Archive for March, 2025

ஸ்ரீ ஆழ்வார்‌ கலித்துறை யந்தாதி என்று வழங்குகிற ஸ்ரீ சடகோபாரந்தாதி–

March 31, 2025

ஆழ்வார்‌ – கடவுளின்‌ நற் குணக் கடலில்‌ முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும்‌ ஒரு வகைப் பாடலினாற்‌ செய்‌யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம்‌ – சடம்‌ என்‌னும் வாயுவை,
கோபர்‌ – கோபித்த இறைவரது என்பதாம்‌.

சடகோபரந்தாதி – சடகோபரைப்‌ பற்றிய அந்தாதி யெனவும்‌ சடகோபரது ௮ந்தாதி எனவும்‌ விரிக்கலாம்‌. இவற்றுள்‌, முன்னது இரண்டாம்‌ வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும்‌ பின்னது ஆறாம் வேற்றுமைத்‌ தொகையுமாகச் கொள்ளலாம்‌.

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –

தேவில்‌ – தெய்வங்களில்‌-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்‌- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்‌,
பாவில்‌ சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை,
பகர்‌-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்‌;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்‌கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன்‌ – நல்ல கவிஞரானவர்‌, பூவில்‌ – உலகத்தில்‌, -சிறந்த-
ஆழ்‌வான்‌ – பக்தி வெள்ளத்தில்‌ மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்‌-கம்ப நாடரென்னும்‌ வித்துவானேயாம்‌;

எல்லாத் தேவரிலும்‌ சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப்‌ பாடுதலில்‌ வல்லவர்‌ நம்மாழ்வாரேயாம்‌-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப்‌ பாடுதலில் சிறந்தவர்‌ கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்‌-மற்றைத்‌ தேவர்களைப் போலாகாமல்‌ உயிர்களிடத்தில்‌ அந்தர் யாமித்‌துவமுடைமையால்‌ தேவிச் சிறந்த திருமாலென்றார்‌. சிவ பிரானிடத்தில்‌ உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப்‌ பொருந்திய பாடல்‌களைப்‌ பாடப் பெற்றதனால்‌ தெய்வக்கவி யென்றார்‌. ஏனைய நூல்கள்‌ போலாகாது இருமைப் பயனுந் தருதலால்‌ பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார்‌. பண்டிதன்‌ -ஞான பண்டிதருமாம்‌, மாறன்‌ – ஆழ்வார்‌-பிறந்த பொமுது அழுதல்‌, விம்முதல்‌, பால் குடித்தல்‌ முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல்‌ உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால்‌ மாறன்‌ என்று பெயர் பெற்றார்‌. பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும்‌ அமையும்‌. கம்பநாடு – முதலில்‌ இது வெண்ணெயூர்‌ நாடாக விருந்து பின்‌பு கம்பர் காலத்தில்‌ அவர் பெயரால்‌ மாற்றப் பட்டமையால்‌ கம்பநாடென்றார்‌. பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம்‌ ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால்‌ புலமையனென்றார்‌–கவிஞன்‌-ஞ்‌ -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல்‌ என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும்‌ தேற்றம்‌.

———

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

ஆரணத்தின்‌ – வேதத்தின்‌,
சிரம்‌ மீது – முடிவிடத்‌திலே,
உறை : பொருந்தி யிருக்கின்‌ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம்‌ – அழகிய,
தமிழால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌,
பாரணம்‌ செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல்‌ பல ௮ – பலபலவகையாக ,
நாரணன்‌ ஆம்‌ என–இவர்‌ நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்‌பனை – கம்பரென்னும்‌ புலவரை (யாம்‌,) உள்‌ – எமது மனத்தில்‌,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம்‌ – கருதுவோம்‌;

வேதாந்தத்தின்‌ மேல்‌ விளங்குஞ்‌ சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம்‌ உள்ளங் களிக்கும்படி தியானிப்‌போம் என்பதாம்‌, உபநிஷத்துக்களிலும்‌ உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்‌-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால்‌ ஆரணத்தின் சிரமீதுறை என்றார்‌. எல்லாரிலும்‌ மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால்‌ சோதி யென்றார்‌, செய்யுளிடத்தன்றி உலக நடையில்‌ மாந்தர்‌க்குப்‌ பயன்படாமலும்‌ தமக்கென்று ஓர்‌ இடமில்லாமலும்‌ இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல்‌ ௮வை யெல்லாமுடைமையால்‌ அந் தமிழ் என்றார்‌. திருமாலால்‌ அளிக்கப்படுவன யாவும்‌ தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப்‌ பல முகத்தாலும்‌ இவர்‌ நாராயணனே யாவார் என்பதைக் கம்பர்‌ குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம்‌ – வேதத்திக்குச்‌ சினை யாகுபெயர்‌.
சோதி – உவமை யாகுபெயர்‌. யாம்‌ -தோன்றா எழுவாய்‌, நினைவாம்‌-பயனிலை-

———-

நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

வேதம்‌ – வேதங்களின்‌ கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ்‌ -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம்‌ பெருமாள்‌ – எங்கட்கிறைவனாகிய மாயோன்‌,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால்‌ – அன்பினால்‌ (கம்பரை நோக்கி ),
நம்‌ சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன்‌, கம்பன்‌—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல்‌ -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும்‌ நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும்‌ – நூறு கலித் துறைப் பாடல்களும்‌,
தெரியும்‌ வண்ணம்‌ – நான்‌ அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில்‌ பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்‌-கொடுத்தருளுவீர்‌;

வேதத்தைத்‌ தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள்‌ சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும்‌ கம்பர் பாடிய அந்தாதியைத்‌ தெரிந்து கொள்ளும் வண்ணம்‌ அடியேனுக்கு மனத்தைக்‌ கொடுத்‌தருளுவீர் என்பதாம்‌. வேதம்‌ நான்கு;-இருக்கு , எஜூர்‌, சாமம்‌, அதர்வணம்‌. இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில்‌ நம்மாழ்வார்‌ செய்த
பிரபந்தங்கள்‌ முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன்‌ தான்‌ ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின்‌ மிகுதியால்‌ தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும்‌ நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும்‌ அன்பொத்திருக்கச்‌ சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும்‌ தம்மைக் கம்பர்‌ பாடி யிருக்கவும்‌ அவற்றால்‌ திருப்தி யுறாமல்‌ சடகோபனைப்‌ பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார்‌. பெருமாள்‌ – உயர்‌ திணை யிருபாற்‌ பொதுப் பெயர்‌, கம்பன்‌-சாதிப் பெயர்‌, உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்‌-வேதங்களை,
தமிழ்‌ செய்‌த-தமிழ்ப் பாடல்களாகப்‌ பாடி யருளிய,
மெய்ப்‌ பொருளே – தத்‌துவ ஞான மூர்த்தியே !
நாதன்‌ – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான்‌, (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்‌பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல்‌ கம்பன்‌.-சிறந்த கம்பரென்னும் புலவர்‌, உன்‌ தன்‌ – உம்முடைய,
பாதம்‌ – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ்‌ – பசுந்‌ தமிழ்ப் பாடல்‌கள்‌-நூறும்
பரிவுடன்‌ – (யான்‌) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும்‌ வண்ணம்‌, எனக்கு—-உள்ளம்‌ தனை – மனத்தினை,
அருள்‌ – திருத்தி யருள வேண்டும்‌,
என்‌ – எனது ,
விண்ணப்பம்‌ – வேண்‌டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்‌; –

வேதத்தினைச்‌ தமிழிற்‌ செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன்‌ கட்‌டளையால்‌ கம்பர்‌ உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப்‌ படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம்‌, அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள்‌ அளவில்லாத பகுதியன ஆதலால்‌ ஓதரிய என்றார்‌-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால்‌ பாடலென்று கூறாமல்‌
இன்பமென்ற. பொருள் படும்‌ தமிழென்றார்‌-எல்லா வூழிகளிலும்‌ அழியாதிருத்தலால்‌ நாதனென்றார்‌. அப்படி யிருப்பதை அறியா , மனிதரும்‌ ௮றிந்து தர்ஸித்து நன்‌மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ கொண்டெழுந்தருளினமையால்‌ அரங்கனென்றார்‌. எத்தனையோ புலவர்‌ தோன்றியிருந்தும்‌ இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும்‌ புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால்‌ நற்கம்பனென்‌றார்‌-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந்‌ தருதலின்‌ பைந் தமிழ் என்றார்‌.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார்‌ பிறரும்‌, கம்பன்‌ – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர்‌ – இயற் பெயர்‌ புலப்பட வில்லை ; பெரியோர்களின்‌ இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்‌ற அப் பட்டப்‌ பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்‌- ‘ஐயரவர்‌கள் பிள்ளையவர்கள்‌, செட்டியாரவர்கள்‌’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல்‌ போல அக் காலத்திலிவரைக்‌ கம்பரெனக் கூறுதலுண்டென்‌றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன்‌, தன்‌- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்‌.-ஓத அகரம் தொக்கது,

———-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
.–தற் சிறப்புப் பாசுரம்

——–

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே
.– 1-

தொல்லை – பழமையும்‌,
மூலம்‌ – எல்லாவற்றிற்கும் காரணமும்‌,
பரம்‌ – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்‌,
வேதத்தின்‌ முன்‌ செல்க – வேதங்களின்‌ ௮ளவைக் கண்டது போவனென்‌றாலும்‌ போவானாக ;
மெய்‌ உணர்ந்தோர்‌ – உண்மை நிலையை அறிந்‌தவராகிய,
விரிஞ்சன்‌ முதலோர்‌ – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்‌
அற்ற – நீங்கிய,
ஞானம்‌ – ஞானத்தின்‌,
கொழுந்தின்‌ முன்‌-முடியைக் கடந்து போவனென்றாலும்‌,
செல்க – போவானாக ;
தென்‌-அழகிய,
குருகூர்‌ – குருகூரென்னும்‌ பதியிலவதரித்த,
குணம்‌ கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம்‌ கடல்‌ – ஞான சாகரமாகிய,
எங்கள்‌ புனிதன்‌- எங்களுக்கு மேலாய்‌ விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்‌களின்‌,
ஓர்‌ பாதத்தின் முன்‌ – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்‌];

திருமால்‌, வேதத்தினெல்லையையும்‌ அறிவுடையவர்‌ ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும்‌ சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும்‌ வலியிலனென்பதாம்‌. எனவே திருமாலின்‌ செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும்‌ வேண்டுவன உணர்த்தும்‌ வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால்‌ வேதத்தின்‌ முன்‌ செல்க வென்றும்‌ குணாதிதரான நம்மாழ்வார்‌ பாடலில்‌ அங்ஙனம்‌ ஒரு பாதமுமில்லாமையால்‌ பாதத்தின்‌ முன் செல்லுமே யென்றுங்‌ கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர்‌ ஞானத்துக்கும்‌ முதலடியிலேயே மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்ற நம்மாழ்வார்‌ ஞானத்துக்கும்‌ மிகுந்த ஏற்றத் தாழ்வுண்‌டாதலால்‌ விரிஞ்சன்‌ முதலோர்‌ கோதற்ற ஞானக் கொழுந்தின்‌ முன்‌ செல்கவென்றும்‌ பாதத்தின் முன்‌ செல்லுமே யென்றுங்‌ கூறினார்‌, இது மெய் யுணர்ந்தோர்‌ என்‌றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்‌பது விளங்கும்‌, வேதம்‌ – மங்கலச்‌ சொல்லாதலின்‌ முதவிலெடுத்‌துக் கொண்டார்‌, இது விருத்தப் பொருத்தமாயினும்‌ பெரியோராட்சியிற்‌’குற்றமில்லையென்‌க -. மெய் யுணர்ந்தோர்‌– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்‌.-முதலோரென்‌றதனால்‌ இந்திராதியரையுங்‌ கொள்க – கோதற்ற ஞானம்‌ – ௮மல ஞானம்‌. குணங்கள்‌ தந்த எனப்‌ பிரித்‌துத்‌ திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத்‌ தந்தருளுகின்ற என்றலுமாம்‌.-தென் குருகூர்‌ – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும்‌, எல்லோரிலுஞ்‌ சிறந்தவராதலால்‌ புனிதனென்றார்‌. முன்‌ – இடைச் சொல்‌ ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர்‌ – பெயரெச்சமுற்று, செல்‌லுமே, ஏ-எதிர்மறை, சுடர்‌ – உவமை யாகுபெயர்‌-

————-

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.
2-

பண்டு- முற்காலத்தில்‌,
சுடர்‌ இரண்டே-சூரியனும்‌ சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்‌),
எம்‌ பிறப்பை – எமது பிறவியை,
அடர்‌ – போக்கிய,
இரண்டு ஆம்‌ – இரண்டாகிய,
மலர்‌ தாள்‌, உடையான்‌ -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும்‌, குருகைக்கு – குருகூருக்கு,
அரசன்‌ – தலைவரும்‌,
படர்‌ – பரவிய,
இரும்‌ – பெரிய,
கீர்த்தி பிரான்‌ – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார்‌ (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய்‌ மொழி யென்னும்‌ பிரபந்தத்தினது ,
பாவொடும்‌ – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்‌,
இரண்டு இடர்‌ஆய்‌ – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும்‌ – வந்து பற்றிக்‌ கொள்கின்ற,
பேர்‌ இருள்‌ – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்‌களென்று மேம் பட்டு விளங்கலாயின ;

முன்னாளில்‌ சூரியன்‌ சந்திரனென்னும்‌ இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால்‌, உயிர்களின்‌ மனத்திலுள்ள இருளைப் போக்‌க வேண்டிப்‌ பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும்‌ கெடுத்து முச் சுடராயின வென்பதாம்‌-உலகத்தின்‌
பேரிருளைக்‌ கெடுத்தற்குத்‌ திருவாய்மொழி வேண்டுமானாலும்‌ நம்மாழ்‌வார்‌ திருவடிகளில்‌ அன்பு பூண்ட தமக்கு ௮வர்‌ திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும்‌ மணம் பெறுதல் போலத்‌ திருவாய்மொழிப்‌ பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்‌-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால்‌ அவ் விராமபிரான்‌ சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும்‌ கண்ணபிரான்‌ அருச்சுனனை நோக்கிக்‌ கீதை யருளிச் செய்தமையாலும்‌ இங்கு-வீடுமின்‌ முற்றவும்‌!” என்று எல்லா வுயிர்களையும்‌ நோக்கி யருளிச் செய்‌தமையாலும்‌ இத் திருவாய்மொழியே ௮வரினும்‌ சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள்‌ நல்வினை மீண்டும்‌ பிறவியைத் தருதலால்‌ இரண்டினையும்‌
சேர்த்து இடரென்றூர்‌ ; இருள்‌ என்பதும்‌ இக் கருத்துப் பற்றியேயாம்‌ :
‘* இருள் சேரிரு வினையும்‌”’ என்றார் பிரரும்‌. ஒருவன் செய்யும்‌ நன்மையால்‌ அவனைச்‌ சார்ந்த பலரும்‌ மேம் படுவாராதலால்‌ தாம்‌ ஒருவர் துதித்‌தலினால்‌ தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும்‌ நீங்குதல் பற்றி எம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌. இரண்டே, ஏ- தேற்றம்‌, மலர்த்‌ தாள்‌ – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத்‌ தொகை,

————

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே
. 3–

குருகூர்‌. -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்‌) மலரில்‌,
ஒடுக்கும்‌ -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம்‌ – அமிர்‌தம் போன்ற,
திரு ஆயிரம்‌ – சிறந்த ஆயிரம்‌ பாடல்களும்‌, போந்தன.-வெளி வந்தவைகள்‌ தாம்‌,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்‌,
ஒடுக்கும்‌ – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்‌,
ஒடுக்கும்‌—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும்‌ – வேறாகிய பலவற்றையும்‌, பறையும்‌ – மாறுபடக் கூறுகின்‌ற,
நா – புறச் சமயிகளின்‌ நாவினை,
ஓடுக்கும்‌ – அடக்கி விடும்‌ ;
நல்‌ ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும்‌ – தன்னுள்ளடக்கி யிருக்கும்‌ ; மற்றும்‌ – அன்றியும்‌,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்‌தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்‌,
ஒடுக்கும்‌ –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம்‌ – வேறாகிய (மதங்களின்‌),
வாதம்‌ – விவகாரத்‌தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும்‌ – அடக்கி விடும்‌

பாடல்களினுறுப்பக்கள்‌ பலவற்றையும்‌ நிறையப் பெற்றிருப்பதனால்‌ பாவொடுக்கு மென்றார்‌-சிவபிரான்‌ திருக்கையிலேந்திய வெண்டலையால்‌ பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப்‌ பண்களின்‌ வழியில்‌ விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும்‌ பெற்றிருப்பதனால்‌ நுண்ணிசை யொடுக்குமென்றார்‌. நம்மாழ்வார்‌ கொண்ட கொள்கைச்கு மாறாகப்‌ பிதற்று்கின்றவர்‌ நாவினை அடங்கச் செய்தலால்‌ பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்‌; காலையில்‌ நறுமல ரொன்றக்‌ கட்டிய, மாலையினியல்‌
புரை சமய வாதியர்‌, சூலையின்‌ திருக்கலாற்‌ சொல்லுவோர்க்கெலாம்‌,
வேலையும்‌ திரையும் போல்‌ வேறு பாடிலான்‌ ” என்றபடி எல்லா மதத்தையும்‌ தன்னுளடக்கிக் கொண்டவனாதலால்‌ தேவொடுக்கும்‌ பரவாதமென்றார்‌. இறந்தாரைப் பிழைப்பிக்கும்‌ அமுதம் போலசத் தீவினையிலழிவார்‌ தாம்‌ நினைத்த மாத்திரையில்‌ அவரை அதினின்று நீக்குதலால்‌ இறந்தாரைப்‌ பிழைப்பிக்கும்‌ ௮முதத்தை அத்‌ திருவாய் மொழிக்கு உவமை கூறினார்‌.-இறைவனருளாற்‌ பாடியதன்றி ஆழ்வார்‌ தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்‌; முந்தை ஆயிரம்‌” என்‌ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும்‌ நித்தியமான வேதத்தைப்‌ பிரமதேவர்‌ வெளியிட்டது போலத்‌ திருவாய்‌ மொழியையும்‌ ஆழ்‌வார்‌ வெளியிட்டனர் என்பதும்‌ இதனால்‌ விளங்கும்‌, ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம்‌ –
இவற்றிலுள்ள நகர மகரங்கள்‌ விரித்தல்‌ விகாரம்‌, பூ – உவமை யாகு பெயர்‌-

——–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே
. 4-

தொல்லை- பழமையாகிய,
எர்‌- அழகிய,
வகுளம்‌ – மகிழம் பூக்கள்‌ தொடுத்த ,
வனம்‌ – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்‌பெருமான்‌ – எமது தலைவராக,
குருகூர்‌ மன்னன்‌ – குருகூரிலவதரித்‌த நம்மாழ்வாரது ,
வாய்‌ மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம்‌ ஆம்‌-செல்வப் பொருளாகும்‌;
சிலர்‌க்கு— தவம்‌ ஆம்‌ – தவமே யாகும்‌; சிலர்க்கு–தருமம்‌ நிறை -புண்ணியமிகுந்த, கனம்‌ ஆம்‌ – பெரும் சிறப்புமாகும்‌ ;
சிலர்க்கு- ந அதன்‌-காரணம்‌ ஆம்‌-அப் பெருஞ்‌ சிறப்புக்குக் காரணமுமாகும்‌ ;
சிலர்‌க்கு –;.,ஆரணத்தின்‌ இனமாம்‌ -வேதத்தின்‌ பகுதியாகும்‌;
அதற்கு-அந்த வேதத்தின்‌ பகுதிகள் அனைத்துக்கும்‌,
எல்லையும்‌ – முடிவாய உப நிஷத்துக்களும்‌,
ஆம்‌ – ஆகும்‌;

குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருவாய் மொழி யானது செல்வம்‌ முதலியவற்‌றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்‌.-திருவாய் மொழி தமிழ்ப்‌ பிரபந்தமாதலால்‌ அந்தத்‌ தமிழுக்குரிய தெய்‌வம்‌ தான்‌ ௮ந் நூலைப்‌ பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார்‌ -தனத்தை வேண்டு வார்க்குத்‌ தனமும்‌ தவத்‌தை விரும்பினவர்க்குத் தவமும்‌ பெருமையை விரும்பினவர்க்குப்‌ பெருமையும்‌ அதன்‌ காரண்முமாமென்றார்‌- அத் தெய்வமும்‌ வேறன்று வேதத்தினுள்‌ விளங்குவதென்பதை விளக்குவார்‌ ஆரணமாமென்றும்‌ வேதமும்‌ வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார்‌ -அதன்‌ எல்லை யென்றும்‌ ஆரணம்‌ பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும்‌ பழமையே யெனக்‌ கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்‌-அன்றியும்‌ உலகத்தில்‌ தனம்‌ இம்மையின்பத்திற்கே உரியது ; தவம்‌ -மறுமையின்‌பத்திற்க்கே யுரியது இம்மைக்குப்‌ பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால்‌ தனமென்றும்‌ தவமென்றுங்‌ கூறினார்‌ என்றலுமாம்‌-

—————-

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே
–5-

குளிர்‌ – குளிர்ந்த,
நீர்‌- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்‌- பற் பலவாசச்‌ சுழித்து, ஒழுகும்‌ – ஓடுகின்ற,
குருகூர்‌- குருகூர்‌ என்னும் பதியில்‌,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்‌,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம்‌ – ஓழுங்‌கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்‌- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்‌,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்‌,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம்‌ குழி- நரகக் குழிகள்‌,
பல ஆயின – பல வாயின வெல்லாம்‌,
பாழ்‌ பட்டது – பாழாயிற்று-

குருகூரில்‌ நம்மாழ்வார்‌ ௮வதரித்தலால்‌ பாஷைகளில்‌ ஓழுங்கென்‌பது தோன்றிற்று -முத்தி மார்க்கம்‌ ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்‌று என்பதாம்‌. செந்தமிழ் மொழியில்‌ மாறுபட்டுக் கிடந்த துறைகள்‌ பலவும்‌, சடகோபர்‌ திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப்‌ பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால்‌ செப்பம்‌ பிறந்ததென்றார்‌-வழுவா நரகம்‌.-.தீவினை செய்தாரைத் தப்பாமல்‌ விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப்‌ பாராயணஞ்செய்வோரும்‌ அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும்‌ கேட்போரும்‌ முத்தியையே – அடைதலால்‌ நரகக் குழி பாழ்பட்ட தென்றார்‌.-மொழி யென்பதற்குப்‌ பதமென்ற பொருள்‌ கொண்டு கட படாதி சப்தங்கள்‌. அவ்‌வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால்‌ மொழி பலவாயின தென்றும்‌ திருவாய் மொழியிலுள்ள எல்‌லாப்‌ பதங்களும்‌ அவ்‌வப் பொருள்களின் நினைவில்‌ நில்லாது எம்பெருமான்‌ வரையிற்‌ சென்றுணர்த்தினமையால்‌ செப்பம்‌ பிறந்தது என்றும் கூறினுமமையும்‌-இவ் வாழ்வாரவதரித்ததன்‌ பின்‌ பலலா யிருந்தன சுழிகளே யன்‌றிப்‌ பிறவில்லை யென்பார்‌ பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார்‌. செப்பம்‌-பண்புப் பெயர்‌, ஆய-வினைப் பெயர்‌-

————–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே
. 6-

பல காலும்‌ : பல தரமும்‌,
தம்மில்‌ -தமக்குள்‌,
மூன்று ஆயினவும்‌ – மூன்‌று பகுதியாகி அமைந்தவற்றையும்‌,
நினைந்த—
ஆரணத்‌தின்‌ – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான்‌ – அருளிச் செய்தவரும்‌,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான்‌ – பெரியவரும்‌,
எம்பிரான்‌ – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப்‌ பாடல்கள்‌,
தோன்றா- பலராலும்‌ ௮றியப் படாத உபநிடதம் பொருள்‌-உபநிஷதத்தின்‌ கருத்‌துக்களை,
தோன்‌றல்‌ உற்றார்‌ தமக்கும்‌ – அறியப்‌ பெற்ற பெரியோர்களுக்கும்‌,
சான்று ஆம்‌ – சாட்சியாகி விளங்கும்‌,
என்‌ற போது – என்று சொல்லிய காலத்தில்‌,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என்‌ -யாது வேண்டும்‌-

ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்‌று கூறுபடுத்‌திக் காட்டி யிருப்பதைத் தம்முள்‌ ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர்‌ நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள்‌ உப நிஷதத்தின்‌ கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில்‌ சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச்‌ சந்தேகங்களை ஒழிக்குமானால்‌ இதன்‌ சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம்‌. ௮ரிய தத்வ ஞானத்தைப்‌ பெறத் தக்க புண்‌ணிய முடையார்க்கன்‌றிப்‌ பிறர்க்கு வெளிப் படாமையால்‌ தோன்றா வுபநிடசப் பொருளென்றார்‌. தோன்‌றலுற்றார்‌-இங்கு மதுர கவியாரும்‌, நாத முனிகளுமாம்‌; எப்படி யெனில்‌? ஆழ்வாரைக்‌ கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள்‌ உண்டாகி இக் கண்ணி நுண்‌ சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்‌-12000-தடவை ஒதினமையால்‌ முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின்‌ மனத்தில்‌ தோன்‌ற- இவர்‌ தம் மனத்தில்‌. ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார்‌ பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்‌-இயற் றமிழ்‌, இசைத் தமிழ்‌, நாடகத் தமிழ்‌ ; இயற்றமிழ்‌ – இலக்கண அமைதியை
யுடைய தமிழ்‌, -இசைத் தமிழ்‌- இராக: அமைதியை யுடைய தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ வெளிப்படை, எம்பிரான்றன்‌, தன்‌-சாரியை,

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே.
7-

கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம்‌ – உணவினை,
இசையின்‌ – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன்‌ – கண்ணபிரான்‌,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்‌பான்‌ – சமைத்துச் குவிப்பவரும்‌, குருகை – குருகூரில்‌ அவதரித்த,
பிரான்‌ – பெரியோரும்‌,
சடகோபன்‌ – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்‌,
குமிகொண்கன்‌ -குமரி நாட்டுக்குத் தலைவரும்‌,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம்‌ – வித்துவான்‌களுக்கு,
பிரான்‌ – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்‌-நிலத் தேவர்களாகிய பிராமணர்‌ களுடைய,
செவிப்பால்‌ – காதுகளின்‌ வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்‌தினிடத்திலே, நின்‌று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்‌- இனிய சுவையை உண்டாக்கும்‌-

ஆழ்வார்‌, பாடலாகிய சோற்றினையும்‌ இசையாகிய கறி முதலியவற்‌றையும்‌ கண்ண பிரான்‌ உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர்‌ செவியின்‌ வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம்‌. இப் பாடல் முழுவதம்‌ உருவகப் படுத்தினமையால்‌ முற்றுருவகம்‌. சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப்‌ பரசுராமன்‌ ஸ்தாபித்‌திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும்‌ இது சூழ்ந்த நாட்டிற்குக்‌ குமரி நாடென்றும்‌ பெயராயிற்று-ஆழ்வார் பாடல்‌களையே புலவர்கள்‌ மேற் கோளாகக் கொள்கின்‌றமையால்‌ பாவலர்‌ தம்‌ பிரானென்றார்‌. புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும்‌ பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின்‌ ௮வருள்ளத்‌துள்ளே தித்திக்குமென்றார்‌. அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்‌று இடையர்கள்‌ கண்ணன் உண்ணக் குவித்தாரேனும்‌ ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப்‌ பூசுரரும்‌ சுவைத்து மகிழ்வதாயிற்று-

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

—————

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
8-

குருகை – குருகூரிலவதரித்த,
பிரான்‌ – சடகோபர்‌,
சொன்ன——, ஆயிரம்‌- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்‌,
தித்‌திக்கும்‌’- இனிமை செய்கின்‌ற
மூலம்‌ -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்‌; (அன்றியும்‌), தெய்‌வம்‌ உண்டு என்பார்‌ – தெய்வங்கள் இருக்கின்‌றன என்று சொல்லுவர்‌களுடைய,
பத்‌திக்கு மூலம்‌ – பக்திக்கும்‌ இதுவே காரணமாகும்‌
பனுவற்க்கும் – வரவாற்‌று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும்‌, மூலம்‌—-;
பவம்‌-பிறவியை,
அறுப்பார்‌ – போக்கத் துணிந்தவர்கள்‌, முத்திக்கும்‌ – முக்தி யடைவதற்கும்‌–மூலம்‌ முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள்‌ நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார்‌ -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்‌-போக்‌குகைக்கும்‌, மூலம்‌ —;

அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின்‌ அமுதத்தை உவமித்தார்‌. அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம்‌. ௮ங்ஙனம்‌ ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும்‌ பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்‌து நிற்றலால்‌ முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால்‌ மொய்‌
குழலார்‌ அத்திக்கு மூலமாகாது – அன்றியும்‌ பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம்‌ அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும்‌ சிற் சில நாளில்‌ இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின்‌ மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்‌டாரில்‌, பல் பகற்‌
றுய்த்த வின்பம்‌ பழுதெனக்‌ கவல்ப கண்டாய்‌ ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம்‌, அன்றியும்‌ நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.

————

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.
9-

தண்‌ – குளிர்ச்சியான,
அம்‌ – நீர் வளமுடைய,
குருகூர்‌ சேய்‌ – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்‌,
மா -சிறந்த,
இரு மரபும்‌ – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்‌,
செவ்‌வியான்‌ – சிறந்‌த மரபினருமாகிய சடகோபர்‌, செய்த—,
செய்யுட்கள்‌-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும்‌ – சிறந்த ஆயிரமென்‌ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்‌,
அலங்காரம்‌ – அழகு செய்வனவாகும்‌ ;
௮ரும்‌ தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம்‌ – வரலாற்று முறையாகும்‌ ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம்‌ – ஒப்புக் காண்‌பதற்குரியனவாம்‌
பனுவற்கு எல்லாம்‌-எல்லா வகைப்பட்ட நூல்களுக்‌கும்‌ –
தாய்‌ -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்‌;
இரு நால்‌ திசைக்கும்‌ – எட்டுத் திக்குக்கும்‌,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம்‌ – விளக்குமாகும்‌;

குருகூராழ்வாரருளிய பாடல்கள்‌ சாம வேதத்துக்கு அழகு செய்‌வனவாம்‌.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும்‌ ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்‌; பனுவலுக்குத் தாயாகும்‌ ;எட்டுத் திக்குக்குக்‌ தீபமாகுமென்பதாம்‌. ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர்‌ விரும்புமாறு அணிகளால்‌ ௮ணியப் படுவன போல பொருள்‌ மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார்‌. சிவ பெருமான்‌ முருகக் கடவுள்‌ நிதியின்‌ கிழவன்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களும்‌, வான்மீகியார்‌ கெளதமர்‌ மார்க்கண்டேயனார்‌ ௮கத்தியனார்‌ முதலாகிய முனிவர்களும்‌ ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன-ஒருவன்‌ பாடுக வென்றவுடன்‌ பாடுதல்‌ ஆசு கவியாகும்‌; இனிய சுவைகள்‌ ஒன்பதும் தோன்‌றப் பாடுதல்‌ மதுர கவியாகும்‌.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம்‌, ஏக பாத மெழுகூற்‌று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங்‌ கொளவே வாவன்‌ ஞாற்று நாக பந்தம்‌’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல்‌ சித்திர கவியாகும்‌.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும்‌ அமைத்து விரிவாகப் பாடுதல்‌ விஸ்த்தார கவியாகும்‌. பாயிரம்‌ — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம்‌, தமிழில்‌ இவ் வண்ணம்‌ பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால்‌ படிச் சந்தமென்றார்‌. பனுவல்‌, பலவகைய ; ௮வை ;–அறநூல்‌, பொருள் நூல்‌, காமநூல்‌, வீட்டுநூல்‌ என்பன. இந் நான்கும்‌ திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால்‌ தாயென்றார்‌, உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்‌

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து
–ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து
–இடைக்காதர்

————–

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே
. 10-

அருவி – அருவி நீர்கள்‌,
செய்‌ – வயல்களில்‌,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான்‌ – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள்‌ – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர்‌ கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார்‌ (அதனை அறிந்தும்‌), அவன் -௮ந்‌தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம்‌ – தாமரை மலர்களை,
பெய்யோம்‌ – பூஜித்து அறியோம்‌
அவன்‌ புகழ்‌ – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய்‌ – பிறர்‌ நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்‌-திரிந்து அலைந்திலோம்‌; (அவன்‌) உபகாரத்தின்‌ – அவர்‌ நமக்குச் செய்‌த நன்றியின்‌,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும்‌ – எப்போது அறியப் போகிறோம்‌?
ஐயோ -ஐய ஓ ! என்னே!

திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்‌; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத்‌ தொண்டும் செய்தறியோம்‌; அவருபகாரத்தின்‌ பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம்‌ “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்‌’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும்‌ ‘“வாணார்‌ நுதலார்‌ வலைப்பட்‌ டடியேன்‌ பலவின்‌ கனி யீந்‌தது போல வதன் முன்‌ -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்‌’ எம்பெருமான்‌. நமக்குச் செய்யும்‌ பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப்‌ பார்த்துக்‌ ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்‌.
அருவி நீர்‌ வயலில்‌ சென்று பாய்தல் போல்‌’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின்‌ கருத்து –
மற்றும்‌ அருவி நீர்‌ வயல்களை விளையச் செய்வது போல்‌ ஆழ்வார்‌ மாயோனைக் காட்டிப்‌ பக்தியை விளையச் செய்தாரெனினும்‌ பொருந்தும்‌-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்‌.-பெய்யோம்‌, திரியோம்‌-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும்‌ – தன்மைப்‌ பன்மை எதிர்கால வினை முற்று,

———

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே
. 11-

ஆற்றில்‌ – பொருநை யாற்றில்‌,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின்‌ தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும்‌ மறைகள்‌ வேற்றில்‌ – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்‌,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள்‌ எல்லாம்‌ -எல்லாப் பொருள்களும்‌,
விழும்‌ – (யாவரும்‌) விரும்பத் தக்க ,
மா கமலம்‌ – சிறந்த தாமரைகள்‌,
சேற்றில்‌… பொதி அவிழ்க்கும்‌ – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்‌-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர்‌ செய்தருளிய,
செம்‌ சொல்‌ பதிகம்‌ நூற்றில்‌ – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும்‌, பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்‌-பொருள்களில்‌,
ஒரு கூறும்‌-(நூற்றில்‌) ஒரு பகுதி யளவும்‌, நுலல்கில – சொல்லினவில்லை;

பலவாகிய வேதங்களெல்லாம்‌ ஆழ்வார்‌ திருவாய்‌ மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்‌களவும் கூடக்‌ கூறின வில்லை யென்பதாம்‌-அனந்தாவை வேதா: என்றதனால்‌ ஆற்றின்‌ மணலின்‌ தொகை மறைகளென்றார்‌-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப்‌ பக்றுளி மணலினும்‌ மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும்‌ பலவே’” என்பன முதலாகப்‌ பிற சான்றோர்களும் கூறுதல்‌ காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம்‌, பெளடிகம்‌, தலவகாரம்‌, ௭சு , சாமம்‌, அதர்வணம்‌ என்பன,-திருமாலும் யீசனும்‌ பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால்‌ செஞ்சொலென்றார்‌. பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால்‌ பதிகம் என்றார் -நூற்றில்‌ என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்‌டிப்‌ பொருள் கொள்ளுதல்‌ சிறப்பு- மாக் கமலம்‌ சேற்றில் பொதியவிழ்க்‌குமெனவே சேற்றில்‌ தாமரை மலர்‌தல் போல தகுதியில்லாத உயிர்‌கள்‌ உலக மயக்கத்‌தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார்‌ மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்‌

——–

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே.
12-

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்‌,
துறை–அஃது, இவ்விடத்‌து இவ்வியல் தென்றல்

பல – பற்பலவாகிய,
வேதமும்‌ – வேதத்தின்‌ ௧ருத்தை யெல்‌லாம்‌,
செம்‌ தமிழ்‌ சொற்களால்‌ – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான்‌ – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்‌-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்‌-சில இதழ்கள்‌,
இலவே – நிறத்தில்‌ முள்ளிலவ மலரேயாம்‌; உள்‌ – அவ்விதழ்‌களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்‌,
உளவே- சில உள்ளனவாம்‌;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும்‌ – சொல்லப்படுகின்‌ற,
மொழியும்‌ – வார்த்தைகளும்‌,
சிலவே – சிலவுண்டாம்‌;
அவை – அவ் வார்த்தைகள் தாம்‌,
செழும் தேன்‌ – செழுமையான தேனை, ஓக்கும்‌ – நிகர்க்கும்‌;
(இன்னும்‌ அத் தாமரை மலரிலே), இரண்டு சலம்‌ வேல்களும்‌ – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்‌,
உளவே-உள்ளனவேயாம்‌;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான்‌, என்‌ – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்‌;
காண்‌ – நீ சென்று அதனைப் பார்‌;

நண்பனே! யான்‌ கருதிய தலைவியினிடம்‌ ஆழ்வார்‌ குருகூர்‌; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும்‌ முல்லை யரும்பொத்த பற்களும்‌ தேனொத்த சொற்களும்‌ தாமரை மலர்போன்ற முகமும்‌ வேல் போன்ற கண்களுமாம்‌; ௮ந்தப் பெண்‌ என்னுயிரே யாவளென்பதாம்‌. அவள்‌ எவ்‌விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம்‌ குருகூரென்றான்‌–இயல் எவ்‌வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான்‌. மொழி பெறாது வருந்‌திய தலைவன்‌ அவள்‌ வறிது நகைத்தலை இயற்கைப்‌ புணர்ச்சியிற்‌ கண்‌டனனாதலின்‌ இதழுள்‌ முல்லை யுளவென்றான்‌. அவள்‌ வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின்‌ சிலவே சொல் என்றான்‌. பிற்பாடு அச் சொல்லைப்‌ பெறாமையால்‌ சில வென்றான் எனினுமாம்‌. அருமையைச்‌ செய்தலால்‌ தேனொக்குமென்றான்‌. தன்‌
மனத்தை ௮வள்‌ வசப்படுத்தலால்‌ முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள்‌ விழிகள்‌ தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால்‌ சல வேல்களென்‌றான்‌. ௮வள்‌ இன்றியமையாமையின்‌ என்‌ உயிரென்றான்‌. கைகோள்‌-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர்‌ – பாங்கன்‌-இடம்‌-முன்னிலை–காலம்‌ – இறந்த காலம்‌, மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல்‌. இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்‌கள்‌, இயம்பும்‌ மொழியும்‌ – விரித்தல் விகாரம்‌, உள-முதல்‌ விளக்காக இரண்டிடத்தும்‌ கூட்டப்பட்டது.

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

———-

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே
. 13

உருக்கும்‌ நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்‌- தயிரையும்‌,
திருடி திருடி-ஆயர்பாடியில்‌ எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான்‌ – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன்‌ – சடகோபனென்னும்‌ பெயருடையவரும்‌,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர்‌ – நுண் மணலையும்‌ கொணர்ந்து, உருக்கும்‌ – கரை யோரங்களில்‌ ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல்‌ – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர்‌ – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்‌வராகிய பராங்குசரது ,
அம் தமிழ்‌ – அழகிய தமிழ்ப் பாடல்கள்‌,. (படிக்‌கும் பொழுது ), உயிர்‌ உருக்கும்‌ – நம்‌ உயிரை உருகச் செய்யும்‌ ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்‌:
உடலத்தில்‌ உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர்‌ – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக்‌ கொண்டிருக்கிற,
நம்‌ தீங்கு உருக்கும்‌ – நம்முடைய தீ வினைகளெல்லாம்‌ போக்கும்‌;

குருகூர்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும்‌ செயிரைக் கொண்ட தீங்கையும்‌ போக்குமென்பதாம்‌.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்‌ உயிரையும்‌ உணர்வையும் தன்‌ வசப் படுத்திக் கொள்ளுதலால்‌ உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்‌-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்‌; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும்‌ மறுமைக்கு நரகும் தருதலால்‌ செயிருருக்‌ கொண்ட தீங்கு என்றார்‌. கண்ண பிரான்‌ ஆயர் பாடியில்‌ வீதிகள் தோறும் புகுந்து தயிரையும்‌ வெண்ணெயையும்‌ திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள்‌ போலாகாமல்‌ தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும்‌ இலக்கண வரம்புடைமையும்‌ நோக்கி ௮ந்தமிழ் என்றார்‌. பொருநை யெனினும்‌ பொருநலெனினும்‌ பொருந்தும்‌, உடலத்து, ௮த்து – சாரியை-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே
. 14

ஆர்‌ – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின்‌ – தமிழ்ப் பாடல்கள்‌போல,
பந்தம்‌- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்‌,
ஒழுகும்‌ – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்‌,
வந்த – அவதரித்த,
பண்ணவன்‌ – சிறந்தவரான சடகோபர்‌,
௮ந்தம்‌ இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்‌,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்‌-திருத்தமமையப் பாடி யருளா விட்‌டால்‌,
நிலம்தேவர்களும்‌ – பூசுரராகிய பிராமணர்களும்‌,
தம் தம்‌ – அவரவர்கள்‌ கொண்டாடப் படுகிற,
விழாவும்‌ – உற்சவங்கழும்‌,
அழகும்‌ -அவர்களுள்‌ அமைதியும்‌,
என்னாம்‌ – எத் தன்மையவாய்‌ முடியும்‌?

குருகூராழ்வார்‌ வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால்‌ பிராமணர்களும்‌, அவர்கள்‌ வேள்வி முதலிய விழாக்களும்‌ ௮ழகும்‌ என்ன பயன்படுமென்பதாம்‌. ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன்‌ வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில்‌ ஒவ்வொரு பிடி யெடுத்துக்‌ கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால்‌ ௮ந்தமிலா மறை என்றார்‌.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்‌.இம் மொழியின்‌ சுவை யேற்றம்‌ நோக்கிச்‌ செந் தமிழ் என்றார்‌. ஆகாயத்தில்‌ தேவர்களைப் போலப்‌ பூமியில்‌ பெரும் சிறப்புஉடைமையால்‌ அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார்‌ ; பூசுரர் என்பதன்‌ பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள்‌ படிக்கப் படிக்க இன்பம் தருதலால்‌ பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார்‌. (இதனால்‌ ஆசிரியர்க்‌குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார்‌ – பண்ணவன்‌ – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர்‌ திணையோடு விழாவும்‌ அழகுமென்னும்‌ அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்‌- ,

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———–

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே
. 15-

இயலோடு – இயல் தமிழோடு,
இசையின்‌ – இசைத் தமிழுமாகிய,
வண்ணம்‌ – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்‌,
மலர்‌ உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம்‌ – மகரந்தங்கள்‌,
படர்‌ – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர்‌ வந்த – குருகூரில் அவதரித்த, சொல்‌ கடல்‌ : தமிழ் சொற் கடல்‌ போல்பவருமாகிய பராங்குசர்‌,
மறை-வேதங்கள்‌,
பண்ணப் படுவனவும்‌ – இனிப் புதியனவாகச்‌ செய்யப் படுபவைகளும்‌,
உளவோ என்று -இருக்கின்‌றனவோ வென்று,
பல்லோர்‌ – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம்‌ பட – தங்கள்‌ மனத்தில்‌ நினைக்கும்படியாக,
சொல்‌ – சொற்கள்‌,
திகழ – விளங்குமாறு,
செய்தான்‌ – பாடி யருளினார் –

குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார்‌ வேதங்களில் இனிச்‌
செய்யப் படுவனவும்‌ முளவோ வென்று கூறும்படி திருவாய்‌ மொழியைப்‌ பாடி யருளினாரென்பதாம்‌. வேதத்திற்‌ கூறப் படும்‌ பொருள்‌ நிலைமையினும்‌ மேலான பொருளை வெளிப் படுத்தலால்‌ பண்ணப்படுவனவும்‌ உளவோ மறை யென்றார்‌ -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர்‌ நிலையும் , தக்க நெறியு்‌ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும்‌ வாழ் வினையுமோதுங்‌ குருகையர் கோன்‌, யாழினிசை வேதத்‌தியல்‌’” என்பதானாலும் அறிக- கடல்‌ – உவமை யாகு பெயர்‌,

எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-

—————-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே.
16-

களித்தார்‌ – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும்‌ – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான்‌ -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன்‌, கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான்‌ – கொடுத்தருளினான்‌ ; (அப்படிப்‌ போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்‌—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன்‌ – நம்மாழ்வாரானவர்‌,
குறையா – குறைவில்லாத,
மறையின்‌ – வேதங்களின்‌,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும்‌ – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்‌-தந்தருளினார்‌ –

மாயோன்‌ சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ வேதங்களின்‌ முட்டுப்‌பாடுகளைப்‌ பெயர்த்தெடுத்துத்‌ திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம்‌. தவத்தால்‌ நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால்‌ நடலைப் பிறப்பென்றார்‌- தமிழில்‌ ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால்‌ நாயகனென்றார்‌… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால்‌ குளிர் சங்கு என்றார்‌. பரத்துவாசனுக்கு இந்திரன்‌ நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில்‌ “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால்‌ குறையா மறை என்றார்‌- கடலை வேதமாகவும்‌ அமுதத்தைத் தேனாகவும்‌ அமரர்‌ அடியராகவும்‌-சங்கினான்‌ நாயகனாகவும்‌ உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும்‌, உம்‌- இழிவு சிறப்பு.

———

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே
. 17–

பிறர்‌ கடை தோறும்‌ – அயலார்‌ வாயில்கள்‌ தோறும்‌,
நாய் போல்‌ நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர்‌ எச்சில்‌ -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல்‌ – பிசாசைப்‌ போல,
திரியும்‌ – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும்‌ – பிறப்பென்கிற,
நோய்‌ – பிணிகள்‌,
போம்‌ மருந்து என்னும்‌ – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய்‌ மொழிப்‌ பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல்‌ – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன்‌ – தொண்டனாகிய நான்‌,
பண்டு – முன்னாளில்‌,
என் சாதித்தது -என்ன உபகாரம்‌ செய்ததுண்டு?

நாய் போல நுழைந்து பேய் போலத்‌ திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப்‌ பார்த்‌துப்‌ பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான்‌ முன் செய்த நன்றி தான்‌ யாதோ ?என்றதாம்‌, தம்‌ தாழ்ச்சியைக் குறித்துக்‌ கடைப்பட்ட நாயை உவமித்தார்‌.-ஒயாமல்‌ பிரந்து உழலுதலால்‌ மாறாமல்‌ அலைகின்ற பேயை உவமிழத்தார்‌, எச்சில்‌ – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம்‌ -எஞ்சு பகுதி இல்‌ – பெயர் விகுதி, நோய் போம்‌ மருந்து என்பதில்‌ போம்‌ என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம்‌ மருந்து என்னும்‌ காரணப் பெயரைக் கொண்டது. நுன்‌ – பெயர்த் திரி சொல்‌,

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.
18–

எம்‌ கோன்‌ – எங்கள்‌ தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ்‌ சொல்‌ என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம்‌ – உங்களுடைய வேதங்களெல்லாம்‌,
பர தத்துவத்தை – மேலான கடவுளின்‌ நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம்‌ திருக்‌கை – அன்‌னிய மதங்களின்‌ மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்‌படி அறிந்தாலும்‌),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும்‌ ஓங்கி – எவ்‌விடத்‌திலும்‌ சிறப்படைந்து
பொது நிற்கும்‌ – பொதுவாய்‌ நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்‌,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்‌தையும்‌,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?

நம்மாழ்வார்‌ பிரபந்தம் போல உங்கள்‌ வேதம்‌ பரம் பொருள்‌ நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின்‌ மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும்‌ பிறர்க்குச்‌ சொல்ல முடியுமோ ? மெய்யையும்‌ பொய்யையும்‌ பகுத்தறியுமோ ? இவை யொன்‌றும்‌ செய்ய இயலாது என்பதாம்‌. எல்லார்க்கும்‌ மேலானாரென்பது பற்றிக் கோன்‌ என்றார்‌, உங்கள்‌ என்றது புற மதத்தவரை என்க -,-வேதம்‌ ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும்‌ படிப் படியாகப்‌ பரத்‌துவஞ்‌ சொல்லுதலால்‌ திருவாய்‌ மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்‌.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம்‌ வினாவாகச்‌ கூறி யிருப்பினும்‌ எதிர் மறைப் பொருள்‌ படுதல்‌ காண்க-

————–

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே.
19-

குருகூர்‌ – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான்‌ – நம்மாழ்‌வார்‌,
சொன்ன – ௮ருளிச் செய்‌த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல்‌ என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம்‌ – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும்‌ – யாவருக்கும்‌,
நெல்‌ என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும்‌ – பருகுகின்ற,
நீர்‌ என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர்‌ நிறுக்கும் -நேரே தராசில்‌ நிறுத்‌தப் பார்ப்பதற்குரிய
கல்‌ என்கெனோ- படிக்‌கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம்‌ முதிர்‌ – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல்‌ என்கெனோ -பல விதமாகச்‌ சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்‌பேனோ,

குருகூர்‌ நம்மாழ்வார்‌ பாடல்களைக்‌ தமிழ்ச் சொல்லென்‌பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்‌பேனோ ? பழமென்‌பேனோ? பலவிதமாகச்‌ சொல்‌ல வல்லமை யுண்டென்‌பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம்‌. ஒன்‌றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால்‌ மாலை யென்றார்‌-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச்‌ சுருக்க வைத்திருத்தலால்‌ சொல்லென்‌பெனோ சுருக்கென்‌பெனோ என்‌று ஐயத்தாற்‌ கூறினார்‌. திருவாய்‌ மொழியின்‌ பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்‌தார்‌ -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———-

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே
. 20-

பொருள்‌-அகப் பொருள்‌.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன்‌ வருவோர்‌ புலம்பல்‌ தேற்றல்

மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும்‌ – கூந்தலை யுடைய உன்‌ மகளும்‌,
வில்லியும்‌ – கையில்‌ வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர்‌ – துதியாதவர்கள்‌,
போம்‌ – செல்‌லத் தகுந்த,
பாலை கடம்‌ – பாலை நிலத்‌து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப்‌ பகலிலேயே தாண்டிச்‌ சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்‌,
கரும்பின்‌ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்‌,
நரேல்‌ என்னும்‌ ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில்‌ வளர்க்கிற,
கிளி – கிளிகள்‌,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம்‌ – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள்‌ – அடைவார்கள்‌;

உன்‌ புதல்வியும்‌ ௮வள்‌ கணவனும்‌ நம்மாழ்வாரைத்‌ துதியாதவர்‌ போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித்‌ தமது நாட்டை யடைவார் களென்பதாம்‌-செவிலியைத்‌ தேற்றுபவராதலின்‌ அவள்‌ வருத்த மின்றிச்‌ சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்‌; எனவே இடை வெயிலில்‌ தலைவியும்‌ தலைவனும்‌ உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள்‌ கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்‌டாகாதபடி வில்லின்‌ நாணேற்றிக் கையிலேந்திச்‌ செல்கின்‌றமையால் வில்லி யென்றார்‌,கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறாமையால்‌ அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம்‌ பாலை” ஆதலால்‌ திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல்‌ ஒருவனைக்‌ கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச்‌ சொல்லாதலால்‌ கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச்‌ சென்ற செவிலியை எதிர்‌ வந்தோர்‌ கூறித் தேற்றுதல்‌ துறைக் கருத்து,-கைகோள்‌ – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர்‌ – செவிலி, இடம்‌ – முன்னிலை, காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – பெருமிதம்‌, பயன்‌ – செவிலியை மீள வுரைத்தல்‌, ஆதலால்‌ நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

———-

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே.
21–

பொருள்‌–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்‌.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்‌,

குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில்‌ மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்‌-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம்‌ -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில்‌ – சோலையிலே,
தளிர் மெல்‌ அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்‌,
தண்‌ – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல்‌ நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம்‌ நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்‌-விரைசந்து வருகிற,
சூரல்‌ – பிரப்பங்காடுகள்‌ நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும்‌ – நினைக்கும் பொழுதெல்லாம்‌,
துணுக்கெனும்‌ ஆல்‌ – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்‌,
வாரல்‌ – நீ வாராது நீங்குவாய்‌.

நம்மாழ்வார்‌ ஆஜ்ஜையைச்‌ சிரத்தால்‌ வகிக்கும்‌ பொதியிவின்‌ தலைவனே ! சோலையில்‌ தலைவியானவள்‌ அவள்‌ முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும்‌ துணுக்கென்று நடுங்குவளாதலால்‌ நீ வாராதொழிவாய்‌ -என்பதாம்‌. எனவே தலைவன்‌ ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம்‌ எப்படியோ வெனில்‌, ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால்‌ அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள்‌ வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும்‌ நான்‌ அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள்‌ மணஞ்‌ செய்யப்‌ புகுவானாம்‌, இங்கனம்‌ கூறுதல்‌ தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும்‌ இருவரும்‌ மணஞ்செய்து கொள்ள வேண்டிச்‌ கூறும்‌ அன்பின்‌ மிகுதியால்‌ வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித்‌ தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல்‌ ஆணை யிட்டு மறித்தாளென்‌று உரைப்‌பின்‌ ஆணை யிட்டு மறித்ததனால்‌ தலைவன்‌ வாராதே யொழியவும்‌ அதனால்‌ தலைவி யிறந்து படவுஞ்‌ செய்தவளாம்‌. அங்ஙனஞ்‌ செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள்‌ தோழி ” என்னுஞ்‌ சூத்திரத்துக்கு விரோதமாம்‌ ; ஆதலால்‌ இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர்‌ ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித்‌ தொகை பன் மொழித் தொடர்‌, குறிஞ்சி மூரல்‌-மூரல்‌-அரும்புக்கு உமையாகு பெயர்‌, ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்‌ற தன்றே’-என்ற சிந்தாமாணிச்‌ செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல்‌ – ௮ச்‌சக் குறிப்பு, கைகோள்‌-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன்‌ -தலைவன்‌, இடம்‌ – முன்னிலை, காலம்‌- எதிர்காலம்‌,-மெய்ப்பாடு- அச்சத்தைச்‌ சார்ந்த பெருமிதம்‌, பயன்‌- வரைவு கடாதல்‌,

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.
22-

மலை- பொதியில்‌ மலையிலுள்ள,
ஆரமும்‌ – சந்தன மரமும்‌,
கடல்‌ ஆரமும்‌ – கடலிலுள்ள முத்துக்களும்‌, பல்‌ மா மணி குயின்‌ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும்‌ – விலை பெற்ற மாலைகளும்‌,
விரவும்‌ – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்‌டெரித்த கோதண்டமென்னும்‌ வில்லை யுடைய,
ஆர்‌ – அரிய,
௮முதின்‌-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில்‌ பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும்‌ – போய்‌ வணக்குகின்ற,
தலையார்‌ – தலையை யுடையவர்‌,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும்‌ – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்‌-தவமாகிய செல்வத்தை யுடையவராவர்‌ ;

மூவகை ஆரங்களும்‌ பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும்‌ இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத்‌ தலைவராவாரென்பதாம்‌, விலை யாரம்‌ இந்திரன்‌ கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங்‌ கோத்த சடலாரம்‌. தேவர் கோன்‌ பொன்னாரம்‌ தென்னர் கோன்‌ மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும்‌ நோக்குக” இராமாமிருதமென்னும்‌ பெயருடைமையால்‌ அமுதென்றார்‌; அன்றி மனத்திற்‌ கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற்‌ கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில்‌ இராம பிரான்‌ . தென்‌ கடலருகு வந்து இலங்கைக்குச்‌ செல்ல வழி வேண்டி வருணனை அழைத்‌தலும்‌ ௮வன்‌ வாராமையால்‌ சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப்‌ பிரயோகித்துக்‌ கடலை வற்றச் சுட்டு வருணன்‌ வந்து அடைக்கலம்‌ புகக்‌ காத்தருளினார் என்பதாம்‌. அமுது -உவமை யாகு பெயர்‌. குயின்ற-குயில்‌ – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,

தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –

———–

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே.
23-

போந்து – எங்கள்‌ விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர்‌ – தேவர்கள்‌,
புகலினும்‌ -சொன்‌னாலும்‌,
பூ – அழகிய,
தொழுவின்‌ – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன்‌ – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும்‌ – பரம பதத்தை யடையப்‌ பெற்றாலும்
எழில்‌ குருகூர்‌ – அழகிய குருகூர்ப் பதியில்‌,
நாம் தேறிய – நாங்கள்‌ தெளிவடையச் செய்த,
அறிவன்‌ – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச்‌ செய்த, திருவாய்மொழி —,
நாளும்‌ – தினமும்‌,
நல்கும்‌- கொடுக்கின்ற,
தீம்‌ தேறல்‌ – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும்‌ – பருகி உலாவுகின்‌ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்‌-நான்‌ பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்‌;

என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர்‌ நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின்‌ இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக்‌ கை கூடி யிருக்கும்‌ என்பதாம்‌-இது ௮ப்பிரபந்தத்தின்‌ சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்‌திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால்‌ நாம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌…படிக்கும் தோறுஞ்‌ சுவை தருதலால்‌ நாளும்‌ நல்குமென்றார்‌-ஏனைய பயன் போலாகாமல்‌ மேம் பட்டமையால்‌ சித்தி யென்றார்‌, ஏறு -விலங்கின் ஆண் பாற்‌ பெயர்‌ ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்‌றம்‌, தேறல்‌ – கள்ளின்‌ தெளிவுமாம்‌ ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால்‌ இத ஏக தேச வுருவக வணி. கண்ணன்‌ ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள்‌ தந்தை யானவன்‌ அசுர விவாகமாக நியமித்துத்‌ தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப்‌ பிடித்‌துக் கட்டுபவனுச்கு என்‌ மகளைக்‌ கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான்‌ அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்‌.

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே.
24-

சடகோபன் – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின்‌ தொகுதியானது ,
சித்தர்க்கும்‌- எண் வகைச்‌ சித்தி யுடையவர்க்கும்‌,
வேதச் சிரம்‌ – வேதத்தின்‌ தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும்‌ – அறிர்தவர்களுக்கும்‌, செய்‌ தவர்க்கும்‌ – தவத்தைச் செய்பவர்க்கும்‌,
சுத்தர்க்கும்‌-பரி சுத்தமுடையவர்க்கும்‌, மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும்‌ – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்‌,
தொண்டு செய்யும்‌ – கடவளுக்கு அடிமை செய்கின்‌ற,
பத்தர்க்கும்‌ – அடியார்களுக்கும்‌,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்‌,
பண்டு – முன்னாளில்‌ சென்‌ற,
முத்தர்க்கும்‌- முத்தி பெற்றவர்களுக்கும்‌, இன்‌ ௮முதம்‌- இனிய ௮மிருதமேயாம்‌;

நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ சித்தர்‌ முதலாகிய எல்லார்க்கும்‌ இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம்‌, சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம் -என்பன. சுத்தர்‌- மனத்திற்‌ பரி சுத்தமுடையவர்‌. பகவர்‌ – வீரம்‌ கீர்த்தி வைராக்கியம்‌ இவற்றில்‌ மிக்கவர்‌, முத்தி யடைந்தவர்‌-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில்‌ அவர்க்கும்‌ இன்‌னமுதமென்றார்‌.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர்‌ அதனிலும்‌ இதன்‌ கருத்துத்‌ தெளிவாய்‌ விளங்குதலால்‌ அவர்க்கும்‌ அமுதென்றார்‌. இதிலுள்ள உம்மைகள்‌ எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,

———-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே
. 25-

தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம்‌ -சாஸ்‌திரங்களிலெல்லாம்‌,
துறை தோறும்‌ – ஒவ்வொரு பகுதிகள் தோறும்‌,
தொட்டால்‌ – உற்று நோக்கினால்‌,
பகை உளவாம்‌ -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம்‌ ;
மற்றும்‌ – மீட்டும்‌,
பற்றுளவாம்‌-தொடர்சி யுள்ளனவாகும்‌ :
பழ நால் மறையின்‌ – பழமையகிய நான்கு
வேதங்களின்‌,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம்‌ -விரோதங்களுமுள்ளனவாகும்‌; (அப்படியன்றி,) குருகூர்‌ -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான்‌ தன்‌ – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்‌,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்‌,
ஏ- சிறந்த,
மிகை உளவாம்‌ -மேம் பாடுகள்‌ உள்ளனவாகின்றன ;

எல்லாச் சமய நூல்களிலும்‌ உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும்‌ முன்னுக்குப் பின்‌ விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வார் பாடல்களில்‌ பார்க்குமிடம் தோறும்‌ சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்‌பதாம்‌-நான்மறையின் வாது – வேதவிரோதம்‌; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம்‌ -வந்திடம்‌ ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும்‌ ‘? என்றதனால்‌ ஏ என்னும்‌ ஓரெழுத்தொரு மொழி உரிச்‌ சொல்லாயமைந்த விடத்துப்‌ பெருமையை யுணர்த்தும்‌,

———

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே
26-

௮ரு வினைகாள்‌ -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்‌- மிக்க இளைய சங்கங்களில்‌,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய்‌ -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்‌- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம்‌ குலம்‌ – எம் போல்வாராகிய தொண்டர்‌ கூட்டங்களுக்‌கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன்‌ – ஒப்பற்ற நம்மாழ்‌வார்‌,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில்‌ நெருங்க ஓட்‌டாமல்‌ அப்பால்‌,
இழுப்பான்‌ -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான்‌ – எம்‌ உள்ளத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌; (ஆதலால்‌,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்‌,
ஓழிமின்‌ – நீங்கி விடுங்கள்‌ ;
இனி – இனி மேல்‌,
எம்மை-எங்களை,
பிறவித் துயர்‌ – பிறவியாகிய துன்பத்தில்‌, விழுப்பார்‌ யார்‌ – தள்ளுபவர் யாவர்‌ இருக்கிறார்கள்‌ –

வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார்‌ உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்‌-ஆதலால்‌ கிட்ட நெருங்காதீர்‌ ; ; இனி எம்மைப்‌ பிறவிபில்‌ தள்ளுபவர்‌ யாவர்‌ இருக்கிறார்கள்‌? என்பதாம்‌-ஆழ்வார்‌ மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால்‌ இனிப்‌ பிறவியில்‌ புகாதிருத்தல்‌ நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார்‌. ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல்‌. கொழுந்து உவமை யாகு பெயர்‌ -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும்‌. கொழு- கலப்‌பைப் படை வாள்‌ நுணியில் தைக்கும் இரும்பு.

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே.
27-

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல்‌ வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –

கொழுந்தோடு – கொழுந்துகளும்‌, இலையும்‌, முகையும்‌- அரும்புகளும்‌, எல்லாம்‌ – மற்றுள்ள மலர் காய்களும்‌, கொய்யும்‌ கொய்‌ மகிழ்‌ கீழ்‌ – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின்‌ கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர்‌ சருகும்‌ பெறாள்‌ -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்‌- வலிமை யுடைய,
மாறன்‌ என்றால்‌ – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்‌,
அழும்‌ – அழுகின்றனள்‌;
தோள் தளரும்‌- சோள் தளர்ச்சி யடைவாள்‌;
மனம்‌ உருகும்‌-மனம் கரைவாள்‌ ;
குருகூர்‌ அறையில்‌ -குருகூரென்று சொன்னால்‌,
எழுந்து ஆடவும்‌- தான்‌ எழுந்‌து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்‌,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன்‌ – நான் யாது செய்கேன்‌-கெட்டேன்‌ !

நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண்‌ ௮வர்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால்‌ ௮ம்‌ மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம்‌ மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும்‌ பெற்‌றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால்‌ அழுகின்றாள்‌ ;தளர்கின்றாள்‌ ;உருகுகின்றாள்‌ ; குருகூரென்றால்‌ அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன்‌ ! என்றாள்‌ என்பதாம்‌. காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார்‌. இவள்‌ இன்னும் காமத்தால்‌ மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார்‌ எல்லாம் கொய்யக் கூடிய மகிழின்‌ சருகும்‌ பெற்றாளில்லை யென்றார்‌. ஆற்றாமை மிகுதியினால்‌ ௮ழுமென்றார்‌, அணைத்து மகிழ்வது தோளாதலால்‌ ௮து பெறாமை ஹேதுவாகத் தோள்‌ தளருமென்றார்‌, மனத்தை அவர் பால்‌ விடுத்தமையால்‌ உருகுமென்றார்‌. யாமிங்‌கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்‌றார்‌. தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ்‌ செய்தும்‌ பயன் படாமையால்‌ கெட்டேனென்றாள்‌. தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும்‌ சந்திரகாந்தச்‌ சிலையிலும்‌ படுச்கச் செய்தல்‌ -கொங்கைகளில்‌ தளிர்களையும்‌ சந்தனத்தையும்‌ பிறவற்றையும்‌ அப்புதல்‌; பன்னீர் தூவுதல்‌ முதலியவாம்‌, இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால்‌ ௮கப் பொருளாகாமல்‌ அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால்‌ கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்‌று. தலைவன்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின்‌ வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –

———-

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே
. 28-

ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்‌கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில்‌ எடுத்‌துக் கொண்டு கூறிய,
மாறன்‌ என்‌றால்‌ – நம்மாழ்வார்‌ என்று யார் சொன்னாலும்‌,
பதுமக் கரங்கள்‌ – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில்‌ அஞ்‌சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும்‌ ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள்‌ – பாதங்கள்‌,
என் முடி என – எனது தலையிற்‌ சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன்‌ -விருதுக் கொடி பிடித்‌துக் கொண்டு நிற்கின்றேன்‌ ; (அதலால்‌),
இனி -இனி மேல்‌,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர்‌ அடி எடுத்‌துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால்‌ வரலாகும் கொல்‌-என்னிடத்தில்‌ வருதல்‌ கூடுமோ? |கூடாதென்பதாம்‌]

நம்மாழ்வாரென்று யார்‌ கூறினும்‌ ௮ன்பினால்‌ அஞ்சலி செய்கின்‌ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற்‌ சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்‌றமையால்‌ கூற்றுவன்‌ அஞ்சாமல்‌ என்னிடத்து அடி யெடுத்‌து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்‌-நான்கு பிரபந்தங்களைச்‌ செய்தமையின்‌ ஆரணத்தின் படி யென்‌றார்‌. கரங்கள்‌ முடி யெடுத்‌துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால்‌ என்க, ௮ந்தணர்‌ -௮ழகிய தண்மை யுடையார்‌ என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர்‌. வைஷ்ணவப் பிராமணரென்றால்‌ குறைபாடு என்‌னை யெனின்‌ அதில்‌ தோன்றிய சிலர்‌ பொருளாசை மேலீட்டினால்‌ பிறர்‌ நூல்‌ உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால்‌ முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,

———-

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.
29–

இராவணன்‌ தன்‌ – இராவணனுடைய,
பொன் முடியால்‌ -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்‌திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான்‌ – கோதண்டமென்னும்‌ வில்லை
யுடையவனுடைய,
அவன்‌ – அந்த இராம பிரானுடைய,
இணை தாள்‌ கீழ்‌ -இரண்டு திழுவடிகளிலும்‌,
பொருநை துறைவன்‌ – தாமிரபருணை யாற்‌றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்‌,
தன்‌ முடியால்‌ – தம் தலையால்‌ வணங்கி ,
எ பொருளும்‌ – எல்லாப் பொருள்களையும்‌,
தழீஇ – ஒரு சேரச்‌ கொண்டு,
சொல்‌ முடியால்‌ – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம்‌ -அமிர்தம் போன்ற,
ஆயிரம்‌ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
சூட்டினன்‌ -பாடிச் சேர்ப்பித்தனர்‌; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என்‌ முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான்‌ அரியதாகும்‌? [எல்லாம்‌ முடியும்‌-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்‌]

இராவணனைக் கொன்ற இராம பிரான்‌ திருவடிகளில்‌ நம்மாழ்வார்‌ ஆயிரம் பாடல்‌ பாடிச் சூட்டினார்‌;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான்‌ யாது? ௮ரியது தான்‌ யாது? [ஒன்று மில்லை] என்பதாம்‌, இராவணன்‌ -இலங்கைக் கிறையவன்‌ ; ஸ்ரீ கைலாஸ மலையைப்‌ பெயர்த்து அதன் கீழ்‌ ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற்‌ கதறினமையால்‌ இப் பெயர் பெற்றனன்‌ ; இராவணம்‌ -அழுகை, ௮வன்‌ தன்‌ தலைகள்‌ வெட்டுண்டால்‌ மீள முளைக்கும் படி பிரமனிடத்தில்‌ வரம் பெற்றான்‌-பின்பு இராம பிரான்‌ போரில்‌ ௮வன் தலைகளை வெட்டிக்‌ கடலிற்‌ குவித்தனன்‌ ; வெட்ட வெட்ட முளைத்தமையால்‌ மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன்‌. எப் பொருளும்‌ – முதல் கடவுளாகிய மாயோன்‌ நிலையும்‌, அக் கடவுளை யடையும்‌ நெறியும்‌, அடைதற்குரிய உயிர்களினிலையும்‌, அடைதலாற் பெறும்‌ பேறும்‌ பிறவுமாம்‌, எனக்கு – இடை நிலைத்‌ தீவகம்‌. தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-

——–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே
. 30–

சூட்டில்‌ – செற் போரில்‌,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும்‌ – தூங்குகின்ற,
குருகூர்‌ – திருக் குருகூரையும்‌, தொழுதேன்‌-வணங்கினேன்‌ ;
வழுதி நாட்டில்‌ – பாண்டி நாட்டில்‌,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில்‌ ௮ன்புடையவருக்கு,
ஆளும்‌ செய்தேன்‌ – அடிமையுமாயினேன்‌ ;
(ஆதலால்‌), மறை – வேதமான,
மெய்‌ எனில்‌, உண்மையா யிருக்குமானால்‌, என்னை- -,
நல்வினை ஆம்‌ நாட்டில்‌ -நல்ல தவஞ் செய்தலால்‌ மேன்மை யுற்ற நாட்டில்‌, புகுதவிட்டு – ,
உய்யக் கொள்‌ – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்‌ற ,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கழல்‌ – பாதங்களை,
பற்றி போய்‌ – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில்‌ புகுதற்கும்‌- மோட்சத்தை அடைதற்கும்‌,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்‌;)

யான்‌ அழ்வார்‌ அவதரித்த குருகூரை வணங்கினேன்‌ ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும்‌ அடிமையாயினேன்‌ ; வேதம்‌ உண்மையா யிருக்குமானால்‌ நல் தவத்தில்‌ என்னை விட்டு ஆழ்வார்‌ பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச்‌ செல்லத் தடை யுண்‌டோ? என்பதாம்‌. தாம்‌ கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப்‌ போரில்‌ நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால்‌ விளக்கினார்‌, இங்கனமே நாடுகளைச்‌ சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற்‌ சேக்கும்‌ ” என்றார்‌ ஐங்குறு நூற்றிலும்‌. குருகு உறங்கும் குருகூர்‌ எனச் சொல்‌ நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும்‌ பெயராதலால்‌ வீடு வேண்டின்‌ மறாமல்‌ கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற்‌ கூ.றினார்‌. ஆளும்‌, புகுதற்கும்‌ – உம்மைகள்‌ இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,

—————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே
. 31-

உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும்‌ – வெட்டி யழிக்கின்‌ற,
மெய்‌ – சத்தியமாகிய,
வாள் வலவன்‌ – வாள் யுத்தத்தில்‌ வல்‌லவரும்‌,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன்‌ – இறைவரும்‌,
புலமை செய்யும்‌ – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்‌ற,
ஐயன்‌ தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்‌-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின்‌ – தான்‌ பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும்‌ – சத்துவப் பொருளெல்லாம்‌,
மெய்‌ ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும்‌ – பொய்ப் பொருளும்‌,
பொய்‌ ஆயது – பொய்ப்‌ பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம்‌ வேறாகப்‌ பகுத்‌துக் காட்டி,
உய்யும்‌ – பிழைப்பதற்குரிய,
மெய்‌ ஆய – உண்மையாகிய,
உபாயம்‌ -தந்திரமும்‌,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,

நான்‌ நம்மாழ்வாருக்குத்‌ தொண்டு செய்யத்‌ தொடங்கிய பின்‌பு தான்‌ தத்‌துவ ஞானம்‌ உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும்‌ நீங்கிற்று ; இங்கனம்‌ பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும்‌ வந்து பொருந்தித்றென்பதாம்‌-உண்மை நிலை தெரியாமல்‌ அஞ்ஞானம்‌ மூடப்‌ பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால்‌ மெய்யும்‌ மெய்யாயது என்‌றார்‌. ௮து மெய்யாதலும்‌ ௮தற்கு மறுதலையாகிய பொய்யும்‌ பொய்யாகிய தென்பது தானே இயையினும்‌ மகிழ்ச்சி மிகுதியால்‌ அதனையும்‌ உடன்‌ கூறினர்‌, பொய்ப் பொருள்‌ – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்‌-பிழைத்தல்‌ -பரம பதத்தை நாடும்‌ வழி
கொய்தற்கேற்ப வினையைப்‌ பகை யென்னாமையால்‌ இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால்‌ ஐயனென்றார்‌.

———-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே.
32–

திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்‌(என) – சிவந்த நிறமுடையவனென்றும்‌,
கரியன்‌ என – கரிய நிறமுடையவனென்றும்‌,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம்‌ – உலகத்‌ துயிர்கள்‌,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்‌
டாவாம்‌;
மறை- வேதங்களும்‌,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்‌), மதுரம்‌- இனிமை யாகிய, குருகூர்‌ – திருக் குருகூரில்‌ ௮வதரித்தருளிய,
ஐயன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல்‌ – பாடல்‌கள்‌ அல்லா விட்டால்‌,
பிறவிக் கடல்‌ – பிறப்பாகிய சமுத்திரத்தில்‌,
ஆழ்‌வது அல்லால்‌ -அமுங்குவது ௮ல்லாமல்‌,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்‌களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்‌வழி,
ஒன்றும்‌ – ஒன்‌றினையும்‌,
யான்‌ -நான்‌,
கண்டிலேன்‌ -பார்த்தேனில்லை ;

மாயோன்‌ சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால்‌ உயிர்கள்‌ நம்‌மாழ்வார்‌ பாடலில்லாவிட்டால்‌ பிறவிக் கடலில்‌ அழுந்துவதே யல்‌லாமல்‌ அவ் வுயிர்கள்‌ ஈடேறும்‌ வழியை யான்‌ பார்த்தேனில்லை என்‌பதாம்‌. செய்யன்‌,கரியன்‌– சிவப்போ கறுப்போ என்னும்‌ உலக வழக்கை நோக்கிச்‌ கூறியவாம்‌. வையம்‌–இடவாகுபெயர்‌, தமிழ்க்‌ குருகூர்‌ என்பார்‌ – அதன்‌ மறு பெயராகிய மதரமென்னும்‌ மொழியாற்‌ கூறினார்‌. எல்லாருக்கும்‌ மேலாவான்‌ என்பது பற்றி ஐயன்‌ என்றார்‌. ஒரு நாளும்‌ முடிவு பெறாமையும்‌ கடத்த வருமையும்‌ நோக்கிப்‌ பிறவியைக் கடலென்றார்‌,

———–

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.
33–

உயிர்த் தாரையில்‌ – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம்‌ மூன்றனையும்‌ – காமம்‌ வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்‌,
செயிர்த்தார்‌ – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்‌-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய்‌ மொழி -திருவாய் மொழி யென்னும்‌ பிரபந்தத்தினை,
செப்பல்‌ உற்றால்‌ – சொல்லத் தொடங்கினால்‌,
எங்கள்‌ அந்தணர்க்கு-தத்துவ நூல்‌ ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த்‌ தாரைகள்‌ பொடிக்கும்‌ – சரீரத்திலுள்ள்‌ மயிரொழுங்குகளெல்‌லாம்‌ சிலிர்க்கும்‌ ;
கண்கள்‌-கண்களில்‌,
நீர்‌ மல்கும்‌ – ஆனந்தக் கண்ணீர்‌ பெருகும்‌ ;
மா மறையுள்‌-சிறந்த வேதத்தின்‌ பொருள்களுள்‌,
அயிர்த்தார்‌-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள்‌ – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்‌,
வெளியாம்‌ – நன்றாக விளங்கும்‌ ;

முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியைச்‌ சொல்லத் தொடங்கினால்‌ அதனைக்‌ கேட்கும்‌ சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம்‌ மயிர்‌ புளகிக்கும்‌ ; கண்ணீர்‌ வடி.யும்‌; ௮ன்றி வேதப் பொருளில்‌ சந்தேக முற்றவர்களுக்கு அந்தச்‌ சந்தேகமும்‌ நிவர்த்தியாகும்‌ என்பதாம்‌. என்றும்‌ நீங்கா இயல்பினவாதலால்‌ உயிர்த் தாரையிற்‌ பொருந்திய முக்குறும்பென்றார்‌. அவை தம்‌மை யடையாதபடி இருந்தமையால்‌ செயிர்த்தார்‌ என்றார்‌, மயிர்‌ புளகித்தலும்‌ கண்ணீர் விடுதலும்‌ பக்தியினால்‌ தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில்‌ பொருந்தி யிருத்தலால்‌ தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்‌,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர்‌ ௮ந்தணராதலால்‌ ௮வ்வுபநிடதங்களிலும்‌ இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்‌கும்‌, கண்ணீர் மல்கும்‌ என்றுரைப்பினும்‌ அமையும்‌,

———-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.
34–

சுடர் தோய்‌ – சூரியனும்‌ சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும்‌ தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள்‌ சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்‌,
பிரான்‌ – நம்மாழ்வார்‌,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல்‌ அரும்‌ தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்‌றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்‌,
யோகியராய்‌ வந்தவர்க்கோ – யோகம்‌
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்‌ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம்‌ குழை சேர்‌ – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்‌டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்‌);

குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-

இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே
. 35–

சந்தியும்‌ – பதப் புணர்ச்சி யிலக்கணமும்‌,
சந்தி – அப்படிப்‌ புணர்கின்ற,
பதமும்‌- சொல்லிலக்கணமும்‌,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்‌,.
தழைக்கும்‌ – அடுக்கப்பட்டுப் பெருகுகின்‌ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்‌,
பல்‌ அலங்காரம்‌ பொருளும்‌- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும்‌, பயிலுகிற்பீர்‌ – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்‌’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்‌);
தென்குருகூர்‌- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும்‌ – நினையுங்கள்‌ ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள்‌ செய்யும்‌ -அவருக்கு அடிமை செய்யுங்கள்‌
வந்தியும்‌ – நமஸ்கரியுங்கள்‌ –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்‌)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்

பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-

———-

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே
. 36–

பொருள்‌–அகப் புறப்‌ பொருள்‌.
திணை-கந்தருவத்தின்‌ வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்‌,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்

நீங்கள்‌-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப்‌ பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர்‌ அழித்தீர்‌ – நிலை குலையச்‌ செய்தீர்கள்‌
பூ வரை – மலர்கள்‌ மட்டும்‌,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம்‌ – மனத்தில்‌,
புகுந்தார்‌ – புகுந்து வருத்துகின்றவர்‌,
எவர்‌ என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம்‌ குறிச்சியில்‌ வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்‌,
இறைவர்‌ – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும்‌ – சொல்லுங்கள்‌ ;

நீங்கள்‌ கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின்‌ பெருமையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌; நம்‌ தலைவியின்‌ மனத்திற்‌ புகுந்தார்‌ யாரெண்று வினாவுகின்‌ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர்‌ ஆழ்‌வார்‌ புகுந்தா ரென்றோ ௮வள்‌ கூறியது. அதனைச்‌ சொல்லுவீ ரென்பதாமாம்‌, கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில்‌ நெல்‌ மூதலியவற்றை வைத்து
அக்‌ கடவுளைப் பரவி அந்த நெல்லில்‌ ஒரு பிடியள வெடுத்துத்‌ தனியே வைத்து இந் நெல்‌ ஒற்றைப் பட்டால்‌ தெய்வத் தானாயிற்றென்றும்‌ இரட்டைப் பட்டால்‌ பிற நோய்‌ முதலிய வென்றும்‌ கூறுவதோர்‌ குறி யென்‌று சில நூல்களால்‌ தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல்‌, கழங்கு பார்த்தல்‌, கன்னமெடுத்தல்‌ எனப்‌ பலவகைப் படும்‌. கட்டு வைத்து
உரைப்பவள்‌ கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால்‌ மூதறிவாட்டி யென்றாள்‌. இவளுக்கு நோய்‌ வந்த மூலமறிந்து கூறாமல்‌ மாறாகக் கொண்டு குறி பார்க்கத்‌ தொடங்கியதனால் அவளைச்‌ சீர் அழித்தீர் என்றாள்‌-தெய்வத்தால்‌ தீண்டப்‌ பெற்றிலளென்பது தோன்றப்‌ பூவரை யேறிய கோதை யென்றாள்‌. தெய்வம் தீண்டப்‌ பெற்றால்‌ பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம்‌. தலைவன்‌ பிரிந்ததனால்‌ வருந்திய மனத்தினளாய்‌ ௮ணி முதலிய அணிபப் பெறாமல்‌ பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம்‌. திரிமூர்த்திகளிலும்‌ மேலாக ஆழ்வாரை இவள்‌ மனங்கொண்டிருப்பதனால்‌ மூவரில்‌ யாரேனும்‌ இவள்‌ உள்ளம்‌ புகுந்தாருண்டோ என்று நகை யாடிக்‌ கூறினாள்‌. நம்மாழ்வாரையே இவள்‌ கருதி இருக்கிறாள் என்பதைக்‌ கொள்ஞங்களென்பாள்‌ அவரை ஈற்றில் கூறி முடித்தாள்‌. தலைவனது இயர்பெயர்‌ கூறுதல்‌ அகப் பொருள்‌ கந்தருவ வழக்க மில்லாமையால்‌ பின்னர்‌ நான்கும்‌ பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல்‌ – தலைவி தரும வழி தவறவில்லை யென்‌றதை நிலை நிறுத்துதல்‌, தலைவியின்‌ அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல்‌ துறையின்‌ கருத்து. முதுமை யென்னும்‌ பண்புப்‌ பெயர்‌ ஈறு போய்‌ ஆதி நீண்டது. ஆட்டி – பெண்‌ பாற் பெயர்‌, “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல்‌ -பொரு – 287) என்ற சூத்திர வுரையில்‌ கைக் கிளைக்கும்‌ பெருந்‌ திணைக்கும்‌ மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால்‌ இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

————

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.
37–

துறவாதவர்க்கும்‌ -இல்லறத்தி லிருப்பவர்க்கும்‌,
துறந்தவர்க்கும்‌ – துறவறத்தி லிருப்பவர்க்கும்‌,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும்‌ – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம்‌ – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம்‌ ஆ அவை – ஒரு ஆயிரம்‌ பசுக்கள்‌,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்‌,
அந்தோ – ஐயோ !
சிலர் போய்‌ – சிலர் சென்று,
மறம்‌ வாதியர்‌ – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்‌,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம்‌ ஆம்‌ -தன்‌னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப்‌ பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர்‌ – உழலுவார்‌ ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள்‌ கை வலிப்பே – அவர்கள்‌ கை
வருந்துவதானது ,
என்‌ பெறவோ -வேறு யாது பயனைப்‌ பெறுவதற்காகவோ?

யாவர்க்கும்‌ சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம்‌ பாடல்களுமிருக்க அவற்றை விட்‌டுப்‌ புறச் சமயிகள்‌ சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார்‌ அதனால்‌ தங்கள்‌ கை வருந்துவது வேறு யாது பயனைக்‌ கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம்‌. துறவாதவர்க்கு இருமைப் பயனையும்‌, துறந்தவர்க்கு மறுமைப் பயனையும்‌ தன்‌னை நினைத்தவுடனே கொடுத்தலாலும்‌ மற்றும்‌ வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும்‌ திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக்‌ கூறினார்‌. புறச் சமையத்தார்‌ நூல்கள்‌ மலட்டுப் பசுவைப் போலப்‌ பயன் கொடாதொழிவதன்றித்‌ தம்‌மைப்‌ படித்தவர்க்கு நரகத்கையும்‌ கொடுப்பதால்‌ குற்றம்‌ பொருந்திய மலட்டுப் பசு வென்றார்‌-மற வாதியரென்ற பன்மைப் பெயராற்‌ கூறினமையால்‌ ஆசுகளை அகத்‌திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல்‌ எல்லாச் சமயத்தாராலும் புகழும்‌
-மாணிக்க வாசகர்‌ திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக்‌ கூறி எரி வாய்‌ நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர்‌. ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள்‌ விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல்‌ ; : தனித் தமிழ்‌ மொழி- அந்தீற்றோவும்‌”என்றதனா லறிக , ஆசகம்‌- அன்மொழித் தொகை ,-இப் பாடல்‌ உருவகவணி..

குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
. 38–

பொருள் –புறப் பொருள்‌.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில்‌ பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .

குருகூர்‌ என்னும்‌ ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன்‌ தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்‌டில்‌- பனை மடலாலகிய குதிரையில்‌,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்‌து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல்‌ தூக்கி , அரும்‌ பூசல்‌ இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால்‌ – செய்யுட்களால்‌,
உலகை – உலகத்திலுள்‌ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும்‌ – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய்‌ என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர்‌ அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்‌?.]

குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார்‌ அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்‌-தலைவி பால்‌ அண்பு மிகுதியால்‌ பெண் பாலை ஆண் பாலாகப்‌ பைதல் என்றாள் – ஆண் மகனில்‌ சிறுவனுக்கும்‌ துன்பத்திற்கும்‌ பெயர்‌,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப்‌ பைதலென்‌றதும் , “பைதல வாகிப்‌ பசக்குவ மன்னோ… கண்‌! இங்குத்‌ துன்பத்துக்கும்‌ ஆயிபனமையுமறிக -ஆண்பாற்‌ குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும்‌ வழக்குப் பற்றிக்‌ கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும்‌, கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்‌; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம்‌ பிரித்தார்‌ பூர்வாச்சார்யர்- எனின்‌ அதுவும்‌ ஏட்டுப் பிரதியில்‌ தட்டென்பது கட்டென்று ப்‌றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன்‌ றி உகட்டென்‌று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம்‌ இவர்களுக்குத்‌ தோன்றிப்‌ பொருள் பட்டமை யிறும்‌பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன்‌ மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்‌ணிருக்கும் தெருவழியே மூன்று நாள்‌ வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள்‌ ௮ப் பெண்ணைக் கொடா விட்டால்‌ நாலா நாள்‌ மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால்‌ மடற் கூற்று, பெண் பால்‌ மடலேறுவதற்கு விதியில்லாமையால்‌ பொருந்தாதாயினும் பிற் காலத்தார்‌ இங்கனம் எழுதுதலால்‌ இது புறத் திணையில்‌ அடக்கலாயிற்று,

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே
. 39–

மகிழ் மாறன்‌ – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
செய்யுள்‌ – பாடல்களை,
௭ண்ணும்‌-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய்‌ – உண்மையான,
யோகியர்‌ – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம்‌ என்னும்‌ கண்ணும்‌- அறிவாகிய மனக் கண்ணும்‌,
மனமும்‌ – உள்ளமும்‌,
செவியும்‌- காதுகளும்‌,
தவஞ்செய்த-தவஞ்செய்‌தன :
காலத்திலே, பண்ணும்‌–குறிஞ்சிப் பண்‌ முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும்‌, தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும்‌ – விண்ணுலகும்‌, தவம் செய்தன-

நம்மாழ்வார்‌ பாடி யருளிய பாடல்களைத்‌ தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்‌ணும்‌ மனமும்‌ செவியும் தவஞ்செய்‌தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும்‌ மறையும்‌ மண்‌ணும்‌ விண்‌ணும்‌ தவம் செய்தன வென்‌ தாம்‌.-எனவே யோகியர்‌ இவர்‌ பாடல்களையே கருதுவார்கள் எனவும்‌ இப் பாடல்களுக்கு பண்கள்‌ இன்றியமையாதான எனவும்‌,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும்‌, நான்‌கு மறையுமென்றதனால்‌ நான்கு வேதங்களின் சாரமே யிவர்‌ நூல்கள் எனவும் , மண்ணும்‌ விசும்புமென்‌றதனால்‌ இருமைப் பயனும்‌ இந்நூல் அளிக்கும் எனவும்‌ கூறினாராயிற்று, பண்‌ – முற் கூறப் பட்டது, மண்‌, விசும்பு-இட வாகு பெயர்கள்‌,

————-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே
. 40–

கடை நாள்‌ – உலகமொடுங்கும்‌ ஊழிக் காலத்தில்‌,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர்‌ – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்‌,
கொண்ட. – தாம்‌ எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய்‌ அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம்‌ கடந்த – மிக்குணங்‌களுக்கும்‌ அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்‌லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத்‌ தந்தருளிய,
எம்‌ மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்‌- அவர்‌ அவதரித்த திருக் குருகூரில்‌,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின்‌ – தரிசித்து நற் பயனைக்‌ கைப் பற்றுங்கள்‌ ;

ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில்‌ யீடுபட்டுக்‌ காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச்‌ செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப்‌ பிழையுங்கள்‌ என்பதாம்‌, எல்லாம்‌ அழிந்து முடிவிலும்‌ நிலை பெற்று விளங்குவதால் கடை நாள்‌ ஆலத்திலே துயின்‌றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால்‌ கொண்மினோ என்றார்‌. உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில்‌ அவற்றை அழியாதபடி மாயோனானவன்‌ தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன்‌ வடிவான ஆலிலையில்‌ யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால்‌ கடைநாள்‌ ஆலத்திலே துயின்றோர் என்றார்‌. ஆலத்தில்‌, அத்து – சாரியை,

————-

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே
. 41–

முழு ஏழ்‌ உலகை – ஏழுலகம் முழுவதினையும்‌,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்‌தத்தினை – பரிசுத்தரன கடவுள்‌நிலையையும்‌,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்‌,
திருமால்‌ பெருமை – சிறந்த மாயோன்‌ பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்‌,
பணித்‌தானும்‌ – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌,
நின்‌ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய்‌ மொழியை யுடைய, குருகைப் பிரானும்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரும்‌, ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்‌-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார்‌ – அறிந்தவராவார்கள்‌,

உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும்‌ மூவகை நிலைமைகளையும்‌ நான்கு வேதங்களையும்‌ ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌ நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும்‌ ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்‌மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம்‌. மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால்‌ வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும்‌ வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும்‌ அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார்‌ மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங்‌ கொள்ளக் கிடந்தமை காண்க,

———

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே
. 42–

பொருள் –அகப் பொருள்‌.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்

(நெஞ்சமே!) குருகூர்‌ புனிதன்‌ -திருக் குருகூரிலவதரித்‌த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள்‌ -அடைந்தவளாகிய தலைவியின்‌,
கண்ணின்‌ கடை திறந்து – கடைக் கண்‌ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில்‌ விலங்கின்‌ குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும்‌ – ஓடி வருகின்‌ற,
கொள்ளை வெள்ளம்‌ – மிகுதியான கண்ணீர்‌ வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர்‌ – இரத்தினங்கள்‌ பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்‌?

நெஞ்சமே நம்மாழ்வார்‌ அருள் பெற்ற நம் தலைவியின்‌ கடைக் கண்‌ணில்‌ நின்‌று வடிகின்ற கண்ணீர்‌ வெள்ளமானது நாம் போகும்‌ வழியில்‌ குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம்‌ எப்படிப் பொருள்‌ சம்பாதிக்கப் போவது என்பதாம்‌.-குருகூர்ப் புனிதன்‌ அருளைச் சுமந்தவள்‌ கண்ணீர் வெள்ளமானதால்‌ அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச்‌ செல வழுங்கினான்‌- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும்‌ பிதிரரும் இன்புறார்‌? என்பது விதியாதலால்‌ தானே பொருள்‌ சம்பாதித்து அதனால்‌ அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப்‌ போனமையால்‌ பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம்‌, பயன்‌ நெஞ்சொடு கூறி யாற்றுதல்‌, ஓட்டரும் – ஓட்‌டம் தருமென்பதன்‌ விகாரம்‌.

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே
. 43–

பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மாறன்‌ – நம்மாழ்வார்‌ அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்‌,
வஞ்சி – இம்மாதின்‌, கொங்கைகள்‌-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில்‌ அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்‌கும்‌ – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத்‌ தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால்‌ – கொங்கைப்‌ பெருமனும்‌ இடையின்‌ துவட்சியும்‌ இப்படி யென்றால்‌,
கொந்து – பூங்கொத்‌துக்கள்‌,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும்‌ – தலை மயிரும்‌,
கலையும்‌- இடையிற் கட்டிய சேலையும்‌,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும்‌ – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்‌,
நெஞ்சம்‌ – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது

ஆழ்வார்‌. குருகூரில்‌ இம் மாதின்‌ கொங்கைகள்‌ பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத்‌ தாங்கும்‌ வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில்‌ இவள்‌ குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம்‌ என்‌மனந் துடிக்கின்‌றதே யென்பதாம்‌.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக்‌ கொங்கை’* என்றார்‌ இராமாயணத்திலும்‌. மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள்‌ மேல் வளர்தலால்‌ அடிக்‌ கொண்டன வென்றான்‌, வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால்‌ அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால்‌ வஞ்சி யென்றான்‌. பின்னும்‌ ஆடுதல் நோக்கி ஆற்றாமையால்‌ உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான்‌. பந்தாடுமிடத்திற்‌ புகுந்த தலை மகன்‌ தலைவி பந்தடிப்பதை நோக்கிக்‌ கூறினதாகத்‌ துறை கூறினமையில்‌ இது கிளவியில் அடங்க வில்லை யெனினும்‌ ஒன்றனுள்‌ அடக்க வேண்‌டி யிருத்‌தலால்‌ இருவருமுளவழி யவன் வர வுணர்‌தலின்‌ பாற் படுத்தலாம்‌, மெய்ப்‌பாடு- உவகை, பயன்‌-தலைமகளைச் சார்தல்‌.

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே.
44–

கனவு ஆயினவும்‌- சொற்பன அவஸ்த்தையின்‌ பகுதிகளையும்‌,
துரியமும்‌ ஆயயையும்‌ – துரியாவஸ்தை முதலியவைகளையும்‌,
கடந்து -தாண்டி,
மனம்‌ வாசகங்களை -மநோ வாக்குகளையும்‌,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும்‌ பெயருடையவரும்‌,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால்‌ ஒதாமல்‌ உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்‌,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்‌,
தொலைத்த – போக்கிய,
சினம்‌- கோபத்தை யுடைய,
வாரணத்‌தை -யானை போன்றவரும்‌, குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்‌
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம்‌ – யாம்‌ சரணமாக அடைந்தோம்‌;

கனவு துரியம்‌ முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும்‌ தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும்‌ ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம்‌ சரணமாக வடைந்தோம்‌ என்பதாம்‌-ஆயினவும்‌ என்பதனால்‌ கனவின்‌ முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும்‌ பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும்‌, ஆயவையும்‌ என்பதனால்‌ துரியாதீத அவஸ்‌தையும்‌ கொள்க. அதன்‌ உட்‌ பகுதி பலவாதலால்‌ ஆயவை என்று பன்‌மையாற்‌ கூறினார்‌ ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்‌! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம்‌, சுழுத்தி, துரியம்‌, துரியாதீதம்‌ என்பன-இவற்றின்‌ பொருள்‌ முறையே விழித்திருத்தல்‌, கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல்‌, என்‌பனவாம்‌. மனத்தால்‌ எண்ணுதற்கும்‌ வாயினால் சொல்லுதவற்கும்‌ எட்‌டாத நிலைமை யாராதலால்‌ மன வாசகங்களை வீசிய மாறனென்றார்‌,-“மயர்வற மதி நலம்‌’ அருளப்‌ பெற்றவராதலால்‌ வினவாது உணர்ந்த விரகனென்றார்‌. சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால்‌ வினை தொலைத்த சின வாராணமென்றார்‌. இது ஒரு பொருள் மேல்‌ பல பெயர்‌ வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்‌-தோன்‌றா எழுவாய்‌,

———-

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே
. 45–

அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்‌- வேதங்களால்‌,
செப்பும்‌- சொல்லப்படுகிற,
பேர்‌ ஆயிரம்‌ – திருப் பெயர்கள்‌ ஆயிரங்களாம்‌;
திண்‌ – வலிய,
பெரும்‌ புயம்‌ – பெரிய தோள்களும்‌, ஆயிரம்‌-ஆயிரங்களாம்‌;
துளவம்‌ பெய்‌- திருத் துழாய வைத்துத்‌ தொடுத்த,
தார்‌- மாலை,
ஆர்‌ – பொருந்திய,
முடி – திரு முடிகள்‌,
ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌; (அப்படி யெல்லாம்‌ ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன்‌ – நம்மாழ்வார்‌,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம்‌ போன்ற பாடல்‌கள்‌, ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌ : (ஆதலால்‌;) பெருஞ்‌ செல்வர்க்கு – பெரிய அனுபோகப்‌ பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப்‌ பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம்‌ அடையும்‌ -என்றவாறு –

மாயோனுக்குத் திருப் பெயர்கள்‌ ஆயிரம்‌ ; தோள்களுமாயிரம்‌ ;முடிகளும்‌ ஆயிரம்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ பாடல்களுமாயிரம்‌ ;ஆதலால்‌ பெருஞ்‌ செல்வரை யடையப்‌ பெறாதவை யுமுண்டோ ?? எல்‌லாம்‌ அடையுமென்பதாம்‌, உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால்‌ ஸகஸ்ரநாமமென்னு நூலைக்‌ கூற வந்தவர் அதன்‌ தயிழ்‌ மொழியாகிய பேராயிரமென்றார்‌, புயமாயிரம்‌, முடியாயிரம்‌- இவற்றிலுள்ள ஆயிரங்கள்‌ மிகுதிப்‌ பொருளன-திண்‌ பெரும்‌ புயம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌. இதன்‌ முதலடி. வேற்றுப்‌ பொருள் வைப்பணி –

———–

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே
. 46–

பொருள் – அகப்! புறப்‌ பொருள்‌. ்‌
திணை-நெய்தல்‌.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக்‌ கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .

முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்‌,
சினையும்‌ – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்‌,
மயங்க – வேறுபாடு தோன்றாமல்‌ கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும்‌ – கோடுகளுடைய சங்கும்‌,
அன்னமும்‌: அன்னப்‌ பறயையும்‌,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம்‌ பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச்‌ சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின்‌ நடுவிலே சென்று,
அறுக்கும்‌- அந்த வழக்கைத்‌ தீர்த்து விடுகிற,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த,
எம்‌ பூர்வலன் -எம்‌ இறைவன்‌,
அரி- வண்டுகள்‌,
வளை- வளைந்து மொய்க்கப்‌ பெற்ற,
பொன்‌ -பொன்‌ போன்ற,
மகிழ்‌ – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக்‌ காலத்தில்‌ வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல்‌ – கொடுத்தருளுவானோ ?

குருகூரிலிருக்கும்‌ எம்‌ தலைவன்‌ ௮ந்திச்‌ காலத்தில்‌ வந்து எம்‌ தலைவிக்குத்‌ தன்‌ மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்‌.-முத்தும்‌ சினையும்‌ வேற்றுமை தெரியாமல்‌ ஒரு தன்மையா யிருக்கக்‌ கண்டு மாறுபாடாய்‌ ஒன்‌றனை ஒன்று எனது எனது என்று முத்தைப்‌ பெற்ற சங்கும் சினையைப்‌ பெற்ற அன்னமும்‌ வாது கூறலும்‌ இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும்‌ நாடெனவே இரண்டு அரசர்‌ தம்முள்‌ மாறுபட்டுப்‌ போர்‌ தொடங்க எத்தனித்த பொழுது இடையில்‌ இத் தலைவன்‌ இருவரையும்‌ சமாதானப் படுத்த வேண்டித்‌ தூதிற்குக்‌ சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற்‌ கூறியது காண்க, ”ஓதலுர்‌ தூதும் உயர்ந்தோர்‌ மேன *என்‌றமையால்‌ அரசர்க்குத்‌ தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற்‌ குரியதனால்‌ தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்‌; ஆகவே இங்குக்‌ காமக் கிழத்தியே மாலை வேண்டற்‌ குரியவளாவாள்‌,கிளவித் தலைவன்‌ மாலையைச்‌ சுட்டிக்‌ கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால்‌ திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள்‌ – சேரிப் பரத்தையின்‌ மசளாகித்‌ தலைவனைத்‌ தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும்‌ விரும்பா நிலையி லிருப்பவளென்க

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

———–

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே.
47–

பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்‌.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன்‌ நீடலில் , காம மிக்க கழிபடர்‌ கிளவி ,

எம்‌- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின்‌ தலைவரான நம்‌மாழ்வார்க் குரிய,
துறை நீர்‌ பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்‌,
கரை துடைக்கும்‌ – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும்‌ துடைத்து – தாம் சொல்‌லும்‌ வார்த்தைகளில்‌ பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்‌- அயலார்‌ கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும்‌ இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்‌,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல்‌ – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர்‌ – எம்‌ தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்‌ற வழியை, துடையேல்‌ – அழித்து விடாதே கொள்‌;

கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின்‌ சுவட்டைத் துடைக்‌காதே என்பதாம்‌–கைக்கிளையில்‌ தலைவனை நோக்கியவுடன்‌ தனக்குண்‌டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால்‌ புரை துடைத்தென்றாள்‌-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன்‌ என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள்‌ பொய்யுந் துடைத்தென்றாள்‌-பிரிந்தால்‌ தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப்‌ பிறர் கண்‌டால்‌ பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப்‌ பிறர் புகலமுரை துடைத்தென்றாள்‌. ஊசல்‌ -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல்‌ இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின்‌ தலைவன்‌ யாதேனும்‌ ஒரு காரியத்தின்‌ மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்‌-அங்கனம் பிரிந்த தலைவன்‌ குறித்த நாளில்‌ வாராமல்‌ தாமதித்ததனால்‌ தலைவி கடலை நோக்கிப்‌ புலம்புவது துறையின்‌ கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர்‌ நேமி நெடும் திண்டேர்‌,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்‌ ‘என்றார் பிறரும்‌-கை கோள்‌ – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம்‌ -எதிர் காலம்‌, மெய்ப்‌பாடு- அழுகை. பயன்‌ – -கடலொடு புலம்பி யாற்றுதல்‌.

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-

———-

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே
. 48–

பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்‌
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்

நங்காய்‌- பெண்ணே !
படர்‌ – துன்பத்தைச் செய்கின்‌ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம்‌ – ஆகாயமெங்கும்‌,
இருள்கின்‌றதே – இருள் மூடுகின்‌றதே ; இரண்டு கவடு இற – தலையில்‌
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும்‌ ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர்‌ – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல்‌ ஓடிப்‌ போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம்‌ – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர்‌ -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள்‌ நிமித்‌தமாக, ஒன்றும்‌- வருமோ?

நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்‌கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம்‌. பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால்‌ ஆசையை யானையாக உருவகப் படுத்கினார்‌, இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும்‌ அழிபட எனவுமாம்‌, சுற்றத்தை நீங்காமல்‌ பிணித் தலால்‌ அன்பைத் தளை யென்றார்‌. சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல்‌ யானைக்கியல் பாதலால்‌ ஆழ்வார்‌ பாடல்‌ – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார்‌. அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால்‌ ஆழ்வாரைக்‌ கொலை யானையாகக் கூறினார்‌ -எனவே இத் துறை முழுதும்‌ உருவகமாகச்‌ கூறினமையால்‌ முற்றுருவகமாயிற்று,-இரங்கலால்‌ திணை நெய்தலாயிற்று,இருவரையும்‌ மணஞ்செய்விக்க எண்‌ணிய தோழி அவ் விருவரையும்‌ குறியிடத்துச் சேர்ப்பியாமல்‌ தந்திரஞ் செய்தலால்‌ தலைவன் புலந்து அப்பால்‌ போதலும்‌ மற்றையோர் கூற்று நிகழ்‌தலின்‌ ஒரு சார் பகற் குறியாயிற்று.

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

————-

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே
. 49–

இரவி அது தான்‌ – குரியனானது.
பொருள்‌ ஆய்‌ பரந்த -காணும்‌ பொருளாகி,
பொது நிற்றலின்‌ – பொதுவாய்‌ நிற்றலினால்‌,
இருள்‌ ஆய்‌ பரந்த – இருள்‌ மிகுத்துப்‌ பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்‌,
விளக்கும்‌ – அவ விருளைப்‌ போக்கி விளங்கச்‌ செய்யும்‌ ;
அது போல்‌ – ௮தனைப் போல,
மருளாய்‌ – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்‌- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம்‌ நீங்கப் பெற்ற
கோன்‌ மாறன்‌ – எங்கள்‌ தலைவரும்‌ மாறனென்னும்‌ பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால்‌ – கருணையினால்‌,
சமயம்‌ எல்லாம்‌- எல்லாச் சமயமும்‌,
பரன்‌ உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.

சூரியன்‌ தான்‌ பொதுவாய்‌ நின்று உலகத்தின்‌ இருளைப் போக்கிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌; அதே போல நம்மாழ்வார்‌ கருணை யானது எல்லாச்‌ சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப்‌ பொருளைத் தெரிவித்தலால்‌ எல்லாரும்‌ நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம்‌. எல்விதத்தாலும்‌ நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப்‌ பரந்த மயக்கென்றார்‌. பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால்‌ துயக்கற்ற மாறனென்றார்‌. விளக்கும்‌-மிகவும்‌- விரித்தல்‌ விகாரம்‌. அது – பகுதிப்‌ பொருள்‌ விகுதி, தான்‌-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்‌- தொகுதி யொருமை யாதலின்‌ ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

———-

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே
. 50–

மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம்‌ புரிவோரை,
செறிவேன்‌ என – யான்‌ அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்‌,
செய்தாரை இல்லா-ஒருவராலும்‌ செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம்‌ – வேதத்தில்‌,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன்‌ – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர்‌ நிலத்தை – திருக்குருகூரென்னும்‌ திவ்விய தேசத்‌தை,
பிறிவேன்‌ எனவும்‌ – நான்‌ பிரிந்து போவேனென்றும்‌,
எண்ணாது-நினையாமல்‌,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப்‌ பெறச்‌ செய்தனை யாதலால்‌,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன்‌ – வணங்குகின்றேன்‌ ;

ஆகம வாதியரை நான்‌ சேர்வேனென்று நினையாமலும்‌ ஆழ்வார்‌ குருகூரைப்‌ பிரிவேனென்‌று எண்ணாமலும்‌ எனக்கு மோஷம் அடையச்‌ செய்தனை யாதலால்‌ ௮றிவே ! உனைத்‌ தொழுதே னென்பதாம்‌, மற்றை யாகம மென்றதனால்‌ அங்கம் , பூர்வம்‌, பகுசுருதி’ என்கின்‌ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம்‌ அனாதி யாதவால்‌ செய்தாரையில்லா மறை யென்றார்‌, நின்ற நிலை- நாராயணனுக்‌கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன்‌, பிறி- பகுதி,

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

———

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே
. 51–

குறும்பு ஆக்கிய -பெரியோரால்‌ இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம்‌ வெகுளி மயக்கம்‌’ என்னும்‌ மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன்‌ -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்‌,
பிறர் பால்‌ – அன்னியரிடத்‌தில்‌,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்‌,
வினை – வினையானது.
கொடு போய்‌ – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும்‌ – தேவர்களுக்‌கும்‌,
ஏற விட்டான்‌ -மேலாகச் செய்தருளிவிட்டார்‌ ; (ஆதாலால்‌), பெறும்‌ பாக்கியம்‌ உள்ள போதும்‌ -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்‌,
பிழைப்பும்‌ – அதற்கு ஒரு கெடுதியும்‌, உண்டே-உண்டாமோ? [இல்லை.].

குருகூர்‌ நம்மாழ்வார்‌ மெலிகின்றேனும்‌ தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால்‌ ஒருவர்‌ பெறக் கூடிய செல்‌வமுள்ள காலத்‌தில்‌ அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம்‌. பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும்‌ மறுமைக்குப்‌ பயன் படாமையால் வெறும் பா என்றார்‌. எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார்‌. தீ வினையில்‌ தனக்கு ஒத்தவரில்லை யென்பார்‌.
தமியேனென்றார்‌. அமரர்‌ – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால்‌ அமரெனப் பட்டார்‌. காமம்‌ -வேறொரு பொருளின் மேல் செல்லும்‌ பற்றுள்ளம்‌, வெகுளி-கோபம்‌, மயக்கம்‌- ஒன்றனை வேறொன்றாகக்‌ க௫துதல்‌.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்‌றார்‌. போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப்‌ பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்‌-அமரர்க்கும்‌ – ஜந்தனுருபு மயக்கம்‌; எல்லைப் பொருளது, மன்‌ -எழுவாய்‌,”விட்டான்‌ – பயனிலை, இதன்‌ முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

——–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே.
52–

எம்மை- எங்களை,
உள்ளும்‌ சுற்றும்‌ – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர்‌ – மிக்க.
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய விரண்டும்‌,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்‌- அவைகளழியும் படியாகப்‌.
பார்கின்‌ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்‌- -திருக் குருகூரென்னும் பதியில்‌,
எம் பிரான்‌ – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்‌வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்‌,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில்‌ — ஒரே விட்டினுள், உறைவார்க்கும்‌ – வசிக்கின்‌ எங்களுக்கும்‌,
உண்டு- உண்டாகும்‌) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர்‌ அருகூர்‌- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்‌பார்கும்‌,
அருகுஇல்‌ – அவர் விட்டின்‌ சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்‌க்கும்‌,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;

எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்‌ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர்‌ அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்‌கும்‌ அரியதொரு காரியமில்லை என்பதாம்‌. உண்டே, ஏ-தேற்றம்‌. உள்‌ளும்‌, உம்‌- இறந்த தழுவிய வெச்சம்‌, இறப்பு ஆர்க்கும்‌ என்று பிரித்‌து
இரத்தலைச் செய்யும்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌, அவ் வூர்‌ – அடியாரிருக்கும்‌ ஊரென்பதே பொருந்திய வுரை,

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-

——————–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே
. 53–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால்‌ வந்த வருத்த முரைத்தல்‌.

அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும்‌ – அன்றிப் பறவைகளையும்‌,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன்‌ – தாயோடு, பின்றாத வண்ணம்‌ எல்லாம்‌ -மாறுபடாத வகை யெல்‌லாம்‌,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம்‌ – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம்‌ இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்‌?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்‌- நீக்கினவராகிய,
குருகைப் பிரான்‌ -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்‌றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்‌,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;

தலைவனைப்‌ பிரிந்த தலைவிக்கு அன்‌றில் கத்தற வோசை செவியிற்‌ பட்டால்‌ விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப்‌ படுத்தி என்றார்‌. தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம்‌ தலைவனிடத்தே செல்லுமாதலால்‌ அப்பொழுது அருகிலிருந்த தாய்‌ கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன்‌ விரோதப் படுத்தி என்றார்‌. பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால்‌ அதனையும்‌ விரோதித்து என்றார்‌. ௮ன்றுதல்‌ – விரோதித்தல்‌; ௮ன்றுவித்‌து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர்‌, மகிழே, ஏ-தேற்றம்‌,-அன்றி. எதிர்மறை வினை யெசசம்‌. வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்‌.

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே
. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்‌ற வித்‌துவான்களுள்‌ சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத்‌ துறந்த முனிவர்களுக்கெல்லாம்‌,
இன்‌ – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்‌-௮லை வீசுகின்‌ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர்‌ – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர்‌ -திருக் குருகூரிலுள்ள,
மறையோர்‌ – அந்தணர்கள்‌,
பெற்ற- ௮டையப்‌ பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்‌றவரே !
‘இவன்‌-இந்தக் கம்பன்‌,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்‌புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்‌று
உள்ளம் தேறேன்‌ -நான் மனத்தில் தெளிய மாட்டேன்‌.’
எனல்‌ – என்‌று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்‌- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்

ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்‌றும்‌ இவனைத் தெளிய மாட்டேனென்றும்‌ சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம்‌. எல்லாரிலும்‌ சிறந்தமை பற்றி ஏறென்றார்‌; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார்‌ ; பிறர்‌ கவியின்‌ ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள்‌ செய்தமையால்‌ வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார்‌. இம் மூன்றும்‌ உவமை யாகு பெயர்‌, எனல்‌ – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும்‌ – இது தொழிற் பெயராய்த் தேற்றப்‌ பொருள் பட்டு நிற்கும் சொல்-

——

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே
. 55–

பெரும்‌ – பெரிய,
தண்‌ – நீர் வளமிக்க ,
குருகூர்‌ – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென்‌ – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும்‌ – தமிழ் மொழிக்கும்‌,
இயற்கும்‌ – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்‌,
இசைக்கும்‌ – இசைத் தமிழ்க்கும்‌,
சிகா மணியே -சிரோ ரத்தினம்‌ போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்‌
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்‌-உயர்ரந்த,
நாற் காவியும்‌-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்‌,
பின்னை-கடைசித்தரத்தில்‌,
உரைக்கப் பெறுவது அல்லால்‌ – சொல்லத் தக்கதே யல்லாமல்‌,
உன்னை உரைத்து – முதலில்‌ உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர்‌ – வேறொருவர்‌,
உளரோ -இருக்கிறார்களோ ?

குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால்‌ பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால்‌ உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும்‌ அப்படி யார் இருக்கிறார்கள்‌ ? ஒருவருமில்லையே யென்பதாம்‌. நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம்‌, புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம்‌ ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல்‌ சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில்‌ கொண்டிருத்தலால்‌ ஐயுரை யென்றார்‌, ஆழ்வார்‌ பிரபந்தத்தில்‌ இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும்‌ அப் பிரபந்தம்‌ பண்‌ணோடு’ பாட அமைந்திருத்தலாலும்‌ அவ் விடயங்களைச் கொண்டு இயற்‌கும்‌ இசைக்கும்‌ சிகாமணி யென்றார்‌,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-

———

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே.
56–

மறம்‌ – பல்வரிக் கூத்தில்‌ ஒன்று ; ௮து தான்‌ மறவரின்‌ மகளை விரும்‌பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ்‌ நூல்களிற்‌ காண்க,-பல்‌ வரிக்‌ கூத்திற்‌ சில வுறுப்புச்கள்‌ கலம்பக முதலியவற்றிற்‌ காணலாம்‌.

சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால்‌ – தமிழ்ப்‌ பாடல்களால்‌,
பணித்தான்‌ – பாடி யருளினவரும்‌,
எம்‌ – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான்‌ – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரின்‌,
பணி அன்றெனில்‌ – கட்டளை யில்லை யென்றால்‌, (எம்‌ பெண்ணை விரும்பிய), மணித்தார்‌ – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன்‌ தன்‌-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன்‌ – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய்‌ வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்‌,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன்‌ தலையை,
சிதைமின்‌ – வெட்டி யெறியுங்கள்‌ ;
எம் பாவையை – எமது பாவை போல்‌வாளாகிய பெண்ணை,
கொள்ளும்‌ கொள்ளும்‌- நன்றாகச்‌ கொள்வானே போலும்‌

வாயைத் திறந்திருந்தால்‌ – பேரிரைச்சலிடு வானாதலின்‌ முதலில்‌ வாயை அடையுங்களென்றதாம்‌. ஆழ்வாருக்கு அடிமை யென்‌றறிந் திருந்தும்‌ பெண் கேட்க வந்தது குற்றமாதலின்‌ ஆசென்றதாம்‌; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும்‌ வந்த, தூதரைசக் கொன்றுளார்கள்‌ யாவரே தொல்லை நல்லோய்‌” என்‌றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின்‌ அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால்‌ வதைக்க அமையுமென்க . கொள்ளும்‌ கொள்ளும்‌ – வெகுளி பற்‌றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர்‌ : இது கொல்லி மலையில்‌ தேவரும்‌ முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்‌திய ௮சுரரை மயக்க வேண்டித்‌ தேவ தச்சனால்‌ யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம்‌ ; இது அவ் வசுரரைக் கண்டால்‌ சிரித்‌து மயக்கிக் கொல்லுவது –

————

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே.
57–

திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ்‌ சுவை யுள்ள கனி போன்றதும்‌, பசுங்கற்பகத்தின்‌ – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்‌,
பொருகடல்‌ – மோதுன்ற கடலில்‌ நின்றும்‌,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்‌,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள்‌ – நால் வகைப்பொருளையும்‌,
சுரக்கும்‌ – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம்‌ கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம்‌ சுண்டு -முன்னமே பாடாத குற்‌றத்தை யறிந்து,
மற்றை நா வலர்‌ –இனி வேறுள்ள புலவர்கள்‌,
என்‌ -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும்‌ – பிடங்கினாலும்‌,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]

திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர்‌ எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும்‌ அது நல்லதே யாகுமென்பதாம்‌, எங்கும்‌ பரவி நிற்பதென்னும்‌ பொருளும் தோன்றப் பா வென்றார்‌, சுவை யறிவார்க்குச்‌ சுவை மிக்கிருத்தலினால்‌ பழமென்றார்‌. கேட்கக் குளிர்ந்திருத்‌தலின்‌ கற்பக மலரைக் கூறினார்‌. கடலில் தோன்றிய அமுதம்‌ எடுக்கக்‌ குறைந்தும்‌ உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால்‌ போதாரவமுதென்றார்‌. நால் வகைப் பொருள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு-நாவினால்‌ வருணித்துச்‌ சொல்லுஞ்‌ சொல்லில்‌ வல்லவராதலின்‌ நாவலர் எனப்பட்‌டார்‌, நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல்‌ நேர்‌. அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல்‌ ஓன்றனைக் கொண்டது.-

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

——-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே
. 58–

நாவல்‌ ௮ம்‌ தீவில்‌ – அழகிய ஜம்புத்தீவில்‌,
கவிகள்‌ எல்‌லாம்‌ – பிறர் பாடிய பாடல்களெல்லாம்‌,
சில நாள்‌ கழிய – சில நாட்கள்‌ சென்ற பின்‌, பூ- மலர்‌,
வலம்‌ – மணம் முதலிய வன்மைகள்‌,
தீவது போல்வ அல்லால்‌ – கெட்டழித்தல்‌ போல்வன வாகிக்‌ கெடுமே யல்லாமல்‌,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ அவதரித்த,
புலவன்‌ – புலவரும்‌,
தீங்கு -உயிர்களின்‌ குற்றங்களை,
கேவலம்‌ – முழுவதும்‌,
அறுப்பான்‌ – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல்‌ – திருவாய்மொழிப்‌ பாடல்களைப் போல,
எங்கும் போய்‌ – எவ்விடத்‌தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்‌;
கூவல்‌ – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும்‌ – அழகிய இனிய நீரானதும்‌,
வெள்ளம்‌ – பெரு வெள்ளத்தை ,
கோள்‌ இழைத்துக் கொள்‌ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]

உலகத்தில்‌ பிறர் பாடல்கள்‌ சிலகாலத்தில்‌ கெட்டழிந்து போகுமே யல்லாமல்‌ நம்மாழ்வார்‌ பாடல்கள் போல எங்கும்‌ போய்ப் பரவாவாம்‌ ;கிணற்று நீர்‌ பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்‌த இயையுமோ -இயைதாதென்பதாம்‌, பூ.-மலர்ந்த வுடன்‌ மணம்‌ வீசிப் பின்‌ பூ இல்லாமற்‌ போவது போலப்‌ பிறர் கவிகள்‌ பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத்‌ தோன்றி பின்பு பயன்படாதெனக்‌ கொள்க,. நாவலம்‌, அம் -சாரியையுமாம்‌, தீவது -தொழிற் பெயர்‌, அறுப்பான்‌ -வினைப் பெயர்‌,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில்‌ வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி

கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே
. 59–

இழைத்தார்‌ – செய்தவர்‌,
ஒருவரும்‌ இல்‌லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின்‌ பொருள்களை,
இன் தமிழால்‌ – இனிய தமிழ்‌ மொழியினாலே,
குழைத்தார்‌ – செய்தருளியவரும்‌,
குமரித் துறைவர்‌ – கன்னியா குமரி யென்னும்‌ தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில்‌ – குருகூரில்‌,
கூட்டம்‌ கொண்டார்‌ – அடியார்‌ கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌,
வானின்‌ – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்‌-பெரிய, கைகளால்‌—-,
என்‌னை அழைத்தார்‌-என்னை வா வென்றழைத்தார்‌ ; (அங்கனம்‌ அழைத்தன்றி),
அறிவும்‌ தந்தார்‌ – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும்‌ கொடுத்தார்‌ ; (ஆதலால்‌ யான்‌),
அங்கும்‌ போய்‌ – அவ்விடத்துஞ்‌ சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட்‌ செய்வன்‌-அடிமைத்‌ தொழில்‌ செய்வேன்‌ ;

வேதப்‌ பொருளைத்‌ தமிழில்‌ விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர்‌ நம்மாழ்வார்‌ பரமபதத்தில் இருந்து தடக் கைகளால்‌ என்னை வா வென்று அழைத்தாராதலால்‌ நான்‌ அங்கும்‌ போய்‌ அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்‌.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம்‌ கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம்‌. அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின்‌ இன்‌ தமிழென்றார்‌. கைமாறு கருதா அருள்‌ செய்‌யுங்‌ கைகளாதலால்‌ மேகத்தின்‌ தன்மை வென்றார்‌, அங்கும்‌, உம்‌.இங்குத் துதித்த தன்றியும்‌ என இறந்தது தழுவிய வெச்சப்‌ பொருளது,

——–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே.
60–

தண்‌ – குளிர்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள்‌ பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன்‌ என்பேன்‌ – நம்மாழ்வாரென்‌று கூறினேன்‌ ;
ஆள்‌ – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல்‌ ஆவது எல்லாம்‌ – என்னாற்‌ செய்யக் கடவதெல்லாம்‌ செய்து.
அடி அடைந்தேன்‌ – அவர்‌ திருவடிகளை யடைந்தேன்‌ ;
அது அன்றி- அதுவல்லாமல்‌,
செய்‌ய தாமரை தாள்‌ – செந்தாமரை போன்ற அவர்‌ திருவடிகளை,
என்தலை ஏற்றனன்‌ – என்‌ தலையில்‌ சூடிக் கொண்டேன்‌ ;
இனி – இனிமேல்‌,
நாள்‌ குறித்து – என்‌ வாழ் நாளை உத்தேசித்து,
என்‌ தன்‌ ஆர்‌ உயிர்‌ – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்‌,
கோள்‌ செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];

யான்‌ குருகூரில்‌ நம்மாழ்வாரைத்‌ தியானித்து அடிமைத்‌ தொழில்‌ செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச்‌ சிரத்திலணிந்து கொண்‌டேன்‌ ; இனி யமன்‌ என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம்‌. தாளாகிய தாமரை யென்று நேரினும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால்‌ ஆட்‌ செய்யலாலவது
எல்லாஞ்‌ செய்தேன் என்றார்‌. அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம்‌, உண்டே,-ஏ- எதிர்மறைப்‌ பொருள்‌ தோன்றி நின்றது,

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-

———-

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே.
61–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்

கூறப்படா- ஒருவராலுஞ்‌ சொல்லப்படாத,
மறையின்‌ பொருள்‌ – வேதத்தின்‌ பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால்‌ வெளிப் படுத்தி, குவலையத்தோர்‌ – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்‌படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன்‌ – நம்‌மாழ்வருடைய,
மகிழ்‌ அலங்கல்‌ – மகிழ மலர்‌ மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்‌ற காலத்தில்‌,
அன்றில்‌ நஞ்சம்‌௮து -௮ன்‌றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்‌- அமுதாக விருக்கும்‌;
மன்றல்‌ நாறும்‌ – மணம்‌ வீசுகின்ற,
தண்‌ தென்றலை – குளிர்ந்த தென்றல்‌ காற்றினையும்‌,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்‌டேன்‌ – இனி யான்‌ வாழ மாட்டேன்‌ ;

கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில்‌ ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால்‌ ஓசையை நஞ்‌சென்றார்‌-தீண்டப்‌ பெற்ற வுடன்‌ தலைக்கேறும்‌ விடம் போல அன்றிலோசை கேட்டவுடன்‌ விரகம் தலைக்கேறுதலால்‌ நஞ்சமென்றலுமாகும்‌.
கெட்டேன்‌ -இனி யான்‌ உண்ணா லும்‌ உண்ணேன் வாழலும்‌ வாழேன்‌ ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்‌” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும்‌ அமையுமேல் கொள்க-

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

——-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே
. 62–

தென்‌ தலை தோன்றும்‌ – இவ் வுலகத்தின்‌ தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப்‌ பொருளாயும்‌,
என்‌ தீ வினையை – என்‌ தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்‌- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்‌,
நிறை – எல்லா வளங்களும்‌ நிறைந் துள்ள, குருகூர்‌ – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன்‌ தலை- நம்மாழ்கார்‌ வாக்கில்‌,
தோன்றும்‌ – உண்டாகுகின்ற,
மதுரம்‌ கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்‌மொழிப் பாடல்களை,
மனத்துள்‌ – தங்கள்‌ மனத்திலே,
வைப்பார்‌- வைத்‌துக் கொண்டிருப்பவர்களே,
என்‌ தலை- என்னுடைய சிரத்தின்‌ மேலே,
தோன்றும்‌ – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள்‌ – எமது தலைவ ராவார்கள்‌;( அவர்களே),என்‌ நாவுக்கு-என்னுடைய நாவினால்‌ துதிப்பதற்கு, உரியவர்‌ – தக்கவராவார்‌ )

திருக் குருகூர்‌ நம்மாழ்கார்‌ பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள்‌ வைப்பவரே என்னால்‌ வணங்குவதற்கும்‌ துதிப்பதற்‌கும்‌ உரியவராவார்‌ என்பதாம்‌, தத்‌துவப்‌ பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின்‌ உபநிடச மென்றார்‌. தருக்க நியாயத்தால்‌ பரத்துவ நிர்‌ணயஞ்‌ செய்தலால்‌ நியாய நெறி யென்றார்‌.-வேதம் போலாகாது எல்‌லாச் சாதியாரும்‌ படித்த்துச் சுவை காணும் தன்மையினால்‌ மதுரகவி என்‌றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல்‌ விகாரம்‌ பெற்றது. பிரான்‌ – என்னும்‌ னகர ஈறே யுடைமையின்‌ (கள்‌’ என்ற விகுதி பெற்றது.

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே
. 63–

பிறர்‌ – அயலாருடைய,
புல்‌ கவி- புன்மையாகிய பாடல்‌கள்‌,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப்‌ பகுக்கப் படுகின்‌ற ,
கோடலின்‌ -வெண் காந்தள்‌ மலரினின்றும்‌,
உந்து – வீசுகின்ற,
கந்தம்‌ என – மணத்தைப் போல,
ஒன்றும்‌ இன்றி- சொல்‌ பொருள்‌ அணி முதலிய யாதொன்றுமில்லாமல்‌,
விரிக்குந் தொறும்‌ – பதங்களைப்‌ பிரித்தப்‌ பார்க்‌கும்‌ போதெல்லாம்‌,
வெறும்‌ பாழாய் விடும்‌- வீணே பயனற்றதாய்ப்‌ போய் விடும்‌;
மெய்‌ – கடவளின்‌ உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச்‌ சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்‌கள்‌,
புவியில்‌ – பூமியில்‌,
தோண்ட – பறிக்கப்‌ பறிக்க,
சுரத்தலின்‌ -தண்ணீரூறுதலால்‌,
நுண் மணல்‌ – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்‌கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்‌கும்‌- ஒத்திருக்கும்‌;

பிறர்கள்‌ பாடும்‌ பாடல்களெல்லாம்‌ மணமில்லாத கார்த்திகைப்‌ பூவை ஒத்திருக்கும்‌; நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ ஆராயும் தோறுஞ்‌ சுவை ஊருதலால்‌ தோண்டுந் தோறுஞ்‌ சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம்‌. காந்தள்‌ – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில்‌ மலர்தலால்‌ இப் பெயர்‌ பெற்றதென்பர்‌ ; கார்த்திகை மலர்‌ பார்‌வைக்கு அழகாயிருத்தல்‌ போலப்‌ பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும்‌ ௮க்‌ கார்த்திகை மலர்‌ நறுமண மில்லாதது போல அப்‌ பிறர்‌ கவியும்‌ சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால்‌ பயன ற்றதாய்‌ விடுமென்றார்‌, கந்தம் மென, மகரம்‌ – விரித்தல்‌ விகாரம்‌ பெற்றது. தொறும்‌ இங்குத்‌ தொழிற்‌ பயில்வுப்‌ பொருளைத்‌ தந்தது. பாழாய் விடும்‌, விடு-துணிவுப் பொருள்‌ விகுதி, சுரத்தலின்‌ – மூன்றாம்‌ வேற்றுமை ஏதுப் பொருள்‌,

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-

——–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே.
64–

திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும்‌ தாளில்‌ – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம்‌ தேன்‌ – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்‌களிலிருக்கின்ற,) கயல்‌ குதிப்ப- கெண்டை மீன்கள்‌ துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும்‌ – தேன்‌ பரவுகின்ற
பழன வயல்‌ – மிக்க வயல்கள்‌ சூழ்ந்த,
குருகூர்‌ – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌,
வளம்‌ – மகிமைகளை,
பாடுமின்‌ -பாடுங்கள்‌ ;(அப்படிப்‌ பாடினீர்களாயின்‌),
திருவும்‌ சுரக்கும்‌ -செல்வமும்‌ பெருகும்‌ ;
வறுமையும்‌ தீரும்‌ – தரித்திரமும்‌ நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்‌,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்‌- மறைந்து போகும்‌;
மேன்மையும்‌ காணும்‌ – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்‌,

ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌ மகிமையைப்‌ பாடுங்கள்‌ ; செல்வமுண்டாகும்‌ -வறுமை நீங்கும்‌; இருவினைப் பற்றொழியும்‌; மேன்மை யுண்டாகு மென்பதாம்‌. திரக்குதல்‌ – தெறித்து விழுதல்‌. கயல்‌ குதித்தலால்‌ தேன்‌ உடைந்து வயல்களிற்‌ பாவுதல்‌ போலக் குருகூர்‌ மகிமையைக் கூறுதலால்‌ நம்மாழ்வாரின்‌ கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப்‌ பரவும்‌ என்பது தொகை மொழியின்‌ கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள்‌ எண்ணுப்‌ பொருளன,. குதிப்ப- காரணப்‌ பொருளில்‌ வந்த செயவெனெச்‌ச வாய்பாடு, பழன வயல்‌ – இருபெயரொட்டு,

———-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே
. 65–

பாடும்‌ – எப் பக்கங்களிலும்‌,
கறங்கும்‌ சிறை – சுழலுகின்‌ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்‌,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்‌,
பை தாள்‌ – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும்‌ -நெய்‌தல்‌ மலரின்‌ இதழ்களும் (அவ் வண்டுகள்‌ வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்‌ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான்‌ – மிக்க உபகாரமுடையவராய்‌,
இ -இந்த –
சுழல்‌ பிறவியோடும்‌ – சுழன்று வருகிற பிறப்பினுடன்‌,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும்‌ – பரம பதத்தையும்‌,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும்‌ – எந்த நாளும் ,
விடகிலம்‌- யாம்‌ கை விட மாட்‌டோம்‌);

குருகூரிலவதரித்த மக்களின்‌ நிலை யற்ற வாழ்வைப்‌ போக்கி மோட்ச பதத்தினைத்‌ திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம்‌ எந் நாளும்‌ விட மாட்டோம்‌ என்பதாம்‌. வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர்‌ சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல்‌ போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்‌போடு யாவர்‌ பாடுகிறார்களோ ௮வர்களைப்‌ பரம பதமானது தட்டாமல்‌ ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின்‌ கருத் தென்க-சிலர்‌ இதனையே உள்ளுறை யுவமை என்பர்‌, குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்‌,-தந்தான்‌ – வினைப் பெயர்‌, விடகிலம்‌, ௮, கு – சாரியைகள்‌, இல்‌ – எதிர் மறை இடை நிலை-

———–

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.
66–

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர்‌ கண்ணி மாலை யம்‌ பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்‌.

வெம்‌ – கொடிய,
விடம்‌ -நஞ்சு போன்ற ,
அந்தகாரம்‌ பாலில்‌- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம்‌ தலைவிக்கு,
இடர்‌ வந்ததென்று- காமத்‌ துன்பஞ்‌ செய்கின்ற சந்திரன்‌ உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்‌-நம்மாழ்வார்‌,
புணர்ந்திலர்‌-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்‌], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்‌து நீங்குதலும்‌,
௮ந்த காரம்‌ பெரும்‌ புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ்‌ சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன்‌ உயிரை-எம்‌ தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன்‌ கொலோ -யமன்‌ தானோ ? அறியேன் -யானறிந்திலேன்‌ ;

கொடிய இருள்‌ பரவிய இரவில்‌ என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப்‌ பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப்‌ பொழுதில்‌ இருள்‌ பரவா நின்றது தான்‌ உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம்‌. விடம்‌ -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர்‌ -சந்திரனுக்கு ஆகு பெயர்‌, ஆல்‌ – அசை, காலன்‌ கொல்‌ – ‘இடைச் சொற்றொடர்‌ ) கொல்‌ – அசை நிலை யிடைச்சொல்‌.-ஓ – ஐயப் பொருளில்‌ வந்த இடைச் சொல்‌, மாலைப்‌ பொழுதின்‌ பின்‌ இருளைப்‌ பார்த்தலும்‌ தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள்‌, வெம்மையை இடர்‌ என்பதனோடு கூட்டுக ., இன்னும்‌ தலைவர்‌ வந்திலாமையில்‌ இருள்‌ பரவுவதைக்‌ காலனோ வென்றாள்‌, பாரங்குசர்‌ – அயல்‌ மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம்‌ போவ்பவர்‌, இங்கும்‌ துன்பஞ்‌ செய்யுங்‌ காமனை யடக்குபவர் என்று எண்ணிப்‌ பராங்குசர் என்றாள்‌. காமன்‌ கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின்‌ துன்பத்தைக் கண்டு பொறாளாய்‌ வெளிப் படையாகப்‌ புணர்ந்‌திலர் என்று கூறினாள்‌. கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறினமையால்‌ அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால்‌ நான்கு மணம்‌ பெற்ற பெருந் திணை யாகாமல்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர்‌ – தீர்க்க சந்தி, மெல்லியல்‌ – பண்புத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த ௮ன்மொழி,

——–

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே.
67–

பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்‌.
துறை–(தலைவிக்குத் தலைவன்‌) தன்பதி யணுமை சாற்றல்‌,

சுரவாத – அறிவுடையோர்க் கன்‌றிப்‌ பிறருக்குப்‌ பொருள்‌’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள்‌ அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்‌து – எல்லாருக்கும்‌ பொருள்‌ தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்‌,
சொரியும்‌ -கொடுக்கின்ற,
பொருள் பால்‌ – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்‌காமல்‌,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய்‌ – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்‌,
இப் புறம்‌ – இந்தப் பாலை நிலத்தின்‌ எல்லை யானது,
ஓர்‌ சரம் வாதம்‌- ஓர்‌ அம்பு வீழ்ச்சி யளவு தான்‌ ;
அப்புறம்‌-இதற்கு அப்பால்‌,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின்‌ எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்‌;
காண்‌ – நீபார்‌;
ஆதலால்‌, பரவாது – உன்‌ மனத்தை அலைய விடாமல்‌,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்‌,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;

தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன்‌ தன்‌ ஊர்‌ அருகில் இருப்பதனைக்‌ காட்டித்‌ தெரிவித்தனனென்‌க -, இணை – பாலை, கைகோள்‌ – களவு, கூற்று – தலைவன்‌கூற்று, கேட்‌போர்‌ – தலைவி இடம்‌ – முன்னிலை, காலம்‌ – ௭திர் காலம் , எச்சம்‌ -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன்‌ – தலைவியைத் தேற்றல்‌. வேதத்தைப்‌ பசுவாகவும்‌ அதன் பொருளைப்‌ பாலாகவும்‌ அதனைச்‌ சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின்‌ இதுஉருவக வணி. பெண்களிற்‌ சிறந்தமையின்‌ – எல்லாக் கவிகளுள்‌ளும் சிறந்த மாறன்‌ கவியோடு உவமித்தான்‌. இன்னம்‌ எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின்‌ பரவாது கேட்டு என்றான்‌. நெறி முழுதும்‌ இவ் வண்ணமேயாமெனக்‌ கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால்‌ தடம் பணை யுள்ளதனால்‌ பைய நட வென்றான்‌, இடையிலெதிர்த்த சிங்கம்‌ முதலியவற்றை ௮வன்‌ அம்பாலெய்‌ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின்‌ ௮வள்‌ அறிந்த அம்பின்‌ வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான்‌, ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண்‌ என்றான்‌. அப்பால்‌ ஊர் போய்ச்‌ சேரும்‌ வரையில்‌ அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்‌.தடம்பணை -உரிச் சொற்றொடர்‌,

புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

———–

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே.
68–

பொருள் –அகப் புறப்பொருள்‌,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்‌

பனி – விடாமல்‌ மழை பெய்வதை ,
தோய்ந்திடும்‌ – மேற்‌ கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற்‌ செல்கின்ற மேகங்களே!
தண்‌ பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர்‌ – திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம்‌ வடம்‌- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில்‌ – என்‌ கொங்கைகளில்‌, வைக்‌கின்‌றிலர்‌ –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்‌
லாம்‌ – பிற மாலைகளெல்லாவற்றையும்‌,
உடம்பு அணைக்குந் தொறும்‌ –
என்‌ உடம்பில்‌ சேர்த்து ஒற்றிக் கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால்‌ வெந்து போய்‌,
உகும்‌ – உதிர்ந்து விடும்‌ ;
(௮ந்தக் காமத்தீயும்‌.) ஐந்து வெம்‌ பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள்‌, (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில்‌ ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில்‌ கக்கின,
விடம்‌ – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்‌;

மேகங்களே ! குருகூராழ்வார்‌ தம்‌ வகுள மாலையை என்‌ கொங்கைகளில்‌ வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர்‌ கொண்டு வந்து சூட்டு கின்‌ற பிற மாலைகள்‌ காமாக்கினியால்‌ கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக்‌ காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்‌.-அகன்ற நீர் பாய் வயல்களும்‌ குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால்‌ அவர்‌ மாலையும்‌ குளிர்ச்சியைச்‌ செய்யு மென்றாள்‌, உயிர்க்கு நன்மை செய்தலால்‌ தகை வகுளமென்றாள்‌,-பனி – குளிர்ச்சியுமாம்‌. நீங்கள்‌ மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால்‌ பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால்‌ என்பாற்‌ கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர்‌ என்பதனை யடக்கிப்‌ பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள்‌. நீங்கள்‌ இங்கே
பொழிவதனால்‌ பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத்‌ தொடங்கினால்‌ அவர்‌ நம்மைக் கண்டவடன்‌ விரக மேலீட்‌டினால்‌ தாமே என்னிடம்‌ வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம்‌. ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்‌,

பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

———

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே
. 69–

பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப்‌ பொருள் வயிற்‌ பிரிதல்‌,
துறை–தலைவன்‌, மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன்‌ சொல்லல்‌,

மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன்‌ என்‌று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்‌காமல்‌, (நீங்கள்‌),
குருகூர்‌ மெய்யன்‌ -குருகூரிலுள்ள சத்‌துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும்‌ – ஒத்திருக்கின்‌ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என்‌ தலைவியை,
கண்‌ நீரின்‌ துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக்‌ கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம்‌ – என்னை நீங்கள்‌ வருகிற வழியிற் பார்த்ததான வார்‌த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்‌குக-ஆரம்பிப்பீர்களாக ;

மேலோரை முன்னிலை மொழியாற்‌ கூறுதலினும்‌ படர்க்கை மொழியாற்‌ கூறுதல்‌ சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்‌துக் கூறாமல்‌ படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம்‌ வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப்‌ பார்த்து விட்டமையால்‌ இதனை நும்‌ வீட்டில் வந்து கேட்டுக்‌ கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன்‌ என்று எண்ணாது என்று உபசாரம்‌ கூறினான்‌-ஏனைய மாதர்கள் போல்வாளல்‌லள்‌ என்பது தோன்றத்‌ திருவாய் மொழியோடு உவமித்ரான்‌, உங்களுக்கு ௮வள்‌ மறு மொழி கூறத் தொடங்கினால்‌ அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால்‌ சொல்லாளென்றான்‌. அவளைக் கண்டவுடன்‌ என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால்‌ உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும்‌ ஏத முண்டாகுமோ வென்‌றஞ்சி முதலில்‌ மோகத்தை யாற்றிச்‌ சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான்‌, சொல்லிய வுடன்‌ சென்று விட்டால்‌ சோகமடைவளாதலால்‌ மீட்டும்‌ ௮வள்‌ மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்‌டென்றான்‌, பெரு மழை பெய்யத் தொடங்‌கினால்‌ குளிரில்‌ வருந்துவளாதலின்‌ சிறிது துளிகளைத் தூவுக வென்றான்‌. யான்‌ விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான்‌, திணை-முல்லை, கை கோள்‌-
களவு, கூற்று – தலைவன்‌ கூற்‌று. கேட்போர்‌ மேகத்தோடு கூறுவானாய்க்‌ கூறியது , இடம்‌ -முன்னிலை. காலம்‌ – எதிர் காலம்‌. எச்சம்‌- யான்‌ விரைவில்‌ வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம்‌. பயன்‌-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல்‌, பொருள் கோள்‌-யாற்றுகீர்‌. மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம்‌, பாகம்‌ -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர்‌. கண்ணீரின்‌ துளி-பிரிவாற்றாமை யென்னும்‌ மெய்ப்பாடு தோன்ற நின்றது,

மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

———

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே
. 70–

இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன்‌ சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும்‌ முற்கூறிய பல்வரிக்‌ கூத்திலொன்று,

சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்‌றேன்‌ -இப்‌பொழுது உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகின்றேன்‌ அதனைக் கேளுங்கள்‌,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்‌-கூத்தாட எத்தனிக்கின்றாள்‌ ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள்‌ – திரையினுள்‌ளேயே திரும்பிப் போகின்‌றாள்‌ ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள்‌ இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்‌-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்‌,
பிழைப்‌பார்‌ ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள்‌ ?
இந்தப் படங்கு விண்‌டால்‌ – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம்‌ பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்‌- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள்‌ :

சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகேன்‌ கேளுங்கள்‌, பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக்‌ கூத்தாடத் தொடங்குகிறாள்‌, இவளழகு கண்டால்‌ எல்லாரும்‌ மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால்‌ இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம்‌. பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்‌பதன்‌ மரூஉ.

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-

———–

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே
. 71–

பொதியம்‌ – பொதிய மலையானது ,
தரும்‌ – கொடுக்கின்ற
அமுதம்‌ – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார்‌, பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம்‌ என்ன – தமிழில்‌ பதிகங்களென்‌னும் படியாகவும்‌,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்‌,
இ பார்‌ – இந்த உலகத்தை
புரக்கும் – தன்‌ குளிர்ச்சியால்‌ காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில்‌ – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள்‌ என்ன – மாலைகளென்‌னும் படியாகவும்‌,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின்‌ -தமிழ் மொழியில்‌,
௮தியம்‌ தரும்‌ – மிகுதியான பெருமையைத்‌ தருகின்ற,
ஆயிரம்‌’ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்‌– கொடுத்தருளினார்‌ ;

குருகூராழ்வார்‌ பிராமணர்களுக்குத் தமிழெனவும்‌, நான் மறை யென்னவும்‌ மாலை ளென்னவும்‌ ஆயிரம் பாடல்கள் பாடிச்‌ கொடுத்தருளினாரென்பதாம்‌.-பொதிய மலையில்‌ அகத்தியரிடத்தில்‌ பிறந்த தமிழிலக்கணம்‌ உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித்‌ தென்னாட்டை வாழ்விக்கும்‌ சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்‌.-பூசுரர்‌ – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நான்‌கும்‌ நான்கு வேதங்‌கள்‌ போல்‌ கூறப்படுதலால்‌ நான்மறை என்றார்‌. பதிகம்‌ – பத்துப் பாடல்களை யுடைமையின்‌ பதிகமெனப் பட்டது, நினைக்கவும்‌, கூறவும்‌ குளிர்ச்சியைத் தருதலின்‌ மதியை யுவமித்தார்‌. ஒன்றோடொன்று தொடர்புடைமையின்‌ மாலைகளென்றார்‌. பதிகம்‌, அதிசம்‌ என்பன எதுகை நோக்கி, பதியம்‌, .அதியம்‌ என்றாயின. வேதப்‌ பொருளைக்‌ கண்டு மகிழ்பவர் அந்தணராதலால்‌ அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார்‌ என்க,

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-

—————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே
. 72–

பரவும்‌ – எல்லாராலும்‌ துதிக்கப் படுகின்‌ற , குருகூர்‌ -திருக் குருகூரில்‌,
வந்த – அவதரித்த,
கற்பகம்‌ – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்‌,
பொய்ச் சமயப்‌ புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம்‌ பெளத்தமென்னும்‌) புறச் சமயங்களிலுள்ள வித்வான்‌களுக்‌கும்‌,
பூட்சி கண்டீர்‌ -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்‌கள்‌;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள்‌ மாறு பாட்டைப்‌ போக்குவதாகிய,
வல்வாய்‌ – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர்‌ – வாள்‌ போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள்‌ :
மன்‌ – நிலை பெற்ற,
உயிர்‌கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌,
ஆட்சி கண்டீர்‌ – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌ ;
தொண்டர்க்கு – திருமாலின்‌ அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர்‌ – பேரின்பக்‌ கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்‌டீர்‌ – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்‌,

குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர்‌ பொய்‌யான சமயத்தருமேற்‌ கொள்ளத் தகுவார்‌ ;அருகர்க்கு வாள் போன்றவராவார்‌ ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர்‌ : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார்‌ ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்‌.-பிரத்தியஷப் பிரமாணம்‌ ஒன்றே யுடைய லோகாயிதரும்‌ காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும்‌ ஆழ்வார்‌ திருவாய் மொழியின்‌ கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின்‌ அவராற்‌
பூணப்படுவாரென்றார்‌. வஞ்சனை யுடைய ஜைனர்‌ முற்கூறிய இரண்டினோடு ஆகமம்‌, அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும்‌ ஆழ்லார்‌ நூல்‌ அதன்‌ மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின்‌ இதனை வெல்ல முடியாமையால்‌ அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார்‌. தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின்‌ மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத்‌ தரலிற்‌ கற்பகமென்றும்‌ அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத்‌ தொண்டர்க்கே கொடுப்பரென்றும்‌ இங்கனம் இருந்தும்‌ மனத்தால்‌ நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம்‌ -உவமை யாகு பெயர்‌-

————-

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே.
73–

எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்‌கு விற்கவும்‌,
விலை கொள்ளவும்‌ – அந்த விலைப் பொருளைத் தாம்‌ பெற்றுக் கொள்ளவும்‌, உரியான்‌ உரியவரகிய,
மாறன்‌ – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
கவி வெள்‌ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம்‌ – நாம்‌,
நிதம்‌ – தினந்தோறும் ,
கற்றும்‌ – மூலத்தைக் கற்கக் கடவோம்‌; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும்‌ – அதன் பொருளைக் காதில் நன்றாகக்‌ கேட்கக் கடவோம்‌ ; பருகி – குடித்து, களித்தும்‌ – மகிழ்வோம்‌ ; முற்றும்‌ – அந்தப்‌ பிரபந்த முழுவதும்‌, உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும்‌ – ஊற்றிக் கொள்வோம்‌ ; மூழ்கி – அந்த வெள்ளத்தில்‌ அழுங்க,-குடைதும்‌ – ஸ்நாநஞ் செய்வோம்‌ ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்‌துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும்‌ – நிற்போம்‌;
நீந்துதம்‌ – நிலை கொள்ளாத இடங்களில்‌ நீந்திச் செல்வோம்‌;

ஆழ்வார்‌ பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம்‌ ;பிறர் பாற்‌ கேட்போம்‌ ; உண்டு மகிழ்வோம்‌ ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம்‌ ; அதில்‌ ஸ்நாநஞ் செய்வோம்‌ ; நிலை கொண்ட இடத்தில்‌ நிற்போம்‌; நிலை கொள்ளாத விடத்தில்‌ நீந்துவோம்‌ என்பதாம்‌, பருகும் போதெல்லாம்‌ தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார்‌. முழுதுங்‌ கொள்ளுதற்கு எம்‌ அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும்‌ வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார்‌. ஓயாமற்‌ பருக வேண்டியதனால்‌ முகந்துகொடு நிற்றுமென்றார்‌, யாம்‌ அவர்க்கு அடிமையாய் விட்டபடியால்‌ அவர்‌ என்னை விற்கவும்‌ பொருளைப் பெறவுமுரியரென்றார்‌. விற்றல்‌-அடியார்க்கு அடியனாகச் செய்தல்‌.விலை கொள்ளுதல்‌ – அவ்வடியாரையும்‌ தம்மடியாராக்குதல்‌, மாறன்‌ – ஆழ்வார்‌ திருப் பெயர்களுளொன்று.-கற்றும்‌ முதலியவை – தன்மைப்‌ பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும்‌ உருவகஞ்‌ செய்தமையால்‌ இது முற்று உருவக அணி’.

———–

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.
74–

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்‌துரைத்தல்‌.

கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள்‌ பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள்‌ – தெளிந்த,
அம்‌ – நீர்‌,
பரந்த – பரவிய,
வயல்‌ – கயல்கள் சூழ்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின்‌ – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்‌,
எம்‌ உள்ளம்‌ – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப்‌ பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்‌,
வெள்ளம்‌ – பிரவாகமான கடல்கள்‌ தாம்‌,
பரந்தனவோ – பரவி யிருக்கின்‌றனவோ ? அன்றி- அல்லாமல்‌,
வெள்மதி மேல்‌ – வெண்மையாகிய சந்திரன்‌ மேலே யுள்ள,
முயல்‌ நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்‌ளம்‌ – களவாகிய தொழிலொன்று தான்‌, பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும்‌ ஒர்கிலோம்‌- ஒன்றாகத்‌ துணிந்து சொல்ல யாம்‌ ௮றிந்தோமில்லை.

ஆழ்வார்‌ குருகூரில்‌ எம்‌ தலைவியின்‌ முகத்திலுள்ளன கமலத்தில்‌ வெள்ளம்‌ பரந்தனவோ ? சந்தின் மேற்‌ களவுத் தொழில் தான்‌ பரந்னவோ? அல்லது என்‌ மனந்தான்‌ ௮ங்கனம்‌ பரந்தனவோ ? கண்கள்‌ தாமோ? ஒன்றும்‌ அறிந்தோமில்லை யென்பதாம்‌,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள்‌ போலத்‌ தலைவனுக்குத்‌ தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன்‌ மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக்‌ கூறியது பண்பு பற்றி யென்க , இவன்‌ நெஞ்சம் அவள் விழியால்‌ தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்‌.,அங்கனம்‌ கொண்ட மயலுச்கு எல்லை காணாமல்‌ ஆழ்ந்ததனால்‌ கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்‌; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும்‌, கொம்பு -உவமை யாகு பெயர்‌. வெள்ளம்‌, கள்ளம்‌, உள்‌ளம்‌ – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால்‌ பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும்‌ ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால்‌ உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்‌று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன்‌ மற்றை நாள்‌ முன்‌ கொடுத்த தெய்வம்‌ இன்னுங்‌ கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல்‌. கை கோள்‌ – களவு, கூற்று -தலைவன்‌ கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம்‌ ; உவகையுமாம்‌. பயன்‌ -கண் சிறப்புரைத்தல்‌ ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்‌.

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே
. 75–

ஓரும் – ஆராய்‌ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்‌மைக்கு,
உரியாரும்‌ – தகுந்தவர்களும்‌;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும்‌ -ஞானமுடையவர்களும்‌,
சாரும்‌ – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன்‌ – சடகோபனென்‌னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்‌- வரக் கடவீர்கள்‌ ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப்‌ பாட்டை,
சொன்னேன்‌ – இப்பொழுது சொல்லுகிறேன்‌; (அப்படி. வருவீரேல்‌,)
நும்‌- உங்களுடைய,
மயக்கம்‌ எல்லாம்‌ -விபரீதமுழுவதும்‌,
தீரும்‌: -நீங்கி விடும்‌ ;
திருக்கு அறும்‌ – மாறுபாடுகள் நீங்கி விடும்‌
தீங்கு -தீவினைகள் எல்லாம்‌,
அறும்‌ – நீங்கும்‌;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்

நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள்‌ ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன்‌ ; உங்கள்‌ மயக்கம்‌ நீங்கும்‌ ; திருக்கு நீங்கும்‌; மனம்‌ ஒழுங்குபடும்‌ ; தீங்கறுமென் பதாம்‌. ஒர்தல்‌ – கடவுளியல்பை யறிதல்‌, ஓங்கிய ஞானம்‌ – கடவுளை அறியும் அறிவு – மயக்கம்‌ – ஒன்றை மற்றொன்றாகக்‌ கருதும் விபரிதம்‌: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்‌பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல்‌, திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும்‌ அவர் போல்வாரும்‌ நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல்‌, இவைகள் ஓழியவே மனம்‌ ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல்‌ கூடிமென்பதாம்‌,-இவை யனைத்தும்‌ திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால்‌ இது அப் பதியின்‌ சிறப்புக் கூறப்பட்டது, வாரும்‌ என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்‌-தெளிவினால்‌ வந்த கால வழு வமைதி,

———

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.
76–

பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்‌.

அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்‌-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும்‌ உறுவகையால்‌-தன் மாத்திரைகளும்‌ கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்‌டம்‌எல்லாம்‌ – நீண்ட பொருள் விரிவு முழுவதும்‌,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான்‌ -தலைவரும்‌,
குருகூர்‌ பிறந்த – குருகூரிலே அவதரித்‌தருளிய,
சிறு வகையார்‌ – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம்‌ – யாம்‌ வணங்கினோம்(ஆதலால்‌) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;

சமய நூல்களில்‌ கூறிய மாறுபாடுகளை யெல்லாம்‌ போக்கி நல்வழி இதுவே யெனப்‌ பிரபந்த ரூபமாகக்‌ காட்டி யருளிய திருக் குருகூர்‌ நம்‌மாழ்வாரை யாம்‌ தொழுதோமாதலால்‌ மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம்‌, பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம்‌ எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம்‌ – அவ்வச்‌ சமய நால்களில்‌ கூறிய தத்துவ சாத்திரங்களாம்‌ ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின்‌ பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும்‌ நிலையிட்டருளியபடி என்பதாம்‌, ஆய சமயம்‌ – இடைச்‌ சொற்றொடர்‌. ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம்‌ வேற்றுமைத் தொகை.
தலைவன்‌ பரத்தையிற்‌ பிரிவில்‌ தலைவியின்‌ மைந்தன்‌ தெருவில்‌ விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான்‌ தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன்‌ பரத்தையிற் பிரிதலும்‌ தலைவிக்கு ஊடல் தோன்றுதலின்‌ உரிப் பொருளால்‌ மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம்‌. பயன்‌-காமக் கிழத்தி மகிழ்தல்‌. கை கோள்‌ – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,

சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே
. 77–

அணி நீர்‌ -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ்‌ -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய்‌ – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில்‌ -அவ்விடத்‌தில்‌,
வீனையேன்‌ -தீ வினை யுடையவனாகிய நான்‌,
இவ் வெறும்‌ பிறவி – இப் பயனற்ற பிறப்பில்‌,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்‌பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார்‌ திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப்‌ பெற்றிலேன்‌ – பிரார்த்தித்து அடையப்‌ பெற்றேன் இல்லை ;

நான்‌ பிறந்த பொழுதே நம்மாழ்வாருக்‌ கன்புடையோனாய்‌ அவர்‌ திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்றுக்‌ கொண்டேனில்லை என்பதாம்‌. மற்றை நாட்டைக் காட்டிலும்‌ சிறப்புடைமை தோன்றம்‌ தமிழ்த் திருநாடு என்றார்‌.-பாவகன்‌ – அக்னி. அவனைப்‌ போலப் பரிசுத்த முடைமையால்‌ ஆழ்வாரை அவ்வாறு கூறினார்‌. இம்மைப்‌ பயனைத் தேடி உழலுதலால்‌ வெறும் பிறவி என்றார்‌. சிந்தித்தது – வீட்‌டின்பம்‌, பாவகன்‌- உவமை யாகு பெயர்‌, வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர்‌, சிந்தித்தது – வினைப்பெயர்‌,

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே
. 78–

பாவகத்தால்‌ – அம்சத்தினால்‌,
தன்‌ – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம்‌ – சிறந்த அவதாரங்கள்‌, பதினொன்று என்‌று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார்‌ – இந்த வுலகத்திலுள்ளவர்‌கள்‌,
அறியாத வண்ணம்‌ -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்‌-தந் நாவினிடமாக,
ஆயிரம்‌ கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப்‌ போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்‌.
புறத்தார்‌-அன்னியர்களுக்கு,
செய்‌ – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்

நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய்‌ ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்‌-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல்‌ பிறருக்குச் செய்‌யும்‌ ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்‌,-ஆழ்வார் திருமாலின்‌ அம்சமென்று கூறப்படுதலால்‌ அந்த மாயோனவதாரம்‌ பத்தன்றிப் பதினொன்றென்‌றார்‌. அக் காரணத்தால்‌ இவர்‌ மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்‌- மாயோன்‌ வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்‌-. பூ ௮கம்‌ -பூமியாகிய இடம்‌; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான்‌ – மேலாகிய இடத்தை யுடையவன்‌, புறத்தார்ச் செய்‌- வேற்றுமைத் தொகை –

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-

தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

———

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே
79–

குருகைப்‌ பிரான்‌ – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம்‌ பிரான்‌ தன்‌ – எங்கள்‌ நம்மாழ்வாருடைய,
இயல்‌ இசைக்கு – இலக்கணமும்‌ பண்ணும்‌ அமைந்த திவ்யப்‌ பிரபந்தங்களாலே. (யான்‌) குற்றேவலும்‌ செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின்‌ தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன்‌ – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என்‌ போல்‌- என்னைப் போல,
எவர்‌ – யாவர் தாம்‌,
பேறு பெற்றார்‌ – பயனடைந்து இருக்கிறார்கள்‌ ? (ஒருவருமில்லை என்றதாம்‌),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில்‌ நிலை நிற்கின்ற ,
பொய்‌ அன்பர்‌ தாங்களும்‌ – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்‌,
மெய்‌ – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார்‌ – அறிந்து கொண்‌டார்கள்‌ ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது

யான்‌ ஆழ்வார்‌ பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல்‌ முதலியவற்றைச்‌ செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்‌னைப் போல் பெற்றவர் யார்‌? ஆழ்வார்க்குப்‌ பிற் பட்ட பலர்களும்‌ இந்தப்‌ பிரபந்தத்தினால் தத்துவ ஞானம்‌ பெற்றார்கள்‌, ஈதென்ன வியப்பு ?என்பதாம்‌. இயல்‌, இசை – சினை யாகு பெயர்‌.-ஏவலும்‌, உம்‌. இறந்தது தழுவிய எச்சம்‌. எற்றே , எல்‌ – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும்‌ அமையும்‌. கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச்‌ சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,

———

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–
80–

பொருள் –அகப் புறப் பொருள்‌,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,

இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்‌ல் புகுத்தி,
இன்‌ இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான்‌ – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்‌),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப்‌ பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்‌டதே கொல்‌ – கதவு தாழ் போடப் பட்டதோ ?

இலக்கண அமைதியும்‌ இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில்‌ சந்திரனிடத்தில்‌ களங்கம் போக்கி விட்‌டும்‌ முத்தும்‌ மீனும்‌ அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்‌டதோ வென்றான்‌ என்பதாம்‌.-எல்லா இலக்கணங்களுக்கும்‌ இலக்கியமாகக் கொள்ளுதலால்‌ இயலைத் தொடுத்தென்றார்‌ – இசையோடு கூறப்படுவதனால் இசையைப்‌ புணர்த்தென்றார்‌. படித்தலால்‌ பிறப்பின்‌
மயக்கம்‌ நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார்‌. களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும்‌, முத்துக்கள்‌. – பற்களுக்கும்‌; கயல்கள்‌ – கண்களுக்கும்‌ உவமை யாதலால்‌ இவை யனைத்தும்‌ உவமை யாகு பெயர்கள்‌. கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்‌னும்‌ ஐய இடைச் சொல்‌ பிரித்துக் கூட்டிப் பொருள்‌ கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்‌;ஒப்பாரு மிக்காரு மில்லாத்‌ தலைவன்‌ வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக்‌ கைக்கிளை யன்றி அடியோர்‌
பாங்கினும்‌?? என்ற விதிப்படி யமைந்த அடியவன்‌ தலை மகனாய்த்‌ தெருவில் செல்பவன்‌ சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன்‌ கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன்‌ – வியப்பினாலுள்ள மகிழ்தல்-

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே.
81–

கேணியிலும்‌ – கிணறுகளிலும்‌,
பட்டத்திலும்‌ – பட்டக்‌ கால்களிலும்‌,
பைந்தடத்திலும்‌ – பசிய குளங்களிலும்‌,
ஓடை – நீரோடைகள்‌ சூழ்ந்த,
பழனத்திலும்‌ – பள்ளமாகிய வயல்களிலும்‌,
குட்டத்திலும்‌ – ஆழமான குட்டைகளிலும்‌,
கயல்பாய்‌ – கயல் மீன்‌ பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர்‌ – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம்‌ அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின்‌ கிட்டத்திலும்‌ வலியாரும்‌-இரும்புகளுருக்குகின்‌ற உருக்குக் கிட்டானைக்‌ காட்டிலும்‌ வலிய நெஞ்சுடையவரும்‌,
இட்டத்திலும்‌ _ கருத்துக்களைச்‌ சொல்லுமிடத்திலும்‌,
தம்தம்‌ உள்ளத்திலும்‌ – தங்கள்‌ தங்கள்‌ மனத்திலும்‌,
எண்ணிலும்‌ – நினைப்பினும்‌,
உருகுவர்‌ – கரைவார்கள்‌ ;

குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும்‌ மனமுருகு வாரென்பதாம்‌, பட்டம்‌ – தண்‌ணீர்ப் பெருக்கும் காலத்‌தில் மட்டும்‌ ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்‌. நீர் வளத்‌தால்‌ மேடும்‌ பள்ளமான வயல்களிலும்‌ கிணறு குள முதலியவற்றிலும்‌ ஏற்றத் தாழ்வின்றி மீன்கள்‌ பாய்தல் போல ஆழ்வாரின்‌ குண விசேஷத்‌தால்‌ அறிந்தோர்‌ அறியாதோர் கொடிய நெஞ்சர்‌ முதலிய யாவரும்‌ உருகுவாரென்று தொகை மொழியாற்‌ கொள்க , இரும்பு – வன்றொடராயிற்‌
று. ஓடையாகிய பழனம்‌ என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்‌’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம்‌ – பண்பாகு பெயர்‌.

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

————————–

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெரும்‌- பெரிய,
தண்‌ – குளிர்ந்த,
வகுளம்‌ மணம்‌ – மகிழ மலரின்‌ மணமானது ,
வேண்டும்‌ – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல்‌ – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான்‌ – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள்‌ – பாடல்களாகிய,
மா மணியின்‌ – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம்‌ -,கூட்டத்தை ,
வேண்டும்‌ என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால்‌ – தரிசித்தால்‌,
குணம்‌வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள்‌ வேண்டுமோ? (வேண்டாம்‌)
நல்‌ குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்‌)
௮ குலத்து ஒழுக்காம்‌ – அந்தக் குலத்‌துக்குரிய நடையாகிய, –
பிணம்‌-பயனற்ற பிணம் போல்‌வதும்‌. வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்‌
டாம்‌)
செல்வம்‌ பேய்‌ – பொருளாகிய பிசாசும்‌, வேண்டுமே – வேண்‌டுமோ ? வேண்டாம்‌
ஆதலால்‌, சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும்‌ – கை கூப்பி வணங்குங்கள்‌

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை அன்‌போடு படிப்பவரைக் கண்டால்‌ ௮வருடைய குணம்‌ குலம்‌ நடை பொருள்‌ யாவும்‌ பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள்‌ -என்பதாம்‌. குணம்‌ – அன்பு. பொருள்‌, அடக்கம்‌ முதலியன. குலம்‌ – ௮ந்தணர்‌ முதலிய உயர்குலம்‌, நடை – அவர்கள்‌ தர்கள்‌ மதத்துக் ஏற்பக் கட்டியதானால்‌ பிணமென்றிகழ்ந்தார்‌. பேய்‌ – தான்‌ பிடித்தவரைத்‌ தன்‌ வசமாக்குதல்‌ போலப்‌ பொருளும்‌ விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார்‌. மணிக்கு மேற் சிறந்த பொருள்‌ தோற்றத்தி லில்லை யாதலால்‌ மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள்‌ எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய்‌ – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌:

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–
83-

தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின்‌ சுழலிருந்து
எழும்‌ – வெளியில்‌ வரும்படியாகிய, பாக்கியம்‌ – செல்வம்‌,
உடைத்து ஆக்கவும்‌ – எனக்கு உடையதாக்கவும்‌,
தென்‌ – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும்‌ – விளங்‌கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்‌,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின்‌ குண விசேடங்களை,
நாளும்‌ கிளத்தி- தினந்தோறும்‌ சொல்‌லிச் சொல்லி,
என்‌ நா – எனது நாக்கில்‌,
தழும்பு ஆக்கவும்‌ – தழும்பு ஏறச் செய்யவும்‌, வல்ல கோ – வலியரான இறைவர்‌,
தயா பரன்‌ – கருணை யுடையவரான, சடகோபன்‌ – நம்மாழ்வாரேயாம்‌ ;

பிறவிப் பெருங் கடற்‌ சுழியில் அமுங்கிப்‌ போகாமல் எழுந்து மீண்டு வருந்‌ திறமை யுடையதாக்கவும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களில் உள்ள கடவுளின்‌ மகிமையைத் தினந்தோறும்‌ கூறி எனது நாக்கில் தழும்பேறச்‌ செய்யவும் தகுதி யுள்ளவர்‌ நம்மாழ்வாரே யென்பதாம்‌. தீ வினை தான் செல்லும்‌ வழியே என்னை இழுத்தலால்‌ தோழும்பாக்கிய வினை யென்‌றார்‌. மாறாமல்‌ தொடர்ந்து வருதலால்‌ தொல்லைப் பிறவி யென்றார்‌.
இது பற்றியே தொல்லை நம்‌ பிறவி யெண்ணிற்‌றொடு கடல்‌ மணலுமாற்றா” என்றார்‌ திருத் தக்க தேவரும்‌, அதில்‌ நின்று மீண்ட வரருமையாதலால்‌ சுழி யென்றார்‌. ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம்‌ அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர்‌, உடைத்து –
குறிப்பு முற்றெச்சம்‌. வல்ல – குறிப்புப் பெயர் எச்சம்‌, கோ ௭ன்னும்‌ எழுவாய்‌ ஆம்‌ என்னும்‌ ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –

தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

——–

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே
.–84-

பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்‌,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

நங்காய்‌ – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும்‌ – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர்‌ என்‌னில்‌ – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்‌,
உன்‌ மகள்‌ – உன்‌ புதல்வி,
கண் பனி மல்கும்‌ – கண்களில்‌ நீர்‌ பெருக்குவாள்‌ ;
கரம்‌ – கைகளை,
தலை கொள்ளும்‌ – தலையிற்‌ குவித்துக் கொள்ளுவாள்‌ :
கருத்து உள்‌ளும்‌ – மனத்தில்‌ தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம்‌ உருகுகின்றாள்
கவியால்‌ – பாடல்களால்‌,
உலகை – இந்தத்‌ தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும்‌ வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான்‌ – நீக்கிய நம்மாழ்வார்‌.
புனை – ௮ணிந்து கொள்‌ளுகின்ற,
மகிழ்‌ பூவும்‌ ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்‌,
மரம்‌ தலைக் கொள்ளவும்‌ – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்‌,
போதும்‌ – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள்‌ கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்‌.

நங்காய்‌ உன்‌ மகள்‌ குருகூர் என்றவுடன்‌ கண்ணீர்‌ வடிக்கிறாள்‌ -கை கூப்புவாள்‌ ; கருத்தில்‌ நினைக்கிறாள்‌ மனம் கரைகிறாள்‌ ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும்‌ செல்கிறாள்‌ என்பதாம்‌. நங்கை – எல்லாக்‌
குணங்களும்‌ நிறைந்தவள்‌. இதன்‌ ஆண்பால்‌ – நம்பி. கிளவித் தலைவன்‌ பெயர் கூறலின்‌ அகப்புறமாயிறறு, புறமெனவே அதன்‌ பகுதியாகிய பெருந் திணையாம்‌. தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச்‌ சிறப்புச்‌ செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித்‌ தோழியிடத்‌துத்‌ தன்‌ காம நிலையைக் கூறத்‌ தோழியாலறிந்த செவிலி யானவள்‌ பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல்‌ கிளவியின்‌ துறையாகும்‌-கண் பனி மல்குமெனவே அன்பும்‌ தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும்‌ உள்ளுமெனவே கூடற்குறிப்பும்‌ உருகுமெனவே இன்பத்தின்‌ மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

———–

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே
. 85–

பொருள்‌–அகப் பொருள்‌
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .

(ஐயனே !) கருத்தில்‌ – உமது மனத்திலே,
கருணை வைத்‌து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும்‌ – செல்லக் கடவீர்‌ ;
இதுவும்‌ – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்‌,
கலை மறையோர்‌ – கல்வியில் சிறந்த அந்தணர்கள்‌,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம்‌ – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம்‌ ;
தினம்‌ மயல் தீரும்‌ – இதனால்‌ காள்தோறும்‌ உங்களுக்குண்டாகிய காம மயக்கமும்‌ நீங்கும்‌;
நீரில்‌ – தண்ணீரருகில்‌,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின்‌ – வெண்மையான அடிக்‌ குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின்‌ – கரும்புகளைடைய,
குருத்தில்‌ – குருத்துக்‌களில்‌,
முயல்‌ – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம்‌ வைக்கும்‌ -தேனடைகள்‌ வைக்கின்‌ற,
குருகூர்‌ – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்‌,
கூடுமின்‌ – அடையுங்கள்‌ ;

ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும்‌ ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்‌; ஆதலால்‌ நீங்கள்‌ திருக் குருகரைப் போயடையுங்கள்‌ என்பதாம்‌, நீரில்‌ முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில்‌ தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்‌தில்‌ இருக்கிற தன்‌
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர்‌ என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள்‌ நீர் தலைவியின்‌ குடியாகவும்‌ தோழி நெட்டிச்‌கோரை யாகவும்‌ தலைவி கரும்பாகவும்‌ தலைவனது அன்பு தேனடையாகவும்‌ உவமித்தமை காண்க. இவை முழுவதும்‌ முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்‌,-எண் வகை மணமான :– பிரமம்‌, பிராசாபத்தியம்‌,ஆரிடம்‌. தெய்வம்‌, காந்தருவம்‌, அசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌ என்‌பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல்‌ பண்டை வழக்கு, : அவனுந் தான்‌, ஏனலிதணச்‌ தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர்‌ மதியம்‌ வரை சேரினவ்வரைத்‌, தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன்‌ மகன்‌ ‘என்பதினாலுமறிக , தலைவன்‌ தலைவி சுரத்தில்‌ செல்லுதலால்‌ திணை -பாலை யாயிற்று , தலைவனுடன்‌ தலைவி செல்லுதலால்‌ உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும்‌ வரைவும்‌ மனைவிக்கட்‌
டோன்றும்‌ ” (தொல்‌ – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத்‌ தோழி கூற்றாற் கூறியது : ஒன்‌றித் தோன்றும்‌ தோழி மேன ”(தொல்‌ – பொரு – 19..) என்பதனாற்‌ கொள்க,

கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –

————-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே
. 86–

கூட்டங்கள்‌ தோறும்‌- தாம்தாம்‌ கூடுமிடங்களிலெல்‌லாம்‌,
குருகை பிரான்‌ – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம்‌ -சிறந்த குணங்களை,
கூறும்‌ – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர்‌ ஈட்‌டங்கள்‌ தோறும்‌ – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்‌,
இருக்கப்‌ பெற்றோம்‌ – கூடி யிருக்கலாயினேம்‌;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள்‌ தோறும்‌ -இரண்டு கண்களிலும்‌,
புனல்‌ வந்து- கண்ணீர் பெருகி,
நாலப்‌ பெற்றோம்‌- வடியப் பெற்றோம்‌ ;
(ஆதலால்‌) இனி மேல்‌, வீட்டு- பரமபதத்தில்‌,
எங்கள்‌ தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்‌) தங்கள் நண்பர்‌களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்‌,
பெரும்‌ போகம்‌- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்‌) உண்டா யிருக்கிறது –

கூடும் போதெல்லாம்‌ குருகூர்‌ நம்மாழ்வார்‌ குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற்‌ சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால்‌ கண்ணீர் பெருகப் பெற்றோம்‌ ; இனி மேல்‌ பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென்‌ றறிந்து அங்குள்ளார்‌ அமைத்தலால்‌ அங்கே எமக்குப்‌ பெரும்‌ போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம்‌. குணம்‌-பிறரை வாழ்‌விக்கக் கருதிய குணம்‌. கண்ணீர் வடிதல்‌ – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத்‌ துதித்தலால்‌ பிறவிப் பிணி நீங்குதலும்‌ பரம பதத்திலுள்ளார்‌ தங்கள்‌ நண்‌பரென்று அமைத்தலும்‌ பேரின்பம்‌ பெறுதலும்‌ இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்‌பம் தருதலால்‌ பெரும் போகமென்றார்‌. தோறும்‌- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்‌,

————-

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே
. 87–

பொருள்‌. அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்‌.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்

கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென்‌ – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான்‌ -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில்‌ -குருகூரில்‌,
கார்‌ புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்‌னுடைய தீ வினையே, தினையின்‌ -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்‌றது – முற்றிப் போகின்‌றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல்‌ கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும்‌ உண்டே – ஏதேனும்‌ மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]

ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான்‌ உங்களிடத்தில்‌ தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற்‌ சொல்லிக் காணா யென்பதாம்‌. திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால்‌ யமனுக்குத் தப்பலாமென்பார்‌ தென் பாலை வழி தடுத்தென்றார்‌-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால்‌ தலைவியின் தமர்‌ அத் தினையைக்‌ கொய்து கொண்டு தங்களையும்‌ வீட்டிற்கு அழைதுப் போவார்‌ ; முற்றா திருப்பின்‌ தாங்கள்‌ அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள்‌, இங்ஙனம்‌ பிரியச் செய்வது தீ வினையே யாதலால்‌ ௮துவே தினை வடிவமாகியும்‌ வந்து வருத்திற்று என்றாள்‌. கை கோள்‌ – களவு, கேட்போர்‌ – தலை மகன்‌ சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்‌ச் சொல்லியது, இடம்‌ -முன்னிலை, காலம்‌- இறந்த காலம்‌. மெய்ப்பாடு – அழுகை. பயன்‌ – பகற்‌ குறி விலக்கல்‌. ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம்‌, ஆல்‌ – அசை, இளையாம்‌. ஆம்‌ -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால்‌ திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால்‌ புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்‌-அப்படித் தெரிந்ததனால்‌ தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும்‌ அஞ்சிப்‌ பல வழியாலும்‌ களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்‌யும்படி. முயற்சிப்பதால்‌ கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம்‌. இங்கனம்‌ நாளும் தனியிடத்தில்‌ தலைவியைச் சேருதற்குச்‌ தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும்‌ கொய்யப் பட்டால்‌ தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால்‌ நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால்‌ துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,

நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

———-

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே
. 88–

பொருளும்‌, திணையம்‌ அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்‌.

வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்‌- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான்‌ – தலைவரும்‌,
இன்னா – துன்பத்தைச் செய்கின்‌ற
கலியின்‌ சினம்‌ – கலியின்‌ கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன்‌ -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்‌,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம்‌ பாழ்‌ படுத்து – கதிர்‌ கொய்தலால்‌ கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால்‌ -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்‌,
புகுந்து – என்‌னிடத்துச் சார்ந்து ,
என் மனம்‌ – எனது மனத்தையும்‌, பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்‌.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும்‌ ௮மையும்‌-

நம்மாழ்வார் மலையிற்‌ சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்‌
பாழாக்கிப்‌ புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என்‌ மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்‌-முற்றுதலால்‌ குறவர்‌ கொய்து கொண்டு போனது நிமித்தமாகப்‌ புனம் பாழ்படுத்து என்றான்‌, ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால்‌ பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம்‌. தானும்‌ தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால்‌ பெற்ற பயன்‌ இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான்‌. மெய்ப்பாடு -அழுகை , பயன்‌ – ஆற்றாமை நீங்குதல்‌. பகலில்‌ தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம்‌ பாழாய்ப் போய்த்‌ தலைவியைச் சேர வழி யில்லாமையால்‌ கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின்‌ தலைவன்‌ அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய்‌ அங்குத் தலைவியைக் காணாமையால்‌ ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல்‌ துறையின்‌ கருத்து,

தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-

————

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே.
89–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக்‌ கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்

தினை ஓன்‌றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்‌- பிழையும்‌,
அற்று – இல்லாமல்‌,
உணர்ந்தோர்‌ – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்‌வாரது,
மகிழின்‌ திறத்தின்‌ – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில்‌ வருந்தி யிருக்கிற,
கொடியாள்‌ – கொடி போன்‌ற இடையை யுடைய எங்கள்‌ தலைவி,
துயின்றாலும்‌ -தான் புலம்புவதின்‌று சிறிது நித்திரை செய்தாலும்‌, (தூங்க வொட்டாமல்‌),
தன்‌—-. வாய் அடங்கா – வாய்‌ ஓயாமல்‌,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்‌றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும்‌ – பனை மரமல்லாமலும்‌,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?

நம்மாழ்வார்‌ மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல்‌ கத்துகிற அன்‌றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும்‌ எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம்‌. எந்‌தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின்‌ அவரினும் சிறந்தவரென்பது தோன்‌றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்‌.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல்‌ வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள்‌. ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும்‌ ) அங்‌கனம்‌ அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம்‌ அதிகரிக்குமென்‌பது பற்றி இங்கனம் கூறுதல்‌ வழக்கம்‌, இது கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறுதலால்‌. அகப் புறமும்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல்‌ -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே
. 90–

பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக்‌ கலங்கல்‌.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்‌

பகையாய்‌ வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும்‌ – காமம்‌ வெகுளி மயக்க மென்னும்‌ முக் குற்றங்களையும்‌,
வேரினொடும்‌ – வேரோடும்‌,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய்‌ – அதன்‌ பகுதியாய்‌,
வருவன – வருகின்ற,
யாவையும்‌ – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்‌,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம்‌ உய்ய – உலகத்தினுயிர்கள்‌ பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத்‌ தொகுக்கப்பட்ட,
ஆயிரங்‌ கவி – ஆயிரம்‌ பாடல்களை,
சொன்‌னோன்‌ – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர்‌ சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ்‌ பனியின்‌ புகை – புகை போலப்‌ பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம்‌ இரு ள்‌ – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள்‌ – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?

நம்மாழ்வாரைத்‌ தியானிக்க வேண்டிப்‌ புகை போலப்‌ பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப்‌ போகின்றதென்பதாம்‌.-காமம்‌ -பிற பொருளிச்‌ செல்லுகிற பற்றுள்ளம்‌. வெகுளி – சினம்‌. மயக்கம்‌ -நல்லது தீயதென்றறியா மயக்கம்‌. இவை நீ ங்கவே மனம்‌ தூய்மையாகு மென்பர்‌,-இவற்றின்‌ வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம்‌ – இனி வரப் போகும்‌ வினை,சஞ்சிதம்‌ -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம்‌ – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப்‌ புணர்ச்சிப்‌ பின் பிரிந்த தலை மகன்‌ இரவு மீட்டிப்பத்‌ துயிலப்‌ பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல்‌ இத் துறையாகும்‌ இருளைக் கூறினமையால்‌, திணை – குறிஞ்சி, கைகோள்‌ – களவு.-கூற்று-தலைவன்‌ கூற்று, கேட்போர்‌ – இல்லை. இடம்‌ – தன்மை. காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – இளிவரல்‌. பயன்‌ -தன்‌ ஆற்றாமை நீங்குதல்‌. மூன்று- தொகைக் குறிப்பு. வையம்‌- இடவாகுபெயர்‌. பின்‌னை – இடைச்சொல் திரிபு

இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

————-

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே.
91–

பொருள்‌–௮கப் பொருள்‌,
திணை –உரிப் பொருளால் நெய்தல்‌.
கிளவி -வரைவு கடாதல்‌
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்

இருள்‌ புகுகின்‌றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்‌கின்றது
வண்ணம்‌ – இவளுடைய நல்ல நிறமும்‌,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண்‌ – கண்ணிலிருந்து,
நீர்‌ உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக்‌ கருதி,
உயிர்‌ – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்‌றது ;
உலகு ஏழும்‌ – ஏழுலகங்களும்‌,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப்‌ பத்துப்‌ பாடல்களாகச்‌ சேர்க்கப்‌ படுகின்ற,
ஆயிரம்‌ -ஆயிரம்‌ பாடல்களும்‌,
சொன்னோன்‌ – அருளிச்‌ செய்தவாரகிய நம்மாழ்‌வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால்‌ – கீர்த்தியால்‌,
விளங்கத் தகுகின்றனர்‌ – விளங்கத்‌ தக்க வராகிய,
மேல்‌ மேலும்‌ – மேலும்‌ மேலும்‌ ௮திகமாக, காதல்‌ தரும்‌ அவர்‌ – ஆசையைத் தருகின்ற தலைவர்‌,
அல்லர்‌ – தகுதி யுடையார் அல்லர்‌ ;

இருள்‌ வருகின்றது ; தலைவியின்‌ மாமை நிறம்‌ மாறுகின்றது ;இவள்‌ கண்ணீர்‌ வடிகின்றது ; இவற்றைப்‌ பார்த்து என்னுயிர்‌ சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம்‌ காதலைக்‌ கொடுக்கின்றவர்‌ நம்‌மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால்‌ விளங்கத் தக்கவரல்‌லர்‌ என்பதாம்‌. முந்திய நாள்‌ வரையிலும்‌ இரவில்‌ துன்புற்றவளாதலின்‌ இன்றைத் தினமும்‌ இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள்‌ என்றாள்‌. மாமை – மாந் தளிரின்‌ தன்மை, சிறிது சிறிதாக உயிரின்‌ வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற்‌ கூறினள்‌. மெய்ப்பாடு -அழுகை, பயன்‌ – வரைவு கடாதல்‌. இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன்‌ ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள்‌ போலத் தலைவியின்‌ துன்பத்தைச்‌ சொல்லுதலின்‌ தலைவன்‌ கேட்டு வரைவானாதலின்‌ கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்‌-

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-

———–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே
. 92–

இருமையும்‌ தீர்ந்த பிரான்‌ – யான்‌ எனது என்னும்‌ செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாரது,
இன்‌௮ருள்‌ – இனிய கருணை யானது,
தருமமும்‌ – அறமும்‌,
காமமும்‌ – இன்பமும்‌,
தாவில்‌ அரும்‌ பொருளும்‌ – கெடாத அரிய செல்வமும்‌,
தணவாக் கருமம்‌ ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும்‌ – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின்‌ – பயனற்ற காரணங்களின்‌,
பெருமையும்‌ – பெருமைகளும்‌,
மாயப்‌ பிணக்கும்‌ – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்‌,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம்‌ செய்‌யும்‌ – மிக்க வேறு பாட்டைச் செய்யும்‌; உம்‌ – பிரித்துக் கூட்‌டப்பட்டது.,

நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும்‌ நான்கும் தந்து பயனற்ற காரணங்களின்‌ பெருமையும்‌ பிணக்‌கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச்‌ செய்யுமென்பதாம்‌. செய்யுளாதலால்‌ காமம்‌ பொருள்‌ என முன் பின்‌ மாற்றி வைத்தார்‌. தருமமும்‌,காமமும்‌ பொருளால் செய்யப்படுதலின்‌ அரும் பொருளென்றார்‌.
அறத்தால்‌ சேர்ப்பதே பொருளாமாதலால்‌ வருத்தமில்லாத என்றார்‌. பயனற்ற தொழிலின்‌ மூலங்களின்‌ பெருமையும்‌ பிணக்கும்‌ நீங்க எனவே நல்ல நெறியில்‌ சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌, குயர்ந்த வுலகம்‌ புகும்‌” என்பதற்கு ஆழ்‌வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –

இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-

———-

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே.
93–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்‌.

இயலோடு – இலக்கணத்துடன்‌,
இசையின் பொருளில்‌ -இராகப்‌ பொருளிலும்‌,
சிறந்த —-அலங்கார வல்லியில்‌ – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்‌,
போக்கு இல்‌ – நீங்காத,
உள்‌ளம்‌ – மனத்தால்‌,
தெருளில்‌ – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும்‌ – கரும்‌பை ஓத்த,
ஆயிரம்‌ பர – ஆயிரம்‌ பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்‌,
செய்தவர்‌ – செய்தருளிய நம்மாழ்வார்‌,
௮௫ளில்‌ – கருணையால்‌,
சில மகிழ்‌ – சிலவாகிய மகிழ மலர்‌ மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர்‌ கொல்‌ – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில்‌ – மாலையில்‌ வந்த இருளைக் காட்டிலும்‌,
பிறிது துயரும்‌ உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ

முன்னம்‌ திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார்‌ தமது மகிழ மலர்‌ மாலையை நம்‌ தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்‌ட துன்பத்திற்‌ கெல்லை யில்லை யாதலால்‌ அவ் விருளைக் காட்டிலும்‌ துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம்‌. தொடர்ச்சி பெறப்‌ பாடினமையால்‌ அலங்காரம்‌ அமைந்த கொடி யென்றார்‌. மனத்தால்‌
ஆராயும் தோறும்‌ சுவை மிகுதலால்‌ கரும்பொக்குமென்றார்‌. ஆயிழை – வினைத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித் தொகை, துயரைச்‌ செய்கின்ற இருளைத்‌ துயர் என்றது குறிப்பு மொழி.

———–

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.
94–

(உலகத்தின்‌ உயிர்கள்‌ தம் பிறப்புக்களை), படர்‌ – ஓடுகின்‌ற,
நீரின்‌ இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்‌-புதிய,
ரேகை – எழுத்‌தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்‌தாது ௮ல்லால்‌ – செய்ததே யல்லாமல்‌,
பவம்‌ – பிறப்பாகிய,
ரேகையில்‌ – வழியில்‌,
தம்‌ பணி-தங்கள்‌ தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்‌),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல்‌ – நம்மாழ்வாரைப்‌ போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம்‌ – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர்‌ – பாட வல்லவர்‌,
எவரே -யாவரிருக்கிறார்கள்‌ ?(ஒருவருமில்லை அதனால்‌,)
அயற்கும்‌ – பிரம தேவருக்கும்‌,
அரற்கும்‌ – சிவ பிரானுக்கும்‌,
அல்லா அமரர்க்கும்‌ – மற்றுமுள்ள தேவர்க்கும்‌,
எல்லாம்‌ – முழுவதும்‌,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்‌;

உலகத்திலுயிர்கள்‌ இத் திருவாய் மொழியைப் படித்‌துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்‌றிப் பிறப்பிடத்தில்‌ நாடினவில்‌லை -ஆதலால்‌ மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர்‌ யாவருளர்‌? அதனால்‌ அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம்‌. நம்பி -எல்லாக் குணங்களும்‌ நிறைந்தவன்‌. மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்‌.

————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே.
95–

மெய்யன்‌ – உண்மை ஞான மறிந்தவரும்‌,
குருகைப்‌ பிரான்‌ -திருக் குருகூரிலவதரித்தவரும்‌,
எம்மை – எங்களை,
இன்னம்‌-மறுபடியும்‌,
ஒரு பவம்‌ செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன்‌ – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்‌வாரது,
வள்‌ – வளம் பொருந்திய,
தமிழ்ப்‌ பாவும்‌ உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம்‌ செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள்‌ உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும்‌ உண்டு – அவற்றின்‌ பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்‌),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்‌
கொண்டு,
தவம்‌ செய்வதும்‌ – தவங்களைச் செய்வதும்‌,
தழல்‌ – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும்‌ -யாகங்களைச் செய்வதும்‌,
எவன்‌ செய்‌யும்‌ – என்ன பிரயோஜனத்தைத் தரும்‌

நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும்‌ அவற்றை ஆசிரியர் முகமாகக்‌கேட்க நமக்குச்‌ செவிகளும்‌, படிப்பதற்கு நாவும்‌, பயனறிவதற்குப் புத்‌தியும்‌ உள்ளனவாயிருக்க அந்தப்‌ பிரபந்தங்களை ஆராய்ந்தடையும்‌ பயனைக் காட்டிலும்‌ தம்மை வருத்‌தித் தவங்களும்‌ யாகங்களும்‌ செய்வதனால்‌ என்ன பயன்‌ என்பதாம்‌,-உண்மையாகப் பயன்படும்‌ நூலைச்‌ செய்ததனால்‌ மெய்யனென்றார்‌. அவரைத் தியானித்ததனால்‌ தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்‌.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால்‌ வண்டமிழென்‌றார்‌. எவன்‌ – குறிப்பு வினா வினை. மெய்யன்‌ – குறிப்பு முற்றுப் பெயரெச்சம்‌, உண்டு, என்பன – குறிப்பு முற்று,

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-

———

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே
. 96–

பொருள்‌–அகப் பொருள்‌,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .

உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள்‌ மூன்‌றனையும்‌,
இயலும்‌ -செய்தருளிய,
திருமால்‌ – திருமகள்‌ கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல்‌ – நம்மாழ்வாரது,
குருகூர்‌ துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல்‌ துறை யிடத்து
நண்டு ஆட்‌டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால்‌ – குறிப்புக்களால்‌,
இந்த நாட்டை யெல்லாம்‌ – இந்தஉலக முழுவதையும்‌,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல்‌ -கண்களைப் போல,
கயல்‌- கயல்‌ மீன்கள்‌,
தீங்கு செய்யுமோ – தீமைகள்‌ செய்யுமோ ? [செய்யாவாம்‌.]

திருமாலின்‌ ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய்‌ தலைவியின்‌ குறிப்புக்களால்‌ இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக்‌ கயல்‌ மீன்கள்‌ தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்‌.-திருக் கூத்துக்கள்‌ மூன்றாவன :– அல்லியம்‌, மல்‌, குடம்‌; அல்லியம்‌ – குவலையாபீடத்தின்‌ தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம்‌ அல்லாதது-வாத்தியமில்லாமல்‌ யாடியது அல்வியமாம்‌. மல்லாடல்‌ – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம்‌ – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால்‌ அவனது சோணித புரத்தின் தெருவில்‌ கையில்‌ குடமேந்தி ஆடியது, இவற்றின்‌ விரிவைச்‌ சுத்தானந்தப்‌ பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின்‌ பகுதி களாம்‌. கைகோள்‌ – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால்‌ திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன்‌ புணர்ச்சிக்குப்‌ பின்னும்‌ தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின்‌ மிகுதியால்‌ புகழ்ந்தானென்பது துறையின்‌ கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்‌-புகழ்‌தல்‌,

ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்

———–

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே
. 97–

பொருள்‌ -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல்‌ கைம் மிக்குக்‌ கையற வுரைத்தல்

இந்த, நுண் பிறவி – அற்பப்‌ பிறப்பாகிய,
மாயைக்‌ கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில்‌ சேர்த்துக் கொள்ள,
வல்லவர்‌- வல்‌லவராகிய நம்மாழ்வார்‌,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக்‌ கிழித்தெடுத்து,
ஒரு திங்கள்‌ கொழுந்தென – ஒரு இளஞ்‌ சந்திரனாக,
செய்ததல்லால்‌ – செய்ததமன்றி,
அன்றில்‌ பனை… அன்றில்‌ பட்சிகள்‌
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்‌,
பிளவார்‌ – இரு பிளவாகச்‌ செய்தாரில்லை ; உளவாம்‌ நோயை – அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்‌-போக்கும் படியாகிய,
வகுளம்‌ – மகிழ மாலையை,
நல்கார்‌ – கொடுத்தாரில்லை

இந்தப்‌ பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்‌வார்‌ நெருப்பைத்‌ திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன்‌ றிலிருக்கும்‌ பனையைப் பிளக்காமலும்‌, அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப்‌ போக்கத் தக்க மகிழ மாலையுங்‌ கொடுத்தாரில்லை என்பதாம்‌-காமநோய்‌ கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால்‌ திங்களைத்‌ தீ யென்றார்‌. ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும்‌ ஓசை காமமுடையார்க்குத்‌
துன்பத்தைச்‌ செய்தலால்‌ அவ் வன்‌றிவிருக்கும்‌ பனை மரங்களை பிளந்திலர்‌ என்றாள்‌. பேய்க்குப்‌ பனையை யுவமித்தல்‌–கரு நெடும் பனங்காடு முழுமையும்‌ காலும்‌ கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்‌துப் பரணிச்‌ செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்

——–

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.
98–

பொருளும்‌, திணையும்‌, துறையும்‌ அவை.

அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம்‌ வாயில்‌ – முகத்தின்‌ வாயிலுள்ள,
கரும்பின்‌ – கரும்பு போன்ற திவ்வியப்‌ பிரபந்தங்களால்‌,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல்‌ – சொல்ல வல்ல,
அம்‌ புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்‌,
ஓர்‌ வகுளம்‌ கொடார்‌ – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்‌,
தாய்‌ என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர்‌ இல்லம்‌ புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும்‌ கோகு தட்டி – வளைந்த தோள்‌களைத் தட்டிக் கொண்டு,
சல்லம்‌ புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்‌து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்‌),
மீள – மறுபடியும்‌,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்‌- அசை நிலை

தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால்‌ ஐநங்களின்‌ மறு பிறப்பைப்‌ போக்குபவராகிய நம்மாழ்வார்‌ தாம்‌ இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய்‌ வீட்டிலுள்ள புவி போலப்‌ பாய்ந்து என்னை வருத்துகின்றாள்‌ ; இது போதாமல்‌ சந்த்ரனும்‌ உதயமாய் விட்டது – இனி மேல்‌ நான்‌ உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள்‌ என்பதாம்‌.-கரும்பு- உவமை யாகு பெயர்‌,-இரணடாமடியில்‌ புலி-உவமை யாகு பெயர்‌, மூன்றாமடியில்‌ புல்லி என்பது தொக்கு, தாயின்‌ கொடுஞ்சொல்‌ முட் போல தைத்தலால்‌ ௮வளை முட் பன்றியின்‌ தன்‌மையைக்‌ கொண்டென்றாள்‌. புலி போலக்‌ கறுவு கொண்டு பாய்தலால்‌ புலியை உவமித்தார்‌, இது உவமைக்கு உவமையின்‌ பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால்‌ தாயாகிய புலியானது முட் பன்றியின்‌ தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும்‌ பயனும்‌ அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால்‌ சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப்‌ புலி யென்றதற்கேற்பப்‌ பாய்கின்‌ற தென்‌றதனால்‌ உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால்‌ தாய் புலி போலப்‌ பாய்கின்றாள் எனவும்‌, ௮வள்‌ வார்த்தை முள்ளம் பன்றியின்‌ முட்போலத் தைக்கின்ற தெனவும்‌, சந்திரனது நிலவைக் கண்டு விரகம்‌ ௮திகரித்தலால்‌ ௮துவும் தோன்‌றிற்று எனவும்‌ வருந்திக் கூறினாளாயிற்று-

சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே
. 99–

புகழ் மெய்ப்‌ புலவோர்‌ – புகழுடைய உண்மையான கல்‌விமான்கள்‌,
தொழுது இயல்‌ – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன்‌ -தலைவரும்‌,
ஒதும்‌ – சொல்லப் பெற்ற,
கனல்‌ தறை – யாச நெறிகள்‌ மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல்‌ நாடன்‌ – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய்‌ மொழி எம்‌. மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்‌).
எழுதிய நாளும் – பிரமன்‌ எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்‌,
வினையும்‌-பழ வினைத் தொடர்ச்சியும்‌, தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப்‌ பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில்‌ நாற்று இட்டு – புழுதிக் காவில்‌ மாற்று விதைத்துப்‌ பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்‌.

புலவோரால்‌ வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால்‌ பிரம தேவர்‌ எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப்‌ பழ வினைகளும் சேர்த்துப்‌ புழுதியில்‌ நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச்‌ செய்ய முடியாது என்பதாம்‌. இம்மையி லனுபவிப்ப தெல்லாம்‌. பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன்‌ கொள்ளுதல் போல இப் பிறப்பால்‌ இன்னும்‌ வினையைச்‌ சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும்‌ பெயராதலால்‌ பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார்‌. வைப்ப – அகரம் தொக்கது -ஆல்‌ அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்‌
கூட்டி நீர்த் துறை யென்றும்‌ கொள்ளலாம்‌.

ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்
. 100–

மனையும்‌ – மனைவியும்‌, பெருஞ்செல்வமும்‌ – மிக்க பொருளும்‌,
மக்களும்‌ – புத்திராதிகளும்‌,
மற்றை வாழ்வும்‌ – மற்றுமுள்ள வாழ்வுகளும்‌,
தம்மை நினையும்‌ பதம்‌ என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான்‌ – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர்‌ நிமலன்‌ – திருக் குருகூரில்‌ அவதரித் தருளிய குற்றமற்ற நம்‌மாழ்வார்‌,
புனையும்‌ – பாடி யருளிய,
தமிழ்க் கவியால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌, இருள்‌ நீங்கு – அஞ்ஞான இருள்‌ நீங்கிப் போய்‌,
பொருள்‌ விளங்‌கி – மெய்ப் பொருளான ஞானம்‌ தோன்றப் பெற்று,
வினையும்‌ – இரு வினைகளும்‌,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள்‌ குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம்‌ நீங்கலாயின.

தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும்‌ மற்றுமுள்ள வாழ்வுகளும்‌: தம்மைத்‌ தியானிக்கும்‌ பதமாக நின்ற நம்மாழ்வார்‌ தமிழ்ப் பாடல்களால்‌, அஞ்ஞானம் நீங்கி நன்‌ ஞானம்‌ பெற்று வினைகளும்‌ அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம்‌. தம்மை நினைத்‌தவர்கள்‌ எஷணாதிகளாலும்‌ பிற வாழ்‌வினாலும் அடையும்‌ மகிழ்ச்சியிலும்‌ மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால்‌ தம்மை நினையும்‌ பதமென நின்ற வென்றார்‌. மற்றை வாழ்வு – சுற்றத்தார்‌ சேர்க்கை , எண்‌ வகைப் போகம்‌ தசாங்க முதலியனவுமாம்‌,

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

————

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

முன் – முன்னாளில்‌,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள்‌ – மதுர கவி யாழ்வார்‌,
சென்று – அடைந்த ,
தென்‌ தமிழ்‌ தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்‌,
பதிகம்‌ ஒன்றே உரைத்து .
கண்ணி நுண்‌ சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன்‌ – அந்த மாயோனுடைய
பொன்‌ ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான்‌ என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்‌றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்‌-உலகம் எல்லாம்‌ புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல்‌ – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்‌,
பதிகம்‌ – ஒரு பதிகம் போல,
பதிகம்‌ ௮து ஆக – பத்‌துப் பதிகமாக,
இசைத்தனன்‌ – பாடி யருளினார்‌ ;

முன்னாளில்‌ நம்மாழ்வாரை மதுர கவிப்‌ பெருமாள்‌ அடைந்து ஒரு பதிகம் பாடிப்‌ பரமபத முற்றாரென்று இந் நாளில்‌ கம்ப நாடர்‌ ௮வ்வொரு பதிகம் போலப்‌ பத்துப் பதிகம்‌ பாடி யருளினார் என்பசாம்‌. மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர்‌ காவேரி தங்குமூர்‌, கும்ப முனி சாபங்‌ குலைந்த வூர்‌ ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்‌.” என்‌றதனால்‌ கம்பர்‌ திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ்‌ நாடு என்னாளும் உய்ய இராமாயணம்‌ பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால்‌ வள்ளலென்றார்‌, மதுர கவியார்‌ – நம்மாழ்வாரைத்‌ துதித்து முத்தி பெற்றவர்‌. பதிகம்‌ – பத்‌துப் பாடல்கள்‌ சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்‌.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள்‌. ஒன்ற, ஏ- எண்‌, என்றே-ஏ தேற்றம்‌. பதிகமது, ௮து – பகுதிப் பொருள்‌ விகுதி,

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

சோழ நாட்டில்‌ மூவலூர்‌ ஆதித்தன் புதல்வரும்‌ திருவழுந்தூரிற்‌ பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர்‌ கதிரா மங்கலத்தின்‌ கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால்‌ ஆதரிக்கப் பெற்று இதின்‌ வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத்‌ தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில்‌ இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர்‌ முதலாயினோர்‌ வட மொழி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ மொழி பெயர்க்கும்‌ படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப்‌ பால காண்ட முதல்‌ யுத்தகாண்டம்‌ வரையிலுள்ள ஆறு காண்டங்களையும்‌ தமிழில்‌ செய்யுள் நடை யாகப் பாடி்‌ அரங்கேத்தத் தொடங்குகையில்‌ பலரும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ ௮ரங்க நாதன்‌ சன்னிதியில்‌ அரங்கேற்றுதல்‌ தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள்‌ இவரது கனவில்‌ அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார்‌. உடனே அஞ்சி நம்மாழ்வார்‌ மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில்‌ இதனை முதலில்‌ அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர்‌ காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின்‌ இராமாயணம்‌ பாடும் பொழுது காளிதேவியாரைப்‌ பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர்‌ காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன்‌ மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில்‌ மாணாக்கர்‌
பிந்தாமற்‌ பந்தம்‌ பிடி,

இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில்‌ மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக்‌ கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால்‌ தெரிகிறதனால்‌ இவரும்‌ அப் பகுதியாரென்‌று ஊூ்கிக்கப் படுகிறார்‌, இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின்‌ பெருமையை யறிந்த அரசாங்கத்தார்‌’அந்நாட்டினை இவர் பெயரால்‌ மாற்றி விட்டதனால்‌ கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில்‌ நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப்‌ பின்பு அருண் மொழித் தேவர்‌ வள நாடென்று பெயரிட்டமையும்‌ ௮றிக,
இன்னும்‌ இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப்‌ படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள்‌ ஓட்டக் கூத்தர்‌, நேமிநாதர்‌, பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் -மூன்றாம் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

March 31, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

——-

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

——–

மூன்றாம் பாதத்தின் ஸங்கதிகள்
முதல் அத்யாயத்தின் இரண்டாவது மூன்றாவது நான்காவது பாதங்களில் பரமாத்மாவைத் தவிற வேறு ஒருவரும் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று அந்ய யோக₃ வ்யவச்சே₂தம் செய்யப் படுகிறது.-அதிலும் இரண்டாவது பாதத்தில் தெளிவற்ற வாக்யங்களைக் கொண்டு பூர்வ பக்ஷீ எழுப்பிய ஐயங்களுக்கு வ்யாஸர் பதிலுரைத்தார், இப் போது மூன்றாம் பாதத்தில் தெளிவான வாக்கியங்களைக் கொண்டு பூர்வபக்ஷீ எழுப்பும் ஸந்தேஹங்களுக்கு விடை அளிக்கிறார்.-இரண்டாம் பாதத்தில் ப்ரஹ்மம் சேதந மற்றும் அசேதநப் பொருள்களைத் தனக்கு உடலாகக் கொண்டு, தான் அந்தர் யாமியாய் இருப்பவர் என்று சொல்லும் வாக்கியங்களை ஆராய்ந்தார். இனி மூன்றாம் பாதத்தில் சேதந அசேதநப் பொருள்களுக்கு ப்ரஹ்மம் ஆதாரமாய் (தாங்குபவராய்) இருக்கிறார் என்று கூறம் வாக்கியங்களை ஆராய்கிறார்.

ஸ்வ நிஷ்டா

கீழ் இரண்டாவது பாதத்தின் 6 அதிகரணங்களாலே பரமாத்மாவின் முக்கியமான பண்புகள் சொல்லப்பட்டன.
1-ஸ்வாதீ₄ந அசேஷ ஸத்தா ஸ்தி₂தி யதநதயா ஸர்வ பா₄வேந திஷ்ட₂ந்
2- க்₃ரஸ்தேசேஷ:
(3) அக்ஷி நித்ய ஸ்தி₂தி:
(4) அகி₂லதநு:
(5) கல்பித அக்₃ந்யாதி₃ கா₃த்ர: |
(6) ஸ்வர் லோகாத்₃யங்க₃வைஸ்வாநர மதி விஷய: லக்ஷணஸ்ய ஆதி₃மஸ்ய
ப்ரோக்த: பாதே ₃ த்₃விதீயே ஸ்ருதி நிகர சிரச் சேக₂ர: ஶ்ரீநிவாஸ: ||

1-எல்லாப் பொருள்களின் உண்டாக்கம், இருப்பு, செயல்பாடு இவை யனைத்தும் தன் அதீனமாக தானே அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்
2-அனைத்தையும் ஸம்ஹரிப்பவர்
3-எப்போதும் நம் கண்ணில் உணர்பவர்
4-உலகிலனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டவர்
5-அக்நி முதலானவற்றை உடலாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர்
6-விண்ணுலகம் முதலானவற்றை அங்கங்களாகக் கொண்டவராக த்யானிக்கப்பட வேண்டியவர் என்று முதல் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில் ஶ்ரீநிவாஸனான பரமாத்மா சொல்லப் பட்டார்.

1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்
நெறி வாசல் தானேயாய் நின்றான்

த்யுப்வாத்யதிகரணத்தின் பின்புலம்
1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்ரம் ’த்₃யுப்₄வாதி₃’ என்று துவங்குகிறபடியால் இவ்வதிகரணம் இப் பெயரைப் பெற்றது.

ஸங்கதி – 1.2.5-அத்₃ருச்யத்வாதி₃கு₃ணகாதி₄கரணத்தில் முண்டக உபநிஷத்தை ஆராய்ந்து வந்தார் வ்யாஸர். அப்போது உலகத்தை யெல்லாம் உடலாகக் கொண்டவர் என்று சொன்னபடியால், அதோடு தொடர்பு பட்டதாய் 1.2.6-வைஸ்வாநர அதிகரணத்தில் உலகத்தை உடலாகக் கொண்டவர் யார் என்ற ஆராய்ச்சியைச் செய்தார். அது முடிந்ததும், விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக முண்டக உபநிஷத்தின் அடுத்த பகுதியை 1.3.1 அதிகரணத்தில் ஆராய்கிறார்

ஒரே உபநிஷத்தாய் இருந்தாலும் தெளிவான வாக்ய விசாரமாக இருப்பதால் இது மூன்றாம் பாதத்துக்கு வந்தது

உபநிஷத்தில் த்₃யயௌ: ப்ருதி₂வீ -சுருக்கமாக த்₃யு பூ₄ என்று ஸூத்ரம்

விஷய வாக்யம் – இரண்டாம் முண்டகத்தின் இரண்டாம் கண்டத்தில் உள்ள ஒரு வாக்யம்
யஸ்மிந் த்₃யயௌ: ப்ருதி₂வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மந: ஸஹ ப்ராணை : ச ஸர்வை : |
தமேவ ஏகம் ஜாநத₂ ஆத்மாநம் அந்யா: வாச: விமுஞ்சத₂…
…. ||
எவரிடத்தில் த்₃யௌ: (விண்ணுலகம்), ப்ருதி₂வீ (பூமி), அந்தரிக்ஷம் (வானம்), மனது, ஐந்து ப்ராண வாயுக்கள் இவை யெல்லாம் தாங்கப் படுகின்றனவோ , அந்த ஆத்மா ஒருவரையே அறிந்து கொள்வாய். மற்றப் பொருள்களைப் பற்றின பேச்சை யெல்லாம் கை விட்டு விடு

ஸம்சயம் – இங்கு த்₃யு பூ₄ முதலான வற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
பூர்வ பக்ஷம் – இங்கு த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரமாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவே . ஏனெனில் –
1- (அரா இவ ரத₂நாநபௌ₄ ஸம்ஹதா யத்ர நாட்₃ய:) அதாவது“சக்கரத்தின்
அரங்கள் நடுவிலுள்ள நாபியில் சேர்வது போல் உடலிலுள்ள நாடிகள் எல்லாம் இவரிடம் சேர்கின்றன” என்று சொல்லப் படுகிறது. ஜீவாத்மா தான் நாடிக்களைப் பயன்படுத்துபவர், அவற்றோடு சேர்ந்தவர்

2-(ஸ ஏஷ: அந்த: சரதி ப₃ஹுதா₄ ஜாயமாந:) அதாவது-“உள்ளே இருக்கும் இவர் பலவிதமான பிறவிகணை எடுக்கிறார்” என்று சொல்லப் பட்டுள்ளது. ஜீவாத்மா தான் தன் கர்மங்களின் காரணமாக தேவன் மனிதன் விலங்கு தாவரம் கல் முதலான பல விதமான பிறவிகளை எடுப்பவர்.

3- (ஓதம் மந: ஸஹ ப்ராணை: ச ஸர்வை : )-அதாவது “மனதும் ஐந்து விதமான ப்ராண வாயுக்களும் இவரால் தாங்கப் படுகின்றன” என்று சொல்லப் பட்டுள்ளது. மனதும் ப்ராணனும் ஜீவாத்மாவுக்குத் தானே .

கர்மங்கள் மூலம் உலகங்களை ஜீவாத்மா தாங்குகிறது என்று சொல்லலாம் அன்றோ

ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 6 ஸூத்ரங்கைளால் நிராகரித்து, சரியான பொருளைக் காட்டுகிறார் வ்யாஸர்
1-த்₃யுப்₄வாதி₃ ஆயதநம் ஸ்வ சப்₃தா₃த்

த்₃யுப்₄வாதி₃ – விண்ணுலகம் மண்ணுலகம் முதலானவற்றின்
ஆயதநம் – ஆதாரம் (பரமாத்மாவே )
ஸ்வ சப்₃தா₃த் – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்

இங்கும் அந்ய பதம் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும் -அசாதாரண – அவருடைய சொல்லால் அதாவது அவருக்கே உரித்தான சொல்லால்-சொல்வதால் வேறு யாருக்கும் பொருந்தாதே

ஸித்தாந்த யுக்திகள்
ஸ்வ சப்₃த₃ம் அதாவது-பரமாத்மாவுக்கே உரித்தான சொல்’ இங்கு என்ன உள்ளது என்று பார்ப்போம் –
1-(அம்ருதஸ்ய ஏஷ ஸேது:)
ஸேது என்றால் அக்கரையை அடைவதற்கான பாலம் என்று பொருள். “அம்ருதம் எனப்படும் மோக்ஷத்தை அடைவதற்கான வழி இவர் தான்” எனப்படுகிறது. இது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.(தமேவம் வித்₃வாந் அம்ருத: இஹ ப₄வதி)-அதாவது“அந்தப் பரமாத்மாவை அறிந்தவன் முக்தி அடைகிறான்” என்று உபநிஷத்தே கூறுகிறது.
2-(ஆத்மாநம் ஜாநத₂) – “அந்த ஆத்மாவை அறிய வேண்டும்” என்று சொல்லப் படுகிறது. ஆத்மா என்ற சொல்லுக்கு ’ ஒரு உடலுக்குள்ளே புகுந்து அதை இயக்குபவர்’ என்று பொருள். கல்லின் ஆத்மா, பூனையின் ஆத்மா, மனித உடலின் ஆத்மா என்று தான் பொதுவாகச் சொல்ல வேண்டும். எந்த அடை மொழியுமின்றி ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொன்னால், உலகப் பொருள்கள் அனைத்துக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்.

3-(யஸ் : ஸர்வஜ்ஞஸ் : ஸர்வ வித்) – “யார் ஸர்வஜ்ஞனோ ” என்று உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆத்மாவை ஸர்வஜ்ஞன் என்று சொல்கிற படியாலும் இது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
இப்படி பூர்வபக்ஷீ மூன்று யுக்திகளையும் ஸித்தாந்தீ மூன்று யுக்திகளையும் சொன்னால் எப்படி முடிவெடுப்பது? அதைக் காட்டுகிறார் பகவத் ராமாநுஜர். வேதத்தின் எந்த ஒரு பகுதியையும் தவறானது என்று கூற இயலாது -. எனவே எந்தப் பொருளைக் கொண்டால் இங்கு காட்டப்பட்ட 6 வாக்கியங்களுமே பொருந்தும் என்று பார்க்க வேண்டும்.

ஜீவாத்மா என்று பொருள் கொண்டால் ஸித்தாந்தீ காட்டின மூன்று வாக்கியங்களும் முற்றிலும் பொருந்தாது.-ஆனால் பரமாத்மா என்று பொருள் கொண்டால் பூர்வ பக்ஷீ காட்டிய வாக்கியங்களுக்கும் ஒருவாறு பொருள் கொள்ளலாம் –
1-இதயத்தில் பரமாத்மா இருக்கிற படியால் நாடிகள் அவரிடம் சேர்கின்றன
2-பரமாத்மாவும் தான் ஆசைப் பட்டு பல விதமான அவதாரங்களைச் செய்கிறார்
3-பரமாத்மா உலகமனைத்தையும் தாங்குகிற படியால் மனதுக்கும் ப்ராணனுக்கும் ஆதாரம் என்பதும் பொருந்தும். ஆகவே த்₃யு பூ₄ முதலானவற்றின் ஆதாரம் பரமாத்மாவே .

வேண்டித் தேவர் இரக்கவும் –தானே விரும்பி -தேவர்களும் வேண்ட அவதாரம்-பஹுதா விஜாயதே -சன்மம் பலபல செய்து -பஹுதா ஜாயமானம் பொருந்தும் –

1.3.1 த்யுப்₄வாத்₃யதி₄கரணம்-பரமாத்மாவே உலகங்களைத் தாங்குபவர்

1.3.1 த்₃யுப்₄வாத்₃யாத்₃யதி₄கரணத்தில் உலகங்களை எல்லாம் தாங்குபவராகச் சொல்லப் பட்டவர் ஜீவாத்மா தான் என்று பூர்வ பக்ஷீ வாதிட, பரமாத்மாவுக்கே உரித்தான சொற்கள் இங்குள்ள படியால் இது பரமாத்மாவையே குறிக்கிறது என்று இவ்வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் வேத வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்கள் –
2- முக்த உபஸ்ருப்ய வ்யபதே₃சாத் ச – “முக்தனாலே அடையப் படுபவராகச் சொல்கிறபடியாலும்” உலகத்துக்கு எல்லாம் ஆதாரமாகச் சொல்லப்பட்ட பொருள் தான் முக்தி அடைந்த ஜீவாத்மாவால் அடையப்பட வேண்டியவர் என்று முண்டக உபநிஷத் கூறுகிறது –யதா₃ பஸ்ய: பஸ்யதே ருக்ம வர்ணன் கர்தாரம் ஈசம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம் |
ததா₃ வித்₃வாந் புண்ய பாபே விதூ₄ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி ||
-எப்போது ஒரு உபாஸகன் 1-தங்கம் போன்ற ஒளி பொருந்தியவராய், 2-உலகத்தைப் படைத்தவராய்,3- உலகப் பொருள்களை எல்லாம் இயக்குபவராய், 4-உலகத்துக்குக் காரணமாய் உள்ள பரம புருஷனைத் த்யானத்தால் காண்கிறானோ , அப்போது அவன் எல்லா பாப புண்யங்களையும் கழித்து, ப்ரக்ருதியோடு இருக்கும் தொடர்பையும் வெட்டிக் கொண்டு
பரமாத்மாவோடு ஒற்றுமை அடைகிறான் (அதாவது முக்தி அடைகிறான்).

யதா₂ நத்₃ய: ஸ்யந்த₃மாநா: ஸமுத்₃ரே அஸ்தம் க₃ச் ₂ந்தி நாம ரூபே விஹாய |
ததா₂ வித்₃வாந் நாம ரூபாத் விமுக்த: பராத் பரம் புருஷம் உபைதி தி₃வ்யம் ||

நதிகள் எல்லாம் தங்கள் தனிப்பட்ட பெயர்களையும் வடிவங்களையும் இழந்து கடலில் கலப்பது போல், உபாஸகன் ஸம்ஸாரத்திலிருக்கும் பெயர் உறுவ வேறுபாடுகளை எல்லாம் கடந்து பரம புருஷனை அடைகிறான்.-இப்படி முக்தனால் அடையப்படுபவர் பரமாத்மாவே ஒழிய ஜீவாத்மா அல்ல, எனவே அவரே தான் உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமானவரும் என்று தெளிவாகிறது.

பிரளயத்தில் நாம ரூபம் இல்லை -அத்தை வியா வ்ருத்திப்பதற்காக இங்கு முக்தனுக்கும் என்றும் சேர்த்து அருளிச் செய்கிறார்

இரண்டு ஸூத்திரங்களையும் சேர்த்துப் பார்த்து உபாயமும் உபேயமும் இவனே -நெறி வாசல் தானேயாய் நின்றான் அன்றோ –இங்கு தாங்குபவன் என்றும் சொல்ல வந்த பிரகரணமாக இருந்தும் இவ் வர்த்தம் கிடைக்கிறது அன்றோ –

ஜீவாத்மா உலகங்களுக்கு ஆதாரம் அல்ல
3-ந அநுமாநம் அதச் ச₂ப்₃தா₃த் ப்ராண ப்₄ருத் ச
அநுமாநம்
– அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானம் என்ற மூல ப்ரக்ருதி
– உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் அல்ல
அதச் ச₂ப்₃தா₃த் – அதைச் சொல்லும் பதம் இல்லாதபடியால்
ப்ராண ப்₄ருத் ச – ப்ராணனைத் தாங்கும் ஜீவாத்மாவும் அல்ல (அதே காரணத்தால்)
உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமாக இங்கு சொல்லப்பட்டது அசேதனமான மூல ப்ரக்ருதி என்கிற கேள்வியே எழவில்லை , ஏன் எனில் ப்ரதானத்தைக் குறிக்கும் சொல்லோ அடையாளமோ இங்கு காணப்படவில்லை . அதே போல், ப்ராண வாயுவைத் தரிக்கும் ஜீவாத்மாவைக் காட்டும் சொற்களோ அடையாளங்களோ இல்லாத படியால் இங்கு சொல்லப் படுபவர் ஜீவாத்மாவும் அல்ல என்று தெரிகிறது.

4-பேத₄₃ வ்யபதே₃சாத் ச – “-உலகங்களுக்கு எல்லாம் ஆதாரமான பொருளை, ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவராகச் சொல்கிற படியாலும் -அது ஜீவாத்மா அல்ல-”

ஸமாநே வ்ருஷே புருஷோ நிமக்₃ந: அநீசயா சோசதி முஹ்யமாந: |
ஜுஷ்டம் யதா₃ பஸ்யதி அந்யம் ஈசம் அஸ்ய மஹிமாநம் இதி வீதசோக: ||-
ஸம்ஸாரத்தில் மூழ்கி யிருக்கும் ஜீவன் அசேதனமான ப்ரக்ருதியின் காரணமாக மயங்கி, சோகம் அடைகிறார்-அதைக் காட்டிலும் வேறு பட்டவராய், எல்லாருக்கும் ஈஸ்வரனாய், தன் கர்மங்களாலே மகிழ்பவரான பரமாத்மாவையும் அவரது பெருமை களையும் எப்போது அறிகிறானோ அப்போது சோகம் நீங்கப் பெருகிறான்.-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே ’ஆத்மா ஒருவரே அறியப்பட வேண்டியவர்’ என்று சொல்லி , அவர் தான் உலகங்களை எல்லாம் தாங்குகிறார் என்று சொல்லி, இங்கு மறுபடியும் ’பரமாத்மாவை அறிந்தால் தான் சோகம் விலகும்’ என்று கூறுகிறபடியால் அந்த பரமாத்மா தான் உலகங்களைத் தாங்குபவர் என்று தெரிகிறது.

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்
5-ப்ரகரணாத் ச
– “ப்ரகரணத்தாலும் (உலகங்களுக்கு எல்லாம் ஆதாரம் பரமாத்மாவே)”
முன்னமே 1.2.5-அத்₃ருச்வாதி₃கு₃ண அதி₄கரணத்தில் இந்த முண்டக உபநிஷத் ப்ரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே அதில் அடங்கிய இந்த வாக்யமும் பரமாத்மாவைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். எனவே த்₃யுப்₄வாத்₃யாயதனம் பரமாத்மாவே –

6-ஸ்தி₂த்யத₃நாப்₄யாம் ச – “இருத்தலாலும் உண்பதாலும் கூட”–
ஸ்தி₂தி என்றால் இருத்தல். அதுவும், ஏதோ ஒரு செயலைச் செய்யாமல் வெறுமனே இருத்தல். எந்தச் செயல்? அடுத்து உள்ள அத₃நம் என்ற சொல்லுக்கு உண்பது என்று பொருள். எனவே அந்தச் செயல் தான் முன்னாலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இருத்தல் என்பதற்கு ’உண்ணாமல் இருத்தல்’ என்று பொருள்-நிர் வியாபரத்வம் -ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஸ்திதி -அடுத்து உன்பதைச் சொல்வதால் உண்ணாமல் இருப்பத்தைச் சொன்னவாறு

கூடிற்றாகில் நல்லுறைப்பே -கூடாமையைக் கூடினால் அது அதுவே – ஜீவன் பரனோடு ஒன்றாம் என்னும் அவ்வல்லல் எல்லாமே ஒழித்தான் ராமானுஜன்

இந்த ப்ரகரணத்தில் ஒரு வாக்யம் இருவரைப் பற்றிப் பேசுகிறது – ஒருவர் உண்கிறார், மற்ற ஓருவர் உண்பதில்லை என்று கூறுகிறது.
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநஸ்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

ஒற்றுமை யுடைய நண்பர்களான இரண்டு பறவைகள் (பரமாத்மாவும் ஜீவாத்மாவும்) ஒரு மரத்தில் (இந்த உடலில்) இருக்கிறார்கள். அதில் ஒருவர் (ஜீவாத்மா) அந்த மரத்தில் வளரும் பழங்களை (தன்னுடைய பாப புண்யங்களில் பயன்களான இன்ப துன்பங்களை ) உண்கிறார், ஒளி குறைந்து போகிறார். மற்ற ஓருவர் (பரமாத்மா) அந்தப் பழத்தை
(வினைப் பயனை ) உண்ணாமல் ஒளி விடுகிறார்.-இப்படி ஜீவனும் பரனும் வெவ்வேறாகச் சொல்லப் பட்டுள்ளார்கள். இவர்களில் த்₃யுப்₄வாத்₃ யாயதநமாக இருக்கும் தகுதி பரமாத்மாவுக்கே உண்டு. ஜீவாத்மாவுக்கு இல்லை . ஆகவே த்₃யுப்₄வாத்₃ யாயதனம் பரமாத்மாவே –

—————————–

ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி
–7-மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

1-3-2 -பூ₄மாதி₄கரணம்-கவலை போக்கும் ஆத்ம ஜ்ஞாநம்

பூமாதிகரணத்தின் பின்புலம்
1.3.2 பூ₄மாதி₄கரணம் – ஸங்கதி
– கீழ் அதிகரணத்தோடு இவ்வதிகரணுத்துக்கு இரண்டு விதமான ஸங்கதிகள் உள்ளன
1-முண்டகோபநிஷத்தில் பரமாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால், உலகங்களுக்கு ஆதாரமாகச் சொல்லப் பட்டவரும் பரமாத்மா தான் என்று கூறப் பட்டது. அதே போல் இங்கு சாந்தோக்ய உபநிஷத்தில் ஜீவாத்மாவைப் பற்றி பேசத் தொடங்கி, அந்தப் ப்ரகரணம் முடியாத படியால் இந்த விஷய வாக்யமும்
ஜீவாத்மாவைப் பற்றித் தான் கூறுகிறது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.

2-கீழ் அதிகரணத்தில் முண்டகோபநிஷத்தில் ப்ராணங்களுக்கும் ஆதாரமானவர் பரமாத்மா தான் என்று சொல்லப் பட்டது. ஆனால் சாந்தோக்யத்தில் ப்ராணன்களுக்கு ஆதாரமானவர் ஹிம்ஸை செய்யப்பட்ட முடிந்தவர் என்று சொல்லப் படுகிற படியால் அது ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – பூம வித்யா – சாந்தோக்ய உபநிஷத்தின் 7ஆம் ப்ரபாடகம் முழுவதும் (1-26 கண்டங்கள்)-அதீ₄ஹி ப₄க₃வ இதி ஹோபஸஸாத₃ ஸநத் குமாரம் நாரத₃: | தம் ஹோவாச யத்₃வேத்த₂ தேந மோபஸீத₃ ததஸ்த ஊர்த்₄வம் வக்ஷ்யாமீதி-“எனக்கும் ப்ரஹ்மத்தை உபதேசிக்க வேண்டும்” என்று கூறி நாரதர் ஸநத் குமாரரைப் பணிந்தார். “உமக்கு என்ன தெரியுமென்று கூறினால் அதற்கு மேல் வேண்டியதை உபதேசிக்கிறேன்” என்றார் ஸநத் குமாரர்.

ருக்₃வேத₃ம் ப₄க₃வ: அத்₄யேமி யஜுர் வேத₃ம் ஸாம வேத₃மாத₂ர்வணம் சதுர்த₂மிதிஹாஸ புராணம் பஞ்சமம் வேதா₃நாம் வேத₃ம் பித்ர்யம் ராஶிம் தை₃வம் நிதி₄ம் வாகோ வாக்ய மேகாயநம் தே₃வ வித்₃யாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் பூ₄த வித்₃யாம் க்ஷத்ர வித்₃யாம் நக்ஷத்ர வித்₃யாம் ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம் ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி–எலலா வேதங்கள், அதன் அங்கங்கள், இதிஹாஸ புராணங்கள் இவற்றை எல்லாம் கற்றிருக்கிறேன் என்றார் நாரதர்.

வேதா₃நாம் வேத₃ம்-வியாகரணம்
பித்ர்யம் -பித்ரு பற்றியவை
ராஶிம் -ஜ்யோதிஷம்
தை₃வம்
நிதி₄ம் -அர்த்த சாஸ்தம்
வாகோ வாக்ய -நியாயம்
மேகாயநம் தே₃வ வித்₃யாம்
ப்₃ரஹ்ம வித்₃யாம்
பூ₄த வித்₃யாம்
க்ஷத்ர-சர்ப்ப – வித்₃யாம்-நாகங்கள் பற்றியவை
நக்ஷத்ர வித்₃யாம்
ஸர்வ தே₃வ ஜந வித்₃யாம்
ஏதத் ப₄க₃வ: அத்₄யேமி-

பூமா என்ற சொல்லின் பொருள்
ஸ: அஹம் ப₄க₃வோ மந்த்ர விதே ₃வாஸ்மி நாத்மவித் | ஸ்ருதம் ஹ்யேவ மே ப₄க₃வத்₃ த்₃ருஸேப்₄ய: – தரதி ஸோகம் ஆத்ம விதி₃தி | தம் மா ப₄க₃வாந் ஸோகஸ்ய பாரம் தாரயது-
-“ஆனால் நால் வெறும் மந்த்ரங்களை (நூல்களை ) அறிந்தவனாகவே உள்ளேன், ஆத்மாவை அறியவில்லை . உங்களைப் போன்றவர்களிடம் கேள்விப் பட்டிருக்கிறேன் – ஆத்மாவை அறிந்தவன் தான் ஸம்ஸாரமென்னும் துன்பத்தைக் கடக்கிறான் என்று. எனவே நீர் தான் என்னை ஸோகத்தைத் தாண்டு விக்க வேண்டும்” என்றார் நாரதர்.

யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூ₄மா | அத₂ யத்ர அந்யத் பஶ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி தத₃ல்பம்-எதை அறிந்தால் வேறு எதையும் பார்க்கவோ கேட்கவோ அறியவோ மாட்டானோ , அதுவே பூமா. எதை அறிந்தால்
மற்றவற்றைப் பார்ப்பானோ , கேட்பானோ , அறிவானோ , அது அல்பம்.-பூ₄மா என்ற சொல் ப₃ஹு என்ற சொல்லிலிருந்து வருகிறது. ப₃ ஹு என்றால் அதிகமானது என்று பொருள்.-இங்கு எண்ணிக்கையால் அதிகமானதைப் பற்றிச் சொல்ல வில்லை ; அடுத்த வாக்யத்தில் இருக்கும் அல்பம் என்ற சொல்லுக்கு அளவாலே குறைந்தது என்று பொருளான படியால், அதற்கு எதிர் மறையான இந்த பூ₄மா என்ற சொல்லுக்கு ’அளவால் அதிகமானது’ என்று பொருள் கொள்வது தான் தகுந்தது.-தொடக்கத்தில் ’ஆத்மாவை அறிந்தவன் ஸோகத்தைக் கடக்கிறான்” என்று சொல்லி, இடையில் ’ பூ₄மா’ என்ற பொருளைப் பற்றி உபதேசித்து, இறுதியில் ’இது அனைத்தும் ஆத்மாவே’ என்று உள்ள படியால், இந்த பூ₄மா என்ற பொருள் தான் ஆத்மா என்ற பொருள் என்று தெரிகிறது.

பூமா -விபுலம் -அதிகமான பொருளைப் பற்றிச் சொல்கிறது -அதிகமான இருத்தல் குணம் -அதைச் சொல்லாமல் -அதிகமானதாக இருக்கும் பொருள் பற்றியே சொல்கிறது –

ஸம்சயம் – ’
பூ₄மா’ அதாவது-அதிகமான அளவுடையது’ என்று சொல்லப் பட்ட பொருள் ஜீவாத்மாவா? பரமாத்மாவா

ஸநத்குமாரரின் உபதேசங்கள்
பூர்வ பக்ஷம்
– ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அந்தப் ப்ரகரணம் முடியாமலிருக்கும் பொழுதே பூ₄மா என்பதை உபதேசிக்கிற படியால் பூ₄மா ஜீவாத்மா தான். ஸநத் குமாரர் செய்த உபதேசங்களைப் பார்ப்போம் –

யத்₃வை கிஞ்ச ஏதத் அத்₄யகீ₃ஷ்டா₂ நாம ஏவ ஏதத் | ஸ யோ நாம ப்₃ரஹ்ம இத் யுபாஸ்தே யாவந் நாம்நோ க₃தம் தத் ராஸ்ய யதா₂காம சாரோ ப₄வதி–நீர் கற்ற நூல்கள் எல்லாம் வெறும் நாமங்கள் (சொற்களே ). சொற்களையே ப்ரஹ்மம் என்று உபாஸித்தால் சொற்களால் அடைய முடிந்த பயனை மட்டும் தான் அடையலாம்

அஸ்தி ப₄க₃வோ நாம்நோ பூ₄ய: | வாக் வாவ நாம்நோ பூ₄யஸீ |….. மந: ஸங்கல்ப: சித்தம் த்₄யாநம் விஜ்ஞாநம் ப₃லம் அந்நம் ஆப: தேஜ: ஆகாச: ஸ்மர: ஆசா ப்ராண:“நாமத்தை விட உயர்ந்தது உண்டா?” என நாரதர் கேட்க ஸநத் குமாரர் “சொல்லை விட பேச்சு உயர்ந்தது” -என்றார். இதே போல் அடுத்தடுத்து உயர்ந்த பொருள் உண்டா உண்டா என்று நாரதர் கேட்க, அடுத்தடுத்து மனது, உறுதி, சிந்தனை , த்யானம், அறிவு, உடல் பலம், உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், நினைவு, ஆசை , ப்ராணன் என்பவற்றை ஸநத் குமாரர் உபதேசித்தார்.-இறுதியில் சொல்லப் பட்ட ப்ராணன் என்பவர் ஜீவாத்மா தான், வெறும் மூச்சுக் காற்று அல்ல என்று பூர்வ பக்ஷியும் ஒப்புக் கொள்கிறார், ஸித்தாந்தியும் அதை ஏற்கிறார். பூ₄மா எனப்படுபவர் யார் என்பதில் தான் விவாதம் உள்ளதே தவிற, ப்ராணன் எனப்படுபவர் ஜீவாத்மா தான் என்பதில் ஐயமில்லை . ஏன் என்று பார்ப்போம்.

(மனஸ்-இதுவே மூன்று ஆகாரங்கள் கொண்டதாய் இருக்கும் -முதலில் –புத்தி-உறுதியாக இருப்பது -அடுத்து அஹங்காரம்-கர்வம் அடைதல் -மூன்றாவது – சித்தம் -யோசித்துப் பார்க்கும் கருவி)

ப்ராணன்’ எனப்படுபவர் ஜீவாத்மாவே
’ப்ராணன்’ ஜீவாத்மா தான் என்பதற்கான காரணங்களைப் பூர்வ பக்ஷீ கூறுகிறார் –

1-ஆத்மாவைப் பற்றிய கேள்வியோடு தொடங்கிய உபதேசம் இந்தப் ப்ராணன் என்பதைப் பற்றிய உபதேசத்தோடு முடிகிறது. எனவே ப்ராணன் தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும், இல்லாவிடில் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பே இல்லாமல் போகும்.

2- (ப்ராணோ பிதா ப்ராணோ மாதா) அதாவது“இந்தப் ப்ராணன் அன்றோ தந்தை , ப்ராணன் அன்றோ தாய்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். மூச்சுக் காற்று என்ற அசேதனப் பொருள் தாய் தந்தை முதலான சேதன (அறிவுடைய) பொருள்களாக மாற இயலாது. எனவே , தாய் தந்தை அனைவரும் ஜீவாத்மாக்களாக இருக்கிறபடியால், இங்கு ’ப்ராணன்’ என்ற சொல் ஜீவாத்மாவையே குறிக்க வேண்டும்.

3-ஸ யதி₃ பிதரம் வா மாதரம் வா கிஞ்சித்₃ப்₄ருஸமிவ ப்ரத்யாஹ தி₄க் த்வா அஸ்து இதி ஏவ ஏநமாஹு ꞉ பித்ருஹா வை த்வமஸி இதி| அத₂ யத்₃யபி ஏநாந் உத்க்ராந்த ப்ராணாந் சூலேந ஸமாஸம் வ்யதிஷந்த₃ஹேத் நைவ ஏநம் ப்₃ரூயு꞉பித்ருஹாஸீ இதி-ஒருவன் தந்தை முதலானவர்களை சிறிது எதிர்த்துப் பேசினாலும் கூட அவனைப் பார்த்து உலகம் ’நீ தந்தையை ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி கூறுகிறது. ஆனால் ’ப்ராணன்’ புறப்பட்டுச் சென்ற பிறகு சூலத்தால் குத்தினாலும் நெருப்பால் எரித்தாலும் ‘தந்தையைக் ஹிம்ஸிக்கிறாய்’ என்று பழி சொல்வதில்லை -இத்தால் ப்ராணன் எனப்படுபவரை ஹிம்ஸிக்க முடியும் என்று தெரிகிறது. வெறும் உடலோ , வெறும் மூச்சுக்காற்றோ , பரமாத்மாவோ ஹிம்ஸிக்கப் பட முடியாது. எனவே ப்ராணன் ஜீவாத்மா தான்

தர்ம புத்ரனை அர்ஜுனன் -காண்டீபத்தைக் குறை சொன்னதால் கொல்லப் புக -நீ -த்வங்காரம் -சொன்னாலே கொல்வதற்கு சமம் என்று கண்ணன் சொல்ல –த்வங்கார அத்யாயம் -உண்டே

இப்படி ஜீவாத்மா தான் ப்ராணன் என்ற முடிவாகி விட்டால், அவரைப் பற்றின உபதேசத்தை முடிக்காமலேயே பூ₄மா என்பதை உபதேசிக்கிறபடியால், பூ₄மா எனப்படுபவரும் ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷியின் வாதம்.

1.3.2 பூ₄மாதி₄கரணம்-பொருளாலும் அளவு படாதவர் பரமாத்மா-
ப்ராணனே பூ₄மா என்று பூர்வ பக்ஷம்
– – முக்தி அடைவதற்காக ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கும்படி நாரதர் கேட்க, ஸநத் குமாரர்-நாம, வாக், மனஸ், ஸங்கல்பம், பலம், அந்நம், ஜலம், தேஜஸ், ஆகாசம், ஸ்மரணம், ஆசா முதலான அசேதனப் பொருள்களைப் பற்றி உதேசித்து, பின் ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்தார்-இனி, அந்த ப்ராணன் என்ற ஜீவாத்மா தான் பூ₄மா எனப்படுகிறார் என்று வாதிடுகிறார் பூர்வ பக்ஷீ.

இதுவரை பிராணன் பற்றிய விவாதம் –பிரகரண விச்சேதம் இல்லாமல் மேல் பூமா -அளவில் பெரியது என்று மேல் வருகிறது-என்று பூர்வ பக்ஷம் -பிரகரணம் மாற்றி பூமா பற்றி சொல்வதாக ஸித்தாந்தம்

ஸ வா ஏஷ ஏவம் விஜாநந் அதிவாதீ₃ ப₄வதி-எவன் ஓருவன் இவ்வாறு ப்ராணன் என்ற ஜீவாத்மாவை அறிந்து உபாஸிக்கிறானோ அவன் ’அதிவாதி₃’ ஆவான்.-அதிவாதி₃ என்றால் தான் அறிந்த பொருளை மற்ற அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகப் புகழ்ந்து பேசக் கூடியவன்.-ஏஷ து வா அதிவத₃தி ய꞉ ஸத்யேந அதிவத₃தி-எவன் ஸத்யத்தோடு அதிவாத₃ம் செய்கிறானோ , அவன் அன்றோ அதிவாதி₃. இத்தால், ப்ராணன் என்ற ஆத்மாவை த்யானிப்பவன், அந்த த்யானத்தின் அங்கமாக, ஸத்யம் பேச வேண்டும் என்று கிடைக்கிறது என்கிறார் பூர்வ பக்ஷீ.

யதா₃ விஜாநாத்யத₂ ஸத்யம் வத₃தி | மநுதே அத₂ விஜாநாதி |ஶ்ரத்₃த₃தா₄த்யத₂ மநுதே | நிஸ் திஷ்ட₂த்யத₂ ஶ்ரத்₃த₃தா₄தி|கரோத்யத₂ நிஸ் திஷ்ட₂தி|ஸுக₂ம் லப₄தே அத₂ கரோதி | யோ வை பூ₄மா தத் ஸுக₂ம் நால்பே ஸுக₂ம்-எப்போது த்யானிக்கிறானோ , அப்போது அதிவாத₃ம் செய்கிறான். எப்போது சிந்திக்கிறானோ அப்போது தான் த்யானிப்பான். எப்போது ஸ்ரத்தா (ஈடுபாடு) கொள்கிறானோ , அப்போது தான் சிந்திக்கிறான். எப்போது நிஷ்டா₂ (கேட்க வேண்டும் என்கிற உறுதி) கொள்கிறானோ அப்போது தான் ஈடுபாடு கொள்கிறான். எப்போது மற்ற பொருள்களின் தாழ்ச்சியை சிந்திப்பதில் முயற்சி செய்கிறானோ (க்ருதி) அப்போது தான் உறுதி கொள்கிறான். எப்போது ஸுகத்தை அறிகிறானோ அப்போது தான் க்ருதியில் ஈடுபடுகிறான். எது அளவால் பெரியதோ, அதுவே ஸுகம் ஆகும்.-இவ்வாறு, ப்ராணன் என்ற ஆத்மாவின் தூய்மையான நிலை தான் அளவற்ற ஸுகமான பூ₄ம என்று சொல்லப் படுகிறது

உலக இன்பத்தின் தாழ்ச்சியையும் அவனது பெருமையையும் அறிந்த பின்பு-தானே முயற்சி வரும் -முதல்படி -பின்பு ஸ்ரத்தா-கேட்டு – -த்யானம் -சத்யம் -படிப்படியாக வரும் அன்றோ -அஹம் என்று சொல்லிக் கொள்வதால் இங்கு ஜீவாத்மாவையை பூமா என்கிறது என்பர் பூர்வ பக்ஷி

அதிவாதி₃கள் இருவர்
ஸித்தாந்தம் – 1- பூ₄மா ஸம் ப்ரஸாதா₃த் அதி₄ உபதே₃சாத்

பூ₄மா – பூ₄மா அதாவது அளவில் பெரியயவர் என்று சொல்லப் படுபவர்(பரமாத்மாவே )
ஸம் ப்ரஸாதா₃த் – ஸம் ப்ரஸாத₃ம் எனப்படும் ஜீவாத்மாவைக் காட்டிலும்
அதி₄ உபயத₃சாத் – அதி₄கமாக (உயர்ந்ததாக) உபதேசிக்கப் படுகிற படியால்-

ஸம் ப்ரஸாதம் -ஜீவாத்மாவுக்கு பதமாக பல இடங்களிலே ஸ்ருதியில் உண்ட -ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் அடைகிறான் என்ற ஸ்ருதியில் இப்பத பிரயோகம் உண்டு

ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து விட்டு, அவரைக் காட்டிலும் உயர்ந்தவராக ஸத்யம் என்று ஒருவரைச் சொல்லி, அந்த ஸத்யத்தைப் பற்றின உபதேசத்தின் நடுவே தான் பூ₄மா என்ற பொருள் சொல்லப் பட்டுள்ளது. -உபநிஷத்தில் ஸத்யம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிப்பதற்கே பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு, ப்ராணன் என்ற ஜீவாத்மாவின் ப்ரகரணம் முடிந்து, ஸத்யம் என்ற பரமாத்மாவின் ப்ரகரணமே நடக்கிற படியால், பூ₄மா எனப் படுபவர் பரமாத்மாவே என்கிறார் வேத வ்யாஸர்.

ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்ததாக ஸத்யம் என்ற பொருள் எங்கு சொல்லப்படுகிறது? அதற்கு விடை அளிக்கிறார் –-ஏஷ து வா அதிவத₃தி ய: ஸத்யேந அதிவத₃தி” என்ற வாக்கியம் உயிரானது. இதை நுட்பமாக ஆராய்வோம்.
எடுத்துக் காட்டு 1 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. அஹிம்ஸை கடைப் பிடிப்பவன் அவன் அன்றோ ஜ்ஞாநீ”. -இதில் இரண்டு ஜ்ஞாநிக்கள் இருப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை – ஜ்ஞாநியாய் இருப்பவன், அஹிம்ஸை என்ற பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் பொருள் படுகிறது.
எடுத்துக்காட்டு 2 – “ஆத்மாவை உணர்ந்தவன் ஜ்ஞாநீ. பரமாத்மாவை உணர்ந்தவன் அன்றோ ஜ்ஞாநீ”.-இந்த வாக்கியங்களில் இரண்டு ஜ்ஞாநிகள் இருப்பதாகவும், ஜீவனை மட்டும் அறிந்த ஜ்ஞாநியை விட பரமாத்மாவை அறிந்த ஜ்ஞாநி உயர்ந்தவன் என்றும், இதன் காரணம் பரமாத்மா ஜீவனை விட உயர்ந்தவரானது என்றும் தெரிகிறது.-இங்கும் இந்த இரண்டாவது எடுத்துக் காட்டு போல், ஜீவனைப் பற்றி அதிவாத₃ம் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஸத்யம் என்ற பரமாத்மாவைப் பற்றி அதிவாத₃ம் செய்பவர் என்று தெரிகிறது. எனவே ஸத்யம் வேறு ப்ராணன் வேறு.

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று ஸத்யம் பதபிரயோகம் ப்ரஹ்மத்தைக் காட்டுவது போல் இங்கும் என்றவாறு-ஸத்யம் என்ற பத பிரயோகம் பிரகரணம் மாற்றி -அதுவே பூமா என்று முடிகிறது –

மேலும் சில ஸித்தாந்த யுக்திகள்
மேலும், உபதேசத்தின் இறுதியில் ஸநத் குமாரர் “ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்” அதாவது “ஸத்யத்தைத் தான் உபாஸிக்க வேண்டும்” என்கிறார்.-பூர்வபக்ஷீ சொன்னது போல் ஸத்யம் என்பது உண்ணம பேசுதல் என்று கொண்டால் அதை எப்படி த்யானிக்க இயலும்? எனவே , ஸத்யம் என்பது ஜீவாத்மாவை விட உயர்ந்தவராய், உபாஸிக்கத் தகுந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க முடியும்

மேலும், “ஆத்மாந: ப்ராண :” அதாவது “ஆத்மாவிடமிருந்து ப்ராணன் உண்டாகிறார்” என்று ஸநத் குமாரர் கூறுகிறார். -ஆத்மாவைப் பற்றி தான் நாரதர் தொடக்கத்தில் கேட்டால். எனவே ஸநத் குமாரரால் உபதேசிக்கப்பட்ட பூ₄மா தான் அந்த ஆத்மாவாக இருக்க வேண்டும். அந்த ஆத்மா என்ற பூ₄மாவிடமிருந்து ப்ராணன் எனப்படும் ஜீவாத்மா
உண்டாகிறார் என்று இந்த வாக்கியம் சொல்கிறபடியால், ப்ராணனைக் காட்டிலும் வேறே ஓருவர் தான் பூ₄மா என்று தெரிகிறது. எனவே , அவர் ஸத்யம் என்ற பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

கேள்வி – ப்ராணனை விட உயர்ந்த பொருளாக ஸத்யம் என்ற பரமாத்மா உபதேசிக்கப்படுகிறார் என்றால், ஏன் நாரதர்-ப்ராணனைக் காட்டிலும் உயர்ந்த பொருள் எது?” என்று கேள்வி கேட்டு ஸநத் குமாரர் விடை கூற வில்லை ?
பதில் – நாமம் வாக் மநஸ் பலம் அந்நம் ஜலம் தேஜஸ் ஆகாசம் போன்ற அசேதனப் பொருள்களை ஒவ்வொன்றாக உயர்ந்தவை என்று உபதேசித்தார் ஸநத் குமாரர். அவை தாழ்ந்தவை யான படியால் தான் கேட்ட ஆத்மாவாக இருக்க இயலாது என்று நாரதர் உணர்ந்து, இதை விட உயர்ந்த பொருள் உண்டா என்று கேட்டுக் கொண்டே வந்தார். ப்ராணன் என்ற ஜீவாத்மாவைப் பற்றி உபதேசித்து, அவரைப் பற்றி அதிவாத₃ம் செய்ய வேண்டும் என்று ஸநத் குமாரர் கூறிய படியால், “இந்த ஜீவாத்மா தான் நான் அறிய ஆசைப் பட்ட ஆத்மா” என்று நினைத்து நாரதர் எண்ணி, அதை விட உயர்ந்தது உண்டா என்று கேட்காமல் இருந்தார். சிஷ்யன் அறியாமையால் கேட்கா விட்டாலும், உண்மை அறிந்த
ஸநத் குமாரர், பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் தான் ஸம்ஸாரத்தைத் தாண்டுவிக்கும் என்று அறிந்து, பரமாத்மாவைப் பற்றி நாரதர் கேட்காமலேயே உபதேசம் செய்தார். எனவே கேள்வி இல்லாமை ஒரு குற்றம் அல்ல.

பரமாத்மா ஏன் பூ₄மா எனப் படுகிறார்?
இவ்வாறு பரமாத்மா தான் பூ₄மா என்று நிரூபிக்கப்பட்டது. இனி பூ₄மா என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.
“எந்தப் பொருளை அறிந்தால் வேறு எதையும் அறிய மாட்டோமோ அதுவே பூ₄மா” என்று ஸநத் குமாரர் கூறினார். -உலகிலுள்ள சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கு உடலாக இருக்கின்றன, அவர் அந்தர்யாமியாக உள்ளார். எனவே , பரமாத்மாவை அறிவது என்றால், உலகனைத்தோடும் கூடியவராக அவரை
அறிவது. அப்படி அறிந்து விட்டால், வேறு எந்தப் பொருளையும் அறிய இயலாது, ஏனென்றால் பரமாத்மாவைத் தவிற வேறு பொருளே உலகில் கிடையாது. அவரை அண்டாமல், அவருக்கு உடலாக இல்லாமல் எந்தப் பொருளும் உலகில் இல்லை . எனவே அவரை விட்டு தனித்திருப்பதாக எந்த ஒரு பொருளையும் அறிய இயலாது என்று பொருள்

மேலும், பரமாத்மா எல்லை யற்ற ஸுக வடிவமானவர் என்று சொல்லி, அவரை அறிந்தவர் வேறு ஒன்றை அறிய மாட்டார் என்று சொன்னால், துக்கத்தை அறிய மாட்டார் என்று பொருள். -உலகிலுள்ள பொருள்கள் நமக்கு துக்கத்தைத் தந்து கொண்டு தானே இருக்கின்றன என்று தோணும். ஆனால் அது உண்மையில் நம் அறியாமையால். பொருள்களை நம்மதென்றும் பிறரதென்றும் பிரித்துப் பார்ப்பதால் தான் துக்கம் எழுகிறது. எல்லாமே பகவானின் சொத்து என்று பார்த்தால் எல்லாமே ஸுகத்தை மட்டுமே வழங்கும்

2-த₄ர்மோப்பத்தே: ச – “(இங்கு பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட) தர்மங்கள் பொருந்துகிற படியாலும்”இந்தப் ப்ரகரணத்தில் பூ₄மாவுக்குச் சொல்லப்பட்ட பண்புகள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்துகின்றன-“ஏதத் அம்ருதம்” – “இவரே மரணமற்றவர்” என்று சொல்லப்பட்டது பரமாத்மாவுக்கே பொருந்தும்–“ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” – உலகனைத்தையும் தாங்கும் இந்த பூ₄மா,“தன் பெருமையிலேயே நிலை நிற்கிறார்”அதாவது இவரைத் தாங்கும் வேறு ஓருவர் கிடையாது என்று சொல்லப்படுகிறது.-இதுவும் பரமாத்மாவுக்கே உரியது-“ஆத்மத: ப்ராண :” என்று ப்ராணன் எனப்படும் ஜீவனுக்கும் காரணமாக பரமாத்மா தான் இருக்க இயலும்-ஆக இவ்வாறு, உலகில் அனைத்தாகவும் இருக்கும் பூ₄மா எனப்படும் பொருள் பரமாத்மாவே எனப் பட்டது

அஹம் -நான் -அனைத்துக்கும் அந்தராத்மா பரமாத்மாவே தானே -வஸ்தாந்த்ரம் -அப்ரஹ்மாத்வ வஸ்து இல்லையே

——–

1-3-3 அக்ஷராதி₄கரணம்-பரமாத்மாவின் தடையற்ற ஆணை

அத்ருஸ்யாதி குணக அதிகரணம் -1-2-5- -பார்க்க முடியாத பண்பு கொண்ட அக்ஷரம் பரமாத்மாவே -பார்த்தோம் -இங்கே நேரடியாக அக்ஷரம் பற்றிய விசாரம் –

1.3.3 அக்ஷராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
-1.3.2 பூ₄மாதி₄கரணத்தில் “ த₄ர்மோப்பத் தேஶ்ச” என்ற இரண்டாம் ஸூத்ரத்தில், பூ₄மாவின் குணங்களில் ஒன்றாக “ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டி₂த:” என்று தன் பெருமையிலேயே நிலை பெற்றிருத்தல் சொல்லப் பட்டுள்ளதால் அவர் பரமாத்மவாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேல் ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ருஹதாரண்யகத்தில் ’தன் பெருமையில் நிலை பெற்றவர்’ என்று வேறே ஓரு பொருள் சொல்லப்பட்டுள்ளதே என்று.

விஷய வாக்யம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 3ஆம் அத்யாயத்தில் 8ஆம் ப்ராஹ்மணம் – கார்கீ ப்ரஸ்நம்–ஜநக மஹாராஜரின் ஸபையில் யாஜ்ஞ்ய வல்க்யரைப் பார்த்து கார்கீ என்ற பெண் 2 கேள்விகள் கேட்டாள்.
யதூ₃ர்த்₄வம் யாஜ்ஞவல்க்ய தி₃வவா யத₃வாக் ப்ருதி₂வ்யா꞉ யத₃ந்தரா த்₃யாவா ப்ருதி₂வீ இமே யத்₃பூ₄தம் ச ப₄வச்ச ப₄விஷ்யச் சேத்யா சக்ஷதே ஆசக்ஷதே கஸ்மிந் ததோ₃தம் ச ப்ரோதம் சேதி-விண்ணுலகத்து மேலும், பூமிக்குக் கீழும், பூமிக்கும் விண்ணுலகுக்கும் இடைப் பட்ட பகுதியிலும், கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் வருங் காலத்திலும் இருக்கும் எல்லாப் பொருள்களும் குறுக்கும் நீளமுமாக நூல்கள் கோர்க்கப் படுவது போல் எதில் கோர்க்கப் பட்டுள்ளன அதாவது- எதால் தாங்கப் படுகின்றன
என்று பொருள்.-ஸ ஹோவாச – ஆகாசே தத் ஓதம் ச ப்ரோதம் ச-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – “ஆகாசத்தில் அவை அனைத்தும் தாங்கப் படுகின்றன” என்று.- ஸா ஹோவாச – கஸ்மிந் நு க₂லு ஆகாச: ஓத: ச ப்ரோத: ச இதி-கார்கீ கேட்டாள் – “அந்த ஆகாசம் எதால் தாங்கப் படுகிறது” என்று

ப்ரக்ருதியே அக்ஷரம் என்ற பூர்வ பக்ஷம்–ஸ ஹோவாச – ஏதத்₃வை தத₃க்ஷர(அ) கா₃ர்கி₃ ப்₃ராஹ்மணா அபி₄வத₃ந்தி – அயஸ்தூ₂லம் அநணு அஹ்ரஸ்வம்-அதீ₃ர்க₄ம் அலோஹிதம் அஸ்நேஹம் அச்சா₂யம் அதம: அவாயு அநாகாஶம் அஸங்க₃ம் அசக்ஷுஷ்கம் அஶ்ரோத்ரம்-அவாக் அமந: அதேஜஸ்கம் அப்ராணம் அமுக₂ம் அமாத்ரம் அநந்தரம் அபா₃ஹ்யம்-யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறினார் – அந்தப் பொருள் தான் உபநிஷத்துக்களில் ’அக்ஷரம்’ என்று கூறப்படுகிறது.-அப் பொருள் பெரியது அல்ல, சிறியது அல்ல, குள்ளம் அல்ல, நீளம் அல்ல, வாயு அல்ல, ஆகாசம் அல்ல, கண் உடையது அல்ல,காது உடையது அல்ல, பேச்சுக்கான புலன் உடையது அல்ல, ப்ராணன் உடையது அல்ல, முகம் உடையது அல்ல, புலன்கள் உடையது அல்ல, உள்ளே இருப்பது அல்ல, வெளியே இருப்பது அல்ல.

ஸம்சயம் – இங்கு அக்ஷரம் என்று சொல்லப் படுபடுவது மூல ப்ரக்ருதியா? ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வபக்ஷம் – ப்ரதாநம்- மூல ப்ரக்ருதி எனப்படும் அசேதனப் பொருள் தான் இந்த அக்ஷரம் என்கிறார் பூர்வ பக்ஷீ.-“அக்ஷராத் பரத: பர:” முதலான உபநிஷத் வாக்கியங்களில் அக்ஷரம் என்ற சொல் மூல ப்ரக்ருதியையே குறிக்கிறது.-“அஸ்தூ₂லம் அநணு” முதலான பண்புகள் எல்லாம் இந்த மூல ப்ரக்ருதிக்குப் பொருந்துகின்றன-எல்லா உலகங்களிலும் முக் காலத்திலும் இருக்கும் பொருள்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருக்கும் ஆகாசம் எனப்படும்
வானத்துக்கும் ஆதாரமாய் இருத்தல் ப்ரக்ருதிக்குப் பொருந்தும், ப்ரக்ருதி ஆகாசத்துக்கே காரணமானபடியால்.

கேள்வி – ’கூடஸ்த₂: அக்ஷர: உச்யதே ”-யயா தத₃க்ஷரம் அதி₄க₃ம்யதே ” முதலான வாக்கியங்களில் ஜீவாத்மா -பரமாத்மா கூட அக்ஷரம் என்ற சொல்லால் அறியப் படுகிறார்களே ?
பதில் – ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால், அவற்றில் எது வேகமாகச் செயல்படும் ப்ரமாணத்தால் அறியப்பட்டதோ , அது தான் முதலில் தோன்றும். ஸந்யாஸம் என்ற சொல்லிலிருந்து துறவறம் தோன்றுவது போல்-எனவே , அக்ஷரம் என்பது அநுமானத்தால் அறியப்படும் ப்ரக்ருதியே , வேதத்தால் அறியப்படும் பரமாத்மா அல்ல.

ஸன்யாஸி -ப்ரத்யக்ஷமாக அறிவது துறவறம் -கீதை மூலம் அறிவது பயன்களில் ஆசை இல்லாமல் கர்மங்களைச் செய்வது-இதில் முதல் அர்த்தமே நேராக கொள்கிறோம் -இதே போல் ஈஸ்வரன் என்றால் சிவபெருமான் -அறிகிறோம் -வேதம் கற்ற பின்பே அவனும் கர்ம வஸ்யன் என்றும் அறிந்து பர ப்ரஹ்மமே ஸர்வேஸ்வரேஸ்வரன் என்றும் அறிகிறோம் -ஸாஸ்த்ர யோநித்வாத் -கீழேயே பார்த்தோம் –அதே போல் என்பர் பூர்வ பக்ஷி-

ஆகாசம் எனப்படுவதே ப்ரக்ருதி; அக்ஷரம் பரமாத்மாவே
ஸித்தாந்தம்
– இந்தப் பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் எதிர்க்கிறார் வேத வ்யாஸர்.
1-அக்ஷரம் அம்ப₃ராந் தத்₄ருதே :
அக்ஷரம்
– அக்ஷரம் என்று இங்குச் சொல்லப்பட்டவர் (பரமாத்மாவே )
அம்ப₃ராந்த – ’அம்ப₃ரம்’ என்ற வானத்துக்கும் ’அந்தம்’ அதாவது முடிவான (காரணமான) ப்ரக்ருதியையும் கூட
த்₄ருவத: – தாங்குகிறபடியால்

உலகப் பொருள்களை எல்லாம் தாங்கும் ஆகாசம் என்றழைக்கப் பட்ட பொருள் வானம் தான் என்றார் பூர்வ பக்ஷீ. இது தவறு. ’ராஜ்யத்தில் உள்ளவர்களை எல்லாம் ஆள்பவர் யார்?’ என்று கேட்டால், ராஜ்யத்தில் ஒருவரான மந்திரி என்று கூறுவது தவறாகும். அதே போல் உலகப் பொருள்களுள் ஒன்றாய், தானே உண்டாகி அழியக் கூடியதான வானம் எப்படி உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக இருக்க முடியும்? எனவே இங்கு ஆகாசம் என்ற சொல்லே மூல ப்ரக்ருதியைத் தான் குறிக்கிறது என்று கொள்ள வேண்டும். அது தான்’அம்ப₃ராந்தம்’ எனப்படுகிறது. அந்த மூல ப்ரக்ருதிக்கும் ஆதாரமான அக்ஷரம் பரமாத்மாகவே இருக்க முடியும்.-ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தால் அதில் வேகமான ப்ரமாணத்தால் அறியப் பட்டதையே கொள்ள வேண்டும் என்பதும் தவறு. எந்தப் பொருளில் ஒரு சொல் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறதோ அது தான் அந்தச் சொல்லின் முக்கியமான பொருள் என்று கொள்வதே சரியானது. -அக்ஷரம் என்பது யௌகி₃கச் சொல் (காரணப் பெயர்). ’ந க்ஷரதி இதி அக்ஷரம்’ அதாவது-எது அழியாதோ அது அக்ஷரம்’ என்று பொருள் தோற்றுகிறது. அழியாமை எந்தப் பொருளுக்கு மிகுதியாகவோ இயற்கை யாகவோ உள்ளதோ , அந்தப் பொருளைத் தான் கொள்ள வேண்டும். அழியாமை இயற்கையில் பரமாத்மவுக்கே உள்ளது. அவரே அக்ஷரம்.–ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு ’ஆள்பவர்’ என்று பொருள். ஆனால் அச் சொல்லைக் கேட்டதும் ஓரிருவரை ஆளும் மனிதனா தோன்றுகிறான்? அனைத்தையும் ஆளும் பரமாத்மாவே தோன்றுகிறார்-அதே போல் தான் இங்கும்

விகார ஜாதம் -உலகப்பொருள்கள் அனைத்துக்கும் ஆதாரம் ஆகாசம் என்பது வானத்தைச் சொல்ல வில்லையே -இதனால் மூல பிரக்ருதியையே சொன்னவாறு – இதற்கும் மூலம் காரணம் பரமாத்மாவே -என்றவாறு

அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் அர்த்தமே பிரதானம் -ஈஸ்வரன் ஆள்பவன் -அரசனே ப்ரத்யக்ஷமாக இருந்தாலும் இறைவனையே குறிக்கும் அன்றோ –

ஜீவாத்மாவும் அக்ஷரம் அல்ல
மற்ற ஓரு பூர்வ பக்ஷீ கேள்வி எழுப்புகிறார்– “ஜீவாத்மாவே அக்ஷரம் என்று கொள்ளலாமே ?அவரைக் குறிக்கவும் அக்ஷரம் என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அஸ்தூ₂லம் முதலான பண்புகள் ஜீவனுக்கும் பொருந்தும். ப்ரக்ருதிக்கு ஆதாரமாக ஜீவன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்” என்று. அதற்கு பதிலுரைக்கிறார் வேத வ்யாஸர் –
2- ஸா ச ப்ரசாஸநாத் – “அதுவும் (அனைத்தையும் தாங்குவதும்) தடையற்ற ஆளுமையாலே ”
அக்ஷரம் என்ற பொருள் உலகில் அனைத்தையும் தாங்குகிறது என்று மட்டும் யாஜ்ஞ்யவஸ்க்யர் கூறவில்லை . அப்படித் தாங்குவது அதனுடைய தடை யற்ற ஆணை – இயக்கத்தால் என்றும் கூறுகிறார்.

ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ ஸூர்யா சந்த்₃ரமஸஸௌ வித்₄ருஸதௌ திஷ்ட₂த: | ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா₃ர்கி₃ த்₃யாவா ப்ருதி₂வ்யௌ வித்₄ருதே திஷ்ட₂த-இந்த அக்ஷரத்தின் ப்ரசாஸனத்தால் (ஆணையால்) தான் ஸூர்யனும் சந்திரனும் தாங்கப் படுகிறார்கள், விண்ணுலகும் மண்ணுலகும் தாங்கப்படுகின்றன.
ப்ரசாஸநம் = ப்ரக்ருஷ்டம் சாஸநம் = உயர்ந்த ஆட்சி = தடை யில்லாமல் அனைத்துப் பொருள்களையும் இயக்குதல்.-இது பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியது, எந்த ஒரு ஜீவாத்மாவுக்கும் கிடையாது. எனவே அக்ஷரம் ஜீவாத்மா அல்ல.

3-அந்ய பா₄வ வ்யாவ்ருத்தே: ச – இந்த ஸூத்ரத்திற்கு இரண்டு விதமாகப் பபாருள் கொள்ளலாம்.
1-அந்ய பா₄வ -வேறு ஓன்றாய் இருக்கும் தன்மை
வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
அக்ஷரம் என்பது’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது ’அறியப்படாதது, மற்றவற்றை அறிவது’ என்று சொல்லப்படுகிறது. மற்றவற்றை அறிகிற படியால் இது அசேதனம் அல்ல, தான் அறியப் படாதபடியால் இது அசேதனமும் அல்ல என்று தெரிகிறது.
2-அந்ய -வேறு ஓன்றினுடைய
பா₄வ: இருப்பு
வ்யாவ்ருத்தே: ச தவிர்க்கப் படுகிறபடியால் –
இந்த அக்ஷரம் அனைத்தையும் தாங்குவது போல், இதைத் தாங்கும் வேறு ஓரு பொருளில்லை என்று கூறப்படுகிறது – “நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்ட்ரு” என்று. எனவே அக்ஷரம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்

-உம்மைத் தொகையால் -இவரை அறிந்தே மோக்ஷ பேறு போன்றவையைக் காட்டியவாறு

————————

1.3.4 ஈக்ஷதி கர்மாதி₄கரணம்-ஸ்ரீ வைகுந்தம் சென்று அடையப்படுபவர்
பரமாத்மாவே

(1-1-5- ஈஷத் அதிகரணம் பார்த்தோம்)

(யோ விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை” என ஸ்வேதாஸ்வதர உபநிஷத் வாக்கியம் கூறுகின்றது-அவரையே உபாஸித்து பேறு)

1.3.4 ஈக்ஷதிகர்மாதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’அத்₃ருஷ்டம் த்₃ரஷ்ட்ரு’ அதாவது பரமாத்மா அனைத்தையும் பார்ப்பவர் என்று கூறப்பட்டது. அதற்கு மேல் தான் ஆஷேபம் எழுகிறது – உலகில் பொதுவாக பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே பரமாத்மா பார்ப்பவர் என்று சொல்லப் பட்டுள்ள படியால், மற்ற ஓரு உபநிஷத்தில் பார்க்கப்படும் பொருளாகச் சொல்லப்பட்டது பரமாத்மா அல்ல, வேறு ஓன்று தான் – என்று.

விஷய வாக்யம் – அத₂ர்வண வேத₃த்தின் ப்ரஸ்ந உபநிஷத்தில் உள்ள ஐந்தாவது ப்ரஸ்நம்
அத₂ ஹைநம் ஸைப்₃ய꞉ ஸத்ய காம꞉ பப்ரச்ச₂ । ஸ யோ ஹ வை தத்₃ப₄க₃வந் மநுஷ்யேஷு ப்ராயணாந்தம் ஓங்காரம் அபி₄த்₄யாயீத ।கதமம் வா வஸதேந லோகம் ஜயதீதி ।-ஸத்ய காமம் என்ற சிஷ்யன் தன் ஆசார்யரிடம் கேட்டான் – “எந்த ஒரு மனிதன் தன் மரணம் வரை ஓம் என்ற ப்ரணவத்தைத் த்யானிக்கிறானோ , அவன் எந்த உலகங்களைச் செல்கிறான், அதாவது, எந்தப் பயனை அடைகிறான்?“

ஏதத்₃வை ஸத்ய காம பரம் ச அபரம் ச ப்₃ரஹ்ம யதோ₃ங்கார꞉ ।தஸ்மாத்₃ வித்₃வாநே தேநைவாயத நேதைக தரமந் வேதி-“உலகத்திலுள்ள தாழ்ந்த மற்றும் உயர்ந்த பொருள்கள் அனைத்தையும் தன் வடிவமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொல் இந்த ஓம் என்பது. எனவே இந்த ஓம்காரத்தைத் த்யானிப்பவன் அந்த உயர்ந்த மற்றும் தாழ்ந்த பொருள்கள் அனைத்தையும் அடைய முடியும்” என்றார் ஆசார்யன்.

ஸ யதி₃ ஏக மாத்ரம் அபி₄த்₄யாயீத தம் ருச: மநுஷ்ய லோகம் உபநயந்தே | ஸ தத்ர தபஸா ப்₃ரஹ்ம சர்யேண ஶ்ரத்₃த₄யா ஸம்பந்நோ மஹிமாநம் அநுப₄வதி-ஒரு மாத்திரை கொண்ட ஓம்காரத்தைத் த்யானிப்பவன் மநுஷ்ய லோகத்தை அடைந்து, தவம் ப்ரஹ்ம சர்யம் மற்றும்
ஸ்ரத்தையோடு கூடியவனாய் மேன்மையை அநுபவிக்கிறான்

நான்முகனே பார்க்கப்படுபவர் என்ற பூர்வ பக்ஷம்
அத₂ யதி₃ த்₃வி மாத்ரேண மநஸி ஸம்பத்₃யதே ஸ: அந்தரிக்ஷம் யஜுர் பி₄ருந்நீயதே ஸோமலோகம் । ஸ ஸோமலோகே விபு₄தி மநுபூ₄ய புநராவர்ததே ॥
இரண்டு மாத்திரை கொண்ட ஓம்காரத்தை த்யானிப்பவன், ஸோமலோகம் என்ற ஸ்வர்கத்தை அடைந்து, அங்குள்ள செல்வங்களை அநுபவித்து, மீண்டும் மநுஷ்ய லோகத்தை அடைகிறான்.

ய꞉ புநரேதம் த்ரிமாத்ரேண ஓமிதி ஏதேநைவ அக்ஷரேண பரம் புருஷமபி₄த்₄யாயீத ஸ ஸாம பி₄ருந்நீயதே ப்₃ரஹ்ம லோகம | ஸ ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத்பரம் புரிஸயம் புருஷம் ஈக்ஷதே । -எவன் மூன்று மாத்திரை கொண்ட ஓம்காரத்தைக் கொண்டு உயர்ந்த புருஷனை த்யானிப்பவன் ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான். அசேதனத்தோடு இறுகியுள்ள ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்த புருஷனை அங்கு காண்கிறான்.

(தத் க்ரது நியாயம் -உபாசிக்கப்படும் பொருளின் தன்மையை அடைந்து பேறு -அபஹத பாப்மத்தாதி அஷ்ட குண சாம்யம்)

(கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்)

ஸந்தேஹம் – இங்கு ப்ரஹ்மலோகம் சென்று காணப்படுபவராகச் சொல்லப் பட்டுள்ள ’உயர்ந்த புருஷன்’ எனப்படுபவர் இந்த அண்டத்திற்குத் தலைவரான நான்முகக் கடவுளா? அல்லது பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – இங்கு பார்க்கப்படுபவராகச் சொல்லப் படுபவர் நான்முகக் கடவுள் தான். ஏனெனில் –1-மநுஷ்ய லோகம், ஸ்வர்க லோகம், ப்ரஹ்ம லோகம் என்று வரிசையாகச் சொல்லப் பட்டுள்ளபடியால், இங்கு ப்ரஹ்ம லோகம் என்று சொல்லப் படுவது நான்முகக் கடவுள் இருக்கும் ஸத்ய லோகம் தான். எனவே அங்குச் சென்று காணப்படும் ’உயர்ந்த புருஷன்’ அந்த நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்-2-உடல் புலன்கள் முதலானவற்றைக் காட்டிலும் உயர்ந்தவராக ஜீவாத்மா இருந்தாலும், அந்த அசேதனப்
பொருள்களோடு பின்னிப் பிணைத்து இருக்கிற படியால் அவர் ஜீவ க₄நம் (இறுகிப் போன ஜீவன்) என்று சொல்லப் படுகிறார். அவரைக் காட்டிலும் உயர்ந்தவராகச் சொல்லப் பட்டவர், இந்த அண்டத்தில் பொருள்களை எல்லாம் ஸ்ருஷ்டிப்பவரான நான்முகனே . ஆக, அவர் தான் உயர்ந்த புருஷன்’ என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

அவன் மேவு ஸ்ரீ வைகுந்தம்
ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தால் இந்தப் பூர்வ பக்ஷத்ணத கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-ஈக்ஷதி கர்ம வ்யபதே₃சாத் ஸ:-
“பார்க்கப்படுபவர் பரமாத்மா, அவ்வாறு சொல்லுகிற படியால்”-இங்கு ப்ரஹ்ம லோகம் சென்று பார்க்கப்படும் பொருளுக்குச் சொல்லப்படும் குணங்கள் பரமாத்மாவுக்கே உரியவை –தம் ஓங்காரேண ஏவ ஆயதநேந அந்வேதி வித்₃வாந் யத் தத் சாந்தம் அஜரம் அம்ருதம் அப₄யம் பரம் சேதி–“அந்த ஓம்காரத்தைக் கொண்டு சாந்தமான, மூப்பற்ற, மரணமற்ற, பயமற்ற, உயர்ந்த பொருளை அடைகிறான்”-இந்தப் பண்புகள் எல்லாம் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவுக்கே சொல்லப் பட்டுள்ளன. நான்முகனுக்கும் பிறப்பு, இறப்பு, கவலை , பயம் முதலானவை புராணங்களில் சொல்லப் பட்டுள்ளன. எனவே அவர் அல்ல- (ஏதஸ்மாத் ஜீவக₄நாத் பராத் பரம்) என்று சொல்வதும் பரமாத்மாவுக்கே பொருந்தும்.-ஜீவ கனம் என்றால் அசேதனப் பொருளோடு இறுகி யிருக்கும் ஜீவாத்மா.-அண்டத்துக்கே அதிபதியான நான்முகனும் பாப புண்யங்களால் உடற்பிறவி அடைந்து அசேதனத்தோடு பின்னிப் பிணைத்து இருப்பவரே . எனவே , ஜீவ கனத்தைக் காட்டிலும் உயர்ந்தவராக அவர் சொல்லப்பட முடியாது. பரமாத்மாவுக்கே அது பொருந்தும்.

(கர்த்தா- செய்பவன் -subject-கர்ம-செயப்படும் பொருள்-object)

(சாந்தி –பசி தாகம் கவலை மயக்கம் மூப்பு மரணம் -ஷட் ரஹிதம்)

(கணீ பூதர்கள் -பிரக்ருதியால் கட்டுப்பட்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் -ஜீவ கநம்–ஆ பிரம்மா ஸ்தம்ப பரியந்தம் -சம்சார வசத்தில் கட்டுப் பட்டவர்கள் தானே )

ப்ரஹ்ம லோகம் என்பது ஸத்ய லோகம் என்றும் கொள்ள இயலாது.
(யதா₂ பாதோ ₃த₃ரஸ்த்வஸா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த꞉ உந்நீயவத ப்₃ரஹ்ம லோகம்)
– ஒரு பாம்பு தன் சட்டையை விட்டு வெளி யேறுவது போல் இந்த ஜீவாத்மா பாபங்களிலிருந்து விடுபட்டு ப்ரஹ்ம லோகம் அடைகிறான் என்று சொல்கிறபடியால், ப்ரஹ்ம லோகம் ஸ்ரீ வைகுந்தமே -(தத் கவயோ வேத₃யந்தே ) – கவிகள் எனப்படும் நித்ய ஸூரிகளால் பார்க்கப்படும் உலகம் என்று சொல்கிற படியாலும் அது ஸ்ரீ வைகுந்தமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ வைகுந்தம் சென்று காணப்படுபவர் பரமாத்மாவே , நான்முகன் அல்ல–இவ்வாறு ஓம்காரத்தை முழுமையாகக் கொண்டு பரமாத்மாவை த்யானிப்பவன், ஸ்ரீ வைகுந்தம் அடைந்து, அந்தப் பரமாத்மாவையே கண்டு அநுபவிக்கிறான் என்று சொல்லப் பட்டுள்ளது என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்

(பாதோதரம் -பாத -உதரம் -காலே வயிறாகக் கொண்ட பாம்பு -சஷுஸ்ஸு ஸ்ரவா கண்ணையே காதாக உடையது பாம்பு)

(பாட்டுக் கேட்க்கும் இடமும் -கவி-ஏதத் சாம காநம் ஆஸ்தே -சதா பஸ்யந்தி ஸூரயா-பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அன்றோ)

(மனுஷ்ய லோகம் ஸ்வர்க்க லோகம் -அடுத்து மகர் லோகம் தானே- சத்ய லோகமாகத்தான் இருக்க வேண்டாமே –ஆகவே ஸ்ரீ வைகுண்டமே -இதுவும் நாலாவது யுக்தி)

——–

1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
-ஶ்லோகம் 18 –)

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
||-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

(ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

பரமாத்மாவே தஹராகாஸம்
ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
:-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

(கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

(மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

————

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

நாம் அறியாத செல்வம்
தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

(உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறார்)

2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
க₃தி சப்₃தா₃ப்₄யாம் – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
(தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
“எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
அஸ்ய-
இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
அதாவது
“இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
ஸமுத்பத்₃யந்தே )
அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
இதர பராமர்சாத் ஸ:
-பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
) அதாவது
“இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

————–

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
உத்தராத் சேத்
– “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

(அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே
॥ 8.12.2॥।

ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த:
॥ 8.12.3॥)

முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
9-அநுக்ருதே : தஸ்ய ச –
தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.

இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச

இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து,
மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர்,
ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார்,
ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.

இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

——————————

1.3.6 ப்ரமிதாதி₄கரணம்-பரமாத்மா அருவெறுப்பு இல்லாமல் உறைகிறார்

சப்தா தேவ ப்ரமித-ஸூத்ரம் இருப்பதால் இந்த அதிகரணத்தின் பெயர்-மித -அளக்கப் பட்டது –அமித-அளவிடமுடியாதவர் –பிரமித -கட்டை விரல் அளவாக அளக்கப்படுபவர்

ப்ரமிதாதி₄கரணத்தின் பின்புலம்
1.3.6 ப்ரமிதாதி₄கரணம் – ஸங்கதி
– இதற்கு முன் தஹராதிகரணத்தில் “அல்பச்ருதே : இதி வேத் தது₃க்தம்” என்கிற ஸூத்ரத்தில் பரமாத்மாவுக்கு சிறிய வடிவம் எப்படிப் பொருந்தும் என்று காட்டப்பட்டது.-அதற்கு மேல் ஒரு ஸந்தேஹம் எழுகிறது – கடோபநிஷத்தில் இப்படி சிறிய வடிவம் ஜீவாத்மாவுக்குத் தானே சொல்லப்பட்டுள்ளது என்று
விஷய வாக்யம் – கடோபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தின் முதல் வல்லியில் உள்ள வாக்கியங்கள் –அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: மத்₄யே ஆத்மநி திஷ்ட₂தி | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ததோ ந விஜுகு₃ப்ஸதே ||-கட்டை விரல் அளவுடைய ஒரு புருஷன் உடலுக்குள்ளே இருக்கிறார். அவர் கடந்த காலப் பொருள்கள் வருங்காலப் பொருள்கள் என அனைத்தையும் இயக்குபவர்.

அங்கு₃ஷ்ட₂மாத்ர: புருஷ: ஜ்யோதிரிவ அதூ₄மக: | ஈசாநோ பூ₄தப₄வ்யஸ்ய ஸ எவாத்₃ய ஸ உ ஶ்வ: ||-கட்டை விரல் அளவுடைய புருஷன் புகை யில்லாத நெருப்புபோல் ப்ரகாஸ மானவர். அவர் தான் உலகில் அனைத்துப் பொருள்களாகவும் இருக்கிறார்.
தம் ஸ்வாத் சரீராத் ப்ரவ்ருஹேத் | தம் வித்₃யாத் சுக்ரம் அம்ருதம் -அந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷனைத் தன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவனாய் அறியவேண்டும். அவரே ப்ரகாஸ மானவர், மிக இனியவர்.

ஸந்தேஹம் – இந்தக் கட்டை விரல் அளவுடைய புருஷன் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – இங்கு சொல்லப்படுபவர் ஜீவாத்மாவே -வேறொரு உபநிஷத்தில் அவ்வாறு சொல்லப்பட்டபடியால்.
ப்ராணாதி₄ப: ஸஹ்சரதி கர்மபி₄: | அங்கு₃ஷ்ட₂மாத்ரோ ரவிதுல்யரூப: ஸங்கல்பாஹங்கார ஸமந்விதோ ய: ||-அந்த கட்டை விரல் அளவுடை யவர் ப்ராண வாயுவுக்கு தலைவன், கர்மங்களால் பிறந்தவர் என்று சொல்கிற படியால்.

தன் சொத்தில் அழுக்கையும் ஏற்கும் பரமாத்மா
கேள்வி
– ஜீவாத்மா உண்மையில் அணுவானவர் என்று தானே சொல்லப்படுகிறார். எனவே இங்கு கட்டை விரல் அளவு என்று சொன்னது ஒரு பேச்சுக்காகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவுக்கும் அப்படிச் சொல்லலாமே ?
பதில் – உண்மை தான், ஜீவாத்மா அணுவே . ஆனால் அவர் ஹ்ருதயத்துக்குள் இருக்கிற படியால் ஒரு பேச்சுக்காவது அவரை கட்டை விரல் அளவுடையவர் என்று சொல்லலாம். பரமாத்மாவை அப்படிச் சொல்ல வழியே இல்லை .
கேள்வி – கடந்தகால மற்றும் வருங்காலப் பொருள்களை யெல்லாம் இயக்குபவராக ஜீவாத்மா எப்படி ஆவார்?

பதில் – தன்னுடைய சொத்தான உடல், புலன்கள், பொருள்கள் முதலானவற்றை இயக்குகிற படியால்
ஸித்தாந்தம் – 1-சப்₃தா₃தே₃வ ப்ரமித: – (ஸப்தாத் ஏவ ப்ரமித)கட்டை விரல் அளவுடையவர் (பரமாத்மாவே ) சப்தத்தாலேயே –இங்கு கட்டை விரல் அளவுடையவரை ’ஈசாந :’ அதாவது’இயக்குபவர்’ என்று சொல்கிற படியால் அந்தச் சொல்லைக் கொண்டு அவர் பரமாத்மா தான் என்று புரிந்து கொள்ளலாம். உலகில் சில பொருள்களை மட்டும் இயக்கும் பண்பு ஜீவாத்மாவுக்கும் உள்ளதே என்று பொருளைக் குறைத்துக் கொள்ள முடியாது-வேதமே ஸ்பஷ்டமாக ’பூ₄தப₄வ்யஸ்ய’ என்று ’முக் காலத்திலிருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரன்’ என்று சொல்லப்பட்டபடியால்-

(பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -பரந்த அண்டம் இதுவென கரந்து எங்கும் பரந்துளன்-அனைத்தும் சொத்து என்பதால் ஜுகுப்ஸை இல்லாமல் உள்ளே உகந்து உறைகிறான்–ஆமவை ஆயவை யாய் நின்ற அவரே–யானும் நீ என்னுடைமையும் நீயே -ஆத்மாவும் சரீரம் அவனுக்கு சரீரம் -அவரே ஆத்மா)

அளவற்ற பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் சிறிய வடிவம் கொண்டவர் என்று சொல்லலாம் என்கிறது அடுத்த ஸூத்ரம்-2- ஹ்ருதி அபேக்ஷயா து மநுஷ்யாதி₄காரத்வாத் –
ஹ்ருதி₃
– (உபாஸநத்தின் ஸௌகர்யத்துக்காக) ஹ்ருதயத்தில் (பரமாத்மா இருக்கிற படியால்)
அபேக்ஷயா து – அதன் அளவை வைத்து (பரமாத்மாவுக்கு அளவு சொல்வதில் தவறில்லை )
ஹ்ருதயம் கட்டை விரல் அளவுடையது என்று புராணங்கள் சொல்கிறபடியால் அதற்குள் இருக்கும் பரமாத்மாவுக்கும் அதே அளவு சொல்லப்படுவதில் தவறில்லை

கேள்வி – விலங்குகளுக்குக் கட்டை விரல் இல்லாததால் அவர்கள் ஹ்ருதயத்திலிருக்கும் பரமாத்மாவின் அளவு என்ன?
பதில் – மநுஷ்யாதி₄காரத்வாத் – மனிதர்களுக்கு மட்டுமே உபாஸநத்தில் தகுதி உள்ளபடியால் (இக்குறை இல்லை )

(வாலாக்ர்யம் –இத்யாதி –அணு மாத்ரம் -நுண்ணியவர் -கட்டை விரல் என்பது பேச்சுக்குச் சொன்னபடி -உபசார யுக்தி)

(கொண்டல் வண்ணன் –ஒண் சங்கதை வாள் ஆழியான் அடியேன் உள்ளான் -விக்ரஹத்துடன் உள்ளான் –கருட வாஹனம் கொண்டு அருளுகிறவன் ஆழ்வார் திரு உள்ளத்தில்-அரவிந்தப்பாவையும் தானும் –அகம்படி வந்து புகுந்தான் -பாற்கடலுடன் -அலைஓசை கேட்க்கும்)

இந்த அதிகரணத்தின் மீதமுள்ள இரண்டு ஸூத்ரங்கள்-அடுத்த மூன்று அதிகரணங்களுக்குப் பின்னர் அமைத்துள்ளார்

———————————-

1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-தேவதைகள் உபாஸனம் செய்யலாமா?

தே₃வதாதி₄கரணத்தின் பின்புலம்
1.3.6 ப்ரமிதாதி₄கரணம் இன்னும் முடியவில்லை . அதற்கு இடையிலேயே மூன்று அதிகரணங்களை அமைத்துள்ளார் வேத வ்யாஸர். அதற்குப் பிறகு மறுபடியும் ப்ரமிதாதி₄கரணத்தின் மீதமிருக்கும் ஸூத்ரங்களைப் பார்க்கலாம்.

(ஸ்ம்ருதஸ்ய உபேஷா அநஹர்த்வம் -நினைவுக்கு வந்தவற்றை விலக்க முடியாமை பிரசங்காத் மூன்று அதிகரணங்களில் விசாரம் -அனைத்தையும் தாங்குபவரைப் பற்றிய விசாரம் மூன்றாம் பாதத்தில் பார்த்து வருகிறோம் -இந்த மூன்றிலும் அது இல்லாவிட்டாலும் தொடர்புடைய விசாரம் என்பதால் இங்கே அமைத்துள்ளார்)

1.3.7 தே₃வதாதி₄கரணம் – ஸங்கதி – ப்ரமிதாதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரத்தில் “மநுஷ்யாதி₄காரத்வாத்”-அதாவது “மனிதர்களுக்கு மட்டும் உபாஸநத்தில் தகுதி உள்ள படியால்” என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையுள் ஒரு கேள்வி எழுகிறது – ’மனிதர்களுக்கு மட்டும்’ என்று சொல்வதால் யாருக்குத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறது? என்று.
விஷய வாக்யம் – இந்த அதிகரணத்தில் விஷய வாக்யம் கிடையாது. யுக்திகளின் அடிப்படை யில் தான் விசாரம்.

ஸந்தேஹம் – விலங்குகள் முதலான தாழ்ந்த பிறவிகளுக்கு மட்டும் உபாஸநம் செய்யத் தகுதி இல்லை என்று சொல்லப்படுகிறதா? அல்லது மனிதர்கணை விட உயர்ந்த பிறவிகளான தேவர்கள் முதலானவர்களுக்கும் தகுதி இல்லை என்றும் சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – தேவர்களுக்குத் தகுதி இல்லை , அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இல்லாதபடியால்.
அர்தி₂த்வம் – ஒரு பயனை அடைய வேண்டும் என்னும் ஆசைக்கு அர்தி₂த்வம் என்று பெயர். உபாஸநத்தின் பயன் முக்தி, அதாவது உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுதல். எனவே முக்தியில் ஆசை இருப்பவர்கள் தான் உபாஸநம் செய்யத் தகுதி உடையவர்கள். ஆனால் தேவர்களுக்கு அந்த ஆசை கிடையாது. ஒருவருக்கு துக்கம் இருந்தால் தான்-அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட முடியும். துக்கம் இருக்க வேண்டும் என்றால் உடல் இருக்க வேண்டும். தேவர்களுக்கு உடலே இல்லாதபடியால் துக்கம் கிடையாது, எனவே அந்த துக்கத்தைப் போக்கிக் கொள்வதில் ஆசையும் இருக்க முடியாது. எனவே அர்தி₂த்வம் இல்லாதபடியால் தகுதி கிடையாது.
ஸாமர்த்₂யம் – ஒரு செயலைச் செய்வதற்கான திறமை தான் ஸாமர்த்₂யம். உபாஸநம் என்பது கர்மாநுஷ்டானம்,-ப்ராணாயாமம், ஆஸனம், அர்ச்சனை , நாம ஸங்கீர்தனம் முதலான பல செயல்களை உள்ளடக்கியது. இவற்றைச் செய்வதற்கு உடல் தேவை -தேவர்களுக்கு உடல் இல்லாதபடியால் உபாஸநம் செய்யும் ஸாமர்த்₂யம் கிடையாது –

(மீமாம்சகர் -தேவதை வியக்தி அல்ல -சொற்களைக் கொண்டே -அடையாளம் என்பர்-விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியா -கல்யாணம் -அநவசாதம் -அனுத்ருஷ்யம் -சாதன சப்தகம் சொல்வார்கள் அன்றோ)

தேவர்களுக்கு உடல் உண்டா?
பூர்வ பக்ஷியின் வாதத்தின் அடிப்படை தேவர்களுக்கு உடல் கிடையாது என்பது தான். அதை எப்படி நிரூபிக்கலாம்?-உடல் உள்ளது என்று சொல்லும் ப்ரமாணம் இல்லாதபடியால் உடல் கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.-கேள்வி 1 – உபநிஷத்துக்களில் பல இடங்களில் தேவர்களின் செயல்கள் சொல்லப்படுகின்றனவே ?
பதில் 1 – உபநிஷத்துக்களில் சொல்லப்படும் பொருள்களுக்கு ஏதாவது ஒரு ப்ரயோஜநம் இருக்க வேண்டும். அதில் சொல்லப்படும் உபாஸனத்துக்குப் பயன் உள்ளது. அதில் சொல்லப்படும் ப்ரஹ்மம் தானே புருஷார்த்தமாக உள்ளது, எனவே அந்த வாக்கியங்களுக்கும் ப்ரயோஜனம் உள்ளது. ஆனால் தேவதைகளுக்கு உடல் உள்ளது என்று சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. எனவே அந்த வாக்கியங்களுக்கு அப்படியே உண்மைத் தன்மையை ஏற்க முடியாது.

கேள்வி 2 – கர்ம காண்டத்தில் சில மந்த்ரங்களிலும் அர்த்த வாதங்களிலும் தேவர்களின் உடல்கள், அவர்களின் சக்திகள்,அவர்கள் செய்யும் வீரச் செயல்கள் முதலானவை சொல்லப் பட்டுள்ளனவே ? எனவே உடல் இருக்க வேண்டுமே ?
பதில் 2 – அந்த வாக்கியங்களும் செய்யப்படும் யாகத்தைப் புகழ்வதற்காகவே வந்தவை – யாகம் உயர்ந்தது என்று சொல்வதற்காக அந்த யாகத்தில் பூஜிக்கப்படும் தேவதையைப் பற்றி இல்லாத பெருமைகளை எல்லாம் சொல்லி நம்மை யாகம் செய்ய ஊக்குவின்றனவே தவிற, அந்தப் பெருமைகளை எல்லாம் உண்மை என்று கொள்ள முடியாது.

கேள்வி 3 – கர்ம காண்டத்தில் இந்த இந்த பயனை விரும்புபவன் இந்த இந்த கர்மத்தைச் செய்ய வேண்டும் என்று கர்ம விதி₄கள் (கட்டளைகள்) உள்ளனவே . இன்று செய்யப்படும் ஒரு யாகம் என்றோ பயனளிக்கும் என்று சொல்வது பொருந்தாது. எனவே அந்த யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்று உண்ட தேவதை தான் த்ருப்தி அடைந்து பிற்காலத்தில்
பயனளிக்கிறார் என்று கொள்ள வேண்டும். இதெல்லாம் தேவர்களுக்கு உடல் இருந்தால் தானே நடக்க முடியும்
பதில் 3 – கர்மங்களைச் செய்வதால் அபூர்வம் என்றழைக்கப்படும் புண்ணியம் உண்டாகிறது. அது ஆத்மாவிடம் வெகு காலத்துக்கு இருக்கும். அது தான் பிற்காலத்தில் ஸ்வர்கம் முதலான பயன்களை அளிக்கிறது. தேவர்கள் ஹவிஸ்ஸை ஏற்பதோ , உண்பதோ , த்ருப்தி அடை வதோ , பயனளிப்பதோ கிடையாது. எனவே அவர்களுக்கு உடல் கிடையாது.

தேவர்களும் ஸம்ஸாரிகளே
ஸித்தாந்தம்
– இந்தப் பூர்வபக்ஷத்தை 5 ஸூத்ரங்களாலே வேத வ்யாஸர் தவறென்று நிரூபிக்கிறார்.
1- தத் உபரி அபி பா₃த₃ராயண: ஸம்ப₄வாத்
தத்
– “அது”-, அதாவது மோக்ஷம் அடைவதற்காக ப்ரஹ்மத்தைப் பற்றின உபாஸநம் என்பது
உபரி அபி – “மேலேயும் உண்டு”-, மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் முதலானவர்களுக்கும் உண்டு
பா₃த₃ராயண: – என்பது பா₃த₃ராயணர் என்கிற வேத வ்யாஸரின் கருத்து
ஸம்ப₄வாத் – “ஸாத்தியமான படியால்”-, அதாவது அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் தேவர்களுக்கு ஸாத்தியமானபடியால்

அர்தி₂த்வம் – இந்த்ரன் சந்த்ரன் முதலான தேவர்களும் இந்த உலகத்தில் தான் பிறந்துள்ளார்கள். ஒரு புல் தொடங்கி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா வரை இந்த உலகில் பிறந்த அனைவருமே கர்மத்துக்கு வஸப்பட்டு உடற்பிறவி அடைந்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் ஸம்ஸாரிகள் தான். எனவே தேவர்களுக்கும் அந்த துக்கத்திலிருந்து விடுதலை அடைவதாகிற முக்தியில் ஆசை இருக்கலாம். எனவே அர்தி₂த்வம் அவர்களுக்கு ஸாத்தியமே .
ஸாமர்த்₂யம் – உபாஸநம் செய்யும் திறமையும் கூட அவர்களுக்கு உண்டு, மிக உயர்ந்த உடல் இருக்கிறபடியால்.
அவர்களுக்கு உடல் இருப்பதற்கு என்ன ப்ரமாணம் உள்ளது என்று கேட்டார் பூர்வ பக்ஷி. அதற்கான பதில் –
(1) உபநிஷத்துக்களில் தத்த்வங்களைச் சொல்லும் வாக்கியங்கள் – சாந்தோக்ய உபநிஷத்தில் பரமாத்மா உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது “நான் பலவாக ஆகக் கடவேன். என்னுடைய உடலான ஜீவாத்மாக்களைக் கொண்டு ப்ராணிகளின் உடல்களுக்குள்ளே புகுந்து அவர்களை பெயராலும் உருவத்தாலும் வேறுபடுத்தப் போகிறேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ஜீவாத்மாக்களை பெயராலும் உருவத்தாலும் தேவர்கள்,மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று வேறுபடுத்துகிறார் பரமாத்மா. இந்த வேறுபாடுகள் ஜீவாத்மாவுக்கு நேரடியாக ஏற்பட முடியாது. ஒரு உடல் மூலமாகத் தான் வர முடியும். எனவே , தேவர்கள் என்று சொன்னாலே ஒரு விதமான உடலை எடுத்துக் கொண்டுள்ள ஜீவாத்மா என்று தான் பொருள். எனவே தேவர்களுக்கும் உடல் உண்டு.

தேவர்களுக்கும் உடல் உண்டு
2–உபநிஷத்துக்களில் உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் கதைப் பகுதிகள் – ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் உபதேசம் செய்தார், இந்த்ரன் ப்ரஜாபதியிடம் உபதேசம் பெருவதற்காகச் சென்றார், 32 ஆண்டுகள் தொண்டு செய்தார், தன் ப்ரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்த்தார், ப்ரஜாபதியிடம் கேள்வி கேட்டார் என்று தேவர்கள் செய்யும் பல செயல்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்படுகின்றன. இவற்றை யெல்லாம் பொய் என்று கொள்ள இயலாது. எனவே உடல் உண்டு

3-கர்ம காண்டத்தில் மந்த்ரங்களும் அர்த்த வாதங்களும் – ’வஜ்ர ஹஸ்த: புரந்த₃ர:’ முதலான பல மந்திரங்களும் அர்த்தவாதங்களும் (புகழ்ச்சி வாக்கியங்களும்) தேவர்களின் உடல்கள், ஆயுதங்கள், சண்டைகள், சக்திகள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஏற்க வேண்டும்.

(தை. ஸம். (2-4-12) –வஜ்ர ஹஸ்தபுரந்தர: | தேவேந்த்ரோ. வஜ்ரம் உதயச்சத் இந்த்ரன் வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டிருந்தான்.)

ஆஷேபம் – ஒரு குழந்தையை மருந்து சாப்பிட வைப்பதற்காக ’இதை சாப்பிட்டால் உயரமாக ஆவாய்’ என்று பொய் சொல்வது போல், யாகத்தில் நம்மை ஊக்குவிப்பதற்காகப் பொய்யான பண்புகளை யெல்லாம் சொல்லுகிறது வேதம்
ஸமாதாநம் – அக்குழந்தைக்கு அந்த வார்த்தை பொய்யானது என்று தெரிந்து விட்டால் மருந்து உண்பதில் ஆசையே பிறக்காது. அது போல், யாகம் செய்வதற்கு முன்னால் வேதத்தை ஆராய்ந்து புரிந்து கொள்ளும் ஒருவனுக்கு இந்தப் புகழ்ச்சி வாக்கியங்கள் எல்லாம் பொய்யானவை என்று தெரிந்து விட்டால் ஊக்கமே ஏற்படாது. வேதத்தின் குறிக்கோள் நிறை வேறாமல் போய்விடும். இல்லாத குணத்ணதச் சொல்லிப் புகழ்வதை விட, இருக்கும் உயர்வுகளைச் சொல்லிப் புகழ்ந்தால் தான் கேட்டு ஆராய்பவர்களுக்கு உண்மையான ஊக்கம் ஏற்படும். எனவே இவை எல்லாம் உண்மையே .

4-கர்ம விதி₄கள் – கர்மங்கள் எப்படிப் பயனளிக்கின்றன என்னு கேள்வி எழும் போது வேதமே சொல்லுகிறது – நீ செய்யும் யாகத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பயன் அளிக்கிறார்கள் என்று. இதை விட்டுவிட்டு,’அபூர்வம்’ அல்லது ’புண்ணியம்’ என்று புதிதாக ஒரு பொருளைக் கற்பிப்பது வீணானது. நம் ஸித்தாந்தத்திலும் புண்ணியத்தை
ஏற்கிறோம், ஆனால் அது யாகம் செய்யும் நம்மிடம் இருப்பதல்ல. வேதத்தின்படி நாம் நடந்தால் பகவானுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே புண்ணியம். வேதத்தை மீறி நடந்தால் அவருக்கு ஏற்படும் சீற்றமே பாபம். எனவே தேவர்களின் த்ருப்தியாலும் கோபத்தாலும் தான் நமக்குப் பயன்கள் கிடைக்கின்றன. எனவே அவர்களுக்கு உடல் உண்டு.

1.3.7 தே₃வதாதாதி₄கரணம்-வேதங்களின் நித்யத்துவம்

ஆஷேபங்களுக்கு விடை
தேவர்களுக்கும் உடல் இருக்கிறபடியால் அவர்களுக்கும் அர்தி₂த்வம் ஸாமர்த்₂யம் என்ற இரண்டும் இருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கும் உபாஸனத்தில் அதிகாரம் உண்டு என்றார் வேத வ்யாஸர்.-அதற்கு மேல் எழும் சில ஆஷேபங்களுக்கு மேல்வரும் ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் –

2-விரோத₄: கர்மணி இதி தேத் ந அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத்
விரோத₄: கர்மணி
– (தேவதைகளுக்கு உடல் உண்டு என்று கொண்டால்) கர்மத்தில் முரண்பாடு ஏற்படும்
இதி தேத் ந – என்று கூறினால் அது தவறு
அநேக ப்ரதிபத்தே: தர்ஸநாத் –சக்திசாலிகள் பல சரீரங்கணை ஏற்றுக் கொள்வதை புராணங்களில் காண்கிறபடியால்
ஆஷேபம் – ஒரே தேவதையைக் குறித்து பலரும் ஒரே காலத்தில் கர்மங்களைச் செய்யும் போது, அந்த தேவதை தன் உடலோடு ஒருவரிடம் மட்டும் தான் ஹவிஸ்ஸை ஏற்க முடியும் என்பதால் மற்றவரின் கர்மங்கள் பயனற்றவை ஆகும்.
ஸமாதாநம் – ஸௌபரி முதலான ருஷிகளைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவர்களான தேவர்களும் ஒரே காலத்தில் எண்ணற்ற உடல்களை எடுத்துக் கொள்ள முடியும். எனவே எத்தனை பேர் ஒரே காலத்தில் ஹவிஸ்ஸை வழங்கினாலும் அந்த தேவதை அதை ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு ஒன்றுமில்லை

3-சப்₃தே₃ இதி தேத் ந அத: ப்ரப₄வாத் ப்ரத்யஷ அநுமானாப்₄யாம்
சப்₃தே₃
– (வேதம் என்கிற) சப்தத்தில் (இந்த்ரன் முதலான அழியக் கூடிய பொருள்களைப் பற்றிப் பேசுவதால், இந்தரன் இல்லாத போது இல்லாத பொருளைச் சொல்லுவதால் உண்மைத் தன்மை இல்லாமை என்ற முரண்பாடு ஏற்படும்)
இதி தேத் ந – என்று குறினால் அது தவறு
அத: ப்ரப₄வாத் – அந்த சப்தத்திலிருந்தே உலகப் பொருள்கள் உண்டாகிறபடியால்
ப்ரத்யஷ அநுமானாப்₄யாம் –-ஸ்ருதிகளாலும் ஸ்ம்ருதிகளாலும் (இவ்வாறு கூறப்படுகிறபடியால்)
ஒரு இந்த்ரன் அழிந்தாலும் அதே போன்ற மற்ற ஓருவரை நான்முகன் படைத்து விடுகிறார் என்பதால் வேதத்தில் சொல்லப்பட்ட பொருள்கள் இல்லாமல் போகும் காலமே கிடையாது. எனவே இந்த தோஷமில்லை-

4-அத ஏவ ச நித்யத்வம் – ஆகையாலேயே (வேதத்தின்) அழியாத் தன்மையும் (உறுதி யாகிறது)
ஆஷேபம் – வேதத்திலேயே சில ரிஷிகளை ’மந்த்ர க்ருத்’ அதாவது மந்த்ரங்களைச் செய்தவர்கள் என்று சொல்கிறபடியால், வேதங்கள் இயற்றப்பட்டவையே , நித்யமாக இருக்க முடியாது
ஸமாதாநம் – ’இந்த ரிஷி இந்த மந்த்ரத்தைச் செய்தார்’ என்பதும் வேதத்தலேயே உள்ள படியால், கீழ் ஸூத்ரத்தில் சொன்னபடிக்கு, அந்த ரிஷியின் பெயரைத் தன் மனதில் கொண்டுள்ள ப்ரஹ்மா அந்த ரிஷியைப் படைத்து, அவரைத் தவம் செய்யத் தூண்டி, அவர் ஆழ்ந்த த்யானத்தில் இருக்கும் போது அந்த மந்த்ரத்தை அவருக்குக் காட்டித் தருகிறார்.
இப்படி யாரிடமும் கற்காமல் த்யானத்தில் மந்த்ரத்தைக் கண்டறிந்தபடியால் அவர்கள் ’மந்த்ர க்ருத்’ எனப்படுகிறார்கள்.

(ஒவ்வொரு சதுர்யுகத்திலும் வியாசர் படைக்கப்படுகிறார் -வசிஷ்டர் வால்மீகி போல்வாரும் அவ்வாறு படைக்கப்பட்டு -தவம் செய்யத்தூண்டி -மந்த்ர த்ரஷ்டா -கண்டு அறிந்தவர்கள் -discovery வேறு invention வேறு -வர்ணதயா தர்சனம் -சந்தஸ்ஸுடன் கண்டு வெளியிடுகிறார்கள்-தமிழ் வேதம் -அருளிச் செயல்களும் அவ்வாறு தான் -இவையும் நித்யம் -யானாய்த் தன்னைத்தானே பாடி -என் முன் சொல்லும் மூவா முதல்வன் -இவர்கள் மூலமும் வெளிப்படுத்தினான்-ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்
||-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!)

5-ஸமாந நாம ரூபத்வாச்ச ஆவ்ருத்தவ் அபி அவிரோத ₄: த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே:
ஆவ்ருத்தவ் அபி ச
– ப்ரளயத்தில் உலகமே அழிந்து திரும்பவும் ஸ்ருஷ்டி ஏற்படும் போதும்
அவிராேத₄: – ப்ரஹ்மாவோ வேதச் சொற்களோ இல்லாதபடியால் வரும் முரண்பாடு இல்லை
ஸமாந நாம் ரூபத்வாத் – ஒரே வடிவத்தோடும் பெயரோடும் பொருள்கள் உள்ள படியால் வேதமும் மாறாதபடியால்
த₃ர்ஸநாத் ஸ்ம்ருதே: ச – ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் இவ்வாறு அறிகிறபடியால்.
ப்ரளயத்தில் ப்ரஹ்மாவும் அழிந்து வேதச் சொற்களும் அழிந்தாலும், பகவானின் மனதில் எப்போதும் வரிசை மாறாமல் நித்யமாக வேதங்கள் உள்ள படியால் அவர் அடுத்தமுறை ஸ்ருஷ்டி செய்து, தன் நாபீ கமலத்தில் ப்ரஹ்மாவை உண்டாக்கி, அவருக்கு வேதங்களையும், பொருள்களின் வடிவங்களைப் பற்றின ஜ்ஞாநத்தையும் கொடுத்து, அவரை ஸ்ருஷ்டி செய்யச் சொல்கிறபடியால் அப்போதும் வேதச் சொற்களிலிருந்து தான் ஸ்ருஷ்டி நடக்கிறது, வேதமும் நித்யமானது அதாவது என்றும் மாறாத ஒரே வரிசையைக் கொண்டது என்பது நிரூபிக்கப்படுகிறது.
ஆக, எந்த முரண்பாடுகளும் இல்லாதபடியால் தேவர்களுக்கும் உடல் உண்டு. எனவே அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருக்கிறபடியால் அவர்களுக்கும் உபாஸநத்தில் தகுதி உண்டு என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.

(யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் -)

—————–

1.3.8 மத்₄வதி₄கரணம்-குறிப்பிட்ட உபாஸநத்தில் ஸந்தேஹம்-மத்₄வதி₄கரணத்தின் பின்புலம்-மத்₄வதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பொதுவாக தேவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி உண்டு என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட தேவர்களுக்கு சில குறிப்பிட்ட உபாஸநங்களில் தகுதி உண்டா என்கிற சிறப்புக் கேள்விக்கு இந்த அதிகரணத்தில் பதில் அளிக்கப்படுகிறது.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் மூன்றாம் அத்யாயத்தில் உள்ள மது₄ வித்₃யா
அஸஸௌ வா ஆதி₃த்ய: தே₃வ மது₄, தஸ்ய த்₃யௌதேவ திரஶ்சீனவம்ச:, அந்தரிக்ஷம் அபூப:, மரீசய: புத்ரா:-இந்த ஸூர்யன் தான் தேவர்களின் தேன். த்₃யுலோகம் தான் கிளை , வானம் தான் தேன்கூடு, கிரணங்களே தேனீக்கள்

ப்ராஞ்ச: ரச்மய: ப்ராச்ய: மது₄நாட்₃ய: | ருச: ஏவ மது₄க்ருத:, ருக்₃வேத₃ ஏவ புஷ்பம் | யச: தேஜ: இந்த்ரியம் வீர்யம் அந்நாத்₃யம் ரஸ: | தத் வஸவ: உபஜீவந்தி |
ஸூர்யனின் (1) கிழக்குக் கிரணங்களே கிழக்கு தேன்கூடு- ருக் மந்த்ரங்களே தேனீக்கள், -ருக்வேத கர்மங்களே புஷ்பங்கள். அந்தக் கர்மங்களிலிருந்து பிறக்கும் தேஜஸ், ப₃லம் முதலானவையே தேன். அதை வஸுக்கள் பயன்படுத்துகிறார்கள்.
(2) தெற்கு–யஜுஸ்– யஜுர்வேத-ருத்ரர்கள்
(3) மேற்கு -ஸாமங்கள்-ஸாமவேத-ஆதித்யர்கள்
(4) வடக்கு மற்றும்–அத₂ர்வாங்கி₃ரஸ் மந்த்ரங்கள் மற்றும் -இதிஹாஸ புராணக் கர்மங்கள் மற்றும்-மருத்துக்கள் மற்றும்
(5) மேல் புறங்களில்,-உபநிஷத்துக்கவள தேனீக்கள், -ப்ரஹ்மம் தான் புஷ்பங்கள், – அத் தேனை ஸாத்ய தேவர்கள் பயன்படுத்துகிறார்கள்

ந வை தே₃வா: அச்நந்தி ந பிப₃ந்தி ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி
தேவர்கள் தேனை உண்பதோ குடிப்பதோ கிடையாது, அது பார்த்து மட்டுமே த்ருப்தி அடைகிறார்கள்

(அந்தர்யாமியான அவனே தேன் -அவனைப் பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -வஸூக்களில் ஒருவனாக இருந்து பார்த்து மகிழ்கிறார்கள் -இதே போல் ருத்ரர்களில் ஒருவனாகவும் ஆதித்யர்களில் ஒருவனாகவும் மருத்துக்களில் ஒருவனாகவும் -ஸாத்ய புருஷர்களில் ஒருவராக கண்டு மகிழ்கிறார்கள் –இதுவே பலன்)அந்தர்யாமி உபாஸனமே சொல்லிற்று

பூர்வபக்ஷியின் வாதம்
ஸ ஏவ ஏத்தே₃வ ஏவம் அம்ருதம் வேத₃ வஸூநாமேவ ஏகோ பூ₄த்மா த்ருப்யதி

எவனொருவன் இப்படி உபாஸநம் செய்கிறானோ அவன் வஸுக்கள்/ஆதித்யர்கள்/ருத்ரர்கள்/மருத்துக்கள்/ ஸாத்ய தேவர்களுக்குள் ஒருவனாக ஆகி அந்த அம்ருதத்தைப் பயன்படுத்தி மகிழ்கிறான்
அத₂ த்த ஊர்த்₄வ: உதே₃த்ய நைவ உதே₃தா ந அஸ்தமேதா ஏகல ஏவ ஸ்தா₂தா | ஸக்ருத்₃தி₃வா ஹைவ அஸ்மை ப₄வதி ய ஏதாம் ஏவம் ப்₃ரஹ்ம உபநிஷத₃ம் வேத₃-இந்த உலகத்தைத் தாண்டிய பிறகு அவனுக்கு ஸூர்யன் உதிப்பதுமில்லை , அஸ்தமிப்பதுமில்லை . ப்ரஹ்மத்தைப் பற்றிய இந்த ரஹஸ்யமான உபதேசத்தை அறிந்து உபாஸநம் செய்பவனுக்கு எப்போதுமே பகல் போல் இருக்கிறது.

ஸந்தேஹம் – இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் ஆதித்யர்கள் முதலாவனாருக்குத் தகுதி உண்டா? கிடையாதா?
பூர்வ பக்ஷம் – அவர்களுக்கு இந்த உபாஸநத்தில் தகுதி கிடையாது.

(இதில் முதல் இரண்டு ஸூத்ரங்களும் பூர்வபக்ஷ வாதம் மட்டுமே -மூன்றாவது மட்டுமே ஸித்தாந்த ஸூத்ரம்)

1-மத்₄வாதி₃ஷு அஸம்ப₄வாத் அநதி₄காரம் ஜைமிநி:
மத்₄வாதி₃ஷு –
மது₄ வித்யை முதலான வற்றில்
அநதி₄காரம் – (வஸுக்கள் முதலான தேவர்களுக்கு) அதிகாரம் இல்லை
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
அஸம்ப₄வாத் – (அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் அவர்களுக்கு இருக்க) வாய்ப்பு இல்லாதபடியால்.
ஸாமர்த்₂யம் இல்லை – எந்த ஒரு செயலிலும் கர்த்தா (எழுவாய்) வேறாகவும் கர்மம் (செயப்படுபொருள்) வேறாகவும் இருக்க வேண்டும். எனவே , இந்த மது₄ வித்₃யையில் வஸுக்கள் முதலானோர் உபாஸிக்கப் படுகிறபடியால், அவர்கள் தங்களையே உபாஸித்துக் கொள்வது பொருந்தாத படியால், அவர்களுக்கு இவ் வுபாஸநத்தில் ஸாமர்த்₂யம் இல்லை .
அர்தி₂த்வம் இல்லை – நம்மிடம் இல்லாத பொருளைத் தான் ஆசைப் பட முடியும். இந்த உபாஸநத்தின் பயன் வஸுக்கள் முதலானவர்களாக ஆகுவது. அதில் வஸுக்களாகவே இருப்பவர்களுக்கு ஆசை பிறக்க முடியாது.

வேத வ்யாஸரின் பதில்
2-ஜ்யோதிஷி பா₄வாத் ச –
“ஜ்யோதிஸ்ஸில் இருக்கிறபடியாலும்”
“தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி: ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம். அதில், “தேவர்கள் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதைச் சொல்வதால் ப்ரயோஜநம் இல்லை . “தேவர்கள் மட்டும் தான் ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறார்கள்” என்று பொருள் கொள்வது பொருந்தாது, மனிதர்களுக்கும்
அத் தகுதி இருக்கிறபடியால். எனவே , “தேவர்கள் ப்ரஹ்மத்தை மட்டுமே உபாஸிக்கிறார்கள்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். எனவே , மது வித்யை என்ற உபாஸநம் ப்ரஹ்மத்தைப் பற்றியது அல்ல என்பதால் வஸுக்கள் முதலான தேவர்களுக்கு அதில் தகுதி கிடையாது.

ஸித்தாந்தம் – ஒரே ஸூத்ரத்தாலே இதற்கு வ்யாஸர் பதிலளிக்கிறார்.
3- பா₄வம் து பா₃த₃ராயண: அஸ்தி ஹி
பா₄வம் து
– (அந்த தேவர்களுக்கும் இந்த உபாஸநத்தில்) தகுதி உள்ளது
பா₃த₃ராயண: – என்று பா₃த₃ராயணர் எனப்படும் வேத வ்யாஸர் கூறுகிறார்.
அஸ்தி ஹி – (அவர்களுக்கும் அர்தி₂த்வமும் ஸாமர்த்₂யமும் இருப்பதற்கு வாய்ப்பு) உள்ளதன்றோ
இந்த உபாஸநத்தின் பயனைச் சொல்லும் போது “ஸக்ருத்₃தி₃வா ப₄வதி” அதாவது எப்போதும் பகல் போல் இருக்கிறது என்று ஸர்வஞ்ஜத்வம் (அனைத்தையும் அறியும் தன்மை ) சொல்லப் படுகிறது. எனவே இந்த உபாஸநத்தின் பயன் மோக்ஷம் தான். அதனால் இதுவும் பரமாத்மாவைப் பற்றிய உபாஸநமாகத் தான் இருக்க வேண்டும். நேரடியாகவும்-“ப்₃ரஹ்மோபநிஷத்” அதாவது-“ப்ரஹ்மத்தைப் பற்றிய ரஹஸ்யமான உபதேசம்” என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், இங்கு உபாஸநம் செய்யும் வஸுக்களைக் காட்டிலும் உபாஸிக்கப்படும் ப்ரஹ்மம் வேறானபடியால்,அவர்களுக்கு ஸாமர்த்₂யம் உண்டு. ஒருமுறை வஸுவாக இருந்தாலும் திரும்பவும் வஸுவாக ஆகி, பின் பரமாத்மாவை அடையும் ஆசையும் இருக்கும் வாய்ப்பு உள்ளபடியால் அர்தி₂த்வமும் உள்ளதே -எனவே வஸுக்கள் முதலானவர்களுக்கு இந்த மது₄வித்₃யையில் அதிகாரம் உண்டு என்று தெளிவாகிறது.

(மன்னவராய் உலகாண்டு பின் வானவராய் மகிழ்வு எய்துவர் போல் வசுவாகி பின்பு ப்ரஹ்ம அனுபவம் இந்த உபாசனத்தின் பலன்-இது பூர்வகமாக ப்ரஹ்ம பிராப்தி என்றவாறு -ப்ரஹ்மத்தைப் பற்றிய உபாசனமே -போதாயனாரும் அருளிச் செய்கிறார் -)

————————

1-3-9-அபசூத்ராத்₄வதி₄கரணம்-சோகமே ப்ரஹ்ம ஜ்ஞாநத்துக்குத் தகுதி

அபசூத்₃ராதி₄கரணத்தின் பின்புலம்-1-3-9-அபசூத்₃ராதி₄கரணம் – ஸங்கதி – அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருந்தால் உபாஸநம் செய்யும் தகுதி உண்டு என்று சொல்லப்பட்டபடியால், மனிதர்களுள் நான்காம் வர்ணத்தவர்களுக்கும் தகுதி உண்டா என்று கேள்வி எழுகிறது.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் நான்காம் அத்யாயத்தில் உள்ள ஸம்வர்க₃ வித்₃யா ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண꞉ ஶ்ரத்₃தா₄தே₃யோ ப₃ஹுதா₃யீ ப₃ஹுபாக்ய ஆஸ | ஸ ஹ ஸர்வத ஆவஸதா₂ந்மா பயாஞ்சக்ரே ஸர்வத ஏவ மே அந்ந மத்ஸ்யந்தீதி
ஜாநஸ்ருதி என்பவர் ஸ்ரத்தையோடு பல தானங்களைச் செய்பவராய், அதிகமாக அன்ன தானம் செய்பவராய் இருந்தார்.-மக்களுக்கு உணவளிப்பதற்காகப் பல சத்திரங்களைக் கட்டி வைத்திருந்தார். அவருடைய தர்ம ஸ்ரத்தையால் மகிழ்ந்த இரண்டு ரிஷிகள் அவருக்கு ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி, ஹம்ஸத்தின் வடிவத்தை
எடுத்துக் கொண்டு அவர் அருகிலே பரந்தனர்

ஹம்ஸோ ஹம்ஸம் அப்₄யுவாத₃ – ஹோ ஹோ அயி ப₄ல்லாக்ஷ ப₄ல்லாக்ஷ ஜாநஶ்ருதே ꞉ பௌத்ராயணஸ்ய ஸமம் தி₃வா ஜ்யோதிராததம் | தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா மா ப்ரதா₄க்ஷீரிதி-ஒரு ஹம்ஸம் மற்ற ஓன்றிடம் சொன்னது – “அடேய்! உனக்குக் கண் தெரிய வில்லையா? அங்கு ஜாநஸ்ருதியின் தேஜஸ் ஸூர்யனைப் போல் ப்ரகாஸமாக உள்ளது. அதனருகில் செல்லாதே , அது உன்னை எரித்து விடும்”கம்வர ஏநமேதத் ஸந்தம் ஸயுக்₃வாநமிவ ரைக்வமாத்த₂ | ஸர்வம் தத₃பி₄ஸமைதி யத் கிஞ்ச ப்ரஜா꞉ ஸாது₄ குர்வந்தி
யஸ்தத்₃வேத₃ யத்ஸ வேத₃ ஸ மயைதது₃க்த-
அதற்கு அந்த ஹம்ஸம் பதில் சொன்னது – “எதற்கு இந்த ஜாநஸ்ருதியை ரைக்வர் அளவுக்கு உயர்ந்தவன் போல் புகழ்கிறாய்? அவருடைய செயலிலும் ஜ்ஞாநத்திலும் தான் மற்ற அனைவர் செயலும் ஜ்ஞாநமும் அடக்கம்”

செல்வம் கொடுத்து உபதேசம் பெற்றான்
ஜாநஶ்ருதி꞉ உபஶுஶ்ராவ | ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாச | ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித₃மிதி ப்ரத்யேயாய| தம் ஹோவாச – யத்ராரே ப்₃ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே ₃நமர்ச்சே₂தி
–இதைக் கேட்ட ஜாநஸ்ருதி, தனக்குக் குறை இருப்பதை உணர்ந்து வருந்தினான். அப் பெருமையை உடைய ரைக்வரைக்
காண வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய தூதர்களை அனுப்பி அவரைத் தேடினார். அவர்கள் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினார்கள். இப்படிப்பட்ட ஜ்ஞாநீ நகரங்களில் இருக்க மாட்டார், காடுகளில் தேட வேண்டும் என்று ஜாநஸ்ருதி கூறினார். அங்கு தேடி ரைக்வரைக் கண்டுபிடித்தார்கள் தூதர்கள்.

ஷட்ஶதாநி க₃வாம் நிஷ்கம் அஶ்வதரீரத₂ம் ததா₃தா₃ய ப்ரதிசக்ரமே | அநு ம ஏதாம் ப₄க₃வோ தே ₃வதாம் ஶாதி₄ யாம் தே₃வதாமுபாஸ்ஸ இதி தயைவ ஸஹ கோ₃பி₄ரஸ்த்விதி-ஜாநஸ்ருதி உடனே அவரைக் காண ஓடி வந்தார். அவருக்கு 600 மாடுகள், தேர்கள் முதலானவற்றை ஸமர்ப்பித்து, நீங்கள் உபாஸிக்கும் தெய்வத்தை எனக்கும் உபதேசிக்க வேண்டும் என்றான். ஆனால் ரைக்வர், இந்தச் செல்வத்தை நீயே வைத்துக் கொள் என்றார். ஏனென்றால், பணி விடை செய்யாமல் உபதேசம் பெற விரும்பும் ஜாநஸ்ருதி தன்னுடைய செல்வத்துக்கு ஏற்ற தக்ஷிணையைக் கொடுத்தால் தான் அவனுக்கு ஸ்ரத்தை இருக்கும் என்ற ரைக்வருக்கு எண்ணம்.ஸஹஸ்ரம் க₃வாமயம் நிஷ்க: அஶ்வதரீரத₂ இயம் ஜாயாயம் க்₃ராமோ -யஸ்மிந்நாஸ்ஸே | அந்யேவ மா ப₄க₃வ꞉ ஶாதீ₄தி–ஜாநஸ்ருதி மறுபடியும் 1000 மாடுகள், தேர்கள், பெண் மற்றும் க்ராமங்களை ஸமர்ப்பித்துப் ப்ரார்த்தித்தான்.

ஆஜஹார இமா꞉ ஶூத்₃ர அநேநைவ முகே₂ந ஆலாபயிஷ்யதா₂-“சூத்ரனே ! இந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உனக்கு உபதேசிக்கிறேன்” என்று ரைக்வர் கூறினார்.
ஸந்தேகம் – நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ப்ரஹ்ம உபாஸநத்தில் தகுதி உண்டா? கிடையாதா?

பூர்வபக்ஷியின் வாதங்கள்-பூர்வபக்ஷம் – அவர்களுக்கும் அர்தி₂த்வம் மற்றும் ஸாமர்த்₂யம் இருக்கிறபடியால் அவர்களுக்கும் தகுதி உண்டு.-வேத அத்யயனம் செய்து அதன் மூலம் அடையும் ஜ்ஞாநமும், ஆதா₄னம் என்ற வைதிகச் செயலால் கிடைக்கும் மூன்று
அக்நிகளும் இருந்தால் தான் யாகம், ஹோமம் முதலானவற்றைச் செய்ய முடியும். நான்காம் வர்ணத்தவர்களுக்கு அத்யயனமும் ஆதானமும் இல்லாதபடியால் அவர்களுக்கு வைதிக கர்மங்களில் தகுதி இல்லை என்று பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -ஆறாவது அத்தியாயத்தில் -ஜைமிநி ரிஷியால் சொல்லப்பட்டது. ஆனால் உபாஸநம் என்பது மனதால் செய்யும் செயலானபடியால்-அதற்கு வேறு எதுவும் தேவையில்லை , எனவே நான்காம் வர்ணத்தவர்களும் அதைச் செய்ய இயலும்.

கேள்வி – உபாஸநத்துக்கு அங்கமாக யாகம் ஹோமம் முதலான வைதிக கர்மங்கள் தேவை யாயிற்றே ?
பதில் – அது யாகம் ஹோமம் தான் என்று நிர்பந்தம் இல்லை . நான்காம் வர்ணத்தவர்கள் வர்ணாஸ்ரம தர்மமே போதும்
கேள்வி – வேதம் கற்காமல் ப்ரஹ்மத்தைப் பற்றியும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய இயலாதே ?
பதில் – இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொல்கிறபடியால்-அதன் மூலம் அவர்களும் ப்ரஹ்மத்தை யும் அதை உபாஸிக்கும் முறையையும் அறிய முடியும்.
ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்துக்கு 7 ஸூத்ரங்களில் விடை அளிக்கிறார் வேத வ்யாஸர்.
1–சுக் அஸ்ய தத₃நாத₃ர ஸ்ரவணாத் ததா₃ ஆத்₃ரவணாத் ஸூஸ்யதே ஹி

அஸ்ய சுக் – இந்த ஜாநஸ்ருதியின் ஸோகம்
தத₃நாத₃ரஸ்ரவணாத் – தன்னை அநாதரித்துப் பேசிய ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதாலும்
ததா₃ ஆத்₃ரவணாத் – அப்போதே ரைக்வரைக் காணத் துடிப்போடு ஓடிவந்த படியாலும்
ஸூஸ்யதே ஹி – கோடி காட்டப்படுகிறது அன்றோ
இங்கு ’சூத்ரன்’ என்ற சொல் நான்காம் வர்ணத்தைக் குறிக்கவில்லை . அச் சொல்லுக்கு’ஸோகம் உடையவன்’ என்று மற்ற ஓரு பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தில் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை அழைக்கிறார். அவனுக்கு ஹம்ஸத்தின் வாக்கியத்தைக் கேட்டதால் ஸோகம் இருந்தது என்பதை அவன் ஓடிவந்ததே காட்டிக் கொடுக்கிறது.

வேத வ்யாஸரின் பதில்கள்
தான் தற்போது இருக்கும் நிலையைக் குறித்து ஸோகம் இருந்தால் தான் ஒருவன் ப்ரஹ்மத்தை அறிவதற்குத் தகுதி உடையவன் ஆகிறான். அதனால் தான் ரைக்வர் ஜாநஸ்ருதியை ’ஸோகம் உடையவனே ’ என்று அழைக்கிறார்.-இதிஹாஸ புராணங்களை நான்காம் வர்ணத்தவர்களும் கேட்கலாம் என்று ஸாஸ்த்ரம் சொன்னாலும், அது தங்கள்
பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காகத் தான். அதன்மூலம் உபாஸநம் செய்வதற்கு அல்ல.-உபநிஷத்துக்களைக் கற்காமல் இதிஹாஸ புராணங்கள் மூலம் மட்டும் ப்ரஹ்மத்தையும் அவரை உபாஸிக்கும் முறையையும் சரியாக முழுமையாக அறிய இயலாது. அவை விவரண நூல்கள் தான், மூல நூல்கள் அல்ல. உபாஸநத்துக்கு அங்கமாக யாகம், வேதம் ஓதுதல், தவம் முதலானவை சொல்லப்பட்டுள்ளன. அவற்றைச் செய்ய
தகுதி இல்லாதபடியால், நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸநம் செய்யத் தகுதி கிடையாது

2-ஷத்ரியத் வக தேச – “க்ஷத்ரியன் என்று அறிகிறபடியாலும்”
ஜாநஸ்ருதி அதிகமாக அன்னதானம் செய்தார், அவருக்குத் தூதர்கள் இருந்தார்கள், அவர் ரைக்வருக்கு க்ராமம் தேர்கள் முதலானவற்றை வழங்கினார் என்னும் அடையாளங்களை வைத்து அவர் க்ஷத்ரியன் என்று அறிய முடிகிறது. எனவே அவர் நான்காம் வர்ணத்தவர் அல்ல.

3- உத்தரத்ர ஸைத்ர்ரதே₂ந லிங்கா₃த் – “மேலே ஸைத்ர்ரதனாலே ,-அடையாளத்தால்”
ரைக்வர் ஜாநஸ்ருதிக்குச் செய்யம் உபதேச த்தில் காபேயர்கள் என்ற ப்ராஹ்மணர்கணளயும் அபிப்ரதாரி என்ற க்ஷத்ரியனையும் பற்றிச் சொல்கிறார். எனவே இந்த வித்யையில் க்ஷத்ரியர்களுக்கு தான் தொடர்பு உள்ளது என்று தெரிகிறது. எனவே ஜாநஸ்ருதியும் க்ஷத்ரியனாகத்தான் இருக்க வேண்டும்.-அபிப்ரதாரி என்பவன் க்ஷத்ரியன் என்று எப்படித் தெரியும்? அதற்கு பதில் ’லிங்கா₃த்’ என்று. அவனுக்குச் சைத்ர்ரத₂ன் (அழகான தேரை உடையவன்) என்று சொல்லப்பட்ட அடையாளத்தைக் கொண்டு அவன் க்ஷத்ரியன் என்று அறியலாம்.

வேத வ்யாஸரின் பதில்கள்
4- ஸம்ஸ்கார பராமர்சாத் தத₃பா₄வ அபி₄லாபாத் ச-
ப்ரஹ்ம உபாஸநத்தைப் பற்றிச் சொல்லும் இடங்களில் எல்லாம் ’உபநயனம்’ என்ற ஸம்ஸ்காரம் சொல்லப்படுகிறது. ஆனால் நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபநயனம் என்ற ஸம்ஸ்காரம் கிடையாது என்று
ஸாஸ்த்ர நூல்கள் கூறுகின்றன. எனவே நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபாஸனத்தில் அதிகாரம் கிடையாது.

5-தத₃பா₄வ நிர்தா₄ரணே ச ப்ரவ்ருத்தே : சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள ஸத்யகாமனின் கதை முதலான இடங்களில் மாணவன் நான்காம் வர்ணத்தவன் இல்லையா என்று தெரிந்து கொண்டு ஆசார்யன் ப்ரஹ்ம உபாஸனத்தைப் பற்றி உபதேசிப்பது காணப்படுகிறது.

ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

6- ஸ்ரவண அத்₄யயன அர்த₂ ப்ரதிஷேதா₄த்-நான்காம் வர்ணத்தவர்கள் வேதத்தைக் கேட்கவவோ , ஓதவவோ , அதில் சொல்லப்பட்ட யாகம் முதலானவற்ணறச் செய்யவோ கூடாது என்று கட்டளைகள் வேதத்தில் உள்ளபடியால், அவர்கள் உபாஸநம் செய்வது பொருந்தாது.

தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

7-ஸ்ம்ருதே : ச-ரிஷிகள் எழுதிய ஸ்ம்ருதிகளிலும் இதே போல் கட்டளைகள் காணப்படுகிறபடியாலும் இந்த அர்த்தம் நிரூபிக்கப்படுகிறது.

அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

இவ்வாறு, நான்காம் வர்ணத்தவர்களுக்கு பக்தி யோகம் எனப்படும் உபாஸநத்தைச் செய்ய அதிகாரம் இல்லை என்று வேதவ்யாஸர் நிரூபித்தார். ஆனால் அவர்களுக்கும் முக்தி அடையவதற்கான எல்லா உரிமையும் உண்டு. -அதனால் தான் வேதமே ’ ஸரணாகதி ’ என்ற மற்ற ஓரு உயர்ந்த மார்கத்தை உபதேசித்து, அது அனைவருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் ஸரணாகதியின் மூலம் முக்தி அடையலாம் என்று கூறுகிறது. ஆழ்வார்கள், நம்முடைய ஆசார்யர்கள் முதலான அனைவருமே ஸரணாகதியை சிறந்த மார்கமாகக் கருதி பின்பற்றினார்கள்

உடலை வைத்து வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்ய வேண்டும் -பக்தியோகம் த்ரைவர்ணத்தவர்க்கும் ஆண்களுக்கும்-யாகம் ஹோமம் செய்ய பல கட்டுப்பாடுகள் உண்டே- -உடலைப் பார்க்காதே -ஆத்மாவை உஜ்ஜீவிக்க சரணாகதி விதிக்கப்பட்டுள்ளதே

—————

1.3.6 ப்ரமிதாதி₄கரணம்–மீதமிருக்கும் ஸூத்ரங்கள்-பரமாத்மாவைக் கண்டு பயப்படும் தேவர்கள்-1-3-6-ப்ரமிதாதிகரணத்தில் கட்டை விரல் அளவில் உடலுக்குள் இருப்பவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல என்று-முதல் இரண்டு ஸூத்ரங்களால் நிரூபித்தார் வேதவ்யாஸர். அப்போது உபாஸநத்தில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழ, மூன்று அதிகரணங்களாலே அதற்கு பதில் அளித்தார். இனி, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, மேலும் இரண்டு ஸூத்ரங்களால் கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கிறார்.

3-கம்பநாத் – “நடுக்கத்தால்”-கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே , இந்த வாக்யம் உள்ளது –
யதி₃த₃ம் கிம்ச ஜக₃த் ஸர்வம் ப்ராண ஏஜதி நி꞉ஸ்ருதம் ।
மஹத்₃ப₄யம் வஜ்ரமுத்₃யதம் ய ஏதத்₃விது₃ரம்ருதாஸ்தே ப₄வந்தி ||

இந்த உலகத்திலிருக்கும் அனைத்து ப்ராணிகளும் எந்தப் ப்ராணனால் வாழ்கின்றனவோ , யாரிடமிருந்து உண்டாகின்றனவோ , தூக்கிய வஜ்ராயுதம் போலிருக்கும் யாரைப் பார்த்துப் பயந்து செயல்படுகின்றனவோ அவரே கட்டை விரல் அளவுடையவர்.
ப₄யாத₃ஸ்யாக்₃நிஸ்தபதி ப₄யாத்தபதி ஸூர்ய꞉ । ப₄யாதி₃ந்த்₃ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா₄வதி பஞ்சம꞉ ||
அவருக்கு பயந்து தான் அக்₃நி தஹிக்கிறார், ஸூர்யன் உதிக்கிறார், இந்த்ரன் அக்₃நி வாயு ம்ருத்யு முதலான தேவர்களும் செயல்படுகிறார்கள்.
இவ்வாறு தேவர்கள் எல்லாரும்கூட ’இவருடைய ஆணையை மீறினால் என்ன ஆகுமோ ?” என்று பயந்து செயல்படுவது பரமாத்மாவைக் கண்டு மட்டும் தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் நாம் காண்கிவறாம் – “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ ஸூர்யா சந்த்₃ர மஸௌ வித்₄ருதௌ திஷ்ட₂த:” முதலான இடங்களில்.-எனவே இந்த கட்டை விரல் அளவுடையவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

பரமாத்மாவின் ஒப்பற்ற ஒளி
4-ஜ்யோதி: த₃ர்சநாத் –
“ஒளி காணப்படுகிறபடியால்”
கட்டை விரல் அளவுடைய புருஷனைப் பற்றிச் சொல்லும் வாக்கியங்களுக்கு இடையே இந்த வாக்யம் உள்ளது –
ந தத்ர ஸூர்யோ பா₄தி ந சந்த்₃ரதாரகம் நேமா வித்₃யுதோ பா₄ந்தி குத: அயமக்₃நி꞉ ।
தமேவ பா₄ந்தமநுபா₄தி ஸர்வம் தஸ்ய பா₄ஸா ஸர்வமித₃ம் விபா₄தி ||

“அந்தப் புருஷனுக்கு முன் ஸூர்யனோ , சந்த்ரனோ , நக்ஷத்ரங்களோ , மின்னலோ , அக்நியோ ஒளிவிடுவதில்லை . அவருடைய ஒளியில் ஒரு பகுதியை அவர் அநுக்ரஹத்தால் அடைந்து தான் இவை ஒளி விடுகின்றன”
இப்படி மிகவும் ஒளி பொருந்திய உலகப் பொருள்களையே இருட்டடிப்பு செய்யும் அளவுக்கு ஒளி வாய்ந்தவராய், அவர் அநுக்ரஹத்தால் ஸூர்யன் முதலானவற்றைப் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா தான் என்று மற்ற உபநிஷத்துக்களில் காணப்படுகிறது.
பரமாத்மா தான் பல இடங்களில் ’பரம் ஜ்யோதிஸ்’ (மிக உயர்ந்த ஜ்யோதிஸ்) என்று அழைக்கப்படுகிறார்.-எனவே , இங்கு கட்டை விரல் அளவுடையவராகச் சொல்லப்பட்டவர் பரமாத்மாவே என்று நிரூபிக்கப்பட்டது.

————–

1-3-10-அர்த்தாந்தரத்வாதி₃ வ்யபதே₃சாதி₄கரணம்-முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா

அதி₄கரணத்தின் பின்புலம்
1.3.10 அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே₃ச அதி₂கரணம் – ஸங்கதி
– கீழ் 1.3.5 தஹராதிகரணத்தில் சாந்தோக்ய உபநிஷத்தின்-8ஆம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட தஹர வித்யை ஆராயப்பட்டது. அதில் எழுந்த கேள்விகளுக்கு விடை யளிக்கத் தான்
6,7,8,9 அதிகரணங்கள் பிறந்தன. அவை முடிந்தபடியால், மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக அதே சாந்தோக்யத்தின் 8ஆம் அத்யாயத்தின் இறுதியான பகுதியை ( 14 கண்டங்கள் இதில் உண்டு -இறுதி இரண்டு கண்டங்கள் இதன் விஷயம் )இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார் வ்யாஸர்.
விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் 8ஆம் அத்யாயத்தின் 14ஆம் கண்டத்திலிருக்கும் முதல் மந்த்ரம்-ஆகாஸோ வை நாம நாமரூபயோர் நிர்வஹிதா தே யத₃ந்தரா தத்₃ப்₃ரஹ்ம தத₃ம்ருதம் ஸ ஆத்மா-ஆகாசம் தான் பெயர்களையும் வடிவங்களையும் நிர்வாஹம் செய்கிறது, அது பெயர்களும் வடிவங்களும் அற்றது,
அதுவே ப்ரஹ்மம் (பெரியது), அதுவே அம்ருதம் (மரணமற்றது), அதுவே ஆத்மா (உள் புகுந்து வ்யாபிக்கக் கூடியது)

ஸந்தேகம் – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவது முக்தி அடைந்த ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?
பூர்வபக்ஷம் – முக்தி அடைந்து, தன் இயற்கையான நிலையில் இருக்கும் ஜீவாத்மா தான் இங்கு சொல்லப்படுகிறார்.
அஶ்வ இவ ரோமாணி விதூ₄ய பாபம் சந்த்₃ர இவ ராஹோ : முகா₂த் ப்ரமுச்ய |
தூ₄த்வா ஸரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்₃ரஹ்ம லோகம் அபி₄ஸம்ப₄வாமி ||

இதுக்கு முன் மந்த்ரத்தில் ’குதிரை ரோமங்களை உதிர்ப்பது போல் பாபங்களை உதிர்த்து, ராஹுவின் முகத்திலிருந்து சந்த்ரன் வெளி யேறுவது போல் உடலிலிருந்து வெளியேறி, நித்யமான ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான்’ என்றுள்ளது.–எனவே , முன் மந்த்ரத்தில் முக்தாத்மாவைப் பற்றி பேசியிருக்கிறபடியால், இந்த மந்த்ரமும் அவரைப் பற்றியது தான்.நாமரூபயோ : நிர்வஹிதா’ (பெயர் உருவங்களை உடையவர்) என்று முக்தி அடைவதற்கு முன் ஜீவாத்மாவின் நிலை சொல்லப்படுகிறது. ’தே யத₃ந்தரா’ (பெயர் உருவங்களுக்கு அப்பாற்பட்டவர்) என்று முக்தி நிலை சொல்லப்படுகிறது.
ஆகாசம்’ என்பது ஜீவாத்மாவே . இடையில் ப்ரஜாபதி வாக்யம் உள்ள படியால் தஹராகாசம் என்கிற பரமாத்மா அல்ல.

ஆ காசம் நன்றாகப் ப்ரகாசிப்பதால் -தல் லிங்காத் -முன்பே பார்த்தோம் -இதுவும் முக்தாத்மாவுக்கும் பொருந்தும் -பிரஜாபதி வாக்கியத்தில் விஷயமும் முக்தாத்மா பற்றியதே -என்பது அவர் வாதம்

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
(1) ஆகாச: அர்தா₂ந்தரத்வாதி₃ வ்யபதே ₃சாத்

ஆகாச: – இங்கு ஆகாசம் என்று சொல்லப்படுபவர் [பரமாத்மா தான்]
அர்தா₂ந்தரத்வாதி₃ – வேறுபடுத்தும் தன்மை முதலானவை
வ்யபதே ₃சாத் – சொல்லப்படுகிறபடியால்
அர்த₂ம் என்றால் பொருள். அர்தா₂ந்தரம் என்றால் வேறு பொருள். அர்தா₂ந்தரத்வம் என்றால் வேறுபாடு. இங்கு அதே சொல் வேறுபாட்டை உணர்த்தும் தன்மைகளைக் குறிக்கிறது. இந்த ஆகாசம் என்ற பொருளை ஜீவாத்மாவிடமிருந்து வேறுபடுத்தும் தன்மை இங்கேயே சொல்லப்பட்டுள்ளது தான் முதல் யுக்தி, இந்த ஆகாசம் பரமாத்மா என்று நிரூபிக்க.
“ஆகாஸோ வை நாம நாமரூபதயா: நிர்வஹிதா” என்று இந்த ஆகாசம் தான் பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்கிறது அதாவது ஆள்கிறது என்று சொல்லப்படுகிறது. ஸம்ஸாரத்தில் இருக்கும் பத்₃த₄ ஜீவாத்மா இந்த பெயர் உருவங்களை உடையவரே தவிற அவற்றை ஆள்பவர் அல்ல. முக்த ஆத்மாவும் இதைப் போன்ற உலகச்
செயல்களைச் செய்வதில்லை என்று உபநிஷத்துக்கள் சொல்வதை ’ஜக₃த்₃ வ்யாபார வர்ஜம்’ என்ற அதிகரணத்தில் காட்டப் போகிறோம். மேலும், பெயர் உருவங்களை ஆள்பவர் பரமாத்மாவே என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன.

“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி” (சாந்தோக்ய உபநிஷத் 6.3.2)
“என் உடலாக இருக்கும் இந்த ஜீவாத்மா மூலம் பொருள்களுள் புகுந்து பெயர் மற்றும் வடிவங்களைப் பிரிப்பேனாக”
“ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ₄ர: நாமாநி க்ருத்வா அபி₄வத₃ந் யதா₃ஸ்தே ” (புருஷ ஸூக்தம்)
“எல்லா உருவங்களையும் செய்த பரமாத்மா பெயர்களையும் செய்து அவற்றை ஓதிக் கொண்டிருகிறார்”
மேலும், ’தே யத₃ந்தரா’ என்று இதற்குப் பொருத்தம் சொல்லப்படுகிறது. பரமாத்மா நாம ரூபங்கள் இல்லாதவர், -அதாவது பாபமற்றவரான படியால் பிறப்புக்கு அப்பாற்பட்டவர். எனவே அவரே இவற்றை ஆள்கிறார் என்று.
’ஆதி₃ வ்யபதே ₃சாத்’ (முதலானவை சொல்லப்படுகிறபடியால்) என்று ’ப்ரஹ்மம்’
, ’அம்ருதம்’, ’ஆத்மா’
என்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. இவையும் இயற்கையில் பரமாத்மாவுக்கே முழுமை யாகப் பொருந்தக் கூடியவை .

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு
கேள்வி –
அச்வ இவ ரோமாணி’ என்ற முன் மந்த்ரத்தில் முக்தாத்மா தானே சொல்லப்படுகிறார்?
பதில் – அல்ல, அங்கும் இறுதியில் ’ப்ரஹ்மத்தின் லோகத்தை அடைகிறான்’ என்றுள்ள படியால், இந்த மந்த்ரமும் முன்னால் தஹராகாசம் என்று சொல்லப்பட்ட பரமாத்மாவைப் பற்றித் தான் சொல்கிறது. உபாஸநம் செய்பவனால் இவ்வாறு அடையப்படுகிறார் பரமாத்மா என்று அவர் பெருமையே சொல்லப்படுகிறது. எனவே அவரே ஆகாசம்.

ஆகாசம்’ என்ற சொல்லும் நமக்கு ’தஹராகாசம்’ என்று இதே அத்யாயத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவையே நினைவூட்டுகிறது. இடையில் ப்ரஜாபதி வாக்யத்தில் ஜீவாத்மா பேசப்பட்டிருந்தாலும், அங்கு ஜீவாத்மாவின் தன்மையைச் சொன்னதும் “இவ்வாறு தன் உண்மைத் தன்மையை உணர்ந்த உபாஸகன் தஹராகாசம் என்கிற பரமாத்மாவைத் த்யானிக்க வேண்டும்” என்று சொல்வதற்கே . எனவே பரமாத்மாவைப் பற்றின பேச்சு முடியவில்லை

கேள்வி – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவே தான் முக்தி அடைந்த பிறகு தூய்மையான நிலையில் இருக்கிறபடியால் பரமாத்மா, பர ப்ரஹ்மம் எனப்படுகிறார். தனியாக பரமாத்மா கிடையாதே ? எனவே முக்தனே தான் இந்த ஆகாசம்.
பதில் – இதற்கு மேல் இரண்டு ஸூத்ரங்களாலே விடை யளிக்கிறார் வேத வ்யாஸர்.
2-ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : பே ₄தே ₃ந – ’வ்யபதே ₃சாத்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்க.
ஸுஷுப்தி உத்க்ராந்த்தயோ : – ஸுஷுப்தி
(ஆழ்ந்த உறக்கம்) மற்றும் உத்க்ராந்தி (மரணம்) ஏற்படும் போது
பே ₄தே ₃ந – [ஜீவாத்மாவைக் காட்டிலும்] வேறுபட்டவராக [பரமாத்மா சொல்லப்படுகிறபடியால்]
ஸுஷுப்தி –(्ப்ராஜ்ஜேந ஆத்மநா ஸம்பரிஷ்வக்த: ந பா₃ஹ்யம் கிஞ்சந
வேத₃ நாந்தரம்)
– “ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையும் வெளிப் பொருள்களையும் அறியாதவனான அறிவிலியான ஜீவாத்மாவை மிக்க அறிவுடையவர் அணைக்கிறார்”. எனவே , அந்த மிக்க அறிவுடையவர் வேறு ஓருவர் தான்.
உத்க்ராந்தி -(ப்ராஜ்ஜேந ஆத்மநா அந்வாரூட₄: உத்ஸர்ஜந் யாதி) – “இந்த ஜீவன் மிக்க அறிவுடை யவரான ஆத்மாவாலே செலுத்தப்பட்டு உடலை விட்டுப் புறப்படுகிறான்”. இங்கும் மிக்க அறிவுடையவர் என்று சொல்லப்படும் பரமாத்மா முக்தி அடையும் ஜீவனைக் காட்டிலும் வேறு என்று தெரிகிறது.

கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே  

3- பத்யாதி₃ சப்₃தத₃ப்₄ய: – “பதி முதலான சப்தங்களாலும்”
பரமாத்மாவைப் பற்றிப் பேசும் இடங்களில் பதி, ஈச்வரன், பாலகன், ஸேது, அம்ருதம், அபயம் முதலான சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், எந்த ஜீவனுக்கும் பொருந்தாது.
(ஸர்வஸ்ய அதி₄பதி: ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்ய ஈசாந: )
“அனைத்துக்கும் தலைவர் (ஸ்வாமீ), அனைத்தையும் தன் வசத்தில் கொண்டவர், அனைத்தையும் இயக்குபவர்”
( ந ஸாது₄நா கர்மணா பூ₄யாந் நோ ஏவ அஸாது₄நா கநீயாந்)
“அவர் நற் செயல்களால் பெருமை அடை வதும் இல்லை , தீய செயல்களால் தாழ்ச்சி அடைவதும் இல்ல, அதாவது பாப புண்யங்களுக்கு அப்பாற்பட்டவர்.”
(ஏஷ ஸேது: வித₄ரண : ஏஷாம் லோகாநாம் அஸம்பே ₄தா₃ய)
“இவர் தான் அணையாக இருந்து உலகங்களைத் தாங்குகிறார், பொருள்களில் தன்மைகள் கலக்காமல் பார்க்கிறார்”
இவ்வாறு வருணிக்கப்படுபவர் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்

(ஸ்வ நிஷ்டா -தானே தமது பெருமையில் நிலை நின்றும் அனைத்தையுமே தாங்குகிறார்)

பாதத்தின் சுருக்கம்
இந்த பாதத்தில் பரமாத்மாவுக்குச் சொல்லப்பட்ட குணங்கணை ஶ்ரீ வேதாந்த தேசிகன் கூறுகிறார் –
(1) விச்வாத்மா
(2) அநந்த பூ₄மா
(3) நியமந த்₄ருதி க்ருத்
(4) முக்த போ₄க்ய ஸ்வபா₄வ:
(5) த₃ஹ்ர ஸ்வாதா₄ர ஸர்வ:
(6) ஹ்ருத₃ய பரிமித அவஸ்த₂யா ஸர்வ யந்தா |
(7) தே ₃வாதீ₃நாம் உபாஸ்ய:
(8) வஸுமுக₂ விபு₃தை ₄: ஸ்வாத்ம பா₄வேந ஸேவ்ய:
(9) சூத்₃ராத்₃ யுபாஸ்த்யனர்ஹ : ப்ரபு₄ ரிஹ பு₃பு₃தே ₄
(10) நாமரூபைக கர்தா ||

(1) உலகத்தை உடலாகக் கொண்டவர்,
(2) எல்லை யற்ற ஆநந்தமே வடிவானவர், (3) அனைத்தையும் தாங்கி இயக்குபவர்,
(4) முக்தர்களால் அநுபவிக்கப்படுபவர்,
(5) மிகச்சிறிய ஆகாசமாக அனைத்தையும் தாங்குபவர்,
(6) ஹ்ருதயத்திலிருந்து இயக்குபவர்,
(7) தேவர்களாலும் உபாஸிக்கப்படுபவர்
(8) வஸு முதலான வர்களாலும்கூட தனக்கு அந்தர்யாமியாக உபாஸிக்கப்படுபவர்,
(9) நான்காம் வர்ணத்தவர்களால் உபாஸிக்கப் படாதவர்,
(10) பெயர் உருவங்களை நிர்வஹிப்பவர் பரமாத்மா
என்று மூன்றாம் பாதத்தில் பத்து அதிகரணங்களால் சொல்லப்பட்டது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்–விரோதிகள் பரிஹரிக்கப் பட்டால் உண்டாகக் கூடிய பலன்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் 

March 28, 2025

ஸ்வாமி அந்தரங்க சிஷ்யர்கள் பலர்
முதலி ஆண்டான் -கூரத் ஆழ்வான்-தண்டும் பவித்ரமும் போல்வார் –
1-கந்தாடை ஆண்டான்-2- -எம்பார்–3-வங்கி புரத்து நம்பி -4- -வடுக நம்பி –5-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஐவரும் பஞ்ச ரத்ன சிஷ்யர் –
வங்கி புரத்து நம்பி -தளிகை பண்ணும் கைங்கர்யம் செய்து அருளியவர் –
இவர் –மணல்கால் நம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த வங்கி புரத்து ஆச்சி திருக் குமாரர் –
இவர் தனியன் –
பாரத்வாஜ குலோத் பூதம் லஷ்மணார்யா பதாஸ்ரயம்
வந்தே வங்கி புராதீசம்   சம்பூர்ணார்யம் க்ருபா நிதிம் –

சிஷ்யர்: சிறியாத்தான்-

——————

உபய விபூதி நிர்வாஹகரான ஸ்ரீ உடையவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பிக்கு ஸாதித்தவை

வ்யாஸோ வா பகவான் பராசர முனி ஸ்ரீ சவ்நகோ வாண்த வா
ஸாஷான் நாரத ஸம்யமீ ஸடரி புர் வாகீஸ்வரோ வா ஸ்வயம்
லோகேஸே புருஷோத்தம பணிபதி ஸேஷோ ஜகச் ஸேஷிண
த்வித்யாக்யோ ஜகதாம் ஹிதாய ஸம்பூத் ராமாநுஜார்யோ முநி-

ஸ்ரீ சைல அத்தங்கி ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம திருகுமாரார் திரு வேங்கட தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ப்ரஸாதித்து அருளிய அவதாரிகை

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் லீலா விபூதி சேதன ஸம்ரக்ஷண அர்த்தமாக -இத்தனை காலம் இவர்களை லீலைக்கு விஷயமாக்கினோமே என்று அநுதபித்து-இனி போகத்துக்கு விஷயமாக்கத் திரு உள்ளம் பற்றி அஜாய மாந-என்கிறபடியே பிறப்பிலியான தான் லீலா விபூதியில் பஹுதா விஜாயதே -என்கிறபடியே பலபிறப்பாய் திருவவதரித்து –ஸாது பரித்ராண -துஷ்ட சிஷண -தர்ம ஸம்ஸ்தாப நாதிகளாலே திருத்தப் பார்க்கிலும் -நெடு நாள் லீலைக்கு கர்மீபவித்து -ப்ரக்ருதியிலே அகப்பட்டு -கர்மா வாஸனையாலே -இத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாய் -ஹேயத்வம் தோற்றாமே -எடுக்க வந்தவனுடன் எதிர் அம்பு கோத்து -த்வம் மே அஹம் மே -என்று நீங்கிப் போனபடியைக் கண்டு –
இனி ஸஜாதீயரைக் கொண்டு திருத்துவோம் என்று ஆழ்வார் ஆச்சார்யர்களாக அவதரிப்பித்து -ஞான உபதேச த்வாரா திருத்துவோம் என்று அவதரிப்பித்த ஆழ்வார் ஆச்சார்யர்களாலும் பலிக்கக் காணாமையாலே அதற்க்கு என்று ஒரு மஹாநுபாவன் அவதரித்து ஈஸ்வரன் குறையைத் தீர்க்க வேண்டும் –கலியுகம் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லி வைத்து –இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் என்று இவ் வுலகை விட்டு தன்னுடைச் ஜோதிக்கு எழுந்து அருளினார்கள்-

இனி ஏது செய்வோம் என்று -இதுக்குத் தக்க மஹாநுபாவன் யார் என்று யோசித்து-லீலா விபூதி ஜன துர்கதியையும் -எனது மனக்குறையையும் தீர்க்கவல்ல ஸாமர்த்யம் உமக்கே உள்ளது என்று –ப்ரஹ்ம வாதிநோ வதந்தி -இத்யாதிப்படியே –ஆ முதல்வன் இவன் என்று உம்மையே சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள் -ஆகையால் நீரே அவதரித்து குறையைத் தீர்த்து வாரும் என்று தமக்கு அபிமதரான திருவநந்த ஆழ்வானை நியமிக்க
அவரும் இடையே இராமானுச முநி யாயின இந்நிலத்தே -என்கிறபடியே இராமானுச முனியாய் இவ்வுலகத்தில் திருவவதரித்து வாழும் காலத்திலே பெரியபெருமாள் தம் கோயிலேற வரவழைத்து -தீர்த்த ப்ரஸாத பஹுமாநங்களைச் செய்து -துயரரு திருவடிகளைத் திரு முடியில் வைத்து உம்மை அவதரிப்பித்த கார்யமான சேதன சமஷணத்தைப் பண்ண ஸகல ஆத்மாக்களை கரையேற்றி நம் கோயிலிலேயே நித்ய வாஸம் பண்ணக் கடவீர் என்று
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்குத் தந்தோம் இனி நீரே உடையவர் என்று பட்டம் கட்டி நியமித்து அருள -அன்று முதல் ஸகல சேதன சம்ரஷன தீஷிதராய் வாழும் காலத்திலே

கடலளவாய திசை எட்டினுள்ளும் கலியிருளே மிடை தரு காலத்து -என்று கலி தோஷத்தால் ஜனங்கள் படும் துயரத்தைக் கண்டு
செரு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் ராமானுஜன்-என்கிறபடியே தம்முடைய திவ்ய ஞானத்தாலே இவர்களுடைய அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படிக்குத் திரு உள்ளம் பற்றி அகில ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தோடே பெரிய பெருமாளைத் திருவடி தொழுது அப்போது ஒரு சிந்தை செய்து அவ்வுகப்போடு திருமடத்துக்கு எழுந்து அருளி கோஷ்டியாக எழுந்து இருக்கும் காலத்தில்

அப்போது மத்யே ஸ்ரீ வங்கி புரத்து நம்பி எழுந்தருளி தாளும் தடக்கையம் கூப்பித் திருவடிகளிலே விழுந்து கிடக்க
நம்பீ இது என்ன -என்று உடையவர் கேட்க
அப்பொழுது எழுந்திருந்து இக்கொடு உலகத்தில் அநாதி கர்ம வாஸனையாலே இக்கலியிலே தேவரீர் நியமித்த ஸ்வரூபத்துக்கு விரோதிகளான பலவற்றிலும் அகப்பட்டு கட்டுண்டு உழல்கிற தாஸ வர்க்கங்களுக்கு
ஸ்வரூப விரோதிகள் இன்னது என்றும்
தத் பரிஹாரங்களும்
ஸ்வரூபம் வார்த்திக்கும் கிரமமும்
விசதமாக அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய

உகப்பின் மிகுதியாலே அஃகோக்ஷ்டியில் உள்ளார் எல்லாரும் அறிந்து கொள்ளும் படி வங்கி புரத்து நம்பியை முன்னிட்டு அருளிச் செய்த விரோதி பரிக்ரஹம் என்ற இவ் வர்த்தத்தை
முமுஷுவாய் -பஞ்ச ஸம்ஸ்காராதி ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமுடையவனான ஒருவனுக்கு அவஸ்யம் தெரிந்து கொண்டு அனுஷ்ட்டிக்க வேண்டியதாய் இருக்கும்
அவை எவை என்னில்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி

(ஞானம் இச்சை பிரயத்தனம் -மூன்று தசைகள் உண்டே
ஆகவே பிரித்து விரோதிகளை அருளிச் செய்கிறார்)
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
10-பிரபத்தி நிஷ்டனுக்கு கர்மாத் யுபாயங்கள் விரோதி-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு தேவதாந்திர பஜனம் விரோதி-(கைங்கர்யத்துக்கு பூர்வ பாவி பக்தி ருசி வேண்டுமே -இதுக்கு தேவதாந்த்ர பக்தியே விரோதி என்றவாறு)
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
17-உபாய விரோதி –
18-உபேய விரோதி –
19-உபேய த்ரி விரோதி-(மூன்று விரோதிகள்)
20-முக்ய பிரமாண விரோதி

21-யாவதாத்மபாவி விரோதி
21-நித்ய விரோதி
23-அநித்திய விரோதி
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
25-பர ஸ்வரூப விரோதி –
26-ஸ்வ அனுபவ விரோதி –
27-பர அனுபவ விரோதி –
28-சம்ச்லேஷ விரோதி
29-விஸ்லேஷ விரோதி
30-விஷய விரோதி –

31-விஸ்வாச விரோதி –
32-பிரவ்ருத்தி விரோதி –
33-நிவ்ருத்தி விரோதி –
34-சயன விரோதி –
35-உத்தான விரோதி –
36-கதி விரோதி –
37-ஸ்திதி விரோதி –
38-ஆவஸ்யக விரோதி
39-சரீர சுத்தி விரோதி –
40-ஸ்நான விரோதி –

41-அனுஷ்டான விரோதி
42-லஷண விரோதி –
43-ஸ்மரண விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
45-ஸ்ரவண விரோதி
46-ஸேவா விரோதி –
47-சமாராதன விரோதி-(சம்யக் ஆராதனை -நல்ல பகவத் பாகவாத ஆச்சார்ய ஆராதனை)
48-வந்தன விரோதி
49-அஞ்சலி விரோதி(வந்தனம் த்ரிவித-கரணங்களால் -அஞ்சலி -கைகூப்புதல்-
50-கால ஷேப விரோதி

51-ஆர்ஜன விரோதி
52-க்ருஹ விரோதி –
53-ஷேத்திர விரோதி
54-போஜன விரோதி –
55-போஜ்ய விரோதி-
56-தீர்த்த விரோதி –
57-பிரசாத விரோதி –
58-உக்தி விரோதி-
59-சங்க விரோதி
60-சம்பந்த விரோதி

61-சிநேக விரோதி
62-பக்தி விரோதி –
63-தாஸ்ய விரோதி –
64-சக்ய விரோதி-(ஸ்நேஹம் அன்பன் சக்யம் நண்பன்)
65-சமர்ப்பண விரோதி-
66-தர்சன விரோதி –
67-ஆஸ்ரம விரோதி
68-ஜாதி விரோதி
69-ஆப்த விரோதி
70-அநாப்த விரோதி

71-சித்தாந்த விரோதி
72-தத்வ விரோதி
73-பும்ஸ்த்வ தப விரோதி –
74-அந்திம தசா விரோதி
75-அவிஸ்வாச விரோதி
76-சங்க விரோதி –
77-சந்தான விரோதி –
78-வர்ண விரோதி
79- ஜப விரோதி –
80-ஆராதன விரோதி

81-பதித்வ விரோதி –
82-வர்ஜ நீய விரோதி
83-அவர்ஜ நீய விரோதி

—————————————————————————————————————————————–

இவற்றுக்கு ஸ்ரீ வங்கி புரத்து நம்பி அருளிச் செய்த வ்யாக்யானம்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
ஸ்வ தேகமும் -தேக அநு பந்திக்களுமான பித்ரு மாத்ரு தனம் ஸ்திரீ பான புத்ர மித்ர களத்ராதிகள்–என்கை(ஸ்வர்க்கமும் லீலா விபூதிக்குள்ளே தான் இருக்கும் -இது ஆமுஷ்மிக போகம் -இங்கு சம்சாரம் -ஐஹிக போகம்)

1-சம்சார சங்கம் அறவே ஸ்வர்க்கம் லபிக்கும்

2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி-ஸ்வர்க்க ஸூக அபேக்ஷை யுடையவனுக்கு
இவ் வுலகத்தில் உள்ள கீழ்ச் சொன்ன பதார்த்தங்களுடைய அனுபவ இச்சை -என்கை

2- ஐஹிக போகத்தில் நசை அறவே ஸ்வர்க்க இச்சை பிறக்கும்


3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
கைவல்யானுபவத்துக்கு ஸ்வர்க்கத்தில் ஆசை விரோதி
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி(கர்மம் தொலைய வேண்டுமே கைவல்யார்த்திக்கும் -ஜனனம் மரணம் இவை அவனுக்கு கிடையாதே -இதுக்கும் பகவத் திருவடிகளே உபாயம் -கதி த்ரயத்துக்கும் அவனே உபாயம்-சுத்த ஆத்ம ஸ்வரூபம் -கைவல்யனுக்கு -அசித் மிஸ்ர சேதனன் போல் அல்லவா -சரீரம் கழித்த சேதனன் இவன்)
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி-ஸ்வரூப ரூப குண விபூதி யுக்த ப்ராப்த ஸேஷியான பரமாத்ம அனுபவத்துக்கு
அணுவாய் சேஷமாய் இருந்துள்ள ஸ்வ ஆத்ம அனுபவம் விரோதி என்கை
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி-ப்ராப்த பகவத் அனுபவ அபேஷாவானுக்கு-அப்ராப்த ஸ்வ ஆத்ம அனுபவ அபேக்ஷை பிறப்பது விரோதி தானே – அது பள்ளமடை -இது அல்பமாயும் மேட்டு மடையாக இருக்கும்-ஞான தசை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் -இயற்கையான தாஸ்யம் -ஸ்வத ஸித்தம் -அந்தமும் ஆதியும் இல்லாதது என்று அறிந்து-அதை அடைய இச்சை -இரண்டாம் தசை
மேல் அடைய முயற்சி யத்ன தசை இவ்வாறு மூன்றும் உண்டே -மூன்றுமே ப்ராப்ய வகுத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி-குணி -ஸ்வரூபம்-ஸஹ ஸ்ருதி –குணங்களை அவன் கூட இருந்தே அனுபவிக்கிறான் –
பரமம் ஸாம்ய உபைதி -ஸாம்ய சுருதி -ஆனந்தத்தில் ஸாம்யம் உண்டே
சாதர்ம்ய ஸ்ருதி -ஸாலோகம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் -அடைகிறோம்
இம் மூன்றும் விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு -அசாதாரணம் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண  விபச்சிதா  -இத் யுக்த பகவத் கல்யாண குண அனுபவத்துக்கு -ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான் -ஸ்வரூப அனுபவம் -திவ்யாத்ம ஸ்வரூப அனுபவம் விரோதி
நெஞ்சால் நினைப்பரிதால் –வெண்ணெய் யூண் என்னும் ஈரச் சொல்லே -திரு விருத்தம் -98-
எத்திறம் உரலோனோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய் -1-3-1-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது -பெரிய திருவந்தாதி -86-ஸ்வரூபம் நினைத்து போக்க முடியாதே -சீர் கலந்த சொல்லாலே போக்கலாம்

நின் புகழில் வைகும் சிந்தியினிலும் மற்று இனிதோ நீ அவருக்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் நைகும் –உன் குணங்களை எண்ணியே -உடையவர் கல்யாண குண அனுசந்தானமே ஸ்ரேஷ்டம்
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி –காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் என்னப் பண்ணும் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான-பகவத் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்த்ர்யம் விரோதி-த்ரஷ்டத்வம் வந வாஸாயா -சுமத்ரா தேவி -அவன் நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்ய நிஷ்டையிலே இருக்க வேண்டும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –அனைத்துமே அசேதனம் இப் பாசுரத்தில் –

3- ஸ்வர்க்க அனுபவ இச்சை அறவே ஆத்ம ப்ராப்தி உண்டாம்
4-ஸ்வர்க்கத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே ஆத்ம அனுபவம் உண்டாம்
5-ஆத்ம அனுபவத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே பகவத் அனுபவம் சித்திக்கும்
6-ஸ்வ அனுபவத்தில் ஆசை அறவே பர அனுபவ ப்ரேமம் விளையும்
7-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சு நீங்கவே குண அனுபவ நிஷ்டை வர்த்திக்கும்

8-பகவத் சௌந்தர்யத்தில் கண்ணை மாற வைத்தால் கைங்கர்யம் வர்த்திக்கும்

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே –நறு மா விரை நாண் மலரடிக் கீழ்ப் புகுதல் உறுமோ –திருவாய் -8-10-3
ததா நர்ச்சிதஸ் சத் பக்தம் பகவான் நாபி நந்ததி –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க் கடிமை கண்ணபுரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் -நான் முகன் -18
சத்ருனோ நித்ய சத்ருக்ன –கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத 
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

9-பகவத் கைங்கர்யத்தில் ருசி அறவே பாகவத கைங்கர்யம் வர்த்திக்கும்

10-பிரபத்தி நிஷ்டனுக்கு-பிரபத்தி ஸப்த வாஸ்ய ஸித்த சாதன பூத ஸர்வேஸ்வரனே உபாயம் என்று பற்றினவனுக்கு- கர்மாத் யுபாயங்கள் விரோதி-

பிரபத்தி என்கிற வாசகத்துக்கு வாஸ்ய ஸித்த ஸாதனான ஸர்வேஸ்வரன்
உபாயாந்தரங்களைப் பற்றியவனுக்கு இரக்கத்தாலும்
பிரபன்னனுக்கு ஆனந்தப்பட்டு வசீகரப்பட்டது அருளுவான்

10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்த நா மதி –
சாஸ்திர ரூபமான பகவத் ஆஜ்ஞ்ஞைப் படி அவனுக்கு  செய்யும் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-பகவத் முக மலர்த்தியே பிரயோஜனமாக கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்
சரீர பூதர்கள் தேவதாந்த்ரர்கள் -தேவதாந்த்ர முக மலர்த்திக்காகச் செய்தவை விரோதியாகும் –ஸர்வ ஸப்த வாஸ்யன் -ஸர்வ அந்தர்யாமி -எண்ணத்துடன் செய்ய வேண்டுமே –
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு -பதிம் விஸ்வஸ்ய இத்யாதிப்படியே-தேவதாந்திர பஜனம் விரோதி

10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-துஷ்கரத்வ க்ருதி சாத்யத்வ விளம்ப்ய பல ப்ரதத்வ ஹேதுக்களைத் தெரிந்து உபாயாந்தரங்கள் த்யாஜ்யம் என்று விடவே பிரபத் யுபாய நிஷ்டை சித்திக்கும்
12-அக்நி இந்த்ராதி தேவதாந்தர உத்தேச்யத்வேன செய்யும் கிரிசைகளில் நசை அறவே பகவத் விஷய கர்ம நிஷ்டை பிறக்கும்
13-தேவதாந்திர சேவா த்யாஜ்யத்வ ஜ்ஞானம் பிறக்கவே ஸ்வரூப ப்ராப்த பகவத் கைங்கர்ய நிஷ்டை ஜனிக்கும்

கீழ் கர்மங்கள்-இங்கு கைங்கர்யங்கள்-தனக்குத் தானே பதி -ஸர்வ லோகத்துக்கும் பதி -ப்ராப்த சேஷி கீழ் ஸர்வ அந்தர்யாமி எண்ணத்துடன் ஹித கர்மாக்களை செய்பவற்றைச் சொல்லிற்று
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
பண்ணின பிரபத்தியும் உபாயம் ஆகாதே-உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே எம்பெருமானையே உபாய உபேயமாகப் பற்றின உத்தம அதிகாரிக்கு உபாயாந்தர நிஷ்டனான மத்யம அதிகாரியைப் போலவே உபாயத்வேன உத்தேசித்துப் பண்ணின ப்ரபத்தியும் விரோதி யாகுமே-இசைவித்து என்னை உனது தாளிணைக் கீழ் இருத்தினாய்-பல பிரபத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை பெற என்ற எண்ணம் -அதிகாரி விசேஷம்
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி-சேதன ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபம் பெற வேண்டிய-உபாயாந்தரங்களுக்கு- ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விரோதி என்கை-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோஸித்து -தியானித்து -காண்பது –
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்றிலேன் –
செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யன் -வாழும் சோம்பர்
17-உபாய விரோதி –உபாயாந்தரங்கள் உடன் ஒக்க எம்பெருமானை நினைக்கையும்
நம்முடைய இசைவு கொண்டு அன்றோ உபாயமாயிற்று என்று நினைக்கையும் -இது இல்லாத போது ஸர்வ முக்தி ப்ரஸங்கம் பிறக்கும் என்கையும் -இது அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் என்று இராமையும் -இது தானும் அவன் இட்ட வழக்காய் இருக்கும் என்று அறியாமையும் -என்கை-அசித்து போலே அவன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்

14-தான் பண்ணும் பிரபத்தியில் உபாய புத்தி அறவே ஈஸ்வரன் இடத்தில் உபாய புத்தி பிறக்கும்
15 -சாஸ்திர சித்தி அனுஷ்டானத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகவே சாதநாந்தரம் கை கூடும்
16-ஸ்வ உஜ்ஜீவன விஷயக ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யம் அறவே சித்த உபாயம் லபிக்கும்
17-உபாய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபாயத்வம் நிலை நிற்கும்

(உபாயம் என்றாலே பிரபத்தி -பகவான் என்பதையே குறிக்கும் நம் ஸம்ப்ரதாயத்தில் – பலத்துக்கு சத்ருச உபாயம் இவனே -உபாயாந்தரங்கள் அசேதன கிரியா கிலேசங்கள் இவனுக்கு கிட்டே கூட ஸமமாகாதே –
இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் இவன் தானே -என்னையும் என்னுடைமையும் சமர்ப்பித்தேன் அதுவும் அவனது இன்னருளே –
கர்மம் அடியாக சம்சாரத்தில் அழுந்தி இருக்க -கிருபை யடியால் விடுபட்டு பேறு அடைகிறோம் -மாறாடி நினைத்தால் அவத்யமே விளையும் –
இசையாத அன்றும் விடாதவன் -இசைந்த அன்று பேறு அளிப்பான் சொல்லவும் வேண்டாமே –
இசைவு இல்லாவிடில் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரும் என்றும் நினைத்து இசைந்ததால் பேறு என்றும் நினைக்கக் கூடாதே –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஸம்ஹாரமும் லீலா கார்யமே -இன்புறும் இவ் விளையாட்டுடையான் -லோக வத்து லீலா கைவல்யம் -)

18-உபேய விரோதி -பகவத் உபாயனாய் -அந்ய பலனாகையும்-அந்ய உபாயனாய் பகவத் பலனாகையும்-கர்த்தாவாய் கைங்கர்யம் பண்ணுகையும் -அகர்த்தா என்று கைங்கர்யத்தை அநாதரிக்கையும்-போக்தாவாய் ரசிக்கையும்-போக்யம் என்று வந்து அவன் முக மலர்த்தி கண்டு ரசியாமையும் –-விரோதி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
படியாய் கிடந்து   உன் பவள வாய் காண்பேனே
கதா பிரகர்ஷயிஷ்யாமி

என்னை ஆக்கி தன்னைத் தந்த கற்பகமாய் இருக்க-அவன் முக மலர்த்தி ஒன்றே பிரயோஜனமாகக் கைங்கர்யம் பண்ண வேண்டும் அன்றோ -மற்றை நம் காமங்கள் மாற்று -செய்வார்களைச் செய்வானும் யானே என்னும்-செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -இத்யாதி –

நாம் கர்த்தா அல்ல -கருவியாக என்னைக் கொண்டு செய்விக்கிறான் -சேஷத்வ போக்த்ருத்வம் போல் அன்றி பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -எதிர் விழி கொடுத்து பாரதந்தர்யம் வேண்டும்

18-உபேய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபேயத்வம் நிலை நிற்கும்

19-உபேய த்ரி விரோதி
ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே –
1-பலாகாங்ஷையும் -2-திருஷ்ட பிரயோஜன அபேஷையும் -3-அத்ருஷ்ட  தேவதாந்திர அபேஷையும் –
1-பகவத் பிராப்தியை அபேஷியாது ஒழிகையும்
2-பாகவத கைங்கர்யத்தில் அபரத்வ புத்தியும்
3-ஆச்சார்ய கைங்கர்யத்தில் பர்யாப்தியும்  –

திருஷ்ட பிரயோஜன அபேஷை-திருவடி பாவோ நான்யத்ர பஸ்யதி -அமுதினைக் -பெருமாளைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே-முயல்கிறேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே -முயலத் தானே முடியும் -சத்ருஸமான பிரதியுபகாரம் செய்ய முடியாதே -இரண்டு ப்ராஹ்மும் நான்கு விபூதிகளும் வேண்டும் அன்றோ-

19-உபேயத்ரி விரோதியை பரிஹரிக்கவே அநந்த ஸ்திரத்வ பரம போக்யத்வ ரூபமான உபேய ஆகார த்ரய பிரகாசம் நிலை நிற்கும்

20-முக்ய பிரமாண விரோதி
நிர்த் தோஷ ஜ்ஞான ஜனகமான வேதாந்தத்தை  பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
அத்தை இதர பிரமாணங்களோடு ஒக்க நினைக்கையும்
மாஸூச வார்த்தையை விஸ்வசியாது ஒழிகையும்
அருளிச் செயல்களே முக்ய பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
பூர்வாச்சார்யர்கள் வாதங்களில் அவிஸ்வாசமும்-

உண்மை அறிவுக்குக் கருவியே பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்-ஊற்றமுடையாய் -பெரியாய் -வேத ஸாரம் -மாயன் அன்று ஓதிய மெய்மைப் பெரு வார்த்தை–சரம ஸ்லோகம் -அதுக்கும் மேல் அருளிச் செயல்கள் -அதுக்கும் மேல் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-தெளியாத மறைப்பொருள்கள் தெளியப் பெற்றோம்-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-

20-முக்ய ப்ரமாண விரோதியைப் பரிஹரிக்கவே ப்ரமாணிகத்வம் நிலை நிற்கும்-

21-யாவதாத்மபாவி விரோதி
தேஹேந்த்ரியங்களில் ஆத்ம புத்தி பண்ணுகையும்-ஸ்வா தந்த்ர்ய புத்தி பண்ணுகையும் –
ஈஸ்வரனை அபூர்ணன் என்று இருக்கையும்
ப்ரம்மா ருத்ராதிகளை ஈஸ்வரராக நினைக்கையும்
எம்பெருமானை ஒழிந்தவர்களை ரஷகர்  என்று இருக்கையும்
நிலை நின்ற பாகவத அபசாரமும்   ஆச்சார்ய அபசாரமும்
ஈசான சீல நாராயண ஏவ -சங்கரர் திரு வாக்கு
நாராயண பர ப்ரஹ்ம -உபநிஷத்
பாகவத அபசாரம் செய்தோரை -ஷிபாமி ந ஷமாமி வஸூந்தரே
இராமானுச உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆள்படுத்தே-107-

ஈஸ்வரை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் என்றும் பிரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம் -காக்கும் இயலபினன் கண்ணபிரான் -சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பான்

21-யாவதாத்ம விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம ஸ்வபாவம் நிலை நிற்கும்

21-நித்ய விரோதி
இந்த்ரியங்கள் விரோதி அன்று என்று இருக்கையும்
இந்த்ரிய கிங்கரனாய் அவற்றுக்கு இறை தேடிக் கொடுக்கையும்
ஞானச் செருக்காலே இந்த்ரியங்களுக்கு அஞ்சாது ஒழிகையும்
பாகவத் கைங்கர்யத்தில் அந்வயியாதே கேவல பகவத் -பாகவத் சௌந்தர்யத்திலே  மக்னனாய் இருக்கையும்

ஸூஷ்ம இந்திரியங்கள் விடாமல் தொற்றிக் கொண்டே எடுக்கப் போகும் ஜென்மங்கள் தோறும் வருவதால் நித்ய விரோதி தானே இவை-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழன்று-இந்திரிய பய க்ரோசம் -அஞ்சினேன் -இந்திரியங்கள் கொண்டு பகவத் பாகவத ஆராதனம் செய்யாமல் இவற்றுக்கே தீனி போட்டு உழன்று-கீதை -2-51 தொடங்கி நான்கு ஸ்லோகங்கள் -யஜமான ஸம்ஹிதை -இத்யாதி -யோக ஆரம்ப விரோதிகள் -மாய வல் ஐம் புலன்கள் ஆமவை நன்கு அறிந்தேன்-விண்ணுளார் -பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் —

அநக –நித்ய சத்ருக்ந –நீக்கமில்லா அடியாரான லஷ்மணன் -சயமே அடிமை தலை நின்ற பரதன் -கோதில் அடியார் இவர் ஒருவரே

22-நித்ய விரோதியைப் பரிஹரிக்கவே இதர விஷய விரக்தி நிலை நிற்கும்

23-அநித்திய விரோதி
சுக துக்கங்கள் -தேகாத்ம பிரமத்தால் சந்தநாதிகளைக் கொண்டு சுகிக்க நினைக்கையும்
விஷ சஸ்த்ராதிகளை கண்டு வெருண்டு துக்கிக்கையும்
ப்ராக்ருத பதார்த்த லாபத்தாலே சந்தோஷிக்கையும்
அலாபத்திலே விஷண்ணனாகையும்

இவை எல்லாமே தாற்காலிக சுக துக்கங்கள் -அல்பம் அஸ்திரம் -என்று உணர வேண்டுமே

23-அநித்ய விரோதியைப் பரிஹரிக்கவே நித்ய ஸூகம் நிலை நிற்கும்

24-ஸ்வ ஸ்வரூப விரோதி
ஜ்ஞான அனுதய
அந்யதா ஜ்ஞான
விபரீத ஜ்ஞானங்களும்
போக தசையில் அவன் அழிக்கும் இடத்து சேஷத்வத்தையே நோக்கி பிற்காலிக்கையும்
பார தந்த்ர்யத்தை நோக்கி பர அதிசய கர ப்ரவ்ருத்தி அறுக்கையும்
ஆச்சார்ய பார தந்த்ர்யத்தில் அப்ரதான புத்தியும்-

அறிந்து அறிந்து தேறித் தேறி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை-முமுஷுப்படி –சூரணை -92
அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே-போக்தாவான ஈஸ்வரன்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி- அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி – இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது – நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

24-ஸ்வரூப விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தின் பகவத் போக அனுரூபம் நிலை நிற்கும்

25-பர ஸ்வரூப (அனுபவ) விரோதி –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியான பிரகிருதி வச்யனாகையும் –
பிராக்ருதர் பக்கல் பரத்வ புத்தியும் -நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –
பராவரர்கள் பகவத் பரதந்த்ரர் என்று அறியாமையும்
சௌலப்யம் கொண்டு பரத்வத்தில் அதி சங்கை பண்ணுகையும்
பகவத் ஸ்வரூப ரூப விஷயத்தில் அஜ்ஞ்ஞாத அந்யதா ஜ்ஞானங்களும்  -என்கை

இச்சா கிருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் உணர வேண்டுமே
நாட்டினான் -தெய்வங்களாக -அருளினால்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்

25-பர ஸ்வரூப விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறக்கும்

26-ஸ்வ அனுபவ விரோதி –
தேக வாசனையும் -தேக அனுபந்தி வாசனையும் -வாசனா கார்யமான தேகாதிகளில் ருசியும்

கைவல்ய அனுபவ விரோதிகளைக் காட்டி அருளுகிறார் -வாசநா – மனப் பதிவு =ருசி -இரண்டையும் விட வேண்டுமே

26-ஸ்வ அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ ரஸத்வ ராஹித்யம் நிலை நிற்கும்

27-பர அனுபவ விரோதி –
ஸ்வ இச்சா பிரவ்ருத்தியும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
ஈஸ்வரனுடைய குணங்களைக் கேட்டால் அசூயையும்
இதர குணங்களைக் கேட்டால் தெளிகையும்
பரத்வம் கண்டு வெருவுகையும்-அவனை நாம் தேவர் என்று அஞ்சினோம்-

கீழ் பர ஸ்வரூப அனுபவம்-இங்கு பர ரூப குண விபூதிகள் அனுபவம்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34

27-பர அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ அதீன ப்ரவ்ருத்தி ராஹித்யம் நிலை நிற்கும்

28-சம்ஸ்லேஷ விரோதி
எம்பெருமானுடைய ஈஸ்வரத்வத்தைக் கண்டு வெருகையும்
ஸ்வ பாவத்தைக் கண்டு தரிக்கை யன்றிக்கே ஸ்வ நைச்சியத்தை அனுசந்திக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் கிட்டுகையும் -துர்லபம் என்று பிற்காலிக்கையும் –என்கை

தேவாதி ராஜனே ஆ மருவி அப்பன் என்றும் உணர்ந்து அநுபவித்தாரே கலியன்

அன்னையும் நோக்கும் என்றும் அஞ்சுகிறேன் அச்சோ ஒருவர் அழகிய வா
அவளும் நின் திரு ஆகத்தில் இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்

28-சம்ஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி ஸூலபத்வம் நிலை நிற்கும்

29-விஸ்லேஷ விரோதி
பக்தி வஸ்யமற்றும் பொறுத்து ஆறி இருக்கையும்
போதயந்த பரஸ்பரம் பண்ணிப் பாடாற்றும் உசாத் துணை அறுகையும் -என்கை

துக்க அனுபவத்துக்கு மூலம் இவை -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -துக்க ஹேதுவாகுமே -பரவசம் -பரனான அவனுக்கு வசப்பட்டு துடிக்க வேண்டும் அன்றோ –

மச்-சித்த மத்-கத-ப்ராண போதயந்தঃ பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச-10-9-திருநெடும் தாண்டகம் -மூன்று பத்துக்களும் இவ் வகை –

ஈறும் வேம் ஈரியாய் உலர்த்த -சித்தம் சித்தாய் நின்னிடையேன் -அல்லேன் என்று நீங்க-உடல் ஆத்ம தர்மம் கொள்ள-உடலும் நீராய் அலைந்து உருக -முடியானேயில் கரணங்கள் அவையாக -ஓன்று மற்ற ஒன்றின் செயலில் விரும்ப-உள்ளதெல்லாம் தான் விரும்ப-காற்றும் கழியும் கட்டி அழ -கொண்ட பெரும் காதலுக்கு பக்தி நூல் வரம்பில்லையே-

கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகும் தூங்க -கதிரவன் -தேரும் போயிற்று -திசைகளும் மறைந்தன -செய்வது ஒன்றுமே அறியேனே –
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-
ஆழ்வார் அருளிச் செயல்களால் பக்தி வளரும் -ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் -வேதாந்தம் ஞானம் வளர்க்கும்

29-விஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் சம்ஸ்லேஷ விளம்பத்வம் நிலை நிற்கும்

30-(பகவத்) விஷய விரோதி –
பகவத் வ்யதிரிக்த விஷயமங்களிலே பிரவணன் ஆகையும்
பாகவத நாமங்களை கேளாதே கேவல பகவன் நாமங்களைக் கேட்கையும்
பகவத் விக்ரஹத்தை பாராது இதர சரீரங்களைப் பார்க்கையும்
பாகவத சமூகத்தைக் காணாதே கேவலம் பகவத் விக்ரஹத்தைக் காண்கையும்
பகவன் நாம உச்சாரணம் பண்ணாதே இதர நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் ஷேத்ரங்களுக்கு போகாமல் இதர இடங்களுக்கு போகையும்
ததீயரை ஒழிந்த இதரரை ஸ்பர்சிக்கவும்
பாகவத உச்சாராணம் பண்ணாதே கேவல பகவன் நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் பாத துளசி கந்த க்ராணம் பண்ணாதே கேவல துளசி க்ராணம் பண்ணுகையும் என்கை-

காதுக்கும் கண்ணுக்கும் வாயுக்கும் காலுக்கும் —கேளாச் செவிகள் செவி அல்ல-நாவகாரியம் -நாவுக்கு அகாரியம் -சதுரா சதுர் அக்ஷரீ -நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-போந்தாரை போந்து எண்ணிக் கொள்-ஊரைச் சொன்னாய் பேரைச் சொன்னாய் அடியார் ஒதுங்கி நிழல் தந்தாய் -அஞ்ஞான ஸூஹ்ருதம்-கந்தம் கமழும் குழலி -அங்கும் பஞ்ச இந்திரியங்கள் விஷயம்-

30-விஷய விரோதியை பரிஹரிக்கவே இந்த்ரிய ஜெயம் நிலை நிற்கும்-

31-விஸ்வாச விரோதி –
உபாய லகுத்வ பிரதிபத்தியும்- உபேய கௌரவ பிரதிபத்தியும்
விரோதி பாஹூல்ய பிரதிபத்தியும்
சரம உபாயத்தில் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதில் அவிச்வாசமும் –என்கை –

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
இணை திருவடிகள் -ஒன்றே ஒன்றுக்கு ஸத்ருசம்

31-விசுவாச விரோதியைப் பரிஹரிக்கவே சாமத்யவசாயம் நிலை நிற்கும்

32-பிரவ்ருத்தி விரோதி –
பகவத் கைங்கர்யத்தை கர்த்தவ்யதா புத்தி இல்லாதே விதிப் பொருளுக்கு பயப்பட்டு பண்ணுகையும்
ராக ப்ரேரிதனாய்ப் பண்ணாது ஒழிகையும்
பாரதந்த்ர்யத்தை நோக்கிப் பதற்ற மறுகையும்
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தியும் -என்கை-

உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன்-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாய்-பாட்டினால் என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே-கர்மங்கள் கைங்கர்யத்தில் புகும் –புருஷோத்தமன் -புஷ்ப்ப கைங்கர்யம் -தலையால் ஸ்வீ கரித்து அருளுகிறவன் -குறும்பு அறுத்த நம்பி விருத்தாந்தம்

32-ப்ரவ்ருத்தி விரோதியைப் பரிஹரிக்கவே பர பிரயோஜன  பிரவ்ருதித்வம் நிலை நிற்கும்

33-நிவ்ருத்தி விரோதி –
இதர கர்ம த்யாக பூர்வகமான எம்பெருமானை பற்றி இருக்கச் செய்தேயும்
த்யாகத்தில் பாபம் வரில் செய்வது என்-என்று அநுசங்கிக்கையும்
மடங்கி அனுஷ்டிக்கையும்
அசக்தியால் விடுகையும் –
ஸ்வ சக்தியால் விடுகையும்
விட்டோம் என்னும் பிரதிபத்தி விடாமையும்
த்யாக அந்வயமும்–என்கை-

அப்ராப்தி -ஸ்வரூப ஹானி என்றே விட வேண்டும்-விடுவித்துப் பற்றச் செய்த அவனே உபாயம்-உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விட வேண்டும் -விடுகையில் அந்வயம் கூடாது -ஞானம் முக்கியம்-

33-நிவ்ருத்தி விரோதியை பரிஹரிக்கவே தத் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி நிலை நிற்கும்

34-சயன விரோதி –
சம்சாரிகள் க்ருஹங்களில் சயநிக்கையும்
அவர்களுடன் சயிக்கையும்
அவர்கள் படுக்கையில் சயநிக்கையும்
அவர்கள் காற் கடையில் சயநிக்கையும்
அவர்களுக்கு கீழாக சயநிக்கையும்
அவர்களுக்கு தான் சயனிக்க இடம் கொடுக்கையும்
அவர்கள் சயனிக்கும் இடத்தை சுத்தி பண்ணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ பவனன்களிலே சயநியாமையும்
அவர்களுடன் சம ப்ரதிபத்தியாய் சயநிக்கையும்
அவர்கள் திருப் படுக்கையில் மதியாமல் சயநிக்கையும்
அவர்கள் ஸ்ரீ பாத பிரதேசத்தில் சயனிக்க கூசுகையும்
அவர்கள் கீழே கண் வளர தான் உயரத்தில் சயநிக்கையும்
தான் அவர்களுக்கு சயனிக்கும் இடம் கொடாமல் சயநிக்கையும்
அவர்கள் கண் வளர்ந்து அருளும் இடத்துக்கு சுத்தி பண்ணுகையும்
விஹித விஷயம் என்று விஷய ப்ரவணனாய் சஹ சயிக்கையும்
ததீய பிரதிபத்தியால் சஹ சயியாமையும்
விஷயாந்தர ஸ்மரணத்துடன் சயநிக்கையும்
பகவத் ஸ்மரணம் இன்றி சயநிக்கையும்
ஆச்சார்ய ஸ்மரண நிஷ்டன் இன்றியே சயநிக்கையும்
தேக யாத்ரா பரவசனாய் சயநிக்கையும்
ஆத்ம யாத்ரா சிந்தா பரவசனாய் சயநியாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதிகளில் கூச்சம் இன்றி கால் நீட்டி சயநிக்கையும்
திரு முற்றம் திருப் பள்ளி யறை ஆச்சார்யன் திரு மாளிகைகளைக் காற்கடைக் கொண்டு சயநிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்யம் பண்ண வேண்டும் காலத்திலேயே சயநிக்கையும்
ஆச்சார்யன் கண் வளர்ந்து அருளுவதற்கு முன்னே சயநிக்கையும்
ஆச்சார்யன் எழுப்பச் செய்தே சயனித்து இருக்கையும் -என்கை –

முமுஷுக்கள் இல்லாமல்-ஈஸ்வரனையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் இடம் ஸஹ வாஸமும் கூடாதே

34-சயன விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தில் உணர்ச்சி நிலை நிற்கும்

35-உத்தான விரோதி –
ஆச்சார்யர் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுப்ப மெள்ள எழுந்து இருக்கையும் –
ப்ராக்ருதர் எழுப்பப் பதறி எழுந்திருக்கையும்
பூர்வ அனுசந்தானம் இன்றியே எழுந்திருக்கையும்
ஆச்சார்யர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தனது வரவு பார்த்து இருக்க அனுசந்தான தத் பரராய் எழுந்து இராது  இருக்கையும்
தனது மடியில் ஆச்சார்யன் முடியை வைத்துக் கண் வளரா நிற்க கால் கடுத்தது என்று எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் மத்யே எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அதிர நியமித்து தட்டி எழுப்புகையும்
ஆச்சார்யன் சயநிக்கிற காலத்திலேயே தான் எழுப்புகையும்
ஆச்சார்யன் எழுந்திருப்பதற்கு முன்னே தான் எழுந்திராமையும்
தன்னுடனே எழுந்திருக்கும் ச ப்ரமசாரிகள் மேலே மயிர் உதறுதல் சோம்பல் முறித்தல் கொட்டாவி கொள்ளுதல் செய்கையும்
எழுந்திரா நிற்க முந்தி அடியேன் என்று பரஸ்பரம் தண்டன் இடாமையும்
ஆச்சார்யன் தத் பத்னி பித்ராதிகள் எழுந்திருந்த போதே தண்டன் இடாது ஒழிகையும்-என்கை-

35-உத்தான விரோதியைப் பரிஹரிக்கவே தத் தத் ஜ்ஞானம் நிலை நிற்கும்

36-கதி விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண் வளர்ந்து அருளின திருப் படுக்கையை மிதித்தல் செய்கையும்
சந்தித்த ஸ்ரீ வைஷ்ணவர்ககளுக்கு எதிரே செல்லாமையும்
விநயம் பாவித்து சம்சாரிகளுக்கு எதிரே செல்லுகையும்
பகவத் கோபுராதிகளைக் கண்டு அஞ்சலித்து கண் குளிர நோக்காமல் கடைக் கணித்துப் போகையும்
தேவதாந்திர கோபுராதிகளைக் கண்டால் கண் புதைத்துக் கடுக நடவாமையும்
திரு முற்றங்களுக்கு பிரதஷிணமாகப் போகாமையும்
அருளிச் செயலில் த்வநியைக் கேட்டு சிறிது செவி கொடாமல்  கடுக நடை யிட்டுப் போகையும்
அந்ய கீரத்த த்வநியைக் கேட்ட போதே செவி புதைத்துக் கொண்டு சீக்கிரமாகப் போகாமையும்
ஆச்சார்யனுடையவும் இதர ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் சாயையை மிதித்தல் செய்து நடக்கையும்(எம்பார் ராமானுஜ பதச் சாயா)
தன் நிழல் அவர்கள் மேல் பட நடக்கையும்
சம்சாரிகள் நிழல் தன் மேல் படுத்தல் தன் நிழல் அவர் மேல் படுத்தல் செய்யும்படி கூச்சமற்று நடக்கையும்
பகவத் பாகவத சமாராதன அர்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ண நடக்கும் போது ப்ரஹ்ம ருத்ராதி வசதிகளை அணுகிப் போகையும்
ஸாண்டில்ய ஸ்ம்ருதி -பிரம்மா ருத்ராதி வஸதி ஸ்மஸாநம் சரமேவ ச -அபலீம் ராஜ தாலீம் ச தூரத பரி வர்ஜயேத்-தேவதாந்திர உச்சிஷ்டங்களை மிதித்து நடக்கையும்
பாஷண்டிகளுடன் வழி நடக்கையும்
வழி இடுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை பரிந்து பாராமல் போகையும்
எல்லை யளவும் சென்று எழுந்து அருளுகிறவர் மறையும் அளவும் நில்லாமல் மடங்குகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளா நின்றார்கள் என்று கேட்டு எதிரே போகாயையும்
சம்சாரிகளை எதிர் கொள்ளுதல் வழி விடுதல் செய்கையும்
கேவல தேக யாத்ரா பரவசனாய் சம்சாரி க்ருஹங்கள் தோறும் சென்று தட்டித் திரிகையும்
பகவத் பாகவத் தேசிக அபிமானம் உள்ள திவ்ய தேசத்தில் செல்லாமல் திரிகையும்
பிரகிருதி சம்பந்தத்தை இட்டு சம்சாரிகள் உத்சவங்களுக்குப் போகையும்
ஆத்ம சம்பந்த அநுரூப பகவத் பாகவத உத்சவங்களுக்குப் போகாமையும்
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் அலையும்படி அதிர நடக்கையும்
சதாச்சார்யன் பின் சென்று சேவியாமையும்
பிரயோஜனாந்தர பரனாய் பின் செல்லுகையும்
அவன் போ என்னப் போகாமையும் வா என்ன வாராமையும்
இயலில் முன்னே செல்ல முயலுகையும் பின் செல்லப் பிற்காலிக்கையும்
பெரும் கூட்டத்தில் நடக்க  மாட்டாதாரை விட்டுப் பறந்தோடுகையும்
ஆச்சார்யனுக்குத் திருக் கை கொடுத்துச் செல்லுமிடத்து சிநேக பயமின்றி பேணிச் செல்லாமையும் –என்கை  –

36-கதி விரோதியைப் பரிஹரிக்கவே புநராக நிவ்ருத்தி நலை நிற்கும்

37-ஸ்திதி விரோதி –
சம்சாரிகளுடைய புடவை பட நிற்கையும்
ஏகாசனத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தன் புடவை பட நிற்கையும்
சம பிரதிபத்தியாலே ஏகாசனத்தில் இருக்கையும்
சம்சாரிகள் ஆசனத்தின் கீழ் இருக்கையும்
அவர்களுடன் ஏக க்ருஹத்தில் வசிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்கையும்
அவர்கள் திரளிலே இருக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசனத்தின் கீழ் இருக்க மாட்டாமையும்
ஏக பவனத்தில் இருக்கப் பிற்காலிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்க லஜ்ஜிக்கையும்
அவர்கள் திரளில் இருக்க முசிக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இராது ஒழிகையும்
ஆச்சார்யன் எம்பெருமான் திரு வீதியிலே எழுந்து அருள தான் உள்ளே இருக்கையும்
ஆச்சார்யனையும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்டு சடக்கெனத் துடித்துக் கொண்டு எழுந்து இராது இருக்கையும்
சம்சாரிகளைக் கண்டு த்ருணவத் கரித்து இருக்காதே விநயம் பாவித்து எழுந்து இருக்கையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வரவு கேட்டு சம் ப்ரம ந்ருத்யம் அற்று ஆறி இருக்கையும்
தான் பகவத் சமாராதானம் பண்ணும் வேளையில் ஒரு பாகவதர் எழுந்து அருளினால் உதறிக் கொண்டு எழுந்து இருந்து அவரை சத்கரியாதே சமாராதன வேளையில் எழுந்து இருக்கலாகாது என்று இருக்கையும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை தீர்த்தம் கொள்ளா நிற்க மற்றொரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளினால் அடியேன் அடியேன் என்கை ஒழிய ஸ்ரீ பாதத்தை விட்டு எழுந்து இருக்கையும்
கொடுக்கிறவரும்  அடியேன் அடியேன் என்று வணங்கும் அத்தனை யன்றி ஸ்ரீ பாத தீர்த்தத்தைப் பறித்து எழுந்திருக்கையும்
ஜங்கம அஜங்கம ஸ்ரீ விமானச் சாயையை மிதித்து நிற்கையும் -ஜங்கம ஸ்ரீ விமானம் -பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் வாகனம்-அஜங்கமம் -எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் –
தேவதாந்தர ஆலய கோபுர தத் பக்தச் சாயை தன் மேல் பட நிற்கையும்
தேவதாந்தர அபிமானம் ஒழிய மர நிழலில் ஒதுங்குகையும்
தத் சேஷமான ஸ்தலங்களில் தங்குகையும்
பாகவத பவனங்களை விட்டு அபாகவத க்ருஹங்களிலே தங்குகையும்
ஆச்சார்யன் நிற்கத் தான் இருக்கையும்
ஆச்சார்யன் நடக்கத் தான் இருக்கையும்
அவன் நின்று இருக்கச் சொல்லாச் செய்யாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியில் மதியாமல் கால் நீட்டி இருக்கையும்
திரு முற்றங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு எழுந்து இராமையும்
பகவத் பாகவத சந்நிதில் செம்பளித்துத் த்யானம் பண்ணுகையும்–என்கை –

37-ஸ்திதி விரோதியை பரிஹரிக்கவே அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருக்கை நிலை நிற்கும்

38-ஆவஸ்யக விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் திரு மாளிகையில் எல்லைக்குள்ளே எச்சிலாக்குகையும்
எம்பெருமானும் முதலிகளும் எழுந்து அருளும் திரு வீதியில் எச்சிலாக்குக்கையும்
நித்ய ஸூரிகள் திருப் பூ மரங்களாய் வந்து அடிமை செய்கிற திரு நந்தவனத்தில் எச்சிலாக்குகையும்
ஆச்சார்யன் இருக்குமிடத்தை எச்சிலாக்குகையும்
எச்சிலுடன் ஆச்சார்யன் பின் செல்லுகையும்
எச்சிலுடன் எம்பெருமானை ஸ்பர்சிக்கையும் -பாகவதர்களை ஸ்பர்சிக்கையும் -ஒதுங்கி நடவாது ஒழிகையும் -திரு மாளிகை திரு நந்தவனங்களில் புகுகையும் என்கை-

38-ஆவஸ்யாக விரோதியைப் பரிஹரிக்கவே நிர்மல சரம தேஹத்வம் நிலை நிற்கு

39-சரீர சுத்தி விரோதி –
திருமஞ்சனத் துறைகளை தூஷிக்கையும்
ஆச்சார்யனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் விநியோஹ அர்ஹமான திருமஞ்சனத்தை சேஷமாக்கி தூஷிக்கையும்
அவர்கள் விநியோகித்து ஒழிந்தது கொண்டு சரீர சுத்தி பண்ணுகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு மிக்க சேஷத்தைக் கொண்டு பாத ப்ரஷாலனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் திருக்கை விளக்கும் இடத்தில் தானும் கை கால் கழுவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனியில் தெறிக்கக் கொப்பளிக்கையும்
பாகவத தர்சனமே சுத்தி கரம் என்று அறியாமையும்
இத்தை விட்டு சரீர சுத்தியை அபேஷிக்கையும்–என்கை-

39-சரீர சுத்தி விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்மசுத்தி நிலை நிற்கும்

40-ஸ்நான விரோதி –
ஸூத்தி வேண்டி குளிக்கையும்
பிரபன்னனனாய் இருந்து விசேஷ திவசங்களில் குளிக்கையும்
ஆன்ருசம்ஸ் யார்த்தமாகவும் -தர்சன பரிபாலனார்த்த மாகவும் -லௌகிக அனுசாரம் பண்ணி அமுது செய்யும் இடத்து -தத் அநுசார ஹேதுவான சரீர ஸ்திதியைக் கண்டு பயம் அனுவர்த்தியாது ஒழிகையும்
திருமஞ்சனத் துறைகளிலே குளிக்கையும்
சம்சாரிகள் குளிக்கும் துறையிலே குளிக்கையும்
சம்சாரிகளை குளிக்கும் துறையிலே குளிக்கையும்  ஸ்ரீ சம்சாரிகளை முன்னிட்டு  குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பின்னிட்டு தீர்த்தமாடுகையும்
மந்திர ஸ்மரணத்துடன் குளிக்கையும்
கங்கா தீர்த்த ககதனம் பண்ணிக் குளிக்கையும்
பகவத் பாகவத உத்சவங்களில் அந்ய ஸ்பர்ச சந்கையால் குளிக்கையும்
அர்ச்சாவதாரவத் பரம பாவனமான விமல சர்ம விக்ரஹ ஸ்பர்ச சங்கையால் குளிக்கையும்
அபாகவாத ஸ்பர்ச சங்கையால்  ஸ்நானம் பண்ணாமையும்
ஆச்சார்ய தீர்த்த திவசங்களில் சிஷ்டா சரிதமான தீர்த்தமாடாது இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தெறிக்கத் தலை உதறுகையும்
வேதகப் பொன்னான விலஷண ஸ்பர்ச பாவனத்வம் அறியாமல் குளிக்கையும்
எம்பெருமானைத் திருமஞ்சனம் பண்ணிக் குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணித் தீர்த்தமாடுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை வழி விட்டு  முழுகுகையும்
சரீர யாத்ரா மாத்தரம் என்று முழுகாமையும்-என்கை-

40-ஸ்நான விரோதியைப் பரிஹரிக்கவே விரஜா ஸ்நானம் பண்ணுகை நிலை நிற்கும்-

41-அனுஷ்டான விரோதி
ஆச்சார்ய கைங்கர்யமும்- பகவத் கைங்கர்யமும் -பாகவத கைங்கர்யமும்- அல்லாதவற்றை செய்கையும்
பகவத் கைங்கர்யம் நிருபாதிகம் ஆச்சார்ய கைங்கர்யம் ஔபாதிகம் என்று செய்கையும்(சாஸ்தா நாராயண தேவதா -திருவடி ஸ்தானம் -காருண்யாத் ஸாஸ்த்ர பாணி -உலவும் பெருமாள்)
ஆன்ருசம்ஸ் யார்த்தமாக செய்யுமவற்றை லோக சங்க்ராஹார்த்தமாக செய்கையும்
ஸ்வரூப அனுகுணம் அல்லாத ஆன்ருசம்ஸ் யார்த்தமான கர்த்தவ்யங்களில் கைங்கர்ய புத்தியும்
எம்பெருமான் எழுந்து அருளா நிற்க திரு ஒலக்கமாக எழுந்து அருளி இரா நிற்க -ஆன்ரு சம்ச்ய ப்ரவ்ருத்தி வேணும் என்று நினைக்கையும்
கோஷ்டியாக இருந்து பகவத் குண அனுசந்தானம் பண்ணி நிற்க காருண்ய பிரவ்ருத்திக்குக் காலம் என்று கோஷ்டியைக் குலைத்துக் கொண்டு எழுந்து இருக்கையும்
திரு நாமம் சாத்துகை -தீர்த்த பிரசாதம் கொள்ளுகை -திருவடி விளக்குகை -அருளிச் செயல்  அனுசந்திக்கை-திரு விளக்கு ஏற்றுகை- திருமாலை சாத்துகை -திரு நந்தவனம் செய்கை- ஸ்ரீ வைஷ்ணவர்களை சத்கரிக்கை –தத்வ ரஹஸ்ய திவ்ய பிரபந்தம் ஒதுவிக்கை -ஒதுகை-துடக்கமான ஸ்வரூப அனுஷ்டானங்களில் மோஷ சாதன புத்தியும்
பூர்வர்கள் செய்யாதன செய்கையும்
பலாபிசந்தி பூர்வகமாக பகவத் கைங்கர்யமும்
அவன் உகந்த அடிமை செய்யாதே தான் உகந்த அடிமை செய்கையும் -என்கை –

41-அனுஷ்டான விரோதியைப் பரிஹரிக்கவே பூர்வ அனுஷ்டானம் நிலை நிற்கும்

42-லஷண விரோதி –
தோளில் திரு இலச்சினை தோன்றாது இருக்கையும்
அசிஷ்ட பரிக்ருஹீதமான பூ முத்ரையை தரிக்கையும்
சிஷ்ட பரிக்ருஹீதமான தப்த முத்ரையைத் தரியாமையும்
சரீர ரோக நாசார்த்தமாக தப்த முத்ரையை தரிக்கையும்
சம்சார ரோக நாசகம் என்று தரியாமையும்
ஸ்வாமி சின்னம் என்று தரியாமையும்
சம்சாரிகள் கைவிடுவார்கள் என்று கூச்சத்துடன் தரிக்கையும்
சத்துக்கள் கைக் கொள்வார்கள் என்று ஹர்ஷத்துடன் தரியாமையும் –
சிஷ்ட பரிக்ரஹம் அற்ற அப்ரசஸ்த தேசங்களில் திரு மண் கொண்டு திரு நாமம் இடுகையும்
சிஷ்ட பரிக்ரஹம் உள்ள திருமலை தொடக்கமான பிரசஸ்த திவ்ய தேசங்களில் உண்டான திரு மண் இடாமையும்
தத்தத் திவ்ய தேச வைபவம் அடியான கௌரவ பிரதிபத்தி இன்றிக்கே திருநாமம் இடுகையும்
முமுஷூவாய் இருந்து ஸ்வேத வர்ணமான திருநாமம் இடாமையும்
தத் தத் காம்ய பிரதமான வர்ணாந்தரம் உள்ளது கொண்டு திரு நாமம் இடுகையும்
மத்யே சித்ரமான ஹரி பாத க்ருதி ஒழிந்த தீபாகாராதியான ஊர்த்வ புண்ட்ரத்தை தரிக்கையும்
திரு நாமம் சொட்டளவே இடுகையும்
நுணுக்கி இருக்கையும்
பூர்வர்கள் சாத்தும் அளவும் அறிந்து இடாமையும்
பன்னிரண்டும் தரியாமையும்
கேசவாதி அடைவே தரியாமையும்
அனைத்தின்  இடம் அறிந்து இடாமையும்
உகிர் கொண்டு ஒடுக்குகையும்
நடுத் திருச் சூர்ணம் இன்றித் திருநாமம் இடுகையும்
மந்த்ராந்தரத்தினால் அபி மந்தரித்து இடுகையும்
யந்த்ரம் கீறி இடுகையும்
அந்ய சேஷமான ஜலம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடுகையும்
பாகவத சேஷம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடாமையும்(வைஷ்ணவ வாமனத்தில் -வடுகா -என்ன -நம்பி வைஷ்ணவ நம்பியான வ்ருத்தாந்தம்)
ஆச்சார்யனுக்கு வைத்த திரு மஞ்சனத்தை கொண்டு கரைத்து இடுகையும்
சம்சாரிகள் முன் திரு நாமம் இடுகையும்
ப்ராக்ருதர் கையில் திருமண் வாங்கி தரிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் என்று தரிக்கையே பிரயோஜனம் என்று தரியாமையும்
கேவல சாஸ்திர விஹிதம் என்று தரிக்கையும்
விசிஷ்ட பரிக்ருஹீத லஷணம் என்று தரியாமையும்
அழித்து அழித்து இடுகையும்
ஆச்சார்ய சேஷமான  திருமண் திருச் சூரணங்களை கொண்டு தரியாமையும்
ஆச்சார்யனை த்யானித்து தச் சேஷமாக தரியாமையும்
ஆச்சார்யன் சாத்துமவத்தை தான் சேஷமாக்கித் திருநாமம் இடுகையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியிலே திரு நாமம் இன்றி முகம் காட்டுகையும் –
ஒற்றைத் திரு மணி வடம் -ஒற்றைத் திருத் துழாய் வடம் தரிக்கையும்
தாவடமாகத் தரிக்காமையும்
முறுக்கறை நாண் கட்டுகையும்
அறையில் பின்னல் அற்று இருக்கையும்
வஸ்த்ர யுக்ம கௌபீ நங்கள் ஓன்று குறைகையும்
கிருஷ்ண கம்பள ஆச்சாதனம் பண்ணுகையும்
கந்தை போக்கையும்
முதலிகளாய் இருந்து கீழ் போக்கி உடுக்கையும்
முற்றி இல்லாத சேலை யுடுக்கையும்
வேஷ்டி தாங்கிப் பின்னல் இல்லாமையும்
கழுத்துக் கீழ் வபனம் -ஷவரம்- பண்ணுகையும்
ப்ரபன்னனான பின்பு கூம்பன் கட்டுகையும்-மீசை திருத்துகையும்
உகிர் ஒடுக்கி வளர்க்கையும் –
செம்பஞ்சி இடுகையும்
கழுத்தை வளைத்து சந்தனம் பூசுகையும்
களப பிரசாதம் அல்லாத சந்தனம் பூசுகையும்
பூ முடிக்கையும்
விசேஷித்து நம் பெருமாள் உகந்த புழுகு பூசுகையும் செங்கழு நீர் முடிக்கையும்
தேக பரனாய் சாந்து சந்தனம் பூசுகையும்
திருத் தாம்பூலம் பிரசாதம் அல்லாத வெறும் தாம்பூல சர்வணம் பண்ணுகையும்
காதில் அநந்த முடியிடுகையும் -அனந்ததோரம் தரிக்கையும் -திருத் துழாய் சொருகையும்
வெள்ளிக் கிழமை தந்தாவனம் பண்ணுகையும்
வச்யாஞ்சன சூர்ணம் தரிக்கையும் -ரஷை கட்டுகையும்
வெள்ளி மோதிரம் இடுகையும்
ஆயுதம் பிடிக்கையும்
ஆடை பகுந்து போர்க்கையும்
புள்ளடியான தலைக் கட்டுகையும்
குமிடுகையும் -தலையில் வணக்கம் அற்று இருக்கையும்
கண்ணில் தண்ணளி யற்று இருக்கையும்
வாயில் அருளிச் செயலும் பிரபந்த பேச்சும் அற்று இருக்கையும்
அதிரப் பேசுகையும்
அவிடு பேசுகையும்
வெடிச் சிரிப்பு சிரிக்கையும்
கையில் அஞ்சலி அற்று இருக்கையும்
முஷ்டிக் கூடித் தழும்பு அற்று இருக்கையும்
மார்பு இருமாந்து இருக்கையும்
அடியில் மென்னடை யற்று இருக்கையும் -பதறி நடக்கையும்
எத்தாப்பு கூட்டுகையும்
பகவத் குண ஸ்ரவணத்தில் பாகவத தர்ஸ நாதிகளில் ஆனந்தாஸ்ரு அற்று இருக்கையும் சரீரம் புளகியாமையும் -போஷியாமையும்
பாகவத விஸ்லேஷத்தில் வாடாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் வடிவிலே நிழல் எடுத்துத் தோற்றாமையும்
ஸ்ரீ வைஷ்ணவப் புகரற்று இருக்கையும் -என்கை-

42-லஷண விரோதியைப் பரிஹரிக்கவே விலஷணத்வம் நிலை நிற்கும்

43-ஸ்மரண விரோதி
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அன்யே து புருஷ வ்யாக்ர சேதஸா யேப் யபாஸ்ரயா
அஸூத்தாச்தே சமஸ்தாஸ் து தேவாத்ய கர்ம யோநய -என்கிறபடியே
ஸூ பாஸ்ரய விக்ரஹத்தை ஒழிய தேவதாந்திர ரூப தச் சரீரங்களை நினைக்கையும்
சதாச்சார்ய விக்ரஹத்தை த்யாநியாமை
ப்ராக்ருத சமூஹத்தை ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத அபிமானம் உள்ள திவ்ய ஸ்தலங்களை ஸ்மரியாமையும்- இதர ஸ்தலங்களை ஸ்மரிக்கையும்
பரம பாகவதருடைய ஆலோக ஆலாப அங்கீகார விசேஷாதிகளை நிரந்தரம் நினையாமையும் -இதரருடைய ஆலோக ஆலாப அங்கீகார திகளை ஒருக்கால் ஆகிலும் ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத குண சம்ருத்தியை மனனம் பண்ணாமையும்
அர்ச்சாவதாரத்தில் ப்ராக்ருத உபாதான ஸ்ம்ருத்தியும்
விலஷண பாகவத ஜன்மாதிகளில் அபகர்ஷத்வ ஸ்ம்ருதியும்
சாஷாத் பகவத் அவதாரமான ஆச்சார்யன் பக்கல் மானுஷ ஸ்ம்ருத்தியும்
ஆச்சார்யன் பக்கல் உபகார ஸ்ம்ருதி இல்லாமையும்
ஆச்சார்ய துல்யர் பக்கல் சமத்வ ஸ்ம்ருதியும்
ஆழ்வார்கள் பாசுரங்களில் நிகர்ஷ பாஷா ஸ்ம்ருதியும்
ஆத்ம யாத்ரையில் விஸ்ம்ருதியும் தேக யாத்ரா ஸ்ம்ருதியும்
பகவத் போக அனுரூபம் அல்லாத ஸ்வரூப ஸ்பாவ ஸ்ம்ருதியும்
சித்த சாதனா நிஷ்டா விஸ்ம்ருதியும்
சாத்திய சாதனா சத்பாவ ஸ்ம்ருதியும்
தத் கைங்கர்யத்தில் பூர்ண சாத்திய ஸ்ம்ருதியும்
ததீய கைங்கர்யத்தில் தத் ஸ்மரண ராஹித்யமும்
பகவத் பாகவத விஷயங்களில் தான் செய்த அனுகூல பிரவ்ருத்திகளை ஸ்மரிக்கையும்
பிரதிகூல பிரவ்ருத்திகளை ஸ்மரித்து பீதன் ஆகாமையும்
விசேஷித்து ஆச்சார்யன் செய்த உபகாரங்களை நினையாது ஒழிகையும்
சாதனாந்தர நிஷ்டர்க்கு அவஸ்யம் அபேஷிதமான அந்திம ஸ்ம்ருதியும் -என்கை –

அந்திம ஸ்ம்ருதி ப்ரபன்னனுக்கு விரோதி அல்ல -இது இல்லாவிடில் பேறு இல்லை என்ற நினைவு தான் விரோதி

43-ஸ்மரண விரோதியைப் பரிஹரிக்கவே தத் குண ஸூத்தி நிலை நிற்கும்

44-சங்கீர்த்தன விரோதி –
குண கீர்த்தனம் பண்ணா நிற்கச் செய்தே குணாந்தரங்கள் பிரஸ்துதமானால் இகழாது ஒழிகையும்
க்யாதி லாப பூஜாதி பிரயோஜனாந்தரங்களைச் சொல்லிக் கீர்த்திக்கையும்
வக்த்ரு தோஷம் உள்ளவற்றை கீர்த்திக்கையும்
பாஷாந்தரம் என்று வக்த்ரு தோஷம் அற்றவற்றைக் கீர்த்தியாது ஒழிகையும்
பகவத் சங்கீர்த்தனம் பண்ணும் நாவாலே இதர சங்கீர்த்தனம் பண்ணுகையும்
சர்வாதிகாரம் ஆனவற்றை அதிக்ருதாதிகார பிரதிபத்தி பண்ணி கீர்த்திக்கையும்
விசேஷ ஜ்ஞானான பின்பு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உடைய பாசுரங்களை ஒழியக் கீர்த்திக்கையும்
அவற்றை சதாச்சார்யன் பக்கல் ஓதாமல் விழுவேடு எடுத்தும் சுவர்ப் புறம் கேட்டுக் கீர்த்திக்கையும்
பகவன் நாமங்களை கேவல பாவநத்வ பிரதிபத்தியால்   கீர்த்திக்கையும் அவற்றில் போக்யதா புத்தி பிறவாமல் கீர்த்திக்கையும்
பாகவத கீர்த்தனம் கலசாதே பகவத் கீர்த்தனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் சந்நிதியில் அவர் சொல்லாமல் கீர்த்திக்கையும் அவர் சொல் என்னச் சொல்லாமையும்
திரளில் தான் முந்தி முதல் எடுக்கையும்
மற்று ஒருவர் முதல் எடுத்தால் பின்னுரு சொல்லாது இருக்கையும்
பின்னடிக்குப் பிற்காலிக்கையும்
திரு அஷரங்கள் நழுவும்படி ஒட்டுகையும்
திரளில் தவறிற்று என்று திருத்துகையும் ஷேபோக்தி பண்ணிச் சிரிக்கையும்
முதல் முடிவு இரண்டுரு அனுஸ்தியாமையும்
சடகோபனுக்கு அஞ்சலி செய்யாமையும்
திவ்ய பிரபந்தங்களை ஓதிச் சாத்தாமையும்
திருஷ்ட பிரயோஜனத்தை நச்சி ஒதுவிக்கையும்
கூலிக்கு திருவத்யயனம் சாத்துகையும்
நீச ஸ்பர்சமுள்ள துறையிலே நித்ய கர்மாநுஷ்டானம் பண்ணுவாரைப் போலே க்ருஹ பூஜாதி தேவதாந்தர ஸ்பர்சமுள்ள ஸ்பர்சமுள்ள க்ரஹங்களிலே திருவத்யயனத்தை நடத்தி ஸ்வரூப ஹானிப் படுகையும்
தன் வியாதிக்கு சஹஸ்ர நாமம் -ஏழை எதலன்- ஆழி எழச் சங்கு எழ -ஜபிக்கையும்
குரு ஸ்துதி பூர்வக பகவத் ஸ்துதி பண்ணுகையும்-என்கை-

குரு பரம்பர அனுசந்தானம் இல்லாத த்வய அனுசந்தானமும் தேவதாந்திர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலி யாண்டான் திரு வாக்கு –

44-சங்கீர்த்தன விரோதியைப் பரிஹரிக்கவே வாக் சுத்தி நிலை நிற்கும்

45-ஸ்ரவண விரோதி
பகவத் கதை நடக்கும் இடத்து அவிடியை இகழாது ஒழிகையும்
அந்ய மனஸ்கனாய் செவி ஏற்றுக் கேளாமையும்(வேண்டுவன கேட்டியேல் -கேளாய்)
பகவத் குணம் கேளா நிற்கப் புறம்பில் வார்த்தை செவிப்படுகையும்
இதுக்கு முன்பு தான் கேட்டு அறியாத ப்ரமேயங்களை கேட்கும் போது ஒக்கும் ஒக்கும் என்று அணுபாஷிக்கையும்
பாண்டித்ய பிரகட நார்த்தமாக நடுவே துஸ் சோத்யம் பண்ணுகையும்
சொல் மினுக்குக் கேட்டு அசூயைப் பட்டு முகம் கன்றுகையும்
நல் வார்த்தை கேட்டு நன்று என்று நா எழாமையும்
புத்திமான்களாய் ஸ்ரவிக்கும் ஸ ப்ரஹ்ம சாரிகளோடு அசூயை கொண்டாடுகையும்
வயிர வுருக்கான பகவத் குணங்களைக் கேட்டு நெஞ்சு உருகாமையும்
பக்தியுடன் கேளாமையும்
ஸ்வ நேத்ர அங்க விக்ரியை இல்லாமையும்
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
சதாச்சார்யன் பக்கல் கேளாமையும்
கேட்ட சீரிய அர்த்தத்தை அநதிகாரிகளுக்குச் சொல்லுகையும்
அவைஷ்ணவர்கள் சொல்லும் பகவத் கதையைக் கேட்கையும்
அசம்ப்ரதாயார்த்தங்களைக் கேட்கையும்
பகவத் பாகவத ஆச்சார்ய வைபவம் கேட்கும் செவியாலே தந் நிந்தைகளைக் கேட்கையும்
சரமார்த்தம் கேட்டு நெஞ்சில் படாமையும்
பகவத் கதை நடக்கும் இடத்தில் தேவதாந்திர கதைகள் பிரஸ்துதங்கள் ஆகையும் -என்கை –

45-ஸ்ரவண விரோதியைப் பரிஹரிக்கவே சத் சம்ப்ரதாய ஸூத்தி நிலை நிற்கும்

46-ஸேவா விரோதி -(வணக்கம் -கைங்கர்யம் -சேவா காலம் -பல அர்த்தங்கள்)
பகவத் ஷேத்ரங்களைக் குறித்து யாத்ரை பண்ணா நிற்க இதர ஷேத்ரங்களிலே புகுவதும் அன்றியே அங்கே சில விசேஷம் கண்டு ஆச்சர்யப் படுகையும்
அந்ய கோபுராதிகளை விசாரியாமல் அஞ்சலிக்கையும் அறிந்த பின்பு அனுதாபம் இன்றி நிற்கையும்
பகவத் கோபுராதிகளை தூரத்தில் கண்ட போதே உகளித்து அஞ்சலித்து தண்டம் இடாமையும் செருப்பு கழற்றாமையும் வாகனங்களில் நின்று இழியாமையும்
திருப்பதிக்குள் செருப்புடன் செல்லுகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளுள் தண்டன் இடாமல் உள்ளுப் புகுருகையும்
அத் திரு மாளிகைக்குள் புகாமல் பெருமாள் கோயிலில் நேரே செல்லுகையும்
கோயில் வாசலிலே தண்டன் இடாமல் புகுருகையும்
புடவையைப் போர்த்துப் புகுருகையும்
எம்பெருமானுக்கும் பலி பீடத்துக்கும் நடுவே சென்று புகுருகையும்
அப்ரதஷிணமாக வந்து புகுருகையும்
திரு வாசல் படிகளை மிதிக்கையும்
முற்படச் சுற்றுக் கோயிலிலே சேவியாது ஒழிகையும்
திவ்ய விமானச் சாயையை மிதிக்கையும்
திரு வாசல் காக்கும் முதலிகளை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
சேனை முதலியாரை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
ஆச்சார்யனை முன்னிலையாகப் புக்கு சேவியாமையும்
எம்பெருமான்  சந்நிதியில் ஒதுங்கப் புகாமையும் எதிரே கூசாமல் புகுருகையும்
வலப் பக்கத்தில் இடம் உண்டாய் இருக்க இடப் பக்கத்திலே நின்று சேவிக்கையும்
சம்சாரிகளுடன் கலந்து சேவிக்கையும்
பாதாதி கேசாந்தமாகக் கண்ணார சேவியாமையும்
திருப் பல்லாண்டு முதலிட்டு இரண்டு பாட்டு துடங்கிப் பூர்வர்கள் அனுசந்தித்தவற்றை அனுசந்தியாது ஒழிகையும்
பிராக்ருதர் சொல்லுமவற்றைச் சொல்லி சேவிக்கையும்
பிரயோஜனாந்தரங்களை பிரார்த்தித்து சேவிக்கையும்
அந்ய சித்தனாய் சேவிக்கையும்
புதுப் பானையில் புக்க ஈ போலே பொருத்தம் இன்றி சேவியாமல் புறப்படுகையும்
திருவாதாரனத்தில் மத்யே மீளுகையும்-அமுது செய்கிற வேளையில் பலி பிரதானத்துக்கு முன்னே மீளுகையும்
தூப தீபம் திருவந்திக் காப்பு கண்டு அருளும் போது-அமுது செய்து அருளுகிற போது -பராக்கடித்து இருக்கையும் ததுசிதமான பாட்டுக்களை அனுசந்தியாமையும்
கூத்திலும் பாட்டிலும் சக்தனாய்  பகவத்  விக்ரஹத்தில் கண் வையாது இருக்கையும்
அவிகிற திரு விளக்கைக் கண்டு சடக்கு என்று நந்தாது இருக்கையும்
செத்தையைக் கண்டு திருவலகிடாதே போகையும்
சாத்தின திருமாலை திருப் பரிவட்டம் திரு ஆபரணங்களில் கண் இடுகையும் -ஆக்ரானம் பண்ணுகையும்(மோந்து பார்க்கையும்)
அமுது செய்து அருளுவதற்கு முன்னே எம்பெருமான் திருப்பாவாடை கண்டு நா நீருகையும்
திரு முற்றத்துக்குள் கால் நீட்டுதல் -எத்தாப் புகட்டுதல் -புடவை போடுதல் -கொட்டாவி கொள்ளுதல் -சோம்பல் முறிதல் மயிரு தட்டுதல் உகில் முறித்தல் மூக்கு சிந்துதல் காரித்து உம்முதல் -தாம்பூல சர்வணம் பண்ணுதல்
மேல் புடவை போர்த்தல் உறங்குதல் அவிடு சொல்லுதல் கை தட்டச் சிரித்தல் கதறி அழைத்தல் வைதல் சீறுதல் ஒடுக்கம் அற்று கர்வித்து இருத்தல் முதலான
அபசாரங்களை பரிஹரித்து வர்த்தியாமையும்
அங்கே சம்சாரிகளை வினவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமதி பண்ணுகையும் கேவல பகவத் சேவையை பண்ணித் திரிகையும் பாகவத சேவையில் நழுவித் திரிகையும்
ஆச்சார்ய சேவைக்கு அசலாய்த் திரிகையும்
அவனது பாதச் சாயையாய்க் கொண்டு பின் சென்று சேவியாமையும்-என்கை-

46-சேவா விரோதியைப் பரிஹரிக்கவே சேவ்யன் உகந்து சேவை கொண்டு அருளுமது நிலை நிற்கும்

47-சமாராதன விரோதி(ஸம்யக் ஆராதனம் -ஆச்சார்யர் நியமனப்படி -நித்ய கிரந்தம் -ஜீயர் படி -ததீயாராதனமும் சமாராதானமே)
வித்யாதி க்ரம பீதியாலே செய்கையும் -ப்ரீதி ப்ரேரிக்கச் செய்யாமையும்
சோம்பிச் செய்கையும்
ஆளிட்டுச் செய்கையும்
ப்ராப்த காலத்தில் செய்யாமையும் -தனக்குக் கை ஒழிந்த போது செய்கையும்
க்யாதிக்குச் செய்கையும்
கூலிக்குச் செய்கையும்
பலத்தைக் கோலி செய்கையும்
அவன் தந்த கரணங்களுக்கு அடைத்த தொழில் என்று செய்யாமையும்
ஸ்வரூப அநுரூப ப்ரவ்ருத்தி என்று செய்யாமையும்
அவன் நிரபேஷன் பூரணன் என்று செய்யாமையும்- நம் கை பார்த்து இருக்கும் சாபேஷன் என்று செய்கையும்
தன் வஸ்துவைத் தான் கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்யாமையும்- நம் வஸ்துவை கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்கையும்(என்னையும் என்னுடைமையும் சக்கரப் பொறி பொறி ஓற்றிக் கொண்டு -சேஷத்வ ஞானமே ஆத்மாவுக்கு சக்கரப் பொறி)
தன் ஸூத்தியை முன்னிட்டு செய்கையும் -கைக் கொண்டு அருளுகிறவனுடைய ஸூத்தியை முன்னிட்டுச் செய்யாமையும்(புரா நீசனாகவே இருந்தாலும் ஸமாச்ரயே ஆதி தேவம் -சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் -பகவத் ப்ரபாவாத் -என்ற நினைவு வேண்டுமே)
பாவ ஸூத்தியே அவனுக்கு வேண்டுவது என்று செய்யாமையும்(பக்தியோடு உபகாரம் -பக்திக்கே அருளுகிறவன் உபகாரத்துக்காக அல்லவே)
பதார்த்த வைஷம்யம் பார்த்துக் கைக் கொள்ளும் என்று செய்யாமையும்
துஷ்கர பிரதிபத்தியால் செய்கையும் -பகவத் சமாராதானம் அத்யந்தம் ஸூகரம் என்று செய்யாமையும்
அத்யந்தம் சௌலப்யம் கொண்டு ஔதா ஸீந்யத்துடன் செய்கையும்
அர்ச்சாவதாரமே பர வஸ்து மூச்சுண்டு என்று செய்யாமையும்(அவன் இவன் என்று கூழேல் மின் -அவனாகும் நீள் கடல் வண்ணனே -வைகுண்ட நாத அரங்கமாளி என்னாளி —நவ களே பரம் –பூரி ஜெகந்நாதப் பெருமாள் -நீலாத்ரி நிவாஸாய -திருமேனி மற்றும் பொழுது -அன்று சக்கர லாஞ்சனம் பண்ணிய மரம் கிடைக்கும் -அமாவாசை நாடு இரவில் ஊரடங்கும் -பொழுது -பாண்டாக்கள் உள்ளே சென்று புதிய திருமேனி -தொப்புளில் -எடுத்து வைக்க மூச்சு விடும் ஸப்தம் கேட்க்குமாம்)
தன் ஆச்சார்யனை முன்னிட்டு அவனுக்கு எடுத்துக் கை நீட்டுகிறோம் என்று செய்யாமையும் -அவர்களது மதி -அனுமதி-கொண்டு செய்யாமையும்-
சம்சாரிகள் கண் படச் செய்கையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கத் திருத் திரை வளைத்துச் செய்கையும்-
சாமான்ய சாஸ்த்ரமான முற்றல் சடங்குகள் கொண்டு செய்கையும் -சிஷ்டாசார சித்தமான திருவாராதன விசேஷம் அறிந்து செய்யாமையும்-
மந்த்ராந்தரம் கொண்டு செய்கையும்- குரு பரம்பரா பூர்வகமான மந்திர அனுசந்தான பரனாய்ச் செய்யாமையும்-(மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாமல் செய்ய வேண்டுமே -அவனே மந்த்ரம்)
விசேஷித்து அதின் விவரணமான ஆழ்வார்கள் பாசுரங்களையும் -அதின் கருத்தான ஆச்சார்ய வசனங்களையும் அனுசந்தித்திக் கொண்டு செய்யாமையும்-
திவ்ய ஸ்நபன தீப தர்சன வ்யவஹார ஸ்வீகார விஷயங்களில் பூர்வர்கள் அனுசந்திக்கும் ஆழ்வார்கள் பாசுரங்களை அனுசந்தியாமையும்-
விசேஷஜ்ஞர் உச்சரிக்குமவற்றை உச்சரியாமையும்-
அந்ய சித்தனாய் செய்கையும்-
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவனிலும் அதிகர் என்று அறியாதே வேறிட்டு அர்ச்சிக்கையும்-(விண்ணுள்ளாரிலும் சீரியர் -நான் பெரியன் நீ பெரியை என்றும் யார் அறிவர் -நம்மாழ்வார் -உம் பெருமாளை நீர் -என் பெருமாளை நான் -சேர்த்து வைக்கத் தட்டில்லையே -வடுக நம்பி)
கூடத் திருவடி விளக்கக் கூசுகையும்-
தழிகை  தாழ வைத்து அமுது செய்யப் பண்ணுகையும்-
ஆச்சார்யர்களை அவனிலும் அதிகர் என்று அறியாமையும் -இருந்தபடியே அமுது செய்யப் பண்ணக் கூசுகையும்-
சம்சாரிகள் க்ருஹத்தில் எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் எம்பெருமானையும் கூட ஒன்றியே திருவடி விளக்குகையும்-
சிஷ்டர்கள் ஆதரியாத ததி பக்தாதிகளை ஆராதிக்கையும்-
அசாதாரணமான அர்ச்சாவதாரம் இருக்க- சாதாரணமான ஆதித்ய மண்டலாதிகளில் எம்பெருமானை அர்ச்சிக்கையும்-
அந்தர் யாகத்திலும் பஹிர் யாகமே அதிகம் என்று செய்யாமையும்-
ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதாரத்திலே ஆவாஹாந உத்வாசனம் பண்ணி அநர்த்தப் படுகையும்-
தத் ஆராதனத்திலும் ததீய ஆராதனமே பரம் என்று பண்ணாமையும்-
தனக்கு விசேஷித்து வேண்டுவது சதாச்சார்ய சமாராதனம் என்று அத்யவசித்து பண்ணாமையும்-
ஆச்சார்யனிலும் ஆச்சார்யன் திருவடிகளே திருவாராதானம் என்று உணர்ந்து ஆநுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் திருவடிகளிலும் திருவடிகளுடன் சம்பந்தம் உடைய திருவடி நிலையே சரம அதிகாரிகளுக்குத் திரு வாராதன விஷயம் என்று பழுக்க சிஷித்து தெளிந்து அனுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் ப்ரீதி வர்த்தகமான பகவத் பாகவத சமாராதனத்தை உபேஷிக்கையும் -த்விவித அர்ச்சனம் பண்ணுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைப்பறிந்து சடக்கெனத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணாமையும்-
தர்சநாத் க்ருஹ்யதே மயா-என்கிற தர்சன க்ரஹணத்தை காட்டிலும் -முக்ய க்ரஹணத்தில் பூர்த்தி உண்டு என்று ஆசரியாமையும்-(கண்டு அருளப் பண்ணுதல் -அமுது செய்யப் பண்ணுதல் -வாசி அறிய வேண்டுமே -)
ஆச்சார்யனுக்கும் தத் சத்ருசர்க்கும் எம்பெருமானுக்குப் பண்ணும் உபசாரங்களில் குறையச் செய்கையும்-
பகவத் சமாராதானம் பண்ணா நிற்க சாமான்ய சாஸ்த்ரங்களைக் கொண்டு உபய அர்ச்சனை பண்ணுகையும்-
ஆலயச்யத்தாலே யூஜ்ரும்பணாதிகளை-கொட்டாவி விடுதல் போன்ற -சோம்பல் செயல்கள் -பண்ணுகையும் -என்கை-

47-சமாராதான விரோதியைப் பரிஹரிக்கவே சமராத்யன் உகந்து அத்தைக் கொண்டு அருளுமது நிலை நிற்கும்

48-வந்தன விரோதி
நல்ல தரை பார்த்து தண்டணிடுகையும்
முடுக்கத் தண்டன் இடுகையும்
அந்ய மனஸ்கனாய் தண்டன் இடுகையும்(கைகள் கால்கள் தலை மனஸ் புத்தி அஹங்காரம் -சாஷ்டாங்க பிராணாமம்)
த்வய அனுசந்தானத்துடன் தண்டன் இடாமையும்
விதி ப்ரேரிதனாய் தண்டன் இடுகையும் -ப்ரீதி ப்ரேரிதனாய் தண்டன் இடாமையும்
பகவத் விஷயத்தில் போலே பாகவத விஷயத்திலே தண்டன் இடக் கூசுகையும்
ஆச்சார்யன் திருவடிகளிலே தலை பொருந்த தண்டன் இடாமையும்
ஒருக்கால் இட்டோம் என்று ஆறி இருக்கையும்
ஆச்சார்யன் எழுந்து இருக்கச் சொல்லுவதற்கு முன்னே தான் எழுந்து இருக்கையும்
வெறும் தண்டன் இட்டு ஸ்ரீ பாதங்களை சிரஸா வஹியாது ஒழிகையும்
முற்பட  ஆச்சார்யனுக்கு தண்டன் இடாதே எம்பெருமானுக்கு தண்டன் இடுகையும்
பகவத் சந்நிதியில் பாகவதர்களை தண்டன் இடக் கூசுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடும் தண்டனை சஹித்து தண்டன் இடுகையும்
அவரிடும் தண்டனுக்கு தன்னை ஸ்வீ கர்த்தாவாக நினைத்து பிரதி தண்டன் இடுகையும்
அவர்களுக்கு உகப்பாகில் தன் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் அவரிடும் தண்டனைப் பெறாதே உதறிப் போகையும்(போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –ஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பி விழுந்து சேவிக்க பிரதி வந்தனம் செய்யாமல் –வளர்த்ததனால் பயம் பெற்றேன் -கைக் கிளியை வணங்கி -பரகால நாயகி –)
திருவாராதன சமனந்தரம் தீர்க்க தண்டன் இடாமையும்
இயல் சாற்றி  ஒருவருக்கு ஒருவர் தண்டன் இடாமல் போருகையும்
கோஷ்டியில் முதலிலும் முடிவிலும் தண்டன் இடாது ஒழிகையும்
தூரஸ்தனானால் ஆச்சார்யன் எழுந்து அருளி இருந்த திக்கு நோக்கி நாடோறும் தண்டன் இடாது ஒழிகையும்
புரோடசத்தை நாய்க்கு இடுவாரைப் போலே  ப்ராக்ருத பந்துக்களுக்கு தண்டன் இடுகையும்-
வர்ண நிபந்தன வந்த நீயரை வணங்குகையும்
திருப் பிண்டி (அமரும் ஆஸனம்)பேணாது இடுகையும்
தேவதாந்திர ஆலய சமீபங்களிலும் பாஷண்டி சமீபங்களிலும் தண்டன் இடுகையும்
திருப்பதியில் திரு வாசலில் தண்டன் இடாமல் புகுருகையும்
ஆச்சார்யனையும் ஆச்சார்ய துல்யரையும் திரளில் தண்டன் இடக் கூசுகையும்
அத்யாத்ம வித்யாப்ரதர் அல்லாத வித்யாந்தர பிரதரை தீர்க்க பிரணாமம் பண்ணுகையும்-மந்த்ர ரத்ன பிரதர் அல்லாத மந்த்ராந்த்ர பிரதரை தீர்க்க பிராணாமம் பண்ணுகையும்
ஆபத்து வந்தது என ப்ராக்ருதர் காலிலே விழுகையும்
பகவத் வந்தனத்தில் ஆலஸ்யப் படுகையும்
தத் ஸன்னதியிலே அபாகவத நமஸ்காரம் பண்ணுகையும் பகவத் நமஸ்காரம் பண்ணாது ஒழிகையும்–என்கை-

48-வந்தன விரோதியைப் பரிஹரிக்கவே வந்தனத்தை உகந்து ஸ்வீகரிக்குமது நிலை நிற்கும்

49-அஞ்சலி விரோதி(அம் ஜலதி -ப்ரத்யக்ஷமாக அவனை உருக வைக்கும்-நிராலம்பனம் -காட்டவே ஆகாசத்தில் விபீஷணன் -நின்று -ஸர்வாயுத பாணி -அஞ்சலியே ஸர்வாயுத சமம்)
பகவத் அங்க்ரியை உத்தேச்யம் பண்ணாமையும் -வ்யதிரிக்தரை விஷயீ கரித்துப் பண்ணுகையும்
அஞ்சலிக்கு கால நியதி இல்லை என்று இராமையும் -காலம் பார்த்து பண்ணுகையும்
-சர்வாதிகாரம் என்று உணராமையும்- அதிக்ருதாதிகாரம் என்று இருக்கையும்
-பிரகார நியதி இல்லை என்று இராமையும் -அது உண்டு என்று இருக்கையும்
-சக்ருத் என்று இராமையும் – அசக்ருதாவ்ருத்தி வேணும் என்று இருக்கையும்
-காலாந்தரத்திலே பலிக்கும் அத்தனை என்று இருக்கையும் -அப்போதே பலிக்கும் என்று இராமையும்
-ஒவ்வொரு அபராதத்துக்கு பிராயச்சித்தமாய் இருக்கும் என்று இருக்கையும்- சர்வ அபராத பிராயச்சித்தம் என்று அறியாமையும்
-சில பாபத்தையே போக்கும் என்று இருக்கையும் -சர்வ பாபங்களையும் சமூலோன்மூலனம் பண்ணும் என்று அறியாமையும்
-ஒரு நன்மையே தரும் என்று இருக்கையும் -எல்லா நன்மைகளையும் குறைவறத் தரும் என்று அறியாமையும்
-பல ப்ராப்தி யளவும் நிற்குமத்தனை என்று இருக்கையும் -பல அனுபவ வேளையிலும் நிலை நிற்கும் என்று அறியாமையும்
-கருட முத்ரை விஷத்தை அடக்குமா போலே ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தை ஆளவற்று என்னும் விசுவாசம் இல்லாமையும் –
-(அம் ஜலயதீதி அஞ்சலி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
அபராதா நிமான் சர்வான் ஷமஸ்வ புருஷோத்தம
ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -ஸ்தோத்ர ரத்னம்)
சேஷிக்கு அமைத்த கை ப்ராப்தம் ஆனாப் போலே சேஷ பூதனுக்கு அஞ்சலி அநந்ய கதித்வ ஸூசகமாய்க் கொண்டு ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்று அறிந்து பண்ணாமையும்-

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-28

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

-ஸ்வ ரஷணத்தில் கை வாங்காமல் அஞ்சலிக்கையும்
-அந்ய பல காமதயா அஞ்சலிக்கையும்
-அந்ய ஆலய சமீபங்களில் சட கோபனுக்கு அஞ்சலிக்கையும்
-அபாகவதர் அஞ்சலிக்கு பிரத்யஞ்சலி பண்ணுகையும் -பாகவதர் அஞ்சலிக்குப் பின் அஞ்சலிக்கையும்
-ஆச்சார்யனை தண்டன் இடாமல் அஞ்சலிக்கையும்
-நெஞ்சில் இடுக்குடன் (நேர்மை இல்லாமல்)அஞ்சலிக்கையும் -கையில் இடுக்குடன் அஞ்சலிக்கையும்
-சடகோபனுக்கு தலையில் அஞ்சலி பண்ணாமையும் -என்கை-

49-அஞ்சலி விரோதியைப் பரிஹரிக்கவே தச் சித்தா கர்ஷணத்வம் நிலை நிற்கும்

50-கால ஷேப விரோதி
தமோ குணா அபிபூதனாய்ப் பாதியில் உறங்கிப் போகையும்
-உணர்ந்தால் பரானர்த்தங்களை நெஞ்சினால் நினைந்து காலம் கழிக்கையும்
வேல் கணார் கல்வியே கருதி காலம் கழிக்கையும்
கரியான் கழல் காணக் கருதாதே காலம் கழிக்கையும்
வர்ண அனுகுண கர்ம கலாபங்களிலே காலம் கழிக்கையும்
த்வய அனுசந்தானத்தாலே காலம் கலியாமையும்
தேவதாந்திர பஜனத்தாலே காலம் கழிக்கையும்- பகவத் சமாராத நத்தால் காலம் கழியாமையும்
சாமான்ய சாஸ்த்ரார்த்த பட நாதிகளாலே காலம் கழிக்கையும்
தாத்பர்ய சாஸ்திர ஸ்ரவண மனநாதிகளால் காலம்   கழியாமையும்
அநர்த்த கரமான அர்த்தார்ஜன உபாயங்களாலே காலம் கழிக்கையும்
ஆத்மா உஜ்ஜீவன அர்த்த உபாயங்களால் காலம் கழியாமையும்
பர ஹிம்சையால் காலம் கழிக்கையும்- பர உபகாரத்தால் காலம் கழியாமையும்
பர அன்னம் புஜித்தே காலம் கழிக்கையும் ஸ்வ அன்ன லுப்தனாய்க் காலம் கழிக்கையும்
பர ஸ்திரீ பரவசனாய்க் காலம் கழிக்கையும் அத்தாலே ஸ்வ ஸ்திரீ விரக்தனாய்க் காலம் கழிக்கையும்
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியே காலம் கழிக்கையும்- ஸ்வ த்ரவ்ய விநியோக அசக்தனாய்க் காலம் கழிக்கையும்
சூது சதுரங்கம் பொருது காலம் கழிக்கையும்
(தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் காலம் கழியாமையும்-நான்முகன் திரு -63-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதியவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் களித்தேன் -ஆர்த்தி -28 -சூது பிரசங்கம் -ஸ்ரீ மஹா பாரதம் – ஸ்த்ரீ பிரசங்கம் ஸ்ரீ இராமாயணம் – களவு பிரசங்கம் -ஸ்ரீ பாகவதம்)
ஸ்வ க்ருஹம் இன்றிக்கே காலம் கழிக்கையும்
ஸ்வ உதர போஷண அர்த்தமாக்கத் தோட்டம் கழனி பண்ணியே காலம் கழிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக்கத் திரு நந்தவனம் செய்து காலம் கழியாமையும்
ஆச்சார்யன் திரு மாளிகை பிரிந்து இருக்கப் பேணாமல் காலம் கழிக்கையும்
ஸ்வ குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழிக்கையும்
ஆச்சார்ய குடும்ப  ரஷண அர்த்தமாக காலம் கழியாமையும்
ஸ்வ சரீர ரஷணம் பண்ணியே காலம் கழிக்கையும் -ஆச்சார்யன் திரு மேனியை ரஷியாமல் காலம் கழிக்கையும்
தான் குளித்தே காலம் கழிக்கையும் -ஸ்ரீ  வைஷ்ணவர்களை நீராடப் பண்ணிக் காலம் கழியாமையும்
தான்  பாலும் சோறுமாக வயிறு வளர்த்துக் காலம் கழிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் அமுது செய்யப் பண்ணாமையும்
தான் உடுத்து முடித்து பூசிப் புலற்றிக் காலம் கழிக்கையும்
பகவத் விஷயத்தில் பூசும் சாந்து புனையும் கண்ணி வான் பட்டாடை சாத்திக் காலம் கழியாமையும்
ஹேயக் கூத்துக் கண்டு காலம் கழிக்கையும் -மாயக் கூத்துக் கண்டு காலம் கழியாமையும் -மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா-திருவாய் -8-5-1-
பொல்லாப் புன் கவி சொல்லிப் போது போக்குகையும் -நல்லின் கவி சொல்லி நாள் கடலைக் கழிக்காமையும்
என் நாவில் இன் கவி -திருவாய் -3-9-1-
புன் கவி –  தேவதாந்தரங்களைப்  பாடும் பாடல்கள்(இல்லாத ஒருவனுக்கு இல்லை என்றேன் -மொட்டைத் தலை அரசனைப் பாடிய கதை)
கேவல புண்ய தீர்த்தங்களை தேடிச் சென்று கால் தேய்ந்து காலம் கழிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் தேடிக் காணச் சென்று காலம் கழியாமையும்
கேவலம் புண்ய ஷேத்ரம் தேடித் போய்க் காலம் கழியாமையும் -பகவத் ஷேத்ரம் தேடிச் சென்று காலம் கழியாமையும்
காவ்ய நாடகம் கொண்டு காலம் கழிக்கையும் -பகவத் காவ்யமான ஸ்ரீ ராமாயணம் கொண்டு காலம் கழியாமையும்
பூர்வ பஷமான தர்சன கிரந்தாந்தரங்களிலே காலம் கழிக்கையும்
ஸ்வ சித்தாந்தமான தர்சநத்திலே ஊன்றிக்   காலம் கழியாமையும்(அருளிச் செயலில் பொழுது போக்கும் நம்பிள்ளை போல்)
கேவலம் பகவத் கைங்கர்யத்திலே காலம் கழிக்கையும்  -சதாச்சார்யா கைங்கர்யத்திலே காலம் கழியாமையும் -என்கை-

50-கால ஷேப விரோதியைப் பரிஹரிக்கவே தத்கால சமீசீ நத்வ ஸ்மரண சந்தோஷம் நிலை நிற்கும்-

51-ஆர்ஜன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து தானம் ஏற்று ஆர்ஜிக்கையும்
பிராயச்சித்தம் விதித்து ஆர்ஜிக்கையும்
தீர்த்த பலம் தாரை வார்த்து ஆர்ஜிக்கையும்
காலன் கொண்டு ஆர்ஜிக்கையும்(காலன் கொண்டு மோதிரம் இடுதல்)
ஸ்ரார்த்தம் புஜித்து ஆர்ஜிக்கையும்
சடங்கு (பரிஹாராதிகள்)காட்டி ஆர்ஜிக்கையும்
க்ரஹ நிலை எண்ணி ஆர்ஜிக்கையும்
கிராமண்யம் பண்ணி ஆர்ஜிக்கையும்
பள்ளி வாசிப்பித்து ஆர்ஜிக்கையும்
பாண்டித்தியம் சொல்லி ஆர்ஜிக்கையும்
கவி சொல்லி ஆர்ஜிக்கையும்
களவு கண்டு ஆர்ஜிக்கையும்
வஞ்சித்து ஆர்ஜிக்கையும்
வழி பரித்து ஆர்ஜிக்கையும்
கோளானாய் ஆர்ஜிக்கையும்
கும்பீடு கள்ளனாய் (கள்ள கும்பீடு )ஆர்ஜிக்கையும்
புராண பட்டனாய் ஆர்ஜிக்கையும்
புஸ்தக  சோரனாய் ஆர்ஜிக்கையும்
குண்டலம் தூக்கி (தற் பெருமை பேசி)ஆர்ஜிக்கையும்
குலாதிகம் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஆசாரம் நடத்தி ஆர்ஜிக்கையும்
அஹம் ப்ரஹ்ம என்று பிரமித்து(சூதனாய் கள்வனாகி) ஆர்ஜிக்கையும்
வித்யா பிரபாவம் சொல்லி ஆர்ஜிக்கையும்
வீர வாதம் சொல்லி ஆர்ஜிக்கையும்
முகவச்யம் கொண்டு ஆர்ஜிக்கையும்-மூடரை வஸ்யம் கொண்டு-ஆர்ஜிக்கையும்
மருந்து செய்து ஆர்ஜிக்கையும் மாயம் செய்து ஆர்ஜிக்கையும்
நிதி தர்சனம் கானவிடுவோம் என்று ஆர்ஜிக்கையும்
நீச சேவை பண்ணி ஆர்ஜிக்கையும்
ரசவாதம் சொல்லிப் பகட்டி ஆர்ஜிக்கையும்
ராஜவச்யம் அறிவோம் என்று ஆர்ஜிக்கையும்
விஷய வர்த்தகம் சொல்லி ஆர்ஜிக்கையும் -விஷ வித்யை கற்று ஆர்ஜிக்கையும்
பகவத் விஷயம் சொல்லி ஆர்ஜிக்கையும்
பக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
அருளிச் செயல் சொல்லி ஆர்ஜிக்கையும்
அபிமானம் சொல்லி ஆர்ஜிக்கையும்
விரக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
விஸ்வாசம் பாவித்து ஆர்ஜிக்கையும்
அழு கண்ணனாய் ஆர்ஜிக்கையும்
அநந்ய கதித்வம் காட்டி ஆர்ஜிக்கையும்
கைங்கர்யம் பேரிட்டு ஆர்ஜிக்கையும்
காஷாயம் போர்த்து ஆர்ஜிக்கையும்
திரு நந்தவனம் செய்து ஆர்ஜிக்கையும்
திருமாலை பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
திருப்பதியின் பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரிப்பேன் என்று ஆர்ஜிக்கையும்
சிறப்பு விடுவேன் என்று ஆர்ஜிக்கையும்
பிரபந்தம் சாத்த வேணும் என்று ஆர்ஜிக்கையும்
திருவத்யயன நிமித்தமாக ஆர்ஜிக்கையும்
திருவடி விளக்கி ஆர்ஜிக்கையும்
மெய் வருத்திக் கை செய்து கிருஷி பண்ணி ஆர்ஜிக்கையும்
பிச்சை புக்கிலும் எம்பிரான் திரு நாமமே நச்சி -என்று முஷ்டிபுக்கு (பிச்சை புக்கு)ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து முஷ்டிபுகக் (உஞ்ச வ்ருத்தி)கூசுகையும்
அதில் வயிறு வளர்க்கைக்காக முஷ்டிக் கூடை பிடித்து உலாவி ஆர்ஜிக்கையும்
ஸ்வரூப அநுரூப ஆர்ஜனம் இது என்று முஷ்டி புகுராமையும்
சிஷ்டாசாரம் என்று முஷ்டி புகுராமையும்
முஷ்டி கூடையில் பெற்றது கொண்டு த்ருப்தனாகாமையும் -முஷ்டி சற்றே பரிமாறினார்கள் என்று  குறைவு படுகையும்
முஷ்டி மிகப் பரிமாறினார்கள் என்று கொந்தளிக்கையும்
கைக்குள் அடங்கினதுக்கு மேல் ஆகாது என்று இராமையும்
கேட்கத் திரு நாம உச்சாரணம் பண்ணாமையும்
முஷ்டி புகுரும் போது வாசல்கள் தோறும் திரு நாம உச்சாரணம் பண்ணுகை- மௌஷ்டிக வ்யாவ்ருத்தி ஸூசக விசேஷண  புத்த்யா சிஷ்டாச்சாரம் என்று உச்சரியாமையும்
திரு நாம உச்சாரணம் முஷ்டி யிடுகைக்கு சாதனம் என்று உச்சரிக்கையும்
தேவதாந்தரம் உள்ள க்ருஹங்களில் உலாவுகையும்
க்ருஹ பூஜா தூஷித க்ருஹங்களில் உலாவுகையும்
வெள்ளிக் கிழமையில் மெழுகின க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
திரு நாம உச்சாரணம் கேட்டு உகவாதார் க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
பகவத் பாகவத நிந்தை பண்ணும் நீசருடைய க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
ஸ்ரீ வைஷ்ணவ வ்ருத்தி என்று அறியாமல் ஷேபோக்தி பண்ணுவார் க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
தேவதாந்தர சேஷமான ஊரிலே சென்று முஷ்டி புகுருகையும்
திரு முற்றம் இல்லாத ஊரிலே முஷ்டி புகுருகையும்
திருவாராதனம் இல்லாத கிருஹத்திலே முஷ்டி புகுருகையும்
பிரபன்னனாய் இருந்து வைத்து விசேஷ திவசங்களிலே திருமொழி சொல்லி உலாவுகையும்-ஒழிந்த நாள் அருளிச் செயலில் சொல்லாமல் உலாவுகையும்
ரஹஸ்யங்கள் பிறர் கேட்கச் சொல்லி உலாவுகையும்
அசத் சஹாவாசம் பண்ணி உலாவுகையும்
விஷயாந்தர தர்சனம் பண்ணக் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்த -கண் இன்றி உலவாமையும்
முன்னடி பார்த்து நடந்து உலவாமையும்
தாந்தி (மன அமைதி)யற்று உலாவுகையும்
சதாச்சார்யன் திருக் கையாலே அமுதுபடி கூடை பிடித்து உலாவாமையும்
அமுது படி கூடை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அபிஷேகம் என்று அறியாமல் உலாவுகையும்
த்வய அஷர சங்க்யையான பர்வமற்ற முஷ்டிக் கூடை பிடித்து உலாவுகையும்
திரு விலச்சினை இல்லாதார் கையிலே முஷ்டி  ஏற்கையும்
காதில் பாம்பணி இட்டார் கையில் முஷ்டி ஏற்கையும்
அஹங்கார கிருஹஸ்தர் கையில் முஷ்டி ஏற்கையும்
உலாவிய  அளவில் ஆச்சார்யனுக்கு ஒரு கூறு சமர்ப்பியாது ஒழிகையும்
ஒரு கூறு ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவர்களை உத்தேசித்து வையாது ஒழிகையும்
ஒரு கூறு எம்பெருமானுக்கு என்னும் பிரதிபத்தி இல்லாமல் ஸ்வீகரிக்கையும்
உலாவின போது ஆச்சார்யன் சந்நிதியில் வைத்துத் திருக் கண் சாத்திக் கொடுக்கக் கொண்டு போகாமையும்
உலாவின அமுது படியில் அந்ய திருஷ்டி படாதபடி பேணாது ஒழிகையும்
இப்படி முஷ்டியில் பெற்ற கெரத்தார் மொழியக் கண்ட சம்சாரிகளை அனுவர்த்தித்து ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்கி  ஆர்ஜிக்கையும்
ஆச்சார்யன் ஸ்வத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்யத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுவார் பக்கல் யாசித்து ஆர்ஜிக்கையும் -என்கை-

51-ஆர்ஜன விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விகத்வம் நிலை நிற்கும்

52-க்ருஹ விரோதி –
தேவதாந்திர அபிமான தூஷித பிரதேசங்களில் க்ருஹமாகையும் –
பாஷாண்டிகள் இருக்கும் தெருவில் க்ருஹமாகையும்
சம்சாரிகளில் அலசான க்ருஹமாகையும்
சக்ர லாஞ்சனம் இல்லாத க்ருஹமாகையும்
பிராக்ருதர் என்னது என்று அபிமாநிக்கும் க்ருஹமாகையும்
ஆச்சார்ய அபிமானம் அற்ற க்ருஹமாகையும்
பாகவதருக்குப் புகு வாசல் அல்லாத க்ருஹமாகையும்
பிரகிருதி பந்துக்கள் புகுவது புறப்படுவதான க்ருஹமாகையும்
திருப்பள்ளி யறையும் எம்பெருமானும் இல்லாத க்ருஹமாகையும்
திரு முன்பில் சங்கிருக்கும் க்ருஹமாகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லாத க்ருஹமாகையும்
திரு நாமப்பையும் (திருமண் பெட்டி)அமுதுபடி கூடையும் இல்லாத கிருஹமாகையும்
ஜப வடம் தொங்கும் க்ருஹமாகையும்
கந்தா தரஷூ சர்மாதி (நாய் நாரி தோல்கள்)பாஷண்டி பரிக்ருஹீதங்கள் இருக்கும் கிருஹமாகையும்
சைவ பௌத்த (கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மான்)ஜைன சார்வாகாதி பாஹ்ய குத்ருஷ்டி மத கிரந்தம் இருக்கும் கிருஹமாகையும்
சுக்ரவார அமாவாஸ்யாதி திவசங்கள் தேடி (அன்று மட்டுமே)மெழுகும் க்ருஹமாகையும்
அந்ய திருஷ்டி படும் அடுகு வளம் (சமையல் பாத்ரம்)உள்ள கிருஹமாகையும்
கண்டவிடம் எங்கும் சாம்பல் சிதறி இருக்கும் க்ருஹமாகையும்
காடிச்சால் இருக்கும் க்ருஹமாகையும்(காழிச்சால் மூலையில் ஈஸான மூலையில் -பழைய சோற்றுப்பானை வைத்திருக்கும் க்ருஹம்)
ரஷை கட்டித் தூங்குகையும்
திருமஞ்சனச்சால் முதலான வற்றில் திரு நாமம் அற்று இருக்கையும்
ஏகும் பாகவத பாத பாம்ஸூ (திருவடித்தூள் -தொண்டரடிப்பொடி)பரிசுத்தம் ஆகாது இருக்கையும்(காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின ஆச்சாரம்)
முற்றத்தில் பாஷாண்டிகள் வந்து போனால் அவ்விடத்து சுத்தி பண்ணாமையும்
தேவதாந்தர சிஹ்னம் உள்ள கன்று காலி கட்டி ஆளுகையும்
சிஷ்டர் தர்சியாத கோவை (சிஷ்டர்கள் இல்லாத கூட்டமாக)படருகையும்
திருத் துழாய் வளராமையும்
அருளிச் செயல் த்வனி அற்று இருக்கையும்-ஆச்சார்யன் எழுந்து அருளாத இடமாகையும் – -என்கை-

52-க்ருக விரோதியைப் பரிஹரிக்கவே சாதாகமான தத் ஸ்பர்சாதி மகா லாபம் நிலை நிற்கும்

53-ஷேத்திர விரோதி
தேவதாந்திர சேஷமான ஷேத்ரமாகையும்(எல்லைக்கல் -உண்டே திருக் கோயில்களுக்கு)
தேவதாந்திர சிஹ்னம் உள்ள ஷேத்ரம் ஆகையும்
பகவத அபிமானம் அற்ற தேசத்தில் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த பகவத் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த அந்ய ஷேத்ரம் ஆகையும்
என்னது -என்று அபிமானித்து இருக்கும் ஷேத்ரம் ஆகையும்
ஆச்சார்யனுக்கு என்று காணப்படாத ஷேத்ரம் ஆகையும்
பகவத் பாகவத ஆச்சார்யர்களுக்கு விநியோகப் படாத ஷேத்ரம் ஆகையும் -என்கை

53-ஷேத்ர விரோதியைப் பரிஹரிக்கவே தல்லாப பாரார்த்யத்வம் நிலை நிற்கும்

54-போஜன விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர் ஆதரத்தோடு பிரசாதம் இடப் புக்கால் -பிரசாதம் சூடுமவர் ஆகார சௌஷ்டவ ரச சௌஷ்டவ நிரூபணம் பண்ணுகையும்
பாகவத பிரசாதம் என்னும் கௌரவ நிரூபணம் பண்ணாமையும்
இடுகிற  பரிவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும்
பாக பேதம் பண்ணித் தான் சுவடு பட புஜிக்கையும்
நான் இடுகிறேன் என்று அபிமான தூஷிதம் ஆக்குகையும்
தம்முடைய பதார்த்தம் தாமே அங்கீ கரித்து அருளுகிறார் என்று இராமையும்
அமுது செய்கிறவர் கலத்தைக் கடைக் கணித்து  ஏற்றத் தாழ்வுகள் நினைக்கையும்
எனக்கு இப்படி இடுவதே -என்று குபிதராகையும்
கோபத்திலே -பரிமாரினவற்றை உதறி எழுந்து இருக்கையும்
இடுகிறவர் தாம்- உள்ளே இருக்கையும் -இவரைப் புறம்பே வைக்கையும்
தாம் முற்படவே புஜிக்கையும் இவருக்கு பிற்பாடு இடுகையும்
தாம் முற்பட எழுந்து இருக்கையும்
தாம் உள்ளே இருந்து என்னைப் புறம்பே வைத்தார் என்று கன்றுகையும்
தாம் முற்படவே புஜித்து நமக்குப் பிற்பட இட்டார் என்று பிற்காலிக்கையும்
மதியாமல் நமக்கு முற்பட எழுந்து இருந்தார் என்று நினைக்கையும்
இடுகிறவர் உபசாரம் சொல்ல வேண்டினார்க்குச் சொல்லாமையும்
வேண்டாதார்க்கு ஸ்வ கர்த்ருத்வ ஸூசகமான உபசார உக்தி சொல்லுகையும்
இவர் உபசார உக்தியும் இன்றி இருந்தார் என்று வெறுக்கையும்
கனக்க நம்மை உபசரித்தார் என்று இறுமாக்கையும்
அடியேனைக் குறித்து இத்தனை வேணுமோ என்று இராமையும்
திரு மாளிகையில் அவர் முற்பட இவர் அமுது செய்வதற்கு முன்பே தீர்த்தம் அமுது செய்கையும்
தம்முடைய சேஷத்வத்தை கொடுக்கையும்
இவர் அவர் சொல்லுவதற்கு முன்பே எடுத்து அமுது செய்கையும்
அமுது செய்த சேஷம் என்று பிற்காலிக்கையும்
ஆச்சார்ய அபிமான விசேஷ ஜ்ஞானம் அறியாமல் ரூப நாம மாத்ரம் கொண்டு அந்யோந்யம் பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
அறிந்த பின்பு பாகவத பிரசாதம் ஸ்வீகரியாது ஒழிகையும்
எச்சில் கையாலே அந்யோந்யம் பிரசாதம் ஏற்கையும்
இரந்து பிரசாதப் படாதே நலிய அள்ளுகையும்
போனகம் செய்த சேடம் தருவரேல் என்று அலாப்ய லாபம் என்று அறியாமையும்(பாண்ட சேஷம் பாத்ர சேஷம் இரண்டுமே உண்டு -போஜன இலை சேஷம் வேறே)
ஸ்ரீ வைஷ்ணவர் தாமே பிரசாதக் கலம் எடுக்கப் பார்த்து இருக்கையும்
கையில் நின்றும் பறித்து எடாமையும்
தாமும் தேவியாரும் எடாதே அடியாள் சம்சாரிகள் கையிலே எடுப்பிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை என்று மதியாதே புசித்த கலத்தை வைத்து எழுந்து இருக்கையும்
அவர் வேண்டாம் என்னிலும் வலிய எடாமையும்
திரு மாளிகையில் பற்று உதிராதபடி பேணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முன்னே முந்திக் கொண்டு திருக் கை கழுவுகையும்
பிற்பட்டத்து என்று தச் சேஷ ஜலம் என்று பாகவத சேஷத்துக்கு அசலாகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்த இடங்களை சுத்தி பண்ணுகிறோம் என்று ப்ரோஷிக்கையும்
பஸ்மம் இட்டு ப்ரோஷிக்கையும்
அமுது செய்த இடங்களை மிதித்தால் அபசாரம் என்று திருக்கைத் தொடை கொள்ளாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பட சுருளமுது கொடாமல் தாம் முற்பட ஸ்வீகரிக்கையும்
தன்னுடைய சேஷமான மூன்றாவது இடுகையும்
வந்தவர் ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகையில் குறை கண்டு போகையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு உள்ளம் கன்றிப் போகாத படிக்கு அனுவர்த்தியாமையும் –என்கை-

54-போஜன விரோதியை பரிஹரிக்கவே பர்தாத்ரு போக்த்ரு ஸ்வரூப அனுரூபத்வம் நிலை நிற்கும்

55-போஜ்ய விரோதி
சம்சாரிகள் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
பிரகிருதி பாந்தவத்தை இட்டு ப்ராக்ருதர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஷூத்ர புருஷார்த்திகள் விட்ட சிறப்பில் ஸ்வீகரிக்கும் பகவத் பிரசாதமும்
திவ்ய தேசங்களில் பிரபாவத்தை இட்டு ஸ்வீகரியாது ஒழிகையும்
கேவல பகவத் பக்தர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளில் ஸ்வயம் பாக பார்க்கச் சோறும்
இட்டுக் கணக்கு என்னும் சோறும்
க்யாதிக்கு இடும் சோறும்
மணச் சோறும்
பிணச் சோறும்
விலைச் சோறும்
எச்சில் சோறும்
மடி தடவும் சோறும்
சங்கல்ப்பித்து இடும் சோறும்
அபிமான தூஷித சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்டமாய் மசப் பரலிட்ட சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்ட பாண்டங்களிலே  இட்ட சோறும்
அந்ய ஸ்மரண அசத் கீர்த்தர் பசித்த சோறும்
பகவத் ஸ்மாரணாதி திவ்ய பிரபன்ன பரர் சமையாத சோறும்
பகவத் பாகவதர்களை உத்தேசியாமல்   ஆத்ம காரணத்தால் பசித்த சோறும்
திருநாமம் அற்ற பாண்டங்களில் நின்றும் இடும் சோறும்
பகவன் நிவேதிதம் இல்லாத சோறும்
சாமான்யர் நிவேதித்ததும் அந்ய திருஷ்டி பரிஹரியாத பிரசாதமும்
சேஷ சேஷாச நாதி ஸூரிகளையும் ஆழ்வார்களையும் அமுது செய்யப் பண்ணாதே கேவல பகவன் நிவேதிதமும்
ஜாதி துஷ்டமான அன்னமும்
கிருமி கீட கேசாதி நிமித்த துஷ்டமான அன்னமும்
அபாகவதர் பங்க்தியில் புஜிக்கும் அன்னமும்
அசத் கீர்த்தனம் பண்ணி புஜிக்கும் அன்னமும்
த்வய அனுசந்தானத்துடன் பிரசாதப் படாத அன்னமும்
பதார்த்தங்களில் போகயதா புத்தியில் புஜ்க்கும் அன்னமும்
பகவத் பிரசாத ஸ்வீகாரப் பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பரமாத்மா சமாராதன பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
சமாராதன சமாப்தி பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பாகவத பிரசாத ச்வீகார பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
கேவலம் பஞ்ச வ்ருத்தி பிராண சேஷம் என்னும் துஷ் பிரதிபத்தியாலே புஜிக்கும் அன்னமும்
வேதகப் பொன்னான விலஷண தர்சனாதிகளில் பாவனா பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பங்க்தி பாவனர் ஆனவர்களைப் பெற்றும் உள் கலந்து பரிமாற சங்கித்து புஜிக்கும் அன்னமும்
ஸ்வ க்ருஹத்தில் நியத அன்னமும்
ஆச்சார்ய துல்யருடைய திரு மாளிகையில் நியத அன்னமும் –என்கை-

55-போஜ்ய விரோதியைப் பரிஹரிக்கவே சத்வாபிவ்ருத்தி நிலை நிற்கும்

56-தீர்த்த விரோதி -(திருமஞ்சன-திருவாராதன -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்த -அருளிச் செயலில் கோஷ்ட்டி ஸ்ரீ பாத தீர்த்தம் -நான்கும் உண்டு -தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி –)
பிரயோஜனாந்தர பரர்களுடைய க்ருஹங்களில் எம்பெருமானை தீர்த்தம் கொள்ளுகையும்(அநந்ய ப்ரயோஜனர் க்ரஹங்களிலேயே கொள்ள வேண்டும்)
சாதநாந்தரர் உடைய முன்னல் தீர்த்தம் கொள்ளுகையும்
மந்த்ராந்தர பரருடைய முன்னில் தீர்த்தம் கொள்ளுகையும்
திவ்ய தேசங்களில் நிரூபித்து தீர்த்தம் கொள்ளுகையும்
ஒழிந்த இடங்களில் நிரூபியாமல் தீர்த்தம் கொள்ளுகையும்
சம்சாரிகளுடன் கலந்து நின்று தீர்த்தம் கொள்ளுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பாடனாய் தீர்த்தம் கொள்ளுகையும்-கிழக்கு திசையா என்று ஆராய்ந்து தீர்த்த கொள்ளுகையும்-
தீர்த்தம் கொண்டு கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொள்ளாமையும்
தீர்த்தம் கொண்டு கர ப்ரஷராலன ஆசமனங்களில் சுத்தி தேடுகையும்
ஆச்சார்ய பகவத் கைங்கர்யம் பண்ணும் இடத்து தீர்த்தம் பிரசாதப்பட்ட கை கழுவாமையும்
தீர்த்தம் சிந்துகையும்
அவிசேஷஜ்ஞர் போலத் தலையில் தெளித்துக் கொள்ளுகையும்
அந்ய சம்பாஷணத்துடன் கொள்ளுகையும்
சம்சாரிகள் கண்ட தீர்த்தம் கொள்ளுகையும்
பகவத் தீர்த்தத்திலும் ஸ்ரீ பாத தீர்த்தம் அதிகம் என்று அறியாமையும்
ரூப நாமம் கொண்டு கொள்ளும் தீர்த்தம் அறியாமையும்
உச்சாரண விசேஷம் கொண்டு ஒருக்கால் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
ஆச்சார்ய அபிமானம் கொண்டு பலகாலும் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
சதாச்சார்ய தீர்த்தமே திரு முன் வைத்து சதா சேவ்வியம் என்னும் சிஷ்டாசாரம் அறியாமையும்
வேதகப் பொன்னான விலஷண தீர்த்தம் விசேஷித்துப் பெற வேணும் என்னும் விசேஷ ஜ்ஞானம் இல்லாமையும்
கேவல பிரபாவ மாத்ரம் கொண்டு பேணாமல் கொள்ளுகையும்
ஸ்வரூபம் அழிந்தது என்று அஞ்சாமல் கொள்ளுமதும்
முற்பாட்டுக்கு முந்திக் கொடுக்குமதும்
பிற்பட்டது என்று கன்றிக் கொடுக்குமதும் -உஜ்ஜீவனமாக மாட்டாது என்று அறியாமையும்
பரம பாவனமான ஸ்ரீ பாத தீர்த்தத்திலே தன் பாத தோயம் கலந்தது என்று சங்கித்து புறக் கணிக்கையும்
பிரபன்னனாய் இருந்து பிராயச் சித்த தீர்த்தம் கொள்ளுகையும்
சிவாதி ஸ்பர்சம் நேர்கையில் தத் பிராயச் சித்தமாக ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமையும்
கேவல பாவனத்வ பிரதிபத்தியே நடந்து கொள்ளுகையும்
போக்யத்வ பிரதிபத்தி நடவாது ஒழிகையும்(கேவல பாவனத்வம் என்றும் மட்டுமே கொண்டு இல்லாமல் போக்யம் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டுமே)
ஒரு நாள் கொண்டது அமையும் என்று இருக்கையும் -ஸ்தன்ய பானம் பண்ணாவிடில் நாக்கொட்டும்படியான ஸ்தன்ய அவஸ்தை பிறந்து கொள்ளாமையும்
சதாச்சார்யன் விமல சரம தேஹி என்று அறியாது இழக்கையும்
ஆளிட்டுத் தீர்த்தம் கொள்ளுகையும்
தானே அள்ளிக் கொள்ளுகையும்
இரங்கிப் பிரசாதிக்கும் அத்தனையும் இரப்புடன் இல்லாமையும்
த்வயைக நிஷ்டனாய்க் கொடுத்துக் கொள்ளாமையும் -என்கை-

56-தீர்த்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் ஸ்வரூப உஜ்ஜீவனத்வம் நிலை நிற்கும்

57-பிரசாத விரோதி –
பிராக்ருத கிராமங்களில் எம்பெருமான் பிரசாதம் என்று ஸ்வீகரிக்கையும்
திவ்ய தேசங்களில் கோயிலில் பிரசாதித்த போதே பிரசாதப் படக் கூசுகையும்
நிரூபித்து பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
உபவாசாதி நிமித்தம் பிரசாதத்தை உபேஷிக்கையும்
அப்போது ஸூத்த ஆசமன அபேஷை பிறக்கையும்
பாவனமான பாகவத பிரசாதத்தில் உச்சிஷ்ட பிரதிபத்தி நடக்கையும்
திரளில் ஆச்சார்ய பிரசாதத்தை பிரசாதப் படக் கூசுகையும்
தத் ஸ்பர்சத்தில் அஸூத்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
தத் பிரசாத ஸ்வீகாரத்தில் நாடொறும் வெறும் பசியனாய் இராமையும்
சுவடு பட்டிரா விடில் போக்யத்வ -பாக்யத்வ-பிரதிபத்தி குலைகையும்
ஆச்சார்யன் இரங்கி பிரசாதிக்கப் பெறாமையும்
அமுது செய்யா நிற்க பிரசாதப்படுகையும்
அமுது செய்யும் தனையும் பார்த்து நின்று பிரசாதப் படாது ஒழிகையும்
அமுது செய்து அருளின பிரசாதத்தைத் தானே அள்ளிக் கொள்ளுகையும்
அனுமதி இன்றி பிரசாதக் கலத்தில் ஸூடுகையும்
அமுது செய்யும் தளிகையை எச்சில் படுத்துகையும்
ச ப்ரஹ்மசாரிகளுக்குப் பகுந்து இடாமல் பிரசாதப் படுகையும்
பிரசாதக் கலத்தை சம்சாரி நாஸ்திக ஸ்வாதிகளுக்கு இடுகையும்
சிஷ்டாச்சார சித்த தத் பிரசாத ஸ்வீகார பிரகாரம் அறியாமையும்
பிரசாதத்தைப் பேணாமல் சிந்துதல் மிதித்தல் செய்கையும் -என்கை –

57-பிரசாத விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ பாவநத்வ பிரதிபத்தி நிலை நிற்கும்

58-உக்தி (பேச்சு)விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்தால் ஏன் என்கையும் சம்சாரிகள் அழைத்தால் அடியேன் என்கையும்
அநவதாநத்தாலே  (கவனக் குறையாலே)மாறாடின போது அனுதாபம் அற்று இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து- விண்ணப்பம் அருளிச் செய்து அருள -திருக் கை விளக்கி அருள-சுருளமுது அமுது செய்து அருள -கண் வளர்ந்து அருள இத்யாதி -ப்ரபன்ன உக்திகளைப் பேணி விண்ணப்பம் செய்யாமையும்
பிராக்ருதரைக் குறித்து வார்த்தை சொல்லு -இரு -எண்ணெய்  இடு -உறங்கு இத்யாதி
சாமான்ய உக்திகளைச் சொல்லாதே அந்த பூஜ்ய உக்திகளைச் சொல்லுகையும்
தீர்த்தமாட -பிரசாதப்பட -அமுதுபடி -கறி யமுது -அடிசில் -பிரசாதம் -தீர்த்தம்- திரு மஞ்சனம் -இலை பிரசாதம் இலை அமுது -மூன்றாவது முதலான உக்தி விசேஷம் அறிந்து சொல்லாமையும்
குளிக்க -உண்ண- தின்ன -அரிசி சோறு- கறி -தண்ணீர் வெற்றிலை- சுண்ணாம்பு முதலான
ப்ராக்ருத உக்திகளைச் சொல்லுகையும்
திருப்பதி -திருச் சோலை -திருப் பொய்கை -திருக் கோபுரம் -திரு மதிள்- திரு வீதி -திரு மாளிகை- திரு வாசல்- திரு மண்டபம் –திருச் சுற்று – திரு வோலக்கம் -திருப் பள்ளி அறை- திருப் பள்ளிக் கட்டில்- திரு மேற்கட்டு -திருத் திரை- திருக் கொற்றொலியல்-(துளுவம் துடை துணி )-திரு வெண் சாமரம் -திருவால வட்டம் -திருவடி நிலை– திருப் படிகம் திரு மஞ்சனக் குடம் -திருப் பரிகரம் -திரு வந்திக் காப்பு -திரு விளக்கு –திருமாலை -திரு வாபரணம் -திருப் பள்ளித் தாமம் -திருவடி நிலைகள் தொடங்கி திரு அபிஷேகம் திருவழகு எரிந்த திரு மேனி திரு நாள் முதலானவற்றை திரு இல்லாத் தேவரான தேவதாந்தரங்களுக்குச் சொல்லுகையும்
ஸ்ரீ வைஷ்ணவனே இருந்து வைத்து கோயிலை ஸ்ரீ ரெங்கம் என்கையும்- தும்மித் திருவரங்கம் என்னாது ஒழிகையும்
மற்றொரு திருப்பதிகளின் பேர் சொல்லுகையும்
திருமலையை வெறும் வேங்கடம் என்கையும்
பெருமாள் கோயிலை காஞ்சீபுரம் என்கையும்
திரு வநந்த புரத்தை அனந்த சயனம் என்கையும்

(வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

பெருமாளை ஸ்ரீ ராமன் என்கையும்
நாச்சியாரை சீதை என்று சொல்லுகையும்
இளைய  பெருமாளை லஷ்மணன் என்கையும்
கிருஷ்ணனை ஸ்ரீ கிருஷ்ணன் என்கையும்(பிறந்தவாறும் -பிறந்த மாயா -ஒருத்தி மகனாய் பிறந்து -நம் கண்ணன் அன்றோ)
அழகிய சிங்கரை ஸ்ரீ ந்ருசிம்ஹன் என்கையும்
ஞானப் பிரானை ஸ்ரீ வராஹன் என்கையும்
ஸ்ரீ குஹப் பெருமாளை குஹன் என்கையும்
திருவடியை ஹனுமான் என்கையும்
மகாராஜரை ஸூக்ரீவன் என்கையும்
பெரிய உடையாரை ஜடாயு என்கையும்
திருத் துழாயை துளசி என்கையும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்- ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -திருவாழி ஆழ்வான் -ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் –ஸ்ரீ பரத ஆழ்வான் -சத்ருக்ன ஆழ்வான் -கோயில் ஆழ்வான்- நம் ஆழ்வார் என்று சொல்லாமையும்
தீர்த்த நாயனாரை சாளக்ராமம் என்கையும்
ஸ்ரீ மத் த்வாராபதி நாயனார் -சேனை முதலியார் -திரு வாசல் காக்கும் முதலிகள்- நம்பி மூத்த பிரான் -ஸ்ரீ மாலா காரார் -ஸ்ரீ விதுரர் -ஸ்ரீ நந்த கோபர் இப்படிப் பூர்வர்கள் அருளிச் செய்யும் பூஜ்ய உக்தி விபாகம் அறியாமையும்
பூர்வர்கள் உச்சரியாத பகவன் நாமங்கள் உச்சரிக்கையும்
பூர்வர்கள் விசேஷித்து உச்சரிக்கும் சதாச்சார்ய நாம உச்சாரணம் பண்ணாமையும்
ஏகாந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை கிராம குல ஜன்ம நிரூபணம் பண்ணி வ்யவஹரிக்கையும்(பெரிய திருவடி -சாண்டில்யை இடமும் அபசாரப்பட்ட வ்ருத்தாந்தம்)
திருவடி சேர்ந்தாரை செத்தார் என்கையும்
பரம பதத்துக்குப் போனார் என்ன வேண்டுமவரை திருவடி சேர்ந்தார் என்கையும்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் எனத் தக்காரை பரம பதத்துக்குப் போனார் என்கையும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டரை ஆச்சார்யன் திருவடி யடைந்தார் என்று சொல்லாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளம் கன்றச் சொல்லுகையும்
கேட்டவர்கள் நெஞ்சு அதிர வார்த்தை சொல்லுகையும்
ஸ்வ தோஷம் சொல்லாமையும்
சம்சாரிகள் -பிறர்-குற்றம் சொல்லுகையும்
ஸ்வ குணம் சொல்லுகையும்
பகவத் பாகவத திவ்ய பிரபாவம் சொல்லாமையும்
கேவலம் ஈஸ்வர வைபவம் சொல்லுகையும் -ஆச்சார்ய வைபவம் சொல்லாமையும்
விசேஷஜ்ஞனாய் இருந்து ஆழ்வார்கள் பாசுரங்களையும் -ஆச்சார்யர்கள் பாசுரங்களையும் சொல்லாமையும்-வறை முறுகுதலான ஆர்ஷ வசனங்களை (ரிஷி வாசகங்களைச்) சொல்லுகையும்-
ஆச்சார்யன் உபதேசித்த குரு பரம்பரையும் -த்வயமும் ஒழிந்த மந்த்ராந்தர சப்த உச்சாரணம் பண்ணுகையும்
சதா ஜப்தவ்யத்தை விட்டு இருக்கையும் -என்கை –

58-உக்தி விரோதியைப் பரிஹரிக்கவே சம்சாரி வ்யாவ்ருத்தி நிலை நிற்கும்

59-ஸங்க விரோதி -யாவது
தேஹாத்ம அபிமானிகளோடு ஸம்ஸர்கிக்கையும்
விஷய பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஹங்கார க்ரஸ்தருடன் ஸம்ஸர்கிக்கையும்
தத் வர்த்தகருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர ஹிம்ஸா பர வஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாதகிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பர நிந்தா பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர குண அஸஹிஷ்ணுக்களுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸ்வர்க்க காமனுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸூஷ்க கர்மருடன் ஸம்ஸர்கிக்கையும்
ப்ரம ருத்ராதி தேவதாந்த்ர பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பவ்த்த மாயாவாதிகளான பாஷண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
திரு விலச்சினை திரு நாமம் இல்லாத முரரருடன் ஸம்ஸர்கிக்கையும்
முண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாகவத அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஸஹ்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
ஆச்சார்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
மந்த்ராந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
த்வய ஏக நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
உபயாந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் உபாய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
ஞான வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
பக்தி வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
சரம அதிகாரிகளான ஆச்சார்ய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
தேஹாதிகளிலே சங்கம் நடக்கையும்
சேக்ஷத்வாதிகளிலே சங்கம் நடவாமையும்
தத் இதர விஷயாதிகளிலே சங்கம் நடக்கையும்
ததீய சங்கம் நடவாமையும்
ஷூத்ர ப்ரயோஜந்தரங்களிலே சங்கம் நடக்கையும்
பரம ப்ரோஜனமான பகவத் பாகவத கைங்கர்யங்களிலே சங்கம் நடவாமையும்
ஆச்சார்ய கைங்கர்யங்களிலே அநவதிக சங்கம் நடவாமையும் –என்கை

59-சங்க விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிலை நிற்கும்

60-சம்பந்த விரோதி
தேக சம்பந்திகள் பக்கல் பந்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
பகவத் சம்பந்திகள் பக்கல் பந்துத்வம் நடவாமையும்
பிரபன்னனாய் இருந்து ப்ராக்ருத பந்துக்கள் பக்கல் சம்பந்திக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம்பந்தம் செய்யாமையும்
கேவல தேக உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இருக்கையும்
ஞான உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இராமையும்
ஒரு மாம்ச பிண்டத்திலே பிறந்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இருக்கையும்
ஒரு ஆச்சார்யன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இராமையும்
இதர சம்பந்தம் ஔ பாதிகம் என்று இராமையும் -பகவத் சம்பந்தம் நிருபாதிகம் என்று இராமையும்
அசித் சம்பந்தம் பகவத் பிரசாத நிவர்த்யம் அநித்தியம் என்று அறியாமையும்
அயன சம்பந்தம் அநிவர்த்யம் நித்யம் என்று அறியாமையும்
அசித் சம்பந்தம் ஸ்வரூப ஹாநி கரம் என்று இராமையும் -அயன சம்பந்தம் ஸ்வரூப உஜ்ஜீவன கரம் என்று இராமையும்
தச் சரீர பூத நார சம்பந்தம் ததீய பிரயுக்தம் என்று இராமையும்
சர்வ சரீரியான நாராயண சம்பந்தம் சத்தா பிரயுக்தம் என்று இராமையும்
தத் சரீர சாமான்யம் கொண்டு சம்சாரிகளுடன் சம்பந்தம் உண்டு என்று இருக்கையும்
பரி ஸூத்த அந்த கரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் நித்ய சம்பந்தம் உண்டு என்று இராமையும்
பகவத் சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும்  பொது என்று இராமையும்
ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேது என்று இராமையும்
அது சத்தா பிரயுக்தம் என்று அறியாதே உபதேச நிபந்தனம் என்று இருக்கையும் –என்கை –

60-சம்பந்த விரோதியைப் பரிஹரிக்கவே நிருபாதிக சம்பந்த ஜ்ஞானம் நிலை நிற்கும் –

61-ஸ்நேக விரோதி
பிரகிருதி பந்துக்கள் பக்கம் ஸ்நேஹம் நடக்கையும்
ஆத்ம பந்துக்கள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் விஷயத்தில் பக்தி இன்றியும் இதர லௌகிகமான விஷயங்களில் பற்றும் உண்டாகி இருக்கையும்-பகவத் விஷயத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும் இதர விஷயங்களில் ஸ்நேஹம் மிக்கு இருக்கையும்
ஸ்வ தேஹத்தில் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யன் விக்ரகத்தில் ஸ்நேஹம் நடவாமையும்
ஸ்வ புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்ய புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-

ஆச்சார்யன் திரு மேனியை தன் உடல் நலனை விட அக்கரை உடன் நோக்காமையும்
பிராக்ருத பதார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும்
திரு மந்த்ரார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-தான் இருந்த தேசத்திலே ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யர் இருக்கும் தேசத்திலே ஸ்நேஹம் நடவாமையும்-
தேக யாத்ரையில் ஸ்நேஹம் நடக்கையும் -ஆத்ம யாத்ரையில் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் பாகவத விரோதிகளாய் இருந்துள்ள புத்ர தார க்ருஹாதிகளில் சாஸ்திர நீத ஸ்நேஹம் ஒழிய காமார்த்தமாகப் பண்ணுகிற ஸ்நேஹமும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
அர்ச்சா ஸ்தல பிரதானமான கோயில் திரு மலைகளில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ஸ்நேஹம் நடக்கையும்
மந்திர ரத்ன ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் பெரிய திரு மந்திர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும் -என்கை –

(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?)

61-சிநேக விரோதியைப் பரிஹரிக்கவே தத் ப்ராப்தி விஷய லாபம் நிலை நிற்கும்

62-பக்தி விரோதி -(ஸ்நேஹம் -பூர்வ -அநு த்யானம் பக்தி-ஸ்நேஹமும் பக்தியும் காரண கார்ய பாவம் என்றுமாம்)
பக்தியை சாதனம் என்று இருக்கையும்
பக்தி யுபக்கிரம பூதமான ஸ்மரண சங்கீர்த்த நாதிகளும் (ஆதி -வந்தன ப்ரதக்ஷிணம் போல்வன)சாத்திய கோட்யந்தர் கதம்  என்று அறியாமையும்(இவையும் அவன் இன்னருளாலேயே வந்தவை என்ற நினைவு வேண்டுமே)
இதர பக்தி கலக்கையும் அநந்ய பக்தி கலவாமையும்
பிரபன்னனுக்கு சாத்திய பக்தி பிரபத்திகள்   இரண்டும் சமம் என்று இருக்கையும்(அவன் அருளாலே கிடைத்த பக்தி -ஸாத்ய பக்தி -அவன் உபாயமாக இருந்து ப்ராப்யமாக கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தியை அருளுவார் அன்றோ -இதுவே சாத்ய பக்தி -பிரபத்தி -காரணம் -சாத்திய பக்தி கார்யம் -கைங்கர்ய பிரார்த்தனை -முதல் நிலை -சாத்திய பக்தி -நடு நிலை -கைங்கர்யம் -இறுதி நிலை -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பரார்த்த கைங்கர்யம் -அவன் ஆனந்தத்துக்காக என்ற எண்ணம் வேண்டும் -சாதன பக்தி உபாசகனுக்கு-முற்றி போக்யம் அறிந்து ஸ்வயம் பக்தி நிஷ்டனாகலாமே -நிலைப்பாட்டில் மாறுதல் அல்ல -ஏறி வந்த வழிகள் வேறே தானே -)
பிரபன்னனுக்கு சாத்திய பக்தியில் பிரபத்தி நழுவி நிற்கும் என்று அறியாமையும்
பிரபத்தி நிஷ்டர் அபேஷிக்கும் பக்தி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
பகவத் கிருபையாலே ஆழ்வார்கள் லபித்த பக்தி (கைங்கர்யத்துக்கு)பூர்வ ஷண விருத்தியான சத்தா பிரயுக்த பத்தி என்று  அறியாமையும்
உக்த த்ரவ்யங்களில்  ஓன்று குறையாது ஒழிந்தால் பகவத் கிருபையை நினையாதே தம்முடைய த்ரவ்ய பூர்த்தியாலே இறே அவன் பிரசன்னனாவது என்று நினைக்கையும்
பக்தி உத்பத்தியும் பக்தி விவ்ருத்தியும் பரம பக்தியும் தயா சித்தம் என்று அறியாமையும்(என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித்தொழும் மனமும் தந்தாய் -இசைவித்து தாளிணைக் கீழ் வாழ்வித்தாய் -அதுவும் அவனது இன்னருளே-)
பக்தி பாக விசேஷ கார்யமான அநந்ய உபாயத்வ ஹானியாலே ஸ்வரூப ஹானி வாராது என்று அறியாமையும்
பக்தி தசையில் பண்ணும் மங்களா சாசனமே ஸ்வரூப அனுரூபம் என்று அறியாமையும் –என்கை –

62-பக்தி விரோதியைப் பரிஹரிக்கவே கைங்கர்ய மங்களா சாசனம் நிலை நிற்கும்

63-தாஸ்ய விரோதி -(தாஸ பூத ஸ்வத ஸர்வே -இயற்கையிலே அனைவருக்கும் தாஸ்யம் உண்டே-ஞாத்ருத்வம் -அறிந்த உடன் போக்த்ருத்வம்-ஸ்வதந்த்ரமும் கூடவே வரும் -)
ஸ்வ தந்த்ரனாய் இறுமாக்கையும்
அந்ய சேஷ பூதனாய் அனர்த்தப் படுகையும்
அதில் வர்ண நிபந்தனமாக தேவதாந்திர சேஷம் என்று இருக்கையும்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உத்பத்தி  நிபந்தனமாக மாதா பித்ரு சேஷம் என்று இருக்கையும்
கர்ம நிபந்தனமாக பர்த்ரு சேஷம் என்று இருக்கையும்
ஷூத்ர பிரயோஜனத்தை நச்சி ஒரு ப்ராக்ருதனுக்கு அடிமை புக்கு இருக்கையும்
ஷூத்ர விஷயத்தின் காலிலே விழுந்து சுணை கெடுகையும்
சர்வ வித பந்துவாய் சர்வ ரஷகனான சர்வ சேஷிக்கே சேஷம் என்று அறியாமையும்

(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு )
சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆகாமையும்
தத் இஷ்ட விநியோகம் ததீய சேஷத்வ பர்யந்தம் என்று அறியாமையும்
ஸ்வரூப க்ருத தாஸ்யமே குண க்ருத தாஸ்யம் விட பிரதானம் என்று அறியாமையும்
சேஷியினுடைய இஷ்ட அநிஷ்டமே தனக்கு இஷ்ட அநிஷ்டம் என்று அறியாமையும்
ஸ்வ விநாசத்துக்கு அஞ்சி சேஷிக்கு அதிசயத்தை விளையாது ஒழிகையும்
அவன் சேஷத்வத்தை அழிக்கும் போது பிற்காலிக்கையும்

போகத்தில் தட்டு மாறும் சீலம் -ஆட் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மா மாயன் -அவன் உகப்பே முக்கியம் -ஸ்வரூப நாஸம் பார்க்காமல் இருக்க வேண்டும் -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –
சேஷ வ்ருத்தியில் அந்வயியாது ஒழிகையும் வ்ருத்தி விரோதி  நடக்கையும்
ஆச்சார்ய சேஷத்வம் ஔ பாதிகம் என்று நினைக்கையும்
நித்ய சேஷி யானவனுக்கு நித்ய சேஷம் என்று உணராமையும்

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -ஆத்மாவும் சேஷத்வமும் நித்யம் -நித்ய ஸூரிகளைப் போல் –சம்பந்த ஞானமும் தான் மறந்து உணர்கிறோம்
தேவதாந்த்ரங்களையும் பித்ராதிகளையும் குறித்து தாஸ்யத்தை செய்கையும் –என்கை –

63-தாஸ்ய விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி நித்ய பிரதி சம்பந்தி ஜ்ஞானம் நிலை நிற்கும்

64-சக்ய விரோதி
தண்ணியரான சம்சாரிகளுடன் சக்யம் கொள்ளுகையும்
பெரியோரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம பிரதிபத்தியால் சக்யம் கொள்ளுகையும்
ஒருவருக்கு ஒருவர் சக்யம் கொண்டு உடன் கலந்து குறை காண்கையும்
ததீய புத்தியால் சர்வ ஜன மித்திரன் ஆகாமையும்
தச் சரீர பூதர் இடம் சாத்ரவம் கொண்டாடுகையும்(ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் -உணர வேண்டுமே)
ஸ்ரீ வைஷ்ணவர் உடன் கலந்து மடி தடவுகையும்
உபகார  பிரத்யுபகாரமாக ஸ்நேஹிக்கையும்(மடி தடவாத சோறும் -சுருள் மாறாது பூ -சுண்ணாம்பு கலசாத சந்தனம்-பிரதியுபகாரம் எதிர்பாராத -)
குற்றம் நற்றமாக தோற்றாமையும்
உகந்தாரை உகந்து பொடிந்தாரை பொடிந்து இருக்கையும்
ஆச்சார்ய விரோதிகளுடன் உறவு கொண்டாடுகையும்
ஆச்சார்ய பக்தர்களுடன் ஒரு மிடறாய் பரிமாறாமையும்-என்கை-

64-சக்ய விரோதியைப் பரிஹரிக்கவே சர்வ ஜன அனுகூல்ய ஜ்ஞானம் நிலை நிற்கும்

65-சமர்ப்பண விரோதி
அநாதி காலமே பிடித்து தத் ததீய விஷயத்தில் ஆத்மாத்மீய சமர்ப்பணம் பண்ண வொட்டாத அஹம் மமதையும்(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ உன்னுடைமையும் நீயே -மாம் மதீயஞ்ச நிகலாம் சேதன சேதநாஞ்ச)
ஆத்ம சமர்ப்பண இச்சை பிறந்த பின்பு மதியம் என்று ஓன்று உண்டாய் சமர்ப்பிக்கப் பெறாமையும்
ததீயத்தை மதியம் என்று பிரமித்து சமர்ப்பிக்கையும்
முன்புத்தை ஆத்மாத்மீய அபஹாரத்தோடு ஒக்கும் இப்போதைய ஆத்மாத்மீய சமர்ப்பணம் என்று அறியாமையும்
அவன் உடைமையை நாம் சமர்ப்பிக்கையாவது என்  என்று சிஷ்டாச்சாரமான சமர்ப்பணத்தைத் தவிருகையும்
தன்னுடையமையைத் தான் கொள்ளுகிறான் என்று சமர்ப்பியாமையும்
என்னது என்னும் துரபிமான தூஷிதமானவற்றை சமர்ப்பிக்கையும்
பூர்ண விஷயம் என்று அறியாமல் சாபேஷம் என்று பிரமித்து சமர்ப்ப்க்கையும்
அங்குத்தைக்கு இல்லாத ஒன்றை  சமர்ப்பிக்கிறோம் என்று இருக்கையும்(அப்ருத் ஸித்த விசேஷணமே -ஸமஸ்த சேதன அசேதனங்களும் –அந் நலனுடை ஒருவனையே நணுகினம் நானே -உள்ளத்தில் இருந்து என்றுமே விலக வில்லையே -)
நிரபேஷமாய் பூர்ண விஷயமாய் இருந்து இத் தலையை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்றே இவற்றை அங்கீ கரித்து அருளுகிறான் என்று அறியாமையும்
அவன் உபகரித்ததற்கு பிரத்யுபகாரமாக சமர்ப்பிக்கிறோம் என்று பிரமிக்கையும்
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-முயல்கின்றேன் உந்தன் மொய் கழல்க்கு அன்பையே -என்று பிரத்யுபகாரம் தேடிக் காணாமல் நெஞ்சாரல் பட்டுத் தடுமாறாமையும்-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணும் இடத்தில் என்னதான ஆத்ம வஸ்துவை நான் சமர்ப்பிக்கிறேன் -என்ற நினைவும் -என்கை –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

65-சமர்ப்பண விரோதியைப் பரிஹரித்தவாறே ஸ்வகீய ததீய ஜ்ஞானம் நிலை நிற்கும்

66-தர்சன விரோதி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ சங்கையும்
திருமூர்த்தி சாம்ய சங்கையும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ததீயத்வ ஆகாரத்தாலே ஆஸ்ரயணீயர் ஆனாலோ என்ற சங்கையும்
பௌத்த சைவ மாயாவாதி பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய குதர்க்க உக்திகளைக் கேட்டு பிரமிக்கையும்

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

சாமான்ய சாஸ்திர தாத்பர்ய நிஷ்டன் ஆகையும்(வர்ணாஸ்ரம தர்மம் பிரதானம் -விப்ரர் -கர்ம அனுஷ்டானம் -விசேஷ தர்மம் –பிரபன்னர் -பிரபன்ன காயத்ரியையும் அறிய வேண்டுமே)
நாம ரூபங்களை உடையராய் பாகவத் நிந்தை பண்ணுகையும்

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அற்று இருக்கையும்(பாஹ்ய -ஆந்தர லக்ஷணங்கள் -ஆத்ம குணங்கள் -சம தமாதிகள்)
த்வய அதிகாரி அல்லாமையும்
அருளிச் செயலில் அந்வயம் இல்லாமையும்
தத்வ ரஹஸ்ய பரிஷை இல்லாமையும்(நல்ல திருந்திய ஞானம் -ததீய பர்யந்தம் -அவர்கள் உகந்த கைங்கர்யம்-சிஷிக்கப்பட்ட ஞானம் வேண்டுமே)
சிஷ்டாசார நிஷ்டை இல்லாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்கியம் இல்லாமையும்
ஒரு ஜ்ஞாநாதிகர் அபிமானத்தில் ஒதுங்காது ஒழிகையும்
நம் தர்சனத்துக்கு விரோதிகளான பிரதி கூலரோடு சஹவாசம் பண்ணுகையும் –என்கை-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

66-தர்சன விரோதியைப் பரிஹரித்தவாறே ஆச்சார்ய அங்கீகாரம் நிலை நிற்கும்

67-ஆஸ்ரம விரோதி
குல தொல்லடியான தன்னை தத்தாஸ்ரமியாக (மட்டுமே)நினைக்கையும்(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -குல தொல் அடியேன் -)
உத்தமாஸ்ராமி என்று கர்விக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்லாத ஆஸ்ரமி ஸ்வ பசரில் கடை என்று அறியாமையும்
தத்தாஸ்ரமே அனுஷ்டானத்தில் தாஸ்ய அனுகுண அனுஷ்டான பிரதிபத்தி இல்லாமையும்
தத்தாஸ்ராம விபரீத உபசாரமும்
சரமார்த்தம் நெஞ்சில் பட்டும் சாமான்ய அனுஷ்டான த்யாக பீதி அனுவர்த்திக்கையும்
ஸ்வரூப அனுரூபமான ஆஸ்ரம விபரீத அனுஷ்டானமும்
அந்த ஸ்ரீ வைஷ்ணவத்வாதி ஆஸ்ரம விரோதியான கீழ் மேற் சொல்லும் விரோதங்களைப் பரிஹரித்து வர்த்தியாமையும்
ஆஸ்ரம மினுக்கம் கொண்டு ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணக் கூசுகையும்(பின்பு அழகு பெருமாள் ஜீயர் நம் பிள்ளைக்கும் நஞ்சீயர் பட்டருக்கும் கைங்கர்யம் செய்த விருத்தாந்தங்கள்)
ப்ரஹ்மசர்யாதி ஸ்வ ஆஸ்ரம விருத்த தர்மாசரணம் -என்கை –

67-ஆஸ்ரம விரோதியைப் பரிஹரிக்கவே பரம ஏகாந்தித்வம் நிலை நிற்கும்

68-ஜாதி விரோதி
அஜ்ஞர் ஜ்ஞாநாதிகர் பக்தி பரவசர் என்கிற ப்ரபன்ன ஜாதி தர்மமான மகா விஸ்வாச ஹானியும்
மனுஷ்யத்வ ஜாதிக்கு விருத்தமான தர்மா சரணமும்
ஸ்வ யத்ன பிரவ்ருத்தியும்
ப்ரபத்திக்கு ஸூத் யஸூத்திகள் தேடுகையும்(பெருமாள் விபீஷணன் -இருந்தபடியே அமையும் -ஸூத்தியும் அஸூத்தியும் தேட வில்லையே)
தாஸ்ய அனுகுண  நித்ய கர்ம த்யாகமும்
அநித்ய கர்மிகளுடன்(நித்ய கர்மங்களைச் செய்யாதவர்கள்) சஹ வசிக்கையும்
திரு மந்த்ரத்தில் பிறக்கையே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்று அறியாமையும்
தத் இதர மந்த்ரத்தில் உண்டான ஜன்மம் நிகர்ஷம் என்று அறியாமையும்
கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் என்னுமதே தனக்கு ப்ராப்தமான பிரசித்த வ்யபதேசம் என்று அறியாமையும்
க்ராம குலாதிகளால் வரும் வ்யபதேசம் அநர்த்த கரம் என்று அறியாமையும்
பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குசாதிகள் என்று இராமையும்
ஆஸாபாச பத்தரான சரகு தின்றிகளை கூடஸ்தர் என்று இருக்கையும்

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் —சூரணை -36-

ஸ்ரீ வைஷ்ணத்வ சித்தி கரமான சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆகாமையும்
அஹங்கார ஹேதுவாய் பாகவத அபசாரத்தை விளைக்கும் வர்ணம் த்யாஜ்யம் என்று அறியாமையும்
கான்றத்தைக் கவ்வப் பண்ணுமதாகையாலே பய ஜனகமாய் நைச்யம் பாவிக்க வேண்டும்படி அஹங்கார க்ரஸ்தமானது ஹீன ஜாதி என்று அறியாமையும்
பய ஹேதுவும் இன்றியே ஜன்ம சித்த நைச்ய முடைத்தாய்
ஹீன ஜாதி தோஷ அபஹந்த்ரி யானதுவே உத்தம ஜாதி என்று அறியாமையும்
ஹீன ஜாதியில் தோஷம் உத்தம ஜாதியான தர்சநாதிகளாலே அபஹ்ருதமாம் என்று அறியாமையும்
ஜாதிக் கொத்தை போகாமல் உத்தம ஜாதியுடன் கலந்து தூஷிக்கையும்
வேதகப் பொன்னான ஜாதி சம்பந்தத்தில் சங்கை அனுவர்த்திக்கையும்
விலஷண ஜ்ஞாநாதிகர் ஆச்சார்ய சத்ருசர் ஈஸ்வரனில் அதிகர் என்னும் பிரதிபத்தி பிறவாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ ஜாதிக் கொத்தையான தேவதாந்திர கந்த லேச ஸ்பர்சமும்
தர்சன ஹானியான ஜாத்யந்தர லஷண பரிக்ரஹமும் -என்கை
அத்யயன ஜ்ஞான அனுஷ்டானங்களாலே ப்ரஹ்மண்யம் ஆகிறாப் போலே சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லரானால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஆச்சார்ய ஹ்ருதயம் -37
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்  கடல் ஞாலத்துள்ளே -திருவாய் -5-5-11
நைச்சயம் ஜன்ம சித்தம் —

68-ஜாதி விரோதியைப் பரிஹரிக்கவே ததீய சேஷத்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்

69-ஆப்த விரோதி
பகவத் விஷயத்திலே யாதல் -பாகவத் விஷயத்திலே யாதல்-வாசியுடையாரை அநாதரிக்கையும்
அது இல்லாதாரை ஆதரிக்கையும்
ஸ்வகீய ஸ்வீகார நிஷ்டையும்(அதுவும் அவனது இன்னருள் -உனது அனுக்ரஹத்தாலேயே சரணம் என்றும் சொல்கிறோம்)
ஸ்வ பிரயோஜன பிரவ்ருத்தியும்
பாரதந்த்ர்ய ஜ்ஞானம் அற்ற கேவல சேஷத்வ ஜ்ஞானமும்(பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் என்கிறோம் லஷ்மண ஆழ்வான் சொல்ல வில்லையே)
போக்யத்வ பிரதிபத்தி விருத்தியான போக்த்ருத்வ பிரதிபத்தியும்
பாரதந்த்ர்ய போக்யதா தர்சனத்தில் பிறக்கும் ரசம் பரகத மாகாதே ஸ்வ கதமாகையும்
ஸ்வரூபம் பர கதம் ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய குண விசேஷங்களும் பரகதங்கள் என்று அறியாமையும்
அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணும் ஸூலப  விஷயத்தில் (அறியாதன அறிவித்த அத்தா -ஆச்சார்யர் விஷயத்தில்)பரத்வ புத்தி பிறவாமையும்
சரம பர்வத்தில் சரம சாத்திய புத்தி இல்லாமையும் -என்கை(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -உபாயமும் உபேயமும் ஆச்சார்யர் தானே-அவரை அனுபவித்து கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் -அத்ர பரத்ர சாபி இத்யாதி -)
திருமோகூர் ஆப்தன் -ஆத்தன் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-

69-ஆப்த விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்-

70-அநாப்த விரோதி
பிரபத்தி விரோதியான உபாயாந்தர நிஷ்டையும்
பிரதிகூலரோடு சஹவாஸம் பரிஹரணீயம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும் சில உபாதிகளால் (பிரதிகூலரோடு சஹவாஸம்)வரில் செய்வது என் என்கிற நினைவும்
ப்ராப்ய விரோதியான பிரயோஜனாந்தர நிஷ்டையும்
அநந்ய தைவத்வ விரோதியான தேவதாந்திர நிஷ்டையும்
(ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான)த்வயைக நிஷ்டா விரோதியான மந்த்ராந்தர நிஷ்டையும்
அநந்ய போக்யத்வ விரோதியான விஷயாந்தர ப்ராவண்யமும்
மோஷ சாஸ்திர விரோதியான பந்த சாஸ்த்ர ஆலோசநமும்
சரம கைங்கர்ய விரோதியான ஸ்வ தேக யாத்ரா பாரவஸ்யமும் -என்கை-

70-அநாப்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் தர்மம் நிர்மலத்வ ப்ரவ்ருத்தி நிலை நிற்கும்-

71-ஸித்தாந்த விரோதி(ஸித்த -அந்தம் -வேதத்தில் அருளிச் செய்தபடி இருக்கும் -இதுவே இறுதியான முடிவு -)
வைதிக ஸித்தாந்த விருத்தமான பிரமாண (நல்ல அறிவுக்கு கருவி பிரமாணம்)ஸ்வீ காரமும்
பிரத்யஷாதி (ஆதி -அனுமானம்)பிரமாண விலஷணமான  வேதத்துக்கு ஸ்வத ப்ராமாண்யம் (அபாதித பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதி)கொள்ளாமையும்

திரி எண்ணெய் குறைய தீபம் மாறுகிறது -பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிதமாகிறதே- ஆகாசத் தாமரை வாசனையாக இருக்கிறது – தாமரையான படியால் -அனுமானம் தப்பாகுமே

வேத உப ப்ரும்ஹணம் பண்ணும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் திருட ப்ராமாண்ய புத்தி இல்லாமையும்(ஸ்ருதி ஸ்ம்ருதி -மமை ஆஜ்ஜை)
உப ப்ரும்ஹ்யோ ப்ரும்ஹணங்களில் சாத்விக அம்சமே சாத்விக க்ராஹ்யமான பிரபல பிரமாணம் என்று அறியாமையும்
ராஜஸ தாமஸரை விஷயீ கரித்த சாத்விக அம்சம் சாத்விக அனுபாதேயம் என்று அறியாமையும்
அம்ச பேதம் இன்றி பரம சாத்விக பரிக்ருஹீதமான அருளிச் செயலே களங்கம் அற்ற பிரமாணம் என்று விஸ்வாசம் இல்லாமையும்
பூர்வாசார்ய வசனமே சாத்விகர்க்கு மிகவும் விஸ்வாச நீயம்  என்று இராமையும்
ஸ்ரீ மன் நாராயண உக்தமான ஸ்ரீ பாஞ்சராத்தில் ப்ராமாண்ய பிரதிபத்தி குறைகையும்
சர்வ பிரமாண பிரமேயம் பகவத் ஸ்வரூபாதிகள் என்று இராமையும்(எல்லா வேதங்களிலாயே நான் சொல்லப் படுகிறேன்-அஹமேவ -நான் மட்டுமே சொல்லப்படுகின்றேன் -என்னை அறிவிக்காமல் நிற்காதே –)
லௌகிக வைதிக விபாகமற சர்வ சப்தமும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம வாசகம் என்னும் வ்யுத்பத்தி பிறவாமையும்(யானே நீ என்னுடைமையும் நீயே -சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் -அசித் உடன் கூடிய சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் நீயே-இதம் சரீரம் -க்ஷேத்ரம் -எனது விளைநிலம் என்று-அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன் சாபி அஹம் சப்த கோசாரன் ஜீவாத்மா இதம் சொன்னாலே அசித் -உணர்வது ஜீவன் பார்ப்பது சரீரம் -இருவரும் எனக்கு சரீரம் -ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம -தஜ்ஜலான் -தத்வ த்ரய ஸித்தாந்தம்)
சர்வ சரீரி அவன் என்று அறியாமையும்(இதம் சர்வம் ஐததாத்ம்யம் -இதம் -தத் சத்யம் -தத் த்வம் அஸி -ஸ்வேதகேது சொன்னாலே அந்தராத்மாவரை போகும்-அந்த ப்ரஹ்மமே இந்த ப்ரஹ்ம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமே உன்னுள்ளும் இருக்கும் ப்ரஹ்மம்)
சாமாநாதி கரண்யத்தில் விசேஷண அம்சத்தை விட்டு வஸ்து மாத்ரம் கொள்ளுகையும்(நீலக்குடம் -உயரமான பருமனான ஸ்வேதகேது -விசேஷண அம்சம் விடக் கூடாதே -)
அது(சாமாநாதி கரண்யம்) அவன் ஏக (அநேக)விசேஷண விசிஷ்ட ஐகார்த்ய  பரம் என்று அறியாமையும்(அவன் ஒருவனே -அநேக விசேஷண விஸிஷ்ட ஐகார்த்த -இவற்றுடன் கூடிய ப்ரஹ்மம் ஒருவனே)
நாநாத்வ நிஷேதம் அப்ரஹ்மாத்மக வஸ்து விஷயம் என்று அறியாமையும்(நேக நாநா அஸ்தி -இங்கு பலவாக இருப்பதாகப் பார்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சரிக்கிறான் -அத்வைதி -தோற்றுகிறது -கானல் நீர் போல் -ஸாஸ்த்ர வாக்கியம் -சொல்ல வந்தது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாதே வஸ்துக்கள் கிடையாது சொல்ல வந்ததே –)
சம்ஹாரத்தில் சித் அசிந் நிஷேதம் தத் தத்  அநு குண சூஷ்ம தசா பத்தி விஷயம் என்று அறியாமையும்(நாம ரூப அநர்ஹம் –அசேதனத்துக்கு நாமம் ரூபம் உண்டு -ஜீவாத்மாவுக்கு ஸ்தூல தசையில் நாமம் ரூபம் இல்லையே -கர்மாதீனமாக அனுபவிக்கும் தசை தானே ஸ்தூலம் -ஆகவே தத் தத் -அவற்றுக்குத் தக்க)
சோதக வாக்யத்தில் குண நிஷேதம் ஹேய குண விஷயம் என்று அறியாமையும்(நிஷ் கலம் இத்யாதி -ஹேய குணங்கள் இல்லை-முக் குண வசமில்லையே -சுத்த சத்வம் -அப்ராக்ருதம்)
குண விதாயக வாக்யங்களில் கண் செம்பளிக்கையும்(உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக குண கணன்-இல்லை உண்டு -இரண்டும் சொல்லலாம் -)
விக்ரஹ நிஷேதம் கர்ம நிபந்தன தேக விஷயம் என்று அறியாமையும்(-இச்சா க்ருஹீத அபிமத தேஹம்இஷ்ட க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கர்ம நிபந்தம் இல்லையே -)
ச விக்ரஹத்வ பிரகாசக வாக்யங்களில் குருடனாகையும்
உபய லிங்க விசிஷ்டனாய் -விலஷண விக்ரஹ விசிஷ்டனாய்- ஸ்ரீ யபதியான -அகார வாஸ்யனே -சர்வ ஸ்மாத் பரன் என்று அறியாமையும்
அவனே சகல ஜகத் காரணம் என்று அறியாமையும்
பிரதான பரம அணுவாத கலுஷ் சித்தனாகையும்
நாராயண கார்ய பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ காரணத்வ சங்கையும்
த்ரிமூர்த்தி சாம்யமும்
சர்வ ரஷகனை ஒழிய வேறு ஒரு ரஷகர் என்று இருக்கையும்
ஸ்ரீ யபதியை ஒழிய சேஷ்யந்தரம் உண்டு என்று அறிகையும்
முமுஷூபாஸ்யமான பர ப்ரஹ்மத்தை அல்லது உபாஸ்யாந்தரம் உண்டு பதைக்கையும்
மோஷ பிரதானான புருஷோத்தமனை யல்லது ஸ்வ அபிமத பல ப்ரதன் இல்லை என்று அறியாமையும்
சூத்திர தேவதா பஜனம் பண்ணுகையும்
சூத்திர பல அபிலாஷி யாகையும்
அநந்த ஸ்திர பலமான மோஷ அபேஷை பிறவாமையும்
முமுஷூவாய் இருந்து வைத்து சம்சார ஜிஹாசை பிறவாமையும்
கர்ம சாத்திய பலம் அல்ப அஸ்தரம் என்று அறிந்து நிர் விஷண்ணனாய் ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாசை பிறவாமையும்
நாராயண அனுவாக சித்த நாராயண வாஸ்யனே பர ப்ரஹ்ம வாஸ்யன் என்று அறியாமையும்(அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –கர்மங்களைப் பண்ணி -அதனாலே அல்ப அஸ்திர பலன்களையே பெறமுடியும் என்றும் அறிந்து ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசை பிறந்து உத்தர மீமாம்ஸா ஆராய வருகிறான்)
கர்ம பாகம் அவனுடைய ஆஜ்ஞ்ஞா விநாயகம் என்று அறியாமையும்
ப்ரஹ்ம பாகம் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபவாதி ஜ்ஞாபகமாய்க் கொண்டு தத் ப்ராப்தி விஷய பிரகாசகமாய்த் தலைக் கட்டும் என்று அறியாமையும்
தத் ப்ராப்தி ரூப புருஷார்த்தம் -ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தம் என்று அறியாமையும்
சமாரஸ்யமே சாம்யா பத்தி என்று அறியாமையும்(கல்யாண குணங்களை சேர்ந்து அனுபவித்து -ஸஹ ஸ்ருதி -சா தர்ம்ய ஸ்ருதி -சாம்ய ஸ்ருதி -ரஸம் இருவருக்கும் -ஆனந்தத்தில் சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்)
ஸ்வரூப ஐக்ய ப்ரமம் அனுவர்த்திக்கையும்(ஆதிப் பரனுடன் ஒன்றாம் , என்னும் அல்லால் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-கூடிற்றால் நல்லுறைப்பு -அவன் ஸ்வாமி-நாம் சேஷிகள் உணர வேண்டுமே)
முக்தியில் கைங்கர்யார்த்தமான அநேக விக்ரஹ பரிக்ரகம் உண்டு என்று அறியாதே அசரீரத்வ ப்ரமம் அனுவர்த்திக்கையும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நித்ய விபூதியை ப்ராபிக்கை முக்தி என்று அறியாதே ஜீவன் முக்தி ப்ரமம் நடக்கையும்
கர்மம் இங்கே நசித்து இருக்கவும் பகவத் சங்கல்ப சக்தியாலே தத் கார்யமான ஸூஷ்ம சரீரம் விரஜா ஜல ஸ்பர்சத்தளவும் வரும் என்று அறியாமல் சங்கிக்கையும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனம் வேண்டாத விஹித பக்தி இத்தனை என்று இருக்கையும்
தத் சாதனம் பிரபத்தியே என்று அறியாமையும்(பக்தியே ஸ்வயம் பிரயோஜனம் -அதுக்கு சாதனம் அவனே)
பிரபத்தி சப்த வாச்யன் பிரபத்தவ்யனான எம்பெருமான் தானே சிஷியாமையும்
அதிகாரி விசேஷணமான சரண வரணத்திலே உபாய புத்தி நடக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் சரணம் புகுருகையும்
ஆச்சார்ய மாத்ரத்தில் புருஷகாரத்வ மாத்திர   பிரதிபத்தியும்
ஸ்வ தந்திர உபாய பிரதிபத்தி பிறவாமையும்
உபாய உபேய த்வித்தவ பிரதிபத்தியும்
பகவானுடைய ஜகச் சரீரத் வாதிகளை இசையாத மதாந்த்ரஸ்தரை விரும்புகையும்(துவைதிகள் -சரீராத்மா பாவம் இசையாமல் ஸ்வாமி தாஸ்ய பாவமே உண்டு என்பர்) –என்கை-

71-சித்தாந்த விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ த்ருட பிரமாண நிஷ்டை நிலை நிற்கும்

72-தத்வ விரோதி

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,–இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,-ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான-ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்

போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூப தத்வம் அல்லது வேறு தத்வம் இல்லை என்று அறியாமையும்-கோடி த்ரய அதீனனான உதாசீனன் என்றும் ஒருவன் உண்டு இருக்கையும்-
வைசேஷிகன்  சொல்லுகிற த்ரவ்யாதிகள் ஆறு தத்வங்கள் என்று கலங்குகையும்
நையாயிகன் சொல்லும் பிரமாணாதிகள் பதினாறு தத்வம் என்று கலங்குகையும்
சாங்க்யன் சொல்லுகிற மூல பிரகிருதி முதலான இருபத்தஞ்சு தத்வம் என்று கலங்குகையும்
பதஞ்சலி சொல்லுகிற இருப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(யோக மார்க்கம் -ப்ரஹ்மம் நிமித்த மாத்திரமே-உபாதானம் இல்லை என்பர்)
பாசுபதன் சொல்லுகிற முப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(சிவ சக்தி ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சதா சம்ஹாரம் ஈஸ்வர திரோதானம் -இத்யாதி ஐந்து சுத்த தத்வம் என்பர் அசுத்த 24-சுத்த அசுத்த ஏழும் –)
சார்வாகன் சொல்லுகிற ப்ருதிவ்யாதி பூதமே தத்வம் என்று கலங்குகையும்
பௌத்தன் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தாதிகள் தத்வம் என்று கலங்குகையும்-ஜைனர் சொல்லுகிற தர்ம அதர்மாதிகள் தத்வம் என்றும் கலங்குகையும்-மாயாவாதி சொல்லுகிற நிர்விசேஷ சின் மாத்திரமே தத்வம் என்று கலங்குகையும்-
பாட்டப் பிரபாகரர்கள் போலே ஆத்மாக்களை ஒழிய ஈஸ்வர சத்பாவம் இல்லை என்று கலங்குகையும்
குண த்ரய சாம்ய அவஸ்தையில் மூல பிரகிருதி என்று கலங்குகையும்
அஹங்கார கார்யமான இந்த்ரியங்களை பூத கார்யம் (நையாயிகர் போல்)என்று கலங்குகையும்
கர்மேந்த்ரியம் இல்லை என்று கலங்குகையும்(மீமாம்ஸகர் ஞான இந்திரியங்கள் இல்லை என்பர் )
மனஸ்ஸூ அனுத்பந்தம் நித்யம் என்று கலங்குகையும்-தன் மாத்திரைகள் ஒழிய பூதங்கள் இல்லை என்று கலங்குகையும்-
அவை தான் இந்த்ரிய பேதத்தாலே தூரம் என்று கலங்குகையும்
தன் மாத்ரைகள் ஐந்தும் பூதாதி ஒன்றின் (தாமஸ அஹங்காரத்தின்)நின்றும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதியின் நின்றும் சப்த தன்மாத்ரையும் ஆகாசமும் பிறக்கும்
சப்த தன்மாத்ரையின் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவும் பிறக்கும் என்றும்
இப்படி பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் உத்தர உத்தர தன் மாத்ரமும் தத் விசேஷமும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதி யின் நின்றும் (சப்த தன்மாத்திரை பிறந்து சப்த தன் மாத்ரையில் இருந்து) ஆகாசம் பிறக்கும் -அவ் வாகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை பிறக்கும்
அந்த ஸ்பர்ச தன் மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
என்று இப்படி சப்த தன் மாத்ரை ஒழிந்த (எல்லா)தன் மாத்ரைகளும் -பூமி ஒழிந்த(நான்கு) பூதங்களுக்கும் பூத கார்யத்வ தன் மாத்ரா காரணத்வம் உண்டு என்று கலங்குகையும்
தன் மாத்ரா க்ரமத்தை அநாதரித்து பூதாத் பூதாந்தர உத்பத்தி உண்டு என்று கலங்குகையும்
இந்த ஸ்ரௌத மதத்திலும் பூத வாசக சப்தம் தன் மாத்ரா லஷண ஆகாசாதி பூதங்களை விவஷிக்கிறது என்கிற ஹிருதயம் அறியாமையும்
பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் தத் விசேஷங்களும் உத்தர உத்தர தன் மாத்ரைகளும் பிறக்கும் என்கிற சிருஷ்டி க்ரமமும் பிரமாண சித்தம் சிஷ்ட பரிக்ருஹீதம் என்று அறியாமையும்
ஆவரண அபாவம் ஆகாசம் என்றும் (நையாயிகன் போல்)நித்யம் நிரவயவம் விபு என்று கலங்குகையும்
திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் என்று கலங்குகையும்
காலத்தை இல்லை என்று கலங்குகையும்
வாயு அப்ரத்யஷம் என்று கலங்குகையும்
அண்டத்துக்கு உள்ளும் புறம்பும் உண்டான பிரகிருதி பரிணாமம் ஒரு சேதன(பரமாத்மாவின்) சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(அண்டத்துக்கு உள்ளே -நான்முகன் -குயவன் போல்வார் -சேதனன் -மூலம் பரிணாமம் -புறம்பே -மஹத் -அகங்காரம் போல்வன -பரம சேதனனுடைய ஸங்கல்பம் அடியாகவே –)
ஜகத் பரிணாமம் அத்வாரக பகவத் சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(ஏஷ -ஆத்மா -பரமாத்மாவையை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மாக்கள் -ஐததாத்மா)
சகல வஸ்துக்களையும் பகவதாத்மகம் என்று அறியாமையும்
பகவதாத்மகத்வாத் சமஸ்த பதார்த்தங்களும் அனுகூலம் என்று அறியாமையும்
பிரதி கூலங்களாகத் தோற்றுகை தேஹாத்மா   ப்ரமம் என்று அறியாமையும்(அனைவரும் அவனுக்கு சரீரம் -ஆகவே அவனுக்கு அனுகூலம் -ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அனுகூலம் -சரீர பாகம் ஓன்று மற்ற ஒன்றுக்கு அனுகூலம் தானே -நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -)
நித்ய விபூதி நித்ய ப்ரஹ்ம நித்ய இச்சையால் நித்யம் என்று அறியாமையும்
அப்ராக்ருத அசித் பரிணாமம் கேவல பகவத் இச்சா சித்தம் என்று அறியாமையும்
திவ்ய பூத பஞ்சகங்களுக்கு இல்லாத ஸூஷ்ம ஸ்தூல அவஸ்தா சங்கல்பங்களையும்
அங்கு தன் மாத்ரம் உண்டு என்கிற ப்ரமம் சாந்தத்வ கோரத்வாதி ராஹித்ய மாத்ரம் அத்தனை என்று அறியாமையும்(குணங்கள் தன் மாத்ரையில் வெளிப்படையாகத் தெரியாமல் அநுத்பூதமாக-சாந்தமாக — இருக்கும் அங்கு-இங்கு இப்படி இரண்டு நிலைகள் இல்லையே)
பஞ்சக சக்தி மயத்வமே அப்ராக்ருத பகவத் விக்ரஹ உபாதானம் (பரம சுடர் உடம்பாய் அங்கு -அழுக்கு பதிந்த உடம்பு இங்கு-பஞ்ச-சக்தி: பரமேஷ்டி, புருஷா, விஷ்வ, நிவ்ருத்தி மற்றும் சர்வ)என்று அறியாமையும்
பிரகாசகத்வ குணங்களைப் பற்ற ஷாட் குண்ய விக்ரஹம் என்கிறதுக்கு கருத்து அறியாமையும்(ஞான பல ஐஸ்வர்ய தேஜஸ் சக்தி வீர்யம் -ஸ்வரூப குணங்கள் -இவற்றை ஷாட் குண்ய -திவ்ய மங்கள விக்ரஹம் -விசேஷ க்ரஹணம் -விக்ரஹம் இங்கு -பிரகாசபடுத்த இவ்வாறு குணங்களும் வேண்டுமே –)
ஜாதி ஒன்றாகிலும் நித்ய ஸூரி விக்ரஹத்தை பற்ற தேஜஸ்ஸாலே வேறு பட்டு இருக்கும் அசாதாராண விக்ரஹம் என்று அறியாமையும்
அவதார விக்ரஹங்களும் அப்ராக்ருதங்களாய் இருக்க சைவாதி ப்ராக்ருத ஆகார தர்சனம் ஸ்வாகாரவிதானம் பண்ணுகிற பகவத் இச்சா காரியம் என்று அறியாமல் ப்ராக்ருத்வ சங்கை நடக்கையும்(சோதி வெள்ளத்து எழுவதோர் உருசகல மனுஷ நயன விஷயாதாங் கத-ஆகத -ஆக்கிக்கொண்டு -காட்டவே காண்கிறோம்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய்)
சிதசித்துக்கள் அடங்க பகவச் சரீரம் என்று அறியாமையும்
அதில் பகவச் சரீரமான ஆத்மாவை தேக இந்த்ரியாதிகள் என்று பிரமிக்கையும்
ஆத்மாவை ஜ்ஞான மாத்ரம் என்று பிரமிக்கையும்
சைதன்யம் ஆகந்துகம் என்று பிரமிக்கையும்
பரதந்திர ஸ்வரூபத்தை ஸ்வ தந்த்ரம் என்று பிரமிக்கையும்
பகவச் சேஷமான ஸ்வரூபத்தை அந்ய சேஷம் என்று பிரமிக்கையும்
மிதுன சேஷம் என்று அறியாமையும்(திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -)
ததீய சேஷம் என்று உணராமையும்
சர்வ சரீரியான சர்வ சேஷி சர்வேஸ்வரன் என்று அறியாமையும்(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மான தாரயிதும் நியந்தும்-சர்வ சரீரியாக இருப்பதால் சர்வ சேஷீ -ஸர்வேஸ்வரேஸ்வரன்)
அவனுக்கு ஸ்வா தந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இராமையும்
அத்தாலே பலித்தது ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்று அறியாமையும்(அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -)
அது நித்யம் என்று அறியாமையும்
அதுக்கடி பிரணயித்வம் என்று அறியாமையும்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
அதுக்கடி கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று இவர்களுக்கு ஜனனியான பிராட்டி பக்கல் பண்ணின ப்ரணய பரிணதி என்று அறியாமையும்

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப்பெற்று. இனிப்போக்குவனோ?”
அவள் அவனுக்கு அபிமதையாய் -அனுரூபையுமாய் -நிரூபகையுமாய் -நித்ய அனபாயிநியுமாய் -சேஷ பூதையுமான -மஹிஷியான ஜகன் மாதா என்று அறியாமையும்
(ஆத்ம)ஜாதி ஒன்றாகிலும் த்ரிவித ஆத்ம வ்யாவ்ருத்தை என்று அறியாமையும்(நித்யர்களிலும் வேறுபட்ட விசேஷ-விஷ்ணு பத்னீ)
இரண்டு ஆஸ்ரயத்தில் நில்லாத சர்வ ஈஸ்வரித்வம் இவளுக்கு உண்டு என்கையும்(ஸர்வேஸ்வரத்வம் இரண்டு இடத்தில் இருக்க முடியாதே)
ஸ்ரீ ஸ்ரீசர்களுக்கு விக்ரஹ பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை என்கையும்
பகவத் ஸ்வரூபம் உபய ஆகாரமுமாய் இருக்கும் என்கையும்-பகவத் ஸ்வரூபம் ஒழிய லஷ்மீ ஸ்வரூபம் தான் இல்லை என்கையும்
ஜ்ஞான குணகையான இவளை ஜ்ஞான சக்த்யாதி குண கோடியில் என்கையும்(ஆத்மா ஞானமயம்-ஞானம் உடையதாய் இருக்கும் -இங்கு ஆத்மா த்ரவ்யம் – -குணத்துக்கு குணம் இருக்காதே -ஞானத்துக்கு ஞானம் இருக்காதே -)
இவள் நிரூபகமான அஹந்தையாய் அவன் நிரூப்யமான அஹமர்த்தமாய் இருக்கும் என்று அறியாமையும்(அஹந்தை -தானான தன்மை பிராட்டிக்கு இருக்கும் -அஹமாய் அவன் இருப்பான்)
இவள் அணு ஸ்வரூபையாய் இருந்தும் -ஒரு சக்தி விசேஷத்தாலே (யதா சர்வகதா விஷ்ணு இத்யாதி -விஷ்ணு புராணம் –பத்னியத்வத்தால் பகவத் ஸங்கல்பத்தால்)பரம மஹத் பரிமாண விபு ஸ்வரூபத்தை தழுவிக் கொண்டு இருக்கும் என்று அறியாமையும்
ரசம் திருப் பாற்கடல் எங்கும் உண்டானாப் போலே பகவத் ஸ்வரூபாதிகள் எங்கும் உடன் இருக்கும் என்று அறியாமையும்(மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப் போலே -உப்புக்கட்டி முழுவதும் உப்பாய் இருக்குமா போலே- இவள் அவன் உடன் எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் பிரியாமல் இருப்பவள் அன்றோ)
இப்படி எங்கும் எப்போதும் உடன் இருக்கிறது தேச கால நிரபேஷமாக சேதனருக்கு புருஷீ கரிக்கைக்கு என்று அறியாமையும்
இப்படி இருக்கிற இவளை யிட்டு ஸ்ரீ யபதி என்றே பகவத் ஸ்வரூபத்தை நிஷ்கரிக்க வேணும் என்று அறியாமையும்
பகவத் ஸ்வரூபம் உணர் முழு நல ஜ்ஞான ஆநந்தைக   ஸ்வரூபமாய்
ஹேய பிரதிபடமாய்
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வரூபதோ குண தச்ச விபுவாய்
அவாப்த சமஸ்த காமத்வாத் நிரபேஷமாய் இருந்தும் அகில ஜகதுதய விபவ லய ஹேதுவாய் லீலா ரசம் அனுபவித்தும்(இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)
நித்ய விபூதியிலே திருமா மணி மண்டபத்திலே -திவ்ய சிம்ஹாசனத்திலே -திரு வனந்த ஆழ்வான் மேலே ஸ்படிக கிரி தடத்திலே மின் கொடிக்களுடன் காள மேகம் படிந்தால் போலே சியாமள கோமள விக்ரஹ பிரகாசகைகளான நாச்சிமார் உடன்
ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அயர்வறும் அமரர்களுடன் அபரிமித போக ரசத்தை அனுபவித்து உபாசக அனுக்ரஹார்த்தமாக வாசுதேவாத் யாகாரேண வ்யூஹித்து
ஒரு படுக்கையிலே உறங்குகிற சம்சாரியை உணர்த்தி ஒரு நீராகக் கலந்து அனுபவித்து கட்டிலிலே வாங்க ஆசைப்பட்டு
தத் தத் சஜாதீய வேஷம் கொண்டு நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் விபவத்தைக் காட்டியும்
ஒருவரும் எட்டுப் படாமையால் விஷய ப்ராவண்யம் மிக்கு இனிக்களவிலே பிடித்துக் கொள்வோம் என்று

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
பிறர்க்கும் காண ஒண்ணாத படி கரந்த சிலிடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து கட்கிலியாயும் ஒரு விஷயம் லபியாமல் முசித்து
வேட்க- ஆற்றாமை மிக்கு- மூச்சு விடுதல் செய்ய மாட்டாதே- ஆராமங்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாய்

நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே.
ஆள் பார்த்து அலமாக்கும்படி விஷய சபலனாய் கிடப்பது ஒரு பரத்வம் என்று அறியாமையும்
பரத்வம் நித்ய போகமாய் இருக்கும் அத்தனை -அவதாரம் பத்த முக்த நித்ய விபாகம் அற சர்வ ஜன போக்யம் என்று அறியாமையும்
முக்ய அவதாரங்களில் தத் சஜாதீயத்வ புத்தியும்
கௌண அவதாரத்தில் பூஜ்யத்வ புத்தியும்
அர்ச்சாவதாரத்தில் அசக்தத்வ புத்தியும்
பரம குருவான ஆச்சார்ய அவதாரத்தில் அபூர்ணத்வ புத்தியும்
பரத்வத்தில் அவதாரம் அதிகம் என்று அறியாமையும்
சரம அவதாரமான ஆச்சார்ய விக்ரஹத்தில் அப்ராக்ருத்வ புத்தி நடவாமையும் –என்கை-

(ஆத்மா இயற்கையாகவே ஞான ஆனந்த மயமாக இருப்பதால் கர்ம நிபந்தனமாக விரோதிகள் அழுக்குகள் போக -தானே ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும் -உண்மையான ஞானம் வர தானே பரிஹரிக்கும் -மேல் பரிஹரிக்க இந்த பலன்கள் கிட்டும் என்று நிகமித்து அருளுகிறார்)

72-தத்வ விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்

73-பும்ஸ்த்வ  விரோதி –

(ஸ்த்ரீத்வம் -பர தந்த்ர அர்ஹதை -மனு பகவான் -பெண் வேஷம் -இயற்கையில் ஸ்வ தந்த்ரம் இல்லாததால் ஸ்த்ரீத்வ விரோதி கிடையாது -ஆண் உடை உடுத்த பெண் -புருஷன் என்று நினைப்பது விரோதி தானே -)
பறவை ஏறும் பரம புருடனான புருஷோத்தமன் ஆனவனை ஒழிய ஸ்திரீ ப்ராயரான தன்னை புருஷன் என்று நினைக்கையும்
புருஷ சரீர பூதர் ஆகையாலே புருஷர் எனப்படும் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பும்ஸ்த்வ புத்தி நடக்கையும்
அவனுடைய  பும்ஸ்த்வ பிரதியோகியான ஸ்த்ரீத்வமே தனக்கு ஸ்வதஸ் சித்த வேஷம் என்று அறியாமையும்
தோல் சட்டையான புருஷ வேஷ பரிகிரஹம் ஆகந்துகம் அநித்யம் என்று அறியாமையும்(மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று-ஸ்வதஸ் ஸித்தம் -கடி மா மலர்ப் பாவையோடு உண்டான சாம்ய ஷட்கம்)
தான் அநாதி காலமே பிடித்து மாறி மாறி பரிக்ரஹித்த ஸ்திரீ புருஷ வேஷம் இரண்டும்(ஆத்மாவுக்கு) நிலை நின்ற வேஷம் இல்லை என்று அறியாமையும்
பகவத் பாரதந்த்ர்ய ரூபத்வமே நிலை நின்ற ஸ்வரூப ப்ராப்த வேஷம் என்று அறியாமையும்
இந்த பாரதந்திர ஜ்ஞானம் பிறந்து ஸ்வா தந்த்ர்ய ரூப பும்ஸ்த்வ பிராந்தி அனுவர்த்திக்கையும்
இப்படி பர ஸ்திரீயான தனக்கு ஸ்வ ஸ்திரீ தேடி உழலுகையும்
எல்லாரும் பர ஸ்திரீ என்னும் ஜ்ஞானம் பிறவாமையும்(ராஸக்ரீடை -அவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்ற அனைவரும் ஸ்த்ரீ பிராயர் -அவன் அவர்களுக்கு அந்தராத்மாவாக இருந்து சத்தையும் நியமனத்தையும் பண்ணி அருளுகிறான் அன்றோ -)
தானும் தத் ததீய கைங்கர்ய அர்த்தமாக பரிக்ரஹித்த அவளும் ஸ்ரீ யபதியான பரம சேஷிக்கு  பெண் அடிமை என்று இராமையும்
தன்னை ஆண் அடிமை என்று இருக்கையும்
இந்த ஜ்ஞானம் பிறந்த பின் ஸ்திரீ போலே சஹ சயியாமையும் பும்ஸ்த்வ அபிமான பிரமராகம் அனுவர்த்திக்கையும்
ஆண்களாய் இருக்க பெண்களாக பாவித்து பகவத் விக்ரஹத்தை காங்ஷித்து ராகாந்தராய் துடித்த ஆழ்வார்கள்
பாசுரங்களை ஓதியும் கேட்டும் புனர் பவ பிரமம் விடாதே
இதர விஷயங்களிலே ஹேய சரீரங்களை உகந்து ராகாந்தராய்த் துடிக்கையும்(அத்தாலே இவன் அஸ்த்ரைணன் என்றும் ஸிஷ்ட கர்ஹிதனாகையும்)
ஆஸ்திக நாஸ்திகன் என்று ஆச்சார்யன் கை விடும் படியாய் விடுகையும்
சார அசார (சேஷத்வ பாரதந்தர்யமே சாரம் -ஆண் பெண் சரீரம் பார்ப்பது அசாரம்)விவேகம் பண்ண அறியாத படி சிஷ்ட கர்ஹிதனாகையும் -என்கை  –

73–பும்ஸ்தவ விரோதியைப் பரிஹரிக்கவே பத்நீ சாம்யம் நிலை நிற்கும் –

74-அந்திம தசா விரோதி
க்ருக ஷேத்திர ப்ராவண்யம் புத்திர தாரா ப்ராவண்யம் சரீர அர்த்த ப்ராவண்யம் பின்னாடி(பின் தொடர்ந்து)
இவற்றை விட்டுப் போகிறோமே என்று கண்ண நீர் கலங்குகையும்
ஷேத்ராணி மித்ராணி என்கிறபடியே அவை பிரதிகூலத்வேன திருஷ்டி விஷயமாய்த் தோற்றாமையும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-(மா கம் -பரமாகாசம்)என்கிற ப்ராப்ய பூமியில் ப்ராவண்யம் அற்று இருக்கையும்
கொடு உலகம் காட்டலே என்று த்யாஜ்ய பூமி காண வெருவாமையும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்று சரீர விஸ்லேஷ காலம் எப்போது லபிக்கும் என்று மநோ ரதம் அற்று இருக்கையும்
உன்னை எந்நாள் வந்து கூடுவன் -என்கிற பரம பதத்தில் இருப்பைக் கண்டு அல்லது தரியாத (பகவத்)பரத்வ ப்ராவண்யம் பரிபக்வம் ஆகாமையும்
மருள் ஒழி நீ -என்கிற அர்ச்சாவதார ப்ராவண்யம் அனுவர்த்திக்கையும்

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அந்திம தசையாய் இருந்து இப்போது எனக்குத் தஞ்சமேது என்று தளும்புகையும்
தஞ்சம் என்கிற நினைவு குலைகையே தஞ்சம் என்று அறியாமையும்
காஷ்ட பாஷாண  சந்நிபம் -என்று அத் தசையில் சைதன்யம் அற்று இராமையும்
அவஸ்ய அபேஷித தாதாத்விக ஸ்ம்ருதி சித்த சாதன நிஷ்டா ஹானியைப் பிறப்பிக்கும் என்று அறியாமையும்
பகவத் உன்மிஷிதையான அவர்ஜ நீய ஸ்ம்ருதி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
அப்போது ஆச்சார்ய நாம உச்சாரணம் அவசியம் வேணும் என்று இருக்கையும்
பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய நாம உச்சாரணம் தத் பிரயாண பாதேயமாய்க் கொண்டு தாரகமாம் இத்தனை என்று அறியாமையும்
அப்போது பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய பதாம் போருஹ  த்யானத்தில் சாதனத்வ புத்தி நடக்கையும்
பரம ஆப்தனான அவனே மார்க்க பந்து என்று அறியாமையும்
அவித்யாதி விரோதி நிவ்ருத்தியிலும் அர்ச்சிராதி கதி ப்ராப்தியான இஷ்ட ப்ராப்தியிலும் ஸ்வ பலித்வ புத்தி நடக்கையும்
விரோதி நிவர்தகனுமாய் இஷ்ட ப்ராபகனுமான ரஷகனான சேஷிக்கே தத் பலித்வம் உள்ளது என்று அறியாமையும்(ப்ராப்தாவும் ப்ராபகனும் பேற்றுக்கு உகப்பானும் அவனே என்ற எண்ணம் வேண்டுமே-நாம் அவன் அனுபவிக்கும் போக்யமான பொருள் என்ற எண்ணம் வேண்டுமே -)
இஷ்ட அநிஷ்டங்களில் மதீயத்வ புத்தி நடக்கையும்
அது (மதீயம்)அஹம் அர்த்த அபிமானியான பரம சேஷியது (யானே நீ என்னுடைமையும் நீயே)என்று அறியாமையும்
ஜ்ஞான பிரதனான நித்ய சேஷியே மோஷ ப்ரதன் என்ற துணிவு அற்று  இருக்கையும்  -என்கை-

74-அந்திம தசா விரோதியைப் பரிஹரிக்கவே பிரபன்னத்வம் நிலை நிற்கும் –

75-அவிஸ்வாச விரோதி
விஸ்வசிக்கக் கூடாததான சம்சாரிகள் இடத்திலும்
தேவதாந்த்ரங்கள் இடத்திலும்
சாமான்ய சாஸ்திரங்கள் இடத்திலும் விஸ்வசிக்கை -என்கை-

(தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் -அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே -என் நான் செய்கேன் –களை கண் மற்றிலேன் -)

75-அவிஸ்வாச விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்தியிலும் விசேஷ சாஸ்திரத்திலும் விஸ்வாசம் நிலை நிற்கும்

76-சங்க விரோதி –
பகவஜ் ஜ்ஞானம் பிறந்தவன் மதாந்தரஸ்தர்களான
சைவாதிகளோடு உறவு பண்ணுகை-என்கை –

76-சங்க விரோதியை பரிஹரிக்கவே பகவத் விஷய ஜ்ஞானம் நிலை நிற்கும்

77-சந்தான விரோதி –
தனக்குப் பிறந்து இருந்து
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் தூஷகனான தன் புத்ரனைத் த்யாஜியாமல் இருக்கை
ஸ்ரீ வராஹ புராண வசனம் -மாஜ நிஷ்ட  ச நோ வம்சே  ஜாதோவா த்ராக் விஸ்ருஜ்யதாம்
ஆஜன்ம மரணம்  யஸ்ய வாஸூ தேவோ ந தைவதம் –

77-சந்தான விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் நிலை நிற்கும்

78-வர்ண விரோதி
ஸ்வ ஸ்வ வர்ணங்களுக்கு அனுசிதங்களான க்ருத்யங்களைச் செய்கை -என்கை -(நமக்கு என்று விதித்த தர்மங்களைப் பற்று அற்று கைங்கர்ய ரூபமாகச் செய்வதே கர்ம யோகம்)

78-வர்ண விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம வர்ணமான சேஷத்வம் நிலை நிற்கும்

79- ஜப விரோதி –
மூல மந்த்ராதிகளை ஜெபிக்கும் இடத்தில்
தத்தத் மந்திர தேவதா ரூப த்யாநத்தை விட்டு
விஷயாந்தர தேவதாந்தரங்களை நினைக்கை -என்கை-

திருமந்திரம் -நாராயணன் -விஷ்ணு -வாஸூ தேவ-மூன்றும் மூன்று வியாபக மந்த்ரங்களை ஜெபிக்கும் இடத்தில் த்யானிக்க வேண்டும் அன்றோ

79-ஜப விரோதியைப் பரிஹரிக்கவே த்வய அனுசந்தாம் நிலை நிற்கும்

80-ஆராதன விரோதி
ஸ்வயம் பிரயோஜனமான பகவத் ஆராதனத்தில் பலாந்த்ர ஆகாங்ஷையும்
ஜாதி யாஸ்ரய நிமித்த துஷ்ட வஸ்து நிவேதனம் பண்ணுகையும்
சாஸ்திர நிஷித்த மத்ய (கள்)மாம்சம் முதலானதுகளை நிவேதனம் பண்ணுகையும் –என்கை-

80- ஆராதன விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஆராதனம் நிலை நிற்கும்-

81-பதித்வ விரோதி –
பதிம் விஸ்வஸ்ய என்று ஒதப்படுகிற பகவான் உடைய பதித்வத்துக்கு விரோதியான
பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி ஸூரபதி தனபதி  சேனாபதி கணபதிகள் உடைய பதித்வத்தை நினைக்கையும் -என்கை -(பரன் திறமன்றி பல்லுலகில் தேவர் மற்றில்லையே-பதித்தவம் பலான ஸாமர்த்யம்)

81-பதித்தவ விரோதியைப் பரிஹரிக்கவே ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்

82-வர்ஜநீய (விடத் தக்க)விரோதி
சாஸ்திரங்களிலே  நிஷித்தங்களான தாமச ஆகாரங்களான மத்ய மாம்சாதி போஜனம் செய்கையும்
சாத்விக ஆகாரங்களையும் சாத்விக சாஸ்திரங்களையும் சாத்விக அனுஷ்டானங்களையும் த்யஜிக்கையும் -என்கை

82-வர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விக ஆகார சாத்விக சாஸ்திர சாத்விக அனுஷ்டானம் நிலை நிற்கும்

83-அவர்ஜ நீய (விடக் கூடாத)விரோதி
முமுஷூ தசையில் அப்ராப்த புத்தி மறந்தும் பின்னாட்டும் அர்த்த காம த்ருஷ்ணையும்
அதடியான பாகவத அபசாரமும்
பிராக்ருத வஸ்துக்களில் போக்யத்வ பிரமமும்
முக்த தசையில் பகவத் ப்ராப்தியில் உகப்பு தன்னதாகையும்
அதுக்கடியான போக்த்ருத்வ புத்தி நடக்கையும்
அதடியாக பரைக போக்யத்வ புத்தி குலைகையும்
அத் தசையில் அத்மி என்று போக்த்ருத்வம் உண்டாய்  இருக்க அது பர ப்ரேரிதமாய் பர ப்ரீதி வர்த்தகமுமான பரம போக்யமாம்படி அவன் விநியோகிக்கையாலே விரோதி அல்லவாய் விட்டது

சாப்பிடுகிறவன் -அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -மற்றை நம் காமங்கள் மாற்று –அவன் ஆனந்தம் உகப்பைக் கண்டு உகக்க வேண்டுமே -அப்பொழுது தான் போக்யமாய் இருந்த நாம் பரம போக்யமாவோம்-
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -திரு விருத்தம் -33-என்று
அத் தசையிலும் ஸ்வாதீன ஸ்வார்த்த பிரதிபத்தி ரூப விரோதி புகுராதபடி படிந்ததும் பரமனுடைய நித்ய சங்கல்பம் இறே

அன்றிக்கே
அவர்ஜ  நீய விரோதியாவது
இங்கோடு அங்கோடு வாசியற ஆச்சார்ய கைங்கர்ய விரோதியான பகவத் சௌந்தர்யம் ஆகவுமாம்
அத்தை சாத்மிப்பித்து இறே அவனும் கைங்கர்யம் கொள்ளுவது
ஜன்மாந்தரீய கர்மங்களாலே உத்பன்னங்களாக நிஷித்த  ஆசரணங்களும்- என்கை –

(அநக -ராம பக்தியாகிய குற்றம் இல்லாத சத்ருக்ந ஆழ்வான்-)

83-அவர்ஜ  நீய விரோதியைப் பரிஹரிக்கவே சரீர அவசான பிராப்தி நிலை நிற்கும்

இப்படி உடையராலே சாதிக்கப்பட்ட 83 விரோதிகளையும் நன்றாகத் தெரிந்து பரிஹரிக்கும் க்ரமத்திலே பரிஹரித்து பற்றுமவைகளைப் பற்ற யதாவத்தாக ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு நிர்ப்பரராய் இருந்த வங்கி புரத்து நம்பி பின்புல்லாரும் இவ்விரோதிகளை நன்றாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படி அவற்றுக்கு வியாக்யானம் அருளிச் செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களான முமுஷுக்கள் அனுஷ்டித்துப் போரும்படிக்கு ஆச்சார்ய ஆஜ்ஜை இட்டு அருளிச் செய்தார்

இவ்விரோதிகள் அடங்க ஒரு சேதனனுக்கு ஸ்வரூப சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளைப் பற்றி வரும்
பர ப்ரகார ஸ்வரூப அதீன சத்தா பிரகாசக ஸ்வரூப அதீன பிரணவர்த்த அனுசந்தானத்தாலே
ஸ்வரூப சத்தா விரோதிகள் கழியும்
நமஸ் சப்த சித்தமான பிரணவார்த்த அனுசந்தானத்தாலே ஸ்திதி விரோதி சமூலமாகக் கழியும்
பர பிரேரித்த தத் பிரயோஜன ப்ரவ்ருத்தி பிரயோஜக நாராயண பதார்த்த அனுசந்தானத்தாலே ப்ரவ்ருத்தி விரோதிகள் கழியும் –

ஆகையாலே சதாச்சார்யா சேவை பண்ணி
பத த்ரய சித்தமான திரு மந்த்ரார்த்தை லபித்து
விரோதிகளை நீக்கி வாழக் கடவன் -என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் – ஸ்ரீ ராமாவதாரம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ பாசுரப்படி ராமாயணம்-பாசுர வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளுடன் –

March 18, 2025

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ பால காண்டம்

1-திரு அவதாரம்
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
5-ஸ்ரீ சீதா விவாஹம்

——

1-திரு அவதாரம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

ஸ்ரீ பால காண்டம் .–25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம்
பெரும்புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகுகைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!–3-10-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து
சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –

பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்-மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

இவ் விபூதி அநந்த கிலேச பாஜநமாய் இருக்குமா போலே முடிவிறந்த போக்யதையை உடைத்தாய் இருக்கை–நாடு –என்கையாலே -அவித்யாதி நிவ்ருத்தியாதிகள் அன்று -மோக்ஷம் என்கை –-புகுவீர் என்கையாலே -அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது –இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது ––அடியரொடு இருந்தமை –அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது–பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —

—————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

——————–

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்

தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்

துணை ஆவார் ஆர் என்று – துணை ஆவார் யார்? என்று.-அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க–கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-

வானவர் தம்-ஈஸ்வரோஹம் -என்றும் வான் உலகம் அடைவதே ப்ராப்யம் என்று இருக்கும் தேவர்கள் –துயர் தீர வந்து தோன்றி –அவனை அல்லாது அறியாத-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்-நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

—-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது

———–

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-

இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து-தர்ச நீயமான வில்லு  வளைய-கொலை யம்புகளை நடத்தி-பெரிய ஷோபத்தை   உடைத்தான கடல் வந்து முகம் காட்டி நான் முதுகு காட்டிச் செறிந்து தருகிறேன் -அடைத்துக் கொடு போவது என்று வழி பட –

—–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க–நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல-துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர-பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

————-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து
உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய் ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை–அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் – ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து-தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை
————

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது-சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே-எங்கள் வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –

———

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

———-

2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் -தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே –முகச் சோதி வாழியே   -என்கிறபடியே தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் -அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற பெரிய பிராட்டியாரையும் -மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் -ஜல ஸ்தலவிபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே -சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும்  உபகரித்து அருளும் பரமோதாரான இராமானுசன் –எம்பெருமானார் எம் குலக் கொழுந்தே -எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம் – அதுக்கு கொழுந்து -என்றது -வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் -மூலம்–கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –கொழுந்து-தலை –அன்றிக்கே -எங்குலக் கொழுந்து -என்றது –எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும் அவர் என்னவுமாம் –குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -இராமானுசன் -பதி தோறும்-புக்கு நிற்கும் –என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்

ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.-திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்-நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…
“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அ + ஹல்யா = மாசு அற்றவள்!
கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!

கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
வால்மீகி= “உடல் உணர்ச்சி”

கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே

————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

5-ஸ்ரீ சீதா விவாஹம்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த
தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

———–

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

————

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு

வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

——–

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-

———-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து-ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை

நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு-திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த-திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை-சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை-இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்- நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று-நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று-

————-

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

6-வன கமனம்

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய

குலக் குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி வைதேகி இன் துணையா

இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8-

முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே –கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –

————–

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

தேனைப் புறப்பட்டுவிக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயி யுடைய வார்த்தையிலே அகப்பட்டு

————-

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

கூனியாகிற அடியாட்டி ஆனவள் – திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –அதாவது –ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா
-என்கிறபடியே -ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –மங்கள வாத்திய கோஷங்களையும் கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து  -கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான் -உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது-அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே  அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று 
திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி  -பின்பு ராஜா உடனே  முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது – என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் 
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் -இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண  அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு  இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி – உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் -நீர் அவருக்கு பிரியம் செய்யவும்  வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு 

——–

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி –அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் –
இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது-என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும் நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய மா மனனத்தனாய் -என்றது-அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி-இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே – பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே-அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே-முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் –
அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன்
சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து
உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –
யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

———–

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே
விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு-உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து- அவர்களைக் கை விட்டு-போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று கைகேயி நினைக்கும் -என்று விரைந்து

————-

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம் ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே -கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய –
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -கான் தொடுத்த நெறி போகி –
தே வநேனே வனம் கத்வா-என்கிறபடியே –
காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே -போகி –
நெய்வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -என்கிற படியே
பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி -கண்டகரை களைந்தான் –
ஏஹீ பஸ்ய சரீராணி –என்கிறபடியே
ராஷசர் தின்ற உடம்பை காட்டி வந்து நின்ற தண்ட காரண்ய வாசிகளான ரிஷிகளுக்காக –
அவர்களை நித்ய பீடை செய்து போந்த
கண்டகராய் ஜனஸ்தான வாசிகளான ராஷசர் முதலானரை நிரசித்து அருளினவன் ஊர் –

——————

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து
வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து-இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் – என்னாயனே நான் என் செய்கேன் –

———–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி-அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி-ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே-விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்-அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை-

—————

மானமரும் மென்னோக்கி வைதேவி இன் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-

ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே – நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் – அங்கு நின்றும் போந்து –அவதரித்து – திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  – தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக காட்டிலே முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும் பாலை நிலத்தின் வெம்மைக்கும் பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம் இவளேயாய்ப் போனார் –

———

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –

————–

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு-
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ-எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-
இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் -இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்-அது தான் செய்கிறது –வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்-தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது-(கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும் ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்(கர தூஷணாதிகளை கொல்ல முடியாதே -கடந்து போய் என்பதால் இலங்கைக்கு சென்று என்றே கொள்ள வேண்டும்-)

———-

7-குஹ ஸஹ்யம்

8-பரத கமனம்
9-ஸ்ரீ பாதுகா பிரதானம்

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்கு காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல்

கல்லணை மேல் கண் துயின்று

சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்

என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள்

அணி கொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

———-

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் – செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே – அந்த வில் தானும் மிகை என்னும் படி மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே-ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே-அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்-காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே-பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ-இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

———

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே

———-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும் ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்-பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான என் மருமகளான பிராட்டியையும்-காட்டிலே போக விட்டு-உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும் வனத்திலே போக விட்டு-இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்-சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே

———

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு-நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி – திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-மநு குலோத்பவனானவனே–

————-

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –

———

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ராவணனுடைய படை எழுச்சியை அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு அநந்தரம் – குதிரைகளை விட்டு
அநந்தரம்  தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் – (ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———

சுமந்திரன் வசிட்டருடன்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –

———-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து தத் கத சித்தனாய் இருந்து – ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம் தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் – பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –தன்னுடைய ஆற்றாமை தோற்ற பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் – என்னும் இடத்தை அறிவித்து –பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு – ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து – தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து- தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ– நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை – என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –திரு உள்ளக் கருத்து இது –ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் – தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும் ஹேதுவானது தான் ஏது-என்ன-இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து-பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே இத்தை பலகாலும் அருளிச் செய்து – ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே – -மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –பணயம் ஆவது –விஸ்வாச ஹேதுவாய் உள்ளதுவான் பணையம் -என்கையாலே -மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று வலியதால் – பெருமை யாதல் –

———

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே -கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –குவலய துங்க கரியும் – பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் – பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்-எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே எழுந்து அருளுகிற காடு தானும் – பரதற்கு அருளி –
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து -ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்
முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு
காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –அன்றிக்கே –
ராம கமல பத்ராஷா-என்கிறபடி அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அழகிய எளியவன் -கண்ணை உடையவன் என்று இரண்டு நிர்வாகங்கள்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா-ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே

———-

விடை கொடுத்துத்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு -என்று யுத்தம்-செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது-இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே-தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் ) ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –ராவணன் வந்து – ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –-அது நிமித்தமாக-கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் –என்று சங்கல்பித்து –அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு – அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து – அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு கடலை அணை செய்து –மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து – இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை-ராவண வத அநந்தரம் பிராட்டியோடு கூடி அருளி –
சதுர்த்தே சேஹி சம்பூர்னே வர்ஷேஹனி ரகூத்வஹம் ந த்ரஷ்யாமி யதித்வாந்து பிரவேஷ்யாமி ஹூதாசனம் -என்று பிரதிக்ஜை பண்ணிப் போந்த ஸ்ரீ பரத ஆழ்வானை அழியக் கொடுக்க ஒண்ணாது-என்று – புஷ்பக விமானத்திலே ஏறி -பெரிய த்வரையோடு மீண்டு – ஸ்ரீ திரு அயோத்யையிலே எழுந்து அருளி

————-

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி  எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு  இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

தான் இருந்த இடத்திலே அவர் வந்து அடை மதிள் படுத்த அபகாரம் பண்ணினான் அன்று –
காட்டிலே தாபச வேஷத்தோடு திரியா நிற்க அங்கே வந்து பிராட்டியைப் பிரித்து
நிர்க் க்ருணனான   பையல் கேட்டுப் போனான் –

————–

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

10-காகாஸூர பங்கம்
11-விராத வதம்
12-சூர்பணகா பங்கம்
13-கர தூஷண வதம்

தயங்கு மறை முனிவர்க்கு ‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு

இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9- 3-

புனராவ்ருத்ய அபாவத்துக்கும் – நித்ய கைங்கர்ய லாபத்துக்கும் உடலான தன்னுடைய பிரசாதத்தை இவர்களுக்கு கொடுத்து

வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்து

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-

ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-திண்ணிய படையார்ந்த கை வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த (ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம்-வில் என்றது உப லக்ஷணம் )விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்

வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி

புலர்ந்து எழுந்த காமத்தால் சுடுசினத்துச் சூர்ப்பணகா

பொன்னிறம் கொண்ட சீதைக்கு நேராவன் என்று வரக்

கொடி மூக்கும் காது இரண்டும் கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்

கரனொடு தூடணன் தன் உயிரை வாங்க அவள் கதறித்

தலையில் அங்கை வைத்து மலை இலங்கை ஓடிப் புக,

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய விராதனைக் கொன்று-ஸ்ரீ  அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான்

தன் சீதைக்கு நேராவன் -இத்யாதி-பிராட்டியோடு சாம்யை -சத்ருசை -யாவன் என்று வந்த சூர்ப்பணகை விரூபை யாக்கி விட அவள் போய் கரன் காலிலே விழ சபரிகரனாய் வந்த கரனை நிரசித்த படியைச் சொல்லுகிறது –தன் சீதை –ராகவோமர்ஹதி வைதேஹீம் –தனக்கு உயரம் சொல்லிலும் அவளைச் சொல்லித் தன்னைச் சொல்ல வேண்டும்படி இருக்கும் பிராட்டிக்குக் காணும் சத்ருசையாவேன் என்று வந்தது –நேராவன் என்று-சர்வ லஷணத்தாலும்-விலஷணை யான பிராட்டிக்கு விரூபையாய் இருக்கிற தான் காணும் ஒப்பாவன் என்று வந்தாள் –ஓர் நிசாசரி – பெற்ற தாயோடு சீறு பாறு என்று வந்தவள் என்று
பிணம் தின்னி என்கிறாள் -காணும் இவள் –தான் –பெருமாளுக்கு மேலான பிராட்டிக்குப்
பெருமாளோடும் ஒவ்வாத தான் காணும் ஒப்பாவான் என்று வந்தாள் –தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை –த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப்நுயாத் கலாம் -என்று பெருமாள் தாமும் தம் விபூதியும் ஒரு தட்டுக்கும் கூட போராது இருக்கக் காணும் தான் நேராவன் என்று வந்தது –வந்தாளை – பெருமாள் பாடே வந்தவாறே
நான் ஏக தார வ்ரதனாய் இருப்பன் – அக்ருத விவாஹராய் இருக்கிற இளைய பெருமாள் பாடே போ -என்ன-அங்கே  சென்றவாறே அவர் -நான் தாசனாய் இருப்பன்-எனக்கு நீ கடவை யானால் நீயும் தாசியாய் அன்வயிக்கும் அத்தனை அன்றோ-பெருமாள் பாடே சென்றால் அன்றோ உனக்குப் பட்டம் கட்டி ஏக சிம்ஹாசனத்திலே இருக்கலாவது -என்ன அங்கே போவது இங்கே வருவதாய்த் திரிந்தவாறே இவள் அன்றோ இது எல்லாம் ஒட்டாது ஒழிகிறாள் -என்று பிராட்டி யுடைய பாடே வந்து உன்னைத் தின்னும் இத்தனை -என்று விழ

கூரார்ந்த வாளால் -இத்யாதி
தம்முடைய கையாலே இ றே தண்டிப்பது-ராமஸ்ய தஷிணோ பா ஹூ-தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்து தண்டிப்பித்தார்-கூரார்ந்த வாளால் – கூர்மை மிக்கு இருக்கிற வாளாலே முரட்டு உடம்பிலே வ்யாபரியா நின்றால் ரக்த ஸ்பர்சம் இல்லாதபடி வ்யாபரிக்கலாம் வாள்-கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து – பிராட்டியோடு ஒப்பாக்கி அங்க விசேஷங்களைப் பேணி வர அவற்றைப் போக்கி விட்டார்-ஈரா விடுத்து – வாளின் கூர்மை சொல்லுகைக்காக –கூரார்ந்த வாள் -என்றது அங்கு
ஈர்ந்தது என்கையாலே ஈருகைக்கு அரிதான உடம்பின் திண்மை சொல்லிற்று இங்கு-ஈரா விடுத்து – பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்திற்கு வந்தாள் போல் அன்றியே
புக்ககத்தில் நின்றும் பிறந்த கத்திற்கு போம் போது ஓர் ஆதிக்யம் பண்ணி விட வேணும் இறே – பெருமாளை ஆசைப் படச் செய்தேயும் பிராட்டி பக்கல் அபராதம் பண்ணுகையால்விரூபை யானாள் இறே-ஆகையாலே இவ் விஷயத்தில் ஆசை உண்டானாலும் ததீயர் பக்கலிலே அபராதம் உண்டானால் பலிக்கும் பலம்
சூர்பணகை பலம் என்கை- இவள் ஆசைப் பட்ட விஷயம் இ றே சிந்த யந்தியும் ஆசைப் பட்டது இப்படி அபராதம் இல்லாமையாலே அவள் பெற்றுப் போனாள் இறே-விடுத்து
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று கரன் காலிலே விழும்படி பண்ணி –

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து

சொல்லீர் அவள் ஒருத்தியை அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய் அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-
ஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ-அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை சொல்லீர் எயிற்றின் ஒளியை-ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்-துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்-எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்-பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-— அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் – கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்-தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்-தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ-ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ-முனிந்து விட்டு விடப் பெற்றதோ அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ

——

14-மாரீச வதம்
15-சீதா வியோகம்
16-ஜடாயு மோக்ஷம்
17-கபந்த வதம்

கொடுமையில்கடுவிசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.5-7-7-

ஸூ கேச்யா-என்றும் சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்-இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும் இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள  ரத்னங்களாலே செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்
அன்றிக்கே எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல் –இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து  –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

———-

பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே.–52-

கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை-மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை-மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து-அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த-படியாலே சொல்லுகிறது-இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர் என்கை –ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும் ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய் இறே  குவலயாபீடம் நின்றது – சக்ய பஸ்யதே -வஸூ தேவோ  பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே-சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த – சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும் வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் – ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால் எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்-தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்-புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள்-த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே –– தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–

வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி

நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

நீள்கடல் சூழிலங் கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக் கழிமினே.-1-6-7-

‘பரந்த கடலை அகழியாக வுடைத்தாய், அது தானும் மிகையாம் படியான அரண்களை யுடைத்தாய் இருந்துள்ள இலங்கைக்குத் தலைவன் அல்லனோ?’ என்னும் கெட்ட அகங்காரத்தாலே ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று மதியாமல் எதிரிட்ட பையலுடைய.

அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போந்து

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –

வம்புலா கடிகாவில் சிறையா வைக்க

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்

அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்ற

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே-திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பொல்லா ராவணன் -என்றதுக்கு அடியான ஜந்து விசேஷம் இறே –முன்பு போலே தொற்றம்பாக விடாதே பிணத்தையும் மாய்த்து – பிணமும் காணாதபடி -நசிப்பித்து –அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய்-ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து  

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு – தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

கங்குலும் பகலும் கண் துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்?-விரஹிணிகளுக்கு ஓடுகிற வியசனம் மாற்றுகைக்காக ‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ?
அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை; இரவில் விஷய லாபத்தாலே போது போக்கவும்,
பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே கொடுபுக்கு மூட்டி, ‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும் ஆமன்றோ?-எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே,
இவளுக்கு அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே.-ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து வைத்த இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள்.-பகலும் இரவோடு ஒக்க உறங்கக் கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின்,
‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை கொடுக்கையாலே உறக்கம் இல்லை; அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது இல்லை’ என்றபடி.-பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,
’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44. என்கிறபடியே,
இவளையும் தன் படி ஆக்கினான். என்றது, மேலான ஒப்புமையை அடைகிறான்’
‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.-என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.-கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது; ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல், ‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.

கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும்
கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் –
கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது –கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே தலைக் காவல்( -முதலாளிகள்-) இருந்தவர்கள் பட்டது இது-

சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –(பெருமாள் 10-6)

வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து-

மராமரங்கள் ஏழும் எய்து

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   —மூன்றாம் திருவந்தாதி—-52-

இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து,
‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று
மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன்.
இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ?
ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டிகருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து-

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்

பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-

எழு உருத்து வாலி -வ்ருத்தி அடையா நின்ற கோபத்தை உடையனான வாலி-உருவென்று சீற்றம்-வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய்-அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின
(அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் )-விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய்-தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக -அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் ) (இதே போலவே அர்ஜுனனுக்கு உதவினவன் )-ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே-பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்-ஸூக்ரீவம் ஏவ -தத் ராஜ்யே – சிம்ஹம் நின்ற முழைஞ்சிலே மான் பேடையை கொடு புக்கு நிறுத்தினால் போலே யாய்த்து-ராகவ –-அளவுடையார் அளவில்லாதார் என்று ஒரு வாசி இன்றிக்கே ஆரேனுமாக தாங்கள் கொடுத்தாரது ராஜ்ஜியம்  ஆம்படி மதிப்புடைய குடியில் பிறந்தவர்-ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-ஸ்ரீ மதா-உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது-ராஜ ராஜேன-உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –லங்காயாம்  அபிஷேசித – இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்-அவன் பரிகரமாய் இருந்து வைத்து அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே இப்படி சொல்லுகைக்கு அடி அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

வைதேவீ-தேஹத்தை உபேஷித்து இருக்கிற படியைக் கொண்டு சொல்கிறான் –

காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —அதாவது தேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே – திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை-மால்யவானிலும் கிஷ்கிந்தையிலுமாகப் பிரிந்து இருந்து போய் பெருமாளுடன் கூடி இருந்து தேவரீரைத் தேடுகைக்காக சர்வ திக்குகளிலும் ஆள் விடுகிற அளவிலே – விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமத்த்யர்த்தம் உக்தவான் -என்கிறபடியே எல்லாரையும் போல் அன்றிக்கே விசேஷித்து என்னை அபிமானித்து –
இவன் இக்காரியத்துக்கு சமர்த்தன் -என்று மஹா ராஜர் திரு உள்ளம் பற்றின அநந்தரம்

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இறே நாங்கள்-க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி
-என்கிற திருவடி இறே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே

திறல் விளங்கு மாருதியும்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

மாயோன் தூது உரைத்தல் செய்ய

செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே –7-8-1-

ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –ஸ்ப்ருஹணீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –சனகாதிகள் நின்று ஸ்துதிக்க –மரக் கலங்களால் மிக்கு இருக்கிற பெரிய கடலுள்-திரு வநந்த வாழ்வான் என்று பிரசித்தனாய் இருக்கிறவன் மேலே –சர்வேஸ்வரனையும்-அநந்தன் -என்னக் கடவது இறே-த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தாலே –அநந்தன் தன்னையும் விளாக்குலை கொள்ள வல்லனாய் இருக்கையாலே அநந்தன் -என்று பிரசித்தியை உடையனான   –குன்றிச் சூடு-(மயில் தோகைக் கற்று ) போலே சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும் படி தர்ச நீயமான வரிகளை உடையனாய் சைத்ய சௌரப்யாதிகளை பிரக்ருதியாக உடைய திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் கிடீர் கோள் இங்கு வந்து நிற்கிறவன் –

தூது உரைத்தல் செய்ய

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

என் தூது வார்த்தையை அறிவிக்க அமையும் –கொண்டு வர வேண்டா -இனிய பேச்சை உடைய வண்டுகாள் –அவன் விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே-வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது ––என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில் என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்-அன்றிக்கே-செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல் அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –

செய்ய

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-

கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் – அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

சீராரும் திறல் அனுமன்

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

மா கடலைக் கடந்தேறி-

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –

மும் மதிள் நீள் –

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை-திரு எழு கூற்று இருக்கை

கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர் குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை-

இலங்கை புக்குக்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்கு இருந்துள்ள கடலை –அகடிதகடநா சாமர்த்தியம் தோற்றும்படி நீரைக் கண்டவாறே -ஆழக் கடவ -அமிழுந்து போகக் கடவ- மலைகளை இட்டு
குரங்குளைக் கொண்டு அடைத்து –லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடியே
மண்பாடு தானே (துர்க த்ரயம் )ஒருவருக்கும் பிரவேசிக்க அரியதாய் அதுக்கு மேலே உள்ளு நின்று நோக்குகிறவனுடைய பலத்தையும் உடைத்தாய் ஆகையாலே – துஷ் ப்ராபகமாய் இருக்கிற இலங்கையில் – எழுபது வெள்ளம் வானர சேனையையும்  கொண்டு – சென்று புக்கு –

கடிகாவில்

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

ஸ்லாக்கியமான-திக் விஜயம் பண்ணிக்  கவித்த  முடியை உடையனான எங்கள் ராவணன் பிராட்டி என்ற ஒரு தேவதையை கொண்டு வந்து –புதுமை மாறாதே இருப்பதாய்
பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –

‘நின் அடியேன் விண்ணப்பம்-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

நெறித்துக் கருகின குழலையும் -மடப்பத்தையும் -யுடையவளே-கோரை மயிராய் இராதே –
சுருண்டு கடை அளவும் செல்ல இருண்டு இருக்கை இறே குழலுக்கு ஏற்றம் –
இது தான் பூர்வத்தில் படியை இட்டுச் சொல்லுகிற படி –
(நீண்டு சுருண்டு –இத்யாதி சொல்லி ஈண்டு சடையாயினவே -என்றார் அன்றோ பெருமாளுடைய திருக்குழல் )நீல நாகா பயா வேண்யா ஜகனம் கதயை கயா–(ஸூ ந்தர -11-25) -என்னும் படி இறே இப்போது கிடக்கிறது –(நீல-நைல்யம் -சமஸ்க்ருதம் -கருமை என்றவாறு )நாயகரான பெருமாளோடே கூடிச் செவ்வை தோற்றச் செருக்கி இருக்க ப்ராப்த்தையாய் இருக்க – அவரைப் பிரிந்த கிலேசத்தாலே துவண்டு ஒடுங்கி இருக்கிற படியைப் பற்றி -மடவாய் -என்கிறான்-அதவா– மடப்பமாவது -பற்றிற்று விடாமையாய் -இங்கே இருக்கச் செய்தேயும் – அஸ்யா தேவ்யா மநஸ் தஸ்மிந்-(ஸூ ந்தர-15-52 )-என்கிறபடியே பெருமாளையே நினைத்துக் கொண்டு மற்று ஓன்று அறியாமல்
இருக்கிறபடியைச் சொல்லுகிறான் ஆகவுமாம்-தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய –என்று பெருமாளுக்கு அடியனான போதே இவளுக்கும் அடியனாகையாலே உனக்கு அடியனான என்னுடைய விண்ணப்பம் என்கிறான் –இத்தால் உனக்கு அடியேனான நான் விண்ணப்பம் செய்கிற வார்த்தையைக் கேட்டு அருள வேணும் என்கை –

கேட்டருளாய்!

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –திரு விருத்தம் -1–

எம்பெருமான் பேரா நிற்க போக நின்று கேட்டு அருள வேணும்-என்னுடைய சர்வ துக்கங்களும் போகும்-இவர் உக்தியால் இவர் ஸ்வரூபம் அறியலாம் என்று நின்று கேட்க
அடியேன்-என்றதும் -ஸ்வரூபம் அறிந்தவர்-மெய்ப்பாடு அறியலாம்-இந்த அபேக்ஷைக்கு மேல் வேறே ஒன்றும் இல்லை-என்றுமே இதே வார்த்தை என்றுமே மாறாது விண்ணப்பம் வாசா கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்கிறார் –

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி-விண்ணப்பம் -வாசிக விருத்தி )
இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-அது கேட்க்கையில் யுண்டான ஆதரம் தோற்றக் கடாஷித்திக் கொண்டு இருக்கிற-
சொல்லுகேன் கேட்டருளாய்- என்கிறான் –என் பக்கல் வாத்சல்யம் தோன்ற என்னைக் கடாஷித்திக் கொண்டு இருக்கையாலும் – பவ்யதையாலும்-(மடமானே) இணை மலர் போலே இருக்கிற கண்களை யுடையளாய் மடப்பத்தையும் யுடைத்தான மான் போலே இருக்கிறவளே – அந்த விண்ணப்பம் தன்னைச் சொல்லுகிறேன் -கேட்டு அருள வேணும் -என்கை –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

தேர்களால் அலங்க்ருதமான திரு அயோத்யையில் உள்ளவருக்கு நிர்வாஹகரான
பெருமாளுடைய பெருமைக்குத் தகுதியான தேவீ-துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோ அர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-என்னக் கடவது இறே-அல்லது ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே –
பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-நான் விண்ணப்பம் செய்கிற இத்தைக் கேட்டு அருள வேணும்-

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ?

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
–3-10-2-

ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும்
ஓர் அடையாளம் –3-10-3-

குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி – அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் – இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும்-நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய
மா மனனத்தனாய் –என்றது அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –-இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி
இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே –
பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் – அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும் பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன் சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்-உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-

மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய –ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில் கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )தேன்- வண்டு-உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே
இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்- இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் –
என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் 

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்;

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6-

சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-இந்திரன் மகனான ஜெயந்தன் தமோ குண பிரசுரனாகையாலே-ப்ராப்த அப்ராப்த விவேக சூன்யனாய்-தேவ வேஷத்தை மறைத்து ஷூத்ரமான காக வேஷத்தைப் பரிகரித்துக் கொண்டு வந்து-பெருமாள் -மடியில் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே –வாயசஸ் ஸஹஸா கம்ய விததாரஸ் தநாந்தரே – என்கிறபடியே-ஜனனி என்று அறியாதே தேவரீர் திரு முலைத் தடத்திலே நலிய-அவ்வளவில் பெருமாள் உணர்ந்து அருளி –
க்ரீடதி ஸரோஷேனை பஞ்ச வக்த்ரேண போகிநா -என்று அதி க்ருத்தராய்
ச தர்ப்பம் ஸம்ஸ்தரா த்க்ர்ஹ்ய ப்ராஹ்மணாஸ்த்ரேண யோஜயத் –ச தீப்த இவை காலாக்னி ஜஜ் வாலாபி முகோ த்விஜம் –ச தம் ப்ரதீப்தம் சிஷேப தர்ப்பந்தம் வாயசம் பிரதி
-என்கிறபடியே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து-அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-அந்த அஸ்திரம் மந்த கதியாய் விடுகையாலே பின் தொடர்ந்து செல்ல-அத்தைத் தப்ப வழி தேடி-ச பித்ராச பரித்யக்த ஸ்ஸூரைஸ் ச ச மஹரிஷிபி த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய-என்கிறபடியே
முந்துற பித்ரு கிரஹத்தில் சென்ற அளவில் பிதாவாலும் மாதாவாலும் கை விடப்பட்டு-பந்துக்களானவர்கள் தான் கைக் கொள்ளுவார்களோ-என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களிலும் பரித்யக்தனாய்-ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் தான் கைக் கொள்ளுவார்களோ என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களும் கை விடுகையாலே-திறந்து கிடந்த வாசல்கள் தோறும் ஒரு கால் நுழைந்தால் போலே-ஒன்பதில் கால் நுழைந்து மூன்று லோகங்களையும்-வளைய ஓடித் திரிந்த இடத்திலும் ஒருவரும் கைக் கொள்ளாமையாலே-தமேவ சரணம் கத என்கிறபடியே-சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருக்கும் கிருபாவானாகையாலே விசமய நீயனாய்-
எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –-உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட-இப்படி சரணம் புகுகையாலே
சதம் நி பதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் –
வதார்ஹம் அபி காகுத்ஸ கிருபயா பர்யபாலயத் -என்கிறபடியே கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில்
காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி-அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே-முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

மின்னோடு ஒத்து இருந்துள்ள நுண்ணிய இடையை யுடையாய் –இடையினுடைய நுண்ணிமையும் விரக தசையில் நோவு பாடாற்ற ஒண்ணாமைக்கு உடலாய் இருக்கும் இறே-அத்தைப் பற்றிச் சொல்லுகிறான்-புரையற்ற சேஷ பூதனான நான் விண்ணப்பம் செய்கிறதை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
மெய்யடியானாகை யாவது –-எதிர்த் தலையிலே ஸம்ருத்தியே புருஷார்த்தமாய் இருக்குமது ஒழிய-ஸ்வ ப்ரயோஜன பரன் இன்றிக்கே இருக்கை-மாயாவியான மாரீசன் இதுக்கு முன்பு லோகத்தில் கண்டு அறியாத ஒரு வடிவை எடுத்துக் கொண்டதாகையாலே-பொன் போலே இருக்கிற நிறத்தையும்-நாநா ரத்தினங்கள் போல் இருக்கிற புள்ளியையும் மற்றும் அநேகம் வைசித்தரியையும் யுடைத்தாய்
இருபத்தொரு மானானது எழுந்து அருளி இருக்கிற ஆஸ்ரமத்தின் முன்னே வந்து மநோ ஹரமாம் படி நின்று துள்ளி விளையாட –இத்தைப் பிடித்துத் தர வேணும் -என்று பெருமாளைப் பார்த்து தேவரீர் அருளிச் செய்த இடத்தில் – இளைய பெருமாள் அருகே நின்று – லோகத்தில் இப்படி இருபத்தொரு மிருகம் இல்லை – மாரீசன் இங்கனே சில மாயா ரூபங்களைக் கொண்டு திரியும் என்று பிரசித்தம் ஆகையால் இது மாயா மிருகம் – என்னா நிற்கச் செய்தேயும் – தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று-இளைய பெருமாளை இங்குத்தைக்குக் காவலாக நிறுத்தி-திருக் கையிலே பிடித்த வில்லும் தாமுமாய்க் கொண்டு அத்தைப் பிடிப்பதாகப் பெருமாள் நெடும் தூரம் எழுந்து அருள – பின்பு தங்களை எல்லாரையும் விஷயீ கரித்த உபகாரத்தை நினைத்து –எம்பிரான் -என்கிறான் – நெடும் தூரம் பின் பற்றிப் போன இடத்திலும் பிடி கொடாமல் அது தப்பித் திரிகையாலே – இது மாயா மிருகம் என்று திரு உள்ளம் பற்றி அதின் மேல் சரத்தை விட – அது பட்டு விழுகிற போது – ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ-அத்தை தேவரீர் கேட்டு அருளி பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும் –இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்-பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –
அல்லாது போது-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-ஆன பின்பு விண்ணப்பம் செய்த அடையாளம் இத்தனையும் இந்த பிரகாரத்தாலே வந்தது என்று அறிவித்து-இது அவர் திருக் கையிலே திருவாழி மோதிரம் என்று –
ராம நாமாங்கிதஞ்சேதம் பஸ்யதே வ்யங்குளீயகம் -என்கிறபடியே பெருமாளுடைய திரு நாமத்தாலே அங்கிதமாய் இருக்கிற திருவாழி மோதிரத்தைக் கொடுத்தான் ஆய்த்து –

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று
உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே
–3-10-9-

தத்வ ஞானத்தாலும் – பிராகிருத விஷய வைராக்யத்தாலும் – முமுஷுவாய் பல அபி சந்தி ரஹிதமாக கர்ம அனுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டு போருகையாலும்- சர்வ திக்குகளிலும் நிறைந்த புகழை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய ஆஹவநீயாத் யக்நி த்ரயத்தோடே பண்ணும் யாகத்தில் விச்வாமித்ர மகரிஷி கொண்டு செல்ல எழுந்து அருளின காலத்தில்-மிகவும் பெரிய சபா மத்யத்திலே-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய்-பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்-சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி-க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் -என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் –அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் –அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி
பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –ஆல்-ஆச்சர்யம் –(ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான்-என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை-பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே -நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –


திறல் விளங்கு மாருதியும்-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை


இலங்கையர் கோன்-

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
பிராட்டிக்காக கடைந்து – அவள் தனக்காக அடைத்து – இலங்கைக்கு நிர்வாஹகன் ஆனவன் உடைய வரை போலே திண்ணியதான மார்விலே

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-
கடி இலங்கை மலங்க எரித்து

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்

தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழேயாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –(ஸப்த மந்திரி ஸூதான் -வால்மீகி -ஏழு மந்திரி குமாரர்கள் )அரணை உடைத்தாய்
அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர்-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –(வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –
நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே-ஆதர் -என்று இளிம்பர் என்றபடி-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

அரக்கர் கோன்-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11-

மாயா ம்ருகத்தைக் காட்டி ராஜ புத்ரர்களை அகற்றி-திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே-தனி இருப்பிலே வந்து பிரித்த கோழைப் பையலைப் போலே-அன்றியே பத்தும் பத்தாக யுத்தத்திலே –நான் ராஜச ராஜன் என்று தன பரிகரத்தைப் பார்த்து அபிமானித்து இருந்தவனை தானே அதிக்கிரமம் பண்ணும் அளவு அன்றியே துர் வர்க்கத்துக்கு அடைய ஒதுங்க நிழலாய் இருந்தவனை –அவன் கண் முகப்பே பரிகர பூதரை அழித்து
பிரஜைகளை அழித்து தன் தலை தரையிலே புரள கண்ணாலே காண்பார் இல்லையாம் படி இருக்க தானே காணும்படி ஒரோ தலையாக அறுத்து இறே அழியச் செய்தது – கச்ச அநு ஜாநாமி –ஈஸ்வரத்தாலே -சேவகனார் -என்கிறார் அல்லர் -சேவக வாசி யாலே –
அதாகிறது – கை இலக்கைக்கு சேவிக்கும் அவன் -என்கை –
அதாகிறது-ஓர் அஞ்சலிக்கும் தான் உள்ளதனையும் இவனை சேவிக்கும் -என்கை –தாய்த்தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் இறே
அநந்ய கதியான நம் விரோதி வர்க்கத்தை பிராட்டியோடே சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே போக்கும் ஆண் பிள்ளை -என்னுதல் –எல்லார்க்கும் தஞ்சமான பிராட்டிக்கு உதவுகையாலே நமக்கு உதவினான் என்று எல்லார்க்கும் சொல்லலாம் படி இருக்கையாலே –நம் சேவகனார் -என்னுதல் –

சினம் அழித்து,-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

அயர்வறும் அமரர்கள் அதிபதி –தன்னைப் பேணாதே கால் நடையே கழுத்திலே ஓலை  கட்டி
பாண்டவர்களுக்காக துரியோதனன் பக்கலிலே தூது போனவன் –ஊருகிற காலை உடைத்தான சகடத்தின் உடைய சினத்தை போக்கி –இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய் ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் – கண்ண புரம் நாம் தொழுதுமே –

மீண்டு, அன்பினால்,

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –(இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)காலால் அன்று போலே –அந ஸனம் தீஷித்தும் –கடல் கடந்தும் –யுத்தம் பண்ணியும் –இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –

அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால் தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் – அல்லாது போது
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

என் தலை மேலவே –தளிர் புரையும் அடி – அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்-சத்தையும் சேஷித்வமும் விக்ரஹமும் பெற்றானாய் -இருக்கிறபடி –(நின்ற எந்தை திருவடி -நின்ற சத்தை -எந்தை -ஸ்வாமி -சேஷித்வம் -திருவடி -விக்ரஹம்)

இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன் ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக்

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-

முசுவும்-கோலாங்கூலம் -நீண்ட வால்களைக் கொண்ட குரங்கு வகை –இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் –
இடக்கை வலக்கை வாசி அறியாதே என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய
பூசல் கண்டு அறியாத –எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு
திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –

கொடியோன் இலங்கை புகலுற்று-

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —-8-6-4-

ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய அஸ்ப்ருஷ்ட    சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –அவன் பண்ணின க்ரௌர்யத்தை திரு உள்ளத்தாலே
முன்னோட்டுக் கொண்டு கொடியோன் என்கிறார்  – ஜனகனும் ஜனநியும் ஓர் இடத்தில் இருக்கப் பொறாத க்ரௌர்யம் இறே –இதுக்கு முன்பு பறியுண்டு அறியாத பழைய மரங்கள் அடைய பறியுண்டு போம்படி அதிலே பிரவேசிப்பித்து-அடைக்கிற போதை திவலைகள் ஆனவை கிளர்ந்து ஆகாச அவகாசத்தை இடம் அடைக்க –நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான
கண்ண புரம் நாம் தொழுதுமே –

அலையார் கடற்கரை வீற்றிருந்து

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –

ஸ்ரீ வானர வீரர்கள் உடைய திரள்கள் ஆனவை – ஸ்ரீ பெருமாள் திருவடிகள் படப் புகுகிறது அன்றோ -என்னும் கௌரவ புத்தியாலே சிரசா வஹித்துக் கொண்டு சென்று –பெரிய மலைகளைக் கொண்டு கடலை ஊடருத்து (இடைவெளி இல்லாமல் )அணியாக அடைக்க (அணில்கள் நுண் மணலைக் கொண்டு வந்து -சிற்றாள் வேலை வானர வீரர்கள் )அலை மிக்கு இருந்துள்ள கடல் கரையிலே -அவ் வலை தெறிக்கும்படி ஆசந்னமாக
அவர்கள் செய்கிற அடிமையைப் பார்த்து உகந்து கொண்டு –அவர்களை அடிமை கொள்ளுகையால் வந்த  வ்யாவ்ர்த்தி தோற்ற எழுந்து அருளி இருந்தவனை அந்த ஸ்தலத்தில் கண்டவர்கள் உளர் – 

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை
நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே திண்ணியதான உடல் கிழியும்படிக்கு   ஈடாக தர்ச  நீயமாய் தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும் அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே
அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் –என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று
மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று
பெருமாளும் நிர்பந்திக்க-ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி நறையூரிலே காணப் பெற்றேன் –

விரி நீர் இலங்கை அருளிச்

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.-‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்; அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.-அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத
:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.-‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,-இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.-‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்றருள் செய் தானோ?’-என்றார் கம்பரும்.-கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

கொல்லை விலங்கு  பணி செய்ய-

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —-8-6-4-

ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய-அஸ்ப்ருஷ்ட    சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –

மலையதனால் அணை கட்டி-

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே

மறு கரையை ஏறி-10-7

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

(வால்மீகி-கும்பகர்ணன் முதலில்-இந்திரஜித் 5 நாள்-இராவணன் 7 நாள்கம்பராமாயணம் மாறுபாடு உண்டுஇங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்

வரபல புஜ பலங்களாலே மிக்க இலங்கை யாராலே துகளாயிற்று –

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

கும்பனோடு நிகும்பனும் பட

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் –ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே  —10-3-2-

எனக்கு   உபகாரகன் ஆனவனே –என்னை அடிமை கொள்ளுகிறவனே-என்ற
இப் பாசுரங்கள் பாடாமையாலே –தான் அம்பில் வாயில் அகப்பட்டு ஆற்ற மாட்டாமை முடிந்து போனான் இந்த்ரஜித் –மகாராஜர் -வத்த்யதாம் -என்றாலும் இத் தேசத்தில்
இக் காலத்திலே வந்தான் என்று சொல்லுமவரோடும் அலைந்து கைக் கொள்ளப் பண்ணும்படி அன்றோ உன் பூர்த்தி –(ராமோ விக்ரஹவான் தர்ம -தர்மத்துக்காகப் பேசினார் திருவடி – இனிமையாக எளிமையாக பொருள் உள்ளதாக பொருத்தம் உடையதாகப் பேசினார் ராமருடைய கௌரவத்துக்காக பேசினார் )கும்பகர்ணன் பட்டுப் போனான்  எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –

அரக்கர் ஆவி மாள,

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5-

பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல் ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி
ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் – வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –
அரசன் -நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து
இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர

தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-

மின் போலே இருக்கிற நேரிய இடையை உடையளாய் மிருது ஸ்வ பாவையாய் இருக்கிற பிராட்டிக்காக இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணன் உடைய பத்துத் தலையும்
இருபது தோளும் போய் உதிரும்படியாக தனக்கு ஒப்பு உண்டாகிலும் உபமான ரஹிதமாய் இருக்கிற வில்லை வளைத்து அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய-பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்

சிலை வளைத்துச்-

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-

பிறரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்யுமவன்  கிடீர் விஸ்வசித்து ஆசையோடு இருக்கிற எனக்கு உதவாது ஒழிகிறான்

சரமழை பொழிந்து-

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–

இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்- சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று – எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சர வர்ஷம் வவர்ஷ ஹ–என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே- பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை

சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும்  பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3-5-8 –

பல திரளாய் கடலை வாளாகப் பருகி நீர் கொண்டு எழுந்த மகா மேகங்கள் ஆனவை
யுத்த பூமியில் சர வர்ஷம் போலே வர்ஷித்துக் கொண்டு – திரு ஆய்ப்பாடியிலே ஊரோடு பசுக்கள் மேயும் இடத்தோடு வாசி அற எங்கும் – எங்களை தப்ப வல்லார் உண்டோ -என்று இடித்து முழங்கி பூசலிட்டு நலிவதாக ஒருப்பட்ட அளவிலே-அந்த சர வர்ஷத்தை தகைக்கைக்கு கடகு கோத்து பிடிக்குமவன் போலே சர்வ ரஷகனான நாராயணன் -தன் கையிலே எடுத்துக் கொண்டு – முந்தி வருகிற வர்ஷ முகத்தை தகைந்த மலை –

(கரம் துணிந்து பாட பேதம் )

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.-நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும், நினைக்கப் படுவனவாய் ஆசைப்படப் படுவனவாய் இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய்.

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் வில் ராமனிடம்
கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-

பெரும் மிடுக்கராய் சாயுதருமாய் இருந்துள்ள ராஷசர்க்கு எல்லாம் வழி யடித்துப் புக்கு
ஒதுங்கலாம் படி அஞ்சினான் புகலிடமாய் இருந்துள்ள வனுடைய (பயந்தவர்களுக்கு அபய பிரதானம் பண்ணுபவன் )வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –

வென்றி கொண்ட செருக் களத்து

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

முருக்கம் பூ போலேயும் விளங்கா நின்றுள்ள கனி போலேயும் இருக்கிற அதரத்தை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் –ராஜ லோகம் அடங்க வழிப் போக்கிலே முடியும் படி
யுத்த பூமியிலே சென்று கிட்டி –இந்த பிராதி கூல்யத்துக்கு ஹேது பூதனான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய மிடுக்கு எல்லாம் போய் அவன் முடிந்து போம் படிக்கு ஈடாக தலைகளைத் துணித்த சர்வேஸ்வரன் திருவடிகளை உங்கள் தலை மேலே வைக்க வேண்டி இருப்பீர் –

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும் த்ரி நேத்ரனும் திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் த்வாதச ஆதித்யர்களும் அஸ்வினி தேவதைகளுமான இவர்கள் –நாநா விதமான புஷ்பங்களை தரித்துக்  கொண்டு –எப்போதும் கிட்டி-விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி-எல்லாரும் நம் வாசலிலே வரும் இத்தனை -என்று அபிமானித்து இருக்கக் கடவர்கள்-அவையடங்க அழிந்து தாங்களே சென்று ஆஸ்ரயிப்பார்கள்-

மற்றுமுள்ள வானவர்-

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய்-அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாக புக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-

மலர்மழை பொழிந்து-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்- ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று- தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –

மணி முடி பணித அடியிணை வணங்கக்

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-

ப்ராமணிகளைப் போலே யாயிற்று தேவர்களும் ப்ரஹ்ம ஹத்யை சொல்லிப் பழி இடுவாரும் தலை அறுப்பாரும் – தலை அறுப்புண்பாருமாய் இறே இருப்பது-இப்படி இருப்பவர்கள் கிண்ணகத்தில் இழிவாரைப் போலே ஒரு மிடறராய் இருப்பார்கள் ஆயிற்று
தேவர்கள் அடங்கலும் திரண்டு இறுமாப்பாலே வணங்கோம் -என்று இருக்குமது தவிர்ந்து –
பக்ந அபிமாநராய் திருவடிகளிலே தலைகள் பட வணங்கும்படி ஆயிற்று-அங்கு எழுந்து அருளி இருக்கிறது-பரத்வத்தில் வணங்கதார் எல்லாரும் சீலம் கண்டு வணங்கும்படியாக இருக்கிற தேசம் ஆயிற்று-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

எனக்கு தந்தை-காரண பூதன்-எனக்கு ஸ்வாமி-இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்-ஸ்வர்க்கத்தில் தேவர்கள் திருவடிகளை ஆஸ்ரயிக்க – ஒரு  முகம் செய்து  வந்து புகில் கடல் பொறாது என்று பார்த்து ஆயிரம் முகத்தினால் போய்ப் புகு என்று -சர்வேஸ்வரன் திரு உள்ளமாய் அருள அப்படி மந்திர பர்வதத்தில் நின்றும் வந்து இழிந்தது ஆயிற்று – அன்றிக்கே – கங்கை தன்னை ஆஸ்ரயிக்க அது தான் அருளுகையாகவுமாம் –

கோலத், திரு மா மகளோடு-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.-“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-முன்னம் அநாதி காலம் இழந்த நான் இன்னம் – அநந்த -பல காலம் இழக்கவோ?-அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கை விடலாம் என்று இருக்கிறாயோ?-“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? ‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;-ருசி பிறந்த பின்பு இழக்கவோ?-இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;-இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;-ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.-“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.-அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.

செல்வ வீடணன்-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க-அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-

வானரக் கோனுடன்-

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று-இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —-அதாவதுதேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே –-திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை

இலகும்-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகின்ற-தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கினை கொண்டு- திரிவாரைப் போலே ஆயிற்று –மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –

அணி நெடுந்தேர் ஏறிச்

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலை யுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும் வருகின்றிலன்.-இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

சீரணிந்த குகனோடு கூடி-

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும்
ஓர் அடையாளம் –3-10-4-

மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

நன்னீராடிப்-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி
அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்  -மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் ஸ்வயம் பிரயோஜனம்-அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  -கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை-இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம்

திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்-அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன்மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் – தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னுமா போலே
திரு மார்விலே விளங்க-தழைத்த பீலியை திரு முடியிலே சுற்றி-மிகவும் மெல்லிய ஆடையைத் திரு வரையிலே சாத்தி-பூம் கொத்தை காதிலே மிகவும் பொருந்த விட்டுத் தேனையும் நறு நாற்றத்தையும் உடைய குழலை உடையவர்களோடு குழைந்து-கலந்து-நெகிழ்ந்தவர்களோடே ஒரு நீராகக் கலந்து – அக் கலவியால் பிறந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படியாக இனிதாக குழலூதி வந்தாய்

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்–
இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –தண்ட காரண்யம் முழுதும் அழகிய சோபை விளங்கச் செய்து -என்றபடியே–சோபயஸ் தண்டகாரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா அத்ருச்யத் ததா ராமோ பால சந்திர இவோதித –ஆரண்யம் -38-15-
என்கிறபடியே -விளங்க –அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே
அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை – அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –

திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும்
திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் -தொங்குகின்ற -சுட்டியும் –இரண்டு அருகும் அசைந்து ஆடுகையாலே -எல்லாம் சேர ஒளி விட என்னுதல்-திரு மேனிக்கு தகுதியாக பிரகாசிக்க என்னுதல் –

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து
சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

பீதக ஆடை –செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது-முடி –செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது -முதலா மேதகு பல் கலன் அணிந்து –பல சுடர் புனைந்த என்றத்தை-மேதகு ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை – மேன்மைக்குத் தக்கபடி என்றபடி – மேவித் தகுதியாக என்றுமாம்-கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6- ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே-இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்

சூட்டு நன் மாலைகள் அணிந்து-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்-ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே-ஏற்பது தன் தலையால் இருக்கையாலே-பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம்   கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லி காட்டினார்–-அஸ்நாமி-என்னுமா போலே-பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்-எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன்-நன் மாலைகள் — இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே , இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்  -பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் – கள்ளார் துழாய் -என்றும் நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்-அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால்-மாலைகள் —
ஈரம் கொல்லியை கொன்று திரு  பரியட்டம் சாத்தி-ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும்
துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –(கச்சதா மாதுல குலம் அநக -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )-இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் ) ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்-ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்-முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )-நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே-திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )-இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

வடிவிணை இல்லாச்

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

வடிவில் வந்தால் ஒப்பு இன்றிக்கே இருக்கும் -என்றது-பகவானும் ஒப்பு ஆகான் -என்றபடி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5–பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –இந்த விதமான ஏற்றத்தை உடைய பூமிப் பிராட்டியும்-அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –அப்படிப் பட்ட திருவடிகளை –

சங்கு தங்கு முன்கை நங்கை-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-

வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் – அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –

மலர்க் குழலாள் சீதையும் தானும்-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து-பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –
ஆல்-ஆச்சர்யம் – (ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-23

சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்-தர்ம ஜ்ஞானாதிகளாலும்-அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –-படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது-இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் அறுதியாய் இருக்கை – கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும் தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும் பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும் அமோகமாய் இருக்கை –அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான சிம்ஹாசனம் என்றுமாம் –நடை அழகு போலே இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே-உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –சொன்னது அமோகமாய் இருக்கை –கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்-பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே – இது தான் தர்மாதி பீடம் இறே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;-பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

வாழ்வித்தருளினார்.”–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

நீ ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவன்-தோற் புரையில் ஒரு சம்பந்தம் அன்றோ உள்ளது –திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்று ஒழிக்க ஒழியாதபடி –
மஜ்ஜாவிலே (எலும்புக்குள்ளே மாமிசத்தில் )தட்டின உறவு அன்றோ இது –

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்-ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்-பரந்த விழியும் -பதிந்த நெற்றியும் – நெறித்த புருவமும் சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்- சரிந்த கழுத்தும் -அகன்ற மார்பும்-திரண்ட தோளும் -நெளித்த முதுகும் -குவிந்த இடையும்-அல்லிக் கயிறும் -அழுந்திய சீராவும் -தூக்கிய கரும் கோவையும்-தொங்கலும் தனிமாலையும்-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்-சாற்றிய திருத் தண்டையும்-சதிரான வீரக் கழலும்-தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்-குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்-வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று-வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய-வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி –-வியாக்யானம்-

March 16, 2025

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே

யஸ்யாவதார ரூபாணி நமஸ்யந்தி திவௌகஸ:அபஸ்யந்த: பரம் ருபம்
(எந்தப் பரம புருஷனுடைய பரவாஸூ தேவ ரூபத்தைக் காணமாட்டாமல் தேவர்கள் அவனுடைய அவதார ரூபங்களை நமஸ்கரிக்கிறார்களோ) என்கிறபடியே -ஆராத,கரான தேவ ஜாதிகள் அவஸர ப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள்-திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

ஆதித்யனானாவன் தன் ஸ்வரூப ஸித்திக்காக விளக்காய் வந்து தோற்றினான்; அவனைக் குஸல ப்ரஸ்நம் பண்ண வேண்டாவோ? (உன் அடியானான அவனை க்ஷேமம் விசாரிக்க வேண்டாவோ?” )என்கிறார். “வெய்ய கதிரோன் விளக்காக ‘ என்றார் இறே.”நாட்டை யெல்லா மெழுப்புகிற ஆதித்யனுதித்தால் எங்கள் ஆதித்யன் உதிக்க வேண்டாவோ? (எங்களை யெழுப்பும் ராம திவாகரனாகவும், அச்யுத பாநுவாகவு மிருக்கிற தேவரீர் உதிக்க வேண்டாவோ? )பாஹ்யமான அந்தகார மிறே அவனாலே போக்கலாவது; ஆந்தரமான அந்தகாரம் போக்கும் போது தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ?ஆதித்யன் உதய பர்வதத்தை வந்து அணையா நின்றன்; இருள் நீங்கா நின்றது; ஸமாராதந உ பகரணமான
திருப்படித் தாமங்கள் விகஸிதமாகா நின்றன; (தேவரீரை ஆராதிப்பதற்கு உறுப் பான அழகிய மலர்கள் மலர்கின்றன)ஆராதிப்பாரெல்லாரும்-தேவரீரை ஆராதிக்கும் தேவர்கள் ஆராத்யர் தேவரீரென்று தந்தாம் பரிகரங்களோடே , -தங்கள் பரிஜனங்கள் வாஹநங்களோடே அவஸரப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள். -இத்தை யெல்லா மடைய தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்

வ்யா:-(கதிரவனித்யாதி ) தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. (காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து. (மதுவிரிந்தொழுகின மா மலரெல்லாம்) உதய பலமாக ஆராதந உபகரணமான புஷ்பங்கள் விகஸிதமாய் மது வெள்ளமிடா நின்றன-(ஆராதிப்பவர்கள் ஆராதனத்திற்குத் தொடங்கும் காலம் வந்து விட்டது.)(வானவரித்யாதி ) துர்மாநிகளான தேவர்களும், ராஜாக்களும் பக்நாபி, மாநராய், தந்தாமுடைய பல ஸித்திக்கும் ஆபந் நிவ்ருத்திக்கும் உடலா ஒருவர்க் கொருவர் முற் கோலித் திரண்டனர்.( எதிர்திசையித்யாதி; ) திருக் கண்ணோக்கான-தெற்கு திக்கிலே விவரமறப் புகுந்து நின்றார்கள். (இவரொடும் புகுந்த வித்யாதி,) இவர்கள் ஏறும் வாஹனங்களான களிறுகளும் பிடிகளும் முரசினுடைய த்வநிகளுமாய்த் திரண்டு நெருங்கி நின்று த்வநிக்கிற த்வநியானது அலை யெறியா நின்ற ஸமுத்ரத்தின் கோஷம் போலே எங்கும் கோஷியா நின்றது.(அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே) உபய விபூதி நாதத்வம் தோற்றச் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான தேவரீர் அநந்ய கதியான அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- (கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான்)கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. ) “கதிர வர வரவர் கைந் நிரை காட்டினர்” -திருவாய் 10-9-4]”நாரணன் தமரைக் கண்டுகந்து”10-9-2 என்று தேவரீருடையார் அர்ச்சிராதி கதியே போம் போது, ஆதி வாஹிகர் தந்தாம் பதங்கள் நிலை நிற்கைக்காக,தேவரீருடையார்க்குத் தரங்கொடுத்த விளக்குடையாரோபாதி விளக்குப் பிடிக்கிறவர்கள் வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாதிரார்களிறே. கண் வளர்ந்தருளுகிற தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளுவ தெப்போதோ வென்று அவஸர ப்ரதீஷனாய் –பீஷாஸ்மாத், வாத: பவதே! பீஷோதேதி ஸர்ய:பீஷாஸ்மாதக்நிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம: (தைத்-ஆந 8-1 )(இந்தப் பரம புருஷனிடத்தில் பயத்தாலேயே காற்று அடிக்கிறது. (இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும், இந்திரனும், ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் கார்யத்தைச் செய்கிறார்கள் )என்கிறபடியே கீழ்த் திக்கில் உதய கிரியிலே வந்து தோன்றினான். குன்றத்திட்ட விளக்காக உதய பர்வதத்தினருகே ஊரையும் சோலையையும் கண் வளர்ந்தருளுகிற படியையும் காண்கையிலுண்டான ஆசைப் பாடு தோன்ற வந்து கொடு நின்றான்.(கனவிருளகன்றது) ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று. (காலை யம் பொழுதாய் மது விரிந்தொழுகின மா மலரெல்லாம்) இருட்டுப் போய் நின்ற வளவிலே, (ஸூர்யோதயத்தின் பயனாக ஆராதிப்பதற்கு உதவி புரியும் பூக்கள் மலர்ந்து தேன்,வெள்ளம் பெருக நின்றன. ) (ப்ராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம் |ஹரிர் ஹரிர் ஹரிரிதி வ்யாஹரேத், வைஷ்ணவ: புமாந் ||(பராஸர ஸ்ம்ருதி)[வைஷ்ணவனான புருஷன் விடியற்காலை வேளையில் எழுந்து தனக்கு நன்மையைச் சிந்திக்கக் கடவன்; “ஹரி: ஹரி: ஹரி:என்று மூன்று தடவை சொல்லக் கடவன்.] என்றும், ‘சிற்றஞ் சிறு காலே’ என்கிற படியே ஸமாராதந யோக்யமான அழகிய காலமாய், அக் காலத்திலே, தேஸாந்தரம் போன பந்துக்கள் வாரா நின்றார்களென்றறிந்தவாறே ஸ்வ தேசத்திலிருந்த பந்துக்கள் முக மலருமா போலே, இவ் வெயிற் கொழுந்து தாமரைப் பூக்களை வந்தணாவும்படியான கால வண்ணிமையாலே பூக்கள் ஸ்மிதம் பண்ணினவாறே, பூக்களினுடைய செறிவு நெகிழ, சித்ரங்களாலே பூவில் தேன்களடைய ஒழுகா நின்றன-(அக் காலத்திலே வெளியூர் போன உறவினர்கள் வருவதை அறிந்தவுடன் உள்ளூரிலிருக்கும் உறவினர்களின் முகம் மலர்வது போலே, முதல் நாள் மறைந்த ஸூர்ய கிரணங்கள் தாமரைப் பூக்களை வந்தடைந்தவுடன் அப்போதே பூக்கள் சிரிப்பது போலே மலர்ந்தன. குவிந்திருந்த பூக்கள் விரிந்தவுடன் அந்த இடைவெளி வழியாகப் பூக்களிலுள்ள தேன்கள் ஒழுகா நின்றன.)மா மலர்– பெரிய மலர்-மா மலரெல்லாம் ‘ என்கையாலே புஷ்ப ஜாதிக்கெல்லாம் உப லக்ஷணம்.(முல்லை,மல்லிகை, செண்பகம், இருவாட்சி முதலிய எல்லா வகையான பூக்களையும் உபலக்ஷண முறையாலே காட்டுகிறது. )மது விரிந்தொழுகின- மது வெள்ளமிடா நின்றது-(வானவரித்யாதி,) ஆராதகரான தேவர்களும் ராஜாக்களும் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்கு இதுவே யாத்ரையாக ஆராத்யரான தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான த்வரையாலே முற்பட்டார் முற்பட்டபடி ஒருவரிருவராய் வந்து திரண்டு திக்குகள் எங்கும் நிறையப் புகுந்தார்கள். திருக் கண்ணோக்கிலும், அல்லாத திக்குகளெங்கும் நிறைந்தார்கள் என்னவுமாம்; (“எதிர்திசை” என்று கடாக்ஷத்திற்கு விஷயமான தெற்குத் திக்கைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். ஒன்றுக்கொன்று எதிரான எல்லா திசைகளையும் சொல்லுவதாகவும் கொள்ளலாம். )தேவரீருடைய பரிகரமென்னில் இங்ஙனே இருக்க வேண்டாவோ?(இவரொடுமித்யாதி) இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பிடிகளுமாய்; ஸ்ரீரங்கமிறே.(ஸ்ரீரங்க நாதனைப் பிரிய மாட்டாத “ஸ்ரீ”ஆகிய ஸ்ரீரங்க நாச்சியார் வாழும் ஸ்ரீரங்க மன்றோ இது. )வாத்ய கோஷங்களும், இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது, உறங்குகிற பிள்ளைகளை ஒரு வகைகளாலே எழுப்புமா போலே வாத்ய கோஷங்களாலே திருப் பள்ளி யுணரும்படி-(அதிர்தலில் அலை கடல் போன்றுள தெங்கும்) இப்படி கோஷிக்கையில் “குமுறுமோசை விழவொலி”-திருவாய்-6-5-2]- என்னுமா போலே இந்த ஸமுதாய கோஷமானது-சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளர்ந்தது. பெரும் புறக் கடலான-பெரிய திரு 7-10-1- தேவரீர் உணர வேண்டாவோ? உபய விபூதி யுக்தரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்து இவர்களுக்கு முகங்கொடுத்தருளி, அடிமை கொண்டருள வேணுமென்று கருத்து.(அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே) பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ( நாச்- திரு 11-3] என்கிறபடியே இங்கிருந்து கொண்டு உபய விபூதியையும் செங்கோல் செலுத்துகிற தேவரீர் வேறு புகலற்ற அடியேனுடைய ப்ரார்த்தனைக்காகத் திருப் பள்ளி யெழுந்து இவர்களைக் கடாக்ஷித்து அடிமை கொண்டருள வேணும் என்று கருத்து.

———–

அவ:,போது விடிந்தமைக்கு அடையாளமான கீழ்க் காற்றும். புஷ்ப ஸாயிகளான அன்னங்களினுடைய ப்ரபோதநமும் உண்டாயிற்று; ஆஸ்ரித வத்ஸலரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-

அவ:- முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு கீழ்க் காற்று வந்து தாமரைப் பூவில் கிடந்துறங்குகிற ஹம்ஸ மிதுனங்களைக் கிளப்பிற்றின; (போது விடிந்ததற்கான அடையாளமான இவை உண்டான பிறகும் )ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய விரோதி,யை
யறுக்க அரை குலையத் தலை குலைய வந்து ரக்ஷித்தருளின தேவரீர் கண் வளர்ந்தருளுகிறதென்? திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள்ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

வ்யா:- ஸஸ்ரத்தமான முல்லை யினுடைய ஸஸ்ரத்தமான பூவை யணவி, அல்லியுந் தாதும் அரும்புமான கந்தல் (கல்மஷம் )படாமே அருமிதியான(அதனுடைய ஸாரமான) மணத்தை வாங்கிக் கொண்டு புது மாதவிமீதணவி(திருவாய் 5-9-2] என்னுமா போலே கீழ்த் திக்கில் காற்றானது கூர்ந்தது-விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை,
ஆதித்யனுக்கு நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலத்தில் பூவான முல்லைப் பூவும் விகஸித்து, அதின் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப் பள்ளி யுணர்த்துமா போலே வந்து கொடு நின்றது.(சென்ற பாட்டில் சொன்ன படி, ஸூர்யனுக்கு நேரே உறவான நீர்ப் பூவான தாமரை மாத்திரமல்லாமல், நிலத்தில் பூவான முல்லையும் மலரப் பெற்று, அதன் மணத்தை முகந்து கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துவது போலே கீழ்க் காற்று வீசுகிறது.) இதுவோ’ காலைப் பிடித்து உணர்த்துகிறபடி.-இதுவோ” என்றது-ராஜாக்களுக்கு அந்தரங்கரானவர்கள் வந்தவர்களைக் காட்டுமா போலே பார்த்தருளீரென்கிறார். ஸ்பர்ஸேந்த்ரிய க்ராஹ்யமானதை -என்கையாலே -காற்று ஸதத தித்வம் தவிர்ந்து நின்றப் போலே யிருக்கிறது-(தொடு வுணர்ச்சியை உணரும் த்வக் இந்த்ரியத்தாலே அறியப்படும் காற்றை “இதுவோ” என்கையாலே, காற்று எப்போதும் ஸஞ்சரிக்கும் தன் தன்மையை விட்டு, பெரிய பெருமாளுக்குக் கைங்கர் ம் செய்வதற்காக நேரே நின்றது போலே இருக்கிறது.)
(எழுந்தன இத்யாதி) தாமரைப்பூவாகிற படுக்கையிலே பனியை மதியாதே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிற ஹம்ஸ மிதுநங்களானவை காலமுணர்த்த உணர்ந்தன.இத்தால் அரு மறை பயந்த வன்னத்தோடு ஸஜாதீயமானஅன்னம் எழுந்தன-நீயு மெழுந்திரா யென்றபடி. (தமிருஞ்சிறகித்யாதி) பனியிலே நனைந்த சிறகுகளை உதறி நின்றது.
(விழுங்கியவித்யாதி)(பராமாபத மாபந்த🙂 என்று ஸ்வ ஸக்தி மாளும் படி, பிலத்வாரமென்று சொல்லலாம்படி யிருக்கிற பெரிய பரப்பை யுடைய முதலை வாயிலே அகப்பட்டு அதினெயிற்றாலே நெருக்குண்டு மிகவும் நோவு பட்டு, துதிக்கை முழுகும் படியான தஸையிலே, பெரிய ஆபத்தைத் தீர்த்து,
“கைம் மா துன்பம் கடிந்த பிரான்” என்று உபகார ஸ்ம்ருதியாலே க்ருதஜ்ஞர் ஈடுபடும் படியாக, கையில் பூவின் செவ்வி யழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு, அவனை யடிமை கொண்ட மஹோபகாரகராய், பிற் பாடர்க்கு உதவுகைக்காகக் கோயிலிலே நித்ய ஸந்நிதி, பண்ணுகிற தேவரீருணர்ந்தருளும் போதை யழகு காண ஆசைப்பட்ட அடியோங்களுடைய ஆர்த்தி யெல்லாம் தீரும்படி உணர்ந்தருள வேணுமென்கிறார்.
பரமாபத மாபந்நே மநஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர: ஸ்ரீமாந் நாராயண பராயண:| [வி- தர் 69 -47]
( ஸ்லாக்யமான ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தினாலே ஹரியை நினைத்தான் ] என்கிறபடியே தன் ஸக்தியெல்லாம் அழியும்படி குகை வாயில் போலே இருக்கும் பெரிய பரப்பை உடைய முதலை வாயிலே அகப்பட்டு, அதன் வெண் பற்களாலே கடிக்கப்பட்டு மிகவும் துன்புற்று, துதிக்கை முழுகும் படியான நிலையை கஜேந்த்ராழ்வான் அடைந்தவுடன் அவனுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்து வைத்து, “கைம்மா துன்பம் கடிந்தபிரான்” (திருவாய் 2-9-1] என்று நம்மாழ்வார் போல்வார் தமக்குச் செய்த உதவியாக நினைத்து ஈடுபடும் படியாக, கஜேந்திரன் கையில்
புஷ்ப்பம் வாடுவதற்கு முன்பே அதைத் தன் திருவடிகளிலே இடச் செய்து கொண்டு அவனை அடிமை கொண்டு அவனுடைய பெருந்துயரைப் போக்கிய வரலாற்றை அருளிச் செய்கிறார்.”முதலையின் வாயிலே யானை அகப்பட்டது என்றால் தான் தேவரீர் அரை குலையத் தலை குலைய ஓடி வருவீரோ? எங்களைப் போன்ற ஸம்ஸாரிகள் ஸம்ஸார ஸாகரத்தில் அகப்பட்டுத் தத்தளிப்பது கண்டு ஓடிவர மாட்டீரோ?” என்னும் கருத்து தோன்றுகிறது)

வ்யா:-செழுமை யுடைய முல்லைக் கொடியினுடைய செழுமை நிறைந்த முல்லைப் பூக்களை அளைந்து விடி காற்றானது “நீங்களுறங்குகிறதென்?” என்று உணர்த்துவாரைப் போலே சூழ்ந்து கொண்டு முகங்களிலே அலை யெறியா நின்றது;
(எழுந்தன மலரணை யித்யாதி,) இக் காற்று வீசினவாறே விடிந்ததாகாதே யென்று மலராகிற படுக்கையிலே பள்ளி கொள்ளுகிற ஹம்ஸ மிதுநங்களுணர்ந்தன.
“பள்ளி கொள்”-என்கிறது- உகந்தருளின நிலத்திலே உள்ளவையாகையாலே உபசாரமாக வல்லது சொல்லாரிறே, ” நம்மில் சிறியாரில்லை இங்கு வர்த்திப்பாரில்’ என்றிருப்பார்களே-( நாடோடியான அன்னங்கள் உணர்ந்த பின்பும் அரு மறை பயந்த அன்னமான தேவரீர் உணர வேண்டாவோ? என்று கருத்து. “அன்னமாய் அன்றங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகரமர்ந்தானே” [பெரியதிரு 5-7-3] என்று திருமங்கையாழ்வாரும் அருளினாரன்றோ. )(“மலரணைத் துயிலும் என்று கூறாமல் ‘மலரணைப் பள்ளி கொள்’ என்று கூறியது எம்பெருமான் உகந்தருளின பூ,லோக வைகுண்டத்தில் உள்ளவை யாகையாலே
கௌரவமாகவே சொல்ல வேண்டும் என்னும் திரு வுள்ளத்தாலே)
(“அஹ்ருத ஸஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்த பந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கா தாம
மஹித மநுஜ திர்யக்ஸ்தாவரத்வா: ஸ்ரயந்தே
ஸுநியத மிதி ஹஸ்ம ப்ராஹுரேப் யோ நமஸ்ஸ்தாத் (ர-ஸ்த 1-33)
[ இயல்வான ஷேத்வம் என்றுமே நீங்கப் பெறாத நித்யஸுரிகளும், பந்தத்திலிருந்து விடுபட்ட முக்தர்களும், அழகியதான கடைசி தேஹத்திலிருக்கும் முமுக்ஷக்களுமான இவர்கள் ஸ்ரீரங்கத்தில் சிறப்புற்ற மனிதர், திர்யக், ஸ்ததாவரம் ஆகிய பிறவிகளை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது நிச்சயம் என்று அறிவாளிகள் கூறுகிறார்கள். இவர்களுக்கு நமஸ்காரம் ) என்று
பூர்வாசார்யர்கள் ஸ்ரீரங்கத்தில் வாழும் பறவைகள் முதலானவற்றையும் நித்ய முக்தர்களில் ஒருவராக அநுஸந்தித்தார்களன்றோ. பெரிய திருமலை நம்பி, “என்னை அழைக்க ஒரு சிறியாரை அனுப்பக் கூடாதோ? நீரே வர வேண்டுமோ?” என்று கேட்ட எம்பெருமானாரிடம் “திருமலையில் என்னைக் காட்டிலும் சிறியார் இல்லை ” என்று அருளிச் செய்தாரன்றோ)
பூம் படுக்கையிலே தனிப் படுக்கை தணலோடொக்கு மாகையாலே மிதுநமாயல்லது ஸயியாமை தோற்றுகிறது; மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாமே.-திருவாய் 9-9-4-( எழுந்தன’ என்று பன்மையில் அருளிச் செய்கையாலே அன்னம் என்னும் பதம் பேடையோடு கூடிய ஆண் அன்னத்தைக் குறிக்கிறது )
(ஈன் பனி நனைந்த)
உண்டான பனியாலே நனைந்த என்னுதல்; சொரிகிற பனியென்னுதல்(இது சிறகுக்கு விஸேஷணம். ஈன் பனி’ என்றது “விடியற் காலையில் உண்டான பனி” என்றோ,
மழை போலே சொரிகிறபனி’ என்றோ பொருள் படும்.)
“ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய”-இத்யாதி (ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை கோலி” (பெரியதிரு 8-5-8) என்று பரகால நாயகியும் பனிக்கு பயந்து ஒடுங்கிய பேடையை ஆண் அன்னம் தன் சிறையிலே அடக்கிக் கொண்டு துயில்வதாக அருளினாளன்றோ.) (இருஞ்சிறகுதறி) பெரிய சிறகுகளை உதறிக் கொண்டு; பேடையைச் சிறகுக்குள்ளே வளர்த்தித் தன் சிறகை யிட்டுக் கவித்துக் கொண்டாய்த்துக் கிடப்பது. நாடோடியான அன்னங்களெல்லாமுணர்ந்தன;
அன்னமா யன்றங் கருமறை பயந்த தேவரீர் திருப் பள்ளி யுணர வேண்டாவோ?
(விழுங்கிய வித்யாதி.)முதலையின் கையிலே யானை அகப்பட்டதென்றாலோ தேவரீர் அரை குலையக் தலை குலையப் புறப் படலாவது? காலிலே முதலை கடிக்க “விழுங்கிய”என்கிறார்-பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் ‘இனியிழந்தேன்’ என்பாரைப் போலே. (“காலிலே முதலை கஜேந்திரனைக் கடித்து நீரில் இழுத்தது” என்றே வரலாறு யிருக்க. விழுங்கிய” என்று இவர் அருளிச் செய்வது-குழந்தை கிணற்றின் அருகிலே போகும் போதே ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது” என்று பரிவாலே கூக்குரலிடும் தாயின் செயலை ஒத்தது. )
( பிலம்புரை பேழ்வாய் )
பிலத்வாரத்தோ டொத்திருக்கிற பெரிய வாயின்.
(வெள்ளெயிறுற) அங்கு ஆமிஷமில்லாமையாலே மணலை யிற
பக்ஷிப்பது; ஆகையாலே சாணையிலிட்ட ஸ்த்ரம் போலே காணுமிருப்பது
(அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கியஆனையினருந்துயர் கெடுத்த )
(அனுக்கம்) நோவு; (அழுங்கிய) அழுந்திய; நோவிலே அழுந்தின என்றபடி.) ஆனையினுடைய காலைப் பற்றின முதலை யினுடைய பல்லின் விஷத்தாலே யனுங்கி நோவு பட்ட ஆனை யுடைய. (அழுங்கிய) நோவு பட்ட.
(அருந் துயர் கெடுத்த) –அதந்த்ரித சமூபதி ப்ரஹிதஹஸ்தம்)இத்யாதி .
(அருந்துயர் இனி அவ்வருகில்லை என்னும்படியான க்லேமென்னவுமாம் ;
பெறுதற்கரிய துயரென்றுமாம். ஸர்வேஸ்வரனை வந்து விழப் பண்ணின நோவிறே.
(அரங்கத்தம்மா இத்யாதி ) இப்படி ஆர்த்தரானார் கூக்குரல் கேட்கிற இடத்திலே உறங்குமத்தனையோ? ஒரு முதலை பிடித்தாலோ உதவலாவது?
ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ஆழ விழுந்து இந்தரியங்களாகிற முதலைகள் ஐந்தின் வாயிலே விழுந்து அகப்பட்டாரை உணர்ந்தருளி ரக்ஷிக்க வேண்டாவோ?
இப்படி ஸம்ஸாரத்தில் கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் முதலான பல முதலைகளால் நோவுபட்டவர்களை நோக்குவதற்காக வன்றோ திருவரங்கத்தில் திருப்பள்ளி கொள்வது; ஒரு முதலை பிடித்தால் தான் உதவலாமோ? ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே கரை யேற முடியாதபடி விழுந்து இந்த்ரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துன்புறுகிறவர்களை உணர்ந்து ரக்ஷிக்க வேண்டாமோ? “தேவரீர் பள்ளியெழும் அழகைக் காண ஆசைப்பட்ட எங்களுடைய வருத்தம் தீர உணர்ந்தருள வேணும்” என்றுமாம்

———————

அவ:- நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும்படி ஆதித்யனுதித்தான்; கையுந் திருவாழியுமான அழகை அநுபவிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.

அவ:- ஆதிரத்ய கிரணங்கள் எங்கும் பரந்தன; நக்ஷத்ராதி,பதியான சந்த்ரனும் விவர்ணனானான்; திருச்சோலையில் படல் விரிந்த பாளையின் மணத்தைக் கொண்டு விடி காற்றனது வந்தது; கையும் திருவாழியுமான அழகைக் கொண்டு உணர்ந்தருள வேணுமென்கிறார்.
முதற் பாட்டில் கீழ்த் திக்கில் உதய கி,ரியிலே வந்தணைந்தானென்றது; இதில் -நேராக வுதித்து, தன்னுடைய தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோற்றினானென்கிறார்.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

வ்யா:-(சுடரித்யாதி )பார்த்த பார்த்த இடமெங்கும் ஆதித்ய கிரணங்கள் பரம்பிற்று; அத்தாலே நக்ஷத்ராதி,களுடைய தேஜஸ்ஸு தோற்றாதபடியாயிற்று. அவ்வளவன்றிக்கே
( படரொளி இத்யாதி,) இரவெல்லாம் ஸாம்ராஜ்யம் பண்ணின சந்த்ரனும் ஒளி மழுங்கினான்-
(பாயிருளகன்றது)அந்தச் சந்த்ரனுக்கு விகாஸ ஹேதுவாய்ப் பரப்பின இருளானது, மஹா ராஜாக்கள் தோற்றினால் க்ருத்ரிமர் ஒளிக்குமாபோலே மறைந்தது.
(பைம் பொழில்கமுகினித்யாதி)பசுமையை யுடைத்தான சோலைக் கமுகுகளின் பாளைகளானவை விரிய, அதின் பரிமளத்தை முகந்து கொண்டு விடிவோரைக் காற்றானது எங்கும் வ்யாபியா நின்றது.
(அடலொளியித்யாதி.) திருவாழியாலே ப்ரதி பக்ஷத்தைப் போக்கினாப் போலே கையும் திருவாழியுமான அழகைக் காட்டி ஸஹஜ சத்ருவான இந்த்ரிய பாரவஸ்யதையைப் போக்கி, தேவரீர் அழகை அநுப,விக்கும்படி திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

வ்யா:- ( சுடரொளி பரந்தன சூழ் திசை யெல்லாம் )
சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )
(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து. -“தாரகையின் புறந்தடவி யப்பால் மிக்கு’ என்றும்,(“இருவிசும்பினூடு போயெழுந்து – மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிரவோடி, தாரகையின் புறம் தடவி, அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை”[திருநெடு 5]-என்கிறபடியே எல்லாப் பொருள்களையும் வியாபித்து தரிக்கச் செய்யும் திருவடிகளை உடையவராகையாலே, நக்ஷத்திரம் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நாயகராய்.) (சந்திர காந்தாநநம் ராமம்) என்றும் (சந்த்ர காந்தாநதம் ராமமதீவ ப்ரிய தர்ஸநம் (ரா-அ 3-29][சந்திரன் போன்று அழகிய முகமுடையவனாய், மிகவும் இனிய காட்சியை உடையவனான ராமனை (தசரதன் கண்டான்)] என்கிறபடியே,)ஸர்வ பதார்த்தங்களையும் தரிப்பிக்கப் பண்ணும் திருவடிகளை யுடையராய், ஸகல கலா பரி பூர்ணராய், நிஷ் களங்கனான சந்த்ரனைப் போலே யிருக்கிற குளிர்ந்த திருமுகத்தை யுடையரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருளலாகாதோ?-
ஆகாசப் பரப்பெல்லாம் முப்பல் (முத்துப் பந்தல்) விரித்தாப் போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து,-இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய பரந்த தீப்தியும் போய்த்து ; தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே, சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.
(“அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்-திரு வாய் 1-9-9]என்கிறபடியே தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷிக்காமையாலே,சந்த்ரன் தானும் தன் துணையான நக்ஷத்திரங்களோடு உரு மாறிப் போய் விட்டான் என்றும் கருத்துரைக்கலாம்.)
(பாயிருள்) வ்யாபித்த இருள். (அந்தச் சந்த்தரனுடைய ப்ரகாஸத்திற்குக் காரணமாய்ப் பரவி யிருந்த இருள்)
(அகன்றது) நிரஸ்தமாய்த்து. (மஹா ராஜாக்கள் வெளியில் வந்தால் கள்ளர்கள்
ஒளிவது போலே ஸூர்யன் தோன்றிய வுடன் இருள் மறைந்தது.)
( பைம்பொழிலித்யாதி, ) கலக்கந் தெளிந்தால் தந்தாமுடைய போகம் ஒருக்குவாரைப் போலே. (கலக்கம் தெளிந்தவுடன் தம்முடைய போாகத்திலே ஈடுபடுவாரைப் போலே, விடியற் காலைக் காற்றானது, இருளகன்றவுடன் பசுமை யுடைய சோலைக் கமுகுகளின்
பாளைகள் விரிய,அவற்றின் மணத்தை முகந்து கொண்டு எங்கும் வீசுகின்றது. )
(மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற) பாளைக்கு வண்மை யாவது- காற்றுக்குத் தன் பக்கலுள்ளத்தைக் கொடுக்கை யிறே.
(வைகறை) என்று- விடியற்காலம். (மாருதம்.காற்று; விடிகாற்று வருகையும், கமுகிலுண்டான பாளைகள் விகஸிதமாகையும், இதிலுண்டான மணத்தைக் காற்று கொண்டு வருகையாலே மணம் விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை.
மன்றூடு தென்றலுலாம் ” என்று பொதுவான காற்றன்றியே விடிந்தமைக்கு அடையாளம் தெரியக் காற்று வரச் செய்தேயும் கண்வளர்ந்தருள வேணுமோ?( “‘மன்றூடு
தென்றலுலாம் மதிளரங்கம்” [ பெரியாழ் திரு 4-8-9 ] என்கிறபடியே திருவரங்கத்தில் எப்போதும் வீசும் காற்றல்ல இது]-விடிந்ததற்கு அடையாளமான மணம் மிகுந்த இக் காற்று வீசிய போதிலும் கண் வளர்ந்தருளலாமோ? என்று கருத்து.)
(அடலொளியித்யாதி) ஆதித்ய கிரணங்கள் மின்மினியாம் படியிறே திருவாழி யாழ்வானொளி; பெரிய மிடுக்கை யுடைத்தாய், ஒளி திகழா நிற்பதாய், தேஜஸ்ஸு விளங்கா நின்றுள்ள திகிரியை யுடைத்தாய், வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகை யுமுடைய திருக் கையிலே.
(தடக்கை) திருவாழி யாழ்வானுக்கு இடம் போரும் படியான திருக்கை.
( அரங்கத்தம்மா) ஆர்த்தரானார்க்கு முகங்கொடுக்க வந்த விடத்தே கிடந்துறங்குமத்தனையோ?-தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-
(திருவாழி யாழ்வானைக் கொண்டு எதிரிகளைப் போக்கினது போலே, கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எங்களுடைய உடலிலுள்ள எதிரி
இந்திரியங்களுக்கு வசப்பட்டிருக்கும் தன்மையைப் போக்கி, தேவரீருடைய அழகை நாங்கள் அநுப விக்கும்படி பள்ளி யெழுந்தருள வேணுமென்று அருளிச் செய்கிறார்.
ஸூர்ய கிரணங்கள் மின்மினி போலே ஆம்படி இருப்பதன்றோ ஸுதர்சனாழ்வானின் ஒளி; ஆகையாலே அதை அடலொளி என்கிறார். ஸம்ஸாரத் துன்பங்களால் வருந்துகிறவர்களுக்கு முகம் கொடுப்பதற்காக வந்து திருவரங்கத்தில் படுகாடு கிடக்கும் போது உறக்கம் கொள்ளலாமோ? தேவரீர் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

———

அவ:- சக்ரவர்த்தித் திருமகனா யவதரித் தருளி விரோதி, நிரஸந பூர்வகமாக ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் பண்ணி யருளினால் போலே த்வத் அநுபவ விரோதியைப் போக்கி அநுபவி(ப்பி?)க்கத் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.

அவ:- ‘எருமை சிறுவீடு என்கிறபடியே சிறு வீடன்றியே பெரு வீடும் விடும் படியாய், இளங்கன்று மேய்க்க ஒருப் பட்டுத் தளை விடுகிற ஆயர் ஊதுகிற குழலினோசையும்,நாகுகளின் மேலே செருக்கி யோடுகிற விடையினுடைய
கழுத்தில் மணி யோசையும், கார்மணியினாவாடல்”’ என்கிறபடியே மணிக் குரலும் திக்குகளெங்கும் பரந்தது;-மது பாநம் பண்ணின வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டு கிளம்பிற்றின; இவற்றின் ஆர்ப்பரவமறப் போய் அதிக்ரமித்துச் செல்லா நின்றது; விரோதி, நிரஸந ஸீலராய்,ஸர்வ ரக்ஷகரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

வ்யா :-கொம்புகள் அங்குரியா நின்றுள்ள இளையதான எருமைகளும், அவற்றை நியமிக்கக் கடவ இடையர் ஊதுகிற குழலோசையும், அதுக்கும் மேலே மேயப்
புறப்பட்ட பசுக்களின் நடுவில் ரிஷபங்களின் கழுத்தின் மணி த்வநியுமாய், இசை போலே திரண்ட த்வநி எல்லா திக்குகளிலுள்ள வயலெல்லாம் பரந்தன.
( இரிந்தன சுரும்பினம்)அலருகிற கால புஷ்பங்களில் மதுவைப் பாநம் பண்ணின வண்டுகளானவை ஸப்திக்கத் தொடங்கிற்றின.
(இலங்கையரித்யாதி)-துர் வர்க்காத்துக்கெல்லாம் புகலிடமான லங்கைக்கு நிர்வாஹகனான ராவணனுடைய குலத்தை ஸ பரிகரமாக மாய்த்த ஸ்ரீசார்ங்கத்தை உடையராய், ப்ரஹ்மாதி,களுடைய அபேக்ஷிதம் செய்யப் பெற்றோமென்னும் மேனாணிப்பையும் உடையவரே!-விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.
(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.

வ்யா:- இளங் கன்றாயிருக்கச் செய்தே ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்று இவற்றினுடைய. (தளை விடுமாயர்கள்) தளை விடுகையாவது- கட்டு விடுகை. சிறு வீடன்றியே விடிந்து மேய்கையாலே பராக்கற்று மேயுமே; பின்பு அவர்களுக்குப் பராக்கற்ற படியாலே குழலூது மித்தனை யிறே.
(விடை மணிக் குரலும்) பசுக்களும் விட்டு இவற்றுக்குக் கடவதான விடை மணி யோசையும் ;”(ஜ்ஞாநேந ஹீந:பபி,ஸ் ஸமாந:)என்னக் கடவதிறே.(ஆஹார நித்ரா பாயமைது நாநி
துல்யாநி கால்வத்ர ஸமஸ்த ஜந்தோ : |
ஜ்ஞாநாத், விஸிஷ்டோ ஹி நர: பரேப்யோ
ஜ்ஞாநேந ஹீந: பஸூபிஸ் ஸமாந: [நரஸிம்ஹ புராணம் 16-13]
(ஆஹாரம், நித்திரை, பயம். ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும் ஸமானம்.-மற்றவைகளைக் காட்டிலும் மனிதன் அறிவினால் மேலானவனாயிருக்கிறான். ஞானமற்றவன் பசுக்களுக்கு ஸமானமானவன். ]என்று ஞானமற்றவர்களுக்கு உதாரணமாகச் சொல்லப்பட்ட பிராணிகளும் )
இப்படிக் கொத்த ஜ்ஞாந ஹீநமான பதார்த்தங்கள் விட்டு ஸஞ்சரியா நின்றன. ஸர்வஜ்ஞரான தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ? இப்படிப் பட்ட குழலோசையாலும் மணி யோசையாலும்,
( ஈட்டிய விசை திசை பரந்தன திரண்ட த்வநிகளானவை திக்குகளெங்கும். பரந்தன-விஸ்த்ருதமாய்த்து.
(வயலுள் இரிந்தன சுரும்பினம்) சோலைக்குள்ளி லன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை செங்கழு நீரிலே மது பாநம் பண்ணின வண்டுகளானவை ஆரவாரித்துக் கொண்டு சிதறிற்றின.
(இலங்கையர் குலத்தை வாட்டிய) லங்கை யிலுண்டான ராவண ஸந்தாநத்தை வாட்டிய; வாட்டுகையாவது -நிஸ் ஸேஷமாக முடிக்கை; கரியாக்குகை. “வாட்டிய” என்றால் கரியாக்குமோ வென்னில்; வீரபத்நி யாகையாலே “கிள்ளிக் களைந்தானை” என்னுமா போலே, இவரும் தம்முடைய வையாத்யத்தாலே விரோதித்தார்(க்குச் )சொல்லும் படியே அநாயாஸநமாகச் செய்தபடியைக் கொண்டு வாட்டிய” என்ற தித்தனை; இவை எரி சிதறும் சரமாகையாலே தீ,ப்த பாவக ஸங்காஸங்களாகையாலே -அவைகளைக் கரியாக்கி யல்லது விடாதே-
( “பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை” ( திருப்பாவை 18 ) என்று ஆண்டாள் ராவண ஸம்ஹாரத்தைச் சொல்லும் போது வீர பத்நி யாகையாலே ராமன் அநாயாஸமாக ராவணாதிகளை அழிப்பதைக் காட்டுவதற்காக, -கிள்ளிக் களைந்தானை’ என்று கூறியதையும், ராவணனோடு எதிரிட்ட ராம பிரான் தம்முடைய வீரத்தை சுக்கிரீவனுக்கு வெளிப் படுத்தும் போது ” அங்குள்யக்ரேண தாந் ஹந்யாம்” ( ரா-யு 18-24)[தீயவர்கள் அனைவரையும் விரல் நுனியாலே கொல்லுவேன் ] என்று தான் விளையாட்டாக எதிரிகளை அழிக்க வல்லவன் என்று சொல்லி அப்படியே செய்த படியையும் போலே, இவ் வாழ்வாரும்-வாட்டிய’ என்கிறார். ராம பாணங்கள் எரி சிதறும் சரம்” (பெரியாழ் திரு 4-3.8] என்றும், “தீப்த பாவக ஸங்காஸை: [ரா-யு16-22) என்றும் சொல்லுகிறபடியே அக்னியை வீசும் அம்புகளாகையாலே, எதிரிகளைச் சாம்பலாக்கியே தீருமன்றே.)
(நேயயமஸ்தி) யிறே;
(ஸீதாயாஸ் தேஜஸா த,க்தா ) விறே; (காஞ்சந பூ,ஷணை🙂 என்னக் கடவதிறே
(நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண:
யஸ்மாதிக்ஷ்வாகு நாதேந பத்தம் வைரம் மஹாத்மநா |||(ரா- 43-25)
(மஹா புருஷனும், இஷ்வாகு குல நாதனுமான ராகவனோடு விரோதம் வைக்கப் பட்டதாகையால், இந்த லங்கா புரியும், நீங்களும், ராவணனும் அஸத் ஸமராய் விட்டீர்கள். ] என்று ராவணன் லங்கையில் இருக்கும் போதே, அவன் இல்லை என்று அனுமன் சொன்னது போலே இங்கு ‘வாட்டிய‘ என்னும் பதத்திற்கும் ‘அழிந்த என்று பொருள் கொள்ளலாம்.)
(ஸீதாயாஸ் தேஜஸா தக்தாம் ராம கோப ப்ரபீடி தாம்
தஹ்ய மாநாமிமாம் பஸ்ய புரீம் ஸாட்ட ப்ரதோளிகாம் |(ரா-ஸு 51-37]
(சீதையின் தேஜஸ்ஸாலே எரிக்கப் பட்டதும், ராமனுடைய கோபத்தால் பீடிக்கப் பெற்றதுமான இந் நகர் மாடங்களோடும் வீதிகளோடும் எரியப் போவதைப் பார்.) என்று அநுமனே இலங்கை எரியப் போவதாகக் கூறினானன்றோ)
(தீப்த பாவக ஸங்காஸை : ஸிதை: காஞ்சந பூ ஷணை:
நத்வாமிச் சாம் யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை -[ரா-யு 16-22])-எரியும் நெருப்புப் போன்றவையும், கூர்மை யானவையும் பொன்னால் அலங்கரிக்கப் பெற்றவையுமான அம்புகளைக் கொண்டு ராமனாலே நீ கொல்லப் படுவதை நான் காண விரும்ப வில்லை -என்று விபீஷணனும் எரியும் நெருப்புப் போன்ற அம்புகளாலே ராவணன் அழியப் போவதை அவனுக்கு உணர்த்தினானன்றே)
(வரிசிலை வானவரேறே) தர்ஸ நீயமான வில்லை யுடைய-வானவரேறே! ராக்ஷஸரை நிரஸித்து அநுகூலனான ஸ்ரீ விபீஷணாழ்வானை வைத்தாப் போலே இந்த்ரனுடைய அமராவதியை தரிப்பித்து இந்த்ரனுக்கு ஸ்வர்க்க லோகத்தையும் கொடுத்தபடி.
(மாமுனியித்யாதி) முனிகளாகிறார் மநந ஸ்ரீலரிறே. “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்” (ஏஹி பஸ்ய ஸரீராணி)இத்யாதி, எங்கள் பக்கலுள்ள தெல்லாம் குழைச் சரக்கு; உன் அம்பு பார்த்திருந்தோ மென்ன வல்லவர்களிறே; அப்படிப்பட்ட மஹர்ஷிகள் வந்தாலோ போகலாவது?
(மாமுனி வேள்வியைக் காத்து) லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)
(ஏஹி பஸ்ய ஸ்ரீராணி முநீநாம் பாவிதாத்மநாம் |
ஹதாநாம் ராக்ஷஸைர் கோரைர் பஹுநாம் பஹு தாவநே [ரா-ஆ 6-16.)-(ராம (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம் செய்பவர்களும், வனத்தில் கோரமான ராக்ஷஸர்களால் பலவிதமாக ஹிம்ஸிக்கப் பட்டவர்களுமான பல முனிவர்களுடைய ஸரீரங்களைப் பார்ப் பாயாக.] என்கிறபடியே “எங்களுக்கு எங்களை ரக்ஷித்துக் கொள்ள வலிமை யில்லை;உன்னுடைய அம்பைக் கொண்டே எங்களை ரக்ஷித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று சொல்லுகிறவர்களே மாமுனிகள் ஆவார்.“அப்படிப்பட்ட மஹரிஷிகள் வந்தால் தான் எழுந்திருந்து வருவாயோ?” என்று கருத்து)
அத்வர த்ராணம் பண்ணி ] அவரைக் கொண்டே அவப்,ருத,ஸ்நாநம் பண்ணி அதுக்கீடான ப்ரதி பக்ஷத்தை முடிக்கைக் கடியான திறலை யுடைய-பராபி, பவந ஸாமர்த்ய முடையருமாய்,-(தஸ வர்ஷ ஸஹஸ்ராணி) என்றாப் போலே தீர்த்தம் ப்ரஸாதிக்கை யன்றிக்கே, பிற்பாடரானாரும் பெறும் படியாகக் கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற இதுக்கு ப்ரயோஜநம் வேண்டாவோ? விரோதி,நிரஸநம் பண்ணினோமாகில் இனி யென்னென்று கிடக்கலாமோ? அப்படியே ராக்ஷஸராலே பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான் செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர்-
(உத்திஷ்ட, நரஸார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந் தருளப் பார்க்கிறது?
அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?
( தஸ வர்ஷ ஸஹஸ்ராணி தஸ வர்ஷ ஸதாநி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி ||(ரா-பா 1-97
(பதினோராயிரம் வருடம் ராம பிரான் ராஜ்யத்தை ஆண்டு பர ப்ரஹ்மமாகிற தன் லோகத்தை அடைவான்.) என்கிறபடியே நீண்ட காலம் அரசாட்சி செலுத்திய எம்பெருமானே! மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ? “விரோதிகளான
அரக்கரை அழித்து விட்டோம். இனிச் செய்ய வேண்டியதில்லை’-என்று படுத்திருக்கலாமோ? அப்போது அரக்கராலே துன்புற்ற பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான்
செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர். (உத்திஷ்ட, நரார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந்தருளப் பார்க்கிறது?-அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?

———

அவ: – முன்னில் பாட்டிலே- “’வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப் பாட்டிலே -போது வைகினால் உணரக் கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்த வற்றுக்கும் இப் பாட்டிலுணர்ந்த வற்றுக்கும் பாகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரி களுக்குமுள்ள வாசி போருங் காணும்.-வயலிலுள்ளவை போலன்றிறே; சோலையாய் அதிலே பூம் பொழிலா யிருக்கச் செய்தே உணருகிறன விறே. போது- வைகின -படி.

தேவரென்றும், அரக்கரென்றும், மனிதரென்றும் ஏற்றத் தாழ்வு பாராமல் அடிமை கொண்டருளும் தேவரீர் பள்ளி யெழுந்து அடியோங்களுடைய கைங்கரியத்தை ஏற்றுக் கொள்ள வேணும்’ என்கிறார்- வண்டுகள் வயலில் உள்ளவை யாகையாலே ஸூர்யன் உதித்தவுடன் எழுந்து விடும். சோலையாய் அதிலும் பூஞ்சோலை யாயிருக்கும் இங்கு வாழும் பறவைகள் பொழுது விடிந்த பின்பே உணரும்.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

வ்யா🙁புலம்பின வித்யாதி)திருச் சோலையில் பக்ஷி களானவை உணர்ந்து ஆரவாரியா நின்றன.
(போயிற்றுக் கங்குலித்யாதி)ஸர்வரையும் அபி பவிக்கக் கடவ தமஸ்ஸுக்கு ஆஸ்ரயமான ராத்ரி யானது வாஸனையோடே போய்த்து
(புகுந்தது புலரி) ஸத்வோத்தரமாகையாலே ஆராதன யோக்யமான காலமும் ஸந்நிஹிதமாய்த்து.
(கலந்ததித்யாதி ) கீழைத் திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமான ஸமுத்ர கோஷம் எங்கும் வ்யாபித்தது.
(களிவண்டித்யாதி ) மது பாநம் பண்ணிக் களிக்கிற வண்டுகளோடே. கூடின நாநா விதா புஷ்பங்களைத் தொடுத்து அந்த மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்களடைய எல்லார்க்கும் நாதனான தேவரீர் திருவடிகளிலே சாத்துகைக்கு அருள் பாடிடுவது எப்போதோ வென்று புகுந்து நின்றார்கள்.
( ஆதலில் ) ஆகையாலே, பராவரோரான தேவரீர்-
( இலங்கையர்கோனித்யாதி )ராவணாநுஜனென்று பாராதே லங்காதி, பதியான ஸ்ரீ விபீஷண ஆழ்வானாலே கொண்டாடப் பட்ட கோயிலிலே அஸ்மதாதி,களுக்கு முகந்தர விருக்கிற தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
அதவா, ஸ்ரீ விபீஷணழ்வானை அடிமை கொண்டாப் போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்கிறாராகவுமாம்.

வ்யா:- ( புலம்பின புட்களும்) வண்டினமுரலுஞ்
சோலை மயிலினமாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ்
சோலை ‘ என்றார் இறே -அவை யெல்லாம் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே சில பாட, சில ந்ருத்த கீத வாத்யங்கள் பண்ண,அதுக்கு இசையச் சிலராடச் சிலர் கொண்டாட விருந்ததிறே-அங்கு; (போயிற்றுக்கங்குல்) முன்புபோலே அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரியானது நிர்ஸேஷமாய்த்து;
(புகுந்தது  புலரி) தமஸ்ஸ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமாபோலே.  ஆகையாலிறே “பகற் கண்டேன்” என்றது.  (கலந்தது குணதிசைக் கனை கடலரவம்) கோஷமாத்ரமன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.
(“வண்டின முரலுஞ் சோலை
மயிலின மாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ் சோலை குயிலினம்
கூவுஞ் சோலை” (திருமாலை 14 ] என்று இவர் திருமாலையில் அருளியபடியே திருவரங்கத்திலே எல்லாக் காலத்திலும் வண்டுகள் பேரானந்தத்தாலே பாடவும், மயில்கள் அதற்குத் தக்கபடி நடனமாடவும், மேகங்கள் தூரியம் முழங்கவும், குயில்கள் கொண்டாடவுமாயிருக்கும். இங்கு இப்போது பறவைகள் புலம்புவது “பெரிய பெருமாள் இப்படி விடிந்த பின்பும் பள்ளி கொள்வதே!” என்று கூவுவது போல உள்ளது. )
இங்கு ‘பெரிய பெருமாள் இப்போது வைகவும் பள்ளி கொள்வதே!” என்று கூப்பிடுமா போலே இருக்கிறது.
(போயிற்றுக் கங்குல்) முன்பு போலே – “பாயிருளகன்றது” என்று மூன்றா ம்பாட்டில் சொன்னது போல -அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரி யானது நிஸ் ஸேஷமாய்த்து-
புகுந்தது புலரி– தமஸ்ஸூ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமா போலே. -ஆகையாலிறே “பகற்கண்டேன்” என்றது. (‘பகற் கண்டேன் நாரணனைக் கண்டேன்” [ இர. திருவ 81] என்று ஸத்வ குணத்தினால் உண்டாகும் பகவத் ஸாஷாத்காரம் ‘பகல்’எனப்பட்ட தன்றோ. உமது திருவாராதானத்திற்குத் தகுதி யுள்ள காலை நேரம் வந்து விட்டது என்றும் கருத்து. )
(கலந்தது குண திசைக் கனை கடலரவம்) கோஷ மாத்ர மன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.(கீழைத் திக்கில் முழங்குவதையே இயல்வாகக் கொண்ட கிழக்குக் கடலின் ஒலி வெறும் முழக்க மாயிராமல்-உமக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாடுவது போல எங்கும் வியாபித்தது.)
(களிவண்டித்யாதி) உறவு முறையாரைப் பட்டினி விட்டு விருந்தூணரைக் கலும் கலமும் வைத்து ஊட்டுவாரைப்போலே யிறே தேவரீர் படி,-ப்ரயோஜநாந்தர பரரான தேவர்கள் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்காக, நன்றாய்ச் செறிந்து வண்டுகள் மது பாநம் பண்ணிக் களித்துப் பாடிக் கொண்டு ஸேவியா நிற்பதாய், கலம்பகனா யிருந்துள்ள தொடை யலங்கல்கள் கொண்டு வந்தார்கள்; அவர்களுக்காகிலும் முகங்கொடுத்தருளீரோ-என்கிறார். (வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகள் பட்டினி கிடந்தாலும் விருந்தாளிகளுக்கு விருந்திட்டு வெற்றிலை பாக்கு முதலானவற்றைக் கொடுத்து உபசரிப்பவர்களைப் போன்ற இயல்பு கொண்வரன்றோ தேவரீர். எங்களுக்காக அல்லா விடினும் விருந்தாளிகளான அந்தத் தேவர்களுக்காகவாவது முகங் கொடுத்தருள வேணும். மற்ற பயன்களை விரும்புகின்றவர்களாய், தங்களுடைய பதவி நழுவாமலிருப்பதற்காக வந்து பணிபவர்களன்றோ தேவர்கள்)
( ஆதலில் அம்மா) என் மாலை சாத்தாத போதும்-என்னாயினன்று என்ன ஒண்ணாது இறே -( என்னுடைய மாலையை ஏற்றுக் கொள்ளாத போதும் நீர் என்னுடைய ஸ்வாமி யன்று என்று சொல்ல முடியாதே) (ஸ்வாமி என்றே வ்யாக்யானம் செய்கையாலே, அம்மான் அரங்கத்தம்மான்! என்ற பாடம் பொருத்தமாயுள்ளது ) )இப்படி விண்ணப்பஞ் செய்யும் இவர் பேச்சு இனிதா யிருந்தவாறே பள்ளி கொண்டருள;
(இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்) பள்ளி கொண்டருளவேணு மென்றவன் தானே வந்து “எழுந்திரும்” என்றாலோ திருப்பள்ளி யுணர்ந்தருளுவது? வழிபாடு செய்கையாவது திருவுள்ளக் கருத் தறிந்து அடிமை செய்கையிறே. (இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்) இதுவுமோரேற்றமிறே இங்குத்தைக்கு;
(எம்பெருமான் ) ஆஸ்ரித பராதீநரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
விபீஷணாழ்வானை அடிமை கொண்டது போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்று நஞ்ஜீயர் கருத்துரைப்பர்.
(எம்பெரு மான் பள்ளி யெழுந்தருளாயே) ஸ்ரீரங்க மாஹாத்மியத்தின்படி விபீஷணனான அடியானுக்கு வசப் பட்டிருக்கும் தேவரீர் அடியோங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுப் பள்ளி யெழுந்தருள வேணும் என்கிறார்.

——————

அவ:-தேவ ஸேநாபதியோடே கூட, ஜகத்துக்கு நிர்வாஹகரான ஸகல தேவதைகளும்(தங்களுடைய வாஹநம் மு;லான) ஸ பரிகரராய்ச் கொண்டு ஸ்வாபி,மத ஸித்த்யர்த்த,மாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்; தேவரீர் உணர்ந்தருளி விஷே கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்.

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

வ்யா:- த்வாதஸ ஆதித்யர்கள் தங்களுடைய விலக்ஷணமாய்ப் பெரிதான தேரோடே வந்தார்கள்-
(இறையவரித்யாதி ) ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதஸ ருத்ரர்கள் தங்களுடைய வாஹநங்களான ருஷபங்களும் தாங்களுமாக வந்து நின்றார்கள்.
(மருவியவித்யாதி,)தே வஸேமாதி பதியான ஸுப்ரஹ்மண்யன் தன் வாஹ மான மயிலும்
தானுமாய் வந்து நின்றான், (மருதருமித்யாதி ) தேவதா விஸேஷமான மருத் கணங்கள் நாற்பத்தொன்பதின்மரும்,
அஷ்ட வஸுக்களும், ஒருவர்க்கொருவர் முற்கோலிக் கொண்டு வந்து திரண்டனர்.
(புரவியோடித்யாதி.) தேவர்களுடைய வாஹாமான புரவி பூண்ட தேரும் பாட்டுக்களும் ஆட்டமுமாய், தேவ ஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யனோடே திரண்டு பரிச்சேதிக்க வொண்ணாதபடி திரளாய்க் கொண்டு மஹா மேருவை ஒத்திருந்துள்ள கோயிலில் திருக் கண்ணோக்கத்திலே ப்ரதம கடாக்ஷத்துக்காக வந்து நின்றார்கள். ப்ரயோஜநாந்தர பரரோடு அநந்ய
ப்ரயோஜநரோடு வாசி யற ஸர்வர்க்கும் நிர்வாஹகராய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற தேவரீர்
உணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணும்-என்கிறார்.

வ்யா:-தேவரீர் பணிக் கடைத்த ஆதித்யனே யன்றிக்கே, மற்றும் சோம்பி யிருக்கிற ஆதித்யர்களும் வந்தார்கள்-( “கதிரவன்
குண திசைச் சிகரம் வந்தணைந்தான்” (திருப்பள்ளி-1) என்று தேவரீரால் நியமிக்கப்பட்டு உதித்து மறையும் ஸூர்யன் மாத்திரமல்லாமல், சோம்பி யிருக்கிற மற்ற ஆதித்யர்களும் வந்தார்கள்
இன்னமும் படுத்திருக்கலாமோ? என்று கருத்து)
(இறையவரித்யாதி,)(பஹுநாமதி,பதி:)என்கிறபடியே – நான் கேவலம் பசு ஸமராயிருப்பார்க்குக் கடவனாக வேணுமென்றானிறே.
(உலகை நிர்வஹிக்கும் பதினொரு
உருத்திரர்கள் தங்களுடைய வாஹநங்களோடு கூட வந்து நின்றார்கள். விடையர்-ருஷப வாஹனர். (இறையவர்)(ஸோ அப்ரவீத் வரம் வ்ருணா அஹமேவ
பஹு நாமதி,பதிரஸாநீதி தஸ்மாத், ருத்ர:
பஹு நாமதி,பதி:|| (யஜூ -ஸம் 6 2-3)
[ நானே பசுக்களைப் போன்ற ஸம்ஸாரிகளுக்கு அதிபதியா யிருக்கக் கடவேன் என்னும் வரத்தை நான் தேவர்களான உங்களிடமிருந்து வரிக்கிறேன்” என்று அந்த ருத்ரன் உரைத்தான் -என்கிறபடியே “நான் பசுக்களை ஒத்திருப்பாருக்குப் பதியாக
வேண்டும்” என்று தேவர்களிடம் வரம் வேண்டினானன்றோ உருத்திரன். )
(மருவிய மயிலினன்) அவர்கள் தேர்களினின்றும். ருஷபங்களினின்றும் இழியவுங் கூடும்; இவனை மயிலோடே கூடக் கருப்பிடித்தது என்னும்படி யாயிருக்கை. தேவ ஸேநாபதியிறே.
( மருவிய என்கையாலே ஆதித்யர்கள் தங்கள் தேர்களிலிருந்தும், உருத்திரர்கள் ரிஷபங்களிலிருந்தும் இறங்கினாலும்,
முருகன் மயிலை விட்டு இறங்காமையாலே மயிலோடு கூடவே பிறந்தவனோ என்று தோன்றுகிறது-என்னும் கருத்து உணர்த்
தப்படுகிறது.)
(மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி)
மருத் தேவதைகளும், அஷ்ட வஸுக்களும், முற்பட்டார் முற்பட்டபடியே வந்து திரண்டு. (புரவியோடித்யாதி ) தேர் ப்ரஸ்துத மாகையாலே தேர் பூண்ட புரவி யென்னவுமாம்.
அன்றியே, அவ்வவரேறி வந்த வாஹநமென்னவுமாம் –
(குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் ) “தேவசேநாபதி” என்று முன்னே சொல்லுகையாலே, ”குமரன்” என்று
அவன் பேராய், “தண்டம்” என்று தண்டுக்குப் பேராய், இத்தால்-தேவ ஸேநா ஸமூஹத்துக்குப் பேராய், தேவ ஸேநாபதி
வந்தால் தேவ ஸேநையும் வரக் கடவதிறே. அங்ஙனன்றியே-தேவ ஜாதி யாகையாலே ஷோட வயஸ்கராயிருப்பர்களிறே.இனி “தண்டம்” என்கிறது – அவ்வவருடைய
பெரிய திரளை; அவ்வவராயுத, பேதங்களை யென்னவுமாம்.((தண்டம்) ஸமூஹமாதல், ஆயுத மாதல்.)
{ ஈண்டிய வெள்ளம் ) நால்வரிருவரோ? வெள்ளமா-யன்றோ கிடக்கிறது? (அருவரை யித்யாதி) அணியினார்
செம் பொனாய அருவரை யனைய கோயிலிறே-( “அணியினார் செம்பொனாய அருவரையனைய கோயில்”-(திருமாலை 21 ] என்று இவரே திருமாலையில் அருளிச் செய்தபடியே
பெரிய மேருமலை போன்ற திருவரங்கம் பெரிய கோயிலைச் சொல்லு
கிறது. )த்வாதஸ ஆதித்யயர்கள் , ஏகாதஸ , ருத்ரர்கள, தேவ ஸேநாபதியான
ஸுப்ரஹ்மண்யன், மருத்துக்களாகிற தேவதைகள், அஷ்டவஸுக்கள், மற்றுஞ் சொல்லிச் சொல்லாத தேவதைகளடைய ஸ பரிகரராய், தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும்
போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து, “நான் முற்பட, நான் முற்பட’ என்று எல்லாரும் திரண்டு வந்து நின்றார்கள்;
திருப்பள்ளி யுணர்நதருளிக் கடாக்ஷித் தருள வேணும் என்கிறார்.

—————-

அவ: , முதற்பாட்டில் ஸங்க்ரஹேண சொன்னத்தை இப் பாட்டுத் தொடங்கி மேலில் பாட்டுக்களாலுமாக விஸ்தரிக்கிறார். கீழ்ச் சொன்ன தேவதைகளுக்கு நிர்வாஹகனான இந்த்ரனும், வித்யா ப்ரவர்த்தகரான ஸப்த ருஷிகளும், திருப் பள்ளி யெழுச்சி திருவடி தொழ ஸபரிகரராக ஆகாஸ அவகாஸ இடம் அடையும்படி வந்து புகுந்தார்கள்; திருப் பள்ளி எழுந்தருளி இவர்களை அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

அவ:-முன்னிற் பாட்டில் தேவ ஸேநாபதி யானவன் தன் வாஹநத்தோடும் தன் பரிகரங்களோடும் வந்தமை சொல்லிற்று; இப் பாட்டில்- தேவ ஜாதிக்கு நிர்வாஹகனான இந்த்ரன் தன் வாஹநத்தோடே ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லுகிறது-தேவ ஜாதியை மெய்க் காட்டுக் கொள்ள தேவரீரிட்ட வகை செய்வானாய் வந்தானென்கிறது;(பீஷாஸ்–யாத்) இத்யாதிப்படியே.பீஷாஸ்மாத் வாத: பவதே பீஷோதேதி ஸூர்ய:பீஷாSஸ்மாதக்நி லசேந்த்ரஸ்ச ம்ருத் யுர்தா,வதி பஞ்சம:[தைத்-ஆந 8-1.](இந்தப் பரம புருஷனிடத்தில் பாயத்தாலேயே காற்று அடிக்கிறது;(இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும் இந்திரனும் ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள் ] என்று இந்திரன் பர புருஷனின் நியமனப் படியே காரியம் செய்பவன் என்று சொல்லப் பட்டதன்றே.

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:- அபி, மாநிகளான அந்தர ஜாதிகளடையத் தங்களுடைய பரிசரமும் தாங்களும் பாக்ந அபி, மாநமாகத் திரண்டு வந்து நின்றார்கள். இத்தால் கீழ்ச் சொன்னராலும் செய்து முடிக்க வொண்ணாத தபஸ்ஸை யுடைய ஸநகாதிகளும் இந்த்ராதிகளுக்கு ப்ரத்யா ஸந்நரான மருத் கணங்களும் வந்து நின்றார்கள்.
(இந்திரன் இத்யாதி,) ஸர்வாத், யக்ஷனான தேவேந்த்ரன் தன் வாஹநமான ஐராவதமும் தானுமாய் வந்து நின்றான்.
(எம்பெருமானித்யாதி,) ஸர்வேஸ்வரனான தேவரீருடைய கோயில் திரு வாசல். (சுந்தரர் நெருக்க வித்யாதி,)கந்தர்வர்கள் நெருக்க, அவர்களுடனே வித்யாதரரும் நூக்க, யக்ஷருமொன்றாகத் திருப் பள்ளி யுணர்ந் தருளும் போதை அழகு கண்டு திருவடித் தொழுது திருப் பல்லாண்டு பாடுகைக்குண்டான ஆசையாலே ஒருவர்க்கொருவர் முற் கோலி மேல் மேலென நெருக்குண்டு மோஹியா நின்றார்கள். (அந்தரமித்யாதி) ஆகாத்திலும் பூமியிலும் இடமில்லாதபடி யாய்த்து. த்வாராத்,யக்ஷராலும் நிற்கை
யரிதாம்படி நெருக்குப் படா நின்றார்கள். ஸர்வ ஸ்வாமியான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- “இந்திரனானையுந் தானும் வந்திலனோ” என்கிற அர்த்த க்ரமத்தாலே முதலாகக் கடவது; இப்படி யாமோ வென்னில்; இப் பாட்டுக்குத் தாத்பர்யம் – இந்த்ரன் வந்தபடி சொல்லுகை யாகையாலே முதலாகக் கடவது அக்நியாஹிதர் என்னக் கடவதாயிருக்கச் செய்தே பதச் சேர்த்தி அர்த்தச் சேர்த்திக்காக ஆஹிதாக்நியார் என்றதிறே.ப்ரணவம் ஸப்தத:ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்றே யாகிலும் அர்த்தத: பகவத் ஸ்வரூபமிறே சொல்லுகிறது. ராஜ புருஷன்’ என்றால் புருஷன் விசே ஷணமாய் ராஜாவின் பக்கலிலே ப்ராதாந்யம் கிடக்குமா போலே.(“அகார வாஸ்யனுக்கே அடிமையா யிருப்பவன் மகார வாச்யனான ஜீவன்” என்னும் பொருளை யுடைய ப்ரணவத்தின் சொல்லை நோக்கும் போது அது ஜீவனைச் சொல்லுவதாகத் தோன்றிய போதிலும்,அகார வாஸ்யனான பரம புருஷனுக்கே அடிமைப் பட்டவன் ஜீவன்’ என்னும் பொருளை நோக்கும் போது பகவத் ஸ்வரூபமே அதில் ப்ரதாானமாகச் சொல்லப் படுகிறது என்று தேறுகிறதன்றோ-“ராஜ புருஷன்’என்னும் சொல்லைப் பார்க்கும் போது புருஷ சப்தம் விசேஷ்யமாய், ராஜ ஸப்தம் விஸேஷணமா யிருக்கையாலே புருஷனுக்கே ப்ராதகாந்யம் தோற்றும் . ஆனால் ‘ராஜாவுக்கு அடிமைப் பட்ட மனிதன்’ என்று அதன் பொருளை நோக்கும் போது புருஷன் அப்ரதாநமானவனாகவும் ராஜா ப்ரதானமாகவும் தேறுவதையும் இங்கு உதாஹரணமாகக் கொள்ளலாம்-அது போல் இங்கும் பொருளுக்கே ப்ராதாந்யம் கொள்ள வேண்டும்-)( அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ) அந்தரம்-அண்டம் ஆகாஸம் என்று-தேவ லோகத்துக்குப் பேர், “கேசவன் தமர்” என்கிறதல்லவே. அவர்கள் வர்த்திக்கிற தேஸத்தை யிட்டுச் சொல்லு மித்தனை யிறே (ஸ்வரூபத்திற்குத் தக்க ஸ்வாமித்வம் இருந்தால் ‘கேசவன் தமர்’என்று பாகவதர்களைச் சொல்லுவது போலே,இவர்களையும் இந்திரன் தமர் என்று சொல்லலாம்; அப்படி யல்லாமையாலே ‘அந்தரத் தமரர்கள்’ என்று அவர்கள் வாழுமிடத்தை யிட்டு அழைக்கப் படுகிறார்கள். )-தேவர்களை;-பன்மை-கூட்டங்களின் பன்மை.(அருந்தவ முனிவர்) ஸப்த ரிஷிகளாகவுமாம்; பெறுதற்கரிய தபஸ்ஸைப் பண்ணி விரோதி நிவ்ருத்தி பண்ணினவர்க ளென்னவுமாம்.(மருதரு மிவரோ) மருத்,தே வதைகள்; ‘கூட்டங்கள்” என்கிறது மூன்றிடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.(எம்பெருமானுன கோயிலின் வாசல்) அணைந்தார்கள்,-வந்தார்களென்கிற வளவல்ல;பார்த்தருளீர்! திரு வாசலிலே வந்தார்கள்;( அமரர்கள் புகுந்தனர்”(5) என்ற பாட்டில் சொன்னது போலே அருகில் வந்தது மாத்திரமன்று, உன் கோயிலின் வாசலுக்கே வந்து விட்டார்கள் கடாக்ஷிக்கவேணும் ” என்று கருத்து. ) ‘’பின்னிட்ட சடையானும் பிரமனுமிந்திரனும் துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல்” [பெரு. திரு 4-3] என்று சொல்லப் பட்டது போலே பூ லோக வைகுண்டமான கோயிலின் வாசலும் ஆயிற்று என்று கருத்து. ).(சுந்தரர் நெருக்க)தேவ ஜாதியிலே ஒரு பே,தம். ” சுந்தரம்’ என்று அழகாய் அத்தாலே பாடுவாரென்னவுமாம். சுந்தரரென்று கந்தர்வர்,(விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியராயிருப்பார் சிலர்.(இந்திரனுக்கு நெருங்கிய மருத்துக்கள் எனப்படும் தேவதைகள். முன் பாட்டில் ‘மருதர்’ என்று சொல்லப் பட்டவர்களுக்கு அடங்கினவர்களை இங்கு குறிப்பதாகக் கொள்ளலாம்-‘கூட்டங்கள்’ என்பதை அந்தரத்தமரர்கள், அருந்தவ முனிவர், மருதர்
என்னும் மூன்றிடங்களிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்..)(இயக்கரும் மயங்கினர்) யக்ஷரென்று கொண்டு ம்ருது,ப்ரக்ருதிகளா யிருப்பார் சிலர். (மயங்கினர்)நெருக்கம் பொறுக்க மாட்டாமையாலே மோஹித்தார்கள் இவர்கள் இங்ஙனே பட வேணுமோ வென்னில் (திருவடித் தொழுவான்) தேவரீரைத் திருவடித் தொழுகையிலுள்ள நசை யிருந்தபடி. உள் நெருக்கத்தைக் கண்டோமென்றால், புறம்பு தான் நெருக்கற்றிருக்கிறதோ வென்கிறர் மேல் (அந்தரமித்யாதி) ஆகாஸத்தோடு பூமியோடு வாசி யற விவரமற நெருங்கிற்று; தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளிப் பார்த்தருளீரென்கிறார். ஆகாசத்தோடு பூ,மியோடு வேற்றுமை இல்லாமல் இடை வெளியே இல்லாமல் நெருக்கமாய் இருக்கிறது.(அந்தரம்-பார்-மற்று-இடமில்லை”என்று அந்வயம். ) “துவார பாலர்களும் நிற்க இயலாதபடி நெருக்குப் படா நின்றார்கள்” என்பர் நஞ்ஜீயர்- அனைவருக்கும் ஸ்வாமியான தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷித்து அடிமை கொண்டு அருள வேண்டும்

————–

அவ: தேவரீர் திருவாராதநத்துக்கு அநுரூபமான ப்ராத:காலமானது ஸந்நிஹிதமாய்த்து; ஆராதந அங்கமாய்க் கண்டருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்கள் கொண்டு அநந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து நின்றார்கள்;திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக் கண்டருள வேணும் என்கிறார்.

அவ:- முன்னில் பாட்டில் இந்த்ரன் ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லிற்று-இப் பாட்டில்-திருப் பள்ளி யுணர்ந்தருளினால் கடவ உபகரணங்களை மங்களார்த்தமாக கொடு வந்து நின்றர்களென்கிறது,

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:- (வம்பவிழித்யாதி)பரிமளிதமான ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவ தேவர்கள் கோக்ராஸங்கள் கொண்டு வந்து நின்றார்கள். (மாநிதியித்யாதி,) சங்க நிதி, பத்ம நிதி,களும, கபிலா ஸுரபி,களும், திருக் கண்ணாடி முதலாக ஸர்வ ஸ்வாமியான தேவரீர் கண்ட ருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்களுமடையக் கொண்டு அருந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து அவஸர ப்ரதீக்ஷராய் நின்றார்கள்.( தும்புரு நாரதரித்யாதி ) மங்கள கீதங்கள் பாடுகைக்குத் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள். (தோன்றினனிரவியுமித்யாதி) மிக்க தேஜஸ்ஸை யுடைய ஆதித்யனும் தன் தேஜஸ்ஸைப் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான்.(அம்பரமித்யாதி ) ஆகாஸத்தினின்றும் இருள் போயிற்று.-பாஹ்யமான அந்த காரமிறே அவனால் போக்கலாவது; ஸர்வ ரக்ஷகரான தேவரீர், ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்க, திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.

வ்யா:– (வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க) வானவர்-தேவ ஜாதி. (வம்பவிழ் வானவர் -நித்யமான யௌவனத்தை யுடையவர் களென்னுதல்;-ஸெளகந்த்யத்தை யுடையவர்கள்; தந்தாம் பதங்களுக்குத் தக்க பூமலர்களை உடையவர்களென்னுதல்.
(மணம் மிக்க தேவர்கள் தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக அறுகம் புல்லைக் கொண்டு வந்தார்கள். ‘வம்பு’ என்று மணத்தைச் சொல்லுகிறது; அல்லது புதுமையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்–என்றும் இளமையோடு இருக்கும் தேவர்கள் என்று கருத்து. அல்லது மலர்களைச் சொல்லுவதாகவும் கூறலாம். தங்கள் பதவிகளுக்குத் தக்கவாறு பாரிஜாதம் முதலிய மலர்களைக் கைக் கொண்டவர்கள் என்று கருத்து. )(வாயுறைவழங்க) “‘வாயுறை வழக்க என்றதை மெலித்து ”வாயுறை வழங்க” என்றாக்கி, அவர்களுடைய நியமந ப்ரகாரத்தை நினைக்கிறது; “வாயுறை ” என்றது-அறுகம்புல் -வம்பவிழ்” என்றது.ஸஸ்ரத்தமா யிருக்கை.(மாநிதி) “நிதி” என்று-ஸங்க நிதி, பத்,ம நிதி யாகவுமாம்; ‘நிதி’ யென்று நவ ரத்நாதி களாகவுமாம்;
மாநிதி‘யென்றது-மஹார்க்கமென்றபடி. நித்ய தாநத்துக்கு தந ராஸிகளைச் சொல்லிற்றாகவுமாம்.( மாநிதி’யை) தேவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்க்காமல், மேலே சொல்லப்படும் முனிவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்த்து நஞ்ஜீயர் உரை யிட்டார்.)
(கபிலை)பசுக்கள் வரக் கடவதிறே-வழக்கத்துக் குறுப்பாக வாயுறை, மாநிதி, கபிலை மற்றும் சொல்லிச் சொல்லாத உபகரணங்களெல்லாம் வந்தன; கண்டருளுகைக் குறுப்பாகத் திருக் கண்ணாடி தொடக்கமானவையும் எல்லாம் வந்தன-(ஏற்பனவாயின கொண்டு)தேவரீர்க்கு ஸத்ருஸமானவை.-அநுரூபமானவை. (நன் முனிவர்) அத் தலைக்குப் பாங்கானவற்றையே மநநம் பண்ணுமவர்கள்.(எம்பெருமானுக்கு எது உகப்பு என்பதையே நினைத்திருக்கும் முனிவர்கள். ‘வேறு பயன் கருதாத ரிஷிகள்” என்று நஞ்சீயர்.)
(தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ) பெருமாள் பள்ளி கொண்டருளின பின்பு இசை கேட்டருளுமா போலே (தோன்றினனிரவியுந் துலங்கொளி பரப்பி) ‘’அவ்வோ பணிக்குக் கடவர்கள் எடுத்து வந்தார்கள்; அவற்றைக் கண்டருள வேணும்” என்று காட்டுவாரைப் போலே, ஸஹஸ்ர கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு ஆதித்யனும் வந்தான். (ராஜாக்களுக்குப் பந்தமெடுத்துக் காட்டுவாரைப் போலே ஸூர்யனும் தன் ஆயிரம் கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு இந்தப் பணி செய்வாரைக் காட்டுவதற்கு வந்தான். )(அம்பரதலத்திலித்யாதி ) இருளானது ஒரு பயணமெழ வாங்கிற்று-என்றப் போலே யிறே முன்பு சொல்லிற்று-அவ்வளவல்ல; ஆகாசத்திலும் ஸஞ்சரிக்க வொண்ணாத படி நிரஸ்தமானபடி சொல்லுகிறது. (முன் பாட்டுக்களில் ‘இருள் மறையத் தொடங்கிற்று’ என்று சொல்லப்பட்டது. அந்த அளவோடு நில்லாமல் ஆகாசத்திலே நடையாட முடியாதபடி இருள் முழுவதும் மறைந்தததைச் சொல்லுகிறது;-இங்கு)பாஹ்யமான இருளானது நிரஸ்தமானால் ஆந்தரமான இருளைப் போக்கி யருள வேண்டாவோ? தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி அமலங்களாக விழித்தருளீரென்கிறார்.( அமலங்களாக விழிக்கும்’ ( திருவாய் 1-9-9] என்கிறபடியே, திக்குகளிலுள்ள மலங்களெல்லாம் நீங்கும்படி தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார். )

—————

அவ:- திருப் பள்ளி உணர்ந்தருளும் போதை யழகு கண்டு திருவடித் தொழவும், அழகோலக்கம் இருக்கும்படி கண்டு அடிமை செய்யவும் வேணுமென்று தந்தாமுடைய பரிகரமான மங்கள வாத்யங்களும் வீணைகளுமாய் உகளித்துக் கொண்டு யக்ஷ கந்தர்வாதி,கள் வந்து நின்றார்கள்; அடியேனுக்காகத் (அழகோலக்கமாக?) திருப்பள்ளி யுணர்ந் தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

அவ:--முன்னிற் பாட்டில் நித்ய தானத்துக்குறுப்பானவையும் மற்றும் கண்
டருளக் கடவனவும் வந்தன வென்றது;-இப் பாட்டில்- தேவரீர் திருப்பள்ளி யெழுச்சிக்கு ந்ருத்த கீத வாத்யங்களுக்குக் கடவரானவர்கள் வந்தார்களென்கிறது.
(இப் பாட்டில் “தேவரீர் திருப்பள்ளி யுணரும் போது உள்ள அழகைக் கண்டு திருவடித் தொழவும், மண்டபங்களிலே வீற்றிருக்கும் போது கண்டு அடிமை செய்வதற்காகவும் தம் தமது கருவிகளான மங்கள வாத்யங்களையும், வீணைகளையும் ஆநந்தத்துடன் ஏந்திக் கொண்டு யக்ஷர்கள் கந்தர்வர்கள் முதலானவர்கள் வந்து நின்றார்கள். அவர்களுக்காகவும் அடியேனுக்காகவும் திருப் பள்ளி யுணர்ந்து அடிமை கொள்ள வேண்டும்” என்கிறார்)

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வ்யா:-நிர்த் தோஷமான மங்கள வாத்ய விசேஷங்களும், ஏகதந்த்ரீ-எக்கம்; மத்தளி என்னவுமாம் -ஒரு பறை விசேஷம்; யாழ் விசேஷங்களும், குழல் விசேஷங்களுமாய், திக்குக்களெங்கும் முழங்கிக் கொண்டு மங்களமான கீதங்கள் பாடக் கடவரான கிந்நராதிகளும், கந்தர்வர்களும்-மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகளும், அநுக்தரான
தேவர்களும், சாரண யஷ ஸித்தர்களுமடையப் புகுந்து திருவடித் தொழுகை யிலுண்டான த்வரையாலே நெருக்கா நின்றார்கள்.-ஸர்வ ரக்ஷகரான தேவரீர் உணர்ந்தருளி இருந்து அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- ஏதமில் தண்ணுமை -ஏதமென்று-குற்றம், இல்-என்று இல்லாமை; குற்றமற்ற வாத்யமென்கிறது. “தண்ணுமை” என்றது சிறு பறை. ஒரு தலைப் பறை. தாளம்; ஏகதந்த்ரி யென்னவுமாம்; மத்தளி-சிறு மத்தளி.“‘யாழ்” என்று-இசைக்கு முன்னோட்டுக் கொள்வதொன்று; “குழல்’’ என்று ஜாத்யேக வசநம். (முழவம்)பெரு வாயன்;பெரு மத்தளி யென்றுமாம். இவற்றிலுண்டான நாதமானது திக்குகள் தோறும் கெழுமிற்று- நிறைந்தது. ஏதமில்-தண்ணுமை, ஏதமில்-எக்கமென்று எல்லாவற்றிலும் வைத்துச் சொல்லலாம். (கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்)
எல்லாரும் விடிவோறே வருவாரும், விடிந்து வருவாருமிறே; இவர்களைத் திரு வுள்ளம் பற்றி யருள வேணும்.
(கின்னரர் கெருடரித்யாதி) மங்கள காநம் பாடுவார்.-அதில் தலைவரான கந்தர்வர்களுள்ளிட்டவர்களைப் பார்த்தருளீர்
(கங்கலுளெல்லாம்) ராத்ரி யெல்லாம். (மாதவர்) மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகள்.
(வானவர்) வைமாநிகரான தேவர்கள்.(விமானங்களில் வானத்தில் ஸஞ்சரிக்கும் தே வர்கள்.)
(சாரணர்) தேவ ஜாதி தன்னிலே உலாவித் திரியுமவர்கள். ( ‘சரதி இதி சாரண:’-உலாவித் திரிகின்றபடியாலே ‘சாரணர்’ எனப் படுவர் – என்று வ்யுத்பத்தி )
(இயக்கர்) யகூரென்று-தேவ ஜாதியிலே சிலர்;
(சித்தர்) ஸித்தர்கள்;
(சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்) வைமாநிகரான தேவ ஜாதியோடு பெரிய தபஸ்ஸுக்களைப் பண்ணின மதிப்பரான ரிஷிகளோடு-யக்ஷ ஸித்த, சாரணரென்கிற தேவர்களோடு கிந்நரர் கெருடரென்கிற மங்கள காநம் பாடுவாரோடு இவர்களில் தலைவரான கந்தர்வரோடு வாசியற சிறியார் பெரியாரென்னாதே தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து ஒருவர்க்கொருவர் முற்கோலி நெருக்குண்ணா நின்றார்கள்; மங்கள வாத்யங்கள், குழல்கள் இவை கொண்டு அடிமை செய்யுமவர்களும் திருப்பள்ளி யெழுச்சிக்கு உதவ வந்தார்கள். (ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத் தம்மா பள்ளியெழுந்தருளாயே) “நன் மணி வண்ணனூர்” என்கிறபடியே திருப்பள்ளி உணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூமரமும்-பன் மணி நீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடை வேங் கடம்.
-என்று(நான் திருவ-47]திருவேங்கடமுடையான் தாழ்ந்தார் பலருக்கும் முகங்கொடுப்பது போலே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் அனைவரும் வாழலாம்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.

———–

அவ:- நிகமத்தில் முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன தேவர்களோடு ரிஷிகளோடு வாசியற தேவரீர் பக்கல் ஒரு ப்ரயோஜநங்கொண்டு மீளுமவர்களன்றிக்கே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதை முக, விகாஸமே ப்ரயோஜநமாயிருக்கிற அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்று ப்ரார்த்தித்து முடிக்கிறார்-

அவ:- நிகமத்தில்; (கடிமலரித்யாதி ) உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேர்ந்திருக்கிறது. எங்ஙனே யென்னில்;
“அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று தொடங்கி* மாறன் விண்ணப்பம் செய்த’‘ என்றும்,
“நமக்கே பறை தருவான் ‘ என்று தொடங்கி “அங்கப் பறை கொண்ட என்றும்,
(நாதாய முநயே) என்று தொடங்கிப் பின்பு முடிக்கிற விடத்திலும் (பிதாமஹம் நாத முநிம் விலோக்ய) என்றும்—உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரக் கிடக்குமா போலே, இவரும் உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரத் தலைக் கட்டா நிற்கச் செய்தே இவருக்கோரேற்றமுண்டு; இப் பிரபந்தந் தன்னில் பாட்டுக்குப் பாட்டு போது வைகின படி சொல்லுகை யாயிற்று-கருத்து-
முதற்பாட்டிலே செய்தது-ஆதித்யனானவன் உதய பர்வதத்தை வந்தணுகினான்;-தேஸாந்தரம் போன பிள்ளைகள் வாரா நின்றார்கள்” என்று கேட்டால் அவர்களுடன் ஸ்பர்ஸமுடைய மநுஷ்யருக்கு முகத்திலே விகாஸ முண்டாமாப் போலே ஆதித்யனோடே தாமரைக்கு ஒரு சேர்த்தி யுண்டிறே; அத்தாலே முன்பு நின்ற மாத்ரையில் சிறிது விகஸிக்கக் கோலி அது கட்டு நெகிழ்கிற வளவிலே சித்ரத்தின் வழியே தேன் ப்ரவஹித்த தென்றிறே சொல்லிற்று. இதில் அவ்வளவு மன்றியே, இத் தாமரையோடு சேர்த்தி யுடைய ஆதித்யனும் உதித்து மேலே போனான் ;தாமரைகளும் கழிய அலர்ந்தன வென்று போது வைகினபடி சொல்லுகிறது.( இப்படி முதலும் முடிவும் இந்த ப்ரபந்தங்களில் ஒத்திருப்பது போலே இவரும் முதல் பாட்டிலும் ஸூர்யன் உதித்ததையும் தாமரை மலர்ந்ததையும் கூறியது போலே, கடைசிப் பாட்டிலும் அதைக் கூறுகிறார். ஆனால் இந்த ப்ரபந்தத்திற்கு ஒரு சிறப்புண்டு. மேல் மேலே உள்ள ஒவ்வொரு பாட்டும் முந்திய பாட்டைக் காட்டிலும் பொழுது விடிந்ததைச் சொல்லுவதாய் அமைந்துள்ளது. அந்த முறையில் முதற் பாட்டிலும் முடிவுப் பாட்டிலும் ஸூர்யனையும் தாமரையையும் சொன்ன போதிலும் இரண்டுக்கும் ஒரு வேற்றுமை உண்டு.-ஸூர்யன் உதய கிரியை நெருங்கினான். ‘வெளி நாட்டுக்குச் சென்ற பிள்ளைகள் வருகின்றார்கள்’ என்று கேட்டால் அவர்களோடு உறவுடைய மனிதர்களுக்கு முகம் மலருவது போலே, ஸூர்யன் உதித்ததைக் கண்டவுடன் அவனோடு உறவுடைய தாமரை சிறிது மலரத் தொடங்கிய போது அந்த இடைவெளியின் வழியாகத் தேன் ஒழுகிற்று” என்று முதல் பாட்டில் சொல்லிற்று.இக் கடைசிப் பாட்டில் “தாமரையோடு உறவுடைய ஸூர்யனும்உதித்து மேலே கிளம்பினான்; தாமரைகளும் முழுவதும் மலர்ந்தன”என்று பொழுது மிகவும் விடிந்து விட்டதைச் சொல்லுகிறது)

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—
–10-

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

வ்யா:– ஊரிலே தாமரை யாயுள்ளவை யெல்லாம் அலர்ந்து தோன்றி மது, வெள்ள மிடா நின்றன-(கதிரவனித்யாதி) அந்தத் தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யனும் கீழ்திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமாக வுடைய ஸமுத்ரத்தில் உதய கிரியிலே வந்து தோன்றினான். (துடி யிடையாரித்யாதி.) கண்டாரைப் பிச்சேற்ற வல்ல இடையையும்,மயிர் முடியையும் உடைய ஒருதரத்தில் பெண்களெல்லாம் நீராடித் தந்தாம் பரியட்டங்கள் தாந்தாமே சாத்திச் சமைந்தார்கள்-இத்தால்-பெரிய பெருமாள் சிவட்கென்ன உணருகைக்காகப் பழைய யமுனை நீராட்டை ஸ்மரிப்பிக்கிறார். “பெரிய பெருமாளாகிறார்-கிருக்ஷ்ணன்; நம் பெருமாளாகிறார்-சக்ரவர்த்தித் திருமகன்”என்றருளிச் செய்வர். (சூழ்புனலரங்கா) விரஜையையும்,-யமுனையையும், ஸரயுவையும் மறப்பிக்கும் படியான திருப் பொன்னியாலே சூழப்பட்ட கோயிலை நிரூபகமாக வுடைய தேவரீர். பெருமாளுக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி.(தொடைகொத்தவித்யாதி,) தொடுக்கிற போதே அங்குத்தைக்கு ஸத்ருஸமாம்படி தொடுத்த திரு மாலைகளும், திருப் படலிகையுமாய். (தோன்றிய வித்யாதி; ) ரஷகரான பெருமாளுக்குக் கோயில் நிரூபகமானாப் போலே ஆழ்வாருக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி– ( க நித்ர பிடகாத. 🙂 என்றும் (லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந🙂 என்றும் சொல்லுகிற இளைய பெருமாளைப் போலே சேஷ பூதனுக்கு சேஷத்வ பரிகரமே ஐஸ்வர்யமாகக் கடவதிறே, (ஸர்வ ப்ரிய கரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி: ப்ராண இவா பர: !}
ரா – ப ா 18-28)-கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு சரீரத்தைக் காட்டிலும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனாகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்.] என்று கைங்கர்ய லக்ஷ்மியை நிரூபகமாகச் சொன்னது போலவும் தமக்கு நிரூபகம் தொண்டரடி்ப் பொடி” என்பதே என்கிறார்)”தொண்டரடிப் பொடி” என்று இவருடைய ப்ரஸித்தி,ஜ்ஞாந ஆநந்த லக்ஷணமாகை யன்றிக்கே ததீய சேஷத்வ பர்யந்தமாயிருக்கை.(அடியனை அளியனென்றருளி) ஸ்நிக்தனென்று க்ருபை பண்ணி யருளி, அச் சேஷத்வத்தின் எல்லையிலே நிறுத்தின தேவரீர் அடியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.

வ்யா:- (கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ)கடி யென்று நறு நாற்றம். கடிந்தமுண்டாகச் சொல்ல வேணுமோ? வாசஞ்செய் பூங்குழலாளுடைய வாஸஸ்தாநமன்றோ .(“வாசஞ் செய்பூங்குழலாள் திரு“[திருவாய் 10-10-2] என்கிறபடியே நறு மணமே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாகையாலே தாமரை களுக்கு நறு மணமுண்டு என்று சொல்லவும் வேண்டுமோ?)(மலர்ந்தன இவையோ) முன்பு சொன்ன மாத்ரமே யல்ல. தேவரீர் கண்டருள வல்ல வளம்பூ. (தேவரீர் கண் விழித்தவுடன் கடாக்ஷிக்க வேண்டிய வளம் மிக்க பூ எங்கும் நிறைந்துள்ளது.)(கதிரவன் கனை கடல் முளைத்தன னிவனோ) முன்பும் இவன் ப்ரஸ்துதனான விடத்தில் ‘இவனோ’ என்றவிடமில்லை; இவனை வினவி யருளீர்; அவனுக்கு தாரகம் தேவரீர் குல ப்ரஸ்நம் பண்ணுகை யன்றோ -இவர்கள் தந்தாமுடைய ஸத்தா தாரகம் இழக்கு மளவல்ல; இவர்களை வினவி யருளாதே தேவரீருடைய ஸத்தா தராரகம் இழக்கப் புகா நின்றீர் என்கிறார் மேல்;(துடியிடையாரித்யாதி) “தோழியும் நானும் தொழுதோம்’ ‘கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ‘ என்கிற இந்த ரஸம் இழக்கப் புகா நின்றீர். இத்தால்-பழைய மடுவின் கரையையும், குருந்திலேறின படியையும் நினைக்கிறது. கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயனிறே பள்ளி கொள்ளுகிறவன் (கண்டவர் ஈடுபடும் உடுக்கை போன்ற நுண்ணிய இடையையும் சுருண்ட மயிர் முடியையும் உடைய அழகிய பெண்கள் காவிரியில் நீராடி தம்முடைய வஸ்த்ரங்களைத் தாமே சாத்திக் கொண்டு கரை யேறினார்கள். “தோழியும் நானும் தொழுதோம் ” (நாச் திரு 3- 1] “கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ( நாச் திரு 3-5) என்கிற கிருஷ்ணாவதார ரஸத்தை இழக்காமல் விழித்தருள வேணும் என்று கருத்து. “கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” [ அமலனாதி பிரான்- 10] என்று திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளைக் கண்ணனாகவே அருளிச் செய்தாரன்றோ. “பெரிய பெருமாளாகிறார் க்ருஷ்ணன்; நம் பெருமாளாகிறார் சக்ரவர்த்தித் திருமகன்” என்று பட்டர் அருளிச் செய்லர் என்பது நஞ்சீயர் வ்யாக்யானம்) (சூழ்புனலரங்கா)நீர்ச் சிறை( நீரை)யிட்டு கொண்டு கண் வளர்ந்தருளலாமோ?(தொடை யொத்த துளபமும்) திருமாலை யெடுத்தால் திருக் குழலுக்கும் திரு மார்வுக்கும் அளவாயிருக்கை. திருமாலை யாயும் திருப் பரியட்டமாயும் நிற்கிறாப் போலே சேதந வர்க்கமிறே( ‘ஒத்த துளவ மாலை’ என்கையாலே மாலை பீதாம்பரம் முதலானவை யெல்லாம் நித்ய ஸூரிகளான சேதநர்களாகவ இருக்கிறார்கள் என்று உணர்த்தப் படுகிறது.ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வாநுரூபைரநூபமை: சிந்மயைஸ் ஸ்வ ப்ரகாலை ச அந்யோந்ய ருசி ரஞ்ஜிதை:[பௌஷ்கர ஸம்ஹிதை] தனக்குத் தகுந்தவையும், ஒப்பற்றவையும், ஞான மயமாயிருப்பவையும், ஸ்வயம் பிரகாசமானவையும் ஒன்றுக் கொன்று (சேர்த்ததியினாலுண்டான) காந்தியினால் அழகாயிருப்பவையுமான மாலைகளோடும் வஸ்திரங்களோடும் ஆபரணங்களோடும் கூடியிருப்பவன் பரம புருஷன்] என்று சொல்லப்பட்டதன் .)(கூடையும் பொலிந்து தோன்றிய தோள்) **ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்” -[பெரிய திரு 11-2-6)என்று அவை அவனுக்கு ஸேஷித்வ ஸூசகமிறே- (மஹாத்மநஸ் ஸங்க சக்ர அஸி பாணே:) என்னுமா போலே யிறே சேஷ பூதனானவனுக்கும் திருப் படலிகை ஸூசகமாயிருக்கிறபடி( வர்ஷாயுதைர் யஸ்ய கு,ண ந ஸக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:மஹாத்மந: சங்க சக்ராஸி பாணேர் விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸு தேவாத் மஜஸ்ய||(பார-கர்ண 88-651 (மஹா புருஷனும், ஸங்க,சக்ரங்கள், வாள் ஆகியவற்றைக் கையில் ஏந்தி யிருப்பவனும், ஸர்வ வ்யாபியும், ஜய சீலனும், வஸு தே வ புத்திரனுமான எவனுடைய குணங்கள் பதினாயிரம் வருஷங்களிலும் எல்லா உலகங்களும் கூடியும் பேச முடியாதவையோ ] என்கிறபடியே தலைவனான எம்பெருமானுக்கு சங்கு சக்ரங்கள் அவனுடைய தலைமையை உணர்த்தும் அடையாளங்களாக இருப்பது போலே, தாஸனான சேதனனுக்கும் பூக் கூடை சேஷத்வத்தைக் குறிக்கும் அடையாளமாக இருக்கிறது,)(க நித்ர பிடகாதர இத்யாதி) ( தநுராதாய ஸ ஸரம் கநித்ரபிடகா த ர |அக்ர தஸ்தே கமிஷ்யாமி மந்தா நமநுதர்யந்[ரா-அ 31-25]மண் வெட்டியையும் கூடையையும் தரித்தவனாய், அம்புடன் வில்லையும் எடுத்துக் கொண்டு வழியைக் காட்டிக் கொண்டே உன் முன் செல்வேன்] என்று இளைய பெருமாளுக்குக் கூடை அடையாளமாகச் சொல்லப் பட்டதன்றே.)தொண்டரடிப்பொடி) [துளவத் தொண்டாய ] (“துளவத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி” (திருமாலை 45]-என்கிற படியே திருத் துழாய்க் கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதராகத் தம்மை நினைத்திருப்பவர். )திருத்துழாய்க் கெழுதிக் கொடுத்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியேனென்றிருக்குமவர்; இவருடைய அடியாரடியாரிருக்கிறபடி; இப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீபாத ரேணு)வென்கிறார். (அடியனை) இவ் வாத்மாவினுடைய ஆர்ப்பைத் துடைத்தால் நிலை நின்ற பேர் இதுவிறே-(இவ்வாத்மாவினுடைய அஹங்காரமாகிற ஆர்ப்பை (ஆரவாரத்தை]த் துடைத்தால் நிலை நின்ற பேர் “அடியேன்” என்பதே யாகும். அதுவும் அடியார்க் காட்பட்டிருக்கை வரையில் செல்ல வேணும் என்று காட்டுகிறது. )(அளியனென்றருளி) – ஸ்நேஹி யென்று திருவுள்ளம் பற்றி -அங்ஙனன்றியே, தேவரீர் அளி மிக்காரிறே; ( “அளிமிக்கான்” ( திருவாய் 4-8-5] என்கிறபடியே கருணை மிக்கவரான தேவரீர் இந்த ஜந்துவை-‘அன்பு காட்டத் தக்கவன் என்று திருவுள்ளம் பற்றி; ஒரு கைம் முதலும் இல்லாதவனாகையாலே நாமே அருள் புரிய வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி. “அளியன் நம் பையல் என்னார்” [ திருமாலை 37] என்று திருமாலையிலும் அருளினாரன்றோ.)இஜ் ஜந்துவை க்ருபை பண்ண வடுக்குமென்று திரு வுள்ளம் பற்றி; எல்லாமற்றானென்று திருவுள்ளம் பற்றி-(உன்னடியார்க்காட் படுத்தாய்) உன்னளவிலே நிற்கில் முதல் நிலை; “உனக்காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” என்னாதபடி அடியார்க் காட் படுத்தாய். முதல் நிலையுமன்றியே இவ் வருகில் ஸம்ஸாரமுமன்றியே “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்னுமா போலே எல்லை நிலத்திலே நிறுத்தினாய்; ரத்நம் பட்டது, முத்துப் பட்டது” என்னுமா போலே-(உனக்காட்பட்டிருந்தால் அது முதல் நிலை-(ப்ரதம பர்வம்) ஆகையாலே பல ஸித்தியைப் பற்றி ஐயுற வேண்டி யிருக்கும். “உனக் காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” (திருவாய் 9-4-4) என்ற நம்மாழ்வாரைப் போலே ஐயப்படாமல்,அடியேனை அடியார்க்கு ஆட்படுத்தி ஐயப் படுவதற்கே இடமில்லாத சரம பர்வமாகிற கடைசி நிலையிலேயே நிலை நிறுத் தினாயே என்கிறார். )( பள்ளி யெழுந்தருளாயே ) அபிமத ஸித்தி,யுண்டானாலும் உறங்குமித்தனையோ ? தேவரீருடைய யோக நித்ரை பல பர்யந்தமானாலு முறங்குமித்தனையோ?


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யானம் -தனியன் வியாக்யானங்களும் பிரவேசமும்-

March 14, 2025

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
-ஸ்ரீ திருமாலை ஆண்டான்

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்-குணங்கள் அமைந்த தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்-ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை

இஸ் ஸ்லோகத்தில்
செய்யும் பசுத்துளபத் தொழில் மாலையும் -செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத் தையன் கழற்கு அணியும் பரன் –13-என்னும் படி
தொண்டார் அடிப்பொடி ஆழ்வாரை ஸ்தித் அபி வாதநம் பண்ணும் படி சொல்கிறது
திருமாலை என்னும் திவ்ய பிரபந்தம் அன்றிக்கே திருப்பள்ளி எழுச்சியையும் -ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம்-என்று சொல்மாலையாக விறே சொல்லுவது -இது தான் திருப்பள்ளி எழுச்சிக்குத் தனியனாக இருப்பது -திருமாலை என்ற சொல்ல அது ஒரு பா மாலை என்று காட்டுகிறது -ஆண்டாள் பெரியாழ்வாரைப் போல பா மாலை பூ மாலை இரண்டையும் பெரியபெருமாள் திருவடிகளிலே சமர்ப்பித்ததைக் கூறுகிறது –

ராஜவத் அர்ஹணீயம்-ரங்கேசயம்-பர வாஸூ தேவம்-மத்வா –அதாவது
ராஜவத் பூஜ்யராய் -ரங்க ராஜதானியிலே கண் வளர்ந்து அருளுபவரான -ஸ்ரீ ரங்கராஜரை -ஸ்ருதி ப்ரஸித்தரான பர வாஸூ தேவராகவே பிரதிபத்தி பண்ணி என்றபடி –
ராஜவத் அர்ஹணீயராவது -ராஜவத் பூஜ்யர் என்றபடி -ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திருமகனாராலும் ஆராதீயநராய் இருக்கை –
ரங்கேசயம்-அதாவது
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்,
மருவிய பெரிய கோயில்
மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11) -என்றும்

பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கினப் பணி புங்கவே
சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே
–1-–106-

பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக
வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை
விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும்
இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே-மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ
பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது
சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும்
கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான
ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் –
அலம் புரிந்த நெடும் தடக்கை என்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –திரு நெடும் தாண்டகம்–6-

அரங்கத்து அரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-என்றும்
அறிவுடையார் பேசும்படி பெரிய பெருமாள் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளுகை

இப்படிப் படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டருளும் பெரிய பெருமாளை-பர வாஸூ தேவம் மத்வா -வாஸூ தேவோ அஸி பூர்ண -ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்களால் பூரணமான வாஸூ தேவனாய் இருக்கிறீர் -என்று புத்தி பண்ணி-இங்குத்தையில் படியே விசாரியாதே -அங்குத்தையில் படி யாகவே அனுசந்தித்து
(அர்ச்சக பராதீனனாய் அடியார்கள் குற்றங்களைப் பொறுத்திருக்கும் அர்ச்சாவதாரமாக எண்ணாமல் வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும் பர வாஸூதேவனாகவே எண்ணி (ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -திருவாய் -3-5-5-என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-என்றும் சொல்லப்படுகிறது அன்றோ –நம்மாழ்வார் பெரியபெருமாளை கடலிடம் கொண்ட கடல் வண்ணா -7-2-7-என்று அனுசந்தித்தார் அன்றோ
ஆகையால் இவரும் அப்பரவாஸூதேவனைப் போலவே பூர்ண ஷாட் குண்யமாய் -ஞான பல ஐஸ்வர்ய சக்தி தேஜஸ் வீர்ய-இவற்றால் பரிபூர்ணனாய்
ஸர்வம் பூர்ணம் -த்வய உபநிஷத் –என்கிறபடியே அர்ச்சாவதாரமே சவ் ஸீல்யாதி நீர்மைக் குணங்களாலும் நிறைந்து இருப்பவர் அன்றோ –
ஆகையால் –யாவரும் வந்து அடி வணங்கி அரங்க நகர் துயின்றவனே -பெருமாள் திருமொழி -8-10-என்கிறபடி ஸர்வ சமாஸ்ரயணீயமாய் யாய்த்து -இவ்விஷயம் இருப்பது
நித்ய ஸூரிகளோடே நித்ய சம்சாரிகளோடே வாசியற அனைவரும் வந்து அடி பணிய நிற்பவர் அன்றோ பெரிய பெருமாள் –

தம் -பர வாஸூ தேவம் ஏவ மத்வா– என்னும் இடத்தில் -அவதாரணத்தாலே-ஏவ கார்த்தாலே -கைங்கர்யம் பண்ணும் இடத்தே –முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8-5-7-என்றும்
பரவா நஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -1-57-என்று ஏவிக் கொண்டு -அருள்பாடிட்டு அழைத்து
வானாடு அமரும் குளிர் விழிகளாலே -திருவிருத்தம் -63 என்கிறபடியே எதிர் விழி கொடுக்கும் பர வாஸூதேவனாகவே இவரை புத்தி பண்ணி-ஆதி மூர்த்தி அரங்கன் மா நகருளானே –திருமாலை -16 என்றும் இவ்வாழ்வாரே இவரைப் பர வாஸூதேவனாக அருளிச் செய்தார் இறே
இந்திரலோகமாளும் அச்சுவை பெறினேம் வேண்டேன் அரங்க மா நகருளானே -2-என்று பர வாஸூதேவனைக் காட்டிலும் சிறப்புற்றவனாக அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
ராஜவத் அர்ஹணீயம் ரங்கேஸேயம்-என்று கூட்டி -இங்குத்தையில் ஸுலப்ய ப்ரஸித்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம்

பர வாஸூதேவம் என்கையாலே வ்யூஹ வாஸூதேவனைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது
ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்ரித
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயன் மது ஸூதன
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-6-
வாஸூதேவன் என்னும் பெயருள்ள தமது ஸ்வரூபத்தை சிந்தித்துக் கொண்டு தன்னுடைய மூல ப்ரக்ருதிக்கு அபிமான தேவதையான யோக நித்ரையை அறி துயிலை மேற்கொண்டான் -என்னும்படி
இவள் திறத்து என் சிந்தித்தாயே -7-2-4-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை -5-4-11-என்றும் -ஜகத் ரக்ஷண சிந்தையாகிற -வ்யூஹ ஸுஹார்த்தம் உண்டு இறே இங்கு -இவர் பரிபூர்ண அனுபவம் பண்ணும் பர விஷயமாகவே பெரிய பெருமாளைக் ப்ரீதி பண்ணி இருப்பாராய்த்து-

காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்
ஸ வாஸூதேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
-ஸ்ரீ ரங்க மஹாத்ம்யம் சொல்லப்படுகிறது அன்றோ –
அண்டர் கோன் அணி யரங்கன் -அமலனாதி -10-என்றும்
வடிவுடை வானவர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே -திருவாய் -7-2-10-என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் -11-2- என்றும்
அடி அறிந்தார் அனுசந்தித்தார்கள் அன்றோ
பெரிய பெருமாள் எங்கிருந்து வந்தார் என்றும் திருவடிகளை அறிந்தவர் என்றும் சாடு –

விசேஷித்து கோயில் திரு த்வாதஸ அக்ஷரீ (ஓம் நமோ பகவதே வாஸூதேவாய ) பிரதானமாய் இறே திருவாராதனம் கொண்டு அருளுவது –
த்வாதஸ அக்ஷர மந்த்ரோயம் மந்த்ராணாம் த்ராய உச்யதே –இந்த மந்த்ரம் மற்ற மந்திரங்களுக்கும் ரக்ஷகமாக சொல்லப்படுகிறது -என்ற ப்ரமாணப்படியே
ஸ்ரீ ரங்கநாத ஜகந்நாத -என்னும்படி அர்ச்யரான இவருக்கும் சர்வருக்கு ராஜாவாய் இருப்பர் -இங்கும் ராஜவத் அர்ஹணீயம் -என்றது இறே –
ஆகையால் ராஜாக்களைப் பள்ளி யுணர்த்துமாப் போலே அந்தப் ராஜாக்களுக்கு ராஜாவான ஸ்ரீ ரங்கராஜரைத் திருப்பள்ளி உணர்த்தினபடி சொல்லுகிறது

அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் -ஸ்ராவ்யமாய் -இனிமையாய்-திருப்பள்ளி யுணர்த்துமதான பாமாலையை யாதொருத்தர் பணித்தார் -அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானத்திற்கு குண பூர்ணரான தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை (தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை)
(ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்-போல் -இங்கும்-பணித்த ஆழ்வாருக்கும் பெருமை-குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார் அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே –ஏற்கும் நால்வருக்கும்)
ஈடே என்கிற பத பிரயோகம் ஸ்துதித்துத் தொழுவோம் -இரண்டையும் வகிக்கக் கடவது –

ராஜவத் அர்ஹணீயானாகையாலே ராஜவத் உபசாரமாம்படி திருப்பள்ளி யுணர்த்த வேணும் இறே
அயோத்தி எம்மரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
-8-என்று இறே இவர் திருப்பள்ளி உணர்த்துவது
ரஷோ கண பரி ஷிப்தோ ராஜா ஹ்யேஷ விபீஷண
ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபி ஷேசித-
யுத்த -28-7-
ராக்ஷசர்களால் துரத்தப்பட்டவனாய் அரசனான இந்த விபீஷணன் அரசர்க்கு அரசனாய் ஸ்ரீ மானான ராமபிரானாலே லங்கா ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விக்கப் பட்டான் -என்றும்
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணு ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜாநீமஸ் ஸ பிதா ஸ பிரஜாபதி
-ஆஸ்வ பர்வம் -43-13
பர ப்ரஹ்ம ஸ்வரூபியும் -பெரியோனும் அரசர்களுக்கு எல்லாமே அரசராயும் இருப்பவன் விஷ்ணு -ஈஸ்வரனாக அவனை அறிவோம் -அவனே தந்தை -அவனே பிரஜாபதி -என்றும்
வீர சவும்ய விபுத்யஸ்ய கௌசல்ய ஆனந்த வர்த்தந
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸூப்தே நராதிப
-உத்தர -37-4-
கௌசல்யா தேவியி இன்பத்தை வளர்ப்பவனும் -வீரனான அழகனுமான ராமபிரான் பள்ளி உணர்ந்து அருள வேண்டும் -நீ உறங்கினால் உலகம் எல்லாமே உறங்குகிறது-என்றும்
கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்
-பால-23-2-
என்று வந்திகள் -விச்வாமித்திராதிகள் உணர்த்துமா போலேயும்
அவருக்கும் பெரிய பெருமாளாய் பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கராஜரை அன்றோ இவர் திருப்பள்ளி உணர்த்துவது –

இவர் தாம் இப் பிரபந்தத்திலே
கால அதிக்ரமமான படியையும்
ப்ரஹ்மாதி தேவதைகள் ஸாவதாநராய் வந்து திருவாசலில் காத்து நிற்கிற படியையும்
அங்குத்தையில் சம்மர்த்தத்தையும்
திருப்பள்ளி யுணர்ந்தால் கண்டு அருளும்படி மங்கள வஸ்துக்கள் பாரித்த படியையும்
மங்கள வாத்யங்கள் முழங்குகிற படியையும்
மங்கள தீபம் போலே ஆதித்யன் உதித்துத் தோற்ற அதில் அரவிந்தங்கள் தீபிகை -சிறு விளக்குகள் -போலே விகஸித்த படியையும்
அருளிச் செய்து அன்றோ திருப்பள்ளி யுணர்த்துகிறது –
இவை எல்லாமே ராஜவத் அர்ஹணீயதைக்கு ஏற்கும்படியாய்த்து இருப்பது

ரங்கேஸயம் ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம் அக்ருத -என்கையாலே -அடிக்கடி அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் -என்றும் -விசேஷித்து –இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே –என்றும் இறே அருளிச் செய்தது –
ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம்-என்கையாலே திருப்பள்ளி எழுச்சியாகிய சொல் மாலையை இறே இவர் சொல்லிற்று –திருமாலையும் ஸூக்தி மாலை இறே -அதிலும் என்னை-நோக்காது ஒழிவதே -36-என்றும் –அளியல் நம் பையல் என்னார் -37-என்று இறே ஆலோகநாலா பாதிகளை அபேக்ஷித்தது -அபேக்ஷித்து –கிடந்ததோர் கிடைக்கை -23-என்று கிடை அழகை அனுபவித்து நடையழகு தொடக்கமானவற்றைக் கண்டு அனுபவிக்கத் துயில் எழப் பாடுகிறார் -இரண்டுமே பெரிய பெருமாளைப் ப்ரதிபாதித்த பிரபந்தங்கள் இறே -ஆகையால் ஸூக்திமாலாம் -என்றதில் இரண்டுமே அந்தர்பூதம் –

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியல் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23-

பகவந்தம் -என்கையாலே ஞானாதிகளைச் சொல்லி -(ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யயஸ ஸ்ரீ ரிய ஞான வைராக்யோஸ் ச ஏவ ஷண்ணாம் பக இதீரணா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-)ஞானம் பலம் ததீய சேஷத்வம் என்றது தோற்ற பகவத் அங்க்ரி ரேணும் -என்கிறது
அவரும் –அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும் –துளவத் தொண்டாய சீர்த் தொண்டரடிப்பொடி -என்றும் இறே அருளிச் செய்து தலைக்கட்டிற்று-

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்று திருப்பள்ளி யுணர்த்தி –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி இத்யாதி -படியே -பகவத் முக உல்லாஸ ஹேதுவான பகவத் கைங்கர்யத்தைப் பிரார்த்தித்த ஆழ்வார் போலவே –ஈடே -என்று இதில் அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யங்களை சொல்லித் தலைக் கட்டுகிறார் – ஸ்ரீ திருமாலை ஆண்டான் இத் தனியனில்-

———

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்
ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

வண்டு–வண்டுகளானவை
திணர்த்த -நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற
வயல் -கழனிகள் சூழ்ந்த
தென் -அழகிய
அரங்கத்தம்மானை-திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை
பள்ளி வுணர்த்தும்–திருப்பள்ளி யுணர்த்துமவராய்
பிரான் –பரம உபாகரராய்
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம்
வுதித்த ஊர்-
தொண்டரடிப்பொடி – “தொண்டரடிப்
பொடி” என்னும் திரு நாமமுடையரான ஆழ்வார்,
உதித்த ஊர் – திருவவதரித்த திவ்ய தேசமாவது,
சீர் மன்னிய–சீர்மையுடைய,
மண்டங்குடி – திருமண்டங்குடி என்கிற,
தொல் நகரம் — அநாதி,யான நகரமாகும்.
என்பர் மறையோர் – என்று வேதம் வல்ல பெரியோர் கூறுவர்

அவ:- (மண்டங்குடியித்யாதி) சேஷேத்வ ஸீமாபூமி யான தொண்டரடிப் பொடியாழ்வார் திருவவதார ஸ்தலம்-மிக்க வேதியராலே -வைதிக ஸ்ரேஷ்டராலே – ஸதா அநுஸந்திக்கப் படுமென்கிறது-

வ்யா:-(மாமறையோர்-வண்டு திணர்த்த வயல் தென் னரங்கத்தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரான்-தொண்டரடிப் பொடி உதித்த வூர் – தொல் நகரமான மண்டங்குடி
யென்பர்.] ‘கண்ணங்குடி குறுங்குடி புள்ளம் பூதங்குடி” என்று உகந்தருளின நிலங்களைச் சொல்லுமா போலே இங்கும் ‘மண்டங்குடி யென்பர் மா மறையோர்” என்கிறது. இவர் மா மறையோராகையாலே மண்டங்குடியைச் சொல்லுமவர்களும் மா மறையோராய்த்து, மா மறையோ ராகிறார்-மிக்க வேதியர் வேதத்தினுட் பொருளான -ததீ,ய வைபவத்தை அறிந்தவர்கள்-(‘மிக்க வேதியர் வேதத்தினுட் பொருள்'(கண்ணி-9) என் று மதுரகவி யாழ்வாரால் வேதத்தின் உட் பொருளாகச் சொல்லப்பட்ட அடியார் பெருமையை அறிந்தவர்களே மா மறையோர் ஆவர்.)

அது தான் தொண்டரடிப்பொடி தொல் நகரமிறே-(தொல் நகரம்) பழையதாய்ப் போருகிற நகரம், நகரங் களிலேயிறே நல்ல வஸ்துக்களுண்டாவது; நல்லார் நவில் குருகூர் நகரான்”(திரு விருத்தம்-100) ” என்னுமா போலே. இது நகரமாகைக்கு ஹேது சொல்லுகிறது (வண்டு திணர்த்த) இத்யாதியால்-(இது நகரமாவதற்குக் காரணம் திருப் பள்ளி யெழுச்சி பாடிய தொண்டரடிப் பொடி யாழ்வார் அவதரித்ததே என்று பாட்டின் எஞ்சிய பகுதியாலே)

வண்டுகள் நெருங்கின வயலை யுடைய, ‘’வயலுள் இரிந்தன சுருப்பினம்‘ என் றருளிச் செய்தாரிறே–பூங்குவளைப போதில் பொறி வண்டு கண் படுப்ப-(திருப்பாவை-3] என்று ஆண்டாளும் அருளினாள் அன்றோ – இப்படி நீர்ப் பூவிலே வண்டுகள் நெருங்கின வயல் சூழ்ந்த கோயிலுக்கு நிர் வாஹகரான பெரிய பெருமாளை-
வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும்” என்கையாலே “வயலுள் இரிந்தன சுரும்பினம்-இத்யாதிப்படியே (மஞ்ஜரீஸுப்தப், ருங்கா) என்று பூக்களிலே கண்படுத்த வண்டுகள் உணர்ந்தன.
தரளத தரங்கைர் மந்த மாந்தோள்யமாந ஸ்வதட விட பிராஜீ மஞ்ஜரீ ஸுப்த ப்,ருங்க க்ஷிபது கநக நாம் நீ நிம் நகா நாரிகேௗ- க்ரமுகஜ மகரந்தைர் மாம்ஸ லாபா மதம்ஹ: (ர-ஸ்த 1-24
[அசையும் மெல்லிய அலைகளாலே மெல்ல அலைக்கப் படுகின்ற தன் கரையிலுள்ள சோலைகளினுடைய பூங்கொத்துக்களிலே உறங்குகின்ற வண்டுகளை யுடையதும், தென்னை பாக்கு மரங்களிலிருந்து உண்டான மகரந்தம் நிர்ம்பிய நீரை யுடையதுமான பொன்னியெனும் பெயரை யுடைய காவேரி நதியானது என்னுடைய பாபத்தை அழிக்கட்டும்.] என்கிற படியே பூக்களிலே உறங்கின வண்டுகள் உணர்ந்தன என்று கூறி-ஸ்ரீரங்க ராஜனாகிற வண்டை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துபவர் என்று சொல்லப் படுகிறது.-ஸ்ரீரங்க நாச்சியார் ஸ்தநஸ்தபகத்திலே கண் வளர்ந் தருளுகிற ஸ்ரீரங்காராஜ ப்ருங்கத்தை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துமவர்.(பள்ளியுணர்த்தும் பிரான்) திருப் பள்ளி யுணர்த்தி, பின்புள்ளார்க்கும் இப் பிரபந்த,த்தை யுண்டாக்கி உபகரித் தருளினவர்.

(உதித்த வூர்) அறிவிலா மனிசர்க்கு (திருமாலை 13]அறியாதன அறிவித்து [திருவாய் 2-3-2] என்கிறபடியே அவர்களால் அறியப்படாத நல்ல விஷயங்களை அறிவித்து அஜ்ஞாநத்தைப் போக்குகைக்காக இவர் அவ் வூரிலே உதித்தது. “கதிரவன் குண திசைச் சிகரம்
வந்தணைந்தான் கன விருளகன்றது
” [திருப்பள்ளி-1] என்னும்படி யன்றிக்கே -ஸூர்யனைப் போலே வெளி யிருளை மாத்திரம் போக்காமல், –ஆந்தரமான அந்த காரத்தைப் போக்கிற்று-அஞ்ஞாக இருளாகிற உள்ளிருளையே போக்கினாரன்றோ-
ஆகையால் தொண்டரடிப் பொடி தொன்னகரம் மண்டங் குடியென்பர்– என்று முற்பாதியோடே கூட்டிப் பொருள் கொள்வது.

—————-

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த திருப் பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை
ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே -(அநாதி,மாயயா ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே
[கௌட பாதகாரிகை]
[அநாதி மாயையினால் உறங்கும் ஜீவன் எப்போது உணருகின்றானோ] என்கிறபடியே
அநாதி காலம் அஜ்ஞாநத்தாலே உறங்குகிற இவரைப் பெரிய பெருமாள் தம்முடைய நிரவதிக க்ருபையாலே (எல்லை யற்ற நிர்ஹேதுக கிருபையாலே மயர் வற மதிநலமருளி)உணர்த்தி யருள-உணர்ந்து, பெரிய பெருமாளே ப்ராப்யரும் ப்ராபகரும் என்னுமிடம் ” ஐம்புலனகத் தடக்கிக் காம்பறத் தலை சிரைத்துன்
கடைத்தலை யிருந்து வாழும் சோம்பரை யுகத்தி
-திருமாலை-38” என்று இவரை யிட்டு நிலை யிடுவித்து, இப் பிரபந்த,த்தாலே நாட்டுக்கு வெளிச் செறிப்பைப் பண்ணி வைத்து நிர்ப் பரராய்க் கண் வளர்ந்தருள,அத்தலை யித்தலையாய்ப் பெரிய பெருமாளை யுணர்த்தி அடிமை செய்யப் பாரிக்கிறார்

ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே என்றறுதி யிட்டால்-பின்பு திருப் பள்ளி யுணரும் படியையும், அழகோலக்க மிருக்கும்-படியையும், அருகே திருமாலை யெடுத்து அடிமை செய்யும் படியையும், மநோரதி த்து, இவையே யாத்ரையாய்ச் செல்லுமித்தனை யிறே. (அவன் திருப்பள்ளி யெழுந்திருக்கும் படியையும், சீரிய சிங்காசநத்திலே இருக்கும்படி யையும் கண்டு அநுபவித்து அருகில் பூமாலைகளை எடுத்து அடிமை செய்ய வேண்டுமென்று பாரித்து இதுவே தொழிலாக இருக்க வேண்டி வருமன்றே. )நாய்ச்சியாருக்கு ” மாரி மலை முழைஞ்சில் ; என்கிற பாட்டிலே இதுவே யிறே அநுஸந்தமாநம். நம்மாழ்வாரும், நெடு மாற்கடிமையிலே -(8-10)புருஷார்த்தத்தினுடைய சரமாவதியை நிலையிட்டு. அநந்தரம் கொண்ட பெண்டிரிலே (9-1)நாட்டுக்கு வேண்டும்
ஹிதமருளிச் செய்து, பின்பு “கிடந்த நாள் கிடந்தாய்எத்தனை காலம் கிடத்தி‘ (திருவாய் 9-2-3] என்கிற பாட்டிலே உணர்த்தி யெழுப்பி அடிமை செய்யப் பாரித்தாரிறே.
விச்வாமித்ரனும் –கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தை,வமாஹ்நிகம்) என்றானிறே;
அப்படியே இவரும் (நம்மாழ்வார், ஆண்டாள், விஸ்வாமித்ரர் ஆகியவர்களைப் போலே )பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”
(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25]

(நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1)
என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திருப்பள்ளி யெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை

இவ் வாழ்வாராகிறார் – முதலிலே ஸ்வரூப உபாய புருஷார்த்த, விவேக ஸூந்யராய் தேஹத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணி தத,நுபந்தி,களான ஸப்தாதி | விஷயங்களிலே மண்டி, தம்மோடு சேர்ந்தாரையும் தத் ஸ்வபாவராக்கிப் போரா நிற்க,
(அதாவது – இவ்வாழ்வார் அநாதி,காலமாக ஸம்ஸாரியாய் இருந்து “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” [திருவாய் 2-6-5] என்கிறபடியே பல பிறவிகள் எடுத்து வரும் போது, தம் ஸ்வரூபம் எத்தகையது, தாம் அடைய வேண்டிய பயன் எது, அதற்கு உபாயம் எது என்னும் அறிவு இல்லாதவராய், தேஹத்தையே ஆத்மாவாக எண்ணி இந்த தேஹத்தைக் கொண்டு அநுபவிக்கப்படுகிற ஸப்த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்தங்களாகிற ப்ராக்ருத விஷயங்களிலே ஈடுபட்டு, தம்மோடு சேர்ந்தவர்களையும் தம்மைப் போலவே ஆக்கிப் போந்தார். )இவ்வாறு போரா நிற்க'(அவர் அநுகூலரான பின்பு உறங்குகிறார் என்கைக்கு, முன்பு உறக்க மில்லையோ வென்ன அருளிச் செய்கிறார்-மாதராரித்யாதி)மாதரார் கயற் கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் போதரே யென்று சொல்லிப்போதரே யென்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன் பாலாதரம் பெருக வைத்த அழகன்” [திருமாலை-16) என்கிறபடியே பெரிய பெருமாள் தம் நிர்ஹேதுக க்ருபையாலே தம் வடிவழகைக் காட்டி, விஷயாந்தர ப்ராவண்யத்தை மாற்றி, ஸ்வரூபாநுரூபமாகத் தம் பக்கலிலே அபி. நிவேசத்தைப் பிறப்பிக்க, இவரும் ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைப் பாரித்துக் கொண்டு பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்ற விடத்திலே, திருக் கண்களாலே குளிர நோக்குதல், கையை நீட்டி அணைத்தல், குசல ப்ரஸ்நம் பண்ணுதல், (<ஸிரஸா தே,வ: ப்ரதி க்ருஹ்ணாதி) என்கிறபடியே (யா: க்ரியா: ஸம் ப்ரயுக்தா: ஸ்யுரேகாந்தக,த புத்தி,பி : |தா: ஸர்வா: ஸிரஸா தே வ: ப்ரதி க்குஹ்ணாதி வை ஸ்வயம்
(பரதம் -மோக்ஷ 171-63)[மறந்தும் புறந்தொழாமையில் நிலை நிற்கும் அறிவை யுடையவர்களாலே யாவை சில கிரியைகள் (கைங்கர்யங்கள்) நன்கு அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அவை யெல்லாவற்றையும் தேவன் தானே தலையாலே ஏற்றுக் கொள்கிறான் ]சூட்டு நன் மாலைகளை ஸிரஸா வஹித்தல் செய்யாதே பள்ளி கொண்டருளினார் பெரிய பெருமாள்.

அதற்கு நிபந்தநம் அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரிய பூதராகையாலே -உண்டது அறாமையாலே யாதல்(உண்ட உணவு ஜெரிக்காமையாலோ ) -தம அபி பாவத்தாலே யாதல் -என்ன ஒண்ணாது -ஸூத்த ஸத்வமாகையாலே -பின்பு இதற்கு நிபந்தநம் என் என்னில் -ஆதலால் பிறவி வேண்டேன் -திருமாலை -3- என்னும்படி -ப்ரக்ருதி ஸம்பந்தம் அப்ராப்தம் என்னும்படி யான ஞான விசேஷத்தை யுடையவரான படிையும், “போனகஞ்
செய்த சேடந் தருவரேல் புனித தமன்றே”( திருமாலை 41] என்னும்படி அவனடியார்க்கும் ஆட்பட்டிருக்க வேண்டும் என்னுமளவுக்கு ஆழ்வாருக்கு ஸ்வரூப ஜ்ஞநம் பிறந்தபடியையும், )ததீய சேஷத்வ பர்யந்தமாக ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும் “இச் சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்”-(திருமாலை-2] என்னும்படி ப்ரக்ருதி புருஷ யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும், “காவலிற் புலனை வைத்து” -திருமாலை 1]என்னும்படி இந்த்ரியங்களை நியமித்தபடியையும், குளித்து மூன்றனலை யோம்புங் குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன்” -திருமாலை 25)என்னும்படி உபாயாந்தரங்களில் துவக்கற்ற படியையும், “உன்னருளென்னுமாசை தன்னால் பொய்ய னேன் வந்து நின்றேன்” -திருமாலை 33-என்னும்படி- எம்பெருமானுடைய இரக்கமே உபாயம்’ என்னும் – உபாய யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்தபடியையும் அநுஸந்தித்து, “சோம்பரை யுகத்தி போலும்”-திருமாலை 38] என்கிறபடியே இவரை யிப்படிப் பெறுவோமென்கிற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலும், –ஆத்மாநம் வாஸுதே வாக்யம் சிந்தயந்) என்கிறபடியே இவரைப் புகுர நிறுத்தின தன் வைபவத்தையும் அநுஸந்தி,த்து. “நாகமிசை த் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்” -திருவாய் 4-8-9-என்கிறபடியே-“எல்லாரையும் இவரைப் போலே நம் பக்கலிலே ப்ரவணராக்கும் விரகேதோ?” என்று ததேகாக்ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்டருளினார்.
‘மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டு-திருமாலை 16” என்கிற படியே இந்த்ரிய வஸ்யராய்க் கைகழிந்தவன்று, (அநித்ரஸ்ஸததம் ராம:) என்கிறபடியே-(அநித்ரஸ் ஸததம் ராம: ஸூப்தோபி ச நரோத்தம: ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே||(ரா-ஸு 36-44][(ஸீதையைப் பிரிந்த) ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார்; நர ஸ்ரேஷ்ட்ட,ரான அவர் தூங்கினாலும் ‘ஸீதே’ என்னும் அழகிய சொல்லை உச்சரித்துக் கொண்டே விழித்தெழுகிறார்) எ-உறங்காதிருந்த பெரியபெருமாள், “அடியரோர்க்ககலலாமே”-திருமாலை 20-என்னும்படி கை புகுந்த பின்பு கரைச்சல் கெட்டு மார்பிலே கை வைத்து உறங்கப் புக்கார். –எம்பிராற்காட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே” – திருமாலை 28-என்றிருக்கு மவராகையாலே கைங்கர்ய த்வரையாலே –
(உத்திஷ்ட, நரார்தூல) (ஸ மயா போதி த : ஸ்ரீமாந் -வாயஸேந ததஸ்தேந பலவத் க்லிஸ்யமா நயா | ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுக,ஸுப்த: பாந்தப: !(ரா-ஸூ -38-25 J
[பிறகு அந்தக் காகாஸுரனால் பலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னால், ஸுகமாகக் கண் வளர்ந்தருளியவரும், (அதனாலே) அழகாயிருப்பவரும், எதிரிகளைத் தபிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார் ] என்று ஸீதாப் பிராட்டி எழுப்பியது போலும், ) “உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்” -திருப்பாவை 17] என்று ஆண்டாள் எழுப்பியது போலும்– ‘அரங்கத் தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்தி, உனக்கே நாமாட் செய்வோம்” – [திருப்பாவை-29) என்று ஆண்டாள் அவன் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட்டது போலே – “தொண்டரடிப் பொடி யென்னு மடியனை அளியனென்றருளி யுன்னடியார்க் காட் படுத்தாய்” -திருப்பள்ளி-10-என்று ததீய பர்யந்தமான கைங்கர்யத்தைக்
கொண்டருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறரா யிருக்கிறது-அடியார் வரையிலான கைங் கர்யத்தைக் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறவராய் இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார்.

ஆதித்யன் உதய கிரியிலே வந்து தோற்றினான். திருவாராதநத்துக்கு ஸமுசிதமான ஸகலோபகரணங்களுங் கொண்டு துர்மாநிகளான தேவ ஜாதிகளும், ராஜாக்களும் பக்நாபி மாநராய்த் திருக் கண்ணோக்காகத் தெற்கு திக்கிலே ப்ரதம கடாக்ஷத்துக்காக “நான் முற்பட்டேன் நான் முற்பட்டேன்” என்று முற்கோலிக் கொண்டு வந்து நின்றார்கள்; ஸர்வ ரஷகராய், ஸ்ரீய:பதியாய்-ஆஸ்ரித வத்ஸலராய், ஸர்வ ஸமாரயணீயரான தேவரீர்
அடியேனுக்காக உணர்ந்தருளினீரென்கிற தரத்தை அடியேனுக்குத் தந்தருளித் திருப் பள்ளி யுணர்ந்து அடியோங்களடிமை கொண்டருள வேணுமென்கிறார். ப்ரஜைகளைக் காட்டி ஜீவநம் வேண்டுவாரைப் போலே ஆராத கரான தேவ ஜாதியை முன்னிட்டுக் கொண்டு ஸ்வ ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கிறார்.

திருமாலையில் திருப்பள்ளி யெழுச்சிக்கு வாசி யென்னென்னில்;
1-அநாதி மாயயா ஸுப்தரான இவரைப் பெரிய பெருமாளுணர்த்தினார் அதில்;
இவர் தம் பக்கல் வ்யாமோஹத்தாலே ஸுப்தரான அவரைத் திருப் பள்ளி யுணர்த்துகிறார். இதில்
2-“புன் கவிதையேலு மெம்பிராற் கினியவாறே” திருமாலை – 45-என்று வாசிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டபடி சொல்லிற்று- அதில்;
தொடை யொத்த துளவமும் கூடை யும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி யென்னும் அடியனை அளியனென்றருளி-திருப்பள்ளி 10- என்கையாலே காயிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டருள வேணு மென்கிறது இதில்.
3-“எம்பிராற்கினியவாறே” என்று பெரிய பெருமாளுக்கினிதான கைங்கர்யத்தைப் பெற்று நின்றார்-அதில்;
‘‘அடியார்க்காட்படுத்தாய்” என்று-ததீயருகந்த கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் இதில்
4-அதில் பெரிய பெருமாளுடைய க்ருஷியைச் சொல்லிற்று;
இதில் அவருடைய க்ருஷி பலித்த படியைச் சொல்லுகிறது.
5-“’எளியதோரருளுமன்றே யென் திறத்து”- திருமாலை 37]- என்று தம்மை விஷயீகரிக்க வேணுமென்றார் அதில்;
அவர்க்கு நாளோலக்க மருள” -திருப்பள்ளி 9]என்று பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கும் படியாகப் பாகம் பிறந்தபடி சொல்லுகிறது இதில்-
பிறரைக் கடாக்ஷிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கும் படியான பரிபக்குவ நிலை தமக்குப் பிறந்த படியைச் சொல்லுகிறார் ஆழ்வார் இத் திருப்பள்ளியெழுச்சியில்
இவை திருமாலையைக் காட்டிலும் திருப் பள்ளி யெழுச்சிக்குள்ள சிறப்புக்கள்.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –புள் -கருட -பத-ப்ரயோகங்களும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளும் —

March 11, 2025

என்னை வெள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே-9-

தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும் ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன் என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும் திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்-

——

உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த –2-1-9- நாலாயி:126/3

இந்த ஆர்த்த த்வனி திருச் செவிப்பட்ட போதே திருப் படுக்கையிலும் நின்றும் பதறி எழுந்து இருந்து – அதந்த்ரித்த சமூபதி ப்ரஹித ஹஸ்தம்–(ரங்கராஜ ஸ்தவம் )-இத்யாதிப்படியே
சேனை முதலியார் திருக் கை கொடுக்கவும் -பற்றாமல் – திருவடி நிலை கோத்து எழுந்து அருளுகையும் இன்றிக்கே வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்ட பதற்றத்தை கண்டு –இதுக்கடி என் -என்று பயப்பட்டு திவ்ய அந்தபுரம் கை நெரிக்க – பெரிய திருவடியை பண் செய்து ஏறப் பெறாமல் -வெறும் புறத்தில் மேற் கொண்டு – அந்த ஆர்த்திக்கு உதவ வேணும் -என்னும் அதைப் பற்ற அவனை பிரேரித்து விரைய நடத்திக் கொண்டு சென்று – அந்த பொய்கையிலே முதலையின் கையில் அகப்பட்டு – ஸ்ரீ கஜேந்த்திரன் பட்ட அதி மாத்ர துக்கத்தைப் போக்கின –

—————-

பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4-9-5- நாலாயி:416/

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ  (திரு விருத்தம் )-என்கிற பூக்களின் குளிர்த்தியாலும்
மார்த்வத்தாலும் பரிமளத்தாலும் மதுவாலும்-உண்டான போக்யதையாலே விட மாட்டாதே பொருந்தி –அன்னங்கள் வண்டுகள் முதலான பஷி சமூகங்கள்  ஆனவை தங்கள்
ஜாதிக்கு ராஜாவான ஸ்ரீ பெரிய திருவடி உடைய புகழை அனஷர ரசமாக -பேசா நிற்கும் படியாய் –
அவற்றுக்கு போக்யமான புஷ்பங்கள் மிக உண்டாகைக்கு அடியான ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருவரங்கமே-

—————–

பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

பறவை அரையா உறகல்- இவர்கள் எல்லாம் தாம் தாம் நின்ற இடங்கள் குலையாதே நின்று இறே காப்பது – ஓர் இடத்தில் நில்லாதே எங்கும் வ்யாபரித்து நோக்கும் பெரிய திருவடியை – உறங்காதே கொள் -என்கிறார் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உழலும் புள் (8-10 ) இறே –

————

பறவை ஏறும் பரம் புருடா –5-4-2-

பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே – திரு வேம்கடமுடையான் பெரிய திருவடி மேலே எழுந்து அருளி வந்து இவரை பரம பதத்துக்கு கொடு போகையிலே த்வரிக்கிற படி –

————

அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1

த்ரிபாத் விபூதியில் உள்ளார் எல்லாரும் ஒத்து இருக்கச் செய்தே -இவர்களுக்கு ஓர் ஏற்றம்
சர்வ காலமும் திரு மேனியோடே ஸ்பர்சிக்கையும்-தர்சநீயத்தின் இனிமையாலே மோம் பழம் போலே முன்னே வைத்து கொண்டு இருக்கும் இறே –இப்படிக்கு ஒத்த இவர்கள் பக்கலிலே சிநேகத்தை அல்பமாக வைத்து – இவ்வளவு தான் வைக்கிறது -இவர்கள் பக்கல் வரும் போதைக்கு-சென்றால் குடையாம் -இருந்தால் சிங்காசனமாய்-நின்றால் மரவடியாகைக்கும்
மணி விளக்காய் ஆகைக்கும்- பூம் பட்டாகைக்கும் –பொறு சிறைப் புள்ளு வந்தேறி   இவர் பக்கல் வரும் போதைக்கு வாஹநம் ஆகைக்கும் சேர விடுகைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் வேணும் இறே-பிரதம விவாகத்துக்கு செங்கல் சீரை கட்டி கூப்பிடாமைக்கு சோறு வைப்பாரைப் போலே – த்வதீய விவாகத்திலே இறே போக்கியம் உள்ளது -இவர் தண்மை பாராதே உபகரித்த உபகாரம் இருக்கிறபடி-த்ரிபாத் விபூதியில்  உள்ள எல்லாரோடும்  பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவர் ஒருவரோடும் பரிமாறின உபகாரம் –
கருள புள் கொடி சக்கரம் அடிமை கொண்டாய் -(5-4 ) என்று நித்ய ஸூரிகளை விட்டு
நித்ய சம்சாரிகளுக்கு புறம்பான தம்மை அடிமை கொண்ட உபகாரம் –

————

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் -6- நாலாயி:479/1

மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே- வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –

போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன-
அது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன-ஏன் அல்லாவோ என்ன –-ஓம் அல்லவீ என்ன –
ஆவது என் என்ன –நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பின வாறே கிளம்பிற்றன
அல்லது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன –இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —
என்று அருளிச் செய்வர்-நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ – காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது – வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று கிடந்தாள் –

நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகள் உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று –ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று – காலை எழுந்து இருந்து (9-8 )-ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் – கிருஷ்ணனுடைய வடிவை ஸ்மரிக்குமவை
மாலின் வரவு சொல்லி -அவன் வியாமுக்தனாய் வரும் படியைச் சொல்லி –
மருள் (இந்தளம் என்னும் பண் ) பாடக் கடவதாம் படி இறே-பண்ணி வைப்பது –ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை –இப்போது இவள் புள் என்கிறது –சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால்
சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் – பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்- தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு – அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்-அவனுடைய இல் -என்னுதல்–புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் – அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் –என்னுதல் –
திருப் பள்ளி எழுச்சியில் சங்கத் த்வனி கேட்டிலையோ –புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )அகஸ்திய ப்ராதரம்–நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்-அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே-புள் அரையன் –-என்று கிருஷ்ணனைச் சொல்லிற்று ஆகவுமாம்புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூசகம்-

—————-

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-

மேலே பரந்த வெய்யிலை நோக்குகைக்காக வினதை சிறுவன் -என்றபடி – பெரிய உடையார் மேல் வெயிலே படாத படி சம்பாதி மறைத்தால் போலே இவனையும் பெரிய திருவடி சிறகின் கீழே நின்று விளையாடக் கண்டோம் –-அவன் தனக்கும் சேஷபூதன்-என்பது தோற்ற – என் தான் ஆண்டாள் அருளிச் செய்வர் —நஞ்சீயர் -வித்தராய் – சிறகாலே கவித்து தனது தாயாரை -கத்ருவானவள் வெய்யிலிலே வைத்த போது நோக்கி அருளினார் பெரிய திருவடி -என்பதை உள்ளத்தே கொண்டு வினதை சிறுவன் -பத பிரயோகம் என்று வித்தராவார் என்றபடி-அவனுக்கு குடையிடுவான் இவளுக்கு பவ்யனாய் இறே இருப்பது – கர்ப்ப தாசர் -என்னுமா போலே –

————–

கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப -1-8- நாலாயி:654/2

காற்றினுடைய மிக்க வேகம் போலே இருக்கிற கதியை உடையனாய் ஸ்ரீ பெரிய திருவடி என்கிற பேரையும் உடையனாய் இருக்கிற பறவை –கடல் கரை வெளியில் ஸ்ரீ சேனை எல்லாம் குழைச் சரக்காய்- தாமும் தம்பியாருமாய் காக்குமா போலே-ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகையாலே ஸ்ரீ பெரிய திருவடி முதலாக ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது-

————

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-
நாலாயி:770/2

வேதத்தின் உடைய அபௌருஷேயத்வ சித்திக்காக ஸ்வ அசாதாராண விக்ரஹத்தை
திர்யக் சஜாதீயமாக்கிக் கொண்டு –ஹம்சாவதாரத்தைப் பண்ணி -தத்வ ஹிதங்களுக்கு
ஜ்ஞாபகமான நாலு வேதங்களையும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படி அருளிச் செய்தாய் –மாநம் ப்ரதீப மிவ காருணி கோததாதி -என்னக் கடவது இறே-சஹஜ சத்ருவான அஞ்ஞானத்தை போக்கினதுக்கு போலே-பஹாசுரன் வாயைக் கிழித்து -இத்தால்
பிரமாண ஞானத்தால் அஞ்ஞான  அந்தகாரம் போக்கினாப் போலே பஹாசூரனை நிரசித்து
ப்ரமேய பூதனான தன்னை தந்து ஆஸ்ரிதருக்கு பிராண பிரதிஷ்டை பண்ணின படியைச் சொல்லிற்று-தன் பக்கலிலே ஆர்த்தர் அடங்க வந்து கார்யம் கொள்ளும்படி பெரிய திருவடியை ரஷண தர்மத்துக்கு த்வஜமாகப் பிடித்து -அவ்வளவும் அன்றிக்கே -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாகனமாகக் கொண்டு நடவா நின்று———சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ–சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருத்து –அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

———–

கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2

ஸ்பர்சத்தாலே அழகு பெற்ற திரு சிறகுகளை உடைய பெரிய திருவடியை நடத்தா நிற்றி –
அவனை மேற்கொண்டால் ஈஸ்வரனுக்கு அலங்காரமாய் இருக்கும்படியைச் சொல்லிற்று
ஆகவுமாம் –இத்தால் ஆஸ்ரிதர் இருந்த சம்சாரத்தில் ஆபத் தசைகளில் சென்று
முகம் காட்டி ரஷிக்கும் நீர்மையைச் சொல்லிற்று 

———-

பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான் – 15-நாலாயி:886/2

இப்படி மெய் என்று பேரிடலாவது பொய்யைக் கொண்டு விஷயீ கரிக்கிறவன் தான் ஆள் இல்லாதவான் ஒருவனோ வென்னில் – புட் கொடி யுடைய கோமான் – மெய்யான பரிமாற்றத்தை உடையார் அநேகர் உடைய படிகளை ஒருவன் செய்ய வல்லனாம்படி சமைந்தார் அநேகரை உடையான் ஒருவன் ஆய்த்து-கொடி -என்றது – தாச விதான வாஹனம் -உப லஷணம்-நிவாச சய்யா -என்னக் கடவது இறே-கோமான் – அயர்வறும் அமரர்கள் அதிபதி ஆகையாலே -மேணானிப்பை உடையவனாய் இருக்குமவன் –

———–

குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – 1-10-2-நாலாயி:1039/2

பாதாளத்திலே புக்கு ஒளிப்பாரும் பட்டுப் போவாருமாம் படி த்வஜமான பெரிய திருவடியை சுழற்றிக் கொடு திரிந்த – கீர்த்தி பூதாம் பதாகாம் யோ லோகே ப்ராமயதி ப்ரபு -கீர்த்தி பூதாம் பதாகாம்–வெற்றிக்கொடி 

———-

ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – 2-3-9-நாலாயி:1076/3

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

——–

பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – 2-5-7-நாலாயி:1094/2

திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவனை –ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்டு
அங்கு நின்றும் பெரிய திருவடி தோளிலே ஏறி அவர்களுக்கு காட்சி கொடுக்கும் படி சொல்லுகிறது –

——————-

பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
–2-6-8-

அசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக பிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே – பெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –காய் சின பறவை அன்றோ –
அவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனைகொற்றப் புள் ஓன்று ஏறி மன்று ஊடே வருகின்றான் என்கின்றாளால் –

—————————

கன்றின் பின் புள்ளின் தலைவனை  போக்கினேன் எல்லே பாவமே 3-2 -7- – –

கன்றின் பின் புள்ளின் தலைவனை  போக்கினேன்
பசுமை அழிந்து உலரும்படி அத் உஷ்ணமான காட்டு வழியிலே கன்றுகளின் பின்னே –ஸ்ரீ பெரிய திருவடிக்கு நாயகனாய் -அவன் மேல் கொண்டு சஞ்சரிக்கும் அது ஒழிய
ஒரு காலமும் கால் நடை தந்து திரியாதவனைப் போக்கினேன் –

——-

தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே -3-3-6– நாலாயி:1173/4

பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-

——————

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய–3-5-1-

அரவம் -என்ற ஜாதிக்கு எல்லாம் பகையான பெரிய திருவடியை வாகனமாக நடத்துகிறவனுடைய-

—————

போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் -3-6-6- நாலாயி:1203/2

யுத்த உன்முகமான குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்தவன் –
வரும் இடத்தில் வழியில் பிரதிபந்தகம் தான் உண்டோ – பெரிய திருவடியை வாகனமாக உடையவன்-விரோதி நிரசன ஸ்வா பவனுமாய் தான் வரும் போதே தூரத்தில் கண்டு விடாய் தீரலாம்படியான பரிகரத்தை உடையவன் –சோளேந்திர சிம்ஹனில்-பெருமாள் யானைக்கு திரு நாமம்–இருப்பைக் காட்டி யாயிற்று இவளை அநன்யார்ஹை ஆக்கிற்று –

————–

சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் -–3-8-4- நாலாயி:1221/1

சிறை என்று சிறகு-கமன சாதனமான சிறகு குறைவற்று இருந்துள்ள –உவணமாகிற புள்
உவணம் என்று பெரிய திருவடிக்கு பேர் –புள் என்று பருந்து ஜாதிக்கு பேர் -அத்விதீயமான புள்ளை ஏறி -பரத்வ பிரகாசமான பெரிய திருவடி –கடலாலே சூழப் பட்டு இருப்பதாய்-புற்றுக்கள் பாம்பு அறாதே இருக்குமா போலே-துர்வர்க்கங்கள் சேரும்படியான இலங்கையை கடந்தான் –மாலி சுமாலி மால்யவான் துடக்கமானவரை-பெரிய திருவடிமேலே எழுந்து அருளி நிரசித்தத்தாக சொல்லக் கடவது இறே (உத்தர காண்டத்தில் அகஸ்தியர் பெருமாளுக்கு சொல்லுவார் )

————–

பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே–4-9-5-

அன்னங்கள் வண்டுகள் முதலான பஷி சமூகங்கள்  ஆனவை தங்கள்
ஜாதிக்கு ராஜாவான ஸ்ரீ பெரிய திருவடி உடைய புகழை அனஷர ரசமாக -பேசா நிற்கும் படியாய் – அவற்றுக்கு போக்யமான புஷ்பங்கள் மிக உண்டாகைக்கு அடியான
ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருவரங்கமே

———-

செரு ஆளும் புள் ஆளன் –4-9-10-

யுத்தத்தை ஸ்வயமேவ நிர்வஹியா நிற்கும் ஸ்ரீ பெரிய திருவடியை ஆளுகிறவன் –-ஆஸ்ரித விரோதிகளான அசூர  ராஷசரோடே யுத்தம் பண்ணும் இடத்தில் அந்த யுத்தத்தை ஸ்ரீ பெரிய திருவடி தானே நடத்த – இவன் காண வந்த சோழரோ பாதி – அத்தைக் கண்டு கொண்டு அவன் தோளிலே இருக்கும் அத்தனை ஆய்த்து

————

அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே –5-6-6- நாலாயி:1403/4

ருஷபம் வாலை எடுத்துக் கொண்டு ஓட தான் ஜடையை விரித்துக் கொண்டு முதுகு  காட்டி
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ -என்றாப் போலே சொல்லிக் கொண்டு ஓடும்படி பண்ணின திருவடியை வாகனமாக உடையவனை –இது பாணனை -என்றும் சொல்லுவார்கள் நரகனை என்றும் சொல்லுவார்கள் –

—————–

தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் – –6-8-3-நாலாயி:1520/1

சர்வேஸ்வரன் திருவடியை மேற்கொண்டு தன் திருவடிகளால் தாக்கி நடத்தப் புக்கால்
அந்த ஸ்பர்ச ஸூத்தாலே திமிர்த்து எங்கள் அம்மை  நாயனார் உடைய ஸ்பர்ச ஸூகம் இருந்த படி என் -என்று ஏத்தும் வாயை உடையவாதல் –அன்றிக்கே – நிர் தோஷமான சப்தத்தை வடிவாக உடையவன் -என்னுதல் – வேதாத்மா விஹாகேஸ்வரா -என்னக் கடவது இறே-அவனுடைய ஸ்வாபாவிக வேகம் போராமை நடத்திக் கொண்டு அவன் இடர் பட்ட பொய்கைக் கரையிலே வந்து –

—————

போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே -7-7-9- நாலாயி:1616/2

என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை யுடையவனே –இவை எல்லா வற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே–ஆஸ்ரிதர் பக்கலில் மிக்க வ்யாமோஹத்தை யுடையவனே-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-

—————

போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் -8-1-4- நாலாயி:1651/2

யுத்தோன் முகமான குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன பறித்து
அச் செயலாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்  -என்னா நின்றாள் –
சக்க்ய பஸ்யத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றவர்களிலே ஒருத்தி போலே காணும் இவள் –
(களிறு தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி மூன்றும் லௌகிகத்தில் –
தன்னைக் காத்துக் கொடுத்ததுக்கு என்னை நான் சமர்ப்பித்தேன் )பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –

————

கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் – 8-1-8-நாலாயி:1655/1

சர்வ சதாராணவன் விடாயர் இருந்த இடங்களிலே சாய் கரத்தை கொடு வந்து கொடுப்பாரைப் போலே எல்லார்க்கும் உபகரிக்கும் அத்விதீயனானவன் – வாஹனத்தில் ஏறி சர்வ சாதாரண ஸ்தலத்திலே வாரா நின்றான் –ஆர் இறாஞ்சிக் கொள்ளக் புகுகிறார்
ஆர் கையில் பறி யுண்ணப் புகுகிறான் – என்று அறிகிலேன் என்கின்றாள் –வந்தபடி தெரியாமல் வந்து தன் கண்ணுக்கு உள்ளே இருக்கக் காணும் இவளுக்கு ஓடுகிறது –
வரப் புக்கால் ப்ரதிபந்தகம் இல்லை கிடீர் என்னா நின்றாள் –கருட வாகன உத்சவம் அனுபவித்துப் பாசுரம் இது-வைகாசி -மாசி இரண்டும் ப்ரஹ்ம உத்சவம் -மாசி மகம் தீர்த்தவாரி-காஞ்சி தேவப் பெருமாள் ஆண்டுக்கு மூன்று தடவை –அவர் வீதி ஒரு நாள் என்று -அருளாழி புட் கடவீர் –ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே –பள்ளி யந்துலாத்திலே-தண்டிகை -பல்லக்கில் – ஏறி உலவா நிற்பர்கள் காண் –பிள்ளை அமுதனார்

———

பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து – 8-6-2–நாலாயி:1699/1

சர்வதா நாம் அனுகூலித்தாலும் பொருந்தாமையிலெ நிலை நின்ற ராஷச ஜாதியானது யுத்தத்திலே முடியும்படியாக திருவடியை மேல் கொண்டு –மிக்க தோள் வலியை உடைய மாலி தலையானது புரளும்படியாக அவனை ஒழிந்த  மற்று உள்ள ராஷசர்கள்
புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

—————

பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை – —11-7-1–நாலாயி:2012/3-

இவர் தம்முடைய -அம்ருதம் –திருமங்கை ஆழ்வாரது ஆரா அமுதம் – திருக்குடந்தையிலே திரு உள்ளம் பேராமல் இருந்து அருளிய படி -சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –காய்ச்சின வேந்தன் பொன் மலைக்கு மேல் மீமிசைக் கார்முகில் -நம்மாழ்வார்
ஸ்வர்ண வர்ணாம் -இவள் அனைத்தையும் ஸ்வர்ண மயமாக்குவாளே-ஹிரண்ய மய புருஷன் -புருஷ ஸூக்தம்-

————

அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – 6-நாலாயி:2057/1

அவன் அடிமை கொள்ளுகையிலே அபிஷிக்தனாய் இருக்கும்–இவர்கள் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று தாஸ்யத்திலே அபிஷிக்தர்களாய் இருப்பார்கள் அபிஷேகம் இருவருக்கும் ஒக்கும் – அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னக் கடவது இறே–அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு த்ர்ஷ்டாந்தமாக ஒரு வ்யக்தியைப் பேசுகிறார் –அழகிய சிறையை உடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன் –வினை உள்ள போது அன்றோ வாகன அபேஷை உள்ளது -என்னில் வினை இல்லாத போதும் ராஜாக்கள் அழகு செண்டேறக் கடவதாய் இறே இருப்பது
ஓடும் புள்ளேறி சூடும் தன் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே –1-8-1 -என்னக் கடவது இறே –பெரிய திருவடி உடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்காகவும் அழகு செண்டேறக் கடவதே இறே இருப்பது –வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே-நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே-10-6-5-அம் சிறை – பெரிய திருவடியை மேல் கொண்டால் திரிப் பரியட்டத்தைக் கொய்து சாத்தினாப் போலே அங்குத்தைக்கு அலங்காரமாய் இருக்கை –அழகு செண்டேறும் போதை ஆயாசத்துக்கு ஆலவட்டம் பணி மாறினாப் போலே
இரண்டு திருச் சிறகாலும் ஆஸ்வாச கரனாய்  இருக்கிறபடியைச் சொல்லுகிறது

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய்

பரத்வத்தை ஆஸ்ரிதர் உடைய கால் கடையிலே கொண்டு வந்து சேர்க்கைக்கு
அடியான-பரிகரத்தை உடையவன் –புள் –(தர்ம ஸாஸ்த்ரம் -காயிக கைகளால் அபசாரம் -ஞானம் இல்லாத -ஸ்தாவரமாக பிறப்பார்கள் – வாசிக அபசாரத்தால் -பறவை பிறப்பு என்று சொல்லுமே )பாப யோநியான ஜன்மம் அவர்களுக்கு உண்டோ என்னில் –
பிராட்டியும் சர்வேஸ்வரனும் திருத் திரைக்கு உள்ளே இருந்தால்
நிலா தென்றல் சஞ்சரிக்கும் போது பிற்காலிக்க வேண்டும்படி இறே அப்போதை ஐகாந்தம் இருப்பது – அவஸ்தா அனுகுணமாக கூனர் குறளர்(நபுபும்சகர் )சஞ்சரிக்குமா போலே
அந்தரங்க சேவைக்கு அனுகூலமான வடிவை பரிகிரஹிப்பர்கள் -என்கை –
ஸ்ரீ சர்ப்ப ஜாதியோடு பஷி ஜாதியோடு ஸ்தாவர ஜாதியோடு வாசி அற பரிகிரஹிப்பர்கள்
சம்சாரி கர்ம பல அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –
அவன் அவஸ்தா அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –

தனிப் பாகன்-பாகன் -என்கையாலே அவனுக்குத் தான் பவ்யனாய் தனக்கு அவன் பவ்யனாய் இருக்கிறபடியும் தோற்றுகிறது – ஆனையைத் தன் நினைவிலே நடத்தக் கடவனாயும் அதுக்கு சேஷனாயும் இறே பாகன் இருப்பது-பெரிய திருவடி முதுகிலே நல் தரிக்க இருந்து அவனை நடத்துகை இறே சர்வாதிக லஷணம் அது புறம்பு இல்லாமையாலே அத்விதியீத்வம்(வேதாத்மா விஹஹேஸ்வரன் –நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நிர்வாஹகன் -என்னவுமாம் – அயர்வறும் அமரர்கள் என்னக் கடவது இறே –

—————–

அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் -12 நாலாயி:2063/3

பாணி க்ரணம் பண்ணி வைக்க கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்கிறது –
அழகிய சிறைகை உடைய பெரிய திருவடி ஆகிற த்வஜத்தை அனுகரியா நின்றாள்
வந்தால் பிரியப் படுக்கை அன்றியிலே வருகிறான் என்று தூரத்தில் கண்டால்
விஸ்வசிக்கும்படி இறே பெரிய திருவடி உடைய ஔதார்யம் இருப்பது –
பெரிய திருவடி தூரத்தில் தோற்றி ஆஸ்வசிக்கும் படியை நினைத்துக் கொண்டு இருந்தாள் – அவன் வரக் காணாமையாலே அவனை அனுகரிக்கத் தொடங்கினாள் -(ஆடுகை -அனுகரிக்கை ) விடாய்த்தார் ஹஸ்த முகத்தாலே தண்ணீர் வேண்டுமா போலே அவன் வரவில் தனக்கு உண்டான ஆகாங்க்ஷை தோற்ற அவன் வரும்படியை பாவிக்கத் தொடங்கினாள் –பெரிய திருவடி முதுகில் அவன் தான் வரும்படியை பாவிக்கை அன்றியே
கொடியையே பாவியா நின்றாள் –
அவனை அனுகரிக்கையாலே பிறந்த ஆஸ்வாசத்தாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்ற கூப்பிடத் தொடங்கினாள் –கண்ணும் கண்ணீருமாய் கொண்டு கால் தாழ்ந்து இருக்கும்படியான த்வனி இறே –
அப்படியே இவளும் உரக்க -ஆர்த்த நாதத்தாலே மரங்களும் இரங்கும் வகை -என்கிறபடியே
பிறர் கால் தாழ்ந்து கண்ணும் கண்ணீருமாய் இருக்கையாலே-

———

புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4

பெரிய திருவடியை நடத்துக்கிற க்ரித்ரிமனே- பெரிய திருவடியை பதிப் படையாக வைத்து வந்து புகுந்து கலந்து-இத் தலை அகப்பட்டவாறே -அவன் கடுமை போராது என்று
அசேதனமான தேரை நடத்துமா போலே பெரிய த்வரையோடே பெரிய திருவடியை நடத்துக்கிற கிரித்ரிமனே-வந்த போதே போகையாலே பெரிய திருவடியை பதிப்படையாக கடத்தி வந்த க்ர்த்ரிமனே -என்கிறாள்-வந்த போது –சிலையே துணையாக வந்தானாகில் பெரிய திருவடி வருகை யாவது என் – கொண்டு போகை யாவது என் என்ன
ராஜாக்கள் அபிமத விஷயத்தை பற்ற கறுப்புடுததுப் புறப்பட்டால் மந்த்ரிகள் வரவும் கொண்டு போகவும் கடவதாய் இருக்குமா போலே பெரிய திருவடி வந்து கொண்டு போனான்-வந்த கார்யம் தலைக் கட்டிற்று ஆகில் எழுந்து அருளல் ஆகாதோ -என்று பெரிய திருவடி சொல்ல அவனை மேல் கொண்டு போனான் -தேரூர்ந்தான் -என்னுமா போலே –
அதாகிறது – பெரிய திருவடியும் குழைச் சரக்காம்படி -காண் -போன கடுமை இருந்தபடி என்கிறாள் –பெரிய திருவடி சிறகிலும்-திரு வநந்த ஆழ்வான் மடியிலும் –-சேனை முதலியார் பிரம்பிலும்-பிராட்டி கடாஷத்திலும் வளரும் தத்வம் ஆகையாலே தான் நினைத்தபடி செய்யப் போகாது இறே –வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்– இறே –

————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி – 5-நாலாயி:2086/1

வாகனங்களையும் ஆராய்ந்தால் அப்படியேயாய் இருக்கும் –அவன் தன க்ரௌர்யத்துக்கு ஈடாக தமஸ் பிரசுரராய் இருப்பார் பரிக்ரஹித்து போரும் ருஷபத்தின் மேலேயாய் இருக்கும்    –சிம்ஹத்தின் பக்கல் போகாமைக்காக ஆன் விடை என்கிறது – வெறும் விடை என்றால் சிம்ஹத்தையும் குறிக்கும் இறே-மற்றையவனுக்குவேதாத்மாவான பெரிய திருவடி வாகனமாய் இருக்கும் – ஐஸ்வர்ய ஸூசகம் இறே –-அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் – த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –-அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இறே-ஏஷ ஸர்வ பூதாத்மா- உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-அவனே அவனும் அவனும் அவனும்-நளிர் மதிச் சடையன் என்கோ-முனியே நான்முகனே முக்கண் அப்பா-

————

ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் ஊர்ந்தான் உலகு அளந்த நான்று -17- நாலாயி:2098/3,4

கூரிய உகிராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்(ஆயுதம் தேவையாய் இருக்க வில்லையே -அதுவும் விளையாட்டாகக் கிழித்தவன் -ஈர்ந்தவன் )பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான(புஷ்ப ஹாஸ ) திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று –பெரிய திருவடியை மேற் கொண்டு ஸ்வைரமாக நடத்தி -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட மிக த்வரையுடன் ஓடி வந்து–ஓர் இடத்திலே ஓர் அடியானுக்கு விரோதியை அழித்து உபகரித்த ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில் இழந்தது வியப்பில்லை-ஸ்ரீ கஜேந்த்ரனுக்குப் புள்ளூர்ந்து காட்சி அளித்து உபகரித்த போது இழந்ததும் வியப்பில்லை- -திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –எல்லார் தலையிலும் திருவடியை வைத்து உபகரித்த திரிவிக்ரம அவதாரத்தில் அன்றோ இழந்தேன் என்கிறார் –

——–

படை ஆழி புள் ஊர்தி பாம்பு அணையான் பாதம் – –21-நாலாயி:2102/3

எப்பொழுதும் கை கழலா நேமியான்  -பெரிய திருவந்தாதி -87-எப்பொழுதும் பரிகரம் ஆயத்து திருவாழி – பெரிய திருவடி வாஹனம்-திரு வநந்த ஆழ்வான் படுக்கை –கையிலே திருவாழி யைப் பேராதே பிடிக்க வல்லனுமாய் திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும் சர்வேஸ்வரன் -ஆகிறான்-இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே -உன்னைக் கொடு-

———

ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – 74-நாலாயி:2155/1

ருஷப வாஹனன் என்று பிரசித்தமாய் இருப்பதொரு எருத்தை வாகனமாக உடையனாய் இருக்கும் அவன் –வேதாத்மாவான பெரிய திருவடியைத் தனக்கு வாகனமாக உடையனாய் இருக்கும் இவன்-அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன்   அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்-இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

———-

படி கண்டு அறிதியே பாம்பு அணையினான் புள் கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் -–85- நாலாயி:2166/1,2

அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-பாம்பணையினான் கண்டு அறிதியே- புட்கொடி கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –எல்லாம் கண்டாயாய் இருக்கிற நீ இன்னது கண்டேன் என்று சொல்லிக் காணாய் –

————

படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன் -92 நாலாயி:2273/2

கம்சன் ஈஸ்வரனை வஞ்சிக்க நினைத்ததை அவனுக்கு முன்னே கோலித் திருவடிகளாலே மார்பிலே ஏறி முடித்தவன் –குடி இருப்பு பெற்றோம் என்று ப்ரஹ்மாதிகள் ஏத்தும் ஸ்வபாவத்தை உடையவன் –ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன்-ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களை ஏத்துங்கோள் –1-பிரதிபந்தகம் போக்குகை–2-ஐஸ்வர்யம் -3-ஆத்ம லாபம்- 4-தன்னைத் தருகை- எல்லாம் கிடைக்கும்-ஸகல பல ப்ரதோ விஷ்ணு அன்றோ-

—————–

பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – 7-நாலாயி:2288/2

கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து –அத்தாலே ஸ்ரீ மானாய்–கருட வாஹனான ஸ்ரீ மான்-நிரதிசயமான ஐஸ்வர்யத்தை யுடையவன்எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–ஸ்வ யத்னத்தால் காண்பாருக்குக் கிட்ட அரியனானவனை – அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————

கருடன் மேல் கொண்ட கரியான் கழலே -57- நாலாயி:2338/3

பெரிய பிராட்டியார் தன் வேண்டப்பாடு தோன்ற எழுந்து அருளி இருக்கும் படியான
மார்வை யுடையவன் –அவளும் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப் படா நிற்கும் -பெரிய பிராட்டியாரை உடையவன் என்னும் இடத்துக்கு மேலே வேறே யொரு வேண்டற்பாடு காணும் திருவடி மேல் இருக்கும் அத்தால் – அவ் வழகுக்கு  மேலே ஆரழகு -என்றுமாம்-பெரிய திருவடியை நடத்தா நின்றுள்ள கருத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே –சம்ருத்த்னான திருவடி என்றுமாம் – மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –திருவடி மேரு போலே – எம்பெருமான் அஞ்சன கிரி போலே-ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் இருக்கிறபடி –

————–

அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் -22 நாலாயி:2499/2

கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரம் ஆயிற்று-வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்-வேட்டை கொண்டாடுகை நாட்டுக்கு வார்த்தை-அம்போடே யானை போந்ததோ என்று வினவா நிற்பது-இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது-பெரிய திருவடியை மேற்கொண்டு எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற ஈஸ்வரனுடைய விபூதியிலே எக் காலத்திலும் நடை யாடாததான- தன்னில் தான் சேர்த்தி அற்றன-நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ-புள் ளூரும் கள்வர் – வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய் (வேதம் நான்காய் –வேதம் தந்தவனும் வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே ) யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

———

புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – 24-நாலாயி:2501/3

கண்டதொரு மலையாலே பெரு மழையில் ஈடுபடாமல் கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய-மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட – கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

————

மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3

விரோதி நிரசன ஸமர்த்தனாய் பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்-பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்-வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன் இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில் பொருந்தி வர்த்திக்கிற அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய கண் என்று பேராய் இருக்கிற தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை-அலர் மேல் மங்கையைச் சொல்லி அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

———–

வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால் – 1-4-1-நாலாயி:2932/3

அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான்.
விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்; அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்

———

அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி-1-4-6-

நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது:-கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள்.-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே;-இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.-என்னைப் பற்றி வந்தார் என்னும் நிறக்கேடு தமக்கு பிறவாதபடி-அழகு செண்டேற -என்னுதல்–ஆனைக்கு அருள் செய்ய என்னுதல்
ஒரு வியாஜத்தாலே எங்கள் தெருவே வழி போக அமையும்-நாங்களும் ஜாலகரந்த்ரத்தாலே காண எங்களுக்கு அருளினீர் ஆகவுமாம்அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள்,-‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில்,-அவள் தெருவிலே.‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில்,-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்-அருளாழி அம்மானைக் கண்டக்கால்
பெரிய திருவடி யுடைய கிருபையும் மிகை என்னும் படி என்றோ அவன் நீர்மை இருப்பது
அருள் கடலான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் அருள் மறுத்தாலும் மறுக்காத திரு வாழி என்று திரு வாழிக்கு விசேஷணம் ஆகவும் –.-இது சொல்லி யருள்- இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லி யருளல் வேண்டும்.

————–

கொடியா அடு புள் உயர்த்த -1-6-10- நாலாயி:2963/3

தூரத்தில் கண்ட அளவில் -பிரதிபக்ஷம் – பகைவர்கள் மண் உண்ணும்படியான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையைச் ஸ்வபாவமாக உடையவர்.

———-

ஓடும் புள் ஏறி – –1-8-1-நாலாயி:2976/1

புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்
மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொள்ளுகை வாஹனத்துக்கு அபேக்ஷிதமாய் இருக்கை – மேற்கொள்ளும் அது தான் -அங்கு உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும் – அவனுடைய ஸ்வரூப லாபத்துக்குமாய் இருக்கும்-த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணங்க ஸோபிநா

————

பொரு சிறை புள் உவந்து ஏறும் பூமகளார் தனி கேள்வன் – –1-9-3–நாலாயி:2989/3

ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பெரிய திருவடியை மேல் கொள்ளுவதாக நினைத்து வா என்று அழைத்தால் – அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான ஹர்ஷத்தாலே பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துத் தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையனாய்க் கொண்டு ஆயிற்றுத் தோன்றுவது – அவனும் நாம் இவனை மேல் கொள்ளப் பெற்றோமே என்று திரு உள்ளத்திலே ப்ரீதியுடன் ஆயிற்று மேல் கொள்ளுவது

————–

புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே2-2-10- நாலாயி:3029/4

சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே,
திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது ஆட்டத்து வெளியில் யானைக் காலில் துகை யுண்ணா நிற்பார்கள்-

——————

வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்2-4-4-நாலாயி:3045/2

‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள்.
‘விடாயர் இருந்த இடத்தே சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தை யுடையவனே!’ என்கிறாள் என்றபடி.
அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்றுமாம்.

—————

தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – 3-1-9-நாலாயி:3129/2

சதுர் தந்தி என்னுமா போலே காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் –சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -நினைவுக்கும் அவ்வருகே போக வல்ல வேகம் உடையவனை -குழைச் சரக்காம் படி திருவடிகளாலே ப்ரேரித்து கொண்டு வந்தபடி-ஹூம் ஹூம் -பட்டர் –தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது 

——–

அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர் – 3-8-1-நாலாயி:3198/2

பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே -ஆஸ்ரிதர் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனமாய் தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று தரிக்கைக்கு த்வஜமாகை

——–

ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

தன்னை மேற் கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப் போக்குவிட்டுச் சஞ்சரியா நிற்கை-பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.-சிறகு ஒலி பாவித்து – திருவடி சிறகின் ஒலியையே பாவித்து.
திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை;-இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –

————

என்னை ஆள் உடைத் தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்3-8-7-நாலாயி:3204/2

பெரிய திருவடி திருத்தோளில் இருக்கும் இருப்பைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!
அன்றிக்கே,‘என்னை ஆளுடை’ என்பதனைப் பெரிய திருவடிக்கு அடையாக்கலுமாம்.
‘ஆயின், திருவடியை ‘என்னை ஆளுடையவன்’ என்று கூறல் என் கருதி?’எனின்,
‘இறைவனோடு சேர்க்குமவர்களுக்குத் தாம் அடிமை என்றே அன்றோ இவர் இருப்பது? இதனால், ‘மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,-தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.

————-

புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – -3-8-9-நாலாயி:3206/4

சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!-‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

————

ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில் -–3-10-1- நாலாயி:3220/2

புள் ஊர்ந்து – இதுவும் ஒரு சேர்த்தி அழகு; பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ இருப்பது?-உலகில் – இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ? அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார்.-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் –

————–

கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ – –4-1-9–நாலாயி:3239/

கொடியாய் மன்னா நின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக் காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில்,  அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் பக்ஷபாதமும் அதற்கு அடி.-புள்ளுடை அண்ணல் – ‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமே யன்றோ அவன்? அண்ணல் – தலைவன்.-கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில்.-இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ’என்கிறார் காணும், அவளோபாதி இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

———–

தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை -–4-5-4– நாலாயி:3278/2

‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,-அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே,
சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார் அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,-திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார்,‘-தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.-ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காணவல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான் வல்லரே யல்லரே? வாழ்த்து.’-பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன்–அஸ்தானே பயசங்கிகள் –

—————

ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – –4-10-7–நாலாயி:3336/4

வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார்.
ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை.
அன்றிக்கே, ‘சர்வேசுவரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடாநின்ற புள்’ என்றுமாம்.-கருடக் கொடியன், கருட வாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான்.-காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே, உலக காரண வஸ்துவே யன்றோ உபாசிக்கத் தக்கதாவது? ஆக, ‘மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய் எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேசுவரனுக்கு’ என்றபடி.

————–

கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ5-6-9- நாலாயி:3404/3

தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”– என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

———-

கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்முகில் வண்ணா5-7-3-நாலாயி:3409/1

உன்னை அறிந்தோ-மேலும் சொல்ல வேண்டுமோ உன் உயர்த்தி
த்வஜமாக -அருளாழிப் புள் -ஆஸ்ரிதர் இடம் கூட்டி வர பெருமைக்கு நிரபேஷ சாதகம்
மேலே சொல்வது மிகை -நீர்மைக்கு -அருளாழிப் புள்-சக்கரப்படை -அதுவும் வர வேண்டும் படியோ இது இருப்பது அருளார் திருச் சக்கரம் -இதுவும் நீர்மைக்கு – வான நாட -ஓன்று எடுக்கவும் ஓன்று பிடிக்கவும் வேண்டுமோ இருந்தாலே போதுமே -இருப்பிடமே அமையும் வாசச் ஸ்தானம் –சர்வாதிக லஷணம் -மூன்றும் -இவை ஓர் ஒன்றே அமைந்து இருக்க -சர்வ பிரகார பரி பூர்ணன்
கருடன் டகாரம் ளகாரமாய் கருள-கருள் -கறுப்பாய்-சீற்றமாய் -பிரதிபஷம் மேல் சீற்றம்
கருள் உடைய பொழில் மருது -பெரியாழ்வார்-

———–

  வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த –-6-8-5- நாலாயி:3532/2

வெவ்வியவான கண்களை யுடைத்தான புள்ளை நடத்திக் கொண்டு வந்து.
வருகிற போதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.
அன்றிக்கே,-பிரித்துக் கொண்டு போகிற போது கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.
“அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜ புத்திரனைப் போலே, “அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூது விட்டது,-அப்படியே வந்தபடி.

———–

கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே -6-10-7– நாலாயி:3556/2

விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடைய பெரிய திருவடியைக் கொடியாக உடையவனே!-1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய்,4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.-1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தை சொல்லி – 4–ஸுலப்யம் சொல்லி –5-அழகை சொல்லி 6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது-பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே, என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “ ‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————–

குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் -8-1-8-நாலாயி:3678/2

உன்னிலும் கண்ட போதே பகைவர்களை மாய்க்க வல்ல பெரிய திருவடியை கொடியாக உடையவனே-பகைவர்களை முடிப்பதற்கு தான் வேண்டா-கொடியை காண அமையும் -ஆதலால் உயர்த்த -என்கிறார் – 

———–

இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் -8-5-9- நாலாயி:3723/1,2

மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய-விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது- அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –-ஏறக் கடவ பெரிய சிறகை உடைய கருடப் பறவை தன்னையே-கொடியாக உடையவனே
அடியார்களை எல்லா அடிமைகளையும் கொள்ளுமவன்-தாஸ ஸஹ ஸ்லோகம் –இப் பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால் –இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ–கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ-அன்றிக்கே இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனே புண் படுகிறதோ -என்னுதல் –

——————-

தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே -8-10-6- நாலாயி:3775

பெரிய வடிவை உடையரான அசுரர்கள் உடைய உயிரை எல்லாம்-தகர்த்து உண்டு –
இது தானே இயல்பாக இருக்கிற பெரிய திருவடியைக் கருத்து அறிந்து-நடத்துகின்றவனுடைய-அளவிடற்கு அரியனாய்-உபமானம் இல்லாதவனாய்-
இருந்துள்ள கல்யாண குணங்களை திருவாய் மொழி முகத்தாலே அனுபவிக்கும்-அனுபத்துக்கு ஒக்குமோ -என்றது -திருவாய் மொழி நுகரும் ஆனந்தத்துக்கு-
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும்-ஆனந்தமும் போராது –என்கிறார் 

————–

தண் திருப் புளிங்குடி கிடந்தாய் கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

தன் நிலம் அல்லாத பொய்கையிலே மிகச் சிறிய பொருளின் -முதலையின் -கையில் அகப்பட்டு- மாற்று வினை செய்வதற்கு இடம் இன்றிகே இருக்கும்படியான ஆபத்து போம்படியாக – தடம் -என்பது-கரைக்கும் பொய்கைக்கும் பெயர் –பகைவர்களை காயும் சினத்தை உடைய பெரிய திருவடியை – அவன் வேகம் போராமை அவனை நடத்திக் கொண்டு வந்து தோற்றிலையோ–தோள் மேலே திருவடி வைத்து ஹும்காரம் -இப்படியே சில திவ்ய தேசங்களில் சேவை – அவ் யானையின் நிலை காண் – என் நிலை –அதற்க்கு தோற்றினாப் போலே என் முன்னே வந்து- தோற்றி அருள வேண்டும் –

கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏடு அலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம் பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழுன் மேல் வந்து தோற்றினான் –கம்பர்

————

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்–9-2-6-

பகைவர்கள் இடத்து உனக்கு கண்ணோடிலும்-கண் அற்று அழியச் செய்யும் -பெரிய திருவடியை நடத்தி –அப்பொழுது இருக்கும்படி –-மேருவைக் கினியக் -கபளீகரிக்க -காளமேகம் படிந்தாப் போலே ஆயிற்று இருப்பது – இப்பொழுது இது சொல்லுகிறது-பெரிய திருவடி முதுகில் இருப்பை காண்கைக்காக-

———

தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ -9-9-4- நாலாயி:3872/3-

பெரிய திருவடியை உடைய-தெய்வம் ஆகிற வண்டாலே எடுப்பப் பட்ட சாரத்தை உடையதான என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது – படுக்கை துன்புறுத்தியவாறே புறம்பே புறப்பட்டாள் – உடல் இருக்கும் வரையிலும் இருப்பதான பெண் தன்மையானது கெடத் தொடங்கிற்று- அழகிய சிறகுகளையுடையனாய்-காண்பதற்கு இனியனான் பெரிய திருவடி முதுகிலே வந்து ஆயிற்று – இவளுடைய பெண்மையை அழித்தது-அன்றிக்கே
கருட வாகனத்தை உடையவன் அன்றோ பரம் பொருள் ஆவான் -ஆதலின் –தூவி அம் புள்ளுடைத் தெய்வம் – என்கிறாள் -தன் பெண்மை அழிந்தது பேச்சுக்கு நிலம் இல்லாமையாலே –இது -என்கிறாள் – ஆவியின் பரமல்ல வகைகளாலோ –கலக்கிற போது அவன் செய்த தன்மைகள்-உயிரால் தாங்கக் கூடியன அல்ல –அன்றிக்கே –துன்புறுத்துகின்ற பொருள்களின் பாரிப்பு-ஆன்மாவின் அளவு அன்று -என்னுதல் –

————-

ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –10-2-2- நாலாயி:3904/1

புள் ஊரும்-பெரிய திருவடியை வாகனமாக கொண்டு நடத்தும் –கொடியும் அந்த திருவடியே –புள்ளினை கூறியது நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம் –-அநேக சேஷ வ்ருத்திகள் நித்ய ஸூரிகள் அனைவரும் செய்வதற்கு உப லக்ஷணம் -ஏகதா பவதி இத்யாதி
இவ் உலகில் தொடர்பு சிறிதும் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு–சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -53- என்கிறபடியே-உண்டாகச் சொல்லுகிற பல வகைப் பட்ட நிலைகள்-
இன்று சென்று கிட்டனவனுக்கும் வாசி அறக் கொடுக்கும்-என்கைக்காக சொல்லுகிறது –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25–இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ–குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று- இவன் இறைவனுக்கு தொண்டு செய்யாத அன்று ஆத்மாவுக்கு அடிமைத் தன்மை இல்லை – ஆகையால் ஒன்றிலும் விருப்பு இல்லாதவனான தான் குறைய நின்று-இவனுடைய குறையைத் தீர்க்குமாயிற்று -என்றது
தான் குறை உடையவனாய் நின்று இவனை குறை இல்லாதவனாகச் செய்வான் -என்றபடி –
இவன் தொண்டு செய்து -அடிமைத் தன்மை உடையவனாம்படி இவனைச் செய்வித்து
குறைவற்றவனாக வேண்டும் அன்றோ அவனுக்கு -என்றது
இவன் தொண்டு செய்து அடிமை தன்மை உடையவனாம் பொருட்டு அவன் தன்னை தாழ விட்டான் என்றால்- அது தானே நிறை யுடைமைக்கு உடலாக இருக்கும் அன்றோ -அவனுக்கு –என்றபடி – இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திருமொழி -2-2-3-என்ற பின்பே அன்றோ சேஷியாம் தன்மை அவனுக்கு உண்டாயிற்று –

——

புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் -10-6-9- நாலாயி:3954/3

புகழ்கின்ற புள்ளூர்தி –புகழ் நின்ற புள்ளூர்தி -புகழ் எல்லாம் தன் பக்கலிலே கிடக்கும்படி இருக்கிற பெரிய திருவடியை-வாகனமாக உடையவன்-புகழ் அடங்கலும் கிடப்பதுவும் அவன் பக்கலிலே-அதனை உடையவன் -என்கிற இதுவே இவனுக்கு ஏற்றம் –

 

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்யம் —ஸமுதாயா அதிகரணம் (2-2-3)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

March 9, 2025

சூத். 2-2-17 :: ஸமுதாய உபய ஹேதுகே அபி ததப்ராப்தி ::

புத்தாவதாராம் பகவதவதாரம் ஆன்படியாலே அவனும் ஸர்வஜ்ஞன்தான். அவனுக்கு கிஞ்சித்தும் மோகம் கிடையாது.
இல்லை மற்றவர்களை மோகிப்பனோ என்னில் அவனும் தான் ஸர்வலோக ஸுக்ருது, தயாவான் ஆனபடியாலே
விப்ரலிப்சை கிஞ்சித்தும் கிடையாதே. ஆகையாலே பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தைப் போலே புத்தாகமத்தையும்
பிரமாணமாக கொள்ளவேண்டும் என்று பூர்வ பக்ஷம் வருமேல் , அப்படி அன்று. புத்தாகமாம் நமக்கு பிரமாணம் ஆகாது.

வேதாபஹாரிணம் தைத்யம் மீன ரூபே நிராகரோது
ததர்த்தாபகாரோ தைத்யாம் வியாஸ ரூபி நிராகரோது

என்று புத்தாவதாரம் எடுத்து பிரவர்த்தனம் பண்ணின பிரக்ரியைகளை எல்லாம் வியாஸாவதாரம் எடுத்து நிராகரித்தார் என்பது பார்க்கத்தக்கது.
பகவானே சொன்னானாகிலும், வேத விரோதமானால் அதை நிரசிக்க வேண்டியது தான். பௌத்தர்களுடைய ஆசார பிரக்ரியைகளை
ஜைமினி பூர்வ காண்டத்தைக் கொண்டு நிரசிக்க, அவருடைய ஆசாரியரான வியாசர் அவர்களுடய தத்வங்களை நிராசனம் பண்ணுகிறார் இங்கு.

பகவான் தான் இட்ட கட்டளைகளை யார் பாலனம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை
தண்கடல் வட்டத் துள்ளே திண்கழல் அசுரர்களை தடிந்துண்ணும் –என்றபடி அவர்களுடைய மோகன சாஸ்த்திர
நிரசனம் பண்ண பகவான் எடுத்த ஆவேசாவதாரம்தான் வியாஸாவதாரம்.

இப்படிப் பட்டதான புத்தாவதாரத்தில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை பின்பற்றி இந்த கலியுகத்தில்
மாத்யமிகன்
வைபாஷிகன்
சௌத்ராந்த்ரன்
யோகோசாரன்
என்று நால்வகை பௌத்த சாகைகள் ஏற்பட அவர்களில் , முதல் முன்னம்
யோகாசாரனும், சௌத்திராந்திகனும் நிராசனம் பணப் படுகிறார்கள் இந்த அதிகரணத்தில்.

இவர்கள் நால்வருமே க்ஷணிக வாதிகள். இவர்கள் சித்தாந்தத்தில் காலம், ஆகாசம், திக்கு, விதிக்கு எதுவும் கிடையாது.
இவர்கள் மதத்தில் ஜ்ஞானம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஜ்ஞாத்ரு ஞேயங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை.
அந்த ஜ்ஞானமும் எப்படி இருக்கிறது என்றால் அது க்ஷணிகம் என்கிறான்.
அவ்வோ க்ஷணம் என்பதும் தோன்றும் போதே மறைவது. க்ஷணிக கடபடாதிகள் இருப்பால், க்ஷணம் என்கிற காலம்
ஆனுமானித்து அறியலாவது. அதை கடக்ஷண : என்கிறார்கள்.
இமை கொட்டும்போது, இமையோடு இமை சேரும் கால பரிமாண அளவே ஆகும் அது.
வைசேஷிகனோ ஒரு பொருள் உண்டாகும்போது உற்பத்தி, ஸ்திதி, விநாசம் என்று 3 கால அளவைகளையாவது ஒத்துக் கொள்கிறான்,
ஆனால் பௌத்தன் உற்பத்தி ஸ்திதியிலேயே விநாசம் என்பததாக அத்யந்த அல்பமாக அதை கணக்கிட்டு,
இல்லாமைக்கு ஈடாக சொல்லிவிடுகிறான்.

வைசேஷிகன் என்ன சொன்னான்? பாஷாணம்போல இருக்கிற பிரக்ருதி மேலே தர்மபூத ஜ்ஞானம் வந்தேறி என்கிறான்.
அத்வைதி ஸ்வரூபத்தில் தான் ஜ்ஞானம் உண்டு. அதற்கு சுடர், பிரகாசம், தர்மபூத ஜ்ஞானம் இவை எதுவும் கிடையாது என்றான்.
நம்முடைய சித்தாந்தத்தில் தீபம் போல ஸ்வரூப கத ஜ்ஞானம் உண்டு. தீப பிரபை போலே அத்தல் பரம்பி வருகிற
தர்ம பூத ஜ்ஞானம் என்ற இரண்டும் ஆத்மாவுக்கு உண்டு என்பதாகும்.

பௌத்தர்களின் மாதயமிகன் ஆத்மா சூன்யம் என்றான். மற்ற மூன்று பேரும் க்ஷணிக விஜ்ஞானம் ஆத்மா என்றனர்.
அதனுடைய உற்பத்தி விநாசம் எத்தனை வேகம் என்றால், அது நம்முடைய இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாத அளவுக்கு
க்ஷணிக பிரவிருத்தி என்றனர். அது உள்ளே இருந்தால் ஆலய விஜ்ஞானம். வெளியே வந்தது என்றால் பிரவிருத்தி விஜ்ஞானம் என்றனர்.
ஜ்ஞாத்ரு ஞேயங்கள் எல்லாம் பிரமம் என்றும் சொல்லி வைத்தார்கள்.

ஜகத் அபல பதி என்று முதல் முதலில் அத்வைத மதத்தைச் சொன்னவன் யோகாசாரன்.
இத்தால் அவர்களுக்கு அத்வைத விநாயகன் என்ற பெயரும் உண்டு. சங்கரருடைய ஆசாரியரான கௌடபாதர் அதை வாங்கி,
வைதிக மதத்தோடு பொருத்தி பிரஹ்ம ஏக வாதத்தை பிரவர்த்திப்பித்தார். இத்தால் இவர்களை ,
இந்த ஏக பிரஹ்ம காரண வாந்தியை பிரச்சன்ன பௌத்தன் என்று சொல்வதும் உண்டு.

சத்ருக்களை ஜெயிக்க அபிசார மார்க்கத்தை வேதமே சொல்வது போல, இந்த பௌத்தர்களை ஜெயிக்க அவர்களுடைய
ஏக விஜ்ஞான வாதத்தைக் கொண்டே பிரஹ்ம சத்ய வாதத்தை சித்திக்க வேண்டி வந்தது.
எப்படி கர்ம காண்டத்தை ஜைமினி பண்ணி ஜ்ஞான காண்டத்தை வியாஸர் பண்ணும்படி விட்டாரோ ,
அதே போல பௌத்தர்களுடைய ஜகன் மித்யா வாதத்தை ஒப்புக்கொண்டு சங்கரர் நிர்விசேஷ பிரஹ்ம ஸத்ய வாதத்தை செய்து போகவே ,
பகவத் ராமானுஜர் கிஞ்சித்து அதை திருத்தி, ஸவிசேஷ பிரஹ்மாத்வைதத்தை நிலை நாட்டலாயிற்று.
இல்லையாகில், பிரஹ்ம சத்யம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா?

ஜகன் மித்யாவாதிகளான அத்வைதிகள் , போக்தா, போக்கியம், பிரேரிதா என்கிற த்ரிபுடியில்
போக்தா போக்கியம் இரண்டும் பிரகிருதி தர்மமாகையாலே அவை வியாவஹாரிகா சத்யம் என்று தள்ளி விட்டு,
பிரேரித்தாவாகிற பிரஹ்மம் ஒன்றே பாரமார்த்திகம் என்றனர். ,

வைபாஷிகனும், சௌத்திராந்தனும் ஞேயமான ஜகத்தை க்ஷணிகம் என்றாலும் அதை ஒத்துக் கொண்டவர்கள்.
அதிலும் வைபாஷிகன் அவை பிரத்யக்ஷ சித்தம் என்றான். சௌத்திராந்திகன் அனுமான சித்தம் என்றான்.
இது தான் இருவருக்குமான வித்யாசம். ஒப்புமை மூவருமே க்ஷணிக வாதிகள்.

ஜகத் காரண- காரிய வாதத்தில்
தார்கிகனுடையது — ஆரம்ப வாதம்.
வைபாஷிக, சௌத்திராந்திகன் – – ஸங்காத வாதம்
சாங்கியன் , விசிஷ்டாத்வைதி — பரிணாம வாதம்.
மாத்தியமிக்கான் — சூன்ய விவர்த்த வாதம்
(முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று பிரமித்து போல சூன்யத்தைப் பார்த்து இந்த அஹம் என்பதும்,
ஜகத்தும் வருகின்றன என்ற வாதம். )
யோகாசாரன் – விஜ்ஞான விவர்த்த வாதம்.
சங்கரர் — நிர்விசேஷ பிரஹ்ம விவர்த்த வாதம்
பர்த்ருஹரி – ஸப்த விவர்த்த வாதம் (ஸப்த விஸ்போட – Big Bang Theory)

ஸங்காத வாதிகளான வைபாஷிக, சௌதிராந்திகன் சொல்வது
நிலம், நீர், தீஎரி , கால் என்கிற நான்கும் கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம் என்கிற தன்மைகளை அடைவே
நிலம் 4ம் , நீர் கந்தம் தவிர்ந்த 3ம், எரிதீ கடை 2ம், கால் ஸ்பர்ச தன்மை மட்டும் உடைய பரமாணுக்களின் சங்காதம் ஆகும்.
பல பூமி பரமாணுக்கள் சேர்ந்து பூமியும், பல ஜல பரமாணுக்கள் சேர்ந்து ஜலமும், பல தேஜஸ் பரமாணுக்கள் சேர்ந்து தேஜஸும்,
அவ்விதமே பல வாயு பரமாணுக்கள் சேர்ந்து வாயுவும் உண்டாக, இந்த 4பூதங்களும் சேர்ந்து
தேஹம், இந்த்ரியங்களாகிற பௌதிக பொருள்கள் உண்டாகின்றன.
இந்த 4 தத்துவங்களின் அபாவமே ஆகாசம் என்றும் சொல்கிறான்.

அதில் அஹம் என்கிற ஆத்ம விஷயம்,
தேஹத்தின் உள்ளிருக்கிற பொருள்களின் ஜ்ஞானத்தின் ஸந்தானமே/சமூகமே ஆகும் .
இதை அனுமானத்தால் அறியலாம் என்கின்றனர்.
ஸௌத்ராந்திகன் பாஹ்ய பதார்த்தங்களான ஞேயங்களும் அனுமானிகமே என்கிறான் அவன்.
யோகாசாரன் பாஹ்ய பதார்த்தங்களை சொப்ன துல்யம் என்று சொல்லி மித்யா என்கிறான்.

உபயஹேதுகே ஸமுதாயே அபி — ஸ்பர்ச,ரூப, ரஸ, கந்த தன்மாத்திரங்களின் சமுதாயமான
காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய 4 பூதங்களும், அவைகளை காரணமாகக் கொண்ட தேக, இந்திரிய சமுதாயத்திலும்
ததப்ராபதி – ஸங்காதமாகும் தன்மை ஒவ்வாது, ஸர்வ க்ஷணிக வாதத்தாலே..

———–

சூத். 2-2-18 :: இதரேதர பிரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந, ஸங்காதபாவா நிமித்ததவாத் ::

இதரேதர பிரத்யயத்வாத் -இந்த சுழச்சியில் ஒன்றுக்கொன்று காரணமாக இருப்பதால்
உபபந்நம் – சமுதாயமாகும் தன்மை பொருத்தும்.
இதிசேத் ந – என்று இப்படி சொல்வது பொருந்தாது
ஸங்காத அபாவா நிமித்வத்வாத் – அவித்யை முதலானவை பூத சமுதாயத்துக்கு காரணம் ஆகமாட்டாது –

பாஹ்யார்த்த அஸ்தித்வ வாதிகளான வைபாஷிக, ஸௌத்ராந்திகன் இருவரில் ஒருத்தன் ஜகத்து பிரத்யக்ஷ பரம் என்றான்.
மற்றோருத்தன் அனுமானிக பரம் என்றான். ஸ்பர்ச, ரஸ ரூப கந்தம் இவைகளின் பரமாணுக்களின் ஸங்காதம் 4 பூதங்களாய்,
அப்படியே இந்த 4 பூதங்களின் ஸங்காத்தம் பௌதிகமான தேஹேந்திரிய மாகும் என்றும்,
இந்த ஸங்காத்தமும் க்ஷணிகம் ஆனபடியால், இவைகளின் தோற்றம் மித்யையாய் ஸத்யமன்று.
அண்டத்தில் உள்ளபடியே பிண்டத்தில் என்ற வகையில், தேகத்தின் உள்ள பொருள்களின் ஜ்ஞான ஸந்தான பரம்பரையே ஆத்மா
ஆன படியாலே கார்யா காரணம் அனைத்தும் க்ஷணிகம் என்கிறான்.

நாம் சொல்லுகிற அவித்யா, கர்ம, வாசனா, ருசி , பிரகிருதி ஸம்பந்தமாகிற 5 – பஞ்ச ஆராதி (spokes ) கர்ம பிரவாக
சக்கரத்தால் வந்த ஷாட்பாவ விகாரம் சுக துக்க ஹேது போல
இவர்களும் க்ஷணிக பொருள்களை ஸ்திரமானவைகளாக நினைப்பிடும் விபரீத ஜ்ஞானத்தால் பந்தமும்,
அதனால் ராக துவேஷமும் உண்டாகி ஜனனமரண சக்ரம் சுழல்கிறது என்கின்றனர்.

இதெல்லாம் நடக்க நாம் ஆத்மா என்பது ஸ்திரமாக உண்டு. புண்ய பாபங்கள் என்பன உண்டு.
பகவான் தான் இதை எல்லாம் நடத்துகிறான் என்று ஒத்துக் கொள்கிறோம்.
ஆனால் இவர்கள் இவை எதுவும் ஸ்திரம் என்பதை ஒத்துக்க கொள்ளாமல் அவித்யா-பிரகிருதி சம்பந்த சக்ரத்தைத் பற்றி விவரிக்கிறார்கள்.
அவர்கள் சொல்லுகிற அவித்யா என்பது
அவித்யா, விஜ்ஞானம் ஸம்ஸ்கார: நாமரூபம் ஷடாயதனம் ஸ்பர்ஸ: வேதநா திருஷ்ணா உபாதானம் பவா ஜாதி
ஜரா மரண சோக : பரிவேதனம் துக்கம் துர்மனஸ்தா என்கிற ஆரங்களைக் கொண்டதாய்
ஒன்றுக்கு கொன்று காரணமாக இருந்து லோக யாத்திரை நடக்கிறது என்கின்றனர்.
இதற்கு ஸுத்திகையில் ராஜத புத்தி பண்ணுகையாகிற அதஸ்மிந் தத் புத்தி – காரணமாகிறது என்கின்றனர்.
இவன் சொல்லுகிற ஆவித்யை பிரமத்துக்குக் காரணமாகலாம் ஒழிய, ஸங்காதத்துக்கு காரணமா முடியாது என்பது கேள்வி.

ஸர்வம் யதார்த்தம் பிரமா என்று அவன் சொல்லுகிறான்.
ஸர்வம் யதார்த்தம் ஜ்ஞானம் என்று நாம் சொல்லுகிறோம்.
சித்தம் என்பது க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவைக் குறிக்கும்.
சைத்யம் ஸ்ரத்தை வீர்யம் ஸ்ம்ருதி ப்ரீத்தி இத்தோடு பூத தாதுக்கள் சேர்வதால் தேஹேந்த்ரிய பிராணன் சம்பவிக்கின்றன என்கிறான்.

ஜ்ஞாநாதி -இச்சேதி- யததே-கரோதி- அநுபவதி- ஸுக்யதி என்று இவை அனைத்தும் எத்தனை சுருக்கமாக நடந்தாலும்
அவை நடப்பதற்கு அத்யல்ப காலமாவது வேண்டாவோ ?
அதற்குள்ளாகவே தோன்றும் பூத பௌதிகங்கள் நசிந்து விடுகின்றன என்கிற க்ஷணிக விஜ்ஞானத்தால்
சமுதாய உத்பன்னத்துக்கு அவகாசமே கிட்டாது என்பதால் இவர்கள் சொல்வது பொருந்தாது.

ஸ்திரத்தில் அஸ்திரத்தவ புத்தி பண்ணுகிற ஜீவன் அவனும் அஸ்திரம் என்றான போது,
அஸ்திரமான ஜ்ஞானத்தால், அஸ்திரமான ஜீவன் ஸ்திரத்தவ புத்தி பண்ணுகிறான் என்பது எங்கனம் பொருந்தும் ?
காரணமான அந்த பிரமாத்மக ஜீவனும் அஸ்திரமேயாய் ஸங்காதம் யாரைக் கொண்டு உண்டாகும் ?
உத்தர க்ஷணம் உண்டாக்குவதற்கு முன்பாக, பூர்வ க்ஷணம் நஷ்டமானால், பதார்த்தங்களின் உற்பத்தி எப்படி சாத்தியம் ?
இங்கு க்ஷணம் என்பது பதார்த்தங்களைக் குறிக்குமல்லது காலத்தைக் குறிக்காது.
காரணம் பௌத்தன் காலம். ஆகாசம். திக்கு இவைகளை ஒத்துக் கொள்வதில்லை என்பதை முன்பே பார்த்தோம்.
ஸதி குட்யேது சித்ர கர்ம : ? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத?
கந்தர்வ லோக சலா – என்று கூடிக் கலைகிற மேகக் கூட்டம் – ஜலதர படலம் – போல உள்ள இவர்களுடைய
க்ஷணிக வாதத்தால் இதரேயிதர பிரத்யய உத்பந்நம் அஸம்பவம்.

————–

சூத். 2-2-19 :: உத்தரோத்பாதே ச பூர்வ நிரோதாத் ::

உத்ரோத்பாதே – பின் க்ஷணம் உண்டாகும் வேளையில்,
பூர்வநிரோதாத் ச — முன் க்ஷணம் அழிந்து விடுவதால் , இவர்கள் வாதம் பொருந்தாது.

உங்களைப் போல் ஸத் காரிய வாதம் என்றால் நீங்கள் சொல்வது ஏற்புடைத்து. ஆனால் அஸத்தே காரியமாகிறது
காரணம் அஸது என்பது எங்களுடைய வாதம்.
இல்லாததனின்றும் (5ஆம் வேற்றுமை உறுபு) இருப்பு உண்டாகி நசிகிறது என்பதாக சொன்னான்.
நையாயிகன் இல்லாததால் (6ஆம் வேற்றுமை) – காரியம் அஸதாகையால் – புதிதாக உண்டாகிறது என்பதாக அவர்கள் வாதம்.

இதற்கு மறுப்பு என்ன வென்றால் – இல்லாத தின்றும் பொருள்கள் உண்டாவதானால், எப்போதுமே சிருஷ்டி நடக்கலாமே ?
காரணம் என்ற நிமித்தம் இருக்க வேண்டாவே ? என்றால் அதற்கு அவர்கள் சமாதானம் இப்படி உள்ளது.
அதாவது ஒரு பொருள் உண்டாகி நசியும் போது அந்த பொருளின் அபாவம் ஏற்படுகிறதே,
அந்த அபாவத்தால் அப்பொருளின் உற்பத்தி அடுத்தடுத்து நடப்பதற்கு காரணமாகிறது என்கிறான்.

அபாவம் ஒன்று இருந்தால் பொருள் உண்டாகும் என்றால், கட அபாவத்தால் கடம் தான் ஏன் உண்டாக வேண்டும்?
கடம். படம். அஸ்வம். சிம்மம் இவை ஏன் உண்டாக்க கூடாது என்பதற்கு அவர்கள் சொல்வதாவது
கட அபாவத்தில் இருந்து கட ஜாதிதான் உண்டாகும் வேறு பொருள் உண்டாகாது என்கிறான்.
அதாவது காரண காரியத்துக்கு விசஜாதியத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஸஜாதீயத்தைத்தான் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறான்.

ஆக, அதை வாதத்திற்காக ஏற்றாலும், , ஒருகடத்தினுடைய அபாவத்தால்
நானா வர்த்தித – வேறு வேறு இடத்தில், தேசத்தில் உள்ள கடங்களின் உத்பன்னம் – சாத்தியமோ என்ன? இல்லை
எந்த இடத்தில் எந்த கடத்தின் அபாவம் உண்டாச்சுதோ அந்த இடத்தில் அந்த கடஜாதி உத்பன்னமே சாத்தியம் என்றான்.
தேச காலங்களை இவர்கள் ஒத்துக் கொள்ளாததால் , கிரகிக்கிற ஆலய விஜ்ஞானமோ, பிரவர்த்தக விஜ்ஞானமோ
எதுவும் ஸ்த்ரமில்லாதபோது இவர்களுடைய இந்த வாதம் தள்ளத் தக்கது.

இவர்கள் சொல்லுகிற அவித்தையைக் காட்டிலும் நாம் சொல்லுகிற அவித்யை வேறுபட்டது.
அநஹத்தில் அஹம் புத்தி பண்ணுகை அஹங்காரம்– சரீரமே ஆத்மா என்று நினைக்கை அஹங்காரம்.
இந்த பாவ பந்தம் பாரமார்த்திகம் . அத்வைதிகள் சொல்வது போல் அபாரமார்த்திகம் – ஸ்வப்ன துல்யம்.
வாக்யார்த்த ஜ்ஞானத்தால் போக்க வல்லது என்பது அல்ல. அது பகவத் கேவல கிருபையால் மட்டும் போக்க வல்லது.
பகவத் கிருபா பிரசாத லப்த ஜ்ஞாநாந் மோக்ஷ : என்பது நம்முடைய சம்பிரதாயம்.

தர்மி கல்பனார்த்தோ வரம் தர்ம கல்பனா – தர்மி ஸப்த வாச்சயமான ஆத்மா என்பது க்ஷிணிகம் தான்.
அது க்ஷணிக விஜ்ஞான சந்தானமே. அதுவே சரீரகதமாக இருக்கும் போது ஆலய விஜ்ஞானம் என்றும்,
அந்த ஆலய விஜ்ஞானம் பாஹ்ய பதார்த்தங்களோடு சையோகம் கொண்டு பாஹ்ய பதார்த்தங்களை விநிவேசனம் பண்ணிக் கொண்டால்
அதுதான் பிரவிருத்தி விஜ்ஞானம் (அ ) சித்த விஜ்ஞானம் – என்கின்றனர்.
இத்தாலே தர்மத்தையே (ஆலய விஜ்ஞானத்தையே), தர்மியாக அதாவது புத்தியையே ஆத்மா என்று சொல்வது தவறு ,
யஸ்யாநுபவ தஸ்யேவ ஸ்மிருதி : என்று ஸ்ம்ருதி, பிரத்யபிக்ஞா வியவகாரங்கள் உண்டாக.
ஸ்திரமான ஆத்மா (அ ) தர்மி இருந்தால் அல்லது மறுபடி நினைத்துப் பார்க்கை, நினைவு இவை எல்லாம் ஏற்படவழி இல்லை.

கடக்ஷணிக வாதத்தில் பலாபலன்கள் மாறிப்போவது குற்றம் என்று நாம் சொல்ல,
குற்றமாகாது என்பதற்கு அந்யதீய பாலார்த்தஸ்ய அந்யஸ்ய பிரவிருத்தி : குழந்தை பிறந்த போது தகப்பனார் செய்கிற ஜாத கர்ம,
நாம கரண ஹோமத்தில் பலன் செய்கிறவனுக்கன்றி, அவன் குழந்தைக்கு என்று வேத கர்ம காண்டத்தில் நீங்களும்
ஒத்துக் கொண்டிருக்கிற போது, எங்களுடைய வாதம் குற்றமாகாது. எங்கள் க்ஷணிக வாதத்தாலே
உற்பத்தி விரோதங்கள் உண்டாகாது என்று மறுதலிக்க;

இதற்கு உத்தரமாக, விசேஷ சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஒன்றை சாமான்ய சாஸ்திரத்துக்கு பயன் படுத்தக் கூடாது.
அர்த்தார்த்தி ராஜகுலம் கச்சேத் . போஜனார்த்தி போஜனசாலா கச்சேத் – என்பதாக சாமான்ய சாஸ்திரத்துக்கு
சாமான்ய சாஸ்திரத்தில் இருந்தே உதாகரிக்க வேண்டும் என்று அவன் வாதத்தை தள்ளிப் போட்டனர்.

————

சூத். 2-2-20 :: அஸதி ப்ரதிஜ்ஞோபரோத : யௌகபத்யம் அந்யதா ::

உற்பத்தியும் அஸத்தாலே லீனமும் அசத்தாகவே என்கிற இவர்களுடைய ஸித்தாந்தம் அதார்மிகமானது.
ஜைனனும் நைராத்மா பாவத்தை ஆதரிப்பதில்லை.
குமாரில பட்டர்
அகளங்க தேவன்
சங்கரர்
ஞாயகுஸுமாஞ்சாலி உத்யநாச்சார் என்ன
இவர்கள் எல்லோரும் கூட பௌத்த சித்தாந்தத்தை கண்டனம் பண்ணுகின்றனர்.
ஆகவே தான் இவர்களுக்கு பின்பு வந்த எம்பெருமானாருக்கு ஜகத் ஸத்யத்தை நிலைநாட்டல் எளிதாயிற்று.

அஸதி – காரணம் நசிந்த உத்தர க்ஷணம் காரியம் உண்டாகிறது –
ஒரு உத்தர கடக்ஷணத்திற்கு ஒரு பூர்வ கடக்ஷணம் அபாவம் காரணம் என்றால்
ப்ரதிஜ்ஞோபரோத — அதிபதி (இந்திரியங்கள்) ஸஹகாரி (தீபம்) ஆலம்பந (பாஹ்ய பதார்த்தங்கள்)
ஸமநந்தர ப்ரத்யயா: ( முன் க்ஷணத்தில் ஏற்பட்ட ஜ்ஞானம்) சத்வாரா விஜ்ஞாந :
உத்பத்தௌ ஹேதவ : என்கிற ஜ்ஞானம் உண்டாக காரணமாக இருக்கின்ற பௌத்த மத பிரதிஞையை அதுக்கு விரோதம்.வரும்.
அந்யதா – இந்த அவர்களுடய கொள்கையை விரோதிக்காமல் இருக்கவே காரணம் இருக்கும் போதே காரியம் உண்டாகிறது என்றால்
யௌகபத்யம் -இருந்தது (காரணம்) அழியும் முன்பே காரியம் உத்பன்னமாகிறது –
த்வி சந்திர ஜ்ஞானம் போலே காரியம் காரணம் இரண்டும் தோற்றமளிப்பதான –
காரண கடம், காரிய கடம் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்பட வேண்டும்.
உண்மையில் அப்படிக் காண்பதில்லை யாகையால் பௌத்த மதம் பொருந்தாது.

ஜ்ஞானம் ஏற்படுவதும் , மனப் – பிராணன் – இந்திரியம் – பாஹ்ய வஸ்து பிரதர்சனமாகிற
சுவை, ஒளி, ஒலி, நாற்றம் இவை அதே பிரகாரம் உள்வாங்கப்பட்டு புத்திக்கு அறிவிக்கப்பட்டு,
பிறகு அது நினைவுப் படிவமாக மனதில் நிறுத்தப்பட, ஆத்மாவுக்கு அவை பிரதர்சனமாகிறன.
இத்தனைப் படிகளில் எத்தனை வேகமாக நடந்தாலும், அதற்கும் ஒரு கால இடைவெளி அவசியம்.
இதனை மறுக்கும் விதமாக செய்கிற க்ஷணிக வாதத்தால், இந்திரிங்களால் விஷயங்கள் அறியப் படுதலும்,
அதனை ஆத்மா உணர்வதான ஜ்ஞான உற்பத்தியும் ஒரே க்ஷணத்தில் நிகழ்வது போலாகிவிடும். இது உண்மைக்குப் புறம்பானது.

—————-

சூத். 2-2-21 :: ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத அப்ராப்தி : அவிச்சேதாத் ::

கீழ் சூத்திரங்களால் உற்பத்தி க்ஷிணிகத்தல் உண்டாகிறது என்பது நிராகரிக்கப் பட்டன்.
இப்போது அவன் சொல்லுகிற விநாசம் (அ ) பிரளய பிரகாரமும் சரியில்லை என்பது பேசப்படுகிறது. .
நம்முடைய சித்தாந்தத்தில்
லீன் = ஸ்லேஷ்ணே என்று காரணத்தில் காரியம் போய் ஸூக்ஷ்மாவஸ்தையில் ஒட்டிக் கொள்வதையே லயம் என்கிறோம்.
திருமழிசை ஆழ்வாரும்
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் (திருச்சந்த விருத்தம்-10) இதையே காட்டிக் கொடுக்கிறார்.
நச அதர்ஷணே என்பதாக அவன் சொல்லுகிறான்.

ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத– பார்க்கப்படுகிற ஸ்தூல வஸ்த்துக்களின் விநாசமும்,
கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம வஸ்து விநாசமும் ஜகத்துக்கு ஏற்படாது. காரணம்
அவிச்சேதாத் – உள்ள பொருள் அடியோடு அழியும் என்பது சேராதாகையாலே.

ருதிர் = ஆவரணே என்று பிரளயத்துக்குப் பெயர். இங்கு விநாசத்தைக் குறிக்கும்.
ஸாங்கிய = கியா = பிரகடனே பிரகடனே அனைய இதி = புத்தியில் இருப்பதையே சொல்லப் போகுமாகையால், இங்கு புத்தியைக் குறிக்கும்.
ஸங்கியாம் பிரதி விரோதம் = இந்திரியங்களுக்கு கோசாரமாகக் கூடிய விநாசம். பாஹ்யமான பதார்த்தங்களுக்கு ஏற்படுகிற ஸ்தூல விநாசம்
அப்பிரதி ஸங்கியா விரோதம் என்பது பௌத்தன் சொல்லுகிற புலன்களால் ஊகிக்க முடியாத கடக்ஷண விநாசம்.
பிரளயத்தில் வஸ்துக்கள் நாசமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி மாயமாகி விடுகின்றன.
க்ஷிணிகம் – தீப ஜ்வாலா பேத அநுமானம் = சுடர் ஒரு ஜுவாலைப் போல தோற்றினாலும், உண்மையில் அது பிரதிக்ஷணமும்,
அணு அணுவாக எண்ணை உறிஞ்சி திரி எரிவதன் தொடர்ச்சியாகும். அதுபோல
ஜோதி நிர்வாணம் = என்பது அணைந்த விளக்கின் ஜோதி மாயம் ஆவது போல என்கிறான். இதுவே நிரண்மய விநாசம் என்பது.
இப்படி அசத்தால் உண்டாவது அசத்தையே போய்ச் சேருகிறது என்று ஸ்ருஷ்டி பிரளயங்களைப் பற்றிச் சொல்கிறான்.
நாம் சொல்வது பிரஹ்மதிடத்தினின்று உண்டாகி, பிரம்ஹத்திடத்தில் போய்ச சேருகின்றது என்பதற்கு எதிர்மறையானது இவர்கள் வாதம்.
இதை வைதிகனும், ஸாங்க்யனும் கூட ஒத்துக் கொள்வதில்லை.
பௌத்தர்களும், அத்வைதிகளும் கூட பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக பேசுகிறார்கள் என்பதே உண்மை.

நிரந்வய விநாசம் என்பது கிடையாது. பொருள்கள் நாசமாகும்போது அவை அவஸ்தாந்திர பேதத்தை அடைகின்றனவே ஒழிய,
பதார்த்தம் இல்லாமலே போவதில்லை. பானை உடைந்தால் சில்லு. சில்லு மண்ணில் கரைந்தால் பாம்சு.
பாம்சு பிண்டமாகி மீண்டும் கடாவாஸ்தாயைப் பெறலாம்.
தார்கிகன் இப்படி மாறி உண்டாகிற திரவ்யமே வேறு என்றான்.
சாங்கியன் எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல் காரியம் காரணத்தில் இருக்கிறது என்றான்.
நாம் சொல்வது திரவியம் ஒன்றாய், காரண அவஸ்தையில் இருந்து காரிய அவஸ்தைக்கு மாறுகிறது என்பதாக.

திரவியம் என்றால் என்ன? எது உபாதான காரணமோ அதுதான் திரவியம்.
உபாதான காரணம் என்றால் என்ன? அவஸ்தாஸ்ரயமாக எது உள்ளதோ அதுதான் திரவியம்.
அவஸ்தா என்றால்? அபிரதக் ஸித்த ஸம்பந்தமாய், காகாசித்தமாய் இருப்பது. விட்டுப் பிரியாததாய்
பரிணமிக்கக் கூடியதாய் இருப்பது என்று பொருள்.

எரிகிற தீபம் அணைந்த பிறகு, தீபம் பிரகாசம் மாயமாவதுபோல் நிரந்வய விநாசத்தால் அஸத்தோடு சங்கமிக்கிறது என்றான்.
இதுவும் சரியில்லை. காரணம் கரி எரியும்போது ஜுவாலையோடு தூமம் வெளியேறுகிறது. அது சற்று கரிப்புகையாக இருக்கும்.
விறகு எரியும்போது புகை அம்சம் நலிந்து ஜுவாலை அதிகம் காணலாம்.
அதுபோல் தீபம் எரியும்போது தூமம் வெளுத்து கண்ணுக்குப் புலளப் படாமல் இருக்கலாம்.
விளக்கு அணையும் போது, அது புகையாக வாயு மண்டலத்தில், கலந்து அது மலினமாகி பரிணாமத்தை அடைவதே அவஸ்தா பேதம்.
எனவே நிரந்வய விநாசம் என்பது கிடையாது. எல்லாம் ஸாந்வய விநாசமாகத்தான் இருக்கிறது என்பது சித்தாந்தம்.

—————-

சூத். 2-2-22 :: உபயதா ச தோஷாத் ::

உபயதா – இல்லாத வஸ்துவிலிருந்து உள்ள பொருள் உண்டாதல், இருக்கிற பொருள் இல்லாது போவதும் ஆன இரண்டும்
தோஷாத் ச – தோஷம் உடைத்தால் , பௌத்த மதம் பொருத்தாது.

பதார்த்தங்கள் ஜாதி, ஆகாரம், வியக்தி மூன்றும் கூடிய வஸ்துவாகும்.
ஆகாரத்தையே குறிக்கும் ஜாதியானது திரவ்யத்தையே ஆஸ்ரயித்து இருப்பதாகும்.
கடத்தவம், படத்துவம், மனுஷ்யத்வம் இவை ஜாதி போல்
அஸ்வத்வம் என்பது 4 கால், குளம்பு, பிடரி மயிர், கற்றை வால் உடைய விலங்கின் ஆகாரத்துக்குள்ளே அடக்கம்.
தார்கிகன் சொல்வதுபோல் கடத்வ படத்வங்கள் அஸ்வத்தம் என்று பிரதக்காக தனித்த பதார்த்தம் இல்லை.
இன்னும் நீல கடம் என்றால், கருமை என்கிற குணம் குடத்தினுடைய அவினா பாகம்.
அதே போல அபாவம் என்பதும் அவஸ்தாந்தரமே ஒழிய தனித்து பதார்த்தம் இல்லை .

ஸது ஏவ சௌம்யா! இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
ஏகம் — துவைதிகள் சொல்லுகிற 5 விதமான பேதம் இங்கு சொல்லப்பட வில்லை.
பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வகத குணம் கிடையாது. விகத ஜீவாத்மா கிடையாது. விஜாதீயமான அசித்து கிடையாது என்பதால்.
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – பஹுஸ்யாம் பிரஜாஏய – ஸதபோ தப்பியத – தப ஆலோசநே என்று சங்கல்ப மாத்ரேண
மயி ஸர்வ இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ -என்று பகவான் தானும் சொல்லி இருக்கிற படியே
இந்த ஜகத்து அவனால் படைக்கப்பட்டு, தரிக்கப்பட்டு, அந்தராத்மாவாய் ஸத பத்ர கோச ஸூஜி நியாயத்தாலே
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஜ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
வரை அநுபிரவேசம் செய்து , நியமிப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த அத்விதீய ஸப்தமெல்லாம்
சரீராத்மா பாவத்தை இட்டே சொல்லப் பட்டதாக பொருள்படும்..

அவனுக்கு ஒரு ஆத்மா உண்டோ? என்றால் இல்லை,
பதிம் விஸ்வ – விஸ்வபதியாய்
ஸ்வரகும் ஈஸ்வரம் – தனக்கொரு பதி இல்லையாய்
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்ய ஸ்தித நாராயண : ஸதைக ரூப ரூபாய என்று அவனுடைய ஸ்வரூபத்தில் விகாரம் இல்லையாய்
விசேஷணாம்சமான அசித்தில் ஸ்வரூபதயா விகாரமும்; சித்தில் ஸ்வபாவதயா விகாரமும் ஏற்று
பரிணமிக்கையாகிற இது மாயையால் வந்ததோ – சங்கரர்
உபாதியால் வந்ததோ – பாஸ்கரர்
சக்தியால் வந்ததோ – யாதவபிரகாசர்
அல்லாமல் பகவத் சங்கல்பத்தால் வருவது என்கிற
திரவியா-அதிரவ்ய விபாகம் அனைத்தும் சத்யம் நித்யம் பகவத் ஆஸ்ரய ஆஸ்ரயணீயம்.

உபநிஷத் சித்தமான இதை எல்லாம் இல்லை செய்து வஸ்துக்கள் துச்சத்தில் உண்டாகி, துச்சத்தில் போய் சேருகிறது.
இடையில் க்ஷணிகமாய் இருக்கிறது என்று இவர்கள் சொல்ல அது பொருந்தாது
உள் இருக்கிற ஆலய விஜ்ஞானம் என்ன, வெளியில் இருக்கிற பிரவ்ருத்தி விஜ்ஞானம் என்ன இரண்டுமே ஸ்திரமானது தான்.
இல்லாததிலிருந்து இந்த ஜகத்து உண்டானால் , இதுவும் துச்சமாய் காணப்பட வேண்டும்.
மாத்யமிகனைப் போல் இவர்கள் உலகம் சூன்யம் என்று ஒப்புக் கொள்கிறார்கள் இல்லை.
ஆன பின்பு, ஜகத் இருப்பை ஒப்புக்கொள்ளுகிற வைபாஷிகர்களின் இந்த வாதம், அவர்களுடைய
உற்பத்தி கிரமம், பிரளய கிரமம் இரண்டும் துச்சம் என்பதற்கு சேராது.

—————

சூத். 2-2-23 :: ஆகாஸே ச அவிசேஷாத் ::

ஆகாஸே ச – ஆகாச விஷயத்திலும் வைசேஷிகர் சொல்கிற சூன்ய வாதம் பொருந்தாது.
அவிசேஷாத் – பிரத்யக்ஷமாக பார்க்கப் படுகிற பூமி முதலானவற்றிற்கும், ஆகாசத்துக்கும் வேற்றுமை கிடையாதாகையால்.

வைபாஷிகன் ஆகாசத்தை நிருபாக்யா என்று வாங்மனஸா அகோசரம் என்பதுபோலே சொல்கிறான்.
அது 4 விதமான அபாவத்தோடே இருக்கிறது என்கிறான்.
1. ப்ராகபாவம் – பொருள் உண்டாவதற்கு முன்னும் இருப்பது – கடத்துக்கு மண்கட்டி
2. ப்ரத்வம்ஸாபாவம் – அது அழிந்ததற்கு பின்னும் இருப்பது – கடம் நஷ்டமாக இருக்கும் சில்லு
3. அந்யோந்யாபாவம் – கடத்வோ படத்துவம் ந ; படத்தவே கடத்வம் ந – ஒன்றின் தன்மை இன்னொன்றில் இல்லாது இருப்பது.
4. அத்யந்தாபாவம் – கடம் அடியோடு இல்லை என்கிற துச்சமான நிலை.

நிலம், நீர், தீ, வளியாகிற 4 பூதங்களின் அபாவமே ஆகாசம் என்கிற போதும் அது பிரத்யக்ஷ கோசரமாகவே இருக்க வேண்டும்.
கடாபாவம் பூதலமாக காண்கையாலே, ஆகாஸாபாவம் பாவாந்தர ஸித்தமாய் துச்சம் என்னவாகாது.
இந்த வகையில் பூமிக்கும் ஆகாசத்துக்கும் வாசி இல்லையாதலால், ஆகாசம் சூன்யமாக மாட்டாது.
நீலமாக காண்கிற ககன இடைவெளி தான் ஆகாசம் என்று காட்ட, அருகில் உள்ள ஆகாசம் நீலமாக காண்பதில்லையே
எனவே அது தோற்றம் (ஆபாஸம் ) என்று தள்ளிவிட, கிணற்றின் வீழ்சியிலும், ஊசி புகும் துளையிலும்,
பக்ஷி பறக்கும்போது ஆஸ்ரயமாயும் இருப்பதுவும் ஆகாசம் என்று விளக்கப்பட்டது.

சங்கரர் ஆகாசத்தை ஆவரணா அபாவம் என்றார்.
த்ரிவ்ருத்கரணம், பஞ்சீகரணம் ஆனபோது, ஆகாசத்தில், பிருத்வி முதலான மற்ற பூதங்களின் அம்சமும் கலந்து இருப்பதால்,
அது பிரத்யக்ஷ கம்யம் என்பது சித்தம் என்பதாக பகவத் ராமானுஜர் காட்டினார்.
ஆகாசம் பரமாணு ஸங்காத ரூபமாய் . நிரவயவம் என்பதால் அகோசரம். ஸப்தமும் அநித்யம் என்று நிராகரணம் பண்ணுகிறான்.
அப்படியானால் சப்த தன்மாத்திரத்தை எப்படி நிர்வகிப்பது? என்றால்
சப்தத்துக்கும் பொருளுக்கும் சம்பந்தம் நித்தியமாய், அவை முக்கியார்த்தத்தையே குறிக்கும்.
இதையும் பௌத்தன் ஏற்பதில்லை.

வியாச சித்தாந்தத்தில் விஷ்ணு பாரம்யத்தையே சொல்லி இருக்கிறார்.
சங்கரரும் கூட நாராயண: நாராயண: என்று விஷ்ணு பாரம்யத்தையே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் வருமிடத்து திரிமூர்த்தி சாம்யம் சொல்வது போல் பிரமை ஏற்படலாம்.

ஸத் பிரஹ்மத்துக்கு பிரகிருதி சம்பந்தமே கிடையாது. அவித்யா சம்பந்தம் வந்த போது, அதனுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் காரணமாக
மூன்று வித காரண சரீரம் ஏற்பட்டு, அவரே பிரஹ்மா, விஷ்ணு, சிவன் என்றாகி ஸ்ருஷ்டி, ஸ்திதி. சம்ஹாரங்களை செய்வதாகவும்,
இவர்களுக்கு ஆத்மா ஒன்றாய், சரீரம் மூன்றாய் த்ரிமூர்த்தி ஐக்கியம், சாம்யம் சொல்லகின்றனர் அத்வைதிகள்.
இது தவறான வாதம்.

மத்யே விரிஞ்சி கிரீஸ : விஷ்ணுரேவ அவதரிதி – என்று நாராயணனே ஸ்வயம் விஷ்ணுவாகவும்,
பிரம்ம, ருத்ராதிகளில் அந்தர்யாமியாகவும் நின்று சிருஷ்டி ஸ்திதி லயங்களை செய்கிறான் —
மச்ச, கூர்மாதி ஆதாரங்களுக்கு முன்னம், இந்த த்ரி மூர்த்திகள் நடுவே விஷ்ணுவாக அவதாரம் பண்ணினது தான்
அவனுடைய முதல் அவதாரம் என்பது நம்முடைய ஸித்தாந்தம். அதுவே வியாஸ சித்தாந்தமும் கூட.
வியாசர் இதை எங்கே சொன்னார் ? என்றால்

ஜன்மாதி அஸ்ய யத : என்று பிரஹ்மா ஸூத்ரத்தில் வியாசர் ஆதி சம்பதத்தால்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம் இந்த மூன்றையும் செய்ப்பவன் எவனோ அவன் தான் பர பிரஹ்மம் என்று சொன்னதோடு,
உத்தவ கீதை பிரகரணத்தில், பகவான் கிருஷ்ணன் திருவாக்காக

ஆத்மந : பித்ரு புத்தராப்யாம் அநுமேயோ மம பவாப்யயௌ
ந பவாப்யே வஸ்தூணாம் அவிக்ஞோ அத்வய லக்ஷ்ண :

பவா = உற்பத்தி
அவ்யயௌ = விநாசம்
ஜீவாத்மா = ந ஜாயதே ம்ரியதே வா என்று இரண்டும் அறியாதவன். இந்த அத்வைத லக்ஷ்ணத்தை உடைய ஜீவாத்மா.
இந்த உற்பத்தி விநாசத்தை யாரும் சரியாக அறிந்தார் இல்லை. காரணம் இந்த ஜீவாத்மா அத்வைத லக்ஷணமானவன்.
அவனுக்கு உற்பத்தியும் விநாசமும் கிடையாது. பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஜனன மரண துவயத்தை அறியாதவன்.
பரமாத்மா அறியானோ என்னில் ?
பஹுனிமே வியதீதாநி ஜன்மநா நான்யஹம் வேத்தி தவஸார்ஜுணா – என்று அவன் அறிவான் –
ஸ்வேச்சா க்ருஹீத அபிமத உரு தேஹம் ஆனபடியாலே–ஆனால் அவன் அறிந்தபடி நாம் அறிவதில்லை.
நித்யர்களோ என்னில் , அவர்களும் இன்னொரு ஜீவாத்மாவை இட்டே அறியலாம் தாங்கள் ஸ்வத :பிறவாதவர்கள் என்பதால்.
நம் பிறப் இறப்பை நாம் அறிவதும் தனக்கொரு குழந்தை பிறப்பதைப் பார்த்தும், தன் தந்தை இறப்பதைப் பார்த்துமே யாகும்.

வைபாஷிகன் இதற்கு எதிர் தட்டாக வஸ்துக்கள் அஸத்தாலே உண்டாகிறது, அஸத்திலே போய் சேருகிறது என்பதை
இங்கு நிராகரணம் பண்ணி, சரீராத்மா பாவத்தை இட்டு சமர்த்தனம் பண்ணவேண்டி இருக்க
நீங்கள் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தம் என்ன, மூலா ஜ்ஞானம் என்ன, அவித்யா நிவிர்த்தி என்ன இதுகளால் அல்ல என்பதே வியாச சித்தாந்தம் .
இதைக் கொண்டே கிரியா, தேவதா, யோகம் சூன்யம் என்பதான 4 வகைப் பட்டவரான பௌத்தர்களையும்
இந்த சமுதாயாதிகாரணத்தில் வியாசர் நிரஸனம் பண்ணுகிறார்.

இத்தால், ஸர்வ சித்தாந்த சங்கிரகத்தில் வியாஸ பாரத தர்ஸனமாக
சங்கரரால் சொல்லப்பட்ட பஞ்சவிம்சதி தத்வ விமர்சனமோ, திரிமூர்த்தி சாம்யா வாதமோ கண்டு மயங்க வேண்டாம் .
வியாஸ சித்தாந்தமும், அவருடைய சரீரக ஸித்தாந்தமும் இரண்டும் ஒன்றே அல்லது வேறு அல்ல.

—————–

ஸூத். 2-2-24 :: ஆநுஸ்ம்ருதேஸ்ச ::

பிரத்யபிஜஜ்ஞை என்பதைக் கொண்டு இரு வேறு காலங்களில் உள்ள பொருள் ஒன்றே என்று சொல்ல வேண்டுமானால்,
அந்த பொருள் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பொருள்கள் க்ஷணிகமானால், இருவேறு காலங்களில்
உள்ள பொருள் ஒன்றே என்கிற இந்த பிரத்யபிஜ்ஞா ஒட்டாது.

அநுஸ்ம்ருதே : முன் அனுபவிக்கப் பட்ட பொருள் அனைத்தும் மீண்டும் அனுபவத்துக்கு வருவதால் ,
வஸ்துக்களுக்கு க்ஷணிகத்வம் செல்லுபடியாகாது என்றதற்கு
அநுஸ்மரணமாகிற பிரத்யபிக்ஞா – ஜ்வாலாபேத வியாமோகம் போலே பிராந்தியால் வந்தது என்கிறான்.

எதை வைத்து இப்படிச் சொல்கிறான் என்றால் இரண்டு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. அர்த்த க்ரியா காரித்வம்
2. ஸத்வம்
யது ஸது க்ஷணிகம் – எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் க்ஷணிகம், யதா ஜலதர படலம்–என்பது அவன் வாதம்.
அதற்கு ஸித்தாந்தி பிரத்யபிக்ஞா ஸோ அயம் தேவதத்த –என்ற வார்த்தை பாடில் 3 சொற்கள் உள்ளன.
இவை அனைத்தும் பிரதமா விபத்தியில் சாமான்யாதிகாரணத்தில் ( முன்நிலை படர்க்கையில் .} அமைந்துள்ளாதால்
அவை ஒரு வியக்தியையே உணர்த்தும்.
பூத காலத்தில் இருந்தவரும் இப்போது காட்சியளிக்கிற இவரும் ஆனா தேவதத்தன் என்று தானே இந்த வார்த்தைப் பாட்டுக்கு பொருள்.
எனவே சித்ரத்வம் உண்டு. யது ஸது க்ஷணிகம் என்கிற உங்கள் வாதம் பொருந்தாது- எனறாக

எதெல்லாம் ஸம்ஸ்கார பலமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமம் – என்றான்.
வெள்ளியை – ராஜதம் – முன்பே பார்த்திருந்த படியால் அதனுடைய நினைவு – சம்ஸ்காரம் புத்தியில் இருக்க,
முத்து சிப்பியைப் – சுத்திகை – பார்க்கும்போது வெள்ளி என்கிற பிரமிக்கிறான்.
ஆகவே இதெல்லாம் சம்ஸ்காராதீனமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமாத்மகம் என்று சொல்லி விட்டான்.
எனவே இந்த தேவதத்தன் விஷயமான பிரத்யபிக்ஞையும் சுத்திகா ரஜத பிரமம்போலே அன்று
பார்த்த தேவதத்தன் வேறு, இவர் வேறு என்று சொல்லி விட்டான்.

அதற்கு சித்தாந்தி துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானமானால் அப்படி, எல்லா பிரத்யபிக்ஞா ஜ்ஞானமும் பிரமம் ஆகாது.
எதுபோல் என்றால்
சந்தன கொட்டடியில் மணம் வீசுவதை அறிந்த ஒருவன், மலையில் சந்தன மரத்தைப் பார்த்ததும் இதற்கு மணம் உண்டு
என்று நினைவு படுத்துவது போல –
நிர்துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானம் சத்யம் என்று சொல்ல ;
இப்போது அவன் சத்வத்தை விடுத்து, அர்த்த கிரியா வாதத்துக்கு வந்தான்.

பாய்சல் நிலத்தில் உள்ள நெல் விளைகிறது. தானிய கிடங்கில் – க்ருஸூலத்தில் – வைத்த நெல் விளைகிறதோ?
சாமர்தியா அசாமார்தியம் இரண்டுக்கும் வேறுபட காண்கையால் – விருத்த தருமம் ஒரு ஆச்ரயத்தில் இருக்க வழியில்லை ஆதலால் –
இந்த நெல் இரண்டும் வேறு வேறு தான் – என்றான்.
ஆல் விதைக்க மா முளைக்குமா? அசமர்த்தமான கடம் என்றும் அசமர்த்தமே. சமர்த்தமான பீஜம் என்றும் சமர்த்தமே.
அதற்கு வேண்டியது ஸஹகாரி சையோகமே.
தரணி-ஜல சையோக ஸாகார அபாவத்தாலே நெல் க்ருசூலத்திலே முளைப்பத் தில்லை , அன்றி அசாமர்த்தியதால் அன்று –

அநுஸ்மரணம் –பூர்வாநுபூதி வஸ்து விஷய ஜ்ஞானம் பிரத்யபிஜ்ஞானம் இத்யர்த்த :
ஆகவே எதுவும் க்ஷணிகமில்லை. எல்லாம் ஸ்திரம் தான். என்று விளக்கப்பட்டது.

யஸ்யாநுபவ தஸ்யைஹி ஸ்ம்ருதி : ஸ்ம்ருதி வியதீத விஷய: மதி ஆகாமி நிர்மிதா. புத்தி தாற்காலிகா புரோக்தா
பிராஜ்ஞா த்ரைகாரிகா மதா – என்று காவ்யப் பிரகாசத்தில் உம்மதப்பட்டன சொன்னபடி
பிரத்யபிஜ்ஞா உண்டாக ஆத்மா ஸ்திரமானதாக இருக்க வேண்டும்.
ஜ்வாலாபேத வியாமோகமும் ஸ்திரமான ஆத்மா விடத்திலேயாய் , இவர்கள் சொல்லுகிற க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவுக்கு சொல்லப் போகாது
மேலும் வியாமோகம் ஜ்வாலைக்கு வேண்டுமானால் பொருந்தலாம், கடம் போன்ற பொருள்கள் நசிந்தபோது வியாமோகம் ஏற்பட வழியில்லை ,
வஸ்து மொத்தமாக மாயமாவ தில்லையால்–என்று விஷ்யாதர முகமாகவும் இவர்கள் வாதத்தை தள்ளிவிட

இதுவரை பிரத்யக்ஷத்தைக் காட்டி பேசியவன், இப்போது அனுமானத்தை இட்டுப் பேசு, அந்த அனுமானத்தை அவனுக்கே திருபாலாவது. .
யது ஸது தது ஸ்தாஷ்னு . யது துச்ச : ததேவ அநர்த்த கிரியாகாரி யதத்யத் ஸது தது அர்த்த கிரியா காரிரேவ .
எனவே அர்த்த கிரியா வாதம் அக்ஷணிகத்துத்வதையே காட்டும்.
தவிர, ஸ்தைர்யம் இருந்தால் தான் அனுமானத்தையே பண்ண முடியும். 5 வாக்கியங்களைச் சொல்லி அனுமானத்தை
ஸ்தாபிக்குமளவாக ஆத்மா இருக்க வேண்டுமே? க்ஷணிக விஜ்ஞானத்தால் அது ஆகாது.

இதுவரை வைபாஷிகன், சௌத்திராந்திகன் ஆகிய இரண்டு பேருக்கும் பொதுவான விஷய சூத்ர விமர்சனம் பார்த்தோம்.
வைபாஷிகன் ஜகத்தை பிரயக்க்ஷ சித்தம் என்றான்.
சௌதாந்த்ரிகன் அதை ஆனுமானிகம் என்கிறான்.
இதனை அடுத்த சூத்திரத்தில் நிராசனம் பண்ணுகிறார் சூத்ரகாரர்.

https://srivasanesa24d.blogspot.com/–33/34-july 4th

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் ஏவகார சீமாட்டி-ஸ்ரீ திருப்பாவையில் ஏவகாரங்களும் உம்மைத்தொகையும் -அவற்றின் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்–

March 7, 2025

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐ ஐந்தும் அறியாதார் வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி
பரமனடி காட்டும் வேதங்கள்
வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் வேதம்
கோதை தமிழ்-
ஐ ஐந்தும் ஐந்தும் -அர்த்த பஞ்சகம் -ஒவ்வொன்றிலும் ஐந்து உண்டே
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி

ப்ரத்யகாத்மா –புபுஷு -முமுஷு -கேவலர் -முக்தர் -நித்யர்பிள்ளாய் -பேய்ப்பெண்ணே -புபுஷு
தேசமுடையாய் -முமுஷு
கோது காலமுடைய பாவாய் -கேவலர்
துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே -முக்தன்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-நித்யர்

உபாயம் -கர்ம யோகம்- ஞான யோகம் -பக்தி யோகம் -பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் -ஐந்தையும்
பல கறந்து -கர்ம யோகம்
நினைத்து -ஞான யோகம்
போதரிக் கண்ணினாய் -பக்தி யோகம்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -பிரபத்தி
நானே தான் ஆயிடுக -ஆச்சார்யர் அபிமானியே இவ்வாறு இருக்க முடியும்

பல ஸ்வரூபம் -தர்மம் அர்த்தம் காமம் கேவலம் பகவத் ப்ராப்தி
தூயோமாய் வந்தோம் -தர்மம்
அம்பரமே தண்ணீரே சோறே -அர்த்தம் -பொருள்
மாதவிப் பந்தல் கீழ் -இன்பம் -போக அனுபவம் -காமம்
தத்வம் அன்று தகவு -கேவலம்
உன் மணாளனையும் தந்து –நீராட்டு -பகவத் ப்ராப்தி-உக்கமும் தட்டொளியும் கைங்கர்ய உபகரணங்கள்

விரோதி -ஸ்வரூப-பரத்வ விரோதி – புருஷார்த்த -உபாய -பிராப்தி
மாற்றாதே வந்து -ஸ்வரூப விரோதி
அபிமான பங்கமாய் வந்து -பரத்வ விரோதி -தேவோஹம் இல்லாமல்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -கைங்கர்யமே புருஷார்த்தம் -ஆகவே புருஷார்த்த விரோதி
உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் -உபாய விரோதி -நம்முடைய யத்னமே இல்லாமல் -ஏத்துகையே பிரயோஜனம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -அவன் ஆனந்தமே -பிராப்தி விரோதி

ஐ ஐந்தும் -அறிய மேல் ஐந்து-பிரமாண பஞ்சகம் -வதந்தி ஸகல வேதா – இதிஹாச புராணங்கள் முனைய -பாஞ்சராத்ர ஆகமம் -தர்ம சாஸ்திரம் அருளிச் செயல்கள் -மஹாத்மாக்கள் -வாசுதேவ சர்வம் இதி என்று இருப்பவர்கள்
மேலையார் செய்வனகள் -வேதம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா -சரித்திரங்கள் -இதிஹாச புராணங்கள்
கானம் சேர்ந்து -தர்ம சாஸ்திரங்கள்
வந்து சேவித்து -ஆராதன முறைகள் -பாஞ்சராத்ர ஆகமங்கள்
முப்பத்தும் தப்பாதே -திவ்ய பிரபந்தங்கள்

வேதம் -முதல் ஐந்தும்
வல்லார்களைக் கொண்டு -இரண்டு பதங்கள் -அடுத்த பத்து
விண்ணோர்கள் -16-20
பெருமான் -21-25
திருப் பாதம் பணிந்து -26-30

தமிழ் மாலை முப்பதும் -தமிழிலே அருளிச் செய்து இருந்தாலும் மீண்டும் தமிழ் என்று அருளிச் செய்து -இனிமையும் நீர்மையும் தமிழ் அன்றோ

————

ஏவ காராம் – 1-தேற்றப் பொருளிலும் -2-இசைவுப்பொருளிலும் -3-உறுதிப்பொருளிலும் -4-சிறப்புப் பொருளிலும் -5 வினாவாகவும் -6-வியப்பாகவும் -7-உயர்ச்சியாகவும் உண்டே

தேற்றப்பொருளில்
நாராயணனே- 1- -சமிதை பாதி ஸாவித்ரி பாதி அன்றிக்கே தானே சென்று தலைக்கட்ட வல்லன் என்கிற உபாயத்தில் விருப்பம் இல்லாமை -உபாய நைரபேஷ்யம் -சொல்வதில் நோக்கு
நமக்கே -2-
முலை வழியே –12- கை வழி தவிர

இசைவுப்பொருளில்
கீழே -22- அந்த ராஜ்யங்களைக் கொடுத்துப் போங்கள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா என்று உன் ஸிம்ஹாஸனத்தின் கீழேயே

உறுதிப்பொருளில்
அடியே -29-ஸர்வாத்நா பர்யநு நீயமாநோ யதாநா ஸுமித்ரி ருபைதி யோகம் என்னுமா போலே

சிறப்புப்பொருளில்
உனக்கே -29-நீ உகந்த அடிமை செய்வோம்

வினாப்பொருளில்
வல்லீர்கள் நீங்களே -15-உன் வாசலில் வந்து எழுப்ப -சில்லென்று அழையேன்மின் -என்றது உன்னதன்றோ வெட்டிமை

வியப்புப் பொருளில்
நென்னலே -16 -உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றும் ஒரு நாளே

அம்பரமே -17 இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை

—————

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் – வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறேஅவதாரணத்துக்கு கருத்து-சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –

—————–

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )–ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் –அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –நமக்கே பறை தருவான்-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை – சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-

ஏவகாரத்தால்-உபாயாந்தரங்களையும் தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-ஈஸ்வரன் கர்ம அனுகுணமாக பலம் கொடுப்பான் அத்தனை அல்லது-கிருபா அனுகுணமாக பலம் கொடான் என்னும் இடம் தோற்றுகிறது

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது-மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

———————-

நாமும் –
அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே – இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்-நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு – உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது – ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் –நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்-அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்- உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது-அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –

————–

பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து- மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் – தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே-பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் – அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்

——–

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே – மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -என்கிறார்கள் –வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ – உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ -கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ – மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது -படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ-போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும் நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –

துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்-தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ-எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே-ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே

——–

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர – நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை-இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில் கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே- பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-கன்றை அகல கட்டி வைப்பார்கள் –அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே – கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு கை வழியும் அன்றிக்கே – கன்றின் வாய் வழியும் அன்றிக்கே முலை வழியே பால் சொரியா நிற்கும் –

———

வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –-வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன-உன் வாசலில் வந்து எழுப்ப-சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன-அது என் குற்றம் அன்று –-அதுவும் உங்கள் குற்றமே
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள்-நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன -நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன-அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது-பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன-அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் – அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

———-

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி-கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை –-பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை-யாழில் இட்டுப் பாடி – அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு-திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் – பேச்சில் இனிமை இருந்தபடி – எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ – பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்-மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-

—————

கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே-அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே-அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் -இத்தால் – சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே -இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –கம்சன் வெட்டியன் –காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –உன்னைக் காவலாக வைத்தது உகவாதார் புகுராமைக்கும் உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ – ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –

கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி-வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று-யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ-கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –உள்ளுக் கொண்டு புகாது – நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள- அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
-சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ-அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்-ஒரு நாளே -என்றார்கள் –-ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –திரு முளை யன்று-நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே-மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய் ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –பவிஷ்ய ஆச்சார்யர் அவதாரம் பற்றி நென்னலே வாய் நேர்ந்தாரே ஆழ்வார் –

———

அம்பரமே தண்ணீரே சோறே –புடைவையோடு-தண்ணீரோடு-சோறோடு வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –-ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலிலே நாங்கள் வந்தது எங்கள் குறை தீர்க்கைக்காகவோ – உம்முடைய குறை தீர்க்கைக்கு நாங்கள் வந்து நிற்க நீர் உறங்குவது என்-தன் பக்கல் கார்யம் கொள்ளுமவர்களை உதார என்று கிருஷ்ணன் சொல்லுவது உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ -இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்-வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –-பெற்றாலும் அங்கனேயோ என்று பெறா விட்டாலும் தரிக்கலாமவையோ நீர் கொடுப்பது-அர்த்தித்தவர்களுக்கு ரூப சாதனமான வஸ்திரம் – தாரகமான தண்ணீர் – போஷகமான சோறு – வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொடுக்கிற உமக்கு நாங்கள் வேண்டிற்று எல்லாம் தர வேண்டாவோ –அம்பரமே என்கிற அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கத் தக்கது என்னும் படி இருக்கையும் – அது தான் புஷ்கயசஸ் ஸூ க்கு கொடுக்கை இன்றிக்கே- பல அபிசந்தி ரஹிதமாகக் கொடுக்கையும் கர்த்தவ்யம் என்கிற பிரதிபத்தியோடே -தன் பேறாக ஆன்ரு சம்சயத்தாலே கொடுக்கையும் –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் – அறம் செய்கிறவர் ஆகையாலும்–எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும்-நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம் ஸ்வ ஜன ரக்ஷணம் – ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –ஆத்மா ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய் ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –

அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே--பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே-பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது
-குல விளக்கே – இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே- பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே-இரண்டுக்கும் கடவ அவன் உணர்ந்தால் ஒன்றுக்கும் கடவ நீ உறங்கக் கடவையோ – வஞ்சிக் கொம்பு போலே இருந்துள்ள ஸ்திரீகளுக்கு எல்லாம் தலையானவளே-கொழுந்தே-பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகம் அன்றோ வாடுவது –நாரீணாம் உத்தமா என்கிற பதம் பெறும் போது அவள் படி உனக்கு உண்டாக வேண்டாவோ-தன்னை நலிகிற ராக்ஷஸிகளுக்கு பவேயம் சரணம் ஹிவ-என்று அவள் சொன்னால் போலே ஆர்த்தைகளாய் வந்த எங்களையும் அஞ்சாதே என்ன வேண்டாவோ –ஆயர் கொழுந்தையும்-ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –எம்பெருமானை பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்-அதிதி -பெற்ற அன்றே அழுது–கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே-குல விளக்கே -எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே-இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி-இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ உறங்காது ஒழிய வேணும்

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ – திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )-இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்

—————–

கலியே –
மிடுக்கை உடையவனே –அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேரமா போலே உன் மிடுக்குக்கு எங்கள் பல ஹானியும் நேர் அன்றோ –அபலைகளான எங்களுக்கு கிருஷ்ண பலா -என்கிற உன் மிடுக்கு அல்லது உண்டோ –கலி -என்று மிகுதியாய் – சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகனானே–செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா – பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –இத்தால்-பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –

இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –அனந்தர க்ஷணத்தில் ஊராரும் இசையார் –
நாங்களும் ஜீவியோம் –

திருவே –எம்மை நீராட்டு
எங்களையும் அவனையும் ஒரு துறையிலே சேராத போது-நீ திருவாகைக்கு உபாயம் உண்டோ-ஸ்ரீயதே ஸ்ரயதே -என்று இறே ஸ்ரீ யாயத்து – ஸ்வ தந்திரரோடு பரதந்த்ரரோடு வாசி இல்லை – இவள் கை பார்த்து இருக்க வேணும்-உன் மணாளனை எம்மை-உனக்கு ஒருக்கால் எழுதித் தந்து பிரதி க்ஷணம் எழுத்து வாங்குகிறவனை – நீராட்டம் அமைத்து வைத்தேன் -என்று உனக்கும் அவனுக்கும் கூட குளிக்கச் சமைத்த நீரிலே எங்களையும் கூட முழுக்கூட்டு-உன் மணாளனையும் தந்து நீராட்டு என்கிறார்கள்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –

———

மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று –-கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது –முலைக் கடுப்பாலே ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- -பரம பதத்தில் வந்தோமோ –வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ-நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-ஆற்றப் படைத்தான் மகனே –அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த-ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை –
ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்-உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று-உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இறே-நந்த கோபன் குமரன் -முதலில் -இங்கு ஆற்றப்படைத்தான் மகன் -மேல் ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து

ஆற்றப்படைத்தான் மகனே -திருவாய்ப்பாடியில் அனைவருக்கும் பொருந்தும்
ஆகவே கண்ணனுக்கே அசாதாரணமான மூன்று அடையாளங்கள் –
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -கண்டவர் பேச்சைக் கெடுக்காமல் கண்ட எனது பேச்சை கேள் -திருவடி மித்ர பாவேனே -நத்யஜேயம் கதஞ்சன

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி-
அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து – சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே
சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை-லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்-நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே –உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே- மனுஷ்யத்தவே பரத்வம்-இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிர காலம் இருந்து தேஷிஷ்டனானவனே- ஆஸ்ரித பஷ பாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்-இன்னார் தூதன் என நின்றான்ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இறே–பகல் விளக்கு அங்கு –பாற் கடலில் கடல் விளக்கு – இங்கு தானே சுடர் விளக்கு

நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும்
ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் -ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்-பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்-உபாயாந்தர உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –

———-

என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்-ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ -உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –-)இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் -நீ கிருபை செய்து அருள வேணும் –வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது – பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது-உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே-வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் – இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்-சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் – வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே-இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்-மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம் ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –

————

திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –-பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –திருவுக்கு தக்க செல்வம்-யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து – திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )-ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் 
பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ

சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே-ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் – கப்பம் தவிர்க்கும் கலியே (சேவகமும்)என்றதுவும்

வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து – கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம் பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 ) உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல் விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )-வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –-ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —

———————-

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
அபிமான ஸூன்யாராய் வந்து-சிம்ஹாசனத்தின் கீழே திரள வந்து அணுக்க ஓலக்கமாய் இருக்கை –கீழே-அவதாரணம்(கீழேயே )-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் –புத்தியால் அநந்யார்ஹ சேஷத்வம் உணர்வதையே இங்கும் சொல்லிற்று-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் திருவடிக் கீழேயே வாழ்ச்சிநின் பள்ளிக் கட்டில் கீழே – அந்த ராஜ்யங்களைக் கொடுத்து- போங்கோள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே –

நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்-வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குணஜிதராய்க் கொண்டு வந்தோம் –அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்
அநாதி காலம் பண்ணிப் போந்த தேகாத்ம அபிமானத்தை விட்டு தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –நாங்களும் -ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப்
புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான போகங்களையும் விட்டு
அம்புக்கு தோற்றாரோ பாதி உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம் 

——————

மாலே-இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நோற்கவும் ஷமன் அன்றிக்கே-நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –-அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு

பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி-பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்-ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்-பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது

சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ – பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும்-கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –சத் சஹாவாசம் வேணும் –

கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –-எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-

விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

பறை கறங்க கூத்தாடின போது திரு வரையில் கட்டின பறையையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு-அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்-பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்-விளக்குக்கு -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்-கொடிக்கு -பெரிய திருவடியையும்–விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள்-கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்கொடி -சித்தாந்த விஜய த்வஜம்விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.-ஆறு விஷயங்கள்- –அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள்-போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம் உக்கம்
தட்டொளி என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –
என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

———

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்-பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –-அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-காப்பே

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –-அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-திரு இலச்சினையே

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது —திரு மந்த்ரமே-மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம் –மேல் தோன்றிப் பூ- ஆழ்வார் )-த்வயமே-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்சரம ஸ்லோகமே-பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் –பல் கலனும் -என்கிறார்கள் –

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்-திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –ஆக இரண்டு பட்டாலும் சாம்யா பத்தியும் குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து--வாய் பாட–உடம்பு கூட–நெஞ்சு குளிர–கூடிக் –குளிர்ந்து–குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா- அஹம் அன்னம் –இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் , அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.-பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

———–

அறிவொன்றும் இல்லாத 

1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –நோற்ற நோன்பிலேன்-குளித்து மூன்று-ந தர்ம நிஷ்டோஸ்மி

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி-உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ-சர்வ நிரபேஷன் -என்கை-இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை – எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –-2-ஸாவதியும் அன்று –-3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் –நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்-நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆனபின்பு இப்பிறவி -விதி நிர்மித மேத தன்வயம் -என்கிறபடியே மேடு படக் கண்டது பள்ளத்தை நிரப்ப அன்றோ-உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ-ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி -நன்றாக நான் -நான் இல்லை என்றால் நீ இல்லையே-நாரம் -இருந்தால் நாராயணன்-நடுவில் வந்த–இடையனாய் வந்த உறவை சொன்னோம்–ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் சொல்ல வில்லை-இடைக்குலத்தில் நாங்கள் –இடையிலே வந்த உறவு–இடைத்தனத்தில்–அறிவு இல்லாதவர் மறக்கலாம்

————

கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்

——–

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்-போக்யமுமாய்-பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-உன்னடியே போற்றும்-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே (திருமார்பை ஆசைப்படும் அத் திரு-திருவடியை ஆசைப்படும் இத் திரு )-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-உன் பொற்றாமரை அடியே-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்-கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே-அழித்தாய் உன் திருவடியால் –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக-தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும் நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் – ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் – இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே-உற்றோமே யாவோம்-சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் – பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே)நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி) அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் ) நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை ) நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும் (அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் ) நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் ) கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும் -எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )-விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே-பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)-பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)-ஏழு ஏழு பிறவிக்கும்-இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
கிருஷ்ணனும் பெண்களுமாய் புறப்படில் அமையும்-அவனும் எதிர் சூழல் என்று இவர்களைப் பெற வேணும் என்று முற்கோலிப் பிறவா நிற்கும் என்றுமாம்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -மனுஷ்யத்வே ச மாநுஷீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-ஆக வேணும் என்கிறார்கள்-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்வோம்-அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –ஆட் செய்யும் இடத்தில் எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே-கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும் மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் –என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ) கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.-உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால் நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே – அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –இங்கு – பிற்பட்ட காலத்திலே -என்னுதல் -சம்சாரத்திலே -என்னுதல்-அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

—————

நாச்சியாரும்‌ பெரியாழ்வாரும்‌ வடபெருங்‌ கோயிலுடையானும்‌ கலந்து வாழும்‌ வில்லிபுத்தூர்‌ பொன்னும்‌, முத்தும்‌, மாணிக்கமும்‌ பதித்துச்‌ செய்த அணிக்கு நிகராய்‌ ஒளிர்கின்றது என்று உணர்வோர்‌ உளர்‌.
குறித்தொருவர்‌ கொண்டாடும்‌ கொள்கைத்‌தோ கோதை
நிறுத்தவூர்‌ விண்டுசித்தர்‌ நீடூர்‌–பிறப்பிலியூர்‌
தாழ்வில்லி புத்தூர்‌என்‌ றைவர்க்குத்‌ தானிரந்தான்‌
வாழவில்லி புத்தூர்‌ வளம்‌
-என்று பிள்ளைப்‌ பெருமாளையங்கார்‌ கூறும்‌ கூற்று இதை
நிலை நிறுத்தும்‌. (நூற்றெட்டுத்திருப்பதி அந்தாதி, ப: 108),

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5-

மற்றொருவற்‌ கென்னைப்‌ பேசவொட்டேன்‌ மாலிருஞ்சோலை யெம்மாற்‌ கல்லால்‌
(பெரியாழ்வார்‌ திருமொழி -3-4-5-
மானிடவர்க்‌ கென்று பேச்சுப்படில்‌ வாழகில்லேன்‌- கண்டாய்‌ மன்மதனே (நாச்சியார்‌ திருமொழி 1-4-3-)

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத் தெருவே போதாரே—11-4-

ஆண்டாள்‌ வில்லிபுத்தூர்‌ விளக்கு – அணிவிளக்கு – சுற்றும்‌ எரியும்‌ விளக்கு – பெரியாழ்வாரின்‌ குலவிளக்கு – குத்துவிளக்கு – இறுதியில்‌ குன்றின் மேலிட்ட விளக்காக விளங்கியமை. வேயர்‌ பயந்த விளக்காகிய ஆண்டாள்‌, ஆயர்‌ குலத்தில்‌ தோன்றிய கண்ணனாகிய அணி விளக்கின்‌ வனப்பு வீரம்‌, உயர்வு முதலியவற்றால்‌ ஈர்க்கப்பட்டு அவனை அணுகி இறுதியில்‌ அன்னவனோடு கலந்தாள்-கோதை தமிழ்‌- கோதுஇல்‌ தமிழ்‌ – இன் தமிழ்‌-‘ வண் தமிழ்‌. பிற ஆழ்வார்களை விஞ்சும்‌ தமிழ்‌. இவருடைய காதல்‌ பள்ளமடையாகும்‌.

*பேச்சு அரவம்‌ கேட்டிலையோ” என்றது விசேஷமான கருத்தை யுடையது. சேட்பதில்‌ ரஸமில்லை; பேச்சிலிருந்து தோன்றுகிற (அரவம்‌) த்வனிப்‌ பொருளைக்‌ கேட்டுணர்‌வது தான்‌ சுவை மிக்கது என்று ஆண்டாளே காட்டியிருக்‌றாள்-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும்-ஸ்ரீ அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டம்-

March 5, 2025

ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும் அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டத்தில் பார்க்கவ ரிஷி உபதேசித்த இந்த இரண்டு ஸ்தோத்ரங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை-இரண்டு ஸ்தோத்ரங்களயும் சேர்த்துத்தான் பாராயணம் செய்யவேண்டும். முதலில் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம், பிறகு ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம், பிறகு மறுபடியும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும்.

ஸ்ரீ ஹரி:ஓம்

அஸ்ய ஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
லக்ஷ்மி நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:

கர ந்யாஸ:

நாராயண: பரம் ஜ்யோதிரிதி அங்குஷ்டாப்யாம் நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி தர்ஜநீப்யாம் நம:
நாராயண: பரம் தேவ இதி மத்யமாப்யாம் நம:
நாராயண: பரம் தாமேதி அநாமிகாப்யாம் நம:
நாராயண: பரம் தர்ம இதி கனிஷ்டிகாப்யாம் நம:
விஶ்வம் நாராயண இதி கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி ஹ்ருதயாய நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி ஶிரஸே ஸ்வாஹா
நாராயண: பரோ தேவ இதி ஶிகாய வௌஷட்
நாராயண: பரம் தாமேதி கவசாய ஹும்
நாராயண: பரோ தர்ம இதி நேத்ராப்யாம் வௌஷட்
விஶ்வம் நாராயண இதி அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:

அத த்யாநம்
உத்யதாதித்ய ஸங்காஶம் பீதவாஸம் சதுர்ப்புஜம்
ஶங்கசக்ர கதாபாணிம் த்யாயேல் லக்ஷ்மீபதிம் ஹரிம்
த்ரைலோக்யாதார சக்ரம் ததுபரி கமடம் தத்ர சாநந்தபோகீ
தந்மத்யே பூமி பத்மாங்குஶ ஶிகர தளம் கர்ணிகாபூத மேரும்
தத்ரத்யம் ஶாந்தமூர்த்திம் மணிமய மகுடம் குண்டலோத் பாஸிதாங்கம்
லக்ஷ்மீ நாராயணாக்யம் ஸரஸிஜ நயநம் ஸந்ததம் சிந்தயாம:

அஸ்யஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ரிஷி: அனுஷ்டுப் சந்த: நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:

ஓம்
நாராயண: பரம் ஜ்யோதிராத்மா நாராயண: பர:
நாராயண: பரம் ப்ரஹ்ம நாராயண நமோஸ்து தே -1-

நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ தாதா நாராயண
நமோஸ்து தே -2-
நாராயண: பரம் தாம த்யாநம் நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்து தே -3-

நாராயண: பரோ தேவோ வித்யா நாராயண: பர:
விஶ்வம் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே-4-

நாராயணாத் விதிர் ஜாதோ ஜாதா நாராயணாத் பவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ நாராயண நமோஸ்து தே -5-

ரவிர் நாராயணஸ்தேஜ: சந்த்ரோ நாராயணோ மஹ:
வஹ்நிர் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே -6-

நாராயண உபாஸ்யஸ் ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண பரோ போதோ நாராயண நமோஸ்து தே -7-

நாராயண: ஃபலம் முக்யம் ஸித்திர் நாராயணஸ் ஸுகம்
ஹரிர் நாராயண: ஶுத்திர் நாராயண நமோஸ்து தே -8-

நிகமாவேதிதாநந்த கல்யாண குண வாரிதே
நாராயண நமஸ்தேஸ்து நரகார்ணவ தாரக -9

ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி பாரதந்த்ர்யாதிபிஸ் ஸதா
தோஷை ரஸ்ப்ருஷ்ட ரூபாய நாராயண நமோஸ்து தே -10-

வேத ஶாஸ்த்ரார்த்த விக்ஞாந ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண நமஸ்தேஸ்து மாமுத்தர பவார்ணவாத் -11

நித்யாநந்த மஹோதார பராத்பர ஜகத்பதே
நாராயண நமஸ்தேஸ்து மோக்ஷஸாம்ராஜ்ய தாயிநே -12

ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தம் அகிலாத்ம மஹாஶ்ரய
சர்வ பூதாத்மா பூதாத்மந் நாராயண நமோஸ்து தே -13

பாலிதாஶேஷ லோகாய புண்யஶ்ரவண கீர்த்தந
நாராயண நமஸ்தேஸ்து ப்ரளயோதக ஶாயிநே -14

நிரஸ்த ஸர்வதோஷாய பக்த்யாதி குணதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து த்வாம் விநா ந ஹி மே கதி: -15

தர்மார்த்த காம மோக்ஷாக்ய புருஷார்த்த ப்ரதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து புநஸ்தேஸ்து நமோ நம: -16-

அத ப்ரார்த்தநா
நாராயண த்வமேவாஸி தஹராக்யே ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரிதா ப்ரேர்யமாணாநாம் த்வயா ப்ரேரித மாநஸ: -17-

த்வதாஜ்ஞாம் ஶிரஸா க்ருத்வா பஜாமி ஜநபாவநம்
நாநோபாஸந மார்காணாம் பவக்ருத் பாவபோதக: -18

பாவார்த்தக்ருத் பவாதீதோ பவ ஸௌக்யப்ரதோ மம
த்வந்மாயாமோஹிதம் விஶ்வம் த்வயைவ பரிகல்பிதம் -19-

த்வதிஷ்டாந மாத்ரேண ஸா வை ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவ தாம் புரஸ்க்ருத்ய மம காமாந் ஸமர்த்தய -20-

ந மே த்வதந்யஸ் த்ராதாஸ்தி த்வதந்யந் ந ஹி தைவதம்
த்வதந்யம் ந ஹி ஜாநாமி பாலகம் புண்யவர்த்தநம் -21

யாவத் ஸாம்ஸாரிகோ பாவோ மநஸ்தோ பாவநாத்மக:
தாவத் ஸித்திர் பவேஸ் ஸாத்யா ஸர்வதா ஸர்வதா விபோ -22

பாபிநாமஹ மேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே -23

த்வயாஹம் நைவ ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்வாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: -24-

பாபஸங்க பரிஶ்ராந்த: பாபாத்மா பாபரூபத்ருக்
த்வதந்ய: கோத்ர பாபேப்யோ: த்ராதாஸ்தி ஜகதீதலே -25

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ ஸேவ்யஶ்ச குருர் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ -26

ப்ரார்த்தநா தஶகம் சைவ மூலாஷ்டக மத: பரம்
ய: படேத் ஶ்ருணுயாந்நித்யம் தஸ்ய லக்ஷ்மீ: ஸ்திரா பவேத் -27-

நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம்
லக்ஷ்மீ ஹ்ருதயகம் ஸ்தோத்ரம் யதி சைதத் விநாக்ருதம் -28

தத் ஸர்வம் நிஷ்பலம் ப்ரோக்தம் லக்ஷ்மீ: க்ருத்யதி ஸர்வதா
ஏதத் ஸங்கலிதம் ஸ்தோத்ரம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் -29-

ஜபேத் ஸங்கலிதம் க்ருத்வா ஸர்வாபீஷ்ட மவாப்நுயாத்
நாராயணஸ்ய ஹ்ருதய மாதௌ ஜப்த்வா தத: பரம் -30-

லக்ஷ்மீ ஹ்ருதயகம் ஸ்தோத்ரம் ஜபேந் நாராயணம் புந:
புநர் நாராயணம் ஜப்த்வா புநர் லக்ஷ்மீநுதிம் ஜபேத் -31-

தத்வத் ஹோமாதிகம் குர்யாத் ஏதத் ஸங்கலிதம் ஶுபம்
ஏவம் மத்யே த்விவாரேண ஜபேத் ஸங்கலிதம் ஶுபம் -32-

லக்ஷ்மீ ஹ்ருதயகே ஸ்தோத்ரே ஸர்வமந்யத் ப்ரகாஶிதம்
ஸர்வாந் காமா நவாப்நோதி ஆதிவ்யாதிபயம் ஹரேத் -33-

கோப்யமேதத் ஸதா குர்யாத் ந ஸர்வத்ர ப்ரகாஶயேத்
இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரம் ப்ரோக்தம் ப்ரஹ்மாதிபி: புரா -34-

லக்ஷ்மீ ஹ்ருதய ந ப்ரோக்தேந விதிநா ஸாதயேத் ஸுதீ:
தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந ஸாதயேத் கோபயேத் ஸுதீ: -35

யத்ரைதத் புஸ்தகம் திஷ்டேத் லக்ஷ்மீ நாராயணாத்மகம்
பூதபைஶாச வேதாள பயம் நைவ து ஸர்வதா -36

ப்ருகுவாரே ததா ராத்ரௌ பூஜயேத் புஸ்தக த்வயம்
ஸர்வதா ஸர்வதா ஸ்துத்யம் கோபயேத் ஸாதயேத் ஸுதீ: -37

கோபநாத் ஸாநால் லோகே ந்யோ வதி தத்வத:

இதி அதர்வ ரஹஸ்யே உத்தரபாகே நாராயணஹ்ருயம்

ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம்

ஸ்ரீ ஹரி:ஓம்
அஸ்ய ஸ்ரீ ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுபாதி நாநாச்சந்தாம்ஸி ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித நாராயணோ தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஐம் கீலகம்
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

ஓம்
“ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ தேவதாயை நம:” ஹ்ருதயே
“ஸ்ரீம் பீஜாயை நம:” குஹ்யே
“ஹ்ரீம் ஶக்த்யை நம:” பாதயோ:
“ஐம் பலாய நம:” மூர்த்தாதி பாதபர்யந்தம் விந்யஸேத்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கரதல கரபார்ஶ்வயோ:
ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
ஐம் மத்யமாப்யாம் நம:
ஸ்ரீம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிகாப்யாம் நம:
ஐம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஸ்ரீம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா
ஐம் ஶிகாயை வௌஷட்
ஸ்ரீம் கவசாய ஹும்
ஹ்ரீம் நேத்ராப்யாம் வௌஷட்
ஐம் அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:

அத த்யாநம்
ஹஸ்தத்வயேந கமலே தாரயந்தீம் ஸ்வலீலயா
ஹார நூபுர ஸம்யுக்தாம் மஹாலக்ஷ்மீம் விசிந்தயேத் -1-

கௌஶேய பீதவஸநா மரவிந்த நேத்ராம்
பத்மத்வயாபவ வரோத்யத பத்மஹஸ்தாம்
உத்யச்சதார்க ஸத்ருஶாம் பரமாங்க ஸம்ஸ்தாம்
த்யாயேத் விதீஶ நத பாதயுகாம் ஜநித்ரீம்–2-

ஸ்ரீலக்ஷ்மீ கமலதாரிண்யை ஸிம்ஹ வாஹிந்யை ஸ்வாஹா
பீத வஸ்த்ராம் ஸுவர்ணாங்கீம் பத்ம ஹஸ்த த்வயாந்விதாம்
லக்ஷ்மீம் த்யாத்வேதி மந்த்ரேண ஸ பவேத் ப்ருதிவீபதீ: -3-

மாதுலுங்க கதா கேடே பாணௌ பாத்ரஞ்ச பிப்ரதீ
வாகலிங்கஞ்ச மாநஞ்ச பிப்ரதீ ந்ருபமூர்த்தநி -4-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
வந்தே லக்ஷ்மீம் பரஶிவமயீம் ஸுத்த ஜாம்பூநதாபாம்
தேஜோ ரூபாம் கநக வஸநாம் ஸர்வ பூஷோஜ்வலாங்கீம்
பீஜாபூரம் கநககலஶம் ஹேமபத்மம் ததாநாம்
ஆத்யாம் ஶக்திம் ஸகலஜநநீம் ஸர்வமாங்கல்ய யுக்தாம் -1-

ஸ்ரீமத் ஸௌபாக்யஜநநீம் ஸ்தௌமி லக்ஷ்மீம் ஸநாதநீம்
ஸர்வகாம பலாவாப்தி ஸாதநைக ஸுகாவஹாம் -2-

ஸ்மராமி நித்யம் தேவேஶி த்வயா ப்ரேரித மாநஸ:
த்வதாஜ்ஞாம் ஶிரஸா த்ருத்வா பஜாமி பரமேஶ்வரீம் -3-

ஸமஸ்த ஸம்பத்ஸுகதாம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஶ்ரியம்
பஜாம்யஹம் ஜ்ஞாநகரீம் மஹாஶ்ரியம் -4-

விஜ்ஞாந ஸம்பத் ஸுகதாம் மஹாஶ்ரியம்
விசித்ர வாக்பூதி கரீம் மநோரமாம்
அநந்த ஸௌபாக்ய ஸுக ப்ரதாயிநீம்
நமாம்யஹம் பூதிகரீம் ஹரி ப்ரியாம் -5-

ஸமஸ்தபூதாந்தர ஸம்ஸ்திதா த்வம்
ஸமஸ்த பக்தேஶ்வரி விஶ்வ ரூபே
தந்நாஸ்தி யத் பவேத் வ்யதிரிக்த வஸ்து
த்வத் பாத பத்மம் ப்ரணமாம் யஹம் ஸ்ரீ: -6-

தாரித்ர்ய துக்கௌக தமோநிஹந்த்ரி
த்வத்பாதபத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
தீநார்தி விச்சேதந ஹேதுபூதை:
க்ருபா கடாக்ஷை ரபிஷிஞ்ச மாம் ஸ்ரீ: -7-

விஷ்ணு ஸ்துதி பராம் லக்ஷ்மீம் ஸ்வர்ண வர்ண ஸ்துதி ப்ரியாம்
வரதாபயதாம் தேவீம் வந்தே த்வாம் கமலேக்ஷணே -8-

அம்ப ப்ரஸீத கருணா பரிபூர்ணத்ருஷ்ட்யா
மாம் த்வத்க்ருபா த்ரவிணகேஹமிமம் குருஷ்வ
ஆலோக்ய ப்ரணதஹ்ருத்கத ஶோக ஹந்த்ரீ
த்வத் பாத பத்ம யுகளம் ப்ரணமாம் யஹம் ஸ்ரீ: -9-

ஶாந்த்யை நமோஸ்து ஶரணாகத ரக்ஷணாயை
காந்த்யை நமோஸ்து கமநீய குணாஶ்ரயாயை
க்ஷாந்த்யை நமோஸ்து துரிதக்ஷய காரணாய
தாத்ர்யை நமோஸ்து தநதாந்ய ஸம்ருத்திதாயை -10-

ஶக்த்யை நமோஸ்து ஶஶிஶேகர ஸம்ஸ்த்திதாயை
ரத்யை நமோஸ்து ரஜநீகர ஸோதராயை
பக்த்யை நமோஸ்து பவஸாகர தாரகாயை
மத்யை நமோஸ்து மதுஸூதந வல்லபாயை–11-

லக்ஷ்ம்யை நமோஸ்து ஶுபலக்ஷண லக்ஷிதாயை
ஸித்த்யை நமோஸ்து ஸுரஸித்த ஸுபூஜிதாய
த்ருத்யை நமோஸ்து மம துர்கதி பஞ்ஜநாயை
கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயகாயை–12-

தேவ்யை நமோஸ்து திவி தேவ கணார்ச்சிதாயை
பூத்யை நமோஸ்து புவநார்த்தி விநாஶநாயை
ஶாந்த்யை நமோஸ்து தரணீதர வல்லபாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வத்ஸலாயை -13

ஸுதீவ்ர தாரித்ர்ய தமோபஹந்த்ர்யை
நமோஸ்து தே ஸர்வ பயாபஹந்த்ர்யை
ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தல ஸம்ஸ்த்திதாயை
நமோ நம: ஸர்வ விபூதிதாயை –14-

ஜயது ஜயது லக்ஷ்மீர் லக்ஷணாலங்க்ருதாங்கீ
ஜயது ஜயது பத்மா பத்ம ஸத்மாபிவந்த்யா
ஜயது ஜயது வித்யா விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்த்தா
ஜயது ஜயது ஸம்யக் ஸர்வ ஸம்பத்கர ஸ்ரீ: 15

ஜயது ஜயது தேவீ தேவஸங்காபிபூஜ்யா
ஜயது ஜயது பத்ரா பார்கவீ பாக்யரூபா
ஜயது ஜயது நித்யா நிர்மலஜ்ஞாந வேத்யா
ஜயது ஜயது ஸத்யா ஸர்வபூதாந்தரஸ்த்தா–16-

ஜயது ஜயது ரம்யா ரத்நகர்ப்பாந்தரஸ்தா
ஜயது ஜயது ஶுத்தா ஶுத்தஜாம்பூநதாபா
ஜயது ஜயது காந்தா காந்திமத் பாஸிதாங்கீ
ஜயது ஜயது ஶாந்தா ஶீக்ரமாகச்ச ஸௌம்யே –17-

யஸ்யா: கலாயா: கமலோத்பவாத்யா
ருத்ராஶ்ச ஶக்ரப்ரமுகாஶ்ச தேவா:
ஜீவந்தி ஸர்வேபி ஸஶக்தயஸ்தே
ப்ரபுத்வமாப்தா: பரமாயுஷஸ் தே –18-

முகபீஜம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம் ஆம் யம் தும்(dhum) லம் வம்
லிலேக நிடிலே விதிர் மம லிபிம் விஸ்ருஜ்யாந்தரம்
த்வயா விலிகிதவ்ய மேததிதி தத்பலப்ராப்தயே
ததந்திக பலஸ்புடம் கமலாவாஸிநி ஸ்ரீரிமாம்
ஸமர்ப்பய ஸமுத்ரிகாம் ஸகலபாக்ய ஸம்ஸூசிகாம் -19-

பாதபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம் கம்(kam) லம் ரம்
கலயா தே யதா தேவி ஜீவந்தி ஸசராசரா:
ததா ஸம்பத்கரீ லக்ஷ்மி ஸர்வதா ஸம்ப்ரஸீத மே -20-

யதா விஷ்ணுர் த்ருவம் நித்யம் ஸ்வகலாம் ஸந்யவேஶயத்
ததைவ ஸ்வகலாம் லக்ஷ்மி மயி ஸம்யக் ஸமர்ப்பய -21

ஸத்வ ஸௌக்யப்ரதே தேவி பக்தாநா மபயப்ரதே
அசலாம் குரு யத்நேந கலாம் மயி நிவேஶிதாம் –22

முதாஸ்தாம் மத்பாலே பரமபத லக்ஷ்மீ: ஸ்புடகலா
ஸதா வைகுண்ட ஸ்ரீர் நிவஸது கலா மே நயநயோ:
வஸேத் ஸத்யே லோகே மம வசஸி லக்ஷ்மீர் வரகலா
ஶ்ரிய: ஶ்வேதத்வீபே நிவஸது கலா மே ஸ்வகரயோ: -23

நேத்ரபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரேம் (ghrEm) க்ரைம்(ghraim) க்ரோம்(ghrom) க்ரௌம்(ghroum) க்ரம்(ghram) க்ர: (ghra:)
தாவந்நித்யம் மமாங்கேஷு க்ஷீராப்தௌ ஸ்ரீகலா வஸேத்
ஸூர்யா சந்த்ரமஸௌ யாவத் தாவல்லக்ஷ்மீபதி ஶ்ரியௌ –24

ஸர்வமங்கள ஸம்பூர்ணா ஸர்வைஶ்வர்ய ஸமந்விதா
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ: த்வத்கலா மயி திஷ்ட்டது-25-

அஜ்ஞாந திமிரம் ஹந்தும் ஶுத்தஜ்ஞாந ப்ரகாஶிகா
ஸர்வைஶ்வர்யப்ரதா மேஸ்து த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா –26-

அலக்ஷ்மீம் ஹரது க்ஷிப்ரம் தம: ஸூர்யப்ரபா யதா
விதநோது மம ஶ்ரேய: த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா –27-

ஐஶ்வர்ய மங்களோத்பத்திஸ் த்வத்கலாயாம் நிதீயதே
மயி தஸ்மாத் க்ருதார்த்தோஸ்மி பாரமஸ்மி ஸ்திதேஸ் தவ -28-

பவதாவேஶ பாக்யார்ஹோ பாக்யவாநஸ்மி பார்கவி
த்வத் ப்ரஸாதாத் பவித்ரோஹம் லோக மாதர் நமோஸ்து தே –29-

புநாஸி மாம் த்வத்கலயைவ யஸ்மாத்
அதஸ் ஸமாகசச் மமாக்ரதஸ் த்வம்
பரம் பதம் ஸ்ரீர் பவ ஸுப்ரஸந்நா
மய்யச்யுதேந ப்ரவிசாதி லக்ஷ்மீ:–30-

ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மீ ஸமாகச்ச மமாக்ரத:
நாராயணேந ஸஹ மாம் க்ருபாத்ருஷ்ட்யா வலோகய: -31-

ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸந்நிதிம்
வாஸுதேவேந ஸஹிதா ப்ரஸீத வரதா பவ-32-

ஶ்வேதத்வீபஸ்திதே லக்ஷ்மி ஶீக்ரமாகச்ச ஸுவ்ரதே
விஷ்ணுநா ஸஹிதா தேவி ஜகந்மாத: ப்ரஸீத மே -33

க்ஷீராம்புதிஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸமாதவே
த்வத் க்ருபா த்ருஷ்டி ஸுதயா ஸததம் மாம் விலோகய -34-

ரத்நகர்ப்பஸ்திதே லக்ஷ்மி பரிபூர்ண ஹிரண்மயி
ஸமாகச்ச ஸமாகச்ச ஸ்தித்வாஶு புரதோ மம -35-

ஸ்திரா பவ மஹாலக்ஷ்மி நிஶ்சலா பவ நிர்மலே
ப்ரஸந்ந கமலே தேவி ப்ரஸந்ந ஹ்ருதயா பவ -36-

ஸ்ரீதரே ஸ்ரீமஹாலக்ஷ்மி த்வதந்தஸ்தம் மஹாநிதிம்
ஶீக்ரமுத்த்ருத்ய புரத: ப்ரதர்ஶய ஸமர்ப்பய-37-

வஸுந்தரே ஸ்ரீவஸுதே வஸுதோக்த்ரி க்ருபாமயி
த்வத்குக்ஷிகத ஸர்வஸ்வம் ஶீக்ரம் மே ஸம்ப்ரதர்ஶய-38-

விஷ்ணு ப்ரியே ரத்ந கர்ப்பே ஸமஸ்த பலதே ஶிவே
த்வத் கர்ப்பகத ஹேமாதீந் ஸம்ப்ரதர்ஶய தர்ஶய -39-

ரஸாதலகதே லக்ஷ்மி ஶீக்ர மாகச்ச மே புர:
ந ஜாநே பரமம் ரூபம் மாதர் மே ஸம்ப்ரதர்ஶய -40-

ஆவிர்ப்பவ மநோவேகாத் ஶீக்ரமாகச்ச மே புர:
மா வத்ஸ பைரிஹேத்யுக்த்வா காமங்கௌரிவ ரக்ஷ மாம் –41-

தேவி ஶீக்ரம் மமாகச்ச தரணீ கர்ப்ப ஸம்ஸ்த்திதே
மாதஸ்த்வத் ப்ருத்ய ப்ருத்யோஹம் ம்ருகயே த்வாம் குதூஹலாத்-42

உத்திஷ்ட ஜாக்ருஹி மயி ஸமுத்திஷ்ட்ட ஸுஜாக்ருஹி
அக்ஷய்யாந் ஹேமகலஸாந் ஸுவர்ணேந ஸுபூரிதாந் -43-

நிக்ஷேபாந் மே ஸமாக்ருஷ்ய ஸமுத்த்ருத்ய மமாக்ரத:
ஸமுந்நதாநநா பூத்வா ஸம்யக் தேஹி தராதலாத் -44-

மத் ஸந்நிதிம் ஸமாகச்ச மதாஹித க்ருபா ரஸா
ப்ரஸீத ஶ்ரேயஸாம் தோக்த்ரீ லக்ஷ்மீர் மே நயநாக்ரத: -45-

அத்ரோபவிஶ்ய லக்ஷ்மி த்வம் ஸ்த்திரா பவ ஹிரண்மயீ
ஸுஸ்த்திரா பவ ஸம்ப்ரீத்யா ப்ரஸந்நா வரதா பவ -46-

ஆநீதாம்ஸ்து த்வயா தேவி நிதீந் வை ஸம்ப்ரதர்ஶய
அத்ய க்ஷணேந ஸஹஸா தத்வா ஸம்ரக்ஷ மாம் ஸதா -47-

மயி திஷ்ட்ட ததாநித்யம் யதேந்த்ராதிஷு திஷ்ட்டஸி
அபயம் குரு மே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே-48-

ஸமாகச்ச மஹாலக்ஷ்மி ஶுத்த ஜாம்பூநத ஸ்த்திதே
ப்ரஸீத புரத: ஸ்த்தித்வா ப்ரணதம் மாம் விலோகய –49-

லக்ஷ்மீர் புவங்கதா பாஸி யத்ர யத்ர ஹிரண்மயீ
தத்ர தத்ர ஸ்த்திதா த்வம் மே தவ ரூபம் ப்ரதர்ஶய – 50-

க்ரீடந்தீ பஹுதா பூமௌ பரிபூர்ண க்ருபாமயி
மம மூர்த்தநி தே ஹஸ்தம் அவிலம்பித மர்ப்பய -51-

பலபாக்யோதயே லக்ஷ்மி ஸமஸ்த புர வாஸிநி
ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி பரிபூர்ண மநோரதே -52-

அயோத்யாதிஷு ஸர்வேஷு நகரேஷு ஸமாஸ்த்திதே
வைபவைர் விவிதைர் யுக்தை: ஸமாகச்ச முதாந்விதே -53-

ஸமாகச்ச ஸமாகச்ச மமாக்ரே பவ ஸுஸ்த்திரா
கருணாரஸ நிஷ்யந்த நேத்ர த்வய விலாஸிநி -54-

ஸந்நிதத்ஸ்வ மஹாலக்ஷ்மி த்வத்பாணிம் மம மஸ்தகே
கருணாஸுதயா மாம் த்வம் அபிஷிச்ய ஸ்த்திரம் குரு–55-

ஸர்வ ராஜக்ருஹே லக்ஷ்மி ஸமாகச்ச பலாந்விதே
ஸ்த்தித்வாஶு புரதோ மேத்ய ப்ரஸாதேநாபயம் குரு –56-

ஸாதரம் மஸ்தகே ஹஸ்தம் மம த்வம் க்ருபயார்ப்பய
ஸர்வராஜஸ்த்திதே லக்ஷ்மி த்வத்கலா மயி திஷ்டது -57-

ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மி விஷ்ணு வாமாங்க ஸம்ஸ்த்திதே
ப்ரத்யக்ஷம் குரு மே ரூபம் ரக்ஷ மாம் ஶரணாகதம் -58-

ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி ஸுப்ரஸீத மஹாஶிவே
அசலா பவ ஸுப்ரீதா ஸுஸ்திரா பவ மத்க்ருஹே -59-

யாவத் திஷ்ட்டந்தி வேதாஶ்ச யாவச்சந்த்ர திவாகரௌ
யாவத் விஷ்ணுஶ்ச யாவத் த்வம் தாவத் குரு க்ருபாம் மயி -60-

சாந்த்ரீ கலா யதா ஶுக்லே வர்த்ததே ஸா திநே திநே
ததா தயா தே மய்யேவ வர்த்ததா மபிவர்த்ததாம் -61-

யதா வைகுண்ட நகரே யதா வை க்ஷீர ஸாகரே
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ -62-

யோகிநாம் ஹ்ருதயே நித்யம் யதா திஷ்டஸி விஷ்ணுநா
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ -63-

நாராயணஸ்ய ஹ்ருதயே பவதீ யதாஸ்தே
நாராயணோபி தவ ஹ்ருத்கமலே யதாஸ்தே
நாராயணஸ்த்வமபி நித்ய விபூ ததைவ
தௌ திஷ்ட்ட்தாம் ஹ்ருதி மமாபி தயாந்விதௌ ஸ்ரீ: -64-

விஜ்ஞாந வ்ருத்திம் ஹ்ருதயே குரு ஸ்ரீ:
ஸௌபாக்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
தயா ஸுவ்ருஷ்டிம் குருதாம் மயி ஸ்ரீ:
ஸுவர்ண வ்ருஷ்டிம் குரு மே கரே ஸ்ரீ: –65

ந மாம் த்யஜேதா: ஶ்ரித கல்பவல்லி
ஸத் பக்தி சிந்தாமணி காமதேநோ
ந மாம் த்யஜேதா பவ ஸுப்ரஸந்நே
க்ருஹே களத்ரேஷு ச புத்ரவர்கே –66-

குக்ஷிபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம்
ஆத்யாதி மாயே த்வமஜாண்ட பீஜம்
த்வமேவ ஸாகார நிராக்ருதீ த்வம்
த்வயா த்ருதாஶ்சாப்ஜ பவாண்ட ஸங்கா:
சித்ரம் சரித்ரம் தவ தேவி விஷ்ணோ: –67-

ப்ரஹ்மருத்ராதயோ தேவா வேதாஶ்சாபி ந ஶக்நுயு:
மஹிமாநம் தவ ஸ்தோதும் மந்தோஹம் ஶக்நுயாம் கதம் -68-

அம்ப த்வத்வத்ஸ வாக்யாநி ஸூக்தாஸூக்தாநி யாநிச
தாநி ஸ்வீகுரு ஸர்வஜ்ஞே தயாலுத்வேந ஸாதரம் -69-

பவந்தம் ஶரணம் கத்வா க்ருதார்த்தா: ஸ்யு: புராதநா:
இதி ஸஞ்சிந்த்ய மநஸா த்வாமஹம் ஶரணம் வ்ரஜே –70-

அநந்தா நித்ய ஸுகிந: த்வத பக்தாஸ் த்வத்பராயணா:
இதி வேதப்ரமாணாத்தி தேவி த்வாம் ஶரணம் வ்ரஜே -71-

தவ ப்ரதிஜ்ஞா மத்பக்தா ந நஶ்யந்தீத்யபி க்வசித்
இதி ஸஞ்சிந்த்ய ஸஞ்சிந்த்ய ப்ராணாந் ஸந்தாரயாம்யஹம் -72-

த்வததீநஸ்த்வஹம் மாத: த்வத்க்ருபயா மயி வித்யதே
யாவத் ஸம்பூர்ண காம: ஸ்யாம் தாவத் தேஹி தயாநிதே -73-

க்ஷணமாத்ரம் ந ஶக்நோமி ஜீவிதும் த்வத்க்ருபாம் விநா
நஹி ஜீவந்தி ஜலஜா ஜலம் த்யக்த்வா ஜலாஶ்ரயா: -74-

யதா ஹி புத்ரவாத்ஸல்யாத் ஜநநீ ப்ரஸ்நுத ஸ்தநீ
வத்ஸம் த்வரிதமாகத்ய ஸம்ப்ரீணயதி வத்ஸலா -75-

யதி ஸ்யாத் தவ புத்ரோஹம் மாதா த்வம் யதி மாமகீ
தயாபயோதர ஸ்தந்ய ஸுதாபி ரபிஷிஞ்ச மாம் -76-

ம்ருக்யோ ந குணலேஶோபி மயி தோஷைக மந்திரே
பாம்ஸூநாம் வ்ருஷ்டிபிந்தூநாம் தோஷாணாஞ்ச ந மே மதி:-77-

பாபிநா மஹமேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே -78-

விதிநாஹம் ந ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்யாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: -79-

க்ருபா மதக்ரஜா கிம் தே அஹம் கிம் வா ததக்ரஜ:
விசார்ய தேஹி மே வித்தம் தவ தேவி தயாநிதே -80-

மாதா பிதா த்வம் குரு ஸத்கதி: ஸ்ரீ: த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம்–81-

ஹ்ருதயபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரூம் (ghEm) க்ரைம்(ghraim) க்ரௌம்(ghroum) க்ர: (ghra:)
ஹும்பட் குரு குரு ஸ்வாஹா
ஆத்யாதி லக்ஷ்மீர் பவ ஸுப்ரஸந்நா
விஶுத்த விஜ்ஞாந ஸுகைக தோக்த்ரி
அஜ்ஞாந ஹந்த்ரீ த்ரிகுணாதிரிக்தா
ப்ரஜ்ஞாந நேத்ரீ பவ ஸுப்ரஸந்நா -82-

அஶேஷ வாக்ஜாட்ய மலாபஹந்த்ரீ
நவம் நவம் ஸுஷ்டுஸுவாக்ய தாயிநீ
மமைவ ஜிஹ்வாக்ர ஸுரங்க வர்த்திநீ
பவ ப்ரஸந்நா வதநே ச மே ஸ்ரீ: -83-

ஸமஸ்த ஸம்பத்ஸு விராஜமாநா
ஸமஸ்த தேஜஸ்ஸு விபாஸமாநா
விஷ்ணு ப்ரியே த்வம் பவ தீப்யமாநா
வாக்தேவதா மே வதநே ப்ரஸந்நா -84-

ஸர்வ ப்ரதர்ஶே ஸகலார்த்ததே த்வம்
ப்ரபாஸுலாவண்ய தயாப்ரதோக்த்ரி
ஸுவர்ணதே த்வம் ஸுமுகீ பவ ஸ்ரீ:
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா -85-

ஸர்வார்த்ததா ஸர்வ ஜகத் ப்ரஸூதி:
ஸர்வேஶ்வரீ ஸர்வ பயாபஹந்த்ரீ
ஸர்வோந்நதா த்வம் ஸுமுகீ ச ந: ஸ்ரீ:
ஹிரண்மயீ மே பவ ஸுப்ரஸந்நா -86-

ஸமஸ்த விக்நௌக விநாஶ காரிணீ
ஸமஸ்த பக்தோத்தரணே விசக்ஷணா
அநந்த ஸம்மோத ஸுக ப்ரதாயிநீ
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா -87-

தேவி ப்ரஸீத தயநீயதமாய மஹ்யம்
தேவாதிநாத பவ தேவகணாதி வந்த்யே
மாதஸ் ததைவ பவ ஸந்நிஹிதா த்ருஶோர் மே
பத்யா ஸமம் மம முகே பவ ஸுப்ரஸந்நா -88-

மா வத்ஸ பை ரபயதாந கரோர்ப்பிதஸ் தே
மௌளௌ மமேதி மயி தீநஜநாநுகம்பே
மாதஸ் ஸமர்ப்பய முதா கருணாகடாக்ஷம்
மாங்கள்ய பீஜமிஹ ந: ஸ்ருஜ ஜந்ம மாத: -89

கண்ட்ட (kantta) பீஜம்
ஓம் ஶ்ராம் ஸ்ரீம் ஶ்ரூம் ஶ்ரைம் ஶ்ரௌம் ஶ்ரம் ஶ்ரா:
கடாக்ஷ இஹ காமதுக் தவ மநஸ்து சிந்தாமணி:
கரஸ் ஸுரதரு: ஸதா நவநிதிஸ் த்வமேவேந்திரே
பவேத் தவ தயாரஸோ ரஸரஸாயநம் சாந்வஹம்
முகம் தவ கலாநிதிர் விவித வாஞ்சிதார்த்த ப்ரதம் -90-

யதா ரஸஸ்பர்ஶ நதோ(அ)யஸோபி
ஸுவர்ணதா ஸ்யாத் கமலே ததா தே
கடாக்ஷ ஸம்ஸ்பர்ஶ நதோ ஜநாநாம்
அமங்களாநாமபி மங்களத்வம் -91-

தேஹீதி நாஸ்தீதி வச: ப்ரவேஶாத்
பீதோ ரமே த்வாம் ஶரணம் ப்ரபத்யே
அதஸ் ஸதாஸ்மிந் நபயப்ரதா த்வம்
-92-ஸஹைவ பத்யா மம ஸந்நிதேஹி

கல்பத்ருமேண மணிநா ஸஹிதா ஸுரம்யா
ஸ்ரீஸ்தே கலாமயி ரஸேந ரஸாயநேந
ஆஸ்தா மதோ மம ச த்ருக் கரபாணிபாத
ஸ்ப்ருஷ்ட்யா ஸுவர்ணவபுஷ: ஸ்த்திரஜங்கமா: ஸ்யு: -93-

ஆத்யாதி விஷ்ணோ: ஸ்திர தர்ம பத்நி
த்வமம்ப பத்யா மம ஸந்நிதேஹி
ஆத்யாதி லக்ஷ்மி த்வதநுக்ரஹேண
பதே பதே மே நிதி தர்ஶநம் ஸ்யாத் -94-

ஆத்யாதி லக்ஷ்மீ ஹ்ருதயம் படேத் ய:
ஸ ராஜ்யலக்ஷ்மீ மசலாம் தநோதி
மஹாதரித்ரோபி பவேத்தநாட்ய:
ததந்வயே ஸ்ரீ: ஸ்திரதாம் ப்ரயாதி -95-

யஸ்ய ஸ்மரணமாத்ரேண துஷ்டா ஸ்யாத் விஷ்ணுவல்லபா
தஸ்யாபீஷ்டம் ததாத்யாஶு தம் பாலயதி புத்ரவத் –96-

இதம் ரஹஸ்யம் ஹ்ருப்யம் ஸர்வகாம பலப்ரதம்
ஜப: பஞ்ச ஸஹஸ்ரம் து புரஶ்சரணமுச்யதே –97-

த்ரிகால மேககாலம் வா நரோ பக்திஸமந்வித:
ய: படேச் ச்ருணுயாத்வாபி ஸ யாதி பரமாம் ஶ்ரியம் -98-

மஹா லக்ஷ்மீர் ஸமுத்திஶ்ய நிஶி பார்க்கவ வாஸரே
இதம் ஸ்ரீஹ்ருதயம் ஜப்த்வா பஞ்சவாரம் தநீ பவேத் –99-

அநேந ஹ்ருதயேநாந்நம் கர்ப்பிண்யா அபிமந்த்ரிதம்
ததாதி தத்குலே புத்ரோ ஜாயதே ஸ்ரீபதி: ஸ்வயம் -100-

நரேணாப்யதவா நார்யா லக்ஷ்மீஹ்ருதய மந்த்ரிதே
ஜலே பீதே ச தத்வம்ஶே மந்தபாக்யோ ந ஜாயதே -101-

ய ஆஶ்வயுங் மாஸி ச ஶுக்லபக்ஷே
ரமோத்ஸவே ஸந்நிஹிதே ச பக்த்யா
படேத் ததைகோத்தர வாரவ்ருத்த்யா
லபேத ஸௌவர்ணமயீம் ஸுவ்ருஷ்டிம் -102-

ய ஏகபக்த்யாந்வஹ மேகவர்ஷம்
விஶுத்ததீ: ஸப்ததிவாரஜாபீ
ஸ மந்தபாக்யோபி ரமாகடாக்ஷாத்
பவேத் ஸஹஸ்ராக்ஷ ஶதாதிகஸ்ரீ: -103-

ஸ்ரீஶாங்க்ரிபக்திம் ஹரிதாஸதாஸ்யம்
ப்ரஸந்ந மந்த்ரார்த்த த்ருடைகநிஷ்டாம்
குரோம் ஸ்ம்ருதிம் நிர்மலபோதபுத்திம்
ப்ரதேஹி மாத: பரமம் பதம் ஸ்ரீ: –104-

ப்ருத்வீபதித்வம் புருஷோத்தமத்வம்
விபூதிவாஸம் விவிதார்த்தஸித்திம்
ஸம்பூர்ணகீர்த்திம் பஹுவர்ஷபோகம்
ப்ரதேஹி மே லக்ஷ்மி புந: புநஸ்த்வம் -105-

வாதார்த்தஸித்திம் பஹுலோகவஶ்யம்
வய: ஸ்திரத்வம் லலநாஸு போகம்
பாத்ராதிலப்திம் ஸகலார்த்தஸித்திம்
ப்ரதேஹி மே பார்கவி ஜந்மஜந்மநி -106-

ஸுவர்ணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
ஸுதாந்யவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதிவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:-107-

ஶிரோபீஜம்
ஓம் யம் ஹம் கம்(kam) லம் வம் ஸ்ரீம்
த்யாயேல் லக்ஷ்மீம் ப்ரஹஸிதமுகீம் கோடிபாலார்க்க பாஸாம்
வித்யுத்வர்ணாம்பரவரதராம் பூஷணாட்யாம் ஸுஶோபாம்
பீஜாபூரம் ஸரஸிஜயுகம் பிப்ரதீம் ஸ்வர்ணபாத்ரம்
பர்த்ரா யுக்தாம் முஹுரபயதா மஹ்யமப்யச்யுதஸ்ரீ: -108-

இத்யதர்வரஹஸ்யே, உத்தரபாகே,
ஆத்யாதி ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸமாப்தம்,

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –