Archive for June, 2026

ஸ்ரீ அண்ட கோளத்தார் அணு – (ஸ்ரீ அண்ட கோள மெய்ப் பொருள்)ஸ்ரீ நம்மாழ்வார் அகவல்–

June 7, 2026

இது ‘மயர்வற மதிநலம்’ அருளப் பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங் கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்க்கு எழுதி யருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் ‘அண்ட கோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.

அண்ட கோள மெய்ப் பொருள்-ஸேது ஸம்ஸ்தான மஹா வித்வானும் பாஷா கவி சேகரரும் அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய ஸ்ரீ ரா. இராகவையங்கார்
ஸ்வாமிகள் எழுதியது- சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேத வேதாந்தவர்த்தனீ மகா சபையாரால் -1934.-வெளியிடப்பெற்றது-

அண்ட கோளத்தாரணு’ என்ற பாசுரம், ‘ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்’ என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் ‘இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை’ என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.-அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், ‘அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.–ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள்-

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் – பாரிற்
றெருள் காட்டும் வேதச் செழுந் தமிழ் நா வீறன்
அருள் காட்ட மெய்ம்மை யறிந்து–
தற் சிறப்புப் பாயிரம்

அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே   (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்  (10)
செறி பொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
–ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்-

 அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.-ஆகல் – வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை ‘ஆகலூழ்‘ (திருக்குறள் – 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு – அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதி நிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலை யுமாகும்) பரமாணுவே என்பதை ஸ்ரீ பாகவதம் 3-ஆம் ஸ்கந்தம் (11 – 1) ‘பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது’ என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3-ஆம் ஸ்கந்தம் 11

பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.-ஆம் அத்தியாய முடிவில் ‘ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்’ என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ‘ஆகி’ என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை ‘காமத்துக் காழில்கனி’ (திருக்குறள் – 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.-மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகீதை பதினாறாம் அத்யாயத்தில் ‘இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்’ என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய ‘துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:’ என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் – ‘ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:’ என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் ‘அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா‘ (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெய்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக் கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். ‘ஞானீ த்வாத்மைவ மேமதம்’ (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ஸ்ரீ கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. ‘தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்’ என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. ‘பிதா மாதாச ஸர்வஸ்ய’ என்பது மஹாபாரதம். சுத்த ஸத்வ நிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற் பிரதேசத்தில் எ-று.-வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்த ஸ்தல விசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) ‘பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்’, என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்த மூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. -இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் ‘க்ஷீரோதந்வத்ப்ரதேசே’ என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் – அத்தகைய வெண்மணல்.

5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானே யன்றி வேறில்லாமல் எ-று.-வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ஸ்ரீகீதை; விஷ்ணு புராணம் ௭ – ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்ம வ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,-‘வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல்வண்ணன்‘ (திருவாய்மொழி, 2,8,10) என்று பணித்தலாறிக. ஸ்ரீ கீதையிலும் ‘பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்‘ (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். ‘எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்’ ‘தானோருருவே தனிவித்தாய்’ (திருவாய்மொழி, 1 – 5 – 2, 4) என்று பணித்தல் காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ஸ்ரீஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.

5 – 6 தானே தன்னிலையறியா – ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவ மகிமை அறியலாகாத எ-று.-தன்நிலை – தன் தெய்வநிலை: ‘-துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே
.–திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப் படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். ‘தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை’ எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே ‘ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ஸ்வேத த்வீபவாசிகள் ஆஸ்ரயிக்கைக்கு …. திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை‘ என வ்யாக்யானமிட்டது காண்க.

இனி யஜுர்வேத காடகத்தில் ‘த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ஸ்ரீகீதையில் (10 – 15) ‘நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை’ எனவும், பரிபாடலில் (3) ‘நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ’ – நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) – எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பர ப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.-காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. ‘ப்ருஹத் ரூப:’ என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. ‘இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை’ என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் ‘இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை‘ என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். ‘அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு‘ என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). ‘வாஸுதேவதரு’ என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ஸ்ரீ பராசரபட்டர் ‘உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்‘ என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் ‘பூர்புவஸ்வஸ்தரு:’ என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:‘ என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்ய லோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் ‘நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்‘ (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். ‘ப்ரஹ்மதரு’ என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் ‘முக்தி பல ப்ரபாத:’ என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.-இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் ‘மரம்’ என்றாரென்க. ‘என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘ என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ஸ்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை ‘மரம்’ என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் ‘பைங்கண் மாஅல்‘ என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் ‘பசிய உடம்பினையுடைய அநிருத்தனே’ என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. ( ஈண்டே ‘பொன்கட்பச்சை’ என்புழிச் ‘சிவந்த உடம்பினையுடைய காமனே’ எனவுரைத்துப் ‘பச்சை யென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு’ என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.)பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி ‘அத்தியின் மத்தியிலே … நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்’ (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரத மஹருஷி ஸ்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் ‘வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெரு மரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

‘மனிசரு மற்று முற்றுமாய்‘ என்னுந் திருவாய்மொழி யீட்டில் ‘தடங்கடற் சேர்ந்த பிரானை’ என்புழி நம்பிள்ளை ஆசிரியர் – ‘திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு-கந்தம் – கிழங்கு. அவதார கந்தம் – அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே‘ என்று அருளிச் செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் ‘ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன’ என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ஸ்ரீதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. ‘பெருமரம்’ என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்ம சப்தத்திற்கு ஸ்ரீ பராசர பகவான் ‘பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது’ என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி – ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் – இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி – நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் -ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் ‘பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்’ என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, ‘பக்தியோகஸ்ததர்த்தீசேத்’ என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீ கீதாபாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் ‘தேஷாம் ஜ்ஞாநீ’ என்கின்ற ச்லோக விளக்கத்தில் ‘ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி’ என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.

மஹாபாரத்தத்திலும் ‘சதுர்விதா மமஜநா பக்தா:’ என்று, ஸ்ரீகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. ‘நோற்ற நோன்பிலேன்’ என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் ‘ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது’ என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,’

முப்பழம் – ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை‘ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்‘ என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா’
-என்பது கீதைப்பாடல்.முறைமுறை – அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே
‘ (பெரியதிருவந்தாதி – 61) என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க (வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ’ என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் ‘தாமரைப்பூ படைப்பிற்கு முதலாக வந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்’ எனவுரைத்தது காண்க). சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும். தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது ‘தருதலின்’ என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. ‘வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே’ (திருவாய்மொழி ௩ – ௧0 – ௧௧) என வரும் ஆழ்வார் திவ்ய ஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.

ஒன்றுண்டு ஒண்சுவை தருவது – ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.-ஒண்மை – ‘ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ’ என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை – பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். ‘தம்மையே யொக்க வருள்செய்வர்‘ எனவும் ‘நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி’ எனவும் ‘போகமாத்ர ஸாம்யலிங்காச்ச’ எனவும் ‘பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய‘ எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.- 

9 – 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு – இதன்கண், அறுகாற்குறவன் – அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் – ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் – மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; ‘இந்திரியாணி ஷட்’ (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் ‘மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி’ என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர் பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே
(கீதை – ௧௫ – ௮)என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் ‘தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச’ ‘சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்’ என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய ‘கால்’ என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை ‘ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்’ என்பதற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளிய வாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ – று.-இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பத்தாத்மா ஐச்வர்ய காமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையற வுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை-பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா‘ (மூன்றாந்திருவந்தாதி – ௭௬)என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் – இராது நிற்றலாதலானும், கல் – பொருப்பாதலானும் ‘பொருப்பிடையே நின்றும்’ என்பதனையே ‘கல்லின் எழுந்து‘ என்பதனாற் கூறினார். ‘கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்‘ (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. ‘வடபெருங்கல்’ எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே ‘கடலினழுந்தி’ என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். ‘நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்’ (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் – மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பத்தாத்மா ஐச்வர்ய காமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. ‘நீரற’ என்பது பசையற வுணக்குதலைக் குறிப்பதாதல் ‘முழூஉவள்ளுர முணக்குமள்ள‘ (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம் வாட்டுதலை-படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்’
–4-1-9-

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு – (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச் சோலை என்பது தலைமையான வண்மை பற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,-‘இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை’-என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். ‘குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை’ என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், ‘குப்பை தருகட்பு’ என்றார். கட்பு – களவு, வஞ்சம் எ – று. ‘செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்’ என்ப. (பாரதம்)’வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்’ (திருவாய்மொழி 8 – 10 – 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது ‘அறுமீனினைவனள்’ என வரும் அகநானூற்றின் குறிப்பில் ‘அறுமீன் – உரோகிணி’ எனக் கூறியதனானறிக. கால் – உருளை. ‘சகடக்கால்’ (நாலடி) எனவும் ‘கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்‘ (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்-இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 – 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் ‘குணமாலையை வைதுமாறி’ என்பதனை ‘மாறி வைது’ என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் ‘சாந்த்ரமஸம்’ என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், ‘நிறைமதி யுண்டி யமரர்க்கு’ எனவும், ‘அமரருண்டி மதி‘ எனவும், ‘மதியுண் அரமகள்‘ எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 – 12. ஒன்று வித்து அறு கோட்டு – பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.-இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் – குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை ‘நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்‘ எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். ‘தானோருருவே தனிவித்தாய்‘ (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.


‘பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் – மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்’
(பெரிதிருவந். 80)என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் – துன்பம் எனினுமமையும்.-நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாங் கடை’ (இரண்டாந்திரு. 54)-ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். ‘அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்‘ (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.-இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு ‘வித்தறு தோட்டு’ எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். ‘நாற்கூற்றே மருந்து’ (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ – று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். ‘தேறுமா செய்யா அசுரர்களை‘ (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; ‘ஆமாறொன்றறியேன்’ (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ – று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; ‘செய்த வேள்வியர்’ (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் – உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் ‘நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த‘ என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 – 3 – 7) ‘ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்‘ என வருதலானும் உணர்க.-உய்யவுலகு படைத்து‘ எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)-படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந் துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா
‘-எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் ‘என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்’ எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

‘நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே – மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்
‘ (முதற்றிருவந்தாதி, 95)-என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் ‘மாக்கதிக்கட் செல்லவகையுண்டே’ என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.-ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் – ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்‘ (நான்முகன் றிருவந்தாதி, 93)என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ – று.-நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) ‘தேவிபோகி…சுடுகாடவள் சேர்ந்தவாறும்’ என்புழி ‘தேவியவள்’ என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.-பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 – 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.-கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்’ (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. ‘ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள’ என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். ‘கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி. 4 – 10 – 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் ‘ஒருவன் தலைகெட்டு நின்றான்’ என்று உரைத்ததனாலும் ‘தலையிலி’யாதலுணர்க; ‘வாணன் கையிழந்து நின்றான்’ என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.-‘தேவுமெப் பொருளும் படைக்கப் பூவினான்முகனைப் படைத்த தேவன்’ (திருவாய், 2,2,4)என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ – று.-பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே ‘அவன் மகள்’ என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.-இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். ‘ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்’ என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. ‘ஞானமுதல்வி’ என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. ‘கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ’ என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். ‘முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று’ (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது ‘காமாநுபோகத்தை’ என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது ‘ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்’ என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‘ (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் ‘யௌவன சூசகமான முலையானவை‘ என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 – 6 – 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.-இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி –

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ – று.ஈனாள்…படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ – று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; ‘ஏதத் நிச்வஸிதம்’ என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம்

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் – எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து – வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த – பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது ‘தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி’ என்னும் வாக்யத்தாலறிந்தது; ‘பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க’ என்பது இதன் பொருள்.உள்ளவளாகியும் –

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் 3 – ஆம் ஸ்கந்தம் (12 – 22) ‘மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்‘ என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ஸ்ரீ பாகவதத்தில் (11 – 14 – 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். ‘முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்’ (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.-பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். ‘திதியின் சிறுவர்’ என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். ‘மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்’ எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. ‘சிந்தாதேவி‘ (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது ‘விதியின் மக்களும்’ (பரிபாடல், ௩) என்புழி ‘ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்’ எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை ‘த்ர்யக்ஷரீ’ ‘த்ரிவ்ருத்’ என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய ‘நமோ நாராயணாய’ என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். ‘இசைத்தலுமுரிய வேறிடத்தான‘ (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பது பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

16. அவள் இவள் உவள் என அறிதல் – இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் – உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே – துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ – று.புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் ‘வித்வத் ஸம்ரக்ஷணம்‘ என ஓர் பகுதியுண்டு – அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் – வாடுதல். துவளறு காட்சி – யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது’ என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து – வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்’
–என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை ‘நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு’ (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் ‘உவளென அறிதல் கடன்’ என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை ‘அவளத்தனா மகனாந் தில்லையான்’ எனத் திருக்கோவையினும் ‘அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்’ எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் ‘பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்’ எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,-கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே
‘ (10,5,1)என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை ‘ஆரியத் தமிழ்’ என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை ‘வேதத் தமிழ்’ என்பதுபோல இதனையுங் கொள்க.

ஈயா டுவதோ கருடற் கெதிரே யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின் ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே’
-என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸித்த உபாய விஜயம் -கிருபா ஜன்யமா- கிருபா ஜனகமா–

June 7, 2026

ஸித்தோபாய விஜயம் : ஸித்தோபாயமாகிற எம்பெருமானுக்கே மோக்ஷோபாயத்வம் உண்டு என்னும் தென்னாசார்ய ஸம்ப்ரதாய ப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தத்தின்மீது ஸ்ரீரங்கத்தில் வாழும் ஸ்ரீ உ. வே. மதுராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியும் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமியும் சில ஆக்ஷேபங்களா எழுப்ப அவற்றுக்குத் தக்க ஸமாதானங்களைக் கூறி ஸித்தோபாயத்தின் நிரபேக்ஷோபாயபாவத்தை நிலைநாட்டும் நூல் / ஆசிரியர்கள், ஸ்ரீ உ. வே. வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ. வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி-

உள்ளபடி யுணரில் ஒனறு நமக்குணடென்று
விள்ள விரகிலதாய விட்டதே — கொள்ளக்‌
குறையேது மில்லாற்குக்‌ கூறுவதென்‌ சொல்லீர்
இறையேது மில்லாத யாம் ”
[பரமேயஸாரம் – 6]

உபாத,ததே ஸததா ஸதி,தி நியமநாத்‌யை : சித,சிதெள
ஸ்வமுத்‌, திஸய ஸ்ரீமாநிதி வத,தி வாக ஒளபநிஷ தீ ; |
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்தவம நது கு;ணெள
அதஸதவாம ஸ்ரீரங்கே,மய ஸரணமவயா ஜமபஜம |!
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-87-ஸ்ரீரஙக, நாதனே! உபநிஷத்‌; வாக்கானது (என்ன சொல்லு கிறதெனறால்‌) திருமால்‌ பயனடைபவனாகக தனனையே எண்ணி, சேதநா சேதனங்கள்‌ -ஸருஷ்டி, ஸ்திதி, நியமனம்‌ முதலியவறறைச்‌ செய்து ஸ்வீகரிககிறான் எனறு ஒதுகின்றது. ஆகையாlm, உபாயத் வமும்‌ உபேயத் வமும் தேவரீர்க் கு ஸ்வரூபமாகும் (முக்யமாகும்‌), ( உபாய உபேய சப்தத்தால் சொல்லப்படும மற்றவற்றுக்குப்போலே)கெளணம( அமுக்கி யம் ) அலல. ஆகையால் தேவரீரை நிருபாதிகமான உபாய மாகப்‌ பற்றினேன்‌-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

———————————

“ அஸாரம் அல்பஸாரம ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத ஸார தமம் ஸாஸ்தரே ரத்நாகர இவாமருதம ||?” எனற வைகுணட ட தீ,க்ஷிதீயோ பாதத வசநம் பிரமாண பாவத்தை வஹிக்கும் . இவ் வசநத்தில் , ரதனாகாரம் த்ருஷ்டாந் தமாகவும் ஸாஸ்த்ரம் தார்ஷ்டாந்தகமாகவும காட்டப்பட்டுளள து உற்று நோககததககது. ஸமுத்ரத்தில் அடங்கி யுளள அஸரராதி;சதுஷடயம் தயாஜ்யம் , ஸார தமம பஞசமம் அம் ருதம் உபாதேயம் . இவ் வோபாதி ஸாஸ்த்ரத்தில் அடங்கியுளள அஸாராதி,களைத் துரநது ஸாரதமத்தைக் கைக் கொள்ளவேணும் எனறு ஸ்லோகார்த்தம் தேறுகிறது

தேசிகன் செய்தருளின வ்யாக்யாநத்தின் படி, பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அஸாரமென்றும் , வேதத்தில பூர்வ பாகத்தில் ஐஹிக பல தத் ஸாத,ந பிரதிபாதகம் அல்பஸாரம் என்றும் , ஆமுஷ்மிக பல தத் ஸாதந ப்ரதிபாதக பர தேசம் ஸாரம் எனறும, ஆத்மபராப்தி ததஸாதந ப்ரதிபாதக பாகம ஸார தரம் எனறும் , பரமாத்ம ப்ராப்தி ததஸாதந பிரதேசம் ஸார தமம் என்றும் , இதுவே வீவேகிக்கு உபாதேயம என்றும் இஸ் ஸ்லோகாரத்தம் தெரிய வருகிறது

யா வேத; பாஹ்யா: ஸ்ம்ருதய: யாம்ச காம்ச குக ருஷடய:! ஸாவாஸதர : நிஷ்படிலா: பரேதய தமோ நிஷடதா ஹி தாஸ ஸமருதா: |!” என்றிறே மநு ப,க;வான அருளிச்செய்த து. மேலும, *’ வேதாத்‌ ஸாஸ்த்ரம் பரம்‌ நாஸதி ‘” எனறு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த் ரஙகளுககு சாஸ்த்ரத்வம் நிஷிதம் – இவ் விடததில ‘“ அந்யவாசியெனக் கொளள வேணும் .-பரா-ததத கைங்கர்ய ததஸாத,ந ஸிதத்தோபாய பிரதிபாத,கமே ஸாரதமம ஆக ஸார தமமுமான ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸார தமம் எனத் தேறியது

——————————————————————-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் –
சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
-பக்தி கிருபையின் பலம் என்றவாறு
-பக்தி ப்ரபத்திகளும் ஈஸ்வர கிருபா பலமே எனத் தேறியது-
பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம்
–போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா — ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்-இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

(1) ஸ்ரீதேவி உபாயமாகிறாள்‌,
(2) ஸ்ரீதே,வி விபு,ஸ்வ ரூபமுடையவள்‌;
(3) சரண வரண வாக்குக்கு உபாயத்வ முணடு என்பதற்கு பிரமாணம்‌ உள்ளது,
(4) கைவல்யம் மோக்ஷமாகாது
(9) கைவல்யத்தை ௮நுபவித்த பின்‌ பரமாத்மாவை அநுபவிககலாம்‌ எனறு கூறப்படுகிறது;
(6) கைவலயம்‌ ௮ண்டத்தினுள்ளேயே இருக்கிறது எனறு பிரமாணங்களால் கூறப்படுகிறது,
(7) பிரபததி துர் பல மானது.
(8) சக்தி யுள்ளவர்களுககு பக்தி யோகத்திலேயே அதிகாரம்
(9) பக்தி யற்றவர்களுக்கே ப்ரபத்தியில்‌ அதிகாரம்
(10) பக்திக்கு ௮ங்க மாகவேயிருககும் கர்ம யோகம்‌ முதலானவற்றுக்கு ஸ்வதந்தரோபாயத்வம் கூடாது.
(11) ஸாத்யோபாயததினால்‌ ஸித்த,வஸ்து ஸாதிக்கப்படுகிறது
(12) ஸாத்‌ய ஸாதநங்களுக்கு வேறு பாடு உண்டு.
(13) வேறான ஸாதரநத்தாலேயே வேறான ஸாதயம் ஸாதிக்கப் படுகிறது.
(14):பரித்யஜய என்கிற உபா யாந்தர தியாக,வசநம் அதிகாரத்தினால் ஏற்கனவே யுள்ளதை அநுவாத,மே செய்கிறது.
(15) திருமந்திரத்தில்‌ பரணவம்‌ இல்லாமலே எட்டு அக்ஷரமாகிறது
(16) மிகப்‌ பெரியவர்‌களான நித்யர்ககும்‌ முக்தர்க் கும்‌ ஸருஷ்டி முதலானவற்றில சக்தி கிடையாது
(17) தேஷத்தைக் காணாதிருக்கையே வாத்ஸல்யம்‌
(18) பிறர்‌ துன்பத்தைக்‌ களைவதில் விருப்பமே தயை என்று
சில பூர்வபக்ஷிகள்‌

1-ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளிலிருந்து. பகவத கிருபை ஒரு ஹேது வில்லாமல்‌ உண்டாகிறது என விளங்குகிறது –
2-உபாயங்களில்‌ ஏற்றத் தாழ்விருக்கையால் அதிகாரிகளுக்குத்‌ தக்கபடி பல பேதம் உணடு
3-மற்ற ஜீவரைப் போலே அணுத்வமே ஸ்ரீதேவிக்கு இயலவானது.-அகடி தகடநா சக்தியாலே அவள்‌ எங்குமிருக்கவும் செய்கிறாள்
4-இல சமயங்களில்‌ கர்மயோகமும் , ஜ்ஞாந யோகமும் மோக்ஷத்திற்கு ஸ்வதந்த்ர காரணமாகவும்‌ ஆவதுண்டு –
5-ஸ்ரீதேவிககு எப் போதும்‌ மோக்ஷோபாயத்வம்‌ கிடையாது, எப்போதுமுள்ளது புருஷகாரத்வமே
6-அடியார்களின் குறறங்களைக் குணமாகக்‌ கொளளுகை வாத்ஸல்யமாகும்
7-பிறர்‌ துனபங்‌களைக் கண்டு துன்புறுவதே காருண்யமென ப்ரமாணம் கூறுகிறது-
8-ஈஸ் வரனுடைய நிரபேஷ உபாயத் தன்மைக்கு ஓட்டாதாகையால, பிரபத்தி அதிகாரி விஸேஷணமே
9-ஸவரூபத்தைப் பற்றிய உண்மை யறிவுடைய அனைவருமே அதற்கு அதிகாரிகள்‌-
10-உபாயாந் தரங்களைக் கை விடுவதை பிரபத்திககு அவஸ்யமான அங்கமாகவே கீதை விதிக்கிறது-
11-ஸ்ரீ ய பதிக்குக்‌ கைங்கர்யமாயிருககும கர்மம் (உயிரகளிடதது) இரக்கம முதலான பல காரணங்களால உண்டாவது.
12-அத் யந்த பரந்தர ஸ்வரூபததை அறிந்தவர்களுக்கு ஸாதராந்தரஙகள்‌ ஸவரூப விருத்தமே யாகும்
13-நெல் குத்தி னால் வியர்வை ஏற்படுவது போலே ஸரணாகதனுக்கு இயல்‌ வாகவே ஏற்படும்‌ தன்மைகள் ஆநுகூல்ய ஸங்கலபம் முதலானவை-
14-பகவத் ப்ராப்தி விஷயத்தில்‌ பிரபத்தி பலத்தைக் கொடுத்தே தீரும் என்கிற இந்த நியமம்‌ இல்லை -பகவத் இச்சையே ஹேது என்பதை பரத ப்ரபத்தியிலே காணலாம் –

15-ப்ரபந்ந னுக்கு அக்ருத்ய கரண கருத்யாகரண ரூப பாப சம்பந்தமும் உபாயாந்தர சம்பந்தமும் உண்டானால் அவன்‌ முன் பிரபத்தியை நினைவிற் கொள்வதே பிராயச் சித்தமாகும்
16-குல தைவதம் போலே எல்லா பரபந்நர்களும் பூஜிக்கத் தக்கவர்களே
17-ஒவ்வொரு வயக்தியிலும ஜாதி பரி ஸமாப்ய வ்யாபித்திருப்பது போலவே, ஓவ்வோ ரணுவிலும் ஈஸ் வரன் உள் நுழைந்து பரி ஸமாப்ய வ்யாபித்‌திருக்கிறான்‌
18-கைவல்யம் நியாமாகவே கொள்ளத் தக்கது –

நம்பிள்ளை ஈடு -ஈமபிளளை ஈடு.1-1-1 (அருளினன்‌ ) நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்டவித்தனை. இத்தலை அர்த்திக்க வன்‌ றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிறகக் கண்டவித்தனை

8-7-9 மதி–௮நுமதி என்றாக்கி அநுமதி மாத்ரத்‌ தாலே” என்பர்‌ பட்டர்‌. அதாவது அவன் புகுருகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை

8-8-3-எனனுணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும்‌ அவனதின் னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன்‌ ப்ரஸாதத்‌ தாலே. நின்ற நின்ற அளவுகள் தோறும்‌ இவ்வளவும அவனாலே பிறந்தது எனனும்படி யாயிற்று இருப்பது அவனுடைய சவ் ஹார்த்தம்

10-8-10 அவன் தானே செய்தான்‌’ என்னுமன்று அவனுககு வைஷமயமும, நைர்க்ருண்யமும, ஸர்வ முக்தியும் பிரஸங்கியாதோ? என்னில்‌; இத் தலையில் ருசியை அபேக்ஷித்துச்‌ செய்கையாலே, ௮வனுககு அவை தட்டாது. அது ஹேது வெனறு ஈஸ்வரனுககு உத்தரமானாலோ வென்னில, அது உபாயமாக மாட்டாது. பல வ்யாப்தமான திறே உபாயமாவது. இநத ருசி ௮திகாரி ஸ்வரூபமாகையாலே தத,விஸேஷணமாமித்தனை. உபாயம ஸஹகாரி நிரபேஷமாகையாலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது –

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் ) பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமாப் போலே இருப்பது ஓன்று –சூரணை -54-

சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி-

இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை –சூரணை -55-

சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  – இது தன்னை அருளிச்  செய்கிறார் –

அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை – சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –சூரணை -56-

உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத  ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –சூரணை-58- (இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் – அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-சூரணை-59-ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல –

பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது –சூரணை -60-

அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம் –சூரணை-61-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று – பிரமித்து – அத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே வேண்டுவது –சூரணை -62-

ரஷணத்துக்கு அபேஷிதம் ரஷ்யத்வ அனுமதியே –சூரணை -63-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லைசூர்ணிகை – 134–

இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )-சூரணை -142-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —சூரணை-143-

இவை இரண்டும் ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும் காணலாம் –சூரணை -144-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று – ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –சூரணை -145-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –சூரணை -263-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்குமற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..சூரணை-266-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –சூரணை -269-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–சூரணை-270-

ஆகையாலே தோஷம் இல்லை –சூரணை -271-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அதாவது – ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் – நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –சூரணை -396-

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம் அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம் பல வி சத்ருசம் பலாந்தர ஹேது
—ஆசார்ய ஹ்ருதயம்-111-

நாலயலார்-அயல் சேரியார்-உபாய சதுஷ்ட 0அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

ஸம்பந்த ஐஞாநமாத்ரம் , ஸித்த உபாய ப்ரதிபத்தி மாத்ரம் , அநிவாரண மாத்ரம் , ௮நுமதி மாத்ரம்‌, ௮சித் வ்யாவ்ருத்தி மாத்ரம் , சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விசேஷணம– என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள்

உபாய ப்ரபத்தி ஷட் அங்க யோகம் – வேதாந்த ஸார ஸித்தமான அநுபாய ப்ரபத்தி அதிகாரி விஸேஷணம்‌-இவ் வாசியை அறிய வேணுமநீயே எனககு உபாயமாவாயாக–எனறு பிரார்த்திக்கும் அறிவே சரணாகதி எனப்‌ படுகிறது-மஹா விஸ்வாஸத்தோடு கூட பகவான் ஒருவனையே உபாயமாயிருக்கும்படி யாசிப்பதே ப்ரபத்தி என்றும்‌ சரணாக,தி என்றம கூறப்படுகிறது

உபாய வர்ணததுககு உபாயத்வமிலலாமையாலே “சரணம்‌ வ்ரஜ” எனகிற விதியால சரண வர்ணததுககு இஷ்ட ஸாதநத்வம ஏறபட மாட்டாது.-இதை அநுஸரித்தே தேசிகனும பிரபத்தியை வ்யாஜோபாய மெனறு ௮ருளிச் செய்திருக்கிறார்‌. இப்படியுளள பிரபததி அநுபாயம்‌ என்பதும தேஸிகன் நியாய ஸித்தா ஞஜனத்தில அருளிச்செய்துள்ளார்-

பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி, ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி
லக்ஷ்மீ நா தனையேஉபாயமாகக் கொளளும் எண்ணமாயிருககும்‌ இந்த பிரபத்தி தன்னை உபாயமாக எண்ணும நினைவைத்‌ தடுக்கிறது -ஸஹ காரிகளை உபாயமாகக்‌ கருதும்‌ நினைவைத் தடுக்கிறது என்பதைக்‌ கூறவும் வேண்டுமோ -பகவானைக்‌ காட்டிலும வேறுபட்டது உபாயமாகாது ‘ எனனும்‌ அறிவு -பிரபத்தி உபாயம” என்னும் அறிவுக்குத் தடையாயிருக்கத் தட்டில்லை என்று கருத்து-
ஸர்வேஸ்வரன் ஸர்வஜ்ஞனா யிருந்த போதிலும் எப்போதும்‌ கருண யுடையவனா யிருந்த போதிலும ஸமஸாரச்‌ சுழலை நிர்வஹிப்பவனாகையால் ரஷ்யனான ஜீவனின அபேஷயை எதிர் பார்க்கிறான் – என்று பகவத ஏவ அபேஷா ப்ரதீஷையைச் சொல்லுகை யாலேயும்‌ இதுக்கு அநுபாயத்வம் ஸித்தம்‌

ஆளவந்தாரின ஆகம ப்ராமாண்ய ஸ்லோகத்தின் கருத்து பின வருமாறு — சேதனர்களுடைய முயறசியால் ஸாதிக்கப் படும்‌ உபாயாந் தரங்களுடைய ௮திகாரமும் அவர்களுடைய முயற்சியால் ஸாதிக்கப் படுவதாகவே யிருந்தால் , இவ் வதிகாரத்தை ஸாதிப்பதறகு மற்றோரதிகாரம்‌ வேணும் ; அதுவும் ஸாத்யமாகில் அதை ஸாதிகக ஒரதிகாரம் வேணும்‌ எனனும்‌ ரீதியில் ௮நவஸதா தோஷம் ஏற்படும் ஆகையால் சேதநர்களின முயறசியால்‌ ஸாதிக்கப்படும் உபாயாந்தர ஸ்தலங்களில் ௮திகாரத்தை முன்பே ஸித்தமாயிருப்பதாகக் கொள்ளப் பட வேண்டும்‌. இவ் வண்ணமாகவே, ஸித்த உபாய ஸ்தலத்தில் அதிகாரத்தை ஸாத்யமாகவே கொண்டால் , எப்போதுமே பலம்‌ ஏறபட வேண்டி வருமாகையாலே எப்போதுமே மோக்ஷம்‌ ஏற்படுகை யாகிற நித்ய முக்தி ப்ரஸங்க,ம்‌ ஏற்படுமாகையால் ஸித்‌தோபாய ஸ்தலததில்‌ அதிகாரத்தை ஸாத்‌யமாகவே கொள்ள வேணடும்‌–என்று கருத்து. இவ்வளவால் சரணாகதி ஸாத்யரூபமாகையால் ஸித்‌தோபாய நிஷ்டனுக்கு இது ௮திகாரி விசேஷணமாகாது என்று சிலர்‌ மயங்குவது தள்ளப்பட்டது-

ப்ரபத்தியாவது -சேதனனுடைய பிரார்த்தநா ரூப ஞானமே -, நமஸ் சப்தத்துக்கு ஸ்தூல யோஜனை, ஸுஷ்ம யோஜனை, பர யோஜனை என்று மூன்று யோஜனைகள்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன. அந்த மூன்று யோஜனைகளிலும்‌ பரபத்திக்கு உபாயத்வமில்லை என்று ஏற்படுகிறது –
முதல் யோஜனையில் நமஸ் -வணக்கத்தைச் சொல்லி –ஸ்வரூப அந்தர் கதமாய் -ஸ்வயம் ப்ரயோஜனமான சேஷ வ்ருத்தியைச் சொல்கிறது -இது மானஸ வாசிக காயிக ரூபமாய் த்ரிவிதமாய் இருக்கும் -மூன்றில் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாகும் –
ஸ்தூல யோஜனையில் ந மம –தேவோஹம் மனுஷ்யோஹம் -தவிர்ந்து யானும் என்னுடைமையும் நீயே என்னும் நினைவு -ஸ்வரூப உபாய பல அம்சங்களிலும் -பகவத் விஷயத்தில் சேஷ விருத்தியைப் பண்ணி தனக்கும் போகத்தை ஸம்பாதிக்க யோக்யனாகை–ஸ்வ சேஷத்வ ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்யத்வ ரூப ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி நமஸ் ஸப்தத்தாலே சொல்லப்படுகிறது -ஸர்வேஸ்வரனுக்கே ஸ்வம்மாய் இருக்கையும் -அவனுக்கே ரஷ்யமாய் இருக்கையும் -அவனுக்கே போக்யமாய் இருக்கையும் -சொல்லிற்று -தன்னால் வரும்‌ நன்மை விலைப் பால் போலே-என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -பரயோஜனையில் -௮வனை யடையும்‌ பொருட்டு உபாயமும்‌ அவனே. பல ப்ரதனும் அவனே ”என்னும் நினைவு –

ஸரணாகதி தீபிகையில தேசிகன் ப்ரபத்தியை ஈஸ்வர யத்ந பலமாகவும்‌ ஈஸ்வர கிருபா பல மாகவும்‌ உபபாதித்துள்ளார்யாஜ்ஞா பிரபத்தி -பிரார்த்தனா மதி பிரபத்தி -அவ ரக்ஷணே ” “மந ஜ்ஞாநே ‘ என்கையாலே ரக்ஷண தர்மாஸ்ரய வஸ்துவுக்கு ரக்ஷய விஷயம் அபேக்ஷிதமானாப்‌ போலே, ஜஞாநாஸ்ரய வஸ்துவுககு ஜ்ஜேய விஷயம்‌ அபேக்ஷிதமாகையாலே, இருவர்க்கும் இரணடும்‌ அபேக்ஷத விஷயமா யிருக்கையாலும் , இரண்டும்‌ தர்மிக,ராஹகமாந ஸித்‌தமாகையாலும இருவர்க்கும்‌ இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்‌.புண்ணியம் யாமுடையோம் -நாங்கள் செய்தது அல்ல ஸ்வீ கரித்ததும் அல்ல புறப்பகையும் கழிக்க வேண்டாம் உள் பகையும் அழிக்க வேண்டாம்

பண்டே உனக்கு ஸேஷமாயிருககிற இவ்‌ வாத்மாவை நீ கொண்டருளினா யித்தனை யிறே என்று ஆறாயிரப்படி – ஸ்வரூப ஸமர்ப்பணமாவது ஸ்வதஸ ஸித்‌தமான ஸேஷத்வத்தினுடைய ௮நுஸந்தான மாத்ரமே யொழிய தன்னதான ஆத்ம வஸ்துவை அவனுக்கு ஸமர்ப்பிக்கை யன்று —
ஆசார்யாபிமாநமாவது–இவை யொனறுக்கும்‌ சக்தனன்றிக்கே யிருப்பா னொருவனைக குறித்து –ஸநந்தய பிரஜைககு வியாதி யுண்டானால் அது தனது குறையாக நினைதது ஓளஷத ஸேவையைப பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான் உபாயாநுஷ்ட்டாநம் பண்ணி ரக்ஷிக்க வலல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமாநததிலே யொதுஙகி –வல்ல பரிசு வருவிப்‌ பரேல் அது காணடுமே–என்கிறபடியே ஸகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி களையும அவனிட்ட வழக்காக்குகை -கைங்கர்யம் தான் நித்யம் -, நித்யமாக பிரார்தித்தே பெற வேணும — பேற்றுக்கு வேண்டுவது, விலக்காமையும இரபபும் —

நியாஸத்தில்‌ என் சுமையை நீ ஏற்றுக் கொள்ள வேணும்‌’ எனறு பிரார்த்திக்கப் படுகிறது. சரணாகதியில் ‘நீ எனக்குப்‌ பலனை யளிப்பாயாகா எனறு பிரார்த்திக்கப் படுகிறது. மேலும் , உன்னிடத்தில் என பரம்‌ வைக்கப்பட்டது ‘ எனனும பரந்யாஸம் ஸ்வாதந்தர்யததை உள்ளடக்கியது, “என் சுமையை நீயே மேல் விழுந்து ஏற்றுக் கொள்ள வேணும” என்னும் ப்ரார்த்தனையா யிருப்பதால் சரணாகதி பாரதந்தர்யத்தை உள்ளடக்கியது. நியாஸத்தில்‌ பர ஸமர்ப்பணம்‌ முக்கியம்‌, சரணாகதியில் உபாயமாக வரிப்பது முக்கியம்‌; சுமையை இறக்குவதாகிற ந்யாஸத்திற்குப்‌ பிராட்டியோடு கூடிய பெருமாள்‌ உத்தேஸ்யம்‌. சரணாகதியில்‌ பிராட்டிக்கு உப லக்ஷணத்வ மாத்ரமே; (உபாய ப்ரார்த்தனையில் நேரே அந்வயமிலலை. ) ந்யாஸம்‌ பிரணவத்தை ௮ங்கமாகக் கொணட தாகையால் ( பிரணவத்திற்குப்‌ பொருளான ஐகத்‌ காரணத்வம்‌ முதலான ) பரத்வ குணங்கள்‌ அதற்கு விஷயம்‌, சரணாகதியில் கரண மநதிரம த்வயமாகையாலே , அதில் சொல்லப்படும் ஸெளலப்யம்‌, ளெளஸீல்யம் முதலான நீர்மைக் குணங்கள்‌ விஷயம் – சரணாகதியில் -— ஜீவாத்மா தனக்குப்‌ புண்ணிய மில்லை யென்றும்‌, பாபம்‌ உண்டென்றும்‌ அநுஸந்திக்க வேணும்‌. நியாஸத்தில்‌ ப்ராதி கூல்ய வர்‌ஜனமும்‌. ஆநு கூல்ய ஸங்கல்பமும் அங்க மாகையால் , பாபத்தை விடுகையும் , புண்ணிய முடைமையும் அநுஸந்திக்கத் தககது–தன் அறிவாலே தேவனுடைய திருவடிகளிலே தன்னை ஸமர்ப்பிப்ப தென்பதே பிரபத்தியாகும் . இது எல்லாப்‌ பாபங்களையும போக்கும.” என்பது ந்யாஸத்தின் லக்ஷணம்‌. “நான்‌ அபராதங்களுக் கெல்லாம் ஆலயமாயும்‌. கைம்‌ முதலற்ற வனாயும. வேறு புகலற்றவனாயும்‌ இருக்கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாவாயாக என்று பிரார்த்திக்கும்‌ அறிவே ஸரணாகதி யெனப்படும்‌. அது இந்த தேவனிடத்‌தில் பிரயோகிக்கப்படட்டும, ” என்பது சரணாகதியின்‌ லக்ஷணம்‌–ஜிதந்தா ஸ்தோத்ரத்தில் :: ஜிதம்‌ தே” என்‌னும்‌ முதல் ஸ்லோகத்தாலே ந்யாஸமும்‌, “ தேவாநாம்‌ ” என்னும்‌ இரண்டாவது ஸ்லோகத்தாலே சரணாகதியும்‌ தனியாகச்‌ சொல்லப்பட்டது.

ஸ்தோத்ரத்திலும்‌ – நமோ நம ” [21] என்னும்‌ ஸ்லோகத்தாலே நியாஸமும, “ந தர்ம: [22] என்னும்‌ ஸ்லோகத்தாலே சரண வர்ணமும்‌ தனிப் படுத்திச்‌ சொல்லப்பட்டது. கத்யத்திலும்‌ “த்வத பாதார விந்தயுக,ளம்‌ ॥சரண மஹம பரபத்‌யே” என்று சரணாகதியும்‌, நமோ அஸ்து தே’ என்று பர ஸமர்ப்பணமும்‌ வேறாகக் கூறப்பட்டது. ஸ்ருதிகளிலும்‌ அவற்றுக்கு வேறாக விதி, காணப்படுகிறது. தைத்திரீய உடநிஷததில ஓம்‌ என்னும்‌ மந்திரத்தாலே ஆத்மாவைப் (பரமாத்மாவிடம்‌) ஸமர்ப்பிக்க வேண்டியது ” என்று ந்யாஸம்‌ விதிக்கப்‌ பட்டது. ஸ்வேதாஸ்வதர உபனிஷத்தில் “முமுஷு வான நான்‌ சரணமடைகிறேன்‌” என்று சரணாகதி விதிக்கப்‌ பட்டது. அவ் வண்ணமே புருஷ ஸூக்தத்தில் , *“அப,தந ந புருஷம்‌ பஸூம” என்று நியாஸமும்‌, **: அத பய: ஸமபூ,த. ” என்னுமிடததில் சரணாகதியும்‌ விதிக்கப் பட்டது “தஸ்ய தீரா.” எனறல் விடத்தில தீர( தீ மதா மக,ரேஸர) சப்‌த்தத்தாலே. உபாயாந்தர நிஷ்டர் களுக்குள்ள ‘ஸம் பந்த ஐஞாநத்‌தில்‌ அறி வின்மை’ இவனுக்கில்லை என்று கூறுவதன்‌ மூலம்‌ ஸமபந்த ஜ்ஞாந பூர்த்தியே இவனுக்குள்ள அதி,காரம்‌ (தகுதி) என்று காட்டி *யோநிம பரிஜாநநதி” – அவதார ரஹஸ்யத்தை நன்கு அறிகிறார்கள்‌ ] என்னும்‌ பகுதியாலே அவதார விஷயமாகவும் . ஸெளலப்யாதி குண விஷயமாகவு மிருககும் சரணாகதி தெரிவிக்கப்பட் து. அதற்கு வேணடிய புருஷகாரமும்‌ ஹ்ரீஸ் ச-லக்ஷமீம்‌ ச ” என்று காட்டப்படட து. பகவத கீதையிலும்‌–மந்மநா பவ” [18-65]என்‌னும் ஸ்லோகத்தாலே பர நியாஸமும, அடுத்த ஸ்லோகத்திலயே “ஸர்வ தர்மாந்‌ ? எனறு சரணாகதியும் சொல்லப்பட்டது; லக்ஷ்மீ தந்த்ரத்திலும ““ உபாயாந்தரங்களையும்‌, அபாயங்களாகிற பாபங்களையும கை விட்டவனாய்‌, நடு நிலையை ஏற்றவனாய்‌,என்னையே சரணமடைந்து, இறுதியில என்னையே அடைகிறான் ” [12-50] என்று சரணாகதியைக் கூறி, “அதுவே ஆறு அங்கமுடையதாய்‌ உபாயமாவதை என்னிடமிருநது கேட்பாயாக” [12-59] எனறு தொடங்கி பர ஸமர்பபணம் வேறுபடுத்திக் கூறப்பட்டது. அஹிர்‌ புத்ய ஸம்ஹிதையிலும் அவற்றை வேறு படுததிக் கூறி யுள்ளது ஸதூல பாரதந்தர்ய ரூபமாகையாலே ஷடங்க ந்யாஸத்தை ஸ்தூலமாகவும, ஸூ்ஷ்ம பாரதந்த்ர்ய ரூப மாகையாலே சரணாகதி ஸபக்ஷ்ட மாகவும் சொல்லப்பட்டது. எல்லா உபாயாந் தரங்களையும்‌ கை விடுகை அங்கமா யிருக்கை யால் அப்ரதாந மாகவும்‌, அதை அங்கமாக வுடையதாய் யிருக்கையால்‌ ஸித்தோபாய ஸ்வரூபம்‌ ப்ரதாநமாகவும்‌ கூறப் பட்டது ] என்று ஸ்ரீவசந பூஷண மீமாம்ஸா பாஷ்‌யத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளதே –

நியாஸ சரணாகதி களுக்கும் ‘ஸம்யோகம்‌ ரூபம்‌, சோதநா (விதி,), ஆகயா(பெயர் ) ஆகிய நான்கும் வேறுபடுகின்றன. எப்படி யெனில.–
“ஓம்‌ என்று ஆத்மாவைத் தியானிக்கக் கடவன் ” என்பது ந்யாஸத்தைப்‌ பறறிய விதி. “என்னை ஒருவனையே” உபாயமாக அடைவாய் ,! “லக்ஷ்மீ நாதனையே உபாயமாக வரிப்பாய்‌” முதலானவை சரணாகதியைப்‌ பற்றிய விதி, , இவ்விரு விதிகளும்‌ ஒன்றாக முடியாது –
‘யுஞ்ஜீத’ என்று சொல்லப் பட்ட யோகமும்‌, “சரணம்‌ வ்ரஜ’ * உபாயம் வ்ருணு’ என்று சொல்லப்பட்ட சரண வரணமும்‌ வெவ் வேறாகும் – யோக,மாவது தியானம்‌.–“ஓம் என்று ஆத்மாவை தியானியுங்கள்‌ ” என்று மற்றொரு வாக்கியம்‌ ஓதுகின்றதன்றோ. :யுஜிர்‌ யோகே,’ :யுஐஸமாதெள? என்னும் தாது பாடமும்‌ “யோகஸ் ஸநநஹந– உபாய– தியாந–ஸங்கதி — யுக்திஜு ” என்னும்‌ நிகண்டுவும் யோக ஸப்த்தம் தியானத்தையே குறிக்கும்‌ என்று காட்டுகின்றன. உபாய வரணமோ வெனில் உபாயமாகப்‌ பிரார்த்திக்கும் செயலாயிருப்பது. ஆகையால்‌ சோதநா(விதி) பேதத்தாலே ந்யாஸ வரணங்கள்‌ வெவ்‌ வேறுபட்டவை என்பது மறைக்க வொண்ணாதவையே

ஒரு முறையே அனுஷ்டிக்கப் படும் தியான ருபமாயிருடபது ந்யாஸம் என்றும்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, ஜீவனை ப்‌ரஹ்மத்திடம்‌ ந்யஸிக்க வேண்டும்‌” என்னும் வசனததில் நி எனனும்‌ உப சர்க்கத்தோடு கூடிய “அஸ்‌ தாது ஸமர்ப்பித்தல் , என்னும்‌ பொருளையே குறிக்குமாகையால, உபாய வரணம என்னும் பொருள்‌ அதிலிருந்து ஸித்திக்காதாகையால, ந்யாஸ சரணாகதிகளுக்கு வேறுபாடு மறைக்க முடியாததே யாகும் . ஆக, சோதநா பேதம் ஸாதிக்கப் பட்டதாயிற்று-

ந்யாஸ சரணாகதிகளின ரூபமும வேறு படுகிறது. எப்படி யெனில் : “ஆத்மாவை தியானிக்கக் கடவன்‌” என்று ந்யாஸ வித்யை ஜீவாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகை யாலும்‌. என்னையே உபாயமாக அடைவாய்‌ ” என்று சரணாகதி பரமாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகையாலும்‌ இரண்டுக்கும்‌ ரூபமும் வேறுபட்டதே.

தலை சிறந்த பெரிதாயிருக்கும் தன்மை முதலாக மஹஸ்த்வமீறாக வுள்ள பரத்வ குணங்கள்‌ விசேஷணமாக அநுஸந்திக்கத் தக்கவை –சரணாகதியிலோ வெனில (த்வயத்தில் கூறப்படும்‌) வாத்ஸல்யம்‌ முதலான எட்டு குணங்‌களோடு கூடியவனாகப் பரமாத்மா நேரே ௮நுஸந்திக்கத் தக்கவன்‌ “வஸூ ரண்யோ விபூ,ரஸி”என்று ஓதப்பட்ட ஸாவாதாரமான விபு ஸ்வரூபம் நியாஸத்திற்கு விஷயம் * ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம ‘ என்று த்‌வயோபனிஷத்தில் ஓதப் பட்ட குண பூர்த்தி யுடைய அாச்சாவதாரம் சரணாகதிக்கு விஷயம்‌. “பிரஹ்மாத்மா” எனறு ஓதப்பட்ட தே,வதாந்தர்‌யாமித்வமும்‌ ந்யாஸத்தில் அநுஸந்திக்கத்தக்கது. சரணா கதியில் ‘சரணெள என்னும் த்வய பூர்வ கண்ட, பதத்தில் ஸ்ரீபராங்குஸ பரகால யதிவராதிகளான ஆசார்யர்களோடு கூடி யிருக்கை அநுஸந்திக்கத் தக்கது–ந்யாஸத்தில :ப்ரஹ் மணே தவா மஹஸே‘ என்ற விடத்தில்‌ நாலாம் வேற்றுமைப்‌ பதங்களாலே ப்‌ரஹ்மத்திற்கு ஸேஷித்வமும அவற்றோடு ஓரே வேற்றுமையில்‌” படிக்கப் படும் -ஓமிதி ” என்னும் ப்ரணவத்திலுளள ௮காரததினால்‌ ரக்ஷகத்வமும் ௮நுஸந்திக்கத் தக்கது-சரணாகதியிலோ வெனில் , “ஸரண? சப்த்த்தினால் மோக்ஷ பஃல கரணத்வம் ௮நுஸந்திக்கத் தக்கது, ஆக, ரூப பேதமும் மறைக்க வொண்ணாதது -.

அவ் வண்ணமே ந்யாஸ சரணாகதிகளின்‌ ஸம்யோகமும் வேறு படுகிறது. நியாஸ வித்யை உபாயாந் தரங்களான முப்பத்திரண்டு வித்‌யைகளில ஒன்றாகையால் , அதில்‌ ஈடு படுபவர்களுக்கு ௮தின் பலத்தின்‌ ஸ்வாமியா யிருக்கை யாகிற அதிகாரம் பற்றிய ஜ்ஞானம ஏற் படுகையால் , “ ஸாஸ்த்ர பலம் பரயோக்தரி” [சாஸ்திரத்தின பலம்‌ அதைப்‌ பிரயோகப்பவனுக்கு ஏற்படுகிறது. ] என்கிற ந்யாயத்தாலே ந்யாஸ வித்யைக்கு ஸ்வார்த்த, மோக்ஷமே பலமாகிறது, சரணாகதி உபாயமாகாதாகையால் ஸித்‌தமான பகவானுககே அதில் உபாயத்வமாகையால. சேதனன் உபாயாநுஷ்டதாவாக ஆகாமை யாலும் , “’ பரம புருஷனால் ரக்ஷிக்கப் படும் இவனுக்குப்‌ பலத்தில் ஸவாமித்வமற்றிருக்கை” [ லஷ்மீதந்தரம்‌ 17-74] என்கிறபடியேயே பலஸவாமயமாகிற உபாயாதிகாரம இவனால் கைவிடப்படுகையாலும் , த்வயத்தில் உத்தர கண்டத்தில் நம சப்தத்தாலே பலனில் பார தந்த்ர்யமே பிரார்‌த்திக்கப் படுகையாலும, கேவல பரார்‌த்த மோக்ஷமே சரணாகதிக்குப்‌ பலமாகையால் , நியாஸ ஸரணா கதிகளுக்குப்‌ பலனில் இவ்வாறு. வாசி உள்ளதை யிட்டு ஸம யோக,பேதமும் ஸித்திக்கிறது.

‘ந்யாஸ வித்யை’ என்று நியாஸத்திற்கும்‌, சரணா கதி வித்யை’ என்று சரணாகதிக்கும்‌ பெயரில்‌ பேதமுள்ளதாகையால ஆகயோ பேதமும் அவற்றினிடையே உள்ளது. :: அதற்கே நியாஸம் என்னும்‌ பெயர் அறியப்‌படுகிறது. அது முதலில் உபாயமாகிறது ” எனறு ந்யாஸத்தைப்‌ பறறியும்‌, (நீயே உபாயமாவாயாக எனறு பிரார்ததிக்கும் அறிவே) சரணாகதியாகிறது; அது இந்த தேவனிடம்‌ பிரயோகிககப்படட்டும்‌ ” என்று சரணாகதி யைப்‌ பறறியும்‌ வசனங்களில இநத நாம பேதமம் மிகத் தெளிவு-

ஸாதநாந்தர நிஷ்டரர்ககும்‌, ஸித்‌தோபாய நிஷ்டரர்க் கும் அவர்களுக்குக் கிடைக்கும்‌ பலன்களுக்குமிடையே இவ்வாறு வேறுபாடு எளிதில் விளக்கத் தக்கதே யாகும்‌. இக் கருத்தினாலேயே ஸ்ருத ப்ரகாஸிகாசார்யா்‌ “தானே வந்தடைந்தவனை ஏறறுக்‌ கொள்வது ப்ரீதி விஷயத்வம் ” எனறு அருளிச் செய்தார் –

இவாகள அனைவரும உதாரர்களே, ஞானீயோ வெனில எனக்கே ஆத்மாவா யிருப்பவன என்பது எனது ஸித்தாந்தம் கீதை7-19] எனறு கீதையில் ஐஸ்வர்ய கைவல்யார்திகள் விஷயததில் எமபெருமாரான தனது வண்மையை மாத்திரம் காட்டி, பகவத் உபாசனத்தை இயல்வாகக் கொண்ட ஞானிகளைத் தனது ஆத்மாவைப் போலே இனியவர்களாகக் கூறினான் ”’ என்று கூறுவதும் பொருந்தாது. தனககுப் பெருமையை விளைக்கும மோக்ஷத்தை விரும்பி ஸாதநாநுஷ்டாநம்‌ செய்யும் தாழ்வை யுடையவர்களே ஸாதநாந்தர நிஷ்டர்‌ களாகையால, அவர்களையும் கைவல்யார்த்திகளோடு சேர்த்துத் :தமப’பிரத்யயத் தினால் வேறுபடுத்துவதாகக்‌ கொள்வதே உசிதமாகும் –ஞானியோ வெனில,– எப்போதும் என்னிடம சேர்ந் திருப்பதையே விருமபுகிறவாகள்‌’ [கீதை 10-10] :என்னோடு கூடியிருப்பதையே விருமபு கிறவனனறோ அவன் ‘ [கீதை7-18] – (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்‌) எல்லாம் கணணன”” முதலான விடங்களில சொன்னபடி பரம புருஷனிடமே ஓப்பற்ற பிரீதியை உடையவனாகையால்‌ வரிக்கத்தக்க ஆத்ம பூதனாகிறானாகையால ‘ உதாரர் , ‘ எனப்பட்ட மற்றவர்க ளோடு சேர மாட்டான்‌-ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான பலனை ௮டைகிறான் ‘ .’ப்ரஹ்மத்தை உபாஸிபபவன கல்யாண குணங்களை ௮னுபவிக்கிறான் ” முதலான உபாஸந விதிகளில் ஸவாரார்தத அநுப,வமும, சரணாகதி விதிககு த்வயத்தின உத்தர வாக்யத்தில் பரார்த்த கைங்கர்யமும் பலமாகக் கூறப் படுவதை ஆராய்ந்து பல பேதத்தை ௮றியலா மாயினும, மிகத் தெளிவான நிஷேத வாக்யத்தாலேயே அதை அறியலா யிருககும் போது பல வாக்யங்களில உள்ள விதியை ஆராய வேண்டா

நாட்டினான தெய்வமெங்கும்‌ நல்லதோர் அருள்‌ தன்‌னாலே காட்டினான திருவரஙகம் உய்பவர்க்கு உய்யும்‌ வணணம்‌–[திருமாலை 10]
இதுவே நிர்ஹேதுக கிருபையாகும்
. ஒன்றி யொனறி உலகம படைக்கை, மறை யருளுகை, எந் நினற யோனியுமாய்ப் பிறக்கை, திருவரங்கம்‌ ( முதலிய அர்ச்சாவதாரஙகளைக் ) காட்டுகை, ஆழ்வாராதிகளையும்‌, ஆசார்யர்களையும்‌ அவதரிப்பிக்கை முதலான சேதந உஜ்ஜீவநார்த்தமான எண்ணிறந்த செயல்கள்‌ இந்த நிர்ஹேதுக கிருபையினால்‌ செய்யப் படுமவையே யாகும்‌. இதை நலல தோர்‌ அருள்‌ ‘ என்கையாலே, இதற்குக கீழ்ப் பட்ட அருளும் -ஓரருளும்‌ எம்பெருமானுக்கு உண்டு என்று உணர்த்தப் படுகிறது. இவை ஸஹேதுக கிருபைகளாகும்‌. அதில், “அருள்‌ ‘ என்பது மற்ற தெய்வங்களுக்கு அந்தர்‌யாமியா யிருந்த எம்பெருமான் செய்வது, :ஓரருள்‌ ‘ என்பது தானே சேதனர்‌ அனுஷ்டிக்கும்‌ உபாயாந்தரங்களுக்குப்‌ பலனளிப்பது. சேதனரின பக்குவத்திற்குத் தக்கபடி தேவதாந்தர ஸமாஸ்யரயணமும உபாயாந்தராநுஷ்டானமும திருவரங்கம் தொழுகைக்குப்‌ படிப் படியாகக் காரணங்களாக ஆகின்றபடியால் தெய்வஙகளை நாடடுகைக்குக் காரணமான அருளும் உபாயாந்தரங்களைக் காட்டுகைக்குக்‌ காரணமான ஓரருளும்‌ திருவரங்கம்‌ காட்டுகைக்குக் காரணமான நல்லதோரருளை அடையும்‌ படிக் கட்டுகளாய்‌ அமைகின்றன.

ஸார தமமான ரஹஸ்ய த்ரயத்தால் விவேக முண்டாகப் பெற்றவர்களுக்குள் ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர் தாழ்ந்தவர் . இவருக்கு ஸ்வார்த்த கைங்கர்யமே பலம் – பரகத ஸ்வீகார நிஷ்டர் என்கிற ஸித்தோபாய நிஷ்டர் உயர்நதவர்‌ இவருககு பரார்த்த கைங்காயம பலம் என்று பூரணம் பண்ணிக்‌ கொள்ளலாம்ஸித்‌தோபாய நிஷ்டர்‌-ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்‌, உபாயாந்தர நிஷ்டர்‌ ஆகிய மூவருக்கும்‌ பலத்தின்‌ ஆகாரத்தில்‌ பேதமிருந்தாலும்‌ ஆநந்தத்தி ன்‌ அளவில்‌ பேதமில்லை என்பது தென்னாசார்யர்களின்‌ திருவுள்ளம்‌-

(இல்லை கண்டீர்‌ துணையே (9.1-1)—ஆபத்துக்கு வேறொரு ௮பாஸ்ரயம் உண்டாயிருக்க, இவனைப் பற்றச்‌ சொல்லுகிறதல்ல இது. ௮வனைப் பற்றி ஸவரூபம்‌ பெறுதல்‌ இல்லையாகில் இல்லையா மித்தனை ” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார் இறே –அஹம் மத் பராப்தயுபாயோ வை ஸாஷாத் லஷ்மீபதி. ஸ்வயம் ‘-லஷ்மீ நாதனான நான் தானே என்னை யடைய உபாயமாவேன் ] என்றிறே பகவத் வாகயம்‌. மத் ப்ராபத் யுபாய அஹம் –மத் ப்ராபத் யுபாய ஸாக்ஷாத் அஹம்‌” “மத் பராப்த யுபாய ஸாக்ஷாத்‌ ஸ்வயம்‌ அஹம் -என்று பகவான் தன் உபாயத்வத்தையும் மற்றவற்றின அநுபாயத்வத்தையும ஸ்பஷ்டமாக அருளிச் செய்தானிறே –ஸாஷாத் – என்று உபாயாந்தர வ்யாவ்ருததியும்‌,ஸ்வயம் ‘ என்று லஷ்மீ வ்யாவ்ருததியும் ஸித்‌தம்‌-

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202அதாவது – பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கேஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் – என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-அதாவதுஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது – அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை – இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் -நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே – சகல உபாய சாதாரணமாய் இருக்கை–இத்தால் ஓர் இடத்திலும் இவ் வனுமதிக்கு இவ் வதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பல சாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –

சைதன்ய கார்யம் ஆகை யாவது –ரஷ்யத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கச்  செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் வாகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே – அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் பக்கல் உண்டான அனுமதி – இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை – இத்தால் இவ் வனுமதி இச் சேதனனுடைய வாசியைப் பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் -அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி  கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப அதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் வனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —

அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் வாகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி -இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது –இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்–அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –

பொரு மா நீள் படை -திருவாய் மொழி பிரமேயத்தை தேசிகன்‌ –அவ்யாஜோதார பாவாத் ” என்றும் மா முனிகள்‌ -தருமாறு ஓர் ஏது வற” என்றும்‌ அருளிச் செய்தார்களிறே. இது கொணடு பகவானுடைய விஷயீகாரம்‌ நிர்ஹேதுகம் என்ற விஷயததில் இரு மஹாசாரயர்களும ஏகாபியராயர்களே என்னலாமே என்றாலும் இருவரும பின்ன அபிப்ராயர்கள்‌ என்பதே உண்மை; இது ஸித்‌தோ பாய ஸாத்‌யோபாய போதநாதிகார சரம ஸ்லோகாதிகாரங்களிலே வியக்தம்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸ்ரீ பரிணய உத்சவம்

June 4, 2026

ஸ்ரீ பரிணய உற்சவம் என்பது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி தேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் (மலையப்ப சுவாமி) திருக்கல்யாணம் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த உற்சவம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும். 

பரிணய உற்சவம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மலையப்ப சுவாமிக்கும் (ஸ்ரீனிவாச பெருமாள்) பத்மாவதி தாயாருக்கும் இடையே நடைபெறும் மூன்று நாள் தெய்வீகத் திருமணத் திருவிழாவைக் குறிக்கிறது. இது ஆண்டுதோறும் வைகாசி மாதம் (வைசாக சுத்த நவமி, தசமி மற்றும் ஏகாதசி நாட்களில்) திருமலை நாராயணகிரி தோட்டத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

வாகன சேவை: தினமும் மாலை மலையப்ப சுவாமி முறையே கஜ (யானை), அஸ்வ (குதிரை), மற்றும் தங்கக் கருட வாகனங்களில் எழுந்தருள்வார். ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தனித்தனிப் பல்லக்குகளில் மண்டபத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். [1, 2, 3]

பரிணய உற்சவத்தின் சிறப்பம்சங்கள்:

  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி தேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்:இந்த விழாவில், மலையப்ப சுவாமி (ஸ்ரீனிவாச பெருமாள்) பத்மாவதி தேவியுடன் திருக்கல்யாணம் செய்துகொள்ளும் வைபவம் பிரதிபலிக்கப்படுகிறது. 
  • மூன்று நாள் திருவிழா:இது ஒரு மூன்று நாள் திருவிழாவாகும், இதில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 
  • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள்:திருவிழாவின் ஒரு பகுதியாக திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 
  • பல்லக்கில் ஊர்வலம்:ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார்கள். 
  • வாகனங்களில் ஊர்வலம்:மலையப்ப சுவாமி தங்க யானை, குதிரை போன்ற வாகனங்களில் ஊர்வலம் வருவார். 
  • பூந்தோட்ட பூஜைகள்:நாராயணகிரி பூங்காவில் பூஜைகள் நடைபெறும். 
  • மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும்:புராணக் கதையின்படி, மகாலட்சுமி கோலாப்பூருக்குச் சென்றபோது, ஸ்ரீனிவாச பகவான் பத்மாவதி தேவியை மணந்தார், என்பதை இந்த விழாவில் நினைவுகூர்கிறார்கள். 
  • பத்மாவதி பரிணயோத்சவம் திருமலையில் வண்ணமயமாகத் தொடங்குகிறது
  • “பூங்கொத்து மற்றும் பழ பஞ்ச் பரிணயோத்சவ மண்டபத்தின் சிறப்பம்சங்கள்”
  • திருமலை, ஏப்ரல் 27: பத்மாவதி பரிணயோத்சவத்தின் மூன்று நாள் வருடாந்திர தெய்வீக விழா, மலை நகரமான திருமலையில் திங்கள்கிழமை வண்ணமயமாகத் தொடங்கியது – மத விழாவிற்காக பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் ஆன “பல-புஷ்ப ஷோபித வேதிகா” என்ற கருத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு மேடையில்.
  • முன்னதாக, சிறிய கஜ வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மலையப்ப சுவாமி வாருவின் ஊர்வலத்துடன் தொடங்கிய இந்த மத விழா, ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி ஆகியோர் மற்ற திருச்சிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பரிணய மண்டபத்தை அடைந்தனர்.
  • பாரம்பரிய இந்து திருமண முறைப்படி இந்த தெய்வீக திருமணம் நடைபெற்றது. எடுருகொலு (மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரிணய வேதிகாவிற்கு மணமகனையும் அவரது பரிவாரங்களையும் அழைப்பது), பூமால மார்பு – (மலர் மாலைகள் பரிமாற்றம்), வஸ்திரால சாதிவிம்பு (மணமகனுக்கு புதிய வஸ்திரங்களை வழங்குவது), பூ பந்தாட – (மலர் பந்துகளின் விளையாட்டு) மற்றும் வெஞ்சேபு (மணமகள் மற்றும் மணமகன் திருமண விழாவிற்காக மேடையில் அமர்ந்திருப்பது) போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.
  • தெய்வீக திருமணத்தைக் காண கூடியிருந்த யாத்ரீகர்கள் விழாவின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தனர். தெய்வீக திருமணம் ஆகம ஆலோசகர் ஸ்ரீ என்.ஏ.கே. சுந்தரவதானாச்சாரியாரின் மேற்பார்வையில் நடந்தது.
  • புராணக்கதை: கோயில் புராணத்தின் படி, மகாலட்சுமி தேவி மகா விஷ்ணுவை விட்டு கோலாப்பூருக்குச் சென்றபோது, ​​தனது அன்பைத் தேடிப் புறப்பட்ட ஸ்ரீனிவாசர் முதலில் திருமலையில் உள்ள நாராயணகிரியில் இந்த தோட்டங்கள் அமைந்துள்ள இடத்தில் தரையிறங்கி, வெங்கடேஸ்வரராகக் குடியேறி, பத்மாவதி தேவியை மணந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு வனவாசத்திலிருந்து திரும்பிய மகாலட்சுமி தேவியுடன் கடவுள் கந்தர்வ விவாகம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த விழாவைக் குறிக்கும் வகையில், நவமி, தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் மூன்று நாட்கள் திருமலையில் பத்மாவதி பரிணயோத்சவமாக தெய்வீக திருமணம் கொண்டாடப்படுகிறது.
  • பரிணாய வேதிகா: ஒவ்வொரு ஆண்டும் தேவலோக திருமணத்திற்காக TTD-யின் தோட்டக்கலைத் துறை தனித்துவமான கருத்தாக்கத்தைத் திட்டமிடுகிறது. முன்னதாக பசுபு-கும்கும மண்டபம், படிக மண்டபம், கஜுலா மண்டபம் யாத்ரீகர்களின் பாராட்டைப் பெற்றது, இந்த ஆண்டு “பல-புஷ்ப ஷோபித மண்டபம்” என்ற மற்றொரு கருத்தை வெளியிட்டுள்ளது. இதில் ஆப்பிள், மாதுளை, பைன் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், சோளம், கரும்புகள் மற்றும் மாம்பழங்கள் சுவையாக அலங்கரிக்கப்பட்டன. ஊஞ்சல் மற்றும் பரிணாய வேதிகா அஸ்பாரகஸ், சாமந்தி, ஆர்க்கிட்ஸ், ரோஜாக்கள் மற்றும் பிற வகையான பாரம்பரிய மற்றும் அலங்கார மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமான “மட்டி உட்லு” வெவ்வேறு இடங்களில் கூரை முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ளது. கருத்தியல் திருமண நிலைக்கு நன்கொடை அளிக்க புனேவைச் சேர்ந்த ஒரு நன்கொடையாளர் முன்வந்துள்ளார்.
  • கலாச்சார நிகழ்ச்சிகள்: பின்னர் அன்னமாச்சார்யா திட்டத்தின் கலைஞர்கள் இந்த தெய்வீக விழாவின் போது சங்கீர்த்தனங்களை நிகழ்த்தினர்.
  • TTD EO Dr D சாம்பசிவ ராவ், திருமலை JEO ஸ்ரீ KS ஸ்ரீனிவாச ராஜு, கோவில் DEO ஸ்ரீ C ரமணா, VGO ஸ்ரீமதி விமலா குமாரி, கார்டன் துணை இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீநிவாசுலு மற்றும் பிற மூத்த அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உபதேச ரத்ன மாலையில் ஸ்ரீ வசன பூஷண சீர்மையும் சாரமும்–

June 4, 2026

(ஸ்ரீ வசன பூஷணம் -மணி மகுட வியாக்கியானங்கள் மா முனிகள் அருளிச் செய்து –
இங்கு 53–59-பாசுரங்களால் அதன் மகிமையையும்
மேலே எல்லா பாசுரங்களாலும் அதன் சாரமும் அருளிச் செய்கிறார் –
அப்ரதிம வைபவம் -53-
இப்பிரபந்த திருநாமம் வந்த ஹேது –54-
அதிகாரி துர்லபம் -55-
அர்த்த கிரஹணம் பண்ண நமக்கு உபதேசம் –56-
இந்த ஸ்ரேஷ்ட அர்த்தம் அறிந்து அதிகாரி துர்லம் ஆனதுக்கு ஹேது –57-
இதுக்கு வியாக்கியானங்கள் -பிரபந்த கர்த்தாவின் திரு உள்ளத்துக்கு பொருந்துமாறு இருந்தால் ஆதரணீயம் –58-
ஸ்வ பர போக்யமாக இருக்கும் பிரபந்தம் -59
-)

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய வைபவத்தையும் அவராலே அருளிச் செய்யப் பட்டதாய் ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரம் -என்றும் –
சாங்காகில திராவிட சம்ஸ்க்ருத ரூப வேதவ் சாரார்த்த சங்க்ரஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ திருவாய்மொழி யினுடையவும் மற்றை அருளிச் செயலினுடையவும் அர்த்தத்தை பிரதி பாதிக்குமதாய் பூர்வோக்தமான அருளிச் செயல்களின் வியாக்யான அர்த்தங்களையும் பொதிந்து கொண்டு இருப்பதாய்-

அது தான் ஸ்ரீ பகவத் அபிப்ராயம் என்னுமது தோற்ற
ஸ்ரீ பகவத் அவதார விசேஷமான அவராலே அருளிச் செய்யப் பட்டதுமாய்
ச க்ரமமாக த்வ்யார்த்த பிரதிபாதகமுமாய் சரம பர்வ நிஷ்டையை முடிவாம்படி
அத்தை முடி போலே யுடையதுமாய்-அத்தாலே அ சத்ருசமாய் இருப்பதுமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய வைபவத்தையும் பஹூ முகமாக அருளிச் செய்வாரான இவர்

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரசா வாக்ய ஜாதம்
சர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
அகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–
ஸ்ரீ வசன பூஷண தனியன்

புருஷகார வைபவஞ்ச சாதனசஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே
–ஸ்ரீ வசன பூஷண தனியன்

இப்பாட்டில்-
இப்படி ஸ்ரீ லோகாச்சார்யர் என்று லோக பிரசித்தரான இவர் லோக உஜ்ஜீவன அர்த்தமாக
தம்முடைய கிருபையாலே செய்து அருளின )அஷ்டாதச ) ரஹஸ்ய பிரபந்தங்களில் காட்டில்
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான சீர்மையை அருளிச் செய்கிறார் –

(ஏழு பாசுரங்களால் சீர்மையும் அடுத்து பத்து பாசுரங்களால் சாரமும் அருளிச் செய்கிறார் )

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் யிப்போது
–53-

யண்ணல்-ஸ்ரேஷ்டர் -ஸ்வாமி –
கலை-ஸாஸ்த்ரங்கள்
திராவிட வேத ஸாஸ்த்ரமான திருவாய் மொழி சாரம் -ரஹஸ்ய வேத சாஸ்திரமே ஸ்ரீ வசன பூஷணம்

கோ வா பிரபந்த இஹ லோக குரு பிரபந்த சாத்ருச மேவ சகலேஷு வாங் மயேஷு தத்ராபி கிம் வசன பூஷண துல்யம் அந்யத் இதம் வசனம் சத்யம் ந மித்யா

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன் –
தஸ்ய நாம மஹத்யச-என்கிறபடியே திரு நாமம் அடியாக வந்ததாய் இருப்பதான
எண்ணிறந்த யசஸை யுடையராய் –
ஸ்ரீ முடும்பை இறைவன் -என்னும் படி
ஸ்ரீ முடும்பை என்னும் மகா நகரத்துக்கு நிர்வாஹகரான ஸ்ரீ லோகாச்சார்யர் –

(ராஜ மந்திரி அருகில் முடும்பை கிராமம் உள்ளது
கந்தாடை என்றும் விஞ்சி மூரி என்ற கிராமமும் ஆந்திராவில் உள்ளதாம்
விஜய நகர சாம்ராஜ்யம் தான் புனர் நிர்மாணம்
ஹரிஹரர் புக்கர் தொடங்கி கிருஷ்ண தேவ ராயர்
நிறைய இடங்களை அந்தணர்களுக்கு கொடுத்து -இக்குடும்பத்தார் அங்கு போய் இருந்து இருக்கலாம் )

அன்றிக்கே –
ஸ்ரீ முடும்பை உலகாரியனான அண்ணல் -என்னுதல் –

ஸ்ரீ முடும்பை -குடிப்பேர்
கீழே ஸ்ரீ ஈயுண்ணி மாதவர் -என்றாப் போலே
இவரையும் – ஸ்ரீ முடும்பை உலகாரியன் -என்கிறது –
ஜ்ஞாநாதிகர் யுடைய சம்பந்தம் உள்ளது அடங்கலும் அடிக் கழஞ்சு பெற்று இருக்கும் இறே –
(சிறியாழ்வான் அப்பிள்ளையே ஈயுண்ணி மாதவர் )

உலகாரியன் -இன்னருளால் செய்த கலை யாவையிலும் –
இவர் அபேஷா நிரபேஷமாக தம்முடைய அஹேதுகமான கிருபையாலே யாய்த்து
அசேஷ திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்தது
அண்ணலான முறையாலே இறே இவற்றை இன்னருளாலே செய்து போந்தது –
அவை தான் அநேகங்கள் ஆகையாலே-யாவை -என்னும் அத்தனை –

யாவையிலும் என்றதுக்கு
இப்படி அருளிச் செய்த அசேஷ ரஹஸ்யங்களிலும் வைத்துக் கொண்டு
ஒரு ரஹஸ்யத்துக்கும்-

உன்னில் –
நன்றாக ஆராய்ந்து நிரூபிக்கில் –

திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை –
அத் யுஜ்வலமான ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய கௌரவம் ஒன்றுக்கும் இல்லை –
அவை பல என்னும் காட்டில்-அவற்றில் ஓன்று தான் அர்த்த பூர்த்தியை யுடைத்தான
இதனுடைய பெருமைக்கு ஒப்பாக வல்லதோ –

அதாவது
ஆர்ஷ வசனங்களான அத்யாத்ம சாஸ்த்ரங்களில் காட்டில்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல் மேலாய்
அத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்று அவர்கள் அருளிச் செயலில் தாத்பர்யங்களை
வெளியிடுகிற ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகள் மேலாய்
அவற்றைக் காட்டிலும்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருளை யுடைய இவருடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகளாய் உள்ள அசேஷ ஸ்ரீ ரஹஸ்யங்களும் மேலாய்
அவற்றில் காட்டிலும்
அதிசய அர்த்த கௌரவத்தை யுடைத்தாய் இதிஹாச ஸ்ரேஷ்ட இத்யாதிப் படியே
கீழ் உக்தமான அர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கையாலே
வந்த பெருமையை யுடைத்தாகையாலே-ஸ்ரீ வசன பூஷணம் ஸ்வ பிரபந்தங்கள் பர பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் அதிசயிதமாய் இருக்கத் தட்டில்லை –

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது
-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -5-)

ஆகையாலே இறே இவர் இப்படி அ சத்ருசமாக அருளிச் செய்தது –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகளில் காட்டிலும் இவர் திவ்ய பிரபந்தங்கள் அதிசயிதமாய் இருக்கிறது இவற்றைக் கொண்டே அவற்றின் தாத்பர்யம் அறிய வேண்டுகையாலே –

புகழ் அல்ல இவ் வார்த்தை –
புகழ வில்லை -என்னுமா போலே இப் பிரபந்தத்தை விசேஷமாக சொல்லுகிற இவ் வார்த்தை-கேவலம் அர்த்த வாதமாய் ஸ்துதி பரமாய் இருப்பது ஓன்று அன்று –

மெய் யிப்போது-
இப்போது இதன் வைலஷண்யத்தை நிரூபித்துச் சொல்லுகிற இப் பிரபந்த விஷயமான வார்த்தை சத்தியமே –இவர் தாம் பொய் இல்லாதவர் ஆகையாலே மெய் இப்போது -என்று இவ் வர்த்தத்தின் உடைய ஆப்திக்கு உடலாக சத்யம் பண்ணி சாதித்து அருளுகிறார் –

ஸ்ரீ வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை என்கிற வார்த்தை
மெய் – சத்யம் சத்யம் -என்னுமா போலே

இத்தால்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பல என்னுமதுவும்
அவற்றிலும் ஸ்ரீ வசன பூஷணம் அ சத்ருசமான வைபவத்தை யுடையது என்னுமதுவும்
த்யோதிக்கப் பட்டது –

—————————————-

ஏவம் வித வைலஷண்யத்தை யுடைய இப்பிரபந்ததுக்கு வக்தாவானவர் தாமே
தத் அனுகுணமாக திருநாமம் சாத்தின படியை அருளிச் செய்கிறார் –

(காரணப் பெயர் என்னலாம் படி திரு நாமம் சாத்தி அருளினார் என்றபடி )

(திரு சேர்த்தே -திரு வாராதனம் -ஸ்ரீ குண ரத்ன கோஸம் -ஸ்ரீ வசன பூஷணம்
டன் வந்தான் கதை -திருவரங்க சுத்தி மொத்தமும் களவு -திரு வேண்டாம் சொன்னதால் மொத்த திருவும் போனதே )

(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் என்ன –-இது ஒன்றே மோக்ஷ ஏக ஹேது -ஆகவே ஏவ காரம் –அவனது அபிமானம் மோக்ஷம் பந்தம் இரண்டுக்கும் ஹேது ஆகுமே-உலக விஷய தோஷ தர்சனம் -பகவத் விஷயத்தில் எளிதாக மூட்டும்
இங்கு பகவத் ஸ்வா தந்தர்யம் அறிந்து ஆச்சார்யரைப் பற்றுவது அடுத்த படி-அதுக்கும் மேலே ஆச்சார்யர் நம் மேல் வைக்கும் அபிமானம் –-மக்நான் -உத்தாரதே -ஏக காரணம் -ஸஸ்த்ர பாணிநா -அவனே ஆச்சர்யராக -திரு அவதாரம் -)

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் –54-

(என் என்னு -பாட பேதங்கள்
சீர் -வைபவம் உடைய
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே-ஸ்ரீ வசன பூஷணமாக அருளிச் செய்து அருளிய
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரே -தாமே ஆத்மாவுக்கு அன்றோ இப் பூஷணம்-ரத்னம் -வைரம் போல் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்-அதுக்கு தங்கம் போல் இவரது ஸ்ரீ ஸூக்திகள் )

பிராதாம்
பிரபத்தி பதவீம் மயதாம்
குரு நாம் ரோஹிஷ்ணுநா
வசன ரத்ன கதம்ப கேந
ஏதாம் க்ருதிம்
ஹ்ருதய
புத ஆத்ம பூஷாம் -கற்றோர் -கல்வி தனில் ஆசை உள்ளோர் –
தத்தம் வரம் வசன பூஷண நாமதேயம் –

முன்னம் குரவோர் –
பூர்வ காலத்திலே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு அவ்வருகு உண்டானவர்களாய்
நமக்கு நாதரான ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் சர்வ ஆத்மாக்களுடையவும் ஹிதத்தைக் குறித்து
அருளிச் செய்த திவ்ய ஸூக்திகள்
தன்னை மிகவும் தத் பிரசுரமாம் படி ( பிராஸுர்யம் -நிறைந்து ) இதுக்கு ஆப்த பிரமாணமாக ( பிரம-உண்மை ஞானம் -கரணம் -கருவி ) அங்கீ கரித்து யாய்த்து இவர் இத்தை பிரபந்தீ கரித்தது -என்கை –

மொழிந்த வசனங்கள் –
ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசகமாக அருளிச் செய்த திவ்ய வசனங்களை –
அவர்கள் தாம் பலர் ஆகையாலே ஆப்திக்கு உடலான அவர்கள் வசனங்களும் பலவாய் இருக்கிறபடி –

வசனங்கள் தன்னை மிகக் கொண்டு –
தர்மஜ்ஞ்ஞஸ் சமய பிரமாணம் வேதாச்ச
-(மனு ஸ்ம்ருதி ) -என்கிறபடியே
அல்லாத பிரமாணங்கள் அநேகங்கள் யுண்டாய் இருக்கவும் அதில் அனுஷ்டாதாக்களான இவர்களுடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-அத்தை இதுக்கு முக்ய பிரமாணமாக அங்கீ கரித்து அந்த வசன பிரசுரமாய் இறே இத்தை அருளிச் செய்து அருளிற்று

(மூதறியும் அம்மனைமார் -மேலையால் செய்வனகள் -செய்யாதன செய்யோம்
இதுவே முக்கியம் -வேதாஸ் ச -அதுவும் பிரமாணம் என்பர் இதுக்கு இரண்டாம் பக்ஷம் )

ரத்ன பூஷணம் சமைப்பார் பல ரத்னங்களை முந்துறச் சேர்த்துக் கொண்டு சமைக்குமா போலே இவரும் வசன பூஷணம் சமைக்கிறவர் ஆகையாலே அர்த்தவத்தான வசனங்களை மிகவும் கொண்டு கூட்டின படி –
ஸூ வ்யாஹதானி மஹதாம் ஸூஹ்ருதாநி ததச் சத
சஞ்சின் வந் தீர ஆஸீத சீலஹாரி சிலம்யதா
-( பாரதம் )–என்னக் கடவது இறே –
(களத்து நெல்லைத் திரட்டி -பிரயத்தனம் -செய்து -கண்ணும் பருத்தாக சேகரிப்பது போல் தீரர்கள் )

இப்படி இவற்றைக் கொண்டு செய்கிறது ஆர்க்கு என்னில் –
கற்றோர் தம் உயிர்க்கு –
கற்றோர்க்கு வரிசை கொடுக்கைக்காக-
அதாவது
தங்களுக்கு ஹிதைஷிகளாய் இருக்கிற ஆச்சார்யர்களுடைய சந்நிதியாலே
ஜ்ஞாதவ்ய ( அறிய வேண்டிய )சகலார்த்தங்களையும் நன்றாக கேட்டு இருக்கிறவர்கள் உடைய ஸ்வரூபத்துக்கு
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று
-(பெரிய திருமொழி – 8-10-3-)
அறியக் கற்று வல்லார் -(திருவாய் -5-5-11 )-என்னக் கடவது இறே
(கற்றோருக்கும் கல்வி தன்னில் ஆசை உடையோர்களுக்கும்-கற்றோர்க்கு இல்லாமல் கற்றோர் தம் உயிருக்கு -ஆத்மாவுக்கு தானே இது )

மின் அணியாச்-
ஏவம் விதரான அதிகாரிகள் உடைய ஸ்வரூப ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும் படியான ஒளியை யுடைய பூஷணமாக –

உயிர்க்கு மின் அணியாச் –
அநித்தியமான உடலுக்கு பூஷணம் சமைப்பார் நடுவே-இவர்-நித்தியமான உயிர்க்கு பூஷணம் சமைத்தார் இறே –

உயிர்க்கு மின் அணியாச் –
கௌஸ்துபதுக்கும்-கௌஸ்துபம் -என்னலாம் படி இருக்கை-வைகுண்ட ப்ரிய கண்ட பூஷணமாய் இறே இருப்பது-

(குரு மா மணிப் பூ திகழும் திரு மார்பு –
ஸ்ரீ வத்சம்-அசித் -மச்சம் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ பிரதிநிதி-நீல நாயக்கல் –கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
ரத்னத்துக்கு ரத்னம் இப்பிரபந்தம்-ஆபரணத்துக்கு ஆபரணம் இது
புருடன் மணி வரமாக )

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்
–(ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-)

மின் அணியாச் சேரச் சமைத்து அவரே –
ஔஜ்வல்ய ரூபமான ஆபரணமாய் சேரும்படி என்னுதல் –
ஸ்வரூபத்துக்கு சேரும் படி -என்னுதல் –
கீழ்ச் சொன்ன வசனங்கள் எல்லாம் அன்யோன்யம் சந்தர்ப்பமாம் படி சமைத்தவரே பேரிட்டார்

சமைக்க –என்றது –
பண்ண -என்றபடி
ஆரஞ்சமைக்க -என்று இறே இவர்கள் சாதிப் பேச்சு இருப்பது –
(இவர்கள் -பொற் கொல்லர்கள் )

சமைத்தவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின் –
அதாவது –
ஆபரண நிர்மாணகர் தாமே அந்த ஆபரணத்துக்கு அனுகுணமானதோர் அபிதானத்தை கற்ப்பிக்குமா போலே-வசன சந்தர்ப்ப ரூபமான வசன பூஷணத்தை நிர்மித்த அந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தாமே ஸ்ரீ வசன பூஷணம் என்கிற இந்த அதிசயமான திரு நாமத்தை இந்தப் பிரபந்தத்துக்கு சாத்தி அருளினார் -என்கை –

(பாடின ஆழ்வார் பாட பாட்டுடைத்தலைவனே மிதுனமாக திருவாறன்விளையில் கேட்ட ஏற்றம் திருவாய் மொழி வால்மீகி ராமாயணம் குசலவர்கள் பாட பெருமாள் மட்டும் கேட்டு -பாட்டுடைத்தலைவி கேட்க்காமல் போனதே )

பின் –
சேரச் சமைத்த பின் -என்னுதல்-
அந்த ரஹஸ்யங்களை அருளிச் செய்த பின் -என்னுதல் –

(காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் இவர் கால ஷேபம் –
தேவப்பெருமாள் நியமனம் அடியாகவே பிரபந்தம் உருவானது
)

அவரே பேரிட்டார் –
பிதா புத்ரஸ்ய நாம குர்யாத்
-என்கிறபடியே
தமக்கு அதிசயமான திரு நாமத்தை தமப்பனார் (வடக்குத் திருவீதிப்பிள்ளை )ஆதரித்து சாத்தினாப் போலே இத்தை ஈன்ற தாயான தாமும் அப்படியே இதுக்கு அதிசயமான திரு நாமத்தைச் சாத்தி அருளினார் ஆய்த்து
இந்த பிரபந்தம் மூலமாக விறே இவருடைய ஜ்ஞான சந்தானம் அவிச்சின்னமாய் நடந்து செல்லுகிறது –

(தம் அப்பனார் -அப்பா -அப்பன் -உபகாரகன் -தகப்பன் மருவிய சொல்
பிள்ளை லோகாச்சார்யார் -என்று ஆச்சார்யர் திரு நாமமே ப்ராஸூர்யம் ஆனது போல் இவரது இந்த ப்ரபந்தமும் -)

வசன பூஷணம் என் பேர் –
ரத்ன பிரசுரமான பூஷணத்தை ரத்ன பூஷணம் என்னுமா போலே ஆச்சார்ய வசன பிரசுரமாய்-அனுசந்தாக்களுக்கு ஒஜ்வல்ய கரமாய் இருக்கையாலே
இதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆய்த்து
-என்று ஸ்ரீ ஜீயர் தாமே இதன் வியாக்யான பிரவேசத்தில் அருளிச் செய்து அருளினார் இறே

வசன பூஷணம் என் பேர் இக் கலைக்கு இட்டார் –
இந்த -ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்தரத்துக்கு –இப்படி திவ்யமாய் இருப்பதொரு திரு நாமத்தை நிர்தேசித்து அருளினார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்துத் தாழ் வடத்தை- இது ஒரு கோவை இருந்தபடி என் -என்று -அதன் வாசி அறிந்தவர்கள் கொண்டாடுமா போலே இதுவும்-வாங்மணி ஸ்ரக் க்ரைவேய பூஷாத் மகம் -என்னும்படி வசன சந்தர்ப்பத்தை யுடைத்தாகையாலே –

இக்கலை -என்று
இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

(கலை இலங்கு மொழியாளர் -கலை -சாஸ்திரம் –மொழி பாஷை அர்த்தங்கள் –செந்தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர்-இதுவும் ப்ரஹ்மம் அடைய வழி காட்டி அருளுவதால் ஸாஸ்த்ரம்-மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -கர்ம விசாரம்-ப்ரஹ்ம விசாரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் போல் இது ரஹஸ்ய த்ரய ஸாஸ்த்ரம் -)

———————————————————-

புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

கீழ்-
ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் சாத்தும் படியான இதன் பெருமையை அருளிச் செய்தார் –
இதில்-
ஏதத் அர்த்த தர்சிகள் யுடையவும்-
ஏதத் பிரதிபாத்ய அனுஷ்டாதாக்கள் யுடையவும்-
அருமையை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் —

(இது ஸ்வ சோதனைக்கே -இன்னும் ஒருவரைப் பார்த்து நீர் ஸ்ரீ வசன பூஷணம் படி
நடக்க வில்லை என்று சொன்னால் சொன்னவனே அறியாதவன் ஆகிறான் )

(த்வாபர யுகத்திலே வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார் ஸூ துர்லபம் –
கலியில் -அத்தையும் தாண்டி பாகவத சேஷத்வம் அறிந்து அறிந்தபடி அனுஷ்ட்டிப்பார் மஹா துர்லபம் அன்றோ-மதுரகவி நிஷ்டை ஓர் ஒருவர் தான் உண்டு -சத்ருக்ந ஆழ்வான் -வடுக நம்பி -போல்வார் – )

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது
–55-

த்யானந்திகே
வசன பூஷண வாரி ராசேக
சதாம் அபிதேய ரத்னம்
தே
சத் ப்ரகர்ஷ தே சஞ்சரிந்தி
யஹா கோபி சாம்பவி சேத்
விரலோகி

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய அகாதமான அர்த்தத்தை அதிலே அவகாஹித்து
உள் புகுந்து உள்ளது எல்லாம் அறிவார் ஆர் –
எத்தனை அதிசயித ஜ்ஞாநராய் இருப்பார்க்கும் இத்தை ஸ்வ யத்னத்தால் அறிய வென்றால் துர் அவஹாகமுமாய் துஸ் தரமுமாய் இறே இருப்பது –

முதலடியில் அல்லாதவற்றில் இதுக்கு யுண்டான வாசி அறிந்து இத்தைப் பாடம் பண்ணுவார் அரிதாய் இருக்கும் –
அது ஒரு படி செய்தார்கள் ஆகில் அர்த்தம் அறிகை அரிதாய் இருக்கும் –
அதுவும் பெரு வருத்ததோடு கூட மேல் எழ சிறிது அறிந்தார்களே யாகிலும்
ஆழ் பொருள் எல்லாம் அறிவார் மிகவும் தேட்டமாய் இறே இருப்பது –

ஆழ் பொருள் –
ரத்னாகாரமானது-(ஆகாரம் -இருப்பிடம் )
மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் -(பெரிய திருமொழி -2-8)–என்னும்படி ஆழ் கடலான தனக்குள்ளே மணி முக்தாதிகளான சிறிய பதார்த்தங்களைக் கொண்டு இருக்கும் –
அதுக்கு தேசிகரான முழுகுவர் இறே முழுகி எடுப்பார் –
மற்றை யார்க்கும் கரை யருகும் செல்ல ஒண்ணாதாய் இருக்கும்

அப்படியே
ஸ்ரீ வசன பூஷண வாரிராசி யான இதுவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளான
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிற அகாத அர்த்தத்தை யுடைத்தாய் இருக்கும் –

(வேதியர் -மிக்க வேதியர் -வேதியர் பொருள் -மிக்க வேதியர் பொருள் -வேதத்தின் உள் பொருள் –மிக்க வேதத்தின் உள் பொருள் -ஆழமான அர்த்தம்-
ததீய சேஷத்வ பாரதந்த்ரம் -அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
பக்தி யோகம் தாண்டி பிரபத்தி தாண்டி தான் பற்றும் பற்றும் உத்தாரகம் அன்று என்று உணர்ந்து-ஆச்சார்யர் தாமே அபிமானித்து கைக்கொள்ளுதல்
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு –
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை வேண்டுமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

இவன் நம்முடையவன் என்று –இவரே ஆண் பிள்ளை என்று ராமானுஜர் அனந்தாழ்வானை அபிமானித்தது போல்-தான் பற்றும் பற்று அக்னி ஸ்பர்சம் அகங்கார கர்ப்பமாய் இருக்குமே )

இதுவும் அறிவித்தேன் ஆழ் பொருளை -(நான்முகன் )-என்னும்படி தேசிகர் அறிவித்தாய் ஆய்த்து அறியலாவது –
வாக்ய சங்கதிர் இத்யாதி ஸ்ருதம் விநா மகதாம் அபி அஸஹ்யாநி -என்று இறே
அறிகையில் உள்ள அருமை இருப்பது –

(கடலுக்கும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் சாம்யம் சொல்லி வருகிறார் )

அங்கும் –
செழும் கடல் அமுதினில் பிறந்த
(திருவிடந்தை )-அவள் பிரயோஜனமாய் இருக்கும் –
இங்கும்
புருஷகார வைபவம்
-தொடங்கி -(26 சூரணைகள் )-ஆச்சார்ய அபிமானம் -ஈறாக
ஆறு பிரகரணத்தாலும் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாம் ஆழ் பொருள்களாய் இருந்ததே யாகிலும்
சரம பிரகரணத்தில்-(குரோர் உபாயதாஞ்ச யோ)
சரம உபாயத்துக்கு சேஷமாய் இறே இருப்பது –

ஆகையால் இறே –
திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும் -என்று தொடங்கி
மன்னிய இன்பமும் மா கதியும் குரு வென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும் -என்று இறே
பொருள் முடிவாக அருளிச் செய்தது-

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

(ஒன்பது பிரகரணங்கள் ஆறாகும் பொழுது
முதல் அதுவே
2-3-4-5- பிரகரணங்கள் -இரண்டாவதும் மூன்றாவதும்
6-7-இரண்டும் சேர்ந்து நாலாவது ஆகும் –
8-ஐந்தாவது
9-ஆறாவது பிரகாரணம் ஆகும் )

(புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே)

(பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

(1-புருஷகார வைபவஞ்ச-பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை -(1-22-)
2-சாதனஸ்ய கௌரவம்-ஆறு -( 23-79 )
3-தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய–பெறுவான் முறை -( 80-307-)
4-சத்குரு உபசேவனம் -அவன் கூறு குருவை பனுவல் (308-365-)
5-ஹரிதயாம் அஹேதுகீம்–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான் (366-406 )
6-குரோர் உபாயதாஞ்ச–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு ( 409-469 )
எலாம் வசன பூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

பெரு விலையனான ஆபரணத்துக்கு
நாயகக் கல் போலே யாய்த்து
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு
இப் பிரதேசம் -(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-447 )
நாயக ரத்னமாய் இருக்கும் படி
(எண்ணிக்கையில் நடுவில் உள்ள சூரணை கொள்ளாமல் விஷயத்துக்கு நாயகம்
மேம்பொருள் பாசுரம் திருமலைக்கு போல் )

இத்தனையும் அருளிச் செயலைப் பற்ற அதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது
கீழ் அடங்கலும் மேல் அடங்கலும் இதன் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது -என்று இறே
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
-என்னும் இடத்துக்கு ஸ்ரீ ஜீயர் வியாக்யானம் செய்து அருளிற்று –ஆகையால் இதுவே ஆழ் பொருளாகக் கடவது –

வேதம் ஒரு நான்கின் உட்பொருள் தந்த மெய்ப்பொருள் -என்று தொடங்கி
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாகும் என்னுமது -( ஞானசாரம்-31- )-என்று இறே அருளிச் செய்தார் –

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது
–31-ஆச்சார்யர் திருவடிகளே அரண் என்பதே மெய் பொருள் )–தன்னுடைய ஆச்சார்யன் – இறைவன் என்றது சேஷி -என்றபடி –தன்னிறைவன் என்கையாலே –சர்வ சாதாரண சேஷியான ஸ்ரீ ஈஸ்வரனைப் போல் அன்றிக்கே
தனக்கு அசாதாரண சேஷி யாவவன் -என்கை -அவனுடைய திருவடிகளே –
பிரதம பர்வத்தோபாதி- சரம பர்வத்திலும் திருவடிகளே இறே உத்தேச்யம்-அவதாரணத்தாலே அதனுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் சொல்லுகிறது-தாளே அரணாக என்றும் –சேஷித்வ சரண்யத்வங்களைச் சொல்லுகையாலே
ப்ராப்யத்வம் அர்த்தாத் சித்தம் இறே-குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம் ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா
-என்று ஸ்ரீ சாத்விக தந்த்ரத்திலே-த்வய பிரசங்கத்தில் தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனுடைய வைபவம் பகவானால் அருளிச் செய்யப்பட்டது இறே

அன்றிக்கே
பேறு தருவிக்குமவன் தன் பெருமை -என்று தொடங்கி
நல் குருவின் வன்மையோடு எல்லாம் ஸ்ரீ வசன பூஷணம் அதில் தேறிட நமக்கு அருளுகையாலே
ஆறு பிரகரணத்தில் உக்தமான அசேஷார்த்தங்களும்
ஒரு சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு
ஓர் ஒன்றே ஜ்ஞாதவ்யமாக வேண்டுகையாலே
எல்லாம் ஆராய்ந்து அறிய வேணும் என்று ஆழ் பொருள்
என்கிறார் ஆகவுமாம்-

முந்தின யோஜனையில்-
ஆழ் பொருள்கள் எல்லாம் என்கிறதுக்கு சேர-
மற்றை அர்த்தங்கள் எல்லாம் ஆஸ்ரயண விதி சேஷங்களாய் அறியப் படுமதாய் இருக்கும்
தன்னை அறியும் போது உக்த லஷண யுக்தனான தான் என்று அறிய வேணும் –
ஆச்சார்யனை அறியும் போது ஆறு பிரகரணத்தாலும் பிரதி பாதிக்கப் படுகிற
ஷட் பத ( த்வய ) நிஷ்டனாக அறிய வேணும் –
ஆகையால் ஆழ் பொருள்கள் எல்லாம் அறிய வேணும் –

இதில் அர்த்தங்கள் எல்லாம் சாப்தமாக (மேல்) எழத் தோன்றி இருந்ததே யாகிலும்
இதுக்கு எல்லாம்-சர்வார்த்தான் விபரீதாம்ச-(ஸ்ரீ கீதை 18-32)- -என்னும் படி விபரீத அர்த்தத்தை கற்பித்து அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்வார் ஒழிந்து
இதில் யதார்த்த ஞானத்தை யுடையராய்
இத்தை விஸ்வசித்து உஜ்ஜீவிப்பார் அரிதாய் இறே இருப்பது
ஆமார் அறிவுடையார் ஆவார் அரிதன்றே–(பெரிய திருவந்தாதி 37 )என்னக் கடவது இறே
ஆகையாலே அறிவார் ஆர் -என்கிறார்-

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை
— பெரிய திருவந்தாதி-37-

(வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-சரணாகதி செய்வார்க்கு -விபரீத அர்த்தம் –தான் அருள் செய்யும் நினைத்தவருக்கு உகந்து செய்வான் )

இனி மேல் இதன் அனுஷ்டாதாக்களின் அருமையை அறிவிக்கிறது –
ஆரது சொல் நேரில் அனுஷ்டிப்பார் –
தத் விபரீதங்களை அனுஷ்டித்துப் போருமது ஒழிய
தத் உக்த அர்த்தத்தின் படியே
நேரே நெறியே ஆசரித்து போருவார் ஆர் –
ஸ்ரீ வசன பூஷண வழியிலே வழி படுவார் யுன்டாவது அரிதாய் இறே இருப்பது –

(கற்க கசடற கற்க கற்றபின் அதுக்கு தக்க நிற்க வேண்டுமே )

அல்லாத சாஸ்த்ரங்களை அறிந்து அனுஷ்டிப்பார் யுண்டாகிலும்
இந்த திவ்ய சாஸ்திரத்தின் படியே அனுஷ்டிப்பார் அரிது இறே
ஆகையால் அருளிச் செய்தவர் தாமே அதின் படியை
ஊனமற ஆசரித்து இருக்கும் நாளை நாள் எனை நினைந்து -என்று
அந்த பரம ரஹஸ்ய பிரதிபாதகமான அர்த்தத்தின் படி அசங்குசிதமாக அனுஷ்டிக்கும் படியையும்
தத் பலமாக ஆச்சார்ய அநு ஸ்மரணத்தையும்-அருளிச் செய்தார் இறே –

இதன் ஆழ் பொருளை அறிந்தும்-அது சொல் நேரில் அனுஷ்டித்துப் போருவார்
ஸ்ரீ உலகாரியன் அருள் தப்பாமல் எய்திய தரத்தை யுடைய
ஸ்ரீ ஜீயர் தாம் ஒருவரும் இறே உள்ளது –

இனி இந்த மகா பிருத்வியிலே எல்லாம் சம்பாவிதங்களாய் இருக்க
தாத்ருசரான இவர்களைக் கிட்டாதோ என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக –
ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே — என்கிறார் –
இத்தை அறியவும்
அனுஷ்டிக்கவும்
அருமருந்து போலே ஓர் ஒரு மகாத்மாக்கள் யுண்டாகில் உண்டாம் அத்தனை காண் —

ஓர் ஒருவர்
ஸ்ரீ பிரதி வாத பயங்கரம் அண்ணனும்
அவருக்கு
ச ப்ரஹ்மசாரிகளாய்
செந்தமிழ் சேர் ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர் அன்றி
தேவு மற்று அறியாத ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரும் தத் பரதந்த்ரர் இறே –

(பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -இவர் பூர்வாஸ்ரம இயற் பெயர் கோவிந்த தாசர் அப்பர்
திருக்குமாரர் – அழகிய மணவாள ஜீயர் —
இவர் திருக்குமாரர் வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர் -)

அண்ணனை எண்ணில் மற்று ஒருவரை எண்ணாது என் அணி விரலே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ தாசரான ஸ்ரீ அண்ணா மதிக்கும் படியான ஸ்ரீ மதுரகவி தாசர்
அண்ணன் போல்வார் ஒருவர் யுண்டாகில் யுண்டாம் அத்தனை

ச மகாத்மா ஸூ துர்லப -என்றும்-
ஸூ துர்லபா பாகவதாஹி லோகே -என்றும்-
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்றும் -சொல்லுகிறபடியே
பகவத் பரராய் இருப்பவர்கள் தான் தேட்டமாய் இறே இருப்பது –

இனி
அனுகூலரான ஆச்சார்ய பரதந்த்ரர் அத்யந்த அபூர்வராய் இறே இருப்பது –
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு
ராமோ ராமோ ராம இதி -என்று ஒரு நாடாக யுண்டாய்த்து
ஆச்சார்ய பாரதந்த்ர்யதுக்கு
பரத அனுஜரான ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஒருவர் இறே உள்ளது

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்வார் பத்துப் பேர் யுண்டு இறே-அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் யுண்டு இறே
வடுக நம்பி ஆண்டானையும் ஆழ்வானையும் இரு கரையர் என்பர்
-என்று இப்படி
குரு பக்தோத்த மோத்தம -என்னும்படி குரு பக்தர் ஆகையாலே
உத்தமோத்தமராய் ஸ்ரீ மான்களான அதிகாரிகள் ஓர் ஒருவரை இறே அருளிச் செய்தது –

(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே – அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது —சூரணை -408–
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-)

யுண்டாகில் -என்கிற எதி சப்தத்தாலே
ஓர் ஒருத்தர் தானும் துர்லபம் என்று தோற்றுகிறது-
இப்படி அலாப்ய லாபமானது கிட்டிற்று ஆகில் அவ்வளவு காண் –

உள்ளமே –
ஸ்ரீ வசன பூஷண் பூஷிதமான மனசே –
அதில் அகாதமான அர்த்தத்தை அறிந்து
தத் உக்தமான அனுஷ்டானத்தையும் ஆசரித்துக் கொண்டு போருமவர்களை
ஆதரித்துக் கொண்டு போருவாய் நீயே அன்றோ –

என் -ஓர் ஒருத்தர்க்கு ஒழிய அது எல்லார்க்கும் இது யுண்டாகாதோ-என்ன
எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
தாங்களும் தங்களில் வைஷ்ணவர்கள் என்று இருக்கில் எல்லார்க்கும் அதில் கம்பீரமான அர்த்தத்தை ஸ்வ யத்ன ரூப ஞானத்தாலே அறியவும்
தத் ப்ரதிபாத்யமான விலஷண அனுஷ்டானத்தை
ஸ்வ யத்ன ரூப சக்தியாலே அனுஷ்டிக்கவும்
அசக்யமாய் இருப்பது ஓன்று அன்றோ –

அண்டாதது -அடங்காதது –
அத்தாலும் அசக்யமானது -என்றபடி –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாய் இறே இருப்பது

அது –
என்று அர்த்தத்தில் துரவாஹத்வமும்
அனுஷ்டானத்தில் அசக்யத்வமும்
தோற்றி இருக்கிறது –

லோகோசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே தத்வார்த்த
தர்சினோ லோகே தந் நிஷ்டாச்ச ஸூ துர்லபா-

ஜகதாச்சார்யரசிதே ஸ்ரீ மன் வசன பூஷணே தத்வஜ் ஞ்ஞாநஞ்ச
தன் நிஷ்டாம் தேஹி நாத யதீந்திர மே
-என்றும் சொல்லக் கடவது இறே –

(உபதேச ரத்ன மாலை அறிய பலனும் எந்தை எதிராசன் இன்னருள் கிட்டும் –
அது கிட்டியவாறே ஸ்ரீ வசன பூஷண அர்த்தமும் அனுஷ்டானமும் கிட்டும் –
திருவாய் மொழி பெரிய திருமொழி அறியவும் எங்கள் கதியே ராமானுஜ முனியே அருள வேண்டும்

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தனில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா – )

————————————————

கீழ் ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே -என்று அதிகாரிகள் சங்குசிதராய் இருக்கிறபடியைக் கண்டு சர்வரும் வசன பூஷண அதிகாரிகளாம் படி திருத்துவோம் என்று
திரு உள்ளம் பற்றி அபி முகராய் இருக்கிறவர்கள் ஆபி முக்யமே பற்றாசாக இதில்
அர்த்த நிஷ்டை யுடையராம் படி அவர்களைக் குறித்து -பரோபதேசம் பண்ணி அருளுகிறார்

உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து –56-

உக்ராத் பவாப்தி குஹராத் -உக்ரமான சம்சார புதைகுழி
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-ஜிதந்தே ஸ்தோத்ரம் )
த்ருதம் உத்தகீர்ஷா
ஜாயேதுவோ யதி ஜனார்த் உபாய ஏக
ஆலோகியதாம்
வசன பூஷண ஆத்ம நீதம்
நிஷ்டீயதாம் தத்
நியமேன
தத் யுக்த மார்க்கே

உய்ய நினைவுடையீர் –
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற மனசை யுடையவர்களே
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -என்கிறபடியே-மனஸ் சஹகாரம் ஆகிற சம்பத்தை யுடைய நீங்கள்

(பழுதிலா ஒழுகல் ஆறு -வேதம் கற்க வேண்டும் -இதுக்கு மனம் ஒன்றுமே போதுமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )

இந்த சம்பத்தின் மேலே எந்த அதிகாரத்தை ஆர்ஜித்துக் கொள்ளப் போகிறீர்கோள் –
ஈஸ்வரன் படியைப் பார்த்தாலும்-ஆபி முக்யத்துக்கு அவ்வருகே –
அந்யன் நசேச்சதி ஜனார்த்தன -என்னும் படி இறே இருப்பது –
திரு மந்த்ரத்தின் யுடைய தாத்பர்யமான இப் பிரபந்த அப்யாச அனுஷ்டானங்களுக்கும்
ஸ்ரத்தை இறே வேண்டுவது –

(வேத சாரம் – உபநிஷத் சாரதர -அநுவாக சார தம- காயத்ரியில் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கு தானே திருமந்திரம் )

ஆகையால் இவ்வளவு ஆனுகூல்யம் யுடைய –உங்களுக்குச் சொல்லுகின்றேன் –
உங்கள் உஜ்ஜீவனத்திலே ஊன்றி இருக்கிற நான் உங்கள் கார்யம் பலிக்கும் தனையும்
இந்தப் பரமார்த்தத்தை சொல்லா நிற்கிறேன் –சொல்ல உபக்ரமித்தல் சொல்லி முடித்தல் செய்ய வில்லை –நீங்கள் அதிலே நிலை நிற்கும் தனையும் நான் சொல்லுகை தவிரேன் –
(நமது உஜ்ஜீவனமே மா முனிகள் நினைவு -சொல்லுகின்றேன் வர்த்தமானம் –
சொன்னேன் என்று முடிக்க வில்லையே-இது வரை முன்னுரை தானே -இனி மேல் தானே ஸ்ரீ வசன பூஷண சாரங்கள் )

ஆகில் நீர் சொல்லப் புகுகிற அந்த ரஹஸ்யம் தான் ஏது என்னில் –
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த –
பூர்வாச்சார்யர்களைப் போலே அர்த்தத்தின் சீர்மையைப் பார்த்து ரஹஸ்யமாக உபதேசித்துப் போருகை அன்றிக்கே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தம்முடைய கரை புரண்ட கிருபையாலே பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும் படி
முற்காலத்திலே மொழி பட்டோடும் கவியமுதம் -(திருவாய் – 8-10-5 )-என்னும்படி தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்து அருளின –

செய்ய கலையாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக்
அனுகூலருக்கு ஸ்வார்த்த பிரகாசத்தை பண்ணிக் கொண்டு இருப்பதான ஆர்ஜ்வத்தை உடைத்தாய் சாஸ்திர ரூபமாய் இருப்பதான ஸ்ரீ வசன பூஷணமுடைய கம்பீரமான அர்த்தத்தை –

கற்று –
சத் சம்ப்ரதாய நிஷ்டரான சதாச்சார்யர்கள் சந்நிதியிலே அவர்கள் அப்யசிப்பிக்க அப்யசித்து –

தத் பலமாக –
அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து –
அந்த அப்யச்தமான அர்த்தத்துக்கு அனுகுணமான நிஷ்டையிலே அதனுடைய கௌரவத்தை அறிந்து நில்லுங்கோள்- உங்களுக்கு உஜ்ஜீவனம் சித்திக்கும் –

ஆழ் பொருளைக் கற்று -அதனுக்காம் நிலையில்-நிற்கை யாவது –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்கிற அகாத அர்த்தத்தை ஸ்வாச்சார்யர்கள் சந்நிதியிலே சேவித்து ( காலஷேபம் கேட்டு-உணர்ந்து ) அதன் கௌரவத்தை அறிந்து அதுக்கு அனுகுணமான நிஷ்டையில் நிஷ்டராய் இருக்கை -என்றபடி –

கேட்டிருக்கையாய் இருக்கும் (443)-என்றும்
கேட்டிருப்பார் -என்றும் – சொல்லக் கடவது இறே –

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும்
–சூரணை-443-)

(பூர்வர் அருளிச் செய்ய கேட்டு அதன்படி இருக்க வேண்டுமே விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பார் )

இத்தால்
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டையே உஜ்ஜீவனம் என்றது ஆய்த்து –

(இதில் உறுதியே உஜ்ஜீவனம் –
தொழுது எழு என் மனமே
தொழுதால் எழலாம் உஜ்ஜீவனம்
தொழுவதே உஜ்ஜீவனம் -இதுவே வாழ்க்கை
பிறந்தார் உயர்ந்தே -பிறந்து உயர வேண்டாம் -உயர்ந்தே பிறந்தவர் ஆகிறார்
அதுவே போல் இதில் உறுதியான மனசே உஜ்ஜீவனம் )

——————————————-

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து -என்று அந்வயத்தாலே இதில் அர்த்தத்தை ஸ்தாபித்தவர் –கல்லாதது என்னோ கவர்ந்து -என்று வ்யதிரேகத்தாலும் இதில் அர்த்தத்தை ஸ்தாபித்து அருளுவாராய் அபி முகராய் செய்கிறோம் என்று ஆறி இருந்த கீழில் அவர்களைக் குறித்து-இவர்கள் இத்தை அபிநிவேசத்துடன் அதிகரியாமைக்கு அடி ஒன்றும் காண்கிறிலோம் -என்று ஸ்வ விசாரமாகப் பண்ணி அருளுகிறார் –

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து
—57-

ஏ தேசிகா அதிகதானி
உபதேச ரத்னானி
ஆஸஸ்ய தே சதி
ததா ஆஸ்ரயிதம் சக்தா
தே யத்ன தகா
வசன பூஷண கூடம் அர்த்தம்
நைவ ஆஸ்ரயந்தி
பரிசீலன குதோந வித்வான்

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச்
ஸ்வ பர ஹித பரராய் இருக்கிற தேசிகர்கள் சந்நிதியில் ப்ரஸ்ன கால பிரதீஷராய் –
ஸ்ரவித்த ஸ்லாக்கியமான அர்த்தத்தை –

(சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத்
-ஸ்ரீ நியாஸ விம்சதி —–1-ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய
-ஸ்ரீ நியாஸ விம்சதி–3-)-சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

சிந்தை தன்னில் மாசறவே –
சம்சய விபர்யய ரூபமான மநோ மாலின்யாதிகள் ச வாசனமாகப் போம் படி –
(சம்சய விபர்யய ரூபமான ஐயம் திரிபு )

யூன்ற மனனம் செய்து –
ஸ்ருதஸ்ய அர்த்தஸ்ய யுக்தி தோநு சிந்தனம் மனனம் -என்கிறபடியே
ஸ்ருதமான அர்த்தத்தை ஹிருத் கதமாக மாசற்றால் மனனம் -என்னும் படி மனனம் பண்ணி

ஆசரிக்க வல்லார்கள் தாம்
உக்தமான அனுஷ்டானத்தில் ஒன்றும் நழுவாமல் – ஆசரிக்க வல்ல சக்தியை யுடைய தாங்கள் –

வசன பூஷணத்தின் வான் பொருளைக்
தங்கள் அனுஷ்டானதுக்கு அனுக்ரமணி போலே இருக்கிற ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய
சீரியதான அர்த்தத்தை –கனத்த பொருளை –

கல்லாதது என்னோ கவர்ந்து
குருவான அர்த்தத்தை குருக்கள் சந்நிதியிலே அபி நிவேசத்துடன் இவர்கள் அதிகரியாமைக்கு ஹேது என்னோ –
(குரு -பெரியது லகு சிறியது -குருக்கள் ஆச்சார்யர்கள்-ஆழமான அர்த்தத்தை ஞானத்தால் பெரிய ஆச்சார்யர்கள் )
மா நிதியம் வசன பூஷணம் யுண்டே அதின் படியை யூனமற வாசரித்து -என்னும் படி
மகா நிதி போலே இருக்கிற இத்தைப் பெற்று வைத்து-அந்தகன் -அநந்த நிதி கண்டால் போலே அபேஷையோடே அதிகரிக்க வேண்டி இருக்க —அத்தை உபேஷித்து–வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இருக்கிறது ஏதோ –

இவர்கள் தங்களுக்கு ஞான சக்தியாதிகள் யுண்டாய்-
இதுக்கு அர்த்த பூர்த்தியும் யுண்டாய் இருக்க –
இத்தை மேல் விழுந்து மண்டி அதிகரியாமைக்கு அடி அறிய அரிதாய் இருக்கிறது –

அறிகைக்கும் அனுஷ்டிக்கைக்கும் ஈடான ஞான சக்திகள் தங்களுக்கு இல்லை என்ன ஒண்ணாது –அனுஷ்டேயார்த்த பிரகாசகமான இதுக்கு அர்த்த பூர்த்தி இல்லை என்ன ஒண்ணாது –ஆயிருக்க இப்படி இருக்கிறது அபி நிவேச மாந்த்யம் இறே என்றத்தை தாம் நிரூபிக்கும் முகத்தாலே இது யுண்டாம்படி திருத்தி அருளுகிறார் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -என்னும்படி சாஸ்திர அனுஷ்டான யோக்கியமாய் இறே மனுஷ்ய ஜன்மம் தான் இருப்பது –

(நா வாயில் உண்டே–ஏத்தும் பொழுது உண்டே -என் நினைந்து போக்குவார் இப்போதே –
கர்த்ருத்வாதி கரணம் –
ஞானம் வடிவு ஞானம் ஸ்வரூபன் -அறிவுடையவன் கர்த்தா –
செயல்படும் திறன் -சாஸ்திரம் அர்த்தவத்தாக ஆகவே –
கட்டளை இடுவதால் சாஸ்திரம் -ஸாஸனாத் -பின்பற்ற ஒருவன் இருந்தால் தானே
அது இருக்க பிரயோஜனம் -பொருள் உள்ளதாகும் –
இதுவும் திவ்ய சாஸ்திரம் -இதுக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டுமே -)

இத்தால்
இவ் வர்த்தம் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராமல்
சத் த்வரராய் சமக்ரமான இச்சையாலே சாதித்து அறிய வேணும் என்று கருத்து –
(துடிப்பால் த்வரையுடன் இருக்க வேண்டுமே-பேறு தப்பாது என்று துணிகையும் பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே-அடையும் இடம் ஸ்ரேஷ்டம் -விரோதி பாஹுல்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரன் -பண்ணும் சரணாகதி எளிது –-மூன்றாலும் நம்பிக்கை விஸ்வாசம் குறையுமே
அதே போல் இங்கும் ஆபிமுக்யம் மாத்திரம் உள்ளது -அடைந்தே தீர வேண்டும் என்னும் பெரு விருப்பம் அபிநிவேசம் வர -மாந்த்யம் குறைக்க உபதேசித்து அருளுகிறார்
)

————————————————————————

உய்ய நினைவுடையீர் என்று கீழே இவராலே உபதேசிக்கப் பட்டவர்கள் (56-57)
இந்த உபதேசம் பலித்தவாறே-
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்றும் -என்றும்
ஸ்ரீ வசன பூஷணத்தின் வான் பொருளைக் கல்லாதது என்னோ -என்றும்
இப்படி அதன் அர்த்தத்தை நாங்களும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி
அந்வய வ்யதிரேகங்களாலே பல காலும் அருளிச் செய்யா நின்றீர் –

(நம் கண்ணன் கண் அல்லாதோர் கண்ணே -அன்வயம் வ்யதிரேகம்
முதல் ஆழ்வார்கள் அன்வயமாகவும் திருமழிசை ஆழ்வார் வியதிரேகமாகவும்
நம்மாழ்வார் இரண்டாலும் அருளிச் செய்தார்களே
அதே போல் கீழே இரண்டு பாசுரங்களும்)

நாங்கள் அதில் அர்த்த க்ரஹணம் பண்ணும் உபாயம் என் என்ன –
ஆகில் சத் சம்ப்ரதாய நிஷ்டராலே ஸ்லாகநீயமான வியாக்யானம் யுண்டாகில்
அத்தை அதிகரித்து அம் முகத்தாலே அறியுங்கோள் என்கிறார்

(உண்டாகில்-என்பதால் துர்லபம் –மா முனிகள் காலத்திலும் பலவும் இருந்ததாகவும்
அவை லுப்தமாகவும் இருந்தமை தோற்றும் –நாலூர் ஆச்சான் பிள்ளையும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்பர் –அது லுப்தம் இப்பொழுது –
இப்பொழுது ஆய் ஸ்வாமிகள் மா முனிகள் வியாக்யானங்களே உள்ளன
)

அன்றிக்கே
அபேஷா நிரபேஷமான தத் அர்த்த விஷயமாக வியாக்யானம் யுண்டாகில்
அத்தையும் நிரூபண முகேன அறிந்து ஆதரியுங்கோள் என்கிறார் ஆகவுமாம்-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய்
–58-

அற்ற-அற்றுத் தீர்ந்த
நச்சி அதிகரியும்-விரும்பி அந்வயிக்க வேண்டும்
மத்யஸ்தர்பேச்சுப்பார்க்கில் கள்ள பொய் நூல்களும் க்ராஹ்யம் பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் ஆறு மூன்றும் கழிப்பனவாம்

ஸச் சம்பிரதாய ஸ்துதியா
சதத உபலால்யா
லப்யதே சேத்
வசன பூஷண வாக்ய ஸீதா
ச வ்யஞ்ஜபி ஸகல மர்த்தயா பதார்த்த ஜாதம்
மத்யஸ் யைவ தசயா நநு பாவயநீய-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் –
அதாவது-
ஓதி-ஓதுவித்து-ஆதியாய் வரும் அந்தணர் அறா திருவாலி –என்கிறபடியே
விச்சேதியாத சத் சம்ப்ரதாயத்திலே சம்பத்தை யுடையராய் தம்மைப் போல-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே
–3-5-6-

வாக்யா லங்க்ருத வாக்யாநி வ்யாக்யாதரம் (தினசரி )-என்றும்
(வாக்யா லங்க்ருத–ஸ்ரீ வசன பூஷணம் -கால ஷேபம் செய்து அருளும்
மா முனிகளை நான் வணங்குகிறேன் )

வாக்ய சங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் சர்வான்
குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்
-என்றும் சொல்லுகிறபடி

(வாக்ய சங்கதி -தொடர்பு
வாக்யார்த்த தாத்பர்யாணி -தாத்பர்யஅர்த்தம்
யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே -பூர்வர் நிர்வாகம்படியே
ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் -கொஞ்சம் கூட தானே கல்பிக்காமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
சர்வான் குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்-மறைந்து கிடந்த பொருள்களை பரம காருண்யத்தால் வெளியிட்டு அருளி )

ஸ்ரீ வசன பூஷண வியாக்யான ( விலஷணராய் ) விசஷணராய் ஆச்சார்ய சந்நிதியிலே அநவரத ஸ்ரவணத்தை யுடையராய் இருக்குமவர்கள் ஸ்ரவித்தக்கால் -என்கை –

(வர வர முனி சம்பு -கத்யம் பத்யம் இரண்டும் கலந்து -ராமாநுஜ சம்புவும் உண்டாம்
கேட்டக்கால் -கேட்பித்துக்கால் என்றபடி )

சச் சம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் விசதமாகக் கை வந்து இருக்கும் படியான
மதிப்பை யுடையராய் இருக்கும் தாங்கள் கேட்டக்கால் –

மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில்
அதாவது –
ஸ்ரீ சீதா சரிதமான ஸ்ரீ ராமாயணத்தைக் கேட்ட விசேஷஞ்ஞர் எல்லாம்
அஹோ கீதஸ்ய மகாத்மியம் -என்று ஆதரித்தால் போலேயும் -(ஹஸித்தம் பாஷிதம் சைவ இத்யாதி )
செவிக்கினிய செஞ்சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியை-கேட்டாரார் வானவர்கள்-( 10-6-11 ) -என்றால் போலேயும்
சுத்த சம்ப்ரதாய பிரவர்தகர் ஆனவர்கள் இத்தைக் கேட்டு இதுவும் ஒரு வியாக்யானம் இருந்த படியே என்ற ஈடுபட்டுக் கேட்குமதான வியாக்யானம் தான் யுண்டாகில் –
(வல்லர் என வல்லவர் -ஸ்ரேஷ்டர் ஸ்லாக்யிக்கும் படி )

அன்றிக்கே –
மெச்சும் வியாக்கியை தான் –
என்று மதிப்பானவர்கள் மதிக்கும் படியான வ்யாக்கியை தான் -என்னவுமாம் –

(ஈடுபாடும் மதிப்பும் வேண்டுமே -தடை இருந்தாலும் விலக்காமைக்கு ஈடுபாடும்
நச்சு அணுக மதிப்பும் -ஆக இரண்டும் வேண்டுமே )

வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் –
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் அற்றுத் தீர்ந்த மதி யுடையீர் -என்னவுமாம் –

வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர ரசிதா
வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை பிரசன் நாமே
ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா (வர வர முனி காவ்யம்
)-என்னக் கடவது இறே —

(வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர -ஸ்ரீ வசன பூஷண வியாக்யாதா வான ஸ்ரீ மா முனிகள்
ரசிதா வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்– அனைத்து வேதாந்த அர்த்தங்கள் சாரங்கள்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை -நிறைந்த ஆழமான அர்த்தங்கள் -தொடர்பு கூட்டங்களை
பிரசன் நாமே ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா—பரம கிருபையால் சாந்தமான மனஸ்ஸால் அர்த்தங்களை வெளிப்படுத்தட்டும் )

ஆகில் –
என்கிற எதி சப்தத்தாலே-அதனுடைய தௌர்லப்யம் தோற்றுகிறது –
அப்படி அலப்யமானது லபித்ததாகில்

நச்சி அதிகரியும் நீர் –
வசன பூஷண அதிகாரிகளாய்-உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சை யுடைய
நீங்கள் இத்தை விருப்பத்துடனே அதிகரியுங்கோள்-
கல்லாதது என்னோ கவர்ந்து -என்ன வேண்டாத படி யாய்த்து இப்போது இவர்க்கு –

வசன பூஷணத்துக்கு அற்ற –
ஸ்ரீ வசன பூஷணதுக்கு-மெச்சும் வ்யாக்யானமாய் இருக்கு மதானவற்றை –
(ஏற்ற என்றபடி )

மதி யுடையீர் மத்தியத்தராய் —
நச்சி அதிகரிக்கும் இடத்து-விவேக பரிகரமான மனசை யுடைய நீங்கள் மத்யஸ்த பாவனையாலே-அர்த்தத்தின் சீர்மையை ஆராய்ந்து பார்த்து உங்கள் அதிகாரி பூர்த்திக்கு உடலாக அதிகரியுங்கோள் –

இத்தால்
சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

மாறில் முடும்பை யுலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும்
வல்லிருக்கைச் சீறும் படி திருத் தாழ்வரைத் தாதன்
தெரிந்து எனக்குத் தேறும்படி யுரைத்தான்
திருத் தாள்கள் என் சென்னியதே
-என்றும் -வசனக் கலனும்-(வசன பூஷணமும் )

ஆச்சார்ய ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்தநஸ்ய வியாக்யாம் அகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே

ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே
அவை அடி ஒத்தி இறே மற்றை வ்யாக்யானங்கள் யுண்டானது

அவர்களோபாதி
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
அவர் -(ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் )
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடக்கமான சகல பிரபந்தங்களுக்கும்
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ரஹஸ்யங்களுக்கும் அர்த்தம் கேட்டார் -என்று பிரசித்தம் இறே

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா
-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

(பூர்வர் வியாக்யானங்கள் இருந்தால் மா முனிகள் பண்ண மாட்டார் –
பெரியாழ்வார் திருமொழி -வியாக்யானத்தில் பார்த்தோம் –
ஆய் ஸ்வாமி வியாக்யானம் இருக்க -செய்தமை –
சம காலத்தவர் என்று இருக்கலாம் -இருவரும் சந்தித்தது உண்டே –
ஞான சதுர்த்திகள் மேலே -ஸூத்ரம்
இரண்டு நிர்வாகங்கள்
ஆய் ஸ்வாமி -காட்டி -பொருந்த வில்லை என்று அருளிச் செய்து -வேறே நிர்வாகம் காட்டி உள்ளார்
அவரை சந்தித்து பேசியபின்பு அவர் நியமனம் அடியாகவே செய்து இருக்கலாம்
அதே போல் ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானங்களிலும் வாசி உண்டே
நடு நிலையில் இருந்து நீங்கள் பார்த்து கைக்கொள்ள வேண்டும் என்று இங்கே அதனாலே உண்டே
இனி இனி -20 பாசுரங்களில் வேறே வேறே பாசுரங்கள் ஆய் ஸ்வாமி காட்டி உள்ளார் –
மா முனிகளுக்கு விளாஞ்சோலை பிள்ளை இடம் கேட்டு திருவாய் மொழிப் பிள்ளை பெற்ற ஏற்றம் உண்டு –
வேளுக்குடி வரதாச்சார்யர் சதாபிஷேக ஸ்வாமிகள் இது பற்றி முன்பே பேசி உள்ளார்கள் –
பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய் மொழிப் பிள்ளை -வியாக்யானமாக இன்று உள்ளது அவரது இல்லையாய் இருக்கலாம்
அவர் சந்ததி -இன்றும் திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமி என்றே உண்டு –
இது ஒண்ணான அவரது இல்லை என்று காஞ்சி ஸ்வாமிகள் சொல்வார்
மா முனிகளுக்கு பின் உள்ளார் செய்ததாக இருக்கலாம் )

——————————————————–

ஸ்ரீ வசன பூஷணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பாருலகைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் ( யதீந்த்ர ப்ரவண பிரபாவம் )-என்கிறபடியே
தம்முடைய பரம கிருபையாலே பரோபதேசம் பண்ணி
சத்கார சஹவாச யோக்யர் ஆனாரையும் திருத்தி –
இனி
தம் உபதேச நிரபேஷமாக திருத்தின சத் ஸதா அனுபவ யோக்யரான ஆச்சார்யர்களைப் பார்த்து
இதன் ரஸ்யதையை அவர்கள் உடன் பேசி அனுபவிக்கிறார் –

அன்றிக்கே –
தம் உபதேசம் கேட்டு திருந்தினவர்களை ஸ்ரீ ஆரியர்காள் -என்று கௌரவ்யதை தோற்ற
அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
(நஞ்சீயரை பட்டர் கொண்டாடினால் போலவும்
பொலிக பொலிக பொலிக என்று தம்மால் திருந்திய ஸமூஹம் கண்டு
மங்களா சாசனம் பண்ணிய நம்மாழ்வார் போலேயும்
கண புரம் -கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறு வரே —
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே )

ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடையார்கள் பண்டே -(3-7-3-)-என்றும்
ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -என்றும்
அருளிச் செய்தால் போலே இவர் தாம் தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை
மத் குரு என்றும்
நம் இறைவர் என்றும் இறே அருளிச் செய்து போருவ்து –

சீர் வசன பூஷணத்தின் செம் பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —-59-

சார்த்தா ஸ்மராமி
யதி வசன பூஷணாதி
வாஸோ வதாமி
யதி வா மதுரா மமாபி
ஆர்யா கதன்னு பவதாம் மனஸ் ப்ரஸன்ன
பூம்னா த்யோகி
விஷய அதிசயவாஹஹா

சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச்-
அந்யருக்கு ஆழ் பொருளாய் -அரிதாய் -இருக்குமது-
தமக்கு செம்பொருள் என்று செவ்வியதாய் இருக்கிறபடி –

செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–
நெஞ்சாலே நிரூபிக்கிலுமாம்–
வாக்காலே அனுசந்திக்கிலுமாம் இதிலொரு நிர்பந்தம் இல்லை –
ஏதேனும் ஒரு காரணத்தாலே அனுசந்திக்கப் பெறிலும்
நித்ய அபூர்வமான போக்யமாய் இருக்கும் –
(எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கும் )

சாரார்த்த சங்க்ரஹம் ஆகையாலே
சதா அனுவர்த்தனம் பண்ணுகிற மனசுக்கு இனிதாய் இருக்கும் –
மகா ரச வாக்ய ஜாதம் -ஆகையாலே
வாக்குக்கு இனிதாய் இருக்கும்
இவர் மனத்தாலும் வாயாலும் கவர்ந்து அனுபவிக்கிறார் –

கீழில் அவர்களை இறே (சத்கார சஹவாச யோக்யர் ஆனாரை)
கல்லுங்கோள் சொல்லுங்கோள் -என்று விதிக்க வேண்டுவது –
தமக்கு அங்கன் அன்றிக்கே
இது பள்ள மடையாய் இருக்கிறபடி –

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் -என்றும்
சிந்தை தன்னால் கல்லாதது என்னோ கவர்ந்து -என்றும் சொல்லக் கடவது இறே –

ஆரியர்காள் என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ –
செஞ்சொற் கவிகாள் -என்னுமா போல
இதில் அனுபவத்துக்கு தேசிகராய் இருக்குமவர்களே -என்கிறார் –

(அண்ணிக்கும் அமுதாகும் என் நாவுக்கே –
நான் கண்ட நல்லதுவே போல் )

என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது –
உங்களைப் போல் பேரளவுடையன் அன்றிக்கே
அடியேன் சிறிய ஞானத்தன்-( 1-5-7 )-என்கிறபடியே
அத்யல்ப ஞானத்தை யுடையனாய் இருக்கிற எனக்கு –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -(2-5-4)-என்கிறபடியே
தொண்டர்க்கு அமுதான-(9-4-9)
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதத்தின் யுடைய சாரமான ஸ்ரீ வசன பூஷணமானது
நித்ய அபூர்வமுமாய்
நிரதிசய போக்யமுமாய்
இரா நின்றது –

விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் -( 5-1-1 ) -என்னுமா போல
ஹர்ஷ பிரகர்ஷத்தால் யுண்டாம தொரு பாசுரம் —

ஆரியர்காள் உம் தமக்கு எவ் வின்பம் உளதாம் –
ஆர்ய போகமாய் இருக்கிற இதடியாக ததேக போகராய் இருக்கிற உங்களுக்கு
எவ்வளவு ஆனந்தம் யுண்டாம்
அங்கே யுண்டான ஆனந்தம் இவர்க்கு இதடியாக இங்கே யுன்டாகிற படி
அது தான் இன்ப மிகு விண்ணாடு இறே –

உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —
எனக்கு என்னளவிலேயாய் இருக்குமா போல
உங்களுக்கும் உங்கள் அளவுகளிலேயாய் இராதோ

வைதேஹி ரமஸேகச் சித்ர கூடே மயா சகா -என்னுமா போலே
(மூவருக்கும் -ஆனந்தம் துல்யம் -ஹேதுக்கள் வேறே வேறே போல் )

சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போல கண்டு
அவர்களோடு அதில் அனுபவ ரஸ்யதையை அநு பாஷித்து அருளுகிறார் ஆகவுமாம் –
இது தான் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -ஸ்ரீ திரு வாய் மொழியில் படி யாய்த்து –

இத்தால்
இதனுடைய நிரதிசய போக்யதா அதிசயத்தால் யுண்டான
வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

ஸஸ்த்ர பாணியாக அவனே ஆச்சார்யராக திரு அவதாரம்
ஆச்சார்யர் மூலம் அவனை அடைவது முதல் நிலை
ஆச்சார்யர் மூலம் ஆச்சார்யரை அடைவதே இறுதி நிலை
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே சாரார்த்தம் –
இத்தை புரிய வைக்கவே -60-70- -ஆச்சார்ய வைபவம் சொல்லும்
ஸ்ரீ வசன பூஷண ஸாரார்த்தங்களை 11 பாசுரங்களால் ஸ்வாமி வெளியிட்டு அருளுகிறார் –
ஆக ஸ்ரீ வசன பூஷணத்துக்காகவே –18 பாசுரங்களும் அதுக்கும் முன்பாக —
மூன்று 50-52-பாசுரங்கள் பிள்ளை லோகாச்சார்யார் வைபவம்

ஆக கீழ் (ஏழு பாசுரங்களில் )
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே நிர்மிதமான ரஹஸ்யங்களில்
1-ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான அப்ரதிம வைபவத்தையும்-(53)
2-அதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆகைக்கு அடியையும் -(54 )
3-ஏதத் அர்த்த அபிஞ்ஞரும் அனுஷ்டாதாக்களும் ஏகைக புருஷர் என்னுமத்தையும் -(55)
4-ஏதத் அர்த்த க்ரஹண விஷயமாக பரோபதேசம் பண்ணி யருளியும்-(56)
5-இதின் அர்த்தத்தை அபி நிவேசத்துடன் அதிகரியாமைக்கு ஹேது சிந்தனையும்-(57)
6-ஏதத் விஷயமாக விலஷண பரிக்ரஹ வியாக்யானம் யுண்டாகில் அது அங்கீகாரம் என்னுமத்தையும்-(58 )
7-இது தான் ஸ்வ பர விபாகம் அற நிரதிசய போக்யமாய் இருக்கும் என்னுமத்தையும்-(59 )
தர்சிப்பித்தாராய் நின்றார் –

இனி (மேல் எல்லாம் )
ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இந்த திவ்ய பிரபந்தத்திலே
வேதார்த்தம் அறுதி இடுவது (1)-என்று தொடங்கி-
அத்தாலே அது முற்பட்டது (4)-என்னும் அளவாக
பிரதிபாத்ய அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணங்களை ஒருங்க விட்டு

(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே–சூரணை-1–
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –சூரணை-2-
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –சூரணை -3-
அத்தாலே அது முற் பட்டது –சூரணை -4-
அதே போல் இங்கும் முதல் 29 பாசுரங்களில் தமிழ் வேதங்களையே ப்ரமாணமாகக் கொண்டு என்றபடி )

இதிஹாச ஸ்ரேஷ்டம்-( 5 ) என்று தொடங்கி
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று
உக்தார்த்தை இதுக்குக் கீழ் நிகமித்து

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை -5-
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –சூரணை-407-
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் உக்த அர்த்தம் )

அவர்களைச் சிரித்து இருப்பார் யுண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் என்று -(சூரணை- 409 )
சரம பிரமேயத்துக்கு சரம பிரமாணத்தை ஒருங்க விட்டால் போலே

(சரம பிரமேயம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
சரம பிரமாணம்-கண்ணி நுண் சிறுத்தாம்பு )

இவரும்
அருளிச் செயல்களினுடையவும் ஏதத் வ்யாக்யானங்களுடையவும் -(முதல் 38 பாசுரங்கள் திவ்ய பிரபந்தம் )
தாத்பர்ய ரூபமாய் (ஸ்ரீ வசன பூஷணத்தை )
சரம பிரகரண பர்யந்தமான அந்த ஸ்ரீ வசன பூஷணத்தை கீழ் அடங்கலும்
அருளிச் செய்த அர்த்தங்களுக்கும்
மேல் அருளிச் செய்யப் புகுகிற சரம பர்வ நிஷ்டாக்ரமங்களுக்கும்
ஆப்த தமமான பிரமாணமாக (ஸ்ரீ வசன பூஷணத்தை ) அங்கீ கரித்த படியே அதில் தாத்பர்யமான
சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை
சரமத்திலே
இப் பாட்டுத் தொடங்கி
மேல் எல்லாம் ( 73 பாசுரங்கள் வரை )தர்சிப்பித்து அருளுகிறார் –

(சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதையே –
அதுவும் கடைசி சூரணை இல்லை -பிரமேயமே சரமம்
சரமத்திலே இப் பாட்டுத் தொடங்கி –பேடிகா விபாகத்தில் சரமம் இதுவே சரம ஸ்லோகம் போல் )

இதில்
முதல் பாட்டில்
தங்களுக்கு அசாதாரண சேஷியான ஸ்ரீ ஆச்சார்யன் விஷயத்தில்
அல்பமும் பக்தி இன்றிக்கே இருக்குமவர்கள்
சாதாரண சேஷியான ( எல்லாருக்கும் பொதுவான )ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே பக்தியைப் பண்ணிலும்
பக்தி க்ருதனான (க்ரீதனான -விற்கவும் வாங்கவும் அமைத்துக் கொள்வானே )
அவன் தான் அவர்களுக்கு பிராப்ய லாபத்தைப் பண்ண
இச்சித்து இரான் ஆகையாலே அவர்கள் பிராப்யத்தை பிராபியார்கள் என்கிறார் –

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —60-

(அம்புயை கோன்-ஆச்சார்யர் இடம் அன்பு லேசமும்-அத்வேஷம் மாத்ரம் – இல்லையாகில்
புருஷகாரமும் துர்லபம் என்று காட்டி அருளவே இங்கு இப் பத பிரயோகம்
கமல வாஸினி -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே உலர்த்துவான்
தண்ணீர் பசை -ஆச்சார்ய ஸம்பந்தம் -இல்லையாகில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
மிதுனத்தை ப்ராப்யமாகக் காட்டி அருளுவதே ஆச்சார்யர் தானே
உளன் அலன் எனில் -ஸப்த பிரயோகம் -இல்லை எனில் போல் இல்லாமல் இங்கும் -அளிக்க வேண்டி இரான்
தான் -அளிக்க -வேண்டி இரான் -மூன்று பத பிரயோகங்களும் வியாக்யானம் உண்டே
இன்ப மிகு விண்ணாடு -திரு நாடு -இரண்டு பத பிரயோகம்
நந்த கோபன் கோயில்- உன் கோயில் -இரண்டும் திருப்பாவையில் –
நாயக ரத்னம் -ஆச்சார்யர் -பின்பு நப்பின்னை -பிராட்டி -பின்பு அவனைப் பற்றுகிறோம் )

பக்திம் விகாய
பத யோகோ நிஜ தேசிகஸ்ய
பக்தி பிரகர்ஷம் அபி யே பகவதி
தேப்ய
ரமா ஸஹஜர பரமம் பதம் யத் தாதும்
நஹி இச்சதி
நாதேபி ச தல் லபந்தே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் –
மருளாம் இருளோட மத்தகத்துக்கு தந்தன் ( தன் தான் ) அருளாலே வைத்தவராய் -ஞான சாரம்
தனக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய அங்க்ரி யுகளம் தன்னிலே யாய்த்து –
பிரபத்தி ( பிரதிபத்தி உறுதி என்றுமாம் ) பண்ண பிராப்தம் –
அவன் தன் தாளையே யுன்னுவதே சால யுறும்( ஞான சாரம் 38 )-என்று இறே இருப்பது –
ஆகையால்
தஸ்மாத் பக்திர் குரௌ கார்ய (அந்திம உபாய நிஷ்டையில் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லும் இடம் )-என்கிறபடியே
(ஷத்ரிய பந்து அன்றோ பராம் கதி கண்டு கொண்டான் என்பதுக்கு மூலம் )
அவன் விஷயத்திலே அதி ஸ்நேஹத்தைப் பண்ண வேண்டி இருக்க –
அத்தைச் செய்யாதே –

(வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-)

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

அன்பு ஓன்று இல்லாதார்-
பக்தையக தேசமும் இல்லாதார்
அந்தாமத்து அன்பு செய்து -என்று ஈஸ்வரனும் கூட
அதி ஸ்நேஹம் பண்ணும் விஷயத்திலே யாய்த்து
இவர்கள் அபி நிவேச லேசமும் இன்றிக்கே ஒழிகிறது-

அது இன்றிக்கே ஒழிந்தால் ஆவது என் –
பகவத் பக்தி யுன்டானால் என்ன –
அன்பு தன் பால் செய்தாலும் –
ஸ்வ விஷயத்திலே பக்தி ஜனகன் ஆனவன் இடத்தில் அன்றிக்கே
(பகவத் விஷயத்தில் பக்தி உண்டாக்கியவன் அன்றோ ஆச்சார்யர் )
அன்பனான தன் விஷயத்தில்,அன்பைச் செய்தாலும் –

(இவன் அன்பன்-அவர் அன்பை ஏற்படுத்தியவர் –
தன் பால் -அவர் பாசுரம் கொண்டே தான் அறுதி இட வேண்டும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் சிறுத்தாம்பு –-11–
ஆகவே அதே அன்பு சப்த பிரயோகம் இங்கு -காதல் அபிநிவேசம் இல்லாமல் அதே அன்பு சப்த பிரயோகம்)

பிறர்க்கு அரிய வின்னபாதகத்தி -( திருச்சந்த விருத்தம் -100) –என்றும்
அரும் பெறல் அன்பு—(திருக்குறும் தாண்டகம் 5-) என்றும் சொல்லும்படியான

(பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –திருக் குறும் தாண்டகம் –5)

பெறற்கு அரியதான பக்தியை – சரம விஷயத்தில் பக்தி அன்றிக்கே
பிரதம பர்வமான ஸ்வ விஷயத்தில் பரி பூரணமாகப் பண்ணினாலும் –
அப்படிப் பட்டவர்கள் தன் பிரசாத்துக்கு பாத்ரம் இன்றியே ஒழிகையால்

அம்புயை கோன்-இன்பமிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயீ காரம் அடியாக யுண்டான
ஸ்ரீ பிராட்டி புருஷகார பலத்தாலே
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுக்குமவனான ஸ்ரீ மாதவன் -( ராமானுஜ -68 )
ஆச்சார்ய விஷயத்திலே ஆதரம் மட்டமாய் இருக்கிறவர்களுக்கு
பிராப்ய பிரதானத்தில்( அளிக்க -பிர தானம் ) ப்ரீதி இன்றியிலே ஒழியும் –

(வேண்டி தேவர் இரக்க -தேவர்கள் பிரார்த்திக்க தானும் விரும்ன்பி –
இச்சன் ஹரி கணேஸ்வர -போல் –
அவனுக்கு விருப்பம் இருக்காது இங்கும் _

ஆதலால் நண்ணா ரவர்கள் திரு நாடு –
இப்படிக் கொடுக்குமவன் கொடாது ஒழிந்தால்
தெளி விசும்பு திரு நாடு -( 9-7-5 )ஆன பிராப்ய தேசத்தை ப்ராபியார்கள் –
ப்ராப்ய பலம்-( லாபம் ) பிராபகத்தாலே -( 93-)-என்னக் கடவது இறே –

இன்பமிகு விண்ணாடு –
அந்தமில் பேரின்பம்-(10-9-11) -என்றும்
நலமந்த மில்லதோர் நாடு- -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்வ விஷயத்தில் ஆபி முக்ய லேசமே பார்த்து
மோஷ பிரதானத்தில் தீஷித்து இருக்கும் அவன் தான் –
அவர்கள் விஷயத்தில் ஔதார்யத்தைப் பண்ண இச்சியான் –

விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
தான் விண்ணாட்டில்( விண்ணாட்டை விட ) சால விரும்பும் விஷயத்தில் விருப்பம் இன்றிக்கே ஒழிகையால்
பரம வ்யோம சப்த அபிதேயமான பரம பதத்தை அனுக்ரஹிக்க இச்சியான்
ஆகையால்
ஏனத்துருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் ( முதல் திருவந்தாதி -91 )-என்கிறபடியே
அவர்களுக்கு திரு நாடு சித்திக்கை அரிதாய் இருக்கும் –
வானவர் நாட்டை நீ கண்டு கொள் ( 3-9-9-)-என்று கொடுக்கும் -உதாரனானவன்
தான் கொடுக்க இச்சியாது ஒழிந்தால்
இவர்களுக்கு பிராப்யத்தை பிராபிக்க விரகு என் –
இழந்தே போம் இத்தனை என்று மனத்து உயிர்க்கும் -இத்யாதி –

இத்தால் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் (437)-என்று தொடங்கி
இத்தை ஒழிய ஸ்ரீ பகவத் சம்பந்தம் துர்லபம் (440 )-என்னும் அளவும்
அருளிச் செய்த அர்த்தம் பிரதி பாதிக்கப் பட்டது –

(ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —சூரணை -437

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –
பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –சூரணை -438-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே –
ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —சூரணை-439-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –சூரணை -440-

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –
ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –)

(தான் அளிக்க வேண்டி இரான் -மூன்று சப்தங்கள்
தான் தான் அளிக்க வேண்டும் -வேறே யாரும் கொடுக்க வல்லவர் அல்லர் –
அளிக்க தான் வேண்டும் -நாம் பிரார்த்திக்க மட்டுமே அதிகாரி -வேண்டினால் அளிப்பார் –
பயம் -சோகம் பிரபத்திக்கு அதிகாரம் -உபாயாந்தர சம்பந்தமும் உபாயத்தில் ஸ்வீ கார புத்தியும் இருந்தால்
நம் பக்கல் விசேஷ ப்ரீதியுடன் -அபிமானதுடன் -வேண்டி அளிப்பான்
தான் இச்சித்து அளிக்க வேண்டும் –
மடி பிடித்துக் கேட்க முடியாது பிரதான அர்த்தம் இல்லை -கடமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் –
மேலைத் தொண்டு உகளித்து -பொரு சிறைப் புள் உகந்து ஏறுவான் –
இதுவே விசேஷ அபிமானம் -வேண்டி -பத அர்த்தம் –
பக்தி இல்லாதவனுக்கு கீதை சொல்லாதே –
சச பூஜ்யக -என் அளவிலாவது அடியார்களைப் பூஜிக்க வேண்டும் என்றானே –
ஆணை மீறினால் விசேஷ அபிமானம் வராதே –
திருமேனி திருவடி ஸ்தானம் தானே அடியவர்கள் –ஸ்வரூபத்தில் மட்டும் பக்தி வைத்து
திவ்ய மங்கள விக்ரஹத்திலும் அன்பு வைக்க வேண்டுமே – )

(ஏணி படகு த்ருஷ்டாந்தம்-ஆச்சார்யர் சம்பந்தம் பொருந்தாது -தாமரை நீர் சம்பந்தம் தான் பொருந்தும்
பகவத் சம்பந்தம் குலையும் என்றது -விசேஷ அபிமானம் குலைவதையே சொல்லிற்று
அந்தர்யாமித்வம் -வியாபகம் பொது -அது குலையாதே
சேஷ சேஷி பாவ ரூப சம்பந்தம் -உயிர்கள் எல்லாம் அரங்கனுக்கு -ஆச்சார்யரால் உணர்த்தப்பட்டது
ததீய சேஷத்வ பர்யந்தமாக ஆக வேண்டுமே அது நிலைக்க –
ஆச்சார்ய பக்தி இல்லை என்றால் தத் சேஷத்வமும் நிலை நிற்காதே –
சம்பந்தம் தெரிந்து கொண்டால் தானே மோக்ஷம் -உஜ்ஜீவனம் —
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞான ஜென்மம் –
பேயாழ்வார் சம்பந்தம் அடியாக திரு மழிசை ஆழ்வாரும் இவர் அடியாக கணி கண்ணனும் பெற்றார்கள்
சத்தா ப்ரயுக்தம் மோக்ஷ ஹேது இல்லை-அறிய வேண்டுமே – -அறிந்து கொள்ள தேவை ஆச்சார்யர் வேண்டுமே –
இது குலைந்தால் -நிமித்தம் போனால்- நைமித்திகமும் போகுமே –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -ஆழ்வார்
இவர் நண்ணாரவர்கள் திரு நாடு-என்கிறார்
ராமானுஜர் அவதரித்த பின்பு நாம் நாதர் உடையவரானோமே
ஆச்சார்ய சம்பந்தம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று அன்றோ
மா முனிகள் இப்படி வலி உறுத்தி அருளிச் செய்கிறார் )

(காஞ்சி ஸ்வாமி -இப்பாட்டில் எழுவாய் அம்புயை கோன் –
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோனில் அந்வயிக்கும் –
அதே போல் தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார் –
சேர்த்து -மா முனிகள் பால் அன்பு இல்லாவிட்டால் –
மா முனிகள் வாக்கால் வர அவன் பிரயோகம் இப்படி அருளினான் –
மற்றது எல்லாம் காற்றிலும் நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
தேவி மற்று அறியேன் குருகூர் நம்பி
மாறனை மிக்குமோர் தேவும் உளதோ –
மால் தனை என்றே நான் கொண்டேன் -என்பாராம் -அவர் திரு வாக்கால் வரும்படி சங்கல்பம்
அம்புஜ நாயகனான தேவ நாதன் -திரு வயிந்த்ர புரத்தில் உபந்யசித்தாராம் –
அம்புஜ வல்லித் தாயார் -ஹேமாப்ய நாயகி
ஓர் ஒருவர் உண்டாகில் -மா முனிகள் போல் என்று இங்கே முன்பே பார்த்தோம் )

—————————————–

ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே உபதேச ரத்ன மாலையும் அருளிச் செய்கிறார் –
பூர்வாச்சார்யர்களின் உபதேச ரத்னங்களைக் கொண்டே என்றும் கொள்ளலாம்

இனி-
கேவல சதாச்சார்ய சம்பந்தத்தாலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
ஸ்ரீ வைகுண்டத்தை தந்து அருளும் என்கிறார் –
(கேவல -மட்டுமே -தப்பாக மட்டம் என்று உபயோகம்
இது ஒன்றே போதும்
ஆச்சார்ய சம்பந்தம் வந்த பின்பு ஆத்மகுணங்கள் வளர்ந்து மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவோம் )

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
(கீழும் அம்புயை கோன் -இங்கும் திரு மா மகள் கொழுநன்-ஸ்ரீ சம்பந்தம்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே
பேறும் இழவும் -திருமால் -எங்கும் திருமால் அன்று இன்மை கண்டு )

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –61-

அடைந்தக்கால்-துர்லபம் -திருவடி -பக்ஷிகள் -கடகர்
தானே -வேறே ஸஹ காரி வேண்டாமால் -ஸ்ரீயப்பதி தானே -தன்னாலே -இவரே ஆச்சார்யர் -நான்கு அர்த்தங்கள் –

(திரு மா மகள் கொழுநன்-தானே குருவாக இருந்து வைகுந்தம் தரும்
ஆச்சார்யர் அந்தராத்மாவும் அவனே –சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி -என்றும்
ஸஸ்த்ர பாணிநா -என்றுமாம்
அக்னி ஸூர்யன் சப்தமே அவனை குறிக்கும்
பவக் கடலை உறிஞ்சி -முன்னே கூட்டிச் செல்லும் -அவன் அன்றோ –
குரு -சொல்லே அவனைக் குறிக்கும் -கு அந்தகாரம் ரு தன் நிவாரஹம்-
தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குரு-ரஹஸ்ய த்ரயம் அறிந்து அனுஷ்ட்டித்து –
சேஷ சேஷி பாவம் அறிந்து உபாய உபேய பாவம் அறிந்து -திருமந்திரமும் சரம ஸ்லோகமும் அறிந்து –
சரணாகதி அனுஷ்டானம் செய்து -த்வய நிஷ்டர் )

ஞானம் பரம்
தத் உசித ஆசாரண்யஞ்ச யஸ்ய
தஸ்மிந் குரோவ் பரமபக்தி ஜூஷே ஜனா
பவ்மா
ஸ்வயம்
மது ரஸா விலாய பத்ம ஜாயா காந்தன்
கருணயா
நிஜ தாமம் தத்தே

ஞானம் அனுட்டானம் –
ஞானமாவது-
உபாய அத்யாவசாய ரூபமாயும்
உபேய த்வரா விஷயமாயும் -உண்டான அறிவு

(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பெயர் -133-
உபாய விஷயத்தில் ஞானமும் உபேய விஷயத்தில் அனுஷ்டானமும் –
என் பணி எது என்னாதே அது ஆட்ச்செய்வதே )

அனுட்டானமாவது –
தத் அனுகுணமாக
அலர்மேல் மங்கை உறை மார்பா யுன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -(6-10-19)–என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நான் என்றும் -(3-3-1-)
நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே-(1-9-1-) -என்றும்
சொல்லப் படுகிற உபாய உபேய அனுஷ்டானம் -என்கை –
(உபாய அனுஷ்டானம் உபேய அனுஷ்டானம் இரண்டுக்கும் இரண்டு நம்மாழ்வார் -ஒரே பாசுரம் கலியன் )

இதுவே இறே வாக்ய த்வயத்தில் பிரதிபாதிக்கிறது –
ஆகையால் ஷட் பத நிஷ்டனான சதாச்சார்யனை இறே இங்கு
சமாஸ்ரயணீயனாக அருளிச் செய்கிறது –
(அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை )
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல மகா பாகவதன் ஆக வேணும் இறே –

(உடையவர் என்று நேராக அருளிச் செய்யாமல் -இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் -திருவரங்கத்தை திரு உள்ளத்தில் கொண்டே
இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்—60-

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய ஸரணம் ப4க3வத் ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணே அர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வஸ் ஆஸ்ரிதாநாம் ||-ஸ்ரீ யதிராஜ விம்சதி)

இவை-
இவை யன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவேனேலும் -(பெரிய திருவந்தாதி )-என்கிறபடி
சத் அசத் விவேக பரிகரமான-ஞானம் என்றத்தாலே
விடுமவற்றை விட்டு
பற்றுமவற்றைப் பற்றியும் போருகிற-
த்யாஜ்ய உபாதேய ரூபமாய் இருக்கிற அனுஷ்டானங்கள்
என்கிற இவை யாகவுமாம்-
(ஞானம் அனுஷ்டானம் ஒருமை இவை பன்மை –
ஆகவே சத் அஸத் விவேக ஞானத்தால் த்யாஜ்ய உபாதேய அனுஷ்டானங்களை இவை என்கிறார்
போதரிக்கண்ணினாய் ஞானமும் நா உடையாய் அனுஷ்டானமும் போல் )

ஆச்சார்யனுக்கு அடையாளம் –
அறிவும் அனுஷ்டானமும் -என்றும்
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் -என்று இறே
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது –

ஸ்வ ஞானம்
பிராபக ஞானம்
ப்ராப்ய ஞானம்
முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் (ஏதத் அந்யத் ந கிஞ்சன)-என்னும்படி
(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி த்ரய ஞான ஸ்லோகம் இது
பஞ்சீ கரணத்தை த்ரயீவக் கரணம்-தேஜோ பன்னங்கள் பிருத்வி அப்பு தேஜஸ்ஸூ மூன்றையும் சுருக்கிச் சொல்வது போல்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் பர வ்யூஹ விபவம் ஸ்பஷ்டம் –
அந்தர்யாமியை பரத்வத்திலும் அர்ச்சையை விபவத்தில் சுருக்கி -இதுவும் ஐந்தை மூன்றாக சொல்வது )

ஸ்வ ரூப அனுரூபமான உபாய உபேய விஷய ஞானம் –
இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய ஞான அனுஷ்டானங்களை —

(ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் பாரதந்தர்யம் அறியவே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியும் ஏற்படுமே
இதுவே உபாய உபேய ஞானம் -இதுவே த்வயார்த்தம் -பூர்வ வாக்யமுயம் உத்தர வாக்கியமும் –
ஞானம் -ஒரே வார்த்தை -விளக்கி -த்வயத்தில் கோத்து –
ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யத்தோடே சேர்த்து அருளுவது அழகு )

நன்றாகவே யுடையனான குருவை –
இவற்றால் பரி பூர்ணனாய் இருப்பான் ஒரு பரம சத்வ நிஷ்டனை
ஆஸ்ரயித்தால் ஆயத்து கார்ய கரமாவது
இவற்றில் ஓன்று குறையிலும் ஆஸ்ரயிக்கும் அவனுக்கு அந்த ஆஸ்ரயண பலம் தலைக் கட்டாது
காட்டுத் தீ சூழ்ந்த விடத்து அந்தனும் பங்குவும் ( குருடனும் நொண்டியும் ) கூடி இருந்தால்
அப்ரயோஜனமாகவே இறே இருப்பது
சஷூஷ் மானுமாய் சரணவானுமாய் இருப்பான் ஒருவனாலே இறே அத்தைத் தப்பிப் பிழைக்கல் ஆவது –
ஆகையால் அனுஷ்டான ஹீனமான ஞானமும் ஞான ஹீனமான அனுஷ்டானமும் அகிஞ்சித்கரம் இறே

(கண் -ஞானம் கால் அனுஷ்டானம் -சம்சாரம் காட்டுத் தீ-ஆகவே இந்த த்ருஷ்டாந்தம்
பாவாடவி வர்ணனம் ஸ்ரீ மத் பாகவதத்தில் பெரிய அத்யாயம் உண்டே -அடவி காடு -சம்சாரம் என்னும் காடு –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாக இல்லையே -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மம் அடியாகவே -இப்படி இரண்டும் போல்
நம் ஆச்சார்யர் உபகார ஆச்சார்யர் -அவர் கொண்டு போய் உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்க்க
அவருக்கு ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே இருப்பதால் அது கார்யகரம் ஆகுமே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார் -இல்லாதார்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் – )

ஞான ஹீனம் குரும் பிராப்ய -என்று தொடங்கி –
யதாபாரம் ந கச்சதி -என்னக் கடவது இறே –
கண்ணும் காலும் உண்டானால் இறே ஒருவனைக் கரை ஏற்றலாவது-
அந்த அநந்த க்ரஹண வசக -இத்யாதி –
(குருடன் கண் தெரிந்தவன் வசம் இருந்தால் தானே தாண்ட முடியும் )
தன்னை அக்கரை ஏற்ற வல்ல ஞானாதி பரி பூர்ணனாய் இருப்பான் ஒருவன் என்று இறே
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –
ஆகையால் அசங்குசித ஞான அனுஷ்டானங்களை யுடையவர்களை ஆய்த்து ஆச்சார்யர்களாக ஆஸ்ரயிப்பது-

(விஷ்ணு போதம் -சர்வம் ஞானம் ப்லவம் படகு-ஸ்ரீ கீதை – -அவன் திருவடியே-ஆச்சார்யர் – அவனை அடைவிக்கும் )

குருவை அடைந்தக்கால் –
அஞ்ஞான நிவர்த்தகனாய் ஆசார பிரவர்த்தகனாய் (அனுஷ்டான பிரவர்த்தகனாய்) இருக்கிற ஆச்சார்யனை
உபாய யுபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
தனக்கு பிராப்யனாயும் பிராபகனாயும் அத்யவசித்து ஆஸ்ரயித்தக்கால் —
(கு சப்த அந்தகார வாசக ரு தத் நிவாரகத்வம்
குரு -பெரிய லகு சிறிய
தமேவ -இங்கு -மாம் ஏகம் அங்கு -கீதாச்சார்யன் -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பீடம் ஆசைப்பட்டு மேற் கொண்டான் அன்றோ
அடைவது -திடமான உறுதியான விஸ்வாசத்துடன் ஆஸ்ரயப்யதே )

அடைந்தக்கால் –
நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல
அஞ்சினான் புகலிடம் ஆன ஆச்சார்ய அபிமானத்தை
(அசைலம் -அஞ்சினான் புகலிடம்
சம்சாரம் கண்டு அஞ்சி ஈஸ்வரனைப் பற்ற –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யம் பற்றி அஞ்சினால் ஆச்சார்யரைப் பற்ற வேண்டுமே
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் )
(ஆச்சார்ய அபிமானத்தை ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே ) அவன் பிரசாதத்தால் பிராபிக்கப் பெற்றால் –
தங்களுக்காக சரண வரணம் பண்ணி ரஷிக்கும் அவனை தாங்கள் சரணமாக அடைந்தக்கால் –
(ஸ்வகத ஸ்வீ காரம் கூடாதே -ஆகவே அடைந்தக்கால் -பரகத ஸ்வீ காரத்தையே கொள்ள வேண்டும் )

குருவை அடைந்தக்கால் –
குருரேவ பரம் ப்ரஹ்மம்-என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்றும் சொல்லுகிறபடியே
குருதரனான குருவை ஆஸ்ரயித்தக்கால்-
(குருவே ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே குரு -இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் )

இப்படி அலாப்ய லாபமானது லபிக்கப் பெற்றால்
அந்த ஆஸ்ரயண ராஜ குல மகாத்ம்யத்தாலே ( ப்ரபந்ந குல மஹாத்ம்யம் -அரசு இளம் குமரன் போல் )
ஸ்ரீ யபதியானவன் ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் –

அடைந்தக்கால் மா நிலத்தீர் –
பசு மனுஷ்ய பக்ஷி வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா -(சாண்டில்ய ஸ்ம்ருதி )-என்கிறபடியே
அவனுடைய அபிமானத்திலே அந்தர்பாவத்தை யுடையார் ஆனக்கால் –

மா நிலத்தீர் –
மகா பிருத்வியில் உள்ளவர்களே
ஞாலத்தார் தமக்கும் வானத்தவருக்கும் பெருமான்-(திருவாய்-3-5-8-)-என்கிறபடியே
(ஞாலத்தார்-படு கரணன் பக்கலில் தாய் அபிமானம் மிக்கு இருக்குமே -ஆகவே முதலில் இது )
அவனோடு யுண்டான அவர்ஜ நீய சம்பந்தம் யுடையவர்கள் ஆகையாலே உங்களை விட மாட்டுகிறிலன்
ஞாலத்தார் பந்த புத்தியும் -என்று இறே அருளிச் செய்தது –
(ஈஸ்வர பந்தத்தை இங்கே சொல்கிறது -சம்சார பந்தத்தை அல்ல )
இப்படி பிரதிபத்தியிலும் அதி ஸூலபமான உபாயத்தை இறே நாம் உங்களுக்கு விதிக்கிறது-

(நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ் உயிர்க்கும் அறிய என்று அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-சூரணை -203-
1-ஞாலத்தார் பந்த புத்தியும்–ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் )

ஆனால் நீர் சொன்னபடி அடைந்தால் ஆவது என் என்னில் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே-குருவாகையாலே-தத் ஆஸ்ரயணத்துக்கு
தேனைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
அந்தத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்கிறார் –
(தேனைவதே-அந்த ஆச்சார்யர் பலத்தால் -தானே குருவான படியால் -நாம் அடைந்தக்கால் -தானே தரும் )

திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-(10-8-1-) -என்றும்
(நின்றவன் படுத்தவன் இங்கு வந்து இருந்தான் )
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -(பெரியாழ்வார் -5-2-10-)-என்றும் சொல்லுகிறபடி
இவன் இடத்திலே -என்னுள்ளம் மாலுக்கு இடம் -என்னும் படி
விசிஷ்ட அதிஷ்டானமாக எழுந்து அருளி இருக்கையாலே அவன் தானே என்று சொல்லலாம் இறே
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -என்று இறே அருளிச் செய்தது –

(விசிஷ்ட அதிஷ்டானமாக-லஷ்மீ விசிஷ்டனாக -பிராட்டி உடன் கூட நம் உள்ளத்தை இருப்பிடமாக கொண்டான் -அது போலவே
தானே குருவாக அதிஷ்டானமாக -தேர்ந்து எடுத்துக் கொள்வான் -திருவடியைப் பற்றிக் கார்யம் கொள்ளுமா பாதி தானே )

இப்படி அவிநாபாவமுமாய்-அநதிக்ரமண (பிரிக்க முடியாததாயும் -உதற முடியாத காரணத்தாலும் )
ஹேதுவாயுமாய் இருக்கிற இவ் உபாயத்தாலே
தேனார் மலர் மேல் திருமங்கை -(பெரியாழ்வார்-1-3-7 )-என்னும் படியான
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன்
அவள் சார்வான ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டருக்கு பலம் கொடுப்பது அவளுக்கு உகப்பாகையாலே

(பூ மேல் திரு -நமக்கு என்னும் சார்வு -பேயாழ்வார்
த்வயம் பிராட்டியாலே பேறு சொல்லுமே
மஹரீஷீணாம் ஸூக வாஹனம் -அணைத்துக் கொண்டது போல் )

யஸ்யா வீஷ்ய முகம் (ஸ்ரீ ஸ்தவம் -கூரத்தாழ்வான் )-என்று அவள் முக மலர்த்திக்காக
கேவலம் சமபந்தம் மாத்ரமே பற்றாசாகக் கொண்டு தானே மேலே விழுந்து
ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் –
ஸ்வயமேவ பரந்தாமா ஸ்வயம் நயதி மாதவ -என்னுமா போலே —

(அவ்வானவருக்கு மவ்வானவர் –உவ்வானவர் உடைமை என்று உரைத்தார் –
பெரிய பிராட்டியார் பரிகரம் ஆச்சார்யர் )

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் –
தன்னோட்டை சேர்த்தியாலே
மது சம்ருதியை யுடைத்தான தாமரைப் பூவை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையாளாய்
ஸ்ரீ என்று திரு நாமத்தை யுடையாளாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
தனக்கு வல்லபனான அவனை வசீகரித்து
ஸ்வ சம்பந்தம் அடியாக யுண்டான கடகத்வத்தை யுடைய ஸ்ரீ ஆசார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு
பல சித்தியை பண்ணுவிக்குமவள் ஆகையாலே ( கொடுக்க வைப்பவள் தானே பிராட்டி )
அவளுடைய பிரீதிக்காக தான் ஏறிட்டுக் கொண்டு
உபாய நிரபேஷனாய்-
அஹம் மோஷயிஷ்யாமி -என்கிறபடியே –
திரு மா மகள் கொழுநன் தானே –
திருமால் வைகுந்தம் -( 10-7-8 )-என்று சொல்லப் படுகிற
தன்னதான ஸ்ரீ வைகுண்ட வான் போகத்தை தந்து அருளும் —

(கொடுப்பதைக் கொடுத்தால் தானே கொடுப்பான் -லௌகிக விஷயம் போல் )

வைகுந்தம் தரும் –
வீடும் தரும் நின்று நின்றே -( திருவாய் -3-9-9 )-என்கிறபடியே இருவருமான சேர்த்தியிலே
நித்ய கைங்கர்ய நிரதனாய் வாழும் படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்து அருளும் –
இதில் சம்சயம் இல்லை —

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –

ஆக இத்தால் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

——————————

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -வேதமே பரம சாஸ்திரம் -கேசவன் பரம தத்வம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜா ஜகத் குரு –நாத்ர சம்சயம் -கூரத்தாழ்வான் -சம்ஸ்க்ருதம் விசேஷத்தில்
இங்கு மா முனிகள் தமிழில் பொதுவாக மா நிலத்தீர் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு

ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-
ஆச்சார்ய சம்பந்தத்தாலும்
அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு
உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய (ஸ்ரீ வசன பூஷண ஸாஸ்த்ர தாத்பர்ய ) நிஷ்டராய்
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து
தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான
தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில் நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –
(அன்னை குடிநீர் அருந்தி அழும் குழவி -இதே அர்த்தம் ஆர்த்தி பிரபந்த பாசுரம் )

உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-

மாயன் பரம பதம்-அவனே பரமபதம் -அதுவாகவே –
பையரவில்-அறி துயில் அமர்ந்த –
கையிலங்கு நெல்லிக் கனி -ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாம் – மாயன் பரமபதம் உங்களுக்காகும்
பொன்னடியாம் செங்கமல போதுகளை -உன்னி சிரத்தாலே தீண்டில் -யதீந்த்ர பிரவணர் திருவடி பலத்தாலே பெறுவோம்

உஜ்ஜீவநாய யதி
நிஷ்டீயதாம்
நிஜ குரோவ் சரணார விந்த
சத்யம் ப்ரவீணீ
மனுஷா
பணி சாயிநா
தத் திவ்யம் பரம்
கர தல ஆமல தலகம்
பவேத் வஹ

உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே-விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
(ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வாபஞ்ச சதா ஸ்மர
விருப்பம் இருந்தாலே போதும் )
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாத்ரம் யுண்டாகில்
மனஸ் சஹகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ரிய பிரசங்கம் இல்லை-( இம்மையில் வறுமை இல்லை )
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-
(விலக்காமை வருவது பரம பதம் பெறுவது போல் அருமை அன்றோ )

இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –

உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை
உம் தம் ஆச்சார்யர் திருவடிகளில்
உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து என்கிறபடி அதி ஸ்நேஹம் வைக்கும் படி பாருங்கோள்

உம் குருக்கள் தம் பதத்தே
சார்ந்தது என் சிந்தை -உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து -ராமானுஜ -71-
மனம் மொழி செய்கை மூன்றுமே -மிகவும் கூர்ந்து -அமுதனார்
வையும் அன்பு தன்னை -மிகவும் விட்டு –அன்பு லேசமும் வைத்து
அதி ஸ்நேஹம் –வையும் அன்பு தன்னை ( இவ்வளவு இறங்கி வந்து நம்மைக் கைக்கொள்ளுகிறார் )
நிதியை அடியிலே இட்டு வைக்குமா போலே -அன்பையையும் அடியிலே வைத்து
பாத மூலம் பற்றி இருப்பதே பிராப்தம் (வேர் பாத மூலம் )

உம் குருக்கள்
என் குருக்கள் அடியிலோ அன்பை வைக்கச் சொல்கிறது
உங்களுடைய அஞ்ஞானத்தை போக்கி -ஞான தீபம்–ப்ரதோ குரு
விஞ்ஞானம் ப்ரதானாதிகளை கொடுக்கும் -மஹா உதாரர் -மஹா உபகாரகர்
ஆதி சப்தம் -அறிவு கொடுத்து -வைராக்யம் விளைவித்து -தட்டித் திருத்தி -ஆனந்தம் வளர்த்து -ரக்ஷித்து -உசாத்துணையாக இருந்து
விமல சரம விக்ரஹ ஏக தேசமாய் -திருவடி –
கு அந்தகாரம் -ரு அத்தைப்போக்கி -மங்க ஒட்டு உன் மா மாயை என்று ஆழ்வார் காலைக் கட்டி
விட வைக்கும் படி அன்றோ அவனது வியாமோஹம் -இருந்தான் கண்டு கொண்டே –
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உள்ள
திருவடிகளில் பரிவராக -பதத்தே -என்பதன் அர்த்தம்
திருப்பாதம் கமலபாதம் போல்

குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் அடிக்கு அன்பர் –
அன்புக்கு அடியில் அன்பு வையும் –
அன்பு அவர் கண்ணே வைத்து -( திருக்குறும் தாண்டகம் -18-) என்கிறபடி – பகவத் பஜனம் அரிது
‘இந்த எளிய வழியைப் பற்றுங்கோள்
(அடி -மூலம் -ஆச்சார்யர் திருவடிகளே மூலம் )

(அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம்-ஞான சாரம் –39-)

(அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ-ஞான சாரம் –40-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-)

இந்த மா நிலத்தீர்
உங்கள் ஆச்சார்யர் உங்களுக்காக இங்கு வந்து அவதரித்து எதிர் சூழல் புக்கு
இந்த மஹா பிருத்வியிலே ஜனித்து -அதில் வசிக்கப் பெற்ற பாக்யம் உடையவர்களே
இருந்த ஊரில் இருக்க எத்தவம் செய்தீர்கள் -4-4-7–என்றும்
பாத தூளி படிதலால் பாக்யம் செய்ததே-4-4-6- -என்றும்
ஊரும் நாடும் உலகமும் தங்களை போலே ஆக்குமவர்கள் அன்றோ

(பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4 6-)

(குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4-7-)

மானிடர்க்காய் -அவன் தாளிணை -என்கிறபடியே
உங்களை ரஷிக்கவே சர ரூபியாய் நடமாடும்
சசார வஸுதா தல
சஞ்சரிக்கும் -கோயில் ஆழ்வார் ஸ்தாவர விமானம் -இது ஜங்கம விமானம்
மாதவன் என்னும் கோயில் அமைத்து
இது எல்லாம் மத்தர்த்தம் என்று விசாரித்து
அச் சரண யுகங்களில் சங்கத்தைப் பண்ணுங்கோள் அன்பு வையுங்கோள்
எங்கும் திரிந்து அரங்கன் அம்மானுக்கே சங்கம் உண்டாக்க அன்றோ தீர்த்தகரராய் திரிந்து உள்ளார்கள் –

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் -ஞான சாரம்–38-)

(ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே-பெருமாள் திருமொழி –2-6-)

இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –

அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூஸ்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்போதித்து அருளுகிறார் ஆகவுமாம்-

(முதலிகள் அனைவருக்கும் விபீஷணன் கை கூப்பியது போல் இவர் அனைவருக்கும் உபதேசம் –
ஆசை வைப்பார் யாவராவது கிடைப்பாரா என்னும் நப்பாசையால் )

நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன

மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –

பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –
(உண்மை விளம்பி -நன்மை விரும்பி -ஆப்த வாக்கியம் )

மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷ கண சன்னிதௌ–(ஸூ ந்தர 51) -என்று
(கரடி குரங்கு கூட்டத்தில்-மஹா பக்தர்கள் சமூகம் – பெருமாள் ப்ரதிஜ்ஜை )
அந்த மகா பரிஷத்திலே சத்ய வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –

இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-
அடியிலே அன்பு யுண்டாகையாலே-
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் (முதல் திருவந்தாதி -32-)-என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –

(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-32–
அணைவரே -தேற்ற ஏகாரமும் எதிர்மறை ஏகாரமுமாம் -தன்னேற்றமும் -இரண்டு அர்த்தமும் -உண்டே
இமையாத கண் -ஞானக்கண் -இந்திரிய வசம் இல்லாதார்-நமையாமல்- வைகுந்த நகர் அணைய மாட்டார்கள்
இப்படிப்பட்டவர்களும் -பெருமாள் வர விலக்காமல் இருந்தால்-ஆகத் தணைப்பார் அணைவரே- பெறுவார்கள் -)

மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -( 2-8-1)-என்றும் –
தயா சஹா ஸீநமனந்த போகி நீ–(ஸ்தோத்ர ரத்னம் )என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீநம் -( கத்ய த்ரயம் )-என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில் (ஞான சாரம் )
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை (ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிறவனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோகதாம் ஆப்நோதி-(உபநிஷத் )என்கிறபடியே சித்திக்கும் –

(ஸ்ரீ விசிஷ்டன் குண விசிஷ்டன் விக்ரஹ விசிஷ்டனை ப்ராப்யமாக இருக்கும் அவனை அனுபவிக்காமல் –
விதியால் ப்ராபகமாக பற்றுகிறோம் சரணம் ப்ரபத்யே )

இது தான்
ஏவம் வித் பாதேன அத்யாரோஹதி (கௌஷீக உபநிஷத் )-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக கல்பிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –
(சகல கைங்கர்யங்களையும் சென்றால் குடையாம் போலே சித்திக்கும்
பரம போகி-ஆதி சேஷன் -அனந்த போக்யம் அனுபவிக்கும் நித்யர் -சாடு )

பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் –
ஸ்வ சம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால்
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று
(பலம் -பிரயோஜனம் -பலம் -நெல்லிக்கனி திருஷ்டாந்தம் )

அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும்-(ராமானுஜ -104) -என்றும்
(சேஷ ராமானுஜ திருமேனியில் ஈடுபட்ட நான் சேஷி ராமானுஜ -கண்ணனைக் காட்டித் தரிலும் வேண்டேன் )
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -( 4-10-11-)-என்றும்
இவர்களுக்கு கரதல ஆமலகம் போலே- (நெல்லிக் கனிக்கு வடமொழி -கரதல ஆமலகம்)
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –

கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்

பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -(ஸ்ரீ முதல் திருவந்தாதி-85)-என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -(வைகுண்ட ஸ்தவம் )-என்னும் படியான மைப்படி மேனி இறே –

(படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ -ஸ்ரீ முதல் திருவந்தாதி–85-)

பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி
அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ் வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –
(சென்றால் குடையாம் –நிவாஸ இத்யாதி )

உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா –
அவன் தானே தரவும் வேண்டா –
(ஆம் -மோக்ஷயிஷ்யாமி போல் -நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே விட்டுப்போம் போல் இங்கும் )
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களேதாயே இருக்கும் –
புங்க்தே போகாந் அந்விதித நிருபஸ் சேவைகச்ய அர்ப்பகாதி-( ந்யாஸ திலகம் ) -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்ம தன்றோ தாய முறை தான் -( ஆர்த்தி பிரபந்தம் -)-என்றும் சொல்லக் கடவது இறே –

உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-
ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –

பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-(ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி-18)-

உய்ய நினைவு -உஜ்ஜீவனம் -உத்தாரணம் -இதுக்கு த்வரிக்கையே –
அடியார் குழாங்களைக் கூடி நித்ய கைங்கர்யம் செய்யவே த்வரிப்பது –
உய்விப்பதற்கு ஆற்றல் நம் குருக்கள் இடம்-அவர்கள் உபகாரம் செய்து –
உத்தார ஆச்சார்யர் உடையவர் இடம் சேர்த்து அருளுவார் – –
ஆகவே அன்பு வைக்க வேண்டும் இவர் இடம்
பாலர் -ஜடர் -மூடவன் -அந்தகன் -சதாசார்யரை அடைந்து நல் கதி அடைவோமே –
திருக்கையால் தீண்டப்பற்றி மரங்களும் நாள் கதி அடைந்ததை அறிவோம் –
ஸாஸ்த்ர கண்ணால் தான் பகவானைக் காண முடியும்
ஊனக் கண்ணாலே நாம் ஆச்சார்யரைக் காணலாம்
கையில் ராமானுஜனில் நீர் இருக்க அத்தைப் பருகாமல் வானை எதிர்பார்ப்பது போலே ஆகுமே
சித்தர் பவதி வா ந இதி சம்சயவா அச்யுத -நிஸ் சம்சயம் -பக்தர் கைங்கர்யம் செய்தால் –
குருவால் யார் அபிமானம் செய்யப்பட்டாலும் குருவை அபிமானித்தாலும் நியமமாக பரம புருஷார்த்தம் கிட்டும்
இரண்டிலும் ஆச்சார்ய அபிமானம் ஸ்ரேஷ்டம் –

——————————————————————————-

கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
(தரதி -தாண்டுவித்து )
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
(சம்சார நிவர்த்தகமான திருமந்திரம் உபதேசிப்பவரே நேரே ஆச்சார்யர் )
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில்
இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யனுடைய மனஸ் தான்-
(க்ருதம் -செயல் -ஞா -ஞானம் அறிவு-கிருதஞ்ஞனான-செய் நன்றி உடையவனான )
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

உபகாரமானவது-உபகாரமான-அது -பெருமையை நினைத்து வித்தராகிறார்
தேசாந்தரத்தில்–ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு-சேவைக்கு – அசலாக உள்ள தேசமே தேசாந்தரம்
இனி-வஸ்து ஸ்திதி -உண்மை இப்படி இருக்க
அறியோம் யாம்-ஆதிசேஷனான இவரே அறியார் -இத்தால் யாருமே அறியார் –
மனசில் தூயதாகப் பட்ட பின்பு யாரும் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றவாறு –

உஜ்ஜீவநாயா விஹிதா
குரூனோ உபகார
சிஷ்டே சித்தே –
விமலா யதி சேதாநானாம்
தேசாந்தரே நிவசனம் ந மநோபி வ்ருஷயேத்
வாஸம் கதம் பவதேதி
வயம் ந வித்மே

ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே
அது -என்னும் அத்தனை –

(கல் தச்சன் -கரடு முரடு மாத்துபவன் -ஆசாரி -ஆச்சார்யன் -அவஸ்து வாக உள்ளவனை வஸ்துவாக்கி –
பிரதியுபகாரம் -ஈஸ்வர த்வயமும் சதுஷ்ட்ய விபூதிகளும் வேண்டுமே
அது -ஸப்த பிரயோகம் ஸ்ரேஷ்டம்- பயம் –
பேதை பாலகன் அது ஆகும்
அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டு
தம் பேறாக -நம் குற்றம் பாராமல்-மங்களா சாசன பரராக்கிய -கடக க்ருத்யம்
திவளும் -அமுத்தினாள் பிறந்த அவள் -நின் தாள் நயந்து இருந்த -இவள் –
இரண்டாலும் பெருமையை சொன்னது போல் இங்கும் )

தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –

உபகாரமானது –
ஆத்ம நோஹ் யதி நீசஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தாரம் ஆசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
(நீசரான நமக்கும் யோகிகள் பெரும் பேற்றை பரம கிருபையால் )
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
உனக்கென் செய்கேன் -என்றும்
இப்படி ஈடுபடும்படி
பெரு நல் உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக

பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –

ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –
(தேடிப் பிடிக்கும் படி அன்றோ இருப்பது )

இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து (அடைந்த வஸ்து -ஆர்த்தி பிரபந்தம்-57- )-என்றும்
(ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்கவே வஸ்துவானேன் -ஜெகதாசார்யர் )
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -(46)-என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே-(21) -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –

இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு
தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –

தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்ய சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல்
க்ருதஞதா பல பிரத்யுபகார சாபேஷமான மனஸ்ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது-
(ஆச்சார்ய திரு உள்ளம் உகப்புக்காக அன்றோ அனந்தாழ்வான் திருமலைக்கு உடையவராய் விட்டுப் பிரிந்தது )

இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ்சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -(ராமானுஜ –100-)-என்னும்படி
பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
( ராமம் மே அனுகதா த்ருஷ்ட்டி -தசரதன் )

ஆகையால்-
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்-310 )-என்கிறபடி
சஹ வசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விஸ்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே-

(தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –ஸஹ வாசத்தையும் –பலமாக நினைக்கை —ஸ்ரீ வசன பூஷண-சூரணை-309-)

(நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
(உன் மனசால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே )
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –சூரணை -310-

அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி)

அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-
(ஸ்ரீ ஆளவந்தாரை பிரிந்து நோய் வாட-என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்ததே -ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான்)

இனி
விஸ்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விஸ்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானாம்சமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத ( பிராயச்சித்தம் இல்லாத ) பாபம்-என்னும் படியான
க்ருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விஸ்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –
(என் செய் கேன் உலகத்தீரே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் இங்கு இவரும் )

இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஜ்ஞராய் இருக்குமவர் (மா முனிகள் )ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –

நித்யம் குரும் உபாசீத -என்கிற
சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்ய வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –

அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்ய பதச் சாயையிலே இருந்து-
பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய் ( பல்லவம் துளிர் )
(ஆத்ம புஷ்பத்தை நிழலில் வைத்து சரீரத்தை வெய்யில் இட வேண்டுமே
மொட்டு துளிர்த்து பூத்து பழுத்து -நிலைகளை அடைய வேண்டுமே )
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –

இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து
ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
(முதல் திருவந்தாதி -91 -வியாக்யானத்தில் இந்த ஐதிக்யம் )
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –

(ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன –
நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-நாடோறும்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ )

(ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு –
கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க –
ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று
கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில்
நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –

பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –)

————————————————

கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்
அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய
பிரசங்கம் இல்லை என்கிறார் –

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-

சிஸ்ரூஷணம் நிஜ குரு
உபதேதி வாம்
ஏனாம் ப்ரமேய தரணீம்
பிரதிபத்ய மான
ஹே வாத் யஜந்தி
நிஜ தேசிக பாத மூலம்

தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய்
தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது

(ப்ரக்ருதிம் அதிஷ்டாயா -சாஷாத் நாராயண தேவனே சஸ்த்ர பாணியாய் –
அவனே -ஈஸ்வர இச்சை என்பதால் கர்மாதீனம் இல்லை –
அவதாரமும் அவனைப் போல் -இருப்பதும் நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே )

அந்நாட்டிலே போனால்
எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
(அம்ருத சாகரான் நிமக்னன் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் )
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற
இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –
(திவ்ய மங்கள விக்ரஹம் அங்கு வியர்க்காதே -திருவடி பிடித்து விட முடியாதே )

நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -(6-8-2 )-என்றும்
குருக்களுக்கு அனுகூலராய்-(பெரியாழ்வார் 4-4-2) -என்றும் சொல்லக் கடவது இறே –
(பிராகிருத பதார்த்தம் சமர்ப்பிக்கவும் கைங்கர்யம் செய்வதற்கும் இரண்டு பிரமாணங்கள் )
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-

(திருவாய் மொழி –4-3-11-ஈட்டில்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே மண்ணூடேயே -ஸ்ரீ ராமானுஜர் போல் –120-ஸம்வத்சரம் இல்லாமல் –
பராசர பட்டரை பால்யத்திலே இழந்ததால் -நஞ்சீயர் -வருந்தி இருக்க
நம் பெருமாள் கவலைப்படாதீர் பிள்ளை ஒருவரைத் தருவோம் -என்று
நம்பிள்ளையைக் கொண்டு இவர் திருவடிகளில் சேர்த்து அருளினார் அன்றோ )

(பட்டர் –60-68 திரு நக்ஷத்ரம் இருந்து இருப்பதாக சொல்வர் )

(யதன்ன புருஷ பவதி பெருமாளுக்கு சாஸ்திரம் அனுபவித்த தனக்குப் பிடித்த ஓன்றை பெருமாளுக்கு
பூதங்கள் -சிந்தப்புடைத்து -செங்குருதி கொண்டு பூதங்கள் அந்தப்பலி கொடுத்து திருமாலிருஞ்சோலை –
வர்ணாஸ்ரமம் படி வாழ்ந்து ஸாஸ்த்ரம் அனுமதித்த ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஆச்சார்ய பிரிய தனம் -அவருக்கு பிடித்த ஒன்றையே சமர்ப்பிக்க வேண்டுமே )

அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும்
சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற
நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் படலாய் இருக்க –

அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில்
அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –

ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான
சத்தை யுடையராய் இருக்கிற ஆச்சார்ய பர தந்த்ரரில்–
அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –

அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில் அத்தனை போக்கி —
அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும்
ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது

அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-
தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற
இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது –
சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–ஸப்த காதை–1-)

மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–
யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உன் தனக்கே யாட்கொள்ளு உகந்து (ஆர்த்தி பிரபந்தம்-11- )-என்று ஆதரித்து
(எந்நாளும் -யாவதாத்ம பாவி -அத்ர பரத்ர சாபி தமிழ் படுத்துகிறார் )
போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –

இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே–
தம் திரு உள்ளத்திலே பரிவு – தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –

(மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை -இவர்களைச் சொன்னவாறு
பொன்னடிக்கால் ஜீயர் -வான மா மலை ஜீயர் வடநாட்டு யாத்திரை மா முனிகள் நியமனம் அடியாக சென்று பின்பு
வெகு காலம் கழித்து தான் திரும்பினாராம் -வடக்கே நிறைய சிஷ்யர்கள் இன்றும் இவராலேயே –
கூட இருந்து சரம கைங்கர்யம் செய்தவர் கோயில் அண்ணன் -கந்தாடை ஆண்டான் தான் என்பர்
இது சிஷ்யர் ஆச்சார்யர் பிரிவுக்கு த்ருஷ்டாந்தம்
பாதுகை ஸ்தானீயம் -அண்ணன் ஸ்வாமி மா முனிகளுக்கு – முதலியாண்டான் ராமானுஜர் போல்
எம்பார்-ராமானுஜர் போல் -பதச்சாயை -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
பாத ரேகை -பொன்னடிக்கால் ஜீயர் -சாயை கூட நிழலில் பிரியலாம் -ஆகவே ரேகையே பிரியாது )

அந்த அனந்தரத்திலே–
எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் -(எம் காயம் )தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் –
என்றும் அருளிச் செய்தாராம் –

ஆக இத்தால்
தத் பாத சேவை ஏக தாரகராய் இருக்கும் ஆச்சார்ய பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விஸ்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-

————————————————————–

(கீழ் இரண்டும் ப்ராசங்கிகம் –
ஆச்சார்யர் சிஷ்யர் விஸ்லேஷ வியசனம் அடியாக வரும் அனர்த்தங்கள் )

கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும்
கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான
சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை அருளிச் செய்து–

அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான
ஸ்வரூப
தேக
சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும்
அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும்
அருளிச் செய்கிறார் இதில் –

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

தேசாரும் சிச்சனவன்-ஆச்சார்யர் திருமேனியை ப்ரீத்தி உடன் நோக்கும் தேஜஸ் உடைய சிஷ்யன்
ஆருயிரை-எம்பெருமானும் விரும்பும் படியான கௌஸ்துப ஸ்தானீயம் -ஆத்மவஸ்து –

அந்தே சதக குரு
ஆத்ம ரஷாம் சிஷ்ய
ப்ரக்ருஷ்ய குரு தாம்
குரு தேக ரஷாம்
அர்த்தம் ஸூ ஸூஷ்மம் இமாம் ஆகலயந்தி சிந்தே
துர்லபாத் அபி வர்த்தனி தத்ர நிஷ்டா

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதானாதி முகத்தாலே
நல் வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை
ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –

தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் –
அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-
தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களாவஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –

(ஞானியை விக்ரஹத்துடன் ஆராதிக்கும் -சரம விமல திரு மேனி –
திரு நாராயண புரத்தில் வீற்று இருந்த கோலத்துடன் எழுந்த அருளப் பண்ணி
வாழை மரம் தோரணம் கட்டி கோயில் பிரசாதம் -அபய ஹஸ்த பிரசாதம் சாதிப்பார்களாம்
இங்கு ஸந்யாஸ ஜீயர் அப்படி
திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் சாதிப்பார்களாம்
ஸந்நிதி கதவு திறந்து மாலை -அருளப்பாடு அப்பொழுதும் உண்டாம்
உபநிஷத் சேவை உடன் தந்த பல்லக்கு
வீதியில் தட்டு அமுது செய்து
பின்னால் அடுத்த ஸ்வாமி
அவரை குழியில் எழுந்து அருளப் பண்ணி
திருமேனி பரிவட்டம் வஸ்திரம் கணையாழி உபதண்டம் இவருக்கு சாத்தி அப்பொழுது தான் இவர் ஜீயர் ஆவார்
திருவரஸில் அதே பல்லக்கில் எழுந்து அருள பண்ணி வருவார்களாம்
திருமண் ஸ்ரீ சூர்ணம் பிரிக்காமல் தீட்டு நாள்களிலும் உண்டாம் திரு நாராயண புரத்தில் )

ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்- (ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -333-)என்றும்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -(சூரணை -334-)-என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும்
இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –

(இருவரும்-பிள்ளை லோகாச்சார்யார் -மா முனிகள் சொன்னதாக பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இருவரும்
நாயனாரும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளிச் செய்தார்கள் – )

(ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –(ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -335)
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-)

ஆசையுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்த அநஸூயா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன்
தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–
ஸ்நிக்தோ ஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –

(சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -திவ்ய மங்கள விக்ரஹ மங்களா சாசனம் தானே உண்டே எங்கும் )

ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -(திருவாய் -9-6-6 )-என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய்
இப்படி
ஊணும் பூணுமாய் (அன்னமும் கௌஸ்துபமும் )இருக்கும் என்னுமது தோற்றுகிறது

சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -( திருவாய் 10-7-4-த்யாஜ்ய தேக வ்யாமோஹம் )-என்றும்
ஷணேபி தே யத் விரஹ அதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விஸ்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –

என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள்
சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த ஸூஷ்ம ஞானத்தை
சாஸ்திர முகத்தாலும்
சதாச்சார்ய வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –

ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –

கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில்
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –

ஆகையால்
ஆச்சார்ய பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –

(கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை-339-
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –
அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை –
என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –சூரணை -345-
அது என்ன அருளிச் செய்கிறார் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –(சம்யக் ஆச்சாரம் சமாசாரம் )
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –)

ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில்
ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –

(ஆச்சார்ய நிஷ்டர்களை விட சிஷ்ய நிஷ்டர்களையே விளக்கும் சூரணைகள் பல எங்கும் உண்டே
ஆச்சார்ய லக்ஷணம் 12 சூரணை களும் அதில் மும் மடங்கு சிஷ்ய லக்ஷணம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே
சிஷ்ய லக்ஷணம் அறிவதில் அருமை உண்டே )

(முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் =
ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —
நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு
நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)

(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

அத்யாதராதி
நிஜ குரும் கலி வைரி தாஸர்
நித்யாம் விபூதிம் அவத்யம்
நிரந்தரம் யஹா
சிஸ்ரூஷா தேக குரு மானஸ
தஸ்ய நிஷ்டாம்
பஸ்யான் மநோ ஹர பதே முனி புங்கவஸ்ய

பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-
ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று
தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் —
தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –

பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
(அது -ஸ்ரேஷ்டமான அந்த அதுவும் )
துளிக்கின்ற பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -( 2-9-)-என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே —என்றும் (மா கம் -பெரிய திவம் இங்கு )
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது ( திருமங்கை )-என்றும் சொல்லுகிறபடியே
எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று
அருளிச் செய்து போருவர் -என்கை-

இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம்
தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே கைங்கர்யத்திலே யாய்த்து – இவர்
ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –

(அர்ச்சிராதி மார்க்கம் திருவேங்கட யாத்திரை அக்ரூர கமனம் மூன்றுமே நித்ய அனுசந்தானம் –
இவை எல்லாம் இவருக்கு ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போருமே –
அந்தாமத்து அன்பு செய்து எங்கும் பக்க நோக்கு அறியாத பைந்தாமரைக் கண்ணன்
அஸ்மாத் துல்யோ பவ தி -இதுக்கும் அவனே முன்பே அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ )

(திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.)

நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் –
பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்-
(பக்கத்து திருமாளிகை அம்மையார் திருமாளிகைக்கு எழுதிக் கொடுத்த ஐ திக்யம் முன்பே பார்த்தோம்
கொற்றி அம்மை பிராட்டிக்கு -சமன் கொள் வீடு தந்த ஐ திக்யம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் –
நாகப்பழம் கொடுத்த பெண் பிள்ளை
ஸ்த்ரீகளே அறிந்த ரஹஸ்யம் -)
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத் யது குணைர் உபசாரைஸ் சதா உசிதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான
சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை

(வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கு மென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.)

நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-(திருவட்டாறு பதிகம் )-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்-( 1-10-4 ) -என்றும் சொல்லுகிறபடி
அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –
(சாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம் –
ஆச்சார்யர் வாழ்வும் வாக்குமே எளிதில் அனுபவித்து அனுஷ்ட்டிக்கலாம் படி இருக்குமே )

ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே -(விருப்பமுடன் கேட்டு நினைத்து இடைவிடாமல் சிந்தித்து )

இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –
(ஆர்த்தி பிரபந்தம் -வடுக நம்பி நிலை மதுரகவி நிலையை அபேஷித்து அருளுவார் )

இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே
அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் (பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரும் )
அருளிச் செய்தார் இறே –

சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து
தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே
ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-

(ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கு ஸ்ரீ அப்பிள்ளை வியாக்யானம் உண்டு என்று இங்கே காட்டி அருளுகிறார் )

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-3-

June 4, 2026

திராவிட வேத மருளிய படலம்‌

ஐயரிமைக்‌ கண்ணுறுந்தன்‌ றேவியார் சென்‌ றாரி யன்றே வியினொடு மோரமுத கூபத்‌
தெய்தியந்நீர்‌ மொண்டிடும் போழ்‌ தவள்‌ பொன்‌ றோண்டி யிடித்தது
துய்யவனச்‌ செயலறிந்தம்‌ மனைவி நீத்துத்‌ துரிய நிலை பெற்றெதிக டோன்ற லானோன்‌
செய்ய மலர்ச்‌ சேவடி நஞ்‌ சென்னி சேர்த்துத்‌ திரவிட வேதப் பட லஞ்‌ செப்புவாமே –1-

இன்ன வாறு நூற்‌ றெண் பதி மாயனு மன்னி யேபுளி நீழலில்‌ வைகுற
வன்னவர்க ளடி பணிந்‌ தாய் மலர்க்‌ கன்னி யந்தொடைக்‌ காரி குலப் பிரான்‌ –2-

வார ணம் முனம்‌ வாவியின்‌ கண் பரனார ணனென்‌ றதை வெளி நல்கல்போ
லாரணத்தி னரும்‌ பொரு ளாய்ந்துல கோர ணத் தமி ழோதலுற்‌ றானரோ–3-

முற்றிலுந் துறத்‌ தற்குள முன்னினோர்‌ சுற்ற மற்றுந்‌ துறப்பதை மானவே
வெற்றி மாலருள்‌ மேவ விரோதியாம்‌ பற்ற றற்குளம்‌ பற்றின னாகியே–4-

அருத்தி மீக்கொண்‌ டடி முடி யொன்றிலா விருக்கு வேதத்‌ தியைந்த பொருளெலாஞ்‌
சுருக்கி யின்றமிட்‌ டூக்கிலன்‌ பாய்த்திரு விருத்த நூறு விளம்பினன்‌ மாதரோ–5-

மாசில்‌ சோதி மணி வண்ண னென்பவ நாச னாதன்‌ குணாநு பவந் தருஞ்‌
தேசு லாமெசு சைத்தமிழேழ்‌ திருவாசி ரீஇயத்‌ தறைந்தன னன்புற–6-

இக்‌கி னின்புற்‌ றினிக்கக் கொண்‌ டாடிய வக் குணாநு பவத்தெழு மார்வமே
மிக்க தர்வண வேத மந்தாதியாத்‌ தொக்கி யெண்பத்தி னேழ் தொடை சொற்றனன்‌–7-

அந்த வார்வத்‌ தழுந்தி யணி நலமந்த மற்ற வளம்பதிக்‌ கேகுவான்‌
சிந்தை யுட்கொடு சிர்கொள்‌ சரம ப்ரபந்த மொன்று பகர்ந்திட வுன்னியே–8-

மாயி ருங்கடன்‌ மானிலத்‌ தோங்கிய தூய சாமப்‌ பொருளைச்‌ சுருக்கியோ
ராயி ரத்தொரு நாற்றிரண்‌ டாய பா வேய தாந் திரு வாய்மொழி யென்றரோ–9-

பேரு றும்பிர பந்த மதிற் பிரான்‌ நார ணனென்ற தும்முயிர்‌ நாடிடுஞ்‌
சீரு மன்னவன்‌ செய்கு முபாயமுமேர் கொணாடினை யீதலு மோதினான்‌–10-

இத்தகுந்‌ திரு வாய்மொழி யீரைந்து பத்தி லொன்றிரண்‌ டும் பரன்‌ பாரினின்‌
மத்த ளைக் குறி வாய் வைத்த மாயனீர்‌ நத்தி சையுமென்‌றே நிலை நாட்டினன்‌–11-

விரிக்கு மூன்றுடன்‌ மேவிய நான்கினின்‌ முருக்க விழன மொய்ம்பனைப்‌ பாருளீர்‌
பெருக்கு நும்முளப்‌ பேதைமை நீக்கியின்‌ றருத்‌தி செய்யுமென்‌றே யறி வித்தனன்‌–12-

மற்று மைந்துட னாறிலம்‌ மாயனாங்‌ கற்றை வார் குழற்‌ கன்னி கொண்‌ மார்பனை
வுற்றி டற்குள்‌ ளுபாய முரைத்தனன்‌ சிற்றிலைப் புளி வாழ் தரு செம்மலே—13–

கேடி லேழுட னெட்டிற்‌ கிளர் தரு வீடு சேர விரோதிக ளாமவை
நாடி வென்று நசைவில்‌ லவனடி கூட வேணுமென்‌றே தமிழ்க்‌ கூறினான்‌–14-

ஒன்பதோடு முயரொரு பத்தின லன்பர்‌ சேரவ்‌ வணிந கருய்த்திடு
நன்பி னோடு பலனையு நானிலக்‌ தின்ப மாக விசைத்தன னன்றரோ-15–

அத்த குந் திரு வாய்மொழி யை யிரு பத்து ளொவ்வொரு பத்தின்‌ ப்ரபாவம
குத்து வந்தனைக்‌ கூறுவங் கேட்டவை பித்த ரேஞ் சொற்‌ பெரியோர்‌ பொறுப்பரே –16–

பண்ண மைந்தவப்‌ பா முதற்‌ பத்தினிற்‌ கண்ணனே பர னென்று கழறி மற்‌ றெண்ணு மோரிரண்‌ டெவ்வுயிர்‌ கட்கு மவ்‌ வண்ணலே யினி யானென்‌ றறைந்தனன்‌—17-

பின்னு மூன்றினிற்‌ பேரரு ளான் குணந்‌ தன்னையே யுயிர்‌ சாற்றிடு மென்றதும்‌
உன்னு நான்கு ளுயிரவன்‌ றன்னையே மன்னு மென்றும்‌ வாய்ப்ப விளம்பினான்‌-18-

ஏயு மைந்தினி லெம் பெரு மானே யுபாய மாமுயிர்க்‌ கென்று பகர்ந்த பின்‌
னாயு மாறினி லாருயி ருய்குவான்‌ மாய வன் செய்‌ யுபாயம்‌ வழங்கினான்‌-19-

மற்று மேழினில்‌ மாயனைச்‌ சேருதற்‌ குற்றிடும் பல்‌ விரோத முரைத்து நற்‌
சொற்றி கழ்ந்தடெட்‌ டிற் சொல்‌ விரோதிக ளற்றிடும் மென்‌ றறைந்தன னன்றரோ–20-

பாகு நேரொன்‌ பதிற் றிரு வாளனா லாகு லாப மறைந்தொரு பத்திறான்‌
சோக மோகந்‌ தொலைத்தவர்‌ வாழ் திரு மாக மானிலம்‌ வைகிய தோதினான்‌ –21–

புத்தமுதின்‌ சுவை மறையின்‌ பொருள் கொள் சர ம ப்ரபந்தம்‌ பொலியு மொவ்வோர்‌
பத்துறு மொவ் வொரு திருவாய்மொழி யெனும்பேர்‌ கொளு மினிய
வத்தமதெம்‌ மறிவளவில்‌ வினவியமாத் திரந் தொகுத்திங் கறிவித்‌தோமால்‌
முத்தர்களுக்‌ கிடக்கை வலக்‌ கை தெரியா மூடனெறி மொழியுமாறே–32-

உயர்வறவென்‌ தெடுத்த திலச்‌ சாமமுத லக்கர முனொளிரக்‌ காட்டி
யயர்வறுமால்‌ கல்யாண குணமனைத்தும்‌ பாகதர்க ளறியச் செய்து
மயர்வறுமா னில வுயிர் நா யகமிதுவோ வதுவோ வென மயங்கு நெஞ்சத்‌
துயரற மா மருதிடை போங்‌ கண்ணனையே பரத்வமெனத்‌ துலக்கி னானால்‌–33-

வீடுமின்முற் றமென வெடுத்‌ கருடிருவாய்‌ மொழியிலரும்‌ விமலனாமக்
கேடில்பர மன் றனை மா னில வுயிர்காள்‌ ப்ரபத்தி பண்ணிக்‌ கிட்டி மேலை
நாடடைமி னென்றுடன் பத்‌ துடை யடியென்‌ றெடுத் தினிய நயநக்‌ கஞ்சக்‌
காடுடைய னளை திருடிப்‌ பிணிப் புணலெத்‌ திறமெனமோ கத் தாழ்ந்‌ தானால்‌–34–

மாதமிரு மூன்‌றவன் செள லப்ய குண வாரிதியின்‌ மடிந்து பின்னச்‌
சீதரனுள்‌ ளுகந்தருளத்‌ தெளித்து முளத்‌ தாராது செப்பி யம் பொற்‌
போது றுமின்‌ னவள் கொழுநன்‌ றன்னடியா ரெவை செயினும்‌
கோதறு செள லப்ய குண னெனவு மச் சேடக் கவியிற்‌ கூறினானால்‌–35-

அஞ்சிறையென்‌ றருடிருவாய்‌ மொழியதனில்‌ பிராட்டியின தவத்தை பூண்டாங்‌
கெஞ்சலில் விண்‌ ணாடுடைய னபராத சகத்துவமே யேதுவாக
நெஞ்சுறக் கொண்‌ டவனடியிற்‌ றனாதுறு கண்‌ முழுமை யும் போய்‌ நிகழ்த்தமின்‌று குஞ்சினுக் கென்றுழ விறலைக் கடை யொதுக்குங் குருகினங்காள்‌ கூறீ ரென்றான்‌ –36-

வளவேளென்‌ ஐருடிருவாய்‌ மொழி யதனின்‌ மாறனை முன்‌ மருவி நீக்குந் தளவாயொன்‌ றமையா துண்‌ மம்மர் கொளச்‌ குருகினஞ்சந் தனுப்ப மாயோன் இளவேய்மென்‌ றோளிணையா ளூடலறச் சூடுவமென்‌ றிசைந்‌தீண்‌டேகிக் களப நறுங்‌ குய மருவும்‌ மவனருளே யுலகறியக்‌ கழறினானால்‌ —37-

பரிவதிலீ சனையெனுமோர்‌ பதிகமதி லார் கலி சூழ் பாரிலுள்ளீ
ரரிகுணமீ தென்றறியா துள மயங்‌கிக்‌ கொடிய பவத்‌ தழ றாழ்கின்றீர்‌
சரியலவப்‌ பரமனுந்து ராராத்திய னன்‌ றவனைச்‌ சார்ந்து வாழ்த்தி
யிரு விசும்பிற்‌ பிறப்பிலரா யுச்‌சீவியுங்களென விசைத்தா னன்றே–38-

பிறவியெனும்‌ பதிகமதி லெம்பெருமான்‌ ஸ்வாராத்யனாம்‌ பேணித் தூய
நறவுகுபன்‌ மலர்கொடு பூசியுமவனா ராதனையு நனிசுகந்தகந்
தற நெறியே வுருவமதா யொளிருமெனப்‌ பாரறிய வறிவித்‌ தானால்‌
மறலியை வென்‌ றடுவெளிக ளுடைய நங்கை திரு வயிறு வாய்த்தோ னம்மா–39-

ஓடும்புள்‌ ளேறி யெனும்‌ பதிகமதி லக் குணங்க ளுந்தி பூத்த
மோடம் பொன்‌ வரை நகலத்‌ திரு மணவாளன் கரண மூன்‌றுமொன்‌றாய்க்‌ கோடின்றிப்‌ பரிசுத்த மா மடியார்‌ தமை யுகந்து கூடு மென்றாங்‌
காடும்புற்‌ கொடி பரித்த வழுதி குலத்‌ தரசுசுத னறிவித்‌ தானால்‌–40-

இவையு மவையு மென வருளுந்‌ திருவாய்‌ மொழியி னிசைத்த வண்ண
நவையறுமெய்ய டியனெனத்தம்‌ மிடத்‌ தெம்பெருமா னனியுகந் தாங்‌
கவையவங் கண் முழுமை யினாற்‌ சாத்மிக்க சாத்மிக்க வணைத்த தான சுவையினை முந்‌ நில மறியச்‌ சொற்றனனிக்‌ கலி கெட வந்துதித்தானன்றே–41-

பொருமானீள்‌ படை யெனும பதிகமதி லெம்‌ பெ ருமான் நற்‌ புலவி நீங்கி நிருகேதுக கடாட்சமருள்‌ வைபவ மிம்‌ மானிலத்தி னிகழ்த்தினானா
லொரு கோடி கயல் புரளுந்‌ திரை கொள் பொரு நற்றுறைவோ னொளிரு மாடக்‌
குருகூரன்‌ சட வாயு வணுகாது நிரசித்த குழகன்‌ றானே–32-

இரண்டாம்பத்து

மன்னுமவ்‌ விரண்டாம்‌ பத்தில்‌ வரு முதற்‌ பதிகத்‌ தெம்மான்‌
பின்னு மூடியதிலார்த்தி பெருகி நாயகியாய்‌ நின்று
தன்னை நேர்‌ சேதந அசேதனங்களை நினைத்து நீவி
ரென்னின் மாறனை வேட்டீர் கொலென்ன வருந்தி யதுரைத்தான்–33-

திண்ணெனும்‌ பதிகத்‌ தார்த்தி தீர் தரக்‌ கூட்டலாலப்‌
பண்ணவன்‌ குண சமர்த்திக்‌ கேதுவாம்‌ பரத்வ முன்னீர்‌
மண்ணிடை யவதாரத்தில்‌ மலர் தரு நலங்க ளெல்லாம்‌
நண்ணுமென்‌ றவன் பரோப தேசமு நவின்றான்‌ மாதோ–34–

ஊனில் வாழ்‌ பதிகத்தந்த வுரகமெல்‌ லணையான்‌ றன் கு
ணானுபவ விரோதஞ் செய்‌ நவை கொள்‌ சம்சார நீத்‌து
வானுளோர்‌ பரவு நித்ய சூரிக ளோடு வாழ்வன்‌
யானெனும்‌ குறிப்பை வையத்‌ தியாவரு மறியச்‌ சொன்னான்‌–35-

ஆடி ஆடி யெனுந் தூய பதிகத்தக்‌ குறிப்பண்‌ ணாது
ணாடி நெஞ்‌ சுழன்று மாற னாயகி யவத்தைக் கொண்டு
வாடி மோகித்திருக்கும்‌ வண்ணம தறிந்து தாய் பார்‌
தோடவிழ்‌ துளவினான் முன்‌ சொல்ல ரங் கருளினாரால்‌–36-

அந் தாமத்‌ தன்பெனுஞ் சொற்‌ பதிகத்த வவத்தை போக
வந்துடன்‌ சம்சிலேடித்த மாயவன்‌ ஸெளந்தர்யத்து
நந்தலி னித்யமுத்தர்‌ நல்கிய சேவை யுள்ளுஞ்‌
சிந்தை சென்‌றனுபவித்த செவ்வியை விளம்பினானால்‌–37-

வைகுந்தா வென நின்‌ றோதும்‌ பதிகமான்‌ மாறனீங்கல்‌
செய்குமோ நமை விட்‌ டென்று திகைத்ததின்‌ சங்கை பண்ணப்‌
பெய்குமா முகிலே யென்றும்‌ பிரிகலே னுனையா னென்றும்‌
மொய் குழல்‌ நங்கை பாலன்‌ மொழியமான்‌ மழ்ச்சி சொன்னான்‌ –38-

மேதகு கேசவன் றன்‌ பதிகமவ்‌ விபுத னாந் துவாதச நாம னான மாதவ னருளி னானம்
தீதில் சம்‌ பந்தா சம்பந்திகளு முச்‌சீ வித்தாரென்‌ றோதினான்‌ கலிகெடற்கிவ்‌ வுலகிடை யுதித்த நம்பி -39-

அணைவெனும்‌ பதிகத்‌ தெம்மா னருளிய செவ்வி யோர்ந்து
தணிவில் பற்‌ பலசம்சாரி தயங்கு முன்‌ மருள்கெடத் தன்‌
ணிணையில்சம்‌ பந்தியாக விசைய மோக்கப் பரத்தைப்‌
பணித்தனன்‌ றிருந்த வின் சொற்‌ பாவலர்க்‌ கரசரேறே -40-

பண்ணமைந் திலகுமெம்மா வீடெனும்‌ பதிகந் தன்னி
லண்ணறன்‌ சம்பந்திக்கு மழிவில் விண்‌ ணடளிப்பா
னெண்ண நின்‌ ப்ரீதிக்கன்றி யென் பொருட்‌ டளிக்க வேண்டாம்‌
கண்ணநீ யெனக் கைங்கர்ய நிச்சயம்‌ கழறினானால் –41–

கிளெரொளி யிளமை யென்று கிளத்திய பதிகத்‌ திம்மெய்‌
தளர்முன முயிர்களன்று சாற்‌ று கைங்‌ கர்ய சித்திக்‌
கிளமதி தவழும்‌ பொன் கோட்‌ டெழில் கொள் மா லிரும் பூஞ்‌ சோலை
வளர் திரு மலையைச்‌ சென்று மருவுமென்‌ றருளிச்‌ செய்தான்‌–42-

மூன்றாம் பத்து-

முத்தமிழின்‌ சுவைக் கடலைக்‌ கடைந்து கொள்ள முதவினிய தாந் திரு வாய்‌ மொழியின்‌ மூன்றாம்‌
பத்தின் முடிச்‌ சோதி யெனும்‌ பதிகந் தன்னிற்‌ பனி மலர்க்கார்‌ மரு விடபப்‌ பருப் பதத்தார்‌
மைத்தகரு மாமுகினேர்‌ வண்ண னெம்மான்‌ மாலழகன்‌ செளந்தர்ய வலையுட்‌ பட்டுச்‌
சித்தமிவண்‌ டிரும் பாதங்‌ கீடுபட்ட செய்தி யுல கோரறியத்‌ தெரிவித்தானால்‌–43-

முன்னீரென்‌ றருடிவாய்‌ மொழியின்‌ மாறன்‌ முனமழக ரெழிற்‌ கடலின்‌ மூழ்கிக்‌ கங்கு
றன்னை யறி யாதுழன்ற னுபவித்தற்‌ கசக்தி வருவது காண்‌ சங்கோ சம்மென்‌
றுன்னியதில்‌ வ்யாமோகித்‌ திருக்க மாயோ னுற்றி தற்கென்‌ னீயழுங்‌க லுலக மேத்‌தும்‌
பொன்னி வரும் வடமலை சென்றணை யடைந்து புல்லுவா யெனுமருளைச்‌ சொல்லினானால்‌–44-

ஒழிவில் காலமென வருள் பதிகந் தன்னில் உலா மகிழ்ந்து ஆதரத்துடன் நம் உயிர்காள் இன்றே
யழிவிறிரு வேங்கடவெற்‌ புடையான்‌ றன்பா லடைந்தவன் காற் றுணை யினை வாக் கக மெய்ம்‌ முன்றாற்‌
றழுவியிடம்‌ பொருளே வல்‌ கொண்டு யாமுஞ்‌ சகல வித கைங்கர்யஞ்‌ சமர்த்தியாக
வழுவறு மெய்த்‌ தொழும்பு புரிந்திடுவா மென்ன வழுதியர் கோன்‌ காரி சுதன்‌ வழங்கினானால்‌–45-

புகழநல்லொ ருவனென்னும்‌ பதிகந் தன்னில்‌ பூமகள் கோன்‌ சர்வமு மாய்ப்‌ பொலியும்‌ தன்மை
யகமகிழ்ந்தின்‌ புற வளிக்கு மணங்கி யானவ்‌ வண்ணறனை யெக்‌ குணங் கொண்‌ டழைப்பே னென்ன
மிக மலைந்து தேர்ந்தவன் சேவடியிற்றாழ்ந்து விருப்பொடு வாசிக வடிமை வியப்பதாக
விகல் கெட முப்‌ பொழுது மடைந்தியற்றி வாழு மிறுமாப்பை, யுல கறிய விசைத்தானன்றே –46-

மொய்ம்மாம்பூம்‌ பொழிலெனுஞ் சொற் பதிகத்‌ தாழ்ந்த முன்னீரிற்‌ றிருவணை செய்‌ முகுந்தன்‌ வெய்ய
கைம்மாவுக்‌ கருள் புரி நங்‌ கண்ணற்‌ கன்பாய்க்‌ கைங்கர்யம்‌ புரியுமவர்‌களைக் கொண்‌ டாடி
யெம்மானைப்‌ பரவாது பணியுஞ்‌ செய்யா திருக்குமவர்‌ தமை யிகழ்ந்‌ தங்‌ கியம்பினானால்‌
அம்மானைக்‌ காளையரை யளித்த பெம்மான்‌ ௮பராவதாரமிவ ணடைந்‌ தகோவே–47-

செய்ய தா மரைக் கண்ணெனும்‌ பதிகந்‌ தன்னிற்‌ றேசுறுமானில வுயிர் செய்‌ திருப்பணிக்கு
மெய்ய பர வ்யூகமொடு விபவாந்தர்யாமிய துகளையஅபவிக்கன்மிகவும்‌
துய்ய பரா தீனமுறு மர்ச்சை யென்னிற்‌ சுலபமதா மென வுலகிற்‌ றுலக்கினானான்‌ மைய வரி வண்டு பொடி யாடு நிம்ப மாலை யுறுங் காரி சுத மாறன் றானே–48-

பயிலுஞ்‌ சுடரொளியெனும்‌ பதிகம் தன்னிற்‌ பல கோடி யண்ட ரண்டப்‌ பரப்பை யீன்ற
வெயிலந்‌ திகிரிகொடிர வாக்குமெந்தை மெய்யடியிற்‌ கைங்கர்யம்‌ விரும்பி நாளுஞ்‌
செயுமன்பர்‌ தன்னடியார்க்‌ கடிய ரெற்கா சிரியரேனப்‌ பாகவத சேடத்வத்தை
யுய வென்றார்‌ கலிப்புவியு ளறிவித்தானா லுயர் புளிக்கா வணத்துறை யு மொருவன்றானோ-49-

முடியானென்‌ நினிதருளும்‌ பதிகந்‌ தன்னின்‌ முன்னுரைத்த சேடத்வ முறைமை யாலோர்‌
பிடியின்றிப்‌ போதமுறா தவன் குணத்தின்‌ பீடுடைய ஸ்மாரகமாய்ப் பேர்ந் தாட்‌ செய்ய
வடிவுறுமோ ரிந்த்ரியம் பஞ்‌ சேந்த்ரியத்தின்‌ மருவுதலை வேட்ட தென வழங்கினானால்‌
குடிகுடியாட்‌ செயுமடி யார்க்‌ கழிவினாடு கொடுத்தருளும்‌ வரையாது கொடுக்கும்‌ கொண்டல்–50-

சொன்னால்வி ரோதமெனும்‌ பதிகன் தன்னிற்‌ சொற்றெரி நாவலிற்‌ பிறரைத்‌ துதித்துப்பாடி
லென்னாகு மப்பொருள்வந்‌துமதுகால மெதுவரைப்போமது வெழிலி யெழுமின்னென்று
தன்னோடு மிணைந்‌து பிறப்‌ பிலியாய்‌ நிற்குஞ்‌ சார்ங்கனிருந்‌ தாளிணையிற்‌ சாற்றுவீரேற்‌
றென்னா வென்‌ றளி முரலுந்‌ துளவத் தண்ணல்‌ சேணுலுகி னித்தியராய்த்‌ திரிவீரென்றான்‌–51-

சன்மம்‌ பலபலவெனும்‌ பதிகத்தின் முன்‌ சாற்றிய லெளகீகவி தங்களுள்ளம்‌
வன்மீனுக்‌ கிடருறுத்தி யானை காத்த மாயவன் பால்‌ மருவுதலின்‌ மாறக்‌ கண்டாற்‌
கன்போடப்‌ பரமனடித்‌ துணையிற்‌ செய்யு ளாக்கெதிற்‌ ருமடையு மபீட்ட முற்று
மென்போடுள்‌ ளுருகியவ ரறிவான்‌ வேண்டி யிசைத்தனன்றென்‌ குருகூர் வந்திருந்த கோவே–52-

நாலாம்‌ பத்து
ஒருநான்கு பத்திலுறு மினிய தீஞ்சொல்‌ லுகளொரு நாயகப்பதிகத்‌ துலகு ளோர்கா
ளிருமாநி லம் பரவு நிதி படைத்திவ்‌ வெறி கடற்பா ரொரு குடைக்‌கீ
மருவாரைந்‌ தரு நிழலிந்த்‌ ராணி கூடும்‌ வாழ்வுறினும்‌ நச்வரமா மறையும்‌ காணாத்‌
திருமாது கேள்வனது பவமே நித்யஞ்‌ சேருவீ ரவனடியிற்‌ றிருகாதென்றான்‌.–53-

பாலனா யெனுந்திருவாய்‌ மொழியின்‌ முன்னம்‌ பகருபதே சம்பலி யாப்‌ பரமன்‌ றன்பாநற்
சாலபினி வேசமடைந் துள மயங்‌கித்‌ தண்ணளியாய்‌ முனஞ்செயவ தாரத்‌துள்ள
சீல முழுவது முகந்தெற்‌ கருள வேண்டுந் தென்னிலங்கை யீடழித்த திறத்தோ யென்றான்‌
காலனகர்‌ பாழ்பட வண்‌ புளிக்குட்‌ டென்பாற்‌ கருணை முகம்‌ வைத்‌தமர்ந்த கழகனம்மா–54-

கோவைவா யாளெனுஞ்சொற்‌ பதிகந் தன்னிற்‌ கொன்றை முடி.யோனிரப்பைத்‌ தொலைத்தாங்‌ கின்னும்‌
மேவாது குருதியருள்‌ பரமன்‌ முன்னம்‌ மேவு திரு வவதார விதங்கள் காட்ட
நாவாய் கொண்‌ டவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி நாடுமதி ப்ரீதியினை நவின்றா னெங்குந்
தேவாகு மவனே யிவ்‌ வுலகு முய்யச்‌ சென்று மகிழ்‌ மாறனெனச்‌ செனித்தோ னன்றே–55-

மண்ணையிருந் தென்றருளும்‌ பதிகத்‌ தந்த மால வதாரங்களெலாம்‌ வழங்கி யேகத்‌
துண்ணென மா றனுமணங்கி னவத்தை கொண்டுட்‌ சோகித்தங்‌கெவை யவன்‌ றன்‌ சோதி யுள்ள
கண்ணுறுமோ வவை திருமாற்‌குரிய வென்‌று கதறி யுளம்‌ புலர்ந்து மிகக்‌ காதல்‌ கொள்ளும்‌
வண்ணமறிந் தீன்றவளுஞ்‌ சேடிமார் முன்‌ வழங்கலென வுரைத்தனனுண்‌ மயர்வற்றோனே –56-

வீற்றிருந்தே ழுலகமெனும்‌ பதிகத்‌ தந்த வெய்யமய றீர் தரவே விமலன்‌ முன்னா
ணூற்றுவர்பாற்‌ சந்துபட நடந்தோன்‌ மாதர்‌ நுண்டுகிலைக்‌ கவர்ந்து தரு நுதியில்‌ வைத்தோன்‌
மாற்றறு மெய்த்‌ தவ வாய்மை நித்யமுத்தர்‌ மாடடரத்‌ திருவினோடு மருங்கி லீண்டப்‌
போற்றியுள மதிழுமதி ப்ரீதி தன்னைப்‌ புங்கவ னானில மறியப்‌ புகன்றான்‌ மாதோ–57-

தீ ர்ப்பாரென்‌ றினிதருளும்‌ பதிகத்‌ தெந்தை சேவை யளித்‌ துடன்‌ மறையத்‌ தீரா மையல்‌
போர்ப்பாளாய்ச்‌ சோகமுறத்‌ தாயரீது புன் சமயத்‌ தேவர் செயல்‌ போக்க வென்று
பார்ப்பாரா கிற பொழுதத்‌ தலைவி தோழி பாகவத கீர்த்தனையும்‌ பாதத்‌ தூளுஞ்
சேர்ப்பீரே லிவள்பிணிக்கு மருந்தா மென்னச்‌ சேர்க்கவது தீர்ந்த தெனத்‌ தெரிவித்‌தானால்‌ –58-

சீல மிலா வெனுந் திருவாய்‌ மொழியிற்‌ சோகந் தீர்ந்துடனெம்‌ பெரு மானுந் திவ்யரூபஞ்‌
சாலவெனக்‌ களித்தருளுள்‌ ளிரங்கி யார்க்குந் நாயகனெ பகற்‌ றடங் கண்‌டுஞ்சா
தோல மோடங்‌ கவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி யுலை மெழுதிற்‌ கரைந்தழைத்த துறழச்‌ சொற்றா
னீலமணித்‌ திரளனைய கூந்தற்‌ செவ்வாய்‌ நேரிழை கொ ணங்கைசுதனிமலன்‌ றானே –59-

ஏறாள மிறையெனுஞ்சொற்‌ பதிகத்‌ தெந்தை யிரவு பகல்‌ விழி பொருந்தா திரங்‌கக் கூவ
மாறாதங்‌ கொளித்தமையா லவலுகந்‌து மருவ வுரித்‌ தாதிய வாத்‌ மாத்மியங்க
டேறாதெற்‌ குலகவர் போல்‌ வேண்டாமென்று திரஸ்கரித்த மாற் மிவண்‌ டெரிவித்‌ தானால்‌
வீறாரு மதகரிவாண்‌ மருப்பொசித்த வேந்தனடி யே பரவும்‌ விமலன்‌ றானே–60–

நண்ணாதா ரென்றருளும்‌ பதிகத்‌ துன்க ணண்ணியவெவ்‌ வூடலையு நனிபொறுப்பேன்‌
கண்ணானின்‌ னிடத்திலதி விமுகரான காமர் கொள்‌ சீவரைப்பார்க்‌க க்‌ கருத்திற்‌ சற்று
மெண்ணேனிவ்‌ வுடற்பொறைவிட்‌ டகலச்‌ செய்வா யேழுலகுங்‌ கண்டிடவா யிடைநின்‌ றாம் பற்‌
பண்ணாளா வென்றவன் சே வடியை வாழ்த்திப்‌ பற்றியவா றினிய சமிழ்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–61-

ஒன்றுந்தே வென்றருளும்‌ பதிகத்‌ இந்த வுலகிலுள சேகனர்பா லுகந்து பின்னு
நன்றல நீர்‌ பிறதெய்வ நயக்கும்‌ வாய்மை காரணனே பரமனென நால் வேதங்க
ணின்றுமுறை யிடலறியா துழன்று கெட்டீர்‌ நீக்யெதை யினி யேனு நிமலன்‌ செம்பொன்‌
குன்றநிகர்‌ மணிகொணெடு மாட மோங்குங்‌ குருகையர்க்காட்‌ செய்யுமெனக்‌ கூறினானால்‌-62-

இத் திருவாய்‌ மொழியினை மாறனு முகந்தங்‌ கியம்பலுமச்‌ சுவை செவியா லினிது மாந்தி
வித்தகன் நம்‌ பொலிந்து நின்ற பரமனெஞ்சம்‌ வியந்ததற்கோர்‌ கைமாறு விருதீவான்றன்‌
சித்தமதி லுன்னியனத் துவசம்‌ வண்டார்‌ செய்ய மடழ்த்‌ தொடையலுமச்‌ செவ்வி யோன்பான்‌
மத்தகசத்‌ துறுகணறச்‌ செய்தோ னீந்து வகுள பூடணனெனப்‌ பேர்‌ வழங்கப்‌ பெற்றான்‌–63-

ஜந்தாம்‌ பத்து

கையார் சக்‌ கரத்தனெனும்‌ பதிகத்‌தி யானுட்‌ கருத்துறு மெய்ப்‌ பத்தியிலாக்‌ கபட னாக
மெய்யாய தொழும்பரினு மவன்‌ றன்‌ னாமம்‌ விளம்பியொரைம்‌ பொறிப்பாக்ய விடய மாக்கும்‌
பொய்யேனுக்‌ குகந்தவன்‌ ஸ்வா பவந் தன்னைப்‌ போரவளித்‌ தனனென்‌ று புகழ்ந்து தன்பாற்‌
செய்யாளுக்‌ குகந்தவரை மார்ப னெங்கோன்‌ செய்யுபகார ச்ம்ருதி யைச்‌ செப்பினானால்‌–64-

பொலிக பொலிகவென வருள் பதிகத்‌ திற்றாம்‌ போர வுகந்‌ தருளிய மெய்ப்‌ போதத்தாலே
பலவிதங்கொ ளுளமொருக்கிற்‌ றிருந்தி வாழும்‌ பாகவத ரோடு தம்‌ ப்ரபாவ நோக்க
மலிவுடனிங்‌ கெழு நித்ய முக்தர்‌ தம்மை மங்களா சாசனம்‌ புரிந்த வகையுஞ்‌ சொல்லிக்‌
கலிகெடுமென்‌ றுரைத்துடன்‌ காடாய முக்கோல்‌ கைக் கொளெதிபதி வடிவுங்‌ காட்டினானால்‌–65–

மாச றுசோ தியென வருள்‌ பதிகத்‌ தெந்தை மாதவன் விச்‌ லேடமதை மனத்துட்‌ கொண்டு
பாசிழை கொ ணாயகி தன்‌ மைத்தாயீண்டிப்‌ பாரிலலர்‌ தூற்றிய வெம்‌ பழிக்கென்‌ செய்வேன்‌
பேசவரி தாய கொடுந் தொழில தான பெண்ணை மட லூர்வனெனப்‌ பிதற்றினனா
லாசறு பெண்‌ பேதை முத லன்பரியாரு மறிதர லாம்படி புளிக் கீழமரும்‌ வேந்தே–66-

ஊரெல்லா மெனவருளும்‌ பதிகத்‌ தன்முன்‌ னுன்னு மட லூர்வதற்கு மொண்ணா தாகி) காரெல்லா மொருபடிகொண் டிருந்த தென்னக்‌ கங்குலிடை தனித்‌ திரவு யங்‌ கழியா தின்று
பாரெல்லா முண்டுமிழ் நங்‌ கண்ண னான பண்ணவன் வா ராமையிற்‌ பலுகிற்‌றென்றச்‌
சீரெல்லா முரைத்துரைத்து வருந்தா நின்ற செயலெனப் பா ரவரறியத்‌ தெரித்தான்‌ மன்னோ—67-

எங்கனேயோ வெனுந்திருவாய்‌ மொழியிலந்த விரவுகழிந் துதய னும் வந் தெழுந்த தற்பின்‌
மங்குறவழ்‌ மணி மாடக்‌ குறுங்கை நம்பி வழங்கிய சே வையிலழுங்கு
கொங்குலவோ தியை யனைமார்‌ புலம்ப லென்னீ கோற்றொடி யென்‌றே முனியக்‌ குணத்தின்‌ மிக்கா
ளங்க வன்பா லென் மனமுங்‌ கண்ணு மோடி யடைந்த முனியீரெனுமா றறிவித்தானால்‌–68-

கடன்ஞால மெனவருளும்‌ பதிகத்‌ தெம்மான்‌ காட்சி யளித்‌ துடன்‌ மறையக்‌ காதல்‌ கொண்டு
குடமனைய நகிலமரி மைக்கட்செவ்வாய்க்‌ கோபியர் கண்‌ ணனில் லீலை கொண்டா லன்ன
மடவரலா யப் பரமன்‌ லீலை முற்றும்‌ மனமகழ்ந்தங்‌ கனுகரித்த வகைய தாகப்‌ படவரவத்‌ தரசவனே யவதரித்த பனிமலர் சூழ் புளி நிழலோன்‌ பணித்தா னன்றே,–69-

நோற்றநோன்‌ பெனவருளும்‌ பதிகத்தின் முன்‌ னுவலுமநு கார மென்ற நொய்மை தீர்ந்து
மாற்றரிய திருநாடு ததி பாண்டற்கு வழங்கருளா யுனைப் பிரிந்தோர்‌ மாத்திரைப் போழ்‌
தாற்றேனுன்‌ திருவடியே யுபாய மென்‌றுள்‌ ளன்பொழுகச்‌ செஞ்‌சாலி யரியினூடு
சேற்றுறு தாமரை மலர் சீவரமங்கைக்குட்‌ சீதரன் றாள்‌ பற்றியதைச்‌ செப்பினானால்‌–70-

ஆராவ முதமெனுஞ் சொற்‌ பதிகத்தங்கு மடைந்து பல சித்தியிலா ததினானொந்து தீராத வாசையொடு செழு நீர்ப்‌ பண்ணைத்‌ திருக் குடந்தை யெம்‌ பெருமான்‌ திருப் பாதத்தி
னீராயலைந்து கரைந் துருகித்‌ தன்னுண்‌ ணின்றிடுமாக்‌ ருந்தநத்தை நிகழ்த்தி மாயன்‌
காராருந் திருமேனி யம்மான்‌ கண்ணன்‌ கழலிணை பற்‌ றிய வாய்மை கழறினானால்‌–71–

மானேய் நோக்‌ கெனுந் திருவாய்‌ மொழியிலந்த மாதவனும்‌ பல சித்தி வழங்கா துள்ளந்
தேனார் பூஞ்‌ சோலைகள்‌ சூழ்ந் தணி கொண் மாடத்‌ திருவல்ல வாழ்‌ புகப் போய்த்‌ திகைத்து வீழ்ந்தக்‌
கோனார்செம்‌ பதும மல ரடியை வாழ்த்திக்‌ கூடியது பவிப்பதென்று கொல்லோ வென்று
கானாரும்‌ பிடி நடைகொ ளீ குளைமார் முன்‌ கழறியவா றுரைத்தனன்‌ வெங் கலி வென்றோனே–72–

பிறந்தவாறு மெனவருள்‌ பதிகத் தென்‌ றும்‌ பேணியவா சையிற்‌ பலனைப்‌ பெறற்கில்லென்‌ று
சிறந்தவவ தாரங்க டோறுஞ் சென்‌று சீர் கெழு குணானுபவஞ்‌ செய்ய வுள்ளம்‌
மறந்து மலைந்‌ தலையாத பக்தி நாளும்‌ மாறாமற்‌ றருக வென மறிகடற்‌ கண்‌
ணிறந்த குரு மகனைத் தக்‌ கணைக்கன்‌ றீந்த வெம்பெருமான்‌ றனக்குரைத்த இசைத்தான்‌ மாதோ–73-

ஆறாம்‌ பத்து

வைகலெனும்‌ பதிகமவ தாரமதில்‌ இட்ட சித்தி வராமை பின்னு
முய்வர்தொழு மர்ச்சாவ தாரமதி லுளமனைத்து மூன்றி வண்டார்‌
கொய் மலர்க்கா வின மருவு திருவண்வண்‌ டூருறையும்‌ கோவலன் பாற்‌
செய் மருவு புள்ளினஞ்சந்‌ தனுப்பிபவாறு லகறியத்‌ தெரிவித்தானால்‌–74-

மின்னிடையென்‌ றருள்பதிகத்‌ தத்தூதி லெம்பெருமான்‌ மிகவொ ளித்துத்‌
தன்னுழையி லினிதுவர லறிந் துமக்குப்‌ பலவாய சலவேன்‌ மைக்‌கட்‌
கன்னியரங்‌ குளரவர்நீத்‌ திவணேக லென ப்‌ரணய கலகத்தாலே
பன்னகமீ நடித்தவனைத்‌ திரஸ்காரம்‌ பண்ணினதைப்‌ பகர்ந்தான்‌ மாதோ–75-

நல்குமவப்‌ பதிகம ப்ரணயகலக விருத்தமதா நலிவி றம்மைப்‌
பல்கதிரு மதியுமினி மினியெனவாஞ்‌ சேணுலகப்‌ பரம னண்ணார்‌
வெல்லு முயர் விருத்த விபூதிகளு மெனைக் கைக் கொள்ள மேவினானென்‌
றெல்ல வரு மறிவுறவே யுடைய நங்கை யீன்ற சுத னிசைத்தானம்மா–76-

குரவையெனும்‌ பதிகமதி லவ்வாறு கூடிய நங்‌ கொண்டல்‌ வண்ணன்‌
பரவையிற்க ணைவர் கொடி பாஞ்சாலிக்‌ களவில் கலை பல்கச் செய்தோ
னரவணையான்‌ குரவை முத லாடிய பல்‌ லீலைகளு மநு சந்தித்தாங்‌
கிரவு பக லகமகழ்ந்து ப்ரீதி யடைந்‌ததை யறிய வியம்பினானே—-77-

துவளிலெனும்‌ பதிகமதவ்‌ வதுபவத்தோர்‌ விச்லேடர்‌ தோன்றி மாதாய்ச்‌
சலிகெட மோகங் கொடு தண்‌ தொலை வில்லி மங்கல மால்‌ சரணைப்‌ பற்று
மவை யறியா தனை முனிய வதைமறுக்கப்‌ போகாதங்‌ கவளவாவை
யிவஎளவுமெண்‌ ணாது வீடு மென் றிகுளை சொல்வதென விசைத்தான்‌ மாதோ–78–

மாலுக்கென்‌ றருள்பதிகத்‌ திவ்வாறு வருந்தியுமான்‌ மருவானாகக்‌
கோலுகக்கத்‌ தரிவைவிர கார்த்தியின லுடலசந்து குறையச்‌ செம்‌பொன்‌
னீலக்கல்‌ லிழைதரள வடமொடு சங்‌ கெழில்‌ பலவு நில்லா தாகிக்‌
காலக்கண்‌ டனை வருந்திச் சொல்லுஞ்‌ சொல்லாக முனங்‌ கழறினானால்‌–79–

உண்ணுஞ்சோ நென்றருளும்‌ பதிகமதிற்‌ றாய்சோக முறவன்னா டன்‌
பெண்ணுஞ்‌ சோகந் தெளிந்து தாரக போஷக போக்யம்‌ பின்னு மெல்லாங்‌
கண்ணன் றா னென்றனக்கென்‌றே திருக்கோளூர் செலத்தாய்‌ கலக்‌கந்‌ தீர்ந்து
திண்ணங் கொண்டென் மகளவ் வூரடைந்தா ளெனுமாறு செப்பினானால்‌–80-

பொன்னுலகாளீ ரெனுஞ் சொற்‌ பதிகமதவ்‌ வணி நகர்க்குப்‌ போவே னென்று
மன்னிய காற்‌ பலகானி யாறுபோக மாளாது மலைந்தாங்‌ குற்ற
வன்னமொடங்க குருகினங்கா ளுமக்கிரு விபூதியு நானளிப்பன்‌ றுத்திப்‌
பன்னகமீத்‌ துயில் பரம பத நாதற் குரையுமெனப்‌ பகர்ந்தான் மாதோ–81–

நீராயென்‌ றிடு திருவாய்‌ மொழியினிற்‌ சந்தனுப்பியுமா னிகழானாக
வாராயென்‌ றழைத்திடு தங்‌ குரலறிவா ருள முருகு மாறு மெய்ய
பேராயிரங் கொளு மெம்‌ பெருமாற்கு முத்தருறை பெரு நாட்டிற்குந்
தாராள மாயடைய வோல மிட்டங்‌ கழைப்பதெனச்‌ சாற்‌ றினானால்‌–82–

உலகெனுஞ்சொற்‌ பதிகமதிற்‌ றாமுறுமா க்ருந்த நத்தி லுண்மை சொல்ல
நிலையொடுறும்‌ பொருட்டுயர் விண்‌ ணாடகன்றித்‌ திருமலையந் நெடு நாடாக
நலமுறநிற்‌ றனமென வின்‌ னோனு மலர்‌ மேலுறையு நங்கை தன்னை
யலைவறு மெய்க்‌ காரணமாய்க்‌ கொண்டவன்றா ளடைந்த மென வறிவித்தானால்‌-83

எழாம்‌ பத்து

உண்ணிலா விய பதிகத்‌ தோத நீர்‌ வண்ணனரு
ணண்ணிலா தார்த்தி கொடுன்‌ னளினமலர்ச்‌ சேவடியை
யண்ணிலா திந்த்ரியத் தெக்‌ காலமளவும்‌ மழுங்கப்‌
பண்ணினா யென்று மனப்‌ பாதையறி வித்தனனால்–84-

கங்குல்லெ னும்பதிகத்‌ திவ்வாறு காதல்‌ கொள
வங்கவடாய்‌ செம்பொன்‌ னரங்கன்‌ றனைக் குறித்திம்‌
மங்கை யுய்யற்‌ கெவ் வண்ணம்‌ வைத்தீர் சங் கற்பமெனப்‌
பங்கமறக்‌ கேட்டுருகும்‌ பான்மை யறிவித்தனனால்‌–85-

வெள்ளை யெனும் பதிக மெய்த்தா யிவை யுரைக்கக்‌
கள்ளவிழ் பூங்‌ கோதை கொளுங்‌ காதறெளிந் தருகாம்‌
பிள்ளைக் குழாங் கொடிருப்‌ பேரை செல்லு வேனெனத்தாய்‌
தள்ள நிராகரித்துச்‌ சாருவதாகப் பகர்ந்தான்‌–86–

ஆழிப்‌ பதிகத்‌ தவன் பிரிவிற்‌ றுன்பமுறப்‌
பாழியந்தோண் மாயன்‌ பண்டை யவதார மெல்லாம்‌
வாழியின மாறனுக்கு வந்துதவச்‌ சிந்தித்துச்‌
சூழக்‌ குணத்தியல்பு சொல்வதென வோதினனால்‌–87–

கற்பாரெனும் பதிகங்‌ காண் விஜயோபா தாநக்‌
சிப்பாலி ராம க்ருஷ்ண ரென்னு மவதார நிற்கத்‌
தப்பாக வே பிறரைத்‌ தாழ்வதிலென்‌ னென்றுடன்றான்‌
முப்போது மால் குணத்தின்‌ மூழ்கியவா றிங்குரைத்தான்‌–88-

பாமரு வென்றோதும்‌ பதிகத்‌ தவன் குணமுண்‌
ணா மருவி யும் மெதிரி னண்ணா ததினாலுன்‌
றே மலர்த்தா ளெப்போது சேர்வே னென வுருகா
ஏமுறுமாக்ருந்தன மியற்றியதையே பணித்தான்‌ –89–

ஏழையெனும்‌ பதிகத்‌ திவ் வணமாக்ருந்‌த நங்கேட்‌
பாழியான்‌ றன்ன வுரு பாக்ய சம்சிலேட மின்‌றித்‌
தாழ மனமுருகித்‌ தன்னுள்‌ வருத்த மெலாந்‌
தோழியர்க்கு மன்னையர்க்கும் சொல்லுவதாகப்‌ பணித்தான்‌ –90-

மாயா வெனும் பதிகத்‌ திவ்வாறுளம் வருந்து
நாயேனை யிவ் வுலக நண்ண வைத்த தென்னெனப்பார்‌
தாயோன் விசித்திர விபூதி தனைக் காட்டச்‌
சேயோன்‌ மகிழ் மாறன்‌ சிந்தை மகிழ்‌ வைப் பகர்ந்தான்‌ –91-

என்றை தனி லென்னை யிவ ணேன் வைத்தா யென்ன வெற்கு
மொன்றடியார்க்‌ குந் தமிழ் நீ யோத வைத்‌த தென்னலுமக்‌
கன்‌று குணிலா யெறியுங்‌ கண்ணனுரைக்‌ குப் பதிலெந்
நன்றி புரி வேனென வுண்‌ ணலியும் வகை யுரைத்தான் -92–

இன்பமென்லும் பதிகப்‌ திவ்வா றுபகரித்த
மின்பொலியு மார்பனுறை மெய்த் திருவாறன் விளைக்கு
ளன்புடன் சென்‌ நின் றமிழை யரங்கேற்ற வேணுமென
வென்புருகு மார்த்தியினை யீங்கருளிச்‌ செய்தனனே–93–

எட்டாம் பத்து-

தேவிமா ரெனும்பதிகத்‌ தப்பதிக்குச்‌ செல முடியா திடை தருகித்‌ திருமா துண்மை
மேவு புரு டாகார பூதை யாக மெய் யுறு மாச்ருத பார தந்த்ரிய முற்றும்‌
பாவுதலிற்‌ றமக்கினிய பலனில்லென்று பன்னு குண மேற் சங்கை பண்ண மாயோ
னாவலிற் றன்‌ கல்யாண குணங்கள்‌ காட்ட வதி சங்கை தீர்ந்துகந்த தருளினானே –94-

நங்களெனும்‌ பதிகத் தெம்‌ பெருமான்‌ றன்முனளின முகங்‌ காட்‌ டாது நலியச்‌ செயய
லெங்கனமற்‌ றவனறியச்‌ சஞ்சா ரத்தி னியற்கை யுள தோ வென்‌ றிரங்கி மிக்கச்‌
சங்கை கொடெற்‌ கவை மிகவும்‌ தியாச்சய மென்று தாயருயிர்த்‌ தோழி பல தாதி மார்முன்‌
னுங்களோ டெமக்கனிப் பற்‌ றில்லை யென்றாங்‌ கோதியதாய்க்‌ காரி சுதனுரை செய்‌ தானால்‌–95–

௮ங்கெனுஞ் சொற்‌ பதிகமதிற்‌ பற்றில்‌ லென்றாங்‌ கறைந்திடமா லவனுளத் துற்‌ றருளே செய்யச்‌
சுங்கையிலன்‌ னோனெழி லெவ் வநமுங் கண்டு தானழுங்குந் துயர் மறந்து தனை யல்லாதிம்‌
மங்கை மண வாளனதி ரூபத்துக்கு மங்களா சாசன பரரில்‌ லென வருந்தப்‌ புங்கவ நித்திய முத்தர்‌ முழூட்சு வுண்டுட்‌ புலரலென மகிழ்ந்த வகை புகன்றானம்மா-96-

வார்கடா வியென வருட்‌ பதிகத்‌ தெந்தை மாறனுமக்‌ இன்ன முள மலையுமென்‌று
சீர் கெழுதன்‌ வீர்ய சக்தி குணங்கள்‌ யாவுஞ்‌ சேவை பர சமர்த்தியை யுந்‌ தெளியக்‌ காட்டி
யேர் கொள் பொழிற்‌ றிருச் செங்குன்‌றூரில் வாழு மெம்பெருமான்‌ பயமறச் செய்‌ யியற்கை சொன்னான்‌
கார்கொளுமைம்‌ பாலுடைய நங்கை யீன்ற கண் மணி நாற் கவிப்‌ புலவர்‌ களிக்கும் வேந்தே–97-

மாயக் கூத்‌ தா வெனுஞ் சொற்‌ பதிகத் திந்த வாறு பயம்‌ போக்கியது மான சத்தி
னாயவநு பவமாத லாற் பாக்யத்தி னநுபவமே வேண்டு மென வதி சங்‌கித்து
தாயவனெம்‌ பெருமானை வணங்க மிக்கச்‌ சாக்ஷாத்‌ கரிக்க வெனத்‌ தாமுந் தன்பான்‌
மேயபுல னுங் கரைந்தங்‌ கழைத்த வாறிம்‌ மேதினியோ ரறிதரவே விரித்தான்‌ மன்னே–98–

எல்லியுங் கா லென வருளும்‌ பதிக மாற னிவ்வாறு கூப்பிட மாலிவ னின்‌ மிக்க வல்லல் கொளுந் திருஷ்ணையதாய்‌ வருந்தி யன்னோன்‌ ஆக்ரோசம்‌ பண்ணு முன மடைந் தோமில்லை
வல்லை யதற்‌ கிதமாகப்‌ போனான்‌ மாறன்‌ மாலுறுவ னென்று திருக்‌ கடித்தானம் போய்ச்‌
சொல்லுவமால்‌ சாத்மித்த பின்பென்றேகுஞ்‌ சூட்சி யறிந்‌தக மகிழச்‌ சொற்றான்‌ மாதோ–99-

இருந்தெனுஞ்சொற் பதிகமதி லுகந்து மாறனேர் கொடிருக்‌ கடித்‌ தானத்‌ திருடி கேசன்‌
பொருந்தியுள மகிழ்ந்‌து தம தூடனீங்கப்‌ புல்லியது சொப்பனமோ பொய் மாலோ வென்
றருந் துயருற்‌ றிவை சொப்ன மோகமன்றென்‌ றதி சங்கை தீர்ந்துடனங்‌ கதிமால் கொள்ளத்‌
திருந்தியவன்‌ றனை யடைந்த தருளிச் செய்தான்‌ றென் குருகூ ரவதரித்த செவ்வியோனே–100–

கண்கள்‌ சிவந்தெனும் பதிகத்‌ ததிமாலுற்ற கண்ணனவ யவங்களிலுங்‌ கலன்களூள்ளும்‌
வண்ணமதி லும் மனமுங்‌ கண்ணு மாழ்ந்து மாதமிரு மூன்றளவும்‌ வாரா நிற்கத்‌
தண்ணளியோ னருள்‌ கொடு பின்‌ மீண்டம்‌ மாறன்‌ சர்வ ஸ்வா மித்வமதைச்‌ சாற்றினானாற்‌
பண் கொளுமென்‌ மொழி யுடைய நங்கை யீன்ற ப்ரபந்ந ஜன கூடனருட்‌ பரமன் றானே–101–

கருமாணிக்‌ கமலை யெனும்‌ பதிகத்‌ திந்தக்‌ கண்ணனடி சேடத் வக்‌ கனிவினாலள்‌ ளூருகாநின்‌ றெப்பொழுதுந் தனை மறந்தோ ரொண்டொடி யினவத்தை கொடவ்‌ வுததி வண்ணன்‌
றிருமாலின்‌ குணங்களிலீ டுபடா நின்ற செயலை யுயிர்த்‌ தோழியர்க டெரிந்து தாய்க்குன்‌
னருமாது படு துயர மறிதி யென்றங்‌ கறைவதெனப்‌ பாரறிய வறிவித்தானால்‌–102-

நெடுமாலுக்‌ கடிமை யெனும்‌ பதிகத்‌ தெந்தை நித்திய சூரிகள் பரவு நிமல னேழ்ப
கடுமாயத்‌ தொலைத்தணங்கை மணந்த வென்றிக்‌ கண்ணனுடைக்‌ கல்யாண குணத்திலீடு
படுமாயத்‌ தடியருக்கு மடியர்‌ செய்ய பதமலரென்‌ னுயிர் நிலையாய்ப்‌ பரித்தே னென்றான்‌
சுடுமாதித்‌ தனுக்க விழா விதய கஞ்சந் தோடவிழ வுதித் தருளுஞ்‌ சுடரோனன்றே.-103-

ஒன்பதாம்‌ பத்து-

கொண்ட பெண்டிர்‌ மக்க ளென்னுங்‌ கோதறு பதிகத் திந்த
மண்டலத் துள்ளீ ருங்கண்‌ மனை யுற முறையார்‌ வாழ்வுங்‌
கண்ட மாத்‌ திர மல்‌ லாது கடிப்பதிங் கிறையு மின்னந்
தண்டயி ருலகுண்‌ டோன்ற ன்றாட்டுணை யல தென்றானே–104-

பண்டைநா ளென்னு மின்சொற்‌ பதிகமம்‌ புளிங்குடிக் கண்‌
விண்டுவைப்‌ பரமனாகுங்‌ காசினி வேந்தை மாறன்‌
கண்டு நின்‌ னுறவின்‌ மெய்ய காரிய மனைத்துந் தந்‌துன்‌
னண்டையி லிருத்தி நல்வாழ்‌ வருடி யென்‌ றறிவித்தானால்‌–105–

ஓராய பதிகத்‌ தந்த வொண் சுட ராழி மாய
னேராய் நீ வேண்டும்‌ யாவு நின்னுளப்‌ படியே செய்வம்‌
நாராயணனு நானென்று நல்லுற வதனைக்‌ காட்ட
வாராத சீலத்‌ தற்கா றாழ்ந்ததா யருளினானால்‌–106–

மையாரும்‌ பதிக மென்னும்‌ வண்டமிழ்த்‌ தொடையி லந்தக்
கையாழிள்‌ சங்கு வேந்தைக்‌ காண வென்‌ றதிமால்‌ கொண்டு
நையாநின் றினித ழைத்தந் நாரணன்‌ றனைக் காண்‌ குற்றங்‌
குய்யா நின்‌றுகந்த தாய வுண்மையை யறிவித்தானால்‌–107–

இன்னுயிர்ச் சேவல் என்று அங்கு இனிதருள் பதிகத் தெந்தை
பொன்னவள்‌ கொழுநன்‌ கூடிப்‌ போயபி னதிமாலுற்று
மன்னிய குருகீ ரென்றன்‌ மாதவன்‌ வருக வென்‌றுங்‌
கன்னியம்‌ பேடை யோடு கரைமினென்‌ தறிவித்தானால்‌-108-

உருகுமா னெஞ்சு மென்றங்‌ கோதிய பதிகத்‌ தென்னுட்
டிருகுமாய்த்‌ திடுபுள்‌ ளூருந்‌ தேவனின்‌ செயல்களெண்ணிப்‌
பெருகுமால்‌ வேட்கை கொண்டு பேசிய தழீஇய தன்மை
முருகுமா மகிழலங்கன்‌ மொய்ம் பனீண்‌ டறிவித்தானால்‌–109-

எங்கானற்‌ பதிக மாற னேந்திழை யவத்தை கொண்டெற்‌
கங்காய காதன்‌ மாற னழகென வவை பற்‌றா சாய்ச்‌
செங்கானன்‌ னாரையீர் தென்‌ றிரு மூழிக்‌ களத்துள்‌ ளோன் பா
னங்காத லுரைமி னென்று நவின்றவா றறிவித்தானால்‌–110–

அறுக்குமப்‌ பதிகத்‌ தின்முன்‌ னனுப்புந் தூதரியைத்‌ தன் முன்‌
குறுக்குமுன்‌ மிக விளைத்‌தக்‌ கோவலன்‌ நிரு நாவாய
னுறற்கு நாளுள தோமாயற்குரிய தொண்டி யற்‌றுவேனோ
மறுப்பனோ வன்னோ னென்றுண்‌ மனோ ரத மறிவித்தானால்‌–111–

மல்லிகைப்‌ பதிக மாறன்‌ மடவர லாகி யந்தி
புல்லிய வாடை தங்கள்‌ பூவணை யன்றில்‌ வேயின்‌
சொல்லியல்‌ கடல்வே டாயர்‌ தோழிசாந் தணி வெறுத்தாங்‌
கல்லிருந் தரியைக் கூவி யழுங்கலாய்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–112-

மாலை நண்‌ ணி யெனுந்‌ தூய வண்ட மிழ்ப்‌ பதிக மாற
னோலையார்‌ கலிசூழங்க ணுல குளீர்‌ கண புரத்து
நீலமா மலை போ னின்ற நிமலனை வணங்கீர்‌ துஞ்சுங்‌
காலை விண்‌ ணாடளிக்குங் கருதுமென்‌ றருளினானால்‌-113–

பத்தாம்‌ பத்து–

தாள தாமரை யாம்பதி கந்தனில
வாளை பாய்தட மல்குதிரு மோகூர்க்‌
காள மேகங்‌ கழல்பணிந் தால்வழிக்‌
காளு நற்றுணை யாமென்‌ றறைந்தனன்‌–114–

கெடுமி டர்ப் பதிகங் கிளர்‌ மாட மார்ந்‌
தடர னந்த புரத்தது கூலரை
மடம றும்பன்‌ மயக்கு மறச்செயு
நடலை தீர்ந்தவ ணாடு மென்‌ றோதினன்‌–115–

வேய்மரும்பதி கத்தவன்‌ மேனகர்‌
தாமடைதற்‌ கிலாததிற்‌ றம்மையிப்‌
பூமி வைக்குமோ வென்று புலர்ந்துபின்‌
மாம ணாற்ற மகிழ்ந்ததை யோதினான்‌–116–

சார்வெ னும்பதி கத்துமுன்‌ சாற்றிய ‘
சீர்கொள்‌ பக்தி பலத்துடன்‌ சேர்ந்ததாற்‌
சோர்வி லததைத்‌ தொல்லுல கத்தினுக்‌
கார்வ மோடிங்‌ கறைந்தன னன்றரோ—117–

கண்ண னாம்பதி கந்தனிற்‌ காரினேர்‌ வண்ண மேனிகொண்‌ மாயனை வாழ்த்துறுந்‌
திண்ணமேவுநர்‌ சீர்த்தி தனைப் புவிக்‌ குண்ணெ கிழ்ந்திங்‌ குரைத்தனன்‌ மாறனே–118-

அருளெ னும்பதி கத்தவ னன்பினு
லிருள் செ றிந்த தம்‌ மென்புட றன்னொடு
மருவு பொன் மதில்‌ வாட்டா றடைவமென்‌
றுருகி நெஞ்சொ டுரைப்பன வோதினான்‌–119–

செஞ்சொ லாம்பதி கத்திறன்‌ சிர் கொண் மெய்‌ வஞ்ச மோடரி வாஞ்சை வைத்‌ தாளமால்‌ விஞ்சியே கலக்‌ தாய்ந்து பின்‌ விட்டதை யெஞ்சிலாதிங்‌ இசைத்தனன்‌ மாறனே.–120-

மன்றிருப்பேர்‌ நகருறை மாறனக்‌
கின்று மாற னிசைத்திலன்‌ பாவெனச்‌
சென்‌ று ழன்றவன்‌ சிந்தை நிறைவுற
வொன்ற வெந்தை யுகந்துபி னோதுவான்‌.–121-

திருவெனும் பதி கந்தனிற்‌ செந்திரு
மருவு மார்பன்‌ மகிழ்ந்து வியத்தல் கண்‌
டுருவி னோய் முன்‌ னொழித்தின்று சேறுத
லருமை யோ வென்‌ றழுங்கிய தோதினான்‌-122-

சூழ்ந்தெ னும்பதி கத்தரி சூரிகள்‌ வாழ்ந்தி டும்பதி யின் வழி காட்ட வாங்‌ காழ்ந்து முற்று மனுபவித்‌ தண்ணறா டாழ்ந்த வாறிவண்‌ சாற்றினன்‌ மாதரோ.–123-

முனிய தாம்பதி கத்துமுன்‌ னின்பு போய்த்‌
தனிய தாகத்‌ தளர்ந்து தெளிந்து பின்‌
னனிய தாம்பர மபக்தி யானைந்தப்‌
பனி கொண்‌ மாயனைப்‌ பற்றிய தோதினன்‌–124–

இந்த வாறெழு தா முறை யின் பொரு
டந்த போழ்து மதுர கவித்தவன்‌
சிந்தை கூர்ந்தவன்‌ சேவடி யுன்னுபு
நந்த லின்றி நனிவரைந்‌ தானர–125-

திராவிட வேத மருளிய படலம் முற்றும்‌-

திரு வர்ச்சைப்‌ படலம்‌

தீதறு மெய்ஞ்‌ ஞான நிறை யாள வந்தார்‌ திருவுளத்து முன்னியவை செய்யு முன்பே
மாதவன்றன்‌ னுலகருளச்‌ சரம பிம்ப மலர்க்‌ கையிடை விரன் மூன்று மடித்துக்‌ காட்டிப்‌
போதர மெய்ச்‌ சிச்சர் மனம்‌ வருந்த வெல்லை போந்து விர னிமிர்த் தருணம்‌ புநிதனாக
வாதவனிற்‌ றோன்று மெதி பதி தாள்‌ வாழ்த்த யர்ச்சை யெனும்‌ படலமதை யறிவிப்‌ பாமால்‌–1-

எம்மாற னைத் தடிந் தின்‌ றிணை யடிக்காட்‌ கொண்டருளு மெழில்‌ கொள்‌ சோதி
யம் மாறன்‌ றனைப்பணிவோர்க்‌ கின்னமுதச்‌ சடகோப னருள் சேர்‌ கொண்ட
றெம்மாறுஞ்‌ செந்தமிழோ ராயிரமுஞ்‌ செய்துகந்த செயற்குத் தூய
கைம்மாறு செய்தருள்வா னெனப் பரம வானாட்டிற்‌ கருணை பூத்தோன்‌–2-

தெள்ளமுதத்‌ திருமகளம்‌ புவிமாது மிருமருங்குந்‌ திகழத்‌ தூய
வள்ளயில்சே ரைம்படையு முறை முறைநின்‌ றருளி செய்ய மருவுந் தீய
பள்ளவினைச்‌ தொடரறுத்த நித்யர் குழாம்‌ புடை பரந்து பல்லாண்‌ டேத்தப்‌
புள்ளரசன்‌ மீத் தோன்றி முன்போல விண்ணகத்திற்‌ பொலிந்தான்‌ மாதோ–3–

விண்ணகத்திற்‌ றோன்றி யிவ்வா றடல் வாண னயிரந்தோள்‌ வீட்ட நாதன்‌
பண்ணமைந்த பைங்கமலத்‌ தாளேறு வரையகலப்‌ பரமன்‌ சேவை
தண்ணளியோ டீந்தருளப்‌ பாந்தண்முடி மீக்கிடந்து தயங்கு ஞாலத்‌
துண்ணயந்த வெவ்வினை தீர்த்‌ தருண் ஞான தேசிகனு முவந்து கண்டே–4–

மருவாருந் துளவமுகி லைக்கனிவாய்‌ முடியார வணங்கி வாழ்த்தி
வுருகாநின்‌ றிடவரிதன்‌ சேவை யளித்‌ தணி நகர்செல்‌ லுழியந்‌தோ நின்‌
றிருவாணை நின்னாணை கண்டாய் போ கேலுனது திருநா டெற்குத்‌
தருவாயென்‌ றாரணமுந் தேடறியா வடி பரவிச்‌ சாற்‌றுவானால்–5–

குருதிவெளென்‌ பசை நரம்பு செறி தசை சர்‌ மங்கொளுடற்‌ குரம்பை யின் கண்‌ ணரைபிணி கொண் டது குறிக்‌ காறளர்க்து கோலூன்றி நனி வருந்தி
மருள்‌ கொளுமிப்‌ பிறப்பிலினு முழன்‌ றிடிலயா னுய்வதற்கென்‌ வழி யுண்டோதாய்‌
சுருதியொடோ திமமுயர்த்தோ னரனமரர்‌ தேடறியாத்‌ தூய்மை யோனே–6-

என்ன லுமா லுமதருளிம்‌ மெய்யடியர்ம. துர கவிக்‌ இசைய வீண்டு
முன்னுளமூ வர்களுடன் மற்‌ றவருரைசெய்‌ செந்தமிழின்‌ மொழியு நீவிர்‌
சொன்ன மறை நான்னெரும்‌ பொருளுடன் பின்‌ னவருரைக்குந் தொடையு மோதி
மன்னுமிவ ணெனவுமலைந் தடியனுள மருவாதிவ்‌ வளநா டென்றான்‌–7-

இவ்வணமா லுடன்வகுள பூடணன்றன்‌ ஸனுளவிருப்‌ப மினிது கூற வவ்வியினின்‌ மதுரகவி யும் மெனைக் கைக்‌ கொண்ட கன்றாலடியே னுய்வன்‌
பவ்வ நெடு வரி விழி கொ ணங்கைகுமா ராவெனுமுன்‌ படியுளோர்க்குச்‌
செவ்வியினான்‌ மறைத் தமிழை நீயலதிங் கெவரிருந்து தெரிவிப்‌பாரால்‌–8-

என்‌ றிடவுள்‌ ளுழன்‌ று தெளிந் தடி பரவிக்‌ குடி மறவா திளமையான
கன்றை மறந்‌ தனை பிரிதலுலகியல் போ தம் மகவைக்‌ களைந்தின்‌ போகந்
துன்றிய நற்‌ கனியமுதா ரடிசிறனை யுண்கிலதிற்‌ சுவை யேதெனு
மொன்றிடுமோ தந்தையருக்‌ கவைசிவண வெனைப் பிரித லொவ்வா தென்றான்‌–9–

மத்தளைவாய்‌ வைத்த கரு முகில் புரையுந்‌ திருமேனி மாயன்‌ றுய்ய
புத்தமுதிற்‌ றெளிதமிழா யிரமருணன்‌ னாவீறு போத நும்மை
நத்திய மெய்‌ யடிம துர கவியுழுலா திவணிருநா நவின்ற வண்ண
நித்தியமா கப்பொலிந்திங் குமதுதிரு முன்னரிலே நிற்போமென்றான்‌–10-

அம்புவியிற்‌ கலிகெடுமென்‌றுரைசெய் மகி ழலங்கலுறு மஞ்ச வூர்‌தி
யெம்பெருமான்‌ றிருவுளத்தின்‌ படி திருந்தி மதுரகவி யிடையா வண்ண
மூம்பருல கோடு புவிக்‌கா முதல்வ னீயே யென்‌ றுரை த்துகந்து
தம்பது மக்‌ கட்கடையாற்‌ குளிர விழித்‌தவன் கனியச்‌ சாற்‌றினானால் –11-

தென்றிசைமார்த்‌ தாண்டனுரு வாயுதயஞ்‌ செய்ததுவுந் திருப்‌ புளிக் கீழ்
ஓன்றியொரு பதினாரூண்‌ டளவின மக்‌ கோர் மறுசொல்‌ வுரைத்த வாறும்‌
பொன்றிலரு நான்மறையின்‌ பொருளினைச் செந் தமிழ்த் தொடை யிற்‌ புகன்ற வாறு
மின்று திரு மாலினுட னேகலந்திங்‌ கவனருளுக்‌ கிசைந்த வாறும்‌–12–

எண்ணி நெடு மாலிலிவனே பரமென்று றுதகொடுள்ளி னினிய பக்தி
பண்ணியவன்‌ றாளிணையி லாரியனே தெய்வமென்றிப்‌ படியோர்‌ காணக்‌
கண்ணிநுணென்‌ றொருப திக நாவீற னம் மதுர கவியோ வென்னத்
தண்ணமுதைக்‌ கடைந்தெடு வெண்‌ சுதையிலுமின்‌ சுவை யொழுகச்‌ சாற்றினானால்–13-

இன்னணஞ்சின்‌ னாள்வரை முப்‌ போதுமவன்‌ தாளிணையை யிறைஞ்‌ ச மாற
னன்னவற்கோர்‌ நாடனிலிக்‌ கலி விபவத்‌ தியாமிருப்ப தழக தல்ல
பொன்னி வருந் தென்மலை நின்‌ றகிலுரிஞ்சிப்‌ புனல் பரக்கும்‌ பொருந லாய
நன்ன தி நீர்‌ கொடுவெனினே ரர்ச்சையியற்‌ றிடுவை யென நவின்‌ றான்‌ மாதோ –14–

அம்மொழி கேட்‌ டெவ் வகையந் நீரை யெடுத்‌ தமைத்திடுத லருடி யென்ன
மைம்முகிலூ ரும்புளிக்கா வண மகிழ் மா றனுமிவனை மகிழ்ந்து நோக்கி
யிம்மணனா றும்புனற டாவினிறைத்‌ தடிலெருவை யினிதுண்‌டாகுஞ்‌
செம்மலுளோ யதை யெடுத்தந் நீரில் விட நம்முருவிற்‌ றிகழு மென்றே –15–

ஓத வுள்லி லுவகையம்‌ பேரலை மோத மாறன்‌ மொழிந்த மொழிப்படி
வேத நாவர்‌ மிடைந்து செலத் திரைச்‌ சீத நீர்ப் பொரு நாநதி சென்றரோ–16-

பொற் கு டத்திற்‌ புனல் கொடு நான் மறை விற்ப னர்கள்‌ விளம்பிட மும்மத
வெற் பொ ருங்களி றின் பிடர்‌ வைத்துல கற்பு தங்கொள வார்த்தெழப்‌ பல்லியம்‌–17-

காவி யொண் கண்‌ கணிகைய ராட விண்‌ மேவு வோர்கள்‌ வியந்து நறு மலர்‌
தூவ மாடங்கொ டோரண வீதி வாய்‌ மாவ லங்கொடு மாறளி மேவியே–18-

சந்த கிற்றேவ தாரமெனுந்தறும்‌ மிந்த னம் மிட்‌ டெரிவளர்த்‌ தப்புனற்‌
பைந்த மனியப்‌ பாத்திரத்‌ திட்டுயர்‌ சிந்தெழுங் கதிர்ச்‌ சென்னிறச்‌ செம்புற–19-

அட்ட பின்மற்‌ றமுது கொள்‌ பொன்றடா விட்ட நீர் குளிர மேயபி னோக்கலு
மட்டு லாமரை மாமலர்க்‌ கை குவிந்‌திட்ட தோருரு வெய்திடக்‌ கண்டனன்‌–20-

காண்ட லும் முட்‌ கலங்கிப்‌ பதறியங்‌ காண்ட கை முன்‌ னடைந்தடி சென்னியிற்‌
பூண்டென்‌ குற்றம்‌ பொறுத்திடு வாயென வேண்டிப்‌ பின்னும்‌ விளம்பினன்‌ மெய்த்தவன்‌–21-

சொன்ன சொற்படி சோர்வணு வின்றியா னின்ன காலை யியற்றின னின்னுருத்‌
தன்னை யன்றிச்‌ சமைந்தது வேறுரு வென்ன காரண மென் பிழை யென்னவும்‌–22-

கார்கொள்‌ வெங்கலி யுங்கெடுங்‌ காணுமென்‌ றேர்கொள்‌ பா முன்‌னிசைத்து நான்‌ காட்டிய
பார்கொள்‌ மாக்கள்‌ பராவும்‌ பவிஷ்யதா சார்ய னாமிவ னென்றுபு சாற்றியே–23-

மண்ட லத் துண்‌ மருள் கொள்‌ பிறமத கண்ட னஞ் செய வுங் கலி காயவு
மண்டர்‌ நாத னருளில்‌ வருந்திரிதண்ட மாருந்‌ தவத்திறை யென்றனன்‌–24-

அன்ன மாறனை வாழ்த்தி யணி மகிழ்‌ மன்ன னின்னுரு வாய்ப்ப வமைத்திடற்‌
இன்னருள்புரி வாயென வேந்தலு முன்னி யன்பனை நோக்கி மொழிகுவான்‌–25-

முன்னி னப்புனன்‌ மொண்டுவந் தட்டிடிலென்னி னேருரு வெய்துமென்‌ றோதலு
மன்ன மாறனை வாழ்த்தி யணிநல மன்னு மாதவ ரோடு மகிழ்ந்தரோ–26-

கங்‌கிரும ருங்குமடர்‌ சங்கின முழன்று கக்கிய மணித்திர ளுகுத்து நில மெங்கும்‌ [ பொங்கு கதிர்‌ தங்கு முயர்‌ திங்களி னிலங்கும்‌ பொற்புறுதி ருப்‌ பொருந ந ற்புனல் கொணர்ந்தாங்‌
கிங்கிதமோ டங்கரிய மங்கள மு கூர்த்தத்‌ திப்புனலை யட்டுமுனி னப்பினில்‌ விடுக்கத்‌
துங்கவனெ ருங்குகுழ னங்கையருள்‌ பாலன்‌ சோதி வடி வாகியது மாதவ னறிந்தான்‌–27-

விண்டலநி ரைந்த பல வண்டமு முகாந்த மேவு பெரு வாரியினி னோவுமென நாடி
யுண்டுமிழ்‌ தருங் கருணை மண்டு திரு மாலே யுற்றடைய நங்கை வயி னற்ற நயனாகிக்‌
கொண்டறவழ்‌ திந்‌திரிணி யண்டி மறை யோ தெங்‌ குருவினுரு மன்னவொளி ரெருவையை யளித்த
வண்டலுறு தண் பொருநல்‌ கொண்ட புக ழாரும்‌ வளத்தினை யறிந்‌து பு கிளத்தலரி தம்மா -28-

பொன்னிமு தலாய பல தன்னதியி லாடிற்‌ புலப்படுமு டற்குறும லத்தினை யறுத்‌து மன்னுமிக நல்லறிவு மிந்நதியி லாடில்‌ வழுத்துமு னழுக்கறு மொழுக்கமுட னுள்ளம்‌
பன்னு கலை யாதுமுறு மின்னருளி னாற்புட்‌ பகத்தனெனவே பொருலி கத்தினி லடைந்தே
துன்னுமக வாழ்வுறுவர்‌ பின்னுயிர் கழன்றாற்‌ சொற்றெரி யணைக்‌ கடவுள்‌ பற்றுவ னுகந்தே -29-

உப்பய முடுத்திலகு வைப்புயி ரனைத்தும்‌ முய்ய வென வேதமுள செய்ய பொரு ளெல்லாம்‌
துப்பமை தமிழ்ப்பட வுரைப்பபென நாடிச்‌ சூழரவ தாயபுளி நீழலி லுறும் மெம்‌
மப்பனுரு விற் பொருந றுப்பெருவை தந்த வந்நிலைமை யாற்றாம் ப்ர வன்னியென நாம
மிப்பொரு விலாறுறு மெனப் பிறவி யாய வேதமறு மாதவனு மோதின னுகந்தே –30-

இப்பெய ருறும் பொருந லப்பினி தளித்த வென்று நிகர்‌ நின்றோ ளிரு மன்றன் மகிழ்‌ மாலைத்‌
துப்பனுரு வைவிழிக ளிப்ப மிக நோக்கித்‌ துய்யவடி வாயதென மெய்யனு மகிழ்ந்தவ்‌
வொப்பரி யதாய வடி வைப்பணிகொ ளும்மா லூர்சினைய டர்ந்து மலரார் புளி நிழற்‌ கீழ்ச்‌
சிற்பரம னங்கை யருள்‌ கற்பக மிணைந்த சேவடி வணங்கு பு வம்மா வடிவை வைத்தான்‌ –31-

எந்தையேநீ யுந் தருளி லந்தமோட மைந்த திக்கரண முற்றொளிரும்‌ விக்கிரக மென்று
வந்தனை புரிந்தினிதின்‌ சிந்தை யரு ணந்தா மாறவென வோதலுநா வீறனு முணர்ந்தச்‌
சுந்தரமி குந்தவடி வந்தனை யணைந்தே சுப்பிரம தென்றதில நுப்‌ பிரவேசிக்க
முந்தவிப வந்தரை படிந்த வுயர் வந்தோர்‌ மொய் தரு மலர் மழைகள்‌ பெய்தனர்க ளம்மா –32-

இன்னண நிலம் படியு முன்னை விபவத்தை யெல்லை யறு ஞான முனி வல்லை யி லடக்கிக்‌
கன்னவில் புயன் வழுதி மன்னர் மர புற்றோன் காரி மக ராசனருண்‌ மாரி சொரி கொண்டல்‌
பொன்னணி நெடும் புரிசை மின்னிய விமானம்‌ போதவு மமைத்த ருணி கேதந மதற்குண்‌
மன்னுறவ மைத்தன னெற்‌ றன்னை நிகர்‌ மாறன்‌ வண்மை யு று தானான தன்மையினை யன்றே –33

வீசுதிரை சூழ் புண ரி தூசென வுடுத்த மேதினியி னங்கவியை யோதுபு சிறந்தாம்‌
காசிலுயிர்‌ பாலிருகை பாசம தெடுத்தே யந்தக வரேலடையி னந் துவை நீ யென்ற
வாசிமுக மாகவொளி வீசுபரி யங்க மத்தியி லெழுந் தருள வித்‌தரை யிலங்கத்‌
தேசிக முறுங்கலை பன்‌ மாசறு கலன்க டிவ்விய மகிழ்த் தெரியல்‌ செவ் வியி னணிந்தே —34-

அன்றுமுதன்‌ மன்றன் மகிழ்‌ துன்று நற விண்டை யண்ணலுறு மர்ச்சையினை நண்ணுபு வணங்கி
நின்று தின மொன்று மதி குன்றில் வருடத்து நிச்சலம தாயபல வுச்‌சவ நடாத்திக்‌
கன்று குனி லென் றெறியு மின்றிகழு மார்பன்‌ காணி பொரு ளீன்றவர்கள்‌ பேணு மனை வாழ்வா
மென்றிவை னைத்து மறை யின் றமிழு ரைத்தோ னிணைப்பத மெனத்துதி பணித்தவ ணிருந்தான்‌ —

திரு வர்ச்சைப்‌ படலம்‌ முற்றும்‌-

பரவாத கண்டனப்‌ படலம்‌–

தாரிலுயர்‌ யாதவ ப்ர காசிக்‌ கெண்ணை தாக்கொருகா ளவன் கப்யா சமெனும்‌ வாக்ய
நீர்மைகெடப்‌ பொருள்‌ சொலவின்‌ னவனோ ராக்கண்‌ ணீரனலிற்‌ குறங்கு குப்ப நீச னோர்ந்திச்‌
சீரவனனஞ்‌ சமயமடு மென்‌று கொல்வான்‌ சேணத செல்‌ லுழி யெம்‌பார்‌ தெரிக்க நீங்கி
யேருறுமத்‌ திகிரியன் வந் தழைக்கச்‌ சென்ற விளையாழ்வா னடித்‌ துணையை யிறைஞ்சு வாமால்‌ –1–

இம் மா மது ரக வித்தவ விறையோனுற வவனி
னம் மாமலர்ச்‌ சரணைப் பணி யடியானொரு மறையோன்‌
கைம்மாவிடர்‌ கெடு சக்கிரி கருதும் பதி தொறும் போய்ப்‌
பைம்மாமுகி லுருவத்தனைப்‌ பணி வானவண்‌ சென்றே –2–

செந்தாமரை மகள் மேவிய திருமாலினி தமரு
மிந்தாரணி மணி மேடை யின்‌ னெழிலார் பதி தொறுமே
வந்தாழி கொ ளளியோனடி மருவாவரு வழியிற்‌
கொந்தாரலர்‌ செறி சோலை கொள்‌ கூடற்பதி யுற்றான்‌ –3–

விண்டோயுத யனை நேர் கதிர்‌ விடு மாமணி கனகங்‌
கொண்டாரண மென வெல்லையில்‌ குலவு மெயிற்‌ சிகரி
மண்டேர்‌சன கரமே வுபு மதுவார்கடி பெருகுந்‌
தண்டாமரை மகணாயகன்‌ றனையே துதி புரிவான்‌ –4–

கருமாமுகி லுருவா பொழி கருணைப் பெரு மழையாய்‌
திருமாமகள கணவா வென வேதந் தமிழ்‌ செய்யும்‌
பெருமான் பர வடியாயொளிர்‌ பேராயிர முறு மெம்‌
மொரு மா மணி முதலே யென வுருகும் வயி னவணே–5–

வாதம்புரி சங்கத்தொரு வல்லோனதை வினவா
வேதந்தமிழ்‌ செய்தோனென விருதோதனை யவனா
லோதங்கவி சங்கத்தின மொவ்வாவகை யறியா
தேதிங்கன முரையாடினை யினி நீ விடுகென்றான்‌–6–

அப்பத்தனின்‌ செவிவாய்சுடு மழனேரது படியச்‌
செப்பற்கவ னடல் வெந்துயர்‌ செறிவாரிதி முழுகி
வைப்பிற்றிக ழணி பற்பல வளமாநிதி நிறைவுற்‌
றொப்பற்றொளிர்‌ குருகாபுரி யொல்லைப் பொழுதற்றே –7–

செங்கட்பிடி நடைநுண்டுடி சிவணும்மிடை யுடைய
நங்கைக் கரு மகனாகிய நாவீ றனை யடையா
வெங்கட்கரு முதலீரிரு வெழுதா முறை முழுது
மங்கட்படி யறியத் தமிழ தனிற்றரு மழகா -8-

தெதிபாண்டனுக்‌ கருள்‌ வானவன்‌ சிறு கூறையி லுறைமால்‌
பதி தோறம டியன்மேவுபு பரிவாலடி தொழுதேர்‌
மதுராபுரி யடையாவவண்‌ மாலைத் தமிழ்‌ மறையாற்‌
றுதி செய்யுளி யக மேவிய தூர்த்தன் பிற வாதி –9–

உன்னாலுரை கவி யென்றிறை யுன்னாததை யிழிவு
சொன்னானென வவணிற்றிடு துயர் சேர் மொழி யுரையா
மன்னாவினி யவனெவ்வீடும்‌ வகையே யரு ளிலையே
லென்னாவிகொ ளென மாறனி னெதிரிற் படுத்‌ தனனால்‌ –10-

உண்ணலோ டுறக்க மற்றாங்‌ கொருவன் ப்ரா யோபவேசம்‌
பண்ணின வசை யுளோர்ந்‌து பராங்குச னுவகை பூத்துத்‌
துண்ணெனச்‌ சிச்சனாம மதுரகவி யழைத்த வ்வன்ப
னெண்ணம தனை த்து மோதி யெழுதினன்‌ னிருபமம்மா–11-

கரைந்துள முருகுங்‌ கண்ணன்‌ கழலிணை யெனுமோர்‌ பாவை
வரைந்தொரு முடங்க லாக்கி மதுரை போ யிஃதைச்‌ சங்கத்
தரங்க நீர்ப்‌ பலகை வைக்கிற்‌ றாழுவ ரன்னோ ரென்றிவ்‌
வுரங்கொணெஞ்‌ சவன்பா னீபோ யுணர்த்தென வளித்து ரைத்தான்‌ -12–

செல்லடர்‌ புளிகொண்‌ மாறன்‌ றிருமுக முனி கொண்‌ டந்த
நல்லறி வாள னோக்கி நனி மகழ்ந் தெழுப்பி மாறன்‌
சொல்லிய தனைத்து மோதித்‌ துதித்திட வவனும்‌ போற்றி
வல்லையின்‌ மதுரை சென்றான்‌ மலி கதிர்‌ கடலுட்‌ சென்றான்‌–13–

தோட்டடர்ந் தளிமுரன்‌று துன்னுதார்‌ மகிழ் கொண்‌ மார்பன்‌
பாட்டுறு நிருபங்‌ கொண்ட பாகத னறிய வெய்ய
கோட்டமார்‌ மனத்துச்‌ சங்கக்‌ குழுஉக்களின்‌ கருத்தீ தென்று
காட்டுவா னெழுந்த தன்ன காரிருட்‌ படர்ந்த தன்றே –14–

அன்றிர வவணோ ரில்லத்‌ தந்தணன்‌ றுயின்று நீங்கத்‌
துன்று சங்‌ கத்தோர்‌ நெஞ்சஞ்‌ சூறிருட்‌ பிழம்பிப்‌ பாவா
மென்றினா லறுமென்‌ றே முன்‌ னியம்புவா னெழுந்த தன்ன
குன்றிலாக்‌ கதிரோன்‌ றுய்ய குண புலத்‌ தெழுந்தானன்றே–15–

கொங்கலர்‌ நறவு காலும்‌ குளிர் மலர்‌ வாவி யாய
வங்கடைந் தெமது பெம்மா னாரணந்‌ தமிழாய்ச்‌ செய்தோன்‌
பொங்குபா மகிமை காண்பான்‌ புலவரீர்‌ நீங்கள்‌ வைகுஞ்‌
சங்கமாம்‌ பலகை தன்னிற்‌ சற்றிடங்‌ கொடுப்பீ ரென்றான்‌–16–

அன்னதை வினவா வன்னோ ரந்தணன்‌ சிறுசுருட்கு
மின்னுமப்‌ பலகை யிற்றாம்‌ விலகிச்சற்‌ றிடங் கொடுக்க
மன்னுவ்‌ வேத நாவன்‌ வகுள பூ டணனை நெஞ்ச
முன்னியம்‌ முடங்க றன்னை முடியினின்‌ றிருகை யேந்தி–17–

ஆங்குறு புலவ ராய ரஜோ குணத்‌ தவர்க ணோக்கப்‌
பாங்குட னிருத்தச்‌ சங்கப்‌ பலகையு மூவகை பூத்துத்‌
தாங்கி மீ தரும மும்மைத்‌ தமிழுறு குழூஉக்கண்‌ முற்றும்‌
வீங்குநீ ரதனுள்‌ வல்லை விழும்படி. சுருங்கிற்‌ றன்றே –18–

புடத்தில் வைத்‌ தெடுக்கக்‌ கட்டைப்‌ பொன்னு மாற்‌ றதிக மா போற்‌
றடத்து வீழ்த்‌ தோலை தன்னாற்‌ றம்முள மலமு நீங்க
விடக்கரு தாமுன்‌ புன்மை விளம்புநா வூமை யாதி
யிடக் கரற்‌ றறிவு மீக் கொண்‌ டெய்தினர்‌ கடைமீதன்றே –19–

வந்தனர்‌ வகுள மார்பன்‌ வரைந்திடு நிருபஞ்‌ சென்னி
நந்துத லின்றிச்‌ சூடி நாமெனு மகங்கா ரத்தின்‌
பந்தன முண்டு நாயேம்‌ பரிபவப்‌ பட்டோ மின்றியா
முய்ந்தன மென்று தம்முள்‌ ஞன்னுபு வணங்கிப்‌ பின்னர்‌–20-

மைப்படி மேனி செந்தா மரை விழி மாலே வந்தே
ரிப்படி தன்னின்‌ மாற னெனவவ தரித்த நங்க
ளப்பன தடியிற்‌ றாஞ்செய்‌ ய பாரத க்ஷமை செய்‌ வான் சங்‌
கப்புல வோர் கண்‌ முற்றுங்‌ கருத்துற முன்னி மன்னோ –21-

சிந்துகு ழுலகிற் காரி சிறுவனால்‌ விடுக்க வந்த
வந்தண்‌ னுபய பாத மன்பொடு பராவி யன்னோன்‌
முந்துற நடக்கப்‌ பின்னே முடுகியவ்‌ வூமை யானோர்‌
சந்தனப்‌ பொதும்பர்‌ சூழ்தென்‌ குருகையிற்‌ சார்ந்தா ரன்றே–22-

சிற்றிழை நுசுப்பு நங்கை திரு வயி றுதித்த செல்வன்‌
பொற்றளி வலம தாகப்‌ போந் தவன்‌ முன்னே சென்று
கற்றிலே நீ சொல்‌ வேதக்‌ கவியினிற்‌ பரம பக்தி
யுற்றிலே நாயே மென்றுள்‌ ளுன்ன வூமையு மகன்ற–23-

கண்ணினுண்‌ சிறுத்தாம்‌ போதுங்‌ கவி வலர்‌ பணி பாதத்தை
யுண்ணெகிழ்‌ வுடனே பல்கா னாத்தழும்‌ பெழவே வாழ்த்தி
நண்ணினா ரடிமை பூண்டார்‌ நைச்யாநு சந்தா னத்தைப்‌
பண்ணினா ரவன் கழற்கோர்‌ பாமல ரருச்சித்‌ தாரால்‌ –24–

ஈ யாடுவதோ கருடற்‌ கெதிரே யிரவிக் கெதிர் மின்‌ மினியா டுவதோ
நாயாடுவதோ விறு வெம்‌ புலிமுன்‌ நரி யாடுவதோ நர கே சரிமுன்‌
பேயாடுவதோ வழகூர்‌ வசி முன்‌ பெருமான்‌ வகுளா பரண ருள்‌ கூர்ந்‌
தோவா துரையா யிரமா மறையின்‌ ஒரு சொற் பெறுமோ உலகிற்‌ கவியே–25-

என்றேய்‌ சுடர் கொள்‌ வகுளா பரணன்‌ னிரு தாமரை நே ருறு தா ளிணையிற்‌
பொன்றா தவர் தம்‌ மவரில்‌ லொருவர்க்‌ கொருவர் தெரியாப்‌ புகலின்‌ கவிதா
னொன்றாகிய தீ தவனின்‌ னருளென்‌ றுவவைக்‌ கடலுற்‌ றவருள்‌ ளறிய
முன்றா மிழை தீ மையினைப்‌ பல்கான்‌ முன்னிப்‌ புகலா மன்னுங்‌ கவியோர்‌ –26–

இந் நாள்‌ வரையிவ்‌ வகை சென்‌ றெவரும்‌ மெதிரா நமையின்‌ றெழிலார்‌ வகுள
மென்றா ரணியோ னொருவாய்‌ மொழியால்‌ வென்றா னதனால்‌ விரிநீ
மன்னா கு பராங்கு சனா மெனவே வழுவா தொரு பே ரழியா துரையா
வன்னோ ரிவனின்‌ கழலே பரவா வணிமா மதரைப்‌ பதயே கினரால்‌–27–

சங்கத்‌ தவரிற்‌ பதினெண்‌ மதருந்‌ தாமென்‌ றுறு மித்‌ தனியே தனிவந்
திங்குற்‌ றிடமா மகிழம்‌ புயனின்‌ னேவல்‌ கொடுவம்‌ முனியும்‌ மவரைப்‌
பங்கப்‌ படவென்‌ றவனின்‌ கழலே பரவும்‌ படி. செய்‌ திவணிப்‌ படியே
துங்கத்‌ தவனென்‌ றிடவே வதியாச்‌ சோதித்‌ திருநா டேகுற்‌ றனனே –28-

பரவாத கண்டனப்‌ படலம் முற்றும்‌-

திரு நாத முனிப்‌ படலம்‌

தென் புதுவா புரி மடக் கோ தைப் பிராட்டி செந்தமிழிற்‌ காட்டு வணஞ்‌ சேவெற்‌ போர்க்கு
ளன்பினோட மக்கார வடிசினூறு கடாரஞ் செய்‌ தருளி யெழுந் தவ்வூரேகப்‌
பின்னவளு நல் கோயி லண்ணனென்றோர்‌ பேர் வழங்கக்‌ கொண்‌ டருளெம்‌ பெருமா னார் தம்‌
நன்கமல மாமலர்‌ த்தாள்‌ சென்னி கொண்டு நாதமுனிப்‌ படலமதை நவில்குவாமால்‌–1–

முருகு விண்ட மா மகிழணி நின்மல முதல்வ
னருளி னல்வழி நின்றவம்‌ முனிவர னழிவி
றிரு மடந்தையுள்‌ ளுகந்துறை திரு மரு மார்பன்‌
பெரு விசும்படைந் தநேக நாட்‌ சென்றதன்‌ பின்னர்‌ -2–

அந்த மாமுனி வரன்றன தடிபணிந்‌ தன்னான்‌
சிந்தையே மகிழ்‌ தரப் பணி விடை பல செய்து
வந்த நான்மறைச்‌ சீடனின்‌ மரபுழித்‌ தோன்றும்‌
விந்தை சேர் பராங்‌ குச நம்பி யென்னுமோர்‌ விமலன்‌–3–

பையராமுடி மிசை யுறக்‌ கிடந்த பா ரதனிற்‌
றுய்ய மாவிசை தாங்கிய மது மகிழ்த்‌ தொடை சூழ்‌
செய்ய மார்புடைப்‌ பரன்றனக்‌ கம் முனி செய்த
பொய்யிலா வகை தானு நன்‌ கியற்றினன்‌ போந்தான்‌ –4–

ந்த வாறு பராங்குச நம்பியு மியற்றி
வந்த நாண்மதுரச் செயுண்‌ மாமுனி வரன் போ
மந்த நாண் முத லாக முற்‌றோன்‌றிய மகிழ் கொ
ணந்த மாறனை முதலிய நின்மலர்‌ நவின்ற–5–

இனிய செந்தமிழ்‌ மறை யெலா மிருநில வரைப்பி
னனியு மோதுவித்‌ திடுவர்க ளின்மையி னாலுங்‌
கனிவி னவ்வண மோதுவித்‌ திடினுநி கரிலாப்‌
புனித ராகியிங்‌ குற்றவவ்‌ விமலர்கள்‌ பொருந்தி –6–

மன்னும்‌ விந்தையை யோர்ந்தியா முணர்ந்தடின்‌ மடிவா
மென்னவே மனத் தெண்ணம தெழுந்ததினாலும்‌
உன்னவே பர கதியினை யுகந்தினி துதவு
மன்ன செந்தமிழ்‌ மறை யெலா மழிந்தன வன்றே –7–

இருநிலந்தனி லிவ்வணந்‌ தமிழ்மறை யெல்லா
மருவலின்‌ நியே மலினமா யழி தருஞ்‌ செயலைத்‌
திருமலிந்தணி சிறந்தொளி மிகுந்துபு திகழும்‌
பருமை தங்கு வைகுந்தமா நகரெனும் பதியில்‌–8–

அண்ட கோளம தழிதரு முடிவினு மழிவி றோண்டர் தங்குழா மிருமருங்‌ கினு மிகச்‌ சூழ்ந்தே
வண்டலர்க்கர முகிழ்த்தன ரிறைஞ்சியே வாழ்த்த வெண்டரும்‌ பணா முடியரா வணைய தன்‌ மிசையே —9-

அஞ்சநந் திகழ்‌ தரு முகிற்‌ குலமளி யலம்புங்‌
கஞ்ச நாண் மலர்‌ பூத்தலர்ந் தென வுருக்‌ கலந்த
விஞ்சு வாணிதம்‌ பெருகு பைந்‌ துளவணி விமல
னெஞ்சி னானில வலயமுன்‌ னிகழ்ந்ததை நினைவான்‌ –10-

அறிவி லாதுயி ரடங்கலும்‌ பவக்கட லாழ்ந்து
சிறிது மோரிடம்‌ தங்குறு துறமுறுஞ்‌ செயலை
நெறியி னோர்ந்தது தவிர்ந்து நற்‌ பரகதி நேர்வா
னறிய வாரணந்‌ தனைத் தமிழதனினா னவின்றும்–11-

உணர்கிலாது பின்‌ னும் கொடும்‌ பவந்தனி லுழன்று
புணரு நந்தமை யறிகிலா வகைய பொருவில்‌
குணமு றுந் தமி ழோதூவித்‌ திடுவர்கள்‌ குரைநீ
ரணவு பாரிடத்‌ தின்மையி னென்றுளி யருள்வான்‌–12-

மூல மென்றொரு காலழைத்‌ திடுவதன்‌ முன்னர்‌
நீல மாமுகி லென்ன வக்‌ கரிமுன ணிமலன்‌
றாலம்‌ வாழுயிர்‌ தமைப்பினுந் திருத்து வான்‌ றகைசேர்‌
சீல மாய வித்தகையன செய்குவன்‌ நேர்ந்தே–13–

கான மாமல ராடன திணையடி கருதுஞ்‌
சேனை நாயகன்‌ றனதருள்‌ வழியுறச்‌ செல்லு
மூன மேதுமி லமைச்சராங்‌ கஜாநநர்‌ தம்மை
யான நாதனு நோக்கியின்‌ னுரை செய்வா னன்றே–14–

ஈர நீர்புடை சூழ்தரு முலகுயி ரெல்லாம்‌
பார மாய பழவினை பற்றறுத்‌ துய்வான்‌
சீர தாகுமுன்‌ னிகழ்த்திய மறைத் தமிழ்‌ தெரிப்பா
ராரு மின்மையி னாலவ ணெழுந்தினி தடைந்தே–15–

அரிய செந்தமிழ்‌ மறை யெலா மினிதெடுத்‌ தருளி
வருதி யென்றுரை செய்யலு மாமலர்‌ மடந்தை
பொருது மார்புடைப்‌ புங்கவ னடியிணை போற்றிக்‌
கரியி னாநநமுடை யருங் கழறுவ ரன்றே-16-

உறழ்வி னின்னுரை மறுத்திட வல்லவ ருளர்கொ
லிறைவ வவ்வண முலகிடை யுதித்தலு மெமக்காங்‌
கறிவு தீர்ந்திடு மாதலி னத் தமி ழனைத்து
நெறியி னோர்ந்திடும்‌ வண்ணம தியாதென நிமலன்‌–17–

நினக்கெ னன்னது நந்தமக்‌ கன்று கொ னிகழு
மனத்தி னுற்றவக்‌ கவலை யற்‌ றேகுதி மருவுங்‌
கனத்த பாரிடத்‌ ததற்கு நல்‌ வழியினைச்‌ காட்டா
வுனக்கு நல்லரு ளாங்குமீ குவமென மொழிந்தான்‌–18-

மறைக ளாலுநன்‌ களப்பதற்‌ கரியமா மருமா
னறழைவிளங்கிய மலரடி வாழ்த்தினர்‌ நவையிற்‌
கறைவிளங்கிய பையயராத்‌ தாங்கிய கடல்சூழ்‌
தறையிடத்தினிற்‌ றோன்றுவா னெழுந்தனர்‌ தாமே–19-

குட கிழிந்த கரு முருகு சந்தினொடு கொண்டு வெண்டிரை எறிந்து நீள்‌
தடமு றுந்‌ கரைகட கர வண்டல் படு தண்ணரும் புனல்‌ பரந்து சேர்
புடவி யின் மகிமை பெருகு மொன்‌ றிணையில்‌ பொன்னி நல்வளஞ்‌ சுரந்திடுந்
திடமிகுந்த புய லணவு பைம் பொழில்‌ சிறந் துயர்ந்திடு மரும்பதி–20–

எண்ணிறந்தவள மேவு தண் கழனி யேடலர்ந்தமரை மீதிலே
நண்ணி வெண்பணில மீனு மொண்டரள நாறு நுண்ணிலவு வீசவே
பண்ண மைந்தகளி வண்டினங்கள் படர்‌ பாவு செங்குமுதம்‌ வாய் விளும்
விண்ணி வந்து பல மேடை நின்றொளிரும்‌ வீர நாரண புரமரோ –21-

வச்சிரத்தினி லிழைத்த பற் பல வரைக் குலங்கணிகர்‌ மாடமு
முச்சிவிட்புல முகட்டினிற் படியு மொப்பருஞ்சின கரங்களுங்‌
கச்சறுக்கு நகிலத்‌து மங்கையர்‌ களிப்புடன்பயிலு சாலையும்‌
நச்சி யந்தணர்க ணிச்சலும் மரிய நற்றவம் புரி யிடங்களும்‌ –22-

வண்டினம் பல மருங்கணைந்து முரன்‌ மா மலர்ப் பொழிலு விண்ணு லாங்
கொண்டல் வெண்டிரையி னுள்ளி வந்து புனல்‌ கொள்ளுறுந் தகைய கன்றவாம்‌
விண்டு புண்டரீ க மங்கைமார் முகம்‌ விளங்கு மெண்ணறு தடங்களும்‌
தண்டருந் நறை தயங்கு தண்டுளப நந்தனங்கள்பல கோடியும்‌ –23–

சக்ரவாள கிரி யொத்‌துயர்ந்திலகு சதுர மா மதி லினங்களும்‌
புக்கு மா மலரி னட்டலக்குமி பொருந்தி மட்டில் பல வாவண
மிக்க வீ திகள னந்தமுங்கனக வீறு கொண்ட விரதங்களு
மிக்கணிப்பரு வளத்தின் மிக்குய ரெழின் மிகுத் தவ நகர்க்கணே–24–

நச்சியுற்றினிது வைகுமந்தணர்‌ த நற்பருங்குல மத ற்குளே
வெச்சடுத்திடு பவக் கடற்றனில்‌ வீழுந்து நொந்துற வழிந்திடு
மிச்சகத்‌ தயி ரனைத்து நற் கதி யெழக் கடுக்கலி யுகத்தினின்‌
முச்சகத்திரமு மிருசதத்தொடிரு பத்திரண்டினி லிரண்டுமே –25–

ஒன்றுமிந்தவரு டங்கள்‌ சென்ற பின்‌ முறுவதானசுப கிருது யாண்‌
டன்றி நன்மிதுந மென்னு மாதமுட னணிய பூரணையு மென்றுமே
பொன்றிறன்மையபு தன்‌ றன் வாரமு மிணைந்த தானவ றுடந்தனி லென்றெனும்படி யுகந்துதித்தன ரெம்‌ மிருள் களைந்தருள வென்பரால்‌–26-

௮நகனின்னருளில்‌ வந்‌ துதித்தருள்‌ கஜாந நத்தவரு மிம்பரா
லினிய தன்மையஸ்ரீ ரெங்க நாதமுனி யென்று நாமமது பெற்றனர்‌
முனிவில்‌ சிந்தை யுடை நிபுணராகி மறை முற்‌று நன்கினி துணர்ந்து மே
தினி முதன்மை திரி லோக மெங்குமிசை சென்றுலாவுற வளர்ந்தனர்‌.–27–

இக்கணிப்பினிலை யுற்றடுத் துவள ரெட்டருந் தகைய வப்பரர்‌
முக்குணத்தினு முதற் குணத்துடை முதற் பரத்த வரி பத்தியே
மிக்கெழிற் படரு மத் திருப்பதியில்‌ விட் புலத்தெழு முகிற் குலம்‌
புக்கெனத்தளி யிடத்தினிற் பொலி பொருப்புயர்ந்த புய மன்னனார்‌–28-

போத னைம்முகன் மு தற் படுங் கடவுள்‌ போற்றருந் தகைய பாதமே
மாத னம்மென மனத்‌தி னுட்கொடு வணங்‌கி நன்குற வழுத்தியே
வேத நன்மறை வழாத வவ்விறை விருப்புடனக மகிழ்ந்திட
வேத நைந்த பல வாய தொண்டுகளிழைத்‌து வந்தனரு ளன்பினால்‌.–29–

இன்ன வாறனைய ரெங்க நாதமுனி யென்னு மந்த மறை யாளரு மா
மன்ன னார் தமது தொண்டி னல்வழியில்‌ வந்த நாளிலொரு வைகன்‌
றுன்னு மா நகர் தொ றும் பணிந்து வர மன துளித்தமது தெய்வமா
மன்ன மாயனை வணங்‌கி நின்றெதிரி லறிய வின்ன மொழி யுரை செய்வார் –30-

கிட்டு வார்வினை யறுத்து வாழ்வருள்‌ கிடைப்பிலா மணி நிறத்தனே
வட்டவாரித யுடுத்த மானில வரைப்பினிற் கொடு நடத்தை சேர்‌
துட்டரானவர்‌ துடிப்ப நூறிவெகு சிட்டர் பாலன மியற்றுவா
னிட்டமாக முன்‌ னுதித்‌து வந்தெழின்‌ மிகுத்து யர்ந்த மது ராபுரி–31–

கோவருந்‌ தகைய கோகுலம் பொருவில்‌ கோவருத்தன முடன் விருந்
தாவனம் பிரிதி துவாரகை பதரி தாரு மிக்க திரு வேங்கட
மே வயோத்‌தி யணி நைமிசாரணியம்‌ விந்தை யின்னமுத லான சீர்‌
பாவுறும் வட புலத்தினின்‌ றிசை பரந்த நற் பதி தொறுஞ்செலா –32–

அங்கி லங்குன்வடி வங்கள் கண்டினி தகங் குளிர்ந்‌திட வணங்கியே
யிங்கெழுந்‌து வர வரமுகந்தருள்‌ செ யென்‌ றிறைஞ்சியய னின்றிடச்‌
சங்குடன்றி விரி தண்டு வாள்‌ வரிவில்‌ தங்கு செங்கமல மன்னனார்‌
புங்க வன்னவரை நன்‌கினவ்வகை புரிந்தி வன் கடிது செல்கெனா–33–

முன்னு மர்ச்சக முகேந வின்னண மொழிந்திடக்‌ கடிதெழுந்து போய்‌
மன்னு முத்தர திசைக்கணின்‌ றிசை மலர்ந்திலங்குறு வதானவா
மன்ன திவ்ய பல தேச மெங்கிலு மடைந்திறைஞ்சி விரை வாகியே
பின்னெழுந்‌து தம நாடு செல்லுழி பிறங்கு மன்ன மறையாளரே –34–

ஓடு தெண்டிரை யரும் பொ னொண்மணி யொதுக்கு பொன்னி வளம்‌ மன்னு சோ
ணாடி லங்குறு மரங்கமே முதல நற்றலந்‌ தொறும்‌ வணங்கியே
மாடணிந்தபுனன்‌ மானிலந்தனின்‌ மலிந்த வெவ் வினை யறுத்தருள்‌
கோடில்‌ சிந்தையரும்‌ வந்த ணைந்தனர்‌ குடந்தை யென்றுரை யரும்ப தி –35–

அயனெ னுந் தகைய வேள்வி யந்தணர்க ளாரணத்‌ தொலியு மணி யறா
வியனி டந்தழுவு மாவ ணத்தொலியு மேவரும்‌ பல வளங்கள் சேர்‌
புயலி ணைர்தமணி மாட நன்மறுகு பொங்கு மங்கல விழாவெழு
மயர்வில்‌ சும்லையு மளாவி வெண்டி ரைய வம்பினோடி கலி யார்க்குமால்‌–36–

அருமறைக்குரிய புனிதர்‌ நித்தமு மமைக்கும்‌ வேள்வி யெழு மாவியும்‌
இரு தனப்பொறையி னொசி யிடைச்சிய ரெழிற் றருங் குழலருத்து நீன்‌
முருகடுத்தொளிரு மகரு நற் புகை யுண்‌ முற்று மொன்றி விணகத்‌தெழ
வரு முகிற் குலமி தென வுறக் கருதி மஞ்ஞை நின்‌ றசை தரும் பொழில்‌–37–

அணிபெருகுதிரைக ளொன்றுமா லலவிர்மணி யுகுபொனி தன்னிலுந்
திணிபெரு முயர்திரு மாளிகை செறிதரு மறுகிலு மின் புனல்‌
பணிமதி யணிசடை யோன்நலம்‌ பற்று பரன்‌ றளி மீதிலும்‌
தணிவரு கலியென மைம் முகி றடமுளிறங்‌கி மடுக்குமால்‌–38-

பானல மருவிடு மீர்தன பாரம தொசியு மருங்குலார்‌
கானலர்‌ குழலிய ரின்சொலுங்‌ கடிமலர்‌ நிறை தரு வாவியும்‌
வானக முகிறவழ்‌ சோலையு மா மறை வேதிய ருள்ளமுந்
தூநகை மாடமு மினமுறத்‌ துளி மலர்க்‌ கண்ணனை நாடுமால்‌ –39-

இளையன பெருவள மிடையுமவ்‌ வெழினக ரிடை நவ மாமணி
புநை புரி சையுமெண்‌ விமானமும்‌ பொன்னகர்‌ மிசை யுறு சிகரியும்‌
வனையுமி னொளிமிகு தூபியு மலிந்து சிறந்தடு கோயிலை
யனைய நின்‌ மலருமடைந்தன ரகமெழு மோகையோ டென்பரால்–40-

அன்னவிருந்தளி தன்னிலோ ரஞ்சன வெற்புக்‌ கிடந்ததை
யென்ன மலர்க்கண்‌ வளர்ந்தரு ளெந்தமை யாளுடை நின்மலன்‌
கொன்னவிலுமயி னேர்விழிக்‌ கோமள வல்லி புணர்ந்தவன்‌
முன்னரடைந்தடி தாழ்ந்தனர்‌ மூவுலகும் மிசை கொண்டனர்‌ –41–

அண்டமடங்கலு நின்றரு ளன்ன பரன்றன மாமணி
கொண்டொளி வீசபி டேகமொண்‌ கோடிய செஞ்சிலை யின்னுதல்‌
கண்டவர்‌ சிந்தை கவர்ந்திடும்‌ கருணை மிகப் பொழி யுந்தகை
புண்டரிகம் புரை கண் குளிர்‌ பூரண சந்திர வானனம்‌ –42–

குடந்தை கிடந்தருள்‌ கொள்கை யென்‌ கோல வெனும்‌ மழிசைப் பிரா
னிடந்தனி லின்னுரை யாடவே யெழுந்த வெழிற் கனி வாய் வரைத்‌
தடந்தனி யம்புய மைம்படை தாங்கிய செங்கர மா மலர்‌
மடந்தை வதிந்தருண்‌ மார் பொளிர்‌ மாடுடை மேவிய சீரரை –43–

புண்டரி கன்வதி நாபியே போந்தடை வார் பிற விப் பிணி
கண்டி மருந்தென வாகுமீர்ங்‌ கமல மலர்ப்பத மின்னவை
மண்டி மனத்தி லெழக்களி கண்டு கணுற்று வணங்கியே
யண்டரு மா மறை முற்றையு மறிந்தரு ளன்னவர்‌ நின்றனர்‌ –44-

நம்பர மாரிய ராயவந் நவையில்‌ பெருங் குண ரிவ்வண
மம்பர மன்றனை யேத்தியே வங்கய னின்‌ றிடும்‌ வேலையோர்‌
வம்பறு வந்தி இனம் வரு மாறுபோலன்று மடைந்தன
ளெம் பெரு மானிரு தாமரை யென்னு மடித்துணை போற்றியே–45–

ஏவன கண்டிரு நண்பனவ்‌ வெம்பெரு மான்றன மீதிலே
மாவமு தத்து மினித்ததாய்‌ மா மகிழ்‌ மாறனுரைத்தவாம்‌
மேவரு நற்றகை யாயிர மென்றமிழ்‌ மாமறை தன்னுளா
ராவமு தென்னு மரும் பதி கந்தனை யார நவின்றரோ –46–

முன்னுற நின்றிட வன்னவர்‌ முன்னு முணர்ந்தவை தம்முளே
மன்னும ரும்பொரு டன்னையே வழாம லுணர்ந்தன ராசியே
பன்னிவை யாயிர முள்ளிவை பத்தெனு மஞ்சட கோபனே
சொன்ன தெனுமிவை தம்முளே தோன்றலினன் கறி வேனெனா–47–

அன்னவ டன்னை யடுத்திவை யாயிர முட்குறை வாகலா
லின்னவை சொற்றனர்‌ யார் கொலோ விப் பிர பந்த மனைத்துமே
நின்னிட முண்டு கொ லன்றி நீ நெறியி னுணர்ந்தனை யோவயன்‌
மன்னிய புத்தக மேலுமுண்‌ டோவென வின்சொல்‌ வழங்கினார்–48-

சொற்ற சொலைச் செவி யோர்ந்தனார்‌ துணை யடி யைத் தொழு துரை
ணற்றவ தென்குரு கூரெனு நகரத னுட் சட கோபனென்‌ செய்வா
றற்றை யுதித்து மறைப் பொரு ளனைத்து மருந் தமிழான் முனா
ளுற்று விரித்தன ரென்று முன்‌ னோருரை செய்குவ ராதலால்‌ –49–

அத்தமி ழாயிர முள்ளிவை யன்‌ றடி யேனறி யேனயற்‌
புத்தக மும்மிலை முற்றுணர்‌ புனிதரு மிங்கிலை யென்றனள்‌
அத்தன்‌ மறைத்தளி வாழுமா ராவமுதன்‌ பதமாமலர்‌
சித்தமுகந்து வழுத்துறாச்‌ சிறியர்‌ முகத்து விழித்திடாள்‌ –50-

அன்ன வின்சொ லறிந்தன ராகியே
யின்ன செந்தமிழ்‌ மாமறை யாவுமே
மன்னி வைகும்‌ வளநகர்‌ யாதென
வுன்னி யுன்னி யுருகினர்‌ நின்றோ–51-

தேறி யுள்ளமிச்‌ செந்தமிழ்‌ தம்மைமுற்‌
கூறு மச்சட கோப னுதித்தருண்‌
மாறி லாவள வண்குரு கூரெனும்‌
வீறு கொண்டு விளங்கு பதிக்கணே –52–

அன்றி யெங்கு மிருப்பரி தாகுமா
லின்று சென்றறி வேனென வேமன
மொன்றி வேக முடனெழுர்‌ தோகையிற்‌
றென்றி சாமுகஞ்‌ சென்றனர்‌ நோக்கியே–53-

பாட்டு வண்டு படும்பல பூம்பொழிற்
கூட்ட மன்னக்‌ குருகை யடைந்தனர்‌
வாட்ட மின்மகிழ்‌ மாற னருள்வடப்‌
பூட்டி. முக்கப்‌ பொருவில்‌ குணத்தரே–54-

மெலிந்து சென்றருண்‌ மேதகு சிந்தையோ
ரலிந்து சேரு மகன்மணி யாலய
மலிந்து செங்கம லங்கள்‌ வருமுகிற்‌
பொலிந்து நின்ற பிரானடி போற்றியே–55-

வேலை சூழ்தரு மேதிநி மீமிசை
சால வேயரு டந்த கடிமழ்‌
மாலை கூடிய மாறனை யுந் தொழாச்‌
சீல மோடுட்‌ செழித்துமு னின்றரோ–56-

தூநகும்மணி துன்றபி டேகமும்‌
வான வாவு மதியைப்‌ பழீசெயு
மோன மாய முகமும்‌ கருணை சேர்‌
தேன வாவுந் திருமலர்க்‌ கண்களும்‌-57-

வாம விற்புரு வங்களு மாசிலாத்‌ து மறைத்தமிழ்‌ சொற்ற செழுந்துவர்க்‌
காம ரொண்கடி கைக்கிணை வாயுமுள்‌ ளாம ணித் திரு வார முறுவலும்‌–58-

துய்ய மாமகழ்‌ துன்றிய மார்பமுஞ்‌
செய்ய சின்முத்‌ திரைக்கர முந்தொழு
மெய்ய ருக்குயர்‌ வீட்புல மீதலால்‌
வய்ய கம்புகழ்‌ மாமலர்ப்‌ பாதமும்‌–59-

விண்ட லத்தெழு வெஞ்சுடர்‌ வானவன்‌
மண்ட லத்திடை வந்தன னென்னவே
யொண்டு லங்கு மொளித்திரு மேனியுங்‌
கண்டு கண்டு களிக்கட லாழ்ந்தனர்‌–60-

யோக நன்னிலை யோரவர்‌ மாறனை த்‌
தாக மோடித்‌ தகையின்‌ வழுத்தியே
மேக மீச்செல்‌ விமானந்‌ தனைவல
மாக வந்து மகிழ்ந்த னராகியே–61-

பந்த மாய பழைய வினையறுக்‌
தெந்த மக்கரு ளின் வகு ளப்பிராற்‌
கந்த மற்ற வணி பெருந் தொண்டுகள்‌
புந்தி யோடு புரிந்தனன்‌ வந்திடும்‌–62-

அப்ப ராங்குச நம்பி யடுத்தனா
னைப்ப ராவி யினைய நவில்வரா
லிப்ப ராவு மண்ணேழிலு நின்ற சீர்த்‌
துப்ப ராயவத்‌ தூ நெறி யாளரே–63-

வாச மன்மகிழ்‌ மாறன்‌ முதலியோர்‌
பேசு செந்தமிழ்‌ யாவுமிப்‌ பேர் நக
ராசி லோங்குவ துண்டுகொ லன்‌ றுஸ்ரீ
கோச முண்டுகொல்‌ கூறுதி ரென்றனர்‌–64-

சொற்ற சொற்ச டுளைச்செவி யேறு முன்‌
மற்ற னானும்‌ வழங்குவன்‌ சிற்பக
லுற்ற தாண்டுபி னோய்ந்து மலினமா
யிற்றை நாளிவ ணே து மிலையெனா–65–

பின்னு மோதுவன்‌ பெய்மது மாமதிழ்‌
துன்னும்‌ மார்புடைத்‌ தோன்ற லடிபணிந்
தன்ன வன்ற னருளிற்‌ பர கதி
மன்னி வைகும்‌ மதுர கவியெனும்‌–66-

எங்க ளாரிய னிங்கு விபவமாய்த்‌
தங்கு நாளிற்‌ றரணி யெலாமிசை
பொங்கு மாறப்‌ புனிதன்‌ விடயமாய்ப்‌
பங்க மின்றிப்‌ பரிவி னவின்றவாம்‌–67-

கண்ணி நுண் சிறுத்‌ தாம்பெனுங்‌ கானறை
யுண்ண யப்புறு மோர்பதி கம்மனான்‌
விண்ணி னிற்செலும்‌ வேலையிற்‌ சீடராய்‌
நண்ணினர்க்கு நவின்தன னன்பினால்‌–68-

அன்ன சீடர்‌ மரபின னாகலா
லென்னி டத்தது வன்றிமற்‌ நின்றெனாப்‌
பின்னுங்‌ கேட்டி யென்றாங்குப்‌ பிதற்றுவா
னின்ன வந்தமி ழின்குண மியாவுமே–69-

இப்பதிகத்‌ து று மகிமை யெனையோ வென்னி லின்றதையு முரைத ருவனிசைந்துகேட்டீ
யொப்பற விட்‌ புலமுகடுங்‌ கிழிய வப்பா லோங்கு புளிக்‌ காவணத்து ளூறையுஞ்‌ சீதத்‌
துப்புறுபாட்‌ டளிமுரலத்‌ துளிக்குந் தண்டேன்‌ றூங்கு மகிழ்த்‌ தொடையகலஞ்‌ சூடுமெம்மா
னப்பறுவா ட்கமலமுகத்‌ தெதீரே நந்தண்‌ ணரிய குசத்‌ திழைதவிசட்‌டதன் மேல்‌ வைக–70-

புல்லியவைம்‌ பொறி வழியிற்‌ போக்கா தேக புந்தியுடன்‌ புண்ணியராய்ப்‌ பொருந்தி யன்ன
சில்லியறற்‌ குழலுடைய நங்கை மாது திரு வயிறு வாய்த்தோனைச் சிந்தை செய்யா
யெல்லியினும்‌ பகலினுமோ ரணுவு நீங்கா திருந்தனரா யோகியர்கட்‌ கிணையாய்‌ மன்னிச்‌
சொல்லருபே ரானந்தக்‌ கடலுட்‌ டாழ்ந்து சோர்விலரும்‌ தகைமை யவப்‌ பதிகந்‌ தன்னை–71-

பன்னரிய நற்றேவ கானத்‌ தோடும்‌ பன்னீராயிர முருவே பகர்வராகினாங் கன்‌னோர் தம்‌
லன்ன செயற்‌ கதி யோகை கொண்டானாகி யணி கிளரச்‌ சடகோப
முன்னரெழுந்த தருள் புரிவா னெனவே முன்னோர்‌ மொழிந்தனரா லிங்‌கிது தான்‌ முறையோ வென்ன
மன்னு பராங்‌ குச நம்பி வழங்கினானான்‌ மாமறையின்‌ பொருளுணரம்‌ மதி வல்‌ லோர்க்கே–72-

சொற்றமொழி யிரு செவியு ளேறா முன்னர்த்‌ தூய மனத்‌ ததியோ கை தூங்கத்‌ தூங்கப்‌
பற்றறு பராங்குசனைப் பற்றற்‌ கன்ன பதிகமே பணி புருட கார மென்னாப்
புற்றளரு நெஞ்சுடைய புனித ரன்னோன்‌ பூங்கமலத்‌ தாளிணையைப்‌ போற்றா நின்றே
மிற்றை யுகந்‌ தன்னதை நுந்‌ தாசனேற்கின்‌ றீந் தருள்வீ ரெனவின–73-

மிக வணக்கத்‌ தடி வணங்கி நிற்குமன்ன விமலர்‌ தமை யன்னோனும்‌ வியந்து நோக்கி
நிகரறு மப்‌ பதிகமதற்‌ நின்மலர்க்கு நிகழ்த்துவனென்‌ றுபதேச நெறியா னாங்குப்‌
புகரறு தன்‌ னாரியனை நெஞ்சுட்‌ கொண்டு போதனை செய்‌ தருளின னாற்‌ புலம்போ மார்க்கத்‌
தகமதனைச்‌ செலுத்தலிலா வளவில்‌ யோக வருநிலை தேர்ந்தினி துணர்ந்த வன்னோர்க்‌ கன்றே–74-

துன்னு றுந்தகை யன்ன நற்‌ பாவைத் தூய னாமப்‌ பராங்குச நம்பி
தன்னி டந்தனி லின்னன மாகத்‌ தகையி னோர்ந்‌து தெளிந் தன ராதி
யன்ன வன்றன தின்னரு டன்னா லந்த ரங்க முகந்தனர்‌ சென்றார்‌
மன்னு மாமல ரன்ன மணந்த மன்ன னாரடி நன்குற வுன்னி–75-

தேவ கானங்‌ கடிதினிற்‌ சென்று தேர்ந்து ணர்ந்திவ ணார்ந்தன ரகிச்‌
சேவி யார்மன மேவரி தாகுஞ்‌ செய்ய மாமகி ழையனின்‌ முன்ன
ரோவில்‌ சிந்தையத்‌ தூயனுகந்தன்‌ றுரை செய்‌ வண்ணம்‌ புரை செகு மன்ன
பாவி னங்களை யாவருங்‌ கேட்பப்‌ பாட லுற்றனர்‌ பீடுடன்‌ மன்னோ–76–

மாட லர்ந்த பணாடவி தாங்கும்‌ வாரி சூழ்தரு பாரிட மெங்கும்‌
வீட லர்விசை நாடிய நன்னா வீற னென்ற வம்‌ மாறனின்‌ முன்னர்ப்‌
பீடி, லர்மனக்‌ கோடறுறந்த பேரருட்டழை சீருறு மன்னோர்‌
பாடு மின்னிசை யீடிலமுதம்‌ பரிந்து ஈன்கு சொரிந்தன ரன்றே–77-

வான்பயி லமரர்‌ யாரு மறுவிலா ரிசைக்குந் துய்ய
தேன் பயி லினிய கானஞ்‌ செவியிடை யடையா முன்ன
ரூன்பயில்‌ குலிசப்‌ புத்தே ளோங்கவை யிடத்தி யாழ்‌ வல்லோன்‌
றான் படர்ந்‌ தனனோ வென்னச்‌ சாற்றினர்‌ விரையச்‌ செல்வார்‌ –78–

வாரிசூ ழுலக முய்ய வந்தரு ணிமலர்‌ செய்யுஞ்‌
சீரிய கான மோர்ந்து சிறிது நீங்‌ கரிய வாதி
யேரி மிரசுண மெல்லா மிருஞ்சிறைப்‌ பந்தர்‌ வீசிக்‌
காரிரு விசும்பி னூடே கவிந்தன சுழலு மாதோ–79-

முல்லைய நிலத்தின்‌ மாயோன்‌ முற்குழற்‌ கானஞ்‌ செய்யு
மெல்லையன்‌ னேனைச்‌ சூழ்ந்த வியல்பென நிரைக ளெல்லா
நல்லிசை செலியி னோரா நாற்றிசை மருங்குந் தீட்டுஞ்‌
சொல்லிலோ வியமே யென்னத்‌ துன்னின மலியுமாதோ –80–

மைப்புய லூர்தி செய்ய மலர் புரை விழிகளே போற்‌
செப்பறு முடல மெல்லாஞ்‌ செலியிலே னென்பான் சேடன்‌
ஒப்பிலாச்‌ செலிய நேக முற்றமை பலித்த தென்னாத்‌
துப்புறுங்‌ களியி னழ்வான்‌ றூய வவ்‌ விசை கேட்‌ டம்மா -81–

மானினங் கரடி வேழம்‌ வரிப்புலி யரிமா னின்ன
வான்பல விலங்‌ யாவு மறிவிழந் திரையுந்‌ தேடா
தூனமி லெழுவை மான வுற்ற வவ்‌ விடத்தே நிற்கு
மீனரை யணுகா வன்னோ ரிசையமு தருந்தி மாதோ –82-

தண்ணளி சுரக்கு மன்ன தகையினா ரிசைக்குங்‌ கானம்‌
விண்ணக முழுது மேவி விரவி நிற்‌றலினாற்‌ றுய்ய
பண்ணமை துளவத்‌ தெம்மான்‌ பண்டிட மெங்குந் தாய
வண்ணமுற்‌ றொளிருஞ்‌ செய்ய மலர்ப்பத மொக்கு மம்மா –83–

காரணத்‌ துதித்த வன்னோர்‌ கழறிசை யொன்றே யெல்லாப்‌
பாரண வுயிர்க டம்மைத்‌ தன் வசப்‌ படுத்த லாலே
சீரணம்‌ கயனும்‌ வீயச்‌ செறிதரு முடிவிற்‌ றன்பா
னாரண னனைத்துங்‌ கொள்ளு நவை யிலாத்‌ தகைமை யொக்கும்–84-

அவ் விம லன் செய்‌ கான மணிந்தன ராகி மண்ணோ
ரெவ் விடந் தனிலீ தென்னா விரங்கினர்‌ செவிசெய்‌ நோன்மை
யொவ்வவிவ்‌ விசை வலானை யுற்று நோக்‌ குறவே கண்கள்‌
செவ்விதிற்‌ புரிய கில்லாச்‌ செய்கையி னயர்வ ரன்றே–85-

பாதவஞ்‌ சலியா வாங்குப்‌ பறவைகள்‌ சிறிதுங்‌ கூவா
வாதவ னிவனே குங்கா லன்றென விரையச்‌ செல்லான்‌
போதவந் தணர்க ணாவும்‌ புரிகில வேத வோதை
தீதவம்‌ படுத்‌துங்‌ கானச்‌ சிறை வலை யகட்ட வம்மா–86-

மாரத மொழுக வன்னோர்‌ வழங்கிசை செவியி னாரா
நாரதன்‌ முதலா யாழின்‌ நல் வளந்‌ தெரியும்‌ வல்லோர்‌
போர வுள்‌ ளுடைந்து நாணம்‌ பூண்டி னி திருப்பரென்றா
லாரதன்‌ மகிமை தேர்ந்திங்‌ கறைய வல்‌ லவர்க ளம்மா—-87-

இவ்வகைத்‌ தாய கானத்‌ தெண்ணருந் தகமை சேரத்‌
திவ்லிய மதரப்‌ பாவைத்‌ தீஞ்சுவை யொழுக வன்னோ
ரொவ்வ நாற்‌ பத்தைந் தென்றங்‌ கோதுநா ளளவாய்ச்‌ சொன்ன
வவ்வண மாகப்‌ பன்னீ ராயிர முருச் செபித்தார்‌–88–

இணையிலா ரிசைத்த தேவ வின்னிசைக்‌ குகந்தா னாகிக்‌
கணையென மிளிர்ந்து நீண்ட கண்ணுடை நங்கை பால
னணை வரு மதிர்ச ன யகல்விசும்‌ பகட்டிற்‌ றோன்றுங்‌
குணமுறுந்‌ தொனியி னின்று குளிர்ந்தன னுரை சொய்‌ வானால்‌–89–

என்னகொல்‌ வெகுவாய்‌ நீரில்‌ கெந்தமைக்‌ குறித்தி யாரும்‌
பன்னுதற்‌ கருமரேகம்‌ பகலிமைப்‌ பொழுது நீங்காத்‌
துன்னியே யருமை யான தொழிலினைப்‌ புரிந்தீ ரென்ன
வன்னவர் செவியுட்‌ கேட்ப வறைந்தன னினிதி னம்மா—90-

அவ்வுரை செவியிற்‌ கேட்டவ்‌ வநகருங்‌ களிதுலங்கிச்‌
செவ்வியின்‌ வணங்கி நாயேன்‌ செந்தமிழ்‌ மறைகணான்கு
மெவ்வமின்‌ றுணர வென்‌ றிங்‌ கியைந்தன னடிய னேன் செய்‌
வெவ்வினை கழற வோத வேண்டு நாவீ ற வென்ன–91–

மாமகிழ்‌ மாறனுள்ள மகிழ்ந்துரை செய்வ னன்பா
நாமுனக்‌ கெதிரி னின்று நவிலுத லறமன்‌ றர்ச்சை
தூ மலர்‌ வாய் திறந்து சொல்லுவந் திரையி னப்பால்‌
நீ மனங்‌ களிப்பக்‌ கேட்டு வரைந்திடு நிமல வென்றான்–92–

என்ன லு மாடிப்‌ பாடி யிரு நிதி கிடைத்த தென்ன
மன்னு மா நந்த மென்னும்‌ வாரிதி படிந்து மாறன்‌
சந்நிதி யருகிற்‌ சென்று சரண் பணிந் தருடி யென்னக்‌
கன்னலு மமிழ்ந்து மேய்ப்பக்‌ கழறினன்‌ மறை நான்‌ கன்றே—93-

தூயமா தவத்து வைகும்‌ பதின்மர் சொற் றமிழு மாநா
லாயிர முரைத்துத்‌ தேவ கானமிங் கமுதி னேய்ப்ப
நீயிவ ணிசைத்த தாலே நிற்கு நாதமுனி யென்றே
ரேயு நா மமுமளித்தங்‌ கின்புற விருந்த பின்னர்‌–94-

நாதமா முனியுஞ்‌ சொன்ன நான் மறைப்‌ பொருளு மோர்ந்து
போதமுற்‌ றமலன்‌ செய்ய பொன்னடி பணிந்து நாயேன்‌
மாதவ மிழைத்த தாலிம்‌ மாறனுள்‌ ளுகந்து நாவா
லோதின னம்போற்‌ பாரி லொருவரில்‌ லெனவுங் கொண்டான்‌–95–

கருத்தி னிற்கடிய வன்பு கொண்டிலகு கண்ணகத்‌ துயிர்கள்‌ யாவையுந்
திருத்தி நம் ஸமய நிலை நிறுத்‌து பு திகைப் புறும் பல மதம் செகுத்‌
தருத்தி யொன்றபய மறை நிறுத்தி யு மநேக வைகலி வண்‌ வைகுவா
ருரைத்த விப் பெருந் தகை தனக்குரிய யோகி யாகுமிவ ரென்றனன்‌–96–

மறுவளரு மறுகால் வண்‌ டினங்கள்‌ பாட மடை திறந்தின்‌ மது வொழு கும்‌ வகுள மார்பத்‌
திருவளரு மெங்கோனிவ்‌ வண்ண மாகத்‌ திரிதண்ட மேந்துமெதி சேகரன் றன்‌
னருவள மெல்‌ லா மொழியா தன்னோர்க் கோதி யதிரிசனா மாறன் மவு னமதாங்‌ காலை
பொருவரு நன்‌ னிலை பிறழா திலகு மன்ன புனிதரங்க நாதமுனிப்‌ புகழ்சேர்‌ தூயர்‌–97–

தாயிழந்த சேய் போலு மெழிலி நீங்குஞ்‌ சாயலுறு மயில் போலுற்‌ தயங்கி வாடிச்‌
சேயிதழ் நன்‌ மரை மலர்க்கண்‌ பனிப்பத்‌ துய்ய திரை யுடுமா னில வலையஞ்‌ செழிப்புற்‌ றோங்க
வேயிருந்தோ ணங்கை திரு வயிற்று ணின்றே விண் சுடரோ னென வெழுந்து விளங்குஞ்‌ ஜோதி
மாயமறு மெய்யறிவின்‌ றளித்த கோவே மதியிலியேன்‌ மனம் புகுந்து வளருந் தேவே–98-

கருணை பொழி விழி முதலே நடு வீறில்லாய்‌ கலி வைரி புன் சமயக்‌ கலகர்‌ தீய
வருமொளியே வழுதி குல வாழ்வே துய்ய வண்டுளவப்‌ புயலாதி வழங்கு மஞ்சத்‌
திருவளருக்‌ துவசத்தா யரிய நான்கு செழு மறையைச்‌ செந்தமிழ்‌ செய்‌த தேவே
யுருகுமன வன்பர்களுக்‌ கன்றி யெட்டா வுத்தமமே யென்று பல வுரையா வேத்தி–99-

அடங்கரு மெம்ஞ்‌ ஞான முறு மனைய கோவா மமலனுக்கே பற்பல வுத்‌ தவங்கள்‌ செய்வான்‌
றொடங்கி யுயர்‌ குறுங்குடி வாழ்‌ நம்பி வந்தான்‌ தொன்னிலங்க ளுய்ய வந்த தோன்றல்‌ வந்தான்‌
மடந்தையர் தந்‌ திலக நங்கை மைந்தன்‌ வந்தான்‌ வழுதி குலத்‌ தொரு முதல்வன்‌ வந்தான் வந்தான்‌
ஓடுங்கலறுஞ்‌ சடவைரி வந்தா னோங்கு மாறனெனும்‌ திருப்பெயர்‌ கொளொருவன்‌ வந்தான்‌—100-

அனை முலையை யுண்ணாது கடந்தா னவ் விண்ணவிர் புளிக்கா வணத்தி லினி தமர்ந்தான் வந்தான்‌
வனையிசை மதுரகவிதம்‌ பெருமான்‌ வந்தான்‌ வண்மை கொள்‌ பராங்குசனே வந்தான்‌ வந்தான்‌
புனையுமது மலி வகுளா பரணன்‌ வந்தான்‌ பொரு விலருஞ்‌ சடகோபன்‌ போந்தான்‌ போந்தான்‌
நினை வரு மெய்ஞ்‌ ஞாந நநம்‌ மாழ்வார்‌ வந்தார்‌ நீசமுறும்‌ பரமதம்‌ வென்‌ னிமலன்‌ வந்தான்‌–101–

குயினினனால்‌ பொழிற் குருகூர்‌ நம்பி வந்தான்‌ கோதறு நா வீறனெ னுங்‌ கோமான்‌ வந்தான்‌
செயிர் மறுகுங்‌ கலி வைரி வந்தான்‌ வந்தான்‌ செழும் வேதற்‌ தமிழ்‌ செய்த செல்வன்‌ வந்தான்‌
எயிலெழு கொண்‌ டொளிரரங்கத்‌ தீசன்‌ கொங்க மீர்ங்கமலத்‌ தடி யாரு மிறைவன்‌ வந்தான்‌
மயர்வறு நம்‌ பொய்கை முத லாழ்வார்‌ தம்மை மகிழ்ந்த வய வங்‌ கொண்ட மன்னன்‌ வந்தான்‌ –102–

வண்டலம்பும்‌ பொழில் வழுதி நாடன்‌ வந்தான்‌ மறையவர் தம்‌ மனத்‌திருந்து வளர்வான்‌ வந்தான்‌
குண்டுபடு பேரகழி வளருங்‌ கோமான்‌ குளிர் மதமோங்‌ குறவந்த குமரன்‌ வந்தான்‌
விண்ட புனற்‌ றண் பொருநைத்‌ துறைவன்‌ வந்தான்‌ வேட்டவர் தம்‌ வினை யறுத்தாள்‌ விமலன்‌ வந்தான்‌
பண்டு நன்னாத முனியென்ப ரர்க் குகந்து பண்டைய நாலாயிரமும்‌ பகர்ந்தான்‌ வந்தான்‌–103–

என்றுபல சின்னங்க ளியம்பி யார்ப்ப வெழிலியென மங்கல பல்‌ லியமு மேங்க
பொன்ற யுவா னவருகந்து மலர் மந்‌ தாரம்‌ பொழிதர மண்‌ ணோர் குழுமிப்‌ புகழ்ந்து போற்ற
மன்றறரு மணி மாட மோங்கித்‌ தோன்று மணிநகர முழுதுமரு வளங் கொண் டோங்க நடாத்தி வந்தார்‌–
நன்று மன திடை மிகவா னந்தங்‌ கொண்டு நாடோறும்‌ பற்பல் விழா நடாத்தி வந்தார்–104-

இங்குள மகிழ்ந்திவணம்‌ ரங்க முனி யெந்த மிறைவனெனு மந்தண்‌ மகிழ்‌ நற வொழுகு மார்பற்‌
கங்கமல மொன்று முக நங்கை யணி பாலற்‌ களப்பறு ப லுச்சவ நடத்தி யருள்‌ மாறன்‌
பொக்கணி மி குந்தினி திலங்குறு மடிக்கே பொற் புறுப றொண்டு களை யற்புடனி யற்றாத்‌
தங்கி யவ ளந்திகழு மிங்குதிரமாகத்‌ தரித்திடுவ மென்றுத மனத்தி லெணி யுற்றார்‌–105-

ஆர்வமொடு மிவ்வணம னோர் வருகு நாளி லட்ட திசை பொங்கிசை தம்‌ மிட்டதெய்வ மாகுங்‌
கார்வளரு மோதிமினை நேர்வுறு மருங்குற்‌ கற்புமிகு பொற்றிருவி னற்புடைய மன்ன
னார்வளரு மன்பினொடு மோர் பகல்‌ கனாவி னத்‌து திகிரிப் படை கொள்‌ சுத்த வுரு வோடு
நீர்வளரு மப்பரர்மு னேர் பெறவ டைந்தே நின்‌ நினைய பற்பல சொல்‌ சொற்றிடுவரம்மா–106-

திரைக் கட லரைக்குடு தரைக்குளிசை கொண்டோய்‌ சிறு பர வாதி யர்கள்‌ வீறினை யடக்கும்‌
விரைத்தனி மிழ்த் தொடையு ரத்தணியு நந்நா வீறனென நாம முறு மாறனை யடுத்தே
மரைத்‌ துணையை நேரடி சிரத்திடை புனைந்தே வணங்‌ மிக வேண்‌டிட விணங்கியவன்‌ வந்தங்‌
குரைத்‌திட மறைத் தமிழ்‌ சிரத்தையொடு கேட்டு ளுகந்திட விருப்‌ புள தவந்தனை யொழுக்கும்‌-107–

நந்தம்வள நன்னக ரடைந்திடுதி யென்றே நவின்றிடவு மொப்பரு கவின்றழையுமாற
னந்தமிழ்‌ மறைப்பொரு ளுகந்தினி துரைத்தா னடிக்கினிய வன்பவர்‌ திடுக்கென விழித்தே
சிந்தை தனி லுன்னியுட னிந்தநகர்‌ செல்வான்‌ சிதைவறு கதிர்க்‌ கடவு ளுதயமு னெழுந்தே
நிந்தையறு தண் பொருநல்‌ வந்து புன லாடி நித்திய கடன்களை முடித்துட னெழுந்தே.–108–

செந்தழ னிறத்த பல சந்த மணி மேவித்‌ தினகரனை யொத்திலகு சினகர மடைந்தே
நந்திறைவ னுக்கருள்‌ புரிந்துதவு மாதி நாதனை யிறைஞ்சி வலமேத மிலடைந்தே
யிந்து தவழ்திந்திரிணி மேவலு முகந்தே விருந்தருளு நங்கையி னருந்தவ மெழுந்த வந்தமறு மெந்தைமு னடைந்தனையர்‌ தாமு மப்பரம னொப்பறு மலர்ப் பத மிறைஞ்சா–109–

மாவல நிறத்திலணி கோவலாம்‌ மாதி மாலினை வழுத்து றவே கோலிமுன மொன்றுந்‌
தேவென வுரைத்த பதி கந்தனை வினாவிச்‌ செப்பமோ டளித்தபரி சர்ச்சையிலு மாறன்‌
மேவிய நன்‌ னித்திய வி பூதியொடு லீலா விபூதியிலு முள்ள பல சேதநர்‌ களுய்யக்‌
கோவென விருந்து நனி போதக மெனுஞ் செங்‌ கோலினை நடாத்தி வருகின்றன னுகந்தே–110–

வானவர்கள்‌ சித்தர் பல தானவர்க ணித்தம்‌ வந்தடி பணிந்‌ து மலர்‌ சிந்தியே வழுத்த
நானில மதற்குளுள மானிடர்களெல்லா நாடொறு மெழுந்தபு பலாண்டிசை பயின்றே
தேனுகு மலர்ப் பத முறத் தொழுது நிற்கத்‌ தேவ ரடி யார் நடன கீதமு முழங்கக்‌
கோனென விருந்து தமி ழாரணம்‌ விளங்கக்‌ கொண்டிரு விபூதி புரிகின்றன னுகந்தே–111–

திரு நாதமுனிப் படலம் முற்றும்‌

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்‌ முற்றும்‌-


——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-2-

June 2, 2026

திருப் புளிப்‌ படலம்‌

பருமா னிலத்தி லடர்நீச முற்ற பரவாதி யர்க்கியமனாய்க்‌
திருமாதிருக்கு மணிமார்பருக்க திக நேசருக்கினியவாங்‌
குருவாயுதித்த வெிராசன்‌ மெச்சு குண சீல னித்தனடியா
மிரு தாமரைச் செம்‌ மலரே மனத்து ளெளியே மிருத்தி நினைவாம்–1-

மதியோடருக்க ரிருபாடு முற்று மருமாமரைச்‌ செம்மலரே
பொதிநீல்வரைக்கு நிகராகி நின்ற பொருவான தற்ற பெருமா
னெதிரே திருக்கு முதவாய் முகிழ்த்த வெழில் கால்‌ கிடத்தி யிறையும்‌
நிதியாலிழைத்த கடமாமுலைப்‌ பெணிதியோடு மெச்சு பொழுதில்–2-

இமையோர் வணங்க முனிவோரிறைஞ்ச விறையோரிதென்கொல் விபரீ
தமதாயதென்று வகையோடிரங்க வடியார்கள்‌ சங்க மறை சொல்‌
விமலாதிமன்‌ற னருளானதின்‌று வெளியானதென்று மகிழக்‌
கமமாய துன்ப நிறை வாரி நின்று கரை காண வன்பர் கணமே–3-

மிடியே மிகுப்ப வதினோ மவர்க்கு மிளிர்மா னிதிக்‌ குவையுமே
னெடுநாடிருக்‌ லெயர்‌ வோடிருக்கு நிலமானிடர்க்‌ கிருகணு
மிடைசேர்‌ தரக்கொ ளவரோகை தற்கு மினிதே யிரட்டி யயில்வே
லுடையானொடுற்ற விள வாணகைக்கு மொழியா மகிழ்ச்சி எழவே–4-

தரைமீது சற்று மசையாது வைத்த தலமே கிடக்கு முளைதான்‌
புரை தரு மத்த வளையாதி மைத்த புகழ் சாயல்‌ கண்டு மகிழ்வான்‌
மரைநே ரரிக்க ணுறவே விழித்து மணி வாய்‌ திறந்து பொதுவர்‌
நிரையே களிக்க வவர்பாலுதித்து நெடு நா டவழ்ந்த தெனவே–5-

இருதோள்‌ குலுங்க விருகா தணிந்த வெழிலே மிகுந்த மணி சேர்‌
தருநீடு குண்டலமராக வொண்வி றரலோடிலங்க வவிருந்‌
திருமார்‌ பணிந்த வணியே சரிந்து செகமீ திழிந்து புரளச்‌
சுருணாறு குஞ்சி மிசையார் கலன்‌கடொடை யோடசைந் தொளிரவே–6-

பிறையோ டிகற்றரு மனோகரத்தின்‌ பிழை தீர்‌ நுதற்க ணணியு
நிறைவா லொளித்‌ தரளமே யிழைத்த நெடிதாய சுட்டி யலைய
விறையா மடிச்செ நறையோடு புத்து றிரு தாமரைச்செ மலர்மே
லுறை யோதி மத்தண்‌ சிறை யோதி மப்புள்‌ ளொலீயே தரக்க லெனவே–7-

எணிலாத தன்மை யுறுபார வண்ட மிசையா வடங்கு மிடமா
மணிமேவு பண்டி யரைசேர்‌ சதங்கை யொடு கீழ்‌ சரிந்து புரளப்‌
புணராய செந்துவரை நேரிலங்கு புகழ் தாளி னங்குலிகளொ
ணிணர்கோடை யங்கையுடன்‌ மாமுழந்து மிடவே சிவந்த நிறமே–8-

திருமாமடந்தை புவிமாது செவ்வி திகணீளை தங்களுடனே
யொருநீல விண்டு நிகராக நின்ற வொளிராதி தன்னை வலமா
யருகே தவழ்ந்து வரு போதிலய் யனனையோடு தந்த மரெலாம்‌
பெரு கோகை மண்டி யெழ நீடு கண்டு பினிலே தொடர்ந்‌து வரவே–9-

எழிலே மிகுந்த மதவேளு மண்டி. யெதிர்காணுறிற்றன்‌ வடிவவ்
வுழியார வெள்ளி யணை வானோர்‌ பெண்மை யுறவே விருப்புளடையக்‌
கழிதே லங்க வருளாதி நின்று களி நீடிடத்தின்‌ வடபால்‌
வழியாகி நின்ற மதி மேவு திந்திரிணி நீழலுற்‌ றனனரோ–10-

மாக னகக் கலை சூழரையிற்புனை மாறனணைத் தலமா
நாக மதைக்கலி யேகுது முற்பட ஞாலமடுத்‌ தெகின
மாகி யுதித்திடு போதி யெனச்சொல வார வழுத்‌தி விரைந்
தேகி யுரைப்படி. யாய திருப்புளி யேர்தகை சிற்பகர்வாம்‌.–11-

கஞ்ச மலர்த்தவி சந்தர முற்றெழு கண்ணோரு வெட்டனொடு
மஞ்சி னிறத்தடை கண்டர்‌ தமக்கு மகிழ்ந்தினி தெட்டரிதா
யெஞ்சலினித்திய வும்பரிலுற்றிட மெங்கும்‌ விரிந்‌ திடலா
லஞ்சயினற்படை யங்கை தரிக்கு மரிந்தம னொக்குமரோ–12-

வானக மண்டல மோர்கையின்‌ மன்னிய வாணி தனத்‌ திசையா
மேனனிகொண்டிடு மோதி மனண்ணிய வேலை யுயிர்ப் படையா
நானன்‌ முகங்களு நாடி யிரும்மரி தாமரை பெற்றிடலாற்‌
றானவருங்‌ கமலாலய மன்னு பிதாமக னொக்குமரோ.–13-

வானதி தன்னுடன்‌ மீத விரும்பிறை வான்முக மஞ்சுறலா
லூனமிலங்கமலாதன மன்னய னோர் தலை தங்குறலாற்‌
றூனகு கொன்றையு மாடரவுந் தலை சூடியை யொன்றுமதே
ஞானமிகுந்தந மாறனுகந்தன னாடிய திந்த்ரிணியே.–14-

வென்றிமிகுத்திடு மங்கதமுற்று விளங்கு பதிக்குமடி
நின்றெவருக்கு மகிழ்ந்தினி தெட்டி னிமிர்ந்து சலிப்படையா
வன்றிறலிற்படுமண்ட முகட்டிடை மன்னி யுணிற்குமதை
யென்ற முறச்சரிவின்றி நிறுத்தெழு வென்னு முரைக்குறழா–15–

கொண்டபசுஞ்சுடர்‌ விண்டுவையுஞ்‌ சிறுகுன்‌று கடம்மையுமே
கண்டதை யொன்று மணங்கையினன்‌ கவிகை யெனும்‌ வண்ணமுற
வண்ட மடங்க லு மண்டி விரிந்தெழு மந்தர மாந்தனையும்‌
வண்டலையும்‌ பல தண்டலைதம்மையு மன்னவே கண்டிடிலே.–16-

காயொடடை திரள்‌ சேர்தரு நற்கனி காண மிகுக்குமலர்‌
தூயமிகக்கெழு காலடி பட்டுயர் சோர்வி றிசைத்‌ திசைப்போ
யோயடை யுற்றிடு மோவல துக்கு விணோடுநதிக்குள்‌ விழா
மேயலை கிட்டுமோ வோர்கில மித்தரை வீழ்தரலற்றனவே–17-

ஆருமலர்க்கணணாலு மளப்பரி தாய் முடிவற்றி மிருஞ்‌
சாருமெணற்றப லாயிர மற்படு சாகை தழைத்திடலா
லாரணமொக்கு மலாமலு மற்று வலாரி நிகர்க்குமதே
சேருமை யுற்றொளி சேர்சசி தொட்டுயர்‌ சேணகருற்றிடலால்‌–18-

வாரிகலிங்க மெனா வரை கொண்டிடு மானில மண்டிமிரு
மாரிருள்‌ வெம்பகை போழ்தர வெங்கதி ராமசி கொண்‌ டெழுகுஞ்‌
சூரிய னொன்றினராவித னுண்ணுழை தோறு மெஞ்ஞான ரவி
சாரொளியா லொரு தீபமெனும்படி. தானொளி தந்திடுமால்‌–19-

பாயுமிதிற்‌ சிறிதேனு முரைத்திடில்‌ பாருள மட்டுமிழி
வாயுவுடற்படு நோய்களனைத்தும்‌ வராமலடர்த்திடமாற்‌
றீயகனற்‌ கணுவேனுமிதிற்‌ படில்சேகுரு கப்‌ புனல்க
ளேயது வெத்தல மோவவ்விடத்தினி லேற விடுத்திடுமால்‌–20-

யோகவருங்‌ கொடி தாய தொழில் புரிவோர்களு மிவ்வழியா
யேக வரும் பொழு தீதவர்கண்படி லேய பவந் தொலையும்‌
ஆகவ நன்னகர்‌ மேவி விளங்குவராகில்‌ விளம்புவர்‌ யார்‌
தாகமொடும்‌ வழிபாடு செயும்‌ மவர் தாமடையும்‌ திறனே-21-

தாறுபடுங்கமுகேர்பெறு தெங்கொடு சாமரையிற்‌ பொலியச்‌
சீறி மலர்ந்தகல்‌ வானுயருங் கவிர்தேரின்‌ விளக்கொளிரச்‌
சூறடி விண்டவழ்‌ சோலையெறுழ்‌ மனர்தாழ்ம்‌ தயனிற்பவன
மாறனெனும்படி பூவரசுற்றிடும்‌ வாளர வப்புளியே–22-

அத்தனறா மாவலி பான்‌ மூவடி. மண்‌ வாங்ய நாள னைத்துந் தள்னுள்‌
வைத்தடக்கு மலரடியே மானவிரு வானமெலா மலர்ந்து நீண்ட
இத்தகைய புளிநீழற்ற வழ்ந்‌ தோடிச் சென்‌ றணைந்‌ தவிள வலாய
முத்தி நிலமடி தொழுவோர் தமக்கருளும் பரன தன்‌ றன் மூலம் சேர்ந்தான்–23-

பாரடையிற்‌ பரகதியிற்‌ சேர்த்தருள்வாம்‌ வடபாற்கட்‌ பரிந்துமுன்‌ போய்‌ ஓரடியிட்டினிவரவின் றொழுதிரெனத் தென் புறத்துற்‌றுறையும்‌ தீய
காரடமற்படு முடலத்தே மனருங்‌ கொடுந்‌ தமரைக்‌ காய்வான்‌ போலச்‌
சீடரப்புளி வேரிற் சென்ற பரன்‌ றெக்கண மாந் திசையை நோக்கா–24-

ஐம்புலமாயந்தனை நிராகரிக்கும்‌ யோகியர்கட்‌ ௧ றிவிப்பான்‌ போற்‌
செம்பது மாதனந்தரித்‌துட் கரிகாப் புடையகலாச் செழித்து நீண்டு
வம்புறுமற்கமல நறும் போதெனவே யிடையிடைசெவ்வரிகளோடிப்‌
பம்பருட்‌ கணிணைபிறழா தெழிலாரு நாசி நுனி பார்த்துமாதோ–25-

வடமேருப்‌ பொன்கிரி நின்றிழிதரு பல்லருவியென வயங்குமார்பி
னிடமே வொண்ணிலவு மிழும்‌ வெண்டரள மணியார மிலங்கவே நேர்
படமேலி நிமிர்ந்த மிருமரகத நல்வரைய தனுட்‌. படிர்த சோதித்‌
தடமேய செங்க தரிற்‌ றிருமேனி யொளி செய்யச்‌ சலியானாகி–26-

பல்லாயிரங்கோடி யண்டமு மவ் வண்டத்துட்‌ பரந்து வாழு
மெல்லாமுந் தானாகி நின்றருளு முதலாய வெழில் கொள்‌ சோதி
வில்லாரைம்படையாதி நிர்மலனே பரமாயவிமல னென்ன
மல்லாரும்‌ வலது கரத்தில்‌ குசின்முத்திரை தரித்து வயங்கிமாதோ–27-

மற்றோர்‌ செங்கர கமல முன்னொரு நாட்‌ டோன்றிய வம் மலரே யன்னப்‌
பொற்றோ யுமப் போதிற்‌ புடை பரந்த வுந்தியின் மேற்‌ பொருந்தச்‌ சேர்த்தி யுற்றோடும் பேருயிர்ப் புள்ளு ற வடக்கி யாம்பலம்போ துறழ்வாய்மூடி
முற்றோகை யொளி பரந்‌து வாண் முக நின்றொளி செய்ய மோனமாகி.–28-

அகலுகில்லேனிறையு மெனத்‌ திருமாதுள்ளுற மகிழ்வுற்ற மருமார்‌ சகமுழுதுந் தன்னுளுறக்‌ தானடக்குந் தாட் கமலத் தார்வம்‌ வைத்துப்‌ பன்
பகர்தரக்‌ கண்ணகத்‌ துழலு மிரு வினையாம்‌ பவந் தொடைத்துப்‌ பாநாடீயும்‌
நிகரிலருர்‌ தகைய வட்டாக்‌ கரப்பொருளே தாரகமாய்‌ நெஞ்சுட்‌ கொண்டு–29-

உருகிய பேரன்பினொடும் வந்தணைந்தா ரிருவினை யீர்த்‌து யர்வானீயத்‌
தருமுதலே மெல்லணையா யந்நிழலே மேனிழற்றுஞ்‌ சத்திரமாகப்‌
பெருகிய மெய்ஞ்ஞானச் செங்கோலோச்சி வீற்றிருந்து பிறங்னானா
லிரு நிலங்கொள்‌ மருளகலச்‌ செங்கதர் போற்‌ றென்பாலி லெழுந்தானம்மா–30-

இவ்வணம்‌ வீற்றிருந்‌ தருளுமேந் தறனைக் கண்‌ டெளிதி னெடுப்பா னெண்ணிப்‌
பவ்வங்கொளலை வாரி தன்னிலும்‌ பேருவகை வெள்ளம் பம்பி யோங்‌கச்
செவ் வண்ணந் திகழ் சுடரோன்றனை மின்சேருந்‌ தகையிற்‌ றழுவினாளான்‌
மைவ்‌ வண்ணந் திகழோதிப்‌ பொன்னுடைய நங்கை யெனு மடந்தை தானே—31-

கையாரத்‌ தழுவியணைத்‌ தெடுத்தளவிற்‌ பேர்வரைபோற்‌ கனப்ப நோக்கி
யையோ வீதென்கொலெனப்‌ பதைபதைப்புற்‌ றசைத்‌ தெடுத்து மசையா னாகி
மெய் சோரக் கை சோர மாழாந்து வாய் குழறி மிகவே விம்மி
மையோதி யெழுதியவோர்‌ சித்திரம் போலத்‌ தனையு மறந்தான் மன்னோ–32-

மருவிரியுங் குழலுடைய நங்கை யெனும் மட மாதோர் வண்ணந்தேறிப்‌
பொருமலொடு விம்மலு மென்மே லெழவுள்ளுற வடக்கிப்‌ பொரு வேற்‌ கண்ணின்‌
றருவியெனப்‌ புனல்சோர வாம்பலென வாயங்‌ காந்தறைந் தாண்‌
விரு நிலனும்‌ பெரு வானுங்‌ கருதுறவே யிசை வாய்ந்த விறையோற்‌ கன்றே–33-

போதகமோடிகல்‌ வேடற்‌ இருவானமீந்து முகிற் பொலிந்‌து நின்ற நாதனருட்‌ பல்காற்‌ சிந்தித்‌ தோகை மீக்கிளர்‌ நனியுந்தேசார்‌காதலனின்‌ றிங்கோடி த்‌ தவழ்ந்ததுவே பெறும் பேறாய்க் கருதி நின்ற சீத நறுங்‌ களி வண்டு பாண் முரலுந்‌ தொடை யகலத் திறல் வேற்‌ கோமான்‌–34-

பருந்தாரயில் வாட்‌ படை விழியாள்‌ பரிவிற்‌ சோர்வுற்‌ றுரைத்த
திருந்தாரங்கை வேனுதி போற்‌ செவியினாடே நுழைதரலும்‌
வருந்தா நின்றுள்ளினி திரங்கி மாழாந் தீ தென்‌னதிசயமென்‌
றருந்தாட்‌ கமலத்‌ தவிர் கழல்‌ களதிரக் கடிதிற்‌ குறுகினனால்‌–35-

மழஞ்சே றொளிவிட் டெழுங் கதிரை வளையுமூர்‌ கோள்‌ சூழ்ந்ததெனக்‌ குழைஞ்சேயுள்ளந் திருந்தலர்க்குக்‌ கொடுமை கூருங் கொலைவேலான்
பழஞ்சேயாம்பற்‌ றுவர்‌ வாய பாலனாமப்‌ பரனைத் தன்‌
முழைஞ்சேயேம வரை யன்ன மொய்ம்பாற்‌ றழுவி யெடுத்தனனால்–36-

தண்ணென்‌ நதி சூடிறையன்னான்‌ றாதையாய தாட்கமலத்‌
தண்ண றன்னோடும்ப ரெல்லாமறியச்‌ சுடரை யெடுத்தளவிற்‌
றிண்ணஞ்‌ சிகரம் போற்‌ கனப்பச்‌ செழியர்‌ கோமான் றிறலழிந்து
கண்ணிலாதான்‌ பெற்றிழந்த காட்சி யண்ணலா யினனால்‌–37-

மன்னர்கோமா னெடுத்ததற்‌ பின்‌ மாழாந்துருகிக்‌ தமர்குழுவுந்‌
துன்னுங்‌ கதிர் வேன ராதிபருந்‌ துணைமென்கொங்கை நுண்மருங்கு
லின்னல்கூரப்‌ பணைத் தண்ணாந் திறுமாந்திருக்குங்‌ குவடிணையா
மன்னம் போலு நடையாரு மசைத்‌ தசைத்துப்‌ பார்த்தனரால்‌,–38-

தம்மாலாகுந் திறத்தினொடுந்‌ தழுவி யசைத்‌ துப்‌ பார்த்தளவிற்‌
செம்மா மேனித்‌ தனி முதல்வன்‌ சிறிதுஞ்‌ சலியாலகை நோக்கா
நம்மாலாகா வகையன்றி தாறுங்கதிர்காலிப்‌ புதல்வன்‌
செம்மாந்‌ திருக்கும்‌ களியானைத்‌ திரட்குமசையா னென்றனரே–39-

சனித்தநாட்‌ டொட்டின்‌ றளவுஞ்‌ சலியாத ணுவுமதி விரைவி
லினித்த செவ்வாய்‌ கண்டிறந்‌ தின்றெளி திற்றவழ்ந்திங்‌ கோடியதால்‌
பனித்த நெஞ்சில்லாதார்‌ தம்‌ பார்வை யெச்சிலெய்தியதோ
தனிச் செஞ்சுடரே யெனவொளிரித்தனைய ற் கென்பார் சிலரன்றே–40-

மருந்தனின்சொற்‌ நிருமாது வளரு மணிமார்பன்‌ கொல்லோ
திருந்து, தனிச்‌ செங்கோ னடத்துஞ்‌ சேனை முதல்வன்‌ தான்‌ கொல்‌லோ
கருந்தண்ணீர்‌ மண்ணிடத்தேதோ காரண த்தின்‌ பொருட்டாக
அருந்தவத்‌ திம்மன்னவன்‌ பா லடைந்தார்‌ கொல்லோ வென்பாரால்‌–41-

தேனார்கமலத்‌ திருமகட்குந் திரைப்பார்‌ மகட்குந் தனிச்‌ செல்வக்‌
கோனாதனுக்குக்‌ குடிகுடியாட்‌ சேய்யுஞ்‌ செழியர்தங்‌ கோமான்‌
மேனாளிழைத்த மெய்த்‌ தவங்கள்‌ விளங்க முற்று முடித்திலனோ
ஏனாமிவ்வாறிப்‌ புதல்வற்‌ இருக்கும்‌ திறனென்பார்‌ சிலரே—42-

வாளை கமுகு மடல்‌ கீறு வயல்சூழ்‌ குருகாபுரி யளிக்குங்‌
காளையன்னா னிம்மை தனிற்‌ கணமும்‌ தீமை நினையானாய்‌
வேளை மூன்று மெய்யறமே விளங்கச்‌ செய்தான்‌ யாம றநிவோங்‌
கோளை யெய்திக்‌ கொடுமை யன்னன்‌ கொண்டதிறனெ னென்பார்‌ சிலரே–43-

வியனார்ப தம மென்போதே மிளிருங்‌ கண்கால்‌ கரமாயு
முயர்வா னிலவினேர்‌ மதியே யொளிமா முகமாயும்‌ படைத்தே
யியலாரிப்‌ பாலகன்‌ றனக்கங்‌ கிவ்வாற ளித்தவீர்ங்கமலத்‌
தயனே கொடிய பாவியென வறைவா ருள்ளங் கரைவால்-44-

என்று கூறுமொழிகளைக்‌ கேட்டி றுமாந்‌ திணைந்த வன்னமுலை
துன்றுங்குழ னங்கை மாதுர்‌ தோன்ற றானு முள்ளுடைந்து
கன்றிமாழாற்‌ தனராடிக்‌ கண்ணீர்‌ தமை மஞ்சன மாட்டக்‌
குன்றுபோலப்‌ பொலிந்து நின்ற கோமான்‌ முன்னரிவை சொல்‌வார்–45-

கொண்டலிற்‌ பொலிந்து நின்ற கொழுஞ்சுடர்ப்‌ பரிதி வேந்தே
வண்டர்தந்‌ துயரந்திர வகலிடத்து தித்த கோவே
பண்டொரு விலங்கிற்கோடிப்‌ பாலனம்‌ புரிந்த வுன்றன்‌
மண்டரு ளினையின்‌ றெங்கண்‌ மறைத்தனை யெம்பான்‌ மன்னோ–46-

வழிவழி நினக்காட்‌. செய்து வர்த வல்வினையே மின்று
கழிபெருங்‌ கொடிய துன்பக்‌ கடலிடையாழ்த னன்றே
பழிவழி யொழுகா வன்பர்‌ படுந்‌.துயர்‌ காப்பா யென்று
மொழிவது பொய்யதாமோ முதற்பரம்‌ பொருளிரங்காய்‌–47-

அறிவிலாச்‌ சிறியரே போலெதுவு நின்னடியலாது
பிறி துயர்‌ நினைந்ததுண்டோ பெருந்துய ருழன்று வாடுங்‌
குறியினைப்‌ புரிவதென்னோ குணப்பெருங்‌ கடலேநாவி
செறிகுழற்‌ றிருமணாளா செழிக்க வின்னருள்‌ செய்வாயே–48-

அருளிழிந் தொழுகு தாதை யன்னை மெய்ஞ்ஞான மோதுங்‌
குருமுத னைத்து நீயாய்க் கொண் டினிதிருக்கு மெம்பாற்‌
பெருகிய வருள்‌ செய்யாதே பிறங்கு மெய்ப்பொருளே மேன்மேல்‌
வருதுய ரதனின்‌ மூழ்க வைக்தனை யென்கொலின்றே–49-

வன்புறு மனத்தேன்‌ நின்பான்‌ மனிமக வருள்வா யென்ன
வன்புடன்‌ வேண்டுங்காலை யளித்திடா தொழியின்‌ மேவுந்
துன்பமொன்‌ றதுவே யாகுந் தூய்மறைப் பொருளே யன்றி
யின்ப மதருள்வான்‌ போல விடர்‌ பல விளைத்ததென்னோ–50-

மூல மென்றொருகாற்‌ கூவு முன்னரே யடைந்தோர் மாவி
னேலஞரொழிந்தா யின்றிவ்விளி வரலிடரின்‌ மூழ்கச்‌
சாலவு முழன்‌ற நேகந் தர முனை யழைத்து மென்னோ
வாலடை துயின்ற கோவே யருள் செயா திருந்தவாறே–51-

உள்ள நெக்குருகி யிவ்வாறொலி திரைப்‌ பரவை ஞாலத்‌
தெள்ளருஞ்‌ சிறப்பு வாய்ந்த வெரி மணிப்‌ பூணாரேத்தப்‌
புள்ளுயர்‌ கொடியனாங்குப்‌ பொலிந்தருள்‌ புரியானாகத்‌
தள்ளருந்துயரவாரி தன்னுளாழ்ந்‌ திருந்தாரன்றே–52-

வரிசிலைச்சுவடு தோய்ந்த வரை பொருவயிர த்திண்டோட்‌
குரிசிலாண்‌ டகைமையாலுட்‌ கொள்ளஞ ரடக்கா நின்றான்‌
பெரிய வாட்டடங்கணல்லாள்‌ பேதைமைக்‌ குணத்தாலன்ன
துரியனைக்‌ கண்டி கண்டு துயருளாழ்ந்தினைய சொல்வாள்‌-53-

நஞ்சிற்‌ பொலிகண்‌ ணங்கையர்‌ நகை கண்டயல்‌ சூழ்ந்தே
கொஞ்சத்தனி மஞ்சத்திடை குலவித்துயில்‌ வளர்ந்தென்‌
நெஞ்சத்‌ துயரகலக்‌ களிநிலைபெற்றிட வருளா
விஞ்சுற்றுயர்தருமித்தரு வேருற்ற தென் மதலாய்‌–54-

தளிர்மெல்லடி தனவைப்‌ பழி நுதலாய்‌ குல மதலாய்‌
மிளிரொண்மணி மனைவாய்ப்‌ பவ வினையாள்‌ செயவிழைவா
லொளிமேனி சற்றசையா விடு முழையே கிடந்தனையே
யெளிதாயிவனுறவே யெழுமிகல்‌ வந்த தெனிறையோய்‌–55-

இருகட்புல னில்லாதவர்க்‌ கிடையே யளித்‌ தன்றே
பருகுற்றிடு வகைபோ லொளிர்‌ பனிமாமதி நுதலாய்‌
மருவுற்றெழு களியுட்கொளும்‌ வகையே தவழ்‌ நடைசெய்‌
துருகித்‌ துயருற வென்னதை யுடனே கரந்தனையே–56-

பழுமாமர விலைமேலோரு பகலோர்‌ சிறுமகவாய்த்‌
தழுவாவிழி துயில்வோனருட்‌ டகையால் வரு மகனே
யெழுநீள்பசியதனான்மல ரெழில் வாய் திறந்‌ தினிதா
யழு மோசையை யெளியேன் செவி யடையுந் திற னென்றே–57-

துனியே மிகு மா பாதகத்‌ தொழிலே யரு வினையே
னினிதாய்‌ மடிமிசை வைத்‌ தம மிழிபானிறை வூட்டக்‌
கனிவாய் திறந்‌ துண வென்றுகொல்‌ களியோடது காண்பேன்‌
பனிமாமதி மரபூடெழு பகல்‌ போலொளிர்‌ மகனே–58-

இங்குன்றன தணியும்‌ பெருவெழிலார்மதி முகமும்‌
பொங்குஞ்செழு வகுளப்புயம்‌ பொருவு நயநயுக
முங்கண்டவர்‌ கண்ணெச்‌ சிலதுடையப்பல காப்புத்‌
தங்கும்படி செயவென்றெழு தருவா யொளி யுருவே–59-

கோடுஞ்சிலை நுதலாயணி குழையார்கன மரும்பப்‌
பாடுள்ள விர்‌ பனி தூங்கவே செங்கீரைய தொன்றி
யாடும் பருவ மிதாகலினரிதாய தொல் வினை யேன்‌
நீடுந்துயரது தீர்தர நீ யென்று புரிவாய்‌.–60-

துன்றுங் குழன் மட மங்கையர்‌ சூழ்வுற்றனர்‌ தாலோ
வென்றுன்றனை யாட்டச்சுட ரெறிமா மணியதனா
லொன்றும்படியிழை தொட்டிலிலோடித்‌ தவழ்ந்தேறி
மின்‌ றுன்றிய கழலாய் மலர்‌ விழி யென்று கொ றுயில்வாய்‌–61-

என்றென்‌ வயிறிடை நின்று நீ யிவண் வந்‌ துதித்தனையோ
வன்றொன்றியே யிது நாள் வரை யஞரிற்பட மூழ்கு
முன்றன்றவ முது தந்தையு முறவோர்களு மியானுங்‌
குன்றில்‌ களி கொள வென்று கொல்‌ சப்பாணி கொட்டுவையே—62-

சித்தந் தனிலுறு வெந்துயர்‌ தீரக்களிசேரக்‌
கத்துந் திறலதுகண்டு நீயினியாகிலுங் கனிவாய்‌
முத்தந் தர வெழுவாய் தரு மூலத் துறைவோ யென்‌
புத்தென்‌றுரை நரகப்பிணி போகப்பணி மகனே–63-

விட்டுக்கதிர்‌ பொலியுஞ்சுடர்‌ மிளிரும்‌ பசுமுகிலு
மெட்டிக்கு மகிழ வந்தென விவரிம்மர முறை வோய்‌
வட்டச்‌ சிறு பறை கைக்கொடு வரு சிற்ற வருடனே
கொட்டித்‌ திரிதரலென்‌று கொல்‌ கொடியே னிடர் கெடவே–64-

தாராகண நடு நின்றோளிர்‌ தருமாமதி யெனவே
வேரார்‌ தருசிறு பாலகரிடை மன்னுற வெய்தி
வாரார் முலை மடவார் மலி மறு கூடொளிர்‌ சிறிய
தேரார விடுத்‌ தென்று கொறிரிவா யொளியுருவே–65-

வரமாமலரிணை நேரடி மணி நூபுரமொலியே
தரநாடொறும்‌ விரைவோடியே தள வெண்ணகை யிளையார்‌
பரவாவகன் மறு கூடிழை பயில்‌ சிற்றில் கண்‌ முழுதுந்
திரமாக வெனொரு பாலக சிதைத் தென்று கொல்‌ வருவாய்‌.–66-

அணிமாநகருறைவோர்‌ பல ரடையா வெனதிடையே
மணிவார்‌ குழையுடையாயுனன்‌ மகனா டொறுமளவில்‌
திணியோடின றருவம்புகள்‌ செய்கின்றன னெனவே
பணியாவெழ விறை யென்ற.கொல்‌ பயில்வாய்‌ மறுகிடையே–67-

பெருநீருலகிடை மாமகள்‌ பெருமானுயர்‌ மதமே
மருவாமலி, தரவே செயுமனர்‌ கோனளி மகனே
திருமாதுறுமணி மாளிகைத்‌ திருவே முதன் மருவா
திருமாமரநிழல்‌ வைகுறுமிதுவோவுன விதியே–68-

கடல்வேலை கடந்தாலென விழிநீரிருபுடையும்‌
விடவே யெரிதரு வெங்கனலிடைமென்றளி ரெனவே
யுடல்சோர்‌ தரமாழாந்தினி துருகுஞ்‌ செயல் கண்டு
மிடரேனென வுரையாடலை யிதுவோ வுன தறமே–69-

மிகவே நறை யுகு மாலுகவிரி மாலையினிறையோய்‌
மகனே யருமகனேயென மதசோர்தரல்‌ கண்டே
யுகவாவெனதனைநீ யினி யுருகே லென வுரையா
வகமேவிய துயர் தீர் தர வருளாதது தகவோ–70-

நகுமின் சுதரிசனன் பத நளினங்களை மறவேந்
தகவெந் துயர் கொள மன்னுயிர் தமை யெங்‌ கணு நலியே
மிகு நல்லற வினை யன்‌றியே புரியோ மொரு வினையுஞ்‌
செகுவெந் துயரிடை மூழ்குறு செயலென்ன கொல் விதியே–71-

கொலை பழுத்தொழு கூன்‌ வைவேற் கொற்றவர்‌ குழுமி நந்தந்‌
தலைமகனிவனே யென்று தாங்கருந் திறைகள்‌ கொண்டு
சிலை நுதற்றிருவே யுன்றன்‌ நிருவடி போற்றா நின்றார்‌
உலைவு றென்‌றுயரந் தீர வுகந்ததைக் கண்ணாற் பாராய்‌-72-

சிற்றிடைக் கன்னிமாருன்‌ சீரடிச்சுவடு காண்பான்‌
முற்றிலந் தூதை கொண்டிம்‌ மூதெகினத்தி னீழற்‌
சுற்றிலுஞ் சிற்றில் செய்து துன்னி நின்றார்‌ நீயத்தைப்‌
பற்றுமென்‌றுயரந்‌ தீரப்‌ பணி மலர்க் கண்ணாற்‌ பாராய்‌-73-

செவ்விய வொளி கொள் மேனிச் செல்வனோர்‌ வளர் வெண்டிங்கட்‌
கொவ்வ நாடொரும்‌ பூரித்து முடல்‌ சிறி தசையானாக
வவ்வணமிருப்பக் கண்டே யறற் குழஞரிலாழ்ந்தாங்
கிவ்வணம் பருவந்தோறு மிரங்கி யுள்ளுருகா நின்றார்‌—74-

எல்லியும் பகலு நீங்கா தியாவருமிருப்பச்‌ செம்பொற்‌
சில்லியங் குழலாணங்கை செவ்வி யிற்றினங்கடோறு
மில்லகந்தனிலே முன்னரியற்றிய வாறு போல
வல்லியல் கமலக் கண்ணாற்‌ கவ்விடத்தி யற்றா நின்றாள்–75-

வண்டலைந்திழி தேனுண்டு மருவுதாரிமிரு மார்பக்‌
கொண்டலைப் பொருவும்‌ வண்கைக் கோமகன்‌ குழவி தன்னைக்‌
கண்டு கண்டுருகித்‌ துன்பக் கடற்கரை காணானாகிப்‌
பண்டருங் குறுங்கை வாழும்‌ பரமனதுரை மறந்தே-76-

நச்சினர் வினையை நீக்கும்‌ ஞான தேசிகனெடுப்பான்‌
வைச்ச பண்டிதர்களாலு மந்திரத் தலைவராலும்‌
வெச்சுறு முத்தீ யோம்பும்‌ வேத வந்தணர்களாலும்‌
பச்சிலை வகை யினாலும்‌ பார்‌த்தனனிருந்தா னன்றே-77-

நீருலாம்பொருனை நாடனெஞ்சிடர்‌ நிறைய நாளு
மேருலாங்குழவி தன்னை யெடுத் தினி தளிப் போர்க்கென்றன்‌
சீருலாந் தரணியாவுஞ்‌ சிறப்புடன ளிப்பேனென்ன
வோருரைவழங்கி யன்னோரு றும்‌ வழி பாரா நின்றான்‌-78-

ஞானவாரமுத முண்டு நாடொறு மவயவாதி
வானவாந் தருக்களே போல்‌ வளர்தரத் தருவின் மூலத்
தேனலம் பொருந்த யோகி யென வினி தமர்ந்‌து வாமு
மூனமிலாத வெந்தை யொளித்திர மேனி தன்னில்‌-79-

விரைக்கருங்குழலாணங்கை வேந்தர் கோன்‌ முதலயாரு
நிரைக்குலந் தமது கன்றை நீங்கிலா வகை போற் சூழ்ந்தே
யுரைக்கரும் பதினாருண்டீ யுடனெறும்‌ பணுகா வண்ண
மரைக் கணப் பொழுது நீங்கா தன்னவ ரிருந்தா ராங்கே–80-

திருப் புளிப் படல முற்றும்‌-

திரு மதுரகவிப்‌ படலம்‌-

பைத்தலை யாவந்‌ தாங்கும்‌ பாரிடத்‌ துயிர்கட்‌ கெல்லா
மெய்த்தகு முகலேய்‌ மேனி மாயனெம்‌ பெருமான்‌ றன்னைக்‌
கைத்தலத்‌ தமர்ந்த நெல்லிக்‌ கனி யெனக்‌ காட்டித்‌ தந்த
மெய்த்தவ னெதிராசன்‌ றன்‌ விரை மலரடி யுட்‌ கொள்வாம்–1-

கர கமலங்கள்‌ கூப்பிக்‌ கை தொழு மவர் தம்‌ தீய
நரகவித்‌ தருள்வான்‌ ஞான நாதனிவ்‌ வாறிருக்க
குரகத முகத்தாற்‌ கன்பாங்‌ குமுத கணாம்சராம் ம
துரகவிப்‌ பெருமாள்‌ வந்து தோன்றிய விபரஞ் சொல்வாம்‌–2-

உலகெனு மடந்தைக்‌ கோங்கு முருவமை யவயவாதி
யலகிலா வளஞ் சேர்‌ தேய மவற்றுளிப்‌ பாண்டி நந்நா
டிலகொளி வதன மந்த வெழின் முகங்‌ கவினத்‌ தீட்டும்‌
திலகம தென்னகத் தோன்றித்‌ திகழ்தருந் திருக்கோளூரே-3-

அத்தமா னிறத்து வேதத்‌ தந்‌தணன்‌ முதலாந்‌ தேவர்‌
தத்தமானியை யெடுத்துச்‌ சாற்றிடக்‌ கமல மென்போ
துய்த்தமா னிலமான்‌ செய்ய வொளியடி வருடப்‌ பாம்பில்‌
வைத்தமா னிதி மலர்க்கண்‌ வளர்தருந் திருக்கோளூரே–4-

மாகய மருப்புமாய்த் தான்‌ மலரடி. வணங்குந் தூயோ
ரேகய வேள்வி யாற்ற வெழுந் தடர்‌ கரிய தூமம்‌
ஆகயம்‌ படரக்‌ கண்டே யணி முகிற்‌ குலங்களென்னாக்‌
கேகயம்‌ பல நின்‌ றாடிக்‌ கிளர்தருந் திருக்கோளூரே –5-

அமலமுற்‌ நிடலான்‌ மீதி லணிமை தங்குறலான்‌ மீவான்‌
கமலக ணுறலா னற்பொற்‌ கலை தரித்‌ திடலான் மண்ணின்‌
குமரர் கண்‌ணிணைக்கு மெட்டாக்‌ கொள்கையா லொளிரு மாடம்‌
விமல விண்டு வினை யொப்பாய்‌ விளங்ககுறுந் திருக்கோளூரே –6–

எங்கண்மா னகர் போந்‌ தெந்த மிறையடி வண்டி யேகுஞ்‌
சங்கரன்‌ றனைநீ தாகத்‌ தருக்குட னெம் போனிற்குந்‌
துங்க நன்‌ றெனவான்‌ கைலைத்‌ தொல் கிரி யினை நக்கென்னாத்‌
திங்களஞ்‌ சவீசேர்‌ மாடம்‌ திகழ் தரும்‌ திருக்கோளூரோ–7-

இத்திரு நகரில்‌ வேத வெழிற்‌ பெருங் குலத்துட்டு வாப
ரத்தின தந்த மாகு மணிய விக்கிரம வாண்டிற்‌
சித்திரை மாதத்‌ தோடு சேர்ந்த சுக்கில பக்கச்‌ச
துர்த்த சித்‌ திதியுஞ்‌ சுக்ர வாரமுங்‌ கலந்ததாகும்‌–8-

சித்திரை நாளி லாசான்‌ சிச்சரி னியல்பு மன்னோர்‌
பத்தியும்‌ விசுவாசத்தின்‌ பான்மையு நிலத்‌ து வாமும்‌
புத்தியி லுயிர்கட்‌ கன்பாய்ப்‌ புகழ் பெறக்‌ காட்டித்‌ தூய
முத்தியின்‌ விளைவை நல்க முதற் பரம்‌ பொருளா லன்றே–9-

இருணலி தரக்கால்‌ சோதி யிளங்கதி ருதையமுன்ன
ரருணனா ருதிந்குந் தன்மை யாமெனப்‌ பரவை ஞால
மருணசிப்‌ படைய ஞான வாரமு தருளுஞ் செம்பொன்‌
வருணநங்‌ காரிமாறன்‌ வருமுன்‌ மெழுந்த வள்ளல்‌.–10-

முடிவிலின்னவனால்‌ வேத முற்றணர் திறத்தைக்‌ கூறிற்‌
கடிமலர்‌ கமலச் சேக்கைக்‌ கண்ணவற் கிழுக்குண்டாமா
லொடி திரைப்‌ பரவை ஞாலத்‌ துயிர் கண் மேல்‌ வைக்கு மன்பாற்‌
படி முழு தளந்து கொண்ட பரமனே யனை யனாவான்‌–11-

பண்டரும்‌ பரம வேதவிதிப்படி பரித்த முந் நூல்‌
விண்டலத்‌ தெழுந்துலாவு மின்னெனப்‌ பிறழு மார்பன்‌
வெண்டிக ழூர்த்த புண்ட்ர மேவிய னுதலான்‌ சேந்த
மண்டு பொற்‌ சடிலத்‌ தாலே வயங்கு சேகரத்தினானே–12–

பரந்த வணையான்‌ செய்ய பத கமலங்க ளல்லாற்‌
புரந்தர னீறாய்‌ வேதப் புனிதனே முதலாந் தேவர்‌
வரந்தர வல்லே மென்ன வந்து முன்‌ னிற்பாரேனுங்‌
கரந்தலை குவித்துச்‌ சற்றுங்‌ கணித்திடாக்‌ கருத்தனம்மா–13-

கொல்லு நஞ்‌ சடக்கு கண்டக்‌ குழகனு மறை வலானும்‌
வெல்லுதற்‌ கரிய காம வெகுளிக ளவிக்கு நீரான்‌
புல்லிய நெறியி னாளும்‌ பொறி புலன்‌ றமைப் போக்‌காது
சொல்லிய வறத்தினிற்குந்‌தூய நன்மனத்‌ தனம்மா.–14-

சென்னிகழ்‌ வடைத லாகச்‌ செப்பிய கால மூன்று
முன்னி யுள்‌ ளறியும்‌ ஞானத்‌ துறுதி கொண்‌ டுயர்வு பெற்றோன்‌
பன்னுதற்‌ கரியவாய பதும வாதனத்‌ தட்டாங்க
மன்னிய யோகத்‌ தின்‌ கண்‌ வரம்பினான்‌ மகிழ்வு கொண்டோன்‌–15–

இன்ன தன்மைய மதுரகவிப் பெருமா னெண்ணுதற்கரிய வேதாந்தத்‌
தன்னியல் புணரு நிபுணனாய்ச் சத்வந் தலை யெடுத் தெவருமோர் தரமு
ளுன்னிய வளவிற்‌ பரகதி யுதவயோத்தியே முதற் றிரு மடந்தை
மன்னியோ ரிறையு மகல்கிலா மருமன் வளர்தரும்‌ பத தொறுஞ்‌ சென்றே–16-

விழுத்தகு மூவகை யுள்ள நெக்‌ குருகி விரைமல ரருச்சனைபுரியா
வழுத்தியாங்‌ குளவாம்‌ புனித நற்‌ றிவலை வானக முகடு தைவரவே
கொழுத்தலை யெறியுங் கங்கையை முதலாக்‌ கொண்ட பற்பல நதிபடிந்து
பழுத்த மெய்ஞ்ஞான நிலை யுணர்ந்‌ தநேகம் பகல் வட புலத்திருந்தனனால்‌.–17-

அங்கரு முனிவ னிவ்வண மிருப்ப வணிய வைகுந்த நன்னாட்டிற்‌
பொங்கருட்‌ பரம வுருவினித்தியர்கள்‌ புடை பரந்‌ திறைஞ்சினர்‌ பொலிய
சங்குடன்‌ றிகரி வாள் கதை வரிவிற்‌ றாங்கி வீற்றிருந்தரு ணிமலன்‌
செங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி நன்களிக்குஞ்‌ சேனையர்‌ தலைவனைக் கூவி–18-

இன்றெழும்‌ துலூற்‌ றீ யிருட்‌ பிழம்பை யிகலறத்‌ துடைத்தருள்‌ புரிவான்‌
சென்றுந மமிசைபூதரா யுதித்துத்‌ திருப்புளியடியில் யோகியரா
யொன்றிய பதமாசனந்தரித்‌ திருக்கு மொப்பிலா மாறனுக்கின்றே
பொன்மக ளிடமுன்னீர்ப் பெரும்‌ தகையைப் போற்றிரு விலச்சினை முதலா–19-

மந்திர வுபதேசமும்புரிந் திவணீர்‌ வருதிரென்‌ றுரைத்திட விரைவிற் சிந்தையுள்‌ ளுவகை கொண்டன னிவணந் திந்த்ருணி யடியில்‌ வீற்‌றிருக்கும்‌ நந்த மதிறையாங் கொந்தவிழ்‌ குழலி னங்கை தன்‌ திரு வயிறுதித்த சுந்தர வதநற்‌ கவ்வணம்‌ புரிந்து தொன்னக ரடைந்தனன்‌ றூயோன்-20-

சங்கொடும்‌ புனிதத்‌ திகிரியும்‌ தாங்கித்‌ தயங்குறு மூர்த்த புண்டரனாய்‌
மங்கலி லதிதேயோ மயனாய்‌ நின்மலனுமாய் வீற்றிருந்தனனால்‌
பொங்கலைப்‌ புணரி நிலந்தனி புரக்கும்‌ புரவல னியற்றருந் தவத்தில்‌
வெங்கலி கரப்ப வந்தெழுந்தருளும்‌ விமல மெய்ஞ்‌ ஞான நாயகனே–21-

இருந்தரு டரவிங்கணை யிலான்‌ முன்ன ரெழுந்தன னுத்தரதிசை யிற்‌ றதா
பொருந்திய மதுர கவியெனும்‌ பெயர் கொள்‌ புனித மெய் யற நிலை பிறழா
வருந்தவ முனிவ னொருபக லிரவி லனை பிரிந்த லமருகன்‌ றின்‌
வருந்தியுள ளுருகி யணி திருக்கோளூர் வணங்கினன்‌ தென்றிசை நோக்கா–22-

நோக்கலு மிவணந் திருப்புளி யடியி னுவலருந் தகையின்‌ வீற்றி ருக்கு
மாக்கவி னிமல மாறனன்னவன்றன்‌ மணி விழி யிணையினுக்‌ கல்‌லாற்
றாக்குற வெவர்க்குந் தோற்றில னாகித்‌ தள தளப்‌ புடனெழுமுதைய
நீக்கருஞ்‌ சவி கொள்‌ கதிரெனப்‌ பொலிந்து நின்றிடக்‌ கண்டனன வனும்‌–23-

காண்டவச்‌ செழுமி னொளியிடுஞ்‌ சுடரைக்‌ கடிய வெங்கானக மதனிற்
றாண்டி நின்‌ றெரியு மங்கி கொ லலது தட நகர்‌ வேவுறக்‌ கனன்று
நீண்டு பற்றிடு செங்‌ கனல்‌ கொலோ வென்ன நெஞ்சயிர்ப்‌ புடனி ருந்தனனால்‌
மாண்டகு மினிய தமிழ் மறை யுரைத்த வன்றன தடி பணிந் துய்ந் தோன்‌–24-

இவ்வண மிரண்டு மூன்று நா ளளவா யெண்ணியு மவ்வொளி மழுங்கா
தவ்வண மிருப்ப வென் விழிப்‌ புலனுக்‌ கன்றிமற்‌ றியாவர்‌ கண்ணிணைக்கு
மொவ்வுத லின்றி யொளி யுட னிலங்க லென்னகொ லிதுவெனக்‌ கலங்கிச்‌
செவ்விய நெறிகொண்‌ முனிவரன்‌ பின்னுர்‌ திரு வினாயகன்‌ செய லென்னா.–25-

நன்றுகொ லிதனைக்‌ கண்ணுறி லழியா நவையிலா வொளியதா யிலங்கு
கின்றது கணமுந் தங்குறா விரைவிற்‌ கிளம்பியான்‌ சோதனை
சென்‌றிவ ணடைவ னெனத்திரங்‌ கொடுதொ றென்முக நோக்‌கின னெழுந்தான்‌
மன்றலந்‌ துளவத்‌ தாரினா னடியர்‌ மலரடி யன்‌றி மற்றுன்னான்‌–26-

உதைய வெங்கதிரி னொளி விடுஞ்‌ சுடரை யொன்றுற நோக்கியச்‌ சுடரே
சிதைவினன்‌ னெறியாக்‌ கொண்டிரா முழுதுஞ்‌ சென்று சென்றரும்பக றொருங்கண்‌
டதைமலர்‌ வளரச்‌ செயதிடை யுறு நற்‌ றலந் தொறுஞ்‌ சோதனை புரிந்து
புதை யிருட்‌ பிழம்பு சீத்தொளிர்‌ மாடம்‌ பொலி திரு வரங்கம் வந்தடைந்தான்–27-

அத் திரு நகரி லரங்கனை வணங்கி யற்றைய பகலினைக்‌ கழித்து
நத்தம் வந்தடைய வாய்ந்தன னவணந்‌ நகை விடுஞ்‌ சோதியே பின்னு
மத்திசை யொளிர வெழுந்தனன்‌ விரை விலடவி வெற்பகன்‌ றிருங் கரையைக் குத்திரு்‌ந் திரை கொள்‌ பொருனை சூழ்‌ தருமிக்‌ குருகை மானகரம்‌ வந்தடைந்தான்‌-28-

எழுந்தரு டரவு மவ்வொளி மறைய விரும்பல தருவினான்‌ மறைந்து
மழுங்கியது கொலோ வெனும்பினுந்‌ தென்பால்‌ வந்தனன்‌ வட புலத்‌ தொளிரத்‌
தொழுந்தகை யுடையவ்‌ வருந்தவ முனியித்‌ தொன்னக ரிடத்ததீ தென்ன
வழுந்தினன்‌ களியி லடைந்தன னிவணே யடைதலு மறைந்த தவ்‌ வொளியே–29-

வந்த வருந்தவ மாமுனி வோனு
மிந்த நகர்க்கு ளேதேனும்‌ விசேடம்‌
விந்தையி னுண்டுகொ லென்ன வினாவச்‌
சிந்தை யுவந்தனர்‌ செப்புவர்‌ மன்னோ,–30-

எந்தம்‌ விளங்கயி லேந்திறை வோனே சந்தத முஞ்செய்‌ தவத்தினின்‌ மாயோ னந்தமிலண்ணறன்‌ னின்னரு ளாலே மைந்தனும்‌ வந்து பிறந்தன னன்றே.–31-

தோன்றிய வன்று தொடங்கியி தீறா யான்ற வரும் பதி னாறெனு மாண்டாய்‌
வான்றழை வெஞ்சுடர்‌ வானவ னே போற்‌ கான்ற கவின்றிகழ்‌ காண்டகு மேனி,–32-

சற்றுமசைத்திலன்‌ றாமரை யங்க ணுற்று விழித்தில னொள்ளிய செம்மை
முற்றியவாயது மூடுத லின்றிப்‌ பற்றிழையான்‌ முலைப் பாலு மருந்தான்‌–33-

தீண்டரு மெய்த்தவ செப்பிய தன்றி யாண்டு தோறுங்கவி னங்கம்‌ வளர்ந்தே
நீண்டிட வோர்தரு நீழ லிடத்தே மாண்டக வைகினன்‌ மைந்தனு மன்றே.–34-

அன்றுமுதற்கொ டருந்திறல்‌ வேலோ னின்றள வாக வெழுந்தரு ளூன்போற்‌
சென்றவ ராய செழுந்தவர்‌ தம்மாற்‌ குன்றி னிதிக்குவை கொள்ள வளிப்பேன்‌.–35-

என்னவுரைத்தன னிந்நெடு நாளாய்த்‌ துன்ன வருட் கொடு பார்த்தனன்‌ றுய்ய
வன்னவ ராலு மசைந்தில னாக மன்னிய வின்னலின்‌ மாழ்கின னன்னோன்‌–36-

என்றுரை செய்தன ரின்றத னைப் போய்‌ நன்றறி வேனென நாறிய மாடங்
குன்றென நின்றொளிர்‌ கோமறு கின்கண்‌ சென்று நடந்தனன்‌ றீதில் குணத்தோன்‌–37-

வருந் தவனைச் செழு மாமறு கிற்கண்‌ டரந்தை யழுங்கினனன் னவர்காணா
இருந்தவெழிற் புயவேந்தலிடம் போய்‌ விரைந்தனர் சென்‌ற விளம்பினரன்றே.–38-

கேட்டள விற்பொன்‌ கிரிப்பெரு மொய்ம்பின்‌ வாட்டகை மன்னன்‌ மதிக்கடலாய
கூட்டவமைச்சர்கள்‌ கூட்டி வரத் தீ வீட்டிய லற்கெதிர்‌ மேவின னன்றே–39–

இந் நக ருக்குணி யெய்துற வென்றன்‌ முன்னரிழைத்த முதற்றவ மேயென்‌
றன்ன முனிப்பர னாய்மல ரன்ன மன்னுமடித்‌ துணையார வழுத்தி–40-

ஆக்கமு றும் முடை யார வொடுக்கி நீக்கரும்‌ வெந்துயர்‌ நீடின னிற்கும்‌
வீக்கவடற்புய வேந்தனை யன்னோ னோக்கின னின்று நுவன்றிட லுற்றான்–41–

நெய்கதழ்‌ வேலநின்‌ னெஞ்சிடர்‌ கொள்ளுஞ்‌ செய்கை யதென்ன கொல்‌ செப்பு தி யென்னப்‌
பொய்கை தனிற்பல புட் செறி பாண்டி மொய் கவினுற்று முதிர்ந்திடு நாடன்‌.–42-

மைந்த னிலாது வருந்திய தாதி யந்த மராத்தி லடைந்ததை யீறாய்‌
விந்தை யினங்கிடை மேவிய வெல்லாஞ்‌ சிந்தை மயக்கொடு செப்பினனன்றே.–43-

இந்த வாறிரு நிலந்தனி புரந்தரு ளிறையோன்‌ சந்த மாமுடி மன்னவன்‌ சாற்றின னிற்ப
வந்த மாமுனி யருண்முக நோக்கினராகி அந்த மாமதி யமைச்சர் நின்‌ றறைகுவர்‌ மாதோ,–44-

அரிய மாமறைப்‌ பொருளெலா மினிதுணர்ந்‌ தரியாந்‌ துரிய மால்பத மன்றி மற்‌ றுணர் தராத்‌ தூயோய்‌
விரிய காதமென்‌ மேலெழுந் துயரெனு மிகுந்த கரிய வார் கலிக்‌ கரை பெறாதுழன்றுயர்‌ கடையோம்‌–45-

களிப்பெனும்பெரு மதுக் கட லாழ் தரக்‌ கமலத்‌ தளிர்க்கு மெல்லடிக்‌ குமரனத் தருநிழல்‌ விட்டெங்‌
களிக்குலம்படு மாம்பலம்‌ போதினுக்‌ கரிய நளிக் கனிக்கிணை வாய்‌ திறந்‌ தொரு மொழி நவில–46-

விருப்புளிப்புரிரந் தருளுவ தன்‌ றிமேல்‌ வேங்கைப்‌
பொருப்பு விட்ட பைங்‌ரியெனத் தனியிடை பொலியுந்
திருப்புளித் தலத்‌ திருந்தெடுத்‌ தன்னை தன்‌ செமுலை
யருப்புளிற்பெரு கமுதுண வருள்‌ செய வேண்டும்‌–47-

இவ் வணம்புரி்‌ந் திடிலொரு சூச்சியு மேறாச்‌
செவ் வணந்திகழ்‌ சடிலசேகர வருந் திறலோய்‌
பவ்வ வெண்டி ரைப்‌ பரவை மா னிலந்தனி புரக்குங்‌
கவ்வை யின்னக ரன்புட னளித்தகங்‌ களிப்ப–48-

மண்டலேசுர ரனை வரு நின்னடி வணங்கப்‌
பண்டை யாய்வழி வருமுடி சூட்டினர்‌ பரவுக்‌
கொண்ட தோரரி யணைமிசை யிருத்தினங்‌ கொடியேந்
தொண்டு செய்தனம்‌ வருகுவ மென்றுபு சொற்றார்–49-

சொற்ற வம்மொழி யிரு செவி வெதுப்புறத்‌ தூய்மை
யுற்ற மாமுனி வரனவ னுறைவிட மதனை
யிற்றை நீரது காட்டுமி னிவ்வண மியற்றிப்‌
பிற்றை யானது கொள்ளுவ னென்மொழி பெய்தான்‌–50-

என்ற மாமுனி வரன்றனை மிறையவர்க்‌ இறையோன்‌
துன்று பற்பல மங்கல முரசினந் தொனிப்ப
நன்று கொண்டினி தேகியத்‌ தருநிழ னவையின்‌
றொன்றி வைகிய வொளியினைக்‌ காட்டின னுகந்தே,–51-

முன்னம்‌ தாயினை நீங்கிய முலை விடாக்‌ கன்று
பின்னம்‌ காண்குறு வகை யெனப்‌ பெய்யொளி பிறங்க
மன்லுர்‌ தாரு நன்‌ னிழலிடைக்‌ கதிரென வைகும்‌
பொன்னந் தேசினம்‌ மாறனைக்‌ கண்டனன்‌ புனிதன்‌-52-

வண்டு சூழ் மகிழ்‌ மாறனைக்‌ காண்டலும்‌ வதநம்‌
விண்டலர்ந்திட லாலவன்‌ முகமது விளங்கும்‌
புண்டரீகமென்‌ பத ற்குமம்‌ மாறனைப்‌ பொருவி
லண்ட யோனி யென்‌பதற்கு மிங்கைய மில்லம்மா–53-

மோன மாகியோகத்தினி திருந்தருண்‌ முதல்வ
னான நாதனைக்‌ காண்டலு மன்னவ னருளால்‌
ஞான முன்னைய துதயமா குற முனி நளினத்‌
தேனவாமலர்த்‌ தாட்டுணைச்‌ சடை முடி தீண்டி –54-

இப்பெருந்தனிச்‌ சோதியோ வென்றன திதயற்‌
துப்பனன்‌ மெழு கெனவுருக்‌ கியதெனுந் தூய
முப்பரஞ்சுடர்‌ தம்மிலு முதற் சுட ரிதுவென்‌
றப் பராங்குசன்‌ குணனெலா மெடுத்தெடுத்‌ தறையும்‌.–55-

கண்ணுகர்ந்தவர்‌ தம்மிலுங்‌ களி நறா வருந்தி
யுண்ணெகிழ்ந் து நின்‌றாடுறும்‌ பாடுறு முயர் யாழ்ப்‌
பண்னுலாமொழி நங்கை கொண் மகிமை யிப்‌ பரவை
நண்ணு மானிலத்‌ துற்றவர்‌ யாரென நவிலும்‌.–56-

அங்கு மிங்குமா யெழுந்தெழுர்‌ தேமுறு மமல
னிங்கு தோன்றுதற்‌ கெத்தவ மிழைத்த திவ்‌ வெறிநீர்‌
தங்கு மானில மென்னுமியான்‌ பெற்றிடுந்‌ தகையிற்‌
பொங்கு பேறியார்‌ பெற்றவ ரெனத்தனைப்‌ புகழும்‌.–57-

மருப்படுங்கம லாநந மலருமாநதந்தப்‌
பெருக்கி னீடுகட்‌ புனலிடை மூழ்குறும்‌ பிதிருந்
திருத்தகும்புய வரைகள்‌ பூரிப்புடன்‌ றிகழ
விருப்பினாற் புள காங்‌கித மடைதர வியக்கும்‌–58-

இத்தரைக்குள் யா னியற்றிய தவப் பல னின்றே
முத்தி யின்விளை யதனை யீந்தது வென மொழியும்‌
பித்தடைந்தவ ரென்ன மெய்‌ மறந்தளி பிதிருங்‌
கொத்து நன்மலர்‌ கொய்து கொய்‌தெறி தரு மன்றே.–59-

இவ்வணம்பர மானந்தக்‌ கடலத னிடையே
யவ்வரந்தரு முனிவரன்‌ மெய் மறந்‌ தாழ்ந்து
செவ்வை யின்னகந் தெளிந்து பின்‌ றோத்திரஞ்‌ செய்வான்‌
கொவ்வை வாயுடை நங்கை தன்‌ குலக்கொழுந் தனையே,–60-

செஞ்சுடர்‌ போலொளி செய்‌தே சுறு மெய்ப் பொருளே
மஞ்செனவே யணி சேர்‌ மானிற மெங்குரையாய்‌
விஞ்சகல் மார்பிடையே மேவி விளங்குறு பொற்
கஞ்சமலர்த் தவிசார் காரிகை மெய்த்‌ தவனே-61-

பொங்கட லாரவுணர்‌ பொயொழியப்‌ புவியில்‌
வெங்கதழ்‌ வாளமரில்‌ வீசு செழுந்திகிரி
சங்குட னொண் கதை வாள்‌ சார்ங்க மெனுந்தவர் மற்‌
றெங்கிவை வைத்தனையோ வென்றனை யாளொளியே–62-

மந்தர மாமலையின்‌ வாகொரு நான்கிலுனுங்‌
சுந்தர மோடடல்சேர்‌ தோளிணை பெங்கு கொலோ
இந்தள ராகமிசைத்‌ தின்னளி பல்லடருங்‌
கந்தமுறுந் துளவக்‌ கண்ணிகளெங்கு கொலோ–63-

பாதக வெவ்வீனைகள்‌ பாரிடம்‌ விட்டகலத்‌
தீதறு மெய்யறிவார்‌ தேசிடு மாதவனே
மாதக வாயுறுசீவத்ச மெனும் மருவும்‌
பீதக மெய்யொளி சேர்‌ பீடுடை யெங்கு கொலோ—64-

செஞ்சரண்‌ வீழ்சுரர் நோய்‌ தீர் தர மண் கொளு நாள்‌
விஞ்சகல்‌ வான்முகடுமே வர நின்றது தான்
எஞ்சலி னன் மணியா லிழை பல பூண்டிகழிக்‌
குஞ்சி கொலோ வழுதிக்‌ கோமகனே யுரையாய்‌—65-

நாடிய வாசமுறு நான நறுந் திலகம்‌
பீடிய லாவணியப்‌ பெய்யொளி செய்வது தான்‌
நீடிய வெண்ணிலவி னேரவிர்‌ புண்டரமரர்‌
கோடிய செம்பிறை நேர்‌ கொண்டொளிரிந் நுதலே—66-

அண்டர்‌ தொழக்குளிர வன்றருள்‌ செய்தது தான்‌
வண்டலர்‌ செங்கமல மான மிளிர்ந்தரிகள்‌
கொண்டு பரந்தணிசேர்‌ குழைகளி னோடி சலிக்‌
கண்டவர்‌ கண் கவரிக்‌ கண்ணிணையே கொலரோ–67-

கோவியர்‌ மத்தளைபால்‌ கொண்டினி துண்டது தான்‌
காவிய நீள் விழி நங்கைக்குயர்‌ மாமதலாய
தூவிய னற்பவளத்‌ துண்ட மிரண்டதனைச்‌
சீவியிணை த்ததெனத்‌ திகழுமிவ்‌ வாய் கொலரோ–68-

முன்னொரு வாரணமே முலமெனுஞ் சொலையே
மன்னுற வேற்றத தான்‌ மா மறை யாலுணராய்‌
நன்னய நான் மகர குண்டல நின்றினிதூ
சன்னளி யாடுறமிக்‌ காது கொல்‌ சற்றுரையாய்‌–69-

விழுத்தகு வால் வளையை வென்‌று பசுங்கமுகிற்‌
பழுத்தணி கொண்டு பள பளப் புட னோங்குறுமிக்‌
கழுத்து கொ லண்டமெலா முண்டு களித்ததுவே
கொழுத்தலை மண்டு புனற்‌ கூர் பொருனைத் துறையாய்‌–70-

விண்ணவருக்கனிய வெண் சுதை யீந்தருள்வான்‌
தண்ணலையைக் கடையுஞ்‌ சார் தகை யுற்றது தான்‌
வண்ணமுறுங் கிரிபோன்‌ மல்லோடு பேரணியு
தண்ணிய விப்புயமோ நங்கை கண்‌. மா மணியே,–71-

சந்தமுறும்பசிய தாமரை யோடிகல
விந்தை சின்‌ முத்திரையை மேவிய விக்கரமோ
நொந்தக நைந்தரனார்‌ நுன் சரணே சரணாய்‌
வந்தடி வீழ்தருமுன்‌ மாபலி யிட்டதுவே,–72-

துண்ட நறுந்துவரோ தூய்மை யருங் கமலம்‌
விண்டிதழோ வெனவே விளங்கணி யிவ் விரறான்
மண்டு நிரைக்குலம் விண்‌ மாரி நெருங்குதலைக்‌
கண்டழு கால் வரையைத்‌ தாங்கி யளித்ததுவோ–73-

நிம்பவலங்கலொடு நீண் மணி யார முநி
ரம்பி நிதிக் கிரிபோ லகன்றொளி ரிம் மருமப்‌
பம்பிடமேகொலரும்‌ பைங் கமலத்திடை வாழ்‌
வம்பு மலர்க் குழலாள்‌ வாழ்வினுகக்குமிடம்‌–74-

குயிற்றிட மேதினியிற்‌ கோதறு மெய் யறிவைப்‌
பயிற்றிட வேவிய வெம்‌ பரம்பொருண்‌ முத்திரையைக்‌
கயிற்றிட மேகொளிறை கவின்மிக வார்ந்தொளிரிவ்‌
வயிற்றிட மேகொலுயிர்‌ வைத்து வளர்த்ததுவே–75-

அங்கம லாதனனை யன்றருள்‌ செய்தது தான்‌
துங்கம லாதவனார்‌ தோன்றின ரென்ன வொளி
பொங் கமலாதடையிற்‌ பூம் புனலிற் சுழிபோற்‌
பங்கம லாதளிசேர்‌ பாவுமிவ்‌ வுந்தி கொலோ–76-

பார்த்தனணிந்த செழும்‌ பைந் தொடை யுங்கனத
தீர்த்தமு மன்றரனார்‌ செஞ்சடை மீதுறவே
சேர்த்தது தானெழிலச்‌ செய்ய மலர்க் கழலோ
நீர்த்தல மேழிலுமே நின்ற புகழ்ச்சுடரே.–77-

ஏறுட னம்பதும விரேகை பரந்த மலர்‌
வீறுகெடுத்து மணி மேவி யடைந்தவர் நோய்‌
மாறுபடுத்தி யருண்‌ மா மலரிவ்வடியோ
வீறிலிரும் புவி மண்‌ டாவி யளர்ந்த துவே,–78–

சேய மணிச் சடிலச்‌ சேகர னிவ்வனமா யேயரியன்‌றி விழி யேனெனு மக்குறியே மேயவனாகிய நா வீறனை யுன்றனரு மாயமதைத் தெரியும்‌ வல்லவர்‌ யார் கொலெனா-79-

பற்பல தோத்திரமுஞ்‌ செய்து பரன் செயலைக்‌
கற்புடை நங்கை முதல்‌ கண்டு மகிழ்ந்திடுவான்‌
சிற்பரனுக்கணிசேர்‌ செவிப்புல னுண்டுகொலென்‌
றற்பக நின்றெழவே யம்முனி வோரிறையே–80-

அடுத்த திரைக்கடன் மண்‌ ணதிர்ச்சி மிகுந்திடவே
யெடுத்தோரிருங்கலை முன்‌ னே யெறியக்‌ குணமே
கொடுத்தருள்‌ செய்தெளியேங்‌ கோது தொலைப்பவனுந்‌
திடுக்கென வேவிழிக டிறந்தன னோக்கினனால்‌–81-

நீக்கமருங்களியி னாழ்ந்தன னின்றெ வரு
நோக்கினர்‌ மன்னுறவே நோன்மையி னேழுலகு
மாக்கிய நல்லிசைகொ ளவ்வரு மா முனிவன்‌
வாக்கிவ னுக்குள கொலென்‌று மகிழ்ந்தனனாய்‌-82-

சித்தின் வயிற்றிடையே சிறிய துதித்திடிலே
யெத்தை யருந்தியது வெங்கு கிடக்குமென
வத்தை யருந்தியது வங்கு கிடக்குமென
வித்தக னன் பொடுவாய்‌ விண்டுரை செய்‌ தனனால்‌ -83-

அதுல னுரைத்திடு மம்மொழி தன்செவி யடையா முன்‌
மதுர கவித்தவ னெந்தை யடித் துணை மலர் வாழ்த்திச்‌
சதுமறை யுட்பொருண்‌ முற்றுமோ ரிம்மொழி தனிலொன்றி
யது வென வுட்கொடு கந்தன னங்ங னிருக்குங்கால்‌–84-

வந்தடி சென்னி புனைந்தவர்‌ வெவ் வினை மருவாதே
விந்தையி னின்ப முகந் தரு ணன் மகிழ்‌ விரை மார்பன்‌
இந்தை யுவந்து விளம்பிய வம்மொழி செவியோரா
வந்தர நின்று பொழிந்தனர்‌ விண்ணவ ரலர்மாரி-85-

மல்லட ரும்புய நின்மல னன்று மகழ்ந்தீயு
நல்லமு அண்டு வியந்தவி ணும்பரி னனியேயு
மல்லலெனுங்கட றன்னி லழுங்கிய வனைவோருஞ்‌
சொல்லமு தஞ்செவி யுண்டு களித்தனர்‌ துணிவுற்றார்‌–86-

எத்திசை யுந்தனி நின்று புரந்தரு ளிறையோனோ
டுத்தி யுறும் பணி நுண்ணிடை நங்கையு முடனாகப்‌
பித்தரெனும்படி தம்மை மறந்தனர்‌ பேரோகை
யத்தி யழுங்‌கி மயங்கி யுணர்ந்தனராய் நின்றே-87-

அங்கை யெனும் மலர்‌ சென்னி புனைந்தன ராயம் பொன்‌
றங்கிய செஞ்சடை கொண்டெழுமம்முனி தனையார
வெங்கடம்‌ வெந்துயர்‌ மங்க வெழுந்தரு ளிறைபோற்றி
யங்கச னுந்திய வெஞ்சரம்‌ வெனறவ வருள் போற்றி–88-

வய்யக மெங்கு மலிந்து பிறங்கிசை வளர்ந்தோங்கப்‌
பொய்யிலருந்தவ மெண்ணில்‌ புரிந்த புனித போற்றி
வெய்ய கொடும் பவ மெவ்வுயிரும் விட மேவாவந்
தய்யமறும்படி மெய்யறி வின்‌றருளடி போற்றி-89-

என்று வணங்கெ ருள்ள நிரம்பி யெழுந்தோகை
யொன்றுற நின்றிட மன்ற லுறுங்குழன்‌ மட மாதர்‌
வன்றிறலின் மணி மண்டபமெங்கு மலிந்தோங்கிக்‌
குன்றின் மிகுந்தெரு வெங்கு முளங்களி கொண்டாராய்‌–81-

விந்தையலங்கிர்த நன்கு புரிந்தனர்‌ மென்மேலுஞ்‌
சந்தன நன்புனு கின்பணி நீர் மலர்‌ தயிர் நெய் பால்‌
புந்தியிலன்பு மிகுந்து பொழிந்தனர்‌ பொருவில்லா
மைந்தனுதத்தரு ளன்றினு மினறெண்‌ மடங்காக,–82-

இவ்வண மெண்ணி லருந்தகை யந்நக ரெல்லோரு
மெவ்வமி லுள்ள மகிழ்ந்தனர்‌ வைகுற விகல் சேருந்‌
தெவ்வர் கடம்முயிர்‌ தனஜொளி மண்டிய திறல்வேலான்‌
முவ்வுல கும்புகழம் முனி தன்னடி. முடி தாழ்ந்தே–83-

மின்னவிருஞ்சடை மன்னு மருந்தவ வினையேன் முன்‌
சொன்ன வணந்திரை மண்டி யெழுங்கடல்‌ சூழும் பரர்‌
நின்னததன் கண்‌ மலிந்து பிறங்கிய நிதி யெல்லா
முன்னது வின்று நீ கொள்ளுதி யென்றவனுரை செய்தான்‌–84-

அவ்வுரை தன்னை யுணர்ந்து மறிந்தில னெனவே யவ்‌
வெவ்வமி னன்னெறி கொண்ட வருந்தவ னிடை வைகப்‌
பவ்வவருங்கடன்‌ மண்டனி நின்றளி பகல் வேலான்‌
செவ்விய வன்னவன்‌ முன்பினு மின்னுரை செய்வானால்‌–85-

இன்று கொடும்பவ வல் வனை யேன் சொலை யேறாதே
யொன்றிய தென்னென வன்பு மிகுந்தன னுரைசெய்யத்‌
துன்றிய மின்னவி ருஞ்சடை கொண்டு துறந்தெல்லாம்‌
பின்றவ நல்விர தங்கொ டெழுந்தவர்‌ பிழை யில்லோய்‌–86-

மன்னவர்‌ தம் வினை கொண்டு மகிழ்ந்திட வகை நன்றோ
வின்னமு துண்டவர்‌ வெங்கடு வுண்பர் கொலெனவே முன்‌
றென்ன முகந் தனில்‌ வெங்கதர்‌ கண்டெழு சீராளன்‌
சொன்ன துணர்ந் தெழின்‌ மன்னவர்‌ மன்னவன சொல் வானால் –87-

சங்கென வெண்ணில வுந்தி யிலங்கு பறவ யோகி
ருங்குல தன்மமி தென்னிலெ மைந்தனை யுற நன்றாய்ச்‌
செங்கனி மென்றுவ ரென்ன விளங்குறு செவ்வாயை
யிங்கு திறந்து சொ னன்கு மொழிந்திட விறை செய்யா–88-

அப்புமலர்க்சண்‌ விழித்திட வின்னுமதருள் செய்தே
யொப்பிலிவன்‌ றனை யன்னை முலைப்பய முண வோங்கு
மிப்புளி நின்று மெடுத்தெமிடந் தனி லினி தீந்து
செப்பரு வாழ்வை யளித்தரு ளென்றுரை செய்தானால்‌-89-

திரு மதுரகவிப்‌ படலம்‌ முற்றும்‌.

பதின்மர்‌ திரு வரன் முறைப்‌ படலம்‌

ஆடரவத்‌ தமளி துயி லரங்கன் செய்ய வடி பரவக்‌ கூரேச னடைய மேலை
வீடுமக்கின்‌ றளித்தனமென்‌ றரங்கன் சொல்ல விபுதனென்‌ சம்பந்தா சம்பந்திகட்குன்‌
நாடிடந் தந்தருடி யென வுரைத்‌துக்‌ கைக் கொ ணன்மையிற்‌ காடாயமுயர்‌ நனிவீ செந்தை
சேடமுனி கழல் பணிந்து பதின்மர் தங்க டிரு வரன்முறைப்‌ படலஞ்‌ செப்புவாமால்‌–1-

இன்னணங்‌ குரிசி லுரை செவி யுணர்ந்தாங்‌ கேதிலாத்‌ தவமுனி யுகந்து
தென்னனின்‌ மகவென்‌ றுள்ளினை யதுவோர்‌ தேவரா சியமெனத்‌ திரண்ட
கன்னவிறிறற்‌ றோட்‌ காளைமன்‌ மதுர கவி யடி பணிந்ததை யருடி
யென்னலு முன்னாண்‌ டறிந்தவை முழுது மியம்பின னெவர்களு மறிய–2-

தாதளைந்தின வண்‌ டூது பைந் துளபத்‌ தாரினன்‌ கரைக்கள னூர்திப்‌
போதவற்‌ கரு நான்‌ மறையன வடிவிற்‌ போதமுற்‌ றிடவருள்‌ புனிதன்‌
ஆதவனெளி கெட்‌ டிர வுறப்‌ பகலி லாழி கொண்‌ டெறி தருக படன்
வாத முண்‌ ணரவப்‌ பணாடவி நடித்த மாயவன்‌ பர வாசு தேவன்–3-

செங்கதிர்‌ மதிமின்‌ மினியென வொளி கொள் சேணுறு நித்தியரான்றிப்‌
பங்கய னரனிந்‌ திரன் முத லறியாப்‌ பதத்தவ னுள்மகிழ்ந்‌ து லகோர்‌
நங்கழ னிலைபெற்‌ றின்புற வவர்த நவை கொள்வெவ்‌ வினைத் தொட ரகலச்‌
சங்கையி லவதாரங்கள்‌ செய்துரைத்த சது மறை விதி வழி யனைத்தும்‌-4-

கற்றிடற்‌ குரிய ரெவர்க்கு முட்‌ பொருள்கள்‌ கசடற வெளிப்பட லரிதாய்‌
மற்றுளோ ருள்ளற்‌ கறமில தாகி வழங்கலி லவரெவாறுய்வார்‌
இற்றை நாடொடங்கி யாவரு மஃதை யெளிதினி லறிவதற்‌ கினிய
சொற்றருந் தமிழி லருமறைப்‌ பொருளைச்‌ சொற்றிடி லுய்வரென்‌ றெண்ணி-5–

பைத்தலை யரவுக்‌ கரசனோ டினிய பரிகர மனைத்தையும்‌ விளித்தங்
கத்திசூழுலகின்‌ முன்பினு மமிச மவதரித்‌ திடப்புரிந் தறநூன்‌
முத்தமிழதனிற்‌ றெளிதரப்‌ பொருளை மொழிந்து வெம்‌ பிறமத நெறிகொள்‌
சித்தர்களெளிதிற்‌ பரமிதென்‌ றறியச்‌ செய்திடச்‌ செவ்லியிற்‌ செய்மின்‌–6-

என்றவர்க்‌ குரைத்திவ்‌ வுலகுயக்‌ கருது மெம்பிரான்‌ சரபசங்கார
வென்றி கொளுகிரி னரகரி யெனுமம்‌ மேதகு விமலனுள்‌ ளுகந்தே
இன்று நீ செய்த தவத்தினு முன்னா ளெய்து மாதவத்தினு முனக்கு
மன்றலங்‌ குழவி யெனப் புகழுடைபோய்‌ மலடற வுதித்தன னென்‌றான்‌–7-

மாமுனி யுரைத்த வுரை செவி யுணரா வாம்பரி மன்னர் கோனயந்து
தேமலர்த்துள வினானருட்‌ பெறுமச்‌ சேடன் மற்‌ றுள பரிகரங்க
டாமினி துதித்த தெவ்விட மவர்கள்‌ சாற்றிய நூல்கள் யா வெனவும்‌
நாமவேன்‌ மன்னா நினக்கறி வுறயா னவில் குவ னென நவில்குவனால்‌-8–

முதலாழ்வார்கள்‌

தண்டுழாய்‌ மார்பன்‌ பாஞ்ச சன்னி யாழ்‌ வானு மிந்தத்‌
தொண்டை மானிலப்‌ பெண்‌ கண்டந் துலங்கு மங்கலமே யென்ன
வண்ட மொடிலகு மிஞ்சி யத்திமா நாகந் தன்னுட்‌
கொண்டலார் கலியென்‌றுள்ளிக் குளிர் புனற் பருகும் பொய்கை–9-

தோடலவிழ்ந் தொழுகு செந்தேன்‌ றும்பிதங்ளேயோ டுண்டு
பாடொலி கறங்குஞ்‌ செய்ய பங்கய மலரினுள்ளே
கேடி றுவா பராந்தங்‌ கெழு முசித்தார்த்தி தன்னி
னாடுமைப் பசியிற் சுக்ல பக்கமு நயந்த காலை–10-

ஓணமோ டார னன்ன ளொன்றிய தினத்தி லாங்கு
மாணமர்‌ குழவி யாயவ்‌ வளநகர்‌ வதிந்து நாம
நீணிலத்தவர்கள்‌ பொய்கை யாரென நிகழ்த்த மேலோர்‌
பேணிய புவிகள்‌ முற்றும்‌ வலஞ் செய்வான்‌ பெயர்ந்தான ன்றே–11-

திண்டிறற்‌ கதையு முன்னஞ்‌ செப்பிய திருநா டுள்ளே
வெண்டிரைக்‌ கரங்கண்‌ முத்தம்‌ வீசுமம்‌ புதிக்கங்‌ குற்ற
துண்ட வெண்‌ பிறை யோனென்னச்‌ சுதையவிர்‌ மாட மல்லை
வண்டிமிர்ந்‌ தடருத்யான வனத்துறு குருக்‌கத்திக் கண்‌–12-

வாய்ந்த பொன்‌ மலரிலக்த யுகமொடு வருட மாதத்‌
தேந்திடு புதன விட்டத்‌ திளமக வுருவாய்‌ நாம
மாய்ந்த பேருலகர்‌ பூதத்‌ தய்யனென்‌ றழைக்க முன்னீர்‌
தோய்ந்த மாநில மன்னோனும்‌ வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–13-

நாந்தக மதுமுன்‌ சொன்ன நாட்டெறி கடற்‌ கரைக்கண்‌
மாந்தளி ரனைய மேனி மாதரார்‌ மயிலை தன்னிற்‌
பாந்தளிற்‌ பயிலு மாதி கேசவப்‌ பெருமாள்‌ கோயி
லேய்ந்த நீள்‌ புனல் கொள்‌ கூபத்‌ திருந்த செவ்‌ வல்லிப் போதில்‌–14–

முன்னிருவருக்கு மாங்கு மொழி யுக வருட மாதம்‌
தன்னிலந்‌ தசமி பொன்னாட்‌ சதையம்‌ வந்‌ துதித்த நாம
மின்னிலத்‌ தவர்கள்‌ பேயரென்றிட முதிர்ந்த ஞான
மன்னியவாறு பூமி வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–15-

முனம் புவி வலஞ் செயச் சென்‌ மூவரிற்‌ பெரியோன்‌ செய்யி
லனம்பயில்‌ கோவ லற்றோ ரம்மையார்‌ மனைக் கண்‌ சென்றித்‌
தினந்துயில்‌ வுறவெற்‌ கும்மி லிடமருள்‌ செய்வீ ரென்ன
மனமகிழ்ந் தவளத் தொண்டன்‌ மலரடி பரவிச்‌ சொல்வாள்‌–16-

அய்யவிக்‌ குடிற்கு டிண்ணை யொருவருக்‌ கணையா மற்று
மெய்யவரிருவராகில்‌ வீற்றிருந்‌ திடலா மூன்று
துய்யவராகின்‌ மாயன்‌ றொடர நிற்றிடலா மென்னப்‌
பொய்யிலாள்‌ மனைக்கு ளன்பிற்‌ புகுந்து கண்டுயிலுங்‌ காலை–17-

பூதமா முனிவ னின்னோன்‌ போலவே வினவி வந்தம்‌
மேதகு விமலனோடு வீற்றிருந் தருள மற்றும்‌
கோதிலா னொருவ னன்னோன்‌ போல மேய்‌ வினவிக்‌ கூட
வேதிலார்‌ மூவராகி யிசைந்து நின்‌றிடு மவ்வேலை–18-

நள்ளிருட்‌ பிழம்பி னாங்கு நனிபடர்‌ தர வவ்வேலை
கள்ளிருந் தொழுக வண்டர்‌ காமரு பெடையோ டுண்டு
கொள்ளரும்‌ பார்ப்பு முண்ணக்‌ கொடுத்‌து வாழ் துளவக்‌ தெந்தை
ஜெள்ள லாரிடைக்க ணின்று நெருக்கிட வவருஞ்‌ சொல்வார்‌-19-

அய்ய மூவரின்‌ முன்னோனங்‌ கடை தரு மிருட்குலங்க
ணைய வென்‌ றாழி யான்ற னளீரடிக்‌ கமலப்‌ போதில்‌
வையமோர்‌ தகழி யாக வாரிதி நறு நெய்‌யாக
வெய்யவன்‌ விளக்கதாக விருப்புட னேற்றினானால்‌–20-

பின்பிரு வருக்குண்‌ முன்னோன்‌ பேரிருட்‌ பிழம்பு துஞ்ச
வன்பொரு தகழி யாக வார்வமே நறு நெய்‌யாக
வின்புறு சித்தை யந்நெய்‌ யிடுதிரி யாகப்‌ போத
நன் மணி விளக்கதாக நாரணன்‌ கழலிற்‌ சூட்ட–21-

துன்னிய விருள் கணீங்கித்‌ துளவினான்‌ கலுழன்‌ மீதங்‌
கன்னவர்க்கெதிரில்‌ காட்சி யளித்திட வவருட்‌ பின்னோன்‌
மன்னிய திருவைக்‌ கண்டேன்‌ மாசில் பொன்‌ மேனி கண்டேன்‌
பின்னுமைம்‌ படை கைக்‌ கண்டேன்‌ பேரருட்‌ கடலென்றோதி –22-

மூவரொன்‌ றாகி யார்க்கு முதல்வனை வித யீசற்குந்
தேவனைக்‌ கமலவீட்டுச்‌ செல்வி நாயகனை வாழ்த்தி
மேவுபு வணங்க யன்னோன்‌ விரிபுகழ தனினெஞ்ச
வாவுற வேதாந்தார்த்தம்‌ வண்டமிழ்த்‌ தொடை செய்தாரால்‌–23–

அத்திரு நாட்டில்‌ மாயன்‌ நிருவாழி யாழ்வான்‌ மெய்யர்‌
நித்தமைந்‌ தழலை யோம்பு நீணகர்‌ மழிசை தன்பாற்‌
பத்துடை யடியர்‌ மேலாம்‌ பார்க்கவ ரிடி தன்றேவி
மைத்தகோ திசுக வின்சொற்‌ கனகாங்கி மணி வயிற்றில்‌–24-

செப்புறு விபவாப்தத்துட்‌ செயிரறு மகர சுக்லத்‌
தொப்பறு தசமி பொன்னா ளுற்றிடு மக நாளெங்கு
மற்புத மெனவோர்‌ பிண்ட மாய வதரிக்க நொந்தம்‌
மைப்படி குழலியோடவ்‌ வரமுனி யதை யெடுத்தே–25-

வனத்துறு யிரப்புத்‌ தூற்றில்‌ வைத்தவ ரேகப்‌ பின்பு
வனத்துளோர்‌ தமைப்புமக்கு மலரவ ளருளினாலே
வனத்துறு புணரி சூழ் குவலயமா ததனைக்‌ காக்க
வனப்புறு குழவி போல வடிவமைந்‌ தழுமவ்‌ வேல்வை -26-

அந் நக ருறையு நெய்யா ராழியா னறிந்து சென்று
தன்னிரு கண்களாரத்‌ தழிஇய ருளமுத மூட்டி
மன்னு தன்‌ வடிவு காட்டி மாயனுண்‌ மகிழ்ந்து போய
பின்னரம்‌ மகவு தாயைப்‌ பிரிந்த கன்‌றனைய வேங்க -27-

அற்றைநா ளரிதா சென்னு மருட்டிரு வாள னென்னும்‌
வெற்றி வேந் தொருவ னன்பின்‌ மேவவவ்‌ வனத்து முன்செய்‌
நற்றவ மதனாற்‌ கண்ட நாகிளங்‌ குழவி செங்கை
பற்றி யுண்‌ மகிழ்தன்‌ றாரப்‌ பங்கயச்‌ செல்விக்‌ கீந்தான்‌ -28-

கொந்தவி சளக பாரக்‌ குவிமுலை மடமா னோக்கி
வந்தியா கையிலன்‌ போடு வாங்கி யுள்‌ளு வகை பொங்கக்‌
கந்துக நகிலங்‌ கொண்டு கான்முளை மலர்‌ வாய்‌ வைக்கச்‌
செந்தளிர்‌ மேனி கொள்ளச்‌ செல்வனும்‌ பருகா துற்றான்‌ –29–

என்ன காரணமோ வென்றங்‌ கிருவரும்‌ வருந்தா நிற்க
மன்னுமவ்‌ வூரினான்காந் வருணத்தோர்‌ திருமா னேய
னுன்னி யிப்‌ புதுமை கேளா வுளங்கனிந் தினிய தீம்பால்‌
கன்னியங்‌ குழவிக்‌ கென்று காய்ச்சிவந் துதவ வுண்டான்‌–30-

நாடொறு மன்பி னன்னோ னல்க வுண்‌ டிடுமோர்‌ நாளிற்‌
கோடிலா னுளமீ தென்றுட்‌ குறித்ததி லிறையுட்‌ கொண்டிச்‌
சேடமுண்‌ டிடினிற்‌ கொன் போற்‌ சிறுவனுண்‌ டாகு மென்ன
நீடிய களி கூர்ந்‌ துண்டந் நேயனுங்‌ குழவி யீன்றான்‌ –31–

மண்ணுளோர்‌ புகழப்‌ பன்னீ ராண்டவண்‌ வதிந்து வெவ்வே
றெண்ணமுற்‌ றிதர மாய சமயம தியல்பு கோக்க
நண்ணியங்‌ குளதே வெல்லா நலிதர வறிதல்‌ காணப்‌
பண்ணவ னாழி யானே பரமென வுறுதி கொண்டே –32–

மருமலர்‌ நறவ மாந்தி வண்டிமிர்ந்‌ தடருஞ்‌ சோலைத்‌
திருவலிக்‌ கேணி தன்னிற்‌ சென்ற மெய்ப்‌ பொறி யடக்கிக்‌
குருமணி வண்ண னுன்னிக் கொடுந்தவ முஞற்று நாளி
லெருது வெந் கொடு முக்‌ கண்ணா னெய்தின னுமை யோடன்றே–33-

வெறுமையா லறுவை கீறி வேளை போக்கிடப்‌ பொருத்து
மறிஞரை யுமைகாண்‌ குற்றிவ்‌ வறியனுக்‌ கருள்வா யின்று
தறுகண்வெங்‌ கயத்தோ லன்பா சார்ந்தென மறுக்கத்‌ தாழ
மறுவிலான்‌ முனவன்‌ நண்ண மதித்திடா திருந்துந் தேறான்‌ –34-

மாசிலாய்‌ நினது ளென்சொல்‌ வழங்குவ னெனவீ டென்ன
வாசிலா ததற்கு நாமோ ரதிகாரி யில்லை யென்னத்‌
தேசிக னகைத்தாங்‌ கேநின்‌ சீர்மை யிக்கலை பொருத்து
மூசிபோம்வழி நூலேனு முடன்‌ செலற்‌ குதவா யென்ன –35-

முக்கணான்‌ பரிகசித்தா னிவனென முனிந்து வெய்ய
வக்கனிக்‌ கணை விழிப்ப வவன்றவத்‌ தழலை யேவ
விக்கி நொந்‌ துயரேழ்‌ மால் பெய்‌ வித்‌ தும தவியா தெண்ணி
நக்கனும்‌ பக்தி சார நாமமிட்‌ டேகினானால்‌–36-

இத்தகை மழிசை வேந்த னிணைமரு திறுத்த வேந்தே
மத்தளை தயிர் பாலுண்ட மாயனே பரனென்றோ துந்
தத்துவப்‌ பொருளு மாறு சாத்திரப்‌ பொருளு மோர்ந்து
முத்தமிழதனில்‌ யாரு மொழி தரப்‌ புகன்றான்‌ மாதோ –37–

காரமர்‌ மேனி நங்கள்‌ கண்ணனின்‌ கவுத்துவாம்சத்‌
தார் கலி பரசு ராம னாணையி லொதுக்கித்‌ தந்த
கேரள நாட்டு மாதர்‌ கிளரொளி வதன நோக்கி
மாரவேண்‌ மயல் கொள்‌ வஞ்சிக்‌ களநக ரரசுகந்து–38-

அகனில முழுதுமோச்சு மரசனாங்‌ கொருவன் பால
வுகமுறு பராபவத்து ளோங்கிய மாசிச் சுக்லத்‌
திகல் கெடு தசமி பொன்னா ளெய்திய புனர் பூசத்திற்‌
பகலவ னொளியே யன்ன பைங் கதிர்க்‌ குழவியானான்‌–39-

சேரனுக்‌ கிள வலாகச்‌ செனித்‌ துவெண்‌ டிருமண் காப்பு
நேர்கொள் வைணவர்க ளோடு நித்தலும்‌ ராம காதை
யோரு நாட்‌ கரனோடெந்தை யொருவனாய்ப்‌ பொருதுங்‌ காதை
போரவு மொழியக்‌ கேட்டுப்‌ பொருதுவன்‌ கரனோடென்‌றே –40-

வழிகொடு கடந்த போத மைச்சரான்‌ மறை வலார்கள்‌
பழிபடு கரன் மற்‌ றுள்ள பரிகர மழிந்தாரென்று
மொழி தரு காதை சொல்ல முழக்கு பேரிகையை யென்‌ று
கழுகுலா மயிற்கை வேந்தன்‌ களிப்புடனிருந்தானம்மா–41-

இன்னவா றியைந்த வாய்மை யேதிலா வுழைய ரோர்ந்து
மன்னனுக்‌ கிவ்வா றோதும்‌ வைணவர்‌ நீக்க வென்று
ளுள்ளியவ்‌ வினன் செய்‌ பூசைக்‌ குரிய தென்‌ னரங்கன் சாத்தும்‌
பொன்னணி யாரந் தாமே கவர்ந்து பின்‌ புகலலுற்றார்‌–42–

கடகரி மருப்பொசித்த கண்ணன்‌ முத்தாரந்‌ தன்னை
மட மிலா விபுதராநின்‌ வைணவர்‌ கவர்ந்தா ரென்ன
வடலரசவர்கள்‌ செய்யா ரென்றுரை யாடிப் பாந்தட்‌
குடமதுட்‌ கையிட்‌ டன்னோர்க்‌ குறுதியே கூறினால்‌–43-

இனையன விழைத்த பேர்க ளுழையரென்‌ நினனுளெண்ணி
வனமணி மார்ப னெந்தை மாமதி லரங்க மேவித்‌
தனைக் குல சேகராழ்வா ரென்று பேர்‌ சாற்றப்‌ பெற்று
முனமுள ராம காதை மொழிந்தனன்‌ றமிழி லன்றே–44-

கள்ளவி ழளகபாரக்‌ கடைசியர்‌ களை கொய்‌ வேலை
பள்ளநீர்ப்‌ பழன முற்றும்‌ பங்கயல்‌ குமுத நீலத்‌
தொள்ளிய வுருவிற்‌ காட்ட வோதையிட்‌ டலமார்ந் தெங்குங்‌
கொள்ளை வண்‌ டுள மயங்குங்‌ கோமகன்‌ வழுதி நாட்டில்‌–45–

அல்லியங்‌ கோதை மாதரகனிலா மணி மாடஞ் சேர்‌
வில்லிபுத்தூரின்‌ மெய்ய விப்பிரர்‌ குலத்து முன்னஞ்‌
சொல்லு நற்‌ குரோதனத்திற்‌ றோன்‌றிய மிதுன சுக்லச்‌
செல்வ நற் பலகோளேகாதெசிகொள்‌ ஞாயிறு நன்னாளில்‌–46-

சோதிநாட்‌ கருடன்‌ சேயாய்ச்‌ தோன்றியப்‌ பருவஞ்‌ சென்று
நீதி நூ லனைத்தும் மோர்ந்து நிலமலர நந்தனான
வாதிமா லடியர்‌ தம்பா லன்பு பூண்‌ டவன் பதத்திற்‌
போது நந்தவனம்‌ வைத்துப பூந் தொடை யளித்து வந்தான்‌–47-

ஆவலிற்‌ றுளபமற்று மமுதுகு மலர்கள்‌ கொய்து
மாவல மார்பன்‌ செய்ய மலரடி சூட்டு நாளிற்‌
சீவல தேவனென்னுந் தென்னர்கோன்‌ பரமதாய
தேவினைத்‌ தெரிவா லுள்ளந்‌ திகைத்திருங்‌ கவலை பூண்டே–48-

ல்வியின்‌ முதிர்ந்து ஞானக்‌ கடலெனக்‌ கருணை பூத்த
செல்வ நம்‌ பியினைக் கூவித்‌ தேவினுட் பரமீதென்று
சொல்வதற்‌ குலகுளோரிற்‌ றுளக்கறு மறை மற்‌றுள்ள
பல்வகை நூல்களாய்ந்த பாவலர்த்‌ தேர்மினென்றான்‌–49-

இன்னிலத்‌ தியாவரேனு மிணையிலாப்‌ பரமீதென்று
நன்னெறி மநு நூன்‌ மற்று நான் மறை யெவையாலேனு
மன்னிடப்‌ பிரதிபாதிக்க வல்லரே லளவிலிந்தப்‌
பொன்னுறு கிழி யறுத்துப்‌ போவரென்‌ றறிவித்தானால்‌–50-

கற்றறிவாளர்‌ பல்லோர்‌ கசடற வறிந்தீ தென்று
சொற்றிடற்‌ கரியதாகச்‌ சோர்வுறப்‌ புதுவை வாழு
மற்றுறந்‌ திடவென்‌ றோட்டும்‌ வடபெருங்‌ கோயிலுள்ளா
னற்றை நா டொடையல்‌ சூட்டவ்‌ வன்பனின்‌ கனவிற்‌ சொல்வான்‌–51-

வார்ந்த வேல்‌ வழுதி கூடன்‌ மன்னர் கோன்‌ பரமீதென்‌ று
தேர்ந்திட வறிவிப்‌ போரிக்‌ கிழியறச்‌ செய்வாரென்‌ று
நேர்ந்தவ னாற்றி னான்‌ நிருபன தவைக்க ணீயுஞ்‌
சார்ந்திதென்‌ றறிவித்துப் பொன்‌ றனை யறுத்‌ திவணேகென்றான்‌–52-

கொழுஞ்சுட ரனைய நேமிக்‌ கோவல னுரைப்பவன்னோன்‌
அழுங்கி யு னடியிலன்பி னாய் மலர்‌ த்‌ தொடையல்‌ சூட்டுந்
தொழும்பல தறியா யான் மெய்ச்‌ சொரூபமீ தென்பான்‌ கொட்டுத்‌
தழும்பினைக்‌ காட்டி வீட்டத்‌ தக்கதோ கிழியை யென்றான்‌–53–

மெய்ய நின்‌ கவலை மாற்றி வேந்தன தவைக்கண் வாதஞ்‌
செய்யு நா ளெழுந்து யானுன்‌ சிந்தை வந் திருப்ப னஞ்ச
லய்யவென்‌ றிட வவ்‌ வன்ப னரசர் கோணவைக் கண் சென்று
பையராத்‌ துயிலு மாலே பரமென வறிவித்தானால்‌–54–

கொய்யுளைப்‌ பரிவேந் தன்னோன்‌ கூறிய தோர்ந்து பின்னுங்‌
கையிலங்‌ காழி மாலே பரமெனக்‌ கழறும்‌ வாய்மை
மெய்யெனில்‌ கிழி யறுந்து விழுமெனச்‌ சமையமெல்லா
நைய வீழ்ந்தது வெல்லோர்க்கு நாரணன்‌ பரமனென்ன–55-

மீனகேதனனுகந்தவ்‌ விபுதனைக்‌ களிற்றி லேற்றித்‌
தானைபின்‌ றொடர வீதி தனை வலம்‌ வருங் காலத்தில்‌
வானினான்‌ முகன் வேய்‌ முத்தன்‌ வார் தொழக்‌ கலுழன்மீது
தேனிறை துளவத்‌ தெந்தை சேவை தந் தருளக் கண்டே–56–

கூடினான்‌ களிதுலங்கக்‌ குணமிகு பரமன்‌ தாளைச்‌
சூடினான்‌ றுதி பல்காலுஞ்‌ சொல்லினான்‌ றுளங்‌கி நெஞ்சம்‌
வாடினா னிவர்கண்‌ ணீறு வருமெனத்‌ திருப்பல்லாண்டு
பாடினா னெவர்க்கு நீயே பரமெனத்‌ தொழுதான் மாதோ–57-

பொன்னவள்‌ கொழுநன்‌ வாழ்த்திப்‌ போனபின்‌ புனிதனாகும்‌
பின்னமி லிவர்க்குப்‌ பட்டர்‌ பிரானென நாமஞ்‌ சாத்திக்‌
கன்னவி றிரடோட்‌ காளை கனிந் திவர்க்‌ கடிமையாக
மன்னுமிவ்‌ வுலகிற்‌ பாக வத மியற்‌ றமிழ்செய்தானால்‌-58-

இளையவன்‌ புதுவை சென்றாங்‌ கெந்தைபான்‌ முன்னினந்தா
வனமதுபுரந்து செய்ய மலரளித்‌ திடுமோர் நாளிற்‌
கனவண னருளா னீளை கடிவனத்‌ துளவத் தூற்றிற்‌
சினமக ளுருவதாகத்‌ திருவின் வந்‌ தவதரித்தாள்‌–59-

மண்டமர்‌ கடந்த வாழி வடபெருங்‌ கோவிலார்க்குத்‌
தண்டுள வெடுக்குங்‌ காலத்‌ தளிர் நிறக்‌ குழவி தன்னைக்‌
கண்டுட னெடுத்து வந்து கனிவுடன்‌ வளர்க்க வன்னாள்‌
கொண்டலிற்‌ சுருளுங்‌ குஞ்சிக்‌ குழவி போய்ப்‌ பருவமுற்றான்‌–60-

ஒடரித்‌ தடங்கணாளவ்‌ வொளிமணி வண்ணற்‌ கன்னோன்‌
ஜோடவிம்‌ மலர்கள்‌ கொய்து தொடுத்து வைத்‌ தயல்‌ போங்‌ காலை
நாடியுள்‌ ளுகந்து நீண்ட நள்ளிரு ளளகந் தன்னிற்‌
சூடிநீர்க்‌ கிணற்றிற்‌ பார்த்துச்‌ சுற்றி வைத்‌ திடுமோர் நாளில்‌–61-

தார்வட பத்திரற்குச்‌ சாத்தவன்‌ னோனெடுக்க
வார்குழலிருப்ப நோக்‌கி மதி மலைந்‌ துழன்‌ று கெட்டுச்‌
சீர்கெழிம்‌ மடமான்‌ செய்த செய்கை யென்‌ றறிந்து மற்று
மேர் கொடே மலர் கொய்‌ தெந்தை யிணை யடி புனைந்தான்‌ மன்னே–62-

அம்மல ரணிந்த மாலவ்‌ வடியனின்‌ கனவிற்‌ சென்றப்‌
பொம்மல் வெம்‌ முலையாள்‌ சூடும்‌ போதுகந்‌ தளித்திடாதிச்‌
செம்மல ரளித்த தெற்குத்‌ திருவுள மிலையென்றேக
விம்மறை யோனு மன்னா ளிந்திரை யாமென் றெண்ணி–63-

படத்தர வணையானுள்ளப்‌ படிமல ரளித்துச்‌ சூடிக்‌
கொடுத்தவ ளென்று காமங்‌ கொழுங்கயற்‌ கண்ணிக் கீந்தான்‌
மடக்கொடி யுகந்‌து பொன்னி யரங்கனை மணந்து முன்னீ
ரிடத்‌ துப நிடதார்த்தத்தை யிசைத்தன டமிழிலன்றே–64-

கடி கொள் சந்தகிலுருட்டுங்‌ காவிரி நதிநீர்‌ சூழத்‌
தொடுநிரை விளைவாஞ்‌ சாலிச்‌ சோழநாடதனுள்‌ மண்டங்
குடிநக ருறையும்‌ விப்ர குலத்திலோர்‌ வனமாலாஞ்சத்‌
தடியர்பாற்‌ கலியுகத்தி லழகிய தனுமாதத்தில்–65-

கேட்டை நாளவதரித்‌துக்‌ கிளரொளி மகவாய்‌ ஞான
நாட்டமார்‌ விப்ர நாரா யணனென நாமம் பெற்று
வாட்டமின்‌ மறை கண்‌ மற்றை மனு முத னூல்க ளோர்ந்து
கோட்டமின்‌ மனத்தா னென்று கூறிட வதியுமெல்லை–66-

மஞ்சுயர்‌ மாட நீண்ட மாமதி லரங்கஞ்‌ சென்றோ
ரஞ்சன வண்ணன்‌ செம்பொ னடி யிணை வணங்க மாயோன்‌
கஞ்ச நீண்‌ மலரரிக்கட்‌ கடையரு ளளித்தன்‌ னோன்ற
னெஞ்சினைக்‌ கவர்ந்து தன்பா னே யவா னாக்கினானால்‌–67–

அற்றைநாண்‌ முதலன்னோ னெம்‌ மரங்கனே யரணென்‌
றுள்ளிற்‌ பற்றிமா மலர் கொணந்தா வனமது பரிவாய்‌ வைத்து
நற்றொடை யளித்துச்‌ செல்லு நாளொரு தினத்திலந் நா
டுற்றிடு திருக் கரம்ப னூரில் வாழ்‌ கணிகைமானாள்‌–68-

காவிவென்‌ றகன்று நீண்ட கயற்கணர்‌ துவர் வாய்த் தேவ
தேவகி யெனும் பேர்‌ கொள்ளுந்‌ தெரிவையு மிகுளை மாரு
மாவலி னிசளை யென்றோ ரணி நகர்க்‌ கரசன் பாற் சென்‌
றேவல்கள்‌ புரிந்து தன் பொ னெழினகர்க்‌ கெய்துமாறில்‌–69-

இவ்வெழில்‌ வனங்கண்‌ டுட்சென்‌ றெய்திரு வளநோக்‌ குங்கா
னவ்விகொணயரநி விப்ர காரணன்‌ றன்னைக்‌ காணச்‌
செவ்வியோ னிவளை யோர் கண்‌ டிரும்பியும்‌ பாரா நிற்க
வவ்வணி மாதுக்‌ குற்ற பின்னவ ளறை கின்றாளால்‌–70-

மைப்படு குழலி யிந்த வையகத்‌ தெவரையும் யான்‌
கைப்படுத்‌ துவனென்‌ நென்பாற்‌ கழறினை யலவோ விந்தத்‌
துப்பனை வசஞ்செயின்னீ தொழில் வல வேசி யென்ன
வெப்படி யேனு நங்கா யிவனை யென்‌ வசப்படுப்பேன்‌–71-

சூளென வுரைக்க மற்றோர்‌ தொன்னக ரடைய வீண்டு
வாளரி மதர்க்கட்‌ டேவ தேவகி வஞ்சமுற்று
நீளலர்‌ வனத்‌துக்‌ சுன்னோன்‌ பரிவுட னீரிறைக்கும்‌
வேளை பார்த்‌ திவளங்‌ குற்றம்‌ மடையினை விலக்கி வந்தாள்‌ –72-

இன்னணஞ்‌ சிலநாட்‌ சென்றவ்‌ வேதிலா னீயாரென்ன
நன்னய நிதி வெறுத்து நாயினேன்‌ பரனைக்‌ காண்பா
னுன்னடி பணிந்து சந்ம முய்ந்திட வந்தேனென்ன
வன்னவ னிசமென்‌ அள்ளி யவ்வனம்‌ பயிலுங் காலை–73-

வருடமோ ரிரவிற்‌ பெய்ய மறைவலான்‌ சிறுகுடிற்கு
ளிருடிபோல்‌ வேடங்கொண்ட விவளையான்‌ அழைக்க வந்தெ
னருடருக்‌ தவனே நின்றன டியினை வருடல்‌ செய்வேன்‌
முருடனே னென நயந்து முனிவனை வசஞ் செய்தாளால்‌–74-

அன்றுதொட்‌ டவளை யின்னே னிறையள வகலானாகிப்‌
பின்றொடர்ந்‌ தேக வன்னாள்‌ பின்னவள்‌ வியந்த பின்னர்ப்‌
பொன்தரத்‌ தரமிலாய்நீ போவெனப்‌ புகல மின்னாண்‌
முன்‌ றில்வற்‌ தணுகி யென்னோ முடங்கி நெஞ்‌ சுருகுங் காலை–75–

வாவிசூழரங்கன்‌ றன் பொன்‌ வட்டிலை யெடுத்தன்னோனா
லேலிய தூதன்‌ போல வெய்திய வேசி தன் முன்‌
மேவி வட்‌ டிலை யுன்‌ விப்ர நாரணன்‌ கொடுத்து விட்டா
னாவியி னவனைக் கூவி யணை கெனக்‌ கொடுத்த கன்றான்‌–76–

அன்னவன்‌ கொடுத்தகன்ற வனந்தர மவனைக்‌ கூவிப்‌
பின்னமி லணைந்து மற்றும்‌ பிற்றை நாள்‌ வெறுக்க வாங்கு
பொன்னரங் கேசன்‌ கோயிற்‌ பொலன் கொள்‌ வட்டிலைக்‌ காணாதீ
தென்ன காரண மென்றேங்கி யிறைவனுக்‌ கறிவித்‌ தாரால்‌–77-

செம்பியன்‌ சினத்தக்‌ கோயிற்‌ சேவக ரனைவோர்க் கூவி
யெம்பிரான்‌ வட்டி றன்னைக்‌ கவர்ந்த தாரியம்பீ ரென்று
வெம்பிட வருத்துங்காலவ்‌ வேசையின்‌ றூதி சென்றெம்‌
வம்பவிழளகத் தேவதேவகி மடமான்‌ கண்ணே—78-

அடுத்தவ னொருவன்‌ விப்ர நாரண னவன் றன்‌ றூதாய்‌
விடுத்தவ னொருவ னோர் பொன்‌ மேய வட்டிலைக் கைக்‌ கொண்டு
கொடுத்தன னதுவோ வென்று கூறு முன்‌ படை திரண்டவ்‌
வடுக்கணி மனைசோதித் தவ்‌ வட்டிலை யெடுத்தாங் கெய்தும்‌–79-

துப்பனை யழைத்து நின்றன்‌ றாதனார்‌ கவர்ந்த தென்னீ
செப்புவா யெனவுமன்னோன்‌ செப்பலென்‌ றூதுமில்லை
யிப் பொன்‌ வட்டிலையும்‌ யானிங்‌ கெடுத்ததி லென வேந் துள்ளம்‌
வெப்பியன்‌ னோனைக்‌ காவற்‌ படுத்திட விளம்பிச்‌ சென்றான்‌–80-

பொன்னிசூழரங்கனிந்தப்‌ புனிதனொன்‌ றறியான்‌ யானே
யன்னவ ளிடத்திற்‌ சென்றிவ்‌ வட்டிலை யளித் தன்னோன்ற
னன்னயத்‌ தூதனென்று நவின்றன னென்று வைவேன்‌
மன்னவ னருகிற்‌ சென்று கனவுரை வழங்கனானால்–81-

கேட்டமன்‌ னவனாமென்ன கேடிழைத்‌ தனமென்‌ றுள்ளம்‌
வாட்டழுற்‌ றவணெழுந்தம்‌ மறை வலான்‌ சிறையை நீக்‌கிக்‌
கோட்டமின்‌ மனத்தனோ யென்‌ கொடும்பிழை பொறுத்தி யென்று
தாட்டுணை தழுவ வன்னோன்‌ றன்பிழை குறித் தயர்ந்தே–82-

முன்னினந் தவனம் வைத்தம்‌ முகிழ் மலர்த்‌ தொடையல்‌ சூட்டித்‌
தென்னரங்‌ சேசன்‌ மெய்ய திருவடித்‌ தொழும்பனாகி
யன்னவ னடியவர்க்கு மடியர்காற்‌ றுகணாமங்கொண்
டின்னியல்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–83-

ஒதமா னீர்கொள்‌ பொன்னி யுலவு தண்‌ சோழ நாட்டின்‌
மாதவர்‌ வேள்வி நாளும்‌ வளர்த்திடு முறந்தை தன்னிற்‌
சீதவா ரங்கொழிக்குஞ்‌ செய்யுறு கதிரினுளளே
கோதறு கலி யுகத்திற்‌ கூறு துன்‌ மதியப்தத்தில்‌–84–

விருச்சிக மதியிற்‌ புந்தி விமாநநாள்‌ ஸ்ரீவத்ஸாஞ்சத்‌
துருக்கிளர்‌ மதலை யாயங்குதித்தழ வுழவன்‌ காணாத்‌
தருக்குடனெடுத்தச் சேயைத்‌ தன் மனை வளர்க்கச் சேயுந்‌
தெருட்சியின் முதிர்ந்த ஞானச்‌ சிந்தையாய் வளர்ந்து பின்னர்‌–85-

நித்தனு மரங்கத் துற்றுத்‌ திரு முகத்‌ துறைக்கு நேர் நின்‌
றத்தனை மனத்துட்‌ கொண்டம்‌ கவன் குணம்‌ பலவும்‌ சொல்லிப்‌
பித்தரிற்‌ கடையனேனென்‌ பிறப்பறுத்‌ தருள்வா யென்று
புத்தல ரடிவணங்கிப்‌ போரு நாளொரு நாளாங்கே–86–

போதுலாம்‌ பொதும்பர்‌ சூழும்‌ பொன்னரங் கேசனாரக்
கோதிலாற்‌ கருள்வானெண்ணிக்‌ குண மிகு முனிவனாகும்‌
வேத சாரங்கன்‌ றன்பான்‌ மேவு புகன வினீநஞ்‌
சீதவார்‌ புனலலைக்குந் திரு முகத்‌ துறைக் கண்‌ சென்று –87–

அங்கிருந் தொரு வனம்பா லன்பினின்‌ றகலா னாடகிச்‌
செங்கர முடி மேல்‌ வைத்தித்‌ திசை தொழு திறைஞ்டு நிற்கும்‌
புங்கவன்‌ றனை நின்றோளிற்‌ பொலிய வைக்‌ திவண் வாவென்‌று
வங்கமா கடல் கடைந்த மாயவனருளிச்‌ சென்றான்‌–88-

அவ்வுரை முனிவன்‌ கேளா வன்புடனெழுந் தாங்குற்ற
செவ்வியோன்‌ றனை யழைப்பச்‌ சிறியனான்‌ புலை யனையா
எவ்வண மெழுவேனென்ன விசைத்தனன்‌ றிருத் தோளேற்றிப்‌
பவ்வநீ ரணை படுத்த பாழியான்‌ றிருமுன்‌ புய்த்தான்‌–89-

வண்டின முரலுந்தாம வனமணி மார்பன்‌ றன்னைக்‌
கண்டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
வண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுத மாந்திப்‌
பண்டு போம்‌ பொருள் கிடைத்த படி யுள மகிழ்ந்தா னன்றே–90-

மாட மாளிகை யரங்க மறைவலா ரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப் பரனுக்குற்ற குணங்களி லீடுபட்டுப்‌
பாடலி லுனக்கு நாமம்‌ பாண் பெரு மாளென்‌றோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–91–

கொல்லுலைப்‌ படுவே லங்கைக்‌ கோமகன்‌ வதி சோணாட்டுட்‌
சில்லரிச்‌ சிலம்பு மாதர்‌ செறி தரு குறையலூரி
லல்லி நற்‌ கமலக் கண்ண னழகிய தனு வஞ்சத்தின்‌
மல்லலங்‌ கலி யுகத்தில்‌ வரு நள வருடமன்னோ–92-

பொங்கு கார்த்திகை யுவாவிற்‌ பொன்னெரி நாளினல்ல
மங்கல யோக நான்காம்‌ வருணம துதித்து நாமம்‌
நங்குல நீல னென்று நவின்றிட வளவன்‌ றன்னாற்‌
சங்கையி னிதிபடைத்தோர்‌ தரணியும்‌ புரந்து வந்தான்‌–93–

ஆவியி லுலக மோம்பு மவன் றிரு நகரி லுள்ளோர்‌
வாவியி லரம்பை மாதர்‌ வைகலு மாட வோர்நாட்‌
கூவிளங்‌ கனி மென்‌ கொங்கைக்‌ கொடி யிடைக்‌ கமல மாது
மேவியிப்‌ புவிமானென்ன வியந்து நீராடி னாளால்‌–94–

அன்னவ ளடைதலோடு மரம்பைய ரகலக்‌ கண்டார்‌
பொன்னவ டனிக்க வாங்கோர்‌ புனிதன் வந் திவளை நோக்கா
நின்னிட மெவணின்‌ பேரென்‌ னிற்றலென்‌ றனித்திங்‌ கென்னக்‌
கன்னலிற்‌ கனிந்த தீஞ்சொற்‌ கன்னியும்‌ கழறு வாளால்‌-95-

நாக மங்கையரோ டிங்கு நணுகின னெனை யன்னோர் விட்‌
டேகின ரினியுன்‌ பண்டி யெய்திய மகள் யா னென்னக்‌
கேகையச்‌ சாயன்‌ மாதைக்‌ கிழத்தி பா லளித்து நாளும்‌
பாகமா ரமுத மூட்டிப்‌ பரிவுடன்‌ வளர்க்குங்‌ காலை–96-

நீலனவ்‌ வநகன்பாலோர்‌ நேரிழை யியைந்‌து வாழுஞ்‌
சீலம தறிந்தனாளைத்‌ திருமணஞ்‌ செய்ய வென்று
கோலியாங்‌ கணுகிச்‌ செம் பொன்‌ குறை வறக்‌ கொடுக்க வன்னோன்‌
னேலவார்‌ குழலி யுள்ள மென்றவ னியம்பப் பின்னர்–97-

குருகுலாமயிற்கை வேந்தன்‌ கோகில மொழியைக் கேட்கத்‌
திரு விலச்சனை யுண்டாகிற்‌ செய்வனென்றுரைப்பச் சென்று
மருமலர்ப் பொதும்பர் சூழு மாமதி னறையூர் நம்பி
யருளினன்‌ றிருமுன் பெற்றீண்ட டைதலு மவள் பின்‌ சொல்வாள்‌–98-

வான்றொடை புனை நாட்‌ டொட்டோர்‌ வருடமதளவுமெற்கோர்‌
நோன்பது வைணவர்க்கு ணூறு பேரழைத்து நித்தம்‌
பான்மிசை கருனை மற்றும்‌ பல மளித்‌ தவருண்பிக்கி
னானுனை மணப்பே னென்ன நன்றென மணஞ் செய்தானால்‌–99-

மன்றலா னது தொட்‌ டன்னோன்‌ வைணவர்க் களித்துக் காணாக்‌
குன்றிய நிதியோ னாயுட்‌ குழைவது வளவன்‌ கேட்டு
யின்‌று நந் நிலுவை வாங்க யேகு மென்‌ றுரைக்கத் தூதர்‌
சென்றிட முனிந்தி லென்னச்‌ செம்பியன்‌ சிறையிலிட்டான்‌—100-

வெம்பிய சிறையி லன்னோன்‌ வெதும்ப நும்‌ வேக்கிறைக்கும்‌
வம்பவிழ்‌ கமலத் தொங்கல்‌ வைணவர்‌ வேழ்விக்கும் யான்‌
அம் பொன தளிப்பே னென்றங்‌ கத்தி மா நகரத்‌ தெம்மா
னெம்பதிக்‌ கேகென்‌ றன்னோற்‌ கியம்பினன்‌ கனவிலன்றே–101-

அக்கன வறியா நீல னத்திமா நரகம்‌ வந்து
மிக்க நும்‌ பகுதி கோடி வேந்தென விசைந்தவ்‌ வூருட்‌
புக்க நன்‌ னிதி காணாது புலர்ந்திடக்‌ கனவில்‌ வந்து
சக்கரத்‌ தெந்தை காட்டுந் தனத்தவர்க்‌ குளதளித்தான்‌–102-

மற்ற நன்னிதியு முன் போல்‌ வைணவர்க் களிக்கக் காணா
துற்றிட வழிப் பறி செய்‌து,தவவவ்‌ வேள்விக்கோர் நாள்‌
சொற்றெரி வீழி துயின்ற மாயவன்‌ றிருவினோடு
விற்றிரட்‌ பணி பூண்‌ டாற்றின்‌ மேவினன்‌ கிழவோரன்ன–103-

அன்னவ ரடைய நீல னகமகிழ்ந் தணுகி வல்லை
பொன்னணி பறித்தன்‌ னோர்தம்‌ பொற் கலை விரித்து வைத்து
பன்னக நடித்த பொற்றாட்‌ பவள மெல்‌ விரலின்‌ மிஞ்சி
தன்னை வெள்‌ ளெயிற்றால்‌ வாங்கித்‌ தானைவைத்‌ தெடுக்குங் காலை–104-

அந்தர மசைபட்டாலு மசை படா விதனை யோர்ந்து
கந்துகக்‌ களினு போல்வான்‌ காய்சினத்‌ தவனை நோக்கி
மந்திர முணர்ந்தாய்‌ கொல்லோ மறை வலா வதையான்‌ றேறத்
தந்திடில்‌ விவெனென்னச்‌ சக்கரத்‌ தெந்தை சொல்லும்–105-

வழிப்பறிக்‌ கபடர்‌ மேலாம்‌ வள்ளலிம்‌ மந்திரந் தான்‌
விழுமிய ததினாலிந்த மென் மலர்‌ வாவி யுண்ணீ
முழுகி நாமமு மணிந்‌துண்‌ மொய்த்தவன்‌ பகலத்‌ தென்னை
தொழுது பின்‌ வினவிற்‌ சொல்வன்‌ றூய வென்னலு மிசைந்தான்‌–106-

மாதவ னடியை வாழ்த்தி வலச் செவி கொடுக்க வன்னோன்‌
கோத றட்டாக் கரத்தைக்‌ கூறவு மிருளகன்று
போதமுற்‌ றெனை யிவ்‌ வாறிற்‌ போந்துனதடிக் காட் செய்த
நாதனே கண்டு கொண்டே னாரண னாமமென்றே–107–

சூடினான்‌ மடி மாங்காயிட்‌ டடியனை வழித் தொண்‌ டாக்குங்‌
கோடுளாய்‌ மாதரார்தங்‌ கூர் விழி வலையிற்‌ பட்டு
வாடினேன்‌ வாடி யென்றும்‌ வருந்தினே னெனப்‌ பாமாலை
பாடினான்‌ பரமீதென்று பாருளோர்‌ தெளிய மாதோ–108-

பொன்வரைக்‌ குடுமி மீதூர்‌ புயலெனக்‌ கலுழன்மீது
கன்னியர்‌ அளவினானுங்‌ காட்சி தந்தருளிப்‌ பின்னர்‌
மன்னு நங்‌ கலிய னென்று நாமமும் வழங்கிச்‌ செல்ல
வின்னவ னுகந்தம்‌ மாயன்‌ பதிதொறு மிறைஞ்ச வென்றே–109-

நாடிப்பல்‌ பதிகஞ்‌ சொல்லி நாற் கவிப்‌ புலவனென்று
நீடிய விருது பெற்று நிகழுறும் பொழுது கொன்றை
சூடியின்‌ கழல் சம்பந்த தூதனாங் கொருவன்‌ செல்லா
ஏட வெம்‌ மிறை போலிந்த விருதுனக்‌ கிசையாதென்ன–110-

கலியனீ தறிந்திவ்‌ வண்ணம்‌ விருது கொள்‌ கவியின்‌ மிக்க
வலியன தவைக்கண்‌ சென்றியாம்‌ வாதமே புரிவ மென்று
சொலிவரு மிவனை யன்னோன்‌ றூயனென்‌ றறியானாி
வெலுவமென்‌ றெண்ணி நீயோர்‌ குறளினை விளம்பென்றானால்‌–111–

இந்தவா றுரைப்ப நெஞ்சத்‌ தேதிலாக்‌ கலியனோர்ந்தே
யந்தமா நகர்க்குள்‌ வைகும்‌ வைணவத்‌ தம்மை யாரை
யெந்தமக்‌ குமது பூசை யெம்பிரான்‌ றனை நீர் சற்றே
தந்திடு மெனக்கைக்‌ கொண்டச்‌ சார்ங்கனை யெதிரில்‌ வைத்தே–112-

ஒருகுற ளென்றெடுத்துப்‌ பதிகமொன்‌ றுரைத்துத்‌ தான்கொள்‌
விருதுகள் அனைத்தையும் கூறி வென்ற பின் இவனை யன்னோன்
திருவடி வணங்கி நாயேன்‌ செய் பிழை பொறுத்தி யென்று
பருதி முன்‌ சசியினின்று பரகால னென்று போனான்–113-

நாரணன்‌ பதிகடோறு நாடியன்‌ னவனும்‌ வாழ்த்தி
யாரணப்‌ பொருளீ தென்றுள்‌ ளறிந்து பற்‌ பதிகமாக
பாரணு முயிர்கள்‌ செய்ய பழ வினை யறுத்துய்தற்‌குக்‌
காரணமாகச் செய்தான் கலியனும்‌ தமிழின் மன்னோ–114-

திருப் புளி யாழ்வார்‌

நன்னய துவாபர சயத்தினலி வில்லா மன்னு மிதுநத்தில்வரு மாசிறிரு மூலம்‌
பன்னக வரோதய னுகந்து பனி மாலூ ரின்னறு மலர்ப் புளி யுருக் கொடி வனுற்றான்‌-115-

இங்கன முரைத்தடு ப்ர பந்நர்களிவர்க்கே
யங்கமென வுற்றிடுவ ரண்ணலினி நீ யிப்‌
புங்கவனை நம் புதல்வ னென்று புகலாது
வங்கமவி பவ்வமதி மாயனென வெண்ணீ -116-

கற்றின மறித்ததோர்‌ கழைத்தலை யிடத்தும்‌
புற்றரவ மீதும் விழி போதவள ரெந்தை
சிற்‌றுருவினேரிலிவன்‌ சென்‌று தனடிக்காட்‌
பற்றிய நின்‌ பேரினுயர்‌ பாரிலெவருள்ளார்‌–117-

வாரிச நிகேதனன்‌ மலைத் தெரிவை பாகன்‌ ஈரிமு மறைக்குவடு மின்னு மறியாத
சூரிகள்‌ பராவுமிவன்‌ றொண்டு புரிகின்ற வாரிய நினாது புக ழாருரை செய்கிற்பாற்‌,–118-

வெஞ்சமர்‌ கடந்தவிறல்‌ வேக்தென விளம்ப
நெஞ்சிரு ளகன்‌ றுவகை நீள்கடலழுந்தா
வெஞ்சலிலிவன்பர னெனும்வகை தெரிந்தே
வஞ்சலி புரிந்திறைவ னம்முனி பணிந்தான்‌-119-

இத்தகைமை யுற்றபுக ழெய்து முதிர்‌ ஞானத்‌
தத்துவ முனிப்பர னடித்துணை யிறைஞ்சா
நத்தியுல காய சட நாசனென நாமம்‌
முத்தி தருகானரு முதற்கினி தளித்தே–120-

எம்பிறவி வெவ்வலை யிறக்கருணை கூரும்‌
நம்பி யருள் செய்த மொழி நாயினன்‌ மறந்தே
வம்புலவு பைந் துளவ மாலை யணி மார்பா
கொம்புலவு திந்தரிணி கொண்ட சடகோபா–121-

கண்ண நினை யிவ்வுலகர்‌ காள்‌ முளையினெஞ்சத்‌
தெண்ணி யடியன் பிழை யிழைத்தது பொறுத்தி
விண்ணவிர்‌ திருப்புளி வியந்த பெருமானே
தண்ணளி யெனுங்கட றதும்பு சடகோபா–122-

என்‌றுபல வாறுள மியைந்து பணி மாறி நன்‌று புரி யாத பவ நாடி நனி செய்யுந்
தன்றனைய னாயவன்‌ சனித்த வரு ளோரா நின்று பு திகைத்து பு நினைந்து பு மகிழ்ந்தே–123-

என்னை யுல கோர்பொரு ளெனத் திரு வுளத்தி
துன்னி யருள்‌ வான் வயி றுதித்த பெருமானா
நின்னை மக வென்ற பிழை நீ பொறு வெனத்தார்‌
மன்னவ னிரந்‌து பு மலர்க்கழல்‌ பணிந்தான்‌–124-

அன்னவ னிறைஞ்சலு மருட்கொடளி சூழாத்‌
தென்னவெனு மாலையன்முன்‌ செய்யு மவதாரந்‌
தன்னை முழு தும் மவன்‌ றனா துளம்‌ வியப்பப்‌
பின்னமி லளித்தனன்‌ பிறப்பினை யறுப்பான்‌–125–

தாறுகொள்‌ மதக்கரி தடிந்த விறை தந்த
வீறிலவ தாரமதி லின்புற வுளங்கண்‌
மாறில் வகை பற்றவுடன்‌ வாய் புகழ வென்போற்
பேறுறுவ ரார் கொலெனவே பெரிதுவந்தான்‌.–126-

இன்னண நவின்‌ றுவல மெய்தியிம மால்கொண்
மின்னெனு நுடங்கடை விழிக்கரு விளைப்பூ
கன்னியுட னப் பரன்‌ கழற்றுணைபணிந்தே
நன்னக ரடைந்து நித நாடுவர் தொழற்கே–127–

பதின்மர்‌ திரு வரன்முறைப்‌ படலம் முற்ரம்

நூற்றெட்டுத்‌ திருப் பதிப்‌ படலம்‌

திரு மகழ்‌ மார்பரங்கன்‌ நிருவடித்‌ துணையதாகு
மருமகிழ்‌ மாலை மாறன்‌ மலர்ப் பதத்‌ தினிதுவாழு
மிருமகி தலத்துளோங்கு மெதிபதி சரணம் போற்றி
யருமகிமைய நூற்றெட்டா மரும்பதிப்‌ படலஞ்‌ சொல்வாம்‌–1-

குருதிகொப்பளிக்கும்‌ வைவேற்‌ கொற்றவன்‌ றேவிசேரப்‌
பருதியிற்‌ றிகழு மேனிப்‌ பரமனை யிவ் வாறாகக்‌
கருதிநித்தமும்‌ போந்தன்னான்‌ கழறொழு தினிய செய்யுட்‌
டருதவத்‌ திறையை நீ கொள்‌ தகையார் பெற்றாரென் றேத்தி–2-

அண்டமு மண்டத்துற்ற சராசர மனைத்து மாகும்‌
புண்டரீகக்கண்‌ ணாழிப்‌ புங்கவன்‌ போந்து போந்திவ்‌
வெண்டிசை போற்றச்‌ செய்த வெழில் விபவாவதாரந்
தண்டரை யின்றர்ச்சாவதாரமாய் விளங்கலாலே–3–

அன்னது நிகர்ப்ப நம்பா லடைந்தவதாரஞ்‌ செய்த
பன்னருஞ்‌ சிறப்புற் றோங்கிப்‌ பரமனு மிவ்வாறாவா
னென்ன மண்ட லங்கள்‌ காக்கு மெழின் முடி மன்னர் போந்தே
சென்னி தாழ்ந்‌ திறைஞ்சும்‌ வேந்தன்‌ றிருவுளத்‌ தெண்ணா நின்றே–4-

பொனனக ரிமையோர்‌ போற்றப்‌ பொலிந்து நின்‌ றருளுமாதி
சினகரத்தினுக்குத்‌ தெற்கிற்‌ றிகழ் திருப்‌ புளியின்‌ கீழ் பா
லன காற்‌ புளத்து வாழு மனைய மாறனுக்குக்‌ கோயில்‌
கனக ரத்தினத்தினாலே கவின் பெற வமைத்துப்‌ பின்னர்‌–5–

சங்கராசனுக்கு முத்தித்‌ தலமுகந் தளித்த வாதிப்‌
புங்கவன்‌ மிக்க வாதிப்‌ புனிதன்‌ றன்பாற்‌ றனாது
தங்கு நீர்‌ வளங் கொண்டோங்குந் தரை யெழி னகராங்குள்ள
மங்கல நிதிபூண்‌ மற்றும்‌ வளமெலா முகந்து நல்கி–6–

பாட்டளி துதைந்து பாடும்‌ பனிவளர்‌ வகுளத்‌ தெம்மான்‌
றாட்டுணை கருதியன்னோன்‌ றழை விழிக்‌ கருணையாலே
வாட்டடங்‌ கண்ணாணங்கை மாதொடுஞ்‌ சின்னாளீங்கு
வேட்டனன்‌ வைகி வேந்தன்‌ விளம்பரும்‌ பதியிற் சேர்ந்தான்‌–7-

அனையவ ரிவ்வாருக வணி பெருஞ்‌ சுடர் கொள்‌ மேனி
புனை தரும்‌ வகுளத்‌ தெம்மான்‌ பொற்றிரு வடித் துணைக்கே
தனை நிகர்‌ மதுரச்‌ செய்யுட்‌ டவப்பிரான்‌ பலவாறாய
நினைவரு மடிமை செய்யா நின்‌று முன்‌ னினைய சொல்வான்‌–8-

எளியனா மடியேற்‌ ஒன்று ஹித புரு டார்த்த தத்வங்‌
களை விளக்‌ குறு விசேடார்த்‌ தங்களை யெல்லாங்‌ கைசே
ருள மயக்‌ கறவே யுள்ள முகந்துரைத்‌ தருடி. யென்றே
வள மலர்க்‌ கரங்கள்‌ கூப்பி வணங்‌கினன்‌ வழங்கினானால்‌–9–

இன்னணம்‌ பரமன்‌ முன்ன ரிசைத்தன னிற்குங்காலை
அன்னு மெய்ஞ்ஞான நித்ய சூரி கடமக்கிலாது
பின்னெவர்களுக்கு மெட்டாப்‌ பேறுரித்‌ தாகி யோங்கும்‌
தன்னிக ரில்லா வைகுந் தத்தினிற்‌ பொலிந்து வாழும்‌–10-

திரு வினாயக னொண்போதின்‌ செல்வனன்‌ றிட்ட சாப
மிருவிநாயகன்‌ றாதைக்கன்‌ றீர்த்தவன்‌ கமல பாத
மருவினாய கருவோட்டி வானுகந் தளிக்கு மெம்மான்‌
பொரு வினாயக மாறற்குப்‌ புகழ்ந் தெதிர்‌ விழி கொடுப்பான்‌–11–

கருத்தினிற்‌ கருதா முன்னர்க்‌ கலுழனு முன்னர்‌த் தோன்ற
வெருத்தமீ தலரின்‌ மேன்மா திரு நில மாது நீளை
யருத்தி யி னுடன் வந்தேற வவிர் பொலன்‌ கிரியின் மீது
கருத்ததோர் வெற்‌ புவந்து கலந்தெனத்‌ திகழத் தோன்றி–12–

இருமருங் கினிது வாழு மிந்திரை முதலா மூவர்‌
கரு விழி யெனுங்கார்‌ வண்டின்‌ கண் முக மலரின் வீழப்‌
பொருதயிற்‌ றிகிரி யாதி பூங்கரத்‌ தடக்குந்துய்ய
செருவிகற்‌ படை களைந்து முறை முறை திகழ்மின் காட்ட–13–

அங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி யண்டாண்ட முழுதுங்‌ காக்கும்‌
பொங்கருட்‌ சேனை நாதன்‌ புகழ்ந்தனன்‌ முன்னரேகத்‌
துங்கலில்‌ வினை தீர்‌ நித்ய சூரிகள்‌ நெருக்கிப் பக்க
மெங்கிலுஞ்‌ சூழ்ந்து சென்னி யெழிற்கா முகிழ்த்தாராகி –14–

பாயிர மறைகணான்கும்‌ பாடுறப்‌ பலர்கள்‌ சில்லோ
ராயிர ஈாமங்‌ கூறி யடியினை பணிந்தாரேத்த
தூயவர்‌ சிலர் ப்ர தாபஞ்‌ சொல்லியங் கர முகிழ்த்தா
ராயவண்‌ வெகுபராக்கென்‌ றன்னவ ரெழுச்சி கூர–15–

தாணுவயனே முதலர்‌ காணரிய மாயன்‌ றனக்கு விழி யிற்றுறு மெனத்தமதுளத்தே |
பூணரிய சங்கைகொடு மாணுறு மநேகர்‌ பொங்கு பல வாழியொடு மங்கள முரைப்பச்‌
சேணிமிரு வெண்மதியின்‌ வாணில வெறிக்குஞ்‌ சித்திர மிழைத்தபல சத்திர மெடுத்தே
யேணுடைய இற்சிலர்க ணீணசையி னொடு மெழிற்றிரு வொண்‌ மேனி யினிழற்றினர்கள்‌ செல்ல–16-

ஆமவர்க ளிற்சிலர் க டேமருவுமென்பூ வாசறுமி னாசை யுறு தூசி னொடு சுண்ணம்‌
பூமருவு மங்கை கொட மா மணமும்‌ வீசப்‌ போதமிக வுற்ற சிலர்‌ போதவு மிரட்டும்‌
காமரொணி லாவுலவு சாமரைக ளன்னான்‌ காயமெனு மார்கலியின்‌ மேயகவினங்கத்‌
தாமரையை நாடி வரு கோமள மிகும்புட்‌ சாதியி னுயர்ந்த பல வோதிமநிகர்ப்ப–17-

மந்தவிள மாருத மிகுந்தடைய வால வட்டமல ரங்கைகொடு சிட்டர் பலர் வீச
விந்தை யுறு பற்பலர்கள்‌ சிந்தை மகிழ்‌வோடும்‌ விசித்திர விநோத வொண்‌ விசுத்த விருதுக்க
ளந்தமற வங்கை கொடு முந்தினர்‌ நடப்ப வற்புத மிகுந்தணிய பொற் புலவு மின்னா
ரெந்தையி னருங்குண முகந்‌ தினி துரைத்தே யின்னிசை யிசைத்‌தனர் கண்‌ முன்னுற நடப்ப–18-

௮ண்ட பகிரண்டமுமு துண்ட விறை வந்தா னக்கனய னுக்கரிய விக்கிரமன்‌ வந்தான்‌
முண்ட கமின்‌ மார்பினிடை கொண்டபரன்‌ வந்தான்‌ முற்றுமுயிர்‌ தானாக வுற்றவ னடைந்‌தான்‌
பண்டைமறை நாலினிலுங்‌ கண்டறிய கில்லாப்‌ பராதீன மற்றிலகு புராதன னெழுந்த
னெண்டிசையு மண்டிசைகொள்‌ கொண்டல் வணன்‌ வந்தா னென்று பல நற்கின ஈயின்‌ றன கறங்க–19-

ஆடக மணிக் குழைகள்‌ பாடலை தரப்பொன்‌ னரத்தவொ ணரிப்பரி புரத்தொலி கறங்க
பாடக வடித்துணையி டக ஈடித்தே பான்மொழியர்‌ சிற் சிலர் கண்‌ மேன்மையி னடப்ப
மாடக முடுத்ததிரை நாடிய முழக்கோ மாறரிய கோடையிடி யேறது கொலென்ற
நீடக மயிர்ப்புறவே கோடணிய காள நிகழ்த்தரிய பல்லிய மிகுத்தன கறங்க-20-

இன்னன வளங்களய முன்னின நடப்ப வெங்கிலு நிறைந்‌ துறையு மங்கள முகுந்தன்‌
பன்னக முடித்தலய னின்னலொழி யெம்மான்‌ பங்கய வரும் பனைய கொங்கை யயிராணி
மன்னவன்‌ முதற்சுரர்க டன்னடி வணங்க வந்தருள்‌ புரிக சவ னெழுந்தனன்‌ விரைந்தே)
தன்னை நிகராய சுட ரென்னவொளி பொங்கிச்‌ சந்தமுறு மாறனெதி ரந்தர நிறைந்தான்‌–21-

வாரண மளித்தருளு நாரணனிவ்‌ வாறு வானக மிசைப் பொலிய வானகு மகழ்ப்பூந்
தாரணியு மார்பனிசை தாரணி யுயர்ந்தோன்‌ றன்னடி வணங்குமவர்‌ துன்னு வினை தீர்ப்பான்‌
சீரணிய பொற் கமல வேரணிப கண்கடிறந்து வகை நீர் மடை திறந் தொழுக நீல்வா
ணேரணவு குஞ்சி மிசை யாரமலரங்கை நிகழ்த்தரிய வன்பொடு முகிழ்த்தன னுவந்தே –22-

செங்கவி னுறு பைங்‌ கமலம் வீற்‌றிருக்குந் திருமக ணாயக னெம்மான்‌
சங்குடன்‌ பதும விரேகைகள்‌ பரந்து தாமரை மலரொடு மிகலிப்‌
பொங்குமெய்‌ யுளவன்‌ பொடு தொழு மவர்கள்‌ பொருந்‌த வெம்‌ பவப் பிணி மருந்தா
யங்கண் மா ஞால மகலிரு விசும்பு மளந்த பொற்‌ றிருவடித்‌ துணையும்‌ –23-

வானகத்‌ தவிருஞ்‌ செக்களை யனைய வயங்குமாற்‌ றுயர்ந் தொளிர்‌ பசும்பொன்‌
னான நற்‌ கலையை நன்மருங்‌ கலைப்ப வணிந்தெழிலுறுதிரு வரையு
மூனமி லொருநான்‌ முகத்தனை யளிக்கு மொளி கொள் பைங் கமல முன்‌ னளித்த
கானகு மலரிற்‌ புடைபரந்‌தகன்று கவினுறு நாபிநற்‌ றலமும்‌ –24-

அழிவுறு முடிவி லெண்ணிலண்‌ டாண்ட மதனுள சராசரத்‌ தொகை கண்‌
முழுமையு நெருங்கி யடங்குறு மிடமா மொய்யொளி யுதர பந்தனமும்
வழுவறுஞ்‌ சரச வீட்ட ர சுகந்த மாணிழை மடந்தையுள்‌ ளூகந்தெப்‌
பொழுது முள்‌ வதியு மஞ்சன வரையிற்‌ பொற்புறு மார்பின திடமும்‌ –25-

அத்திரு மருமத்‌ துற்றினி திவகு மணியபொன்‌ முப்புரி யிழையும்‌
நத்திவண்‌ மனக்க ளிணைந்திசை முரன்று நறைத் துளி யுண்டடை கிடக்கப்‌
பத்தெனும்‌ இசையு மணம் புகுந் தொளிரப்‌ பரவு வண்‌ டிருத் துழாயணியு
மத்தியி னிலகுங்‌ கெளத்துவ மணியும்‌ வற்சமென்‌ றுரை திரு மருவும்‌ –26-

ஒன்னல ருதிர மலகையுண்‌ டுவப்ப வுதவிய திதிரியை முதலா
மன்னுமைம்‌ படைக டாங்கி நன்‌ கமல மலரெனச்‌ சிவந்தொளிர்‌ கரமு
மின்னொளி கதுவு மங்கத மணிந்து வெற்பிரு நான்கொடு மிகலிப்‌
பொன்னக ருவப்பப்‌ புணரி முன்‌ கடைந்து பொற்புறு மீரிரு புயமும்‌ –27-

அண்டமுண்‌ டுகந்த கண்டமுங்‌ கரந்தன்‌ றாய்ச்சியர்‌ மத்தளை தயிர்‌ பா
லுண்டு விண்‌ டிலகு முண்டக மலரி னொளிர்ந்தனி யரக்கெனச்‌ சிவப்புட்‌
கொண்டு கண்‌ டவர் கண்‌ கவர்ந்திடு வாயுங்‌ கோமள மிகுந்தகன்‌ றருளுண்‌
மண்டு செங்‌ கமல மலரினுக்‌ கிணை செவ்‌வரி பரந்‌ துயர்ந்த கணினையும்‌–28-

வாமவிற்‌ புருவத்‌ துணையும் வெண்‌ பிறையின்‌ மலிந்த நன்‌ நுதற்றிகழ் நான
நாமமுங் கமல மலரெனப்‌ பொலிந்து நவை யிலா வட்ட வொண் மதியிற்
றூமலி கவினுற்‌ றிலகு மாநநமுந் துன்றிய கதிர் மணி முடியு
நீமநற்‌ பசிய மரகத மலையை நிகர்த்தில கருந் திரு வுருவும்‌ –29-

இரு மருங்கிலு மஞ்‌சலி புரிந்தனர் வீற்‌ றிருந்தரு ளினியசொற்‌ கனி வாய்த்‌
திருமகண்‌ முதலா மூவர் தங்‌ கனகந்‌ திகழு சுந்தரமு மன்னவர் தம்‌
பெருகிய வணியின்‌ விநோதமு நிமலன்‌ பிழை யறு குணத்தினி தியல்பும்‌
பொருவரும்‌ வகுள பூடண னுகந்து புகழ்ந்தனன்‌ கண்டு கண்டுருகா–30-

இவ்வண மாநந்‌ தத்துட னிமல னெண்ணிறிவ்‌ யாத்தும ஸ்வரூப மம்மா
திவ்ய மங்‌கள விக்கிரக திவ்ய தேவி பூடணா யுத திவ்ய
வெவ்வமில்‌ குண சேட்‌டி தங்களை யுமுளஞ்‌ சிறந்தநு பவித்துந
னவ்வநு பவத்தை வெளியிடுஞ்‌ சர்வ வாரணத்‌ தந்த சாரமதாம்‌–31–

அருந்தகைய திருமந்திரார்த்‌ தத்தை யடக்கி நால்‌ வேதசாரமதாந்
துரிதமி லீரிரண்டு ப்ரபந்தத் தொடர்பினால்‌ விளக்கிட மனத்துட்‌
கருதுமு னனைய மாறனுக்குகந்து கருணையிற்‌ சேவை சாதிப்பான்‌
றிருவளர்‌ நித்ய சூரிகளெ வருஞ்‌ சென்றனர்‌ திருப்புளி மருங்கே–32-

இருவி னைத் தொடரின் செய லற்றுயர்‌
திருவுறக் கடை சென்றவ ருமிவ்வூர்‌
வருத லுற்றன ராயினம்‌ மன்னகர்‌
பெருகு சீரெவர்‌ பேசுக்‌ தகையரே-33–

அந்த நித்திய சூரிக ளன்னவே
மிந்த மானிலத்‌ தேய்பதி தோறும் வாழ்‌
கந்த மார்வனக்‌ கண்ணி கொள்‌ யாவரும்‌ ்‌
வந்து சேவை வழங்கிட லாயினார்‌–34-

பெருவரங்கள்‌ கருது மன்பர்‌ பெற வழங்கு வகுளநங்‌
குருவரங்கொள்‌ கவியிலன்பு கொடுவ வண்‌ முனரனய
னிருவரங்க ளமுதமண்டி யெழுகு பொன்னி வலம்‌ வருந்‌
திஸருவரங்க ந௧ருறங்கு திருவரங்க னெய்தினான்‌ –35–

மருவரு நூறிதட் கமல மன்னி கர்மா றன்‌றருவின்‌
மருவரு நூலினிதுணர்வான்‌ வந்தனனன்‌ னானெதிரே
திருவுறையூ ரியறுளவந்‌ திகழ்ந்தலையு மணி மார்பத்‌
திருவுறையூ ரெனும் பதியிற்‌ சிறந்துறையு மிறையோனும்‌–36-

கருத்தஞ்ச வானோ ருருக்கும் பொ னாமன்‌ கணத்தின் மு னேதுஞ்சவே
வருத்தஞ்செய்‌ மாய னருக்கன் குலாவு மணிப் பொன்னின்‌ மாடங்கள்‌ சேர்
திருத் தஞ்சை யாய நகர்க் கண்ண மாலுஞ்‌ சிறைப் புள்ளின்‌ மேனாடின
னிருத்தஞ்செ யாகன்‌ றமிழ்ச் செஞ்சொன்‌ மாறன்‌ றமர்க்கன்பர்‌ நேயன் முனே–37-

அருவன்‌ பிலியா மரவின்‌ றலை மேற்‌ பெருவன்‌ பினினா டிய நம்‌ பெருமான்‌
திரு வன்‌பிலில் வாழ்‌ தேவு முவண வொருவன்‌ பிடர்மே லுற்றானிவணே—38-

கருக்க ரும்படர்‌ கண்ட னாதிதே வருக்க ரம்பட வாண னாயிரங்‌
குருக்க ரம்பக லாழி கொண்டரி திருக் கரம்பனூர்த்‌ தேவு மெய்தினான்‌.–39-

புள்ளறை யும் பொழில்‌ பொன் மதில்‌ வானை நள்ளறை கூவவி ணாமய வெனவாம்
வெள்ளறை மாயனு மேவின னம்பொற் கள்ளறை வந்த கருங்குழலோடு–40-

பொருப்புள்ளம்‌ பூதப்‌ படையாற்கெட்‌ டாதென்றும்‌ போற்றடியார்‌
விருப்புள்ளம்‌ பூதல மாதின்‌ விளங்கவினார் முகமாந்‌
திருப்புள்ளம்‌ பூதங்‌ குடிவிற்‌ றிகழ் ராமனும் பொழிலிற்
கருப்புள்ளம்‌ தங் குரு கைம் மாறற்‌ கீந்தனன்‌ காட்சியதே–41-

திருப்பே ரொருக்கா னினைப்போர்‌ திருக்கே திரித்தாண்மகிழ்‌
மருப்பே ரளித்தா ருடைக்கோ னெதிர்க்கே வரத் தேறினான்‌
திருப்பேர்‌ நகர்க்கோ ரிறைச்சேர்‌ தடத்தே திகைத்தே யழை
மருப்பேர்‌ கரித்தோ மொழித்தா னிருக்கே வழுத்தாதியே–42-

மருவாத வல்வினை மாறருளாத்‌ திருவாத வனேரணி கொண்டவன் முன்‌
திருவாதனூர்‌ மேவிய சீதரனும்‌ பெருவா தமோடு பிறங்கனனால்‌–43–

செருவழுந் திறலுடைய ராகிடுந் தீய பிணி மருவழுந்‌ திட வவுணர்‌ வளை திரிக்‌ தெறியு மணி
திருவழுந்‌ தூரிறையு மேயினன்‌ செய்ய மகிழ்‌ மருவழுந்‌ திய வணி கொண்‌ மார்பினன்‌ முனரரோ–44-

தருச்சினை மலராற்‌ செய்ய தாட்டுணை மலரின்‌ மீதே
யருச்சனை புரிந்து வானோ ரக மகிழ்ந் திறைஞ்சி யேகத்‌
திருச் சிறு புலியூர்‌ வாழும்‌ தேவனெம்‌ பெருமான்‌ றானு
முருச்சிறைப்‌ புட்பான்‌ மாறற்‌ குதவினன்‌ சேவை மன்னோ –44-

சூறை யாகத்‌ துதைந்தெழு தீயவர்க்‌ கிறை யாக்கி யிருந்தவனாந் திருச்‌ சேறை
யாயனுஞ்‌ சென்‌றன னந்தமிழ்‌ வீறை யாரும்‌ விமலன்‌ றிருமுனம்‌–45–

உருத்தலைச் சங்‌கம் புதிய வொன்றால் எரித்தரக்கர்
கருத்தலைச் சங்கவர் திறளைக் கண்டனஞ் செய்‌ தினிதுகந்த
திருத்த லைச் சங்‌ க நாண்மதியத்‌ தேவர் பிரா னும் மடைந்தான்‌
குருத்த லைச் சங்கப்புலவோர்‌ கொண்ட செருக்‌ கடர்ப்பான் முன்‌-46-

சீர்‌ திருக்‌ குடந்தை மானகர்க்‌ கமர்ந்த தேவனற்‌ புளென்ற வாகன
வூர் திருக்‌ குடந்தை யோர் கணத்‌தின் முன ரோகை யுற்றெழுந்து நாடினான்‌
பார் திருக்‌ குடந்தை யானவர்‌ கருதும் பராங்குசற்‌ குறுண்‌ மைசேரிடை
வார் திருக்குடந்தை மாதனத்து நங்‌கை வாழ்வினுக்‌ குகந்து முன்‌னரோ–47-

தருக்கண்டி யானை யிடர்‌ தந்துகன்‌ மடந்தை யுருக்கண்டி யாரதிவ ளோதுமுனி யென்ற
திருக்கண்டி யூரிலுறை தேவனு முகந்தெங்‌ கருக்கண்டி மாறனுயர்‌ கண் முன மடைந்தான்‌–48-

மண்ணக முறும் வினை வரைந்தருளு மாறன்‌ கண்ணக முன்‌ னண்ணினன கங்களி சிறப்ப
விண்ணகர மெண்ணறிரு விண்ணகர நண்ணுந் தண்ணகமலம் புரை தடங்கணிறை யோனும்‌ –49-

கருதிருக்‌ கண்ணறனை நில வுயிர்க்‌ கங்கை யுறு கனி யெனத் தந்த மகிழ்தேன்‌
றரு திருக்‌ கண்ணி புனை யளி புயத்‌ தெந்தை யெழு தளவிரைச்‌ செங்‌ கமல நே
ரிரு திருக்‌ கண்ணவுயர்‌ கருடனற்‌ கந்தர முளிசை கரப்‌ பொன்னி னோடு சென்‌
றொரு திருக் கண்ணபுர வள நகர்க்‌ கண்ணவனு முயர்புளிக்‌ கண்‌ மருவினான்‌.–50-

அருவாலில்‌ வளர்ந் தொ ணடி.ப்பொடியா லுருவா லிகைதற்‌ குதவுற்‌ றெணிலாக்‌
குருவா லிபர்‌ தங்கள்‌ குழா மலியுந்‌ திருவாலி வாழ் தேவனுஞ்‌ சென்றனனால்‌.–51-

பாகை யினிப்படு பான்மொழி மின்னா ரோகை யின் மாளிகை யும் பரு லாவ
வாகையின்‌ மின்னென லாகும்‌ வளங் கொள்‌ நாகையி னாதனு நாடின னம்மா–52-

மறையூ டு வதிந்‌ தருளெம்‌ பெருமானறையூ ருறை நம்‌பியுமெய்தினனாற்‌
நிறையூ கமனேரலருக்‌ கயிலிற்‌ கறை யூறிய காரிகுலச்‌ சுதன்முன்‌–53-

வெந்திற லுறுந் திதிரி நந்துவி லருங்கதை விளங்கு வடிவாள்‌
சந்தம லரங்கைக டயங்கமரு வண்டுமுர றண்டுளவமுஞ்‌
செந்திரு மடந்தையு முரந்தனில்‌ வயங்க நொடி சென்‌ றனனரோ
நந்திபுர விண்ணகர வெந்தையு மினங்கையரு நந்தனெதிரே–54-

அருவிந்தள மளிபாடுசெ யடருங்களை கடியு மிருவிந்தள முலையார்மரை யெழில் செந் துவர்‌ குவளை
வருவிந்தன முகம் வாய்விழி யென வேகரை மருவுந்‌ திருவிந்தளூருறை மாயனுஞ்‌ சென்றானவன் முனமே–55-

குருச்சித்‌ தரமா ளிகை மிசையே கொண்டல்‌ வந்து கண் படுக்குந்‌
திருச்சித் திர கூடத்தமர்ந்த சீமானும் போந்தான் மலரா
லருச்சித்‌ திரவெ ணீங்காத வன்பர்‌ கொண்ட வெவ்வினையை
வருச்சித்‌ திரங்கு நங்கோனாம்‌ வகுளாபரணன்‌ றிரு முன்னர்‌-56–

காரா மணிச்சுனை கலக்க முகை விண்டே வாரா மதுத்தளி மலர்த்தவி சுகந்த
தாரா மடுத்தன தழைத்திடு வளஞ்சேர்‌ சீராம விண்ணகரச்‌ சீதரனுமுற்றான்‌–57-

ஏடலார் குழ னங்கை தன் சுத னெந்தை யஞ் சட கோபனின்‌
பாட லார் தமி ழாசை யான் மிகு பரிவதோடு முன்‌ மருவினா
னாட லாருர காசனன்பிட ராரவேறியே நேரிலாக்‌
கூட லூரெனு மாவளப்பதி கொண்டவன்‌ றுயர் விண்டவன்‌–58-

வண்ணங்‌ குலையா தமடந் தையர்மா றிண்ணங்‌ குலை யன்‌பர் செருக்‌ கருவா
னெண்ணங்‌ குடியா னுமுனெய்‌ தினனாற்‌ கண்ணங்‌ குடி நின்று ககப்‌ பிடர்மேல்–59-

வண்ண மங்கல மாமலர்‌ மேவிய வெள்ளை யன்ன விராசிக ளாதவ
மன்னை வெஞ்சமர்‌ வேளையி லே மறை மாயோனின்‌
றண்ண மங்கையி னாமயவால்வளை யென்ன நன்கணி யோடு முலாவிடு தங்கு பல்வள நீள் பணை சூழ் தரு தாரார்‌ சீர்க்‌
கண்ண மங்கையி னோகையினோடுறை யன்பர்‌ தங்களி னாவியுமேவன கன்கணண்ணபி டேகமனாளொடு கானாரும்‌
விண்ண மங்கைகு லாவிய காவின மன்னுமங் குரு காபுரி மாறனின்‌ மென் கண் முன்னணி சேவை தரா புளின்‌ மேலானான்‌–60-

உருக்கவித்‌ தலத்‌ துளோடு மும்பரு நடுங்கவே
செருக்கவித்‌ தலங்கைமன்‌ செருக்கழித்த வாதியாந்‌
திருக்கவித்‌ தலத்‌ துகந்த தேவுமெய்தி னம
தருக்கவித்‌ தலங்கெடுத்த தன்னிகர்க்கு மாறன் முன்‌–61-

வள்ளி யங்குழை யின்சொன்‌ மடந்தையர்‌ கள்ளி யங்குங்‌ கவின் குரு காரின்முன்‌ பள்ள யங்குடி கொண்ட பரவைசெய்‌ வெள்ளி யங்குடி மாயனு மேவினான்‌–62-

அணிமாடத்‌ திடை யிருந்த லைம்பால் கொண்‌ மாதர் செயுந்‌
திணி மாட கத்தியாழ்ப் பண்‌ செவியின் மடுத்‌ தகணமெலா
நணி மாட கத்துலவு நாரியர் கண்‌ டினிதுவக்கு
மணி மாடக்‌ கோயிலுறை மாமகணாதனு மடைந்தான்‌–63-

நந்தமர்‌ முன்கை மின்னிடை மாதர்‌ நடை கண்டே
வந்‌துறை யும்ப லஞ்சம னத்தே வட்கிப்போம்‌
விந்தை வைகுந்த விண்ணகரத்தே விளைவோடா
ரந்தமி லானு மிந்திரை யோடடைந்தானால்‌–64-

வரிமேய விளமுசுவு முழவோர்‌ கண்டார்‌ வளைகொடெறி தரவது தென்‌ மரமேறாவெண்‌)
கரிமேய விண்ணகர மிசையிற்‌ றாவிக்‌ கற்பகக்கா வூடொளியுங்‌
லரிமேய விண்ணகரத்‌ திறையும்‌ போந்தா னன்பர் குழா மிடுபதக மாகும் பாரப்‌ பரிமேய விறை யளவுஞ்‌ சகியா நம் பராங்குசன் நன்‌ குரைசெய்தமிழ்‌ பரிந்துளோர்வான்‌–65-

ஆவனார்தொக லார்மன வன்பர் தங்‌ காவ னார் தொடு கண்ணி மகிழன் முன்‌
மாவ னார் தொகை யுற்று மகிழ்ந்து வாழ்‌ தேவனார் தொகைச்‌ செல்வனு மெய்தினான்‌–66-

வருடோத்தவ மாதோத்தவ மகிழ்வோடு செ யது விண்‌
வருடோத்தரம்‌ புரியப் பசு மலை யிற்றி கழுறு வண்‌
புருடோத்தம மெனவே யுரை பொரு வின்னக ரிடை வாழ்‌
புருடோத்தம னுஞ்சென்றனன்‌ பொலிவா ருவணத்தே–67-

பம்பு செங் கதிரோன்‌ றன்னைப்‌ பாயிரு ளனைத்து மொன்றி
வம்பற வுறவு செய்வான்‌ வருந்தகை யனைய மாற
னம்பொன்செ யுருவந் தாங்கு மமலனின்‌ றிரு முன்‌ பாகச்‌
செம்பொன்செய்‌ கோயில்‌ வாழும்‌ திரு வினாயகனும்‌ போந்தான்‌–68-

வெற்றி யம்பலத்‌ தாடும்‌ விளங்கனல்‌ நெற்றி யம்பலர்‌ நேர் சடை யாற் கருள்‌
பெற்றி யம்பலரும் பரன்‌ பேரருட்‌ டெற்றி யம்பலத்‌ தேவனு மெய்தினான்‌-69-

அருமணிக்‌ கூட லுற்ற விர்தரத்‌ துடைய நங்கைக்‌ கொரு மணிக்‌ கூடற்‌ சங்க மொழிப்பவ னுரை நூலோர்வான்‌
பெருமணிக்‌ கூடத்‌ தோடும்‌ பிறங்கு மாடங்களோங்குந்‌ திருமணிக்‌ கூடத்‌ தானுஞ்‌ சென்றனன்‌ கடிதினம்மா–70-

நெருக்கா வளவில்‌ நிரை மேய்த்து நேர்ந்தங்‌ கிகலுந்‌ தீ யோரைக்‌
கருக்கா வளவிற்‌ சென்றாயர்‌ கன்னி மாரோ டினிதாடும்‌
திருக்கா வளம் பாடிக் குறையுஞ்‌ செங்கட்‌ டிருமாலும் போந்தான்‌
பெருக்கா வளமார்‌ தென் குருகைப்‌ பெருமான்‌ வகுளப்‌ பரன்‌ முன்னே –71-

எள்ளக்‌ குளத்தினை யினித்த சொலரும்பிக்‌
குள்ளக்‌ குளத்தியர்‌ குருடேந் திட வரால்கள்‌
பள்ளக்‌ குளத்திடை பரந் துயர்‌ குதிக்கும்‌
வெள்ளக்‌ குளத்திலுரை மெய்யனு மடைந்தான்‌.-72-

சுருப்பார்த்‌ தலம்பு பொழில்‌ சூழ் குருகை மாறன் பால்‌
விருப்பார்த்‌ தநெஞ்சடியார்‌ வெவ் வினை தீர்ப்‌ பான் முன்னர்‌
மருப்பார்த்‌ ததண்டுளவ மாலையணி மார்பிலங்கத்‌
திருப் பார்த்தன்‌ பள்ளி யுறை தேவ பிரானும் மடைந்தான்‌–73-

இருமா னிலம்பரவு மகிழ் மார்ப னின் வாயி லினிதாயெழு
மொருமா வளங் கொள் கவி பெற வேணு மென்றேகி யுயர் மேவு தண்‌
முருகா ரரும்பு விரி புளி மேவி னன் கரிய முகின் மேருவின்‌
வருமாறு புண் மீது திருமா லிருஞ்சோலை வளர் மாயனே–74-

சினத் திருக் கோட்‌ டிபமலற மருப் பொசித்த திருக்கரன்ற னடிபரவு்‌ந் திறத்தினோருண்‌ மனத் திருக்கோட்‌ டிடுங் கருணை வரதன் செய்ய மரைத் திருமா மகளுகந்த வரை நேர் மார்பன்‌
முனத் திருக்கோட்‌ டினை யுறுவெற்‌ பெடுத்தானுய்ய முகிறடுத்தோன்‌ பழமறை தேர்‌ முதுவோர் வாழுந்‌
தனத் திருக்கோட்‌ டி யெனு மணி நகர் வாழெந்தை செளமிய நாராயணனுஞ்‌ சார்ந்தான்‌ மன்னோ–75–

வையமுறு மாருயிர்கள்‌ செய்யும் வினை யோடி யுயர்‌ வானி லடையா
வுய்யும் வகை யாக வரு மய்யனருண்‌ மாறனுரை யொன்று பெறவே
பையரவ மீது துயின்‌ மைய வரி மூசி யடர்‌ பாசொளி துழாய்‌
மெய்ய மலை யாளனிவண்‌ செய்ய மலர்‌ மாதினொடு மேவினனரோ–76-

செல்லாரு மாறுறுவ ரெல்லாரு மேபரவு தீந்தாமமார்‌
சல்லாப மாறனுரை யில்லார்வ மொடுகட றான்றீய வெய்‌
வில்லாளி யேழிடப மல்லோடு காயும் வலி வேந்தாகு மெம்‌
புல்லாணி மாயவனும்‌ மல்லாரு மோதியொடு போந்தனரோ–77-

எருத்தண லமரர்‌ யாரு மியாங்களுச்‌ சீவித்தற் கெங்‌
கருத்தண்கா வென நின்‌ றேத்தக்‌ கருணை கூர்ந் தருளினானை
மருத்தண்கா வுகு செந் தேனால்‌ வானுற வளருஞ்‌ செந்நெற்‌
றிருத்தண்கா லுறையு மம்பொற் றிருமகட்‌ கிறை வந்தானால்‌–78-

குன்றுறழ்‌ மாடம்‌ பம்பிய வீதிக்‌ குருகூரில்‌ வென்றி கொண்‌ மாறன்‌ செந்தமிழ்‌ தானும்‌ வியந்தே விண்‌
பொன்றல மேவர்‌ தண் புளி நீழற்‌ பொலிவானான்‌ றென்றிரு மோகூ ரம்பதி வாழும்‌ திருமாலே–79-

தோடவிழும்‌ நிம்பத்‌ தொடைசூழ்‌ வழுதியர் முன்‌ டிப்‌ பரம்பொருணந் நாரணனா மென்றுரை த்தோன்‌
பாட லுகந்தருளும்‌ பானீய மாலுருவோன்‌ கூடலழகன்‌ கருடன்‌ கூடி யிவண்‌ சென்றனனால்‌–80-

சழக்கறு நீருலவு பெரு வராற்க டுள்ளிச்‌ சாடிடத்தீம்‌ பல வுதிர்க்‌கத்‌ தகர்ந்து வீழும்‌ பழப்பொறைகங்‌ குறுவேழ நுதியிற்‌ றூங்கும்‌ பைந்தேனி ரூலு டையப்‌ படியமேதி
வழுக்குற வண்‌ டர் மிகு பூங்‌ கழனி சூழ்ந்த வண் புதுவா புரி வளரு மலர் வாவிக் கண்‌ புழைக்கை யிடர்‌ கெட வஞ்ச லென்று வந்த பொன்னவள் சேர்‌ வடபத்ர சயநன்‌ போந்தான்‌–81-

சிலைவில்லி மங்கலமை நுதலோதி நங்கை யருள்‌ சிறுவோனருள்‌
கலைவில்லி மங்கல நகரில் வந்தனன் கரிய களனென்‌ ற பொன்‌
மலைவில்லி மங்கலம ழிய வென்ற செம்பதும மகள் மொய்ம்பனார்‌
தொலைவில்லி மங்கலம தனிலொன்று தும்பியிசை துளவத்தனே–82-

௮ரமங்கை நிகர் கொங்குண்‌ குழனங்கை சுதனன்பு ளடியர்க்குவிண்‌
சரமங்கை தருமின்ப னொரு செஞ்சொல்‌ பெறவென்று தனிவந்தனன்‌
வரமங்கை நகரொன்று திரு நண்ப னென தென்‌ று வரு பொன்னவன்‌
னுரமங்கை கொடு விண்ட நரசிங்கன்‌ வலி கொண்ட வுவணத்தனே–83-

தென்றிருப்பே றையில்வளர்‌ சீதான்‌ றன்றிரப்பே ருரைப்பவர்‌ தங்களுக்‌
கொன்றிருப்பே யுதவுவன்‌ மாறன் வாய்‌ துன்றிரும்பே ருரை பெறத்‌ தோன்றினன்‌.–84-

மருவை குந்தளம னுடைய நங்கைவயின்‌ வந்தவன்‌ னினிய சந்தமா
குருவை குந்தமிளிர்‌ நறுமை கண்டகுதை யுள்ளியே மிகவு நள்ளிடார்ப்‌
பொருவை குந்தனருள்‌ சிவனிரந்த பலி பொன்றிடக்‌ குருதி தந்தவன்‌
றிருவை குந்தநக ருறைவை குந்தனிவன்‌ சென்றனன்‌ கருட னொன்றியே-85-

மருப்புளிக்கண்‌ வளர்பவன்‌ பாவினில்‌ விருப்புளித்தன்‌ விறற்புய மால் வரை
யுருப்புளின்‌ மிசை யொன்றி மிக் கொல்லையிற்‌ றிருப் புளிங்குடிச்‌ சீதரன்‌ சென்றனன்‌–86-

மருமலர்‌ நிம்பத்‌ தொடையணி தென்ன வரேரதயனாங்‌ குருகுல வங்கைப்‌ படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ் பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக ளன்பன்‌ வர குண மங்கைத்‌ திருமாலே–87-

மருக்கு லாமகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டிருக்கு ளுமெந்தை யின்புறுந் தொண்டதாய்க்‌
கருக்குளன்றிக்‌ கடத்துங்‌ கருணையோன்‌ றிருக் குளந்தைப்‌ பதியவன்‌ சென்றனன்‌–88-

மன்றன்‌ மா மகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டொன்றி னன் புளி யொள்ளயில்‌ வேற்கலி
கன்றி விண்ணகர்‌ கண்ட குறுங்குடி நின்ற நம்பியு கந்து நிகழ்ந்தரோ-89-

மஞ்ச னந்தவழ்‌ தண்டலை வாவி சூழ்‌ மாட மார் திருக்‌ கோளூ ரகந்தனி
னஞ்ச னந்தன்‌ றுயிறரு மாமுகி னாயகன் வைத்த மாநிதி நாதன்‌ வெங்‌
கஞ்ச னந்த வுதைத்தவன்‌ பிங்கலற்‌ கான செம்பொ னளித்தினுங்‌ காணுவா
னஞ்ச னந்தங்‌ கரங்கொடு நோக்குவா னவலோடிங் கடைந்த னன்‌ மாதரோ –90-

திருவ னந்த புரமுகந்த செமலருந்தி யிறைவனா மருவ னந்த ழுவுமலங்க லணி முகுந்த னணுகினான்‌
கருவ னந்த வெமையுகந்த கருணை நங்கை யென வுரை யொருவ ளந்த னருமை நந்த னெளி சுதந்த்ர னெதிரரோ–91-

திண்பரி சாரங்‌ கங்கர மேவுந் திறலோனேர்‌
வண்பரி சார மன்னிறை யோனெம்‌ மன மேவு
நண்பரி சாரங்‌ கொண்டுயர்‌ பாவி னசைவைய்யா
வெண் பரி சாரர்‌ தந் திகழ்‌ மாற னெதிரானான்‌–92-

பனித் திருக் கார்த்‌ தொலி கெழு தண்‌ பரவை யூடே யினிது வளர்‌
தனித் திருக்காட்‌ கரையோனுந்‌ தந்தான் சேவை யுகந்தடியார்‌
துனித் திருக்கா றலைத்தரிய துணைத்தா ளருளு மணித்தான் வாய்க்‌
கனித் திருக்காரக மேவிக்‌ கவினார் குருகாபுரிச்‌ சுடர்க்கே–93-

காழிக்‌ கடாபணை சூழத்‌ திகழ் குருகாபுரிவாய்‌
வாழிக்‌ கலியடன்‌ மாறற்‌ கருள்புரி வானுகவா
முழிக்‌ கள நக ராழிக்‌ கரனளி மூசழகார்‌
சூழிக்‌ கமலவ ளோடுற்‌ றனனுயர்‌ தூய்ப்புளியே–94-

குருப்புலி யோநி வழிப்பிறவாது குலைத்தெமை யாளு மகிழ்‌
மருப்புலி யூறு மதுத் தொடைமார்பன்‌ வழுத்திடு பாவுணர்வா
னிருப்புலி யானை யுரித்தணி யாடை யிடைக்கணி வோனயர்‌ தீர்‌
திருப்புலி யூரனிவற்கு முனேர்பு திருப்புளி நாடினனால்‌-95-

இங்குன்‌ ரூளே சரணமென்று ளெண்ணா வந்திங்‌ கடிதொழுவோர்‌
வெங்குன்‌ றாத வினை தீர்ப்பான்‌ விரையார்‌ வகுளத்‌ தார்க்கோ முன்‌
செங்குன்‌ றூரென்‌ றுரை சேருந் திருவாழ்‌ நகரு ளினிதுறையு
மங்குன்‌ றூராற்‌ கரியானும்‌ மடைந்தான்‌ பாக்க ணசை கொண்டே-96-

காவாயென வணிவானவர்‌ கண மோடினி தடையா
பூவாயடி தொழவே யவர்‌ புரை தீர் வருட்‌ டருபுள்‌
நாவாயிடை யமர் மாயனு நலமார் தமிழ்‌ நசையாற்‌
றேவாயந மகிழ் மாலை சொல்‌ செவியோன் முன நணினன்‌–97-

குருவல்ல வாவு முலை யுடை நங்கை பாலனுயர்‌ குணமொன்று பாவி னசையாய்ப்‌
பொருவல்ல வால் வகுள வணிகொண்ட, மாறனெதிர்‌ பொதி யன்பி னாடினனரோ
வொருவல்ல வாவெமைமு னருள்செய்த வாவெனவிண்‌ ணுளர்வந்‌து தாழ நிதமுந்‌ திருவல்ல வாழுறையு முகிலெள்ளு மேனியிறை திரை பொக்கு வாரி யணையான்‌–98-

தண்டா தரிக்கமல வண்டான முற்றதிரு தன்மார்‌ பிருக்கு மிறை யோன்‌
மண்டா தரிக்கமுகில்‌ விண்டாற டுத்தவன்வண்‌ வண்டூரி னித்த மிமையோர்‌
விண்டா தரிக்கவருள்‌ கொண்டா தரித்தவன்வி ரைந்தேக மைப்பு னலிதா னண்டா தரிக்கமல ரொண்டாள ளிக்கு மகிழந் தாரன்‌ முற்கணினனால்‌.–99-

சூட்டோதி மந்தமது போட்டோடிணைந்‌ அலவு தோட்டோ டவிழ்ந்த மலர்நீர்‌ மாட்டோதி மங்கையர்கள்‌ வேட்டாடு கின்ற திரு வாட்டாற தென்‌றுரை செயுந்‌
கோட்டோதி மந்நிலவு நாட்டானு மம்மமவிர்‌ கோட்டானை நங்கை புதல்வன்‌
பாட்டோது வன்னமது பாட்டே யுகந்தெனவுப்‌ பாட்டோ னடைந்தனனரோ.–100-

பெருவித்து வக்கோட்டி பெருகித் தமிழ்ச் சூட்டு குருகைப்ப ரற்கேத்து மடியர்க்கு நோய்க்‌
கருவித்து வக்கோட்டி யழிவிற்‌ கதிக்காட்டு கருணைக்கடற்கேற்ப வெதிருற்றனன்‌
றிருவித் து வக்கோட்டிலிறை யுட் கருக்கோட்டன்‌ செருவிற்‌ றலைக்‌ கோட்டு மதவெற்பினை
மருவித்து வக்கோட்டி கலி முற்ப றித்தாட்ட மதுமுற்றளிப்பாட்ட துளவத்தனே–101-

துருக்கடித்‌ தானத்த வரைக்கு முற்‌ காலத்தி றொனித்தழைக்‌ காமுற்று யரையட்டவன்‌
திருக்கடித்தானத்தன்‌ வனத் தனித்‌ தாமத்தன்‌ சிறைக்ககத் தேறித்த ணெகினத்துவேர்‌
நெருக்கடித்‌ தானத்த மருக்கனைப்‌ போலுற்ற நிதிக்கருத்‌ தேவைக்கு மடி யர்க்குறுந்‌
தருக்கடித்‌ தானத்தன்‌ மகிழ்ப்பனித்‌ தாமத்தன்‌ சடத்தினைக்‌ காய்நித்த னெதிருற்றனன்‌–102-

மாறன் விளை யாடி மலர்‌ மாதுவள சேர் குருகை மான கருணா
வீறன்விளை சாரமுறு பாவினசை யோடவன்முன்‌ மேவினனிலா
நீறன்விளை யாநநச ரோருக நிகேதனனு நேடரியனா
மாறன்விளை யாகுநகர்‌ நாடிநிதம்‌ வாழுமுத லாயபரனே–103-

இருவிசும்பிடை யமரரும்பர வெம துநம்பிமெய்‌ வாதனால்‌
பொருவிலின்கவீ பெற வெழுந்‌துயர்‌ புளியிலொன்‌ றின னளிகுலா
மருவிரிந்து நறவுகும் புது மலரடர்ந்திவர்‌ சோலை சூழ்‌
திருவயிந்திர புரமெனும் பதி திகழுமம்புய லொருவனே–104-

மாவ டம்பமொளி ரோவி யத்‌ துலவு:மங்கை யாருடைய நங்கை சேய்‌
பாவ லம்பெறவு ளாவ லின் வினதை பால னேறிமிக வோலமாய்‌
நாவ லம்புவியுண்‌ மேவு முவர் முன நண்ணியே கிருபை பண்ணினேன்‌
கோவ லம்பதியின்‌ மாவலன்‌ கருணை கூடினோன்‌ புளியி னாடினான்‌—105-

மச்ச விழி நங்கையருள் எச்சமொரு செந்தமிழ் வழ ங்குமெனவே
யிச்சையொடு கந்துமதிர்‌ கச்சணி குறுங்கணுறு மிந்திரையொடு
கச்சி நகர் நின்று அருளும் அச்சுதன் அன்று துயர்‌ கடிந்த வலியோ
னச்சரவ மீது துயில்‌ பச்சை முகிலும் புளியி னண்ணினனரோ–106-

பெருவட்ட புயகரனங்‌ கமல னாதிப்‌ பெரும் தேவ ராசுரர் தமைப் பிலத்தில்‌ வீழ்த்தப் பொருவட்ட புயகரம்ய வணையா யென்றே போந்தனர்க ளனுதினமும்‌ போற்றி யேகத்‌
திருவட்ட புயகரமென்‌ றுரை சேர் திவ்ய தேசமகிழ்ந் தினிதுறையுந் திருமால்‌ வந்தான்‌
கருவட்ட புயகரலா வன்பர்‌ தம்பாற்‌ கண்ணருள் செய்‌ தருண் மாறன்‌ கண் முனம்மா–107-

பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌ தொளிர் மாடப்‌ பருப்பதஞ்சூழ்‌
பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌
தண்காவி னின்றருளெம்‌ பெருமா னொல்லைச்‌ சழக்கறு புட்‌ பிடரேறிச்‌ சார்ந்தான்‌ மிக்கு
வண்காரி மாறனுரை யாரணத்தின்‌ வண்டமிழ் கேட்‌டுகந்திடமின் மருவி மாதோ–108-

மஞ்சினம் தெண்‌ முதிர்ந்துளையா வுயிர்க்கு முத்த மல்கு மணி மாட மிசை மடவார்‌ நின்று
நஞ்சினுங்கா ரளகமுண வூட்டுந் தூம நனி கெழுமி யாசை யெலா நறைய தாக்கும்‌
வெஞ்சினமற்‌ றற நெறிக்கண்‌ ணகலார்‌ வாழும்‌ வேளூரை யாளரியு மேவினானால்‌ செஞ்சிலம்பா ருடைய நங்கை வயிறு வாய்த்தோன்‌ செந்தமிழ் கேட்‌டுகந்திடப் புட்‌ செலுத்தி மாதோ–109-

உருப்பாட கத்தடிய நங்கைக்‌ குயர்மகவாய்‌
விருப்பாடகத்தடியார்‌ வெவ் வினை தீர்‌ மாறனெ திர்‌
பொருப்பாடகத்தனுவான்‌ சிலை யிறுத்த புங்கவனாந்‌
திருப்பாடகத் துறையுஞ்‌ ஸ்ரீதரனுஞ் சென்றனனால்‌–110-

சூர கந்தடிந்‌ தோனுயிர்த்‌ தோன்றனைச்‌
சேர கந்தணித்‌ தோன்செழுஞ்‌ சோலை சூழ்
நீர கந்தனி நின்றருள மால் குரு
கூர கந்தனிற்‌ கூடினன்‌ மாதரோ–111-

முத்தனைய வெண்ணகை செம்‌ பவளவாய் கொண்‌ முகிழ்‌ மலர்க்‌ கைக்‌ கடைகியர்தமுகமாய்‌ நின்று
மத்தமுடன்‌ களைகடிய வவர் முகந் தா மரை யெனவோ திம மயங்கு வளைமென்‌ சாலி
நித்கிலமார்ந் திலகு பழ னங்களார்ந்த நிலாத்திங்கட்‌ டுண்டத்து நெடுமால் முன்ன
மத்திவிளித்‌ திடுமுனஞ் சென்‌ றருள்வோன் மாற னாரணச் செந் தமிழ் தருமென்‌ றடைச்தான்‌ மாதோ–112–

வம்பு லாவு மகிழ் மலர்த்‌ தாரினான்‌ பம்பு மாமறைப்‌ பாவில வாவியே
உம்பர்‌ போற்று நம்‌ மூரக மால்‌ முனம்‌ தும்பி காத்தவன்‌ றோன்றினன்‌ மாதரோ —113-

வண்ணமுறு மாதவர்செய்‌ வேள்வி தோறும்‌ வழங்குறுமா குதிய வியை வாங்க நாளும்‌
விண்ணவர்தங்‌ குழூஉக்கணிரைந் தணி கொண்‌ மாட வெஃகாவிற் துயிலமரும்‌ வேந்தன்‌ வாசச்‌
சுண்ணமனைர்‌ தளி பெடையோ டமுதமுண்ணுந்‌ துளவலங்க லாடுதிருத்‌ துலங்கு மார்ப
னண்ணலரு ளிலகு மயிற்‌ காரி சூனு நாவீறற்‌ கருள்புரிவா னண்ணி னால்‌,–114-

இருக்கார கங்கனியாப்‌ புல்லரிடந் தன்னடியே யிறைஞ்சு மெய்யன்‌
பருக்கார கங்கடிவார்‌ தானெனதென்‌ றிடுங்கனகன்‌ பருமார்‌ பத்துட்‌
பெருக்கார கங்கலுழக்‌ ண்டவன் சேயினை மருவும்‌ பெற்றி யோர்‌ தென்‌
றிருக்கார கங் கருதும்‌ பொன்னவள் காந்தரு முகந்து சேர்ந்தாரன்றே–115-

உருக்கார்வா னந் தணிவார்‌ தன்னடியார்‌ செய்த பிழை யுகந்தன்‌ னோரைத்‌
கருக்கார் வானந் தருவார்‌ மறந்தொரு காற்‌ றமை யெணினுங்‌ கருணை செய்வார்‌
மருக்கார்வா னந் தவழுந்‌ தண்டலைசூழ்‌ மணிமாட மல்க யோங்குந்‌
திருக்கார்வா னந் தனில் வாழும் பரந்தா மரும் புளிக் கண்‌ சேர்ந்தார்‌ மாதோ–116-

அண்டர்‌ நாய கன் கபாலி யம்புயத்தி னன்றொழும்‌
புண்ட ரிக மந்திரங்கொள்‌ பூவை வாழு மார்பினான்‌
கண்டல்‌ வேலி நின்றிலங்கு கள்‌ வனூரு மாயவன்‌
வண்டு லாவ லங்கலாட வந்தனன் புள்‌ ளொன்றியே–117-

குருப்பவள வண்ணவத ரத்துடைய ஈங்கையருள்‌ குமரன்‌ செஞ்‌ சொல்‌
விருப்பவள வண்ண றனை முப்போதும்‌ வந்தனை செய்‌ விபுதர்‌ தாயர்‌
கருப்பவள வண்ணவிடா தருள்புரிவோன்‌ கனக மதிற்‌ ககனமோங்‌குந்
திருப்பவள வண்ண நக ருறை கருமா முகலுருவன்‌ சேர்ந்தானன்றே–118-

வண்டொடுதே னினமுல்கே சர நறுந்தா ரிலகு புய மாறன்‌ செஞ்‌சொற்‌
ணுற்றான்‌ தண்டமிழ்கேட்‌டுகந்திடப் புட்‌ பிடரேறி யரவெகினைத்‌ தருக்க
புண்டரிகத்‌ தாளிறை மெய்‌ யடியர் பணிக்‌ குடனுருகப்‌ புரக்கும்‌ போதத்‌
திண்டிறலார்‌ பயில் பரமேச்‌ சுரவிண்ண நகரில் வரு திருமான்‌ மன்னோ-119-

உட்புல னெனுமோர்‌ பாகனூ ணுதிர வுடலெனு நாப்பணி லுறச்‌ சேர்
கட்செவி நாசி வாயெனு நான்கு கற்கி வாய்‌ மதிக்கருள்‌ பூட்டி
நுட்ப நூலுரைக்கு மறநெறி செலுத்து நுவலரு மறையவர்‌ வளர்‌ சீர்ப்‌
புட்குழி நெடுமால்‌ சடகரிக்‌ கருள்வான்‌ போந்தனன்‌ போரகெஞ்‌சுகந்தே–120-

நன்றி யோர் தொழு நாயகன்‌ வெஞ்சட வென்றி மாறன்‌ விழுத்தமிழ்‌ வேட்டி வண்‌
சென்ற னன்னறை சேர் மலர்க்‌ காவொளிர்‌ நின்ற வூருறை நின்மல மாயனே–121-

பருமணி யிமைக்குஞ்‌ செஞ்சூட்‌ டராவணைப்‌ பரம னீலக்‌
குருமணி வண்ண னெவ்வுட்‌ கோவல’ னடைந்தா னொன்னார்‌
மருமமுண்‌ டொளிரும்‌ வைவேற்‌ காரி சேய்‌ மாறனாவா
லொருகவி பெற வென்‌ றுன்னா வுவணன்‌ மொய்ம்‌ புந்தி மாதோ–122-

கார்மலை மேனி வேங்கட்‌ கடகரி மருப்பொசித்துப்‌
போர்மலை முனிந்த சீற்றப்‌ புயவலிக்‌ குரிசில்‌ வண்மை
நீர்மலை யாதி செல்வி நீளையுற்‌ றெழுந்தான்‌ முத்து
வார்மலை யுடைய நங்கை மகவினுக்‌ கருள வென்றே-123-

கொந்து லாநெடுங்‌ குந்தள நங்கை சேய்‌ செந்த மிழ்த் தொடை சிந்தை யுள்‌ ளுன்னியே
யந்த ணாளரமருந் திருவிட வெந்தை வாழ் தரு விண்டுவு மெய்தினான்‌–124-

இருக்கடன்‌ மல்லைந் திலக கணந் திகழ் மா றன் கவிவேட்‌ டிசைக்கு மென்றுட் டருக்கடன்‌ மல்லைப்‌ பொருவா குவலியுளோ யனநடைப் பொன் றரப்‌ பெண்ணாள் பா
கருக்கடன்‌ மல்லைத்‌ தொலைத்தா யருளெமக்கென்‌ றும்பர்தொழுங்‌கடிகொள்‌ செம்பொன்‌
றிருக்கடன்‌ மல்லைப்‌ பதி வாழெம்‌ பெருமா னெகின நிழற்‌ சென்றான்‌ மாதோ–125–

மருவல்லிக்‌ கேணிளநீ ரளக மொழி முலை நங்கை மடமா னென்னு
மொருவல்லிக்‌ கேசுதன் மா றன் கவி வேட்‌ டளைசுவைப்பா லுடனே வெண்ட
யிருவல்லிக்‌ கேகி யுறிக்‌ கண்கவர்வோன்‌ மணிமாட மிலங்கும்‌ வண்‌மைத்
திருவல்லிக்‌ கேணி வள ரெம் பெருமான்‌ புட்கடவிச்‌ சென்றான் மாதோ-126-

முடிகை கூப்பு முள்கனிந்த மொய்த்த வன்பி னோர்கள் பால்‌
மடிகை யோடு யிர்ப்பறுக்கு மாறனின்‌ சொல் வாவியே
சுடிகை யோதி மத்தனன்ன வேதியர்கள்‌ சூழ்‌ திருக்‌
கடிகை மாநகர்க்குள்‌ வாமுங்‌ கண்ணனெய்தினனரோ-127–

சஞ்ச ரீகவிழி நங்கை பாலிலவ தரித்தவன்‌ சடமரித்தவன்‌
செஞ்சொ லாயதமி ழொன்ற வாவியுயர்‌ சிற்றி லைப்புளியு ளுற்றனன்‌
வஞ்ச மாயை யொரு கஞ்ச னே வுமத மத்த கக்கரியு தைத்தவன்‌
கஞ்ச மாதுவளர்‌ நெஞ்சி னானடியர்‌ கற்பகன்‌ னரவ வெற்பனே-128-

நங்கையார்‌ குழவி யின் சொ னாடி வந் தடைந்தா னும்ப
ரெங்கணா யகவென்‌ றேத்து மிகன்மதக்‌ கரியி னீட்டம்‌
தங்க நாயகி களோடு தனித்தனி வதுவை யாற்றும்‌
சிங்க வேழ்‌ குன்றில்‌ வாழுந் தெய்வ நாயகனு மாதோ–129-

மற்புனை யிலங்கை மூதூர்‌ வள்ளல்கம்‌ பத்துவீழ
விற்புனைந் தெழில் கொள்‌ தோளான்‌ மிளிர் நிலா மணி மாடத்தி
னற்புத மிகுமயோத்தி யாண்டகை யடைந்தா னின்பா
கற்பழ மொழிச்சி நங்கை கண்மணி கவி வேட்‌ டன்றே–130-

பொருந்தலரூ ணுண்டொளிரு மயில் வேற்காரி பு.தல்வனடி.யார்க்கு வினை பொருந்தா தேக
மருந்தனைய திருவடியோ னெகினத்‌ தங்கா வணனிறைக் கீழ்ச் சடவைரி மலர்வாய்ச்‌ செஞ்சா
லருந்தமிழ் வேட்‌டிந்திரையோ டெழுந்தா னக்கன்‌ ௮டற்பதுமா சுரற்குழலா வலைய வாங்கோர்‌
திருந்கணிமா தாகியனோன்‌ முனிந்த சோலை சேர் நைமி சாரணியத் திருமால்‌ மன்னோ–131-

நள்ளிரு ளளகபார நங்கையார்‌ மகவின்‌ சொற் கொண்
டுள்ளுகர்‌ தருள்வான்‌ புள்ளி னொல்லையி னெழுந்தான்‌ றொல்லை
பொள்ளனால்‌ கரவெற்‌ பாண்ட புங்கவன்‌ பவளத்‌ துண்டக்‌
கிள்ளை சேர்‌ பொழில் கொள்‌ சாளக்‌ கிராம நின்‌றருள் வோனன்றே–132-

மதரிரு விழிக்க ணங்கை மதலை வாய்ப்‌ பனுவல்‌ வேட்டுச்‌
சிதறியாச்‌ சியத்தை யுண்ட சீதரன்‌ பெரு மழைக்குப்‌
பதறியாச்‌ சிரமத்‌ தெய்தப்‌ பருமலை யெடுத்துக்‌ காத்த
வதரியாச்‌ சிரமத்‌ துற்ற மாயவ னெழுந்தான்‌ மன்னோ–133-

கொண்டலைந்‌ தரு நே ராங்கைக்‌ குரிசினன்‌ னெறிவாய்‌ நின்று
விண்டிலான்‌ காரி சூனு விளம்புறு பனுவல்‌ வேட்டீண்‌
டண்டின திரைக டோறும்‌ ஆரமீன்‌ றிடு கங்‌கைக் கண்‌
கண்டமா நகரின்‌ வாழுங்‌ கண்ணனு மெழுந்தான்‌ மன்னோ–134-

குருதிதோ யயில்வே றாங்குங் கொற்றவன்‌ காரி சூது
சுருதிதோய்‌ தமிழ் வேட்‌ டைவர்‌ தூதனாம்‌ விசையன்‌ போரில்‌
பரிதோ யிரத மூரும்‌ பாகனா மறையோர்‌ வாழும்‌
பிரிதிதோ யிலங்கை செற்ற பீடுளோ னெழுந்தா னம்மா–135-

விடமெனக்‌ கருத்து நீண்ட வேல் விழி யுடைய நங்கை
யிடமவ தரித்த செல்வ னின்னுரை கழறு மென்றே
குடவர்தம்‌ மனையில்‌ ரெய்பால்‌ கொள்ளை கொண்‌ டறியே னென்னும்‌
வடமது ரையினில்‌ வாழும்‌ மாயவ னெழுந்தான்‌ மாதோ –136-

கண்டு வரார்தமை யண்டகிலார் வினை கண்டிந மாறனெரி
பண்டு வராடை மண்‌ மண்டிசை யானுரை பண்டறு பாவினசை
கொண்டு வராலினம்‌ விண்டல மூடு செல்‌ கண்டுறு நீர் புடை சூழ்
வண்டு வராபதி விண்டுவும்‌ மேவினன்‌ மண்டல மேழ்புகழ–137-

ஆடி நேர்‌ கொடி றிரண்டு மணி செய்யு முடைய நங்கை
தோடவள்‌ கமலப் பண்டி தோன்றிய சிறுவன்‌ செஞ்சொல்
நாடி நன்‌னெறி வாய்‌ நின்‌ற நந்தர் கோன்‌ மதலை யாயர்‌
பாடி வந்‌ தருள்வோன்‌ யார்க்கும்‌ பரமனு மடைந்தான்‌ மன்னோ -138-

சேற்கடல்‌ விளக்கு முண் கட்‌ சேயிழை யுடைய நங்கை
சூற் கடங்‌ குறவெ ழுந்த தோன்றனல்‌ லுரைவேட்‌ டங்கை
வேற்கட மதமா வாணன்‌ விறற் புயந்‌ துணித்தம்‌ பைவாய்ப்‌
பாற்கடல்‌ துயிலு மாதிப்‌ பரமனு மெழுந்தான்‌ மாதோ–

நூற் றெட்டுத்‌ திருப்பதிப்‌ படலம்‌ முற்றும்‌-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –