ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் (204-205-்)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்
204-205-்ராமாநுஜன் 2004ல் பதினேழாவது பிராயம் பூர்த்தியாகி 2005ல் பதினெட்டாவது பிராயம் ஆரம்பமாகிறது. இதன் ஞாபகசின்னமாகப் பதினெட்டு விஷயங்களை உபஹரிக்கிறேன். அந்த 18 விஷயங்களாவன:1 வேத ஸம்ஹிதையில் 18 -2,, ப்ராஹ்மணத்தில் 18–3 ஸம்ஸ்கிருத வேதாந்தத்தில் 18-4 பகவத்கீதையில் 18 -5 பூர்வாசார்யக்ரந்தவிவரணம் 18-6 ராமாநுஜனும்ராமாநுஜரும் 18-7 மநுஸ்மருதியில் 18 8 ஸ்ரீராமாயணத்தில் 18 – 9 ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் 18-10 பகவத் விஷயத்தில் 18 -11 மூவாயிரவியாக்யானத்தில் 18–12 ஆசாரியர்நால்வர் ஸு க்தி 18–13-ஸ்ரீவசநபூஷணத்தில் 18-14 தத்வத்ரயைத்தில் 18 15 முமுக்ஷப்படியில் 18 16 ஆசார்ய ஹ்ருதயத்தில் 18- 17வேதாந்த தேசிக க்ருதிகளில் 18- 18 மணவாள மா முனிகள் பற்றி 18-ஆக இங்ஙனே குறித்த பதினெட்டு விஷயங்களில் ஒவ்வொன்றிலும் 18 லக்கமிட்டு அபூர்வ விஷயங்கள் எழுதப்படும். எனவே இந்த நினைவுமலரில் (324) முந்நூற்றிருபத்து நான்கு விஷயங்கள் அபூர்வமாக வெளிவருகின்றன வென்றதாயிற்று.
அன்னம் கிடைக்கவேணுமென்றுவிரும்பினால் போதாதா? அன்ன முண்ணப்பெற வேணுமென்று கூட விரும்பவேணுமா? என்று. இது மிகவும் ஆவச்யகமான சங்கை தான். வேதபுருஷன் இங்ஙனே பல விடங்களிற்சொல்லுகிறான்; இரண்டாவது காண்டம்இரண்டாம் ப்ரச்நத்தில் “ய காமயே அந்நவாந்ஸ்யாமிதி’ என்றும்”ய காமயேதஅந்நாதஸ் ஸ்யா தி” என்றும் தனித்தனியாக இரண்டு இஷ்டிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தைத்திரீயோபநிஷத்தில் “அந்நவாநந்நாதோ பவதி” என்றோதி யிருப்பதுஸுப்ரஸித்தம். இங்ஙனே இரண்டு பலனாகச் சொல்லவேண்டியது அவசியமே
யாகும். ஏனென்றால் அன்ன ஸம்ருத்தி யிருந்தாலுங்கூட அதை யனுபவிக்கிறசக்தி இல்லாமற்போகும். ஆகவேதான் “போஜ்யம் போஜந சக்திச்ச ரதிசக்திர்வராங்கநா, விபவோ தாநஸம்பத்தி: நால்பஸ்ய தபஸ பலம்.” என்று மேலையார் சொல்லி வைத்தார்கள்.போஜ்ய ம்ருத்தியுள்ளவர்களுக்கு போஜநசக்தியில்வைகலயத்தைக் கட்கூடாகக் காணாநின்றோம். இவ்விஷயத்தை ஆழ்ந்து நோக்குமளவில்,அந்நவாந்என்பதற்கு வஸு தேவரையும், அந்நாதல் என்பதற்கு நந்தகோப ரையும் லக்ஷடியமாகக் கொள்ளலாம். பகவானைப் பிள்ளையாகப்பெற்ற வத்தனையேவ தேவர்க்காதலால் அவர் அந்நவாந் என்னத் தகுந்தவராயினர். “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்றுதெய்வத்தேவகி புலம்பும்படியாக அநுபவமெல்லாம் நந்தகோபர்க் காகையாலே இவர் அந்நாதரென்னத் தகுந்தவராயினர்.
நாலாவது காண்டம் முதல் ப்ரச்நத்தில் எட்டாவத நுவாகத்தில் சு ஹீரண்யகர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே என்றுதொடங்கி எட்டுருக்குக்கள் “கஸ்மை தேவாய ஹவிஷாவிதேம ” என்று ஒரேவிதமான முடிவோடு கூடியவையாய் விளங்குகின்றன். கர்ம
காண்டத்திலும் பரப்ர ம ப்ரபாவ ப்ரதிபாதநமுள்ளதென்று அடியேன் பரக்க
வுபந்யளிப்பதுண்டு. அதற்குப் பொருத்தமாக ஸம்ஹிதையிலும் ப்ராஹ்மணத்திலும்பல ஸ்தலங்கள் எடுத்துக் காட்டப் பாங்கானவையுண்டு; அவற்றுள் இந்த ஸ்தலம்மிக முக்கியமானது.தைத்திரீயோபநிஷத்தில் உத்தரநாராயணத்தில் “அத்ப்யஸ் ஸம்பூதோ ஹிரண்யகர்ப்ப இதியஷ்டெள ” என்று வைதிகர்களனைவரும் ஸமரீதியாக
ஓதிவருகிறார்கள். இங்கு “ஹிரண்ய கர்ப்ப இதி அஷ்டௌ” என்றது ஸம்ஹிதையில்
நாலாவது காண்டத்தில் ஓதப்பட்டு வருகிற எட்டுருக்குக்களையும் இங்கே ஓதவேண்
டியது என்றபடி. இவ்விதமாக ஸகல பாஷ்யகாரர்களும் அர்த்தம் செய்திருப்பதனால்
இது நிர்விவாதம்.இதனால் இந்த எட்டுருக்குக்களும் நாராயணபரங்களென்பது
ஸ்பஷ்டமாகத் தேறிநின்றது. இவற்றை வேறொரு தேவதாபரமாக ஒதுக்குவ
தற்குச்சிறிதும் ஒளசித்யம் கிடையாது. இவற்றில் இரண்டு ருக்குக்களைமட்டும் இங்கு விவரிக்கின்றேன். (ஹரண்யகர்ப்ப அக்ரே ஸமவர்த்தத.] ஸஹஸ்ர நாமத்தில்
ஹிரண்ய கர்ப்போபூகர்ப்ப * என்று ஹிரண்ய கர்ப்பனாகக் கூறப்பட்ட நாரா
யணனொருவனே முந்துறமுன்னமிருந்தனன். அவன் எப்படிப்பட்டவன்? [பூ தஸ்ய
ஜாத பதிரேக ஆஸீத்] ஸகல ப்ராணிவர்க்கங்களுக்கும் அத்விதீயசேஷி. இன்னும்
அவனுடைய பிரபாவம் எத்தகைத்து? [ஸ தாதார ப்ருதி ம் த்யாமுதேமாம்]அவனே உபயவிபூதி நிர்வா கன். பருதிவீம் உத த்யாம் மண்ணுலகையும் விண்ணுல
கையும் என்றபடி. (உத என்னுமவ்யயம் ஸமுச்சயார்த்தகம். [கஸ்மை தேவாய
ஹவிஷா விதேம.] ஸஹஸ்ரநாமத்தில் * ஏகோநைகஸ் ஸவ க கிம் * என்ற
விடத்தில் (கிம்என்று) கிம்சப்தநிர்திஷ்டனான அந்தநாராயணனுக்கு ஹவிஷ்யம்
நிவேதனம் பண்ணக்கடவோம் என்கை. (இந்த எட்டுருக்குக்களும் திருவாராதனத்
தில் விநியோகிக்கப்படுமவை. மற்றொரு ருக்கு-* ய ஆத்மதா பலதா யஸ்ய வீச்வ
உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா? யஸ்ய ச்சாயா அம்ருதம் யஸ்ய ம்ருத்யு. கஸ்மை
தேவாய விஷா விதேம.] ஆத்மதா – * எற்பரனென்னை யாக்கிக்கொண்டு எனக்கே
தன்னைத் தந்த கற்பகம் * என்கிற திருவாய்மொழியின்படியே முற்றூட்டாக அநு
பவிக்கும்படி தன்னையே தருமவன் எம்பெருமான். பலதா -* குலந்தரும் செல்வம்
தந்திடும்….. வலந்தரும் * என்ற திருமங்கையாழ்வா ரருளிச் செயலின்படியே
தன்னையநுபவிக்கைக் கீடான தே பல மனோபலங்களை யருள்செய்பவன். [யஸ்ய
ப்ரசிஷம் விச்வே தேவா உபாஸதே] * ஆணைமெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ
னாகி என்று திருவாசிரியத்திலருளிச் செய்தபடியே எம்பெருமானுடைய ஆணையை
ஸகல தேவர்களும் சிரமேற்கொள்ளுகின்றார்கள். ப்ரசிஷம்-ஆஜ்ஞம்என்றபடி. [அம்ருதம் ம்ருத்யு யஸ்ய ச்சாயா] மோ பூமியும் ஸம்ஸாரபூமியும் அவனிட்டவழக்கு.
ஐந்தாவது காண்டம் ஐந்தாவது ப்ர நம் முதல வாகத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவின்பாரம்யம் ஸு ஸ்பஷ்டமாக வோதப்பட்டிருக்கின்றது;- (அக் ரவமோை தேவதாநாம் விஷ்ணு பரமா] தேவதாநாம்’ என்றது நிர்தாரணே ஷஷ்டி. தேவதைகளுக்குள்ளே கீழ்பட்ட தேவதை அக். ‘இவற்கு மேற்பட்ட தேவதை யில்லை யென்னும்படியான பரமதேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு.இப்படிச்சொன்ன பாரம்யத்தை மேலே ஆறாவது காண்டத்தில் இரண்டாம் ர நத்தில் *தேஷாம ராணாம்திஸ்ர புர ஆஸந் என்றுதொடங்கிச் சொல்லுமுபாக்கியானம் நிலைநாட்டுகின்றது.
தேவர்கள் வெற்றிபெற முடியாதவர்களாயிருந்தனர். பிறகு ஓருபாயம்செய்துவெல்லத்தொடங்கினார். தே இஷும் ஸமஸ்குர்வ = அவர்கள் அம்பைளித்தப்படுத்தினர். அந்த அம்புக்கு எப்படி மிடுக்கு உண்டாயிற்றென்ன,(விஷ்ணும் தேஜநம்)திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (6.1-3) * குழல் நிறவண்ண ! நின் கூறு
கொண்ட தழல் நிறவண்ணன் நண்ணார்நகரம் விழ, நனி மலை சிலை வளைவு செய்துஅங்குஅழல்நீற அம்பது வானவனே !* என்றருளிச்செய்திருப்பது கொண்டு(விஷ்ணும்தேஜனம்) என்பதற்குப் பொருள் காணவேணும்.திருவாய்மொழியில் (3-10-4ல்)பாணாஸுரபங்க கதையை யருளிச் செய்யுமிடத்து அந்தப் போரில் சிவபிரானும்தலையிட்டா னென்பதைச்சொல்லுகின்றஆழ்வார் * திரிபுரம் செற்றவனும் * என்கிறசொல்லால் சிவபிரானைக் குறித்தனர். அங்கு நம்பிள்ளை யீடு -கத்ரிபுரதஹன் ஸமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும்,அம்புக்குக் கூர்மையாயும் தனக்கு அந்தராத்மாவாயும் எதிரிகளைத் தலை சாயும்படி பண்ணி த்ரிபுரத்தையழித்துக் கொடுத்தா னெம்பெருமான்; அத்தை யறியாதே அஞரானவர்கள்இத்தை அவன் தலையிலே வைத்துக் கவிபாட, இத்தைத் தானுங்கேட்டு மெய்யிறேயென்று மயங்கி ‘ அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டென்?‘ என்று வந்துஎதிரிட்டானாயிற்று.” என்று.
(தே அப்ருவந் க இமாஷ்ய அம்பு ஸித்தமாய் விட்டது ஸரி; இதை யெடுத்து எய்ய வல்லவன்
யாவன்? என்கிறகேள்வி பிறந்தது.[ருத்ர இந்யப்ருவந்] அப்போது ருத்ரனைக்குறிப்
பிட்டார்கள். அவனைக் குறிப்பிட்டதற்குக் காரணம் சொல்லுகிறது உடனே
[ருத்ரோ வை க்ரூர:, ஸோஸ்யது இதி] ருத்ரன் தான் கொடியவன், அவன் எய்யட்டு மென்றார்களாம். உடனே ருத்ரனை நோக்கி எய்யச் சொன்னபோது (ஸோப்ரவீத்வரம் வ்ருணை. அஹமேவ பசூநாம் அதிபத்திரஸாநீதி] நான் பசுபதியாயிருக்கும்படி வரங்கொடுத்தால் எய்கிறேனென்றானாம் ருத்ரன். அப்படியே வரங்கொடுத்த பின்பு எய்தானென்று மேலே சொல்லிற்று. ருத்ரன் பரதேவதையா யிருந்தால் வரம்வேண்டுவனா?
[ஜாயமாநோ”ஹ வை ப்ராஹ்மணஸ் த்ரிபி: ருணவா ஜாயதே பிராமணன் பிறக்கும்போது மூவர்க்குக்கடன் பட்டவனாய்ப் பிறக்கிறான்; அம்மூவர் ரிஷிகளும் தேவர்களும் பித்ருக்களுமாவர். வேதாத்யனம் பண்ணி ரிஷிகளின் கடனைத் தீர்க்கக் கடவன். தேவ’பூஜை பண்ணி தேவர்களின் கடனைத்தீர்க்கக் கடவன்; ப்ரஜோத்பாதநம் பண்ணிப்பிதருக்களின் கடனைத் தீர்க்கக் கடவன். எனவே, வேத மோதி தேவதாரா தனம்பண்ணி ஸந்தான ஸம்பந்நனாயிருப்பவன் யாவனே அவனே கடன்கள் தீர்ந்தவன்என்றதாயிற்று.
நூல் வரம்புக்குக்கட்டுப்பட்ட பரம வைதிகர்கள் * ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமீதி ஸாயம் பரிஷிஞ்சதி.ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமீதி ப்ராத * என்றுபரிஷேசநமந்த்ரம் இரண்டு வேளைகளுக்குமட்டுமே உள்ளதனால் இரண்டு வேளைகள் தவிர வேறொரு வேளை எதுவும்உட்கொள்ள மாட்டார்கள். இடைப்பலஹாரங்கள் கடைப்பலஹாரங்கள் அணுகமாட்டா. பகவத் ஸந்நிதிகளில் அகாலங்களில் ப்ரஸாதம் கிடைத்தால்”ஆமலகமாந்ரம் க்ருஹ்யாத்” என்னும் சாஸ்த்ரத்தை யடியொற்றி நெல்லிக்காயளவுப்ரஸாதம் ஸ்வீகரிப்பர்கள்.
(யாம் காமயேத து தரம் ப்ரியா ஸ்யாதிதி. தாம் நிஷ்ட்யாயாம் தத்யாத். ப்ரியைவ பவதி.
நேவ து புதராகச்சதி ] எந்த மகளை பர்த்தாவுக்கு மிகவும் ப்ரீதிபாத்ரமாயிருக்கவேணு
மென்று பிதா விரும்புகிறாரோ, அந்த மகளை ஸ்வாதீ க்ஷத்திரத்தில் விவாஹம்
பண்ணிக்கொடுக்க வேண்டியது. (நிஷ்ட்யா-ஸ்வாதீ .)அப்படியே அம்மகள் பர்த்
தாவின் பரமப்ரீதிக்குப்பாத்திரமாகிறாள். அதனால் அவள் மறுபடியும் பிதாவின்
க்ருஹத்தை நோக்கி வருவதே கிடையாது. (இது இந்த ஸ்வாதீ நக்ஷத்ரத்திற்கு
நிந்தையா? ஸ்துதியா? என்று விமர்சிக்கப் புகுந்த பாஷ்யகாரர் நிந்தையன்று,
ஸ்துதிதானென்று நிஷ்கர்ஷிக்கிறார். பிதா விரும்பியபடி பதியின் அதிசயித
ப்ரீதியை விளைப்பதனால் என்று காரணம் காட்டுகிறார்.) ஜநக சக்ரவர்த்தி ஸ்த
பிராட்டியை ஸ்வாதீ க்ஷத்ரத்தில் க யகாப்ரதானம் பண்ணியிருப்பர் போலும்;
”பிராட்டி பெருமாளைக் கைப் பிடித்த வனந்தரம் ஸ்ரீமிதிலையை நினையாதாப் போலே”
என்று ஆசாரியர்கள் அருளிச் செய்வதனால்.
மூன்றாமஷ்டகத்தில் முதல் பிரச்னத்தில் நாலாவததுவாகத்தில் நக்ஷத்
திரங்களுக்குச் சிறப்புச் சொல்லி வருகையில் ஸ்வாதிநக்ஷத்ரப்ராகரணத்தில் *வாயுர்
வா அகாமயத என்றுதொடங்கிச்சொல்லப்பட்டிருப்பதாவது-எல்லா விடங்களிலும்
தட்டுத் தடங்கலில்லாமல் யதேஷ்டமாக ஸஞ்சரிக்கப் பெறவேணுமென்று விரும்பிய
வாயுதேவதை ஸ்வாதீ நக்ஷத்ரதேவதையைக் குறித்து இஷ்டி செய்ய,அப்படியே
பேறு பெற்றதாக ஓதிற்று
நாலாவத நுவாகத்தில் *ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணாம்ருது ஸ்யோநம்
என்கிற மந்த்ரம் படிக்கப்படுகிறது. இது பித்ருதர்ப்பணம் செய்கிறவர்களுக்கெல்லாம் கண்டபாடமான மந்திரம். இதன் பொருளாவது ஒரே தடவை கிள்ளப்பட்ட தர்ப்பம் ; பஞ்சுபோல் மெல்லியது. ஸு ககரமானது. இப்படிப்பட்ட தர்ப்பமே!உன்னைப் பிதருக்களுக்காகப் பரப்புகிறேன். இங்ஙனம் பரப்பப்பட்ட தர்ப்பத்தில்என்னுடைய பித்ருபிதாமஹப்ரபிதாமஹர்கள் தம்தம் அநுசரர்களோடு கூட வீற்றிருக்கக் கடவர்கள் என்கை. [ மந்த்ரார்த்தம் தெரிந்திருப்பது நலம்.]
காடகம் மூன்றாவது ப்ரச்நத்தில் * பிதா புத்ரேண பித்ர்மாந்யோநியோநௌ.
நாவேதவிந் மநுதே தம் ப்ர்ஹந்தம் * என்று பகவானுடைய விபவாவதாரம் ஓதப்பட்டது. இவ்விரண்டு வாக்யங்களின் பொருளாவது- எம்பெருமான் ஸர்வலோக பிதா ; அவன் ஒருவர்க்கும் மகனாகத் தகுந்தவனல்லன் ; ஆனாலும் தனக்குப் புத்ர
ப்ராயரானவர்களையே பிதாவாகக் கொண்டு எந்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான்.வேதமோதாதவர்கள் அவன் பெருமையை யறியகில்லா ரென்கை.
ருத்ரனைப்பற்றி ஓர் இதிஹாஸம் ஓதப்பட்டுள்ளது. திருவாய்மொழியில் உயர்வற வுயர்நலப்பதிகத்தில் எட்டாம் பாட்டில் புரமொரு மூன்றெரித்து என்றவிடத்து ஈடுமுப்பத்தாறாயிரத்தில் “ தான்பூட்டின நாணி தன்கழுத்நை யறுத்துக்கொண்டு போகா தொழியும்போதும் ஈச்வரன் அந்தராத்மாவாய் நிற்கவேணும்” என்கிற ஸ்ரீஸக்தி காண்கிறது. ருத்ரன் தான் பூட்டின நாணி தன்கழுத்தை யறுத்துக்கொண்டு போனகதை எங்குள்ளதென்றால் இங்கேயுள்ளது. இங்கு (விச்வே தேவா விப்ரஹரந்தி என்றுதொடங்கிச் சொல்லப்பட்ட இதிஹாஸமாவது; தேவர்கள் ஆயுதங்களைக் கொண்டு போர்புரிய ஆயத்தமாயினர். ருத்ரன் தன்னு டைய வில்லைஊன்றிக்கொண்டுநின்று [வ தேவோ ந மர்த்ய. ந ராஜா வருணோவிபு:.நாக் ர் நேந்த்ரோ ந ப மாந:. மாத்ருக் கச்சந வித்யதே.] தேவர்களோ மனிதர்களோ ராஜாக்களோ வருணனோஅக்னியோ இந்திரனே வாயுவோ யாரானாலும் ஸரி; என்னைப்போன்றவர்கள் யாருமே கிடையார்கள் என்றான். இப்படிச் சொன்னவன் ருத்ரன். ஸாயணபாஷ்யத்தில் ” ஸோயம் விச்வைர் தேவை ருத்கோ தச் சப்த: ” என்றுள்ளது. இது தவறென்றும், ருத்ரன் உத்கோஷித்த சப்தராசிகளிவை
யென்றும் வேதாந்த கௌஸ்துபகாரர் உபபத்திகளுடன் எழுதியுள்ளார். அது தான் பொருத்தமாகக் காண்கிறது. மேலுள்ள கதையும் அதையே நிலைநாட்டுகின்றது. [ i அஸ்ய ஏகா தநுரார்த்னி:] இந்த ருத்ரத ஸ்ளின் ஒரு நுனி ஆகாசத்தை யளாவியுள்ளது. [பர்தீவ்யாம் அபரா சரிதா ] மற்றொருநுனி பூமியின் கீழே தாக்கியுள்ளது. ஜகதுபஸம்ஹாரமே நடக்கும் போல் தோன்றநின்றது. அப்போது இந்திரனுக்கு ஓர் உபாயம் தோன்றிற்று. என்ன செய்தா னென்னில்,[தஸ்யேந்த்ரோ வம்ரிருபேண. தநுர்ஜ்யாம் அசிநத் ஸ்வயம் ] இந்திரன் செல்லு என்கிற ஐந்துக்களின் வடிவுகொண்டு (கீழேபரவி) அந்த வில் நாணியை அறுபட்டதாம்படி
செய்துவிட்டனன். செல்லு மென்றதனால் நாணி இற்றொழிந்ததென்கை. பிறகு என்னாயிற்று? [ததிந்த்ரதநுரித்யஜ்யம். அப்ரவர்ணேஷ சக்ஷதே.] இந்த வில்ஆகா
சத்தில் போய் விழுந்திட்டது. சில ஸமயங்களில் மேக மண்டலத்தில் வில் ரேகை
நாணி யின்றிக்கே காணப்படுவதுண்டே, அதை இந்திர தநுஸ்யென்று சொல்லு
கிறார்கள். செல்லு வடிவுகொண்ட இந்திரனால் அறுபட்ட தநுஸ்ஸென்றும்
அதனால்தான் நாணியில்லாமல் தென்படுகிறதென்றும் சொல்லுகிறார்கள். இந்த வில் அறுபட்டு எழும்பிப் போம்போது வெறுமனே போகவில்லை; [ருத்ரஸ்யத்வேவதநுரார்த் . சீர உத்பிபே . ருத்ரன் தலையைப் பொடி பண்ணிவிட்டுப் போயிற்று.பிறகு அந்தத் தலை ஒட்டப் படுகிற வரலாறுஉள்ளது.
ஆரண்யகம் இரண்டாம் பிரச்நம் இரண்டா மநுவாகம் ஸந்த்யாவந்தனத்தின் ஆவச்யகத்வத்தைத் தெரிவிப்பதற்காகப் பழங்கதை யொன்று சொல்லு
கிறது. (* ரக்ஷாம்ஸி ஹ வா புரோநுவாகே * இத்யாதி.] முற்காலத்தில் ராக்ஷஸர்கள்
தீவரமான தவமொன்றைச் செய்தார்கள். அதனால் உகப்படைந்த ரஜாபதியானவர் நீங்கள் தவஞ்செய்தது போதும், வரம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.நாங்கள் ஸூர்யனோடு யுத்தம் செய்யவேணும் ; இந்தவரம் கொடுப்பீராக’ என்றார்கள்அரக்கர்கள். அப்படியே யநுமதியளித்தார் ப்ரஜாபதி. ஸூர்யன் உதித்ததுமுதல்அஸ்தமிக்குமளவும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தணர்கள் காயத்ரியைஐபித்து அளிக்கும் அர்க்கிய தீர்த்தத்தினால் அவர்கள் மாண்டொழிகிறார்கள்-நம்மாழ்வாருடைய முதற்பிரபந்தமான திருவிருத்தத்தில் (82) * எரிகொள் செந்நாயிறு என்கிற பாட்டில்” மீண்டவற்றுள் எரிகொள் செந்தீவீழ் அசுரரைப்
போல ” என்பதனால் இந்த வைதிக கதை அநுஸந்திக்கப் பட்டுள்ளது. அவ்விடத்தில்அடியேனுடைய திவ்யார்த்ததீபிகையில் எழுதியுள்ளதாவது – ….ந் தஹாருண
மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹரென்னும் அசுரர்கள் உக்ரமான தவத்தைச்செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனால் செருக்கடைந்து எப்பொழுதும் ஸுர்யனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர்செய்கின்றனரென்றும்,அந்தணர்முதலியோர் ஸந்தியா காலங்களில் மந்த்ர பூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அர்க்கிய
தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால்தள்ளி ர்யனுடைய ஸஞ்சாரத்துக்குத்தடையில்லாதபடி செய்கின்றனரென்றும்,அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்ய மண்டலத்தினிடையே ஒரு செந்தீ யெழுந்து வலிக்க (விளக்கில் விட்டில் போல் அத்தீயில்அசுரர்கள் விழுந்து மாண்டுபோகின்றனரென்றும் ஒதப்பட்டுள்ளது.” என்று.
ஆசார்ய ஹ்ருதயத்தில் (53 )” புரவியே ழொருகாலுடைய தேரிலே”இத்யாதி சூர்ணையின் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் அருளிச் செய்திருப்பது – ” மந்தேஹரென்பார்சில ராக்ஷஸர் ; ஸந்த்யாஸமயத்திலே ஆதித்யரதத்தைச் சுற்றிக்கொண்டு போகவெட்டாதே ஆதித்யனோடே மஹாயுத்தம்பண்ணி அவனைக் கொல்லத் தேடுவர்களாய், அவ்வளவிலே ப்ராஹ்மணர் காயத்ர்யபிமந்திரிதைகளான அப்புக்களை அர்க்கிய ரூபேண ஊர்த்வமாகப்ரக்ஷேபிக்க,அந்த காயத்ரீ பூத – அர்க்கய சக்தியாலே ஆதித்ய மண்டலத்திலே ஜ்வலித்துக்கொண்டுதோற்றின சிவந்த அக்கியிலே விழுந்து முடிந்து போவர்கள்….”
ஜகத்காரண வஸ்துவை ப்ரஸ்தாவிக்கின்ற வாக்யங்கள் காரணவாக்ய
மெனப்படும். அந்த வாக்யங்களை ஸாகாங்ஷ வாக்யங்களென்றும்,நிராகாங்க்ஷ
வாக்யங்களென்றும் இருவகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டியது முதற்காரியம்.
ஸாகாங் வாக்யங்களென்பவைதாமும் இரு வகையாயிருக்கும். 1. ஸாமான்யாது
சப்தத்தோடு கூடியிருந்து விசேஷ ப்ரதிபத்தியை அபேக்ஷித்திருக்குமவை.
2.அநுவாத ரூபமாய்க்கொண்டுபுரோவாதத்தை அபேக்ஷித்திருக்குமவை -என்று.
“ ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் ” – ” ஸேயம் தேவதைக்ஷத”
இத்யாதி வாக்யங்களில் ‘ஸத் என்றும் தேவதா என்றும்ஸாமான்யா சப்தங்களே
யிருக்கையாலே இவை விசேஷ ப்ரதிபத்தி ஸாகாங்க்ஷங்க ளென்பது ஸ்பஷ்டம்.
” யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யாதி வாக்யங்கள் யச் சப்த கடிதங்களா
யிருப்பதுபற்றி அநுவாத ரூபங்களாகையாலே புரோவாத ஸாகாங்கங்களென்பதும்
ஸ்பஷ்டம். ஸாகாங்க்ஷவாக்யங்களில் கீழ்ச்சொன்ன இரண்டுவகைகள்தவிர மூன்றாவது வகையும் ஒன்று சொல்ல வேண்டியதாகிறது ; அதாவது, அயோக்யமான அர்த்தத்தைத் தெரிவிக்கும் வாக்யங்கள் யோக்யார்த்த பிரதிபத்தி ஸாகாங்க்ஷமாயிருப்பதாம். ப்ரதர்தந வித்யையில் “மாமுபாஸ்வ ஏததேவாஹம் மநுஷ்யாய ஹிததமம் மந்யே” என்று இந்திரன் சொன்ன வாக்யம் போன்றவை இந்த வகுப்பில் சேரக் கடவன். ஆக மூவகுப்பாகப் பிரியலுற்ற ஸாகாங்க்ஷங்களான காரண வாக்யங்கள் வஸ்து விசேஷத்தை நிர்ணயிப்பதில் ஸ்வதந்திரமாக அசக்தங்களாகையாலே நிராகாங்கங்களான வாக்ய விசேஷங்களைக் கொண்டே வஸ்து விசேஷத்தை நிர்ணயிக்க வேண்டியதாகிறது. யோக்யார்த்த விசேஷ ப்ரதிபாதகங்களாய்க் கொண்டு இதர வாக்யங்களை எதிர்பாராத வாக்யங்களே நிராகாங்க்ஷ வாக்யங்க ளென்று தேறிற்று.
+ஏகோ ஹவைநாராயண ஆஸ்த் ந ப்ரஹமா நேசாந: இத்யாதி வாக்யங்களே அப்படிப்பட்டவை என்று ஸாரஜ்ஞர்கள் நிஷ்கர்ஷித்துள்ளார்கள். மேலே கா டிய வாக்ய விசேஷத்தில் ஸாமாந்ய சப்தம் சேர்ந்திருக்கவில்லை. அநுவாத ரூபத்வமுமில்லை ; அயோக்யார்த்த ப்ரதிபாதநமுமில்லை. ஸத், ப்ரஹ்ம, ஆத்ம தேவதா இத்யாதிகளான பதங்களிருந்தால ோ ஸாமான்ய சப்தம் சேர்ந்திருப்பதாக ஆகும். அவை இல்லையே. யச்சப்த கடிதமாயிருந்தாலன்றே அநுவாத ரூபமாக ஆகும். அதுவுமில்லையே. அயோக்யார்த்த ரதிபாதகத்வமில்லாமையோடு கூடின யோக்யார்த்த ரதிபாதகத்வமே யுள்ளதென்பது நிரூபிக்கப்பட வேண்டியதாக நிற்கையாலே அதை நிரூபிக்கிறேன்.சாரீரக மீமாம்ஸையில் சாஸ்த்ராரம்ப ஸமர்த்த நார்த்தமான சதுஸ் த்ரி முடிந்ததும் ஐந்தாவது அதிகரணம் ஈக்ஷத்யதிகரணம்-இதில் விசேஷித்துக் குறிக்கொள்ளத்தக்க த்ரங்கள் இரண்டு ; “தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்” ”கதிஸாமாந்யாத்” என்னுமிவை. ஸாதாரணமான ஸச்சப்தத்தையும் தேவதா சப்தத்தையும் கொண்டிருக்கிற ஸத்வித்யையானது புருஷஸுக்த ப்ரதி நனான ஸ்ரீமந் நாராயணன் பக்கலிலே பர்யவளிப்பதாக இவ்விரண்டு ஸூத்ரங்களாலும் காட்டப்படுகிறது.”தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்” என்கிற ஸூத்ரத்தின் பொருளை முன்னம் தெரிந்து கொள்ளவேணும். “தந்திஷ்டஸ்ய “என்கிற விடத்துள்ள தச்சப்தத்தினால்-ஸு த்ரகாரர் கருதிய விஷய வாக்யத்திலுள்ள ஸச்சப்தவாச்யமான வஸ்து கொள்ளப்படுகிறது . ஆகவே, ஸத்தை உபா ளிப்பவனுக்கு என்பதாகப்பொருள் தேறிற்று.ஸத்தைஉபாளிப்பவனுக்கு முக்தி)கிடைப்பதாக ஓதப்படுவதால் ரக்ருத ஸச்சப்த வாக்யமான வஸ்து ப்ரதானமாக மாட்டாது என்றதாக த்ரார்த்தம் தேறும். ப்ரதாநந்தான் ஜகத் காரணம்’என்பவர்களை நிரஸிப்பதன்றோ ப்ரஸ்துதம். புருஷஸுனாதத்திலும் உத்தர நாராயணத்திலும் “தமேவம் வித்வா ம்ருத இஹ பவதி. நாய பந்தா அய நாய வித்யதே என்றும், ”நா ய. பந்தா வித்யதே அயநாய ” என்றும் மோ ேபாயமான உபாஸநத்திற்கு இலக்காகுந்தன்மை நாராயணனுக்கே ஓப்பட்டுள்ளது. இந்த ஸத்வித்யா ப்ரகரணத்திலும் (அதாவது,ச்சாந்தோக்யத்தில்]”ஆசார்யவாந் புருஷோ வேத ; தஸ்ய தாவதேவ சிரம்யாவந் விமோக்ஷயே அத ஸம்பத்ஸ்யே” என்று ஸ்துபாஸனமே மோஷோபாயமாகச் சொல்லப்பட்டது. இந்த ச்ருதி வாக்யத்தின் பொருளாவது. எவனுக்கு உபதேஷ்டாவான ஆசார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான். சரம சரீரத்திலிருந்து விடுபடுமளவே அவனுக்குக் கால தாமதம் ; சரம சரீரம் விழுந்தவுடனே ஸச்சப்த நிர்திஷ்டனாய் ஜகத்காரண பூதனா பரம புருஷனை அடைகின்றான். (ஸதுபாஸன நிஷ்டனுக்கு சரீரம் விழுமளவுதான் மோக்ஷப்ராப்தியில் தாமதம்; சரீரம் தொலைந்தவுடனே முக்தனாகிறான் என்பதாம்-இதனால் நாராயணனே ஸச்சப்த வாச்யனென்று அறுதியிடப்படுவதனால் ப்ரகருதமான ஸத்துப்ரதாநமன்றுஎன்றதாக த்ரதாத்பர்யம் தேறுகிறது. “தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி” இத்யாதிகளான உதாஹ்ருத வாக்கியங்களாலே நாராயணோபாஸனந்தான் மோக்ஷே பாயமென்றுநிச்சமிக்கப்பட்டவளவில்*தந்நிஷ்டஸ்ய மோக்ஷே பதேசாத் என்று த்ர மியற்றின் மஹர்ஷியானவர் நாராயணோபாஸகனையே விவக்ஷித்தாராகிறார் என்று நிர்ணயிப்பதில் தட்டுண்டோ?
கீழேநாம் விவரித்த விஷயத்தில் பிறர்சொல்லக்கூடிய தொன்றுண்டு;
அதாவது ; தந்நிஷ்டஸ்ய மோக்ஷோபதேசமாகிற ஹேதுவைக்கொண்டு ப்ரதாநம்
ஜகத்காரணமன்று என்று நிரஸிப்பது மட்டுமே இங்கு ஸூத்ரகாரருக்குஉத்தேச்ய
மானது ; நாராயணனே ஜகத்காரணபூகனென்றுஸ்தாபிப்பதில் இங்கு நோக்கே
கிடையாது. சப்தத்தினால் கிடைப்பதற்கு மேற்படக் கொள்ளத்தகாது என்று.
(இதற்கு மறுப்பு) இங்ஙனம் சொல்வது தவறு. இதர ப்ரதி க்ஷேபத்தில் மட்டுமே
த்ர தாத்பர்யமென்று கொண்டால் ந்யூந்தையாகும். இந்த வேதாந்தசாஸ்த்ரம்
எதற்காக ஆரம்பிக்கப் பட்டதென்று பார்க்கவேணும்; முமுக்ஷ வானவனை
மோஷோபாய பூதமான வஸ்துவை உபாளிப்பதில் ப்ரவர்த்திக்கச் செய்வதன்-பொருட்டு விசிகித்ஸையற்ற ப்ரஹ்மஜ்ஞானோத்பாதநத்தின் பொருட்டு சாஸ்த்ரம்
ஆரம்பிக்கப்பட்டது.சாஸ்த்ராரம்பத்திற்குப்பலன் இதுதானென்பதை வேதாந்திகள்
யாவரும் ஸமரூபமாக இசைந்தே தீருவர்கள். ஜக ஐந்மாதி காரணம் ப்ர ம்’
என்று ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி ப்ரதாநாதிகள்ஜகத்காரணமன்று என்று
கண்டித்த வளவால் விசிகித்ஸையற்ற ப்ரஹ்மஜ் ஞாநோத்பாதானம் செய்ததாகஆய்விடுமோ? ஒருநாளுமாகாது. ப்ரஹ்ம ருத்ராதிகளிடையில் எந்த தேவதை
ஜகஜன்மாதி காரணம்? என்கிற விசிகித்ஸை பரிஹரிக்கப்படாத வளவில்நிஸ்ஸம்சய ப்ரஹ்மஜ்ஞானோத்பாத நம் செய்யப்பட்டதாக ஆகமாட்டா தென்பதைப்பேதையருமறிவர். ஏவஞ்ச, இன்ன தேவதைதான் ஜகத்காரணமென்று நிஸ்ஸந்
தேஹமாகத் தெரிவிக்கப்படாத வளவில் சாஸ்த்ராரம்ப ப்ரயோஜனம் தேறாமை
யாலே ந்யூமதைக்குப் பரிஹாரமே ஏற்படாது. ஆகவே, ஜகத்காரணபூத ரஹ்மசப்தவாச்யமான தேவதா விசேஷம் இன்னதென்று நிர்த்தாரணம் செய்வதிலும்சாஸ்த்ரம் தத்பரமானது என்று இசைந்து தீர வேண்டும். தந்நிஷ்டஸ்யமோஷோபதேசாத் என்கிற ஸேதூக்தியின் ஸ்வாரஸ்யத்தினாலும் தேவதாவிசேஷ நிர்ணயத்தை த்ரகாரர் செய்யக் கருதியுள்ளாரென்பது செவ்வனே விளங்கா நின்றது. மோஷேர்பாய பூதமான வஸ்துவுக்கு உபாஸந விஷயத்வம்யாதொன்று இங்குச் சொல்லப்பட்டிரா நின்றதோ இது ப்ரதாநாதி பிரதிக்ஷேபகமாத்ரமே யன்று, தேவதா விசேஷ விஷயகத்வத்தை ஸாதிப்பதாகவுமாகின்றது. தமேவம் வித்வாந்அமருத இஹ பவதி* என்கிற ச்ருதி வாக்கியத்திலுள்ளதானதச்சப்தமானது எந்த தேவதா விசேஷத்தைச் சொல்லுகின்றதோ, அதனையே
தந்நிஷ்டஸ்ய என்கிற ஸ த்ரத்திலுள்ள தச்சப்தமும் சொல்லக்கடவ தென்பதுதிண்ணம். *வாஸத்தேவ மநாராத்ய கோ மோ ம் ஸமவாப்ஸ்யதி * என்பதுமுதலான பல ரமாண வசனங்களை இங்கு அநுஸந்திப்பது. ஆக, மோக்ஷ
ஹேதுத்வமாகிற லிங்கத்தினால் ஸச் சப்தத்தின் பொருளை நிஷ்கர்ஷிப்பவரானவியாஸ முனிவர் தமது ஸூ த்ரத்தில் நாராயணனையே கருதினாரென்பது நிச்சயம்.
ஸச்சப்த வாச்யன் நாராயணனே என்பது மற்றொரு ரகாரத்தாலும்நிர்ணயிக்கத்தக்கதாம். அதாவது, புருஷ ஸ க்தத்திலும், உத்தர நாராயணத்திலும் ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர .நாமா கருத்வா அபிவதந் யதாஸ்தே.என்பதனால் நாம ரூப வயாகர்த்தாவாக இருக்குந் தன்மை சொல்லப்பட்டது.இது ஸ வித்யா ரகரணத்திலும் * ஸேயம் தேவதா இமாஸ் திஸ்ரோ தேவதாஅநேந ஜீவேநாத்மநா அனுப்ரவி ய நாமரூபே வயாகரோத்ஈ என்றோதப்பட்டிருப்பதானது ஸச்சப்தவாச்யன் நாராயணனே என்பதற்கு ப்ரத்யபிஞாபகமாகும்.ஈக்ஷத்யதிகரணத்திலிருந்து மேலே நாமெடுத்துக் காட்டின இரண்டு ஸு த்ரங்களில்* தந்நிஷ்டஸ்ய மோஷோபதேசாத் என்கிற முந்தின னத்ரத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமவை சொன்னோம். இனி * கதிஸாமாந்யாத் என்கிற அடுத்த த்ரத்தைப்பற்றிச் சொல்லுகிறோம் [ கதிஸாமான்யா .] கதியாவது பரவ்ருத்தி; அதாவதுஅர்த்த போதகத்வம் . [ஸாமாந்யாத்) அது ஸமாநமாயிருக்க வேண்டியது ஆவசயகமாகையாலே என்று பொருள். காரண வாக்யங்களெல்லாம் ஒரு மிட ாயிருக்கப்ரஸ்தாவம் கீதையில் இல்லாமற் போகவில்லை. (7.-20) * காமை ஸ்தை ஸ்தைர்
ஹ்ருதஞனாக பிரபத்யந்தே அந்யதேவதா * என்றுதொடங்கிச் சொல்லி வரு கையில் * அந்தவத்து பலம் தேஷாம் தத்பவதியல்பமேதஸாம் என்று தலைக் கட்டப்பட்டுள்ளது. இந்த ச்லோகத்தின் பாஷயத்தின் முடிவில் சங்கராசாரியர் எழுதியுள்ள வாக்கியம் பரம பக்தர்களை அவசமாகவே கண்ணீர் பெருக்க வைக் கின்றது.அவ்விடத்திலுள்ள வாக்கியமிது காணீர் : * ஏவம் ஸமாநே அப்யாயாஸ மாமேவ ந ப்ரபத்யந்தேஅநந்தபலாய; அஹோ கலு கஷ்டதரம் வர்த்ததே இத்யநுக்ரோசம் தர்சயதி பகவான் * என்று. ஸ்ரீமந்நாராயணனை பஜிப்பவர் களுக்கே அநந்தா ய பலன் பெறுவதற்கு அவகாசமுள்ளதென்று அறிந்தவர் களுங்கூட க்ஷத்ர பலன்களை விரும்பி தேவதாந்தரபஜனம் செய்கிறார்களே என்று பகவான் தானே கண்ணீர் விட்டழுது கதறுவதாக ஸாக்ஷாத் கரித்தன்றோ சங்காராசாரியர் இதை யெழுதியுள்ளார்.
பகவத் கீதை ஆறாமத்யாயத்தில் முடிவான சுலோகமிது. *யோகிநாமபி
ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா, சாத்தாவாந் பஜதே யோ மாம்ஸ மே யுக்த தரோ மத என்பது. இங்கு சங்கர பாஷ்ய பங்தி வருமாறு- *யோகிநாமபி
ஸர்வேஷாம் ருத்ராதி த்யான பராணாம். மத்கதேந – மயிவா தே வே ஸமா தேந, அந்தராத்மநா – அந்தமகரணே ந, ச்ரத்தாவார் சரத்ததாந ஸ்ஸந், பஜதே-ஸேவதே
யோ மாம், ஸமே -மம யுக்ததம: அதிசயேநம் யுக்த , மத:-அபிப்ரேத என்று.
இதற்கு விவரணம் அநபேக்ஷிதம்.ப பாத மற்றவர்கள் நற்றெளிவு பெறுவர்கள்
ஆதி சங்கராசார்யர் ஸஹஸ்ர நாம பாஷ்யத்திலும்பல பல இதிஹாஸங்களை யெடுத்துக்காட்டி நாராயண பாரம்யத்தைத் திடப்படுத்தியுள்ளார். விஷ்ணுவின் தாழ்வையோ, தேவதாந்தரத்தின் உயர்வையோ ஓரிடத்திலும் அவர்காட்டினதில்லை.கேசவநாம பாஷ்யத்தில் * கோ ப்ரமேதி ஸமாக்கியாத ஈசோஹம் ஸர்வதேஹி நாம்,ஆவாம் தவாங்கேஸம்பூதெள தஸ்மாத்கேசவ நாமவார்என்று சொல்லிக் கொண்டே சிவபெருமான் இந்த கேசவ நாமத்தை ஸமர்ப்பித்ததாக ஹரி வம்சத்தில் சொல்லப்பட்டுள்ள இதிஹாஸத்தை உதா ரித்துள்ளார் பகவத்பாதர். (அர்க்க ) என்னும் திருநாமத்தின் பாஷ்யத்தில் ப்ரஹ்மாதிபி பூஜ்யதமைரபி அர்ச்சநீயத் வாத் அர்க்க என்ற விவரணம் காட்டினார். இங்கு ஆதி சப்தத்தால் முந்துற முன்னம் கரஹிக்கக் கூடியவர் பார்வதீபதியல்லவோ? ஏன்? சுஸ ப்ரஹ்மா ஸ சிவ என்றோதுகிற வேத புருஷன் பிரமனுக்கடுத்தபடி சிவபிரானைச் சொல்லி வைத் திருப்பது பிரஸித்தமன்றோ? [அமிதாச : என்னும் திருநாமத்தின்பாஷயத்திலும் ஸம்ஹாரஸமயே விச்வம நா தி அமிதாசந.” என்று விவரித்தார் பகவத் பாதர் சிவபெருமான் விச்வ பஹிர்ப்பூதனல்லனே. நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் என்கிற திருவாசிரியப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கது.* அத்தா சராசரக்ரஹணாத் என்கிற ஸ த்திரத்தில் கருத்ஸ்நமான சராசரத்தையும் உண் டவனென்று நிர்ணயிக்கப்பட்ட நாராயணன் சிவபெருமானை விட்டிட்டானென்ன ப்ரஸக்தி யில்லையே. உட்கொள்ளப்பட்டவர்களில் சிவபெருமானே முதல்வதாவதுச்யதே யோ ௌ நாராயண: ப்ரஸித்த பரமாத்மா ஸர்வாத்மா இதி, தத்ந
நிராக்ரியதே. யதபி தஸ்ய பகவத அபிகமநாதிலக்ஷணமாராதனம் அஜஸ்ர ம ந்யசித்ததயா அபிப்ரேயதே, ததபி நப்ரதிஷித்யதே ; ச்ருதி ஸ்மருத்யோரீ வரப்ரணி தாநஸ்ய ப்ரஸித்தத்வாத் “ என்பன் அவருடைய பாஷ்ய பங்திகள்.-இவற்றால், ஸ்ரீமநாராயணனுக்கே பாரம்ய ப்ரதிஷ்டாபநத்தில் பகவத் பாதர் ஊக்கமுடையவரென்பது தேறிற்றென்னுமிடம் மறக்கத் தக்கதன்று
(10-8)அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே என்றவிடத்தில்சங்கர பாஷ்ய பங்தி இது காணீர்:- அஹம் பரம் ப்ரஹ்ம வாஸு தேவாக்க்யம், ஸர்வஸ்ய ஐகத: ப்ரபவ:- உத்பத்தி; மத்த ஏவ ஸ்திதிநாசக்ரியாபலோப்போகஎக்ஷணம் விக்ரியாரூபம் ர்வம் ஜகத்ப்ரவர்த்ததே” இத்யாதி .மூலத்தில் நாராயண பதமோ விஷ்ணு பதமோ காணப்படாத விடங்களிலெல்லாம் நியமேந விஷ்ணு நாராயண வாஸதேவ பதங்களை யிட்டே பாஷ்ய மியற்றுகிறார் சங்கராசாரியர்என்பது வயபிசரியாத விஷயம்.-அநந்யாச் சிந்தயந்தோமாம் * (9-22) என்ற விடத்தில் பரம் தேவம் நாராயணம் ப யுபாஸதே -தேஷாம் பரமார்த்த தர்சிநாம் * என்று பாஷயமிட்டிருக்கின்ற சங்கராசாரியர் பரதேவதையான நாராயணனை உபாளிப்பவர்கள் யாவரோஅவர்களே உண்மை யறிவாளிகள் என்று காட்டினாராகிறார் -ுஸர்வவாகீச்வரேச்வர * என்கிற நாம் பாஷ்யத்திலும் ஸர்வேஷாம் வாகீச்வராணாம் பிரஹ்மாதிநாமபி ஈச்வர என்றார் அவர் தாமே.
முமுக்ஷ க்களும் முக்தர்களும் நித்யர்களுமான ஸமஸ்தஜீவராசிகளையும் தன்னுடைய குணாறுபவத்தினாலேயே உஜ்ஜீவிப்பிக்குமதான பரப்ரஹ்மம் ணமாத்ரமும் நிர்க்குண
மாக இருக்ககில்லாது. கூரத்தாழ்வானருளிச்செய்த ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்தூரே குணாஸ்தவ து ஸத்வரஜஸ்தயாஸி தேந த்ர ப்ரதயதி தவயி நிர்க்குணத்வம், நித்யம் ஹரே! நிகில ஸத்குணஸாகரம் ஹி த்வாமாம ந்தி பரமேச்வரமீ வராணாம் என்றுள்ளச்லோக ரத்நம் இங்குநித்யானு ஸந்தேயமாகக் கடவது–ராமாயணத்தில்-ஆதியோடந்தமாகத் திருக்கல்யாண குணகண ப்ரஸ்தாவமே விளங்கா நின்றது .வான்மீகி முனிவர் தம்மிடம் வந்து சேர்ந்த நாரத மஹர்ஷி பக்கலில் கதை கேட்க விரும்பிற்றிலர் ; திருக்குணங்கள்
கேட்கவே விருப்பத்தை வெளியிட்டார். அதில், *கோ வஸ்மிந்ஸாம்ரதம் லோகே குணவார்* என்றும் * பஹவோ துர்லபாச்சைவ யே த்வயா கீர்த்திதாகுணா: * என்றும் உபகரமத்தில் காணும் வினாவிடைகளினால் இஃது அறியலாகும்
* ரம் ப்ரதானம் அம்ருதாக்ஷரம் ஹர ராத்மாநாவீசதே தேவ ஏக: * என்பது முதலான சருதிவாக்யங்கள் சேதந் அசேதந ஈச்வர ரூப தத்வத்ரையத்தின் உண்மையைத் தெரிவிக்கும் முகத்தால் பேதத்தைக்காட்டுகின்றன. *நேஹ நாநாஸ்தி கிஞ்சந* சுளர்வம் கல்விதம் ப்ரஹ்ம* *தத்த்வமஸி இத்யாதிகளான ச்ருதி வாக்யங்கள் பலவகைப்பட்ட வஸ்துக்களில்லாமையைத்தெரிவிக்கும்முகத்தால் அபேதத்தைக் காட்டுகின்றன.-*யஸ்யாத்மா சரீரம்,யஸ்யப்ருதிவீ சரீரம். ய ஆத்மநி திஷ்ட இத்யாதி வாக்யங்கள் பகவான் ப்ருதிவி முதல் ஆத்மா வரையிலுமுள்ள ஸகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாயிருக்கிறா னென்பதை ப்ரதிபாதிக்கின்றன;இவற்றை த்வைதிகளும் அத்வைதிகளுமான இரு வகுப்பினரும் அறவே விட்டிட்டார்கள்.-ஸுபாலோபநிஷத்து முதலான அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்கியங்களுக்கு உபய மதத்திலும் ஆதரவு கிடையாதென்பது ஸ்பஷ்டம். ஆக, த்வைதாத்வைத மதங்களிரண்டிலும் அநேக சருதி வாக்யங்களை அமுக்கியார்த்தங்களாகக் கொள்ளுதல்உபேக்ஷித்தல் இத்யாதியான பலீயஸ்ஸான தோஷமுள்ளது. இத்தகையதோஷம்சிறிதும் தட்டப்பெறாதது நமது மதமென்னுமிடம் அடுத்தபடியாக விவரிக்கப்படும்.
சுயஸ்யாத்மா சரீரமித்யாதிகளான ச்ருதி வாகியங்களுக்கு கடக ச்ருதிகளென்று பெயர்.பேனத்தையும் அபேதத்தையும் விரோத லேசமுமின்றிக்கே பொருந்தச் செய்யவல்லவை அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்யங்கள்-என்கிறகாரணத்தினால் இவற்றுக்கு கடகச்ருதிகளென்னும் பெயர் மிகப் பொருத்தமானது. * நேஹ நாநாஸ்தி கிஞ்சந இத்யாதிகளான அத்வைத (அபேத) ச்ருதி களினாலேற்பட்ட அபேதத்தையும் க்ஷரம் ப்ரதாநமம்ருதா ரம் ஹர * இத்யாதிகளான த்வைத (பேத ச்ருதிகளினாலேற்பட்ட பேதத்தையும் பொருந்தவிடும்வழி கேண்மின்.சேதநா சேதந ஈச்வரர்களான மூன்று தத்துவப் பொருள்களின் ஸ்வரூப பேதம் உண்மையாதலால் * ரம் ப்ரதா மித்யாதி பேத ச்ருதியானது பேதத்தைச் சொல்லியிருப்பது பாங்கே. ப்ரஹ்மம் சேதநாசேதந விசிஷ்டமாய் கொண்டு ஒன்றேயாகிறபடியால் *ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதியான அபேத ச்ருதிகளும் பொருந்தக் குறையில்லை. *யஸ்யாத்மாசரீரமித்யாதி அந்தர்யாமி ராஹ்மண
ச்ருதிகளானவை ஸர்வேச்வரனை ஸர்வாந்தர்யாமியென்று தெரிவிக்கும் முகத்தால் பேதத்தையு அபேதத்தையும் பொருந்த விடுகின்றன என்பர் நம் ஆசாரியர்கள்- உண்மையில் வெவ்வேறுபட்ட வஸ்துக்களும் சரீர சரீரி பாவநிபந்தநமாக வே ஒன்றாக வழங்கப்படுவதாய் ஸ்த்திக்கையாலே அப்படிப்பட்ட சரீர சரீரிபாவத்தை யுணர்த்துகின்ற அந்தர்யாமி ராஹ்மணாதி ரூபங்களான ச்ருதி வாக்யங்களுக்கு நமது மதத்தில் மிகுந்த கௌரவமுள்ளது. அத்வைதிகள் பேதச்ருதிகளை அநாதரிப்பது போலவும், த்வைதிகள் அபேதச்ருதிகளை அநாதரிப்பது போலவும் நாம் ஒருவகையான ச்ருதியிலும் அநாதரம் காட்டுகின்றிலோம். ஆகவே ஸர்வச்ருதி ஸாமரஸ்யம் நமக்கேயொழியப் பிறர்க்கில்லையென்று கல்வெட்டாயிற்று.
மதாந்தரஸ்தர்கள் ஒப்புக்கொள்ளாத பல அர்த்தங்களை நாம் ஒப்புக் கொண்டிருக்கின்றோம்.நித்ய ரிஸத்பாவம், எம்பெருமானுடைய கல்யாண
குணாசரயத்வம், திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டத்வம் முதலானவை அவை. இவற்றை
யெல்லாம் விட்டு சரீர சரீரி பாவத்தையே கொண்டு விசிஷ்டாத்வைதமென்றுபெயரிடுவதில் என்ன விசேஷமென்னில்,கேண்மீன். த்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்ற அர்த்த விசேஷங்களுள் ஐகச்சரீரகத்வமென்பதே ப்ரதாநமானது
ஆனது பற்றியே இதுப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தமெனப்படுகிறது. இதுவே ப்ரதா மென்பது எங்ஙனமென்னில் ஸர்வச்ருதிகளினுடையவும் முக்கியமான அர்த்தத்தைத் தெரிவிப்பதாய், ஸர்வ ச்ருதிகளுக்கும் ஸாமரஸ்யத்தை நிர்வஹித்து வாதி விஐய ப்ரயோஜகமா யிருப்பதனாலே, இதற்கு ப்ராதாந்யமென்றுணர்க.
முதலத்யாயம் நான்காவது பாதத்தில் வாக்யாந்வயாதிகரண மென்பது ப்ரஸித்த
மானது. நான்குஸு த்ரங்கள் கொண்டது இவ்வதிகரணம். ப்ருஹதாரண்யகோப
நிஷத்தில் ப்ரஸித்தமான மைத்ரேயீ ப்ராஹ்மணமென்னும் பகுதியில் அ ருத வோ
பாயமே தென்று கேட்டமைத்ரேயியைக் குறித்து யா ஞவல்க்யருடைய விடை: “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய : ச்ரோதவ்யோ மந்த யோ நிதித்யா தவ்ய “ என்பது. இதில் ஆத்மா என்னும் சப்தத்தால் குறிக்கப்பட்டவன் பரமாத்மாவா? ஜீவாத்மாவா? என்று விசாரம் ப்ரஸக்தமாக, பரமாத்மாவே யென்று நிர்ணயம் செய்வது இவ்வதி கரணத்தின் ப்ரமேயம். இது * வாக்யாந்வயாத் என்கிற முதல் த்ரத்தினால் தேறியது. மேத்ரே ப்ராஹ்மணத்திலுள்ள மஹாவாக்யம் ஸமஞ்ஜளமாக அந்வயிக்க வேண்டுகையாலே அந்த வாக்யத்தில் பிரதிபாதிக்கப்பட்டா ஆத்மா கரும்பலனை யநுபவிப்பவனான ஜீவாத்மாவாக இருக்க முடியாது,பரம புருஷனேயாகவடுக்கும் என்று சொல்லப்பட்டதாயிற்று. இதற்கு மேல் ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, இங்கு பரமாத்மா விவக்ஷிதனாகில் ஜீவாத்ம வாசகமான
ஆத்மா என்கிற சொல்லையிட்டுச் சொல்லுவானேன்? பரமாத்மாவென்றே பிர யோகிக்கலாகாதா? என்று. இக்கேள்விக்கு த்ரகாரரான வியாஸரால் மேலே
மூன்றுஸவத்ரங்களினால் ஸமாதானம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடைவே ஆத்மர
த்த்ய மதம், ஔடுலோமிமதம், காசக்ருத்ஸ் மதம் என மூவருடைய மதம் காட்டப்
பட்டுள்ளது. ப்ரதி ஞாஸித்தேர்லிங்கமாச்மரத்திய என்கிற முதல் ஸு த்ரம் ஆச்மரத்த்ய மதம். ஜீவாத்ம பரமாத்மாக்களுக்கு கார்ய காரண பாவம் சுருதியில் சொல்லப்பட்டிருக்கையாலே அதனால் அவர்களுக்கு அபேதம் ஏற்படுகிறது. காரண மான மண்ணுக்கும் அதன் கார்யமான பானைக்கும் அபேதம் காண்கிறதன்றோ.ஆக இவ் வபேதத்தைத் தெரிவிப்பதற்காக பரமாத்ம ஜீவாத்மாக்களுக்கு ஐக்யோக்தியுஎ ளதென்றார் ஆசமரத்தயர்.
இன ஒளடுலோமீ மதம்; கீழே காட்டிய ஆச்மரத்த்ய மதத்தில்ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவினிடத்திலிருந்து உத்பத்தியைக் கொள்ளுகையாலே நஜாயதே மரியதே வா விபச்சித்சு இத்யாதி ப்ரமாணங்களோடு அது விரோதிக்கையாலும் மற்றும் அநேக தோஷப்ரஸங்கத்தாலும் ஆசமரத்த்ய மதம்ஸாதுவன்றென்று கொண்ட ஒளடுலோமியானவர்- (உத்க்ரமிஷயத ஏவம்பாவாதித்யௌாலோமி ] முக்தி தசையில் ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவோடு அபேதம் சருதி ஸித்தமாயிருக்கையாலே முக்திதசையில் பவிஷ்யத்தான ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை யவலம்பித்து ஐக்யம் சொல்லிற்றாக நிர்வஹித்தார். இதற்குமேல் காசக்ருத் த மதம்:-கீழே விவரித்த ஒளடுலோமி மதத்தில் மோக்ஷம் வரையில் ஜீவாத்ம பரமாத்மாக்களுக்கு பேதமுள்ளதென்றும், முக்தி தசையில் அபேதமென்றும் கொள்ளப்படுகிற விது ”பரமாத்மாத்மநோர்யோக: பரமார்த்த இதீஷ்யதே,மித்த் யைதத் அந்யத் ரவியம் ஹிநதி தத் த்ரவ்யதாம் யத : என்கிற ஸ்ரீவிஷ்ணு
புராண வசன விருத்தம். வெவ்வேறுபட்ட பொருள்கள் ஒன்றோடொன்று சேருமே யொழிய ஐக்கியத்தை யடையமாட்டா வென்று இதில் ஸ்பஷ்டமாகக் கூறியிருக் கின்றதன்றோ. முக்தி தசையில் ஜீவாத்மாவுக்கு அபஹத பாப்மத்வாதி ஸ்வரூபம் ஆவர்ப்பவிக்குமதொழிய பரமாத்மாவோடு ஐக்யாபத்தியென்பதில்லை யென்னுமிடம்
(1-4-1.) *ஸம்பத்யாவிர்ப்பாவாதிகரணத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆக இத்தனைக்கும் முரணாக நிர்வஹிப்பது அநுசிதம் என்று கொண்ட காசக்ருத்ஸ்நர்
[பி அவஸ்திதேரிதி காசகருத்ஸ்ந]பரமாத்மா ஜீவாத்மாவினுள் அந்தராத்மாவாக இருப்பதும், ஜீவாத்மாவுக்குப் பரமாத்ம சரீரத்வமும் ய ஆத்ம திஷ்டந்யஸ்யாத்மாசரீரம் * இத்யாதி ச்ருதி ஸித்தமாகையாலும், சரீர வாசகங்களான சப்தங்களுக்கு சரீரிபர்யந்த வாசகத்வம் ஆக்ருத்யதி கரண ஸித்த மாகையாலும் பிரக்ருதத்தில் ஜீவாதயவாசியான ஆத்ம சப்தத்தைப் பரமாத்மபர்யந்த வாசகமாக நிர்வஹிப்பது
தான் உசிதமென்று கருதினார்.
பதினெட்டு அத்யாயமாக அமைந்தகீதையில் பதினெட்டு ஸாரார்த்தங்கள்-தேரைக்கொண்டுநிறுத்து ‘ என்று அர்ஜுனன் கட்டளையிட, உடனே அங்ங்னம் செய்த கண்ணபிரான் தன்னுடைய ஆசரித பாரதந்திரியத்தைக் காட்டிக்கொண்டா னென்பது கண்ணனுடைய திருக்குணங்களில் ஸாரமாக அறியத்தக்கது .மேலே தன்னுடைய பரத்துவத்தைப் பலவாறு பேசப்போகிறான் ; அதனிலும் சிறப்பாக ௌலப்யத்தை முந்துற முன்னம் அனுஷ்டான முகத்தினால் காட்டியருளினானென்பது விசேஷம்.
அர்ஜுனன் வாயில் “ சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம்” என்று வெளிவந்திருக்கிறது. கண்ணா ! எனக்கு தர்மாதர்மங்கள் தெரியவில்லை;
எனக்குச்ரேயஸ்ஸென்றுநீ அறுதியிட்ட பொருளை எனக்கு உரைப்பாயாக. உனக்கு
நான் மித்திரன் மாத்திரமல்லேன்; சிஷ்யனுமாகிறேன்: இதோ உன் திருவடிகளில் வீழ்ந்துயாசிக்கிறேன்காண் ; எனக்கு ஹிதா ஹிதங்களை யுபதேசிப்பாயாக’ என்று
அர்ஜுநன் சொல்லும்படி செய்து விட்டான் கண்ணபிரான். இந்த ப்ரார்த்தனையைப்
றாமல்சிறந்த சாஸ்த்ரத்தை யுபதேசிப்பது தகுதியன்றாதலாலும் நிர்வேத மில்லா
து வாயில் இந்த பிரார்த்தனை வெளிவராதாகையாலும் இத்தனையும் கண்ணபிரான் செய்துவைத்த வொரு நாடகம் என்பது அறியத்தக்கது. ஆகவே அர் னனுக்குண்டான வயாமோஸம் அவன்றன்னுடைய ஸ்வபாவத்தாலுண்டானதன்று-மாயப்போர்த் தேர்ப்பாகனுடைய மாய மந்திரம் செய்வித்த செயல் என்றதாயிற்று.இல்லையாகில் கீதாசாஸ்த்ரம் அவதரிக்க அவகாசமே யிராதன்றோ
(3-22) *” நமே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷ லோ கேஷு கிஞ்சந.நாநவாப்த மவாப்தவ்யம் வர்த்தஏவ ச கர்மணி என்பது. இதில்பகவான்தானும் கர்மா நுஷ்டானத்தில் ஊன்றி யிருப்பதாக வற்புறுத்திச் சொல்லப்பட்டுள்ளது . க்ருஷ்ணாவதாரத்திற்கு முந்தின அவதாரமான ஸ்ரீராமாவதாரத்தில் இது தன்னை ஸுஸ்பஷ்டமாகக் காணலாம். விச்வாமித்ர முனிவன் தசரத மன்னனிடம் வந்து அஹம் வேத்மிமஹாத்மாநம் இத்யாதிகளைச் சொல்லி ஸ்ரீ ராமபிரானைக்கொண்டுசென்றான். ஊந்ஷோடச வர்ஷோமே ராமோ ராஜிவ லோசG : என்று சக்ரவர்த்தி சொன்னபடி இராமன் செந்தாமரைக் கண்ணனாகையாலே ஸுர்யன் அஸ்தமித்தவாறேதாம்ரை முகுளிதமாகுங் கணக்கிலே இராமனும் கண்மூடினான். பிறகு கூப்ரபாத காலத்திலே முனிவன் “கௌஸல்யாஸுப்ரஜா ராம! பூர்வாஸந்த்யா ப்ரவர்த்
ததே “ என்று சொல்லித் துயிலுணர்த்துகிறான். “இராமா! எழுந்திரு; நாம் சீக்கிரமாக ஆசரமம் சென்று சேர்ந்துயாகம் தொடங்கவேணும் என்று சொல்லவேண்டி யிருக்க. அங்ஙனே சொல்லாதே”உத்திஷ்டநரசார் தூல் ! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் “
என்றான் முனிவன். ப்ராதஸ் ஸந்த்யா நுஷ்டானம் வழுவாமற் செய்யவேண்டுமே
அதற்காக எழுந்திராய் என்று சொன்னவிதனால் எம்பெருமானுடைய அவதாரம்
முக்கியமாக தர்மாநுஷ்டானத்திற்காகவே யென்பது நன்கு விளங்கும். மேலே
பிராட்டியைப் பிரிந்து வருந்திக் கிடக்கிற காலங்களிலும் பெருமாள் ஸந்தியாகாலங்
களில் தவறாது ஸந்தியாவந்தனம் அனுட்டித்தபடியை வான்மீகி பகவான் அஸ்க்ருத் கூறியிருக்கின்றார். ஆகவே பகவான் வர்த்த ஏவ ச கர்மணி* என்று சொன்னது மிகப்பொருந்தும்.
நாலாமத்யாயத்தில்(7) * யதா யதா ஹி தர்மஸ்ய * என்கிற ச்லோகத்தில் “ததா ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்” என்ற விடத்தில் ரஹஸ்யமும் ரஹஸ்யமுமான ஒரு விசேஷார்த்தமுண்டு ; மலே ஏழாமத்யாயத்தில் “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” (18) என்று கீதாசார்யன் தானே ஜ்ஞானிகளைத் தனக்கு ஆத்மாவாகச் சொல்லுகையாலே இங்கு”ஆத்மாநம் ஸ்ருஜாமி” என்றதற்கு ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்பதும் அந்தரங்கமான பொருளாகும். அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைமடிந்துநிற்குங்காலங்களில் பகவான் தான் வந்து அவதரிப்பதிற்காட்டிலும் ஞானிகள் அவதரிப்பதில் ப்ரயோஜநாதிசயமுண்டு. இராமாநுச நூற்றந்தாதியில் (41) மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுறநிற்கிலும் காண்கில்லா வுலகோர்களெல்லாம் அண்ண ராமானுசன் வந்துதோன்றிய வப்பொழுதே நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காயினரே * என்றுள்ள பாசுரம் இங்குப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும். அன்றியும் இந்த நான்காமத்யாயத்திலேயே மேல் (34) * தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நோஸேவயா, உபதே யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநி நஸ்தத்வதர்சி : * என்கிற ச்லோகத்தில் ஞானிகளின் உபதேசப் பெருமை நன்கு கூறப்பட்டிருக்கிறது. தத்வமாகிய நான் சொல்லுவதிற்காட்டிலும். தத்வமாகிய என்னைஸாாத்கரித்து தத்வதர்சிகளென்று பேர் பெற்றஞானிகள் உபதேசிப்பது மிகச்சிறந்திருக்கும்.அவர்களை யடிபணிந்தும் பலகால் அநுவர்த்தித்துக் கேட்டும் தெரிந்துகொள்’ என்று அந்த ச்லோகத்தில்சொல்லப்படுகிறது. அப்படி யுபதேசித் துத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஞானிகளை ஸமய விசேஷங்களில் நானே அவதரிக்கச் செய்கிறேன் என்கிறானிங்கு. தன்னுடைய அவதாரத்தைப் பற்றிச் சொல்ல ப்ராப்தமான இந்த ப்ரகரணத்தில் ஞானிகளின் அவதாரத்தைப்பற்றிச் சொல்வதற்கு என்ன ப்ரஸக்தி யென்று நினைக்கவேண்டா:* பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து* என்கிற பெரியாழ்வார் திருமொழிப்படியும் ஸாக்ஷாந்நாராயாணோ தேவ: க்ருத்வா மர்த்யம ம் தநூம். மக்ாந்உத்தரதே லோகாந்காருண்யாத் சாஸ்த்ர பாணிநா* என்கிற ப்ரமாணப்படியும் ஞானிகளின் அவதாரமும்பகவதவதார விசேஷ மேயாகையாலே. * சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ,நாமம் பராங் குசமோ நாரணமோ? தாமம் துளவோ வகுளமோ தோளிரண்டோநான்கு முளவோ பெருமானுனக்கு*என்று நம்மாழ்வாரை நோக்கி ஒரு பரமபக்தர் பணித்த பாசுரமும் இங்கு அநுஸந்திக்கப் பொருந்தும்.
ஐந்தாமத்யாயத்தில் (18) வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி.சுநிசைவ ச்வபாகே ச பண்டிதாஸ் ஸமதர்சிந * என்பதொரு சுலோகம். இந்த ச்லோகத்தில் ” பண்டிதாஸ் ஸமதர்சிந “ என்றிருப்பது கொண்டு,’ஜாதிபேதம் முதலானவற்றை யிட்டு ஏற்றத்தாழ்வு காண்பவர்கள் பண்டிதர்களல்லர்,பாமரர் களே’ என்கிற அபார்த்தம் நவீந் ஸம்ஸ்காரகர்களின் வாக்கில் உலாவி வருகிறது. அது சிறிதும் பொருந்தாது, பாஷ்யஸுக்திகளை நோக்குக. பசுவினாலாகிறகாரியம் யானையினால்ாகாது . யானையினாலாகிறகாரியம்பசுவினாலாகாது. பால்வேண்டும்போது பசுவைத் தேடுவதும் மஹோத்ஸவங்களுக்கு யானையைத் தேடுவதும் யாவரிடத்துங் கண்ட வியல்பு. லோக ரீதியில் ஸமதர்சனம் எங்ஙனே பண்ணமுடியும்? ஸர்வத்ர ஸ்மதர்சிந் ” என்றதற்குநவீநர்கள் சொல்லுகிற பொருள் பொருந்தவேணுமாகில், யானைக்குச் செய்கிற அலங்காரங்களை நாய்க்குச் செய்யவேண்டும்; நாய்க்குச் செய்யு மவற்றைக் குதிரைக்குச் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஆபத்திகளைப் பரிஹரிக் கைக்காக ஸர்வத்ர ஸமதர்சி ‘ என்பதற்குப் பொருத்தமான பொருள் காண வேண்டும். அதுதான் பாஷ்யத்தில் காண்பது. அன்றியும், இதற்குமேல் மூன்றாவது ச்லோகத்தில் (5-20) சொல்லப்பட்டிருக்கின்றதாவது – ப்ரியமானது கிடைத்தால் ஸந்தோஷிக்கக் கூடாது; அப்ரியமானது கிடைத்தால் வெறுப்புக் கொள்ளலாகாது என்று கூறப்படுகிறது. இப்படியிருக்க வல்லவனுக்குத்தான் ஸர்வத்ர ஸமதர்சந் ரூபமான ஞாந விபாக முண்டாகுமென்று பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார். அப் படிப்பட்ட ஓர்அதிகாரி தேறுவனாகில் அவனுடைய ஸர்வத்ரஸமதர்சித்வம் எப்படிப் பட்டதென்று நேராகக் கண்டு கொள்ளலாம்.
ஆறாவது அத்யாயத்தில் (5) உத்தரேத் ஆத்மநாத்மாநம் நாத்மாநமவஸாத யேத், ஆத்மைவ ஹ்யாத்மநோபந்து; ஆத்மைவ ரிபுராத்மந என்கிற ச்லோகம் ஒவ்வொரு வருடைய நெஞ்சிலும் அநவரதமும் ஊன்றியிருக்கத்தக்கது. தன்னைக்கொண்டே தான் கடைத்தேற வேணுமென்றும்,தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளலாகாதென் றும், தனக்குத் தானே உறவு, தனக்குத்தானே பகைவன் என்றும் இந்த ச்லோகத்தில் சொல்லப்படுகிறது. ஒருவன் கடைத்தேறுவதற்குப் பல பல ஸாதனங்கள் வேண்டி யிருக்கின் ற. ஸத்ஸ் வாஸம் வேணும். ஆசார்யோபஸேவை வேணும். பிராட் டியை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுதல்வேணும்…….. என்றிப்படியாக உஜ்ஜீவனத்திற்கு வேண்டியவை பல இருந்தாலும் இவற்றுள் மிக முக்கியமான ஸாதனம் மனம் ஒன்றேயாம். அதை விஷயாந்தரங்களில் யதேஷ்டமாகச் செல்லவிட்டுவைத்தால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டபடியாகும். மனத்தை விஷயக்ராமங்களில் புகவிடாமல் ஆத்மோஜ்ஜீவனத்திற்கு அபிமுகமாக்குமளவில் அந்த மனத்தைக்கொண்டுதான் வாழ்ந்தவனாவன். ஆகவே, மனமானது உறவாயு மிருக்கும், பகையாயு மிருக்கும். உறவாகக்கொண்டு வாழ்வதே விவேகிகளின் பணி: பகையாகக்கொண்டு பாழாய்ப் போக வேண்டாமென்று கீதாசார்யன் வெகு பொருத்தமாக உபதேசித்தருளுகின்றான்.
ழாமத்யாயத்தில் (17.) *தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த:* என்னும்ச்லோகத்தின் உத்தரார்த்தம் “ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய :” என்றுள்ளது. இங்குநம் ஸ்வாமி ” ஞாநிந: அஹம் அத்யர்த்தம் ப்ரிய “ என்று கரமாந்வயத்தையே திருவுள்ளம்பற்றி பாஷயமிட்டருளினார். இவ்வந்வயக்ரமத்தில்- ஞானிக்குத்தன்னிடத்தில் ப்ரீதி அதிகம் என்றதாக விளங்குகிறது. உண்மையில், பகவானிடத்தில் ஞானி வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்கு மனவில் ஞானியினிடத்தில்பகவான் வைதிருக்கிற ப்ரீதிதான் அதிக மென்னத் தகும். ஆகவே இந்த ச்லோகத்தில் (அத்யர்த்தம்] என்பதை ‘அஹம் ப்ரிய:’ என்பதிலே கூட்டுவதைவிட ‘மம ப்ரிய என்பதிலே கூட்டுவதுதான் ரஸ்வத்தரமென்று திருவுள்ளம் பற்றின ஸ்வாமி ஸ்ரீபாஷ்யத்தில் சரமஸ்த்ரமான * அநா ருத்தி ஸூத்ரத்தின் பாஷ்யத்தில் “அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்கிற அநர்க்கமான வாக்யத்தினால் அந்த அந்வய க்ரமத்தையும் காட்டியருளினார். அந்த ஸ்ரீ பாஷ்ய ஸுக்தியின்படி ப்ரக்ருத கீதா லோகாந்
வயம் எப்படி கொள்ளவேணு மென்னில்; ஞாநி : அஹம் ப்ரிய: : ஸ ச மம் அத்யர்த்தம்ரிய:” என்றிங்ஙனே கொள்ளவேணும் . உபயத்பாஷ்யத்திலும் துல்யமானஅந்வயக்ரம்மே விவக்ஷித மென்று சில பண்டிதர்கள் கூறுவதுண்டு. இங்கு நாம் வாத ரதிவாத ருசி யுடையோமல்லோம்.
எட்டாமத்யாயத்தில் ஒரு நிதி காட்டுகிறேன் காண்மின். (14.)* அநந்யசே
தாஸ்ஸத்தம் யோ மாம் ஸ்மரதி நித்யசா, தஸ்யாஹம் ஸு லப பார்த்தநித்யயுக்தஸ்ய யோகிற என்கிறசுலோகத்தின் உண்மைப் பொருளைக் கண்டுணர்ந்து பாஷ்யமிட்டருளினவர் நம் ஸ்வாமி. இதை மிக விரித்து அடியேன் வேறு சில நூல்களில் விளக்கியிருக்கிறேன். இங்கு மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறேன். *நாயமாத்மாச்ருதியில் *யமே வைஷ வர்ணுதே தேந லப்ய என்றதிலுள்ள அர்த்த வாதத்தை ஸ்வாமி தமது
பாஷ்யத்தில் அறவே அறுத்தருளுகிறார். அதைதாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸுக்திகள்
மிக நன்றாக விளக்குகின்றன. சேதந்னுடைய காரியங்களில் பசை யறுத்து எம்பெரு
மானுடைய க்ரூதியின் ப்ராபல்யத்தை ஸ்திரீகரிப்பது இவ்விடத்து பாஷ்யம். பரகத்
ஸ்வீகாரத்தின் பெருமையை யுணர்த்துவதென்றபடி. “தத்வியோகம் அஸஹமாந அஹ
மேவ தம் ருணே அத்யர்த்தமத்ப்ரியத்வாதிகஞ்ச அஹமேவ ததாமீதி அர்த்த “இத்யாதி பாஷ்ய ஸ்ரீஸுக்திகளையும், “உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ சங்காவ்யுதாஸாய
ச்ருதி லதாம் ஆஹ- யமேவேதி. என்கிற தாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸுக்தியையும்
சிந்தனை செய்வது.
ஒன்பதாமத்யாயத்தில் (26) *பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யாதுப்ரயச்சதி, தத ம் பக்த்யுபஹ்ருதமச்நாமி ப்ரயதாத்மந: என்கிற சலோகத்தினால் கண்ணபிரான் தான் ஆராதனைக் கெளியன் என்னுமிடத்தை அருளிச் செய்கிறான்-திருமங்கை
யாழ்வார் *கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்
பலுமுன் கண்டக்கால் புள்ளாயோ ரேனமாய்ப்புக்கிடந்தான் பொன்னடிக் கென்று உள்ளாதாருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே * என்று பெரிய திருமொழியில்
(11-7-6) அருளிச் செய்கிறார். –இடுகிற பொருளில் வாசி பார்ப்பதில்லை; இடுகிறவன் னெஞ்சில் ஈரமுள்ளதா என்பதொன்றையே பார்ப்பேன் ‘ என்று ஸ்பஷ்டமாகக் காட்டுகின்றது. பூர்வார்த்தத்தில் யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்று சொல்லிவைத்து உத்தரார்த்தத்திலும்‘தத் பக்த்யுபஹ்ருதம் ” என்று மீண்டும் சொல்லியிருக்கிறதல்லவா? தத் என்றாலே போதுமாயிருக்க பக்த்யுபஹ்ருதம்’ என்றது பக்தியின் கனமே முக்கியமென்று
காட்டுதற்காம் .
பத்தாமத்யாயத்திற்கு ஸ்வாமி யெம்பெருமானாருடைய அவதாரிகை வருமாறு:-கீழே பக்தியோகம் ஸாங்கமாக விவரித்துரைக்கப்பட்டது ; இப்பொழுது பக்தியுண்டாவதற்காகவும் அது வளருவதற்காகவும் எம்பெருமானுடைய (தன்னுடைய] நிகரற்றஐச்வர்யம் முதலிய
திருக்கல்யா குணங்களின் திரள் அளவு கடந்திருக்கிற படியையும், உலகமெல்லாம்
தனக்கு சரீரமாயிருக்கையாலே அவனுருவாய் அவன் ஏவச்செல்லும்படியாயிருக்
கின்றமையும் விஸ்தரித்துச் சொல்லப்படுகின் றன- என்று.-தானாகவே பூய ஏவ மஹாபாஹோ ! ச்ருணு மே பரமம் வச : (10-1) என்று,மீண்டும் நான் சொல்லுவதைக் கேளப்பா! என்று ஆரம்பித்துச் சொல்லுகிறான்; இப்படி அப்ருஷ்டோத்தரமாகச் சொல்லுவது கூடுமோ வென்று சங்கிக்க இடமில்லாதபடி உத்தரார்த்தத்தில் யத் தேஹம் ப்ரீயமாணாய
வக்ஷ்யாமி ஹிதகாம்யயா* என்று, ச்ரோதாவான அர்ஜு நனுடைய முகத்தில் ப்ரீதி
விசேஷத்தைக் கண்டு இவனுக்கு இன்னமும் விரிவாகச் சொல்லியே யாகவேண்டுமென்று திருவுள்ளம் பற்றிச் சொல்லுவதாகக் காட்டப்படுகிறது,-10.11. ஆகிய இரண்டத்யாயங்களிலும் சொல்லப்புகுகிற விஷயங்கள் கீதாசாஸ்தரத்தினுள் ஸாரங்களாயிருப்பதால் இவற்றைச் சொல்லத்தொடங்கும்போதேஅர்ஜுநன் தன்னுடைய அவாவை அதிகமாகக்காட்டினானென்பது ” ப்ரீயமாணாய தேஎன்பதனால் விளக்கப்படுகிறது. அவன் பரீதனாகத் தென்படாமற் போனாலுங் கூடஅவனுடைய ஹிதத்தை யுத்தேசித்துத்தான் சொல்லியே தீரப்போகிறதாகக்காட்டப்படுகிறது ” வ யாமி ஹிதகாம்யயா ” என்பதனால். ஆக,இவ்விரண்டத்யாயங்களிலும் தெரிவிக்கப்படுகிற அர்த்தங்கள் ப்ரியங்களுமாய் ஹிதங்களுமாயிருக்குமென்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டதாயிற்று.
(10-19) ஹந்த தே கதயிஷ் யாமி விபூதீ ராத்மநச் சுபா:, ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட! நாஸ்த்யந்தோவிஸ்தரஸ்ய மே என்று, அர்ஜுநா! என்னுடைய மிகவழகிய விபூதிகளை உனக்குச் சொல்லுகிறேன் ; எல்லாவற்றையும் சொல்லுவதென்றால் அவற்றுக்கு முடிவே கிடையாமையாலே சொல்லப் போகாது ; உன்னால் கேட்கவும்போகாது ; ஆகையாலே முக்கியமாகச் சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளாய் என்று சொல்லி. (21) ஆதித்யாநாமஹம் விஷ்ணு: என்று தொடங்கி முப்பத்தொன்பதாவது ச்லோகமளவும் சொன்னான். இவையெல்லாம் கேட்ட அர் நன் (11-1ல்) யத் த்வயோக்தம் வசஸ் தேந மோஹோயம் விகதோ மம என்று,கண்ணா! நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு என்னுடைய மோஸ மெல்லாம் தொலைந்தது என்று சொல்லி, (11-3ல்) த்ரஸ்டுமிச்சாமி தே ரூப மைச்வரம் புருஷோத்தம என்றுபகவானுடைய அஸாதாரண ரூபத்தைக்காண்பதிலே
தனக்கு விருப்பமிருப்பதாக வெளியிட்டான். அவனுக்குக் கண்ணபிரான் விச்வரூபம் காட்டியருளத் திருவுள்ளம்பற்றி அதை ஊனக்கண்ணாலே காண முடியாதாகை
யால்அது காண்கைக்காக திவ்யசக்ஷஸ்ஸைக் கொடுத்தருளி விச்வரூபத்தை அற்புத
மாகக்காட்டியருளினான். ஆக,பத்தாமத்யாயத்தில் விபூதி விஸ்தாரத்தைப் பேசி, பதினோராமத்யாயத்தில் விச்வரூபத்தைக் காட்டியருளினானாயிற்று. இவையெல்லாம்
எம்பெருமானுடைய உடைமைகள் என்றதாயிற்று.
பன்னிரண்டாமத்யாயத்தில் 18, 19 ச்லோகங்கள் ஸாரமானவை. அவையாவன- ஸமச் சத்ரெள ச மித்ரே ச ததா மாநாவமாநயோ :, சீதோஷ்ண ஸுக துக்கேஷ
ஸமஸ் ஸங்கவிவர்ஜித : துல்ய நிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித், அங்கேத:
ஸ்திரமதிர் பக்திமாந் மே ப்ரியோ நர, என்பன் . பகைவனிடத்திலும் நண்பனிடத்திலும் ஒரேவிதமான பாவனையுள்ளவனும், பஹுமானம் நேர்ந்தாலும் அவமானம் நேர்ந்தாலும் அவற்றையும் துல்யமாகவே பாவிப்பவனும், சீதோஷ்ணங்களையும்ஸு க துக்கங்களையும் ஸமமாக நினைப்பவனும், எதிலும் பற்றில்லாமலிருப்பவனும்,பிறர் நிந்திப்பத்தையும் துதிப்பதையும் துல்யமாக நினைப்பவனும், ஒருவரோடும் பேசாமலிருப்பவனும். ஏதேனுமொன்றினால் ஸந்துஷ்ட சித்தனாயிருப்பவனும் உறுதியும் பக்தியு முடைய வனுமானவன் எனக்குப் பரம ப்ரீதிபாத்ர பூதன் என்று சொல்லு கிறான் கண்ணபிரான். இப்படிப்பட்ட அதிகாரி உலகில் மிகவும் துர்லபனேயாயினும் இப்படியிருக்க ஆசைப்படவேணு மென்பதற்காகவே இங்து அருளிச்செய்தபடி. இத்தகைய அதிகாரிகள் இமயமலைச் சாரல்களில் காணப்படுவர்கள்.
பதின்மூன்றாமத்யாயத்தில் முதல் ச்லோகமும் இரண்டாம் ச்லோகமும்சிறிது விபரீதவுணர்ச்சியை உண்டாக்குவது போலுள்ளது. இங்குஸ்வாமியினுடையபாஷ்யமும் அதற்கு டீகையானதாத்பர்ய சந்த்ரிகையும் மிகமிக விரிவாக அமைந்திருக் கின்றது . மூல லோகங்களாவன- *இதம் சரீரம் கெளந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே, ஏதத்
யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித என்பது முதல் ச்லோகம். இனி இரண்டாவது சலோகமாவது க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷ பாரத!, க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத் தத் ஜ்ஞாநம் மதம் மம என்பது. இங்கு (ஆபாத ப்ரதீதியில்) மேல்நோக்கில் என்ன தோற்றுகிறதென்றால்,க்ஷேத்ரமென்னப்படுகிற அசேதநமும், க்ஷேத்ரஜ் னென்னப்படுகிறசேதநனும் ஆகிய இரண்டையும் அர் நா!
நானாக அறிந்துகொள் என்னப்படுகிறது பூர்வார்த்தத்தில் ; க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞர் களாகிறசேதநாசேதனங்களை யறிந்து கொள்வதென்பது யாதொன்றுண்டோ, அது
தான் என்னையறிந்து கொள்வதாகும் என்கிறது உத்தரார்த்தத்தில். இவற்றால் அத்வைதவாதம் ஸித்திக்கிறதென்று கருதிய சங்கராசாரியர் தமது பாஷ்யத்தில் அக் கருத்தை விளக்கியிருக்கின்றார். அதற்கு விரிவான மறுப்பு நமது ஸ்வாமியின் பாஷ் யத்திலுள்ளது; மிகமிக விரிவான மறுப்பு தாத்பர்ய சந்திரிகையிலுள்ளது. அதன் ஸாரத்தை மிகவும் சுருக்கமாகத் தெரிவிக்கிறேனிங்கு. தேஹத்திற்காட்டிலும்ஆத்மா வேறுபட்டவன் என்பது தெரிந்திருக்கச்செய்தேயும் தேவோஹம் மநுஷ்யோஹம் என்று வ்யவஹாரம் செய்துவருகிறோம். அஹம் என்பதற்கு ஆத்மா அர்த்தமேயொழிய தேஹம் அர்த்தமன்று; தேவத்வமோ மநுஷ்யத்வமோ சரீரத்திலுள்ளதேயன்றி அஹமர்த்தமான ஆத்மாவிலுள்ளதன்று. அப்படியிருந்தும்,தேவ அஹம்,மநுஷ்யஅஹம் என்று ஸமாநாதிகரணமாக ப்ரயோகிப்பது எப்படி பொருந்துகிறதென்றால் கேண்மின் ; ஆத்மாவும் சரீரமும் ஒன்றைவிட்டொன்று தனித்து நிற்பனவல்ல.தேஹமானது. ஆத்மாவுக்கு அப்ருதகளித்தவிசேஷணமாய்க்கொண்டேயிருப்பதால் இந்தச் சேர்த்தியையிட்டு தேவ அகம், மநுஷ்ய; அஹம்’ என்று வ்யவஹரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், தேவ சரீரக அஹம், மநுஷ்ய சரீரக அஹம் – என்பதேயாம். ஏவஞ்ச, சரீராத்மபாவரூபமான ஸம்பந்தத்தைக்கொண்டு பொருத்தப்பட்டதாயிற்று. இவ்வண்ணமாகவே ச க்ஷேத்ரஜ்ஞஞ் சாபி மாம் வித்தி என்றதும் சரீராத்ம பாவ ஸம்பந்த நிபந்தனமாகவே பொருந்தக் குறையில்லை. அசேதநமான தேஹமானது ஜீவாத்மாவுக்கு சரீரமாயிருப்பது போல, இவ்விரண்டும் சேர்ந்து பரமாத்மாவுக்கு சரீரமாயிருக்கும் விஷயம் ஸுபாலோபநிஷத்து முதலான வற்றில் கூப்ரஸித்தமா யிருப்பதால் க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் பரமாத் மாவாக நினைப்பதென்பது க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரஜ்ஞனையும் சரீரமாகக்கொண்ட வன் பரமாத்மா” என்று நினைப்பதாகவே முடிந்து நிற்கும். இவ்விஷயம் பலபல உப பத்திகளுடன் ஸ்வாமி பாஷ்யத்தில் விரித்துரைக்கப் பட்டிருப்பது காண்க.
பதினான்காமத்யாயத்தில் (24,25ல்) *குணாதீதஸ் ஸ உச்ச்யதே என்று ஓர் உத்தமாதிகாரி சொல்லப்படுகிறான். இவனுக்கு குணுா தனென்று பெயர். குணங்களைக் கடந்தவனென்று பொருள். ஸகலகுணங்களுக்கும் கொள்கலமாக இருப்பவனன்றோ உத்தமாதிகாரி ; குணங்களைக் கடந்தவன் எப்படி உத்தமாதிகாரியாவன்? என்றுகேள்வி பிறக்கக்கூடும். இங்கு விவக்கப்படுகிற குணங்கள் சமதமாதிகுணங் களல்ல: ஸத்வ ரஜஸ் தமோகுணங்கள். *முக்குணத்து வாணியத்து இரண்டிலொன்று நீசர்கள்க என்று திருமழிசைப்பிரானும். * முக்குணத்திரண்டவையகற்றி, ஒன்றினி லொன்றி நின்று என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்கிறபடி ரஜஸ் தமோ குணங்களிரண்டுதானே ஹேயங்கள் : ஸத்வகுணம் உபாதேயந்தானே; அதுவுங்கூட ஹேயமென்று தோன்றும்படியுள்ளதேயென்று நினைக்கவேண்டா: சுத்தஸத்வம்என்பது உபாதேயமே. ரஜஸ் தமஸ்ஸுக்களோடு கலசின ஸத்வம் உபாதேயமன்றுஅது ஹேயமே. ஆக, தமோகுணமும் ரஜோகுணமும் ரஜஸ்தமோமிச்ரஸத்வகுணமுமாகிய முக்குணங்களையும் கடந்தவன் குணா தனென்ப்படுவான். இவனை நாம் எப்படித் தெரிந்து கொள்ளுவதென்றால் அவனுடைய நிலைமையைக் கொண்டு தெரிந்து
கொள்ளலாம். அந்த நிலைமை தெரிவிக்கப்படுகிறது இரண்டு ச்லோகங்களினால்.
* ” ஸமதுக்க ஸுகஸ் ஸ்வஸ்த: ஸமலோஷ்டாச்ம காஞ்சந, துல்யப்ரியாப்ரியோ தீரஸ்
துல்ய நிந்தாத்ம ஸம்ஸ்துதி; மாநாவமாநயோஸ் துல்யஸ் துல்யோ நிந்தாரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகி குணாதீதஸ் ஸ உச்யதே * என்னு மிவ்விரண்டு ச்லோகங்களும்
அநவரதம் கண்டபாடம் செய்யத்தக்கன. ஸுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும்
ஒரேவிதமான சித்தவருத்தியையுடையனாயிருக்கவேணுமென்கிறது. [ ஸமதுக்கஸுக:]
என்பதனால்.அதன்மேல் (ஸ்வஸ்த; ] என்கிறது. இதற்கு இவ்விடத்தில் அபூர்வமான
வ்யுத்பத்தியைக் காட்டியருளுகிறார் ஸ்வாமி யெம்பெருமானார்.(தன்னிடத்திலேயே
யிருப்பவன்) என்கிறார். உடனே அதை விவரிக்கிறார்- உலகில் ஸுகதுக்கம். பிரியா
ப்ரியம் என்னும் சப்தங்கள் விசேஷமான பொருள்வாசியையுடையனவல்ல : பர்யா
யசப்தங்கள் போலவேகாணும். ஆனாலும் விஷய பேதத்தாலே பொருள் பேதித்
திருக்கும். [” ஸமலோஷ்டாச்மகாஞ்சன “) லோஷ்டத்தையும் கல்லையும் பொன்னையும்
துல்யமாக நினைப்பவன். இப்படியாக மேன்மேலும் சொல்லப்படுகிற தன்மைகள்
இந்நிலத்தில் நம் போன்ற பாமரர்களுக்கு எவ்வளவு பழக்கம் செய்தாலும் வாய்க்கக்
கூடியவையல்ல. இத்தகைய நலம் வாய்ந்தவர்கள் பூலோகம் முழுவதற்குள்ளும்
ஒருவரிருவர் தேறுவதும் அருமையென்னலாம். ஆயினும் இப்படிப்பட்ட ச்லோகங்களை நாம் மனனம் செய்துகொண்டே யிருந்தால் பெரிதும் பயன்படும் என்றிவ்வளவே சொல்லலாம் கீழே பன்னிரண்டாமத்யாயத்திலும் இது சொன்னோம்.
பதினைந்தாமத்யாயத்தில் (15) * ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ் ச. வேதைச் ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்த
க்ருத் வேதவிதேவ சாஹம். இந்த ச்லோகத்தின் பூர்வார்த்தம் பகவத்கீதைக்கு அவ
தாரிகை போன்றிருக்கும். (எங்ஙனே யென்னில் 😉 யுத்தம் செய்வதற்கு மிகுந்த
உத்ஸாஹத்தோடு குருக்ஷேத்ரம் வந்து சேர்ந்த அர்ஜுநன் தீடீரென்றுயுத்தஞ்செய்ய மாட்டேனென்று வில்லையும் அம்புகளையும் எறிந்துவிட்டு உட்கார்ந்ததானது அவனு
டைய ஸொந்த எண்ணத்தினாலன்று. எப்படியாவது கீதா சாஸ்த்ரத்தை அவதரிப்
பிக்க வேணுமென்று தீவிரமான குதூஹலங்கொண்டிருந்த கண்ணபிரான் சாஸ்த்ர
ச்ரவணத்திற்குப் பூர்வாங்கமாக அர் ன னுக்கு நிர்வேதத்தை யுண்டாக்கவே விளை
வித்த வைராக்யமது என்று (2ல்)சொன்னோம். அதைத்தான் இங்கு ஸுசனையாகக்
காட்டுகிறான். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நானே உறைந்திருந்து ஜ்ஞான
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையுண்டாக்கிவருகிறேன் என்று சொல்லுகிறானிங்கு. இது
வேதா நுக்ரு ஹீதமுமான அர்த்தம். * அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
இத்யாதிச்ருதிகள் காண்க. இனி உத்தரார்த்தத்தின் விவரணம் கேண்மின்(இங்கு
சங்கரபாஷ்யத்திலுள்ள விவரணம் மிகவும் ஸாமா யமானது.நம்ஸ்வாமி பாஷ்யத்
தின்படி விவரணம் கேளீர்.) வேதைச் ச ஸர்வை ரஹமேவ வேத்ய கர்மகாண்டங்களி
லும்கூட எனக்குத்தான் ப்ரசம்ஸையுள்ள தென்றபடி. ஸ்ரீ ரங்கராஜஸ்தவ – உத்தர
சதகத்தில் * ஆதெள வேதா ரமாணம் என்கிறசுலோகத்தின் நான்காவது பாதம்
“ வேத்யோ வேதைச் ச ஸர்வைரஹமிதி பகவந்ஸ்வேந் ச வயாசகர்த்த” என்பது. வேதாந்தக்ருத்] ”வேதாந்தார்த்த ஸம்ப்ரதாயக்ருத்” என்றுரைத்தார் சங்கராசாரியர். அந்தம் என்பதற்குப் பலன் என்று பொருள். வேதோக்த கருமங்களை யனுட்டிப்பவர்களுக்கு நானே பலனளிப்பவன் என்பதுஸ்வாமியின் ஸமஞ்ஜஸமான பாஷ்யம். [அஹமேவ வேதவித்] ஸர்வவேத வேத்யன் நானேயென்றும், வேதோக்தகர்ம பல பிரதாதா நானேயென்
றும் அறியாதவன் வேதவித்தல்லன்; இப்படியறிகிறநானே வேதவித்து என்றபடி.
பதினாறா மத்யாயத்தில் தேவா ரவிபாகம் முக்கியமானது. தைவப் பிறப்பு அஸுரப்பிறப்பு என்று பிறப்பிலேயே இருவகையுண்டு. (16-6) த்வெளபூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸு ஏவ ச என்று,உலகத்திலுள்ள பிராணிவர்க் கங்களை யெல்லாம் இரண்டே வகுப்பாக வகுக்கிறான் கீதாசார்யன். தைவவகுப்பு ஒன்று, ஆஸுரவகுப்பு மற்றொன்று. இதைப்பற்றிச் சுருக்கமாகத்தெரிந்து கொள்ள வேணுமானால் + தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய ஆஸுரீ மதா * (16-5) என்கிற வொரு பாதி ச்லோகத்தை மனனம் பண்ணினாற்போதும். ஸம்ஸாரபந்தத்தில் நின் றும் விடுபட்டு ஸத்தியை யடையும் வழியைச் சிந்தனை செய்யும் வகுப்புதான் தெய்வ வகுப்பெனப்படுவது. அப்படிப்பட்ட சிந்தனையின் றிக்கே அதோகதியை யடையும் வழியைத் தேடும் வகுப்புதான் ஆஸுர வகுப்பெனப்படுவது. இங்ஙனே சொன்ன தைக் கேட்டவுடனே அர்ஜுநனுடைய முகத்தில் துக்கக் குறி காணப்பட்டது. நம்மைக் கண்ணபிரான் தைவவகுப்பில் சேர்த்திருக்கிறானோ ஆஸுரவகுப்பில் சேர்த் திருக்கிறானோ தெரியவில்லையே யென்று அர்ஜுநன் கவலையுற்று நின்றான். அதை யறிந்த கண்ணபிரான் உடனே யருளிச் செய்கிறான் * [ பதினாறா மத்யாயத்தில் தேவா ரவிபாகம் முக்கியமானது. தைவப் பிறப்பு அஸுரப்பிறப்பு என்று பிறப்பிலேயே இருவகையுண்டு. (16-6) த்வெள
பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸு ஏவ ச என்று,உலகத்திலுள்ள பிராணிவர்க் கங்களை யெல்லாம் இரண்டே வகுப்பாக வகுக்கிறான் கீதாசார்யன். தைவவகுப்பு ஒன்று, ஆஸுரவகுப்பு மற்றொன்று. இதைப்பற்றிச் சுருக்கமாகத்தெரிந்து கொள்ள வேணுமானால் + தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய ஆஸுரீ மதா * (16-5) என்கிற வொரு பாதிச்லோகத்தை மனனம் பண்ணினாற்போதும். ஸம்ஸாரபந்தத்தில் நின் றும் விடுபட்டு ஸத்தியை யடையும் வழியைச் சிந்தனை செய்யும் வகுப்புதான் தெய்வவகுப்பெனப்படுவது. அப்படிப்பட்ட சிந்தனையின் றிக்கே அதோகதியை யடையும் வழியைத் தேடும் வகுப்புதான் ஆஸுர வகுப்பெனப்படுவது. இங்ஙனே சொன்ன தைக் கேட்டவுடனே அர்ஜுநனுடைய முகத்தில் துக்கக் குறி காணப்பட்டது. நம்மைக் கண்ணபிரான் தைவவகுப்பில் சேர்த்திருக்கிறானோ ஆஸுரவகுப்பில் சேர்த் திருக்கிறானோ தெரியவில்லையே யென்று அர்ஜுநன் கவலையுற்று நின்றான். அதை யறிந்த கண்ணபிரான் உடனே யருளிச் செய்கிறான் * [மா சுசஸ் ஸம்பதம் தைவீம் அபிஜாதோஸி பாண்டவ!] * அப்பா!நீ கவலை கொள்ளாதே, நீ தெய்வ வகுப்பில் சேர்ந்தவனே யென்று கூறி அவனைப் பரமானந்தப்படுத்துகிறான். தான் செய்யும் உபதேசங்களை அவன் ருசிவிச்வாஸங்களோடு கேட்டுக் கொண்டிருப்பது பற்றியேஅவனைத்தைவஸம்பத்து வாய்ந்தவனாக அறுதியிட்டருளினன் கண்ணபிரான். நமக்கு ஆஸ்திக்ய முள்ளதா? நாஸ்திக்ய முள்ளதா? என்பது உலகில் அவரவர்களுடைய நெஞ்சுக்குத் தெரியுமன்றே. ஆஸ்தித்ய முண்டாகில் நம்முடைய பிறப்பு தெய்வப் பிறப்பு என்று தானே நிச்சயித்துக் கொள்ளலாம். அஃதில்லையாகில் ஆசுரப் பிறப்பே நமக்கு வாய்த்ததென்று நிச்சயித்துக்கொள்ள என்ன தடை? இத் தீய பிறப்பின் தன்மைகளை மேலே பல ச்லோகங்களினால் கண்ணபிரான் தானே நன்கெடுத்துக் கூறுகின்றான். * ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷ வித்யதே. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் இத்யாதிகள் * காண்க. * அப்பா!நீ கவலை கொள்ளாதே, நீ தெய்வ வகுப்பில் சேர்ந்தவனே யென்று கூறி அவனைப் பரமானந்தப்படுத்துகிறான். தான் செய்யும் உபதேசங்களை அவன் ருசிவிச்வாஸங்களோடு கேட்டுக் கொண்டிருப்பது பற்றியேஅவனைத்தைவஸம்பத்து வாய்ந்தவனாக அறுதியிட்டருளினன் கண்ணபிரான். நமக்கு ஆஸ்திக்ய முள்ளதா? நாஸ்திக்ய முள்ளதா? என்பது உலகில் அவரவர்களுடைய நெஞ்சுக்குத் தெரியுமன்றே. ஆஸ்தித்ய முண்டாகில் நம்முடைய பிறப்பு தெய்வப் பிறப்பு என்று தானே நிச்சயித்துக் கொள்ளலாம். அஃதில்லையாகில் ஆசுரப் பிறப்பேநமக்கு வாய்த்ததென்று நிச்சயித்துக்கொள்ள என்ன தடை? இத் தீய பிறப்பின் தன்மைகளை மேலே பல ச்லோகங்களினால் கண்ணபிரான் தானே நன்கெடுத்துக் கூறுகின்றான். * ந சௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷ வித்யதே. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்வரம் இத்யாதிகள் * காண்க.
பதினேழாமத்யாயத்தில் மூவகையான தபஸ்ஸுக்களைக் கூறுகின்றான்
கண்ணன் . அவை சாரீர தபஸ்ஸென்றும், வாங்மய தபஸ்ஸென்றும், மாநஸ்தபஸ்ஸென் றும் வழங்கப்படுவன. *ஊன்வாட வுண்ணா துயிர்காவலிட்டு உடலிற்பிரியாப்
புலனைந்தும் நொந்து,தான்வாடவாடத் தவஞ்செய்ய * என்றும்,காயோடு நீடுகனி
யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவஞ் செய்ய * என்றும் ஆழ்வார்கள் ஒருவிதமான உடல்தவத்தை யருளிச் செய்துள்ளார்கள்.கீதா சார்யான் அருளிச்செய்வது அதனில் வேறுபட்டது. பகவானையும் அந்தணர்களையும் ஆசாரியர்களையும் பண்டிதர்களையும் வழிபாடு செய்வது, புண்ய தீர்த் தங்களில் குடைந்தாடுவது, நெஞ்சில் நினைத்தபடியே அனுஷ்டித்துக்காட்டுவது,மாதர்களைக் கண்டு காதல் கொள்ளாமை, ப்ராணி பீடைகள் செய்யாமை ஆகிய இவை காயிக தபஸ்ஸென்கிறான். அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத், ஸ்வாத்யாயா த்யயநம் சைவ வாங்மயம் தப உச்யதே என்பது வாங்மயமான தபஸ்ஸைத் தெரிவிக்கும்-ச்லோகம். பிறரை நோவச் செய்யாத வார்த்தைகளைச் சொல்லுவது, உண்மையைச் சொல்லுவது. ப்ரியமும் ஹிதமுமானவற்றைச் சொல்லுவது, வேதமோதுவது ஆகியவிவை வாசிக்தபஸ்ஸெனப்படும். * மந ப்ரஸாதஸ் ஸௌம்யத்வம் மௌனமாத்மவி
நிக்ரஹ,பாவஸம்சுத்திரித்யேதத் தபோ மானஸ் முச்யதே கோபம் முதலியன் கொள்
லாமையாகிற மனத்தெளிவு, பிறர்க்குத் தீங்கிழைக்க நினையாமையாகிற ஸௌம்யத்
வம் : வாய்திறந்து பேசாமை, ஸதா தியானிக்கத் தகுந்த பரமபுருஷன் விஷயத்திலே
நெஞ்சைச் செலுத்துகை,வேற்றுவிஷயங்களில் சிந்தனை கொள்ளாமை ஆகிய இவை
மாநஸ்தபஸ் ளெனப்படும்.இங்ஙனம் மூவகைப் பட்ட தபஸ்ஸு மறுபடியும் மூவகையாக வகுக்கப்படுகிறது; ஸாத்விகமென்றும் ராஜஸமென்றும் தாமஸ மென்றும். அங்கே விரிவு காண்க.
அவரவர்களுக்கு ஸ்வ தர்மத்தில் ருசியையுண்டாக்குவதே கீதையின் முழுநோக்கு-திருவாய்மொழியில் (4-8-6) * அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தி என்கிறபாசுரத்தில் கீதையின் பெருமை ஸாரமாக அருளிச் செய்யப்பட்டது. இதன் அருமைபெருமையைக் கண்ணபிரான் தானே முடிவில் + இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந, நசாசுச்ஷவே வாச்யம் ந ச மாம் யோப்ய யதி என்கிற வொரு ச்லோகத்தினால்அற்புதமாகப் பேசினான். -இங்கு “ந சமாம் யோப்யயதி” என்ற விடத்திற்கு நம் பாஷ்யகாரர் பாஷ்யமிட்டருளுகிறார் ; காணக் கண்ணாயிரம் வேண்டும்; கேட்கக்காதாயிரம் வேண்டும். நவில் நாவாயிரம் வேண்டும்.
என்னுடைய ஸ்வரூபத்தையும் என்னுடைய ஐச்வர்யத்தையும் என்னுடைய குணங்களையும் ஒருவர் எடுத்துரைத்தால் அவற்றில் தோஷாவிஷ்கரணம் செய்பவனே என்னிடத்தில் அஸூயை கொண்டவன், அவனுக்கு நீ ஒன்றும் சொல்லாதே-என்றுகண்ணபிரான் கட்டளை யிடுவதாக ஸ்வாமி பாஷ்யம் செய்தருளுகிறார். பகவத்குணங்களை எத்தனை உயர்த்தியாகச் சொன்னாலும் அத்தனையும் ஒக்கும்! ஒக்கும்!!என்றிராதே அவற்றில் அஸம்பாவிதத்வத்தை உபபாதிக்கிறோம் கேண்மினென்று.தங்களுக்குண்டான பாண்டித்யத்தை யெல்லாம் பகவத் குணங்களை இல்லைசெய்வதிலும் இறக்குவதிலுமே உபயோகப்படுத்துகிறவர்கள் பகவத் கீதைக்கு வெகுதூரத்திலே நிற்கவேண்டுமென்பது ஸ்வாமி திருவுள்ளமாகக் காண்கிறது.
ஆளவந்தார் அருளிச்செய்த புருஷ நிர்ணயமென்கிற ஒரு க்ரந்தம் லுப்தமென்று தெரிகிறது, ஸித்தித்ரயத்தை கத்ய த்ரயம்போலே மூன்று க்ரந்தமாகக் கணக்கிடுவர் பெரியார்- கூரத்தாழ்வான் அருளிச் செய்த சரம ச்லோக வியாக்கியானமும் நித்யமுமருளிச்செய்திருந்ததாக தேசிகன் உதாஹரிக்கிறார் ; அவை லுப்தங்கள்.-பட்டர். அருளிச் செய்த–லக்ஷ்மீ கல்யாண நாடகமும் தத்வ ரத்நாகரமும் லுப்தங்கள்–நஞ்சீயர். அருளிச் செய்த.-நித்யமும் ஸ்ரீஸுக்த பாஷ்யமும் லுப்தங்கள்.- குன்றத்
தூரய்யன் திருக்குமாரரான அப்பன் ஸ்ரீ நிவாஸாசார்யர் பணித்ததாக (1913-ஆம்
வருஷத்தில்) தெலுங்கு லிபியில் அச்சிடப்பட்டுள்ள அஷ்டச்லோகி பெரியபடி வியாக்
கியானத்தில் (பக்கம் 14லும் 66லும்) வடக்குத் திருவீதிப்பிள்ளை அஷ்டாக்ஷர தீபிகை
யென்றொரு க்ரந்த மருளிச் செய்திருப்பதாக உதாஹரிக்கப்பட்டுள்ளது. அது லுப்தமென்றே சொல்லவேணும்.- பிள்ளை லோகாசாரியர் .-கத்யத்ரத்திற்கு ஒரு வியாக்கியான மருளிச்செய்திருந்ததாக மணவாள மாமுனிகளெடுத்துக்ாட்டியருளுகிறார் :- தத்வத்ரயத்தில் ஈச்வர ப்ரகரணத்தில் (6)ஜ்ஞ நா நந்தைக ஸ்வரூபனாகையாவது ஆநந்த ரூபஜ்ஞாநனாயிருக்கை” என்ற விடத்துமாமுனிகளின் வியாக்கியானத்தில் “அநுகூலஜ்ஞானமே ஸ்வரூபமாயிருக்க ஞாநானந்தங்களென்று பிரித்துச் சொல்லுகிறது இரண்டு முண்டாகைக்காக . என்றிறே இவர் தாமிட்டருளின் கத்ய வயாக்க்யானத்திலே அருளிச்செய்தது’ என்கிற ஸ்ரீஸூக்தி காண்கிறது . அந்த வியாக்கியானம் லுப்தம்.-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயத்திற்கு மூலமான பட்டோலை லுப்தம்.- மணவாளமாமுனிகள் அருளிச்செய்த கீதாதாத்பர்ய தீபம் (லுப்த்தம்).-ஈட்டு ப்ரமாணஸங்க்ரஹம். (இப்போது அச்சிடப்பட்டிருப்பதல்ல.)
———
ராமாநுஜனுக்கும் ராமாநுஜருக்கும் ஒற்றுமைகள் பதினெட்டு
முகுந்தமாலை யென்னும் ஸ்தோத்ரத்தில் “ஹேராமாநுஜ! ஹே ஜகத்த்ரய குரோ! ஹே
புண்டரீகா மாம் ஹே கோபீஜநநாத! பாலய ” என்றுராமாநுஜ திருநாமத்தினாலே பல
ராமாநுஜனான கண்ணபிரான் அழைக்கப்பட்டுள்ளான்.-கண்ணபிரானுடைய
அந்தத்திருநாமமே ஸ்வாமி உடையவர்க்குச் சாத்தப்பட்டதென்று கொள்ளுகிற
ஸம்பிரதாயமும் ஒன்றுண்டு. யதிராஜ ஸப்ததியில்”ச தோதய சங்கராதிகர்வ:
ஸ்வபலாத் உத்த்ருதயாதவ ப்ரகாச:, அவரோபிதவாந்சருதேரபார்த்தாந் நநு ராமாவரஜஸ்
ஸ ஏஷ பூய :” என்ற ச்லோகம் இதற்கு ஆதாரமாக அவதரித்ததாகும். கண்ணபிரா
னுக்கும் உடையவர்க்கும் பல படிகளாலும் ஸாம்யமுண்டு. கண்ணபிரானாகத்
தோன்றின பகவான் செய்த செயல்களும் ஸ்ரீராமாநுஜர் செய்தருளின் செயல்களும்ஒத்திருக்கையாகிற ஒற்றுமையம் ஈண்டு நிரூபிக்கப்படுகிறது . மேலே யெடுத்துக்காட்டிய சமிதோதய சங்கராதிகர்வ: இத்யாதியான யதிராஜஸப்ததிலோக ரத்னத்தில் கண்ணனுக்கும் உடையவர்க்கும் ஸாம்யம் சிலேடையினால் நிர்வஹிக்கப்பட்டுளது: அது வடமொழிக்கடலில் ஆழ்ந்தவர்கட்கே ரஸிக்கக்கூடியது.
கண்ணபிரான் திருவவதாரஞ் செய்த இடம் சிறைக் கூடம் என்பது உலகமறிந்தது. ஸ்ரீராமாநு ர் அவதரித்த இடமும் சிறைக் கூடமே. எப்படியெனில்:* அமரரோடு உயர்விற்சென்று அறுவர்தம் பிறவி யஞ்சிறையே * (திருவாய்மொழி1-3-11] என்ற நம்மாழ்வார் திருவாக்கின்படி இந்த ஸம்ஸார மண்டலமே ஒரு சிறைக்கூடமன்றோ. இஃது * இருள்தருமா ஞாலமாதலால் இருள் மலிந்த விடத்தேவந்து பிறந்தார் உடையவர். கண்ணனும் * இருள் நாள் பிறந்த வம்மான் * என்ற திருமங்கையாழ்வர் பாசுரத்தின்படியும் * வேண்டித் தேவரிரக்க- வீங்கிருள்வாய் வந்து பிறந்ததும் * என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் படியும் இருள்மலிந்தபோழ் தன்றோ வந்து பிறந்தது.
கண்ணபிரான் அவதரித்தபோது ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகதாதர!-என்கிறபடியே சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையனாகவே சுடர்விளக்கத்தோடு திருவவதரித்தான். ஸ்வாமி அவதரிக்கும்போதும் நம்போலியரைப்போலே அழுதல் அரற்றுதல் செய்யாதே மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கத்தையே காட்டிக் கொண்டு அனைவரும் வியப்புறுமாறு அவதரித்தார்.
கண்ணபிரான் பிறந்த விடம் ஒன்று; இளமையில் வளர்ந்த விடம் வேறொன்று; பிறகு வளர்ந்தவிடம் மற்றொன்று. (அதாவது) வடமதுரையிலே பிறந்தது ; திருவாய்ப்பாடியிலே இளமையில் வளர்ந்தது ; பிறகு முதுமையில் த்வாரகை முதலான விடங்களில் வளர்ந்தது. நம் ஆசாரியரும் பிறந்தது, ஸ்ரீபெரும்பூதூரில் ; இளமையில் வளர்ந்தது காஞ்சீபுரியில்; பிறகு வளர்ந்தது ஸ்ரீரங்கம் திருநாராயணபுரம் முதலான விடங்களில்
“திருமந்திரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து என்கிற நம்முன்னோர்களின் முதுமொழியின்படியே திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தினால் ஸ்வரூப வுணர்ச்சி பெறுதலாகிற பிறவியைப்பெற்று. த்வயம் என்கிற மந்த்ரரத்னத்தின் அநுசந்தானத்தையும் அதன்படி அனுட்டானத்தையுமே செல்வ வா ழ்ச்சியாகக் கொண்டிருப்பவரென்க. பிறக்குமிடம் திருமந்த்ரம் ; வளருமிடம் த்வயம்- ஆக இதனாலும் கண்ணனோடு ஒப்புமை.
கண்ணபிரான் பிறந்த வயிற்றில் இவனொருவனே பிறக்கவில்லை: *மக்களறு
வரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில். சிக்கன வந்து பிறந்து நின்றாய் *
(பெரியாழ்வார் திருமொழி 5-3-1) என்கிறபடியே மற்றும் பல மக்கள் பிறந்தாருண்டு: ஆனால் அந்தப் பிள்ளைகளினால் உலகுக்கு யாதொரு உதவியும் நேர்ந்ததில்லை: அவர்கள் பிறந்ததும் இறந்ததுமே தெரியவருகின்றது. இதுபோல,எம்பெருமானார் திருவதரித்த இவ்வுலகத்தில் மற்றும் பலபேர்களும் ஒக்கப்பிறக்கின்றார்களெனினும் அவர்களால் உலகுக்கொரு நன்மையுமில்லையாயிற்று.அவர்களின் பிறப்பும் இறப்புமே தான் உலகுக்குத் தெரியும்.
கண்ணபிரான் வடமதுரையில் நின்றும் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளும்போது “வ தேவோ வஹந் க்ருஷ்ணம் ஜா நுமாத்ரோதகோ யயௌ” என்னும்படி பேராழமான பெருவெள்ளமும் முழந்தாளளவாக வற்றிப்போயிற்றென்று தெரியவருகிறது.அதுபோல், நம் ஆசாரியர் சிறிது ஸஞ்சரிக்கத் தொடங்கும்போதே ” பிறவியென்னுங்கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால்” என்ற பெரியாழ்வார் திருவாக்கின்படியே ஸம்ஸாரமாகிற பெருங் கடலும் வற்றத் தொடங்கிற் றென்க.
பராத்பரனான பெருமான் தனது பெருமைகளை யெல்லாம் மறைத்து அடக்கிக்கொண்டு நீறு பூத்த நெருப்புப்போலேயாகி இடக்கை வலக்கை யறியாத ஆயர்களோடே கலந்து பழகினான்; அதுபோல் எம்பெருமானாரும் மிகுஞானச் சிறுகுழவியாய்த் தமது ஞானசக்திப்பெருமைகளையெல்லாம் மறைத்துக்கொண்டு அறிவிலா மனிசரோடே கலந்து பழகியிருந்தனர். கண்ணன் இடையர்களோடு மாத்திரம் கலந்து பழகி யிருந்தானல்லன்; தன்னை வதைக்க வழிபார்த்திருந்த ஆஸுரப்ரக்ருதி களோடும் கலந்திருந்து காலங்கழித்தனன்.எம்பெருமானாரும் தம்மை மாய்க்க வெண்ணின யாதவப்ரகாசர் போல்வாரிடத்திலும் கலந்திருந்து காலங் கழித்த துண்டே. கண்ணன் விரோதிகளை முடித்தனன் ; இவர் வாழ்விப்பதும் செய்தனர்.
வளர்ந்தருளுமிடத்தில் தீயபுந்திக் கஞ்சனால் ஏவப்பட்ட பூதனை தாய்வேஷம் பூண்டுவந்து நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கண்ணனைக்கொல்ல முயன்று தானே முடிந்துபோனாள். இந்தப் பூதனையின் வரலாற்றைப் பேசுகின்ற தேசிகர் யாதவாப்யுதயத்தில் + கம்ஸப்ரயுக்தா கில காபி மாயா என்று மாயை என்கிற சொல்லால் கூறினர். மாயை யென்று மூலப்ரக்ருதிக்குப்பெயர். அது உண்மையில் விஷம்போன்றதா யிருக்கச் செய்தேயும் தன்னிடத்தில் போக்யதாபுத்தியை யுண்டுபண்ணிக் கொண்டு தன்பக்கலிலே யீடுபடுத்தி நம்போல்வாரை முடிக்கப் பார்க்கிறது. இப்படியே ஆசாரியரையும் முடிக்கப் பார்க்கையில் அவரை முடிக்க மாட்டாமல் அவரது அளவற்ற பெருமையினால் தானே முடிந்து நின்றது.
* கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி (திருப்பாவை – 6] என்றபடி அஸ் ராவேசம் பெற்றவொரு சகடத்தைக் கண்ணன் திருவடிஸ்பசத்தால்நொறுக்கிமுறித்து முடித்தனன் என்பது ப்ரஸித்தம்.எம்பெருமானாரும் தமது திருவடி ஸ்பர்சத்தினால்சகடபங்கஞ் செய்தவரே, (எப்படியெனில்)ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுபோகும் ஸாதனம் சகடமெனப்படுவது. இங்கிருந்து நாம் அப்பால் செல்லப் பல வழிகளுண்டு ; நரகம் சுவர்க்கம் முதலானவற்றின் வழிகளிற்கொண்டு செல்லுவது கள்ளச் சகடமாகும்: நம் ஆசாரியருடைய திருவடி ஸம்பந்தத்தினால்அது தொலைந்தொழிந்ததேயாம். அர்ச்சிராதி மார்க்கமாகிய நல்வழியிற் செல்லும் ஸா தனமே மேம்பட்டுத் தீயவழிகளில் செல்லும் ஸாதனம் சிதைந் தொழிந்ததென்க.
கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிடப்பெற்ற கண்ணன் அவ்வுரலையுமிழுத்துக் கொண்டு தவழ்ந்து இரட்டை மருதமரங்களின் நடுவே யெழுந் தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினாலே அந்த இரட்டை மரங்களிரண்டும் முறிந்து விழுந்தனவாகயமளார்ஜுன பங்க விருத்தாந்தமுள்ளது. இணைபிரியாதே நின்ற இரட்டை மருத மரங்கள் போல இணை பிரியாது நின்று நம்மை நலியுமவை பலவுண்டு ; பகவத் கீதையில் நான்காவது அத்யாயத்தில்-த்வந்த்வாதீதோ விமத்ஸர என்றும் ஏழாவது அத்யாயத்தில் த்வந்த்வமோஹே பாரத என்றும் பதினைந்தாமத்யாயத்தில் த்வந்த்வைர் விமுக்தாஸ் ஸுக து:க்க ஸம்ஜ்ஞை: என்றும் இப்படிப் பலவிடங்களில் த்வந்துவம் (இரட்டை)என்று பல சொல்லப்பட்டுள்ளன; இன்பு துன்பு. அஹங்கார மமகாரம்,காம க்ரோதம், புண்ணிய பாபம்.. என்னுமிவை யெல்லாம் இரட்டைகளாம். இவை யெல்லாம் எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றவளவிலே இற்றொழிந்தன வென்க. காமாதி
தோஷ ஹரமாத்மபதா ரிதாநாம்.”
*வையமேழுங் கண்டாள் பிள்ளைவாயுளே * என்றும் * வாயுள் வையகங் கண்ட மட நல்லார் * என்றும் சொல்லுகிறபடியே கண்ணபிரான் தனது திருவாயில் ஏழுலகங்களையும் அன்பர்களுக்குக் காட்டினன். அதுபோல எம்பெருமானாரும்-1. ச்ருதிகள், 2. ஸ்மிருதிகள், 3. இதிஹாஸங்கள், 4. புராணங்கள், 5. பாஞ்சராத்ரங்கள், 6. ஆழ்வாரருளிச்செயல்கள். 7.ஆசார்ய திவ்யஸுக்திகள் ஆகிய ஏழையும் தமது திருவாக்கில் அன்பர்கட்குக் காட்டி யருளினர்
யமுனையாற்றில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன்
விஷாக்னியினால் கொதிப்படைந்தநீரூள்ளதாக்கிப் பெருங்கேடு விளைத்தகாளியனென்
னுங் கொடிய நாகத்தைக் கண்ணபிரான் கொழுப்படக்கினன். இவ்வரலாற்றை
யாதவாப்யுதய காவியத்தில் தேசிகர் கூறுமிடத்து (4-125) ஸ்ரீ ராமா ஐர் செய்
தருளின் செயலையே உவமையாகக் காட்டியருளினர். ஐந்தலைவாய் நாகமாகிய காளி
யன் யமுனையாற்றைக் கலக்கிக் கெடுத்தது – விஷவாக்குக்களான புறம த்தவர்கள்
மனம்போனபடியெல்லாம் கூறும் தவறான பொருள்களாலே வேதங்களைக் கெடுத்த
படியாம். அந்தக் கெடுதியைக் கண்ணபிரான் நீக்கி யமுனையை எல்லாரும் இனிமை
யாகப் பருகும்படி செய்தது -ஸ்வாமி தவறான பொருள்களை நீக்கி நல்ல பொருள்களை
வெளியிட்டு வேதத்தை ஸத்துக்களுக்கு உப வ்யமாக ஆக்கின படியாம். யமுனையின்
ஸ்தானத்தில் வேதம்: காளியன் ஸ்தானத்தில் குதர்க்கவாதிகள் ; கண்ணன் ஸ்தானத்துல் ஆசாரியர். * தூய பெரு நீர் யமுனைத் துறைவனை * என்னும்படி யமுனையாறு
இடையறாத பகவத் ஸம்பந்தத்தை யுடையதா யிருந்தது போல வேதமும் பகவத் ஸம்பந்தத்தை நியதமாக வுடைத்தா யிருக்குமிறே.
காளியன் ஐந்து தலைகளாலும் நஞ்சை யுமிழ்ந்து நாசம் விளைவித்தது போல் புறமதத்தவர்கள். ஐந்துவிதமான துர்வாதாங்களாலே நாசத்தை விளைவிக்கின்
றனர் ; (எப்படி யென்னில்) 1. ஈச்வரனே யில்லையென்னுதல்,2. ஈச்வரன் உண்டெனி
லும் அவன் அனுமானத்தால் ஸித்திப்பவனேயன்றி சாஸ்த்ரத்தால் ஸித்திப்பவனல்
லன் என்னுதல்; 3. சாஸ்த்ரங்களைக்கொண்டு ஈச்வரனை யாங்கீகரித்தும் அவனுக்குக்
குணங்களும் விக்ரஹமும் இல்லை யென்னுதல் ; 4. ஈச்வரன் ஒருவனே யென்பதில்லை.
பல ஈச்வரர்கள் உண்டென்னுதல், 5.பிரபஞ்சமேயில்லை- ஸர்வம் குன்யம் என்னுதல்.
ஆக இப்படிப்பட்ட ஐவகையான அபார்த்தங்களினால் புறமதத்தவர்கள் வேதங்களைக் கெடுக்க. அந்தக் கெடுதல்களை எம்பெருமானார் போக்கியருளினர், காளியன் தலையிலே
கண்ணபிரான் அடியிட்டுநடனம் புரிந்தாப்போலே நாவலிட்டுழிதருகின்றோம் நமன் தமர் தலைகண்மீதே ( திருமாலை-1) என்ற கணக்கிலே யமபடர்களின் தலைமீதும் குத்ருஷ்டிகளின் தலைமீதும் கூத்தாடப் பெறுவோம்.
குதிரை வடிவங்கொண்டு மஹாபயங்கரனாக வந்த கேசி யென்னு மஸ்ரனைக் கண்ணபிரான் தொலைத்தருளினன்; அதுபோல நம்பேராசிரியர் இந்த்ரியாணி
ஹயாநாஹு : என்றஉபநிஷத்தின்படியே குதிரைகளாகச் சொல்லப்பட்ட இந்திரியங்களின் வலியை யடக்கிஜிதேந்த்ரியராய் * மதநகதகைர் ந க்லிச்யந்தே யதீசவரஸம்சரயா: வ (யதிராஜஸப்த்தி)என்று சொல்லும்படி வாழ்ந்தவர்.
கம்ஸனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஓரசுரன் விளாமரத்தின் வடிவமாய். தன் கீழே கண்ணன் வரும்போது மேல் விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்கவும். மற்றொரு அசுரன் கண்ணனை முட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு நிற்கவும் இவற்றையறிந்த கண்ணபிரான் “விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே ” “கன்றுகொண்டு விளங்கனியெறிந்து’ என்கிறபடியே கன்றைச்சுழற்றி விளவின்மீ தெறிந்து இரண்டையும் ஒருசேரமுடித்தருளினன் என்ற வரலாறு முள்ளைக்கொண்டே முள்ளைக் களைகிறபடியைக் காட்டுகின்றது. இதுபோலவே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யகாரர் புற மதங்களைக் கண்டிக்குமிடத்து அவை பரஸ்பர யாஹதங்களா யிருக்குபடியை நன்கு நிரூபித்துக்காட்டி அவைகளைக் கொண்டே அவற்றை மறுத்தொழிப்பவர்.
இடையர்கள் வழக்கப்படி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில் சோறும் தயிரும்.நெய்யும்,காய்கறிகளும் சேகரிப்பதைக்கண்டு கண்ணன் அப்பூசனை யனைத்தையும் கோவர்த்தனமலைக்கே இடும்படி கட்டளையிட்டுத் தானே ஒரு தேவதாரூபங் கொண்டு அவற்றை முற்றும் அமுதுசெய்தருள. இந்திரன் பசிக்கோபத்தினால் மேகங்களை ஏவிக்கடூரமான கல்மழையை ஏழுநாள் பெய்விக்க, அதனால்யார்க்கும் யாதொரு தீங்கும் நேரிடாதபடி கண்ணன் அம்மலையையே குடையாக வெடுத்துப்பிடித்து நின்றனன் என்பது ப்ரஸித்தமான கதை: தேவதாந்தரத்திற்கு வழிபாடு செய்வதைப் பொறாத தன்மையும் அந்தவழிபாடுகளையெல்லாம் தானே ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அதனால் எதிரி என்ன தீங்கு செய்ய நினைத்தாலும்அதற்குப் பிரதியாகத் தீங்கிழைக்க நினையாத பெருந்தகவும், தன்னையடுத்தவர்களைத் தான் ரக்ஷித்துக்கொண்டு நிற்றலுமாகிய விஷயங்கள் இவ்விதிஹாஸத்தில் கிடைக்கின்றன- மறந்தும் புறந்தொழாமாந்தர் என்றிருக்குமாசிரியர் தேவதாந்தரபஜனத்தைச் சிறிதும் ஸஹியார். ” திருவில்லாத் தேவரைத் தேறேல்மின்தேவு” என்று துணிந்து உபதேசிப்பர். ஸாக்ஷாத் நாராயணோ தேவ : கருத்வா மர்த்யமயிம்தநும், மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா என்றும் பிதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றுஞ்சொல்லுகிறபடியே எம்பெருமானே ஆசார்ய னாக வந்து பிறந்ததனால் ஆராதனைகளெல்லாம் ஆசார்யனுக்கே சேரும். ” குற்றஞ் செய்தவர்கள் பக்கல் பொறையும் க்ருபையும் சிரிப்பும் உகப்பும் உபகாரஸ்ம்ருதியும் நடக்கவேணும்“(ஸ்ரீவசனபூஷணம் 305) என்றிருப்பவர் ஆசார்யராகையாலே தீங்கிழைப்பவர் திறத்திலும் ப்ரதியாகத் தீங்கிழைக்க நினையார். பெருமழையில்நின்றும் கண்ணன் காத்தருளினதுபோல் அவிவேக கநாந்த திங்முகே பஸுதா ஸந்ததது:க்கவர் ஷிணி-பவதுர்த்திநே [ஸ்தோத்ரரத்னம் 49] என்னப்பட்ட பெருமழையில் நின்றும்(அதாவது, ஸம்ஸாரத் துயர்ப் பெரு மழை யினின்றும் )காத்தருளினர். கண்ணன் ஏழுநாள் காத்தனன். ஆசிரியர் காப்பது ஏழேழ்ப்பிறவிக்கும்.
கண்ணன் நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்துகொள்ளுதற்காக.அவளது தந்தை க யாசுல்கமாகக் குறித்தபடி அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளைவலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்டனன்.நம் பரமாசார்யர் “எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸூத்ரம்போலே திருமந்த்ரம்[முமுக்ஷப்படி 113) என்கிறபடியே திருமந்திரமாகிற திருமங்கலியத்தை சேதநர்களுக்குக் கட்டி விவாஸம் நடத்துகைக்கு அங்கமாக.காமம். குரோதம். லோபம். மோஹம்.மதம் மாத்ஸர்யம் அஸூயை என்கிற ஏழு விரோதிகளையும் தொலைத் தருளினர். கண்ணன் இரண்டு மல்லர்களை மடித்ததுபோல ஆசிரியர் * நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்தும் என்கிறபடியேஅஹங்கார மமகாரங்களை அடியறுத்தவர்.கண்ணன் குவலயா பீடமென்கிற மதயானையை முடித்தாப்போலே: மதக்களிறைந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ” என்கிற பொய்கையார் பாசுரத்தின் படியேமதகளி ாகிய இந்திரியத்தின் துஷ்டத்தன்மையைத் தொலைத்தவர். கண்ணன் மாலாகாரர் திருமாளிகைக் கெழுந்தருளி அவர் தந்த பூவைப்பெற்று உகந்ததுபோல நம்
ஆசிரியர் * அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ. ஸர்வபூதயா புஷ்பம் க்ஷமா
புஷ்பம் விசேஷத:, ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யாநம் புஷ்பம் ததைவச, ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத் என்னப்பட்ட எண்பகர் பூவையும் சிஷ்யர்கள் பக்கலிலே செழித்து வளரக் காணப் பெற்றுக் களித்தவர்.
கண்ணபிரான் கம்ஸ் சிசுபால கௌரவ ப்ரப்ரூதிகளை முடித்துப் பஞ்சபாண்டவாதிகளை வாழ்வித்தது போல நம் பரமாசார்யர் * தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்நிற்கக் குறும்பு செய்சரும் மாண்டனரென்னுபடியாக *நாட்டிய நீத்த சிமயங்களைமாள்வித்து அர்த்தபஞ்சகம் முதலிய விசேஷார்த்தங்களை எங்கும் விளங்கச் செய்தனர்
———–
மநுஸ்மிருதியில் பதினெட்டு-(அத்.1. சுலோ.85) * அந்யே க்ருதயுகே தர்மா த்ரேதாயாம் த்வாபரே அபரே. அந்யே கலியுகே ந்ரூணாம் யுகஹ்ராஸாநுரூபத; * = தருமங்கள் எப்போதும் ஒரு படிப்பட்டே யிருக்கமாட்டா.யுகங்களுக்குத் தக்கபடி தருமங்கள் குறைந்துகொண்டே
வரும் என்கை. இதற்கடுத்த சுலோகத்தில், க்ருதயுகத்தில் தபஸ்ஸுக்கு ப்ராதான்ய மென்றும்,த்ரேதாயு த்தில் ஜ்ஞானத்திற்கு ப்ராதான்யமென்றும், த்வாபரயுகத்தில்
ய ஞத்திற்கு ப்ராதான்யமென்றும். கலியுகத்தில் தானமொன்றுக்கே ராதான்ய
மென்றும் சொல்லப்பட்டுள்ளது. வேறோரிடத்தில் த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞைஸ்
த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயங்,யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்
என்று க்ருதயுகத்தில் த்யானத்துக்கு ப்ராதான்யமும், துரேதாயுகத்தில் ய ஞத்துக்கு
ப்ராதான்யமும், த்வாபரயுகத்தில் அர்ச்சனைக்கு பராதான்யமும், கலியுகத்தில்நாம
ஸங்கீர்த்தனத்திற்குப்ராதான்யமும் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாமத்யாயத்தில் 36. 37, 38 ஆம் சுலோகங்கள் குறிக்கொள்ளத்
தக்கவை. (36ல்) கர்ப்பாஷ்டாமே அப்தே குர்வீத ப்ராஹ்மண ஸ்யோபநாயநம் என்று
கர்ப்பாஷ்டமமாகிய ஏழாவது வயதில் பிராமணனுக்கு உபநயனம்பண்ணவேண்டு
மென்றது. (37ல்) ப்ரஹ்மவர்ச்சஸ காமஸ்ய கார்யம் விப்ரஸ்ய பஞ்சமே * = ஐந்தாவது
வயதிலேயே உபநயமம் பண்ணினால் அப்போதிருந்தே வேதாத்யயன ஸம்பத்து
மலிந்து ப்ரஹ்மவர்ச்சஸம் மிகும் என்றபடி. இங்கு பஞ்சமே என்பதற்கு “கர்ப்ப
பஞ்சமே” என்றே வியாக்கியானம் செய்கிறார்கள். நான்காவது பிராயத்திலென்ற
தாயிற்று. (3 ல்) * ஆஷோடசாத் ப்ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்த்ததே = இதனால்
பிராமணனுக்குப் பதினாறாவது வயது வரையில் உபநயனகாலம் அனுமதிக்கப்படு
கிறது. இதே சலோகத்தில் க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாம் வயது வரையிலும்,
வைச்யனுக்கு இருபத்துநான்காம் வயது வரையிலும் உபநயன்காலம் அனுமதிக்கப்
பட்டிருப்பதால் இக்காலத்து ப்ராஹ்மணப்பிள்ளைகளுக்கு க்ஷத்ரிய வைச்ய தர்மமே
கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது
இரண்டாமத்யாயத்திலேயே (127) நூற்றிருபத்தேழாம் சுலோகம்-சுப்ராஹ்மணம் குசலம் ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மநாமயம். வைச்யம் க்ஷேமம் ஸமாகம்ய சூத்ரம் ஆரோக்யமேவ ச .= இதில் (ஸமாகம்ய என்றது ப்ராஹ்மணம் ஸமாகம்ய, க்ஷத்ர பந்தும் ஸமாகம்ய, வைச்யம் ஸமாகம்ய, சூத்ரம் ஸமாகம்ய என்றபடி.பராம்மணன் அணுகினால் குசலமா? என்று கேட்கவெண்டியது ; க்ஷத்ரியன் அணுகினால் அநாமயமா?என்று கேட்க வேண்டியது. வைச்யன் அணுகினால் ஸேமமா? என்று கேட்கவேண்டியது. சூத்ரன் அணுகினால் ஆரோக்யமா ? என்று கேட்கவேண்டியது. இதில் குசலம் க்ஷேமம் என்கிற பதங்களும். அநாமயம் ஆரோக்யம் என்கிற பதங்களும் பரியாயமேயானாலும் இங்கு அர்த்தத்தில் நோக்கில்லை ; உச்சரிக்க வேண்டிய சப்தத்தில்நியமம் விவக்ஷிதம் என்பர் வியாக்க்யாதா. இது யுக்தமே.
இரண்டாமத்யாயத்திலேயே (131.) நூற்றுமுப்பத்தோராம் சுலோகம்
மாத்ருஷ்வஸா மாதுலா நீ ச்வச்ரூ அத பித்ருஷ்வஸா. ஸம்பூஜ்யா குருபத்ரீவத் ஸமாஸ் தா
குருபார்யயா. * = சிறிய தாயார் அம்மாமி மாமியார் அத்தை ஆகிய இவர்கள் ஆசார்ய பத்னியோடொத்தவர்களாகையாலே அவளைப்போலவே இவர்களை வழிபட வேண்டு
மென்கிறது. எழுந்திருத்தல் தொழுதல் செய்யவேண்டிய தென்கை. இதற்குமேல்
140,141-ஆம் சுலோகங்களில் இன்னாருக்கு ஆசார்யரென்று பெயர், இன்னாருக்கு உபாத்யாயரென்று பெயர் என்பது தெரிவிக்கப்படுகிறது. (140) * உபநீய து யச்
சிஷ்யம் வேதம் அத்யாபயேத் த்விஜ, ஸகல்பம் ஸரஹஸ்யஞ்ச தமாசார்யம் ப்ரசக்ஷதே. =
சிஷ்யனைத் தம்மிடத்திலேயே வைத்துக்கொண்டு கல்பம் ரஹஸ்யம் இவற்றோடுங்கூட
வேதச கையைப் பூர்த்தியாக ஓதுவிப்பவரை ஆசார்யரென்று கூறுவர்கள். (141.)
ஏகதேசம்து வேதஸ்ய வேதாங்காந்யபி வாபுந, யோத்யாபயதி வ்ர்த்த்யர்த்தம் உபாத்யாயஸ்
ஸ உச்யதே.க வேதத்தில் ஏகதேசத்தையோ (அல்லது) வியாகரணம் முதலான வேதாங்கங்களையோ வருத்திக்காக ஓதுவிப்பவர் உபாத்யாயரெனப்படுவர். இதற்கு
மேல் (145-ல்)* உபாத்யாயாந் தசாசார்ய இத்யாதியில், பத்து உபாத்யாயர்களுக்கு
ஸமமானவர் ஒரு ஆசார்யரென்றும். நூறு ஆசாரியர்களுக்கு ஸமமானவர் ஒரு பிதா
என்றும், ஆயிரம் பிதாக்களுக்கு ஸமமானவள் ஒருமாதா என்றும்சொல்லப்படுகிறது.
இதற்குமேல் 225, 226-ஆம் சுலோகங்களில் இன்னும் விசேஷம் சொல்லப்படுகிறது.
ஆசார்யன் பரமாத்மாவின் வடிவமானவன்.பிதா பிரமனுடைய வடிவமானவன்.
மாதா பூமிப்பிராட்டியின் வடிவமானவள். ஆசார்யன் தந்தை தாய் தமையன் ஆகிய
இவர்களால் தனக்கு ஏதேனும் பீடையுண்டானாலுங்கூட இவர்களை பிராமணன்
அவமதிக்கவே கூடாது என்கிறது .
ூன்றாவதத்யாயத்தில் (77, 78- ஆம் சுலோகங்களில்) க்ருஹஸ்தாச்ரமிக்கு
மிக்க ஏற்றம் சொல்லப்படுகிறது . (77)+ யதா வாயும் ஸமாச்ரித்ய வர்த்தந்தேஸர்வ
ஐந்தவ. ததா க்ருஹஸ்தமாச்ரித்ய வர்த்தந்தே ஸர்வ ஆச்ரமா ஸர்வப்ராணிகளும்
வாயுவை யவலம்பித்தே வாழ்வதுபோல ஸர்வாச்ரமிகளும் க்ருஹஸ்தாச்ரமியை யவ லம்பித்தே வாழவேண்டியிருக்கிறது. வாயுவில்லையானால் மூச்சடங்கிவிடும்; க்குஹஸ்
தனில்லையானால் ப்ரஹ்மசாரிகளும் ஸம்ந்யாஸிகளும் ஜீவிக்க முடியாதென்றபடி.
அடுத்த சுலோகத்தினால் இது உப்பாதிக்கப்படுகிறது. யஸ்மாத் த்ரயோ பயாச்ர
மிண ஜ்ஞாநேந அந்நேநசாந்வஹம் . க்ருஹஸ்தேநைவ தார்யந்தே தஸ்மாத் ஜ்யேஷ்டாச்ரமோ க்ருஹீ. ] வேதார்த்தவியாக்கியான முகத்தாலும் அன்னதான முகத்தாலும்க்ருஹஸ்தனே மற்றஆச்ரமிகளுக்கு உபகாரகனென்கை. ஆன துபற்றியே காளிதாஸர் ரகுவம்சத்தில் “ ஸர்வோபகார க்ஷமமாச்ரமம் தே என்றார்.
மூன்றாமத்யாயத்திலேயே (சுலோ. 238-ல்) போஜன காலத்து நியமம் கூறப்படுகிறது. யத்வேஷ்டிதசிரா புங்க்தே இத்யாதி. முட்டாக்கிட்டுக்கொண்டு உண்ணலாகாது ; தெற்கு முகமாயிருந்து உண்ணலாகாது. பாதரக்ஷை யணிந்து கொண்டுஉண்ணலாகாது. இந்த நிஷேதத்திற்குக் கட்டுப்படாமல் உண்டால் அந்த வுணவு ராக்ஷஸர்களுக்கே சேரும். (இந்த மூன்றாமத்யாயம் 286 சுலோகங்கள் கொண்டது ; பூர்த்தியாக ஊன்றி வாசிக்கத்தக்கது.)
நான்காமத்யாயத்தில் ஜீவிக்க வேண்டிய வழிகள் கூறப்படுகின்றன. ருதாம்ருதாப்யாம் ஜீவேத் து ம்ருதேந ப்ரம்ருதேந வா. ஸத்யா ருதாப்யாமபி வா நச்வ வ்ருத்த்யா கதாச பிறர்க்குத் தொண்டு செய்து ஜீவிப்பது கூடாதென்று முடிவாகச் சொல்லி, ருதம் அம்ருதம் மருதம் ப்ரம்ருதம் ஸத்யாந்ருதம் என்னும் வழிகளால் ஜீவிக்கலாமென்கிறது. இந்த பதங்களெல்லாம் விவரணஸாபே மாகையாலே மேலே மஹர்ஷிதாமே விவரிக்கிறார். ருதம் உஞ்சம் ஸிலம் என்று பர்யாயம். தட்டுத்தடை யில்லாதவிடங்களில் ஓஷதிகள் முளைத்ிருக்குமே. அவற்றை ஒவ்வொன்றாகக் கிள்ளிக் கொய்து கொள்ளுமது உஞ்சம் ; கொத்துக்கொத்தாகக்கொய்துகொள்ளுமது ஸிலம். இனி அம்ருதம் என்பது அாசிதம். இரந்து பெறாமல்,பாத்ரவிநியோகம் பண்ணுமவர்கள் கொடுப்பதைக் கொள்ளுவது அம்ருதம். இரந்து பெறுமது ம்ருதம்.க்ருஷி யினால் கிடைக்குமது ப்ரம்ருதம். ஸத்யாருத மென்று வாணி யத்திற்குப் பெயர் : அதாவது வர்த்தகம். மெய்யும் பொய்யும் கலந்து வாணிஜ்யம் நடத்தப்படுவதால் அதற்கு ஸத்யாந்த மென்று பெயர் போலும். ஆக இவற்றால் ஜீவிக்கலாமேயொழிய ஸேவகவருத்தியால் ஒரு போதும் ஜீவிக்கலாகாது. * ஸேவா ச்வவ்ருத்திராக்க்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் என்றுகடுமையாகச் சொல்லி முடிக்கிறார். இதைக் கண்ட ஒரு அபியுக்தர் சொல்லி வைத்தார்-” ஸேவா ச்வவ்ருத்திரிதியத் அபத்தம் தத்உதீரிதம். ஸ்வைரசாரீ க்வ சுநக விக்ரீதாஸு க்வ ஸேவக?”. [இதன் பொருளாவது. அடிமைப் படுவதை நாய்வேலையென்று மநுமஹர்ஷி கூறியது தவறு; ஒருவர்க்கும் அடிமைப்படாமல் யதேஷ்டமாகத்திரிகிற நாய்எங்கே ? நாலுகாசுக்கு உயிரை அறவிலை செய் திருக்கும் சேவகன் எங்கே? என்பதாம். இதனால் சேவகன் நாயினும் கடை கெட்டவன் என்றதாயிற்று.] குணங்கண்டு ப்ராப்த விஷயத்திலே ஸேவகனாயிருப்பவனைப் பற்றியதன்று இந்த நிந்தை.
நாலாமத்யாயத்திலேயே (ச்லோ.18.) வயஸ் கர்மணோர்த்தஸ்ய ச்ருதஸ்ய அபிஜநஸ்ய ச. வேஷவா வருத்தி ஸாரூப்யமாசரந் விசரேதி . + = இந்த சுலோகம் ஒவ்வொருவருடைய சிந்தனையிலுமிருக்கவேண்டும். வேஷம் வாக்கு வ்ருத்தி என்னுமிவை மூன்றும் வயதுக்கும் தொழிலுக்கும் பொருளுக்கும் படிப்புக்கும் குலத்துக்கும் தக்கபடி யிருக்கவேண்டுமென்பது பொருள். இதன் கருத்தை விவரிப்போம். வேஷ
மாவது அரையில் துணிகட்டுதல், நெற்றியில் புண்ட்ரமணிதல், ஆபரணம் பூணுதல் பூமுடித்தல் முதலியன. இவை வயத்துக்குத் தக்கபடியிருப்பதாவது – சைசவம் கெளமாரம் யௌவநம் ருத்தாப்யம் ஆகிய பருவங்களுக்குத் தக்கபடியிருப்பதாம். வயதுக்கு மட்டுமன்று; தொழிலுக்கும் தக்கபடி இருக்க வேணும். லௌக்கத் தொழிலுக்குத் தக்க வேஷம் வேறு; வைதிகத் தொழிலுக்குத் தக்க வேஷம் வேறு என்பதுதெரிந்ததே. அர்த்தஸ்ய =தனத்திற்கும் தக்கபடியிருக்கவேணும். தனிகன் கொள்ளத்தக்க வேஷத்தை தரித்ரன் கொள்ளலாகாது ; தரித்ரன் கொள்ளத்தக்க வேஷத்தை தனிகன் கொள்ளலாகாது . சருதஸ்ய = படிப்புக்குத்தக்கபடி வேஷமிருக்க வேணும். வித்வான்களின் வேஷம் வேறாகவும், படிப்பில்லாத மூடர்களின் வேஷம் வேறாகவுமிருக்கத்தக்க தென்கை. அபிஜநஸ்யச= அபிஜநமாவது ஆபிஜாதியம், ஸ குலப்ரஸ்தத்வமென்றவாறு. உயர்குடிப் பிறப்பாளர் வேஷம் வேறு, அநபிஜாதர்களின்வேஷம் வேறு.ஆக இதுவரை வேஷத்தைப் பற்றிச் சொல்லியாயிற்று ; இனிவாக்கைப் பற்றிச் சொல்லுவோம். வாக்கும் வயது தொழில் பொருள் படிப்பு குலம்ஆகிய இவற்றுக்குத் தக்கபடியிருக்கவேணும். பெரியார் வாக்கில் வெளி வரவேண்டியது சிறியார் வாக்கில் வெளி வரலாகாது; சிறியார் சொல்லக் கூடியதைப் பெரியார்சொல்லலாகாது. நி ந காரியங்களைச் செய்பவன் சொல்லுமதை உத்க்ருஷ்டகாரி
யங்கள் செய்பவர் சொல்லலாகாது. தனிகர்கள் சொல்லக்கூடிய வாக்கை தரித்ரன்
சொல்லலாகாது. படிப்பாளிகள் சொல்ல வேண்டிய வாக்கை அறிவிலிகள் சொல்ல
லாகாது ; குலீனர்கள் சொல்லவேண்டிய வாக்கை அநபிஜாதர்கள் சொல்லலாகாது.
இனி வ்ருத்தியைப் பற்றிக்கேண்மின்.வ்ருத்தியாவது தானிருக்கவேண்டிய நிலைமை.
இதுவும்- வயது தொழில் பொருள் படிப்பு குலம் ஆகிய இவற்றுக்குத் தக்கபடியிருக்கத் தக்கது. இந்த சுலோகம் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் முமுக்ஷ த்வாதிகாரத்தில்
உதாஹரிக்கப்பட்டுள்ளது .
ஐந்தாவது அத்யாயத்தில்(சுலோ .39 ) யஜ்ஞார்த்தம் பசவஸ் ஸ்ருஷ்டா ஸ்வயமேவ ஸ்வயம்புவா, யஜ்ஞச்ச பூத்யை ஸர்வஸ்ய தஸ்மாத் யஜ்ஞே வத அவத * யாகத்தில் பசுவதம் செய்வது வதமாகாது என்று இந்த சுலோகத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப்படுகிறது. ப்ரஜாபதியினால் யஜ்ஞத்திற்காகவே பசுக்கள் விரும்பிப் படைக்கப்பட்டன. ய ஞமானது ஸகல்லோக க்ஷேமத்திற்காக ஏற்பட்டது.ஆகையினால்யஜ்ஞத்தில் செய்யப்படும் வதம் வதமன்று. வதத்தினாலுண்டாகும் பாபம் அணுகாதென்றபடி . இங்கே விசேஷித்துச்சில விஷயங்களைத் தெளிவாகத் தெரிவிக்கின்றேன்.அடியேனெழுதிய உபந்யாஸ சதத்வயத்தில் (54.) அக்நிகோத்ராதி யாக ரசம் ஸோபந்யாஸத்திலும், மேலே இதன் அநுபந்தமாக 151 பக்கம் முதல் 8.பக்கமும் இதைப்பற்றிமிக விரிவாக எழுதியிருக்கிறேன். தச்சே பூதமாக இங்கும் விளக்கமாகச் சில விஷயங்கள் தெரிவிக்கிறேன். யஜ்ஞத்தில் பசுவதம் செய்வது பாபமென்றுஅடியேன் நெஞ்சிலும் நினைத்ததில்லை.வாக்கினாலும் சொன்னதில்லை. எழுதற்றுமில்லை.பகவத்கீதை இரண்டாமத்யாயம் முப்பத்தோராம் சுலோகத்தின் பாஷ்யத்திலும்(அவ்விடத்துத்) தாத்பர்ய சந்த்ரிகையிலும் ஸாதித்திருப்பவைகளைக் காணதவனல்லேன். அர் நன் யுத்தத்தில் கொலை செய்ய நேருவதைப் பாபமாக நினைத்துப்பேசினபோது அவனுடைய மதத்தைக் கண்டிப்பதற்காகக் கண்ணபிரான் க்ஷத்ரியனுக்கு யுத்தம் அதர்மமன்று, தருமமேயாகும் என்று உபதேசிக்கிறான். அங்கு பாஷ்யகாரர் “அ நீஷோமீயாதிவத்” என்றும் “அ நீஷோமீயாதி ஷ ந ஹிம்ஸா பசோ?” இத்யாதிகளும் அருளிச் செய்கிறார். மருத்துவர்கள் செய்யும் சஸ்த்ரசிகித்ஸையையும் எடுத்துக் காட்டுகிறார். இங்குதாத்பர்ய சந்திரிகையில் “உக்தஞ்ச ம நா- தஸ் மாத்யஜ்ஞேவத அவத* இதி’ என்று இப்போதடியேனெடுத்துக் கொண்டு விமர்சிக்கும் சுலோகத்தின் கடைப்பகுதியையும் உதா ரித்துள்ளார்ஸ்வாமி. உதாஹரித்தது மட்டுமன்றிக்கே ஸாரமாக ஒரு ஸ்ரீ ஸூக்தியை யருளியுள்ளார். அதாவது : வத
இதி பாம்ரத்ருஷ்ட்யா அநுவாத , அவத இதி தத்வகதநம் “என்று. இதன் கருத்துஎன்ன
வென்றால், வதம் என்று சொல்லவே கூடாது; பாமரர்கள் இதைப்பாபமாக நினைக்
கிறபடியால் அநுவாதமாத்ரமிது ; உண்மையில் வதமன்று என்பதாம். யஜ்ஞத்தில்பசுவதம் செய்ய வேணுமென்கிற கொள்கையுடையார்க்குத் தெரியாத ப்ரமாணங்களையும் அதிகமாக அடியேன் தெரிந்து கொண்டிருக்கிறேனென்பது ஆத்மஸ்துதி யன்று, உண்மையுரை. க்ஷத்ரியர்களுக்கு யுத்தம் போலே ப்ராஹ்மணர்களுக்கு யஜ்ஞம். இதில் ஸந்தே மில்லை. நமக்கு ப்ராஹ்மண்யத்திற்காட்டிலும் பரமைகாந்தித்வம் மிகச்சிறந்தது. அந்த பாரமைகாந்தியத்திற்குபசுவதம் பண்ணிச்செய்ய வேண்டியதான யஜ்ஞம் அநர் ணம். . வதம் பாபமன்றே, அதைச் செய்தாலென்ன?”என்கிற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். மநுஸ்ம் தி யில் இப்போது நாம் விமர்சிக்கிற சுலோகம் [5-39.] இதற்குமுன்னே இருபத்தாறாம் சுலோகத்தில் “ ஏததுக்கம் த்விஜாதீநாம் பக்ஷியாபக்ஷயம் அசேஷத, மாம்ஸஸ்யாத ப்ரவக்ஷ்யாமி விதிம் பக்ஷணவர்ஜநே” = இந்த சலோகத்தில் ” மாம்ஸஸ்ய பக்ஷணவர் நேவிதிம் வ யாமி “ என்றதற்குமாம்ஸபக்ஷணஸ்ய வர் நே என்று அர்த்தம்செய்யப்படவில்லை; ” பக்ஷணே வர்ஜநேச “என்று விவரிக்கிறார் குல்லூகப்பட்டர். உண்மையில் இதுதான் இங்கு அர்த்தம். மேலே மாம்ஸம் பக்ஷிக்கத்தக்கது,பக்ஷிக்கவேண்டியது என்பதையும் மநுமஹர்ஷி கூறியுள்ளார். உடனே “ப்ரோக்ஷிதம் பக்ஷயேந் மாம்ஸம் “ என்றுஆரம்பிக்கிறார். இங்கு “ யஜ்ஞஹுத பசுமாம்ஸபக்ஷணம் இதம் யஜ்ஞாங்கம் விதீயதே “ என்கிறார் வ்யாக்க்யாதா. சிலர்சொல்லுவதென்னவென்றால் ‘மாம்ஸபக்ஷணம் கலிவர்யத்தில் சேர்ந்துவிட்டபடியால் அதை பக்ஷிக்கக் கூடாது’ என்று. இங்ஙனே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களை அடியேன் கேட்பது ஒன்றே; ‘கலியிலும் மாம்ஸமுண்ணலாம். என்று சாஸ்த்ரம் சொல்லிவிட்டால் பரமைகாந்திகள் உண்பர்களா? மிகவும் அருவருக்கக் கூடிய கார்யமன்றா இது. தேவரேணஸுதோத்பத்தியை கலியிலும் உபாதேயமாக சாஸ்த்ரம் விதித்து விட்டால் சிஷ்டர்கள் அ த யநுஷ்டிப்பர்களோ? வர்ஜ்ய மென்று தெரிந்தும் வர்ஜியாதவர்கள்
எத்தனை பேரில்லை. பசுவதத்தில் எங்களுக்கு அருவருப்பில்லை’ என்னுமவர்கள்
அதை தாராளமாகச் செய்யலாமென்று அடியேன் பலகால் எழுதியிருக்கிறேனே. அக்ரியாவதநர்த்தாய தத்து கர்ம ஸமாசரேத் என்று ர ஸ்யத்ரய ஸாரத்தில்
கையாளப்பட்ட வசனத்தைக் கண்ணெடுத்து பார்ப்பாரில்லையே, அகரணேப்ரத்ய
வாயம் காட்டித் தீரவேணுமே. அதைத் தேடிப்பிடித்துக் காட்டுகிறவரையில் * பசு
மாரண கர்மதாருணர்களின் வாதம்செல்லாது; வதம் செல்லும். ஆப்தரான ஒரு
வித்வான் அடியேனுக்கெழுதினார் – யஜ்ஞம் ஸாமா யமாக எல்லாரும் செய்ய
முடியாது ; அதற்கு த்ரவ்யஸம்பத்து வேண்டும்; அஃதுள்ளவர்கள் செய்யாதிருக்க
லாமா?” என்று. இதற்கு ஒரே வார்த்தை சொல்லி முடித்துவிடுகிறேன். கீதையில் மூன்றாமத்யாயத்தில் (8) * நியதம் குரு கர்ம த்வம் என்கிற சுலோகத்தின் பாஷ்யத்
திலே ” ந்யாயார்ஜிததநேந மஹாயஜ்ஞாதிகம் க்ருத்வா தச்சிஷ்டாசநேநைவ சரீரதாரணம் கார்யம்” என்கிறார் ஸ்வாமி. தனிகர்கள் தனத்தைக் கொண்டு பசுவதம்பண்ணி
மாம்ஸ்பக்ஷணம் பண்ணிதேஹதாரணம் பண்ணவேணுமென்றா இதற்குப் பொருள்? மேலே ஆறாமத்யாயத்தில் 37. அநதீத்ய த்விஜோ வேதாந் அநுத்பாத்ய ததா ஸுதார், அநிஷ்ட்வாசைவ யஜ்ஞச்ச மோக்ஷமிச்சந் வ்ரஜத்யத* என்னுமிந்த சுலோகத்தை ஆழ்ந்து விமர்சிக்க வேண்டா; மேலெழ விமர்சித்தாலும் போதும். வேத மோதா விடில் நரகம் புகுவன்,யஜ்ஞம் செய்யாவிடில் நரகம்புகுவன் என்றது ஸரி. இடையில் மக்கள் பெறாவிடில் நரகம் புகுவன்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. இது யாரைப் பற்றிச் சொன்னது ? என்று விமர்சிக்கவேண்டும். பகவத்கீதை 8-3ல் பாஷ்யத்தில் * யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி என்று மேலுள்ள வசனத்தையும் எடுத்துக்காட்டி ”ச்ருதிஸித்தோ யோஷித்ஸம்பந்த:.. உத்வேஜநீயதயா பரிஹரணீயதயா ச முமுக்ஷ பி ஜ்ஞாதவ்யம் ” என்று ஸ்வாமி ஸாதித்திருப்பதை விச்வளித்து யோஷித் ஸம்பந்தத்தை வெறுத்தவர்களுக்குமா நரகம் வரும் ‘ஆமாம். வரத்தான்வரும் மென்னில், அவர்களோடு கூடவே இவர்களும் நரகம் போகட்டுமே. எவர்களும்? பசுவதத்தைக் கொண்டயாகத்தைச் செய்யாதவர்களும்.
10. நாலாமத்யாயத்திலே ச்லோ. 171 முதல் நான்கு சுலோகங்கள் தார்மிகர்கள் கண்டபாடம் செய்து வைத்துக் கொள்ளத்தக்கவை. அதர்மம் செய்பவர்கள் தனிகர்களாயிரூப் பதையும்,தருமம் செய்பவர்கள் அகிஞ்சனர்களாயிருப்பதையும்காணும்போது தார்மிகர்களுக்கு அதர்மருசி ஏற்படக்கூடும் தருமம் செய்துதரித்ரர்களாயிராமல் அதர்மம் செய்து தனிகர்களாயிருப்போமென்கிற எண்ணமுண்டாகி அதர்ம பரவ்ருத்தி விளையக்கூடுமன்றோ. அன்னவர்களைக் குறித்துச்சொல்லப்படுகிறது * ஸ்தந்நபி தர்மேண மந அதர்மே நிவேசயேத். அதார்மிகாணாம் பாபாநாம் ஆசு பச்ய விபர்யயம். * தர்மேண ஸ்தந்நபி ம அதர்மே ந நிவேசயேத்-தருமம் செய்வதனாலேதான் நமக்குக் கஷ்டங்களுண்டாகின்றனவென்று நினைக்க நேர்ந்தாலுங்கூட அத மாசரணத்தில் நெஞ்சைச் செலுத்தக்கூடாது; ஏனென்றால்,அதர்மஞ்செய்யும் பாபிகள் வாழ்ந்தேநிற்காமல் அதற்கு மாறுபாடான நிலைமையை யும் அடையக் காண்கையாலே. அடுத்த 172 சுலோகத்தினால் அதர்மம் பலன் காட்டியே தீருமென்று வற்புறுத்திச் சொல்லப்படுகிறது . நாதர்மச் சரிதோ லோகே ஸத்ய பலதி கௌரிவ, சநைராவர்த்தமாநஸ் து கர்த்துர் மூலாநி க்ருந்ததி. * =அதர்மம் செய்யப்பட்டால் அது உடனே அனர்த்தமாகிற பலனைக் கொடுத்துவிடுமென்பதில்லை. எதற்கும் பரிபாகத்சை யென்று ஒன்றுண்டு; அப்போது ஸமூலநாசம்பண்ணியே தீரும். 173 . * யதி நாத்மநி… இத்யாதி. அதர்மமான ஸாக்ஷரத்துகர்த்தாவினிடத்திலும் பலனைக் காட்டும்; இல்லையேல் புத்திரர்களிடத்திலோ பெளத்ரர்களிடத்திலோ பெளத்ரர்களிடத்திலோ பலித்தே தீரும். செய்தஅதர்மம் எந்த விதத்திலும் நிஷ்ப்பலமாகாது. அடுத்த சுலோகம் 174 மிக முக்கியமானது அதர்மேண ஏததே தாவத் ததோ பத்ராணி பச்யதி. ததஸ் ஸபத்நாந் ஜயதிஸமூலஸ்து வி நச்யதி. * இந்த சுலோகம் அதர்மம் செய்து பழுத்தவன் ஸ்வாநுபவத்தைத் தெரிவிக்கும் சுலோகம் போலவே காண்கிறது. அதர்மம் செய்தவன் தற்காலத்தில் ஸம்ருத்தியடைகிறான் : மாடமா கைகள் கட்டிக்கொள்வதும் யானைகுதிரைகள்ஏறப்பெறுவதுமான செல்வங்களையும் அநுபவிக்கிறான். சத்துருக்களையும் வெல்லுகிறான் .நாளடைவில் பரிபாக சை வந்தவாறே ஸமூலநாசத்தையடைகிறான். ஆகவே தருமநிஷ்டையே க்ஷேமங்கரமென்றதாயிற்று.
எட்டாமத்யாயத்தில் ச்லோ 92. * யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித தே சேத் அவிவாதஸ் தே மா கங்காம் மா குரூந் கம . * இந்தசுலோகம் ஆழ்வார்கள் பாசுரம் போலுள்ளது. பெரும்பாலும் ரதமபுருஷ நிர்தேசமாகவே செல்லுகிறஇந்ததருமசாஸ்த்ரத்தில் இங்கு ஒரு மூன்று சுலோகங்கள் மத்யமபுருஷநிர்தேசமாக நிகழ்கின்றன. ஆழ்வார்கள் உபதேசம் செய்தருளும் வகை காண்கிறது. ஆகவேதான் இந்த சுலோகம் பகவத்வியைத்தில் விசேஷித்துக் கையாளப்படுகிறது. எம்பெருமானோடு த்வேஷம் முற்றி நிற்கும் நிலை நீங்கி அத்வேஷா நிலையென்று ஒன்று உண்டாகும்.அது பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகளுக்கு முதற்படியான நிலைமையாகையாலே அதையே பக்தி தசையாகவுங் கொள்ளுவர்கள்.எம்பெருமானோடு விவாதப்படுகிற நிலை நீங்குமளவே போதுமானது. எம்பெருமான்கண்ணுக்குப் புலப்பட்டாலன்றோ அவனோடு விவாதப்படமுடியும் கட்கிலியான அவனோடு விவாத ப்ரஸக்தியே யில்லையே யென்று சிலர் நினைக்கவும் கேட்கவும் கூடும்.அவனோடு தனக்குண்டான உறவை ஒப்புக்கொள்ளாமலிருப்பதுதான் விவாதமெனப்படுவது. த்வம் மே ‘ என்று பகவான் சொல்லுவதாகவும் அஹம் மே என்று சேதநன் சொல்லுவதாகவும் வைத்து பட்டர் அருளிச்செய்திருப்பது சமத்காரோக்தி
விந்யாஸம். பகவச்சேஷத்வத்திற்கு இசையாமலிருப்பதுதான் பகவானோடு விவாதப் படுகையாவது. அது தீராதவளவில் (பகவச்சேஷத்வத்திற்கு இசையாதவளவில்
கங்கைநீர் குடைந்தாடப்போவதும் குரு க்ஷேத்ர யாத்திரை செய்யப்போவதும்
வீணேயாகும். சேஷத்வருசி யுண்டாய்விட்டதாகில் க்ஷேத்ரதீர்த்த யாத்திரையே வேண்டா. அது உண்டாகாதவளவில் இந்த யாத்திரை நிஷப்பலமாகையாலே ஸர்
வாத்மநா யாத்திரை போகவேவேண்டா வென்கிறது. இதற்குயாத்ரர் நிஷேதத்தில்தாத்பரியமன்று ; பகவானோடுள்ள உறவை அறியவேண்டியது முக்கியம் என் கையிலே தாத்பர்யமத்தனை. இந்த சுலோகத்தைத் திருவாய்மொழியில் * வீடுமின்
முற்றத்தில் * உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்மினே * என்றவிடத்து நம்பிள்ளை அற்புதமாக வியாக்கியானித்தருளுகிறார் ; அந்த ஸ்ரீ ஸக்திகளையே இங்கெடுத்துக் காட்டுகிறேன்;
” யம ] ராதேசிகமான நியமனத்தை யுடையவனையன்று சொல்லுகிறது
* ப்ரபவதி ஸம்யமநே மமாபி விஷ்ணு * என்று அவன் தன்னையும் நியமிக்குமவனாயிற்று இவன். (வைவஸ்வத: விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவனென்னுதல் ; ஆதித்யாந்தஜ் அவஸ்திதனென்னுதல். (ராஜா ] அவனைப்போலே தஹ பச என்கை யன்றிக்கே எல்லார்க்கும் இனியனாயிருக்குமவனாயிற்று இவன். ரஞ்ஜய தி.ராஜா .* [ய ] அந்தர்யாமி ப்ராஹ்மணதிகளில் ப்ரஸித்தி. [தவைஷ ஹ்ருதி ஸ்தித / அவன் எங்குற்றானென்ன; கண்டிலையோ? உன்னுடையஹ்ருதயத் திலே புகுந்து ஆட்சியில் தொடர்ச்சி நன்றென் றிருக்கிறான் . ஆனால் செய்ய வேண்டுவதென்னென்னில் ; [தேநசேத் அவிவாதஸ் தே]; உடையவனாயிருக்கிறவனோடே உனக்கு அஷிவாத முண்டாகில். ‘இத்தால் பேறுஎன்?’ என்பாயோ?-[மா கங்காம்மா குரூங் கடி ] ஒரு தீர்த்தம் தேடிப்போதல், புண்ய க்ஷேத்ரம் தேடிப்
போதல் செய்யவேண்டா. அஹங்கார மமகாரங்கள் கிடக்க ராயச்சித்தம்
பண்ணுகையாவது நிஷித்தத்ரவயத்தை உள்ளே வைத்து மெழுகூட்டின வோபாதியிறே. உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடியிறே ப்ராயச்சித்தமும். உடையவன் ஸர்வேச்வரன். த்ரவ்யங்களில் த ையான ஆத்மத்ர யத்தை யிறேஅப ரித்தது. ரவயத்தைப்பொகட்டுப்ராயச்சித்தம் பண்ணவேணுமே. பொகடுகிற த்ர யம் தானாகையாலே பராயச்சித்தம் பண்ணுகைக்கு வேறுஅதிகாரியுமில்லையே. ஆகையாலே நீங்களும் உடையவன், பக்கலிலே வீடுசெய்ம்மின். இவை ஈடு முப்பத்தாறாயிரப்படி ஸ்ரீ ஸுக்திகள்.
எட்டாவதத்யாயத்திலேயே, தவறு செய்தபிர மணனை தண்டிக்க வேண்
டிய விதம் கூறப்படுகிறது . ச்லோ. 979. பிராமணனுக்குமரண தண்டனை விதிக்கவே
கூடாது. தலையை மொட்டையடிப்பதுதான் பிராமணனுக்கு வதப யாயமான தண்டனையாகும். பிராமணன் தவிர மற்றஜாதியாருக்கே வத்தண்டனை விதிக்காலாம். பிராமணன் எவ்விதமான குற்றம் செய்திருந்தாலும் அவனுக்கு வததண்டம் விதிக் கவே கூடாது.தீவ்ரமான பாபம்செய்திருந்தால் பிராமணனை ராஷ்ட்ரத்தில் நின்றும் வெளியே துரத்தி விடலாம். அப்போதும் அவனுடைய ஜீவனத்திற்குப் போதுமான பொருளைக் கையில் கொடுத்தனுப்பவேணும். சரீரத்தில் எவ்விதமர தியையும் உண்டுபண்ணக்கூடாது. பிராஹ்மணவதத்திற்கு மேற்பட்ட ஆதர்மமே உலகத்தில் கிடையாது. ஆகையினால் அரசன் ப்ராஹ்மணவதத்தை நெஞ்சினாலும் நினைக்கலாகாது. (இதற்கான வசனங்களிவை . * மௌண்ட்யம் ப்ராணாந்திகோ தண்டோப்ராஹ்மணஸ்ய விதீயதே … ந ஜாது ப்ராஹ்மணம் ஹந்யாத்ஸர்வபாபேஷ்வபி ஸ்திதம். ராஷ்ட்ராத்ஏநம் பஹி குர்யாத் ஸமக்ரதநம் அக்ஷதம்.ந ப்ராஹ்மண
ஒன்பதாமத்யாயத்தில் ஸ்த்ரீபுருஷ தருமங்களைச் சொல்லத் தொடங்கி
ஸ்த்ரீகளுக்கு ஒருபோதும் ஸ்வாதந்திரியம் கூடாதென்று வலிதாக மறுக்கிறார்.
சுலோ. 3. பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷத்தி யௌவநே, ரக்ஷந்தி ஸ்தாவிரே புத்ரா
ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யமர்ஹதி. இந்த சுலோகம் நீதி சாஸ்த்ரஸங்க்ரஹத்தில் ஏறியிருந்தாலும் இதற்குஆகரம் மநுஸ்மிருதியேயாகும். ஸ்த்ரீகளை இளம்பிராயத்தில் தந்தைகாக்கிறார் ; யௌவனத்தில் கணவன் காக்கிறான். முதுமையில் புத்திரர்கள் காப்பர்-ஆக.ஸ்த்ரீகள் தங்களைக் காத்துக்கொள்வதில் ஒருபோதும் ஸ்வாதந்திரியமுடையரல்லர் என்பது ச்லோகார்த்தம். இதன்மேல் கேள்வி பிறக்கக்கூடும்? இளமையில்வைதவயமடைந்து பதியுமின்றிக்கே புத்திரனுமின்றிக்கே யொழிந்தவர்களைக் காப்பவர் யார்? என்று. இதற்கு வ்யாக்கியாதா (குல்லூகபட்டர் ] ஸமாதான மெழுதியுள்ளார்- தந்தை, தந்தையுடன் பிறந்தவர் முதலானார் காக்கும்படியைக் காணா நின்றோமென்று.
மாதா பிதாக்கள் ஜீவித்திருக்கும்போது புத்திரர்கள் பங்கு பிரித்துக்கொள்வது கூடாதென்றும், அவர்கள் முடிந்தபிறகு கநிஷ்ட ப்ராதாக்கள் ஐயேஷ்டப்ராதாவையே அநுவர்த்தித்து வாழ் வேண்டுமென்றும் நியமிக்கிறார். (9-104.)
* ஊர்த்வம் பிதுச் ச மாதுச் ச ஸமேத்ய ப்ராதரஸ் ஸமம். பஜேரம் பைத்ருகம் ரிக்த்தம் அநீ
சாஸ்தேஹி ஜீவதோ மாதா பிதாக்கள் ஜீவித்திருக்கும்வரையில் அவர்களது தனத்தில் புத்திரர்களுக்கு ஸ்வாழித்வம் கிடையாதாகையாலே அத் தந்தைதாயருடைய வாழ்நாள் முடிந்தபிறகே பங்கு பிரித்துக் கொள்ளவேண்டியது.(இங்கு வியாகயாதா எழுதுகிறா ) – ” விபாகஞ் சேத் பிதா குர்யாத் இச்சயா விபஜேத் ஸுதாங்(தகப்பனார் இஷ்டப்பட்டால் புத்ரர்களுக்குத் தாமே பங்கு பிரிக்கலாம்] என்றுயா வல்க்யர் சொல்லியிருக்கையாலே தகப்பனார் இஷ்டப்படாதவளவில் இந்த சாஸ்த்ரம் செல்லுமென்கிறார். அடுத்தசுலோகம் 105. * யேஷ்ட ஏவ து க்ருஹ்ணீயாத் பித்ர்யம் தநம் அசேஷத . சேஷாஸ் தம் உப வேயு யதைவ பிதரம் ததா. * பிதாவின் தனத்தையெல்லாம் மூத்தபுதல்வனே அடையக்கடவன் ; மற்ற ப்ராதாக்கள் தமையனையே தந்தையாகக் கொண்டு அவன்கீழ் வாழக் கடவர்கள். மேலே ச்லோ. 108.* பிதேவ பாலயேத் புத்ராந் ஐயேஷ்டோ ப்ராத்ரூந் யவீயஸ , புத்ரவச் சாபி வர்த்தேரந்ஜ்யேஷ்டேப்ராதரி தர்மதா * பிதா புத்திரர்களைக் காப்பதுபோல மூத்தவன் தம்பிமார்களைக் காக்கக் கடவன். தம்பிகளும் பிதாவினிடத்திற்போலவே மூத்தவனிடத்
தில் வர்த்திக்கக் கடவர்கள். இதெல்லாம் ஜ்யேஷ்ட பராதாயோக்யனாயிருக்குமளவில்
என்று நூற்கொள்கை.
அனுஷ்டானங்களில் முக்கிய கல்பமென்றும் கெ ண்கல்பமென்றும் இரண்டுண்டு.கௌண கல்பத்தை ஏதோ ஆபத்காலத்தில் கொள்ளலாமே யல்லதுசக்தியும் ஸௌகர்யமுமிருக்கும் காலங்களில் முக்கிய கல்பத்தைத்தான் கொள்ளவேண்டும்; கௌணகல்பம் கேவலம் ஆபத்கால் மாத்ரவிஷயம். 11-28. ஆபத்கல்பேந யோ தர்மம் குருதே அநாபதி த்விஜ, ஸ நாப்நோதி பலம் தஸ்ய பரத்ரேதி விசாரிதம்-கௌண்கல்பத்திற்கு ஆபத்கல்பமென்று பெயர் . அதை ஆபத் காலத்தில் மட்டுமே அனுட்டிக்கலாம். ஆபத்தொன்றுமில்லாதவளவிலும் ப்ராஹ்மணன் கௌண்கல்பத்ையனுட்டித்தானாகில் அதுஅனுட்டியாததோ டொக்குமத்தனை. (இந்த விதியைப் பரிபாலனம் செய்பவர்கள் மிகச் சிலரே யாவர். ஆசமன ப்ராணாயாமாதிகளையும் தினப்படி பெரும்பாலும் கௌணகல்பமாகவே யன்றோ அனுட்டித்து வருகிறோம்
(11-34.) க்ஷத்ரியோ பாஹுவீர்யேண தரேத் ஆபதமாத்மந. தநேந வைச்ய
சூத்ரெள து ஜபஹோமைர் த்விஜோத்தம.* நான்கு ஜாதியார்க்கும் சத்துருக்கள் மூலமாகப் பரிபவங்கள் நேருவது ஸம்பாவிதம். அதைப் போக்கிக் கொள்ளுமுபாயம் ஜாதி பேதந வெவ்வேறு பட்டிருக்குமென்கிறது. க்ஷத்ரியன் தன்னுடைய பராக்ரமத்தைக் கொண்டு ப்ரதிக்ரியை பண்ணக்கடவன். வைச்யனும்சதுர்த்தனும் தனத்தைக்கொண்டு வெல்லக்கடவன். ப்ராஹ்மணோத்தமனோவென்னில், கேவலம் பம்ஹோமம் முதலிய வைதிக்கருமங்களைக் கொண்டேசத்ருபக்ஷ ரதிக்ஷேபம் பண்ணவேண்டியவன்.(இத்தால் தெரிவிக்கப்படுவதென்ன ? பிராமணன் தன்னிடத்தில் பராக்ரமமிருந்தாலுங்கூட அதை உபயோகிக்கக் கடவனல்லன்; தனமிருந்தாலும்அதை ப்ராப்து விஷயங்களில் தவிர இத்தகைய காரியங்களில் துர்விநியோகம் செய்யக்கடவனல்லன். ஓதியுணர்ந்திருக்க வேண்டியதையே கடமையாகவுடையவனாதலால்ஜ ஹோமாதிகளைக் கொண்டே ய சீலனாயிருக்கக் கடவனென்பதாம். * திக் பலம்க்ஷத்ரிய பலம் ப்ரஹ்மதேஜோ பலம் பலம் * என்ற புகழ்ச்சியைப் பரிபாலித்துக் கொள்ளக்கடவோம்].
ஸம்ந்யாஸிகளை த்ரிதண்டிகளென்கிறோம். முக்கோல் பிடித்த முனிக
ளென்றபடி. இந்த முக்கோல்களே த்ரிதண்டமெனப்படுகின்றன. தண்டமென்பதற்குக் கோல்என்கிற பொருள் தவிர, தண்டித்தல் [அடக்குதல்] என்கிற பொருளும் ப்ரஸித்தமாதலால் மூன்று வகையான தண்டங்களைக் கொண்டவர்களே
த்ரிதண்டிகளெனத் தகுவர்களென்கிறார் மனுமஹர்ஷி. 12-10, வாக்தண்டம், மநோ
தண்டம்,காயதண்டம் என்னுமிவை மூன்று தண்டங்களாம். வாக்கை யடக்குதல்,
மனத்தை யடக்குதல், சரீரத்தை யடக்குதல் ஆகிற இம்மூன்று அடக்கங்களும் மூன்று
தண்டங்கள்; இவற்றை யுடையவர் த்ரி தண்டி (இதன் விவரணம் வருமாறு ) பொய்
சொல்லுவது. பழிமொழிகளைச் சொல்லுவது, பகவத் பாகவத ஆசார்ய நிந்தைகளைப்
பொழிவது தன்னைத்தானே ரசம்ஸித்துக்கொள்வது முதலான வாக் தோஷங்களில்
லாமை வாக்தண்டமெனப்படும். (வாக்கினாலே தண்டித்தலென்று பொருளன்று; ுைவாக்கைத் தண்டித்து அடக்கிவைத்துக் கொள்ளுதலென்று பொருள்) மனோதண்ட மாவது-அப்ராப்த விஷயங்களைச் சிந்தனை செய்யாதபடி மனத்தை நிக்ரஹித்தல்.
ழ் காய தண்டமாவது-கரசரணாதி யவயவங்களை அப்ராப்த விஷயங்களில் போகவொட்
டாதபடி தடுக்கை. பெரிய திருமொழியில் 1-6-7. * நெஞ்சினால் நினைந்தும் வாயி
னால்மொழிந்தும் நீதியல்லாதன செய்தும் * என்றருளிச் செய்தபடியே மனமொழி
மெய்களால் அநீதியொன்றும் நிகழாதபடி ஜாகரூகர்களாய் வர்த்திப்பவர்களே த்ரி தண்டிகளென்றதாயிற்று. இங்கு வியாக்கியானத்தில் குல்லூகபட்டர் “நது தண்ட
த்ரயதாரண மாத்ரேண த்ரிதண்டீதி உச்யதே “ என்றெழுதி யிருக்கையாலே அவர் ஏக
தண்டிகளை நெஞ்சிலெண்ணாது த்ரி தண்டிகளையே சிந்தனை செய்பவரென்று புலப்படு கின்றது. சததூஷணி 64-ஆம் வாதத்தில் இது வ்யக்தம்.
(12-122) பரமபுருஷனையே அநவரதமும் சிந்திக்க வேணுமென்று மநுமஹர்ஷி தம்முடைய ஸ்ம்ருதியைத் தலைக்கட்டுகிறார். * ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணோரபி ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் ‘வித்யாத் தம் புருஷோத்தமம். *(புருஷம்பரம் என்றும் பாடமுண்டு.) இதில் நான்கு விசேஷணங்கள் பரமபுருஷனைச்சிறப்பித்துக்கூறுவன. ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம்-ஸர்வ யந்தா என்றபடி . கீதையில்* ஸர்வஸ்ய சாஸம் ஹ்ருதி ஸம்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ரூதிர் ஞாநம்போஹநஞ்சி-என்றதை நினைப்பது. அ யாம்ஸம் அணோரபி = * அணோரணீயாந்மஹதோ ம யாந்என்கிறபடியே அணுபதார்த்தங்களிலும் அந்த ப்ரவேச ௌக யார்த்தமாகமிகவும் அணுவாயிருக்குமவன். (ருக்மாபம்]ச்சாந்தோக்யத்தில் அந்தராதித்ய ‘வித்யையிலே ஹிரண்மயர் புருஷ’ என்றும் ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண?’ என்றும்-சுட்டுரைத்த நன்பொன் உன்
திருமேனியொளி யொவ்வாது(திருவாய்மொழி 3-1-2.) என்றும்சொல்லுகிறபடியே பொன்மேனியன். திருக்கண்டேன்பொன்மேனி கண்டேன் * என்கிறபடியே ஹிரண்ய வர்ணையான பிராட்டியின் தேஜோவ்யாப்தியாலே-பொன்மேனி படைத்தவனென்னவுமாம்.[ஸ்வப்ந்திகம்யம் ] ‘ஸ்வப் நமூண்டாவது எப்போது? செவி வாய்கண் மூக்கு முதலான ஸகலேந்திரியங்களினுடையவும்வியாபாரம் உபரதமானவாறேகேவலம்மநோஐந்யமானது கனவு.அப்படியே பரம்புருஷனும் கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங்கருவிகளும் ஓய்ந்து, என்றேனும் கட்கண்ணால் காணாத வவ்வுருவை நெஞ்சென்னு முட் கண்ணேல் காணுமுணர்ந்து *(பெரிய திருவந்தாதி.) என்கிறபடியே விசுத்தேந ம ஸாக்ராஷ்யனா யிருப்பவன்.இப்படிப்பட்ட பரமபுருஷனைச் சிந்தித்து வாழ்வோமாக. இந்த ஸ்ம்ருதியின் உபக்ரமத்தில் ச்லோ 10ல் * ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ . தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத * என்று நாராயண நாம நிர்வசனம் செய்திருக்கையாலே இம்முனிவர்க்குப் பரமபுருஷத்வே விவக்ஷிதன் நாராயணனே யென்றறிவது.
நரஸிம்ஹமூர்த்தியினுடைய தம்ஷ்ட்ரையைத் தமிழில் கோரப்பல் என்பர். கோரமான பல் என்றபடி, இவர் அதைக் கோரைப் பல்லாக ஆக்கிப் பலகால் எழுதிவிட்டார். கோரை போலே நீண்டிருக்கும் பல் என்று வியாக்கியானமும் ஸாதிப்பர்.-கோரம் என்கிற சொல்லை ஆழ்வார்களும் கையாண்டிருக்கிறார்கள். கோரமாதவஞ் செய்தனன் கொலறியேன். அரும்பெருந்தமிழ்ப் புலவர்கள் ‘கோரைப்பல் ‘ என்றெழுதினால் (கோரமான பல் ) என்றே அதற்குப் பொருள்காண இயலும்-அங்கண்ஞாலப்பதிகத்தினால் சிங்க வேழ்குன்றத்தை மங்களாசாஸனம் செய்தருளாநின்ற திருமங்கையாழ்வார் முதற்பாட்டில் “அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்” என்று நரஸிம்ஹமூர்த்தியை விசேஷித்திருக்கிறார்.-புனிதன்– பாவனன் என்றபடி, எம்பெருமானுடைய பாவத்வம் *பாவஸ் ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகுநந்த !* இத்யாத்யநேகப்ரமாண ஸித்தம். எனினும். இங்கு
அவுணனாகம் போழ்ந்த பனிதன்‘ என்றதற்குச் சேர நரஸிம்ஹமூர்த்தியின் பாவ
நத்வத்தை ஒன்பது வகையாக நிரூபிக்கின்றேன். பிறருடைய அவத்யத்தைப் போக்கி, தான் அவத்ய ஸங்கமற்றிருக்கை பாவநத்வமாகும். இதை நரஸிம் ஹமூர்த்தியின் திவ்ய சரித்திர விசேஷங்களைக் கொண்டே உபபாதித்துக் காட்டுகிறேன்.-1-ப்ரஹ்லாத ரக்ஷணத்தையும் ஸத்வாரகமாகவே செய்திருந்தானாகில் அவத்யமே யாகும். அத்வாரகமாகவே (ஸாக்ஷாத்தாகவே]செய்தருளினனாதலால் அவத்ய வைதேசிகனாயினன். இது முதன்மையான பாவநத்வம்.
பயலே! நீ சொல்லுகிற விஷ்ணு எங்கிருக்கிறான்?’ என்று இரணியன் கேட்க. எங்குமுளனென்றான் சிறுக்கன். பிறகு தூணைத்தட்டினானிரணியன். எம்பெருமான்
” ஒரு சிறுபயல் சொன்னவார்த்தையை மெய்ப்பிக்கவேணுமென்று நமக்கு என்ன நிர்ப்பந்தம்? என்று வாளாவிருந்து விடலாம். இற்றைக்கும் நாளைக்கும் பல்லாயிரமிடங்க
களில் பல்லாயிரவர் ‘ஈச்வரோ நாஸ்தி’ யென்று அட்டஹாஸங்கள் செய்துகொண்டுதானே யிருக்கிறார்கள். அவற்றைப் பொருள்படுத்தாமலேயிருக்கின்ற ஸர்வேச்வரன்ப்ரஹ்லாத ப்ரதி ஞையையும் பொருள் படுத்தாமல யிருந்தால் கேட்பாரார்?அங்ஙனேயிருந்தால் அவத்யமேயாகுமன்றோ . அதற்கு இடமளிக்காதது இரண்டாவது பாவநத்வம்.-நரஸிம்ஹமூர்த்தியும் ஸ்தம்பத்தில் கர்ப்பவாஸம் செய்து பத்து மாதங்கள் கழித்துத் தோன்றினனாகில் அப்போதும் அவத்யசாலியே யாவன்.(எங்ஙனே யெனில்) எங்குமுளன் என்பது மட்டுமன்று ப்ரஹ்லாத ப்ரதி ஞை; எப்போதுமுளன் என்பதுமாகையால் அது வய சரித்ததாகுமே. அந்த அவத்யத்திற்கும் இடமளிக்காமல் அப்பொழுதேதோன்றியது மூன்றாவதான பாவ த்வம்.
*ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:, அர்த்திதோ மாநுஷே
லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாத என்கிறபடியே பெருமாள் ராவணவதார்த்தமாகத்
திருவவதரித்தும் முப்பத்தெட்டாவது பிராயத்திலன்றோ ராவணவதம் செய்தருளிற்று.
வேண்டித் தேவரிரக்க வந்து பிறந்ததும் (திருவாய்மொழி 6-4-5 ) என்கிறபடியே
கம்ஸ சிசுபாலாதி வதார்த்தமாக வேண்டப்பட்டு வந்து பிறந்த கண்ணபிரானும் இடையில்
வெகுகாலம் கடத்தியே காரியம் செய்தருளினன். நரஸிம்ஹமூர்த்தியும் தூணைத் தட்டின
வுடனே தோன்றிவிட்டு இங்ஙனே விளம்பித்துச் செய்தால் அவத்யந்தானேயாகும்.
அதற்கும் இடமளிக்காமல், ப்ரஹ்லாதன் ப்ரதிஞை பண்ணினது, தூணினின்றும் தோன்றினது, இரணியனகல்மார்வம் கீண்டது ஆகிய இவை யெல்லாம் ஏககாலத்திலானது நான்காவது பாவநத்வம் .
தேவர்கள் *ராவணஸ்ய வதார்த்திபி: என்கிறபடியே இராவணவதத்தைக்கோரினது போல ப்ரஹ்லாதாழ்வான் இரணியன் வதத்தைக் கோரர்மையினாலே “எங்குமுளன் என்ற ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றுதல் மாத்திரமே நமக்குப்பணி” யென்று நினைத்து நரசிங்கமூர்த்தி தோன்றினவுடனே மறைந்திருக்கலாமே. அப்படி மறைந்திருந்
தால் அதுவும் அவத்யமாம்; அதற்கும் இடமளிக்காமே அவனை மாய்த் தொழித்து மறைந்தது
ஐந்தாவது. பாவநத்வம்.–
இரணியன் மாளிகையில் பல தூண்களுமுண்டே; ஏதேனுமொரு தூணில் தோன்றியும் காரியம் செய்யலாமே, அவன் புடைத்த தூணிலேயே புடைத்த விடத்திலேயே தோன்ற வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? என்று நினைத்திருந்தால் எங்குமுளனென்ற ப்ரஹ்லாத ப்ரதிஜ்ஞை சிதிலமாகி அவதியம் நேர்ந்திருக்குமே; அதற்குமிடமளிக்காதது ஆறாவது பாவநத்வம்.-ராமபிரான் செளர்ய வீர்ய பராக்ரம நிதியாயிருக்கச் சேய்தேயும் ராவண
வதத்தில் பல கிலேசங்களை யடைந்ததாக வறிகிறோம். விபீடணன் வார்த்தையைக்
கேட்டுக் கடற்கரையிலே மூன்று நாள் தரைக்கிடை கிடந்தது. நாகபாசத்தால் கட்டுண்டு
கிடந்தது, அறுக்கவறுக்க முளைத் தெழுகின்ற அரக்கன்தலைகளை யறுக்கப் பாடுபட்டது.
அஸ்ஹாய் சூரனென்று ஓரிடத்தில் பேர் பெற்றும் குரக்கினப் படைகொடு காரியம்
செய்ததனாலே ஸஸஹாயனானது இங்ஙனே பல. கண்ணபிரானும் “ஜராஸுதபயாத்
விபலாயதாஸ் த்வம்” என்று ஆழ்வானருளிச் செய்யும் படி பகைவனுக்கு அஞ்சினவன்
போல ஓடியொளித்தமையுண்டே. இத்தகைய ஆபத்திகளுக்கு நரஸிம்ஹ பகவான் தன்
பாலிடமளிக்காதது ஏழாவது பாவநத்வம்.- * ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:, த்யக்த்வா தேஹம்புநர் ஜம்ம நைதி மாமேதி ஸோர் ந!* என்று கீதையில் அவதாராத்யாயத்தில் பணித்தபடி தன் திருவவதாரத்தையும் சரிதையையும் எங்கும் பரவ வைத்து மூவுலகங்களையும் பரிசுத்தமாக்குகிறானென்பது எட்டாவது பாவநத்வம்.-தேவாநாம் தா வாநாஞ்சஸாமா யமதிதைவதம் ” என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வமாகக் குலாவப் படுகிற எம்பெருமான் *அமரர்க்கு இடர்கெட அசுரர்க்கு இடர் செய்வது அவத்யமன்றோ வென்று சங்கிக்க இடமறும்படி விளக்கிலே விட்டில்விழுந்து மடியுமாபோலவும், கழுத்திலே கல்லைக் கட்டிக்கொண்டு குளத்திலே விழுந்து மடியுமா போலவும் இரணியன் தானே நரசிங்கனுடைய சீற்றத்தீயில் விழுந்து மடிந்தன னென்கிற வஸ்து ஸ்திதியினால் தேறுமது ஒன்பதாவது பாவநத்வம்.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –