இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு
என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –
இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்
விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்
இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே
தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே
நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே
ஆறி இருந்தார் இத்தனை போக்கி -அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே
யார் எதிராகத் தான்
இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்
————————————————————————————————————————————
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
———————————————————————————————————————————————
இன்று என்னைப் பொருள் ஆக்கி –
அசேதனத்தைப் போலே இருந்த என்னை
ஒரு பொருளாம் படி செய்து
பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை
தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –
என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை
முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –
அன்று –
என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு
முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும்சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`-
என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் –
பரதந்த்ரனான என்னை
புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக
புறம்போகப் பண்ணுகையாவது-பராமுகம் செய்தல் –
இழந்த நாள் இழந்ததும் அவனாலே –
பெற்ற இன்ற பெற்றதும் அவனாலே -என்று இருக்கிறார் –
ஸ்வதந்த்ரம் இல்லாத பொருள் செல்ல நிற்க வற்றோ –
வர நிற்க வற்றோ –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இப்படி மதிப்பனானவன்
மலைகளை சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள
மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய –
முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –
இன்று என்னை அங்கீ கரித்ததற்கு காரணம் சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே –
இதற்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்
என்று திரு உள்ளத்தில் படும் படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன்
உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பனி செய்து -என்று சமாதானம் அடைகிறார்
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்
அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே
பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –
இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று
நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி
வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்
படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ எண்ணில்
அது செய்யாது
அடியிலே வெறுப்பின்மையும்
இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி
அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –
கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து
விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது
என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா
யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9-
என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட
அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் எனபது எனக்கு
மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிறபாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ
இவர் தாம் எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன
அதுவே அமையும் -என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ
விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-
நிதானப் பாட்டு இந்த திருவாய் மொழிக்கு
இன்று பொருள் ஆக்கி
இது வரை கை விட்ட காரணம் என்ன
ஆழ்வார் கேட்க
ராவணன்
ஜடாயு போல்வார் சொல்லியும்
சீதை எங்கே தெரியாமல்
அவனை முடித்தாள் சீதை எங்கே வைத்து இருந்தானோ
எல்லா திக்குகளிலும் அனுப்பி
தெற்கு திக்குக்கு உக்கியவர்களை அனுப்பி
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமா
உம்முடைய தாமரைக் கண்ணே தெரிவிக்குமே
நீர் இருக்கும் இடம் தெரிந்தும் வாரா இருப்பாரோ
ராம -எப்படிப் அட்டவர்
ந ஜீவேயம் ஷணம் அபி
அவரையும் அறியாதது இல்லை
உம்முடைய கண் அழகையும் நீர் அறியாதது இல்லை கமல லோசனே
தூதன் நான்
எங்கே அறியாமல் ஆறி இருக்கிறார் பெருமாள்
இன்று என்னை பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
ஆசாத் கல்பம் போன்ற என்னை வச்துவாக்கி
அசந்நேவ பவதி
ப்ரஹ்ம வேத
ப்ரஹ்ம வித் -ஞானம் வந்த பின்பு
தன்னை
மேம்பட்ட
என்னுள் வைத்தான் முற்றூட்டாக பரி பூரணமாக எனக்கே வைத்து விட்டான்
பிறருக்கு அனுபவிக்க அவகாசம் இல்லாத படி
அன்று
விசேஷ கடாஷம் பெறாத முன் நாள்களையும்
இன்று
மயர்வற மத நலம் அருளப் பெற்ற பின் நாள்கள்
பரதந்த்ரனாய் போந்த என்னை
புறம்பே போக வைத்தது எதனால்
இழந்ததும் அவனாலே
பெற்றதும் அவனாலே
என்று இருக்கிறார்
பரதந்திர வஸ்து
கெட்டு போனாலும் நீ தான் காரணம்
பெற்று வாழ்ந்தாலும் உன்னாலே
தொலைந்து போனது பழியை வஸ்து மேல் சொல்வோம்
நான் தொலைத்து விட்டேன் சோழ வில்லை
மாடி படி இடித்தது அசேதன வஸ்துவையும்
ஆழ்வார் சேதன வஸ்துவும் உன்னால் என்கிறார்
ஓன்று எனக்கு அருள் செய்ய
எதனால் கை விட்டான்
அல்லது எதனால் கைக் கொண்டான்
ஒன்றை சொல்லி அருள வேண்டும்
பொய் தோற்றம்
அவித்யை
சத்தா அசத்தா -உண்மையா பொய்யா
உண்மை என்றால் ப்ரஹ்மம் ஒரு தத்வம்
அத்வைதம் போகுமே
அசத்தியம் மித்யா பூதம் என்றால் போக்க வேண்டியது இல்லை
எப்படி சொன்னாலும் போகுமே
அது போலே ஆழ்வார் எம்பெருமானை கால் கட்டி
ஓன்று எனக்கு அருள் செய்ய
மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்
விண்ணப்பம் செய்து
உமக்கு உற்றேன்
இது நாம் சொல்ல வேணுமோ
நீரே அறியீரோ என்றான்
அடியேன் அறியேன்
சர்வஞ்ஞன் தேவரீர்
சம்மதித்து இருந்தீர் புகுர
விலக்க வில்லை
யான் ஒட்டி வந்து –இருத்த
தான் ஒட்டி வந்து
அகலாமல் ஸ்தாவர பிரதிஷ்டியாக இருக்க -ஆழ்வார் பதில்
புகுந்த பின்பு ஆதரித்தீர் கழுத்தை பிடித்து தள்ளவில்லையே
மருவி தொழும் மனமே தந்தாய் என்றார்
நம்பூர் வரதாச்சார்யர் நம்பிள்ளை
விஷாயாந்தரங்கள் விரும்பாது இருந்தீர்
என்னை தீ மனம் கெடுத்தாய் அதுவும் தேவரீர் செய்து அருளி
நான் தந்த மயர்வற மதி நலம் அருளியதை வளர்த்தீர்
காதல் கடல் புரைய வளர்த்த நின் காரமர் மேனி திவ்ய மங்கள விக்ரகம் தேவரீர்
முடிய பதில் சொல்லி
போக்கற்று
பெரிய கடலில் விழுந்தவன் போலே
ஈஸ்வரன் சொல்லிய உத்தரம் என்ன ஜீயர் பட்டரை கேட்க
இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டு சொல்ல முடியாமல்
கைக் கொள்ளாததுக்கு லஜ்ஜித்து
துக்கம் பட்டு இருக்கிறான்
என் சொல்வது காலாலே தரையைக் கீறி நின்றான்
வெட்கத்தால்
வேறு உத்தரம் உண்டோ
ருசி இவன் விளைவிக்க
சாதனா அனுஷ்டானம் இல்லை
எல்லாம் எம்பெருமான் கிருபை தானே
தானே அத்வேஷம் ஆபிமுக்கியம்
மயர்வற மதிநலம் அருளி
கடல் புரைய விளைவித்தான் என்றால்
எல்லாருக்கும் எதனால் செய்ய வில்லை
வைஷண்யம் வராதா நைர்க்ரிண்யம் வாராதா
நிர்ஹெதுக கிருபை எதனால் ஆழ்வார் உடன் இருக்க வேண்டும்
ஈஸ்வரனுக்கு சர்வ முக்தி பிரசங்கம் வாராதோ
அடியிலே அத்வேஷம் -இச்சைக்கு -பிறக்க கிருஷி பண்ணி
காரண களேபரங்கள் கொடுத்து -பிரவர்த்தி சக்தி அனுமதி பண்ணி
உதாசீனன் பிரவர்த்திக்கும் பொழுது
நல்ல கார்யம் கெட கார்யம் பலன்
அறிந்தோம்
ஆழ்வாரே இதுக்கு ஹேது இங்கனே ஆக வேண்டும்
தான் ஒட்டி வந்து
வந்த பொழுது தள்ள வில்லையே
காரணமாக சொன்னால் அது சாதனம் ஆகுமே
சைதன்ய கார்யம்
அசேதன வஸ்து கையில் கொண்டால் இசைவு வெளிப்படுத்த
ஸ்வரூபம்
உபாய பாவம் அவன் தலையிலே
எத்தை சொல்வது பேசாதே இருந்தான்
ஆழ்வார் கேட்கும் படியான நிலை
எடுத்து வைத்து வார்த்தை சொல்லும் படி அவன் ஆனான்
நாம் செய்வது எதுவும் சாதனம் இல்லை
கண்டாகர்ணன் தம்பி -ஆ\த்வேஷம் ஆபி முக்கியமும் இல்லை
கண்டாகர்ணன் தான் மட்டும் அபிமானத்து இருந்ததால் பெற்றான்
சைதன்ய பிரயிக்தமான ருசி ஆசை ஸ்வரூபம்விட வேறு பட்டது இல்லை
அனுபவம் எப்படி எதனால் கிடைத்தால் என்ன
எதுக்கு ஆராய்ச்சி
பிராப்தம் கிட்டித்தாகில் அதுவே அமையாதோ
தேங்காய் இள நீர் புக்க வழி ஆராய்வாரோ
தாகம் உள்ளவர் குடித்து அனுபவிக்காமல் இருப்பாரோ
பருகி அனுபவிக்க வேண்டாவோ
ஆராய வேண்டாமே என்றானாம்
அப்படியே உத்தங்க மகரிஷி கண்ணனை கால் கட்டி கேட்ட விருத்தாந்தம்
நிர்ஹெதுக கிருபை என்றுமே உண்டே
அதுவும் அவனது இன்னருளே
காரணம் ஆராய வேண்டிய அவசியம் இல்லையே
———————————————————————————————————————————————————
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-