Archive for January, 2018

ஸ்ரீ திருப்பாவை சாரம் – குத்து விளக்கு எரிய — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

இவள் திறக்கப் புக–நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி —
அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்
அவளை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு–
என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்–
ந கச்சின் ந அபராதி -என்னுமவளும்
இருவரும் உண்டு என்கை-மிதுனமே தஞ்சம்-
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்கு தஞ்சமாய் இருப்பதொரு மிதுனம் உண்டு என்கிறது –
தனித் தனியே பற்றுமவர்கள் தங்கையும் தமையனும் பட்ட பாடு படுவார்கள்
தனியன் -பட்டர் -இத்தைக் கொண்டே–நீளா துங்க —பாரார்த்த்யம் –
சிற்றம் சிறு காலை பாசுரம் —இரண்டும் சாரமான பாசுரங்கள்
எம்பெருமான் கை கீழே கீழ் பாசுரம்–
இங்கே மேல் ஓங்கி அவன் மார்பு விசாலம் என்று–கிருபை மிக்கு என்பதை காட்ட-
சேர்ப்பதற்கு முன் அவள் மன்னாடும் –
சேர்த்த பின் இவள் மன்னாடும்–நாம் இப்படி பட்டவர்களை தஞ்சமாக
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கோயில் சீய்த்து–ஆள்கின்றான் ஆழியான்–
அம்பின் கூர்மையையும்-கூர் அம்பன் அல்லால் குறை -இல்லை துணை –
கூர்மையையும் புகரையும் நினைத்து பகவத் நிஷ்டர்
மை தடம் கண்ணினாய் -கண்ணின் கூர்மை புகர் -அவன் அம்பையும் ஏவுமே- நமக்கு தஞ்சம் –

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்-
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே–
கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட் கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே–
பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டு–படுக்கையிலே கிடக்கப் பெறுவதே–
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க ஓர் நிலை விளக்கு உண்டாவதே –
ஞானம் பிரகாசிக்க
கிருஷ்ணனும் நாங்களும் விளக்கும் படுக்கையும் ஆக வேண்டாமா–
உன்னுடைய அனுபவத்துக்கு இது தான் பிரயோஜனம்
உண்ணாதார்க்கு உண்டார் -கொடுக்க வேண்டாவோ–
குத்து விளக்கு வேண்டிய இடத்தில் பேர்த்து-நிலை விளக்கு போலே இல்லை–
வேண்டிய இடம் வைத்து கைங்கர்யம் செய்ய நாங்கள் வேண்டாவோ
புறம்பே ஒரு கொடி விளக்கு
தோரண விளக்கு பிரகாசிக்காமல்–
உள்ளே குத்து விளக்கு பிரகாசிக்க
கோபிகள் துக்கம் நப்பின்னை மட்டும்–
குத்து விளக்கு நப்பின்னை–கொடி விளக்கு கோபிகள்-
ஆயர் பாடிக்கு அணி விளக்கு பிரகாசிக்கைக்கு இட்ட நிலா விளக்கு இவள் இறே
இவள் தன்னை காட்டுகையலே ஸ்வயம் பிரகாசகம்–பாரதந்த்ர்யம் கொண்டு அவன் தன்னை காட்டாமல்
ராமன் -ஜனகாத்மஜா அப்ரமேயம்–
திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும்

கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இறே —வீர பத்னி ஆகையாலே
இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே
உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –
சதுர்வித கர்த்ருத்வ மூலமான–அஹங்கார கார்யமான–
சேஷத்வே கர்த்ருத்வம்–ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வம்-கர்த்ருத்வே கர்த்ருத்வம்–போக்த்ருத்வே கர்த்ருத்வம்–
ஆகிற கால்களை உடைத்தாய்
அந்த கர்த்ருத்வ விஷயமான–தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற–பட்டங்களை உடைத்தாய்-
தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற-கட்டில் மேல் என்கிறது –

தபம் தூய்மை இரக்கம் உண்மை நான்கு கால்கள் -கலி யுகம் –
ஸ்ரீ மத் பாகவதம் கதை -கலி புருஷனுக்கு இடம் கொடுத்த பரிஷத்
தங்கத்தில் ஆசை -உள்ள இடமும் ஒன்றே –

மெத்தென்ற –
மெத்தை ஆகிலும்–கட்டில் -ஜாதி பேச்சு–கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே —கண் உறங்குவதே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
மெத்தென்ன பஞ்ச சயனம் -அழகு குளிர்ந்தி மென்மை பரிமளம் வெண்மை–மென்மை-விசேஷித்து
துளிர் மலர் பஞ்சு மெல்லிய கம்பளம் பட்டு -இவற்றால் என்றுமாம்–பஞ்சால் ஆன என்றுமாம்
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாய் இறே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் —பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –
சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே–மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற–படுக்கையின் மேலேறி –

பஞ்ச சயனம் -அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி

மேலேறி –
நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ–நீ படுக்கையிலே ஏறுவது என்கை –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக–அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்
காலம் அலர்த்துமா போலே–அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை —வாசம் செய் பூம் குழலாள் இறே –

கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை —
கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் –
கொங்கை மேல் வைத்து கிடந்த -அவளை இழுத்து தன மேல் கொண்ட அவதாரிகை படி
பிரணயம் இருக்குமாறு —
மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே —
மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இறே —

மலர் மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே–அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ-என்னில் விரோதியாது–
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –
வர்க்கம் வர்க்கம் ஆகிற–விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய
பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற–அளகபாரத்தை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு–
அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
மலர் மார்பா –
மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது -இது ஸ்வரூபம் பற்றி –
அபிமத ஜன லாபத்தாலே அவிகாராயா இருப்பவனும் விகாரம்
யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தன பந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
அடைக்கலத்து ஓங்கும் –புடைகலர்ந்தானை –திருவிருத்தம் புடைக்க அலர்ந்தானை –அலந்தானை இல்லை –

கொங்கை மேல் வைத்துக் கிடந்த
திருவிடவெந்தை அனுபவம் -ஸூ சகம்-கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் –
திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –

வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே–ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே–உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு–ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது–மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –
நீ வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றவாறே –
அவன் வாய் திறக்கப் புக –
அவனை நீ க்ரமம் தப்பி நடப்பதே -என்று கண்ணாலே அதட்ட–
அவனை எழுப்புகைக்காக–மீளவும் அவளை எழுப்புகிறார்கள்
பிரிக்க ஒண்ணாது இறே -மிடற்று ஓசையே வாழ்விக்குமே
கூவுதல் வருதல் செய்யாதே -என்று ஆழ்வாரும் கூவுதலையே முதலில் அபேக்ஷிக்கிறார்
மிதுனத்தை பிரிக்கக் கூடாது என்று
பின்னர் வந்தாலும் மிதுனம் உடனே வருவான் என்று தேறி வருதல் என்றும் அருளிச் செய்கிறார் –
உன்னால் அல்லாது செல்லாது இருக்க எங்களுக்கு–வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என்
திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே–நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்–
கிடந்த இடத்தே கிடந்து- மாசுசா என்னவும் அரிதோ
உன் மார்பை நப்பின்னைக்கு தந்தாய் ஆகிலும் வாயையாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
நாங்களும் உன்னைப் போலே மைத் தடம் கண்ணிகளாக வேண்டாவோ
பொதுவாக உண்பதனை நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே

மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக —நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று–
கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்-
அஸி தேஷிணாம்–அக் கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-
மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ
நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்–எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —
அது இழவுக்கு உடலாவதே –
சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே–விஸ்ருங்கமான–ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –
மைத்தடம் கண்ணினாய் –
சித்தாஞ்சனம்-ஞான விகாசம்பெற்ற

நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ–அவனை விலக்கக் கடவையோ –
ஸ்வரூப யாதாம்ய தர்சியான நீ –

உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய–உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு–எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே–இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –

வாய் திறவாய் –மார்பனை -அவள் இடம் பிரிக்கும் ராவணன் இல்லையே இவர்கள் –
திரு சோதி வாய் திறந்து அங்கே இருந்து –
இவள் அணைப்பில் இருந்து வாய் திறந்தால் தானே நமக்கு அனுக்ரஹம் –
உனக்கு ஒரு வார்த்தை -எங்ககளுக்கு வாழ்வு –
கண்ணாலே இவள் தடுக்க -மைத்தடம் கண்ணினாய் -இதற்கவோ உன் திருக் கண்கள்
உன் மணாளன் -பிரித்து -பதிம் விஸ்வஸ்ய -மறந்தாய் -நம் மணாளன் அன்றோ –
கீழே தனியாக -இங்கு சேர்த்தியிலே புருஷகாரம்

எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ —அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத–உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விச்லேஷமும்–பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு–உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –
சம்ச்லேஷ அர்த்தமான விச்லேஷமும் நீ பொறுக்குகிறிலை-அது உன் குற்றமோ-உன் பல ஹானியின் குறை
அத்யல்ப காலமும்–நித்ராப்ரதமான படுக்கையின் நின்றும்–எழுந்திருக்க ஒட்டுகிறது இல்லை
ஒட்டுதல் -சம்மதித்தல்–ஏன் என்னில் –
சம்போக வ்யஸ்தமாக கட்டின கை நெகிழ்கிலும் உடம்பு வெளுப்புதீ
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய்–
புணர்ச்சிக்காக பிரியிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி

எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாத –
ஆச்சார்யனை பிரிந்து இருக்க மாட்டாத சிஷ்யன்

தத்வம் அன்று தகவு –
தத்வம் –
சத்யம்–
தகவன்று –
தர்மம் அன்று–
எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று —தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்
அதவா
தத்வமன்று–தத்வம் -ஸ்வரூபம் —உன் ஸ்வரூபத்துக்கும் போராது –
தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது–
உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது
கிருபைக்கும் போராது –
தத்துவமன்று தகவு –
ஆகிலும் புருஷகார பூதையான உனக்கு-எம்பெருமானை நம்மோடு சேர ஒட்டாமல்
பண்ணுகை ஸ்வரூபம் அன்று-
தத்துவம் அன்று தகவு
தத்துவம் –
நாங்கள் சொன்னது ஆற்றாமையால் கண்ணாம் சுழலை இட்டு சொன்னது அன்று
உண்மையே சொன்னோம் இத்தனை காண்
அன்று தகவு –
எங்கள் பக்கலிலும் நீ இங்கன் உபேஷை தோற்ற இருப்பது தருமம் அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவு –
உனக்கு நீர்மை உண்டு எனபது உண்மை அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவன்று –
தத்வமஸி வாக்யார்த்தம் பிறர் சொல்வது தகவு அன்று
தத்துவம் அன்றி தகவும் அன்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை-
தகவு உண்டு என்று சொன்னது உண்மை இல்லை
தத்தவம் உண்மை இல்லை கிருபை
கிருபை உண்டு சொன்னது உண்மை இல்லை
ந கச்சின் ந அபராதி அவன் -திருவடி பரிகரம் நலியும் பொழுது தான்
உன் பரிகரம் அவனால் நோவு படும் பொழுது சொல்ல வேண்டாமா —
பார்த்து இருக்கும்–ஷிபாமி என்றவன் உடன் உன்னோடு வாசி இல்லை
தத்துவம் –
இன்றியமையாமை -உயிர் நிலையாய் இருப்பவன்
தத்துவனை வரக் கூவி-தலை யல்லால் கை மாறு இல்லை -தலையை அறுத்து கொடுப்பது இல்லை
நாயகன் வந்தால் கூட வேண்டுமே பெற்றி -நம்பிள்ளை –
தலையை காலில் வைத்து வணங்கி காலம் எல்லாம் பணி செய்து கிடப்பேன் –
இட்ட கைங்கர்யங்களை உகந்து பணி செய்வேன் என்றபடி –
ஆசார்யர் அடிகளில் பணிந்து கால ஷேபம் கேட்டே அறிய வேண்டும் உணர்ந்தேன் என்றாராம்

தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும்-
குத்து விளக்கு -ஜங்கமம் இருக்கும்
குத்து விளக்கு எரிய –
நம்பி பக்கலில் அர்த்த விசேஷம் கேட்டு அறிய
கோட்டு -கோட்டி
கால் கட்டு -திருவடி தொட்டு சபதம் செய்து கொடுத்த பின் அர்த்த விசேஷம் அருளியது ஸூசகம்
மேல் ஏறி -சன்னதியின் மேல் ஏறி
ஆச்சார்யர் திவ்ய ஆஞ்ஞையைக் கடந்து–இத்தாலே மலர் மார்பா- ஹிருதய வைசால்யம்

தோரண விளக்கு திருக் கோஷ்டியூர் நம்பி
திருமாலை ஆண்டான் -கிடாம்பி ஆச்சான் 2/3 இடங்களில் தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி –
அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால்-எம்பெருமானார் நிர்வாகம்
குத்து விளக்கு எம்பெருமானார் -எங்கும் கொண்டு போகலாம்

கோட்டுக்கால் கட்டில் கால்–
நான்கு தேகம் -வர்ணம் -ஆஸ்ரமம் அதிகாரம் -பலம் -மோக்ஷம் -கதி -யுகம் -தர்மம் –
வ்யூஹம் -ரூபம் -கிரியாதிகள் ஆகிய –13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–
சாஸ்திரம்
மெத்தன்ன சயனம்
ஐஞ்சு லஷணங்கள் –
அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதற்க்கு உள்ளே உண்டு அர்த்த பஞ்சகம்
மேல் ஏறி
கட்டில் மேல்
மேல்
மறுபடியும் மேல் ஏறி

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
சிஷ்ய ஷ்ரேஷ்டருடைய ஞான பக்திகளிலே வியப்பு கொண்டு இரா நின்ற ஆச்சார்ய ஸார்வ ப்வ்மரே-
திரு சோதி வாய் திறந்து உபதேசங்கள் செய்து அருள வேணுமே –
மெத்தென்ற பஞ்ச சயனம்
பஞ்ச சயனம் –மென்மை குளிர்ச்சி நறுமணம் வெண்மை விரிவு -மென்மை இருக்கச் செய்தே
தனி விசேஷணம் பிரதானம் -அர்த்த பஞ்சக ஞானம் –
கோட்டுக்கால் கட்டில்
சாஸ்த்ரங்களே கட்டில் -சதுர்வித வர்ணம் -ஆஸ்ரமம் அதிகாரம் -பலம் -மோக்ஷம் -கத்தி -யுகம் -தர்மம் –
வ்யூஹம் -ரூபம் -கிரியாதிகள் ஆகிய –13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–
கோடு-யானைத் தந்தம்
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை ஆடி வந்த கண்ணன்
யானைத் தந்தங்கள் கொண்டே கட்டில் கால் அமைப்பான நப்பின்னைப் பிராட்டிக்கு
ஆச்சார்யர் பர சமயி மத வேழங்களை வென்று முடித்து அந்த விஜயம் தோன்ற
வீற்று இருக்கும் இருப்பு அன்றோ
சாஸ்திரம்-எதுக்கு என்றால்
குத்து விளக்கு எரிய
ஞான விகாசம் உண்டாக்கவே –

கர்த்தரி ஸ்ரயதே -லஷ்மி ஆச்ரயிக்கிறாள்
கர்மணி -லஷ்மியை அடைந்தேன் -ஸ்ரீ யாதே
ஸ்ருனோதி- ஸ்ராவயதி– கேட்டு கேட்பிப்பவள் –
ஒழிக்கிறாள் -பாபங்களை / சேர்த்து வைக்கிறாள் அவன் உடன்-இப்படி ஆறும்
பரியங்க வித்யா பிரகரணம் கௌஷீததி உபநிஷத்
மாடி -காட்டில்- மெத்தை -மேல் உறங்கி –
ஹிருதயம் -நாடி விசேஷம்- ப்ரஹ்மத்தின் இடம்- ஆத்மா
உரிமையுடன் மிதுனத்தை எழுப்பி தத்வம் அன்று தகவும் அன்று –
மா சதிர் பெற்று நம்முடைய வாழ்வு / பெற்று /சதிர் இது பெற்று / மா சதிர் இது பெற்று
வீர பத்தினிகள் படி அன்றோ பிரபன்னர் படி பாஹு ராமஸ்ய நிழலில் இருக்க பயமோ வெய்யிலோ தெரியாதே –
முறை உணர்ந்து நெருங்க நெருங்க -அபயம்/ இந்த முறை தான் கோட்டுக் கால் கட்டில் -/
முறை இடுவது முறைமையை உணர்த்துதலே-/நம்முடையவர் என்று உணர்வதே உஜ்ஜீவன ஹேது
ஒண்ணான வானமா மலை ஸ்வாமி -சின்னி அம்மாள் -கேள்வி –
நாடு எது -திரு வழுதி வள நாடு /ஊர் எது திருக் குருகூர் /வீடு -பண்டுவையாள் வீடு / குலம் அச் யுத்த குலம்/
வேதம் எது திராவிட வேதம் /கோத்ரம் -பராங்குச கோத்ரம் / சூத்ரம் ராமானுஜ சூத்ரம் / காரிகை -பர கால காரிகை /
குடி -அஞ்சு குடி / பந்து யார் -ஆத்ம பந்து / உறவு -பகவத் -ஒட்டு அறுத்தவர் உறவு -கொண்ட பெண்டிர் /
உற்றார் யார் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை உணர்ந்தவர் / தாய் ஸ்ரீ வர மங்கை தம்மப்பன் -தெய்வ நாயகன் /
புகுந்த இடம் வான மா மலை பார்த்தா நீரே /உத்யோகம் -பாகவத கைங்கர்யம் /மாமனார்-மா முனிகள் காந்த உபயந்தா -மூல புருஷர் /
பிரயோஜனம் இதுவே ஸ்வயம் -இத்தை அறிந்த ஞானமே பேறு-பாகவத சாத்மிக அபிமானம் / அதிகாரம் -சர்வ அதிகாரம் /
நிஷ்டை பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சரம உபாயம் -திருவடி ஸ்தானீயர் -/
பாகவத அபிமானம் -கேசவ பக்தியோ பாகவத சமாகமோ -இது இல்லை என்றால் அது ./
பிரார்த்தனை எது -கைங்கர்யமே -இப்படி -24-கேள்விகள் /
கட்டில் முறைமை அறிந்து -அர்த்த பஞ்சக ஞானம் -பஞ்ச சயனம் -பயம் இல்லாமல் இருக்கலாமே
/ இந்த நிஷ்டை அறிந்தோம் என்று அறிவிக்க மலர் மார்பன் ஆவான்

சீரிய சிங்காசனம் –
ஆசனம்
சிங்காசனம்
சீரிய மூன்று
மூன்றும் உண்டே
பேத அபேத கடக ஸ்ருதி
சீரார் வளை ஒலிப்ப மூன்றும்
செந்தாமரைக் கை மூன்றும் இத்தையே குறிக்கும் –

—————-

குத்து விளக்கெரிய – ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது.
இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல)ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம்.
குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது,
பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்),
விபவ (அவதார நிலைகள்), அர்ச்ச (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும்
அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.

இன்னொரு விதத்தில் “குத்து விளக்கெரிய” என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு,
அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!

“குத்து விளக்கு” (பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாம்.
தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.

கோட்டுக்கால் கட்டில் – கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி)
என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.

இன்னொரு விதத்தில், இவை “நான்” என்ற அகந்தையின் 4 நிலைகளை
(நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம்.
பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! “நான்” என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி – பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட)
குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை “மேலேறி” என்பது உணர்த்துகிறது!

கொத்தலர் பூ – பரமனையும், பிராட்டியையும் சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டத்தைக் குறிக்கிறது.

மலர் மார்பா – பரமனின் கருணை வடிவைக் குறிக்கிறது.

வாய் திறவாய் – திருவருளுக்காக தொழுது நிற்கிறோம், எங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்வாய்!
நம்மாழ்வாரின் திருவாய்மொழி வாக்கியத்தை “தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன் தாமரைக் கண்களால் நோக்காய்*” நினைவு கூர்க!

மைத்தடங்கண்ணினாய் – கிருஷ்ண பக்தியில் (மை) உருகி நிற்கும் உத்தம அடியவரைக் குறிக்கிறது.

நீ உன் மணாளனை – ஆச்சார்யனை (குருவை) குறிப்பில் சொல்வதாம்.

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் – எங்கள் அஞ்ஞான இருளை விலக்க வல்ல குருவின் உபதேசத்தை
அடியவர் நாங்கள் பெற தடையாக இருத்தல் கூடாது!

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று – பரமனை விட்டு பிரியாத நிலை வேண்டும் வேண்டும்
அடியவர் மனநிலையை குறிப்பில் உணர்த்துவதாம்! அதுவே பேரின்பம் (தத்துவம்). மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்கிக் கொள்வது தத்துவமன்று!!!

“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு” என்று விஷ்ணுசித்தர் பாடியதை நினைவு கூர்க 🙂

தகவேலோ – பரமனின் முழுமையான அருளின்றி, மேற்கூறியது (முக்தி) நடைபெறாது.

மேலும், இங்கு “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற கோதை நாச்சியார் வாக்கியம்,
“அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா” என்ற நம்மழ்வரின் பாசுர வரியை நினைவூட்டுகிறது தானே!

தத்துவம் = தத் + த்வம் = பரமன் + பிராட்டி எனும் போது, திருமாலும் திருமகளும் பிரிக்க முடியாதவர் என்பது விளங்குகிறது.

———————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – உந்து மத களிற்றன் — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே தங்களுக்கு புருஷகார பூதையான
நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
அவள் புருஷகாரமாக அவனைப் பற்றுவதே பல வ்யாப்தம் ஆவது-
இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம் –
அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்பணகை அனர்த்தப் பட்டாள் இறே
பெருமாளை ஒழிய பிராட்டியைப் பற்றின ராவணனும் அனர்த்தப் பட்டான்
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழ்வது
அபிநிவேச ப்ரேரிதர்கள் ஆகையால் முந்துறவே கிருஷ்ணன் பக்கலிலே மேல் விழுந்தார்கள் இவர்கள்
அங்கு கார்யம் பலியாமையாலே வழியே போக வேணும் என்று புருஷகாரத்தில் இழிந்தார்கள் –
ஆஸ்ரயண வேளையிலே இறே க்ரமம் பார்ப்பது –
போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாது இறே-

பிராட்டிக்கு வேற புருஷகாரம் வேண்டாமே அவளுடைய கருணையே-
வெந்நீரை ஆற்ற தானே தண்ணீர் வேணும்
பர தசையில் நாய்ச்சியார் மூவரையும்
வ்யூஹ தசையில் இருவரையும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையும்
ஸ்ரீ வரஹாவதாரத்தில் ஸ்ரீ பூமி பிராட்டி ஒருவரையும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியையும்,முன்னிடிவது சம்ப்ரதாயம்

மா சதிர் இது பெற்று–
ஸூய பிரயத்னம் அடைவது இழிவு இழிம்பு-எளிவரவு தாழ்வு
கிருபையாலே பெறுவது சதிர்–
பிராட்டி முன்னிட்டு பெறுவது மா சதிர்-
எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்தது -செய்த கார்யம் –
மாதவன் என்றதே கொண்டு —தீதவம் கெடுக்கும்–உபாயம் –
உக்தி மாத்ரம் இவர் மட்டும்
பலன் சம்பந்தி எமர் யெழ் எழு பிறப்பும் வெள்ளம் இட்டது
திருக்கண்டேன் —சார்வு பூ மேல் அமர்ந்த திரு -பேய் ஆழ்வார் மட்டும்
தேன் அமரும் பூ மேல் திரு —சார்வு நமக்கு என்றும்
சக்கரத்தானும் முயங்கும் திரு மகதா பெரிய பெயர் பெற்றார் –பேய் ஆழ்வார்-
எம்பெருமானாரும் -கத்ய த்ரயத்தில் -த்வய நிஷ்டை உண்டாக பிராட்டி-

நப்பின்னை இடம் சரணம் புக்கு இதில்
அனந்தரம்-அடுத்து இரண்டு சேர்த்து -உபாய சித்திக்கு உடலாகா -மலர் மார்பா -அவனை பற்றி –
புருஷகாரமாக அவளை பூர்வ வாக்கியம்
அடுத்த பாசுரம் உபாய சித்திக்கு இருவரையும் பற்றி -கலியே -திருவே- துயில் எழாய்-
உத்தர வாக்கியம்–அப்புறம் கண்ணனை மட்டும் -அடைய –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

உந்து மத களிற்றன்-
மதத்தை உந்தா நின்றுள்ள களிறு –
மத்த கஜம் போலே இருக்கும் பலத்தை உடையவன் –
ஆனைகளுடன் பொரும்படியான மிடுக்கை உடையவன் -என்கை –
உன்மஸ்தகமான அஹங்காரத்தை வெல்லும் பலத்தை உடைய –
ஸ்ரீ வஸூதேவரும் இவரும் ஒரு மிடறு அங்கு இருக்கும் களிறுகள் இங்கே இருக்க தட்டில்லை
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
மிடுக்கு -வாரணம் பைய நின்று ஊர்வது போலே இவன் வயிற்றில் பிறந்ததால்
உந்து -தள்ளுகின்ற -யானையை விட -தள்ளும் மிடுக்கு–யானை உடையவர் கண்ணனே யானை
கிருஷ்ணன் யானை கொன்றது சர்வ சக்தித்வத்தால் இல்லை இவர் பிள்ளை

ஓடாத தோள் வலியன் –
பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் –
நாட்டில் நடையாடாத தோள் வலியன் -என்னவுமாம் -இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று
தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –
அங்கோர் ஆய்க் குலம் -என்று கம்சன் படை வீடான ஸ்ரீ மதுரையை நினைத்து
அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –
ஜகத் விலஷணமான ஞான பலத்தை உடையவனாய் –
ஞானக் கை -என்னக் கடவது இறே –
அஹங்காரத்துக்கு பிற்காலியாத ஞான பலத்தை உடையவன் என்றுமாம் –

தோள் வலியன் –
நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே –
கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாய் இருக்கை –
கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல மிடுக்கை உடையவர் இறே –
அஞ்சினான் புகல் இடம் -அசைலம் -போலே–கிஷ்கிந்தை சுக்ரீவன் -வாலி சாபம்
திருவாய்ப்பாடி அஞ்சினான் புகல் இடம்–அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்–
அச்சம் கெடுவது இடைச் சேரி என்று இறே-

நந்தகோபாலன் மருமகளே –
ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று -அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே
ஆனந்த நிர்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆச்சார்யன் உடைய -மருமகள்
ஆசார்யனுக்கு எம்பெருமான் புத்ரவத் விதேயன் ஆனால் – பிராட்டி மருமகள் ஆகக் குறை இல்லை இறே –
நந்தகோபன் குமரன் போல் இவளுக்கும் அவனை இட்டே
நந்த கோபாலா எழுந்திராய்
இவர்கள் சொல்லும் படி நீர்மையும் உடையவன் தாழ விட்டு கொண்டு மருமகளே -ஆசைப்பட்ட
கிருஷ்ணன் -மச்சினி பால்யத்தில் இங்கே வளர -பிறந்த அன்றே இங்கே இருக்க இங்கே வளர –
இவள் உகக்கும் கும்பனே அறியாள்
முக்தனுக்கு சம்சாரம் போலே இவளுக்கு பிறந்தகம்
கிருபை வேணும்–அறம் செய்யும் நந்த கோபாலன் மருமகளாக இருந்தால் தான் கிருபை இருக்கும்
மாமனார் இருந்தார் ஆகில் -இவ்வார்த்தை அசோக வனம் சிறை இருப்பேனா —மிதிலை நினைக்க வில்லையே –
பிரம்மாஸ்திரம்-புழுதி அளைந்த பொன் மேனி காண நானும் பெரிதும் உகப்பேன்-
கண்டார் பழிப்பர் லோகத்தார்-நாண் இத்தனையும் இலாதாய் –நப்பின்னை காணில் சிரிக்கும் –
வரப் போகிறவள் -அப்புறம் தான் வந்தான் -மஞ்சன மாட்டிய வாற்றை -அப்புறம் –
அவ்வளவு லஜ்ஜை அந்த பருவத்திலே

நப்பின்னாய் –
திரு ஆய்ப்பாடியிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு ஸ்ரீ நந்த கோபருக்கு மருமகள் இல்லாதார் உண்டோ –
நமக்கென்-என்று பேசாதே கிடக்க –
நப்பின்னாய் –
என்கிறார்கள் -திரு நாமம்
1-பின்னல் கூந்தல் அழகு–
2-பின் அழகு–
3-ஸ்ரீ தேவி பூமா தேவி பின் பட்டவள்–
4-ந பின்னா பிரியாதவள் -நப்பின்னை

கும்பன் -யசோதை தம்பி -இவன் மனைவி -தர்மதை -இவர்களுக்கு ஸ்ரீ தாமா -நீளா -இவளே நப்பின்னை
கோவலர் மடப்பாவை -ஆய் மகள் அன்பன்–குலவாயர் கொழுந்து –
குற்றம் என்று ஒரு பொருள் இருப்பதையே அறியாதவள் -ஷமையே வடிவாக இருப்பாள்
பெரிய பிராட்டியார் சம்பத் -பூமிப பிராட்டி விளையும் தரை –
அவனையும் -அந்த செல்வத்தையும் -விளை நிலத்தையும் -சேர்ந்து அனுபவிக்கும் போக்தா இவள் –
பொன்னுக்கு அதி தேவதை ஸ்ரீ தேவி / மண்ணுக்கு பூமா தேவி -ஆனந்தத்துக்கு இவள் –
சேதனனுக்கும் மட்டும் அல்ல அவனுக்கும் பேர் ஆனந்தம் அளிக்கும் பெரும் தேவி இவள்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் –பெரிய திருமொழி -11-4-6-
நீளா தேவி புலன் மங்கை இந்திரியங்களை அபகரிக்க வல்லவள் அன்றோ –
ஈஸ்வரனுடைய சர்வ இந்த்ரியங்களையும் அபகரிக்க வல்லவள் -யஸ்ய சா -என்னும்படி
இவளை யுடையவர் என்னும் பெரும் புகழை யுடையவர் -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-
பின்னை தோள் மணந்த பேராயா –
ஒன்றில் ஓன்று மேற்பட்ட ரசத்தின் தன்மைகளைச் சொல்லி-அது போராமையாலே தன்னையே சொல்லுகிறது மேல் –
ஒரு மிதுன அனுபவம் ஆயிற்று இவருக்கு போக்யம்-
சம்சாரியை அவன் ஆனந்திப்பிக்குமாறு போலே ஆயிற்று
ஆனந்தமே உருவமாய் இருக்கிற அவனை இவள் உகப்பிக்கும் படி –
இவருடைய சேர்த்தி அழகாயிற்று இவருடைய போக்யம் –
இத்தால் பிரியில் உலகம் அழியும் என்று நினைக்க வேண்டும் படியான
அவனது இனிமையின் மிகுதியே ஐயத்திற்கு காரணம் என்பதாயிற்று –ஈட்டு ஸ்ரீ ஸூக்தி கள்

உந்து மத களிறு -வாரணம் ஆயிரம் சூழ -வந்தார்கள் –
முக்தன் சம்சாரம் நினைப்பது போலே நப்பின்னை கும்பன் சம்பந்தம் -சீதா பிராட்டி ஜனகர் சம்பந்தம் –
ப்ரஹ்ம வித்யை தாயாகப் பெற்று –தஞ்சமாகிய தந்தை -ஆச்சார்யர் –
நந்த கோபாலன் மறு மகள் -என் திரு மகள் சேர் மார்பனே -அனந்தாழ்வான் -மகள் அன்றோ ஸ்ரீ பத்மாதேவி பிராட்டி
ஒண்ணான ஜீயர் -1447–1443–மா முனிகள் திரு நாடு அலங்கரிக்க –
தனிக்கோயில் நாச்சியார் -திருமலையில் இருக்க -கல்யாணம் உத்சவம் பண்ண முயல அர்ச்சக முகேன–
சேற்றுத்தாமாரை -ஸ்ரீ வர மங்கல நாச்சியார் -பிரிய மாட்டார் -ஒரே பல்லக்கில் இன்றும் புறப்பாடு –
கனு பொடி உத்சவம் இன்றும் –
யதுகிரி நாச்சியார் -யதிராஜ செல்லப்பிள்ளை -மறு மகள் -ராமபிரியன் இயற்பெயர் –
லவ குசர் -பெண் பிள்ளை -கனக மாலா -ஸ்ரீ தனமாக -கண்ணன் திருவாராதன பெருமாள் -வைநதேயன் முடி வைர முடி –
ஸத்ய லோகம் -ராமன்-அயோத்யா -கிருஷ்ணன்-வடமதுரா -இங்கு எல்லாம் இருந்து ராமானுஜர் திரு மடியில் ஏறி உட்கார-
மாருதி சிறியாண்டான்-வந்து ஸ்ரீ ரெங்கம் நம் பெருமாள் வந்த வ்ருத்தாந்தம் அறிவிக்க -இங்கும் மாருதி –
பெரும் தேவி தாயார் -நடாதூர் அம்மாள் வாக்ய வரதாச்சார்யர் -அப்புள்ளார் இவர் மருமகன் -தேசிகர் இவர் மருமகன்
பால் காய்ச்சி திருப் பவளத்துக்கு பரிந்து கொடுத்ததால் அம்மாள்
விடையாற்றி உத்சவம் தளிகை பிரசாதம் வேறே மாதிரி இன்றும் இருக்கும் -பரிவர் இன்றும் உண்டே
நம் போல்வார் பரிவதையும் நம்மாழ்வார் புரிவதைப் போலே திரு உள்ளம் கொள்ளும் சர்வ சக்தன் சர்வஞ்ஞன் –
ஆச்சார்யர் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே -ராமானுஜரும் திருமலை நம்பி போலே
திருமலை அப்பனுக்கு தந்தை ஸ்தானம் –
காவேரி தாயார் பெரிய பிராட்டியார் -தாயார் -திருப்பாற் கடல் அரசன் தந்தை –
பெருமாள் எழுந்து அருளுவதும் பாலம் வழியாக இல்லை இன்றும் –

கந்தம் கமழும் குழலீ –
குழலின் கந்தம் கடுக வந்து மறு மொழி தர –கந்தம் கமழும் குழலீ-என்கிறார்கள்
பரிமளம் தான் நிறம் பெறுவது இவள் திருக் குழலிலே சேர்ந்த வன்று -என்கிறது –
வாசம் செய் பூம் குழலாள் இறே –
சர்வ கந்தா -என்கிறவனுக்கும் நாற்றம் கொடுக்கும்படி பரிமளம் மிக்க திருக் குழல் –
சர்வ கந்தா -என்னும் அவனுக்கும் வாசனையை கொடா நிற்கிற பகவத் விஷய வ்யாமோகத்தை உடையவரே –
இத்தால் –
ஸ்வ வ்யாமோகத்தாலே ஈஸ்வரனை வசீகரித்து – ஆஸ்ரித ரஷணத்திலே மூட்டி அவனை எல்லாரும் கொண்டாடும்படி
பண்ணுகிறாள் என்னும் இடம் தோற்றுகிறது –

கடை திறவாய் –
கிருஷ்ணன் உடைய பரிமளமும் உன்னுடைய பரிமளமுமாகி தேங்கி நிற்கிற வெள்ளத்தை –
கதவை திறந்து புறப்பட விட்டு எங்கள் விடாயைத் தீராய் -என்கிறார்கள் –
கிண்ணகத்தை அணை செய்தாப் போலே அடைத்துக் கொண்டு கிடவாதே வெட்டி விடாய் –
நாங்களும் கண்ணன் என்னும் சென்னிப் பூவை சூடுமாறு கதவை திற என்கிறார்கள்
அவனுடைய பரிமளமும் உன்னுடைய பரிமளமும் காட்டில் எறித்த நிலா வாகாமே நாங்கள் அனுபவிக்கும் படி –
தத் விரோதியான எங்களுடைய அஞ்ஞானத்தை நீக்காய் –
அனுபவிப்பார் அவயவம் சந்தனம் பூ வேண்டுமே–நாங்களும் வேண்டாமா-
மத்திய ராத்ரியில் எழுப்புகிறது என் என்ன
போது விடிந்தது -என்ன
விடிந்ததுக்கு அடையாளம் என்-என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
கோழி கூவா நின்றது என்ன –
ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன–
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும் பின்னை உறங்குமது தான் சாமக் கோழி -என்ன –
கோழி கூவும் என்னுமால் -தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் திருத்தாய் செம்போத்தே – திருமங்கை ஆழ்வார்
முதல் சந்தோஷ வார்த்தை அப்புறம் துக்கம் வார்த்தை
ஜாமம் பிரித்து -கோழி கூவின உடன் வருவேன் அடுத்த கூவலுக்கு போவானாம்
கோழி கூவும் -என்னுமால் -ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று
வந்ததும் -கோழி கூவும் என்னுமால் தோழி நான் என் செய்கேன் -பாதம் மாற்றி –
கண்ணன் கோழி மடியிலே இட்டுக் கொண்டு வருவானாம்
கோழி வயிறு எரிச்சல் திரு வாய்ப்பாடி உனக்கு அது இல்லையே -எங்களைப் போலே –
கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே உனக்கு
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்-
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –

மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவினகாண் –
ஸூக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன
பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில் விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே
பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்ற குயில் இனங்கள் கூவின காண் –
இனம் இனமாக குயில்கள் பலகாலும் கூவின –
சத்வோத்தரமான காலம் ஆனவாறே–சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து
பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –என்ன-
அவர்களை உறங்க ஒட்டாமைக்கு நீங்கள் உண்டே -என்ன –
வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்–
பரம பாகவத சமூஹங்கள்-
சத்வம் தலை எடுத்த பின்பும்–உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப்
பலகாலும் கூவா நின்றன காண் –
குயில் இனங்கள் ஓன்று இல்லை–ஒரு குரல் இல்லை–பல் கால் கூவின–உறக்கத்தால் அலர்த்தி
மாதவி பந்தல் இஷ்டமான பந்தல்–
நோ பஜனம் ஸ்மரம் படுக்கை வாய்ப்பால் —உன் நோக்கும் உன் பேச்சும் தாரகமாக இருக்கும்
தயிர் பழம் சோறு பல் அடிசில் –கோல கிளியே நாராயணனை வரக் கூவாயால் துரத்துவேன்
மேல் ஒரு திரள்–கீழே நாங்கள்

புன்னை மேல் உறை பூம் குயில்காள் -போற்றி யான் இரந்தேன்-திரு வண் வண்டூர் உறையும் –
மாற்றம் கொண்டு
குயில் த்வனி பஞ்சமம் த்வனி ஐந்தாவது வேதம் பாரதம் பஞ்சம வேதம்
இப்படி எழுப்பின விதத்திலும் எழுந்தி ராமையால் ஜாலகரந்த்ரத்தாலே பார்த்து –

இன்னமுத திருமகள் -திரு மகள் -அமுத திரு மகள் -இன்னமுத திருமகள் – நித்ய நிஹ்ரஹ அஞ்ஞாத –
களிறு உண்டோ நந்தகோபனுக்கு -சாஷாத் கண்ணனே உண்டே –
கந்தம் கமழும் -பக்தி மனம் -சர்வ கந்தா சதா வாசம் –
உகாரம் -பிராட்டி உந்து -woman சொன்னால் man அடங்கும் female சொன்னால் male அடங்கும்
கொக்கு போலே -நித்ய கைங்கர்ய பாரிப்பு ஒன்றிலே ஏகாக்ர சிந்தை
கோழி போலே -குப்பையில் சாரம் உண்ணும் -பஞ்ச கால பராயணர் கோழியும் ஐந்து தடை கூவும்
உப்பு -போலே -சம்சர்க்கம் தானே இவனால் கிட்டும் –
ஊமை போலே -தோஷங்கள் கண்டும் பேசாமல்
உம்மை போலே -பொறுமை
மாதவி-ஆத்மா -பந்தல்-தேகம் – மேல் -அர்ச்சிராதி கதி -பல்கால் -குயில் இனங்காள் வால்மீகி –

பந்தார் விரலி –
பந்தும் கையும் பொருந்தி இருக்கிறபடி –
நாங்கள் சைதன்யத்தை விட்டு அசேதனமாக பெற்றிலோமே -அது என் -என்னில்
உன் கைக்குள்ளே கிடக்கலாமே
இப்போது பந்தின் பிரசங்கம் என் என்றால் – கிருஷ்ணன் உடன் பந்தடித்து -அவனைத் தோற்பித்து
அவனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் அனைத்துக் கொண்டு கிடக்கை –
அவன் இவளுக்கு போக உபகரணம்
பந்து லீல உபகரணம் –
ஒரு கையில் நாரம் ஆய்த்து – ஒரு கையில் நாராயணன் ஆய்த்து –
ஒரு கையில் விபூதி ஆய்த்து ஒரு கையிலே விபூதிமான் ஆய்த்து –
இத்தால்
உபய சம்பந்தத்தால் வந்த புருஷகார பாவம் தோற்றுகிறது –
நீங்கள் வந்தது என் என்ன –
சத்வம் தலை எடுக்கும் தனையும் சேதனரைக் கொண்டு லீலா ரசம் அனுபவித்து
சத்வம் தலை எடுத்தவாறே ஒரு கையாலே லீலா உபகரண பூதரான சேதன வர்க்கத்தையும்
ஒரு கையால் இத்தைக் கொண்டு தன்னை லீலா ரசம் அனுபவிப்பித்த ஈஸ்வரனையும் அணைத்துக் கொண்டு கிடப்பதே –
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள்
பந்தார் விரலி
பந்து இருக்கும் மெல் விரலாள்-திரு எவ்வுள்ளூர் பாட்டு–பந்தார் விரலாள் பாஞ்சாலி குழல் முடிக்க –
எழில் கொள் பந்தடிப்போர் நாங்கூர் வெளுப்பு சிகப்பு கருப்பு நூல்கள் பந்து முக்குணங்கள் –
சத்வம் ரஜஸ் தமஸ் – பந்துகள் பாவை -குணத்ரயம்-அல்ப சாரம்-

உந்து -திரு நறையூர் அனுபவம் ஸூ சகம்-மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் —-
ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
ஆங்கிடையே–அன்ன திருவுருவம் நின்றது –பந்தார் விரலி –பந்தார் விரலாள் – பெரிய திருமொழி -6-6-8-

உன் மைத்துனன் பேர் பாடச் –
நீயும் அவனும் மைத்துனமை யாடி –ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது
உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட–
அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும்– பிரிந்தால் தாய் பஷத்தில் இறே பிரஜைகள் நிற்பது –
நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட –
உபகரிக்க–மட்டை அடி உத்சவம்–ஆசார்யர் தாயார் கோஷ்டி–தயிர் பழம் போட்டு அடிப்பார் பெருமாள் மேலே
அவன் தோல்விக்கு சகஸ்ர நாமம் சொல்வோம்–
இளைய பெருமாள் சீதை உடன் சிரித்தால் போலே–நீச்சல் போட்டி
அவள் இங்கனே ஆகில் திறந்து கொண்டு புகுருங்கோள் -என்ன

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும் செந்தாமரைக் கையால் – அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –

சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலாய் இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே – நாங்களும் அத் த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே இவர்களுக்கு உள்ளது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ-
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
செந்தாமரைக் கை–
மாஸூச கை பார்த்து இருப்பாரோ நாங்கள்–சரணம் பற்றாத உங்களுக்கும் நான் இருப்பேன் ராஷசி –
லகு தரா ராமஸ்ய கோஷ்டி கிருதா -பட்டர்–நீங்கள் செய்த பாபத்துக்கு அஞ்ச வேண்டாம்
அவன் ஸ்வா தந்த்ர்யம் அஞ்ச வேண்டாம் வைத்த அஞ்சல் கை செந்தாமரைக் கை
அவனும் ஆசைப் படும் கை -கை மேல் என் கை வைத்து–
பெண் கை மேலே —அணி மிகு தாமரைக் கை மேலே செந்தாமாரைக் கை
பந்து பிடித்து சிவந்த கை
மேகம் முழங்கி சீரார் வளை ஒலிப்ப–பசியர் சோற்றை வர்ணிப்பது போலே–கையிலோ நின்றும் கழலாத சீர்மை

நந்த கோபாலனை இதிலும் கொண்டாடி -மதம் உண்டு களித்த களிறுகள்
லீலா பந்துகம் -நரர்கள் ஒரு கையில் -கண்ணன் ஒரு கையில் -நாராயணன் –
செந்தாமரைக் கை இவளது -தாமரைக்கை அவனது -அபயம் இவனைக் கண்டும் -அவன் பாபங்களைக் கண்டு –
அஸ்ய ஈசானம் ஜகத் – விஷ்ணு பத்னி -உன் மைத்துனன் -இவளுக்கு அவன் -என்பதே ஏற்றம் –
பாணி கிரஹணம் -பிள்ளை வீட்டார் -கன்னிகா தானம் செய்து கொடுப்பதாய் -பெண் வீட்டார்
சீரார் வளை-பிரியாத சீர்மை -யாமி / ந யாமி-போக வில்லை உன்னை கூட்டிப் போவேன் என்றுமாம் –கதை
சங்கு தங்கு முன்கை நங்கை

வளை ஒலி கண்ணன் எழ வேண்டும்–நாங்களும் ஒலி கேட்டு வாழ–
கிடந்த இடத்தே இருந்து–நாலடி நடந்து வந்து -அவனும் நாங்களும் நடை அழகு காண
மகிழ்ந்து திறவாய்-தலை விதி என்று வராமல்–ஆர்த்தி சாஸ்திரம் அர்த்தம் பரிதாபம்
உகந்து வந்து–மகிழ்ந்து மார்கழி நீராட–எதோ உபாசனம் ததோ பலம்–நாங்கள் நோற்ற நோன்பு நீ மகிழ தான்
உன்னுடைய மகிழ்ச்சி தான் எங்கள் மகிழ்ச்சி–இதுவே பலம்–
தர்மத்துக்கு திறவாமல்–மகிழ்ந்து–பேறு உன்னதாக வேண்டும்
அவன் உடையார் பக்கல் அவனை விட–முக விகாசத்தில் தோற்றும்படி–
கண்ணுக்கு இறை வந்து
வளை
செவி பட்டினி தீர–
பேர் பாட நாக்கு பட்டினி–
செந்தாமாரைக் கை ஸ்பர்சம்–கந்தம் நுகரும்–சர்வ இந்த்ரியங்கள் விடாய் தீர்க்க
மனஸ் மகிழ்வு உன்னதாக இருக்க

சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே–தாமரை போன்ற திருக் கையாலே –
இவ்விடத்தில் -கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் – ஆழ்வார் –
ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன இதர விஷய நிவ்ருத்தி –
சௌந்தர்யம்-ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி –
சௌகுமார்யம் -நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-
சௌகந்த்யம் -இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –
சீரார் வளை ஒலிப்ப—
நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-பகவத் சம்பந்த சூசகங்களான-
ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

வந்து திறவாய் –
யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது –
உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –
வந்து திறவாய் –
நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்–நீயே வந்து ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய
விரோதியான தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-
மகிழ்ந்து –
புருஷார்த்தம் உன்னதாக வேணும்-

மகிழ்ந்து –
அர்த்திகள் வாசலிலே நிற்க வேறு அனுபவம் உண்டோ -என்று
தர்மத்துக்கு திறக்கை அன்றிக்கே -பேறும் உன்னதாக வேணும் –
மகிழ்ந்து –
கிருஷ்ண சம்ச்லேஷத்தால் வந்த -ஹர்ஷ பிரகர்ஷம் முகத்திலே தோற்றும்படி என்னவுமாம் –

பந்து கழல் பாவை – பொங்கைம் புலனில் போக்யாதி சமூஹம் -நாயனார் -149-லீலா விபூதி முழுவதும்
உபய விபூதியும் தம் கையில் உடையவர் இறே
செந்தாமரைக்கையால் -உபதேச முத்தரை
சீரார் வளை ஒலிப்ப -த்வனிப் பொருள்கள் மல்கும் படி உபதேசித்து அருளி
மகிழ்ந்து -தம் பேறாக
கந்தம் கமழும் குழலீ-கமநீய சிகாய நிவேசம் –
காரிசுதன் குழல் சூடிய முடியும் கன நல சிகை முடியும் –
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள்
பூர்ண அதிகாரிகளாகக் கொண்டு மகிழ்ச்சியில் குறைவின்றி–
பரம திருப்தியோடு நெஞ்சு திறந்து வாய் திறந்து உபதேசித்து அருள வேணும் –

இப்பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு –
பெரிய நம்பி திரு கிரஹம்-திருப்பாவை ஜீயர் ஐதீகம் பிரசித்தம்-
பெரிய நம்பி திருக் குமாரத்தி அத் துழாய்–ஜீயா உந்து மத களிறு அனுசந்தானமோ
திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரத்தி தேவகி பிராட்டி -சிலர் சொல்லி —நித்ய வாசம் திருவரங்கம் தான்-இதுவே
மாது தன்னுடைய கரத்தால் மாதுகரம் —
ஸ்ரீ பெரும்புதூர் விசேஷ தளிகை இன்று உண்டே-திருப்பாவை ஜீயர்–திரு நெடும் தாண்டகம் அபிமானம் பட்டருக்கு

உந்து மத களிற்றன்
மதக் களிற்று ஐந்தினையும் சேரி தெரியாமல் -பஞ்ச இந்த்ரியங்களையும் நொறுக்கித் தள்ளுமவர்
ஓடாத தோள் வலியன்
தோள் -கை -ஞானக்கை தா / வாதி பிரதிவாதிகளைக் கண்டு பிற்காலியாதே –
முன் நின்று அஸ்மதாதிகளை சம்சார காந்தரங்களில் ஓட விடாத மிடுக்கு
நந்த கோபாலன் மருமகளே
எம்பெருமானுக்குய பிராண வல்லபர்-பிராட்டி திரு வாக்கு போலே ஆச்சார்யர்கள்
திரு வாக்குகளையும் மீறாதவன் அன்றோ
நப்பின்னாய்
காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்ய அஸூயை -போன்ற விரோதி நிரசன பூர்வகமாக
எம்பெருமானால் கைக் கொள்ளப் படுபவர்கள்
கந்தம் கமழும் குழலீ
எண்வகைப் பூக்கள்-செண்பக மல்லிகை இத்யாதி -அஹிம்சா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்திரிய நிக்ரஹ
ஸர்வபூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் விசேஷத -த்யானம் புஷ்பம் தபஸ் புஷ்பம் ஞானம் புஷ்பம்
ததைவ ச சத்யம் அஷ்ட விதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதி சரம் பவேத்
திரு மேனி முழுவதும் கந்தம் கமழ்ந்தாலும்-நமந்தி சந்தத-வணங்கி தலை தாழ்ந்து இருப்பார்களே –

தாழ்வு ஓன்று இல்லா -தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுச மா முனி
உந்து மத களிறு -ஐந்து யானைகள் நம் இடம் –
வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும்–அடக்கியவர் எம்பெருமானார்
தோள் வலி ஞானக்கை தா -காருண்யா சாஸ்த்ரா பாணினா
வாதம் செய்தவர்கள் பலர் பலர் ஸ்வாமி இடம் —சாறு வாத -ஆர்த்தி பிரபந்தம் -நாளும் மிக வாழியே
கந்தம் கமழும் குழலி –அத்வைதிகள் தலை மொட்டை பூணூல் இல்லை–
காஷாய சோபி கமநீய சிகாசாய வேஷம் – -கூரத் ஆழ்வான் –
தண்டத்ரய–ரூபம் தவாஸ்மி—முப்புரி நூலோடு –கமலக் கண் அழகும் காரி சுதன் கழல் சூடிய முடியும் –
கன நல சிகை முடியும் இல்லை எனக்கு எதிரே
குயில் இனங்கள் கூவின–குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -மதுர கவி
வசந்த காலே–சித்தரை வைகாசி -நம் ஆழ்வார் எம்பெருமானார் இரண்டு குயில்கள்

வந்து திறவாய் –
இவரே வந்து உபதேசித்து–தாம் வந்து திறவாய் -உஜ்ஜீவிக்க இருக்கும் இடம் வந்து-

——–

இப்பாசுரத்தில் வரும் “பஞ்ச சயனம்” என்பது ஒரு வைணவன் அறிந்திருக்க வேண்டிய 5 பொருட்களை குறிப்பது என்பது உள்ளுரையாம். அவை:

பரமாத்ம தோற்றம் என்கிற “மிக்க இறைநிலை”
ஜீவாத்ம தோற்றம் என்கிற “உயிர்நிலை”
மோட்சம் கை கூடுவதற்கு உதவும் வழிவகையான “தக்க நெறிகள்”
பரமன் திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளாம் “ஊழ்வினைகள்”
பரமாத்ம அனுபவம் என்கிற “வாழ்வினை” (முக்தி அல்லது மோட்சம்)

கோபியர் “அம்பரமே தண்ணீரே” பாசுரத்தில் கண்ணனை மட்டும் (பிராட்டியை விடுத்து) எழுப்ப முயற்சித்தார்கள்.
அடுத்து, “உந்து மத களிற்றன்” பாசுரத்தில் பரமனை விடுத்து பிராட்டியை தனியாக துயிலெழுப்பப் பாடினார்கள்.
என்ன ஆயிற்று ? கண்ணனும் எழுந்திருக்கவில்லை, நப்பினையும் எழுந்திருக்கவில்லை 🙂

அதனாலேயே, இப்பாசுரத்தில் “மலர்மார்பா” என்று கண்ணனையும்
“மைத்தடங் கண்ணினாய்” என்று பிராட்டியையும் சேர்த்தே துயிலெழுப்ப முனைகிறார்கள்!
அதாவது,
வைணவ அடியவரின் மோட்ச சித்திக்கு பகவான்-பிராட்டி என்று இருவரும் திருவுள்ளம் வைக்க வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம்.
பிராட்டியின் பரிந்துரை (வைணவத்தில் இதற்கு புருஷகாரம் என்று பெயர்) அடியவர் முக்திக்கு அவசியம் என்பது வைணவக் கோட்பாடு.

இந்த திருக் குணத்தைத் தானே நம்மாழ்வார், “நின் திருவருளும்* பங்கயத்தாள் திருவருளும்” என்று
ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்!

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்கடிகால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே –9-2-1-

——————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – அம்பரமே தண்ணீரே சோறே — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
இவர்களைத் திருக் காப்பு நீக்கி உள்ளே புகுர விட – ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
முற்பட கிருஷ்ணனை பெண்கள் களவு காண்கிறார்களோ -என்று நினைத்து
காவலாக புறக் கட்டிலே கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்பு கிறார்கள் –
அநிருத்த ஆழ்வானை அகப்பட களவு காணக் கடவ பெண்கள் அவன் அழகுக்கும் வாய்த்தலையாய்
சாஷாத் மன்மத -என்கிற கிருஷ்ணனைக் களவு காண சொல்ல வேணுமோ –
இப்பாட்டில்
கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால்
திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட
முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய-/
வேதம் -முதல் ஐந்து பாசுரம்-/வல்லார்களை கொண்டு -அடுத்த -10-/
விண்ணோர்பெருமான் -ஏற்ற கலங்கள் தொடங்கி அடுத்த ஐந்து பாசுரம் /
திருப்பாதம் -உன் பொற் தாமரை பணிந்து போற்றும் பொருள் ஐந்து பாசுரம்/
விவரணம் தான் திருப்பாவை –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

சாஷாத் மன்மத மன்மத -நோக்கி கிடக்கும் – உள்ள வைத்தமா நிதி –
எடுத்த பேராளன் நந்த கோபன் 8-1-3-இவன்
நிதி எடுத்தால் போலே -அடிக் கரும்பு – நுனி கரும்பு நந்த கோபர் அனுபவித்த-
நடு கரும்பு காவல் காக்க வேண்டுமே –
கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலில் -உம் குறை தீர்க்க வந்தோம்–நீர் உறங்குவது
உதாரா -கண்ணன் தனது கையில் வாங்குவாரை சொன்னது உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ –
கேட்கிறவர்கள் வள்ளல் கொடுக்கும்படி செய்ததால் –
பெற்றாலும் அங்கனேயோ பெறா விட்டாலும் தரிக்க முடியாத வஸ்து கொடுக்கும் வேண்டுவார்க்கு
வேண்டியது எல்லாம் கொடுக்கும்

அம்பரமே தண்ணீரே சோறே –
புடைவையோடு–தண்ணீரோடு–சோறோடு–வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –
ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –

எங்கள் தாரகம் போஷகம் போக்கியம் ஒன்றாக இருந்தால் தர லாகாதோ
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் கொடுக்க கூடாதா
சர்வ லாபாயா கேசவா -எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
எங்களுக்கு கண்ணனை எடுத்த பேராளான் பெற்று தந்த சுவாமி-

கார்ய குணம் காரணம் –
இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை சுரந்ததும்–
இனிது மறித்து நீரூட்டி -பாண்டவர் பாண கங்கை
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து பக்த விலோசனம் –
சோறு வாங்கி இட்டது – இவர் வயிற்றில் பிறந்ததால்

அறம் செய்யும் –
பல அபிசந்தி ரஹிதமாக–ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –
இத்தால்
நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ —எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –
அறம் செய்யும் -கொடுக்கும் சொல்லாமல் —சாத்விக தானம் –

எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் –
எங்களுக்கு தாரக போஷக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி

எழுந்திராய் –
வாசுதேவ சர்வம் இதி–உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும்
தானே யானவன் இறே கிருஷ்ணன் –
எம்பெருமான்-
நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை–தானம் கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே –
வாசுதேவ சர்வமிதி என்று இருக்கிற எங்களுக்கு கிருஷ்ணனைத் தரப் புகுகிற நீ
விசேஷித்து எங்கள் நாயகன் அன்றோ –
உணர்ந்து அவன் அனுமதி பண்ணினபடி தோற்றிக் கிடக்க –
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-
ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்–தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத் ஹேதுவான கைங்கர்யத்தையும்–ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –

கண்ணால் காண்பதற்கு மேற்பட ஒன்றும் அறியாத இடைப் பெண்கள் என்பதால் யசோதை பிராட்டியை
முதலில் பள்ளி உணர்த்த வில்லை யசோதை அறியவே அமையும்
பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை -என்று இருக்கிறார்கள்

முலையால் அணைக்கவும் முலைப்பால் கொடுக்கவும் நடுவில்
பிராட்டி சர்வேஸ்வரனையும்-உபய விபூதியையும் -பிரதம பதம் அகாரம் மகாரம் நடுவில் உகார ரூபம்-
யசோதையை போலே -அங்கே திருஷ்டாந்தம்
விபூதி த்வயம் – ஸ்ரியதே ஸ்ரேயதே ஆஸ்ரியிக்கிறாள் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் –
ராமஸ்ய மன காந்த பிராதச்ய தேவதை பிராணன் விட உயர்ந்த சீதை-உன் திரு நங்கள் திரு
திவ்ய மகிஷி அகல ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்-ஜனன பவன் ப்ரீத்யா திருப்பாற்கடலையும் விடாமல்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்-
பிராட்டி முன்னாக அவனை எழுப்புமா போலே–
இவள் முன்னாக ஸ்ரீ நந்த கோபரை எழுப்பா விட்டது என் என்னில்
பிள்ளை மேல் சங்கத்தாலே அணித்தாக உள் கட்டிலே கிடைக்கையாலே–பிற்பட அவளை எழுப்பு கிறார்கள் –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே
பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே–
கொம்பனார்–கொம்பு –
வஞ்சிக் கொடி
அனார் அத்தை அளையவர்கள்-ஒத்தவர்கள்

குல விளக்கே –
இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே-
பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -என்னவுமாம்

கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது

எம்பெருமாட்டி –
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே

யசோதாய்
ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –
அறிவுறாய் –
நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-
அவள் சம்வாதத்தாலே உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –

எம்பெருமானை பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்
அதிதி -பெற்ற அன்றே அழுது–
கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே
குல விளக்கே –
எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கை தர வேண்டாவோ

கண்ணனுக்கு இஷ்டம் அஞ்ச உரைப்பாள் யசோதை–இது பற்றாசாக வந்தோம்
புகார் -ஏதேனும் ஒரு படி செய்து கண்ணன் சந்தோஷமே அமையும்
தீம்புக்கு–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை உடைக்கும் உன் மகனை கூவாய்–
அசல அகத்தார் பரிபவிப்பார் செய்ய தரிக்க கில்லேன்
அஞ்ச உரைப்பாள்–வருக -வருக -பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே —துதிக்கைக்கு உடலாகும் அவனுக்கு
அறிவுறாய்–எழுந்திராய் நந்த கோபன்–இவள் நெஞ்சில் உணர்த்தியே போதுமே

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக தங்களை அமைத்து வைக்கும் பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய்
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி
சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக-ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க-ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடறுத்து-
விம்ம வளந்த –இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –
உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே-
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே திருவடிகளை குளிர வைத்தபடி –
உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி —நித்ய சூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே-
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –
ஆண்களுமாய்–பிரயோஜனாந்த பரருமாய் வேணுமோ முகம் கொடுக்கைக்கு –
அநந்ய பிரயோஜனைகளுமாய்–அபலைகளுமானால் ஆகாதோ எங்களுக்கு முகம் காட்டும் போது
சிறுப்பது பறுப்பதாக வேணுமோ –
இருந்தபடியே காட்ட அமையாதோ உன் வாசி அறியாதே அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை-
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ

அம்பரமே தண்ணீரே -காழிச் சீராம விண்ணகரம் அனுபவம் -ஸூ சகம் –
அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் -ஒரு குறளாய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன்-

அம்பரம்–உம்பர்கோமானே எழுந்திராய் –
நல்கி ..பொழில் ஏழும் வினையேற்கே -திருவாய்மொழி -1-4-5-
அகலிடம் படித்து –வாரான் -திருவாய்மொழி -9-9-2-
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு -கலியன் -9-4-9-
ஆண்டாளும் -பராங்குச பரகால நாயகிகளும் வருந்த ஒரே காரணம்
நாட்டுக்கு உள்ள நியாயம் அந்த புரத்துக்கு இல்லையாய் யாயிற்றே
சாமான்யத்தில் பண்ணும் ரஷணம் விசேஷத்தில் இன்றிக்கே இருப்பது என்று –

உறங்காது எழுந்திராய்
எங்களை உறக்கம் எழுப்ப வந்த நீ உறங்கக் கடவையோ அழகாய் இருந்ததீ-
நீர் விழுந்த வாறே விம்ம வளைந்து வரையாதே இந்த்ராதிகளை எழுதிக் கொண்ட தலைவன்
இரு விசும்பு -மண் முழுதும் அகப்படுத்தி –ரஷண ப்ரீதியால் வளர்ந்து இருந்ததே குடியாக
தாயார் அணைக்கும் குழந்தை -அறியாதே இருக்க செய்தே
நீயே அர்த்தியாய் கார்யம் செய்ய நாங்கள் அர்த்திகளாய்-
உறங்குவாரை தழுவிய நீ உணர்ந்து வந்த எங்களை-
விபூதிக்காக உன்னைக் கொடுத்தாய் உன்னை அறிந்த எங்களுக்கு
மண்ணை ஆசைப் படாமல் உன்னை ஆசைப் பட்டது தப்பா-
வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப -ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா
முதலை வாயில் விழாமல் தபஸ் வாயில் விழுந்தோம் வெட்கி-

உம்பர் கோமானே
நித்யஸூ ரிகளுக்கு-சிரோ பூஷணம் திருவடிகளை காடும் மோடும் அளப்பதோ-
தோற்கும் படி-சதா பச்யந்தி -இருப்பார் -இமையோர் –
துடிக்க விட்டு இங்கே வந்து தூங்கி எங்களை துடிக்க விட வேண்டுமோ-
இங்கே இரக்கவும் அளக்கவும் வேண்டா-வடிவை அனுபவிக்க அமையும் –
உலகு அளந்த இளைப்பால் உறங்குகிறாய் -வயிறு எரிச்சல் தீர்ந்தால் போதும்-
நடந்த கால்கள் நொந்தவோ -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே
இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ-தாளால் —உறங்காது எழுந்திராய்-
பாண்டவர் -ரிணம் பிரவர்த்தம் புண் பட்டவன்
பெருமாள் ஒருத்தி பிரிந்து தூங்காமல்-கோவிந்தா சொல்லோடு அவள் முன்னே நிற்க பெற்றிலோம்-
செறுக்கு அடைய பிரணயிகள் இடம் காட்டவோ –

இப்படிச் சொல்லவும் எழுந்திராமையாலே-முந்துற நம்பி மூத்த பிரானை எழுப்பாதே
முறை கேடாக செய்தோம் என்று அவனை எழுப்புகிறார்கள்-
செம் பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –
உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –
உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-
முன்னே பொற் கால் பொலிய விட்டு –
ஸ்ரீ மான்-இளைய பெருமாள் பின் பெற்று பெற்ற சம்பத் முன் பிறந்து
கைங்கர்ய ஸ்ரீ–நோக்கும் நடமாடும் மதிள் போலே-கண்ணன் பெண்களையும் சேர விடும் பலராமன்-
மதுரா வந்ததும் திரு ஆய்ப்பாடி -பலராமன் சொல்லி அவதார ரகசியம்
ஆச்வாசம் இனிமை ப்ரேமம் தெரியும்படி பொருந்த விட்டான் பலதேவா-
பலத்துக்கு ஒரே தாமம் -ஆதி சேஷன் ஒரே இருப்பிடம் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து–ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்யப் வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்
இப்படி சம்பன்னனான பல தேவனே-உறங்காது ஒழிய வேணும்-
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-

நான்கு வித பக்தி –
நந்தகோபர் -யசோதை -கண்ணன் -பலராமன் –
ஆச்சார்ய -மந்த்ர -மந்த்ர தேவதை -பாகவத பக்தி –நான்கையும் காட்டும் -அம்பரமே -பாசுரத்தால் –
ஆச்சார்யர் கை வசம் தானே பரமபதம் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு –அம்பரம் அறம் செய்வது
விராஜா நதி ஸ்நானம் செய்விப்பவன் தண்ணீர் அறம் செய்தல்
சோறு அறம் செய்வது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ
எடுத்த பேராளன் நந்த கோபன் –
மந்த்ரோ மாதா குரு பிதா-மாதாவாகச் சொல்லுவது மந்த்ரம்-
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரமும் ஸ்ரேஷ்டம் போலே
ஞாலத்து புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -சர்வ வியாபகத்வம் திரு மந்த்ரார்த்தம்
ஒண் மிதியில் புனலுருவி -த்ரிவிக்ரம அபதானம்
மேலே செம் பொன் கழல் தேவா -ததீய சேஷத்வம் -மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று
நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்றவாறு
உம்பியும் நீயும் உறங்கேல் -என்றது பகவத் பாகவத சேஷத்வமும் ஒன்றை விட்டு
ஓன்று பிரியாதே என்கிறதுக்கு ஸ்மாரகம்

இளைய பெருமாளை பிரிந்து அமுது செய்திலர்- தம்பி போன வழியே போவேன்
பிராட்டி பிரிந்து இருந்தாலும் படுக்கையும் உறங்கலாமா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய விட்டு பிறந்த சீமானே
அவனுக்கு படுக்கையான நீயும் எங்களுக்கு படுக்கையான அவனும் உறங்காது உணர வேணும்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனுக்கு படுக்கை
கண்ணபிரான் பிரணயத்தாலே இவர்களுக்கு படுக்கை-
பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் கால் கட்டும் பொழுதே எழுந்திராதே
எங்கள் திருவடி கட்ட நீ புகுவாய் தீ முகத்து நாகணை ஊடலிலும் கோபத்திலும் நாகணை மிசை நம்பிரான்

அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –
க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யார்
அப் பரமபதத்தை ஊடறுத்தவர் இடைச்சுவர் தள்ளி
ஆசார்யன் கை புகுரவே மற்றது கை யதுவே -பிராப்ய பூமி
தண்ணீரே -விரஜா நதி ஸ்நானம் சூஷ்ம ஒட்டு நீரிலே கழித்து உமி தவிடு இரண்டும் போக்க வேணுமே
அன்னம் ப்ரஹ்மேதி -பரப்ரஹ்மமே அன்னம் -அனுபவிக்கப்படுகிறோம் –
அறம் செய்யும் நந்ததீதி -நம்பிள்ளை -எங்கே வரும் தீ வினைகள் -ப்ரஹ்மானந்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-

நந்த கோபன் -ஆச்சார்யன் –
அம்பரம் -பரம ஆகாசம் -தண்ணீர் -விரஜா நதி –
அன்னம் ப்ரஹ்மேதி வியாஜா நாத் -ப்ரஹ்ம அனுபவம்
எடுத்த பேராளான் -நிதி எடுத்தால் போலே
யசோதை –
திரு மந்த்ரம் –
ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை – பெரிய திருமந்தரம் பிரதானம்
கண்ணபிரான் -திரு மந்தார்த்தம் -சர்வ வ்யாபகத்வம் –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -அநந்தரம்
ஒண் மிதியில் புனலருவி -என்று அருளிச் செய்தார் இறே
பலராமன் -திருமந்த்ரார்த்த சாரம் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை
பகவத் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாது என்பதை உணர்த்தவே உம்பியும் நீயும் உறங்கேல்
யஸ் சப்த பர்வ வ்யவதான துங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன்முராரே-பாதுகா சஹச்ரம்

அம்பரமே -திருமந்திரம் -ஸாஸ்த்ர ருசி பரிக்ரஹீதம் -மந்த்ர ரஹஸ்யம்
தண்ணீரே -த்வயம் -ஆச்சார்ய ருசி பரிக்ரஹீதம் -அனுசந்தான ரஹஸ்யம் /
யாவத் சரீர பாதம் அர்த்த அனுசந்தானம் -நம்பெருமாள் ஆஜ்ஜை
சோறே -சரம ஸ்லோகம் -சரண்யன் ருசி பரிக்ரஹீதம் -விதி ரஹஸ்யம் –
ஒவ் ஒன்றின் தாத்பர்யங்கள் அருளிச் செய்வதிலே ஆழ்ந்து –
ஏரி காத்த ராமர் -குரு பரம்பரை -மேகம் பருகின சமுத்ராம்பு –
ஈஸ்வர கருணையே நீரே பயிரை வளர்க்குமா போலே
இவர்கள் மூலமே -பல பர்யந்தமாக -அறம் செய்யும் –
பரகத ஆதேய அதிசய -சேஷத்வ லக்ஷணம் –அவன் முக உல்லாசத்துக்காகவே /
அத்யந்த ப்ரீதி-/ ஸூ போக்த்ருவ புத்தி தவிர்ந்து -போக்யமாக -சோறு நீர் வெற்றிலை -இவைகளே அனுபவிக்காதே –
அசித்வத் அத்யந்த பாரதந்தர்யம் –
ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் வந்தால் தன்னடையே போக்த்ருத்வமும் வருமே –
இப்படி -தடங்கல் இல்லாத -முக உல்லாசத்தை வளர்க்க -மூன்றாவது என் என்னில் -பரார்த்த கைங்கர்யம் -செய்ய வேண்டுமே –
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீது –
சாஷாத் தர்மம் -கண்ணனை கொடுத்தால் அம்பரமும் தண்ணாரும் சோறும் அறம் செய்ததாகுமோ –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்மம்
உண்ணும் சோறு இத்யாதி -வா ஸூ தேவம் சர்வம் அறிய வேண்டுமே -அறம் = கண்ணன் -சாஷாத் அன்றோ
இதி ஸூ துர்லபம் -என்று அன்றோ கண்ணன் –
உமக்கு பவ்யன் -ஆச்சார்யர் விஷயீ கரிக்க கரிய திரு உருக் கோலத்தை தானே காட்டி பின் வருவானே
கொடுத்தால் தானே நீர் நந்த கோபாலன் -உமக்கு ஆனந்தம் -கர்தவ்யம் ஆச்சார்யருக்கு சொத்தை ஸ்வாமியிடம் சேர்ப்பதே –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -ஏகைக பல லாபாயா சர்வ லாபாயா கேசவா –
எனக்கு எல்லா உறவின் காரியமும் -நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் –
நந்த கோபாலன் எழுந்தும் -யசோதா அறிவுற்றாலே நடக்கும் –

ஸ்வாபதேசம் –
ஆசார்யர் -நந்த கோபாலன் -ஆனந்தம் கொடுத்து
அடுத்து திரு மந்த்ரம் கொம்பனார் மந்த்ரங்கள் எல்லாரையும் ரஷிக்கும் தாய் போலே
குலம் தரும் குல விளக்கு
யசஸ் தரும் யசோதை
திருவிக்கிரம அபதானம் வியாப்தி -மந்த்ரத்தை -அடுத்து ஒண் மிதியில் –
ஸ்வரூப வியாப்தி விக்ரக வியாப்தி மூலம் காட்டி
தாத்பர்யம் பாகவத சேஷத்வம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
விஷ்வக்சேன -நாயகன் /அம்பரமே பிரம்பின் கீழே வளருவது போலே
வான மா மலை ஜீயர் செம் பொற் கழல் அடி ஸ்ரீ மான்
மா முனிகள் பொன்னடிக்கால் ஜீயர்-பொன்னடியாம் செங்கமல போது இவர் தானே-

————–

அம்பரம் என்பது பரமபதத்தையும், தண்ணீர் என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதியையும்,
சோறு என்பது உபநிடத ஞானத்தையும் குறிப்பில் உணர்த்து
அம்பரம் என்பது ஆத்மசுத்தியையும், தண்ணீர் என்பது அதை வளர்க்க வல்ல (அகந்தை, அஞ்ஞானத்தை விலக்கி) உபாயத்தையும்,
சோறு என்பது பரம புருஷார்த்தத்தையும்(முக்தி) குறிப்பில் உணர்த்துவதாம்.
இம்மூன்றையும் அளிக்கவல்லவன் ஆச்சார்யனே என்பதால், நந்தகோபன் ஆச்சார்யன் ஆகிறான்

அம்பரம் = ஓம் (ப்ரணவம்)
தண்ணீர் = நமோ (சரணாகதி)
சோறு = நாராயணா (பரத்துவம்)

பந்தார் விரலி என்று பாடும்போது, கண்ணனோடு பூப்பந்து விளையாடி அதில் அவனை தோற்கடித்து விட்டு,
கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது!

ஐம்புலன்களில் “தொடுதல்” என்பது மேலே சொல்லப்பட்டது. அது போல, மற்ற நான்கு புலன்களின் அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு!

கந்தம் கமழும் குழலி – மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு
சீரார் வளையொலிப்ப – செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ – கண்

வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர் (ஒன்றே) என்பதையும்,
அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும் (குறிக்கோள்) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது.
இதை வடமொழியில், “மிதுன சேஷித்வம்” என்றுரைப்பார்கள்.

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! – இங்கே கோழி என்பது வைணவனுக்குரிய (திருமாலின் தொண்டன்)
ஒரு முக்கிய குணநலத்தைக் குறிப்பில் உணர்த்துகிறது. வைணவர்கள் நாரை போல, கோழி போல, உப்பைப் போல,
ஊமையைப் போல இருத்தல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவன் என்றும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக
பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவன் என்றும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத்(இறை), பாகவத(அடியவர்), ஆச்சார்ய(குரு) சேவைகளில் கரைபவன் என்றும்,
‘ஊமையைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும்
இல்லாதிருப்பவன் என்றும் வைணவப் பெருந்தகைகள் உள்ளுரை கூறுவர்.

பொதுவாக, கோழி (சேவல்) விடியலில் மூன்று முறை கூவும். அது

1. தினமும் மூன்று வேளையும் பரமனை வழிபட வேண்டும்
2. திருமந்திரம், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை தினம் உரைக்க வேண்டும்
3. பரத்துவம், வைணவத்துவம், சரணாகதித்துவம் என்ற மூன்றின் அவசியத்தை உணர வேண்டும்

என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் – சரணாகதித்துவத்துக்கும், அதன் பயனாக மோட்ச சித்திக்கும் வேண்டிய தன்மை உடையவன்

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! – திருமகளைக் குறிக்கிறது

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய் – பரமனைப் பற்றுவதற்கு தடையாக இருப்பவற்றை நீக்க வேண்டுமிறோம்.

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! – சுற்றித் திரிந்து உன்னைச் சரணடைந்ததைக் கண்டு கொள்வாயாக!

மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் – வேத உபநிடத ஞானத்தன்மையுடன் யோகிகளும் முனிவர்களும்
உன் மணாளனின் திருநாமங்களைப் பாடுகின்றதை காண்பாயாக!

பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாட – எங்கள் மாயையை அகற்றி, பரமனது சேவைக்கு ஆட்படுத்த

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப – இனிமையான மங்கள முழக்கம் ஒலிக்க

வந்து திறவாய் – பரந்தாமனிடம் (அவன் அருளுக்கு உகந்தவராக) பரிந்துரை செய்ய வேண்டி நிற்கிறோம்!

———————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – நாயகனாய் நின்ற — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப எல்லாரும் கூடி வந்து –
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –
ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை –
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும் பெரியாழ்வார் திருமகள் இறே இவள்-
த்வதீய கம்பீரம் -ஸ்ரீ வைஷ்ணவர் -மன அனுசாரின விதிகள் பின் செல்லும் –

நஞ்சீயர் ரசவாதம் கை பட்டவன் இரும்பு பொன் ஆவது போலே
பிரமேயம் கை பட்டவன் சொன்னது எல்லாம்-சாஸ்திரம் ஆகும்
நம்பிள்ளைக்கு சொல்லி முமுஷுவை அஹம் சரணம் பிரபத்யே -அபய பிரதானம் நிவேதய மாம்-
ததீயர் மூலம் -காட்டி அருளி ஆகாசம் வரை வந்து நின்றவன் –
வானர முதலிகள் முன்னிட்டு —10 பாகவதர்கள் கீழே புருஷகாரம்
கடகரே சேஷி என்று இருக்கிறவர்கள் இவர்கள்

ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் நாதாயா பிதா மஹிம் நாத முனையே முதலிலும் கடைசியிலும்
ரத்னம் விலை அறிய அறிய கொடுத்தவன் பக்கலில் ப்ரீதி விஷயம் கூடும் இறே –மணி வண்ணன் இறே-
கர்ம யோகாதிகள் பலம் தராதே
எம்பெருமான் கிருபை ஒன்றே பலம் கொடுக்கும் வேண்டியவர்கள் முன்னிட்டு போனால் பேற்றுக்கு உடல்
பெரிய முதலியார் நாதமுனிகள் ஆளவந்தார் இருவரையும் சொல்லுவார்
மற்று அவரை சாற்றி இருப்பார் தவம் வெல்லுமே -ஏத்தி இருப்பாரை–
அடியார்க்கு ஆட்படுத்தாய் ஆட் படுத்திய விமலன்
உடன் கூடுவது என்று கொலோ அடியரோடு இருந்தமை பலம் ஈஸ்வரன் கிருஷி பாகவத பக்தி –
பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் -பட்டர் நஞ்சீயருக்கு அருளிச் செய்தார்
இப்பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி-
பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –
இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன – பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே –
உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக -தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை
தேடித் போக வேண்டி இருக்கை அன்றிக்கே
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –
வாசு தேவன் பெற்றிலன் நந்தன் பெற்றனன் -ராஜ குலங்களில் பிரசித்தம் இறே
உந்தை யாவர் என்று உரைப்ப கடைக்கண்ணிலும் விரலிலும் காட்ட நந்தனன் பெற்றனன்
வானவர் நாடு இவன் அவர்கள் மடியில் கிடப்பது வான் இளவரசு
வானவர் நாடு முடியுடை வானவர் நித்யர் விண்ணாட்டவர் மூதுவர் பழையவர்
இவன் அவர்கள் மடியில் பிரம்புக்கு அஞ்சி சேனை முதலியார் –
தத் சதா -அவை அவை அப்படியே அனுஜானம் உதார வீஷனை
இளவரசன் – விருத்த மந்த்ரிகள் -ராஜ்ஜியம் நடத்த –
திருவாய்மொழி பிள்ளை நடத்தினது போலே அரரசன் இளையவன் ஆக இருந்ததால்
சிறகில் ஒதுங்கி- பிரம்பில் கீழும் -திரு அநந்த ஆழ்வான் மடியிலும்
மேலாப்பின் கீழ் வருவான் வினதை சிறகின் அநந்த போக பர்யங்கே

நாயகன்
நந்தகோபருக்கும் கோயில் காப்பானுக்கும்–கடகர் இறே நாயகர்
ஆளவந்தார் நாத முனிகள் ஆச்சார்யர்களை துதித்து இழிந்தால் போலே
சீற ஒண்ணாதபடி புருஷகாரமாக
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் -என்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும்
நம்முடை நாயகனே -என்றும்–இருந்தாலும்
உந்தம் அடிகள் முனிவர் -அந்த கண்ணபிரானுக்கும் நாயகர் நந்தகோபர் என்றது இறே
கண்ணபிரான் கோயில் காப்பானே என்னாமல் நந்தகோபர் கோயில் காப்பானே
பரமபதத்தில் ஸ்வ தந்த்ரனாய் பட்ட பாடு தீர–
நந்த கோபர்க்கு பிள்ளையாய் பிறந்து பாரதந்த்ரம் பேணினான்

நாயகன் ஆய நின்ற–
பிதா -புத்ரேன பித்ருமான் ஆக்கி வைத்தான் மகன் ஒருவருக்கு அல்லாத –
கோயில் காப்பான்
தொழில் இட்டு மௌக்யத்தாலும் அவன் உகப்பதாலும் சேஷ வ்ருத்தி பெயரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பெயர்
ஆதி சேஷன் என்றே –
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே -யசோதை —நாயகன் முழு எழு உலகுக்கும் நாதன்
பிரத்யீயம் வளையம் ஆக்கி பாணினி சூத்ரம் –நாயகன் ஆனான் இல்லை நாயகனே ஆகி நின்றான்
கண்ணன் முற்றம் கண் நல் முற்றம் -விசாலம் அர்த்தம் இல்லை–
பிறந்த உடனே தன்னுடையது ஆனதே -உபய விபூதி நாதன் –
திருப்பாவையில் யார் உடைய பெயர் அதிகம் –நந்தகோபன்
நந்த கோபன் குமரன் -நாயகனாய் -அம்பரமே -உந்து /ஏற்ற கலங்கள் -ஆற்ற படைத்தான் மகனே –ஐந்து தடவை

க்ரம குலத்தால் சொல்லாமல் விஷ்ணு சம்பந்தம் இட்டே காக்கும் இயல்வினன்
எங்கள் நிதியை காப்போடு சேர்த்து காக்கும் திருமாளிகை ரத்னதுடன் காக்கும்
போய் பாடுடைய நந்தன் தாழ்த்தான் -காப்பாறும் இல்லை கடல் வண்ணா -வயிறு எரிச்சல் தீர்க்கும் நீ லோகம் தூங்கும் ஞானிகள் விழித்து
ரஷகத்வம் இவர்கள் தலையில் வைத்து தான் உறங்கா நிற்கும் காப்பானே –
எண்மர் -உலோக பாலீர்கள் பறவை அரையா–திரு அநந்த ஆழ்வான் சொல்ல வில்லை
உறங்காதவரை சொல்ல வேண்டாமே —அவர் தானே எம்பெருமானார்- மா முனி கள்–ஆங்கு ஆராவாரம் அது கேட்டு

நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய
கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் -சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்–
அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –

கோயில் காப்பானே என்று ஷேத்ராபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியை சொல்லிற்றாகவுமாம்
ஆராலே விக்நம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலில் விழச் சொல்ல வேணுமோ

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் –
கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் –
ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –
கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே பெண்கள் தடுமாற்றம் தீர
முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள–அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-

ஸ்ரீ பரத ஆழ்வான் -சித்ர கூடம் கொடி கண்டு தரித்தால் போலே–
தண்ணீர் பந்தல் கொடி கட்டி -விடாயருக்கு காட்டுமா போலே
அடையாளம் எங்களுக்கு–வாசத் தடம் உள்ளே கிடப்பதை காட்டும் கொடி–க்ரீஷ்மே -சீதம் -தண்ணீர் –
கொடி வாசலில் வானவர் அங்கும்–தசரதன் பெற்ற மணித் தடாகம் கொடியும் காவலும் உண்டே
கொடி தோரணம் அசேதனம் அழைக்க அனுமதிக்க தெரியாதே–
அர்ஜுனன் சுமத்ரை கொண்டு போக கடவன் -சொல்லி வைத்தது போலே
இவளுக்கும் சொல்லி வைத்து இருப்பான்

மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே புகுவாரை தன் அழகாலே
கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –
பாகவதர் மணிக் கதவம் சாம்யம் கொடுத்து அருளி–
உள்ளு புக்கால் மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும்
தாள் திறவாய் -என்றவாறே
அவன் பயமுள்ள தேசத்தில் மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன – இருந்த இடத்தில் பயம் என் என்ன –
காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய் பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய் மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய் பயம் அற்று இருக்கிறதோ –
காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம்
தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் –
இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி கம்சன் சத்ரு எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள் பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –
பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன
சூர்பணகை -பெண் அன்றோ என்ன –
அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த வர்கள் அன்றோ -என்ன –
பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும் தவிர்த்து அருளாய்-

நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் ஸூ சகம்-
துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –
விரதத்துக்கு பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சப்தங்களைச் செய்து
நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –

ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் –
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதரான பாலர்களான நமக்கு -என்ன
வார்த்தையிலே அறியலாம் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –

அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்-அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன-புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன
ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து தருவிக்கிறேன் -என்ன

மாயன்
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று கையை காலை பிடித்து பரிமாறின படி

மணி வண்ணன்
தாழ நில்லாதே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவழகை உடையவன்
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை -பிரகாசம் -என்னவுமாம் –
வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே
இவர்களை கிடந்த இடத்தே கிடக்க ஒட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு
தூயோமாய் வந்தோம்
பல்லாண்டு பாடுகையே பரம பிரயோஜனம் -புருஷார்த்தம்
தமது ரஷணத்துக்கு அவனே கடவன் என்கிற அத்யாவசாயம் கொண்டவர்கள்
பிரயோஜனாந்த பரர் இறே ஓலக்கத்தில் புகுவார்
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளரும் இடத்திலே புகுரப் பெறுவார் –

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம் ஒரு நாளே -என்றார்கள் —ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –
நென்னலே -ஏவகாரம் அதுவும் ஒரு நாள் கொண்டாடி
இன்று உன் காலை பிடிக்க–நேற்று அவன் எங்கள் காலைப் பிடிக்க–

வாய் நேர்ந்தான்
சர்வ ஸ்தானம்-
வாய் நேர்ந்தான் –
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்-மெய்யாக வேணுமோ -என்ன
ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில் பழுதாய்த்தாகில் அன்றோ
இவ் வார்தையும் பழுதாவது -என்ன – சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –
ஸ்மிதம் பூ அலர்ந்தது போலே–வாக்மி ஸ்ரீ மான் சோதி வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் —அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய–தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-
அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –
தூயோமாய் வந்தோம்–
ஆராய வேண்டாம்–அவன் ரஷையும் அவனே பிரயோஜனம்
உபாயாந்தரம் கொண்டு பெற மாட்டோம்–அவனே உபாயம் அவனே பலம்–பிரயோ ஜனாந்தரம் கொண்டு எழுவார் அல்லோம்-
ராவண பவனம் விட்டு வந்தவன் முழுகி வர வில்லை
நீசர் நடுவில் அர்ஜுனன்
அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் புறம் தூய்மை நீரால்

வந்தோம் –
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை-
நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் என் என்ன –
வந்தோம் –
வரவிலே தெரியாதோ எங்கள் பாவ சுத்தி–அவன் பதறி துடித்து ஓடி வர நாங்கள் வந்தோம்–கஜேந்த்திரன்
நாங்கள் அல்லவோ வந்தோம்

துயில் எழப் பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்–பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்-அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –
எழுப்புமவர்களோட்டை சம்பந்தம்–பெரியாழ்வாரோட்டை குடல் துவக்கத்தால்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் -நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –அவன் கையது இறே வாழ் நாள்–அவன் சத்தை பெற
வாய் சொல்லே தண்ணீர் பந்தல்–மாற்றாதே -நியமிக்கலாமா–சேஷ பூதர் -தடுக்கலாமோ

அம்மா -ஸ்வாமி–த்வார சேஷி தான் எங்களுக்கு கடவர்கள் —அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் கட்டுபவர் நீ
வத்யதாம் மம அபி சித்தம் வேத்தி விபீஷணன் சுக்ரீவன் அஸ்மாத் துல்ய பவத் சொல்ல வைத்தான் –
நீ புக விட்டால் தான் அவன் உகப்பான்–ஐயர் சொன்னால் சீதை கொள்வேன் என்றாரே பெருமாள்

அம்மா –
பச்சை இடுகிறார்கள்–உள் இருக்கிறவனோ நாதன்–நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –

நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
நேசமுடைய நிலையையும் கதவையும்–நிலை நேசம் கதவம் -நிலையோடு பொருத்தம் உடைய கதவம்-
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு–எங்களால் தள்ளப் போகாது–நீயே திறக்க வேணும் – என்கிறார்கள்
சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –கம்சன் படை வீட்டில் எல்லாம்
பிரதிகூலமாய் இருக்குமா போலே –
நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –
நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் – உன்னிலும் பரிவு உடையது
இவர் விலக்குவது சிநேகத்தால் கதவு திறக்காதது சிநேகம்
திறந்து கொள்வார் மூக்கில் அறையும் நீயே கதவை திறந்து விட வேண்டும்
அகால காலத்தில் செடி கொடிகள் பூத்து சகடத்தில் அசுரர்
நித்யர் கதவில் இருக்கலாம் படியாய் கிடந்தது -உன் பவள வாய் நிலையும் கதவுமாய் இருக்கலாமே
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் நேச நிலை கதவு நடுவில் இடை வெளி இல்லை
அவனை முன்னிட்டே எம்பெருமானை பற்ற வேண்டும் –

நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய் –
நீ
எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே -ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை -மறைக்கக் கடவதாய் இறே இருப்பது-

தூயோமாய் வந்தோம் -இரண்டு -உபாயாந்தரம் இல்லாமை -பிரயோஜனாந்தரம் இல்லாமை –
கதவம் நீக்கு
நிலை கதவம் நீக்கு
நேச கதவை நீக்கு
நீ நேச நிலை கதவம் நீக்கு
எழும் புல்லு பூண்டு எல்லாம் ஆசூரா வேஷம்
அசேதனங்களும் ரஷிக்கும் நேசம் மிக்கு
ஆச்சார்யர் உபதேசம் மூலமே பற்ற வேண்டும் –
நாயகன் -ஸ்ரீ ராமானுஜர் -ரத்னா ஹாரம் -மத்ய மணி நியாயம் –
முன்னோர் திரு முடி சம்பந்தம் பிற்பட்டார் திருவடி சம்பந்தம்
அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜர் அன்றோ

மாயன் -மணி வண்ணன்-அழகன் -பிராப்தி இல்லா விட்டாலும் –
பொய்யே-அஹிதமே சொன்னாலும் விட ஒண்ணாத -முந்தானையில் முடிந்து ஆளலாமே – –
நென்னலே –வாய் நேர்ந்தான் -திருவாய் அழகு பிரதானம் -அதிலே மெய் மறந்தோம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு அஷ்ட புஜகரத்தான் / இடை -நமஸ் அர்த்தம் -இவர் கைக்கொள்ள அஷ்ட புஜங்கள் /
ராமோ த்விர் நா பாஷதே -கத்யம் -எடுத்து ஆண்டு -ஏலாப் பொய்கள் உரைப்பானே/ நம் பெருமாள் அன்றோ /
மாஸூச -வாய் நேர்ந்தான் அர்ஜுனனை வியாஜ்யமாக கொண்டு
கண்ணனும் சத்யம் -என் வார்த்தை பொய்யாக்காதே -ஆகாசம் விழட்டும் ஹிமாசலம் பொடியாட்டும் சமுத்திரம் வற்றட்டும் –
இவை நடந்தாலும் என் பிரதிஜ்ஜை மீறாது திரௌபதி இடம் / பரீக்ஷித் கர்ப்பம் -ப்ரதிஜ்ஜை செய்து உயிர் ஊட்டி/
ஆத்ம சம்பந்தம் -ஆத்ம ஆராமன் -இந்திரிய ஆராமன் -ஆராமம் தோட்டம் –
பெருமாள் சத்தியமும் கிருஷ்ணன் பொய்யும் நமக்கு தஞ்சம் –
நென்னலே -எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் சம்பந்தம்
நேர்ந்தான் -சத்ய ஸங்கல்பன்
மாயன் -ஆர்ஜவம் -தாழ நின்று -செல்வ சிறுமீர்காள் / கிங்கரர் விசுவாமித்திரர் இடம் கூட -தூத்ய சாரத்யங்கள் -/
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் –
ராமானுஜர் -சர்வேஸ்வரன் பயப்படுவானா -சங்கை இருக்க –
நம்பி திரு வழுதி நாட தாசர் திருவாராதனம் சொல்லி கொடுத்து அறிந்த அர்த்தம்
அஹம் மே த்வம் மே -சம்சாரிகள் இடமும் தாழ நின்று சொத்தை சேர்த்து கொள்ள /
வாரிக் கொண்டு என்னில் முன்னம் பாரித்து -திருக்காட்கரை அப்பன் /
நைவளமும் ஆராயா நம்மை நோக்கா நாணினால் போல் இறையே நயங்கள் செய்யும் அளவில் –
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய – –
நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு எங்கு உசாகோ /
தாழ நின்று பரிமாறிய இடங்கள் -பத்னிக்கு தோற்பான் பரம ரசிகன் -அறிந்தவன் அன்றோ கண்ணன் –
தூங்குவதை பார்த்துக் கொண்டே இருக்க சீதா பிராட்டி ஆசை -காகாசுரன்
இவர்கள் துயில் எழுந்து இருக்கும் பொழுதை காண அன்றோ ஆசைப்படுகிறார்கள்

நாயகனும் எம்பெருமானும்-
எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே-
எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை

கோயில் காப்பானும் -எம்பெருமானாரே-நடு நாயகம் -எம்பெருமானார் –
யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இறே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது

மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்

நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்

நின்றான் –
யாத்ரை போகாமல் நின்றார் ராமானுஜர்
தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ –
யதிராஜ சம்பத் குமாரர்- செல்வ பிள்ளை -நந்த கோபன் கண்ணனை -பெயர் தகும்
ஆனந்தப் படுத்தியவர் –
உடைய கோயில் -உடைய பதம் இந்த பாசுரத்தில் மட்டுமே -உடையவர் –
கோயில் காப்பான் திருவரங்கம் –
திரு பூரி க்ஷேத்ரம் – மாமலை மற்றும் உவந்திடும் நாள் -திருத்தி பணி கொண்டார்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –
கடல் வண்ணன் கோயிலே என்னும் –
மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்

கோயில் காப்பான் -எம்பெருமானார்
உடையவர் உபய விபூதியும் கையிலே உடையவர்
கொடி தோன்றும் தோரண வாயில் -நித்ய விபூதி
கோபுரம் -நடு தோரணம் நிறைத்து -கொடி அணி
எம்பெருமானார் சம்பந்தமே கொடுக்கும்-

நேசக் கதவு இரட்டை–
பிரணவம் -மந்திர சேஷம் -திரு மந்த்ரம்–பூர்வ கண்டம் உத்தர கண்டம் –
த்வயம்–பூர்வார்த்தம் உத்தரார்தம் சரம ஸ்லோகம்

திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு

கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நிலைக்கதவம்-

நாயகனாய் -16-என்று தொடங்கி மேல் அஞ்சு பாட்டாலே
ஸ்ரீ மதே விஷ்வக் ஸேனாய நம / ஸ்ரீ யை நம /ஸ்ரீ தராய நம /என்னும் அர்த்தங்களையும்
அச்சேர்த்தியிலே இவரும் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்தே பெறும் ஏற்றங்களைச் சொல்லுகிறது –

அமுநா தபநாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயகஸ்ரீ –யதிராஜ சப்ததி
நந்த கோபன் –
எம்பெருமானை புத்திரனாக பெற்றதில் எம்பெருமானார்க்கு சாம்யம் -யதிராஜ சம்பத் குமாரர்
உடைய
ஸ்வாமிக்கு உடையவர் திரு நாமம் ஸூசகம்
கோயில் காப்பான்
திருவரங்கம் -அணைத்து கோயில்களுக்கும் உப லக்ஷணம்
தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய —
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்று உவந்திடும் நாள்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
கொடியும் தோரணமுமான பரமபத வாசல்
ராமானுஜர் அடியவர்களுக்கு மட்டுமே உரித்தானது அன்றோ

—–

பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுவதாகப் பெரியோர் கூறுவர்.

பிரமாணம்: வேதம், ஸ்மிருதி, புராண இதிகாசங்கள், திவ்யபிரபந்தம், பிரம்ம சூத்ரம் ஆகியவை
பிரமேயம்: பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
பிரமாதா: ஆச்சார்யர்கள்
சுருங்கச் சொன்னால், பிரமாணம் மூன்று மந்திரங்களையும், பிரமேயம் எம்பெருமானையும்,
பிரமாதா, மந்திரங்களை உபதேசிக்கும் ஆச்சார்யனையும் குறிக்கின்றன.
எம்பெருமானைப் பற்ற மந்திரம், பரதேவதா, ஆச்சார்யன் ஆகிய மூன்றின் பேரிலும் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பாசுரத்தில்
கோயில் காப்பான் – மூல மந்திரம்
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் – த்வயம்
நென்னலே வாய் நேர்ந்தான் – சரம ஸ்லோகம்

‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்பது மேற்கூறிய மூன்று மந்திரங்களை உபதேசிக்குமாறு
ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டுவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

இப்பாசுரத்தில் கோபியர்கள் ‘தூயோமாய் வந்தோம்’ என்று சொல்லும்போது, முக்காரண சுத்தியுடன் (வாக்கு, மனம், உடம்பு)
பகவானிடம் வந்துள்ள அடியார்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றனர்.

‘துயிலெழப் பாடுவான்’ என்பது, எம்பெருமானை போற்றிப் பாடித் தொழுது, அதன் வாயிலாக
உலக பந்தங்களிலிருந்து விடுபடும் மார்க்கத்தை உட்பொருளாக வலியுறுத்துகிறது !

சிஷ்யனானவன், ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் கணத்திலேயே, எம்பெருமானின் கருணைக்கு
பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை ‘ மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்’ என்பது குறிக்கிறது.

‘நேய நிலைக் கதவம்’, தடங்கலின்றி வளரும் (பகவான் மேல் வைத்திருக்கும்) அன்பையும், பக்தியையும் குறிக்கிறது.

——————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

January 22, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –

சாம வேதம் –1000-சாகைகள் / ரிக் வேதம் -21-சாகைகள் / யஜுர் வேதம் -100-சாகைகள் / அதர்வண வேதம் -1-

————————————————–

ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –

காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்

ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்

உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு

எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –

இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –

இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –

———-

முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —

சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–

1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்

ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –

சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-

———————————–

இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –

அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-

அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –

பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-

தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –

ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –

———————————-

ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-

பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-

ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-

1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்

அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்

முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்

மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்

நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்

ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்

ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்

எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்

ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்

இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————

இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4

முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –

ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்

அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்

ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –

——————————

முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –

பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–

பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –

இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –

இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –

இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன

நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –

ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –

——————————–

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –

உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–

உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்

அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல

இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —

—————————————

இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—

ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-

அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-

அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –

இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்

நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்

இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –

—————————————–

இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –

ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—

ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –

யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –

முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —

———————————

ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–

நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –

நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–

————————-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –

பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-

—————————————

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

————————————

அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-

ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் – சரணாகத ரஷாக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன் / அநாதி / ருசி ஜனகன் / ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன் /
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்

———————————————–

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

————————————–

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –

——————————————–

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

————————————–

அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-

ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்

——————————————

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /

————————————————

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-

நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்

சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/

—————————————————

அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-

சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /

—————————

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /

———————————-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

—————————————

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

—————————–

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

————————————

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்

———————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ திருப்பாவை சாரம் – எல்லே இளம் கிளியே — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை-

இப்பாட்டில் பாகவத கோஷ்டியைக் காண ஆசைப்பட்டு –
எல்லாருடைய திரட்சியையும் காண வேண்டி இருப்பாள்- ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

உக்தி-பிரதி உக்தி- ஸ்பஸ்டமாக இந்த பாசுரம் – முக்த கண்டம் -வெளிப்படையாக சொல்லுகிறது –
திருப்பாவை ஆகிறது இப் பாட்டு ஆகிறது -நானே தான் ஆயிடுக-
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும்- இல்லை என்று வாதம் செய்யாமல்-
இருக்கிறது என்று இசைந்து- அனுஷ்டானம் பர்யந்தம் -காட்ட-தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-
சிற்றம் சிறு காலை பகவத் விஷயம்- இது பாகவத விஷயம்-
நடு நாயகமான பாசுரம் –இறுதி பாசுரம் தானான தன்மை சொல்லி -நிகம ரத்ன ஹாரம் –
பாசுரத்திலும் நட்ட நடுவில்- நானே தான் ஆயிடுக –
மகா பாரதம் -சரம ச்லோகத்துக்காக -கீதை -அர்ஜுனன் யுத்தம் -எதனால் செய்ய –
விபீஷண- மித்ர பாவேன அதுக்காகா ஸ்ரீ ராமாயணம்-
மேம்பொருள் போக விட்டு சொல்ல திருமாலை மேலில் பாட்டில் பாகவத வைபவம்
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனை பாட -என்று
அசல் அகத்து பெண் பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவள் அந்த பாசுரத்தை
தன் மிடற்றிலே இட்டு பாட-எழுப்புகிறவர்கள் –
அந்த த்வனி வழியே கேட்டுச் சென்று இவள் பேச்சின் இனிமையாலே –
எல்லே இளங்கிளியே –
என்கிறார்கள் –-அது தானும் இவர்களுக்கு அத்யந்தம் ஆகர்ஷகமாய் இருக்கையாலே-
அவரை கொண்டாடுவதற்கு முன்பே –எல்லே-என்று ஆச்சர்யப் படுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது –
கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை – பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை
இவ்விடத்தில் பருவம் எனபது அபி நிவேசத்தை –
அவற்றுக்கு அபிநிவேச பூர்வகமாக வார்த்தை சொல்ல வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே –
பசுமைக்கும் பேச்சுக்கும் ஒப்பு – பருவத்துக்கு ஒப்பு ஆகாதே –
ஆஹ்லாதகரத்வம் -ஆகர்ஷணத்வம் – மனோஹரத்வம் தாமரை –திருக் கண்களுக்கு ஒப்பாகாதே –
பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பு ஆக மாட்டாதே
இவர்கள் கிளி-
தாம் இளம் கிளி-
மென் கிளி போலே மிக மிழற்றும் கிளி மொழியாள்
இளம் கிளி– கிளி போன்றவளே இல்லை- முற்று உவமை –தாவி வையம் கொண்ட தாமரைகட்கே -போல

எல்லே –என்னே –சம்போதனம் ஆகவுமாம் – எல்லே- ஏடி- சாழலே
ஹலா -ஹஞ்சே -ஹண்டே சமஸ்க்ருதம் – ஏலே -திரு நெல்வேலி -பாஷை -அடே சப்தம்
எல்லே என்று பேச்சின் இனிமையாலே ஆச்சர்யப் படுகிறார்கள் –

பங்கயக் கண்ணானை பாடுவது -நா படைத்த பயன் கேட்டு -இவள் பாட
நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று
இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்
போந்தார் போந்து எண்ணிக் கொள்
மநோ வாக் காயம் -கையாலே தொட்டு எண்ணிக் கொள் பாகவதர் விஷயத்தில்
மாற்றாரை அழிக்க இல்லை மாற்றாரை மாற்று அழிக்க –
அவர்களின் துர் அபிமானம் பகைமை அழிக்க தானே
மாயனை -5- ஆரம்பித்து -15-முடிவில் மாயனைப் பாட –
அசல் மாளிகை பாடினதை கேட்டு – –
வண் த்வாராபதி மன்னனை ஏத்துமின்–ஏத்துதலும் தொழுது ஆடுமே -தோழி சொல்லக் கேட்டு உணர்ந்தால் போலே
தொழுது ஆடி -அடுத்த பாசுரம் –
பாகில் பிடிபட்ட பாவை அன்றோ இவள் -தேர்ப்பாகு -போர்ப்பாகு –
அதே போலே இவளும் பாடி -எல்லே இளம் கிளியே -இவளும் பாட –

இன்னம் உறங்குதியோ –
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க –
இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் –
கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே உன் கடாஷமே பற்றாசாக நாங்கள்
நின்ற பின்பும் உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க- உறங்கக் கடவையோ -என்றுமாம் –
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன –
உத்தேச்யம் உன் வீட்டு வாசலில் பழி கிடக்க- கிருஷ்ணன் உதறி இங்கே வர வேண்டாமோ
வையம் மன்னி வீற்றி இருந்து மண்ணும் விண்ணும் ஆழ்வார் ஸ்ரீ வைஷ்ணன் பாகவத கோஷ்டி மிக உத்தேச்யம்
தனித் தனியே அனைவரையும் காணப் பெறுதல்- பேர் சொல்லப் பெறுதல்-
விரல் தொட்டு எண்ணப் பெறுதல்- ஸ்பர்ச சுகம் அனுபவிக்கப் பெறுதல்-
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் ஆகையாலே எண்ணி முடிக்கும் அளவும் அவளைப் பிரியாதே
காணப் பெறுதல் முதலிய பல பேறுகளை பெறுதல்
பிரத்யஷம் கிடக்க அனுமானம் கொள்ளவோ–இது சித்தம் -பாகவதர் கைப்பட்டு கிடக்க
ஆனை வந்து போன பின்பு காலடி -ஆனை வந்து போனதே –
அனுமானத்தால் நையாகிகனை கிண்டல் பண்ணி அனுமானம் கட்டி அழுவான்

மாணிக்க வாசகர் திருவாசகம் 4 பாசுரம் இதை ஒட்டி –
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுவோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உண்ணெக்கு நின்று உருக யா மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையிற்று யிலேலோரேம்பாவாய் –

சில்லென்று அழையேன்மின் –
தன் அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிறது விக்நம் ஆகையாலே சிலுகிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அசஹ்யமோ -என்னில் –
திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அசஹ்யமாம் போலே –

நங்கைமீர் போதர்கின்றேன் –
நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்த படி என் -என்ன சிவிட்கென்ன கூசி –
நங்கைமீர் போதர்கின்றேன் —
நம் பாசுரத்தை மிடற்றிலே வைத்துப் பாடுகிற இவ் வனுபவதிற்கு விரோதம் பண்ணலாகாதே என்று
எழுப்பாதே இருக்க வேண்டி இருக்க
அது பொறாதே எழுப்புகிற நீங்கள் அன்றோ பூர்ணைகள் –
நீங்கள் வாய் திறவாது இருக்க வல்லிகோள் ஆகில் நான் புறப்படுகிறேன் -என்ன

வல்லை யுன் கட்டுரைகள் பண்டே யுன் வாய் அறிதும் –
நங்கைமீர் –
என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
நீர் கட்டு வார்த்தை சொல்ல சமர்த்தர் –
சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை
என்னும் இடம் பண்டே அறியோமோ -என்றுமாம் —

வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –
வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன
உன் வாசலில் வந்து எழுப்ப சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன
அது என் குற்றம் அன்று -அதுவும் உங்கள் குற்றமே-
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள் நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே
தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –
உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி-
அதுக்கு மேலே -என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன –
அது கிடக்க ஸ்வரூபம் இருப்பதால்

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் – இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –
பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
இல்லாத குற்றத்தை உண்டு என்றாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்து -உத்தமன்-
இருக்கிற குற்றம் மத்யமன்
மத்பாபமே -நிமித்தம் வன பிரேவசம் – மந்தரை கைகேயி தசரதர் ராமர் -யாருமே இல்லை –
பிள்ளையாக பிறந்ததே காரணம் –
கௌரவியர்-குணம் அபதானதுக்காக நிர்பந்தம் பண்ணி – அதி ரமணீயமான – தோஷ துஷ்டியான நான்
குற்றம் இசைந்த பின்பு செய்ய வேண்டியது என்ன
பட்டரை குறை சொல்ல -நம்முடைய தோஷம் -விண்ணப்பித்தது என்ன கைம்மாறு செய்வேன் சால்வை போத்தினாராம்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்– கொக்கை –பொறை சிரிப்பு கிருபை உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டும்

ஒல்லை நீ போதாய் –
எங்களுக்கு ஒரு ஷணமும் உன்னை ஒழியச் செல்லாமையாலே எங்கள் திரளிலே சடக்கென புகுந்து கொடு நில்லாய் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே -என்று அவர்களுக்கும் இத் திரள் இறே பிராப்யம் –
வைகுந்தம் புகுவார் போலே
இப்படி பழியை தம் மேலே ஏறிட்டுக் கொண்ட இவரை சடக்கென இக் கோஷ்டியிலே பிரவேசியாய் -என்கிறார்கள்
ஸ்ரீ ரெங்கம் அத்யாபகர் -சாது கோஷ்டி–

உனக்கென்ன வேறுடையை-
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே உனக்கு வேறு சில உண்டோ –
வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பாகவத விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –
நீ ஒருவருக்கு விரோதி அல்லை- நீ புக்குத் திருவடி தொழு -என்ற ஆழ்வான் வார்த்தையை நினைப்பது –
உனக்கு என்ன வேறுடையாய் –
உன் படுக்கையில் கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய் –இட்டு வைத்து -ஒதுக்கி வைத்து –
அஞ்சு லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்திலையோ எங்கள் பெரும் பானை கண்ட பின்பும்
புருஷார்த்தமான இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அனர்த்தம் உண்டோ
விஷயங்களை விட்டு புறம்பாக இருக்கலாம்
ஈஸ்வரனை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
ஆத்மாவை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
அடியார்களை விட்டும் புறம்பாய் இறுக்கக் கடவையோ
அரை ஷணம் வைஷ்ணவ கோஷ்டியை பிரிய நின்று வரும் மத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய என்கிற
ஸூப்ரஹ்மணய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது
கங்கை கொண்ட சோழ புரத்தில் அமைச்சர் -புரோஹிதராகவும் இருந்தவர்
உத்தேச்யமான நம்பெருமாள் திருப்புன்னை கீழ் எழுந்து அருளி இருக்க அங்கு சென்று தண்டன் இடாது
எம்பெருமானார் திருவடி இணைகளையே
போற்றித் தண்டன் இடுகிறார்களே-சந்நியாசியான இவரும் அங்கீ கரிக்க லாமோ
எம்பெருமானார் -தாம் அரங்கன் திருவடி நிலை என்று உணர்த்த உணர்ந்தார்

எல்லாரும் போந்தாரோ –
எனக்கு உங்களை ஒழிய சுகம் உண்டோ உணர அறியாத சிறு பெண்களும்
உணர்ந்தால் புறப்பட இருந்தேன் – எல்லாரும் போந்தாரோ -என்ன –

நானே தான் ஆயிடுக
மத் பாபமே -பரதன் /
சீதா பிராட்டி -மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் / மஹத் அஸ்தி –
நமக்கு உணர்த்த நாடகம் -இவர்கள் –
கௌசல்யா லோகா பர்த்தா –கொண்டாடட்டம் போலே -என்னை ரஷிக்க வில்லையே –
பொழில் எழும் காக்கும் நாராணனைக் கண்டக்கால் ஓர் வாசகம் கொண்டு அருளாயே
என் பிழையே நினைந்து அருளி -அபராத சஹத்வம் -பற்றாசாக ரஷிக்க
அறிவிப்பே அமையும் -நானே தான் ஆயிடுக –
எல்லாரும் போந்தாரோ –
பிள்ளாய் தொடக்கமான அனைவரும் -போவான் போகின்றாரை போகாமல் காத்தீர்களே -அவர்கள் எல்லாரும் வந்தார்களா
முனிவர்களும் யோகிகளும் வந்தார்களா –
சதுர்வித பஜந்தே மாம் -அனைவரும் – – வந்தவர் நான்கு வகை – கீதை –
ஆர்த்தன்-அர்த்தார்த்தி -ஆத்மானுபவம் -பகவத் அனுபவ காமன் —
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன்-ஆழ்வார் லோகம் எல்லாம் தம்மைப் போல ஆக்க –
பெரியாழ்வார் அனைவரையும் கூப்பிட்டு பல்லாண்டு
சதுர்வித புருஷார்த்தம் -அறம் பொருள் இன்பம் வீடு -எல்லாரும் போந்தாரோ –
ஆச்சார்ய ப்ரபோ தர்மம் -அஹம் சர்வ யஜ்ஜம் போக்தா பிரபு -பரம தார்மிகன் -அனைத்தும் இவனே –
ஞானம் த்ரஷ்டும் -அறிய நினைக்க காண -தாளிணை கீழ் வாழ்ச்சி தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -கூடிக் களித்தல்
நித்யர் -முக்தர் -முக்த பிராயர் -கைவல்ய முக்தர் -முமுஷூக்கள் -புபுஷூக்கள்-ஐஸ்வர்யார்த்திகள் –
அமரர் முனிவர் -ஒவ் ஒன்றிலும் இரண்டு வகை -ஸுலப்யம் அனுபவிக்க இங்கே நித்ய முக்தர் வருவார்களே
ஸ்வார்த்த பரர்கள் – பரார்த்த பரர்கள் -இதிலும் இரண்டு வகை -பிரதான ஆனந்தம் –

போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன
ஆகில் உள்ளே புகுர விடுங்கோள் -என்ன –

போந்து எண்ணிக் கோள் –
புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்- மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே
பார்க்கையும் அனுபவிக்கையும் –
நாம் எல்லாம் கூடினால் செய்வது என் என்ன –

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தைக் கொன்று -நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –

எல்லே இளம் கிளியே -திரு வல்லிக் கேணி அனுபவம் ஸூ சகம்–
வல்லானை கொன்றானை –விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்-
வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப –

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
எதிரிட்ட கம்சாதிகளை அனாயேசேன நசிப்பித்து அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை-
சுபாகு மாரீசன் -தொலைக்காமல் விட்ட -இராவணனை திருத்துவானோ நப்பாசை-
அகம்பனன் விட்டு மிச்சம் வைத்து அனர்த்தம்
கண்ணன் அப்படி இல்லை -கச்ச என்று விடாதே-
கஞ்சன் மயிரை பிடித்து மதிப்பு அறுத்து குஞ்சி பிடித்து மாற்றாரை மாற்று அழிக்க வல்லான்

மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை பெண்கள் கையில் படுமவனை –

வல் ஆனை கொன்றானை –
அங்கே குவலயா பீடத்தை கொன்றாப் போலே நம்முடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தைப் போக்கினவனே-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை —
சாணூர முஷ்டிகாதிகளை நிரசித்தாப் போலே நம்மை தம்மோடு சேர ஒட்டாத
இடையர் உடைய சங்கல்பத்தை போக்கினவனே –
எதிரிகளை தான் தோற்பிக்குமா போலே நம் கையிலே தோற்ற ஆச்சர்ய பூதனை –

பாட –
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்கு தோற்றுப் பாட –
நம்முடைய தோல்வியும் அவனுடைய வெற்றியையும் பாடி –
தடம் பொங்கத்தம் தோற்றவர்கள் பாடி- வாயினால் பாடி- அவதார விஷயங்கள் பாடி
கேசவனை பாடி -விரோதி நிவர்தகம்
முகில் வண்ணன் பாடி -வடிவு அழகு பாடி-
சங்கோடு சக்கரம் ஏந்திய தடக் கையன் பாடி -திவ்ய ஆயுதம் சேர்த்தி அழகை பாடி
வெறும் கையுடன் மல்லரை வென்ற படி- பேச்சும் உத்தேச்யம் எல்லே -இளம் கிளியே -பாகவதர்

ஸ்வ யத்னத்தால் கடக்க அரிதாய் பிராயச்சித்த விநாச்யமுமாய் இன்றிக்கே இருக்கிற அஹங்கார நிவர்தகனாய்
மற்றும் உள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகனாய் –
ஆஸ்ரித பரதந்த்ரனைப் பாட ஒல்லை நீ போதாய் – இத் அந்வயம்-

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களையும் செய் எல்லையிலா மாயன் கண்ணன்
கண்ணன் முடித்தது ஒரு யானை ஆச்சார்யர்கள் முடித்ததோ பல யானைகள்
வாரி சுருக்கி மதக் களிற்று ஐந்தினையும் சேரி திரியாமல் –பொய்கையார் -47-ஜிதேந்த்ரியர்கள்
கலியும் கெடும்
தீயவன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடியும் நேமிப்பிரான் தமர் போந்தார்
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவான போல் தடம்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய் –
பொலிக பொலிக –
அண்ணல் ராமானுசன் தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினரே
இரும்பைப் பொன்னாகுவது போலே நித்ய சம்சாரிகளையும் வெள்ளுயிர் ஆக்கி
நித்ய ஸூரி பரிஷத்தில் வைக்கும் ஆச்சார்யர்கள் மாயம் –

உனக்கு என்ன வேறுடையை -எம்பெருமானார் தர்சனம் என்றே
மாற்றாரை மாற்றழிக்க பாஷண்ட –தற்கச் சமணரும் –சாறுவாக மதம் நீறு செய்த –
12 -மதுரகவி ஆண்டாள்
நல் செல்வன் தங்காய்
நல் செல்வன் -நம் ஆழ்வார் -தம் கை மதுரகவி ஆழ்வார்
எம்பெருமானார் -கணித்து -தங்காய் -பிள்ளான் –

மென் கிளி போலே மிக மிழற்றும் என் பேதையே திரு மங்கை ஆறங்கம் கூற அவதரித்தார்
அடி சுவட்டில் பேசிற்றே பேசின் கடைக்குட்டி இளம் கிளி-
திரு வெஃகாவில் மடக்கிளி -வருவதை -திரு தேசிகர் திருவவதாரம் -ஸூசிப்பித்தாரே
பிஷை-பார்வதி ஸ்ரீ மகா லஷ்மி -வாமனன் தாண்டவன் -கூத்தாடி எங்கே மன்யே பிருந்தாவனம் -இன்று கூத்தாடி –
மன்னில் மரக்கால் கூத்தாடினான் காணேடி –
மடியில் மான் குட்டி இங்கே பன்றி எங்கே போனது பரார்த்தம் கறவை எருது பார்த்தாயா
இடையனை போய் கேளு என்றாளாம்- சல்லாபம் சம்பாஷணம் கவி வைத்து – -சாகுந்தல நாடகம் –
அது போலே
காடுறைந்த பொன்னடி –மலர் கண்டாய் சாழலே எல்லே -ஏடி -சாழலே –
நீசமான சரித்ரம் ஏடி -மலர் கண்டாய் சாழலே -சம்வாதம்
கடுமையாக பேச கற்றவர் – வாழ்ந்தே போம் –
வேம்பேயாக வளர்த்தாளே
குறும்பு செய்வானோர் மகனை
அவன் மார்பில் எறிந்து அழலை தீருவேனே -கொங்கை தன்னை கிழங்கோடு -வல்லீர்கள் நீங்களே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய்
ஆழ்வார் தனி வழி மடல் பண்ணி அருளி –
சொல்லி விடுவேன் –
அதில் நின்றும் வாராது ஒழிவது உண்டோ
கலியன் அருளிச் செய்யும் -பாடல் – அசாதாராணம் –
நல்லீர் அறிவீர் தீயோர் அறிவீர் என்னை அறியீரே
வாழ்ந்தே போம் இந்தளூரிரே

எல்லாரும் போந்தாரோ எண்ணிக் கொள் –
வீரத்தில் ஈடுபட்ட ஆனைகளை அடக்கி ஆடல் மா குதிரை யானை வாகனம் கடமா களிறு -யானை வல்லான்
மாற்றாரை விரோதிகளை பொடி படுத்தி
மாயன் -ஆசார்யம் –புத்த விகாரம் தங்கம் நாகை ஈயத்தால் ஆகாதோ மாயப் பொன் வேணுமோ –
வைதிகம் ஆக்கி -அவைதிகமான த்ரவ்யம்
நீர் மேல் நடப்பான் -நால்வர் ஆச்சர்யமான கார்யங்கள்
யந்த்ரம் -சில்பி வீட்டில் சென்று -கைங்கர்யம் செய்து –
திருட முடியாதே
கத்தி கழுத்தை அறுக்கும்
ரகசியம் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது
கண்ணனும் ஆச்சர்யமான ஈடுபாடு-
எல்லாரும் போந்தார் –
குண அனுபவம் ருசி உள்ளார் எண்ணிக் கொள் –
எண்ணாத மானிடத்தை எண்ணாத பொய்கை ஆழ்வார் தொடங்கி-

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-
பொன்னானாய் –புகழானாய் — என்னானாய் —
உலகம் ஏத்தும் தென்னானாய் -வட வானாய் -குடபாலனாய் -குண பாலானாய்-
இமையோர்க்கும் என்றும் முன்னானாய் –என்று அருளிச் செய்தவர் அன்றோ –
போதருகின்றேன் -திரு மங்கை ஆழ்வார் கிளி -சொன்னத்தை சொல்லுமாம் கிளிப்பிள்ளை
கிளி பூவை ஒரே ஜாதி -பொன் உலகு ஆளீரோ -தீ வினையேன் வளர்க்க -கன்மின்கள் –
யாம் கற்பியாத மாற்றம் உனக்கு என்ன வேறு உடையை –
மடலூரில் -சர்வ ரஷகனை பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழிவேன் யாம் மடலூர்த்தும் நம் ஆழ்வார் –

சதுஷ்கவி சித்ர கவி -வேடிக்கை
மதுர கவி பத்தராவி பெருமாள் பெரும் புறக் கடல் கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் -கவியின் பொருள் தானே
விஸ்தார கவி
ஆசு கவி உடனே அருளும் வல்லமை
பெரிய திருமொழி பகல் பத்து ஏழாம் நாள் தூ விரிய மலர் உழுக்கி -திருவாலி திருநகர் எம்பெருமான்
பாட்டு கேட்கவும் பெருமாள் முன்னும் பின்னும் சேவிக்க அபேஷை-என்றார் வரம் தரும் பெருமாள் அரையர் –
தாளத்துடன் சிகை உடன் பாட
ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலை உரையாயே பசலை நோய் உரையாயே –குறிப்பறிந்து கூறாயே
தானாக நினையாமல் தன் நினைந்து நலிவேற்கு – மீனாய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ –
என்னும் அளவும் வந்தவாறே
காம சரங்கள் -உதவிற்றாகிலும் பட்ட புண் -ஆற்ற வரலாகாதோ வித்தராக அருளினார்
ஒ மண் அளந்த தாளாளா -அடுத்த பாசுரம் நம் பெருமாள் மண் அளந்து அருளின படி என் என்னில்
கதை -சொல்லுவர் மத்யானம் -வாமன திரு விக்ரமன் சேஷ்டிதம் தண் குடந்தை நகராளா –
அப்புறம் சொல்லி பதிகம் முடிப்பார்கள் –
இந்த பாட்டில் மிகவும் ஈடுபட்டு – மூன்று பதிகங்கள் நடு பதிகம் வந்து என் அடியேன் -தூ விரிய -கள்வன் கொல்
நஞ்சீயர் -நோவு சாத்தி பெற்றி நம்பிள்ளை கூட ச சிஷ்யர்

எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக -ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் -பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –
நீராடப் போதுவீர் -என்றத்தை -பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் -சந்த மலர்க குழல் –பூம் கோதை –
-எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –
பண்டிவன் ஆயன் நங்காய் -என்று தொடங்கி -அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக்
கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்
மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் -இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –
வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் –
இப்பாட்டில் வல்லானை கொன்றானை என்கிற வித்தை ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

எல்லே இளங்கிளியே -என்கையாலே
ஸூக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுதம் -என்னும்படி –
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப் பவளத்தில்
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் / மொழி பாட்டோடும் கவி அமுதமாய்த் திருவாய் மொழி பிரவஹிக்க
அத்தாலே-அணி மழலைக் கிளி மொழியாளை -அநு கரிக்கையாலே –
ஸ்ரீ மதே சட்கோபாய நம-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நாவுடையாய் -நாத முனிகள்
எல்லே -இளம் கிளியே -கிளி மொழியாள் ஸ்ரீ மதே சடகோபாயா நம -வானமா மலை ஜீயர் காட்டி அருளி –

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின் ஓர்ந்து தாம் அதனைப் பேசுபவர்களே கிளிப்பிள்ளைகள்

——–

ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனின் பத்து குணாதிசயங்கள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

எல்லே இளங்கிளியே – நற்பேச்சு

இன்னும் உறங்குதியோ – அடியவர் அருகில் இருக்கையில், அவர் சேவையை விடுத்து வேறு எந்த செயலிலும் ஈடுபடலாகாது

சில்லென்றழையேன் மின் – அடியவருடன் உரையாடும்போது, சுடு சொற்களை பயன்படுத்துவது தகாது!

நங்கைமீர்! போதருகின்றேன் – அடியவரை மரியாதையுடனும், அடக்கத்துடனும் அணுக வேண்டும்

வல்லை உன் கட்டுரைகள் – அடியவர், நம்மீது சொல்லும் குறைகளை பிணக்கின்றி மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்!

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக! – இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைய வேண்டும்

ஒல்லை நீ போதாய் – அடியவரை ஒரு கணமும் பிரியலாகாது, அவர்களை காக்க வைக்கலாகாது!

உனக்கென்ன வேறுடையை – வைணவ சாத்திரங்கள் சொல்லும் வழிமுறைகளிலிருந்து மாறாமல் நடத்தல் வேண்டும், நம் மனம் போனபடி அல்ல!

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள் – அடியவர் கூட்டத்தைக் காண்பதும், அதில் சேர்வதுமே பரமனைப் பற்றுவதற்கான உபாயமாகும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட – பரந்தாமனின் கல்யாண குணங்களைப் போற்றிப் பாடுவது,
அடியவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால், இதுவே, அடியவர் சேவையின் உன்னத விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பாசுரத்திற்கு இன்னொரு உள்ளுரையும் உண்டு.

இளங்கிளியே – சம்சார பந்தத்தில் உழலும் பக்தன்

இன்னம் உறங்குதியோ – பல பிறவிகள் எடுத்தும், ஆச்சார்யனிடம் புருஷார்த்தம் (ஞானம்) பெற முடியாத தன்மை

எல்லே – ஆச்சர்யத்தை (அதாவது, உலகப்பற்று, அஞ்ஞானம் ஆகியவற்றில் உழலும் பக்தனுக்குக் கூட கற்றறிந்த
அடியவர் சம்பந்தம் ஏற்படப் போகும் ஆச்சர்யத்தை) குறிப்பில் உணர்த்துவதாம்!

நங்கைமீர் – ஞானமிக்க அடியார்களே!

சில்லென்றழையேன் மின் – எனது அஞ்ஞானத்தால் தவறிழைப்பின், அதற்காக கடிந்து கொள்ளதீர்

போதருகின்றேன் – சத்விஷயங்களில் (பகவத், பாகவத, ஆச்சார்ய சேவை) என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் – வைணவ ஆச்சார்யர்கள் சொன்ன நற்கதைகளையும், உபதேசங்களையும் மனதில் நிறுத்தி

வல்லீர்கள் நீங்களே – அடியவர் நீங்களும் சத்விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்

நானே தான் ஆயிடுக – மனதில் வைராக்கியம் இன்றி, விஷய சுகங்களில் நான் திளைக்கிறேன்

ஒல்லை நீ போதாய்! (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) – வைராக்கியத்தோடு உலகப் பற்றைத் துறந்து,
கைவல்யத்தைக் காட்டிலும் மோட்ச சித்தியே சிறந்தது என்றுணர்ந்து, பகவத் சேவைக்கு வருக!

எல்லாரும் போந்தாரோ – மற்ற அடியவர் அனைவரும் இவ்வழியைத் தான் அனுசரிக்கிறார்களா ?

போந்தார் போந்தெண்ணிக் கொள் (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) – ஆமாம், அடியவர் அனைவரும்
பகவத்-பாகவத சேவையின் வாயிலாக பேரின்பத்தை நாடுவதே உயரியது என்றுணர்ந்து விட்டனர்.
நீ வெளியே வந்தால், அது உனக்கும் புரிந்து விடும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட – நம் தீவினைகளை அழித்து,
நம்மை மாயையிலிருந்து விடுவித்து, தறிகெட்டு அலையும் நம் புலன்களை நெறிப்படுத்தி, பகவத்-பாகவத சேவையில்
நம்மை ஈடுபடுத்தி நம்மை ஆட்கொள்ளவிருக்கும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடுவோமாக!*

ஆண்டாள் இப்பாசுரத்தில் கடைபிடிக்கும் (அடியவரிடையே)சம்பாஷணை முறையை, திருமங்கையாரும்,
“மானமரு மென்னோக்கி” என்ற பதிகத்தை (10 பாசுரங்கள்) இரண்டு ஆய்ச்சிகளுக்கு இடையே நிகழும்
சம்பாஷணையாகப் பாடியுள்ளார்!
மானமரு மென்னோக்கி* வைதேவியின் துணையா,*
கானமரும் கல்லதர்போய்க்* காடுறைந்தான் காணேடீ*
கானமரும் கல்லதர்ப்போய்க்* காடுறைந்த பொன்னடிகள்,*
வானவர்தம் சென்னி* மலர்க்கண்டாய் சாழலே!

கலியப் பெருமானை “இளங்கிளியே” என்பது மிகப் பொருத்தமே, இவர் தான் ஆழ்வார்களில் இளையவர்,
அத்துடன் தன்னைக் கிளியாக பல பாசுரங்களில் வருணித்துக் கொண்டவர். அதை விட முக்கியமாக ஒரு கிளி செய்வதைப் போல,
நம்மாழ்வாரின் உபதேசத்தை இவ்வுலகுக்கு திரும்ப உரைக்க அவதாரம் கொண்ட (மாறன் தமிழ்மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த)
திருமங்கையாரை “இளங்கிளியே” என்று தாராளமாக அழைக்கலாம் தானே 🙂

“வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்” எனும்போது ஆண்டாள் திருமங்கையார் அவதரிப்பதற்கு முன்னமே
(பண்டே!) அவரது (பெரிய திருமொழி இயற்றப்போகும்!) புலமையை மனதார பாராட்டுகிறார்!

“உனக்கென்ன வேறுடையை” என்று ஆண்டாள் பாடுவது, பெரிய திருமொழி தவிர கலியபெருமான் அருளப் போகும்
இரண்டு பிரசித்தி பெற்ற திருமடல்களை ஞாபகம் வந்ததால் என்று கொள்ளலாம்!

எல்லாரும் போந்தாரோ? – திருமங்கையார், தனக்கு முன்னால் மற்ற ஆழ்வார்கள் அனைவரும் அவதாரம் எடுத்து விட்டனரா
என்பதை ஆண்டாளிடம் வினவுவதாகக் கொள்ளலாம்!

வல்லானைக் கொன்றானை – குவலயாபீடம் என்ற கம்சன் அனுப்பிய யானையை அழித்த கண்ணனின் லீலையை
திருமங்கையாழ்வார் பல பாசுரங்களில் பாடியுள்ளார் என்பது கவனிக்க வேண்டியது.

“அவரிவை செய்கறிவார் அஞ்சனமாமலை போலே”, “கவல யானை கொம்பொசித்த கண்ணனென்னும்”,
“வேழனும் பாகனும் வீழ” (திருவல்லிக்கேணி பற்றிய பாசுரத்தில் உள்ளது இது) என்பவை சில உதாரணங்கள்.
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட – பகைவரின் அகந்தையை அழிப்பதற்கு வேண்டி எம்பெருமான்
லீலைகள் பல புரிபவன். அவற்றில் ஒன்று தான், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து, மாக்களையும், ஆயரையும் காத்து,
இந்திரனின் கர்வத்தை சாதுர்யமாக அடக்கியது. திருமங்கையார் இந்த கிருஷ்ண லீலையால் மிகவும் கவரப்பட்டதால் தான்,
தனது பெரிய திருமொழியை, “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்று முடிக்கிறார்!
அது போல, திருநெடுந்தாண்டகத்தை, “குன்றெடுத்த தோளினானை” என்று நிறைவு செய்கிறார்!
கோதை நாச்சியாரும், ஆழ்வாருக்குப் பிடித்த அதே கிருஷ்ண லீலாவை ஞாபகப்படுத்தி இப்பாசுரத்தை நிறைவு செய்கிறார் –

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – உங்கள் புழைக்கடை — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமே யாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் –
எல்லாருக்கும் முன்னே எழுப்ப மறந்து வாய் பேசும் நங்காய்
வாயாலே பேசி கார்யம் செய்யாமல் உறங்கும்

செங்கழு நீர் புழக்கடை தோட்டம் மலர -அனுமானம் கொண்டு சொல்லி
திருக் கோவில் சங்கிடப் போகின்றார் பிரத்யஷம்
வாய் பேசும் ஆப்த வாக்கியம் சப்தம் சாஸ்திரம் –
பிரமாணங்கள் மூன்றையும் காட்டும் பாசுரம் –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி–போது விடிந்தது உறங்குவதே இன்னம் -என்ன –
அல்லிக் கமலம் முகம் காட்டும் – தோட்டத்து வாவியுள் –
நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன –
புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –
அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன –
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்–
எங்களுக்கு புகுர ஒண்ணாதே
அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே கால பாகத்தாலே -என்கை –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா பொழில்கள் திரு வல்லிக்கேணி
காலத்தின் பரிபாகத்தால் அலர்ந்தும் மொட்டிதவையும்–அனுமானத்தால் சொல்கிறார்கள்
இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச் சொல்கிறார்கள்

அஹங்காரம் த்யாஜ்யம்–
பகவத் சம்பத்தால் வரும் அஹங்கார உத்தேச்யம்
மம அஹம் ஏகாஷரம்-மிருத்யு தள்ளும் ஆத்மா நாசம்
நீர் நுமது வேர் முதல் வாய்த்து -நாம் எனது சொல்லாமல்-யானே என் தனதே என்று இருந்தேன் த்யாஜ்யம் இவை
இவர்கள் உணர்ந்தவர்கள் உங்கள் எங்கள் சொல்வது வ்ருத்தம்
பாகவத சம்பந்தம் -அஹங்காரம் அபிமான துங்கன் -செல்வனைப் போல சாத்விக அஹங்காரம்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -மின்னிடை மடவார் பதிகம் அச்சுதச்ய பக்தன் அஹம் –
ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் நாம் அடியேன் சொல்வது நான்
எம்பார் கொண்டாட்டம் இசைந்து -எம்பெருமானார் கடாஷத்தால் வந்த பெருமை
கால கத பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருமே

ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய
மத்யே வர்த்திக்கிற நமஸிலே-
பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

செங்கழு நீர் –ஆம்பல் -என்றது
பரதந்த்ர ஞானம் பிறந்து -ஸ்வ தந்திரம் போக –
புழக்கடை வேதம் -அதர்வண வேதம் –
அஷ்டாக்ஷர மந்த்ரம் -ஓமித்யேகாஷாரம் –
நாராயணா பஞ்சாக்ஷராணி -நாராயண உபநிஷத்தில் வரும் –

அலரப் புகுகிற அளவிலே கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறிகோள்
வேறு அடையாளம் உண்டோ என்ன –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவ த்விஜரும் கூட தங்கள் தேவதைகளை
ஆராதிக்கும் காலம் ஆய்த்து-
திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -என்றது
ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் –
குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –
சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து என்றுமாம் –
தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன
தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே-
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்-
சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி

சக்கரவர்த்தி திருமகன் அந்தபுர காவல்
காஷாய வேத்திர பாணி -கொம்பு கையில் காவல் -அலங்காரம் காஷாயம் அணிந்த வயசான கிழவர்கள் –
வ்ருத்தாம் – கைங்கர்ய த்வரையால் வஸ்த்ரம் பேண அவகாசம் இல்லாமல் –
நீர் காவி ஏறி காஷாயம் வைராக்கியம் விரக்தி – சக்ரவர்த்தியோபாதி பழையவர்
சக்ரவர்த்தி திருமகன் தழுவி குங்குமப் பூ சந்தனம் அலங்காரம் – வெண் பல் போக்ய த்ரவ்யங்களில் விரக்தி
தவா தவா என்பர் தவத்தவர் –
யானே நீ என் உடைமையும் நீயே — கண்ட பேர் இடம் பல்லைக் காட்டாமல் வெண் பல் தவத்தவர்-
குறடு வேறு ஏறோம்-
சததம் கீர்த்தி யந்தாம்-எப்பொழுதும் ஸ்தோத்ரம் நித்ய யுக்தர் – அனவரதம் -விடிவுக்கு அடையாளம் இல்லை

ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்-
தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது–உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –
வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை –
கிருஷ்ணன் உடன் பழகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி
ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பிரத்யஷமும் பிரமாணம் இல்லை சாஸ்திரம் பிரதிகூலமாக இருந்தால்
வாய் பேசும் –
வாய் மட்டும் சொல்லி
மேலையார் செய்வனகள்
சிஷ்டாசாரம் ஆப்த வாக்கியம் தர்மஞ்ஞச்ய- நடவடிக்கை வேதாஸ் ச கூட அபிரதானம் -ஆபஸ்தம்ப சூத்திரம் –
யச்தய தாசரதி ச்ரேஷ்டா -யதா ததே அவர்கள் போலே செய்ய வேண்டும் –
சொன்னது செயலிலே கண்டிலோம் -அனுஷ்டான பர்யந்தம்
உக்தி மாதரம் ஹிருதயத்தில் நினைவும் செயலும் வேறே வேறே கண்ணன் ஸ்வபாவம் கடைக் கணித்து–
அவளுக்கு பாம்பணையாருக்கும் நாவு இரண்டு மனஸ் ஏகம்- வசஸ் ஏகம் வாய்-செயல் ஒன்றாக

நங்காய் –
பூரணை இறே–எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இறே –
சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை – பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு நாணமும் இன்றிக்கே ஒழிவதே இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என் பக்கல் சாபேஷராய் வருவது என்ன –
நாணினார் போல் இறையே செய்யும் -திரு நெடும் தாண்டகம் —
நாண் இத்தனையும் இல்லார் நப்பின்னை காணில் சிரிக்கும் –
பகவானை ஆஸ்ரையித்தவர் வெட்கம் – தலையினோடு ஆசனம் தட்ட வீதி யார ஆடி உலோகர் சிரிக்க
நாண் எனக்கு இல்லை தோழிமீர்காள்

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன
உன் பேச்சின் இனிமை கேட்க இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
வாக் மாதுர்யமுடையவரே நீர் அஹ்ருதமாய் சொல்லிலும் பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம்
நா வீறுடைமை-
பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே-
ந ரிக் வேத -ந யஜுர் வேத -சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடைவலானோ கம்பர் –
மதுரம் வாக்கியம் -திரு நாராயண ஐயங்கார் மதுரம் இனிமை தமிழ் பேசினார்
தேவ பாஷை பேச மாட்டேன் -ராவணன் ஆள் என்று நினைக்கலாம்
வால்மீகியும் தமிழும் -வால்மீகி தமிழ் அறிவார்-
போதரிக் கண்ணினாய்
கடாஷம்
நா வுடையாய் உபதேசம்

நா உடையாய்
மா சாஹசம் ந குரு- பறவை-ஸிம்ஹம் வாயில் உள்ள மான் மாமிசம் உண்டு கொண்டே -நா உடையாய் –
போதரிக் கண்ணினாய் நா உடையாய் -ஞானம் அனுஷ்டானம் -ஸ்தித ப்ரதிஜ்ஜன் –
கீதாச்சார்யர் ஸ்தித ப்ரதிஜ்ஜன் எப்படி இருப்பான் என்று விளக்கி நான்கு ஸ்லோகங்கள் –
நாணாதாய்-
அகார்ய கரணம் கிரீடா -லஜ்ஜை -எழுப்புவேன் சொல்லி தூங்குவதால் நாணாதாய் –
தயா -பேராசை இல்லாமல் -மார்த்தவம் -தெய்வ தன்மை -கீதை –
ஹ்ரீஸ்ஸ-லஷ்மீ ச பத்ந்வ் -பூமி தேவியும் லஷ்மியும் இருவரும் -இரண்டு சகாரம்-ச குடும்ப சமேதராய் -நீளா தேவியும்
வெட்கமே நிரூபகம் பூமா தேவிக்கு
நாவ காரியம் சொல் இல்லாதவர் -4-4-பெரியாழ்வார் -ந அகார்யம்-திருக் கோஷ்ட்டியூர் மக்கள்
அ ஸத்யம் பேசுதல் -மனம் புண்படும்படி பேசுவது -உண்மையாக இருந்தாலும் -சத்யம் பிரியம் –
சத்யம் பூத ஹிதத்துக்காக இருக்க வேண்டுமே –
பிள்ளான் -கொங்கு நாட்டில் -பெருமாள் திரு நாமம் சொல்பவரை -ஆச்சார்யர் நாமம் சொல்லாமல் -இதுவும் நாவகாரியம்
அனந்தாழ்வான் -சரம தசை -பட்டர் -ராமானுஜர் இவர் என்று பிரதி பத்தி அருளிச் செய்ததை –
எங்கள் குடிக்கு அரசே கொண்டாட -பிடித்த திரு நாமம் -அழகிய மணவாளன் -நம்பெருமாள் அரங்கா சொல்லாமல்
பார்யா பத்ரு நாமம் சொல்வதை போலே நாவ காரியம் -அவர் மட்டும் சொல்லலாம் -நமக்கு கூடாது என்பாராம் –
அப்படி எல்லை வகுத்து வைத்து இருப்பார்கள் பூர்வர் –
வடுக நம்பி -அஷ்டாக்ஷரம் நாவ கார்யம் -ஸ்ரீ மதே ராமாநுஜாயா சொல்லாமல் -அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்–நம் பெருமாள் அரங்கா -நாவ கார்யம் -திருவரங்கம் -சொல்ல வேண்டும் –
உகந்து அருளின திவ்ய தேசம் சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம்
திருக்கடித்தானம் – ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் நன்றி உணர்வுடன் இன்றும் சேவை
நாவினால் சுட்ட வடு -யா காவாராயினும் நா காக்க –
நாணாதாய் –
பாற் கடல் -தேவர் குழாம் சூழ அன்றோ -திரு மார்பில் அமர்ந்தாள் -என்று சொல்ல –
பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் வேண்டாமே -புருஷோத்தமன்
சீதை வெட்கப்பட்ட இடம் -திருவடி -தூக்கில் –
அனலா- திரிஜடை -சார்பா மூவரும் கூட இருந்து -சீதா கைங்கர்யம் செய்தவர்கள் –
பாடப்படாதவர்கள் -இந்த மூவரும் –சுமித்திரை – ஊர்மிளை போலே இவர்களும் /
சொப்பனம் கண்டு சொல்ல -பர்த்துர் விஷயீ ஹர்ஷதீ வெட்க்கி முகம் சிவந்ததாம் -வெட்கத்தை திருவடி பார்க்க
32-வயசில் வெட்கம் /பெருமிதம் கலந்த வெட்கம் -லகு தாரா ராமஸ்ய கோஷ்ட்டி / அந்நிலைமை ஏற்பட்டால் நாமே சரணம் –
அதே போலே நீயும் நாணப்பட்டு கண்ணனை எங்களுக்கு தரலாகாதோ –
தண்டகாரண்யம் ரிஷிகளை கண்டு பெருமாள் காவல் சோர்வால் வெட்க்கி –

உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் –அனுபவம் -ஸூ சகம்
நாவுடையாய் -செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தா;லே வளர்ந்த திருக் கைகளை உடையவனாய்
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே–
நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே-
பெருமாள் சங்கு சக்கரம் காட்டி அருளினை இடங்கள் நிறைய இல்லை –
கண்ணனோ பிறக்கும் பொழுதே தாய் தந்தைக்கு காட்டி அருளினான் –
சங்கு சக்கரம் -சூர்ய சந்திரன் -நாபி கமலம் அலரும் குவியும் –
சந்த்ர மண்டலம் போல் -சங்கரய்யா -விருப்புற்று கேட்க்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற
திருக் கண்களையும் உடையவனை பாட-
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம் எழுந்திராய் -என்கிறார்கள் –
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க
கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு அது பெண்களுக்கு தோற்றும்–
அல்லாதார்க்கு தோற்றாது –இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே
மயக்க வைக்கும் அழகு கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
பங்கயக் கண்ணன் தன்னை எழுதி கொடுத்து வாங்கப்படும் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி மயக்கி
விடலை தனம் விடவே செய்து குறும்பு காண பார்த்து
ஜிதந்தே
தாமரைக் கண்ணனை விண்ணோர் தோற்று பரவும் தோற்க வைத்து –
உபய விபூதியையும் தோற்பிக்கும் திருக் கண்கள்
சந்திர ஆதித்யன் -திங்களும் ஆதித்யன் போலே அலருவதும் மொட்டிப்பதுவும்
உந்தி தாமாரை -சங்கு சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் ஆங்கு மலரும் குவியும்
மால் உந்தி வாய் கமலத்தின் பூ — பேய் ஆழ்வார்
திருக் கண்களும் அலருவதும் மொட்டுவதும் – நெய்த்தலை நேமியும் கை தலம் வந்து காணீரே
மெச்சூடு சங்கம் இடத்தாம் அப்பூச்சி காட்டி –
பரத்வ சின்னம் காட்டாமல் பெருமாள் போலே இல்லையே கண்ணன்

சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் –
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள்
திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே
திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே
தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்
அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே –
ஜிதம் தே –பண்ண வைக்குமே –
செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி–
எம்பெருமானார் பரமான வியாக்யானம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தத்வமஸி-ஸ்வாமி அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர்
போல்வார் மூடிக் கொண்டது போலே
செங்கல் பொடிக் கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசநா-யதிராஜ சப்ததி
வெண் பல் -அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-என்னும்படி
மகா விரஹ சார்வ பௌமர்
தவத்தவர் -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் அதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக் கோயில் என்னும்படி
சங்கிடுவான் -திறவு கோல்-ஆழ்வான் மூலமாக திரு கோவிலைப் பெற்ற இதிகாசம்-

வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து -கப்யாஸம் வியாக்யானம் இத்தைக் கொண்டே ராமானுஜர்
கபி -ஸூர்யன் -நாளம் -இரண்டும் தண்ணீர் பருகுமே –
வாய் நெகிழும் -மலரும் –
இளநீர் நேராகவே கொண்டு திருமஞ்சனம்
பாத்திரத்தில் விட்டு பண்ணினால் சுத்தி போகுமே -கள் போலே ஆகுமே –
ஆகவே தாமரைத் தண்டு கொண்டே உறிஞ்சி குடிப்பார்களாம் ஆஸ்திகர்

தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி பரிசுத்தம் ஆக்குமே
திருப் புன்னை மரத்தில் சந்தை சொல்வார்களாம் -காலை -இத்தாலே வளர்ந்ததாம்
தர்சயம் தந்த பந்தி -அரங்கன் கையை இப்படி மறித்தாலும் அவன் குறடு தவிர வேறு எங்கும் ஏற மாட்டோம் –
வெண் பல் தவத்தர் –
த்ருணீக்ருத-ராமானுஜ பதாம் புஜ சமாஸ்ரையான சாதினாக –
சதுரா சதுரஷரீ -ராமானுஜ திவாகரா –
வெண் பல் -நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –
இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை உன் சாயிக்கு அழிவு கண்டாய்
உனக்கு அவத்யம் -ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணி ஜீவிக்கும் காட்டில் ராஜாவுக்கே அவத்யம் –
தங்கள் திருக் கோயில்
தங்கள் இல்
திரு இல்
கோ இல்
திருமந்த்ரார்தம் -ஸ்வரூபம் பிரகாசித்து -தங்கள் -ஆத்மாவாலே பேறு
த்வயத்தில் பெரிய பிராட்டியால் பேறு -திரு இல்
சரம ஸ்லோகம் ஈஸ்வரனால் பேறு என்கிறது –
முமுஷூ வுக்கு அறிய வேண்டும் ரகஸ்யங்கள் இவை –
சங்கிடுவான் -அர்த்தம் உள்ள ரத்னம் அருள –
ஞானக் கை தா காலம் களிவு செய்யேல்
எங்களை முன்னம் சம்சாரிகளை எழுப்புவான் வாய் பேசும்
பேசின வார்த்தை பேசின ராமன் இரண்டு இடத்திலும் அன்வயிக்கும் –
உத்தரிப்பிக்க வந்து இருக்கிறோம் –
அபய பிரதானம் கேட்ட பிள்ளை உறங்கா வல்லி தாசர் அழ –
உம்மை நாம் கூட்டியே போவோம்
உனக்கு நான் உண்டு
எனக்கு பெரிய நம்பி உண்டு
ஆளவந்தார் உண்டு தொடர் சங்கிலி உண்டே –
அவதரிக்கப் போகிறார்கள் தத்வ தர்சனிகள் கீதை –
பேசப்படுபவர்கள் ஆசார்யர்கள்
சிஷ்யாசார்யா க்ரமம் குரு பரம்பரை அவனே கொடுத்து அருளி
உபேதசந்தி ஞானம் –
சங்கு சக்கரம் -உள்ளவரை உள்ள விட -கண்ணனே சொல்லி அருளி –
ந முத்தரை ந பிரவேஷ்டத்வய –
சங்கு போலே அவன் திருவடிகளில் இருந்து
சக்கரம் சுழன்று தீர்தகரராய் திரீந்து
பங்கய கண் -ஆசார்ய கடாஷமே உத்தாராகம் –

திருப்பாண் ஆழ்வார்
புழக்கடை தோட்டம் காலை எழுந்து பாட
லோக சாரங்க மகா முனி -செங்கல் பொடி -திருக் கோயில் சங்கு இடுவான் போனாரே
நங்காய் -பூர்த்தி நைச்யம் தான் பூர்த்தி -ஜன்ம சித்தம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நாணாதாய்
நாண் கௌரவம் நாடுவோம் நாமே தேசிகன்
அஹங்காரம் படாமல் அடியார்க்கு ஆட்படுத்திய விமலன்
தோள் மேலே உட்கார லஜ்ஜை இன்றி
நா வுடையாய் சொல்ல வந்த விஷயம் -சுருக்கமாக
காண்பனவும் -கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பல மறையின் பொருள் -நாண் பெரியோம் அல்லோம் நன்றும் தீதும் உரைக்க உளர் என்று
நாடுதுமே விநயத்துடன் இருப்பவள் நாணாதாய்
நாவுடையாய் –
நா அசைந்தால் நாடு அசையும்-
நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே -தேசிகன் -முனிவாகன போகம் –

பிரணவம் சகாரம் பாதுகை
முன்னம் எழுப்புவான் அடியார்க்கு ஆட்படுத்த விமலன்
ஜன்ம சித்தம்
திருத் துழாய் திரு முடியில் இருந்தால் சேஷத்வம் குறையுமா
ஏழு விசேஷணம் திருக் கண்ணுக்கு சொல்லி
கரிய வாகி -நீண்ட அப்பெரிய அ -சுட்டு பேதைமை செய்தன-

நாவுடையாய் –என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே –

ஸ்ரீ மன் நாத முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நங்காய்-நாணாதாய் –நாவுடையாய் -ஆச்சார்ய ஸார்வ பவ்மருக்கு விளிச் சொற்கள்
நாண் -லஜ்ஜைக்கும் அஹங்காரத்துக்கும் -உப லக்ஷணத்தால் மமகாரத்துக்கும்
வாசா தர்மம் ஆப்நுஹி / சா ஜிஹ்வா ஸ்யாத் யயா சர்வே ஜீவந்தி பிராணிநோ புவி
ச ஜிஹ்வா யத்ர ராஜந்தே வித்யா ஹ்ருதயாச் சதுர்தசி
திரு நா வீறுடையார்கள் அன்றோ நம் ஆச்சார்யர்கள் –

————

ஸ்ரீ புழைக்கடை” என்பது அனுமான பிரமாணம்
“தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்” என்பது பிரத்யட்ச பிரமாணம்
“எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!” என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணமாம்.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து – உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும்
ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்

ஆம்பல்வாய் கூம்பினகாண் – காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் –
மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்! எழுந்திராய்! – நாங்கள் சம்சார பந்தம் என்ற
நித்திரையிலிருந்து வெளிவர உத்தம் அதிகாரியான நீயே அருள வேண்டும்!

நாணாதாய் – நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம்.
அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், “நாணாதாய்” என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!

நாவுடையாய் – சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற)
சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக கூறுவார்.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய் – சங்கும் சக்கரமும் பரமனது
பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – புள்ளின் வாய் கீண்டானை — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில் தானே வருகிறான் என்று கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில்-நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில் அவன் தானே வருகிறான் என்று
நிர்ப்பரராய் இருக்குமவளை எழுப்புகிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பகாசுரனைப் பிளந்தபடி –ஸ்வ ஆஸ்ரிதருக்கு–ஸ்வ அனுபவ விரோதியான –காமாதி தோஷ நிவர்தகனாய்

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் —
சுரி குழல் கனி வாய் -இத்யாதி
முன் பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹங்காரத்துக்கு நன்மை யாவது –
அஹம் மம -என்றால்–ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–
தீமையாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —
அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே
தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

பொல்லா அரக்கனை –
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு
துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே
ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –

புள்ளின் வாய் கீண்டான் –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
மனத்துக்கு இனியான் பாசுரம் கேட்டு–அசல் மாளிகை–அபராதம் தீர வார்த்தை சொல்ல-
பெண்காள் இங்கே ஸ்ரீ ராம வ்ருத்தாந்தாம் சொன்னார் உண்டோ–
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்–
வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்- பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு–
பரத்வ-பரமுது வேதம்– வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் தன்னைப் போலே
பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தான் என்று ஸ்ரீ ராமாவதாரமும்
இனியானை பாடவும் உம்மை சொல்லி -ஸ்ரீ கண்ணன் பாடினால் தூங்கலாமா-
பெண்களை படு கொலை–அவளுக்கும் மெய்யன் அல்லை
ஒருத்தி தன்னை புணர்த்தி ஐந்து பெண்களை சொல்லி–உண்ணாது உறங்காது ஸ்ரீ ராமன் ஒரு பெண்ணுக்காகா
வேம்பேயாக வளர்த்தாள்–குறும்பு செய்வானோர்- மகள்–வைதாலும் ஸ்ரீ கண்ணன் நாமம் –
ஏசியே யானாலும் பேசியே போக்கே
ஸ்ரீ ராமன் நாமம் சொல்லவா–ஸ்ரீ சீதைக்கு தான் செய்தான்–
ஸ்ரீ கண்ணன் ஏக தார வ்ரதன் இருந்தால் நாம் எல்லாரும் போக முடியுமா
பிறர் மனை நோக்காத–பிராப்தியே இல்லையே நமக்கு அவனுடன்–இரண்டு கோஷ்டியாக பிரிந்து
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாராணம் –கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மான்
கண்ணன் ராமன் —வருக வருக வாமன நம்பி காகுத்தன் வருக
சீத வாய் அமுதம் உண்டாய் சிற்றில்–தர்மி ஐக்கியம் உண்டே சமாதானம் பண்ண–
கிருஷ்ண கோஷ்டியார் சமாதானம் அடைய வில்லை
இருவரும் சொல்லிப் போவோம் -என்ன–இரண்டு கோஷ்டி
புள்ளின் வாய் கீண்டானை -முன்னால்–கிள்ளிக் களைந்தானை பின்னால்-

எந்த சரித்ரம் சொல்லி இருக்க வேண்டும்–
பொல்லா அரக்கன் ராவணனை கிள்ளிக் களைந்தான்–இவர்கள் கொக்கு சுட்ட கதை
புள் இது என்று பொதுக்கோ சடக்கென பெரியாழ்வார் –
பேச்சு வழக்கு சாமான்யமான சரித்ரம்–இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
அவ்வளவு பெரிய கதை–அதே சுலபம் ராமனுக்கு –உசந்த தாழ்ந்த சரித்ரம் எனபது இல்லை–
வதுவை –நப்பின்னை -மாய மா கேசி -குரவை
அது இது உது என்னாலாவது இல்லை-உன் செய்கை என்னை நைவிக்கும்–நீ செய்தாய் என்பதே —
ராவணன் வீரத்தில் இலக்கானான்–தங்கை அழகில் கலங்கி–தம்பி சீலத்தில் இலக்கானான்

பொல்லா அரக்கரை கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடி என்றது
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர் –
கலியும் கெடும் கண்டு கொண்மின்
ஜெயதி திசா முகேஷூ யதிராஜா யரஸ் பாடஹ-யதிராஜா சப்ததி இத்யாதி
ராமானுஜர் ஸ்தோத்ராதிகளையும் அனுசந்தானம் என்றவாறு

பொல்லா அரக்கரை கிள்ளிக் களைந்தானை
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளிக் களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி -கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே

பாடிப் போய்-
பாட்டே தாரகமாக போனார்கள்
விரஹ தாபம் போக்க- பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தனம் அம்ருதம்–
கட்டு சோறு -ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் நர ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-
நால்வரையும் பாடி என்றவாறு –

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி–பாடி போய் பகவானால் கொடுக்கப் பட்ட பலம்-
பாடுகையாலே பலம் ஏற்பட்டு–உபன்யாசம் செய்தால் தான் பலம் வரும் காஞ்சி சுவாமிகள்
மற்றவர் உஜ்ஜீவனம் அடைய வைக்கும் சந்தோசம்–

கீர்த்திமை –
எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –
உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும் –உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் –
நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் —சங்கேத ஸ்தலம் புக்கார்கள் –
அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் -நெல் களம் போர் களம் போலே பாவைக் களம்-
பாலைகள் அறியாமல் போனார்கள்-போனேன் வல்வினையேன் என்பர் பரகால நாயகி –
அதாவது காலஷேப கூடம்–அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று-
வெள்ளி உச்சிப் பட்டது–வியாழம் அஸ்தமித்தது–
உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இறே இருப்பது என்ன-அதுவே யன்றி –
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்–அஞ்ஞானம் தலை மடிந்தது –
சுக்ரன் -வெள்ளி -சுக்ரோதயம் அருணோதயம் சூர்யோதம்–ப்ரஹச்பதி மறைந்து வெள்ளி எழுந்து
நின்ற குன்றம் நோக்கி நெடுமால் சொல்வீர்–விடிவுக்கு உடல் இல்லை–திரளாக நாங்கள் வந்தோம்–ஈட்டம் கண்டால் கூடுமே
பிரியவே இல்லையே–புள்ளும் சிலம்பின–அது கூட்டில் எழுந்து இருக்கும் பொழுது–ஆகாரம் தேடும் பொழுது சிலம்பின
திர்யக் விருத்தாந்தம் கொண்டோ கால நியதி–நாங்கள் சொல்லவதற்கு விபரீதம்-

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள்
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும் மான் போலேயும் இருந்துள்ள கண்–அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்–பூவோடு சீறு பாறு என்னும் கண் என்னவுமாம் –
ஸ்வச்சமாய் ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

போதரிக் கண்ணினாய் -ஞான வன்மை / நா உடையாய் -அனுஷ்டானம் -எடுத்து உபதேசம் -ஆச்சார்யர் விஷயம் தானே மேலும்
பிள்ளாய் தொடங்கி -மேலே மேலே உயர்ந்த நிலை -18-திருக் கோஷ்ட்டியூர் நம்பி மூலம் நமக்கு தெரிவிக்க –
சரம் -விவேகம் கொண்டு அஹங்காரங்களை போக்குவது -ஸ்வாபதேசம்
திவ்ய தேச குணங்கள் வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் -விசேஷம் போலே பிள்ளாய் தொடங்கி நா உடையாய் வரை –

குள்ளக் குளிரக் –குடைந்து-
நீர் கொதிப்பதற்கு முன்னே -அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி –
ஆழ முழுகி விரஹ தாபத்தால் குளிருமே என்று அறியாமல்
முதல் கோபி விரஹ அக்னியால் யமுனை நீர் வற்றி போகுமே -ஒன்றாகவே போகலாம் கிருஷ்ண விரஹ தாபம்-
கண் அழகை நினைத்து கௌரவம்- அவன் உபாசகன் -தேடி வர வேண்டும் அஸி தீஷணை புண்டரீகாஷன்
நெடு நீண் கண் -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் ஒரு மூலையில் -அவனும் அவன் விபூதியும்
தாயார் கடாஷம் விழிக்க போகாதே- போது அரி கண்ணினாய் பூ /மான் போன்ற கண்
பூவில் படிந்த வண்டு போன்ற கண் ஹரதி பூவுடன் சீறு பாறு வென்ற கண் போதுகின்ற அரி உலாவும் மான்
குள்ளக் குளிர –
அடுக்குத் தொடர் அதிகமாக செக்க சிவந்து-மீமிசை சொல் –
மிகவும் குளிர்ந்து ஆதித்ய கிரணம் பட்டு கொதிக்கும் முன்பே

நீராடாதே –
கிருஷ்ண குணங்கள் சேஷ்டிதங்கள் அவஹாகித்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
கண்ணாலே -இருவர் கண்ணுக்கும் இலக்கு உன்னுடைய சௌந்த்ர்யம் எங்கள் பேற்றுக்கு உடல்

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆர- நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து–பகவத் அனுபவத்தைப் பண்ணாதே -தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை–மோந்து கொடு கிடக்கிறாயோ-
விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை அனுபவம் -ஸூ சகம் -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
நாகத்தணைக் குடந்தை –திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இறே

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து–அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் பண்ணாதே–
நெடுங்கண் இள மான் இவள்
அனைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்–இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

போதரிக் கண்ணினாய் பாவாய்–
கொல்லி அம் பாவாய் -திருவிட எந்தை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
போதம் -ஞானம் அறிவு ஞான போதினி தத்வ போகினி–
போதில் கமல வன்நெஞ்சம் -பெரியாழ்வார் -போதத்துக்கு இல் ஸ்தானம் ஆன கமலம் –
ஞானம் அரிக்கும் கண்ணினாய் -மகா ஞானம் மிக்கவள் –

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ –
தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ
பாவாய் -கொல்லி அம் பாவை -பதி விரதை நிருபாதிக ஸ்த்ரீத்வம்

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து–அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து–படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –
நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இறே-
சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –
நல் நாள் காலம் போய் கொண்டே இருக்கும் -கிருஷ்ண அனுபவம் பெரியவர் கொடுத்து இருக்க வீணாக கழிப்பதே
பரம பதத்தில் உள்ளாறும் கைங்கர்யம் துடிக்க கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -ஆறி இருக்கிறது என்ன
மேய்ச்சல் கடையிலே அசை இடுவார் உண்டோ
நல் நாள்
ஆண்டாள் -பட்டர் இடம் தீர்த்தம் தாரும் பெரிய திரு நாளில் இந்த ஏகாதசி எங்கே தேடி கண்டு பிடித்தீர்கள் –
கைங்கர்யம் செய்ய உடம்பில் பலம் வேண்டும் ஏகாதசி உபவாசம் கைங்கர்ய விரோதி
நித்யம் பெருமாள் அனுபவம் ஏகாதசி நினைவு எப்படி வரும் – நல் நாள்

கள்ளந்தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை–
அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற–ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை பொதுவாக உண்பதனை நீ தனியே உண்ண புக்கால்-
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்–
சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –யார் இடம் விண்ணப்பிக்க
குற்றம் நின்றே போம் இத்தனை —
கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற களவை விட்டு எங்களோடு ஒரு நீராக கலந்து
இவ்வளவு பேர்- எங்கள் உடன் கலந்து
அவன் உடன் கலந்த உடம்பை காண ஆசைப் படும் பாகவதர்கள் -எங்கள் சத்தையை உண்டாக்காய்-

ஸூவ நிஷ்டை- யுக்தி நிஷ்டை -ஆச்சார்யர் சொல்ல திரும்பி சொல்லி – ஆச்சார்ய நிஷ்டை -மூன்று நிலைகள் உண்டே
பகவத் கைங்கர்யம் -பகவான் உகந்த பாகவத கைங்கர்யம் -பாகவதர் உகந்த கைங்கர்யம் -ஆச்சார்யர் கைங்கர்யம்
பேர் உறக்கம் -சரம பர்வ நிஷ்டைக்கு உள்ளார் இடம் தான் பெறுவாள் இப்பெண் -ஆய்ப்பாடியில் இவன் நீக்கமற நிறைந்து இருக்க –
ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டு இருக்கும் –
கோபிமார் அனுஷ்டானம் -ஆண்டாள் அநுகாரம் -அப்யாஸம் -மூவருக்கும் பாவைக்களம்-உண்டே
பகவத் அனுபவத்துக்கு சேர்ந்த இடம் -ஸ்த்ரீ பிராயர் நாம் – கால ஷேப கூடம் –
யாஜ்ஜ்வல்க்யர் -ஜனகர் வந்தால் தான் கால ஷேபம் – -கால ஷேப கூட்டமே பாவைக் களம் –
ஞான பூர்வகமாக பக்தி -பிரமாணம் -உண்மை அறிவை ஏற்படுத்தும் கருவி -மூலம் பிரமேயம் -காட்டுபவர் பிரமாதா –
பிரேமா – புத்தியால் இவன் என்று அறிவது –
தத்வ தர்சினிகள் -ஓராண் வழி -பிள்ளைகள் எல்லாரும் -நம்பிள்ளை கோஷ்ட்டியோ நம் பெருமாள் கோஷ்ட்டியோ
த்யான யோகம் -தனிமை -ப்ரஹ்மானுபவம்-ஜனக்கூட்டம் தவிர்த்து -பிறப்பு இறப்பு ஜனீ-தாண்டி – –
அடியார் குழாங்கள் -ஈட்டம் கண்டு -பிள்ளைகள் எல்லாரும் இங்கும் –
நல்ல கந்தம் –தீய கந்தம் -உபதேச ரத்னமாலை இரண்டு பாசுரங்கள்
தனியாக யோகம் -சக்தி வளர்த்து பின்பு தீய கந்தம் மாற்ற -இரண்டுமே வேண்டுமே -பக்தி யோகத்துக்கு தனிமை /
பிரபத்தி மார்க்கத்துக்கு -அடியார் -கரிய கோல திரு உரு காட்டுவான்
யோகம் முதிர்ந்து அனுபவம் இங்கு -கீதா உபநிஷத் யோகம் தனிமை -கோதா உபநிஷத் எல்லாரும் பாவைக் களம் புக்கார் –
நரனுக்கு நாராயணன் -உபதேசம் / பெருமாள் பிராட்டிக்கு / கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு -இவை முன்பு பாவைக் களம்
சுவையன் திருவின் மணாளன் -இவனுக்கும் சொல்லிக் கொடுத்து -இது பாவையுடைய களம்
நம்மாழ்வார் மூலம் உலகோரை திருத்த -அவர் நாவில் அமர்ந்து -அவர் திரு மேனி பாவைக் களம் –
என் வாய் முதல் அப்பன் -மெய் நின்று கேட்டு அருளாய் -மெய் சத்யம் சரீரம் -யாகம் பண்ணுவது பெருமாளே இங்கு
குரு பரம்பரைக்கு வித்து/ நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினாரே மதுரகவி -அனுபவம் பகிர்ந்து -யோகம் உபதேசம் -மாறி அனுபவம்
நாத முனிகள் -உபதேசம் தொடக்கம் -அஷ்டாங்க யோகம் கை வந்தவர் -இவர் இடம் அனுபவ ருசி கை வந்து –
உய்யக் கொண்டார் -பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ –
மணக்கால் நம்பி ஆச்சார சிஷ்யரை தேடி ஆளவந்தாரை சம்பிரதாயத்துக்கு –முன்பு எல்லாம் சிஷ்யர் தேடித் போக –
பாவைக் களம் ராஜ சபை இங்கு –கீதை சொல்லி -அரங்கனை தன்னைக் காட்டச் சொல்லி –
பலர் மூலம் பஞ்ச ஆச்சார்யர் மூலம் ராமானுஜருக்கு அருளி -கடாக்ஷ பலத்தால் அருளும் முறை தொடக்கம் –
ஆ முதல்வன் இவன் என்று-மதுராந்தகம் பாவைக் களம் -இருவரும் எழுந்து அருளி -சடக்கென செய்ய வேண்டும் –
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
கப்பும் களையுமாகா ராமானுஜர் –12000–ஸ்ரீ வைஷ்ணவர்கள் -700-சந்யாசிகள் –ஆண்டாள் கோஷ்ட்டி –
நமக்காக சரணாகதி அனுஷ்ட்டித்து -அனுபவம் ஒன்றே நமக்கே -ஆச்சார்ய அபிமானம் –
ஆசை யுடையார்க்கு எல்லாம் -பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி -ஞானம் எழ / ஆம்பல் கூவிற்று சம்சார அந்தகாரம் போனதே /
நம்பிள்ளை -100-ஈடு சாத்தி –ஈடு படுத்தி அனுபவம் எங்கும் பரந்து விரிய /
மா முனிகள் -நம்பெருமாளுக்கும் ஈடு சாத்தி அருளி -இந்த குரு பரம்பரை ஹாரமே நமக்கு பாவைக் களம் –

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று–நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும்
பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் –
ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன் வேதமயன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை–
மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பாவைக் களம்–பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்ற–சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை சாய்த்து
புள்ளும் சிலம்பின
வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர–
தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஆத்மா அபஹாரி–இனியது தனி அருந்தேல்–
பாவைக்களம்-
கால ஷேப மண்டபம் -ஆசை உடையோரை எல்லாம் புக்க விட்டாரே-எம்பெருமானார்

வானமா மலை -சுவாமிகள் –
கோவலர் தம் பொற் கோடி -யாமுனமுனி
நற் செல்வன் தங்கை -ராம மிஸ்ரர் -திரு குமாரத்தியார் சேற்றில் படியாய் கிடந்தது –
மணக்கால் நம்பி -மணல் கால் பட்டாதால் –
மனத்துக்கு இனியான் ராம மிஸ்ரர்–போதரிக் கண்ணினாய் புண்டரீகாஷர் உய்யக் கொண்டார்
பிணம் கிடக்க மணம் புணர்ந்தார் உண்டோ–
யோக ரகசியம் வேண்டாம் தான் மட்டும் கலந்து அனுபவம் வேண்டாம்-
உலகம் உஜ்ஜீவிக்க வைக்க நினைத்த -உய்யக் கொண்டார் –
போதரிக் கண்ணினாய் –என்றும்
பங்கயக் கண்ணானைப் பாட –என்கையாலே ஸ்ரீபுண்டரீ காஷாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
கிருஷ்ணன் ராம– இருவரையும் சொல்லி அருளி-
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
வச்த்ராபரணம் -துகில் உடுத்தி ஏறினர் பள்ளி எழுந்து அருளாய்–அயோத்தி அம் அரச -கண்ணன் ராமன்
நம் பெருமாள் -வசிஷ்டர் விநயம் எல்லாம் தோற்ற –
பெரிய பெருமாள் யசோதை பிராட்டி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் காணலாம் –
நஷத்ர கதி–பறவைகள் ஒலி- அடையாளம் கதிரவன் வசுக்களும் வந்து ஈண்டி
பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் புள்ளும் சிலம்பின காண் –
போதை அரிவதில் கண்ணை உடையவர்-
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் —
குள்ளக் குளிர குளித்து -அந்தணமை ஒழித்திட்டேன்
பழியாக தாசி வீட்டில் மாதரார் -கயலில் பட்டு பாவாய் -அரங்கனை தவிர பாடாத பதி விரதை
நல் நாள் மார்கழி திங்கள் மதி -மார்கழி கேட்டை
கள்ளம் தவிர்ந்து கலந்து -வட்டில்
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து கள்ளம் தவிர்ந்து -தொண்டர் அடி பொடி –

பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் –
இரவியர் -வந்து வந்து ஈண்டி -வம்பவர் -அனைவரும் வந்தனர் -சுந்தரர் நெருக்க
வெள்ளி வியாழன் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி -புள்ளும் சிலம்பின –தோட்டம் வாழ்ந்த ஆழ்வார்கள்
போதரிக் கண்ணினாய்
புஷ்பத்தை பறிப்பதில் கண்ணை உடையவர் குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன்
பள்ளிக் கிடத்தியோ
அரக்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயோ
பாவாய் பதி
வ்ரதை இவர் தானே
பதின்மர் பாடும் பெருமாள் -பாக்கியம் இல்லையே ஜீயர் அரையர் இடம் சொல்ல
சோழியன் கெடுத்தான்
உச்சி குடுமி பெரியாழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் மூவரும்
நல் நாள் -மார்கழி கேட்டை -மன்னிய சீர் மார்கழி கேட்டை
கள்ளம் தங்க வட்டில் திருடி –
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து –

போதரிக் கண்ணினாய் –என்றும்
பங்கயக் கண்ணானைப் பாட –என்கையாலே ஸ்ரீபுண்டரீ காஷாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

————–

‘புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடி’ என்பது
பத்து இந்திரியங்களையும், மனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆச்சார்யனைப் போற்றுகிறது.

‘பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்’ என்பது (ஒருவனைத் தவிர) மற்ற சீடர்களெல்லாம்
ஆச்சார்யனை அடைவதற்கு தயாராகி விட்டதை குறிக்கிறது.

“வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று” என்பது ஞானம் புலரும் மற்றும் அஞ்ஞான இருள் விலகும் சுப வேளையை குறிப்பில் உணர்த்துவதாம்.

“குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே” என்பது பகவத் அனுபவத்தில் திளைத்து மகிழ முன் வைக்கப்படும் அழைப்பை உள்ளர்த்தமாக கொண்டது.

ஆச்சார்ய சம்பந்தம் கிடைக்கும் நாள் என்பதால் “நன்னாள்” என்று கொண்டாடப்படுகிறது.

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – கனைத்திளம் கற்று எருமை – — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை
கிருஷ்ணனைப் பிரியாமல் –இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன் –
தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்
இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாடலில்–பாகவத அபிமான நிஷ்டரை எழுப்புகிறார்கள்-

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே–முலை கடுத்து கதறுகை –
ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை
என்று வியசனப் பட்டு –
கனைத்து
கறக்க வில்லை–வேதனையால் கனைக்கிறது–உதாரார் கொடுக்கா விட்டால் கதறுவது போலே –

வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆஸ்ரிதர் -ரிணம் பிரவர்தம் -கோவிந்தா குரலுக்கு -செய்ய வில்லையே -எல்லாம் செய்த பின்பு –
வாசலிலே கன்று காலியாய் நான் பட்டதோ
குமுறி – இளைய பெருமாளுக்கு அக்னி கார்யம் அன்வயம் ஆகும் பொழுது இவன் கறப்பான்-
கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே சாஸ்திரம் -ஒத்து கொள்ளுமா பக்தி யோகம் -தைல தாராவது –
தபஸ் – நித்ய கர்மாநுஷ்டானம் உண்டா இப்படிப் பட்டவனுக்கு -பிரேமத்தால் பிரிய மாட்டாதவன் –
ஆலச்யத்தால் விடக் கூடாது – தொல்லை மால் நாமம் ஏத்தவே பொழுது –
இவன் தன்னை நேராக விட்டிலன் கர்மம் கைங்கர்யத்தில் புகும்

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே பாடாற்றாமை –பால சந்தானமுடைய சிஷ்யர்
கறவா மட நாகு -தன் கன்று உள்ளினால் போலே-
முலைக் கடுப்பு வேதனை விட கன்றை நினைந்து -இரங்கி ஏழை எதலன் கீழ் மகன் இரங்கினால் போலே
கோபிகள் கன்று ஸ்தானம் வாசலில் -கறவாத எருமை ஸ்தானம்

கன்றுக் கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க – கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்—
மீன் -பார்வையாலே -/ பறவை- ஸ்பர்சத்தால் /
ஆமை நினைத்த மாத்திரத்தாலே போஷணம் -என்பர் தேசிகர் சங்கல்ப ஸூர்யோயதத்தில் –
முலை வழியே – கை வழி தவிர – நின்று பால் சோர – நினைவு மாறாமையாலே
திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது அது என் என்னில்
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-
நினைத்து-
ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –
பாவன பிரகர்ஷத்தாலே ஸ்வாசாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –

நினைத்து -தானே பால் பொழிய –
கஜேந்த்திரன் நினைக்க- பாகவத த்வராயா நம-வேகத்துக்கு நமஸ்காரம்
அவன் வேகம் போலே பால் சொரிய மனசா சிந்தயந்தே ஹரிம் நினைத்த பாவனா பிரகர்ஷத்தால்
கன்று வழியே இன்றி பாத்ரம் வழியே அன்றி
முலை வழியே நின்று பால் சோர –
அர்ஜுனன் கேளாமல் பூயயோகோ மகா யோ ஸ்ருனு-18 அத்யாயம் 700 ஸ்லோகம் –
மறுபடியும் சொல்கிறேன் – எடுப்பும் சாய்ப்புமாக –
கரிஷ்யே வசனம் தவ -நீ சொன்னதை கேட்கிறேன் சொல்வதை நிறுத்து
பால் வெள்ளம் இல்லம் சேறாக்கும்
கண்ண நீர் –அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் பொன்னி நீர் போலே –
பால் சோறு அப்புறம் இங்கே பால் சேறு –

நற் செல்வன் தங்காய்-
பால் சேறாக கறவாமல் – அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும்
ஆஸ்தானம் சேவகம் நழுவும் -விடுவான் சொல்ல வில்லை
உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் -மா முனிகள்
கைங்கர்ய பரருக்கு உபவாசமே வேண்டாம் –
கோவலர் பன்மை கீழே நற் செல்வன் –
ஒருமை விசேஷ வ்யக்தி இவன்
செல்வம்-கைங்கர்யம்–அந்தரிஷ கத ஸ்ரீ மான் லஷ்மண சம்பன்னன் கஜேந்த்திரன் போலே –
கிருஷ்ணன் பின்னே சென்று அவனை அல்லது அறியாதே -அவனுக்கே பரிந்து
ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் போதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவுமே
பகவத் கைங்கர்ய நிஷ்டையாலே இந்த நற் செல்வன் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார் கொண்டு போக
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி -பெரியாழ்வார் -3-4-3-
உபேயம்-தானே உபாயம்- விடுவித்து பற்றுவிக்கும் –அவனே உபாயம்
நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி விடுகையும் பற்றுகையும் உபாயம் இல்லை-

நற் செல்வன் தங்காய் -விபீஷணன் -த்ரிஜடை அனலா -சத்தையா தாரகம் -மாயா சிரஸ் –
இவர்கள் மூலம் விபீஷணனை விஷயீ கரித்து
மனத்துக்கு இனியான்-சேர்ந்தே வருமே
அனைவருக்கும்- வேதம் ரிஷிகள் பிராட்டி தாய்மார்கள் –
கோமானைச் செற்ற -அஹங்காரம் அழித்து -ஆத்மாவை அழிக்க முடியாதே
பேர் உறக்கம் -பெரும் துயில் -திருட மஹா விசுவாசம் -அச்யுதன் பிடியை நழுவ விட மாட்டாரே
அனைத்து இல்லாரும் அறிந்து -எம்பெருமானார் -வந்து தோன்றிய அப்பொழுதே
ஞானம் தலைக் கொண்டு நாரணர்க்கு ஆயினர் -போலே

செல்வ சிறுமீர்காள் -பொதுவான ஏற்றம்-செல்வப் பெண்டாட்டி கோவலர் தம் பொற் கொடி –
நற் செல்வன் தங்காய் -பிரபத்தி நிலை தாண்டி -பஞ்சமோ உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
காருண்யா ஸாஸ்த்ர பாணிநா -சஸ்திரம் விட்டு -பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டு –
நினைத்தை பண்ணுவதே ஸ்வாதந்தர்யம் –
தூக்கம் பற்றி இல்லை செல்வம் பற்றியே இங்கு –
மாமன் மகள் -சுவர்க்கம் புகுகின்ற அம்மான் -பிரபத்தி நிஷ்டை -நிவாகரகர் இல்லாத ஸ்வதந்த்ரன்
இரண்டிலும் தூக்கம் -செல்வம் இல்லை –
தனம் மூடா -கைப்பணம் -பிரமாணம்
ஸூய வியாபாரம் இல்லை என்பதே மேல் ஓங்கி இருக்கும் இந்த இரண்டிலும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய -விடுகை பிரதானம்
ஸூ லபம்-ஸூ வ குரு -துர்லபம் பகவான் உபாசத –கை நீர் விட்டு ஜீமூதம் தேடி –
கைப்பட்ட தனம் விட்டு புதையல் தேடுபவரை போலே -அந்தர்யாமி அஷ்டாங்க யோகம் கை வந்தவர்களுக்கே –
தன் கைப்பொருள் விட்டாரை காசினியில் தாம் புதைத்த —ஞான சாரம் –
இரண்டு -பாசுரம் -ஒவ் ஒன்றுக்கும் -அவாந்தர பேதம் – –ஸூகத ஸ்வீகாரம் /பரகத ஸ்வீகாரம் இரண்டும் உண்டே –
மர்கடம் -குரங்கு குட்டி தானே பிடிப்பது –
மார்ஜாரம் -பூனை தாயே பிடிக்கும் குட்டியை –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிந்து ஸூகத ஸ்வீகாரம்
ஏஷஹ்யேவாநந்த -ஆனந்தப்படுத்தும் ஊட்டும் -பரகத ஸ்வீகாரம்
நோற்காமலே பெற்ற அம்மனாய் அன்றோ -கண்ணனே நோன்பு நோற்று பெற்ற இவள் –
கோரா மா தவம் செய்தனன் கொல்-
கோவலர் தம் பொற் கொடி -இங்கு -கொண்டாட்டம் ஆச்சார்யர் பெருமைக்கு இதில்
பிரத்யஷே குருவை கொண்டாட வேண்டும்
கீழே மாமானுக்கு விசேஷணம் இல்லையே
அடுத்த பாட்டு -கனைத்து –நினைத்து முலை வழியே -ஆச்சார்யர் குமுறி உபதேசம் உண்டே
குருவால் அபிமானம் -குருவை அபிமானம் இருவரும் உயர்ந்த கதி -அடைவார் -பிரமாணம் –
கீழே அப்படி இல்லை -பரதன் இடம் பலிக்க வில்லையே –
சரண்ய ஹ்ருதய அனுசாரி அனுகுணமாக இருக்க வேண்டும் –
அப்பொழுதே செய்ய வில்லை அப்புறம் பண்ணினார்
பிரபத்தி சேஷமாக அங்கமாக ஆச்சார்ய அபிமானமா -நேராக மோக்ஷத்துக்கா அடுத்த படி
இவன் நம் பையல்-அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே
ஆழ்வார் திரு நகரி மறியல் -ஊரே ஆழ்வாருக்காக காத்து இருக்குமே -அடுத்த நாள் –
சாஷாத் – ஸ்ரேஷ்டம் / அங்கம் -பாரத்வாஜ சம்ஹிதை –
பிரபத்தியை பூர்த்தி யாக்கும் ஆச்சார்ய அபிமானம் –
குளிக்கவோ தொட்டிலிடவோ -கூப்பிடுவார் -வந்து நிறுத்தினால் போற்றுவோம் –
பசுர் மனுஷ்ய பஷீர் வா யே வைஷ்ணவ சமஸ்ரிதா தேனை ஏவ –தத் விஷ்ணு பரம பதம் -அதனாலே மோக்ஷம் –
மனுஷ்யனை நடுவில் வைத்து பரகத ஸ்வீ காரம் -ஜடாயுவை பெருமாள் தானே பற்றினார்
பழுதாகா வகை அறிந்தேன் பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி
ஏத்தி இருப்பாரை வெல்லும் -அவரை சாத்தி இருப்பார் தவம் -பரகத ஆச்சார்ய அபிமானத்துக்கு பிரமாணம்
பிதாமஹம் -பார்த்து -என்னைப் பாராமல் -ஆளவந்தாரும் –
பால மூட ஜடம் அந்தன் பசவா செவிடு -சதாச்சார்ய ராலே கடாஷப்பட்டால் -சந்த்ருஷ்டா -ப்ராப்யம் பரம கதி
வேதார்த்தம் அறுதியிடுவது ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் –

நனைத் தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் – அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால் சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை-
மேலே வர்ஷம் பனி வெள்ளம் கீழே பால் வெள்ளம்-தண்டியம் பிடித்து தொங்கி இருக்கிறோம்
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

தங்காய்-
குணத்துக்கு தமையனில் தன்னேற்றமுடையவள் -என்கை –
நற் செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ
நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்

பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட – கீழ் பால் வெள்ளம் இட – நடுவு மால் வெள்ளம் இட நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில் தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –
பனியானது தலை மேல் சொரிய–அதாவது–
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற–ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும் பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய-அருளிச் செயலால் வரும்
குணானுபவ பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –
இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வாரவர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி-
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி –
இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்

சினத்தினால் –
பெண்களை தீரா மாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய பெண் பிறந்தாருக்கு
தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –

சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் அவர் அழுத போது கூட அழுதார் இறே –
ஜித குரோத கக- திருவடி மேலே அம்புபட்ட பொழுது சீறினார்-

மனத்துக்கு இனிய சினம் –
பகவான் இடம் இருந்து -ஹிதம் அருளி நம்மை நியமித்து அருளுவான் -சீறி அருளாதே -என்பார்களே –
கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து

சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்
அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது
ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதி கள்
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்

கனைத்து இளம் கன்று -சித்ரகூட அனுபவம் ஸூ சகம்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் –
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்

செற்ற
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே படையைக் கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து
புத்திர பௌத்ர அரக்கர் தம் கோன் போலும் அஹங்காரம் அழித்து-
பட்டர் அனுபவம்
தாம் போலும் -என்று எழுந்தான் -கோன் போலும் – இயலை ஒரு தடவை கேளா –
சந்தை கூட சொல்லிக் கொள்ள வில்லை – ராவணன் வார்த்தை காண் என்று விட்டார் –
தான் போலும் -தாரணி யாளன்
மனிஷா பையல் -தான் என்று யுத்தம் வர அரக்கர் கோன் பூ பறித்தால் போலே இருப்பேனா -என்று எழுந்தவன்
அஹங்காரம் மனத்து இனியான் செற்ற காலத்தில் இன்று போய் நாளை வா சொன்ன இனிமை –
சசால சாபஞ்ச -முமோஷ வில்லையும் கீழே போட்டான் வெறும் கை வீரன் ஆனான் –
சிங்கம் கண்ட யானை கருடன் கண்ட பாம்பை போலே ஆனான்
இரவுக்கு அரசன் தூக்கம் வராது கையும் வில்லுமாகா கையும் அஞ்சலியுமாக வர வேண்டுமா
திருவினைப் பிரிந்த கடு விசை அரக்கன் – செற்ற காலத்தில் மனத்துக்கு இனியான்
பெண்களை ஹிம்சை கண்ண நீர் அடிக்கும் தீம்பன் இல்லை-
சத்ருக்களுக்கும் கண்ணநீர் பெருக்கும் கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர்
மிருத சஞ்சீவனம /நம் ஆழ்வார் உயிர்க்கு அது காலன் –

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில் கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ – எழுந்து இராய்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை – ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ – எழுந்திராய் –
உன்னுடைய மகிழ்ச்சிக்காக எழுந்து ஆர்த்திக்கு உணராவிடில் உனது பேற்றுக்கு இது என்ன பேர் உறக்கம் –

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே–
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே– இருப்பதே உன்னுறக்கம் –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீரும்படியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷண சிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும்
என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –
இனி எழுந்திராய்
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் –
எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்

கனைத்து இளம் கற்று எருமை – ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிக்கும் பாசுரம்
நற் செல்வன் –
ஸ்வாமியை குறிக்கும் லஷ்மி சம்பன்ன -அஹம் சர்வம் கரிஷ்யாமி
விபவம் போலே இவர் அர்ச்சையில் -நித்ய கிங்கரோ பவதி
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –
எம்பெருமானார் உகந்த பாசுரம் இதுவும் —பெரும்பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே-

பொய்கை ஆழ்வார்
நற் செல்வன் தங்காய் தாமரை பூவில் அவதரித்த சந்த மாமா –
பாற்கடலில் லோக மாதா –பொய்கை-பூவில் ஆவிர்பாவம் -தமிழ் மறை செய்ய –
நான்முகன் நாபி கமலத்தில் போலே –
வனசமரு கருவதனில் பிராட்டி போலே தாமரை மலரில் அவதாராம் –
இளம் கற்று எருமை முதல் ஆழ்வார்-முதலில் கனைத்து பேச ஆரம்பித்து –
கன்றுக்கு இரங்கி நம் போல்வாருக்கு-கனைத்து முதல் முதலில் பேச-
இளம் -நம் போல்வார் நினைத்து
முலை வழியே கிருபை மூலம்
நின்று முதல் திருவந்தாதி
பாலே போலே சீரில்
கல்யாண குணங்கள்
பழுதே -அஞ்சி அழுதேன்
கண்ண நீர்
பனித்தலை
சக்கரவர்த்தி திரு மகன் -பூ மேய -நீண் முடியை பாதத்தால் எண்ணினான் – சரித்ரம் ஆமே
அமரக்கு அறியா நாமே அறிவோம்
இனித் தான் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற பின் மறையின் குருத்தின் பொருளையும் அனைத்து இல்லத்தாரும்
அதி கிருதா அதிகார்யம் இல்லை தமிழ் –
வேதம் தமிழ் செய்து -பரத்வமாய் இருந்த அவனே அர்ச்சையாய் –
மான மேய சரமங்கள் -அருளிச் செயல்கள் முதலிலே வந்த பின்பும் என்றவாறு –

———–

சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய
ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்!
நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்! ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று
இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை
(ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.
திருமகள் “ஹிரண்மயி” என்பதால் தங்கை என்ற பதத்தை “தங்கம்” என்று கொள்ள வேண்டும்.

“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை” என்று 5 வார்த்தகளில்
ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி!
ராமனை “புண்ணியன்” என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்)
போற்றியதை நினைவு கூர வேண்டும்.

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி – இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்)
ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர – எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது,
நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம்.
இதையே, ஸ்ருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பனித்தலை வீழ – அஞ்ஞானமிக்க (நாங்கள்)

நின் வாசற்கடை பற்றி – “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு

தென்னிலங்கைக் கோமானைச் செற்ற – கட்டுப்பாடற்ற புலன் சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல

மனத்துக்கினியானை – கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும் பேறு பெற்றவர்கள்.
அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் “கண்ணுக்கினியவன்” ஆவான் 🙂
ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும்,
அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் “மனத்துக்கினியவன்” ஆகின்றான் –

ஈதென்ன பேருறக்கம் – நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?

அனைத்தில்லத்தாரும் அறிந்து – பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு,
அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!

அனைத்தில்லத்தாரும் அறிந்து – ஆண்டாள் பாடியது பொய்கையாரின் “அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்” என்ற
பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!

அறியும் உலகுஎல்லாம்* யானேயும் அல்லேன்,*
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய்,* – வெறி கமழும்-
காம்பு ஏய் மென் தோளி* கடை வெண்ணெய் உண்டாயைத்,*
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு.

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – கற்றுக் கறவைக் கணங்கள் — —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
எல்லா வற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்-ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-
இப் பாட்டில் ஈச்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு
மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்-
இப் பாட்டில்-ஜாதி உசிதமான தர்மத்தை-சாதனா புத்தி அன்றிக்கே
கைங்கர்ய புத்யா அனுஷ்டித்தால் குற்றம் இல்லை என்கிறது-
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கற்றுக் கறவை –
ஸ சந்தானரான சிஷ்யர்-
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை —இதுக்கு ஹேது
முக்தர் பஞ்ச விம்சதி பிராயர் கீழ் நோக்கி வயசு புகுமா போலே-இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே-
இவை மனுஷ்யத்வ பரனான கிருஷ்ணன் ஸ்பர்சத்தாலே-அனுபவம் ஆழ மோழையாக செல்ல –
முலை சரிந்த பெண்ணை பாராத ராஜ குமாரனை போலே–
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -நம் ஆழ்வார்–
திவத்திலும் -திவத்தை காட்டிலும் -பரம பதத்தை காட்டிலும்–திவதில் சேர்ந்தாலும் -அங்கும்
சிம்ஹாசனம் இருந்து டியோ டியோ -நித்ய சூரிகள் என்ன கேட்பார்களாம்-
பசு மேய்க்க மந்த்ரம் சொல்வான்–
சப்த மாதரம்–ஹாவு ஹாவு சொல்கிறீர்களே அதுக்கு என்ன அர்த்தம் ஆஹா ஆஹா சந்தோஷம் வெளிப்பாடு –

ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்டாதவரையே அவன் இனிது உகப்பான் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -லஜ்ஜை சுய வியாபாரம் சக்தி விட்டு
இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே-
கஜேந்த்திரன் -ஆதி மூலமே கதறின பின்பே ஓடி வந்தான்
பசுக்கள் புல் மேய அறியும்–இவை தீர்த்தம் குடிக்க தெரியாமல்-
நதிக் கரைக்கு -சென்று-தடம் பருகு கரு முகில்-வெறும் மேகம் இல்லை –
வரை மீ கானில் தடம் -மலையில் தாழ் வரையில் தீர்த்தம் பருகும் மேகம்-
மலை தாழ் வரை தடாகம் —தாகம் -கன்று குட்டி தீர்த்தம் பருக தெரியாதே-
உறிஞ்சி -ஸ்ரேஷ்டன் செய்வதை லோகத்தார் பண்ணி –
இதை அறிந்து கீதையிலும் அருளினான் –
இட்டமான பசுக்களை இனிது மறுத்தி நீரூட்டி-இஷ்டமான பசு கன்று
காளாய் -இளமை யௌவனம்-
அவற்றை இளகிப் பதிப்பித்து அத்தை கண்டு தானும் இளகி- –
தசரதன் -வா போ -ராமன் த்ர்ஷ்ட்வா புனர் யுவா பவ –
இவனுக்கு கண் ஜாடை காட்டலாம் படி-புக்க இடத்தே புக்கு -இவனுக்கு ஒதுங்க நிழல் கொடுத்து –
கறவைகள் பின் சென்று –
புல் தேடி அது போக –எங்களுக்கும் வழி காட்டி போகுமே -அவ்வளவே எங்கள் ஞானம்

கணங்கள் பல –
அவர்கள் உடைய பலவான சமூகங்களை
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே–சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை–ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இறே–பசுக்களுக்கு தொகை உள்ளது –
நர — அழியாத வஸ்து–
நர நாரா நாரா பல நரங்கள்–கல்யாண குணங்களை எண்ணினாலும் இவற்றை எண்ண முடியாதே

கறந்து –
அவர்களுடைய அபிநிவேச அனுகுணமாக ஜ்ஞானப் பிரதானம் பண்ணி
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்–நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்–
பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி-
சம்ருத்தம் ஆகையாலே–முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –

கற்றுக் கறவை கணங்கள் பல கறக்கும் -கோவலர் தம் பொற் கொடியே –
வர்ணாஸ்ரம தர்மம் -அனுஷ்டிக்கும் கோவலர் -பன்மை
அவனே நோற்று என்னை பெறட்டும் என்று கிடக்குமவள் இந்த பொற் கொடி-

தேங்காதே புக்கு இருந்து வாங்க
கறந்து -ஒருவனே–வேதம் அடைய அதிகரிக்குமா போலே- ஜாதி உசித வ்ருத்தி

செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்–கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –

திறலழியச் –
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு–புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –
செற்றார் உண்டு-
உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்–
அவர்களுடைய திறல் உண்டு –ஸ்வார்த்த பரதை-அழிய-நசிக்கும்படி

சென்று செருச் செய்யும் –
தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி அவர்களோடு வர்த்திக்கிற –
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே–இருந்த இடங்களிலே சென்று பொருகை —
சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –
கம்சனே நுழைய முடியாத- அசுரர்களும் மாறு வேஷத்தில் கப்பம் ஒரு நாழி பாலில் வீணாக போவதை கொடுக்க-
கஞ்சன் கடியன் கரவு -கப்பம் வரி எட்டு நாள் கை வலத்து யாதும் இல்லை –
நீயே உண்டாய்-படை எடுத்து போக வில்லையே வீரம் அறிந்து –

குற்ற மொன்றில்லாத –
பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்–
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்
அவன் படி அறிந்து நடப்பவர்கள் –

குற்றம் ஒன்றும் இலாத-செற்றார்
கிருஷ்ணன் மினுக்கம் பொறாதவர்கள் அங்கதன் – -நம் விரோதி கோஷ்டி வந்தான் என்றானே –
சம்ருத்தி பொறாதவர்-சத்ருக்கள் பாகவத விரோதிகள் இவனுக்கு
விதுரன் திருமாளிகை அமுது செய்து–பீஷ்ம த்ரனவ் அதிகிரமம் ஞானம் அந்தணர் குலம் இருவரும்-
மாம் ச ஏவ -என்னையும் ஓக்க ஐஸ்வர்ய வ்ருத்தர்
கிம் அர்த்தம் புண்டரீகாஷா-வைய வந்த வாயால் – விகசித்த திருக் கண்கள்

சென்று செருச் செய்யும் உத்தமன் –
சக்கரவர்த்தி திரு மகன் போலே எதிரிகள் ஆயுதம் பொகட்ட பின்பு யுத்தம் செய்யும் குற்றம் இல்லை
அடை மதிள் படுத்தின பின்பு எதிரிகளை -குற்றம் இல்லாத நாங்கள் வர உறங்குவதோ-

கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை —பொற் கொடி தர்சநீயமாய் இருக்கையும்
பர்த்தாவாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இறே இருப்பது –
அவனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பவர்களுக்கு-ஸ்ப்ருஹணீயமான பொற் கொடி
போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம் -பக்தியை மேலே சொல்ல-

புற்றரவல்குல்-
ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது
தன்னிலத்தில் சர்ப்பம் போலே–ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்–
பெண்களை ஆண்களாக்கும் அழகு இறே–அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக
ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –

புன மயிலே –
தன்னிலத்திலே மயில் —கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல–அளகபாரத்தை உடையாளாகை-
பொற்கொடியே –
என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று
மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே–
வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான–பிரேம ரூப ஞானம் ஆகையாலே
புன மயிலே
என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்-
தாரகமாக நாலடி நடந்து பின்னே சென்று நடை அழகு காண கிருஷ்ணனை கூட்டி செல்ல வேண்டாம்
தண்டகாரண்யம் சோபை ஆக்கினது போலே
புனத்தை மயில் சிறப்பிக்கும் ஸ்திரீ வனத்தை நீ சிறப்பிக்க வேண்டும்

புன மயிலே போதராய் –
இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்
நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது-
இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே-உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரான
பாகவதர் எல்லாரும் வந்து –
உறவினரும் தோழி அனைவரும் இவள் தன்னை போலே அநந்ய பிரயோஜனர் கைங்கர்யம் செய்யும் கோஷ்டி

நின் முற்றம் புகுந்து –
பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் —
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே–
சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
விசாலமான பிராப்ய ஸ்தானம் -முற்றம் புகுந்து-
பரமபதம் முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து சேஷிக்கு பிராப்யம்-ஏக ரூபமாய் உள்ளவனையும் முறுவல் –
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன –

முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்–அவன் அழகிலும்–ஔதார்யத்திலும் ஈடுபட்டு–அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –
பரம உதாரனும் ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை
நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –
முகில் வண்ணன் பேர் பாட –
மேக ஸ்யாமம் எனக்கே தன்னை தந்த ஔதார்யம் இரண்டையும் உன் பக்கல்
நீ உகக்கும் அவன் வடிவு ஔதார்யம் பாடியும்

சிற்றாதே பேசாதே-
பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே வார்த்தையும் சொல்லாதே –
முகில் வண்ணன் என்றவாறே–அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்
சிற்றாதே –
சிற்றுதல் -சிதறுதல் —உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே–
இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் போக்கியம் ஆகையாலே-இன்னாதாகிறார்கள்
சிற்றாதே
அங்கங்கள் அசையாமல் -சேஷ்டிதம் வாக்கு – கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வேண்டுமே

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ–
கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –இல்லையாகில் –
செல்வப் பெண்டாட்டி–
உன்னை நீ பிரிந்து அறியாய் –
உன்னுடன் கூடினால் எல்லா ஐஸ்வர்யமும் உன்னுடைய உத்தேச்யம் உனக்கு கிடைக்க-
என்னுடைய உத்தேச்யம் எங்களுக்கு வேண்டாவோ

பின்னை எற்றுக்கு உறங்கும்–
கூடு பூரித்து பூர்ண அனுபவம் – அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ

எற்றுக் குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ —
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு–கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்
உறங்கும் பொருள் எற்றுக்கு -உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது – எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா சொல்லாய் -என்கிறார்கள் –

எற்றுக் குறங்கும் பொருள்-
பகவத் குணங்களை ஒரு மடை செய்து புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய
நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே –
நீ –
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே —
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே–
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்- என்று இருக்கும் படி அழகிதாக இருந்தது–
அவனை தனியாக அனுபவிப்பது கைவல்யம்–எங்கள் ஆற்றாமை பாராதே
உன்னுடைய உத்தேச்யம் பாராதே–கிருஷ்ணன் நிரதிசய போக்யதை–ஒன்றையும் பாராமல்
அவனை உகப்பிக்க பார்த்தாய் ஆகில்–அவன் உகந்தார் எங்களை உகப்பிக்க வேண்டாமோ-
ஸூய பிரயோஜன கைங்கர்யம் போலே கூடாதே
மற்றை நம் காமங்கள் மாற்று —
உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேண்டும் -கடகர் ஸ்தானம் பாகவதர்
எடுத்து கை நீட்ட நாங்கள் வேணும்–
விஸ்லேஷ தசையில் -போதயந்த பரஸ்பரம் வருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கை நாங்கள் வேணும்

எற்றுக்கு உறங்கும் பொருள்
தமோ குணத்தால் சம்சாரிகள் உறக்கம் யோக நித்தரை பாற் கடல் நாதன்-
நடந்த கால்கள் நொந்தவோ மடியாது –துயில் மேவி மகிழ்ந்தது அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
அன்று இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ
தொல்லை மாலைக் கண்னாரா கண்டு காதல் உற்றார் கண்கள் துஞ்சாரே-
சதா பஸ்யந்தி சூரய-எற்றுக் குறங்கும் பொருள்-

செல்வப் பெண்டாட்டி –செல்வச் சிறுமீர்காள் -கீழே பொதுவாக –
உபாயமும் உபேயமும் அவனே என்று நன்கு உணர்ந்த செல்வம் –
அனுபவ ஜெனித -ப்ரீதி காரித கைங்கர்யம் -குண அனுபவம் -அன்பு -செயல் மூன்றும் வேண்டுமே
உபகார சிந்தனையால் ப்ரீதி இருக்க வேண்டுமே
உபாயம் செய்ய கூடாது உறுதி -ஆனால் உபேய பாவம் கைங்கர்யம் செய்வதை மறந்தாயே
உபாய பாவம் மறந்து -உபேய பாவத்தில் கண் வைக்க –
கைங்கர்யத்தில் கண் வைத்து –ராமானுஜர் இறுதி கட்டளை
மறந்து உறங்குகிறாள் –
நிழல் போல்வனர் வேண்டுமே -எடுத்து கை நீட்ட -உணர்த்துகிறார்கள் வெளியில் உள்ளார் /
ஆற்றாமை தீர்க்க வ்ருத்த கீர்த்தனம் -பாகவதர் ஏற்றம் உணராமல் /
திருவடி -வந்து ஆஸ்வாசம் பிராட்டிக்கு -வ்ருத்த கீர்த்தனம் பிராட்டிக்கு -செல்வ பெண்டாட்டி –
காகாசுரன் கதை கேட்டதை ஜாம்பவான் இடமும் பெருமாள் இடமும் சொல்லி சாந்தி சாந்தி சாந்தி மூன்று தடவை
நல்ல என் தோழி- நாகணை மிசை நம் பரர் – செல்வர் பெரியர் -இங்கு செல்வப் பெண்டாட்டி
மூன்றாலும் -கை விட மாட்டான் -என்றும் கண்டு கொள்ள மாட்டான் –
நாம் செய்வது என்
விட்டு தேவர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -குடல் துவக்கு உண்டே –
பகவத் சம்பந்தம் உணர்த்தவும் -உறுதிப்படுத்தவும் பாகவதர்கள் வேண்டும் /
ஏறி வந்த ஏணியை விடக் கூடாதே
விட்டு தேவர் தங்கள் தேவரை-தங்கள் என்பதால் -நேராக தொடர்பு இல்லை –
இவளுக்கு விஷ்ணு தேவர் தேவர் –
வட பெரும் கோயில் பெருமாள் அவருக்கு –
விபீஷணன் -ராமன் விரோதி இடம் கிளம்பி -ராமன் ரக்ஷகன்-என்று நினைப்பவர்கள் மட்டும் இல்லாமல்
அவனை ரஷிக்கும் முதலிகள் கண்டு பெரும் உகப்பு –
நேராக போகாமல் -இவர்கள் சோற்றை பறிக்கக் கூடாதே
ராவணன் வந்தால் நாடே வாழ்ந்து போகுமே அவன் நினைவு
தீர்ப்பாரை -பதிகம் -தோழி -அநந்யார்ஹத்வம் -சஹி வெறி விலக்கு/
கோவலன் தன் பொற் கொடியே -உனக்கும் இது நடக்கும் நாங்கள் வேண்டுமே
ஆசை அறுத்து -துவளில்-மா மணி -/
அறத்தொடு நிற்கும் -கறு மாணிக்க மலை நேர் பட்டதே குட்ட நாட்டு திருப் புலியூர் /சேஷத்வ ஸ்வரூபம் -அறம் –
திரு நெடும் தாண்டகம் -மூன்றாம் பத்தில் -தேவர் என்று அஞ்சினோம் தோழீ -பேசி தரிக்க போத யந்த பரஸ்பரம்

கற்றுக் கறவை -திரு மோகூர் அனுபவம் -ஸூ சகம்-முகில் வண்ணன் பேர் பாட –
தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே
நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே-

எம்பார் உகந்த பாசுரம் –
திருமலை நம்பி கால ஷேபம் – பரத்வம் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன்
எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தகாது தகாது இனி அங்கீகரித்து அருள வேணும் -ஸ்ரீ சைல பூர்ணாயா -ஸ்ரீ ராமாயணம் -சம்மானம் எம்பாருக்கு –
ஆசார்யாய பிரியம் தனம் நான் தர எமபாரைத் தந்து அருள வேணும் –
கோவிந்தர் -எம்பார் -உடம்பு தேமல் – தேசாந்தாரம் இருக்க மனம் இருக்க மாட்டாதே –
விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -கதவையும் திறக்காமல் இரண்டு நாள் காத்து
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – சௌக்யமாக இருக்கிறாயா கூட கேட்க மாட்டாயா மாமா

ஆச்சார்யர் -புன மயில் –
1-மயில் உள்ள இடங்களில் விஷம் பூச்சிகள் நடமாடாவே –
யத்ர அஷ்டாக்ஷர சம் சித்தோ மஹா பாகோ மதீயதே ந தத்ர சம் சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
2-மயில் ஹர்ஷத்தால் தோகை விரித்தாடும் -ஆச்சார்யர் ப்ரஹ்மானந்தம் பொங்கி ஞான விகாசத்தை காட்டி அருளுவார்
3-சிரமப்படுத்தியே மயில் இறகு பெறுவது போலே அநுவார்த்த ப்ரசன்னாச்சார்யார்
மைத்ரேய பரிபப்ரச்ச பிரணிபாத் யாபிவாத்ய ச என்றும் -பிரணிபாதே ந பரிபப்ரச்நேந சேவயா
4-கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து -மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா –
ஏக தேசம் எம்பெருமான் திரு முடி மேலே விளங்குவது போலே ஆழ்வார் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் கேட்டு அருளி
தெனா தெனா என்று தலை குலுக்கிக் கொண்டாடுவான்
5-மயில் முகிலைக் கண்டு களித்தாடுமே
கார் முகில் போல் கண்ணன் யெம்மானைச் சொல்லிப் பாடி ஏத்தியும் பறந்தும் துள்ளுவார்கள்
6-மயிலைக் கண்டு பாம்பு பயந்து ஓடும் குடில விருத்திகள் அஞ்சி நடுங்கி அகலுவார்களே –

நாராயணன் -திருப்பாவையில் மூன்று
நாராயணனே நமக்கே –
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன்-
நாற்றத் துழாய் முடி நாராயணன் இங்கும்-

ஆளவந்தார் -உணர்த்தப்படுகிறார்-
எமுனைத் துறைவன் வானமா மலை ஜீயர் கோவலர் தம் பொற் கொடி-
சுற்றத்தார் தோழிமார் ஐஞ்சு சிஷ்யர்கள் உண்டே–
பவிஷ்யதா ஆசார்யர் ஆ முதல்வன் கடாஷிக்க வேண்டாவோ
கா பிஷா தர்க்க பிஷா – குற்றம் ஒன்றும் இல்லாத நஞ்சீயர் ஆக்கி மைப்படி மேனியான் –
நஞ்சீயர் பட்டருக்கு எடுத்துக் காட்டி –
ஞான பக்தி விரக்தி – புற்று அரவு அல்குல் -ஆசார்ய பரமான- அசிந்த்ய அத்புத ஞான பக்தி விரக்த்தியா-
அகாத பகவத் பக்தி சிந்தையே-நாதமுனியை கொண்டாடுகிறார் ஆளவந்தார்-
கற்று கறவை கணங்கள் –
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் –
பஞ்சாச்சார்ய பதாச்சித- பெரிய நம்பி -சமாஸ்ரயணம் -மந்த்ரார்த்தம் –திருக் கோட்டியூர் நம்பி -ரகச்யார்த்தம்
திருமலை ஆண்டான் -திருவாய்மொழி திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் ஆழ்வார் -அருளிச் செயல்கள்
கோ வல்லவர் -மகா வித்வான்கள் -அவர் தம் பொற் கோடி கோ அல்லர் -ஸ்வ தந்த்ரர் அல்லர்-

பூதத் ஆழ்வார்-
திருக் கோவலூர்–மூவரும் நடு நாயகம்–கோல் தேடி -கொடியாக சொல்லிக் கொண்டவர்
செற்றார் -ஓடித் திரியும் யோகிகள் மூவரும்–
கன்றாகிய கறவை சின்ன பாசுரம் வெண்பாவில் வேதாந்த அர்த்தங்களை கொடுத்து
குற்றம் ஓன்று இல்லாத கர்ப்ப வாசம் இல்லாத அயோநிஜர்-குருக்கத்தி தாமரை அல்லி பூ –
ஞானம் பக்தி வைராக்கியம்
இடை–புன மயில் கடல் கரை பிரதேசம் திரு கடல் மலை
சுற்றத்தார் பொய்கை பேய் ஆழ்வார்கள் –தோழி மற்ற ஆழ்வார்கள்
முகில் வண்ணன் முதலில் இவர் பாட–மேகம் கண்டால் மயில் சந்தோஷிக்கும்–
யோகி நிலை மாறி சிற்றாதே பேசாதே
தீர்தகரராம் திரிந்து
கோவலர் தம் பொற் கொடியே-வல்லி-கொடி போலே-
ஆழ்வார்களை காட்டில் ஆண்டாளுக்கு ஏற்றம் பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே
பள்ள மடை காதல் சஹஜம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று
பாரதந்த்ர்யம் அசாதாராண லஷணம் ஸ்திரீகளுக்கு கொண்டானை அல்லால் அறியா குலமகள் போலே –
புன மயிலே போதராய் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் -இவர்களையும் இப்படி பண்ணும் அழகு
புற்றரவல்குல் நடுவான பாகம் பக்தி
இத்தால் தான் ஞானம் விரக்தி
புன மயிலே -ஆசார்யர் உள்ள இடம்
யாத்ர அஷ்டாஷார சம்சித்தா -மகா பாஹோ ந சஞ்சரித்து வியாதி திருபிஷா பஞ்சம் திருடன்
விசாதி பகை -தீயன வெல்லாம் நேமிப்பிரான் தமர் போந்தார் -நம் ஆழ்வார்
சுற்றத்தார் தோழிமார் தேக ஆத்ம பந்துக்கள் இருவரும் உத்தேச்யம்
குற்றம் ஓன்று இல்லாத -குருக்கத்தி தாமரை அல்லி பூ –
கோவலர்
கோ பிறப்பு அல்லர் தாச பூதர் பரதந்த்ரர்
கோபாலர் இடையர்
திருக் கோவலரில் தம் பொற் கொடி
மூவரில் -இவர் கொடி
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம் இவர் அருளி –
ஸ்ரீ ரெங்க கல்ப வல்லி -ஸ்ரீ ய பதி கல்பக வ்ருஷம்
பக்தி மிக்கவர் -அன்பே தகளியே- எந்தன் அளவல்லால் யான் உடைய அன்பு -என்றார் இவர்
முற்றும் வணங்கும் முகில் வண்ணன் –இருந்தாரை ஏற்றும் என் நெஞ்சு பாண்டவ தூதர் -பூதத் ஆழ்வார்

———-

பொற்கொடி, புனமயில் போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம்.
அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்!
மெல்லிய இயல்புடையவளாயினும், “புற்றரவல்குல்” (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை
அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக
வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள். அதாவது,
“சிறுத்த இடை” என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!

இத்தனை விரிவாக (பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை
ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (பரமபக்தி, ஞானம், அடக்கம்..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.

மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்!
மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா!
மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(முற்றம் புகுந்து) முகில்வண்ணன் பேர் பாடப்பட்டது

ஆண்டாள் “பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி” என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே
இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது.
பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது
குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.

பொற்கொடி – பக்தி
அல்குல் – பரபக்தி
புனமயில் – பரம பக்தி

ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான
உன்னதமான பக்திக்கான உருவகங்களே!

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து – புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய
(அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் – வேதங்களை சரியாக கற்காதவரையும், இறை நம்பிக்கை யற்றவரையும்,
சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி,
இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே – வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும்
பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் – கோ என்றால் வாக்கு அல்லது வேதம்)
கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து
ஞானம் பெறும் கொடியாக (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.

புற்றரவு – ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?)
புனமயிலே – பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்
போதராய் – ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து – வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்
நின் முற்றம் புகுந்து – உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
முகில்வண்ணன் பேர் பாட – பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.

சிற்றாதே – அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்
பேசாதே – அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்
செல்வப் பெண்டாட்டி நீ – கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் – எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி,
எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ?

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் – நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை
விவாதங்களில் வென்று நல் வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்

பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* – எண் திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

புற்றரவல்குல் – மேலே சொன்னபடி அல்குல் = பரபக்தி.

பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது திருவந்தாதியை “அன்பில்” தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார்

பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் “முகில் வண்ணன்” என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* – பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட — வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள்,
அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!

———————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –