நந்திபுரத்தில் தங்கியிருந்த நந்திவர்மனைச் சித்திரமாயப் பல்லவராஜனும், தமிழ் அரசர்களும்
(பாண்டியனோடு பிற மன்னர்களும்) முற்றுகையிட்டுச்
சிறைப்படுத்தினர். இச்செய்தியினை அறிந்த வில்வலம் எனும்
நகரத்தின் தலைவனும், யபல்லவமல்லனளைத் தன் பேரரசனாக
ஏற்றுக் கொண்டவனும், பூசான் குலத்தில் பிறந்தவனுமான
உதயசந்திரன் தம்பெரும் படையோடு நந்திபுரம் வந்து,
பகைவர்களுடன் போரிட்டு, சித்திரமாயப் பல்வவராஜனைக்
கொன்று, தம்பேரரசனான நந்திவர்மனை மீட்டான்.உதயசந்திரன் நந்திபுரத்தினை மீட்டதற்குப் பின்பு பல்லவமல்லனான இரண்டாம் தந்திவர்மனின் பலம் மிகவும் ஒங்கியது. பாண்டிய மன்னனுடன் போரிட்டு அவன் வெற்றிபெற்றதைத் திருமங்கை ஆழ்வார். பரமேச்சுர விண்ணகரப் பாசுரத்தில்,
“தேம் பொழில் குன்றெயில் தென்னவளைத்
திசைப்பச் செருமேல்வியத் தன்று சென்றபாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் ௮.துவே”” (பெரியதிருமொழி 2:9:5)
“நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர்வேல்
தெடுவாயல் ககச்செரு வில் முன நான்
பரந்தவன் பல்லவர் கோள் பணிந்த.
பரமேச்சர விண்ணகரம் அதுவே.” (பெரியதிருமொழி 2:9:2) என்றும் பாடுகிறார்.
இப்பதிகத்தில் குறிக்கப்படும் மண்ணை எனும் ஊர்
தஞ்சாவூர் மாவட்டம் மணக்குடி என ஆராய்ச்சியாளர்
கருதுகின்றனர்.
இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது
சாளுக்கிய விச்கிரமாதித்தியனின் தாக்குதலால் காஞ்சியை
விடுத்துச் சோழநாட்டு நந்திபுரத்தில் தங்கிய நந்திவர்மன்,
சித்திரமாய பல்லவராஜனால் அல்லலுற்றதையும், பின்பு
உதயசந்திரனின் ஆற்தலால் அவனைக் கொன்றதோடு,
பாண்டிநாடுவரை சென்று பெரு வெற்றியும் பெற்று
வலிமையுடன் திகழ்ந்ததையும். நாம் : அறிய முடிகின்றது.
அதனால் தான் 68 ஆண்டுகள் இவனது ஆட்சி தொடரமுடிந்தது,௮ப்பல்லவனின் வரலாற்றில் நந்திபுர நகரம்
மிகச் சிறந்த இடத்தினைப் பெற்றது.
காஞ்சி மாநகரில் உள்ள பல்லவர்காலத்து ஆலயபங்களுள் குறிப்பிடத்தக்கது வைகுந்தநாதப்பெருமாள் கோயில்
எனும் வைணவ ஆலயமாகும். இரண்டாம் நந்திவர்ம பல்லவன் எடுப்பித்த சிறப்புடையது. திருமங்கை ஆழ்வார் “பரமேச்சுர விண்ணகரம்” என்று மங்களாசாசனம் செய்த திருப்பது இது. இவ்வாலயத்தின் கருவறையைச் சுற்றியுள்ள மண்டபத்தின்
உட்புறச்சுவர் முழுவதும் பல்லவர் வரலாற்றைச் சித்ரிக்கும்
புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. காட்சித் தொகுப்பகளுக்குக்
கீழாகப் பல்லவ கிரந்தத்தில் கல்வெட்டுப் பொறிப்புகளும் உள்ளன. இவை குறிப்பிட்ட ஒவ்வொரு காட்ச பற்றியவிளக்கங்களாகும். இதனை முழுமையாக ஆராய்ந்த டாக்டர் ௪.
மீனாட்சி அவர்கள் (76 1450071021 Sculptures of the
Vaikuntaperumal Temple, Kanchi) என்ற நூலில்”
இக்காட்சிகள் பற்றிய படங்களோடு பல்லவர் வரலாற்றைச்
சிறப்புற எழுதியுள்ளார்கள். இந்நூலில் நந்திபுர முற்றுகை யிலிருந்து உதயசந்திரன் மீட்பது.ம், பல்லவ மல்லனான
தந்திவர்மன் நந்திபுரக்கோட்டையில் அமர்ந்துள்ளதுமான பல
காட்சிகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
இவ்வாலயத்துத் திருச்சுற்று மண்டபத்தின் தென்புறச்
சுவரில் நந்திவர்ம பல்லவன் அமர்ந்திருத்தல், உதயசந்திரன் குதிரை மீது அமர்ந்த வண்ணம் தன் வீரர்களுடன் உத்திர மாயனின் படையை நோக்கிச் செல்லுதல், சித்திரமாய
பல்லவனைத் தாக்கிக் கொல்லுதல், வெற்றிச் செய்தியினை
வீரர்கள் பல்லவ மல்லனுக்குக் கூறுதல், மனமகிழ்வோடு
தந்திவர்மன் வீற்றிருத்தல், பின்னர் உதயசந்திரன் பலவெற்றி களைத் தழுவுதல் ஆகிய காட்சிகள் தொடர்சிற்பங்களாக
உள்ளன. :உதயேந்திரம் செப்பேடு கூறும் நந்திபுர முற்றுகையும் மீட்புமான செய்திகள் இங்குக் காட்சிச் சிற்பங்களாக அமைந் து
“பல்லவன் கண்ட நந்திபுரத்தை நம் முன் நிறுத்துகின்றன.
நந்திபுர விண்ணகரம்
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மன்
காலத்தில் வாழ்ந்தவராகப் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான
திருமங்கை ஆழ்வாரைக்குறிப்பர். இவர் பெரிய திருமொழியில்
தீதறு எனத்தொடங்கும் பாசுரமொன்றினைப் பாடியுள்ளார்.
பத்துப் பாடல்களிலும் “நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே” என்று நந்திபுரத்தில் இகழ்ந்த வைணவ ஆலயத்தைக்
குறிக்கின்றார். இப்பதிகத்தின் ஏழாம் பாடவில்
தந்தைமன முந்துதுயர் நந்த, இருள் வந்தவிறல்
தந்தன் மதலை
எத்தையிவன் என்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
தின்ற நகர் தான்–5-10-7-
பழையாறு என்ற பெயரில் பல அரர்கள் . இருந்தது
போலவே நந்திபுரம் என்ற பெயரிலும் நந்திவன.ம் என்ற
பெயரிலும் பல ஊர்கள் இருப்பதைக் கண்டோம்.
சோழநாட்டைப் பொறுத்த வரை முற்காலச் சோழர்களின்
கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாகப் பராந்தக சோழனின்
காலத்துச் சாசனங்களில் குறிக்கப்படும் நந்திபுரங்கள் மூன்று.
ஒன்று கிழார் கூற்றத்து ஆயிரத்தளியான நந்திபுரம், மற்றவை
உம்பள நாட்டு நந்திபுரமும்பழையாற்று நந்திபுரமுமாகும்.
இருமங்கை ஆழ்வார் குறிப்பிடும் விண்ணகரம் இருந்த
நந்திபுரம் இவை மூன்றில் எங்கும் இருந்திருக்கலாம்.
தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள சமஸ்கிருத
ஏட்டுச்சுவடி ஒன்று “தந்திபுரமாகாத்மியம்!” என்ற பெயரில்
(B.No. 11328, D.No. 10028) உள்ளது. இதில் நந்திபுரம்-
தந்திதாதபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. பின்பு இதுவே
நாதன்கோயில் என மருவியும் உள்ளது. வைணவ மரபு வழி
போற்றப்பெறும் திருப்பதி என்பதாலும், அங்குப் பல்லவ
மல்லன் காலத்தியது எனக் கலை வல்லோர் ஏற்கக் கூடிய
விஷ்ணு திருமேனி வழிபாட்டில் இருப்பதாலும், நாதன்
கோயிலை நந்திபுர விண்ணகரமாச நாம் ஏற்றுக்
கொண்டாலும் நாதன் கோயில்-நந்திபுரம் என்ற பெயர்
வழக்கிற்கான சான்றுகள் மிக பிற்காலத்தியவையே.ஆயினும்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும், பல்லவ மல்லன் வாழ்ந்த
அரண்மனை இருந்ததுமான நந்திபுரம் செங்கமேடு- வீரசிங்கம்
பேட்டை எனா ஊு களாகத் இகழும் கிழார் கூற்றத்து நந்திபுரம்
தான
“ஆயிரத்தளி”
என்பது ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ள ஒரு சிவாலயத்தைக்
குறிப்பிடும் சொல்லாகும். ஆயிரம், நூறு இலவிங்கங்களை
வழிபடும் நெறிகள் தோன்றியபோது நியமத்திலும்,
தந்திபுரத்திலும் ஆயிரத்தளிகள் தோன்றின.
கோயிற்பெயராலேயே சில ஊர்களும் அழைக்கப்
பெற்றன. திருதாசேச்சரம் எனும் கோயிலால் அவ்வூர்
திருநாகேசுவரமாயிற்று. ரங்கமன்னார் உறையும் கோயில்
மன்னார் கோயிலாகூப் பின்பு கோயில் என்றசொல் தெலுங்கில்
குடி” என்றழைக்கப்பெறுவதால் தாயக்கர்களால் மன்னார்
குடியாக ஊர்ப் பெயரும் மாறிற்று. இதுபோலவே ஆயிரத்தளி
இருந்த ஊர் ஆன நந்திபுரம் பின்னாளில் *ஆயிரத்தனி”” என்ற
ஊர்ப் பெயராகவே ஆயிற்று. அதுவும் காலப் போக்கில் பல
மன்னர்விருதுப் பெயர்களோடு இணைந்து பின்பு முற்றிலுமாக
வழக்கொழிந்தும் விட்டது. நந்திபுரம் ஆயிரத்தளியாஇப் பின்பு
அதுவும் மறைந்து தற்போது வீரசிங்கம்பேட்டை (கண்டியூர்)
என்று மருவியது தான் வரலாற்று உண்மை.
நந்தியின் புதல்வனான’ நிருபதுங்களின் கண்டியூர்
தருக்கோடிக்காவல்”” திருச்சென்னம் பூண்டி” லால்குடி
சல்வெட்டுக்கள் நந்திபுரம் உள்ளிட்ட சோழநாட்டுப் பகுதிகள்
இப்பெருவேத்தனின் ஆளுகையின் கீழ் இருந்தமையை
விவரிக்கன்றன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும்
போது சோழப்பெருநாட்டின் சீர்மிகு பல்லவ ஆட்சி
நந்தபுரத்தனைத் தலைமை இடமாகக் கொண்டு மன்னனின்
கோயிலாம் அரண்மனையோடு திகழ்ந்தது என்பது உறுதி
பெறுகின்றது.
எலியட் மற்றும் டவ்ஸன் அமீர்குஸ்ரு பற்றிக் கூறும்
போது “இந்துஸ்தான கிளி” என்றே இக்கவிஞனை, வரலாற்று
எழுத்தாளனைக் குறிப்பிடுகின்றனர். 2253 இவ் பிறந்து 2325 ல்
‘இறந்ததாகவும்குஸ்ரு டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் .
அவைக்களப்புலவராய்த் இகழ்ந்ததாகவும் கூறுகின்றனர்.
அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் தென்
னாட்டின் மீது படை எடுத்துக் கொள்ளையிட்ட இரு முறையும்
அவனுடன் பயணித்துத் தான் கண்ணால் கண்ட காட்சிகளைக்
குறிப்பெடுத்து எழுதியதே இவ்வாவணங்கள். 1309 இல் மாலிக்
டெல்லியிலிருந்து புறப்பட்டுத் தேவகி வாரங்கல் வரை
படை எடுத்து 2310 இல் இல்லி திரும்பினான். இரண்டாம் முறை
18-li- 7870 இல் தில்லியிலிருந்து புறப்பட்டுத் தேவூரி,
பண்டிரி, துவாரசமுத்திரம், (கர்நாடகம்) மாபார் (தமிழகம்)
வரை கொள்ளையிட்டு 28-70-7477 இல் தில்லி திரும்பியது
இரண்டாம் நிகழ்வாகும்.
தமிழகத்திற்கு மாலிக்காபூர் வருவதற்குக் காரணமாய்த்
திகழ்ந்தவன் பாண்டிய அர குடும்பத்தைச் சேர்ந்த இராராஜன்
சுந்தரபாண்டியன் எனபவனே. தாயத்தார்மீது பொறாமை
யாலும், தான் நாடு பெற வேண்டிச் செய்த சூழ்ச்சியாலும்,
கொடியவன் மாலிக்காபூரூடன் இணைந்தான். இதனால்
தமிழகம் தனித்தன்மை கொண்ட தம் கலைச் செல்வங்களாம்
கோயில்களை இழந்ததோடு நவநிதிச் செல்வங்களையும் இழந்தது.
மாவிக்காபூரின் இப்படை எடுப்பில் பெரும்பகுதி
கண்டியூரிவ்திகழ்ந்தவையாகும். யானைகளைக் கைப்பற்றியது,
கோயில்களையும் கண்டியூர் மக்களையும் அழித்தது, இங்கிருந்த
மூகமதியர்களை மட்டும் மன்னித்துக் கொல்லாமல் விட்டது போன்ற பல திகழ்வுகள் திகழ்ந்தன. :
இக்காரணங்களால் தான் இன்று நந்திபுர நகரம் இல்வை. ஆயிரத்தளி சகஸ்ரவிங்கக் கோயில் இல்லை.
மல்லீச்சுரம் இவ்லை. பராந்தக தேவீச்சுரம் இல்லை. வானவன்
மாதேவீச்சரம் இல்லை. மன்னனது கோயிலோ, அயிஷேக
மண்டபமோ, பல்லவராயன் மண்டபமோ, பள்ளியறைக்
கூட்மோ, காணிங்கராயன், சேதிறாயன் போன்ற மன்னனது கட்டில்களோ இல்லை.
இப்படை எடுப்பால் நந்திபுரம் மட்டுமின்றித் தில்லை
இருவரங்கம், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாஷர்ப்
பெருங்கோயில் போன்றனவும் சதைவுற்றன. தில்லையிலிருத்து
மயிலாடுதுறை வழியாகத் திருவரங்கம் செல்லும் சாலையில்
(காவிரிக்கரை வழி) தான் ஆயிரத்தளி-கண்டியூர் உள்ளது.
இப்பகுதியில் உள்ள அனைத்து இந்து அலயங்களும்
இத்தாக்குதலால் பேரழிவுக்கு உட்பட்டன.
இவ்வளவு . பேரழிவும், பெரும் மாற்றங்களும்
70-9-1277- லிருந்து 8- 4-7227- க்குள் நிகழ்ந்தது என்பதை அமீர்
குஸ்ருவின் குறிப்புகளால் அறியமுடிகிறது. பெருமைமிகு
நந்திபுரம் கி.பி. 1312-ல் அழிந்தது. எஞ்சிய அரண்மனையில்
பின்புவந்த இரண்டாம் வீரபாண்டியன் ஆட்சிபுரிந்தான்.
இதனால் தான் தாராசுரம் சல்வெட்டில் தன்னுடைய
அரண்மனையை “கண்டியூர் கோயில்” என்றே குறிப்பிட்டுக்
கொள்கிறான். 1341-ல் பேரழிவுக்கு உட்பட்ட இந்நகரம் 7280-ல்
வீரபாண்டியன் ஆட்சியோடு மறைந்து பெருமை இழந்து பல
சிற்நார்களாகப் பிரிந்தது.
மூவுலகத்தின் மேன்மைக்காகச் சுமேரு மாலையின்
உச்சியிலே சிறந்த யோகபந்த நிலையில் அமர்ந்திருப்பவரும்
சூரியசந்திரர்களை இரு கண்களாக உடையவரும் உமையுடன்
கூடியவரும், ஆதரவுடன் மேன்மையளிக்கக் கூடிய உதயசந்திர
னுக்குத் திருவை அளிக்கக் கூடியவரும் சடைமுடி தறித்தவரு
மான சதாசிவனை நான் வணங்குகிறேன் என்பதே
இத்தமிழாக்கமாகும்.
சதாசிவ வடிவம் பற்றிக் கூறும் சிற்ப ஆகமதூல்கள்,
அவர் வடிவைப் பஞ்ச பிரமன் என்றே கூறுகின்றன.
“பஞ்சப்ருஹ்மதநுஸ் சாக்ஷாத்
ஸிவேூத் ஸதா௫வ:”
எனவேதான் அவர் வடிவை ஐந்துமுகமுடைய வடிவாகவோ
ஐந்து உடல்கள் இணைந்த வடிவாகவோ ிற்பங்களில்
வடித்தனர். சதாசிவன் ஐந்து முகமுடையவராக 4 வேதங்
களையும் 6 அங்கங்களையும் அளித்தார்… . ”’ எனக் கூறப்
பெறுகின்றது. “ஐந்து முகமுடைய இவ்வள்ளல் ஞானம் உரைக்
கவில்லை என்றால் இவ்வுலகம் அறியாமை இருளில்தான்
மூழ்கி இருந்திருக்கும்” – என்பது ஆகமங்களின் கூற்று.
- பஞ்ச வக்த்ரஹரோ பூத்வா
பஞ்ச பூதைர் முகைரபி
வேதாதிக்ரந்த ஜாலம் யத்
தத் ஸர்வம் அவதத் ப்ரபு
சதாசிவமூர்த்தியின் தியான சுலோகம்
பஞ்ச வக்த்ரே தஸபுஜ: ஹ்யக்ஷ்பஞ்ச தஸைர்யுத: 1
ஸாுத்தஸ்படிக சங்காஸ: ஸர்வாபரண பூஷித: 11
ஸர்வஞ்ஞ ஸர்வக: ஸாந்த: ஸர்வோபரி ஸுஸம்ஸ்தித: 1
பத்மாஸனஸ்த: ஸோமேஸ: பாபம் ஆஸு வ்யயோஹது 1!
ஆகமங்கள் சதாசிவமூர்த்தியின் முகங்களைக் கிழக்கு
தோக்கியது தத்புருஷம் என்றும் தெற்கு நோக்கியது அகோரம்
என்றும் மேற்கு நோக்கியது சத்யோஜாதம் என்றும் வடக்கு
நோக்கியது வாமதேவம் என்றும் முகத்தின் உச்சியில் உள்ளது
ஈசானம் என்றும் பெயரிட்டு அழைக்கின்றன. ஈசான
முகத்தினை வடிவின்றி லிங்கத்தின் சிரசாக கொள்ளல்
வேண்டும் என்றும் உரைக்கின்றன.எனவே சதாசிவ வடிவம் லிங்க மூர்த்தமாயினும் வேறு வடிவாயினும் பெரும்பாலும் நான்கு முகங்களோடு தான்வடிக்கப் பெறுவதாகும்.
தென் ஆர்க்காடு மாவட்டம் திருவதிகைக் கோயில்
பல்லவர் காலத்தியதாகும். இங்கு மூன்றாம் நந்திவர்மன் மற்றும்
நிருபதுங்க பல்லவன் காலத்தில் பல திருப்பணிகள் நிகழ்ந்தன.
அவர்கள் காலத்தில் வடிக்கப் பெற்ற அரிய சதுர்முக இலிங்கம்
ஒன்று அத்திருக்கோயில் தஇருச்சுற்றில் இன்றும் உள்ளது.
பீடத்தின் மேல் காணப்படும் பாணத்தில் நான்கு திக்குகளிலும்
முறையே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம்,வாமதேவம்
ஆகிய முகங்கள் உள்ளன. பாணத்தின் உச்சியாகத்திகமும்
வளைந்த சிரசு இங்கு ஈசான முகமாக வடி.வின்றி உள்ளது. இது
போன்று வடிக்கப்பெற்ற பஞ்சமுகலிங்கங்கள் திருவானைக்கா,
திருக்காளத்தி போன்ற தஇிருக்கோயில்களில் வழிபாட்டில்
உள்ளன.தஞ்சைப் பெரிய கோயிலின் முதற் கோபுரத்தில் (கேரளாந்
தன் திருவாயில்) 4 முகங்களும் (ஐந்தாம் முகம் மறைந்த
திலையில்) பத்துக் கரங்களும் கொண்டு பத்மபிடத்தில் அமர்ந்த
கோலத்தில் வடிக்கப் பெற்ற சுதைச் சிற்பங்கள் இரண்டு
உள்ளதை இன்றும் காணலாம்.
இதே திருக்கோயிலில் காணப்படும் இராஜராதனின்
கல்வெட்டொன்று *பஞ்ச தேகழூர்த்தி”” என்ற செப்புத்
திருமேனி பற்றி விவரிக்கின்றது.
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply