Archive for March, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்
எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து
கொண்டாடுகிற படியை
அருளிச் செய்கிறார்

———————————————————————————————————————————————-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே

——————————————————————————————————————————————-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்-
உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து
தொழா நின்றார்கள் –

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே –
ஸ்ரீ வாமனனாய் திரு உலகு அளந்து அருளின செயலுக்கு தோற்று அடிமை புக்கவர்கள் என்று ஆயிற்று
அவர்கள் ஆதரிக்கிறது –
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திரு மொழி -3-4-2-
என்னுமவர் போல்வர் உண்டே –
அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று
அவர்கள் ஆதரிக்கிறது –

எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் –
இங்கே எழுந்து அருள வேண்டும் -என்று இரண்டு அருகும்
நின்று சொன்னார்கள்
முனிவர்கள் -என்றது -பேசலாகாது -என்று இருந்தமை தவிர்ந்தமைக்கு அறிகுறி –
மௌனத்துக்கு விஷயம் புறம்பே என்று இருந்தார்கள் –

வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே –
பரமபதம் செல்வார்க்கு வழி இது -என்று எதிரே வந்து சொன்னார்கள்
சுக்ல கிருஷ்ண கதீஹ்யதே ஜகத சாஸ்வதே மத
ஏகயா யாதி அநாவ்ருத்திம் அத்யயாவர்த்ததே புன -ஸ்ரீ கீதை -8-26-
உலகத்திற்கு பழைமையானவை -என்கிறபடியே
குறித்தவர் எல்லாரும் போகக் கூடியதாய் கிடக்கிற வழி
இன்று இது உண்டாகிறது அன்றோ
பாகவதர் விஷயத்திலே தொண்டு செய்து நாம் நிலை பெற வேண்டும் என்று
எதிரே தம் தாமுடைய நிலைகளைக் கடந்து வந்து ஆதரித்தார்கள் –
வைகுந்தர்க்கு
வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே
அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –
பூமி அன்று அலர்ந்தவர் தமர் முன்னே
தூப நல் மலர் மழை பொழிவனராய்க் கொண்டு
முனிவரான உலகர் தொழுதனர் –
வைகுந்தர்க்கு வழி இது என்று எதிரே வந்து
எழுமின் என்று இரு மருங்கும் இருந்தனர் -என்க

ஆதிவாஹிக லோகங்களில் உள்ளார்
புஷ்பங்கள் மழை போலே பொழிய
கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் தொழுதார்கள்
பூமி அன்று அளந்த வாமனன் அடியவர் முன்னால்
இதுவே அவர்கள் ஆதரிக்க
மன்னன் சரித்தைக்கே மாலாகிய அடியவர்
திரு உலகு அளந்த நினைவை -அனைவரும் உடைமை
சபிரயோஜனமாக்கி தோற்ற அடியவர்கள்
உணர்ந்தவர்கள்
சேஷ பாவம்
ஆதிவாஹிக ஜனங்கள் அதனால் ஆதரிக்கிறார்கள்
எழுமின் -இரு மருங்கில்
எழுந்து அருள வேணும் இரண்டு அறுகும்
நாரணன் தமர்
13 நாள் கார்யம்
நாலாயிர பூர்த்தி அன்று செய்வார்
கரும்பு குடம்
பூர்ண பொற் குடம்

தேசாந்தராகத ராஜா உத்தேசம் புகுந்தால்  போலே
பிறி கதிர் பட்டு போந்தவர்
இரு மருங்கும்
வைகுந்தம் போகும் வழி இது என்று காட்டி
எல்லைகளை கடந்து
முன்  தேசமே வந்து எதிர் கொண்டு அழைத்து என்னவுமாம்
எல்லை கடந்து கூட செல்வார்
எழுந்து அருளுதல் எழணும் எழ வேண்டும்

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

மேல் உள்ள உலகங்கள்
செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

————————————————————————————————————–

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே

—————————————————————————————————————————-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்
நிர்ஹெதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய
அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக
சமைந்தன –
முற்பட கண்டு உகந்தன
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே
ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே
ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —
என்றுமாம் –

நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்
ஒரு கால் ஆடினோம் என்று இராமல்
உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –

உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை  போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு

தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே
அங்கு உள்ளாரைச் சொன்னபடி யுமாம்
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ
ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்
தமையனாரோடு தேரிலே எரிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –

மேல் உள்ள லோகங்கள்
கீழ் உள்ள சொல்லி முடித்த பின்பு
தாமரைக் கண்டு உகந்து
நாரணன் நிருபாதிக  சேஷி உடைய தமர்
நல்ல நீரை உடைத்த மேகங்கள்
உகப்பாலே பூர்ண கும்பமாக சமைக்கப் பட்டன
முற்பட கண்டு தூரியம் முழக்கின
இப்பொழுது பூர்ண கும்பம்
தூரய கோஷம் செய்தோமே இருக்கிறது இல்லை
அதே மேகங்கள் பூர்ண கும்பம்
அனைவரும் பூர்ண  கும்பம்
நீர் அணி கடல்கள் நின்று
நெடு வரை தோரணம் நட்டு
மலை போன்ற தோரணங்கள்
உலகம் -அங்கு உள்ளாரை
உயர்ந்தோர் மாட்டு உலகு
சத்திர சாமர பானிஸ்து போலே
திரு வெண் கொற்றக்குடையும் சாமரமும்
ஸ்வயம் பாகத்தால் -வயிற்றை பெருக்கியதால் -ஒப்பூண் பண்ண மாட்டாமையாலே

ஹர்ஷத்தால் எல்லா அடிமைகளும் செய்தார்கள்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

சூழ் விசும்பு -பிரவேசம் –

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்
பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

—————————————————————————————————————————————————–

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –

————————————————————————————————————————————–

பரம பதத்தையும்
எங்கும் வர வேற்று
மதி  முக மடைந்தையர்
பிராட்டிமார் உடன் வீற்று இருந்த படியையும்
ஆனந்த நிர்பரராய் இருந்
ப்ரீதராய்
அத்தை அன்யாபதேசத்தால்
ஸ்ரீ வைஷ்ணவர் பெற்ற பேற்றை படர்க்கையில் அருளி
நாரணன் தமரைக் கண்டு உகந்து  –சூழ்  விசும்பு
அத்தனையும் அடியவர்களுக்கு ஏற்பட்டது
தாம் பெற்ற பேறு உஎன்ட்ரு நேராக சொல்லாமல்
தமக்கு பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஆழியான் தமர் நீங்கள் ஆள்மின்கள் வானகம் சொல்லி
அன்யாபதேசம்
பிரயோஜனம் -இங்கு உள்ளார் ஆழ்வார் பெற்ற பேறுநமக்கும் தப்பாது எண்டு தெரிந்து கொள்ள
உபக்ரமத்தில்
ஸ்தாவரங்கள் போல்வார்
தாளம் தப்பட்டு ஆனந்தம்
ஆனந்த கூத்து
சம்சார துக்கம் விட்டு போவதால்
தீர்த்தம்
உபநிஷத்
பரிவட்டம்
சேவா காலம்
பத்து நாளும் திருகண்ண அமுது நித்யம் உண்டே
பரமபதத அன்றே
ஜீவாத்மா பரமாத்மா விவாகம் கல்யாண சாப்பாடு
விதியை தாயாக பெற்றுஎம்பெருமானை அடைந்த ஜீவாத்மா போக உபகரமிதது கண்டு ஸ்தாவரங்கள்
விசும்பை சூழ்ந்த மேகம் தூர்யம் வாத்தியம் முழங்கி
விசும்பு சூழ் அணி முகில்  தூர்யம் முழக்கி
ஆழ கடல் திரை கை எடுத்து ஆடின
நாரணன் தமரைக் கண்டு உகந்து
பொழிலும் சப்த லோகங்களும் லோகத்தார் உலகு உயர்ந்தோர்
சப்த தீபங்களில் உள்ளார் வளம்
என் அப்பன் நாரணன் தமரைக் கண்டு உகந்து
மேகம் சமுத்ரம் சைதன்யம் உள்ளார் எல்லாரும் சந்தோஷத்தால் ஆரவாரித்து
அணி முகில் அணியான முகில்
தூரய கோஷம்
கந்தர்வர்
காந்தப்பர் -இனிமையாக இசை பாட கின்னரர்
கந்தர்வ கான ஜோதி பட்டம் இசைக்கு
ஒப்பித்து அலங்காரம் செய்து பறை அடித்து

அணி முகில் அதிதேவதை பர்ஜான்யன் வருணன் மேக அதிபதி கொட்டின யென்னவூமாம்
தூரியம் முழக்கின
ஆழ கடல் திரை கை எடுத்து ஆடின
காம்பீர்ய பங்கம் குலைந்து
ஆழமான எண்ணம் கடல் ஆழி –
சந்தோஷத்தால் திரையாகிய கையை எடுத்து கூத்தாடின
யெழ் பொழிலும் வளம் ஏந்தின
சப்த தீபங்களும் புதுக் கணித்தன
விசேஷம் அகம் முழுதுவதும் வெள்ளை அடித்து புதுக் கணிப்பது போலே
விசேஷம் உபகாரங்கள் தரித்தன -ஏந்தின
சன்யாசிகள் பரம பதித்த பின்பு
கைங்கர்யம் அன்வயிக்கும் பாக்கியம்
ஆழ்வார் திருநகரி திருப்பணி செய்யும் சமயம்
28 வானமா மலை சுவாமி சேவிக்க போக
மங்களானி பவ
உன்னை பார்த்து மங்களா சாசனம் செய்ய
உன்னிடம் பிரீதி உடன்
அஞ்சலி ஹச்தராய் எழுந்து அருளப் பண்ணி
திருமஞ்சனம்
தீர்த்தம் கோஷ்டிக்கு ஈர வாடை
தந்த பல்லக்கில்
கோயில் வாசலுக்கு பெருமாள்
மாலை பரிவட்டம் பிரசாதம்
அருளப்பாடு சொல்லி
திருவரசு 1 km  தூரம்
மணவாள மா முனி சமர்ப்பித்த கணை ஆழி
அடுத்த பட்டம்
திரி தண்டம் அவிழ்த்து
உபதண்டம் இந்த சுவாமி
மாலை பரிவட்டம் இந்த சுவாமிக்கு கொடுத்து அருளப்பாடு ஆகும்
அதே பல்லக்கில் இவர் எழுந்து அருளி ஜீவிய தசையில் எழுந்து அருளுவார்
சேற்று தாமரையில் இரங்கி அனுஷ்டானம்
அன்றே கோயிலுக்கு
தீட்டே இல்லை
அன்றே
திருமலை பெரிய ஜீயர்
எழுந்து அருள போகும் பொழுது தட்டு சமர்ப்பித்து பெருமாளுக்கு செய்வதுபோலே
சரம திருமேனிக்கு
ஆழ்வார் ஆச்சார்யர் திருமேனி போலே
சப்த தீபங்களும் உபகாரங்கள் தரித்தன
கோலம் போட்டு வீதியில் கோஷ்டி போகும்
எழு பொழிலும்  வளம் ஏந்தின
என் அப்பன்
சம்பந்தம் உண்டே
ராஜ புத்திரன் போகா நின்றால்-
எம்பெருமான் அடியவர் என்பதால் கொண்டாட்டம்
எம்பெருமானுக்கு பண்ணும் கௌரவம்
வாழ புகழ்   நாரணன்
புகழ் கல்யாண குணங்கள்
அவனை கண்டோ
அவன் தாமரைக் கண்டோ
பீதியாலோ
உகந்தே
சந்தோஷமாக செய்வார்கள்

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

நிகமத்தில்

இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்
இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –

————————————————————————————————————————————–
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே

————————————————————————————————————————————–

நில்லா அல்லல் –
துக்கங்கள் ஆனவை
இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –

நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல்
ஆயிற்றுச் சொல்லிற்று

நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
பெரியார் பலரும் தம்மை அனுபவித்து
இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்
இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி
ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –

சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே
இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –

இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப்பத்தினை கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே
வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

ஆள் வது சூழ் பொன் விசும்பே-
எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை
ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று
அங்கு உள்ளார் சொல்லுவது

நிகமத்தில்
அப்யசிக்க வல்லார்
இட்ட வழக்கு பரமபதம் ஆகும்
இல்லா அல்லல்
துக்கம் நமக்கு தேசம் இல்லை என்று தானே ஓடும்
நீள் வயல் சூழ்ந்த திருப்பேர்
நல்லார் விலஷனர் பலரும் தம்மை அனுபவித்து வாழும் திருக் குருகூர்
நல்லார்  நவிலும் குருகூர் நகரான் திரு விருத்தம்
சர்வதா அபிகத சப்தம்
எப்பொழுதும் நல்லார்களே நெருக்கப் பட்ட பெருமாள்
சொல்லார் -தமிழ் ஆயிரம்
இப்பத்தும் வல்லார்
செஞ்சொல் கவிகள் வாசிகமான
சூழ் விசும்பு ஆள்வார்கள் ஆள்மின்கள் என்று விட்டு விடுவார்கள் எப்பொழுதும்

—————————————————————————————————————————————

திருமால் தம்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன -இடர் உற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து

சாரம்
அன்று அருமாயம் அன்று வைத்து -அகல்வித்து
இன்று என் பால் செய்வான் என
இடர் உற்று நின்றான் திருமால்
துன்னு புகழ் மாறனை ஆழ்வாரை சூழ்ந்து

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே
விடை அளித்தால் அற்றவனாய்
உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்
அவன்தானே செய்தான் -என்னும் அன்று
அவனுக்கு உயர்வு தாழ்வு காண்டலும்
அருள் பெற்ற தன்மையும்
எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்
இத்தலையில் ருசியை விரும்பிச் செய்கையாலே
அவனுக்கு அவை உண்டாக மாட்டா
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்
அதுஉபாயம் ஆக மாட்டாது
பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே
அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை
உபாயம் வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்
இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்
சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

——————————————————————————————————————————————

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே

—————————————————————————————————————————————

உற்றேன் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல்
கிட்டிக் கொடு நின்றேன் –

உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –
ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு
திரு வாய் மொழி பாடி
உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்
உகந்து பணி செய்கை சாதனமாக
மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று
இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே

ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை
சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்
எந்தாய் –
இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –
இத்தலைக்கு அடிமையும்
தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்
இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன
ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

கற்றார் –
ஒரு ஆசனத்தின் கீழே இருந்து கற்றவர்கள்

மறை வாணர்கள் வாழ் –
வேதத்திற்கு வியபதேசம் செலுத்த வல்லவர்கள்
அனுபவித்து வசிக்கிற நகரம்

திருப் பேராற்கு –
ப்ரீதியின் மிகுதியாலே முகத்தை மாற்றி
தனக்குத் தானே சொல்லுகிறார் -என்னுதல்
அன்றிக்கே –
திருப் பேரரான உனக்கு -என்கிறார் -என்னுதல் –

அற்றார் அடியார் தமக்கு-
திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல்
அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் என்னுதல்
அல்லால் நில்லாவே –
ஒரு துக்கமும் இவர்கள் பக்கல் நில்லாது

கேட்ட கேள்விக்கு ஹேது காணாமையாலே
உமக்கு வேண்டியது என்ன
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே எனக்கு இன்னம் வேண்டுவது
வைஷண்யம் நைக்ர்ன்யம் சர்வ முக்தி பிரசங்கம் வாராமல்
இத்தலையில் ருசியை அபெஷித்து
அதுக்கு உண்டான சாமக்ரியையும் அவனே கொடுக்கிறான்
பசி தீர –
பண்ணி வைதத்தால் தீருமா
சாப்பிட்டதால்  தீருமா
இரண்டுமே உண்டே
ருசியை -எம்பெருமான் கொடுத்த ஸ்வா தந்த்ர்யத்தால்
ஆழ்வார் வளர்த்து
அவனுக்கு தட்டாது
ருசி உபயம் ஆக மாட்டாது
நிச்சயமாக பலன் கிடைப்பதே  உபாயம்
ருசி இருந்ததால் அனுக்ரகம்
ருசி இருந்தார் எல்லாரும் பெற்று போவது இல்லை
ருசி அதிகாரி விசேஷம்
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் ஸ்பஷ்டமாக நம்பிள்ளை காட்டி அருளி

உற்றேன் கிட்டினேன்
மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டினேன்
சம்சாரத்தில் உழன்று
உகந்து பனி செய்து
ப்ரீதி ப்ரேரிதமாய்
திருவாய்மொழி -வாசிக கைங்கர்யம் பணி செய்து
உன் திருவடிகளை பெற்றேன்
இரண்டும் ஏக காலத்தில் உகந்து பணி செய்து பாதம் பெற்றேன்
ஓன்று சாதனம் ஓன்று பலம் இல்லை
பாதம் பெற்றதும் திருவாய்மொழி பாடுவதும்
ஈதே யதமாத்மபாவி வேண்டுவது
ஆத்மா நித்யம்
இதுவும் நித்யம்
அப்ராப்தமாய்
புனராவர்த்தி இல்லாமல் மீட்சி இல்லா பேறு
ஈதே எனக்கு வேண்டுவது
எந்தாய்
ஸ்வரூப பிராப்தம்
கைங்கர்யம் அவனுக்கே வேண்டுவது
இத்தலைக்கு செஷத்வமும்
தேவரீருக்கு சேஷித்வம் ஸ்வரூபம்
இவர் அபேஷித்த படியே
எம்மா வீட்டிலும் இதுவே
உகந்து பணி செய்யும்படியான உனது பாதம் பெற்றேன் ஈதே வேண்டுவது
பூர்வர் திவ்ய பிரபந்த வார்த்தையே உபயோகித்து
ஆண்டாள் நலம் அந்தமில் நாடு புகுவீர் -பட்டர் இடம்
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே பட்டர் பதில் அருளினாராம்
ஓர் ஆசனத்தின் கீழ் இருந்து
ஆச்சார்யர் மூலம்
கற்றார் –
வேதாந்த வாக்கியம் அர்த்தம் அறிந்த
ஸ்ரீ ராமாயணம் திருமலை நம்பி இடம் கேட்டு அருளி
குருமுகம்
கால ஷேபம் கேட்டே அருளி
சொல்லப் போவதாக கேட்க்காமல்
சொல்லச் சொல்லி உத்சாகப் படுத்தி
1986 ஆரம்பித்து
சொல்லுவதில் ஒழுங்காக சோழ
மீண்டும் சதாபிஷேக சுவாமி இடம் ஒரு நாள் விடாமல் பூர்த்தியாக கேட்டு அருளி
சொல்ல ஆரம்பித்த பின்பும் கேட்க ஆசை
கற்றார்
ஆசனத்தில் கீழே இருந்து
அப்யசிதவர்கள்
ஆசார்யர் மூலம்
வேதத்துக்கு -வியாச பதம் செய்ய வல்லார் வாழும்
திரு பேரார்க்கு
முன்னே இருந்தாலும் முகம் மாற
திருப் பேரான உனக்கு
அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார்
அடியார் அடியார்
அல்லல் துக்கம் இருக்காதே

————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு
என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –
இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்
விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்
இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே
தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே
நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே
ஆறி இருந்தார் இத்தனை போக்கி -அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –

கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –

ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –

ராம கமல லோசனே –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –

கமல லோசனே —
அன்றிக்கே
யார் எதிராகத் தான்
இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்

பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்

————————————————————————————————————————————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

———————————————————————————————————————————————

இன்று என்னைப் பொருள் ஆக்கி –
அசேதனத்தைப் போலே இருந்த என்னை
ஒரு பொருளாம் படி செய்து
பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை

தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –

என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை
முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –

அன்று –
என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு
முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும்சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`-

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் –
பரதந்த்ரனான என்னை
புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக
புறம்போகப் பண்ணுகையாவது-பராமுகம் செய்தல் –
இழந்த நாள் இழந்ததும் அவனாலே –
பெற்ற இன்ற பெற்றதும் அவனாலே -என்று இருக்கிறார் –
ஸ்வதந்த்ரம் இல்லாத பொருள் செல்ல நிற்க வற்றோ –
வர நிற்க வற்றோ –

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இப்படி மதிப்பனானவன்
மலைகளை சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள
மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் –

ஓன்று எனக்கு அருள் செய்ய –
முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –
இன்று என்னை அங்கீ கரித்ததற்கு காரணம் சொல்லவுமாம் –

உணர்த்தல் உற்றேனே –
இதற்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்
என்று திரு உள்ளத்தில் படும் படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன்

உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பனி செய்து -என்று சமாதானம் அடைகிறார்
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்
அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே
பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –

இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று
நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி
வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்
படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ எண்ணில்
அது செய்யாது
அடியிலே வெறுப்பின்மையும்
இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி
அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –

கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து
விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது
என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா
யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9-
என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட
அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் எனபது எனக்கு
மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிறபாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ
இவர் தாம் எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன
அதுவே அமையும் -என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ
விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-

நிதானப் பாட்டு இந்த திருவாய் மொழிக்கு
இன்று பொருள் ஆக்கி
இது வரை கை விட்ட காரணம் என்ன
ஆழ்வார் கேட்க

ராவணன்
ஜடாயு போல்வார் சொல்லியும்
சீதை எங்கே தெரியாமல்
அவனை முடித்தாள் சீதை எங்கே வைத்து இருந்தானோ
எல்லா திக்குகளிலும் அனுப்பி
தெற்கு திக்குக்கு  உக்கியவர்களை அனுப்பி
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமா
உம்முடைய தாமரைக் கண்ணே தெரிவிக்குமே
நீர் இருக்கும் இடம் தெரிந்தும் வாரா இருப்பாரோ
ராம -எப்படிப் அட்டவர்
ந ஜீவேயம் ஷணம் அபி
அவரையும் அறியாதது இல்லை
உம்முடைய கண் அழகையும் நீர் அறியாதது இல்லை கமல லோசனே
தூதன் நான்
எங்கே அறியாமல் ஆறி இருக்கிறார் பெருமாள்

இன்று என்னை பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
ஆசாத் கல்பம் போன்ற என்னை வச்துவாக்கி
அசந்நேவ பவதி
ப்ரஹ்ம வேத
ப்ரஹ்ம வித் -ஞானம் வந்த பின்பு
தன்னை
மேம்பட்ட
என்னுள் வைத்தான் முற்றூட்டாக பரி பூரணமாக எனக்கே வைத்து விட்டான்
பிறருக்கு அனுபவிக்க அவகாசம் இல்லாத படி
அன்று
விசேஷ கடாஷம் பெறாத முன் நாள்களையும்

இன்று
மயர்வற மத நலம் அருளப் பெற்ற பின் நாள்கள்
பரதந்த்ரனாய் போந்த என்னை
புறம்பே போக வைத்தது எதனால்
இழந்ததும் அவனாலே
பெற்றதும் அவனாலே
என்று இருக்கிறார்
பரதந்திர வஸ்து
கெட்டு போனாலும் நீ தான் காரணம்
பெற்று வாழ்ந்தாலும் உன்னாலே
தொலைந்து போனது பழியை வஸ்து மேல் சொல்வோம்
நான் தொலைத்து விட்டேன் சோழ வில்லை
மாடி படி இடித்தது அசேதன வஸ்துவையும்
ஆழ்வார் சேதன வஸ்துவும் உன்னால் என்கிறார்
ஓன்று எனக்கு அருள் செய்ய
எதனால் கை விட்டான்
அல்லது எதனால் கைக் கொண்டான்
ஒன்றை சொல்லி அருள வேண்டும்
பொய் தோற்றம்
அவித்யை
சத்தா அசத்தா -உண்மையா பொய்யா
உண்மை என்றால் ப்ரஹ்மம் ஒரு தத்வம்
அத்வைதம் போகுமே
அசத்தியம் மித்யா பூதம் என்றால் போக்க வேண்டியது இல்லை
எப்படி சொன்னாலும் போகுமே
அது போலே ஆழ்வார் எம்பெருமானை கால் கட்டி
ஓன்று எனக்கு அருள் செய்ய
மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்
விண்ணப்பம் செய்து
உமக்கு உற்றேன்
இது நாம் சொல்ல வேணுமோ
நீரே அறியீரோ என்றான்
அடியேன் அறியேன்
சர்வஞ்ஞன் தேவரீர்
சம்மதித்து இருந்தீர்  புகுர
விலக்க வில்லை
யான் ஒட்டி வந்து –இருத்த
தான் ஒட்டி வந்து
அகலாமல் ஸ்தாவர பிரதிஷ்டியாக இருக்க -ஆழ்வார் பதில்
புகுந்த பின்பு ஆதரித்தீர் கழுத்தை பிடித்து தள்ளவில்லையே

மருவி தொழும்   மனமே தந்தாய் என்றார்
நம்பூர் வரதாச்சார்யர் நம்பிள்ளை
விஷாயாந்தரங்கள் விரும்பாது இருந்தீர்
என்னை தீ மனம் கெடுத்தாய் அதுவும் தேவரீர் செய்து அருளி
நான் தந்த மயர்வற மதி நலம் அருளியதை வளர்த்தீர்
காதல் கடல் புரைய வளர்த்த நின் காரமர் மேனி திவ்ய மங்கள விக்ரகம் தேவரீர்
முடிய பதில் சொல்லி
போக்கற்று
பெரிய கடலில் விழுந்தவன் போலே
ஈஸ்வரன் சொல்லிய உத்தரம் என்ன ஜீயர் பட்டரை கேட்க
இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டு சொல்ல முடியாமல்
கைக் கொள்ளாததுக்கு லஜ்ஜித்து
துக்கம் பட்டு இருக்கிறான்
என் சொல்வது காலாலே தரையைக் கீறி நின்றான்
வெட்கத்தால்
வேறு உத்தரம் உண்டோ
ருசி இவன் விளைவிக்க
சாதனா அனுஷ்டானம் இல்லை
எல்லாம் எம்பெருமான் கிருபை தானே
தானே அத்வேஷம் ஆபிமுக்கியம்
மயர்வற மதிநலம் அருளி
கடல் புரைய விளைவித்தான் என்றால்
எல்லாருக்கும் எதனால் செய்ய வில்லை
வைஷண்யம் வராதா நைர்க்ரிண்யம் வாராதா
நிர்ஹெதுக கிருபை எதனால் ஆழ்வார் உடன் இருக்க வேண்டும்
ஈஸ்வரனுக்கு சர்வ முக்தி பிரசங்கம் வாராதோ
அடியிலே அத்வேஷம் -இச்சைக்கு -பிறக்க கிருஷி பண்ணி
காரண களேபரங்கள் கொடுத்து -பிரவர்த்தி சக்தி அனுமதி பண்ணி
உதாசீனன் பிரவர்த்திக்கும் பொழுது
நல்ல கார்யம் கெட கார்யம் பலன்
அறிந்தோம்
ஆழ்வாரே இதுக்கு ஹேது இங்கனே ஆக வேண்டும்
தான் ஒட்டி வந்து
வந்த பொழுது தள்ள வில்லையே
காரணமாக சொன்னால் அது சாதனம் ஆகுமே
சைதன்ய கார்யம்
அசேதன வஸ்து கையில் கொண்டால் இசைவு வெளிப்படுத்த
ஸ்வரூபம்
உபாய பாவம் அவன் தலையிலே
எத்தை சொல்வது பேசாதே இருந்தான்

ஆழ்வார் கேட்கும் படியான நிலை
எடுத்து வைத்து வார்த்தை சொல்லும் படி அவன் ஆனான்
நாம் செய்வது எதுவும் சாதனம் இல்லை
கண்டாகர்ணன் தம்பி -ஆ\த்வேஷம் ஆபி முக்கியமும் இல்லை
கண்டாகர்ணன் தான் மட்டும் அபிமானத்து இருந்ததால் பெற்றான்
சைதன்ய பிரயிக்தமான ருசி ஆசை ஸ்வரூபம்விட வேறு பட்டது இல்லை
அனுபவம் எப்படி எதனால் கிடைத்தால் என்ன
எதுக்கு ஆராய்ச்சி
பிராப்தம் கிட்டித்தாகில் அதுவே அமையாதோ
தேங்காய் இள நீர் புக்க வழி ஆராய்வாரோ
தாகம் உள்ளவர் குடித்து அனுபவிக்காமல் இருப்பாரோ

பருகி அனுபவிக்க வேண்டாவோ
ஆராய வேண்டாமே என்றானாம்
அப்படியே உத்தங்க மகரிஷி கண்ணனை கால் கட்டி கேட்ட விருத்தாந்தம்
நிர்ஹெதுக கிருபை என்றுமே உண்டே
அதுவும் அவனது இன்னருளே
காரணம் ஆராய வேண்டிய அவசியம்  இல்லையே

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

எல்லை இல்லாத இனியனான
திருப் பேர் நகரான்
என் பக்கலிலே காதலை வைத்து
ஒரு நாளும் போகாதபடி
என் நெஞ்சிலே வந்து புகுந்தான் –
என்கிறார் –

———————————————————————————————————————–

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –

————————————————————————————————————————–

கண்ணுள் நின்று அகலான் –
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு
வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –

கருத்தின் கண் பெரியன் –
உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்
வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்
தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –
இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –
யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்
இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற போது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்
நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்
என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்

எண்ணில் நுண் பொருள் –
அவன் தானே இப்படி மேல் விழில்
விழும் அத்தனை போக்கி
தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு
அறியப் போகாது –

அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –
ஏழிசையின் சுவை தானே –
வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று
இது இனிமை இருந்தபடி –

வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இது மேன்மை இருந்தபடி –

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –
சக்யா சோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா
அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்
எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்
அதற்கு வேறு போக்கடி கண்டிலர்

திண்ணம்
நிச்சயம்
இதில் கண் அழிவு இல்லை -என்கிறார்

நிரதிசய போகய
போகாமல் நெஞ்சுக்குள் உள்ளான்
கண்ணுள் நின்று அகலான்
சதா தர்சனத்துக்கு
வேறு விபூதி உண்டே
எல்லாரும்
இத்தை விட்டு அங்கெ போகாமல்
கருத்தின் கண் பெரியன்
இவனை அவ்வருகில் கொண்டு போக பாரியா நின்றான்
ஜகத் ரஷனம் நித்யர் விஷயம் விட்டு இந்த கருத்தையே விஷயம்
ஆழ்வார் கார்யத்தில் த்வரித்த படி
இப்படிப் பட்டவன் என்று சொல்ல முடியாமல்
பிரமாதா -வேதாத்மா யஸ்ய அமுதம் தஸ்ய மதம்
யாராலும் அறிய முடியாத அவனை த்யானம் பொது
அத்தை சொல்ல வில்லை
என்னுடைய கருத்தில் பெரியவன் அளவிட முடியாதவன்
மனசில் புகுந்தான்
கருத்தால் அளவிட முடியாத
என்னில் நுண் பொருள்
தானே மேல் விழுந்து
தன்னால் அறிய புக்கால் என்னில் நுண் பொருள் அறிய முடியாதே
கருத்தின் கண் பெரியன்
வருந்தியும் மேல் விழும்படி இசை சுவை
மணி மாடங்கள் சூழ் மேன்மை இருந்தபடி
என் மனத்தில் புகுந்தான் எளிமை இருந்தபடி
அத்தை விட்டு
அனந்யார்கா ராகவே சூர்யன்பிரபை போலே பிரிய முடியாதவன்
செறிந்து நெருங்கி
ஆவி உள் கலந்தான்
சர்வாதிகன் இப்படியா அதிசங்கை
திண்ணம்
இது நிச்சிதம்
கண் அழிவு அற்ற பேறு பெறப் பெற்றேன்

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

அவனுடைய ஆதாரத்தால்
தமக்கு குறை இல்லாமையை
அருளிச் செய்கிறார் –

————————————————————————————————————————————————-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே

———————————————————————————————————————————————

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை –
இப்படி அனுபவித்துக் களிக்கப் பெற்ற
எனக்கு ஒரு குறை உண்டோ –
மயர்வற மதிநலம் அருளப் பெற்று
அவனுடைய குணங்களை அனுபவித்த எனக்கு மேலே வேண்டுவது ஓன்று உண்டோ -என்கிறார் –
ஞானத்தை அடைந்த பிறகு -அவ்வருகில் உள்ள பரம பதத்தை
பெற்றிலோம் என்று வருவது ஒரு குறை உண்டோ –
உம்பர் -என்றது -மேல் -என்றபடி –

மேலைத் தொண்டு உகளித்து –
மேலான அடிமை இன்பம் மிகுந்து
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி – பரம சம்ஹிதை –
பரம் பொருள் எந்த எந்த வழியில் செல்கிறானோ அவ்வவ் வழியிலே உயிரும் செல்கிறது –
என்கிற இன்பத்தை அனுபவித்து –
சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமை யாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –
ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –
தொண்டு உகளித்து –
தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று
மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு
அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –
முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்
பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –
மேலைத் தொண்டு –
அதாவது
ப்ரீதி வழிந்த சொல்லாலே திரு வாய் மொழி பாடி
அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் –
வண்டுகள் தேனைக் குடித்துக் களிக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருப் பேரிலே வசிக்கிறவன் -என்றது –
ஞானத்தாலே மேம்பட்டவர்களோடு
திர்யக்குகளோடு வாசி அறக் களிக்கும் தேசம் -என்றபடி –

கண்டு களிப்ப –
மெய் கொள்ள காண விரும்பும் என் கண்கள் -3-8-4-என்று
விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –

கண்ணுள் நின்று அகலானே –
நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்
நின்றும் அகலு கின்றிலன்
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்
தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு
மேல் ஒரு குறை உண்டோ –

அவனுடைய ஆதாரத்தால் தமக்கு உண்டான சிறப்பை அருளிச் செய்கிறார்
கார்த்தார்த்தம்
செய்து முடிக்க வேண்டியதை செய்தேனாக ஆனேன்
உண்டு களித்த பின்பு ஒரு குறை  உண்டோ
ஞான லாபம் பெற்ற பின்பு இனி மேல் என்ன குறை
உம்பர் மேல்
மேலை தொண்டு -மேலான தாஸ்யம் கிடைக்கப் பெற்றேன்
அனுபவித்து
நாய் பிழைப்பு தாஸ்யம்
பங்கா ஆட்டி விசிறி வீசுபவன்
தலை எழுத்தே
மகா பாவி எழுந்து போகசொல்லிக் கொண்டு போக கூடாதோ
வெறுப்புடன்
ஆசார்யன் விசிறி
ஆலவட்டம் கைங்கர்யம் கிடைத்ததே
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் மேலை தொண்டு
உகளித்து உகப்பு தலை மண்டை இட்டு
அந்தி சரம தசையில்
தொழும் சொல் நம சொல்லப் பெற்றோம்
அந்தி தொழும் சொல் -மற்றை நம் காமங்கள் மாற்று
புத்தி பூர்வகமாக திருவாய்மொழி  சொல்லப் பெற்றேன்
வண்டுகள் மது பானம் செய்து வர்த்திகின்ற
ஞானாதிகர் திர்யக்குகள் கழிக்கும் படி தேசம்
கண்ணுள் நின்று
காண ஆசைப் பட்ட கண்கள்
நின்று அகலான்
போகச் சொல்லில்லும் கண் வட்டத்தில் நின்று அகல மாட்டான்
விஷய பிரவனர் போகச் சொல்லியும் தூணைக் கட்டி நிற்பது போலே
இங்கு இரேன் மின் நாசமான பாசம்
எம்பெருமான் போகாமல் கண்ணுள் நின்று அகலான்
அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு குறை உண்டோ

————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 16, 2014

தனக்கு இருப்பிடமான கோயில்கள்
பல உளவாக இருக்க –
ஓர் இடம் இல்லாதாரைப் போலே
என் மனத்திலே ஒரு காரணமும் இல்லாமல்
வேண்டிக் கொண்டு வந்து புகுந்தான்
என்று பிரீதர் ஆகிறார்

————————————————————————————————————————————————–

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –

———————————————————————————————————————————————-

திருப் பேர் நகரான் –
திரு அயோத்தியை போலே ஆயிற்று –

திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்-
ஊரையையும் மலையையும் சொல்லி
பொருப்பே – ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்பிகின்றதையும் சொல்லி –
சித்ர கூடத்தில் வசிப்பது -அயோத்தியில் வாசிப்பதைக் காட்டிலும் மேலாக விரும்பிய பெருமாளைப்போலே
ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-
மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி
யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-
குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்
குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று
எல்லா வகையாலும் குறைவு அற்றவனுக்கு அன்றோ லீலா ரசத்தில் தொடர்பு உள்ளது –

இன்று வந்து –
இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க
வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –

இருப்பேன் என்று –
இருப்பேன் இருப்பேன் -என்னா நின்றான் ஆயிற்று
யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே
லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15
இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்
இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இருந்திடுவானுக்கு -என்று இராத என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான் –

விருப்பே பெற்று –
ஆணையைப் பின் பற்றாமையாலே உண்டான வெறுப்பு
கார்யமாக அன்றிக்கே –
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்
ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19
அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்
என்று இருப்பதும் ஒரு இருப்பு உண்டு அன்றோ –
அங்கன் அன்றிக்கே –
அவனுடைய விருப்பத்தை உடையவனாய் –

அமுதம் உண்டு களித்தேனே –
விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –

என்னுதல் –
அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்
என்னுதல்
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவனாய்
நரகத்துக்கு கிருஷி யைப் பண்ணி வைத்து களிக்குமது அன்றோ அது
அதாவது
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் -4-1-5-என்றபடி –
களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது
நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

இருப்பிடம் கோயில்கள் அநேகம் இருக்க
ஹிருதயம் வந்து
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே
இடம் இல்லாதவன் போலே புகுந்து
திருபேர் நகரான் -திரு அயோதியை போலே
திருமால் இரும்சோலை-காடு போலே தண்டகாரண்யம்
அதிக ஆசை பெருமாள் வைத்தார்
பொருப்பு உறைகின்ற பிரான்
திருச்சித்திர கூடம் போலே
துக்கம் தீர பெற்றார்  பெருமாள்
குறைவற்றவன் உத்யானத்தில் வர்திப்பது போலே
லீலா ரசம் அனுபவிக்க

அரண்மனை விட்டு தோட்டத்தில் சென்று அனுபவிப்பது போலே
உழைக்க வேண்டியது இல்லை -குறைவற்றவன் –
திருமால் இரும் சோலை வர்த்திக்க
இன்று வந்து
வெரி நினைவு ஓன்று இன்றிகே இருக்க பிகுந்ததை கண்டு கொண்டு
இங்கே தான் இருப்பேன் சொல்லிக் கொண்டு
ஜடாயு மகா ராஜர் சிறகுகின் கீழ் இருக்க ஆசை
தண்ட காரண்யம் இங்கேயே இருந்து -பெருமாள்
ஐயர் தோள் கீழே வர்த்திக்க ஆசை கொண்டோம்
நடுவில் ஆய்ச்சி பிரியம் இலாமையாலே போந்தோம்
இவர் சிறகுகின் கீழே வசிக்க ஆசைப் பட்டது போலே
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய
என் நெஞ்சு அனுமதி கூட கொடுக்காதே என் நெஞ்சு
விருப்பே பெற்று
ஆஞ்ஞை அனுவர்தனம் பண்ணும்படி
சாஸ்திரம் அனுவர்த்திகா விடில்  தாமச -ஆசூர -மம துரோகி -பக்தன் இல்லை –
அமுதம் உண்டு களித்தேன்
புலி துரத்த -பாம்பு -தேன் நக்கி அது போலே இல்லை
குண அனுபவம் அமுதம்

குழலார் இன்பக் கலவி அமுது உண்டால்
இன்பக் கலவி -நரக அனுபவம்
விவித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்
அப்படி இல்லாமல் கைங்கர்யம் அமுதம் உண்டு களித்தேன்
சர்வே புன்யச்ய பலம் -லோகத்தில் புண்ய பலம் சுகம் ஆசை பட்டு புண்ய கார்யம்
பாபம் பலம் அனுபவிக்க ஆசை இல்லாமல் பாபமே செய்து போவார்
அன்தைன்பக் கலவி இல்லை
நாவலிட்டு உழி தருகின்றோம் செருக்கால
யமாதிகள் தலையிலே அடி இட்டு கழிக்கப் பெற்றேன்

————————————————————————————————————————————————–

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 15, 2014

திருப் பேர் நகரான் பரம பதத்தை எனக்கு
தருவானாக
என்னோடு பூணித்து
தானே இரு வினைகளையும் போக்கினான் –
என்கிறார் –

————————————————————————————————————————-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே

—————————————————————————————————————————–

வானே தருவான் எனக்காய் –
எனக்கு வானே தருவானாய் –
இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –
இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்
இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்
இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு
நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –

என்னோடே ஒட்டி –
என்னோடே பூணித்து –
நான் விரும்பாது இருக்க –
அஸ்மின் முகூர்த்தே ந சிரான் சத்யம் பிரதி ஸ்ருனோமி வ
அராவணம் அராமம் வா ஜகத் த்ரஷ்யத வானர -யுத்தம் -21
என்கிறபடியே -என்னோடு சூளுறவு -என்றது –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்ற
என்னோடு உமக்கு -எம்மா வீடே -தரக் கடவோம் என்று ஒட்டி -என்றபடி –

ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –
ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து –
இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று
விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு
போகப் பார்த்த பின்பு
ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்

தசைகள் மிக்கு இருப்பதாய்
ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்
மேல் எழக் கலக்கை அன்றிக்கே
விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –

இன்று –
நேற்று ஒரு நினைவு இல்லை

தானே
கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –
இவர் பல காலம் தாகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்
இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே
இதனோடு தொற்று அல்லாத தானே
இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்
இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –
தானே
புகுகிற போது தானே யாய்
பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –

தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் –
தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாரும்படி
செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –
அவை யாவன
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –
தேன் மிக்க பொழிலை உடைத்தான
திருப் பேர் நகரை உடையவன் காண்
என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-
என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –

பரம பதம் தருவானாக
பிரதிஞ்ஞை பண்ணி
கலந்து என்னுடைய விரோதிகளை போக்கி அருளி
தானே செய்து அருளி
வானே தருவான் எனக்காய் இங்கே வைத்து கார்ய்சம் கொள்ளுவதை தவிர்த்தான்
வானே -ஏவகாரம்
ப்ரஹ்மாதிகள் குடி இருப்பு இவருக்கு தரம் இல்லை அத்தையும் தவிர்த்தான்
சம்சாரி நித்ய சூரிகள் இருப்பை
என்னுடன் கூடி
இசையாமல் இருக்க
சமயம் பண்ணி
ராவணன் இல்லாமலோ ராமன் இல்லாமலோ
கூட்டிப் போகா விடில் நானும் இல்லை
என்னுடன் சமயம்
எம்மா வீட்டு திறமும் செப்பம் என்னுடன்
கலந்து அந்த எம்மா வீடே தருவான்
என்னுடன் ஒட்டி ஊனே குரம்பை சரீரம் உடன் புகுந்து
ஒழிய கொடு போக
இனி ஆறி இருப்பேனோ

மாம்ச பிரசரமாய் தேகம்
இதன் உள் புக்கு
மேல் எழ கலக்கை அன்றிக்கே
விடயார் மடுவில் புகுமா போலே உள் புக்கான்
என் உடலே -பிரியானே
இன்று
தானே தடுமாற்ற வினைகள்
அகர்மவச்யன் தானே
ருசி பிறந்தவாறே
தேகம் விடாமல் இருக்க
முன்பு ஆழ்வார் இப்பொழுது அவன்
கரடி பிடி நான் விட்டாலும் அது விடாதே
நான் விட்டேன் இதனுள் புகுந்து
அவனை போலே
வியாமோகம் தோஷ தர்சனம் பார்க்க  பண்ணாதே
இவருக்கும் தோற்றாமல் இருந்தால் தேகம் உபேஷித்து இருக்க மாட்டார்
முன்னடி பின்னடி

மேல் திருவாய்மொழி வரப் போகிற
தான் மட்டும் புகுந்து
பிரித்து தடுமாற்ற வல்ல வினைகள் போக்கி
யாவை
பொங்கு ஐம்  புலன்கள் இத்யாதி தவிர்த்து
பொழில் உடைய திருப் பேர் நகர் உடையவன் கிடீர்
என்னுடைய சரீரத்தில் புகுந்து
ஷன காலமும் விட மாட்டாமல்
என்ன குறை உண்டாய் செய்கிறான் ஆச்சர்யப் படுகிறார்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-