கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-
பதவுரை
அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.
அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே
யஸ்யாவதார ரூபாணி நமஸ்யந்தி திவௌகஸ:அபஸ்யந்த: பரம் ருபம்
(எந்தப் பரம புருஷனுடைய பரவாஸூ தேவ ரூபத்தைக் காணமாட்டாமல் தேவர்கள் அவனுடைய அவதார ரூபங்களை நமஸ்கரிக்கிறார்களோ) என்கிறபடியே -ஆராத,கரான தேவ ஜாதிகள் அவஸர ப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள்-திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.
ஆதித்யனானாவன் தன் ஸ்வரூப ஸித்திக்காக விளக்காய் வந்து தோற்றினான்; அவனைக் குஸல ப்ரஸ்நம் பண்ண வேண்டாவோ? (உன் அடியானான அவனை க்ஷேமம் விசாரிக்க வேண்டாவோ?” )என்கிறார். “வெய்ய கதிரோன் விளக்காக ‘ என்றார் இறே.”நாட்டை யெல்லா மெழுப்புகிற ஆதித்யனுதித்தால் எங்கள் ஆதித்யன் உதிக்க வேண்டாவோ? (எங்களை யெழுப்பும் ராம திவாகரனாகவும், அச்யுத பாநுவாகவு மிருக்கிற தேவரீர் உதிக்க வேண்டாவோ? )பாஹ்யமான அந்தகார மிறே அவனாலே போக்கலாவது; ஆந்தரமான அந்தகாரம் போக்கும் போது தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ?ஆதித்யன் உதய பர்வதத்தை வந்து அணையா நின்றன்; இருள் நீங்கா நின்றது; ஸமாராதந உ பகரணமான
திருப்படித் தாமங்கள் விகஸிதமாகா நின்றன; (தேவரீரை ஆராதிப்பதற்கு உறுப் பான அழகிய மலர்கள் மலர்கின்றன)ஆராதிப்பாரெல்லாரும்-தேவரீரை ஆராதிக்கும் தேவர்கள் ஆராத்யர் தேவரீரென்று தந்தாம் பரிகரங்களோடே , -தங்கள் பரிஜனங்கள் வாஹநங்களோடே அவஸரப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள். -இத்தை யெல்லா மடைய தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்
வ்யா:-(கதிரவனித்யாதி ) தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. (காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து. (மதுவிரிந்தொழுகின மா மலரெல்லாம்) உதய பலமாக ஆராதந உபகரணமான புஷ்பங்கள் விகஸிதமாய் மது வெள்ளமிடா நின்றன-(ஆராதிப்பவர்கள் ஆராதனத்திற்குத் தொடங்கும் காலம் வந்து விட்டது.)(வானவரித்யாதி ) துர்மாநிகளான தேவர்களும், ராஜாக்களும் பக்நாபி, மாநராய், தந்தாமுடைய பல ஸித்திக்கும் ஆபந் நிவ்ருத்திக்கும் உடலா ஒருவர்க் கொருவர் முற் கோலித் திரண்டனர்.( எதிர்திசையித்யாதி; ) திருக் கண்ணோக்கான-தெற்கு திக்கிலே விவரமறப் புகுந்து நின்றார்கள். (இவரொடும் புகுந்த வித்யாதி,) இவர்கள் ஏறும் வாஹனங்களான களிறுகளும் பிடிகளும் முரசினுடைய த்வநிகளுமாய்த் திரண்டு நெருங்கி நின்று த்வநிக்கிற த்வநியானது அலை யெறியா நின்ற ஸமுத்ரத்தின் கோஷம் போலே எங்கும் கோஷியா நின்றது.(அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே) உபய விபூதி நாதத்வம் தோற்றச் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான தேவரீர் அநந்ய கதியான அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
வ்யா:- (கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான்)கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. ) “கதிர வர வரவர் கைந் நிரை காட்டினர்” -திருவாய் 10-9-4]”நாரணன் தமரைக் கண்டுகந்து”10-9-2 என்று தேவரீருடையார் அர்ச்சிராதி கதியே போம் போது, ஆதி வாஹிகர் தந்தாம் பதங்கள் நிலை நிற்கைக்காக,தேவரீருடையார்க்குத் தரங்கொடுத்த விளக்குடையாரோபாதி விளக்குப் பிடிக்கிறவர்கள் வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாதிரார்களிறே. கண் வளர்ந்தருளுகிற தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளுவ தெப்போதோ வென்று அவஸர ப்ரதீஷனாய் –பீஷாஸ்மாத், வாத: பவதே! பீஷோதேதி ஸர்ய:பீஷாஸ்மாதக்நிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம: (தைத்-ஆந 8-1 )(இந்தப் பரம புருஷனிடத்தில் பயத்தாலேயே காற்று அடிக்கிறது. (இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும், இந்திரனும், ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் கார்யத்தைச் செய்கிறார்கள் )என்கிறபடியே கீழ்த் திக்கில் உதய கிரியிலே வந்து தோன்றினான். குன்றத்திட்ட விளக்காக உதய பர்வதத்தினருகே ஊரையும் சோலையையும் கண் வளர்ந்தருளுகிற படியையும் காண்கையிலுண்டான ஆசைப் பாடு தோன்ற வந்து கொடு நின்றான்.(கனவிருளகன்றது) ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று. (காலை யம் பொழுதாய் மது விரிந்தொழுகின மா மலரெல்லாம்) இருட்டுப் போய் நின்ற வளவிலே, (ஸூர்யோதயத்தின் பயனாக ஆராதிப்பதற்கு உதவி புரியும் பூக்கள் மலர்ந்து தேன்,வெள்ளம் பெருக நின்றன. ) (ப்ராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம் |ஹரிர் ஹரிர் ஹரிரிதி வ்யாஹரேத், வைஷ்ணவ: புமாந் ||(பராஸர ஸ்ம்ருதி)[வைஷ்ணவனான புருஷன் விடியற்காலை வேளையில் எழுந்து தனக்கு நன்மையைச் சிந்திக்கக் கடவன்; “ஹரி: ஹரி: ஹரி:என்று மூன்று தடவை சொல்லக் கடவன்.] என்றும், ‘சிற்றஞ் சிறு காலே’ என்கிற படியே ஸமாராதந யோக்யமான அழகிய காலமாய், அக் காலத்திலே, தேஸாந்தரம் போன பந்துக்கள் வாரா நின்றார்களென்றறிந்தவாறே ஸ்வ தேசத்திலிருந்த பந்துக்கள் முக மலருமா போலே, இவ் வெயிற் கொழுந்து தாமரைப் பூக்களை வந்தணாவும்படியான கால வண்ணிமையாலே பூக்கள் ஸ்மிதம் பண்ணினவாறே, பூக்களினுடைய செறிவு நெகிழ, சித்ரங்களாலே பூவில் தேன்களடைய ஒழுகா நின்றன-(அக் காலத்திலே வெளியூர் போன உறவினர்கள் வருவதை அறிந்தவுடன் உள்ளூரிலிருக்கும் உறவினர்களின் முகம் மலர்வது போலே, முதல் நாள் மறைந்த ஸூர்ய கிரணங்கள் தாமரைப் பூக்களை வந்தடைந்தவுடன் அப்போதே பூக்கள் சிரிப்பது போலே மலர்ந்தன. குவிந்திருந்த பூக்கள் விரிந்தவுடன் அந்த இடைவெளி வழியாகப் பூக்களிலுள்ள தேன்கள் ஒழுகா நின்றன.)மா மலர்– பெரிய மலர்-மா மலரெல்லாம் ‘ என்கையாலே புஷ்ப ஜாதிக்கெல்லாம் உப லக்ஷணம்.(முல்லை,மல்லிகை, செண்பகம், இருவாட்சி முதலிய எல்லா வகையான பூக்களையும் உபலக்ஷண முறையாலே காட்டுகிறது. )மது விரிந்தொழுகின- மது வெள்ளமிடா நின்றது-(வானவரித்யாதி,) ஆராதகரான தேவர்களும் ராஜாக்களும் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்கு இதுவே யாத்ரையாக ஆராத்யரான தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான த்வரையாலே முற்பட்டார் முற்பட்டபடி ஒருவரிருவராய் வந்து திரண்டு திக்குகள் எங்கும் நிறையப் புகுந்தார்கள். திருக் கண்ணோக்கிலும், அல்லாத திக்குகளெங்கும் நிறைந்தார்கள் என்னவுமாம்; (“எதிர்திசை” என்று கடாக்ஷத்திற்கு விஷயமான தெற்குத் திக்கைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். ஒன்றுக்கொன்று எதிரான எல்லா திசைகளையும் சொல்லுவதாகவும் கொள்ளலாம். )தேவரீருடைய பரிகரமென்னில் இங்ஙனே இருக்க வேண்டாவோ?(இவரொடுமித்யாதி) இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பிடிகளுமாய்; ஸ்ரீரங்கமிறே.(ஸ்ரீரங்க நாதனைப் பிரிய மாட்டாத “ஸ்ரீ”ஆகிய ஸ்ரீரங்க நாச்சியார் வாழும் ஸ்ரீரங்க மன்றோ இது. )வாத்ய கோஷங்களும், இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது, உறங்குகிற பிள்ளைகளை ஒரு வகைகளாலே எழுப்புமா போலே வாத்ய கோஷங்களாலே திருப் பள்ளி யுணரும்படி-(அதிர்தலில் அலை கடல் போன்றுள தெங்கும்) இப்படி கோஷிக்கையில் “குமுறுமோசை விழவொலி”-திருவாய்-6-5-2]- என்னுமா போலே இந்த ஸமுதாய கோஷமானது-சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளர்ந்தது. பெரும் புறக் கடலான-பெரிய திரு 7-10-1- தேவரீர் உணர வேண்டாவோ? உபய விபூதி யுக்தரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்து இவர்களுக்கு முகங்கொடுத்தருளி, அடிமை கொண்டருள வேணுமென்று கருத்து.(அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே) பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ( நாச்- திரு 11-3] என்கிறபடியே இங்கிருந்து கொண்டு உபய விபூதியையும் செங்கோல் செலுத்துகிற தேவரீர் வேறு புகலற்ற அடியேனுடைய ப்ரார்த்தனைக்காகத் திருப் பள்ளி யெழுந்து இவர்களைக் கடாக்ஷித்து அடிமை கொண்டருள வேணும் என்று கருத்து.
———–
அவ:,போது விடிந்தமைக்கு அடையாளமான கீழ்க் காற்றும். புஷ்ப ஸாயிகளான அன்னங்களினுடைய ப்ரபோதநமும் உண்டாயிற்று; ஆஸ்ரித வத்ஸலரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-
அவ:- முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு கீழ்க் காற்று வந்து தாமரைப் பூவில் கிடந்துறங்குகிற ஹம்ஸ மிதுனங்களைக் கிளப்பிற்றின; (போது விடிந்ததற்கான அடையாளமான இவை உண்டான பிறகும் )ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய விரோதி,யை
யறுக்க அரை குலையத் தலை குலைய வந்து ரக்ஷித்தருளின தேவரீர் கண் வளர்ந்தருளுகிறதென்? திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.
கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள்ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-
குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.
வ்யா:- ஸஸ்ரத்தமான முல்லை யினுடைய ஸஸ்ரத்தமான பூவை யணவி, அல்லியுந் தாதும் அரும்புமான கந்தல் (கல்மஷம் )படாமே அருமிதியான(அதனுடைய ஸாரமான) மணத்தை வாங்கிக் கொண்டு புது மாதவிமீதணவி(திருவாய் 5-9-2] என்னுமா போலே கீழ்த் திக்கில் காற்றானது கூர்ந்தது-விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை,
ஆதித்யனுக்கு நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலத்தில் பூவான முல்லைப் பூவும் விகஸித்து, அதின் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப் பள்ளி யுணர்த்துமா போலே வந்து கொடு நின்றது.(சென்ற பாட்டில் சொன்ன படி, ஸூர்யனுக்கு நேரே உறவான நீர்ப் பூவான தாமரை மாத்திரமல்லாமல், நிலத்தில் பூவான முல்லையும் மலரப் பெற்று, அதன் மணத்தை முகந்து கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துவது போலே கீழ்க் காற்று வீசுகிறது.) இதுவோ’ காலைப் பிடித்து உணர்த்துகிறபடி.-இதுவோ” என்றது-ராஜாக்களுக்கு அந்தரங்கரானவர்கள் வந்தவர்களைக் காட்டுமா போலே பார்த்தருளீரென்கிறார். ஸ்பர்ஸேந்த்ரிய க்ராஹ்யமானதை -என்கையாலே -காற்று ஸதத தித்வம் தவிர்ந்து நின்றப் போலே யிருக்கிறது-(தொடு வுணர்ச்சியை உணரும் த்வக் இந்த்ரியத்தாலே அறியப்படும் காற்றை “இதுவோ” என்கையாலே, காற்று எப்போதும் ஸஞ்சரிக்கும் தன் தன்மையை விட்டு, பெரிய பெருமாளுக்குக் கைங்கர் ம் செய்வதற்காக நேரே நின்றது போலே இருக்கிறது.)
(எழுந்தன இத்யாதி) தாமரைப்பூவாகிற படுக்கையிலே பனியை மதியாதே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிற ஹம்ஸ மிதுநங்களானவை காலமுணர்த்த உணர்ந்தன.இத்தால் அரு மறை பயந்த வன்னத்தோடு ஸஜாதீயமானஅன்னம் எழுந்தன-நீயு மெழுந்திரா யென்றபடி. (தமிருஞ்சிறகித்யாதி) பனியிலே நனைந்த சிறகுகளை உதறி நின்றது.
(விழுங்கியவித்யாதி)(பராமாபத மாபந்த🙂 என்று ஸ்வ ஸக்தி மாளும் படி, பிலத்வாரமென்று சொல்லலாம்படி யிருக்கிற பெரிய பரப்பை யுடைய முதலை வாயிலே அகப்பட்டு அதினெயிற்றாலே நெருக்குண்டு மிகவும் நோவு பட்டு, துதிக்கை முழுகும் படியான தஸையிலே, பெரிய ஆபத்தைத் தீர்த்து,
“கைம் மா துன்பம் கடிந்த பிரான்” என்று உபகார ஸ்ம்ருதியாலே க்ருதஜ்ஞர் ஈடுபடும் படியாக, கையில் பூவின் செவ்வி யழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு, அவனை யடிமை கொண்ட மஹோபகாரகராய், பிற் பாடர்க்கு உதவுகைக்காகக் கோயிலிலே நித்ய ஸந்நிதி, பண்ணுகிற தேவரீருணர்ந்தருளும் போதை யழகு காண ஆசைப்பட்ட அடியோங்களுடைய ஆர்த்தி யெல்லாம் தீரும்படி உணர்ந்தருள வேணுமென்கிறார்.
பரமாபத மாபந்நே மநஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர: ஸ்ரீமாந் நாராயண பராயண:| [வி- தர் 69 -47]
( ஸ்லாக்யமான ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தினாலே ஹரியை நினைத்தான் ] என்கிறபடியே தன் ஸக்தியெல்லாம் அழியும்படி குகை வாயில் போலே இருக்கும் பெரிய பரப்பை உடைய முதலை வாயிலே அகப்பட்டு, அதன் வெண் பற்களாலே கடிக்கப்பட்டு மிகவும் துன்புற்று, துதிக்கை முழுகும் படியான நிலையை கஜேந்த்ராழ்வான் அடைந்தவுடன் அவனுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்து வைத்து, “கைம்மா துன்பம் கடிந்தபிரான்” (திருவாய் 2-9-1] என்று நம்மாழ்வார் போல்வார் தமக்குச் செய்த உதவியாக நினைத்து ஈடுபடும் படியாக, கஜேந்திரன் கையில்
புஷ்ப்பம் வாடுவதற்கு முன்பே அதைத் தன் திருவடிகளிலே இடச் செய்து கொண்டு அவனை அடிமை கொண்டு அவனுடைய பெருந்துயரைப் போக்கிய வரலாற்றை அருளிச் செய்கிறார்.”முதலையின் வாயிலே யானை அகப்பட்டது என்றால் தான் தேவரீர் அரை குலையத் தலை குலைய ஓடி வருவீரோ? எங்களைப் போன்ற ஸம்ஸாரிகள் ஸம்ஸார ஸாகரத்தில் அகப்பட்டுத் தத்தளிப்பது கண்டு ஓடிவர மாட்டீரோ?” என்னும் கருத்து தோன்றுகிறது)
வ்யா:-செழுமை யுடைய முல்லைக் கொடியினுடைய செழுமை நிறைந்த முல்லைப் பூக்களை அளைந்து விடி காற்றானது “நீங்களுறங்குகிறதென்?” என்று உணர்த்துவாரைப் போலே சூழ்ந்து கொண்டு முகங்களிலே அலை யெறியா நின்றது;
(எழுந்தன மலரணை யித்யாதி,) இக் காற்று வீசினவாறே விடிந்ததாகாதே யென்று மலராகிற படுக்கையிலே பள்ளி கொள்ளுகிற ஹம்ஸ மிதுநங்களுணர்ந்தன.
“பள்ளி கொள்”-என்கிறது- உகந்தருளின நிலத்திலே உள்ளவையாகையாலே உபசாரமாக வல்லது சொல்லாரிறே, ” நம்மில் சிறியாரில்லை இங்கு வர்த்திப்பாரில்’ என்றிருப்பார்களே-( நாடோடியான அன்னங்கள் உணர்ந்த பின்பும் அரு மறை பயந்த அன்னமான தேவரீர் உணர வேண்டாவோ? என்று கருத்து. “அன்னமாய் அன்றங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகரமர்ந்தானே” [பெரியதிரு 5-7-3] என்று திருமங்கையாழ்வாரும் அருளினாரன்றோ. )(“மலரணைத் துயிலும் என்று கூறாமல் ‘மலரணைப் பள்ளி கொள்’ என்று கூறியது எம்பெருமான் உகந்தருளின பூ,லோக வைகுண்டத்தில் உள்ளவை யாகையாலே
கௌரவமாகவே சொல்ல வேண்டும் என்னும் திரு வுள்ளத்தாலே)
(“அஹ்ருத ஸஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்த பந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கா தாம
மஹித மநுஜ திர்யக்ஸ்தாவரத்வா: ஸ்ரயந்தே
ஸுநியத மிதி ஹஸ்ம ப்ராஹுரேப் யோ நமஸ்ஸ்தாத் (ர-ஸ்த 1-33)
[ இயல்வான ஷேத்வம் என்றுமே நீங்கப் பெறாத நித்யஸுரிகளும், பந்தத்திலிருந்து விடுபட்ட முக்தர்களும், அழகியதான கடைசி தேஹத்திலிருக்கும் முமுக்ஷக்களுமான இவர்கள் ஸ்ரீரங்கத்தில் சிறப்புற்ற மனிதர், திர்யக், ஸ்ததாவரம் ஆகிய பிறவிகளை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது நிச்சயம் என்று அறிவாளிகள் கூறுகிறார்கள். இவர்களுக்கு நமஸ்காரம் ) என்று
பூர்வாசார்யர்கள் ஸ்ரீரங்கத்தில் வாழும் பறவைகள் முதலானவற்றையும் நித்ய முக்தர்களில் ஒருவராக அநுஸந்தித்தார்களன்றோ. பெரிய திருமலை நம்பி, “என்னை அழைக்க ஒரு சிறியாரை அனுப்பக் கூடாதோ? நீரே வர வேண்டுமோ?” என்று கேட்ட எம்பெருமானாரிடம் “திருமலையில் என்னைக் காட்டிலும் சிறியார் இல்லை ” என்று அருளிச் செய்தாரன்றோ)
பூம் படுக்கையிலே தனிப் படுக்கை தணலோடொக்கு மாகையாலே மிதுநமாயல்லது ஸயியாமை தோற்றுகிறது; மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாமே.-திருவாய் 9-9-4-( எழுந்தன’ என்று பன்மையில் அருளிச் செய்கையாலே அன்னம் என்னும் பதம் பேடையோடு கூடிய ஆண் அன்னத்தைக் குறிக்கிறது )
(ஈன் பனி நனைந்த)
உண்டான பனியாலே நனைந்த என்னுதல்; சொரிகிற பனியென்னுதல்(இது சிறகுக்கு விஸேஷணம். ஈன் பனி’ என்றது “விடியற் காலையில் உண்டான பனி” என்றோ,
மழை போலே சொரிகிறபனி’ என்றோ பொருள் படும்.)
“ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய”-இத்யாதி (ஒழுகு நுண் பனிக்கொடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை கோலி” (பெரியதிரு 8-5-8) என்று பரகால நாயகியும் பனிக்கு பயந்து ஒடுங்கிய பேடையை ஆண் அன்னம் தன் சிறையிலே அடக்கிக் கொண்டு துயில்வதாக அருளினாளன்றோ.) (இருஞ்சிறகுதறி) பெரிய சிறகுகளை உதறிக் கொண்டு; பேடையைச் சிறகுக்குள்ளே வளர்த்தித் தன் சிறகை யிட்டுக் கவித்துக் கொண்டாய்த்துக் கிடப்பது. நாடோடியான அன்னங்களெல்லாமுணர்ந்தன;
அன்னமா யன்றங் கருமறை பயந்த தேவரீர் திருப் பள்ளி யுணர வேண்டாவோ?
(விழுங்கிய வித்யாதி.)முதலையின் கையிலே யானை அகப்பட்டதென்றாலோ தேவரீர் அரை குலையக் தலை குலையப் புறப் படலாவது? காலிலே முதலை கடிக்க “விழுங்கிய”என்கிறார்-பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் ‘இனியிழந்தேன்’ என்பாரைப் போலே. (“காலிலே முதலை கஜேந்திரனைக் கடித்து நீரில் இழுத்தது” என்றே வரலாறு யிருக்க. விழுங்கிய” என்று இவர் அருளிச் செய்வது-குழந்தை கிணற்றின் அருகிலே போகும் போதே ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது” என்று பரிவாலே கூக்குரலிடும் தாயின் செயலை ஒத்தது. )
( பிலம்புரை பேழ்வாய் )
பிலத்வாரத்தோ டொத்திருக்கிற பெரிய வாயின்.
(வெள்ளெயிறுற) அங்கு ஆமிஷமில்லாமையாலே மணலை யிற
பக்ஷிப்பது; ஆகையாலே சாணையிலிட்ட ஸ்த்ரம் போலே காணுமிருப்பது
(அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கியஆனையினருந்துயர் கெடுத்த )
(அனுக்கம்) நோவு; (அழுங்கிய) அழுந்திய; நோவிலே அழுந்தின என்றபடி.) ஆனையினுடைய காலைப் பற்றின முதலை யினுடைய பல்லின் விஷத்தாலே யனுங்கி நோவு பட்ட ஆனை யுடைய. (அழுங்கிய) நோவு பட்ட.
(அருந் துயர் கெடுத்த) –அதந்த்ரித சமூபதி ப்ரஹிதஹஸ்தம்)இத்யாதி .
(அருந்துயர் இனி அவ்வருகில்லை என்னும்படியான க்லேமென்னவுமாம் ;
பெறுதற்கரிய துயரென்றுமாம். ஸர்வேஸ்வரனை வந்து விழப் பண்ணின நோவிறே.
(அரங்கத்தம்மா இத்யாதி ) இப்படி ஆர்த்தரானார் கூக்குரல் கேட்கிற இடத்திலே உறங்குமத்தனையோ? ஒரு முதலை பிடித்தாலோ உதவலாவது?
ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ஆழ விழுந்து இந்தரியங்களாகிற முதலைகள் ஐந்தின் வாயிலே விழுந்து அகப்பட்டாரை உணர்ந்தருளி ரக்ஷிக்க வேண்டாவோ?
இப்படி ஸம்ஸாரத்தில் கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் முதலான பல முதலைகளால் நோவுபட்டவர்களை நோக்குவதற்காக வன்றோ திருவரங்கத்தில் திருப்பள்ளி கொள்வது; ஒரு முதலை பிடித்தால் தான் உதவலாமோ? ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே கரை யேற முடியாதபடி விழுந்து இந்த்ரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துன்புறுகிறவர்களை உணர்ந்து ரக்ஷிக்க வேண்டாமோ? “தேவரீர் பள்ளியெழும் அழகைக் காண ஆசைப்பட்ட எங்களுடைய வருத்தம் தீர உணர்ந்தருள வேணும்” என்றுமாம்
———————
அவ:- நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும்படி ஆதித்யனுதித்தான்; கையுந் திருவாழியுமான அழகை அநுபவிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
அவ:- ஆதிரத்ய கிரணங்கள் எங்கும் பரந்தன; நக்ஷத்ராதி,பதியான சந்த்ரனும் விவர்ணனானான்; திருச்சோலையில் படல் விரிந்த பாளையின் மணத்தைக் கொண்டு விடி காற்றனது வந்தது; கையும் திருவாழியுமான அழகைக் கொண்டு உணர்ந்தருள வேணுமென்கிறார்.
முதற் பாட்டில் கீழ்த் திக்கில் உதய கி,ரியிலே வந்தணைந்தானென்றது; இதில் -நேராக வுதித்து, தன்னுடைய தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோற்றினானென்கிறார்.
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –
பதவுரை
சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.
வ்யா:-(சுடரித்யாதி )பார்த்த பார்த்த இடமெங்கும் ஆதித்ய கிரணங்கள் பரம்பிற்று; அத்தாலே நக்ஷத்ராதி,களுடைய தேஜஸ்ஸு தோற்றாதபடியாயிற்று. அவ்வளவன்றிக்கே
( படரொளி இத்யாதி,) இரவெல்லாம் ஸாம்ராஜ்யம் பண்ணின சந்த்ரனும் ஒளி மழுங்கினான்-
(பாயிருளகன்றது)அந்தச் சந்த்ரனுக்கு விகாஸ ஹேதுவாய்ப் பரப்பின இருளானது, மஹா ராஜாக்கள் தோற்றினால் க்ருத்ரிமர் ஒளிக்குமாபோலே மறைந்தது.
(பைம் பொழில்கமுகினித்யாதி)பசுமையை யுடைத்தான சோலைக் கமுகுகளின் பாளைகளானவை விரிய, அதின் பரிமளத்தை முகந்து கொண்டு விடிவோரைக் காற்றானது எங்கும் வ்யாபியா நின்றது.
(அடலொளியித்யாதி.) திருவாழியாலே ப்ரதி பக்ஷத்தைப் போக்கினாப் போலே கையும் திருவாழியுமான அழகைக் காட்டி ஸஹஜ சத்ருவான இந்த்ரிய பாரவஸ்யதையைப் போக்கி, தேவரீர் அழகை அநுப,விக்கும்படி திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.
வ்யா:- ( சுடரொளி பரந்தன சூழ் திசை யெல்லாம் )
சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )
(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து. -“தாரகையின் புறந்தடவி யப்பால் மிக்கு’ என்றும்,(“இருவிசும்பினூடு போயெழுந்து – மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிரவோடி, தாரகையின் புறம் தடவி, அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை”[திருநெடு 5]-என்கிறபடியே எல்லாப் பொருள்களையும் வியாபித்து தரிக்கச் செய்யும் திருவடிகளை உடையவராகையாலே, நக்ஷத்திரம் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நாயகராய்.) (சந்திர காந்தாநநம் ராமம்) என்றும் (சந்த்ர காந்தாநதம் ராமமதீவ ப்ரிய தர்ஸநம் (ரா-அ 3-29][சந்திரன் போன்று அழகிய முகமுடையவனாய், மிகவும் இனிய காட்சியை உடையவனான ராமனை (தசரதன் கண்டான்)] என்கிறபடியே,)ஸர்வ பதார்த்தங்களையும் தரிப்பிக்கப் பண்ணும் திருவடிகளை யுடையராய், ஸகல கலா பரி பூர்ணராய், நிஷ் களங்கனான சந்த்ரனைப் போலே யிருக்கிற குளிர்ந்த திருமுகத்தை யுடையரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருளலாகாதோ?-
ஆகாசப் பரப்பெல்லாம் முப்பல் (முத்துப் பந்தல்) விரித்தாப் போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து,-இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய பரந்த தீப்தியும் போய்த்து ; தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே, சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.
(“அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்-திரு வாய் 1-9-9]என்கிறபடியே தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷிக்காமையாலே,சந்த்ரன் தானும் தன் துணையான நக்ஷத்திரங்களோடு உரு மாறிப் போய் விட்டான் என்றும் கருத்துரைக்கலாம்.)
(பாயிருள்) வ்யாபித்த இருள். (அந்தச் சந்த்தரனுடைய ப்ரகாஸத்திற்குக் காரணமாய்ப் பரவி யிருந்த இருள்)
(அகன்றது) நிரஸ்தமாய்த்து. (மஹா ராஜாக்கள் வெளியில் வந்தால் கள்ளர்கள்
ஒளிவது போலே ஸூர்யன் தோன்றிய வுடன் இருள் மறைந்தது.)
( பைம்பொழிலித்யாதி, ) கலக்கந் தெளிந்தால் தந்தாமுடைய போகம் ஒருக்குவாரைப் போலே. (கலக்கம் தெளிந்தவுடன் தம்முடைய போாகத்திலே ஈடுபடுவாரைப் போலே, விடியற் காலைக் காற்றானது, இருளகன்றவுடன் பசுமை யுடைய சோலைக் கமுகுகளின்
பாளைகள் விரிய,அவற்றின் மணத்தை முகந்து கொண்டு எங்கும் வீசுகின்றது. )
(மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற) பாளைக்கு வண்மை யாவது- காற்றுக்குத் தன் பக்கலுள்ளத்தைக் கொடுக்கை யிறே.
(வைகறை) என்று- விடியற்காலம். (மாருதம்.காற்று; விடிகாற்று வருகையும், கமுகிலுண்டான பாளைகள் விகஸிதமாகையும், இதிலுண்டான மணத்தைக் காற்று கொண்டு வருகையாலே மணம் விஞ்சிற்று. கூருகையாவது-மிகுகை.
“மன்றூடு தென்றலுலாம் ” என்று பொதுவான காற்றன்றியே விடிந்தமைக்கு அடையாளம் தெரியக் காற்று வரச் செய்தேயும் கண்வளர்ந்தருள வேணுமோ?( “‘மன்றூடு
தென்றலுலாம் மதிளரங்கம்” [ பெரியாழ் திரு 4-8-9 ] என்கிறபடியே திருவரங்கத்தில் எப்போதும் வீசும் காற்றல்ல இது]-விடிந்ததற்கு அடையாளமான மணம் மிகுந்த இக் காற்று வீசிய போதிலும் கண் வளர்ந்தருளலாமோ? என்று கருத்து.)
(அடலொளியித்யாதி) ஆதித்ய கிரணங்கள் மின்மினியாம் படியிறே திருவாழி யாழ்வானொளி; பெரிய மிடுக்கை யுடைத்தாய், ஒளி திகழா நிற்பதாய், தேஜஸ்ஸு விளங்கா நின்றுள்ள திகிரியை யுடைத்தாய், வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகை யுமுடைய திருக் கையிலே.
(தடக்கை) திருவாழி யாழ்வானுக்கு இடம் போரும் படியான திருக்கை.
( அரங்கத்தம்மா) ஆர்த்தரானார்க்கு முகங்கொடுக்க வந்த விடத்தே கிடந்துறங்குமத்தனையோ?-தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்-
(திருவாழி யாழ்வானைக் கொண்டு எதிரிகளைப் போக்கினது போலே, கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எங்களுடைய உடலிலுள்ள எதிரி
இந்திரியங்களுக்கு வசப்பட்டிருக்கும் தன்மையைப் போக்கி, தேவரீருடைய அழகை நாங்கள் அநுப விக்கும்படி பள்ளி யெழுந்தருள வேணுமென்று அருளிச் செய்கிறார்.
ஸூர்ய கிரணங்கள் மின்மினி போலே ஆம்படி இருப்பதன்றோ ஸுதர்சனாழ்வானின் ஒளி; ஆகையாலே அதை அடலொளி என்கிறார். ஸம்ஸாரத் துன்பங்களால் வருந்துகிறவர்களுக்கு முகம் கொடுப்பதற்காக வந்து திருவரங்கத்தில் படுகாடு கிடக்கும் போது உறக்கம் கொள்ளலாமோ? தேவரீர் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.
———
அவ:- சக்ரவர்த்தித் திருமகனா யவதரித் தருளி விரோதி, நிரஸந பூர்வகமாக ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் பண்ணி யருளினால் போலே த்வத் அநுபவ விரோதியைப் போக்கி அநுபவி(ப்பி?)க்கத் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.
அவ:- ‘எருமை சிறுவீடு என்கிறபடியே சிறு வீடன்றியே பெரு வீடும் விடும் படியாய், இளங்கன்று மேய்க்க ஒருப் பட்டுத் தளை விடுகிற ஆயர் ஊதுகிற குழலினோசையும்,நாகுகளின் மேலே செருக்கி யோடுகிற விடையினுடைய
கழுத்தில் மணி யோசையும், கார்மணியினாவாடல்”’ என்கிறபடியே மணிக் குரலும் திக்குகளெங்கும் பரந்தது;-மது பாநம் பண்ணின வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டு கிளம்பிற்றின; இவற்றின் ஆர்ப்பரவமறப் போய் அதிக்ரமித்துச் செல்லா நின்றது; விரோதி, நிரஸந ஸீலராய்,ஸர்வ ரக்ஷகரான தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார்.
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-
பதவுரை
மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.
வ்யா :-கொம்புகள் அங்குரியா நின்றுள்ள இளையதான எருமைகளும், அவற்றை நியமிக்கக் கடவ இடையர் ஊதுகிற குழலோசையும், அதுக்கும் மேலே மேயப்
புறப்பட்ட பசுக்களின் நடுவில் ரிஷபங்களின் கழுத்தின் மணி த்வநியுமாய், இசை போலே திரண்ட த்வநி எல்லா திக்குகளிலுள்ள வயலெல்லாம் பரந்தன.
( இரிந்தன சுரும்பினம்)அலருகிற கால புஷ்பங்களில் மதுவைப் பாநம் பண்ணின வண்டுகளானவை ஸப்திக்கத் தொடங்கிற்றின.
(இலங்கையரித்யாதி)-துர் வர்க்காத்துக்கெல்லாம் புகலிடமான லங்கைக்கு நிர்வாஹகனான ராவணனுடைய குலத்தை ஸ பரிகரமாக மாய்த்த ஸ்ரீசார்ங்கத்தை உடையராய், ப்ரஹ்மாதி,களுடைய அபேக்ஷிதம் செய்யப் பெற்றோமென்னும் மேனாணிப்பையும் உடையவரே!-விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.
(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.
வ்யா:- இளங் கன்றாயிருக்கச் செய்தே ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்று இவற்றினுடைய. (தளை விடுமாயர்கள்) தளை விடுகையாவது- கட்டு விடுகை. சிறு வீடன்றியே விடிந்து மேய்கையாலே பராக்கற்று மேயுமே; பின்பு அவர்களுக்குப் பராக்கற்ற படியாலே குழலூது மித்தனை யிறே.
(விடை மணிக் குரலும்) பசுக்களும் விட்டு இவற்றுக்குக் கடவதான விடை மணி யோசையும் ;”(ஜ்ஞாநேந ஹீந:பபி,ஸ் ஸமாந:)என்னக் கடவதிறே.(ஆஹார நித்ரா பாயமைது நாநி
துல்யாநி கால்வத்ர ஸமஸ்த ஜந்தோ : |
ஜ்ஞாநாத், விஸிஷ்டோ ஹி நர: பரேப்யோ
ஜ்ஞாநேந ஹீந: பஸூபிஸ் ஸமாந: [நரஸிம்ஹ புராணம் 16-13]
(ஆஹாரம், நித்திரை, பயம். ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும் ஸமானம்.-மற்றவைகளைக் காட்டிலும் மனிதன் அறிவினால் மேலானவனாயிருக்கிறான். ஞானமற்றவன் பசுக்களுக்கு ஸமானமானவன். ]என்று ஞானமற்றவர்களுக்கு உதாரணமாகச் சொல்லப்பட்ட பிராணிகளும் )
இப்படிக் கொத்த ஜ்ஞாந ஹீநமான பதார்த்தங்கள் விட்டு ஸஞ்சரியா நின்றன. ஸர்வஜ்ஞரான தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ? இப்படிப் பட்ட குழலோசையாலும் மணி யோசையாலும்,
( ஈட்டிய விசை திசை பரந்தன திரண்ட த்வநிகளானவை திக்குகளெங்கும். பரந்தன-விஸ்த்ருதமாய்த்து.
(வயலுள் இரிந்தன சுரும்பினம்) சோலைக்குள்ளி லன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை செங்கழு நீரிலே மது பாநம் பண்ணின வண்டுகளானவை ஆரவாரித்துக் கொண்டு சிதறிற்றின.
(இலங்கையர் குலத்தை வாட்டிய) லங்கை யிலுண்டான ராவண ஸந்தாநத்தை வாட்டிய; வாட்டுகையாவது -நிஸ் ஸேஷமாக முடிக்கை; கரியாக்குகை. “வாட்டிய” என்றால் கரியாக்குமோ வென்னில்; வீரபத்நி யாகையாலே “கிள்ளிக் களைந்தானை” என்னுமா போலே, இவரும் தம்முடைய வையாத்யத்தாலே விரோதித்தார்(க்குச் )சொல்லும் படியே அநாயாஸநமாகச் செய்தபடியைக் கொண்டு வாட்டிய” என்ற தித்தனை; இவை எரி சிதறும் சரமாகையாலே தீ,ப்த பாவக ஸங்காஸங்களாகையாலே -அவைகளைக் கரியாக்கி யல்லது விடாதே-
( “பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை” ( திருப்பாவை 18 ) என்று ஆண்டாள் ராவண ஸம்ஹாரத்தைச் சொல்லும் போது வீர பத்நி யாகையாலே ராமன் அநாயாஸமாக ராவணாதிகளை அழிப்பதைக் காட்டுவதற்காக, -கிள்ளிக் களைந்தானை’ என்று கூறியதையும், ராவணனோடு எதிரிட்ட ராம பிரான் தம்முடைய வீரத்தை சுக்கிரீவனுக்கு வெளிப் படுத்தும் போது ” அங்குள்யக்ரேண தாந் ஹந்யாம்” ( ரா-யு 18-24)[தீயவர்கள் அனைவரையும் விரல் நுனியாலே கொல்லுவேன் ] என்று தான் விளையாட்டாக எதிரிகளை அழிக்க வல்லவன் என்று சொல்லி அப்படியே செய்த படியையும் போலே, இவ் வாழ்வாரும்-வாட்டிய’ என்கிறார். ராம பாணங்கள் எரி சிதறும் சரம்” (பெரியாழ் திரு 4-3.8] என்றும், “தீப்த பாவக ஸங்காஸை: [ரா-யு16-22) என்றும் சொல்லுகிறபடியே அக்னியை வீசும் அம்புகளாகையாலே, எதிரிகளைச் சாம்பலாக்கியே தீருமன்றே.)
(நேயயமஸ்தி) யிறே;
(ஸீதாயாஸ் தேஜஸா த,க்தா ) விறே; (காஞ்சந பூ,ஷணை🙂 என்னக் கடவதிறே
(நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண:
யஸ்மாதிக்ஷ்வாகு நாதேந பத்தம் வைரம் மஹாத்மநா |||(ரா- 43-25)
(மஹா புருஷனும், இஷ்வாகு குல நாதனுமான ராகவனோடு விரோதம் வைக்கப் பட்டதாகையால், இந்த லங்கா புரியும், நீங்களும், ராவணனும் அஸத் ஸமராய் விட்டீர்கள். ] என்று ராவணன் லங்கையில் இருக்கும் போதே, அவன் இல்லை என்று அனுமன் சொன்னது போலே இங்கு ‘வாட்டிய‘ என்னும் பதத்திற்கும் ‘அழிந்த என்று பொருள் கொள்ளலாம்.)
(ஸீதாயாஸ் தேஜஸா தக்தாம் ராம கோப ப்ரபீடி தாம்
தஹ்ய மாநாமிமாம் பஸ்ய புரீம் ஸாட்ட ப்ரதோளிகாம் |(ரா-ஸு 51-37]
(சீதையின் தேஜஸ்ஸாலே எரிக்கப் பட்டதும், ராமனுடைய கோபத்தால் பீடிக்கப் பெற்றதுமான இந் நகர் மாடங்களோடும் வீதிகளோடும் எரியப் போவதைப் பார்.) என்று அநுமனே இலங்கை எரியப் போவதாகக் கூறினானன்றோ)
(தீப்த பாவக ஸங்காஸை : ஸிதை: காஞ்சந பூ ஷணை:
நத்வாமிச் சாம் யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை -[ரா-யு 16-22])-எரியும் நெருப்புப் போன்றவையும், கூர்மை யானவையும் பொன்னால் அலங்கரிக்கப் பெற்றவையுமான அம்புகளைக் கொண்டு ராமனாலே நீ கொல்லப் படுவதை நான் காண விரும்ப வில்லை -என்று விபீஷணனும் எரியும் நெருப்புப் போன்ற அம்புகளாலே ராவணன் அழியப் போவதை அவனுக்கு உணர்த்தினானன்றே)
(வரிசிலை வானவரேறே) தர்ஸ நீயமான வில்லை யுடைய-வானவரேறே! ராக்ஷஸரை நிரஸித்து அநுகூலனான ஸ்ரீ விபீஷணாழ்வானை வைத்தாப் போலே இந்த்ரனுடைய அமராவதியை தரிப்பித்து இந்த்ரனுக்கு ஸ்வர்க்க லோகத்தையும் கொடுத்தபடி.
(மாமுனியித்யாதி) முனிகளாகிறார் மநந ஸ்ரீலரிறே. “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்” (ஏஹி பஸ்ய ஸரீராணி)இத்யாதி, எங்கள் பக்கலுள்ள தெல்லாம் குழைச் சரக்கு; உன் அம்பு பார்த்திருந்தோ மென்ன வல்லவர்களிறே; அப்படிப்பட்ட மஹர்ஷிகள் வந்தாலோ போகலாவது?
(மாமுனி வேள்வியைக் காத்து) லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)
(ஏஹி பஸ்ய ஸ்ரீராணி முநீநாம் பாவிதாத்மநாம் |
ஹதாநாம் ராக்ஷஸைர் கோரைர் பஹுநாம் பஹு தாவநே [ரா-ஆ 6-16.)-(ராம (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம் செய்பவர்களும், வனத்தில் கோரமான ராக்ஷஸர்களால் பலவிதமாக ஹிம்ஸிக்கப் பட்டவர்களுமான பல முனிவர்களுடைய ஸரீரங்களைப் பார்ப் பாயாக.] என்கிறபடியே “எங்களுக்கு எங்களை ரக்ஷித்துக் கொள்ள வலிமை யில்லை;உன்னுடைய அம்பைக் கொண்டே எங்களை ரக்ஷித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று சொல்லுகிறவர்களே மாமுனிகள் ஆவார்.“அப்படிப்பட்ட மஹரிஷிகள் வந்தால் தான் எழுந்திருந்து வருவாயோ?” என்று கருத்து)
அத்வர த்ராணம் பண்ணி ] அவரைக் கொண்டே அவப்,ருத,ஸ்நாநம் பண்ணி அதுக்கீடான ப்ரதி பக்ஷத்தை முடிக்கைக் கடியான திறலை யுடைய-பராபி, பவந ஸாமர்த்ய முடையருமாய்,-(தஸ வர்ஷ ஸஹஸ்ராணி) என்றாப் போலே தீர்த்தம் ப்ரஸாதிக்கை யன்றிக்கே, பிற்பாடரானாரும் பெறும் படியாகக் கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற இதுக்கு ப்ரயோஜநம் வேண்டாவோ? விரோதி,நிரஸநம் பண்ணினோமாகில் இனி யென்னென்று கிடக்கலாமோ? அப்படியே ராக்ஷஸராலே பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான் செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர்-
(உத்திஷ்ட, நரஸார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந் தருளப் பார்க்கிறது?
அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?
( தஸ வர்ஷ ஸஹஸ்ராணி தஸ வர்ஷ ஸதாநி ச |
ராமோ ராஜ்யமுபாஸித்வா ப்ரஹ்ம லோகம் கமிஷ்யதி ||(ரா-பா 1-97
(பதினோராயிரம் வருடம் ராம பிரான் ராஜ்யத்தை ஆண்டு பர ப்ரஹ்மமாகிற தன் லோகத்தை அடைவான்.) என்கிறபடியே நீண்ட காலம் அரசாட்சி செலுத்திய எம்பெருமானே! மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ? “விரோதிகளான
அரக்கரை அழித்து விட்டோம். இனிச் செய்ய வேண்டியதில்லை’-என்று படுத்திருக்கலாமோ? அப்போது அரக்கராலே துன்புற்ற பீடிதரான தேவ ஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான்
செய்த படி அழகிதோ வென்று வினவி யருள வேண்டாவோ? என்கிறர். (உத்திஷ்ட, நரார்தூல) என்று கொண்டு பண்டே யெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப் பள்ளி உணர்ந்தருளப் பார்க்கிறது?-அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?
———
அவ: – முன்னில் பாட்டிலே- “’வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப் பாட்டிலே -போது வைகினால் உணரக் கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்த வற்றுக்கும் இப் பாட்டிலுணர்ந்த வற்றுக்கும் பாகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரி களுக்குமுள்ள வாசி போருங் காணும்.-வயலிலுள்ளவை போலன்றிறே; சோலையாய் அதிலே பூம் பொழிலா யிருக்கச் செய்தே உணருகிறன விறே. போது- வைகின -படி.
தேவரென்றும், அரக்கரென்றும், மனிதரென்றும் ஏற்றத் தாழ்வு பாராமல் அடிமை கொண்டருளும் தேவரீர் பள்ளி யெழுந்து அடியோங்களுடைய கைங்கரியத்தை ஏற்றுக் கொள்ள வேணும்’ என்கிறார்- வண்டுகள் வயலில் உள்ளவை யாகையாலே ஸூர்யன் உதித்தவுடன் எழுந்து விடும். சோலையாய் அதிலும் பூஞ்சோலை யாயிருக்கும் இங்கு வாழும் பறவைகள் பொழுது விடிந்த பின்பே உணரும்.
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5–
பதவுரை
பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.
வ்யா🙁புலம்பின வித்யாதி)திருச் சோலையில் பக்ஷி களானவை உணர்ந்து ஆரவாரியா நின்றன.
(போயிற்றுக் கங்குலித்யாதி)ஸர்வரையும் அபி பவிக்கக் கடவ தமஸ்ஸுக்கு ஆஸ்ரயமான ராத்ரி யானது வாஸனையோடே போய்த்து
(புகுந்தது புலரி) ஸத்வோத்தரமாகையாலே ஆராதன யோக்யமான காலமும் ஸந்நிஹிதமாய்த்து.
(கலந்ததித்யாதி ) கீழைத் திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமான ஸமுத்ர கோஷம் எங்கும் வ்யாபித்தது.
(களிவண்டித்யாதி ) மது பாநம் பண்ணிக் களிக்கிற வண்டுகளோடே. கூடின நாநா விதா புஷ்பங்களைத் தொடுத்து அந்த மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்களடைய எல்லார்க்கும் நாதனான தேவரீர் திருவடிகளிலே சாத்துகைக்கு அருள் பாடிடுவது எப்போதோ வென்று புகுந்து நின்றார்கள்.
( ஆதலில் ) ஆகையாலே, பராவரோரான தேவரீர்-
( இலங்கையர்கோனித்யாதி )ராவணாநுஜனென்று பாராதே லங்காதி, பதியான ஸ்ரீ விபீஷண ஆழ்வானாலே கொண்டாடப் பட்ட கோயிலிலே அஸ்மதாதி,களுக்கு முகந்தர விருக்கிற தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
அதவா, ஸ்ரீ விபீஷணழ்வானை அடிமை கொண்டாப் போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்கிறாராகவுமாம்.
வ்யா:- ( புலம்பின புட்களும்) வண்டினமுரலுஞ்
சோலை மயிலினமாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ்
சோலை ‘ என்றார் இறே -அவை யெல்லாம் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே சில பாட, சில ந்ருத்த கீத வாத்யங்கள் பண்ண,அதுக்கு இசையச் சிலராடச் சிலர் கொண்டாட விருந்ததிறே-அங்கு; (போயிற்றுக்கங்குல்) முன்புபோலே அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரியானது நிர்ஸேஷமாய்த்து;
(புகுந்தது புலரி) தமஸ்ஸ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமாபோலே. ஆகையாலிறே “பகற் கண்டேன்” என்றது. (கலந்தது குணதிசைக் கனை கடலரவம்) கோஷமாத்ரமன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.
(“வண்டின முரலுஞ் சோலை
மயிலின மாலுஞ் சோலை கொண்டல் மீதணவுஞ் சோலை குயிலினம்
கூவுஞ் சோலை” (திருமாலை 14 ] என்று இவர் திருமாலையில் அருளியபடியே திருவரங்கத்திலே எல்லாக் காலத்திலும் வண்டுகள் பேரானந்தத்தாலே பாடவும், மயில்கள் அதற்குத் தக்கபடி நடனமாடவும், மேகங்கள் தூரியம் முழங்கவும், குயில்கள் கொண்டாடவுமாயிருக்கும். இங்கு இப்போது பறவைகள் புலம்புவது “பெரிய பெருமாள் இப்படி விடிந்த பின்பும் பள்ளி கொள்வதே!” என்று கூவுவது போல உள்ளது. )
இங்கு ‘பெரிய பெருமாள் இப்போது வைகவும் பள்ளி கொள்வதே!” என்று கூப்பிடுமா போலே இருக்கிறது.
(போயிற்றுக் கங்குல்) முன்பு போலே – “பாயிருளகன்றது” என்று மூன்றா ம்பாட்டில் சொன்னது போல -அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்திரி யானது நிஸ் ஸேஷமாய்த்து-
புகுந்தது புலரி– தமஸ்ஸூ நேராகப் போனால் பின்பு ஸத்வமே யாயிருக்குமா போலே. -ஆகையாலிறே “பகற்கண்டேன்” என்றது. (‘பகற் கண்டேன் நாரணனைக் கண்டேன்” [ இர. திருவ 81] என்று ஸத்வ குணத்தினால் உண்டாகும் பகவத் ஸாஷாத்காரம் ‘பகல்’எனப்பட்ட தன்றோ. உமது திருவாராதானத்திற்குத் தகுதி யுள்ள காலை நேரம் வந்து விட்டது என்றும் கருத்து. )
(கலந்தது குண திசைக் கனை கடலரவம்) கோஷ மாத்ர மன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது.(கீழைத் திக்கில் முழங்குவதையே இயல்வாகக் கொண்ட கிழக்குக் கடலின் ஒலி வெறும் முழக்க மாயிராமல்-உமக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாடுவது போல எங்கும் வியாபித்தது.)
(களிவண்டித்யாதி) உறவு முறையாரைப் பட்டினி விட்டு விருந்தூணரைக் கலும் கலமும் வைத்து ஊட்டுவாரைப்போலே யிறே தேவரீர் படி,-ப்ரயோஜநாந்தர பரரான தேவர்கள் தந்தாம் பத ப்ரம்ஸம் வாராமைக்காக, நன்றாய்ச் செறிந்து வண்டுகள் மது பாநம் பண்ணிக் களித்துப் பாடிக் கொண்டு ஸேவியா நிற்பதாய், கலம்பகனா யிருந்துள்ள தொடை யலங்கல்கள் கொண்டு வந்தார்கள்; அவர்களுக்காகிலும் முகங்கொடுத்தருளீரோ-என்கிறார். (வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகள் பட்டினி கிடந்தாலும் விருந்தாளிகளுக்கு விருந்திட்டு வெற்றிலை பாக்கு முதலானவற்றைக் கொடுத்து உபசரிப்பவர்களைப் போன்ற இயல்பு கொண்வரன்றோ தேவரீர். எங்களுக்காக அல்லா விடினும் விருந்தாளிகளான அந்தத் தேவர்களுக்காகவாவது முகங் கொடுத்தருள வேணும். மற்ற பயன்களை விரும்புகின்றவர்களாய், தங்களுடைய பதவி நழுவாமலிருப்பதற்காக வந்து பணிபவர்களன்றோ தேவர்கள்)
( ஆதலில் அம்மா) என் மாலை சாத்தாத போதும்-என்னாயினன்று என்ன ஒண்ணாது இறே -( என்னுடைய மாலையை ஏற்றுக் கொள்ளாத போதும் நீர் என்னுடைய ஸ்வாமி யன்று என்று சொல்ல முடியாதே) (ஸ்வாமி என்றே வ்யாக்யானம் செய்கையாலே, அம்மான் அரங்கத்தம்மான்! என்ற பாடம் பொருத்தமாயுள்ளது ) )இப்படி விண்ணப்பஞ் செய்யும் இவர் பேச்சு இனிதா யிருந்தவாறே பள்ளி கொண்டருள;
(இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்) பள்ளி கொண்டருளவேணு மென்றவன் தானே வந்து “எழுந்திரும்” என்றாலோ திருப்பள்ளி யுணர்ந்தருளுவது? வழிபாடு செய்கையாவது திருவுள்ளக் கருத் தறிந்து அடிமை செய்கையிறே. (இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்) இதுவுமோரேற்றமிறே இங்குத்தைக்கு;
(எம்பெருமான் ) ஆஸ்ரித பராதீநரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்கிறார்.
விபீஷணாழ்வானை அடிமை கொண்டது போலே அடியோங்களையும் அடிமை கொண்டருள வேணும் என்று நஞ்ஜீயர் கருத்துரைப்பர்.
(எம்பெரு மான் பள்ளி யெழுந்தருளாயே) ஸ்ரீரங்க மாஹாத்மியத்தின்படி விபீஷணனான அடியானுக்கு வசப் பட்டிருக்கும் தேவரீர் அடியோங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுப் பள்ளி யெழுந்தருள வேணும் என்கிறார்.
——————
அவ:-தேவ ஸேநாபதியோடே கூட, ஜகத்துக்கு நிர்வாஹகரான ஸகல தேவதைகளும்(தங்களுடைய வாஹநம் மு;லான) ஸ பரிகரராய்ச் கொண்டு ஸ்வாபி,மத ஸித்த்யர்த்த,மாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்; தேவரீர் உணர்ந்தருளி விஷே கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார்.
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –
பதவுரை
மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே
வ்யா:- த்வாதஸ ஆதித்யர்கள் தங்களுடைய விலக்ஷணமாய்ப் பெரிதான தேரோடே வந்தார்கள்-
(இறையவரித்யாதி ) ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதஸ ருத்ரர்கள் தங்களுடைய வாஹநங்களான ருஷபங்களும் தாங்களுமாக வந்து நின்றார்கள்.
(மருவியவித்யாதி,)தே வஸேமாதி பதியான ஸுப்ரஹ்மண்யன் தன் வாஹ மான மயிலும்
தானுமாய் வந்து நின்றான், (மருதருமித்யாதி ) தேவதா விஸேஷமான மருத் கணங்கள் நாற்பத்தொன்பதின்மரும்,
அஷ்ட வஸுக்களும், ஒருவர்க்கொருவர் முற்கோலிக் கொண்டு வந்து திரண்டனர்.
(புரவியோடித்யாதி.) தேவர்களுடைய வாஹாமான புரவி பூண்ட தேரும் பாட்டுக்களும் ஆட்டமுமாய், தேவ ஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யனோடே திரண்டு பரிச்சேதிக்க வொண்ணாதபடி திரளாய்க் கொண்டு மஹா மேருவை ஒத்திருந்துள்ள கோயிலில் திருக் கண்ணோக்கத்திலே ப்ரதம கடாக்ஷத்துக்காக வந்து நின்றார்கள். ப்ரயோஜநாந்தர பரரோடு அநந்ய
ப்ரயோஜநரோடு வாசி யற ஸர்வர்க்கும் நிர்வாஹகராய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற தேவரீர்
உணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணும்-என்கிறார்.
வ்யா:-தேவரீர் பணிக் கடைத்த ஆதித்யனே யன்றிக்கே, மற்றும் சோம்பி யிருக்கிற ஆதித்யர்களும் வந்தார்கள்-( “கதிரவன்
குண திசைச் சிகரம் வந்தணைந்தான்” (திருப்பள்ளி-1) என்று தேவரீரால் நியமிக்கப்பட்டு உதித்து மறையும் ஸூர்யன் மாத்திரமல்லாமல், சோம்பி யிருக்கிற மற்ற ஆதித்யர்களும் வந்தார்கள்
இன்னமும் படுத்திருக்கலாமோ? என்று கருத்து)
(இறையவரித்யாதி,)(பஹுநாமதி,பதி:)என்கிறபடியே – நான் கேவலம் பசு ஸமராயிருப்பார்க்குக் கடவனாக வேணுமென்றானிறே.
(உலகை நிர்வஹிக்கும் பதினொரு
உருத்திரர்கள் தங்களுடைய வாஹநங்களோடு கூட வந்து நின்றார்கள். விடையர்-ருஷப வாஹனர். (இறையவர்)(ஸோ அப்ரவீத் வரம் வ்ருணா அஹமேவ
பஹு நாமதி,பதிரஸாநீதி தஸ்மாத், ருத்ர:
பஹு நாமதி,பதி:|| (யஜூ -ஸம் 6 2-3)
[ நானே பசுக்களைப் போன்ற ஸம்ஸாரிகளுக்கு அதிபதியா யிருக்கக் கடவேன் என்னும் வரத்தை நான் தேவர்களான உங்களிடமிருந்து வரிக்கிறேன்” என்று அந்த ருத்ரன் உரைத்தான் -என்கிறபடியே “நான் பசுக்களை ஒத்திருப்பாருக்குப் பதியாக
வேண்டும்” என்று தேவர்களிடம் வரம் வேண்டினானன்றோ உருத்திரன். )
(மருவிய மயிலினன்) அவர்கள் தேர்களினின்றும். ருஷபங்களினின்றும் இழியவுங் கூடும்; இவனை மயிலோடே கூடக் கருப்பிடித்தது என்னும்படி யாயிருக்கை. தேவ ஸேநாபதியிறே.
( மருவிய என்கையாலே ஆதித்யர்கள் தங்கள் தேர்களிலிருந்தும், உருத்திரர்கள் ரிஷபங்களிலிருந்தும் இறங்கினாலும்,
முருகன் மயிலை விட்டு இறங்காமையாலே மயிலோடு கூடவே பிறந்தவனோ என்று தோன்றுகிறது-என்னும் கருத்து உணர்த்
தப்படுகிறது.)
(மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி)
மருத் தேவதைகளும், அஷ்ட வஸுக்களும், முற்பட்டார் முற்பட்டபடியே வந்து திரண்டு. (புரவியோடித்யாதி ) தேர் ப்ரஸ்துத மாகையாலே தேர் பூண்ட புரவி யென்னவுமாம்.
அன்றியே, அவ்வவரேறி வந்த வாஹநமென்னவுமாம் –
(குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் ) “தேவசேநாபதி” என்று முன்னே சொல்லுகையாலே, ”குமரன்” என்று
அவன் பேராய், “தண்டம்” என்று தண்டுக்குப் பேராய், இத்தால்-தேவ ஸேநா ஸமூஹத்துக்குப் பேராய், தேவ ஸேநாபதி
வந்தால் தேவ ஸேநையும் வரக் கடவதிறே. அங்ஙனன்றியே-தேவ ஜாதி யாகையாலே ஷோட வயஸ்கராயிருப்பர்களிறே.இனி “தண்டம்” என்கிறது – அவ்வவருடைய
பெரிய திரளை; அவ்வவராயுத, பேதங்களை யென்னவுமாம்.((தண்டம்) ஸமூஹமாதல், ஆயுத மாதல்.)
{ ஈண்டிய வெள்ளம் ) நால்வரிருவரோ? வெள்ளமா-யன்றோ கிடக்கிறது? (அருவரை யித்யாதி) அணியினார்
செம் பொனாய அருவரை யனைய கோயிலிறே-( “அணியினார் செம்பொனாய அருவரையனைய கோயில்”-(திருமாலை 21 ] என்று இவரே திருமாலையில் அருளிச் செய்தபடியே
பெரிய மேருமலை போன்ற திருவரங்கம் பெரிய கோயிலைச் சொல்லு
கிறது. )த்வாதஸ ஆதித்யயர்கள் , ஏகாதஸ , ருத்ரர்கள, தேவ ஸேநாபதியான
ஸுப்ரஹ்மண்யன், மருத்துக்களாகிற தேவதைகள், அஷ்டவஸுக்கள், மற்றுஞ் சொல்லிச் சொல்லாத தேவதைகளடைய ஸ பரிகரராய், தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும்
போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து, “நான் முற்பட, நான் முற்பட’ என்று எல்லாரும் திரண்டு வந்து நின்றார்கள்;
திருப்பள்ளி யுணர்நதருளிக் கடாக்ஷித் தருள வேணும் என்கிறார்.
—————-
அவ: , முதற்பாட்டில் ஸங்க்ரஹேண சொன்னத்தை இப் பாட்டுத் தொடங்கி மேலில் பாட்டுக்களாலுமாக விஸ்தரிக்கிறார். கீழ்ச் சொன்ன தேவதைகளுக்கு நிர்வாஹகனான இந்த்ரனும், வித்யா ப்ரவர்த்தகரான ஸப்த ருஷிகளும், திருப் பள்ளி யெழுச்சி திருவடி தொழ ஸபரிகரராக ஆகாஸ அவகாஸ இடம் அடையும்படி வந்து புகுந்தார்கள்; திருப் பள்ளி எழுந்தருளி இவர்களை அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
அவ:-முன்னிற் பாட்டில் தேவ ஸேநாபதி யானவன் தன் வாஹநத்தோடும் தன் பரிகரங்களோடும் வந்தமை சொல்லிற்று; இப் பாட்டில்- தேவ ஜாதிக்கு நிர்வாஹகனான இந்த்ரன் தன் வாஹநத்தோடே ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லுகிறது-தேவ ஜாதியை மெய்க் காட்டுக் கொள்ள தேவரீரிட்ட வகை செய்வானாய் வந்தானென்கிறது;(பீஷாஸ்–யாத்) இத்யாதிப்படியே.பீஷாஸ்மாத் வாத: பவதே பீஷோதேதி ஸூர்ய:பீஷாSஸ்மாதக்நி லசேந்த்ரஸ்ச ம்ருத் யுர்தா,வதி பஞ்சம:[தைத்-ஆந 8-1.](இந்தப் பரம புருஷனிடத்தில் பாயத்தாலேயே காற்று அடிக்கிறது;(இவனிடத்தில்) பயத்தாலேயே ஸூர்யன் உதிக்கிறான்; அக்னியும் இந்திரனும் ஐந்தாமவனான ம்ருத்யுவும் இவனிடத்தில் பயத்தினாலேயே தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள் ] என்று இந்திரன் பர புருஷனின் நியமனப் படியே காரியம் செய்பவன் என்று சொல்லப் பட்டதன்றே.
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-
பதவுரை
எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.
வ்யா:- அபி, மாநிகளான அந்தர ஜாதிகளடையத் தங்களுடைய பரிசரமும் தாங்களும் பாக்ந அபி, மாநமாகத் திரண்டு வந்து நின்றார்கள். இத்தால் கீழ்ச் சொன்னராலும் செய்து முடிக்க வொண்ணாத தபஸ்ஸை யுடைய ஸநகாதிகளும் இந்த்ராதிகளுக்கு ப்ரத்யா ஸந்நரான மருத் கணங்களும் வந்து நின்றார்கள்.
(இந்திரன் இத்யாதி,) ஸர்வாத், யக்ஷனான தேவேந்த்ரன் தன் வாஹநமான ஐராவதமும் தானுமாய் வந்து நின்றான்.
(எம்பெருமானித்யாதி,) ஸர்வேஸ்வரனான தேவரீருடைய கோயில் திரு வாசல். (சுந்தரர் நெருக்க வித்யாதி,)கந்தர்வர்கள் நெருக்க, அவர்களுடனே வித்யாதரரும் நூக்க, யக்ஷருமொன்றாகத் திருப் பள்ளி யுணர்ந் தருளும் போதை அழகு கண்டு திருவடித் தொழுது திருப் பல்லாண்டு பாடுகைக்குண்டான ஆசையாலே ஒருவர்க்கொருவர் முற் கோலி மேல் மேலென நெருக்குண்டு மோஹியா நின்றார்கள். (அந்தரமித்யாதி) ஆகாத்திலும் பூமியிலும் இடமில்லாதபடி யாய்த்து. த்வாராத்,யக்ஷராலும் நிற்கை
யரிதாம்படி நெருக்குப் படா நின்றார்கள். ஸர்வ ஸ்வாமியான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
வ்யா:- “இந்திரனானையுந் தானும் வந்திலனோ” என்கிற அர்த்த க்ரமத்தாலே முதலாகக் கடவது; இப்படி யாமோ வென்னில்; இப் பாட்டுக்குத் தாத்பர்யம் – இந்த்ரன் வந்தபடி சொல்லுகை யாகையாலே முதலாகக் கடவது அக்நியாஹிதர் என்னக் கடவதாயிருக்கச் செய்தே பதச் சேர்த்தி அர்த்தச் சேர்த்திக்காக ஆஹிதாக்நியார் என்றதிறே.ப்ரணவம் ஸப்தத:ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்றே யாகிலும் அர்த்தத: பகவத் ஸ்வரூபமிறே சொல்லுகிறது. ராஜ புருஷன்’ என்றால் புருஷன் விசே ஷணமாய் ராஜாவின் பக்கலிலே ப்ராதாந்யம் கிடக்குமா போலே.(“அகார வாஸ்யனுக்கே அடிமையா யிருப்பவன் மகார வாச்யனான ஜீவன்” என்னும் பொருளை யுடைய ப்ரணவத்தின் சொல்லை நோக்கும் போது அது ஜீவனைச் சொல்லுவதாகத் தோன்றிய போதிலும்,அகார வாஸ்யனான பரம புருஷனுக்கே அடிமைப் பட்டவன் ஜீவன்’ என்னும் பொருளை நோக்கும் போது பகவத் ஸ்வரூபமே அதில் ப்ரதாானமாகச் சொல்லப் படுகிறது என்று தேறுகிறதன்றோ-“ராஜ புருஷன்’என்னும் சொல்லைப் பார்க்கும் போது புருஷ சப்தம் விசேஷ்யமாய், ராஜ ஸப்தம் விஸேஷணமா யிருக்கையாலே புருஷனுக்கே ப்ராதகாந்யம் தோற்றும் . ஆனால் ‘ராஜாவுக்கு அடிமைப் பட்ட மனிதன்’ என்று அதன் பொருளை நோக்கும் போது புருஷன் அப்ரதாநமானவனாகவும் ராஜா ப்ரதானமாகவும் தேறுவதையும் இங்கு உதாஹரணமாகக் கொள்ளலாம்-அது போல் இங்கும் பொருளுக்கே ப்ராதாந்யம் கொள்ள வேண்டும்-)( அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ) அந்தரம்-அண்டம் ஆகாஸம் என்று-தேவ லோகத்துக்குப் பேர், “கேசவன் தமர்” என்கிறதல்லவே. அவர்கள் வர்த்திக்கிற தேஸத்தை யிட்டுச் சொல்லு மித்தனை யிறே (ஸ்வரூபத்திற்குத் தக்க ஸ்வாமித்வம் இருந்தால் ‘கேசவன் தமர்’என்று பாகவதர்களைச் சொல்லுவது போலே,இவர்களையும் இந்திரன் தமர் என்று சொல்லலாம்; அப்படி யல்லாமையாலே ‘அந்தரத் தமரர்கள்’ என்று அவர்கள் வாழுமிடத்தை யிட்டு அழைக்கப் படுகிறார்கள். )-தேவர்களை;-பன்மை-கூட்டங்களின் பன்மை.(அருந்தவ முனிவர்) ஸப்த ரிஷிகளாகவுமாம்; பெறுதற்கரிய தபஸ்ஸைப் பண்ணி விரோதி நிவ்ருத்தி பண்ணினவர்க ளென்னவுமாம்.(மருதரு மிவரோ) மருத்,தே வதைகள்; ‘கூட்டங்கள்” என்கிறது மூன்றிடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.(எம்பெருமானுன கோயிலின் வாசல்) அணைந்தார்கள்,-வந்தார்களென்கிற வளவல்ல;பார்த்தருளீர்! திரு வாசலிலே வந்தார்கள்;( அமரர்கள் புகுந்தனர்”(5) என்ற பாட்டில் சொன்னது போலே அருகில் வந்தது மாத்திரமன்று, உன் கோயிலின் வாசலுக்கே வந்து விட்டார்கள் கடாக்ஷிக்கவேணும் ” என்று கருத்து. ) ‘’பின்னிட்ட சடையானும் பிரமனுமிந்திரனும் துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல்” [பெரு. திரு 4-3] என்று சொல்லப் பட்டது போலே பூ லோக வைகுண்டமான கோயிலின் வாசலும் ஆயிற்று என்று கருத்து. ).(சுந்தரர் நெருக்க)தேவ ஜாதியிலே ஒரு பே,தம். ” சுந்தரம்’ என்று அழகாய் அத்தாலே பாடுவாரென்னவுமாம். சுந்தரரென்று கந்தர்வர்,(விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியராயிருப்பார் சிலர்.(இந்திரனுக்கு நெருங்கிய மருத்துக்கள் எனப்படும் தேவதைகள். முன் பாட்டில் ‘மருதர்’ என்று சொல்லப் பட்டவர்களுக்கு அடங்கினவர்களை இங்கு குறிப்பதாகக் கொள்ளலாம்-‘கூட்டங்கள்’ என்பதை அந்தரத்தமரர்கள், அருந்தவ முனிவர், மருதர்
என்னும் மூன்றிடங்களிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்..)(இயக்கரும் மயங்கினர்) யக்ஷரென்று கொண்டு ம்ருது,ப்ரக்ருதிகளா யிருப்பார் சிலர். (மயங்கினர்)நெருக்கம் பொறுக்க மாட்டாமையாலே மோஹித்தார்கள் இவர்கள் இங்ஙனே பட வேணுமோ வென்னில் (திருவடித் தொழுவான்) தேவரீரைத் திருவடித் தொழுகையிலுள்ள நசை யிருந்தபடி. உள் நெருக்கத்தைக் கண்டோமென்றால், புறம்பு தான் நெருக்கற்றிருக்கிறதோ வென்கிறர் மேல் (அந்தரமித்யாதி) ஆகாஸத்தோடு பூமியோடு வாசி யற விவரமற நெருங்கிற்று; தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளிப் பார்த்தருளீரென்கிறார். ஆகாசத்தோடு பூ,மியோடு வேற்றுமை இல்லாமல் இடை வெளியே இல்லாமல் நெருக்கமாய் இருக்கிறது.(அந்தரம்-பார்-மற்று-இடமில்லை”என்று அந்வயம். ) “துவார பாலர்களும் நிற்க இயலாதபடி நெருக்குப் படா நின்றார்கள்” என்பர் நஞ்ஜீயர்- அனைவருக்கும் ஸ்வாமியான தேவரீர் விழித்தெழுந்து கடாக்ஷித்து அடிமை கொண்டு அருள வேண்டும்
————–
அவ: தேவரீர் திருவாராதநத்துக்கு அநுரூபமான ப்ராத:காலமானது ஸந்நிஹிதமாய்த்து; ஆராதந அங்கமாய்க் கண்டருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்கள் கொண்டு அநந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து நின்றார்கள்;திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக் கண்டருள வேணும் என்கிறார்.
அவ:- முன்னில் பாட்டில் இந்த்ரன் ஸ பரிகரனாய் வந்தபடி சொல்லிற்று-இப் பாட்டில்-திருப் பள்ளி யுணர்ந்தருளினால் கடவ உபகரணங்களை மங்களார்த்தமாக கொடு வந்து நின்றர்களென்கிறது,
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –
பதவுரை
வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.
வ்யா:- (வம்பவிழித்யாதி)பரிமளிதமான ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவ தேவர்கள் கோக்ராஸங்கள் கொண்டு வந்து நின்றார்கள். (மாநிதியித்யாதி,) சங்க நிதி, பத்ம நிதி,களும, கபிலா ஸுரபி,களும், திருக் கண்ணாடி முதலாக ஸர்வ ஸ்வாமியான தேவரீர் கண்ட ருளுகைக்கு ஸத்ருஸமான உபகரணங்களுமடையக் கொண்டு அருந்ய ப்ரயோஜநரான ருஷிகள் வந்து அவஸர ப்ரதீக்ஷராய் நின்றார்கள்.( தும்புரு நாரதரித்யாதி ) மங்கள கீதங்கள் பாடுகைக்குத் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள். (தோன்றினனிரவியுமித்யாதி) மிக்க தேஜஸ்ஸை யுடைய ஆதித்யனும் தன் தேஜஸ்ஸைப் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான்.(அம்பரமித்யாதி ) ஆகாஸத்தினின்றும் இருள் போயிற்று.-பாஹ்யமான அந்த காரமிறே அவனால் போக்கலாவது; ஸர்வ ரக்ஷகரான தேவரீர், ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்க, திருப் பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார்.
வ்யா:– (வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க) வானவர்-தேவ ஜாதி. (வம்பவிழ் வானவர் -நித்யமான யௌவனத்தை யுடையவர் களென்னுதல்;-ஸெளகந்த்யத்தை யுடையவர்கள்; தந்தாம் பதங்களுக்குத் தக்க பூமலர்களை உடையவர்களென்னுதல்.
(மணம் மிக்க தேவர்கள் தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக அறுகம் புல்லைக் கொண்டு வந்தார்கள். ‘வம்பு’ என்று மணத்தைச் சொல்லுகிறது; அல்லது புதுமையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்–என்றும் இளமையோடு இருக்கும் தேவர்கள் என்று கருத்து. அல்லது மலர்களைச் சொல்லுவதாகவும் கூறலாம். தங்கள் பதவிகளுக்குத் தக்கவாறு பாரிஜாதம் முதலிய மலர்களைக் கைக் கொண்டவர்கள் என்று கருத்து. )(வாயுறைவழங்க) “‘வாயுறை வழக்க என்றதை மெலித்து ”வாயுறை வழங்க” என்றாக்கி, அவர்களுடைய நியமந ப்ரகாரத்தை நினைக்கிறது; “வாயுறை ” என்றது-அறுகம்புல் -வம்பவிழ்” என்றது.ஸஸ்ரத்தமா யிருக்கை.(மாநிதி) “நிதி” என்று-ஸங்க நிதி, பத்,ம நிதி யாகவுமாம்; ‘நிதி’ யென்று நவ ரத்நாதி களாகவுமாம்;
மாநிதி‘யென்றது-மஹார்க்கமென்றபடி. நித்ய தாநத்துக்கு தந ராஸிகளைச் சொல்லிற்றாகவுமாம்.( மாநிதி’யை) தேவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்க்காமல், மேலே சொல்லப்படும் முனிவர்கள் கொண்டு வரும் பொருள்களில் சேர்த்து நஞ்ஜீயர் உரை யிட்டார்.)
(கபிலை)பசுக்கள் வரக் கடவதிறே-வழக்கத்துக் குறுப்பாக வாயுறை, மாநிதி, கபிலை மற்றும் சொல்லிச் சொல்லாத உபகரணங்களெல்லாம் வந்தன; கண்டருளுகைக் குறுப்பாகத் திருக் கண்ணாடி தொடக்கமானவையும் எல்லாம் வந்தன-(ஏற்பனவாயின கொண்டு)தேவரீர்க்கு ஸத்ருஸமானவை.-அநுரூபமானவை. (நன் முனிவர்) அத் தலைக்குப் பாங்கானவற்றையே மநநம் பண்ணுமவர்கள்.(எம்பெருமானுக்கு எது உகப்பு என்பதையே நினைத்திருக்கும் முனிவர்கள். ‘வேறு பயன் கருதாத ரிஷிகள்” என்று நஞ்சீயர்.)
(தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ) பெருமாள் பள்ளி கொண்டருளின பின்பு இசை கேட்டருளுமா போலே (தோன்றினனிரவியுந் துலங்கொளி பரப்பி) ‘’அவ்வோ பணிக்குக் கடவர்கள் எடுத்து வந்தார்கள்; அவற்றைக் கண்டருள வேணும்” என்று காட்டுவாரைப் போலே, ஸஹஸ்ர கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு ஆதித்யனும் வந்தான். (ராஜாக்களுக்குப் பந்தமெடுத்துக் காட்டுவாரைப் போலே ஸூர்யனும் தன் ஆயிரம் கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு இந்தப் பணி செய்வாரைக் காட்டுவதற்கு வந்தான். )(அம்பரதலத்திலித்யாதி ) இருளானது ஒரு பயணமெழ வாங்கிற்று-என்றப் போலே யிறே முன்பு சொல்லிற்று-அவ்வளவல்ல; ஆகாசத்திலும் ஸஞ்சரிக்க வொண்ணாத படி நிரஸ்தமானபடி சொல்லுகிறது. (முன் பாட்டுக்களில் ‘இருள் மறையத் தொடங்கிற்று’ என்று சொல்லப்பட்டது. அந்த அளவோடு நில்லாமல் ஆகாசத்திலே நடையாட முடியாதபடி இருள் முழுவதும் மறைந்தததைச் சொல்லுகிறது;-இங்கு)பாஹ்யமான இருளானது நிரஸ்தமானால் ஆந்தரமான இருளைப் போக்கி யருள வேண்டாவோ? தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி அமலங்களாக விழித்தருளீரென்கிறார்.( அமலங்களாக விழிக்கும்’ ( திருவாய் 1-9-9] என்கிறபடியே, திக்குகளிலுள்ள மலங்களெல்லாம் நீங்கும்படி தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார். )
—————
அவ:- திருப் பள்ளி உணர்ந்தருளும் போதை யழகு கண்டு திருவடித் தொழவும், அழகோலக்கம் இருக்கும்படி கண்டு அடிமை செய்யவும் வேணுமென்று தந்தாமுடைய பரிகரமான மங்கள வாத்யங்களும் வீணைகளுமாய் உகளித்துக் கொண்டு யக்ஷ கந்தர்வாதி,கள் வந்து நின்றார்கள்; அடியேனுக்காகத் (அழகோலக்கமாக?) திருப்பள்ளி யுணர்ந் தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
அவ:--முன்னிற் பாட்டில் நித்ய தானத்துக்குறுப்பானவையும் மற்றும் கண்
டருளக் கடவனவும் வந்தன வென்றது;-இப் பாட்டில்- தேவரீர் திருப்பள்ளி யெழுச்சிக்கு ந்ருத்த கீத வாத்யங்களுக்குக் கடவரானவர்கள் வந்தார்களென்கிறது.
(இப் பாட்டில் “தேவரீர் திருப்பள்ளி யுணரும் போது உள்ள அழகைக் கண்டு திருவடித் தொழவும், மண்டபங்களிலே வீற்றிருக்கும் போது கண்டு அடிமை செய்வதற்காகவும் தம் தமது கருவிகளான மங்கள வாத்யங்களையும், வீணைகளையும் ஆநந்தத்துடன் ஏந்திக் கொண்டு யக்ஷர்கள் கந்தர்வர்கள் முதலானவர்கள் வந்து நின்றார்கள். அவர்களுக்காகவும் அடியேனுக்காகவும் திருப் பள்ளி யுணர்ந்து அடிமை கொள்ள வேண்டும்” என்கிறார்)
ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-
பதவுரை
ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.
வ்யா:-நிர்த் தோஷமான மங்கள வாத்ய விசேஷங்களும், ஏகதந்த்ரீ-எக்கம்; மத்தளி என்னவுமாம் -ஒரு பறை விசேஷம்; யாழ் விசேஷங்களும், குழல் விசேஷங்களுமாய், திக்குக்களெங்கும் முழங்கிக் கொண்டு மங்களமான கீதங்கள் பாடக் கடவரான கிந்நராதிகளும், கந்தர்வர்களும்-மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகளும், அநுக்தரான
தேவர்களும், சாரண யஷ ஸித்தர்களுமடையப் புகுந்து திருவடித் தொழுகை யிலுண்டான த்வரையாலே நெருக்கா நின்றார்கள்.-ஸர்வ ரக்ஷகரான தேவரீர் உணர்ந்தருளி இருந்து அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
வ்யா:- ஏதமில் தண்ணுமை -ஏதமென்று-குற்றம், இல்-என்று இல்லாமை; குற்றமற்ற வாத்யமென்கிறது. “தண்ணுமை” என்றது சிறு பறை. ஒரு தலைப் பறை. தாளம்; ஏகதந்த்ரி யென்னவுமாம்; மத்தளி-சிறு மத்தளி.“‘யாழ்” என்று-இசைக்கு முன்னோட்டுக் கொள்வதொன்று; “குழல்’’ என்று ஜாத்யேக வசநம். (முழவம்)பெரு வாயன்;பெரு மத்தளி யென்றுமாம். இவற்றிலுண்டான நாதமானது திக்குகள் தோறும் கெழுமிற்று- நிறைந்தது. ஏதமில்-தண்ணுமை, ஏதமில்-எக்கமென்று எல்லாவற்றிலும் வைத்துச் சொல்லலாம். (கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்)
எல்லாரும் விடிவோறே வருவாரும், விடிந்து வருவாருமிறே; இவர்களைத் திரு வுள்ளம் பற்றி யருள வேணும்.
(கின்னரர் கெருடரித்யாதி) மங்கள காநம் பாடுவார்.-அதில் தலைவரான கந்தர்வர்களுள்ளிட்டவர்களைப் பார்த்தருளீர்
(கங்கலுளெல்லாம்) ராத்ரி யெல்லாம். (மாதவர்) மஹா தபஸ்ஸை யுடைய ரிஷிகள்.
(வானவர்) வைமாநிகரான தேவர்கள்.(விமானங்களில் வானத்தில் ஸஞ்சரிக்கும் தே வர்கள்.)
(சாரணர்) தேவ ஜாதி தன்னிலே உலாவித் திரியுமவர்கள். ( ‘சரதி இதி சாரண:’-உலாவித் திரிகின்றபடியாலே ‘சாரணர்’ எனப் படுவர் – என்று வ்யுத்பத்தி )
(இயக்கர்) யகூரென்று-தேவ ஜாதியிலே சிலர்;
(சித்தர்) ஸித்தர்கள்;
(சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்) வைமாநிகரான தேவ ஜாதியோடு பெரிய தபஸ்ஸுக்களைப் பண்ணின மதிப்பரான ரிஷிகளோடு-யக்ஷ ஸித்த, சாரணரென்கிற தேவர்களோடு கிந்நரர் கெருடரென்கிற மங்கள காநம் பாடுவாரோடு இவர்களில் தலைவரான கந்தர்வரோடு வாசியற சிறியார் பெரியாரென்னாதே தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து ஒருவர்க்கொருவர் முற்கோலி நெருக்குண்ணா நின்றார்கள்; மங்கள வாத்யங்கள், குழல்கள் இவை கொண்டு அடிமை செய்யுமவர்களும் திருப்பள்ளி யெழுச்சிக்கு உதவ வந்தார்கள். (ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத் தம்மா பள்ளியெழுந்தருளாயே) “நன் மணி வண்ணனூர்” என்கிறபடியே திருப்பள்ளி உணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூமரமும்-பன் மணி நீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடை வேங் கடம்.-என்று(நான் திருவ-47]திருவேங்கடமுடையான் தாழ்ந்தார் பலருக்கும் முகங்கொடுப்பது போலே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் அனைவரும் வாழலாம்படி கடாக்ஷித் தருள வேணுமென்கிறார்.
———–
அவ:- நிகமத்தில் முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன தேவர்களோடு ரிஷிகளோடு வாசியற தேவரீர் பக்கல் ஒரு ப்ரயோஜநங்கொண்டு மீளுமவர்களன்றிக்கே, தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதை முக, விகாஸமே ப்ரயோஜநமாயிருக்கிற அடியேனுக்காகத் திருப்பள்ளி யுணர்ந் தருள வேணுமென்று ப்ரார்த்தித்து முடிக்கிறார்-
அவ:- நிகமத்தில்; (கடிமலரித்யாதி ) உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேர்ந்திருக்கிறது. எங்ஙனே யென்னில்;
“அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று தொடங்கி* மாறன் விண்ணப்பம் செய்த’‘ என்றும்,
“நமக்கே பறை தருவான் ‘ என்று தொடங்கி “அங்கப் பறை கொண்ட என்றும்,
(நாதாய முநயே) என்று தொடங்கிப் பின்பு முடிக்கிற விடத்திலும் (பிதாமஹம் நாத முநிம் விலோக்ய) என்றும்—உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரக் கிடக்குமா போலே, இவரும் உபக்ரம உப ஸம்ஹாரங்கள் சேரத் தலைக் கட்டா நிற்கச் செய்தே இவருக்கோரேற்றமுண்டு; இப் பிரபந்தந் தன்னில் பாட்டுக்குப் பாட்டு போது வைகின படி சொல்லுகை யாயிற்று-கருத்து-
முதற்பாட்டிலே செய்தது-ஆதித்யனானவன் உதய பர்வதத்தை வந்தணுகினான்;-தேஸாந்தரம் போன பிள்ளைகள் வாரா நின்றார்கள்” என்று கேட்டால் அவர்களுடன் ஸ்பர்ஸமுடைய மநுஷ்யருக்கு முகத்திலே விகாஸ முண்டாமாப் போலே ஆதித்யனோடே தாமரைக்கு ஒரு சேர்த்தி யுண்டிறே; அத்தாலே முன்பு நின்ற மாத்ரையில் சிறிது விகஸிக்கக் கோலி அது கட்டு நெகிழ்கிற வளவிலே சித்ரத்தின் வழியே தேன் ப்ரவஹித்த தென்றிறே சொல்லிற்று. இதில் அவ்வளவு மன்றியே, இத் தாமரையோடு சேர்த்தி யுடைய ஆதித்யனும் உதித்து மேலே போனான் ;தாமரைகளும் கழிய அலர்ந்தன வென்று போது வைகினபடி சொல்லுகிறது.( இப்படி முதலும் முடிவும் இந்த ப்ரபந்தங்களில் ஒத்திருப்பது போலே இவரும் முதல் பாட்டிலும் ஸூர்யன் உதித்ததையும் தாமரை மலர்ந்ததையும் கூறியது போலே, கடைசிப் பாட்டிலும் அதைக் கூறுகிறார். ஆனால் இந்த ப்ரபந்தத்திற்கு ஒரு சிறப்புண்டு. மேல் மேலே உள்ள ஒவ்வொரு பாட்டும் முந்திய பாட்டைக் காட்டிலும் பொழுது விடிந்ததைச் சொல்லுவதாய் அமைந்துள்ளது. அந்த முறையில் முதற் பாட்டிலும் முடிவுப் பாட்டிலும் ஸூர்யனையும் தாமரையையும் சொன்ன போதிலும் இரண்டுக்கும் ஒரு வேற்றுமை உண்டு.-ஸூர்யன் உதய கிரியை நெருங்கினான். ‘வெளி நாட்டுக்குச் சென்ற பிள்ளைகள் வருகின்றார்கள்’ என்று கேட்டால் அவர்களோடு உறவுடைய மனிதர்களுக்கு முகம் மலருவது போலே, ஸூர்யன் உதித்ததைக் கண்டவுடன் அவனோடு உறவுடைய தாமரை சிறிது மலரத் தொடங்கிய போது அந்த இடைவெளியின் வழியாகத் தேன் ஒழுகிற்று” என்று முதல் பாட்டில் சொல்லிற்று.இக் கடைசிப் பாட்டில் “தாமரையோடு உறவுடைய ஸூர்யனும்உதித்து மேலே கிளம்பினான்; தாமரைகளும் முழுவதும் மலர்ந்தன”என்று பொழுது மிகவும் விடிந்து விட்டதைச் சொல்லுகிறது)
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-
பதவுரை
புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.
வ்யா:– ஊரிலே தாமரை யாயுள்ளவை யெல்லாம் அலர்ந்து தோன்றி மது, வெள்ள மிடா நின்றன-(கதிரவனித்யாதி) அந்தத் தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யனும் கீழ்திக்கிலே கோஷிக்கையே ஸ்வபாவமாக வுடைய ஸமுத்ரத்தில் உதய கிரியிலே வந்து தோன்றினான். (துடி யிடையாரித்யாதி.) கண்டாரைப் பிச்சேற்ற வல்ல இடையையும்,மயிர் முடியையும் உடைய ஒருதரத்தில் பெண்களெல்லாம் நீராடித் தந்தாம் பரியட்டங்கள் தாந்தாமே சாத்திச் சமைந்தார்கள்-இத்தால்-பெரிய பெருமாள் சிவட்கென்ன உணருகைக்காகப் பழைய யமுனை நீராட்டை ஸ்மரிப்பிக்கிறார். “பெரிய பெருமாளாகிறார்-கிருக்ஷ்ணன்; நம் பெருமாளாகிறார்-சக்ரவர்த்தித் திருமகன்”என்றருளிச் செய்வர். (சூழ்புனலரங்கா) விரஜையையும்,-யமுனையையும், ஸரயுவையும் மறப்பிக்கும் படியான திருப் பொன்னியாலே சூழப்பட்ட கோயிலை நிரூபகமாக வுடைய தேவரீர். பெருமாளுக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி.(தொடைகொத்தவித்யாதி,) தொடுக்கிற போதே அங்குத்தைக்கு ஸத்ருஸமாம்படி தொடுத்த திரு மாலைகளும், திருப் படலிகையுமாய். (தோன்றிய வித்யாதி; ) ரஷகரான பெருமாளுக்குக் கோயில் நிரூபகமானாப் போலே ஆழ்வாருக்கு நிரூபக தர்மமிருக்கிறபடி– ( க நித்ர பிடகாத. 🙂 என்றும் (லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந🙂 என்றும் சொல்லுகிற இளைய பெருமாளைப் போலே சேஷ பூதனுக்கு சேஷத்வ பரிகரமே ஐஸ்வர்யமாகக் கடவதிறே, (ஸர்வ ப்ரிய கரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி: ப்ராண இவா பர: !}ரா – ப ா 18-28)-கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு சரீரத்தைக் காட்டிலும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனாகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்.] என்று கைங்கர்ய லக்ஷ்மியை நிரூபகமாகச் சொன்னது போலவும் தமக்கு நிரூபகம் தொண்டரடி்ப் பொடி” என்பதே என்கிறார்)”தொண்டரடிப் பொடி” என்று இவருடைய ப்ரஸித்தி,ஜ்ஞாந ஆநந்த லக்ஷணமாகை யன்றிக்கே ததீய சேஷத்வ பர்யந்தமாயிருக்கை.(அடியனை அளியனென்றருளி) ஸ்நிக்தனென்று க்ருபை பண்ணி யருளி, அச் சேஷத்வத்தின் எல்லையிலே நிறுத்தின தேவரீர் அடியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார்.
வ்யா:- (கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ)கடி யென்று நறு நாற்றம். கடிந்தமுண்டாகச் சொல்ல வேணுமோ? வாசஞ்செய் பூங்குழலாளுடைய வாஸஸ்தாநமன்றோ .(“வாசஞ் செய்பூங்குழலாள் திரு“[திருவாய் 10-10-2] என்கிறபடியே நறு மணமே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாகையாலே தாமரை களுக்கு நறு மணமுண்டு என்று சொல்லவும் வேண்டுமோ?)(மலர்ந்தன இவையோ) முன்பு சொன்ன மாத்ரமே யல்ல. தேவரீர் கண்டருள வல்ல வளம்பூ. (தேவரீர் கண் விழித்தவுடன் கடாக்ஷிக்க வேண்டிய வளம் மிக்க பூ எங்கும் நிறைந்துள்ளது.)(கதிரவன் கனை கடல் முளைத்தன னிவனோ) முன்பும் இவன் ப்ரஸ்துதனான விடத்தில் ‘இவனோ’ என்றவிடமில்லை; இவனை வினவி யருளீர்; அவனுக்கு தாரகம் தேவரீர் குல ப்ரஸ்நம் பண்ணுகை யன்றோ -இவர்கள் தந்தாமுடைய ஸத்தா தாரகம் இழக்கு மளவல்ல; இவர்களை வினவி யருளாதே தேவரீருடைய ஸத்தா தராரகம் இழக்கப் புகா நின்றீர் என்கிறார் மேல்;(துடியிடையாரித்யாதி) “தோழியும் நானும் தொழுதோம்’ ‘கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ‘ என்கிற இந்த ரஸம் இழக்கப் புகா நின்றீர். இத்தால்-பழைய மடுவின் கரையையும், குருந்திலேறின படியையும் நினைக்கிறது. கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயனிறே பள்ளி கொள்ளுகிறவன் (கண்டவர் ஈடுபடும் உடுக்கை போன்ற நுண்ணிய இடையையும் சுருண்ட மயிர் முடியையும் உடைய அழகிய பெண்கள் காவிரியில் நீராடி தம்முடைய வஸ்த்ரங்களைத் தாமே சாத்திக் கொண்டு கரை யேறினார்கள். “தோழியும் நானும் தொழுதோம் ” (நாச் திரு 3- 1] “கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் ( நாச் திரு 3-5) என்கிற கிருஷ்ணாவதார ரஸத்தை இழக்காமல் விழித்தருள வேணும் என்று கருத்து. “கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” [ அமலனாதி பிரான்- 10] என்று திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளைக் கண்ணனாகவே அருளிச் செய்தாரன்றோ. “பெரிய பெருமாளாகிறார் க்ருஷ்ணன்; நம் பெருமாளாகிறார் சக்ரவர்த்தித் திருமகன்” என்று பட்டர் அருளிச் செய்லர் என்பது நஞ்சீயர் வ்யாக்யானம்) (சூழ்புனலரங்கா)நீர்ச் சிறை( நீரை)யிட்டு கொண்டு கண் வளர்ந்தருளலாமோ?(தொடை யொத்த துளபமும்) திருமாலை யெடுத்தால் திருக் குழலுக்கும் திரு மார்வுக்கும் அளவாயிருக்கை. திருமாலை யாயும் திருப் பரியட்டமாயும் நிற்கிறாப் போலே சேதந வர்க்கமிறே( ‘ஒத்த துளவ மாலை’ என்கையாலே மாலை பீதாம்பரம் முதலானவை யெல்லாம் நித்ய ஸூரிகளான சேதநர்களாகவ இருக்கிறார்கள் என்று உணர்த்தப் படுகிறது.ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வாநுரூபைரநூபமை: சிந்மயைஸ் ஸ்வ ப்ரகாலை ச அந்யோந்ய ருசி ரஞ்ஜிதை:[பௌஷ்கர ஸம்ஹிதை] தனக்குத் தகுந்தவையும், ஒப்பற்றவையும், ஞான மயமாயிருப்பவையும், ஸ்வயம் பிரகாசமானவையும் ஒன்றுக் கொன்று (சேர்த்ததியினாலுண்டான) காந்தியினால் அழகாயிருப்பவையுமான மாலைகளோடும் வஸ்திரங்களோடும் ஆபரணங்களோடும் கூடியிருப்பவன் பரம புருஷன்] என்று சொல்லப்பட்டதன் .)(கூடையும் பொலிந்து தோன்றிய தோள்) **ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்” -[பெரிய திரு 11-2-6)என்று அவை அவனுக்கு ஸேஷித்வ ஸூசகமிறே- (மஹாத்மநஸ் ஸங்க சக்ர அஸி பாணே:) என்னுமா போலே யிறே சேஷ பூதனானவனுக்கும் திருப் படலிகை ஸூசகமாயிருக்கிறபடி( வர்ஷாயுதைர் யஸ்ய கு,ண ந ஸக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:மஹாத்மந: சங்க சக்ராஸி பாணேர் விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸு தேவாத் மஜஸ்ய||(பார-கர்ண 88-651 (மஹா புருஷனும், ஸங்க,சக்ரங்கள், வாள் ஆகியவற்றைக் கையில் ஏந்தி யிருப்பவனும், ஸர்வ வ்யாபியும், ஜய சீலனும், வஸு தே வ புத்திரனுமான எவனுடைய குணங்கள் பதினாயிரம் வருஷங்களிலும் எல்லா உலகங்களும் கூடியும் பேச முடியாதவையோ ] என்கிறபடியே தலைவனான எம்பெருமானுக்கு சங்கு சக்ரங்கள் அவனுடைய தலைமையை உணர்த்தும் அடையாளங்களாக இருப்பது போலே, தாஸனான சேதனனுக்கும் பூக் கூடை சேஷத்வத்தைக் குறிக்கும் அடையாளமாக இருக்கிறது,)(க நித்ர பிடகாதர இத்யாதி) ( தநுராதாய ஸ ஸரம் கநித்ரபிடகா த ர |அக்ர தஸ்தே கமிஷ்யாமி மந்தா நமநுதர்யந்[ரா-அ 31-25]மண் வெட்டியையும் கூடையையும் தரித்தவனாய், அம்புடன் வில்லையும் எடுத்துக் கொண்டு வழியைக் காட்டிக் கொண்டே உன் முன் செல்வேன்] என்று இளைய பெருமாளுக்குக் கூடை அடையாளமாகச் சொல்லப் பட்டதன்றே.)தொண்டரடிப்பொடி) [துளவத் தொண்டாய ] (“துளவத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி” (திருமாலை 45]-என்கிற படியே திருத் துழாய்க் கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதராகத் தம்மை நினைத்திருப்பவர். )திருத்துழாய்க் கெழுதிக் கொடுத்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியேனென்றிருக்குமவர்; இவருடைய அடியாரடியாரிருக்கிறபடி; இப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீபாத ரேணு)வென்கிறார். (அடியனை) இவ் வாத்மாவினுடைய ஆர்ப்பைத் துடைத்தால் நிலை நின்ற பேர் இதுவிறே-(இவ்வாத்மாவினுடைய அஹங்காரமாகிற ஆர்ப்பை (ஆரவாரத்தை]த் துடைத்தால் நிலை நின்ற பேர் “அடியேன்” என்பதே யாகும். அதுவும் அடியார்க் காட்பட்டிருக்கை வரையில் செல்ல வேணும் என்று காட்டுகிறது. )(அளியனென்றருளி) – ஸ்நேஹி யென்று திருவுள்ளம் பற்றி -அங்ஙனன்றியே, தேவரீர் அளி மிக்காரிறே; ( “அளிமிக்கான்” ( திருவாய் 4-8-5] என்கிறபடியே கருணை மிக்கவரான தேவரீர் இந்த ஜந்துவை-‘அன்பு காட்டத் தக்கவன் என்று திருவுள்ளம் பற்றி; ஒரு கைம் முதலும் இல்லாதவனாகையாலே நாமே அருள் புரிய வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி. “அளியன் நம் பையல் என்னார்” [ திருமாலை 37] என்று திருமாலையிலும் அருளினாரன்றோ.)இஜ் ஜந்துவை க்ருபை பண்ண வடுக்குமென்று திரு வுள்ளம் பற்றி; எல்லாமற்றானென்று திருவுள்ளம் பற்றி-(உன்னடியார்க்காட் படுத்தாய்) உன்னளவிலே நிற்கில் முதல் நிலை; “உனக்காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” என்னாதபடி அடியார்க் காட் படுத்தாய். முதல் நிலையுமன்றியே இவ் வருகில் ஸம்ஸாரமுமன்றியே “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்னுமா போலே எல்லை நிலத்திலே நிறுத்தினாய்; ரத்நம் பட்டது, முத்துப் பட்டது” என்னுமா போலே-(உனக்காட்பட்டிருந்தால் அது முதல் நிலை-(ப்ரதம பர்வம்) ஆகையாலே பல ஸித்தியைப் பற்றி ஐயுற வேண்டி யிருக்கும். “உனக் காட்பட்டு நின் கண் பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” (திருவாய் 9-4-4) என்ற நம்மாழ்வாரைப் போலே ஐயப்படாமல்,அடியேனை அடியார்க்கு ஆட்படுத்தி ஐயப் படுவதற்கே இடமில்லாத சரம பர்வமாகிற கடைசி நிலையிலேயே நிலை நிறுத் தினாயே என்கிறார். )( பள்ளி யெழுந்தருளாயே ) அபிமத ஸித்தி,யுண்டானாலும் உறங்குமித்தனையோ ? தேவரீருடைய யோக நித்ரை பல பர்யந்தமானாலு முறங்குமித்தனையோ?
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
Leave a Reply