ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-ஆரம்பணாதி அதிகரணம் : 2-1-6 –ஸூத்ரங்கள் -(2-1-15–2-1-20)

ப்ரஹ்மமும் சித்துக்கள் அசித்துக்கள் சேர்ந்த பிரபஞ்சம் –
காரண கார்ய பாவத்தால் ஒன்றே என்று முன்பு –2-1-7- பார்த்தோம்
இதில் உள்ள பிரதிபக்ஷ வாதங்களைக் காட்டி சித்தாந்தம் இதில் காட்டுகிறார் –

பேத -அபேத =பேதமும் அபேதமும் இல்லாமல் ச விசேஷ ப்ரஹ்மம் நம் சம்ப்ரதாயம்

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகரணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்)
ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

ததனன யத்வம்–பரமார்த்த தயா வஸ்து ந அஸ்தி

கடத்துக்கும் படத்துக்கும் வேறுபாடு -மண்ணுக்கும் குடத்துக்கும் வேறுபாடு இருந்தாலும் –
அனைத்துக்கும் விலக்ஷணமான ப்ரஹ்மமே காரணம் –
கேவல பேத வாதம்–நிர்விசேஷ பேத வாதம்-பேத அபேத வாதம் -இவற்றை நிரஸித்து
விசிஷ்டாத்வைத சரீர சரீரீ பாவம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -காட்டி அருளினார்
ச விசேஷமமே விசிஷ்டம்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஏகம் -அத்விதீயம்
ச விசேஷ ஐக்ய வாதம்
அந்நிய சப்தம் வேறே பின்ன சப்தம் வேறே அன்றோ

முயல் உண்டு- கொம்பு உண்டு- முயல் கொம்பு இல்லை என்றால் -சம்பந்தம் இல்லை என்றே அர்த்தம்
வைசேஷிக வாதம் –
1-நாம பேதாத் -மண் -குடம்
2-கார்ய பேதாத் -வேறே வேறே பயனுக்காக
3-வேறே வேறே காலத்தில் இருப்பதால்
4-ஆகார பேதம் -ரூப பேதம்
5-ஒரே உருண்டை -பல குடங்கள் -சங்க்யா
6-ஒன்றாக இருந்தால் உருவாக்குபவர் எதற்க்காக
நான்யத்வம் நாம சங்க்யா ஆகார இத்யாதி -தத்வ முக்த கலாபம் அடக்கி தேசிகன்
அத்யந்த பேதம்

சாங்க்யர் -பூர்வ பக்ஷம்
அஸத் கார்ய வாதம்
உபாதான காரணத்தில் கார்யம் ஸூஷ்ம ரூபத்தில் பூர்வமேவ இருக்கும்
எள்ளில் தானே எண்ணெய் -மணலில் இல்லையே
வியக்தமாக வெளிப்படையாக தெரிய வைப்பதே கர்த்தாவின் கர்தவ்யம்

அத்வைதிகள் -சாங்க்யர் சொல்வதும் தப்பு -வைசேஷிகர் சொல்வதும் தப்பு -ஒன்றே உள்ளது –
மாயை பிரமம் -கார்யம் மித்யை -காரணம் ஒன்றே பரமார்த்தம் உண்மை
காரண வியதிரிக்த வஸ்துவே இல்லையே -என்பர்
அனுவார்த்தமானம் நித்யம்
எப்போது தோன்றி மறையுமது மாயை
கயிறு பாம்பு -பாம்பு ஞானம் தொடராதே
உண்டாவது எல்லாம் அழிந்து காரண வஸ்துவாகுமே

உண்டாகும் சேதனர்களும் அசேதனர்களும் அழிந்து ப்ரஹ்மைவ-ஒன்றாக பவதி-என்பர்
நாமோ ப்ரஹ்ம இவ -போல் ஆவோம் –
ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற வாதம் ஒழித்தார் பாஷ்யகாரர்
சாஸ்திரம் வேறே சம்ப்ரதாயம் வேறே
புநரா வ்ருத்தி மோக்ஷம் என்பதே சாஸ்திரம்
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் சம்ப்ரதாயம்

அநிர் வசநீயம் -கயிற்றைப் பார்த்து பாம்பு என்று தான் பிரமை
யானை என்று பிரமிக்க வில்லையே
ஸர்வதா அசத்தாக இருந்தால் தோன்றாதே
பாம்பு இருக்குமோ என்றும் இல்லையே என்றும் சொல்வதால் -அநிர் வசநீயம்-
உபமானம் உபமேயம் -இரண்டு இல்லையே அவர்களுக்கு
ப்ரஹ்மமே சத்தியமும் ஞானமும் -சஜாதீய விஜாதீய ஸ்வதீய விபாக ரஹிதம்
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா -விருத்தமானவை சேராதே -ஆகவே அநிர்வசனீயம்
ப்ரஹ்மம் அநந்யம் பேதம் அற்றது -என்று
அபேத ஸ்ருதிகளை பிரமாணமாக அத்வைதிகள் காட்டுகிறார்கள்
நேராக அத்வைத நிரஸனம் பண்ணாமல் வைசேஷிகர் வாதத்தால் இவற்றை நிரஸித்து
மேல் சித்தாந்தம் இந்த அதிகரணத்தில் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மமே ஜீவன் -என்றால் பல ஜீவர்கள் -ஒருவர் துக்கம் பட ஒருவர் சுகம் பட
உடம்பில் காலில் வலி கண்ணுக்கு நல்ல காட்சி போல் இதுவும் கூடுமே என்பர் அத்வைதி
அநேக ஜீவன அநு பிரவேசாத்
ஏகோ தேவ போன்ற சுருதிகள் உண்டே

ப்ரத்யக்ஷம் -கயிற்றை பாம்பு போல் பார்த்து
ஒருவர் அது பாம்பு இல்லை -சப்த பிரமாணம் கொண்டு உணராமல்
நேராக சென்று தானே பிடித்துப் பார்த்து -பிரயத்தனம் பண்ணி -உணர்ந்து
பிரபஞ்சம் மித்யா என்றால் பிரத்யக்ஷ விருத்தம்
என்னைத் தவிர வேறே ஜீவர்கள் உண்டு அநுமேயம் -infer -பண்ணி
ஸாஸ்த்ர பிரமாணம் பிரசித்தம்

இங்கு வாசாரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல் ஆரம் சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டமையால்
வாசாரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்பது காட்டப்பட்டது

அநந்யத்வம் -மண் பானை போல்-ப்ரஹ்மமும் ஜகத்தும் வேறே ஓன்று அல்ல
அத்யந்த பேதம் வைசேஷிகர் -நிரசித்து அநந்யத்வம் சாதித்து –
மாத்வ மதத்தில் விஷ்ணு பாரதம்யம் ஒத்துக் கொண்டாலும் பரமாத்மா நிமித்த காரணம் மட்டும் -ப்ரக்ருதி உபாதான காரணம்
ப்ரஹ்ம ஜகத் இரண்டுக்கும் அத்யந்த பேதம் -என்பர்
கார்யங்கள் எல்லாமே மித்யையே என்றால் முயற்சியே செய்ய மாட்டோமே
ஸத் -இருக்கும் வஸ்து என்றால் நித்தியமாக இருக்க வேண்டும்
அஸத் -நேற்றும் இன்றும் நாளையும் இல்லாதது முயல் கொம்பு போல்
குடம் என்றோ ஒரு நாள் உடையும் ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாது
ஆகையால் -அநிர்வசனீயம் -ஆகவே மித்யை
நாமோ இது அநித்தியம் பொய்யான வாஸ்து இல்லை என்கிறோம் -வஸ்துவே பொய் இல்லையே

ச குண ப்ரஹ்மம் நிர்குண ப்ரஹ்மம் இரண்டு சொல்லி
பார்ப்பது அனுக்ரஹம் போன்றவை ச குண ப்ரஹ்ம கார்யம் என்றும்
அதுக்கும் மேல் நிர்குண ப்ரஹ்மம் –
நிர்விசேஷ பர ப்ரஹ்மம் சாஷாத்காரிக்க முடியாதவர் மந்தர்கள் -தே அனுகம்பா ச விசேஷ ப்ரஹ்மம்

இரண்டே இல்லை என்றால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒன்றே ஆகுமே -வைசேஷிகர் வாதம்

தேசாந்தர காலாந்தர வஸ்தாந்தர பேதங்கள் இருந்தே ஆகவேண்டும்
காரண கார்ய பேதங்கள் இருந்தே ஆக வேண்டும்
நான் நாளை அங்கு வரப் போகிறேன் -இறந்த காலம் வேறே இடம் போன்ற பேதங்கள் உண்டே

காரணமும் காரியமும் ஸத்யமே
போஜநம் காரணம் – பசி அடங்குவது கார்யம்
சித்தாந்தம்
தத் அநந்யத்வம்-ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ஸதேவ சோம்ய ஏகம் -போன்ற ஸ்ருதி வாக்கியங்கள் அந்யத்வம் சொல்ல வந்தவையே

பிரஸ்தான த்ரயம் நம் சம்ரதாயத்தில் இல்லை -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் கீதை -மூன்றும் ஏக கண்டம்

ஞான ஜனக சப்த பிரயோகம் தானே விவகாரம் –
தேவதத்தன் பால்ய யுவா முக்த அவஸ்தைகள் மாறினாலும் தேவதத்தன் வ்யக்தி மாறாதே –
ப்ரஹ்மத்திடம் இருந்து சேதன அசேதனங்கள் தோன்றி ப்ரஹ்மத்திடம் லயம்
நாநா ரூபம்-நாம ரூப விபாகம் – ஜகத்
ஸத் என்றே பெயர் ஸூஷ்ம அவஸ்தையில் ப்ரஹ்மம் என்ற பெயரும் இல்லையே
தத் ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜாயேய
சர்வ ஸப்த வாச்யன் ப்ரஹ்மமே -பர்யவசானம் ஆகுமே -அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே –

ஸர்வதா இல்லை என்பதே இல்லையே
ஸத் மட்டுமே இருந்தது என்றால் சேதன அசேதன ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மம் இருந்தது என்றே கொள்ள வேண்டும்
அதுவே பின்பு சேதன அசேதன ப்ரஹ்மம்-போக்யம் போக்தா ப்ரேரிதா -மூன்றாக பரிணாமம்

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் கங்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும்
வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக்கூடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந்ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத்ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டுகிறார் இரண்டு சூத்ரங்களால்

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading