ஸ்ரீ ஸித்த உபாய விஜயம் -கிருபா ஜன்யமா- கிருபா ஜனகமா–

ஸித்தோபாய விஜயம் : ஸித்தோபாயமாகிற எம்பெருமானுக்கே மோக்ஷோபாயத்வம் உண்டு என்னும் தென்னாசார்ய ஸம்ப்ரதாய ப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தத்தின்மீது ஸ்ரீரங்கத்தில் வாழும் ஸ்ரீ உ. வே. மதுராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியும் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமியும் சில ஆக்ஷேபங்களா எழுப்ப அவற்றுக்குத் தக்க ஸமாதானங்களைக் கூறி ஸித்தோபாயத்தின் நிரபேக்ஷோபாயபாவத்தை நிலைநாட்டும் நூல் / ஆசிரியர்கள், ஸ்ரீ உ. வே. வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ. வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி-

உள்ளபடி யுணரில் ஒனறு நமக்குணடென்று
விள்ள விரகிலதாய விட்டதே — கொள்ளக்‌
குறையேது மில்லாற்குக்‌ கூறுவதென்‌ சொல்லீர்
இறையேது மில்லாத யாம் ”
[பரமேயஸாரம் – 6]

உபாத,ததே ஸததா ஸதி,தி நியமநாத்‌யை : சித,சிதெள
ஸ்வமுத்‌, திஸய ஸ்ரீமாநிதி வத,தி வாக ஒளபநிஷ தீ ; |
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்தவம நது கு;ணெள
அதஸதவாம ஸ்ரீரங்கே,மய ஸரணமவயா ஜமபஜம |!
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-87-ஸ்ரீரஙக, நாதனே! உபநிஷத்‌; வாக்கானது (என்ன சொல்லு கிறதெனறால்‌) திருமால்‌ பயனடைபவனாகக தனனையே எண்ணி, சேதநா சேதனங்கள்‌ -ஸருஷ்டி, ஸ்திதி, நியமனம்‌ முதலியவறறைச்‌ செய்து ஸ்வீகரிககிறான் எனறு ஒதுகின்றது. ஆகையாlm, உபாயத் வமும்‌ உபேயத் வமும் தேவரீர்க் கு ஸ்வரூபமாகும் (முக்யமாகும்‌), ( உபாய உபேய சப்தத்தால் சொல்லப்படும மற்றவற்றுக்குப்போலே)கெளணம( அமுக்கி யம் ) அலல. ஆகையால் தேவரீரை நிருபாதிகமான உபாய மாகப்‌ பற்றினேன்‌-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

———————————

“ அஸாரம் அல்பஸாரம ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத ஸார தமம் ஸாஸ்தரே ரத்நாகர இவாமருதம ||?” எனற வைகுணட ட தீ,க்ஷிதீயோ பாதத வசநம் பிரமாண பாவத்தை வஹிக்கும் . இவ் வசநத்தில் , ரதனாகாரம் த்ருஷ்டாந் தமாகவும் ஸாஸ்த்ரம் தார்ஷ்டாந்தகமாகவும காட்டப்பட்டுளள து உற்று நோககததககது. ஸமுத்ரத்தில் அடங்கி யுளள அஸரராதி;சதுஷடயம் தயாஜ்யம் , ஸார தமம பஞசமம் அம் ருதம் உபாதேயம் . இவ் வோபாதி ஸாஸ்த்ரத்தில் அடங்கியுளள அஸாராதி,களைத் துரநது ஸாரதமத்தைக் கைக் கொள்ளவேணும் எனறு ஸ்லோகார்த்தம் தேறுகிறது

தேசிகன் செய்தருளின வ்யாக்யாநத்தின் படி, பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அஸாரமென்றும் , வேதத்தில பூர்வ பாகத்தில் ஐஹிக பல தத் ஸாத,ந பிரதிபாதகம் அல்பஸாரம் என்றும் , ஆமுஷ்மிக பல தத் ஸாதந ப்ரதிபாதக பர தேசம் ஸாரம் எனறும, ஆத்மபராப்தி ததஸாதந ப்ரதிபாதக பாகம ஸார தரம் எனறும் , பரமாத்ம ப்ராப்தி ததஸாதந பிரதேசம் ஸார தமம் என்றும் , இதுவே வீவேகிக்கு உபாதேயம என்றும் இஸ் ஸ்லோகாரத்தம் தெரிய வருகிறது

யா வேத; பாஹ்யா: ஸ்ம்ருதய: யாம்ச காம்ச குக ருஷடய:! ஸாவாஸதர : நிஷ்படிலா: பரேதய தமோ நிஷடதா ஹி தாஸ ஸமருதா: |!” என்றிறே மநு ப,க;வான அருளிச்செய்த து. மேலும, *’ வேதாத்‌ ஸாஸ்த்ரம் பரம்‌ நாஸதி ‘” எனறு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த் ரஙகளுககு சாஸ்த்ரத்வம் நிஷிதம் – இவ் விடததில ‘“ அந்யவாசியெனக் கொளள வேணும் .-பரா-ததத கைங்கர்ய ததஸாத,ந ஸிதத்தோபாய பிரதிபாத,கமே ஸாரதமம ஆக ஸார தமமுமான ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸார தமம் எனத் தேறியது

——————————————————————-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் –
சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
-பக்தி கிருபையின் பலம் என்றவாறு
-பக்தி ப்ரபத்திகளும் ஈஸ்வர கிருபா பலமே எனத் தேறியது-
பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம்
–போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா — ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்-இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

(1) ஸ்ரீதேவி உபாயமாகிறாள்‌,
(2) ஸ்ரீதே,வி விபு,ஸ்வ ரூபமுடையவள்‌;
(3) சரண வரண வாக்குக்கு உபாயத்வ முணடு என்பதற்கு பிரமாணம்‌ உள்ளது,
(4) கைவல்யம் மோக்ஷமாகாது
(9) கைவல்யத்தை ௮நுபவித்த பின்‌ பரமாத்மாவை அநுபவிககலாம்‌ எனறு கூறப்படுகிறது;
(6) கைவலயம்‌ ௮ண்டத்தினுள்ளேயே இருக்கிறது எனறு பிரமாணங்களால் கூறப்படுகிறது,
(7) பிரபததி துர் பல மானது.
(8) சக்தி யுள்ளவர்களுககு பக்தி யோகத்திலேயே அதிகாரம்
(9) பக்தி யற்றவர்களுக்கே ப்ரபத்தியில்‌ அதிகாரம்
(10) பக்திக்கு ௮ங்க மாகவேயிருககும் கர்ம யோகம்‌ முதலானவற்றுக்கு ஸ்வதந்தரோபாயத்வம் கூடாது.
(11) ஸாத்யோபாயததினால்‌ ஸித்த,வஸ்து ஸாதிக்கப்படுகிறது
(12) ஸாத்‌ய ஸாதநங்களுக்கு வேறு பாடு உண்டு.
(13) வேறான ஸாதரநத்தாலேயே வேறான ஸாதயம் ஸாதிக்கப் படுகிறது.
(14):பரித்யஜய என்கிற உபா யாந்தர தியாக,வசநம் அதிகாரத்தினால் ஏற்கனவே யுள்ளதை அநுவாத,மே செய்கிறது.
(15) திருமந்திரத்தில்‌ பரணவம்‌ இல்லாமலே எட்டு அக்ஷரமாகிறது
(16) மிகப்‌ பெரியவர்‌களான நித்யர்ககும்‌ முக்தர்க் கும்‌ ஸருஷ்டி முதலானவற்றில சக்தி கிடையாது
(17) தேஷத்தைக் காணாதிருக்கையே வாத்ஸல்யம்‌
(18) பிறர்‌ துன்பத்தைக்‌ களைவதில் விருப்பமே தயை என்று
சில பூர்வபக்ஷிகள்‌

1-ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளிலிருந்து. பகவத கிருபை ஒரு ஹேது வில்லாமல்‌ உண்டாகிறது என விளங்குகிறது –
2-உபாயங்களில்‌ ஏற்றத் தாழ்விருக்கையால் அதிகாரிகளுக்குத்‌ தக்கபடி பல பேதம் உணடு
3-மற்ற ஜீவரைப் போலே அணுத்வமே ஸ்ரீதேவிக்கு இயலவானது.-அகடி தகடநா சக்தியாலே அவள்‌ எங்குமிருக்கவும் செய்கிறாள்
4-இல சமயங்களில்‌ கர்மயோகமும் , ஜ்ஞாந யோகமும் மோக்ஷத்திற்கு ஸ்வதந்த்ர காரணமாகவும்‌ ஆவதுண்டு –
5-ஸ்ரீதேவிககு எப் போதும்‌ மோக்ஷோபாயத்வம்‌ கிடையாது, எப்போதுமுள்ளது புருஷகாரத்வமே
6-அடியார்களின் குறறங்களைக் குணமாகக்‌ கொளளுகை வாத்ஸல்யமாகும்
7-பிறர்‌ துனபங்‌களைக் கண்டு துன்புறுவதே காருண்யமென ப்ரமாணம் கூறுகிறது-
8-ஈஸ் வரனுடைய நிரபேஷ உபாயத் தன்மைக்கு ஓட்டாதாகையால, பிரபத்தி அதிகாரி விஸேஷணமே
9-ஸவரூபத்தைப் பற்றிய உண்மை யறிவுடைய அனைவருமே அதற்கு அதிகாரிகள்‌-
10-உபாயாந் தரங்களைக் கை விடுவதை பிரபத்திககு அவஸ்யமான அங்கமாகவே கீதை விதிக்கிறது-
11-ஸ்ரீ ய பதிக்குக்‌ கைங்கர்யமாயிருககும கர்மம் (உயிரகளிடதது) இரக்கம முதலான பல காரணங்களால உண்டாவது.
12-அத் யந்த பரந்தர ஸ்வரூபததை அறிந்தவர்களுக்கு ஸாதராந்தரஙகள்‌ ஸவரூப விருத்தமே யாகும்
13-நெல் குத்தி னால் வியர்வை ஏற்படுவது போலே ஸரணாகதனுக்கு இயல்‌ வாகவே ஏற்படும்‌ தன்மைகள் ஆநுகூல்ய ஸங்கலபம் முதலானவை-
14-பகவத் ப்ராப்தி விஷயத்தில்‌ பிரபத்தி பலத்தைக் கொடுத்தே தீரும் என்கிற இந்த நியமம்‌ இல்லை -பகவத் இச்சையே ஹேது என்பதை பரத ப்ரபத்தியிலே காணலாம் –

15-ப்ரபந்ந னுக்கு அக்ருத்ய கரண கருத்யாகரண ரூப பாப சம்பந்தமும் உபாயாந்தர சம்பந்தமும் உண்டானால் அவன்‌ முன் பிரபத்தியை நினைவிற் கொள்வதே பிராயச் சித்தமாகும்
16-குல தைவதம் போலே எல்லா பரபந்நர்களும் பூஜிக்கத் தக்கவர்களே
17-ஒவ்வொரு வயக்தியிலும ஜாதி பரி ஸமாப்ய வ்யாபித்திருப்பது போலவே, ஓவ்வோ ரணுவிலும் ஈஸ் வரன் உள் நுழைந்து பரி ஸமாப்ய வ்யாபித்‌திருக்கிறான்‌
18-கைவல்யம் நியாமாகவே கொள்ளத் தக்கது –

நம்பிள்ளை ஈடு -ஈமபிளளை ஈடு.1-1-1 (அருளினன்‌ ) நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்டவித்தனை. இத்தலை அர்த்திக்க வன்‌ றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிறகக் கண்டவித்தனை

8-7-9 மதி–௮நுமதி என்றாக்கி அநுமதி மாத்ரத்‌ தாலே” என்பர்‌ பட்டர்‌. அதாவது அவன் புகுருகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை

8-8-3-எனனுணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும்‌ அவனதின் னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன்‌ ப்ரஸாதத்‌ தாலே. நின்ற நின்ற அளவுகள் தோறும்‌ இவ்வளவும அவனாலே பிறந்தது எனனும்படி யாயிற்று இருப்பது அவனுடைய சவ் ஹார்த்தம்

10-8-10 அவன் தானே செய்தான்‌’ என்னுமன்று அவனுககு வைஷமயமும, நைர்க்ருண்யமும, ஸர்வ முக்தியும் பிரஸங்கியாதோ? என்னில்‌; இத் தலையில் ருசியை அபேக்ஷித்துச்‌ செய்கையாலே, ௮வனுககு அவை தட்டாது. அது ஹேது வெனறு ஈஸ்வரனுககு உத்தரமானாலோ வென்னில, அது உபாயமாக மாட்டாது. பல வ்யாப்தமான திறே உபாயமாவது. இநத ருசி ௮திகாரி ஸ்வரூபமாகையாலே தத,விஸேஷணமாமித்தனை. உபாயம ஸஹகாரி நிரபேஷமாகையாலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது –

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் ) பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமாப் போலே இருப்பது ஓன்று –சூரணை -54-

சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி-

இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை –சூரணை -55-

சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  – இது தன்னை அருளிச்  செய்கிறார் –

அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை – சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –சூரணை -56-

உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத  ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –சூரணை-58- (இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் – அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-சூரணை-59-ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல –

பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது –சூரணை -60-

அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம் –சூரணை-61-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று – பிரமித்து – அத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே வேண்டுவது –சூரணை -62-

ரஷணத்துக்கு அபேஷிதம் ரஷ்யத்வ அனுமதியே –சூரணை -63-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லைசூர்ணிகை – 134–

இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )-சூரணை -142-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —சூரணை-143-

இவை இரண்டும் ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும் காணலாம் –சூரணை -144-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று – ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –சூரணை -145-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –சூரணை -263-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்குமற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..சூரணை-266-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –சூரணை -269-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–சூரணை-270-

ஆகையாலே தோஷம் இல்லை –சூரணை -271-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அதாவது – ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் – நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –சூரணை -396-

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம் அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம் பல வி சத்ருசம் பலாந்தர ஹேது
—ஆசார்ய ஹ்ருதயம்-111-

நாலயலார்-அயல் சேரியார்-உபாய சதுஷ்ட 0அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

ஸம்பந்த ஐஞாநமாத்ரம் , ஸித்த உபாய ப்ரதிபத்தி மாத்ரம் , அநிவாரண மாத்ரம் , ௮நுமதி மாத்ரம்‌, ௮சித் வ்யாவ்ருத்தி மாத்ரம் , சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விசேஷணம– என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள்

உபாய ப்ரபத்தி ஷட் அங்க யோகம் – வேதாந்த ஸார ஸித்தமான அநுபாய ப்ரபத்தி அதிகாரி விஸேஷணம்‌-இவ் வாசியை அறிய வேணுமநீயே எனககு உபாயமாவாயாக–எனறு பிரார்த்திக்கும் அறிவே சரணாகதி எனப்‌ படுகிறது-மஹா விஸ்வாஸத்தோடு கூட பகவான் ஒருவனையே உபாயமாயிருக்கும்படி யாசிப்பதே ப்ரபத்தி என்றும்‌ சரணாக,தி என்றம கூறப்படுகிறது

உபாய வர்ணததுககு உபாயத்வமிலலாமையாலே “சரணம்‌ வ்ரஜ” எனகிற விதியால சரண வர்ணததுககு இஷ்ட ஸாதநத்வம ஏறபட மாட்டாது.-இதை அநுஸரித்தே தேசிகனும பிரபத்தியை வ்யாஜோபாய மெனறு ௮ருளிச் செய்திருக்கிறார்‌. இப்படியுளள பிரபததி அநுபாயம்‌ என்பதும தேஸிகன் நியாய ஸித்தா ஞஜனத்தில அருளிச்செய்துள்ளார்-

பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி, ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி
லக்ஷ்மீ நா தனையேஉபாயமாகக் கொளளும் எண்ணமாயிருககும்‌ இந்த பிரபத்தி தன்னை உபாயமாக எண்ணும நினைவைத்‌ தடுக்கிறது -ஸஹ காரிகளை உபாயமாகக்‌ கருதும்‌ நினைவைத் தடுக்கிறது என்பதைக்‌ கூறவும் வேண்டுமோ -பகவானைக்‌ காட்டிலும வேறுபட்டது உபாயமாகாது ‘ எனனும்‌ அறிவு -பிரபத்தி உபாயம” என்னும் அறிவுக்குத் தடையாயிருக்கத் தட்டில்லை என்று கருத்து-
ஸர்வேஸ்வரன் ஸர்வஜ்ஞனா யிருந்த போதிலும் எப்போதும்‌ கருண யுடையவனா யிருந்த போதிலும ஸமஸாரச்‌ சுழலை நிர்வஹிப்பவனாகையால் ரஷ்யனான ஜீவனின அபேஷயை எதிர் பார்க்கிறான் – என்று பகவத ஏவ அபேஷா ப்ரதீஷையைச் சொல்லுகை யாலேயும்‌ இதுக்கு அநுபாயத்வம் ஸித்தம்‌

ஆளவந்தாரின ஆகம ப்ராமாண்ய ஸ்லோகத்தின் கருத்து பின வருமாறு — சேதனர்களுடைய முயறசியால் ஸாதிக்கப் படும்‌ உபாயாந் தரங்களுடைய ௮திகாரமும் அவர்களுடைய முயற்சியால் ஸாதிக்கப் படுவதாகவே யிருந்தால் , இவ் வதிகாரத்தை ஸாதிப்பதறகு மற்றோரதிகாரம்‌ வேணும் ; அதுவும் ஸாத்யமாகில் அதை ஸாதிகக ஒரதிகாரம் வேணும்‌ எனனும்‌ ரீதியில் ௮நவஸதா தோஷம் ஏற்படும் ஆகையால் சேதநர்களின முயறசியால்‌ ஸாதிக்கப்படும் உபாயாந்தர ஸ்தலங்களில் ௮திகாரத்தை முன்பே ஸித்தமாயிருப்பதாகக் கொள்ளப் பட வேண்டும்‌. இவ் வண்ணமாகவே, ஸித்த உபாய ஸ்தலத்தில் அதிகாரத்தை ஸாத்யமாகவே கொண்டால் , எப்போதுமே பலம்‌ ஏறபட வேண்டி வருமாகையாலே எப்போதுமே மோக்ஷம்‌ ஏற்படுகை யாகிற நித்ய முக்தி ப்ரஸங்க,ம்‌ ஏற்படுமாகையால் ஸித்‌தோபாய ஸ்தலததில்‌ அதிகாரத்தை ஸாத்‌யமாகவே கொள்ள வேணடும்‌–என்று கருத்து. இவ்வளவால் சரணாகதி ஸாத்யரூபமாகையால் ஸித்‌தோபாய நிஷ்டனுக்கு இது ௮திகாரி விசேஷணமாகாது என்று சிலர்‌ மயங்குவது தள்ளப்பட்டது-

ப்ரபத்தியாவது -சேதனனுடைய பிரார்த்தநா ரூப ஞானமே -, நமஸ் சப்தத்துக்கு ஸ்தூல யோஜனை, ஸுஷ்ம யோஜனை, பர யோஜனை என்று மூன்று யோஜனைகள்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன. அந்த மூன்று யோஜனைகளிலும்‌ பரபத்திக்கு உபாயத்வமில்லை என்று ஏற்படுகிறது –
முதல் யோஜனையில் நமஸ் -வணக்கத்தைச் சொல்லி –ஸ்வரூப அந்தர் கதமாய் -ஸ்வயம் ப்ரயோஜனமான சேஷ வ்ருத்தியைச் சொல்கிறது -இது மானஸ வாசிக காயிக ரூபமாய் த்ரிவிதமாய் இருக்கும் -மூன்றில் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாகும் –
ஸ்தூல யோஜனையில் ந மம –தேவோஹம் மனுஷ்யோஹம் -தவிர்ந்து யானும் என்னுடைமையும் நீயே என்னும் நினைவு -ஸ்வரூப உபாய பல அம்சங்களிலும் -பகவத் விஷயத்தில் சேஷ விருத்தியைப் பண்ணி தனக்கும் போகத்தை ஸம்பாதிக்க யோக்யனாகை–ஸ்வ சேஷத்வ ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்யத்வ ரூப ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி நமஸ் ஸப்தத்தாலே சொல்லப்படுகிறது -ஸர்வேஸ்வரனுக்கே ஸ்வம்மாய் இருக்கையும் -அவனுக்கே ரஷ்யமாய் இருக்கையும் -அவனுக்கே போக்யமாய் இருக்கையும் -சொல்லிற்று -தன்னால் வரும்‌ நன்மை விலைப் பால் போலே-என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -பரயோஜனையில் -௮வனை யடையும்‌ பொருட்டு உபாயமும்‌ அவனே. பல ப்ரதனும் அவனே ”என்னும் நினைவு –

ஸரணாகதி தீபிகையில தேசிகன் ப்ரபத்தியை ஈஸ்வர யத்ந பலமாகவும்‌ ஈஸ்வர கிருபா பல மாகவும்‌ உபபாதித்துள்ளார்யாஜ்ஞா பிரபத்தி -பிரார்த்தனா மதி பிரபத்தி -அவ ரக்ஷணே ” “மந ஜ்ஞாநே ‘ என்கையாலே ரக்ஷண தர்மாஸ்ரய வஸ்துவுக்கு ரக்ஷய விஷயம் அபேக்ஷிதமானாப்‌ போலே, ஜஞாநாஸ்ரய வஸ்துவுககு ஜ்ஜேய விஷயம்‌ அபேக்ஷிதமாகையாலே, இருவர்க்கும் இரணடும்‌ அபேக்ஷத விஷயமா யிருக்கையாலும் , இரண்டும்‌ தர்மிக,ராஹகமாந ஸித்‌தமாகையாலும இருவர்க்கும்‌ இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்‌.புண்ணியம் யாமுடையோம் -நாங்கள் செய்தது அல்ல ஸ்வீ கரித்ததும் அல்ல புறப்பகையும் கழிக்க வேண்டாம் உள் பகையும் அழிக்க வேண்டாம்

பண்டே உனக்கு ஸேஷமாயிருககிற இவ்‌ வாத்மாவை நீ கொண்டருளினா யித்தனை யிறே என்று ஆறாயிரப்படி – ஸ்வரூப ஸமர்ப்பணமாவது ஸ்வதஸ ஸித்‌தமான ஸேஷத்வத்தினுடைய ௮நுஸந்தான மாத்ரமே யொழிய தன்னதான ஆத்ம வஸ்துவை அவனுக்கு ஸமர்ப்பிக்கை யன்று —
ஆசார்யாபிமாநமாவது–இவை யொனறுக்கும்‌ சக்தனன்றிக்கே யிருப்பா னொருவனைக குறித்து –ஸநந்தய பிரஜைககு வியாதி யுண்டானால் அது தனது குறையாக நினைதது ஓளஷத ஸேவையைப பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான் உபாயாநுஷ்ட்டாநம் பண்ணி ரக்ஷிக்க வலல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமாநததிலே யொதுஙகி –வல்ல பரிசு வருவிப்‌ பரேல் அது காணடுமே–என்கிறபடியே ஸகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி களையும அவனிட்ட வழக்காக்குகை -கைங்கர்யம் தான் நித்யம் -, நித்யமாக பிரார்தித்தே பெற வேணும — பேற்றுக்கு வேண்டுவது, விலக்காமையும இரபபும் —

நியாஸத்தில்‌ என் சுமையை நீ ஏற்றுக் கொள்ள வேணும்‌’ எனறு பிரார்த்திக்கப் படுகிறது. சரணாகதியில் ‘நீ எனக்குப்‌ பலனை யளிப்பாயாகா எனறு பிரார்த்திக்கப் படுகிறது. மேலும் , உன்னிடத்தில் என பரம்‌ வைக்கப்பட்டது ‘ எனனும பரந்யாஸம் ஸ்வாதந்தர்யததை உள்ளடக்கியது, “என் சுமையை நீயே மேல் விழுந்து ஏற்றுக் கொள்ள வேணும” என்னும் ப்ரார்த்தனையா யிருப்பதால் சரணாகதி பாரதந்தர்யத்தை உள்ளடக்கியது. நியாஸத்தில்‌ பர ஸமர்ப்பணம்‌ முக்கியம்‌, சரணாகதியில் உபாயமாக வரிப்பது முக்கியம்‌; சுமையை இறக்குவதாகிற ந்யாஸத்திற்குப்‌ பிராட்டியோடு கூடிய பெருமாள்‌ உத்தேஸ்யம்‌. சரணாகதியில்‌ பிராட்டிக்கு உப லக்ஷணத்வ மாத்ரமே; (உபாய ப்ரார்த்தனையில் நேரே அந்வயமிலலை. ) ந்யாஸம்‌ பிரணவத்தை ௮ங்கமாகக் கொணட தாகையால் ( பிரணவத்திற்குப்‌ பொருளான ஐகத்‌ காரணத்வம்‌ முதலான ) பரத்வ குணங்கள்‌ அதற்கு விஷயம்‌, சரணாகதியில் கரண மநதிரம த்வயமாகையாலே , அதில் சொல்லப்படும் ஸெளலப்யம்‌, ளெளஸீல்யம் முதலான நீர்மைக் குணங்கள்‌ விஷயம் – சரணாகதியில் -— ஜீவாத்மா தனக்குப்‌ புண்ணிய மில்லை யென்றும்‌, பாபம்‌ உண்டென்றும்‌ அநுஸந்திக்க வேணும்‌. நியாஸத்தில்‌ ப்ராதி கூல்ய வர்‌ஜனமும்‌. ஆநு கூல்ய ஸங்கல்பமும் அங்க மாகையால் , பாபத்தை விடுகையும் , புண்ணிய முடைமையும் அநுஸந்திக்கத் தககது–தன் அறிவாலே தேவனுடைய திருவடிகளிலே தன்னை ஸமர்ப்பிப்ப தென்பதே பிரபத்தியாகும் . இது எல்லாப்‌ பாபங்களையும போக்கும.” என்பது ந்யாஸத்தின் லக்ஷணம்‌. “நான்‌ அபராதங்களுக் கெல்லாம் ஆலயமாயும்‌. கைம்‌ முதலற்ற வனாயும. வேறு புகலற்றவனாயும்‌ இருக்கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாவாயாக என்று பிரார்த்திக்கும்‌ அறிவே ஸரணாகதி யெனப்படும்‌. அது இந்த தேவனிடத்‌தில் பிரயோகிக்கப்படட்டும, ” என்பது சரணாகதியின்‌ லக்ஷணம்‌–ஜிதந்தா ஸ்தோத்ரத்தில் :: ஜிதம்‌ தே” என்‌னும்‌ முதல் ஸ்லோகத்தாலே ந்யாஸமும்‌, “ தேவாநாம்‌ ” என்னும்‌ இரண்டாவது ஸ்லோகத்தாலே சரணாகதியும்‌ தனியாகச்‌ சொல்லப்பட்டது.

ஸ்தோத்ரத்திலும்‌ – நமோ நம ” [21] என்னும்‌ ஸ்லோகத்தாலே நியாஸமும, “ந தர்ம: [22] என்னும்‌ ஸ்லோகத்தாலே சரண வர்ணமும்‌ தனிப் படுத்திச்‌ சொல்லப்பட்டது. கத்யத்திலும்‌ “த்வத பாதார விந்தயுக,ளம்‌ ॥சரண மஹம பரபத்‌யே” என்று சரணாகதியும்‌, நமோ அஸ்து தே’ என்று பர ஸமர்ப்பணமும்‌ வேறாகக் கூறப்பட்டது. ஸ்ருதிகளிலும்‌ அவற்றுக்கு வேறாக விதி, காணப்படுகிறது. தைத்திரீய உடநிஷததில ஓம்‌ என்னும்‌ மந்திரத்தாலே ஆத்மாவைப் (பரமாத்மாவிடம்‌) ஸமர்ப்பிக்க வேண்டியது ” என்று ந்யாஸம்‌ விதிக்கப்‌ பட்டது. ஸ்வேதாஸ்வதர உபனிஷத்தில் “முமுஷு வான நான்‌ சரணமடைகிறேன்‌” என்று சரணாகதி விதிக்கப்‌ பட்டது. அவ் வண்ணமே புருஷ ஸூக்தத்தில் , *“அப,தந ந புருஷம்‌ பஸூம” என்று நியாஸமும்‌, **: அத பய: ஸமபூ,த. ” என்னுமிடததில் சரணாகதியும்‌ விதிக்கப் பட்டது “தஸ்ய தீரா.” எனறல் விடத்தில தீர( தீ மதா மக,ரேஸர) சப்‌த்தத்தாலே. உபாயாந்தர நிஷ்டர் களுக்குள்ள ‘ஸம் பந்த ஐஞாநத்‌தில்‌ அறி வின்மை’ இவனுக்கில்லை என்று கூறுவதன்‌ மூலம்‌ ஸமபந்த ஜ்ஞாந பூர்த்தியே இவனுக்குள்ள அதி,காரம்‌ (தகுதி) என்று காட்டி *யோநிம பரிஜாநநதி” – அவதார ரஹஸ்யத்தை நன்கு அறிகிறார்கள்‌ ] என்னும்‌ பகுதியாலே அவதார விஷயமாகவும் . ஸெளலப்யாதி குண விஷயமாகவு மிருககும் சரணாகதி தெரிவிக்கப்பட் து. அதற்கு வேணடிய புருஷகாரமும்‌ ஹ்ரீஸ் ச-லக்ஷமீம்‌ ச ” என்று காட்டப்படட து. பகவத கீதையிலும்‌–மந்மநா பவ” [18-65]என்‌னும் ஸ்லோகத்தாலே பர நியாஸமும, அடுத்த ஸ்லோகத்திலயே “ஸர்வ தர்மாந்‌ ? எனறு சரணாகதியும் சொல்லப்பட்டது; லக்ஷ்மீ தந்த்ரத்திலும ““ உபாயாந்தரங்களையும்‌, அபாயங்களாகிற பாபங்களையும கை விட்டவனாய்‌, நடு நிலையை ஏற்றவனாய்‌,என்னையே சரணமடைந்து, இறுதியில என்னையே அடைகிறான் ” [12-50] என்று சரணாகதியைக் கூறி, “அதுவே ஆறு அங்கமுடையதாய்‌ உபாயமாவதை என்னிடமிருநது கேட்பாயாக” [12-59] எனறு தொடங்கி பர ஸமர்பபணம் வேறுபடுத்திக் கூறப்பட்டது. அஹிர்‌ புத்ய ஸம்ஹிதையிலும் அவற்றை வேறு படுததிக் கூறி யுள்ளது ஸதூல பாரதந்தர்ய ரூபமாகையாலே ஷடங்க ந்யாஸத்தை ஸ்தூலமாகவும, ஸூ்ஷ்ம பாரதந்த்ர்ய ரூப மாகையாலே சரணாகதி ஸபக்ஷ்ட மாகவும் சொல்லப்பட்டது. எல்லா உபாயாந் தரங்களையும்‌ கை விடுகை அங்கமா யிருக்கை யால் அப்ரதாந மாகவும்‌, அதை அங்கமாக வுடையதாய் யிருக்கையால்‌ ஸித்தோபாய ஸ்வரூபம்‌ ப்ரதாநமாகவும்‌ கூறப் பட்டது ] என்று ஸ்ரீவசந பூஷண மீமாம்ஸா பாஷ்‌யத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளதே –

நியாஸ சரணாகதி களுக்கும் ‘ஸம்யோகம்‌ ரூபம்‌, சோதநா (விதி,), ஆகயா(பெயர் ) ஆகிய நான்கும் வேறுபடுகின்றன. எப்படி யெனில.–
“ஓம்‌ என்று ஆத்மாவைத் தியானிக்கக் கடவன் ” என்பது ந்யாஸத்தைப்‌ பறறிய விதி. “என்னை ஒருவனையே” உபாயமாக அடைவாய் ,! “லக்ஷ்மீ நாதனையே உபாயமாக வரிப்பாய்‌” முதலானவை சரணாகதியைப்‌ பற்றிய விதி, , இவ்விரு விதிகளும்‌ ஒன்றாக முடியாது –
‘யுஞ்ஜீத’ என்று சொல்லப் பட்ட யோகமும்‌, “சரணம்‌ வ்ரஜ’ * உபாயம் வ்ருணு’ என்று சொல்லப்பட்ட சரண வரணமும்‌ வெவ் வேறாகும் – யோக,மாவது தியானம்‌.–“ஓம் என்று ஆத்மாவை தியானியுங்கள்‌ ” என்று மற்றொரு வாக்கியம்‌ ஓதுகின்றதன்றோ. :யுஜிர்‌ யோகே,’ :யுஐஸமாதெள? என்னும் தாது பாடமும்‌ “யோகஸ் ஸநநஹந– உபாய– தியாந–ஸங்கதி — யுக்திஜு ” என்னும்‌ நிகண்டுவும் யோக ஸப்த்தம் தியானத்தையே குறிக்கும்‌ என்று காட்டுகின்றன. உபாய வரணமோ வெனில் உபாயமாகப்‌ பிரார்த்திக்கும் செயலாயிருப்பது. ஆகையால்‌ சோதநா(விதி) பேதத்தாலே ந்யாஸ வரணங்கள்‌ வெவ்‌ வேறுபட்டவை என்பது மறைக்க வொண்ணாதவையே

ஒரு முறையே அனுஷ்டிக்கப் படும் தியான ருபமாயிருடபது ந்யாஸம் என்றும்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, ஜீவனை ப்‌ரஹ்மத்திடம்‌ ந்யஸிக்க வேண்டும்‌” என்னும் வசனததில் நி எனனும்‌ உப சர்க்கத்தோடு கூடிய “அஸ்‌ தாது ஸமர்ப்பித்தல் , என்னும்‌ பொருளையே குறிக்குமாகையால, உபாய வரணம என்னும் பொருள்‌ அதிலிருந்து ஸித்திக்காதாகையால, ந்யாஸ சரணாகதிகளுக்கு வேறுபாடு மறைக்க முடியாததே யாகும் . ஆக, சோதநா பேதம் ஸாதிக்கப் பட்டதாயிற்று-

ந்யாஸ சரணாகதிகளின ரூபமும வேறு படுகிறது. எப்படி யெனில் : “ஆத்மாவை தியானிக்கக் கடவன்‌” என்று ந்யாஸ வித்யை ஜீவாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகை யாலும்‌. என்னையே உபாயமாக அடைவாய்‌ ” என்று சரணாகதி பரமாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகையாலும்‌ இரண்டுக்கும்‌ ரூபமும் வேறுபட்டதே.

தலை சிறந்த பெரிதாயிருக்கும் தன்மை முதலாக மஹஸ்த்வமீறாக வுள்ள பரத்வ குணங்கள்‌ விசேஷணமாக அநுஸந்திக்கத் தக்கவை –சரணாகதியிலோ வெனில (த்வயத்தில் கூறப்படும்‌) வாத்ஸல்யம்‌ முதலான எட்டு குணங்‌களோடு கூடியவனாகப் பரமாத்மா நேரே ௮நுஸந்திக்கத் தக்கவன்‌ “வஸூ ரண்யோ விபூ,ரஸி”என்று ஓதப்பட்ட ஸாவாதாரமான விபு ஸ்வரூபம் நியாஸத்திற்கு விஷயம் * ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம ‘ என்று த்‌வயோபனிஷத்தில் ஓதப் பட்ட குண பூர்த்தி யுடைய அாச்சாவதாரம் சரணாகதிக்கு விஷயம்‌. “பிரஹ்மாத்மா” எனறு ஓதப்பட்ட தே,வதாந்தர்‌யாமித்வமும்‌ ந்யாஸத்தில் அநுஸந்திக்கத்தக்கது. சரணா கதியில் ‘சரணெள என்னும் த்வய பூர்வ கண்ட, பதத்தில் ஸ்ரீபராங்குஸ பரகால யதிவராதிகளான ஆசார்யர்களோடு கூடி யிருக்கை அநுஸந்திக்கத் தக்கது–ந்யாஸத்தில :ப்ரஹ் மணே தவா மஹஸே‘ என்ற விடத்தில்‌ நாலாம் வேற்றுமைப்‌ பதங்களாலே ப்‌ரஹ்மத்திற்கு ஸேஷித்வமும அவற்றோடு ஓரே வேற்றுமையில்‌” படிக்கப் படும் -ஓமிதி ” என்னும் ப்ரணவத்திலுளள ௮காரததினால்‌ ரக்ஷகத்வமும் ௮நுஸந்திக்கத் தக்கது-சரணாகதியிலோ வெனில் , “ஸரண? சப்த்த்தினால் மோக்ஷ பஃல கரணத்வம் ௮நுஸந்திக்கத் தக்கது, ஆக, ரூப பேதமும் மறைக்க வொண்ணாதது -.

அவ் வண்ணமே ந்யாஸ சரணாகதிகளின்‌ ஸம்யோகமும் வேறு படுகிறது. நியாஸ வித்யை உபாயாந் தரங்களான முப்பத்திரண்டு வித்‌யைகளில ஒன்றாகையால் , அதில்‌ ஈடு படுபவர்களுக்கு ௮தின் பலத்தின்‌ ஸ்வாமியா யிருக்கை யாகிற அதிகாரம் பற்றிய ஜ்ஞானம ஏற் படுகையால் , “ ஸாஸ்த்ர பலம் பரயோக்தரி” [சாஸ்திரத்தின பலம்‌ அதைப்‌ பிரயோகப்பவனுக்கு ஏற்படுகிறது. ] என்கிற ந்யாயத்தாலே ந்யாஸ வித்யைக்கு ஸ்வார்த்த, மோக்ஷமே பலமாகிறது, சரணாகதி உபாயமாகாதாகையால் ஸித்‌தமான பகவானுககே அதில் உபாயத்வமாகையால. சேதனன் உபாயாநுஷ்டதாவாக ஆகாமை யாலும் , “’ பரம புருஷனால் ரக்ஷிக்கப் படும் இவனுக்குப்‌ பலத்தில் ஸவாமித்வமற்றிருக்கை” [ லஷ்மீதந்தரம்‌ 17-74] என்கிறபடியேயே பலஸவாமயமாகிற உபாயாதிகாரம இவனால் கைவிடப்படுகையாலும் , த்வயத்தில் உத்தர கண்டத்தில் நம சப்தத்தாலே பலனில் பார தந்த்ர்யமே பிரார்‌த்திக்கப் படுகையாலும, கேவல பரார்‌த்த மோக்ஷமே சரணாகதிக்குப்‌ பலமாகையால் , நியாஸ ஸரணா கதிகளுக்குப்‌ பலனில் இவ்வாறு. வாசி உள்ளதை யிட்டு ஸம யோக,பேதமும் ஸித்திக்கிறது.

‘ந்யாஸ வித்யை’ என்று நியாஸத்திற்கும்‌, சரணா கதி வித்யை’ என்று சரணாகதிக்கும்‌ பெயரில்‌ பேதமுள்ளதாகையால ஆகயோ பேதமும் அவற்றினிடையே உள்ளது. :: அதற்கே நியாஸம் என்னும்‌ பெயர் அறியப்‌படுகிறது. அது முதலில் உபாயமாகிறது ” எனறு ந்யாஸத்தைப்‌ பறறியும்‌, (நீயே உபாயமாவாயாக எனறு பிரார்ததிக்கும் அறிவே) சரணாகதியாகிறது; அது இந்த தேவனிடம்‌ பிரயோகிககப்படட்டும்‌ ” என்று சரணாகதி யைப்‌ பறறியும்‌ வசனங்களில இநத நாம பேதமம் மிகத் தெளிவு-

ஸாதநாந்தர நிஷ்டரர்ககும்‌, ஸித்‌தோபாய நிஷ்டரர்க் கும் அவர்களுக்குக் கிடைக்கும்‌ பலன்களுக்குமிடையே இவ்வாறு வேறுபாடு எளிதில் விளக்கத் தக்கதே யாகும்‌. இக் கருத்தினாலேயே ஸ்ருத ப்ரகாஸிகாசார்யா்‌ “தானே வந்தடைந்தவனை ஏறறுக்‌ கொள்வது ப்ரீதி விஷயத்வம் ” எனறு அருளிச் செய்தார் –

இவாகள அனைவரும உதாரர்களே, ஞானீயோ வெனில எனக்கே ஆத்மாவா யிருப்பவன என்பது எனது ஸித்தாந்தம் கீதை7-19] எனறு கீதையில் ஐஸ்வர்ய கைவல்யார்திகள் விஷயததில் எமபெருமாரான தனது வண்மையை மாத்திரம் காட்டி, பகவத் உபாசனத்தை இயல்வாகக் கொண்ட ஞானிகளைத் தனது ஆத்மாவைப் போலே இனியவர்களாகக் கூறினான் ”’ என்று கூறுவதும் பொருந்தாது. தனககுப் பெருமையை விளைக்கும மோக்ஷத்தை விரும்பி ஸாதநாநுஷ்டாநம்‌ செய்யும் தாழ்வை யுடையவர்களே ஸாதநாந்தர நிஷ்டர்‌ களாகையால, அவர்களையும் கைவல்யார்த்திகளோடு சேர்த்துத் :தமப’பிரத்யயத் தினால் வேறுபடுத்துவதாகக்‌ கொள்வதே உசிதமாகும் –ஞானியோ வெனில,– எப்போதும் என்னிடம சேர்ந் திருப்பதையே விருமபுகிறவாகள்‌’ [கீதை 10-10] :என்னோடு கூடியிருப்பதையே விருமபு கிறவனனறோ அவன் ‘ [கீதை7-18] – (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்‌) எல்லாம் கணணன”” முதலான விடங்களில சொன்னபடி பரம புருஷனிடமே ஓப்பற்ற பிரீதியை உடையவனாகையால்‌ வரிக்கத்தக்க ஆத்ம பூதனாகிறானாகையால ‘ உதாரர் , ‘ எனப்பட்ட மற்றவர்க ளோடு சேர மாட்டான்‌-ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான பலனை ௮டைகிறான் ‘ .’ப்ரஹ்மத்தை உபாஸிபபவன கல்யாண குணங்களை ௮னுபவிக்கிறான் ” முதலான உபாஸந விதிகளில் ஸவாரார்தத அநுப,வமும, சரணாகதி விதிககு த்வயத்தின உத்தர வாக்யத்தில் பரார்த்த கைங்கர்யமும் பலமாகக் கூறப் படுவதை ஆராய்ந்து பல பேதத்தை ௮றியலா மாயினும, மிகத் தெளிவான நிஷேத வாக்யத்தாலேயே அதை அறியலா யிருககும் போது பல வாக்யங்களில உள்ள விதியை ஆராய வேண்டா

நாட்டினான தெய்வமெங்கும்‌ நல்லதோர் அருள்‌ தன்‌னாலே காட்டினான திருவரஙகம் உய்பவர்க்கு உய்யும்‌ வணணம்‌–[திருமாலை 10]
இதுவே நிர்ஹேதுக கிருபையாகும்
. ஒன்றி யொனறி உலகம படைக்கை, மறை யருளுகை, எந் நினற யோனியுமாய்ப் பிறக்கை, திருவரங்கம்‌ ( முதலிய அர்ச்சாவதாரஙகளைக் ) காட்டுகை, ஆழ்வாராதிகளையும்‌, ஆசார்யர்களையும்‌ அவதரிப்பிக்கை முதலான சேதந உஜ்ஜீவநார்த்தமான எண்ணிறந்த செயல்கள்‌ இந்த நிர்ஹேதுக கிருபையினால்‌ செய்யப் படுமவையே யாகும்‌. இதை நலல தோர்‌ அருள்‌ ‘ என்கையாலே, இதற்குக கீழ்ப் பட்ட அருளும் -ஓரருளும்‌ எம்பெருமானுக்கு உண்டு என்று உணர்த்தப் படுகிறது. இவை ஸஹேதுக கிருபைகளாகும்‌. அதில், “அருள்‌ ‘ என்பது மற்ற தெய்வங்களுக்கு அந்தர்‌யாமியா யிருந்த எம்பெருமான் செய்வது, :ஓரருள்‌ ‘ என்பது தானே சேதனர்‌ அனுஷ்டிக்கும்‌ உபாயாந்தரங்களுக்குப்‌ பலனளிப்பது. சேதனரின பக்குவத்திற்குத் தக்கபடி தேவதாந்தர ஸமாஸ்யரயணமும உபாயாந்தராநுஷ்டானமும திருவரங்கம் தொழுகைக்குப்‌ படிப் படியாகக் காரணங்களாக ஆகின்றபடியால் தெய்வஙகளை நாடடுகைக்குக் காரணமான அருளும் உபாயாந்தரங்களைக் காட்டுகைக்குக்‌ காரணமான ஓரருளும்‌ திருவரங்கம்‌ காட்டுகைக்குக் காரணமான நல்லதோரருளை அடையும்‌ படிக் கட்டுகளாய்‌ அமைகின்றன.

ஸார தமமான ரஹஸ்ய த்ரயத்தால் விவேக முண்டாகப் பெற்றவர்களுக்குள் ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர் தாழ்ந்தவர் . இவருக்கு ஸ்வார்த்த கைங்கர்யமே பலம் – பரகத ஸ்வீகார நிஷ்டர் என்கிற ஸித்தோபாய நிஷ்டர் உயர்நதவர்‌ இவருககு பரார்த்த கைங்காயம பலம் என்று பூரணம் பண்ணிக்‌ கொள்ளலாம்ஸித்‌தோபாய நிஷ்டர்‌-ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்‌, உபாயாந்தர நிஷ்டர்‌ ஆகிய மூவருக்கும்‌ பலத்தின்‌ ஆகாரத்தில்‌ பேதமிருந்தாலும்‌ ஆநந்தத்தி ன்‌ அளவில்‌ பேதமில்லை என்பது தென்னாசார்யர்களின்‌ திருவுள்ளம்‌-

(இல்லை கண்டீர்‌ துணையே (9.1-1)—ஆபத்துக்கு வேறொரு ௮பாஸ்ரயம் உண்டாயிருக்க, இவனைப் பற்றச்‌ சொல்லுகிறதல்ல இது. ௮வனைப் பற்றி ஸவரூபம்‌ பெறுதல்‌ இல்லையாகில் இல்லையா மித்தனை ” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார் இறே –அஹம் மத் பராப்தயுபாயோ வை ஸாஷாத் லஷ்மீபதி. ஸ்வயம் ‘-லஷ்மீ நாதனான நான் தானே என்னை யடைய உபாயமாவேன் ] என்றிறே பகவத் வாகயம்‌. மத் ப்ராபத் யுபாய அஹம் –மத் ப்ராபத் யுபாய ஸாக்ஷாத் அஹம்‌” “மத் பராப்த யுபாய ஸாக்ஷாத்‌ ஸ்வயம்‌ அஹம் -என்று பகவான் தன் உபாயத்வத்தையும் மற்றவற்றின அநுபாயத்வத்தையும ஸ்பஷ்டமாக அருளிச் செய்தானிறே –ஸாஷாத் – என்று உபாயாந்தர வ்யாவ்ருததியும்‌,ஸ்வயம் ‘ என்று லஷ்மீ வ்யாவ்ருததியும் ஸித்‌தம்‌-

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202அதாவது – பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கேஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் – என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-அதாவதுஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது – அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை – இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் -நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே – சகல உபாய சாதாரணமாய் இருக்கை–இத்தால் ஓர் இடத்திலும் இவ் வனுமதிக்கு இவ் வதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பல சாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –

சைதன்ய கார்யம் ஆகை யாவது –ரஷ்யத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கச்  செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் வாகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே – அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் பக்கல் உண்டான அனுமதி – இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை – இத்தால் இவ் வனுமதி இச் சேதனனுடைய வாசியைப் பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் -அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி  கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப அதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் வனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —

அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் வாகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி -இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது –இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்–அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –

பொரு மா நீள் படை -திருவாய் மொழி பிரமேயத்தை தேசிகன்‌ –அவ்யாஜோதார பாவாத் ” என்றும் மா முனிகள்‌ -தருமாறு ஓர் ஏது வற” என்றும்‌ அருளிச் செய்தார்களிறே. இது கொணடு பகவானுடைய விஷயீகாரம்‌ நிர்ஹேதுகம் என்ற விஷயததில் இரு மஹாசாரயர்களும ஏகாபியராயர்களே என்னலாமே என்றாலும் இருவரும பின்ன அபிப்ராயர்கள்‌ என்பதே உண்மை; இது ஸித்‌தோ பாய ஸாத்‌யோபாய போதநாதிகார சரம ஸ்லோகாதிகாரங்களிலே வியக்தம்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading