இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –
——————————————–
அவதாரிகை –
இவள் திறக்கப் புக–நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி —
அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்
அவளை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு–
என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்–
ந கச்சின் ந அபராதி -என்னுமவளும்
இருவரும் உண்டு என்கை-மிதுனமே தஞ்சம்-
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்கு தஞ்சமாய் இருப்பதொரு மிதுனம் உண்டு என்கிறது –
தனித் தனியே பற்றுமவர்கள் தங்கையும் தமையனும் பட்ட பாடு படுவார்கள்
தனியன் -பட்டர் -இத்தைக் கொண்டே–நீளா துங்க —பாரார்த்த்யம் –
சிற்றம் சிறு காலை பாசுரம் —இரண்டும் சாரமான பாசுரங்கள்
எம்பெருமான் கை கீழே கீழ் பாசுரம்–
இங்கே மேல் ஓங்கி அவன் மார்பு விசாலம் என்று–கிருபை மிக்கு என்பதை காட்ட-
சேர்ப்பதற்கு முன் அவள் மன்னாடும் –
சேர்த்த பின் இவள் மன்னாடும்–நாம் இப்படி பட்டவர்களை தஞ்சமாக
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கோயில் சீய்த்து–ஆள்கின்றான் ஆழியான்–
அம்பின் கூர்மையையும்-கூர் அம்பன் அல்லால் குறை -இல்லை துணை –
கூர்மையையும் புகரையும் நினைத்து பகவத் நிஷ்டர்
மை தடம் கண்ணினாய் -கண்ணின் கூர்மை புகர் -அவன் அம்பையும் ஏவுமே- நமக்கு தஞ்சம் –
குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்
குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்-
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே–
கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட் கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே–
பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டு–படுக்கையிலே கிடக்கப் பெறுவதே–
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க ஓர் நிலை விளக்கு உண்டாவதே –
ஞானம் பிரகாசிக்க
கிருஷ்ணனும் நாங்களும் விளக்கும் படுக்கையும் ஆக வேண்டாமா–
உன்னுடைய அனுபவத்துக்கு இது தான் பிரயோஜனம்
உண்ணாதார்க்கு உண்டார் -கொடுக்க வேண்டாவோ–
குத்து விளக்கு வேண்டிய இடத்தில் பேர்த்து-நிலை விளக்கு போலே இல்லை–
வேண்டிய இடம் வைத்து கைங்கர்யம் செய்ய நாங்கள் வேண்டாவோ
புறம்பே ஒரு கொடி விளக்கு
தோரண விளக்கு பிரகாசிக்காமல்–
உள்ளே குத்து விளக்கு பிரகாசிக்க
கோபிகள் துக்கம் நப்பின்னை மட்டும்–
குத்து விளக்கு நப்பின்னை–கொடி விளக்கு கோபிகள்-
ஆயர் பாடிக்கு அணி விளக்கு பிரகாசிக்கைக்கு இட்ட நிலா விளக்கு இவள் இறே
இவள் தன்னை காட்டுகையலே ஸ்வயம் பிரகாசகம்–பாரதந்த்ர்யம் கொண்டு அவன் தன்னை காட்டாமல்
ராமன் -ஜனகாத்மஜா அப்ரமேயம்–
திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும்
கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இறே —வீர பத்னி ஆகையாலே
இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே
உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –
சதுர்வித கர்த்ருத்வ மூலமான–அஹங்கார கார்யமான–
சேஷத்வே கர்த்ருத்வம்–ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வம்-கர்த்ருத்வே கர்த்ருத்வம்–போக்த்ருத்வே கர்த்ருத்வம்–
ஆகிற கால்களை உடைத்தாய்
அந்த கர்த்ருத்வ விஷயமான–தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற–பட்டங்களை உடைத்தாய்-
தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற-கட்டில் மேல் என்கிறது –
தபம் தூய்மை இரக்கம் உண்மை நான்கு கால்கள் -கலி யுகம் –
ஸ்ரீ மத் பாகவதம் கதை -கலி புருஷனுக்கு இடம் கொடுத்த பரிஷத்
தங்கத்தில் ஆசை -உள்ள இடமும் ஒன்றே –
மெத்தென்ற –
மெத்தை ஆகிலும்–கட்டில் -ஜாதி பேச்சு–கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே —கண் உறங்குவதே
பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
மெத்தென்ன பஞ்ச சயனம் -அழகு குளிர்ந்தி மென்மை பரிமளம் வெண்மை–மென்மை-விசேஷித்து
துளிர் மலர் பஞ்சு மெல்லிய கம்பளம் பட்டு -இவற்றால் என்றுமாம்–பஞ்சால் ஆன என்றுமாம்
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாய் இறே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் —பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –
சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே–மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற–படுக்கையின் மேலேறி –
பஞ்ச சயனம் -அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி
மேலேறி –
நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ–நீ படுக்கையிலே ஏறுவது என்கை –
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக–அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்
காலம் அலர்த்துமா போலே–அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை —வாசம் செய் பூம் குழலாள் இறே –
கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை —
கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் –
கொங்கை மேல் வைத்து கிடந்த -அவளை இழுத்து தன மேல் கொண்ட அவதாரிகை படி
பிரணயம் இருக்குமாறு —
மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே —
மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இறே —
மலர் மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே–அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ-என்னில் விரோதியாது–
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –
வர்க்கம் வர்க்கம் ஆகிற–விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய
பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற–அளகபாரத்தை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு–
அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
மலர் மார்பா –
மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது -இது ஸ்வரூபம் பற்றி –
அபிமத ஜன லாபத்தாலே அவிகாராயா இருப்பவனும் விகாரம்
யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தன பந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
அடைக்கலத்து ஓங்கும் –புடைகலர்ந்தானை –திருவிருத்தம் புடைக்க அலர்ந்தானை –அலந்தானை இல்லை –
கொங்கை மேல் வைத்துக் கிடந்த
திருவிடவெந்தை அனுபவம் -ஸூ சகம்-கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் –
திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –
வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே–ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே–உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு–ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது–மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –
நீ வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றவாறே –
அவன் வாய் திறக்கப் புக –
அவனை நீ க்ரமம் தப்பி நடப்பதே -என்று கண்ணாலே அதட்ட–
அவனை எழுப்புகைக்காக–மீளவும் அவளை எழுப்புகிறார்கள்
பிரிக்க ஒண்ணாது இறே -மிடற்று ஓசையே வாழ்விக்குமே
கூவுதல் வருதல் செய்யாதே -என்று ஆழ்வாரும் கூவுதலையே முதலில் அபேக்ஷிக்கிறார்
மிதுனத்தை பிரிக்கக் கூடாது என்று
பின்னர் வந்தாலும் மிதுனம் உடனே வருவான் என்று தேறி வருதல் என்றும் அருளிச் செய்கிறார் –
உன்னால் அல்லாது செல்லாது இருக்க எங்களுக்கு–வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என்
திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே–நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்–
கிடந்த இடத்தே கிடந்து- மாசுசா என்னவும் அரிதோ
உன் மார்பை நப்பின்னைக்கு தந்தாய் ஆகிலும் வாயையாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
நாங்களும் உன்னைப் போலே மைத் தடம் கண்ணிகளாக வேண்டாவோ
பொதுவாக உண்பதனை நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக —நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று–
கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்-
அஸி தேஷிணாம்–அக் கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-
மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ
நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்–எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —
அது இழவுக்கு உடலாவதே –
சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே–விஸ்ருங்கமான–ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –
மைத்தடம் கண்ணினாய் –
சித்தாஞ்சனம்-ஞான விகாசம்பெற்ற
நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ–அவனை விலக்கக் கடவையோ –
ஸ்வரூப யாதாம்ய தர்சியான நீ –
உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய–உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு–எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே–இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –
வாய் திறவாய் –மார்பனை -அவள் இடம் பிரிக்கும் ராவணன் இல்லையே இவர்கள் –
திரு சோதி வாய் திறந்து அங்கே இருந்து –
இவள் அணைப்பில் இருந்து வாய் திறந்தால் தானே நமக்கு அனுக்ரஹம் –
உனக்கு ஒரு வார்த்தை -எங்ககளுக்கு வாழ்வு –
கண்ணாலே இவள் தடுக்க -மைத்தடம் கண்ணினாய் -இதற்கவோ உன் திருக் கண்கள்
உன் மணாளன் -பிரித்து -பதிம் விஸ்வஸ்ய -மறந்தாய் -நம் மணாளன் அன்றோ –
கீழே தனியாக -இங்கு சேர்த்தியிலே புருஷகாரம்
எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ —அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத–உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விச்லேஷமும்–பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு–உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –
சம்ச்லேஷ அர்த்தமான விச்லேஷமும் நீ பொறுக்குகிறிலை-அது உன் குற்றமோ-உன் பல ஹானியின் குறை
அத்யல்ப காலமும்–நித்ராப்ரதமான படுக்கையின் நின்றும்–எழுந்திருக்க ஒட்டுகிறது இல்லை
ஒட்டுதல் -சம்மதித்தல்–ஏன் என்னில் –
சம்போக வ்யஸ்தமாக கட்டின கை நெகிழ்கிலும் உடம்பு வெளுப்புதீ
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய்–
புணர்ச்சிக்காக பிரியிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி
எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாத –
ஆச்சார்யனை பிரிந்து இருக்க மாட்டாத சிஷ்யன்
தத்வம் அன்று தகவு –
தத்வம் –
சத்யம்–
தகவன்று –
தர்மம் அன்று–
எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று —தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்
அதவா
தத்வமன்று–தத்வம் -ஸ்வரூபம் —உன் ஸ்வரூபத்துக்கும் போராது –
தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது–
உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது
கிருபைக்கும் போராது –
தத்துவமன்று தகவு –
ஆகிலும் புருஷகார பூதையான உனக்கு-எம்பெருமானை நம்மோடு சேர ஒட்டாமல்
பண்ணுகை ஸ்வரூபம் அன்று-
தத்துவம் அன்று தகவு
தத்துவம் –
நாங்கள் சொன்னது ஆற்றாமையால் கண்ணாம் சுழலை இட்டு சொன்னது அன்று
உண்மையே சொன்னோம் இத்தனை காண்
அன்று தகவு –
எங்கள் பக்கலிலும் நீ இங்கன் உபேஷை தோற்ற இருப்பது தருமம் அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவு –
உனக்கு நீர்மை உண்டு எனபது உண்மை அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவன்று –
தத்வமஸி வாக்யார்த்தம் பிறர் சொல்வது தகவு அன்று
தத்துவம் அன்றி தகவும் அன்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை-
தகவு உண்டு என்று சொன்னது உண்மை இல்லை
தத்தவம் உண்மை இல்லை கிருபை
கிருபை உண்டு சொன்னது உண்மை இல்லை
ந கச்சின் ந அபராதி அவன் -திருவடி பரிகரம் நலியும் பொழுது தான்
உன் பரிகரம் அவனால் நோவு படும் பொழுது சொல்ல வேண்டாமா —
பார்த்து இருக்கும்–ஷிபாமி என்றவன் உடன் உன்னோடு வாசி இல்லை
தத்துவம் –
இன்றியமையாமை -உயிர் நிலையாய் இருப்பவன்
தத்துவனை வரக் கூவி-தலை யல்லால் கை மாறு இல்லை -தலையை அறுத்து கொடுப்பது இல்லை
நாயகன் வந்தால் கூட வேண்டுமே பெற்றி -நம்பிள்ளை –
தலையை காலில் வைத்து வணங்கி காலம் எல்லாம் பணி செய்து கிடப்பேன் –
இட்ட கைங்கர்யங்களை உகந்து பணி செய்வேன் என்றபடி –
ஆசார்யர் அடிகளில் பணிந்து கால ஷேபம் கேட்டே அறிய வேண்டும் உணர்ந்தேன் என்றாராம்
தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும்-
குத்து விளக்கு -ஜங்கமம் இருக்கும்
குத்து விளக்கு எரிய –
நம்பி பக்கலில் அர்த்த விசேஷம் கேட்டு அறிய
கோட்டு -கோட்டி
கால் கட்டு -திருவடி தொட்டு சபதம் செய்து கொடுத்த பின் அர்த்த விசேஷம் அருளியது ஸூசகம்
மேல் ஏறி -சன்னதியின் மேல் ஏறி
ஆச்சார்யர் திவ்ய ஆஞ்ஞையைக் கடந்து–இத்தாலே மலர் மார்பா- ஹிருதய வைசால்யம்
தோரண விளக்கு திருக் கோஷ்டியூர் நம்பி
திருமாலை ஆண்டான் -கிடாம்பி ஆச்சான் 2/3 இடங்களில் தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி –
அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால்-எம்பெருமானார் நிர்வாகம்
குத்து விளக்கு எம்பெருமானார் -எங்கும் கொண்டு போகலாம்
கோட்டுக்கால் கட்டில் கால்–
நான்கு தேகம் -வர்ணம் -ஆஸ்ரமம் அதிகாரம் -பலம் -மோக்ஷம் -கதி -யுகம் -தர்மம் –
வ்யூஹம் -ரூபம் -கிரியாதிகள் ஆகிய –13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–
சாஸ்திரம்
மெத்தன்ன சயனம்
ஐஞ்சு லஷணங்கள் –
அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதற்க்கு உள்ளே உண்டு அர்த்த பஞ்சகம்
மேல் ஏறி
கட்டில் மேல்
மேல்
மறுபடியும் மேல் ஏறி
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
சிஷ்ய ஷ்ரேஷ்டருடைய ஞான பக்திகளிலே வியப்பு கொண்டு இரா நின்ற ஆச்சார்ய ஸார்வ ப்வ்மரே-
திரு சோதி வாய் திறந்து உபதேசங்கள் செய்து அருள வேணுமே –
மெத்தென்ற பஞ்ச சயனம்
பஞ்ச சயனம் –மென்மை குளிர்ச்சி நறுமணம் வெண்மை விரிவு -மென்மை இருக்கச் செய்தே
தனி விசேஷணம் பிரதானம் -அர்த்த பஞ்சக ஞானம் –
கோட்டுக்கால் கட்டில்
சாஸ்த்ரங்களே கட்டில் -சதுர்வித வர்ணம் -ஆஸ்ரமம் அதிகாரம் -பலம் -மோக்ஷம் -கத்தி -யுகம் -தர்மம் –
வ்யூஹம் -ரூபம் -கிரியாதிகள் ஆகிய –13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–
கோடு-யானைத் தந்தம்
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை ஆடி வந்த கண்ணன்
யானைத் தந்தங்கள் கொண்டே கட்டில் கால் அமைப்பான நப்பின்னைப் பிராட்டிக்கு
ஆச்சார்யர் பர சமயி மத வேழங்களை வென்று முடித்து அந்த விஜயம் தோன்ற
வீற்று இருக்கும் இருப்பு அன்றோ
சாஸ்திரம்-எதுக்கு என்றால்
குத்து விளக்கு எரிய
ஞான விகாசம் உண்டாக்கவே –
கர்த்தரி ஸ்ரயதே -லஷ்மி ஆச்ரயிக்கிறாள்
கர்மணி -லஷ்மியை அடைந்தேன் -ஸ்ரீ யாதே
ஸ்ருனோதி- ஸ்ராவயதி– கேட்டு கேட்பிப்பவள் –
ஒழிக்கிறாள் -பாபங்களை / சேர்த்து வைக்கிறாள் அவன் உடன்-இப்படி ஆறும்
பரியங்க வித்யா பிரகரணம் கௌஷீததி உபநிஷத்
மாடி -காட்டில்- மெத்தை -மேல் உறங்கி –
ஹிருதயம் -நாடி விசேஷம்- ப்ரஹ்மத்தின் இடம்- ஆத்மா
உரிமையுடன் மிதுனத்தை எழுப்பி தத்வம் அன்று தகவும் அன்று –
மா சதிர் பெற்று நம்முடைய வாழ்வு / பெற்று /சதிர் இது பெற்று / மா சதிர் இது பெற்று
வீர பத்தினிகள் படி அன்றோ பிரபன்னர் படி பாஹு ராமஸ்ய நிழலில் இருக்க பயமோ வெய்யிலோ தெரியாதே –
முறை உணர்ந்து நெருங்க நெருங்க -அபயம்/ இந்த முறை தான் கோட்டுக் கால் கட்டில் -/
முறை இடுவது முறைமையை உணர்த்துதலே-/நம்முடையவர் என்று உணர்வதே உஜ்ஜீவன ஹேது
ஒண்ணான வானமா மலை ஸ்வாமி -சின்னி அம்மாள் -கேள்வி –
நாடு எது -திரு வழுதி வள நாடு /ஊர் எது திருக் குருகூர் /வீடு -பண்டுவையாள் வீடு / குலம் அச் யுத்த குலம்/
வேதம் எது திராவிட வேதம் /கோத்ரம் -பராங்குச கோத்ரம் / சூத்ரம் ராமானுஜ சூத்ரம் / காரிகை -பர கால காரிகை /
குடி -அஞ்சு குடி / பந்து யார் -ஆத்ம பந்து / உறவு -பகவத் -ஒட்டு அறுத்தவர் உறவு -கொண்ட பெண்டிர் /
உற்றார் யார் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை உணர்ந்தவர் / தாய் ஸ்ரீ வர மங்கை தம்மப்பன் -தெய்வ நாயகன் /
புகுந்த இடம் வான மா மலை பார்த்தா நீரே /உத்யோகம் -பாகவத கைங்கர்யம் /மாமனார்-மா முனிகள் காந்த உபயந்தா -மூல புருஷர் /
பிரயோஜனம் இதுவே ஸ்வயம் -இத்தை அறிந்த ஞானமே பேறு-பாகவத சாத்மிக அபிமானம் / அதிகாரம் -சர்வ அதிகாரம் /
நிஷ்டை பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சரம உபாயம் -திருவடி ஸ்தானீயர் -/
பாகவத அபிமானம் -கேசவ பக்தியோ பாகவத சமாகமோ -இது இல்லை என்றால் அது ./
பிரார்த்தனை எது -கைங்கர்யமே -இப்படி -24-கேள்விகள் /
கட்டில் முறைமை அறிந்து -அர்த்த பஞ்சக ஞானம் -பஞ்ச சயனம் -பயம் இல்லாமல் இருக்கலாமே
/ இந்த நிஷ்டை அறிந்தோம் என்று அறிவிக்க மலர் மார்பன் ஆவான்
சீரிய சிங்காசனம் –
ஆசனம்
சிங்காசனம்
சீரிய மூன்று
மூன்றும் உண்டே
பேத அபேத கடக ஸ்ருதி
சீரார் வளை ஒலிப்ப மூன்றும்
செந்தாமரைக் கை மூன்றும் இத்தையே குறிக்கும் –
—————-
குத்து விளக்கெரிய – ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது.
இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல)ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம்.
குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது,
பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்),
விபவ (அவதார நிலைகள்), அர்ச்ச (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும்
அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.
இன்னொரு விதத்தில் “குத்து விளக்கெரிய” என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு,
அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!
“குத்து விளக்கு” (பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாம்.
தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.
கோட்டுக்கால் கட்டில் – கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி)
என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.
இன்னொரு விதத்தில், இவை “நான்” என்ற அகந்தையின் 4 நிலைகளை
(நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம்.
பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! “நான்” என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி – பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட)
குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை “மேலேறி” என்பது உணர்த்துகிறது!
கொத்தலர் பூ – பரமனையும், பிராட்டியையும் சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டத்தைக் குறிக்கிறது.
மலர் மார்பா – பரமனின் கருணை வடிவைக் குறிக்கிறது.
வாய் திறவாய் – திருவருளுக்காக தொழுது நிற்கிறோம், எங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்வாய்!
நம்மாழ்வாரின் திருவாய்மொழி வாக்கியத்தை “தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன் தாமரைக் கண்களால் நோக்காய்*” நினைவு கூர்க!
மைத்தடங்கண்ணினாய் – கிருஷ்ண பக்தியில் (மை) உருகி நிற்கும் உத்தம அடியவரைக் குறிக்கிறது.
நீ உன் மணாளனை – ஆச்சார்யனை (குருவை) குறிப்பில் சொல்வதாம்.
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் – எங்கள் அஞ்ஞான இருளை விலக்க வல்ல குருவின் உபதேசத்தை
அடியவர் நாங்கள் பெற தடையாக இருத்தல் கூடாது!
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று – பரமனை விட்டு பிரியாத நிலை வேண்டும் வேண்டும்
அடியவர் மனநிலையை குறிப்பில் உணர்த்துவதாம்! அதுவே பேரின்பம் (தத்துவம்). மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்கிக் கொள்வது தத்துவமன்று!!!
“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு” என்று விஷ்ணுசித்தர் பாடியதை நினைவு கூர்க 🙂
தகவேலோ – பரமனின் முழுமையான அருளின்றி, மேற்கூறியது (முக்தி) நடைபெறாது.
மேலும், இங்கு “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற கோதை நாச்சியார் வாக்கியம்,
“அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா” என்ற நம்மழ்வரின் பாசுர வரியை நினைவூட்டுகிறது தானே!
தத்துவம் = தத் + த்வம் = பரமன் + பிராட்டி எனும் போது, திருமாலும் திருமகளும் பிரிக்க முடியாதவர் என்பது விளங்குகிறது.
———————————————————
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply