந்த சேஷ்டிதாநுபவத்தில்‌ தமக்குண்டான களிப்பைக்‌ கனக்கக்‌ கூறுவனவாகவும்‌ அமைந்திருக்கின்றன. *நீசனேன்‌ நிறையொன்றுமிலேன்‌* என்று நைச்சியாநுஸந்தானத்தின்‌ பரம காஷ்டையிலே நிற்கின்ற ஆழ்வார்‌ இங்கு “எனக்கினியார்‌ நிகர்‌ நீணிலத்தே' என்றும்‌, “எனக்கார்‌ பிறர் நாயகரே'! என்றும்‌ “மாறுளதோ விம்‌ மண்ணின்‌ மிசையே” என்றும்‌ இங்ஙனே ஆவலிப்புடைமை தோற்றக்‌ கூறுவது பரம ஸாத்விகத்வத்திற்குக்‌ குறையன்றோ என்று சங்கிக்க வேண்டா, குணாநுபவத்தாலுண்டான ஆனந்தம்‌ தலை மண்டை கொண்டு அதன்‌ பரீவாஹ ரூபமாக இங்ஙனே பேசுவது ஸ்வப்ரயத்ந பூர்வகமன்று, குணாநுபவம்‌ பரவசமாக்கிப்‌ பேசுவிக்கிறபடி. *நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள் மீதே மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்னாமங்கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்‌ அரங்கமா நகருளனே” என்பன போன்ற பாசுரங்கள்‌ ஸாத்விகாஹங்கார ரீதியிலே அவதரித்தன வென்று கொள்க. உலகில்‌ மதுபானம்‌ பண்ணினார்‌ தம்மை யறியாமல்‌ சொல்லுகிறபடியும்‌ காணா நின்றோம்‌, *எனக்குத்‌ தேனே பாலே கன்னலே யமுதே* என்ற பரம விலக்ஷண மதுவைப்‌ பானம்‌ பண்ணினார்க்குச்‌ சொல்ல வேணுமோ? 
    ஆறாம் பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- -துவளில் மா மணி மாடம்‌ -ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய தன்மைகளை வருணிப்பதில்‌ எவ்வளவு குதூஹலமோ அவ்வளவு குதூஹலம்‌ தம்முடைய தன்மைகளை வருணிப்பதிலுமுண்டு. எம்பெருமானுக்கே மங்களாசாஸநம்‌ பண்ணப் புகுந்த பெரியாழ்வார்‌ *அடியோமோடும்‌ நின்‌னோடும்‌ பிரிவின்றி ஆயிரம்‌ பல்லாண்டு* என்று தமக்கும்‌ தாமே மங்களாசாஸநம்‌ செய்து கொண்டார்‌; எம்பெருமானுடைய பெருமையைப்‌ பாங்காக ,அநுபவிக்கவல்ல அடியார்கள்‌ இல்லையாயின்‌ எம்பெருமானிருந்து யாது பயன்‌? நிலா தென்றல்‌ முதலானவை பரம போக்யமேயானாலும்‌ அவை அநுபோக்தாக்‌களுக்கு உபயோகப்படாதவளவில்‌ *காட்டிலெறித்த நிலாப்போலே” என்னும்படி அவத்யம்‌ பெறுகின்‌றன வன்றோ. அப்படியே, எம்‌பெருமானுடைய பெருமையும்‌ அவனை நன்றாக அநுபவிக்க வல்லவர்‌களுடைய பெருமையிலே சொருகி நிற்கும்‌. பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுவதும்‌ பகவானுடைய பெருமையைப்‌ பேசுவதேயாகும்‌. ஆனது பற்றியே *திருமாலவன்கவி* என்று பகவத்‌ கீர்த்தனமாகக் கொண்ட இத்திவ்யப்‌ பிரபந்தத்திலே *பயிலுஞ்‌ சுடரொளி *நெடுமாற்கடிமை* முதலான பதிகங்கள்‌ பாகவத ய்ரபாவ கீர்த்தத பரங்களாகவும்‌ அமைந்தன. பாகவதர்களுள்‌ ஆழ்வார்‌ சிறந்தவரன்றோ. ஆத்ம ப்ரசம்ஸை [அதாவது தற்‌ புகழ்ச்சி அவத்யமானாலும்‌ பகவத்‌ விஷயத்திலுண்டான தமது ஈடுபாட்டைத்‌ தாமே பேசிக்கொள்வது தகுதியேயாகும்‌. இது அவத்யமன்று, ஆனால்‌ “எம்பெருமான்‌ விஷயத்தில்‌ நான்‌ இப்படி யிப்படி யீடுபட்டிருக்கிறேன்‌' என்று வ்யக்தமாகச்‌ சொல்லிக்‌ கொள்வதில்‌ ஆழ்வார்க்குச்‌ சிறிது ஸங்கோசமுண்டாயிற்றுப்‌ போலும்‌, எம்பெருமானும்‌ தன்னுடைய பெருமையைத்‌ தானே ஒரு பெரிய பிரபந்தமாக வெளியிட்டுக்கொள்ள வேணுமென்று ஆசைப்‌பட்டு, அப்படி நாமே நம்பெருமையைப்‌ பேசிக்கொண்டால்‌ அது சுவை மிக்கதாகாது என்று பார்த்து நம்மாழ்வார்மீது ஆவேசித்து அவர்‌ வாக்காலே தானே தன்‌ பெருமைகளைப்‌ பேசிவிட்டுக்‌ “குருகூர்ச்சடகோபன்‌ சொன்ன” என்று ஆழ்வார் மேலே ஆரோபணம்‌ செய்தான்‌ என்று சொல்லுவதொன்றுண்டு; இவ்விஷயத்தை ஆழ்வார்‌ தாமே மேலே ஏழாம்பத்தில்‌ *என்றைக்குமென்னை* என்கிற திருவாய்மொழியிலே நன்கு. வெளியிடக்‌ காண்கிறோம்‌. அதுவேபோல இப்போது ஆழ்வார்‌ தாமும்‌ தம்‌ பெருமையைத்‌ தாமே வெளியிட்டுக் கொள்ள வேணுமென்று ஆசைப்பட்டு அது சுவையுடைத்  தாவதற்காக அதை வேறொருவர்‌ தலையில்‌ ஏற்றப்‌ பார்த்துத்‌ தோழிமார்‌ பாசுரமாக வைத்து இத்திருவாய்மொழியை அமைத்தருளுகின்றார்‌; ஆழ்வார்‌ பகவத்‌ விஷயத்தி லீடுபட்டிருக்கும்‌ பெருமையை வேறு சில பாகவதர்கள்‌ எடுத்துக்‌ கூறுவதாக உள்ளுறை பொருள்‌ காண்க. 
    ஆறாம் பத்தில்‌ ஆறாம் பதிகம்‌-மாலுக்கு வையமளந்த. -கீழ்த்‌ திருவாய்மொழி தோழி பாசுரமாகச்‌ சென்றது; இத்திரு வாய்மொழி தாய் பாசுரமாகச்‌ செல்லா நின்றது. இதில்‌ பாசுரம்‌ தோறும்‌ “இழந்தது' என்று வாரா நின்றது. சங்கை யிழந்தாள்‌, 
    மாமைநிறமிழந்தாள்‌, சாயை யிழந்தாள்‌, மாண்பிழந்தாள்‌, கற்பிழங்‌ தாள்‌, கட்டிழந்தாள்‌
    என்றிப்படிப் பலவும்‌ இழந்ததாகச்‌ சொல்லப்‌ படுகிறது. இதனால்‌, பகவத்‌ விஷயத்தில்‌ ப்ராவண்யம்‌ அதிகரித்தமையும்‌, அபேக்ஷிதமானபடி ஸம்ச்லேஷம்‌ கிடையாமையாலே மேனி மெலிந்தமையும்‌, கட்டுக்கு அடங்காமையுமாகிற விவை சொல்லப்‌ படுகின்றன வென்றுணர்க. கீழ்‌ நாலாம்பத்தில்‌ *ஏறாளுமிறையோனும்‌* என்கிற. திருவாய்மொழியில்‌ “மாறாளன் கவராத மணி மாமை குறைவிலமே?”. “மணிமாயன் கவராத மடநெஞ்சால்‌ குறை விலமே” என்றிப்படித்‌ தாமே வேண்டாவென்று உபேக்ஷித்த ஆத்மாத்மியங்களெல்லாம்‌ இப்போது தன்னடையே கழிந்து செல்லுகிறபடி. சொல்லுகிறது. எம்பெருமானுடைய ஒரோ அவதார சேஷ்டிதங்களையும்‌ ஒரோ திவ்ய குணங்களையும்‌ நினைக்க நினைக்க, தாம்‌ பரவசராய்‌ மேனிமெலிந்து ஆவி நீராயுருகுகின்‌றமையை ஆழ்வார்‌ அர்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறாராயிற்று.
    ஆறாம் பத்தில்‌ ஏழாம் பதிகம்‌- உண்ணுஞ்சோறு-கீழ்த்திருவாய்மொழி போலே இத்திருவாய்மொழியும்‌ தாய்‌ பாசுரமாகவே செல்லுகிறது.  படுக்கைத்‌ தலையிலே பாரங்குச நாயகியாகிய மகளுடன்‌ கூடவே படுத்துக்‌ கொண்டிருந்து மகளின்‌ விரஹ தாபத்துக்கு. உபசாரங்கள்‌ பண்ணிக் கொண்டிருந்த. திருத்‌ தாயார்‌ படுக்கையைத்‌ தடவிப் பார்த்தாள்‌; எங்கும்‌ தேடிப்பார்த்‌தாள்‌; மகளைக்‌ கண்டிலள்‌ (பேய்‌கொண்டதோ? பிசாசு கொண்டதோ?” என்று சங்கிக்கலாமாயினும்‌ இவளுக்குத்‌ திருக்‌கோளூ ரெம்பெருமானிடத் திலிருந்த ஆவலின்‌ மிகுதியை நன்கு அறிந்தவளாகையாலே அத் திருப்பதிக்கே சென்‌றிருக்க வேணு மென்று அறுதியிட்டு அதை வெளியிட்டுரைக்கும்‌ பாசுரமாகச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி, திருக்கோளூர்‌ சென்று அவ்‌ விடத்து எம்பெருமானோடே நித்ய ஸம்ச்லேஷம்‌ பண்ண வேணுமென்றிருந்த ஆழ்வாருடைய விருப்பம்‌ இத்திருவாய்மொழியாகப்‌ பரிணமித்து விட்டது போலும்‌,
    ஆறாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌ -பொன்னுலகாளீரோ -தூதுவிடும் பதிகம்‌ இது, இதில்‌ *வானவர்கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறென்ன வேண்டும்‌* என்ற பாசுரத்தையும்‌ *எங்குச்‌ சென்றாகிலுங்‌ கண்டு இதுவோ தக்கவாறென்மின்‌*' 
    என்கிற பாசுரத்தையும்‌ உயிராகக்‌ கொண்டு இத்திருவாய்மொழி பரத்வத்திலும்‌ அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விட்டயடியாமென்பர்‌,
    ஆறாம் பத்து ஒன்பதாம்‌ பதிகம்‌--நீராய்‌ நிலனாய்‌ -இப்படி தூத ப்ரேஷணம்‌ பண்ணியும்‌ எம்பெருமான்‌ வரக்‌ காணாமையாலே அவனைத்‌ தம்முடைய பெரிய ஆர்த்தியோடே கூடத்‌ திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைக்கிறார்‌. தூது விடுவதிற்காட்டிலும்‌ தமது ஆர்த்த நாதமே கார்ய கரமாமென்று கொண்டார்‌,  இப்பதிகத்தின்‌ ஸாரத்தை கூறுகின்ற மணவாள மாமுனிகள்‌ நூற்றந்தாதியில்‌, “நீராகிக்‌ கேட்டவர்கள்‌ நெஞ்சழிய மாலுக்கும்‌ ஏரார்‌ விசும்பில்‌ இருப்பு அரிதாம்‌* என்று அருளிச்‌ செய்கையாலே இப்பதிகத்தில்‌ ஆழ்வாருடைய ஆர்த்தியின்‌ கனம்‌ மிக்கதாய் இருக்கிறது என்பது விளங்கும்‌,
    ஆறாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--உலகமுண்ட பெருவாயா --கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அபரிமிதமான ஆர்த்தியோடே பரம பதத்தளவும்‌ கேட்கும்படி கூப்பிட்டார்‌. அங்ஙனே கூப்பிடச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்‌ காட்டாமையாலே மிகவும்‌. 
    தளர்ந்து நோவுபட்ட ஆழ்வார்‌, அப்பெருமான்‌ ஸ்ரீவைகுண்டத்தி லிருந்து நில வுலகத்தே வந்து ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்‌ பண்ணி! அக்காலத்திலே யிழந்தார்க்கும்‌ இழக்க வேண்டாமல்‌. திருவேங்கட மலையிலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குக்‌களோடு வாசியற எல்லாரும்‌ வந்து ஒருமிடறாக ஆச்ரயிக்கலாம்படி நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை யநுஸந்தித்து அத்திரு வேங்கடமுடையான்‌ திருவடிகளிலே பெரிய பிராட்டியார்‌ முன்னிலையாகத்‌ தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பஞ்‌ செய்து சரணம்‌ புகுகிறார்‌ இத் திருவாய்மொழியில்‌,
    ஏழாம் பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--உண்ணிலாவிய -எம்பெருமான்‌ கீதையிலே *தைவீ ஹ்யேஷா குணம௰ீ மம மாயா துரத்யயா* என்று சொல்லி வைத்து, உடனே *மாமேவயே ப்ரபத்யந்தே மாயாம்‌ ஏதாம்‌ தரந்தி தேர என்றும்‌ சொல்லி வைத்தான்‌. அதாவது--ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால்‌. விழ்க்க வொண்ணாதாப் போலே தான்‌ பிணைத்த மாயப்‌ பிறவிப்‌ பிணையானது ஒருவராலும்‌ கழற்ற வொண்ணாதது என்று முன்னம்‌ சொல்லி வைத்து, என்‌ திருவடிகளையே தஞ்சமாகம்‌ பற்றுவார்‌ யாவரோ, அவர்கள்‌ அந்தப்‌ பிணையை எளிதாகக்‌ கழற்றிக்‌ கொள்ள வல்லார்கள்‌ என்று பின்னைச்‌ சொன்னான்‌. அந்தத்‌ திருமுகப்‌ பாசுர நம்பிக்கையாலே ஆழ்வார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌ பெரிய பிராட்டியாரைப்‌ புருஷகாரமாக முன்னிட்டுத்‌ திருவேங்கட முடையான்‌ திருவடிகளிலே ஆர்த்தராய்ச்‌ சரணம்‌ புகுந்தார்‌ மாயப்‌ பிறவி மயர்வறுத்து நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யம்‌ பெறவேணு மென்று. அந்த சரணாகதி பலித்ததில்லை. பரதாழ்வானுடைய சரணாகதிக்கு முன்னே தேவதைகளின்‌ சரணாகதி கிடந்ததாய்‌ அதற்குப்‌ பலன்‌ அளித்த பின்னரே பரத சரணாகதிக்குப்‌ பலன்‌ தர. வேண்டினாப்போலே - இங்கும்‌ ஆழ்வாருடைய சரணாகதிக்கு முன்னே இவ்வுலகில்‌ சில ஸம்ஸாரிகள்‌ சரணாகதி செய்திருப்பர்கள்‌ போலும்‌; நாங்கள்‌ வாழலாம்படி. ஸர்வோத்துங்கமானதொரு பிரபந்தத்தை உபகரித்தருள வேணுமென்று சிலர்‌ சரணாகதி செய்திருந்தார்களாக வேணும்‌) அதுதான்‌ முந்தின சரணாகதி யாகையாலே அதற்குப்‌ பலனளித்த பின்னரே ஆழ்வாருடைய சரணாகதிக்குப்‌ பலனளிக்க வேண்டி எம்பெருமான்‌ தாழ்த்தான்‌. -எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைக்‌ குறையறப்‌ பேசவல்லதொரு பிரபந்தம்‌ திருவவதரிக்கவேணு. மென்று ஏற்கெனவே சிலர்‌ சரணாகதி செய்திருக்க வேண்டுகையாலே முந்துற முன்னம்‌ அதற்குப்‌ பலனளிக்க வேண்டி எம்பெருமான்‌ ஆழ்வாருடைய சரணாகதியைப்‌ பழுதாக்கினனென்னலாம்‌. இவருடைய சரணாகதிக்கு இப்போதே பலன்‌ தந்தால்‌ திருவாய்மொழி அரைகுறையா யன்றோ போயிருக்கும்‌. முந்தின சரணாகதிக்குப்‌ பலன்‌ முற்றிற்றாகாதே. திருவாய்மொழி தலைக்கட்ட வேண்டி ஆழ்வாரை இன்னமும்‌ இவ்விபூதியிலே வைத்தானாயிற்று. -முன்னமே இவர்‌ பாவியேனைப்‌ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ? என்று வயிறெறிந்திருக்கிரரே; அந்த வயிற்றெரிச்சல் தானே  மேலும்‌ தலையெடுத்து *அந்தோ வடியேனுன பாத மகலகில்லே னிறையுமே யென்று சொன்ன வடியேனை, அகற்றுமவற்றின்‌  நடுவே யிருத்தித்‌ துடிக்க வைப்பது தருமமோ வென்று கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.
    ஏழாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌-- --கங்குலும்‌ பகலும்‌ --கீழே ஆறாம்பத்தின்‌ ஈற்றுத்‌ திருவாய்மொழியில்‌ -- பெரிய பிராட்டியார்‌ முன்னிலையாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே விழுந்து சரணம்‌ புகுந்தவிடத்திலும்‌ ஆழ்வார்‌ தாம்‌ 
    எம்பெருமானுடைய திருவடி வாரத்திலே சென்று நிற்கக்‌ கண்டிலர்‌. -இன்னமும்‌ இந்த ப்ரக்ருதி மண்டலத்திலேயே தம்மைக்‌ கண்டார்‌. -சப்தாதி விஷயங்களும்‌ இந்திரியங்களும்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைத்த போதே தன்‌ பக்கலில்‌ நின்றும்‌ நம்மை அகற்றப்‌ பார்த்தானன்றோ வென்று கருதிப்‌ புலியின்‌ வாயிலே அகப்பட்டாற்‌ போலே கூப்பிட்டார்‌ கீழ்த்‌ திருவாய்மொழியிலே. இந்த ஆர்த்தியை எம்பெருமான்‌ அறியாதவனல்லன்‌; “எப்படியும்‌ இவர்க்கு நாம்‌ பேறு பெறுவிப்பது திண்ணம்‌; இவர்‌ அங்கே போந்து செய்யும்‌ காரியத்தை இங்கே யிருந்து தான்‌ செய்யட்டுமே என்றிருந்‌தான்வன்‌. மக்களைப்‌ பட்டினியிட்டு வைத்தும்‌ வந்த விருந்‌தினரைப்‌ பேணுவாரைப்போலே -இவ்வாழ்வார்‌ தாம்‌ நாலுநாள்‌ நோவுபட்டாராகில்‌ படுகிறார்‌; இவருடைய திவ்வியப்‌ பிரபந்தத்தைக்‌
    கொண்டு நாட்டை வாழ்விப்போம்‌' என்றிருந்தான்‌.
    இவர்‌ ஒரு நொடிப்பொழுது இங்கிருந்தாலும்‌ எம்பெருமான்‌ றன்னாலும்‌ திருத்த வொண்ணாத ஸம்ஸாரம்‌ எவ்வளவோ திருந்தி வாழும்படியாயன்றோ விருப்பது. அதற்காகவே இவரை இங்கு வைத்தான்‌ அவன்‌. அந்தோ! இக்கொடு வுலகத்தில்‌ இருப்புப்‌ பொருந்தாத நம்மைக்‌ கொண்டா இவன்‌ காரியம்‌ நிர்வஹிக்கப்‌ பார்ப்பது! இந்நிலத்தில்‌ இருப்புப்‌ பொருந்துவார்‌ பலருண்டே; அன்னவர்களில்‌ ஆரேனு மொருவரைக்கொண்டு காரியம்‌ பார்க்கலாகாதோ!”! என்று துடிக்‌கிறார்‌ ஆழ்வார்‌. இங்கு இருப்புப்‌ பொருந்தாதாரைக் கொண்டே காரியம்‌ பார்க்கவேணும்‌ என்பதே எம்பெருமானுடைய பிடிவாத
    மாயிற்று. இப்படி எம்பெருமானைப்‌ பிரிந்து துடிக்கவேண்டிய தாயிற்றேயென்று நிலைகலங்கின ஆழ்வார்‌ தாமான தன்மையை யிழந்து தமது பரிதாபத்தைத்‌ தம்‌ வாயாலே சொல்லகில்லா தாராய்‌ தாய்‌ சொல்லவேண்டும்படியான தளர்த்தியுண்டாக, திருத்தாயார்‌ பாசுரமாகச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. திருத்தாயார்‌ இப்பராங்குச நாயகியைப்‌ பெரிய பெருமாள்‌ [ஸ்ரீரங்கநாதர்‌] திருவடிகளிலே யிட்டு வைத்துக்கொண்டிருந்து இவள்‌ அழுவது தொழுவது மோஹிப்பது பிரலாபிப்பது அடைவுகெடப்‌ பேசுவது நெடுமுச்‌செறிவது அதுவும்‌ மாட்டாதொழிவது ஸ்தப்தையாயிருப்பது முதலியவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச்‌ சொல்லி, இவள்‌.
    திறத்திலே நீர்‌ என்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றியிருக்கிறீர்‌?” என்று கேட்கிறபடியாய்ச்‌ செல்லுகிறதாயிற்று.

    ஏழாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌ -வெள்ளைச்சுரிசங்கு -கீழ்த்‌ திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய துயர்‌ பேச்சுக்கு நிலமல்லாமேயிருந்தது, பெரிய பெருமாளூடைய திருக்குணங்களையும்‌ வடிவழகு முதலானவற்றையும்‌ பராங்குசநாயகியான தான்‌ வாய்‌ வெருவியும்‌ திருத்தாயார்‌ சொல்லக்கேட்டும்‌ சிறிது தரிக்கும்படி யாயிற்று, மோஹமும்‌ தெளிந்தது. பின்பு அவனைச்‌ சென்று கிட்டியே தீர்வேன்‌ என்னுமாற்றாமை பிறந்து, *தென்திருப்பே ரெயில்‌ வீற்றிருந்த மகரநெடுங்குழைக்‌ காதணிடம்‌ போகவேணு மென்று புறப்பட, பழையபடியே தோழிமாரும்‌ தாய்மாரும்‌ சூழ்ந்து கொண்டு உனக்கு இத்தனை ப்ராவண்யமாகாது: நமக்கு இது பழியாய்‌ விளையும்‌! என்ன, “நீங்கள்‌ தடை சொல்லுகிறவற்றால்‌ ஒரு பயனுமுண்டாகமாட்டாது. நான்‌ மகர நெடுங்குழைக்காதனாலே நெஞ்சு பறியுண்டேன்‌ ; ஆனபின்பு நானே போனதாகாமே நீங்கள்‌ என்னோடு உடன்பட்டு அங்கே கொண்டுபோய்ச்‌ சேர்க்கப் பாருங்கள்‌? 
    என்று, பராங்குச நாயகி தனக்குப்‌ பிறந்த துணிவை அவர்‌களுக்குச்‌ சொல்லுகிறதாகச்‌ செல்லுகிறது இத்திருவரய்மொழி
    ஏழாம்பத்தில்‌ நான்காம்‌ பதிகம்‌- ஆழியெழ -கீழ்த் திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய பதற்றம்‌ அளவு கடந்திருந்தது. *மண்ரதிணி ஞாலமுமேழ்கடலும்‌ நீள்‌ விசும்புங்‌ ஊழியப்‌ பெரிதாகத்‌ தாங்கொண்ட காதலை வெளியிட்டு, இப்படி 
    கரைபுரண்ட, காதலையுடைய நரன்‌ இங்கே யிருக்ககில்லேன்‌, தென்‌ திருப்பேரையில்‌ சென்று சேர்வேனத்தனையென்று சொல்ல, தோழிமார்‌ தாய்மார்‌ முதலானார்‌ இது ஸ்வருபஹானியென்று சொல்லித்‌ தடுத்தவளவிலும்‌ கேட்கமாட்டாதவராய்ப்‌ பதறியே நின்ற ஆழ்வார்‌ புறப்பட்டுச்‌ செல்லப் பார்த்தார்‌. *காலாழும்‌ நெஞ்சழியுங்‌ கண்‌ சுழலும்‌* என்னும்படியான நிலைமையிலே நின்‌றிருந்தாராகையாலே புறப்பட்டுச்‌ செல்ல வலிமை யற்றிருந்தார்‌. வாய் கொண்டு பேசவும்‌ முடியாதபடி பலமழிந்து கிடந்த விவர்க்கு ஒரு வழியாலே பலமுண்டாக்க வேணுமென்று பார்த்தான்‌. எம்பெருமான்‌ தன்னுடைய விஜயாபதான பரம்பரைகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தால்‌ அவற்றைக்‌ கண்டு பலம்‌ மிக்குத்‌ தரித்திருப்பர்‌ என்று கருதி, உலகளந்தது, கடல்‌ கடைந்தது, நிலமிடந்தது, பிரளயத்திலே உலகமுண்டது முதலான அபதானங்களைக்‌ காட்டிக்கொடுத்து, “ஆழ்வீர்‌! இவற்றை யநுஸந்தித்துத்‌ தரித்து வாழும்‌' என்ன, ஆழ்வாரும்‌ அவ்வபதானங்களை ஸமகாலத்திற்போலே கண்டு பாசுரந்தோறும்‌ ஒவ்வொரு அபதானமாகப்‌ பேசித் தரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, ்‌
    ஏழாம்பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- -கற்பாரிராமபிரானை -கீழ்த்திருவாய்மொழியில்‌ எம்பெருமானுடைய சில விஜய சேஷ்டிதங்களைக்‌ காணப்பெற்று அநுபவித்தவாழ்வார்‌ அப்படிப்பட்ட மற்றுஞ்‌ சில சரிதைகளையும்‌ வாயாரப் பேசி, *அந்தோ! இப்படிப்பட்ட பகவத்‌ குணங்களை யநுபவிக்க இட்டுப்‌ பிறந்தும்‌ ஸம்ஸாரிகள்‌ அந்ய பரராயிருப்பது என்னோ வென்று வியந்தும்‌ திருவுள்ளம்‌  நொந்தும்‌ பேசுகிறதாய்த்து இத்திருவாய்மொழி,
    ஏழாம்பத்தில்‌ ஆறாம்பதிகம்‌--பாமருமுவுலகும்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ பரோபதேசம்‌ ஸ்பஷ்டமாக இல்லை யாயினும்‌ பரோபதேசத்திலேயே முழுநோக்காயிருக்கும்‌, *கற்பாரிராமபிரானையல்லால்‌ மற்றுங்‌ கற்பரோ *நாரணற்காளன்‌ நியாவரோ 
    *கண்ணற்காளன்‌ றியாவரோ*
    என்று இங்ஙனே பாட்டுத்தோறும்‌ படர்க்கையாகவே அருளிச்‌ செய்திருந்தாலும்‌ முன்னிலையாக அருளிச்செய்வதிலேயே ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ ஊன்றி யிருக்கும்‌. பாவிகாள்‌! இழந்து போகிறீர்களே!” என்று ஸம்ஸாரிகளை நோக்கிப்‌ பரிதபித்துக்‌ கூறுதலும்‌, *அப்படி இழவாதே கொள்ளுங்‌கள்‌* என்று உபதேசித்ததுமே கீழ்த்திருவாய்மொழிக்கு ப்ரமேயமாயிருக்கும்‌. அங்ஙனே பிறருடைய இழவுக்கு நொந்து பேசின ஆழ்வார்‌ தம்மை நிரூபித்துப்‌ பார்த்தார்‌. பிறர்‌ இழந்திருப்பது நாஸ்திக்யத்தாலே; அப்படிப்பட்ட இழவு தமக்கு இல்லையானாலும்‌,
    எம்பெருமானைப்‌ பரிபூர்ணமாக அநுபவிக்கவேணுமென்கிற விருப்பம்‌ தமக்குக்‌ குறையற உண்டாயிருக்கச்‌ செய்தேயும்‌. அவ்வநுபவம்‌ பெறாமையினலேயான இழவு பொறுக்க வொண்ணா திருந்ததனால்‌, தம்முடைய ஆர்த்தியெல்லாம்‌ தோற்றப்‌ பரமபத நாதனுடைய திருச்செவியளவும்‌ படும்படியாகப்‌ பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌, அம்மங்கியம்மாள்‌ என்னு மாசிரியர்‌ “இத்திருவாய்மொழியின்‌ சப்த ராசிகளை நாம்‌ வாயாற்‌ சொல்லவும்‌ காதாம்‌ கேட்கவும்‌ அதிகாரிகளே தவிர, இதில்‌ ஆழ்வார்க்குச்‌ செல்லுகின்ற ஆர்த்தி இப்படிப்பட்டதென்று எடுத்‌ துரைக்க நாம்‌ அதிகாரிகளல்லோம்‌”' என்பராம்‌.
     ஏழாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌--ஏழையராவி --கீழ்த்‌ திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ கூப்பிட்ட கூப்பீடு பரம பதத்தளவுஞ்‌ சென்று பரவாஸுதேவனுடைய திருச்செவியில்‌ விழுந்திருக்குமே. அது கேட்ட அப்பெருமான்‌ ஆழ்வாரை ஒருவாறு தேற்றுவிக்க  உருவெளிப்பாடு தோன்றச்‌ செய்தருளினன்‌. அதாவது அவனுடைய திவ்யாவயங்களை மாநஸ ஸாஷாத்கார விஷயமாகப்‌ பெற்றாராழ்வார்‌. கண்ணுக்கு ப்ரத்யக்ஷமாகத்‌ தோற்றாமே நெஞ்சுக்கு மாத்திரம்‌ ஸாக்ஷாத்கார விஷயமாகை உருவெளிப்பாடாம்‌. அது இத்திருவாய்மொழியில்‌ செல்லா நின்றது. இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசும்‌ திருவாய்மொழி. தாய்‌மார்களையும்‌ தோழிமார்களையும்‌ நோக்கி “எம்பெருமானுடைய வடிவழகு எனக்கு ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாய்த்‌ தோற்றித்‌ தனித்‌தனியும்‌ திரளவும்‌ ஒரு முகஞ்செய்து நலியா நின்றதே! இந்த நலிவுக்கு ஆற்றுவேனா? உங்கள்‌ பேச்சுக்கு அஞ்சுவேனா?” என்று அலமந்து பேசுகிறாளாயிற்று பராங்குச நாயகி, கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *எங்ஙனேயோ வன்னைமீர்காள்‌* என்கிற திருக்குறுங்குடிப்‌ பதிகமும்‌ உருவெளிப்பாடாய்ச்‌ சென்றது; அதிற்காட்டில்‌ இத்திருவாய்மொழிக்கு வாசி யென்னென்னில்‌; அங்கு பரிதியும்‌ அப்ரீதியும்‌ ஒரு நிகராயிருக்கும்‌; இங்கு அப்ரிதி தலையெடுத்திருக்கும்‌. தொடங்கும்போதே '*இணைக்  கூற்றங்‌ கொலோ!” என்கையாலே பாதகத்வத்தினுறைப்பு தெரியவரும்‌. 
    ஏழாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--மாயா வாமனனே -கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார்‌ உருவெளிப்பாட்டாலே நோவுபட்டார்‌, அந்த நோவைப்‌ பரிஹரிக்கு எம்பெருமானால்‌' ஆகாததன்றே. ஆனாலும்‌ சில காரணங்களாலே அவன்‌ திருவுள்ளம்‌ ஒரு ஸமய விசேஷத்தை எதிர்பார்த்திருந்தபடியாலே தாமதிக்கலாயிற்று. அந்தத்‌ திருவுள்ளத்தை ஆழ்வார்‌ தாம்‌ அறியாதவரல்லரே. அறிந்து வைத்தும்‌ ஆறியிருக்கு மியல்வின ரல்லரே. உயிர்‌ துறந்து, முடியவேண்டும்படியான நிலைமை நேர்ந்‌ திருக்கச்‌ செய்தேயும்‌ எம்பெருமான்‌ தம்மை முடியவொட்டாதே கடத்துகிறபடியைக்‌ கண்டு மிகவும்‌ ஆச்சரியப்பட்டார்‌. “இப்படி யொரு ஆச்சரியமிருந்தபடியென்‌!' என்று எம்பெருமானையே நோக்கிக் கூற, “ஆழ்வீர்‌! இந்தவொரு ஆச்சரியந்தானோ என்னிடத்தில்‌ நீர்‌ அறிந்தது? என்‌ விசித்திரங்களையெல்லாம்‌ காட்டு 
    கிறேன்‌ பாரும்‌' என்று சொல்லி எம்பெருமான்‌ தன்னுடைய விருத்த விபூதித்வத்தைக்‌ காட்டியருள, அது கண்டு ஆழ்வார்‌ விஸ்மிதராய்ப்‌ பேசுகிறார்‌ இத்திருவாய்மொழியில்‌.
    ஏழாம்பத்தீல்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌--என்றைக்கும்‌. -கீழ்த்திருவாய்மொழி சென்றது. எம்பெருமானுடைய ஒரு ஆச்சர்ய சாதுரியத்தாலேயாயிற்று, ஆழ்வார்‌ ஒன்று கேட்க, எம்பெருமான்‌ ஒன்றைச்‌ சொல்லி அவர்‌ கேட்டதை மறப்பிக்குமியல்‌ வினனாகையாலே ஒவ்வொரு. ஸமயத்திலே ஒவ்வொரு குணாவிஷ்காரத்தைப்‌ பண்ணுவதும்‌ அதை ஆழ்வார்‌. அணுபவிக்குமாறு செய்வதும்‌ அத்தாலே சிறிது போது கழியும்படியாகச்‌ செய்வதும்‌ ஆக இப்படியே நடந்து வாராறின்றது. இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று மடிபிடித்துக்‌ கேட்டு உத்தரம்‌ பெற்றேயாக வேணு மென்கிற தீவிரமான ருசி ஆழ்வார்க்கு உண்டாயிற்று, அதனால்‌ எம்பெருமானை வலியப்‌ பிடித்துக் கொண்டு பிரானே! என்னுடைய ஆற்றாமையில்‌ குறை கண்டாயோ? உன்னுடைய சக்தியில்‌ குறை கண்டாயோ? ஏதுக்கு இப்படி யென்னை நலியுமவற்றின்‌ நடுவே வைத்து நலியா நின்றாய்‌? *பொய் நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்குமழுக்குடம்புமாய்‌ இந்நின்ற நீர்மைமிலே மிக்க அருவருப்புக்‌ கொண்ட வென்னை இக்கொடிய நிலத்திலே வைத்துக்‌ குமைப்பது பரம காருணிகனான உனக்குப்‌ பொருந்துமோ? என்ன திருவுள்ளங்கொண்டு என்னையிங்கு இட்டு வைத்திரா நின்ருய்‌? இது தன்னை இன்று நீர் சொல்லியே யாக வேணும்‌' என்றாராழ்வார்‌-அதுகேட்ட எம்பெருமான்‌ *ஆழ்வீர்‌! என்‌ கருத்தை நீர்‌ தாம்‌  அறியீரோ? அறிந்து வைத்தும்‌ அறியாதவர்‌ போலக்‌ கேட்‌கின்றீரே; நமக்கும்‌ நம்‌முடையவர்கட்கும்‌ போது போக்குக்கு உரித்தான செவிக்கினிய செஞ்சொற்களைப்‌ பாடித் தருகைக்காக வன்றோ  நாம்‌ உம்மை இந்நிலத்திலே வைத்திருப்பது; அப்படி யிருக்க ஏன்‌ பதறுகிறீர்‌? என்ன, அதுகேட்ட ஆழ்வார்‌ 'பிரானே; இதுவோ உன்‌ கருத்து? ஸர்வேச்வரனாய்‌ அவாப்த ஸமஸ்த காமனு யிருந்துள்ள உனக்கும்‌ ஒரு குறை யுண்டாகி அக்குறையை என்னாலே தீர்த்துக் கொள்ளப்‌ பார்ப்பதாகிறவிது நன்றாயிருக்கிறது  -உனக்குச்‌ சில ப்ரபந்தங்கள்‌ வேண்டினால்‌ அவையியற்றுவற்கு ஆற்றல்‌ முதலியவை நிரம்பிய வ்யாஸ பராசர வால்மீகி முதலானாரைக்‌ கொண்டும்‌ *இன் கவி பாடும்‌ பரம கவிகளான முதலாழ்வாரைக்‌ கொண்டும்‌ பாடுவித்துக்‌ கொள்ளலாகாதா? நீசனேன்‌ நிறையொன்றுமிலேணைக்‌ கொண்டு பாடுவித்துக்‌ கொள்ளத்‌ திருவுள்ளம்‌ கொண்டபடி என்னே! இது என்ன நீர்மை! இது என்ன வாத்ஸல்யம்‌! “என்று பெரு நன்‌றி பாராட்டி, “ இதற்கீடாக நான்‌ செய்வதொரு கைம்மாறு கண்‌டிலேனே!' எண்று தடுமாறுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி. 
    ஏழாம்பத்தல்‌ பத்தாம்‌ பதிகம்‌--இன்பம்‌ பயக்க எம்பெருமான்‌ தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவிததுக கொண்ட பேருதவிக்குக்‌ கைம்மாறு ஒன்றுங்‌. காணாமே தடுமாறுகிறார் கீழ்த்திருவாய்மொழியில்‌. இப்படிப்பட்ட இவருடைய தடுமாற்றத்தை யாற்றுதற்காக எம்பெருமான்‌, *ஆழ்விர்‌! நீர்‌ ஏன்‌ தடுமாறுகின்‌றீர்‌? நீரும்‌ ஒன்று செய்து நெஞ்சார்ல்‌ திர்ந்தவராம்படி பண்ண நாம்‌. கருதியிருக்கின்றோம்‌; பண்டு திருவயோத்யையிலே நாம்‌ குசலவர்கள்‌ வாயாலே ஸ்ரீராமாயணம்‌ செவி சாத்தினோமென்று கேள்விப்பட்டிருப்பீரே; அப்படியே திருவாறன்விளையிலே திருவாய்‌ மொழி கேட்பதாகப்‌ பாரித்திருக்கின்றோம்‌. ஆனால்‌ ஸ்ரீராமாயணம்‌ கேட்டபோது நாம்‌ பிராட்டியைப்‌ பிரிந்திருந்தோமாதலால்‌ தனியே யிருந்து கேட்டோமென்று ஒரு குறையுண்டு. இப்போது அப்படி யன்றிக்கே நாமும்‌ நம்‌ பெண்டுகளுமாயிருந்து கேட்க அறுதி யிட்டிருக்கின்றோம்‌; நீர்‌ அங்கே வந்து திருவாய்மொழி கேட்பித்து ஒருவாறு நெஞ்சாறல்‌ தீரப்பெறலாமே' யென்று பணிக்க, அது கேட்ட ஆழ்வார்‌, “என்னைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தளவோடு நில்லாமல்‌ அது கேட்கவும்‌ பாரியா நின்றானே! இது என்ன மஹோபகாரம்‌!' என்று உவகை தலை மண்டை கொண்டு அந்தத்‌ திருவாறன்விளைத்‌ திருப்பதியிற்‌ சென்று திருவாய்மொழி கேட்பித்தலாகிற கைங்கர்யத்தைச்‌ செய்யப்‌ பாரிக்கிறார்‌ இத்திருவாய்மொழியினாலே. 
    எட்டாம் பத்தில்‌ முதல் பதிகம்‌ - தேவிமாராவார்‌ -கீழ்ச் சென்ற பதிகத்தில்‌, திருவாறன்விளை யென்னு்‌ம்‌ திருப்பதியிலே சென்று அங்கு எம்பெருமான்‌ பெரிய பிராட்டியாரும்‌ தானுமாகத்‌ திருவாய்மொழி கேட்கைக்கு விருப்பத்தோடிருக்கிற விருப்பிலே நாம்‌ திருவாய்மொழி கேட்பித்து மற்றுஞ் சில கைங்கரியங்களையும்‌ பண்ணி யநுபவிப்போமென்று பாரித்தார்‌ : அது பாரிப்பளவில்  நின்‌றதத்தனையொழிய நினைத்தபடி நிறைவேறப்‌ பெற்றதில்லை. அதனால்‌ ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய சில திருக் குணங்களில்‌ அதிசங்கை தோன்ற, அதனை வெளியிடுவது இத்திருவாய்மொழி, பிராட்டிமார்‌ அருகே யெழுந்தருளியிருக்க, நித்யஸூரிகளுமுண்டா யிருக்க, நினைத்தபடி காரியஞ்செய்து தலைக்கட்டவல்ல சக்தியும்‌ அவனுக்குண்டாயிருக்க, அடியார்கள்‌ விரும்பினபடி திருமேனிகளைப்‌ பரிக்ரஹித்து வந்து உதவுமியல்வினனாயுமிருக்க, தமக்கும்‌ அபிறிவேசத்தில்‌ குறையில்லாதிருக்க, நினைத்த பரிமாற்றம்‌ பெறாதொழியவே ஆழ்வார்க்கு வெறுப்பு உண்டாயிற்று : அதனால்‌, எம்‌பெருமானையே நோக்கி * பிரானே ! நான்‌ நினைத்திருப்பது மருள்‌ கொல்‌ ? அடியார்களுக்கு நீ வசப்பட்டவனென்றும்‌ எல்லாப்‌ பொருள்‌களும்‌ நீ யிட்ட வழக்கென்றும்‌ இப்படிச்‌ சில குணங்களை நான்‌ உன்னிடத்தில்‌ இருப்பனவாகக்‌ கொண்டிருந்தேன்‌ : அக் கொள்கை உண்மை யன்றோ வென்று இப்போது அதிசங்கிக்க நேர்கின்‌றது : நானொருவன்‌ தோன்றி உனக்கு இவை பொய்யாய்ப்‌ போகின்‌றன போலும்‌ ! என்று விண்ணப்பஞ்‌ செய்கிறார்‌. அசோகவனத்திலலே  எம்பெருமானுடைய திருக் குணங்களைச்‌ சிந்தனை செய்தே தரித்‌திருக்க வேண்டியவர்கள்‌ அவற்றில்‌ அதி சங்கை பண்ணினால்‌ பிறகு ஜீவித்திருக்க வழியில்லாமையாலே-பிராட்டி * க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராசுவ:, ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோச: சங்கே மத்பாக்ய ஸம்க்ஷயாத்‌ ” என்று பெருமாளுடைய குணங்களிலே. அதிசங்கை பண்ணினாற்போலுமிது. “ கோவிந்தன்‌ குணம்பாடி -- ஆவிகாத்திருப்பேனே ” என்கிறபடி  * இங்ஙனே அதிசங்கை கொண்ட ஆழ்வாரை இனி நாம்‌ இழக்க நேருமோ ? என்று எம்பெருமான்‌ அதிசங்கை பண்ணி * ஆழ்வீர்‌ ! இப்படியும்‌ நீர்‌ அதிசங்கை கொள்ளத்‌ தகுமோ ? நாம்‌ உமக்கு ஒன்றும்‌ செய்யவில்லையா ? எவ்வளவு செய்‌திருக்கிறாமென்பதை நீர்‌ தாமே ஆலோசித்துப் பாரும்‌ : இவ்வளவு செய்த நாம்‌ மேற்‌ செய்ய வேண்டியதையும்‌ அடைவே செய்வோங்‌ காணும்‌ : வீணாக அதிசங்கை கொள்ள வேண்டா என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ண, ஆழ்வாரும்‌ தேறி நின்று அவற்றை யநுஸந்தித்து இனியராகிறார்‌. 
    எட்டாம்பத்தில்‌ இரண்டாம் பதிகம்‌-நங்கள்‌ வரிவனளை -எம்பெருமான்‌ ஆச்ரித பரதந்திரன்‌, ஸர்வ நிர்வாஹகன்‌ என்றிருந்தோம்‌ ; இவையும்‌ நம்மைத் தோற்றிப்‌ பொய்யாகிறதோவென்று அவன்‌ குணத்திலும்‌, ஸ்வரூபத்திலும்‌ அதிசங்கை பண்ணின ஆழ்வாரை ஒருவாறு தேற்றித்‌ தெளிவித்தானெம்பெருமான்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌, உண்டான அதிசங்கை தீர்ந்தவளவே யல்லது தமக்கு அபேஷிதமான பாஷ்ய ஸம்ச்லேஷத்தைப்‌ பெற்றாரல்லரே ஆழ்வார்‌, -அதனால்‌ ஆழ்வார்க்கு மற்றோர்‌ அதிசங்கையுண்டாயிற்று ; அதாவது ஸம்ஸாரத்திலே நமக்கு நசையில்லையென்று நாம்‌ எண்ணி யிருக்கின்றோமானாலும்‌ *உள்ளுவாருள்ளிற்றெல்லா முடனிருந்தறியும்‌ ஸர்வவேச்வரனுடைய திருவுள்ளமறிய நமக்கு ஸம்ஸார ருசி யிருக்கின்றது போலும்‌. இல்லையாகில்‌ எம்பெருமான்‌ நம்மை உபேஷிக்க ப்ரஸக்தியிராதே; உபேஷிக்கக்‌ காண்கிறோமாதலால்‌,  நமக்கு ஸம்ஸார ருசி இன்னமும்‌ அறவில்லையென்‌று எம்பெருமான்‌ திருவுள்‌ளம்‌ பற்றியிருக்கக்கூடும்‌. ஸர்வஜ்குமன அவன்‌ அங்ஙனே திரு வுள்ளம்‌ பற்றினால்‌ அது பொய்யாக இருக்கமாட்டாதே. நம்மையுமறியாமல்‌ நமக்கு ஸம்ஸாரருசி உள்ளத்தினுள்ளே உறைகின்‌ றதோ என்னவோ ? என்கிற சங்கை உண்டாயிற்று. அதனால்‌ ஆத்மாத்‌மீயங்களில்‌ தாம்‌ நசையற்றபடியை எம்பெருமான்‌ திருவுள்ளத்திலே படுத்த நினைத்தாராழ்வார்‌ ; அதை நேராக விண்ணப்பஞ்‌ செய்யாதே தோழியோடு ஸம்வாதமாகிற அந்யாபதேச முகத்தாலே அறிவிக்கிற படியாயிற்று இத்திருவாய்மொழி. *காலம்‌ பல சென்றுங்‌ காண்பதாணை உங்களோடெங்க எரிடையில்லையே என்றும்‌ *பாதமடை வதன்‌ பாசத்தாலே மற்ற வன்பாரங்கள்‌ முற்றவிட்டு* என்றுமுள்ள பாசுரங்கள்‌ இத்திருவாய்‌ மொழிக்கு உயிரானவை. இத்திருவாய்‌ மொழியில்‌ அந்யாபதேச ப்ரகாரமிருக்கிறபடி யென்னென்னில்‌;- ஸர்வேச்வரனோடு கலந்து மிரிந்தாளொரு பிராட்டி, மறுபடியும்‌ அவன்‌ தானே வரக்கண்டிருக்கை தவிர்ந்து தானே புறப்படுவாளாய்‌ அவனிருந்த தேசத்தேறப்‌ போகமுயல், இது கண்ட தோழிமார்‌ முதலானோர்  * உனக்குப்‌ படி கடந்து புறப்படுகையாகிறவிது ஆகாது காண்‌ ' என்று ஹிதஞ்‌ சொல்லி மீட்கப் பார்க்க; அவளைக்‌ குறித்து, ப்கவத்‌ விஷயமொன்று தவிர மற்ற எதிலும்‌ தனக்கு நசையில்லாத படியைச்‌ சொல்லி அவர்களது பேச்சுக்கு இணங்க முடியாமை கூறுகிறது. 
    எட்டாம்பத்தில்‌ முன்றாம்பதிகம்‌ - அங்குமிங்கும்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ பத்தாம்‌ பாட்டில்‌ *ஓர்‌ கோலரில நன்‌னெடுங்குன்றம்‌. வருவதொப்பான்‌* என்று எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யத்தை யநுஸந்தித்தாரே ; அவ்வநுஸந்தானம்‌ திருவுள்ளத்திலே மிக ஊன்‌றியிருக்க- இப்படிப்பட்ட ஸெளற்தர்ய ஸெளகுமார்யங்களுக்குக்‌ கொள்கலமான இவ்வடிவுடனே ப்ரயோஜறாந்தர பரரான ப்ரதிகூலர் வர்த்திக்கிற இந்த நிலத்திலே தனியே வந்து உலாவுகின்றானே?” பரிவர்‌ ஒருவருமில்லையே, -என்ன தீங்கு நேரிடுமோ ! என்று ஆழ்வார்‌ வயிறெரிற்து பயப்பட, -அதற்கு எம்பெருமான்‌ “* ஆழ்வீர்‌ ! நமக்குப்‌ பரிகைக்கு முழுஷுக்‌களும்‌ முக்தரும்‌ நித்யரும்‌ உண்டு ; ஒரு குறையுமில்லை; வீணாக ஏதுக்கு அஞ்சுகின்றீர்‌ - அஞ்சவேண்டா  என்றருளிச்செய்ய, ஆழ்வார்‌ தாம்‌ ஒருவாறு அச்சம்‌ திர்ந்தவரான படியை இத்திருவாய்மொழியிலே அருளிச்‌ செய்கிறார்‌. இதில்‌, முதலில்‌ *ஆளுமாளாராழியுஞ்‌ சங்குஞ்‌ சுமப்பார்தாம்‌, வாளும்‌ வில்லுங்கொண்டு பின்‌ செல்வார்‌ மற்றில்லை* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஆழ்வார்‌ பரிந்து அஞ்சினமை தெரியும்‌ ; மேலே *கலக்கமில்லா நல் தவ முனிவர்‌ கரை கண்டோர்‌ துளக்கமில்லா வானவரெல்லாந்‌ தொழுவார்கள்‌* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஒருவாறு மனம்‌ தேறினமை தெரியவரும்‌. 
    எட்டாம்பத்தில்‌ நான்காம்பதிகம்‌ - வார் கடா வருவி --எம்பெருமானோ ஸம்ஸார மண்டலத்திலேவந்து அவதரித்துத்‌ தனியே உலாவா நின்றான்‌ ; ஸம்ஸாரிகள்‌ தங்கள்‌ தங்கள்‌ அபேஷிதம்‌ பெற்று அகன்று போமவர்களே யொழிய இவனுக்கு ரகைஷ தேடிப்‌ பரிகிறவர்களாக இல்லையே!, இவனுக்கு என்‌ வருகிறதோ  என்று. அஞ்சின ஆழ்வாருடைய அச்சம்‌ கீழ்த் திருவாய்மொழியில்‌ ஒருவாறு தீர்ந்திருக்கச்‌ செய்தேயும்‌ இன்னமும்‌ இவர்க்கு நம்பக்கல்‌ பரிவின்‌ கனத்தாலே அச்சம்‌ மறுவலிடக் கூடுமென்றெண்ணின எம்‌பெருமான்‌ * ஆழ்வீர்‌ ! பிரதிகூலர்க்குக்‌ கணிசிக்க வொண்ணாதபடி அரணுடைத்தான திருச்செங்குன்றூர்த்‌ திருச்சிற்றாற்றிலே மஹா சத்திமான்களான மூவாயிரம்‌ வேதியர்கள்‌ பரிந்து கோக்க அவர்களுடன்‌ நாம்‌ சேர்ந்து வாழ்கிறபடி பாரீர்‌ ; நமக்கு அஸாதாரணமான வீர்ய பராக்ரமாதி குண ஸம்ருத்தியையும்‌ பாரீர்‌ என்று அவற்றைக்‌ காட்டிக்கொடுக்க, அதனால்‌ அச்சம்‌ நன்றாகக்‌ கெட்டு அவனது வடிவழகிலே நெஞ்சை வைத்து அநுபவித்து உகந்தபடியைத்‌ தெரிவிப்‌பதாம்‌ இத்திருவாய்மொழி, ஸ்ரீ விபீஷணாழ்வான்‌ பெருமாள்‌ திருவடிகளிலே வந்து சரணம்‌ புக, இவனைச்‌ சேர்த்துக்கொண்டால்‌ பெருமாளுக்கு என்ன அவத்யம்‌ வருமோவென்று கலங்கின ஸுக்ரிவ மஹாராஜாதிகளுக்கு அச்சந்தீருமாறு பெருமாள்‌ *பிசாசாந்‌ தாஈவாந்‌ யக்ஷாந்‌ ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸாம்‌, அங்குல்யக்ரேண தாந்‌ ஹர்‌யாம்‌ இச்சந்‌ ஹரிகணேச்வர* என்று தம்முடைய மிடுக்கைக்‌ காட்டினது போலாமிது. அப்படி மிடுக்கைக்‌ காட்ட. அச்சந்தீர்ந்து *கிமத்ர சித்ரம்‌ தர்மஜ்ஞு லோகறாத ஸுகாவஹ* என்று மஹாராஜர்‌ இனியரானாப் போலே ஆழ்வாருமினியராகிறாரிங்கு, 
    எட்டாம்பத்தில்‌ ஐந்தாம்பதிகம்‌ - மாயக்கூத்தா -கீழே *அங்குமிங்கும்‌, *வார்கடாவருவி என்கிற இரண்டு திரு வாய்மொழிகளாலும்‌ எம்பெருமானுக்கு ரகைஷதேடி ஸமாஹிதராய்‌ச்‌ நின்றார்‌. *வார்கடாவருவியில்‌, -திருச்செய்ய கமலக்கண்ணும்‌. செவ்வாயும்‌ செவ்வடியும்‌ செய்யகையும்‌ திருச்செய்ய கமலவுந்தியும்‌ செய்ய கமலை மார்பும்‌ செய்யவுடையும்‌ திருச்செய்ய முடியுமாரமும்‌ படையும்‌ திகழ என்‌ சிந்தையுளானே ” என்று உள்ளம்‌ பூரித்து உடல்‌ பூரித்து அறுஸந்தித்த வடிவழகு திருவுள்‌ளத்திலே வேருன்‌றி யிருந்தபடியாலே அவ்வடிவழகைக்‌ கண்ணாரக்‌ கண்டு பாஹ்யஸம்சலேஷம்‌ பண்ணவேணுமென்று அபேகைஷ. பிறந்து, அது பெறாமையாலே * கீழ்ப்‌ பல திருவாய்மொழிகளிலும்‌ பட்ட கலசங்களும்‌ இதற்கு ஈடல்ல ; ஆழ்வாருடைய கலேசங்களிலே இது நிகரற்ற க்லேசம்‌' என்னும்படியாக நொந்து காட்டுத்தீ கதுவினாரைப்போலே தப்தராய்‌, தம்மிற்காட்டிலும்‌ ஆகுலங்களான கரணங்களை யுடையராய்‌ “என்‌ விடாயெல்லாம்‌ தீரும்படி திவ்யாவயவங்களோடே வரவேணும்‌, அழகிய திருவபிஷேகத்தோடே வர வேணும்‌, அகிழய வடிவோடே வரவேணும்‌, மேகம்‌ போலே வர வேணும்‌, உதய காலத்து ஆதித்யனைப்‌ போலே பெரிய புகரோடே வரவேணும்‌ ' என்றிப்படி ௯ப்பிட்டு, பின்னையும்‌ அவன்‌ வந்து, முசுங்காட்டக்‌ காணாமையாலே * நாம்‌ இந்த க்லேசத்தோடே முடிந்து போமித்தனை யன்றோ ? என்று இழவோடே தலைக்கட்டுகிறது இத்‌ திருவாய்மொழி, 
    எட்டாம்பத்தில்‌ ஆறாம்பதிகம்‌ - எல்லியுங்காலையும்‌ -கீழே *மாயக்கூத்தா வென்கிற பதிகத்திலே ஆழ்வார்க்குண்‌டான விடாய் பேச்சுக்கு நிலமன்று என்‌று நினைப்போம்‌ நாம்‌ ; உண்மையில்‌, ஆழ்வார்‌ விஷயத்தில்‌ எம்பெருமானுக்குண்டான விடாய் தான்‌ 
    அபரிமிதமானது.
    “இப்படி கூப்பிடுகிற ஆழ்வார்க்கு உதவப்‌ பெற்றிலோமே!” என்று மிகவும்‌ தபித்‌து ஆகுலனாய்‌ லஜ்ஜையுமுடையனாய்‌ இனி நாம்‌ என்ன செய்வதென்று ஆலோசித்தான்‌ ; உடனே சென்று நாம்‌ கடுக முகங்காட்டினோமாகில்‌ ஆழ்வார்‌ ஸந்தோஷாதிசயத்தாலே உடலுமுயிருமுக்கி சிதிலராய்ப்போவர்‌ ; ஆகவே ஸந்தோஷத்தைப்‌ பொறுப்பித்து உளராக்கிப்‌ பரிமாறவேணும்‌' என்று
    துணிந்து, பதினாலாண்டு பிரிவாலே நொந்த பரதாழ்வானைத்‌ தரிப்‌பித்து முகங்காட்டுகைக்காகத்‌ திருவடியை முன்னே செல்லவிட்டுத்‌ தான்‌ பரத்வாஜ மஹர்ஷியின்‌ ஆச்ரமத்திலே யிருந்தாப்‌ போலவும்‌ பாண்டவர்களுக்காகத்‌ தூது போகிற போது ப்ரேம பரவசர்களான விதுரர்‌ முதலானோருடைய பரிதியை ஸாத்மிப்பிக்கைக்காக *குசஸ்‌ தலே நிவஸதி ஸச ப்ராதரிஹேஷ்யதி* என்‌றபடியே குசஸ்தலத்திலே தங்கியிருந்து மறுநாள்‌ ஹுஸ்திநாபுரத்திலே யெழுந்தருளினாப்‌ போலவும்‌, ஆழ்வார் தம்மோடே ஸம்ச்லேஷிக்க விரும்பிய ஸர்வேச்வரன்‌ தம்முடைய ப்ரீதியை ஸாத்மிப்பித்துத்‌ தம்மோடே கலக்கைக்காகத்‌ திருக்கடித்தான மென்னும்‌ மலைநாட்டுத்‌ திருப்பதியிலே யெழுந்தருளி யிருந்தான்‌ ; இதனை யறிந்த ஆழ்வார்‌ இப்படியாக எம்பெருமான்‌ தம் பக்கலில்‌ பண்ணுகிற வ்யாமோஹத்தை அநுசந்தித்‌து இனியராய் அத்தைப்‌ பேசி யநுபவிக்கிறார்‌ இத்திருவாய்‌ மொழியில்‌.
    எட்டரம்பத்தில்‌ ஏழாம்பதிகம்‌ - இருத்தும்‌ வியந்து. -இத்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ பேறு பெற்றுக்‌ களிக்கும்‌ விதம்‌ பரம விலக்ஷணமாகவுள்ளது. இவ்விஷயத்தில்‌ இப்பதிகத்‌தோடொத்த பதிகம்‌ இத்திருவாய்மொழி யாயிரத்தினுள்‌ வேறில்லை யென்று சொல்லலாம்‌. எம்பெருமானைப்‌ பெறுவதில்‌ ஆழ்வாருடைய விருப்பம்‌ அதிகமா ? ஆழ்வாரைப்‌ பெறுவதில்‌ எம்பெருமானுடைய விருப்பம்‌ அதிகமா ? என்று ஆராய்ந்து பார்க்குங்கால்‌, எம்பெருமானுடைய விருப்பமே அதிகமென்று தேறி நிற்கும்‌. *ஜ்ஞாரீது ஆத்‌மைவ மே மதம்‌* என்றும்‌ *வாஸுதேவஸ்‌ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:* என்றும்‌ சொல்லி வைத்திருக்கிற எம்பெருமான்‌ படியைப்‌' பார்த்தால்‌, ஒரு சேதநனைப் பெறுகை எம்பெருமானுக்குப்‌ பரம லாபமாகக்‌ காணாரின்றதன்றோ. ஆகவே ஆழ்வாரைப்‌ பெறுகையே எம்பெருமானுக்குப்‌ பரம லாபமாகையாலும்‌, அதற்குரிய கருவி பண்ணுவானும்‌ அவனே யாகையாலும்‌, அவன்‌ தானும்‌ ஆர்த்தியே செப்பேடாக வந்து உதவுமவனாகையாலும்‌ தானே அர்த்தியாய்த்‌ தன் பேறாக வந்து கலந்தான்‌. அதனைக்‌ கண்ட ஆழ்வார்‌ * அந்தோ! நம்மோடு கலப்பதற்கு எம்பெருமான்‌ இரப்பாளனாயிருக்க, நாம்‌ இரப்‌பாளராய்க்‌ கூப்பிட்டோமே!” என்று வருந்தி  ஒரு ஸம்ஸாரி சேதநன் பக்கலிலே ஸர்வேச்வரன்‌ தான்‌ செய்தருளும்‌ விஷயீகாரம்‌ என்னே!” என்று ஈடுபடுகிறாராய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்‌மொழி. 
    எட்டாம்பத்தில்‌ எட்டாம்பதிகம்‌ - கண்கள்‌ சிவந்து -*மாயக்கூத்தாவென்கிற திருவாய்மொழியில்‌ ஆழ்வாருடைய விடாய்‌ அபரிமிதமாகவன்றோ இருந்தது; அந்த விடாயெல்லாம்‌ ஆறும்படி எம்பெருமான்‌ வந்து கலந்து தன்‌ விடாயுந்‌ தீர்ந்து 
    இவரைப்பெற்ற பேற்றாலே பரமப்ரீதனாயிருந்தான்‌. கீழ்த்திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வார்‌ தம்முடைய பரமானந்தத்தைப்‌ பேசும்போது “ சிறியேனுடைச்‌ சிந்தையுள்‌ ” என்றாரே ; அந்தச்‌ சொல்லை எம்‌ பெருமான்‌ மிகவும்‌! ஆராய்ந்தான்‌. * அந்தோ! இவர்‌ சிறியேனென்று தம்முடைய நைச்சியத்தை யநுஸந்திக்கத்‌ தொடங்கி விட்டார்‌. ஏற்‌கெனவே *வளவேமுலகு பதிகம்‌ முதலானவற்றில்‌ தலைகாட்டி ஒருவாறு மடிந்த நைச்யாநுஸந்தானம்‌ மறுபடியும்‌ தலைகாட்டத்‌ தொடங்‌கிற்றுப்போலும்‌ ; இன்னமும்‌ இது முற்றிவிட்டால்‌ பிறகு பரிஹரிப்‌பது அரிதாகுமே ; ஆதலால்‌ இப்போதே அதனை வேரறக்‌ களைந்திடுதல்‌ நன்று * என்றெண்ணி இவர்‌ நைச்யத்திற்கு ஆஸ்பதமாக நினைத்திருக்கிற ஆத்ம வஸ்‌துவினுடைய பெருமையை இவர்‌ நெஞ்சிலே படுத்த வேணுமென்று பார்த்து அது செய்தருளுகிறான்‌ ; அது செய்யுமிடத்தில்‌ * உம்முடைய ஆத்ம ஸ்வரூபமிருக்கும்படி காட்டுகிறேன்‌ வாரீர்‌ என்றால்‌ * மின்மினி போலே யிருக்கிறவிதனை நீ காட்டிடவும்‌ நான்‌ காணவும்‌ வேணுமோ ? என்று சொல்லி இசையாதொழிவரிவர்‌ ; மேலும்‌ *அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே* என்று இவர்‌ நம்‌ வடிவழகிலே துவக்குண்டிருக்கிறாராகையாலே -நம்மை முன்னிட்டு அவ்வாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக்‌ காட்டிக்‌ கொடுப்போம்‌ என்று பார்த்து வாரீர்‌ ஆழ்வீர்‌ ! நம்முடைய வடிவழகிருக்கிறபடி. கண்டீரே ; நம்மைக் காணுங்‌ காட்சியிலே உம்மையும்‌ காணலாம்‌ படியிருக்கின்‌றது காணும்‌ ' என்று சொல்லித்‌ தன்னுடைய வடிவழகை முந்துற முன்னம்‌ அநுபவிப்பித்து, தனக்குத்‌ திருவாபரணங்கள் போலே மிகவும்‌ போக்யமுமாய்‌ அத்யந்த சேஷமுமாயிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக்‌ காட்டிக் கொடுக்க, அதனை யநுபவித்துப்‌ பேசுகிற தாயிற்று இத்திருவாய்மொழி,
    எட்டாம்பத்தில்‌ ஒன்பதாம் பதிகம்‌-கருமாணிக்கமலை -இத்திருவாய்மொழி தோழி பாசுரமாய்ச்‌ செல்லுகிறது. திருவாய்‌ மொழியாயிரத்தில்‌ தோழி பாசுரமாக வரும்‌ பதிகங்கள்‌ மூன்று ; தீர்ப்பாரை யாமினியும்‌ * துவளில்‌ மாமணி மாடமும்‌ * இக்கருமாணிக்க மலையும்‌, இம்மூன்று பதிகங்களிலும்‌ ப்ரணவத்தில்‌ உகாரத்தின்‌ பொருளான அநந்யார்ஹத்வம்‌ வெளியிடப்படுகிறது. *தீர்ப்பாரை யாமினியில்‌ வெறியாடலை விலக்கின முகத்தாலே அது வெளியிடப்‌பட்டது, *துவளில்‌ மாமணிமாடத்தில்‌ * இனியுமக்காசையில்லை விடுமினோ “ என்று பலகாலும்‌ தாய்மாரை நோக்கிச்‌ சொல்லுகிற முகத்தாலே அது வெளியிடப்பட்டது ; இப்போது இத்திருவாய்‌ மொழியில்‌ அது தன்னை வெளியிடுகிறவிதம்‌ கேண்மின்‌ ; பராங்குச நாயகியாகிற தலைமகள்‌ பதிஸம்யோகத்திற்குரிய வயது முதிர்ந்து 
    நின்‌ற வளவிலே தாய்‌ தந்தையர்‌ ஸ்வயம்வரம்‌ கோடித்து நகரத்திலே மணமுரசு அறைவிக்க, அஃதறிந்த தோழியானவள்‌ *: மானிடவர்க்‌கென்று பேச்சுப்படில்‌ வாழகில்லேன்‌ " என்றும்‌, “ அன்றிப்பின்‌ மற்றொருவர்க்‌ கென்னைப்‌ பேசலொட்டேன்‌ மாலிருஞ்சோலை யெம்மாயற் கல்லால்‌ * என்றும்‌ திண்ணிய அத்யவஸாயங் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளை, இப்படி தாய்‌ தந்தையர்‌ கோடிக்கிறபடியை யறிந்தால்‌ கிலேசப் படுவளே யென்று துடித்து, இப்பெண் பிள்ளைக்குக்‌
    குட்ட நாட்டுத்‌ திருப்புலியூர்ப்‌ பெருமானோடே ஸம்ச்லேஷம்‌ பிரவ்ருத்த மானபடியைத்‌ தோழி தானறிந்திருந்தும்‌ அதை வெட்டவெளிச்சமாகத்‌ தாய்மார்க்குத்‌ தெரிவித்தால்‌ நம்மேல்‌ சீற்ற முண்டாகும்‌; தெரியாதிருந்தால்‌, தலைவியும்‌ லஜ்ஜையாலே வாளரவிருப்பளாகையாலே விபரிதமான கோடிப்பு நிறைவேறி அனர்த்தமாகும்‌ ; ஆகவே இப்போதொரு ஸதுபாயம்‌ செய்யவேண்டும்‌ ; நமக்கும்‌ ஏற்கெனவே இது தெரியாதுபோலே காட்டிக்கொண்டு அப்போது தான்‌ நிரூபித்து
    அறிந்து கொள்வது போல்‌ அபிநயித்து ஒருவாறு உண்மையை வெளியிட்டுவிடுவோம்‌ என்று துணிந்து, 'அம்மனைமீர்‌ ! நம்‌ பெண்‌ பிள்ளையின்‌ நிலைமைகளைக்‌ காணுமிடத்து இவளுக்குத்‌ திருப்புலியூர்ப் பெருமானோடே ஸம்ச்லேஷம்‌ கேர்ந்து விட்டதுபோல்‌ தெரிகிறதே, உங்களுடைய கோடிப்புக்கு ப்ரஸக்தியில்லை போல்‌ காண்கிறதே, என்று மத்யஸ்தோக்தியாகச்‌ சொல்லி நிற்கிறாள்‌ ; இவ்வழியாலே ஆழ்வாருடைய அநந்யார்ஹத்வம்‌ வெளியிடப்படுகிறதாயிற்று. கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யம்‌ சோதிக்கப்பட்ட தாகையாலே அதை நன்கு வடிக் கட்டுகிறது இத்திருவாய்மொழி
    எட்டாம்பத்தில்‌ பத்தாம்பதிகம்‌ - நெடுமாற்கடிமை -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ அநர்யார்ஹசேஷத்வம்‌ அறுதியிடப்‌ பட்டதன்றோ ; இந்த ப்ரஸங்கத்திலே பாகவத சேஷத்வம்‌ வடிக்கட்‌டின வேஷமாகச்‌ செல்லப்படவேண்டியதுண்டே ; அது, சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்‌,  கீழ்ப்பதிகத்தின்‌ முடிவு பாட்டில்‌ தொண்டன்‌ சடகோபன்‌* *தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன் என்றாரே; அது தன்னை விசதமாக்குகிறது இங்கு, ஒருவன்‌ ஒரு வஸ்துவினிடத்தில்‌ அன்பு வைத்தால்‌ அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால்‌ அவ்வன்பு அவ்வஸ்துவோடே நின்று விடாமல்‌ அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்ற வஸ்துக்‌களிலும்‌ பெருகிச்‌ செல்லுமென்பைத அனைவரும்‌ தம்‌ தம்‌ அநுபவத்தாலறிவர்‌, அப்படியே பாகவத பக்தியென்பது பகவத்‌ பக்தியின்‌ எல்லை நிலமாக வுண்டாமது, பகவத் பக்தியின்‌ உறைப்‌ பையே பாகவதபக்தி வெளிப்படுத்தும்‌. ஸ்வாமியினுடைய பாதுகைகளிலே நாம்‌ ஆதரம்‌ வைத்து அவற்றைக்‌ கண்களில்‌ ஒற்றிக்‌ கொள்வதும்‌, தலைமீது அணிந்து கொள்வதும்‌, அலம்பித்‌ தீர்த்தம்‌ பருகுவதும்‌ செய்கிறோம்‌ ; இதனால்‌ நமக்கு ஸ்வாமியிடத்துள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்றது. அதுபோலவே இங்‌கும்‌ * அவனடியாரடியே கூடுமிது வல்லால்‌ ' இத்யாதிகளாலே பாகவத சேஷத்வாதிசயத்தைப்‌ பேசுவதெல்லாம்‌ பகவச்‌ சேஷத்வத்‌தின்‌ உறைப்பையே பேசினபடியாகும்‌. திருமந்திரத்தில்‌, அஹங்‌காரமும்‌ மமதாரமும்‌ நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம்‌, உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச்‌ சேஷத்வத்தின்‌ எல்லை நிலத்வம்‌ அநுஸந்திக்கப்பட வேணுமென்பது சாஸ்தரார்த்தம்‌, திருமந்திரத்திற்கு முக்யமான பொருள்‌ பாகவத சேஷத்வமே யென்பதை *மாறன்‌ பணித்த தமிழ்‌ மனக்கு ஆறங்கங்‌ கூற அவதரித்த மங்கையர்கோன்‌ தமது திருமொழியில்‌ *மற்றெல்‌லாம்‌ பேசிலும்‌ நின்திருவெட்டெழுத்துங்கற்று நான்‌ - உற்றது. முன்னடியராக்கடிமை- என்ற பாசுரத்தில்‌ தெளிய வைத்தார்‌. கீழ்‌ மூன்றாம்பத்தில்‌ ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளி ஸ்வ ஸ்வரூப ப்ரதிபாத பரமென்றும்‌, *நெடுமாற்கடிமை. புருஷார்த்த ஸ்வரூப ப்ரதிபாதக பரமென்றும்‌ வகையிட்டுக்‌ காட்டப்பட்டது:அங்கு வியாக்கியானத்தில்‌ மணவாள மாமுனிகள்‌-“பகவச்‌ சேஷத்‌வத்திலும்‌ தத்தரஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யமென்று ப்ரதி பாதித்த *பயிலுஞ்சுடரொளியும்‌....பாகவத் கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த *றெடுமாற்கடிமையும்‌ ”' என்றருளிச்செய்திருப்பது காண்க, இதனால்‌, பாகவத சேஷத்வம்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ என்பதிலே *பயிலும்சுட்ரொளிக்கு நோக்கு ; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்பதிலே நோக்கு இத்திருவாய்மொழிக்கு என்றதாயிற்று, இத்திருவாய்மொழியின்‌' ஈட்டவதாரிகையில்‌ ஓர்‌ ஐதிஹ்யமுள்ளது ; அதாவது அம்முணி யாழ்வான்‌ போசள ராஜ்யத்தில்‌ நின்றும்‌ வந்த நாளிலே பட்டர்‌ கண்‌டருளி “நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப்‌ போர வடிமைசெய்து போந்தா யென்று கேட்டோம்‌ ; உன் ப்ரக்ருதிக்குச்‌ சேர *நெடுமாற்கடிமையைக்‌ கேள்‌” என்றருளிச்‌ செய்தாராம்‌ ” என்று, 
    ஒன்பதாம்‌ பத்தில்‌ முதல்பதிகம்‌-கொண்ட பெண்டிர்‌ -கீழே *நெடுமாற்கடிமை யென்கிற திருவாய்மொழியிலே எம்பெருமானடியார்களையே உபாயோபேயங்களான எல்லாமுமாகப்‌ பற்றி யிருக்கையாகிற தம்முடைய சிழந்த அத்யவஸாயத்தை வெளியிட்ட ஆழ்வார்‌ அவ்வடியார்களின்‌ திருவுள்ள முகக்கும்படியான அர்த்தத்‌தையே இத்திருவாய்மொழியில்‌ அருளிச்‌ செய்கிறார்‌. பாகவதர்களே எல்லா வுறவுமென்‌றது-கீழ்த்திருவாய்மொழி; பகவானே எல்லாவுறவு மென்கிறது இத்திருவாய்மொழி ; இவை ஒன்றோடொன்று முரண்‌ பட்டவை யென்று நினைக்க வேண்டா ; பகவத்‌ பக்தியின்‌ எல்லை நிலமாக பாகவத பத்தியும்‌, பாகவத பக்தியின்‌ எல்லை நிலமாக பகவத்‌ பக்தியும்‌ கொள்ளத்தக்கது, உலகில்‌ ஒரு வ்ய்க்தியினிடத்திலே நாம்‌ வைக்கும்‌ அன்பு அந்த ஒரு வ்யக்தியளவிலே முடிந்து நிற்காமல்‌ தத் ஸம்பந்தி ஸம்பந்திகளிடத்தும்‌ பெருகிச்‌ செல்வது போல, பகவான்‌ பக்கலிலே வைக்குமன்‌பு அவனளவிலே நில்லாது அவனுடைய ஸம்பந்த ஸம்பந்தம்‌ பெற்ற பாகவதர்களிடத்தும்‌ வளர்ந்து செல்லுமாயிற்று. அப்படியே பாகவதர்களிடத்தே வைக்குமன்பும்‌ அவர்களோடு ஸம்பந்தம்‌ பெற்றவனென்கிற காரணத்தினாலேயே பகவானிடத்திலும்‌ பெருகும்‌, பட்டர்‌ ஸ்ரீகுணரத்ந கோசத்திலே -*ஜாமாதா தயிதஸ்‌ தவேதி பவதீஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்‌ பகயேம* என்றருளிச்‌ செய்தது இங்கே அநுஸந்தேயம்‌, பெரிய பிராட்டியாருடைய மணவாளன்‌ என்கிற காரணத்தையிட்டே எம்‌பெருமானை யுகப்பதாக இங்குச்‌ சொல்லி நின்றது, *அஸ்யேசாகா ஜகதோ விஷ்ணுபத்நி* என்று ஓதின படியே தேவதேவ திவ்யமஹிஷி யென்கிற காரணத்தையிட்டுப்‌ பெரிய பிராட்டியாரை யுகப்பதாகச்‌ சொல்லுவதுமுண்டே, இவை பரஸ்பரம்‌ முரண்பட்ட பொருள்‌களல்ல ; இரண்டும்‌ பரமார்த்தமே. இது போலவே, பகவத்‌ ஸம்பந்தத்தையிட்டுப்‌ பாகவதர்களை யுகப்பதும்‌, பாகவத ஸம்பந்தத்தை யிட்டுப்‌ பகவானை யுகப்பதம்‌ பொருந்தியதே யாதலால்‌ கீழ்த்‌ திரு வாய்மொழியிற்‌ சொன்ன அர்த்தத்திற்கு அவிருத்தமாகவே இத்திருவாய்மொழி செல்லுகின்றதென்று கொள்க. உலகில்‌ ப்ராக்ருதர்‌களான ஆபாஸ பந்துக்களையே நம்பியிருப்பாருடைய ப்ரமம்‌ நீங்குமாறு உபபத்திகளுடன்‌ அருளிச்செய்வது இத்திருவாய்மொழி* எந்த நிலைமையிலும்‌ எம்பெருமானொருவனே நிருபாதிக ரக்ஷகனென்‌றும்‌, நாம்‌ பந்துக்களென்று நினைக்கும்படியுள்ளவர்கள்‌ பக்ஷகர்களே யொழிய ரக்ஷகர்களல்லரென்றும்‌ விரிவாக அருளிச்செய்கிறார்‌. கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ *சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ்‌ செல்வமும்‌ நன்மக்களும்‌ மேலாத்‌ தாய்‌ தந்தையும்‌ அவரேயினியாவாரேர்‌ என்கிற பாசுரத்திற்சொன்ன பொருளை விவரிக்க வந்ததாயிற்று இத்திருவாய்‌ மொழி, * ஈச்வரனை யொழிந்தவர்கள்‌ ரக்ஷகரல்லரென்னுமிடம்‌ ப்ரபந்ந் பரித்ராணத்திலே சொன்னோம்‌? என்று முமுக்ஷஃப்படியில்‌ அருளிச்செய்தபடியே ப்ரபந்ந பரித்ராணமென்னும்‌ ரஹஸ்யத்திலே விரிவாகக்‌ காண்கிற விஷயங்களுக்கு இத்திருவாய்மொழியே மூலமமாகும்‌. இத்திருவாய்மொழியில்‌ பல பாசுரங்களில்‌ ** வடமதுரைப்‌ பிறந்த ” என்று வருவதால்‌ வடதிசை மதுரையை மங்களாசாஸனம்‌ செய்கிற பதிகமிது-என்றும்‌ கொள்ளலாம்‌. பரோபதேச ரூபமாகச்‌ சொல்‌வது இது
    ஒன்பதாம்பத்தில்‌ இரண்டாம்பதிகம்‌- பண்டைநாளாலே, ஸர்வேச்வரனைத்‌ தவிர்ந்தவர்களனைவரும்‌ ஆபாஸ பந்துக்களென்றும்‌ ஸர்வேச்வரனொருவனே நிருபாதிக பந்துவென்று மருளிச்‌ செய்தார்‌ கீழ்த்திருவாய்மொழியில்‌. இவரருளிச்செய்தவளவேயன்‌றே; உண்மையில்‌ அவன்‌ தான்‌ பரம பந்துவாயிற்றே. *மாதா பிதா ப்ரதா நிவாஸச்‌ சரணம்‌ ஸுஃஹ்ருத் கதிர்‌ நாராயணர்‌ என்று சுருதி சொன்னது உண்மை யல்லதில்லையே, அப்படி பரம்‌ பந்துவானவன்‌ பந்துக்கள்‌ செய்யவேண்டிய செயலைச்‌ செய்யாதிருக்கமாட்டனே. அது செய்கைக்‌ குறுப்பாகத்‌ திருப்புளிங்குடியிலே திருக்கண்‌ வளர்ந்தருளா நின்றான்‌ : நாமும்‌ அங்கே சென்று கிட்டினால்‌ நமக்கு பந்துக்ருத்யமெல்லாம்‌ பண்ணுவன்‌ என்று அநுஸந்தித்து ஆழ்வார்‌ அங்கே சென்று கிட்டினார்‌. இப்படி பரம பந்துவானவன்‌ ஸன்னிதி பண்ணி யருளுகிற திருப்புளிங்குடியிலே எல்லாவகையான பரிமாற்‌றங்களை யுமாசைப்பட்டுச்‌ சென்று கிட்டினவிடத்தும்‌, இவரை என்‌னென்று வினவுதல்‌, குளிர நோக்குதல்‌, ஒரு வார்த்தை சொல்லுதல்‌ ஒன்றுஞ்‌ செய்திலன்‌. ஆனாலும்‌, *இன்றாக நாளையேயாக இனிச்‌ சிறிது நின்றாக நின்னருள்‌ என்பாலதே* என்று திண்ணிய அத்யவஸாயம்‌ கொண்டிருக்குமவர்களிலே ஒருவரான ஆழ்வார்‌ * அவனும்‌  பந்து க்ருத்யம்‌ செய்யத்‌ தவறமாட்டான்‌ ; சிறிது தாமதித்தால்‌ என்ன குறை?” என்று ஒருவாறுதேறுதலடைந்து, வேறொன்றுக்காக மிகவும்‌ ஆர்த்தி யடைந்தார்‌ ; அதாவதென்னென்னில்‌ ; இங்கே என்றைக்குத்‌ திருக்கண்வளர்ந்தருளப்‌ புகுந்தானோ அன்றுமுதல்‌ இன்றளவாக ஏக ரிதியாய்‌ ஆடாதே அசையாதே சயனித்திருக்கின்றானே ! இது என்ன சிரமமோ?' என்று இவ்‌ வாற்றாமை திருவுள்ளக்திலே குடி புகுந்தது. கீழ்‌ எட்டாம்பத்தில்‌ *கொடியார்மாடக்‌ கோளூரகத்தும்‌ புளியங்குடியும்‌ மடியா தின்னே நீ துயில்மேவி மகிழ்ந்தது தான்‌, அடியாரல்லல்‌ தவிர்த்த வசவோ அன்‌றேலிப்படி தான்‌ நீண்டு தாவிய வசவோ பணியாயே* என்ற பாசுரத்‌திலுண்டான வயிறுபிடியே மீண்டும்‌ தலையெடுத்தது, அப்பெரிய வாற்றாமையோடே *தேவரிரும்‌ பிராட்டிமாருங்கூட எழுந்தருளி யிருக்குமிருப்பை எனக்குக் காட்டி யருளவேணும்‌ ; என்னைக்‌ கண்ட காட்சியிலே விகாரமடைந்து என்முன்னே நாலடியுலாவி யருள வேணும்‌; புன்முறுவல்‌ காட்டியருள வேணும்‌; ஒரு வார்த்தை நீ யருளிச்செய்யவேணும்‌! என்றிங்ஙனே தாமுமவனுமே யறிந்ததாகத்‌  திருவாசலைத்‌ திருக்காப்பிட்டுக்கொண்டு ஏகாந்தத்திலே தம்முடைய மநோ ரதங்களையெல்லாம்‌. விண்ணப்பஞ்‌ செய்கிற இத்திருவாய்‌ மொழியில்‌. இப்பதிகத்தின்‌ பொருட்சுவை ஒருபுறமிருக்க சொற்‌ சுவை கல் நெஞ்சையும்‌ கரையப் பண்ணும்‌, ஸம்ஸாரத்தில்‌ ஆர்த்தி விசேஷங்களுணடாகி நெஞ்சு தடுமாறிக்‌ கிடக்கும்போது இப்பதிகத்திற்‌ பாசுரங்களை வாய் வெருவினால்‌ நெஞ்சு குளிரும்‌. நாற்பதாண்டு களுக்குக்‌ கீழே திருவரங்கம்‌ பெரிய கோயிலில்‌ பெரிய திருவத்யயநத்‌ திருநாளில்‌ இத்திருவாய்மொழியை அரையர்‌ இசைபாடாறிற்க, அஸ்‌மதாசார்யரான அழகியமணவாளச்‌ சியர்‌ கண்‌ணுங்‌ கண்ணீருமா யிருந்த விருப்பு இன்று தோன்றிக்‌ கண்ணுள்‌ நீங்கா நெஞ்சுள்ளும்‌ நீங்காவே.
    ஒன்பதாம் பத்தில்‌ முன்றாம் பதிகம்‌ - ஓராயிரமாய்‌ --கீழ்த்திருவாய்மொழியில்‌ 'தொண்டரோர்க்கருளிச்‌ சோதி வாய்‌  திறந்து உன்‌ தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌* என்றும்‌ “இடங்‌  கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருள்வாய்‌* என்றும்‌ ; *மெல்லடியைக்‌ கொடுவினையேன்‌ பிடிக்க நீ யொருநாள்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாய்” என்றும்‌ பலவாறு பிரார்த்தித்தார்‌, இப்படிப்‌ பிரார்த்திக்கக்‌ கேட்ட எம்பெருமான்‌ ஆழ்வாரை நோக்கி * ஆழ்வீர்‌ ! நமக்கு நாராயணனென்று திருநாமமிருப்பது அறியீரோ ? நாராயணனென்‌பதற்கு. -நாரங்களுக்கு அயனமாயிருப்பவன் என்கிற பொருள்‌ தவிர, நாரங்களை அயனமாக வுடையவனென்கிற பொருளுமுண்டென்பதை அறிவீரன்றோ, அப்பொருளில்‌ ஸகல சேதநா சேதங்களும்‌ சரீரமாய்‌  நான்‌ சரீரியாயிருக்கையாகிற அம்சம்‌ தேறுகின்‌றதென்பறையும்‌ அறிவீரே ; சரீரத்திற்கு ஆகும்பேறு சரீரிக்கேயாதலால்‌ சரீர பூதரான  உமக்கென்று ஒரு பேறு உண்டோ? சரீரியான என்னுடையதன்றோ பேறு என்‌ பேற்றுக்கு நீர்‌ பிரார்த்திப்பது பொருந்துமோ? எல்லாம்‌ நானே செய்து போரக்கடவேன்‌ ; உமக்கும்‌ நமக்குமுண்டான குடல்‌ துடக்கை யறிந்துவைக்து! நீர்‌ இப்படி ப்ரார்த்திப்பதும்‌ கிலேசிப்பதும்‌ தகுதியன்று * என்று ஸமாதானம்பண்ண, அது கேட்டு ஆழ்வார்‌ ஒருவாறு தாம்‌ ஸமாஹீதரானபடியை வெளியிட்டுக்‌ கொண்டும்‌ “இது என்ன சீலகுணம்‌!” என்று ஈடுபட்டுக்கொண்டும்‌. அருளிச்‌ செய்வதாம்‌ இத்திருவாய்மொழி, இப்பதிகத்திற்கு மற்றொருபடியாகவும்‌ ஈட்டில்‌ அவதாரிகை அருளிச்‌ செய்யப்படுகிறது ; அது நடுவில்‌ திரு வீதிப்பிள்ளையின்‌ நிர்வாஹமாகவுங்காண்கிறது. அதன்‌ சாரமாவது, கீழ்‌ எட்டாம்பத்தில்‌ *கண்கள்‌ சிவந்து* என்கிற பதிகம்‌ தொடங்கி முறையே திருமந்திரார்த்தம்‌ அருளிச்‌ செய்யப்பட்டு வந்து, கீழ்‌ *பண்டை நாளாலே* என்கிற பதிகத்தில்‌ கைங்கர்ய ப்ரார்த்‌தனை பண்ணுகிற முகத்தால்‌ வ்யக்த சதுர்த்தியளவாக அர்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டுத்‌ தலைக்கட்டிற்று.  அர்த்தாநுஸந்தானம்‌ பண்ணினவர்‌, அந்த அர்த்தத்தைக்‌ கொண்ட மந்த்ரம்‌ திரு வஷ்டாக்ஷர மஹா மந்த்ரம்‌ யென்று வெளியிடவேண்டி. இப்பதிகமருளிச்‌ செய்கிராரென்பதாம்‌. இப்பதிகத்தின்‌ முதற்பாட்டில்‌ “ நாராயணன்‌ நங்கள்‌ பிரானவனே ” என்றதில்‌ முழு நோக்காக இந்த நிர்வாஹம்‌ தோன்‌றியதென்க. 
    ஒன்பதாம்பத்தில்‌ நான்காம்பதிகம்‌-- மையார்கருங்கண்ணி --எம்பெருமான்‌, சாஸ்த்ரங்களில்‌ ஒரு பக்கத்திலே ஸ்வதங்த்ரினன் என்று போற்றப்படுவதுபோல, மற்றொரு பக்கத்தில்‌ சீலாதி குண கண பூஷிதனென்றும்‌ கொண்டாடப்படுகிறான்‌.  ஸ்வாதந்திரியம் என்பது அவனுக்கு ஸ்வரூபமாயிருக்கும்‌, சீலாதி குணமுடைமையும்‌ அவனுக்கு ஸ்வருபமாயிருக்கச்‌ செய்தேயும்‌ ஸ்வாதந்திரியத்தின்‌ கீழே அத்திருக்குணங்கள்‌ தலையெடுக்கமாட்டாமல்‌ அமுங்கிக்‌ கிடக்‌கும்‌. அவை எப்போது தலையெடுக்குமென்னில்‌ ; பிராட்டி புருஷகாரம்‌ செய்யும்‌ போதுகளில்‌ தலையெடுக்குமென்று நம்‌ ஆசாரியர்கள்‌ கண்டறிந்து கூறுகிறார்கள்‌. முமுக்ஷுப்படியில்‌ த்வய ப்ரகரணத்தில்‌-புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம்‌ தலைசாய்ந்தால்‌ தலை யெடுக்கும்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌” என்ற திவ்ய ஸுூக்தியை இங்கு அநுஸந்திப்பது, ஆக, கீழ்த்திருவாய்‌மொழியில்‌ அநுஸந்திக்கப்பட்ட சீலகுணத்திற்கு. ஊற்றுவாயான பிராட்டியின்‌ ஸம்பந்தத்தையும்‌ அநுஸந்தித்தார்‌ ஆழ்வார்‌. *மாக வைகுந்தங்‌ காண்பதற்கு என்மனமேகமெண்ணு மிராப்பகலின்‌றியே* என்று கீழ்த்திருவாய்மொழியில்‌ வெளியிட்ட ஆசையும்‌ விஞ்சிப்‌ பெருகிற்று. அவன்‌ சீலாதிகனுமாய்த்‌ திருமகள்‌ கொழுநனுமாயிருந்து வைத்து இப்படி நம்மை துடிக்கவிட்டு உபேஷித்து இருக்கிறானே யென்று மிகவருந்தினாராழ்வார்‌. கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய அரைகுலையத்‌ தலைகுலைய மடுவின்‌ கரையிலே ஓடி.  வந்தாப்போலவு மன்றிக்கே ப்ரஹ்லாதாழ்வானுக்கருள்‌ செய்யத்‌ தூணிலே வந்து சடக்கெனத்‌ தோன்‌றினாப் போலே தோன்றி யருள்‌ செய்ய வேண்டும்படியான நிலைமையாயிற்று ஆழ்வாரது, இப்படிப்பட்ட நிலைமையிலும்‌ அவன்‌ வந்து முகங்காட்டிற்றில னென்றால்‌ அவனைக்‌ குறித்துச்‌ சொல்லும்‌ குணங்கள்‌ கடலோசை போலே நிரர்த்தகமாமத்தனையன்றோ. அப்படி தன்‌ திருக்குணங்‌களைப்‌ பழுதாக்கிக்‌ கொள்ளமாட்டானே அவன்‌ ஆழ்வாருடைய விடாயையறிக்து உதவவந்து முகங்காட்டினான்‌. அதற்கு மிக மகிழ்ந்து “நான்‌ க்ருதக்ருத்யனனேன்‌, அடிமை செய்யப்பெற்றேன்‌, வாழ்ந்தேன்‌, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம்‌ சொல்லமுதளித்து உபகாரம்‌ செய்யப்பெற்றவனானேன்‌ ; இம்பேறுகள்‌ ஒருவன்‌ பெறத்‌ தகுமா?! என்று சொல்லித்‌ தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டுத்‌ தலைக்கட்டுகிறார்‌ இப்பதிகத்தை. 
    ஒன்பதாம்பத்தில்‌ ஐந்தாம்பதிகம்‌-- இன்னுயிர்ச்‌ சேவலும்‌ கீழ்‌ பண்டை நாளாலே என்கிற பதிகத்திலே ஆழ்வார்க்கு ஒரு கிலேசம்‌ நிகழ்ந்தது, அதை ஒருவாறு ஸமாதானப்படுத்தப்‌ புகுந்த ஸர்வேச்வரன்‌ * ஆழ்வீர்‌! நான்‌ நாராயணனன்றோ ; உமக்கு எல்லா வுறவின்‌ காரியமும்‌ குறையறச்‌ செய்து தருவேன்‌” என்று சொல்ல, அவனுடைய சீலத்தில்‌ கால்‌ தாழ்ந்து ஒரு படியாய்ச்‌ சென்றது மூன்றாம்‌ பதிகம்- *தொண்டர்க்கு அமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொல்லும்படி உம்மையாக்கினேனே, இது உமக்கு ஸமான்யமாகக்‌ கிடைக்கக்கூடியபேறோ? இதனை நினை! என்று எம்பெருமான்‌ அதனால்‌ ஒருவாறு களிப்படைந்து தரித்து நின்றார்‌ கீழ்ப்‌ பதிகத்திலே. அங்கு “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக்‌ கண்டு கொண்டேனே ” என்றருளிச்‌ செய்தவர்க்கு பாஹ்யஸம்ச்லேஷத்திலே அபேகைஷ பிறந்தது.  இவர்க்கு இன்னமும்‌ விடாயைப்‌ பிறப்‌பித்து முகங்‌ காட்டவேணும்‌ ” என்று எம்பெருமானிருக்கையாலே அவன்‌ தாமதிக்கிறான்‌. ஆழ்வார்க்கோ தளர்ச்சி மிகுகிறது. தளர்ந்‌தவர்கள்‌ தரிப்பதற்குப்‌ பல வழிகளுண்டே ; லெளகிக பதார்த்தங்‌களிலே நெஞ்சைச் செல்ல விட்டு அந்த அந்ய பரதையாலே ஒருவாறு” தரிப்போம்‌ என்றும்‌, அவனோடு போலியான பொருள்களைக்‌ கண்டாகிலும்‌ தரிப்போமென்றும்‌ நினைத்து லெளகித பதார்த்தங்களிலே கண்வைத்தார்‌. ஒருவாறு தரிப்பதற்குச்‌ செய்த அச்செயல்‌ ஆச்‌வாஸ ஹேதுவாகாமல்‌ ஸ்மாரகமாய்‌ பாதிக்கத்‌ தொடங்கிற்று, உலகில்‌ எந்தப்‌ பொருளைக்‌ கண்டாலும்‌, அவனாயிருக்கிற படியை நினைத்‌தோ, அவனோடு ஸம்பந்தம்‌ பெற்றிருக்கிறபடியை நினைத்தோ, அவனுக்குப்‌ போலியாயிருக்கிறபடியை நினைத்தோ தளருமவ ரன்றோ ஆழ்வார்‌. கீழ்‌ நாலாம்பத்தில்‌ மண்ணை யிருந்து துழாவி* என்‌னும்‌ பதிகத்திலே பட்டபாடு தெரியுமே. ஆக லெளகிக பதார்த்தங்‌கள்‌, அவனை நினைப்பூட்டி ஈலிய அவற்றால்‌ நோவுபடுகிற படியை அந்யாபதேச்த்தாலே யருளிச்‌ செய்வது இப்பதிகம்‌, எம்பெருமானோடே கலந்து பிரிந்த வொரு பிராட்டி, தன்னாற்றுமையாலே அவனோடு போலியான பதார்த்தங்களைக கண்டாகிலும்‌ தரிப்போமென்று கொண்டு ஒரு பூஞ்சோலைக்குப்‌ புறப்பட, அங்குண்டான குயில்‌ மயில்‌ முதலானவை அவனுடைய பேச்சையும்‌ வடிவையும்‌ நினைப்பூட்டி நலிய, * இவை தாமாக நலிதின்றனவல்ல ; நம்மை முடிக்க வேணு மென்று பார்த்த எம்பெருமானாலே ஏவப்பட்டு நலிகின்‌றன வித்தனை? என்றெண்ணி, அக்குயில்‌ முதலானவற்றை நோக்கி * உங்களுக்கு என்னை  நலிய நினைவாகில்‌ இவ்வளவு பாரிப்பு வேணுமோ? என்னுயிரை நானே கொடுக்கச்‌ சித்தமாயிருக்கின்றேனே' என்று சொல்லியும்‌, அவனுடைய திருக்குணங்களை ஒருவாறு நினைத்துத்‌ தரித்தும்‌ போருகிறது இத்திருவாய்மொழி, 
     ஒன்பதாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிகம்‌ -உருகுமால்நெஞ்சம்‌ கீழ்ப்பதிகத்தின்‌ முடிவிலே.  *எண்ணி நாமும்‌ நம் வான நாடனோடொன்றிலோம்‌* என்றருளிச் செய்த பாசுரத்தைக்‌ காணுமிடத்து ஆழ்வார்‌ அந்தப்‌ பாசுரத்தோடு திருவாய்மொழியைத்‌ தலைக்கட்டி விட்ட தாகவும்‌, இனிப் பாசுரங்களருளிச்செய்ய ஆழ்வார்‌ இந்நிலத்தில்‌ இல்லையாகவும்‌ தோன்றா நின்றது. ஆனாலும்‌ ஆழ்வார்‌. இன்னமும்‌ இந் நிலத்திலேயே திருப்புளியாழ்வாரடி யிலேயே யெழுந்தருளியிருந்து மேலே பாசுரங்களருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி ஆழ்வாரைத்‌ த்ரிக்கச்‌ செய்தானோ? அதனால்‌ தரித்து நின்று பேசுகிறாரோ <வென்னில்‌; இல்லை; எம்பெருமான்‌ வந்து முகங்காட்டி இவரைப்‌ பெறுவது, இல்லையாகில்‌ இழப்பது என்னும்படியான நிலைமையா யிருக்கச்‌ செய்தேயும்‌ அவன்‌ வந்து முகங்காட்டாமலே ஒருவிரகு செய்தானாயிற்று, அந்த விரகுதான்‌ ஏதென்னில்‌; கீழ்‌ எட்டாம்‌ பத்தில்‌ *இருத்தும்‌ வியந்தென்னை* என்கிற பதிகத்திலே ஒரு விலக்ஷணமான ஸம்ச்லேஷம்‌ நடந்திருந்ததே- அதை நினைப்பூட்டி. ஒருவாறு தரிக்கச்செய்தானாமிற்று எம்பெருமான்‌; அதுதான்‌ அவன்‌ செய்த விரகு. அதனால்‌ ஆழ்வார்‌ ஒருவாறு தரித்திருந்து இப்பதிகமருளிச்‌ செய்கிறபடி. இதற்கு மூன்றுவிதமான காரணங்களை யருளிச் செய்கிறார்‌ ஆழ்வார்‌. 1-முதற்பதிகமே தொடங்கி *குருகூர்ச் சடகோபன்‌ சொல் ஆயிரம்‌* என்று, எம்பெருமானுக்கு ஒரு ஆயிரம்‌ பாசுரம்‌ அருளிச் செய்து  தலைக்கட்டவேணுமென்று ஸங்கல்பித்துக்‌ கொண்டாராகையாலே அப்படி அவர்‌ தாம்‌ அதிகரித்த கைங்கரியத்தை முற்றமுடிய நடத்துகைக்கீடான அத்ருஷ்டராயிருந்தார்‌. (2) ஆழ்வாருடைய ஈரச்சொற்களை இன்னமுங்‌ கேட்கவேணு மென்று பாரித்துக் கொண்டிருக்கிற எம்பெருமானுடைய பாக்கியமுமொன்றுண்டு-(3) *தொண்டர்க்கு அமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்‌னேன்‌* என்று ஆழ்வார் தாமே பணித்தபடி இப் பாசுரங்கொண்டு போதுபோக்க விருக்கிற ஸம்ஸாரி சேதநர்களின்‌ பாக்கியமொன்‌றுண்டே--ஆக மூன்று காரணங்களினாலும்‌ ஆழ்வார்‌ இன்னமும்‌ இந் நிலத்தில்‌ தரித்து நிற்க ப்ராப்தமாகி, போனவுயிர்‌ மீளும்படி *இருத்தும்வியந்தென்கிற வொருபதிகத்திலே நடந்த கலவி நினைவுக்கு விஷயமாயிற்று, அசோகவனத்திலே திருவடி சென்று கிட்டின போது முன்பு நெடுநாள்பட்ட கிலேசமெல்லாம்‌ கிடக்கச்செய்தே, பெருமாளும்‌ வந்து முகங்காட்டாதிருக்கச்‌ செய்தேயும்‌, வனவாஸத்திற்கு முன்பு திருவயோத்யையிலே பன்னிரண்டாண்டு பெருமாளும்‌ தானும்‌ ஏகபோகமாகவிருந்து பேரின்பம்‌ நுகர்த்த நுகர்ச்சி நினைவுக்கு விஷயமாகி *ஸமா த்வாதச தத்ராஹம்‌ ராகவஸ்ய நிவேசநே புஜ்ஞாறா அமாநுஷாந்‌ போகாந்‌ ஸர்வகாமஸம்ருக்தி* என்று அதைச்சொல்லிப்‌ போது போக்கினாப்போலே, *இருத்தும்வியந்‌து பதிகததிலே “மூவுலகும்‌ தன்னெறியாவயிற்றிற்‌ கொண்டு சிறியேனுடைச்சிந்தையுள்‌-—றின்றொழிந்தான்‌”' என்னும்படி முறை கெடப் பரிமாறின பரிமாற்றம்‌ நினைவுக்கு விஜயமாகி, அது கேவலம்‌ ஸ்மிருதி மாத்திரமே யல்லாமல்‌ இப்போதைய அநுபவமேயென்றே கொள்ளலாம்படியாகி அந்த சீல குணத்தைப்‌ பேசி சிதிலராகிறார்‌. இப்படி. பழைய கலவியை நினைப்பூட்டி ஒருவாறு தரித்து நிற்கச்‌ செய்து பேசுவிக்கிறவன்‌ திருக்காட்கரை யெம்பெருமான்‌ போலும்‌. ஆகவே திருக்காட்கரைப் பெருமான்‌ விஷயமாக இப்பதிகம்‌, மலைநாட்டுத்‌ திருப்பதிகளுள்‌ ஒன்றாயிற்று திருக்காட்‌கரை யென்னும்‌ தலம்‌,  
    ஒன்பதாம்பத்தில்‌ ஏழாம்‌ பதிகம்‌ -எங்கானலகங்கழிவாய்‌ --கீழ்த்திருவாய்மொழியில்‌, ஒருவாறு தரிக்கும்படி செய்து வைத்தானெம்பெருமான்‌; குணங்களை ஸ்மரிக்க ஸ்மரிக்க அப் பெருமானை நேரே காணவேண்டும்படியான விடாய்‌ மிக்கது. அதனாலே தூது விடுவதாயிற்று இப்பதிகம்‌. திருவாய்‌ மொழியாயிரத்திலும்‌ தூதுவிடும்‌ பதிகங்கள்‌ நான்கு: (1)* அஞ்‌சிறைய மடநாராய்‌. (2) *வைகல்‌ பூங்கழிவாய்‌. (3) *பொன்னுலகாளீரோ. (4) இத்திருவாய்மொழி, *அஞ்சிறைய மடநாரையில்‌ அபராதஸஹத்வமாகிற க்ஷமாகுணம்‌ பற்றாசாக வியூஹத்திலே தூது விட்டார்‌ *வைகல்பூங்கழிவாயில்‌ ஆச்ரித ஜந ரக்ஷண தீக்ஷிதத்வம்‌ பற்றாசாக விபவத்திலே தூதுவிட்டார்‌; *பொன்னுலகாளீரில்‌ ஐகரஸ்யம்‌ பற்றாசாகப்‌ பரத்வத்திலும்‌ அந்தர்யாமித்‌வத்திலும்‌ தூது விட்டார்‌. இனி இத்திருவாய்மொழியில்‌, அவனுடைய வடிவழகு பற்றாசாக அர்ச்சையிலே தூது விடுகிறார்‌. மேலிரண்டாம்பாட்டில்‌  “திருமூழிக்களத்து--தமரோடு அங்குறைவார்க்கு! என்கையாலே, *பின்னானார்‌ வணங்குஞ்‌ சோதியான திருமூழிக்களத்தில்‌ தம்‌ பரிஐந பரிவாரங்களோடே கூடிக்‌ குலாவா நின்றாரவர்‌; அதனாலே நம்மை மறந்தார்‌ போலும்‌; *செங்கமலத்‌ தலர்போலுங்‌ கண்கைகால்‌ செங்கனிவாய்‌ அக்கமலத்திலை போலுந்‌ திருமேனி யழகை நினைப்பூட்டி “இப்படிப்பட்ட வடிவழகிலே யீடுபட்ட பராங்குச நாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்க வல்லளோ வென்று சொல்லுங்கோள்‌” என்று சில பறவைகளைக்‌ குறித்துக்‌ கூறித்‌ தூது விடுவதாய்ச்‌ சொல்லுகிறது இத்திருவாய்மொழி, 
     ஒன்பதாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌- அறுக்கும் வினையாயின --கீழ்த் திருவாய்மொழியில்‌ திருமூழிக்களத்‌ தெம்பெருமான்‌ பக்கலில்‌ தூதுவிட்டார்‌. தூது சென்றவர்கள்‌ மீண்டு வந்து செய்தி சொல்லுமளவும்‌ ஆறியிருக்கவேணுமே; எங்ஙனே ஆறி யிருப்பர்‌, திரு நாவாயிலே சென்று கிட்டுவோமென்று பார்த்தார்‌ 
    *காலாழும்‌ நெஞ்சழியும்‌. கண் சுழலும்‌* என்ன வேண்டும்‌ நிலைமையிலிருக்கு மிவர்தாம்‌ எங்ஙனே திருநாவாய்க்குச்‌ செல்வர்‌?
    இருந்த விடத்திலே யிருந்து மநோ ரதிக்கக்‌ குறையில்லையே, அந்த மநோ ரதமே இத்திருவாய்மொழியாகப்‌ பரிணமிக்கிறதாயிற்று. “திருவடி சென்று பிராட்டியைத்‌ திருவடி தொழுது மீண்டவனந்தரம்‌ பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்குப்‌ பிறந்த மநோரதம்‌
    போலே, கீழ்விட்ட தூதர்‌ அத்தலைப்பட்டு அவனைக்‌ கொண்டு வருவதற்கு” முன்னே நடுவு இவர்க்குப்‌ பிறந்த மநோரதத்தைச்‌ சொல்லுகிறது
    ,” என்பது ஈடு, திருமூழிக்களம்போலே திருநாவாயும்‌ மலைநாட்டுத்‌ திருப்பதிகள்‌ பதின்மூன்றில்‌ ஒன்று, அங்கே புகவல்லேனோ? புகும் கொல் என்றோ? அங்கே புக்கு என்‌ கண்ணாரக்‌ கண்டு அடிமை செய்யவல்லேனோ? என்றிப்படி பல மநோ ரதங்‌களைப்‌ பண்ணுகிறாராய்ச்‌ சொல்லுகிறது இத் திருவாய்மொழி,
    ஒன்பதாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ --மல்லிகை  கமழ்‌,--நம்முடைய முதலிகள்‌ இத்திருவாய்‌ மொழியை “மாலைப்‌ பூசல்‌' என்று வழங்குவர்‌. (இப்பதிகத்தின்‌ முடிவு பாசுரங்‌ காண்க.) மேல்‌ பத்தாம்‌ பத்தில்‌ மூன்றாம்‌ பதிகமான *வேய்மருதோளிணை 
    மெலியுமாலோ* என்கிற திருவாய்மொழிக்குக்‌ காலைப்பூசல்‌”
    என்று ஸங்கேதம்‌, கண்ணபிரான்‌. விடியற்‌ காலத்திலே பசு மேய்க்கப்‌ போனானாக அதிசங்கை பண்ணி அவன்‌ முகத்தைப்‌ பார்த்து, நீ பசு மேய்க்கப் போனால்‌ நலியக்கடவ பதார்த்தங்கள்‌ நலியா நின்றனவென்று முறையிடுவது, காலைப்பூசலான அத்திரு வாய்மொழியிலே, மாலைப்பூசலான இப்பதிகத்திலோவென்னில்‌, *காடுகளுடுபோய்க்‌ கன்றுகள்‌ மேய்த்து மறியோடிக்‌ கார்க்கோடல்‌ பூச்சூடி வருகின்ற தாமோதரன்‌ மாலைப்பொழுதிலே திருவாய்ப்‌ பாடி யேறத்‌ திரும்பி வரும்போது சில்‌ நாட்களில்‌ பசுக்களை எல்லாம்‌ பின்னே வரவிட்டுத்‌ தான்‌ முன்னே குழலூதிக்கொண்டு வருவன்‌ ; சில நாட்களில்‌ பசுக்களை யெல்லாம்‌ முன்னே போக விட்டுத்‌ தான்‌ பின்னே வருவதுமுண்டு; அப்படி வருகின்ற நாளில்‌ அப்பெருமானைப்‌ பசுக்களின்‌ முற்கொழுந்தில்‌ காணாமல்‌
    திருவாய்ப்பாடியிற்‌ பெண்கள்‌ பட்ட பாட்டை ஆழ்வார்‌ தாம்‌ ஏறிட்டுக்கொண்டு பேசுகிறதா யிரா நின்‌றது இத்திருவாய்மொழி,
    ஒன்பதாம் பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌--மாலை நண்ணி -கீழ்‌ *அறுக்கும்‌ வினைப் பதிகத்திலே அவனைப்‌ பெறவேணு' மென்கிற மநோ ரதமாய்ச்‌ சென்றது, அந்த மநோரதம்‌ நிறை வேறாமையாலே மிகவும்‌ கிலேசித்தபடி சொல்லிற்று கீழ்த்‌ திருவாய்‌ மொழியிலே, இப்படி நோவுபடுகிற விவருடைய கிலேசத்தை யறிந்த எம்பெருமான்‌ “ஆழ்வீர்‌! என்னைப்‌ பெறாமையாலை நீர்‌ நோவுபடுகிறது. கிடக்கட்டும்‌; உம்மைப் பெறாமை இழவுபட்டுக்‌ கிடப்போம்‌ நாமன்றோ? உமக்கொரு குறையுண்டோ? திரு நாட்டை விட்டுத்‌ -திருக்கண்ணபுரத்திலே நாம்‌ ஸன்னிதி பண்ணியிருப்பது உமக்காகவன்றோ; இந்த சரீரத்தின்‌ முடிவிலே உம்முடைய அபேக்ஷிதம்‌ நிறைவேற்றக் கடவோம்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ண, ஆழ்வாரும்‌ ஸமாதானமடைந்து அதனைச் சொல்லி இத்திருவாய்மொழியில்‌, “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌.-என்கிற பாசுரம்‌ இப்பதிகத்திற்கு உயிராய்க்‌ கொண்டு ஸர்வேச்வரன்‌ ஸர்வ ஸமாச்ரயணியனாய்  கோயில்‌ கொண்டிரா நின்றான்‌; அவனைச்‌ சென்று ஆச்ரயுங்கோள்‌; ஆச்ரயிக்குமிடத்தில்‌ அவன்‌ திருவடிகளிலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌; பக்திக்கு உபகரண மில்லாதார்‌ ப்ரபத்தியைப்‌ பண்ணுங்கோள்‌ ; அதற்குரிய அத்யவஸாயமில்லாதார்‌ உக்தி மாத்ரத்தை யாகிலும்‌ சொல்லுங்கோள்‌ ; அவ்வளவே கொண்டு அவன்றான்‌ கைவிடான்‌; ஆனபின்பு எல்லாருமொக்க அவனை ஆச்ரயியுங்கோள்‌ என்று பரோபதேசரூபமாய்‌ நிகழ்கின்றது இப்பதிகம்‌, “மோஹித்துக் கிடந்தாராகில்‌ கிடக்குமித்தனை போக்கி உணர்ந்தாராகில்‌ பிறர்க்கு ஹிதஞ்‌ சொல்லி 
    யல்லது நிற்க மாட்டார்‌”' என்பர்‌ நம்பிள்ளை,
    பத்தாம்பத்தில்‌ முதல்‌ பதிகம்‌--தாளதாமரை-கீழ்த்திருவாய்மொழியில்‌ *மரணமானால்‌ வைகுந்தங்‌ கொடுக்கும்‌ பிரான்‌* என்‌றருளிச்‌ செய்ததானது எம்பெருமானுடைய திருவுள்ளக்‌ கருத்தை அநுவாதம்‌ செய்தபடியன்றோ. தேஹாவஸானத்திலே பேறு” என்று எம்பெருமான்‌ ஆழ்வார்க்கு நாளிட்டுக்‌ கொடுத்ததாகத்‌ தேறி நின்றது. தேஹத்தின்‌ முடிவு என்றைக்கு ஆகுமென்று ஆழ்வார்‌ ஆலோசிக்க வேண்டுமோ. *இழை றல்லவாக்கையும்‌ பையவே புயக்கற்றது* என்றும்‌ "என்னுயிர்‌ கூவிக்‌ கொடுப்பார்க்கு மித்தனை வேண்டுமோ?* என்றும்‌ கீழே யருளிச்‌ செய்தவராகையாலே மிகவும்‌ கட்டுக்குலைந்த தம்‌ திருமேனியின்‌ முடிவு அணித்தென்று தாமே அறுதியிட்டுக்‌ கொண்டார்‌. திருநாட்டுககுப்‌ பயணம்‌ குறித்து ஸற்றாஹம்‌ செய்ய வேணுமென்று கொண்டு முந்துற முன்னம்‌ வழித்துணை யாகத்‌  திருமோகூர்க்‌ காளமேகப்‌ பெருமாளைப்‌ பற்றுகிறதாகச்‌ செல்லுகிறது இததிருவாய்மொழி. பரமபதத்திற்குச்‌ செல்ல வழித்‌ துணை வேணுமோ? “அர்ச்சிர்‌ திரபூர்வபக்ஷஷடு தங்மாஸாப்து வாதாம்சுமத்‌ க்லெளவித்யுத்‌ வருணேந்த்ர தாத்ரு மஹித என்று நடாதூரம்மாள்‌ பணித்தபடியே அர்ச்சிராதிகள்‌ வழிநடத்தவன்றோ போகிறது' வேறு வழித்துணை ஏதுக்கு? என்று ஒரு கேள்வி பிறக்கும்‌, வராஹ சரமச்லோகத்திலே *ததஸ்‌ தம்‌ ம்ரியமாணம்‌ து..அஹம்‌ ஸ்மராமி மத்பக்தம்‌ நயாமி பரமாம்‌ குதிம்‌* என்று எம்பெருமான்‌ தானே வழி நடத்திக்கொண்டு போவதாகச்‌ சொல்லி யிருக்கையாலே  திருநாடு செல்வார்க்கெல்லாம்‌ அவனே வழித்‌துணையாகிறானென்னுமிடம்‌, சாஸ்த்ர ஸித்தமாயிருந்தது. அப்படி வழித்துணையாகும்‌ பெருமான்‌ திருமோகூரிலே வந்து ஸந்நிதி பண்ணியிருக்கிறானாகக்‌ கொண்டு அப்பெருமானையே வழித்துணையாகப்‌ பற்றுகிறார்‌. வழித்துணையாமிடத்து ஞானத்‌தாலும்‌ சக்தியாலும்‌ குறையற்திருப்பானொருவனே யன்றோ ஆக வேணும்‌; அவன்தான்‌ விரோதி நிரசன ஸமர்த்தனாகவும்‌. இருக்க வேணுமே; இப்படிப்பட்ட வாய்ப்பெல்லாம்‌ திருமோகூரெம்‌பெருமான்‌ பக்கலிலே குறையற்திருக்கிறபடியை அநுஸந்தித்துக்‌ கொண்டு அப்பெருமானையே வழித் துணையாகப்‌ பற்றுகிறாராயிற்று
    பத்தாம்பத்தில்‌ இரண்டாம்‌ பதிகம்‌--கெடுமிடர்‌ -கீழ்த்திருவாய்மொழியில்‌ திருமோகூரை யநுபவித்தார்‌; இத்‌ திருவாய்மொழியில்‌ திருவனந்தபுரத்தை யநுபவிக்கிறார்‌; மேலே 'திருவாட்டாறு, திருமாலிருஞ்சோலை, திருப்பேர்‌ நகர்‌ என்கிற 
    -திருப்பதிகளையும்‌ பேசப்போகிறார்‌.
    கீழே ஒன்பதாம்‌ பத்திலும்‌ பல திருப்பதிகளைப்‌ பேசினார்‌. இப்படி அடுத்‌த்‌டுத்துத்‌ திருப்பதிகளிலே யீடுபடுவதற்கு என்ன காரணமென்று ஆராய்ச்சி செய்ய ப்ராப்தம்‌. -திருமங்கையாழ்வாரும்‌ பெரிய திருமொழியில்‌ (10-1) *ஒரு நற் சுற்றம்‌* என்னும்‌ பதிகத்தில்‌ ஒவ்வொரு பாட்டிலும்‌ இரண்டிரண்டு திருப்பதிகளைப்‌ பேசியிருக்கிறார்‌; அதற்கு என்ன காரண மென்று ஆராய்ச்சி செய்த ஆசாரியர்கள்‌ வெகு ஆச்சரியமாகக்‌ கருத்தறிந்து கூறியுள்ளார்கள்‌; பிறந்தகத்தில்‌ நின்றும்‌ புக்ககஞ்‌ செல்லப்‌ புறப்படுகின்‌ற பெண்பிள்ளை தான்‌ நெடுநாள்‌ வஸித்த விடத்திலே தன்னோடு மிகவும்‌ முகம் பழகியிருந்த பரம ப்ரேமா ஸ்பதர்களான சில. 'பெண் பிள்ளைகளைச்‌ சென்று பணிந்து நங்காய்‌! நான்‌ போய் வருகிறேன்‌; மாதே! நான்‌ சென்று வருகிறேன்‌' என்று சொல்லி விடை பெற்றுக்கொள்வதற்காகச்‌ சில குழடுகள்‌ ஏறியிறங்குமாபோலே, இவ்வாழ்வாரும்‌ தம்‌ புக்ககமாகிய பரமபதத்தின்‌ பயணத்திற்குப்‌ பூர்வாங்கமாக, தமது மிக்க. ஈடுபாட்டிற்கிடமான சில திருப்பதி யெம்பெருமான்கள்‌ பக்கலிலே. சொல்லிக் கொள்வதாக நுழைந்து புறப்படுகிறார்‌ *ஒரு நல்சுற்றத்திலே- நம்மாழ்வாருமப்படியே *மாலை நண்ணிக்குப்‌ பிறகு பரமபத ப்ராப்தி அணித்தென்று துணிந்தவராகையாலே பல திவ்ய தேசங்களிலே புகுவதாகிறார்‌. இப்போது திருவனந்தபுரத்தை ப்ராப்யமாகத்‌ துணிந்து அவ்விடத்திலே யீடுபட்டுப்‌ பேசுவதாய்ச்‌ செல்லுகிறது இத்திருவாய்மொழி
    பத்தாம்பத்தில்‌ மூன்றாம்‌ பதிகம்‌-- வேய் மரு தோளிணை -கீழ்த் திருவாய்மொழியில்‌, ஆழ்வார்‌ தாமும்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களுமாய்த்‌ திருவனந்தபுரத்தே புக்கு அடிமை செய்யப்‌ பாரித்தவர்‌' அப்போதே அவ்விடத்தே புக்கு அடிமை செய்யப்‌ பெறாமையாலே கலங்கினார்‌; பழையபடியே நமக்கு ஸம்ஸாரத்திலிருப்பே சேஷித்து விடுகிறதோ” என்று அதிசங்கை தோன்றப்‌ பெற்றார்‌; இவ்வதிசங்கைக்கு நிதான மென்னென்னில்‌; ப்ரக்ருதி ஸம்பதத்தின்‌ கொடுமையாலும்‌ எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியத்தைப்‌ பற்றவும்‌ இங்ஙனே அதிசங்கையுண்டாகக்‌ குறையில்லையன்றோ, இப்படி தமக்குண்டான அதிசங்கையை நேர் கொடு நேரே விண்ணப்பஞ்‌ செய்யாமல்‌ முகபேதத்தாலே விண்ணப்பஞ்‌ செய்‌கிறார்‌ இத்திருவாய்மொழியில்‌; எங்ஙனேயென்னில்‌, இடைப்‌ பெண்களுக்குக்‌ கண்ணபிரான்‌ மீது ஒரு அதிசங்கை யுணடாகி அவர்கள்‌ கதறினபடியை வெளியிடும்‌ முகத்தாலே தம்முடைய அதிசங்கையை வெளியிடுபவராகிறார்‌; அதாவது - ஒரு படுக்‌கையிலே கூடவிருக்கச்‌ செய்தே பசுமேய்க்கப்போகிற விடியற்‌ காலம்‌ வந்து, அக்காலத்திற்கேற்ற குயில்‌ மயில்‌ முதலானவற்றினுடைய பாடலாடல்‌ முதலான அடையாளங்களையுங்‌ காண்‌கையாலே அவற்றையே கொண்டு கண்ணபிரான்‌ பசுமேய்க்கப்‌ போனான்‌" என்று 'அதிசங்கை பண்ணி நோவுபடுகிற இடைப்‌ பெண்களது பேச்சை அநுவதிக்கும்‌ முகத்தாலே ஆழ்வார்‌ தமக்‌குண்டான அதிசங்கையை வெளியிடுகிறாரென்றவாறு. இத்திருவாய்மொழிக்கான நூற்றந்தாதிப்‌ பாசுரத்தில்‌ மணவாளமா முனிகள்‌ ஆய்ச்சிகளுக்குண்டான அதிசங்கையைம்‌ பற்றிச்‌ சிறிதும்‌ ப்ரஸ்தாவியாமல்‌ **தன்னை யின்னம்‌ பூமியிலே வைக்கு மெனச்‌  சங்கித்து ” என்று ஆழ்வாருடைய அதிசங்கை யொன்றையே இப்பதிகத்திற்கு ப்ரமேயமாக அருளிச்‌ செய்திருப்பது இங்குக்‌ குறிக்கொள்ள த்தக்கது, அந்யாபதேசத்தை விட்டு ஸ்வாபதேசத்தையே கொண்டருளினபடி, அதற்குமேல்‌ “மால்‌ தெளிவிக்கத்‌ தெளிந்த!” என்றுமருளிச்‌ செய்துள்ளார்‌; ஆழ்வாருடைய அதிசங்கையைக்‌ கண்ட எம்பெருமான்‌ ஆழ்வாரைத்‌ தெளிவு பெறுத்தியதாக இதன்‌ பொருள்‌ தேறுகின்றது; இப்பதிகத்தில்‌ பத்தாம்‌ பாட்டில்‌ “செங்கனிவாயெங்களாயர்தேவே” என்றதின்‌' சுவடறிந்து பூருவர்கள்‌ நிர்வஹித்தருளினபடியைத்‌ தழுவி “மால்‌ தெளிவிக்கத்‌ தெளிந்த?” என்றருளிச்‌ செய்யப்பட்டதென்க. இத்திருவாய்மொழிக்குக்‌ காலைப்பூசல்‌ என்று நம்‌ ஆசாரியர்கள்‌ வழங்கும்‌ திருநாமம்‌, (மல்லிகை கமழ் தென்‌றற்பதிகம்‌-மாலைப்‌ பூசல்‌). 
    பத்தாம்பத்தில்‌ நான்‌காம் பதிகம்‌- சார்வே தவ நெறி --ஆழ்வார்‌ தாமான தன்மையை விட்டுப்‌ பெண் தன்மை யெய்திப்‌ பேசும்‌ பரிசு முதற் பத்தில்‌ நான்காம்‌ பதிகமான *அஞ்சிறைய மட நாரையிலே தொடக்கமாயிற்று; அது கீழ்ப் பதிகத்தோடு தலைக்‌ கட்டிற்று. இனி மேலுள்ள பதிகங்களிற்‌ பெண்மை தலைகாட்டா தென்க. கீழ்த்‌ திருவாய்மொழியின்‌ ப்ரமேயததை அநுவதித்துக்‌ கொண்டு இங்கே நம்பிள்ளை யருளிச்‌ செய்யுமது காண்மின்‌ - “தம்மைப்‌ பிரிய நினைவின்றிக்கே யிருக்க அதிசங்கையாலே பிரிந்தார் படும்‌ வ்யஸநத்தைப் பட்டு அத்தாலே அவஸந்‌நரானவரை  “உம்மை யொரு நாளும்‌ பிரியேன்‌? என்று அவன்‌ ஆச்வஸிப்பிக்க அத்தாலே தரித்து மிகவும்‌ ப்ரிதரானார்‌ கீழ்‌” என்று, நூற்றந்‌தாதியிலே மணவாள மாமுனிகள்‌ “தன்னை யின்னம்‌ பூமியிலே வைக்குமெனச்‌ சங்கித்து மால் தெளிவிக்கத்‌ தெளிந்த மாறன்‌!” என்றருளிச்‌ செய்தபடியே ஆழ்வார்‌ தம்முடைய அதிசங்கை தொலையப் பெற்று இனி நமக்குப்‌ பரமபத ப்ராப்தியில்‌ ஸந்தேஹ மில்லை யென்று துணிந்து, திருவாய்மொழியாகிற இந்த மஹா சாஸ்திரத்திற்குச்‌ செய்ய  வேண்டுவதெல்லாம்‌ செய்து தலைக்கட்டத்‌ தொடங்குகிறார்‌ இனி; '“பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படியே ஆதியிலே பிறர்க்கு உபதேசித்த பக்தி பலத்தோடே சேர்ந்தபடியைச்‌ சொல்லி நிகமிக்‌கிறார்‌ இதில்‌, விபிஷணாழ்வான்‌ இராவணனைக்‌ குறித்து  உபதேசிக்க, அவ்வுபதேசம்‌ அவனுக்குப்‌ பலியாதொழிந்தாலும்‌ உபதேசித்தவற்குப்‌ பெருமாள்‌ பக்கலிலே ப்ராவண்யம்‌ கனத்துத்‌  "தன்‌ பேற்றுக்கு உறுப்பானாப் போலே இவர்க்கும்‌ பரோபதேசம்‌  தம்முடைய ப்ராவண்யம்‌ கனக்கைக்கு உடலாகி ஸபலமானபடியைச்‌ சொல்லி நிகமிக்கிறாரென்க, பிள்ளானுடைய நிர்வாஹமாக ஒரு ஸங்கதி ஈட்டிலருளிச்‌ செய்யப்படுகிறது; நீ பசு மேய்க்கப்‌ போக வேண்டா வென்றவாறே அதில்‌ தவிர்ந்தேனென்றான்‌ எம்பெருமான்‌; அந்த பெருங்குணத்திலே யீடுபட்டு இவன்‌ பக்தி ஸுலபனென்பதை நிச்சயித்து அது தன்னை யருளிச்‌ செய்வது இத்திரு வாய்மொழி என்று. 
    பத்தாம் பத்தில்‌ ஐந்தாம்‌ பதிகம்‌-- கண்ணன்‌ கழலிணை -முதற்பத்தில்‌ *வீடுமுன்‌ முற்றவுமென்கிற பதிகத்திலே பரோபதேசம்‌ பண்ணத்‌ தொடங்கின வாழ்வார்‌ பத்துத்தோறும்‌ உபதேசபரமான பதிகம்‌ அருளிச்செய்துவந்து, இப்பதிகத்தோடே பரோபதேசத்‌தைத்‌ தலைகட்டுகிறாராயிற்று, பெரியார்கள்‌ தாங்கள்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளும்‌ சரம ஸமயத்திலே அந்தரங்கரானார்க்கு அருமையான சில வுபதேசங்களைச்‌ செய்து போவதுண்டு. அதற்குச்‌ சரம ஸந்தேசமென்று பெயர்‌, இப்பதிகமும்‌ அதுவாயிரா நின்றது. எம்பெருமானோ ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்குக்‌ கொண்டுபோக விரையா  நின்றான்‌ ; ஆழ்வாரும்‌ இனி நமக்கு ப்ராப்தி தப்பாதென்று துணிவு கொண்டார்‌. இவர்தாம்‌ ஸம்ஸாரிகள்‌ பக்கலிலே பரம கருணைய வடிவெடுத்தவராசையாலே, ஸம்ஸாரிகளுக்கு இதுகாறும்‌ வேண்டிய  படி உபதேசங்கள்‌ செய்தருளியிருந்தாலும்‌, விபீஷணாழ்வான்‌ ராவண பவனத்தை விட்டுப்‌ பெருமாள்‌ திருவடியேறப்‌ போவதாகக்‌ கிளம்‌பின பின்பும்‌ ** நறச்யந்தமுபேச்ஷேயம்‌ ப்ரதீப்தம்‌ சரணம்‌ யதா?” என்று சொல்லிப்‌ பின்னையும்‌ உபதேசிக்க வொருப்பட்டாப்போலே இவரும்‌ சரமோபதேசம்‌ செய்து நிகமித்தருளுகிறார்‌. இவர்தாம்‌ பெரிய திருவந்தாதியில்‌ *ஆரானுமாதானுஞ்‌ செய்க அகலிடத்தை பபஇருவது ஆரானுமாதானு யாராய்ந்து அது திருத்தலாவதே!* என்று “ஸம்ஸாரிகளுக்கு உபதேசிப்பது கஷ்டம்‌ கஷ்டம்‌. இது நம்மாலாகாது”” என்று சொல்லி யிருந்தும்‌ *பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்ளவே தாம்‌ அவதரித்தபடியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி *சொன்னால்‌ விரோதமிதுவாகிலுஞ்‌ சொல்லுவன்கேண்மினோ வென்று உபதேசத்தில்‌ ருசி குலயாமே போந்தவர்‌ *மண்ணர்க்குத்‌ தானுபதேசிக்கை தலைக்கட்டினான்‌ மாறன்‌* என்று நூற்றந்தாதியில்‌ மணவாள மாமுனிகளருளிச்‌ செய்தபடியே அவ்வுபதேசத்தை இப்பதிகத்தோடு தலைக்கட்டுகிறாராயிற்று. 
     பத்தாம்பத்தில்‌ ஆறாம்‌ பதிதம்‌-- அருள்‌ பெறுவாரடியார்‌ --இத்திருவாய்மொழிக்கு அவதாரிகையிடத்‌ தொடங்கும்‌ போதே நம்பிள்ளை மருளிச்‌ செய்வது பாரிர்‌--* *பொய்ந்‌ நின்ற ஞானம்‌ தொடங்கி இவ்வளவும்‌ வர ஈச்வரனை ஆழ்வார்‌ பின்‌ தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்வரன்‌ பின்‌ தொடருகிறபடி சொல்லுகிறது”! என்று, அதாவது, இதுவரையில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானிடத்தில்‌ யாசகராய்‌ நின்றார்‌ ; இனி- முனியே நான்முகனென்னும்‌ பதிகத்தளவும்‌ எம்பெருமான்‌ ஆழ்வார்‌ பக்கலிலே யாசகனாய்‌ நிற்கிறானென்கை, இத்திருவாய்‌ மொழியில்‌ முன்றாம்‌ பாட்டில்‌ *இன்று விண்ணுலகந்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌* என்றருளிச்‌ செய்கையாலே ஆழ்வாரைப்‌ பரமபதத்‌தேறக்‌ கொண்டு போகையிலே எம்பெருமான்‌ தான்‌ விரைந்து *ஆழ்வாரே! வாரீர்‌, வாரீர்‌ என்று வேண்டுகின்றமை தெரிகின்றது. அவ்வளவேயுமன்‌றிக்கே சரம சரீரமாகையாலே ஆழ்வாருடைய திருமேனியில்‌ தனக்குண்டான வியாமோஹத்தாலே கொண்டுபோக விரைந்ததையுங்கூட மறந்து இத்திருமேனி யநுபவத்திலே மிகவும்‌ சபலனாய்‌, முன்பு ஆய்ச்சியரோடு குரவை கோத்த போது அநேக விக்ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி யநுபவித்தாப்‌ போலவும்‌, நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறாயிரம்‌ தேவிமார்களை' த்வாரகையில்‌ பதினாறாயிரம்‌ விக்ரஹங்கள்‌ கொண்டு அநுபவித்தாப்போலவும்‌ அநேக விக்ரஹங்‌ கொண்டு ஆழ்வாருடைய அவயவங்கள்‌ தோறுமநுபவிக்கவும்‌ விரும்பி அதற்கு அநுமதி பண்ணுமாறு வேண்டிக்கொண்டான்‌. அதை ஆழ்வார்‌ வெகு சிரமப்பட்டு விடுவித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும்‌ எம்பெருமானுடைய அநுவர்த்தனத்தில்‌ குறைவில்லையே. இதையெல்லாம்‌ திரு வுள்ளம் பற்றியே நம்பிள்ளை * இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்‌வரன்‌ பின்‌ தொடருகிறபடி சொல்லுகிறது ”' என்று மருமமறிந்து அருளிச்செய்தார்‌. எம்பெருமானைப்‌ பெறவேணுமென்று ஆழ்‌வார்க்கு விடாய்‌ அதிகமா ? ஆழ்வாரைப்‌ பெற வேணுமென்று எம்‌பெருமானுக்கு விடாய்‌ அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்குமளவில்‌ ஆழ்வாருடைய விடாய்‌ சிறிது ; எம்பெருமானுடைய விடாய்‌ தானே பெரிது என்று ஸித்தாந்தம்‌ செய்ய வேண்டியதாகிறது. இவ்விஷயம்‌ கீழேயே (9-6.10)* வாரிக்‌ கொண்டுன்னை விழுங்குவன்‌ காணிலென்று, ஆர்வுற்றவென்னை யொழிய என்னின்‌ முன்னம்‌ பாரித்துத்‌ தானென்னை முற்றப்‌ பருகினான்‌* என்னும்‌ பாசுரத்தினால்‌ ஆழ்வார்‌ தம்மாலேயே வெளியிடப்பட்டுள்ளது. எம்பெருமான்‌ அப்படி பெரு விடாயனாயிருந்து வைத்தும்‌, ஆழ்வாரைக்‌ கொண்டு இவ்வுலகுக்கு *தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்மாலைகள்‌ சொன்னேன்‌ என்னும்‌ படியாக உணவளிக்க விரும்பியிருந்ததனால்‌ தன்‌ விடாயையடக்கிக்‌ கொண்டு ஸமய மெதிர்ப்பார்த்திருக்க வேண்டியதாயிற்று, அக்‌ காரியமும்‌ ஒருவாறு தலைக்கட்டுமளவானவாறே இனி யெம்பெருமான்‌ ஆறியிருக்கமாட்டானே, திருவாட்டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து நிற்கிறவனாகையாலே ஆழ்வாரைக்‌ கொண்டு போகையிலே அவனுக்கு விரைவுமிக்கது, ஏன்‌? திருநாட்டிலே கொண்டுபோய்‌ அநுபவிக்கவேணுமென்று என்ன நிர்ப்பந்தம்‌? இங்கேதான்‌ அநுபவிக்கலாகாதோ ? என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌ ; *பாவியேனைப்‌ பல நீ காட்டிப்படுப்பாயோ* என்னும்படியான இருள்‌ தருமா ஞாலத்‌திலே அவிச்சிந்நமான அநுபவம்‌ வாய்க்கமாட்டாதே ; “* ஒரு விச்‌ சேதமும்‌ வாராதபடி. ஏகாந்தமாயிருப்பதொரு தேச விசேஷத்திலே கொண்டுபோய்‌ வைத்து அநுபவிக்க வேணும்‌” என்று பாரித்‌தான்‌. அது தானும்‌ கிடந்தானை கண்டேறுமா போலன்‌றிக்கே ஆழ்வார்‌ நியமித்தருளுகிறபடியே செய்தோமாகவேணும்‌ என்று பாரதந்திரியத்திலும்‌ ருசி யுண்டாகப்‌ பெற்றான்‌. ஆழ்வாரோ பாரதந்திரியத்தின்‌ எல்லையிலே நிற்பவர்‌. ஸர்வேச்வரனைத்‌ தாம்‌. நியமிக்கமாட்டாரே ! ' அவனோ கையுமஞ்ஜலியுமாய்‌ நின்று “ஆழ்வாரே ! நியமித்தருளிர்‌ ;”' என்கிறான்‌. ஆழ்வார்க்கோ நியமிக்க வாய்‌ எழவிலலை, “பராத்பரனாயிருந்து வைத்து இப்படி நம்பக்கலில்‌ பரதந்திரனாய்த் தாழ நிற்கிறானே ! இதுவென்‌ ?”” என்று அந்த சீல குணத்தை யநுபவிக்க விழிந்தாராழ்வார்‌. அநுபவிக்குமிடத்துக்‌ கைவல்யாநுபவம்‌ போலே தனியநுபவம்‌ ரஸிக்கமாட்டாதாதைகையாலே நால்வரோடே கூடி யநுபவிப்போமென்று நாட்டார்‌ பக்கலிலே கண்‌ வைத்தார்‌. அவர்கள்‌ உண்டியே உடையே உகந்தோடுபவாராய்‌ சப்தாதி விஷயங்களிலே அந்யபரராய்‌ அவற்றோடே பணி போந்திருக்கார்கள்‌. அவர்களை விட்டு, பரம ரஸிகனான ஸர்வேச்வரனோடு தான்‌ கூடி இக்குணத்தை யநுபவிப்போமே யென்று அவன்‌ மேலும்‌ கண்‌ செலுத்தினார்‌. அவனோ ஆழ்வாரைக்‌ கொண்டு போகையிலே விரைந்திருப்பானொருவனாகையாலே அதிலே அந்ய பரனாம்‌ ஆழ்வாருடைய அநுபவத்திற்கு உசாத்துணையாக மாட்டிற்‌றிலன்‌. இப்படி ஸம்ஸாரிகளும்‌ துணையன்‌ றிக்கே ஸர்வேச்வரனும்‌ துணையன்றிக்கே யானவிடத்து *யானுமென்னெஞ்சு மிசைந்‌ தொழிந்தோம்‌* என்று முன்னமே சொல்லியிருக்கிறாரே யாழ்வார்‌, “தம்மோடு உடன்‌ கேடான நெஞ்சிருக்க இனி என்ன குறையென்று தேறி அந்த நெஞ்சோடே யநுபவிக்கிறுர்‌--நெஞ்சே ! அவனுடைய மேன்மையிருந்தபடி கண்டாயே; அப்படி மேன்மையுடையவன்‌ நம்பக்கல்‌ இப்போது தாழநிற்கும்நிலை கண்டாயே; நாம்‌ பெற்ற பேற்றின்‌ கனமிருந்தபடி கண்டாயே ! என்று சொல்லிச்‌ சொல்லி உள்குழைகிறார்‌. ஸர்வேச்வரனாகிறான்‌ ஸர்வ நியாமகனாய்‌ ஸ்வதந்‌தரனாயிருப்பானொறுவன்‌ என்று இதுவரை நினைத்திருந்‌தாராழ்வார்‌ ; ஆச்ரித பாரதந்திரியமே அவனுக்கு ஸ்வரூபமென்கிற உண்மையை இப்போதறிந்து “இஃது என்ன சிலம்‌ !!' என்று வியக்கிறாராயிற்று. | 
    பத்தாம்பத்தில்‌ எட்டாம்‌ பதிகம்‌--திருமாலிருஞ்‌ சோலைமலை -ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளப்‌ பண்ணிக்கொண்டு. போக எம்பெருமான்‌ விரைந்தமை சொல்லிற்று *அருள்‌ பெறுவாரடியாரென்னுக்‌ திருவாய்‌ மொழியிலே, அதற்குச்‌ சிறிது 
    இடையூறு விளைந்தது கீழ்த்‌ திருவாய்‌ மொழியில்‌--ஆழ்வாருடைய திருமேனியிலே எம்பெருமான்‌ அளவுகடந்த அபிநிவேசம்‌. பண்ணி இத்திருமேனியோடே ஆழ்வாரைத்‌ திருநாட்டுக்குக்‌ கொண்டு போவதாக முயல, ஆழ்வார்‌ தம்முடலின்‌ தண்மையை அப்பெருமானுக்கு அறிவித்துத்‌ தடுக்க இவ்வழியாலே எம்பெருமானுடைய விரைதல்‌ சிறிது தடைபட்ட,தாயிற்று, எம்பெருமானும்‌ ஆழ்வாருடைய நிஷேதத்திற்கு இணங்கி நின்று இவர்க்கு விண்‌ணுலகம்‌ தர விரைந்தானாகி வானேறும்‌ வழியிலே கொண்டு போவதாக முயன்‌றவளவிலே ஆழ்வார்‌ அவனை மடிபிடித்து ஒரு கேள்வி கேட்கத்‌ தொடங்கினார்‌; அதாவது, “இன்று இப்படி பதறுகின்ற நீ அநாதிகாலம்‌ என்னை இவ்விருள்‌ தருமா ஞாலப் படுகுழியிலே தள்ளியிட்டு வைத்து ஆறியிருந்தமை எங்ஙனே? இன்று இப்படி ஆதரிக்க வைக்கும்‌ அநாதிகாலம்‌ அநாதரித்திருந்தமைக்கும்‌ ஹேது சொல்லியருளவேணும்‌”” என்றார்‌; அவனும்‌ என்ன ஹேது சொல்லலாமென்று பலவாறு சிந்தித்துப்‌ பார்த்தான்‌. எதற்கும்‌ ஆழ்வார்‌ பிரதிகோடி சொல்ல வல்லலர்‌ என்பதைத்‌ தன்னில்‌ தாணுணர்ந்து, *நிரங்குச ஸ்வாதந்திரியத்தாலே செய்யுமதுக்கு ஹேதுவுண்டோ” வென்று ஆழ்வார்‌ தாமே ஸமாதானமடைந்திடுக வென்றும்‌ கருதி, ஒரு மறுமாற்றமுங்‌ காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக்‌ கீறி நின்றான்‌. இது ஒரு நிர்ஹேதுக வீஷயீகாரமென்று ஆழ்வாரறிந்து விஸ்மிதராய்க்‌ களித்துப்‌ பேசுகிறதாயிரா நின்றது--இத்திருவாய்மொழி..
    பத்தாம்பத்தில்‌ ஒன்பதாம்‌ பதிகம்‌ -சூழ்விசும்‌ பணி முகில்‌ -கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ *இன்றென்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை யென்னுள்‌ வைத்தான்‌, அன்றென்னைப்‌ புறம்போகப்‌ புணர்த்ததென்‌ செய்வான்‌?* என்று எம்பெருமானை மடி பிடித்துக்‌ கேள்வி கேட்டாராழ்வார்‌; அதற்கு ஹேது தன்னுடைய நிரங்குச ஸ்வாதந்திரியமொழிய வேறொன்றில்லையென்று ஆழ்வாரும்‌ நன்‌கறிந்தவர்‌, எம்பெருமானும்‌ நன்கறிந்தவன்‌: ஆகவே *ஆழ்வீர்‌! அன்று உபேசுஷித்திருற்ததற்கும்‌ ஸ்வாதர்திரியமே காரணம்‌, இன்று ஆதரிப்பதற்கும்‌ ஸ்வாதந்தரியமேதான்‌ காரணம்‌” என்று பதில்‌ சொல்லவேண்டும்‌. தான்‌ பரம காருணிகனாய் இருந்து வைத்து இங்ஙனே பதில்‌ சொல்லத்‌ தகாதாதலால்‌ ஒரு வகையான உத்தரமுஞ்‌ சொல்லாதே தலைகுனிந்து நின்றான்‌. ஆழ்வாரைப்‌ பரம பதத்தேறக்‌ கொண்டுபோக விரைவு கொண்ட தான்‌ இப்படி ஆழ்வாருடைய கேள்விக்கு பதில்‌ சொல்ல மாட்டாமல்‌ ,வெள்கி நிற்கிற நிலையை மறைப்பதற்காக ஒருவழி பண்ணினான்‌; கலியாணங்களில்‌ சடங்கு காட்டும்‌ உயாத்யாயர்கள்‌ சொல்லவேண்டிய மந்த்ரம்‌ தோன்றாவிட்டால்‌, மேள தாளங்களைக்‌ கொட்டச்சொல்லி வாத்ய கோஷத்தாலே அத்தை மறைத்து விடுமாபோலே, இப்போது நிருத்‌தரனான தானும்‌ மேக ஸமூத்ர பேரி கீத காஹள சங்க ஆசீஸ்‌ ஸ்துதி கோலாஹலங்களைச்‌ செய்தான்‌. அதாவது. *சூழ்விசும்பணி முகில்‌ தூரியம்‌ முழக்கின, ஆழ்‌ கடலலைதிரை கையெடுத்தாடின, என்று ராஜகுமாரர்‌ போம்போது மங்களவாத்ய கோஷம்‌ பண்ணு வாரைப்போலே பரமபதத்துக்குப்‌ போமவர்களைக் கண்ட  ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாகா நிற்கும்‌ மேக ஸமுத்ரங்களாகிற பேரிகளின்‌ கோலாஹலத்தை யுண்டு பண்ணினான்‌. *கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்‌* என்கிற  கீதங்களைச்‌ செவிப்படுத்தினான்‌; *காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்‌* என்கிற காஹளசங்கங்களினுடைய முழக்கத்தை முட்டினான்‌; *வாளொண்கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌? என்கிற ஆசிஸ்ஸின்‌ ஆரவாரத்கைக்‌ கிளப்பினான்‌; *தொடர்ந்தெங்கும்‌ தோத்திரஞ்‌ சொல்லினர்‌* என்கிற ஸ்தோத்ர கோலாஹலங்களைப்‌ பிறப்பித்தான்‌.  ஆக இப்படிப்பட்ட கோலாஹலங்களை விளைவித்த மாத்திரமே யன்‌றிக்கே, அர்ச்சிராதி கதியையும்‌, ஆதிவாஹிக ஸத்காரத்தையும்‌ (பரமபத) திவ்ய தேச ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமானத்தையும்‌ ஆனந்த மயமான ஆஸ்தானத்திலிருப்பையும்‌ ஸ்வ சரண கமல ப்ராப்தியையும்‌ பெற்றாராகப்‌ பேசும்படியும்‌ பண்ணி வைத்தான்‌. அதெல்லாம்‌ பேசப்படுகிறது இத்திருவாய்மொழியில்‌. 
    பத்தாம்பத்தில்‌ பத்தாம்‌ பதிகம்‌ முனியே நான்முகனே --கீழே அர்ச்சிராதிமார்க்க கதியைப்‌ பறக்கப்பேசி *அந்த மில்‌ பேரின்பத்து அடியரோடிருந்தமை* என்றார்‌. திருக்கண்களைத்‌ திறந்து பார்த்தவாறே திருப்புளியாழ்வாரடியிலேயே தாம்‌ விற்‌றிருக்கக்கண்டார்‌. நித்ய முக்தர்களின்‌ திரளிலே யிருந்ததாகச்‌ சொன்ன இருப்பு, ஜ்ஞாநாநுஸந்தான மாத்திரமாயிருந்தது. ப்ரக்ருதி யிலேயே தாம்‌ சிக்குண்டிருக்கிறபடியை கண்டு போர நொந்தார்‌.தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்யகதித்வத்தையும்‌ நன்‌குணர்ந்த எம்பெருமான்‌ இன்னமும்‌ தம்மை இப்படி நோவுபட விட்‌டிருப்பது என்னே! என்று மிகவும்‌ கிலேசித்து மாதா பிதாக்கள்‌ அருகேயிருக்க பசியாலும்‌ தாஹத்தாலும்‌ நோவு படுகிற ஸ்நந்தயப்‌ பிரஜை ஆர்த்தியின்‌ மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக்‌ கூப்பிடுமா போலே. ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதாருடைய ஹ்ருதயங்‌களுங்கூட இரங்கும்படியாகவும்‌, அவனுக்கு, நம்மை ரஷித்தல்லது. பரம பதத்திலும்‌ இருப்பு அரிதாம்படியாகவும்‌ காட்டுத்‌ தீயிலே அகப்பட்டாரைப்‌ போலே ஆர்த்த த்வநியோடே பெருமிடறு செய்து கூப்பிட்டு அவனும்‌ வந்து தோற்றி இவருடைய ப்ரக்ருதிஸம்பந்‌தத்தை யறுத்து அடியார்‌ தம்‌ திரளிலே கொண்டு சேர்க்க, தாம்‌ க்ருத க்ருத்யராய்‌ அவாவற்று வீடுபெற்ற படியைப்‌ பேசுகிறார்‌ இத்‌ திருவாய்மொழியில்‌, -பரம போக்யமான நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்‌ :- “இப்ப்ரபந்தத்துக்கு ப்ரமேயமான வஸ்து ஸர்வேச்வரன்‌; இப்‌ ப்ரபந்தம்‌ - அவாவிலந்தாதி, மயர்வறமதிநலம்‌ மருளப்‌ பெற்றவர்‌ கவி பாடினார்‌! இனி இவருடைய அவதாரம்‌ தான்‌ ஸர்வேச்வரனுடைய அவதாரத்தோபாதி ஸாதுக்களுடைய ஸுூக்ருத பலம்‌.”,
    
    
    
    
    

    —————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-14-

    July 26, 2025
    1-காலக்ஷேபமென்பதுபற்றிய விளக்கம்‌-“முன்னவராம்‌ நம்‌ குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌, முழு துமக்கவைபொழுது போக்காகப்‌ பெற்றோம்‌” என்று மணவாளமாமுனிகள்‌ பணித்தபடியே பெரியோர்‌ 
    களுடைய ஸ்ரீஸூக்திகளைக்கொண்டு போது போக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப்பயன்‌. * “கரவ்ய சாஸ்த்ரவிநோதே௩ காலோ கச்சதி தீமதாம்‌, அந்யேஷாம்‌ து மநுஷ்யாணாம்‌ நித்ரயா நிந்தயா வா? * என்கிற ச்லோகமொன்று யாவருமறிந்ததே,
    திருமழிசையாழ்வார்‌ நான்முகன்‌ திருவற்‌ தாதியில்‌ (69) * தரித்திருர்தேனாகவே ர... தெரித்தெழுதி, வாசித்துங்‌ கேட்டும்‌ வணங்கி வழிபட்டும்‌, பூசித்தும்‌ போக்கினேன்‌
    போது”
    * என்‌றருளிய பாசுரம்‌ ஒவ்வொருவரும்‌ ஙிச்சலும்‌ நினைக்கத்‌ தக்கது. போதுபோக்கும்‌ விதத்தை இவரைப்போல்‌ எடுத்துரைத்‌ தவர்‌ மற்றுயாருமில்லை. தெரித்தல்‌, எழுதுதல்‌, வாசித்தல்‌, கேட்டல்‌ வணங்குதல்‌, வழிபடல்‌, பூசித்தல்‌ ஆகிய இவற்றினாலேயே தாம்‌ போதைப்‌ போக்கினதாகவும்‌ இவையில்லையாயின்‌ தம்மால்‌ உயிர்‌ தரிக்க முடியாதாகவும்‌ வ்யக்தமாக விளம்பியுள்ளார்‌. நம்மாழ்வார்‌. அருளிச்‌ செய்வதோ இதனிலும்‌ விலகஷணமானது) அதாவது
    பெரிய திருவந்தாதியின்‌ முடிவில்‌ (பா. 86)* கார்‌ கலந்த மேனியான்‌. கைகலந்தவாழியான்‌, பார்கலந்த வல்வயிற்றான்‌ பாம்பணையான்‌,
    சீர்கலந்த சொல்‌ நினைந்து போக்காரேல்‌ சூழ்வினையினாழ்‌ துயரை,
    “என்னினைந்து போக்குவரிப்போது,”
    * என்றுள்ள யாசுரம்‌ சுவை மிக்க பொருளுடைத்து-ஸ்ரீராமாயண
    பாரதாதி இதிஹாஸங்களைக்கொண்டும்‌, ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ முதலிய புராணங்களைக்கொண்டும்‌, அருளிச்‌ செயல்களைக்கொண்டும்‌ பாவத்தைப்‌ போக்கிக்கொள்ளார்களாகில்‌ அதுபற்றி விசாரமில்லை; போதைப்‌ போக்குவதற்கு இவையொழிய வேறு என்ன ஸாதனமுள்ளது! என்று கூறின ஆழ்வாரை வழிபடுகின்ற நாம்‌ நம்முடைய போதை எப்படிப்‌ போக்க ஆசைப்பட வேணுமென்று இன்னமும்‌ விவரிக்கவேணுமோ ? அது நிறைவேறாவிடிலும்‌ அதனை ஆசைப்பட்டாலே போதும்‌.

    வேம்புக்குள்ள கசப்பும்‌ மாதுளைக்குள்ள புளிப்பும்‌, கரும்புக்குள்ள தித்திப்பும்‌ முதலியன எப்படி ஒரு நாளும்‌ மாறுவதில்லையோ, அப்‌ படியே மனிதர்களுக்கும்‌ ஜன்மஸித்தங்களான குணங்கள்‌ (நல்லவையோ தீயவையோ) பேர்க்கவும்‌ பேரா என்றே பெரியார்‌ கூறுவர்‌.

    திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ அற்புதமாக ஒரு பாசுரம்‌ அருளிச்‌ செய்கிறார்‌; அதாவது (5--9--5) *கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகங்கொண்டவடியன்‌, அறிவருமேனி மாயத்தன்‌*2- -இத்யாதி--*கடியன்‌”'--தன்காரியத்தை ஸாதித்துக்கொள்வதிலேகனவேக முடையவன்‌. அதாவது, தனக்கு விருப்பமுண்டானால்‌ தானேவக்து மேல்‌ விழுந்து விரைந்து கலக்குமவன்‌ என்கை, “கொடியன்‌” எதிர்த்தலைபடுகிற கஷ்டங்களைப்‌ பாராதே கல்நெஞ்சனாய்ப்‌ பிரிந்து,போமவன்‌; ““நெடியமால்‌” மிகவும்‌ பெரியவன்‌ என்பது இச்‌ சொல்லின்‌ பொருள்‌. இதன்‌ கருத்தாவது, மேல்விழுந்து கலக்கும்‌ போது பிரிய வேணுமென்று நினைப்பன்‌, அப்படி அவன்‌ நினைத்ததை யறிந்து “என்னாயனே! பிரியலாகாது பிரியலாகாது” என்று கால்கட்டி விலக்கப் பார்க்கலாமே, அப்படி விலக்குவதற்குக்‌ கூசி நடுங்கி அஞ்சியிருக்க வேண்டும்படி திடீரென்று பரத்துவம்‌ பாராட்டி நிற்பவனென்கை.' உலகங்கொண்ட வடியன்‌”-பிறருடைமையைத்‌ தனக்காக்கிக்‌ கொள்ள நினைத்தால்‌ பின்னை அவர்களுக்கு ஒன்றும்‌ மிச்சப்படாதபடி பண்ணி அவர்களைப்‌ பாதாளத்திலே கள்ளுமவன்‌. “அறிவருமேனிமாயத்தன்‌ *வடிவைக்கண்டால்‌ ஸர்வஸ்வதானம்‌ பண்ணவிருக்கிருனோ? அன்றி ஸர்ஸ்வத்தையும்‌ கொள்ளைகொள்ள விருக்கிருனோவென்று தெரிந்து கொள்ளமுடியா தபடி ஆச்சரியமான தன்மையையுடையவன்‌, அடியேன்‌ சிறியேன்‌ குடியேனென்று சில சொல்லி மயக்கிக்‌ கண்ணிலே மணலைத்தூவி யோடிப்போவன்‌. “ஆகிலும்‌ கொடியவென்னெஞ்சம்‌ அவனென்றே கிடக்குமெல்லே” என்கிற மூன்றாமடி அமைந்தது. -ஆக இதனால்‌ பெரியார்‌ திறத்தில்‌ நமது பக்தி. ஸ்வருப ப்ராப்தமா
    யிருக்க வேணுமேயல்லது குணப்ரயுக்தமன்று
    என்றதாயிற்று.
    நிறையப்‌ பழங்கள்‌ பழுத்துத்‌ தொங்கப்பெற்ற மரங்களின்மீது கல்லடியும்‌ தடியடியும்‌ விழுமேயல்லது மொட்டை மரத்தையும்‌ மலட்டு மரத்தையும்‌ அடிப்பாரார்‌? அதுபோல்‌, ஞானானுட்டானங்கள்‌' நிரம்பியும்‌, பலவகைகளில்‌ 'புகழ்பெற்றும்‌, பலரால்‌ வணங்கப்பட்டும்‌ விளங்குகின்‌ற மஹான்கள்‌ பேரில்தான்‌ தூஷணைகள்‌ ஏற்படுமே

    ஸ்ரீராமாயணத்தில்‌ யுத்தகாண்ட த்தில்‌-
    **மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம்‌ ௩: ப்ரயோஜறம்‌, க்ரியதாமஸ்ய ஸம்ஸ்கார : மமாப்யேஷ யதா தவ? -என்பது, ஸ்ரீவிபீஷ்ணாழ்வானை நோக்கிப்‌ பெருமாளருளிச்‌ செய்த தொரு சுலோகம்‌-பெருமாள்மீது இராவணன்‌ பகைபாராட்டி யிருந்தானே யல்லது இராவணன்மீது பெருமாள்‌ சிறிதும்‌ பகை பாராட்டியீருந்த தில்லை.
    “ஜிபீஷணோ வா ஸுக்ரீவ! யதிவா ராவணஸ்‌ ஸ்வயம்‌!” என்‌ றருளிச்‌ செய்த பெருமாளுடைய திருவுள்ளத்திற்கும்‌ இணங்கவல்லதான பொருளன்றோ பணிக்கவேணும்‌. அதை நம்பிள்ளைதானே பணிக்க வல்லவர்‌.-[“மரணாந்தாநி வைராணி”] ரிஷிகளின்‌ குடியிருப்பை யழித்து மைதிலியைப்‌ பிரித்து, ஈம்‌. உயிர்நிலையிலே நலிந்தாப்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தவிவையெல்லாம்‌ செய்ய மாட்டானே இவன்‌ இனி.-[“நிர்வ்ருத்தம்‌ ந: ப்ரயோஜாம்‌.?] இவன்‌ ஜீவிக்கிற நாளிலே நாம்‌ செய்யும்‌ நன்மை இவன்‌ விலக்காதொழிய வேணுமென்று,
    இத்தனையே எண்ணியிருந்தோம்‌ ; அது அந்நாளில்‌ பெற்றிலோம்‌. நாம்‌ தேடியிருந்த அது முந்துறமுன்னம்‌ ஸித்திக்கப்‌ பெற்றோமிறே. [“க்ரியதாம்‌ அஸ்ய ஸம்ஸ்கார :!] இவன்‌, நாம்‌ செய்யும்‌ நன்மை விலக்காதவனானவளவு பிறந்தவின்றும்‌ நாம்‌ இழக்க
    வேணுமோ? வேண்டுவன செய்யப்‌ பாரும்‌. [“மமாபி ஏஷ யதா தவ.)':] நீர்‌ இருய்த்திருந்தீராகில்‌, குடல்‌ துடக்குடையாரிலே ஒருவன்‌ செய்யுமித்தனை யன்றோ; நாம்‌ இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர்‌ பின்னைக்‌ கடக்க நில்லீர்‌.” என்று -“£வைரம்‌”” என்று ஏக வசனமாக அன்றிக்கே “வைராணி”' என்று பஹுவசனமாக இருப்பதையே முக்கியமாக நம்பிள்ளை குறிக்கொண்டு ரஸமயமான வியாக்கியானம்‌
    செய்தருளினா ரென்றுணர்க. '*வைராணி” என்‌றது-வைரகார்யாணி என்றபடி

    எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவையெல்லாம்‌ திருவாய்மொழியின்‌ திருவவதாரத்தினாலும்‌ ஈன்கு தேறுகின்‌றன-ஸாதுபரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்‌-*சாதுசனத்தை றலியுங்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்‌ சோதியுருவை அங்குவைத்திங்குப்‌ பிறந்த வேத முதல்வன்‌* *நண்ணாவசுரர்‌ நவிவெய்த ஈல்லவமரர்‌ பொலிவெய்த-பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌
    யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி
    ” *நண்ணாவசுரர்‌ நவிவெய்த ஈல்லவமரர்‌ பொலிவெய்த வாய்த்து திருவாய்மொழி தான்‌ அவதரித்தது. ஸ்துத்யனுடைய அவதாரம்‌ போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்‌.” -திருவாய்மொழி யென்றும்‌ ஸ்ரீராமாயண மென்றும்‌ இரண்டு வலிய மதிள்கள்‌ என்றுமழியமாட்டா தபடி.
    யன்றோ வுள்ளன, அந்த மதிள்‌ களை இவன்‌ அசைக்கவும்‌ முடியாதவனன்றோ, என்று சொன்னானாம்‌. ஆகவே

    1. அஜ்ஞாற நிவர்த்தகத்வம்‌, 2. ஜ்ஞாஈப்ரதத்வம்‌. 3. பக்தி ப்ரதத்வம்‌ ஆகிற. இம்மூன்றும்‌ திருவாய்மொழிக்குமுண்டு. எங்ஙனேயென்னில்‌ : தோரிமாறன்‌ சடகோபன்‌ ஒலி புகழாயிரத்திப்‌ பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால்‌ அஜ்ஞா௩ நிவர்த்தகத்வமும்‌வண்சடகோபன்‌ தெருள்கொள்ளச்‌ சொன்னவோராயிரம்‌!” என்ற பாசுரத்தினால்‌ ஜ்ஞா௩ ப்ரதத்வமும்‌,குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன, தூயவாயிரத்திப்பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்‌றியே”' என்ற பாசுரத்தினால்‌ பக்தி ப்ரதத்வமும்‌ திருவாய்‌ மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,

    எம்பெருமான்‌ நம்மைத்‌ தனக்கு அநந்யார்ஹற சேஷமாக அங்கீகரிப்பவன்‌ என்பது “வெறித்துளப முடியானே ! வினையேனை உனக்கடிமை அறக்கொண்டாய்‌'' என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. -திருவாய்மொழியும்‌ ஈம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ
    சேஷமாக்கு மென்னுமிடம்‌ “தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்‌விளங்கும்‌.

    எம்பெருமான்‌ ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தாயிருப்பவன்‌ என்னுமிடம்‌ அறிக்தனரெல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌ -திருவாய்மொழியும்‌ ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும்‌ உகுமாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம்‌ *தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல்தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌

    எம்பெருமான்‌ பக்தர்கட்குப்‌ பரமப தத்தை யளிப்பன்‌ என்னுமிடம்‌ “ஏுற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு-ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்கவரியே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ பரமபத ப்ராப்தியைப்‌ பண்ணிவைக்கு மென்னுமிடம்‌ “கோனை வண்குருகூர்‌ வண்சடகோபன்‌ சொன்னவாயிரத்‌ துளிப்பத்தும்‌ வானின்மீதேற்றி யருள்செய்து'” என்ற பாசுரத்தினால்‌
    விளங்கும்‌.

    எம்பெருமான்‌ நம்மைத்‌ திருவடிகளின்கீழ்ச்‌ சேர்த்துக்‌ கொள்ளுமென்னுமிடம்‌ “பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்செய்யும்‌ சேமம்‌” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ அவன்‌ திருவடிகளின்கீழே சேர்த்து
    வைக்குமென்னுமிடம்‌ £“திருமாலாலருளப்பட்டசடகோபன் சொல்லாயிரத் துளிப்‌பத்தால்‌ அருளியடிக்கீழிருத்தும்‌'? என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

    எம்பெருமான்‌ தன்னோடு அந்வயித்தவர்களுக்குத்‌ தன்னுடைய அநுபவமாகிற நிரதிசயாறந்த யுக்தமான ப்ராப்யத்தைக்‌ கொடுப்பன்‌ என்னுமிடம்‌ “தெளிவுற்று விவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்‌ தெளிவு ற்ற கண்ணன்‌”? என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்பால்‌ அங்வயித்தார்க்கு
    பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு. மென்னுமிடம்‌ **வண்குரு. கூர்ச்சடகோபன்‌ இங்ஙனே சொன்னவோராயிரத்துளிப்‌ பத்து எங்ஙனே சொல்லிலுமின்‌ பம்‌ பயக்குமே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌

    எம்பெருமான்‌ தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவத்ரவ்யமாம்படி உருக்குவனென்னுமிடம்‌ ““ஊடுபுக்கு எனதாவியை யுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப்பண்டமாக உருக்குமென்னுமிடம்‌ “தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லாயிரத்துள்ளிவை ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகுமுருகுமே” என்கிற பாசுரத்தினாலும்‌' ““டூதா ற்றங்களாயிரத்துள்‌' இவையுமொருபத்தும்‌ வல்லார்‌ ஊற்றின்கண்‌ நுண்மணல்போல்‌ உருகாநிற்பர்‌ நீராயே!” என்கிற பாசுரத்தினாலும்‌ விளங்கும்‌,

    ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாச்யனான அந்த ஸர்வேச்வரனுடைய *பத்தினாய தோற்றம்‌!” என்கிற பத்து அவதாரம்போலே “டூதாற்றங்களாயிரம்‌'! என்கிற இதனுடைய பத்துப்பத்தான ஆவிர்ப்பாவமும்‌-என்று அறியத்தக்கது. எம்பெருமான்‌ லோக ரக்ஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும்‌ லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்‌றதாயிற்று.

    ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள்‌ உண்டாகின்றன. (1) அற்ப விலைக்கு மாறுதல்‌ (2) உள்ள விலைக்கு மாறுதல்‌ (8) விலைக்கு ஆட்படாமல்‌ ஸ்வயம்‌ போக்யமாகக்‌
    கொள்ளப்படுதல்‌ என மூன்று வகைகள்‌
    . ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால்‌ கூடுகின்ற படியை பிரபத்தி விஷயத்திலும்‌ தெளிவாகக்‌ காணவேணும்‌. ரத்னத்தின்‌ மதிப்பை அறியமாட்டா து அதனை அற்ப விலைக்கு விற்கும்‌ செம்படவனைப்போல்‌ பிரபத்தியின்‌ சீர்மையை அறிய மாட்டாத சிற்றறிவாளர்‌ ப்ரபத்தியை ஐச்வர்யகைவல்யாதி க்ஷுத்ர பலன்களுக்கு ஸாதனமாக்கினால்‌ அது ஆகியே தீரும்‌. ரத்னத்‌தைக்‌ குறைந்த விலைக்குக்‌ கொடாதே தகுந்த விலைக்குக்‌ கொடுக்கும்‌
    வியாபாரியைப்‌ போன்ற மத்யமாதிகாரிகள்‌ ப்ரபத்தியை மோக்ஷ ஸாதனமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக்‌ கொள்ளாதே உயர்ந்த மோக்ஷ பலனையே கொண்டால்‌ உபாயத்வாபிமானம்‌ அவ்யாஹதமா யிருக்கும்‌, ரத்னத்தை ஒன்றுக்கும்‌ ஸாதனமாக்‌காதே ஸ்வயம்‌ போக்யமாகக்‌ கொள்ளும்‌ மஹாராஜனைப்‌ போன்ற
    உத்தமாதிகாரிகள்‌ ப்ரபத்தியை ஒன்றுக்கும்‌ ஸாதனமாகக்‌ கோலாதே ஸ்வயம்‌ புருஷார்த்தமாகக்‌ கொண்டு வர்த்திப்பர்கள்‌
    .

    ரோமசரென்பவர்‌ சரிரமுழுவதும்‌ கரடிபோல்‌ அடர்ந்த ரோமங்‌களையுடைய ஒரு மாமுனிவர்‌ தவம்‌ புரிந்தார்‌, “உள்ளுவா ருள்ளிற்றெல்லா முடனிருந்தறியு மெம்பெருமான்‌” இவருடைய அபிலாஷையை மோக்கி மிகவும்‌ மகிழ்ந்து இவர்‌ முன்னே வந்து ஸேவை தந்தருளி “உம்முடைய விருப்பத்தைக்‌ கூசாதே வேண்டிக்‌
    கொள்ளும்‌”? என்று சோதிவாய்‌ திறந்து அருளிச்‌ செய்தான்‌. அது கேட்டு உவந்த மாமுனிவர்‌ “பரந்தாமா! பரஞ்சோதி! பரம புருஷா! இவ்வுடம்போடே உன்னை வெகு காலம்‌ வழிபடவேணுமென்று பேராசை கொண்டிருக்கிறேன்‌ கான்‌; அனேகமாயிரம்‌ ப்ரஹ்மாக்க ூடைய ஆயுளை என்னொருவனுக்குக்‌ கல்பித்தருளினால்‌ மஹா
    ப்ரஸாதமாகும்‌!? என்று ' கைகூப்பி விண்ணப்பஞ்‌ செய்ய, எம்‌பெருமான்‌ அப்படியே திருவுள்ளமுவந்து “முனிவரே! ப்ரஹ்மாவினுடைய ஆயுளின்‌ அவதி உமக்குத தெரிந்ததே; ஒரு பிரமன்‌ காலஞ்சென்றால்‌ உம்முடைய உடம்பினின்றும்‌ ஒரு ரோமம்‌ இற்று விழக்கடவது; இப்படி ஒவ்வொரு ப்ரஹ்மாவின்‌ முடிவிலும்‌ ஒவ்வொரு மயிராக இற்று விழுந்து “இனி உம்முடைய உடம்பில்‌ ஒரு ரோமமும்‌ இல்லை' என்று சொல்லத்தக்க நிலைமை நேருமளவும்‌ நீர்‌ ஜீவித்திருந்து வழிபாடு செய்வீர்‌” என்று வரம்‌ தந்தருளி மறைக்‌திட்டனன்‌. அவர்‌ காழிச்சிராம விண்ணகரம்‌ [சீர்காழி] என்னும்‌
    க்ஷேக்திரத்தில்‌ அவ்வண்ணமா கவே நெடுக ஜீவித்திராந்து வழிபாடு செய்து வருகிறார்‌. இக்கதை மேற்குறித்த திருப்பதியின்‌ பதிகத்தில்‌ இரண்டாவது பாசுரத்தில்‌ “ான்முகனாள்‌ மிகைத்தருக்கை யிருக்கு. வாய்மை நலமிகுசிர்‌ உரோமசனால்‌ (அவித்து) நவிற்றி?! என்று திருமங்கையாழ்வாரால்‌ அறநுஸந்திக்கப்பட்டுள்ளது.

    பெரிய திருமொழியில்‌ (6-6-6) “தன்னாலே தன்னுருவம்‌ பயந்த தானாய்‌!” என்கிற பாசுரத்தின்‌ மூன்றாமடியில்‌ “*மின்னாடு வேலேந்து விளைந்த வேளை?” என்றே பலரும்‌ ஓதிவரக்‌ காண்கிறோம்‌;“விளந்தை வேளை" என்று திருத்தி ஓதவேணுமென்று பெரியார்‌ சிக்ஷிக்கிறார்கள்‌.. குடந்தை, அழுந்தை, அயிந்தை என்னுமாபோலே விளந்தை என்‌பது ஒரு ஊர்‌, அவ்வூரரசனுக்கு “விளந்தைவேள்‌ என்று பெயர்‌.
    வேற்படை. வல்லவனான அவ்வரசனை வென்று உலகமாண்டவனான ஒரு சோழன்‌ சேர்ந்தகோயில்‌ திருநறையூர்‌ என்பது பொருள்‌.

    பெரிய திருமொழியில்‌ (7-4-9) *கள்ளத்தேன்‌ பொய்யகத்‌தேன்‌ என்கிற பாசுரத்தில்‌ “ஆதலால்‌ போதொருகால்‌” என்றே ஓதிவருகின்‌ றனர்‌; பழைய புத்தகப்‌ பதிப்பும்‌ அங்ஙனே காண்கிறது -“போதொருகால்‌! என்பதற்கு இங்கு அர்த்தம்‌ புலப்படவில்லை. போதருகால்‌” எனத்‌ திருத்தவேணும்‌. “போதருகால்‌-நிகமுங்கால
    மெல்லாம்‌”
    என்றபடி

    “இராவணன்‌ கையிற்‌ கொலை யுண்பதைவிட இராம பாணத்தாற்‌ கொலையுண்டு
    முடிதல்‌ கன்று! என்கிற எண்ணத்தோடு வந்த மாரிசனுக்கு இராவணன்திறத்தில்‌ உபகாரம்‌ செய்ய வேணுமென்கிற எண்ணமுண்டாக ப்ரஸக்தியில்லை ; நாம்‌ மாண்டொழிவதுபோல்‌ அவனையும்‌ மாண்டொழியச்‌ செய்து விடவேண்டும்‌' என்‌ற எண்ணங்‌ கொண்டே இராகவனைப்போல்‌ கூச்சலிட்டிருக்கவேண்டும்‌, மாரிசன்‌ இப்படி.
    கூச்சலிடாமல்‌ வெறுமனே செத்திருப்பானாகில்‌ பிராட்டி லக்ஷ்மணனை வெருட்டியனுப்ப நேர்ந்திராது; இராவணன்‌ பிராட்டியைக்‌ கவர்ந்து போகவும்‌ அது நிமித்தமாக அவன்‌ மாண்டு போகவும்‌ நேர்ந்திராது. தேவர்களின்‌ வேண்டுகோள்‌ ஈடேறவும்‌ வழியிராது. மரணகாலத்தில்‌ மாரீசன்‌ போட்ட கூச்சலே ராவண
    ஸம்ஹாரத்திற்கு மூலகாரணமாக நின்றமையால்‌ ஸ்ரீராம விஷயத்‌ திலே மாரீசன்‌ உபகாரகனேயன்றி அபகாரகனல்லன்‌ என்று நினைக்கலாமல்லவா ? “அப்ரமேயம்‌ ஹி தத்‌ தேஜோ யஸ்ய ஸா ஐுகாத்மஜா'” என்று வேதாந்த விழுப்பொருளை நிலையிட்டவனுன மாரீசனைப்‌ பரமபாகவதனென்று கொள்ளுவது அநுசிதமுமாகாது.

    கம்பராமாயணத்தில்‌ அயோத்தியா காண்டம்‌-கங்கைப்‌ படலத்தில்‌ ஆறாவது செய்யுள்‌--*அருப்பேந்திய கலசத்துணை” என்று தொடங்குவது, இதில்‌ மூன்றாமடி. “*கருப்பேந்திர முதலாயின. கண்டாளிடர்‌ காணாள்‌” என்பது. இராமனோடு காட்டிற்‌ சென்ற பிராட்டி எதைக்‌ கண்டும்‌ அஞ்சவில்லையென்று சொல்லும்‌ பிரகாணத்திலுள்ள செய்யுள்‌ இது, இங்குக்‌ *கருப்பேந்திரம்‌' என்பதற்குப்‌ பொருள்‌ யாது? என்று ஆராயவேணும்‌. *கரும்பு ஏந்திரம்‌! என்று பிரித்து “கரும்பாலை” என்று பொருள்‌ எழுதியுள்ளார்கள்‌; வால்மீகி ராமாயணத்தில்‌--*கஜம்‌ வா வீக்ஷ்ய ஸிம்ஹம்‌ வா வ்யாக்ரம்‌ வாபி வராங்கநா, நாஹாாயதி ஸம்த்ராஸம்‌ பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா*” என்றுள்ள ச்லோகத்தை யடியொற்றியே கம்பர்‌ இச்செய்யுளை இயற்றியுள்ளார்‌ என்று பெரியோர்‌ கூறுவர்‌. ஸீதாபிராட்டி காட்டிலே செல்லும்போது யானை, சிங்கம்‌, புலி முதலிய கொடிய விலங்குகளைக்‌ கண்டவிடத்தும்‌ சிறிதும்‌ அஞ்ச வில்லை! புதிய வஸ்துக்களைக்‌ கண்டதனாலுண்டாகும்‌ வியப்பே அவளுக்குத்‌ தோன்றியது; இராமபிரானுடைய திருத்தோள்களை அண்டைகொண்ட மிடுக்குத்‌ தான்‌ இதற்குக்‌ காரணம்‌--என்பது மேற்குறித்த ச்லோகத்தைக்‌ கூறின வால்மீகி முனிவரின்‌ கருத்‌தாகும்‌, இக்கருத்துப்‌ படவே கம்பர்‌ இச்செய்யுள்‌ இயற்றினா ரென்றால்‌ மிக்க பொருத்தமா யிருக்கின்றது. வடமொழி நிகண்டு ஒன்‌றில்‌ “கர்ப்பேந்த்ரஸ்‌ ஸிம்ஹபக்ஷக:? என்று காணப்படுதலால்‌, சிங்கத்தைக் கொன்‌று தின்ன வல்ல யாளியே இங்குக்‌ கருப்பேந்திர மெனப்பட்டது என்றால்‌ பொருத்தமல்லவா?. கரும்பாலையைக்‌ கண்‌டால்‌ இடர் காண்கைக்கு [அஞ்சுதற்கு] ப்ரஸக்தி யிருந்தாலன்றோ அதைக்‌ கண்டு இடர்காணாளென்னத்‌ தகுவது.

    தர்ப்போதக்ரதசேந்தரியாநநமநோகக்தஞ்சராதிஷ்டிதே
    தேஹேஸ்மிக்‌ பவஸிந்துநா பரிகதே தீரம்‌ தசாமாஸ்தித !
    அத்யத்வே ஹநுமத்ஸமேஈ குருணா ஸம்போதிதார்த்தஸ்ஸுதீ 3
    லங்காருத்தவிதேஹராஜதநயாக்யாயேஈ லாலப்யதே
    *-என்கிற ச்லோகத்தை முதலியாண்டானது வார்த்தைகள்‌ யடியொற்றி ஸங்கல்பஸூர்யோதயத்திலே பணித்தருளினார்‌, எம்பெருமானோடு இணை பிரியாமல்‌ கூடி.வாழ்வதற்கு இட்டுப்‌ பிறந்த சேதநன்‌ அவனைவிட்டு விலகி ஸம்ஸாரஸாகர த்தினிடையே கிடந்தலற்ற, ஞானமனுட்டான மிவை ஈன்றாகவே உடையனான வொரு ஆசாரியன்‌ வந்து பகவத்‌
    விஷயத்தையுணர்த்தி இருவரையும்‌ ஒன்று சேர்ப்பதான ஸம்பிரதாய விருத்தாந்தம்‌ நினைவுக்கு வரும்‌. திருவடிக்கு ஸ்ரீ ராமாயணத்தில்‌ ஆசாரிய ஸ்தானம்‌ கிடைத்திருக்கின்றது
    . அந்தத்‌ திருவடியின்‌ தன்மையும்‌ ஆசாரிய லக்ஷணாமும்‌ பக்ஷ ௪ சாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட : புற : புறச்சோத்தமஸாந்த்வவாதீ ஸுஸ்வாகதாம்‌ வாசமுதீரயா௩ ; புற: புகச்‌ சோதயதீவ ஹ்ருஷ்ட :-இருபத்தேழாவது ஸர்க்கத்தின்‌ முடிவிலுள்ள சுலோகம்‌ -சாகாநிலய: என்பதன்‌ உள்ளுறை --ஞான மனுட்டானமென்னும்‌ இரண்டு ஸாதனங்களினால்‌ உச்சைர்‌ கதியை யடையவல்லவன்‌
    ஆசாரியன்‌;-'*உபாப்யாமேவ பக்ஷாப்யாம்‌;ஆகாசே பக்ஷிணாம்‌ கதி:, ததைவ ஜ்ஞாரகர்மப்யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம: என்கிற. ப்ரமாண வசனமும்‌, இதையநுஸரித்து அவதரித்த “*சேர்ப்பாரைப்‌: பக்ஷிகளாக்கி ஜ்ஞானகர்மங்களைச்‌ சிறகென்று குருஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்யஸ்தாறே பேசும்‌!” என்கிற ஆசார்யஹ்ருதய சூர்ணையும்‌ இங்கே அநுஸந்தேயம்‌.-சாகரநிலய:] சாகையென்று கிளைக்குப்‌ பெயராயிருப்பது போலே வேதத்திற்கும்‌ பெயராயிருக்கும்‌. *யஜாச்சாகாத்யாமீ,
    ஸாமசாகாத்யாயீ” என்று வழங்கி வருகிறோமல்லவா-ப்ரஹ்ருஷ்ட :] மிக்க மகிழ்ச்சியையுடையவனென்று பொருள்‌. ஆசாரியன்‌ எப்போதும்‌ ஸந்தோஷமே வடிவெடுத்த சிந்தையை யுடையனாயிருப்பன்‌. ஆறந்தமயனான எம்பெருமானையே அனவரதம்‌ சிந்தை செய்வதனால்‌ இவனும்‌ ஆனந்தமயனாகவே ஆய்விடுவன்‌.
    “திருமாலுருவோடு அவன்‌ சின்னமே பிதற்றாறிற்பதோர்‌ திருமால்‌. தலைக் கொண்டாங்கட்கு எங்கே வரும்‌ தீவினையே” என்கிற திருவிருத்தப்‌ பாசுரமே நித்யாநு ஸ்தானமாக இருக்கப்பெற்றவர்‌களிடத்தில்‌ ஹர்ஷ ப்ரகர்ஷம்தவிர வேறொன்றுக்கு அவகாச முண்டோ? தேஹ யாத்திரையிலும்‌ ஆத்ம யாத்திரையிலும்‌ கவலை
    யற்றிருப்பவர்களே ஆசார்ய பதவிக்கு அர்ஹர்களாதலால்‌ அன்னவர்கட்கு ப்ரஹர்ஷமொழிய வேறில்லை,

    உத்தமஸாந்த்வவாதி என்பதன்‌ உள்ளுறை -மிகச்சிறந்த ஹிதோபதேசங்‌களுக்கு ஸாந்த்வ வாதமென்று பெயர்‌. சிஷ்யர்களின்‌ நிர்ப்பந்தத்திற்‌காக வன்றிக்கே தன்பேறாக அடுத்தடுத்து ஹிதோயதேசம்‌ பண்ணுமவர்‌ எவரோ அவரே உத்தமரான ஆசாரியர்‌. திருக்கோட்டியூர்‌ நம்பியைவிட எம்பெருமானார்க்குண்டான ஏற்றம்‌ இங்கு அநுஸந்‌திக்கத்தக்கது. திருத்திப்‌ பணி கொள்ள வல்லாரைச்‌ சொல்லுகிறது, ஸ்வாகதாம்‌ என்றது -ஸ்வஸ்மை ஆகதாம்‌ என்றபடி, ஸுஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்‌-
    ஸ்வாகதாம்‌.
    ஸ்வகபோல கல்பிதமான அர்த்தங்களை மனம்போனபடியே சொல்லுகையன்‌றிக்கே முன்னோர்‌ மொழிந்த முறை தப்பாமல்‌ கேட்டுப்‌ பின்னோர்ந்து. தாமதனைப்‌ பேசுமவரே உத்தமரான ஆசாரியராதலால்‌ அதைத்‌ தெரிவித்தபடி.
    “பணிமானம்‌ பிழைய।மே அடியேனைப்பணிகொண்ட” என்ற திருவாய்‌ மொழிப்‌ பாசுரப்‌
    படிக்கும்‌, “ஸ்காலித்யே சாஸிதாரம்‌” என்ற ந்யாஸ விம்சதிஸஃத்திப்‌ படிக்கும்‌ தவறுகள்‌ நேருங்‌ காலங்களில்‌ நிர்‌ தாக்ஷிண்யமாக சிக்ஷிப்‌ பவரே உத்தமாசார்யராவர்‌;அதுவே இங்குப்‌ பொருளாக விவஷிதம்‌,
    ஆக இந்த ச்லோகம்‌ உத்தமாசார்யருடைய படியையே தெரிவிப்ப தாயிற்று, இனி இதற்குச்‌ சார்பான கம்பர்‌ பாசுரங்கேண்மின்‌,
    அஞ்சிலே யொன்று பெற்றான்‌ அஞ்சிலேயொன்றைத்தாவி
    அஞ்சிலே யொன்றாறாக ஆரியர்க்காக வேகி
    அஞ்சிலே யொன்று பெற்ற அணங்குகண்டயலாருரில்‌
    அஞ்சிலே யொன்று வைத்தானவன்‌ நம்மையளித்துக்‌ காப்பான்‌
    .” அஞ்சிலே” என்கிற சொல்‌ ஐந்து தடவை வந்துள்ளதன்றோ. அவ்வைக்து தடவைகளிலும்‌ பஞ்ச பூதங்களாகிற ஐந்து தான்‌ பொருளாகக்‌ கொள்ளப்பட்டது முன்னம்‌ ; உள்ளுறை
    பொருளில்‌ அப்படியல்ல;முதலான அஞ்சு-பஞ்சஸம்ஸ்காரம்‌. இரண்டாவதான அஞ்சு-அர்த்தபஞ்சகம்‌, மூன்றாவதான அஞ்சு--உபாயபஞ்சகம்‌. நான்காவதான அஞ்சு--பரத்வாதிபஞ்சகம்‌, ஐந்தாவதான அஞ்சு--லோகபஞ்சகம்‌,-அஞ்சிலே யொன்று பெற்றான்‌-பஞ்சஸம்ஸ்காரங்களில்‌ ஒன்றான மந்த்ர ஸம்ஸ்காரத்தினாலே பிறவி பெற்றவனென்ற தாயிற்று. *அர்த்தபஞ்சகம்‌-அறியவேண்டுமர்த்தமெல்லாம்‌ இதுக குள்ளே யுண்டு; அதாவது அஞ்சர்த்தம்‌”-ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துச்‌ ௪ ப்ரத்யகாத்மஈ:.. ப்ராப்த்யுபாயம்‌ பலம்‌ ப்ராப்தேஸ்‌ ததா ப்ராப்தி விரோதி ௪. வதந்தி ஸகலாவேதா : ஸேதிஹாஸபுராணகா -மிக்க இறநிலையும்‌ மெய்யாமுயிர்கிலையும்‌ தக்கமெறியும்‌ தடையாகித்‌ தொக்கி யலுமுழ்வினையும்‌ வாழ்வினையுமோதுங்‌ குருகையர்கோன்‌ யாழி னிசை வேதத்தியல்‌:இவற்றுள்‌ ஒன்றைத்‌ தாவுகையாவது -- அர்த்த பஞ்சகத்தில்‌ ஒன்றான விரோதி ஸ்வரூபத்தைக்‌ கடத்தலாம்‌.
    முமுக்ஷுப்படியில்‌ “விரோதிதான்‌ மூன்று; ஸ்வரூப விரோதியும்‌ உபாய விரோதியும்‌ ப்ராப்ய விரோதியும்‌!? என்றருளிச்‌ செய்த படியும்‌, பட்டர்‌ அஷ்டச்லோகியில்‌, “மந்த்ரப்ரஹ்மணி மத்யமேஈ ஈமஸா?? என்கிற இரண்டாம்‌ ச்லோகத்திலே நிரூபித்தருளின படியும்‌ அவசியம்‌ களையவேண்டியவையாகத்‌ தேறுகின்ற பிரதிபந்தகங்‌களைக்‌ களைந்து என்றதாயிற்று. அஹங்காரமமகாரஸ்பர்ச மற்றவராய்‌, ஸ்வரக்ஷணே ஸ்வாற்வயரஹிதராய்‌, எம்பெருமானுடைய போகத்திற்கு ஹாநியை விளைவியாதவராய்‌ இருக்குமிருப்பைச்‌ சொல்லிற்றாயிற்று.
    அஞ்சிலே ஒன்று ஆறாக என்றதன்‌ உள்ளுறை உபாய பஞ்சகத்திலே ஆசார்யாபிமானமாகிற ஒன்றையே உபாயமாகக்கொண்டு என்றபடி. ஐந்து உபாயங்கள்‌ எவை யெனில்‌, கருமயோகம்‌, ஞானயோகம்‌, பக்தியோகம்‌, ப்ரபத்தி யோகம்‌, ஆசார்யாபிமானம்‌ என்னுமிவையேயாம்‌-ரச்வரனைப்‌ பற்றுகை கையைப்‌ பிடித்துக்‌ காரியம்‌ கொள்ளுமோ பாதி; ஆசார்யனைப்‌ பற்றுகை காலைப்‌ பிடித்துக்‌ காரியம்‌ கொள்‌ளுமோபாதி”-ஸ்‌ வாபிமாநத்தாலே ஈச்வராபி மாநத்தைக்‌ குலைத்துக்கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமாநமொழிய கதியில்லையென்று பிள்ளை பலகாலுமரு ளிச்செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌!” “பெருவிலையனான ஆபரணத்துக்கு நாயகக்‌ கல்‌ போலேயாயிற்று ஸ்ரீ வச௩ பூஷண த்துக்கு இப்‌ ப்ரதேசம்‌ நாயக ரத்னமாயிருக்கும்படி, இதனையருளிச்‌ செய்கைக்காக அதிஷ்டிகையிட்டுக் கொண்டு வந்தது. கீழடங்கலும்‌; மேலடங்கலும்‌ இதில்‌ நிஷ்டையை ஸ்தாபிக்கிறது'” என்று: மாமுனிகளருளிச்‌. செய்‌திருப்பது. குறிக்கொள்ளத்தக்கது-அஞ்சிலே யொன்று பெற்ற அணங்கு-யரம்‌ வியூஹம்‌ விபவம்‌ அந்தர்யாமி அர்ச்சை என்னும்படியான
    எம்பெருமானது நிலைகள்‌ ஐந்தினுள்ளே ஒன்றாயிருக்கப்‌ பெற்ற அர்ச்சாவதாரத்தைக்‌ காட்டிக்கொடுத்து என்றபடி, (கண்டு? என்றது பிறவினையில்‌ வந்த தன்வினை; காணச்செய்து என்று பொருளாம்‌. *அணங்கு' என்று தெய்வத்திற்குப்‌ பெயர்‌; பரமபத
    நிலனாயிருக்குமிருப்பாகிய பரத்வமும்‌, திருப்பாற்கடலில்‌ ஸங்கர்‌ஷணாதி ரூபேண வ்யூஹீபவித்து நிற்கும்‌ நிலையாகிய வ்யூஹமும்‌ தேச விப்ரக்ருஷ்டமாகையாலே இப்போது நமக்குப்‌ பயன்பட, மாட்டா. மத்ஸய கூர்ம வராஹ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாகிற வியவாவதாரம்‌. காலவிப்ரக்ருஷ்ட மாகையாலே.
    இதுவும்‌ இப்போது நமக்குப்‌ பயன்பட மாட்டா. “அந்த: ப்ரவிஷ்டச்‌ சாஸ்தா ஜநாறரம்‌ ஸர்வாத்மா” இத்யாதிகளிற்‌ சொல்லுகிறபடியே உள்ளே ப்ரவேசித்து ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும்‌ நியாமகளாயிருக்கு மிருப்பாகிய அந்தர்யாமித்வம்‌ கரண விப்ரக்ருஷ்டமாகையாலே நமக்குப்‌ பயன்பட மாட்டா. *தமருகந்த தெவ்வுருவ
    மவ்வுருவமாய்க்‌ கொண்டு கோவில்களிலும்‌ க்ருஹங்களிலு மெழுந்தருளி நிற்கும்‌ நிலையாகிய அர்ச்சாவதாரமொன்றே
    . இப்போது நம்போல்வார்க்கு உபஜீவ்யமாகையாலே இது தன்னைக்‌ காட்டிக்‌ கொடுப்பதே ஆசார்ய க்ருத்யமாயிருக்குமென்க. அயலாரூரிலஞ்சிலே யொன்று வைத்தான்‌ -ஊரஞ்சிலே ஒன்றில்‌ வைப்பது ஆசார்ய க்ருத்யம்‌. இம்மண்ணுலகம்‌, பாபங்களின்‌ பலாநுபவத்திற்கான நரகலோகம்‌, புண்ய பலாநுபவத்திற்கான ஸ்வர்க்கலோகம்‌, ஆத்மாநுபவ ஸ்தானமாகச்‌ சொல்லப்படுகிற கைவல்யலோகம்‌. *நலமந்தமில்லதோர்‌ நாடெனப்படுகிற பரமபதம்‌ ஆகிய ஐந்து லோகங்களில்‌ ஒன்றான பரம பதத்திற்கு ஆளாக்கித்‌ தீருத்திப்‌ பணிகொள்வது ஆசார்ய க்ருத்யமென்க,
    ஆக, பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெறுவித்து, ப்ரதிபந்தகங்களைக் கடத்தி, சரமோபா
    யத்தை உபதேசித்து, அர்ச்சாவதாரத்தைக்‌ காட்டிக் கொடுத்து ஸம்ஸாராத்‌ உத்தீர்ணனாக்கும்‌ ஸதாசார்யனுடைய படிகளை இச்‌ செய்யுளிலே
    வெளியிட்டாராயிற்று





    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


    ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-16-

    July 26, 2025

    https://archive.org/details/sri-ramanujan–6/26/28/30/33/34/35/37/40/42/43/51/59–61/63–109-/111/112/163-164-/186/189–192/199/223/ 267 incomplete-/319-320/322/324-326/335/-372-/375-377/381-387/390-396/

    —————

    ஒழுக்கமுடையோம்‌; அதனால்‌ எங்களுக்கு ஒருவிதமான பிணியும்‌ வருவதில்லை ; 
    சுகமாக இருந்து வருகிறோம்‌” என்றார்கள்‌. அந்த உபதேசம்‌ என்ன வென்றுகேட்க, (1) தினம்‌ இரண்டு, (2) வாரம்‌ இரண்டு. (9) பக்ஷம்‌ இரண்டு, (4) மாதம்‌ இரண்டு. (5) ௬௫ இரண்டு. (6) அயனம்‌ இரண்டு. (7) வருடம்‌ இரண்டு என்று சொல்லி விவரித்தார்கள்‌.
    தினம்‌ இரண்டு-பகலில்‌ ஒரு வேளையும்‌ இரவில்‌ ஒரு வேளையுமாக தினப்படி. இருமுறை மட்டும்‌ உணவு கொள்வது-“தஸ்மாத்‌ த்விரஹ்நோ மநுஷ்யேப்ய உபஹ்ரியதே; ப்ராதச்ச ஸாயஞ்ச'' என்று வேதமும்‌ இருமுறையுணவையே விதித்தது-உண்பதும்‌ உறங்குவதுமான இரண்டும்‌ தினந்தோறும்‌ கட்‌டளைப் பட்டிருக்க வேணுமென்பதாம்‌
    வாரம்‌ இரண்டு -வாரத்தில்‌ சனிக்கிழமையும்‌ புதன்கிழமையுமாகிற இரண்டுநாள்‌
    எண்ணெய்‌ தேய்த்துக் கொள்ள வேணும்‌-வாரத்தில்‌ இரண்டு நாளாவது ஆலயம்‌ சென்று பகவானைத்‌ தொழுவது என்றுமாம்‌
    பக்ஷம்‌ இரண்டு -வாரம்‌ தோறும்‌ தலைசிரைத்துக்‌ கொள்ள வேணும்‌ என்றபடி
    மாதம்‌ இரண்டு-ஏகாதசி தோறும்‌ உணவு கொள்ளாமல்‌ உபவாச மிருக்க வேண்டு மென்‌றபடி.
    ருது இரண்டு -மாதம்‌ தோறும்‌ (அதாவது மாதத்திற்கு ஒருமுறை) வபனம்‌ செய்வித்துக்‌ கொள்ளவேண்டும்‌ ; தலை சிரைத்துக்‌ கொள்ள வேண்டு மென்‌றபடி.
    அயனம்‌ இரண்டு -முன்று மாதங்களுக்கு ஒருமுறை விரேசனங்கொள்ள வேணுமென்‌ றபடி--தேஹத்திலுள்ள கசடுகள்‌ தீர்வதற்காக இதை நியமமாகக்‌ கொள்வர்‌. -விரேசனமாவது எண்ணெய்‌ முதலியன அருந்துதல்‌.
    வருடம்‌ இரண்டு -ஆறுமாதங்களுக்கொருமுறை இரண்டொரு, வாரமாவது ச்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும்‌

    கும்குமிதி கிம்‌ ப்ரமதி அம்ப ததிமத்யே
    டிம்ப நநு பூதமிஹ தூரமபயாஹி
    அம்ப! நவரிதமிதி ஸம்கததி க்ருஷ்ணே
    மந்தஹஸிதம்‌ ஜயதி மாதுரதிரம்யம்‌.

    தயிர்த்தாழியில்‌ வெண்ணெய்‌ திரளத் தொடங்கிற்று. அப்போது கண்ணன்‌ கேட்கிறான்‌ “கும்‌ குமிதி கிம்‌ ப்ரமதி அம்ப! ததிமத்யே” அம்மா! தயிரினிடையே குழு குமூ குமுகுமூவென்று ஏதோ சுழல்‌கின்றதே, இது என்ன அம்மா! என்றான்‌. அதற்கு யசோதை சொன்னாள்‌ “டிம்ப! நு பூதமிஹ தூரமபயாஹி” பையா! இதில்‌ பூதமொன்று கிளம்புகின்றது; அது அருகேயிருக்கிற சிறுவர்களை விழுங்கிவிடும்‌; சடக்கென அப்பால்‌ சென்றுவிடு என்றாள்‌, இது கேட்ட கண்ணன்‌ “அம்மா! அந்த பூதம்‌ என்னை விழுங்குவதற்கு முன்னே அதை நான்‌ விழுங்கிவிட்டாலோ? என்று சொல்லிக்‌ கொண்டே அதை யெடுத்து விழுங்கிவிட்டு “அம்மா! பூதமென்று
    பொய்‌ சொன்னாயே, இது வெண்ணெயல்லவா ?” என்றான்‌. அது கேட்ட யசோதை நம்‌ குழந்தைக்கு இது வெண்ணெயென்று தெரிந்துவிட்டதே!! என்று மகிழ்ந்து புன்னகை செய்து “என்‌ குட்டனே ! முத்தம்‌ தா” என்றாள்‌.

    மாவலிபக்கல்‌ சென்ற வாமனன்‌ வேஷம்‌
    கெளபீனம்‌ கடிஸூத்ரஸீம்ஙி கடயம்‌ மெளஞ்ஜீமபிவ்யஞ்ஜயம்‌
    க்ருத்திம்‌ க்ருஷ்ணம்ருகஸ்ய வக்ஷஸி வஹற்‌ ஆஷாடமம்ஸேர்ப்பயற்‌..
    ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம்‌ ப்ரீதிம்‌ ஸமுத்பாதயற்‌
    யாச்ஞாயை பலியத்ஞவாடநிகடம்‌ ப்ராப்தோ வடு: பாது வ:

    குறட்பிரமசாரியாய்ச்‌ சென்றதனால்‌ அவ்வாச்ரம லக்ஷணம்‌ வழுவாதபடி. கடிஸூத்ர த்தில்‌ கெளபீனம்‌ விளங்கவும்‌, முஞ்சி ஸுவர்ண மேகலைபோல்‌ திகழவும்‌, திருமார்பில்‌ க்ருஷ்ணாஜினம்‌ பொலியவும்‌, தோள்மேல்‌ பலாச தண்டம்‌ திகழவும்‌ பெற்று, “இவன்‌ மெய்யான யாசக ப்ராஹ்மணன்‌” என்று தெரியுமாறு வேத வாக்யங்களை ஸூஸ்வரமாக ஓதிக்கொண்டு யாகசாலையிலுள்ளவர்களை யெல்லாம்‌ மகிழச்செய்‌துகொண்டு யாசனைக்காக மாவலி வேள்வியில்‌ புக்க மாணிக்குறளன்‌ உம்மைச்‌ காத்தருள்க.

    மாவலிக்கும்‌ வாமனனுக்கும்‌ ஸம்பாஷணை
    கஸ்த்வம்‌ ப்ரஹ்மந்‌? அபூர்வ, க்வ ௪ தவ வஸதி:? யாகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி,
    கஸ்‌ தே த்ராதாஸ்தி? அநாத;:, க்வ ச தவ ஜ௩க:? றைவ தாதம்‌ ஸ்மராமி
    கிம்‌ தேபீஷ்டம்‌ ததாநி? த்ரிபதபரிமி தா பூமி;, அத்யல்பமேதத்‌
    த்ரைலோக்யம்‌ பாவகர்ப்பம்‌ பலிமிதி நிகதந்‌ வாமநோ வஸ்‌ ஸ. பாயாத்‌.

    தன்னை ஸாமாந்ய மனிதனாகக்‌ காட்டும்‌ ஒரு பொருளும்‌ பரமாத்மாவாகக்‌ காட்டும்‌ மற்றொரு பொருளும்‌ அமைய விடை கூறுவது நோக்கத்தக்கது. மாவலி:--*கஸ்‌ த்வம்‌ ப்ரஹ்மந்!* அந்தணனே, நீயார்‌ ? வாமனன்‌ “அபூர்வ” (1) முன்னே பின்னே
    நான்‌ யாசணைக்கு வந்தவனல்லேன்‌. (2) எனக்கு முற்பட்டவர்‌ யாரு மில்லை; எல்லார்க்கும்‌ நானே முற்பட்டவன்‌. “க்வ ச தவ வஸதி;?”” உன்‌ இருப்பிடம்‌ யாது? “யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி” (1) எனக்கு இருப்பிடம்‌ ஒருகேடு; எங்கும்‌. தட்டி. த்திரிபவன்‌. (2) *எங்குமுளன்‌' கண்ணனென்றபடி ஸர்வவ்யாபிகாண்‌ நான்‌. “கஸ்‌ தே த்ராதாஸ்தி?” நீ யாருடைய ஸம்ரக்ஷணையிலிருக்கிறாய்‌? “அநாத:” (1) எனக்கு
    நாதனேது?' அநாதையாய்க்கிடக்கிறேன்‌, (2) எனக்கு மேற்பட்ட நாதன்‌ உலகத்திலேயே கிடையாது. “'க்வ ௪ தவ ஜ௩க;” உன்னுடைய தகப்பனார்‌ எங்கிருக்கிறார்‌ ? “நைவ தா தம்‌ ஸ்மராமி” இளமையிலேயே தகப்பனார்‌ போய்விட்டார்‌; அவரைப்‌ பற்றின நினைவே எனக்கில்லை. (2) ஸகல ஜகத்பிதாவான எனக்குத்‌ தகப்பனாருரிக்க ப்ரஸக்தியேது ? “கிம்‌ தே அபீஷ்டம்‌ ததாறி?? உனக்கு என்ன விருப்பம்‌? என்ன கொடுக்கவேணும்‌ நான்‌ ? “த்ரிபத பரிமிதா பூமி???
    முவடிமண்‌ வேணுமத்தனை, “*அத்யல்பம்‌ ஏதத்‌” என்னிடம்‌ வந்து மிக அற்பமான பொருளைக்‌ கேட்கிறாயே. “த்ரைலோக்யமித்யா தி”, மூவுலகங்களையும்‌ திருவுள்ளத்திலே கொண்டு இங்ஙனே மூவடிமண்‌ வேணுமென்று பேசின வாமனன்‌ காத்தருள்க.

    ஸ்வஸ்தி ஸ்வாகதம்‌ அர்த்த்யஹம்‌, வத வடோ! கிம்‌ தீயதாம்‌, மேதிநீ,
    கா மாத்ரா ? மம விக்ரம த்ரய பதம்‌, தத்தம்‌ ஜலம்‌, தீயதாம்‌,
    மா தேஹீத்யுசநா;, குதோ நு? பகவாந்‌, பாத்ரம்‌ கிமஸ்மாத்‌ பரஞ்‌
    சேத்யேவம்‌ பலிநார்ச்சிதோ மகமுகே பாயாத்‌ ஸ வோ வாம;

    இதுவும்‌ மாவலிவேள்வியில்‌ நிகழ்ந்த நிகழ்ச்சியைக்‌ கூறுவது.
    [ஸ்வஸ்தி] இது மாவலிக்கு வாமனனுடைய மங்களாசாஸனம்‌.
    [ஸ்வாகதம்‌] வருகவருகவென்று மாவலி வரமனனை கெளரவிக்கிற படி. [அர்த்தீ அஹம்‌] “நான்‌ ஒரு பிச்சைக்காரனாதலால்‌ என்னை இவ்வளவு கெளரவிக்கத்‌ தகாது! என்று வாமனன்‌ விநயமாகக்‌ கூறுகிறபடி, [வத வடோ ! கிம்தீயதாம்‌] *மாணி! என்ன தேவை?!
    [மேதிநீ] பூமிதானம்‌ தேவை.” [கா மாத்ரா] “எவ்வளவு பூமிதேவை??
    [மம விக்ரம த்ரய பதம்‌] என்னுடைய பாதத்தால்‌ யானளப்ப மூவடி. மண்‌... [தத்தம்‌ ஜலம்‌] (இதோ தாரைவார்த்துத்‌ தருகிறேன்‌.” [தீய தாம்‌] தாராய்‌ மன்னவனே !' [மா தேஹீதி உசநா:] “இவ்வளவில்‌ தைத்ய குருவான சுக்கிரன்‌ வந்து தடைசெய்தான்‌.” [குதோ நு?] “கொடுக்கவேண்டாமென்று ஏன்‌ தடை செய்கிறீர்‌?” என்றான்‌ மாவலி.
    [பகவான்‌ ] (இவன்‌ ஸாமாந்ய யாசகனல்லன்‌; உன்னிடத்து ஸர்வஸ்‌வாபஹாரம்‌ பண்ணவந்த பகவான்‌ கிடாய்‌! என்றான்‌ சுக்கிரன்‌. [பாத்ரம்‌ கிமஸ்மாத்‌ பரம்‌] நாராயணனே என்னிடம்‌ யாசகனாக வந்தானாகில்‌ வேறு ஸத்பாத்ரமுண்டோ ? நான்‌ மஹாபாக்யசாலி யன்றோ?” வென்று தன்னைக்‌ கொண்டாடி. வாமனனை ஆராதித்தானாயிற்று,
    மஹாலக்ஷ்மிக்கும்‌ பார்வதிக்கும்‌ ஸம்பாஷணையாக வைத்து இயற்றிய சுலோகமிது. விஷ்ணுபக்தர்கள்‌ சிவபெருமானிடத்தில்‌ வெறுப்புக்கொள்ளலாகாது என்பதற்கு இந்தச்லோகம்‌ பொருத்தமானது, ஸ்ரீ மஹாலக்ஷ்மி பார்வதியை நோக்கிக்கேட்டாள்‌ “தோழீ! அந்த பிச்சையாண்டி எங்குப்‌ போனான்‌ ?? என்று. பரமசிவன்‌ 
    *பிண்டியார்‌ மண்டையேந்திப்‌ பிறர்மனை திரிதந்துண்ணு முண்டியானாகையாலே அதனைப்‌ பரிஹஸித்துக்‌ கூறினபடி, இங்ஙனம்‌ வினவப்பட்ட பார்வதி விடை கூறினாள்‌ “ஸுதநு பலிமகே?” அம்மா! அந்த பிச்சையாண்டி மஹாபலியின்‌ வேள்வியிலே சென்றாரென்றாள்‌. என்‌ பர்த்தாமட்டும்‌ பிச்சைக்காரரல்லர்‌ ; உன்‌ பர்த்தாவும்‌ பிச்சைக்‌ காரரே யென்று காட்டினபடி, பிறகு லக்ஷ்மி அதை விட்டிட்டு
    வேறொரு கேள்வி “பதரே! அத்ய தாண்டவம்‌ க்வ” நங்காய்‌ ! இன்று கூத்து எங்கே? என்று கேட்டாள்‌. பரமசிவன்‌ நடராஜனாகையாலே அதைப்‌ பரிஹஸித்தபடி. அதற்குப்‌ பார்வதியின்‌ விடை “மந்யே ப்ருந்தாவறாந்த;” அம்மா! லக்ஷ்மீ! இன்று கூத்து ப்ருந்தாவனத்திலிருக்குமென்று நினைக்கிறேனென்றாள்‌. *கன்றப்‌ பறை கறங்கக்‌
    கண்டவர்தம்‌ கண்களிப்ப மன்றில்‌ மரக்கால்‌ கூத்தாடினான்‌ -காணேடீ*
    குடங்களெடுத்‌ தேறவிட்டுக்‌ கூத்தாடவல்ல வெங்‌கோவே! இத்யாதிப்படியே உனது கணவனும்‌ கூத்தாடியேயென்று காட்டினபடி. அதன்‌ பிறகு லக்ஷ்மியின்‌ வினா “'க்வ நுஸ ம்ருக சிசு;”” அம்மா பார்வதீ! அந்த மான்‌ குட்டி எங்கே? என்றாள்‌. பரமசிவன்‌ மான்‌ குட்டியை வைத்துக்‌ கொண்டிருப்பதாக ஐதிஹ்யமாகையாலே அதைப்‌ பரிஹஸித்தபடி, அதற்குப்‌ பார்வதியின்‌ விடை “நைவ ஜாநே வராஹம்‌” அந்தப்‌ பன்றி எங்கே போயிற்றோ அறியேன்‌ என்றாள்‌. என்பார்த்தா மான்‌ குட்டியை வைத்துக்கொண்டிருப்பது பரிஹாஸ்யமன்று; உன்‌ பர்த்தா *பண்டொருநாள்‌ மாசுடம்பில்‌ நீர்‌ வாரா மானமிலாப்பன்‌றி* என்கிறபடியே தாமே பன்றியாக வடிவெடுத்தாரே, அது தான்‌ பரிஹாஸ்ய மென்‌ றவாறு. அதற்குமேல்‌
    லக்ஷ்மியின்‌ வினா “பாலே! கச்சிங்‌ ௩ த்ருஷ்டோ ஐரடவ்ருஷபதி:” அந்தக்‌ கிழ எருது எங்கே? பார்த்தாயா? என்றாள்‌, பரமசிவன்‌ வ்ருஷபவாஹனனாகையாலே அதைப்பரிஹஸித்தபடி, பார்வதியின்‌ விடை “கோப ஏவ அஸ்ய வேத்தா”-எருதைப் பற்றி இடையனுக்குத்‌ தான்‌ தெரியுமென்றாள்‌. என்பர்த்தா ஒரு எருதை வைத்துக் கொண்டிருப்பது ஹேயமன்று; உன்பர்த்தா எண்ணிறந்த மாடுகளை மேய்க்க இடையனான துதான்‌ ஹேயம்‌ என்று காட்டினபடி, இவ்‌வாறாக மலர்‌ மகளுக்கும்‌ மலை மகளுக்கும்‌ விரோதமான ஸம்பாஷணை நடந்த தென்கை.

    கோபால இதி க்ருஷ்ண ! த்வம்‌ ப்ரசுரக்ஷீரவாஞ்சயா,
    ச்ரிதோ மாத்ருஸ்தாக்ஷிரமப்யலப்யம்‌ த்வயா க்ருதம்‌.

    ஸ்ரீ கருஷ்ணபகவானைப்‌ பற்றினவர்களுக்குப்‌ புறர்ஜன்மமில்லை யென்பது ஒரு சமத்காரமாக த்தெரிவிக்கப்படுகிறது இதில்‌. “கண்ணா! நீ இடையனாகையாலே உன்னைப்‌ பற்றினால்‌ விசேஷமாகப்‌ பால்‌ கிடைக்குமென்றாசைப்பட்டு வந்தடைந்தேன்‌. என்னெண்ணம்‌ விபரீதமாயிற்று, ஏற்கெனவே நெடுகாளாகக்‌ கிடைத்துக் கொண்டிருந்த தாய்‌ முலைப்பாலும்‌ அரிதாம்படி. செய்துவிட்டாயே” யென்‌கிறான்‌. புநர்ஜன்‌ம முண்டானாலன்றோ தாய்‌ முலைப்பால்‌ கிடைக்கும்‌? அஃது இல்லை யாயிற்றென்கை,

    பவித்ரீ ரம்போரு ! த்ரி தசவதறக்லாநிரது௩ா
    ஸதே ராமஸ்‌ ஸ்தாதா ௩ யுதி புரதோ லக்ஷ்மஸக:.
    இயம்‌ யாஸ்யத்யுச்சைர்‌ விபதமது௩ா வாநரசமூ:
    லகிஷ்டேதம்‌ ஷஷ்டாக்ஷரபரவிலோபாத்‌ பட புற.
    -(இந்தச்லோகம்‌ ஸம்ஸ்க்ருதஜ் ஞர்களுக்கே மிகவும்‌ ரஸிக்கத்தக்கதாகும்‌, ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள்‌ வானர ஸேனையுடன்‌ இலங்கையிற்‌புகுந்த பின்பு இராவணன்‌ ஸீதையிடம்‌ வந்து முன்று வார்த்தைகள்‌ சொல்ல; அவற்றை உடனே ஸீதை வெகு சாதுரியமாகக்‌ கிள்ளிக்‌ களைந்தமை இதில்‌ தெரிவிக்கப்படுகிறது. கவி புத்தியின்‌ சமத்காராதிசயம்‌ கொண்டாடத்தக்கது.) ஸீதையை நோக்கி. ராவணன்‌ சொன்ன மூன்று வார்த்தைகளாவன : [1, “பவித்ர ரம்போரு! த்ரித. சவதரக்லாநிரது௩ா”] ஸீதே! பார்‌. இப்போது தேவதைகளின்‌ முகம்‌ வாட்டமடையப்‌ போகிறது. [2. “ஸ தேராமஸ்‌ ஸ்தாதா ௩ யுதிபுரதோ லக்ஷ்மணஸக:”] ராம லக்ஷ்மணர்கள்‌ போர்க்களத்தில்‌ என்னெதிரே நிற்கவல்லவர்களல்லர்‌. [8. “இயம்‌ யாஸ்யதி உச்சைர்விபதமது௩ா
    வாரரச்மூ:]
    இங்கே வந்து சேர்ந்திருக்கிற வானர சேனையெல்லாம்‌ மிகவும்‌ விபத்தையடையப்‌ போகிறது காண்‌, ஆக இம்‌ மூன்று வார்த்தைகளையும்‌ கேட்ட ஸீதை சிறிதும்‌ ஆலோசியாமல்‌ உடனே சொன்னாள்‌ [லகிஷ்ட,! இதம்‌ ஷஷ்டாக்ஷரபரவிலோபாத்‌ பட புஈ:] அடா அற்பனே! இப்போது நீ சொன்ன மூன்று வார்த்தைகளில்‌ ஒவ்வொன்றிலும்‌ ஏழாவது எழுத்தை ரீக்கிவிட்டுப்பார்‌;) அப்போது
    என்னபொருள்‌ தேறுகிறதோ, அதுதான்‌ நடக்கப்போகிறதென்பது திண்ணம்‌ என்றாள்‌. இனி இதன்‌ விவரணம்‌, முதல்‌ வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “த்ரி? என்பது. அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ “தசவதறக்லாறி:! அதுநா பவித்ரீ” என்றதாகும்‌, *இராவணனாகிய உனக்கு இப்போது வாட்ட முண்டாகப்‌ போகிறது பார்‌” என்றதாம்‌.
    இரண்டாவது வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “ந” என்பது! அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ ராமலக்ஷ்மணர்கள்‌ போர்க்களத்தில்‌ முன்‌னிற்கப்‌ போகிறார்களென்‌றதாம்‌. மூன்றாவது வார்த்தையில்‌ ஏழாவது எழுத்து “வி” என்பது, அதை நீக்கிவிட்டு வாசித்தால்‌ “இயம்‌ வாரரசமூ: உச்சை: பதம்‌ யாஸ்யதி' என்றதாகத்‌ தேறும்‌, இந்த
    வானர சேனை வெற்றி பெற்று உயர்பதவியையடையப்‌ போகின்றதென்றதாம்‌. பிறகு இப்படியேயாயிற்று

    குற்றங்கள்‌ கழியும்‌ வழி
    அநுதாபாத்‌ உபரமாத்‌ ப்ராயச்சித்தோற்முகத்வத;,
    தத்பூரணாச்‌ சாபராதாஸ்‌ ஸர்வே ஈச்யந்தி பாதச:,

    ஒவ்வொருவனும்‌ தான்‌ செய்த பாபங்களை நான்கு காரியங்‌ களினால்‌ போக்கிக்கொள்ள வேணும்‌ ; ஐயோ ! பாபம்‌ செய்தோமே யென்று அநுதாபங்கொண்டானாகில்‌ செய்த பாபத்தில்‌ கால்பங்கு. தொலையும்‌. இனிமேல்‌ செய்வதில்லையென்று ஸங்கல்பித்துக்‌ கொண்‌டானாகில்‌ பாதிபங்கு பாபம்‌ தொலையும்‌. செய்த பாபத்திற்கு என்ன ப்ராயச்சித்தமென்று விசாரித்துத்‌ தெரிந்துகொண்டு அதையனுட்‌டிக்க விரும்புவானாயின்‌ முக்கால்பங்கு பாபம்‌ தொலையும்‌. அந்த ப்ராயச்சித்தத்தை யனுட்டித்துத்‌ தலைக்கட்டினானாகில்‌ முழுப்பாபமும்‌ தொலைந்திடும்‌.

    உபாஸநாபலத்தினால்‌ விளைகின்ற. ஞானம்‌ பயனற்றது; குருமுக மாகக்‌ கற்பதால்‌ விளையும்‌ ஞானமே மிகச்‌ சிறந்ததென்பது பற்றி முராரிகவி பணித்த பத்யமிது. பலர்‌ வாக்தேவதையை உபாஸித்துப்‌ ப்ண்டிதர்களாகிறார்கள்‌. அன்னவர்களைப்‌ பண்டிகர்களென்று செரல்லலாமாயினும்‌ ஸாரஸ்வத ஸாரத்தை அவர்கள்‌ அறிந்தவர்‌
    களாகார்கள்‌; ஆசார்ய குலத்தில்‌ குட்டுபட்டுக்‌ கல்விபயின்‌ற முராரியே [நானே] ஸாரஸ்வத ஸாரஜ்ஞனாவன்‌. வானரவீரர்களெல்‌லாரும்‌ [இலங்கை செல்வதற்குக்‌] கடலைக்‌ கடந்துவிட்டார்களெனினும்‌ கடலின்‌ ஆழத்தை ஒரு வானரமுமறியாது. திருவடியைக்‌ கேட்டால்‌ *ஆகாச வழியாய்‌ சென்ற நான்‌ கடலாழத்தை என்ன றி
    மேவன்‌” என்பர்‌, மற்ற வானரவீரர்களைக்‌ கேட்டாலோ அணை கட்டிச்‌ சென்ற வெமக்குக்‌ கடலாழமென்ன தெரியும்‌” என்பார்கள்‌. ஆகவே ஒரு வானரவீரனும்‌ கடலாழமறியான்‌; *மந்தரம்‌ நாட்டியன்று மதுரக்‌ கொழுஞ்சாறு கொண்ட* என்கிறபடியே கடல்‌ கடையும்போது. மத்தாக நாட்டப்பட்ட மந்தரமலை பாதாளலோக மளவும்‌ மூழ்கி யிருந்ததாதலால்‌ அஃதொன்றையே கேட்டுக்‌ கடலாழ முணரலகும்‌.
    இவ்வாறாக உபாஸறபலத்தினால்‌ பண்டிதரானவர்கள்‌ ஸரஸ்வதியின்‌
    உள்மருமமறியவல்லரல்லர்‌. குருகுலத்திலிருந்து நெடுநாள்‌ சிரமப்‌
    பட்டவர்களே அஃதறியவல்லார்களென்‌ தாயிற்று,
    ரத்ரைகரஸ்‌ தவ க்ருஹம்‌ க்ருஹிணி ௪ லக்ஷ்மீ: 
    கிம்‌ தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய,
    ஆபீரவாமுயகாஹ்ரு தமாஈஸாய
    துப்யம்‌ ப்ரதத்தமிதமஸ்து மநோ மதீயம்‌
    , -பெருமாள்‌ வாசலிலெழுந்தருளும்போது நியமே உபஹாரம்‌ ஸமர்ப்பிக்கும்‌ விரதமுடையவரொருவர்‌, ஒருநாள்‌ திடீரென்று வாசலில்‌ பெருமாளெழுந்தருளியாயிற்று, முன்னாடி உபஹாரம்‌ ஸித்தப்படுத்தி வைக்கவில்லை. இன்ன து செய்வதென்று தோன்றாமல்‌ அவர்‌ பெருமாளருகே வந்துரின்று ஆசுகவிதையாக இந்த ச்லோ கத்தைக்‌ கூறினர்‌, “எம்பெருமானே! **மாகடல்‌ நீருள்ளான்‌' என்கிற படியே உனக்கு வாஸஸ்தானமோ ரத்நாகரம்‌ ; மனைவியோ ஸ்ரீமஹா லக்ஷ்மி ; ஸ்வயம்‌ புருஷோத்தமனென்று பேர்பெற்றிருக்கின்‌ றணை, இப்படிப்பட்டவுனக்கு ரீசனேன்‌ நிறையொன்றுமிலேன்‌ என்ன ஸமர்ப்பிக்க வல்லேன்‌. எதுவுமில்லை. ஏதாவது அடியேன்‌ கொடுப்ப தானால்‌ உனக்கு இல்லாத வஸ்து இன்னதென்று தெரிந்துகொண்டு அதை ஸமர்ப்பிக்கவேணும்‌. நீ அவாப்த ஸமஸ்தகாமனாயிருந்தாலும்‌ உனக்கு இல்லாதது ஒன்றுண்டு ; அது ஏதென்னில்‌ ; உன்னுடைய நெஞ்சைத்‌ திருவாய்ப்பாடியாயர்‌ மங்கைகள்‌ கொள்ளை கொண்டு
    போய்விட்டதனால்‌ உனக்கு நெஞ்சு இல்லாமலிருக்கிறது, இதோ எனது நெஞ்சை ஸமர்ப்பிக்கிறேன்‌ ; இதனைப்‌ பெற்றுக்கொண்டு ம௩ஸ்வியாவாய்‌.” இங்கு உக்தி சமத்காரமும்‌ பொருட்‌ சுவையும்‌ ரஸிக்கத்தக்கது.

    இராவணனுக்கும்‌ அங்கதனுக்கும்‌ ஸம்வாதம்‌
    கஸ்‌ த்வம்‌ வாநர ! ராமராஜபவநே லேகார்த்தஸம்வாஹக:
    யாத: குத்ர புராகதஸ்‌ ஸ ஹநுமார்‌ நிர்தக்தலங்காபுர;,
    பத்தோ ராக்ஷஸஸூநுநேதி கபிபிஸ்‌ ஸந்தாடிதஸ்‌ தர்ஜித:
    ஸ வ்ரீடாத்தபராபவோ வறம்ருக: குத்ரேதி ௩ ஜ்ஞாயதே.


    இராவணனிடம்‌ அங்கதன்‌ தூது சென்றான்‌; அங்கு இருவர்க்கும்‌ ஸம்பாஷணை. இராவணன்‌ கேட்கிறான்‌ [கஸ்‌ த்வம்‌ வார] குரங்கே நீயார்‌?? அங்கதன்‌ [ராமராஜபவநே லேகார்‌ த்தஸம்வாஹக: ] *இராம பிரான்‌ திருமாளிகையில்‌ நான்‌ குற்றேவல்‌ செய்பவனொருவன்‌”, இராவணன்‌ [யாத குத்ர புராகதஸ்ஸ ] “இங்கு முன்னே ஒரு குரங்கு வந்ததே, அது எங்கே போயிற்று ?' இராவணன்‌ ஹனுமா
    ணைப்பற்றிக கேட்கிறானென்பது அங்கதனுக்குத்‌ தெரிந்தும்‌ ஹனுமானென்று அவன்‌ வாயில்‌ வரவேணுமென்பதற்காகவும்‌ அனுமன்‌ இங்குச்செய்த செயலை இவன்‌ தன்‌ வாயினால்‌ சொல்ல வேணுமென்பதற்காகவும்‌, “அப்படியா? முன்னே இங்கு ஒரு குரங்கு வந்ததா என்ன? எனக்குத்‌ தெரியாதே; அதன்‌ பெயரைச்‌ சொன்‌ னால்‌ ஆலோசிக்கிறேன்‌,' என்றான்‌ அங்கதன்‌. அதன்‌ பிறகு இராவணன்‌ [ஹநுமான்‌] என்றான்‌. அதற்கு அங்கதன்‌ “எங்கள்‌ கோஷ்டியில்‌ ஹநுமானென்று யாரையுங்‌ காணோமே; அவன்‌ இங்கு வந்து செய்தசெயலைச்‌ சொன்னால்‌ ஆலோசிக்கிறேனென்றான்‌ அங்கதன்‌. அதன்மேல்‌ இராவணன்‌ [நிர்தக்த லங்காபுர:] என்றான்‌. -இங்கு வந்து லங்காபுரியை முழுவதும்‌ கொளுத்திவிட்டுப்போன
    குரங்கைப்பற்றிக்‌ கேட்கிறேனென்றான்‌. அதன்மேல்‌ அங்கதன்‌ சிறிது ஆலோசிப்பதுபோல்‌ பாவனை காட்டி [பத்தோ ராக்ஷஸ ஸூநுநேதி...] ஓஹோ! அந்தக்‌ குரங்கைப்பற்றிக்‌ கேட்கிறாயோ ? அது இங்கே வந்து ராக்ஷஸப்‌ பையலால்‌ கட்டுண்டு நலிவுபட்ட தென்று எங்களுக்குத்‌ தெரியவந்ததனால்‌ அதை அடித்துப்‌ புடைத்து வெருட்டியோட்டிவிட்டோம்‌; அது வெட்கத்தினால்‌ தலைகுனிந்து ஓடிப்போயிற்று; அந்த வறம்ருகம்‌ எங்கே புக்கொளித்ததோ அறியேன்‌ என்றான்‌. இதனால்‌ அனுமானுக்கும்‌ மேற்பட்ட குரங்குகள்‌ நாங்கள்‌ வந்திருக்கிரோங்காண்‌ என்று தெரிவித்தவாறு.

    ———————————

    ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -(367/378)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

    ஸ்ரீராமா நூஜன்-367-காளயுக்தி கார்த்திகை-12-1978-

    எம்பெருமானார் தம்முடைய முப்பத்தைந்தாவது திருநக்ஷத்திரத்தில் திருமலையில்ஒரு மடத்தைஏற்படுத்தியருளினார் : சகம் 974. கி. பி. 1032ல் நாலைந்து வருடங்கள் ஏகாங்கிகள்
    மூலமாகவே திருவேங்கடமுடையான் கைங்கர்யத்தை நடத்திவைத்து. கி.பி. 1057ல் அப்பன்
    சடகோப ராமாநுஜஜீயரை நியமித்தார்.எம்பெருமானாரே இம்மடத்திற்கு முதல் ஜீயர். இரண்டாமவர் – அப்பன் சடகோப ஜீயராவர். பிறகு முறையாக வந்த- IIவது ஜியரான அப்பன் ஸ்ரீரங்கராமாநுஜ பெரிய ஜீயரிடத்தில் ஆச்ரயித்துச் சிறிய ஜீயராய்க் கைங்கர்யம் செய்துவந்த அப்பன் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி திருவேங்கடமுடையான் நியமனத் தால் (பெரிய ஜீயர் ஜீவதசையில எழுந்தருளியிருக்கும்போதே) யதிபதிபுநவதாரமான மண வாளமாமுனிகளிடத்தில் திருவிலக்கினை பெற்று அஷ்டதிக்கஜாந்தர்ப்பூதரான ஷ பெரிய ஜீயர் பரமபதித்தவுடன் கி பி. 1506ல் பெரிய ஜீயராய் அபிஷிக்தரானார் .-சிறிய ஜீயருக்கு ஆசா யாரானமையால் மணவாளமாமுனிகள் இப்பெரிய ஜீயர் மடத்தில் பன்னிரண்டாவது பெரிய ஜீயராகப் பரிகணிதரானார் )

    ஆழ்வார்கள் கண்ட பஞ்சாமிருதம் கேளீர்; * சீரார் செந்நெற் கவரிவீசுஞ் செழுநீர்த் தீருக்குடந்தையில் ஆராவமுதே!என்றும், ஆராவமுதாயடியேனாவியக
    மே தித்திப்பாய்
    என்றும் நம்மாழ்வாராலழைக்கப்பட்ட அமுதம் * கொண்டல்வண்ணன்
    கோவலனாய்வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங்கவர்ந்தவன் அண்டர்நேனணியரங்கனென் னமுது
    என்று திருப்பாணாழ்வார் கண்ட வமுதம் அடியேன்மேவியமர்கின்ற வமுதே திருவேங்கடத் தெம்பெருமானே! என்றுநம்மாழ்வார் திருவேங்கடத்திற் கண்ட வமுதம்.-எனக்குத்தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே ; என்று நம்மாழ்வார் தாமே தெற்குத் திருமலையிற் கண்ட வமுதம் மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூ சோலைமலைக்கரசே! கண்ணபரத்தழுதே! என்று திருக் கண்ணபுரத்திலே கண்ட வமுதம்.-ஆக இவ்வம்ருதங்கள் ஆழ்வார்களுடைய பஞ்சாம்ருதாகும்.

    நம்முடைய ஸித்தாந்தமோ வென்னில்; அபூர்வமாக வொரு மஹானந்த மனுபவிப்பதே
    மோ மென்பதாம்.
    ஆளவந்தார் “கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி”
    என்றகுளிச் செய்தார் – ஒழிவில் காலமெல்லா முடனாம்மன்னி வழுவிலாவடிமை செயது
    அனுபவிக்கிற ஆனந்தம் அவரவர்களுக்கு ஆத்மைக வேத்யம். .
    வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்துமைந்தும்” என்னப் பட்ட திருப்பாவையில் ஒருத்தி மகனாய்ப்பாசுரத்தில் வருத்தமுந் தீர்ந்து மகிழந்தேலோ ரெம்பாவாய் என்றது உயிரான வார்த்தை;-வருத்தம் தீர்ந்ததோடு நில்லாமல் மகிழ்ந்து என்னும்படியான வொரு நிலைமையுண்மை காட டப்பட்டது, நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (7-5-10) வார்த்தையறிபவர் என்ற பாட்டில்-போர்த்தபிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துள்பம் வேரற நிக்கி என்றிவ்வளவு சொன்னதற்கும் மேற்பட “தன் தாளின்” கீழ்ச்சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணி என்றருளிச் செய்திருப்பது நோக்கத் தக்கது.-“சேஷக்வம் துக்கரூபமாகவன்றா நாட்டில் காண்கிற தென்னில். சு த நியமமில்லை; உகந்த விஷயத்துக்கு சேஷமாயிருக்கு ருப்பு ஸு கமாகக் காண்கையாலே”

    ஸ்ரீவசனபூஷணம் நான்காம் பிரகரணத்தில் “த்ரிபாத் விபூ யிலே” இத்யாதி ப்ரதம
    சூர்ணைக்கு அடுத்தபடி லலிதா சரிததிகளிலே இவ்வர்த்தம் சுருக்கமொழியக் காணலாம்”
    என்கிற சூர்ணையின் வியாக்கியானத்துலே மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள்ள-அதாவது – விதர்ப்பராஜஸ தையாய் காசீரால மஹிஷியான லலிகை ஸபத்ங்களான முந்நூறு ஸ்த்ரீகளிலுங்காட்டில் ஆபிருப்யம் அகிவ ய பர்த்ருமக்தை தேஹதேஜஸ்- ஸர்வகுண ஸம்ப ந்தை இவை யுடையளாய்அஹோராக்ரவிபாகமற பகவத் ஸநியிலே அநேகந் கிருவிளக்கேற்றி அதிலேநிரதையாய்ப் போருகித படியைக் கண்டு, “உனக் கிவ்வாபிருப்யாதி களுக்கும் தீபாரோபண கைங்கர்ய ப்ராவண்யத்துக்குங் காரணமென்” என்று ஸபக்கள் கேட்க அவள்ஜாகி ஸ்கியோடே பிறங்கவளாகையலே ததேஷா கதயாம் யேகத் பத்வ் த்தம் மம சோபநா என்று தொடங்கி, *ஸௌவீர ராஜஸ்ய புரா மைத் ரேயோபூக் பரோஹித : கோ சாயக ம் விஷ்ணே காரிதம் தேவிகாதடே. அ யஹநிசுச்ரூஷாம் புஷப தூபாம்பலைபகை தீபாதநா கிபிச்சைவசக்ரே தத்ரவ ஸந்த்விஜ ” என்று ஸெ வீரராாஜ புரோஹிதனான மைத்ரேயன்.தேவியாற்றங்கரையிலே ஓரெம்பெருமான் கோயிலை யுண்டாக்கி, அங்கே நாள்தோறும் ஸகல கைங்காயங்களையும் பண்ணவர்த்தித்தபடியையும் *கார்த்திகே தீபிதோதீப உபாத்தஸ்கே சைகதா. அ ந் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நி , தேவதாயகநே சாஸம் தத்ராஹமபி மூஷிகா, ப்ரதீபவர்த் திக்ரஹணே க்ரு புத்ர் வராநநா :, கரு தாச மயாவர்த்தீ ப்ருஷதம்சோ ரராவச. நஷ்டா சாஹம் கதஸ் தஸ்ய மார்ஜாலஸ்ய பயாநுநா.வக் ர ப்ராந்தே நச்யந்த்யா ஸதீப ப்ரேரிதோ மயா, ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா தஸ்மிநாயதநே பு : என்று. கார்த்தி மாஸத்கிலே அவனந்த எம்பெருமான் ஸந்நிதியிலேற்றின அத் திருவிளக்கு அவியத்தேடுகிற வளவிலே யொரு பெண்ணெலியாய்க்கொண்டு வர்த்திக்கிறதான் அத்கிருவிளக்கில் திரியைக் கல்விக்கொண்டு போவதாக நினைத்துச்சென்றா வ்வினவளவிலே ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டஞ் மரணத்தையடையா நிற்க அப்போது பயத்தாலே நடுங்ககிற ன் மூஞ்சியாலே அந்தக்திரி தூண்டப்பட்டு முன்போல அத்திருவிளக்குப் பளபளத்தெரிந்த படியையும் தம்ருதா சாஹம் ததோ ஜாதா பரா குணை என்று அநந்தரம் தான்மரித்து விதர்ப்பராஜனுக்குப்புத்ரியாய் ஜாதி ஸ்ம்ருத்யாதிகளோடே பிறந்தபடியை யும்;” ஏஷப்ரபாவோ தீபஸ்ப ததோஜாதிஸ்ம்ருதிர் ஐந்ம தீபதாயிநாம் என்று அந்த அஜ்ஞாத க்ருதபலமாக தனக்கிந்தவேற்றங்களெல்லா முண்டானபடியையும் சொன்னாளென்று, ஸ் விஷ்ணுதர்மத்திலே லலிதாசரிதம் விஸ்தரேண சொல்லப்பட்டதிறே.”

    ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

    ‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

    ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

    ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

    ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

    கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

    ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

    ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

    ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

    உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

    கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

    ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

    அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

    புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

    கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

    பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

    கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

    ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

    அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

    குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

    குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

    இல் எத்தனை?-அன்பில்.

    தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

    கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

    ஸ்ரீராமா நூஜன்-378–சித்தார்த்தி தைமீ 1980 வ-

    1931ஆம் ஆண்டுதொடங்கி சித்தார்த்தி ஆண்டு மார்கழித் திங்களில்-(1979 80 டிசம்பர், ஜனவரி) ஐம்பதாம் (பொன்விழா) திருப்பாவை-பைங்கூகள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்! என்கின்ற கணக்கிலே.-திருப்பாவைக் காலட்சேப விழாவினை எதிர்பார்த்திருப்பார்கள்.-மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல், அதுகாணும் கண்பயன் ஆவதே!எனப்பாரித்திருப்பர்.-ராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்பாவைபலவும் பாடத் துடித்துக் கொண்டிருப்பர்!

    அத்தகிரிக் கண்ணனான அருளாளனிடம் ஸ்ரீ ஆண்டாள் தன் மனத்தைப் பறிகொடுத்து திருப்பாவையிலே ஐந்து பாசுரங்களாலே அருளாளனை மங்களாசாசனம் செய்தருள்வது வியக்கத் தக்கதாகும்.-அர்த்த பஞ்சக ஞானத்தையும் வெளியிட்டருள்வ து மேலும் வியக்கத்
    தக்கதாகும். தேவர், உம்பர். அமரர் என்பவை ஒரே பொருளைத் தரும்சொற்களே.-1-கீழ் வானம் -தேவாதி தேவன்-சுவாமித்துவமும் வாத்சல்யமும் ஆ! ஆ! என்று ஆராய்ந் அருள்வான் என்பதால் சௌசீல்யமும் இவ்விதம் அருளும் அருளாளன்-அத்தியூரான் என்று கொண்டால் கெளலப்பியமும் பெறப்படுவதால் மிக்க-இறை நிலையை ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்கிறாள்-2-அம்பரமே என்னும் பாசுரத்தாலே உம்பர் கோமானேஉறங்காது எழுந்திராய் என்று தேவாதி தேவனைத் துயில் உணர்த் துகையில்,-எம்பெருமான் நந்தகோபாலனையும் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாம்.குலவிளக்காம் எம்பெருமாட்டி யசோதையையும் மெய்யாம் உயிர் நிலையின்–அறம் செய்யும் நந்தகோபாலனின் ஞானமும்,கண்ணனின் அழுகையும்அஞ்சி நோக்கும் அந்நோக்கும். அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்தொழுகையும் கண்ட அசோதையின் ஆனந்தமும் இவர்களின் ஆத்மலட்சணத்திற்தப் புறப்பொருள்களே. இவர்கள் கண்ணன்பால் கொண்டுஒழுகிய அடிமைத் திறமே அந்தரங்க நிரூபகம்–3-சென்று கப்பம் தவிக்கும் கலியைத் துயிலெழுப்ப அதிபதியைத் துயிலெழுப்புவதேயாகும்.துவய மந்திர உபதேசப்படிபிராட்டியைக் கொண்டே பெருமாளைச் சரண் அடைய வேண்டும் என்னும்தக்க நெறியைக் காட்டியருளும் முகத்தாலே செப்பன்ன மென் முலைச்செவ்வாய்ச் று மருங்குவ நப்பின்னை நங்காய் திருவே! துயில் எழாய்!என்றுபிராட்டியை முன்னிடுகிறாள்!-4-ஏற்ற கலங்கள் பாசுரத்தாலே, அத்தியூரில் பிரமனதுவேதிகையில்தோற்றமாய் நின்ற சுடரே எனத் துயில் எழுப்புகையில்,இறைவனை அடைவதற்குத் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையைமாற்றார்‘ சொரூபத்தில் அமைத்தருள்கிறாள்.-5-ஐந்தாவதாக ஒருத்தி மகனாய் பாசுரத்திலே. (நான்முகனின்கச்சி யாகவேதியிலே) நெருப்பென்ன ன்ற நெடுமாலே என அருளாளனைவிளித்து அவனிடம் அருத்தித்து வந்த நல்வாழ்வாக வைணவர் தம்பேறாகபுருஷார்த்தமாக வேண்டுவது திருத்தக்க செல்வமும். சேவகமும் பாடிவருத்தமும் தீர்ந்து மகிழும் பேறுதான்

    பரகாலநாயகி கொல்லியம்பாவை* எனப்படுகிறாள். இங்கு உவமைக் குறி இல்லையாயினும் கொல்லிப்பாவை போன்றவள்’ என்றே பொருள்படுதலால் உபமா கர்ப்பமேயாகுமிது. வல்வில்ஓரி என்னும் சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லி
    யென்னும் பெயர் கொண்டதான மலையின்கணுள்ள ஒரு பெண்பாற்பிரதிமை கொல்லிப்பாவையென்று பிரசித்திபெற்றது. இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகிற்சிறந்த பதுமையாகும். அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அப்பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்
    களாம். அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களதுவாடைபட்டவுடன் இது தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப் பட்டதென்பர். இது நகைத்துக் கொல்லுமென்பது “திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்கக். கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ?” என்ற சித்திரமடற் பாடலினால் விளங்குகின்றது இப்பாவை கண்டாருள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காமவேட்கையுறுவித்து இறுதியில் கொல்லுமென்றுங் கூறுவர்.-ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க் கெழுந்த அ ணர் மோஹித்து விழும்படி இக்கொல்லிப்பாவையுருக்கொண்டு ஆடினள் என்று சிலப்பதிகாரம் கூறும். “செருவெங்கோலமவுணர்நீங்கத் திருவின் செய்யோளாடிய பாவையும்” (கடடலாடு காதை60,61) என்றது காண்க.

    *நீண்ட மலைகளும் மாமணி யும் மலர்மேல்மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் “என்று மூலமுள்ளது. கடலின் நிறம்போன்ற நிறமுடையவன் என்பத
    னாலாகும் ஸாம்யமொன்று உண்டானாலும் இங்குச் சொல்லுகிறது-அதுவன்று கடலிலுள்ள வஸ்துக்களெல்லாம் எம்பெருமானிடத்துமுள்ளமைப்பற்றின உவமை சொல்லப்படுகிறது. முன்னொருகாலத்தில்மலைகளெல்லாம் சிறகுடனே பறந்து நாடு நகரங்களுக்குத் துன்பம்
    விளைவித்துக்கொண்டிருக்கையில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால்அவற்றின் சிறகுகளைத் துணித்துக்கொண்டுவர. அப்போது மைனாகம் முதலிய பலமலைகள் கடலினுட்சென்று ஒளிந்து கொண்டு இற்றைக்கும் அவ்விடத்திலேயே தங்கிக்கிடக்கின்றனவென்று நூல்கள் கூறும்-எம்பெருமானுடைய திருத்தோள்கள் ஈரிரண்டுமால்வரைத் தோள் என்றும் குன்றருந்திரடோளன் என்று -எம்பெருமானும் மலை
    களையுடையன் என்னலாயிருந்தது. க ட ல்ரத்னாகரமாகையாலேமாமணிகளை யுடையது; எம்பெருமானும் குருமாமணிப்பூண்’ எனப்பட்டஸ்ரீகௌஸ்துபத்தையுடையவன். கடலைக்கடைந்தபோது அதில்நின்றும் பிராட்டி பிறந்தனளென்று புராண வரலாருதலால் மலர்மேல்மங்கை தங்கப்பெற்றது கடல். எம்பெருமான் அகலகில்லே னிறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பன். சங்குக்கு உறைவிடம் கடல்.
    எம்பெருமான் இடங்கைச்சங்கமுடையான்..

    பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதியில் உரைமேற்கொண்டு என்னுள்ள மோவாதென்கிற அறுபத்தைந்தாம் பாட்டில் “வரைமேல் மாகதமே போலத்திரைமேல் கிடந்தானை” என்றவிதுஅதோபமை திருப்பாற்கடலிலே எம்பெருமான் ப ள்ளி கொண்
    டிருப்பது – வெண்ணிறமான தொரு மலையில் மரகதக் கல்லைப் பதித்தாற் போன்றி ருப்பதாகக் கூறினவிது இல்பொருளுவமை.

    ஒண்முத்தும் பைம்பொன்னும் – கெண்டைக்.குலம் ‘என்கிற இம்மூன்று சொற்களும் உபமேயத்தைமறைத்து உபமானத்தை மட்டுமே சொன்னவை. முத்து என்றது முத்துப்போன்றகண்ணீரரும்பைச் சொல்லும். பைம் பொள் என்றது பொன் குலாம்
    பயலை’ எனப்படும் பசலை நிறத்தைச் சொல்லும். கெண்டை யென்றதுகயல்போன்ற கண்ணைச்சொல்லும். இங்கு இப்பாசுரத்தின் சுவைப்பொருளையறிவது நன்று. பொருள் படைப்பதற்காக நாயகியைப்பிரிந்துபோகவேணுமென்றெண்ணிய நாயகன் அவளோடு சொல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும், அல்லது தேசாந்தரம்போய்வருவதா யிருக்கிறே னென்று பிரிவை ப்ரஸங்கித்தாலும் அவள் மரணபர்யந்தமான கஷ்டத்தை யடைந்திடுவளென்று கருதி அவள் ஆற்றுமாறுமெதுவாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி லோகாபிராமமாகப்பலப்ரஸ்தாவங்கள் பண்ணுமடைவிலே உலகத்திலே பொருளீட்டுவதற்காகப் பிரிந்து தேசாந்தரம் போவதென்கிறவொரு விஷயமுண்டு
    எனப் பொதுப்படையானவொரு ரஸ்தாவமெடுத்துக்கூற,அவள்.அது கேட்டவுடன் இப்போது இவர் இவ்விஷயம். ப்ரஸ்தாவித்ததுனெல்ல. இது லோகாபிராழவார்க்தைகளிற் சேர்ந்ததல்ல,-நம்மைப் பிரிந்து போவதற்காகவே இது அவதாரிகையாகக் கூறின
    கூற்றாயிருக்கவேண்டும் என நினைத்து, பிரிவு உண்டாய்விட்டதா கவே நினைத்து வருந்திப் பிரிவாற்றாமையாலுண்டாகும் பசப்பென்கிறநிறவேறுபாட்டை யடைந்து கண்ணுங் கண்ணீருமாயிருக்க, அதைக்கண்டகாதலன் ‘நாம் பிரிந்து போவதாகச் சொல்லாதிருக்கவும் வெறும்வார்த்தையிலே நமது உட்கருத்தைத் தெரிந்துகொண்டஇவளது நிலைமை இப்படியாயிற்றே யென்று வியந்து தோழியை நோக்கி- பிரிவின் ப்ரஸ்தாவமும் அ ஹ்யமாகித் திருமேனி பாடுற்றுக் கண்ணீர் பெருக நிற்கும் தன்மை இதனால் சொல்லப் பட்டதாயிற்று.

    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ கலியனுக்கும்‌ ஸ்ரீ கண்ணனுக்கும்‌ 12 வகைகளால் ஓற்றுமை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

    July 26, 2025
    1-[ஸூர்யத்வாத்‌] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கண்ணபிரானுடைய திருவவதாரத்தைக்‌ கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை ; *ததோகிலஜஐக த்பத்மபோதாய அச்யுதபாநுநா, தேவகீபூர்வஸந்த்யாயாம்‌ ஆவிர்ப்பூதம்‌ மஹா த்மநா* என்கிற ச்லோகம்‌ க்ருஷ்ணாவதாரத்தைக்‌ கூறுமது. இதில்‌, தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றது. இதனால்‌ க்ருஷ்ணன்‌ ஸுூர்யனென்னுமிடம்‌ ஸித்தித்தது. 
    கலியனும்‌ ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை “கலயாமி கலித்‌வம்ஸம்‌ கவிம்‌ லோக திவாகரம்‌” என்கிற அவருடைய ஸ்துதிபத்யத்‌தினால்‌ உணரலாம்‌, ஆக இருவரும்‌ ஸூர்யர்களென்னு மத்தாலே ஸாம்யம்‌.

    2-[ஸூசிதத்வாத்‌] ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன்‌ பொருள்‌. கண்ணனுடைய அவதாரமும்‌ கலியனுடைய அவதாரமும்‌: இவர்கள்‌ அவதரிப்பதற்கு வெகுநாள்‌ முன்னமே ஸசஃசிப்பிக்கப்‌' பட்டிருந்தது. எங்ஙனே யென்னில்‌ ; கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்‌ அக்கம்ஸன்‌- தேவகிக்கு. மிகச்‌ சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்தி வத்துப்‌ பரமப்ரீதியுடன்‌ தம்பதிகளை ரதத்தில்‌ வீற்றிருக்கச்‌ செய்து அதனைத்‌ தானே ஓட்டிக்கொண்டு போகையில்‌ ஆகாசவாணி யொன்று செவிப்பட்டது! “இத்‌ தேவகியின்‌ எட்டாவது குழந்தையினால்‌ உனக்கு ம்ருத்யு விளையும்‌' என்று, அந்த வாக்கு அப்படியே பலித்தது. இதனால்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்‌
    முன்னமே ஸுசிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரமும்‌ முன்னமே ஸூசிதமாகி யுள்ளது. திருவாய்மொழியில்‌ (5-௨-1) “'கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌” என்கிற பாசுரத்தை ஆகாசவாணி யென்றே கொள்க. -தவறாமல்‌ பலிப்பது ஆகாசவாணி. இந்தப்‌ பாசுரமும்‌ தவறாமல்‌
    பலித்திருக்கின்‌றது. ஆசார்யஹ்ருதயத்தில்‌ “கலியுங்‌ கெடும்‌ போலே ஸுசிதம்‌'” என்றவிடத்து வியாக்கியானத்தில்‌ மணவாளமாமுனிகள்‌ -“இவர்‌ தாம்‌ மயர்வற மதிநலம்‌ பெற்றவராகையாலே “கலியுங்‌ கெடும்‌' என்று-திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ அவதரித்துக்‌ கலியுக ஸ்வபாவமும்‌ கழியுமென்று மேல்‌ வரும்‌ அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தாப் போலே” என்று திருவாய்மலர்ந்தருளியுள்ள திவ்ய உக்தி இங்கே அநுஸந்தேயம்‌, கண்ணன்‌ கம்ஸ வதம்‌ செய்தவன்‌ ;இவ் வாழ்வார்‌ கலி புருஷவதம்‌ செய்தவர்‌.

    3-[அபஹ்ருதிகரணாத்‌] கண்ணன்‌ கள்வனென்று ப்ரஸித்தி பெற்றதுபோல இவ்வாழ்வாரும்‌ கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர்‌. “வெண்ணெய்‌ களவுசெய்தான்‌, பெண்களைக்‌ களவுசெய்தான்‌! என்று ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்‌. இவருடைய சரித்திரத்‌திலும்‌ திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ கோபுர ப்ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப்‌ பலபல களவுகள்‌ செய்த செய்திகளை வாசிக்‌கின்றோம்‌. ஆக இத்தகைய கள்வத்தினாலும்‌ ஸாம்யம்‌.

    4-[கோகுலோத்தாரகத்வாத்‌] *ஆயர்பாடிக்கணிவிளக்கே' என்‌றும்‌, “'ஆயர்குலத்தினில்‌ தோன்று மணிவிளக்கை” ' என்றும்‌ சொல்லுகிறபடியே கண்ணன்‌ திருவாய்ப்பாடியில்‌ திருவவதரித்துக்‌ கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்‌, இவ்வாழ்வாரும்‌
    கோகுலோத்தாரணம்‌ செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்‌; *ந்ருபசு;” என்று ஆளவந்தாரும்‌, “வ்ருத்த்யா பசுர்‌ ஈரவபு:” என்று மணவாள மாமுனிகளும்‌ அருளிச்செய்தபடி நாமெல்லாரும்‌ பசுக்களேயன்றோ.
    “ஜ்ஞாநறேற ஹீந : பசுபிஸ்‌ ஸமா௩ :”” என்றும்‌ ப்ரஸித்தமாகவுள்ளது.
    ஞானமும்‌ நன்னடத்தையும்‌ ஒன்றுமின்றிக்கே யிருப்பதனால்‌ கோக்களா யிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார்‌ வந்து அவதரித்து உத்தாரகராயினர்‌.

    5-[பத்தத்வாத்‌] கண்ணன்‌ “மத்துறு கடை வெண்ணெய்‌ களவினிலுரவிடையாப்‌ புண்டு” என்றும்‌ “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌?' என்றும்‌ சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்‌தம்‌, இவ்வாழ்வாரும்‌, பகவதாராதனத்திற் காட்டிலும்‌ பரமபாவனமான பாகவதாராதனத்தில்‌ ஊன்‌றியிருந்த காலத்தில்‌ தாம்‌ அரசுக்‌குச்‌ செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச்‌ செல்வம்‌ முழுதையும்‌ செலவிட்டுவர, அச்செய்தியைச்‌ சிலர்‌ சொல்லக்கேட்ட கொற்றவன்‌ கோபங்‌ கொண்டு। இவரை ஒரு தேவாலயத்தில்‌ சிறைவைக்கச்‌ செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில்‌ பிரஸித்தம்‌. -ஆக, கட்டுண்டமையினால்‌ இருவர்க்கும்‌ ஸாம்யம்‌.

    6-[சாஸ்த்ரதத்வாத்‌] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சரஸ்‌திரத்தைக்‌ கொடுத்ததனாலே என்று பொருள்‌. கண்ணபிரான்‌ “அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்‌ தொருமுர்‌த்தி என்கிறபடியே-ஸகலார்த்தப்ரகாசகமாய்‌ ஸகலசேதரோஜ்ஜீவரஸாதனமான கீதா சாஸ்த்‌ரத்தை யருளிச்செய்தான்‌. திருமங்கையாழ்வாரும்‌ “நெஞ்சுக்கிருள்‌ கடி திபம்‌ அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம்‌, தமிழ நன்னூல்‌ துறைகளஞ்சுக் கிலக்கிய மாரண சாரம்‌, பர சமயப் பஞ்சுக்‌ கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே! என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற்காட்டிலும்‌ பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹா
    சாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார்‌. கண்ணன்‌ தந்த சாஸ்திரத்தை *கீதோப நிஷத்து” என்னுமாபோலே இதையும்‌ “பொங்கு புகழ்‌ மங்கையர்கோனிந்த மறையாயிரம்‌” என்பர்கள்‌. : ஆக, சாஸ்த்ர ப்ரதாநத்தாலே இருவர்க்கும்‌ ஸாம்யம்‌ பொருந்தும்‌.

    7-படுஜநஸஹயோகாத்‌ -கண்ணபிரான்‌ “ தன்னேராயிரம்‌ பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்‌?” என்கிறபடியே 'கொந்தளமாக்கிப்‌ பரக்கழித்துக்‌ குறும்பு செய்வானோர்மகனான தான்‌ செய்யும்‌ திமைகளுக்குத்‌ துணைவராகப்‌ பல சதுரர்களை உடன்‌ கொண்டிருக்‌தான்‌. திருமங்கையாழ்வாரும்‌, நீர்மேல்‌ நடப்பான்‌, நிழலிலொதுங்குவான்‌, தாளூதுவான்‌, தோலாவழக்கன்‌ முதலான சதுரர்களைத்‌
    தமது செய்கைகளுக்குத்‌ துணைவராகக்‌ கொண்டிருந்தார்‌.

    8-லக்ஷ்மீபதித்வாத்‌ -கண்ணபிரான்‌ ஸாக்ஷாத்‌ நாராயணமூர்த்தி யாதலால்‌ லக்ஷ்மீபதியாவன்‌. திருமங்கையாழ்வாரும்‌ லக்ஷமீபதி யாவர்‌. எங்ஙனே யென்னில்‌ : இவர்‌ வளர்ந்து வருகையில்‌ அற்‌மாட்டில்‌ அண்ணன்கோயில்‌ என்று வழங்குகின்‌ற திருவெள்ளக்குளமென்னும்‌ திருப்பதியில்‌ மிகச்‌ சிறர்ததொரு தாமரைப்‌ பொய்கையில்‌
    ீதவலோகத்து அப்ஸர ஸ்த்ரீகள்‌ பலர்‌ வந்து ஜலக்ரிடைசெய்து செல்ல, அவர்களுள்‌ திருமாமகளென்பாள்‌ தன்‌ இச்சையால்‌ தெய்வ வடிவத்தைவிட்டுமானுடவடிவங்கொண்டு தனியே குழுதமலர்‌ கொய்து நின்றாளாக, அங்கு அநுஷ்டாஈத்திற்காக வந்த ஒரு
    வைஷ்ணவ வைத்யன்‌ அவளைக்‌ கண்டு செய்தி விசாரிக்க, அவள்‌ என்னோடு கூடவந்த மாதர்கள்‌ என்னைவிட்டுப்‌ போய்விட்டார்கள்‌, தனியிருந்து அலைகின்ற என்னை நீர்‌ பாதுகாத்தருளவேணும்‌” என்று வேண்டிக்கொள்ள, மலடனான அம்மருத்துவன்‌ மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத்‌ தன்‌ மாளிகைக்கு அழைத்துப்‌ போய்‌ மனையாள்‌ வசம்‌. ஒப்பித்து, குமுதமலர்‌ கொண்டு நின்றது
    காரணமாகக்‌ குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து வருகையில்‌ அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய, பிராயம்‌ வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்‌ பெண்ணுக்கு ஏற்ற கணவன்‌ உலகத்திலுளனோ' என்ற கவலையுண்டாக, அப்பொழுது அவளுடைய ரூப
    லாவண்ய ஸெளந்தரியங்களையும்‌ குணாதிசயங்களையும்‌ சாரர்கள்‌ திருமங்கை மன்னனிடம்‌ கொண்டாடிக்‌ கூற, உடனே அவர்‌ அங்கு வந்து அந்த வைத்தியனிருக்கும்‌ வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷை செய்து அப்பெண்ணின்‌ வரலாற்றை வினாவி அதைத்‌ தந்தையார்வாயில்‌ அறிந்த வளவில்‌ “இவளை எனக்குத்‌ தாரைவார்த்துக்‌
    கொடுக்கவேணும்‌” என்று அவரை வணங்கிக்கேட்டார்‌, அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு **திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கேயன்றிப்‌ பிறர்க்கு வாழ்க்கைப்பட மாட்டேன்‌” என்று தன்‌ உறுதியைத்‌ தெரிவித்தாள்‌. -அதுகேட்ட திருமங்கை மன்னன்‌ உடன்‌ திருநறையூர்க்குச்‌ சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு மெம்பெருமானுடைய திருமுன்‌
    பேஙின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்‌ திருவிலச்சினை பெற்றுப்‌ பன்னிரண்டு திருமண்‌ காப்புகளும்‌ சாத்திக்‌ கொண்டு விவாஹார்த்தமாக விரைவில்‌ வந்துசேரக்‌ கண்டு மீண்டும்‌ குமுதவல்லி “நீர்‌ ஓராண்டளவும்‌ நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்‌ போனகஞ்‌ செய்த சேஷத்தையும்‌ உட்கொண்டாலன்றி உம்மை நான்‌பாணிக்கிரஹணஞ்‌ செய்து கொள்ளமாட்டேன்‌”! என்ன, அவளிடத்‌தில்‌ கொண்ட ஆசையின்‌ கனத்தால்‌ அவர்‌ இவ்வரிய விரதத்தைச்‌ செய்து முடிப்பதற்கும்‌ உடன்பட்டு அங்ஙனமேசெய்வதாகச்‌ சபதஞ்‌ செய்து கொடுக்க, அதன்பின்‌ இருவர்க்கும்‌ திருமணம்‌ நடை பெற்றது. லக்ஷ்மீபதித்வமானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும்‌ லக்ஷ்மியின்‌ பெயரைத்‌ தரித்திருந்த குமுதவல்லித்‌ தாயாருக்குப்‌ பதியென்னுங்‌ காரணத்தினால்‌ ஆழ்வாரும்‌ லக்ஷ்மீபதி யாயினர்‌. ஸ்ரீ வைஷ்ணவலக்ஷ்மிக்குப்‌ பதியென்றுங்‌ கொள்ளலாம்‌.

    9-நீலத்வாத்‌ -கண்ணபிரான்‌ “கண்ணனென்னுங்‌ கருந்தெய்வம்‌” என்றும்‌ “கானகமெல்லாக்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனிவாட” என்றும்‌ சொல்லுகிறபடியே நீலநிறத்தழகார்ந்தவன்‌. திருமங்கை யாழ்வாரோவென்னில்‌ நீலனென்னுக்‌ திருநாமமுடையவர்‌. இராமானுச நூற்றந்தாதியில்‌ “தண்டமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு” என்னுமிடத்தில்‌ நீலனென்ற சொல்லால்‌ திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்பதறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

    10-நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்‌ -கண்ணபிரானுடைய சரித்திரங்‌களை நோக்குமிடத்து “மச்சொடுமாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்குக்‌ கச்சொடுபட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலுற்‌ தீமைகள்‌ செய்வாய்‌” என்றும்‌ “பிறர்‌ மக்களை மையன்மை செய்து தோளாலிட்டவரோடு திளைத்து. நீ சொல்லப்படாதன செய்தாய்‌” என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டி தங்களைச்‌ செய்த விவன்‌ நீதிநெறியில்‌ நின்றும்‌ நழுவினவனல்லவா என்று நினைப்பதற்கு இலக்காயிருப்பன்‌ கண்ணபிரான்‌. திருமங்கையாழ்‌வாரும்‌ அப்படியேயன்றோ. இத்‌ தன்மையினால்‌ ஒரு ஸாம்யம்‌. நீதி
    நெறியில்‌ ஈழுவின தாக நினைக்கலாமத்தனையன்‌றி உண்மையில்‌ இருவரும்‌ நீதிநெறிவழுவாதவர்களே, மது: ச்லோகத்தில்‌ “நீதி மார்க்கச்யுதிமதிபஜநாத்‌” என்றது ச்யுதிமதிவிஷயத்வாத்‌' என்றபடி கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த தேசிகன்‌ யாதவாப்யுதயத்தில்‌ (4-64) “விமோஹரே வல்லவகேஹிநீநாம்‌
    நப்ரஹ்மசர்யம்‌ பிபிதே ததீயம்‌, ஸம்பத்ஸ்யதே பரலகஜீவரம்‌ தத்‌ ஸத்யேக யேறைவ ஸதாம்‌. ஸமக்ஷம்‌?
    என்னும்‌ ச்லோகத்தினால்‌ தெளிவித்தார்‌. அதாவது,பாரதப்போரில்‌ அச்வத்தாமா பிரயோகித்த அபாண்டவாஸ்த்ரத்தினால்‌ உத்தரையின்‌ கருப்பிண்டம்‌ கரிக்கட்டையாக, அப்போது கண்ணபிரான்‌ “யதி மே ப்ரஹ்மசர்யம்‌ ஸ்யாத்‌ ஸத்‌
    யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம்‌ மமைச்வர்மம்‌ த ஜீவது பாலக!
    ” (நான்‌ ப்ரஹ்மசர்யமும்‌ ஸத்யமும்‌ வழுவா தவனாயிருந்தேனாகில்‌ இது உயிர்பெற்றெழுக) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால்‌ கண்ணன்‌ நீதிநெறிவமுவாதவனென்‌பது விளங்கிற்று, திருமங்கையாழ்வார்‌ நீதிறெறிவமுவா தவரென்‌பதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்‌தவதத்தில்‌ “ஜிதபாஹ்யஜிநா தி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமண்டபவப்ரகணாக்‌ வித்தே பரகாலகவி: ப்ரணமேமஹி தாக்‌” என்னும்‌ ச்லோக ரத்நத்தினால்‌ வெளியிட்டருளினர்‌.

    11-[அந்ததச்ச அவதாராத்‌] பகவானது விபவாவதாரங்களில்‌ க்ருஷ்ணாவதாரமே முடிவானது. கல்கியவதாரம்‌ பவிஷ்யத்தென்‌கிறார்கள்‌. அது வந்தபோது பார்த்துக் கொள்வோம்‌. இதுகாறும்‌ முடிந்துள்ள அவதாரம்‌ க்‌ருஷ்ணாவதாரமே. திருமங்கையாழ்வாரும்‌ ஆழ்வார்களுக்குள்‌ கடைப்பட்டவர்‌. “பொய்கையார்‌ பூதத்தார்‌
    பேயார்‌ புகழ்‌ மழிசையையனருள் மாறன்‌ சேரலர்கோன்‌, துய்யபட்ட நாதன்‌ அன்பர்தாள்தூளி நற்பாணன்‌ *நன்கலியன்‌', ஈதிவர்தோற்‌ றத்து அடைவாமிங்கு”
    என்ற உபதேசரத்தினமாலைப்‌ பாசுரமுங்‌ காண்க. ஆக இருவரும்‌ சரமாவதாரபூதர்‌ என்பதனால்‌ ஸாம்யம்‌ பெற்றனர்‌.

    12-சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ -கண்ணபிரான்‌ '*தேனுகன்‌ பிலம்‌பன்‌ காளியனென்னும்‌ தீப்பப்பூடுகளடங்கவுழக்கி” என்றும்‌ “மலை புரைதோள்‌ மன்னவரும்‌ மாரதரும்‌ மற்றும்‌ பலர்‌ குலைய, நூற்றுவரும்‌ பட்டழிய” என்றும்‌ சொல்லுகிறபடியே பகைவர்களை யெல்லாம்‌ வேரோடு களைந்கொழிப்பதில்‌ பேர்‌ பெற்றவன்‌. ஆழ்வாரும்‌ “அருள்‌ மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌” என்றும்‌ '*ஒற்றலர்‌ தங்களை வெல்லு மாடல்மாவலவன்‌ கலிகன்றி” என்றும்‌ தாமே யருளிச்‌ செய்தபடியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக்‌ களைக்தொழித்து இதனாலேயே பரகாலனென்று பேர்பெற்றவர்‌.

    ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும்‌ கலியனுக்கும்‌ ஒற்றுமை நிர்வஹிக்கப்‌ பட்ட தாயிற்று. இந்த 12 அர்த்தங்களைக்‌ காட்டுவதொரு சுலோகம்‌--
    ஸூர்யத்வாத்‌ ஸூசிதத்வாத்‌ அபஹ்ருதிகரணாத்‌ கோகுலோத்தாரகத்வாத்‌
    பத்தத்வாத்‌ சாஸ்த்ரதத்வாத்படுஜஸஹயோகாச்ச லக்ஷ்மீபதித்வாத்‌
    நீலத்வாத்‌ நீதிமார்க்கச்யுதி மதிபஜநாத்‌ அந்ததச்சாவதாராத்‌
    சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ கலிரிபுமுநிராட்‌ க்ருஷ்ணதுல்யோ விபாதி.


    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

     

    ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-13-

    July 13, 2025

    ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் இருந்து (161-162/181/184/187/193-194/365-366/379-380/388-389)திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

    (161-162) 1-நம்மாழ்வார் விஸ்தரித்தருளிச்செய்த விஷயங்களைத் திருமங்கையாழ்வார் சுருக்கியருளிச் செய்வர்.-2-அவர் சுருக்கியருளிச்செய்ததை இவர் விஸ்தரித்தருளிச் செய்வர்.-3-சில விஷயங்களை இருவரும் ஸமமாக அருளிச்செய்வர்.-4சில விஷயங்களில் கலியன் பரிஷ்காரம் காட்டுவர்.

    நம்மாழ்வார் விஸ்தரித்ததைத் திருமங்கையாழ்வார் சுருக்குவது
    தூதுவிடுதல்;
    நம்மாழ்வார் தலைமகள்பாவனையில் தூதுவிட்டது நான்கு திருவாய்மொழிகள். . அஞ்சிறைய மடநாராய். வைகல் பூங்கழிவாய். பொன்னுலகாளீரோ. எங்கானலகங்கழிவாய் ஆக இந்த நான்கு பதிகங்களில்நம்மாழ்வார்தூது மிகவிரிவாக நிகழ்ந்திருக்கின்றது. திருமங்கையாழ்வாரால் இதுமிகவும் ஸம்க்ஷேபிக்கப்பட்டது. பெரிய திருமொழியில் (3-6) தூவிரிய மலருழக்கிப்பதிகத்தில் வயலாலி மணவாளனுக்குத் தூதுவிடத்தொடங்கி நான்கு பாசுரங்களோடு அதனை நிறுத்திவிட்டார். மேலே ஓன்பதாம் பத்தில் (94) * காவார்மடற்பெண்ணை யென்கிற திருப்புல்லாணிப் பதிகத்தில் (2) புள்ளினங்காள்!புல்லாணி அன்னமாய் நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே என்றொருபாசுரத்தில் மட்டுமே தூதுவிடுதல். திருவிருத்தத்திலுள்ள-தூது விடுதலுக்குச் சேரத் திருநெடுந்தாண்டகத்திலுள்ளது. இருவரும் ரண்டு பாசுரங்கள்.

    நரஸ்துதி விலக்குதல் -நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3 – 9) சொன்னால்விரோதமிது என்னுந் திருவாய்மொழியில் சொன்னாவில் வாழ்புலவீர் ! சோறுகூறைக்காக, மன்னாத மானிடரை வாழ்த்துதலாலென்னாகும்? என்ற திருவாய்மொழி நூற்றந்தாதிப்படியே நரஸ்துதியை விலக்கினது விஸ்தாரமாகவுள்ளது.இதனைத் திருமங்கையாழ்வார் ஒரே பாட்டில் சுருக்கினார். பெரியதிருமொழி முதற்பதிகத்தில் (7) இற்பிறப்பறியீர்…… கற்பகம் புலவர் களை ணென்றுலகில் கண்டவா தொண்டரைப்பாடும் சொற்பொருளாளீர்! சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையே தொழுமின் என்றபாசுரங் காண்க.

    அனுகரித்துத் தரித்தல்– திருவாய்மொழியில் (5 – 6) கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும் * என்கிற பதிகத்தில் “கடல் ஞாலத்தீசனைமுன் காணாமல்நொந்தே, உடனாவனுகரிக்கலுற்றுத் திடமாக வாய்ந்தவனாய்த் தான்பேசும்மாறன் * என்ற நூற்றந்தாதியின்படி, யானே யானே யென்றுசொல்லி எம்பெருமாாகவனுகரித்துப் பேசுதல் விஸ்தாரமாகவுள்ளது. திருமங்கையாழ்வார்க்கு இவ் வநுபவம் ஒரே பாசுரத்தில் சுருக்கமாக நிகழ்ந்தது.பெரியதிருமொழியில்(8-2-6) .வடவரை நின்றும் வந்து, இன்று கணபுரமிடவகை கொள்வதுயாமென்று பேசினாள். திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சொரிப்பெருமாளாகக் காட்சிதருவது யானே யென்றது இதில். நம்மாழ்வாருடையஅநுகாரம் தாய்பேச்சால் வெளிவந்தது போலவே இவருடைய அநுகாரமும் தாய்பேச்சாலேயே வெளிவந்ததென்பதும் குறிக்கொள்ளத்தக்கது. . கடல் ஞாலப்பதிகம் தெள்ளியீர் பதிகமும் தாய்ப்பேச்சேயன்றே.

    நம்மாழ்வார் சுருக்கியதைக் கலியன் விரித்துரைப்பது.
    பிரளயத்தில் ஸகல தெய்வங்களும் எம்பெருமானுடைய திருவயிற்றில்புகுந்து ர ைபெறும் விஷயத்தை நம்மாழ்வார் திருவாசிரியத்தில் (7) நளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும், தளிரொளியிமையவர் தலைவனு முதலாஒருபொருள் புறப்பாடின்றி முதுவதுமகப்படக் கரந்து, ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனையல்லது, ஒருமாதெய்வம் மற்றுடையமோ யாமே! * என்று சுருக்கி யநுஸந்தித்ததைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (11-6)-மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி என்கிற பதிகத்தில் (10) * தேவரையு மசுரரையும் திசைகளையுங் கடல்களையும் மற்றும் முற்றும், யாவரையு மொழியாமே யெம்பெருமானுண்டுமிழ்ந்த தறிந்து சொன்ன என்ற நிகமனப் பாசுரத்தின்படியே விஸ்தரித்தருளிச்செய்தவாறு காண்க.

    திருவாய்மொழியில் (5-3) *மாசறுசோதிப் பதிகத்தில் (9) * குதிரியாய் மடலூர்துமே * என்றும், (10) யாமடலூர்ந்தும் என்றும், மடலூர்வதான ப்ரஸ்தாவத்தை அதிஸம்ஷேபமாகச் செய்தார் நம்மாழ்வார். திருமங்கையாழ்வார் இதனை சிறிய திருமடல் பெரிய திருமடல் என்னும் இரண்டு திவ்வியப் பிரபந்தங்களினால் மிகமிக விஸ்தரித்தருளினார்.

    இருவரும் ஸமமாக அருளிச்செய்தது.-நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3-7) *பயிலுஞ் சுடரொளியிலும், (8-10)நெடுமாற்கடிமையிலும் அநுஸந்தித்த பாகவத சேஷத்வத்தை திருமங்கையாழ்வார் தமது பெரியதிருமொழியில் (2-6) நண்ணாதவாளவுணர் (7-4) கண்சோரவெங்குருதி ஆகிய இரண்டு திருமொழிகளில் அநுஸந்தித்தார்.திருவாய்மொழியில்(6-6) மாலுக்கு வையமளந்த பதிகத்தில் “இழந்தது சங்கே, இழந்தது மாமை நிறமே, இழந்தது பீடே, …. இழந்தது கட்டே” என்று எல்லாமிழந்ததாகத் தாய் பேச்சாலே தெரிவிக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் தமது திருமொழியில் (8-3)கரையெடுத்த சுரிசங்கு மென்னும் பதிகத்தில் “இழந்தேனென் வரிவளையே,இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் சரிவளையே ….. இழந்தேனென்பெய்வளையே * என்றுதாமிழந்தவற்றைத் தம் திருவாக்கினாலேயே வெளியிட்டார்.திருவாய்மொழியில் கங்குலும் பகலும் பதிகத்தில் தாய் பேச்சாலே இவள்திறத்து என்செய்கின்றாயே, இவள்திறத்தென் சிந்தித்தாயே.. என்று எம்பெருமான் திருவுள்ள மென்னவென்று கேட்கப்பட்டது, பெரியதிருமொழியில் (2-7) திவளும் வெண்மதிபோல் என்கிற திருவிடவெந்தைப் பதிகத்தில் உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்? * என்று பாசுரந்தோறும் தாய் பேச்சாலே அந்தக்கேள்வியே நிகழ்ந்தது.

    நம்மாழ்வார் செய்தருளின அநுபவங்களில் சிலவற்றில் திருமங்கையாழ்வார் பரிஷ்காரம் செய்திருப்பதுமுண்டு. திருவாய்மொழியில் (4-6) * தீர்ப்பாரையாமினியில் தேவதாந்தரக் கட்டுவிச்சி வந்து குந்தமை சொல்லிற்று.சிறியதிருமடலிலும் திருநெடுந்தாண்டகத்திலும் (1) பகவத்ப்ரவணையான கட்டுவீசியின் பேச்சு வெளியிடப்பட்டது. திருவாய்மொழியில் ( — ) * உண்ணுஞ்சோறுபதிகத்தில் ஆழ்வார்தாமே தனியே திருக்கோளூர்க்கு நடந்தமை சொல்லிற்று. பெரியதிருமொழியில் (3-7) கள்வன்கொல் பதிகத்தில் வயலாலி மணவாளன் வந்துஆழ்வாரைக் கைப்பற்றிக்கொண்டு போனதாகச் சொல்லிற்று-இங்ஙனே பலவகை யநுபவரஸங்கள் சுவைக்கத் தக்கன.

    பெரிய திருமொழி வ்யாக்யானத்தில் (5-8-7) ஓதுவாய்மையு முவனியப் பிறப்பு முனக்கு முன் தந்த அந்தண என்ற விடத்து “முற்பட த்வயத்தைக் கேட்டுஇதிஹாஸ புராணங்களையும் அதிகரித்துப் பரபக்ஷ ப்ரதிக்ஷேபத்துக்கு உடலாகயாய மீமாம்ஸைகளுமதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலே யாம்-நம்பிள்ளையைப் போலே” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்துள்ள ஸ்ரீஸக்தி யொன்றே இவருடைய ஞானப்பெருமையை விளக்கக் கூடியது. திவ்ய ப்ரபந்தங்களுக்கும் இதிஹாஸ புராணாதிகளுக்கும் ஆழ்ந்து இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை யருளிச்செய்வதில் இவர்க்கு ஒத்தாரும் மிக்காருமில்லை.-“துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம் முகப்பால் என்னவுலகாரியனோ வென்றுரைக்க, பின்னை யுலகாரியனெனும் பேர் நம்பிள்ளைக் கோங்கி, விலகாமல் நின்றதென்றும் மேல்” என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம்-பின் பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவுமற்று மிக்க வாசையினால், நம்பிள்ளைக்கான வடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே! ஊனமற வெப்பொழுது மோர்

    மயா த்வம் ஸமநுஜ் ஜாதோ கச்சலோகாநத்தமாந்” என்று ஜடாயுவுக்கு முத்தி யளித்தது எங்ஙனே பொருந்தும்?”ஸத்யேந லோகாந்ஜயதி” என்கிற லோகத்தைக் கொண்டு நிர்வஹிப்பர்

    அஸ்மதாதிகளான சேதனர்கள் பலபல செய்தே ரசைபெறவேண்டும்.-(இது வடகலையாருடைய கொள்கை ) பரமசேதனன்தலையிலேயே ஸகல பாரமுமுள்ளது.
    (இது தென்கலையாருடைய கொள்கை.)-இதையாரும் மாற்றிச் சொல்ல முடியாது. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் நிதாநம் தத்ராபிஸ்வயமகிலநிர்மாண நிபுண:” என்றும், “த்ராணே ஸ்வாமித்வமௌசித்யம் ந்யாஸாத்யா: ஸஹகாரிண; ப்ரதாநஹேது: ஸ்வாதந்த்ர்யவிசிஷ்டா கருணா விபோ!” என்றுமுள்ள இரண்டு வசனங்களேபோதும் தேசிகளித்தாந்தமறிவதற்கு. ஸர்வமுக்தி ப்ரஸங்கமென்பாருடையவாயை மூடுவிக்க (ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா) என விசேஷித்தது.-

    “திருக்கேட்டியூர் நம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் கேட்டார்’-என்றருளிச் செய்ய வேண்டியிருக்க, அங்ஙனமருளிச் செய்யாமல் “ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தார்” என்றருளிச் செய்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். ஸ்வாமி தாம்ஸாக்ஷாதாசார்ய
    ரான பெரியநம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் க்ரஹித்தாயிற்று. அப்போது பெரியநம்பிகள் ஸ்வாமி திருச்செவியிலே “ஆளவந்தார் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தநிதி வைத்தருளியிருக்கிறார், அதை அவர் பக்கலிலே சென்று பெறுவீராக” என்று நியமித்தபடி யாலே ‘கோஷ்டீபூர்ண குரூபஸத்தி குசலோ யாம் சச்வதாஸ்ேதிவார்” என்று தொடங்கி-பட்டரருளிச்செய்தபடியே திருக்கோட்டியூர்க்குப்பலகால் நடந்து துவண்டு கேட்டு….எம்பெருமானாரென்று திருநாமம் பெற்றிருக்கிறார் ஸ்வாமி.

    ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே’ “‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்காரகர்ப்பம் அவத்யகரம், அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” இத்யாதி ஸ்ரீலோகாசார்யஸுக்திகளையும், “கீழை மேலை வடக்கிலவை புறம்பாக, தன்பற்று உள்ளசல்” இத்யாத்யாசார்ய ஹ்ருதய ஸூக்திகளை யும் அதிகரித்தேஸ்வாமி தேசிகன் கீதார்த்த ஸங்க்ரஹராக்ஷை, ந்யாஸத்திவகம் முதலானவை யருளிச்செய்தார். “நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்வை காரித:, உபாயநாம் பரித்யஜ்ய நீயஸ்யேத் தேவேது தாம் அபீ: ” என்றஆளவந்தார் ஸூக்தியின் ரக்ஷையில் தேசிகன் ஸாதித்தருளின ஒருஸூக்தி ஆயிரம் ஸ்ரீ வசன பூஷணமன்றோ.

    இவன்தான் உபாயா நுஷ்டானம் பண்ணிற்றும் வரத!தவ கலுப்ரஸாதாத்ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய்,அவன் ஸ கரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன்கொடுத்த கரணகளே பரங்களைக்கொண்டு அவன் காட்டின வுபாயத்தை அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்குசாதகம்போலே அண்ணாந்திருக்கிற இவனை ஸ்வாதீந ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுக்ஷவுக்கு உசிதமன்று…. என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே யென்றும் இசைவிததென்னையுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே யென்றுஞ்சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக வெண்ணுகை உ.சிதமன்றென்று ஏகசப்தத்துக்கு தாத்பர்யம்”என்றார் [ஹாஹா ! லோகாசார்யாதிகளும் இவ்வளவு எழுதவில்லையே]இத்தனைக்கும் சிகரம்”அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநி ம் லப்த்வா ?என்கிற ஸ்ரீபாஷ்ய திவ்ய ஸுக்தி

    ————

    181-திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –
    உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் -அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
    ” என்பது பிராட்டியின் திருவாக்கு.-அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.” என்றார்.-பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அ நாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயத் யா ரித ஸம் த்ராஸ த்வாந்த வித்வம்ஸ நோதய :, ப்ரபாவாந்ஸ்தயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ‘ என்று ரகுவீர கத்ய மங்கள ச்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவி நாபாவமேயாம். மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளுடையான்’-பிராட்டியேதான் மதுரச்கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான்ஸு ந்தர பா – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவ
    முதுண அமுதில் வரும் பெண்ணமு துண்ட வெம்பெருமானே!
    ” என்றார் திருமங்கை
    யாழ்வாரும்.-வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயின னென்றதாகக் கொள்க.-மேலே கேசவனென்றதனால் பாசுாரம பங்க ககை சிதமாகிறத-கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக
    அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான
    பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே
    யாதலால் அது கேசவனை யென்பதனால் சிதமென்னக் குறையில்லை
    .-“திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸசனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;சேயிழையார் என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்வியஇழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால்சொல்லப்பட்ட
    தாகிறது
    . ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
    புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே-பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று-அடுத்தபடியாக ஸீகாபிராட்டி மங்களாசரஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
    விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
    அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.

    இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம்
    செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று
    நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களரங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூபஸம்ஹ நம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ரு ர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்றபாடமும் பல ஸ்ரீகோ ரஹங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப்பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில்
    கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷி
    களையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்துகொள்ளக் குறையில்லை
    .

    ரெள மஹாபலெள,புண்டரீக விசாலாசெக்ஷள சீரக்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை –அதன் பிறகு தாரையின் புகழுரை.-ிவாஸவ்ருக்ஷஸ் ஸா தூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-தவமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தமதார்மிகச்ச, அக்ஷய்யகீர்த்திச்ச விசக்ஷணச் ச கூமாவாந்க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள் ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-வயக்கமேஷ மஹாயோ …. தம : பரமோ
    யாதர பரங்க சக்ரதாதர , ஸ்ரீவளவக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் பாச்வதோ தருவ:”இத்யாதி

    யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வரக்கிலும் வந்ததல்ல.-திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறைகொண்டவர் சக்ரவர்த்திதிருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்றுசொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற் வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்கவேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றதுதான் அங்குப் பறைகொண்டவாறு.

    குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
    மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
    அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
    என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”

    பெருமாள்திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹிதஸித்தி யாதலால் இதனையே பறைகொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சாலவிணங்கும்.

    “அணிபு துவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த வினேஷணமும்
    ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி ய உபபாதி போம். ஆண்டாளுக்கும வான்
    மீகி முனிவர்க்கும் அபலபிக்கவொண்ணாத வொரு ந்திகர்ஷம் கோதாஸ்தியில்-ः –
    தச் ரவணதோ வ ராத்மாஸ் தே ஜரதோ ய வ ஸ மு : கவிஸார்வபெளம் கோதே! 9கிமத்புதமிதம் பதமீஸ்வதந்தேவக்ரா விந்தமகரந்தநிபா: ப்ரபந்தா: என்கிற லோகத்
    திற்கு அடியேனுடைய வியாக்கியாளத்தின்ஒருபகுதி -நிலததில்தென்படும் புற்றானது பூமிதேவியின்காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமா தலால் பூமி என்றேகொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில்நின்றும் தோன்றியவால்மீகி முனிவர்-ஆண்டாளுடையகாதில்நின்றும்தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்திஏற்பட்டுவிட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும்தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில்நின்றுஉண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோகவிலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவா னால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஹஜமே யாதலால்
    மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில்கின்றும்தோன்ற
    வென்பதில் வியப்புஒன்றுமில்லைகிடீர் ஸ்ரீராமாயணத்திற்குஏற்பட்டிருக்கும் பே.யதையைப் பற்றிச் சிறிது வியக்கவேண்டுமே யல்லது உம்முடைய திவ்யப்பந்தன்
    ளுக்கு ஏற்பட்டிருக்கின்றபோக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
    ஸக்தியில்லை என்பது உள்ளுறை இதனால்,வால்மீமி சோகிலத்தின் சொற்களில்
    கிளிமொழிக்கோதையின் சொற்களே பாமமது ங்களென்பது பெறுவிக்கப்பட்

    ”கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்றுகாட்டினாப்போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவைமிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹஸ்யா சாப விமோசனம் .4.வில்வளைத்து வைதேஹி யை மணம்புணர்ந்தது. 5.பாசுராமபங்கம்.(ஆக 5) அயோத்யாகாண்டத்தில்,1.யுரஜபட்டாபிஷேகப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங்கங்கைதன்னில் சீரணிந்த தோழமைகொண்டது. 4. பாதுகாபட்டாபிஷேகம்.அத்திரிபகவானாச்ரமத்தில் அந யரதேவிக்கும் மீதாதேவிக்கும் னம்வாதம்.(ஆக 5)இங்ஙனேகாண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை யைந்தாக வகுத்
    தாள்வது.-இப்பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக; உரைப்பார்-உபந்யளிக்க ல்லவர்கள்.

    மால்வரைத் தோள்-பெரிய மலைபோன்றதாகச் சொல்லக்கூடிய பு வலமுடையவனென்றபடி, அன்னவன்பொளர்ய வீர் பராக்ரம புஷ்கலனே யாகக் கடவன் ” ய ய மஹா ! மாயீ
    வெளரெய!….. அஸஷாயமா ! அ பாய ஸர ஹஸ் !
    என்று போற்ற ன்றபெருமாளுக்
    கும் மால்வரைத்தோளுடைமை கன்குபொருந்தும். [ஈரிரண்டு *ஜாதோளி ெவஜெவே !
    பாடுங்கசக்க ய ரயா என்னப்பட்ட கண்ணபிரானுக்கு அதுர்வ- ஜத்வண்டேயல்லது இராமபிரானுக்குண்டோ? என்னவேண்டா; பம்பாளரஸ் தீரத்திலே வந்து சண்ட திருவடி “ஆயதாச் ருத்தாச் ச. பா வ : பரிவே ர மா ” என்று ப வசக வூயோ ம்-பண்ணிச்சொன்னதற்கு உபபத்தி காட்டும் ஸ்ரீகேரவிந்தராஜர்-என்று வியாக்கியானித்துள்ளது காண்க. பரமபக்தையானமந்தோதரிக்கு மிங்ஙனே காட்சியளித்ததுண்டே. செங்கண்] “சக்ஷ-ஷாதவ ளெளம்யேந பூதாள்மி

    நியாஸதிலகத்தில் வெகு சாதுர்யமாகக் காட்டியருளினார்; எங்ஙனே என்னில்; அதுதன்னிலுள்ள சுலோகமிது –
    “ ஆர்த்தேஷு ஆசுபலா ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா
    வஹ்ந்யாதேரநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவந் வ்யாபிநீ,
    ஸ்ரீரங்கேச்வர! யாவதாத்ம நியத த்வத் பாரதந்த் யோசிதா த்வய்யேவ த்வதுபாயதீ அ தஸ்வோபாயபாவாஸ்து மே.”
    இதில் ப்ரபத்திக்கு இட்டிருக்கிற விசேஷணங்களத்தனையும் பக்திவேஷ வ்யாவர்த்தகங்கள். விவரித்துக் காட்டுகிறேன் காண்மின்; (ஆர்த்தேஷு ஆசுபலா]பக்தியானது விளம்பித்துப் பலனளிக்கும் ; ப்ரபத்தி அங்ஙனன்றிக்கே விரைவில் பலனளிக்கும் – ஆர்த்தப்ரபந்நர்திறத்தில். [ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா) பக்தியானது தோஹாந்தர ஸாம்பந்தத்தையறுத்துத் தருவதில் நியதியுடைய தன்று; ப்ரபத்தி நியமேந தேறாந்தர ஸம்பந்தத்தை யறுத்துத் தரும்.(வ ந்யாதே:அநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவத் வ்யாபிநீ] பக்தியாகிற உபாயத்தின் அநுஷ்டானத்தில் அ கார்யம் முதலியவை அபேக்ஷிதமாயிருக்கையாலே அது அதிகருதாதிகாரமாயிருக்கும். ப்ரபத்தியில் அவ்வபேக்ஷையில்லாமையாலே ஸத்யம் சொல்வதற்குஎப்படி ஸர்வரும் அதிகாரிகளோ அப்படியே ப்ரபத்தியிலும் ஸர்வரும் அதிகாரிகள். இனி இதற்கு அடுத்த விசேஷணமே ப்ரக்ருத விஷயத்திற்கு உற்று நோக்கத்தக்கது. யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ச்யோசிதா] பக்தி ஸ்வரூபவிருத்தம்.ப்ரபத்திஸ்வரூபா நுரூபம் என்கிறது . யாவதாத்மநியதமான அத்யந்த பாரதந்த்ர்யத்துக்கு ப்ரபத்தி உசிதமாயிருக்கு மென்றபோதே ரபத்திப்ரதிகோடியான பக்தியானது அந்த பாரதந்திரியத்திற்கு விருத்தமாயிருக்கு மென்னுமிடம் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கப்பட்டதாயிற்றன்றோ; ஆகவே வேதாந்தகுருவின் திருவுள்ளமும் உபாயாந்தரம் ஸ்வரூப விருத்தமென்பதே யென்று தேறி நின்றது. பத்தி முதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல் * என்ற செய்யுள் வேதாந்த வாசிரியருடையதாக இருந்தால் பக்தி முதலான உபாயாந்தரங்களில் பதி ஏன்கூட வில்லை? என்று கேட்கவேணும். “உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தமென்ன வொண்ணாது. இவை அகிஞ்சநோநந்யகத்தி என்றிருக்கும் அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்களென்ன ப்ராப்தம் “என்றும் ஸ்வாமி ரஹஸ்யத்தில் பேசியிருப்பதுண்டு.ந்யா திலகத்தி லருளிச்செய்தபடியே இவை அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்குப் போராதென்கிறஸத்ஸம் ரதாய நிஷ்கர்ஷம் சால்வினிது.

    நந்த்ரு நந்த ய பாவோயம் நப்ரயோஜந பூர்வக;, நீசோச்சயோஸ் ஸ்வபாவோயம்
    ந திருநந்த யதாத்மக”
    என்று அஹிர்ப்புத்ந்யஸம்ஹிதையிலுள்ள வசனத்தை வேதாந்தவாசிரியரும் எடுத்துக் காட்டியுள்ளார். பெரியாரைக் கண்டால் சிறியார்,
    தங்களுடைய சிறுமைக்கும் எதிர்த்தலையின் பெருமைக்கும் ப்ரதர் சகமாக நமஸ்காரம் செய்யவேணுமென்றது.வேறொரு ப்ரயோஜநமும் இதற்கில்லையென் றும் சொல்லிற்று. ஒருகால் தொழுதமாத்திரத்தினால் ஸ்வநிகர்ஷமும் பரோத்கர்ஷமும் ப்ரதர்சிதமாயிற்று. பலகால் தொழவேணுமென்கிற நிர்ப்பந்தத் திற்குப்ரஸக்தியில்லை.

    ாஸ்த்ரங்களில், ஒற்றைக்கையால் நமஸ்கரிப்பது அபசாரம், ஒரு ரதக்ஷிணம் பண்ணுகை அபசாரம் என்று சொல்லியிருப்பதுபோல ஒருமுறை நமஸ்கரிப்பது அபசாரம் என்று சொல்லப்படவில்லை “ஏகேந் பாணிநா யஸ் து ப்ரணமேத் புருஷோத்தமம், ந்யாய்யஸ் தஸ்ய கரச்சேத” என்றும், “ஏகஹஸ்தப்ரணாமச்ச ஏகஞ்சாபி ப்ரதக்ஷிணம்” என்றும் இத்தகைய ப்ரமாணங்களையே ஸ்வாமி ஸ்தோத்ர பாஷ்யாதிகளில்உதாஹரிக்கக் காண்கிறோம்.எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் “‘ ப்ரணம்ய த்தாயோத்தாய புந புநா ப்ரணம் “[தொழுது எழுந்தெழுந்து மீண்டும் மீண்டும் தொழுது என்றரு ளிச்செய்திருக்கும் விஷயத்தில் தெளிவுபிறப்பிக்கிறேன்; இங்கு “ப்ரணம்யஉத்தாயோத் தாய புந புந: ப்ரணம்ய ” என்றது ஓரிடத்திலேயே இருந்துகொண்டு பலமுறை நமஸ்கரிப்பதைச் சொல்லுவதன்று. அந்த வாக்யத்திற்கு முன்னே“தூராதேவ” என்றருளிச் செய்திருப்பதனால், எம்பெருமானைக் கிட்டுமளவும் காலால் நடந்து செல்லாமல் தெண்டனிட்டுக்கொண்டே வழியைக் கடந்து ஸ்ரீமந்நாராயணனை அணுகுவதாகவே அங்குப் பொருள்படும். இக்காலத்தில் இந்நிலத்தில் அஸக்ருத் பரணாமகர்த்தாக்கள் செய்வது போன்ற செயல் அங்கு விவக்ஷிதமன்று.தெண்டன் ஸமர்ப்பித்துக்கொண்டே போய் வழியைக்கடந்து எம்பெருமானைக் கிட்டின்பிறகு அங்குஒரேதடவை நமஸ்கரிப்பதென்னுமது அவ்விடத்திலேயே அடுத்தபடியாகச் சொல்லப் பட்டிருக்கிறது . யாசமாநா ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்”‘ என்று அந்த வாக்ய ஸமாப்தியுள்ளது காண்க. இங்ஙனல்லாமல் ஓரிடத்திலேயே நின்றுகொண்டு பலமுறைதொழுவதைத்தான் “உத்தாயோத்தாய புந புந* ப்ரணம்ய என்கிற வாக்கியம் சொல்லுகிறதென்று கொண்டாலும் குறையொன்றுமில்லை. “ந சாஸ்த்ரம் நைவ ச ரம?” என்கிற ரீதியிலேநூல்வரம்புக்கு அடங்காத அவ்வி பூதியிலேநிகழும கொண்டு என்ன ஸாதிக்கலாகும் ? இந்நிலத்தில் நம் பூருவா சாரியர்களின் அனுஷ்டானம் ஸக்ருத் ப்ரணாமமே யென்பதை அந்த எம்பெருமானார் தாமே ஸ்பஷ்டமாகக் காட்டியுள்ள படி பாரீர்.-நித்ய கரந்தத்தில் “ஆராதநாபிமுகோ பவேதி மூல மந்த்ரேண ப்ரார்த்த்ய மூலமந்த்ரேண தண்டவத் பரணம்ய உத்தாய ஸ்வாகதம் நிவேத்ய” என்றருளிச் செய்திருப்பது ர த்தமிறே. இதுகொண்டு ஸ்ரீ வைகுண்டகத்ய ஸ்ரீ ஸுக்தியின் பொருளை நாம் விவரித்தபடியே தெளிய ப்ராப்தம். இனி வேதாந்தவாசிரியருடைய திருவுள்ளத்தை உப்பாதிக்கிறேன்-ஸ்தோத்ர ரத்நத்தில் இருபத்தோராம் சலோகத்தில் “நமோ நம நமோ நம.என்று பலகால் அருளிச் செய்திருப்பதை ஸமந்வயப்படுத்தத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி அவ்விடத்து (ஸ்தோத்ர பாஷ்யத்தில், ” ரசம்ஸாயாம் ப்ரதி ஞாயாம் ப்ரலாபே தர்நேபி ச, பயே ச விஜயே சை பௌநயுந்யமலகருதி “‘ என்கிற வொரு ஸ்லோகத்தை யெடுத்துக் கடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை விவேகிகள் விமர்சிக்கவேண்டும். ஸ்தோத்ரம் செய்தல், ப்ரதிஞை செய்தல்,அழுதல், வெருட்டுதல், அச்சந்தோற்றச்சொல்லுதல் முதலிய ஸந்தர்ப்பங்களில் ஒரு சொல்லையே அடுத்தடுத்துச் சொல்லுவதானது ஒரு வகையான அலங்காரமாகும் என்பது இந்த ச்லோகத்தின் பொருள். உலகத்தில் இதை நாம் நன்றாகக் காண் கிறோம். ”பாம்பு பாம்பு பாம்பு” என்று பலமுறைசொன்னாலும் உள்ளது ஒரு பாம்பே யல்லதுபலபாம்புகள் வந்துவிடமாட்டா, * பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் * என்று நூாயிரந்தடவை சொன்னாலும் விஐயீபவ’ என்று ஒருகால் சொல்வதற்குஎன்னஅர்த்தமோ அந்த அர்த்தமே யன்றோதேறுவது. அப்படியே *நமோ நம: தொழுது தொழுது தொழுது * என்று எத்தனை பரியாயம் சொன்னாலும் அது சப்தாலங்கார மத்தனையென்று ஸ்வாமி நிர்ணயித்தருளினாராயிற்று.

    திருவாழி திருச்சங்குகளினால் இலச்சினை பெறுகையாகிற சக்கராங்கனத்தையே ஸமாச்ரயணமென்று உலகம் கரஹித்திருக்கின்றது. உண்மையில் ஸமாசரயண
    மென்பது அவ்வளவேயன்று.”ஆசாரயனை ஆச்ரயித்து அவன் மூலமாக எம்பெரு
    மானை யடிபணிதல்” என்றும் பொருளதான ஸமாசரயணமென்கிற சொல்லானது

    ஆசார்யனால் பெருவிக்கப்படுகிற பேறுகளுக்கெல்லாம் கமாக நிற்கின்றது.
    ஆசார்யனால் கருதக்ருத்யனாகச் செய்விக்கப் பெறுகையே ஸமாச்ரயணமெனப்
    படுகிறது. பகவதாச்ரயணத்தில் பர்யவளிதமாகிறது. இந்த ஸமாச்ரயணத்தையே
    பஞ்ச ஸம்ஸ்காரமென்கிற சொல்லாலும் வழங்கி வருகிறார்கள். “தாப புண்ட்ரஸ் ததா
    நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம , அமீ பரமஸம்ஸ்காரா: பாரமைகாத்ய ஹேனவு
    ” என்று
    யாவருமறிந்த ச்லோகமானது பஞ்சஸம்ஸ்காரங்கள் இன்னின்னவை யென்பதை விவரித்துக்காட்டுகின்றது .-யாகமாவது ” ய -தேவபூஜாயாம் “-என்கிற தாது விலிருந்து தேறுகிற யாகசப்தம் திருவாராதனத்தைச் சொல்லுகிறதாகையாலே பகவதாராதனத்திற்கு அதிகாரம் பெற்றுகை.

    அநாதிகாலம் ஆஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நிகரஹத்தாலே ஸமஸரித்துப் போந்த நமக்கு அவஸரப்ரதீ ையான பகவத்க்ருபையடியாக வுண்டான ஸதாசார்ய கடாக்ஷவிஷ காரத்தாலே வந்த த்வயோச்சாரணநூச் சாரணத்தாலே ப்ரபத்திய ஷ்டானம் பிறந்த பின்பு சரண்ய ப்ரஸாத ங்களில் இதுக்குமேல் ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களை யெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்தவடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசக்ஷியான சரிய:பதி தன்பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்ப்பரனாயிரு வென்கை. இது *மாசு : என்கிற சரண்ய வாக்கியத்திலும் தீர்ந்தபொருள்.”மந்த்ரஸம்ஸ்காராஸமயத்தில் தவய மென்னும் மந்திரத்தை ஆசார்யன் சொல்ல அதை சிஷ்யன் பின்சொல்லுவதுண்டே இதுதான் பத்த் யனுஷ்டானமென்று சொன்னதோடு நில்லாமல் இதற்குமேல் வேறொன்று கிடையா தென்றும் வ்யக்தமாக அருளிச் செய்தாராயிற்று.-நம்முடைய குல டஸ்தரான எம்பெருமானார்க்கு ஸ்ரீரங்கநாதனிடமிருந்து விசேஷித்து வரமும் கிடைத்திருக்கிறது. அதையும் ஸ்வாமி தாமே நயாஸ்திலகத்தில் சீருத்வா வரம் தத பந்த மதாவலிப்தே” என்பதனால் நன்கருளிச் செய்துள்ளார். அந்த திவ்ய கரந்தத்தில் * அந்தோநந்தக்ரஹண* என்றும் *உக்த்யா தநஞ்ஜய * என்றுமுள்ள இரண்டு சலோக ரத்னங்கள் நிதியானவை அந்தோநந்த க்ர ணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நௌகாகுஹரநி தோ நீயதே நாவிகேந், புங்க்தே போகாந் அவிதிதந் பஸ் ஸேவகஸ் யார்ப்பகாதி: த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே த்யாலு:” இந்த சலோகத்தில் ஜ்ஞாநஹீநனான ஒருவன் குருடனுடைய ஸ்தானத்திலும் ஆசார னான வொருவன் நொண்டியினுடைய ஸ்தானத்திலும் கொள்ளப்பட வேண்டியதாகத் தேறும். இப்படிப்பட்ட அதிகாரிகள் ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடையனான் குருவையடைந்தே புருஷார்த்த த்திபெறவேண்டுமென்கை

    இதற்குமேல் மூன்றாவதானவொரு தருஷ்டாந்தம் (மூன்றாவது பாதத்தில் வெகு அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. சுபுங்க்தே போகர்ந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி: * என்கிற தருஷ்டாந்தம் மிக அற்புதமானது. ராஜஸேவை பண்ணின அமாத்யனுடைய ஸந்ததியார்கள் பலனையனுபவிக்கும்போது அந்த ராஜாவின் முகத்தைப்பார்த்திருக்கவேண்டியதில்லையன்றோ; அந்த ராஜாவைப் பற்றி ஒன்றுமே தெரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லையே. ‘தாம் அமாத்ய னுடைய ஸந்ததியே’ என்னுமிடத்தை மூதலிக்கவேண்டியதொன்று தவிரவேறொரு க்ருத்யமும் இல்லையன்றோ தத்ஸந்ததியார்க்கு; இதுதான் ‘அவிதிதந் ப:’ என்கிற விசேஷணத்தினால் தெரிவிக்கப்படுகிறது .இதுபோலவே,அமாத்ய ஸ்தாரீயரான எம்பெருமானாருடைய ஸந்ததியான நாமும். ‘நாம் எம்பெருமானாரைச் சேர்ந்தவர்கள்’ என்பதை மூதலிப்பது தவிர பேற்றின்ஸித்திக்காகப் பெருமாளுடைய திருமுகத் தையும் காணவேண்டிய ஆவச்ய தையில்லையென் று ஸ்பஷ்டமாகத் தெரிவித்ததா கிறது. நம்முடைய பூர்வாசார்யர்க ளின் சரிதைகளில் திருவிலச்சினைக்கு மேற்பட்ட வொரு அத்ருஷ்டார்த்தானுஷ்டனமென்பது எங்குங்காணக்கிடைக்காதது.

    அத்யந்தம் வ்யவஹித காலவர்த்திகளுக்கும் பேறுதப்பா தென்னுமிடத்தை ஸ்ரீபாஷ்யத்தின்
    மங்களச்லோகத்தில் “விந்தவிவித பூதவராத ரக்ஷை தீக்ஷே ”என்றவிடத்து ருத
    ப்ரகாசிகையில் உபபாதித்திருப்பதை ஸேவித்த வேதாந்தவாசிரியர் தத்வடீகையில்
    அதேயிடத்தில் விபுலமாக நிரூபித்து அதைத் திடப்படுத்தினார்.நியாஸதிலகத்தில்
    *உக்த்யா தநஞ்ஜய இத்யாதி சலோகத்தாலே ஒரு அஸாதாரண விஷயமருளிச்
    செய்கிறார். அதுதான் உயிரானது. ருத்வா வரம்’ தத பந்த மதாவலிப்தே”
    என்கிற மூன்றாம்பாதம் ஜீவநாடியானது
    .இதில் ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஒரு வரம் கொடுத்ததாகச்சொல்லப்பட்டுள்ளது. அந்த வரம் இன்னவித் மென்பதை(நியாஸதிலக ஸம்ஸ்க்ருத ராவிட வ்யாக்கயாதாக்கள் நிஸ்ஸந்தேஹமாக எழுதி வைத்துள்ளார்கள். ஸம்ஸ்க்ருத வியாக்கியானம் பலகால் அச்சிடப்பட்டு உலகம் பரவியிருக்கின்றது. பகவத் ராமாநுஜ ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளுக் கெல்லாம் ஸ்ரீராமாநுஜ ஸம்பந்தமே ஹேதுவாக முக்தி யுண்டாகக் கடவதென்று வரமளித்ததாக வியாக்கியானங்கள் உண்மையை மறைத்திடாமல் வெளியிட்டுள்ளன.

    பரமபத ஸோபாநத்தில்- அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ராஸங்கிக
    ஸாமாந்ய புத்திமூலஸு க்ருத விசேஷங்களை வியா
    மாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி” என்றருளிச்செய்த-இதில் “வ்யாஜமாகக்கொண்டு “ என்றதையும் ஸ்ஹியாமல் அவ்யாஜக்ருபையையுஅருளிச்செய்து போந்தார் .முநிவாஹ போகமென்று பெயரிட்டு ரஹஸ்யகரந்தமாகப் பணித்த அமலனாதிபிரான் வியாக்கி யானத்தின் உபக்ரம ஸ்ரீஸுக்தி இது காணீர்: – “காரண விசேஷம் இன்னதென்று அறுதியிட அரிதாயிருப்பதொரு பகவத்கடாக்ஷத்தாலே அயத்கலப்தமான ……’ என்று. இவ்விஷயத்தில் இவ்வளவேபோதும். ஒரு ஹேதுவில்லாமல் எம்பெரு மான் அருள் செய்யமாட்டானென்கிற வாதம் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டிகளில் விலை செல்லுமதன்று. * நாஸௌ புருஷகாரேண நசாபி அந்யே ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரக்ஷே கஞ்சித் கதாசந் * என்பதன்றோஎம்பெருமானுடைய திருமுகப்பாசுரம்.

    இவ்விஷயத்தை விசேஷித்து “மே மதம்”என்கிறான். இதைப்பற்றி தாத்பர்ய சந்திரிகையில் ஸ்வாமி யருளிச் செய்திருப்பதுகெவினிது; இவ்வர்த்தம் வேதாந்தங்களுக்கு இணங்கின ஸித்தாந்தமாக இருந்தாலிருக்கட்டும்: இல்லாமற்போனால் போகட்டும்; தேர்த்தட்டிலே கண்ணபிரானாக வீற்றிருந்து சொல்லுகிற என்னுடைய ஸித்தாந்தம் இதுவே என்பதாக ஸ்ரீ க்ருஷ்ண ஹ்ருதயத்தை பிவரித்தருளினார் . இதனால், ஸகல சாஸ்த்ரங்களும் ஒரு தட்டாய் “ஜ்ஞாநீது ஆத்மைவ “என்கிற இவ்வசனம் ஒருதட்டாய் இதுவே மேன்மை பெற்றதென்று தேறிற்று. இளையபெருமாளை நோக்கி “த்விதீயம் மேந்தராத்மாநம் த்வாம் “ என்று பெருமாளருளிச் செய்ததைக் கொண்டும் ஆசார்யர்கள் ரஸமயமான அர்த்தத்தை வெளியிட்டுள்ளார்கள்-ஸ்தோத்ர ரத்நத்தில் “மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விர ஹோதி துஸ்ஸஹ: ” என்ற திவ்ய ஸ்ரீ ஸூக்திரத்கத்தில் இவ்வர்த்தவிசேஷங்க ளல்லாம் ஜ்வலிக்கும். பகவான் தன்னிடத்தில் ஸாக்ஷாத் பக்தி செய்யும் அன்பர்களிற் காட்டிலும் “அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம் அடியாரடியோங்களே” என்றும் “த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய “ என்றும் இருப்பார் திறத்திலே அளவுகடந்த வாத்ஸல்ய முடையவன் என்றால் இதில் யாருக்காவது விப்ரதிபத்தியுண்டோ? விவாதமுண்டோ? இதுபோலவே, பகவான் தன்னிடத்தில் தீமை செய்யுமவர்களிற் காட்டிலும் தன்னடியாரடியாரடியார் திறத்தில் தீமை செய்யுமவர்களிடத்தில் அதிகமான நிக்ரஹருசியை யுடையவன் என்றால் இதில் பொருந்தாமை யொன்றுமில்லை.

    யதிராஜ ஸப்ததியில் “அநுகல்பபூத முரபித்பதம் ஸதாம்…. சரணம் பதீந்த்ர சரணம் வருணீமஹே “ என்கிறார். ஸத்துக்கள் வணங்குவதற்கு எம்பெருமா னுடைய திருவடிகள் கௌண பக்ஷமேயல்லது முக்ய பக்ஷமல்ல வென்றும், ஸ்ரீ பாஷ்ய காந்தடைய திருவடிகளே முக்ய பக்ஷமென்றும் இதனால் நிஸ்ஸந்தேஹமாய் ஸுஸ்பஷ்ட தமாய்க் கிடைக்கிறது.

    ஸ்ரீராமாநுஜர் (ராம: கமல பத்ராக்ஷ) என்கிற உபப்ரும்மணவசனத்தைத் துணைகொண்டபடியினால்தான் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) இத்யாதியர்த்தம் எழுதினார்-ஸ்ரீ ராமாநுஜர் அருளிச் செய்திருக்கிற கப்யாஸச்ருதி விவரணமான ஸூக்தியில்
    முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் விஷயமிருக்கிறது. (கம்பீராம்:) என்றாரம்பித்து (விகளித) வரையில் முதல் விஷயம். (புண்டரீக) என்னாமல்(புண்டரீகதள ) என்றது இடை விஷயம். அதற்கு மேலும் (அமல, ஆயத) என்றதுகடையான விஷயம்.(ராம :கமலபத்ராக்ஷ)என்கிற உபப்ரும்ஹண வசனத்தை உதவி கொண்டிருந்தால் “புண்டரீகதள” என்றுஇவ்வளவே யெழுதியிருக்கலாம். வேறொன்றும் எழுதியிருக்க முடியாது.-நீரார் கமலம்போல் செங்கண்மால்* என்று திருமடலில் திருமங் த்யாழ்வாரருளிச் செயல்.இதில் நீரார்என்ற கமல விசேஷணத்திற்குச் சேரவும், திருவிருத்தத்தில் “அழறலர்தாமரைக் கண்ணன் ‘ என்ற சந்தைக்குச் சேரவும் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) என்றது. திருவிருத்தத்தில் ” எம்பிரான தடங்கண்கள்-மென்கால் கமலத்தடம்போல் பொலிந்தன” என்ற சந்தைக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என்றது செந்தண்கமலக்கண்-நாயிறு அந்தமில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே என்கிற திருவாய்மொழிச் சந்தைக்குச் சேர (ரவிகரவிகஸித) என்றது.

    நம்மாழ்வாரை வகுளாபரண: என்றும் வகுளபூஷண: என்றும் வகுளதர; என்றும் வழங்கி வருகிறோம். ஆழ்வார் தாமும் தமது திருவாக்காலே -மகிழ்மாலை மார்பினன் என்றே யருளிச்செய்துவைத்தார். இதற்கெல்லாஞ்சேர ஆழ்வாரை வகுளாபிராமராகச் சொல்லவன்றோ அடுப்பது; ” ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளோஜ்ஜ்வலஸ்ய ” என்றால் பொருத்தமாயிராதா?அங்ஙனம் சொல்லாமல் ஆழ்வாருடைய திருவடிகள்மகிழம்லர்களால் அழகு பெற்றிருக்குமென்று சொல்லுவதில் என்ன விசேஷம்?-அலங்கார சாஸ்த்ரபத்ததியில் உனக்குப் பரிசயமில்லையென்று நினைக்கிறேன். ஸுதர்சந்சதகமென்கிற திவ்யகரந்தம் ஸேவித்திருந்தாயாகில், இங்ஙனம் கேட்கமாட்டாய். அதில்ஸுதர்சந் புருஷனுக்குச் சொல்லவேண்டிய பெருமைகளையெல்லாம் அவனுடைய ஏகதேசங்களான வாலை, அரம், நாபி, அக்ஷம்,நேமி என்கிற அவயவங்களிலே யேறிட்டுவருணித்திருக்கு ழகு காண வேணும்.எம்பெருமான் திருத்துழாயை யணிந்து கொள்வதுஒரு . அவய்வத்திலன்றே, தோளிணை மலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும்,தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்* என்று ஆழ்வார் அருளிச்செய்தபடியே திருத்தோளிலும். ‘திருமார்பிலும் திருமுடியிலும் அணிந்துகொள்வதுபோலத்திருவடியிலும் அணிந்துகொள்ளுகிறன். அப்படியே ஆழ்வாரும். முக்கியமான வார்த்தை-*தன்மன்னு நீ கழல் மேல்தண்டுழாய்நமக்கன்றிகல்கான் என்றபடி அடியில் சாத்துமதுதான் அடியார்களுக்கு உத்தேச்யம்.

    மாதாபிதாயுவதய என்கிற சுலோகம் அவதரித்திருக்கிறபடியை உற்று நோக்க வேணும். இதில் சடகோப:, சடரிபு:, சடாரி , பராங்கு:, காரிஸூ : இத்யாதி திருநாமங்
    களில் எதுவும் கிடையாது. ” ஆத்யஸய ந: குலபதே ” என்றிருக்கிறது . எம்பெருமானையே ஆத்ய குலபதியாக விவத்தருளினாரென்றும் சொல்லிவிடலாம். ஆனால்
    அங்ஙனம் சொல்லவொண்ணாதபடி ” வகுளாபிராமம்” என்றொரு அத்புதமான
    ஸ்ரீ ஸ க்தியைப் புகுத்தியிருக்கிறார். திருத்துழாய் சாத்தின தெய்வமன்று,மகிழ்மாலை
    யணிந்த தெய்வமே எனக்கு உத்தேசயமென்று காட்டினாராயிற்று
    . இந்த விசேஷணம் திருவடியிணைக்கு இட்டிருக்கிற படியாலே அந்தத் திருவடியை எம்பெருமானுடைய
    திருவடியாகவே திருவுள்ளம்பற்றி அப்பெருமான் வேறு, ஆழ்வார் வேறு என்று நினைக்க வொண்ணாபடி எம்பெருமானோடே ஏகீக்ருத்ய அருளிச் செய்தபடி. எம்பெருமான்
    திருவடி நிலைக்கு ஸ்ரீ சடகோபனென்றே அநாதிகாலம் தொடங்கி வ்யபதேசமாதலால் இந்த அவயவம் அவயவியோடே சேர்ந்திருக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றியே
    ஆழ்வார்துதியை எம்பெருமானுடைய துதியோடே அவ்யவஹிதமாக்கினபடி.
    -பராசரமஹர்ஷியைத் துதித்துவிட்டுப் பிறகு நம்மாழ்வாரைக் துதித்திருக்கின் ார. நாதமுனிகளுக்கும் நம்மாழ்வார்க்குமிடையில் பராசர மஹர்ஷியைப் புகவிட்டது எதனாலே? உபக்ரமத்திலேயே நம்மாழ்வாரைத் துதித்து, பிறகு நாதமுனி களைத்துதித்து, அதன் பிறகு பராசரரைத் துதித்திருக்கலாம். இந்த முறைகளை விட்டு வே ொரு முறையில் ஸ்துதியை அமைத்திருப்பது பற்றி த்ருப்திகரமான ஸமாதானம்

    -இது மிகவும் தருப்திகரமான ஸமாதானம். ஆளவந்தார் திருவுள்ளத் திற்கு மிக விணங்கின ஸமாதானம். அடியேனுக்குத் தோன்றுவதொன்றையும் விஜ்ஞா பிக்கிறேன். தவறு இருந்தால் சிக்ஷிக்கவேணும். ” ஆத்யஸ்ய ந: குலபதே:” என்பதனால்
    ப்ரபந்நஜந கூடஸ்தரான நம்மாழ்வாரை விவக்ஷிப்பதாக வன்றோ சொல்லப்படுகிறது. அப்படியல்லாமல், நம்முடைய குருபரம்பரைக்கு முதல்வன் எம்பெருமானே யாதலாலும் லக்ஷ்மீநாதஸமாரம்பாம்.. ந்தே குருபரம்பராம்” என்று அநுஸந்தித்து வருதலாலும், ” ஆபகவத்க : ப்ரதிதாம் அநகாம் ஆசார்யஸந்ததிம் வந்தே” என்கிற ஸ்ரீ ஸூக்தியை யநுஸரித்தும் எம்பெருமானையே ஆத்ய குலபதியாகக் கொள்வதில் குறை யொன்றுமில்லை யன்றோ, ஏவஞ்ச, ஆத்யஸ்ய ந: குலபதே ‘ என்பதற்கு ஸர்வேச்வர
    னுடைய ன்றே பொருள் கூறிவிட்டு, அந்த ஸர்வே வரனுடைய வகுளாபிராமமான திருவடியிணை- நம்மாழ்வார் என்று கொள்ளலாமன்றோ இதில் ஏதேனும் அநுபபத்தி யுண்டோ? (விடை.) ஒரு அநுப்பத்தியுமில்லை. தாராளமாகக்கொள்ளலாம். ஆனால்
    ஆளவந்தார். ஆத்ய குலபதியாக நம்மாழ்வாரைத் தவிர்த்து எம்பெருமானை விவக்ஷித்
    திருப்பரென்று தோன்றவில்லை.

    இவையுமொருபத்தும்வல்லார், ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே”என்கிறாரே, நிகமனப் பாசுரந்தோறும் பலனுரைத்து வருகிற அடைவிலே இங்கும் ஒரு பலன் சொல்லவேண்டியிருக்க, ஒரு பலனும் சொல்லாமல் ‘இப்பதிதழ் வல்லவர்கள்.நீராயுருகுவர்கள் ‘ என்றால் இதுவொரு பலச்ருதியாகுமோ? ஆழ்வார் ஸாதிக்கிறபலன்களுக்குள்ளே இதுதான் உயர்ந்தபலன்- குயில் கூவினாலும்காக்கை கத்தினாலும் வாசியறியாதே நிற்கும் மஹிஷாதிகளைப்போலே உக்திகளிலும் ஸூக்திகளிலும் ஸ்ரீ ஸ- க்திகளிலும் திவ்ய ஸ்ரீ ஸ- க்திகளிலும் ஒரு வாசியுமறியாதே கல்நெஞ்சராயிருப்பார் பலரில்லையா? உருக்கமுண்டாவது ஸாமான்யமா? அருந்தவப்பயனல்லவா? வரப்ரஸாதங்கொண்டு பெறவேண்டிய பேறல்லவா இது. குணவித்தர்கள் என்னும்படியானவர்கள் “மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷ கச்சித்” என்னும்படியாகவன்றோ தேறுவர்கள். “நீராயுருகாநிற்பர்” என்கையாலே இதுவும் ப்ராப்ய பலன்களிலே ஒன்று (அல்லது) சிறந்தது என்று காட்டப்பட்டதாயிற்று. இக்காலத்தில் ஒருவரிருவர்.

    விவாஹங்களில் நடக்கும் சீர்பாடலில் “சீர்பாடி களிமண்பாடப்போமே” என்றுநீட்டுகிறார்களே: இது இன்னதென்று புரியவில்லையே. கல்யாணத்தில் களிமண்ணுக்கு என்ன ப்ரஸக்தி ? களிமண்ணுமில்லை, களிமண் பாடுவதுமில்லை;”சீர்பாடிக் களிமின் களிப்போமே” என்பதுதான் உள்ளது. சீர்பாடல்பாடி நீங்கள்ஸந்தோஷியுங்கள், நாங்களும் ஸந்தோஷிக்கக்கடவோம் என்பது பொருள்.

    —————-

    184-பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமந் நாதமுனிகள் வட இந்தியாவிற்கெழுந்தருளி கண்பிரானவதரித்தவட மதுரைக்கருகிலுள்ள கோவர்த்தனத்தில் ஒரு ஆசா ர்ய பீடத்தை ஸ்தாபனம் செய்தார். கோவர்த்தன மலையில் இன்றும் அவர் பெயர் கொண்ட ஒரு குகையிருக்கிறது. அதில் அவர் வெகு காலம் யோகத்தில் ஆழ்ந்திருந்ததாகப் பெரியோர் கூறுவர்.154 வருடங்களுக்கு முன்பு காஞ்சீ மண்டலத்தைச் சேர்ந்த தென்னேரி அகரம் என்றகிராமத்தில் வா தூல வம்சத்தில் ரங்காச்சார்யார் என்ற ஒரு மஹான் அவதரித்தார். இவர் பிற்காலத்தில் தன்பாண்டித்தியத்தின் மஹிமையால் கோவர்த்தன பீடத்தில் ஆசார்ய ஸ்தானத்தை அலங்கரிக்கும் கெளரவம் பெற்றார். இவர் உபய வேதாந்த கிரந்தங்களில் உயர்ந்த ஞானம் படைத்தவர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உத்தரபிரதேசத்தில் பரவச்செய்த பெருமை பெரும்பாலும் இவரைச் சார்ந்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல், பிருந்தாவனத்தில் கோதை ரங்கமன்னார் சன்னிதியை நிர்மாணித்து அழியாப்புகழ்பெற்றபரம பாகவதர் இவர்.ஆண்டாள் எம்பெருமானின் விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் மிகவும் துவண்டுபேசும் பாசுரமொன்றில் திருமாலிருஞ்சோலை நம்பியை நோக்கி நான் நூறு தடாவில் வெண்ணெய்வாய்நேர்ந்து பாராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ” என்றுவாசிகமாகச் சொல்லி,அவ்வெம்பெருமான் இவற்றைத் திருவுள்ளம் பற்றுவானா? என்று ஏங்குகிறாள். குடிக்கொடுத்த நாச்சியாருக்குப் பலபல ஆண்டுகளுக்குப் பின் அவதரித்த எம்பெருமானார் திருமாலிருஞ்சோலை மலைக்கெழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும், நூறு தடாநிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்குஅமுது செய்வித்தருளி, பிறகு ஸ்ரீ வில்லிபுத்தூருக்கும் எழுந்தருளி ஆண்டாளை வணங்கிநிற்க, கோதையும் இவர் செய்த மிகப் பெரிய செயலுக்குமனமுகந்து”நம் அண்ணரே” என்று சொல்லி அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து தழுவிக்கொண்டாள்என்பர் பெரியோர். ஸ்வாமி எம்பெருமானாருக்கு ஆண்டாளின் இம்மனோரதத்தைப் பூர்த்தி செய்வித்த பாக்யம் கிட்டினாப்போல் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமிக்கும் ஆண்டாளின் மற்றோர் மனோரதத்தைப்பூர்த்தி செய்விக்கும் பெருமை< யும் மஹா பாக்கியமும் வாய்த்தது.“ பட்டி மேய்ந்தோர்” திருமொழியில் கோதாதேவி “விருந்தாவனத்தே கண்டோமே “ என்று மானஸிகமாகக் கண்ணபிரானைச் சேவித்ததை சொல்லு கிறாள்.ளௌலப்ய நிதியான கோபாலனை அவன் அவதரித்த ஸமயத்தில் நேரில் கண்டு அனுபவிக்க முடியவில்லை. என்றாலும் அவன் இந்நிலவுலகில் நடந்த பூமியான விருந்தா வனத்திற்காவது சென்றுஅந்தப் புனித மணலை ஸ்பர்சிக்கலாமென்றால் அதுவும் ஆண்டாள் காலத்தில் ஸாதயமாக வில்லை போலும்! ஸ்ரீவில்லிபுத்தூர் எங்கே?விருந்தாவனம் எங்கே காடு மலைகளைத் தாண்டிப்பல நூறு காதங்களுக்கு அப்பாலுள்ள விருந்தாவனத்திற்கு நடந்து செல்வது ஒரு இளம் பெண்ணுக்குச் சுலபமா? மனத்தினாலும் வாக்கினாலும் பாரிப்பு மட்டுமே வெளிவந்தது.தர்க்க நிபுணர் கோவர்த்தனம் ரங்காசார்ய ஸ்வாமி உத்தராதி ஜைனர்களை வாதத்தில் வென்று,ஸ்ரீ வைஷ்ணவர்களாக்கி ஸமாச்ரயணம் செய்து, அவர்களில் தனிகர்களின் பேருதவியால் யமுனைக் கரையில், “இது காஞ்சி வரதன் ஸன்இங்குகோயில் கொண்டிருக்கும் கோபால கிருஷ்ணன் கோவர்த்தன ரங்காசார்ய ஸ்வாமியின் திருவாராதனத்தில் இருந்த எம்பெருமான். இங்குபூமட்டத்திற்குக் கீழ் கட்டப்பட்டதும் எக்காலத்திலும் ஒரே சீதோஷ்ணநிலையோடு கூடினதுமான ஒரு மண்டபம் இருக்கிறது. அதன் சுவர்களை ஆதி ரங்காச்சார்ய ஸ்வாமி, அவருக்கு முன்னிருந்தவர்களில் சிலருடையவும், அடுத்தாப் போல் வந்த இரண்டு பீடாதிபதி
    களுடையவும் உருவப்படங்கள் அலங்கரிக்கின்றன. -து முடிந்தது. டில்லி, ஜெய பூர்,மதறஸ்,பம்பாய் முதலிய மஹாநகரங்களிலிருந்து உத்ஸ்வத்தைகெளரவிக்க வந்த மஹான்களில் ஸ்ரீ அப்பன் வெங்கடாச்சார்ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீராமானுஜா
    சாரியர் ஸ்வாமியின் பெயர் குறிப்பிடத்தக்கது.-இந்த சந்தர்ப்பத்தை யொட்டி, உத்தர தேசத்தில் பல பல வருடங்களா நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ வைஷ்ண ஸம்மேளனம் நான்கு நாட்கள் நடந்தன.ஸ்ரீஅப்பன் வெங்கடாச்சாரியர் ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீ ராமானுஜாசார்யர் ஸ்வாமிஸ்ம்மேளனத்துக்குத் தலைமைவஹித்து ஸம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான உரை நிகழ்த்தினார். பிரதிநிதிகள் ராமானுஜ தர்சனத்தை உத்தர பாரதத்தில் மேன்மேலுங்பிரசாரம் செய்யவேண்டியதின் அவச்யத்தை வற்புறுத்தினர். 

    ————

    ———————————————

    193-194-நியாய பரிசுத்தியில் தேசிகன் எம்பெருமானாரைப் பற்றிப் பணித்த மங்கள ச்லோகத்தில் [பத்யுஸ் ஸம்யமிநாம் ரணம்ய சரணெள தத்பாதகோடீர
    யோஸ் ஸம்பந் தேந ஸமித்யமாநவி வாந்தந்யாம் ததா யாந்குரூந்]
    என்றுள்ளது.
    இதன் பொருளாவது, ஸம்யமிநாம் பத்யு : சரணௌ ப்ரணம்ய – தத்பாத கோ ரயோ ஸம்பந்தேந- அந்த எம்பெருமானாருடைய திருவடி யென்ன திருமுடியென்ன-இவற்றினுடைய ஸம்பந்தத்தினால், ஸமித்யமாநவி வாந்-பெருமை பெற்றவர்களாய், தந்யாந் -கருதார்த்தர்களான,குரூந்ப்ரணம்ய – ஆசாரியர்களை வணங்கியும் … யாயபரிசுத்தி யென்கிற இந்த க்ரந்தம் செய்யப்படுகிறது என்கை. இதில்-“தத்பாத கோடீரயோஸ் ஸம்பந்தே ” என்றது உயிரான வார்த்தை. கோடீர மென்றுதிருமுடிக்குப் பெயர்.-பிற்பட்டவர்களுக்குத் திருவடி ஸம்பந்தம் போல முற்பட்டவர்களுக்குத் திரு முடி ஸம்பந்தம் உத்தாரகமென்று இதனால்நன்கு காட்டப் பட்டதாயிற்று. இந்த ச்லோகமானது ” அர்வாஞ்சோ யத்பதஸரளிஜ த்வந்த்வ மாச்ரித்ய” என்கிற ஆழ்வான் தனியனை யடியொற்றியே தேசிகன் பணித்தது.

    அவனடியாரடியே கூடுமிது வல்லால்” இத்யாதிகளாலே பாகவத சேஷத்வத்தின் அதிசயத்தைப் பேசுவதெல்லாம் பகவச் சேஷத்வத்தின் உறைப்பையே பேசின படியாகும்.-திருமந்திரத்தில். அகங்காரமும் மமகாரமும் நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம் உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத
    சேஷத்வம் அநுஸந்திக்கப்படவேணுமென்பது சாஸ்த்ரார்த்தம்; திருமந்திரத்திற்கு
    முக்கியமான பொருள் பாகவதசேஷத்வமேயென்பதை * மாறன் பணித்த தமிழ் மறைக்கு
    ஆறங்கங்கூற அவதரித்த மங்கையர்கோன் தமது திருமொழியில்*மற்றெல்லாம் பேசிலும்
    நின் திருவெட்டெழுத்துங் கற்று நான்- உற்றது முன்னடியார்க்கடிமை என்ற பாசுரத்தினால் தெளியவைத்தார்.)
    கீழ் மூன்றாம் பத்தில் ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளியென்னுந்
    திருவாய்மொழியிலும் இவ்வர்த்தம் வெளியிடப் பட்டுள்ளது
    அதற்காட்டில் இத்திருவாய்மொழிக்குவாசி என்னென்னில், ஆசார்ய ஹ்ருதயத்தில் (211) * மூன்றில்
    சுருக்கிய வைந்தையும் என்று தொடங்கியுள்ள சூர்ணையில் * பயிலுஞ் சுடரொளி
    ஸ்வஸ்வரூபப்ரதிபாதநபர மென்றும், நெடு மாற்கடிமை புருஷார்த்த ஸ்வரூபப்ரதி *
    பாதா பரமென்றும் வகையிட்டுக் காட்டப்பட்டது. அங்கு வியாக்கியானத்தில் மணவாள
    மாமுனிகள் ” பகவச் சேஷத்வத்திலும் தகாஷ்டையான பாகவத சேஷத்வமே
    ஆத்மாவுக்கு உத்தேச்ய மென்று ப்ரதிபாதித்த பயிலுஞ்சுடரொளியும்……..பாகவத
    கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த * நெடுமாற்கடிமையும
    என்றருளிச்செய்திருப்பது காண்க. இதனால், பாகவத சேஷத்வம் ஆத்மஸ்வரூபம்
    என்பதிலே * பயிலுஞ் சுடரொளிக்கு நோக்கு; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம்
    என்பதிலே நோக்கு இத்திருவாய் மொழிக்கு என்றதாயிற்று

    “நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம். .இதமகிலதம கர்சநம் தர்சநம் ந என்றுவேதாந்தவாசிரியர் பணித்தபடி ஸ்ரீமந் நாதமுனிகளையே தலைவராகக் கொண்டது நம்தரிசனம். அவர் திருவவதரித்து மஹா ப்ரயாளங்கள் கொள்ளவில்லையென்றால் பின்னை ஆளவந்தார் எம்பெருமானார் போல்வருடைய திருவவதாரமும் அவ்வளவு பயன்பட்டிராதென்றே சொல்ல வேண்டிற்றாகும்-அருள்பெற்ற நாதமுனி ‘.-நாதமுனிகளின் திரு க்ஷத்திரம் ஆனியனுடம். ஆளவந்தாரின் திருநக்ஷத்திரம் ஆடியுத்தராடம். 74 மதகுகளையுடைய வீராணத்தேரி இத்தலத்தின் அருகிலேயே.-ளட கரந்தங்கள். ஸ்தோத்ரரத்மும் கீதார்த்த ஸங்க்ரஹமும் அமுதிலுமினியவை. ஸ்நோத்ரரத்தினத்திற்குத் தனியனிட்டவர்கள்
    “ஸ்வா தயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸு துர்ரஹம். ஸ்தோத்தரயா
    மாஸ “
    என்றது மிகவும் ஆழ்ந்து பேசியது. இதில் த்ரய்யந்தார்த் சப்தத்தாலே உபய வேதாந்தமும் ஸங்க்ரு தம். ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தம் சிறுபான்மையும், த்ராவிடவேதா கார்த்தம்பெரும்பான்மையும் அமையப் பெற்றது ஸ்தோத்ரரத்னம்.-ஆழ்வார்கள் கீதையைப்பற்றிதிவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் ப்ரசம்வித்துள்
    66 ளார்கள். ஆசார்ய ஹ்ருதயத்தில் பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கி காரத்தாலே அதுக்கு (கீகைக்கு) உத்தர்ஷம்’‘ என்கிற சூர்ணையின் மணவாள மாமுனிகள் வியாக்கியானம்: ஸேவிக்கத் தக்கது. ” அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை *ஆழ்வார்கள் புகழ்ந்த கண்ணனில் (648) நாமெடுத்துக் காட்டியுமிருக்கிறோம். திருமழிசைப்பிரான் நான்முகன் திருவந்தாதியில் ஆயன் துவரைக்கோனாய் நின்றமாயன் அன்றோதிய வாக்கு” என்று ஸ்பஷ்டமாகவேகீதையைப் பேயுெள்ளார்.

    நம்மிடத்தில் சில ஆத்மகுணங்கள் இருந்தாலுங்கூட அவற்றை அஸத் கல்பமாக நினைத்து ‘அமர்யாத க்ஷத்ர சலமதிரஸூயாப்ரஸவபூ * ஈவிலாத தீவினைக் ளெத்தனை செய்தனன்கொல்**பாவமே செய்து பாவியானேன் என்று அநுஸந் திக்க வேண்டியதானாப்போலே பகவத்கருபைக்கு உறுப்பாக ஸ்வல்ப ஹேதுக்கள் இருந்தாலுங்கூட அவற்றை நாம் அளத் கல்பமாகவே நினைக்கவும் ‘இவையும் இல்லாமலே அவன் அருள்செய்ய வல்லவன்’ என்று அநுஸந்திக்கவும் ப்ராப்த மாகையாலே நிர்ஹேதுக மென்கிற ஹித்தாந்தமே நிலைநிற்கும்.-*நெறி காட்டி நீக்குதியோ? என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி, தன்னைவிட்டு நீக்குவதற்காக (நம்மை நன்கு சோதிப்பதற்காக) அவன் காட்டின வழிகளிலேநாம் கிடந்து துவளலாகாது; காம்பறத்தலைசிரைத்து உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே * என்று தொண்டரடிப்பொடி யாழ்வரருளிச் செய்தபடி திண்ணிதான அத்யவஸாயங் கொண்டிருப்பதே உற்றது- என்கிற உறுதி தென்னாசார்யர்களின் கருவிலேயே
    நன்கு ஊறிக்கிடப்பதாகும்.-பிறர்களுக்கு அரிய வித்தகன்+ என்ற விடத்து ஈட்டில்-“நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றநிற்க, அல்லாதார் அசேத க்ரியாகலாபங்களைப் பற்றுகிறாப்போ லேயிறே துர்யோதனன் நிலை’‘ என்றுள்ளது. இதனால் நம்முடையவர்கள்படியும் அல்லாதார்படியும் அறியத்தக்கது.மேலே அந்த பதிகத்திற்கு அடுத்த பதிகத்திலே( -4-7) என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்ற விடத்து ஈட்டில் ‘தேவரீர் கருபைக்குத் தண்ணீர்த் துரும்பாக ஏதேனும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்றுண்டோவென்று நம்பிள்ளை யருளிச்செய்யும்படி” என்றுள்ளது.-இப்படி யருளிச் செய்திருக்கிற நம்பிள்ளை பகவத் நிதியில் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்திருக்கமாட்டாரா? செய்திலர் என்றால் இதை யாரேனும் நம்ப முடியுமா? அது சாஸ்த்ரார்த்தந்தானாகுமா? எதற்காக இங்ஙனே நம்பிள்ளை யருளிச்செய்தார்? என்று விவேகிகள் விமர்சிக்க வேண்டு மன்றோ? விமர்சித்தால் அதிகப்ரவ்ருத்தி அவத்யமென்றதாகத் தேறும். இந்த ஸ்ரீஸுக்திக்கு இவ்வளவேதான் கருத்தாகக் கொள்ளத்தக்கது.-சிறிய திருமடலில் ” செங்குறிஞ்சித் தாரார் நறுமாலைச் சாத்தற்குத் தான் பின்னும் நேராதனவொன்றுநேர்ந்தாள்” என்றுள்ளது. இங்கு மூலத்தின் மேல் அர்த்தமென்ன வென்றால், செங்குறிஞ்சி மாலையை யணிகின்ற ‘சாஸ்தா என்கிற தேவதாந்தரத்தை நோக்கி ஓர்அஞ்சலியும் பண்ணிவிட்டாள் என்பதாம்.ஒன்றுநேர்ந்தாள்’ என்ற மூலத்திற்கு ஓர் அஞ்சலி செய்தாளென்று அர்த்தம்.இங்கே “தான் பின்னும் நேராத வொன்று நேர்ந்தாள்” என்ற சொற்சுவையை நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளை என்ன வியாக்கியானம் செய்தருளியிருக்கிறா ரென்றால்,”தான்)வகுத்த விஷயத்திலே ஓர்அஞ்ஜலி பண்ணினால் அது ஸாதனத்தில் அந்வாதிக்கில் செய்வதென்? என்றிருக்க கடவ தான் என்று அருளிச்செய்துள்ளார். இந்த ஸ்ரீஸுக்தியோடுஞ் சேர்த்து முன்னே காட்டிய நம்பிள்ளைஸ்ரீஸுக்திக்கு அர்த்தம் செய்யுமளவில் தென்னாசார்யர்களின் திருவுள்ளம் புலப்படும். உபாயகோடியில் எள்ளளவும் அந்வயியாமல் ஸ்வரூபத்தளவிலே நிற்கும்படி சில செய்வதே உற்றது; எதையேனும் அதிகப்படியாகச்செய்தால் அது உபாய கோடியிலே அந்வயித்து ஆகிஞ்சயத்தைக் குலைத்து எம்பெருமானுடைய திருவருளுக்கு இடையூறாக நிற்கும்கொல் என்கிற அதிசங்கை இவர்களுக்கு உள்ளதென்னுமிடம் விளங்காநின்றது-எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையை ஆழ்வார் அநுபவித்து ஈடுபடுவதாக நன்கு விளங்குகின்றது. வேதாந்தவாசிரியரும் அவ்விடத்திற்கு அவ்யாஜோதார யாவாத்* என்றுதான் ச்லோகமிட்டருளினார்– பரமபத ஸோபா த்தில் பணிப்பதாவது, ” அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்தி மூல ஸு க்ருத விசேஷங்களை வ்யா மாகக் கொண்டுவிசேஷ கடாக்ஷம்பண்ணி” என்று அருளினார்…

    சேதனர்களை ரக்ஷித்தருள்வதில் இயற்கையாகவே ருசியுடையனான எம்பெருமான் * ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரஷ்யாபேக்ஷாம் ப்ரதீ தே * என்கிறபடியே இத்தலையில் சிறிது எதிர் பார்க்கிறானென்று சொல்லிவைத்ததொரு பக்கத்தில்; எம்பெருமானுடைய திருவாககைப் பார்த்தாலோ நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந் ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாகநன் என்று காண்கிறது. நான் புருஷ காரத்தைக்கொண்டும் கடாக்ஷிப்பதில்லை, வேறுஎந்த ஹேதுவையிட்டும் கடாதிப்ப தில்லை;என்றைக்கோவொருநாள்யாரோவொரு அதிகாரியை என் இச்சையினாலேயே நான் கடாக்ஷிப்பேன்” என்பது மேலேகாட்டின ச்லோகத்தின் பொருள். இங்ஙனம் பேசுகின்ற எம்பெருமானது திருவருளை ஸஹேதுகமென்று நினைக்க நாமார்? நம்பக்கல் கைம்முதல் கொண்டே எம்பெருமான் நம்மைக் காத்தருள்கின்றானென்று கொள்வது ஹேயமாகும். மருவித்தொழும் மனமே தந்தாய் என்னைத் தீமனங் கெடுத்தாய் என்கிற அநுஸந்தானம் அக்ருதிரிமமாகக்கடவது.

    த்வமேவோபாய பூதோமே பவேதி ப்ரார்த்தநாமதி சரணாகதி * என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. எம்பெரு மானையே உபாயமாக அத்யவளிக்குமதுவே ப்ரபத்தியென்பது.இத்தகையதான ப்ரபத்தியானது தன்னிடத்தில் உபாயத்வத்தை எங்ஙனே ஸஹிக்கும்? ப்ரபத்தி யென்கிற வஸ்து தேறும்போதே அதன் அநுபாயத்வமும் தெறியே தீரும். இதை வேதாந்தவாசிரியர் வெகு அழகாக நிரூபித்தருளுகிறார் ;ந்யாய ஸித்தாஞ்நத்தில் ஜீவபரிச்சேதத்தில் – இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா ஸ்வஹே துத்வதியம் ருந்தே கிம்புநஸ் ஸஹகாரிணம் என்பது அவருடைய ஸ்ரீ க்திகளில் தலையானது.எம்பெருமானொருவனையே உபாயமாகக் கொள்வதாகிற இந்த ப்ரபத்தி யானது தன்னிடத்தில் உபாயத்வ புத்தியைத் தடைசெய்கின்றது; ப்ரபத்திக்கே உபாயத்வ மில்லாதபோது அதன் ஸஹகாரிகளானவற்றுக்கு அது இல்லை யென்மிடம் தனிப்படச் சொல்லவேணுமோ? என்பது இந்த ச்லோகார்த்தம்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ * என்று விதிக்கப்படுகிற ப்ரபத்திக்கு உபாயத்வம் அநிலார்யம் என்று நினைக்கக்கூடிய துண்டு. இதனையும் ந்யாஸ திலகமென்கிற க்ரந்தத்தில் அவ்வாசிரியரே எடுத்துக்காட்டி அழகாக ஸமாதானமும் வகுத்துள்ளார்;-ஹேதுர் வைதே விமர்கே* என்கிற சலோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்லவேண்டியிருந்தாலும் இங்கு அப்படி கொள்ளவேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதா யிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம்)அறியத்தக்க ரூபமாதலால்– என்று இந்த ச்லோகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது.

    ————–

    த்ரமிட உபநிஷத் பிரபாவ ஸர்வஸ்வம்

    (388-389)பூர்வாசாரிய ஸ்தோத்ர நூல்களில் ஆழ்வார்களநுபவம்

    ஸ்ரீமந்நாதமுனிகளின் முக்தகம்.-(திருவாய்மொழித் தனியன்)
    பக்தாம்ருதம் விச்வஜநா நுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்,
    ஸஹஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம்-நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்.

    அஹம் த்ராவிடவேதஸாகரம் நமாமி -தமிழ்மறையென்னுங் கடலை அடியேன வணங்குகிறேன். பக்தாம்ருத மித்யாதி விசேஷணங்கள் திருவாய்மொழிக்குக் கடலோடு ஸாம்யத்தை நிர்வஹிப்பவை. பக்தாம்ருதம்] *அலைகடல் கடைந்து…. விண்ணவரமுதுண
    அமுதில்வரும் பெண்ணமுதுண்டவெம்பெருமானே
    என்றபடி பக்தர்களுக்கு அமுதமளித்தது கடல். (பக்த) என்ற பதத்திற்கு அடைவிக்கப்பட்டவென்று பொருள்கொள்க. திருவாய்மொழி பக்ஷத்தில்-தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றபடி பக்தர்களுக்கு அம்ருதமாயிருப்பதென்கை (விச்வஜநாநுமோதநம்]கடல் எப்படிப்பட்ட வர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும். கடலைக்காண விரும்பாதவர்களில்லை. திருவாய்மொழியானது * பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரம் என்றும், கேட்டு ஆரார்வானவர்கள் செவிக் கினிய செஞ்சொல்லே என்றும், *பண்ணார் பாடலின்கவிகள் யானாய்த் தன்னைத்தான் பாடித்தென்னாவென்னுமென்னம்மான் என்றும்,ஏர்விலா வென்னைத் தன்னாக்கியென்னால் தன்னைப் பார்பரவின்கவிபாடும் பரமரே என்றும் ஆழ்வார் தாமே பேசும்படி ஸர்வேச்வரனுட்பட உபய விபூதியிலுளார்க்கும் பரம போக்யமானது. (ஸர்வார்த்ததம்] கடல் ரத்நாகரமாகையாலே ஸகலப் பொருள்களையும் கொடுக்கவல்லது. திருவாய்மொழியோ வென்னில் *மிக்கவிறை நிலையும் மெய்யாமுயிர்
    நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலுமூழ்வினையும் வாழ் வினையுமோதும் குருகையர் கோன்யாழினிசை வேதத்தியல்*
    என்ற திருவாய்மொழித் தனியன்படி அறியவேண்டுமர்த்தங்களையெல்லாம்காட்டித்தரவல்லது.

    [ஸ்ரீ சடகோபவாங்கயம்] கடலானது விஷ்வகாசாந்தளிந்தோ; கும்பீ ஸூ நோ என்ற பாதுகா ஸஹஸ்ர ஸூக்தி யின்படி அகத்தியமுனிவரின் வாங்மயமானது. திருவாய்மொழியானது குருகூர்ச்சடகோபமுனிவரின் திருவாக்கு. (ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம் கடலானது பற்பல நதிகளுக்குப் புகலிடமாகையாலே வெள்ளத்தினால் பெயர்க்கப்பட்ட பல்லாயிரம் மரங்களின் சாகைகளினுடைய ஸமாகமத்தை யுடையது. திருவாய்மொழியோ வென்னில் ஸஹஸ்ர சாகைகளை யுடைத்தான ஸாமவேதத்திற்கு ஸமமான சாஸ்த்ரமாயிருக்கும். ஆசார்ய ருதயத்தில் சந்தோகனென்று ஸாமா நயமாகாமல். …இத்தைச் சாந்தோக்ய ஸமமென்பர்கள் * என்ற சூர்ணையின் வியாக்கியானம் ஸேவிப்பது.ஆக, இப்படிப்பட்ட த்ராவிட வேத ஸாகரத்தை ஸேவிக்கிறேனென்றதாயிற்று.

    ஆளவந்தார் ஸ்தோத்ரசத்தம் சுலோகம்-5.
    மாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம், ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகலம் ப்ரணமாமி மூர்த்நா.

    கீழ்நான்காவது சுலோகத்தில் போற்றப்பட்ட பராசர ருடையகரந்தத்தைவிட பரமபோக்யமும் பரமோஜ்ஜீவநமும் பரமோ காரகமும் பலபடிகளாலும் நிகரற்றதுமான திருவாய்மொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்தவரும், ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் யோகதசையில் ஸேவை ஸாதித்து நேரில் ஸகலோபநிஷத்ஸாரார்த் தங்களை உபதேசித்தவரும்,ப்ரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரை நமஸ்கரிக்கின்றார் இதில். “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,மேலாத் தாய் தந்தையும் அவரேயினியாவாரே” (திரு வாய்மொழி-5-1-8] என்று ஆழ்வார்க்கு மாதாபிதாக்கள் முதலிய எல்லா உறவு முறையாரும் எம்பெருமானேயானது போல் ஸ்ரீவைஷ்ணவர்கட்கெல்லாம் ஆழ்வார் திருவடிகளே ஸர்வ ஸ்வமாகிறதென்று அருளிச் செய்கிற இவருடைய அத்யவஸாயத்தை என் சொல்வோம்? நம்மாழ்வார்க்குப் பல திருநாமங்களிருக்கவும், அவற்றையெல்லாம் விட்டு ”ஆத்யஸ்ய ந: குலபதே .” என்று – ‘நம்முடைய குலத்துக்குத் தலைவர் என்று அருளிச் செய்யும்படியான திருவுள்ளக் கனிவு விலக்ஷணமானதே. ‘-‘‘விப்ரர்க்குகோத்ரசரண ஸுத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்; ப்ரபந்ந நகூடஸ்தர் பராங்குச பரகாலயதிவ ராதிகள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்க –மதந்வயாநாம் என்கிற பதத்தினால்-தமக்கு முன்னே அவதரித் திருந்த பெரியோர்களும், தமக்குப் பிறகு , ஜனிக்கப் போகிற ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநங்களும் விவக்ஷிதம். ஸ்ரீவைஷ்ணவர்களென்று பேர் பெற்ற அனைவர்க்கும் ஆழ்வார் திருவடிகளே ஸர்வஸ்வம் என்றாராயிற்று.

    ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்-சுலோ. 26.
    நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
    மஹேச! ஹாதும் தவ பாதபங்கஜம்,
    ருஷா நிரஸ்தோபி சிசு: ஸ்தநந்தய:
    ந ஜாது மாதுச் சரணெள ஜிஹாஸதி.

    எம்பெருமானே! என்னை நீ விலக்கித் தள்ளினாலும் நான் உன் திருவடிகளை விட்டு அகல்வேனல்லேன்; முலையுண்கிற குழந்தையைத் தாயானவள் முன்கோபத்தினால் சீறித் தள்ளிவிட்டாலும் அக்குழந்தை பின்னையும் தாயின் காலையே கட்டிக்கொண்டு அழுமேயல்லது அகன்று போய்விடமாட்டாது; அது போலவே, என்னை நீ நெறிகாட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன் திருவடிகளை விட்டு நீங்குவேனல்லேன்” என்று தம்முடைய திண்ணிய உறுதியை உரைத்தாராயிற்று. ஹாது மிச்சதி – ஜிஹாஸதி, ” தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை….அரிசினத்தாலீன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தனருள்நினைந்தே அழுங்குழவியதுவே போன்றிருந்தேனே” என்ற ஸ்ரீகுலசேகராழ்வார் பாசுரத்தைப் பெரும்பாலும் தழுவி இந்த ச்லோகமருளிச் செய்யப்பட்டது.

    கதாபுநச் சங்கரதாங்க கல்பக
    த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சநம்,
    த்ரிவிக்ரம! த்வச்சரணாம்புஜத்வயம்
    மதீயமூர்த்தாக மலங்கரிஷ்யதி. 31

    திருவாய்மொழியில் ஆழ்வார் “நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” என்றும், “கோலமா மென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்றும், “அடிச்சியோந்தலைமிசைநீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்”
    என்றும் விரும்பினபடியே உன் திருவடிகளாலே என் தலையை அலங் கரிப்பது எப்போதோவென்கிறார் .

    நிவாஸ சய்யாஸநபாதுகாம்சுக
    உபதாநவர்ஷாதபவாரணாதிபி:,
    சரீரபேதைஸ் தவ சேஷதாம் கதை:
    யதோசிதம் சேஷ இதீரிதே ஜநை:
    -40-
    ”சென்றாற்குடையாம் இருந்தாற்சிங்காசனமாம், நின் ால் மர
    வடியாம் நீள் கடலுள்-என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம்
    புல்கும், அணையாம் திருமாற்கு அரவு”
    என்ற முதல் திருவந்தாதிப் பாசுரத்தையே இந்த ச்லோகமாக மொழிபெயர்த்தனர்.

    வபுராதி யோபிகோபிவா
    குணதோஸாநி யதாததாவித:,
    ததயம் தவ பாதபத்மயோ:
    அஹமத்யைவ மயாஸமர்ப்பித:
    .-52-
    ஆத்மாவைப் பற்றிப் பலர் பலவகையாகச் சொல்வர்கள்; தேஹமே ஆத்மா என்பர்சிலர் ; மற்றுஞ் சிலர் இந்திரியமே ஆத்மா என்பர்; வேறு சிலர் அந்த: கரணமே ஆத்மா என்பர்; ப்ராணமே ஆத்மா என்பர் சிலர்; புத்தியே ஆத்மா என்பர் மற்றையோர்; இவை ஒன்றுமல்ல; இவற்றிற்காட்டில் அஹமர்த்தமான ஆத்மா வேறுபட்ட வஸ்து என்பதை இவர்தாம் ஸித்தித்ாயமென்னும் திவ்யகரந்தத்திலே நிலைநாட்டியிருந்தாலும் இங்கே அந்த விசாரம் வைத்துக்கொள்ளாமல்,ஆத்மா என்பது தேஹம் முதலரனவற்றுள் எதுவாக இருந்தாலுமிருக்கட்டும் என்று சரக்கறச் சொல்லுகிறார்; எதுக்காகவென்னில்; ஆத்மாவுக்கு சேஷத்வ ஸ்தாபநமொன்றே முக்கியம் என்கிற தற்கால நோக்கத்தை வெளியிடுத்தற்காக. ‘யோஹமஸ்மி ஸஸந் யஜே” என்று வேதபுருஷனும் சொல்லிவைத்தான்; “நான் எவனாகிலுமாகிறேன்; தேஹமாகவோ இந்த்ரியமாகவோ மற்றும் ஏதேனுமாகவோ அஹமர்த்தமாகவோ உண்மையில் எவனாக இருக்கிறேனோ அவனாகவே யிருந்துகொண்டு பகவானை ஆராதிக்கின்றேன்” என்பது அந்த வேத வாக்கியத்தின் பொருள்: அப்படியே இவரும் அருளிச்செய்கிறார்.குணத : யதாததாவித அஸாநி= ஆத்மா அணுவா ஸர்வவ்யாபியா? நித்திய வஸ்துவா நச்வரவஸ்த்துவா? ஏகரூபனா பரிணாமியா? ஜ்ஞாநியா அஜ்ஞனா? என்றிப்படி ஆத்ம குணங்களில் பலவகை விப்ர திபத்திகளுண்டு; இதுதன்னிலும் இப்போது நிஷ்கர்ஷிக்கப் புகுகின்றிலேன் என்கிறார் எம்பெருமானே! உனது திருவுள்ளத்தால் இவ்வாத்ம வஸ்து எப்படிப்பட்ட ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையதாகக்கொள்ளப் படுகிறதோ அப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபாவ விசிஷ்டமாகவேயுள்ள இவ்வஸ்து உன் திருவடிகளில் அடியேனால் ஸமர்ப்பிக்கப்பட்டதாயிற்றுக் காண் என்றராயிற்று. [மேல் சுலோகத்தோடு முடிவு.

    மம நாத! யதஸ்தி யோஸ்ம்யஹம்
    ஸகலம் தத்தி தவைவமாதவ,
    நியதஸ்லமிதி ப்ரபுத்ததி:
    அதவா கிந்து ஸமர்ப்பயாமி தே.–53-

    -கீழ் ச்லோகததில் அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: என்று சொன்னதைத் தாமே மறுபடியும் ஆராய்ந்தார்; ஐயோ! என்ன சொன்னோம்! என்ன சொன்னோம்!!’ என்று நடுங்கி, அதற்குஅநுதபிக்கின்றமைதோற்ற இந்த ச்லோகமருளிச்செய்கிார். “மயா அஹம் ஸமர்ப்பித” என்று சொன்னேனே ; இப்படி சொல்வதற்குஎனக்கு என்ன அதிகாரமுள்ளது? நான் என்கிற வஸ்துவும் என்னுடையதுஎன்கிற ஒரு வஸ்துவும் ஸ்வதந்த்ரமாகவுண்டோ? “யானே நீ என் னுடைமையும் நீயே” என்றபடி எல்லாம் ஏற்கனவே உன்னுடையதாகவே யிருக்கும் போது, இந்த ஆத்மவஸ்து உனக்கு இல்லாதது போலவும் இப்போதுதான் புதிதாக என்னால் ஸமர்ப்பிக்கப்படுவது போலவும் பேசிவிட்டேனே பாவியேன்; ஸமர்ப்பிப்பதற்கு நானார்? ஸமர்ப்பிக்க என்னிடம் என்ன இருக்கிறது! அதிலும் உனக்கு ஸமர்ப் பிக்க என்ன இருக்கிறது? இவ்விஷயங்களை ஆராயாமல்தானே அவிவேகியாய் ‘அஹமத்யைவ மயா ஸமர்ப்பித:‘ என்று பிசகாகப் பேசிவிட்டேனே! என்று அநுதாபங்காட்டி அருளிச் செய்தாராயிற்று.திருவாய்மொழியில் “எனதாவிதந்தொழிந்தேன் இனி மீள்வதென்ப துண்டே” என்று அருளிச்செய்த ஆழ்வார் உடனே ஆராய்ந்துதெளிந்து, ‘‘ எனதாவியாவியும் நீ பொழிலேழுமுண்ட வெந்தாய்!,எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்றருளிச்செய்ததை அடியொற்றியதாம் இந்த ச்லோகமிரண்டும்.

    ஸக்ருத் வதாகாரவிலோகநாசயா|
    த்ருணீக்ருதாநுத்தமபுக்திமுக்திபி,
    மஹாத்மபிர்மாமவலோக்யதாம் நய
    க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸ :
    .–56-
    சில மஹாத்மாக்களால் அடியேன் கடாக்ஷிக்கப் பெறவேணும்; எந்த மஹாத்மாக்களா லென்னில்; உன்னுடைய திருமேனியை ஒரு காலாகிலும் ஸேவிக்கப்பெற்றால் போதும் என விரும்பி, ‘ஐச்வரியமும் வேண்டா, ஸ்வர்க்கா நுபவாதிகளும் வேண்டா, மோக்ஷஸாம்ராஜ்யமும் வேண்டா, என்று எல்லாவற்றையும் த்ருணமாக நினைத்து உதறித்
    தள்ளுபவர்கள் எவரோ, எவர்களை வீட்டுப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நீ தரிக்கமாட்டாயோ, அப்படிப்பட்ட மஹாத்மாக்களின்கடாக்ஷத்திற்கு நான் இலக்காகும்படி செய்தருளவேணுமென்ரு ராயிற்று. “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய்,
    ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே”
    என்றாற்போலே பிரார்த்தியா தொழிந்தது, “இந்திரலோகமாளுமச்சுவை பெறினும் வேண் டேன்”’எம்மா வீட்டுத் திறமும் செப்பம் ”வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்,கோனாகிவீற்றிருந்து கொண்
    டாடுஞ் செல்வறியேன்” “கம்பமதயானைக்கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
    ” என்றும் புக்திமுக்திகளெல்லாவற்றையும் வெறுத்த ஆழ்வார்களின் கடாக்ஷம்பெறுகைக்கு ஆசைப்பட்டாராயிற்று. ‘க்ஷணேபி தே யத்விரஹோதி துஸ்ஸஹ:” என்ற நான்கா மடிக்குச்சேர, “அருமாமாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே, ஒரு மாநொடியும் பிரியான் என்னூழிமுதல்வனொருவனே” என்ற ஆழ்வார்பாசுரம் அநுஸந்தேயம்

    ந தேஹம் ந ப்ராணாந் நச ஸு கம சேஷாபிலஷிதம்
    ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வவிபவாத், பஹிர்ப்பூதம் நாத! கூணமபி ஸஹே யாது சததா விநாசம் தத் ஸத்யம் மதுமத ! வி. ஞாபநமிதம்.
    –57-

    -திருவாய்மொழியில் “ஏறளுமிறையோனும்” (4-8-) என்கிற திருவாய்மொழியில் “உடம்பினால் குறைவிலமே “உயிரினால் குறைவிலமே” இத்யாதியாகப் பத்துப் பாசுரங்களாலே பரக்கப் பேசின அர்த் தத்தை இந்த ஒரு லோகத்தில் அடக்கி அருளிச் செய்தாராயிற்று.

    ஸ்ரீ பாஷ்ய மங்களச்லோகத்தின் பொருள் விளக்கம்
    அகிலபுவந ஐந்ம ஸ்தேம பங்காதிலீலே
    விந்த விவித பூதவ்ராத ரக்ஷைக க்ஷே,
    ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
    பவது மம பரஸ்மிந்சேமுஷ் பக்திரூபா.

    இந்த ச்லோகத்தினால் ச்ரிய:பதியான எம்பெருமான் பக்கலில்-பக்திரூபாபந்நஜ்ஞானத்தை ஸ்ரீபாஷ்யகாரர் விரும்புவதாக மேலெழக் காணும் பொருள். இதிலுள்ள ஐந்து விசேஷணங்களாலும் நம்மாழ்வாருடைய பெருமைகளை விளக்கி, அவர் திறத்துப் பத்தியுண்டாம்படி பிரார்த்திப்பதாக உள்ளுறை பொருள். எம்பெருமான் ஸகல லோகங்களையும் படைத்தளித்துத் துடைப்பதை லீலையாக வுடையவன்; தன்னை
    வணங்கின வெவ்வேறு வகைப்பட்ட ப்ராணி ஸமூஹங்களுக்கு முக்தி யளிப்பதாகிற ரக்ஷணத்தைச் செய்வதையே விரதமாகக் கொண்டவன்; *வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு என்று பெரியாழ்வார் அருளிச் செய்தபடி வேதாந்தங்களில் மிக விளங்குபவன்; ஸ்வரூபத்தாலும் திருக்குணங்களாலும் மிகப் பெரியவன்; திருமகள் கொழுநன் ; இத்தகைய பெருமை வாய்ந்த பரமபுருஷன்| பக்கலில் மதிநலமுண்டாக வேணுமென்பது எம்பெருமான் பரமான பொருள். இத்தால் சாஸ்த்ரார்த்த ஸூசனமும் பண்ணினபடி.

    இனி நம்மாழ்வார் பரமான பொருள்-[அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே ] இந்த விசேஷணம்-ஆழ்வார்க்கு ஆகும்போது இரண்டுபடியாக யோஜநையாகும். அகில
    புவனங்களினுடைய ஜன்மஸ்தேமபங்கங்களுக்கு [ஆதி காரணபூதனான
    எம்பெருமானோடே லீலாரஸம் அனுபவிப்பவர் ஆழ்வார். அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காநாம் ய: ஆதி: (ஸர்வே வர:) தே.ந ஸஹ லீலா யஸ்ய தஸ்மிந் ” என்று கொள்ளக் கடவது. திருவாய்மொழியில் (6-2)-என்னுடை பந்துங்கழலும் தந்து போகுநம்பீ விளையாடப்போதுமி னென்னப்போந்தோமை என்நிவை முதலான பலபல பாசுரங்களினால் ஆழ்வார்க்கும் எம்பெருமானுக்கும் நிகழ்கின்ற லீலைகள் வாசாமகோசம்.
    இதுவொரு யோஜனை, மற்ருெரு யோஜநையாவது, அகிலம் -புவந
    ஜந்மஸ்தேமபங்கா திலீல: யஸ்ய-
    என்று கொண்டு. எம்பெருமானையே எல்லாமாக வுடையவர் ஆழ்வார்; (அதாவது) உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணனெம்பெருமான்* என்றி ருந்தவர் நம்மாழ்வார் என்றதாகிறது. இப்படியிருந்தவர் ஆழ்வாரொருவரேயாதலால் இந்த யோஜநையும் மிகப்பொருந்தும். இதுவே முக்கியமான யோஜநை.-

    [விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே] விநத விவித பூத வ்ராதரக்ஷகத்வம் எம்பெருமானுக்குச் சொல்லப்பட்டாலும் அநதிக்ரம் ணீயம்ஹி சரணக்ரஹணம்* என்கிற நியாயத்தாலும், மந்தரரத்ந ரக் ரியையாலும் அந்த ரக்ஷண பாரத்தை எம்பெருமானுடைய திருவடிகளே வஹிக்கும். அந்தத் திருவடிகளுக்கு ஸ்ரீ சடகோபனென்றும்
    ஸ்ரீ சடாரியென்றும் நம்மாழ்வாருடைய திருநாமமேயாயிற்று. ஆகவே இந்த விசேஷணம் நம்மாழ்வாரிடத்திலே மிகவெளிதாக அந்வயிக்கக்குறையில்லை பாதுகாஸஹஸ்ரத்தில் ப்ரபாவபத்ததியில்(42) ஜகதாம் அபிரக்ஷணே த்ரயாணாமதிகாரம் மணிபாதுகே! வஹந் த்யோ:” என்றச்லோகம் இங்குப் பொருத்தமாக அனுஸந்தேயம்.-இந்த விசேஷணத்தில் ஆழ்வார் விஷயமான யோஜநையில் விவரிக்க வேண்டிய விசேஷங்கள் பலவுண்டு; விஸ்தபயத்தாலே விடு கின்றதத்தனை.

    [ச்ருதி சிரஸி விதீப்தே] ச்ருதி சிரஸ்ஸாவது உபநிஷத்து;-அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார். எங்ஙனேயென்னில்; தத்-விப்ராஸோ விபந்யவோ ஜாக்ர்வாம்ஸஸ் ஸமிந்ததே இத்யாதிகளான உபநிஷத் வாக்யங்கள் ஆழ்வாரை யன்றோ ஓதுகின்றன. விப்ராஸ: என்றது விப்ரா: என்றபடி.ந சூத்ரா பகவத் பக்த விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: என்கிறபடியே விப்ரத்வ ஸித்தி பெற்றவர் ஆழ்வார். (விபந்யவ:) பண ஸ்துதெள என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமான சொல்லாகையாலே விசேஷித்து ஸ்துதிகர்த்தாக்களென்றபடி. “தேவிற்சிறந்த திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞன், பாவிற்சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே” என்றபடி எம்பெருமானுக் குத்தகுந்த ஸ்தோதா ஆழ்வார். (ஜாக்ர்வாம்ஸ:)” கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றர்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று
    சொல்லி இந்நிலத்திலே உறக்கமற்றிருப்பவர் ஆழ்வாரே. ‘ஸமிந் ததே’ என்றவிடத்து (ஸம்) என்கிற உபஸர்க்கத்தை நோக்கியே இங்கும் (விதீப்தே) என்று ஸோப ஸர்க்கமாக வருளிச் செய்தது.

    இதற்கு மற்ருெரு யோஜநையுமுண்டு; ச்ருத்யாம் தீப்த : ச்ருதிசிரஸி விதீப்த : என்கிறதாகக் கொள்க. ச்ருதி யென்றது திருவாய் மொழி; அதில் தீப்தர் ஆழ்வார்; பதிகந் தோறும் நிகமனப் பாசுரத்திலே குருகூர்ச் சடகோபன்‘ என்று விளங்குபவரென்கை. இனி, சருதி சிரஸ்ஸாவது கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தம் அது திருவாய்மொழியின் முடிவிலே நியமேந அநுஸந்திக்கப்படுவதால் சருதி சிரஸ்ஸாயிற்று. அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார்; அந்த ப்ரபந்தம் முழுவதும் ஆழ்வார் விஷயமேயாதலால் அதில் விதீப்த ரென்னக்குறையில்லையே.

    [ப்ரஹ்மணி] “ஸர்வத்ர ப்ருஹத்த்வகுணயோகேந ஹி ப்ரஹ்சப்த :” என்ற ஸ்ரீ பாஷ்யத்தின்படி ப்ரஹ்மமென்றது மிகப் பெரிய வஸ்துவென்றபடி. ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் “புவியுமிருவிசும்பும் நின்னகத்த, நீ யென்செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய்,அ வின்றி யான் பெரியன், நீ பெரியை யென்பதனை யாரறிவார்’‘என்கிற பாசுரத்தினால்- மிகப் பெரியவனான எம்பெருமானை யும் தம்முள் ஒரு மூலையிலடக்கியிருக்கையாகிற பெருமை தமக்கேயுள்ளதென்று ஸோபபத்திகமாக நிரூபித்திருப்பதனால் ஆழ்வாரை ப்ரஹ்மமென்னத் தட்டில்லை. ஆழ்வார் தம்முடைய ப்ரஹ்மத்வத்தைத் தாமே உபபாதித்த ருளியிருப்பது விசேஷம். அப்பாசுரத்தின்படி எம்பெருமான் ப்ரஹ்ம மாகவும் ஆழ்வார் பரப்ரஹ்மமாகவும் தேறுதலால் இங்கு ‘பரஸ்மிந்
    ப்ரஹ்மணி’ என்றது ஆழ்வார்க்கு மிகவும் பொருந்தும்.

    [ஸ்ரீநிவாஸே] *ஸது நாகவர: ஸ்ரீமாந் அந்தரிக்ஷகத, ஸ்ரீமாந் லஷ்மணோ லஷ்மிஸம்பந் : இத்யாதி ஸ்தலங்களில் பகவத் கைங்கர்ய ருசியும் பகவத் பக்தியுமே ஸ்ரீயாகச் சொல்லப்படுகையாலே அந்த ஸ்ரீயானது ஆழ்வார் பக்கலிலே குறையற்றதாகையாலே ஸ்ரீநிவாஸத்வம் ஆழ்வார்க்கும் அநபாயம். ஆக இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்திலே தமக்கு பக்தியை வேண்டினாராயிற்று,

    இந்த மங்கல ச்லோகத்தின் முதற்பாதம் அகிலபுவநஐந்மஸ்தேம பங்காதிலி லே‘ என்பது. இதில் யதோ வா இமா நி பூதாநி ஜாயந்தே” இத்யாத்யுபநிஷத்வாக்ய ஸித்தமாயும் ஜந்மாத்யதிகரணபாஷ்ய ப்ரபஞ்சிதமாயுமுள்ள ஜகஜ்ஜந்ம ஸ்திதிலயங்கள் அருளிச் செய்யப்பட்டன. ஸ்தி தியாவதுரக்ஷணம்; இதுவும் முதல் பாதத்தில் சொல்லியாயிற்றென்பது ஸ்பஷ்டம், இப்படியிருக்க, விந்தவிவித பூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்று இரண்டாவது பாதம் எதற்கு? இதில் சொல்லப்படுகிற ரக்ஷணமும் முதல்பாதத்திலே சொல்லப்பட்டிருக்க, ச்லோக பூரணார்த்தமாகவா இந்தத் தனி விசேஷணம்? என்று கேள்வி எழுகின்றது.

    இப்படிப்பட்ட க்திவிந்யாஸம் நம் பாஷ்யகாரரிடத்தில் தவிர இதரர்களிடத்தில் காணக்கிடைக்காது. ஸ்வாமி ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே இந்த விசேஷணமிட்டருளினார். எங்ஙனேயென்னில் : ஆழ்வார் திருவாய்மொழியில் (1-3-2). எளிவருமியல் வினன் என்கிற பாட்டில் “ஒளி வருமுழுநலம் முதலில கேடில”என்று அபரிமித கல்யாணகுண முடைமையைச்சொல்லி, உடனே’வீடாந்தெளிதரு நிலைமையது ஒழிவிலன்” என்கிறார், மோக்ஷமாகிற தெளிந்த நிலத்தைத் தருவதான அந்த ஸ்வபாவத்தை அதாவது
    மோக்ஷப்ரதத்வத்தைஎப்போது முடையவன் என்பது இதன் பொருள்.
    இங்கே நம்ஆசார்யர்கள், ஒளிவருமுழு நலம் என்றதிலேயே மோக்ஷப்ரதத்வமாகிற இந்த குணமு ம் அடங்காதோ? என்று கேட்டுக்கொண்டு ‘மோக்ஷப்ரதத்வம் தனியே சொல்லவேண்டுவதொரு குணமாகையாலே சொல்லுகிறார்” என்றருளிச்செய்கிறார்கள்.[இங்குமுக்கியமாகக் குறிக்கொள்க. இப்படி மோ ப்ரதத்வத்தைத் தனிப்படஅருளிச் செய்தவர் நம்மாழ்வாரேயாவர். இங்கே யருளிச் செய்வது தவிரவும் இரண்டாம்பத்தில் அணை வதரவணைமேல்என்கிற திருவாய் மொழியாலும் மோக்ஷப்ரதத்வத்தை விசேஷேண அருளிச்செய்கிறார்.-தேசிகனும் த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்நாவளியிலும் ஸாரத்திலும் அந்தத் திருவாய்மொழிக்குமோக்ஷப்ர தத்வமே அநுபாவ்யகுணமென்று
    அறுதியிடுகிறர்
    ஆக இங்ஙனே மோக்ஷ ரதத்வத்தை ஆழ்வார் தனிப்பட அருளிச் செய்திருப்பது கொண்டே ஸ்வாமி ராமா நுஜரும் விந்த விவித பூதவ்ராதர ைகதீ ே என்பதனால் இதைத் தனிப்பட அருளிச்செய்தார்.

    இதற்குமேல் மூன்றாவது பாதத்தில் ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச் செய்ததிலும் விசேஷித்து அவதானம் செல்லவேண்டும். அகில புவநேத்யாதியான இந்த ச்லோகத்தில் பாஷ்யத்திற்கு மூலமான சாரீரகமீமாம்ஸையின் சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹம் செய்யப்படுகிறதென்பது முக்கியமான விஷயம். இந்த சாரீரக மீமாம்ஸையில் ஒரு ஸ த்திரத்திலும் லக்ஷ்மீஸம்பந்தம் ப்ரஸ்தாவிக்கப்படவுமில்லை; அப்படியிருக்க ஸ்வாமி எதுகொண்டு ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச்செய்தாரென்று விமர்சிக்கவேணும் ஆழ்வார்கள் கோஷ்டியில் திருவில்லாத்
    தேவரைத் தேறேல்மின் தேவு*
    [ரீஸம்பந்தமில்லாத தெய்வத்தைத்தெய்வமாக நினைக்கவேண்டா] என்கிற உத்கோஷமிருப்பதனாலேஅதையாதரித்தேஸ்வாமி இங்கு ‘ஸ்ரீநிவாஸே‘ என்றருளிச்செய்தது.

    இதற்குமேல் நாலாவது பாதத்தில் “பக்திரூபா சேமுஷீ பவது”என்றதும் அவதேயம். மம பக்திர் பவது மம பக்திரஸ்து’ என்றருளிச் செய்தால் போதுமே; ‘பக்திரூபா சேமுஷீ பவது’ என்றது ஏன்? என்று ஆராயவேணும். திருவாய்மொழி முதற்பாசுரத்தில் மதி நலமருளினன்”
    என்று ஆழ்வார் பாசுரமுள்ளது. மதியாவது ஞானம்; நலமாவது பக்தி.ஞானமும் பக்தியுமாகிற இரண்டையும் தந்தான்என்று சிலர் நிர்வஹித்தார்கள். நலமான மதியைத் தந்தானென்று கொண்டு, முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம்போலே பக்திரூபாபந்மான ஞானத்தைத் தந்தானென்பதே முக்கியமான நிர்வாஹமாகக்
    காட்டப்படுகிறது. எம்பெருமானார் இவ்விதமான அர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றியே “பவது மம பரஸ்மிந் சேமுவீ பக்திரூபா” என்றருளிச்செய்தாரென்பதே இங்கு தலையான விஷயம். “புத்திர்மநீஷாதிஷணா தீ: ப்ரஜ்ஞா சேமுஷீ மதி ” என்பது அமரகோசம். மதியும்சேமுஷியும் பர்யாயமே. பக்தியும் நலமும் பர்யாயமே. ஆழ்வார்க்கு மதிநலமருளினது போல அடியேனுக்கும் மதிநலமருள வேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.

    சாரீரகமீமாம்ஸையின் முதல் ஸூத்ரம் *அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா‘ என்பது. இதில் ப்ரஹ்ம சப்தத்திற்கு சங்கராசாரியர் பாஷ்யம் ப்ரஹ்ம ச வக்ஷ்யமாண லக்ஷணம் ஜந்மாத்யஸ்ய யத இதி” என்றிவ்வளவே யுள்ளது. ஸ்வாமியின் பாஷ்யஸூக்தியோ வென்னில்“ப்ரஹ்ம சப்தேந ஸ்வபாவதோ நிரஸ்த நிகிலதோஷ : அநவதிகா திசய
    அஸங்யேய கல்யாண குணகண: புருஷோத்தம: அபிதீயதே
    ” என்று உள்ளது . ஆழ்வார் திருவாய்மொழி தொடங்கும் போதே உயர்வறவுயர் நலமுடையவன் என்றருளிச் செய்த சந்தையையே ஸ்வாமி நேராக மொழிபெயர்த்திருக்கி ார் உயர்வற- அநவதிகா திசய, உயர்
    அஸங்யேய, நலமுடையவன் -கல்யாண குணகண:, யவனவன்-புருஷோத்தம
    . ஆழ்வார் ஸ்ரீஸூக்திகள் முழுவதும் பகவத் குணமயமேயாதலால் அந்த அம்ருத ஸாகரத்திலேயூறின ஸ்ரீராமாநுஜர் அதற்குத்தகுந்தபடியே அருளிச்செய்கி ர். தமிழில், மால் என்றும் நெடுமால்
    என்றுமுள்ள சொற்களுக்குண்டான அர்த்தங்களையே ப்ரஹ்மசப்தார்த்தமாக ஸ்வாமி உப்பாதிக்கும் பரிசு அத்யாச்சர்யம்.

    அந்தஸ் தத்தர்மோபைதே சாத் 1-1-21-இங்கு * பேதவ்பபதேசாச்சார்ய: * என்கிற மேல் ஸூத்திரத்தி )விருந்து அந்ய: என்கிற பதம் வருவித்துச்கொள்ளப்படுகிறது. அந்த:-ஆதித்ய மண்டலத்தினுள்ளே உறையும் புருஷன். அந்ய:- ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரமபுருஷன்; தத்தர்மோபதேசாத்-அந்த பரம புருஷனுக்கேஅஸாதாரணமாகவுரிய தர்மங்களை இங்கு ஓதியிருப்பதனாலே – என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.-இவ்விடத்து ஸ்ரீபாஷ்யத்தில் உபயவேதாந்த ரஸிகர்களுக்கு ஒரு சிறந்த விஷயம் நினை வூட்ட வேண்டியதுண்டு; ஸ்வாமி யெம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யமருளிச் செய்யும்போது ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை இடைவீடின்றித் திருவுள்ளத்தில் சிந்தனை செய்து ண்டேயிருந்தவரென்று முன்னோர்கள் மொழிந்திருப்பதுண்டே-அது உபயவேதாந்தங்களிலும் ஆழ்ந்த அறிவுபெற்ற மஹான்களுக்கே அறியவெளிது. இதற்குச் சான்றுாக எடுத்துக்காட்டக்கூடிய விடங்கள் பலவுண்டு. ப்ரக்ருதம் இந்த ஸுத்ரத்தின் பாஷ்யத்தில் உள்ளதான அரிய பெரிய விஷயமொன்று இங்கு நிரூபிக்கப்படுகிறது. இவ்விடத்தில் பரம புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் கிடையாதென்று பூர்வபக்ஷவதத்தில்ப்ரஸக்தமானதை ஸ்வாமி கண்டிக்குமிடத்து ஸ்ரீ ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் சரீர பரிக்ரஹம் பகவான் செய்தருளுகிறபடியை நிரூபித்து வருகையில் பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம என்கிற கீதா ஸூக்தியை யெடுத்துக்காட்டி, ஸாது பரித்ராணமேவ உத்தேசியம்; ஆ நுஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் விநாச:; ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தே. என்றுள்ளது ஸ்ரீபாஷ்யஸக்தி. எம்பெருமான் அவதாரம் செய்தருள்வது ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவுமானாலும் ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதொன்றே உத்தேச்பம்; துஷ்டர்களைத் தொலைப்ப தென்பது ஸங்கல்ப மாத்திரத்தினாலும் ஆகக்கூடியதாதலால் அது ஆநுஷங்கிகமேயொழிய ப்ரதானமன்று- என்பது மேலெடுத்துக் காட்டிய ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின் கருத்து . “துஷ்டர்கள் தொலையக் கடவர்கள்” என்று ஸங்கல்பிப்பது போல “ஸாதுக்கள் ஸம்ரக்ஷணம் பெறக்கடவர்கள்” என்று ஸங்கல்பிக்க முடியுமன்றோ, ஏன்முடியாது-அப்படியிருக்க, துஷ்டசிக்ஷணமே ஸங்கல்ப ஸாத்யமென்றும் ஸாது ஸம்ரக்ஷணம் ஸங்கல்ப ஸாத்யமன்று என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் எது கொண்டு சாதிக்கிறாரென்று ஆராயுமளவில், நம்மாழ்வாருடைய ஸுஸ்பஷ்டமான ஸ்ரீ ஸூக்தியைக் கொண்டே ஸாதிக்கிறாரென்று நன்கு விளங்குகிறது. அதை விவரிப்போம்.

    திருவாய்மொழியில் (3-1-9) +மழுங்காத வைந்துதியசக்கர நல்வலத்தையாய், தொழுங்காதல்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே என்கிற டாசுரம் பரம போக்யமானது. எம்பெருமான் ஸ்ரீ கஜேந்திராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டு அரைகுலையத் தலைகுலைய மடுவின் கரையிலே டிவந்து விழுந்தானென்கிற இதிஹாஸம் ப்ரஸித்தமானது. எதற்காக வோடிவரவேண்டும்? கருது மிடம் பொருதுவரவல்லதிருவாழியாழ்வானைத் திருநாட்டிலிருந்தே ஏவினால் அவன் ஒரு நொடியில் யானையின் இடரைத்தீர்த்துவரமாட்டானோ ? அவனுக்குத்தான் ச்ரமம் கொடுக்க
    வேண்டுமோ? ஸகல ஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கருவியாயுள்ள ஸங்கல்பத்தினால் யானையிடரை அவலீலையாகத் தீர்த்திருக்கலாமே. இவ்விரண்டுபடியுமின்றிக்கே அறப்பதறியோடிவந்தது எதற்காக? என்று நம்மாழ்வார் கேள்வி கேட்டுக்கொண்டு ஸமாதானத்தையும் தாமேயருளிச்செய்துள்ளார். தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே என்கிற இரண்டாமடிதான் ஸமாதானம். கஜேந்திராழ்வான் தன்னெதிரே வந்து நின்ற பகவானை நோக்கி, *நாஹம் களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மது தந, கரஸ்த கமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் தவ’ என்றான். (என்றேனுமொரு நாள் அழிந்தேபோகக் கூடியதான இவ்வுடலுக்காக நான் கரையவில்லை; எம்பெருமானே! உன்னை ஸேவித்து உன் பொற்றமரையடிகளில் இத்
    தாமரை மலர்களைப் பணி மாறுவதற்காகவே கரைந்தேன் என்றான் ] இப்படிப்பட்ட ஆவல்கொண்ட பக்த சிகாமணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டினால் அவனுக்கு அவத்யமாமென்பதையும் அப்பாசுரத்தின் பின்னடிகளில் ஆழ்வார் தாமே விவரித்துக் கூறியுள்ளார். நேரில் அவதரித்துத் திருமேனியைக் காட்டியே அன்பர்களைக் காக்க வேண்டும் என்று ஆழ்வாரருளிச்செய்த அர்த்தத்தையே இங்கு ஸ்வாமி உயிராகக் கொண்டு பணித்தாராயிற்று.

    திருவாய்மொழியே வடிவெடுத்த ப்ரஹ்ம சூத்ரபாஷ்ய மொன்று.
    சாரீரகமீமாம்ஸா-த்விதீயாத்யாய – த்விதீய பாதத்தில் ஸர்வதா நுபபத்தி யதிகரணத்தில் ஸர்வசூந்யவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் நிரஸிக்கப்படுகிறது.பரப்ரஹ்மமே ஜகத்காரண மென்று நன்கு நிலைநாட்டத்தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வவாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தியென்று சிலர் நினைக்கக் கூடும். ஜகத்காரண வஸ்து ப்ரதா நமா ? பரமாணுவா ? பரப்ரஹ்மமா ? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்; உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும். அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்கமுடியாததா யிருக்க, எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை ஏதுக்கு? உத்பத்தி யானது பாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதா? அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதாவென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண்பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டா கின்றனவென்றால் மண்பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டுதானே யுண்டாகின்றன. எந்தகாரியப்பொருளும் காரணப்பொருளை உபமர்த்தி யாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத் தின் விநாசந்தானே உபமர்த்தமாவது; அதுதான் அபாவமே. ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தியில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங்கூட உத்பத்தியில்லையென்பது அநாயாஸமாகத் தெரியவரும். அபாவத்திலிருந்து பாவோத்பத்தி ஸம்பவிக்கமாட்ட தன்றே. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாவென்பது ஸித்தம். லோகவ்ய வஹாரமெல்லாம் ப்ரம மூலகமே. [இது ஸர்வசூந்யவாதிகளின் வாத ப்ரக்ரியை.]

    இப்படி சூந்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறர்கள். (ஸர்வதாநுபபத்தேச்ச] என்பது த்ரம். ப்ரமேயங்களோ ப்ரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லை யாகிலுமாம்; பூர்வபக்ஷிக்கு அபிமதமான சூந்யத்வம் ஒரு விதத்திலும் தே தாகையாலே மாத்யமிகதர்ச நம் அஸமஞ்ஜஸ மென்றபடி. ஸர்வம் சூந்யம்’ என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான இவ்வர்த் தத்தை ஸாதித்துத் தரும்படியான ப்ரமாணமொன்று உண்டென்று சையும் பக்ஷத்தில் ப்ரமாண ஸத்பாவத்தை யிசைந்தபோதே ஸர்வ சூந்யவாதம் தொலைந்தது. ப்ரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில்;ப்ரமாணமில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அளித்தமென்று முடிந்தது. மேலும் ‘ஸர்வம் சூந்யம்’ என்கிற விந்தவார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாகவேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றெரு ரூபத்தை யடைவதே நாஸ்தி பதார்த்த மாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டையொன்று இருந்தது. பானைதோன்றும் போது அந்தமருத்பிண்டம் நசிக்கிறது. அது நசித்தவளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தைதானே விஷயமாகிறது.

    உலகில் அஸ்தி நா ஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டையில்லை; இங்கு மண்ணுண்டையிருக்கிறது. இங்கு மண்ணுண்டையில்லை; என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே
    வ்யவஹரிக்கிறார்கள் : தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனேமண்ணுண்டை யில்லை ‘ என்கிற ப்ர தீதியோ வ்யவஹாரமோ எங்கும் காண்பதில்லை. இப்போது மருத்பிண்டமிருக்கிறது’ என்றோ ‘ இங்கு மருத்பிண்டமிருக்கிறது’ என்றே ஒருவன் வ்யவஹரித்தால் மண் என்னும் த்ரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம். இப்போது
    மருத்பிண்டமில்லை’ என்றே ‘இங்கு மருத்பிண்டமில்லை’ என்றோ வ்யவஹரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய கடத்வாவஸ்தைவிஷயம். ஆக நாஸ்தித்வவ்யவஹாரம் பண்ணினாலுங்கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறிநிற்கிறதென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக்காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றே ரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொருபோ தில் உண்டென்றதாகத் தேறியேவிடும். ஆகவே ஒருபடி)
    யாலும் ஸர்வசூந்யவாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸூத்ரத்தின் மேலே பொருள் காண்பது எங்ஙனே யென்னில்; ஸர்வதா – ஸர்வ பிரகாரத்தாலும், அநுபபத்தே:-ஸ்வாபிமதமான ஸர்வசூந்யவாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விவரித்தருளும்போது “ஸ்திதி ப்ரதிஜ்ஞா யாம் அஸ்திதி ப்ரதிஜ்ஞாயாஞ் ச” என்றருளிச் செய்கிருர், ஸ்வாமிக்கு இப்பொருள் தோன்றினது எதனாலென்னில்; திருவாய்மொழியில்
    (1-1-9)”உளனெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவுகள், உளனென விலனெனவிவைகுண முடைமை யின், உளனிரு தகைமையோடொழிவிலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்தஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதியிட்டருளினா ரென்பது நிஸ்ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆருயிரப்படியை ஸேவித் தால் இஃது எளிதிற் புலனாகும். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியா லெழுதப்பட்டுள்ள பொருள்தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியா லெழுதப்பட்டுள்ளதென்பதை விசதமாக நிரூபித்துக்காட்டுகிறேன் காண்மின்;

    1-உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் ;–கிம் பவாந் ஸர்வம் ஸதிதி ப்ரதி ஜா நீதே? (ததாஸத்தி) தவாபிப்ரே தம் துச்சத்வம் நஸம்பவதி ;

    2-உளனலனெனில் உளன் ;அவனருவ மிவ்வருவுகள் ;இருதகைமையோடு உளன்.–கிம்பவாந்அஸதி திப்ரதிஜாநீதே?-(ததாபி ) துச்சத்வம் நஸம்பவதி; சூந்யமிதி ப்ரதிஜாந்தா ஸதிதி ப்ரதிஜாநதேவ ஸர்வஸ்ய வித்யமாநஸ்ய அவஸ்த்தாவிசேஷ யோகிதைவப்ரதி ஞாதா பவதீதி. துச்சதா நகுதச்சிதபி ஸித்யதி

    கீதாபாஷ்யத்திலோ ஸ்ரீபாஷ்யத்திலோஸ்வாமியருளிச் செய்யும் ஸ்ரீஸு க்திகளில் நெஞ்சையுருக்கும்படியான ஒரு அதிசயம் அடியேனுடைய அனுபவத்தில் காண்கிறது. இவ்வதிசயம் வேறு எந்த பாஷ்யத்திலும் காணமுடியாது. அஃது என்னென்னில், மூலத்தில்
    பரம புருஷனுடைய ப்ரஸ்தாவம் வருமிடங்களில் ஆழ்வார்களுடைய திவ்யஸுக்திச் சாயையிலே அவனுடைய ஸ்வரூபரூபகுண விபூதிப் பெருமைகளை விளக்கிப் பல விசேஷணங்களை அருளிச்செய்தாலொழிய ஸ்வாமிக்குத் தரிப்பு உண்டாவதில்லை. ஸ்ரீபாஷ்யத்திலும் ஓரிடம் காட்டுகிறேன். அதில் கடைசியான ஸூத்திரம் [அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்] என்பது. இங்கு மூலத்தில் பரமபுருஷனுடைய ப்ரஸ்தாவமே யில்லை. பரமபதத்தைச் சென்றடைந்த முக்தர்கள் மீண்டும் இந்நிலத்தில் திரும்பி வருவது உண்டா. இல்லையா? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இந்த ஸூத்ரம் அவதரித்துள்ளது. புநரா வ்ருத்தி கிடையாதென்று சாஸ்த்ரம் சொல்யிருக்கையாலே அது இல்லை’ என்றிவ்வளவே ஸூத்ரம் சொல்லி நின்றது. இதை விவரிக்குமிடத்து ஸ்வாமி யெம்பெருமானார், பகவானோருவனுளனென்று எந்த சாஸ்த்ரம் அறிவிக்கின்றதோ அந்த சாஸ்த்ரமே பகவானை அடைந்த வர்கட்குப் புநராவ்ருத்தியில்லை என்றும் தெரிவிக்கின்றது” என்றருளிச் செய்கிறார். இங்கு ‘யதா பரமபுருஷ: அஸ்தீதிசப்தாத் அவகம்யதே..” என்றிவ்வளவே அருளிச் செய்தால் போதுமானது; ஆயினும் ஸ்வாமி இங்கே அருளிச்செய்வது பாரீர்:

    ‘யதா நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணைகதாந: ஜகஜ்ஜந்மாதி காரணம் ஸமஸ்தவஸ்துவில ண: ஸர்வ ஜ் ஞ: ஸத்யஸங்கல் : ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த ஸமாப்யதிக ஸம்பாவந: பரம காருணிக: பரப்ரஹ்மாபிதாந: பரமபுருஷ ………. …” என்று இவ்வளவு
    விசேஷணங்களை யருளிச்செய்கிறார். கீதையில் ஒன்பதாமத்யாயத்தில் முடிவு ச்லோகம் மந்மநா பவ மத்பக்க:’ என்பது; இதில் மந்மநா பவ என்பதற்கு என்னிடத்தில் மனத்தை வைத்திடு என்று பொருள். இப்பொருள் யாவர்க்கும் தெரிந்ததே, எளிதில் தெரியக்கூடியதே
    என்கிற கருத்தினால் மத்வபாஷ்யகாரர் அடியோடு அர்த்தம் செய்யவே யில்லை. சங்கராசாரியர் “மயி வாஸதேவே மந : யஸ்ய ஸ: த்வம் மந்மநாபவ” என்று உரைத்தார். என்னிடத்தில் என்பதற்கு வாஸுதேவனாகிய என்னிடத்தில் என்று அர்த்தம் என்பதாக
    விவரித்தாராயிற்று. இனி ஸ்வாமியின் பாஷ்யத்தையெடுத்துக் கொள்வோம். அவ்விடத்து பங்க்திகளை ஸேவித்தால் கல்நெஞ்சினனுக்கும் கண்ணீர் பெருகும்.

    “மந்மநா பவ-ஸர்வேச்வரே நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணை கதாநே ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்பே நிகில ஜகதேககாரணே பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம புண்டரீக தலாமலாயதே ணே ஸ்வச்ச நீலஜீ த ஸங்காசே யுகபதுதித திநகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி
    லாவண்யாம்ருதமஹோததௌ உதாரபீவரசதுர்பாஹெள அத்யுஜ்ஜ்வல பீதாம்பரே அமலகிரீட மகர குண்டலஹாரகேயூரகடகபூஷிதே அபார காருண்யஸௌசீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர்யௌதார்ய வாத்ஸல்ய ஜலதெள அநாலோசித விசேஷாசேஷலோக சரண்யே ஸர்வஸ்வாமிநி தைலதாராவத் அவிச்சேதேந நிவிஷ்டமநா பவ”
    என்கிற இவ்வளவும் அதிகம்பீரமான ஸ்வாமி ஸ்ரீஸூக்தியாகும்.

    இந்த மஹாவாக்யத்தில் எம்பெருமானைப் பற்றின விசேஷணங்கள் பதினெட்டு உள்ளன. இத்தனை விசேஷணங்கள் இங்கு அவசியமோவென்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அவச்யமன்றென்றும் சொல்லலாம் விஸ்தரத்தில் ருசியில்லாதவ ரான ஸ்வாமி இவ்வளவு ஏன் அருளிச் செய்தாரென்று ஆலோசிக்க வேண்டும். ஸ்வாமி யெம்பருெமானார் ‘பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனி வேழம்‘ என்றும் ‘கலி மிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமா னொலி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயமி ராமானுசன்’ என்றும் நூற்றந்தாதியில் அமுதனார் அருளிச்செய்த படியே ஆழ்வாரருளிச் செயற்கடலில் அநவரதம் அவகாஹித்தவராத லால் அதன் பலனாகவே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்திகளை (ஸ்வாமி)’ பலகா லும் அருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. கண்ணபிரான் தன்னிடத்தில் பக்தி பண்ணும்படி விதிக்கிற இவ்விடத்தில் எம்பெருமான் தன்னுடைய இத்தனை விசேஷங்களை யெடுத்துக் காட்டாவிடில் எங்ஙனே பக்தி யுண்டாகும்? அவனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் திவ்யமங்கள விக்ரஹ ஸௌந்தர்யத்தையும் திவ்ய பூஷணாதி வைசிஷ்ட்யத்தையும் திருக்கல்யாண குணபௌஷ்கல்யத்தையும் எடுத்துக் காட்டுவதானது கண்ணபிரான் தானே இவற்றையெடுத்துரைத்து இவற்றிலேயீடுபடும் படி சொல்லுவதாகவன்றோவுள்ளது. இதரபாஷ்யகாரர்களுக்கு திவ்ய ப்ரபந்தஜ்ஞான ஸம்பத்து சிறிதுமில்லாமையினாலே அவர்கள் இப்படிப்யாயிற்று. பட்ட விசேஷணங்களை ஓரிடத்தில் கூட எழுதிவைக்க ப்ரஸக் தியில்லை*செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரையடிக்கள் செம்பொன் திரு வுடம்பே என்றும் ‘கைவண்ணம் தாமரைவாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தமடியுமஃதே’ என்றும் ‘செக்க மலத்தலர்போலும் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலுந் திருமேனி யடிகளுக்கே‘ என்றும் வாய்வெருவுகின்ற ஆழ்வார்களின் ஈரச்சொற் களிலே ஆழங்காற்பட்டிருக்கு மாசிரியர்களுக்கே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்தி விந்யாஸவைபவம் வாய்க்கின்றது.

    திவ்யபூஷண வர்ணன பரமான-*ஸ்லோசித விவித விசித்ராநந்தேத்யாதி வாக்யத்தில் “கிரீடமகுட சூடாவதம்ஸ” என்றுள்ள ஸ்ரீஸூக்தி-திருவபிஷேக மென்றும்,-கொண்டை யென்றும், தொப்பார மென்றும் மூன்று விதமாக வழங்கி வருவதுண்டாதலால் அம்மூவகைத் திருவாபரணங்களுக்கும் வாசகமாகக் கிரீடமென்றும் மகுடமென்றும் சூடாவதம்ஸ மென்றும் மூன்று பதங்கள்இங்கு ப்ரயோகிக்கப்பட்டனவென்னலாம். முக்கியமாயும் உபதேச பரம்பராப்ராப்தமாயுமுள்ள ரஸ்யரஹஸ்யார்த்த மொன்று
    இங்கு அறியவேண்டியதுண்டு. நம்மாழ்வாருடைய திவ்ய ஸக்தி யொன்றைத் திருவுள்ளம்பற்றியே “கிரீட மகுடசூடாவதம்ஸ-திருவிருத்தத்தில் பாரளந்த பேரரசே! எம்விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்தோ) ரரசே! *பாரளந்த பேரரசே! என்பதனால், உலகளக்கிற வியாஜத்தினால் எல்லார் தலையிலும் திருவடியை வைக்கையாகிற ஸௌலப்யகுணம் அனுபவிக்கப்பட்டது. விசும்பரசே! என்பதனால் நித்ய ஸூரிநாதத்வமாகிற பரத்வம் அநுபவிக்கப்பட்டது.-எம்மை நீத்து வஞ்சித்தோரரசே! என்பதனால் தம்மோடு ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் பண்ணிப் போருகையாகிற ப்ரணயித்வகுணம் அநுபவிக்கப்பட்டது. ஆக ஸௌலப்யத்துக்காகக் கவித்த முடியும்,
    பாத்வத்துக்காகக் கவித்த முடியும், ப்ரணயித்வத்துக்காகக் க வித்த முடியுமாக மூன்று முடிகள் நம்மாழ்வாரால் எம்பெருமானுக்குச் சூட்டப் பட்டனவாயின. இதை அடியொற்றியதே எம்பெருமானாருடைய ஸ்ரீஸூக்தி.

    —————-

    (379-380)திருமங்கையாழ்வார் (5-10-8) “ மண்ணிலிது போலு நகரில்லை யென வானவர்கள் தாம் மலர்கள் தூய், நண்ணியுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகர நண்ணு மனமே ” என்றருளிச் செய்தார். நித்திய விபூதி வாஸிகளான நித்யஸூரிகளும் இத்தலத்தே போந்து ‘இம்மண்ணுலகில் இத்திருப்பதிபோன்றதிருப்பதி வேறில்லை? யென்று புகழ்ந்துகொண்டு
    பரிசர்யைகள் பண்ணிஇங்கேயே நித்ய வாஸம் பண்ணிக் கொண்டிருப்ப தாகச் சொல்லப்படுசிறது. அந்த வானவர்களைத் திருமங்கையாழ்வார் கட் கண்ணாலோ உட்கண்ணாலோ காணாமல் இங்ஙனே யருளிச் செய்திருக்க மாட்டார்.-ஸகல திவ்ய
    தேசங்களுக்கு முபலக்ஷணமேயென்று கொள்ளக்கடவது.-பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவத்தில் ” அஹ்ருத ஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்தபந்தா விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம.மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா : ச்ரயந்தே ஸு நியதம் “ என்று நித்ய ஸூரிகளும் முக்தர்களும் முமுக்ஷக்களும் மநுஷ்ய திர்யக்ஸ்தாவர ஜன்மங்களை ஏன்று கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்ய வாஸம் செய்வதாக அருளிச்செய்தார். இதுவும் மற்றுள்ள திவ்ய தேசங்களுக்கு உபலக்ஷணமேயாகும்.-இவற்றை யடியொற்றியே கவிசக்ரவர்த்தியான கம்பரும் தமதுராமாயணத்தில் அயோத்திமா நகரை வருணிக்குமிடத்து “எவ்வுலகத்தோர் யாவரும் தவஞ் செய்தேறுவா னாதரிக்கின்ற. அவ்வுலகத்தோர் இழிவதற்கருத்தி புரிகின்ற தயோத்திமாநகரம்” என்றார். எல்லாவுலகங்களிலுமுள்ள எல்லோராலும் தவம்புரிந்து பெற விரும்பப்படுகின்ற ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரும் இறங்கி வந்து இங்கே வசிக்க விரும்பும் நிலம் திருவயோத்தி யென்றபடி.

    அநாவ்ருத்திச் சப்தாதநாவ்ருத்திச் சப்தாத்-மீட்சியின்றி வைகுந்தமாநகர் போயினாற் பின்னையித் திசைக் கென்றும் புணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே-புநராவ்ருத்தியில்லை யென்றது கர்ம நிபந்தனமான மீட்சியில்லை யென்றபடியத்தனை.-இமாந்லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்–ந்தோக்யத்திலும்
    ” ஸ ஸ்வராட் பவதி: தஸ்ய ஸர்வேஷு லோகேஷூ காமசாரோ பவதி” என்றோதிற்று. மற்றோருபநிஷத்திலும் யே ந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி என்றோதிற்று.-காமாந்நீ காமரூபி] என்றதன் பொருளாவது (காமாந்ரீ) என்றவிடத்துக் காமசப்தம் ஸோச்நுதே ஸர்வாந் காமாந்ஸஹ ப்ர மணா விபச்சிதா * என்றவிடத்திற்போல
    கல்யாண குணவாசகமாய் “கணைநாணிலோவாத் தொழில் சார்ங்கன்
    தொல் சீரை நன்னெஞ்சே! ஓவாதவூணாகவுண்” (பெரிய திருவந்தாதி)
    என்கிற நம்மாழ்வாரருளிச் செயலின் படியே குணா பவத்தையே ஊணாகக்கொண்டவனாய் என்று [காமாந்நீ] என்பதற்குப் பொருள்.
    [காமரூபீ] ஸ்வாபிம தமான உருவத்தைப் பரிக்ரஹித்தவனாகி யென்று பொருள். இங்கே (அநுஸஞ்சரந்) என்றது உயிரான வார்த்தை. பரம புருஷமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும், பரமபுருஷஸ்ய ஆஜ்ஞாமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஏவஞ்ச நித்ய முக்தர்களுக்கு லீலா விபூத்யநுபவம் ப்ராப்தமாகக் குறையில்லை யென்பது தேறிற்று.

    “பரம புருஷ : ஜ்ஞாநிநம் லப்த்வா”-கீதையில் ஸ மஹாத்மா ஸு துர்லப: “–ாரக போஷக போக்யமானவை எல்லாம் கண்ணனென்றிருக்கிற மஹாத்மா மிகவும் துர்லபன் என்று
    பகவான் தன் திருவாக்காலே சொன்னால், அப்படிப்பட்ட வொரு மாஞானியை லபிக்கைக்கு அவன் எவ்வளவோ பாடு படுகிறவன். என்பது விளங்கவில்லையா? ஆகவே சேதந லாபமே ஈச்வரனுக்குப் பேறு என்கிற ஸித்தாந்தம் நன்கு பொலிந்ததாயிற்று.-பேற்றுக்கு த்வரிக்கை கூட நம்மால் விளை வனவல்ல.-“நிதா நம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:” என்கிற.வேதாந்த தேசிக ஸூக்தியால் இவ்வுண்மையும் திண்மைபெறும். ஸொத்தைப்
    பெற்று அனுபவித்து ஆநந்திக்கவேணுமென்கிற ஆவல் ஸ்வாமிக்கே உரியதாகவும்உள்ள தாகவும் உலகிற் காண்கிறோமாதலால் இந்தநியாயமேயாகும்-ஜீவாத்மாவாகிற இந்தஸொத்து சைதந்ய மாகிற கல்மஷத்தோடும் கூடி யிருக்கையாலே சிறிது தலையாட்டவும் வாலாட்டவும் பெறுகிறது. தன்னை நன்க வுணரும்போது தலை மடிந்து நிற்கிறது. நிலாத் தென்றல் சந்தனம் புஷ்பம் முதலியன போலே ஸர்வாத்மநா பரதந்திரமாயிருக்கவேண்டிய ஜீவாத்மாவுக்கு சைதந்யமே இடையூருக நிற்றலால் இதைக் கல்மஷமென்கிறது.-சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவதானது ஸ்வகத ஸ்வீகார மென்றும்,எம்பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகாரமென்றும் சொல்லப்படுகிறது. அடைவே மர்க்கட கிசோர நயாயமென்றும் மார்ஜார கிசோர ந்யாயமென்றும் வழங்குவர். பரகத ஸ்வீகாரமென்பதன் சுவையை அறியப் பெருதவர்கள் இது அஸம்பிர தாயப் பேச்சு’ என்பர்.

    அநந்யசேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச , தஸ்யாஹம் ஸூலப: பார்த்த! நித்யயுக்தஸ்ய யோகி :*-8-14-) ‘ஜ்ஞா நீ து ஆத்மைவ மே மதம்‘ என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டா டும் ஞானியானவன் தன்னை உபாளிக்க வேண்டிய படியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் கண்ணபிரான் என்று அவதாரிகை யிட்டு சுலோகத்தை வெகு அழகாக வியாக்கியானித்தருளி யுள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்.-அர்ஜுநா! எவன் இடைவிடாமல் எப்போதும் வேறொன்றிலும் நெஞ்சைச் செலுத்தாதவனாய் என்னையே ஸ்மரிக்கிறானோ, என்னோடு நித்ய ஸம்ச்லேஷத்தை விரும்பி யிருக்கின்ற அந்த பக்தனுக்கு நான்|ஸுலபன்–இதில் (தஸ்யாஹம் ஸுலபு) அவனுக்கு நான் எளியன் என்கிற பகுதிக்கு பாஷ்யம்-என்னோடு எப் போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்பமுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் நான்; (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்கமாட்டாதவனாய் (அவனைப் பிரிந்து தரித்திருக்கமாட்டாத வனாய்) நானே அவனை வரிக்கிறேன். என்னையடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும் அதற்குற்ற இடையூறுகள் நீங்கு தலையும் என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன். *நாயமாத்மா ச்ருதியில் இவ்வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலேயே மேலே பத்தாவது அத்தியாயத்தில் 10, 11 சுலோகங்களாலும் சொல்லப்படுகிறது- என்பதாம். ஸத்ஸம்பிரதாய ஸாரார்த்தம் இங்கே பொதிந்திருக்கு மழகு காண்க.-ஸ்ரீவசநபூஷணத்தில் 142, 143 “இவன் அவனைப் பெற நினைக்கும்போது பா தகமும் விலக்கன்று” என்று அருளிச்செய்த விடத்தில் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் – “உடைமையை உடையவன் சென்று கைக்கொள்ளுமா போலே ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டிருக்கக்கடவ பரதந்த்ரனான இச்சேதநன் தான் பலியாய் தன் ஸ்வீகாரத்தாலே ஸ்வதந்த்ரனான அவனைப்பெற நினைக்கு மளவில், அவன்நினைவு கூடாதாகில் இப்படி விலக்ஷணை யாயிருக்கிற ப்ரபத்தியும் தல்லாபஸாதநமாகாதென்ற படி ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனான அவன், ஸ்வம்மாய் பரதந்த்ரனாயிருக்கிற இவனை ஸ்வேச்சையாலே பெற நினைக்குமளவில் பாபங்களில் ப்ரதாநமாக எண்ணப்படும் பாதகமும் ப்ரதிபந்தகமாகமாட்டாதென்கை.

    ‘தத்வியோகள அஸ் மாந : அஹமேவ தம் வ்ருணே* என்பது கீதாபாஷ்ய ஸுக்தி.
    ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்றவிதுதான் பரகத ஸ்வீகாரமென்பது. மத் ராபத்ய நுகுணோபாஸந விபாகம் அஹமேவ ததாமீத்யர்த்த: என்கிற அடுத்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றாகக் கழிக்கிறது. இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை யென்கிற ஸத்ஸம்ப்ரதாய ஸாரார்த்தம் எவ்வகையான சோத்யத்திற்கும் இடமில்லாதபடி தெளிவிக்கப்பட்டது.

    இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந் தவாசிரியர் அருளிச்செய்துள்ள திவ்ய ஸூக்திகளும் தெள்ளியவே.*உக்தஸ்ய அதிவாதமாத்ரத்வசங்காவ்யுதாஸாய சருதி மூலதா மா -யமேவேதி என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.-த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே-“புகலொன் றில்லா வடியேன் உன்னடிக் கீழர்ந்து புகுந்தேனே*-‘இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை ; அவனுடைய க்ருஷி பலித்த தத்தனை’-இதையிட்டே பரகத ஸ்வீகார மென்கிறது. “ஸ்வதத்தஸ்வதியா ஸ்வார்த்தம்
    ஸ்வஸ்மித் ந்யஸ் தி மாம் ஸ்வயம் “
    என்கிற தேசிக ஸூக்திக்கு அர்த்தமில்லையோ?” “(தே கிம்நு ஸமர்ப்பயாமி] இத்தையுடைய உனக்கு எத்தை ஸமர்ப்பிப்பேன் ? ஸமர்ப்பணீய மேது? ஸமர்ப்பகர் ஆர்? ஸமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யமில்லை. ஸமர்ப்பிக்கைக்கு ஸ்வாதந்த்ர்யமில்லை; ஸம்ஸார பீதியாலே ஸமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே அநுசயிக்கையுமாக இரண்டும் யாவந்மோக்ஷம் அநு வர்த்திக்கக் கடவது” என்று.-பெரியவாச்சான்பிள்ளையருளிச்செய்வது

    ‘ஸார்வபௌமனை நீசப்பெண் ஆசைப்படுமாபோலே ஐயோ! என்ன ஆசைப்பட்டோம் ! இது தகுமா?’ என்றுஉடனே நெஞ்சாறல் படவும் வேணும் என்று சாஸ்ரார்த்தம் சிக்ஷிதமாகிறது. ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற் கென்றே காட்டுமால் பரஞ்சோதீ (திருவாய்மொழி (3-1-2) என்று, பரஞ்சோதியான எம்பெருமானுக்கு உலகத்திலுள்ள க்ஷணபங்குரமான தாமரை, மேகம் காயாம்பூ முதலானவற்றை ஒப்பாகச் சொல்லுதல் இழிவு என்கிறராழ்வார். இஃது உண்மையா அன்றா? உண்மையாகில்
    கொண்டல் வண்ணா! கடல் வண்ணா? காயா வண்ணா! என்று பல காலும் ஆழ்வார்கள் கதறுகிறார்களே, இது என்ன? என்று ஆராய வேண்டாவோ? அன்றியும், பெரிய திருவந்தாதியில் புகழ்வோம் பழிப்போம் ‘ என்று எம்பெருமானை நாம் புகழ்வதானது பழிப்பதே யாகுமென்கிறார் நம்மாழ்வார் . இப்படிச்சொல்லிக்கொண்டே மேன் மேலும் எம்பெருமானைப் புகழ்வதற்கே ஒருப்படுகின்றாரே, இது என்ன?என்று இதையும் ஆராயவேண்டாவோ?

    ஆறுவார்த்தைகளாவன அஹமேவ பரம்தத்வம் தர்சநம் பேத ஏவச, மோக்ஷோபாய: ப்ரபத்திஸ் ஸ்யாத் பூர்ணாசார்ய ஸமாசரய: தேஹாவஸாநே முக்திஸ் ஸ்யாத் அந்திமஸ்ம்ருதி வர்ஜநம் என்கிற ஸுப்ரஸித்தமான ப்ராசீந ச்லோகத்தினால் விசதம். இதையடியொற்றிப் புராதந கவியாகிய வடிவழகிய நம்பி தாஸர் பணித்த பாசுரங்கள் இரண்டு
    செப்புகின்ற பரதத்வம் யானேயென்னச் செப்புதி, வே றொப்பிலாதாய்! தரிசனமும் பேதமென்றே யுரைத்திடுக
    தப்பிலாதவுபாயமதும் ப்ரபத்தி யென்றே சாற்றிடுக
    அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
    இந்தச்சரீர அவசானந்தன்னிலிசையும் மோக்கமது
    அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசாரியனும் பெரியநம்பி
    சிந்தை தன்னுளிவை யெல்லாம் சிந்தித்திருந்தானிளையாழ்வான்
    முந்தியிவைநீ மொழியென்று மொழிந்தருள்வா னருளாளன்.

    தேனும்பாலுமமுது மொத்த இவ்விரண்டு பாசுரங்களையும் நித்யாநுஸந்தானம் செய்வது ப்ரபந்நர்களுக்கு மிகவும் பாங்கானது.

    தண்பொருநல்வருங்குலசேகரன்,-

    *நல்லநான்மறையோர் வேள்வியென்னும் பாசுரத்தின் (8-4-5) ஈட்டில் நம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்;- ‘அநந்ய ப்ரயோஜநராகில் இவர்களநுஷ்டானத் துக்ரு ப்ரயோஜன மென்னென்னில்; ஸ்வயம்ப்ரயோஜனமாதல், பகவத் ப்ரதிபக்ஷங்களை யழியச் செய்யும் அபிசாரம் பலமாதல். எம்பெருமானாரைப் போலே யாயிற்று இவ்வூரில் ப்ராஹ்மணரும்”

    த்ரைகுண்ய விஷயா வேதா:* என்றவுடனே கீதாசார்யன் * யாவாநர்த்தஉதபாநே ஸர்வதஸ்
    ஸம்ப்லுதோதகே, தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
    * என்றருளிச் செய்தான். இங்கு ஸ்வாமியின் பாஷ்யம் –”ஸர்வேஷ ச வேதேஷு வைதிகஸ்ய முமுக்ஷோ: யதேவ மோக்ஷஸாதநம், ததேவ உபாதேயம் நாந்யத்” என்றுள்ளது. ஸ்வாமி தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதோ தித மபி ந மோக்ஷஸாதநவ்யதிரிக்த முபாதேயம், அநதிக்ருத த்வாத் “ என்று விவரித்தருளினார். புபுக்ஷக்கள் செய்து போருமது க்ஷேபிக்கத்தக்கதன்றென்று முடிந்தது.

    (365-366)ஸ்ரீகாஞ்சி மஹாவித்வான் ஸ்ரீஉ வே. P. B. அண்ணங்கராசார்யஸ்வாமி பட்டர் ஸ்வாமி விஷயமாக அநுக்ரஹித்த பஞ்சரத்மாலிகை பொழிப்புரையோடு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சந பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மூலம் மட்டும் இங்கு வெளியிடப்படுகிறது.
    பஞ்சரத்நமாலிிகை

    ஸ்ரீவேதவ்யாஸபட்டாரக குலஜலதே: கௌஸ்துபாபோவதீர்ண:
    ஸ்ரீசைலாசார்யவர்ய: ஸகலசுபகு ம்போநிதி: ஸாத்விகாக்ர்ய:
    சாந்தோ தாந்தோ நஸூயு: ஸ்வசரணகமலத்வந்தவ ஸேவாரதாநாம்
    மந்த்ரம் மந்த்ரார்த்ததத்த்வம் ஸகலமுபதிசந் ஸர்வஸேவ்ய:–1-


    வாசாமகோசர மஹாகுண கூசநாத ஸத்வம்சதுக்தநிதிசந்த்ரமஸோஸ்ய ஸூரே
    சிஷ்யௌகபாக்யவசதோத்ய சதாபிஷேக – திவ்யோத்ஸவ: ப்ரசலதீதி மஹாந் ப்ரமோத:

    அசீத்யப்தபூர்த்திர் யதா போபவீதி
    ப்ரஸித்தப்ரபாவஸ்ய ஸூரேரமுஷ்ய,
    ததைவ ப்ரபூயாத் சதாப்தீப்பூர்த்தி: திகந்தேஷ ஜேஜேது கீர்த்திச்ச பத்ரா.

    முக்க்யா: சடாரிர் முநீந்த்ரோ யதீந்தர: க்குபாளு :
    ததா ஸௌம்யஜாமாத்ரு யோகிந்த்ர
    ஸதாசார்யவர்யா குஹப்தேரமுஷ்ய
    ப்ரசஸ்திம் ப்ரக்ருஷ்டாம் ஸம்ருத்திம்


    ஸுபுத்ரபௌத் சிஷ்யவர்க்க ஸம்பதாம் ஸப்ருத்திபாக்[திசந்து.
    குரூத்தமோ குணம்புதிர் விசுத்தகீர்த்தி. பூஷண:
    ஸ ஏஷ திவ்யமங்களாட்ய ஸூரிரேவமேவ போ:
    சகாஸ்து மாத் சே ஐதே திசந் த்ருசம் ஸ்தா முதா


    பத்ரம் கர்ணேபிரித்யாதிச்ரௌதவாக்யை குதீரிதாம்
    பத்ரஸந்ததிமச்சித்சாம் அச்நுவீத மஹா ஸௌ
    இத்தம் வாதிபயங்கர வம்சீயாண்ணங்கரார்ய தாஸேத
    வேதவ்யாஸ மஹாகுரு சதாபிஷேகோத்ஸ்வே ந்யவேதி முதா
    ஸமந்தே.

    ஸ்ரீயதே.]-இதற்கு கர்மணி வ்யுத்பத்தியென்று பெயர்; மற்ற ஐந்தும் கர்த்தரி வ்யுத்பத்திகள்
    ஸ்ரீயதே யென்பதற்கு-ஸர்வேச்வரனைத் தவிர்த்து மற்றெல்லாராலும் ஸேவிக்கப்
    படுகிறவள் என்று பொருள். * ஈச்வரீம் ஸர்வபூதா நாம் * என்கிறபடியே ஸகல
    ப்ராணிகளுக்கும் தஞ்சமாயிருக்கையாலே இவளை எல்லாரும் ஸேவித்துத் தங்கள்
    ஸ்வரூபம் நிறம்பெறுகிறார்களென்கை. *லக்ஷ்மீ : புருஷகாரத்வே நிர்திஷ்டா
    பரமர்ஷிபி :, மமாபிச மதம் ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத்
    என்கிற பகவச்
    சாஸ்த்ர வசனத்தின்படியே இவள் எம்பெருமான் பக்கலிலே புருஷகாரக்குத்யம்
    செய்து அவரவர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்ற வல்லவளாகையாலும், இதில்
    வேறொருவர்க்கும் ஸாமர்த்தியமில்லாமையாலும் இதற்காகவே இவள் அனைவரா
    லும் ஆச்ரயிக்கப்படுகிறாளென்க. ஸ்வாமி தேசிகன் சதுச்ச்லோகீ பாஷ்யத்தில்
    அஸ்தி கர்மார்ஹபலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய : நிக்ரஹாத்வாரணம்
    காலே ஸந்துக்ஷணமநுக்ரஹே
    . * என்று காரிகை யிட்டருளினார்.-பலன் கொடுப்பவன் எம்பெருமான்; பிராட்டி செய்வதாவது, அவன் நிக்ரஹோந்முகனாயிருக்குமளவில் ஸதுபாயங்களாலே அந்த நிக்ரஹத்தைப் போக்குவள்; அவன் அநுக்ரஹோ முகனாயிருக்கும்போது அதை மேன்மேலும் பெருகச் செய்வள் என்பதாம் இத்தகைய சக்தி விசேஷம் இவளுக்கிருப்பதனால் ஸர்வை: ஸ்ரீயதே என்றதாயிற்று.

    [ச்ரயதே.] அநவரதமும் எம்பெருமானைப் பற்றியிருக்கிறாளென்கை. எல்லாரும் இவளையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறுவதுபோல, இவள்தானும் அவனையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறவேண்டுகையாலே தன்னுடைய சேஷத்வத்திற்கு உசிதமாக அவனைத் தொழுகிறாளென்பதுதவிர, மற்றொரு காரணமும் முக்கியமாக வுண்டு;கர்மா நுபத்த பலதாந் ரதஸ்ய பர்த்து: (கோதாஸ்துதி- 25) என்று தேசிகனருளிச் செய்தபடியே சேதநர்களின்அபராதங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கவல்ல எம்பெருமா
    னுடைய ஸ்வாதந்திரியத்தையும், காலதத்வமுள்ள தனையும் அனுபவித்தாலும்
    தீராத பாவங்களைப்பண்ணிவைக்கும் சேதநர்களின் அபராதபாஹுள்யத்தையுங்
    கண்டு எந்த ஸமயத்தில் எந்த சேதநன்வந்து நின்று என்ன அனர்த்தம்விளையுமோ!’ என்கிற பயத்தாலும் எம்பெருமானை ஒரு க்ஷணமும் விட்டு அகலாதே ஸதா ஸேவித்திருப்பள்.

    [3. ச்ர்ணோதி.] அடியார்களின் விண்ணப்பங்களைத் திருச்செவிசாத்துகிறளென்கை. எம்பெருமானார் சரணாகதிகத்யத்திலே * பகவந்நாராயணாபிமதாது ரூபேத்யாதி தொடங்கி * அகில ஜகந் மாதரம் அஸ்மந் மாதரம் அசண்ய சரண்யாம் அநந்ய சரணச் சரணமஹம் ப்ரபத்யே* என்று சொல்லிப் பெரியபிராட்டியாரை சரணம் புகுந்தார். ஸர்வலோக சரண்யனான எனது நாதனிருக்க என்னை எதற்காகச் சரணம்புகுகிறீர்? என்று பிராட்டி திருவுள்ளமாக, இப்போது அடியேன் தேவரீடத்தில் செய்தது புருஷகார ப்ரபத்தியென்று காட்டிக்கொண்டு * பாரமார்த்திக பகவச்சரணாரவிந்த இத்யாதியாக அடுத்த சூர்ணிகையாரம்பித்து“ பகவச்சராரவிந்த சரணாகதி– யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே.’ என்று விண்ணப்பஞ்செய்தார். இதனால் என்னதேறுகிறது? எம்பெருமான் திருவருளால் ஸித்திக்க வேண்டிய பேற்றை அடுத்தபடியாக அவன் திருவடிவாரத்திலே பிரார்த்திக்கப் போகிறேன்; அந்தப்பேறு உம்முடைய புருஷகாரபலத்தினாலன்றி ப்ராப்தமாகாதென்று “ச்ரேயோ ந ஹ்யரவிந்தலோசந ம : காந்தா ப்ரஸாதாத்ர்தே
    இத்யாதி ஸ்ரீஸூக்திகளால் உணருகிறேனாதலால், அதற்குறுப்பாக உம்மைத்
    தஞ்சமாகப் பற்றுகிறேனென்று விஜ்ஞாபித்தபடியாயிற்று. இங்ஙனே அவரவர்கள்
    பண்ணும் விண்ணப்பங்களை ச்ரத்தையோடு திருச்செவி சாத்துகிறாளென்பது ச்ர்ணோதி. யென்பதன் பொருளாயிற்று

    [4 ச்ராவயதி ] பேறுதருபவன் எம்பெருமானாகையாலே அவன் திருச்செவியிலே படுத்தியே காரியம் ஸாதிக்கவேண்டியிருத்தலால் உசித ஸமயம்பார்த்து அவன் திருச்செவிசாத்தும்படி செய்வளென்கை. இப்படி பிராட்டி செய்தருள்வதுண்டென்பதை ஸ்வாமி கோதாஸ்துதி
    யில் *ஆர்த்ராபராதிநி ஐநேபி அபிரக்ஷணார்த்தம் ரங்கேச்வரஸ்ய ரமயா விதிவேத்
    யமாநே *
    என்பதனால் ஸ்பஷ்டமாகத் தெரிவித்தருளுகிறார் ரமயா விநிவேத்ய
    மாநே
    என்றது காண்க.-மணவாளமாமுனிகளின் பொன் சொற்களைக் கேளீர்;-
    ” இச்சேதனனுடைய அபராதங்களைக் கணக்கிட்டு நீரிப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறொரு புகலுண்டோ? உமக்கு மிவனுக்கு முண்டான ஸம்பந்த
    விசேஷத்தைப்பார்த்தால்*உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாதென்கிறபடியே
    குடநீர்வழித்தாலும் போகாததொன்றன்றோ? ஸ்வம்மானவிவனை லபிக்கை ஸ்வாமியான உம்முடைய பேறாயன் ே விருப்பது,* *எதிர்சூழல் புக்குத்திரிகிற உமக்கு
    நான் சொல்லவேணுமோ? ரக்ஷணஸாபேக்ஷனாய் வந்தவிவனை ரக்ஷியாதபோது
    உம்முடைய ஸர்வ ரக்ஷகத்வம் விகலமாகாதே? அநாதிகாலம் நம்முடைய ஆஜ்
    ஞாதிலங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய்ப் போந்து விவனை
    அபராதோசி தண்டம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்த்ர
    மர்யரதை குலையாதோ? என்றதன்றோ திருவுள்ளத்திலோடுகிறது. இவனை ரக்ஷி யாதே அபராதா நுகுணமாக நியமித்தால் உம்முடைய க்ருபாதிகுணங்கள் ஜீவிக்
    கும்படி என்? அவை ஜீவித்ததாவது இவனை ரக்ஷித்தாலன்றோ நியமியாதபோது
    சாஸ்த்ரம்ஜீவியாது ; ரக்ஷியாதபோது க்ருபாதிகள் ஜீவியாது ;என்செய்வோம்?
    என்று தளரவேண்டா; சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி க்ருபாதிகளை அபிமுகர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும். ஆனபின்பு இவனை ரக்ஷக்ஷித்தருளீர் என்று உபதேசிப்பளாயிற்று. –

    ஸ்ராவயித்ருத்வம் உபதேச கர்த்ருத்வம் இரண்டும் பர்யாயமாதலால், பிராட்டி எம்பெருமானுக்குப் போலே சேதநனுக்கும் உபதேசிப்பதுண்டாகையாலே அதையுங் கொள்ளலாமிங்கு;-சேதநனை நோக்கி உன் அபராதத்தின் கனத்தைப் பார்த்தால்உனக்கு ஓரிடத்திலும் காலூன்றவிடமில்லை; ஈச்வரனாவான் நிரங்குச ஸ்வதந்திரனாகையாலே அபராதங்களைப் பத்தும்பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கலாயிருக்கும், இவ்வனர்த்தத்
    தைத் தப்பவேண்டில் அவன் திருவடிகளிலே தலை சாய்க்கையொழிய வேறு வழி
    யில்லை; அபராத பரிபூர்ணனான வென்னை அவன் அங்கீகரிக்குமோ? தண்டி
    யானோ? என்று அஞ்சவேண்டா.ஆபிமுக்க்யமாத்ரத்திலே அகிலாபராதங்களை
    யும் பொறுக்கைக்கும் போக்யமாகக் கொள்ளுகைக்குமீடான குணங்களால் புஷ்கல
    னென்று லோகப்ரஸித்தனாயிருப்பானொருவன்; ஆன பின்பு நீ சுகமே வாழ
    வேண்டியிருந்தாயாகில் அவனை யாச்ரயிக்கப்பார் ‘ என்று உபதேசிப்பளாயிற்று.

    தாடகாதாடகேயவதம்நேர்ந்தபோது பிராட்டியின் பரிணயமேயாகவில்லை. பரசுராமன் தலையறுப்புண்ணும்படி செருக்கி வந்தான்; பாலாநாம் மம புத்ராணாம் அபயம் தாதுமர்ஹஸி * என்று சக்ரவர்த்தி நிலைகலங்கும் படி வந்தான்; அவன் பிராட்டி ஸந்நிதியாலே விபத்தில்லாமே மீண்டான். அயோத்யாகாண்டத்தில் * இவள் ஸந்நிதியாலே காகம் தலை பெற்றது ப்ரஸித்தம். ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகைக்கு தாடகைக்குப் போலே வதம் நேர்ந்திருக்கவேணும்; பிராட்டி அருகேயிருந்ததனால் செவி மூக்கோடேபோயிற்று. விராதவதமும் கரதூஷணாதி சதுர்தச ஸஹஸ்ரராஸ வதமும் நட்ந்த காலத்திலே பிராட்டி அருகில் தானே யிருந்திருக்கிறாள்; எப்படி வதம் நடந்தது?’ என்று சிலர் கேட்பதுண்டு ; மாரீசவத காலத்தில் எப்படி பிராட்டி அருகேயில்லையோ அப்படியே தான் விராத கர தூஷணாதி வத காலத்திலும் அருகேயில்லை என்கிற மருமமுணர வேண்டும்.விராதவத காலத்தில் பிராட்டி அருகேயில்லை; பிராட்டியை ஓரிடத்தில் தனியே விட்டிட்டு விராதன் ராம லக்ஷ்மணர்களை வேறொரு வனத்திற்கொண்டு செல்ல அங்கே தான் யுத்தம் நடந்து முடிந்தனன்.பதினாலாயிரம் அரக்கர்கள் அடர்ந்து வந்தபோது பிராட்டிக்குத் திருமேனிக்காவலாக அப்பால் சென்றிருக்கும்படி லக்ஷ்மணனைப் பெருமாள் நியமித்தது ( ஆர. 20 ஸர்க. சுலோ 4 ல்) வ்யக்தம், வதமெல்லாம் முடிந்த பிறகு * பர்த்தாரம் பரிஸ்வஜே * என்னும்படி பிராட்டி அணைக்க வந்ததைச் சொல்லுமிடத்து (30-37) * ஏதஸ்மிந்நந்தரே வீரோ ல மணஸ் ஸஹ ஸீதயா. கிரிதுர்க்காத் விநிஷ்க்ரம்ய ஸம்விவேசாச்ரமம் ஸு * என்று ஸ் ஷ்டமாகச் சொல்லியிருக்கையாலே பிராட்டியும் லக்ஷ்மணனும் கிரி துர்க்கத்தில் ஏகாந்த வாஸம் செய்து கொண்டிருந்தமை விளங்கிற்று. ஆகவேதான் இந்த கெட்டத்தில் பெருமாள்-அ ஹாயசூ ! * என்றுரகுவீர கத்யத்தில் புகழப்பட்டார். இதற்குப் பிறகு நடந்த வாலி வதாதிகள் பிராட்டியின் அஸமக்ஷத்திலே நடந்தவை யென்பது பற்றிச் சொல்லவேணுமோ ; ஆகவே முன்னம் கூறின வ்யாப்தி வெற்றி பெற்றதாயிற்று.

    கோவியல்தருமமுங்கள் குலத்துதித்தோர்கட் கெல்லாம், ஓவியத்தெழுத வொண்ணாவுரு
    வத்தாய்! உடைமையன்றோ, ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின் دو வந்த, தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலுஞ்செய்கை.
    ? என்பதாக.
    இந்த கம்பர் பாசுரத்தைக் கேட்டு ரஸித்த அரசாணிபாலை வேங்கடாத்வரி லக்ஷ்மீ
    ஸஹஸ்ரத்தில் காருண்யஸ் தபகே (9.) த்வய்யேவாயததே க்ருபா ரகுபதே:
    -என்கிற சுலோகத்தை யமைத்தார்.

    சபரி மோக்ஷ பந்யாஸம்.–ரகுவீரகத்யத்தில் . சபரி மோக்ஷ ஸாக்ஷிபூத!” என்று ஸ்வாமி யருளிச் செய்திருக்கையாலே சபரீமோக்ஷமென்று விஷய நிர்தேசம் பண்ணுவது பொருத்த முடையதே. ஆனால் ஸ்வாமி தாமே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ” பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரீகரே” என்று மிக வியப்புடன் அருளிச் செய்திருக்கையாலும், ஸ்ரீ ராமாயண நித்ய பாராயண முடிவில் மங்களாசாஸனமாக அநு ஸந்திக்கும் சலோகமாலிகையில் “ஸாதரம் சபரீதத்பல மூலாபிலாஷிணே என்دو றிருக்கையாலும் சபரியைப் பற்றிப் பேசும்போது “ சபரீஸபர்யா ?’ என்று விஷயநிர்தேசம் பண்ணுவது பாங்கு, அடியேன் இங்கு இரண்டையும் அநுபவிக்கிறேன்.
    பெருமாள் முன்னம் சபரியைப் பற்றித் தெரிந்துகொண்டது த கபந்தனால். அவன் பெருமாளுக்குச் சில விஷயங்களை உள்ளவாறு தெரிவித்தபடியைச் சொல்லுமிடத்து * ஸ சாஸ்ய கதயாமாஸ சபரீம் தர்மசாரி ம்,ச்ரமணீம் தர்மநிபுணாம் அபிகச்சேதி ராகவம்.*என்றது. இங்கு ( தர்மசாரிணீம்) என்றும் (தர்மநிபுணாம்) என்றும் கூறியுள்ளது பற்றிப் பிறகு விமர்சிப்போம் (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், உடனே மஹர்ஷி வாக்கிலும் ஸோப்ய கச்சந் மஹாதேஜாச் சபரீம் சத்ருஸூத : என்று வந்திருப்பதும் முன்னம் குறிக்கொள்ளத்தக்கது.(ச்ரமணீம் அவேக்ஷஸ்வ) என்றோ(சரமணிம் கடாக்ஷய) என்றோ கபந்தன் சொல்லியிருக்கலாம். மஹர்ஷியும் (சபரீம் ஆஸஸாத) என்றோ (சபரீம் உபஜகாம ) என்றோ சொல்லியிருக்கலாம். (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், (அப்யகச்சத்) என்று இவர் சொன்னதும் விமர்சிக்கப்படவேண்டும். ஒரு தேவதா விசேஷத்தில் செய்யும் வழிபாடு தன்னையே அபிகமனமென்று சொல்லுவது முறை. அந்தரங்க ப்ரதிபத்தியோடு செய்யும் அணுகுதல் அபிகமன மெனப்படும் அத்தகைய வழிபாட்டுக்குரிய விலக்ஷண வ்யக்தி விசேஷம் சபரி யென்பவளென்று விளங்கிற்று-இங்கு(மஹாதேஜா :)எனறும்(சத்ருஸூதந:) என்றும் இரண்டு விசேஷணங்கள் பெருமாளுக்கிட்டது பாத பூரணார்த்தமன்று: ஸாபிப்ராயம். சபரியின் ஆச்ரமத்துக்கு எழுந்தருளும்போதே பெருமாஞடைய திருமுகமண்டலம் மிகவும் தேஜஸ்வியாயிற்றென்கிறது (மஹாதேஜா 🙂 என்பதனால்.சரம பர்வ நிஷ்டையைக் காணப் பெறுகிறோமென்கிற மகிழ்ச்சி முகத்திலே தெரியலாயிருந்தது, ப்ரதம பர்வ நிஷ்டர்களான பகவத் பக்தர்களைக் காண்பது அரிதன்று: சரம பர்வ நிஷ்டர்களெனப்படுகிற ஆசார்ய சுச்ரூஷ்ா நிரதர்களையும் ஆசார்யாபிமாந பாத்ர பூதர்களையும் காண்பது பெருந்தவப் பயனன்றோ? ஆக இந்த ஸந்தோஷம் முகத்திலே பொலிய நின்றதனால் (மஹாதேஜா) என்றது. இதற்குமேல் (சத்ருஸூதந:)என்றது அந்த சபரிக்கு ப்ராப்தி ப்ரதிபந்தகங்களாய்ச் சில விரோதிகளிருந்தனவாக அவளுடைய வாக்கில் நின்றுமே தெரியவருவதனால் அந்த விரோதி நிரஸநத்தைத் தம்முடைய கடாக்ஷ வீக்ஷணத்தினால் செய்தருள ஸங்கல்பித்தார் பெருமாள் என்று தெரிவிக்கின்றது.

    மணவாளமாமுனிகள் “ரகுகுலதிலகராய் ஆசார ப்ரதாநரான பெருமாள் சபர்யா பூஜிதஸ் ஸம்யக்ராமோ தசரதாத்மஜ: என்னும்படி, வேடுவிச்சியாய் வைத்தே குருசுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்த் தன் நாவுக்கு இனிதாயிருந்த பலமூலாதிகளையெல்லாம் இங்குத்தைக்கென்று ஸஞ்சயித்துக்கொண்டு வரவு பார்த்திருந்த ஸ்ரீசபரி, தன் ஆதராநுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப்பண்ண, அதிஸந்துஷ்டராய் அமுது செய்தருளினார் என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் விசேஷித்து அநுஸந்திக்கத்
    தக்கவை-தன் நாவுக்கு இனிதாயிருந்த” என்கிற வார்த்தையைமணவாளமாமுனிகள் மூலப்ரமா மொன்றின்றி அருளிச்செய்யார்.* பூர்வே பூர்வேப்யோ வச ஏத்தூசு* என்று வேதமோ தின ப்ரபலப்ரமாணமிருந்தே தீரும்.-இதையநுஸரித்தே ப்ரஸித்தப்ரபாவரான கோவிந்த ராஜார்யரும் ராமஸ் ஸமாகமிஷ்யதீதி ஸ்வா தூ நி பலாநி ஆஸ்வாத்யாஸ்வாத்ய பரீ ய நிக்ஷிப்தவதீ இதி ப்ரஸித்தி: என்றெழுதியுள்ளார். இப்பொருளெல்லாம் (ஸம்யக் பூஜித:)என்றதில் அடங்கியேயுள்ள தென்பர் பெரியோர். கீழே சரபங்கமுனிவர் அகஸ்த்ய
    முனிவர் முதலானார் செய்தது ஸாமாந்யபூஜை; இதுவே பெருமாள் திருவுள்ளத்தால்
    ஸம்யக்பூஜை யென்னலாயிருந்தது.

    தயாசதகத்திலே * நிஷாதா நாம் நேதா கபி குலபதி: காபி சபரீ * என்று ஸ்ரீராமாவதாரத்தில் விசேஷா நுக்ரஹ பாத்ர பூதரான வ்யக்திகள் மூவரை யெடுக் கின்ற ஸ்வாமி குஹப் பெருமாளையும் சபரியையும் எடுத்திருக்கின்றார். இவ்விருவர்க்குமுள்ள வாசியைச் சிறிது ஆராய்வோம். குஹன் சில உணவுப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து இவற்றைத் திருவுள்ளம் பற்றி யருள வேணுமென்று வேண்ட, ‘ எனக்கு வேண்டா: (அயோத்திக்கு இன்னும் திரும்பிப் போகாமல்) விடாய்த்திருக்கின்ற குதிரைகளுக்குக் கொடு ‘ என்றார். மனிதர்களின் உணவு வேறு; மிருகங்களின் உணவு வேறு ; புல்லையும் கொள்ளையுமா குஹன் பெருமாளுக்குக் கொடுக்கவந்தான். மதுபர்ககமன்றோ கொடுக்கவந்தது. அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. * நசவர்த்தே ப்ரதிச்ரஹே என்று ஏதோ சொல்லிக் கழித்து விட்டார். சபரி அந்த குஹனைவிட உயர்ந்த ஜாதியில்தோன்றினவளல்லள். அவன் சபரன், இவள் சபரி. சபரனிடம் மறுத்துவிட்டவர் சபரியிடம் மறுத்துக்கூறாமல் அர்ச்சிதோஸ்மி த்வயா பக்த்யா * என்று சொல்லி உகந்து ஏற்றுக் கொண்டது ஏன்? இது ஆராயத்தக்கதன்றா ?*கீழே அடியேனெடுத்துக் காட்டின ஸ்ரீவசனபூஷண வியாக்கியான ஸ்ரீஸூக்தியில் “குரு சுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்” என்று மணவாளமாமுனிகளருளிச் செய்திருப்பது உயிரான வார்த்தை. சபரியிடம் மிகச்சிறந்ததொரு தருமம் குரு சுச்ரூஷை யென்பதிருந்தது. இதை கபந்தன் பெருமாளுக்குத் தெரிவித்தனன்.

    *ச்ரமணீ சபரீ நாம காகுத்ஸ்த! சிரஜீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் * என்றும் ; *ச்ரமணீம் தர்மநிபுணாமபிகச்ச என்றுமுள்ள கபந்தனது வார்த்தைகளில் தர்ம சப்தத்தினால் வக்ஷிதம் குருசுச்ஷையேயன்றோ. பெருமாளும் சபரியயைக் கண்டவுடனே க்ஷேமம் வினவுகையில் *கச்சித் தே குருசுச்ரூஷா ஸபலாசாருபாஷிணி!* என்று, உன்னுடைய குருசுச்ரூஷை நிறைவேறியதா? என்று கேட்டிருக்கிறார். சபரி பேசின பேச்சினினிமையைக்கொண்டும் இவள் குருசுச்ரூஷை பண்ணிப் பழுத்தவள் என்று பெருமாள் தாம் கண்டறிந்ததை –சாருபாஷிணி–என்ற விளியினால் விளக்கினர். அவளும் தான் குருசுச்ரூஷை செய்ததை யா நஹம் பர்யசாரிஷம் என்பதனால்தெரிவித்திருக்கிறாள், இத்தகைய உத்தம தருமம் குஹனிடத்திலில்லாமை பற்றியே அவன் தந்த வுணவுகளைத் திருவுள்ளம் பற்றவில்லை. ஆக, சபரீஸபர்யையின் ப்ரகாரமும் ஏற்றமும் விஜ்ஞாபிக்கப்பட்ட
    தாயிற்று.

    ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பராசரபகவான் முக்திம் கதாந்யா கோபகந்யகா என்று சிந்தயந்தி யென்கிற ஆய்ப்பெண்ணின் முக்தி ப்ராப்தியைச் சொல்லுமிடத்து [ ணபுண்யசயா]என்றும் [வி நாசேஷபாதக ] என்றும் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள் கழிந்ததைக் கூறினார்–அவள் தன் வாயினால் ப்ரதிபந்தகங்கள் கழிந்தமையைக் கூறவில்லை. மூச்சடங்கிப் போனவளாகையாலே ப்ராப்யனான கண்ணனையும் ஸேவிக்கப் பெற்றிலள். சபரி அங்ஙனன்றிக்கே சக்ஷஷாதவ ஸௌம்யேந பூதாஸ்மிரகுநந்தந! என்று பெருமாளை ஸாாத்கரித்து ஸம்போதித்து, தன்னுடைய பிரதிபந்தகங்கள் நிவ்ருத்தமான படியை (தவ ஸெளம்யேந சக்ஷஷா பூதாஸ்மியென்று) தன்வாய்விட்டுச் சொல்லி, இதோ மோக்ஷம் போகிறேனென்று சொல்லிக்கொண்டேபோனாள் இங்கே ஒரு அருமையான சாஸ்த்ரார்த்தம் கேளீர். சபரி பெருமாளை ஸாக்ஷாத் நாராயணனாக நன்கறிந்தவள் ; ராமா! உன்னுடைய திருவடி வாரம் செல்லுகிறேன் ; உன்னுடைய லோகம் புகுகிறேன் என்னாமல் இங்கு நான் எந்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேனே அந்த ஆசார்யர்களின் திருவடிவாரம் சென்று சேருகிறேன்’ என்று சொன்னாள். இதையுட்கொண்டே ஆளவந்தார் ஆசார்ய ஸ்துதியில் அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயசரணெள சரணம் மதீயம் என்றருளிச்செய்தார். இதில் பரத்ரசாபி என்றதுகாண்க. ஸ்ரீசூர்ண பரிபாலனத்தில் “அடியேனுடைய தகப்பனார் (அல்லது தாயார் ) ஆசாரியன் திருவடியடைந்தார்” என்று சொல்லுவதற்கும் பத்ரிகைகளில் எழுதுவதற்கும் சபரியே வழிகாட்டியென்றுஉணர்க. ப்ரஸங்காத் பாடப்பிறழ்வுபற்றின விண்ணப்பமொன்று கேண்மின். * சக்ஷஷா தவ ஸௌம்யேநேத்யாதி ச்லோகத்தின் உத்தரார்த்தம் ‘ கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந் த்வத்ப்ரஸாதாத் அரிந் தம! ’ என்று பல பதிப்புகளிலும் மாறியிருக்கிறது. கோவிந்தராஜரும் மாறின பாடத்தையே வியாக்கியானித்திருப்பதாகக் காண்கிறது; இதுவும் பிறழ்வே அந்த கோவிந்தராஜர் ” சபரீம் தர்மசாரி ம் என்றவிடத்து வியாக்கியானத்தில் பாதமூலம் கமிஷ்யாமி யா ந ம் பர்யசாரிஷம் – இதி வ யமாணத்வாத்’ என்றெழுதியிருப்பதைக் கண்டு தெளிக.

    அறுதொழிலந்தணர் வணங்குந்தன்மையை-அறுதொழிலென்பதும் ஷட்கர்மமென்பதும் பரியாயம். அந்தணர்களுக்கு ஷட்கருமங்களாவன – அத்யயனம், அத்யாபனம்யஜநம், யாஜநம், தானம், ப்ரதிக்ரஹம்என்பவை அத்யயனம் வேதமோதுதல். அத்யாயனம்-வேதமோதுவித்தல், யஜனம் வேள்வி செய்தல் (யாகம் செய்தல்: ) யாஐநம்-யாகம் செய்வித்தல். தானம் -ஸத்பாத்திரங்களில் கொடுத்தல். ப்ரதிக்ரஹம் -ஸத்துக்கள் விரும்பிக் கொடுப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுதல். ஆக இவையாறும் ஷட் கருமங்கள் (அறுதொழில்கள் எனப்படும்.)”யஸ்ய வேதச்ச வேதீ ச விச்சித்யேதே த்ரிபூருஷம், ஸ வை துர்பராஹ்மணோ ஜ்ஞேயஸ் ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:[யாவனொருவனுக்கு வேதமும் வேள்வியும் மூன்று தலைமுறை இல்லாதபடி விச்சின்னமாய்விடுகிறதோ, அவன் எந்த கருமத்திற்கும் அதிகாரியல்லாதபடி துர்ப்ராஹ்மணனென்று பழிக்கப்படுகிறான் ) என்று பிரமாணமிருப்பதால் நாம் வேத வேள்விகளை ஸர்வாத்மநா வஞ்சித்து விடலாகாது: யதாசக்தி இவற்றில் அந்வயித்தேஆகவேண்டுமென்று விஜ்ஞாபிக்கிறேன். ஆழ்வார்கள் திவ்ய தேச வாஸிகளைவருணிக்கும்போது ” நல்ல வெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடாறங்கம் வல்லவந்தணர் மல்கிய நாங்கூர் ” என்றும், ‘ அங்காமறைந்து வேள்விநால் வேதமருங்கலைபயின்று, எரி மூன்றும் செங்கையால்வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங்குடி’ என்றும், ‘ தெருள்கொள்நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவரமங்கலநகர் “ என்றும் அருளிச்செய்கிறார்கள்.அஷ்டவர்ஷம் ப்ராஹ்ணமூபநயீத என்றபடி கர்ப்பாஷ்டமமாகிய ஏழாவது பிராயத்தில் உபநயனத்தைப்பண்ணி உபாகர்மமான பிறகு வேதமோதத் தொடங்கினால் ஆறேழு வருஷத்தில் க்ரமாந்தம் அத்யயனம் செய்து முடிக்கலாம்.நாற்பத்து நான்கு பிரச்னங்கள் கொண்ட ஸப்தகாண்ட ஸம்ஹிதையும் முப்பத்
    தாறு பிரச்னங்கள் கொண்ட ப்ராஹ்மண பாகமுமாகிய எண்பது பிரச்னங்களை ஓதுவதென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    ஸம்ஹிதைக்கு மேல், பதம்,க்ரைமம், ஜடை, கனம் என்றிவை ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஜடையும் கனமும் ஸபாரஞ்ஜனமாகும் . கரமந்தான் பகவத் கைங்கரியத்திற்குப் பெரும்பான்மையாக உதவுமது. கரமம் திடப்படுவதற்காகப்பதம் ஓதவேண்டியது அவசியமாகிறது.

    இதில் உதாத்த ஸ்வரத்தைக்கொண்டு தச் சப்த ரூபமென்றும், அநுதாத்த ஸ்வரத்தைக் கொண்டு யுஷ்மச் சப்த ரூபமென்றும் நிர்ணயிக்கலாகிறது.-யத: என்பது ஒருபதம். இதுவும் வேதத்தில் அடிக்கடி வரும். இதில் முதலெழுத்து உதாத்தமாக விருப்பது பலபல விடங்களில்; அது அநுதாத்தமா யிருப்பது சிற்சில விடங்களில். உதாத்தமாயிருந்தால் (யஸ்மாத்) என்று அர்த்தமுள்ள அவ்யயமாகும். அநுதாத்தமாயிருந்தால் (யந்தம், யந்தெள, யத 🙂 என்று
    “இண்-கதௌ’‘ என்கிற தாதுவில் சத்ர்ப்ரத்யயாந்தமாகத் தேறுகிற யச்சப்தத்தின்
    த்வி தீயாபஹு வசநாந்தம் ( வர்க்கம் லோகம் யத:)என வருமிடங்களில் ஸ்வர்க்
    கத்தை யடைகின்றவர்களை என்று பொருள்படும். (ய 🙂 என்கிறவிது பஞ்சமீஷஷ்டீ
    விபக்திகளில் ஏகவச நரூபமாகத் தேறுவதுமுண்டு. (யதாம்) என்று ஷஷ்டீபஹ
    வசநரூபமும் வேதத்தில் ஓதப்பட்டு வருகிறது. எனினும் (யத:) என்கிற பதம்
    ஸ்வரபேதத்தினால் அர்த்தபேதத்தை யுடையதென்று காட்டுவது இங்கு முக்கியம்
    .

    வேதத்தில் ச்ரத்தயா என்கிற பதமும் தேவ: என்கிற பதமும் ஓரிடத்திலல்ல; பலவிடங்களில் ஓதப்பட்டு வருகின்றன. இவற்றின் ஸ்வரம் எங்கும் ஒரேவிதமாகத்தானுள்ளது. ச்ரத்தயா என்கிற பதத்தில் (யா) என்கிற மூன்றாமக்ஷரமானது எங்கும் ஸ்வரிதமே யொழிய ஓரிடத்திலும் உதாத்தமன்று. இதை ஸம்ஹிதையிலும் பார்க்கலாம், ப்ராஹ்மணத்திலும் பார்க்கலாம். ப்ரக்ருதமான ச்ரத்தயா தேவ: என்கிற வாக்யமுள்ள அநுவாகத்திற்கு அடுத்த அநுவாகத்திலேயே காணலாம். இப்பதம் உதாத்தாந்தமாக நிற்பது எங்குமே கிடையாது
    இதற்கடுத்த தேவ:) என்கிற பதத்தையுமெடுத்துக்கொள்வோம். இது வேதத்தில் இரண்டாயிர மிடங்களில் வருவது, எங்கும் முதலெழுத்து அ தாத்தமாயும் இரண்டாமெழுத்து உதாத்தமாயுமேயிருக்கும்.-இப்படி நியதஸ்வரங்களான இவ்விரண்டு பதங்களையும் ப்ரக்ருக ஸ்தலத்தில் பாஷ்யகாரர்கள் விபரீத ஸ்வரமாகக்கொண்டு அர்த்தம் செய்திருப்பது வேதபுருஷனுக்கு ஈஷத்தும் அபிமதமன்று. இங்கு அதேவ: என்பதே உண்மையான பதம்.
    ஸ்வரிதாந்தமான ச்ரத்தயாபதமும் உதாத்தாதியான அதேவபதமும் ஸம்ஹிதமாம்
    போது இப்போது இங்கு உள்ள ஸ்வர ஸந்நிவேசம் தன்னடையே வந்து நிற்கும்.
    வேதமோதினவர்களுக்கு இப்படி நூருயிரமிடங்கள் நினைவுக்கு வரும். ஆக அதேவ:
    ச்ரத்தயா தேவத்வமச்துதே என்றுதான் பாஷ்யம் செய்யவேணும்.

    நமக்குத் தலையான வேதாந்தசாஸ்த்ரமான சாரீரகமீமாம்ஸையில் (ப்ரஹ்ம
    ஸூத்ரத்தில்) சிலபல குறைகளிருப்பதாகக் கண்ட ஆழ்வார்கள் தங்களுடைய
    திவ்வியப் பிரபந்தங்களிலே அக்குறைகளைத் தீர்த்தருளினார்கள்.-எம்பெருமான் திருவவதாரங்கள் செய்தருளுகிறானென்பதை அந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் சொல்லவில்லை. அவன் லக்ஷ்மீபதி யென்பதையும் சொல்லவில்லை அவன் நாராயண விஷ்ணு வாஸுதேவாதி சப்த வாச்யனென்பதையும் சொல்லவில்லை. இவற்றை நம் ஆழ்வார்கள் தமது சிவ்யஸூக்திசுளில் அடுத்தடுத்து அருளிச்செய்துள்ளார்கள்.வேதத்தில் பலவிடங்களில் அவதாரம் ஓதப்பட்டுள்ளது. மூன்றிடங்களை மட்டும் இங்கெடுத்துக் காட்டுகிறேன்.[அஜாயமாநோ பஹுதா விஜாயதே] இது அந்தணர்களனைவருமறிந்த வேதவாக்கியம்.எம்பெருமான் கர்மநிபந்தனமான பிறப்பில்லாதவனாயினும் கருணையினாலே பல அவதாரங்களைச் செய்தருளுகிறானென்று பொருள். மற்றொரு வேதவாக்கியம் (ஸ உ ச்ரேயாத் பவதி ஜாயமா :] அப்பெருமான் பிறக்கப்பிறக்க சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிமல்கப் பெறுகிறானென்பது பொருள். இதை யடியொற்றியே ஆழ்வார் திருவாய்மொழியில் * எளிவருமியல்வினன் நிலைவரம்பில பல பிறப்பாயொளிவரும் * என்றருளிச் செய்தார். இன்னொரு வேதவாக்கியம் [பிதா புத்ரேணபித்ருமாந் யோநி யோநௌ] * மகனொருவர்க்கல்லாத மாமேனி மாயனான அவன் தனக்குப் புத்ரப்ராயரானவர்களைப் பிதாவாகக்கொண்டு யோனிகள் தோறும் பிறக்கிறனென்கை. இந்த ச்ருதியை யுட்கொண்டே நம்மாழ்வார் திருவாய் திறந்தருளும் போதே * உயிரளிப்பானெந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா!*என்றருளிச் செய்தார். ஆக அவதாரங்கள் வேதத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளன வென்பது தேறிற்று.

    பஹூநி மே வ்யதீதாநி ஐந்மாநி தவ சார்ஐ ந.-தசாவதாரங்களென்று ஒரு ப்ரஸித்தி வந்திருக்கின்றது. *பத்தினாய தோற்றமோடு * என்கிறார்திருமழிசைப்பிரான். மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய்க் கானாரேனமுமாய்க் கற்கியா மின்னங்கார்வண்ணனே * என்கிறார் நம்மாழ்வார் . அன்னமுமீனுருவுமாளரியுங் குறளுமாமையுமானவனே ஆயர்கள் நாயகனே என்கிறார் பெரியாழ்வார். * மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்தானாய்ப்பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான் தன்னை என்கிறார் திருமங்கையாழ்வார். கூரத்தாழ்வானும் பட்டரும் தங்கள் தங்சுள் ஸ்தவங்களிலே தசாவதாரஸ்துதியை இயற்றுகிறார்கள். தேசிகனும் ‘ தேவோ நச் சுபமாத நோது தசதா நிர்வர்த்தயந் பூமிகாம் ‘ ‘ என்று தொடங்கி தசாவதார ஸ்தோத்ரமியற்றி யுள்ளார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக மஹாபாரதத்தில் சாந்திபர்வணி மோக்ஷ தர்மத்திலிருந்து ஒரு அரிய பெரிய விஷயம் விஜ்ஞாபிக்கிறேன்.

    அதில் முந்நூற்று முப்பத்தொன்பதாம் அத்யாயத்தில் நாரதமஹர்ஷி ச்வேதத்வீபத்தில் எம்பெருமானைக் கண்டு பல விஷயங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறார். பவிஷ்யத்தான தசாவதாரங்களையும் சரித்திர வாலாற்றுடன்பகவான் தன் சோதிவாய் திறந்து பணிக்கக்கேட்டுணர்கின் ார். க்ருணு நாரத! தத்வேந ப்ராதுர்ப்பாவாந் மஹாமுநே, மத்ஸ்ய : கூர்மோ வராஹச்ச நரஸிம்ஹச்ச வாமந:, ராமோ ராமச்ச ராமச்சக்ருஷ்ண: கல்கீதி தே தச. பூர்வம் மீநோ وو பவிஷ்யாமீ …. என்று தொடங்கி தசாவதார சரித்திரங்களை அநதிஸம் ேபவிஸ்தரமாகக் கூறுகின்றார் பகவான்; அதைச் சிறிது விஜ்ஞாபயே(1) நான் முதலில் மீனமாக அவதரித்துப் பெரியகடலில் முழுகுகின்ற உலகங்களை வெளிப்படுத்திப் பிரஜைகளை நிலைநிறத்துவேன். (2) ஹேமகூடபர் வதத்துக்கொப்பான கூர்மாவதாரஞ்செய்து அமிருதத்துக்காக மந்தரகிரியைத் தரிப்பேன். (3) பிறகு வரா ரூபத்தைத் தரித்துக்கொண்டு கடலில் மறைந்த பூமியை எல்லாப் பிராணிகளுடையவும் நன்மைக்காகத் தன்னிலையில்கொண்டு வந்து சேர்ப்பேன். அப்போது ஹிரண்யாக்ஷனென்கிற அஸுரனைக் கொல்லப் போகிறேன். (4) பிறகு நரஸிம்ஹாவதாரத்தையெடுத்து ஹிரண்யகசிபுவென்கிற அஸுரனையும் தேவகாரியத்துக்காகக் கொல்வேன் (5) பின்பு விரோசனனுடைய புத்திரனான பலியென்கிற பெரிய அஸுரன் உண்டாவான். அவன் இந்திரனையும் அவனது ராஜ்யத்திலிருந்து நழுவச்செய்வான். அவனால் மூவுலகமும் அபஹரிக்கப்பட்டு இந்திரனும் விலகியிருக்கும்பொழுது காச்யபரிடமிருந்து அதிதியினிடத்தில் பன்னிரண்டாவது புத்திரனாகப் பிறப்பேன் பிரமசாரியாகி யாகசாலையை அடைந்து உத்தமர்களான வேதியர்கள் துதிக்க அவனுடைய யாகத்தைத் துதிப்பேன். அதைக் கேட்டுப் பலியானவன் பிரீதியடைவான். பிறகு அவனிடம் மூன்றடி அளவுள்ளஸ்தலம் கொடுக்கவேண்டுமென்று யாசிப்பேன். அவன் மந்திரிகளால்தடுக்கப்பட்டும் என்னிடம் மிகவும் பிரீதியுடன் கொடுப்பான். பிறகு தானஜலமானது என்கையில் விழுந்தவுடன் மூன்று அடி களுக்குள்ளடங்கியராஜ்யத்தை இந்திரனுக்கு அளிப்பேன். தேவர்களை அவரவர் அதிகாரங்களில் நிலைக்கச்செய்வேன். மஹாபலியைப்பாதாளத்தில் தள்ளுவேன். (6) திரேதாயுகத்தில் பரசுராமனாக அவதரிப்பேன். ஸேனைகளும் வாகனங்களும் நிறைந்த கூத்ரிய ஜாதியை நாசம்ெய்வேன். (7) திரேதாயுகத்துக்கும் த்வா பர யுகத்துக்கும் ஸந்தியாம்போது தசரதபுத்ரராமனாகிப் பூமண்டலாதிபதியாவேன்.ஏகதரும் த்விதரும் த்ரிதருடைய சாபத்தால் தம் உருவமிழந்து வானரத் தன்மையை அடைவார். அந்தவம்சத்தில் பிறக்கும் வானரர்கள் எனக்குத் தேவகாரிய நிமித்தம் துணையாவர்கள். ராவணனைப் பரிவாரத்துடன் கொல்வேன். அவனுடைய ராஜ்யத்தைக் கிரமப்படி விபீஷணனுக்குக் கொடுப்பேன். நான் அயோத் தியில் வஸிக்கின்ற எல்லாரையும் அழிவற்ற லோகத்தை அடையச் செய்வேன்(8) த்வாபரயுகத்துக்கும் கலியுகத்துக்கும் ஸந்தியானது முடியும்பொழுது என்னுடைய அவதாரமானது மதுராபட்டணத்தில் உண்டாகும்.நான் அந்த அவதாரத் தில் தேவகண்டகர்களான அநேகம் அஸரர்களைக் கொன்று குசஸ்தலியென்கிற த்வாரகாநகரத்தை இருப்பிடமாகச் செய்வேன். அந்த நகரத்தில் வஸித்துக் கொண்டு, நரகன்முரன் முதலான அஸ்ரர்களைக் கொல்வேன். ப்ராக்ஜோ திஷ நகரத்திலுள்ள அஸஸுரர்களைக் கொன்று அதன் செல்வங்களைக் குசஸ்தலிக்குக் கொண்டுவருவேன். தவிரவும் ஒணானாகப் பிறந்த ந்ருகனென்பவனை சாபத்தி னின்று விடுவிப்பேன். அந்த அவதாரத்தில் பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாாஸுரனுடைய நகரத்தையடைந்து பெரும்போர்புரிவேன். பாணஸுரனுக்கு நன்மையைச் செய்வதில் பற்றுள்ள சிவனையும் ஸுப்ரமண்தனையும் ஜயிப்பேன். பிறகு பாணனை ஜயித்து உடனே ஸௌபமென்கிறநகரத்தில் வளிப்பவர்களெல்லாரையும் கொல்வேன். காலயவனனுடையவதமும் என்னாலேயே நடக்கும். கம்ஸனையும் கேசியையும் அரிஷ்டனையும் சாணூரனையும் முஷ்டிகனையும் ப்ரலம்பனையும் தேனுகனையும் கொல்வேன். யமுனையின் பெரிய மடுவில் காளியனை வசஞ்செய்வேன். கோகுலத்தில் இந்திரன் வர்ஷிக்க ஏழு ராத்திரிகோவர்த்தன மலையை அநாயா மாகத் தரிப்பேன். பிறகு மழை நின்ற பொழுது பர்வதததின் உச்சியிலிருந்து கொண்டு உடனே இந்திரனோடுகூட ஸம்வாதம்செய்வேன். பௌண்ட்ரக வாஸுதேவனையும் கொல்வேன். கிரிவ்ர ஜத்தில் ஜராஸந்தனென்னும் அஸுரன் அரசனாவான். என்னுடையபுத்தியின் ஆலோசனையினால் அவனுடையவதம் உண்டாகும். தர்மபுத்ரருடைய யாகத்தில் சிசுபாலனைக் கொல்வேன். எனக்கு இந்திர புத்ரனான அர்ஜுனனொருவனே நல்லஸஹாயகனாவான். அப்பொழுது யுதிஷ்டிரரைத் தம்பிகளோடு அவருடைய ராஜ்யத்தில் ஸ்தா பிப்பேன். பூமியின் பாரத்தை இறக்கிவிட்டு ஆத்மஞானத்தை ஆச்ரயித்து துவாரகைக்கும் பிரளயத்தைச்செய்வேன். த்வாரகையை ஸமுத்ரத்தில் முழுகச் செய்வேன்…….இவ்வண்ணமாகக் கதை சென்றுகொண்டேயிருக்கிறது.எம்பெருமான் தானே சோதிவாய் திறந்து அருளிச்செய்த வரலாறுகளுக்கு மிகுந்த ஏற்ற முண்டல்லவா?

    உயிர் மருத்துவன் ஒருவனே. அவனைத்தான்-மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* என்று பெரியாழ்வாரழைக்கிறார். வைத்யோ நாராயணோ ஹரி: என்று வைதிகர்கள் சொல்லுவர்கள். ஸஹஸ்ரநாமத்தில்(நிர்வாணம் பேஷஜம் ) பிஷக் * என்று பிஷக்காகச் சொல்லப்படுகிறான்.*மருந்தும் பொருளுமமுதமுந்தானே என்கிறார் பேயாழ்வார்-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கென்று பெருந் தேவர் குழாங்கள் திருநாட்டிலே பிதற்றிக்கொண்டிருப்பதாக நம்மாழ்வாரருளிச் செய்கிறார். திருநாட்டிலும் மருந்து வேண்டியிருக்கிறது. இதன் மருமத்தை த்வயத்தின் முடிவிலுள்ள நம:பதம் காட்டும்;திருவாய்மொழியில் (7-1-5) *ஆர்மருந்தினியாகுவார்? என்கிறார். ‘ஆர்மருத்துவராகுவார் ” என்றாராகில் பொருத்தமாயிருக்கும். ஆர்மருந்தாகுவாரென்றது விலக்ஷண ப்ரயோகமாகவன்றே வுள்ளது; ஆழ்வார் அசேதனமான மருந்தைக் கொள்பவரல்லர் என்பது இதனால் விளங்கிற்றன்றே. கைகால் முளைத்த மருந்துதான் உயிர்நோயைத் தீர்க்கும் மருந்தாகும். சுடராழி சங்கேந்தியிருக்கும் மருந்தையே நம்மாழ்வார் நாடுகிறார். நம்மாழ்வாரைச் சேர்ந்த நாமும் அதையே நாடுவோம். அந்தமருந்தின் பிரதிநிதிகள் ஆசாரியர்கள். * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து ஸேவை ஸாதிக்கின்றனர்.எருத்துக்கொடியுடையானும் பிரமனுமிந்திரனும், மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை *போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச் சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணுவாரில்லையே !

    ஒரு பெரிய குரு இருக்கிறார்; அவரிடத்தில் நாங்கள் உபதேசம்பெறுகிறவர்கள்; அவ்வுபதேசத்தின்படியே நடந்துகொண்டும் வருகிறோம்; அதனால் எங்களுக்கு ஒரு நோயும் வருவது கிடையாது. ஆகவே எங்களுக்கு சிகித்ஸாபேக்ஷையே நேருவதில்லை என்றார்கள்.
    இங்ஙனம் சொல்லக்கேட்ட டாக்டர் ” அது எவ்விதமான உபதேசம்? நான்அதைத் தெரிந்துகொள்ளலாமோ? என்ன; ஆகா, நன்றாகத் தெரிந்துகொள்ளலாமென்று
    கூறி அதைத் தெரிவித்தார்கள்; தினமிரண்டு; வாரமிரண்டு; பக்ஷமிரண்டு; மாஸ
    மிரண்டு ; ருது இரண்டு; அயனமிரண்டு; வருஷமிரண்டு-
    இதுதான் உபதேசம் ?
    என்றார்கள் டாக்டருக்கு இது சிறிதும் விளங்கவில்லை. பிறகு ‘இந்த ஸூத்ரங்களை நீங்களே விவரிக்கவேணும்’ என்று அவர்களை வேண்டிக்கொள்ள அவர்களே
    விவரித்தார்கள்.

    தினமிரண்டு=போஜனமென்பது, தோன்றினபோதெல்லாம் செய்யலாகாது”ருதம் த்ா ஸத்யேந பரிஷிஞ்சாமீதிஸாயம் பரிஷிஞ்சதி, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமீதி ப்ராத:” என்று மந்த்ரமோதின இரண்டுவேளை மட்டுமே போஜனம் செய்யவேண்டும்; இடைப்பலகாரம், கடைப்பலகாரம் என்பது எதுவும் கூடாது .இதுதான் தினமிரண்டு என்றதன் கருத்து.போஜனமும் நித்திரையுமாகிற விரண்டும் வ்யவஸ்திதமாயிருக்கவேணு மென்பதையும் இதற்குக் கருத்தாகக் கொள்ளலாம் வாரமிரண்டு= வாரத்தில் இரண்டு நாளாவது ஆலயஞ்சென்று தொழுதுவரவேண்டும்;இதனால் தினப்படி சென்று தொழக்கூடா தென்பதில்லை. இரண்டுநாள் தவறவே கூடாதென்றபடி பக்ஷமிரண்டு = இரண்டுவாரங் கூடினால் ஒரு பக்ஷமாகிறது. வாரந் தோறும் ஒரு அப்யஞ்ஜநம் [எண்ணெய்தேய்த்துக் கொள்வது தவறலாகாதென்றபடி. மாஸமிரண்டு=இரண்டு பக்ஷங்கள் கூடினால் ஒரு மாஸமாகிறது; ஏகாதசி தோறும் உபவாஸம் தவறலாகாதென்றபடி. ருது இரண்டு =இரண்டு மாதங்கள் கூடினால்ஒரு ருதுவாகிறது; “மாஸி மாஸி க்ருஹஸ்தா நாம்”‘ என்றபடி. மாதத் திற்கொருமுறை வபனம் செய்வித்துக்கொள்ள வேண்டு மென்றவாறு. இதுவும் தேஹாரோக்யத்திற்குச் சேர்ந்த காரியமேயன்றோ அயனமிரண்டு=ஆறுமா தங்கள் சேர்ந்தால் ஓர் அயனமாகிறது மூன்று மாதங்களுக்கொருமுறை விரேசனங் கொள்ளவேணு மென்றபடி. ஸம்வத்ஸரமிரண்டு =சிலர் நித்யம் தேசாடனமே செய்து கொண்டிருப்பர். சிலர் ஒருநாளும் ஊரைவிட்டுக் கிளம்பாமலே யிருப்பர். இரண்டும் பிசகு. ஆறுமாதத்திற் கொருமுறை திவ்யதேச ஸேவையையோ சிஷ்யாநுக்ரஹத்தையோ வியாஜமாகக்கொண்டு சிலநாள்வெளி ஸஞ்சாரமும் செய்துவர வேண்டு மென்றபடி. ஆக இந்த நியமங்களை விரதமாகக்கொண்டிருப்பவர்களுக்கு நோய் நொடி வாராது; வைத்யாபேக்ஷையிராது என்றதாயிற்று. இந்த ஸதுபதேசம் அவ்வூரில் ஸபலமாயிருப்பதுகண்டு இங்கு நம்மால் ஜீவிக்கஇயலாதென்று வெளியேறிவிட்டார் டாக்டர் ; அவ்விடத்தில் விரைவில் மஹாதனிகராயினர்.

    (319-320-)நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு (1-2-11ல்சீர்த்தொடையாயிரம் என்றுஒரு திருநாமம் சாற்றியுள்ளார்-ஆழ்வார் தமது செந்தமிழ்ச்செஞ்சொல் மாலையை எம்பெருமானது பலவகைத் திருக்கல்யாண குணங்களையிட்டுத் தொடுத்தருளினர். அவை பரத்வ ஸெளலப்யங்கள்.-“நால்வர் கூடி நான்கு பிள்ளைகள் பெற்றனர்; நால்வர்கூடி ஒரு பிள்ளையைப் பெற்றனர்; அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப் பெற்றனர்” என்றொரு விநோத வசனமுண்டு. (1) நால்வர்கூடி நான்கு பிள்ளைகள் பெற்றது ஸ்ரீராமாவதாரத்தில்.(2) நால்வர்கூடி [ தேவதேவகீ நந்தகோபயசோதைகள்கூடி] ஒரு
    பிள்ளையைப் பெற்றது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில்
    . இவ்விரண்டும் ப்ரஸித்தம்.
    அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகள் பெற்றதைக் கூரத்தாழ்வா னருளிச்செய்கிர். கப்ரக்ருஷ்டம் விஜ்ஞா நம் * என்று தொடங்கி ப்ரவர குணஷட்கம் ப்ரதமஜம்
    குணாநாம் நிஸ்ஸீம் நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ:* என்று. ஞானம் பலம்
    ஐச்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்ஸஸு என்கிற ஆறு குணங்கள் கூடி தயாக்ஷாந்தி
    ஒள தார்யாதிகளான அபரிமித கல்யாண குணங்களை ப்ரஸவித்தன வென்றபடி.

    பட்டர் “குணபரீவாஹாத்மநாம் ஜந்ம நாம்-லாசயங்களில் நீர் மிகமிக நிரம்பிவிட்டால் அதற்குப்போக்குவீடுவிட்டு ஜலாசயத்தைத்ரிக்கச்செய்வது வழக்கம். அங்ஙனே நீர் வெளிப்படுவதற்குப் பரீவாஹமென்று பெயர். அதுபோல,பரமபதநாதனுடைய திருக்குணங்கள் அங்கு விலைசெல்லமாட்டாமையாலே பரீவாஹாபேக்ஷைஷ பிறந்து பரன்இந்நிலவுலகில் அவதரிக்கலாகிறது;-இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பது இங்கேயாம். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் நோக்கி இங்கே என்கிறது. முந்துறமுன்னம் விபவாவதாரங்களைக் கொள்வோம்.மத்ஸ்ய கூர்மாதிகளான விபவாவதாரங்களுள் ஸ்ரீராமாவதாரத்திலும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலுமே திருக்குணங்களைக் கொள்ளை கொள்ளையாக அனுபவிக்க ப்ராப்தமாகிறது . முராரி மஹாகவி அநர்க்கராகவ நாடகத்தில் –யதி ண்ணம் பூர்வைரிதி ஜஹதி ராமஸ்ய சரிதம் குணைரேதாவத்பிர் ஜகதி புநரந்யோஜயதி க: ? ஸ்வமாத்மா நம் கதமுபகரிஷ்யந்தி கவய : ?] இதன் கருத்தாவது – முற்காலத்தில் காவ்யநாடக சம்பூப்ரபந்தங்கள் இயற்றும் கலிகளெல்லாரும் ஸ்ரீராமசரித்திரத்தைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தபடியால் நாம் அப் பெருமானை விட்டு வேறொரு பெருமானுடைய சரித்திரத்தைத் தொடுக்கலாமென்று பார்த்தால், இவ்வளவு திருக்கல்பாண குணங்களோடுகூடிய வேருெரு பகவத் வ்யக்தி யில்லையே! அது கிடக்க; கவிதாசாதுர்யம் பெற்ற கவிகள் தங்களுடைய வாக்வைபவத்தை ஸார்த்தகமாக்கிக் கொள்ளவேணுமானால் இராமபிரானைத் தவிர்த்துவேறு எந்த வ்யக்தியைக் கொள்ளமுடியும்? என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. ப்ரஸந்நராகவகர்த்தா இக்கருத்தைச் சிறிது மேம்படுத்திக் கூறுகின்றார். [ ‘ஸ்வஸுக்தீநாம் பாத்ரம் ரகுதிலகம் ஏகம் கலயதாம் கவீ நாம் கோ தோஷ : ஸ து குணகணாநாம் அவகுண ; யதேதைர் நிச்சேஷை : அபரகுணலுப்தை ரிவ ஜகதி அஸாவேகச்சக்ரே ஸதத கஸம்வாஸ வஸதி:] இந்த ச்லோகத்தின் கருத்தாவது:- ( இதில் ‘சக்ரே (அகெ ) என்கிறக்ரியைகர்த்தரிரூபம்அன்று,கர்மணி ரூபம்-செய்யப்பட்டானென்கை). கவிகளாய்ப் பிறந்தவர்களெல்லாரும் தங்கள் தங்கள் ஸூக்திகளுக்கு ஸ்ரீராகவனொருவனையே பாத்திரமாகக் கொள்வதானது கவிகளுடைய தோஷமன்று. ராகவனுடைய திருக்குணங்களின் தோஷமாகும் ஸகல குணங்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் நல்லதோர் ஆச்ரயம்பெற்று அதனால் மேன்மைபெறவேணுமென்று ஆசைப்பட்டுஸ்ரீ ராகவனிடத்திலே வந்து சேர்ந்து இனிது வாழ்கிறபடியால் ஸ்ரீராகவனொருவனே கவிதாபாத்ரமாகிருனென்றபடி.ஸ்ரீ ராமாயணத்தில் எந்தவிடத்தில் கயிறுபோட்டுப்பார்த்தாலும் இராமபிரானுடைய திருக்குணங்களே மிகமிகக் காணலாக்கும் . ஆரம்பத்திலுள்ள வால்மீகி நாரத ஸம்வாதம் குணப்ரசுரம். பிறகு அயோத்யாவாளி ஜனங்கள் முகமாகவும் சூர்ப்பணகை, தாரை,மந்தோதரி முதலானார் முகமாகவும் வால்மீகி பகவான் வெளியிட்ருள்ள திருக்குணங்கள் அபரிமித்தம். வையவந்த வாயாலே வாழ்த்துகிறபடி.-பெருமாள் இராவணனோடு போர்புரியும்போது ” இன்று போய் நாளைவா ” என்றதில் ஈடுபட்ட கூரத்தாழ்வான், (அதிமா நுவு ஸ்தவத்தில்) ” கோயம் குண: கதரகோடி கத: கியா.வாகஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத!கஸ்ய பூமி ” என்று வியக்கிர் பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ‘பரர்த்தி: பரமஸ்பஷ்ட” என்பது முதலான பதினாறு திருநாமங்கள் இராம பிரானுடைய திருக்குணங்களைச் சொல்லு கின்றனவென்று வியாக்யானிக்கத்தொடங்குகையில் இத உபரி ம்ருதஸஞ்ஜீவனம்-ராம வருத்தாந்த: ப்ரஸ்தூயதே ‘ என்று அவதாரிகை இட்டருளுகிறார். பல சொல்லி என! திருவடி மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் வெறுத்து ராம குணாநுபவத் திற கென்றே சிரஞ்ஜீவி பட்டம் பெற்று இவ்விபூதியிலேயே விளங்கிவருகிறார்.

    திருவாய்மொழியில் (2-7-4) தேவுந்தன்னையும் பாடியாடத் திருத்தி” என்றவிடத்து ஈட்டில் தேவு மென்கிறது ஐச்வர்யத்தை. தன்னை என்கிறது ஆச்ரித பாரதந்த்ர்யத்தை. அதிறே தானான தன்மை. ‘ஆத்மாநம் நாதிவர்த்தேதா”‘ என்றானிறே. ஆத்மபூதம் பரதம் நாதிவர்த்தேதா ‘ எய்கிறானென்று சிலர்சொல்லு வர்கள் ” என்றருளிச் செய்து அதைமறுத்து பட்டர் நிர்வஹித்ததை அற்புத மாக எடுத்துக்காட்டுகிறார் நமபிள்ளை. சித்ரகூடத்தில் பர தாழ்வானுடைய ரார்த்தனையைத் தலைக்கட்டி வைக்க வேணுமென்று கூறுகின்ற வஸிஷ்ட பகவான் ஆத்மாநம் நாதிவர்த்தேதா ‘ என்று கூறுவதானது ஆச்ரித பாரதந்த்ர்யமாகிற ஸ்வஸ்வபாவத்தை இழக்கலாகாது என்று சொல்லுவதாகப் பொருள் செய்தருளி தேவுந்தன்னையும்’ என்ற திருவாய்மொழிப்பாசுரத்தோடு ஸமந்வயம் செய்திருப்ப தானது நம்பூர்வாசாரியர்களுக்கன்றி மற்றெவர்க்கும் நில மன்று. ஸஹஸ்ரநாமத்தில் “விஜிதாத்மா விதேயாத்மா” என்றவிடத்தில் ஆதி சங்கராசாரியர் அவிதேயாத்மா என்று பதம் பிரித்துர பங்கமாக வியாக்கியானம் செய்திருப்பதைத் தள்ளி விதேயாத்மா’ என்றேபதம் பிரித்து பட்டர்செய்தருளியிருக்கிற வியாக்கியானம் இனிமையே வடிவெடுத்தது. அவருடைய திருத்தகப்பனாரான ஆழ்வான் அநந்யாதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர: பராதீநம் த்வாம் து பரணத பரதந்த்ரம் மநுமஹே” என்கிறலோகரத்னத்தினால் எம்பெருமானுக்கு ஆச்ரித பாரதந்த்ர்யமே வடிவு என்பதை நிலைநாட்டியருளினர். பகவத்கீதையின் உள்ளே இறங்கினால் -அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: இத்யாதி ச்லோகங்களினால் அவனுடைய பரத்வம் வெளிவரக் கூடும். கீதையின் ஆரம்பத்தை நோக்கினால் அவனது இயற்கையான ஆச்ரித பாரதந்த்ர்யமே வெளியாகும். கீதையின் ஆரம்பம் என்ன?”ஸே நயோருபயோர் மத்யேரதம் ஸ்த்தாபய மேச்யுத” என்று கூசாமல் சொல்லுகிறான் அர்ஜூநன். கண்ணபிரான் என்னை நியமிக்க நீ யார் ?’ என்று கேளாதே அப்படியே ஆஜ்ஞாபரிபாலனம் செய்திருக்கிறான்.

    திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இரண்டு திருமொழிகளினால் அற்புதமான அநுபவம் காட்டுகி ார். பரத்வத்தை முன்னே அநுபவித்து ஸௌலப் யத்தைப் பின்னே காட்டுவது ஒரு பதிகம். ஸெளப்யத்தை முன்னே காட்டிப் பரத்துவத்தைப் பின்னே காட்டுவது மற்றெருபதிகம். (10-6 எங்கானுமீதொப்ப தோர்மாய முண்டே என்கிற பதிகத்தில் பாசுரந்தோறும் மூன்றேகால் அடிகளால் அவனுடைய பரத்வத்தைப் பேசி ”அவன் காண்மினின்றாய்ச்சியரால் அளை வெண்ணெயுண்டாப்புண்டிருந்தவனே’ என்று ஸௌலப்யத்தைப் பேசித் தலைக்கட்டுகி ார். அந்தப் பெரிய திருமொழி தன்னிலேயே (11-5). மானமருமென்னோக்கிப்பதிகத்தில் ஒருத்தி முன்னடிகளால் ஸௌலப்யத்தையும் மற்றொருத்தி பின்னடிகளால் பரத்வத்தையும் பேசுவதாக வைத்து உபய குணங்களையும் அற்புதமாக அநுபவித்திருப்பது காண்க. இவையன்றோ அனுபவ ரகர்களின் படிகள்

    எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் திருவாபரண சூர்ணையில் “கிரீட குட
    சூடாவதம்ஸ”
    என்று திருமுடிக்கான திருவாபரணத்தை மூன்றுபடியாகப்பேசி
    யுள்ளார். கிரீட மென்றலும் மகுடமென் ாலும் சூடாவதம்ஸ மென் லும் ஒன்
    கவே கொள்ளலாம். அதை மூன்றாக்கியருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
    நம்மாழ்வார் திருவிருத்தத்தில் “பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து
    வஞ்சித்தோரரசேயருளாய்”
    என்று மூன்று விஷயங்களுக்கு மகுடாபிஷேகம்
    செய்து ‘அரசே! அரசே !! அரசே!!! என்று விளிக்கிறார்.

    தாயெடுத்த சிறு கேர்லுக்கு உளைந்தோடுங் கண்ணன் ததிபாண்டனைச்
    சரணமடைந்து தயிர்த்தாழியிலே மூச்சுத்திணறிக்கிடந்தது
    ஒருபுறம் = உனக்கும்
    உன் தயிர்த்தாழிக்கும் உன்னைச் சார்ந்த இருபது மனைக்காரர்களுக்கும் மோக்ஷ
    மளித்தேனென்பது
    ஒருபுறம்.

    அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறுமடங்கப்
    பொட்டத்துற்றி மழைவந்தெழு நாள் பெய்வித்துக் கொடியேறு செந்தாமரைக்
    கை விரல்கள் கோலமுமழியாதே வாடாதே வடிவேறு திருவுகிர்நோவாமே குன்ற
    மொன்றெடுத்தேந்திநிற்பது
    ஒருபுறம் — தேவோ வா தா நவோ வா த்வம் ய க்ஷோ
    வா கந்தர்வ ஏவ வா? என்று வினவினாரைச்சீறி அஹம் வோ பாந்தவோ ஜாத
    என்றது மற்றொருபுறம்.

    ரதியாயிருக்கவேண்டிய தான் தேரோட்டி யென்னும் ஸாரதியாய் நின்று
    குருக்ஷேத்ரத்திற்குத் தேரோட்டிக்கொண்டு செல்லுகிருன்; வழியிடையே பாலை
    நிலம் குறுக்கிட்டது; குதிரைகள் விடாய்த்தன; ரதிகளாயிருக்கின்றபாண்டவர்க
    ளும்விடாய்த்துக்கத்துகின்றனர். அப்போதுஎன்னநடந்தது? பெரியாழ்வார்ஸாதிக்
    கிறார் (பெரியாழ்வார் திருமொழி (4-2-7) மன்னர் மறுக மைத்துனன்மார்க்கொரு
    தேரின் மேல், முன்னங்குநின்று மோழை யெழுவித்தவன் மலை
    -இந்த சரித்திரம்
    பெரியாழ்வா ரொருவரே பணித்தது. குருக்ஷேத்திரத்தில் அது…. இற்றைக்கும் காட்டப்படுமிடம். இப்படியாகப் பரத்வமும் ஸெளலப்யமும் கலந்து பரிமாறும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில் எதை விடுவது? எதை யநுபவிப்பது?அது விது வுது என்னலாவனவல்ல என்னை உன்செய்கை நைவிக்கும் * என்றாராழ்வார். இதையே கூரத்தாழ்வான் ஸுந்தரபா ஸ்தவத்தில் இங்கிதம் நிமிஷிதஞ்ச தாவகம் ரம்யமத்புதம் அதிப்ரியங்கரம்*என்று மொழிபெயர்த்தாப்போலருளிச் செய்தனர். ஆழ்வார் பாசுரத்தில்
    உன் செய்கை என்றது உயிர். ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியில் (தாவகம்) என்றது ஜீவநாடி

    ரத ஸப்தமியும்-ஸப்த தேர் அருளிச் செயல்களும் -1-தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய. * [பெரியாழ்வார் திருமொழி (1-5-7)-2-உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு. (பெரியாழ்வார்திருமொழி 3-9-3.)-3-“மாதலி தேர் முன்புகோல் கொள்ள மாயனிராவணன் மேல். (நாச்சி யார் திருமொழி (5- 3)-4-களிறொழிந்து தேரொழிந்துமாவொழிந்துவனமே மேவி * [பெருமாள்திருமொழி 9 2)-5-தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே.’ பெரிய திருமொழி 8-5-2]-6-உலக்கத்தேர்கொடு சென்றமாயமு முட்பட மற்றும்பல. [திருவாய்மொழி 6 – 4-9.]-7-ாயனன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்பாரினில்சொ ன விராமானுசன் [ இராமா நுசநூற்றந்தாதி – 68]

    எம்பெருமான் உபயவிபூதிநாயகனென்பதை சாஸ்த்ரமுகத்தாலறிகின்றோம்.
    நம்மாழ்வார். ஆண்டாள் ஆகிய இருவரும் இதைப் பேசியுள்ளனர். நம்மாழ்வார்
    திருவிருத்தத்தில் (33) அருளார் திருச்சக்கரத் கால் அகல்விசும்பும் நிலனும் இரு
    னார் வினைகெடச்செங்கோல் நடாவுதிர்’
    என்று எம்பெருமானுடைய உபயவிபூதி
    நாதத்வத்தையருளிச் செய்தார் ஆண்டாள் தனது திருமொழியில் (11-3) பொங்
    கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்றவெம்
    பெருமா செங்கோலுடைய திருவரங்+ச் செல்வனார்’
    ‘ என்று அருளியது காண்க.
    எம் பெருமான் நித்திய விபூதி, லீலா விபூதி ஆகிய இவ்விரண்டையும் தன்னடியா
    ரிட்ட வழக்காக்குவன் என்பதை ”பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ
    தன்னலப்புள்ளினங்கா “
    என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் இனிதறியலாம்.

    9-2-பதிகத்தில்”அச்சோவொருவரழகியவா” என்றே ஒவ்வொரு பாசுரமும் முடிகின்றது.
    ஆனால் இப்பதிகம் திருநாகைப் பெருமானுக் கிட்டருளியது எபைதை பக்தர்கள் உணர்வதற்காக நிகமனப் பாசுரத்தில் ‘நாகையழகியாரை’ என்றருளிச்செய்தனர்.-அச்சோவொருவரழகியவா!* என்றே பாசுரந்தோறும் பணித்தது. அப்பெருமா
    னுடைய திருநாமம் ஸௌந்தர்யராஜன் என்பதை நன்கு காட்டித்தரும்-இதே போன்று “வெருவாதாள் வாய் வெருவி” என்ற பதிகத்திலும் ஸ்ரீரங்க திவ்ய தேசத்தின் திருநாமத்தைப் பாசுரந்தோறும் அருளிச்செய்யாது நிகமனப் பாசுரத்தில் “திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த” என்பதனால் திருவரங்கனே பதிகத்
    திற்கு விஷயபூதனென்றுணர்த்தி யருளினர்.

    போய்ப்பாடுடைய * என்னுமிப்பதிகம்(2-2) யசோதைப்பிராட்டி தன் மகனான
    கண்ணனைக் காதுகுத்த அழைப்பதாக அமைந்துள்ளது. முதற் பாசுரத்திலேயே
    பெரியாழ்வார் தமது முத்திரையைப் பதிக்கின்றார். ”போய்ப்பாடுடைய நின்
    தந்தையும் தாழ்த்தான் பொருதிறற் கஞ்சன் கடியன்காப்பாருமில்லைகடல்
    வண்ணா வுன்னைத் தனிய போயெங்கும் திரிதி”
    என்று வயிறுபிடிக்கிறார். கூர்
    வேல்கொடுந் தொழிலனான நாயகன் நந்தகோபனும் பசுமேய்ப்பினின்றும் மீண்
    டிலன். கம்ஸனோ கடியன். நின்மேல் சுறுக்கொண்ட வன். நீயோ தனியே எங்கும்
    திரிந்து விளையாடுகின்றாய். உன்னைக் காப்பார ருளர் ?” என்று பெரியாழ்வார்
    அருளிச்செய்தவிது ஆழ்ந்து அநுபவிக்கத்தக்கது.

    பெரிய திருவந்தாதியில் முபதாம் பாசுரம் வருமாறு:- இங்கில்லை பண்டு
    போல்வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் அங்கே மடி
    யடக்கி நிற்பதனில் வல்வினையார்தாம் ஈண்ட்டியெடுப்பதன்றா வழகு ?
    ” என்று
    எம்பெருமானுடைய ஸௌலப்ய குணத்தை அநுஸந்தித்த ஆழ்வார் அவ்வநுபவம்
    திருவுள்ளத்தில் தாங்கமுடியாதபடி விஞ்சவே அந்த ஆனந்தத்தினால் பாவங்களை
    குறித்துப்பேசுகின்றார்.

    அழகர் கலம்பகத்தில்காணும் அழகொழுகும் தமிழ்ப்பாடலொன்று மலைக்கு மேல்’ என்று தொடங்குவதாம். பாடல வருமாறு:-“மலைக்குமேன்மலைவிளக்காம் அழகா வேத வான்குதலை நான்குதலை மகனார் வாளா, தலைக்கு மேல்எழுதுகின்றார் அரியென்றெங்கள் தாலத்தின் மேலெழுதச் சமர்த்திலாரோ, அலைக்குமேல் உடு மலராமிதக்குங்காலம் ஆலமொன்று காயா பூவலர்ந்தாற்போற்பச், சிலைக்குமேற் செங்கண்வளர் அனந்தானந்தா இருக்கிலிருக்கும் பொருளே யெம்பிரானே!” இப் பாடலின் சுவைமிக்க பொருள் கேண்மின். மாலிருஞ்சோலை மேய மணி விளக்காம் அழகனே! (உன்னிடம மறைகளையோது உணர்ந்தவனாகிய) உன் மகனாகிய பிரமதேவனது செயலைச் சொல்லுகிறேன் கேள் . அவனுக்கு ஏதோ எழுத வேண்டுமென்று தோன்றியது. உடனே எங்களது வலிய தலையில் பயனில்லாதவற்றை எழுதிவிட்டான். ( ரஹ்ம லிபி, தலையெழுதது என்பது) மெல்லிய எங்கள் நாவில் ‘அரி’ என்ற இரண்டெழுததை எழுதலாமாயிருக்க, பேதைமை நிறைந்த செயலை அவன் செய்தனனே. ஒரு தலைக்கு நான்கு தலைகளாகப் பெற்றிருந்தும் உன் மகன் இவ்வாறுசெய்தது அவனது குதலைச் சொற்களுக்கு இணங்கியேயுள்ளது என்று. ‘அரி’என்று எம்பெருமான் திருநாமத்தைக்கூறி உஜ்ஜீவித்துப்போகாத எங்கள் விதி இருந்தவாறிது’ என்பதனைச் சம காரமாகக் கூறி<னார் புலவரென்க.

    இது அழகர் கலம்பகப் பாடலொன்றின் ஈற்றடியாம். பாடல் வருமாறு:
    “இலையும் பசும்புல்லும் செஞ்சூட்டரவும் இடைச்சி மடித்தலையும் சயனங்கொண்டீர்
    அடியேன் மனத்தாமரையில் அலையுஞ் செயலொழித்திங்கிருந்தாலென்ன வஞ்ச
    னமா மலையுங் கடலும் பொரும் தமிழ்ச்சோலை மலையரசே “
    . சோலைமலைப் பெரு
    மானே! நீர் இராமாவதாரத்தில் வானரஸேனையுடன் இலங்கை செல்லவேண்டிவருணனை வழிவேண்டி கடற்கரையில் தர்ப்பசயனத்தின்மீது இருந்தீர். ஊழிதோழியும் ஆலினிலைய தன்மேல் கண்வளர்ந்தருளினீர். இவ்வாறு புல்லிலும் இலையிலும் பள்ளிகொண்ட நீர் அடியேன் நெஞ்செனும் கஞ்ச மலரிலும் வந்திருந்தால்என்ன குறையுண்டாம்! என்று வினவுமிது இன்சுவையுடைத்து.

    திருவேங்கடத்தந்தாதியிலுள்ள பாசுரம் (92) இது. பாசுரம் வருமாறு. ”பாவையிரங்குமசோதைக்குமுத்துப்பது மச்செல்விக் கேவையிரண்டன்ன கண்மணி நீலமிருசரணப்பூவையிரந்தவர்க்கின் பவளம் புல்லசுரர்க்கென்று மாவையிரந் திருவேங்கடத்தோங்கு மரகதமே” திரு வேங்கடமலையில் மரகதமொன்று உள்ளது. அம் மரகதம்ம முத்தாகவும், நீலமணி யாகவும், பவளமாகவும், வைரமாகவும் திகழும் அதிசயத்தை என்னென்பது! நிறத்தாலும் ப்ரகாசத்தாலும் திருவேங்கடவன் மரகதத்தை ஒக்கின்றான். இவனே யசோதைப் பிராட்டியின் நன்மைந்தனாகத் தோன்றியபோது முத்தென அவளால் போற்றப்பட்டனன். திருமாமகளுக்குக் கண்மணி நீலமாவான். (பிராட்டிக்குக் கண்ணின் கருவிழியனையான் என்க) திருவடியிணைகளைப் பிரார்த்திக்கும் அடி யவர்க்கு இன்பவளமாகிறான். (இன் பவளம் ) என்று பிரித்து ‘பவளம்‘ என்ற
    பொருளும் இன்ப வளம்’ என்று பிரித்து பேரின்பப்பெருவளம் என்ற பொருளும்
    காண்க.அசுரர்க்குவைரமாகிறான். (வைர -(1 ) இரத்தின விசேஷம் (2) பெரும்
    பகை என்ற பொருள்கள் காண்க )எனவே மரகதமொன்றே ஒவ்லொருவர்க்கு ஒவ்
    வொருவகை இரத்தினமாக விளங்குவதாகக் கூறியவிது சுவைமிக்கது.

    “மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்’ -[2-2.6)என்பது பெரியாழ்வார் பாசுரப் பகுதி. வடபெருங்கோயிலுடையான் ஆண்டாளுடைய திருக்குழலிலே படிந்த பூமாலைகளை மிக விரும்பினன் என்பது விசதம் அதனையே இங்கு அருளிச்செய்தனர் பட்டர்பிரான். மின்னனைய நுண்ணிடையார் ஆண்டாள். அவருடைய விரி குழல்மேல் நுழைந்த வண்டு வடபத்சாயி. “தூவியம் புள்ளுடைத்தெய்வ வண்டு என்று எம்பெருமான் வண்டாகக் கூறப்பட்டது காண்க. எனவே ஆண்டாளுடைய பெருமை இதில்காணப்படுவது ரஸிகர்கட்கு அருவிருந்தென்க.

    திருவெழுகூற்றிருக்கையில் “நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவையேறி
    நால்வாய் மும்மதத்திருசெவி யொருதனி வேழத்தரந்தையை ஒரு நாளிருநீர்
    மடுவுள்தீர்த்தனை
    ”என்பதனால் ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கதை அநுஸத்
    திக்கப்படுகிறது. நால்வாய்-நாலுதல்- தொங்குதல்,யானைக்கு வாய் தொங்குதல்
    இயல்பு. மும்மதம் — இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆகமூவிடங்களில்
    யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்
    லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய் தொங்கு
    தலும் மத நீர் பெருகுதலும் காதுக்கள் பெரிதாயிருத்தலும் அதிசயமான விஷய்
    லன்றே; இதைச்சொல்லிவருண்ப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில்:- ஒரு
    குழந்தை கிணற்றில் விழுந்தபோது, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்
    கள்’ அந்தோ ! இதொருகாலழகும் இதொரு கையழகும் இதொரு தலையழகும்
    இதொரு முகவழகும் என்னே! என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்
    ளன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும்-விடுவித்த பின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே
    ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாரல் ஆழ்வார் ஆனையை
    வருணிக்கின்றாரென்க. இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை
    அனுபவிக்கத்தக்கது :- ” நால்வாய் மும்மதத் திருசெவி என்றாற் போலே சொல்
    லுவதுக்குக் கருத்தென்னென்னில்; ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் காதுங் கண்ட
    வாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!’ என்பாரைப் போலே இடர்ப்
    பட்ட இதினுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லு
    கிறது”
    என்ற ஸ்ரீஸாக்தி காண்க.

    பெரிய திருமொழியில் ( 4-6-7 ) பாசுரம் “மூத்தவற்கரசுவேண்டி முன்பு தூதெழுந்தருளி’ என்றுதொ டங்குவதாம். (மூத்தோனாகிய)யுதிஷ்டிரனுக்கு அரசுரிமையைப் பெறுவி தற்பொருட்டுக் கண்ணபிரான் துரியோதனனிடம் தூது சென்ற வரலாறு இதில் அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீ குலசேகராழ்வார் இராம பிரானை “இளையவர்கட்கருளுடையாய் இராகவனே தாலேலோ” என்று இளையவர்கட்கருள்பவனாக (இளையவர்கள்- துர்ப்பலராய் இளைத்தவர்கள், தம்பிகள் என இரு வகைப் பொருள்காண்க) அருளிச் செய்கிறார். எனவே கண்ணன் மூத்தோர்க் கருளுடையவன், இராமன் இளையவர்கட்கருளுடையான் என்று இது வொருரஸோக்தியாகக் கொள்க.

    நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியத்தின் முதல் பாசுரம் “மூவுல களந்த சேவடியோயே” என்று முடிவதாம். நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங் களுள் திருவிருத்தம் ருக்வேத ஸாரமென்றும் திருவாய்மொழி ஸாமவேத ஸார மென்றும் திருவாசிரியம் யஜுர்வேத ஸாரமென்றும் பெரிய திருவந்தாதி அதர் வண வேதஸாரமென்றும் கூறுவர். பெரியோர். யஜுர்வேதம் ஸப்த காண்டங்களை யுடையது. திருவசிரியமும் ஏழு பாசுரங்களாலமைந்தது என்னுமி தொன் றினைக்கொண்டே ருவாசிரியத்தை யஜுர்வேதஸார மென்று கொண்டார்களல்லா பூர்வாசாரியர்கள். “மூவுலகளந்த சேவடியோயே” என்ற இவ்வடிதன்னிலே மறையின் நறுமணம் கமழ்தலை யறி “உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா என்றவேத வாக்யத்தில் உலகளந்த வபதாநம் கூறப்பட்டது. அதனையே “மூவுலகளந்த சேவடியோயே ‘ என்பதனால் ஆழ்வார் அருளிச் செய்தனரென்க .

    பெரிய திருவந்தாதியில் 44-ஆம் பாசுரத்தின் ஈற்றடியிது. பாசுரம் வருமாறு: “வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும் மிகவாய்ந்து வீழா வெனிலும்- மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்ப ரிதுவன்றே. மேலைத்தாம் செய்யும் வினை’. இப்பாட்டுக்குப் பிள்ளை திருநறையூரரையர் ஒருபடியாகவும் பட்டர் ஒரு படியாகவும் நிர்வஹிப்பராம். அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனே யென்னில்;எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்தி ரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும். அந்த ஒரு குணசேஷ்டி தத்தையே பேசிப் புகழ்ந்துகொண்டிருச்கிற நாவோடு கூடின வாக்கும் அப் பெருமானுடைய எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அனுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும்ம்ஸகல சரித்திரங்களிலும், நெஞ்சு பொருந்தும்படி செய்துகொண்டு ஸர்வேச்வரனை அநுபவிச்து மங்களாசாஸநம் பண்ணவேண்டியிருக்க, அங்ஙனே பண்ணா திருக்கிறார்கள் ஸம்ஸாரிகள்; இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த
    பாவமே இதற்குக் காரணம்- என்பதாக.இஃது அரையர் நிர்வாஹம்). பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ர ஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசு
    கைக்கு யோக்யமான நாவோடு கூடிய வாயும் ஏஜோ குணமும் தமோ குணமும்
    மிக்கு ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற்படிந்தனவில்லையே யாகிலும். நம்மை
    ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக்கைகால் முதலிய கரண களேபரங்களைக்
    கொடுத்தது ஏதுக்கு?’ என்று ஆராய்ச்சிசெய்து பகவத் விஷயத்திலே பல்
    லாண்டுபாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
    பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே; இதுவரையில் மாறி மாறிப்பல பிறப்பும்பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா ? இனிமேலா
    வது நல்வழிபோகத்தேடலாகாதா ? மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோஇப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்!-என்பதாம்.

    ‘தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தேவிதாநம் வயஜநம் த்ரயீமய
    உபஸ்த்திதம் தேந புரோ கருத்மதா
    என்னும் ச்லோகத்தில “விதாநம் ” -(மேற்கட்டி)-என்று
    அருளிச் செய்தது ஆண்டாளின்-(14-3) பாசுரத்தின் பின்னடிகள் “மேலால் பரந்த
    வெயில் காப்பான் வினதை சிறுவன் சிற்கென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே”

    மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார் சுடராழி சுரிசங்கமேந்து கையா உன்னைக் காணக் கருதுமென் கண்ணே.-திருவாய்மொழீயில் (9-4-1)-பிராட்டி எம்பெருமானைத் தன் அழகா திருத்துவளாதலால் நம்வாழ்ச்சிக்குப் பிராட்டியின் திருக்கண்களே மூலகாரண மென்று அக்கண்ணழகைப் பேசுகின்றாராழ்வார் (மையார் கருங்கண்ணி)என்று. ஸ்ரீராமாயணத்தில் அஸிதேக்ஷணா’ என்று பலகாலுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி. மையிட்டுக்கருமை ஸம்பாதிக்கவேண் டியதில்லை. ஆயினும் மங்களார்த்தமாகவே மையிடுகிறபடி-”இவள் கையில்லீலாரவிந்தம் அவனுக்கு போக்யமா யிருக்குமா போலே யாயிற்று அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனிதாயிருக்கும்படி ” என்று. இத்தால் பிராட்டி பூ வேந்தியிருக்குமாபோலே எம்பெருமான் ஆயுத விசேஷங்களைந்தி யிருக்கிறபடி என்றதாயிற்று. ”ஏந்துந்கையா” என்கையாலே வெறுந்ருக்கை களையும் வெறுந் திவ்யாயுதங்களையுமன்றிக்கே இரண்டுஞ் சேர்ந்த சோத்தியையே தாம்காண வாசைப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டதாயிற்று.

    திருவாய்மொழியில் (3-5) பதிகம் “மொய்மாம்பூம்பொழிற் பொய்கை“என்று தொடங்குவது. எம்பெருமானுக்கு அன்பாலாட் செய்பவரை ஆதரித்தும் அன் பிலா மூடரை நிந்தித்தும் பாசுரங்கள் அருளிச் செய்கிறாராழ்வார் இப்பதிகத்தில்-இப்பதிகத்தில் முதற்பாசுரத்தில் ஸ்ரீகஜேந்த்ராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய ஆச்ரித வாத்ஸல்யத்தை யன்ஸந்தித்தும் விகாரமடையா திருப்பாருடைய பிறப்புவீண் என்கிறார், நம்பிள்ளையீடு கேண்மின்: “‘பட்டர் இவ்விடத்தை அருளிச்செய்யா நிற்கச் செய்தே ‘அவன் நூறாயிரஞ்செய்தாலும் விக்ருதராகாமைக்கு நாமே வேணும், நமக்கொரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்திலே யிருக்கமாட்டாதே விக்ருதனாகைக்கும் அவனே வேணும்’ என்றருளிச் செய்தார் என்று. எம்பெருமானைப் போன்ற பரமதயாளு இல்லை; அவனது தயையில் ஈடுபடமாட்டாத நம்மைப்போன்ற வன்னெஞ்சருமில்லை என்றபடி.


    ——————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-12-

    July 13, 2025

    ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -298-303/306-308/313-318)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

    ஸ்ரீராமாநுஜன் 298-ப்ரமாதீச ஆடிமீ-1973 ஜூன்மீ வெளியிடப்பட்டது

    மதம் என்கிற வடசொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் கொள்கை’ என்பது.-ஸமுதாயக் கொள்கையென்பது தான் மதமென வழங்கப்பெறும்.-கீதையில் பத்தாமத்யாயத்தில் (ச்லோ – 11) “பரம் ப்ரஹ்மபரம் தாம பவித்ரம் பரமம் பவாந்” என்பது அர்ஜீனனுடையவார்த்தை. அவ்விடத்தில் பாஷ்யத்தில் “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண : பர . நாராயணபரோ ஜ்யோதிராத்மா நாராயண : பர:* இதி ஹி ச்ருதயோவதந்தி” என்று முடிக்கப்பட்டது.-இதை விவரிக்கப் புகுந்த தாத்பர்ய சந்த்ரிகையில், (நாராயணபரம் ப்ரஹம்) என்றவிடத்திலும் (நாராயண பரோ ஜ்யோதி என்றவிடத்திலும் சிலர் நாராயணாத் பரமென்று பஞ்சமீதத்புருஷ ஸமாஸம் பண்ணி நாராயணனிற் காட்டிலும் மேம்
    பட்டதாக ஒன்றிருப்பதாய் ஆபார்த்தம் செய்வதுண்டாகையாலே அதனை நிரஸிக்கத் திருவுள்ளம் பற்றின நிகமாந்தமஹாகுரு,–நாராயணேதி. அநயோர் வாக்யயோ: ப்ரதமெள் நாராயண சப்தெள லுப்தவிபக்திகெள; *தத்வம் நாராயண : பர: இத்யாதிஸஹபாடவசா த் வ்யஸ்தத்வம் ப்ரதமாந்தத்வஞ்ச ப்ராப்தம். ததைவ ஸவிபக்திகதயாச்ருத்யந்தரே அதீ
    யதே * நாராயண : பரம் ப்ரஹ்ம் இத்யாதி. ஏதேந பஞ்சமீஸமாஸ்தாம் வதந்-பகவத் த்வேஷீ ப்ரத்யுக்த:; ஸர்வச்ருதி ஸ்ம்ருதி த்ரந்யாய விரோதாச்ச”
    -என்றெழுதியுள்ளார். இதில் “பகவத்த்வேஷி” என்றுவிருது சாத்தப்பெற்ற மஹா நுபாவர் யாரோ! என்கிற ஸந்தேஹம் இப்போது தீர்ந்தது.-இந்த தாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸூக்தியை யடியொற்றியே வேதாந்த கௌஸ்துபசாரர்”… சாகாந்தரீய: ஸவிஸர்க்க: பாட: ச்வபசஸ்ய ஜிஸ்வாம் ச்சிநத்தி”
    என்றெழுதிவைத்தார். (நாராயணபர:) எ ன்றச்ருதியில் பஞ்சமீஸமாஸம் கொண்டுதானே நாராயணனுக்கும் மேற்பட்டதொன்று இருப்பதாகப் பேசவேண்டும், அந்தப் பேச்சு பல நூற்றாண்டுகட்கு முன்னமே அடியறுக்கப் பட்டது

    திருப்பாவை ஸேவிக்கப்படுகிறது’ ‘திருப்பாவை அனுஸந் திக்கப்படுகிறது’ என்று இவர் கையில் வந்திருக்குமேயொழிய திருப்பாவை பாடப் படுகிறது என்று ஒரு வைஷ்ணவன் கையில் வராது. ” யானாய்த் தன்னைத் தான் பாடி” என்றும் “தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய்” என்றும் “இன்னி சையால் பாடிக் கொடுத்தாள்” என்றும் செய்யுள்களில் இருந்தாலும் வ்யவஹார முறையில் ‘திவ்யப்ரபந்தம் பாடுகிறார்கள்’என்று ஒரு வைஷ்ணவனும் பேசுவதில்லை.-

    வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்றதன் உண்மைப் பொருள் யாதெனின் கேண்மின்: வேதமனைத்துக்கும் வித்தென்று ப்ரண வத்தைச் சொல்லுகிறது. ” ப்ரணவாத்யாஸ் ததா வேதா : என்றும் “ஓங்காரப்ர பவாவேதா ” என்று முள்ள பிரமாணங்களினால் ஓங்காரமான ப்ரணவமானது வேத மனைத்திற்கும் பீஜமாயிருப்பதென்பதில் ஐயமில்லை. அந்தப் பரணவமானது எப்படி ஸகலார்த்தங்களையும் கொண்டதோ அப்படியே கோதை தமிழும் ஸகலார்த் தங்கையும் தன்னில் கொண்டது என்றபடி. ஆசு, “வேதமனைத்துக்கும் வித்தாகும்’ என்றது ஸகல வேதங்களுக்கும் வித்தான ப்ரணவத்தை ஒத்தது திருப்பாவை என்றதா
    யிற்று. அன்றிக்கே திருப்பாவைதானே வேதமனைத்திற்கும் வித்தானது என்று பொருள் கொண்டாலும் குறையில்லை. வேதங்களில் தெளிவாகக் காணமுடியாத அர்த்தங்களைத் திருப்பாவை தெளிவு படுத்துகின்றது என்னுங்கருத்தைக் காட்டும் இவ்வதிசயோத்தி. வேதாந்தவாசிரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே ” என்று பணித்தது இந்த வெண் பாவை உட்கொண்டேயாகும்.

    உடைக்கோ வரணமுண்டு உறங்கப் புறத் திண்ணை யுண்டு
    அடைக்காய் கனியுண்டு அருந்தத் தண்ணீருண்டு
    சடகோபரீந்த தமிழ் ஆயிரமுண்டு தாரணியில்
    வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான் இறைக்கே
    -மா முனிகள் அருளிச் செய்த விடுதிப்பாடல் என்பர்
    ஜ்யோதிட நூல்களில் மீனாடு தெற்கு உயர மற்ற எட்டும் வடக்கு உயர மானே கேள் மகர கும்பம் சமமாக சொன்னபடி சோமன் இராவிட்டால் அன்னம் அரிதாய் விடும் –

    மீனாடு -மீன மாச மேஷ மாசங்களில் -பங்குனி சித்திரைகளில்
    தெற்கு உயர –இளம்பிறையின் கோடு தெற்கே உயர்ந்து இருக்க வேணும் –
    மற்ற எட்டும் வடக்கு உயர -வைகாசி முதல் மார்கழி வரை வடக்கு உயர்ந்து இருக்க வேணும்
    மகர கும்பம் சமமாக -தை மாசி மாதங்களில் ஏற்றத்தாழ்வு இன்றிக்கே சமமாக இருக்க வேணும்
    இப்படி இருந்தால் தான் ஸூ பிக்ஷம் -இதற்கு மாறுபாடு ஆனால் துர்பிக்ஷம் -என்று இருப்பதால்-ஒருநாள் இரவில் இளம்பிறையின் கொடு எப்படி இருக்கிறதோ என்றும் பார்த்துக் இருப்பார்கள் நோக்கி அருளிச் செய்த பாசுரம் –

    பய வேதாந்தமும் அபய வேதாந்தம் சேர்ந்து உபய வேதாந்தமாயிற்று
    பய விபூதியும் அபய விபூதியும் சேர்ந்து உபய விபூதி யாயிற்று
    சுடர் மிகு சுருதியென்று இவர் அங்கீ காரத்தாலே வடமொழி மறைமுடிக்கு உத்கர்ஷம்

    ஸ்ரீ ராமாநுஜன் 318-1975 மார்கழிமாத வெளியீடு-ஆனந்த மார்ழிமாத வெளியீடு

    முந்துற முன னப அரையாகள் பெரிய பெருமாளுடைய மூலஸ்தானத்திற்
    செழுந்தருளி அங்கே அருளிப்பாடும வரிசைகளும் பெற்று தேவகானத்கிலே முதற்
    பாசுரத்தைத தாளத்துடனே அநுஸந்தி து விடைபெற்று வெளியேபோந்து திரு
    நெடுந்தாண்டக ஸேவையைத் தொடங்குகிறார்கள், முதற் பாட்டுக்கு அபிடுயமும்
    வியாக்கியானமும் ஸேவித்து, இடையிடையிற் சில பாசுரங்களுக்குத் தம்பிரான்படி
    ேவித்துப் பத்துப் பாசுரததளவில் நிறுத்திவிடுவர்கள். இதுவே திரு நெடுந்தாள்
    டக ளேவை. அள்று பக்தர்களின் குதூ லம் வாசாமகோசரம்.
    மறுநாள் முதலாக [பிரதமை முதல் தசமியளவாக ] பகற்பத்து எனப்படும்.
    நாள்தோறும் காலை ஏழரை மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புற்ப்பாடு கண்டருள்வர். ஏழரையென்றால் ஏழரைத்தான். 7- 29 அல்ல7 அல்ல. அந்தப்
    புறப்பாட்டு நேரத்தைக்கொண்டு பலர்தம்தம் ரிஸ்டுவாட்சை ஸரிப்படுத்திக்கொள்
    வர்கள்.ஸ்தானிகர் ஸ்ரீபாதம் தாங்குவாரான ஸ்ரீவைஷ்ணவஸ்வாமிகளுக்கு அருள்
    பாடிடுவதும் கிழக்கிலும் மேற்கிலுமாக ரபன்னபாகையுடன்நிற்குமந்த ஸ்ரீபாதத்
    தவர்கள் நாயிந்தே! என்று முழங்குவதும், உடனே அவர்கள் உள்ளே சென்று பெரு
    மாளை எழுந்தருளப்பண்ணிப் புறப்பட, திருத்திரைநீக்க அருள்பாடிடுவதும், வலமா
    கத்திரும்பிப் படியடியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயா பட்டர் அண்ணன் முகலான
    ஆசார்ய புருஷர்களுக்கு விலக்ஷணமான ம ரி யாதைப்ரஸாதிப்பதும், அரையர்
    கானத்துடனும் அந்தரங்க பக்த கிங்கரரின் க ணாமிருதமான விருது பொலிந்த
    எச்சரிக்கைமுழக்கத்துடனும் விண்ணின் மீதமரர்கள் விரும்பித்தொழ அர்ஜுன
    மண்டபம் நோக்கி யெழுந்தருள்வதும் விண்ணுளார்க்கும் கிடைப்பரிய மண்ணுளா
    ரின் மஹு பாக்யமென்னு மத்தனை. ஆழ்வார்களுமாசாரியர்களும் முன்னாடியே
    மண்டபம் சேர்ந்து நம்பெருமாள் வரவை நோக்கியிருப்பர்கள் .பராங்குச பரகால
    யவரர்கள் மூவருமே ஸ்ரீரங்கநாதனுடைய தனிச்சிறப்பைப் பெற நின்றபடியே
    யிருந்து பெற்றபின் வீற்றிருப்பர்கள். ஆழ்வார்களுக கெல்லாம் மரியாதையாகி
    அரையர்களுக்கும் அருளிப்பாடாகி ஒன்பது மணிக்கு ஸேவை தொடக்கமாகும்.

    முதல் நாள். திருப்பல்லாண்டு தொடங்கிப் பெரியாழ்வார் திருமொழி
    இரண்டாம் பத்து – ஒன்பதாம் திருமொழி யளவும் ஸேவை நான்கு மணி காலம்
    நடைபெறும். திருப்ப ாணடு முதலிரணடு பாட்டுக்களுககு அபிநயமும வியாக
    கியான ஸேவையுமாகும.பிறகு திருவாராதனமும் கோஷடி விநியோகமுமாகி,
    ஆழ்வாராசாரியர்கள் புறப்பாடு கண்டருளி ஸ்தோதரபாட கோஷ்டியுடன் எழுந்
    தருள்வர்கள். முன்னம் நபமாழ்வார் தமது ஸவனிதுககுவ எழுந்தருள,வ னிதி
    வாசலில்காத்தருக்கும் மற்றை யாழ்வாராசாரியாகளுக்கு நபமாழ்வாருடைய ஸ்ரு
    பாதுகையான ராமா ஜன ஸாதிக்கப்படுகிற அதிசயம் அறுபவிக்கத்தககது. நம்
    மாழ்வார்க்கு ஜ்யேஷ்டாகளான முதலாழ்வாரகளும் திருமழிசைப் பிரானுங்கூட
    அந்த ஸ்ரீ பாதுகைஸாதிக்கப் பெறுவர்கள் . இதனால் ந மாழ்வாருடைய அவய
    விதவமும் மற்றையோரு டய- அவயவத்வமும் விள க முற்றதாகும். இவ்வதிசயம்
    திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அஸாதாரணமானது . பிறகு அவ்வவ ஆழ்வார்
    களும் ஆசாரியர்களும் தம தம ஸன்னிதிசேரமுடிவாக எமபெருமானார் ஸ னி
    யில் ஸ்தோத்ரபாட கோஷ்டி சாத்தப்படும். பராங்குச பஞ்சவிசதி. நக்ஷத்ர
    மாலிகை, யதிரா விந்சதி, ஸ்தோத்ரரத்னம் இவை யநுஸந்திக்கப்பட்டு தீரத்த
    ப்ரஸாத விநியோகத்துடன் (உடைவர் என்னிதியில் ) தலைக்கட்டியாகும். இது
    நித்யகரமம். பிறகு ஆறுமணிக்குப் பெருமாள் அர்ஜுன மண்டபத்திலிருந்கு புறப்
    பாடு கண்டருளி நடையழகு காட்டிக்கொண்டே ஆஸ்தானம் சேர மூன்று மணி
    காலமாகும் வழி முழுதும் உபயக்க ரர்களின வழிபாடு நடைபெறும். காலை
    வேளைப் புறப்பாட்டிற்காட்டிலும் இப்புறப்பாடு வீறுபெற்றிருக்கும்.

    இரண்டாம்நாள் பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்தின் பத்தாந்
    திருபொழியாகிய *ஆற்றிலிருந்துதொடங்கி, ஐந்தாம் பத்தின் மூன்றாந் திருமொதுக்கச்சுழஜை முடிய பாசுரங்கள் (240 இன்று ஸேவிக்கப்படும். ஆற்றிலிருந்து* தண்னே’ாயிரம்’ இவ்விரண்டு பாட்டுக்களுக்குஅபிநயமும் வியாக்கியான வேவையும்.

    மூன்றநாள். பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம்பத்து நான்காந்திரு
    மொழி சென்னியோங்கு தொடங்கி, நாச்சியார் திருமொழியில் (12. தி.) மற்றிருந்தீர்
    கட்டு* முடிய பாசுரங்கள் 164 இன்று ஸேவிப்பது. •சென்னியோங்கு மார்கழித் திங்கள்
    இவ்விரண்டு பாசுரங்களுக்கும அபிநயமும் வியாக்கியான ஸேவையு முண்டு.
    “செல்னியோங்குக்கு அபிநயமும் வியாக்கியான ஸேவையுமானதும் அத்திருமொழி
    யில்மேற்பாசுரங்களையும் – அபிநயம் முன்னும் பாசுரஸேவை பின்னுமாய் ஏழாவது
    பாட்டு இரண்டாபடி தி ப்பொலிந்த சேவடி யென் சென்னியின்மேல் பொறித்தாய்’ என்னு
    மளவும் அபிநயத்தோடு ளேவத்து நிறுத்தி, பெருமாள் திருவடிக தம் திருமுடி
    யில்பொறிக்கப்பெற்ற பெரியாழ்வாருடையபாகயத்தை அநுகரிப்பதாய் அரையர்
    பெருமாளிடமிருந்து பூற சடகோடனைத் தமது முடியில் தரி துவந்து ஆழ்வாராசா
    ரியர்களனைவர்களும (அரையா, மது திருககையால ஸாதித்து கோஷ்டியாரலை
    வர்க்கும் (பெண் ளுக்கு முட்பட)தாமே ஸாதிப்பா. இதற்கு ஒருமணி யவகாசத்
    திற்கு மேலாகும். இ தகைய நிகழ்ச்சி எம்பெருமானார் திவ்யா ஞையினாலன்றி
    மற்றொருவா கட்டளையினால் இங்ஙனே செல்லாது ! இதற்குப்பி , பெரியாழ்வார்
    திருமொழியைத் தலைக்கட்டி, திருப்பாவை முதற்பாட்டின் அபிநய வியாக கியானங்
    களைத் தலை கட்டி நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டு திருமொழியளவும்
    ஸேவித்து நிறுத்தியாகும.

    நான்காதாள். நாச்சியார் திருமொழி (13) கண்ணனென்னுங்கருந்தெய்
    வம் * தொடங்கித திருச்சந்தளிருத்த முடிய பாசுரங்கள் 245 இன்று ஸேவிப்பது.-கண்ண்னெனனும் பாசுரத்திற்கும், (பெருமாள் திருமொழி) இருளிரிய பாசுரத்
    திற்கும் அபிநய வியாக்கியானங்களுண்டு. *கண்ணனென்னும் பாசுரத்திற்கு
    அபிநய வியாககியா னமாகி, அத்திருமொழியில் மூன்றாம்பாட்டில் [ கஞ்சைக்
    காய்ந்தகருவில்லி என்னும் முதலடியில் ] ப்ரஸ்துதமான கம்ஸவத விருத்தாந்
    தத்தை நடிகதுக் காட்டுசற்காக-. அழகிய ணவாளப் பெருமாள் கமலைதம்
    செய்தருளினபடி எவ்வண்ணமே யெனை?” என்று கேளவியைமட்டும் மூன்றுவி
    சொல்லிவிட்டு, அ திருபொழியில் மிச்சமுள்ள பாட்டுக்களை ஸேவியாமல் அடுத்து
    ( பட்டியேய்நதோ கா ேறு திருமொழி தொடங்கப்பெற்று திருச்சந்தவிருத்தid
    முடிய ஸேவித்துத் தலைக் + ட்டப்படும். திருச்சந்தவிரு தத்தில் ஒருபாசு சூகிற்கd
    அபிநய வியாக்கியான ளேவைகள் இல்லை. இன்று பகல்மேல் இரண்டாம் மேவை
    யுண்டு- கம வதத்திற்காக சபஸவத விஷயமான தம்பிரானமார்படி வியாக
    யானம் ஸேவித்து “அழகிய மணவாளப்பெருமாள் கம்ஸவதம் செய்தநளின்படி
    இவ்வண்ணமே ” எறுை சொல்லி கருஷ்ணாவதாரம் முதல் கம்ஸவதம்வரை நடித்
    துக்காட்டி அத்திருமொழியில் சேஷ பூரணத்திற்காக”கடைக்கனெனும் சிறைத்
    கோலால்” என்று தொடங்கி ஸேவித்துப் பூர்த்திசெய்யப்படும்.

    ஐந்தாந்திருநான். திருமாலை தொடங்கி அமலனாதிபிரான் முடிய பாசுர
    கள் 65 மட்டும ஸேவக்கப்பெறும் திருமாலை முதற்பாட்டுக்கு அபிநய வியாக்யானமானதும் மேல் பாட்டுக்கள் அபிநயம் முன்னும் பாக ம் பின்னுமாய் ஆறாம்
    பாட்டு மூன்றாமடி முடிய ஸேவிக்கப்படும். அதில் அரங்களார்க்கு ஆட்செய்யாதே
    என்னுமிடத்தில் நம்பெருமாள் திருவத்யயநோத்ஸவ வைபவத்தை, புறப்பாடு
    திருவாராதனம். வேதவிண்ணப்பம் அருளிப்பாடு முதலிய ஸகல விவரணத்துட
    னும் அபிநயித்துக் காட்டி [ஒருமணி காலத்திற்குமேல் இங்ஙனை சென்றபிறகு
    மேற்பாசுரங்கள் ஸேவித்து அமலனாதிபிரான் முடித்து நிறுத்துவர்கள்.

    ஆரும் நாளில் *கண்ணிநுண் சிறுத்தாம்புதொடங்கிப் பெரியதிருமொழி
    மூன்றாம்பத்து ஐந்தாந் திருமொழிமுடிய பாசுரங்கள் 61 ஸேவிப்பது. *கண்ணி
    நுண்சிறுத்தாம்பு, வாடினேன்வாடி இவ்விரண்டு பாட்டுக்களுக்கு மட்டும் அபிநய
    மும் வியாக்கியானஸேவையும் நடைபெறும்.

    ஏழாம்ந ள். பெரியத்திருமொழி மூன்றாம்பத்து ஆறாந்திருமொழி தூவிரிய
    மலருழக்கிதொடங்கி ஐந்தாமபத்து ஆறாந் திருமொழி கை மமான மழகளிற்றை
    முடிய பாசுரங்கள் 210 இன்றுஸேவிக்கப்பெறும். தூவிரிய மலருழக்கி பாட்டுக்கு
    அபிநயமும் வியாக்கியான ஸேவையுமாகி மேற்பாசுரஙகள் ஸேவிக்கையில்பாட்டு
    ‘வாளாய கண்பனிப்பவில் *ஓ மண்ணளந்த தாளாள ! என்னுமிடத்தில் -ப்ரஸ்துத
    மான வாமனாவதார விந்தந்ததை ந த்துக்கக் காட்டுவதற்காக அப்போது ஓ
    மண்ணளந்ததாளாளா! ஓ மண்ணளந்த தாளாளா! ஓ மணணளந்ததாளாளா!
    என மூன்று விசை ஸேவித்து “அழகிய மணவாளப் பெருமாள திருவுலகளந்தரு
    ளினபடி எவ்வண்ணமேயெனன ” எனறு கேள்வியைமட்டும் உதமோக்ஷபி து நிறுத்தி.
    அத்திருமொழியில் மேற்பாசுரங்களை ஸேவியாமல் நிறுத்தி மேல் திருமொழி
    தொடங்கி ஸேவித்து முடிப்பர்கள். பிற்பகளில் இரண்டாம் ஸேலையில வாமனாவ
    தார விஷயமான தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து அவ்வவதார வருத்
    தாந்தங்களை நடித்துக்காட்டி, காலை ஸேவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
    பாசுர சேஷத்தை ஸேவிக்கத் தொடங்கிய “தண்குடந்தை நகராளா வரை யெடுதத
    தோளாளா” என்றாரப்பித்து அத்திருமொழியை முடித்திடுவர்கள். அந்த ஸமயம
    நாம் மண்ணுலகத்திலிருப்பதாகவே தோன்றாது.

    எட்டாந்திருநாளில். பெரிய திருமொழி ஐந்தாம்பத்து ஏழாந்திருமொழி
    ரபண்டை நான்மறை தொடங்கி எட்டாம் பத்து முதல் திருமொழி சிலையிலங்கு
    பொன்னாழி முடிய பாசுரங்கள் 250 ஸேவித்தாகும. பண்டை நான்மறையு
    என்கிற பாட்டுக்கு மட்டும் அபிநயமும் வியாக்கியான ஸேவையும், பாசுரத்தின்
    முடிவில் அரங்கமா நகரமர்ந்தானே என்னுமிடத்தில் அவதார வைபவங்கள்
    அபிநயித்துக்காட்டப்படும். பிறகு அரங்கம் என்கிற சொல் சேர்ந்துவரும் சந்தைக
    ளனைத்தும் (ஏறக்குறைய எழுபது.) ஸேவிக்கப்படுவது பேரின்பவெள்ளம் பெருக்
    கும். அத்திருமொழி நாலாம்பாசுரமான மாயிருங்குன்றமொன்று மத்தாகவில்
    ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான் என்று ப்ரஸ்துதமான அ ருதமதன
    விருத்தாந்தத்தைப் பிற்பகலில் நடித்துக் காட்டுவதற்காக அத்துடன் நிறுத்த
    வேண்டி” அழகிய மணவாளப் பெருமாள் அம்ருதமதனம் செய்தருளினபடி யெவ்வண்ணம்ே யென்ன” என்று மூன்றுவிசை சொள்லிவிட்டு மேற்பாசுரங்களைஸே யா
    மலே நிறுத்தி, மேல் திருமொழி தொடங்கி[ ஏழையேதலன் முதலா க ஸேவித்துத்
    தலைக்கட்டுவர்கள். பிறகு இரண்டாம் ஸேவையில் அம்ருதமதன விஷயமான
    தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து. காலை நிறுத்தியிருந்த சேஷத்தை
    ஸேவித்து முடித்தாகும்.

    ஒன்பதாந் திருநாளில் பெரியதிருமொழி எட்டாம்பத்து இரண்டாந்திரு
    மொழி தெள்ளியீர் தேவர்க்குந்கேவர் தொடங்கி பத்தாம்பத்து முதல்திருமொழி
    ஒரு கல்சுற்றம் முடிய பாகங்கள் 200. ஸேவித்தாகும். தெள்ளியீர் பாசுரத்திற்கு
    மட்டும் அபிநயமுர் வியாக்கியான ஸேவையும் இன்றைக்கும் இரண்டா ஸேவை
    யுண்டு. அதில் முத்துக்குரி. மறுநாள்ஸேவிக்கப்போகிற திரு நெடுந் தாண்ட
    கக்தை ஆகர்ஷித்து அகில் முகற்பாட்டுக்கு அபிநய, வியாக்கியானங்கள். பெரிய
    வாச்சா பிள்ளை வியாக்கியானம் ஸேவித்து முடிந்ததும் முதற்பாட்டிலிருந்து
    எபட்டுடுக்கும் பாகாம் முடிய பாட்டுக் ளுக்குத் தம்பிரான்படி ஸேளிப்பர்கள்.பதி
    னோரா பாட்டில் கட்டுவிச்சி சொல்லுங் கூடல்குறியை முத்துக்குறியாக அபிநயித்
    துக்காட்டுவர்கள். முதிக்குறிக்காக அஸ்ரயர் பெருமாளிடமிருந்து தீர்த்சமும்
    ஸ்ரீ சடகோபனும் கொணர்ந்து ஆழ்வாராசாரியர்களுக்கும் கோஷ்டியனைத்துக்கும்
    ஸாகிப்பர். கீழ் முன்றாந்திருநாளில் திருப்பொலிந்த தே வடிக்காக ஸ்ரீசடகோபன்
    ஸாதிப்பது மட்டும் இன்று தீர்த்தமுமுண்டு. இங்ஙன நாளைக்குமுண்டு.

    பத்தரந்திருநாளில் பெரிய கிருமொழி பத்தாம்பத்து இரண்டாந்திரு
    மொமி இரக்கமினறி ொடங்கி திருஃதாண்டகங்கள் மு டி ய ஸேவித்தாகும்
    முஇரக்க ரின்றிக்கு மட்டும் அ பிநய வியாக்கியானங்கள். பிற்பகலில் அலங்காரம்
    வழுது செய்தானபின்ராவணவததிற்கு அருளிப்பாடு ஆகும். கொண்டாட்டங்
    களால் பெருமாளைக் கொண்டாடி பெரியதிருமொழியின் சாத்துப் பாசுரமும திரு
    நெடுந்தாண்ட க்கின் சாக்தப்பாசுரமும் (ஒவ்வொன்று) ஸேவி து சாத்துமுறை
    செய்தாகும். இன்றைக்கும் அரையா ல் தீர்தக ஸ்ரீசடகோப விநியோகம நடை
    பெறும். இன்றுபெருமாள் நாச்சியார் திருக்கோலம் ொள்வது பக்கர்களுக்குப்
    பெறாப்பேறாகும்.காலை புறப்பாடு கண்டருளுமபோதே நாச்சியார் திருக சாலத்
    தடன் புறப்பட்டாகும் மாலையில் வெளிப்புறப்பாடாகி ஒன்பதுபணிக்கு ஆஸ்
    சானம் சேர்ந்தாகும். இவ்வளவோடு சிறிய திநலத்யயநோத்ஸவபெனறும திரு
    மொழி திருநாளென்று வழங்கப்படுகிற பகற்பகது நிகழ்ச்சி ஒருவாறு தரிவத்
    தாயிற்று. இது மி -வு ஸ க்ஷேபமாகத் தெரிவித்தப்படி, நேரிலநுபவிப் க்கு
    இமையவர் நேரொவ்வார்தாமே. இனி திருவாய்மொழித திருநாளென்கிற இராப்
    பத்தின் வைபவமிருக்கும்படி கேண்மின்

    வைகுண்ட ஏகாதசி நன்னாள். மார்கழித்திங்களில் இதுவன்றோ ம நிறைந்த
    நன்னாள் நம்மை வைகுண்டத்திலிருப்பதாக நினைக்கச் செய்யும் ஏலாகசி –
    வைகுண்ட ஏகாத என்ற கொள்க. இன்று விடியற்காலம் நாலுமணிக்குரத்
    னாங்கியுடன் புறப்பாடு. திருவாசல் திறப்பது ஆறுமணிக்கு. அங்கிருந்து சார்த்தூலகதியில் அதிவேகமாகத் திருமாமணி மண்டபத்திற்கு முன்கொட்டகையில்
    ஆழ்வாரைக் காணவேணுமென்னும் அபிநிவேசத்துடன் எழுந்தருள்வதானது
    எவர்க்குமே கண்ணுள்நின்றகலாததோர் காட்சியாகும்.ஸ்ரீ பரங்குச் பரகால
    யதிவரர் மூவரும் எதிர்த் திருமண்டபத்தில் கீழ்கோபுர வாசலுக்கு நேராக எழுந்
    தருளி நிற்க, மரியாதையாகி அரையர் பூஉயர்வற வுயர்நலம் தொடங்குவதும். – –
    ஆழ்வாரைத் திருமுன்பே அழைத்துக்கொள்ளுவதும், அந்த ஹர்ஷப்ரகர்ஷத்துக்கு
    பரகாசமாக ஓய்யார நடையிட்டுக்கொட்டகையில்பத்தி யுலாவுவதும் படியேத்தம்
    திருவந்திக் காப்புடன் திருமாமணி மண்டபம் சேர்ந்து மிகவுத்துங்கயான திவ்யாஸ்
    தான மண்டபத்திலே எதிரே ஆழ்வாராசாரிய களின் திரளை இருந்தான் கண்டு
    கொண்டு* என்னுமருளிச் செயலை நினைப்பூட்டுமாறு மாலை ஆறுமணிவரை
    ஸேவார்த்திகளுக்குப் படிவிடுவதும், உபயவிபூதியிலும் இவ்வளவுதான் ஜீவராசி
    களென்று நிர்ணயிக்கலாம்படி துன்னிட்டுப் புகலரியதாய், எந்த ப்ராகார வீதியும்
    ஜனஸங்க ஸங்கட்டிதமாய்த்திகழும் பெரிய திருநாள் இதுவன்றோ மாலை 6
    மணிக்கு அரையர் எழுந்தருளி உயர்வற வியாக்கியானம் அபிநயத்துடன் ஸேவிப்
    பர். ஈடு முப்பத்தாா பிரம் மூன்றாம் ச்ரிய:பதிஸேவித்து முதற்பாட்டுக்கும் ஈடு
    ஸேவிப்பர். முதற் பத்து பூர்த்தியாகும். திருப்பாவாடை முதலானவையாகி
    வீணை வாத்தியத்துடன் புறப்பட்டருளி ஆஸ்தானம் சேர்வது பன்னிரண்டு மணி
    யாகும். புறப்பாட்டுக்கு முன் திருமண்டபத்தில் ரத்னாங்கி படிகளையப்பெறும்
    பெரிய பெருமாள் முத்தங்கி ஸேவை ப்ர பா தத்திலிருந்தே தொடங்கியாகும்.

    இரண்டாந் திருநாள். பகல் 11 – 30க்கு பட்டர் திருவம்சஸ்தர்களில் முறை
    காரர் குடை திருச்சின்னங்களுடன் ஆர்யபடாள் வாசலளவும் எழுந்தருளி உள்ளே
    சென்றபின்திருக்காப்பு சேர்த்து உள் திருவாசலும் திருக்காப்பு சேர்த்துப் பன்னி
    ரண்டு மணிக்குப் புறப்பட்டருளி உத்தம நப்பிகள் பிள்ளைப் பெருமாளையங்கார்
    பாடலென்று (அஷ்டப் பிரபந்தத்திலில்லாத) பல பாட்டுகளைத் திருமுன்பேபாடிக்
    கொண்டு கண்ணாடி முன் நம்பிள்ளை திருவோலக்கமென்னு மிடத்திலே ஒய்யார
    நடையுடன் திருவாசல் முன்பு அருளிப் பாடாகித் திருக்காப்பு நீக்கி த்வஜஸ்தம்ப
    மண்டபம் சேர்ந்து ஓய்யார நடையுடன் தொரை ப்ரதக்ஷிணத்தில் பரமபத வாச
    விருக்கும் பக்கம் நாலுகால் மண்டபத்தில் வேத் விண்ணப்பமாகி தீர்த்தம் விடாய்
    பருப்பு கோஷ்டியாகி பரமபத வாசல் திறந்து வெளியே எழுந்தருள்வது. வரிசை
    யாய் உபயங்கள் கண்டருளிக்கொண்டே யெழுந்தருள்வது.முன்னம் புறப்பாடான
    வடனேயே எம்பெருமானார் தமது ஸன்னிதியிலிருந்து ஆழ்வார் ஸன்னிதிக் கெழுந்
    தருளி ஆழ்வார்களுடன் தவுட்டரை வாசலுக்குநேராக மணல்வெளியில் ஸ்ரீராமன்
    ஷன்னிதிக்கு எதிர்ப்புறத்தில் பந்தலில் மூவரும் (பராங்குச பரகால யதிவரர்கள்)
    எழுந்தருளியிருக்க, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் ஸேவிப்பதும், பெருமாள் எழுந்தருளும்
    போது ஆழ்வார் எதிர்நோக்கி விரைந்தெழுந்தருள்வதும், பெருமாள் ஒய்யார
    நடையுடன் ஆழ்வார் வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் என்றதும், பெருமாள்
    தானென்னை முற்றப்பருகினான் என்னும்படி யிருந்ததும் ப்ரத்யபி ஞை கொள்ள
    லாம்படியே யிருக்கும். பிறகு ஸ்ரீரங்கராஜஸ்தவ சாத்துமுறை குணதுங்கதயா தவ
    ரங்கபதே சுத்வம் மீநபாநியநயேந இரண்டு ச்லோகங்களையும் சாற்றி ஸ்ரீ பராசரபட்
    டார் : தனியனும் ஸேவித்தானபிறகு பெருமாள் கனவேகமாகத் திரும்புவது பகவதஸ் த்வராயை நம: என்ற பட்டர் ஸ்ரீஸ + தியை நினைப்பூட்டும். நாடோறும்
    இது வ க்ரமம். பிறகு ஆழ்வார்கள் மரியாகை. அந்தந்த நாளில் திருவாய்மொழி
    யில் எந்த பத்து ஸேவிக்கப்ராப்தமோ, அதில் முதற்பாட்டு ஆழ்வார் திருமுன்பே
    அரையர்தொடங்கி ஆழ்வாரைப் பெருமாள் பக்கலிலே எழுந்தருளப் பண்ணுவ
    3 தம் படியேத்தமும திருவந்திக்க ப்பும் திருமாமணி மண்டபம் ஆஸ்தானம் சோவ
    தும் நித்யக்ரமம் .

    ஏழாந்திருநாளன்று ஆழ்வார்க்கு நாச்சியார் திருக்கோலம். [கங்குலும்
    பகலுர் பதிகத்தில் ஆழ்வார் நாயகீஸமாதியிலிருந்தது பற்றி.]அந்தத் திருக்கோ
    லத்தடன் கொட்டகையில். அன்று ஆழ்வானருளிச்செய்த ஸ்ரீஸ்தவமும் பட்ட
    ரருளிச்செய்த ஸ்ரீ குணாத்னகோசமும்லேவிப்பது விசேஷம. ஸ்ரீரங்கராஜஸ்தவம்
    பூர்வச கம் சாத்தாகும். பெருமாள் எழுந்தருளி (நாச்சியாரான ) ஆழ்வாரைக்
    கண்டு மோஹித்து. கொட்டகை யுகஸவம எல்லாம் ஆனபின்பு ஆஸ்தானத்துக்கு
    எழுந்தருள்வதற்குமுன்பு கைத்தல ஸேவை. ஆழ்வார், எதிரே தோளில் எழுந்தருளி
    யிருப்பர். அரையர் (ஏழாம்பத்து. முதல் திருவாய்மொழி) உண்ணிலாவிய பத்தப்
    பாட்டு ஸேவிக்கபின்பு கைத்தலஸேவை. அப்போது கெங்குலும் பகலும் ஸேவிக்
    கையில் இவள்திறக்கென் செய்கின் யே? என்று கேட்பது உயிரை யுருக்கியுண்
    ணுமென்னும்படியிருக்கும். கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி ” என்ற
    ஆசார்யஹ்ருசுய ஸ்ரீ க்கியைாளிகா ள் நினைத்து உருகுவாகள். பின்பு ராத்ரி
    கங்கலும் பகலும் அபிநயம் வியாக்கியானம். ஒஅந்திப்போதவுணனுடலிடந்தானே ” என்கிறவளவிலே ஹீரண்யவசம் வியா கியானம் அபிநயம் . பினபு அரையர் திருக்
    கையால் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் ஸாதித்தால் பின்பு (விட்டளிடம்தொடங்கி)
    க அலைகடல் கடைக்கவராமுத்த தொடங்கி ஏழாம்பத்தை ஸேவித்து முடிப்பது.
    திருப்பாவாடை வெள்ளிச்சம்பா கோஷ்டி, புறப்பாடு. ஏகாந்தஸேவை இவை
    யதாக்ாமம்.

    எட்டாந் திருநாள் ஜயவிஜயர்களுக்கு முன்பாக குதிரை நம்பிான்மேல்
    வீற்றிருக்கும் நிலை கண்ணுள் நின்ற லாத தொன்று. வேகவிண்ணப்பம். அங்கே
    தீர்கதகோஷ்டி. கிருவாசல் திறப்பகி லையி று. மணல்வெளியில் திருவேடுபறி
    *வாடினேன் வாடி கொடங்கித் கிருமங்+ையாழ்வாருடன் திருமாமணி மண்டபம்
    சேர்தல். இரவு பக்து மணிக்கு நெடுமாற்ஈடிமை அபிநய வியாக்கியானம.

    பத்தாந்திருநாள் மாலை மூன்று மணிக்கு புறப்பாடு . திருவாசல்திறந்து
    சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி (பரீ சடகோபனுக்கு). அதற்குமு ைகாலையி
    லேயே ஆழ்வார்க்கு அலங்காரத் திருமஞ்சனம். திருத்துழாய் வளையம் திரு
    மாலை பன்னனிரு திருமண் காப்புடன் திரு வ டிதொழ ஸித்தமாக ரஹி பச்ய சரி
    ராணியென்று விரஹம் தின்ற வுடம்பைக் காட்டுகிறாரென்னும்படி தீகழ்வதானது
    மரங்களுமிரங்கும் வகையிலே உருக்கி யுண்டிடும். அக்கோலத்தடன் ஸ்ரீங்க
    ராஜஸ்தவ ஸேவை. குணதுங்கதயா சாத்துமுறையாகி திருமாாணி மண்டபம்
    ஆஸ்தானம். ராத்திரி பெருமாளுக்கு அசீதி கலசத் திருமஞ்சனம் பின்பு
    அலங்காரம் திருப்பணியாரம் பன்னீராயிரம் அமுதுசெய்து; அரையர் எழுந்தருளி*தாளதாமரை வியாக்கியானம் பத்தாம்பத்து ஸேவை சூழ்விசும்பணி முகில்
    வரைக்கும். திருவடிதொழ எழுந்தருளும்போது சசூழ்விசும்பும், திருவடி
    தொழும்போது முனியே நான்முகனும் அரையர் ஸேவிப்பது. முனியேநான்)
    முகன் ஒவ்வொரு பாட்டையும் இருமுறை ஸேவிப்பது. அது தலைக்கட்டுமள
    வும் ஆழ்வார் பெருமாள் திருவடியிலே வேரற்ற மரம் போலே கிடப்பதும் திருத்
    துழாய் பணிமாறித் திருமேனியை மறைப்பதுமான வைகரி மரங்கள்போல்
    வலியநெஞ்சினரையும் இரும்புபோல் வலிய நெஞ்சினரையும் இறையிறை
    யுருகச்செய்யும்.
    பகற்பத்திற்போல இராப்பத்திலும் ஆழ்வார்கள் திரும்பி யெழுந்தருளுகை
    யில்ஸ்தோத்ரபாட கோஷ்டியும் நம்மாழ்வார் ஸன்னிதி வாசலில் பஹுமான
    மும் எம்பெருமானார் ஸன்னிதியில் சாத்துமுறை கோஷ்டியும் குறையற நடை
    பெறும். இந்த க்ரமங்களை ஆதிகாலத்தில் ஏற்பாடுபண்ணி யருளின ஆசாரியர்
    களின் திருவுள்ள வைசால்யத்தையும், இன்ன இன்னபடி அமைக்கவேணு
    மென்றதோற்றங்களையும் நெஞ்சால் நினைக்கவும் அதிகாரிகளில்லை .திருமழிசைப்
    பிரான் என்மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை. என்று பேசிக்கொண்டார்.
    அந்த திவ்ய ஸ்ரீஸூக்திகள் இங்ஙனே நறுமணங் கமழும்படி செய்துவைத்த
    மஹாசாரியர்களின் மதிக்கு மண்ணும் விண்ணுமெல்லாம் [உபயவிபூதியும்] விலை
    போராதே. பத்தாநாள் திருவடிதொழுத உத்ஸவம். தலைக்கட்டிப் பெருமாள்
    மூலஸ்தானம் சேர்வது மறுநாள் பிற்பகலிலாகும். அமுதனார் திருவம்சஸ் தர்
    களின் மிரசாகும் இயற்பா ஸேவை. ஆனால் அவர்களுடைய சரத்தாலோபத்
    தாலே அரையர்களே இயற்பாவையும் ஸேவித்து வருகிறார்கள் சில காலமாக.
    அது அன்றிரவுதான் ஆஸ்தானத்திலே நடைபெற்று மறுநாள் தீர்த்த விநியோக
    கோஷ்டியாகும். அன்றுதொடங்கியே ஸ்ரீரங்கநாச்சியார்ஸன்னிதியில் ஐந்துநாள்
    பகற்பத்தும் ஐந்துநாள் இராப்பத்தும் நடைபெறும். அதில் தொடக்கமெல்லாம்
    அரையர்களுடையது. ஸேவிப்பது அத்யாபகர்களுடையது.

    ஸ்ரீமந்! ஸ்ரீரங்கரியமனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய.

    கோயில் ப்ரஹ்மோத்ஸவங்களில் அநுபவத்தைப்ற்றியும் சிறிது விஜ்ஞாபிக்
    கிறேன். தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய நான்கு

    அந்தோநந்தக்ரஹணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நொகாகுஹரநிஹிதோ
    நீயதே நாவிகேந, புங்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி
    த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகேந்த்ரோதயாலு
    சு வேதாந்த தேசிகன்
    ந்யாஸத்திலகத்தில் அருளிச்செய்த சுலோகமிது. எம்பெருமா ருடைய ஸம்பந்தத்
    தினால் நாமெல்லாம் உஜ்ஜீவித்துப்போகிறோம் என்கிறது இதில். மூன்று பாதங்
    களில் மூன்று த்ருஷ்டாந்தங்களை யருளிச்செய்கிறாரிதில். ரங்நே என்று ஸ்ரீரங்க
    நாதனை விளித்துச் சொல்லுகிறார். [அந்த: அநந்தக்ரஹணவசகஸ் ஸந் யாதி]
    வழிநடந்து செல்லவேண்டிய குருடன் கண்தெரிந்தவொருவனைத் துணைகொண்டு
    செல்லுகிறான். (பங்கு: நௌகா குஹர ஹிதஸ் ஸத் நாவிகேந நீயதே] ஆறு கடக்க
    வேண்டிய நொண்டியானவன் ஓடக்காரனால் தோணியில் அமர்த்தப்பட்டுக் கடந்து
    செல்லுகிறான். ஆக இந்த இரண்டு திருஷ்டாந்தங்களினால் ஜ்ஞானஹீனனான சிஷ்
    யன் ஜ்ஞானவானான ஆசார்யனைக்கொண்டு கரையேறுகிறான்; அனுஷ்டானஹீன
    னான சிஷ்யன் அநுஷ்டான ஸம்பன்னனான ஆசார்யனைக்கொண்1 கரையேறுகிறான்
    என்று தெரிவிக்கப்பட்டதாகிறது. ஸமாநகாலஸ்தரான ஆசாரி ‘ய சிஷ்யர்களுக்கு
    இவ்விரண்டு தருஷ்டாந்தங்களும் இணங்கும். ஆயிரமாண்டுகட்கு முன்பெழுக்
    தருளியிருந்த எம்பெருமானார்க்கும் இப்போதிருக்கும் அஸ்மதாதி களுக்கும் இணங்
    கும்படியாக மூன்றாவது த்தருஷ்டாந்த மருளிச்செய்கிறார். [புங்க்கே போகாந் அவிதித
    பஸ் ஸேவகஸ்ய அர்ப்பகா ] ஆயிரமாண்டுகட்கு முன்பு ஒரு மஹாப்ரபு இருந்
    தான்; அவனிடம் அமாத்யனாக இருந்து ஸேவைபண்ணினவொருவன் அபரிமித
    மான பொருளையீட்டி நிதிவைத்திட்டான்; அதன் வட்டியை அவ்வமாத்யனுடைய
    பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வம்சபாரம்பர்யேண அநுபவித்து வருகிறார்கள்.
    அவர்கள் அரசனையும் கண்டவர்களல்லர், ( தங்கள் கூடஸ்தனான) அமாத்யனையுங்
    கண்டவர்களல்லர் ; ஆயினும் கூடஸ்தர் சேமித்துவைத்த நிதிபை நிராக்ஷேபமாக
    அநுபவித்துவரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.(ததா தவத்ஸம்ப்ரப்தௌ ப்ரபவதி
    (க8 ) தயாளு: தேசிகேந்த்ர] கீழேகாட்டிய மூன்றாவது தருஷ்டா தத்தின்படி பரம
    காருணிகரான எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தைக்கொண்டு க ங்கள் வாழ்ந்து
    போகிறோமென்கை.

    ஆசைலாத் அத்ரிகந்யா சரணகிஸலயந்யாஸதந்யோபகண்டாத் ஆர க்ஷாநித தா முக
    கமல ஸமுல்லாஸ ஹேதோச் ச ஸேதோ:, ஆ ச ப்ராச்ய ப்ரதீச்யக்ஷிதி ரயுகலாத் ஸூ ய
    சந்த்ராவதம்ஸாத் மீமாம்ஸா சாஸ்த்ரயுக்மச்ரமவிமலமநா: ம்ருக்யதாம் மாத்ருசோந்ய:
    இந்த ச்லோகம் ஆளவந்தார் இளம்பிராயத்தில் [வித்யார்த்தி தகையில்] சோழராஜ
    ஸபைக்கு விடுத்தது. இ வந்தந் தொடங்கி யிருங்கடலளவும், கீழ்த்திசை
    மேற்றிசை யளவும் ஆக நாற்றிசையினுள்ளும் உபயமீமாம்ஸைகளிலும் கைதேர்ந்த
    வித்வான் என்னைப்போன்ற வொருவனைத் தேடிப்பிடியுங்கள் என்றாறு. குருபரம்
    பரா ப்ரபாவ நூலில் ஆளவந்தார் வைபவத்தில் விரிவுகாண்க. இபஙனங் கூறியது
    தற்புகழ்ச்சியாகாது. நன்னூலாசிரியர் *தோன்றா தோற்றித் துறைபலமுடிப்பினும்,
    தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்று முற்படக்கூறி, உடனே மன்னுடை
    மன்றத் தோலைத் தூக்கினும், மன்னிய அவையிடை வெல்லுறு பொ தினும், தன்னைமறுதலை பழித்தகாலையும், தன்னுடையாற்ற லுணராரிடையினும், தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே என்றார்

    இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந, நசா ச்ருஷவே வாசியம் நச மாம் யோப்ய
    யதி இது கீதையின் முடிவில் கண்ணபிரான் அர் நனுக்குக் கூறியது.
    கீதாசாஸ்த்ரத்தின் அருமைபெருமை விளங்குவதற்காகக் கூறின சுலோகமிது.
    இன்னாரின்னார்க்கு இதை நீ உபதேசிக்கலாகாதென்று தடையிட்டுக் கூறுவதாமிது,
    கீதையின்தொடக்கத்திலேயே கூறியிருக்க வேண்டுமிது; இவ்வளவு அரியபெரிய
    பொருள்களை இவனுக்குச் சொல்லப்போகிறோமென்று முதலில் கண்ணபிரானுக்கும்
    தெரியாதுபோலும், தன்னையுமறியாமல் சொல்லித் தலைக்கட்டினபிறகு பொருள்
    களின் சீர்மையை நோக்கி இங்ஙனே நிபந்தனை செய்கிறபடி. இதில் (தே) என்றது
    த்வயா என்றபடி. இதம் அதபஸ்காய ந வாச்யம் : அபக்தாய ந வாச்யம் ; அசுச்
    ரூஷவே வாச்யம் : மாம் ய. அப்ய யதி தஸ்மை ச ந வாச்யம் – என்றுநான்கு
    கட்டளைகள். ஆசார னனுக்குச் சொல்லலாகாது : பக்தியில்லாதவனுக்குச்
    சொல்லலாகாது ; சுச்ரூஷை பண்ணாதவனுக்குச்சொல்லலாகாது; எனது கல்யாண
    குணங்களைச் சொல்ல, அது பொறாதே நிந்திப்பவனுக்குச் சொல்லலாகாது
    என்றபடி.

    ஈசாநாம் ஐகதாம் அ சதயீதாம் நித்யாஙபாயாம் சரியம் ஸம்ச்ரித்ய, ஆசரயணோ
    சிதாகிலகுணஸ்ய அங்க்ரீ ஹரேராச்ரயே, இஷ்டோபாயதயா, ரியா ச ஸஹிதா
    யாத்மேச்வராயார்த்தயே கர்த்தும் தாஸ்யமசேஷமப்ரதி தம் நித்யம் த்வஹம்
    நிர்மம பட்டர் ஸாதித்த அஷ்ட ச்லோகியில் ஆறாவது சுலோகமிது. கீழ்
    ஐந்தாவது சுலோகமான * நேத்ருதவம் நித்ய யோகம் இத்யாதியும் இந்த ஆறாவது
    சுலோகமும் த்வயமென்கிற மந்தரரத்னத்தின் பொருள் விவரணமாக அமைந்தவை)
    பூர்வகண்டமென்றும் உத்தரகண்டமென்றும் இரண்டு கண்டமாக அமைந்துள்ள
    த்வயமந்த்ரத்தின் திரண்டபொருளை யருளிச்செய்கிறாரிதில் ‘உலகங்களுக்குத்
    தலைவியாய் ஸர்வேச்வரனுக்கு ப்ராணவல்லபையாய் ஒருபோதும் விட்டுப்பிரியாத
    வளாயிருக்கிற பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகப்பற்றி சரணவரணத்திற்குப்
    பாங்கான ஸகலகுணங்களையுமுடைய எம்பெருமானுடைய திருவடிகளை இஷ்ட ஸாதநமாகப் பற்றுகின்றேன் ‘ என்று பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்து ‘பெரிய
    பிராட்டியாரோடு கூடியிருந்துள்ள ஸர்வசேஷியான நாராயணனுக்கு கைங்கர்யத்தில்
    களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன் ஸகலவித கைங்கர்யத்தையும் இடை
    யூறும் இடைவீடுமின்றிச் செய்யும்பொருட்டு ப்ரார்த்திக்கின்றேன்’ என்று உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்து இனியராகிறார். பெரியபிராட்டியார்க்கு இதில் மூன்று விசேஷணங்களிடுகிறார். இவற்றுக்குத் திருவுள்ளமேதென்னில்; கேண்மின். பிராட்டியின்புருஷகாரம் அவ்வளவு காரியம் செய்யுமோ என்கிற சங்கைக்குப் பரி
    ஹாரமாக முதலிரண்டு விசேஷணங்களமைந்தன. இவள் சேதநர்களனைவர்க்கும் மாதாவாய் அந்த ஸம்பந்தமடியாக இவர்களுடைய வருத்தம் கண்டுபொறுத்திருக்க மாட்டாதேயிருக்கிறவொரு தன்மையும், எம்பெருமானுக்குப் பத்தினியாய் பித்தர்பனிமலர்மேல் பாவைக்கு * என்கிறபடியே அவன்தன் கைலக்ஷண்யத்தைக் கண்டு
    பிச்சேறித் தன்சொற்படி நடக்கும்படி அபிமத விஷயமாயிரு கிறவொரு தன்மையும்
    உடையளாகையாலே ஒருவகையாலும் பழுதாகமாட்டாத புருஷகாரம். உலகில்
    புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும். எவர் விஷயத்தில்
    புருஷகாரம் செய்யவேண்டுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்க
    வேண்டியதொன்று. யாரிடத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவரிடத்தில் தம்
    வாக்கு வெற்றிபெற்றே தீரும்படியான வால்லப்ய மிருக்கவேண்டியது மற்றொன்று.
    இவ்விரண்டும் பிராட்டியின்பக்கல் புஷ்கலமென்பது இவ்விரண்டு விசேஷணங்களி
    னாலும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.நித்யா பாயாம்’ என்கிற மூன்றவது விசே
    ஷணத்தினால் எம்பெருமானை ஆச்சயிக்க ருசியே வேண்டுவது,காலம்பார்க்க
    வேண்டாவென்பது காட்டப்படுகிறது. பிராட்டி எப்போது எம்பெருமானோடு
    கூடியேயிருக்கின் ாளென்று தெரிந்துகொள்ளுமளவில் ‘புருக்காரஞ் செய்பவள்
    அருகேயிருக்குங் காலம்பார்த்து ஆச்ரயிக்கவேணும்’ என்று ஸமயப்ர க்ஷை
    வேண்டியதில்லை என்பதும் தெரிந்துகொண்டதாகுமன்றோ! இந்த ச்லோகத்தில்
    ஆச்ரயே, அர்த்தயே’ என்கிற உத்தமபுருஷக்ரியா பதங்களை பரயோகித்திருக்கை
    யாலே த்வயத்தின் அர்த்தத்தைத் தாம் வியாக்கியானிக்கின்ற அளவேயன்றிக்கே
    தம்முடைய அநுஷ்டானசேஷமாகவும் கொண்டருளினாரென்கிற விசேஷம் உணரத்
    தக்கது.

    ஈசா நாம் ஐகதோஸ்ய வேங்கடபதே: விஷ்ணோ: பராம் ப்ரேய ம் த வக்ஷஸ்ஸ்தல
    நித்யவாஸரஸ்காம் தத்க்ஷாந்திஸம்வர்த்திநீம், பத்மாலாங்கருதபா ணிபல்லவயுகாம்
    பத்மாஸநஸ்தாம் சரியம் வாத்ஸல்யாதிகுணோஜ்வலாம் பகவதிம் வந்தே ஜகங்
    மாதரம்
    அஸ்மத்குல கூடஸ்தரான ப்ரதிவாதிபயங்கரம் அல ணன் அருளிச்
    செய்த* கமலாகுசசூசுகேத்யாதி ஸ்ரீவேங்கடேசஸ்துதியின் முடிவிலுள்ள சுலோக மிது.அலர்மேல்மங்கைத் தாயார் விஷயமான துதி “‘இவ்வு குக்கெல்லாம்
    ஈச்வரியாயும், திருமலையப்பனுக்கு ப்ராண வல்லபையாயும், அவமது திருமார்பி
    லேயே நித்யவாஸஞ் செய்வதில் விருப்பமுடையவளாயும், அப்பெருமானுடைய
    க்ஷமாகுணத்தை வளரச்செய்பவளாயும் தாமரை மலரினால் அலங்கரிக்கப்பட்டுப்
    பல்லவம்போன்ற இரண்டு திருக்கைகளையுடையளாயும், தாமரைத்;விசில் வீற்றி ருப்பவளாயும் வாத்ஸல்யம் முதலிய குணங்களால் திகழாநின்றவளாயும், பரம்
    பூஜ்யையாயும், உலகுக்கெல்லாம் தாயாயுமிருக்கின்ற அலர்மேல்மங்கைப் பிராட்
    டியை அடியேன் வணங்குகின்றேன்’ என்பது இதன் கருத்தாம். * அஸ்யேசாநா
    ஜகதோ விஷ்ணுபத்நீ என்றச்ருதிச் சாயையிலே பணித்ததாயிற்று ப்ரதமபாதம்,
    ” அவன் மார்பை விட்டுப்பிரியில் இவ்வக்ஷரம் விட்டுப் பிரிவது ” என்கிற ஸ்ரீ ஒக்
    திக்குச்சேர தத்வஸ்தல நித்யவாஸ ரஸிகாம் என்றது. * அஸ்த கர்மார்
    பலதே பத்யெள கருத்யத்வயம் சரிய :,நிக்ரஹாத் வாரணம் காலே ஸந்துக்ஷண
    மனுக்ரஹே” என்கிற தேசிக ஸ்ரீஸூக்தியை யுட்கொண்டு தத்க்ஷாந்தி ஸம்வர்த்
    திநீம் ” என்றது. “புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலை
    யெடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம் ” (முமுக்ஷப்படி) என்றவிடத்து அர்த்த விசேஷங்கள் இங்கே அநுஸந்தேயம். பத்மாலங்க்கதேத்யாதி
    மூன்றாம் பாதத்தில் பத்மப்ரியே பத்மி பத்மஹஸ்தே * இத்யாதி ஸ்ரீஸூக்தம்
    அநுஸந்தேயம். வாத்ஸல்யாதி குணோஜ்வலாம் என்றவிடத்தில் சு ஸஹதர்மசரீம்
    சௌரேஸ் ஸம்மந்த்ரிதி ஜகத்திதாம், அநுகரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத க்ர
    ஹாம் * என்ற தேசிக க்தியை ஸ்மரிப்பது, ஆக இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த
    பிராட்டியைத் தொழுகின்றேன் என்றது.

    உல்லங்கிய ஸிந்தோஸ் ஸலிலம் ஸலீலம் யச் சோகவஹ்ம் ஜநகாத்மராயா:, ஆதாய
    தேவததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்விராஞ்ஜநேயம்
    ஸ்ரீராமாயணபாராயணம்
    செய்பவர்கள் யாவரும் பாராயணத் தொடக்கத்தில் அநுஸந்திக்குப் பல தனியன்
    களில் இதுவொன்று சிறிய திருவடியைப்பற்றியது. இந்த சுலோகத்தின் பொருள்
    அற்புதமானது.திருக்குறுந்தாண்டகத்தில் முன்பொலா விராவணன்றன்
    முதுமதிளிலங்கை வேவித்து, அன்பினாலனுமன் வந்து ஆங்கடியிணை பணிய என்
    றருளிச் செய்தபடி இலங்கையை எரித்த அனுமன் எங்கிருந்து நெரு பு கொணர்ந்
    தார்? என்று ஒருவர் கேட்டாராம் : அரக்கர்கள் தம்முடைய வாலில் வைத்த
    நெருப்பைக்கொண்டு எரித்தார் -என்று மற்றவர் விடைகூறினராம். I ஃது உண்மை
    யன்று; ஸீதாபிராட்டியின் திருவுதரத்திலே சோகமாகிற நெருப்பு நிறைந்து
    கிடந்தது ; அதை வாரியெடுத்துக்கொண்டுபோய் அதனாலேயே இலங்கை முழுவ
    தையுங் கொளுத்தினாரென்று சமத்காரம் பொலியச் சொல்லுகிறது இத்தனியனில்;
    (ஜநகாத்மஜாயா: சோகவஹ்ம் ஆதாய தேநைவ லங்காம் ததா ஏவகாரத்தி
    னாலே வேறு நெருப்பினாலன்று என்று மறுத்துக் கூறுகிறபடி. பிராட்ட பட்ட வருத்
    தந்தீர இலங்கையைக் கொளுத்தினாரென்பது பரமதாற்பரியம். கஞ் ன் வயிற்றில்
    நெருப்பென்னநின்ற நெடுமாலே! என்ற திருப்பாவைப் பாசுரத்திலும் இங்ஙனே
    கருத்துக் காணலாம்.திருவாய்ப்பாடி ஆய்ச்சிமார்களின் உள்ளத்திலிருந்த அச்ச
    மாகிற நெருப்பைக் கொண்டுபோய்க் கண்ணன் கம்ஸனது வயிற்றில் கொட்டினன்
    என்னலாம்.

    இவ்வாண்டு எனது திருப்பாவையுபந்யாஸம் நாற்பத்தைந்தாமாண்டென்று
    பரிகணிக்கப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் ஸ்கூல் ஹாலில் பகவத்ததா
    ப்ரஸங்கஸபையின் மூலமாக இருபத்தேழு ஆண்டுகளும், உப்பட்டூர் ஆழ்வார்
    செட்டியார்சாரிடியில் ஸத்காலக்ஷேப ஸபையின் மூலமாகப் பதினெட்டு ஆண்டு
    களும் ப்ரவசனம் நடைபெற்றிருக்கிறது. இவை தவிர, திரு வல்லிக்கேணி
    ஸ்ரீ பார்த்தஸாரதி யெம்பெருமான் ஸன்னிதியில் ஓராண்டும், சென்னை வாணீ
    மஹாலில் இரண்டாண்டுகளும் நடந்திருக்கிறது-தொண்டை மண்டலம் ஸ்கூல்ஹாலில் இருபத்தேழாண்டுநடந்த காலத்தில் ஸ்ரீ ராமாயண ப்ரவசனம் இரு முறையும்,பகவத் கீதா, ஸ்ரீ பாகவத தசமஸ்கந்தம், ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னம், திருமந்த்ரார்த்தம், ஆசார்ய
    ஹ்ருதயம், ஸ்ரீ வசன பூஷணம், பகவத் விஷயம் இவற்றின் ப்ரவசனமும் நடை
    பெற்றிருக்கிறது.

    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –