ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும் பதத்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் -இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர
ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் -இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார் மேல் நான்கு ஸ்லோகங்களால் –
வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-
ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும் தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே
தடையற நடக்கையாலும் நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்
வ்ருத்தயா பஸூர்
என்னுடைய விருத்தியைப் பார்த்தால் iஜன்ய ஜனக விபாகமற வார்த்தைக்கும் பஸூ விருத்தியோடே ஒக்கும்
நர வபு
எடுத்த உடம்பைப் பார்த்தால் ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய சரீரமாய் இருக்கும்
துசப்தத்தால் மனுஷ்ய சரீர பரிக்ரஹம் பண்ணி வர்த்திக்கிற அல்லாதாரில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்
மீத் ருஸோ அபி
கீழ்ச் சொன்னபடியே யுடையனாய் இருக்கச் செய் தேயும் -தம்முடைய தோஷ பரப்புக்கு பாசுரம் இடப் போகாமையாலே –
இப்படிப்பட்டவன் என்கிறார் –
நம்முடைய தோஷம் இதுவான பின்பு நாம் இவ்விஷயத்தை கிட்டுகை அயுக்தம் என்று கை வாங்க வேண்டி இருக்க
அது செய்யாத அளவன்றிக்கே-இவனைப் போலே ஆத்ம குண பூர்ணன் இல்லை –
ஆகையால் இவ்விஷயத்தை கிட்டிப் பரிமாறுகைக்கு இவன் அத்தனை அதிகாரிகள் இல்லை -என்று
அறிவில் தலை நின்றார்கள் எல்லாரும் தங்களில் ஏக கண்டராய் ப்ரீதிக்குப் போக்கு வீடு இட்டுப் புகழும் படி அன்றோ
இப்போதும் வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் கொண்டு வர்த்தியா நின்றேன்
யதீந்திர –
ரோக நிவர்த்தகனான பிஷக்கைப் பற்றி இருக்கச் செய்தேயும் நோயின் கையிலே துகையுண்ணும் வியாதி க்ரஸ்தனைப் போலே
ஆஸ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு சக்தரான தேவரீரைப் பற்றி இருக்கிற அடியேன்
இத் தோஷ சாகரத்தில் கிடந்தது அழுந்துகை பிராப்தமோ பிரானே என்கிறார்-
——————
துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணா கதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-
துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட–
தேவர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தை யுடைய நான் இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான
தேவரீருக்கு இடைவிடாமல் ஹர்ஷாவாஹனாய்ப் போர வேண்டி இருக்க -அது செய்யாத அளவன்றிக்கே
தத் விருத்த்யமாக துக்காவஹோமானாய்க் கொண்டு போறா நின்றேன் -இது என்னுடைய பிரதம பார்யா நிஷ்டை இருந்தபடி –
துஷ்ட சேஷ்ட
தயாதி குண பூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அருவருக்கும் படி துர் விருத்தியே யாய்த்து செய்து போருவது-
சப்தாதி போக நிரதஸ்
தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து அதுக்கு விருத்தமான சப்தாதி விஷய அனுபவத்தில்
ஒரு சர்வ சக்தியாலும் விடுவிக்க ஒண்ணாத படி மிகவும் பிரவணனாய்ப் போருகிறவன்
சரணா கதாக்ய-
சரணாகத்தான் என்கிற பேர் மாத்திரம் உள்ளது -அதிலும் நிஷ்டை இல்லை என்கை –
இத்தால் மத்யம பதார்த்த நிஷ்டா ஹானி சொல்கிறது
சப்தாதி போக நிரதஸ்-என்கையாலே த்ருதீய பதார்த்த நிஷ்டை இல்லை என்னும் இடம் சொல்லிற்று –
இதர விஷய ப்ரவணனாய் துஷ்ட வேஷ்டானாகையாலே இவனைக் கைக் கொள்ளப் போகிறது இல்லை –
சரணாகதன் என்றும் பேர் இட்டு இருக்கையாலே கை விடப் போகிறது இல்லை
இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாது இருக்கிற இவனை நாம் என் செய்வது என்று புண் படும் படி இருக்கையாலே
நித்யம் துக்காவாஹனாயே இருக்கை என்கை –
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே-மித்யாசராமி யதிராஜ —
நம்படி இதுவானால் -நமக்கும் இவ்விஷயத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு என்று நடுங்கிக் கடக்க வர்த்திக்க வேண்டி இருக்க
அது செய்யாதே தேவரீர் திருவடிகளில் ப்ரேம பரிபூர்ணரரைப் போலே க்ருத்ரிமமாக வரியா நின்றேன் –
ததோ அஸ்மி மூர்க்க —
நிஸ் ஸ்நேஹனாய் இருக்கச் செய்தே ஸ்நேஹ யுக்தரைப் போலே அனுகூல கைங்கர்யங்களை ஆசைப்படுவது –
அர்த்திப்பதாய்க் கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன் என்பது யாது ஒன்றாலே –
அத்தாலே மூர்க்கனாகா நின்றேன் என்கிறார் –
————————
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத்தேவதா ம்பி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –9-
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்-
அஹேதுகமாக அங்கீ கரித்து -ஸ்வ உபதேசத்தால் தத்வ ஞானத்தைப் பிறப்பித்து -ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான
திரு மந்திரத்தையும் சார்த்தமாக ப்ரசாதித்து அருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி இரவு பகல் அவஹிதனாய்
நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்யன் அருளிச் செய்தபடி அனுஷ்டியாமையாலும் –
தத் உபதிஷ்ட மந்த்ர ரஹஸ்யங்களை அநதி காரிகளுக்கு உபதேசிக்கையாலும் சர்வ காலமும் பிரதி க்ஷணம் பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே
மந்த்ரம் பரிபவாமி
அனுசந்தாக்களுக்கு ரக்ஷகமாய் இருக்கையாலே -மந்த்ர ஸ்வ பாவமாய் -சகல வேதாந்த சாரமான திரு அஷ்டாக்ஷரத்தையும்
ஆச்சார்யர் அதுக்கு அருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும்-அயதார்த்தத்தை அதுக்கு அர்த்தமாக நினைக்கையாலும்
அதின் சீர்மை குன்றும்படி பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே –
தத்தேவதா மபி-நித்யம் – பரிபவாமி
அந்த மந்திரத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான எம்பெருமானையும்
தத் ஸமாச்ரயணத்தைப் பற்ற ஸ்ருஷ்டங்களான கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காமையாலும் –
தத் இதர விஷயங்களில் ப்ரவணம் ஆக்குகையாலும் பரிதவியா நின்றேன் –
தத்தேவதா ம்பி ந கிஞ்சித ஹோபி பேமி-
எப்போதும் உத்தேச்யமாகவே அநு சன்யித்து கௌரவிக்கத் தக்க குரு மந்த்ர தேவதைகளை அநவரதம் பரிபவித்து
இதுவே யாத்ரையாய்ப் போரா நின்றால்-இதிலே ஒரு சுற்றும் பயம் இன்றிக்கே இரா நின்றேன்
இத்தம் ச ஸோபி
மேல் எழவென்றிக்கே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் சக்தனாய் இருக்கச் செய்தேயும்
அசடோப்ய அசடவத்–சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி —
ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் அபகரித்த மந்த்ர விஷயத்திலும் -தத் ப்ரதிபாதிதமான தேவதா விஷயத்திலும் யுக்த
கிரமம் தப்பாமல் யதா பிரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய்
தேவரீருடைய திருவடிகளில் சம்பந்தத்தை இட்டே நிரூபிக்கப் படுபவர்களான மஹாத்மாக்கள் நடுவே
குரு மந்த்ர தேவதைகள் அளவில் இவன் அத்தனை ப்ரேம அதிசயம் உடையவர்கள் இல்லை என்று தோற்றும்படி
நிரதிசய ஹர்ஷ யுக்தனாய்க் கொண்டு ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு இதஸ் ததஸ் சஞ்சரியா நின்றேன்
ததோஸ்மி மூர்க்க–
இப்படி குரு மந்த்ராதிகளை பரிஹரித்து அதில் ஒன்றும் பயமும் இன்றிக்கே -விலக்ஷணர் நடுவே புக்கு –
நானும் அவர்களில் ஒருவன் என்று கண்டவர்களுக்குத் தோற்றும் படி மசக்குப் பரலிட்டு களித்துத் திரியா நின்றேன் –
என்பது யாது ஓன்று உண்டோ அத்தாலே என் அத்தனை மூர்க்கர் இல்லை –
———————
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
அவ்விஷயங்களை பரிதவித்து -அதில் ஒரு பயமும் இன்றிக்கே விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே
அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-
ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே
க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –
ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –
சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவகுக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –
சராமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி –
த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வியாபாரங்களிலும் அந்வயித்த படியைப்
பற்ற பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி
ஸோஹம்
அபராத பண்ணின கையில் அராத இந்த பாபிஷ்டன்
தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-
ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –
ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்
யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபதாரத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –
——————–
இப்படி அக்ருத்ய கரண பகவத் அபராதிகளிலே அந்விதனாய் இருக்கச் செய்தேயும் அவற்றிலே அந்வயிதாவனைப் போலேயும்
வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவரும் இல்லை என்று விஷண்ணரான
இவரைப் பார்த்து எம்பெருமானார்
அனுதாபாதிகள் உண்டாகில் அவை தன்னடையே கழியும் காணும் என்று அருளிச் செய்ய
அனுதாபாதிகளிலே லேசமும் இல்லாமையால் இப்போதும் அக்ருத்ய கரணமே எனக்கு நித்ய அனுஷ்டானமாகச் செல்லா
நின்றது -என்று விண்ணப்பம் செய்கிறார்
பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –11–
பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத–
பயமாவது மேல் வரக் கடவ அனர்த்த விசேஷங்களுக்கு ஸூ சகமான விக்னங்களைக் கண்டு பிறக்குமது அன்றோ
இப்போது இத்தைச் செய்தால் மேல் நமக்கு அனர்த்தம் வரும் என்று வெருவுமவனுக்கு அப்படிப்பட்ட பயம் உண்டாகும்
நாம் அக்ருத்ய கரணத்தில் காட்டுவோம் அல்லோம் என்று அபிசந்தி விராமம் பிறந்து இருக்கச் செய்தேயும்
துர்வாசனையாலே நெஞ்சு கலங்கி நினைவரை அக்ருத்யத்திலே இறங்கினவனுக்கு அனுதாபம் உண்டாகும்
புத்தி பூர்வம் ப்ரவர்த்தியா நிற்கச் செய்தேயும் சிஷ்ட ஹர்ஹைக்கு அஞ்சினவனுக்கு லஜ்ஜையும் உண்டாகும்
இவற்றில் ஏதேனும் உண்டாயத்தாகில் மீளவும் பாபத்தைச் செய்கை எங்கனே கூடும்படி –
மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச–
மேல் வரும் அனர்த்தத்தை யாதல் -இப்போது உண்டான சிஷ்ட ஹர்ஹை யாதல் ஒன்றையும் நிரூபிக்க அறியாத
அஞ்ஞானத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யாதிகளிலே மண்டிப் போகும் எனக்கு ஏக தேசமும் பயாதிகள் உண்டானது இல்லை
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –
ஆகையால் அடுத்து அடுத்து பாபமே செய்யா நின்றேன் –
————————
சர்வேஸ்வரன் சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்தால் பாப கரணத்துக்கு இடமில்லை காணும் என்ன
அதுவும் அனுசந்திக்கைக்கு யோக்யதை இல்லாதபடி காம பரவச அந்தக்கரணனாய் இருக்கிறேன் என்கிறார்
அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ஹந்த த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–12 —
அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
ஸ்வ பர விபாகம் அற சகல வஸ்துக்களிலும் உள்ளொடு புறம்போடு வாசி அற வியாபித்து இருக்குமவனாய்
வியாப்ய வஸ்துக்களை ஸ்வ அதீனமாக நியமித்துக் கொண்டு போருமவனை-
உள்ளே இருக்கிற படியை அறிந்தால் -நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சில் இருக்கிறவன்
என் நினைந்து இருக்கும் என்று வேறுவி நெஞ்சால் பாப சிந்தை பண்ணப் போகாது
புறம்பு இருக்கிறபடியை அனுசந்தித்தால் உள்ளே அன்றோ அவன் புறம்பு இல்லை என்று
பாஹ்ய காரணங்கள் கொண்டு பாபம் செய்யப் போகாது
உள்ளும் புறமும் உள்ளவனாய் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய தண்டம் பண்ணி நியமிக்கைக்கு
சக்தன் அல்லவனாகில் பாபம் செய்யலுமாம் –
அங்கனும் இன்றிக்கே அபராத அநு ஸ்மரணம் உண்டிகைக்கு உரிய நிரங்குச ஸ்வ தந்திரனுமாய் இருந்தால்
எங்கனே பாபம் செய்யலாவது –
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண–
ஜாதி அந்த்யன் தன்னுடைய முன்னே நிற்கிறவனைக் காண மாட்டாதாப் போலே தத்வ ஞான ஸூந்யனான நான்
ஸர்வத்ர சன்னிஹிதனான சர்வ நியாந்தாவானவனைக் காண மாட்டுகிறிலேன்
ஆச்சார்ய உபதேசாதி லப்ய ஞானம் உண்டாய் இருக்கக் காண மாட்டாமைக்கு ஹேது என் என்ன அருளிச் செய்கிறார் –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் –
அவனைக் காண்கைக்கு சாதனமான நெஞ்சு காம பாரவசயத்தாலே கலங்கின பின்பு காண விரகு உண்டோ –
விஷய ப்ரவணமான நெஞ்சில் ஆச்சார்ய உபதேச லப்யமான ஞானத்தை ப்ரதிஷ்டிப்பிக்கை அரிது இறே
சத்தம் பவாமி
மனஸ்ஸூக்கு காம பாரவஸ்யம் காதாசித்கமம் ஆய்த்தாகில் அல்லாத காலங்களிலே யாகிலும் பகவத் அநு சந்தானம் பண்ணலாம் –
சர்வ காலங்களிலும் சித்தம் காம கலுஷமானால் எங்கனம் அநுஸந்திக்கும் படி –
பவாமி-
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே கால கலை ஏக லேசமும் காம பாரவஸ்யம் தவிர்ந்து இல்லை என்கிறது –
க்ஷணம் காலமாகிலும் வாஸூ தேவ சிந்தனத்துக்கு யோக்யமாகாதபடி பாழே போவதே -என்கிற விஷாதத்தாலே
ஹந்த என்கிறார்
த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–
சாஷாத்க்ருத பகவத் தத்வராய் நிரஸ்த ஸமஸ்த காமரானவர்கள் கிட்டி சேவிக்கும் படியான வைபவத்தை
யுடைய தேவரீர் திரு முன்பே வருகைக்கு
இப்படி இருக்கிற நான் அர்ஹனோ என்று தம்மையே தாம் நிந்தித்துக் கொண்டு அருளுகிறார் –
—————————————-————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply