Archive for July, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.

பொ-ரை :- தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன்திருவடிகளின் நிழலிலேவைத்துக் காப்பாற்றியும், பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக்காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.

வி-கு :- சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க. கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.

   ஈடு :- எட்டாம்பாட்டு. 1எனக்குப் புகலான மாத்திரமன்றிக்கே, மற்றும் எல்லாமும் திருவிண்ணகர் சேர்ந்தபிரானே என்கிறார்.

சுரர்க்கு வன்சரண் ஆய் – தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் – அசுரத்தன்மை வாய்ந்தவர்களுக்கு 2‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் – தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும். சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும். தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் – 3“புண்ணிய சரித்திரங்களையுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ” “தஷிணாதிக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”-  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பலதீர்த்தம்
அத்திக்கினும் எத்திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.

என்கிறபடியே, தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன். என் சரண் – எனக்குப் புகலிடம். என் கண்ணன் – எனக்குப் பவ்யனானவன். என்னை ஆளுடை என் அப்பன் – என்னை அடிமைகொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன். 4‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.

புகல் மட்டும் இல்லை அனைத்தும் இவனே
தேவர்களை நோக்கும் -தன்னை அம்புக்கு இலக்காக்கிக் கொண்டு
அசுரர் இடம் யுத்தம் செய்து
இவனை அனுப்பி
பரிவு இன்றி செய்பவர்
அசுரர்க்கு வெம் கூற்றம் இவன்
அந்தகன் -எமன் -தண்ணீர் போலே -அப்படி கொடியவன் அசுரர்களுக்கு இவன்
வெவ்விய கூற்றம் –
சாஸ்திரம் கட்டுப் படாமல் இருப்பாரை ஹிம்சிக்கை இவன் கடமை
பீஷாத்மா வாயு பவதி ஆஞ்ஞை உண்டே
இருவருக்கும் பொதுவாக இருந்தாலும் தேவர்கள் செய்ய வேண்டிய -கார்யம் செய்ய முடியாமல்
அகிர்த்ய கரணம் கிருத்திய அகர்ணம் இரண்டும் செய்பவர்
பிரார்த்திக்கிறோம் நாம் இரண்டையும் செய்தும் சர்வ ஷமஸ்வ
நிழல் கீழ் அனுகூலரை இட்டுக் கொண்டு
துர் யோதானாதிகளை போக விட்டும்
விராட பர்வதம் -யுதிஷ்ட்ரன் துரி யோதனன் ராஜ்ஜியம் பறிக்க சூதாட போனேன்
நானும்
ரண யுத்தம் பின் வாங்கி கேவலம் போலே சூதாட போகாமலிருப்பது
வனவாசம் தண்டனை இதற்கு
தென் சரண் திசைக்கு
புகலிடம் திரு விண்ணகரம்
அகஸ்த்யர் -ருத்ரன் பார்வதி கல்யாணம் –
பெருமை இத்தால் திசைக்கு
என் சரண் -ஏன் கண்ணன் பவ்யன்
என்னை ஆளுடை அப்பன் உபகாரகன் சேர்த்து கொண்டவன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.

பொ-ரை :- பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியையுடையவனாயும், உலகத்தையே உருவமாகவுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும், இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திருவிண்ணகரம் என்னும்திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பையுடைத்தான திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்றுஇல்லை.

வி-கு :-
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.

ஈடு :- ஏழாம்பாட்டு. 1எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.

பரஞ்சுடர்உடம்பாய்-2“திருமேனி ஒளிகளின்கூட்டம்” -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”-இது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 67.

என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்வியவிக்கிரகத்தையுடையனாய். அழுக்குப் பதித்த உடம்பாய் – முக்குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாகவுடையனாய். கரந்தும் – இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச்செய்தே 3“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான்இல்லை” -“யம் ஆத்மா ந வேத”-என்பது, பிருஹதாரண்யக உப.-என்கிறபடியே, இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும். தோன்றியும் – 4காண வாராய் -திருவாய். 8. 5 : 2.-என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும். நின்றும் – நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். 5அவ்விடங்களிலே, கைதவங்கள் செய்தும் – வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும். அதாவது, அவதரித்து நிற்கச்செய்தே தன்படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும், தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி. விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்-6‘பிரமன்முதலாயினோர்’ தலைபடைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே நிற்கிற உபகாரகன். வரம் கொள் பாதம் அல்லால் – 1எத்தனையேனும் தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது. யாவர்க்கும் வன்சரண் இல்லை – எத்தனையேனும் 2கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை. 3அவனை ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர். இவனைக்கொண்டு கரை ஏறுதற்குத் தக்க வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை. 4அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.

எத்தனை ஞான சக்தி உள்ளாருக்கும்
எம்பெருமானே புகல்
பரம் சுடருடம்பு தேஜசாம் ராசி மூர்த்தம் சுத்த சத்வம்
இந்த சகமும் சரீரமாக கொண்டு -அழுக்கு படிந்த உடம்பு -அந்தர்யாமித்வம்
கரந்தும் -உள்ளே இருப்பது தெரியாத படி சத்தையை நோக்கிக் கொண்டு –
கரந்த பாலில் நெய்யே போல்
பாலுள் நெய்யினை திருமங்கை ஆழ்வார்
தோன்றியும் காண வாராய் கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பாருக்கு ராம கிருஷ்ண அவதாரம்
பரம் சுடர்-பரத்வம் திரு விண்ணகர் அர்ச்சை
நின்றும் -தோன்றியும் அப்புறம் –
இரட்டையாக சொல்லி
நூறாண்டு -11000ஆண்டு
கைதவங்கள் செய்தும்
ஆஸ்ரிதருக்கு காட்டியும் –
சிசுபாலாதிகளுக்கு தோன்றாத படியும்
இதுவே ஒரு கிரித்ரிமம்
விண்ணோர் தலை படைத்த பிரயோஜனம் வணங்கும் படி இங்கே வந்து வணங்கி
ஸ்ரேஷ்டமான திருவடிகள்
வர வர முனி –
வர -மணவாள பிள்ளை ஒரு அர்த்தம்
வர-ஸ்ரேஷ்ட
மணவாள மா முனி வர வர முனி
வரம் கொள் பாதம் ஸ்ரேஷ்டமான உறுதியான பாதம்
எத்தனையேயனும் கிளார் -பெரியாருக்கும்
இதுவே சரண்
இவனைக் கொண்டு கரை ஏற்ற
வேற புகல் இல்லை -இவனை ஒழிய
இவனைக் கொண்டு முழுகாமல்
அடியே பிடித்து ஜீவிக்கும் இத்தனை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.

பொ-ரை :- மூன்று உலகங்களையுடையனாயும் அல்லாத பரமபதத்தையுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப்பூவில் வசிக்கின்ற திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்தியவாசம் செய்கின்ற மேலான ஒளியுருவன் ஆவான்.

வி-கு :- ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை – தமக்கை; மூதேவி.

    ஈடு :- ஆறாம்பாட்டு. 1‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன்குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி கலந்து அதனாலே பேரொளிப் பிழம்பாயிருக்கிறவன் திருவிண்ணகரிலே நின்றருளின சர்வேசுவரன் கண்டீர் என்கிறார்.

மூன்று உலகங்களுமாய் – மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய். அன்றிக்கே, 2கிருதகம் அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல். அல்லனாய் – 3அல்லாதமேலேயுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய். அன்றிக்கே, இந்த உலகங்களைச் சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே, இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன் என்னுதல். உகப்பாய் முனிவாய் – மகிழ்ச்சியும் முனிவுமாய். பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய் – திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய். தவ்வை – திருமகள் அல்லாதவள். புகழாய்ப் பழியாய் – திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ், தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி. தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – 4இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால் கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத் திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது; அப்படிஇருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்கமாட்டாத நித்திய சூரிகள், திரிவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள். அப்படிப்பட்ட திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன். பாவியேன்-“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார். 1நித்தியசூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து மேல் விழாநிற்கக்கண்டீர்நான் ‘அல்லேன்’ என்றது. மனத்தே உறைகின்ற-இப்போது, நித்தியசூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்தியவாசம் செய்யாநின்றான். பரஞ்சுடரே – தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கையன்றிக்கே ‘தன்பேறு’ என்று தோற்றும்படி பேர்ஒளியன்ஆனான். 2என்றது, “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர, இவரைப் பெற்ற பின்பு அதனாலே “நின்றிலங்கு முடியினாய்!” –திருவாய். 6. 2 : 8.-என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

அல்லேன் என்று நிற்க
செய்தேயும் குண செஷ்டிதங்கள் காட்டி
கலந்தவன் இங்கே எழுந்து அருளி இருக்கிறான்
மூ உலகும் கிருதகம் -அக்ருதகம் -கிருத அகிருதகம்
அசாதாரானமான நித்ய -விபூதியையும் உடையவன் அல்லனாய்
உகப்பாய் அனுக்ரகம் முனிவு நிக்ரகம்
ஸ்ரீ தேவியும் மூத்தவளும் -சேட்டை ஜேஷ்டா அஸ்ரீ யும்
புகழும் பழியும் -ஸ்ரீ தேவி கடாஷத்தால் வரும் புகழ் –
சேஷ்டை மூலம் வரும் பழியும்
தேவரும் மேவித் தொழும்
ஹவுஸ் வாங்க முகம் திரும்பி வாங்கி போவார்கள்
மூன்று யோஜனை அவ்வருகே நின்று வாங்கி
வெறுப்பு அப்படி
நித்யர்களுக்கு இவர்கள் கந்தமும் பொறுக்க மாட்டாத
அவர்களும் மேவித் தொழும் திரு விண்ணகர்
-பாவியேன் -நிதயரை தள்ளி என் மேல் விழுந்தவனை அல்லேன் என்று அகன்ற பாவி
மனத்தே உறைகின்ற -நித்தியரும் ஸ்ரீ வைகுண்டமும் இருக்க
கல்லும் கனை கடலும் புல் என்று ஒழிய
என் பால் இட வகை கொண்டனையே
பரம் சுடர் இப்படி வந்தது தனது பேறாக கொண்டு தேஜஸ் மிக்கு இருந்து
அலாப்ய லாபம் பெற்றது போலே உஜ்வலமாய் இருக்கிறான்
வராத ராஜ பஞ்சச்தம் -தேசிகன் களேபரம் சூஷ்மம் வந்து ஆதாரம் காட்டி இருக்கிறாய்
இழக்கிறோமோ -மின்னிடை மடவார் -கவலை பட்ட பின்பு வெளுத்து
அப்படி இருந்தவன் தேஜஸ் பெற்று
மின்  இலங்கு முடியினாய் தரிக்கும் படி
பாவியேன் மனத்தே உறைகின்ற பரம் சுடர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 21, 2013

  கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

பொ-ரை :- வஞ்சனையும் நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும் பழமையுமாகி, செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்; பெரிய தெய்வங்களையுடைய இந்த மூன்று உலகங்களும்.

வி-கு :- பெருந்தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா – சோலை.

ஈடு :- ஐந்தாம்பாட்டு. 2சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார்.

கைதவம் செம்மை – வஞ்சனை நேர்மைகள். கருமை வெளுமை – கருப்பு வெளுப்பு. மெய் பொய் – உண்மை இன்மை. இளமை முதுமை – இளமை கிழத்தனம். புதுமை பழமை – புதுமையும் பழமையும். செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற்போலே இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது. பெய்த காவு கண்டீர் – வைத்து ஆக்கினசோலைகண்டீர். பெரும்தேவுடைமூஉலகே – ஈசுவர அபிமானிகளான
தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும். 1இத்தால், என் சொல்லியவாறோ? எனின், சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ; நின்ற இடத்தே நின்று வாடிக் காட்டுகையும், பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்யவேண்டுகையும் முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ. அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம் அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.

அத்யதனம் புதுமை
காலம் செல்ல செய்தேலும் இப்பொழுதே செய்த திண்ணிய மதிள் போலே
சோலைகள் மூன்று லோகங்களும் அவன் செய்வது போலே
தனக்கு வேண்டியவற்றை இவையும் அறிவிக்க மாட்டாதே
நின்ற இடத்தே நின்று வாடி காட்டுகையும்
வைத்தவனே ரஷிக்க வேண்டும்படி
கதறினால் -அபேஷித்தால் வந்து காப்பான் ஈஸ்வரன்
ஈசன் ஈசிதவ்யர் பெயர்கள் உள்ளாரையும் சர்வேஸ்வரன் ரஷிப்பான்
பொறுத்தோம் என்றதையும் அவனே ஏற்படுத்தி கொண்டு
கூடலுக்கு ஊடல் வேண்டுமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 20, 2013

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசியது கூர
அரவமாவிக்கு மகம் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமனாதி யெம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-8-

அரவம் -மலைப்பாம்பு -அவதூத சந்நியாசி -கிடந்த இடத்திலே கிடக்கும்
ஆவிக்கும் -கொட்டாவி இடும்
அகம் பொழில் -உள் சோலை
பனி முகில் வண்ணன் -குளிர்ந்த அழகான தன்மை ஸ்வபாவம் நிறம் என்றுமாம் –

இரவு-இத்யாதி
சோலைச் செறிவாலே பகல் போது காண ஒண்ணாமையாலே ராத்ரியே விஞ்சி இருக்கும் –
பகல் விரவாத -கூடாத -ராத்ரியாய் இருக்கும் –
ஹேது மாறாமையாலே காரியமும் மாறாது இறே –
ஆதித்ய கிரணங்கள் புகுந்து பரம்பாது பகலாயே  இருக்கிற அதுவும் –
(பகலாகவே இருந்தாலும் ஆதித்ய கிரணங்கள் பரவ முடியாமல் சோலை செறிவு )

இருள் பெருகிய வரை முழை –
இருளாய் இருக்கிற மலை முழைஞ்சுகளிலே –
வயிரம் பற்றின இருளாய் இருக்கை –
நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணினாரைப் போலே –
அடிப்பட்டு இருக்குமாயிற்று இருளும் –
ஆக
ராத்ரியே அத்தால் இருள் மிக்கு இருந்துள்ள மலை முழைஞ்சுகளிலே

இரும் பசியது கூர –
வெளி கண்டு புறப்பட்டு வ்யாபரிக்கப் பெறாமையாலே பெரிய பசியானது மிக

நித்ய ஸூரிகள் அன்ன பாநாதிகள் ஒழிய தரிக்கும் அதுவே உத்தேச்யமாய்
அவர்கள் தாங்களுக்கும் உத்தேச்யராய் இருக்குமா போலே
அந்த சர்ப்பங்களினுடைய பசியும் –
திர்யக் ஜாதிக்கும் அவ்வருகாய் இருக்கிற சர்பங்கள் தானும் உத்தேச்யமாய்
இருக்கிற தாயிற்று இவருக்கு –
ஏதேனுமாக அந் நிலத்தில் உள்ளதாம் இத்தனையே வேண்டுவது இவர்க்கு ஆதரிக்க –

அரவம் ஆவிக்கும்
ஆவிக்கையாவது -பசியாலே கொட்டாவி கொள்ளுகையாகவுமாம் –
அன்றிக்கே
ப்ராணிக்கையாய் -மூச்சு விடுகையாய் -அதாவது
சோலையின் பரிமளத்தோடு கூடின காற்றை யாஸ்வசித்து தரியா நிற்கும் –
வாயுவை இறே அவை பஷிப்பது –

முக்தர் சத்யகாமாதிகளை உடையராய் இருக்குமா போலே
அங்குத்தை சர்ப்பங்கள் சஞ்சார யோக்யதை இல்லாமையாலே
கிடந்த இடத்தே கிடந்தும் –
அத்தை-மணத்தை- ஆக்ராணம் பண்ணித் தரியா நிற்கும் –

அகன் பொழில் உண்டு
அக வாயில் பொழில்– உட் சோலை
அது அணைந்து இருந்துள்ள அருவரை இமயத்து-

பரமன் இத்யாதி –
சர்வ சமாஸ்ரயணீயன் வந்து வர்த்திக்கிற தேசம் ஆகையாலே நமக்கு
ஆஸ்ரயணீய ஸ்தலமான பின்பு -நெஞ்சே –
அங்கே சென்று கிட்டப் பாராய் என்கிறார் –

சர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான
தேசம் ஆயிற்று
(ஒரு தலை இருந்தால் சர்ப்பம் -வாசுகி ஒரு தலை
பல தலைகள் இருந்தால் நாகம் -ஆதி சேஷன் போலே )

பரமன் இத்யாதி –
ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள் உடைய பாசுரம் இருக்கிறபடி
சர்வாதிகனாய் -தனக்கு அவ்வருகு ஒருவரும் இல்லாதபடி இருக்கிற -சர்வேஸ்வரன் –
சர்வாதிகன் ஆகிலும் பெற்ற தாயால் விட ஒண்ணாதாப் போலே விட ஒண்ணாத படியான ப்ராப்தியை உடையவன்-ஆதி-
விஷயங்களை விரும்புவது ஒரு ப்ராப்தி கொண்டு அன்று இறே
கீழ் சொன்னவை இரண்டும் இல்லை யானாலும் விட ஒண்ணாத படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் -முகில் வண்ணன் –

என்று எண்ணி இத்யாதி –
இப்படி சொல்லா நின்று தேவர்கள் தங்களுக்கு கண் காட்டியான ப்ரஹ்மாவோடே
சென்று ஆஸ்ரயிக்கும் படி -மஹா ப்ரபாவமான

பிரிதி சென்று அடை நெஞ்சே –
சிறியார் பெரியார் என்ற வாசி அன்றிக்கே எல்லாருக்கும் உத்தேச்யமான தேசம் –
சிறியாருக்கு வாசி உண்டு
சர்ப்பங்கள் கிடந்த இடத்தே கிடந்தது அபிமதம் பெற்று புஜியா நிற்கும் –
ப்ரஹ்மாதிகள்
தங்கள் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயித்து தட்டித் திரிவர்கள் –
புறம்படைய சோலைச் செறிவாலே வந்த விருட்சி மிக்கு இருக்குமா போலே
உள்ளடைய ஆஸ்ரயிக்கிற தேவர்கள் உடைய நெருக்கும் மிக்கு இருக்கும் –
ஆனபின்பு நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –

இத்தால் அங்கு உண்டான சர்ப்பங்கள் அச் சோலையில் பரிமளத்தை காற்று வழியாலே
பருகி தரியா நிற்கும் –
ப்ரஹ்மாதிகள் -சர்வ கந்த -என்கிற வஸ்துவை அனுபவித்து தரிப்பர்கள்-

————————————————————————- .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 20, 2013

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் 3உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.

பொ-ரை :- புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும், உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.

வி-கு :- ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டுகொண்மின் என்க. ‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக்கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.

ஈடு :- நான்காம்பாட்டு. 4புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள் எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.

புண்ணியம் பாவம் – இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம். புணர்ச்சி பிரிவு – புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு. எண்ணமாய் மறப்பாய் – விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி. உண்மையாய் இன்மையாய் – 1உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது, சேதன அசேதனங்களுமாய் என்றபடி. அன்றிக்கே, உண்மை இன்மை என்னுதல். அல்லனாய் – புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய், அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய். திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – 2“ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருமாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்கவில்லை” -“வாசுதேவக்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே, பிரளயகாலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே சேர்ந்துநிற்கிற உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணன். இன்னருளே – புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம் அவனுடைய கிருபையாலே உண்டாயின. பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே. சேதனனுடைய முற்பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே அதுவும் அவன் கிருபையாலேயாமத்தனை. நன்று; எல்லாம் செய்தாலும்3 தீமை அவன் கிருபையாலே வரக்கூடுமோ? என்னில், தீயதனைக் காட்டி வெதுப்பி நல்வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ. இன் அருள் – காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள். கைதவமே – நான் சொல்லுகிற இதில்அர்த்தவாதம் இல்லை. கண்டுகொண்மின்கள் – நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டுகொள்ளுங்கோள். அன்றிக்கே, கைதவமே – என்பதற்கு, செய்யப்பட்டவை என்றபடியாய், செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.

புண்ய பாபாதிகள்
புணர்ச்சி பிரிவு -பலம் –
எண்ணம் மறுப்பு
உண்மை இன்மை
அஸ்தி சப்த வாச்யம் நாஸ்தி சப்த வாச்யனாய்
அல்லனாய்
வசயன் அன்றிக்கே இருக்கும்
கண்ணன் இன் அருளே
பிரளய காலத்திலும் அழியாத திண்ணிய மாடங்கள்
விபூதியாக இவை தோன்றுவது அவன் கிருபை
பாபம் அனுபவித்து கழிக்க வேண்டுமே
மாலை நண்ணி பிரவேசம் விஸ்தீரமாக சொல்லுவார்
நல் வழி போக்குகைக்கு தீய வழி புன்மை காட்டி
கைதவம் அர்த்த வாதம் இல்லை
கை தவம் கிருதகம் பண்ணப் பட்ட இடங்களும் அவன் பிரதானம் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 20, 2013

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
2
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.

பொ-ரை :- நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி, நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ஒளிபொருந்திய கீர்த்தியேயல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.

வி-கு :- ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.

ஈடு :- மூன்றாம்பாட்டு. 2திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாணகுணங்களை ஒழிய ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.

நகரமும் நாடுகளும் – 3போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார், பயிர்த்தொழில் செய்துகொண்டு தேகயாத்திரையை நடத்திக்கொண்டிருக்கும் நாட்டிலேயுள்ளார். அன்றிக்கே, அளவிற்கு உட்பட்டனவாயுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவாயுள்ளவையும் என்னலுமாம். ஞானமும் மூடமுமாய் – பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக்கடவதான ஞானமும், அதனை மாறுபாடாக எண்ணக்கூடியதான அறியாமையும். நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் – உபமானம் இல்லாததாய்க்கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய், அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய். நிலனாய் விசும்பாய் – 1உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய். அன்றிக்கே, கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம். சிகரமாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலே இருக்கிற மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

புகர் கொள் கீர்த்தி யல்லால் – 2பரமபதத்தில் புகழ் மழுங்கியாகாதே கிடப்பது. 3அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே! -மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும், 5“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும், 5“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே, தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது. 6குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது. யாவர்க்கும் புண்ணியம் இல்லை – 7எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை. 8தாம்தாம் தேடிக்கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை. 9“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்

அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ. 1இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக்கட்டியாம். அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற்காட்டாம். இதுவன்றோ உபாயத்தில் அடிப்பாடு.

திருக் கல்யாண குணங்களை அனுசந்திப்பது தவிர
வேறு ஒருவருக்கும் உத்தாராகம் இல்லை
நகரமும் நாடுகளும் -நாடு கிராமம்
போக பிரதானர் -உழவன் தேக யாத்ரை செய்து கொண்டு
சேற்றில் காலை வைத்தால் நாம் சோறில் கை வைக்கலாம்
பரிச்சின்னம் அபரிச்சின்னம்
ஞானம் -அஞ்ஞானம் இரண்டும்
-தேஜஸ் அந்தகாரம்
நிலன் விசும்பு ரூபம் உள்ளவை -அரூபி
பர்வத சிகரம் போலே மாடங்கள் உள்ள திரு விண்ணகரம்
புகர் கொள் கீர்த்தி
அங்கு மழுங்கி இருக்குமே பகல் விளக்கு பட்டு இருக்கும்
பரமம் சாம்யம் தன்னையே ஒக்க அருள் செய்வர்
குறைவாளருக்கு முகம் கொடுத்து புகர் மிக்கு இங்கு
சம்சாரிகளுக்கு அருள் கொடுத்து கொண்டு
சர்வருக்கும் உத்தாரகம்
மின்னிடை மடவாருக்கும் உத்தாரகன்
தாம் தாம் தேடிக் கொள்வது கழுத்துக் கட்டி போலே -ஸு ப்ரத்யனம் -கூடாதே
வர வேண்டாம் முடிந்து போக புக்கு
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் கால் கட்டாம்

இதுவே உபாயத்தின் அடிப்பாடு
கட்டி வைக்குமே
உபாயம் கட்டி வைக்குமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 20, 2013

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.

பொ-ரை :- அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.

வி-கு :- ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.

ஈடு :- இரண்டாம்பாட்டு. 1தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

கண்ட இன்பம் – 2“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம். துன்பம் – பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம். கலக்கங்களும் தோற்றமுமாய் – இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும். தண்டமும் தண்மையும் – கோபமும் அருளும். தழலும் நிழலுமாய் – வெப்பத்தைச் செய்யக்கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய், கண்டுகோடற்கு அரியபெருமான் – 3இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. 4இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என்தான்! 5இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லாநின்றார்; மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னாநின்றார்;

இது என்ன அநுசந்தான முறைதான்! 1இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத்பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.

2நல்லாரும், நம்பி ஸ்ரீசேநாபதிதாசரும் கூடத் திருமலைக்குப் போகாநிற்க, ஸ்ரீசேநாபதிதாசர் ஒரு கோலையிட்டுத் தூற்றை அடிக்க, நல்லார் ‘அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது. என்னை ஆள்வான் ஊர் – என்னை இழக்கமாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு என்னை அடிமை கொண்டவனுடைய ஊர். தெண் திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல்நகரே – தெளிந்த திரைகளையுடைத்தான புனலாலே சூழப்பட்ட திருவிண்ணகராகிற நன்னகர். 3திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப்பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார். 4அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டுஇல்லையே. அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ? 6அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனையன்றோ.

ஸு யத்னத்தால் முடியாததை திவ்ய தேசமே கொடுத்து அருளும்
கண்ட இன்பம்
இன்பம் துன்பம் -இரண்டுமே துன்பம் தானே
அக்நி
அளவிட முடியாததை சொல்லி
விசேஷணம் சொல்லி
கண்டு கொள்ள அரிய -என்று அவனை சொல்லி
பல் வகையால் பரந்த சொல்லி சோழ முடியாதது என்கிறார்
பிரத்யக் ஸ்திதி -ஒன்றுக்கும் இல்லையே
ஆத்மா உள்ளே இருக்கும் வரை தான் சரீரம்
எம்பெருமானை விட்டு ஒன்றுமே இல்லை ஆனால் போக மாட்டான்
போனால் என்ன ஆகும் காட்ட ஆத்மா சரீரம்
ஒத்திகை -போலே இது
நல்லார் ஒருவரும் -சேனாதிபதி தாசர் திருமலை
தண்டை இட்டு தூற்றை அடிக்க
ஈஸ்வர விபூதியை நலிவதே
செடி கொடி என்ன பண்ணிற்று -அர்த்த காம நிபந்தம்த்வேஷம் இன்றிக்கே
நல்லான் வம்சம் -அனைவருக்கும் நல்லார்
எம்பார் -வார்த்தை முன்பும் பார்த்தோம்
மரம் கூட வெட்டக் கூடாது
என்னை அடிமை கொண்ட தேசம்

விரஜை போலே
காவேரி உண்டே
நாகரிகம் ஜலக்கரையில்
திவ்ய தேசம் நதிக் கரைகளில்
முகம் காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் தேசமோ
திரு விண்ணகர் ஏற்றம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

July 20, 2013

மூன்றாந் திருவாய்மொழி – “நல்குரவும்”

முன்னுரை

    ஈடு :- 1‘இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம். 4சேரவிட்டுக்கொண்ட படிதாம் பலவாக இருக்குமன்றோ: 1முதல் தன்னிலே தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க, தன்படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான். உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து ‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல, தன்செல்லாமையைக் காட்டிப் பொருந்தவிட்டுக் கொண்டான். 2இனி, அவைபோன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே. 3அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றேயன்றோ! 4ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு; பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை. ஆக, இந்தப்படிகளாலே தன்செல்லாமையைக் காட்டி அவன்பொருந்தவிட்டுக்கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.

அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி. உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்! ஆனபின்னர், நம்மோடுசேராதார் இலர்காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக்கொடுக்க இவரும் கண்டார். கண்ட இவர் ‘இவைஇருந்தபடி என்!’ 1கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிறபடிகளும், இனி, நிமித்தகாரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாகமாட்டாது; இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானேயாயிருக்கிற படியையும், இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும், குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கைமாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும், இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆகமாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க, பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானேயாக இருக்கிற படியையும், மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, ‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்; இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதியிட்டு, ‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.

முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம்பண்ணி, மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார். இங்கு, “போகுநம்பி” என்று தள்ளச்செய்தேயும் கால்வாங்கமாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து, அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார். இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச்செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில், மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!1

இத்திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு

1. “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும்நீ
அனைத்தும்நீ அனைத்தினுட் பொருளும்நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.

பொ-ரை :- வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.

வி-கு :- ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம், உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. 2செல்வு – செல்வம்.

இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

ஈடு :- முதற்பாட்டு. 1விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

நல்குரவும் செல்வும் – வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும், நரகும் சுவர்க்கமும் – துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும். வெல்பகையும் நட்பும் – சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விடவேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும். விடமும் அமுதமுமாய் – முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய். 2போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது. 3விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ. பல்வகையும் பரந்த பெருமான் – 4ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” -ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.

என்று இளைத்துக் கைவாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.5 ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ. 1வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத்தோன்றுதல் இல்லையன்றோ. 2“வஸ்து விசேடணம் இல்லாதது” என்றுவிசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே. 3அங்ஙனேயாகில் மோக்ஷசாஸ்திரந்தான் வேண்டாவே. 4வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது. 5ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும்போது அந்யயோக வியவச்சேதம் பண்ணிக்கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது. 6இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே அந்யயோகவியவச்சேதம் பண்ண ஒண்ணாது. ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில், அயோகவியவச்சேதம் பண்ணிக்கொண்டு சேருகிறது.

  1இவர்தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது, இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில், அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. 2இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்றுதோன்றுமன்றோ. 3இவர்தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலாவிபூதி அநுசந்தானம் போலே அன்றோ. 4“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” -“நோபஜநம்
ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3 🙂 -என்னா நிற்கச்செய்தே, முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ. 1இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான். 2தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும். 3அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து, அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல். பல்வகையும் பரந்த பெருமான் – இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன். பரந்த பெருமான் என்னை ஆள்வானை – இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்; 4ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே. செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-5மருபூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி. மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்” – ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.
-என்னுமாறுபோலே, சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே, கிட்ட நின்று அடிமை செய்யும் இளையபெருமாளைப் போலே. 2‘காணவேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே, பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்; 3“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.

இவர்கள் அபிசந்தி கூட அழித்தான்
எத்தால் -பரத்வத்தாலே- சௌலப்யத்தாலே என்றும் சொல்வார்
இரண்டு நிர்வாஹம்
எதிர் எதிராக திருவாய் மொழி
முழுவதும் வ்ருத்த விபூதி தத்வம் -பட்டர் –
பிள்ளான் எம்பெருமான் உடைய சர்வேஸ்வரத்வம் காட்டும் திருவாய்மொழி -என்று பணிக்கும்
அதில் குறிப்பாக வ்ருத்த விபூதி -சேர மாட்டேன் என்று ஊடுகிறவர்களையும் –
வாசி தோன்ற சர்வேஸ்வரத்வம்
ஆச்சர்யம் பட்டு விஸ்மிதர் ஆகிறார்
சேர விட்டுக் கொண்டதும் அநேகம்
படிகளை முதலில் அறிவித்து கூட விட்டு கொண்டான்
அறியாத சம்ச்சாரியாக இருந்த பொழுது –
உள்ளே புகுர நின்று ஸுய நிஷ்கர்ஷம் அவன் மேன்மை அனுசந்தித்து
நைச்ச்ய அனுசந்தானம் பண்ண -செல்லாமை கட்டி பொருந்த விட்டுக் கொண்டான்
வெண்ணெய் போலே -உம்முடைய திரு மேனியும் -சௌசீல்யம்
சீலத்தால் உடன் சேர்த்தான் அங்கு –
அது போல் அன்று இ றே -இது
கோபம் ஆழ்வாருக்கு -தாமதித்து வந்தான் என்று
அகலில் குற்றம் -அணுகினாலும் குற்றம் இங்கே –
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச்சித்தம் உண்டு –
ப்ரணய அபராத சண்டாளர் –
பிரணயத்தால் செய்யும் பாபம் பிராயச்சித்தம் இல்லை
செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டாமை கண்டு
விஸ்மிதரான இவர் –
லோகத்தில் சேராத வ்ருத்த பதார்த்தங்களை காட்டி –
புலியும் மானும் சேர்ந்து தண்ணீர் குடிக்கும் ஸ்ரீ ராம ராஜ்யத்தில் போலே
இது இருந்த படி என் -அகலுகைக்கு உடலாக இன்றி கூட நிற்கும் படி செய்து அருளினான்
நிமித்தம் உபாதானம் ஆக மாட்டாது எல்லாம் தாமாக இருக்கும்படி
குயவன் மண்ணாக மாட்டான்
சேதனன் அவன் அசேதனம் இது
பொருந்தாதவை தன் பக்கல் பொருந்தி விட்ட படி
கூடி இருந்தாலும் அவற்றின் தோஷம் ஸ்பர்சியாத படி
பிரகிருதி சம்பந்தம் இருக்கச் செய்தேயும்
ஓன்று புஜித்து இளைக்க ஓன்று புஜிக்காமல் பெருத்து இருக்கும்
நியந்தாவாய் இருக்கிறபடியும்
காட்டிக் கொடுத்து
பிராப்யம் பிராபகம் நாட்டில் ஒன்றே இருக்காது
இங்கு இரண்டும் தானே ஆக
சௌந்தர்ய சீலாதிகள் காட்டிக் கொடுத்து
பரம பந்து இவனே உபாயம் அருளிச் செய்கிறார்
பரத்வம் முதலில் அனுபவித்து மூன்றாம் திருவாய்மொழியில் சௌலப்யம் அனுபவித்து
எத்திறம் மோஹித்து
இங்கு சௌலப்யம் போகு நம்பி சொல்லவும் -இங்கே இருந்து சேர விட்டதை நினைத்து-

அடுத்து -பரத்வம் அனுபவிக்கிறார்
நீர்மை முதலாகவும் பரத்வம் அடுத்தும் இங்கே
எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்-

நல குரவு தாரித்ர்யம் -செல்வம் ஐஸ்வர்யம்
நரகம் ஸ்வர்க்கம்
வெல் பகையும் வென்றே விட வேண்டிய பகை -சமாதானம் வராமல் இருந்தாலும்
நட்பும்
விடமும் அமுதமுமாய்
தானே அமிர்தமாய்
அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன்
பல வஸ்துக்களாக பரந்து
என்னையும் ஆள்வான்
திரு விண்ணகரில் சேவித்தேன்
ததீயத்வ ஆகாரதாலே அனைத்தும் உத்தேச்யம் ஆழ்வாருக்கு
ஆய் -ஒவ் ஒன்றுக்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
அவன் நிர்வாஹம் கீழ் அனைத்தும்
விபூதி பேச புக்க கீதாசார்யன் -முழுவதும் சொல்ல முடியாது என்றான்
நாஸ்தி அந்தக -சர்வஞ்ஞன் கூட -இப்படி இளைத்து கை வாங்கி
ப்ரேமம் கலங்கிய இவர் பல்வகையும் பரந்தான் என்று தான் சொல்ல முடியும்
ஆனாலும் சிறிது பேசவும் வேண்டும் இ றே
மாயா வாதம் இல்லை
நிரவித கல்பக ப்ரத்யஷம்
ப்ரஹ்மம் சூன்யம் என்றால் ஞானத்துக்கு விஷயம் ஆக்க முடியாதே
கவ்யம் ஜந்து மாடு போலே இருக்கும் -கொஞ்சம் சாம்யம் உண்டு
அறிந்த ஒன்றை காட்டி -விசேஷணம் கொண்டு அறிவிக்கிறான் –
நிர் விசேஷ வஸ்துவை கிரஹிக்க முடியாதே எம்பெருமானார்-

அந்த ப்ரஹ்மத்தை த்யானம் செய் என்றால் ஒவ்வாதே
இங்கு எல்லாம் உடையவர் என்கிறார்
செல்வம் உள்ளவர் இடம் தாரித்ர்யம் இல்லை
அது போல் இங்கு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார் இல்லை
மாயா வாதம் போலே இல்லை –
மோஷ சாஸ்திரம் வேண்டாவே -அப்படி என்றால்
ப்ரஹ்மம் ஏகமேவ சத்யம் மற்றவை மித்யை என்பான்
இரண்டு சத்யம் இருக்க கூடாதே அத்வைதம் போகுமே சாஸ்திரம் சத்யம் என்றால்
அதுவும் மித்யை என்றால் இது கொண்டு சத்யமான அவனை எப்படி அறிவது-

வேறே தப்பு ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் பொய் நிறைய சொல்வேன் -கதை போலே
சாஸ்த்ரம் ஞானம் கொடுக்கும் வரை மெய் அப்புறம் பொய் என்பார்
அஞ்ஞானம் அவித்யையால்
அது பொய் என்றால் போக வேண்டாமே
அநிர் வசநேயம்
அவித்யை நிவ்ருத்தி பிரத்யநீகமாக இருக்க வேண்டும்
அது சத்தா அசத்தா கேள்வி வருமே
நியாய சாஸ்திரம் அறிந்தவர் தான் எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம் கொண்டாடுவார்கள்
வஸ்துவை -விசெஷணம் கொண்டே அறியலாம்
வ்யாவர்த்தாக விசேஷணம் -வேண்டுமே
அந்யோக -விவச்சேதம்  கொண்டு -வேறு ஒன்றில் இல்லாதது காட்டி –
பச்சை அட்டை உள்ள  புஸ்தகம்
அது ஒன்றிலே இருந்தால்
ராமனே வில்லாளி -தனி சிறப்பு அந்ய யோக விவசசேதம்
வேறு  படுத்தி காட்ட -அந்ய யோகம் -வந்து சேருவது
இங்கு இவனுக்கு அந்ய யோக விசேஷணம் இன்றி
விருத்தமாக விசெஷணங்கள் கூடுமோ
கொம்பு இல்லாதது அரை கொம்பு முழு கொம்பு -மூன்றும் சொல்லி
முரண்பட்டதாக சொன்னால்
அயோக விசேஷணம் -பிரிக்க முடியாத ஓன்று இவனுக்கு-

தண்டி புருஷ
ப்ரத்யிக்  சித்த -அப்ரத்யக் சித்த விசெஷணம்
கருப்பாக இருப்பவர் பிரிக்க முடியாத
ராமனே வில்லாளி
ராமன் வில்லாளியே
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்வர் -பாசுரம் வியாக்யானம் அயோக விவசசேதம்
இதுவே செய்து கொண்டு இருப்பவர் போலே செய்பவர் –
ஒவ் ஒன்றும் உடைமை இது ஒன்றே உடைமை போலே இருக்கிறான்
அயோக விவச்சேதம் மாத்ரம் இது –

இவர் அவனை அனுபவிக்க இழிய
வ்ருத்த விசேஷணம் சொல்வது -முழுவதும் அனுபவிக்க
ராஜ புத்திரன் -அரண்மனையும் சிறைக்கூடமும் -சொத்து தானே
வீட்டு சாக்கடையும் நம் சொத்து தானே
அனைத்தும் உத்தேச்யம்
அவன் சம்பத்து என்று அடங்குக உள்ளே –

முக்தனுக்கு லீலா விபூதி அனுபவிக்குமா போலே ததீயத்வ ஆகாரம் என்பதால் –
ஆழ்வார் -தாரித்ர்யம் விடம் நரகம் -இது போலே பேசுகிறார்
இங்கன் இருக்கச் செய்தே முக்தன் போலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
சம்சாரியும் இல்லை நித்தியரும் இல்லை -திவ்ய சூரி இவர் -ஜீவன் முக்தி சேராதே
திவ்ய சூரி சரிதம் உண்டே ஆழ்வார் காவ்யம்
கால் வாங்கி அல்லாது நிற்க ஒண்ணாத படி சம்சாரம் -இனி யாம் உறாமை -ஸு சம்பந்தம் பார்த்தால்
அவன் சம்பந்தம் பார்த்தால் -உத்தேச்யம் தான்

பல படியாக பரந்து
என்னை ஆள்வான் -என்னை கொள்வதற்கு
ஒருவனை வளைக்க ஊரை வளைப்பது போலே
மிக்க செல்வம் மல்கு குடி
கைங்கர்ய செல்வம்
பகவத் சம்பந்தம் ஒன்றே செல்வம் -அது மாறாத செல்வம் இங்கு உண்டே
கிட்டே இருந்து அடிமை செய்யும் இளைய பெருமாள்
கடக்க நின்று அடிமை செய்தான் பரத ஆழ்வான் –
எம்பெருமானார் திவ்ய தேச வாஸம்
ஸ்ரீ பாஷ்யம் -திவ்ய -ப்ரபந்தம் கைங்கர்யம் -அபிமானத்தில் ஒதுங்கி -குடில் கட்டி
இது இல்லை யானால் அது இல்லை சமம்
ஓன்று ஞான மண்டபம்
சாது சமானம் அபிமானம் வரும்
கூட கோயிலுக்கு போக
திரு மாலை எடுக்க கைங்கர்யம்
அருளிச் செயலை அனுபவிக்க ஆசை
அர்த்தம் கால ஷேபம்
ஸ்ரீ பாஷ்யம் கேட்க வருவான்
எல்லாம் ஓன்று பின் ஒன்று வரும்

தேசசோம் சர்வ காம திருத் –
செல்வம் படைத்த திரு விண்ணகர்
கண்டேனே –
தேசாந்தரம் தேகாந்தரம் இன்றிக்கே
பசித்த இடத்தில சோறு
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

July 19, 2013

புஷ்பாஞ்சலி பண்ணி தேவர்கள் தொழா நிற்பர்கள்
நாலாம் பாட்டில் தேவர்கள் விபவதில் பணிந்ததை சொல்லி –
ஐந்தாம் பாட்டில் ஷீராப்தி நாதனை ஸ்துதித்தார்கள் என்றும் –
ஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே  ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்
என்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து
இதில்
அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-

மிளகு கொடி -வேங்கை மரத்தை தழுவி -அவை மேகம் வரை உயர்ந்து-
இமையோர் இங்கு உள்ள சுனையில் தீர்த்தமாடி -எண்பகர்-பூக்களை –
ஆயிரம் நாமம் வாயில் வந்தபடி -ஆனந்தத்துக்கு போக்குவீடாக

வியாக்யானம்-
கார் கொள் வேங்கைகள்-
கார் என்று மேகமாய்
கார் கொள் வேங்கைகள் என்று மேக பதத்தளவும் செல்ல வளர்ந்த வேங்கைகள் என்னுதல்
அன்றிக்கே –
நாநா வர்ணமாயிற்று வேங்கைகள் தான் இருப்பது -அத்தாலே நீல வேங்கைகள் என்னுதல் –

கன வரை தழுவிய –
சுற்றில் உண்டான தாழ்வரைகளிலே உண்டான -கறியினுடைய வளர்ந்த கொடியானது –
மிளகினுடைய வளர்ந்த கொடியானது நெருக்க படர்ந்து கிடக்கும் ஆயிற்று –

போர் இத்யாதி –
வெளி நிலங்களிலே சிறு மலைகள் அடைய பெரிய சீற்றத்தை உடைய யுத்தோன்முகமான
வேங்கைப் புலிகள் நெருங்கிக் கிடக்கும் ஆயிற்று –

பூம் பொழில் இமயத்துள்
இது வாயிற்று சோலை இருக்கும்படி

ஏர் இத்யாதி –
தர்சநீயமாம் படி பூத்து இருந்துள்ள தடாகங்களின் கரைகளிலே படிந்து

இன மலர் எட்டும் இட்டு –
அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு
(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ்
த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )
அன்றிக்கே 
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை
என்றாப் போலே
பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்
அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –
மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-
அத்தை மலர் என்னும்படி என் –
என்னில்
பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –
சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –
அன்றிக்கே 
கீழில் திரு மொழியில்
திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

இமையோர்கள் -இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஆனவர்கள் திரு நாமங்களை அடைவு கெட சொல்லி ஆஸ்ரயியா
நின்று உள்ள

பிரிதி சென்று அடை -நெஞ்சே
கீழ் திரு மந்த்ரம் ஆன போது -பெயர்கள் -ஆயிரம் என்னும்படி எங்கனே என்னில்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு -உடையான் -என்னா –நாராயணா என்றது இறே
இத்தால்
நிரூபித வஸ்துவுக்கு விசேஷணங்களாய் இறே அல்லாதவை இருப்பது
தர்மிக்கு நிரூபகம் இது இறே

மலைத் தாழ் வரைகள் அடங்க மிளகு கொடிகளாலே நெருங்கி கிடக்கும்
வெளி நிலங்களில் சிறு மலைகள் அடங்கலும் பாதக வர்க்கங்கள் நெருங்கிக் கிடக்கும்
உள் எல்லாம் நாட்டுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிறவர்கள் உடைய ஸ்தோத்ர கோஷத்தாலே நெருங்கிக் கிடக்கும்-

பாரதந்தர்யத்தால் ஸ்த்ரீ ப்ராயர் எங்கும் இருக்க
விரோதிகள் வெளியில் இருக்க
துர்மானிகள் ஆஸ்ரயிப்பார்கள்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –