ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -ஸ்ரீ சார சங்க்ஷேபம் –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

திருமந்தராதிகாரம்‌ -முன்னுரை 
ஆசார்ய லக்ஷணங்கள்‌ நிறைந்த சிறந்த ஆசார்யனை அடைந்து அவன்‌ கடாக்ஷத்தால்‌ ஞானம்‌ பெற்று ப்ர பத்தியைச்‌ செய்தவனுக்கு அந்த ப்ரயத்திக்குப்‌ பின்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களை அதுஸந்தித்துக்‌ கொண்டும்‌ அவற்றின்‌ அர்த்தங்களை சிந்தித்துக்‌ கொண்டும்‌ இருப்பது எப்பொழுதும்‌ இன்பத்தைத்‌ தரும்‌.

திருமந்த்ரம்‌' சேதநன்‌ முக்கியமாய்‌ அறியவேண்டிய 'எல்லா விஷயங்களையும்‌
சருக்கமாய்த தெரிவிக்கும்‌. இது எட்டு அக்ஷரங்கள்‌ கொண்டது. இதில்‌ மூன்று பதங்கள்‌ உண்டு. முழுதும்‌ ஒரே வாக்யமாயிருக்கும்‌-இதில்‌ முதற்பதம்‌ ப்ரணவம்‌. இந்த ப்ரணவம்‌ எல்லா வேதங்களுக்கும்‌ மூலமானது. இதைச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌
வேதத்தைத்‌ தொடங்க வேண்டும்‌. இது ஒரே எழுத்தாக உள்ளது. வேதமும்‌ ஸ்ம்ருதிகளும்‌ இந்த ஒரெழுத்தான ப்ரணவத்தை மூன்று எழுத்துக்‌ கொண்டதாகக்‌ கூறி அந்த மூன்று அக்ஷரங்களையும்‌ மூன்று பதமாகப்‌ பிரித்து ஒரு வாக்யமாக வைத்துப்‌ பொருள்‌ கூறியுள்ளன.

இந்த ப்ரணவத்தில்‌ அ-உ-ம்‌ என்ற மூண்று எழுத்துக்கள்‌ உள்ளன. இதில்‌ முதல்‌ எழுத்தான ?௮ என்பது பிராட்டியைப்‌ பிரியாத எம்பெருமானைச்‌ சொல்லுகிறது. எத்தகைய எம்பெருமானை? எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாம்‌ எல்லோருக்கும்‌ சேஷியான எம்பெருமானைக்‌ காட்டும்‌. இந்த மூன்று அம்சங்களையும்‌ அகாரம்‌ எவ்வாறு காட்‌டுகின்றது என்பதை ஆராய்வோம்‌ - உலகில்‌ சொற்களும்‌ அச்சொற்களால்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்டல்லவா? சொற்களுக்கெல்லாம்‌ மூலமான எழுத்து அ என்பது. எழுத்துக்கள்‌ ௮” வில்‌ தானே தொடங்குகின்றன! இவ்வாறே சொற்கள்‌ கூறும்‌ பொருள்களுக்கெல்லாம்‌ மூல காரணமாயுள்ளவன்‌ எம்பெருமானே-இப்படி சொற்களுக்கு மூலமான அகாரம்‌ சொற்‌ பொருள்களுக்கு மூல காரணமான எம்பெருமானைக்‌ கூறுவது பொருத்தம்‌ தானே! இவ்வம்சத்தை வாமன புராணமும்‌ காட்டுகின்றது. ஆகவே ௮ என்பதால்‌ அனைத்துக்கும்‌ எம்பெருமான்‌ காரணம்‌ என்ற பொருள்‌ தேறியது. மேலும்‌ ?௮? என்னும்‌ எழுத்து "அவ்‌? என்ற தாதுவிலிருந்து தேறுகின்றது. ?அவ்‌? என்ற வினைப்பகுதி (தாது) காத்தல்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌. இவ்வழியால்‌ எல்லோரையும்‌ காப்பவன்‌ என்ற பொருள்‌ தேறும்‌. மேலும்‌ இந்த ௮? என்னும்‌ எழுத்தின்‌ மேல்‌ ஆய: என்னும்‌ நான்காம்‌ வேற்றுமையுருபு ஏறிப்‌ பின்‌ மறைந்திருக்கின்றது. இந்த வேற்றுமை யுருபுக்கு அடிமைத்‌ தன்மை பொருளாகும்‌. இங்கு எம்பெருமானால்‌ காக்கப்படும்‌ ஜீவன்‌ அவனுக்கு அடியன்‌ என்று பொருள்‌ கிடைக்கின்றது. இப்படி ஜீவன்‌ அவனுக்குச்‌ சேஷன்‌ என்று ஏற்பட்டால்‌ எம்பெருமான்‌ ஜீவனுக்குச்‌ சேஷியாகின்றான்‌. ஆகவே எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாகத்‌ திகழும்‌ எம்பெருமான்‌ எல்லோர்க்கும்‌ சேஷியாகவும்‌ உள்ளானென்று அகாரத்தால்‌ தேறியது.-இப்படி ஜீவன்‌ அடியனாம்‌ எம்பெருமான்‌ தலைவனாய்‌
நிற்றலாகிய சேஷ சேஷிபாவமென்னும்‌ ஸம்பந்தம்‌ ஒருநாளும்‌ யாராலும்‌ நீக்க முடியாதாதலின்‌ இதனால்‌ ஜீவன்‌ சரீரமாயும்‌ எம்பெருமான்‌ ஆத்மாவாயும்‌ நிற்பதென்ற சரீர சரீரிபாவ ஸம்பந்தமும்‌ கூறப்பட்டதாகின்றது. சரீரத்தின்‌ இலக்கணத்தில்‌ சேஷதவம்‌ ஒரு பகுதியன்றோ!

வயத்தில்‌ பிராட்டியின்‌ சேர்க்கை வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இங்குக்‌
கருத்தாகக்‌ கொள்ள வேண்டியுள்ளது.ப்ரணவத்தில்‌ உ” என்பது நடுவெழுத்து. இதற்கு அவதாரணம்‌ பொருள்‌ என்பர்‌ வடநூலார்‌. அவதாரணத்தைத்‌ தமிழர்‌ தேற்றேகாரம்‌ என்பர்‌. இரண்டும்‌ பரியாயச்‌ சொற்கள்‌. அவதாரணமேென் பதற்கு அவனுக்கு மட்டும்‌” *இவனுக்கே என்ற முறையில்‌ வரையறுத்தலே பொருளாகும்‌. அ?” என்பதுடன்‌ ௨”
என்ற எழுத்துச்‌ சேரும்போது அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கே அடியன்‌ ஜீவன்‌ என்று வரையறுத்த பொருள்‌ தேறும்‌. இதனால்‌ எம்பெருமானையன்றி மற்றுள்ளாரோடு ஜீவனுக்கு இயற்கையான ஸம்பந்தம்‌ ஏதுமில்லையென்று தேறியது.
இதனால்‌ எம்பெருமானையன்றி மற்ற தேவதைகளை விலக்க வேண்டிய அவசியம்‌ ஏற்படுவதுடன்‌ மற்ற தெய்வங்களை நாடுமவர்களையும்‌ அணுகாது விலக்க வேண்டுமென்பதும்‌ தேறியது.

ம்‌” என்ற எழுத்து ஜீவனைக்‌ கூறும்‌ பொருளில்‌ உருவாவதற்கு இரண்டு வழிகள்‌ உள்ளன. (1) வடமொழியில்‌ மந்‌” என்ற ஒரு தாது (வினைப்பகுதி) உள்ளது. இந்தப்‌ பகுதிக்கு அறிவு என்பது பொருள்‌. இந்த வினைப்பகுதியினின்று வியாகரண முறைப்படி ம்‌ என்று தேறிவிடுகின்றது. அப்பொழுது ஞான வடிவான ஆத்மா
என்று பொருளாகும்‌. (2) மற்றொரு வழி - வடமொழியில்‌ அஸ்மத்‌ என்ற ஒரு சொல்‌ உண்டு. இது தன்மைப்‌ பொருளில்‌ வருவது. வேதத்திற்கு இலக்கணம்‌ தனி. அந்த இலக்கணத்தின்‌ படி *அஸ்‌.மத? என்ற சொல்லில்‌ முன்னே உள்ள அஸ்‌” என்பதுவும்‌ பின்னே உள்ள அத? என்பதுவும்‌ அழிகின்றன. எஞ்சியுள்ள பகுதி ?ம்‌* என்பதுவே. இப்படி அஸ்மத்‌? என்ற முழுப்பகுதியே *ம்‌* என்று அகியிருப்பதால்‌ அந்தப்‌ பொருளே இதற்கும்‌ உண்டு.

ம்‌” என்னும்‌ மகாரம்‌ ஜீவனைக்‌ கூறுவதாய்த தேறியது. மந்‌” என்றவினைப்பகுதியினின்று ஞான வடிவன்‌ ஜீவாத்மா என்று தேறியது போல்‌ அநந்த வடிவமாயுள்ளவன்‌ என்றும்‌ தேறும்‌. எவ்வாறெனில்‌ நான்‌ என்று ஒவ்வொருவனும்‌ உணரும்போது அந்த ஜீவன்‌ அநுகூலனாகவே தோன்றுகின்றான்‌. நூன்‌” என்று உணரும்‌ எவனுக்காவது தன்‌ ஆத்மா ப்ரதிகூலனாய்த தோன்றுவதுண்டா? ஆகவே இன்பவடிவமாகவே தோன்று கின்றான்‌ ஜீவன்‌. ஆதலின்‌ அநந்த வடிவமாயுமுள்ளவனென்றும்‌ தேறுகின்றது. இவ்வாற்றால்‌ ஞானவடிவனாய்‌ ஆநந்தவடிவனாய்‌ முன்கூறிய அடிமைத்‌ தன்மையுடையவனாயுள்ளவன்‌ ஜீவாத்மா என்று பொருள்‌ தீர்ந்தது. ப்ரணவத்தின்‌ முழுப்பொருள்‌ ப்ரணவத்தில்‌ இந்த மூன்று அக்ஷ்ரங்களின்‌ அர்த்தத்தையும்‌ சேர்த்து ஒரு பொருளாகப்‌ பார்க்கும்போது ஜீவனைப்‌ பற்றிய பின்வருமாறு உள்ள அநுஸதந்தாநம்‌ பலிக்கும்‌. அதாவது - "ஜீவாத்மா தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே நான்‌? என்று ப்ரகாசிப்பவன்‌; எப்பொழுதும்‌ அநுகூலனாகவே தோற்று. மவன்‌: தன்‌ ஞானத்தாலே வஸ்துக்களை அறிபவன்‌; தான்‌ ப்ரகாசிப்பதால்‌ வரும்‌ பயனைத்‌ தானே பெறுமவன்‌; (ப்ரக்ருதி - மஹாந்‌ - அஹங்காரம்‌ - ஜஞாநேந்தரியம்‌ ஐந்து - கர்மேந்த்ரியம்‌ ஐந்து - மனம்‌ - தந்மாத்ரங்கள்‌ ஐந்து - பூதங்கள்‌ ஐந்து ஆகிய) இருபத்துநான்கு அசேதந தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. இத்தகைய ஜீவாத்மா, எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌” எல்லோரையும்‌ காப்பவனாய்‌ எல்லோருக்கும்‌ தலைவனான சரிய: பதிக்கே இயற்கையில்‌ அடியனாயிருப்பவன்‌; வேறு எவனுக்கும்‌ அடியனாகத தகுதியூடையனல்லன்‌”. என்பதுவே. 'ப்ரணவத்தால்‌ இந்த அர்த்தத்தை அறிந்து சேதநன்‌ அநுஸந்திப்பான்‌. இப்படி ஜீவாத்மாவாகிய தான்‌ எம்பெருமானுக்குச்‌ சேஷமென்று தீர்ந்ததால்‌ தனக்கு உடைமையாயுள்ள ஸகல வஸ்துக்களும்‌ எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளனவென்றும்‌ தேறுகின்றது. உகாரத்திற்கே பொருள்‌ பிராட்டியென்று சுருதி முதலியன கூறுகின்றன. ஆகவே பரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூற.ப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌
எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌ டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது.ப்ரணவத்துக்கும்‌ நம: என்பதற்கும்‌ சேர்த்துப்‌ பொருளை ஆராய்ந்தால்‌ 'ஜீவ்னாஇய நானும்‌ என்னுடையனவாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்மையில்‌ என்னுடையனவாகமாட்டா. பிறருக்கும்‌ இவற்றில்‌
சிறிதும்‌ - உரிமையில்லை. இவை அனைத்தும்‌ மற்றவருக்கு உரிமையில்லாதவாறு எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளன? என்று அநுஸந்திக்க வேண்டியதாய்‌ முடிந்தது.

திருமந்திரத்தின்‌ பதங்களை வாக்கியமாகச்‌ சேர்த்துப்‌ பொருள்‌ பூ கண்ட பெரியோர்கள்‌ பத்துவகை அர்த்தங்களை அநுஸந்திப்பர்‌. -அந்தப்‌ பத்துவகைப்‌ பொருள்களும்‌ ஸ்ரீமத்‌ ரஹஸ்யத்ரய ஸாரத்தில்‌ விளக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன-
முன்னோர்களான பெரியோர்கள்‌ 'திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்ட்‌ டரா£வீர்‌' என்று சிஷ்யர்களுக்கு உப்தேசித்தார்கள்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading