ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-
தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி–
இதிலே அனுபவிக்கிற துக்கம் தான் ஓன்று இரண்டாய் -அத்தைக் கழித்துக் கொள்ளாது ஒழிகிறதோ
கர்மம் ஏகவிதமாகில் இறே தத் பலமான துக்கமும் ஏக விதமாய் இருப்பது –
கர்ம அநு குணமாக அனுபாவ்யமான துக்கம் ஆத்யாத்மிகாதி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் ஆத்யாத்மிகம் தான் சாரீரம் என்றும் மாசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
சாரீரம் தான் ஜ்வராதி வியாதிகளால் அநேக விதமாய் இருக்கும் –
மாநசம் காம க்ரோதாதிகளால் வருகிற வியசனம்
ஆதி பவ்திகமாவது -மிருக பக்ஷியாதிகளால் வரும் வியசனம்
ஆதி தைவிகமாவது-சீதோஷ்ணாதிகளால் வரும் வியசனம்
இப்படி மூவகைப்பட்ட தாப சமூகங்களால் உண்டான துக்க சாகரத்தில் உத்தர உத்தரம் அவகாஹியா நிற்கச் செய் தேயும்
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ-
சர்வம் மா ஸூபம்-என்கிற லௌகிகர் படியும் கடந்து இருக்கிற தூக்காஸ்பதமான சரீரத்தைக் குறைவற
நோக்கிக் கொள்ளுகையிலே யாய்த்து இப்போது ருசி
து
லௌகிகர் படியில் தமக்கு உண்டான விசேஷம்
ந தந் நிவ்ருத்தௌ-
அந்த ருசி இதனுடைய நிவ்ருத்தியிலும் ஒருக்கால் உண்டாய்த்து ஆகில் இத்தை விடுவித்துக் கொள்ளலாய்த்துக் கிடீர்
ஏதஸ்ய காரண
இதுக்கு காரணம் நான் பண்ணின பாபமே அன்றோ ஐயோ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
நாத
இது அநாத வஸ்துவாய்த் தான் இங்கனம் எளிவரவு படுகிறதோ
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம்
இஸ் சம்பந்தத்தைப் பார்த்து சர்வத்தையும் ஸூபமாக விரும்புகிற இவன் மென்மேலும் அனர்த்தத்தை விளைத்துக் கொள்ளும்
என்று சடக்கென அந்த பாபத்தை போக்கி அருள வேணும் -என்கிறார் –
————
இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ -ஆனபின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –
தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை
என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –
அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்
வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –14–
வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
மொழியைக் கடக்கும் பெறும் புகழான் -என்கிறபடி இவ்வளவு என்று வாக்கால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
நிஸ் சீமமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையராய் –
தன் திறத்திலே தீரக் கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் பெருமாளோடு ஒரு தலையாக மன்றாடி ரஷிக்கும்
பரம கிருபாவான் ஆகையால் -ஆச்சார்ய ச்ரேஷ்டராயும் உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த
அந்த நைச்யத்துக்கும் பாத்திரம் கீழ்ச் சொன்ன ஸ்வ பாவத்தை யுடைய நான் ஒருவனுமேயாய் இருக்கும்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்–
ஆராய்ந்து பார்த்தால் இஜ்ஜகத்தில் இப்படிப்பட்ட தோஷத்தை யுடையவன் ஒருவனும் இல்லை
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –
தேவரின் கிருபைக்கு வயிறு நிறையும்படிக்கு ஈடான தோஷ பூர்த்தி எனக்கு உண்டாகையாலே
தேவரீர் கிருபையே எனக்குப் புகல்
ஆர்ய
இவ்விஷயம் தேவரீர் அறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
மோக்ஷ ஏக ஹேதுவான சாதுர்யத்தை யுடைய சதுர அஷரியான திருநாமம் போதாதோ
ந சேத் ராமாநுஜேத் அக்ஷரா சதுரா சதுர் அக்ஷரீ -என்னக் கடவது இறே –
————————
இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கணக்கா கணக்கா ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழுமடை கொள்ளும் என்று இருக்கிறார்
ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-
ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்-
பரி ஸூத்த அந்தக்கரணரான ஸ்ரீ ஆளவந்தார் -ஆச்சார்ய உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வான் -அவர் திரு மகனாரான ஸ்ரீ பட்டர்
இவர்கள் ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே
அமர்யாத–ஸூய்வாப நோப-அதி க்ரம அஞ்ஞானம் – இத்யாதிகளில் அருளிச் செய்த எல்லா நைச்சியமும்
திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்
ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்
அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே-தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே-
இந்த லோகத்தில் இக்காலத்தில் நான் ஒருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகா நின்றது என்பது யாதொன்று –
ஆகையால் தேவரீர் கிருபையே எனக்கு உஜ்ஜீவன உபாயம் –
இஹ லோகே
லோகாந்தரங்களில் உண்டாகில் தெரியாது
அத்யா
காலாந்தரத்தில் உண்டாகில் தெரியாது
அ சங்குசிதம்-
உண்டாகில் இப்படிக் குறைவற உண்டாகக் கூடாது -ஆகையால் இங்கனம் ஒத்த விஷயம்
தேவரீர் கிருபைக்கு வேறே எங்கும் எப்பொழுதும் இல்லை –
அடியேனுக்கும் தேவரீர் கிருபை ஒழிய வேறே புகல் இல்லை என்றபடி -இல்லை
இத்தால்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
அருட்க்கும் அஃதே புகல் 46–என்றத்தைச் சொன்னபடி –
—————————-
இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும் பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார்
சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-
சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா-நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்ருதீய பதத்தில் சொன்ன அநந்ய போக்யத்துக்கு சப்தாதி அனுபவம் இறே விரோதி யாகையாலே
அவித்யா நிவ்ருத்தியை அபேஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
இந்த ருசியால் அன்றோ அநாதி காலம் ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தை இழந்தது என்று
அதன் பேர் சொல்லவும் அஸஹ்யமாய் இருக்கிறதாய்த்து –
யாது சததா வி நாசம் -என்னுமா போலே உருக்காண ஒண்ணாத படி நசிக்க வேணும்
தேக அவசா நத்திலே தன்னடையே நசியாதோ என்ன
இஹ –நஷ்டா பவத்
இஸ் சரீரத்தோடு இருக்கிற இப்பொழுதே நசிக்க வேணும்
அன்றிக்கே
பேர் அளவு உடையவர்களையும் தன் கீழ் ஆக்கி சப்தாதிகள் தனிக் கோல் செலுத்துகிற இவ்விபூதியிலே என்னவுமாம்
அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக் கிடக்கிற இது நசிக்கும் போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
நமக்கு சேஷமாய் வைத்து இவ்வஸ்து இவ்விஷயங்களின் காலிலே துகை யுண்வதே
இதன் கையில் இவன் இனி நலிவு படாமல் ஒழிவான் என்று தேவரீர் கிருபை பண்ணில் பிழைக்கலாம் அத்தனை –
கிருபா மாத்திரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப் போமோ என்ன
அருளிச் செய்கிறார்
யதீந்த்ர -என்று –
விஷயங்களை திரஸ்கரிக்கும் சக்திமான்களான யதிகளுக்கு தலைவரான தேவரீருக்கு முடியாதது உண்டோ –
இவ்வளவோ மற்றும் வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது ஆனு ஷங்கிகம் வேறே ஒரு பிரயோஜனம் உண்டு என்று தமக்கு அபேக்ஷித்தமான புருஷார்த்தத்தையே அபேக்ஷிக்கிறார் –
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
தேவரீர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாக உடைய சேஷ பூதருடைய பரம்பரையில் எல்லை நிலத்தில்
நிற்கிறவர்கள் யாவர் ஒருவர் அவர் திருவடிகளில் சேஷத்வம் ஒன்றிலுமே ஒருபடிப்பட்ட ரசத்தை யுடையனாகையே
இடைவிடாமல் எனக்கு நடக்க வேணும் –
மமாஸ்து
இதுவே புருஷார்த்தம் என்று அறுதி இட்டு இருக்கிற எனக்கு இது உண்டாவதாக
இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதவர்கள் இழந்தார்கள் என்று ருசி யுடைய எனக்கும் இழக்க வேணுமோ –
———————————————————–————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply