இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப எல்லாரும் கூடி வந்து –
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –
ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை –
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும் பெரியாழ்வார் திருமகள் இறே இவள்-
த்வதீய கம்பீரம் -ஸ்ரீ வைஷ்ணவர் -மன அனுசாரின விதிகள் பின் செல்லும் –
நஞ்சீயர் ரசவாதம் கை பட்டவன் இரும்பு பொன் ஆவது போலே
பிரமேயம் கை பட்டவன் சொன்னது எல்லாம்-சாஸ்திரம் ஆகும்
நம்பிள்ளைக்கு சொல்லி முமுஷுவை அஹம் சரணம் பிரபத்யே -அபய பிரதானம் நிவேதய மாம்-
ததீயர் மூலம் -காட்டி அருளி ஆகாசம் வரை வந்து நின்றவன் –
வானர முதலிகள் முன்னிட்டு —10 பாகவதர்கள் கீழே புருஷகாரம்
கடகரே சேஷி என்று இருக்கிறவர்கள் இவர்கள்
ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் நாதாயா பிதா மஹிம் நாத முனையே முதலிலும் கடைசியிலும்
ரத்னம் விலை அறிய அறிய கொடுத்தவன் பக்கலில் ப்ரீதி விஷயம் கூடும் இறே –மணி வண்ணன் இறே-
கர்ம யோகாதிகள் பலம் தராதே
எம்பெருமான் கிருபை ஒன்றே பலம் கொடுக்கும் வேண்டியவர்கள் முன்னிட்டு போனால் பேற்றுக்கு உடல்
பெரிய முதலியார் நாதமுனிகள் ஆளவந்தார் இருவரையும் சொல்லுவார்
மற்று அவரை சாற்றி இருப்பார் தவம் வெல்லுமே -ஏத்தி இருப்பாரை–
அடியார்க்கு ஆட்படுத்தாய் ஆட் படுத்திய விமலன்
உடன் கூடுவது என்று கொலோ அடியரோடு இருந்தமை பலம் ஈஸ்வரன் கிருஷி பாகவத பக்தி –
பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் -பட்டர் நஞ்சீயருக்கு அருளிச் செய்தார்
இப்பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி-
பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே –
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –
இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன – பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே –
உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக -தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை
தேடித் போக வேண்டி இருக்கை அன்றிக்கே
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –
வாசு தேவன் பெற்றிலன் நந்தன் பெற்றனன் -ராஜ குலங்களில் பிரசித்தம் இறே
உந்தை யாவர் என்று உரைப்ப கடைக்கண்ணிலும் விரலிலும் காட்ட நந்தனன் பெற்றனன்
வானவர் நாடு இவன் அவர்கள் மடியில் கிடப்பது வான் இளவரசு
வானவர் நாடு முடியுடை வானவர் நித்யர் விண்ணாட்டவர் மூதுவர் பழையவர்
இவன் அவர்கள் மடியில் பிரம்புக்கு அஞ்சி சேனை முதலியார் –
தத் சதா -அவை அவை அப்படியே அனுஜானம் உதார வீஷனை
இளவரசன் – விருத்த மந்த்ரிகள் -ராஜ்ஜியம் நடத்த –
திருவாய்மொழி பிள்ளை நடத்தினது போலே அரரசன் இளையவன் ஆக இருந்ததால்
சிறகில் ஒதுங்கி- பிரம்பில் கீழும் -திரு அநந்த ஆழ்வான் மடியிலும்
மேலாப்பின் கீழ் வருவான் வினதை சிறகின் அநந்த போக பர்யங்கே
நாயகன்
நந்தகோபருக்கும் கோயில் காப்பானுக்கும்–கடகர் இறே நாயகர்
ஆளவந்தார் நாத முனிகள் ஆச்சார்யர்களை துதித்து இழிந்தால் போலே
சீற ஒண்ணாதபடி புருஷகாரமாக
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் -என்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும்
நம்முடை நாயகனே -என்றும்–இருந்தாலும்
உந்தம் அடிகள் முனிவர் -அந்த கண்ணபிரானுக்கும் நாயகர் நந்தகோபர் என்றது இறே
கண்ணபிரான் கோயில் காப்பானே என்னாமல் நந்தகோபர் கோயில் காப்பானே
பரமபதத்தில் ஸ்வ தந்த்ரனாய் பட்ட பாடு தீர–
நந்த கோபர்க்கு பிள்ளையாய் பிறந்து பாரதந்த்ரம் பேணினான்
நாயகன் ஆய நின்ற–
பிதா -புத்ரேன பித்ருமான் ஆக்கி வைத்தான் மகன் ஒருவருக்கு அல்லாத –
கோயில் காப்பான்
தொழில் இட்டு மௌக்யத்தாலும் அவன் உகப்பதாலும் சேஷ வ்ருத்தி பெயரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பெயர்
ஆதி சேஷன் என்றே –
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே -யசோதை —நாயகன் முழு எழு உலகுக்கும் நாதன்
பிரத்யீயம் வளையம் ஆக்கி பாணினி சூத்ரம் –நாயகன் ஆனான் இல்லை நாயகனே ஆகி நின்றான்
கண்ணன் முற்றம் கண் நல் முற்றம் -விசாலம் அர்த்தம் இல்லை–
பிறந்த உடனே தன்னுடையது ஆனதே -உபய விபூதி நாதன் –
திருப்பாவையில் யார் உடைய பெயர் அதிகம் –நந்தகோபன்
நந்த கோபன் குமரன் -நாயகனாய் -அம்பரமே -உந்து /ஏற்ற கலங்கள் -ஆற்ற படைத்தான் மகனே –ஐந்து தடவை
க்ரம குலத்தால் சொல்லாமல் விஷ்ணு சம்பந்தம் இட்டே காக்கும் இயல்வினன்
எங்கள் நிதியை காப்போடு சேர்த்து காக்கும் திருமாளிகை ரத்னதுடன் காக்கும்
போய் பாடுடைய நந்தன் தாழ்த்தான் -காப்பாறும் இல்லை கடல் வண்ணா -வயிறு எரிச்சல் தீர்க்கும் நீ லோகம் தூங்கும் ஞானிகள் விழித்து
ரஷகத்வம் இவர்கள் தலையில் வைத்து தான் உறங்கா நிற்கும் காப்பானே –
எண்மர் -உலோக பாலீர்கள் பறவை அரையா–திரு அநந்த ஆழ்வான் சொல்ல வில்லை
உறங்காதவரை சொல்ல வேண்டாமே —அவர் தானே எம்பெருமானார்- மா முனி கள்–ஆங்கு ஆராவாரம் அது கேட்டு
நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய
கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் -சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்–
அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –
கோயில் காப்பானே என்று ஷேத்ராபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியை சொல்லிற்றாகவுமாம்
ஆராலே விக்நம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலில் விழச் சொல்ல வேணுமோ
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் –
கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் –
ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –
கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே பெண்கள் தடுமாற்றம் தீர
முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள–அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-
ஸ்ரீ பரத ஆழ்வான் -சித்ர கூடம் கொடி கண்டு தரித்தால் போலே–
தண்ணீர் பந்தல் கொடி கட்டி -விடாயருக்கு காட்டுமா போலே
அடையாளம் எங்களுக்கு–வாசத் தடம் உள்ளே கிடப்பதை காட்டும் கொடி–க்ரீஷ்மே -சீதம் -தண்ணீர் –
கொடி வாசலில் வானவர் அங்கும்–தசரதன் பெற்ற மணித் தடாகம் கொடியும் காவலும் உண்டே
கொடி தோரணம் அசேதனம் அழைக்க அனுமதிக்க தெரியாதே–
அர்ஜுனன் சுமத்ரை கொண்டு போக கடவன் -சொல்லி வைத்தது போலே
இவளுக்கும் சொல்லி வைத்து இருப்பான்
மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே புகுவாரை தன் அழகாலே
கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –
பாகவதர் மணிக் கதவம் சாம்யம் கொடுத்து அருளி–
உள்ளு புக்கால் மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும்
தாள் திறவாய் -என்றவாறே
அவன் பயமுள்ள தேசத்தில் மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன – இருந்த இடத்தில் பயம் என் என்ன –
காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய் பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய் மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய் பயம் அற்று இருக்கிறதோ –
காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம்
தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் –
இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி கம்சன் சத்ரு எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள் பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –
பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன
சூர்பணகை -பெண் அன்றோ என்ன –
அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த வர்கள் அன்றோ -என்ன –
பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும் தவிர்த்து அருளாய்-
நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் ஸூ சகம்-
துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –
விரதத்துக்கு பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சப்தங்களைச் செய்து
நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –
ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் –
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதரான பாலர்களான நமக்கு -என்ன
வார்த்தையிலே அறியலாம் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –
அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்-அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன-புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன
ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து தருவிக்கிறேன் -என்ன
மாயன்
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று கையை காலை பிடித்து பரிமாறின படி
மணி வண்ணன்
தாழ நில்லாதே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவழகை உடையவன்
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை -பிரகாசம் -என்னவுமாம் –
வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே
இவர்களை கிடந்த இடத்தே கிடக்க ஒட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு
தூயோமாய் வந்தோம்
பல்லாண்டு பாடுகையே பரம பிரயோஜனம் -புருஷார்த்தம்
தமது ரஷணத்துக்கு அவனே கடவன் என்கிற அத்யாவசாயம் கொண்டவர்கள்
பிரயோஜனாந்த பரர் இறே ஓலக்கத்தில் புகுவார்
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளரும் இடத்திலே புகுரப் பெறுவார் –
நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம் ஒரு நாளே -என்றார்கள் —ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –
நென்னலே -ஏவகாரம் அதுவும் ஒரு நாள் கொண்டாடி
இன்று உன் காலை பிடிக்க–நேற்று அவன் எங்கள் காலைப் பிடிக்க–
வாய் நேர்ந்தான்
சர்வ ஸ்தானம்-
வாய் நேர்ந்தான் –
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்-மெய்யாக வேணுமோ -என்ன
ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில் பழுதாய்த்தாகில் அன்றோ
இவ் வார்தையும் பழுதாவது -என்ன – சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –
ஸ்மிதம் பூ அலர்ந்தது போலே–வாக்மி ஸ்ரீ மான் சோதி வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் —அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய–தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-
அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –
தூயோமாய் வந்தோம்–
ஆராய வேண்டாம்–அவன் ரஷையும் அவனே பிரயோஜனம்
உபாயாந்தரம் கொண்டு பெற மாட்டோம்–அவனே உபாயம் அவனே பலம்–பிரயோ ஜனாந்தரம் கொண்டு எழுவார் அல்லோம்-
ராவண பவனம் விட்டு வந்தவன் முழுகி வர வில்லை
நீசர் நடுவில் அர்ஜுனன்
அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் புறம் தூய்மை நீரால்
வந்தோம் –
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை-
நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் என் என்ன –
வந்தோம் –
வரவிலே தெரியாதோ எங்கள் பாவ சுத்தி–அவன் பதறி துடித்து ஓடி வர நாங்கள் வந்தோம்–கஜேந்த்திரன்
நாங்கள் அல்லவோ வந்தோம்
துயில் எழப் பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்–பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்-அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –
எழுப்புமவர்களோட்டை சம்பந்தம்–பெரியாழ்வாரோட்டை குடல் துவக்கத்தால்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் -நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –அவன் கையது இறே வாழ் நாள்–அவன் சத்தை பெற
வாய் சொல்லே தண்ணீர் பந்தல்–மாற்றாதே -நியமிக்கலாமா–சேஷ பூதர் -தடுக்கலாமோ
அம்மா -ஸ்வாமி–த்வார சேஷி தான் எங்களுக்கு கடவர்கள் —அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் கட்டுபவர் நீ
வத்யதாம் மம அபி சித்தம் வேத்தி விபீஷணன் சுக்ரீவன் அஸ்மாத் துல்ய பவத் சொல்ல வைத்தான் –
நீ புக விட்டால் தான் அவன் உகப்பான்–ஐயர் சொன்னால் சீதை கொள்வேன் என்றாரே பெருமாள்
அம்மா –
பச்சை இடுகிறார்கள்–உள் இருக்கிறவனோ நாதன்–நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –
நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
நேசமுடைய நிலையையும் கதவையும்–நிலை நேசம் கதவம் -நிலையோடு பொருத்தம் உடைய கதவம்-
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு–எங்களால் தள்ளப் போகாது–நீயே திறக்க வேணும் – என்கிறார்கள்
சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –கம்சன் படை வீட்டில் எல்லாம்
பிரதிகூலமாய் இருக்குமா போலே –
நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –
நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் – உன்னிலும் பரிவு உடையது
இவர் விலக்குவது சிநேகத்தால் கதவு திறக்காதது சிநேகம்
திறந்து கொள்வார் மூக்கில் அறையும் நீயே கதவை திறந்து விட வேண்டும்
அகால காலத்தில் செடி கொடிகள் பூத்து சகடத்தில் அசுரர்
நித்யர் கதவில் இருக்கலாம் படியாய் கிடந்தது -உன் பவள வாய் நிலையும் கதவுமாய் இருக்கலாமே
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் நேச நிலை கதவு நடுவில் இடை வெளி இல்லை
அவனை முன்னிட்டே எம்பெருமானை பற்ற வேண்டும் –
நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய் –
நீ
எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே -ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை -மறைக்கக் கடவதாய் இறே இருப்பது-
தூயோமாய் வந்தோம் -இரண்டு -உபாயாந்தரம் இல்லாமை -பிரயோஜனாந்தரம் இல்லாமை –
கதவம் நீக்கு
நிலை கதவம் நீக்கு
நேச கதவை நீக்கு
நீ நேச நிலை கதவம் நீக்கு
எழும் புல்லு பூண்டு எல்லாம் ஆசூரா வேஷம்
அசேதனங்களும் ரஷிக்கும் நேசம் மிக்கு
ஆச்சார்யர் உபதேசம் மூலமே பற்ற வேண்டும் –
நாயகன் -ஸ்ரீ ராமானுஜர் -ரத்னா ஹாரம் -மத்ய மணி நியாயம் –
முன்னோர் திரு முடி சம்பந்தம் பிற்பட்டார் திருவடி சம்பந்தம்
அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜர் அன்றோ
மாயன் -மணி வண்ணன்-அழகன் -பிராப்தி இல்லா விட்டாலும் –
பொய்யே-அஹிதமே சொன்னாலும் விட ஒண்ணாத -முந்தானையில் முடிந்து ஆளலாமே – –
நென்னலே –வாய் நேர்ந்தான் -திருவாய் அழகு பிரதானம் -அதிலே மெய் மறந்தோம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு அஷ்ட புஜகரத்தான் / இடை -நமஸ் அர்த்தம் -இவர் கைக்கொள்ள அஷ்ட புஜங்கள் /
ராமோ த்விர் நா பாஷதே -கத்யம் -எடுத்து ஆண்டு -ஏலாப் பொய்கள் உரைப்பானே/ நம் பெருமாள் அன்றோ /
மாஸூச -வாய் நேர்ந்தான் அர்ஜுனனை வியாஜ்யமாக கொண்டு
கண்ணனும் சத்யம் -என் வார்த்தை பொய்யாக்காதே -ஆகாசம் விழட்டும் ஹிமாசலம் பொடியாட்டும் சமுத்திரம் வற்றட்டும் –
இவை நடந்தாலும் என் பிரதிஜ்ஜை மீறாது திரௌபதி இடம் / பரீக்ஷித் கர்ப்பம் -ப்ரதிஜ்ஜை செய்து உயிர் ஊட்டி/
ஆத்ம சம்பந்தம் -ஆத்ம ஆராமன் -இந்திரிய ஆராமன் -ஆராமம் தோட்டம் –
பெருமாள் சத்தியமும் கிருஷ்ணன் பொய்யும் நமக்கு தஞ்சம் –
நென்னலே -எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் சம்பந்தம்
நேர்ந்தான் -சத்ய ஸங்கல்பன்
மாயன் -ஆர்ஜவம் -தாழ நின்று -செல்வ சிறுமீர்காள் / கிங்கரர் விசுவாமித்திரர் இடம் கூட -தூத்ய சாரத்யங்கள் -/
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் –
ராமானுஜர் -சர்வேஸ்வரன் பயப்படுவானா -சங்கை இருக்க –
நம்பி திரு வழுதி நாட தாசர் திருவாராதனம் சொல்லி கொடுத்து அறிந்த அர்த்தம்
அஹம் மே த்வம் மே -சம்சாரிகள் இடமும் தாழ நின்று சொத்தை சேர்த்து கொள்ள /
வாரிக் கொண்டு என்னில் முன்னம் பாரித்து -திருக்காட்கரை அப்பன் /
நைவளமும் ஆராயா நம்மை நோக்கா நாணினால் போல் இறையே நயங்கள் செய்யும் அளவில் –
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய – –
நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு எங்கு உசாகோ /
தாழ நின்று பரிமாறிய இடங்கள் -பத்னிக்கு தோற்பான் பரம ரசிகன் -அறிந்தவன் அன்றோ கண்ணன் –
தூங்குவதை பார்த்துக் கொண்டே இருக்க சீதா பிராட்டி ஆசை -காகாசுரன்
இவர்கள் துயில் எழுந்து இருக்கும் பொழுதை காண அன்றோ ஆசைப்படுகிறார்கள்
நாயகனும் எம்பெருமானும்-
எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே-
எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை
கோயில் காப்பானும் -எம்பெருமானாரே-நடு நாயகம் -எம்பெருமானார் –
யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இறே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது
மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்
நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்
நின்றான் –
யாத்ரை போகாமல் நின்றார் ராமானுஜர்
தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ –
யதிராஜ சம்பத் குமாரர்- செல்வ பிள்ளை -நந்த கோபன் கண்ணனை -பெயர் தகும்
ஆனந்தப் படுத்தியவர் –
உடைய கோயில் -உடைய பதம் இந்த பாசுரத்தில் மட்டுமே -உடையவர் –
கோயில் காப்பான் திருவரங்கம் –
திரு பூரி க்ஷேத்ரம் – மாமலை மற்றும் உவந்திடும் நாள் -திருத்தி பணி கொண்டார்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –
கடல் வண்ணன் கோயிலே என்னும் –
மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்
கோயில் காப்பான் -எம்பெருமானார்
உடையவர் உபய விபூதியும் கையிலே உடையவர்
கொடி தோன்றும் தோரண வாயில் -நித்ய விபூதி
கோபுரம் -நடு தோரணம் நிறைத்து -கொடி அணி
எம்பெருமானார் சம்பந்தமே கொடுக்கும்-
நேசக் கதவு இரட்டை–
பிரணவம் -மந்திர சேஷம் -திரு மந்த்ரம்–பூர்வ கண்டம் உத்தர கண்டம் –
த்வயம்–பூர்வார்த்தம் உத்தரார்தம் சரம ஸ்லோகம்
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு
கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நிலைக்கதவம்-
நாயகனாய் -16-என்று தொடங்கி மேல் அஞ்சு பாட்டாலே
ஸ்ரீ மதே விஷ்வக் ஸேனாய நம / ஸ்ரீ யை நம /ஸ்ரீ தராய நம /என்னும் அர்த்தங்களையும்
அச்சேர்த்தியிலே இவரும் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்தே பெறும் ஏற்றங்களைச் சொல்லுகிறது –
அமுநா தபநாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயகஸ்ரீ –யதிராஜ சப்ததி
நந்த கோபன் –
எம்பெருமானை புத்திரனாக பெற்றதில் எம்பெருமானார்க்கு சாம்யம் -யதிராஜ சம்பத் குமாரர்
உடைய
ஸ்வாமிக்கு உடையவர் திரு நாமம் ஸூசகம்
கோயில் காப்பான்
திருவரங்கம் -அணைத்து கோயில்களுக்கும் உப லக்ஷணம்
தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அநு பத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய —
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்று உவந்திடும் நாள்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
கொடியும் தோரணமுமான பரமபத வாசல்
ராமானுஜர் அடியவர்களுக்கு மட்டுமே உரித்தானது அன்றோ
—–
பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுவதாகப் பெரியோர் கூறுவர்.
பிரமாணம்: வேதம், ஸ்மிருதி, புராண இதிகாசங்கள், திவ்யபிரபந்தம், பிரம்ம சூத்ரம் ஆகியவை
பிரமேயம்: பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
பிரமாதா: ஆச்சார்யர்கள்
சுருங்கச் சொன்னால், பிரமாணம் மூன்று மந்திரங்களையும், பிரமேயம் எம்பெருமானையும்,
பிரமாதா, மந்திரங்களை உபதேசிக்கும் ஆச்சார்யனையும் குறிக்கின்றன.
எம்பெருமானைப் பற்ற மந்திரம், பரதேவதா, ஆச்சார்யன் ஆகிய மூன்றின் பேரிலும் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பாசுரத்தில்
கோயில் காப்பான் – மூல மந்திரம்
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் – த்வயம்
நென்னலே வாய் நேர்ந்தான் – சரம ஸ்லோகம்
‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்பது மேற்கூறிய மூன்று மந்திரங்களை உபதேசிக்குமாறு
ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டுவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
இப்பாசுரத்தில் கோபியர்கள் ‘தூயோமாய் வந்தோம்’ என்று சொல்லும்போது, முக்காரண சுத்தியுடன் (வாக்கு, மனம், உடம்பு)
பகவானிடம் வந்துள்ள அடியார்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றனர்.
‘துயிலெழப் பாடுவான்’ என்பது, எம்பெருமானை போற்றிப் பாடித் தொழுது, அதன் வாயிலாக
உலக பந்தங்களிலிருந்து விடுபடும் மார்க்கத்தை உட்பொருளாக வலியுறுத்துகிறது !
சிஷ்யனானவன், ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் கணத்திலேயே, எம்பெருமானின் கருணைக்கு
பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை ‘ மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்’ என்பது குறிக்கிறது.
‘நேய நிலைக் கதவம்’, தடங்கலின்றி வளரும் (பகவான் மேல் வைத்திருக்கும்) அன்பையும், பக்தியையும் குறிக்கிறது.
——————————————————–
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply