ஸ்ரீ கீதா தத்வ உபதேசமும் -ஸ்ரீ ஆழ்வார்கள் -தத்வ தர்சன- ஸ்ரீ ஸூக்திகளும்-ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி-71–

(எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு-நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-மெய்யான ஞானம் இல்லாதாராய் –உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவ ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.-‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால்-காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து -‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்-தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;அதனை அருளிச் செய்கிறார்.

முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எல்லை இல் ஞானத்தன் – மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்-மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும்
உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
–10-10-10-

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
.–4-7-7-

பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-குற்றம் அறும்படியாக நினைத்து.-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே -நமக்காக -ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே-உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை-நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
.–4-10-9-

உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே-பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்
–5-

தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே, கலங்கி நிற்பவனாய், சரணமடைந்தவனான, அர்ஜுனனைக் குறித்து,
கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது நாடு திருந்த ––சூரணை-229 –தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –என்னும்படி திருந்துகைக்காகவும் —

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.
–4-8-6-

சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்ம பிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –
ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

————

1-தத்வ விவேக

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்
—৷৷2.12৷৷

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –எப்போதும் நான் உள்ளவனே யாவேன்-நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்-இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே-நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—
৷৷2.13৷৷

இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான்-என்னுள்ளான் -என்ன வேண்டும் இடத்திலே அடியேன் உள்ளான் என்றது -அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –-உடல் உள்ளான்-சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே
–8-8-5-

தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை

—————-

2-நித்யத்வாநித்யத்வ

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷
1.2.19 ৷৷

இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.-கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
—৷৷2.20৷৷

ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை – இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் –அழிவற்றவன் –பரிணாமம் அற்றவன் –பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை -விகாரங்கள் -சரீரத்துக்கு – வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ
—৷৷2.22৷৷

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் – அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே – நல்ல சரீரம் தான் கிட்டும் –

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக-அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக–திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,-‘உயிர் யாக்கைகள்’ என்கிறார்.மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-அது தோற்றி நசிக்கும் இது கர்ப்பத்தில் நசிக்கும் தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

————
3-நியந்த்ருத்வ

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும் மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷

தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –
ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக 

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்-அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
–1-1-7-

சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது – ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல்லிற்று-ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று  யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும்

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்-பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –அதி ஷூத்ர சரீரங்களிலும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-அன்யைரத்ருஷ்டனாய்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்-இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்-இப்படி த்ருட பிரமாண சித்தன்-இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும்-தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்-ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் – ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே-அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்-என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்-எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது 

———–
4-சௌலப்ய

சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில் சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம் ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பெறற்கு அரிய ஸ்வாமிகள்-ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை-உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –-எதிர் சூழல் புக்கு -என்றும் -என்னில் முன்னம் பாரித்து-சேதனர்களுடைய அத்வேஷ மாத்திரமே தேடித் திரிபவன் -சுக்ரீவம் நாதம் இச்சதி –கிம் கார்யம் ஸீதாயா மம -என்று இருக்குமவன்-ஆஸ்ரிதற்கு ஸர்வ ஸூலபனாய்-இன்னார் தூது என நின்று சாரத்யாதி இழி தொழில்கள் செய்து நின்றவனே பரத்வம் தோன்ற விஸ்வரூபம் காட்டி அருளினவன் –

—————
5-சாம்ய

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்-எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை-எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்-தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

பற்று -உண்டு சங்கம் –அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்று இலான்
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி -ஈஸ்வரனும்
ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்–நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்-அவனுடைய முற்றிலும் அடங்கு – எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி-நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து – நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது-அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு – அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று- மாதா மிதா ப்ராதா —-வா ஸூ தேவஸ் சர்வம் – உண்ணும் சோறு பருகும் நீர்-சேலேய் கண்ணியர்-

—————-

6-அஹங்கார இந்திரிய தோஷ பல-(அஹங்கார தோஷ)-(இந்திரிய பல)

ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ-
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
—৷৷3.27৷৷

தேகமே ஆத்மா எனும் அஹங்காரத்தால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன்
பிரக்ருதியைச் சேர்ந்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாகிற குணங்களால் பல வகைகளில் செய்யப்படும் கர்மங்களைக் குறித்து -நானே செய்கிறேன் -என்று மயங்குகிறான் 

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3-

அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-இவற்றை சவாசனமாகப் போக்கி-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

குந்தீ புத்திரனே அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும் மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன-இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் — பிரத்யனம் செய்தாலும் — இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
–7-1-6-

அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இறே -ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள் விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? 

—————-

7-மன பிராதான்ய

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்
–৷৷6.34৷৷

மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் – வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது-அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம்ஸயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் —
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
—৷৷6.35৷৷

பகவான் கூறினார் -நீண்ட கைகளை உடையவனே -மனம் அடக்க அரிது – அலை பாய்வது என்பதில் ஐயம் இல்லை -குந்தீ புத்திரனே – அதனைப் பயிற்சியினாலும் வைராக்யத்தாலும் கட்டுப்படுத்தலாம் –

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
–5-1-4-

பரமை காந்திகளே போலே -உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தை கொள்வன்-என்று சொல்லா நின்று வைத்து-வலிய களவாவது -சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார்-உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்–இப்படி நீ என்றால் உடை குலைப் படாத படி உன்பக்கலிலே நெருங்கும் படி சேர்த்து-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் 

————–

8-கரண நியமன

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –

தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–
৷৷6.12৷৷

பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் – மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால் மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் – சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

ஸர்வ த்வாராணி ஸம் யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச.–
மூர்த் ந்யாதா யாத்மந ப்ராணமாஸ்திதோ -யோக தாரணாம்—৷৷8.12৷৷

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநு ஸ்மரந்.–
யம் ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷

அறிவு வெளிப்படும் த்வாரங்களாய் இருக்கும் எல்லா ஞான இந்த்ரியங்களையும் -தமது தொழிலைச் செய்யாத படி –அடக்கி -மனத்தை ஹ்ருதய கமலத்தில் இருக்கும் அக்ஷர புருஷனான என் இடத்திலே அசையாத நிலையை அடைந்தவனாய் -ப்ரஹ்மம் ஆகிற எனக்கு வாசகமான பிரணவம் ஆகிற முக்கிய அக்ஷரத்தை சொல்ல நிற்பவனாய் -அதற்குப் பொருளான என்னை அநுஸந்தியா நிற்பவனாய் – தன்னுடைய பிராண வாயுவை தனது தலையிலே -தலையில் இருக்கும் ஸூஷ்ம்நா நாடி -வழியாகப் பிரவேசிக்கச் செய்து -சரீரத்தை விடுகின்றவன் எவனோ அவன் சம்சாரத்திற்கு திரும்பி வருதல் இல்லாத
ப்ராப்யமான ப்ரக்ருதி வியுக்தமான தன் ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறான் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்-ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து-வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்-

———–
9-ஸூஹ்ருதி பேத

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –(அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷-தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக
ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக –)ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
–4-1-1-

ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.
–4-1-8-

பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.
–4-1-10-

ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன – கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
இவை பத்தும்அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

————-

10-தேவாஸூர விபாக-

தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷

குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு-தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு –அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே )தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

த்வௌ பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு--৷৷16.6৷৷

குந்தீ புத்திரனே இந்த கர்ம லோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே
.–6-3-8-

தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
–10-7-5-

விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

———

11-விபூதி யோக

ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே–—৷৷10.19৷৷

குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே — ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

ஆதித்யாநா மஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவி ரம்ஸூமாந்.—–
மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்ராணா மஹம் ஸஸீ-–৷৷10.21৷৷

துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷

வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்-தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-

யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் ) அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ்நம் ஏகாம் ஸேந ஸ்திதோ ஜகத்-—৷৷10.42৷৷

அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன் நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—

புகழும் நல் ஒருவன் என்கோ!-(3-4)பிரவேசம்-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ்ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு –முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்- இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துஅதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-தமக்கு அவனால் அல்லாது செல்லாத படியும் அவனுக்கு தம் ஆர்த்தி தீர்க்க சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் தம் அபேக்ஷிதம் செய்யாமைக்கு அடி தம்மை இங்கே வைத்து தான் நினைத்த கார்யம் தலைக் கட்டுவானாக நினைத்தது என்றும் அறியாதே எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே -ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –

புகழும் நல் ஒருவனில் சம்சயம் -நல்குரவிலே விருத்த விபூதி-மாயா வாமனன் ஆச்சார்ய விபூதி ஆகாரம்

————-

12-விஸ்வரூப தர்சன

ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் – மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய் -பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

அர்ஜுந உவாச-
பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்-–৷৷11.15৷৷

அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
அவ் வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் – உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும் ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-

ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும்-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.-பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –கீழ் தூது விடுகிறவற்றுக்கு அங்குப் போனால் சொல்லும் வார்த்தையாக இவள் சொன்ன பாசுரத்தால் வந்த-ஆர்த்த நாதத்தாலே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தெல்லாம் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை அறிவிக்கைக்கு ஷமர் இல்லை என்று பார்த்து தம்முடைய ஆர்த்த த்வனியாலே அழைத்துக் கொள்வாராக நினைக்க
தம்முடைய ஜகதாகாரத்தையைக் காட்டி யருளி -நீர் என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று அருளிச் செய்ய ஜகத் சரீரியாய் இருக்கிற இந்த ஞான லாபத்தால் போராது -உன்னுடைய அசாதாரண விக்ரஹத்தை எனக்கு காட்டி அருள வேணும் என்று வைஸ்வரூப்யத்தைக் கண்ட அர்ஜுனன் -சதுர் புஜமாய் பிரசன்னமான வடிவைக் காண வேணும் என்று அர்த்தித்தால் போலே விடாய் எல்லாம் கெட சங்க சக்ராதி பூஷிதமான அப்ராக்ருதமான வடிவோடே தோற்றி அருள வேணும் என்று பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் இருப்பும் நிலை குலைந்து வந்து முகம் காட்ட வேண்டும் படி கூப்பிடுகிறார் – என்னுடைய ஆர்த்த த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் அழியப் புகா நின்றது -என்னுடைய ரக்ஷணத்துக்காக வந்திலையாகிலும் உன்னுடைய விபூதி ரக்ஷணத்துக்காக வாகிலும் வர வேணும் என்று கூப்பிடுகிறார்

————–

13-சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக – அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா -என்னை வணங்குவாயாக என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

(இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

இனி ஒப்பனை அழகு விவரணம்
அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

இனி கல்யாண குண விவரணம்

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

(இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

வேதாந்தேஷு — ‘வேதாஹமேதஂ புருஷஂ மஹாந்தம் ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (ஷ்வே0 உ0 3.8)‘தமேவஂ வித்வாநமரித இஹ பவதி.”நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ (ஷ்வே0 உ0 3.8)இத்யாதிஷு விஹிதஂ வேதந த்யாந உபாஸநாதி (ஆதி- நிதித்யாஸன )ஷப்த வாச்யஂ தர்ஷந ஸமாநாகாரஂ ஸ்மரிதி ஸஂஸந்தாநம் அத்யர்த ப்ரியம் இஹ’மந்மநா பவ’ இதி விதீயதே.மத் பக்தஃ அத்யர்தஂ மத் ப்ரியஃ அத்யர்த மத் ப்ரியத்வேந
ச நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதி ஸஂததிஂ குருஷ்வ இத்யர்தஃ. மத் யாஜீ தத்ராபி மத் பக்த இதி அநுஷஜ்யதே.யஜநஂ பூஜநம்? அத்யர்த ப்ரிய மத் ஆராதந பரோ பவ. ஆராதநஂ ஹி பரிபூர்ண ஷேஷ வரித்திஃ.

மாஂ நமஸ்குரு நமோ நமநஂ மயி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவம் அத்யர்த ப்ரியஂ குரு இத்யர்தஃ. ஏவஂ வர்தமாநோ மாம் ஏவ ஏஷ்யஸி இதி ஏதத் ஸத்யஂ தே ப்ரதி ஜாநே தவ ப்ரதிஜ்ஞாஂ கரோமி? ந உபச்சந்த மாத்ரஂ யதஃ த்வஂ ப்ரியஃ அஸி மே’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத் யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ (கீதா 7.17) இதி பூர்வம் ஏவ உக்தம். யஸ்ய மயி அதி மாத்ர ப்ரீதிஃ வர்ததே மம அபி தஸ்மிந் அதி மாத்ர ப்ரீதிஃ பவதி(என்னதுன்ன ஆவியில் -அறிவார் உயிரானாய் -அவன் மதம் தோன்றும்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்திலே பூரிக்கும் )இதி தத் வியோகம் அஸஹ மாநஃ அஹஂ தஂ மாஂ ப்ராபயாமி? அதஃ ஸத்யம் ஏவ ப்ரதிஜ்ஞாதஂ மாம் ஏவ ஏஷ்யஸி இதி.

(அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் -அறிந்தேன் அவனை நான் -வேத்யம் -இது ஒன்றே உபாயம் வெறும் அறிவு மட்டும் போதாதே –மனனம் த்யானம் அவிச்சின்ன தைலதாராவத்  நிதித்யாஸனம் மூலமே மானஸ ப்ரத்யக்ஷம் -தர்சன சமானாகாரம் -நினைவின் தொடர்ச்சியே தர்சனம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய இவை எல்லாம் ராக பிராப்தி இடைவிடாமல் சிந்திப்பதே விதி ஸ்ம்ருதி சந்தானம் நினைவு எதில் தொடர்கிறது அதுவே -நினைவின் தொடர்ச்சியே அவனைக் காட்டிக் கொடுக்கிறது மனன் உணர் அவை இலன் -மனசாது விசுத்தேனே –அறிய முடியாதவன் என்றே அறியலாம் -நின் புகழின் வைகும் சிந்தை -என்றதே இது நீ அருளும் வைகுந்தத்தை விட இதுவே இனிது -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -புகுந்தத்தின் பின் வணங்கும்  என் சிந்தனைக்கு இனியாய்-மத் பக்த வேட்க்கை மீதூறி -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் -)

(மத் பக்தோ மந்மநா பவ –மத் பக்தோ மத் யாஜீ –மத் பக்தோமாம் நமஸ்குரு.-பக்தியே ஒரே உபாயம் -அன்புடனே அனைத்தும் செய்ய வேண்டும் -பக்தி செய்ய அதே பத பிரயோகம் –இங்கு பக்தி அன்பு அத்வேஷ மாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்)

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய் இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்--৷৷18.62৷৷

அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

இவ்வண்ணமாக ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான மோக்ஷத்திற்கு உறுப்பான அறிவு உனக்கு என்னாலே சொல்லப்பட்டது – இதை முழுவதும் ஆராய்ந்து -உன் தகுதிக்கு ஏற்றவாறு எதை விரும்புகிறாயோ அதை அனுஷ்டிப்பாயாக –

ஸ்ரீ பகவான் உவாச —
இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே
ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-

ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்புற நெறிகளை கட்டு இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யறபறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தேதத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.
–5-2-9-

ஞான விதி பிழையாமே-வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது – பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று – கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
–9-1-7-

இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –-ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை –யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும்-வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

பக்தி உக்தராய் சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை -திகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் -சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

ச அங்க பக்தி –பிரபத்தி -ஆதிகள் -அவதார ரஹஸ்யம் -புருஷோத்தம வித்யை -நாராயணனுக்குக்கே எளியவன் போக்யன் இத்யாதிகள்

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந
—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

எவன் ஒருவன் இலையையோ பூவையோ பழத்தையோ நீரையோ எனக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறானோ – பரிசுத்தமான நெஞ்சுடைய அவனுடைய அத்தகைய அன்பால் இடைப்பட்ட அப் பொருளை நான் உண்கிறேன்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-

ஈசனை –இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது -எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்-நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘-கேவலம் தண்ணீரும் அமையும்-அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்-இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

——————

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

——

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –நின்மலமாக வைத்தவர் –எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து –என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது
-திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிணஅநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வபூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே-சேதன அசேதன சரீரியாய் –-சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா
-18-61- -என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று –சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

6 -சௌலப்ய –தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும் பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ -அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 –இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம் அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும்

11 -கரண நியமன –தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பரவசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 –தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும் தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று தேவாசுர விபாகத்தையும்

14 –விபூதி யோக –ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான்-10-21- –இத்யாதியால் விபூதி யோகத்தையும்

15 -விஸ்வரூப தர்சன –பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான் ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15-இத்யாதியாலே-விஸ்வரூப தர்சனத்தையும்

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -18-66- –ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

இவரும்–1-2 -3–ஜீவ பர பேதமும்-ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்-ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும் மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் –சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்-சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

6 –அவனுடைய சௌலப்யத்தையும் பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும் -பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 –அஹங்கார தோஷத்தையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

9 –இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

10 –மனோ பிரதான்யத்தையும் மனத்தை வலித்து –5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும் உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

12 –ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்-இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன்குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன் –திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 –தேவ அசுர விபாகத்தையும் அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்

14 –விபூதி யோகத்தையும் புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் –இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 –விஸ்வரூப தர்சனத்தையும் –நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

16 –சாங்க பக்தியையும் வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று-அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்-ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும்
உபதேசிக்கையாலே

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன –9-26– என்றார் போலே –பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில் வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

———————————-

அது தத்வ உபதேசம்-இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..

இப் பிரபந்தம் –தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

(தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
—৷৷4.34৷৷நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை ஞானிகள் இடம் அறிவாயாக – ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –)

இத்தால் சொல்லிற்று ஆய்த்து -அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும் மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும் இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..

(ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷)-இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்சேஷியாகவும் இருக்கிறேன்)

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷)எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

(திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
–2-2-1-)பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் – களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே-வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் )

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா -கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம் இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் )

(கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
–9-1-10-)கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் -அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –)

—————

அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச் சொன்னது-இது நாடாக தோற்றோம் என்று ஐ ஐந்து முடிப்பான் சொன்னது –அதாவது -அந்த பிரபந்தம்-அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று-ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே –ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

(ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—
৷৷1.32৷৷)கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை-கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ)

(அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது – உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று
நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது –ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்ககு தானே இவ்வளவும் அருளினான் )

(தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
மா மலையாவது நீர் மலையே–2-4-4-)வென்றி கொண்டு அல்லது மீளக் கடவது அல்லாத மதிப்புடைய பூசலிலே-தான்  ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும்-ஐவரோடும் – பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு-அவர்களோடு உறவு பண்ணி கலந்து –அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –)

இந்த பிரபந்தம் –தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..

(தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-)அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு -ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம்

(சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும்
தன் கண்கள் சிவந்தே–8-7-11-)சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து-ஜென்ம சம்பந்தம் அறும்படி இப்பத்தும் தன் கண்கள் சிவந்து நோக்கும் -அதாகிறது ஜென்மத்துக்கும் இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை -ஜென்மத்துக்கும் இப்பத்துக்கும் சஹா நவஸ்த்தான லக்ஷண விரோதம் உண்டு என்கை –)

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும்–கர்ம இந்திரியங்கள் ஐந்தும்-பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –)

இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

—————————————–

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது-இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது-..-சூரணை -192 ..-அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரியாழ்வார் திருமொழி –1-9-4-என்கிறபடியே ,சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்துநூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று

(நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி
தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக-அர்ஜுனனுடைய அழகியதாய் –திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான் –இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே – என்னைப் புறம் புல்குவான் )

(கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
—৷৷2.7৷৷)மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ-அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக)

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –உபதேச உபக்ரமத்தில் ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று மங்களாசாசனம் பண்ணி –உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை -இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

(ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
–2-2-2-இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் – என்றது என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால்போக்கி ரக்ஷிப்பார் யார் –ரக்ஷிப்பார் இன்னார் என்னாதே ஆர் என்கிறது பிரதிவாதிகளும் இசையை வேண்டும்படியான பிராமண சித்தி-தலை அறுப்புண்டும் தலையை அறுத்து பாதகியாயும்
நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே)

——————————————-

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –

அதில் சித்த தர்ம விதி -இதில் விதி அனுஷ்டானங்கள் -சூரணை -193

அதாவது-அந்த கீதையில் –மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது -இந்த பிரபந்தத்தில் –திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும்அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-இரண்டும் காணலாம் என்கை -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய் நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

(ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-)ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’-தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ-அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –

(அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)“அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், ஸ்வரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச் செய்கிறார்;-அமர்ந்து புகுந்தேனே –-“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே-ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்ய வேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார்-புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வ ஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம பாவத்தையும் ஸர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து,‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்-முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

——————————————–

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்-சூரணை -194- –

அதாவது அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து –இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே -ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் -இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..-ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

(பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-)தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை -வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்)

(மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-)பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை

(கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-)நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே -மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

———————————————–

ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம் –
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு ——–41-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி-

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading