ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்று
ஸ்ரீ எம்பெருமானாற்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை-அனுசந்தித்தார் கீழ் –
அந்த பிரசங்கத்திலே தமக்கு உத்தேச்யமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
அனுசந்தித்து -தத் ஸ்வபாவ அனுசந்தானத்திலே வித்தராகிறார் -இதில் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
ஸ்ரீ தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு-
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தை அனுசந்தித்தார் கீழ் -இதில்
அந்த பிரசங்கத்தில் தமக்கு உத்தேச்யரான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை அனுசந்தித்து –
அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை அடைவே அருளிச் செய்து கொண்டு -வித்தார் ஆகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார் .
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல்சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-
பத உரை
பரவு -பரவுகின்ற
தொல்-பழையதான
சீர்-குணங்களை உடையராய்
எதி-துறவிகளுக்கு
தலை -தலைவராய்
நாதன் -எனக்கு நாதனாய் இருக்கும்
இராமானுசன் தன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒப்புடைய
அடி-திருவடிகள்
உத்தமர் -உயர்ந்தவர்களுடைய
சிந்தை-மனத்துள்
உதிப்பன –தோன்றுவன
ஒன்றலர் -சேராதவருடைய
நெஞ்சம் -உள்ளம்
கொதித்திட -கொதிக்கும்படி
மாறி -ஒன்றுக்கு ஓன்று மாறி அடி இட்டு
நடப்பன -நடந்து செல்வன
கொள்ளை-மிக
வன் -வலிமையான
குற்றம் எல்லாம் -தோஷங்கள் அனைத்தும்
பதித்த -பதித்து வைக்கப்பட்ட
என் -எனது
புன் கவி -அற்பக் கவி யாகிற
பா இனம் -பா இனத்தை
பூண்டன -ஏற்றன –
வியாக்யானம் –
திசை யனைத்தும் ஏறும் குணன் -என்கிறபடியே சர்வ திக்கிலும் பரவி இருப்பதாய் –
ஸ்வரூப அனுபந்தி யாகையாலே -பழையதாய் இருந்துள்ள கல்யாண குணங்களை உடையராய் –
எதிகளுக்கு தலைவராய் -நாத பூதராய் -இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் உடைய
சேர்த்தி அழகை உடைத்தாய் இருந்துள்ள திருவடிகள் ஆனவை –
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய சாதனராய் -இருக்கும் உத்தம அதிகாரிகள் உடைய திரு உள்ளங்களிலே –
எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி -8 5-5 – – என்கிறபடியே
ஆதித்யன் உதித்தால் போலே பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன .
பாஹ்ய குத்ருஷ்டிகளான பிரதி பஷ பூதருடைய ஹ்ருதயமானது -பீதமாய்-அந்த பய அக்நியாலே -பரிதபிக்கும் படி
பரஸ்பரம் மாறி இட்டு நடவா நிற்கும் தன்மையை உடையன –
சம்ருத்தமாய் பிரபலமாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம் சேர அழுத்தி வைக்கப்பட்ட என்னுடைய-புல்லிய கவிகள் ஆகிற –
சந்தஸ் சமூஹததை அணிந்து கொண்டன –
இவற்றின் உடைய தன்மை இருக்கும் படி என் என்று கருத்து –
இனத்தின் வகையான கலித்துறை யாகையாலே –பாவினம் -என்கிறார் ஆகவுமாம்-
ஒன்றலர் -சத்ருக்கள்
பாவுதல்-பரம்புதல்–
உதிப்பது -மாறி நடப்பன -பூண்டன மூன்றும் உடையவர் திருவடிகளால் நடந்தவை —
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் -மோக்ஷ ஏக ஹேது-இணை அடியே -ஏவ காரம் –
அதமர் மத்யமர் இல்லாமல் – உத்தமர் -சிந்தை உள்ளே
பரவு தொல் சீர் –
பரவுகை -பரம்புகை –
திசை யனைத்தும் ஏறும் குணன்
என்று இவர்-தாமே அருளிச் செய்தபடி -சகல திக்குக்களிலும் வ்யாப்தங்களாய் –
வந்தேறி யன்றே -ஸ்வபாவிகங்களாய்-இருந்துள்ள கல்யாண குணங்களை வுடையவராய் –
எதித் தலை நாதன் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்–ஸ்ரீ எம்பார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும் வகுத்த சேஷியாய் –
அவர்களுக்கு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை-தத் யாதாம்ய பர்யந்தமாக உபதேசித்து அருளி –
அவ் வழியாலே அவர்களுக்கு தலைவராய் -நாத பூதராய்-இருந்துள்ள –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
தன் இணை யடியே –
இச் சம்சார சேதனரை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்கும் -அனுபாவ்யமாய்க் கொண்டு ரசிப்பிக்கைக்கும் –
இத் திருவடிகளோடு ஒத்து இருப்பார்- உண்டோ என்று ஆராய்ந்து பார்த்தால் –
வேத புருஷனாலும் சொல்லப்பட்ட பிரபாவத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
பிராப்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டும்படி பண்ணக் கடவன் ஆகையாலும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு இரங்காதே போன படியாலும் -இவ் உபாயத்துக்கு ஒப்பாக மாட்டாது –
நிஸ் சம்சய பிரதிபாதகமாய் அந்ய யோகவ்ய வச்சேதகமாய் இருந்துள்ள பிரமாண பலத்தாலே இவ் உபாயம்-
அதிலும் ஸ்ரேஷ்டமாய்த்து இருப்பது –
ஆகையாலே அந்த அதிசயத்துக்கு ஒன்றுக்கு ஒன்றே -சதர்சமாய் இருக்கிற இரண்டு திருவடிகளும் -என்றபடி –
உதிப்பன உத்தமர் சிந்தையுள் –
உத்தமராவார் -அதம மத்யமரான வேத பாஹ்யரும் -வைதிகராய் கொண்டு-சாமான்ய தர்மத்திலே தானே மண்டி
இருக்குமவர்களுக்கும் -அவர்களுடைய நிஷ்டைக்கும் பிரதிபடராய் -பரம வைதிகரான -விசேஷ சாஸ்திர ஏக நிஷ்டராய் –
முமுஷுக்களாய் இருக்குமவர்கள் –
உத்க்ருஷ்டராய் -அநந்ய சாதனராய் -அநந்ய ப்ரயோஜனராய் இருக்கும் உத்தம அதிகாரிகள் -என்றபடி –
அன்றிக்கே –
இது சரம பர்வ பிரதிபாதாக சாஸ்திரம் ஆகையாலும் -முமுஷுக்களிலும் -ஏகாந்திகளிலும் –
பரம ஏகாந்திகளிலும் வைத்துக் கொண்டு –உத்தமர் பரம ஏகாந்திகள் ஆகையாலும் -இவ்விடத்திலே
உத்தமர் என்றது -பரம ஏகாந்திகளை சொன்னபடி என்னவுமாம் –
சிந்தையுள் –
அவர்களுடைய திரு உள்ளங்களிலே
உதிப்பன –
எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போல் -என்கிறபடி சக்ரவாள பர்வதத்தில் இரண்டு ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே –
சத்துக்களுடைய திரு உள்ளங்களிலே எம்பெருமானார் உடைய இரண்டும் எப்போதும்-உதித்து பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன –
கீழ்ச் சொல்லப்பட்ட அத்யாவச்ய ரஹீதர்க்கு ஒருக்காலும் பிரகாசிக்கிறனவல்ல-
இப்படிப்பட்ட பிராவண்ய அதிசயம் உடையவர்களுக்கே பிரகாசிக்கும் என்றபடி –
யதீந்திர நாத -சிஷ்டாக்ர கணய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே -என்று இறே ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தது
அஜடா சயோதயம் யதிராஜ சந்த்ரம் -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
உதிப்பன உத்தமர் சிந்தையுள் –
உத்தமர் -மாதவான்க்ரி த்வயோபாய மாதவான்க்ரி பிரயோஜன ச உக்த மோதிகாரீ ஸ்யாத்-என்று
ஸ்ரீய பதியினுடைய இரு திருவடிகளையும் உபாயமாக கொண்டவனும் -அத்திருவடிகளையும் உபேயமாகக் கொண்டவனும் –
உத்தம அதிகாரி யாவான் -எனப்படும் உத்தம அதிகாரிகள் உடைய திரு உள்ளத்தில் தோன்றி பிரகாசிக்கும் தன்மை உடையன
ஸ்ரீ எம்பெருமானார் இணை யடிகள் என்றபடி –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் –
வேத பாஹ்யர் -அதமர் -பரம வைதிகர் ஆகிய சாமான்ய நிஷ்டர் மத்த்யமர் –
பரம வைதிகராய் விசேஷ சாஸ்திர நிஷ்டராய் முமுஷூ வானவர் உத்தமர் என்று கூறுகிறார் –
உதிப்பன என்றமையால் -திருவடிகளுக்கு ஸூர்ய சாம்யம் தோற்றுகிறது –
இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி – 8-5 5- -என்று திருப்பாதத்தை -உதிக்கும் ஸூர்யன்
போன்றதாக திருவாய் மலர்ந்து இருப்பது இங்கு அனுசந்திகத் தக்கது –
ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன –
ஒன்றலர் -என்றது பாஹ்ய குத்ர்ஷ்டிகள் தொடக்கமான-பிரதி பஷிகளை –
அவர்களுடைய ஹ்ருதயமானது சூர்யோதத்திலே திவா பீதங்கள் பயப்படுமா போலே –
ஷிப்த ப்ரத்யர்த்தி த்ர்ப்தி-என்னும்படியான அவர் திருவடிகள் தன் உதயத்தால் பீதமாய்-
ஆதித்யனுடைய தேஜசாலே-அவை பரிதபிக்குமா போலே -ஸ்வ தேஜச்சாலே பரிதபிக்கும்படி ஆதித்யன் இவற்றுக்கு பிரதிபடனாய் கொண்டு –
சர்வ திக்குகளிலும் பரஸ்பரம் மாறி நடவா நிற்கும் தன்மையை உடையன –
இத்தால் பாஹ்ய குத்ருஷ்டிகளை -நிரசிக்கைக்காக -ஸ்ரீ வேம்கடாசலத்துக்கும் ஸ்ரீ யாதவாசலத்துக்கும் ஸ்ரீ சாரதாபீடம் முதலான
ஸ்தலங்களுக்கும் இவர் எழுந்து அருளின படியை அருளிச் செய்தார் ஆய்த்து –
ஒன்றலர் —மாறி நடப்பன –
ஒன்றலர் –சேராதவர்கள் -அவர்கள் ஆகிறார் குத்ருஷ்டிகளும் பாஹ்யர்களும்
பிரதி பஷ நிரசனத்துக்கு ஸ்ரீ எம்பெருமானார் செய்த ஸ்ரீ திருவேம்கட யாத்திரை முதலியன இ
ங்கு நினைக்கத் தக்கன –
நடந்த நடையிலே யஞமூர்த்தி அஞ்சித் தோற்றமை உலகம் அறிந்ததே –
கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த –
சர்வதா சர்வ பிரகாரத்தாலும் பண்ணப்பட்டவை யாகையாலே -ச்மர்த்தங்களாய் பிரபலங்களாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம்
திரட்டி ஒரு குப்பலாக வைக்கப்பட்ட –
என் புன் கவி பாவினம் –
கவி பாடுகைக்கு தகுதியான ஞானமும் -காவ்ய லஷண பரி ஜ்ஞானமும் இல்லாத-என்னுடைய கவி யாகையாலே –
புல்லியதாய் -அசமீசீனமான கவியாகிற சந்தஸ் சமூகத்தை –பாட்டுக்களை-என்றபடி –
அன்றிக்கே
அநேக சந்தஸ் ஸூக்களோடே கூடின கலித்துறை யாகையாலே –பாவினம் -என்றார் ஆகவுமாம் –
பூண்டன –
இவனுடைய அஞ்ஞானத்தாலே சொன்ன சொல்லுக்கள் அன்றோ –
இவை என்று அவற்றில் ஒரு-குறைகளும் பாராதே -கலம்பகன் மாலையை அலங்கரித்துக் கொள்ளுவாரைப் போலே
இவற்றை-அலங்கரித்து கொண்டன -இவற்றினுடைய தன்மை இருக்கும்படி என் என்று வித்தராகிறார் காணும் –
கொள்ளை –பாவினம் பூண்டன-
பாவினம் -பாக்களின் கூட்டம்
கலித்துறை யாகையாலே பாவினம் என்கிறார் ஆகலுமாம்-
உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன
பரவு –இணை யடியே
வேறு ஒப்பற்ற ஒன்றுக்கு ஓன்று இணையம் படியான சேர்த்தி அழகு கண்டு –இணையடி -என்கிறார் .
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும்
வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி -1 8-3 – – என்று-ஸ்ரீ திருமங்கை மன்னன்
அசுரா வேசத்தாலே ஒன்றலராய் நின்ற மருது இற்று வீழ -நடந்த கண்ணன் அடிகளை-இணைத் தாமரை அடியாகக் கூறினார் .
அவ்வடிகளும் ஒப்பாகா எம்பெருமானார் இணை அடிகளுக்கு .
அங்கு இருவர் இற்று வீழ்ந்தனர் –
இங்கே பலர் அஞ்சிக் கொதிக்கின்றனர் –
தாமரையும் ஒப்பாகாமையால் –இணை தாமரை அடி -என்று இலர் –
பாவு தொல் சீர் கண்ணா என் பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -ஸ்ரீ தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் ஸ்ரீ எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
ஸ்ரீ ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது
———-
இராமானுசன் தன் இணை யடியே –
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி-1-8-3-
நீடு பனி மலர் மாலை இட்டு நின் இணை யடி தொழுது ஏத்தும் -3-5-5-
ஆழி வண்ண நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-1-
எனக்குமாதல் வேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-2-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டுளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-3
அஞ்சி வந்து நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-4-
மாகமா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மா மறையாளன் –பொன்னருள் எனக்கும்
ஆகவேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-5-
நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-7
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-8-
அவ்வரத்த வடி இணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -8-1-7-
முன்பொலா விராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி இணை பணிய நின்றார்க்கு -திருக் குறுந்தான்டகம்- -15
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்–பெருமாள் திருமொழி —-5-5-
நரங்கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது -இரண்டாம் திருவந்தாதி –-84-
எந்தை இணை அடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக வென்வாய்-17
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18-
அடி இணையை தன்னுடைய அங்கைககளால் தான் தடவ தான் கிடந்தது —பெரிய திருமடல் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை யருளாய் வந்தே -திருவாய்மொழி -3-2-4-
என் பரஞ்சுடரே என்று உன்னை யலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10-
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்மையே நின்ற வெம்பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே-8-4-4-
உதிப்பனவுத்தமர் சிந்தையுள்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி-1-10-9-
அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் ! இனி போயினால் அறையோ ! -3-5-8.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் -7-3-3..
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-
உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீர் இள ஞாயிறு இரண்டு போல் என்னுள்ள வா- திருவாய்மொழி–8-5-5-
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply