ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்து அருளிற்று என்னை யடிமை கொள்ளுகைக்காக –
வேறு ஒரு ஹேதுவும் இல்லை -என்கிறார்.
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
பால்யமே பிடித்து -மாதுலேயன் என்று நினையாதே ரஷகன் என்றே அத்யவசித்து இருக்கிற-பஞ்ச பாண்டவர்களுக்கு
பிரதி பஷம் அழியும்படி சாரத்தியம் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆனைத்-தொழில்கள் எல்லாம்
தெளிந்த ஸ்வரூப ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆராவமுதாய்-இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் –
இந்த பாப பிரசுரமான பூ லோகத்திலே -அவதரித்தது -ஆராய்ந்து பார்த்தால் –
என்னை ஆளுகைக்காகவே என்று நிச்சிதமாய்த்து இத்தனை ஒழிய வேறு ஒரு ஹேது இல்லை என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
என்னை அடிமை கொள்வதற்காகவே ஸ்ரீ எம்பெருமானார்-அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்
அவதாரத்துக்கு ஹேது -பயன்- கர்ம இல்லை ..கை பிடித்து உத்தாரணம் பண்ண தான்
நாம் கர்மம் அடியாக பிறக்க -/ஸ்வாமியோ -நம் கர்ம தீர அவதாரம்
நானும் பிறந்து நீயும் பிறக்க வேணுமா-ஸ்ரீ கண்ணன்-அர்ஜுனன் கீதையில்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –
பத உரை –
அடியை தொடர்ந்து -திருவடிகளை உபாயமாக பற்றி கொண்டு அதன் வழியே பின்பற்றிச் சென்று
எழும் -எழுச்சியை பெரும்
ஐவர்கட்காய்-பஞ்ச பாண்டவர்களுக்காக
அன்று -அக்காலத்திலே
பாரதப் போர் -மகா பாரத யுத்தத்திலே
முடிய -எதிரிகள் நாசம் அடையும்படியாக
பரி-குதிரைகள் பூட்டிய
நெடும் தேர் -பெருமை வாய்ந்த தேரை
விடும் -செலுத்தும்
கோனை-சர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த -முழுவதும் தெரிந்து கொண்ட
அடியர்க்கு -அறிந்த அந்தந்த தன்மைகளுக்கு தோற்று அடிமை யானவர்களுக்கு
அமுதம் -இனியராய் இருக்கும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் –
இப்படியில் -இந்த பூமியில்
வந்து பிறந்தது -வந்து அவதாரம் செய்து
என்னை ஆள -என்னை ஆளுகைக்காக
பார்த்திடில் -ஆராய்ந்து பார்த்தல்
மற்று -வேறு காரணம்
இல்லை-ஏதும் இல்லை
வியாக்யானம் –
க்ருஷ்ணாஸ்ரயா க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -பாரதம்-த்ரோண- 183- – என்கிறபடியே
திருவடிகளை பின் சென்று -கர்வோத்தரராய் இருக்கிற பாண்டவர்களுக்காகாத் துர்வர்க்கமடைய
அங்கே திரண்டு இவர்கள் தனிப்பட்டு -தன்னை ஒழிய வேறு துணை அற்று இருக்கிறவன்று –
பாரத சமரத்திலே அவர்கள் பிரதி பஷம் முடியும் படி –
ஆடிய மா நெடும்தேர் -திருவாய் மொழி – 6-8 9- –என்கிறபடியே
குதிரை பூண்ட நெடிய தேரை நடத்தின ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரித பஷபாதம் -ஆஸ்ரித பாரதத்ர்யம் –
ஆஸ்ரித விரோதி நிரசனம் –முதலான சர்வ ஸ்வபாவங்களையும் அறிந்து-அவவவ ஸ்வபாவங்களுக்கு தோற்று
எழுதிக் கொடுத்து இருக்கும் அவர்களுக்கு போகய பூதரராய் இருக்கும்-
ஸ்ரீ எம்பெருமானார் இந்தப் பூமியில் வந்து அவதரித்து -என்னை ஆளுகைக்காக –
ஆராயில் வேறு ஒரு காரணம் இல்லை –
எழுச்சி –கிளப்பும் -அதாவது -நாம் கிருஷ்ண ஆஸ்ரயர் -என்கிற ஒவ்த்தத்யம்
படி-பூமி–
அடியைத் தொடர்ந்து எழும் –
பால்யமே பிடித்து -வியாசர் குந்தி மார்கண்டேயன் முதலானவர்கள்- உடைய உக்தி விசேஷங்களாலும் –
ஆபத்து வந்த போதெல்லாம் உதவி ரஷித்த படியாலும் –
ஸ்ரீ கிருஷ்ணனை மாதுலேயன் என்று நினைக்கை அன்றிக்கே -தங்களை ரஷிக்கும் பரதத்வம் என்று அத்யவசித்து –
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ணா பலா கிருஷ்ணா நாதஸ பாண்டவ -என்கிறபடியே அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து
ருத்ரேந்த்ராதிகளை வென்று -காலகேய ஹிடிம்ப ஜராசந்தாதிகளை சம்கரித்து லோகத்திலே-
தங்களுக்கு ஒருவரும் சதர்சர் இல்லை என்று கர்வோத்தராய் இருந்த ஔத்தத்யம் –
ஐவர்கட்கா –
தர்ம-பீமார்ஜுன நகுல சகதேவர் என்று ஐந்து பேரான பஞ்ச பாண்டவர்களுக்காக –
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் –
அடியைத் தொடர்ந்ததனால் ஐவர் எழுந்தனர் –
தொடராமையால் மற்றையோர் அனைவரும் முடிந்தனர் –
கச்சத் தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -புருஷ ஸ்ரேஷ்டர்களே இந்தக் கண்ணனை-சரணம் அடையுங்கோள்-என்று
மார்கண்டேயன் உபதேசிக்க -அதன்படியே –
த்ரவ்பத்யா சஹிதாஸ் சர்வே நமச்சக்ரூர் ஜனார்த்தனம் -என்று
அனைவரும் த்ரவ்பதியோடு கூடினவர்களாய் கண்ணனை சரண் அடைந்தனர் –
பாண்டவர்கள் ஐவரும் ஸ்ரீ கண்ணனை சரண் அடைந்தமை காண்க –
ஐவர்கட்காய் –
என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்து ஸ்ரீ கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – ஸ்ரீ ஈடு –
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது .
அன்று –
துரி யோதனன் இடத்தில்-
பஷ பாதத்தால் கர்ண சல்யாதி துர்வர்க்கம் எல்லாம் திரண்டு -இந்த பாண்டவர்களும் தனிமைப் பட்டு-
தன்னை ஒழிய வேறு ஒரு துணை இன்றிக்கே இருக்கிற சமயத்திலே –
பாரத போர் முடிய –
உபய சேனையிலும் -பரத வம்சத்தாரில் பரிமிதரானாலும் துர்வர்க்கங்கள் இந்த உபய சேனையிலும்-அந்வயித்து
யுத்தம் பண்ணினார்கள் ஆகையாலே அந்த யுத்தத்துக்கு பாரத யுத்தம் என்று பேராய் இருக்கிறது –
அப்படிப்பட்ட உபய சேனையிலும் திரண்டு இருக்கிற பதினெட்டு அஷோகிணி பலத்துக்குமாக பாண்டவர்கள் ஐவரரும்
சேஷித்து அவர்களுக்கு பிரதி பஷ பூதரான மற்றப் பேர் எல்லாரும் முடியும்படி
பரி நெடும் தேர் விடும் கோனை –
ஆடிய மா நெடும் தேர் -என்கிறபடி
ஸ்வேதாச்வங்களாலே பூணப்பட்டு -சர்வாலன்க்ர்தமாய் –தேவதா ப்ரசாதத்தாலே வந்ததாகையாலே
திவ்யமாய் மகத்தான திருத் தேரை-
தான் சாரதியாய் நடத்தி தன்னுடைய சர்வ ஸ்வாமித்வம் சர்வருக்கும் தெரியும்படி இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணனை
தத்ர பாண்டவாநாம் குருணாம் ச யுத்தே ப்ராரப்தே பகவான் புருஷோத்தம சர்வேஸ்வர ஜகது
பக்ர்திமர்த்ய ஆஸ்ரித வாத்சல்ய விவச பார்த்தம் ரதினம் ஆத்மாநஞ்ச சாரதிம் சர்வலோக சாஷிகம் சகார-என்று
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே இவ் அர்த்தத்தை ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே -.
இந்த ஸ்ரீ கிருஷ்ணன்-யது குலத்திலே அவதரித்தாலும் – ஸ்ரீ ருக்மிணி பிராட்டி யினுடைய சுயம்வரதுக்காக குண்டின புரத்துக்கு
ஏற எழுந்து அருளின போது -இந்த்ரன் தேவ ஜாதிகையிலே ஒரு சிம்காசனத்தை அனுப்பி வைத்து-
ஸ்ரீ கிருஷ்ணனை ராஜாவாகும்படி அந்த சிம்காசனத்திலே எழுந்து அருளப் பண்ணுவித்து -திரு அபிஷேகம்
பண்ணிவித்தான் என்று பிரசித்தம் இறே –
ஆகா ராஜா என்னக் குறை இல்லை -இப்படிப் பட்டவனை –
அன்று –தேர் விடும் கோனை –
கையில் ஆயுதம் எடேன் -என்று பிரதிக்ஜை செய்து இருப்பதால்
தேரை விட்டுத் தேர்க் காலாலே சேனையைத் தூளாக்கினான் .
ஸ்வாமி ஸ்ரீ நம் ஆழ்வாரும்
குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-என்றார் .
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே -சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்தி .
மகதி சயந்த நேச்த்திதவ் -பெரிய தேரில் இருப்பவர்கள்-என்றதற்கு ஏற்ப நெடும் தேர் –எனப்பட்டது –
தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –ஸ்ரீ இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –
முழுது உணர்ந்த அடியர்க்கு-
ஸ்வரூப ரூப குண விபூதிகளையும்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ-நிகேதன -நாக பர்யங்க முத்ஸ்ரஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனாயும்-அஜகத் ஸ்வபாவனாயும் வந்து அவதரித்து –
உபசம்காசர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் -என்று பிதாவானவன் பிரார்த்திதவாறே ப்ராக்ரதரைப் போலே இருந்தபடியையும் –
யமுனா நதியைக் கால் நடையாக பண்ணினதும் –
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி உண்டதும் –
பூதனா சகட யமாளார்ஜுன உரிஷ்ட ப்ரலம்ப தேனுக காளிய-கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளாகிற
ஆஸ்ரித விரோதிகளைக் கொன்றதும் –
அக்ரூர மாலாகாராதிகளை அனுக்ரகித்ததும் -கோவர்த்தன உத்தரணாத்ய அதி மானுஷ திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணினதும் –
பாண்டவர்களுக்கு பரதந்த்ரனாய் கழுத்திலே ஓலை கட்டிக் கொண்டு தூத்யம் பண்ணினதும் –
காலாலே ஏவிக்-கார்யம் கொள்ளும்படியான சாரத்யத்தைச் செய்ததும் –
விஸ்வரூபத்தை தர்சிப்பததும் –
அர்ஜுன வ்யாஜேன லோக-உபகார அர்த்தமாக அத்யாத்ம சாஸ்த்ரத்தை வெளி இட்டதும் –
முதலானவற்றையும் அறிந்தவர்களாய் -அவ் வவ-ஸ்வ பாவங்களுக்கு தோற்று -தங்களை எழுதிக் கொடுத்து
சேஷத்வ ஸ்வரூபத்தில் நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான்-ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் முதலானவர்களுக்கு –
இது நூற்றுவர் வீய சொன்னது அது-திரு வாய் மொழி- ஐ ஐந்து முடிக்க
அமுதம் –
ஸ்வரூப உஜ்ஜீவனத்தை பண்ணுமவர் ஆகையால் நித்ய அபூர்வராய் ரசிக்குமவரான –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை யாள வந்து –
பரம பதத்திலே பரி பூர்ண அனுபவம் நடவா நிற்க –
அத்தைக் காற்கடைக் கொண்டு -அதில் நின்றும் அடியேனை அடிமை கொள்ளுக்கைக்காக எழுந்து அருளி –
இப்படியில் -பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாச்ய போக்ய புத்தர் ஜநநீம் -என்னும்படியான
ப்ராக்ருத பூமியிலே -பிறந்து -ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் பூமவ் -என்கிறபடியே அவதரித்து அருளினது –
என்னை யாள –
அஹ மச்ப்யபராத சக்ரவர்த்தி -என்றும்
பாபானாம் பிரதமோச்ம்யஹம்-என்னும்படியான-அடியேனை ரஷிக்கவே ஆய்த்து –
மற்று இல்லை காரணம் பார்த்திடிலே –
பின்னையும் இவ் அவதாரத்துக்கு மூலம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் வேறு ஒரு காரணம் இல்லை
என்று அருளிச் செய்தார் ஆயிற்று –
அவதார ரகஸ்யத்தை அறிந்து -ஸ்ரீ எம்பெருமான் ஸ்வபாவங்களுக்கு தோற்று உள்ள அடியர்
அமுதம் போல் இராமானுசனை அனுபவிக்கின்றனர் .ஆதலின் இவர் ப்ராக்ருதராய் இருத்தல் கூடாது .
அமுதம் திவ்யம் அன்றோ-
ஆகையால் -இவ்வமுதம் இப்படியில் பிறப்பதற்கு காரணம் அதன் கருமம் அன்று
பின்னை ஏன் பிறந்தது
என்னை யாளவே என்கிறார்
இந்தப் பாட்டில் -ஸ்ரீ எம்பெருமானார் என்னை விஷயீகரிக்க முடியாமையால்-அவன் திருவடிகளில்-எனக்கு ஈடுபாடு இல்லை –
எனக்காகவே அவதரித்து -விஷயீ கரித்தமையால்-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே எனக்கு விலஷணமாய்த் தோற்றுகின்றன
என்று-ஸ்ரீ அமுதனார் கருதுவதாகத் தோற்றுகிறது .
ஸ்ரீ ஸ்வாமி இந்த லோகத்தில் அவதரித்து -திவ்யம்- அமுதம்- அருளிற்று என்னை அடிமை
கொள்ளுகைக்காக–வேறு ஒரு ஹேதுவும் இல்லை..
—————-
அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–
பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-
போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-5-
மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-
ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-
சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-
மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-
—————————————————
நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-
—————————————————-
திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-
—————————————–
பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-
விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-
இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-
மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-
கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-
வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-
பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-
கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-
துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-
அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-
பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-
மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-
பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-
——————————————————-
திரு நெடும் தாண்டகம் –
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-
—————————————————–
முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-
———————————————
இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–
————————————————
மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-
——————————————-
நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-
நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–
—————————————————
பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-
————————————————————————–
திருவாய்மொழி
தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-
மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-
வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-
வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
————————————————————
இராமானுச நூற்றந்தாதி
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-
———-
அடியர்க்கு அமுதம்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நல்மாலை ஏத்தி நவின்று
அமரர் முழு முதல் ஆகியவாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-