Archive for October, 2020

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -81-90-

October 20, 2020

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

——————-

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருள பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–

யதி வர பக்தி பூர்த்தி கலி தார்த்தி சமாஹ்வய யத் க்ருதி ரஸா வேதிந
கில தரந்தி பாவார்த் யுததிம்
தம் அநு தினம் யதீந்த்ர பத பங்கஜ ப்ருங்க வரம்
வர முனிம் ஆஸ்ரயாசய விஹாய தத் அந்ய ருசிம் –85-

யதிகளில் ஸ்ரேஷ்டரான நம் ஸ்வாமி எம்பெருமானார் இடத்து முதிர்ந்த தமது பக்தியினால் தூண்டப்பட்டு –
பரம பக்தி தலை எடுத்து – ஆர்த்தி என்ற பெயரை உடைய எந்த பிரபந்தத்தில் ரஸத்தை அறிந்தவர்கள்
ஸம்ஸார தாபக் கடலைக் கடக்கிறார்கள் அன்றோ
நெஞ்சே யதிராஜருடைய திருவடித் தாமரைகளில் இருக்கும் தலை சிறந்த வண்டு போன்ற அந்த மா முனிகளை
தினம் தோறும் மற்றவற்றில் ருசியை அறவே விட்டு ஆஸ்ரயிப்பாயாக –

——————

ஸடாரி த்ருஷ்ட ஸாம வேத பாஷ்ய தர்சித அகில
பிராமண சங்கரஹோ மஹா உபகாரகோ மநீஷிணாம்
முதம் தநோதி யத் க்ருதிஸ் ஸமாஸ்ரயஸ்வ சாதரம்
மநோ ஹரோ பயந்த்ரு யோகி நம் தமன்வஹம் மன –86-

நம்மாழ்வாரால் காணப்பட்ட சாம வேத சமானமான திருவாய் மொழியின் பாஷ்யம் ஆகிற ஈட்டில்
காட்டி அருளப் பெற்ற அனைத்துப் பிரமானங்களுக்கும் எந்த மா நுனிகளால் அருளிச் செய்யப்பட்ட
எந்த தொகுப்பானது பகவத் விஷய அதிகாரிகளுக்கு மிகுந்த உபகாரத்தைச் செய்து ஆனந்தத்தை
உண்டாக்குகிறதோ மனசை வசீகரிக்கும் அந்த மா முனிகளை ஹே மனமே
தினம் தோறும் ஆதாரத்தோடு ஆஸ்ரயிப்பாயாக -அனு தினம் அனுசந்திக்கக் கடவாய் –

————-

ஸ்வ க்ருத ஜகத் குரு தத்வ த்ரிதய வ்யாக்யான மான ஸங்க்ரஹத
பவி நாம் க்ருத உபகாரோ வர யோகீ பாதுநஸ் ஸததம் –87-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருடைய தத்வ த்ரயத்துக்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்
மற்றும் பிராமணத் திரட்டல் சம்சாரிகளுக்கு உபகாரம் செய்து அருளினவரான
யோகிகளில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

————————

யதீ யய உபதேஸ ரத்ன மாலயா பரிஷ் க்ருதா
யத் அங்க்ரி பத்ம சேகரா ஜயந்தி தேசிக உத்தமா
தம் ஆஸ்ரி தஸ்ய ஸூ ந்தரோ பயந்த்ரு யோகி சேகரம்
பவ ஆர்ணவ அபி கோஷ் பத த்வமேதி தத் ப்ரபா வத –88-

எவருடைய உபதேச ரத்ன மாலையை நன்கு அனுசந்தித்தவர்களாய் எவருடைய திருவடித் தாமரைகளை
தலைக்கு அணிகலனாகக் கொண்டவர்களாய் விளங்கும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்கள் சம்சாரத்தை வெல்கிறார்களோ
அந்த மா முனி ஸ்ரேஷ்டரை ஆஸ்ரயித்த வர்களுடைய ஸம்ஸார ஆர்ணவமும்
அந்த மா முனியின் பிரபாவத்தாலே குளப்படியாகும் தன்மையை அடைகிறது –

மன்னுயிர் காள் இங்கே மணவாள மா முனியாம்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தால் தீண்டல் கடன் -எறும்பி அப்பா பாசுரம் அனுசந்தேயம் –

——————

சடாரி த்ருஷ்ட ஸாம வேத மௌலி ஸங்க்ரஹாத் மிகாம்
யத் யுக்திம் அன்வஹம் க்ருணன் வி முக்தி ஸம்பதாஸ் பதம்
ஸமேத தே ஸதாம் கணஸ் ஸ நஸ் ஸூபாநி சாதரம்
வரோ பயந்த்ரு யோகி ராட் தரங்க யத்வ நாரதம் –89-

நம்மாழ்வார் கண்டா சாமவேதத்தின் தலையான திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹமாக
எந்த மா முனிகளுடைய திருவாய் மொழி நூற்று அந்தாதியை
மோக்ஷமாகிய செல்வத்தைப் பெறக் காரணமாக மஹான்கள் குழாம் நாள் தோறும் ஆதாரத்தோடு
அனுசந்தித்து மென்மேலும் அனுபவிக்கிறார்களோ அந்த ஸ்ரேஷ்டரான மா முனிகள்
நமக்கு இடைவிடாமல் மங்களங்களை வளரச் செய்து அருளுகிறார் –

————–

துக்தோதந் வத்த வல மதுரம் ஸூத்த சத்துவ ஏக ரூபம்
ரூபம் யஸ் யஸ் புட யதி தராம் யம் பணீந்த்ர அவதாரம்
த்யாயந்தஸ்தம் வர வர முனிம் கே அபி தன்யா மஹாந்த
காலம் சர்வம் கலுஷ ரஹிதா ஹ்ருஷ்ட சித்தா ஹரந்தி –90-

எந்த மா முனிகள் பாற் கடல் போன்று வெண்மையாகவும் இனிமையாகவும் ஸூத்த ஸத்வமே
உருவெடுத்தவராகவும் -உத்தம நம்பி போன்ற அந்தரங்கங்களுக்கு காட்டி அருளிய
ஆதி சேஷ திரு அவதாரமே என்னும் உண்மையை மிகத் தெளிவாக்க காட்டுவதாக
திரு மேனியை உடையவரோ அந்த மா முனிகளை த்யானிப்பவர்களான சில மஹான்கள்
தன்யர்களாய் மனக்கலக்கம் அற்றவர்களாய் சந்துஷ்டியை உடையவர்களாய்
உள்ள எஞ்சிய காலத்தை எல்லாம் ஸூ கமாகவே கழிக்கிறார்கள் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -71-80-

October 20, 2020

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

ஸடரிபு நிகமார்த்த தத்த்வ போதம் ஜநயதி ய கில வாதி ஸிம்ஹ கோஷ
வர வர முனி வர்யம் ஆஸ்ரயே தத் ப்ரவண தியம் ப்ரஸமதி ஸத் குணாட்யம் –71-

நம்மாழ்வாருடைய தமிழ் வேதத்தில் தத்வார்த்தத்தின் ஞானத்தை எதிர் வாதம் செய்பவர்களுக்கு
ஸிம்ஹ கர்ஜனையாகப் பேசும்
எந்த வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அல்பரும் அறியும் படி செய்து அருளுகிறாரோ
அதில் ஈடுபட்ட திரு உள்ளத்தை உடையராய்
புலன் அடக்கம் முதலிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன்

————-

சர ப்ரமுக திவ்ய ஸூர்யுதித திவ்ய ஸூக்த்யாசய
ப்ரகாஸந ஸமுத்பவாநி தர லப்ய கீர்த் யுஜ்ஜ்வலம்
குரும் ஹ்ருதி விபாவயந் வர முனிர் ஹி கிருஷ்ணாஹ் வயம்
மதீய ஹ்ருதயே ஸதா ஸ கருணம் விதத்தாம் ஸ்திதம் –72-

பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் அருளிச் செய்த அருளிச் செயல்களின் அர்த்தங்களை பரப்புவதில் உண்டான
வேறு ஒருவராலும் பெற முடியாத வ்யாக்யான சக்ரவர்த்தி என்ற புகழால் விளங்குகிற மஹா ஆச்சார்யரான
விலக்ஷண கீர்த்தி உள்ள ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை திரு உள்ளத்தில் சிந்தை செய்து கொண்டு இருக்கும்
மா முனி ஒருவரே கருணையோடு அடியேனுடைய ஹ்ருதயத்தில் எப்பொழுதும் நிலை பெற்று இருக்கட்டும் –

————-

ரஹஸ்ய த்ரயாக்யம் ஜகத் தேசிக உத்தமம் ரஹஸ்ய த்ரய அந்தர் கதார்த்த ப்ரதீபம்
விவவ்ரே ஜகத் குப்த யே ய க்ருபாப்தி ச ந பாது ரம்யோ பயந்தா முனீந்த்ர–73-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே அருளிச் செய்யப்பட முமுஷுப்படியை ரஹஸ்ய த்ரயத்தின்
உள் அர்த்தங்களை லோக ரக்ஷணத்திற்காக
ஒளி விளக்காக விளங்கும் கருணைக் கடலான ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் செய்து அருளினாரோ
அவர் நம்மை ரக்ஷித்து அருளட்டும்
ரஹஸ்ய த்ரயாக்யம் என்று கால ஷேப பிரபந்தம் ஆகிற முமுஷுப்படியையே சொன்னவாறு –

————————–

ஸ்ரீ மல் லோக குரூதி தா ஸ்ருதி சிரஸ் ஸித்தாந்த ஸஞ்ஜீவி நீ
ஸா தத்த்வ த்ரித யாஹ்வயா கில க்ருதி யத் வ்யாக்யய அலங்க்ருதா
ஸ்லாகா லோல பணீந்த்ர மௌலி விலஸத் ரத் நாம் ஸூ நீ ராஜி தா
பாயான் நஸ் ஸததம் ஸ ஸூந்தர வரோ யோகீ குணைஸ் ஸூ ந்தர –74-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்டதாய் வேதாந்த சித்தாந்த அர்த்த விசேஷங்களை
விளக்குகின்ற தத்வ த்ரயமாகிற கிரந்தம்
எவருடைய வியாக்யானத்தால் அலங்கரிக்கப் பட்டு ஆதி சேஷன் தன் திரு முடியை அங்கீ காரமாக
ஆட்டுவதால் விளங்குகிற ரத்னங்களின் ஒளியால்
நீராஜநம் -ஆலத்தி செய்யப்பட்டு பிரகாசிக்கிறதோ -குணங்களால் சிறந்து விளங்கும்
அந்த மா முனிகள் நம்மை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –

———————–

ஸ்ருதி ஸ்ம்ருதி சரோ முனி ப்ரப்ருதி ஸூரி ஸூ க்திஸ் புரத்
ப்ரஸூந ரசிதா துலாநக வரார்ய ஸூக்திஸ் ரஜஸ்
பிபர்தி ஸூப ஸுவ்ரப ஸ்ரீய முதார யத் பாரதீ
ச மே தி சது ஸூ ந்தரோ வர முனிஸ் ஸூபம் ஸாஸ்வதம் –75-

ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் உடைய ஸ்ரீ ஸூ க்திகள் இவற்றை மூலமாகக் கொண்டு தோன்றியதும்
ஒப்பற்றதும் குற்றமற்றதும் தலை சிறந்த ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்ட
ஸ்ரீ வசன பூஷணம் என்னும் மலையானது எவருடைய வியாக்யானமான மங்கள மணம் உள்ள
ஸ்ரீயை தரித்துக் கொண்டு இருக்கிறதோ வள்ளலான அந்த ஸ்ரீ மா முனிகள் அடியேனுக்கு
நிலையான மங்களத்தை அருளட்டும்
திவ்ய கந்தத்துடன் கற்றோர்களுக்கு அணி கலனாய் அநு பாவ்யமாய் உள்ள வியாக்யானம் அன்றோ –

———————-

ஜகத் குரு வர அநுஐ பிரதித சித்ர குர்வா சயா பிதா ந க்ருதி ஸம் ப்ரகாஸ ந படீ யஸீ யத் க்ருதி
அநந்ய ஸூலபா வ்யநக்த்ய நக சேமுஷீ நை புணீம் ச மே வர வரோ முனிர் விதரது ஸ்ரீயம் பூய ஸீம் —-76-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய அனுஜரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் அருளிச் செய்யப்பட
ஆச்சர்யமான ஆச்சார்ய ஹ்ருதயமான திவ்ய கிரந்தத்தை விளக்குவதில் மேலானதும் மற்றவர்களுக்கு கிடைக்க அரிதான
திறமை உடைய தோஷம் அற்ற ஞானம் நிறைந்ததுமான வியாக்யானத்தை அருளிச் செய்த மா முனிகள்
அடியேனுக்கு நிறைந்த ஞான ஸம்பத்தை அளிப்பாராக –

———————-

க்ருத்வா அநேகாந் யஹாந்ய ப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர ஸம்பாத கோரம்
தத்தாத் ருக் வாத யுத்தம் யதிபதிர நயத்யம் விஜித்ய ஸ்வ பக்ஷம்
தத் ப்ரோக்தம் ஞான சாரம் வ்யவ்ருணுத கில யோ மேய ஸாரம் ச ஸம்யக்
தஸ்மை நித்யம் நமஸ் ஸ்யாத் வர வர முநயே நிஸ்து லோதார பூம் நே –76-

அப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர-அமோகமான -நிச்சயமாக பலன் அளித்தே தீரும் படியான நீதி உடன் கூடிய
நியாய ஸாஸ்த்ரத்தைக் கொண்டு -17 நாட்கள் கோரமான போராட்டம் போன்று வாதப் போரை செய்து
ஸ்ரீ யதிராஜர் எந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை தம் பக்ஷத்துக்கு கொண்டு வந்தாரோ
அப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அருளாளப் பெருமாள் எம்பெருமானாரால் அருளிச் செய்யப் பட்ட
ஸ்ரீ ஞான சாரம் ஸ்ரீ பிரமேய சாரம் இவற்றை நன்கு விளக்கி அருளிய அந்த இணை அற்ற உதார குணம் நிறைந்த
ஸ்ரீ மா முனிகளுக்கு என்றும் நமஸ்காரங்கள் உரித்தாகட்டும் -நித்யம் அடியேன் தண்டம் சமர்ப்பிக்கக் கடவேன்-

———————

ப்ரபந்நா நாம் காயத்ர்யம்ருத கவி த்ருஷ்டா யதிபதி
ஸ்துதிர் யத் வ்யாக்யாதா ப்ரஜ நயதி ஸத்வ உத்தர முதம்
அஜஸ்ரம் ந பாயாத் வர முனி வர ஸீல கருணா
ஷமா வாத்சல்யாத்யை அநவதிக குணவ்க ஏகஸ் ச மதுர —-78-

திருவரங்க அமுதனாரால் அருளிச் செய்யப்பட ப்ரபந்ந காயத்ரி என்று சொல்லப் படுகிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஸ்துதிக்கும் ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி எந்த ஸ்ரீ மணவாள மா வியாக்யானத்தோடே
ஸத்வ குணம் மிகுந்து இருக்கிறவர்களுக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறதோ
சீலம் தயை பொறுமை வாத்சல்யம் முதலிய எல்லை அற்ற குணக் கூட்டங்களால்
இனிமையாக இருக்கும் அந்த ஸ்ரீ மா முனிகள் எப்போதும் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

————–

விஷ்ணோர் யத் தர்சன அர்ச்சா சரணி மநு சரன் அர்ச்சனம் சத்த்வ பாஜாம்
சங்கஸ் ஸர்வோ அபி குர்வன் ஜயதி குண நிதிஸ் தத் கடாக்ஷ ஏக பாத்ரம்
தஸ்மாத் காந்தோ பயந்து ப்ரணத ஜன நிதே ஸ்ரீ மதோ தேசிகேந்த்ராத்
நாஹம் நாஹம் ந ஜானே பரமிஹ சரணம் தைவதம் நைவ ஜாநே –79-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஜீயர் படி என்னும் எம்பெருமானுடைய திரு வாராதன க்ரமத்தை
அனுஷ்ட்டித்து சத்வ குணம் உள்ளவர்கள் அனைவருடைய குழாமும் திரு ஆராதனத்தைச் செய்து கொண்டு
சத் குணங்களை நிதியாக உள்ள அந்த மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு பாத்திரமாக விளங்குகிறார்கள் –
இங்கு அந்த ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும் அடி பணிந்தவர்களுக்கு நிதி யானவரான
மா முனிகளைக் காட்டிலும் மேலான தெய்வத்தை நான் அறிய மாட்டேன்
உபாயமும் நான் அறிய மாட்டேன் அறியவே மாட்டேன்
எப்போதுமே ஜீயர் திருவடிகளே சரணம் என்றே இருப்பேன்

————————

ஸ்ரீ மத் காந்த வரஸ்ய தேசிக வரஸ்ய அங்க்ரீ ஸரோஜ உபமவ்
ஸம்ஸார ஆர்ணவ மக்ந ஸர்வ ஜனதா சாந்தாரணை கவ்ரதவ்
யே த்யா யந்தி ஸதா தத் அந்ய விமுகாஸ் தத் தர்சிதே ஸத் பதே
நிஷ்டாம் பிப்ரதி ஸத் குணைஸ் ஸூ ரபி தாஸ்தேப்யோ மஹத் ப்யோ நம -80-

ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான மா முனிகளுடைய -ஸம்ஸாரக் கடலில் ஆழ்ந்து உள்ள
எல்லா சேதனர்களையும் கரை சேர்ப்பதையே விரதமாகக் கொண்ட பொன்னடியாம் செம் கமலமான
திருவடி இணைகளை யார் த்யானிக்கிறார்களோ -அவற்றைத் தவிர வேறு எதையும் காணாதவர்களான –
அவர் காட்டிய நல் வழியிலேயே நிஷ்டையை உடையவர்களாக -நற் குணங்களால்
நறு மணம் உடையவர்களாக உள்ள அந்த மகான்களுக்கு நமஸ்காரம்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -61-70-

October 20, 2020

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

சட வைரிமு நே பரம் ந தைவம் விதிதம் யேந ததே கதை வதே ந
மதுரம் கவிம் ஆஸ்ரித ஸ் தமீட்யம் வர யோகீ விததாது பாவுகம் ந –61-

நம்மாழ்வாரை விட மேலான தெய்வம் எவரால் அறியப் பட வில்லையோ அந்த ஒரு தெய்வத்தை உடைய
தேவு மற்று அறியாமல் குருகூர் நம்பி பாவின் இன்னிசையைப் பாடித் திரிந்த
ஸ்துதிக்கத் தக்க ஸ்ரீ மதுர கவிகளை ஆஸ்ரயித்த மா முனிகள் நமக்கு நன்மைகளைத் தந்து அருள வேணும்

————

யத் பதாப்ஜ அநு பந்தஸ் ஸகல தநு ப்ருதாம் கல்பதே முக்தி ஸித்த்யை
யத் சம்பந்தாத் கரஸ்தாம மநுத ச யதிஷ் மாபதி ஸ்வஸ்ய முக்திம்
தஸ்மிந் கூராதி நாதே நிரவதிக குணே பக்திமாம் ரேட யந்தம்
முக்த்யை பக்த்யோ பஜந்தோ வர முனி மநகா தேஸிகா மே தயந்தாம் –62-

எவருடைய திருவடித் தாமரைகள் சம்பந்தமே எல்லா சேதனர்களுடையவும் முக்தி பெறுவதற்கு
சாதனமாக கருதப் படுகிறதோ அந்த ராமானுஜரே
தன்னுடைய மோக்ஷம் எவருடைய சம்பந்தத்தால் கைப்பட்டதாக எண்ணினாரோ
இதற்கு மேல் இல்லை என்னும்படியான குணங்களை உடைய அந்த கூரத்தாழ்வான் இடம்
இடைவிடாத பக்தியைப் பண்ணும் மா முனிகளை மோஷார்த்தமாக பக்தியுடன் ஆஸ்ரயிக்கும்
ஆச்சார்யர்கள் அடியேனுக்கு தயை பண்ணி அருள வேணும் –

அர் வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த் நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்தி மாபு
ஸோ யம் ராமாநுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ் தாம்
யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அன்றோ –

—————————–

யதிபதி பத யுக்மம் தைவதம் யஸ்ய நான்யத் தமிஹ வடுக பூர்ணம் சாதரம் பாவ யந்தம்
ஸததம பிலஷந்தம் தஸ்ய நிஷ்டாம் கரிஷ்டாம் வர வர முனி வர்யம் சந்ததம் சிந்தயேயம் –63-

யதிராஜருடைய திருவடித் தாமரைகளைத் தவிர எவருக்கு வேறு தெய்வம் இல்லையோ
அந்த வடுக நம்பியை இங்கு பிரியத்தோடு எப்போதும் நினைப்பவரும்
அவர் தம் ஆழ்ந்த உறுதியை -அந்திம உபாய நிஷ்டையை -தமக்கு விரும்பும் முனிகளிலே
ஸ்ரேஷ்டரான மா முனிகளை எப்போதும் சிந்திக்கக் கடவேன்

————————

ஸடரிபு முனி த்ருஷ்ட ஸாம வேதம் வ்யவருணு த யோ யதிராஜ சாஸநே ந
தமிஹ சடஜிதாஹ் வயம் ஸ்ர யந்தம் வர முனி வர்ய முபாஸி ஷீய நித்யம் –64-

நம்மாழ்வார் கண்ட சாம வேத சம மான திருவாய் மொழியை நம் ஸ்வாமி எம்பெருமானாருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே எவர் ஆறாயிரப்படி வியாக்யானம் செய்து அருளினாரோ அந்த
திருக் குருகைப் பிரான் பிள்ளானை ஆஸ்ரயித்த வர வர முனியை எப்பொழுதும் ஆஸ்ரயிக்கக் கடவேன்

——————–

ஸடாரி த்ருஷ்ட வேத மௌலி பாவ ஸம் ப்ரகாஸ க்ருத்
க்ருதேத ரோக்தி மௌலி வேத்ய யோகி சேகர ஸதா
ஸமாதி ஸத் குணோததவ் நிமஞ்ஜ தீவ யஸ்ய தீ
வரோ பயந்த்ரு யோகி நம் நிரந்தரம் தமாஸ்ரயே –65-

ஒருவராலும் செய்யப் படாததும் நம்மாழ்வாரால் சாஷாத் கரிக்கப் பட்டதுமான திருவாய் மொழியின்
கருத்தை தெளிவாக வெளியிட்ட வேதாந்தி என்று அறியப் படும் சம தமாதி ஸத் குணக் கடலான –
க்ருதேத ரோக்தி மௌலி வேத்யர் -நஞ்சீயர் இடம் எப்பொழுதும் எவருடைய திரு உள்ளம்
ஆழ்ந்து இருக்கிறதோ அந்த மா முனிகளை இடைவிடாது ஆஸ்ரயிக்கிறேன்

————-

தத மது ரக பீர த்ராவிடாம் நாய பாஷ்யம் யது தி தமிஹ சந்த ஸந்ததம் சீல யந்தி
ஸ ஹி விஹரதி கிருஷ்ணோ தேசிகோ யஸ்ய சித்தே ச தி சது வர யோகீ பத்ர மவ்யாஹதம் ந –66-

ஒன்பதினாயிரம் போன்று இனிமையானதும் ஆழமானதுமான திராவிட வேத பாஷ்யமானது
எவரால் அருளிச் செய்யப் பட்டு அத்தை நல்லோர்கள் எப்பொழுதும் கௌரவிக்கிறார்களோ
அத ஆச்சார்யரான கிருஷ்ண ஸூரி என்னும் பெரிய வாச்சான் பிள்ளை எவருடைய திரு உள்ளத்தில் இன்புறுகிறாரோ
அந்த மா முனிகள் நமக்கு தடைவிடாத மங்களங்கள் அருள திரு உள்ளம் பற்ற வேணும் –

—————

ஸூதா சிந்தோர் இந்தோஸூ ஸூஹ்ருத திக பீரம் ஸூ மதுரம்
யதுக்தம் பாஷ்யம் தச் சட ஜித் உதிதாம் நாயா சிரஸ
ஸ கிருஷ்ணார்ய புஷ்ணன் ஹ்ருதி விஹரணம் யஸ்ய ஜயதி
ஸ்ரியம் சந்தன் யான்மே வர முனி வரஸ்ய ப்ரதிதி நம் –67-

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதாந்தமான திருவாய் மொழிக்கு மிகவும் ஆழ்ந்ததாய் மிக்க இனியதாய்
அம்ருதக் கடலுக்கும் சந்திரனுக்கும் நட்ப்புடைத்தாய் விளங்கும் வியாக்யானமானது எவரால் அருளிச் செய்யப் பட்டதோ
அந்த கிருஷ்ணன் என்னும் பெரிய வாச்சான் பிள்ளை
எவருடைய திரு வுள்ளத்தில் ஆனந்தத்தை உண்டு பண்ணிக் கொண்டு
தாமும் ஆனந்தமாக விளங்குகிறாரோ அந்த வர வர முனி
தினம் தோறும் அடியேனுக்கு கைங்கர்ய ஸ்ரீ யை வளர்த்து அருளிச் செய்ய வேண்டும்
சந்திரன் ஸூர்யனது ஒளி வாங்கி பிரகாசிப்பது போல் திருவாய் மொழி அர்த்த விசேஷங்களை விளக்கியே
ஸ்ரீ கிருஷ்ண பக்தியை வளர்க்கும் தன்மையால் சந்திரனுக்கு மித்ரன் என்றவாறு –

————

நிகில நிகம மௌலி சார ஸாரம் ப்ரதயதி யத் த்ரவிடாக மாந்த பாஷ்யம்
ததிஹ ஜயதி யத் பிரசாத சீதம் ஹ்ருதய ஸதா வர யோகி நம் பஜஸ்வ –68-

எந்த திராவிட வேத வியாக்யான மானது அனைத்து வேதாந்த மிக்க சாரமாக விளங்குகிறதோ
அந்த இருபத்து நாலாயிர வியாக்யானமும் எவருடைய-பிரசன்ன மதுரமான வியாக்யானத்தால் –
பிரசாதத்தினால் குளிர்ந்து இங்கு பிரகாசிக்கிறதோ
அந்த மா முனிகளை என் மனமே எப்பொழுதும் ஆராதிப்பாயாக –
இது ஈட்டுக்கும் பொருந்தும்

——————–

ஸூதா சாரா காரம் ஸகல நிகமாந்தார்த்த முகுரம்
யத் யுக்தம் தத் பராங்குச நிகம பாஷ்யம் சரண யன்
ஸமிந்தே யத் சங்கஸ் ஸ விஹரதி கிருஷ்ணோ குரு வர
ஸதா யச் சித்தே தம் வர வரம் உபாஸே முனி வரம் –69-

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதம் ஆகிய திருவாய் மொழிக்கு அருளிச் செய்யப்பட
எந்த வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப்படி யானது -அம்ருத சாரமாய் வேதாந்தங்கள் அர்த்தங்களை எல்லாம்
தெளிவாகக் காட்டும் கண்ணாடியாய் ஸ்ரீ வைஷ்ணவ சமுதாயத்து தஞ்சமாய் விளங்குகிறதோ
எதனோடு சேர்ந்து கொண்டு அந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்கிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை எவருடைய திரு உள்ள கமலத்தில் எப்போதும் உல்லாஸமாக
ஆனந்தத்தை அளித்துக் கொண்டு விளங்குகிறதோ அந்த மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன் –

—————-

ஸர்வஜ் ஜேந த்ருதா ஹி யேந சிரஸா சா கிருஷ்ண பாத உத்பவா
ஸ்ரீ பராங்குச வேத மௌலி விவ்ருதிஸ் ஸ்வர் வாஹிநீ ஸோ த ரீ
தாபம் ஸர்வ ம பாகரோ தி பவி நாம் தத்தே பராம் நிர் வ்ருதம்
ஸேவே தஸ்ய பாதாப்ஜ யுக்ம மநிசம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே –70-

எந்த பரம சிவனால் தலையால் தாங்கப் பட்ட ஆகாசக் கங்கை சம்சாரிகளுடைய எல்லா தாபங்களையும் போக்குகிறதோ
அதைப் போன்று நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள வேதாந்தம் ஆகிய திருவாய் மொழிக்கு விவரணமாய்
வடக்குத் திரு வீதிப் பிள்ளையிடம் இருந்து தோன்றிய
ஈடு -அது எல்லாம் அறிந்த ஸ்ரீ மா முனிகளால் திரு முடியில் தரிக்கப் பட்டு
கங்கையின் சகோதரி யாக சம்சாரிகளுடைய எல்லா தானங்களையும் போக்கி மேலான ஆனந்தத்தையும் அளிக்கிறதோ
அந்த ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரான மா முனிகளுடைய திருவடித் தாமரை யுக்தத்தை எப்பொழுதும் சேவிக்கிறேன் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -51-60-

October 19, 2020

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

யது பாது காத்வ மதி கச்சதி சம்ய மீந்த்ர
தஸ்மிந் முனவ் வகுள மாலிநி பத்த பாவம்
தத் ஸூ க்தி சாகர சதுஷ்டய பூர்ண சந்த்ரம்
ஸுவ்ம்யோ பயந்த்ருய மிநம் சரணம் வ்ருணே அஹம் –51-

எந்த ஸ்ரீ நம்மாழ்வாருடைய பாதுகையாய் இருக்கும் தன்மையை ஸ்ரீ எதிராஜரான நம் உடையவர் அடைகிறாரோ
மகிழ மாலை அணிந்த அந்த ஸ்ரீ நம்மாழ்வார் திறத்தில் ஊன்றிய திரு உள்ளத்தை உடையவரும்
அவருடைய ஸ்ரீ ஸூக்தி கடலான நான்கு திவ்ய பிரபந்தங்களுக்கும் பூர்ண சந்திரன் போன்றவருமான
ஸ்ரீ மா முனிகளை சரணமாகப் பற்றுகிறேன் –
சந்த்ர தர்சன ஹர்ஷத்தால் கடல் பூரிக்கும்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள் அன்றோ திரு மூல நன்னாள் –

—————–

மூர்த்தோ யோ பக்தி பூமா முரரிபுத யோ யன் மஹிம் ந கலா அபி
வ்யாஸாதீ நாம லப்யா புஜக விஹக ராட் ஸைன்ய ப்ருத் விஸ்மயாய
யத் ஸூக்தி நாம் கரிம் ணே ஸ்ப்ருஹயதி ஸகலோ அப்யாக மோ அபவ்ருஷேய
தஸ்மிந் ந்யஸ்தாத்ம பார சடஜிதி வர யோக்யஸ்து மே ஸ்வஸ்தி பூம்நே –52-

எந்த நம்மாழ்வார் முரனை அழித்த ஸ்ரீ கண்ணபிரான் திருவடிகளில் பரமபக்தியே வடிவானவரோ –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ
எவருடைய பெருமையில் பதினாறில் ஒரு பங்கு கூட வ்யாஸாதிகள் அடைய முடியாதோ
அநந்த கருட விஷ்வக் சேனாதிகளுக்கும் கூட ஆஸ்ரயிக்க விஷயம் ஆனவரா
எவருடைய ஸ்ரீ ஸூ க்திகளின் மஹிமையை வேதங்களும் கூட அடைய விரும்புகின்றனவோ
அந்த ஸ்ரீ நம்மாழ்வார் இடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஸமஸ்த பாரத்தை யுடைய மா முனிகள்
அடியேனுடைய பூர்ண மங்களங்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்

——————

சடாராதி ஸ்ரீ மத் வதன ஸரஸீ ஜாத மிஹிர
ததீய ஸ்ரீ பாதாம் புஜ மது கரஸ் தஸ்ய வசஸாம்
சதுர் ணாம் ஸிந்தூ நாமம் ருத கிரனோ பக்த ஜனதா
ஸூர த்ருபாயான் மாம் வர முனி வரோ வேள மஹிமா –53-

நம்மாழ்வாருடைய திரு முக மண்டலமான தாமரையை அலர்த்த வல்ல ஸூ ர்யனாகவும்
அவர் தம் திருவடிகளில் வண்டாகவும்
அவர் அருளிச் செய்த நான்கு பிரபந்த சாகரத்துக்கு பூர்ண சந்த்ரனாகவும்
பக்த ஜனங்களுக்கு அபேக்ஷித்ங்களைக் கொடுக்க வல்ல கல்பக வ்ருக்ஷமாகவும்
எல்லை அற்ற பெருமை யுடைய ஸ்ரேஷ்டரான மா முனிகள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

——————-

ஸடரிபு முனி த்ருஷ்டாம் நாய கூடார்த்த தத்த்வ
ப்ரகடந படு லோகாசார்ய ஸூக்த்யர்த்த ஜாதம்
வ்ய வ்ரு ணத பவ பாஜாம் குப்தயே ய க்ருபா வாந்
பவது ச வர யோகீ ஸ்ரேயஸே பூயஸே ந –54-

ஸ்ரீ நம்மாழ்வார் கண்ட வேத ரஹஸ்யார்த்தங்களை -அர்த்த ரசங்களையும் பாவ ரசங்களையும் -உள்ளது உள்ளபடி
வெளிப்படுத்துவதில் திறமை மிக்க லோகாச்சார்யரான ஸ்ரீ நம்பிள்ளையினுடைய ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகளின்
அர்த்தங்களை சம்சாரிகளை ரக்ஷிப்பதற்காக எவர் எடுத்து விவரித்து உரைத்தாரோ
பரம காருணிகரான அந்த ஈட்டுப் பெருக்கரான மா முனிகள் நம்முடைய
ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக நன்கு விளங்கட்டும்

————–

தாத்ருக் கேசர பூஷ த்ருஷ்ட சதுராம்நா யங்க ஷட் கதாமக
ஸ்வ உக்த்யா நந்திதே கேசவ கில கலி ப்ரத்வம்ஸி யோகீஸ்வர
நித்ய உத்புத் வயதீய ஹ்ருத் ஸரஸிஜ புஷ்ணாதி ஹம்ஸஸ் ரியம்
ச ஸ்ரே யாம்ஸி தநோ து ந பிரதிகலம் காந்தோ பயந்தா முனி –55-

அப்படிப்பட்ட வகுள மாலையைத் தமக்கு பூஷணமாக அணிந்தவரான ஸ்ரீ நம்மாழ்வாரால் காணப்பட்ட
நான்கு திராவிட வேதங்களுக்கு ஆறு அங்கங்களான தம்முடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே எம்பெருமானை
உகப்பிக்கும் கலி கன்றியான திரு மங்கை ஆழ்வார் அல்லவா
இவற்றை அநுஸந்திப்பதால் எப்பொழுதும் மலர்ந்த எவருடைய இதயத் தாமரையில் கலி கன்றியான
திருமங்கை ஆழ்வார் ராஜ அம்சமாக விளங்குகிறாரோ
அந்த அழகிய மணவாள மா முனிகள் எப்பொழுதும் நமக்கு ஆத்ம நன்மைகளைச் செய்து அருள வேணும் –

————–

ஸ்வ கரல சாச்சி தாக்ர கரவாள ஜிதாப்தி ஸூதா தயித
ஹ்ருதாந பாய நிகமாந்த நிகூட தநம்
கலிரிபு யோகி வர்ய மநிசம் ஹ்ருதயே நிததத்
மநஸி விஹார மேது ஸததம் மம காந்த வர –56-

தம் திருக்கையிலே விளங்குகின்ற கூரான நுனியை யுடைய வாளால் வெல்லப்பட்ட எப்பொழுதும் பிரியாத
அலை மகள் நாதன் இடம் இருந்து அபஹரிக்கப் பட்ட வேதாந்தத்தில் மறைந்துள்ள தனமான
திரு மந்த்ரத்தை யுடைய திரு மங்கை ஆழ்வாரை எப்பொழுதும் திரு உள்ளத்தில் தரித்து இருக்கிற
மா முனிகள் எப்பொழுதும் அடியேன் மனத்தில் மகிழ்வை அருள வேணும் -விஹரிக்கக் கடவாராக –

—————–

யத் ஹஸ்தந் யஸ்த சஸ்த்ரம் ஸகலயதி கலிம் யஸ்ய சாரஸ் வதம் து
ஸ்ரோதஸ் ஸ்ரோத்ரு ந சேஷா நபி சபதி ஹதா சேஷ தாபான் விதத்தே
தஸ்மிந் நிர் தூத திஷ்யே ஜகததி பதநஸ்தேயநிஸ் துல்ய பூம் நி
ந்யஸ்தாத்மா ஸ்வஸ்தி விஸ்தாரயது மம ஸதா ஸுவ்மய ஜாமத்ரு யோகீ –57-

எந்த ஆழ்வாருடைய திருக்கையில் இருக்கும் ஆயுதமான வேல் கலியை தூளாக்குகிறதோ –
எவருடைய ஸ்ரீ ஸூக்திகளுடைய ப்ரவாஹமானது கேட்பவர்கள் அனைவருமுடைய எல்லா தாபங்களையும்
உடனேயே போக்குகிறதோ கலியை விரட்டியவரான லோக நாதன் என்னும் எம்பெருமானுடைய
தனத்தை அபஹரித்த ஒப்பற்ற மஹிமை பொருந்திய ஆழ்வார் இடத்தில் திரு உள்ளத்தில் வைத்தவரான
அழகிய மா முனிகள் நமக்கு எப்பொழுதும் மங்களங்களை அருள வேணும் –

———–

யத் வாணீ ரஸ பூம தாரித ஸூதா வேணீ முதா ஸம்யமி
ஷோணீ பால முகைஸ் ததந்ய விமுகை ராஸ் வாத்யதே சாதரம்
வேதாந்த ஸ் ப்ருஹணீய வைபவ வதீ கேதாந்த க்ருத்தேஹி நாம்
கோதாம் தாம் சரணம் ஸ்ரயன் வர வரோ மோதாய ந கல்பதாம் –58-

வேதங்களாலும் விரும்பப்படுவதாய் -வேதங்கள் அனைத்துக்கும் வித்தாய் –
சேதனர்களுடைய துக்கத்தைப் போக்குவதாய் -பாபங்களைப் போக்கும் பரமன் அடியைக் காட்ட வல்லதாய் –
ஸ்ரீ ஸூ க்திகளின் ரசத்தாலே அம்ருத ப்ரவாஹத்தையும் கீழ்ப் படுத்த வல்லதாய்
ஆனந்தத்தினால் திருப்பாவை ஜீயரான யதிராஜர் போல்வரால் இதைத் தவிர மற்ற விஷயங்களில் விருப்பம் அற்றவர்களாய்
ஆதாரத்தோடு அனுபவிக்கப் படுகிறதாய் விளங்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்த
அந்த ஆண்டாளை சரணமாகப் பற்றிய மா முனிகள் நமக்கு ஆனந்தத்தை அளிக்க வேணும் –

————

யத் ஸூக்திர் முக்தி ஹேதும் பிரகட யதிதராமாக மாந்தாதி ரூடம்
லஷ்மீ காந்த அநு வாதம் ஸ்புரத மித குண ஆச்சார்ய வர்யாபிதா நம்
கோதாம் தாமாத ரேண ப்ரணித ததி வர யோகி ந்யஸ்த சித்தா
சந்தஸ் ஸந்தோஷ வந்தோ விததபி பஜதாம் ஸ்வாந்த சந்தாப சாந்திம்–59-

எந்த ஆண்டாளுடைய ஸ்ரீ ஸூ க்தியானது
வேதாந்தத்தில் தேறிய அர்த்தமான மோக்ஷ உபாயமாக
எம்பெருமானை ஆஸ்ரியப்பதை விட பிரகாசிக்கும் குணங்களை உடைய ஆச்சார்யனை மோக்ஷ உபாயமாக
நன்றாக வெளிப்படுத்துகிறதோ
அந்த ஸ்ரீ கோதா நாச்சியாரை ஆதாரத்தோடு ஆஸ்ரயிக்கும் மா முனிகள் இடம் ஊன்றிய
மனத்தை உடைய ஆனந்தம் உடைய சாதுக்கள்
தங்களை ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மனத்தில் உள்ள கிலேசத்தை நீக்கி சாந்தி அடையச் செய்கிறார்கள் –
நல்ல என் தோழி -இத்யாதி சரம பர்வ நிஷ்டை -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
இது அன்றோ பரம ரஹஸ்யம் –

——————-

யந் மௌலிஸ் பர்சதீ வ்யத் பரிமள பரிதாம் மாலிகாம் மூர்த் நி பிப்ரத்
தன்யம் ஸ்வம் மன்யதே ஸ்ரீ நிதிர் அபி புருஷஸ் தாமமேயா நுபாவாம்
கோதாம் பக்த்யா யதிஷ்மாபதி மிவ ஸததம் லால யந்தம் மஹாந்தம்
சேவந்தே யோகி நம் யே ஹ்ருதய கலய தாநன்வஹம் தேஸி கேந்தரான் –60-

எந்த ஆண்டாளுடைய குழலின் ஸ்பர்சத்தால் பிரகாசிக்கிற நறு மணம் நிறைந்த மாலையைத்
திரு முடியில் தரித்து இருப்பதால் ஸ்ரீ யபதியான புருஷோத்தமனும் தன் பயனாகக் கருதுகிறானோ
அந்த அளவிட முடியாத ப்ரபாவத்தை உடைய ஆண்டாளை
யதிராஜர் போன்று எப்பொழுதும் கொண்டாடும்
மஹா யோகியான ஸ்ரீ மா முனிகளை எவர்கள் பக்தியோடு சேவிக்கிறார்களோ
அந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை எப்பொழுதும் மனமே அநுஸந்திப்பாயாக –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ காயத்ரி ஸ்லோகங்கள் –

October 19, 2020

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹ
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹ
தந்நோ கருட ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

ஓம் பூம் சக்யே ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பந்தாய சதீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் தன தான்யை வித்மஹே
ஸ்ரீ ம்ராதிப்ரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்திப்ரசோதயாத்

ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்–

October 19, 2020

ஆனந்த ரூபே நிஜ போத ரூபே
ப்ரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதி மூர்த்தி ரூபே |
ஸஸாங்க ரூபே ரமணீய ரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மநோ மே || 1 ||

அனந்த ஞானத்தின் சத்திய வடிவம்−
ஆனந்தம் தந்திடும் அத்புத வடிவம்;
ஆழியைக் கரம் கொண்ட அருமறை வடிவம்−
அடியேனென் உளம் கொண்ட, அரங்கனின் வடிவம்!

காவேரி தீரே கருணா விலோலே
மந்தார மூலே த்ருத சார கேலே |
தைத்யாந்த காலேऽகில லோக லீலே
ஸ்ரீரங்க லீலே ரவதாம் மநோ மே || 2 ||

காவிரி தீரத்தே, கருணையைப் பொழியும்−
கண்ணனின் லீலையில் விரியுமே விழியும்!
பாவியாம் அரக்கரின் ஆவியை முடித்து,
பாலித்த அரங்கனை, மனமிது விழையும்!

லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத் பத்மவாஸே ரவி பிம்பவாஸே |
க்ருபா நிவாஸே குண வ்ருந்த வாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோ மே. || 3 ||

அகிலத்தின் ரக்ஷகன், அலர் மகள் ரமணன்!
அருணனில் ஒளிர்பவன், அகத்திலும் ஒளிர்பவன்!
சகல குணத்தொடு கருணையில் அணைப்பவன்,
சீலத்தால் அரங்கன், சிறை பிடித்தனனே!

ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே |
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோ மே || 4 ||

அரனும் வணங்க, அகிலமும் வணங்க,
அரியொடு அமரரும் சேர்ந்தே வணங்க,
அருந்தவ முனிவர்கள் அவன் தாள் வணங்க,
அடியனும் அரங்கனின் அடி நயந்தேனே!

ப்ரஹ்மாதி ராஜே கருடாதி ராஜே வைகுண்ட்ட ராஜே ஸுர ராஜ ராஜே |
த்ரைலோக்ய ராஜேऽ அகில லோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே || 5 ||

அரனுக்கு ஈசன், அந்த கருடனுக்கீசன்;
அமரரிறை ஈசன், அத்திவத்துக்கும் ஈசன்!
அண்டசராசரமும், அம்மூன்றுலகும்,
ஆளும் அவ்வரங்கனில், அகம் இழந்தேனே!

அமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே
ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே |
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோ மே || 6 ||

அரி துயில் காணிணும், அபயமே அளிப்பான்;
அலை யுடை பாற்கடல், யோகு போல் அயர்வான்!
அடைக்கலம் வேண்டிட அருள் கொடுக்கும் அவன்,
அண்டத்தின் ஆதாரம், அவ்வரங்கனில் தொலைந்தேனே!

ஸசித்ர ஸாயீ புஜகேந்த்ர ஸாயீ
நந்தாங்க ஸாயீ கமலாங்க ஸாயீ |
க்ஷீராப்தி ஸாயீ வடபத்ர ஸாயீ
ஸ்ரீரங்க ஸாயீ ரமதாம் மநோ மே || 7 ||

அரவணைத் துயில்வான்; ஆலிலைத் துயில்வான்;
அத்தன், அலர்மகள், அவர்மடி விழைவான்;
அதிசய வடிவினில், பாற்கடல் படுப்பான்;−
அரங்க இறை அவன், அடியனை ஆண்டனே!

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி |
பாணௌ ரதாங்கம் சரணேம் புஜாங்கம்
யாநே விஹங்கம் ஸயனே புஜங்கம் || 8 ||

ஆகா, அரங்கம் இதற்கீடுண்டோ?
போகும் உயிரிங்கு, புவி திரும்புதலில்லை!
வாகாய் பிறவியும் வருமென்றாலும்
தோதாய் தேகம், தேவனுரு ஏற்குமே!

ரங்கநாதாஷ்டகம் புண்யம்
ப்ராதருத்தாய ய: படேத் |
ஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கஸாயுஜ்யமாப்நுயாத் || 9 ||

அரங்கனின் தோத்திரமிதை,
அனுதினமும் படிப்பவர்தாம்−
இச்சைகள் நிறைவேறி,
எம்பிரானை, திண்ணம் அடைவரே!!

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -41-50-

October 19, 2020

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

சார அசார விவேச நைக ரசிகம் ஸாரஸ்வதம் ஸாரஸம்
ஸுவ்ரா ஹார ஜரீ சஹோதர பரீ பாகேந லோகோத்தரம்
பக்த்யா சீலயதஸ் ஸூ ஸீல ஜன தோத்தம் ஸம் பதாப்ஜ த்வயம்
நித்யம் சிந்தய சித்த சாதர பரம் ஸுவ்மயோ பயந்துர் முநே –41-

சாரம் உள்ளது சாரம் அற்றது இவற்றை பிரித்து அறிவதில் ஊன்றி இருப்பதும்
தேவர்களின் ஆஹாரமான அம்ருத ப்ரவாஹத்தின் உடன் பிறந்தது போன்ற பக்குவமான தன்மையால்
உலகில் மிகச் சிறந்ததுமான பொய்கையாழ்வாருடைய ஸ்ரீ ஸூ க்தியான முதல் திருவந்தாதியை
பக்தியுடன் அநுஸந்திக்கும் மா முனிகளின் அடியார்களான சாத்விகர்களுக்கு
ஸீரோ பூஷணமாய் இல்ல இரண்டு திருவடித் தாமரைகளை
மனமே எப்பொழுதும் கௌரவத்தோடே சிந்தித்து இரு –

—————

பூதார்த்தஸ் வோக்தி ஸந்தர் சித நிகம ஸிகா கூட தத்வார்த்த ஜாதே
பூதாக்யே யோகி வர்ய பகவதி ஸததம் பக்தி தோ லக்ந சித்தம்
சேவஸ்ய ஸ்வாந்த காந்தம் நிரவதிக குணை ஷாந்தி காருண்ய முக்யை
காந்தம் ஜா மாதரம் தம் நிரவதிக குணை ஸ்வாத முக்தாந்ய சங்கம் –42-

என் மனமே -வேதாந்தினுடைய ரஹஸ்யமான தத்வார்த்தங்களை உள்ளது உள்ளபடியே இரண்டாம் திருவந்தாதியிலே
நன்றாக வெளிப்படுத்தி அருளிய பரம பூஜ்யரான ஸ்ரீ பூதத்தாழ்வார் இடத்திலே பொறுமை கருணை இவற்றை
முக்யமாக உள்ள எல்லையற்ற நற் குணங்களை அனுபவிப்பதால் எல்லை யற்ற கல்யாண குணங்களோடு கூடியவரும்
முக்தியைத் தவிர மற்ற விஷயங்களில் விரக்தியை உடையவருமான அந்த மா முனிகளை
எப்பொழுதும் பக்தியுடன் மனம் ஊன்றியவராக ஆஸ்ரயிப்பாயாக –

————–

மஹதாஹ் வய பாத பத்மயோ மஹதுத்தம் சிதயோர் மது வ்ரதம்
வர யோகி நமேவ சாதரம் மதிராஸீ தது மாமிகா அந் வஹம் –43-

பெரியோர்களால் மிகவும் மதிக்கப்பட்ட சென்னிக்கு அணியாக பூணப்பட்ட ஸ்ரீ பேயாழ்வாருடைய
திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற மா முனிகள் இடமே என்னுடைய மனம் ப்ரீதியுடன்
ஒவ் ஒரு நாளும் அமர்ந்து இருக்கட்டும் –

——————–

ஸ்ரீ விஷ்ணு சித்த பத பத்ம ரஜ அநு ஷங்காத் சித்தம் யதீயம ரஜஸ் கதயா ஸமிந்தே
அவ்யாஜ வத்சல தயா ப்ரதி தஸ் ஸதா அஸ்மான் அவ்யாத்ச ஸூ ந்தர வரோ முனி ஸார்வ பவ்ம–44-

விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாருடைய தாமரைத் திருவடிகளின் துகளின் சம்பந்தத்தால்
எவருடைய திரு உள்ளம் ரஜோ குண சம்பந்தம் அற்றதாக ப்ரகாசிக்கிறதோ வாத்சல்யத்தால் ப்ரஸித்தரான
மணவாள மா முனி ஸ்ரேஷ்டர் நிர்ஹேதுகமாக அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –
ரஜஸ் சம்பந்தத்தால் ரஜஸ் போயிற்றே என்ன ஆச்சர்யம் –

—————————

ஷீரம் சர்கர ஏவ யத் விஹிதயா ஸாபிக் யயா வியாக்யயா
ஸ்ரீ கோதா குரு பாரதீ ஸூ மஹிதா புஷ்ணாதி சா மாது ரீம்
தஸ்ய ஸ்ரீ பத பத்ம யுக்ம மநிஸம் காந்தோ பயந்துர் முநே
ஸ்மாரம் ஸ்மாரமஹம் விதூ தது ரிதோ யாயாமநா யா சத –45-

எந்த மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானத்தால் –
ஸ்ரீ ஆண்டாளுடைய திருத்தகப்பனார் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி
சக்கரை உடன் சேர்ந்த பால் போல் இனிக்கிறதோ அந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளை
எப்பொழுதும் நினைத்து நினைத்து ஸூ லபமாக பாபங்கள் அழிக்கப் பட்டவனாக அடியேன் ஆக வேண்டும்

————-

யத் க்ருதாந் மங்களா சாஸநாத ந் வஹம்
மங்களாநி ஸ்ரீ யோ வல்லபோ விந்ததி
தஸ்ய கோதா குரோர் மங்களா ஸாஸனம்
குர்வதே ஸ்யான் மஹா யோகிநே மங்களம் –46-

எந்த ஒரு ஸ்ரீ பெரியாழ்வாரால் மிதக்கியமாகச் செய்யப்பட மங்களா சாசனத்தால் ஸ்ரீ யபதி மங்களங்களை அடைகின்றானோ
ஸ்ரீ கோதையின் திருத்தகப்பனாரான ஸ்ரீ பெரியாழ்வாருக்கு மா முனிகளால் மங்களா சாசனம் செய்யப்படுவதால்
மா முனிகளுக்கு மங்களம் உண்டாகட்டும் -நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் உண்டாகட்டும் என்றவாறு –

—————–

ஷோணீ சார புரீ க்ருத அவதரணே ஸ்வீ யோக்தி சந்தர்சிதா
சேஷாம் நாய ஸி ரோ ரஹஸ்ய நிகரே ஸ்ரீ பக்தி சாரே முனவ்
பக்த்யா பூஷித மாநஸே வர முனவ் பக்திம் பராம் பிப்ரதோ
பக்த்யா நித்யம் உபாஸி ஷீய விலஸத் தத் பக்தித ந்யா நஹம் –47-

மஹீ சார க்ஷேத்ரம் எனப்படும் திரு மழிசையில் திருவவதரித்த பக்திசாரரான -திருமழிசைப் பிரான்
இடத்தில் பக்தி பூண்டவரும் -அவரது இரண்டு அருளிச் செயல்களான திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி
இரண்டிலும் ஓன்று விடாமல் அவரால் காட்டப் பட்ட வேதாந்த ரஹஸ்யங்கள் -வேதாந்த விழுப்பொருளை -அனைத்துமே
நிரம்பிய திரு உள்ளத்தை உடைய மா முனிகள் இடம் மேலான பக்தியை உடையவர்களாய் விளங்கும் அடியார்களான
பாக்ய சாலிகளை அடியேன் எப்பொழுதும் உபாஸிக்க -ஆஸ்ரயிக்கக் கடவேன் –
யான் முகமாய் அந்தாதி மேல் இட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து என்று
அவரே அருளிச் செய்துள்ளார் –

———–

யச் சித்தம் ரகு சேகர அங்கரி கமல த்வந்த ஏக பந்தீ க்ருதம்
தஸ்ய ஸ்ரீ குலசேகரஸ்ய பதயோ ஸூக்தவ் ச ஸக்தா சயம்
தத்வத் ரங்க புஜங்க புங்கவ கிரி ப்ரேம அநு வித்தாசயம்
சேதஸ் காந்த வரம் விபாவய ஸதா யோகீஸ்வரம் சாதரம்–48-

மனமே எவருடைய திரு உள்ளமானது சக்கரவர்த்தி திரு மகனுடைய இரண்டு திருவடித் தாமரைகளில்
கட்டப் பட்டு இருக்கிறதோ -அந்த ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளில் அவரது ஸ்ரீ ஸூ க்திகளான
ஸ்ரீ பெருமாள் திரு மொழியிலும் பக்தி நிறைந்த திரு உள்ளத்தை உடையவராய்
அதைப் போன்று ஸ்ரீ கோவிலிலும் ஸ்ரீ திருமலையிலும்
(புஜங்க புங்கவன் -சர்வ ஸ்ரேஷ்டரான ஆதி சேஷன் -கிரி -மலை -சேஷாசலம் -என்றவாறு )
ப்ரேமம் நிறைந்த திரு உள்ளத்தை உடையவருமான ஸ்ரீ மா முனிகளை மனமே நினைத்து இருப்பாயாக –

———————–

ஸ்ரீ ரங்காதிப திவ்ய மங்கள வபுஸ் ஸுவ்ந்தர்ய சார அம்ருத
ஸ்ரோத மக்ந முனீந்திர வாஹந குணோதந் வந்நி மக்நாசயம்
சேதஸ் காந்த வரம் விசிந்த்ய முனிம் யச் சிந்தனம் சந்ததம்
குர்வந்தோ ஹி விதந்தி தைவம பரம் சந்தோ ந யஸ்மாத் பரம் –49-

ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தினுடைய ஸுவ்ந்தர்ய சாராம்ருத பிரவாகத்தில் ஆழ்ந்தவரும்
முனி வாஹனர் என்று பெயர் பெற்ற ஸ்ரீ திருப்பாணாழ்வார் உடைய குணக்கடலில் மூழ்கிய நெஞ்சை உடையவருமான
ஸ்ரீ மா முனிகளை நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்து இருப்பாயாக -இவ்வாறு சதா சிந்திக்கும் அடியார்கள் –
என் அமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றே இருப்பார்களே –

———————-

யத் பாத ரேணு வஹ நேந ஸூ கந்த மௌலிஸ்தம்
ப்ரஹ்ம பந்த மதி கச்சதி முக்தி பந்த
தத் விஷ்ணு பக்த பத ரேணு முனீந்திர பக்தம்
காந்தோ பயந்த்ருமுனி மன் வஹம் ஆஸ்ரயேயம் –50-

எந்த ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருடைய திருவடி தூளியைத் தரித்து நறு மணம் பெற்ற முடியைப் பெற்றவர்கள்
சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அத்யந்த பகவத் பாரதந்தர்யத்தை அடைகிறார்களோ
அந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம் பக்தியை உடைய ஸ்ரீ மா முனிகளை ஒவ் ஒரு நாளும் ஆஸ்ரயிப்பேனாக –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -31-40-

October 18, 2020

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

மஹீ பர குத் ருக் பல ஷபண தஷிணவ் ஜோப்ருத
யதங்கரி சமுபாஸ்ரயா பர ஸூ ராம சாதரம்ய கா
ஜெயந்த் யகில பாபபீ மஹித விஷ்ணு தர்மாந் விதா
ச நோ வர வர முனிர் விதரது ஸ்ரீ யம் சந்ததம் –31-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்தவர்கள்
பூமிக்கு பாரமான குத்ருஷ்ட்டி பலத்தை அழிப்பதற்கு சாமர்த்தியம் உடைய தேஜஸ்ஸை உடையராய்
எல்லா பாபங்களைச் செய்வதில் பயந்தவர்களாய்
மிகவும் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியவர்களாய்

பூமிக்கு பாரமான துஷ்ட ஷத்ரியர்களை அழிப்பதில் வல்லமை யுடைய தேஜஸ்ஸை உடையரான
ஸ்ரீ பரசுராமரோடே சமமான தன்மையை உடையவர்களாய் வெற்றி பெறுகிறார்களோ

அந்த ஸ்ரீ மா முனிகள் எப்பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை அளித்து அருளட்டும் –

இதில் பாட பேதத்தால் -தாம் வென்ற பூமி முழுவதும் காஸ்யபருக்குக் கொடுத்து விட்டு
மஹேந்திர மலையில் -அர்ணவ நிவாஸம் கொண்டால் போல்
அடியவர்களும் எம்பெருமானுடைய குணக்கடலில் நித்ய வாஸம் பண்ணி
பகவத் குண அனுபவமே நியதமாக பண்ணுவார்கள் –

——————-

ஸஹஜா நக லஷ்மண அந் விதா வஸூ மத்யுத் பவயா ஸ்ரீய உஜ்ஜ்வலா
ரகு வர்ய சமா யதாஸ்ரிதா வர யோகீ ச ஸூபம் தநோ து ந –32-

எந்த மா முனியை ஆஸ்ரயித்தவர்கள்
ஸ்வ பாவிக -உடன் தோன்றிய குற்றம் அற்ற ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணங்களோடே கூடினவர்களாயும்
லஷ்மணா -அந் விதா -இரண்டு பதம் இங்கு -லஷ்மண ந் வித -ராகவன் பக்ஷத்தில் –
பூமியில் உத்பத்தியான செல்வத்தாலும் -ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ யாலும் விளங்குகிறார்கள் –

உடன் பிறந்த குற்றம் அற்ற-பாப ரஹிதரான – இளைய பெருமாளுடன் கூடினவரும்
யாக பூமியில் தோன்றிய ஸ்ரீ சீதாப் பிராட்டியால் பிரகாசிக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
சமானர்களாய் உள்ளனரோ
தயா ஸாகரமாயும் -சரணாகத வத்சலராயும் -ஸதாச்சார்ய பராயணர்களாயும் –
பெரியோர்களுக்கு விதேயர்களாயும் -இப்படி சிஷ்ய சம்பத்தை உடைய –
அந்த மா முனிகள் நம்முடைய மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

————-

அதிகத பலபத்ராபி க்யயா யத் பாதாப்ஜ ப்ரவண ஜன சமஷ்டயா வாஸூ தேவாக் ரஜஸ்ய
அநி தர ஜன லப்யா லப்யதே சாம்ய லஷ்மீ ச ஜெயது வர யோகீ நிஸ் துலா வேல பூமா –33–

எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய கோஷ்டியால்
பலம் மங்களம் கீர்த்தி இவை அடையப் படுகின்றனவோ
அதி கத -பல -பத்ர -அபி க்யயா -பஹு வ்ரீஹி ஸமாசார்த்தம் –
எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய குழாத் தாலே
ஸ்ரீ கண்ணபிரானுக்கு மூத்தவராய் பல பத்ரன் -நம்பி மூத்த பிரான் -உடன்
மற்றவர்களால் அடைய முடியாத சமானமாக ஐஸ்வர்யம் அடையப் படுகிறதோ
ஒப்பற்ற பெருமையை உடைய அந்த மா முனிகள் -சர்வ ஸ்ரேஷ்டராக -வெல்லட்டும்

———————

ஸ தர்ம ஜாத அர்ஜுன சித்த ஹர்ஷ ப்ரத்வம்ஸி பக்ஷ ஷபண ப்ரவீணா
யதாஸ்ரயா கிருஷ்ண துலாம் பஜந்தே பாயாத்ஸ ந காந்த வரோ முனீந்த்ர–34-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கிறவர்கள்
தர்மத்தோடே கூடின வெண்மையான தூய மனஸ்ஸின் சந்தோஷத்தை அழிக்கிற பக்ஷத்தை
நாஸம் செய்வதில் திறமையை உடையவர்களாய்
அர்ஜுனனுடைய சந்தோஷத்துக்கு அழிவை விளைவிக்கிற துர்யோதனன் முதலிய
துஷ்ட பக்ஷத்தை நாஸம் செய்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸமமான தன்மையை அடைகிறார்களோ
அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்
கண்ணன் பக்ஷத்தில் தர்ம ஜாதர் -தர்ம புத்திரர்
அடியார்கள் பக்ஷத்தில் தர்ம ஸமூஹம் –

————————

கலி தோஷம் அசேஷத ஷிதவ் ஷபயன் கல்கி துலா விஹார பூ
யது பாஸ்ரித சஞ்ஜனஸ் ச ந சததம் ஸுவ்மய வரோ அபி ரக்ஷது –35-

எந்த மா முலைகளை ஆஸ்ரயித்த நல்லோர் பூமியில் கலியின் தோஷத்தை ஓன்று விடாமல்
நிஸ் சேஷமாக நாசம் செய்து -க்ருத யுக தர்மத்தை ப்ரவர்த்திப்பிக்கறவர்களாய் -கல்கி அவதாரத்தோடு
சமானமாக விளங்குகிறார்களோ -விஹார பூ -விஹரிக்கும் இடமாய் விளங்குகின்றார்களோ –
இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்தை உடைய
அந்த மா முனிகள் எப்போதும் ரக்ஷித்து அருள வேணும்

—————

தசாவதார ஸாம்யத்துக்கு அடுத்து கோயில் திருமலை பெருமாள் கோயில் எம்பெருமான்களோடே
சாம்யம் இது முதல் மூன்று ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

அஹீந போக ப்ரவணஸ் சமிந்தே ஸ்ரீ ரெங்க தாமா கில ரெங்க பர்த்து
சாதர்ம்யமா ஸாத்ய யதங்க்ரி பக்த பாயாத் ச ந ஸுவ்மய வரோ முனீந்த்ர–36-

எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி உடையவர்கள்
ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் செய்பவர்களாய்
ஆதி சேஷன் ஆகிற படுக்கையை அனுபவிக்கிற ஸ்ரீ ரெங்க நாதனுக்கு சமமான பண்பை அடைந்து பிரகாசிக்கிறார்களோ
குறைவற்ற பகவத் அனுபவ போகத்தில் ஆழ்ந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும்
அஹீந போகம் -அஹீ -இந-போகம் -அரவரசின் உடலும் என்றும் -அஹீந போகம்-குறைவற்ற போகமும் –

—————

வ்ருஷாசல ஸ்திதம் பஜன் வஹந்ந நாரதம் ஸ்ரீயம்
ஸூ துர் லபாக மாகி லாரத் ததாந கேலி கீர்த்தி மாந்
விபாதி வேங்கடேச வத் யதங்க்ரி சேவிநாம் கண
ச ந ஸ்தநோது மங்களம் வரோ பயந்த்ரு தேஸிக–37-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்த குழாம்
தர்மத்தில் அசையாது ஊன்றி இருக்கும் நிலையை அடைந்தாய் எப்பொழுதும் கைங்கர்ய ஸ்ரீயை உடைத்தாய்
கிடைத்தற்கு அரிய சாஸ்திரங்களின் -வேதாதிகள் -அருளிச் செயல்கள் -ரஹஸ்யார்த்தங்கள் –
எல்லா அர்த்தங்களையும் கொடுப்பதில் இன்பம் அடையும் புகழை உடையவர்களாய்
வ்ருஷா சலத்தில் நிலை நின்று இருக்கும் தன்மையை அடைந்து
திருவேங்கட முடையானைப் போல் பிரகாசிக்கின்றதோ
அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை விருத்தி செய்து அருளட்டும் –
வ்ருஷ -அசலம் -ஸ்திதம் -எருது மலை வாஸம் -என்றும்
தர்மம் பேராத நிஷ்டை -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடன் விளங்கா நிற்பவர்கள்

——————–

பக்த அகிலார்த் தாதிக மைக ஹேதும் ஸ்ரீ புண்ய கோட்ய ஆயதனம் யதீயம்
விதந்தி ஸந்தோ வரதே ந துல்யம் வரோ முனிர் நஸ் ச தநோது பத்ரம் –38-

தம்மிடம் பக்தி கொண்டவர்கள் எல்லா அர்த்தங்களையும் அடைவதற்கு ஒரே காரணமும்
கைங்கர்ய ஸ்ரீ யும் -கோடிக்கணக்கான -எண்ணற்ற புண்ணியங்களுக்கு இருப்பிடமும் எவருடையதோ
மா முனிகளை ஆஸ்ரயித்த அந்த நல்லோர்கள்
எண்ணற்ற புண்ணியங்கள் எவருடையதோ அந்த வரதராஜப் பெருமாளோடே சாம்யத்தை அடைகிறார்கள் –
இப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அந்த மா முனிகள் நமக்கு –
கல்யாண பரம்பரையை -மங்களங்களைப் பெருக்கி அருளட்டும் –

—————————

காந்தம் வரம் ப்ராப்ய ஸதீ மதீ யா மதி
பரஸ்மின் புருஷே விரக்தா
தத் ஸத் குணாஸ் வாதரஸை கலோலா
பதி வ்ரதோ தா ஹரணத்வ மேது –39-

அழகிய மணவாள மா முனிகளையே அடைந்து அடியேனுடைய புத்தியானது
பர புருஷன் விஷயத்திலே விருப்பம் அற்று இருப்பவளாய்
தனது பர்த்தாவின் நல்ல குணங்களையே அனுபவிப்பதிலேயே ஸந்தோஷம் அடைபவளாய் –
ஸதீ -என்று போற்றப்படுபவளாய் -இருக்கும் பதி வ்ரதைக்கு
எடுத்துக் காட்டான தன்மையை அடையட்டும் –

————————–

இது முதல் ஆழ்வார்கள் இடத்திலும் அருளிச் செயல்கள் இடத்திலும்
மா முனிகளின் ஈடுபாட்டின் அதிசயத்தை அருளிச் செய்கிறார்

ஸரஸி க்ருத விஹாரம் த்யான மாத்ரேண பும்ஸாம்
சமித ஸகல தாபே ஹம்ஸ ஸம் ஸேவ்யமாநே
பஜதி முத ம வேலாம் ஸந்ததம் யஸ்ய சேதஸ்
ச பவது வர யோகீ மானஸே மாமகீ நே –40-

த்யானம் செய்வதாலேயே சேதனர்களுடைய எல்லா தாபங்களைப் போக்குபவராயும்
மற்ற பொய்கைகள் ஸ்நானம் செய்ய சில தாபங்களைப் போக்கடிக்கும் –
பொய்கையாழ்வாரை த்யானம் செய்யும் மாத்திரத்திலே சகல தாபங்களும் தானே போகுமே –
பரம ஹம்ஸர் களாலே ஸேவிக்கப் படுபவரான பொய்கையாழ்வாருடைய
ஸ்ரீ ஸூக்தியான முதல் திருவந்தாதியை அனுபவிக்கிற எவருடைய திரு உள்ளம்
எல்லை அற்ற இன்பத்தை அடைகிறதோ
அந்த மா முனிகள் அடியேனுடைய மனஸ்ஸிலே நித்ய வாஸம் செய்து அருள வேணும் –
அடியேனுடைய மனஸ்ஸாகிற ஸரோவரத்தில் மா முனிகள் ஆகிற பரம ஹம்சம் விஹகரிக்கட்டும் -என்றபடி

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -21-30-

October 18, 2020

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

க்ருத அவகாஹா ஜனதா யதீய சாரஸ் வதஸ் ரோதஸி துங்க பத்ரா
ஸம் ஸேவ்ய மாநா கவி பிஸ் ஸமிந்தே பாயாத் ஸ ந காந்த வரோ முனீந்திர –21-

எவருடைய வாக் வர்ஷா ப்ரவாஹத்தாலே தீர்த்தமாடின சிஷ்ட ஜன சமுதாயம் உயர்ந்த நலமுடையதாக
வித்வத் ஜனங்களால் சேவிக்கப்பட்டு விளங்குகிறதோ
அந்த அழகிய மணவாள மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

துங்க பத்ரை -உயர்ந்த நன்மை -சஞ்சன ஸமூஹமும் -துங்க பத்ர நதிக்கு சமானம் –
நதியின் பக்ஷத்தில் கவி -நீர்ப்பறவை ஜலசர பஷிகளால் ஸேவிக்கப் படுகிறது என்று பொருளாகக் கடவது –

————-

யத் வாணீம் மதுரா மவாப்ய ஸூதி யஸ் சாகேத தாமாத் யஜஸ்
மாயா சங்க விதூ ரகாஸ் ச ஸூத ராம் ஸந்த்யக்த காஸ்யாஸ் ரயா
காஞ்ச்யாதிஷ் வபி நிஸ் ஸ்ப்ருஹாஸ் ச ஸததம் ராமானுஜ ஏக காந்தி ந
ராஜந்தே ச தநோது ஸூ ந்தர வரோ யோகீஸ் வரோ நஸ் ஸூ பம் –22-

நல்ல ஞானம் உடையவர்கள் -திரு அயோத்யா -ஸ்ரீ மாயாபுரி நகர் -ஸ்ரீ காஸீ -ஸ்ரீ காஞ்சீ -நகரங்களை எல்லாம் விட்டு
ஸ்ரீ வடமதுரா நகரை அடைந்து எப்பொழுதும் நம்பி மூத்த பிரானுடைய அனுஜனான ஸ்ரீ கிருஷ்ணன் இடத்தில் மட்டுமே
ஈடுபாடு கொண்டு விளங்குகிறார்களோ –
அப்படியே நல்ல ஞானம் உடையவர்கள்
எவருடைய இனிமையான வாக்கிலேயே ஈடுபட்டவர்களாய் விளங்குகிறார்களோ அப்படிப்பட்ட
அழகிய மணவாளர் ஆகிய யோகீஸ்வரர் நமக்கு மங்கலத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –

நல்ல ஞானம் உடையவர்கள் எவருடைய இனிமையான ஸ்ரீ ஸூ க்திகளில் ஈடுபட்டு
சிறந்த மாட மாளிகைகளில் ஆசை அற்றவர்களாய் -மாயையின் சம்பந்தத்தை விட்டு விலகியவர்களாய் –
காசியில் உள்ள தேவதாந்த்ரங்களை விட்டவர்களாய்
பொன் அரை நாண் முதலான ஆபரணங்களில் ஆசை அற்றவர்களாய்
எம்பெருமானாரையே ப்ராப்ய ப்ராபகமாய் கொண்டவர்களாய் பிரகாசிக்கின்றார்களோ
அப்படிப்பட்ட அழகிய மணவாள யோகீஸ்வரர் நமக்கு மங்களத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாராவதீ சேதி சப்தைதா மோக்ஷ தாயிகா –
மன்னு வட மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத ஏற்றம் உண்டே –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா
யஸ்யாம் ஜாதோ ஜகந்நாத ஸாஷாத் விஷ்ணு ஸநாதன –
கோகுலம் கோவர்த்தனம் பிருந்தாவனம் இவற்றுக்கும் உப லக்ஷணம் –

————-

யத் வாணீ மப ராஜிதாம் மது ஜிது ல்லா ஸாஸ் பதம் ஸந்ததம்
சேஷ அஹீந பல த்விஜேந்த்ர மஹிதாம் முக்தா வலீ பந்து ராம்
ஸூ த்தஸ் ஸம் ப்ரதிபத்ய ஹ்ருஷ்யதி ஜநோ நோபைதி பாபோத்தர
தஸ்மாத் காந்த வரான் முநேர் அநுப மாத் தைவம் பரம் நாஸ்ரயே –23-

முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ வைகுண்ட நகரத்தைப் போன்று ஒருவராலும் ஜயிக்கப் படாதவையோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகள் இடைவிடாது எம்பெருமானுடைய முக மலர்த்திக்குக் காரணமாக இருப்பதையோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகளை பாபிஷ்டன் அடைய மாட்டானோ
மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகளை அடைந்து ஸ்ரீ ப்ராஹ்மண உத்தமர்கள் ஆனந்தம் அடைகிறார்களோ
அப்படிப்பட்ட ஒப்பற்ற பெருமை வாய்ந்த அழகிய மணவாள மா முனிகளைக் காட்டிலும்
மேலான தெய்வத்தை ஏற்க மாட்டேன்

ஒருவராலும் ஜயிக்கப் படாததும் -எம்பெருமானுக்கு முக உல்லாசதத்தை அளிப்பதாயும் -முக்தர்களின் வரிசையால்
மாலை போன்று தோற்றுவதுமான பெருமை வாய்ந்த பரம பதத்தில்
ஆதி சேஷன் -குறைவற்ற சேனையை உடைய விஷ்வக் சேனர் -த்விஜேந்த்ரன் -பெரிய திருவடி யானவர்கள்
எப்பொழுதும் ஆனந்தம் அடைகிறார்கள் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளும் அபராஜிதை என்றவாறு –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் பங்கம் அடையாதவை -எம்பெருமான் முக உல்லாசத்துக்கு உரித்தானவை –

————

யத் வாணீ விரஜா வகாஹந கலா தவ்தாத்மநா மாத்ம நாம்
ப்ரஜ்ஞா தர்ஜித நிர் ஜரேஸ் வர குரு பிரவ்டிம் சமாடவ் கதே
பக்தி ஸ்ரீ சத தீ யதே ஸிக பதா தாரா ஜரீஜ் ரும்ப்யதே
முக்திர்யாதி கரா பசேய பலதாம் ஸோ அவ்யாத் வரோ அஸ்மான் முனிஸ் –24-

எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள்
பரி ஸூத்தமான மனஸ்ஸை உடையவர்களாக ஆகிறார்களோ
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள்
உடைய விசேஷ ஞானமானது தோற்கடிக்கப் பட்ட தேவ குருவான ப்ரஹஸ்பதியின்
ஆழ்ந்த ஞானத்தை அளவுபட்டதாகச் செய்கிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால்
ஸ்ரீ யபதியான எம்பெருமான் பாகவதர்கள் ஆச்சார்யர்களுடைய திருவடிகளை ஆஸ்ரயமாக உடைய
சேதனர்களுடைய பக்தியானது விருத்தி அடைகிறதோ –
மேலும்
எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால்
கைக்கு எட்டிய பலமாகிற மோக்ஷத்தை சேதனர்கள் அடைகிறார்களோ
அப்படிப்பட்ட வர வர முனியானவர் நம்மை ரக்ஷித்து அருள வேணும்

எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுடைய பிரஜ்ஜை -அறிவு புத்தி -யானது எப்பேர் பட்ட பிரௌடியை -சாமர்த்தியத்தை அடைகிறதோ
எந்த புத்தியின் பிரௌடியானது -அறிவின் சிறப்பானது -தேவ குருவான ப்ருஹஸ்பதியின் புத்தி பிரௌடியையும் மிரட்டுகிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுக்கு ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் இடத்திலும்
ததீயாரான பாகவதர்கள் இடத்திலும் ஆச்சார்யர்கள் இடத்திலும் உண்டான பக்தி ப்ராவண்யமானது
மேன்மேலும் விருத்தி அடைகிறதோ
மேலும்
எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
அவர்களுக்கு மோக்ஷ பலமும் கிடைக்கிறதோ அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

————

யஸ் சிஷ்யாஸ் திஷ்யடிம்ப ப்ரதிமகு மதி துஸ் தர்கஸம்பர் கஜாத
த்ரயந்த ஸ்வாப ரூபா ப்ரதிம நிரவதி த்வாந்த கல்பாந்த ஸூர்யா
ஸ்ரீ மத் ராமாநுஜார்யோதி தமத மமதா மூர்தய கீர்த்தி மந்த
ஜாக்ரத் யஸ்மை நமஸ் ஸ்தாத் வர வர முநயே அநந்த நிஸ் துல்ய பூம்நே –25-

எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள்
கலி புருஷனின் புத்ர ஸமானரான குத்ருஷ்டிகளுடைய குதர்க்க வாதங்களின் சேர்க்கையால் உண்டான
வேதாந்த உறக்கம் போன்ற எல்லை அற்ற அந்தகாரத்துக்கு பிரளய கால ஸூர்யன் போன்று இருப்பவர்கள்
நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
அபிமானம் உடையவர்களாக புகழப் படுகிறார்கள்
நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
விழிப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்
எல்லை ஏற்றதும் ஒப்பு இல்லாததுமான சிஷ்ய சம்பத்தை யுடைய நம்முடைய
அந்த மணவாள மா முனிகளுக்கு ப்ரணாமங்கள் இருக்கட்டும்

எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள்
கலி புருஷ புத்ர சமானர்களான-கலி கோலா ஹலமே வடிவு எடுத்த – குத்ருஷ்டிகளின்
ஸ்ருதி விருத்தமான -குதர்க்க -விதண்டா வாதம் -சம்பந்தத்தால் உண்டான வேதாந்த மூர்ச்சை யாகிற
ஒப்பற்ற காட அந்தகாரத்தை -அடர்ந்த இருளைப் -போக்கடிப்பதில் பிரளய கால ஸூ ர்யனைப் போல் விளங்குகின்றனரோ
திஷ்யன் -கலி புருஷன் -டிம்ப -சிஸூ
ஸ்ரீ ராமானுஜர் வளர்த்து அருளிய விசிஷ்டாத்வைத தர்சனம் -இராமானுஜ தர்சனம் -நிலை நாட்டுவதில்
ஸதா ஜாகரூகராய்-எப்போதும் விழிப்புடன் -இருப்பவர்களாய் இருக்கிறார்களோ
ஒப்பு உயர்வு அற்ற வைபவ சாலியான அந்த மா முனிகளுடைய திருவடிகளுக்கு
அடியேன் உடைய பிராணாமம் என்றும் உரித்தாகுக –

——————-

அநி மிஷத நுர் ப்ரஹ்மா நிர்வேத பாவ நிபந்தநம்
பஜதி கில யஸ் ஸ்ரீ மன் மத்ஸ்ய அவதார துலாம் ஹரே
ச ஜயதி ஸதாம் சங்கஸ் ஸுவ்ம்யோ பயந்த்ரு சமாஸ்ரய
தமிஹ ஸததம் சேதஸ் சேவஸ்வ ஸத் குண சேவதிம் –26-

இமையாத கண்களை யுடைய சரீரகரான நான் முகன் மநோ வேதனை அடைந்ததனால்
ஸ்ரீ மத்ஸ்ய அவதாரத்தோடே சாம்யத்தை அடைகிறார் அல்லவா
எந்த மணவாள மா முனிகளை ஆஸ்ரயமாக உடைய சாதுக்களின் குழாம் மத்ஸ்ய அவதாரத்தோடு
சாம்யம் அடைகின்றதோ ஸத் குணங்களுக்கு நிதியான அந்த மா முனிகளை மனமே இங்கு
எப்பொழுதும் சேவித்துக் கொண்டே இருப்பாயாக –

இது முதல் பத்து ஸ்லோகங்களால் பக்த வர்க்கங்களின் தசாவதார சாம்யம்
மத்ஸ்ய மூர்த்தி -அநிமிஷ தநு-இமையாத கண்ணை உடையதாய் இருக்கும் –
மத்சயங்களுக்கு கண் திறந்தே இருக்கும் –
அடியார்கள் குழாங்களும் -அநிமிஷ தநுவாய் -எப்போதும் விழிப்புடன் இருந்து
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து வேதத்தின் துன்பத்தைப் போக்கடிப்பர்

————–

வேத ராஸி மநகம் ஸரோஜ ஜம் பிராபயந் நதி விஷண்ண மாஸ்ரிதம்
மத்ஸ்ய தேவ சத்ருஸோ விபாதி ய தம் பஜேய வர யோகி சேகரம் –26-இது ஸ்லோக பாட பேதம்

இதில் மா முனிகளுக்கே மத்ஸ்ய சாம்யம்
தன்னை ஆஸ்ரயித்த மிகுந்த துக்கத்தை உடைய தாமரையில் தோன்றிய ப்ரஹ்மாவுக்கு
குற்றம் அற்ற வேதங்களை அடைவித்து –
அதாவது வேதத்தை இழந்த நாபீ கமல உத்பூதரான ப்ரஹ்மாவுக்கு கொடுத்து அருளிய மத்ஸ்ய மூர்த்தி
தம்மை ஆஸ்ரயித்த சேதனனுக்கு தாமரையில் தோன்றிய பொய்கை ஆழ்வார் மூலமாகக் குற்றம் அற்ற
திராவிட வேதத்தை அடைவித்து எந்த மா முனிகள் பிரகாசிக்கிறாரோ
அந்த சிறந்த யோகிகளுக்குத் தலைவரானவரை பஜிப்பாயாக —

—————-

பிராப யந்நம் ருத காங் ஷிண அம்ருதம்
மந்த ராக பரணே அபி சாதர
திவ்ய கூர்ம சத்ருஸோ யதாஸ்ரித
ஸத் குணோ அவது ச மாம் வரோ முனி –27-

மந்த்ர மலையைத் தாங்குவதில் ஆதாரத்தை உடையவனாய்
அம்ருதத்தை விரும்பிய தேவர்களுக்கு அம்ருதத்தை அடைவித்து
அவர்கள் இடம் ஆர்வத்தை உடையவன் ஸ்ரீ கூர்மாவதார எம்பெருமான்

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் -ஸ்ரீ கூர்மாவதார சாம்யத்தை உடையவர்களாய் மோக்ஷத்தையே விரும்புபவர்கள்
சிறிதே வைராக்யம் உடையவர்களே ஆனாலும் அவர்களை ரக்ஷிப்பதில் ஆர்வம் உடையவர்களாய்
அவர்களுக்கும் மோக்ஷத்தை அடைவிக்கும்
கல்யாண குணங்களை உடைய அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

மந்த ராக பரணே அபி சாதர-மந்தராகிறார் -குறைந்த விருப்பம் உடையவர்கள் –
அல்ப அநு கூல்யம் உடையவர்கள்
மந்த்ர அக என்று மலை பக்ஷம்
மந்த ராக -இவர்கள் பக்ஷம்
பாட பேதமும் உண்டு -இதில் மா முனிகளையே ஸ்ரீ கூர்மாவதார ஸத்ருசம் என்று சொல்லும் –

———————–

ஸுவ்கர்ய வாந் யத் பத பக்தி சாலீ
பவாப்தி மக்ந உத்தரண ப்ரவீண
ஆடீ கதே ஹ்யாத் யகிடே ரபி க்யாம்
முனிஸ் ச ந பாது வரோ பயந்தா –28-

எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி மிகுந்த அடியவன் முமுஷு வான ஒரு சேதனனுக்கு
அவன் தன்னை ஸூ லபமாக ஆஸ்ரயிக்கும் படி இருப்பவன் ஆவான்
ஆஸ்ரித ரக்ஷணத்தை சுலபமாகச் செய்யக் கூடியவன் என்றபடி
இத்தால் அவன் சம்சார ஆர்ணவத்தில் மூழ்கி இருப்பவர்களை மேலே உயர்த்தி விடுவதில் வல்லவனான
ஸ்ரீ ஆதி வராஹ மூர்த்தியின் பெயரை -சாம்யத்தை அடைகிறான்
இப்படிப்பட்ட சிஷ்ய ஸம்ருத்தியை உடைய மா முனிகள் நம்மை ரசித்து அருளட்டும் –
ஸுகர்யவான் –ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் பிரளய ஆர்னவ உத்தாரணம்
ஆத்ய கிடி -ஸ்ரீ ஆதி வராஹ நாயனார்

————–

ஹிரண்ய ஜித் யத் பத பக்த சாலீ
ந்ருஸிம்ஹ பாவம் ப்ரகடீ கருதி
ச மே விதத்தா மது லாநு பாவோ
வரோ பயந்தா குசலான் யஜஸ்வரம் –29-

மாமுனிகளின் திருவடிகளில் பக்தி உடையவர்-ஹிரண்ய ஜித் -பொன்னில் ஆசையை வென்றவரான –
ஹிரண்யனை வென்றதால் ஸ்ரீ நரஸிம்ஹருடைய தன்மையை வெளிப்படுத்து கிறார்களோ –
ஒப்பற்ற பிரபாவம் உடைய புருஷ ஸிம்ஹம் என்னும் படியான அந்த மணவாள
மா முனிகள் நித்யமான நன்மைகளை -குசலங்களை -அளிக்க வேணும்

————————-

பஜதே கில வாமன உப மாம் ஸூ மநோ வைரிபலிஸ் மயம் ஹரந்
ஸூப விக்ரம பூத் யதாஸ்ரித தமுபாஸ வரயோகி சேகரம் –30-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர் -சாத்விகர்களுடைய பலமுடைய விரோதிகளின்-பலிஷ்டர்களின் –
கர்வத்தை அழித்து ஸ்ரீ வாமன அவதாரத்துக்கு சமமான தன்மையை அடைகிறார்களோ
ஸோபனமாகத் எங்கும் சஞ்சரிப்பவராக -தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
ஸூபமான த்ரிவிக்ரம அவதாரத்தை உடையவராக ஆனாரோ
அந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகளை உபாஸிக்கிறேன் -பக்தியுடன் சேவிக்கிறேன் –

—————————

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -11-20-

October 16, 2020

ஸ்ரீ மணவாள மா முனிகள் திருவடிகளில் ஆஸ்ரயித்து
அவரால் ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபி ஷிக்தராய்
அவருக்கு ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த பிரவர்த்தந கைங்கர்யங்களில் உசாத் துணையாய்
அவருடைய கருணா கடாக்ஷ விசேஷ லஷ்ய பூந்தராய்
யதீந்த்ர ப்ரவணரான அவர் திறத்தில் ப்ராவண்ய அதிசயத்தை உடையராய்
மா முனிகளுடைய ஸ்வரூப ரூப குண விபாவங்களையும் ஸ்ரீ ஸூக்தாதிகளையும் அனுபவித்து
அவ்வநுப ஜெனித ப்ரீதிக்கு போக்கு வீடாக சத முகமாக அவரது வைபவங்களை
இந்த ஸ்தோத்ர முகமாக வெளியிட்டு அருளுகிறார் –
ஆச்சார்ய வைபவ கீர்த்தனம் ஸச் சிஷ்ய காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேது
மா முனிவர்கள் அடியோங்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக உல்லாசத்துக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஹேது ஆகும்-

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

———

கலா நிதி ஸிரோ மணிர் ஜித மநோ பவோ யத் வசஸ்
ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர –11-

கலா நிதி -கலைகளை நிதியாக உடைய சந்திரனை
ஸிரோ மணிர் -தலைக்கு அணியாக உடையவரும்
ஜித மநோ பவோ -மன்மதனை ஜெயித்தவரும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -அமுதம் உண்ணும் தேவர்கள் நதியாகிய
கங்கையை எப்பொழுதும் தரித்து இருக்குமவரான
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக -சிவபெருமானாக இருந்தாலும் –
மூன்று கண்கள் இருப்பதால் -எல்லாரையும் சமமாகப் பார்ப்பதில் இருந்து விலகி உள்ளார் –

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சிஷ்யனோ எனில்
கலா நிதி ஸிரோ மணிர் -கலைகளை நிதியாக உடைய வித்வான்களுள் தலை சிறந்த வனாகவும்
ஜித மநோ பவோ -காமத்தை வென்றவனாகவும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -மா முனிகளுடைய அமுதம் போன்ற ப்ரவாஹதமான
ஸ்ரீ ஸூக்திகளை -தலையில் -புத்தியில் -எப்பொழுதும் தரித்து இருக்கிறானோ
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக –இப்படி அவன் சிவனாக இருந்தும்-
பவித்ரனாக மங்கள ஸ்வ பாவனாக இருந்தாலும் – பக்ஷபாதம் உள்ள பார்வையில் இருந்து விலகி இருக்கிறான்
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர –முனிவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மணவாள மா முனிகள்
மங்களமான வற்றைக் கொடுத்து அருள வேணும் –
மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் காம க்ரோதாதிகள் இல்லாமல் பரி ஸூத்தர்களாய் -பக்ஷபாதம் அற்று விளங்குவதை
ஸ்லேஷ அலங்காரமும் விரோத ஆபாஸ அலங்காரமும் கொண்டு அருளுவதை இந்த ஸ்லோகத்தில் காணலாம் –
இதே போல் மேல் ஸ்லோகங்களிலும் காணலாம் –

—————-

கல்யாண அசல தர்ம பாக குர்யத் ஸம்ஸ்ரிதோ பூதிமாந்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம்
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே
ஸோ அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி –12-

கல்யாண அசல தர்ம பாக குர்யத் –பொன் நிறமான மேரு மலையின் பண்பான சிவந்த நிறத்தை உடையவரும்
பொன் திகழு மேனி புரி சடை யம் புண்ணியன் -அன்றோ-
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் பிப்ரத் ரஸ்ய -ஒப்பற்ற நந்தியை வாகனமாக உடையவரும் -விபூதியை அணிந்தவரும் –
கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் – சந்திரனுடைய குறை யற்ற கலையை நன்கு சிரஸ்ஸால் தாங்குகிறவரும்-
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே –பொருத்தம் உள்ள பாம்புகளை அணிகலனாக உடையவரும் –
மன்மதனை வென்றவருமான சிவபெருமானுடைய சமான நிலையை –

கல்யாண அசல தர்ம பாக குர்யத் -விவேகாதி சப்தகங்களில் சத்யம் முதலியவற்றைக் குறிக்கும்
கல்யாணத்தில் அசையாத நிலையை உடைய பண்பாளராய்
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் -ஒப்பற்ற வாக் வன்மையை உடையவராய்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி-கைங்கர்ய ஸ்ரீ
யாகிய செல்வத்தை உடையவராய் -பலமான குறைவற்ற சமதமாதிகளை ஆபரணமாக உடையவராய்
தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே ஸோ -சிவன் பூதி மான் -விபூதி உடையவன்
மா முனிகளை ஆஸ்ரியத்தவர்களும் பூதி மான் -கைங்கர்ய ஸ்ரீயை உடையவர் –
சிவன் சந்த்ர கலையைத் தரிக்கிறான் -இவர்களோ நிர்மலமான ஞான ரூபமான கலைகளைத் தரிக்கிறார்கள் –
தலை வணங்கி நிர்மலமான ஞான ஒளியைப் பெறுகிறார்கள்
சிவன் நாக பூஷணம் தரித்தவன் -இவர்களோ ஆத்ம குண பூஷண தாரிகள் –
அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி -எந்த மா முனிகளை
ஆஸ்ரயித்தவர் அடைகிறார்களோ அந்த வேறு ஒருவருக்கும் தகுதி இல்லாத தேஜஸ்ஸின் நிதி போன்ற
அழகிய மணவாள மா முனிகள் எப்பொழுதும் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

விவேகம் விமோகம் அப்பியாசம் கல்யாணம் கிரியை அநவசாதம் அநுத்தர்ஷம் -சாதன சப்தகம்
பக்தி யோக நிஷ்டனுக்கு அடிப்படையான தன்மைகள்
மா முனிகளும் ஆச்சார்ய ஹ்ருதய –99-
விவேகாதிகள் -சமாதிகள் -வளர –
அதாவது –
இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..
( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )

இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காய சுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் )
என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள
அன்னத்தால் உண்டான காய சுத்தி -(காயம் -அந்தக்கரணம் -மனஸ் )
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் /பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )
ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில்
ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது )
என்றும் சொல்லுகிற இடங்களிலும் -சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..

விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..
யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் —
காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –

அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி-
இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )

கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் – சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே
பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –

கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே –
சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –( தன் நலம் அற்று பிறர் துன்பம் பொறாமை )
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல்
அன்றிக்கே
நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .அது இல்லாமை- அநபிதியை

அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –
சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —
அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –
அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–
அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய
அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –
அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது என்றபடி )

இனி–சமாதிகளில் – -அதாவது –
சமம் ஆவது அந்த கரண நியமனம் –
தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்
சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்
தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –
என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..
ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும்
சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே ,
உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..
மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

——————

யத் பக்தோ நாபி பூதோ மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி
நாலீ கஸ்தோ க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா மேததே சத்ய தாமா
ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ –13-

யத் பக்தோ நாபி பூதோ -எந்த மாமுனிகளுடைய பக்தனாக இருப்பவன் உள் வெளி சத்ருக்களால்
பாதிக்கப் படாமல் இருப்பவனும்
மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -சப்தாதி விஷயாந்தர காமத்தை வென்றானாகவும்
வாக் வந்தமைக்கு ஒரே பாத்திரமாகவும்
நாலீ கஸ்தோ -சத்தியத்தில் உறுதியாக இருப்பவனும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா -அபவ்ருஷேயமான வேதத்தை வியவஹரிப்பதில்
திறமை மிக்க வாக் வன்மையினால் பெற்ற பெருமையை உடையவனாயும்
சாம் ப்ராப்ய -சத்யத்தினால் பெற்ற காந்தியை உடையவனாயும் இருக்கிறானோ அவன் –

மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -மன்மதனை அழித்தவனை புத்ரனாகப் பெற்றவரும் -தனது பத்தினியான
சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிப்பவரும்
நாலீ கஸ்தோ -நாபீ கமலத்தில் இருப்பவரும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் -யத்வ ஸம் ப்ராப்த பூமா நான்கு வேதங்களை ஓத நான்கு முகங்களைப்
பெற்ற பெருமையை உடையவரும்
மேததே சத்ய தாமா-சத்ய லோகத்தை இருப்பிடமாகக் கொண்டவருமான
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா -வேறு எவருக்கும் கிடைத்தற்கு அரிய ப்ரம்மாவுடன் ஒப்பிட்டுச்
சொல்லும்படியான தன்மையைப் பெற்று பிரகாசிக்கிறான்

ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -பொறுமைக் கடலாக எல்லை அற்ற
பெருமை யுடைய அழகிய மணவாள மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

மா முனிகள் அடியார்கள் சிவனைக் காட்டிலும் வி லக்ஷணர்கள் என்பதை கீழ் இரண்டு ஸ்லோகங்களில்
இதில் நான்முகனுடன் ஒப்பீடு
ந அபி பூத -பாஹ்ய ஆந்த்ர சத்ருக்களால் பரிபவம் இன்ரிக்கே -விஷயாந்தர காமம் அற்று –
ஸ்ரீ ஸூ க்திகள் விலாஸத்துக்கு ஆசிரமாயும் அவற்றை ரசமாக எடுத்திப் பேசுபவராகவும் இருப்பார்கள்
அ லீகம் -பொய்ச் சொல் -அப்ரியமான சொல்
சதுர ஆஸ்யத்வ-நான் மறைகள் ஒதுவதில் சமர்த்த வாக் வன்மை கொண்டவர்கள் –
சத்தியத்தில் நிலை நின்றவர்களாயும் இருப்பார்கள்

அயனோ -நாபி பூதன் -உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் –
மதன மதன க்ருத் -காமனைத் தகித்த அரனை உண்டாக்கியவன் –
வாக் தேவியான சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிக்கிறார்
நாலீ கஸ்த-நாலீகம் -கமலம் -அதில் இருப்பவர்
சதுர் ஆஸ்யத்வ -நான்கு முகங்கள் கொண்டு நான்மறைகள்
சத்ய தாமா -சத்யலோகத்தில் இருப்பவர்

மா முனிகளின் அடியார்கள் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யாலே வந்த காந்தியும் ப்ரபாவத்தையும் கொண்டவர் என்றபடி –

அபகத மத மாநை அந்திம உபாய நிஷ்டை
அதி கத பரமார்த்தை அர்த்த காமாநபே ஷை
நிகில ஜன ஸூஹ்ருத்பி நிர்ஜித க்ரோத லோபை
வர வர முனி ப்ருத்யை அஸ்து மே நித்ய யோக —

கர்வம் அஹங்காரம் அற்று
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் சரம நிஷ்டையில் உறுதி கொண்டவர்கள்
பூர்ணமாக ஆச்சார்ய கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பவர்களாயும்
உபயாந்தரங்களை ச வாசனமாக விட்டவர்களாயும்
பக்ஷ பாதம் இன்று அனைவருக்கும் ஸூ ஹ் ருதத்தையே அளிப்பவர்களாயும்
இரட்டைகளை வென்றவர்களாயும் இருப்பார்கள் என்பது அர்த்த வாதம் இல்லையே –
கோயில் கந்தாடை அண்ணன் -பஞ்சு மெத்தை
வானமா மலை ஜீயர் -திருப்பாத ரேகை
இவர்கள் போழ்வாருடன் நித்ய சம்பந்தம் வேணும் என்று பிரார்த்தனை இதில்

சிவனே அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
அன்று அயனும் அயன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம்
அமர்ந்த செழும் குன்றை -ஆழ்வார்கள் அருளிச் செயல் போல் இங்கும் –

——————-

சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத்
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம் –14-

சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா –ஓங்கி உலகத்த யுத்தமானது ஸ்ரீ பாத தீர்த்தமான
கங்கையை திருமுடியில் தாங்கும் பரமசிவன் கலா நிதி மௌலியாய் சந்த்ர சேகரனாய் இருக்கிறார் –
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா -மா முலைகளின் அநந்யார்ஹராய் இருக்கும் வரத குரு
போல்வாருக்கு எல்லாக் கலைகளையும் கற்று அறிந்த தன்மை விளங்குகிறது -வித்வத் சிகாமணிகள் அன்றோ
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத் -மா முனிகளும் ஸாஷாத் நாராயணனே –
பீதகவாடைப் பிரானார் பரம குருவாக வந்து
ஸாஷாத் நாராயணோ தேவ கிருத்வா மர்த்ய மயீம் த நு ம்
மக் நா நுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணி நா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா -அதனாலேயே
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம் –அவருடைய திருவடி சம்பந்திகள் அனைவரும்
சம்சார ஆரணவத்தை எளிதில் கடக்கிறார்கள் –

————————-

ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத்
மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர –15-

ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித -ஜலஜம் -சங்கம் -எண்ணற்ற உயர்ந்த
ப்ராஹ்மணர்களால் சேவிக்கப்படுபவரும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் தம்மை ஆஸ்ரயிக்க வரும்
நல்ல மனம் உடையவர்களுக்கு சங்க சக்ர இலச்சினை ப்ரசாதித்து ஆள் கொள்பவரும்
தாமரை போன்று விளங்கும் திருக்கைகள் என்றுமாம் -நித்யமாகக் கைப்பட்ட நல்ல தர்சனங்களை உடையவர் என்றுமாம் –
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத் மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர –அவர்களது
சத்ருக் கூட்ட கர்வங்களை அழிப்பவராயும் உள்ள மா முனிகள்

ஜலஜ நிலயா காந்தோ –தாமரையாள் –ஜலஜம் -பத்மம் -பெரிய பிராட்டியாருக்கு இடமாகக் கொண்ட
அனந்தத் விஜோத்தம சேவித –ஆதி சேஷன் பக்ஷி ஸ்ரேஷ்டரான திருவடி போல்வாரால் சேவிக்கப் படுபவனும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் சங்கு சக்கரம் தரித்த
திருக்கைகள் உடையவனாயும்
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத்
மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர-தேவர்களின் சத்ருக்களான அசுரர் வர்க்க கர்வங்களை அடக்கி –
பெரிய பிராட்டியார் உகப்புக்கு தக்க கைங்கர்ய ஸ்ரீ யை உடையவரும்
மது கைடபர்களை அழித்த எம்பெருமானுக்கு சமமாக விளங்குகிறார் –

ஜலஜ -நிலய -ஏகாந்த -பாட பேதம் –
பத்மாசினிக்கு அசாதாரணமான பதி
ஜடமான சம்சாரத்தை அழிக்கும் அசாதாரணமான பெரிய ஜீயர் -யதாஜாதரையும் திருத்திப் பணி கொள்ள வல்லவர்

—————

மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம்
பத்மா வாஸா ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை
காந்த்யா காந்தம் ச ஜயது மஹா யோகி காந்தோ பயந்தோ –16-

பத்மா வாஸா -தாமரையாள் -பெரிய பிராட்டியார்
ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை -ஹிமவான் புத்ரி சரஸ்வதி சசி தேவி இவர்களின் நாயகர்கள்
மது ஜித -மது சூதனனான நாராயணன்
தநுச் சேதி -சரீரம் அற்ற மன்மதனை அழித்த பரமசிவன்
நாலீக வாஸ -தாமரையில் வசிக்கும் ப்ரம்மா
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் -தேவர்களால் பிரியத்தோடே ஸேவிக்கப் படுகிற இந்திரன்

மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ –பிரகாசத்தினால் தேனை வென்ற இனிமையை யுடையதாய் -காம க்ரோதாதிகளை
அழிக்க வல்லதாய் -ந அலீகஸ்தம் -பொய் கலவாத இன் மொழிகளால் -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிப்பதாய் விளங்கும்
யத் வாக் ஜாலம்- தெளிவாலும் காந்தியால் மனோஹரமான மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகள்
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் காந்த்யா காந்தம் ச ஜயது -மஹா லஷ்மீ பார்வதி
சரஸ்வதி சசி தேவிமார் ஆகியவர்களின் நாயகர்களான தேவ ஸ்ரேஷ்டர்களால் பிரியத்துடன் ஸேவிக்கப் படுகின்ற
உத்க்ருத்த -நிரசிக்கப்பட்ட
உத் வ்ருத்த -துர் மார்க்கஸ்தர்
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த –
மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள் இவர்கள் உடன் சாம்யம் இத்தாலே என்றபடி
மஹா யோகி காந்தோ பயந்தோ –மஹா யோகியான மணவாள மா முனிகள் எல்லாரையும் விட சிறந்தவராக விளங்கட்டும்

———————

ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம்
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி –17-

ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி -எவருடைய ஸ்ரீ ஸூ க்தியானது –
சரஸ்வதி நதி போல் மநோ ஹரமானது –
மிகத் தூய்மையானது -ஓன்று விடாமல் எல்லா தாபத்ரயங்களையும் சீக்கிரமாக வேரோடு அழிக்கிறது
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம் -காதல் கேட்கப்பட்டாலும் சம்சாரிகளுக்கு
மேலான ஸூ த்தியை அளிக்கிறது –
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்-மிக கம்பீரமானது –
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி –எவ்விடத்திலும் எப்பொழுதும் பழுது போவது இல்லை —
எல்லையற்ற பெருமைகளுக்கு நிதியான அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்

கம்பீரமான ஆழமான சரஸ்வதி நதியோ சில இடங்களில் பங்கத்தை -அலை எறிதலை -அடையும்
மா முலைகளின் ஸ்ரீ ஸூ க்திகளோ பங்கத்தை -பரிபவத்தை ஒரு போதும் ஓர் இடத்திலும் அடைவது இல்லையே
ஆகவே உத்க்ருஷ்டமானது

ஆத்யாத் மிகாதி மைத்ரேய ஞாத்வா தாப த்ரயம் புத
உத் பன்ன ஞான வைராக்ய ப்ராப் நோத் யாத் யந்திகம் லயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-1-
தாபத்ரயங்களை அறிந்து ஞானம் வைராக்யங்களைப் பெற்றவன் மோக்ஷம் அடைகிறான் –
ஆத்யாத்மிக அபி த்வி வித சாரீரோ மாநஸஸ் ததா
சாரீரோ பஹு பிர் பேதைர் பித்யதே ஸ்ரூயதாம் ச ச -6-5-2-
ஸிரோ ரோக பிரதிஸ்யாய ஜ்வர ஸூல பகந்தரை
குல் மார்சஸ் ஸ்வயது ஸ்வாஸ் சர்ச்ச்யாதி பிர் அநேகதா -6-5-3-
தத் அஷி ரோகாதி சார குஷ்ட அங்கா மய ஸம் ஜ்ஜிதை
பித்யதே தேஹஜஸ் தாபோ மாநஸம் ஸ்ரோதும் அர்ஹஸி -6-5-4-
காம க்ரோத பய த்வேஷ லோப மோஹ விஷாத ஜ
சோக அஸூய அவமான அர்ஷ்யா மாத்சர்யதி மய ஸ் ததா –6-5-5-
மானஸோபி த்விஜ ஸ்ரேஷ்ட தாபோ பவதி நைகதா
இத்யேவ மாதி பிர் பேதைஸ் தாபோ ஹ்யாத் யாத்மிக ஸ்ம்ருத –6-5-6-

பஸூ பக்ஷி மநுஷ்யாத்யை பிசாசா அரக ராஸசை
ஸரீ ஸ் ருபாத் யைஸ் ச ந்ரூணாம் ஜாயதே ச ஆதி பவ்திக –6-5-7-

ஸீதவா தோஷ்ண வர்ஷாம்பு வைத் யுதாதி ஸமுத் பவ
தாபோ த்விஜ வர ஸ்ரேஷ்டை கத்யதே ச ஆதி தைவிக –6-5-8-

ய ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக
விஜிகத்ச அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப -சாந்தோக்யம் –8-7-1-

பராம் ஸூத்திம் -என்று ஸ்வரூப ஆவிர்பாவம் இஷ்ட ப்ராப்தியைச் சொன்னவாறு

ஸர்வவித பந்துவாக நம்மாழ்வார் எம்பெருமானையும் ஆளவந்தார் ஆழ்வாரையும்
இராமானுஜர் திருவாய் மொழியையும் அமுதனார் ராமாநுஜரையும் கொண்டது போல்
அண்ணாவும் மா முனிகளின் ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு அருளிச் செய்கிறார்

——————–

ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம்
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர -18-

ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா -எவருடைய ஸ்ரீ ஸூ க்திகள் எல்லா
நல்லார்களுடையவும் -தேவர்களுடையவும் சிரஸ்ஸால் தரிக்கப் பட்டு பிரகாசிக்கின்றனவோ
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம் -தம்முடைய சொற்களின் பொருள் அறிந்தவர்கள்
அனைவருக்கும் தூய்மையான -மங்களமான தன்மையை -அளித்துக் கொண்டு
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத-இதுக்கு மேல் எல்லை என்னும் படியான பூர்ணமான
தன்மையினால் சந்திரனை விட பிரகாசிக்கின்றதால்
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர –எப்பொழுதும் கங்கையைக் காட்டிலும்
மேன்மை பெற்றவராக -ஸர்வ உத்க்ருஷ்டராய் -மணவாள மா முனிகள் விளங்குகிறார் –

—————

ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே
வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம் தாவதா ஸ்யாத ஸமா
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா –19-

ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம்
தாவதா ஸ்யாத ஸமா -ஸூர்யனுடைய மகளான யமுனா நதி ஸூர்யனுக்கு ஆனந்தம் கொடுப்பது போல் என்பதால்
நித்ய ஸூரிகளுக்கு ஆனந்தம் அளிக்கும் மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகளைப் போல் வ்யவஹரிக்கத் தக்கதாக ஆகட்டும்
இவ்வளவாலே அந்த நதி இவற்றுக்கு சமமானதாக ஆகக் கூடுமோ
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம -இவை பரி ஸூ த்தமானவை –
ஆஸ்ரிதர்களுடைய அனைத்துத் தானங்களையும் போக்கி
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா –அபரிமிதமான ஆத்ம நன்மையை அடைவிக்கும்
இதற்கு அந்த தூய பெரு நீர் யமுனை நதி கூட சக்தி உடையவள் அல்லவே

———————-

விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே
வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம்
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம்
நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம் –20-

விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே
வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம் -யமுனை நதியின்
மிக்க மனோஹரமான பிரவாகம் போல் கண்ணபிரான் எப்பொழுதும் எல்லாருடைய உள்ளத்திலும்
ஸ்ரீ ஸூ க்திகளிலும் விளையாடுகிறானோ -இவையும் கிரீடா ஸ்தானமாகவே இருக்குமே –
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம்
நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம் –ஒப்பற்ற மேன்மையை உடையவரும் –
எல்லையற்ற மனோஹரமான குணங்களை உடையவரும் மஹாத்மாவுமான
மா முனியை மனமே எப்போதும் சிந்தித்து இரு –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்