ஸ்ரீ ஸ்வாமி அருளிய- 83 விரோதி பரிஹாரங்களும்–விரோதிகள் பரிஹரிக்கப் பட்டால் உண்டாகக் கூடிய பலன்களும்-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சாதித்த வியாக்யானமும் 

ஸ்வாமி அந்தரங்க சிஷ்யர்கள் பலர்
முதலி ஆண்டான் -கூரத் ஆழ்வான்-தண்டும் பவித்ரமும் போல்வார் –
1-கந்தாடை ஆண்டான்-2- -எம்பார்–3-வங்கி புரத்து நம்பி -4- -வடுக நம்பி –5-அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்-ஐவரும் பஞ்ச ரத்ன சிஷ்யர் –
வங்கி புரத்து நம்பி -தளிகை பண்ணும் கைங்கர்யம் செய்து அருளியவர் –
இவர் –மணல்கால் நம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த வங்கி புரத்து ஆச்சி திருக் குமாரர் –
இவர் தனியன் –
பாரத்வாஜ குலோத் பூதம் லஷ்மணார்யா பதாஸ்ரயம்
வந்தே வங்கி புராதீசம்   சம்பூர்ணார்யம் க்ருபா நிதிம் –

சிஷ்யர்: சிறியாத்தான்-

——————

உபய விபூதி நிர்வாஹகரான ஸ்ரீ உடையவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பிக்கு ஸாதித்தவை

வ்யாஸோ வா பகவான் பராசர முனி ஸ்ரீ சவ்நகோ வாண்த வா
ஸாஷான் நாரத ஸம்யமீ ஸடரி புர் வாகீஸ்வரோ வா ஸ்வயம்
லோகேஸே புருஷோத்தம பணிபதி ஸேஷோ ஜகச் ஸேஷிண
த்வித்யாக்யோ ஜகதாம் ஹிதாய ஸம்பூத் ராமாநுஜார்யோ முநி-

ஸ்ரீ சைல அத்தங்கி ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம திருகுமாரார் திரு வேங்கட தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ப்ரஸாதித்து அருளிய அவதாரிகை

ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் லீலா விபூதி சேதன ஸம்ரக்ஷண அர்த்தமாக -இத்தனை காலம் இவர்களை லீலைக்கு விஷயமாக்கினோமே என்று அநுதபித்து-இனி போகத்துக்கு விஷயமாக்கத் திரு உள்ளம் பற்றி அஜாய மாந-என்கிறபடியே பிறப்பிலியான தான் லீலா விபூதியில் பஹுதா விஜாயதே -என்கிறபடியே பலபிறப்பாய் திருவவதரித்து –ஸாது பரித்ராண -துஷ்ட சிஷண -தர்ம ஸம்ஸ்தாப நாதிகளாலே திருத்தப் பார்க்கிலும் -நெடு நாள் லீலைக்கு கர்மீபவித்து -ப்ரக்ருதியிலே அகப்பட்டு -கர்மா வாஸனையாலே -இத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாய் -ஹேயத்வம் தோற்றாமே -எடுக்க வந்தவனுடன் எதிர் அம்பு கோத்து -த்வம் மே அஹம் மே -என்று நீங்கிப் போனபடியைக் கண்டு –
இனி ஸஜாதீயரைக் கொண்டு திருத்துவோம் என்று ஆழ்வார் ஆச்சார்யர்களாக அவதரிப்பித்து -ஞான உபதேச த்வாரா திருத்துவோம் என்று அவதரிப்பித்த ஆழ்வார் ஆச்சார்யர்களாலும் பலிக்கக் காணாமையாலே அதற்க்கு என்று ஒரு மஹாநுபாவன் அவதரித்து ஈஸ்வரன் குறையைத் தீர்க்க வேண்டும் –கலியுகம் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லி வைத்து –இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் என்று இவ் வுலகை விட்டு தன்னுடைச் ஜோதிக்கு எழுந்து அருளினார்கள்-

இனி ஏது செய்வோம் என்று -இதுக்குத் தக்க மஹாநுபாவன் யார் என்று யோசித்து-லீலா விபூதி ஜன துர்கதியையும் -எனது மனக்குறையையும் தீர்க்கவல்ல ஸாமர்த்யம் உமக்கே உள்ளது என்று –ப்ரஹ்ம வாதிநோ வதந்தி -இத்யாதிப்படியே –ஆ முதல்வன் இவன் என்று உம்மையே சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள் -ஆகையால் நீரே அவதரித்து குறையைத் தீர்த்து வாரும் என்று தமக்கு அபிமதரான திருவநந்த ஆழ்வானை நியமிக்க
அவரும் இடையே இராமானுச முநி யாயின இந்நிலத்தே -என்கிறபடியே இராமானுச முனியாய் இவ்வுலகத்தில் திருவவதரித்து வாழும் காலத்திலே பெரியபெருமாள் தம் கோயிலேற வரவழைத்து -தீர்த்த ப்ரஸாத பஹுமாநங்களைச் செய்து -துயரரு திருவடிகளைத் திரு முடியில் வைத்து உம்மை அவதரிப்பித்த கார்யமான சேதன சமஷணத்தைப் பண்ண ஸகல ஆத்மாக்களை கரையேற்றி நம் கோயிலிலேயே நித்ய வாஸம் பண்ணக் கடவீர் என்று
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்குத் தந்தோம் இனி நீரே உடையவர் என்று பட்டம் கட்டி நியமித்து அருள -அன்று முதல் ஸகல சேதன சம்ரஷன தீஷிதராய் வாழும் காலத்திலே

கடலளவாய திசை எட்டினுள்ளும் கலியிருளே மிடை தரு காலத்து -என்று கலி தோஷத்தால் ஜனங்கள் படும் துயரத்தைக் கண்டு
செரு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவன் ராமானுஜன்-என்கிறபடியே தம்முடைய திவ்ய ஞானத்தாலே இவர்களுடைய அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படிக்குத் திரு உள்ளம் பற்றி அகில ஸ்ரீ வைஷ்ணவ ஸமூகத்தோடே பெரிய பெருமாளைத் திருவடி தொழுது அப்போது ஒரு சிந்தை செய்து அவ்வுகப்போடு திருமடத்துக்கு எழுந்து அருளி கோஷ்டியாக எழுந்து இருக்கும் காலத்தில்

அப்போது மத்யே ஸ்ரீ வங்கி புரத்து நம்பி எழுந்தருளி தாளும் தடக்கையம் கூப்பித் திருவடிகளிலே விழுந்து கிடக்க
நம்பீ இது என்ன -என்று உடையவர் கேட்க
அப்பொழுது எழுந்திருந்து இக்கொடு உலகத்தில் அநாதி கர்ம வாஸனையாலே இக்கலியிலே தேவரீர் நியமித்த ஸ்வரூபத்துக்கு விரோதிகளான பலவற்றிலும் அகப்பட்டு கட்டுண்டு உழல்கிற தாஸ வர்க்கங்களுக்கு
ஸ்வரூப விரோதிகள் இன்னது என்றும்
தத் பரிஹாரங்களும்
ஸ்வரூபம் வார்த்திக்கும் கிரமமும்
விசதமாக அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய

உகப்பின் மிகுதியாலே அஃகோக்ஷ்டியில் உள்ளார் எல்லாரும் அறிந்து கொள்ளும் படி வங்கி புரத்து நம்பியை முன்னிட்டு அருளிச் செய்த விரோதி பரிக்ரஹம் என்ற இவ் வர்த்தத்தை
முமுஷுவாய் -பஞ்ச ஸம்ஸ்காராதி ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமுடையவனான ஒருவனுக்கு அவஸ்யம் தெரிந்து கொண்டு அனுஷ்ட்டிக்க வேண்டியதாய் இருக்கும்
அவை எவை என்னில்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி
3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி

(ஞானம் இச்சை பிரயத்தனம் -மூன்று தசைகள் உண்டே
ஆகவே பிரித்து விரோதிகளை அருளிச் செய்கிறார்)
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
10-பிரபத்தி நிஷ்டனுக்கு கர்மாத் யுபாயங்கள் விரோதி-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு தேவதாந்திர பஜனம் விரோதி-(கைங்கர்யத்துக்கு பூர்வ பாவி பக்தி ருசி வேண்டுமே -இதுக்கு தேவதாந்த்ர பக்தியே விரோதி என்றவாறு)
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
17-உபாய விரோதி –
18-உபேய விரோதி –
19-உபேய த்ரி விரோதி-(மூன்று விரோதிகள்)
20-முக்ய பிரமாண விரோதி

21-யாவதாத்மபாவி விரோதி
21-நித்ய விரோதி
23-அநித்திய விரோதி
24-ஸ்வ ஸ்வரூப விரோதி
25-பர ஸ்வரூப விரோதி –
26-ஸ்வ அனுபவ விரோதி –
27-பர அனுபவ விரோதி –
28-சம்ச்லேஷ விரோதி
29-விஸ்லேஷ விரோதி
30-விஷய விரோதி –

31-விஸ்வாச விரோதி –
32-பிரவ்ருத்தி விரோதி –
33-நிவ்ருத்தி விரோதி –
34-சயன விரோதி –
35-உத்தான விரோதி –
36-கதி விரோதி –
37-ஸ்திதி விரோதி –
38-ஆவஸ்யக விரோதி
39-சரீர சுத்தி விரோதி –
40-ஸ்நான விரோதி –

41-அனுஷ்டான விரோதி
42-லஷண விரோதி –
43-ஸ்மரண விரோதி
44-சங்கீர்த்தன விரோதி –
45-ஸ்ரவண விரோதி
46-ஸேவா விரோதி –
47-சமாராதன விரோதி-(சம்யக் ஆராதனை -நல்ல பகவத் பாகவாத ஆச்சார்ய ஆராதனை)
48-வந்தன விரோதி
49-அஞ்சலி விரோதி(வந்தனம் த்ரிவித-கரணங்களால் -அஞ்சலி -கைகூப்புதல்-
50-கால ஷேப விரோதி

51-ஆர்ஜன விரோதி
52-க்ருஹ விரோதி –
53-ஷேத்திர விரோதி
54-போஜன விரோதி –
55-போஜ்ய விரோதி-
56-தீர்த்த விரோதி –
57-பிரசாத விரோதி –
58-உக்தி விரோதி-
59-சங்க விரோதி
60-சம்பந்த விரோதி

61-சிநேக விரோதி
62-பக்தி விரோதி –
63-தாஸ்ய விரோதி –
64-சக்ய விரோதி-(ஸ்நேஹம் அன்பன் சக்யம் நண்பன்)
65-சமர்ப்பண விரோதி-
66-தர்சன விரோதி –
67-ஆஸ்ரம விரோதி
68-ஜாதி விரோதி
69-ஆப்த விரோதி
70-அநாப்த விரோதி

71-சித்தாந்த விரோதி
72-தத்வ விரோதி
73-பும்ஸ்த்வ தப விரோதி –
74-அந்திம தசா விரோதி
75-அவிஸ்வாச விரோதி
76-சங்க விரோதி –
77-சந்தான விரோதி –
78-வர்ண விரோதி
79- ஜப விரோதி –
80-ஆராதன விரோதி

81-பதித்வ விரோதி –
82-வர்ஜ நீய விரோதி
83-அவர்ஜ நீய விரோதி

—————————————————————————————————————————————–

இவற்றுக்கு ஸ்ரீ வங்கி புரத்து நம்பி அருளிச் செய்த வ்யாக்யானம்

1-ஸ்வர்க்கத்துக்கு சம்சாரம் விரோதி –
ஸ்வ தேகமும் -தேக அநு பந்திக்களுமான பித்ரு மாத்ரு தனம் ஸ்திரீ பான புத்ர மித்ர களத்ராதிகள்–என்கை(ஸ்வர்க்கமும் லீலா விபூதிக்குள்ளே தான் இருக்கும் -இது ஆமுஷ்மிக போகம் -இங்கு சம்சாரம் -ஐஹிக போகம்)

1-சம்சார சங்கம் அறவே ஸ்வர்க்கம் லபிக்கும்

2-ஸ்வர்க்க இச்சுவுக்கு ஐஹிக ஸூகம் விரோதி-ஸ்வர்க்க ஸூக அபேக்ஷை யுடையவனுக்கு
இவ் வுலகத்தில் உள்ள கீழ்ச் சொன்ன பதார்த்தங்களுடைய அனுபவ இச்சை -என்கை

2- ஐஹிக போகத்தில் நசை அறவே ஸ்வர்க்க இச்சை பிறக்கும்


3-ஆத்மானுபவத்துக்கு ஸ்வர்க்கானுபவம் விரோதி –
கைவல்யானுபவத்துக்கு ஸ்வர்க்கத்தில் ஆசை விரோதி
4-ஆத்மானுபவ காமனுக்கு ஸ்வர்க்கம் விரோதி(கர்மம் தொலைய வேண்டுமே கைவல்யார்த்திக்கும் -ஜனனம் மரணம் இவை அவனுக்கு கிடையாதே -இதுக்கும் பகவத் திருவடிகளே உபாயம் -கதி த்ரயத்துக்கும் அவனே உபாயம்-சுத்த ஆத்ம ஸ்வரூபம் -கைவல்யனுக்கு -அசித் மிஸ்ர சேதனன் போல் அல்லவா -சரீரம் கழித்த சேதனன் இவன்)
5-பகவத் அனுபவத்துக்கு ஆத்மானுபவம் விரோதி-ஸ்வரூப ரூப குண விபூதி யுக்த ப்ராப்த ஸேஷியான பரமாத்ம அனுபவத்துக்கு
அணுவாய் சேஷமாய் இருந்துள்ள ஸ்வ ஆத்ம அனுபவம் விரோதி என்கை
6-பகவதனுபவ காமனுக்கு ஆத்மானுபவ இச்சை விரோதி-ப்ராப்த பகவத் அனுபவ அபேஷாவானுக்கு-அப்ராப்த ஸ்வ ஆத்ம அனுபவ அபேக்ஷை பிறப்பது விரோதி தானே – அது பள்ளமடை -இது அல்பமாயும் மேட்டு மடையாக இருக்கும்-ஞான தசை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் -இயற்கையான தாஸ்யம் -ஸ்வத ஸித்தம் -அந்தமும் ஆதியும் இல்லாதது என்று அறிந்து-அதை அடைய இச்சை -இரண்டாம் தசை
மேல் அடைய முயற்சி யத்ன தசை இவ்வாறு மூன்றும் உண்டே -மூன்றுமே ப்ராப்ய வகுத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
7-குண நிஷ்டனுக்கு குணி விரோதி-குணி -ஸ்வரூபம்-ஸஹ ஸ்ருதி –குணங்களை அவன் கூட இருந்தே அனுபவிக்கிறான் –
பரமம் ஸாம்ய உபைதி -ஸாம்ய சுருதி -ஆனந்தத்தில் ஸாம்யம் உண்டே
சாதர்ம்ய ஸ்ருதி -ஸாலோகம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் -அடைகிறோம்
இம் மூன்றும் விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு -அசாதாரணம் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண  விபச்சிதா  -இத் யுக்த பகவத் கல்யாண குண அனுபவத்துக்கு -ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான் -ஸ்வரூப அனுபவம் -திவ்யாத்ம ஸ்வரூப அனுபவம் விரோதி
நெஞ்சால் நினைப்பரிதால் –வெண்ணெய் யூண் என்னும் ஈரச் சொல்லே -திரு விருத்தம் -98-
எத்திறம் உரலோனோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -திருவாய் -1-3-1-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது -பெரிய திருவந்தாதி -86-ஸ்வரூபம் நினைத்து போக்க முடியாதே -சீர் கலந்த சொல்லாலே போக்கலாம்

நின் புகழில் வைகும் சிந்தியினிலும் மற்று இனிதோ நீ அவருக்கு வைகுந்தம் என்று அளிக்கும் வான் நைகும் –உன் குணங்களை எண்ணியே -உடையவர் கல்யாண குண அனுசந்தானமே ஸ்ரேஷ்டம்
8-கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் சௌந்த்ர்யம் விரோதி –காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் என்னப் பண்ணும் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான-பகவத் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்த்ர்யம் விரோதி-த்ரஷ்டத்வம் வந வாஸாயா -சுமத்ரா தேவி -அவன் நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்ய நிஷ்டையிலே இருக்க வேண்டும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –அனைத்துமே அசேதனம் இப் பாசுரத்தில் –

3- ஸ்வர்க்க அனுபவ இச்சை அறவே ஆத்ம ப்ராப்தி உண்டாம்
4-ஸ்வர்க்கத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே ஆத்ம அனுபவம் உண்டாம்
5-ஆத்ம அனுபவத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே பகவத் அனுபவம் சித்திக்கும்
6-ஸ்வ அனுபவத்தில் ஆசை அறவே பர அனுபவ ப்ரேமம் விளையும்
7-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சு நீங்கவே குண அனுபவ நிஷ்டை வர்த்திக்கும்

8-பகவத் சௌந்தர்யத்தில் கண்ணை மாற வைத்தால் கைங்கர்யம் வர்த்திக்கும்

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
9-பாகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு பகவத் கைங்கர்யம் விரோதி
அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே –நறு மா விரை நாண் மலரடிக் கீழ்ப் புகுதல் உறுமோ –திருவாய் -8-10-3
ததா நர்ச்சிதஸ் சத் பக்தம் பகவான் நாபி நந்ததி –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க் கடிமை கண்ணபுரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் -நான் முகன் -18
சத்ருனோ நித்ய சத்ருக்ன –கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத 
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

9-பகவத் கைங்கர்யத்தில் ருசி அறவே பாகவத கைங்கர்யம் வர்த்திக்கும்

10-பிரபத்தி நிஷ்டனுக்கு-பிரபத்தி ஸப்த வாஸ்ய ஸித்த சாதன பூத ஸர்வேஸ்வரனே உபாயம் என்று பற்றினவனுக்கு- கர்மாத் யுபாயங்கள் விரோதி-

பிரபத்தி என்கிற வாசகத்துக்கு வாஸ்ய ஸித்த ஸாதனான ஸர்வேஸ்வரன்
உபாயாந்தரங்களைப் பற்றியவனுக்கு இரக்கத்தாலும்
பிரபன்னனுக்கு ஆனந்தப்பட்டு வசீகரப்பட்டது அருளுவான்

10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-ப்ரபத் யுபாய நிஷ்டனுக்கு இதர உபாயங்கள் விரோதி –
த்வமேவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்த நா மதி –
சாஸ்திர ரூபமான பகவத் ஆஜ்ஞ்ஞைப் படி அவனுக்கு  செய்யும் கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
12-பகவத் கர்ம நிஷ்டனுக்கு தேவதாந்திர கர்ம நிஷ்டை விரோதி
நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-பகவத் முக மலர்த்தியே பிரயோஜனமாக கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்
சரீர பூதர்கள் தேவதாந்த்ரர்கள் -தேவதாந்த்ர முக மலர்த்திக்காகச் செய்தவை விரோதியாகும் –ஸர்வ ஸப்த வாஸ்யன் -ஸர்வ அந்தர்யாமி -எண்ணத்துடன் செய்ய வேண்டுமே –
13-பகவத் கைங்கர்ய நிஷ்டனுக்கு -பதிம் விஸ்வஸ்ய இத்யாதிப்படியே-தேவதாந்திர பஜனம் விரோதி

10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-

11-துஷ்கரத்வ க்ருதி சாத்யத்வ விளம்ப்ய பல ப்ரதத்வ ஹேதுக்களைத் தெரிந்து உபாயாந்தரங்கள் த்யாஜ்யம் என்று விடவே பிரபத் யுபாய நிஷ்டை சித்திக்கும்
12-அக்நி இந்த்ராதி தேவதாந்தர உத்தேச்யத்வேன செய்யும் கிரிசைகளில் நசை அறவே பகவத் விஷய கர்ம நிஷ்டை பிறக்கும்
13-தேவதாந்திர சேவா த்யாஜ்யத்வ ஜ்ஞானம் பிறக்கவே ஸ்வரூப ப்ராப்த பகவத் கைங்கர்ய நிஷ்டை ஜனிக்கும்

கீழ் கர்மங்கள்-இங்கு கைங்கர்யங்கள்-தனக்குத் தானே பதி -ஸர்வ லோகத்துக்கும் பதி -ப்ராப்த சேஷி கீழ் ஸர்வ அந்தர்யாமி எண்ணத்துடன் ஹித கர்மாக்களை செய்பவற்றைச் சொல்லிற்று
14-பகவத் உபாய நிஷ்டனுக்கு பிரபத்தி விரோதி
பண்ணின பிரபத்தியும் உபாயம் ஆகாதே-உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்-என்கிறபடியே எம்பெருமானையே உபாய உபேயமாகப் பற்றின உத்தம அதிகாரிக்கு உபாயாந்தர நிஷ்டனான மத்யம அதிகாரியைப் போலவே உபாயத்வேன உத்தேசித்துப் பண்ணின ப்ரபத்தியும் விரோதி யாகுமே-இசைவித்து என்னை உனது தாளிணைக் கீழ் இருத்தினாய்-பல பிரபத்தி -பலம் அனுபவிக்க யோக்யதை பெற என்ற எண்ணம் -அதிகாரி விசேஷம்
15-சாத்திய உபாய நிஷ்டனுக்கு நிவ்ருத்தி விரோதி-சேதன ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபம் பெற வேண்டிய-உபாயாந்தரங்களுக்கு- ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விரோதி என்கை-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோஸித்து -தியானித்து -காண்பது –
16-சித்த உபாய நிஷ்டனுக்கு ப்ரவ்ருத்தி விரோதி
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்றிலேன் –
செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யன் -வாழும் சோம்பர்
17-உபாய விரோதி –உபாயாந்தரங்கள் உடன் ஒக்க எம்பெருமானை நினைக்கையும்
நம்முடைய இசைவு கொண்டு அன்றோ உபாயமாயிற்று என்று நினைக்கையும் -இது இல்லாத போது ஸர்வ முக்தி ப்ரஸங்கம் பிறக்கும் என்கையும் -இது அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் என்று இராமையும் -இது தானும் அவன் இட்ட வழக்காய் இருக்கும் என்று அறியாமையும் -என்கை-அசித்து போலே அவன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்

14-தான் பண்ணும் பிரபத்தியில் உபாய புத்தி அறவே ஈஸ்வரன் இடத்தில் உபாய புத்தி பிறக்கும்
15 -சாஸ்திர சித்தி அனுஷ்டானத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகவே சாதநாந்தரம் கை கூடும்
16-ஸ்வ உஜ்ஜீவன விஷயக ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யம் அறவே சித்த உபாயம் லபிக்கும்
17-உபாய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபாயத்வம் நிலை நிற்கும்

(உபாயம் என்றாலே பிரபத்தி -பகவான் என்பதையே குறிக்கும் நம் ஸம்ப்ரதாயத்தில் – பலத்துக்கு சத்ருச உபாயம் இவனே -உபாயாந்தரங்கள் அசேதன கிரியா கிலேசங்கள் இவனுக்கு கிட்டே கூட ஸமமாகாதே –
இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் இவன் தானே -என்னையும் என்னுடைமையும் சமர்ப்பித்தேன் அதுவும் அவனது இன்னருளே –
கர்மம் அடியாக சம்சாரத்தில் அழுந்தி இருக்க -கிருபை யடியால் விடுபட்டு பேறு அடைகிறோம் -மாறாடி நினைத்தால் அவத்யமே விளையும் –
இசையாத அன்றும் விடாதவன் -இசைந்த அன்று பேறு அளிப்பான் சொல்லவும் வேண்டாமே –
இசைவு இல்லாவிடில் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரும் என்றும் நினைத்து இசைந்ததால் பேறு என்றும் நினைக்கக் கூடாதே –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஸம்ஹாரமும் லீலா கார்யமே -இன்புறும் இவ் விளையாட்டுடையான் -லோக வத்து லீலா கைவல்யம் -)

18-உபேய விரோதி -பகவத் உபாயனாய் -அந்ய பலனாகையும்-அந்ய உபாயனாய் பகவத் பலனாகையும்-கர்த்தாவாய் கைங்கர்யம் பண்ணுகையும் -அகர்த்தா என்று கைங்கர்யத்தை அநாதரிக்கையும்-போக்தாவாய் ரசிக்கையும்-போக்யம் என்று வந்து அவன் முக மலர்த்தி கண்டு ரசியாமையும் –-விரோதி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
படியாய் கிடந்து   உன் பவள வாய் காண்பேனே
கதா பிரகர்ஷயிஷ்யாமி

என்னை ஆக்கி தன்னைத் தந்த கற்பகமாய் இருக்க-அவன் முக மலர்த்தி ஒன்றே பிரயோஜனமாகக் கைங்கர்யம் பண்ண வேண்டும் அன்றோ -மற்றை நம் காமங்கள் மாற்று -செய்வார்களைச் செய்வானும் யானே என்னும்-செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -இத்யாதி –

நாம் கர்த்தா அல்ல -கருவியாக என்னைக் கொண்டு செய்விக்கிறான் -சேஷத்வ போக்த்ருத்வம் போல் அன்றி பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -எதிர் விழி கொடுத்து பாரதந்தர்யம் வேண்டும்

18-உபேய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபேயத்வம் நிலை நிற்கும்

19-உபேய த்ரி விரோதி
ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே –
1-பலாகாங்ஷையும் -2-திருஷ்ட பிரயோஜன அபேஷையும் -3-அத்ருஷ்ட  தேவதாந்திர அபேஷையும் –
1-பகவத் பிராப்தியை அபேஷியாது ஒழிகையும்
2-பாகவத கைங்கர்யத்தில் அபரத்வ புத்தியும்
3-ஆச்சார்ய கைங்கர்யத்தில் பர்யாப்தியும்  –

திருஷ்ட பிரயோஜன அபேஷை-திருவடி பாவோ நான்யத்ர பஸ்யதி -அமுதினைக் -பெருமாளைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே-முயல்கிறேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே -முயலத் தானே முடியும் -சத்ருஸமான பிரதியுபகாரம் செய்ய முடியாதே -இரண்டு ப்ராஹ்மும் நான்கு விபூதிகளும் வேண்டும் அன்றோ-

19-உபேயத்ரி விரோதியை பரிஹரிக்கவே அநந்த ஸ்திரத்வ பரம போக்யத்வ ரூபமான உபேய ஆகார த்ரய பிரகாசம் நிலை நிற்கும்

20-முக்ய பிரமாண விரோதி
நிர்த் தோஷ ஜ்ஞான ஜனகமான வேதாந்தத்தை  பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
அத்தை இதர பிரமாணங்களோடு ஒக்க நினைக்கையும்
மாஸூச வார்த்தையை விஸ்வசியாது ஒழிகையும்
அருளிச் செயல்களே முக்ய பிரமாணம் என்று நினையாது ஒழிகையும்
பூர்வாச்சார்யர்கள் வாதங்களில் அவிஸ்வாசமும்-

உண்மை அறிவுக்குக் கருவியே பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்-ஊற்றமுடையாய் -பெரியாய் -வேத ஸாரம் -மாயன் அன்று ஓதிய மெய்மைப் பெரு வார்த்தை–சரம ஸ்லோகம் -அதுக்கும் மேல் அருளிச் செயல்கள் -அதுக்கும் மேல் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-தெளியாத மறைப்பொருள்கள் தெளியப் பெற்றோம்-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-

20-முக்ய ப்ரமாண விரோதியைப் பரிஹரிக்கவே ப்ரமாணிகத்வம் நிலை நிற்கும்-

21-யாவதாத்மபாவி விரோதி
தேஹேந்த்ரியங்களில் ஆத்ம புத்தி பண்ணுகையும்-ஸ்வா தந்த்ர்ய புத்தி பண்ணுகையும் –
ஈஸ்வரனை அபூர்ணன் என்று இருக்கையும்
ப்ரம்மா ருத்ராதிகளை ஈஸ்வரராக நினைக்கையும்
எம்பெருமானை ஒழிந்தவர்களை ரஷகர்  என்று இருக்கையும்
நிலை நின்ற பாகவத அபசாரமும்   ஆச்சார்ய அபசாரமும்
ஈசான சீல நாராயண ஏவ -சங்கரர் திரு வாக்கு
நாராயண பர ப்ரஹ்ம -உபநிஷத்
பாகவத அபசாரம் செய்தோரை -ஷிபாமி ந ஷமாமி வஸூந்தரே
இராமானுச உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆள்படுத்தே-107-

ஈஸ்வரை ஒழிந்தவர்கள் ரக்ஷகர் அல்லர் என்றும் பிரபந்ந பரித்ராணத்தில் சொன்னோம் -காக்கும் இயலபினன் கண்ணபிரான் -சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பான்

21-யாவதாத்ம விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம ஸ்வபாவம் நிலை நிற்கும்

21-நித்ய விரோதி
இந்த்ரியங்கள் விரோதி அன்று என்று இருக்கையும்
இந்த்ரிய கிங்கரனாய் அவற்றுக்கு இறை தேடிக் கொடுக்கையும்
ஞானச் செருக்காலே இந்த்ரியங்களுக்கு அஞ்சாது ஒழிகையும்
பாகவத் கைங்கர்யத்தில் அந்வயியாதே கேவல பகவத் -பாகவத் சௌந்தர்யத்திலே  மக்னனாய் இருக்கையும்

ஸூஷ்ம இந்திரியங்கள் விடாமல் தொற்றிக் கொண்டே எடுக்கப் போகும் ஜென்மங்கள் தோறும் வருவதால் நித்ய விரோதி தானே இவை-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழன்று-இந்திரிய பய க்ரோசம் -அஞ்சினேன் -இந்திரியங்கள் கொண்டு பகவத் பாகவத ஆராதனம் செய்யாமல் இவற்றுக்கே தீனி போட்டு உழன்று-கீதை -2-51 தொடங்கி நான்கு ஸ்லோகங்கள் -யஜமான ஸம்ஹிதை -இத்யாதி -யோக ஆரம்ப விரோதிகள் -மாய வல் ஐம் புலன்கள் ஆமவை நன்கு அறிந்தேன்-விண்ணுளார் -பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் —

அநக –நித்ய சத்ருக்ந –நீக்கமில்லா அடியாரான லஷ்மணன் -சயமே அடிமை தலை நின்ற பரதன் -கோதில் அடியார் இவர் ஒருவரே

22-நித்ய விரோதியைப் பரிஹரிக்கவே இதர விஷய விரக்தி நிலை நிற்கும்

23-அநித்திய விரோதி
சுக துக்கங்கள் -தேகாத்ம பிரமத்தால் சந்தநாதிகளைக் கொண்டு சுகிக்க நினைக்கையும்
விஷ சஸ்த்ராதிகளை கண்டு வெருண்டு துக்கிக்கையும்
ப்ராக்ருத பதார்த்த லாபத்தாலே சந்தோஷிக்கையும்
அலாபத்திலே விஷண்ணனாகையும்

இவை எல்லாமே தாற்காலிக சுக துக்கங்கள் -அல்பம் அஸ்திரம் -என்று உணர வேண்டுமே

23-அநித்ய விரோதியைப் பரிஹரிக்கவே நித்ய ஸூகம் நிலை நிற்கும்

24-ஸ்வ ஸ்வரூப விரோதி
ஜ்ஞான அனுதய
அந்யதா ஜ்ஞான
விபரீத ஜ்ஞானங்களும்
போக தசையில் அவன் அழிக்கும் இடத்து சேஷத்வத்தையே நோக்கி பிற்காலிக்கையும்
பார தந்த்ர்யத்தை நோக்கி பர அதிசய கர ப்ரவ்ருத்தி அறுக்கையும்
ஆச்சார்ய பார தந்த்ர்யத்தில் அப்ரதான புத்தியும்-

அறிந்து அறிந்து தேறித் தேறி
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை-முமுஷுப்படி –சூரணை -92
அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே-போக்தாவான ஈஸ்வரன்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி- அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி – இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது – நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

24-ஸ்வரூப விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தின் பகவத் போக அனுரூபம் நிலை நிற்கும்

25-பர ஸ்வரூப (அனுபவ) விரோதி –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியான பிரகிருதி வச்யனாகையும் –
பிராக்ருதர் பக்கல் பரத்வ புத்தியும் -நாட்டினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –
பராவரர்கள் பகவத் பரதந்த்ரர் என்று அறியாமையும்
சௌலப்யம் கொண்டு பரத்வத்தில் அதி சங்கை பண்ணுகையும்
பகவத் ஸ்வரூப ரூப விஷயத்தில் அஜ்ஞ்ஞாத அந்யதா ஜ்ஞானங்களும்  -என்கை

இச்சா கிருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் உணர வேண்டுமே
நாட்டினான் -தெய்வங்களாக -அருளினால்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்

25-பர ஸ்வரூப விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறக்கும்

26-ஸ்வ அனுபவ விரோதி –
தேக வாசனையும் -தேக அனுபந்தி வாசனையும் -வாசனா கார்யமான தேகாதிகளில் ருசியும்

கைவல்ய அனுபவ விரோதிகளைக் காட்டி அருளுகிறார் -வாசநா – மனப் பதிவு =ருசி -இரண்டையும் விட வேண்டுமே

26-ஸ்வ அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ ரஸத்வ ராஹித்யம் நிலை நிற்கும்

27-பர அனுபவ விரோதி –
ஸ்வ இச்சா பிரவ்ருத்தியும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
ஈஸ்வரனுடைய குணங்களைக் கேட்டால் அசூயையும்
இதர குணங்களைக் கேட்டால் தெளிகையும்
பரத்வம் கண்டு வெருவுகையும்-அவனை நாம் தேவர் என்று அஞ்சினோம்-

கீழ் பர ஸ்வரூப அனுபவம்-இங்கு பர ரூப குண விபூதிகள் அனுபவம்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34

27-பர அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ அதீன ப்ரவ்ருத்தி ராஹித்யம் நிலை நிற்கும்

28-சம்ஸ்லேஷ விரோதி
எம்பெருமானுடைய ஈஸ்வரத்வத்தைக் கண்டு வெருகையும்
ஸ்வ பாவத்தைக் கண்டு தரிக்கை யன்றிக்கே ஸ்வ நைச்சியத்தை அனுசந்திக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் கிட்டுகையும் -துர்லபம் என்று பிற்காலிக்கையும் –என்கை

தேவாதி ராஜனே ஆ மருவி அப்பன் என்றும் உணர்ந்து அநுபவித்தாரே கலியன்

அன்னையும் நோக்கும் என்றும் அஞ்சுகிறேன் அச்சோ ஒருவர் அழகிய வா
அவளும் நின் திரு ஆகத்தில் இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்

28-சம்ஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி ஸூலபத்வம் நிலை நிற்கும்

29-விஸ்லேஷ விரோதி
பக்தி வஸ்யமற்றும் பொறுத்து ஆறி இருக்கையும்
போதயந்த பரஸ்பரம் பண்ணிப் பாடாற்றும் உசாத் துணை அறுகையும் -என்கை

துக்க அனுபவத்துக்கு மூலம் இவை -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -துக்க ஹேதுவாகுமே -பரவசம் -பரனான அவனுக்கு வசப்பட்டு துடிக்க வேண்டும் அன்றோ –

மச்-சித்த மத்-கத-ப்ராண போதயந்தঃ பரஸ்பரம்
கதயந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச-10-9-திருநெடும் தாண்டகம் -மூன்று பத்துக்களும் இவ் வகை –

ஈறும் வேம் ஈரியாய் உலர்த்த -சித்தம் சித்தாய் நின்னிடையேன் -அல்லேன் என்று நீங்க-உடல் ஆத்ம தர்மம் கொள்ள-உடலும் நீராய் அலைந்து உருக -முடியானேயில் கரணங்கள் அவையாக -ஓன்று மற்ற ஒன்றின் செயலில் விரும்ப-உள்ளதெல்லாம் தான் விரும்ப-காற்றும் கழியும் கட்டி அழ -கொண்ட பெரும் காதலுக்கு பக்தி நூல் வரம்பில்லையே-

கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகும் தூங்க -கதிரவன் -தேரும் போயிற்று -திசைகளும் மறைந்தன -செய்வது ஒன்றுமே அறியேனே –
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-
ஆழ்வார் அருளிச் செயல்களால் பக்தி வளரும் -ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் -வேதாந்தம் ஞானம் வளர்க்கும்

29-விஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் சம்ஸ்லேஷ விளம்பத்வம் நிலை நிற்கும்

30-(பகவத்) விஷய விரோதி –
பகவத் வ்யதிரிக்த விஷயமங்களிலே பிரவணன் ஆகையும்
பாகவத நாமங்களை கேளாதே கேவல பகவன் நாமங்களைக் கேட்கையும்
பகவத் விக்ரஹத்தை பாராது இதர சரீரங்களைப் பார்க்கையும்
பாகவத சமூகத்தைக் காணாதே கேவலம் பகவத் விக்ரஹத்தைக் காண்கையும்
பகவன் நாம உச்சாரணம் பண்ணாதே இதர நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் ஷேத்ரங்களுக்கு போகாமல் இதர இடங்களுக்கு போகையும்
ததீயரை ஒழிந்த இதரரை ஸ்பர்சிக்கவும்
பாகவத உச்சாராணம் பண்ணாதே கேவல பகவன் நாம உச்சாரணம் பண்ணுகையும்
பகவத் பாத துளசி கந்த க்ராணம் பண்ணாதே கேவல துளசி க்ராணம் பண்ணுகையும் என்கை-

காதுக்கும் கண்ணுக்கும் வாயுக்கும் காலுக்கும் —கேளாச் செவிகள் செவி அல்ல-நாவகாரியம் -நாவுக்கு அகாரியம் -சதுரா சதுர் அக்ஷரீ -நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-போந்தாரை போந்து எண்ணிக் கொள்-ஊரைச் சொன்னாய் பேரைச் சொன்னாய் அடியார் ஒதுங்கி நிழல் தந்தாய் -அஞ்ஞான ஸூஹ்ருதம்-கந்தம் கமழும் குழலி -அங்கும் பஞ்ச இந்திரியங்கள் விஷயம்-

30-விஷய விரோதியை பரிஹரிக்கவே இந்த்ரிய ஜெயம் நிலை நிற்கும்-

31-விஸ்வாச விரோதி –
உபாய லகுத்வ பிரதிபத்தியும்- உபேய கௌரவ பிரதிபத்தியும்
விரோதி பாஹூல்ய பிரதிபத்தியும்
சரம உபாயத்தில் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதில் அவிச்வாசமும் –என்கை –

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
இணை திருவடிகள் -ஒன்றே ஒன்றுக்கு ஸத்ருசம்

31-விசுவாச விரோதியைப் பரிஹரிக்கவே சாமத்யவசாயம் நிலை நிற்கும்

32-பிரவ்ருத்தி விரோதி –
பகவத் கைங்கர்யத்தை கர்த்தவ்யதா புத்தி இல்லாதே விதிப் பொருளுக்கு பயப்பட்டு பண்ணுகையும்
ராக ப்ரேரிதனாய்ப் பண்ணாது ஒழிகையும்
பாரதந்த்ர்யத்தை நோக்கிப் பதற்ற மறுகையும்
ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தியும் -என்கை-

உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன்-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாய்-பாட்டினால் என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே-கர்மங்கள் கைங்கர்யத்தில் புகும் –புருஷோத்தமன் -புஷ்ப்ப கைங்கர்யம் -தலையால் ஸ்வீ கரித்து அருளுகிறவன் -குறும்பு அறுத்த நம்பி விருத்தாந்தம்

32-ப்ரவ்ருத்தி விரோதியைப் பரிஹரிக்கவே பர பிரயோஜன  பிரவ்ருதித்வம் நிலை நிற்கும்

33-நிவ்ருத்தி விரோதி –
இதர கர்ம த்யாக பூர்வகமான எம்பெருமானை பற்றி இருக்கச் செய்தேயும்
த்யாகத்தில் பாபம் வரில் செய்வது என்-என்று அநுசங்கிக்கையும்
மடங்கி அனுஷ்டிக்கையும்
அசக்தியால் விடுகையும் –
ஸ்வ சக்தியால் விடுகையும்
விட்டோம் என்னும் பிரதிபத்தி விடாமையும்
த்யாக அந்வயமும்–என்கை-

அப்ராப்தி -ஸ்வரூப ஹானி என்றே விட வேண்டும்-விடுவித்துப் பற்றச் செய்த அவனே உபாயம்-உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விட வேண்டும் -விடுகையில் அந்வயம் கூடாது -ஞானம் முக்கியம்-

33-நிவ்ருத்தி விரோதியை பரிஹரிக்கவே தத் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி நிலை நிற்கும்

34-சயன விரோதி –
சம்சாரிகள் க்ருஹங்களில் சயநிக்கையும்
அவர்களுடன் சயிக்கையும்
அவர்கள் படுக்கையில் சயநிக்கையும்
அவர்கள் காற் கடையில் சயநிக்கையும்
அவர்களுக்கு கீழாக சயநிக்கையும்
அவர்களுக்கு தான் சயனிக்க இடம் கொடுக்கையும்
அவர்கள் சயனிக்கும் இடத்தை சுத்தி பண்ணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ பவனன்களிலே சயநியாமையும்
அவர்களுடன் சம ப்ரதிபத்தியாய் சயநிக்கையும்
அவர்கள் திருப் படுக்கையில் மதியாமல் சயநிக்கையும்
அவர்கள் ஸ்ரீ பாத பிரதேசத்தில் சயனிக்க கூசுகையும்
அவர்கள் கீழே கண் வளர தான் உயரத்தில் சயநிக்கையும்
தான் அவர்களுக்கு சயனிக்கும் இடம் கொடாமல் சயநிக்கையும்
அவர்கள் கண் வளர்ந்து அருளும் இடத்துக்கு சுத்தி பண்ணுகையும்
விஹித விஷயம் என்று விஷய ப்ரவணனாய் சஹ சயிக்கையும்
ததீய பிரதிபத்தியால் சஹ சயியாமையும்
விஷயாந்தர ஸ்மரணத்துடன் சயநிக்கையும்
பகவத் ஸ்மரணம் இன்றி சயநிக்கையும்
ஆச்சார்ய ஸ்மரண நிஷ்டன் இன்றியே சயநிக்கையும்
தேக யாத்ரா பரவசனாய் சயநிக்கையும்
ஆத்ம யாத்ரா சிந்தா பரவசனாய் சயநியாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதிகளில் கூச்சம் இன்றி கால் நீட்டி சயநிக்கையும்
திரு முற்றம் திருப் பள்ளி யறை ஆச்சார்யன் திரு மாளிகைகளைக் காற்கடைக் கொண்டு சயநிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்யம் பண்ண வேண்டும் காலத்திலேயே சயநிக்கையும்
ஆச்சார்யன் கண் வளர்ந்து அருளுவதற்கு முன்னே சயநிக்கையும்
ஆச்சார்யன் எழுப்பச் செய்தே சயனித்து இருக்கையும் -என்கை –

முமுஷுக்கள் இல்லாமல்-ஈஸ்வரனையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் இடம் ஸஹ வாஸமும் கூடாதே

34-சயன விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தில் உணர்ச்சி நிலை நிற்கும்

35-உத்தான விரோதி –
ஆச்சார்யர் மற்றும்  ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுப்ப மெள்ள எழுந்து இருக்கையும் –
ப்ராக்ருதர் எழுப்பப் பதறி எழுந்திருக்கையும்
பூர்வ அனுசந்தானம் இன்றியே எழுந்திருக்கையும்
ஆச்சார்யர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் தனது வரவு பார்த்து இருக்க அனுசந்தான தத் பரராய் எழுந்து இராது  இருக்கையும்
தனது மடியில் ஆச்சார்யன் முடியை வைத்துக் கண் வளரா நிற்க கால் கடுத்தது என்று எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் மத்யே எழுந்திருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அதிர நியமித்து தட்டி எழுப்புகையும்
ஆச்சார்யன் சயநிக்கிற காலத்திலேயே தான் எழுப்புகையும்
ஆச்சார்யன் எழுந்திருப்பதற்கு முன்னே தான் எழுந்திராமையும்
தன்னுடனே எழுந்திருக்கும் ச ப்ரமசாரிகள் மேலே மயிர் உதறுதல் சோம்பல் முறித்தல் கொட்டாவி கொள்ளுதல் செய்கையும்
எழுந்திரா நிற்க முந்தி அடியேன் என்று பரஸ்பரம் தண்டன் இடாமையும்
ஆச்சார்யன் தத் பத்னி பித்ராதிகள் எழுந்திருந்த போதே தண்டன் இடாது ஒழிகையும்-என்கை-

35-உத்தான விரோதியைப் பரிஹரிக்கவே தத் தத் ஜ்ஞானம் நிலை நிற்கும்

36-கதி விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண் வளர்ந்து அருளின திருப் படுக்கையை மிதித்தல் செய்கையும்
சந்தித்த ஸ்ரீ வைஷ்ணவர்ககளுக்கு எதிரே செல்லாமையும்
விநயம் பாவித்து சம்சாரிகளுக்கு எதிரே செல்லுகையும்
பகவத் கோபுராதிகளைக் கண்டு அஞ்சலித்து கண் குளிர நோக்காமல் கடைக் கணித்துப் போகையும்
தேவதாந்திர கோபுராதிகளைக் கண்டால் கண் புதைத்துக் கடுக நடவாமையும்
திரு முற்றங்களுக்கு பிரதஷிணமாகப் போகாமையும்
அருளிச் செயலில் த்வநியைக் கேட்டு சிறிது செவி கொடாமல்  கடுக நடை யிட்டுப் போகையும்
அந்ய கீரத்த த்வநியைக் கேட்ட போதே செவி புதைத்துக் கொண்டு சீக்கிரமாகப் போகாமையும்
ஆச்சார்யனுடையவும் இதர ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் சாயையை மிதித்தல் செய்து நடக்கையும்(எம்பார் ராமானுஜ பதச் சாயா)
தன் நிழல் அவர்கள் மேல் பட நடக்கையும்
சம்சாரிகள் நிழல் தன் மேல் படுத்தல் தன் நிழல் அவர் மேல் படுத்தல் செய்யும்படி கூச்சமற்று நடக்கையும்
பகவத் பாகவத சமாராதன அர்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ண நடக்கும் போது ப்ரஹ்ம ருத்ராதி வசதிகளை அணுகிப் போகையும்
ஸாண்டில்ய ஸ்ம்ருதி -பிரம்மா ருத்ராதி வஸதி ஸ்மஸாநம் சரமேவ ச -அபலீம் ராஜ தாலீம் ச தூரத பரி வர்ஜயேத்-தேவதாந்திர உச்சிஷ்டங்களை மிதித்து நடக்கையும்
பாஷண்டிகளுடன் வழி நடக்கையும்
வழி இடுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை பரிந்து பாராமல் போகையும்
எல்லை யளவும் சென்று எழுந்து அருளுகிறவர் மறையும் அளவும் நில்லாமல் மடங்குகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளா நின்றார்கள் என்று கேட்டு எதிரே போகாயையும்
சம்சாரிகளை எதிர் கொள்ளுதல் வழி விடுதல் செய்கையும்
கேவல தேக யாத்ரா பரவசனாய் சம்சாரி க்ருஹங்கள் தோறும் சென்று தட்டித் திரிகையும்
பகவத் பாகவத் தேசிக அபிமானம் உள்ள திவ்ய தேசத்தில் செல்லாமல் திரிகையும்
பிரகிருதி சம்பந்தத்தை இட்டு சம்சாரிகள் உத்சவங்களுக்குப் போகையும்
ஆத்ம சம்பந்த அநுரூப பகவத் பாகவத உத்சவங்களுக்குப் போகாமையும்
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் அலையும்படி அதிர நடக்கையும்
சதாச்சார்யன் பின் சென்று சேவியாமையும்
பிரயோஜனாந்தர பரனாய் பின் செல்லுகையும்
அவன் போ என்னப் போகாமையும் வா என்ன வாராமையும்
இயலில் முன்னே செல்ல முயலுகையும் பின் செல்லப் பிற்காலிக்கையும்
பெரும் கூட்டத்தில் நடக்க  மாட்டாதாரை விட்டுப் பறந்தோடுகையும்
ஆச்சார்யனுக்குத் திருக் கை கொடுத்துச் செல்லுமிடத்து சிநேக பயமின்றி பேணிச் செல்லாமையும் –என்கை  –

36-கதி விரோதியைப் பரிஹரிக்கவே புநராக நிவ்ருத்தி நலை நிற்கும்

37-ஸ்திதி விரோதி –
சம்சாரிகளுடைய புடவை பட நிற்கையும்
ஏகாசனத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தன் புடவை பட நிற்கையும்
சம பிரதிபத்தியாலே ஏகாசனத்தில் இருக்கையும்
சம்சாரிகள் ஆசனத்தின் கீழ் இருக்கையும்
அவர்களுடன் ஏக க்ருஹத்தில் வசிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்கையும்
அவர்கள் திரளிலே இருக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசனத்தின் கீழ் இருக்க மாட்டாமையும்
ஏக பவனத்தில் இருக்கப் பிற்காலிக்கையும்
அவர்கள் வரவு பார்த்து நிற்க லஜ்ஜிக்கையும்
அவர்கள் திரளில் இருக்க முசிக்கையும்
அவர்கள் மிக்க தேசத்தில் இராது ஒழிகையும்
ஆச்சார்யன் எம்பெருமான் திரு வீதியிலே எழுந்து அருள தான் உள்ளே இருக்கையும்
ஆச்சார்யனையும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்டு சடக்கெனத் துடித்துக் கொண்டு எழுந்து இராது இருக்கையும்
சம்சாரிகளைக் கண்டு த்ருணவத் கரித்து இருக்காதே விநயம் பாவித்து எழுந்து இருக்கையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வரவு கேட்டு சம் ப்ரம ந்ருத்யம் அற்று ஆறி இருக்கையும்
தான் பகவத் சமாராதானம் பண்ணும் வேளையில் ஒரு பாகவதர் எழுந்து அருளினால் உதறிக் கொண்டு எழுந்து இருந்து அவரை சத்கரியாதே சமாராதன வேளையில் எழுந்து இருக்கலாகாது என்று இருக்கையும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை தீர்த்தம் கொள்ளா நிற்க மற்றொரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளினால் அடியேன் அடியேன் என்கை ஒழிய ஸ்ரீ பாதத்தை விட்டு எழுந்து இருக்கையும்
கொடுக்கிறவரும்  அடியேன் அடியேன் என்று வணங்கும் அத்தனை யன்றி ஸ்ரீ பாத தீர்த்தத்தைப் பறித்து எழுந்திருக்கையும்
ஜங்கம அஜங்கம ஸ்ரீ விமானச் சாயையை மிதித்து நிற்கையும் -ஜங்கம ஸ்ரீ விமானம் -பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் வாகனம்-அஜங்கமம் -எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் –
தேவதாந்தர ஆலய கோபுர தத் பக்தச் சாயை தன் மேல் பட நிற்கையும்
தேவதாந்தர அபிமானம் ஒழிய மர நிழலில் ஒதுங்குகையும்
தத் சேஷமான ஸ்தலங்களில் தங்குகையும்
பாகவத பவனங்களை விட்டு அபாகவத க்ருஹங்களிலே தங்குகையும்
ஆச்சார்யன் நிற்கத் தான் இருக்கையும்
ஆச்சார்யன் நடக்கத் தான் இருக்கையும்
அவன் நின்று இருக்கச் சொல்லாச் செய்யாமையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியில் மதியாமல் கால் நீட்டி இருக்கையும்
திரு முற்றங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு எழுந்து இராமையும்
பகவத் பாகவத சந்நிதில் செம்பளித்துத் த்யானம் பண்ணுகையும்–என்கை –

37-ஸ்திதி விரோதியை பரிஹரிக்கவே அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருக்கை நிலை நிற்கும்

38-ஆவஸ்யக விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் திரு மாளிகையில் எல்லைக்குள்ளே எச்சிலாக்குகையும்
எம்பெருமானும் முதலிகளும் எழுந்து அருளும் திரு வீதியில் எச்சிலாக்குக்கையும்
நித்ய ஸூரிகள் திருப் பூ மரங்களாய் வந்து அடிமை செய்கிற திரு நந்தவனத்தில் எச்சிலாக்குகையும்
ஆச்சார்யன் இருக்குமிடத்தை எச்சிலாக்குகையும்
எச்சிலுடன் ஆச்சார்யன் பின் செல்லுகையும்
எச்சிலுடன் எம்பெருமானை ஸ்பர்சிக்கையும் -பாகவதர்களை ஸ்பர்சிக்கையும் -ஒதுங்கி நடவாது ஒழிகையும் -திரு மாளிகை திரு நந்தவனங்களில் புகுகையும் என்கை-

38-ஆவஸ்யாக விரோதியைப் பரிஹரிக்கவே நிர்மல சரம தேஹத்வம் நிலை நிற்கு

39-சரீர சுத்தி விரோதி –
திருமஞ்சனத் துறைகளை தூஷிக்கையும்
ஆச்சார்யனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் விநியோஹ அர்ஹமான திருமஞ்சனத்தை சேஷமாக்கி தூஷிக்கையும்
அவர்கள் விநியோகித்து ஒழிந்தது கொண்டு சரீர சுத்தி பண்ணுகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு மிக்க சேஷத்தைக் கொண்டு பாத ப்ரஷாலனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் திருக்கை விளக்கும் இடத்தில் தானும் கை கால் கழுவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனியில் தெறிக்கக் கொப்பளிக்கையும்
பாகவத தர்சனமே சுத்தி கரம் என்று அறியாமையும்
இத்தை விட்டு சரீர சுத்தியை அபேஷிக்கையும்–என்கை-

39-சரீர சுத்தி விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்மசுத்தி நிலை நிற்கும்

40-ஸ்நான விரோதி –
ஸூத்தி வேண்டி குளிக்கையும்
பிரபன்னனனாய் இருந்து விசேஷ திவசங்களில் குளிக்கையும்
ஆன்ருசம்ஸ் யார்த்தமாகவும் -தர்சன பரிபாலனார்த்த மாகவும் -லௌகிக அனுசாரம் பண்ணி அமுது செய்யும் இடத்து -தத் அநுசார ஹேதுவான சரீர ஸ்திதியைக் கண்டு பயம் அனுவர்த்தியாது ஒழிகையும்
திருமஞ்சனத் துறைகளிலே குளிக்கையும்
சம்சாரிகள் குளிக்கும் துறையிலே குளிக்கையும்
சம்சாரிகளை குளிக்கும் துறையிலே குளிக்கையும்  ஸ்ரீ சம்சாரிகளை முன்னிட்டு  குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பின்னிட்டு தீர்த்தமாடுகையும்
மந்திர ஸ்மரணத்துடன் குளிக்கையும்
கங்கா தீர்த்த ககதனம் பண்ணிக் குளிக்கையும்
பகவத் பாகவத உத்சவங்களில் அந்ய ஸ்பர்ச சந்கையால் குளிக்கையும்
அர்ச்சாவதாரவத் பரம பாவனமான விமல சர்ம விக்ரஹ ஸ்பர்ச சங்கையால் குளிக்கையும்
அபாகவாத ஸ்பர்ச சங்கையால்  ஸ்நானம் பண்ணாமையும்
ஆச்சார்ய தீர்த்த திவசங்களில் சிஷ்டா சரிதமான தீர்த்தமாடாது இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் தெறிக்கத் தலை உதறுகையும்
வேதகப் பொன்னான விலஷண ஸ்பர்ச பாவனத்வம் அறியாமல் குளிக்கையும்
எம்பெருமானைத் திருமஞ்சனம் பண்ணிக் குளிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராடப் பண்ணித் தீர்த்தமாடுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை வழி விட்டு  முழுகுகையும்
சரீர யாத்ரா மாத்தரம் என்று முழுகாமையும்-என்கை-

40-ஸ்நான விரோதியைப் பரிஹரிக்கவே விரஜா ஸ்நானம் பண்ணுகை நிலை நிற்கும்-

41-அனுஷ்டான விரோதி
ஆச்சார்ய கைங்கர்யமும்- பகவத் கைங்கர்யமும் -பாகவத கைங்கர்யமும்- அல்லாதவற்றை செய்கையும்
பகவத் கைங்கர்யம் நிருபாதிகம் ஆச்சார்ய கைங்கர்யம் ஔபாதிகம் என்று செய்கையும்(சாஸ்தா நாராயண தேவதா -திருவடி ஸ்தானம் -காருண்யாத் ஸாஸ்த்ர பாணி -உலவும் பெருமாள்)
ஆன்ருசம்ஸ் யார்த்தமாக செய்யுமவற்றை லோக சங்க்ராஹார்த்தமாக செய்கையும்
ஸ்வரூப அனுகுணம் அல்லாத ஆன்ருசம்ஸ் யார்த்தமான கர்த்தவ்யங்களில் கைங்கர்ய புத்தியும்
எம்பெருமான் எழுந்து அருளா நிற்க திரு ஒலக்கமாக எழுந்து அருளி இரா நிற்க -ஆன்ரு சம்ச்ய ப்ரவ்ருத்தி வேணும் என்று நினைக்கையும்
கோஷ்டியாக இருந்து பகவத் குண அனுசந்தானம் பண்ணி நிற்க காருண்ய பிரவ்ருத்திக்குக் காலம் என்று கோஷ்டியைக் குலைத்துக் கொண்டு எழுந்து இருக்கையும்
திரு நாமம் சாத்துகை -தீர்த்த பிரசாதம் கொள்ளுகை -திருவடி விளக்குகை -அருளிச் செயல்  அனுசந்திக்கை-திரு விளக்கு ஏற்றுகை- திருமாலை சாத்துகை -திரு நந்தவனம் செய்கை- ஸ்ரீ வைஷ்ணவர்களை சத்கரிக்கை –தத்வ ரஹஸ்ய திவ்ய பிரபந்தம் ஒதுவிக்கை -ஒதுகை-துடக்கமான ஸ்வரூப அனுஷ்டானங்களில் மோஷ சாதன புத்தியும்
பூர்வர்கள் செய்யாதன செய்கையும்
பலாபிசந்தி பூர்வகமாக பகவத் கைங்கர்யமும்
அவன் உகந்த அடிமை செய்யாதே தான் உகந்த அடிமை செய்கையும் -என்கை –

41-அனுஷ்டான விரோதியைப் பரிஹரிக்கவே பூர்வ அனுஷ்டானம் நிலை நிற்கும்

42-லஷண விரோதி –
தோளில் திரு இலச்சினை தோன்றாது இருக்கையும்
அசிஷ்ட பரிக்ருஹீதமான பூ முத்ரையை தரிக்கையும்
சிஷ்ட பரிக்ருஹீதமான தப்த முத்ரையைத் தரியாமையும்
சரீர ரோக நாசார்த்தமாக தப்த முத்ரையை தரிக்கையும்
சம்சார ரோக நாசகம் என்று தரியாமையும்
ஸ்வாமி சின்னம் என்று தரியாமையும்
சம்சாரிகள் கைவிடுவார்கள் என்று கூச்சத்துடன் தரிக்கையும்
சத்துக்கள் கைக் கொள்வார்கள் என்று ஹர்ஷத்துடன் தரியாமையும் –
சிஷ்ட பரிக்ரஹம் அற்ற அப்ரசஸ்த தேசங்களில் திரு மண் கொண்டு திரு நாமம் இடுகையும்
சிஷ்ட பரிக்ரஹம் உள்ள திருமலை தொடக்கமான பிரசஸ்த திவ்ய தேசங்களில் உண்டான திரு மண் இடாமையும்
தத்தத் திவ்ய தேச வைபவம் அடியான கௌரவ பிரதிபத்தி இன்றிக்கே திருநாமம் இடுகையும்
முமுஷூவாய் இருந்து ஸ்வேத வர்ணமான திருநாமம் இடாமையும்
தத் தத் காம்ய பிரதமான வர்ணாந்தரம் உள்ளது கொண்டு திரு நாமம் இடுகையும்
மத்யே சித்ரமான ஹரி பாத க்ருதி ஒழிந்த தீபாகாராதியான ஊர்த்வ புண்ட்ரத்தை தரிக்கையும்
திரு நாமம் சொட்டளவே இடுகையும்
நுணுக்கி இருக்கையும்
பூர்வர்கள் சாத்தும் அளவும் அறிந்து இடாமையும்
பன்னிரண்டும் தரியாமையும்
கேசவாதி அடைவே தரியாமையும்
அனைத்தின்  இடம் அறிந்து இடாமையும்
உகிர் கொண்டு ஒடுக்குகையும்
நடுத் திருச் சூர்ணம் இன்றித் திருநாமம் இடுகையும்
மந்த்ராந்தரத்தினால் அபி மந்தரித்து இடுகையும்
யந்த்ரம் கீறி இடுகையும்
அந்ய சேஷமான ஜலம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடுகையும்
பாகவத சேஷம் கொண்டு கரைத்துத் திருநாமம் இடாமையும்(வைஷ்ணவ வாமனத்தில் -வடுகா -என்ன -நம்பி வைஷ்ணவ நம்பியான வ்ருத்தாந்தம்)
ஆச்சார்யனுக்கு வைத்த திரு மஞ்சனத்தை கொண்டு கரைத்து இடுகையும்
சம்சாரிகள் முன் திரு நாமம் இடுகையும்
ப்ராக்ருதர் கையில் திருமண் வாங்கி தரிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் என்று தரிக்கையே பிரயோஜனம் என்று தரியாமையும்
கேவல சாஸ்திர விஹிதம் என்று தரிக்கையும்
விசிஷ்ட பரிக்ருஹீத லஷணம் என்று தரியாமையும்
அழித்து அழித்து இடுகையும்
ஆச்சார்ய சேஷமான  திருமண் திருச் சூரணங்களை கொண்டு தரியாமையும்
ஆச்சார்யனை த்யானித்து தச் சேஷமாக தரியாமையும்
ஆச்சார்யன் சாத்துமவத்தை தான் சேஷமாக்கித் திருநாமம் இடுகையும்
பகவத் பாகவத ஆச்சார்ய சந்நிதியிலே திரு நாமம் இன்றி முகம் காட்டுகையும் –
ஒற்றைத் திரு மணி வடம் -ஒற்றைத் திருத் துழாய் வடம் தரிக்கையும்
தாவடமாகத் தரிக்காமையும்
முறுக்கறை நாண் கட்டுகையும்
அறையில் பின்னல் அற்று இருக்கையும்
வஸ்த்ர யுக்ம கௌபீ நங்கள் ஓன்று குறைகையும்
கிருஷ்ண கம்பள ஆச்சாதனம் பண்ணுகையும்
கந்தை போக்கையும்
முதலிகளாய் இருந்து கீழ் போக்கி உடுக்கையும்
முற்றி இல்லாத சேலை யுடுக்கையும்
வேஷ்டி தாங்கிப் பின்னல் இல்லாமையும்
கழுத்துக் கீழ் வபனம் -ஷவரம்- பண்ணுகையும்
ப்ரபன்னனான பின்பு கூம்பன் கட்டுகையும்-மீசை திருத்துகையும்
உகிர் ஒடுக்கி வளர்க்கையும் –
செம்பஞ்சி இடுகையும்
கழுத்தை வளைத்து சந்தனம் பூசுகையும்
களப பிரசாதம் அல்லாத சந்தனம் பூசுகையும்
பூ முடிக்கையும்
விசேஷித்து நம் பெருமாள் உகந்த புழுகு பூசுகையும் செங்கழு நீர் முடிக்கையும்
தேக பரனாய் சாந்து சந்தனம் பூசுகையும்
திருத் தாம்பூலம் பிரசாதம் அல்லாத வெறும் தாம்பூல சர்வணம் பண்ணுகையும்
காதில் அநந்த முடியிடுகையும் -அனந்ததோரம் தரிக்கையும் -திருத் துழாய் சொருகையும்
வெள்ளிக் கிழமை தந்தாவனம் பண்ணுகையும்
வச்யாஞ்சன சூர்ணம் தரிக்கையும் -ரஷை கட்டுகையும்
வெள்ளி மோதிரம் இடுகையும்
ஆயுதம் பிடிக்கையும்
ஆடை பகுந்து போர்க்கையும்
புள்ளடியான தலைக் கட்டுகையும்
குமிடுகையும் -தலையில் வணக்கம் அற்று இருக்கையும்
கண்ணில் தண்ணளி யற்று இருக்கையும்
வாயில் அருளிச் செயலும் பிரபந்த பேச்சும் அற்று இருக்கையும்
அதிரப் பேசுகையும்
அவிடு பேசுகையும்
வெடிச் சிரிப்பு சிரிக்கையும்
கையில் அஞ்சலி அற்று இருக்கையும்
முஷ்டிக் கூடித் தழும்பு அற்று இருக்கையும்
மார்பு இருமாந்து இருக்கையும்
அடியில் மென்னடை யற்று இருக்கையும் -பதறி நடக்கையும்
எத்தாப்பு கூட்டுகையும்
பகவத் குண ஸ்ரவணத்தில் பாகவத தர்ஸ நாதிகளில் ஆனந்தாஸ்ரு அற்று இருக்கையும் சரீரம் புளகியாமையும் -போஷியாமையும்
பாகவத விஸ்லேஷத்தில் வாடாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் வடிவிலே நிழல் எடுத்துத் தோற்றாமையும்
ஸ்ரீ வைஷ்ணவப் புகரற்று இருக்கையும் -என்கை-

42-லஷண விரோதியைப் பரிஹரிக்கவே விலஷணத்வம் நிலை நிற்கும்

43-ஸ்மரண விரோதி
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அன்யே து புருஷ வ்யாக்ர சேதஸா யேப் யபாஸ்ரயா
அஸூத்தாச்தே சமஸ்தாஸ் து தேவாத்ய கர்ம யோநய -என்கிறபடியே
ஸூ பாஸ்ரய விக்ரஹத்தை ஒழிய தேவதாந்திர ரூப தச் சரீரங்களை நினைக்கையும்
சதாச்சார்ய விக்ரஹத்தை த்யாநியாமை
ப்ராக்ருத சமூஹத்தை ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத அபிமானம் உள்ள திவ்ய ஸ்தலங்களை ஸ்மரியாமையும்- இதர ஸ்தலங்களை ஸ்மரிக்கையும்
பரம பாகவதருடைய ஆலோக ஆலாப அங்கீகார விசேஷாதிகளை நிரந்தரம் நினையாமையும் -இதரருடைய ஆலோக ஆலாப அங்கீகார திகளை ஒருக்கால் ஆகிலும் ஸ்மரிக்கையும்
பகவத் பாகவத குண சம்ருத்தியை மனனம் பண்ணாமையும்
அர்ச்சாவதாரத்தில் ப்ராக்ருத உபாதான ஸ்ம்ருத்தியும்
விலஷண பாகவத ஜன்மாதிகளில் அபகர்ஷத்வ ஸ்ம்ருதியும்
சாஷாத் பகவத் அவதாரமான ஆச்சார்யன் பக்கல் மானுஷ ஸ்ம்ருத்தியும்
ஆச்சார்யன் பக்கல் உபகார ஸ்ம்ருதி இல்லாமையும்
ஆச்சார்ய துல்யர் பக்கல் சமத்வ ஸ்ம்ருதியும்
ஆழ்வார்கள் பாசுரங்களில் நிகர்ஷ பாஷா ஸ்ம்ருதியும்
ஆத்ம யாத்ரையில் விஸ்ம்ருதியும் தேக யாத்ரா ஸ்ம்ருதியும்
பகவத் போக அனுரூபம் அல்லாத ஸ்வரூப ஸ்பாவ ஸ்ம்ருதியும்
சித்த சாதனா நிஷ்டா விஸ்ம்ருதியும்
சாத்திய சாதனா சத்பாவ ஸ்ம்ருதியும்
தத் கைங்கர்யத்தில் பூர்ண சாத்திய ஸ்ம்ருதியும்
ததீய கைங்கர்யத்தில் தத் ஸ்மரண ராஹித்யமும்
பகவத் பாகவத விஷயங்களில் தான் செய்த அனுகூல பிரவ்ருத்திகளை ஸ்மரிக்கையும்
பிரதிகூல பிரவ்ருத்திகளை ஸ்மரித்து பீதன் ஆகாமையும்
விசேஷித்து ஆச்சார்யன் செய்த உபகாரங்களை நினையாது ஒழிகையும்
சாதனாந்தர நிஷ்டர்க்கு அவஸ்யம் அபேஷிதமான அந்திம ஸ்ம்ருதியும் -என்கை –

அந்திம ஸ்ம்ருதி ப்ரபன்னனுக்கு விரோதி அல்ல -இது இல்லாவிடில் பேறு இல்லை என்ற நினைவு தான் விரோதி

43-ஸ்மரண விரோதியைப் பரிஹரிக்கவே தத் குண ஸூத்தி நிலை நிற்கும்

44-சங்கீர்த்தன விரோதி –
குண கீர்த்தனம் பண்ணா நிற்கச் செய்தே குணாந்தரங்கள் பிரஸ்துதமானால் இகழாது ஒழிகையும்
க்யாதி லாப பூஜாதி பிரயோஜனாந்தரங்களைச் சொல்லிக் கீர்த்திக்கையும்
வக்த்ரு தோஷம் உள்ளவற்றை கீர்த்திக்கையும்
பாஷாந்தரம் என்று வக்த்ரு தோஷம் அற்றவற்றைக் கீர்த்தியாது ஒழிகையும்
பகவத் சங்கீர்த்தனம் பண்ணும் நாவாலே இதர சங்கீர்த்தனம் பண்ணுகையும்
சர்வாதிகாரம் ஆனவற்றை அதிக்ருதாதிகார பிரதிபத்தி பண்ணி கீர்த்திக்கையும்
விசேஷ ஜ்ஞானான பின்பு ஆழ்வார்கள் ஆசார்யர்கள் உடைய பாசுரங்களை ஒழியக் கீர்த்திக்கையும்
அவற்றை சதாச்சார்யன் பக்கல் ஓதாமல் விழுவேடு எடுத்தும் சுவர்ப் புறம் கேட்டுக் கீர்த்திக்கையும்
பகவன் நாமங்களை கேவல பாவநத்வ பிரதிபத்தியால்   கீர்த்திக்கையும் அவற்றில் போக்யதா புத்தி பிறவாமல் கீர்த்திக்கையும்
பாகவத கீர்த்தனம் கலசாதே பகவத் கீர்த்தனம் பண்ணுகையும்
ஆச்சார்யன் சந்நிதியில் அவர் சொல்லாமல் கீர்த்திக்கையும் அவர் சொல் என்னச் சொல்லாமையும்
திரளில் தான் முந்தி முதல் எடுக்கையும்
மற்று ஒருவர் முதல் எடுத்தால் பின்னுரு சொல்லாது இருக்கையும்
பின்னடிக்குப் பிற்காலிக்கையும்
திரு அஷரங்கள் நழுவும்படி ஒட்டுகையும்
திரளில் தவறிற்று என்று திருத்துகையும் ஷேபோக்தி பண்ணிச் சிரிக்கையும்
முதல் முடிவு இரண்டுரு அனுஸ்தியாமையும்
சடகோபனுக்கு அஞ்சலி செய்யாமையும்
திவ்ய பிரபந்தங்களை ஓதிச் சாத்தாமையும்
திருஷ்ட பிரயோஜனத்தை நச்சி ஒதுவிக்கையும்
கூலிக்கு திருவத்யயனம் சாத்துகையும்
நீச ஸ்பர்சமுள்ள துறையிலே நித்ய கர்மாநுஷ்டானம் பண்ணுவாரைப் போலே க்ருஹ பூஜாதி தேவதாந்தர ஸ்பர்சமுள்ள ஸ்பர்சமுள்ள க்ரஹங்களிலே திருவத்யயனத்தை நடத்தி ஸ்வரூப ஹானிப் படுகையும்
தன் வியாதிக்கு சஹஸ்ர நாமம் -ஏழை எதலன்- ஆழி எழச் சங்கு எழ -ஜபிக்கையும்
குரு ஸ்துதி பூர்வக பகவத் ஸ்துதி பண்ணுகையும்-என்கை-

குரு பரம்பர அனுசந்தானம் இல்லாத த்வய அனுசந்தானமும் தேவதாந்திர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலி யாண்டான் திரு வாக்கு –

44-சங்கீர்த்தன விரோதியைப் பரிஹரிக்கவே வாக் சுத்தி நிலை நிற்கும்

45-ஸ்ரவண விரோதி
பகவத் கதை நடக்கும் இடத்து அவிடியை இகழாது ஒழிகையும்
அந்ய மனஸ்கனாய் செவி ஏற்றுக் கேளாமையும்(வேண்டுவன கேட்டியேல் -கேளாய்)
பகவத் குணம் கேளா நிற்கப் புறம்பில் வார்த்தை செவிப்படுகையும்
இதுக்கு முன்பு தான் கேட்டு அறியாத ப்ரமேயங்களை கேட்கும் போது ஒக்கும் ஒக்கும் என்று அணுபாஷிக்கையும்
பாண்டித்ய பிரகட நார்த்தமாக நடுவே துஸ் சோத்யம் பண்ணுகையும்
சொல் மினுக்குக் கேட்டு அசூயைப் பட்டு முகம் கன்றுகையும்
நல் வார்த்தை கேட்டு நன்று என்று நா எழாமையும்
புத்திமான்களாய் ஸ்ரவிக்கும் ஸ ப்ரஹ்ம சாரிகளோடு அசூயை கொண்டாடுகையும்
வயிர வுருக்கான பகவத் குணங்களைக் கேட்டு நெஞ்சு உருகாமையும்
பக்தியுடன் கேளாமையும்
ஸ்வ நேத்ர அங்க விக்ரியை இல்லாமையும்
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
சதாச்சார்யன் பக்கல் கேளாமையும்
கேட்ட சீரிய அர்த்தத்தை அநதிகாரிகளுக்குச் சொல்லுகையும்
அவைஷ்ணவர்கள் சொல்லும் பகவத் கதையைக் கேட்கையும்
அசம்ப்ரதாயார்த்தங்களைக் கேட்கையும்
பகவத் பாகவத ஆச்சார்ய வைபவம் கேட்கும் செவியாலே தந் நிந்தைகளைக் கேட்கையும்
சரமார்த்தம் கேட்டு நெஞ்சில் படாமையும்
பகவத் கதை நடக்கும் இடத்தில் தேவதாந்திர கதைகள் பிரஸ்துதங்கள் ஆகையும் -என்கை –

45-ஸ்ரவண விரோதியைப் பரிஹரிக்கவே சத் சம்ப்ரதாய ஸூத்தி நிலை நிற்கும்

46-ஸேவா விரோதி -(வணக்கம் -கைங்கர்யம் -சேவா காலம் -பல அர்த்தங்கள்)
பகவத் ஷேத்ரங்களைக் குறித்து யாத்ரை பண்ணா நிற்க இதர ஷேத்ரங்களிலே புகுவதும் அன்றியே அங்கே சில விசேஷம் கண்டு ஆச்சர்யப் படுகையும்
அந்ய கோபுராதிகளை விசாரியாமல் அஞ்சலிக்கையும் அறிந்த பின்பு அனுதாபம் இன்றி நிற்கையும்
பகவத் கோபுராதிகளை தூரத்தில் கண்ட போதே உகளித்து அஞ்சலித்து தண்டம் இடாமையும் செருப்பு கழற்றாமையும் வாகனங்களில் நின்று இழியாமையும்
திருப்பதிக்குள் செருப்புடன் செல்லுகையும்
ஆச்சார்யன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளுள் தண்டன் இடாமல் உள்ளுப் புகுருகையும்
அத் திரு மாளிகைக்குள் புகாமல் பெருமாள் கோயிலில் நேரே செல்லுகையும்
கோயில் வாசலிலே தண்டன் இடாமல் புகுருகையும்
புடவையைப் போர்த்துப் புகுருகையும்
எம்பெருமானுக்கும் பலி பீடத்துக்கும் நடுவே சென்று புகுருகையும்
அப்ரதஷிணமாக வந்து புகுருகையும்
திரு வாசல் படிகளை மிதிக்கையும்
முற்படச் சுற்றுக் கோயிலிலே சேவியாது ஒழிகையும்
திவ்ய விமானச் சாயையை மிதிக்கையும்
திரு வாசல் காக்கும் முதலிகளை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
சேனை முதலியாரை அனுமதி கொள்ளாமல் புகுருகையும்
ஆச்சார்யனை முன்னிலையாகப் புக்கு சேவியாமையும்
எம்பெருமான்  சந்நிதியில் ஒதுங்கப் புகாமையும் எதிரே கூசாமல் புகுருகையும்
வலப் பக்கத்தில் இடம் உண்டாய் இருக்க இடப் பக்கத்திலே நின்று சேவிக்கையும்
சம்சாரிகளுடன் கலந்து சேவிக்கையும்
பாதாதி கேசாந்தமாகக் கண்ணார சேவியாமையும்
திருப் பல்லாண்டு முதலிட்டு இரண்டு பாட்டு துடங்கிப் பூர்வர்கள் அனுசந்தித்தவற்றை அனுசந்தியாது ஒழிகையும்
பிராக்ருதர் சொல்லுமவற்றைச் சொல்லி சேவிக்கையும்
பிரயோஜனாந்தரங்களை பிரார்த்தித்து சேவிக்கையும்
அந்ய சித்தனாய் சேவிக்கையும்
புதுப் பானையில் புக்க ஈ போலே பொருத்தம் இன்றி சேவியாமல் புறப்படுகையும்
திருவாதாரனத்தில் மத்யே மீளுகையும்-அமுது செய்கிற வேளையில் பலி பிரதானத்துக்கு முன்னே மீளுகையும்
தூப தீபம் திருவந்திக் காப்பு கண்டு அருளும் போது-அமுது செய்து அருளுகிற போது -பராக்கடித்து இருக்கையும் ததுசிதமான பாட்டுக்களை அனுசந்தியாமையும்
கூத்திலும் பாட்டிலும் சக்தனாய்  பகவத்  விக்ரஹத்தில் கண் வையாது இருக்கையும்
அவிகிற திரு விளக்கைக் கண்டு சடக்கு என்று நந்தாது இருக்கையும்
செத்தையைக் கண்டு திருவலகிடாதே போகையும்
சாத்தின திருமாலை திருப் பரிவட்டம் திரு ஆபரணங்களில் கண் இடுகையும் -ஆக்ரானம் பண்ணுகையும்(மோந்து பார்க்கையும்)
அமுது செய்து அருளுவதற்கு முன்னே எம்பெருமான் திருப்பாவாடை கண்டு நா நீருகையும்
திரு முற்றத்துக்குள் கால் நீட்டுதல் -எத்தாப் புகட்டுதல் -புடவை போடுதல் -கொட்டாவி கொள்ளுதல் -சோம்பல் முறிதல் மயிரு தட்டுதல் உகில் முறித்தல் மூக்கு சிந்துதல் காரித்து உம்முதல் -தாம்பூல சர்வணம் பண்ணுதல்
மேல் புடவை போர்த்தல் உறங்குதல் அவிடு சொல்லுதல் கை தட்டச் சிரித்தல் கதறி அழைத்தல் வைதல் சீறுதல் ஒடுக்கம் அற்று கர்வித்து இருத்தல் முதலான
அபசாரங்களை பரிஹரித்து வர்த்தியாமையும்
அங்கே சம்சாரிகளை வினவுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமதி பண்ணுகையும் கேவல பகவத் சேவையை பண்ணித் திரிகையும் பாகவத சேவையில் நழுவித் திரிகையும்
ஆச்சார்ய சேவைக்கு அசலாய்த் திரிகையும்
அவனது பாதச் சாயையாய்க் கொண்டு பின் சென்று சேவியாமையும்-என்கை-

46-சேவா விரோதியைப் பரிஹரிக்கவே சேவ்யன் உகந்து சேவை கொண்டு அருளுமது நிலை நிற்கும்

47-சமாராதன விரோதி(ஸம்யக் ஆராதனம் -ஆச்சார்யர் நியமனப்படி -நித்ய கிரந்தம் -ஜீயர் படி -ததீயாராதனமும் சமாராதானமே)
வித்யாதி க்ரம பீதியாலே செய்கையும் -ப்ரீதி ப்ரேரிக்கச் செய்யாமையும்
சோம்பிச் செய்கையும்
ஆளிட்டுச் செய்கையும்
ப்ராப்த காலத்தில் செய்யாமையும் -தனக்குக் கை ஒழிந்த போது செய்கையும்
க்யாதிக்குச் செய்கையும்
கூலிக்குச் செய்கையும்
பலத்தைக் கோலி செய்கையும்
அவன் தந்த கரணங்களுக்கு அடைத்த தொழில் என்று செய்யாமையும்
ஸ்வரூப அநுரூப ப்ரவ்ருத்தி என்று செய்யாமையும்
அவன் நிரபேஷன் பூரணன் என்று செய்யாமையும்- நம் கை பார்த்து இருக்கும் சாபேஷன் என்று செய்கையும்
தன் வஸ்துவைத் தான் கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்யாமையும்- நம் வஸ்துவை கைக் கொண்டு அருளுகிறான் என்று செய்கையும்(என்னையும் என்னுடைமையும் சக்கரப் பொறி பொறி ஓற்றிக் கொண்டு -சேஷத்வ ஞானமே ஆத்மாவுக்கு சக்கரப் பொறி)
தன் ஸூத்தியை முன்னிட்டு செய்கையும் -கைக் கொண்டு அருளுகிறவனுடைய ஸூத்தியை முன்னிட்டுச் செய்யாமையும்(புரா நீசனாகவே இருந்தாலும் ஸமாச்ரயே ஆதி தேவம் -சாது கோட்டியுள் கொள்ளப்படுவான் -பகவத் ப்ரபாவாத் -என்ற நினைவு வேண்டுமே)
பாவ ஸூத்தியே அவனுக்கு வேண்டுவது என்று செய்யாமையும்(பக்தியோடு உபகாரம் -பக்திக்கே அருளுகிறவன் உபகாரத்துக்காக அல்லவே)
பதார்த்த வைஷம்யம் பார்த்துக் கைக் கொள்ளும் என்று செய்யாமையும்
துஷ்கர பிரதிபத்தியால் செய்கையும் -பகவத் சமாராதானம் அத்யந்தம் ஸூகரம் என்று செய்யாமையும்
அத்யந்தம் சௌலப்யம் கொண்டு ஔதா ஸீந்யத்துடன் செய்கையும்
அர்ச்சாவதாரமே பர வஸ்து மூச்சுண்டு என்று செய்யாமையும்(அவன் இவன் என்று கூழேல் மின் -அவனாகும் நீள் கடல் வண்ணனே -வைகுண்ட நாத அரங்கமாளி என்னாளி —நவ களே பரம் –பூரி ஜெகந்நாதப் பெருமாள் -நீலாத்ரி நிவாஸாய -திருமேனி மற்றும் பொழுது -அன்று சக்கர லாஞ்சனம் பண்ணிய மரம் கிடைக்கும் -அமாவாசை நாடு இரவில் ஊரடங்கும் -பொழுது -பாண்டாக்கள் உள்ளே சென்று புதிய திருமேனி -தொப்புளில் -எடுத்து வைக்க மூச்சு விடும் ஸப்தம் கேட்க்குமாம்)
தன் ஆச்சார்யனை முன்னிட்டு அவனுக்கு எடுத்துக் கை நீட்டுகிறோம் என்று செய்யாமையும் -அவர்களது மதி -அனுமதி-கொண்டு செய்யாமையும்-
சம்சாரிகள் கண் படச் செய்கையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருக்கத் திருத் திரை வளைத்துச் செய்கையும்-
சாமான்ய சாஸ்த்ரமான முற்றல் சடங்குகள் கொண்டு செய்கையும் -சிஷ்டாசார சித்தமான திருவாராதன விசேஷம் அறிந்து செய்யாமையும்-
மந்த்ராந்தரம் கொண்டு செய்கையும்- குரு பரம்பரா பூர்வகமான மந்திர அனுசந்தான பரனாய்ச் செய்யாமையும்-(மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாமல் செய்ய வேண்டுமே -அவனே மந்த்ரம்)
விசேஷித்து அதின் விவரணமான ஆழ்வார்கள் பாசுரங்களையும் -அதின் கருத்தான ஆச்சார்ய வசனங்களையும் அனுசந்தித்திக் கொண்டு செய்யாமையும்-
திவ்ய ஸ்நபன தீப தர்சன வ்யவஹார ஸ்வீகார விஷயங்களில் பூர்வர்கள் அனுசந்திக்கும் ஆழ்வார்கள் பாசுரங்களை அனுசந்தியாமையும்-
விசேஷஜ்ஞர் உச்சரிக்குமவற்றை உச்சரியாமையும்-
அந்ய சித்தனாய் செய்கையும்-
ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவனிலும் அதிகர் என்று அறியாதே வேறிட்டு அர்ச்சிக்கையும்-(விண்ணுள்ளாரிலும் சீரியர் -நான் பெரியன் நீ பெரியை என்றும் யார் அறிவர் -நம்மாழ்வார் -உம் பெருமாளை நீர் -என் பெருமாளை நான் -சேர்த்து வைக்கத் தட்டில்லையே -வடுக நம்பி)
கூடத் திருவடி விளக்கக் கூசுகையும்-
தழிகை  தாழ வைத்து அமுது செய்யப் பண்ணுகையும்-
ஆச்சார்யர்களை அவனிலும் அதிகர் என்று அறியாமையும் -இருந்தபடியே அமுது செய்யப் பண்ணக் கூசுகையும்-
சம்சாரிகள் க்ருஹத்தில் எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் எம்பெருமானையும் கூட ஒன்றியே திருவடி விளக்குகையும்-
சிஷ்டர்கள் ஆதரியாத ததி பக்தாதிகளை ஆராதிக்கையும்-
அசாதாரணமான அர்ச்சாவதாரம் இருக்க- சாதாரணமான ஆதித்ய மண்டலாதிகளில் எம்பெருமானை அர்ச்சிக்கையும்-
அந்தர் யாகத்திலும் பஹிர் யாகமே அதிகம் என்று செய்யாமையும்-
ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதாரத்திலே ஆவாஹாந உத்வாசனம் பண்ணி அநர்த்தப் படுகையும்-
தத் ஆராதனத்திலும் ததீய ஆராதனமே பரம் என்று பண்ணாமையும்-
தனக்கு விசேஷித்து வேண்டுவது சதாச்சார்ய சமாராதனம் என்று அத்யவசித்து பண்ணாமையும்-
ஆச்சார்யனிலும் ஆச்சார்யன் திருவடிகளே திருவாராதானம் என்று உணர்ந்து ஆநுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் திருவடிகளிலும் திருவடிகளுடன் சம்பந்தம் உடைய திருவடி நிலையே சரம அதிகாரிகளுக்குத் திரு வாராதன விஷயம் என்று பழுக்க சிஷித்து தெளிந்து அனுஷ்டியாமையும்-
ஆச்சார்யன் ப்ரீதி வர்த்தகமான பகவத் பாகவத சமாராதனத்தை உபேஷிக்கையும் -த்விவித அர்ச்சனம் பண்ணுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைப்பறிந்து சடக்கெனத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ணாமையும்-
தர்சநாத் க்ருஹ்யதே மயா-என்கிற தர்சன க்ரஹணத்தை காட்டிலும் -முக்ய க்ரஹணத்தில் பூர்த்தி உண்டு என்று ஆசரியாமையும்-(கண்டு அருளப் பண்ணுதல் -அமுது செய்யப் பண்ணுதல் -வாசி அறிய வேண்டுமே -)
ஆச்சார்யனுக்கும் தத் சத்ருசர்க்கும் எம்பெருமானுக்குப் பண்ணும் உபசாரங்களில் குறையச் செய்கையும்-
பகவத் சமாராதானம் பண்ணா நிற்க சாமான்ய சாஸ்த்ரங்களைக் கொண்டு உபய அர்ச்சனை பண்ணுகையும்-
ஆலயச்யத்தாலே யூஜ்ரும்பணாதிகளை-கொட்டாவி விடுதல் போன்ற -சோம்பல் செயல்கள் -பண்ணுகையும் -என்கை-

47-சமாராதான விரோதியைப் பரிஹரிக்கவே சமராத்யன் உகந்து அத்தைக் கொண்டு அருளுமது நிலை நிற்கும்

48-வந்தன விரோதி
நல்ல தரை பார்த்து தண்டணிடுகையும்
முடுக்கத் தண்டன் இடுகையும்
அந்ய மனஸ்கனாய் தண்டன் இடுகையும்(கைகள் கால்கள் தலை மனஸ் புத்தி அஹங்காரம் -சாஷ்டாங்க பிராணாமம்)
த்வய அனுசந்தானத்துடன் தண்டன் இடாமையும்
விதி ப்ரேரிதனாய் தண்டன் இடுகையும் -ப்ரீதி ப்ரேரிதனாய் தண்டன் இடாமையும்
பகவத் விஷயத்தில் போலே பாகவத விஷயத்திலே தண்டன் இடக் கூசுகையும்
ஆச்சார்யன் திருவடிகளிலே தலை பொருந்த தண்டன் இடாமையும்
ஒருக்கால் இட்டோம் என்று ஆறி இருக்கையும்
ஆச்சார்யன் எழுந்து இருக்கச் சொல்லுவதற்கு முன்னே தான் எழுந்து இருக்கையும்
வெறும் தண்டன் இட்டு ஸ்ரீ பாதங்களை சிரஸா வஹியாது ஒழிகையும்
முற்பட  ஆச்சார்யனுக்கு தண்டன் இடாதே எம்பெருமானுக்கு தண்டன் இடுகையும்
பகவத் சந்நிதியில் பாகவதர்களை தண்டன் இடக் கூசுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடும் தண்டனை சஹித்து தண்டன் இடுகையும்
அவரிடும் தண்டனுக்கு தன்னை ஸ்வீ கர்த்தாவாக நினைத்து பிரதி தண்டன் இடுகையும்
அவர்களுக்கு உகப்பாகில் தன் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் அவரிடும் தண்டனைப் பெறாதே உதறிப் போகையும்(போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –ஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பி விழுந்து சேவிக்க பிரதி வந்தனம் செய்யாமல் –வளர்த்ததனால் பயம் பெற்றேன் -கைக் கிளியை வணங்கி -பரகால நாயகி –)
திருவாராதன சமனந்தரம் தீர்க்க தண்டன் இடாமையும்
இயல் சாற்றி  ஒருவருக்கு ஒருவர் தண்டன் இடாமல் போருகையும்
கோஷ்டியில் முதலிலும் முடிவிலும் தண்டன் இடாது ஒழிகையும்
தூரஸ்தனானால் ஆச்சார்யன் எழுந்து அருளி இருந்த திக்கு நோக்கி நாடோறும் தண்டன் இடாது ஒழிகையும்
புரோடசத்தை நாய்க்கு இடுவாரைப் போலே  ப்ராக்ருத பந்துக்களுக்கு தண்டன் இடுகையும்-
வர்ண நிபந்தன வந்த நீயரை வணங்குகையும்
திருப் பிண்டி (அமரும் ஆஸனம்)பேணாது இடுகையும்
தேவதாந்திர ஆலய சமீபங்களிலும் பாஷண்டி சமீபங்களிலும் தண்டன் இடுகையும்
திருப்பதியில் திரு வாசலில் தண்டன் இடாமல் புகுருகையும்
ஆச்சார்யனையும் ஆச்சார்ய துல்யரையும் திரளில் தண்டன் இடக் கூசுகையும்
அத்யாத்ம வித்யாப்ரதர் அல்லாத வித்யாந்தர பிரதரை தீர்க்க பிரணாமம் பண்ணுகையும்-மந்த்ர ரத்ன பிரதர் அல்லாத மந்த்ராந்த்ர பிரதரை தீர்க்க பிராணாமம் பண்ணுகையும்
ஆபத்து வந்தது என ப்ராக்ருதர் காலிலே விழுகையும்
பகவத் வந்தனத்தில் ஆலஸ்யப் படுகையும்
தத் ஸன்னதியிலே அபாகவத நமஸ்காரம் பண்ணுகையும் பகவத் நமஸ்காரம் பண்ணாது ஒழிகையும்–என்கை-

48-வந்தன விரோதியைப் பரிஹரிக்கவே வந்தனத்தை உகந்து ஸ்வீகரிக்குமது நிலை நிற்கும்

49-அஞ்சலி விரோதி(அம் ஜலதி -ப்ரத்யக்ஷமாக அவனை உருக வைக்கும்-நிராலம்பனம் -காட்டவே ஆகாசத்தில் விபீஷணன் -நின்று -ஸர்வாயுத பாணி -அஞ்சலியே ஸர்வாயுத சமம்)
பகவத் அங்க்ரியை உத்தேச்யம் பண்ணாமையும் -வ்யதிரிக்தரை விஷயீ கரித்துப் பண்ணுகையும்
அஞ்சலிக்கு கால நியதி இல்லை என்று இராமையும் -காலம் பார்த்து பண்ணுகையும்
-சர்வாதிகாரம் என்று உணராமையும்- அதிக்ருதாதிகாரம் என்று இருக்கையும்
-பிரகார நியதி இல்லை என்று இராமையும் -அது உண்டு என்று இருக்கையும்
-சக்ருத் என்று இராமையும் – அசக்ருதாவ்ருத்தி வேணும் என்று இருக்கையும்
-காலாந்தரத்திலே பலிக்கும் அத்தனை என்று இருக்கையும் -அப்போதே பலிக்கும் என்று இராமையும்
-ஒவ்வொரு அபராதத்துக்கு பிராயச்சித்தமாய் இருக்கும் என்று இருக்கையும்- சர்வ அபராத பிராயச்சித்தம் என்று அறியாமையும்
-சில பாபத்தையே போக்கும் என்று இருக்கையும் -சர்வ பாபங்களையும் சமூலோன்மூலனம் பண்ணும் என்று அறியாமையும்
-ஒரு நன்மையே தரும் என்று இருக்கையும் -எல்லா நன்மைகளையும் குறைவறத் தரும் என்று அறியாமையும்
-பல ப்ராப்தி யளவும் நிற்குமத்தனை என்று இருக்கையும் -பல அனுபவ வேளையிலும் நிலை நிற்கும் என்று அறியாமையும்
-கருட முத்ரை விஷத்தை அடக்குமா போலே ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தை ஆளவற்று என்னும் விசுவாசம் இல்லாமையும் –
-(அம் ஜலயதீதி அஞ்சலி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
அபராதா நிமான் சர்வான் ஷமஸ்வ புருஷோத்தம
ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -ஸ்தோத்ர ரத்னம்)
சேஷிக்கு அமைத்த கை ப்ராப்தம் ஆனாப் போலே சேஷ பூதனுக்கு அஞ்சலி அநந்ய கதித்வ ஸூசகமாய்க் கொண்டு ஸ்வரூப ப்ராப்தமாய் இருக்கும் என்று அறிந்து பண்ணாமையும்-

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-28

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

-ஸ்வ ரஷணத்தில் கை வாங்காமல் அஞ்சலிக்கையும்
-அந்ய பல காமதயா அஞ்சலிக்கையும்
-அந்ய ஆலய சமீபங்களில் சட கோபனுக்கு அஞ்சலிக்கையும்
-அபாகவதர் அஞ்சலிக்கு பிரத்யஞ்சலி பண்ணுகையும் -பாகவதர் அஞ்சலிக்குப் பின் அஞ்சலிக்கையும்
-ஆச்சார்யனை தண்டன் இடாமல் அஞ்சலிக்கையும்
-நெஞ்சில் இடுக்குடன் (நேர்மை இல்லாமல்)அஞ்சலிக்கையும் -கையில் இடுக்குடன் அஞ்சலிக்கையும்
-சடகோபனுக்கு தலையில் அஞ்சலி பண்ணாமையும் -என்கை-

49-அஞ்சலி விரோதியைப் பரிஹரிக்கவே தச் சித்தா கர்ஷணத்வம் நிலை நிற்கும்

50-கால ஷேப விரோதி
தமோ குணா அபிபூதனாய்ப் பாதியில் உறங்கிப் போகையும்
-உணர்ந்தால் பரானர்த்தங்களை நெஞ்சினால் நினைந்து காலம் கழிக்கையும்
வேல் கணார் கல்வியே கருதி காலம் கழிக்கையும்
கரியான் கழல் காணக் கருதாதே காலம் கழிக்கையும்
வர்ண அனுகுண கர்ம கலாபங்களிலே காலம் கழிக்கையும்
த்வய அனுசந்தானத்தாலே காலம் கலியாமையும்
தேவதாந்திர பஜனத்தாலே காலம் கழிக்கையும்- பகவத் சமாராத நத்தால் காலம் கழியாமையும்
சாமான்ய சாஸ்த்ரார்த்த பட நாதிகளாலே காலம் கழிக்கையும்
தாத்பர்ய சாஸ்திர ஸ்ரவண மனநாதிகளால் காலம்   கழியாமையும்
அநர்த்த கரமான அர்த்தார்ஜன உபாயங்களாலே காலம் கழிக்கையும்
ஆத்மா உஜ்ஜீவன அர்த்த உபாயங்களால் காலம் கழியாமையும்
பர ஹிம்சையால் காலம் கழிக்கையும்- பர உபகாரத்தால் காலம் கழியாமையும்
பர அன்னம் புஜித்தே காலம் கழிக்கையும் ஸ்வ அன்ன லுப்தனாய்க் காலம் கழிக்கையும்
பர ஸ்திரீ பரவசனாய்க் காலம் கழிக்கையும் அத்தாலே ஸ்வ ஸ்திரீ விரக்தனாய்க் காலம் கழிக்கையும்
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியே காலம் கழிக்கையும்- ஸ்வ த்ரவ்ய விநியோக அசக்தனாய்க் காலம் கழிக்கையும்
சூது சதுரங்கம் பொருது காலம் கழிக்கையும்
(தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் காலம் கழியாமையும்-நான்முகன் திரு -63-
பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதியவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் களித்தேன் -ஆர்த்தி -28 -சூது பிரசங்கம் -ஸ்ரீ மஹா பாரதம் – ஸ்த்ரீ பிரசங்கம் ஸ்ரீ இராமாயணம் – களவு பிரசங்கம் -ஸ்ரீ பாகவதம்)
ஸ்வ க்ருஹம் இன்றிக்கே காலம் கழிக்கையும்
ஸ்வ உதர போஷண அர்த்தமாக்கத் தோட்டம் கழனி பண்ணியே காலம் கழிக்கையும்
ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக்கத் திரு நந்தவனம் செய்து காலம் கழியாமையும்
ஆச்சார்யன் திரு மாளிகை பிரிந்து இருக்கப் பேணாமல் காலம் கழிக்கையும்
ஸ்வ குடும்ப ரஷண அர்த்தமாக காலம் கழிக்கையும்
ஆச்சார்ய குடும்ப  ரஷண அர்த்தமாக காலம் கழியாமையும்
ஸ்வ சரீர ரஷணம் பண்ணியே காலம் கழிக்கையும் -ஆச்சார்யன் திரு மேனியை ரஷியாமல் காலம் கழிக்கையும்
தான் குளித்தே காலம் கழிக்கையும் -ஸ்ரீ  வைஷ்ணவர்களை நீராடப் பண்ணிக் காலம் கழியாமையும்
தான்  பாலும் சோறுமாக வயிறு வளர்த்துக் காலம் கழிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் அமுது செய்யப் பண்ணாமையும்
தான் உடுத்து முடித்து பூசிப் புலற்றிக் காலம் கழிக்கையும்
பகவத் விஷயத்தில் பூசும் சாந்து புனையும் கண்ணி வான் பட்டாடை சாத்திக் காலம் கழியாமையும்
ஹேயக் கூத்துக் கண்டு காலம் கழிக்கையும் -மாயக் கூத்துக் கண்டு காலம் கழியாமையும் -மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா-திருவாய் -8-5-1-
பொல்லாப் புன் கவி சொல்லிப் போது போக்குகையும் -நல்லின் கவி சொல்லி நாள் கடலைக் கழிக்காமையும்
என் நாவில் இன் கவி -திருவாய் -3-9-1-
புன் கவி –  தேவதாந்தரங்களைப்  பாடும் பாடல்கள்(இல்லாத ஒருவனுக்கு இல்லை என்றேன் -மொட்டைத் தலை அரசனைப் பாடிய கதை)
கேவல புண்ய தீர்த்தங்களை தேடிச் சென்று கால் தேய்ந்து காலம் கழிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் தேடிக் காணச் சென்று காலம் கழியாமையும்
கேவலம் புண்ய ஷேத்ரம் தேடித் போய்க் காலம் கழியாமையும் -பகவத் ஷேத்ரம் தேடிச் சென்று காலம் கழியாமையும்
காவ்ய நாடகம் கொண்டு காலம் கழிக்கையும் -பகவத் காவ்யமான ஸ்ரீ ராமாயணம் கொண்டு காலம் கழியாமையும்
பூர்வ பஷமான தர்சன கிரந்தாந்தரங்களிலே காலம் கழிக்கையும்
ஸ்வ சித்தாந்தமான தர்சநத்திலே ஊன்றிக்   காலம் கழியாமையும்(அருளிச் செயலில் பொழுது போக்கும் நம்பிள்ளை போல்)
கேவலம் பகவத் கைங்கர்யத்திலே காலம் கழிக்கையும்  -சதாச்சார்யா கைங்கர்யத்திலே காலம் கழியாமையும் -என்கை-

50-கால ஷேப விரோதியைப் பரிஹரிக்கவே தத்கால சமீசீ நத்வ ஸ்மரண சந்தோஷம் நிலை நிற்கும்-

51-ஆர்ஜன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து தானம் ஏற்று ஆர்ஜிக்கையும்
பிராயச்சித்தம் விதித்து ஆர்ஜிக்கையும்
தீர்த்த பலம் தாரை வார்த்து ஆர்ஜிக்கையும்
காலன் கொண்டு ஆர்ஜிக்கையும்(காலன் கொண்டு மோதிரம் இடுதல்)
ஸ்ரார்த்தம் புஜித்து ஆர்ஜிக்கையும்
சடங்கு (பரிஹாராதிகள்)காட்டி ஆர்ஜிக்கையும்
க்ரஹ நிலை எண்ணி ஆர்ஜிக்கையும்
கிராமண்யம் பண்ணி ஆர்ஜிக்கையும்
பள்ளி வாசிப்பித்து ஆர்ஜிக்கையும்
பாண்டித்தியம் சொல்லி ஆர்ஜிக்கையும்
கவி சொல்லி ஆர்ஜிக்கையும்
களவு கண்டு ஆர்ஜிக்கையும்
வஞ்சித்து ஆர்ஜிக்கையும்
வழி பரித்து ஆர்ஜிக்கையும்
கோளானாய் ஆர்ஜிக்கையும்
கும்பீடு கள்ளனாய் (கள்ள கும்பீடு )ஆர்ஜிக்கையும்
புராண பட்டனாய் ஆர்ஜிக்கையும்
புஸ்தக  சோரனாய் ஆர்ஜிக்கையும்
குண்டலம் தூக்கி (தற் பெருமை பேசி)ஆர்ஜிக்கையும்
குலாதிகம் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஆசாரம் நடத்தி ஆர்ஜிக்கையும்
அஹம் ப்ரஹ்ம என்று பிரமித்து(சூதனாய் கள்வனாகி) ஆர்ஜிக்கையும்
வித்யா பிரபாவம் சொல்லி ஆர்ஜிக்கையும்
வீர வாதம் சொல்லி ஆர்ஜிக்கையும்
முகவச்யம் கொண்டு ஆர்ஜிக்கையும்-மூடரை வஸ்யம் கொண்டு-ஆர்ஜிக்கையும்
மருந்து செய்து ஆர்ஜிக்கையும் மாயம் செய்து ஆர்ஜிக்கையும்
நிதி தர்சனம் கானவிடுவோம் என்று ஆர்ஜிக்கையும்
நீச சேவை பண்ணி ஆர்ஜிக்கையும்
ரசவாதம் சொல்லிப் பகட்டி ஆர்ஜிக்கையும்
ராஜவச்யம் அறிவோம் என்று ஆர்ஜிக்கையும்
விஷய வர்த்தகம் சொல்லி ஆர்ஜிக்கையும் -விஷ வித்யை கற்று ஆர்ஜிக்கையும்
பகவத் விஷயம் சொல்லி ஆர்ஜிக்கையும்
பக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
அருளிச் செயல் சொல்லி ஆர்ஜிக்கையும்
அபிமானம் சொல்லி ஆர்ஜிக்கையும்
விரக்தி பாவித்து ஆர்ஜிக்கையும்
விஸ்வாசம் பாவித்து ஆர்ஜிக்கையும்
அழு கண்ணனாய் ஆர்ஜிக்கையும்
அநந்ய கதித்வம் காட்டி ஆர்ஜிக்கையும்
கைங்கர்யம் பேரிட்டு ஆர்ஜிக்கையும்
காஷாயம் போர்த்து ஆர்ஜிக்கையும்
திரு நந்தவனம் செய்து ஆர்ஜிக்கையும்
திருமாலை பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
திருப்பதியின் பேர் சொல்லி ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரிப்பேன் என்று ஆர்ஜிக்கையும்
சிறப்பு விடுவேன் என்று ஆர்ஜிக்கையும்
பிரபந்தம் சாத்த வேணும் என்று ஆர்ஜிக்கையும்
திருவத்யயன நிமித்தமாக ஆர்ஜிக்கையும்
திருவடி விளக்கி ஆர்ஜிக்கையும்
மெய் வருத்திக் கை செய்து கிருஷி பண்ணி ஆர்ஜிக்கையும்
பிச்சை புக்கிலும் எம்பிரான் திரு நாமமே நச்சி -என்று முஷ்டிபுக்கு (பிச்சை புக்கு)ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவனாய் இருந்து முஷ்டிபுகக் (உஞ்ச வ்ருத்தி)கூசுகையும்
அதில் வயிறு வளர்க்கைக்காக முஷ்டிக் கூடை பிடித்து உலாவி ஆர்ஜிக்கையும்
ஸ்வரூப அநுரூப ஆர்ஜனம் இது என்று முஷ்டி புகுராமையும்
சிஷ்டாசாரம் என்று முஷ்டி புகுராமையும்
முஷ்டி கூடையில் பெற்றது கொண்டு த்ருப்தனாகாமையும் -முஷ்டி சற்றே பரிமாறினார்கள் என்று  குறைவு படுகையும்
முஷ்டி மிகப் பரிமாறினார்கள் என்று கொந்தளிக்கையும்
கைக்குள் அடங்கினதுக்கு மேல் ஆகாது என்று இராமையும்
கேட்கத் திரு நாம உச்சாரணம் பண்ணாமையும்
முஷ்டி புகுரும் போது வாசல்கள் தோறும் திரு நாம உச்சாரணம் பண்ணுகை- மௌஷ்டிக வ்யாவ்ருத்தி ஸூசக விசேஷண  புத்த்யா சிஷ்டாச்சாரம் என்று உச்சரியாமையும்
திரு நாம உச்சாரணம் முஷ்டி யிடுகைக்கு சாதனம் என்று உச்சரிக்கையும்
தேவதாந்தரம் உள்ள க்ருஹங்களில் உலாவுகையும்
க்ருஹ பூஜா தூஷித க்ருஹங்களில் உலாவுகையும்
வெள்ளிக் கிழமையில் மெழுகின க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
திரு நாம உச்சாரணம் கேட்டு உகவாதார் க்ருஹத்தில் முஷ்டி புகுருகையும்
பகவத் பாகவத நிந்தை பண்ணும் நீசருடைய க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
ஸ்ரீ வைஷ்ணவ வ்ருத்தி என்று அறியாமல் ஷேபோக்தி பண்ணுவார் க்ருஹங்களில் முஷ்டி புகுருகையும்
தேவதாந்தர சேஷமான ஊரிலே சென்று முஷ்டி புகுருகையும்
திரு முற்றம் இல்லாத ஊரிலே முஷ்டி புகுருகையும்
திருவாராதனம் இல்லாத கிருஹத்திலே முஷ்டி புகுருகையும்
பிரபன்னனாய் இருந்து வைத்து விசேஷ திவசங்களிலே திருமொழி சொல்லி உலாவுகையும்-ஒழிந்த நாள் அருளிச் செயலில் சொல்லாமல் உலாவுகையும்
ரஹஸ்யங்கள் பிறர் கேட்கச் சொல்லி உலாவுகையும்
அசத் சஹாவாசம் பண்ணி உலாவுகையும்
விஷயாந்தர தர்சனம் பண்ணக் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்த -கண் இன்றி உலவாமையும்
முன்னடி பார்த்து நடந்து உலவாமையும்
தாந்தி (மன அமைதி)யற்று உலாவுகையும்
சதாச்சார்யன் திருக் கையாலே அமுதுபடி கூடை பிடித்து உலாவாமையும்
அமுது படி கூடை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அபிஷேகம் என்று அறியாமல் உலாவுகையும்
த்வய அஷர சங்க்யையான பர்வமற்ற முஷ்டிக் கூடை பிடித்து உலாவுகையும்
திரு விலச்சினை இல்லாதார் கையிலே முஷ்டி  ஏற்கையும்
காதில் பாம்பணி இட்டார் கையில் முஷ்டி ஏற்கையும்
அஹங்கார கிருஹஸ்தர் கையில் முஷ்டி ஏற்கையும்
உலாவிய  அளவில் ஆச்சார்யனுக்கு ஒரு கூறு சமர்ப்பியாது ஒழிகையும்
ஒரு கூறு ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவர்களை உத்தேசித்து வையாது ஒழிகையும்
ஒரு கூறு எம்பெருமானுக்கு என்னும் பிரதிபத்தி இல்லாமல் ஸ்வீகரிக்கையும்
உலாவின போது ஆச்சார்யன் சந்நிதியில் வைத்துத் திருக் கண் சாத்திக் கொடுக்கக் கொண்டு போகாமையும்
உலாவின அமுது படியில் அந்ய திருஷ்டி படாதபடி பேணாது ஒழிகையும்
இப்படி முஷ்டியில் பெற்ற கெரத்தார் மொழியக் கண்ட சம்சாரிகளை அனுவர்த்தித்து ஆர்ஜிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்கி  ஆர்ஜிக்கையும்
ஆச்சார்யன் ஸ்வத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்யத்தை அபஹரித்து ஆர்ஜிக்கையும்
பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுவார் பக்கல் யாசித்து ஆர்ஜிக்கையும் -என்கை-

51-ஆர்ஜன விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விகத்வம் நிலை நிற்கும்

52-க்ருஹ விரோதி –
தேவதாந்திர அபிமான தூஷித பிரதேசங்களில் க்ருஹமாகையும் –
பாஷாண்டிகள் இருக்கும் தெருவில் க்ருஹமாகையும்
சம்சாரிகளில் அலசான க்ருஹமாகையும்
சக்ர லாஞ்சனம் இல்லாத க்ருஹமாகையும்
பிராக்ருதர் என்னது என்று அபிமாநிக்கும் க்ருஹமாகையும்
ஆச்சார்ய அபிமானம் அற்ற க்ருஹமாகையும்
பாகவதருக்குப் புகு வாசல் அல்லாத க்ருஹமாகையும்
பிரகிருதி பந்துக்கள் புகுவது புறப்படுவதான க்ருஹமாகையும்
திருப்பள்ளி யறையும் எம்பெருமானும் இல்லாத க்ருஹமாகையும்
திரு முன்பில் சங்கிருக்கும் க்ருஹமாகையும்
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லாத க்ருஹமாகையும்
திரு நாமப்பையும் (திருமண் பெட்டி)அமுதுபடி கூடையும் இல்லாத கிருஹமாகையும்
ஜப வடம் தொங்கும் க்ருஹமாகையும்
கந்தா தரஷூ சர்மாதி (நாய் நாரி தோல்கள்)பாஷண்டி பரிக்ருஹீதங்கள் இருக்கும் கிருஹமாகையும்
சைவ பௌத்த (கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மான்)ஜைன சார்வாகாதி பாஹ்ய குத்ருஷ்டி மத கிரந்தம் இருக்கும் கிருஹமாகையும்
சுக்ரவார அமாவாஸ்யாதி திவசங்கள் தேடி (அன்று மட்டுமே)மெழுகும் க்ருஹமாகையும்
அந்ய திருஷ்டி படும் அடுகு வளம் (சமையல் பாத்ரம்)உள்ள கிருஹமாகையும்
கண்டவிடம் எங்கும் சாம்பல் சிதறி இருக்கும் க்ருஹமாகையும்
காடிச்சால் இருக்கும் க்ருஹமாகையும்(காழிச்சால் மூலையில் ஈஸான மூலையில் -பழைய சோற்றுப்பானை வைத்திருக்கும் க்ருஹம்)
ரஷை கட்டித் தூங்குகையும்
திருமஞ்சனச்சால் முதலான வற்றில் திரு நாமம் அற்று இருக்கையும்
ஏகும் பாகவத பாத பாம்ஸூ (திருவடித்தூள் -தொண்டரடிப்பொடி)பரிசுத்தம் ஆகாது இருக்கையும்(காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின ஆச்சாரம்)
முற்றத்தில் பாஷாண்டிகள் வந்து போனால் அவ்விடத்து சுத்தி பண்ணாமையும்
தேவதாந்தர சிஹ்னம் உள்ள கன்று காலி கட்டி ஆளுகையும்
சிஷ்டர் தர்சியாத கோவை (சிஷ்டர்கள் இல்லாத கூட்டமாக)படருகையும்
திருத் துழாய் வளராமையும்
அருளிச் செயல் த்வனி அற்று இருக்கையும்-ஆச்சார்யன் எழுந்து அருளாத இடமாகையும் – -என்கை-

52-க்ருக விரோதியைப் பரிஹரிக்கவே சாதாகமான தத் ஸ்பர்சாதி மகா லாபம் நிலை நிற்கும்

53-ஷேத்திர விரோதி
தேவதாந்திர சேஷமான ஷேத்ரமாகையும்(எல்லைக்கல் -உண்டே திருக் கோயில்களுக்கு)
தேவதாந்திர சிஹ்னம் உள்ள ஷேத்ரம் ஆகையும்
பகவத அபிமானம் அற்ற தேசத்தில் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த பகவத் ஷேத்ரம் ஆகையும்
அபஹரித்த அந்ய ஷேத்ரம் ஆகையும்
என்னது -என்று அபிமானித்து இருக்கும் ஷேத்ரம் ஆகையும்
ஆச்சார்யனுக்கு என்று காணப்படாத ஷேத்ரம் ஆகையும்
பகவத் பாகவத ஆச்சார்யர்களுக்கு விநியோகப் படாத ஷேத்ரம் ஆகையும் -என்கை

53-ஷேத்ர விரோதியைப் பரிஹரிக்கவே தல்லாப பாரார்த்யத்வம் நிலை நிற்கும்

54-போஜன விரோதி –
ஸ்ரீ வைஷ்ணவர் ஆதரத்தோடு பிரசாதம் இடப் புக்கால் -பிரசாதம் சூடுமவர் ஆகார சௌஷ்டவ ரச சௌஷ்டவ நிரூபணம் பண்ணுகையும்
பாகவத பிரசாதம் என்னும் கௌரவ நிரூபணம் பண்ணாமையும்
இடுகிற  பரிவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும்
பாக பேதம் பண்ணித் தான் சுவடு பட புஜிக்கையும்
நான் இடுகிறேன் என்று அபிமான தூஷிதம் ஆக்குகையும்
தம்முடைய பதார்த்தம் தாமே அங்கீ கரித்து அருளுகிறார் என்று இராமையும்
அமுது செய்கிறவர் கலத்தைக் கடைக் கணித்து  ஏற்றத் தாழ்வுகள் நினைக்கையும்
எனக்கு இப்படி இடுவதே -என்று குபிதராகையும்
கோபத்திலே -பரிமாரினவற்றை உதறி எழுந்து இருக்கையும்
இடுகிறவர் தாம்- உள்ளே இருக்கையும் -இவரைப் புறம்பே வைக்கையும்
தாம் முற்படவே புஜிக்கையும் இவருக்கு பிற்பாடு இடுகையும்
தாம் முற்பட எழுந்து இருக்கையும்
தாம் உள்ளே இருந்து என்னைப் புறம்பே வைத்தார் என்று கன்றுகையும்
தாம் முற்படவே புஜித்து நமக்குப் பிற்பட இட்டார் என்று பிற்காலிக்கையும்
மதியாமல் நமக்கு முற்பட எழுந்து இருந்தார் என்று நினைக்கையும்
இடுகிறவர் உபசாரம் சொல்ல வேண்டினார்க்குச் சொல்லாமையும்
வேண்டாதார்க்கு ஸ்வ கர்த்ருத்வ ஸூசகமான உபசார உக்தி சொல்லுகையும்
இவர் உபசார உக்தியும் இன்றி இருந்தார் என்று வெறுக்கையும்
கனக்க நம்மை உபசரித்தார் என்று இறுமாக்கையும்
அடியேனைக் குறித்து இத்தனை வேணுமோ என்று இராமையும்
திரு மாளிகையில் அவர் முற்பட இவர் அமுது செய்வதற்கு முன்பே தீர்த்தம் அமுது செய்கையும்
தம்முடைய சேஷத்வத்தை கொடுக்கையும்
இவர் அவர் சொல்லுவதற்கு முன்பே எடுத்து அமுது செய்கையும்
அமுது செய்த சேஷம் என்று பிற்காலிக்கையும்
ஆச்சார்ய அபிமான விசேஷ ஜ்ஞானம் அறியாமல் ரூப நாம மாத்ரம் கொண்டு அந்யோந்யம் பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
அறிந்த பின்பு பாகவத பிரசாதம் ஸ்வீகரியாது ஒழிகையும்
எச்சில் கையாலே அந்யோந்யம் பிரசாதம் ஏற்கையும்
இரந்து பிரசாதப் படாதே நலிய அள்ளுகையும்
போனகம் செய்த சேடம் தருவரேல் என்று அலாப்ய லாபம் என்று அறியாமையும்(பாண்ட சேஷம் பாத்ர சேஷம் இரண்டுமே உண்டு -போஜன இலை சேஷம் வேறே)
ஸ்ரீ வைஷ்ணவர் தாமே பிரசாதக் கலம் எடுக்கப் பார்த்து இருக்கையும்
கையில் நின்றும் பறித்து எடாமையும்
தாமும் தேவியாரும் எடாதே அடியாள் சம்சாரிகள் கையிலே எடுப்பிக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை என்று மதியாதே புசித்த கலத்தை வைத்து எழுந்து இருக்கையும்
அவர் வேண்டாம் என்னிலும் வலிய எடாமையும்
திரு மாளிகையில் பற்று உதிராதபடி பேணாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முன்னே முந்திக் கொண்டு திருக் கை கழுவுகையும்
பிற்பட்டத்து என்று தச் சேஷ ஜலம் என்று பாகவத சேஷத்துக்கு அசலாகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்த இடங்களை சுத்தி பண்ணுகிறோம் என்று ப்ரோஷிக்கையும்
பஸ்மம் இட்டு ப்ரோஷிக்கையும்
அமுது செய்த இடங்களை மிதித்தால் அபசாரம் என்று திருக்கைத் தொடை கொள்ளாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பட சுருளமுது கொடாமல் தாம் முற்பட ஸ்வீகரிக்கையும்
தன்னுடைய சேஷமான மூன்றாவது இடுகையும்
வந்தவர் ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகையில் குறை கண்டு போகையும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு உள்ளம் கன்றிப் போகாத படிக்கு அனுவர்த்தியாமையும் –என்கை-

54-போஜன விரோதியை பரிஹரிக்கவே பர்தாத்ரு போக்த்ரு ஸ்வரூப அனுரூபத்வம் நிலை நிற்கும்

55-போஜ்ய விரோதி
சம்சாரிகள் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
பிரகிருதி பாந்தவத்தை இட்டு ப்ராக்ருதர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஷூத்ர புருஷார்த்திகள் விட்ட சிறப்பில் ஸ்வீகரிக்கும் பகவத் பிரசாதமும்
திவ்ய தேசங்களில் பிரபாவத்தை இட்டு ஸ்வீகரியாது ஒழிகையும்
கேவல பகவத் பக்தர் க்ருஹங்களில் உண்ணும் சோறும்
ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளில் ஸ்வயம் பாக பார்க்கச் சோறும்
இட்டுக் கணக்கு என்னும் சோறும்
க்யாதிக்கு இடும் சோறும்
மணச் சோறும்
பிணச் சோறும்
விலைச் சோறும்
எச்சில் சோறும்
மடி தடவும் சோறும்
சங்கல்ப்பித்து இடும் சோறும்
அபிமான தூஷித சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்டமாய் மசப் பரலிட்ட சோறும்
அந்ய ஸ்ப்ருஷ்ட பாண்டங்களிலே  இட்ட சோறும்
அந்ய ஸ்மரண அசத் கீர்த்தர் பசித்த சோறும்
பகவத் ஸ்மாரணாதி திவ்ய பிரபன்ன பரர் சமையாத சோறும்
பகவத் பாகவதர்களை உத்தேசியாமல்   ஆத்ம காரணத்தால் பசித்த சோறும்
திருநாமம் அற்ற பாண்டங்களில் நின்றும் இடும் சோறும்
பகவன் நிவேதிதம் இல்லாத சோறும்
சாமான்யர் நிவேதித்ததும் அந்ய திருஷ்டி பரிஹரியாத பிரசாதமும்
சேஷ சேஷாச நாதி ஸூரிகளையும் ஆழ்வார்களையும் அமுது செய்யப் பண்ணாதே கேவல பகவன் நிவேதிதமும்
ஜாதி துஷ்டமான அன்னமும்
கிருமி கீட கேசாதி நிமித்த துஷ்டமான அன்னமும்
அபாகவதர் பங்க்தியில் புஜிக்கும் அன்னமும்
அசத் கீர்த்தனம் பண்ணி புஜிக்கும் அன்னமும்
த்வய அனுசந்தானத்துடன் பிரசாதப் படாத அன்னமும்
பதார்த்தங்களில் போகயதா புத்தியில் புஜ்க்கும் அன்னமும்
பகவத் பிரசாத ஸ்வீகாரப் பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பரமாத்மா சமாராதன பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
சமாராதன சமாப்தி பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பாகவத பிரசாத ச்வீகார பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
கேவலம் பஞ்ச வ்ருத்தி பிராண சேஷம் என்னும் துஷ் பிரதிபத்தியாலே புஜிக்கும் அன்னமும்
வேதகப் பொன்னான விலஷண தர்சனாதிகளில் பாவனா பிரதிபத்தி இன்றி புஜிக்கும் அன்னமும்
பங்க்தி பாவனர் ஆனவர்களைப் பெற்றும் உள் கலந்து பரிமாற சங்கித்து புஜிக்கும் அன்னமும்
ஸ்வ க்ருஹத்தில் நியத அன்னமும்
ஆச்சார்ய துல்யருடைய திரு மாளிகையில் நியத அன்னமும் –என்கை-

55-போஜ்ய விரோதியைப் பரிஹரிக்கவே சத்வாபிவ்ருத்தி நிலை நிற்கும்

56-தீர்த்த விரோதி -(திருமஞ்சன-திருவாராதன -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்த -அருளிச் செயலில் கோஷ்ட்டி ஸ்ரீ பாத தீர்த்தம் -நான்கும் உண்டு -தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி –)
பிரயோஜனாந்தர பரர்களுடைய க்ருஹங்களில் எம்பெருமானை தீர்த்தம் கொள்ளுகையும்(அநந்ய ப்ரயோஜனர் க்ரஹங்களிலேயே கொள்ள வேண்டும்)
சாதநாந்தரர் உடைய முன்னல் தீர்த்தம் கொள்ளுகையும்
மந்த்ராந்தர பரருடைய முன்னில் தீர்த்தம் கொள்ளுகையும்
திவ்ய தேசங்களில் நிரூபித்து தீர்த்தம் கொள்ளுகையும்
ஒழிந்த இடங்களில் நிரூபியாமல் தீர்த்தம் கொள்ளுகையும்
சம்சாரிகளுடன் கலந்து நின்று தீர்த்தம் கொள்ளுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முற்பாடனாய் தீர்த்தம் கொள்ளுகையும்-கிழக்கு திசையா என்று ஆராய்ந்து தீர்த்த கொள்ளுகையும்-
தீர்த்தம் கொண்டு கண்ணிலும் தலையிலும் ஒற்றிக் கொள்ளாமையும்
தீர்த்தம் கொண்டு கர ப்ரஷராலன ஆசமனங்களில் சுத்தி தேடுகையும்
ஆச்சார்ய பகவத் கைங்கர்யம் பண்ணும் இடத்து தீர்த்தம் பிரசாதப்பட்ட கை கழுவாமையும்
தீர்த்தம் சிந்துகையும்
அவிசேஷஜ்ஞர் போலத் தலையில் தெளித்துக் கொள்ளுகையும்
அந்ய சம்பாஷணத்துடன் கொள்ளுகையும்
சம்சாரிகள் கண்ட தீர்த்தம் கொள்ளுகையும்
பகவத் தீர்த்தத்திலும் ஸ்ரீ பாத தீர்த்தம் அதிகம் என்று அறியாமையும்
ரூப நாமம் கொண்டு கொள்ளும் தீர்த்தம் அறியாமையும்
உச்சாரண விசேஷம் கொண்டு ஒருக்கால் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
ஆச்சார்ய அபிமானம் கொண்டு பலகாலும் ஸ்வீகரிக்கும் தீர்த்தம் அறியாமையும்
சதாச்சார்ய தீர்த்தமே திரு முன் வைத்து சதா சேவ்வியம் என்னும் சிஷ்டாசாரம் அறியாமையும்
வேதகப் பொன்னான விலஷண தீர்த்தம் விசேஷித்துப் பெற வேணும் என்னும் விசேஷ ஜ்ஞானம் இல்லாமையும்
கேவல பிரபாவ மாத்ரம் கொண்டு பேணாமல் கொள்ளுகையும்
ஸ்வரூபம் அழிந்தது என்று அஞ்சாமல் கொள்ளுமதும்
முற்பாட்டுக்கு முந்திக் கொடுக்குமதும்
பிற்பட்டது என்று கன்றிக் கொடுக்குமதும் -உஜ்ஜீவனமாக மாட்டாது என்று அறியாமையும்
பரம பாவனமான ஸ்ரீ பாத தீர்த்தத்திலே தன் பாத தோயம் கலந்தது என்று சங்கித்து புறக் கணிக்கையும்
பிரபன்னனாய் இருந்து பிராயச் சித்த தீர்த்தம் கொள்ளுகையும்
சிவாதி ஸ்பர்சம் நேர்கையில் தத் பிராயச் சித்தமாக ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமையும்
கேவல பாவனத்வ பிரதிபத்தியே நடந்து கொள்ளுகையும்
போக்யத்வ பிரதிபத்தி நடவாது ஒழிகையும்(கேவல பாவனத்வம் என்றும் மட்டுமே கொண்டு இல்லாமல் போக்யம் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டுமே)
ஒரு நாள் கொண்டது அமையும் என்று இருக்கையும் -ஸ்தன்ய பானம் பண்ணாவிடில் நாக்கொட்டும்படியான ஸ்தன்ய அவஸ்தை பிறந்து கொள்ளாமையும்
சதாச்சார்யன் விமல சரம தேஹி என்று அறியாது இழக்கையும்
ஆளிட்டுத் தீர்த்தம் கொள்ளுகையும்
தானே அள்ளிக் கொள்ளுகையும்
இரங்கிப் பிரசாதிக்கும் அத்தனையும் இரப்புடன் இல்லாமையும்
த்வயைக நிஷ்டனாய்க் கொடுத்துக் கொள்ளாமையும் -என்கை-

56-தீர்த்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் ஸ்வரூப உஜ்ஜீவனத்வம் நிலை நிற்கும்

57-பிரசாத விரோதி –
பிராக்ருத கிராமங்களில் எம்பெருமான் பிரசாதம் என்று ஸ்வீகரிக்கையும்
திவ்ய தேசங்களில் கோயிலில் பிரசாதித்த போதே பிரசாதப் படக் கூசுகையும்
நிரூபித்து பிரசாத ஸ்வீகாரம் பண்ணுகையும்
உபவாசாதி நிமித்தம் பிரசாதத்தை உபேஷிக்கையும்
அப்போது ஸூத்த ஆசமன அபேஷை பிறக்கையும்
பாவனமான பாகவத பிரசாதத்தில் உச்சிஷ்ட பிரதிபத்தி நடக்கையும்
திரளில் ஆச்சார்ய பிரசாதத்தை பிரசாதப் படக் கூசுகையும்
தத் ஸ்பர்சத்தில் அஸூத்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
தத் பிரசாத ஸ்வீகாரத்தில் நாடொறும் வெறும் பசியனாய் இராமையும்
சுவடு பட்டிரா விடில் போக்யத்வ -பாக்யத்வ-பிரதிபத்தி குலைகையும்
ஆச்சார்யன் இரங்கி பிரசாதிக்கப் பெறாமையும்
அமுது செய்யா நிற்க பிரசாதப்படுகையும்
அமுது செய்யும் தனையும் பார்த்து நின்று பிரசாதப் படாது ஒழிகையும்
அமுது செய்து அருளின பிரசாதத்தைத் தானே அள்ளிக் கொள்ளுகையும்
அனுமதி இன்றி பிரசாதக் கலத்தில் ஸூடுகையும்
அமுது செய்யும் தளிகையை எச்சில் படுத்துகையும்
ச ப்ரஹ்மசாரிகளுக்குப் பகுந்து இடாமல் பிரசாதப் படுகையும்
பிரசாதக் கலத்தை சம்சாரி நாஸ்திக ஸ்வாதிகளுக்கு இடுகையும்
சிஷ்டாச்சார சித்த தத் பிரசாத ஸ்வீகார பிரகாரம் அறியாமையும்
பிரசாதத்தைப் பேணாமல் சிந்துதல் மிதித்தல் செய்கையும் -என்கை –

57-பிரசாத விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ பாவநத்வ பிரதிபத்தி நிலை நிற்கும்

58-உக்தி (பேச்சு)விரோதி
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்தால் ஏன் என்கையும் சம்சாரிகள் அழைத்தால் அடியேன் என்கையும்
அநவதாநத்தாலே  (கவனக் குறையாலே)மாறாடின போது அனுதாபம் அற்று இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து- விண்ணப்பம் அருளிச் செய்து அருள -திருக் கை விளக்கி அருள-சுருளமுது அமுது செய்து அருள -கண் வளர்ந்து அருள இத்யாதி -ப்ரபன்ன உக்திகளைப் பேணி விண்ணப்பம் செய்யாமையும்
பிராக்ருதரைக் குறித்து வார்த்தை சொல்லு -இரு -எண்ணெய்  இடு -உறங்கு இத்யாதி
சாமான்ய உக்திகளைச் சொல்லாதே அந்த பூஜ்ய உக்திகளைச் சொல்லுகையும்
தீர்த்தமாட -பிரசாதப்பட -அமுதுபடி -கறி யமுது -அடிசில் -பிரசாதம் -தீர்த்தம்- திரு மஞ்சனம் -இலை பிரசாதம் இலை அமுது -மூன்றாவது முதலான உக்தி விசேஷம் அறிந்து சொல்லாமையும்
குளிக்க -உண்ண- தின்ன -அரிசி சோறு- கறி -தண்ணீர் வெற்றிலை- சுண்ணாம்பு முதலான
ப்ராக்ருத உக்திகளைச் சொல்லுகையும்
திருப்பதி -திருச் சோலை -திருப் பொய்கை -திருக் கோபுரம் -திரு மதிள்- திரு வீதி -திரு மாளிகை- திரு வாசல்- திரு மண்டபம் –திருச் சுற்று – திரு வோலக்கம் -திருப் பள்ளி அறை- திருப் பள்ளிக் கட்டில்- திரு மேற்கட்டு -திருத் திரை- திருக் கொற்றொலியல்-(துளுவம் துடை துணி )-திரு வெண் சாமரம் -திருவால வட்டம் -திருவடி நிலை– திருப் படிகம் திரு மஞ்சனக் குடம் -திருப் பரிகரம் -திரு வந்திக் காப்பு -திரு விளக்கு –திருமாலை -திரு வாபரணம் -திருப் பள்ளித் தாமம் -திருவடி நிலைகள் தொடங்கி திரு அபிஷேகம் திருவழகு எரிந்த திரு மேனி திரு நாள் முதலானவற்றை திரு இல்லாத் தேவரான தேவதாந்தரங்களுக்குச் சொல்லுகையும்
ஸ்ரீ வைஷ்ணவனே இருந்து வைத்து கோயிலை ஸ்ரீ ரெங்கம் என்கையும்- தும்மித் திருவரங்கம் என்னாது ஒழிகையும்
மற்றொரு திருப்பதிகளின் பேர் சொல்லுகையும்
திருமலையை வெறும் வேங்கடம் என்கையும்
பெருமாள் கோயிலை காஞ்சீபுரம் என்கையும்
திரு வநந்த புரத்தை அனந்த சயனம் என்கையும்

(வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

பெருமாளை ஸ்ரீ ராமன் என்கையும்
நாச்சியாரை சீதை என்று சொல்லுகையும்
இளைய  பெருமாளை லஷ்மணன் என்கையும்
கிருஷ்ணனை ஸ்ரீ கிருஷ்ணன் என்கையும்(பிறந்தவாறும் -பிறந்த மாயா -ஒருத்தி மகனாய் பிறந்து -நம் கண்ணன் அன்றோ)
அழகிய சிங்கரை ஸ்ரீ ந்ருசிம்ஹன் என்கையும்
ஞானப் பிரானை ஸ்ரீ வராஹன் என்கையும்
ஸ்ரீ குஹப் பெருமாளை குஹன் என்கையும்
திருவடியை ஹனுமான் என்கையும்
மகாராஜரை ஸூக்ரீவன் என்கையும்
பெரிய உடையாரை ஜடாயு என்கையும்
திருத் துழாயை துளசி என்கையும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்- ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -திருவாழி ஆழ்வான் -ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் –ஸ்ரீ பரத ஆழ்வான் -சத்ருக்ன ஆழ்வான் -கோயில் ஆழ்வான்- நம் ஆழ்வார் என்று சொல்லாமையும்
தீர்த்த நாயனாரை சாளக்ராமம் என்கையும்
ஸ்ரீ மத் த்வாராபதி நாயனார் -சேனை முதலியார் -திரு வாசல் காக்கும் முதலிகள்- நம்பி மூத்த பிரான் -ஸ்ரீ மாலா காரார் -ஸ்ரீ விதுரர் -ஸ்ரீ நந்த கோபர் இப்படிப் பூர்வர்கள் அருளிச் செய்யும் பூஜ்ய உக்தி விபாகம் அறியாமையும்
பூர்வர்கள் உச்சரியாத பகவன் நாமங்கள் உச்சரிக்கையும்
பூர்வர்கள் விசேஷித்து உச்சரிக்கும் சதாச்சார்ய நாம உச்சாரணம் பண்ணாமையும்
ஏகாந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை கிராம குல ஜன்ம நிரூபணம் பண்ணி வ்யவஹரிக்கையும்(பெரிய திருவடி -சாண்டில்யை இடமும் அபசாரப்பட்ட வ்ருத்தாந்தம்)
திருவடி சேர்ந்தாரை செத்தார் என்கையும்
பரம பதத்துக்குப் போனார் என்ன வேண்டுமவரை திருவடி சேர்ந்தார் என்கையும்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் எனத் தக்காரை பரம பதத்துக்குப் போனார் என்கையும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டரை ஆச்சார்யன் திருவடி யடைந்தார் என்று சொல்லாமையும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளம் கன்றச் சொல்லுகையும்
கேட்டவர்கள் நெஞ்சு அதிர வார்த்தை சொல்லுகையும்
ஸ்வ தோஷம் சொல்லாமையும்
சம்சாரிகள் -பிறர்-குற்றம் சொல்லுகையும்
ஸ்வ குணம் சொல்லுகையும்
பகவத் பாகவத திவ்ய பிரபாவம் சொல்லாமையும்
கேவலம் ஈஸ்வர வைபவம் சொல்லுகையும் -ஆச்சார்ய வைபவம் சொல்லாமையும்
விசேஷஜ்ஞனாய் இருந்து ஆழ்வார்கள் பாசுரங்களையும் -ஆச்சார்யர்கள் பாசுரங்களையும் சொல்லாமையும்-வறை முறுகுதலான ஆர்ஷ வசனங்களை (ரிஷி வாசகங்களைச்) சொல்லுகையும்-
ஆச்சார்யன் உபதேசித்த குரு பரம்பரையும் -த்வயமும் ஒழிந்த மந்த்ராந்தர சப்த உச்சாரணம் பண்ணுகையும்
சதா ஜப்தவ்யத்தை விட்டு இருக்கையும் -என்கை –

58-உக்தி விரோதியைப் பரிஹரிக்கவே சம்சாரி வ்யாவ்ருத்தி நிலை நிற்கும்

59-ஸங்க விரோதி -யாவது
தேஹாத்ம அபிமானிகளோடு ஸம்ஸர்கிக்கையும்
விஷய பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஹங்கார க்ரஸ்தருடன் ஸம்ஸர்கிக்கையும்
தத் வர்த்தகருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர ஹிம்ஸா பர வஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாதகிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பர நிந்தா பரவஸருடன் ஸம்ஸர்கிக்கையும்
பர குண அஸஹிஷ்ணுக்களுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸ்வர்க்க காமனுடன் ஸம்ஸர்கிக்கையும்
ஸூஷ்க கர்மருடன் ஸம்ஸர்கிக்கையும்
ப்ரம ருத்ராதி தேவதாந்த்ர பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பவ்த்த மாயாவாதிகளான பாஷண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
திரு விலச்சினை திரு நாமம் இல்லாத முரரருடன் ஸம்ஸர்கிக்கையும்
முண்டிகளுடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
பாகவத அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
அஸஹ்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
ஆச்சார்ய அபசார பரருடன் ஸம்ஸர்கிக்கையும்
மந்த்ராந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
த்வய ஏக நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
உபயாந்தர நிஷ்டருடன் ஸம்ஸர்கிக்கையும்
பகவத் உபாய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
ஞான வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
பக்தி வர்த்தகருடன் ஸம் ஸரிக்காமையும்
சரம அதிகாரிகளான ஆச்சார்ய நிஷ்டருடன் ஸம் ஸரிக்காமையும்
தேஹாதிகளிலே சங்கம் நடக்கையும்
சேக்ஷத்வாதிகளிலே சங்கம் நடவாமையும்
தத் இதர விஷயாதிகளிலே சங்கம் நடக்கையும்
ததீய சங்கம் நடவாமையும்
ஷூத்ர ப்ரயோஜந்தரங்களிலே சங்கம் நடக்கையும்
பரம ப்ரோஜனமான பகவத் பாகவத கைங்கர்யங்களிலே சங்கம் நடவாமையும்
ஆச்சார்ய கைங்கர்யங்களிலே அநவதிக சங்கம் நடவாமையும் –என்கை

59-சங்க விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிலை நிற்கும்

60-சம்பந்த விரோதி
தேக சம்பந்திகள் பக்கல் பந்தித்வ பிரதிபத்தி நடக்கையும்
பகவத் சம்பந்திகள் பக்கல் பந்துத்வம் நடவாமையும்
பிரபன்னனாய் இருந்து ப்ராக்ருத பந்துக்கள் பக்கல் சம்பந்திக்கையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம்பந்தம் செய்யாமையும்
கேவல தேக உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இருக்கையும்
ஞான உத்பாதகரை மாதா பிதாக்கள் என்று இராமையும்
ஒரு மாம்ச பிண்டத்திலே பிறந்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இருக்கையும்
ஒரு ஆச்சார்யன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களை உடன் பிறந்தவர்கள் என்று இராமையும்
இதர சம்பந்தம் ஔ பாதிகம் என்று இராமையும் -பகவத் சம்பந்தம் நிருபாதிகம் என்று இராமையும்
அசித் சம்பந்தம் பகவத் பிரசாத நிவர்த்யம் அநித்தியம் என்று அறியாமையும்
அயன சம்பந்தம் அநிவர்த்யம் நித்யம் என்று அறியாமையும்
அசித் சம்பந்தம் ஸ்வரூப ஹாநி கரம் என்று இராமையும் -அயன சம்பந்தம் ஸ்வரூப உஜ்ஜீவன கரம் என்று இராமையும்
தச் சரீர பூத நார சம்பந்தம் ததீய பிரயுக்தம் என்று இராமையும்
சர்வ சரீரியான நாராயண சம்பந்தம் சத்தா பிரயுக்தம் என்று இராமையும்
தத் சரீர சாமான்யம் கொண்டு சம்சாரிகளுடன் சம்பந்தம் உண்டு என்று இருக்கையும்
பரி ஸூத்த அந்த கரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் நித்ய சம்பந்தம் உண்டு என்று இராமையும்
பகவத் சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும்  பொது என்று இராமையும்
ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேது என்று இராமையும்
அது சத்தா பிரயுக்தம் என்று அறியாதே உபதேச நிபந்தனம் என்று இருக்கையும் –என்கை –

60-சம்பந்த விரோதியைப் பரிஹரிக்கவே நிருபாதிக சம்பந்த ஜ்ஞானம் நிலை நிற்கும் –

61-ஸ்நேக விரோதி
பிரகிருதி பந்துக்கள் பக்கம் ஸ்நேஹம் நடக்கையும்
ஆத்ம பந்துக்கள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் விஷயத்தில் பக்தி இன்றியும் இதர லௌகிகமான விஷயங்களில் பற்றும் உண்டாகி இருக்கையும்-பகவத் விஷயத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும் இதர விஷயங்களில் ஸ்நேஹம் மிக்கு இருக்கையும்
ஸ்வ தேஹத்தில் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யன் விக்ரகத்தில் ஸ்நேஹம் நடவாமையும்
ஸ்வ புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்ய புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-

ஆச்சார்யன் திரு மேனியை தன் உடல் நலனை விட அக்கரை உடன் நோக்காமையும்
பிராக்ருத பதார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும்
திரு மந்த்ரார்த்த ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும்-தான் இருந்த தேசத்திலே ஸ்நேஹம் நடக்கையும் ஆச்சார்யர் இருக்கும் தேசத்திலே ஸ்நேஹம் நடவாமையும்-
தேக யாத்ரையில் ஸ்நேஹம் நடக்கையும் -ஆத்ம யாத்ரையில் ஸ்நேஹம் நடவாமையும்
பகவத் பாகவத விரோதிகளாய் இருந்துள்ள புத்ர தார க்ருஹாதிகளில் சாஸ்திர நீத ஸ்நேஹம் ஒழிய காமார்த்தமாகப் பண்ணுகிற ஸ்நேஹமும்
அர்ச்சாவதாரத்தில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
அர்ச்சா ஸ்தல பிரதானமான கோயில் திரு மலைகளில் ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ஸ்நேஹம் நடக்கையும்
மந்திர ரத்ன ஸ்நேஹம் அற்று இருக்கையும்
மந்த்ராந்தர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடக்கையும் பெரிய திரு மந்திர ப்ரதர் பக்கல் ஸ்நேஹம் நடவாமையும் -என்கை –

(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?)

61-சிநேக விரோதியைப் பரிஹரிக்கவே தத் ப்ராப்தி விஷய லாபம் நிலை நிற்கும்

62-பக்தி விரோதி -(ஸ்நேஹம் -பூர்வ -அநு த்யானம் பக்தி-ஸ்நேஹமும் பக்தியும் காரண கார்ய பாவம் என்றுமாம்)
பக்தியை சாதனம் என்று இருக்கையும்
பக்தி யுபக்கிரம பூதமான ஸ்மரண சங்கீர்த்த நாதிகளும் (ஆதி -வந்தன ப்ரதக்ஷிணம் போல்வன)சாத்திய கோட்யந்தர் கதம்  என்று அறியாமையும்(இவையும் அவன் இன்னருளாலேயே வந்தவை என்ற நினைவு வேண்டுமே)
இதர பக்தி கலக்கையும் அநந்ய பக்தி கலவாமையும்
பிரபன்னனுக்கு சாத்திய பக்தி பிரபத்திகள்   இரண்டும் சமம் என்று இருக்கையும்(அவன் அருளாலே கிடைத்த பக்தி -ஸாத்ய பக்தி -அவன் உபாயமாக இருந்து ப்ராப்யமாக கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தியை அருளுவார் அன்றோ -இதுவே சாத்ய பக்தி -பிரபத்தி -காரணம் -சாத்திய பக்தி கார்யம் -கைங்கர்ய பிரார்த்தனை -முதல் நிலை -சாத்திய பக்தி -நடு நிலை -கைங்கர்யம் -இறுதி நிலை -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பரார்த்த கைங்கர்யம் -அவன் ஆனந்தத்துக்காக என்ற எண்ணம் வேண்டும் -சாதன பக்தி உபாசகனுக்கு-முற்றி போக்யம் அறிந்து ஸ்வயம் பக்தி நிஷ்டனாகலாமே -நிலைப்பாட்டில் மாறுதல் அல்ல -ஏறி வந்த வழிகள் வேறே தானே -)
பிரபன்னனுக்கு சாத்திய பக்தியில் பிரபத்தி நழுவி நிற்கும் என்று அறியாமையும்
பிரபத்தி நிஷ்டர் அபேஷிக்கும் பக்தி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
பகவத் கிருபையாலே ஆழ்வார்கள் லபித்த பக்தி (கைங்கர்யத்துக்கு)பூர்வ ஷண விருத்தியான சத்தா பிரயுக்த பத்தி என்று  அறியாமையும்
உக்த த்ரவ்யங்களில்  ஓன்று குறையாது ஒழிந்தால் பகவத் கிருபையை நினையாதே தம்முடைய த்ரவ்ய பூர்த்தியாலே இறே அவன் பிரசன்னனாவது என்று நினைக்கையும்
பக்தி உத்பத்தியும் பக்தி விவ்ருத்தியும் பரம பக்தியும் தயா சித்தம் என்று அறியாமையும்(என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித்தொழும் மனமும் தந்தாய் -இசைவித்து தாளிணைக் கீழ் வாழ்வித்தாய் -அதுவும் அவனது இன்னருளே-)
பக்தி பாக விசேஷ கார்யமான அநந்ய உபாயத்வ ஹானியாலே ஸ்வரூப ஹானி வாராது என்று அறியாமையும்
பக்தி தசையில் பண்ணும் மங்களா சாசனமே ஸ்வரூப அனுரூபம் என்று அறியாமையும் –என்கை –

62-பக்தி விரோதியைப் பரிஹரிக்கவே கைங்கர்ய மங்களா சாசனம் நிலை நிற்கும்

63-தாஸ்ய விரோதி -(தாஸ பூத ஸ்வத ஸர்வே -இயற்கையிலே அனைவருக்கும் தாஸ்யம் உண்டே-ஞாத்ருத்வம் -அறிந்த உடன் போக்த்ருத்வம்-ஸ்வதந்த்ரமும் கூடவே வரும் -)
ஸ்வ தந்த்ரனாய் இறுமாக்கையும்
அந்ய சேஷ பூதனாய் அனர்த்தப் படுகையும்
அதில் வர்ண நிபந்தனமாக தேவதாந்திர சேஷம் என்று இருக்கையும்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உத்பத்தி  நிபந்தனமாக மாதா பித்ரு சேஷம் என்று இருக்கையும்
கர்ம நிபந்தனமாக பர்த்ரு சேஷம் என்று இருக்கையும்
ஷூத்ர பிரயோஜனத்தை நச்சி ஒரு ப்ராக்ருதனுக்கு அடிமை புக்கு இருக்கையும்
ஷூத்ர விஷயத்தின் காலிலே விழுந்து சுணை கெடுகையும்
சர்வ வித பந்துவாய் சர்வ ரஷகனான சர்வ சேஷிக்கே சேஷம் என்று அறியாமையும்

(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே கோலத் திரு மா மகளோடு )
சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆகாமையும்
தத் இஷ்ட விநியோகம் ததீய சேஷத்வ பர்யந்தம் என்று அறியாமையும்
ஸ்வரூப க்ருத தாஸ்யமே குண க்ருத தாஸ்யம் விட பிரதானம் என்று அறியாமையும்
சேஷியினுடைய இஷ்ட அநிஷ்டமே தனக்கு இஷ்ட அநிஷ்டம் என்று அறியாமையும்
ஸ்வ விநாசத்துக்கு அஞ்சி சேஷிக்கு அதிசயத்தை விளையாது ஒழிகையும்
அவன் சேஷத்வத்தை அழிக்கும் போது பிற்காலிக்கையும்

போகத்தில் தட்டு மாறும் சீலம் -ஆட் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மா மாயன் -அவன் உகப்பே முக்கியம் -ஸ்வரூப நாஸம் பார்க்காமல் இருக்க வேண்டும் -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே –
சேஷ வ்ருத்தியில் அந்வயியாது ஒழிகையும் வ்ருத்தி விரோதி  நடக்கையும்
ஆச்சார்ய சேஷத்வம் ஔ பாதிகம் என்று நினைக்கையும்
நித்ய சேஷி யானவனுக்கு நித்ய சேஷம் என்று உணராமையும்

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -ஆத்மாவும் சேஷத்வமும் நித்யம் -நித்ய ஸூரிகளைப் போல் –சம்பந்த ஞானமும் தான் மறந்து உணர்கிறோம்
தேவதாந்த்ரங்களையும் பித்ராதிகளையும் குறித்து தாஸ்யத்தை செய்கையும் –என்கை –

63-தாஸ்ய விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி நித்ய பிரதி சம்பந்தி ஜ்ஞானம் நிலை நிற்கும்

64-சக்ய விரோதி
தண்ணியரான சம்சாரிகளுடன் சக்யம் கொள்ளுகையும்
பெரியோரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் சம பிரதிபத்தியால் சக்யம் கொள்ளுகையும்
ஒருவருக்கு ஒருவர் சக்யம் கொண்டு உடன் கலந்து குறை காண்கையும்
ததீய புத்தியால் சர்வ ஜன மித்திரன் ஆகாமையும்
தச் சரீர பூதர் இடம் சாத்ரவம் கொண்டாடுகையும்(ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் -உணர வேண்டுமே)
ஸ்ரீ வைஷ்ணவர் உடன் கலந்து மடி தடவுகையும்
உபகார  பிரத்யுபகாரமாக ஸ்நேஹிக்கையும்(மடி தடவாத சோறும் -சுருள் மாறாது பூ -சுண்ணாம்பு கலசாத சந்தனம்-பிரதியுபகாரம் எதிர்பாராத -)
குற்றம் நற்றமாக தோற்றாமையும்
உகந்தாரை உகந்து பொடிந்தாரை பொடிந்து இருக்கையும்
ஆச்சார்ய விரோதிகளுடன் உறவு கொண்டாடுகையும்
ஆச்சார்ய பக்தர்களுடன் ஒரு மிடறாய் பரிமாறாமையும்-என்கை-

64-சக்ய விரோதியைப் பரிஹரிக்கவே சர்வ ஜன அனுகூல்ய ஜ்ஞானம் நிலை நிற்கும்

65-சமர்ப்பண விரோதி
அநாதி காலமே பிடித்து தத் ததீய விஷயத்தில் ஆத்மாத்மீய சமர்ப்பணம் பண்ண வொட்டாத அஹம் மமதையும்(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ உன்னுடைமையும் நீயே -மாம் மதீயஞ்ச நிகலாம் சேதன சேதநாஞ்ச)
ஆத்ம சமர்ப்பண இச்சை பிறந்த பின்பு மதியம் என்று ஓன்று உண்டாய் சமர்ப்பிக்கப் பெறாமையும்
ததீயத்தை மதியம் என்று பிரமித்து சமர்ப்பிக்கையும்
முன்புத்தை ஆத்மாத்மீய அபஹாரத்தோடு ஒக்கும் இப்போதைய ஆத்மாத்மீய சமர்ப்பணம் என்று அறியாமையும்
அவன் உடைமையை நாம் சமர்ப்பிக்கையாவது என்  என்று சிஷ்டாச்சாரமான சமர்ப்பணத்தைத் தவிருகையும்
தன்னுடையமையைத் தான் கொள்ளுகிறான் என்று சமர்ப்பியாமையும்
என்னது என்னும் துரபிமான தூஷிதமானவற்றை சமர்ப்பிக்கையும்
பூர்ண விஷயம் என்று அறியாமல் சாபேஷம் என்று பிரமித்து சமர்ப்ப்க்கையும்
அங்குத்தைக்கு இல்லாத ஒன்றை  சமர்ப்பிக்கிறோம் என்று இருக்கையும்(அப்ருத் ஸித்த விசேஷணமே -ஸமஸ்த சேதன அசேதனங்களும் –அந் நலனுடை ஒருவனையே நணுகினம் நானே -உள்ளத்தில் இருந்து என்றுமே விலக வில்லையே -)
நிரபேஷமாய் பூர்ண விஷயமாய் இருந்து இத் தலையை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்றே இவற்றை அங்கீ கரித்து அருளுகிறான் என்று அறியாமையும்
அவன் உபகரித்ததற்கு பிரத்யுபகாரமாக சமர்ப்பிக்கிறோம் என்று பிரமிக்கையும்
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-முயல்கின்றேன் உந்தன் மொய் கழல்க்கு அன்பையே -என்று பிரத்யுபகாரம் தேடிக் காணாமல் நெஞ்சாரல் பட்டுத் தடுமாறாமையும்-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணும் இடத்தில் என்னதான ஆத்ம வஸ்துவை நான் சமர்ப்பிக்கிறேன் -என்ற நினைவும் -என்கை –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

65-சமர்ப்பண விரோதியைப் பரிஹரித்தவாறே ஸ்வகீய ததீய ஜ்ஞானம் நிலை நிற்கும்

66-தர்சன விரோதி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ சங்கையும்
திருமூர்த்தி சாம்ய சங்கையும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ததீயத்வ ஆகாரத்தாலே ஆஸ்ரயணீயர் ஆனாலோ என்ற சங்கையும்
பௌத்த சைவ மாயாவாதி பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய குதர்க்க உக்திகளைக் கேட்டு பிரமிக்கையும்

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

சாமான்ய சாஸ்திர தாத்பர்ய நிஷ்டன் ஆகையும்(வர்ணாஸ்ரம தர்மம் பிரதானம் -விப்ரர் -கர்ம அனுஷ்டானம் -விசேஷ தர்மம் –பிரபன்னர் -பிரபன்ன காயத்ரியையும் அறிய வேண்டுமே)
நாம ரூபங்களை உடையராய் பாகவத் நிந்தை பண்ணுகையும்

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அற்று இருக்கையும்(பாஹ்ய -ஆந்தர லக்ஷணங்கள் -ஆத்ம குணங்கள் -சம தமாதிகள்)
த்வய அதிகாரி அல்லாமையும்
அருளிச் செயலில் அந்வயம் இல்லாமையும்
தத்வ ரஹஸ்ய பரிஷை இல்லாமையும்(நல்ல திருந்திய ஞானம் -ததீய பர்யந்தம் -அவர்கள் உகந்த கைங்கர்யம்-சிஷிக்கப்பட்ட ஞானம் வேண்டுமே)
சிஷ்டாசார நிஷ்டை இல்லாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்கியம் இல்லாமையும்
ஒரு ஜ்ஞாநாதிகர் அபிமானத்தில் ஒதுங்காது ஒழிகையும்
நம் தர்சனத்துக்கு விரோதிகளான பிரதி கூலரோடு சஹவாசம் பண்ணுகையும் –என்கை-

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

66-தர்சன விரோதியைப் பரிஹரித்தவாறே ஆச்சார்ய அங்கீகாரம் நிலை நிற்கும்

67-ஆஸ்ரம விரோதி
குல தொல்லடியான தன்னை தத்தாஸ்ரமியாக (மட்டுமே)நினைக்கையும்(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -குல தொல் அடியேன் -)
உத்தமாஸ்ராமி என்று கர்விக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்லாத ஆஸ்ரமி ஸ்வ பசரில் கடை என்று அறியாமையும்
தத்தாஸ்ரமே அனுஷ்டானத்தில் தாஸ்ய அனுகுண அனுஷ்டான பிரதிபத்தி இல்லாமையும்
தத்தாஸ்ராம விபரீத உபசாரமும்
சரமார்த்தம் நெஞ்சில் பட்டும் சாமான்ய அனுஷ்டான த்யாக பீதி அனுவர்த்திக்கையும்
ஸ்வரூப அனுரூபமான ஆஸ்ரம விபரீத அனுஷ்டானமும்
அந்த ஸ்ரீ வைஷ்ணவத்வாதி ஆஸ்ரம விரோதியான கீழ் மேற் சொல்லும் விரோதங்களைப் பரிஹரித்து வர்த்தியாமையும்
ஆஸ்ரம மினுக்கம் கொண்டு ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணக் கூசுகையும்(பின்பு அழகு பெருமாள் ஜீயர் நம் பிள்ளைக்கும் நஞ்சீயர் பட்டருக்கும் கைங்கர்யம் செய்த விருத்தாந்தங்கள்)
ப்ரஹ்மசர்யாதி ஸ்வ ஆஸ்ரம விருத்த தர்மாசரணம் -என்கை –

67-ஆஸ்ரம விரோதியைப் பரிஹரிக்கவே பரம ஏகாந்தித்வம் நிலை நிற்கும்

68-ஜாதி விரோதி
அஜ்ஞர் ஜ்ஞாநாதிகர் பக்தி பரவசர் என்கிற ப்ரபன்ன ஜாதி தர்மமான மகா விஸ்வாச ஹானியும்
மனுஷ்யத்வ ஜாதிக்கு விருத்தமான தர்மா சரணமும்
ஸ்வ யத்ன பிரவ்ருத்தியும்
ப்ரபத்திக்கு ஸூத் யஸூத்திகள் தேடுகையும்(பெருமாள் விபீஷணன் -இருந்தபடியே அமையும் -ஸூத்தியும் அஸூத்தியும் தேட வில்லையே)
தாஸ்ய அனுகுண  நித்ய கர்ம த்யாகமும்
அநித்ய கர்மிகளுடன்(நித்ய கர்மங்களைச் செய்யாதவர்கள்) சஹ வசிக்கையும்
திரு மந்த்ரத்தில் பிறக்கையே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்று அறியாமையும்
தத் இதர மந்த்ரத்தில் உண்டான ஜன்மம் நிகர்ஷம் என்று அறியாமையும்
கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் என்னுமதே தனக்கு ப்ராப்தமான பிரசித்த வ்யபதேசம் என்று அறியாமையும்
க்ராம குலாதிகளால் வரும் வ்யபதேசம் அநர்த்த கரம் என்று அறியாமையும்
பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குசாதிகள் என்று இராமையும்
ஆஸாபாச பத்தரான சரகு தின்றிகளை கூடஸ்தர் என்று இருக்கையும்

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் —சூரணை -36-

ஸ்ரீ வைஷ்ணத்வ சித்தி கரமான சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆகாமையும்
அஹங்கார ஹேதுவாய் பாகவத அபசாரத்தை விளைக்கும் வர்ணம் த்யாஜ்யம் என்று அறியாமையும்
கான்றத்தைக் கவ்வப் பண்ணுமதாகையாலே பய ஜனகமாய் நைச்யம் பாவிக்க வேண்டும்படி அஹங்கார க்ரஸ்தமானது ஹீன ஜாதி என்று அறியாமையும்
பய ஹேதுவும் இன்றியே ஜன்ம சித்த நைச்ய முடைத்தாய்
ஹீன ஜாதி தோஷ அபஹந்த்ரி யானதுவே உத்தம ஜாதி என்று அறியாமையும்
ஹீன ஜாதியில் தோஷம் உத்தம ஜாதியான தர்சநாதிகளாலே அபஹ்ருதமாம் என்று அறியாமையும்
ஜாதிக் கொத்தை போகாமல் உத்தம ஜாதியுடன் கலந்து தூஷிக்கையும்
வேதகப் பொன்னான ஜாதி சம்பந்தத்தில் சங்கை அனுவர்த்திக்கையும்
விலஷண ஜ்ஞாநாதிகர் ஆச்சார்ய சத்ருசர் ஈஸ்வரனில் அதிகர் என்னும் பிரதிபத்தி பிறவாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ ஜாதிக் கொத்தையான தேவதாந்திர கந்த லேச ஸ்பர்சமும்
தர்சன ஹானியான ஜாத்யந்தர லஷண பரிக்ரஹமும் -என்கை
அத்யயன ஜ்ஞான அனுஷ்டானங்களாலே ப்ரஹ்மண்யம் ஆகிறாப் போலே சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லரானால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஆச்சார்ய ஹ்ருதயம் -37
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்  கடல் ஞாலத்துள்ளே -திருவாய் -5-5-11
நைச்சயம் ஜன்ம சித்தம் —

68-ஜாதி விரோதியைப் பரிஹரிக்கவே ததீய சேஷத்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்

69-ஆப்த விரோதி
பகவத் விஷயத்திலே யாதல் -பாகவத் விஷயத்திலே யாதல்-வாசியுடையாரை அநாதரிக்கையும்
அது இல்லாதாரை ஆதரிக்கையும்
ஸ்வகீய ஸ்வீகார நிஷ்டையும்(அதுவும் அவனது இன்னருள் -உனது அனுக்ரஹத்தாலேயே சரணம் என்றும் சொல்கிறோம்)
ஸ்வ பிரயோஜன பிரவ்ருத்தியும்
பாரதந்த்ர்ய ஜ்ஞானம் அற்ற கேவல சேஷத்வ ஜ்ஞானமும்(பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் என்கிறோம் லஷ்மண ஆழ்வான் சொல்ல வில்லையே)
போக்யத்வ பிரதிபத்தி விருத்தியான போக்த்ருத்வ பிரதிபத்தியும்
பாரதந்த்ர்ய போக்யதா தர்சனத்தில் பிறக்கும் ரசம் பரகத மாகாதே ஸ்வ கதமாகையும்
ஸ்வரூபம் பர கதம் ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய குண விசேஷங்களும் பரகதங்கள் என்று அறியாமையும்
அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணும் ஸூலப  விஷயத்தில் (அறியாதன அறிவித்த அத்தா -ஆச்சார்யர் விஷயத்தில்)பரத்வ புத்தி பிறவாமையும்
சரம பர்வத்தில் சரம சாத்திய புத்தி இல்லாமையும் -என்கை(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -உபாயமும் உபேயமும் ஆச்சார்யர் தானே-அவரை அனுபவித்து கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் -அத்ர பரத்ர சாபி இத்யாதி -)
திருமோகூர் ஆப்தன் -ஆத்தன் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-

69-ஆப்த விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்-

70-அநாப்த விரோதி
பிரபத்தி விரோதியான உபாயாந்தர நிஷ்டையும்
பிரதிகூலரோடு சஹவாஸம் பரிஹரணீயம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும் சில உபாதிகளால் (பிரதிகூலரோடு சஹவாஸம்)வரில் செய்வது என் என்கிற நினைவும்
ப்ராப்ய விரோதியான பிரயோஜனாந்தர நிஷ்டையும்
அநந்ய தைவத்வ விரோதியான தேவதாந்திர நிஷ்டையும்
(ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான)த்வயைக நிஷ்டா விரோதியான மந்த்ராந்தர நிஷ்டையும்
அநந்ய போக்யத்வ விரோதியான விஷயாந்தர ப்ராவண்யமும்
மோஷ சாஸ்திர விரோதியான பந்த சாஸ்த்ர ஆலோசநமும்
சரம கைங்கர்ய விரோதியான ஸ்வ தேக யாத்ரா பாரவஸ்யமும் -என்கை-

70-அநாப்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் தர்மம் நிர்மலத்வ ப்ரவ்ருத்தி நிலை நிற்கும்-

71-ஸித்தாந்த விரோதி(ஸித்த -அந்தம் -வேதத்தில் அருளிச் செய்தபடி இருக்கும் -இதுவே இறுதியான முடிவு -)
வைதிக ஸித்தாந்த விருத்தமான பிரமாண (நல்ல அறிவுக்கு கருவி பிரமாணம்)ஸ்வீ காரமும்
பிரத்யஷாதி (ஆதி -அனுமானம்)பிரமாண விலஷணமான  வேதத்துக்கு ஸ்வத ப்ராமாண்யம் (அபாதித பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதி)கொள்ளாமையும்

திரி எண்ணெய் குறைய தீபம் மாறுகிறது -பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிதமாகிறதே- ஆகாசத் தாமரை வாசனையாக இருக்கிறது – தாமரையான படியால் -அனுமானம் தப்பாகுமே

வேத உப ப்ரும்ஹணம் பண்ணும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் திருட ப்ராமாண்ய புத்தி இல்லாமையும்(ஸ்ருதி ஸ்ம்ருதி -மமை ஆஜ்ஜை)
உப ப்ரும்ஹ்யோ ப்ரும்ஹணங்களில் சாத்விக அம்சமே சாத்விக க்ராஹ்யமான பிரபல பிரமாணம் என்று அறியாமையும்
ராஜஸ தாமஸரை விஷயீ கரித்த சாத்விக அம்சம் சாத்விக அனுபாதேயம் என்று அறியாமையும்
அம்ச பேதம் இன்றி பரம சாத்விக பரிக்ருஹீதமான அருளிச் செயலே களங்கம் அற்ற பிரமாணம் என்று விஸ்வாசம் இல்லாமையும்
பூர்வாசார்ய வசனமே சாத்விகர்க்கு மிகவும் விஸ்வாச நீயம்  என்று இராமையும்
ஸ்ரீ மன் நாராயண உக்தமான ஸ்ரீ பாஞ்சராத்தில் ப்ராமாண்ய பிரதிபத்தி குறைகையும்
சர்வ பிரமாண பிரமேயம் பகவத் ஸ்வரூபாதிகள் என்று இராமையும்(எல்லா வேதங்களிலாயே நான் சொல்லப் படுகிறேன்-அஹமேவ -நான் மட்டுமே சொல்லப்படுகின்றேன் -என்னை அறிவிக்காமல் நிற்காதே –)
லௌகிக வைதிக விபாகமற சர்வ சப்தமும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம வாசகம் என்னும் வ்யுத்பத்தி பிறவாமையும்(யானே நீ என்னுடைமையும் நீயே -சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் -அசித் உடன் கூடிய சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் நீயே-இதம் சரீரம் -க்ஷேத்ரம் -எனது விளைநிலம் என்று-அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன் சாபி அஹம் சப்த கோசாரன் ஜீவாத்மா இதம் சொன்னாலே அசித் -உணர்வது ஜீவன் பார்ப்பது சரீரம் -இருவரும் எனக்கு சரீரம் -ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம -தஜ்ஜலான் -தத்வ த்ரய ஸித்தாந்தம்)
சர்வ சரீரி அவன் என்று அறியாமையும்(இதம் சர்வம் ஐததாத்ம்யம் -இதம் -தத் சத்யம் -தத் த்வம் அஸி -ஸ்வேதகேது சொன்னாலே அந்தராத்மாவரை போகும்-அந்த ப்ரஹ்மமே இந்த ப்ரஹ்ம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமே உன்னுள்ளும் இருக்கும் ப்ரஹ்மம்)
சாமாநாதி கரண்யத்தில் விசேஷண அம்சத்தை விட்டு வஸ்து மாத்ரம் கொள்ளுகையும்(நீலக்குடம் -உயரமான பருமனான ஸ்வேதகேது -விசேஷண அம்சம் விடக் கூடாதே -)
அது(சாமாநாதி கரண்யம்) அவன் ஏக (அநேக)விசேஷண விசிஷ்ட ஐகார்த்ய  பரம் என்று அறியாமையும்(அவன் ஒருவனே -அநேக விசேஷண விஸிஷ்ட ஐகார்த்த -இவற்றுடன் கூடிய ப்ரஹ்மம் ஒருவனே)
நாநாத்வ நிஷேதம் அப்ரஹ்மாத்மக வஸ்து விஷயம் என்று அறியாமையும்(நேக நாநா அஸ்தி -இங்கு பலவாக இருப்பதாகப் பார்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சரிக்கிறான் -அத்வைதி -தோற்றுகிறது -கானல் நீர் போல் -ஸாஸ்த்ர வாக்கியம் -சொல்ல வந்தது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாதே வஸ்துக்கள் கிடையாது சொல்ல வந்ததே –)
சம்ஹாரத்தில் சித் அசிந் நிஷேதம் தத் தத்  அநு குண சூஷ்ம தசா பத்தி விஷயம் என்று அறியாமையும்(நாம ரூப அநர்ஹம் –அசேதனத்துக்கு நாமம் ரூபம் உண்டு -ஜீவாத்மாவுக்கு ஸ்தூல தசையில் நாமம் ரூபம் இல்லையே -கர்மாதீனமாக அனுபவிக்கும் தசை தானே ஸ்தூலம் -ஆகவே தத் தத் -அவற்றுக்குத் தக்க)
சோதக வாக்யத்தில் குண நிஷேதம் ஹேய குண விஷயம் என்று அறியாமையும்(நிஷ் கலம் இத்யாதி -ஹேய குணங்கள் இல்லை-முக் குண வசமில்லையே -சுத்த சத்வம் -அப்ராக்ருதம்)
குண விதாயக வாக்யங்களில் கண் செம்பளிக்கையும்(உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக குண கணன்-இல்லை உண்டு -இரண்டும் சொல்லலாம் -)
விக்ரஹ நிஷேதம் கர்ம நிபந்தன தேக விஷயம் என்று அறியாமையும்(-இச்சா க்ருஹீத அபிமத தேஹம்இஷ்ட க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கர்ம நிபந்தம் இல்லையே -)
ச விக்ரஹத்வ பிரகாசக வாக்யங்களில் குருடனாகையும்
உபய லிங்க விசிஷ்டனாய் -விலஷண விக்ரஹ விசிஷ்டனாய்- ஸ்ரீ யபதியான -அகார வாஸ்யனே -சர்வ ஸ்மாத் பரன் என்று அறியாமையும்
அவனே சகல ஜகத் காரணம் என்று அறியாமையும்
பிரதான பரம அணுவாத கலுஷ் சித்தனாகையும்
நாராயண கார்ய பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ காரணத்வ சங்கையும்
த்ரிமூர்த்தி சாம்யமும்
சர்வ ரஷகனை ஒழிய வேறு ஒரு ரஷகர் என்று இருக்கையும்
ஸ்ரீ யபதியை ஒழிய சேஷ்யந்தரம் உண்டு என்று அறிகையும்
முமுஷூபாஸ்யமான பர ப்ரஹ்மத்தை அல்லது உபாஸ்யாந்தரம் உண்டு பதைக்கையும்
மோஷ பிரதானான புருஷோத்தமனை யல்லது ஸ்வ அபிமத பல ப்ரதன் இல்லை என்று அறியாமையும்
சூத்திர தேவதா பஜனம் பண்ணுகையும்
சூத்திர பல அபிலாஷி யாகையும்
அநந்த ஸ்திர பலமான மோஷ அபேஷை பிறவாமையும்
முமுஷூவாய் இருந்து வைத்து சம்சார ஜிஹாசை பிறவாமையும்
கர்ம சாத்திய பலம் அல்ப அஸ்தரம் என்று அறிந்து நிர் விஷண்ணனாய் ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாசை பிறவாமையும்
நாராயண அனுவாக சித்த நாராயண வாஸ்யனே பர ப்ரஹ்ம வாஸ்யன் என்று அறியாமையும்(அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –கர்மங்களைப் பண்ணி -அதனாலே அல்ப அஸ்திர பலன்களையே பெறமுடியும் என்றும் அறிந்து ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசை பிறந்து உத்தர மீமாம்ஸா ஆராய வருகிறான்)
கர்ம பாகம் அவனுடைய ஆஜ்ஞ்ஞா விநாயகம் என்று அறியாமையும்
ப்ரஹ்ம பாகம் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபவாதி ஜ்ஞாபகமாய்க் கொண்டு தத் ப்ராப்தி விஷய பிரகாசகமாய்த் தலைக் கட்டும் என்று அறியாமையும்
தத் ப்ராப்தி ரூப புருஷார்த்தம் -ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தம் என்று அறியாமையும்
சமாரஸ்யமே சாம்யா பத்தி என்று அறியாமையும்(கல்யாண குணங்களை சேர்ந்து அனுபவித்து -ஸஹ ஸ்ருதி -சா தர்ம்ய ஸ்ருதி -சாம்ய ஸ்ருதி -ரஸம் இருவருக்கும் -ஆனந்தத்தில் சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்)
ஸ்வரூப ஐக்ய ப்ரமம் அனுவர்த்திக்கையும்(ஆதிப் பரனுடன் ஒன்றாம் , என்னும் அல்லால் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-கூடிற்றால் நல்லுறைப்பு -அவன் ஸ்வாமி-நாம் சேஷிகள் உணர வேண்டுமே)
முக்தியில் கைங்கர்யார்த்தமான அநேக விக்ரஹ பரிக்ரகம் உண்டு என்று அறியாதே அசரீரத்வ ப்ரமம் அனுவர்த்திக்கையும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நித்ய விபூதியை ப்ராபிக்கை முக்தி என்று அறியாதே ஜீவன் முக்தி ப்ரமம் நடக்கையும்
கர்மம் இங்கே நசித்து இருக்கவும் பகவத் சங்கல்ப சக்தியாலே தத் கார்யமான ஸூஷ்ம சரீரம் விரஜா ஜல ஸ்பர்சத்தளவும் வரும் என்று அறியாமல் சங்கிக்கையும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனம் வேண்டாத விஹித பக்தி இத்தனை என்று இருக்கையும்
தத் சாதனம் பிரபத்தியே என்று அறியாமையும்(பக்தியே ஸ்வயம் பிரயோஜனம் -அதுக்கு சாதனம் அவனே)
பிரபத்தி சப்த வாச்யன் பிரபத்தவ்யனான எம்பெருமான் தானே சிஷியாமையும்
அதிகாரி விசேஷணமான சரண வரணத்திலே உபாய புத்தி நடக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் சரணம் புகுருகையும்
ஆச்சார்ய மாத்ரத்தில் புருஷகாரத்வ மாத்திர   பிரதிபத்தியும்
ஸ்வ தந்திர உபாய பிரதிபத்தி பிறவாமையும்
உபாய உபேய த்வித்தவ பிரதிபத்தியும்
பகவானுடைய ஜகச் சரீரத் வாதிகளை இசையாத மதாந்த்ரஸ்தரை விரும்புகையும்(துவைதிகள் -சரீராத்மா பாவம் இசையாமல் ஸ்வாமி தாஸ்ய பாவமே உண்டு என்பர்) –என்கை-

71-சித்தாந்த விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ த்ருட பிரமாண நிஷ்டை நிலை நிற்கும்

72-தத்வ விரோதி

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,–இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,-ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான-ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்

போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூப தத்வம் அல்லது வேறு தத்வம் இல்லை என்று அறியாமையும்-கோடி த்ரய அதீனனான உதாசீனன் என்றும் ஒருவன் உண்டு இருக்கையும்-
வைசேஷிகன்  சொல்லுகிற த்ரவ்யாதிகள் ஆறு தத்வங்கள் என்று கலங்குகையும்
நையாயிகன் சொல்லும் பிரமாணாதிகள் பதினாறு தத்வம் என்று கலங்குகையும்
சாங்க்யன் சொல்லுகிற மூல பிரகிருதி முதலான இருபத்தஞ்சு தத்வம் என்று கலங்குகையும்
பதஞ்சலி சொல்லுகிற இருப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(யோக மார்க்கம் -ப்ரஹ்மம் நிமித்த மாத்திரமே-உபாதானம் இல்லை என்பர்)
பாசுபதன் சொல்லுகிற முப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(சிவ சக்தி ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சதா சம்ஹாரம் ஈஸ்வர திரோதானம் -இத்யாதி ஐந்து சுத்த தத்வம் என்பர் அசுத்த 24-சுத்த அசுத்த ஏழும் –)
சார்வாகன் சொல்லுகிற ப்ருதிவ்யாதி பூதமே தத்வம் என்று கலங்குகையும்
பௌத்தன் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தாதிகள் தத்வம் என்று கலங்குகையும்-ஜைனர் சொல்லுகிற தர்ம அதர்மாதிகள் தத்வம் என்றும் கலங்குகையும்-மாயாவாதி சொல்லுகிற நிர்விசேஷ சின் மாத்திரமே தத்வம் என்று கலங்குகையும்-
பாட்டப் பிரபாகரர்கள் போலே ஆத்மாக்களை ஒழிய ஈஸ்வர சத்பாவம் இல்லை என்று கலங்குகையும்
குண த்ரய சாம்ய அவஸ்தையில் மூல பிரகிருதி என்று கலங்குகையும்
அஹங்கார கார்யமான இந்த்ரியங்களை பூத கார்யம் (நையாயிகர் போல்)என்று கலங்குகையும்
கர்மேந்த்ரியம் இல்லை என்று கலங்குகையும்(மீமாம்ஸகர் ஞான இந்திரியங்கள் இல்லை என்பர் )
மனஸ்ஸூ அனுத்பந்தம் நித்யம் என்று கலங்குகையும்-தன் மாத்திரைகள் ஒழிய பூதங்கள் இல்லை என்று கலங்குகையும்-
அவை தான் இந்த்ரிய பேதத்தாலே தூரம் என்று கலங்குகையும்
தன் மாத்ரைகள் ஐந்தும் பூதாதி ஒன்றின் (தாமஸ அஹங்காரத்தின்)நின்றும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதியின் நின்றும் சப்த தன்மாத்ரையும் ஆகாசமும் பிறக்கும்
சப்த தன்மாத்ரையின் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவும் பிறக்கும் என்றும்
இப்படி பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் உத்தர உத்தர தன் மாத்ரமும் தத் விசேஷமும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதி யின் நின்றும் (சப்த தன்மாத்திரை பிறந்து சப்த தன் மாத்ரையில் இருந்து) ஆகாசம் பிறக்கும் -அவ் வாகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை பிறக்கும்
அந்த ஸ்பர்ச தன் மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
என்று இப்படி சப்த தன் மாத்ரை ஒழிந்த (எல்லா)தன் மாத்ரைகளும் -பூமி ஒழிந்த(நான்கு) பூதங்களுக்கும் பூத கார்யத்வ தன் மாத்ரா காரணத்வம் உண்டு என்று கலங்குகையும்
தன் மாத்ரா க்ரமத்தை அநாதரித்து பூதாத் பூதாந்தர உத்பத்தி உண்டு என்று கலங்குகையும்
இந்த ஸ்ரௌத மதத்திலும் பூத வாசக சப்தம் தன் மாத்ரா லஷண ஆகாசாதி பூதங்களை விவஷிக்கிறது என்கிற ஹிருதயம் அறியாமையும்
பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் தத் விசேஷங்களும் உத்தர உத்தர தன் மாத்ரைகளும் பிறக்கும் என்கிற சிருஷ்டி க்ரமமும் பிரமாண சித்தம் சிஷ்ட பரிக்ருஹீதம் என்று அறியாமையும்
ஆவரண அபாவம் ஆகாசம் என்றும் (நையாயிகன் போல்)நித்யம் நிரவயவம் விபு என்று கலங்குகையும்
திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் என்று கலங்குகையும்
காலத்தை இல்லை என்று கலங்குகையும்
வாயு அப்ரத்யஷம் என்று கலங்குகையும்
அண்டத்துக்கு உள்ளும் புறம்பும் உண்டான பிரகிருதி பரிணாமம் ஒரு சேதன(பரமாத்மாவின்) சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(அண்டத்துக்கு உள்ளே -நான்முகன் -குயவன் போல்வார் -சேதனன் -மூலம் பரிணாமம் -புறம்பே -மஹத் -அகங்காரம் போல்வன -பரம சேதனனுடைய ஸங்கல்பம் அடியாகவே –)
ஜகத் பரிணாமம் அத்வாரக பகவத் சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(ஏஷ -ஆத்மா -பரமாத்மாவையை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மாக்கள் -ஐததாத்மா)
சகல வஸ்துக்களையும் பகவதாத்மகம் என்று அறியாமையும்
பகவதாத்மகத்வாத் சமஸ்த பதார்த்தங்களும் அனுகூலம் என்று அறியாமையும்
பிரதி கூலங்களாகத் தோற்றுகை தேஹாத்மா   ப்ரமம் என்று அறியாமையும்(அனைவரும் அவனுக்கு சரீரம் -ஆகவே அவனுக்கு அனுகூலம் -ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அனுகூலம் -சரீர பாகம் ஓன்று மற்ற ஒன்றுக்கு அனுகூலம் தானே -நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -)
நித்ய விபூதி நித்ய ப்ரஹ்ம நித்ய இச்சையால் நித்யம் என்று அறியாமையும்
அப்ராக்ருத அசித் பரிணாமம் கேவல பகவத் இச்சா சித்தம் என்று அறியாமையும்
திவ்ய பூத பஞ்சகங்களுக்கு இல்லாத ஸூஷ்ம ஸ்தூல அவஸ்தா சங்கல்பங்களையும்
அங்கு தன் மாத்ரம் உண்டு என்கிற ப்ரமம் சாந்தத்வ கோரத்வாதி ராஹித்ய மாத்ரம் அத்தனை என்று அறியாமையும்(குணங்கள் தன் மாத்ரையில் வெளிப்படையாகத் தெரியாமல் அநுத்பூதமாக-சாந்தமாக — இருக்கும் அங்கு-இங்கு இப்படி இரண்டு நிலைகள் இல்லையே)
பஞ்சக சக்தி மயத்வமே அப்ராக்ருத பகவத் விக்ரஹ உபாதானம் (பரம சுடர் உடம்பாய் அங்கு -அழுக்கு பதிந்த உடம்பு இங்கு-பஞ்ச-சக்தி: பரமேஷ்டி, புருஷா, விஷ்வ, நிவ்ருத்தி மற்றும் சர்வ)என்று அறியாமையும்
பிரகாசகத்வ குணங்களைப் பற்ற ஷாட் குண்ய விக்ரஹம் என்கிறதுக்கு கருத்து அறியாமையும்(ஞான பல ஐஸ்வர்ய தேஜஸ் சக்தி வீர்யம் -ஸ்வரூப குணங்கள் -இவற்றை ஷாட் குண்ய -திவ்ய மங்கள விக்ரஹம் -விசேஷ க்ரஹணம் -விக்ரஹம் இங்கு -பிரகாசபடுத்த இவ்வாறு குணங்களும் வேண்டுமே –)
ஜாதி ஒன்றாகிலும் நித்ய ஸூரி விக்ரஹத்தை பற்ற தேஜஸ்ஸாலே வேறு பட்டு இருக்கும் அசாதாராண விக்ரஹம் என்று அறியாமையும்
அவதார விக்ரஹங்களும் அப்ராக்ருதங்களாய் இருக்க சைவாதி ப்ராக்ருத ஆகார தர்சனம் ஸ்வாகாரவிதானம் பண்ணுகிற பகவத் இச்சா காரியம் என்று அறியாமல் ப்ராக்ருத்வ சங்கை நடக்கையும்(சோதி வெள்ளத்து எழுவதோர் உருசகல மனுஷ நயன விஷயாதாங் கத-ஆகத -ஆக்கிக்கொண்டு -காட்டவே காண்கிறோம்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய்)
சிதசித்துக்கள் அடங்க பகவச் சரீரம் என்று அறியாமையும்
அதில் பகவச் சரீரமான ஆத்மாவை தேக இந்த்ரியாதிகள் என்று பிரமிக்கையும்
ஆத்மாவை ஜ்ஞான மாத்ரம் என்று பிரமிக்கையும்
சைதன்யம் ஆகந்துகம் என்று பிரமிக்கையும்
பரதந்திர ஸ்வரூபத்தை ஸ்வ தந்த்ரம் என்று பிரமிக்கையும்
பகவச் சேஷமான ஸ்வரூபத்தை அந்ய சேஷம் என்று பிரமிக்கையும்
மிதுன சேஷம் என்று அறியாமையும்(திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -)
ததீய சேஷம் என்று உணராமையும்
சர்வ சரீரியான சர்வ சேஷி சர்வேஸ்வரன் என்று அறியாமையும்(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மான தாரயிதும் நியந்தும்-சர்வ சரீரியாக இருப்பதால் சர்வ சேஷீ -ஸர்வேஸ்வரேஸ்வரன்)
அவனுக்கு ஸ்வா தந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இராமையும்
அத்தாலே பலித்தது ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்று அறியாமையும்(அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -)
அது நித்யம் என்று அறியாமையும்
அதுக்கடி பிரணயித்வம் என்று அறியாமையும்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
அதுக்கடி கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று இவர்களுக்கு ஜனனியான பிராட்டி பக்கல் பண்ணின ப்ரணய பரிணதி என்று அறியாமையும்

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப்பெற்று. இனிப்போக்குவனோ?”
அவள் அவனுக்கு அபிமதையாய் -அனுரூபையுமாய் -நிரூபகையுமாய் -நித்ய அனபாயிநியுமாய் -சேஷ பூதையுமான -மஹிஷியான ஜகன் மாதா என்று அறியாமையும்
(ஆத்ம)ஜாதி ஒன்றாகிலும் த்ரிவித ஆத்ம வ்யாவ்ருத்தை என்று அறியாமையும்(நித்யர்களிலும் வேறுபட்ட விசேஷ-விஷ்ணு பத்னீ)
இரண்டு ஆஸ்ரயத்தில் நில்லாத சர்வ ஈஸ்வரித்வம் இவளுக்கு உண்டு என்கையும்(ஸர்வேஸ்வரத்வம் இரண்டு இடத்தில் இருக்க முடியாதே)
ஸ்ரீ ஸ்ரீசர்களுக்கு விக்ரஹ பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை என்கையும்
பகவத் ஸ்வரூபம் உபய ஆகாரமுமாய் இருக்கும் என்கையும்-பகவத் ஸ்வரூபம் ஒழிய லஷ்மீ ஸ்வரூபம் தான் இல்லை என்கையும்
ஜ்ஞான குணகையான இவளை ஜ்ஞான சக்த்யாதி குண கோடியில் என்கையும்(ஆத்மா ஞானமயம்-ஞானம் உடையதாய் இருக்கும் -இங்கு ஆத்மா த்ரவ்யம் – -குணத்துக்கு குணம் இருக்காதே -ஞானத்துக்கு ஞானம் இருக்காதே -)
இவள் நிரூபகமான அஹந்தையாய் அவன் நிரூப்யமான அஹமர்த்தமாய் இருக்கும் என்று அறியாமையும்(அஹந்தை -தானான தன்மை பிராட்டிக்கு இருக்கும் -அஹமாய் அவன் இருப்பான்)
இவள் அணு ஸ்வரூபையாய் இருந்தும் -ஒரு சக்தி விசேஷத்தாலே (யதா சர்வகதா விஷ்ணு இத்யாதி -விஷ்ணு புராணம் –பத்னியத்வத்தால் பகவத் ஸங்கல்பத்தால்)பரம மஹத் பரிமாண விபு ஸ்வரூபத்தை தழுவிக் கொண்டு இருக்கும் என்று அறியாமையும்
ரசம் திருப் பாற்கடல் எங்கும் உண்டானாப் போலே பகவத் ஸ்வரூபாதிகள் எங்கும் உடன் இருக்கும் என்று அறியாமையும்(மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப் போலே -உப்புக்கட்டி முழுவதும் உப்பாய் இருக்குமா போலே- இவள் அவன் உடன் எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் பிரியாமல் இருப்பவள் அன்றோ)
இப்படி எங்கும் எப்போதும் உடன் இருக்கிறது தேச கால நிரபேஷமாக சேதனருக்கு புருஷீ கரிக்கைக்கு என்று அறியாமையும்
இப்படி இருக்கிற இவளை யிட்டு ஸ்ரீ யபதி என்றே பகவத் ஸ்வரூபத்தை நிஷ்கரிக்க வேணும் என்று அறியாமையும்
பகவத் ஸ்வரூபம் உணர் முழு நல ஜ்ஞான ஆநந்தைக   ஸ்வரூபமாய்
ஹேய பிரதிபடமாய்
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வரூபதோ குண தச்ச விபுவாய்
அவாப்த சமஸ்த காமத்வாத் நிரபேஷமாய் இருந்தும் அகில ஜகதுதய விபவ லய ஹேதுவாய் லீலா ரசம் அனுபவித்தும்(இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)
நித்ய விபூதியிலே திருமா மணி மண்டபத்திலே -திவ்ய சிம்ஹாசனத்திலே -திரு வனந்த ஆழ்வான் மேலே ஸ்படிக கிரி தடத்திலே மின் கொடிக்களுடன் காள மேகம் படிந்தால் போலே சியாமள கோமள விக்ரஹ பிரகாசகைகளான நாச்சிமார் உடன்
ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அயர்வறும் அமரர்களுடன் அபரிமித போக ரசத்தை அனுபவித்து உபாசக அனுக்ரஹார்த்தமாக வாசுதேவாத் யாகாரேண வ்யூஹித்து
ஒரு படுக்கையிலே உறங்குகிற சம்சாரியை உணர்த்தி ஒரு நீராகக் கலந்து அனுபவித்து கட்டிலிலே வாங்க ஆசைப்பட்டு
தத் தத் சஜாதீய வேஷம் கொண்டு நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் விபவத்தைக் காட்டியும்
ஒருவரும் எட்டுப் படாமையால் விஷய ப்ராவண்யம் மிக்கு இனிக்களவிலே பிடித்துக் கொள்வோம் என்று

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
பிறர்க்கும் காண ஒண்ணாத படி கரந்த சிலிடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து கட்கிலியாயும் ஒரு விஷயம் லபியாமல் முசித்து
வேட்க- ஆற்றாமை மிக்கு- மூச்சு விடுதல் செய்ய மாட்டாதே- ஆராமங்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாய்

நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே.
ஆள் பார்த்து அலமாக்கும்படி விஷய சபலனாய் கிடப்பது ஒரு பரத்வம் என்று அறியாமையும்
பரத்வம் நித்ய போகமாய் இருக்கும் அத்தனை -அவதாரம் பத்த முக்த நித்ய விபாகம் அற சர்வ ஜன போக்யம் என்று அறியாமையும்
முக்ய அவதாரங்களில் தத் சஜாதீயத்வ புத்தியும்
கௌண அவதாரத்தில் பூஜ்யத்வ புத்தியும்
அர்ச்சாவதாரத்தில் அசக்தத்வ புத்தியும்
பரம குருவான ஆச்சார்ய அவதாரத்தில் அபூர்ணத்வ புத்தியும்
பரத்வத்தில் அவதாரம் அதிகம் என்று அறியாமையும்
சரம அவதாரமான ஆச்சார்ய விக்ரஹத்தில் அப்ராக்ருத்வ புத்தி நடவாமையும் –என்கை-

(ஆத்மா இயற்கையாகவே ஞான ஆனந்த மயமாக இருப்பதால் கர்ம நிபந்தனமாக விரோதிகள் அழுக்குகள் போக -தானே ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும் -உண்மையான ஞானம் வர தானே பரிஹரிக்கும் -மேல் பரிஹரிக்க இந்த பலன்கள் கிட்டும் என்று நிகமித்து அருளுகிறார்)

72-தத்வ விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்

73-பும்ஸ்த்வ  விரோதி –

(ஸ்த்ரீத்வம் -பர தந்த்ர அர்ஹதை -மனு பகவான் -பெண் வேஷம் -இயற்கையில் ஸ்வ தந்த்ரம் இல்லாததால் ஸ்த்ரீத்வ விரோதி கிடையாது -ஆண் உடை உடுத்த பெண் -புருஷன் என்று நினைப்பது விரோதி தானே -)
பறவை ஏறும் பரம புருடனான புருஷோத்தமன் ஆனவனை ஒழிய ஸ்திரீ ப்ராயரான தன்னை புருஷன் என்று நினைக்கையும்
புருஷ சரீர பூதர் ஆகையாலே புருஷர் எனப்படும் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பும்ஸ்த்வ புத்தி நடக்கையும்
அவனுடைய  பும்ஸ்த்வ பிரதியோகியான ஸ்த்ரீத்வமே தனக்கு ஸ்வதஸ் சித்த வேஷம் என்று அறியாமையும்
தோல் சட்டையான புருஷ வேஷ பரிகிரஹம் ஆகந்துகம் அநித்யம் என்று அறியாமையும்(மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று-ஸ்வதஸ் ஸித்தம் -கடி மா மலர்ப் பாவையோடு உண்டான சாம்ய ஷட்கம்)
தான் அநாதி காலமே பிடித்து மாறி மாறி பரிக்ரஹித்த ஸ்திரீ புருஷ வேஷம் இரண்டும்(ஆத்மாவுக்கு) நிலை நின்ற வேஷம் இல்லை என்று அறியாமையும்
பகவத் பாரதந்த்ர்ய ரூபத்வமே நிலை நின்ற ஸ்வரூப ப்ராப்த வேஷம் என்று அறியாமையும்
இந்த பாரதந்திர ஜ்ஞானம் பிறந்து ஸ்வா தந்த்ர்ய ரூப பும்ஸ்த்வ பிராந்தி அனுவர்த்திக்கையும்
இப்படி பர ஸ்திரீயான தனக்கு ஸ்வ ஸ்திரீ தேடி உழலுகையும்
எல்லாரும் பர ஸ்திரீ என்னும் ஜ்ஞானம் பிறவாமையும்(ராஸக்ரீடை -அவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்ற அனைவரும் ஸ்த்ரீ பிராயர் -அவன் அவர்களுக்கு அந்தராத்மாவாக இருந்து சத்தையும் நியமனத்தையும் பண்ணி அருளுகிறான் அன்றோ -)
தானும் தத் ததீய கைங்கர்ய அர்த்தமாக பரிக்ரஹித்த அவளும் ஸ்ரீ யபதியான பரம சேஷிக்கு  பெண் அடிமை என்று இராமையும்
தன்னை ஆண் அடிமை என்று இருக்கையும்
இந்த ஜ்ஞானம் பிறந்த பின் ஸ்திரீ போலே சஹ சயியாமையும் பும்ஸ்த்வ அபிமான பிரமராகம் அனுவர்த்திக்கையும்
ஆண்களாய் இருக்க பெண்களாக பாவித்து பகவத் விக்ரஹத்தை காங்ஷித்து ராகாந்தராய் துடித்த ஆழ்வார்கள்
பாசுரங்களை ஓதியும் கேட்டும் புனர் பவ பிரமம் விடாதே
இதர விஷயங்களிலே ஹேய சரீரங்களை உகந்து ராகாந்தராய்த் துடிக்கையும்(அத்தாலே இவன் அஸ்த்ரைணன் என்றும் ஸிஷ்ட கர்ஹிதனாகையும்)
ஆஸ்திக நாஸ்திகன் என்று ஆச்சார்யன் கை விடும் படியாய் விடுகையும்
சார அசார (சேஷத்வ பாரதந்தர்யமே சாரம் -ஆண் பெண் சரீரம் பார்ப்பது அசாரம்)விவேகம் பண்ண அறியாத படி சிஷ்ட கர்ஹிதனாகையும் -என்கை  –

73–பும்ஸ்தவ விரோதியைப் பரிஹரிக்கவே பத்நீ சாம்யம் நிலை நிற்கும் –

74-அந்திம தசா விரோதி
க்ருக ஷேத்திர ப்ராவண்யம் புத்திர தாரா ப்ராவண்யம் சரீர அர்த்த ப்ராவண்யம் பின்னாடி(பின் தொடர்ந்து)
இவற்றை விட்டுப் போகிறோமே என்று கண்ண நீர் கலங்குகையும்
ஷேத்ராணி மித்ராணி என்கிறபடியே அவை பிரதிகூலத்வேன திருஷ்டி விஷயமாய்த் தோற்றாமையும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-(மா கம் -பரமாகாசம்)என்கிற ப்ராப்ய பூமியில் ப்ராவண்யம் அற்று இருக்கையும்
கொடு உலகம் காட்டலே என்று த்யாஜ்ய பூமி காண வெருவாமையும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்று சரீர விஸ்லேஷ காலம் எப்போது லபிக்கும் என்று மநோ ரதம் அற்று இருக்கையும்
உன்னை எந்நாள் வந்து கூடுவன் -என்கிற பரம பதத்தில் இருப்பைக் கண்டு அல்லது தரியாத (பகவத்)பரத்வ ப்ராவண்யம் பரிபக்வம் ஆகாமையும்
மருள் ஒழி நீ -என்கிற அர்ச்சாவதார ப்ராவண்யம் அனுவர்த்திக்கையும்

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அந்திம தசையாய் இருந்து இப்போது எனக்குத் தஞ்சமேது என்று தளும்புகையும்
தஞ்சம் என்கிற நினைவு குலைகையே தஞ்சம் என்று அறியாமையும்
காஷ்ட பாஷாண  சந்நிபம் -என்று அத் தசையில் சைதன்யம் அற்று இராமையும்
அவஸ்ய அபேஷித தாதாத்விக ஸ்ம்ருதி சித்த சாதன நிஷ்டா ஹானியைப் பிறப்பிக்கும் என்று அறியாமையும்
பகவத் உன்மிஷிதையான அவர்ஜ நீய ஸ்ம்ருதி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
அப்போது ஆச்சார்ய நாம உச்சாரணம் அவசியம் வேணும் என்று இருக்கையும்
பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய நாம உச்சாரணம் தத் பிரயாண பாதேயமாய்க் கொண்டு தாரகமாம் இத்தனை என்று அறியாமையும்
அப்போது பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய பதாம் போருஹ  த்யானத்தில் சாதனத்வ புத்தி நடக்கையும்
பரம ஆப்தனான அவனே மார்க்க பந்து என்று அறியாமையும்
அவித்யாதி விரோதி நிவ்ருத்தியிலும் அர்ச்சிராதி கதி ப்ராப்தியான இஷ்ட ப்ராப்தியிலும் ஸ்வ பலித்வ புத்தி நடக்கையும்
விரோதி நிவர்தகனுமாய் இஷ்ட ப்ராபகனுமான ரஷகனான சேஷிக்கே தத் பலித்வம் உள்ளது என்று அறியாமையும்(ப்ராப்தாவும் ப்ராபகனும் பேற்றுக்கு உகப்பானும் அவனே என்ற எண்ணம் வேண்டுமே-நாம் அவன் அனுபவிக்கும் போக்யமான பொருள் என்ற எண்ணம் வேண்டுமே -)
இஷ்ட அநிஷ்டங்களில் மதீயத்வ புத்தி நடக்கையும்
அது (மதீயம்)அஹம் அர்த்த அபிமானியான பரம சேஷியது (யானே நீ என்னுடைமையும் நீயே)என்று அறியாமையும்
ஜ்ஞான பிரதனான நித்ய சேஷியே மோஷ ப்ரதன் என்ற துணிவு அற்று  இருக்கையும்  -என்கை-

74-அந்திம தசா விரோதியைப் பரிஹரிக்கவே பிரபன்னத்வம் நிலை நிற்கும் –

75-அவிஸ்வாச விரோதி
விஸ்வசிக்கக் கூடாததான சம்சாரிகள் இடத்திலும்
தேவதாந்த்ரங்கள் இடத்திலும்
சாமான்ய சாஸ்திரங்கள் இடத்திலும் விஸ்வசிக்கை -என்கை-

(தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் -அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே -என் நான் செய்கேன் –களை கண் மற்றிலேன் -)

75-அவிஸ்வாச விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்தியிலும் விசேஷ சாஸ்திரத்திலும் விஸ்வாசம் நிலை நிற்கும்

76-சங்க விரோதி –
பகவஜ் ஜ்ஞானம் பிறந்தவன் மதாந்தரஸ்தர்களான
சைவாதிகளோடு உறவு பண்ணுகை-என்கை –

76-சங்க விரோதியை பரிஹரிக்கவே பகவத் விஷய ஜ்ஞானம் நிலை நிற்கும்

77-சந்தான விரோதி –
தனக்குப் பிறந்து இருந்து
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் தூஷகனான தன் புத்ரனைத் த்யாஜியாமல் இருக்கை
ஸ்ரீ வராஹ புராண வசனம் -மாஜ நிஷ்ட  ச நோ வம்சே  ஜாதோவா த்ராக் விஸ்ருஜ்யதாம்
ஆஜன்ம மரணம்  யஸ்ய வாஸூ தேவோ ந தைவதம் –

77-சந்தான விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் நிலை நிற்கும்

78-வர்ண விரோதி
ஸ்வ ஸ்வ வர்ணங்களுக்கு அனுசிதங்களான க்ருத்யங்களைச் செய்கை -என்கை -(நமக்கு என்று விதித்த தர்மங்களைப் பற்று அற்று கைங்கர்ய ரூபமாகச் செய்வதே கர்ம யோகம்)

78-வர்ண விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம வர்ணமான சேஷத்வம் நிலை நிற்கும்

79- ஜப விரோதி –
மூல மந்த்ராதிகளை ஜெபிக்கும் இடத்தில்
தத்தத் மந்திர தேவதா ரூப த்யாநத்தை விட்டு
விஷயாந்தர தேவதாந்தரங்களை நினைக்கை -என்கை-

திருமந்திரம் -நாராயணன் -விஷ்ணு -வாஸூ தேவ-மூன்றும் மூன்று வியாபக மந்த்ரங்களை ஜெபிக்கும் இடத்தில் த்யானிக்க வேண்டும் அன்றோ

79-ஜப விரோதியைப் பரிஹரிக்கவே த்வய அனுசந்தாம் நிலை நிற்கும்

80-ஆராதன விரோதி
ஸ்வயம் பிரயோஜனமான பகவத் ஆராதனத்தில் பலாந்த்ர ஆகாங்ஷையும்
ஜாதி யாஸ்ரய நிமித்த துஷ்ட வஸ்து நிவேதனம் பண்ணுகையும்
சாஸ்திர நிஷித்த மத்ய (கள்)மாம்சம் முதலானதுகளை நிவேதனம் பண்ணுகையும் –என்கை-

80- ஆராதன விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஆராதனம் நிலை நிற்கும்-

81-பதித்வ விரோதி –
பதிம் விஸ்வஸ்ய என்று ஒதப்படுகிற பகவான் உடைய பதித்வத்துக்கு விரோதியான
பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி ஸூரபதி தனபதி  சேனாபதி கணபதிகள் உடைய பதித்வத்தை நினைக்கையும் -என்கை -(பரன் திறமன்றி பல்லுலகில் தேவர் மற்றில்லையே-பதித்தவம் பலான ஸாமர்த்யம்)

81-பதித்தவ விரோதியைப் பரிஹரிக்கவே ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்

82-வர்ஜநீய (விடத் தக்க)விரோதி
சாஸ்திரங்களிலே  நிஷித்தங்களான தாமச ஆகாரங்களான மத்ய மாம்சாதி போஜனம் செய்கையும்
சாத்விக ஆகாரங்களையும் சாத்விக சாஸ்திரங்களையும் சாத்விக அனுஷ்டானங்களையும் த்யஜிக்கையும் -என்கை

82-வர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விக ஆகார சாத்விக சாஸ்திர சாத்விக அனுஷ்டானம் நிலை நிற்கும்

83-அவர்ஜ நீய (விடக் கூடாத)விரோதி
முமுஷூ தசையில் அப்ராப்த புத்தி மறந்தும் பின்னாட்டும் அர்த்த காம த்ருஷ்ணையும்
அதடியான பாகவத அபசாரமும்
பிராக்ருத வஸ்துக்களில் போக்யத்வ பிரமமும்
முக்த தசையில் பகவத் ப்ராப்தியில் உகப்பு தன்னதாகையும்
அதுக்கடியான போக்த்ருத்வ புத்தி நடக்கையும்
அதடியாக பரைக போக்யத்வ புத்தி குலைகையும்
அத் தசையில் அத்மி என்று போக்த்ருத்வம் உண்டாய்  இருக்க அது பர ப்ரேரிதமாய் பர ப்ரீதி வர்த்தகமுமான பரம போக்யமாம்படி அவன் விநியோகிக்கையாலே விரோதி அல்லவாய் விட்டது

சாப்பிடுகிறவன் -அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -மற்றை நம் காமங்கள் மாற்று –அவன் ஆனந்தம் உகப்பைக் கண்டு உகக்க வேண்டுமே -அப்பொழுது தான் போக்யமாய் இருந்த நாம் பரம போக்யமாவோம்-
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -திரு விருத்தம் -33-என்று
அத் தசையிலும் ஸ்வாதீன ஸ்வார்த்த பிரதிபத்தி ரூப விரோதி புகுராதபடி படிந்ததும் பரமனுடைய நித்ய சங்கல்பம் இறே

அன்றிக்கே
அவர்ஜ  நீய விரோதியாவது
இங்கோடு அங்கோடு வாசியற ஆச்சார்ய கைங்கர்ய விரோதியான பகவத் சௌந்தர்யம் ஆகவுமாம்
அத்தை சாத்மிப்பித்து இறே அவனும் கைங்கர்யம் கொள்ளுவது
ஜன்மாந்தரீய கர்மங்களாலே உத்பன்னங்களாக நிஷித்த  ஆசரணங்களும்- என்கை –

(அநக -ராம பக்தியாகிய குற்றம் இல்லாத சத்ருக்ந ஆழ்வான்-)

83-அவர்ஜ  நீய விரோதியைப் பரிஹரிக்கவே சரீர அவசான பிராப்தி நிலை நிற்கும்

இப்படி உடையராலே சாதிக்கப்பட்ட 83 விரோதிகளையும் நன்றாகத் தெரிந்து பரிஹரிக்கும் க்ரமத்திலே பரிஹரித்து பற்றுமவைகளைப் பற்ற யதாவத்தாக ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு நிர்ப்பரராய் இருந்த வங்கி புரத்து நம்பி பின்புல்லாரும் இவ்விரோதிகளை நன்றாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படி அவற்றுக்கு வியாக்யானம் அருளிச் செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களான முமுஷுக்கள் அனுஷ்டித்துப் போரும்படிக்கு ஆச்சார்ய ஆஜ்ஜை இட்டு அருளிச் செய்தார்

இவ்விரோதிகள் அடங்க ஒரு சேதனனுக்கு ஸ்வரூப சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளைப் பற்றி வரும்
பர ப்ரகார ஸ்வரூப அதீன சத்தா பிரகாசக ஸ்வரூப அதீன பிரணவர்த்த அனுசந்தானத்தாலே
ஸ்வரூப சத்தா விரோதிகள் கழியும்
நமஸ் சப்த சித்தமான பிரணவார்த்த அனுசந்தானத்தாலே ஸ்திதி விரோதி சமூலமாகக் கழியும்
பர பிரேரித்த தத் பிரயோஜன ப்ரவ்ருத்தி பிரயோஜக நாராயண பதார்த்த அனுசந்தானத்தாலே ப்ரவ்ருத்தி விரோதிகள் கழியும் –

ஆகையாலே சதாச்சார்யா சேவை பண்ணி
பத த்ரய சித்தமான திரு மந்த்ரார்த்தை லபித்து
விரோதிகளை நீக்கி வாழக் கடவன் -என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading