Archive for the ‘Vetham’ Category

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — மீமாம்ச சாஸ்த்ரம்– பாடம் -41–

August 5, 2021

பாடம் -41-மீமாம்ச சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

————-

மீமாம்ஸா -ஞாதும் இச்சா -அறிய வேண்டும் ஆசை -பூஜ்ய விஷய ஆராய்ச்சி –
அறிய ஆசை உடையவர்கள் செய்யும் கார்யம் -வேத விசாரம்
ஒன்றைச் செய்ய செயல் முறை -இதி கர்தவ்யா –
தர்ம ஞானம் பெறவே மீமாம்ஸா ஸாஸ்த்ரம் கொண்டு வேத விசாரம் செய்து பெறுவதற்காக –

மகா ரிஷி ஜைமினி -மீமாம்ஸா ஸாஸ்த்ர ஸூத்ரங்கள் -சாம வேதம் பிரசாரம் செய்ய இவர் வேத வியாசர் சிஷ்யர்
சபரர் -சபர பாஷ்யம்
குமாரில பட்டர் -பாட்ட மதம் -ஸ்லோக வார்திகம் -தந்த்ர வார்த்திகம– டுப்டீகா
பிரபாகரர் -பிரபாகர் மதம் -லக்வீ -ப்ருஹதீ –
முராரி மிஸ்ரர் -மிஸ்ர மதம் -அங்கத்வ நிருக்தி

ஜைமினி மகரிஷி நமது நன்மைக்காக ஸூத்ரங்கள் தந்து அருளி உள்ளார்
12 அத்தியாயங்கள் -60 பாதங்கள் –907 அதிகரணங்கள் -2745 ஸூத்ரங்கள்

இதுக்கும் மேல் -சங்கர்ஷ காண்டம் தேவதா மீமாம்ஸா -நான்கு அத்தியாயங்கள் –
பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதுவே
உத்தர மீமாம்ஸா -வேதாந்த விசாரம்
ப்ரஹ்ம காண்டத்துக்கு வேத வியாசர் ஸூத்ரங்கள் -நான்கு அத்தியாயங்கள் இதிலும் -பாதராயணர் இவரே –
இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம்

முதல் அத்யாயம் –
முதல் பாதம் -8 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -4 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -10-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -20-அதிகரணங்கள்

இரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -2-அதிகரணங்கள்

மூன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -15 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -19 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –20 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -16 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -23-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -23-அதிகரணங்கள்

நான்காம் அத்யாயம் –
முதல் பாதம் -17 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -13-அதிகரணங்கள்

ஐந்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -12அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -15-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -9-அதிகரணங்கள்

ஆறாம் அத்யாயம் –
முதல் பாதம் -13 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -11 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -21-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -14-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –21 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -7 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -13-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

ஏழாம் அத்யாயம் –
முதல் பாதம் -5 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -1அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -3-அதிகரணங்கள்

எட்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -19அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -6 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -8-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -4-அதிகரணங்கள்

ஒன்பதாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -20 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -15-அதிகரணங்கள்

பத்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -11 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -34 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -30-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -27-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –26 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -22 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -20-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

பதினொன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -11அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -16 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்

பன்னிரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -21 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -15 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -16-அதிகரணங்கள்

ஸூத்ரம்
குறைந்த எழுத்துக்கள் கொண்டது
சந்தேகத்துக்கு இடம் இல்லாதது
ஆழ்ந்த பொருளை யுடையது
பல இடங்களிலும் பயன்படுத்தப் படுவது
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாதது
பிழை இல்லாதது

ஸூத்ரங்கள்
எளிதாயும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் யுடையதாகவும்
ரசமாகவும் இருப்பதையே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டங்கள் கொண்டது அதிகரணம்
இதில் ஐந்து பகுதிகள் உண்டு
1-விஷயம் -ஆராயப்படும் வேத வாக்கியம்
2-விஷயம் -அந்த வாக்கியத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3-பூர்வ பக்ஷம் -எதிராளி கூறும் யுக்திகள்
4-சித்தாந்தம் -நாம் சொல்லும் யுக்திகளை முடிவும்
5-சங்கதி -முன் அதிகரணத்துடன் இந்த அதிகரணத்துக்குத் தொடர்பு

12 அத்தியாயங்களின் ஒரே பொருள் தர்மம் -அதில் –
சோதனா ச உபதேச ச அர்த்த -கட்டளை வாக்கியம் நன்மை ஏற்படுத்தும் -லக்ஷணம்

1-பிரமாணம் -தர்மங்களை அறியும் பிரமாணங்களை பற்றியது
2-பேதம் -தர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறியும் முறைகள்
3-சேஷத்வம் -ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு அங்கமாக துணையாக உறுப்பாக ஆகுதல்
யாகம் -தியாகம் -ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பித்தல் தான் –
மானஸ வியாபாரம் தான் இது -மற்றவை எல்லாம் அங்கங்கள்
4-ப்ரயுக்தம் -பல இடங்களில் உபயோகப்படுத்தும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தால்
5-க்ரமம் -வைதிகச் செயல்களை செய்யும் வரிசை
6-அதிகாரம் -வைதிகச் செயல்களை செய்யத் தகுதிகள்
7-ஸாமான்ய அதி தேசம் -ஓர் இடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்றவர் இடத்தில் ஏறிடுதல்
8-விசேஷ அதி தேசம் -எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்
9-ஊஹம் -ஏறிடும் பொழுது செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள்
10-பாதம்-ஏறிடும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை -நிறுத்தப்பட வேண்டியவை
11-தந்திரம் -பலவற்றுக்காக உபயோகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரே முறை செய்தல்
12-பிரசங்கம் -ஒன்றுக்காகச் செய்யப்பட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்ற படியால் அதற்காகத் தனியாக செய்ய வேண்டாமை

அத்யாயம் -1- தர்மத்தைப் போதிக்கும் பிரமாணங்கள் எட்டும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளன
1-விதி -வேதத்தில் இருக்கும் நேரடியான கட்டளைகள்
2-அர்த்த வாதம் -செய்ய வேண்டிய செயலைப் போற்றுவதன் மூலம் செயலில் தூண்டும் சொல் தொடர்கள்
3-மந்த்ரம் -அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களை நினைவூட்டும் சொல் தொடர்கள்
4-ஸ்ம்ருதி -வேதத்தை அறிந்த ரிஷிகளின் நூல்கள்
5-ஆசாரம் -வேதத்தை அறிந்து அதன்படி நடப்பவர்கள் நடத்தை
6-நாமதேயம் -வைதிகச் செயல்களுக்கு கொடுக்கப் பட்ட செயல்கள்
7-வாக்ய சேஷம் -ஒரு கட்டளையை தொடர்ந்து வரும் மற்ற சொல் தொடர்கள்
8-சாமர்த்தியம் -கட்டளை இடப்படும் செயலின் தன்மை திறமை –

அத்யாயம் -2- கர்ம பேதத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளன
1-ஸப்தாந்தரம் -வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்
2-அப்யாஸம் -ஒரு கட்டளையை வேறே எந்த பிரயோஜனம் இல்லா விட்டாலும் திரும்ப திரும்ப வேதம் சொன்னால்
அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்றே கொள்ள வேண்டும்
3-சம்க்யா -வேதமே சில கர்மங்களின் எண்ணிக்கையை சொல்லி விடும் –
அப்போது தெளிவாக அறியலாம் இவை வெவ்வேறு கர்மங்கள் என்று –
4-ஸம்ஜ்ஞா -பெயர் மாறினால் கர்மம் மாறும் -பெயர் -நாமதேயம் -என்பது
ஒரு யாகத்தை ஸூ லபமாகக் குறிப்பிட என்று பார்த்தோம்
ஆகையால் ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது
5-குணம் -ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும் –
ஆகையால் முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஒரு த்ரவ்யத்தை நுழைக்க முடியாத படியால்
அது வேறொரு யாகத்தில் தான் பயன் பயன் படுத்தப்பட வேண்டும்
ஆகையால் கர்மங்களுக்குள் வேறுபாடு த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்
6-ப்ரகாரணாந்தரம்–ஒரு கர்மத்தை ஒரு பிரகரணத்தில் நூலின் ஒரு பகுதியில் – விதித்து விட்டு
மற்ற ஒரு ப்ரகரணத்தில் அதே பெயரை யுடைய ஒரு கர்மத்தை விதித்தாலும் அவை ஒன்றாக மாட்டா
ஏன் என்றால் பிரகரணம் மாறி விட்ட படியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது –

அத்யாயம் -3- அங்கத்தவத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள்-ஸ்ருதி
மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளன
1-ஸ்ருதி -நேரடியாக வேதமே சொற்களால் சொல்லுதல்
2-லிங்கம் -ஸப்த ஸாமர்த்யம் -ஒரு சொல்லின் திறமை –சொல்லுக்கு இருக்கும் ஸாமர்த்யம் –
தன் பொருளை அறிவிக்கும் ஸாமர்த்யம்
3-வாக்யம் -ஸமபி வ்யாஹார -இரண்டாம் வேற்றுமை முதலான ஸ்ருதி பிரமாணம் இல்லாத போது
இரண்டு பொருள்களுக்கு இருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
4-ப்ரகரணம் -உபய ஆகாங்ஷா -இரண்டு கர்மங்களுக்கு இடையில் -பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று இருக்கும் எதிர்பார்ப்பு
5-ஸ்தானம் -தேச ஸாமான்யம் -இடத்தில் ஒற்றுமை
6-ஸமாக்யா -யவ்கிக ஸப்த -காரணப்பெயர் –

அத்யாயம் -4-ப்ரயோஜகத்வம்
ஒரு செயல்பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் –
அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஓன்று தான் அந்தக் கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்
அதாவது அனுஷ்டாபகமாக-முக்கிய பயனாக இருக்கும்
யாகங்களில் ஒரே பொருள் செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் ஆனால் அவற்றுள் ஓன்று தான்
அதற்கு பிரயோஜகமாக செய்விப்பதாக இருக்கும் -அதற்குத் தான் பிரயோஜகம் என்று பெயர் –
இந்த கர்மத்துக்கு பிரயோஜ்யம் என்று பெயர் –
எடுத்துக் காட்டு
தர்ச பூர்ண மாசம் என்ற யாகத்தில் புரோடாசம் -தோசை என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளை பயன்படுத்த வேண்டும்
இதை வேதம் -கபாலங்களில் புரோடாசத்தை சமைக்க வேண்டும் -என்ற விதியில் சொல்லுகிறது
அதே கபாலங்களைக் கொண்டு தான் நெல்லில் இருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது –
புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும் -என்ற கட்டளையால்
கபாலத்தைச் செய்வது புரோடாசத்தை சமைக்கத் தான் -அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே
ஆகையால் புரோடாசம் செய்வது ப்ரயோஜகமும் அங்கியும்
கபாலம் பிரயோஜ்யமும் அங்கமும்
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிர ப்ரயோஜகம் ஆகாது –

அத்யாயம் -5- க்ரமம் -பூர்வ அபவ்ர்யம் -முன் பின் தன்மை -இந்தச்செயலுக்கு அடுத்து இந்தச்செயல் -க்ரமம் -வரிசை
1-ஸ்ருதி – நேரடியாக வேதமே செயல்களின் வரிசையைச் சொல்லுதல்
2-அர்த்தம் -ஒரு செயலின் ப்ரயோஜனத்தைக் கருதி அதைச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயித்தல்
3-பாடம் -வேதத்தில் செயல்களில் படிக்கப்பட்ட வரிசையிலேயே அவற்றைச் செய்தல்
4-ஸ்தானம் -வெவ்வேறு காலங்களில் செய்யப்பட வேண்டிய பல செயல்களை சில காரணங்களால்
சேர்ந்து செய்யும் பொழுது எந்தச் செயலின் இடத்திலாவற்றைச் சேர்த்து செய்கிறோமோ
அச்செயலை முதலில் செய்து விட்டு பின்னால் மற்றவற்றைச் செய்ய வேண்டும் –
5-முக்யம் -பல பிரதான கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் செய்யப்படும் பொழுது பிரதான கர்மங்களை
எந்த வரிசையில் செய்யப் போகிறோமோ அதே வரிசையில் தான் அங்கங்களை செய்ய வேண்டும்
6-ப்ரவ்ருத்தி -பல பிரதான கர்மங்களுக்காக ஒரே அங்கங்களைத் திரும்ப திரும்ப செய்யும் பொழுது
அவற்றுள் முதல் அங்கத்தை எந்த வரிசையில் செய்தோமோ அதே வரிசையில் தான் பின்பு உள்ளவையும் செய்ய வேண்டும் –

அத்யாயம் -6-அதிகாரம்
வைதிக கர்மங்களை செய்ய மூன்று அடிப்படைத் தேவைகள் –
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படா விட்டாலும் இவை இல்லாமல் கர்மங்களை
செய்ய முடியாத படியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1-வித்யை -அத்யயனம் செய்து வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்று இருக்க வேண்டும்
இது இருந்தால் தான் அடுத்து அடுத்து என்ன செயல் செய்ய வேண்டும்
என்பதையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் அறிய முடியும்
2-அக்னி -யாகம் ஹோமம் முதலியவற்றில் ஒரு த்ரவ்யத்தை அக்னியில் சேர்க்க வேண்டும் என்பதால்
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து
கார்ஹபத்யம் ஆஹவ நீயம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒருவன் இடத்தில் இருந்தால் தான்
அவன் யாகம் முதலானவற்றைச் செய்ய முடியும்
3-சாமர்த்தியம் –யாகம் முதலியவற்றை செய்யும் திறமையும் பண வசதியும் -உடல் ஆரோக்யமும்
நன்கு செயல்படக்கூடிய புலன்களும் இருந்தால் தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்
ஆகையால் பார்க்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலான வற்றில் அதிகாரம் கிடையாது
ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு -பெண்ணுக்கும் உண்டு
ஆனால் அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது
இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண்டும் –

அத்யாயம் 7-8-அதி தேசம்
அதி என்றால் மீதூர்ந்து -கடந்து -தாண்டி என்று பொருள்
தேசம் என்றால் போதித்தல் அறிவித்தல்
அதி தேசம் -கடந்து போதித்தல்
ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை அதைக் கடந்து மற்ற விக்ருதி யாகங்களும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதி தேசம் என்று பெயர்

வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் -இதி கர்தவ்யதா -செயல்முறை –
தான் செய்யும் உபகாரத்தை மூலமாக வேறு இடங்களுக்குச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்

எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த
ஸத்ருசமான -ஒற்றுமை யுடைய மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ
அந்த சொல் தொடர் அதி தேசம் என்று அழைக்கப்படுகிறது –

அத்யாயம் –9-ஊஹம்
ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட ஒரு செயல் விக்ருதி யாகத்தில்
வேறு ஒன்றைக் குறித்து செய்யப்படுவதற்கு ஊஹம் என்று பெயர்
ப்ரக்ருதி யாகத்தில் இருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதி தேசம் செய்யும் பொழுது
அந்த அங்கம் விக்ருதியில் வேறொரு பொருளைக் குறித்தும் செய்யப்படலாம்
இதற்கு ஊஹம் என்று பெயர்

ஸம்ஸ்காரத்தில் ஊஹம்
மந்திரத்தில் ஊஹம்
சாமத்தின் ஊஹம்
என்று மூன்று வகைகள் உண்டு

அத்யாயம் -10-பாதம் –
ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்
அதி தேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம்
அந்தச் செயலை முழுவதுமாக விடுவது பாதம் –
இது மூன்று காரணங்களால் ஏற்படலாம்
ப்ரத்யாம் நாநம் -முரண் பட்ட வேறே ஒரு கட்டளை
அர்த்த லோபம் -பிரயோஜனம் இன்மை
ப்ரதி ஷேதம் -செய்யாதே என்ற கட்டளை

அத்யாயம் -11- தந்திரம் -பிரயோகத்தைப் பற்றிய விசாரம்
தந்திரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரு முறை அனுஷ்டித்தல்
பிரயோக விதியானது அங்கங்களையும் பிரதானங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து நமக்கு ஒரு சேர்க்கை தோற்றுகிறது
அச்சேர்க்கை ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும் ஆனால் எங்கு அது இயலாதோ
அங்கு இடைவிடாமல் அடுத்து அடுத்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது
ஆனால் எங்கு எங்கு முடியுமோ அங்கெ சேர்த்தே அனுஷ்ட்டிக்க வேண்டும்
இதுவே தந்திரம்
1-பிரதான யாகங்களில் தந்திரம் -வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களில் ஒரே நொடியிலே சேர்த்து செய்ய முடியா விட்டாலும்
ஒரே தேவதைக்காகச் செய்யப்படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்து செய்யலாம் இது தந்திரம் ஆகும்
2-அங்கங்களுக்குள் தந்திரம் -பல யாகங்களை அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது அவற்றுள்
காலத்தாலோ தேசத்தாலோ எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால் வேறுபாடு அறியாத படியாலே
அந்த செயலை ஒரே முறை செய்வதன் மூலம் அனைத்து யாகங்களும் உதவலாம்
இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும் –

அத்யாயம் -12–ப்ரஸங்கம்
ஒரு யாகத்துக்கு தன் அங்கம் ஒன்றில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி
வேறே ஒரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது
எடுத்துக்காட்டு –
அக்னீ ஷோ மீயம் யாகம் -தர்ச பூர்ண மாசத்தில் இந்திரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின் விக்ருதி ஆகும்
அந்த அக்னீ ஷோ மீயம் யாகத்துக்கு அங்கமாக புரோடாச யாகம் உள்ளது
அதுவும் தர்ச பூர்ண மாசத்தின் விக்ருதி தான்
தர்ச பூர்ண மாசங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிறபடியால் அதி தேசத்தின் மூலம்
இந்த அக்னீ ஷோ மீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கு கூட ப்ரயாஜங்கள் அங்கமாகின்றன –

பாட்ட மீமாம்சையில் ஆறு பிரமாணங்கள்
1-ப்ரத்யக்ஷம் -புலன்களுக்கும் பியருள்களுக்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
2–அனுமானம் -ஒரு பொருள் மற்ற ஒரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதுக்கு வியாப்தி என்று பெயர்
இப்படி வியாப்தி உடைய பொருளை நாம் ஓர் இடத்தில் கண்டால் மற்ற ஒரு பொருள் இருப்பதை ஊஹித்து அறிகிறோம் –
புகை நெருப்பு மலைமேல் போல்
3- சப்தம் -சொற்களுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு -சக்தி -பதார்த்த ஸ்மரணம்–வாக்யார்த்த ஞானம் –
4-உப மானம் -சத்ருஸ்ய ஞானம்
5-அர்த்தா பத்தி – பொருந்தாத இரண்டு பிரமாணங்களை பொருந்த வைக்க ஒரு விஷயத்தை கல்பித்து தான் அர்த்தா பத்தி
எது பொருந்தாமல் இருக்கிறதோ அது உப பாத்யம்
அதை பொருந்த வைக்க எது கல்பிக்கப் படுகிறதோ அது உப பாதகம்
6-அநுப லப்தி -முதல் ஐந்து பிரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளை பற்றின அறிவு ஓர் இடத்தில்
நமக்கு ஏற்பட வில்லை என்றால் அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று அறிகிறோம்
உப லப்தி -என்றால் அறிவு
அநுப லப்தி என்றால் அறிவு தோன்றாமை
ஆகவே அறியக்கூடிய ஒரு பொருளை பற்றின அறிவு தோன்றாமல் இருப்பதே அநுப லப்தி

பாட்ட மீமாம்சையில் ஐந்து பதார்த்தங்கள்
1- த்ரவ்யம் –
ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் காலம் திக்கு ஆத்மா மனஸ் தமஸ் ஸப்தம் என்ற 11 த்ரவ்யங்கள்
தேஜஸ் அபாவம் தமஸ் நியாய மதத்தில்
சப்தம் ஆகாச குணம் நியாய மாதத்தில்
இவர்கள் இத்தை த்ரவ்யம் என்கிறார்கள்
ஒன்பது த்ரவ்யங்கள் நியாய மாதத்தில்

2-ஜாதி சாமான்யம் என்ற பொதுத் தன்மை -குடத் தன்மை மாட்டுத் தன்மை போல்வன

3-குணம் என்ற பண்புகள் -இவர்களும் 24
நியாய -தர்மம் அதர்மம் சப்தம் மூன்றையும் விட்டு
மீதி 21 இவர்கள் கொண்டு
இவற்றுக்குப் பதில்
ப்ராகாட்யம்
த்வனி
சக்தி

மீமாம்ஸா தகர்சனத்தில் 24 குணங்கள்
1-ரூபம் -நிறம்
2-ரஸம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -குளிர்த்தி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு உணர்ச்சி
5-சம்க்யா-எண்ணிக்கை
6-பரிமாணம் -அணு மஹத் விபு போன்ற அளவுகள்
7-பிருத்தக்த்வம் -வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு முதுமை
11-அபரத்வம் -அருகில் இளைமை
12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம் -நீர்மை
14-ஸ்நேகம் -பசைத்தன்மை
15-புத்தி -அறிவு
இது நியாய மதத்தில் ப்ரத்யக்ஷம்-மனசால் அறியப்படுவது
மீமாம்சையில் இதை அனுமானம் தான் செய்யலாம்
16-ஸூகம் -ஐஹிகம் -ஆமுஷ் மிகம் -ஸ்வர்க்கம் -அப வர்கம் -மூ வகைப்பட்டது
17- துக்கம் – ஐஹிகம் -ஆமுஷ் மிகம்-நரகம் -இரண்டு வகைப்பட்டது
18-இச்சை -ஆசை
19-த்வேஷம் -வெறுப்பு
20-பிரயத்தனம் -முயற்சி
21-சம்ஸ்காரம் -வேகம் பாவனை ஸ்திதி ஸ்தாபனம் என்று மூன்று வகைப்படும்
22-த்வனி இது வாயுவின் குணம் -நம் தொண்டை வாயின் வியாபாரத்தால் வாயுவில்
இந்த குணம் ஏற்பட்டு இது தான் சப்தத்தை வெளிப்படுத்து கிறது
23-ப்ராகட்யம் -ஒரு பொருளில் உள்ள அறியப்படுதல் -பயின்ற குணம் –
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்படுவதை நாம் அனுமானம் செய்யலாம்
24-திறமை -இது இரண்டு வகைப்படும்
லௌகிக சக்தி -நெருப்புக்கு எரிக்கும் சக்தி நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி போல்வன
வைதிக சக்தி ஜ்யோதிஷ்டோமம் முதலானவற்றுக்கு ஸ்வர்க்கம் கொடுக்கும் சக்தி போல் வன

4-கிரியை என்ற செயல்
கர்மம் கிரியை செயல்
இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும்
விபு த்ரவ்யங்களால் நகர முடியாதே
இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது
உத்ஷேபநம் மேலே செல்லுதல் போல்வன -நியாய மதம் போலவே
சம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது –

5-அபாவம் என்ற இன்மை
ப்ராபகரர்கள் அபாவம் ஏற்க வில்லை

ப்ராக் அபாவம்
ப்ரத்வம்ஸா அபாவம்
அத்யந்த அபாவம்
அந்யோன்ய அபாவம்

இது பிரபாகர் மீமாம்சகரால் எபிற்கப்படுவது இல்லை
பாட்ட மீமாம்ஸகர்கள் அநுப லப்தி ப்ரமாணத்தால் இது அறியப்படுகிறது -க்ரஹிக்கப் படுகிறது – என்பர்

நியாய மதத்தில் ஏற்கப்பட்ட
விசேஷம்
சமவாயம்
பதார்த்தங்களை இவர்கள் ஏற்க வில்லை –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — நியாய சாஸ்த்ரம்– பாடம் -40–

August 5, 2021

பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்

நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில

வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய

வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க

வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –

நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்

நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-

ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை

வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்

வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்

ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி

நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை

நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்

அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்

ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –

பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை

1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –

பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு

2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு

3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்

4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது

பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –

குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –

5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது

அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்

நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –

பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்

ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –

6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –

அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது

இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்

ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது

இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்

ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –

யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு

அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –

ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்

அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –

அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்

உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு

ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்

வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி

ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –

இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –

அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –

இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

August 5, 2021

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -21-30 —

August 5, 2021

பாடம் -21-ஆத்மா –
ஆத்மா பொதுச்சொல்லை அறிந்து பின்பு ஜீவாத்மா பரமாத்மா பாகுபாட்டை அறிவோம் –
ஆத்மா -நான் என்கிற அறிவுக்கும் பேச்சுக்கும் விஷயமாக இருப்பவர் -இலக்காக இருப்பவர் –
நான் என்கிற அறிவும் சொல்லும் ஆத்மாவைக் குறிக்கும் –நம் உடலை அல்ல
தேக ஆத்மா விபாகம் விரிவாக பின்பு பார்ப்போம்
ஆத்மா ஞானம் என்ற பொருளால் ஆக்கப்பட்டது —
மண்ணால் குடங்களும் -தங்கத்தால் ஆபரணங்களும் -பஞ்சால் துணிகளும் -ஆக்கப்பட்டவை போலே ஆத்மா ஞானத்தாலேயே ஆக்கப்பட்டது –
உப்புக்குக் கட்டி எங்குமே உப்பு மயமாக இருப்பது போல் ஆத்மாவும் முழுவதுமே ஞான மயமாகவே இருக்கும் –
நியாய மதத்தின் படி ஞானம் குணமே-தன்மையே தவிர – த்ரவ்யம்-பொருள் – அல்ல –
ஆனால் வேதாந்தப்படி ஞானம் தனியாக த்ரவ்யம்
ஞானம் – ஞானம் நகரு கிறது -விரிகிறது சுருங்குகிறது –இது போல் செயல்கள் த்ரவ்யத்துக்குத் தானே இருக்க முடியும்
தன்மை குணத்துக்கு கூடாதே –ஆகவே மண் தங்கம் பஞ்சு போல் இதுவும் த்ரவ்யமே
ஆத்மாக்கள் கோடிக்கணக்கானவை –
தங்க துகள்கள் தங்கத்தாலே ஆனது போல் ஆத்மா ஞானத்தால் ஆன ஸூஷ்மமான -நுண்ணியதாக பொருள் –

ஆத்மா ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவர் –
ஜடம் -தானாக பிரகாசிக்காது
அஜடம் -தானாகப் பிரகாசிக்கக் கூடியது -இதுவே ஸ்வயம் பிரகாசம் –
இங்கு பிரகாசம் -ஒளி விடுதல் என்கிற பொருளில் இல்லை -தோற்றுதல் என்கிற பொருளில் உண்டு –
குருவின் உபதேசத்தால் எனக்கு அர்த்தம் பிரகாசிக்கிறது தோற்றுகிறது -என்னுமா போலே -தெளிவாக தோற்றுகிறது என்று பொருள்
தோற்றுதல் -வ்யவஹார யோக்யத்வம் -தகுதி உடையதாக இருத்தல் -வியவஹாரம் பேச்சு செயல் –
குடத்தைப் பற்றி வ்யவஹாரம் செய்கிறேன் என்றது குடத்தைப் பற்றி பேசுகிறேன் -அல்லது குடத்தை கையிலே வைத்து உள்ளேன் போல் –
அறியாத பொருளைப் பற்றி வியவஹாரம் செய்ய முடியாதே –
அறியப் படுவதாவது -அறிவுக்கு விஷயமாதல் -இலக்கு ஆதல் –
ஆக
1- ஒரு பொருள் முதலில் அறிவுக்கு விஷயம் ஆகிறது
2- இதனால் அது பிரகாசம் அடைகிறது -தோற்றுகிறது -வியவஹாரம் செய்ய தகுதி யாகிறது –
3- அந்த வியவஹாரம் செய்யப்படுகிறது -பேசப்படுகிறது -கையாளப் படுகிறது –

எனவே ஒரு பொருள் பிரகாசிக்க -அது முதலில் அறியப்பட வேண்டும் –
ஒரு குடம் அறியப்பட வேண்டும் என்றால் ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தை
கண் மூலமாக வெளியே செல்ல வைத்து –
வெளிச்சத்தின் உதவியோடு அத்தை அறிய வேண்டும் –
ஆகவே ஒரு குடத்துகை அறிய கண் வெளிச்சம் ஞானம் போன்றவற்றின் உதவி தேவை
ஆகவே குடம் ஜடம் -தானாகாத் தோற்றாத த்ரவ்யம் -பொருள்
உலகப் பொருள்கள் அனைத்துமே இப்படி ஜடம் -தானாகாத் தோற்றாதவை –

இப்பொழுது ஞானம் -என்ற த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால்
அறிவைப்பற்றிய வ்யவஹாரம் -எனக்கு இந்த அறிவு ஏற்படுகிறது -நான் இதை அறிகிறேன் போன்ற பேச்சு வர
அறிவு முதலில் பிரகாசிக்க தோற்ற வேண்டும் –
அறிவு அறியப்பட வேறே ஒரு பொருளின் உதவி வேண்டாம் -அறிவு தோன்றும் போது அத்துத்தானாகவே தன்னையும் அறிவிக்கிறது
விளக்கு இருட்டையும் போக்கி -தன்னைத்தானே பிரகாசிப்பது போல் -அறிவும் மற்றப் பொருள்களையும் பிரகாசப்படுத்தி தானும் பிரகாசிக்கும் –
ஆகவே அறிவு அஜடம் -ஸ்வயம் பிரகாசம் -தானாகவே தோற்றுவது –
ஆத்மாவும் ஞானத்தால் ஆக்கப்பட்ட பொருள் ஆதலால் -ஸ்வயம் பிரகாசம் -அஜடம் –

ஆத்மா ப்ரத்யக்
உலகப்பொருள்கள் ப்ரத்யக் பராக் இரண்டு வகைப்படும் –
பராக் -வேறே ஒருவருக்குத் தோற்றம் அளிக்கும் பொருள்
ப்ரத்யக் -தனக்குத் தானே தோற்றம் அளிக்கும் பொருள் –
குடம் துணி போன்றவற்றை அறிவைக் கொண்டே ஆத்மா அறிகிறார் -குடம் தன்னைத்தானே குடம் என்று அறியாது –
ஆத்மா தன்னைத்தானே அறிகிறார் -நான் -நாம் -சொல்வதால் =நம்மை நாம் அறிகிறோம் -என்பது விளங்கும் –
ஆகவே ஆத்மா ப்ரத்யக் –
ஒரு பொருள் பேசப்பட வேண்டும் என்றால் அது அறியப்பட வேண்டும் –அறிவுக்கு விஷயமாக வேண்டும் –
நான் நாம் சொல்லும் பொழுது -நம்மைப் பற்றியே பேசுகிறோம் –
இதற்கு முன் ஆத்மா என்ற ஆத்மா அறிவுக்கு விஷயமாக ஆகி இருக்க வேண்டும் —
அது வேறே ஒரு அறிவு அல்ல -ஆத்மா என்ற அறிவு தான்
ஆத்மாவே அறிவு வடிவமானவர் –
ஞானம் என்றால் அதற்கு விஷயம் இருக்க வேண்டும்
ஆத்மா என்ற ஞானத்துக்கு எது விஷயம் என்றால் தான் மட்டுமே தான் விஷயமாக ஆகிறது –

ஆத்மா சேதனர் –
சைதன்யம் என்றால் அறிவு -ஞானம் என்று பொருள்
சைதன்யம் உடைய பொருள் சேதனம் என்று சொல்லப்படுகிறது –
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம் -இனி ஆத்மா ஞானத்தையும் உடையவர் என்பதையும் பார்ப்போம் –
பஞ்ச பூதங்களில் தேஜஸ்ஸூ ஓன்று -நெருப்பு தீபம் -போன்றவை தேஜஸ்ஸால் ஆனவை –
தீபம் ஓர் இடத்தில் இருந்தாலும் -ஒளி சுற்றும் பரவுகிறது –
ஒளி விளக்கின் குணம் என்று சொல்ல முடியாதே – குணம் ஓர் இடத்தை விட்டு நகராதே –
சுற்றி இருக்கும் ஒளி -பிரபா -அதுவும் தேஜஸ்ஸாலே ஆன த்ரவ்யம் –
எனவே தீபம் பிரபை -இரண்டு த்ரவ்யங்கள் -இரண்டுமே தேஜஸ்ஸாலேயே ஆனவை –
பிரபை எப்பொழுதும் தீபத்தையே அண்டி இருக்கும் -தனியாக இருக்க முடியாது –
தீபம் அழிந்தால் சுற்றி இருக்கும் பிரபையும் அழிந்து விடுமே –
அதே போல் இங்கும் ஞானம் -என்று ஒருவகையான த்ரவ்யம் -அதனால் ஆக்கப்பட்ட இரண்டு பொருள்கள் –
முதல் பொருள் தீபத்தை தனது ஸ்தானத்தில் கொண்ட ஆத்மா -அணுவாக ஓர் இடத்தில் இருப்பார் –
தீபத்தை அண்டி இருக்கும் பிரபை போலே ஆத்மாவையே ஆஸ்ரயித்து இருக்கும் – மற்றை ஓரு ஞானப் பொருள் –
அது தான் தர்ம பூத ஞானம் –ஆத்மாவின் அறிவு -சைதன்யம் –
இந்த அறிவு த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவினுடையபிரிக்க முடியாத தன்மை ஆகும்
ஞானமே வடிவான ஜீவாத்மா ஞானத்தையும் உடையவராகவும் இருக்கிறார் –

அறிவு -தர்ம பூத ஞானம் -சைதன்யம் -ஞானம் வடிவு -ஸ்வயம் பிரகாசம் -பராக் -அசேதனம் –
ஆத்மா -ஞானமே வடிவானவர் -அதனாலே -ஸ்வயம் பிரகாசம் -ப்ரத்யக் –சேதனம் –
ஆத்மா ஞானத்தை உடையவர் –அதனால் சேதனம் –
தன்னைத்தானே அறிபவர் -ஆகவே ப்ரத்யக்
அறிவு என்பதும் ஞானமே வடிவானது -எனவே இதுவும் ஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல -எனவே அசேதனம்
அறிவு தானே அறியாது-ஆத்மாவுக்கு அறிவிக்கும் -ஆகவே பராக்
குடம் ஞான வடிவம் ஆனது அல்ல -எனவே அஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல –எனவே அசேதனம் –
குடம் தான் தன்னை அறியாது – ஆத்மாவால் தான் அறியப்படும் -ஆகவே பராக் –

ஆத்மாவின் லக்ஷணம்
இப்படிப்பட்ட ஆத்மாவின் லக்ஷணங்கள்
1-ப்ரத்யக்காய் இருத்தல் -தன்னைத்தானே அறிதல்
2-சேதனனாய் இருத்தல் -அறிவுடைய பொருளாக இருத்தல்
3-சரீரத்வம் -உடலைக் கொண்டதாக இருத்தல்

இந்த லக்ஷணங்கள் அனைத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவானவை –

ஜீவாத்மாவின் தனிப்பட்ட லக்ஷணம் என்ன என்றால்
1- அணுவாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -அணுத்வே சதி சேதனத்வம்
பரமாத்மா அணு அல்ல -விபு -உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடியவர் -எனவே அவருக்கு இது பொருந்தாது –
2- இயற்கையான அடிமையாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -ஸ்வாபாவிக சேஷத்வே சதி சேதனத்வம் –
பரமாத்மா தன்னிடம் அதிகமான பக்தி உடையவர்களுக்குத் தான் ஆசைப்பட்டு அடிமை செய்கிறான்
ஆனால் அது பக்தியால் வந்த அடிமைத்தனமே தவிற இயற்கையானது அல்ல –

எனவே இயற்கையான அடிமைத் தனத்தை உடைய அறிவாளி ஜீவாத்மா மட்டுமே –

————-

பாடம் –22- ஜீவாத்மாவின் தனித்தன்மை

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ ஸித்தி த்ரயத்தில் ஆத்மாவின் தனித் தன்மையை விளக்கி அருளுகிறார்

சித்தி த்ரயம் -ஜீவாத்மா -ஞானம் -ஈஸ்வரன் மூன்றையும் ஆத்ம சம்வித் ஈஸ்வர-காட்டி அருளும்
ஆத்ம சித்தியில் -ஸங்க்ரஹ ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன

அறிவால் ஆக்கப்பட்ட ஆத்மாவே தானே
தீ -ஸம்விக் -இரண்டு வகை ஞானம்
விளக்கு பிரபை போல்
ஆத்மா -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம்
ஞானமும் ஒரு த்ரவ்யம் தகானே வேதாந்தத்தில்

நான் -என்று குறிக்கப் படுபவர் ஜீவாத்மா என்பதில் சந்தேகம் இல்லை –
அவர் எப்படிப்பட்டவர் என்பதிலே பல விவாதங்கள் உண்டு
உடலே ஜீவாத்மா
புலன்களே ஜீவாத்மா –
மனதே ஜீவாத்மா
பிராண வாயுவே ஜீவாத்மா
உலகப் பொருள்களின் அறிவே ஜாவாத்மா
இந்த வாதங்களை முறி அடித்து அருளவே ஸ்வ இதர விலக்ஷணன் ஜீவாத்மா என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்
தேகம் என்றால் உடல்
இது என்னுடைய உடல் என்பதால் உடலை விட்டு வேறுபாடு தெளிவு
பிராணன் என்பது நம்முடைய மூச்சுக் காற்று -ஆகவே ஆத்மா பிராணனை விட பிராணனை விட வேறுபட்டது என்பது தெளிவு
நான் கண்ணால் காண்கிறேன் மூக்கால் முகர்கிறேன் என்பதால் புலன்களில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு –
தீ -என்றால் அறிவு -நான் அறிவு என்று சொல்லாமல் -அறிவுடையவன் நான் என்கிறோம் -ஆகவே அறிவும் ஜீவாத்மாவும் வேறு

அடுத்து -அநந்ய சாதன -என்கிறார்
அந்நியம் -என்றால் வேறே ஓன்று
அநந்யம் -என்றால் வேறே அல்லாதது -அதாவது தானே -என்று பொருள் –
சாதன -என்றால் அதனால் பிரகாசிப்பது
எனவே அநந்ய சாதன -என்றால் வேறே ஒரு பொருளின் உதவி இல்லாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடிய வஸ்து -என்றதாயிற்று
இத்தையே ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -என்கிறோம் –
ஒரு குடம் அறியப் பட வேண்டும் என்றால்
அறிவு -கண் -வெளிச்சம் இவை அனைத்தும் தேவை -ஆகவே அது ஜடம்-தானாகப் பிரகாசிப்பது இல்லை
ஆனால் ஆத்மா அப்படி அல்ல
தானாகவே பிரகாசிக்கிறார்
நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருக்கிறார் -ஆகவே ஆத்மா தோற்ற எந்தப் பொருள்களின் உதவியும் தேவை இல்லை –
இதை அறிய பல பிரமாணங்கள் உள்ளன
1-ப்ரத்யக்ஷம் –
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உள் புலன்களோ வெளிப்புலன்களோ இயங்காது
அப்போதும் நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருப்பார்
2-ஸாஸ்த்ரம்
அத்ர அயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதி என்று வேதம் கூறும்
ஸ்வயம் ஜ்யோதி என்றால் தானாகவே பிரகாசிக்கும் என்றதாயிற்று –
3-அநு மானம்
ஆத்மா ஸ்வயம் ப்ரகாசமானவர் -ஞானமான படியால் -நம் அறிவைப் போலே -என்கிற
அனுமானத்தாலும் இத்தை அறியலாம்
ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்லோகம்
தத்வ முக்த கலாபம்
கிஞ்ச வேதாந்த த்ருஷ்ட்யா ஞானத்வாத் ஏஷ தீ வத்– ஸ்வ விஷய த்ருஷ்ணா
நிரபேஷ ஸ்வ ஸித்தி –அறிவு பிரகாசம் -வியவஹாரத்துக்கு தகுதி ஆவதே
தன்னைப் பற்றிய அறிவு தானாகவே வெளிக்காட்டும்
இரண்டு ஞானங்கள் உண்டே –
வேதாந்த ஸாஸ்த்ரத்தில் ஞானம் என்று வழங்கப் படுபவை எல்லாம் ஸ்வயம் ப்ரகாசங்கள்
ஆத்மாவும் ஞானம் எனப்படுகிறார்
ஆகவே அவரும் அப்படியே —

——-

பாடம் –23- ஜீவாத்மாவின் பண்புகள்

நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -நியாயக் கூட்டம் -வேத வியாசர் –தீர்ப்பை எங்குமே கொள்ளலாமே –
சகல உபநிஷத்துக்களையும் பொருத்தி பார்த்து -சம்யக் நியாய க்லாபேண மஹதா பாரதம் –
உப ப்ரும்ஹத வேத வேதார்த்த விஷயீ கரணம்

ஆத்மா நித்யமானவர்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ சித்தி த்ரய ஸ்லோகம் முதல் பாதி கீழே பார்த்தோம் –
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)

இரண்டாம் பாதியில் ஆத்மாவின் குணங்களை அருளிச் செய்கிறார்

நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

புத்த மதத்தில் ஆத்மா க்ஷணிகமான -ஒரு நொடியில் அழிந்து விடக்கூடிய அறிவுகளின் தொடர் தான் ஆத்மா என்பர்
ஆகவே இதுவும் அழியக் கூடியது என்பர்
இத்தை மறுக்கவே -ஆத்மா நித்யம் -பிறப்பு இறப்பு அற்றவர் என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார்
முதலில் ஆத்மா க்ஷணிகம் அல்ல -நிலையானது என்பதற்கு பிரமாணம் பார்ப்போம்
நேற்று குடத்தைப் பார்த்த நானே இன்று அதைத் தொடுகிறேன் -என்கிற அறிவு ஏற்படுகிறது –
ப்ரத்யபிஞ்ஞா என்கிற இந்த அறிவால் நேற்று பார்த்தவருக்கு இன்று தொடுபவரும் ஒருவரே -என்று அறிகிறோம்
ஆகவே ஆத்மா நிலைத்து நிற்கும் ஒரு பொருளே என்பது தெளிவு –

ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –ஆத்ம அதிகரணம் இது –
ந ஆத்மா ஸ்ருதே –நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-
ந ஆத்மா-ஆத்மா உண்டாவது இல்லை —
ஸ்ருதே–அவ்வாறு ஸ்ருதி சொல்லுகிறபடியால் —
நித்யத் வாச்ச தாப்ய–ஸ்ருதிகளில் இருந்து ஆத்மா நித்தியமான படியாலும் –

ஆத்மா உண்டாவது இல்லை என்று வேதம் நேராக நேரடியாகக் கூறுகிறது –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்
ஞாஜ்ஜ்வ த்வவ் அஜவ் -முதலிய இடங்களில் -(அறிவு உள்ளார் அறிவு குறைவாளர் இருவரையும் பிறப்பிலிகள் )
ஸ்ரீ கீதையில் இதே போல் வாக்கியம் உண்டே –
ந ஜாயதே ம்ரியதே கதாசித்–நாயம் பூத்வா –அஜ நித்ய ஸாஸ்வத புராண –புரா அபி நவ- இத்யாதி
ஸத் கார்ய வாதம் -அவஸ்தா பேதங்கள் உண்டே அசேதனங்களுக்கு

மேலும் ஆத்மா நித்யமானவர் என்றும் கூறுகிறது –
நித்யோ நித்யாநாம்
அஜ நித்ய ஸாஸ்வத அயம் புராண -போன்ற சுருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மா உண்டாவது இல்லை என்று அறியலாம் –
உடலோடு தொடர்பு படுவதே பிறப்பு -அதை விட்டுப் பிரிவதே இறப்பு என்று உலகில் சொல்லுகிறோம் –

ஆத்மா அணுவானவர்
குடம் புத்தகம் போல் நடுவாக அளவாகக் கொண்டால் அது பகுதிகளால் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும் –
எனவே அழிந்தே தீரும்
இது ஒவ்வாத படியால் ஆத்மா நடுவாக அளவு கொண்டது இல்லையே –

உத் க்ராதி-கதி -ஆகதிநாம் –2-3-20—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –ஆத்மா இவ்வுடலில் இருந்து புறப்படுகிறார் என்பதை
தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்றும்
வேறு உலகங்களுக்குச் செல்கிறார் என்பதை
யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மசமேவ தே ஸர்வே கச்சந்தி -என்றும்
அங்கு இருந்து மறுபடியும் திரும்பி வருகிறார் என்பதை
தஸ்மாத் லோகாத் புந ஏதி அஸ்மை லோகாய கர்மணே என்றும் வேதம் கூறுகிற படியால்
புறப்படுதல் செல்லுதல் வருதல் ஆகியவை விபுவான -எங்கும் பரந்துள்ள -பொருளுக்குக் கூடாத படியால் ஆத்மா விபு அல்ல

மேலும்
ஸ்வ ஸப்த உன் மாநாப்யாம் –2-3-23-ஸூத்ரத்தில் கோருகிறார்

வேதம் நேரடியாக ஜீவாத்மா அணு என்று கூறுகிறது
ஏஷ அணு ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் –முதலானவற்றில்

மேலும்
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேய -என்பனவற்றில்
தலைமுடியின் நுனி ஊசியின் நுனி –முதலியவற்றுக்கு சிறியது ஆத்மா என்கிறது –

அவிரோத சந்தனவத்
சந்தானம் ஒரு இடத்தில் பூச உடம்பு முழுவதும் குளிர்வது போல்
இது நம் சித்தாந்தம் அல்ல
வேறே ஒருவர் சித்தாந்தம்
நம் சித்தாந்தம்-
குணாத்வா ஆலோக வத் –2-3-26- அணுவான ஆத்மா உடலில் ஓர் இடத்தில் இருந்தாலும்
அவருடைய தர்ம பூத ஞானம் உடல் முழுவதும் பரவி இருக்கிற படியால் உடல் முழுவதும் உள்ள இன்ப துன்பங்களை அறிகிறார்
ஆபாசத்துக்கு ஸுவ்ரி –50 உடல்களை கொண்டாரே –
இதே போல் முக்தி அடைந்த ஆத்மாவின் அறிவும் உலகம் முழுவதும் பரவி இருந்து அனைத்தையும் அறிகிற படியால்
ச ச அநந்த -அளவற்ற தர்ம பூத ஞானம் விரியும் –
ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்லோகத்தில் -வ்யாபி -என்று அருளிச் செய்கிறார்
விளக்கு ஓர் இடத்திலே இருந்து கொண்டு தன் ஒளியாலே வியாபித்து போலே
ஆத்மா அணுவாக இருந்தாலும் தன் அறிவால் வியாபிக்கிறார் —

ஆத்மாக்கள் பலர்
அடுத்து ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன -என்பதாக
ஆத்மாக்கள் பலர் உள்ளனர் -உலகில் ஆத்மா ஒன்றே என்று சொல்ல முடியாது
வேதம் -தேவ திர்யக் மனுஷ்யேஷு புமான் ஏக வ்யவஸ்தித –என்று
தேவ உடலிலும் மனுஷ்ய உடலிலும் மிருக உடலிலும் ஒரே ஆத்மா உள்ளார் -என்பதின் பொருளை உள்ளபடி அறிய வேண்டும்
எந்த உடலில் எந்த ஜீவாத்மா இருந்தாலும் -அவர்
ஞான வடிவாகவும்
நித்யமாகவும்
அணுவாகவும்
ஸ்வயம் ப்ரகாசராயும் இருப்பர்
சமமான ஒத்தவராக வேறு பாடு இன்றி இருப்பதால் ஒரே ஆத்மா உள்ளார் என்கிறது –
அரிசி மண்டியில் பல வகை மூட்டைகள் அரிசி இருக்க இது ஒரு அரிசி 52 ரூபாய் இது ஒரு அரிசி -60 ரூபாய் –
ஒரே தரத்தோடும் தன்மையோடும் உள்ளதால் ஒரே அரிசி என்கிறோம்
அதே போல் அனைத்து உடல்களிலும் உள்ள ஆத்மாவும் ஒரே தன்மை களைக் கொண்டவையே
தேஷாம் ஆதித்யவத் ஞானம் ப்ரகாசயதி தத் பரம் -முதலான வற்றால் முக்தர்களை பன்மையில் கூறும் –
ஆகவே ஆத்மா பலர் என்பது ஸித்தம்
ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன என்பதால் சரீரம் தோறும் வேறு பட்டவர் -என்றதாயிற்று –
அனைத்து சரீரங்களிலும் ஒரே ஆத்மா இருந்தால் அவரே உலகில் இருக்கும்
அனைத்து இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடும் –

ஆத்மா ஆனந்த வடிவானவர்
ஸ்லோகத்தில் கடைசியில் ஸ்வத ஸூகீ -இயற்கையாகவே ஆனந்தமாகவே இருப்பவர் -என்று பொருள்
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம்
ஞானம் என்று ஓன்று இருந்தால் அதுக்கு விஷயமாக ஓன்று இருக்க வேண்டும்
அது பிடித்ததாக இருந்தால் அந்த ஞானம் ஸூகம்
பிடிக்காததாக இருந்தால் அதுவே துக்கம்
அதே போல் பயம் வெட்கம் கோபம் சந்தேகம் உறுதி போண்டாவை ஞானத்தின் வெவ்வேறு நிலைகள் தான்
எனவே ஆத்மா என்பவர் ஞானமே வடிவானவர் என்றால் அந்த ஞானத்துக்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் –
ஆத்மா என்கிற ஞானத்துக்கு உலகப் பொருள்கள் விஷயம் ஆக மாட்டா -அதுக்கு தான் மட்டுமே விஷயமாக இருக்கும்
எனவே ஆத்மா என்பது தன்னையே எப்பொழுதும் அறியக்கூடிய ஒரு ஞானம் என்று சொல்ல வேண்டும்
தான் தனக்கு எப்பொழுதும் விரும்பக் கூடியவராக அனுகூலராகவே இருப்பார்
யாரும் தன்னையே வெறுப்பது இல்லையே
எனவே ஆத்மா என்பது தன்னைப் பற்றிய ஒரு ஞானம் -தான் தனக்கு எப்பொழுதும் விருப்பமானவர் –
ஆகவே ஆத்மா என்பது விரும்பப்படும் பொருளை பற்றிய ஞானம்
இதுவே ஸூ கம் -ஆனந்தம்
எனவே ஆத்மா ஆனந்தமே வடிவானவர் என்கிறோம்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது எந்தப் பியருளையும் அறிவது இல்லை
ஆனால் விழித்ததும் ஸூகமாகத் தூங்கினேன் என்கிறோம்
தூங்கும் பொழுது எந்த ஸூகத்தை அனுபவித்து இருக்க முடியும் –ஆத்மா என்கிற ஸூகத்தை மட்டும் தான் –
அதனால் தான் ஆத்மா இயற்கையிலே ஸூகமாய் இருப்பவர் என்று சொல்கிறார்
துக்கம் எல்லாம் சம்சாரத்தால் தான் வருகிறது –

———

பாடம் -24—ஜீவாத்மாவின் ஞாத்ருத்வம்

ஞானமே வடிவானவர் என்றும் ஞானம் -அறிவுடையவர் என்றும் பார்த்தோம் -அந்தர் ஜோதி புருஷ –
சாங்க்யர் -கபிலர் -புத்தர் -இருவரும் ஞானம் வடிவானவர் மட்டும் தான் என்பர் -ஞானம் என்ற பண்பு கிடையாது என்பர்
நியாய மதத்தின் படி ஞான வடிவானவர் அல்ல
கல் கட்டை போல் ஜடமான பொருள் தான் -ஆனால் ஞானம் என்ற பண்பு-குணம் -உண்டு என்பர் –
இவை இரண்டுமே தவறு -ஆத்மா ஞான வடிவானவரும் ஞானம் உடையவருமாகவே உள்ளார் என்று
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கூறுகிறார்
ஞா அத ஏவ –2-3-19-(ஞாதி கரணம் -இந்த ஸூத்ரம் -பெயரால் இந்த அதிகரணம் )
எந்த வேதத்தின் அடிப்படையில் நித்யமானவர் என்று கூறப்படுகிறாரோ அதே வேத அடிப்படையில்
ஆத்மா அறிவாளி அறிவுடையவர் ஞாதா

1-அத யோ வேத இதம் ஜிக்ராணி இதி ஸ ஆத்மா-
எவன் நான் நுகர்கிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா
2-ய அயம் விஞ்ஞான மய ப்ராணேஷூ ஹ்ருதி அந்தர் ஜ்யோதி புருஷ
ஆத்மா ஞானம் என்ற குணத்தை யுடையவராய் ஹ்ருதயத்தில் உள்ளே ஞான வடிவாகவே இருக்கிறார் –
ஜ்யோதி என்று ஸ்வயம் பிரகாசம்
இவை போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அறிவுடையார் – என்று கூறுகின்றன
உலக வாழ்விலும் நான் அறிவுடையான் என்று தானே அறிகிறோம் –

இந்த பிரமாணங்கள்
ஞானம் வேறு -ஆத்மா வேறு -ஞானத்தை யுடையவர் ஆத்மா என்று ஸ்பஷ்டமாகக் கூற வில்லை –
எனவே ஞானமே ஆத்மா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் –
அதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
வியதிரேக கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27-
மணம் உடையது ப்ருத்வீ என்று சொல்லும் பொழுது
ஆறாம் வேற்றுமை மணத்துக்கும் பிருத்வீயுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது –
அதே போல்
ஞாநாதி ஏவ அயம் புருஷ–முதலான வேத வாக்கியங்களில் ஞானம் யுடையவர் ஆத்மா – என்று சொல்லுகிற படியால்
ஞானம் வேறு என்றும் ஆத்மா வேறு என்றும் ஞானத்தை யுடையவர் ஆத்மா என்றும் அறிகிறோம் –

இதே போல் ப்ரஹ்மம் ஆனந்த மயன் என்றும் வேதம் சொல்லும் ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவிட முடியாதே –

இங்கே பராசர பட்டர் —
நான் அறிவுடையவன் என்னும் பொழுது ஆத்மாவும் அறிவும் வெவ்வேறாகவே தோற்றினாலும் இரண்டே ஒன்றே என்று கொண்டால்
குடத்தை நான் அறிகிறேன் -என்னும் பொழுது நானும் குடமும் ஒன்றே-வேறுபோராடு தோற்றம் பொய்யானது என்றும் சொல்லலாமே –
ஆகவே ஆத்மாவுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்

இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை என்று நினைத்தால் -மேலும் வேத வியாசர் கூறுகிறார்
ப்ருதக் உபதேசாத் –2-3-28-
நேரடியாகத் தன் சொல்லைப் பயன்படுத்தியே அறிவானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சொல்லப் பட்டுள்ளது வேதத்தில்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
அறிவு வடிவமான ஆத்மாவினுடைய அறிவுக்கு அழிவே கிடையாது என்று இதற்குப் பொருள் –

இங்கு ஒரு கேள்வி எழலாம்
ஆத்மா அறிவுடையவராக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே பல இடங்களில் கூறுவது எதனால் –
யோ விஞ்ஞானே திஷ்டன்
ஞானம் எனப்படும் ஆத்மாவின் மேல் எந்த பரமாத்மா இருக்கிறாரோ -என்றும்
விஞ்ஞானம் யஜ்ஜம் தநுதே
ஞானம் யாகத்தைச் செய்கிறது
போன்ற இடங்கள் உண்டே —
ஞான ஸ்வரூபம் ஆத்மா விஷ்ணு புராணமும் சொல்லுமே
இங்கு அறிவு என்றே -அறிவாளி -என்று சொல்லாமல் உள்ளதே –

இதற்கு வேத வியாசர் பதில் உரைக்கிறார் –
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஞ வத் –2-3-29-
ஞானத்தை சாரமான குணமாக ஆத்மா கொண்டு இருக்கிறபடியால் ஆத்மாவை ஞானம் என்றே கூறலாம் –
தவறு இல்லை என்றவாறு –

ஒருவருக்கு ஸாரமான குணம் எதுவோ அவரை அக் குணம் என்றே உலகில் சொல்கிறோமே
நம்மாழ்வாரை கிருஷ்ண பக்தர் என்று சொல்லாமல் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உருவானவர் –
அதே போலவே இங்கும் ஆத்மாவை அறிவே என்பதில் தவறு இல்லை
இங்கே ஸாஸ்த்ரீயமான எடுத்துக்காட்டு காட்டுகிறார் வேத வியாசர்
ப்ராஞ்ஞவத்–என்று பரமாத்வையே
பிரகர்ஷேண ஞானம் -சர்வஞ்ஞன்-அவனையே ப்ராஞ்ஞ என்று வேதம் சொல்லும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் சொல்லும் சுருதி -அறிவுடையார் என்று சொல்லாமல் ஞானம் என்றே சொல்லும்
ஆனந்த வல்லி -மேலே மேலே சொல்லி திரும்பிற்றே –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தை என்று -எவ்வளவு என்று அறிய முடியாதோ
என்று அறிபவன் -ஸ்பஷ்டமாக தன்மை வேறே ப்ரஹ்மம் வேறே என்றும் சொல்லும்
அவன் ஆனந்தம் உடையவராக இருந்தாலும் அவனை ஆனந்தம் என்றே வேதம் பல இடங்களில் கூறும் –
அதே போல் ஞானம் உடையவராக இருந்தாலும் ஞானம் என்றே கூறும்
அவ்விடங்களில் போல் இங்கும் ஸாரமான குணத்தைக் கொண்டே அழைக்கப் படுகிறது –

இங்கு இன்னும் ஒரு கேள்வி எழும்
தூங்கும் பொழுது ஆத்மாவுக்கு ஞானம் இல்லையே -எவ்வாறு இது ஸாரம் என்று சொல்ல முடியும் –
இதுக்கு வேத வியாசர் பதில் அளிக்கிறார்
யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ தத் தர்ச நாத் –2-3-30-என்று
ஆத்மாவிடம் ஞானம் எப்பொழுதும் உண்டு
விழித்து இருக்கும் பொழுது உலகப் பொருள்களை அறிய அது உதவுகிறது தானும் அறியப்படுகிறது

நாம் தூங்கும் பொழுது இந்திரியங்கள் செயல் படாமையால் நாம் வெளிப்பொருள்களை அறிவது இல்லை –
அக்காலத்தில் நம்மிடம் இருக்கும் அறிவு தொற்றுவது இல்லை –
இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேத வியாசர் காட்டுகிறார்
பும்ஸ்த்வாதிவத் து அஸ்ய சத அபி வியக்தி யோகாத் –2-3-31-
என்று எப்படி பிறந்த குழந்தை இடமே ஆண் தன்மை பெண் தன்மை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயசிலே
தான் வெளித் தோன்றுகின்றனவோ
அதே போல் ஆத்மாவிடம் எப்பொழுதுமே இருக்கும் ஞானம் நாம் விழித்து இருந்து மற்றப் பொருள்களை
அறியும் பொழுது மட்டும் தான் தோற்றுகிறது
மற்றப் பொழுதில் தோற்றுவது இல்லை -ஆகவே ஸாரமான குணம் என்று சொல்லத் தட்டில்லை

முன் சொன்ன ஸூத்ரத்தில் –ச -என்ற சொல் –
இது மட்டும் சமாதானம் இல்லை -வேறே ஒன்றும் உண்டு அது என்ன என்றால்
ஆத்மா அறிவுடையவனாக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே எதனால் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு
இப்படி சுற்றி வந்து சமாதானம் சொல்லத் தேவை இல்லை –
ஆத்மா அறிவுடையவராக இருந்து கொண்டு -தானும் ஞானமே வடிவுடையவராக இருக்கிற படியால்
வேதம் அப்படிச் சொல்கிறது என்று எளிமையாக சமாதானமும் சொல்லலாம் -என்று காட்டும் –

—–

பாடம் –25- ஜீவாத்மாவின் கர்தவ்யம் –

ஞாத்ருத்வம் வந்தாலே
கர்த்ருத்வமும்
போக்த்ருத்வமும் வருமே
ஹேய உபாதேய ஞான மூலம் -தத் கர்த்ருத்வ – சிகீர்ஷா -செய்வதில் ஆசை
ஞானம் இச்சா க்ருதி–மூன்றும் உண்டே

கர்த்ருத்வம் -செயல்களை செய்பவராக இருக்கும் தன்மை
போக்த்ருத்வம் -செயல்களின் பயனை அனுபவிப்பராக இருக்கும் தன்மை
முதலில் ஒரு பொருளை அறிகிறோம்
அறிந்து அதில் ஆசையோ வெறுப்போ தோன்றி -பெறுவதற்கோ பிளாக்குவதற்கோ முயல்கிறோம் –
அடுத்து அம் முயற்சியின் பயனை அனுபவிக்கிறோம்
ஆத்மா அறிவுடையவராய் இருப்பதால் கொள்ளத்தக்கது என்றோ தள்ளத்தக்கதோ என்றோ அறிகிறார்
அவரே கர்த்தாவான படியால் பிடித்ததை அடையவும் பிடிக்காதத்தை விலக்கவும் முடியும் –
ஆகவே ஆத்மா -ஞாதா -கர்த்தா -போக்தா என்பதே நம் சம்பிரதாய சித்தாந்தம் –

பூர்வ பக்ஷம் ஆத்மா கர்த்தா அல்ல
கபிலர் -சாங்க்ய மதம் -ஆத்மா கர்த்தா அல்ல -போக்தா மட்டும் தான் –
முக்குணங்களால் ஆக்கப்பட்ட பிரக்ருதியே அனைத்து செயல்களும் செய்கிறது
குணங்களே கார்யங்களை செய்கின்றன என்றும் சொல்வர்
சாங்க்ய மதத்தில் முக்குணம் என்று கொள்ளாமல் -மூன்று த்ரவ்யங்களே -தன்மை அல்ல
ப்ரக்ருதி த்ரவ்யமே மூன்று த்ரவ்யங்களின் கலவை என்பர் –
அவர்கள் வாதங்கள் பின்வருமாறு –

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதன் பொருள் – “கொலை செய்யும் ஒருவர் தன்னைக்
கொலை காரன் என்று நினைத்தாலோ கொலை செய்யப்படும் ஒருவர்
தன்னைக் கொல்லப்பட்டவராக நினைத்தாலோ , அவர்கள் ஆத்மாவின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை
என்று பொருள் ஏன் என்னில் ஆத்மா கொள்வதும் கிடையாது கொல்லப்படுவதும் கிடையாது –
இதிலிருந்து ஆத்மா எந்தச் செயல்களையும் செய்வது இல்லை என்று தேருகிறது

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதன் பொருள் -பிரகிருதியின் குணங்களால் செய்யப்படும் செயல்களை தானே செய்கிறான்
என்று நினைப்பவன் அஹங்காரத்தால் மூடப்பட்டு மயங்குகிறான்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
உடலும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு பிரகிருதி காரணமாகும்
ஸூக துக்கங்கள் அனுபவிக்க ஆத்மா காரணம் ஆவார் –

இப்படி பல பிரமாணங்களால் ஆத்மா கர்த்தா அல்ல பிரகிருதி தான் கர்த்தா என்றும்
ஆத்மா போக்தா மட்டுமே என்றும்
கூறப்பட்டுள்ள படியால் இதுவே சரியானது என்று சாங்க்ய மதம் –

இனி சித்தாந்தம்
இதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் –2-3-33–(கர்த் அதிகரணம் )
ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ரம் என்று சொல்லப்படும் வேதங்கள் பயன் உடையவை ஆவதற்காக –
அறிதல் -செயல் படுதல் -பயனை அனுபவித்தல் -இவை மூன்றும் ஒருவர் இடம் தான் இருக்க முடியும்
என்பதை வைத்து சாங்க்ய மத நிரஸனம் செய்கிறார்
சுவர்க்கத்தில் ஆசை இருப்பவன் ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
முக்தியை ஆசை இருப்பவன் ப்ரஹ்மத்தை தியானிக்க வேண்டும்
போன்ற கட்டளைகள் போக்தாவே கர்த்தா என்பதைக் காட்டும்
ஆத்மா போக்தா என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்
எனவே வேதம் பயன் உள்ளதாக வேண்டும் என்றால் போக்தாவான ஆத்மாவே கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –
ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –கட்டளை இடுவதால் இந்தப்பெயர் -ஒரு செயலில் மூட்டுதல் -ஈடுபடுத்துதல் –
எவர் அறிவுள்ளவரோ அவரைத்தான் வேதம் இத்தைச் செய் இதம் குரு இத்தைச் செய்யாதே -என்று கட்டளை இட வேண்டும்
பிரகிருதி அறிவுடையது அல்ல -எனவே அறிவுடைய ஆத்மா தான் கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர மத தீபிகை போன்றவை இவற்றை சொல்லும்
கர்த்ருத்வம் இல்லை என்றால் இவனுக்கு சஸ்த்ர வஸ்யத்தையும் போக்த்ருத்வமும் குலையும்
சக்தி விபர்யதயாத் –2-3-37- என்றும் இத்தையே சொல்லும் –

பூர்வ பஷத்துக்கு சமாதானம்

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வது இல்லை என்ற கருத்தில் சொன்னது அல்ல
ஆத்மா நித்யமானவர் –அவரை யாராலும் அழிக்க முடியாது
கொல்வது உடலை மாத்திரம் தான் -கொலை செய்பவர் உடலைத்தான் அழிக்கிறார் ஆத்மாவை அல்ல
கொல்லப்படுபவரின் உடல் தான் அழிகிறது ஆத்மா அல்ல -என்பதே இதன் பொருள் –

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதிலும் கண்ணன் சொல்ல வருவது ஆத்மா கர்த்தாவே அல்ல என்பது அல்ல
ஆத்மா தான் கர்த்தா -ஆனால் சம்சாரத்தில் நாம் செய்யும் தினசரி செயல்களுக்கு எல்லாம்
ஆத்மா இயற்கையாக கர்த்தா அல்ல செயற்கையாகத் தான் இவற்றை எல்லாம் செய்கிறார் என்றே இதற்குப் பொருள் –
ஏன் என்றால் இயற்கையாக பாப புண்யங்கள் இல்லாமல் உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவுக்கு
பசி தாகம் துக்கம் போன்றவை இல்லையே -ஆகவே இந்தச் செயல்களைச் செய்யத் தேவை இல்லை
ஒரு உடலை எடுத்துக் கொண்டு முக்குண சேர்க்கை ஏற்படும் பொழுது தான் இவற்றைச் செய்கிறார் என்பதைக் காட்டவே இந்த ஸ்லோகம்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
இங்கும் உடலும் புலன்களும் செயல்பட ப்ரக்ருதியுடன் தொடர்புடைய ஆத்மாவே காரணம் –
இயற்கை நிலையில் இருக்கும் ஆத்மா அல்ல

ஆத்மா ஸ்வ தந்த்ரரா -பர தந்த்ரரா –
தன் இச்சையால் செயல்படுகிறாரா -வேறே ஒருவருக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறாரா –

பூர்வ பக்ஷம்
தானாக யோசித்து -தன் இச்சையால் முடிவு எடுத்து செயல் படுபவர்க்குத் தான் ஸாஸ்த்ரம் கட்டளை இட முடியும்
வேதம் பயன் உள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் ஆத்மா ஸ்வ தந்த்ரராகவே இருக்க வேண்டும் –

ஸித்தாந்தம்
இதற்கு வேத வியாஸர் பதில் அளிக்கிறார்
பராத் து தத் ஸ்ருதே –2-3-40-(பராயத்தா அதிகரணம் )
ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் -செயல்பாடும் தன்மை பரமாத்மாவுக்குக் கட்டுப் பட்டதே -வேதம் கூறுகிறபடியால்

அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
பரமாத்மா ஜீவாத்மாக்குள் புகுந்து அவரை நியமிக்கிறார் -இயக்குகிறார்
சாஸ்தா விஷ்ணு அசேஷ ஜகத் -உன்னைக் கேட்க செய்தவனும்
என்னை திரு நாமம் சொல்லக் செய்தவனும் அவனே -பிரகலாதன் –

ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -யம் ஆத்மா ந வேத
யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தர யமயதி
எவர் ஆத்மாவின் மேல் உள்ளாரோ -எவர் ஆத்மாவுக்குள் உள்ளாரோ -எவரை ஆத்மா அறிவது இல்லையோ –
ஆத்மா யாருக்கு சரீரமோ -எவர் ஆத்மாவை உள் இருந்து இயக்குகிறாரோ அந்த பரமாத்மா

இவை போன்ற பல வேத வாக்கியங்கள் ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றும் –
அவரே ஜீவாத்மாவை இயக்குகிறார் என்றும் -சொல்லப்பட்டுள்ள படியால்
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரர் அல்ல பர தந்த்ரரே –
தனது இச்சையாக செயல்படுவது இல்லை –
பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டு அவரால் இயக்கப்பட்டு தான் செயல்படுகிறார் என்பது தெளிவு –

மனதில் எழும் கேள்விகள்
இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் பல சங்கைகள் எழுமே
1–தன் இச்சையால் செயல்படாத ஜீவாத்மாவுக்கு எதனால் வேதங்கள் உபதேசிக்க வேண்டும் —
எதையும் முடிவு செய்து செயல் பட முடியாதே -வேதங்களுக்கு பிரோயோஜனம் இல்லாமல் போகுமே —

2- பரமாத்மா தூண்டுவாராகில் அந்தச் செயலின் பயனையும் அவரே அனுபவிப்பாரா –
பாப புண்யங்களும் அவருக்குத் தானே சேர வேண்டும் –
ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் எப்படி ஏற்படுகின்றன

3-தீய செயல்களை செய்விப்பான் ஆகில் -அதனால் துன்பப்பட வைப்பான் ஆகில் அவனுக்கு கருணை இல்லையா

4-ஒரு சிலரை நல்ல செயல்களில் தூண்டி புண்யம் பெற வைத்து –
ஒரு சிலரை தீய செயல்களில் தூண்டி பாபம் பெற வைப்பான் ஆகில்
ஒரு தலைப் பக்ஷ செயல் ஆகாதா -ஏன் இந்தப்பாகுபாடு -இது பரமாத்மாவுக்குப் பொருந்துமா

5-இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் தானாகவே யோசித்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா
எனக்கு உள்ள அறிவு வீணாகப் போகுமே

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கவே அடுத்த ஸூத்ரம்
க்ருத ப்ரயத்ன அபேஷஸ்து விஹித ப்ரதி ஷித்த அவை யர்த்யாதிப்ய –2-3-41–

இதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி ராமானுஜர்
எல்லாச் செயல்களிலும் ஜீவாத்மா எடுக்கும் முதல் முயற்சியை எதிர்பார்த்து தான் அந்தர்யாமியாய் இருக்கும்
பரமாத்மா தனது அனுமதியை வழங்குவதில் மூலம் அச்செயலில் நம்மை மூட்டுகிறார் –
இந்த ஒரு ஸ்ரீ ஸூ க்தி நமது அனைத்து சங்கைகளையும் தீர்க்கும் –

ஜீவாத்மா கர்மம் அடிப்படையில் ஒரு உடலை எடுக்கிறார் –
அப்பிறவியில் எத்தனையோ பொருள்களைப் பார்க்கிறார்
முன் பிறவியில் அனுபவித்த விஷயங்களை பொறுத்து அவருக்கு ருசி -விருப்பு வெறுப்புக்கள் -உள்ளன –
அதன் அடிப்படியில் விருப்பமோ வெறுப்போ அடைகிறார்
அடையவோ விலக்கவோ முயற்சி செய்கிறார்
பின்பு அடுத்து அடுத்த முயற்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறார் –

இந்தச் சங்கிலியில் ஒவ்வொரு இலக்கையும் குறித்து முயல் முயற்சியில் -அந்தர்யாமியாக இருந்து
உதாசீனனாக -அலட்சியமாக இருந்து விடுகிறார்
அடுத்த நொடியில் அது ண்பல்ல செயலா தீய செயலா என்று பார்க்காமல் அதைத் தான் அனுமதிக்கிறார்
அவர் அனுமதி இல்லாமல் எந்தச் செயலும் நடக்க முடியாதே –
இந்த இரண்டாவது நிலை -அநுமந்த்ருத்வம் -அனுமதி கொடுத்தல் –

நம் சங்கைகளுக்கு பதில்கள் —
பதில்-1-முடிவு எடுத்து செயல் படும் ஸ்வா தந்தர்யம் நமக்கு உண்டு –
எனவே வேதங்கள் நமக்கு கட்டளை இடுவது சரியே -வீணாகாது

பதில்-2-இருவருக்குப் பொதுவாக ஒரு சொத்து உள்ளது -அதில் ஒருவர் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து
மற்ற ஒரு உரிமையாளரின் அனுமதியைப் பெற்று -அந்த நாட்டின் அரசருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்
அந்த அரசர் மகிழ்ந்து பல நன்மைகளை செய்தார் -அதை அனுபவிக்கும் உரிமை முயற்சி எடுத்தவருக்கே உண்டு –
அனுமதி கொடுத்தவருக்கு கிடையாதே –
அதே போல் செயலைச் செய்ய முடிவு செய்த ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் சேரும்
அனுமதி கொடுத்த மற்ற ஒருவருக்கு கிட்டாதே –பரமாத்மாவுக்கு ஒரு குற்றமும் வராதே –

பதில் -3-தீய செயலை செய்யவும் அனுமதி கொடுப்பதால் கருணை அற்றவர் ஆக மாட்டார் –
ஜீவாத்மா தவறான செயலில் ஈடுபட்டது ஸாஸ்த்ர விரோதமாக உள்ளதால் தண்டனை வழங்க வேண்டுமே –
தண்டனை வழங்கும் முறையில் தான் அனுமதி வழங்குகிறார்

பதில் 4-பக்ஷபாதி என்று பரமாத்மாவை சொல்ல முடியாது
ஜீவாத்மா அவரவர் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுத்து செய்யும் எந்தச் செயலையும் அனுமதிக்கிறார்
இவரே எந்தச் செயலிலும் மூட்டவில்லையே

பதில் 5–சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்படும் சக்தி ஜீவாத்மாவுக்கு இருப்பதால்
அவர் அறிவு யுடையவராய் இருக்கும் தன்மை வீண் ஆகாது –

ஆகவே பகவான் அனைத்தையும் இயக்குகிறார் என்பதற்குப் பொருள்
ஜீவாத்மா ஸ்வ தந்திரமாக முடிவு எடுத்து செயல் படத் தொடங்கும் வரை அவர் உதாஸீனமாக அலட்சியமாக இருந்து
அதற்குப் பின் தான் அனுமந்தாவாக -அனுமதி அளிப்பவராகவே இருக்கிறார் என்பதே —

1-பரமாத்மா அனைத்துக்கும் காரணம் –
2-ஜீவாத்மா முதல் முயற்சி செய்ய ஸ்வாதந்தர்யம்
3-அனுமதிப்பதால் பலன் அவனைத் தீண்டாதே
4-பார பக்ஷம் காடடாதவன்
5-காருண்யம் மிக்கவனே -நிர்தயத்வம் அல்லவே -அனைத்துமே பொருந்துமே

இதற்கு விதி விலக்கும் உண்டு –
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்ய-லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீஷதி -என்று கூறும்
யாரை மேலே உயர்த்த பகவான் ஆசைப்படுகிறாரோ அவர்களை நல்ல செயல்களை பண்ணும்படி தூண்டுகிறார் –
யாரைத் தாழ்வடைய வைக்க ஆசைப்படுகிறாரோ அவர்களை தீய செயல்களை செய்யும் படி தூண்டுகிறார் –

இங்கு கீழ் போல் அனுமதி மட்டும் அல்ல -தூண்டுதலும் உண்டு
இது ஒரு சிலருக்கே -ஸ்ரீ கீதையில் இத்தை தெளிவாக்க காட்டி அருளுகிறார்
யார் எல்லாம் என்னிடத்தே மிகுந்த பக்தியுடன் என்னை அடைய விரும்புகிறார்களோ அவர்களை நற் செயல்களில் தூண்டுகிறேன்
யார் எல்லாம் என்னை வெறுக்கிறார்களோ அவர்களை வேறே வழி இல்லாமல் தாழ்ந்த பிறவிகளில் தள்ளுகிறேன்
எனவே ப்ரயோஜகத்வம் -மறைமுகமாகத் தூண்டுதல் – என்ற மூன்றாவது நிலையில் பகவான் இருப்பது
பொதுவான நிலை அல்ல -ஒரு சிலருக்குத் தான் –

ததாமி புத்தி யோகம் -என்றும்
ஷிபாமி –ந க்ஷமாமி–ஆஸூர யோனியில் தள்ளுகிறேன் -என்றும் கீதையில் உண்டே
அதிமாத்ர அனுகூலர்களுக்கும் -தேஷாம் சததி யுக்தானாம் -ப்ரீதி உந்த இருப்பர்களுக்கு –
அதிமாத்ர பிரதி கூலர்களுக்கும்

———

பாடம் -26- ஜீவாத்மாவின் வகைப்பாடு –

ஜீவாத்மா -மூன்று வகை -பத்தர்கள் -முக்தர்கள் -நித்யர்கள் –
பத்தர்கள் -பாப புண்ய -கர்மங்களில் கட்டுப்பட்டு -பந்தப்பட்டு -இந்த அண்டத்துக்குள்ளே ஏதோ ஒரு இடத்தில்
இருந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும் ஜீவாத்மா
அஜோகி ஏக பிறக்காத நித்தியமான ஆத்மா ப்ரக்ருதி சம்பந்தத்தால் -பந்தம் -கட்டுப்பட்டு -ஆசை உடன் -சேர்ந்து
போகம் அனுபவித்து – -ஜகாதி- வெறுத்து முக்தன் ஆக

இவர்கள் நான்கு வகைப்பட்ட பிறவி கொண்டவர்கள்
தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் -ஸ்தாவரங்கள் –
அசுரர்கள் கிங்கரர்கள் கந்தர்வர்கள் இவர்கள் தேவர்கள் சப்தத்தில் அடங்கும் -33 கோடி -ஒரு வகை பிறவி இது
திதி அதிதி -பிள்ளைகள் -கஸ்யபர்
ராக்ஷசர் மனிதரில் ஒரு வகை போல்
தேவர்களுக்குள்ளும் மனிதர்களுக்கும் யோனிஜர் அயோனிஜர் உண்டே -நான் முகன் அஜன் அயன்
ஸ்வேதர் வியர்வை மூலம் வந்தவர் போல் உண்டு

செடி கொடிகளும் சில செயல்களைச் செய்வதால் அவற்றுக்குள்ளும் ஜீவர்கள் உண்டு –
கண்ணன் திருவடி பெற்ற கதம்ப மரம் புண்ணியம் நமக்கு இல்லையே –
இவற்றுள் விலங்குகளும் ஸ்தாவரங்களும் ஸாஸ்த்ரத்துக்குக் கட்டுப் பட்டவை அல்ல —
அதாவது -அவர்களுக்கு ஸாஸ்த்ரம் எதையும் -விதிக்காது
அவை ஸாஸ்த்ரம் சொல்லியதை செய்யா விட்டாலும் பாபம் இல்லை
தேவர்கள் மனிதர்கள் -ஸாஸ்த்ர வஸ்யர் -அதன் படியே நடக்க வேண்டும் –

இவர்களில் –
புபுஷுக்கள் முமுஷுக்கள் -இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ஸம்ஸாரத்திலே இருந்து ஸூக துக்கங்களையே அனுபவிக்க ஆசைப்பட்டவர்கள் புபுஷுக்கள்
போகம் ஸூ க துக்க அனுபவம் -இதையே உண்ண ஆசைப்பட்டவர்கள் புபுஷு –
ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட ஆசைப்படுபவர்கள் முமுஷுக்கள் –

புபுஷுக்களை
அர்த்த காம பரர்கள் என்றும்
தர்ம பரர்கள் -என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

அர்த்த காம பரர்கள்
உடலையே ஆத்மா என்று நினைத்தும் வேறே உலகங்கள் இல்லை என்று நினைத்தும்
இவ்வுலக போகங்களையும் செல்வங்களையும் ஆசைப்படுபவர்கள்

தர்ம பரர்கள் –
உடலைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர் என்று உணர்ந்து ஸாஸ்த்ரம் படி செயலைச் செய்து
புண்யம் சேர்த்து வேறே லோகங்களை அடைந்து ஸூகப்படலாம்
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்கள் -இவ்வுலக இவ்வுலக இன்பங்கள் —
என்று உணர்ந்து யாகம் தானம் தபஸூக்கள் செய்பவர்கள்
இவர்கள் பரமாத்மாவை அறியாமல் நிலையான ஸூகத்தை அடைய மாட்டாதவர்கள் என்று ஸ்ரீ கீதையில் உண்டே –

இந்த தர்ம பரர்களை
தேவதாந்த்ர பரர்கள்
பகவத் பரர்கள் என்றும் இரண்டு வகை பட்டவர்கள் –

தேவதாந்த்ர பரர்கள் –
இதர தேவர்களைக் குறித்து -பரமாத்மா இவர்களுக்கும் ஆத்மா– நியாந்தா என்று அறியாமல்
மேலோட்டமாக கர்மங்களை செய்து பலன்களைப் பெறுவார்கள் –
பூ போல் பேசி -காயோ பழமோ தராது -வேத வாத ரதர்கள் -ஸ்வர்க்க பரர்கள் கிரியா விசேஷ பஹுளாம் —
என்கிறார் கீதாச்சார்யர் –

பகவத் பரர்கள் –
எந்த பலன்களைப் பெற வேண்டிலும் பரமாத்மாவையே பற்றி அடைபவர்கள்
ஆனால் செல்வம் போகங்களையே விரும்பி பெறுவதால் இவர்களும் புபுஷுக்கள் தான் –

அர்த்தார்த்திகள் அபூர்வ ஐஸ்வர்ய காமன்
இழந்த அர்த்தம் பெறவும் –
அண்டக்குலத்துக்கு அதிபதி -பாசுரத்தியல் இருவரையும் குறித்து —
அண்டாதிபதி -ராக்ஷஸர்கள் அசுரர்களை-இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் –
இவர்களையும் உதாரர் என்று கொண்டாடுகிறான் கீதாச்சார்யர் —

முமுஷுக்கள் இரண்டு வகை
கைவல்ய பரர்கள்
பகவத் பிராப்தி பரர்கள்

கைவல்ய பரர்கள் –
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு -உடல் இல்லாத நிலையில் -ஆனந்தமாக இருக்க –
ஆனந்த வடிவமான ஆத்மாவையே அனுபவித்துக் கொண்டு –
பரமாத்மாவை அடைய ஆசைப்படாமல் இருந்து இழந்து போகிறவர்கள் –

பகவத் பிராப்தி பரர்கள் –
சேஷத்வ ஞானம் அறிந்து பரமாத்மாவையே அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ஒன்றே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறிந்து அதற்கு ஆசைப்படுபவர்கள் –
இவர்களை
பக்தர்கள் -உபாசகர்கள்
சரணாகதர்கள் -ப்ரபன்னர்கள் -என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் –

பக்தர்கள் -மிகுந்த அன்புடன் பகவானை இடைவிடாமல் த்யானம் செய்து அதன் மூலம் முக்தி அடைபவர்கள்
சரணாகதர்கள் -தங்கள் முயற்சி ஒன்றுமே இல்லாமல் -அவன் திருவடிகளையே பற்றி அவரே நம்மை
அவருடன் சேர்த்துக் கொள்வார் என்று மஹா விச்வாஸத்துடன் இருப்பவர்கள் –

இவர்களையும்
ஏகாந்திகள்
பரம ஏகாந்திகள் -என்று இரண்டாக பிரிக்கலாம்
ஏகாந்திகள் -அவனை சரண் அடைந்து அவரை அடைய ஆசைப்படுவதோடு
இவ்வுலக இன்பங்களையும் அவர் இடம் பிரார்த்திப்பவர்கள்
பரம ஏகாந்திகள் -வேறே பயன்களை ஒன்றுமே எதிர்பார்க்காமல் அவனையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தகம் என்று இருப்பவர்கள் –

பரம ஏகாந்திகளும் இரண்டு வகை
ஆர்த்தர்கள்
திருப்தர்கள்
ஆர்த்தர்கள் சம்சாரத்தில் வெறுப்பால் இனி இங்கே சிறுது நேரமும் இருக்க முடியாமல்
உடனே அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய பார்க்கும் ஆழ்வார்கள் போல்வார்

திருப்தர்கள் -சரணாகதி செய்த பிறவி எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது இனி மறு
பிறவி எடுக்காமல் அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் நம் போல்வார் –

——–

பாடம் -27-
சம்சாரத்தின் காரணம்
ப்ரம்மா தொடங்கி பீபிலி வரை அனைத்தும் கர்மம் அடியாகவே சம்சாரத்தில் கட்டுப்பட்டு உள்ளன
ஆத்மா இயற்கையிலே ஞானமே வடிவானவர் -ஆனந்தமே வடிவானவர் -குற்றங்கள் அற்றவர் –
பிரகிருதி இயற்கையிலே துக்கமாயும் குற்றம் உடையதாகவும் ஞானத்துக்கு எதிராகவும் உள்ளது
அதில் கட்டுப்பட்டு ஆத்மாவும் செயற் கையாக அஞ்ஞானம் குற்றங்கள் துக்கங்கள் அனுபவிக்கிறது –
என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது –
ஆகவே சம்சாரத்துக்கு மூலம் கர்மம் -கர்மம் என்றால் நாம் செய்த செயல்களால் ஏற்படும் பாப புண்யங்கள் –
பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளோம் இப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்
அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதால் மேலும் பல பிறவிகளை எடுக்கிறோம் –
பாபங்கள் தீய பிறவிகளில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்பட வைக்கின்றன
புண்யங்கள் நல்ல பிறவியில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்படுத்துகின்றன –

கர்மத்தின் காரணம்
நாம் பாப புண்யங்களை சேர்ப்பதற்கு காரணம் அவித்யை தான் -அவித்யை என்றால் அறிவின்மை -தவறான அறிவு
அதன் வடிவத்தை ஸ்ரீ பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறுகிறார்
வேதார்த்த ஸங்க்ரஹம் -பவ பயம் -கோரம் ஸம்ஸாரம் -அநாதி அவித்யா சஞ்சிதா –
அநாத்மனி ஆத்ம புத்தியே அஹங்காரம்
நான் என்பது ஆத்மாவையே குறிக்கும்-உடலில் நின்றும் வேறு பட்டவர் – -இத்தை அறியாமல் உடலே நான் என்று நினைத்து
ஆத்மாவைக் காட்டிலும் வேறே ஒரு பொருளை ஆத்மா என்று நினைக்கிறோம் –
இதுவே தேக ஆத்ம ப்ரமம் -என்றும் அஹங்காரம் என்றும் பெயர்
இது அவித்யையின் ஒரு வடிவம்
இவ்வுலகம் அனைத்தும் பகவானால் படைக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டு -அவரது சொத்தாகவே உள்ளது
நான் தவறாக சில பொருள்களை நம்மது என்று நினைத்தால் அதற்கு மமகாரம் என்று பெயர்
இது அவித்யையின் இன்னொரு வடிவம்
ஆத்மா ஸ்வதந்த்ரன் என்ற நினைவும் அவித்யையின் ஒரு வடிவமே –
இவ்வாறு பிறவி எடுத்த ஒருவர் அஹங்கார மமகார -இரண்டு வித அவித்யைகளால் -மயங்கி செயல்களை செய்து –
அதன் பலனாக பாப புண்யங்களை அடைகிறார்
அவற்றைக் கழிப்பதற்கு மறுபடியும் பிறவி எடுக்கிறார் —

ஸம்ஸார சக்கரம்
இப்படி ஒரு சமயத்தில் அவித்யை இருந்து கர்மங்களை சேர்த்து இப்போது பிறவி எடுக்கிறோம் என்பதோடு நிற்க வில்லை
அப்படி எடுக்கும் பிறவிகளில் மறுபடியும் கர்மங்களை சேர்க்கிறோம் -அதனால் மறுபடியும் பிறவி எடுக்கிறோம்
எனவே சம்சாரம் என்பது அவித்யையும் கர்மமும் மாறி மாறி வரும் சக்கரம் ஆகும்
கர்மம் அடியாக எடுத்த பிறவியில் மீண்டும் எதனால் கர்மங்கள் சேர்க்கிறோம் என்றால் அதுக்கு அடி வாசனைகளும் ருசிகளும் –
நான் செய்யும் செயல்களால் பாப புண்யங்கள் ஏற்படுவது போலவே வாசனையும் ருசியும் ஏற்படுகின்றன –
வாசனை என்றால்
முன் செய்த செயல்களால் நம்மிடம் உண்டான பதிவுகள்
நான் எந்தச் செயலை அடிக்கடி செய்கிறோமோ அவற்றைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் அடிக்கடி ஏற்படும் –
எனவே மறுபடியும் அந்தச் செயலை செய்வது எளியதாக இருக்கும் –
அதே போல் பிறவியை எடுத்த பின்பு உலகப் பொருள்களை அனுபவிப்பதே நமக்குத் பழக்கப் பட்டது என்பதால்
மறுபடியும் மனஸூ அதிலேயே செல்லும் –
பரமாத்மாவை பற்றிய சிந்தனையில் ஈடுபடாது -அதனால் மறுபடியும் அவித்யையே ஏற்படுகிறது
ருசி என்றால்
முன் ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் இயற்கையாக ஏற்படும் விருப்பு வெறுப்புகள்
அவற்றின் அடிப்படையில் தான் இப்பிறவியில் நமக்கு இயற்கையாக எது பிடித்து இருக்கும் என்பது முடிவாகிறது
அதனால் உலகப் பொருள்களின் மேல் ஈடுபாடு இயற்கையாகவே ஏற்படும் -பரமாத்மா இடம் அல்ல –
இதனாலும் மேலும் அவித்யையே ஏற்படுகிறது –

ப்ரவாஹ அநாதித்வம் -பீஜாங்குர நியாயம் –

பிறவியின் ஏற்றத் தாழ்வுகள்
நாம் எடுக்கும் பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன
அவனே ஸ்ருஷ்டிக்கிறார் -கர்மம் அடியாகப் பிறக்கிறோம்
ஏற்றத்தாழ்வுகளை இவர்களில் யார் காரணம்
ஸ்ரீ விஷ்ணு பூரணம்சொல்லும் -அவன் நிமித்த மாத்ரமாகவே உள்ளான் -பொதுவான காரணம் ஆகிறார்
பிறவிகளுக்கு விசேஷ முக்ய காரணம் அந்த அந்த ஜீவனின் பாபமும் புண்ணியமும் தான்
ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேஷாத் வாத் –2-1-34-
அவனுக்கு பாகுபாடு பார்ப்பது என்னும் குற்றமோ கருணை இன்மை என்னும் குற்றமோ வாராது –
அவன் ஸ்ருஷ்டிக்கும் பொழுது அந்த அந்த ஜீவனின் கர்மத்தை எதிர்பார்த்து அதன் அடிப்படையிலே
ஸ்ருஷ்டிப்பதால் -என்கிறார் வேத வியாசர் இதில் –

முக்தர்களும் நித்ய ஸூரிகளும்
முக்தர்கள் -ஜீவாத்மாகில் இரண்டாவது வகை –
பல நாள்கள் சம்சாரத்திலே கட்டுப்பட்டு இருந்து –
பகவானின் அருளால் -பக்தி சரணாகதி -முதலான உபாயங்களில் ஒன்றை அனுஷ்ட்டித்து –
அதன் மூலம் கர்மங்களைத் தொலைத்து
சம்சாரத்தை நீத்து
தங்கள் இயற்கையான தன்மைகளை விளங்கப் பெற்று
பகவானை அடைந்து -அனுபவித்து -அதனால் ஏற்படும் மகிழ்ச்சி உந்த கைங்கர்யம் செய்பவர்கள்

நித்யர்கள்
என்றுமே பாப புண்யங்களின் தொடர்பே இல்லாமல்
அதனால் சம்சாரத்தில் என்றுமே கர்மம் அடியாகப் பிறக்காமல்
பரமபதத்தில் அவனுடன் எப்போதும் சேர்ந்தே இருந்து
என்றுமே அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு -அதற்கு ஏற்ப தொண்டு செய்து கொண்டு இருக்கும்
ஆதி சேஷன் கருடன் விஷ்வக்ஸேனர் போல்வார் –

———

ப்ரக்ருதி நித்ய விபூதி காலம் ஜீவாத்மா
பரமாத்மா தர்ம பூத ஞானம் மேலே பார்த்து த்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம்
மேலே அத்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம் –

பாடம் -28- தர்ம பூத ஞானம்

இவர் குணசாலி -குணம் இவர் இடம் உள்ளது -அறிவாளி -அறிவு என்பதே தர்ம பூத ஞானம் –

ஐந்தாவது த்ரவ்யம்
இதன் லக்ஷணம்
ஸ்வயம் ப்ரகாஸமாகவும் –அசேதனமாகவும் –விஷயம் உடையதாகவும் -இருக்கும் த்ரவ்யம்
ஸ்வயம் பிரகாசம் -என்பதால் ப்ரக்ருதி -காலம் -இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப் பட்டது
அசேதனம் என்பதால் ஜீவாத்மா பரமாத்மா இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப்பட்டது –
விஷயம் உடையது என்பதால் நித்ய விபூதியில் இருந்து வேறுபாடு ஸித்தம்
மற்ற ஒரு லக்ஷணம்
அர்த்த ப்ரகாஸத்வம்
அதாவது பொருள்களை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுத்தல் –
ஆத்மா வேறு –அவர் இடம் உள்ள அறிவு வேறு –
ஆத்மா அணுவாக தனக்குத் தான் தோற்றம் அளிப்பவராக -தன்னை மட்டுமே விஷயமாகக் கொண்டு உருவம் மாறாமல் இருக்கும்
தர்ம பூத ஞானம் விபுவாக தனக்குத் தானே தோற்றம் அளிக்காமல் -ஆத்மாவுக்கே தோற்றம் அளிப்பதாய் –
உலகப் பொருள்களையும் விஷயமாகக் கொண்டு தன் உருவம் மாறாக் கூடியதாகவும் இருக்கும்
நான் அறிகிறேன் என்று உலகில் அனைவரும் உணருவதாலும்
வேதங்களிலும் ஆத்மாவை விஞ்ஞாதா -சேதனன் -என்று எல்லாம் சொல்லுகிறபடியாலும்
விஞ்ஞாதா -அறிவாளி -அறிவு உடையவன் –
ஆத்மாவைத் தவிர அவருடைய அறிவு என்று வேறு ஓன்று என்று தனியாக இருப்பது தெரிகிறது –

தர்மம் பொது சொல்- குணம் நிறம் செயல் த்ரவ்யம் இவற்றைச் சொல்லும் -இவை -தர்மியை அண்டி இருக்கும் –
தர்மி ஞானம் தர்ம ஞானம் -இரண்டும் அறிவு -இது ஆத்மாவை அண்டி இருக்கும்-
தர்மி ஞானம் -ஆத்மாவைச் -சேதனனைச் சொல்லி– தர்ம பூத ஞானம் சேதனன் இடம் உள்ள சைதன்யத்தைச் சொல்லும் –

தர்ம பூத ஞானத்தின் செயல்பாடு
ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -முதலான பல இடங்களில் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற படியால்
ஆத்மாவின் தர்ம பூத ஞானம் பரவத் தொடங்கும்
ப்ரஸ்ருதா-ஓடுகிறது -ப்ரவாஹம் போல் ஞானம் ஓடும்-
ஒரு இந்திரியம் ஓடினால் -அதன் மூலம் அறிவு வெளியே ஓடும் -அனைத்தையும் கட்டுப்படுத்து -கீதாச்சார்யர்
கண் முதலான இந்திரியங்கள் மூலம் உடலில் இருந்து வெளியே சென்று வெளியில் உள்ள பொருள்களை அடைந்து
அவற்றை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுக்கிறது –
ஒரு ஜீவாத்மா விழித்து இருக்கும் பொழுது அதன் ஞானம் புறப்பட்டு வெளியே சென்று பொருள்களைக் காட்டும்
ஜீவாத்மா தூங்கும் பொழுது இந்திரியங்கள் இயங்காத படியாலும்
தமோ குணம் அதிகமான படியாலும் தர்ம பூத ஞானம் வெளியே செல்ல இயலாது –

அதனால் நாம் பொருள்களை அறிவது இல்லை –
இந்திரியம் மட்டும் செல்வது இல்லை -அறிவும் செல்கிறது —
இதனால் தான் தூக்கம் ஸ்வப்னம் அவஸ்தைகள் -மனஸ் மட்டும் வேலை -ஆழ்ந்த உறக்கம் மனசும் வேலை செய்யாமல் –
சங்கோசம் விகாசம் அறிவுக்கு -உண்டே
இப்படிக் கட்டுப்படுத்துவதே தமோ குணம் -ஞானம் இயற்கையாகவே பரவக்கூடியது –

இப்படி விரிதல் சுருங்குதல் முதலான நிலைகளையும் -வெளியே செல்லுதல் முதலான செயல்களையும் கொண்டபடியால்
தர்மபூத ஞானம் ஒரு த்ரவ்யமாகவே கொள்ளப் படுகிறது –
நியாய சாஸ்திரத்தில் ஞானம் -புத்தி -என்பது ஆத்மாவின் ஒரு குணம் மட்டுமே -த்ரவ்யம் அல்ல என்று சொல்லுகிறார்கள்
நம் விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் ஞானம் ஒரு த்ரவ்யம் ஆகும்
ஒரு பொருள் எப்பொழுதும் மற்ற ஒரு பொருளையே அண்டி இருந்தால் அது அதற்கு குணம் என்று சொல்லப்படுகிறது –
எனவே ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் அத்தை ஆத்மாவின் குணம் என்று சொல்வதிலும் ஒரு தவறும் இல்லை
தீபம் என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யத்தை பிரபை என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யம் அண்டி இருப்பது போல்
ஜீவாத்மா என்ற ஞான த்ரவ்யத்தை தர்ம பூத ஞானம் என்னும் ஞான த்ரவ்யம் அண்டி உள்ளது –

நான் உயரமாக இருக்கிறேன் மோதிரம் அணிந்து இருக்கிறேன்
அண்டியே இருப்பதே குணம் -த்ரவ்யமாகவும் இருக்கலாம்
நடத்தல் செயல் நடப்பவனை அண்டியே இருக்கும் -செயல் குணம்
வெண்மை நிறம் வேஷ்ட்டிக்கு குணம்
மோதிரம் கழற்றி விடலாம்
ஆத்மாவுக்கும் தர்ம பூத ஞானத்துக்கும் விட்டுப் பிரியாத -அப்ருதக் ஸித்த விசேஷணம் –
எனவே குணம் என்றும் த்ரவ்யம் என்றும் சொல்லலாமே
ஆத்மாவை -ஆஸ்ரயம் -விட்டு பிரியாமல் -வெளியில் போயும் இருக்கும் தர்ம பூத ஞானம் –
இதனால் குண பூத ஞானம் என்று சொல்லாமல் -தர்ம பூத ஞானம் – என்கிறோம் –

தர்ம பூத ஞானத்தின் தன்மைகள்
ஆத்மா எப்படி நித்யமானவரோ அதே போலே ஆத்மாவின் தன்மையான தர்ம பூத ஞானமும் நித்யம் என்று வேதம்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
ததா ஹேய குண த்வம்சாத் அவ போதய குண ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே -என்ற இடத்திலும்
(ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே-விளங்குகின்றன ஒழிய பிறப்பது இல்லை-நித்யா ஏவ-நித்யமாகவே இருக்கும் )
ஒரு ஜீவாத்மா முக்தி அடையும் பொழுது அவருக்கு புதிதாக அறிவு உண்டாவது இல்லை –
இயற்கையாக அவரிடம் உள்ள அறிவு முழுவதுமாக வெளிப்படுகிறது அவ்வளவே என்று சொல்லப் படுகிறது –
எனக்கு அறிவு உண்டானது -அறிவு நஷ்டமானது என்று உலகில் நாம் சொல்வது எல்லாம் உண்மையில்
தர்ம பூத ஞானத்தின் உத்பத்தியையோ அழிவையோ குறிக்கவில்லை
தர்மபூத ஞானம் உடலில் இருந்து பரவி வெளியே வந்து ஒவ்வொரு பொருளின் தொடர்பை அடைந்து
அதைக் காட்டிக் கொடுக்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றின ஞானம் உண்டானது என்று சொல்கிறோம் –
உண்மையில் தொடர்பு மட்டுமே புதிதாக உண்டாகியது
இந்த ஞானம் இயற்கையாக விபுவாக -உலகு எங்கும் பரவியதாக -இருக்க வேண்டும்
நித்ய ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் –
பத்தர்களான சம்சாரிகளுக்கு மட்டும் அவர்கள் செய்த பாப புண்யங்களைப் பொருத்து அதனுடைய பரவும் தன்மை தடுக்கப்படும்
கல்லுக்குள் உள்ள தர்ம பூத ஞானம் வெளியே வர முடியாது –செடி கொடிகளில் சிறிது வரலாம் –
மனிதனாக இருந்தால் அதிகமாக வரலாம் -தேவர்களுக்கு இன்னும் அதிகம் –

தர்ம பூத ஞானத்தின் நிலைகள்
தர்ம பூத ஞானம் தான் -ஞானம் -சைதன்யம் -மதி -ப்ரஞ்ஞா- ஸம்வித் -திஷணா -தீ -மநீஷா –சேமுஷீ –மேதா –புத்தி –
முதலான சொற்களால் வழங்கப்படுகிறது
நியாய சாஸ்திரத்தின் படி நமக்குத் பிடித்த பொருளைப் பற்றின அனுபவம் ஏற்பட்டால் அதனால்
ஸூகம் என்ற தனி குணம் ஆத்மாவுக்கு உண்டாகும் -அது அனுபவிக்கப்படும் –
ஆனால் இப்படி தனியாக ஒரு குணத்தை நம் ஸித்தாந்தத்தில் ஏற்க வில்லை
ஸூகம் என்பது ஞானத்தைக் காட்டிலும் வேறான பொருள் இல்லை –
இஷ்டமான விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் ஸூகம் ஆகும் –
பிடிக்காத விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் துக்கம் ஆகும்
காமம் ஆசை -சங்கல்பம் முடிவு -விசிகித்சா சந்தேகம் -ஸ்ரத்தை -அஸ்ரத்தை -உறுதி உறுதியின்மை -வெட்கம் -அறிவு -பயம்
முதலான அனைத்துமே மனத்தின் மாறுபாடுகளே என்று ஸாஸ்த்ரம் சொல்லும்
அதன் பொருள் யாது என்னில் இவை எல்லாம் மனத்தின் தாக்கத்தால் தர்ம பூத ஞானத்தின் மாறுபாடுகள் என்பதே –
ஞானத்தின் வேறுபாடுகள் தான் -மனசின் துணையால் தர்ம பூத ஞானம் இத்தனை மாற்றங்கள் என்றபடி –

தர்ம பூத ஞானம் பற்றி பல மதஸ்தர்கள் உடைய க்யாதி வாதம் மேலே பார்ப்போம்

———

பாடம் –29-க்யாதி வாதம்

எந்த தரிசனமாக இருந்தாலும் உலகத்தின் உண்டாக்கும் அழிவு பிராணிகளின் பிறப்பு இறப்பு
முதலானவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்வது போல்
அறிவு என்றால் என்ன
நாம் அறிவு பெறுவது எப்படி
ஒரு அறிவு சரியாதனதா தவறானதா என்று எப்படி அறியலாம்
முதலான கேள்விகளுக்கும் பதில் உரைக்க வேண்டும் –
இதற்குத் தான் க்யாதி வாதம் என்று பெயர்

கியாதி என்றால் அறிவு
வாதம் -ஆராய்ச்சி

தன்மைகளையும் சேர்த்தே அறிகிறோம் -வெண்மை அளவு சுவை செயல் இவற்றைச் சேர்த்தே பொருளை –
ச விசேஷ -இது என்றாலே அருகில் -அது -உது-போல் – அறிகிறோம் –
பொருள் பதார்த்தம் -என்றே அறிகிறோம் -ஒரு ஏகத்துவம் அறிகிறோம் —
இங்கு ஒரு பொருள் உள்ளது -சத்தை உடன் இருப்பதையே சுருக்கமாக இது ஒரு பொருள் என்கிறோம் –
இது பொருள் தன்மை -விசேஷணங்கள் -இரண்டையும் அறிந்து வேறே ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
விசேஷ்யம்–பிரகாரம் விசேஷணம் இவற்றை அறிகிறோம் –

அதில் முக்கியமாக பிரமம் -தவறான அறிவு ஏற்ப்படி ஏற்படுகிறது என்பதே முக்யமாகப் பேசப்படுகிறது –
அந்த முறையில் நம் விசிஷ்டாந்த சித்தாந்தத்தில் ஏற்ப்படி என்று பார்ப்போம்

அதற்கு முன்பு மற்ற தரிசனத்தில் எப்படி என்பதை முதலில் பார்ப்போம் –
ஸ்லோகம் ஐந்து கியாதி வாதங்களை சொல்லும்
1- ஆத்ம க்யாதி -புத்தர்களால் முன் வைக்கப்படுகிறது
2-அஸத் க்யாதி -சாருவாகர்களால் தழுவப்பட்டது
3-அக்யாதி -மீமாம்ஸகர்களில் ஒரு பிரிவினரான ப்ரபாகரர்களால் சொல்லப்படுகிறது
4-அந்யதா க்யாதி -நியாய மாதத்தில் ஒப்புக் கொள்ளப்படுகிறது
5-அநர்வசநீய க்யாதி -அத்வைத மதத்தால் ஏற்கப் படுகிறது
6-யதார்த்த கியாதி -விசிஷ்டாத்வ மதத்தில் ஏற்கப் படுகிறது –

ஆத்ம க்யாதி
புத்தர்கள் -யோகாச்சார்கள் -ஞானமே வடிவான ஆத்மாவைத் தவிர உலகில் எதுவுமே உண்மை அல்ல என்பர் –
குடம் சுவர் கயிறு போன்ற பொருள்கள் உலகில் இல்லை -எல்லாம் அறிவின் வெவ்வேறு வடிவங்களே
அந்த அறிவே தான் ஆத்மா
எனவே ஞான வடிவமான ஆத்மாவே கூடமாகவும் சுவராகவும் துணி யாகவும் அறியப்படுகிறார் –
இதுவே ஆத்ம க்யாதி
அவிபாகோபி புத்தயாத்மா விபர்யாசித தர்வநை
க்ராஹ்ய க்ராஹக ஸம் வித்தி பேதவாந் இவ லஷ்யதே –என்பதே அவர்கள் கூற்று –
கிரஹணம் க்ரஹீதா க்ராஹ்யம் -மூன்றும் -அறிவும் அறிவாளியும் அறியும் பொருளும் ஒன்றே –
ஞானத்தொடர் ஆத்மா க்ஷணிகம் அனைத்தும் -வேறு பாடு இருப்பது போல் தோற்றும் என்பர் –
சேர்ந்தே தோற்றம் அளிக்கிறது -அறிவு தான் பொருள் -ஸஹ ஆலம்பநம் –
உண்மையில் ஞானம் மட்டுமே உள்ளது –
அதுவே தான் நம் தோஷங்களின் காரணமாக
அறியப்படும் பொருள் என்றும் —
அறிவு என்றும் –
அறிபவன் என்றும் மூன்றாகத் தோற்றுகிறது என்பதே அவர்கள் மதம் –

அஸத் க்யாதி
இது சாருவாகர்கள் சொல்வது
இவர்கள் ப்ரத்யக்ஷம் என்கிற ஒரே பிரமாணத்தை ஏற்கிறார்கள் –
புலன்களால் அறியப்படுவது மட்டும் உண்மை என்பர்
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிக்கும் பொழுது இல்லாத பாம்பு தான் தோற்றம் அளிக்கிறது
எனவே பிரமம் ஏற்படும் இடங்களில் -அஸத் -இல்லாத பொருள் தான் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் மதம் –

அந்யதா க்யாதி -இது நியாய மாதத்தில் சொல்லப்படுவது -மீமாம்சை -பாட்ட மதம் -இதே போல்–
சில சந்தர்ப்பங்களில் கண் முன்னாள் இருக்கும் கிளிஞ்சல் நமக்கு வெள்ளியாகத் தோற்றும்
அங்கு கண்ணுக்கும் கிளிஞ்சலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது –
ஆனால் கண்ணில் இருக்கும் தோஷத்தால் அது கிளிஞ்சல் என்று அறியவில்லை
பளபளப்பான ஏதோ ஒரு பொருள் உள்ளது என்று மட்டும் அறிகிறேன் –
உடனே கடையில் என்றோ பார்த்த வெள்ளியின் நினைவு ஏற்பட்டு அதே போன்ற வெள்ளி தான்
நம் கண் முன் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அதனால் ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக அறியப்படுகிறது –
இதுவே அந்யதா -வேறு மாதிரியான க்யாதி அறிவு எனப்படுகிறது –

அக்யாதி -இது மீமாம்சை ப்ரபாகர மதத்தில் சொல்லப்படுகிறது –
இவர்களும் கண் கிளிஞ்சலைப் என்றும் -அது கிளிஞ்சல் என்று தெரியவில்லை என்றும்
பளபளப்பாக இருப்பதைக் கண்டு வெள்ளியின் நினைவு ஏற்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்
ஆனால் அதற்குப் பிறகு கிளிஞ்சலை வெள்ளி என்று கிரஹிக்கும் ஓர் அறிவு ஏற்படுகிறது என்று அவர்கள் ஏற்க வில்லை
கண் முன் இருக்கும் பொருளுக்கும் நினைவுக்கு வந்த வெள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத படியால் தான் பிரமம் ஏற்படுகிறது
இரண்டும் ஓன்று என்று அறியத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆகவே இரண்டும் ஒன்றே என்ற அறிவு தோன்றுவதாகக் கொண்டால் அது அந்யதா க்யாதி
அவை வேறு என்ற அறியாமை மட்டுமே போதுமானது என்று சொன்னால் அக்யாதி –
அசம்சர்க்க அக்ரஹா தொடர்பு இல்லாமை அறியாமை இது –
ஞானம் உண்மையாகவே இருக்கும் -தவறாகவே இருக்காது என்பர் –
வெள்ளியும் கிளிஞ்சாலும் வேறே வேறே என்று அறியாமல் போனேன் என்பர் –

அநிர்வசநீய க்யாதி -இது அத்வைதிகளால் சொல்லப்படுவது -உலகமே பொய்யானது என்பர் –
பரமாத்மாவையே அவித்யை மூடிக் கொண்டு இருப்பதால் உலகம் தோற்றுகிறது
நாம் ஒரு கிளிஞ்சலை வெள்ளி என்று நினைக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அவித்யை என்ற பொருள்
உருமாறி வெள்ளியின் வடிவத்தை அடைகிறது –
அந்த வெள்ளிக்கு அநிர்வசநீயமான வெள்ளி என்று பெயர் -ஏன் என்றால் அது இருக்கும் பொருள் என்று சொல்ல முடியாது –
பின் ஒரு காலத்தில் பொய் என்று அறியப்படுகிற படியால் இல்லாத பொருள் என்றும் சொல்லப்பட முடியாது
தோற்றம் அளிக்கிற படியால் -அநிர்வசநீயம் -சொல்லப்பட முடியாதது என்றே அது சொல்லப்படுகிறது –

வேதாந்த பரிபாஷை -கிளிஞ்சல் வடிவில் அவித்யை
பளபளப்பை கண்டு -வெள்ளி நினைவு -பதிவு ஆத்மா இடம் உள்ளது
ஸாதர்சம் -தூண்டப்பட்டு -கண்ணில் காமாலை தோஷம் -அறியாமல் -அவித்யையே வெள்ளியாக உருவம் –
பார்க்கும் பொழுது தான் இது தோன்றும் -இந்தவித வெள்ளி உண்டாகிறது –
அவித்யையே வெள்ளியாக -ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாதே இதை –

யதார்த்த க்யாதி –இது நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -இதன் படி அனைத்து பரிவும் சரியானது தான்
தவறான அறிவு என்று ஒன்றே கிடையாது
கிளிஞ்சலை வெள்ளி என்று காட்டும் அறிவும் கூட இல்லாத பொருள் எதையும் காட்டவில்லை –
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பகவான் பஞ்சீ கரணம் செய்து பஞ்ச பூதங்களையும் கலந்த படியால்
ப்ருத்வியாலான கிளிஞ்சலிலும் வெள்ளியை உருவாக்கும் தேஜஸ்ஸின் சிறு அவயவங்கள் உள்ளன
எனவே நாம் அந்த வெள்ளியின் அவயவங்களை அதிகமாகவும் கிளிஞ்சலின் அவயவங்களை குறைவாகவும் அறிந்தால்
அது வெள்ளி என்று சொல்லி விடுகிறோம் –
அந்த அறிவு தவறானது அல்ல -இல்லாத எந்தப் பொருளையும் க்ரஹிக்க வில்லை -யதார்த்தம் சர்வஞ்ஞாம் –
உண்மையை முழுமையாகக் கிரஹிக்க வில்லை என்பது மட்டுமே –
அது அறிவின் தோஷம் ஆகாது -இப்படி ஒரு அறிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செயல் வீணாகப் போகும் –
முழுமையான உண்மையை அறிந்தால் அதனால் ஏற்படும் செயல் பயன் உள்ளதாகும் என்பதே வேறுபாடு –

பிரதி நியதி நியாயம்
நெல் இல்லா விட்டால் சத்ருசமாக வ்ருஹீ கொள்ளலாம் -நீவாரங்கள் கொண்டு யாகம் செய்யலாம் –
ததேவ சத்ருசம் தஸ்ய -த்ரவ்ய -ஏக தேச பாவாத் -சில அவயவங்கள் அதிலும் இருக்குமே –
கானல் நீர் மணலிலும் நீரின் அவயவங்கள் உண்டே -பஞ்சீ கரணத்தால் –
கயிறு பாம்பு -இங்கு இரண்டுமே பிருத்வியாலே ஆனவையே -இங்கு பிரதி நியாயம் -உண்டே
சர்வம் ஞானம் யதார்த்தம் இதனாலே -செயல் வீணாக போனால் தானே பிரமம் ஆகும் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -13-20 —

August 5, 2021

பாடம் -13-ஸத்வம் -ரஜஸ் -தமஸ்

ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்நந்தி மஹா பாஹோ தேஹே தேஹிநமவ்யயம் -ஸ்ரீ பகவத்கீதை-14-5-

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்,
ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன,
தேஹே-இவை உடம்பில்,
அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப்,
நிபத்நந்தி-பிணைக்கின்றன.

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்,
இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

ஸத்வம் -ரஜஸ் -தமஸ் -என்ற முக்குணங்களும் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் அசேதனப் பொருளில் இருந்து உண்டாகக் கூடியவை –
அவை ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தின் தன்மைகளே -இவை மூன்றும் சம்சாரத்தில் உடலோடு இருக்கும் ஜீவாத்மாவை உடலோடு காட்டுகின்றன -அதாவது
மேலும் மேலும் சம்சாரத்தில்பிறவிகளை எடுக்க வைத்து சம்சாரத்திலேயே கட்டுப்படுத்துகின்றன –

சத்வம் லகு ப்ரகாசகம் இஷ்டம் -மேல் நோக்கி செல்லும் நெருப்பு வாயுவில் இவை இருக்கும் –
லகுத்த்வம் -உண்டே இவற்றுக்கு -அறிவை ஏற்படுத்தும் -நியாய சாஸ்திரம் சொல்லும்
வேதாந்த வ்ருத்தமானவையாக இருந்தால் இவையும் உபா தேயம்

ஸத்வ குணமானது லகு -லேசாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும் –
அதனால் நம்முடைய இந்திரியங்கள் எளிதில் வெளியே சென்று பொருள்களை கிரஹித்து வர முடியும்
அதனால் ஸத்வ குணம் -ப்ரகாஸகம் -ஞானத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது

உபஷடம்பகம் சலம் -ரஜஸ் -உத்ஸாகம் பண்ண வைக்கும்
ரஜஸ் குணமானது -சலம் -எப்பொழுதும் நிலையாக நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையைக் கொடுக்கிறது –
இதனால் இது உபஷ்டம்பகம் -ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் ஊக்குவித்து அதனதன் கார்யங்களை செய்விக்கிறது –

குரு வரணகம் ஏவ தமஸ் -குருத்வம் -24 குணங்களில் ஒன்றாக நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் –
ஆவரணம் மூடி -மறைக்க தடுக்கக் கூடியவை –
மனஸ் பாரமாய் இருக்கு சொல்வது போல் களைப்பு போன்றவற்றை சொல்லும் -எடை கூடுவதை சொல்ல வில்லை –
தமோ குணம் -குரு -பாரமாய் இருக்கும் தன்மையைக் கொடுக்கும்
அதனால் வரணகம் -இந்திரியங்கள் எளிதில் வெளியே செல்ல விடாமல் தடுத்து மூடி விடும் –

முரண்பட்ட ஸ்வ பாவங்கள் -மூன்றுக்கும் -ப்ரதீப வச்ச அர்த்ததோ வ்ருத்தி –
புருஷார்த்தம் குறித்து மூன்றும் செயல்படும் -இதுக்கு த்ருஷ்டாந்தம் –
த்ரி -எண்ணெய் -நெருப்பு
வாதம் -பித்தம் -ஸ்லேஷ்மம் -போல்
இம் மூன்று குணங்களும் வேறுபட்டாலும் சேர்ந்தே செயல்படுகின்றன –

பிரகாசம் -பிரவிருத்தி -நியமனம் இம்மூன்றும் முறையே ஸத்வ -ரஜோ -தமோ -குண கார்யங்கள்

முக் குணங்கள் செயல்பாடு
ப்ரீதி -என்கிற ஸூகத்துக்குக் காரணம் ஸத்வம்
அப்ரீதி என்கிற துக்கத்துக்கு காரணம் ரஜஸ்
விஷாதம் என்கிற மயக்கத்திற்கு காரணம் தமஸ்

ஸத்வ குணம் அறிவை உண்டாக்கும்
ரஜோ குணம் செயலை உண்டாக்கும்
தமோ குணம் அவற்றைக் கட்டுப்படுத்தும்

அந்யோன்ய அபிபவ வ்ருத்ய –
இவற்றில் ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டு குணங்களையும்
அழுத்திக் கொண்டு -அபி பவம் -செய்து தான் வளரும்

அந்யோன்ய ஆஸ்ரய ஜனன வ்ருத்ய –
ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டின் செயலை எதிர்பார்த்துத் தான் தன் கார்யத்தைச் செய்யும்
ஸத்வ குணம் அறிவை ஏற்படுத்த வேண்டும் என்றால் ரஜோ குணத்தால் உந்தப்பட வேண்டும்
அதே போல் தான் தமோ குணமும் -ரஜோ குணத்தின் காரியமே மற்ற இரண்டின் குணங்களை ஊக்குவிப்பது என்கிறபடியால்
அது மற்ற இரண்டின் குணங்களை எதிர்பார்க்கிறது –

அந்யோன்ய மிதுன வ்ருத்ய –
பிரக்ருதியிலும் அதன் காரியங்களிலும் இந்த முக் குணங்கள் என்றுமே பிரியாமல் சேர்ந்தே இருக்கும் –

சாங்க்ய மத காரிகை இது
விட்டுப்பிரியாமல் இருப்பது இங்கே பிராகிருத மண்டலத்தில் தானே
அவர்கள் நித்ய விபூதியை ஒத்துக் கொள்வது இல்லை
ஆகவே நாம் இவற்றை லீலா விபூதிக்கே கொள்ள வேண்டும் –

முக் குணங்களால் நாம் கட்டுப்படுத்தல்
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம்
ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக–14-6-

அநக-பாவமற்றவனே,
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது,
அநாமயம்-நோவற்றது,ரோகங்கள் வாராமல் தடுக்கும் –
ந சத்வாத் ஆரோக்யம் -தேசிகன்
ஸுக ஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும்,
ஜ்ஞாந ஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும்,
பத்நாதி-கட்டுப்படுத்துவது.

அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது
இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
சத்வ குணமானது –
குற்றம் கலக்கம் அற்றபடியால் ப்ரகாஸம் என்கிற அறிவை ஏற்படுத்துகிறது — உடலில் நோய்கள் வராமல் தடுக்கிறது
அது மேலும் மேலும் அறிவையும் ஸூகத்தையும் அடைய வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி –
அதற்காக பல செயல்களில் ஈடுபட வைத்தும் -அதன் மூலம் நம்மை உடலோடு கட்டுகிறது –

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்
தந்நி பத்நாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநம்–14-7-

கௌந்தேய-குந்தி மகனே,
ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம்,
த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்,
தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்,
நிபத்நாதி-கட்டுகிறது.
ராகம் த்ருஷ்ணா சங்கம் -மூன்றும் -இந்த ஸ்லோகத்தில் ஆசைக்கு பத பிரயோகம் –
ஆண் பெண் சேர்க்கை ஆசை ராகம்
த்ருஷ்ணா -பொருள்களின் மேல் ஆசை -அவர்களுக்கு பிடித்தவற்றின் மேல் -கண்டு –ஐம்கருவி இன்பம்
சங்கம் -அபிமானத்தால் வரும் ஆசை

ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே,
அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

ரஜோ குணம் ராகம் எனப்படும் காம ஸூகத்தில் இருந்து தோன்றுகிறது –
உலக விஷயங்களில் -த்ருஷ்ணா -ஆசை -மற்றும்
நம்முடையவர்களாக அபிமானிக்கப்பட்ட மக்கள் இடம் உண்டான ஆசை-சங்கம் -என்ற இரண்டையும் இது ஏற்படுத்துகிறது –
அதற்காக நம்மை செயல்களில் ஈடுபடுத்தி -அதன் மூலமே நம்மை உடலோடு கட்டுகிறது –

தமஸ்த்வ அஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நி பத்நாதி பாரத–14-8-

பாரத-பாரதா!
ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ,
அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்,
தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப் படுத்துகிறது.

தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது.
தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!

தமோ குணம் அஞ்ஞானம் என்கிற அறிவின்மையால் தோன்றுகிறது -அது மேலும் மயக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது –
கவனம் இன்மை -பிரமாதம் -சோம்பேறித்தனம் -ஆலஸ்யம் -தூக்கம் -நித்ரா –
ஆகிய இவற்றின் மூலம் நம்மைக் – கட்டுப் படுத்துகிறது

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச-14-17-

ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது,
ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும்,
தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும்,
மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

ஸத்வ குணத்தில் இருந்து அறிவும்
ரஜோ குணத்தில் இருந்து பேராசையும்
தமோ குணத்தில் இருந்து கவனம் இன்மை -மயக்கம் -அறிவின்மை -ஆகிடாவையும் தோன்றுகின்றன –
மூன்று குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை சம்சாரத்தில் கட்டுப் படுத்து கின்றன –

முக்குணங்களைப் புரிந்து கொள்ளுதல் –

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மந்யதே–3-27-

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

தத்த்வ வித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே-3-28-

து மஹா பாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மை யறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

இப்படி பிரகிருதியின் தன்மைகளான இந்த முக் குணங்களும் நம்மை எத்தனையோ செயல்களில் ஈடுபடுத்துகின்றன –
ஜீவாத்மா இயற்கையாகவே மிகத் தூய்மை யானவர் -குறைகள் அற்றவர் –
அவர்க்கு பசி தாகம் துக்கம் வியாதி கிழட்டுத்தன்மை முதலான அனைத்துமே இந்த உடலோடு தொடர்பு உள்ள படியால் தான் ஏற்படுகின்றது –
அதற்காக நாம் உண்ணுதல் -உறங்குதல் -சம்பாதித்தல் -தர்ம கார்யங்களைச் செய்தல் போன்ற எத்தனையோ செயல்களைச் செய்கிறோம் –
ஆனால் இவை நமக்கு இயற்கையானவை அல்ல -பிரகிருதியின் தொடர்பால் தவிர்க்க முடியாமல் வந்து சேர்ந்தவை என்று புரிந்து கொள்ள வேண்டும் –
இது புரிந்து விட்டால் அந்தச்செயல்களில் பற்று இல்லாமல் நாம் வாழலாம் –

ஆனால் நானே தான் உடல் என்று தவறாக நினைத்தால் அதற்கு அஹங்காரம் என்று பெயர் –
அப்படி ஒரு மயக்கத்தில் இருக்கும் ஆத்மா இந்த முக்குணங்கள் தன்னுடைய இயற்கையான குணங்கள் என்று நினைத்து –
அவற்றால் தான் செய்யும் செயல்கள் தான் தன்னுடைய இயற்கையான செயல்கள் என்று நினைத்து –
எனவே தானே அவற்றைச் செய்கிறேன் என்று தவறாக நினைத்து விடுகிறான்
எவன் முக்குணங்களைப் பற்றிய உண்மையை அறிகிறானோ அவன் -குணங்கள் தான் இந்தச் செயல்களைச் செய்கின்றன –
இதில் நான் செய்ய என்ன உள்ளது என்று பற்று அற்று இருந்து முக்தி அடைகிறான் –

முக்குணங்களைக் கட்டுப்படுத்துதல் –

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர் யோக÷க்ஷம ஆத்மவாந்–2-45-

வேதா-வேதங்கள்,
த்ரை குண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரை குண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர் த்வந்த்வ-இருமைகளற்று,
நித்ய ஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.

மூன்று குணங்களுக்குட்பட்டன வற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக.
இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.
முக் குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று

வேதங்கள் அனைவருக்கும் பொதுவானது –
ஸத்வ குணம் அதிகமாக இருப்பவர்கள் ஆசைப்படுவதையும் வேதம் உபதேசிக்கும் –
ரஜோ குணம் மிகுதியாக இருப்பவர்களுக்காகவும் பல செயல்களை உபதேசிக்கும் –
தமோ குணம் மிக்கவர்களுக்கும் உபதேசிக்கும் –
அனைவரையும் ஆஸ்திகர்கள் ஆக்கிப் படிப்படியாகப் பக்தர்கள் ஆக்குவதே வேதத்தின் நோக்கமாகும்
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை என்ற ஒரே காரணத்துக்காக நாம் அந்தக் கர்மங்கள் அனைத்தையுமே செய்யத் தேவையில்லை –
நாம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் குறைத்து – ஸத்வ குணத்தையே வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் –
அது தான் நமது உஜ்ஜீவனத்துக்கு வழி வகுக்கும் –

———–

பாடம் –14- ஸ்ருஷ்ட்டி –படைப்பு –

ஸ்ருஷ்டியின் தொடக்கம்
ப்ரக்ருதி என்ற த்ரவ்யம் முக்குணங்களை உடையது என்று பார்த்தோம் –
அந்தப் பிரக்ருதியைக் கொண்டு தான் உலகம் படைக்கப் படுகிறது -மண்ணைக் கொண்டு குடம் செய்வது போலே –
ஆனால் பிரக்ருதிக்கும் இவ்வுலகுக்கு வேறுபாடு உண்டு –
இவ்வுலகத்தில் உள்ள பொருள்களில் ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ என்ற இவை ஏற்றத் தாழ்வுகளோடே இருக்கும்
ஆனால் பிரகிருதி என்ற பொருளில் முக்குணங்களும் சமமான நிலையில் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கும்
பிரளய காலத்தில் அந்த ப்ரக்ருதி என்ற பொருள் மட்டும் தான் இருக்கும் -நாம் இப்போது பார்க்கும் பொருள்கள் அனைத்துமே
தன் தன் காரணப் பொருளில் ஒன்றாக கடைசியாக ப்ரக்ருதி என்ற நிலையில் தான் மிஞ்சி நிற்கும் –
பிரளய காலம் முடிந்து ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் பொழுது முதலில் ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தில்
குணங்கள் மாறுபட்டு ஏற்றத் தாழ்வுகள் அடைகின்றன -இந்த நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர் –
மேலே மேலே உலகம் முழுவதும் உண்டாவதற்கு முன்னால் அக்கார்யத்தை எதிர் நோக்கித் தயாராக இருக்கும்
பொருள் தான் அவ்யக்தம் என்று பொருள் -கார்ய உன்முக அவஸ்தை –

மஹான் என்ற தத்வம்
அடுத்து அவ்யக்தத்தில் இருந்து முதலில் மஹான் என்ற தத்வம் படைக்கப்படுகிறது -இதற்கு புத்தி தத்வம் என்ற பெயரும் உண்டு –
பிரகிருதி அவ்யக்தமாகி -அவ்யக்தம் மஹானாக ஆகும் பொழுது அந்த அந்தப்பொருள் முழுவதுமாக மாறி விடாது –
ஒரு பகுதியே மஹான் என்ற நிலையை அடையும் என்று கருத்தில் கொள்ள வேண்டும் –
எனவே அவ்யக்தம் என்ற பொருளை சுற்றிலும் மூடிக் கொண்டு ப்ரக்ருதி என்ற தத்வம் இப்பொழுதும் உள்ளது –
மஹான் என்ற தத்துவத்தை சுற்றிலும் மூடிக் கொண்டு தான் அவ்யக்தம் என்கிற தத்வம் உள்ளது –

உலகில் முதலில் ஒரு பொருளை அறிகிறோம் -இதற்கு ஆலோசநம் -என்று பெயர்
அடுத்து இது என்னுடையது -நான் இத்தை அடைய வேண்டும் -என்ற எண்ணம் ஏற்படுகிறது -இதற்கு அபிமானம் என்று பெயர்
கடைசியாக இந்தப் பொருளை அடைய நான் இந்தச் செயலைச் செய்யப் போகிறேன் என்ற உறுதி பிறக்கும் -இதற்கு அத்யவசாயம் என்று பெயர் –
நம் மனதைக் கொண்டு நாம் அத்யவசாயத்தை -உறுதியை -எடுக்க வேண்டும் என்றால் -அதற்கு இந்த மஹான் உதவுகிறது –

பொருளை மனசால் அறிந்து கொள்வது -முதல் நிலை –
அதிக்ருதி -அபிமானம் -இத்தை அடைய -அதிகார ஞானம் -அடுத்த நிலை –
இத்தை அடைய அத்யவசாயம் உறுதி -கண்டிப்பாக செய்வது -மஹான் புத்தி தத்வம் இதுக்கு துணையாகிறது –

மஹான் செய்யும் செயல்கள்
மஹான் என்ற தத்வத்தை சாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்ற பாகுபாடு உண்டு -சாத்வீகமான பகுதியின் தன்மைகள்
தர்ம -நாம் தர்மம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் உதவுகிறது
ஞானம் -ஜீவாத்மா வேறு ப்ரக்ருதி வேறு என்ற பகுத்தறிவை ஏற்படுத்த உதவுகிறது
விராகம் -உலக விஷயங்களில் பற்றின்மை -வைராக்யம் -ஏற்பட உதவுகின்றது –
ஐஸ்வர்யம் –யமம் நியமம் ஆசனம் இத்யாதி அஷ்ட-கொண்டு அடையும் அஷ்ட மஹா ஸித்திகளையும் நாம் பெற உதவுகிறது -அவை
அணிமா -மிகச் சிறியதாக ஆகும் சக்தி –
லகுமா -மிகச் லேசாக ஆகும் சக்தி
மஹிமா -மிகப் பெரியதாக ஆகும் சக்தி
பிராப்தி -எவ்விடத்தையும் அடையும் சக்தி
ப்ராகம்யம் -கல் சுவர் முதலானவற்றில் மோதாமை
வஸித்வம் -உலகப் பொருள்களை இயக்குவது
ஈஸித்வம் -உலகப் பொருள்களைப் படைத்து அழிப்பது
காம அவாஸாயித்வம் –நினைத்தத்தை எல்லாம் ஸாதித்தல் -ஸத்ய ஸங்கல்பத்வம் என்று வேதாந்தம் சொல்வது இத்தையே –

தாமஸமான பகுதி இதற்கு முரண்பட்ட தன்மைகள் அனைத்தையும் கொண்டு இருக்கும்

அஹங்காரம் என்ற தத்வம்
மஹான் என்பதில் இருந்து அஹங்காரம் என்ற தத்வம் உண்டாகிறது —
ஆவரணம் என்று இத்தையே சொல்லும் -ஒரு பகுதி தான் மாறும் -ஆவரணம் என்று மூடி போல் –
அஹங்காரம் -கர்வம் -நான் என்கிற புத்தி -அறிவுக்கு இலக்கு -அஞ்ஞானம் என்றும் உண்டு –
இங்கு ஒரு த்ரவ்யத்தைக் குறிக்கிறது
அதின் முக்கியமான செயல் கீழ் சொல்லப்பட்ட அபிமானம் என்கிற புத்தியை ஏற்படுத்த இது -உதவும்
உடலையே ஆத்மா என்று நினைத்தல் -ஆத்மாவை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்தல் போன்ற
தவறான புரிதல்களும் இந்த அஹங்காரம் காரணம் ஆகும் –
இந்த அஹங்காரமும் ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்ற மூவகைப்படும் –

சாத்வீகமான அஹங்காரத்துக்கு -வைகாரிகம் -என்று பெயர் -அதில் இருந்து தான் -11- இந்திரியங்களும் தோன்றுகின்றன –
ராஜஸமான அஹங்காரத்துக்கு தைஜஸம் என்று பெயர் -இதற்கு தனியாக எந்த செயலும் கிடையாது –
ஸாத்விக அஹங்காரமும் தாமஸ அஹங்காரமும் தங்கள் தங்கள் செயல்களை செய்வதற்கு உதவுவதே இதன் வேலை –
தாமஸமான அஹங்காரத்துக்கு பூதாதி என்று பெயர் -அதில் இருந்து தான் ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றுகின்றன –

நியாய மதம் படி-ஐந்து பூதங்களில் இருந்து தோன்றும் –பவ்திகம் இவை என்பர் -ஆனால் நாம்
வேதாந்தத்தில் அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை இவை என்கிறோம் –

இந்திரியங்கள்
ஞான இந்திரியங்கள் -அறிவை ஏற்படுத்தும் புலன்கள் -அவை
சஷுஸ் -நிறத்தைக் காண கண்ணில் உள்ளது
க்ராணம்-மணத்தை அறிய மூக்கில் உள்ளது
ரஸனம் -சுவையை அறிய நாக்கில் உள்ளது
த்வக் -ஸ்பர்சத்தை அறிய தோலில் உள்ளது
ஸ்ரோத்ரம் -ஒலியை அறிய காதில் உள்ளது
கர்ம இந்திரியங்கள் -செயல்கள் செய்வதற்கான புலன்கள் அவை –
வாக் -பேசுவதற்கான இந்திரியம் நாக்கில் உள்ளது
பாணி -பொருள்களைக் கையாள கைகளில் உள்ளது
பாதம் -எங்கும் திரிய கால்களில் உள்ளது
பாயு -மலம் கழிக்கும் இந்திரியம்
உபஸ்தம் -ஜலம் கழிக்கும் இந்திரியம்
மனது -மேல் சொன்ன இந்திரியங்களை எல்லாம் இயக்கும் புலன் –சிந்திப்பதற்கும் -ஆசைப்படுவதற்கும் -முடிவு எடுக்கவும் உதவுகிறது

மனதையே -புத்திக்கு எட்டுகிறது என்றும் -அஹங்காரம் -நான் என்ற நினைவு -சித்தம் -என்றும் சொல்லுகிறோம்
வெவ்வேறே வகார்யங்களை செய்வதால்
ஆலோசனை சிந்தனம் -சித்தம்
அபிமானிக்கும் பொழுது அஹங்காரம் என்கிறோம் – அகங்கார த்ரவ்யம் தத்வம் துணை கொண்டு
அத்யவசாயம் செய்யும் பொழுது மஹான் துணை கொண்டு முயடிவு எடுக்கும் பொழுது புத்தி
மனசு சஞ்சலம் -புத்தி உறுதி -புத்திமான் -மனோவான் சொல்லுவது இல்லையே –

இந்திரியங்கள் அனைத்துமே அணுவானவை -நுண்ணியவை -கண்ணுக்குத் தெரிய மாட்டா –
ஒரு ஜீவன் ஒரு சரீரத்தில் இருந்து மற்ற ஒரு சரீரத்துக்கு போகும் பொழுது –
இந்த 11 இந்திரியங்களை அழைத்துக் கொண்டு செல்கிறான் என்று வேதம் கூறுகிறது –
பிராண வாயு -இந்திரியங்கள் -இவை அனைத்தும் ஜீவாத்மா உடனே செல்லும் -வாயு மணத்தை எடுத்துச் செல்லுமா போல் –

பிரகிருதி -கார்யம் -மூல பிரகிருதி -அவிக்ருதி
பிரகிருதி விக்ருதிகள் ஏழு -காரணமாயும் காரியமாகவும் -மஹான் -அஹங்காரம் -தன்மாத்ரங்கள் -இவை நாடு நிலை
விக்ருதி – -16–ஷோடச -விகாரம் மட்டும் -11- ஐந்து பூதங்கள் -காரியப் பொருள்களாகவே இருக்கும் —
25 தத்வங்கள் -சாங்க்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் –
ந பிரகிருதி ந விக்ருதி ஜீவ தத்வம்
26 தத்வம் ஈஸ்வரன் -வேதாந்தம்
முரண்பாடு இல்லாத சாங்க்ய கொள்கைகளை கொள்ளுவோம் –

————-

பாடம் -15- ஐந்து பூதங்கள்

ப்ரக்ருதியில் முக்குணங்களும் சமமாக இருக்கும்
தார தாம்யம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் -ஸூஷ்மம் -புலன்களுக்கு தென்படாதவை –
நுண்ணியவை அல்ல -அளவால் பெரியதாக இருந்தாலும்
ஆகாசம் போல் -பெரியதாக இருந்தாலும் புலன்களுக்கு அப்பால் பட்டவை -இவை-
நியாய மதம் போல் வேறே த்ரவ்யம் என்பது இல்லை
ஒரே த்ரவ்யம் -நிலை அவஸ்தைகள் மாறும் –
தத்வம் என்பது உண்மைப் பொருள் என்றவாறு –
தன்மைகள் மாறுவதால் 24-தத்வங்கள் -வகையாக அவஸ்தா பேதம் -என்றவாறு –

பூதங்களும் தன் மாத்ரங்களும்
பிரக்ருதியில் இருந்து மஹான் தோன்றி -அதில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது –
ஸாத்விகமான அஹங்காரத்தில் இருந்து 11 இந்த்ரியங்கள் உண்டாகிறது என்று பார்த்தோம்
தைஜஸம் என்கிற ராஷஸ அஹங்காரம் தனியாக எந்தக் காரியத்தையும் செய்யாது –
ஸாத்விக தாமஸ அஹங்காரங்கள் தம் தம் கார்யங்களைச் செய்ய உதவும்

தாமஸ அஹங்காரம் -பூதாதி என்று அழைக்கப்படும் –
இதில் இருந்தே பஞ்ச பூதங்களும் பஞ்ச தன் மாத்தரங்களும் தோன்றுகின்றன –
பூதங்கள் -என்றால் விசிஷ்ட ஸப்தாதி விஷய அதி கரணம்-அதாவது
சிறப்பு வாய்ந்த ஸப்தம் – ரூபம் -ரஸம் -கந்தம் -என்ற விஷயங்களை உடையது எதுவோ அதுவே பூதம் –

ஸப்தம் முதலானவற்றுக்கு சிறப்பு ஆவது எது என்றால்-
1-ஸத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் வரும் -ஸாந்தத்வம் -ஆனந்தம் அளித்தல் -கோரத்வம் -துக்கம் அளித்தல்-மூடத்தவம் -மயக்குதல் –
ஆகிய தன்மைகள் ஸப்தங்கள் முதலானவற்றில் உண்டு –
2- நமது புலன்களால் அறியப்படுவதும் அடுத்த சிறப்பு –ஸப்தாதி குணங்களையும் அவற்றின் தன்மைகளான
சாந்தத்வம் இத்யாதிகளை நாம் புலன்களைக் கொண்டு அறியலாம் –

தன் மாத்ரம் -என்றால் அது மட்டும் -என்று பொருள் -அதாவது எந்தப் பொருள்களில் ஸப்தம் முதலான குணங்கள் மட்டுமே இருக்குமோ –
ஆனால் அவற்றில் உள்ள ஸாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் என்ற சிறப்புகள் இருக்காதோ
அதே போல் எந்தப் பொருள்களில் இருக்கும் ஸப்தம் முதலானவற்றை நம்மால் புலன்களைக் கொண்டு அறிய இயலாதோ
அவை தன் மாத்ரங்கள் ஆகின்றன –

தத்வ முக்த கலாபத்தில் இப்படி தன் மாத்ரைகள் பூதங்கள் ஸ்ருஷ்ட்டி பற்றி ஸ்லோகம் அருளிச் செய்கிறார்

பூதங்களின் ஸ்ருஷ்ட்டி
இந்தப் பூதங்களும் தன் மாத்ரங்களும் ஸமமாக ஒரே காலத்தில் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை அல்ல
அவற்றில் வரிசை உள்ளது
முதலில் -தாமஸ அஹங்காரத்தில் இருந்து -ஸப்த தன் மாத்ரம் தோன்றும் -அதில் ஸப்தம் என்ற குணம் இருக்கும்
ஆனால் முன் சொன்ன விசேஷம் இல்லாமல் –

அந்த ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து ஆகாசம் என்ற முதல் பூதம் தோன்றும் —
அதில் ஸப்தம் இருக்கும் -முன் சொன்ன விசேஷங்களும் இருக்கும் அந்த ஸப்தத்தை நம்மால் காதால் கேட்கவும் முடியும் –

அடுத்து ஆகாசத்தில் இருந்து ஸ்பர்ச தன் மாத்ரம் தோன்றும் -ஆகாசத்தில் இல்லாத குணமான ஸ்பர்சம் அதில் இருக்கும் –
ஆனால் வெளிப்படாமல் இருக்கும்

அடுத்து ஸ்பர்ச தன் மாத்திரத்தில் இருந்து வாயு தோன்றும் -அதில் இருக்கும் ஸ்பரிசத்தை நாம் தோல் என்ற புலனைக் கொண்டு அறிகிறோம் –

அடுத்து வாயுவில் இருந்து ரூப தன் மாத்ரம் தோன்றும் -இதில் புதிதாக ரூபம் -நிறம் -என்ற குணம் இருக்கும் —
ஆனால் வெளிப்படாமல் இருக்கும் -நம்மால் அறிய முடியாது –

ரூப தன் மாத்ரத்தில் இருந்து தேஜஸ் தோன்றும் -அதன் நிறத்தை நாம் அறியலாம்

தேஜஸ்ஸில் இருந்து ரஸ தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக ரஸம் என்ற குணம் இருக்கும் –
ஆனால் முன் சொன்ன எந்தச் சிறப்பும் இல்லாமலே இருக்கும் –

ரஸ தன் மாத்ரத்தில் இருந்து நீர் தோன்றும் -அதில் உள்ள ரஸத்தை நாம் அறியலாம்
நீரில் இருந்து கந்த தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக கந்தம் -மணம் -என்ற குணம் இருக்கும் –
ஆனால் அதில் சிறப்புகள் இல்லாத படியால் நம்மால் அறிய முடியாது –

கடைசியாக அந்த கந்த தன் மாத்திரத்தில் இருந்து பிருத்வீ தோன்றும் –
அதில் இருக்கும் கந்தத்தை -மண் வாசனையை நாம் புலன்களால் அறிகிறோம்
இதுவே தன் மாத்ரங்களும் பூதங்களும் தோற்றும் வரிசை –

பூதங்களின் தன்மைகள்
பால் தயிராக மாறும் பொழுது நடுவில் பாலாவும் தயிராகவும் இல்லாமல் -கலவமாக -இருப்பது போல்
ஒவ்வொரு பூதமும் தன் காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது நடுவில் உள்ள நிலையே தன் மாத்ரங்கள் –

ஆகாசம் -ஸப்தம் மட்டும் உடையது –
ஸ்பர்சம் இல்லாததாயும் சிறப்பு வாய்ந்த ஸப்தம் உடையதாயும் இருப்பதே ஆகாசம் என்று அதன் லக்ஷணம்
இது மற்றப் பொருள்களுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் –
நியாய மதத்தில் சொல்வது போல் இது நித்தியமானது அல்ல -உண்டாகி அழியக் கூடியது தான் –

வாயு -ஸப்தமும் ஸ்பர்சமும் உடையது -ரூபம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்
நம் உடலை இயக்க உதவும் பிராண வாயுக்களும்-சரீர தாரண ஹேதுவான – ஒரு வகை வாயுவே தான் –
வாயுவை புலன்களால் அறிகிறோம்

தேஜஸ் -ஸப்தம் -ஸ்பர்சம் -ரூபம் -உடையது –
வெப்பமான ஸ்பர்சத்தை உடையது -ஒளி விடும் நிறத்தை உடையது –
ரஸம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையது என்று பல லக்ஷணங்கள் சொல்லலாம்

இது நான்கு வகைப்படும்
1-பவ்மம் -பிருத்வியை எரி பொருளாகக் கொண்டது
2-திவ்யம் -நீரை எரி பொருளாகக் கொண்டது –மின்னல் போல்வன –
3-உதர்யம் -நீரையும் நிலத்தையும் எரி பொருளாகக் கொண்டு நம் வயிற்றில் இருக்கும் நெருப்பு -ஜாடராக்னி –
4-ஆகரஜம்-எரி பொருளே இல்லாமல் சுரங்கத்தில் தோன்றும் தேஜஸ்

இது மேலும் ப்ரபா -வெளிச்சம் -என்றும்-ப்ரபாவான் -வெளிச்சத்தை உடையது என்று இருவகைப் படும் –
தீபத்தின் ஜ்வாலை ப்ரபாவான் -அதன் வெளிச்சம் பிரபா

தீபம் -வெளிச்சம் -ப்ரபாவான் -பிரபா –
தடை இருக்கும் வரை-பரவிக் கொண்டே விரிந்து கொண்டே இருக்கும் – –
ஜ்வாலை -வெளிச்சம் -குணம் த்ரவ்யத்தை விட்டு இருக்காதே –
இந்த த்ருஷ்டாந்தம் முக்கியம் -இவை இரண்டும் வேறே வேறே த்ரவ்யங்கள்
தீபத்தை விட்டு வெளிச்சம் பிரியாதே – ரத்னம் ஒளி -பிராட்டி பெருமாள் -போல்

நீர் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் உடையது -மணம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்

நிலம் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் உடையது -சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாய் இருப்பதே இதன் லக்ஷணம் –
நறு மணம் இயற்கை –
தமஸ் -நெருப்பின் அபாவம் -தனி த்ரவ்யம் மீமாம்ஸையில்
நியாய மாதத்தில் தரவ்யம் அல்ல
வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் அல்ல பிருத்வியில் ஒரு வகை என்கிறோம்

——————

பாடம் –16- அண்டங்களின் ஸ்ருஷ்ட்டி
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதைக் கீழே பார்த்தோம் –
இந்த பஞ்ச பூதங்களைக் கொண்டே பகவான் இவ்வுலகங்களை எல்லாம் ஸ்ருஷ்டிக்கிறார் –
ஆனால் இவற்றைக் கொண்டு நேரடியாக ஸ்ருஷ்டிக்க இயலாது –
மண் மணல் தண்ணீர் இவற்றை தனித்தனியாகப் படுத்தி சுவர் கட்ட முடியாதே -மூன்றையும் கலந்தே சுவர் எழுப்ப முடியும் –
அதே போல் பஞ்சீ கரணம் செய்தே ஸ்ருஷ்டிக்க முடியும் –
ஒவ்வொரு பூதத்திலும் ஒரு பாதியை விட்டுவிட்டு மீதம் உள்ள பாதியை நான்கு பங்காக்கி
ஒவ்வொரு அரைக்கால் பகுதியையும் ஒவ்வொரு பூதத்தில் கலந்து
இவ்வாறு பஞ்சீ கரணத்துக்குப் பின்னர் பிருத்வீ பூதத்தில் பாதி பிருத்வீயிலும்
அரைக்கால் பிருத்வீ பகுதி நீர் நெருப்பு காற்று ஆகாசம் -இருக்கும் ‘
இவ்வாறு ஒரு பூதத்தின் குணனும் மற்றவற்றில் தோன்றும்
இதனாலே தான் ஆகாசத்துக்கு இயற்கையாகவே நிறம் இல்லை என்றாலும் பிருத்வீ கலந்து இருக்கிற படியாலேயே –
நீலமான ஆகாசம் கண்ணில் படுகிறது –
உபநிஷத்துக்களில் சில இடங்களில் பிருத்வீ -நீர் -தேஜஸ் -மூன்றையும் கொண்டு த்ரீவித் கரணம்
சில இடங்களில் பஞ்ச பூதங்களையும் கொண்டு பஞ்சீ கரணமும்
இவற்றுடன் மஹான் அஹங்காரம் இவற்றையும் சேர்த்து சப்தீ கரணமும் சொல்லப்படுகின்றன
இவற்றில் விரோதம் எதுவும் இல்லை -அவர் ஏழு தத்வங்களையுமே கலக்குகிறார் –

பூ மண்டலம் -14 லோகங்கள் -ஏழு கடல்கள் -ஏழு தீவுகள் ஒன்றுக்கு ஓன்று சூழ்ந்து கொண்டு உள்ளன
இது தாமரை வடிவில் இருக்கும் -நடுவில் மேரு மலை –
அத்தைச் சுற்றி முதலில் உள்ள நிலம் ஜம் பூத் வீபம் -அதில் ஒன்பது நிலப்பகுதிகள் -வர்ஷங்கள் -உள்ளன

மேருவுக்குத்
தெற்கில் நாம் இருக்கும் பாரத வர்ஷம் -கிம்புருஷ வர்ஷம் -மற்றும் ஹரி வர்ஷம் மூன்றும்
வடக்கில் ரம்யகம் -ஹிரண்யகம் குரு மூன்றும்
கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேதுமால வர்ஷம்
நடுவில் இலாவ்ருத வர்ஷம்

இதில் இருக்கும் தீவுகளும் கடல்களும்
1- ஐம்பூத்வீபம் -1- உப்புத் தண்ணீர்க் கடல்
2-ப்லஷ வர்ஷம் -2- கரும்புச்சாருக் கடல்
3-சால்மலி த்வீபம் –3-கள் கடல்
4-குச த்வீபம் 4- நெய்க்கடல்
5-கிரௌஞ்ச த்வீபம் –5-தயிர்க்கடல்
6-சாக த்வீபம் –6-பால் கடல்
7-புஷ்கர த்வீபம் –7-ஸூ த்தமான நீர்க்கடல்

முதல் தீவும் கடலும் ஒரே அளவாய் இருக்கும் -அடுத்த தீவும் இவற்றில் இரண்டு மடங்கு இருக்கும்
ஏழாவது கடலைத் தாண்டினால் தமஸ் ஸூ -இருள் -இருக்கும்
பின்பு கர்த்தோதகம் -என்ற நீர் இருக்கும்
பின்பு அண்ட கடாஹம் என்ற அண்டச் சுவர் இருக்கும் –

கீழ் உலகங்கள்
அதலம்-விதலம் -நிதலம் -தலா தலம் என்கிற கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாலம்
இவை வெள்ளை கருப்பு அருண நிறம் மஞ்சள் மணல் பாரங்கல் தங்கம் இவற்றால் ஆனவை
இவற்றில் தானவர்கள் கிங்கரர்கள் சர்ப்பங்கள் வாழுகிறார்கள்
இவற்றிலும் மாளிகைகள் மண்டபங்கள் கோபுரங்கள் உண்டு
இவற்றைத் தாண்டி -21 -நரக உலகங்கள்
அதற்குப் பின் தமஸ் இருட்டு
அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

மேல் உலகங்கள்
பூ மண்டலத்துக்கு மேல் ஆறு உலகங்கள்
1-புவ லோகம் -ஒரு லக்ஷம் யோஜனை உயரம் -நமக்கும் ஸூர்யனுக்கும் இடைப்பட்ட பகுதி -கந்தர்வர்கள் வாழும் இடம் –
2-ஸூவ லோகம் -இந்திரன் வருணன் அக்னி குபேரன் போன்ற ஆதி காரிக புருஷர்கள் வாழும் இடம் –
3-மஹ லோகம் -அதிகாரத்தில் இருந்து நீங்கி அடுத்த பதவியை எதிர்பார்த்து இருப்பவர் வாழும் இடம் -ஒரு கோடி யோஜனை உயரம்
4-ஜன-சனகன் ஸனத் குமாரன் -யோகிகள் வாழும் இடம் -2 யோஜனை உயரம்
5-தப லோகம் -ப்ரஜாபதிகள் வாழும் இடம் 8 கோடி யோஜனை உயரம்
6- ஸத்ய லோகம் -ப்ரம்மா விஷ்ணு சிவன் -அவர்களை உபாசித்தவர்கள் வாழும் இடம் -48-
இவற்றுக்கும் மேல்
தமஸ் என்ற இருளும் -அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

விளாம் பழத்தை ஓடு மூடிக் கொண்டு இருப்பது போல் இந்த அண்டத்தை 1 கோடி யோஜனை பருமனான அண்டச்சுவர் மூடிக் கொண்டு இருக்கும்
இந்த அண்டத்தை ஜலம் நெருப்பு வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் அவ்யக்தம் என்கிற ஏழு தத்வங்கள் அடுத்தடுத்து சூழ்த்துக் கொண்டு உள்ளன
முன் தத்வத்தைக் காட்டிலும் அடுத்த தத்வம் பத்து மடங்கு பெரியதாய் இருக்கும் –
பத்து பத்து மடங்கு ஒவ்வொன்றும்
மஹானை சுற்றி முடிவில்லாத -சூழ்ந்து -முடிவில் பெரும் பாழ் -சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்து பரந்த -பல dimentions
சஹஸ்ராணாம் -அநந்த அண்டங்கள் இப்படி உண்டே –
அண்டங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன – வரிசையில் அல்ல

சமஷ்டி ஸ்ருஷ்ட்டி தானே நேராகச் செய்து அருளி
நான்முகனைக் கொண்டு வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி
காலம் நித்யவிபூதி ஞானம் ஜீவன் பரமாத்மா –ஆறு த்ரவ்யங்களையும்
அத்ரவ்யங்களையும் மேலே பார்ப்போம்

———-

பாடம் -17-காலம் –
ஆறு த்ரவ்யங்களுக்குள் முதலான ப்ரக்ருதியைப் பார்த்தோம்
ஸ்ருஷ்டிக்க வேண்டிய பொழுதை உணர்த்துவது காலம் –
ஆறு -த்ரவ்யங்கள் -நித்ய விபூதி -பரமாத்மா ஜீவாத்மா -அவர்களுடைய ஞானம் இவை மற்ற நான்கு த்ரவ்யங்கள்
அஜடமான ஸ்வயம் ப்ரகாசமானவை இவை நான்கும்
மற்றவை அத்ரவ்யங்கள்

காலத்தின் லக்ஷணம் –
முக் குணங்கள் அற்றதான ஜட த்ரவ்யம் காலம் -குண த்ரய ரஹித -ஜட த்ரவ்ய விசேஷ –
அஸ்வயம் பிரகாசம் -ஜடம் –
வெறுமனே முக்குணங்கள் அற்றதான என்று மட்டும் சொன்னால் அது ஜீவாத்மா பரமாத்மா இவர்களுக்கும் பொருந்தும் -ஆகையால் அதி வியாப்தி வரும் –
ஜட த்ரவ்யம் மட்டும் சொன்னால் அது பிரக்ருதிக்கும் பொருந்தும் -எனவே முக் குணங்கள் அற்ற ஜட த்ரவ்யம் என்றே சொல்ல வேண்டும் –
காலம் -நித்யம் -அநாதி -விபு -எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியது —
மாறிக் கொண்டே இருக்கும் -காலமே இல்லாத காலமே இல்லையே
பிரளயத்தில் அழியாதே -ஸ்ருஷ்டிக்க காலமே உணர்த்தும் -காலே ஸம்சயதி யோக்யதே -பராசர பட்டர் –
லீலா விபூதி நித்ய விபூதி முழுவதும் பரந்து விரிந்து உள்ளது –
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காலம் ஒரு காரணம் ஆகும்
அது தான் வினாடி நிமிஷம் நாழிகை பகல் இரவு நாள் பக்ஷம் மாஸம் அயனம் வருஷம் என்று பல பிரிவுகளைக் கொண்டது –

உருவத்தில் மாறு பாடு அல்ல
அவஸ்தா பேதம் இல்லை -குடம் மண் போல் அல்ல
காலம் அனைத்துக்கும் அதிகரணம் -தேசம் இடம் போல் –

காலக் கணக்கு
அனைவருக்கும் ஒரே மாதிரி நிகருவது இல்லை
மனிதர் -பித்ருக்கள் -தேவர் -நான்முகன் -போல் வெவ்வேறே காலக் கணக்குகள் உண்டு
நம்முடைய மாதம் -பித்ருக்களின் ஒரு நாள் -அமாவாசை -அவர்களது மதியம் -உச்சிக் காலம் -பவுர்ணமி நடு ராத்திரி –
நம்முடைய வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்
உத்தராயணம் -தை முதல் ஆனி -அவர்களுக்குப் பகல்
தஷிணாயினம் -அவர்களுக்கு இரவு –
தேவ வருஷம் -நமது -365 வருஷங்கள்
சதா யுவர்வை புருஷ அனைவருக்கும் -அவரவர் கணக்குகள் படி
அவர்கள் ஆயுஸ்ஸூ -அவர்கள் வருஷப் படியே 100-நம் கணக்கில் 36500 வருஷங்கள் –

தேவர்கள் கணக்குப்படி 12000 வருஷங்கள் ஒரு சதுர் யுகம்
க்ருத யுகம் -4000-வருஷங்கள் -பூர்வ சந்தி -400 வருஷங்கள் -உத்தர சந்தி -400 வருஷங்கள்
த்ரேதா யுகம் -3000 வருஷங்கள் -பூர்வ சந்தி -300 வருஷங்கள் -உத்தர சந்தி -300 வருஷங்கள்
த்வாபர யுகம் –2000 வருஷங்கள் -பூர்வ சந்தி -200 வருஷங்கள் -உத்தர சந்தி -200 வருஷங்கள்
கலியுகம் -1000 வருஷங்கள் -பூர்வ சந்தி -100 வருஷங்கள் -உத்தர சந்தி -100 வருஷங்கள்

உத்தர சந்தி காலமும் பூர்வ சந்தி காலமும் -இடைப்பட்ட காலம்
க்ருத யுக த்ரேதா யுக இடைப்பட்ட சந்தி காலம் -700 வருஷங்கள்

இப்படி 1000 சதுர் யுகங்கள் முடிந்தால் நான்முகனுக்கு ஒரு பகல் -அதே கால அளவுக்கு இரவு –
அப்பொழுது அண்டத்தில் மஹ லோகத்துக்கு கீழ் உள்ள 10 லோகங்களும் அழியும் -பிதுவே நைமித்திக பிரளயம்
அந்த நான்முகன் வருஷ கணக்குப்படி அவனுக்கு 100 வருஷம் ஆயுஸ்ஸூ முடிந்த பின்பு
அனைத்து உலகங்களையும் பகவான் அழித்து விடுவார் -இதுவே பிராகிருத பிரளயம்
தினமும் பிராணிகள் மரிப்பது நித்ய பிரளயம்
கர்மங்கள் விடுபட்டு முக்தி அடைவது ஆத்யந்திக பிரளயம் –

பிரளயம் -காரியப் பொருளில் லயம் அடைவது என்று பெயர்
14 மனுக்கள் படைக்கிறார் நான்முகன் -ஒரு மனுவுக்கு 71 சதுர்யுகம் -ஆட்சிக் காலம்

தர்மத்துக்கு நான்கு கால்கள்
தபஸ் -உடலை வறுத்திச் செய்யும் செயல்கள்
சவுசம் -தூய்மை
தயை -இரக்கம்
சத்யம் -உண்மை
க்ருத யுகத்தில் தர்மத்துக்கு நான்கு கால்களும் இருக்கும்
அடுத்த அடுத்த யுகத்தில் ஒவ்வொன்றாகக் குறைந்து கலி யுகத்தில் சத்யம் என்ற ஒரே காலோடு இருக்கும்
அத்தையும் கலி திருடப் பார்க்கும் -என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம் –
காலம் நித்ய விபூதியிலும் உண்டு -ஆனால் இங்கு போல் அங்கு -ஆட்சி செய்வது இல்லை –
ந கால தத்ரைவ பிரபு
காலத்தைக் கணிசியாமல் இஷ்டப்படி கைங்கர்யங்கள் செய்யலாம்

காலம் தமோ குணம் அதிகமான மஹான் என்ற தத்வம் தான் என்பர் சிலர் -அது பொருந்தாது –
ஸ்ருஷ்ட்டி நிகழ்ந்தால் தான் மஹான் தத்வம் உண்டாகும்-காலமோ ஸ்ருஷ்டிக்கு முன்பே உள்ளது என்று வேதங்கள் கூறும்
காலத்தை புலன்களைக் கொண்டு அறிகிறோம் -இப்பொழுது வருகிறார் -இங்கு குடம் உள்ளது போன்ற
பேச்சுக்கள் அறிவுகள் அனைத்தும் காலத்தையே காட்டுகின்றன -எனவே காலம் புலன்களால் அறியப்படுவதே –

——–

பாடம் -18- நித்ய விபூதி –
ஸூத்த ஸத்வம்
வேதாந்தத்தில் பொருள்களை எல்லாம் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் இரண்டாக்கப் பிரித்து
த்ரவ்யம் லக்ஷணம் -அவஸ்த்தா நிலைகளை அடைவது –
குணம் -இத்யாதிகள் அத்ரவ்யம்
அவற்றில் ஆறு த்ரவ்யங்கள் -ப்ரக்ருதி -காலம் -நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -ஞானம் —

பிரகிருதி -முக்குண மயம் -மிஸ்ர ஸத்வமானது –

காலம் -மூன்று குணங்களும் இல்லாத பொருள்
நியாயம் -மீமாம்சை வேதாந்தம் மூன்றிலும் இத்தை த்ரவ்யமாகவே கொண்டு உள்ளார்
எங்கும் பரந்து இருக்கும்
ஆகாசமும் பரந்து இருக்கும் -ஆனால் -லீலா விபூதியில் மட்டுமே –இங்கும் பிரகிருதி மஹான் இருக்கும் இடங்களில் இல்லை- –

நித்ய விபூதி -ஸத்வ குணம் ஒன்றுமே உள்ள பொருள் –மண்ணால் வீடு ஆக்கப் படுவது போல் –
ஸூத்த ஸத்வ குணம் ஒன்றாலேயே ஆக்கப்பட்டது –
எனவே இதன்-ஸூத்த ஸத்வத்தின் – லக்ஷணம் -முக்குண மயமான ப்ரக்ருதியில் இருந்து வேறு பட்டதாயும் –
ஆனால் காலம் ஜீவாத்மாவின் இருந்து வேறுபடுத்த – ஸத்வ குணம் மட்டுமே உடையதாய் இருக்கும் –

நித்ய விபூதியின் லக்ஷணம் -மிச்சம் இல்லாமல் அவித்யை என்னும் கர்மம் தொலையும் பூமி என்று சொல்லப் படுகிறது –
அசேஷ -நிஸ் சேஷ அவித்யா நிவ்ருத்தி தேஸம் -அவித்யா இங்கு கர்மம் என்ற பொருள்
மாயா அவித்யை பிரக்ருதிக்கும்
தேக ஆத்மா அபிமானத்துக்கும் அவித்யா -அஞ்ஞானம் என்று பெயர்
ஒருவன் முக்தி அடைந்து நித்ய விபூதியை அடைந்த போது தான் அனைத்துக் கர்மங்களையும் தொலைக்கிறான் –
தத்வஞ்ஞர்கள்-முஸ்யந்தே சர்வ கில்மிஷங்கள் –

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -விஷ்ணுவின் அந்த உயர்ந்த இடத்தை
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் -என்பதால்
முக்தி அடைபவன் ஒரு இடத்தை -பகவானை மட்டும் அல்ல –
நியாய மதத்தில் கல் போல் இருப்பதே முக்தி –
பகவானை அடைவது -ஸ்ரீ வைகுண்டம் அடைவது -கர்மங்கள் போக்கி -மூன்றாலும் பரமபதம் அடைவது சொன்னாலும் –
விஷ்ணு வாகிய ஸ்தானம் இல்லை -விஷ்ணுவுடைய ஸ்தானம் என்கிறது –

நித்ய விபூதியின் தன்மைகள் –
ஸூத்த ஸத்வத்தால் ஆக்கப் பட்டுள்ளது -பஞ்ச உபநிஷத் மயம் -பஞ்ச சக்தி மயம் –
உபநிஷத் என்றால் இங்கு ரஹஸ்யம் என்று பொருள் –
வேதங்களில் பரமேஷ்டீ -புமான் -விச்வ-நிவ்ருத்தி -ஸர்வ -என்று ஐந்து ரஹஸ்யமான பொருள்கள் –
ஐந்து அப்ராக்ருத பூதங்கள் -என்பதால் பஞ்ச உபநிஷத் மயம் –
அந்த அப்ராக்ருதமான ஐம் பூதங்களுக்கும் சக்திகள் என்றும் பெயர் -ஆகவே பஞ்ச சக்தி மயம் என்றும் சொல்வர் –
லீலா விபூதியில் நீர் நிலம் தீ காற்று ஆகாயம் -பஞ்ச பூதங்கள் போல் அவை அங்கு –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் -இவை போன்ற குணங்களும் அங்கும் உண்டு -ஆனால் அவை திவ்யம் —
இங்கு போல் சாதாரணம் ஆனவை அல்ல –
இங்கு ஸூத்த ஸத்வமே இருக்கிற படியால் -ஞானத்தையும் ஆனந்தத்தையும் வளர்க்கும் என்பதால்
இந்த உலகமே ஞானத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் உலகம் என்றும் சொல்லப்படுகிறது –

நித்ய விபூதி பஞ்ச சக்தி மயே -திவ்யே -ஸூத்த சத்வே -ஸூகா தரே-ஸூகத்துக்கு இருப்பிடம் – –
ஞானமும் ஆனந்தமும் வளர்க்கும் –
ஞான ஆனந்த மயா லோகாகா இருப்பிடங்கள் -பாஞ்ச ராத்ர சாஸ்திரம் சொல்லும் –

நித்ய விபூதியின் இடமும் அளவும் –
இந்த நித்ய விபூதி அளவற்றது என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன
நமது லீலா விபூதியும் அளவற்றது என்றும் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ் –
தமஸ் என்ற ப்ரக்ருதிக்கு மேலே நித்ய விபூதி உள்ளது -தமச பரஸ்தாத் –
நித்ய விபூதிக்கு மேலேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -முடிவில்லாமல் போகும் -ஆனால் அதன் கீழ் எல்லை லீலா விபூதி யாகும் –
லீலா விபூதிக்கு கீழேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -ஆனால் அதன் மேல் எல்லை நித்ய விபூதி யாகும் –

பாத அஸ்ய விச்வா பூதாநி -கால் பகுதி
திரிபாதி அம்ருதம் திவி -முக்கால் பகுதி
இந்த லீலா விபூதி பகவானின் சொத்தில் கால் பகுதி –பாதோஸ்ய நித்ய விபூதி மூன்று பங்கு -த்ரிபாத் விபூதி
ஆகவே அளவற்றதாக இருந்தாலும் லீலா விபூதி மிகச் சிறியது -நித்ய விபூதி மிகப் பெரியது என்பதைக் காட்டவே
இவ்வாறு சொல்லப்படுகிறது -மும்மடங்கு என்பது அல்ல –

மண்ணும் தங்கமும் பிருத்வி தான்
மண்ணால் ஆக்கப் பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
தங்கத்தால் ஆக்கப்பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
மண்ணால் ஆக்கப் பட்டவை காட்டிலும் பிருத்வியால் ஆக்கப் பட்டவை அதிகம் தானே –
மண் தங்கம் பஞ்சு எல்லாம் இத்தில் அடங்கும் -அதே போல் தான் இங்கும் இது சிறியது அது பெரியது என்றவாறு –

இந்த நித்ய விபூதி ஆயிரம் ஆயிரம் ஸூர்யன்களை விட மிகுந்த தேஜஸ்ஸூ கொண்டது –
நிரவதிக தேஜோ ரூபம் —துஷ் ப்ரேஷ்யம் தேவ தானவ —
ஆகவே தேவர்கள் அசுரர்கள் காண முடியாத விபூதி -என்று வேதம் கூறுகிறது –

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –41-

———

பாடம் -19-நித்ய விபூதி

காலாதீதம் -காலத்தால் வரை அறுக்க முடியாதது
அநாதி அந்தம் –ஆதி அந்தம் இல்லாமல் என்றுமே இருக்கும்
அப்ராக்ருதம் -திவ்யம் –
ஸூத்த ஸத்வ மயம்
அ சஞ்சலம்
ப்ராப்யம்
அர்ச்சிராதி மூலம் –
அவன் திரு உள்ளத்தால் நித்தியமாக உள்ளது –

ஸூத்த ஸத்வ மயம் -நித்தியமானது -உண்டாகி அழிவது இல்லை -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டு -குறையாமலும் அசையாமலும்
சரணாகதர்களால் மட்டுமே அர்ச்சிராதி கதி மூலம் அடையப் படுகிறது –
லீலா விபூதி -அவனது விளையாட்டுக்காக -உண்டாக்கப்பட்டு அழிக்கப் பட்டு இருக்கும் –
நித்ய விபூதியோ அவனுக்கு போகத்துக்கு மட்டுமே -அழியாமல் நித்தியமாக இருப்பது –
நித்யம் என்பதால் மாறுபாடுகள் அல்ல என்று சொல்ல முடியாது -நித்ய முக்தர்கள் பகவானுக்கு ஆசைக்கு இணங்க
பல பல உருவங்களை எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறார்கள்

கூர்மாதீன் திவ்ய லோகான் -போக ஸ்தானம்
இச்சா க்ருஹீதாம்
தத் அனு மணி மயம் மண்டபம்
தத்ர சேஷம்
தர்மாதி பீடம்
ததுபரி கமலேசம்
சாமர க்ராஹணீச் ச விஷ்ணும் தேவிஹி விபூஷா ஆயுத கணம்
ச ஏகதா பவதி இத்யாதி -பல உடல்களை ஆசைப்படும் படி கொள்ளலாம் –
உடல் இருக்கும் வரை சுக துக்கம் வரும் -சரீரம் இல்லை என்பர் சிலர் -இது கர்மத்தால் வந்த சரீரம் பற்றியே
அங்கு அழுக்கு உடம்பு இல்லையே
திவ்ய மங்கள விக்ரஹம் -பல பரிணாமங்கள் அங்கும் உண்டே -இச்சாதீனம் –

ஆனந்தம் அனுபவிக்க -அனுபவிக்கப்படும் பொருள் -போக்யம் -அனுபவத்துக்கு கருவி -போக உபகரணம் –
அனுபவிக்கும் இடம் போக ஸ்தானம் -மூன்றுமே வேண்டுமே –
பரம பதத்தில் போக்யம் பகவானின் திரு மேனி
போக உபகரணங்கள் சந்தனம் மாலை போல்வன
போக ஸ்தானங்கள் கோபுரம் பிரகாரங்கள் தோட்டங்கள் போல்வன
இவை நம் ஆசைக்கு ஏற்ப நித்ய விபூதியில் தோன்றுகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன –
முக்தி அடைந்த ஆத்மாவும் வேண்டிய சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்யலாம் –
அந்த உடலும் ஸூத்த ஸத்வ மயம்-கர்ம வஸ்யம் அல்ல
கர்மத்தால் வந்த உடல் தான் தள்ளத் தக்கது -கைங்கர்யத்துக்காக எடுத்துக் கொள்ளும் சரீரம் கொள்ளத் தக்கதே –

பிரக்ருதியில் இருந்து –24 தத்வங்கள் மாறுவதை கீழே பார்த்தோம்
லீலா விபூதியில் இவை இருந்தாலும் ஒரே தத்வமாகவே கொள்ள வேண்டும் -இவை அனைத்தும் நித்யம் –
ஒன்றில் இருந்து மற்ற ஓன்று உண்டாவது இல்லையே –

இந்த நித்ய விபூதி -த்ரிபாத் விபூதி -பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் -அம்ருதம் —
நாகம்-துக்கம் இல்லாத இடம் -அப்ராக்ருத லோகம்
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா -அபராஜிதா -ஜெயிக்க முடியாத ஸ்தானம் –
போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் –

இந்த ஸூத்த ஸத்வ த்ரவ்யம் -அஜடமா -தானாகாத் தோற்றக் கூடியதா -ஜடமா -மற்றவற்றில் உதவியால் அறியப் படுகிறதா
சிலர் இது ஜடம் -தானாகாத் தோற்றாது -ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டே அறிய வேண்டும் என்பர்
ஆனால் உண்மையில் இது அஜடம் -அதாவது ஸ்வயம் ப்ரகாஸம் -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல் தானே தோற்றும் –
நான்-தன்னை அறிய ஞானம் வேண்டாமே -என்னுடைய அறிவு -கொண்டு பாஹ்ய விஷயம் அறிய
தர்ம பூத ஞானம் -தர்மி ஞானம் இரண்டும் உண்டே –
ஆத்மா தன்னைத்தானே அறிந்து கொள்ள எப்படி அறிவை எதிர்பார்க்காமல் தானாகாத் தோற்றுகிறாரோ
அதே போலவே நித்ய விபூதியை அறியவும் தன்னுடைய ஞானத்தை உபயோகிக்கத் தேவை இல்லை –
தானாகவே அறியலாம்
ஸ்வ சத்தா பாஸகம் -இருப்பதாலேயே தோன்றிக் கொண்டே இருக்கும்-ஸ்வயம் பிரகாசம்-

ஆனால் இப்பொழுது நமக்கு ஏன் தோன்ற வில்லை என்னில்
அது முக்தி அடைந்தவர்களுக்குத் தானாகவே தோற்றும் -சம்சாரிகளுக்கு அல்ல –

நான் என்கிற ஆத்மா எனக்கு ஸ்வயம் பிரகாசம்
மற்றவர் ஜீவாத்மாவை அறிய வில்லையே -நாம் ஸ்வயம் பிரகாசமாக இருந்தாலும் –
தான் தனக்கு மட்டுமே ஸ்வயம் பிரகாசம் –
அனுமானம் மூலம் அறிகிறோம் -உடலை இயக்கம் ஆத்மா இருக்க வேண்டும் -அறிவு மூலமே அறிகிறோம்
ஆகவே ஸ்வயம் பிரகாஸம் என்றால் எல்லாருக்கும் எப்பொழுதும் அறிய வேண்டும் என்பது இல்லையே –

மிஸ்ர தத்வம் -காலம் -ஸூத்த சத்வம் -இது இது என்று தோற்றம் அளிக்கும்
ஜீவாத்மா –நான் நான் என்று தோற்றம் அளிக்கும் –
அறிவு -என்ற தன்மை -குடத்தை அறிய ஞானம் மூலம் –
தன்னுடைய ஞானத்தை -அறிய இதுவும் ஸ்வயம் பிரகாசம்
பரமாத்மா –
ஞானம் -இதுவும் ஸ்வயம் பிரகாச வஸ்து -அதுவே பல பொருள்களாக ஆகாது
ஆனால் ஸூ த்த சத்வம் பலவாக அங்கு -ஆகவே இது வேறே
ஸப்தாதி குணங்களும் ஞானத்துக்கு இல்லை –
அறிவு ஒளியை கிரகிக்கும் –
ஸூத்த சத்வம் இதனாலும் வேறு பட்டது
ஆறு த்ரவ்யங்கள் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர தீபிகா –நியாய சித்தாஞ்சம் -இவற்றை விரிக்கும் –
சம்வித்யா நிரவத்ய ஞான ஆனந்தமே வடிவானது -நிஷ் க்ருஷ்ட சத்வம் -அவன் இச்சையால் போகத்துக்காக –
சிந்தா தூரதயா மனசுக்கு எட்டாதது -சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
கர்மங்கள் முழுவதும் போனாலே அறிய முடியும் —

————–

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -1-12 —

August 5, 2021

பாடம் -1- வேதாந்தத்தின் முக்யத்வத்ம்

அநந்தா ஹை வேதா –பரத்வாஜர் -இந்திரன் -மூன்று மலைகள் -கற்றது கைப்பிடி அளவு –
நான் மறை -நான்கு -என்றாலும் த்ரை வேதா -வகைகளில் மூன்று -ருக் யஜுர் ஸாம –
அபூர்வம்-முன்னால் நமக்குத் தெரியாத – உண்மையையே வேதம் சொல்லும் –
ஸ்நாத்வா புஞ்சீத -குளித்தே சாப்பிட வேண்டும் –
வேதையதி வேதம் -விளக்கும்
மறை -குதர்க்க வாதிகளுக்கு மறைக்கும்
தெய்வீகத் தன்மை –
பூர்வ மீமாம்ஸை -ஆராதன முறை -வேதம் -கர்ம காண்டம் -12 அத்தியாயங்கள்
தேவதா காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
உத்தர மீமாம்ஸை -ஆராத்யனைப் பற்றி சொல்லும் -ப்ரஹ்ம காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
வேத வியாசர் -பாதராயணர் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
அதாதோ -ஆதாலால் அதற்குப் பின் – கர்ம விஜ்ஜாசா – ப்ரஹ்ம விஜ்ஜாசா -தொடங்கும்

கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -கேட்டு அதன்படி இருக்க வேண்டும்
திரோதானம் -பிரமம் -விபரீதம் -அநித்யங்களை நித்யமாகக் காட்டும் -அசத்யங்களை சத்யமாகவும் –
அபோக்யங்களை போக்யமாகவும் காட்டும்
சரீரம் உடன் தொடர்பால் மாற்றி அறிய வைக்கும்
இத்தை புரிந்து ஆத்மா வேறே -நித்யம் -அறிய -கர்மங்கள் செய்ய செய்ய பாபங்களைப் போக்கி –
ஆராதனம் பண்ண பண்ண தான் அபூர்வங்களை அறிய விருப்பமும் -தகுதியும் வரும்
ஆகவே வேத புருஷன் -பூர்வ காண்டம் பூர்வ மீமாம்சை -பின்பு உத்தர காண்டம் -உத்தர மீமாம்ஸை
நித்ய கர்மங்களைச் செய்யச் செய்ய அநாதி கால கர்மங்கள் -வினைகள் -போகும் –

பிரமம் -மயக்கம் விப்ரலம்பம் வஞ்சனை இல்லாமல் -பிரமாதம் -கவனக்குறைவு இல்லாமல்
உண்மை பாரமார்த்திகம் ஒன்றையே சொல்லும்
த்ரிவித பரிச்சேதம் இல்லாமல் -அநாதி -அபவ்ருஷேயம்
சர்வ கர்ம சமாராத்யானாய் -எல்லா கர்மங்களால் ஆராதிக்கப்படுபவர் ப்ரஹ்மம் -முதல் -12 அத்தியாயங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –கேசவம் பிரதி கச்சதி- சர்வ தேவதா அந்தராத்மாவாய் -ப்ரஹ்மம் -அடுத்த நான்கு அத்தியாயங்கள் –
ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனாய் ப்ரஹ்மம் -இறுதி நான்கு அத்தியாயங்கள்
வேதமே ஸாஸ்த்ரம் -ஸாஸனாத் -இதம் குறு -இதம் ஆகார்ஷி –
செய்ய வேண்டியவற்றையும் செய்ய வேண்டாதவற்றையும் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு காட்டும் –
த்ரை குண்ய விஷய வேதா -புள்ளு பிள்ளைக்கு இரை தேடி கொடுத்து மேலே மேலே கூட்டிச் செல்லும் –

வேதம் செய்யச் சொல்வதே தர்மம் -செய்யாத வற்றை அதர்மம் -இதனால் அவன் திரு உள்ளத்தில் –
புண்யம் பாபம் ஈஸ்வர ப்ரீதி கோபம் –
இப்படியே அழகான தொடர்பு –
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை –

————–

பாடம் -2- வேதாந்தத்தை யார் கற்க வேண்டும் –
வேதம் -விவர்த்தி சர்வ பூதா நாம் -வேத சாஸ்திரம் ஸனாதனம் -வேத்ய இதி வேதம் –
தஸ்மாத் ஏதத் பரம் அந்நிய -ஸஹஸ்ர மாதா போல் வத்சல்ய தமம்
தொன்மையான வேதங்கள் தான் உலகில் அனைத்து உயிர் இனங்களையும் தாங்குகிறது
உலகில் ஒருவன் தனது இலக்கை அடைய நியாயமான வழியைக் கூறும் வேதங்கள் தான் சிறந்த பிரமாணங்கள் என்று மநு பகவான்
வேதத்தை விட வேறே ஒரு சாஸ்திரமே கிடையாது -அங்கங்கள் உப அங்கங்கள் ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தில் இருந்தே தோன்றியவை
வேதமே அவற்றின் மூலம்
தத்தவங்களைப் பாதிப்பதால் வேதம் என்று பெயர் பெற்றது
வேதத்தில் கர்ம காண்டம் நாம் செய்ய வேண்டிய கர்மங்களைப் பற்றியும் உபநிஷத் என்னும் ஞான காண்டம் ப்ரஹ்மத்தைப் பற்றியும் கூறும்
குருவுக்கு அருகில் அமர்ந்து ரஹஸ்யமாக கேட்க்கும் படியால் உப நிஷத் எனப்படுகின்றன -உப அருகில் நிஷத்ய அமர்ந்து
சம்சார தாபம் தீர்க்கும் ஞானத்தைக் கொடுக்கிறபடியாலும் உப நிஷத் -நிஸ் சேஷ தாப த்ரய விசரணம் ஞானம் -ஆதி சங்கரர் –
ப்ரஹ்மத்தை நேரடியாகக் கூறும் வேதப்பகுதி தான் உபநிஷத் -அத்வாரக ப்ரஹ்ம ப்ரதிபாத்யம் உப நிஷத் –
ஸூதர்சன ஸூரி -ப்ரஹ்மத்துக்கு மிக அருகில் இருந்து நம்மை அருகில் கூட்டிச் செல்லும்
தச உபநிஷத்துக்கள் பிரசித்தம் –

வேதக் கல்வி
ஒவ்வொருவரும் தங்கள் குலத்தில் பயிலப்படும் வேதப்பகுதியை தவறாமல் கற்க வேண்டும் என்று வேதமே சொல்கிறது –
ஸ்வாத்யாயம் அத்யே தவ்ய –
அப்படிக் கற்பவன் வேதத்தை மட்டும் கற்காமல் அவற்றின் அங்கங்களான
சிஷா வியாகரணம் சந்தஸ் ந்ருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆகியவற்றையும் கற்க வேண்டும்
இப்படிக் கற்கும் பொழுது அவற்றைப் படிக்கும் பொழுதே மேலோட்டமாக அதன் பொருள் புரியத் தொடங்கும்
இதற்கு ஆபாத ப்ரதீதி மேலோட்டமான அர்த்தம் என்று பெயர்
இதில் சந்தேகங்களோ தவறான புரிதல்களோ ஏற்படும்

இந்த ஆபாத ப்ரதீதி எவ்வாறு இருக்கும் என்றால்
கர்மங்களின் பலன்களான ஸ்வர்க்கம் பசு குழந்தைகள் செல்வம் உணவு இவை எல்லாமே அழியக் கூடியவை என்றே தோன்றும்
சாதுர்மாஸ யாகத்தைச் செய்தால் -அக்ஷயம் -அழியாத புண்ணியம் கிட்டும் –
அபாம ஸோமம் அம்ருத -ஸோம ரஸத்தைப் பருகி மரணம் அற்றவர்கள் ஆகலாம் போன்ற சொல் தொடர்களைப் பார்த்து
சில கர்மங்களுக்கு நிரந்தரமான பலம் கிட்டும் என்றும் தோன்றும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -என்றும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி-முதலான சொல் தொடர்களைப் பார்த்தால்
பரமாத்மாவை த்யானம் செய்து நித்தியமான பலம் பெறலாம் என்று தோற்றும்
இந்த மேலோட்டமான தோற்றங்களை உறுதி செய்யத் தான் ஒருவன் மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -வேத விசாரத்தில் இழிகிறான்
விதியால் அல்ல -ஆசையால் இழிகிறான் – பூஜ்யம் -மதிக்கத்தக்க உயர்ந்த விஷய விசாரமே -மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
கர்ம மீமாம்ஸையில் கர்ம விசாரங்களைப் பற்றி விசாரித்து முடித்ததும் –
கர்மங்களால் ஒரு ஸ்திரமான அழியாத பலன் கிட்டாது என்ற நிச்சயம் ஏற்படும் – ஓட்டை ஓடங்கள் போல் கர்மங்கள் –
அந்தவத் -முடிவை உடையதாகவே இருக்கும் –
12 அத்தியாயங்கள் கர்ம விசாரம்
தேவதா காண்டம் -அல்லது சங்கர்ஷண காண்டம் என்று -நான்கு அத்தியாயங்களும் ஜைமினி பண்ணி உள்ளார் –
பரீஷ்ய லோகான் -ப்ராஹ்மணன் நிர்வேதம் -இவற்றை அறிந்து விசாரித்து –
வேதம் கற்பவன் வெறுப்பை அடையக் கடவன் -வேதமே சொல்லுமே

வேதாந்தக் கல்வியில் நுழைவு
இவ்வாறு கர்மங்களுக்கு ஸ்திரமான பலன் கிட்டாது என்ற நிச்சயமும் –
ப்ரஹ்ம தியானமே ஸ்திரமான பலம் கொடுக்க வல்லது என்றும்
இவ்வாறு மேலோட்டமான புரிதலும் -ஆபாத ப்ரதீதியும் -உடையவன் தான்
வேதாந்த சாஸ்திரம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -கற்க சரியான அதிகாரி ஆவார் –
வேதத்தைக் கற்றவன் கர்மங்களால் அடையயப்படும் பலன்களை ஆராய்ந்து –
இவற்றால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது என்ற உறுதியான நிச்சயம் பெற்றதால்
கர்மங்களில் நிர்வேதம் -வெறுப்பு ஏற்பட்டவனாக மேலே உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தை அறிவதற்காக
ஒரு குருவை கண்டிப்பாக அணுக வேண்டும் –
அந்த குரு அவனை சோதித்துப் பார்த்து ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பார் -என்று உபநிஷத் சொல்கிறது

இவ்விடத்தில் அவன் குருவை அணுக வேண்டும் என்பது நியம விதி ஆகும் –
ஒரு பயனை அடைய பல வழிகள் இருக்கும் பொழுது -அவற்றில் ஒன்றைக் கட்டளை இட்டு
மற்றவற்றைத் தவிர்க்கச் சொல்லும் விதி நியம விதி ஆகும் –
இங்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய பல வழிகள் இருந்தாலும் குருவை அணுகியே அறிய வேண்டும் என்ற நியமம் சொல்லப் படுகிறது
ஸ்வ குரு ரேவ அதிகச்சதி -நியம கதி
அபூர்வ விதி -நியம விதி வகைகளை கீழேயே பார்த்தோமே
த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாசி தவ்ய -அர்த்த க்ரமம் -பிரயோஜனம் வைத்து மாற்றிக் கொள்ள வேண்டுமே
பரமாத்மாவைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது
இங்கு படிக்கப்பட்ட வரிசையை விட்டு -ப்ரயோஜனத்தைக் கருதி -அர்த்த க்ரமத்தின் படி
கேட்க வேண்டும் -சிந்திக்க -ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் -காண வேண்டும் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் –

நம் நிலை
இவ்வாறு அங்கங்களோடு சேர்ந்த வேதத்தைக் கற்று மேலோட்டமான அறிவைப் பெற்று
கர்ம விசாரித்தால் அவற்றின் தன்மைகளை நிச்சயித்து பிறகு தான் ஒருவன் ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்துக்கு
வர வேண்டும் என்றால் நாம் அனைவரும் எவ்வாறு கற்பது என்ற ஐயம் எழும்
இதற்கான விடையை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தம்முடைய அதிகரண சாராவளி கிரந்தத்தில் கீழில் படி அருளிச் செய்கிறார்

முன் யுகங்களில் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை தடங்கல்கள் குறைவாகவும் இருந்த படியால் முறைப்படியே பயின்றார்கள்
இங்கு கலியுகத்தில் நாம் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை குறைவாகவும் இடையூறுகள் அதிகமாகவும் இருக்கிறபடியால்
காலத்தை விரயம் செய்ய முடியாத காரணத்தால் சில பாக்கியசாலிகள் நேரடியாக வேதாந்த ஸாஸ்த்ரத்தை கற்று மகிழ்கிறார்கள் –
அப்பொழுது நியாய சாஸ்திரம் பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரங்கள் தேவை இல்லையா -அப்படிப் பொருள் அல்ல –
முழுவதுமாக அந்த ஸாஸ்த்ரங்களைப் பயில இயலா விட்டாலும் தேவையான அளவாக வாகிலும் அவற்றைக் கற்று
பெரும்பாலும் வேதாந்த ஸாஸ்த்ரத்திலே பொழுது போக்க வேண்டும் -என்று தான் பொருள்
ஏன் என்றால் நியாயம் மீமாம்ஸை வியாகரணம் -இவற்றை பயிலாமல் வேதாந்தத்தைக் கற்க இயலாது –

————

பாடம் -3-வேதாந்தத்தின் வரலாறு
தயா சதகம் -அவனது கருணை வெள்ளத்தில் -சேர்ந்த நதி போல் -குரு பரம்பரை குளிர்ந்து –
தீர்த்த பஹுளாம் -உபதேசங்ககளில் ஆழ்ந்து உஜ்ஜீவிக்க வேண்டும்
எல்லா சம்பிரதாயங்களில் குரு பரம்பரை உண்டே –
ப்ரஹ்மம் -அஃறிணைச் சொல் சமஸ்க்ருதத்தில் பரமாத்மாவையே சொல்லும்
அனைத்து மதங்களும் இவன் மூலமே தொடங்கும்

விசிஷ்டாத்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி
2-பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
3-வேத வியாஸர் -ப்ரஹ்ம ஸூத்ரம் (நியாய கலாபம் -545-ஸூத்ரங்கள் -நம் சம்பிரதாயப்படி )-மஹா பாரதம் (பஞ்சம வேதம் -இதிகாசம் )
4-போதாயனர் -ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி (வியாக்யானம் -வ்ருத்தி வார்திகம் பாஷ்யம் போன்ற பல வகைகள் உண்டே )

5-டங்கர் -ப்ரஹ்ம நந்தி என்ற பெயரும் உண்டு -சாந்தோக்ய உபநிஷத்துக்கு வாக்கியம்
6-த்ராமிடாச்சார்யார் -சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்ய காரர்
7-குஹ தேவர் -கபர்தி -பாரதி -போல்வார் (வேதார்த்த ஸங்க்ரஹத்தில் இந்த பரம்பரையைக் காட்டி அருளுகிறார் )

8-ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாய தத்வம் -புருஷ நிர்ணயம் -யோக ரஹஸ்யம்
(யோ வேத்தி ப்ரத்யக்ஷமாக முக்காலத்தில் உள்ளவற்றை எப்பொழுதும் அறிபவன் ஸர்வஞ்ஞன் –
இவர் நியாய தத்வத்தில் காட்டி அருளிய ஸ்லோகம் கிடைக்கப் பெறுகிறோம் )

9-ஸ்ரீ யாமுனாச்சார்யர் -சித்தி த்ரயம் (ஸம்வித் -ஆத்ம -ஈஸ்வர த்ரயங்கள் ) –
ஆகம பிராமாண்யம் (பாஞ்சராத்ரம் கொள்ளத் தக்கதே என்று காட்டி அருளவே )
கீதார்த்த ஸங்க்ரஹம் (32-ஸ்லோகங்களில் )- ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோஹி
(த்ராயந்தார்த்தம் ஸூ ஹ்ருதமாக ஸூ லபமாகக் காட்டி அருளிய ஸ்லோக கிரந்தங்கள் இவையே முதலில் வந்தவை )

10-பகவத் ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம் -கத்ய த்ரயம் -நித்ய கிரந்தம்
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம்-இவை மூன்றும் ப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்கள்
ப்ரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -கீதா மூன்று -படித்துறைகள்
வேதார்த்த ஸங்க்ரஹம் -உபநிஷத்துக்களில் பிறக்கும் சங்கைகளை தீர்த்து அருளுகிறார்

(தத்வ ரத்நாகாரம் -பட்டர் எழுதியது நமக்கு கிடைக்க வில்லை )

11-வரத நாராயண பட்டாரகர் -நியாய தர்சனம் -ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம் -ப்ராஞ்ஞா பரித்ராணம்–
12-மேக நாதாரி ஸூரி -நயப்பிரகாசம் என்றும் ஸ்ரீ பாஷ்ய பாவ போதநம் என்றும் இரண்டு உரைகள் -நயத்யுமணி -தனி கிரந்தம்
(மேக நாதன் இந்த்ரஜித்துக்கு அரி எதிரி -லஷ்மணன் என்றவாறு -லஷ்மண ஸூரி )

13-விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் -ப்ரமேய ஸங்க்ரஹம் -சங்கதி மாலை -விஷ்ணு புராணத்துக்கு விஷ்ணு சித்தீயம் என்ற வியாக்யானம்
14-வாத்ஸ்ய வரதாச்சார்யார் -நடாதூர் அம்மாள்-(1165-1275-) ப்ரமேய மாலை -தத்துவ நிர்ணயம் -தத்வ சாரம் -(முக்கிய கிரந்தம் இது )
15-ஸூ தர்சன ஸூரி (வேத வ்யாஸ பட்டர் வம்சம் )—ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸ்ருதி ப்ரகாசிகா- ஸ்ருத ப்ரதீபிகா -ஆகிய இரண்டு வியாக்யானங்களும் –
வேதார்த்த ஸங்க்ரஹத்துக்கு தாத்பர்ய தீபிகா உறையும் – ஸ்ரீ மத் பாகவத புராணத்துக்கு ஸூக பஷீயம் என்ற உரையும் அருளிச் செய்தவர் –
16–ஆத்ரேய ராமானுஜர் -(அப்புள்ளார் சம்பிரதாய பெயர் -தேசிகர் தாய் சகோதரர் )-நியாய குலிசம்

17-வேதாந்த தேசிகர் –சேஸ்வர மீமாம்ஸை –மீமாம்ஸா பாதுகா ( ஜைமினி ஸூத்ர வியாக்கியானங்கள் இவை )
ஸ்ரீ பாஷ்யத்துக்கு தத்வ டீகை உரை -அதிகரண சாராவலீ -(156 அதிகரணங்கள் -ஒவ் ஒன்றுக்கும் ஸ்லோகம் அருளி )
தத்வ முக்த கலாபம் (பிரமாண ப்ரமேய விசாரங்கள் -ஸ்லோக வடிவில் -ஸர்வார்த்த சித்தி -இதுக்கு வியாக்யானம் இவரே எழுதி )
நியாய பரிசுத்தி (கத்யம் ) -நியாய ஸித்தாஞ்சனம் -( கத்யம் )
சத தூஷணீ -(அத்வைத குற்றங்கள் -100-இதுக்கு பதில் சத பூஷணி -அதுக்கும் பதில் கிரந்தம் உண்டே )
கீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகா
ஈஸா வாஸ்ய உபநிஷத் பாஷ்யம் —
சதுஸ் ஸ்லோஹி -ஸ்தோத்ர ரத்னம் -கீதார்த்த ஸங்க்ரஹம் (v)- இவற்றுக்கும் வியாக்கியானங்கள்

18-மஹா சார்யர் -(தொட்டாச்சார்யார் 1543-)-பாராசர்ய விஜயம் -சண்ட மாருதம் (சத தூஷணி ஆபேஷங்களுக்கு பதில் )
ப்ரஹ்ம வித்யா -ஸத் வித்யா -அத்வைத வித்யா -குரூப ஸித்தி மற்றும் பரிகர விஜயங்கள்
19-ரெங்க ராமானுஜ முனி -10 உபநிஷத் பாஷ்யம்-
மூல ப்ரகாசிகை-பாவ ப்ரகாசிகை (ஸ்ரீ பாஷ்யத்துக்கும் ஸூத பிரகாசிகைக்கும் இவை இரண்டும் )
விஷய வாக்ய தீபிகை -சாரீரிக ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸித்தாஞ்சன டீகை
20-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -ஸ்ரீ மஹாச்சாருடைய சிஷ்யர் -யதீந்த்ர மத தீபிகை -ப்ரகரண கிரந்தம்
21-அனந்தாச்சார்யார் ( மேல் கோட்டையில் இருந்தவர் )-நியாய பாஸ்கர -வேதாந்த வாதா வளி

அத்வைதம்
1- நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி -பராசரர் -வேத வியாசர் -ஸூகர்
2-கௌடபாதர் (7 நூற்றாண்டு )-மாண்டூக்ய காரிகை -கௌடபாத காரிகை –
3-கோவிந்த பகவத் பாதர் (சந்த்ர சர்மா பூர்வாஸ்ரமம் -நர்மதா கரையில் ஆதி சங்கரர் ஆச்சார்யர் )
4-ஆதி சங்கர பகவத் பாதர் -பத்து உபநிஷத்துக்களுக்கும் -பகவத் கீதைக்கும் -ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கும் உரை
விவேக சூடா மணி -உபதேச சாஹஸ்ரி

5-பத்ம பாதர் -சதுஸ் ஸூத்ரி பாஷ்ய விவரணமான பஞ்ச பாதிகா –
6- ஹஸ்தா மலகர் -ஹஸ்தா மலக ஸ்தோத்ரம் -12-ஸ்தோத்ரங்கள்
7-தோடகர்-தோடகாஷ்டகம் -8-ஸ்லோகங்கள் -ஸ்ருதி சார சமுத்தரணம் -179- ஸ்லோகங்கள்
8-ஸூரேஸ்வரர் -ஆதி சங்கருடைய ப்ரஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்துக்கும் தைத்ரிய உபநிஷத் பாஷ்யத்துக்கும்
வார்திகம் எனப்படும் உரை -நைஷ்கர்ம்ய ஸித்தி

9-வாசஸ்பதி மிஸ்ரர் -ஆதி சங்கர ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்கு பாபதி (பாமதி என்றும் சொல்வர் ) என்ற உரை
10-ப்ரகாசாத்மன் -பஞ்ச பாதிகா விவரணம் –
11-ஸ்ரீ ஹர்சர் -கண்டன கண்ட காத்யம் (நியாய சாஸ்த்ரா தவறுகளைக் காட்டி )
12-சித் ஸூகர் -தத்வ ப்ரதீகை

13-அமலா நந்தர் -பாமதிக்கு வியாக்யானமான கல்ப தரு
14-வித்யாரண்யர் -விவரண ப்ரமேய ஸங்க்ரஹம் -த்ருக் த்ருஸ்ய விவேகம் – ஜீவன் முக்தி விவேகம்
(ஹரிகரன் புக்கர் இவர்களின் ஆச்சார்யர் இவர் )
15-அப்பய்ய தீக்ஷிதர் -வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதிக்கு அமலா நந்தர் எழுதிய
கல்ப தரு வியாக்யானத்துக்கு வியாக்யானமான பரிமளம் -நியாய ரஷா மணி -ஸித்தாந்த கால்பதிலகா –

(மது ஸூதன ஸரஸ்வதி-இவரும் பல கிரந்தங்கள் அருளிச் செய்கிறார் )

17-தர்ம ராஜ அத்வரீந்த்ரர்-வேதாந்த பரிவாஷா -அத்வைத கருத்துக்கு இது ப்ரகரண க்ரந்தம்

த்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -சனகர் –சநந்தர் -சனத்குமாரர் -ஸனாதனர் -துர்வாசர் -ஞானநிதி தீர்த்தர் –
கருட வாஹனர் -கைவல்ய தீர்த்தர் -ஞானேச தீர்த்தர் -பர தீர்த்தர் -ஸத்ய பிராஜ்ஞ தீர்த்தர் -அச்யுத ப்ரேஷ்ய ஆச்சார்யர் –

2- மத்வாச்சார்யார் -(வாசுதேவன் என்ற இயற் பெயர் -1238 அவதாரம் -இவருக்கே ஆனந்த தீர்த்தர் பூர்ண ப்ரஞ்ஞர் )
அநு வியாக்யானம் -அநு பாஷ்யம் -மஹா பாரத தாத்பர்ய நிர்ணயம் –
விஷ்ணு தத்வ வி நிர்ணயம் -பிராமண லக்ஷணம் -உபாதி கண்டனம் -கதா லக்ஷணம் -மித்யாத்வ அநு மான கண்டனம் –

3-அஷோப்ய தீர்த்தர் -வித்யாரண்யர் வேதாந்த தேசிகர் சம காலத்தவர் –

ஜெய தீர்த்தர் -22 கிரந்தங்கள் -நியாய ஸூ தா
வியாச தீர்த்தர் -பல கிரந்தங்கள்
ராகவேந்திரர் நியாய முக்தாவளி -தச பிரகாரணி
ரகோத்தம தீர்த்தர் பாவ போதகங்கள் -நியாய ரத்ன தீபிகா –

——————

பாடம் -4- ஒரே சாஸ்தம் -ஒரே நூல்
ப்ரஸ்தான த்ரயம் -ப்ரஸ்தானம் -படித்துறை போல் –
வேத வியாசர் நமக்காக செய்து கொடுத்தவை மூன்று –
வேத உபநிஷத் புராணங்கள் -இவற்றைப் பிரித்து முறைப்படுத்திக் கொடுத்தார்
பஞ்சம வேதமான ஸ்ரீ மஹா பாரதத்தையும் அதனுள் அடங்கிய ஸ்ரீ பகவத் கீதையையும் கொடுத்தார்
ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் கொடுத்தார்
உபநிஷத்துக்கள் ஸ்ரீ கீதை ப்ரஹ்ம ஸூ த்ரம் -மூன்றுமே ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய வழிகள் -இவையே ப்ரஸ்தான த்ரயம்
உபநிஷத் ஸ்ருதி பிரஸ்தானம் -கீதை ஸ்ம்ருதி ப்ரஸ்தானம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஸூ த்ர ப்ரஸ்தானம்
உபநிஷத்துக்கள் பல -தச உபநிஷத் ப்ரஸித்தம்
ஈசாவாஸ்ய -கேன -கட -ப்ரச்ன -முண்டக -மாண்டூக்ய -தைத்ரிய -ஐத்ரேய -சாந்தோக்ய -ப்ரஹ்தாரண்யம்
கீதை பகவான் கிருஷ்ணனே அருளிச் செய்தது -18 அத்தியாயங்கள் கொண்டது
ப்ரஹ்ம ஸூத்ரம் -நான்கு அத்தியாயங்கள் -சமன்வய- அவிரோத- சாதன- பல அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் நான்கு பாதங்கள்
விஷய வாக்கியம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -சங்கதி இவை அனைத்தும் அங்கங்கள் அதிகரணத்துக்கு –
மொத்தம் 156 அதிகரணங்கள் -545-ஸூத்ரங்கள் –
அத்வைதப்படி -189 அதிகரணங்கள் -555-ஸூத்ரங்கள் –

முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
மூன்று சொற்கள் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

அத -இச் சொல்லுக்கு அடுத்து -என்ற பொருளை அத்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் கொள்கிறார்கள்
ஆனால் எதுக்கு அடுத்து என்பதில் வேறுபாடு உள்ளது
அத்வைதிகள் சொல்வது -சாதன சதுஷ்ட்யங்களுக்கு அடுத்து
சாதன சதுஷ்ட்யமாவது
நித்ய அநித்ய வஸ்து விவேகம் -பகுத்தறிவு
சமதாதி சாதன ஸம்பத் -புலன் அடக்கம்
இஹாமுத்ரா பல போக விராகம் -பற்றின்மை
முமுஷுத்வம் -மோக்ஷத்தில் இச்சை
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்துக்கு அடுத்து -வேத அத்யயனம் செய்த ஒருவனுக்கு
மேலோட்டமான பொருள் தான் தெரியும் –
அத்தை உறுதி செய்ய தானாகவே கர்ம விசாரம் செய்து -கர்மங்களால்
அல்ப அஸ்திர பலன்களைத் தான் பெறலாம் என்று உறுதிபட அறிந்து ப்ரஹ்ம விசாரத்துக்கு வருகிறான்
த்வைதிகள் சொல்வது -அத -மங்களமான சொல் -பரமாத்மாவைச் சொல்லும் –
மங்களா சரண சொல் என்பதால் முதலில் சொல்லப்படுகிறது –

அத-இந்த சொல்லுக்கு ஆகையால் என்று பொருள்
அத்வைதிகள் சொல்வது -கர்மங்களால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது –
ப்ரஹ்ம ஞானத்தால் மட்டுமே அது முடியும் என்பதால்
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்தால் கர்மங்களுக்கு நிரந்தரமான பலன் கிட்டாது என்ற முடிவும்
உபநிஷத்துக்களை அத்யயனம் செய்தால் ப்ரஹ்ம ஞானத்தால் அளவற்ற இன்பத்தைப் பெறலாம்
என்கிற மேலோட்டமான புரிதலும் உள்ளபடியால் -என்று
த்வைதிகள் சொல்வது -துக்கங்களை போக்கி அளவற்ற ஸூ கத்தை அடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறபடியால்

ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் என்று பொருள் –
ப்ரஹ்மம் -என்றால் மிகப்பெரியது என்று பொருள் -பரமாத்மா ஸ்வரூப ரூப குணங்களால் மிகப் பெரியவராயும்
தன்னை அண்டினார்களையும் மிகப் பெரியவராக ஆக்குபவர் –
ஆகையால்
இந்த ஸூ த்ரத்தின் பொருள் –
கர்ம விசாரத்தை முடித்த பிறகு -கர்மங்கள் நிரந்தரமான பலனை அளிக்காது என்ற உறுதி ஏற்பட்ட படியால்
ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதாகும் –
இதைத் தான் போதாயன மகரிஷியும் -வ்ருத்தி கிரந்தத்தில்
வ்ருத்தாத் கர்மாத்திகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விதிஷா -என்று கூறுகிறார்
முடிக்கப்பட்ட கர்ம விசாரத்துக்குப் பிறகு ப்ரஹ்மத்தை அறிய ஆசை பிறக்கிறது -என்று இதற்குப் பொருள் –

ஏன் முதலில் கர்ம விசாரம்
வேதத்தைக் கற்ற ஒருவனுக்குத் தானாகவே அதன் பொருள் மேலோட்டமாகத் தோற்றுமாயின்
அவன் ஏன் முதலிலேயே ப்ரஹ்ம விசாரம் செய்யாமல் கர்ம விசாகம் செய்கிறான் –
இந்தக் கேள்வியின் விடையைத் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண சாராவளீ நூலில் அருளிச் செய்கிறார் –

க்ரமம் -மீமாம்சை ஐந்தாம் அத்யாயம் பார்த்தோம் –ஆறு வகைகள் பார்த்தோம்
1-சுருதி -நேராக வேதத்தில் சொல்லும்
2-அர்த்தம் -பிரயோஜனம் பார்த்து முடிவு செய்கிறோம் -அக்னி ஹோத்ரம் யாவகு சமைக்க வேண்டும் –
3-பாடம் -படிக்கப்பட்ட வரிசையில்
4-முக்கியம் -பிரதான கர்மங்களில் போல் அங்கங்கள் செய்ய வேண்டும் -ஆக்னேய தயிர் இத்யாதி
5-ஸ்தான கிரமம்-முன் செய்த வழக்கம் படி
6- ப்ரவ்ருத்தி -பல ஸம்ஸ்காரங்களுக்கு -பலவற்றுக்கு செய்யும் –
கர்ம விசாரம் பின்பே ப்ரஹ்ம விசாரம் -ஸ்ருதி சொல்லுமே அஸ்திர பலம் உணர்ந்து -ஆச்சார்யர் இடம் சென்று கற்க சொல்லுமே
ப்ராவண்யம் ப்ராக் த்ரி வர்க்கம் –முதல் மூன்று புருஷார்த்தங்களில் ஆசை கொண்ட வாசனை பதிவுகள் இருக்குமே –
ப்ரஹ்மம் அறிய உபாசனம் வேண்டும் -உபாசனத்துக்கு அங்கமாக கர்மங்கள் வேண்டுமே -அறிந்து அனுஷ்ட்டிக்க வேணுமே –
அங்கி அங்கம் பாவத்துக்காகவும் இப்படி கர்ம மீமாம்ஸா -முதலில் -பின்பு ப்ரஹ்ம மீமாம்ஸா
முக்கிய கிரமம் -வேதம் அர்த்தம் அறுதி விடுவதே பலன் -இரண்டுக்கும் பொதுவான நோக்கு இதுவே
மூலம் படியே வியாக்யானம் செய்ய வேண்டுமே
இன்னும் இரண்டு காரணங்கள் -பூர்வ மீமாம்ஸா கற்றவற்றை ஆதாரமாகக் கொண்டே இதன் விசாரம் அறிவோம்
வேதம் அத்யயனம் -சொல்வதன் மூலமும் யாகம் யஜ்ஜம் தானம் ஹோமம் இவற்றால் உபாசனம் செய்து
ப்ரஹ்மம் அறிய வேண்டும் -சொல் தொடர் அறிய சொல்லின் பொருள்களை அறிய வேண்டுமே
சொல்லின் பொருள் அறிய கர்ம விசாரம் -சொல் தொடரின் பொருள் அறிய ப்ரஹ்ம விசாரம் –

1-எண்ணற்றப் பிறவிகளில் நாம் தர்மம் அர்த்தம் காமம் மூன்று புருஷார்த்தங்களையே ஆசைப்பட்டதால்
இப்பொழுதும் அவற்றைச் சொல்லும் கர்ம விசாரத்தில் தான் இயற்கையாக ஆசை ஏற்படும்
முக்தியைச் சொல்லும் ப்ரஹ்ம விசாரம் பழக்கம் இல்லாத படியால் ஈற்காது
2- உபாசனம் என்ற தியானத்துக்கு கர்மங்கள் அங்கமான படியால் அங்கங்களை அறிந்த பிறகு தான்
அங்கியை அறிய வேண்டும் என்பதால்
3- வேதம் என்ற ஒரே நூலுக்கு கர்ம மீமாம்ஸையும் ப்ரஹ்ம மீமாம்ஸையும் உரை நூல்களாக இருக்கிற படியாலும் –
மூலத்தில் எந்த வரிசையில் உள்ளனவோ அதே வரிசையில் தான் உரைகளைப் படிக்க வேண்டும் –
4-பூர்வ மீமாம்ஸையில் விசாரிக்கப் பட்ட பிரமாணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரஹ்ம மீமாம்ஸையில் செய்யப் படுகிற படியாலும்
5-ஒரு சொல் தொடரின் பொருளை அறிய வேண்டும் என்றால் அதற்கு முன் அதில் இருக்கும் சொல்லின் பொருளை அறிய வேண்டும் என்பதால்
யோகத்தால் –ப்ரஹ்மத்தை உபாசிக்கிறார்கள் -என்ற சொல் தொடரை புரிவதற்கு யாகத்தை முதலில் அறிந்து இருக்க வேண்டும் –
6-பூர்வ மீமாம்ஸையில் சொன்ன விஷயங்களை எடுத்துக் காட்டாக ஆக்கி உத்தர மீமாம்ஸையில் சொல்லுகிற படியால்
முதலில் எடுத்துக் காட்டை அறிய வேண்டும் என்பதாலும் கர்ம விசாரம் தான் முதலில் செய்ய வேண்டும் –

ஐக சாஸ்திர்யம்
இப்படி ஜைமினி மகரிஷி இயற்றின பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -வ்யாஸ மகரிஷி எழுதின உத்தர மீமாம்ஸையும்
ஒரே நூலான வேதத்தின் இரண்டு பகுதிகளைத் தான் விளக்குகின்றன –
ஆகையால் இவை இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் தான்
அதாவது நியாய சாஸ்திரம் -மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -என்று பிரித்து எண்ணுவது போல்
பூர்வ மீமாம்ஸை வேறு உத்தர மீமாம்ஸை வேறு என்று என்று பிரித்து எண்ணக் கூடாது –
இரண்டும் சேர்ந்து மீமாம்ஸா என்கிற ஒரே சாஸ்திரம் தான்
இதைச் சொல்லும் போதாயன மகரிஷி
ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமினீ யேந ஷோடச லக்ஷணேந இதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி –என்று தெரிவிக்கிறார் –
அதாவது ஸாரீரிகம் என்று அழைக்கப்படும் இந்த உத்தர மீமாம்ஸா சாஸ்திரம்
ஜைமினி மகரிஷி எழுதிய பூர்வ மீமாம்ஸை உடன் ஒரே சாஸ்திரம் -என்கிறார்
ஒரே சாஸ்திரமாக் இருந்தால் -எதற்கு இருவரும் தனித்தனியாக -நான் தர்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் –
நான் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்கிறார்கள் என்ற கேள்வி எழும்
1-உத்தர மீமாம்ஸையில் மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்தில் -கர்மங்களைப் பற்றி விசாரம் செய்து இருக்க வேண்டும்
அது மிகப் பெரிய விசாரமான படியால் அத்தை ஜைமினி மகரிஷி முன்பே தனியாக எழுதினார் –
2- அவரவர் இயற்றிய பகுதிக்கு அந்த அந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
முழுவதுமான மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு -வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு ப்ரதிஜ்ஜையைத் தருவித்திக் கொள்ளலாம்
3- தர்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று ஜைமினி செய்த ப்ரதிஜ்ஜை உத்தர மீமாம்சைக்கும் பொதுவானது
ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ஸாஷாத் தர்மம் தானே -நாம் ஆசைப்படும் சகலத்தையும் பெற்றுத் தந்து அருளுவதால் –

ஐக பிரபந்த்யம்
பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும் ஒரே ஸாஸ்த்ரம் என்பதோடு நம் ஆச்சார்யர்கள் நிறுத்த வில்லை –
இரண்டும் சேர்ந்து ஒரே நூல் என்றே தெரிவிக்கிறார்கள் –
சொல் தொடர்களின் கூட்டமே ஒரு நூல் என்பது
அவற்றுக்குள் ஒன்றுக்கு ஓன்று தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் பொழுது தான் –
ஒரு வரியைப் படித்த உடன் வரும் ஐயத்தை அடுத்த வரி போக்கினால் தான் அது ஒரே நூல் ஆகும் –
அதே போல் மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் –
ஜைமினியின் முதல் ஸூ த்ரத்தை படிக்கும் பொழுது தோன்றும் ஐயத்தை அடுத்த ஸூத்ரம் விலக்கும்
இதே போல் கடைசி ஸூ த்ரம் வரை தொடரும் –
ஜைமினியின் கடைசி ஸூ த்ரத்தைப் படித்த உடன் கர்மங்கள் அல்ப பலன்களையே கொடுக்கும் என்ற புரிதல்
ஏற்பட்டு பின்பு நித்தியமான ஸூ கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற எதிர்பார்ப்பு வருமே –
வியாஸரின் முதல் ஸூத்ரமானது -அதற்காகத் தான் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் -என்று தொடங்கி
ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறது –
ஆகையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கிற படியால்
இரண்டும் ஒரே நூல் தானே

வேதாந்த தேசிகர் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
வித்யா ஸ்தான ஐக்யம்
க்ரம நியதி -ஆகாங்ஷை -எதிர்பார்ப்பும் பதிலும் ஒன்றுக்கு ஓன்று இருக்கிறதே
அவாந்தர விஷயம் உள் பிரிவு இருக்கலாமே
ஜைமினி வியாசர் கருத்துக்களில் விரோதம் இல்லை -மேலோட்டமாக இருப்பது போல் இருந்தாலும் –
சொல்லப்பட்ட விஷயம் -பயன் -எழுதியவர் -முதலானவை மாறு பட்டாலும் தவறு இல்லை –
ஒரே நூலாக ஆக முடியும் என்பதையும் காட்டுகிறார் –

————-

பாடம் -5- ஸாஸ்த்ர ஆரம்பம்
சதுஸ் ஸூத்ரீ -முதல் நான்கும் பிரசித்தமாக உள்ளவை -வேதாந்த ஸாஸ்த்ர முன்னுரை –
ப்ரஹ்ம விசாரம் ஆரம்பிக்கக் கூடாது என்ற ஆஷேபம் எழ அவற்றுக்கு பதிலாக இந்த நான்கும் உள்ளன
1-ஸித்தமான வஸ்துவைப் பற்றி வ்யுத்பத்தி ஏற்பட முடியாது
2-ப்ரஹ்மத்தை லக்ஷணம் கொண்டு அறிய இயலாது
3-அனுமானத்தால் அறியப்படும் ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் சொல்வது வீண் —
4-ப்ரஹ்ம ஞானத்தால் பிரயோஜனம் பலன் இல்லை

அறிய முடியாது -ஆஷேபம் முதல் இரண்டாலும் நிவர்த்தகம்
அறிந்தால் பிரயோஜனம் இல்லை ஆஷேபம் அடுத்த இரண்டாலும் நிவர்த்தகம்

இந்த நான்கு காரணங்களால் உபநிஷத்துக்கள் ப்ரஹ்ம ஞானம் போதிக்கும் என்று ஏற்க முடியாது என்று ஆஷேபம்
இதனால் இந்த வேதாந்த விசாரம் ஸ்தம்பித்துப் போகிறது
இதுக்கு பதில் உரைத்து வேதாந்த விசார ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இந்த சதுஸ் ஸூத்ரீ ஸ்தாபிக்கின்றது –

ஜிஜ்ஜாஸ அதி கரணம்
அதேதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

பூர்வ பக்ஷம்
சொல் தொடரின் பொருளை அறிய சொற்களின் பொருள் தெரிந்து இருக்க வேண்டும் —
சொல்லும் பொருளுக்கும் உள்ள தொடர்பு தான் சக்தி –
ஆகையால் சொல்லின் சக்தியைப் பற்றின ஞானம் கண்டிப்பாகத் தேவை –
அந்த அறிவு வ்ருத்த வ்யவஹாரம் என்ற முறையில் தான் ஏற்படும் –
சக்தி கிரஹணம் அஷ்ட வகை நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் -அதில் ஒரு வகை வ்ருத்த வ்யவஹாரம் –
ஒருவர் ஏவி மற்ற ஒருவர் செய்வதைக் காணும் சிறுவனுக்கு இந்தச் சொல்லுக்கு இது பொருள் என்ற அறிவு ஏற்படுகிறது –
ஆகையால் செய்யப்பட வேண்டிய ஒரு செயலைச் சொல்லும் சொல் தொடரில் இருந்து மட்டும் தான் சக்தி ஞானம் ஏற்படும் –
உபநிஷத்துக்களோ -முன்னமே இருக்கக் கூடிய -ஸித்தமான -ப்ரஹ்மத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றன –
ஆகையால் உபநிஷத்துக்களால் -ஸித்தமான -முன்னமே இருக்கக் கூடிய ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் உண்டாக்க முடியாது

சித்தாந்தம்
வ்ருத்த வ்யவஹாரத்தால் தான் சக்தி ஞானம் என்பது தவறு
ஒருவர் விரலைக் காட்டி அப்பா என்று சொல்வதால் ஒரு குழந்தையும்
இதற்கு காக்கை என்று பெயர் என்ற உபதேசத்தால் ஒரு சிறுவனும் ஒருவர் செய்கை செய்ததையும்
அதை மற்ற ஒருவர் சொற்களால் சொல்வதைக் கேட்டு அனைவரும் சக்தி ஞானத்தைப் பெறுகிறோம்
இந்த இடங்களிலே எங்குமே செய்யப்பட வேண்டிய செயலே இல்லா விட்டாலும் சக்தி ஞானம் ஏற்படுகிறது
ஆகையால் உபநிஷத்துக்களில் இருந்தும் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் ஏற்படலாம் –

ஜந்மாத் யதி கரணம்
ஜந்மாத் யஸ்ய யத

பூர்வ பக்ஷம்
விசேஷணம் என்றால் -ஒரு பொருளின் பகுதியாய் இருந்து -அதை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தும் ஓன்று
உப லக்ஷணம் என்றால் ஒரு பொருளைக் காட்டிலும் தனியாக இருந்தாலும் அதை மற்றவற்றில் இருந்தும் வேறுபடுத்தும் ஓன்று
உலகைப் படைத்து அழித்துக் காப்பது ப்ரஹ்மம் -என்ற லக்ஷணம் பொருந்தாத படியால் ப்ரஹ்மத்தை அறிய முடியாது –
இந்தத் தன்மைகள் விசேஷணங்கள் என்று கருதினால் மூன்று விசேஷணங்கள் உள்ள படியால்
மூன்று ப்ரஹ்மங்கள் என்று சொல்ல நேரிடும்
உப லக்ஷணம் என்று கொண்டால் அந்தப்பொருளை ப்ரஹ்மம் என்று அறிவதற்கு முன்னால்
எவ்விதமாகவும் அறியமுடியாதே -என்று கேள்வி வரும்

ஸித்தாந்தம்
இவற்றை விசேஷணமாகக் கொள்ளலாம்
வெவ்வேறு காலத்தில் இவற்றை ப்ரஹ்மம் பரமாத்மா செய்கிறபடியால் இவற்றுக்கு இடையே
முரண்பாடே இல்லாத படியால் பல ப்ரஹ்மங்கள் என்று நேரிடாது
இவற்றை உப லக்ஷணமாகவும் சொல்லலாம்
உலகுக்கு உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் முன்னமே அறியப்பட்ட பொருளை
உலகைப் படைத்து அழித்துக் காப்பதால் இதுவே ப்ரஹ்மம் -உலகிலேயே மிகப் பெரிய பொருள் என்று தெரிந்து கொள்கிறோம்

ஆக முன்னால் அறியப்பட்ட வடிவம் ஒன்றும்
உப லக்ஷணம் ஒன்றும்
பின்னால் அறியப்படும் வடிவம் ஒன்றும் கிடைக்கின்றன –
ஆகவே இவை உப லக்ஷணமாகவும் குறை இல்லை –

வீடு என்பதை அறிந்து காக்கை உட்க்கார்ந்து உள்ள என்ற விசேஷணம் கொண்டு அது வராஹ ஸ்வாமி உடைய வீடு என்று அறிகிறோம்
அதே போல் ப்ரஹ்ம லக்ஷணம் கொண்டு -ஜென்மாதி -ஜென்மம் ஸ்திதி ஸம்ஹாரம் -விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் கொள்ளலாம்
உப லக்ஷணம் என்றால் முன்பே அறிந்து இருக்க வேண்டுமே -யார் ஜகத்தை படைத்தாரோ -யார் யார் என்று முன்பே அறிந்த ஒன்றை –
யார் அறிய சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மமே –
மூவகை காரணமாக உள்ளவன் ப்ரஹ்மம் என்று சொல்லுமே –

ஸாஸ்த்ர யோனித் வாத் அதி கரணம்
ஸாஸ்த்ர யோனித் வாத்

பூர்வ பக்ஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்த வத்-என்கிற நியாயத்தாலே -வேறே ஒரு பிரமாணத்தால்
அறியப் படாத பொருளை ஸாஸ்த்ரம் போதித்தால் தான் அதுக்கு பிரயோஜனம் உண்டு –
படைக்கப்படும் எந்தப்பொருளுக்கும் ஒரு படைப்பாளி வேண்டுகிறபடியால் படைக்கப்படும் இவ் உலகத்துக்கும்
ஒரு படைப்பாளி தேவைப்படும் -என்ற அனுமானத்தாலே அறியப்படும் ப்ரஹ்மம்
ஆகையால் சாஸ்திரம் பரமாத்மாவை போதிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நியாய மதஸ்தர் கூறுவார்கள்

சித்தாந்தம்
ப்ரஹ்மம் ஸாஸ்திரத்தாலே மட்டுமே அறியப்படும் தத்வம் தத்வம் ஆகும்
அனுமானத்தால் அறியலாம் என்பது தவறு -நீங்கள் சொல்லும் அனுமானத்தின் படி
இன்று ஒரு மூளையைப் படைக்கும் ப்ரஹ்மமும் நாளை ஒரு பூவைப் படைக்கும் ப்ரஹ்மமும்
நாளை மறு நாள் ஒரு பழத்தைப் படைக்கும் ப்ரஹ்மமும் வெவ்வேறாகக் கூட இருக்கலாம்
அனைத்தையும் படைத்தவர் ஒருவரே என்பதற்கு எந்தப் பிரமாணமும் இல்லை
மேலும் அதிகமான புண்ணியம் உடைய ஒரு ஜீவாத்மாவே உலகைப் படைக்கிறார் என்று சொன்னாலும்
தவறு இல்லை என்றாகி விடும் -சொல்லப்பட்ட அனுமானத்திலும் பற்பல தோஷங்கள் உள்ளன
ஆகையால் ஸாஸ்திரத்தாலேயே மட்டுமே உலகைப் படைத்து அழித்துக் காக்கும் பரமாத்மாவை உள்ளபடி
அறிய வேண்டும் என்பதால் உபநிஷத்துக்களுக்கு பிரயோஜனம் உள்ளது –

ஸமன்வய அதி கரணம்
தத் து சமன்வயாத்

பூர்வ பக்ஷம்
உபநிஷத்துக்களால் ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு ஏற்பட்டாலும் -அதனால் நமக்கு
ஒரு முயற்சி -ப்ரவ்ருத்தி -அல்லது -ஒரு விலக்கு-ஒரு நிவ்ருத்தி -ஏற்படாத படியால்
ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு பயன் அற்றது ஆகையால் ஸாஸ்த்ரத்தைத் தொடங்கக் கூடாது –

ஸித்தாந்தம்
ப்ரஹ்மம் மிக உயர்ந்த புருஷார்த்தமாக உப நிஷத்துக்களால் சொல்லப் படுகிற படியால்
வேதாந்தத்தால் ஏற்படும் அறிவுக்கு பயன் உண்டு –
எந்த ஸாஸ்த்ரத்தால் முயற்சி -ப்ரவ்ருத்தி -விலக்கு -நிவ்ருத்தி -ஏற்படுகிறதோ அது மட்டுமே
பிரயோஜனம் உடையது என்று சொல்வது தவறு –
உன் வீட்டின் கீழ் புதையல் உள்ளது -என்ற சொல் தொடரைக் கேட்டவுடன் ஒரு ஆனந்தம் ஏற்படுவதாலேயே
அந்த சொல் தொடர் பயன் உடையதாக ஆவது போல் காட்டில் தொலைந்து போய் வேடுவனாக வளர்ந்த ராஜ குமாரன்
உயர்ந்தவரான சக்கரவர்த்தி தான் தன தந்தை என்று அறிந்ததால் மட்டுமே ஆனந்தம் அடைவதால் மட்டுமே
அதை அறிவிக்கும் சொல் தொடர் பயன் உடையதாகுவது போலேவும்
சொல்ல ஒண்ணாத பெருமைகளை உடைய பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார் என்று போதிக்கும்
சொல் தொடரும் -ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் மட்டுமே கூட பிரயோஜனம் உடையது தான் –

சாரீரிக சாஸ்திரம் -ஸமஸ்தமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்ம விசாரம் தொடங்குவோம்

——————

பாடம் -6–வேதாந்தத்தில் பிரமாணங்கள்
யதா வஸ்தித வ்யவஹார அநு குணம் ஞானம் ப்ரமா-
ஒரு பொருளைத் தகுந்தபடி வியவஹாரம் செய்யக் காரணமான ஞானம் ப்ரமா ஆகும்
வியவஹாரம் -என்பது சப்த பிரயோகம் -அதைப் பற்றிச் சொல்லுதல் -மற்றும் அதை எடுத்தல் வைத்தல் முதலான செயல்களும்
தகுந்தபடி வியவஹாரம் செய்ய-என்று சொன்னபடியால் சம்சயம் விபரீத ஞானம் அந்யதா ஞானம் ஆகியவை ப்ரமா ஆக மாட்டா
சம்சயம் -சந்தேகம் -கயிறா பாம்பா என்பது போல் –
விபரீத ஞானம் -ஒன்றை மற்ற ஒன்றாக நினைப்பது -கயிற்றைப் பார்த்து இது பாம்பு என்று நினைத்தல்
அந்யதா ஞானம் -ஒரு பொருளின் தன்மையைத் தவறாக நினைத்தல்-
பித்தம் அதிகமாக உள்ளவன் வெண்மையான சங்கைப் பார்த்து இது மஞ்சளான சங்கு என்று நினைத்தல் –
அப்படிப்பட்ட ப்ரமாவுக்கு காரணமான -உண்டாக்கும் கருவியாக -இருப்பதற்கு பிரமாணம் என்று பெயர்
விசிஷ்டாத்வைத -வேதாந்த -தரிசனத்தின் படி பிரமாணங்கள் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் – சப்தம் என்று மூன்றும் –
(மீமாம்ஸாவில் பாட்ட மதம் போல் அத்வைதிகள் ஆறு பிரமாணங்கள் -உபமானம் அர்த்தா பத்தி மற்றும் )

ப்ரத்யக்ஷம் –
சாஷாத்காரி ஞானம் ப்ரத்யக்ஷம்
சாஷாத்காரி என்றால் விசதமாக -தெளிவாக ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தல் –
நாம் கண் மூக்கு போன்ற புலன்களால் பொருள்களை அறிகிறோமே -அதுவே ப்ரத்யக்ஷம் ஆகும்
விசத அபவாசம் -நெருப்பு சுடும் படித்து அறிவது போல் இல்லாமல் தொட்டுத் தெரிந்து கொள்வதே ப்ரத்யக்ஷம்
சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் -அத்வைதி -ப்ரஹ்மம் ஒன்றையே பார்ப்பது -பண்புகள் இல்லாமல் –
விசிஷ்டாத்வைதம் -அப்படி அல்ல பண்புகள் உடனே ப்ரத்யக்ஷம்

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும் -நிர்விகல்பகம் -ச விகல்பகம் –
நிர்விகல்பகம் -ஒரு பொருளையும் -அதில் இருக்கும் பண்புகள் -சாமான்யம் -செயல்கள் முதலானவற்றையும் –
முதன்முறை கிரஹிக்கப்படும் அறிவு –
மாடு -என்ற அறிவு -மாடு என்ற உடலையும் அதில் இருக்கும் மாட்டுத்தன்மை என்ற சாமான்யத்தையும் க்ரஹிக்கிறது
ச விகல்பகம் -ஒரு பொருளையும் அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றையும் -அவை வேறு சில இடங்களில் இருப்பதையும்
கிரஹிக்கும் ஞானம் ச விகல்பகம் ஆகும் –
மாடு என்னும் அறிவு -மாடு -மாட்டுத் தன்மை என்ற இரண்டுக்கும் மேலாக
இந்த மாட்டுத்தன்மை முன் மாட்டிலும் இருந்தது பின் மாட்டிலும் உள்ளது என்ற அநு விருத்தியையும் -தொடர்ச்சியையும்
கிரஹிப்பது ச விகல்பகம் ஆகும் –

(சிகப்பான தடியைப் பிடித்த மனிதர் வருகிறார் -தத் பிரகாரம் -விசேஷணம் உடனே அறிவது –
பிரித்து அறியாமல் மொத்தமாக அறிவது -சம்யுக்தா ஆகார மீமாம்சையில்
குண ஸம்ஸ்தான பதார்த்த கிரஹணம்
நிர்விகல்பகம் -ச விகல்பகம் -பெயர்கள் நியாய மீமாம்ஸா வேதாந்தம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் அர்த்தங்கள் மாறு படும்
இது மாடு -இதுவும் மாடு -அநு வ்ருத்தி
இது அறியும் இடமே ச விகல்பகம்
பிரதம பிண்ட கிரஹணம் நிர் விகல்பகம்
அப்புறம் கிரஹித்து ச விகல்பகம் )

ப்ரத்யக்ஷத்தின் வகைகள்
1-அநர் வாஸீ நம் -2-அர் வாஸீ நம் –
அநர் வாஸீ நம் -உண்டாகாதது -இது நித்ய ஸூரிகளுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ளது
அர் வாஸீ நம் – உண்டாகக் கூடியது
இது இரண்டு வகைப்படும் –
1-இந்த்ரிய சா பேஷம் –2- இந்த்ரிய நிரபேஷம்
இந்த்ரிய சா பேஷம் என்றால் –இந்த்ரியங்களில் தேவையை உடைய ப்ரத்யக்ஷம் -இது நம் போன்றவர்களினுடையது –

ஆறு ஸந்நிகர்ஷம் நியாய மாதத்தில் பார்த்தோம் –
வேதாந்தத்தில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் படுகின்றன -1-ஸம்யோகம் -2-ஸம்யுக்த ஆஸ்ரயணம் –
த்ரவ்யங்களைக் க்ரஹிக்க ஸம்யோகம் என்ற சந்நிகர்ஷமும் –
அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றைக் கிரஹிக்க ஸம்யுக்த ஆஸ்ரயணம் என்ற சந்நிகர்ஷமும் உதவுகின்றன –

இந்த்ரிய நிரபேஷம் என்றால் -இந்திரியங்களின் தேவையே இல்லாமல் ஏற்படும் ப்ரத்யக்ஷம் -இது மேலும் இரண்டு வகைப்படும்
1-ஸ்வயம் ஸித்தம் -2-திவ்யம் –
ஸ்வயம் ஸித்தம் என்றால் -தன் முயற்சியால் அடையப்பட்டது —
யோகிகள் தங்கள் யோக வலிமையால் எங்கும் உள்ள பொருள்களைக் காண்பது இந்த ப்ரத்யக்ஷத்தால் தான் –
திவ்யம் என்றால் தேவனான பரமாத்மாவால் கொடுக்கப் பட்டது
அர்ஜுனன் விஸ்வரூபம் காண்பதற்கு கண்ணனால் கொடுக்கப்பட்ட அது –

ப்ரத்யக்ஷத்தில் சேர்ந்தவை
ஸ்ம்ருதி -என்றால் நினைவு -முன்னால் ஏற்பட்ட அனுபவத்தால் -பதிவுகள் நம்மிடம் இருக்கும் –
அவை எப்பொழுது தூண்டப் படுகின்றனவோ அப்பொழுது அந்த விஷயம் நினைவுக்கு வருகிறது –
அந்தத் தூண்டுதலுக்குக் காரணம் –
1-அந்த விஷயத்துக்கு ஒப்பான மற்றறொரு பொருளைக் காணுதல்
2-அத்ருஷ்டம்
3-சங்கிலித் தொடரான நினைவு
4-அதை விட்டுப் பிரியாத ஒரு பொருளின் நினைவு -ஆகியவை –
ஆகையால் ஸ்ம்ருதி என்பதைத் தனி பிரமாணமாக எண்ணாமல்
அதற்குக் காரணமாக ப்ரத்யக்ஷத்திலேயே சேர்த்து விடலாம்

(உத்போதம் -தூண்டப்பட்ட சம்ஸ்காரம் -யானைப்பாகன் -யானை -அதன் மணி போல் சங்கிலித் தொடர் –
வயசு ஆக சம்ஸ்காரம் மறைந்து நினைவு வராமல்
ஸத்ருச அத்ருஷ்ட சிந்தை -ஆதி -சேர்ந்தே இருக்கும் தன்மைகள்-நெருப்பு புகை போல் விட்டுப்பிரியாமல் )

ப்ரத்யவிஞ்ஞா -என்பது -அந்த தேவதத்தன் தான் இவன் -என்பது போல் முன்பு அறியப் பட்ட பொருளாக
தற்போது கண் முன் இருக்கும் பொருளை அறிதல் –
இதுவும் ப்ரத்யக்ஷத்தில் தான் அடங்கும் –

அபாவங்களைப் பற்றின அறிவும் ப்ரத்யக்ஷம் தான் –
அபாவம் என்று தனியாக ஓன்று கிடையாது –
ஒரு பொருளின் அபாவம்- இன்மை என்பது – மற்ற ஒரு பொருளின் இருப்பு தான் –
தங்க வளையலின் அழிவு என்பது தங்கக் காசின் உத்பத்தி தான் –
தங்கக் காசின் அழிவு என்பது தான் தங்க மோதிரத்தின் உத்பத்தி —
ஆகையால் அபாவங்களை க்ரஹிப்பதும் புலன்களால் தான் என்பதால்
அதுவும் ப்ரத்யக்ஷம் தானே –

——————–

பாடம் -7-அனுமான பிரமாணம்

அர்த்த பஞ்சகம் சொல்லவே வேதங்களும் இதிஹாச புராணங்களும் -ஸப்த பிரமாணம்
இத்தை சரியாக அறிந்து கொள்ளவே ப்ரத்யக்ஷம் அனுமானம் -தர்க்கமும் அறிய வேண்டும் –

ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு வியாப்யமானது -அதாவது -தவறாமல் -அப்பொருளோடே சேர்ந்தே இருக்கக் கூடியது -என்பதை ஆலோசிப்பதால்
இப்பொருளைப் பார்த்ததும் அப்பொருளைப் பற்றிய ஞானம் அநு மிதி ஆகும்
அதுக்குக் கருவியாக இருக்கும் ஞானம் -அதாவது இப்பொருள் அப்பொருளுக்கு வியாப்யமானது என்ற ஞானம் அநு மானம் –

எடுத்துக்காட்டு –
ஓர் இடத்தில் புகை இருந்தால் அங்கு தவறாமல் நெருப்பு இருக்கும் என்பதை நாம் காண்கிறோம் –
இதற்கு வியாப்தி என்று பெயர் -நியத ஸாஹ சர்யம்
ஆகையால் ஒரு மலையின் மேல் நாம் புகையைக் கண்டால் அங்கு கண்டிப்பாக நெருப்பு உள்ளது என்று அறிகிறோம் அதுவே அனுமானம் –

வியாப்யம் என்றால் -அதிகமான இடங்களில் இல்லாதது என்று பொருள் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருந்தால் -அது நெருப்பைக் காட்டிலும் அதிகமான இடங்களில் உள்ளது என்று சொல்லலாம் –
ஆனால் புகை அப்படி இருக்காது –ஆகையால் நெருப்பை விட அதிகமான இடங்களில் இல்லாதது புகை -அநதிக தேச கால வ்ருத்தித்வம்
அதாவது நெருப்புக்கு வியாப்யமானது புகை என்று சொல்கிறோம் –

வியாபகம் என்றால் குறைவான இடங்களில் இல்லாதது என்று பொருள் -புகை இருக்கும் சில இடங்களிலே
நெருப்பு இல்லாமல் போனால் புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி பொய்த்துப் போகும் —
அதனால் வியாபகமான நெருப்பானது வியாப்யமான புகை இருக்கும் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் –
அதை விடக் குறைவான இடங்களில் இருக்கக் கூடாது –
வியாப்தி என்பது பூயோ தர்சனத்தால் அறியப் படுகிறது -அதாவது
பல இடங்களில் பல முறை புகையையும் நெருப்பையும் சேர்ந்தே காண்பதால் ஏற்படுகிறது –

ஹேதுவின் வகைகள்
மலையில் நெருப்பு உள்ளது புகை உள்ளபடியால் -என்ற அனுமானத்தின்
மலை பக்ஷம் –
நெருப்பு சாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது
புகை ஹேது -சாதித்துக் கொடுப்பது –

ஹேதுவுக்கும் சாத்யத்துக்கும் உள்ள வியாப்தி இரண்டு வகை –
1- கேவல அந்வய வியாப்தி
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது என்று இரண்டின் இருப்பை வைத்துச் சொல்வது
2-கேவல வியதிரேக வியாப்தி
வியதிரேகம் -அபாவம் -இன்மை -எங்கு எங்கு சாத்யம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இல்லை
அந்வய வ்யதிரேக வியாப்தி —
சில இடங்களில் இரண்டு வகையான வியாப்திகளையும் சொல்ல முடியும்
புகை என்ற ஹேது இருக்கும் இடத்தில் நெருப்பு இருக்கும் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது – என்ற இரண்டு வியாப்தியையும் காணலாம்
சில இடங்களில் அந்வய வியாப்தி மட்டுமே சொல்லலாம் படி இருக்கும் –
வியதிரேக வியாப்தியை அறியவோ சொல்லவோ முடியாமல் இருக்கும் –
அப்படிப்பட்ட வியாப்தி கேவல அந்வய வியாப்தி –
இந்தக் குடம் சொல்லால் குறிக்கப் படுவது -த்ரவ்யமான படியால் –
எது எது த்ரவ்யமோ அது அது சொல்லால் குறிக்கப் படும் என்ற அந்வய வியாப்தியை அறியலாம் ஒழிய
எது சொல்லால் குறிக்கப் படுவது இல்லையோ அது த்ரவ்யம் அல்ல என்ற வியதிரேக வியாப்தியை அறிய முடியாது
ஏன் என்றால் சொல்லால் குறிக்கப் படாத பொருள் என்ற ஓன்று உலகில் இல்லையே

நியாய மாதத்தில் ஏற்கப்பட்ட 3-கேவல வியதி ரேகி என்ற மூன்றாம் வகை ஹேது வேதாந்தத்தில் ஏற்கப்படுவது இல்லை –

அவயவங்களும் ஹேது ஆபாசங்களும்
தான் அனுமானத்தால் அறிந்த விஷயத்தை மற்றவரும் அறிய வேண்டும் என்றால் அதற்காக சில சொல் தொடர்களை சொல்ல வேண்டும் –
1-ப்ரதிஜ்ஜா -மலையில் நெருப்பு உள்ளது
2- ஹேது -புகை இருக்கிற படியால் –
உதாஹரணம் -எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு எல்லாம் நெருப்பு இருக்கும் -அடிப்படியில் போல்
4-உப நயம் -அப்படி நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை
5-நிகமனம் -ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை –

நியாய மதத்தில் இந்த இந்த ஐந்து சொல் தொடர்களும் வேண்டும்
மீமாம்ஸா மதத்தில் முதல் மூன்றோ இறுதி மூன்றோ போதும்
வேதாந்தத்தில் இத்தனையும் சொல்ல வேண்டும் என்கிற நியமம் இல்லை –
உதாஹரணம் உப நயம் என்ற இரண்டும் வேண்டும் –
அவை தான் நெருப்புக்கு வியாப்யமானது புகை என்றும் -புகை மலையில் உள்ளது என்றும் சொல்லும்
மற்றவை கேட்பவர்க்குத் தேவைப்பட்டால் சொல்லலாம் –

ஹேது ஆபாசங்கள் முன்பு நியாய சாஸ்திரத்தில் பார்த்தவையே வேதாந்தத்தில் கொள்ளப்படுகின்றன –

உபமானமும் அர்த்தா பத்தியும்
மீமாம்ஸா போல்வேரே சில தர்சனங்களிலும் இவை இரண்டையும் தனி ப்ரமாணங்களாகக் கொள்வர்
வேதாந்தத்தில் இவை அனுமானத்திலேயே அடங்கும் –

உபமானம்
மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட பின்பு –
நேரடியாக மாட்டைப் போல் இருக்கும் விலங்கைப் பார்க்கும் பொழுது
இதுவே கவ்யம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது என்ற அறிவு ஏற்படும் -அது தான் உபமிதி
அதற்கு காரணமான -இந்த விலங்கு மாட்டைப் போல் உள்ளது -என்ற ஸத்ருச ஞானம் தான் உபமானம்-என்பது நியாய மதம் –
இது ஒரு தனி பிரமாணம் அல்ல -சொல் தொடர் சப்த பிரமாணம் -நேரே காணுதல் ப்ரத்யக்ஷம் –
அவற்றின் சேர்க்கையே இந்த அறிவு -தனியான பிரமாணம் அல்ல என்பதே வேதாந்தக் கொள்கை –

அர்த்தா பத்தி
ஒவ்வாத ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக ஏற்படும் ஞானம் அர்த்தா பத்தி
குண்டாக இருக்கும் தேவதத்தன் பகலில் உண்பது இல்லை -என்பதைப் பொருந்த வைக்க –
தேவதத்தன் இரவில் உண்கிறான் -என்று கற்ப்பிப்பதே அர்த்தா பத்தி யாகும் –
இது தனியான பிரமாணம் என்பர் சிலர் -வேதாந்தத்தில் இது தனியான பிரமாணம் அல்ல -அனுமானத்திலேயே அடங்கும் –

ஸப்த பிரமாணம்
ஆப்தரால் சொல்லப்பட்ட சொல் தொடர் தான் ஸப்த பிரமாணம் -என்பர் நியாய மதத்தர்
ஆப்தர் -பொருளை உள்ளபடி அறிந்து அப்படியே உறைபவர்
வேதம் என்ற ஸப்த பிரமாணம் ஸர்வேஸ்வரனால் சொல்லப்பட்டது தான் என்று
அவர்கள் ஏற்கிற படியால் இந்த வேதத்துக்கும் பொருந்துகிறது –

ஆனால் வேதாந்த தரிசனத்தில்
வேதம் சர்வேஸ்வரனால் சொல்லப் பட்டதாகக் கொள்ள வில்லை –
வேதம் நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது –
ஆகவே ஆப்தனால் சொல்லப்பட்டது ஸப்த பிரமாணம் என்னும் லக்ஷணம் வேதத்துக்குப் பொருந்தாது –
ஒவ்வொரு சொல்லும் ஒலியும் அழியக் கூடியதாக இருந்தாலும் வேதம் நித்யமே –
ஏன் என்றால் வேதத்தில் இருக்கும் எழுத்துக்கள் சொற்கள் ஒலிகள் உச்சரிக்கப்படும் வரிசை மாறாமல் என்றும் ஒரே மாதிரியாகவே உள்ளது –
இதற்கு ஆனு பூர்வீ என்று பெயர்

ஆகவே என்றும் மாறாத நித்யமான ஆனு பூர்வீ வேதத்துக்கும்கு இருப்பதால் வேதமும் நித்யமாகவே சொல்லப் படுகிறது
ஆகவே வேதாந்த தரிசனத்தில் வேதத்துக்கும் பொருந்தும் படி ஸப்த லக்ஷணம் –
அநாப்தரால் சொல்லப்படாத சொல் தொடர் ஸப்த பிரமாணம் –
வேதம் யாராலும் சொல்லப்படாததாலும் அநாப்தரால் சொல்லப்படாததே ஆகும் –

வேதத்தைத் தழுவின நூல்கள்
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆறும் வேத அங்கங்கள்
புராணங்கள் ஸ்ம்ருதிகள் இதிகாசங்கள் நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ரங்கள்
ஆயுர் வேதம் தநுர் வேதம் காந்தர்வ வேதம் பரத -நாட்டிய சாஸ்திரம் அர்த்த -பொருளைப் பற்றிய சாஸ்திரம்
இவை அனைத்தும் வேதத்தைத் தழுவிய நூல்களே

இவற்றில் வேதத்துக்கு முரனாகச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவை பிரமாணங்கள் ஆகும்
அவற்றை இயற்றிய ரிஷிகளின் குறையால் இப்படி சில முரண்பாடுகள் இவற்றில் இருக்கலாம்
பாஞ்ச ராத்ரம் வைகானஸம் முதலிய ஆகம நூல்கள் முழுவதுமே பிரமாணங்கள் -இவற்றில் வேத வ்ருத்தமாக எதுவும் இல்லை –
மேல் சொன்னவற்றை விட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் உயர்ந்த பிரமாணங்கள் ஆகும் –
மிகத் தெளிவாக அர்த்தங்களை போதிக்கும் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் மிகச்
சிறந்த ப்ரமாணங்களாகக் கருதப்படுகின்றன –

——-

பாடம் -8- ப்ரமேயங்கள்

மா என்றால் அறிவு -மேயம் -என்றால் அறியப் படும் பொருள்
ப்ரமா-என்றால் சிறந்த அறிவு -உண்மையான அறிவு –
ப்ரமேயம் என்றால் சரியான அறிவால் அறியப்படும் பொருள் -உண்மையான பொருள் –

வேதாந்த தரிசனத்தில் இரண்டு ப்ரமேயங்களையே ஒத்துக் கொள்ளப்படுகின்றன –
த்ரவ்யம் -என்றும் அத்ரவ்யம் என்றும்
நியாய மாதத்தில் த்ரவ்யம் குணம் கர்மம் ஸாமாந்யம் விசேஷம் ஸமவாயம் அபாவம் என்ற ஏழும் ஒப்புக் கொள்ளப் பட்டன
அவற்றுள் த்ரவ்யங்களும் குணங்களும் வேதாந்தத்தில் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் ஏற்கப் பட்டவை
மற்றவை ஏற்கப் படாதவை
குணங்களிலும் -24 -நியாய மாதத்தில் உண்டு -அவை அனைத்தும் வேதாந்தத்தில் ஒத்துக் கொள்ளப் பட வில்லை –

கர்மம் தேவையில்லை
நியாய மதத்தில் கர்மம் என்று ஒரு பதார்த்தம் உண்டு -கர்மம் -என்றால் செயல்
ஆனால் நம் கண்ணுக்குக் கர்மம் என்ற ஓன்று தெரியவதே இல்லை -ஒரு பொருள் நகரும் பொழுது
ஓர் இடத்தை விட்டு மற்ற ஓர் இடத்தோடே தொடர்பு ஏற்படுகிறது என்பதையே கண்ணால் பார்க்கிறோம்
ஸம்யோகம் என்ற குணத்தைத் தவிர கர்மம் -செயல் என்ற பொருளை ஏற்கத் தேவையில்லை –
மேலே செல்லுதல் -கீழே செல்லுதல் -அருகில் வருதல் -தொடர்பு வைத்து ஐந்தாக சொல்லுவதால் –
ஸம்யோகம் ஒன்றையே கொள்ளலாமே

சாமான்யம் தேவை யில்லை
பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படும் இடங்களில் அவற்றுள் உள்ள பொதுத் தன்மை –
சாமான்யம் என்று நியாய மாதத்தில் பார்த்தோம் -அநு கத ப்ரதீதி நியாமகம் தானே சாமான்யம் –
ஆனால் நம் கண்ணுக்கு சாமான்யம் என்ற ஒரு பொருள் புலப்படுவது இல்லை –
ஒரு பொருளின் சமஸ்தானம் ஆக்ருதி மட்டும் தான் கண்ணுக்குப் புலப்படும் –
ஆகையால் வேதாந்த தர்சனத்தின் படி சமஸ்தானம் என்பது தான் ஒரு பொருளின் ஜாதி சாமான்யம் ஆகும் –தனியான ஒரு பொருள் அல்ல –
மாட்டினுடைய மாட்டுத் தன்மை என்பது கொம்பு குளம்பு வால் சாஸ்னா முதலியவற்றைக் கொண்டிருத்தல் தான்
மாடு குதிரை மேஜை போன்ற அவயவங்களுடைய பொருள்களாக இருந்தால் அவற்றின் அவயவங்கள் அமைப்பே ஸம்ஸ்தானம்
ஆத்மா ஆகாசம் போன்ற அவயவங்கள் அற்ற பொருள்களாக இருந்தால் அதன் தனித் தன்மையை தான் அதன் சமஸ்தானம் ஆகும்-
சாஸ்னாதிமத்வம் -அவயவ த்ரவ்யங்களின் கூட்டமே போதுமே -வஸ்து ஸம்ஸ்தானம் -வியக்தி மட்டுமே –

விசேஷம் தேவை யில்லை –
நித்தியமான த்ரவ்யங்களான பரம அணுக்கள் முதலானவற்றை வேறு படுத்திக் காட்ட
வேறே எந்த தன்மையும் இல்லாத படியால் விசேஷம் என்ற ஓன்று ஏற்கப்பட்டது நியாய மாதத்தில்
வேதாந்தத்தில் பரமாத்மா -விபு ஜீவாத்மா அணு -ப்ரக்ருதி முக் குண மாயம் -என்று
வேறு படுத்திக் காட்டுவதால் விசேஷம் தேவை இல்லை –

ஸமவாயம் தேவை யில்லை
பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கும் பொருள்களுக்கு இடையில் இருக்கும் சம்பந்தம் சமவாயம் என்று நியாய மதத்தில் பார்த்தோம்
இத்தை வேதாந்தத்தில் ஏற்கவில்லை
ஒரு குடத்துக்கும் நிறத்துக்கும் உள்ள தொடர்பு -சமவாயம் என்றால்
அந்த சமவாயத்துக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு எது என்று கேள்வி எழும்
அது மற்ற ஒரு சமவாயம் என்று சொன்னால் அதன் விஷயத்தில் மறுபடியும் இதே ஒரு கேள்வி வரும் —
இப்படி முடிவு இல்லாமல் சமவாயங்களைக் கல்பிக்க வேண்டும் –
அந்த தொடர்பு வேறே ஒரு சமவாயம் அல்ல -இயற்கையாகவே வேறே ஒரு தொடர்பு தேவை இல்லாமல்
அவை தொடர்பு பட்டுள்ளன என்று சொன்னால்
அந்தத் தன்மை நிறத்துக்கும் குடத்துக்கும் இடையிலே ஒப்புக் கொண்டு –
அப்ருதக் சித்த விசேஷணம் -பிரிக்கப் பட முடியாத விசேஷணம் -ஒப்புக் கொண்டு –
சமவாயம் என்ற ஒரு பதார்த்தம் தேவை இல்லை என்பதே வேதாந்த சித்தாந்தம் –

அபாவம் தேவையில்லை –
அபாவம் -பொருளின் இன்மை –
பொருள் உண்டாவதும் முன்னால் இருக்கும் அபாவம் ப்ராக் அபாவம்
அதன் அழிவுக்கு பின்பு அபாவம் த்வம்ஸம்
எக்காலத்திலும் ஓர் இடத்தில் ஒரு பொருள் இருக்காது என்றால் அத்யந்த அபாவம்
ஒரு பொருளுக்கும் மற்ற ஒரு பொருளுக்கும் வேறுபாடு அந்யோன்ய அபாவம்-முன்பு பார்த்தோம்

வேதாந்தத்தில் அபாவம் ஏற்கப்படுவது இல்லை –
குடம் உண்டாவதும் முன்னால் குடத்தின் அபாவம் கன்னுக்குத் தெரியாதே -மண் உருண்டை தானே தெரியும் –
குடம் அழிந்த பின்பும் த்வம்ஸ அபாவம் கண்ணுக்குத் தெரியாதே -துகள்களே தெரியும் –
ஆகவே ஒரு பொருளின் அபாவம் -இன்மையே -மற்ற ஒரு பொருளின் பாவம் இருப்பு – தான் என்பதே வேதாந்த மதம்
குடத்தின் ப்ராக் அபாயம் மண் உருண்டை
குடத்தின் அழிவே கபாலங்கள்
வாயுவில் நிறம் -ரூபம் -இல்லாமை -அத்யந்த அபாவமும் தனியான ஒரு அபாவம் அல்ல –
வாயுவின் இயற்கையான தனித் தன்மையை தான்
மாட்டின் இடம் குதிரையைக் காட்டிலும் வேறுபாடு என்று தனியான அந்யோன்ய அபாவம் கிடையாது –
மாட்டுத் தன்மை தான் மாட்டின் இடம் இருக்கும் – குதிரையைக் காட்டிலும் வேறுபாடு –

அதவா வஸ்து சமஸ்தான ரூப ஜாதியாதி லக்ஷண பேதம் -மூன்றும் ஒன்றே –

———-

பாடம் -9- த்ரவ்யங்கள் –

வேதாந்த தரிசனத்தில் ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் பிரிக்கிறோம்
த்ரவ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்
உபா தாநம் -த்ரவ்யம் -என்பது த்ரவ்யத்தின் லக்ஷணம் -எது ஓன்று உபா தானமாக உள்ளதோ அதுவே த்ரவ்யம் –
உபாதானமாய் இருப்பதே த்ரவ்யத்தின் லக்ஷணம் என்றதாயிற்று –
உபாதாநம் என்பது நியாய மாதத்தில் சமவாயி காரணம் என்று சொல்லப் பட்ட தற்கு நிகரான பொருள்
வேதாந்தத்தில் சமவாயம் என்ற ஒரு பதார்த்தத்தை ஏற்காத படியால் அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
பிற்காலத்தில் வேறே ஒரு அவஸ்தையை அடையப்போகும் வஸ்து முன் அவஸ்தையோடு கூடி இருக்கும் பொழுது
அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
அவஸ்தை என்றால் நிலை என்று பொருள் -ஆகந்துகமான அப்ருதக் ஸித்தமான தர்மமே அவஸ்தை என்று சொல்லப் படுகிறது –
ஆகந்துகம் என்றால் நித்தியமாக இல்லாமல் குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் ஒரு தன்மை
அப்ருதக் ஸித்தமான தர்மம் என்றால் தான் இருக்கும் பொழுது தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து பிரிக்க முடியாத தன்மை –
எடுத்துக் காட்டு
மண் உருண்டையில் இருந்து உருண்டை என்னும் தன்மை-என்பதைப் பிரிக்க முடியாதே –
அத்தன்மை நித்தியமாக இல்லாமல் -தொடக்கமும் முடிவும் உடையதாகவும் உள்ளது –
எனவே உருண்டைத் தன்மை என்பது மண்ணின் ஒரு நிலை -அதே போல் குடமாய் இருத்தல் என்பதும் மண்ணின் மற்ற ஒரு நிலை –
மாலையில் குடமாக மாறப் போகும் மண் காலையில் உருண்டை என்ற நிலையோடு -அவஸ்தையோடு -கூடி இருக்கிறது –
எனவே மண் தான் குடத்துக்கு உபா தானம் என்று சொல்லப் படுகிறது –

ஸத் கார்ய வாதம்
த்ரவ்யங்களுக்குச் சொல்லப்பட்ட இந்த லக்ஷணம் -வேதாந்தத்தில் மிக முக்கியமான ஸத் கார்ய வாதம் என்பதையே அடி ஒற்றியது –
நியாய மதத்தில் அஸத்ய கார்ய வாதம் -ஓன்று உண்டு –அஸத் -அபாவம் -கார்யம் என்றால் உண்டாகும் பொருள்
ஒரு பொருள் ஒரு அபாவத்தில் இருந்து தான் உண்டாகிறது என்பது அவர்கள் சித்தாந்தம் –
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் அதனுடைய அபாவம் -ப்ராக பாவம் -தான் இருந்தது –
உண்டாக்கக் கூடிய பொருள் அதன் அவயவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறு பட்டது –
ஏன் என்றால் அறிவு சொல் அளவு எண்ணிக்கை சக்தி வடிவம் முதலான அனைத்துமே காரியத்துக்கும் காரணத்துக்கும் வேறாக உள்ளன –
ஆனால் வேதாந்தத்தில் இந்த அஸத் கார்ய வாதம் ஏற்கப் படுவது இல்லை –
நூல்கள் சேர்ந்து ஒரு துணி உண்டாகும் பொழுது நூல் என்பது வேறே ஒரு த்ரவ்யம் –
துணி என்பது முற்றிலும் யதிதான வேறே ஒரு த்ரவ்யம் என்று நியாய மதத்தில் சொல்வது சரியில்லை என்பதே வேதாந்த கொள்கை –
ஸத் என்றால் இருக்கும் பொருள் -எனவே இருக்கக் கூடிய ஒரு பொருள் தான் கார்யமாக மாறுகிறது –
அபாவத்தில் இருந்து கார்யம் தோன்றவில்லை -என்பதே ஸத் கார்ய வாதம் -ஆகும் –
காலையில் உருண்டையாய் இருந்த மண் தான் இப்பொழுது குடமாக மாறி உள்ளது என்று நமக்கு அறிவு ஏற்படுவதைக் காண்கிறோம் –
இதற்குப் ப்ரத்யபிஞ்ஞா என்று பெயர் –
இந்த அறிவைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம் -மண் என்பதும் குடம் என்பதும் ஒரே த்ரவ்யம் தான் என்று –
பிறகு அளவு எண்ணிக்கை அறிவு சொல் முதலானவை ஏன் மாறுகின்றன என்றால் –
அந்த த்ரவ்யத்தின் அவஸ்தை நிலை -மாறி விட்ட படியால் மாறுகின்றன –

உபநிஷத்தில் ஸத் கார்ய வாதம்
சாந்தோக்யம் ஆறாவது ப்ரபாடகம் -ஸத் வித்யா ப்ரகரணம்
வாசா ஆரம்பணம் விகார நாம தேயம் ம்ருத்திகா இத்யேவ சத்யம்
விகாரம் -உரு மாற்றங்கள்
நாம தேயம் -பெயர்கள்
ஆரம்பணம் -அடையப்படுகின்றன
ஒரே மண் என்ற த்ரவ்யத்தால் வெவ்வேறு உருவங்களும் வெவ்வேறு பெயர்களும் அடையப் படுகின்றன என்று சொல்லும்
இதன் பிரயோஜனம் என்ன என்றால்
வாசா -வாக் முதலான வியவஹாரங்களுக்காக
வாயால் ஒரு பொருளைப் பற்றிச் சொல்வது -அதைக் கையால் எடுப்பது முதலானவை தான் வியவஹாரங்கள் –
வெவ்வேறு வியவஹாரங்கள் ஏற்படுத்துவதற்குத் தான் ஒரே மண் த்ரவ்யம்
வெவ்வேறு உருவங்களையும் பெயர்களையும் அடைகிறது என்று அழகாக ஸத் கார்ய வாதத்தைச் சொல்கிறது –
மேலும்
ம்ருத்திகா இத்யேவ சத்யம்
எந்த நிலையை அடைந்தாலும் அது மண் தான் என்பதே உண்மையாகும் -ப்ரமாணங்களால் அறியப் படுவதாகும் –
வேறே ஒரு த்ரவ்யம் உண்டாகிறது என்று சொல்ல இயலாது –

மேலும் ஸ்பஷ்டமாக அஸத் கார்ய வாதத்தைத் தவறு என்றும் கூறுகிறது –
சிலர் கூறுகிறார்கள் -ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் -அசத்தாக -அபாவமாக -இருந்தது –
அதில் இருந்து தான் ஸத் என்கிற உத்பத்தி ஏற்படுகிறது -என்று
எந்தப் ப்ரமாணத்தைக் கொண்டும் அவ்வாறு சொல்ல இயலாது
எப்படி அபாயத்தில் இருந்து உண்டாக்கும் ஏற்பட முடியும் என்று -பொருள் –

———

பாடம் -10-த்ரவ்யங்களின் வகைகள்
ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்
அவஸ்தை என்கிற நிலைகளுக்கு இருப்பிடமானவை த்ரவ்யங்கள்
ஸப்தம் ஸ்பர்சம் முதலான தன்மைகள் மட்டும் போதுமே -அவற்றை உடைய த்ரவ்யம் என்ற பொருள்
ஏன் ஏற்கப் பட வேண்டும் யென்று சிலர் சொல்வது சரி இல்லை –
ரூபத்தை மட்டும் க்ரஹிப்பதாக கண்ணும் ஸ்பர்சத்தை மட்டும் க்ரஹிப்பதாக தோலும் இருக்கும் பொழுது
நேற்றுப் பார்த்தத்தையே இன்று தொடுகிறேன் என்று ஏற்படும் ப்ரத்யவிஜ்ஜை யானது அவை இரண்டுக்கும்
பொதுவான இருப்பிடமாக ஒரு த்ரவ்யம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறது –

அதே போல் த்ரவ்யம் மட்டுமே போதுமே அதற்குத் தன்மைகள் எதற்கு என்று கூறுவதுவும் சரியில்லை
ஒரே த்ரவ்யத்தில் ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு மாதிரி நாம் அறிவதால் த்ரவ்யம் அறியப் பட்ட போதும்
அதில் இருக்கும் தன்மைகள் நம்மால் அறியப்பட வில்லை என்றே சொல்ல வேண்டும்
எனவே த்ரவ்யத்தில் ரூபம் ரஸம் முதலான தன்மைகள் உள்ளன என்று அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டும் –

புத்த மதத்திலே த்ரவ்யங்கள் அனைத்தும் க்ஷணிகங்கள் —
அதாவது ஒரே வினாடியில் அழியக் கூடியவை என்று சொல்லப் படுகிறது -அதுவும் தவறானது
காலை பார்த்த கூடத்தை இப்பொழுது தொடுகிறேன் என்பது போன்ற ப்ரத்யபிஜ்ஜை
அனைவருக்கும் ஏற்படுகிறபடியால் நீண்ட காலத்துக்கு ஒரே த்ரவ்யம் இருக்கிறது என்றதாயிற்று
இந்த அறிவு அனைவருக்கும் தவறாக ஏற்படுகிறது என்னவும் ஒண்ணாது

த்ரவ்யங்களின் வகைகள்
ஆறாக பிரிக்கலாம் -ப்ரக்ருதி -காலம் -பரமபதம் -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களுக்கு ஏற்படும் ஞானம் –
இவற்றை பலவகைகளாகப் பிரிக்கலாம்

ஜடம் -அஜடம் -பாகுபாடு
ஜடம் -ஸ்வயம் ப்ரகாஸம் அல்லாதவை
ப்ரக்ருதி காலம் இவை இரண்டும் என்றுமே தானாகப் பிரகாசிக்காதவை
இவற்றை அறிய வெளிச்சம் புலன்கள் போன்ற வேறு பொருள்களின் உதவி தேவை –
அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவை –
நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களின் ஞானம் என்ற நான்கும்
வேறே ஒரு பொருளின் உதவி தேவைப்படாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடியவை

ப்ரத்யக் பராக் என்கிற வேறுபாடு
ப்ரத்யக்-ஜீவாத்மா பரமாத்மா -இருவரும் தாங்களே பிரகாசிக்கிற படியால் ப்ரத்யக் என்று அழைக்கப் படுகின்றன
பராக் -மற்ற நான்கும் -மற்றவர்களுக்குத் தான் தோற்றம் அளிக்கக் கூடியவை -தான் தன்னை அறியாது -இவை பராக்

சித் -அசித் -பாகுபாடு
சித் -அறிவுடையவர்களான ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
அவன் பரம சேதனன் -ஆகவே தத்வ த்ரயம்
அசித் -அறிவற்றவையான மற்ற நான்கு பொருட்களும் –

——–

பாடம் -11- பிரகிருதி

ஆறு வகையான த்ரவ்யங்களில் ஓன்று பிரகிருதி
அஜாம் -ஏகாம் – லோஹிதம் சுக்லம் க்ருஷ்ணாம் – வஸ்தூம் ப்ரஜாம் ஜநயந்தி சரூபா -ப்ரக்ருதி
ஸ்ருஷ்டிக்கு மூலப் பொருள்
ஸத் கார்ய வாதம் -நித்யம் -அழிவதோ உண்டாவதோ கிடையாது -அவஸ்தா மாற்றமே
ஸ்ருஷ்டியில் பிரக்ருதியே உலகமாக மாறி -பிரளயத்தின் பொது இயல்பு நிலைக்கு மாறும் –
எனவே பிரக்ருதியை அஜா -பிறவாதது என்றும் சொல்வர்
இது முக்குண மயம் -ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ
இதுவே அனைத்து உலகப் பொருள்களாக மாறுவதால் அவை ப்ராக்ருதங்கள் என்று அழைக்கப்படும்
அவை அனைத்துமே முக்குணங்கள் உடையவையே
இதுவே பேர் ஆனந்தம் என்று பிரமித்து நித்ய சம்சாரிகளாக மாறி மாறி பல பிறப்புகளில் ஆழ்ந்து போகிறார்கள் பலரும்
வெகு சிலரே இவற்றை வெறுத்து முமுஷுக்களாகி முக்தர் ஆகிறார்கள் –

பிரகிருதியின் செயல்கள்
மம மாயா துரத்யயா -மாம் ஏவ -இத்யாதி
இந்த முக்குண மய பிரகிருதி என்னாலேயே இயக்கப் பட்டு என்னுடைய லீலைக்காக உள்ளது –
இந்த பிரக்ருதியான மாயையை யாராலும் எளிதில் தாண்ட இயலாது
யார் என்னையே சரணாகப் பற்றுகிறார்களோ அவர்கள் தான் இத்தைக் கடக்கிறார்கள் –

பிரகிருதி பாப புண்ணியங்களின் அடிப்படையில் நம்மைத் தளைப்படுத்துகிறது –
கர்மங்கள் நீங்கி விட்டால் ப்ரக்ருதியோடே நமக்கு இருக்கும் தொடர்பு நீங்கி விடும்
ப்ரக்ருதி பகவானை அறிய முடியாதபடி செய்து -நம்மையும் கூட நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத படி பண்ணி
இந்த உடலே நான் -என்கிற தேகாத்ம அபிமானத்துக்கும்
நான் ஸ்வ தந்த்ரன் என்று நினைக்கும் ஸ்வ தந்த்ர அபிமானத்துக்கும் காரணமாக உள்ளது
ப்ரக்ருதி தன்னுடைய வெவ்வேறே வடிவங்களான பிராகிருத பதார்த்தங்களில் ஆசையை வளர்த்து
அவையே மிகவும் சிறந்தவை என்று எண்ண வைக்கிறது –
உடல் புலன்கள் உலகப் பொருள்கள் -நுண்ணிய வடிவங்களில் உள்ளது
முக்குணங்களை உடையது
பகவானாலே செலுத்தப்படுவது –

ப்ரக்ருதிக்குப் பல பெயர்கள் உண்டு
1- ப்ரக்ருதி -இந்த உலகில் எல்லாப் பொருள்களும் இதில் இருந்து தோன்றுகிற படியால் இது பிரகிருதி என்னப் படுகிறது
2-அவித்யை -வித்யை என்னும் அறிவைக் கெடுக்கிற படியால்
3-தமஸ் ஸூ -வெளிச்சத்துக்கு நிகரான அறிவுக்கு எதிராக உள்ளபடியால் இருட்டு
4-பிரதானம் -முக்கியமான பொருள் -அனைத்தும் இதில் இருந்து மாறுவதால்
5-மாயா -விசித்திரமான ஆச்சர்யமான பொருள்களை உண்டாக்குகிற படியால்
பொய் என்ற பொருளில் அல்ல -நமக்குத் புரியாதபடி ஆச்சர்யமாக உள்ளது-

பரமாத்மா ஜீவாத்மா -அறிவுடைமை ஒற்றுமை
ஜீவாத்மா ப்ரக்ருதி -இரண்டும் சொத்து ஸ்வாமிக்கு
பரமாத்மாவுக்கு ப்ரக்ருதிக்கும் -ஒற்றுமை -தன்னோடே சேர்ந்தவர்களைத் தன்னைப் போல் ஆக்கும் –
சமதர்ம முக்தி அவன் தருவான் –
தன்னளவுக்கு கீழே இழுத்துச் செல்லுமே -பிரக்ருதியும்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

July 8, 2021

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும்,
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து
அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ர பாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.

இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன்
ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே. நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ
அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும், இவனல்லால் வேறு தெய்வமில்லை..!
இந்த பரம பருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்!
உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்! ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து,
தம் நிலை தாழ நின்று தன்னைப் பற்றினார்காக தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

பாரமேஸ்வர ஸம்ஹிதை (1,39-41) சொல்கிறது.

“அடர்ந்த இருளைப்போன்று, பஞ்சபூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய பிரகிருதியின்
சம்பந்தமுடைய அனைத்தும் உண்மை நிலையறியாது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு கிடக்கின்றன.
இந்த அஞ்ஞானத்தினை அகற்றி, ஞான விளக்கேற்ற வந்த தீபமே பாஞ்சராத்ரம்“ என்கிறது.

விஸ்வாமித்ர ஸம்ஹிதை (2.3.5) சொல்கிறது

பஞ்சேந்திரியங்களினால் இயங்கும் இந்த மனிதனுக்கு “பஞ்சரா“ என்று பெயர்.
இந்த பஞ்சேந்திரியங்களினாலும் எது அறியப்படவேண்டுமோ, எது அடையப்பட வேண்டுமோ,
அதற்கான வழிமுறையை வகுத்து அவனை வழிநடத்திக் கொண்டுபோகும் சக்தி “பாஞ்சராத்ரம்“ என்கின்றது.

புருஷோத்தம ஸம்ஹிதை (1.4) சொல்கிறது

பக்தி ஒன்று மட்டுமே ஒருவனை பிறவிதனிலிருந்து விடுவிக்கக்கூடியது.
இந்த பக்தியை ஊட்டுவது, பரப்புவது பாஞ்சராத்ரம் என்கிறது.

பிள்ளைலோகாச்சாரியாரின் “முமுக்ஷுபடி“ வ்யாக்யனத்திற்கான மாமுனிகளின் அவதாரிகையில் மாமுனிகள் கூறுகின்றார்.
இவர் பாஞ்சராத்ரத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை யானாலும் இங்கு இத் தருணத்தில் நினைவுகூறத் தக்கது..

“நித்ய ஸூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரஸராய் வாழ்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும்,
அத்தை இழந்து “அஸன்னேவ” என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி ஸேதனருடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வ்யாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து,
இறகொடிந்த பட்சிப் போல கிடக்கிற தசையிலே, கரணாதிகளைக் கொடுத்து…….”

பகவானை அனுபவிக்க முடியாது அசக்தராய் அஞ்ஞானத்தில் உழன்று, சிறகொடிந்த பறவை போல தவிக்கின்ற ஸம்ஸாரிகளை,
நித்ய ஸூரிகளைப் போன்று நித்யம் கைங்கர்யம் செய்யும் ஆசையுண்டாகி, அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு “ப்ராப்தி“ உண்டாக,
இந்த வாழ்க்கையில் கடைத்தேற, இந்த சேதனருடைய வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலையினால்
பகவான் கவலைப்பட்டுக் கொண்டே யோசித்து. அவர்கள் உய்யும் வழிக்கான ஞானத்தினை அளிக்கின்றான் என்கிறார்.

பாஞ்சராத்ரம் இந்த உலகம் உய்யும் வழிக்கான ஞானம். இந்த ஜீவன்கள் கடைத்தேற பகவானாலேயே அருளப் பெற்ற வழிமுறை.

எல்லாமுமாய் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஏகமாய் நிற்கும் அவனைத் தொழும் வழிக்கு,
நம்மை அழைத்துச் செல்லும் அயனம் (பாதை) – அதாவது “ஏகாயனம்”.

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே
ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர்.
அது போன்று அவர்கள் சுக்ல யஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

தற்சமயம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் இந்த ஐந்து கோத்ரத்தினைச் சார்ந்தவர்கள்
மட்டுமே அர்ச்சகர்களாய் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் அருகிலுள்ள பல பாஞ்சராத்ரகோவில்களிலும் பணியாற்றியுள்ளனர்.
இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலின் சில அர்ச்சகர்களுக்கு திருவெள்ளறை கோவிலில் முறைகள் உள்ளன.

வெகு வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலும், கீழ் திருப்பதி அலர்மேல் மங்காபுரத்திலும் முறைகள் இருந்து வந்தன.

மேல்கோட்டையில் செல்லப்பிள்ளைக்கு இராமானுஜர் சில காலம் திருவாராதனம் செய்து வருகையில்
கிரஹஸ்தர்கள் செய்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றிமையினால் ஸ்ரீரங்கத்திலிருந்து “மௌஞ்யாயன“ கோத்திரகாரர்கள்
அனைவரையுமே மேல் கோட்டைக்கு அழைத்து சென்றதால் ஸ்ரீரங்கத்தில் இந்த கோத்திரம் விடுபட்டுப் போனதாக ஒரு செய்தி யுண்டு.

அப்படியிருக்க ஏன் ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அர்ச்சகர்கள் வடகலை திருமண்காப்பும்,
மேல்கோட்டை அர்ச்சகர்கள் தென்கலை திருமண்காப்பும்
இட்டுக் கொள்கின்றனர்..?
இந்த அர்ச்சகர்கள் அனைவருமே வடகலை மற்றும் தென்கலை இதில் எந்த கலையும் சார்ந்தவர்கள் இல்லை..!
இந்த கலாபேதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தது தான்..! திருவாய்மொழியில் ஒரு பாசுரம்..!

கரியமேனிமிசை வெளிய நீறு சிறிதேஇடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள்-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு ? இன்று தொட்டும் இனி என்றுமே–( திருவாய் மொழி 4-5-6)

“இதில் வெளிய நீறு சிறிதேஇடும்“ என்பதற்கு பன்னீராயிரப்படி திருவாய்மொழி வியாக்யானத்தில்
”கற்பூர தூளிதவளம் க்ருத்வா தேவஸ்ய விக்ரஹம்” என்று உள்ளது.

“அதாவது பச்சை கற்பூரத்தினால் பகவானிடத்து (திருமுக மண்டலத்தில் ஊர்த்வமுகமாக) தூவுதல்“ என்று பொருள்.

இந்த அர்ச்சகர்களும் இந்த விதமாகதான் திருமணைக் குழைத்து ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் வாரிசுகள் இல்லாது வடகலை குடும்பத்தார்களிடத்திலிருந்து ஸ்வீகாரம் நிறைய வந்தமையாலும்
மற்றுமுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த ஊர்த்வபுண்டரம் வடகலையாகவும்,
மேல்கோட்டையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக தென்கலையாகவும் மாறிப்போயிருக்கலாம்..!

இந்த அர்ச்சகர்கள் “சுயம் ஆச்சார்யர்கள்“ – இந்த அர்ச்சகர்களுக்குள்ளேயே எவர் தகுதியுள்ளவரோ அவரே ஆச்சார்யன் ஆவார்.
இவர்களுக்கு வேறு ஆச்சார்ய தனியன்கள் கிடையாது. இன்றும் திருமணப் பத்திரிக்கைகளில்
ஸ்ரீசுக்ல வேத ரிஷியான “ஸ்ரீயாக்யவல்க்ய மஹாகுரவே நம:“ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு “பரந்யாஸம்“ கிடையாது.

இன்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்….“ என்று தொடங்கி தான் சங்கல்ப்பம்..! ஆரம்பமாகும்.

இந்த ஏகாயன வேதமானது “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே“ என்கிறது.

“யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப:
வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:”

“ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா ” என்று கூறுகின்றது.

மறந்தும் புறம் தொழா மாந்தர், என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் –
நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது.
ஆகமம் என்பதற்கு அணுகுதல் (approach) என்ற ஒரு பொருளும்,
a traditional doctorin or percept, a sacred writing or scripture, sastra, a tantra என்று பலவித பொருள் கூறுகின்றது.
சமஸ்கிருத – ஆங்கில அகராதி. இங்கு அணுகுதல் என்று கொள்ளுதல் எல்லா அர்த்தங்களைவிட சாலப் பொருந்தும்.

பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான்
இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

மணவாள மாமுனிகள் முமுக்‌ஷூப்படியில் சொன்னார் போல, நாம் படும் இழவை அனுசந்தித்து,
அரங்கன், நாம் அவனை வந்து அடைய செய்யாத பிரயத்தனங்கள் இல்லை.
நமக்கு அறிவு வர வேண்டி பல சாத்திரங்களை கொடுத்தான். அதில் ஒன்று தான் பாஞ்சராத்ரமாகிற இந்த ஆகம சாத்திரமும்.

அவன் கொடுத்த இந்த அறிவின் பயன், அவனை அடைவதே.
அவனை அடைய, அவனே உபாயம் என்பதை அரங்கன், அழகாக வலியுறுத்தினான்.

ஆகமம் என்பது வேதத்தினை ஒரு சிலவிடங்களில் கையாண்டிருந்தாலும் அது குறிப்பாக
அந்த ஆகமம் எந்த தெய்வத்தினைப் பற்றி பிரதானமாக கூறுகின்றதோ, அந்த தெய்வத்தினைப் பற்றிய வேத குறிப்புகள்,
எப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும், விழாக்களை எங்கெங்கு- எப்படிக் கொண்டாட வேண்டும்,
பூஜை செய்பவருக்கான தீக்ஷாவிதிகள், எப்படி தீக்ஷைத் தரவேண்டும் ஆகியவற்றினைப் பற்றிதான் பரவலாகக் கூறுகின்றது.

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள், உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும்,
பொதுவாக ஆகமம் என்பது வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

ஆகமம் என்பது பொதுவில் வழிபாட்டுமுறையாகும். இது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டு முறையல்ல.
அவரவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு பலவிதமான ஆகமங்கள் உள்ளன.

இந்த ஆகமங்கள் இரண்டு வகைப்படும்.

வைதீக ஆகமம் (Vedic Agamam) இது நமது வேதங்களின் கோட்பாடுகளுடன் திகழ்வது அல்லது ஒத்துப் போவது.

அவைதீக ஆகமம் (Non-Vedic Agamam). உதாரணம் புத்த ஆகமம் மற்றும் ஜைன ஆகமம்.
இவைகள் வேதங்கள் கூறும் கருத்திற்கு மாறுபட்டு விளங்குகின்றன. புத்த வழிப்பாட்டு முறையில் மட்டும் சுமார் 72 ஆகமங்கள் உள்ளன.
மாறுப்பட்டு விளங்கும் இந்த புத்த ஆகமத்தில் சில பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள தந்தரங்களோடு ஒத்துப் போவது ஆச்சர்யமானது.

ஜைன ஆகமத்தில் சில 3வது நூற்றாண்டிலும் மற்றும் 11வது நூற்றாண்டிலும் உருவானவை.
இவை “தீர்த்தங்கரர்” என்றழைக்கப்படும் அவர்களது ஆச்சாய புருஷர்களால் பிரபலமாயிற்று.

இந்த ஆகமங்கள் அனைத்தும் குருவினால் சிஷ்யர்களுக்கு உபதேசம் மூலமாக வந்த ஒரு சாஸ்த்ரம். பல நூறு வகையான ஆகமங்கள் உள்ளன.
இதில் வைஷ்ணவ ஆகமமானது வைகாநஸம், பாஞ்சராத்ரம் என்று இரு வகை ஆகமங்களாகும்.

இதுவரை நாம் பாஞ்சராத்ரம் என்றால் என்ன..? ஆகமம் என்றால் என்ன..? என்பதனைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டோம்..!
நாம் எடுத்துக் கொண்ட சங்கல்ப்பம் ஸ்ரீபாஞ்சராத்ரம் மட்டுமே என்பதால் இனி நாம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம் பற்றிக் காண்போம்….

பெருமாள் ஐந்து நிலைகளில் வீற்றிருக்கின்றான். அவையாவன:

பரம்
வ்யூகம்
விபவம்
அர்ச்சை
அந்தர்யாமி

விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்றபுற வண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ ?– (திருவாய்மொழி 6-9-5)

விண்மீதிருப்பாய் – பரத்வம்
கடல் சேர்ப்பாய் – வ்யூஹம்
மண்மீது உழல்வாய் – விபவம்
மலைமேல் நிற்பாய் – அர்ச்சை
மறைந்துறைவாய் – அந்தர்யாமி

பரம் என்பது பரமபதம். இது நித்திய விபூதி என்றழைக்கப்படும்.

வ்யூகம் என்பது வாஸூதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தர் என்னும் எம்பெருமானின் சக்திகள் தனித்தனியேப் பிரிந்து வெளிப்படும் ஸ்வரூபங்களாம்.

விபவம் என்பது எம்பெருமானின் அவதாரங்களாம்.

அர்ச்சை என்பது இப்போது நாம் வணங்கி ஆராதித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருவுருவங்களாம்.

அந்தர்யாமி என்பது எம்பெருமானின் சக்தி எங்கும் பரந்து எல்லாவற்றிலும் சூக்கும்மாய் உறைந்திருக்கும் சக்தியாம்.

இதில் ஆழ்வார்கள் அனைவரும் மோகித்து ஆழங்கால்பட்டது அர்ச்சையில் மட்டுமே.
பாஞ்சராத்ரமும் இந்த அர்ச்சையின் ஆராதனையைதான் சொல்லித் தருகின்றது.

பாஞ்சராத்ரம், இதிஹாஸம், புராணங்கள், ஆழ்வாரின் பாடல்கள் ஆகியவற்றில் பகவானின்
ஸ்வரூபம், ரூபம், குணம், நெறி, விபூதி, லீலைகள் ஆகிய எல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும்,

பாஞ்சராத்ரத்திற்கு பகவானுடைய ஸ்வரூபம், குணம் -அதற்கேற்ப என்னென செய்யலாம் என்பதில் தான் கவனம்.
இதிஹாஸங்கள் அவதாரங்களைப் பற்றிச் சொல்லுவதிலும், புராணங்கள் உலகங்களின் விரிவினைச் சொல்லுவதிலும்,
ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடு.

சாமான்யர்களான நமக்கு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி ஆகிய நிலைகளிலுள்ள எம்பெருமானை அனுபவித்தல்
என்பது இயலாத ஒரு காரியம். இந்த கலியுகத்தினுள் அர்ச்சாவதாரம் என்பது எம்பெருமானால்
நம்மை இங்கிருந்து நம்மை மீட்க எடுத்துக் கொள்ளப்பட்ட, நாம் சுலபமாக அவனை அணுக அவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு உபாயம்.

“உடைமைக்கு ஒரு முழுக்கு – உடையவனுக்கு நூறு முழுக்கு“ என்பார்கள்.

ஒரு பெரிய கிணறு. அதில் ஒரு சிறிய வெள்ளிச் சொம்பு வீழ்ந்து விட்டால் அது ஒரு முழுக்கில் அடியில் அமிழ்ந்து விடும்.
அதன் உடைமையாளன் அதனை எடுப்பதற்குள் சில சமயம் நூறு முழுக்குக் கூட போட நேரிடலாம்.

அது போன்று அவனது உடைமை நாம். இந்த ஆன்மா அவனது சொத்து.

நாம் இந்த சம்சார ஸாகரமாகின்ற கிணற்றுக்குள் அமிழ்ந்து விட்டால் நம்மை மீட்பதற்குள் அந்த பரந்தாமன்,
பரமாத்மா நூறு முழுக்குப் போட வேண்டியுள்ளது. நம்மை மீட்டு அவன் தன்னுள் வைத்துக்கொள்வதற்காக ஏற்பட்ட ஒரு உபாயம் அர்ச்சை.

அர்ச்சையில் தம்மை தாமே கூண்டில் அடைத்துக் கொள்வது போல் அவன் அடைத்துக் கொண்டும்,
ஆழ்வார்கள் தன்னுள் ஆழும்படியாகச் செய்தும், தம்மிடத்து ஆழங்கால் பட்டோரிடத்து அவர்கள் சொன்ன வண்ணம் செய்தும்,
எழுந்திருந்து பேசியும், எங்கோ யாரோ ஒரு பாட்டி தன் பேரனைக் காவிரிக் கரையில் காணாது அவனது பெயரான “ரங்கா“ என்று
கதறிய மாத்திரத்தில் தம் பெயரைச் சொல்லி கதறுவோர் மனவருத்தம் கொள்ளல் ஆகாது என்று தாம்
அவள்தம் பேரனைப் போன்று சவரம் செய்து கொண்டு, நீராடி, அந்தம்மையார் கொடுத்த பழைய சோற்றையும், மாவடுவினையும் ரசித்து உண்டும்,
“வாராய் செல்லப் பிள்ளை” என்றழைத்தவுடனேயே தளிர்நடையிட்டு உடையவர்தம் மடியில் ஏறி அமர்ந்து,
ஏதுமறியா குழந்தையைப் போன்று அவரின் கைக் குழந்தையாகவே மாறியும்.
மாமுனிகளிடத்து அர்ச்சகரின் குமாரனாய், அவரின் சிஷ்யனாய் தோன்றி ஆச்சார்ய தட்சிணையாக தமது சேஷ பீடத்தை அர்ப்பணித்தும்,
இந்த மாயவன் செய்த லீலாவினோதங்கள் சொல்லி மாளாது.

ஸ்ரீபாஞ்சராத்ரமே அர்ச்சைக்கான வழிபாட்டு முறைதான். எனவே முதலில் நாம் அர்ச்சையின் விசேஷத்தினை, அருமையினை
உணர்ந்து அதனிடத்து பேரன்பு கொள்ளுதல் வேண்டும். இவ்விதமாக அன்புடன் ஆராதிக்கும் அர்ச்சைதான் தேஜஸ்ஸோடு விளங்கும்.
ஆராதகனுக்கு முதல் தேவை –தகுதி, அவன் ஆராதிக்கும் அர்ச்சையினிடத்து அளவிலாத உள்ளன்புதான்.

– பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம்
– ஆவரண ஜலம் போலே பரத்வம்
– பாற்கடல் போலே வ்யூகம்
– பெருக்காறு போலே விபவங்கள்
– அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் – ஸ்ரீவசனபூஷணம்(40)

பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் ஜலம் போன்று அந்தர்யாமித்வம். மஹாயோகிகளுக்கு மட்டுமே சித்தி தருவது இது.

பரத்வம் இந்த அண்டத்திற்கு புறம்பாக எங்கும் சூழ்ந்திருக்கும் ஆவரண ஜலம் போன்று அதாவது கடல் நீரைப் போன்றது பரத்வம்.
இதுவும் சாமான்யர்களாகிய நம்மால் சாத்தியபடாத ஒன்று.

சென்றடையமுடியாத பாற்கடல் போன்றது வ்யூகம்.

காட்டாறு போன்றது விபவதாரங்கள். அந்த காலத்தில் இருந்தவர்களைத் தவிர யாரும் அடையத் தக்கதல்லதான அவதாரங்கள்.

அர்ச்சாவதாரம் ஆங்காங்கு தேங்கிய மடுக்கள் போன்றதாம். வேட்கைக் கொண்டவனின் தாகம் தீர பருகலாம் இங்கு.
கோயில்களிலும், வீடுகளிலும் வணங்கத்தக்கதான அர்ச்சை எல்லாரும் அணுகக்கூடியது. அடிபணிந்து வணங்கக் கூடியது.

”ஸௌலப்யத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்” – (முமுக்‌ஷுப்படி-139)

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்

மூலம் – அப்போது, நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ
ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும், யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம்
ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும் சொல்லுகிறபடியே

ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும்
ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

விளக்கம் –

அவ்விதம் கைங்கர்யம் செய்யும்போது, தனக்கும் ஸர்வேச்வரனுக்கும் உள்ள உறவுமுறைக்கு ஏற்றபடியும்,
ஸர்வேச்வரனின் எஜமானத்தன்மை மற்றும் எளிமை ஆகியவற்றுக்கு ஏற்றபடியும் செய்தல் வேண்டும்.

தன்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்ட அடியார்களுக்காக அர்ச்சை ரூபமாக வந்துள்ள ஸர்வேச்வரனுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்யவேண்டும்.

பௌஷ்கர ஸம்ஹிதை – நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –

எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும், அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை – யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர், அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) – ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின் அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும்,
இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா – என்பதன் மூலம்
அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) – ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் –
மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும் எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும்
அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு, தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவுதடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) – யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் –
என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில் என்னை அமைக்கின்றனரோ,
அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும் கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக
அவனது அர்ச்சா ரூபத்தில் உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும்.
அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) – ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) – ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய் என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) – யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ, அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.
இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் – தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

அர்ச்சாவதாரம் பகவானுடைய அளவிடமுடியாத காருண்யத்தின் பிரதிபிம்பம்.
இதில் விந்தையென்னவென்றால் அவன் நம்மை ரக்ஷிக்க எடுத்த இந்த அவதாரத்தில்,
அவனை ஒருவனால் (அர்ச்சகனால்) ரக்ஷிக்கப்படுவனாய் மாறியது தான்.

ஸர்வ சக்தி படைத்த அவன் சக்தியே யில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர்பார்த்திருப்பதுதான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே—விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது
அந்த பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும், சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என் னில்முன்னம்
பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே .—திருவாய்மொழி 9-6-10–

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்ன த்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்ய தேசத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும்,
ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும்,
காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ர பாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”–என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

பிள்ளைலோகாச்சாரியார் தமது முமுக்‌ஷுப்படியில் (136)
”புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம்” என்கிறார்.

சேதனர்களாகிய நாம், நாம் செய்த குற்றங்களையெல்லாம் எண்ணி, அந்தோ! இத்தனைக் குற்றங்களை நாம் செய்துள்ளோமே.?
நாம் எப்படி பெருமாளின் திருவடிகளில் சென்றடைவது..! என்று அஞ்சி அவனை விட்டு நாம் அகன்று ஓடிவிடாதபடி,
நம்மை திருத்தி பணிகொள்வதற்காகவே, வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம், ஜ்ஞானம், சக்தி
முதலான திருகல்யாண குணங்களோடு எம்பெருமான் அர்ச்சையிலே காத்திருக்கின்றான்!

வாத்ஸல்யம் – தன்னை வந்தடைந்த சேதனின் குற்றங்களைப் பாராமல், எப்படி பசு தான் ஈன்ற கன்றினிடத்து பாசமுடன் விளங்குகின்றதோ,
அதுபோன்ற அவனிடத்து இன்னருள் சுரந்து, “கதஞ்சன நத்யஜேயம்” ஒருபோதும் கைவிடுபனல்லேன் என்ற
வைராக்கியத்துடனே சேதன்னுக்கு பல நன்மைகளைச் செய்யும் இயல்புடையவனாய் விளங்குகின்றான்.

ஸ்வாமித்வம் – சேதன்ன் ஈஸ்வரனை நினையாமல் பாராமுகமாயிருந்தாலும், எம்பெருமான் இவனை விடாமல் நின்று காப்பாற்றுகின்றானே!
இந்த ஒரு பந்த விசேஷத்திற்குதான் “ஸ்வாமித்வம்“ என்று பெயர்

ஸௌசீல்யம் – தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் சிறிதுமின்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாராது
சேதன்னுடன் இரண்டற கலத்தல் ஸௌசீல்யமாகும்!

ஸௌலப்யம் – அணுகுதற்கு எளியவனாய் இருத்தல்

ஞானம் – அறிவு – சேதனனைக் காப்பாற்றி தன்னடி கீழ் சேர்க்கக் கூடிய சாமர்த்தியம்.

சக்தி – எதையும் செய்யக்கூடிய ஆற்றல். தாழ்ந்த நிலையிலுள்ள சம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒப்ப சேர்த்து வைக்கக்கூடிய ஒரு ஆற்றல்!

”குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமீத்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).

இவ்வளவு கல்யாண குணங்களோடு சேதனுக்காகக் காத்திருக்கும் அந்த எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டியது யாது?

ப்ராப்தியும்.., பூர்த்தியும்…!அப்படியென்றால்..?

ப்ராப்தி யென்றால் அடைய வேண்டியது.
பூர்த்தி யென்றால் வேண்டுவனயாவும் நிறைந்திருக்கை.
அதாவது நாம் அவனடி சரணமடையத் தேவையான குண பூர்த்தி நிறைந்திருக்கை!
ப்ரபத்தி!
இவ்விரண்டையும் சேர்த்து அதாவது ப்ரபத்தியென்றால் அவன் தம் திருவடிகள்தாம் தஞ்சமென்றிருக்கை!

சரி….! மேலேகூறிய இந்த கல்யாண
குணங்கள் அனைத்தையுமே நாம் அர்ச்சையில் காண இயலுமா..?

காணலாம்..! நான் சொல்லவில்லை! முமுக்ஷுப்படியில்(141)

பிள்ளைலோகாச்சாரியார் சொல்லுகின்றார்.

”இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

மேலும் சொல்கின்றார்

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).

‘முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்த்துவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே! -திருவாய்மொழி (3.1.1)-

————————————

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனுதினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும்,
சாங்க்ய சித்தாந்தத்தில் (இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும்,
யோக சித்தாந்தாத்தில் (இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் *
ஏற வீற்றிருந்தாய்! உன்னை எங்கெய்த கூவுவனே”—திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில்
பிரும்மாவினுடைய புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!

தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய் சாண்டில்யர் விளங்கக் கண்டார்.
அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

பொருள்
”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..!
எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.! சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித்
தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான்.
ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!) நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது.
நாரதருடன் கூட ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய எட்டு மஹரிஷிகளும்
இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது. இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.

இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!

இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!

எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!

இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன்,
இதில் சொல்லப்பட்டுள்ள மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவைஎவையென்று
இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும் கடைத்தேற வேண்டி
இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம் மட்டிலும் கொண்ட
மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யஸூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய ஞான காண்டம் மறைந்து விட்டது

1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

இந்த “க்ரியா காண்டத்தில்“ இனி அடுத்து வருவது “ஸ்நானவிதி்“..!
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.

படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச”–என்று மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும்
(முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளேச் சொல்லக்கூடாது.
உரத்தகுரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார். புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

தற்போதுள்ள கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நமக்கு ஒத்துவரக்கூடிய செயல்கள் சிலவற்றைக் காண்போம்..!

இயற்கையோடு மனிதர்கள் ஒன்றி வாழ்ந்துள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டமையினால்
இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நமக்கு அதிசயமாக உள்ளது.

செளசம் (மலஜலங்கழித்தல்) பற்றிச் சொல்லும் போது
பகலிலும், சந்த்யாகாலங்களிலும் மலஜலங்கழிப்பதனால் வடக்கு நோக்கி அமர்ந்தும்,
இரவில் தெற்கு நோக்கி அமர்ந்தும் கழித்தல் வேண்டும்.
சௌசத்திற்கு பின் மண் இட்டுக் கொள்வதற்காக மண்ணை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மண்ணை தெய்வ அக்னியுள்ள இடம், மலை, மாட்டுக் கொட்டில், நதியிலிருந்து, மசானத்தில், புற்றில், எலிவலை,
மரத்தடி, கோவிலருகில், ஜலத்தின் நடுவில், வழிப்பாதையில் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கக் கூடாது.

அந்த மண்ணில் பிராணிகளின் எலும்புக்கூடு, உமி, சாம்பல், சிறு மரக்கட்டைகள், கரித்துண்டு ஆகியவைக் கலந்திருக்கக்கூடாது.

நதிக்கரையோரம் மேலேச் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல மண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜல பாத்திரத்தினை “அஸ்த்ர“ மந்த்ரம் சொல்லி எடுக்க வேண்டும்.
(இங்கு சில மந்த்ரங்களின் பெயர் மட்டும் கூறியுள்ளேன் – அவரவர் ஆச்சார்யர்களைக் கேட்டு இந்த மந்திரங்களை அறிந்து கொள்ளவும்…)
மண் எடுக்கும் போதும் அஸ்திர மந்திரம் சொல்லி சேகரித்துக் கொள்ளவும்.

வன்னித்துளிர், அத்தி, அரசம், இச்சிமரம், தர்ப்பம், மூங்கில்,
மாமொட்டு, நாயுருவி, மருதம் இதில் எது சாத்தியமோ அவற்றையெல்லாம் சேகரிக்க வேண்டும்.
இதில் சில பல் துலக்குவதற்கும், மண்இட்டுக்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்வதற்கும், வைத்துக் கொள்ளவும்.

பல் துலக்கும் குச்சியானது 12 அங்குலமுள்ளதாக இருக்கவேண்டும். அது வளைந்தோ அல்லது முடிச்சுக்களுடன் இருத்தல் கூடாது.
பல் துலக்குவதற்கு முன், கைகால்கள் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து,
கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ பல்துலக்க வேண்டும்.

குச்சியின் மிருதுவான பாகத்தினைக் கடித்து பல்துலக்க வேண்டும். குச்சியிலிருந்து வெளிப்படும்
துவர்ப்பான அல்லது கசப்பான சாற்றினை சுவைத்தப்படி பல் துலக்கச் சொல்கின்றார்.

குச்சி கிடைக்காவிட்டாலோ அல்லது அசக்தமாய் இருந்தாலோ ஆட்காட்டி விரலினால் 12 முறை ஜலத்தினால் பல் துலக்க வேண்டும்.

நாக்கு வழிப்பதற்கு 16 அங்குல நீளமுள்ள குச்சி வேண்டும். முடிச்சுடன் கூடாது.
உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட குச்சியாலும் நாக்கு வழிக்கலாம்.

சாண்டில்யர் அடுத்து “ஸ்நானம்“ பற்றிச் சொல்லும் போது, “ஒரு ஊரில் குளங்கள் இருக்கும் போது கிணற்றில் ஸ்நானம் செய்தல் கூடாது
மற்றும் எந்த குளத்தில் அதிகம் நீர் உள்ளதோ அந்த குளத்தில் குளிக்க வேண்டும் எனவும்,
அந்த ஊரில் ஓடுகின்ற நதியிருக்குமாயின் நதியில்தான் குளிக்க வேண்டும்“என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த நதிகளைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்கின்றார்.

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!

இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!

இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?

கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.

வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!

இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!

நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித் தான் பாய்கின்றது.
அதில் நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!) சதுர்வேதி மங்கலத்தில்
அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

நதியினில் நீராடுவதற்கு முன் முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நீரில் மூழ்க வேண்டும்.
நம் சரீரம் நன்கு நனைந்த பின்பு முதலில் கோமயம் கொண்டு உடம்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பு அல்லது உளுந்து ஆகியவைகளின்
மாவுப்பொடியினைக் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும். கவச மந்திரத்தினைச் சொல்லியபடியே நீராட வேண்டும்.
பின்பு ஹ்ருண் மந்த்ரத்தினை உச்சரித்தப்படியே கந்த பொடிகளைக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஒரு நெல்லிக்காய் அளவு நதியிலுள்ள ஈரமண்ணை எடுத்து இடது கை மணிக்கட்டின் அருகில் வைத்துக் கொண்டு
அஸ்த்ர மந்த்ரம் மற்றும் மூல மந்த்ரம் முதலானவற்றை உச்சரித்தப்படி அந்த மண்ணை ஸ்பர்ஸித்து,
அந்த மண்ணில் ஒரு பாகத்தினை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு பாகத்தினை நாம் நிற்கின்ற இடத்தினில் விட வேண்டும்.
கையிலுள்ள ஒரு பாகத்தினை இரண்டாக பண்ணி இதில் ஒரு பாகத்தினை நதியினில் சேர்த்தும்,
மீதமுள்ள ஒரு பாகத்தினை உடம்பினை தேய்த்து பின்னர் நீராடுதல் வேண்டும்.
இம்மாதிரி செய்வதனால் அந்த தீர்த்தத்தினில் கங்கை, யமுனை, ப்ரயாகை, சக்ர தீர்த்தம், ப்ரபாயம், புஷ்கரம்
முதலான தீர்த்த சக்திகள் அனைத்தும் அங்கே சூக்கும ரூபத்தில் வந்து விடும்..!
மேலும் ஸ்நானத்திற்கு உண்டான இடைஞ்சல்கள் பலமற்று போய்விடும்..

மீண்டும் ஒரு நெல்லிக்காய் அளவு நதியினில் நாம் குளிக்குமிடத்திலுள்ள மண்ணை எடுத்து சூரிய கிரணங்களிடத்துக் காண்பித்து,
ஒருக்கால் சூரியகிரணங்களை மேககூட்டம் மூடி அந்த கிரணங்கள் இல்லையென்றால் மனதில் அந்த மண்ணின் மீது சூரிய கிரணங்கள்
படுவதாக மனதினால் பாவித்து, நம் உடலின் அனைத்து அங்கங்களையும் அந்த மண் கொண்டு தொட வேண்டும்.
பின்னர் கவச மந்திரம் சொல்லி நம் அங்கங்கள் மற்றும் கையிலுள்ள மண்துகள்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

பின்னர், வலது கையினால் ஒரு தர்பமுஷ்டியை எடுத்துக் கொண்டு ஒடும் ஜலத்தில் “அப்பு சூக்த“ மந்திரத்தினால்,
ஜலத்தினைச் சுற்றி பின்பு உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாய் குவித்து கும்பம் போல் வைத்துக் கொண்டு,
அப்படியே இருகைகளினாலும் ஜலம் எடுத்து தலை, காதுகள், கண்கள், முகம் மற்றுமுள்ள அங்கங்களை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஜ்யோதிர்மயமான நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஹரியைத் தியானம் செய்ய வேண்டும்.
புருவ மத்தியில் எம்பெருமானைத் த்யானிக்கவும்.

இது “அகமர்ஷண ஸ்நானம்“ எனப்படும். இது அனைத்து பாபங்களையும் போக்கக் கூடியது.

ப்ராணயாமம் செய்து எழுந்து சூர்யமண்டலத்தினை இரு கை விரல்களையும் கோர்த்து
(இந்த விரல்களைக் கோர்ப்பதற்கு ஒரு முறையுள்ளது. பெரியோர்களிடம் கேட்டு அறிக.!) இருகைவிரல்களுக்கும் இடையே தரிசிக்கவும்.

கரையேறி ஈரவஸ்திரத்தினைக் களைந்து மாற்று வஸ்திரம் உடுத்தி, நம் வலதுபுறமாக அனைத்து சிகையையும் தள்ளி
சிகையினைப் பிழிந்து அந்த தீர்த்தத்தினை சேகரித்து, ‘அஸ்த்ர’ மந்திரம் சொல்லி அந்த தீர்த்தத்தினை பூமியினில் ப்ரோக்ஷிக்கவும்.
இது அனைத்து தோஷங்களையும் போக்கவல்லது.

சிகையினை முடிந்து கொண்டு ஆசமனம் செய்க.
பின்னர் நித்ய தர்ப்பணம் செய்க. கட்டை விரல்கள் மூலம் ரிஷி தர்ப்பணம். மற்ற விரல்களின் மூலமாக கையை நேராக வைத்து தேவ தர்ப்பணம்,
கட்டை விரலுக்கும் இதர விரல்களுக்குமிடையே பித்ரு தர்ப்பணம் என்ற கிரமத்தில் செய்ய வேண்டும்.
ரிஷி தர்ப்பணம் முடிந்தவும் தீர்த்தம் சிறிது பருக வேண்டும். தேவ தர்ப்பணம் முடிந்தவுடன் அங்க ந்யாஸம் செய்க.
பித்ரு தர்ப்பணம் முடிந்தவுடன் தேகத்தினைத் துடைத்துக் கொள்க. இந்த தர்ப்பணாதிகளை விருப்பப்பட்டால் செய்யலாம்.

வலது கையினால் ஜலத்தினை சேகரித்து, நாசிக்கு அருகில் கொண்டுவந்து, ‘ஹ்ருண்’ மந்திரத்தினைச் சொல்லி முகர்ந்து
‘கவச’ மந்த்ரம் சொல்லி பின்பு ‘அஸ்த்ர’ மந்த்ரம் சொல்லி பூமியினில் தெளிக்கவும்.

பின்னர் இரு கைகளினாலும் தேஹ ந்யாஸம் செய்க.!

ஜலத்தினைக் கையில் அஞ்சலி செய்வது போல் எடுத்துக் கொண்டு சூர்யமண்டலத்தின் நடுவில்
எம்பெருமான் வீற்றிருப்பதாக தியானித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆஸநத்தில் அமர்ந்து, கையில் பவித்ரம் தரித்து, ஆஸநத்தில் அமர்ந்து ஜபிக்கத் தொடங்க வேண்டும்.

யார் யாரைத் தியானித்து ஜபிக்க வேண்டும்…?

முதலில் ஆஸநத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,

1) இந்திரன் முதல் விஷ்ணு வரையிலும்
2) வாஸூதேவன் தொடங்கி அநிருத்தன் வரையிலும்
3) கேசவன் தொடங்கி தாமோதரன் வரையிலும் (த்வாதசம்)
4) பரமாத்மா
5) ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்கள் (நீர் தொடங்கி ஆகாயம்வரை)
6) ரிஷிகள் வரை தியானித்து ஜபம் செய்க.
7) பித்ருக்களைத் தியானித்து தெற்கு நோக்கி அமர்ந்து எள் கொண்டு அனைவருக்கும் தாந்தரீக தர்ப்பணம் செய்யவும்.

பின்னர் பவித்ரம் விசர்ஜனம் – ஆசமனம் – திக்குகள் அனைத்திற்கும் அந்தந்த திக்கு நோக்கி நமஸ்காரம் செய்யவும்.

திக்பந்தனம் செய்து, பிராணயாமம் முடித்து, பூதசுத்தி செய்யவும்.

ஜலமத்தியில் எம்பெருமானை தியானித்து, மானஸீகமாக எல்லா உபசாரங்களையும் செய்யவும்.
முடியுமாயின் புஷ்பங்களால் மானஸீகமாய் தியானித்துள்ள எம்பெருமானிடத்து அர்ச்சிக்கவும்.

எள், ஸமித்து, பசுநெய் கொண்டு ஹோமம் செய்க.

சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்க.

இத்துடன் தீர்த்த ஸ்நானம் நிறைவுற்றது.

இவ்விதம் செய்யும் கார்யகிரமமானது, நம் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நிறைவடையச் செய்யும்.

சரி..! இதுவரையில் நதிக்கரையினில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய கார்யகிரமங்கள் அனைத்தையும் பார்த்தோம்..!

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக்
கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?
கை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி)
ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.
நடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும்.
இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.
சிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.

தியான ஸ்நானம்

மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோ மயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

இந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும்
கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.

இத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.

—————-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

இந்த அத்யாயத்தினில் ஸ்நானத்திற்கு பிறகு செய்யவேண்டிய கர்மாக்களைப் பற்றி சாண்டில்யர் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

ஸ்நானம் முடிந்து சிகை முடிந்தபின், சிகையுள்ள இடத்தினில், இளம் அருகம்புல்லையோ, புஷ்பத்தினையோ அல்லது எள்ளையோ
தீர்த்தம் சிறிது சேர்த்து அஸ்த்ர மந்த்ரம் சொல்லி சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு தீர்த்தம் நிறைந்த பாத்திரத்தினை வஸ்திரம் கொண்டு மூடி கையில் எடுத்துக்கொண்டு ஜனங்கள் அதிகம் செல்லாத வழியே,
ஏகாந்தமாய், அழகானதாய், தோஷங்கள் அற்றதாய், மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு ஏற்றதாய், சுத்தமாக இருக்கக்கூடிய
எம்பெருமானின் திருக்கோவிலை நோக்கி, ஹ்ருதயத்தினில் வீற்றிருக்கும் ஞான, ஆனந்தமயனான எம்பெருமானை
சிந்தையினில் வைத்து வேறு எந்த திக்கினையும் பாராது மௌனியாய் செல்ல வேண்டும்.

த்வாதசாக்ஷரியை ஜபம் செய்தவண்ணம் ஸந்நிதியின் உள் நுழைந்து ஸந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தினை சுத்தம் செய்து,
தாம் கையில் நதிதீரத்திலிருந்து கொண்டுவந்த ஜலத்தினால் பிராகாரம் சுற்றி ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

கர்ப்பகிரஹ வாயிலில் இருந்து பலிபீடம் வரையிலும் உதவியாளர்களைக்(பரிசாரகர்கள்) கொண்டு தூய ஜலம் கொண்டு சுத்தம் செய்க.

பின்பு, ஆச்சார்யன் பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும், உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலும்
கைகால்களை சுத்தம் செய்தபின்பு ஊர்த்வபுண்டரம் இட்டுக்கொண்டு ஆசமனம் செய்க.

ஊர்த்வபுண்டரத்தோடு சந்தனம் முதலான சுகந்த வஸ்துக்களை சேர்த்து குழைத்து ஊர்த்வபுண்டரம் இட்டுக் கொள்ளவும்.

சரி…! இந்த ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வ புண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த விரலினால் இட்டுக் கொள்ளலாம். அந்த விரல்களுக்கானப் பலன்கள்…?

புஷ்டி வேண்டுமானால் … கட்டை விரல்
மோக்ஷம் வேண்டுமானல் … ஆட்காட்டி விரல்
விரும்பியதை அடைய .. மோதிர விரல்
ஆயுள் வேண்டின் … நடு விரல்

எக்காரணம் கொண்டும் நகத்தினால் இட்டுக் கொள்ளவேக் கூடாது.

நம் உடலில் எவ்வளவு ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்ளலாம்..?
நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ள வேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும்
ஊர்த்வபுண்டரம் இன்றி செய்வோமாயின் பலனற்றதாகிவிடும்.
ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்க வேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிர விரலில் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ர மோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்
அங்கு அர்ச்சகர்கள் மட்டுமல்ல அங்குள்ள உடையவரின் திவ்யமங்கள வி்க்ரஹத்திலும் உடையவர் இரு கைகளிலும் பவித்ரம் அணிந்துள்ளார் ).
பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய
தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன அலங்காரங்கள் அர்ச்சகர்கள் தமக்குச் செய்து கொள்ள வேண்டும்..?

உச்சந்தலையில் க்ஷோபன அக்ஷதைகளோடு விளங்க வேண்டும்.
தூய்மையான வ்ரதத்தினைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ள வேண்டும்.
மணம் கமழத் திகழ வேண்டும்.
தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவிலின் எல்லைகளுக்குள் எங்கும் உமி்ழ்வதோ, துப்புவதோ கண்டிப்பாகக் கூடாது.
வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)
மாலைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான நல்ல வெண்மையான வஸ்திரங்கள் அணிந்து கொள்ளல் வேண்டும்.
கர்ணபூஷணம் (காதுகளுக்கான கடுக்கண் போன்ற ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கழுத்துக்கு ஹாரங்கள் (ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கைக்குக் கடகம்
கைவிரல்களில் மோதிரங்கள்.
இவை எதற்கும் வசதியில்லாவிடின் கைவிரலில் ஒரு மோதிரமாவது தரிக்க வேண்டும்.
தம்முடைய சுவாசக்காற்று எம்பெருமான் மேல்படாதவாறு நாசித் துவாரங்களை வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள வேண்டும்.
(இதனால்தான் பெரும்பாலான அர்ச்சகர் மூன்றாவது உத்தரீயமாக தமது வலதுதோளில் இன்னொரு வஸ்திரத்தினை அணிந்து கொள்கின்றனர்)

இவையனைத்தும் செய்து கொண்டுபின் அர்ச்சகர்கள் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

சரி..? எப்படி திருப்பள்ளியெழுச்சிச் செய்ய வேண்டும்..?

(இங்கு நாம் சற்று சிந்திக்கவேண்டும். அர்ச்சகர்கள் இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டுமா..? என்றால்,
ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே முக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு கோவில்களுக்கு வருவதில்லை..
பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேண்டுகோளுடனோ அல்லது ஏதேனும் கஷ்டங்கள் நிவர்த்திக்காகவோ வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்குமே கடவுளிடத்தில் அவர்களது பிரார்த்தனைகளை எடுத்துச் செல்வது – சொல்வது அர்ச்சகர்கள்தாம்.
அவர்களே உடலில் துர்நாற்றம் பிடுங்க அழுக்குமூட்டையாயிருந்தால் சேவார்த்திகளிடத்து அவநம்பிக்கைத்தான் பெருகும்.
எனவே அர்ச்சகர்கள் மேற்கூறியவற்றில் எவையெவைக் கடைப்பிடிக்க முடியுமோ அவற்றை செய்தல் நன்று.
குறிப்பாக சுத்தமாயிருத்தல் மிக மிக அவசியம்.
இன்னொரு விஷயம் அர்ச்சகர்களே இவ்வளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவன் ஆராதிக்கும் பெருமாள்
இந்த அர்ச்சகனைக் காட்டிலும் பலமடங்கு சுத்தமாகவும் பரிமளத்துடனும், தேஜஸ்ஸூடனும்
இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதனை அனைத்து அர்ச்சகர்களும் உணர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.)

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.
சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.
சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.
த்வாரம் அருகே சென்று தச திக் பந்தனம் (8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம், நமஸ்ஸூக்களாலே
புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக் கதவுகளைத் திறக்கவேண்டும்.

பிறகு நேத்ர மந்திரத்தினை ஜபித்தவாறு திருவிளக்கு ஏற்றி விட்டு, தீர்த்தம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்க.

பின்பு தம் உதவியாளர்களையோ அல்லது சிஷ்யர்கள் அல்லது புத்ரர்களை ஒத்தாசைக்கு அழைத்து
முதலில் அவர்களை பாத்ரசுத்திக்கு கட்டளையிட வேண்டியது.

(ஒத்தாசைக்கு வருபவர்கள் அனைவரும் நல்ஒழுக்கம், பகவத்சிந்தனை முதலியனை உடையவர்களாகவும்,
தீர்த்தமாடியவர்களாகவும் இருத்தல் அவசியம்)

பாத்ரங்களை எதனைக் கொண்டு சுத்தம் செய்யலாம்..?

தங்கம் மற்றும் தாமிரம் – புளி கரைசல்
வெள்ளி – புகை மற்றும் கரி சாம்பல்
இரும்பு பாத்ரங்கள் – சாம்பலும் தீர்த்தமும் கொண்டு
சங்குகள் – உப்பு
மரபாத்திரங்கள் – மண்ணும், தீர்த்தமும் கொண்டு

இந்த சுத்தம் செய்யபட்ட பாத்ரங்களை, அதனை சுத்தப்படுத்த பயன்படுத்திய வாசனை நீங்கும் வண்ணம் நன்கு அலம்பவேண்டும்.

சூர்யோதயம் ஆரம்பத்திற்கு முன்பே இந்த கர்மாக்களைத் தொடங்கவேண்டும்.

ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால்…..

அந்த அர்ச்சகர் சுத்தமான ஒரு பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். மூல மந்திரத்தினைச் சொல்லிய வண்ணம்
அங்கு மனதினால் ஒரு கோவிலைக் கற்பனைச் செய்ய வேண்டும்.

மூல மந்திரத்தினைச் சொல்லி, கோடி சூர்ய பிரகாசமாயுள்ள எம்பெருமானை அங்கேத் தியானிக்க வேண்டும்.

அந்த எம்பெருமானின் ஹ்ருதயமாக “ஹ்ருண் மந்த்ரம்“
பிரும்ம நாடியாக “சிகோ மந்த்ரம்”
எம்பெருமானது க்ரியா சக்தி “கவச மந்த்ரம்“
இந்த மானஸீகக் கோவிலின் திருக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் “நேத்ர மந்த்ரம்”
கர்ப்பகிரஹத்தில் ஆயிரம் அக்னிப் பொறிகள் சூழ்ந்து ஒளிமயமாகவும், அனைத்து விக்னங்களையும் போக்கக்கூடிய ஜோதியாக “ அஸ்த்ர மந்த்ரம்” —
ஆகிய இந்த மந்திரங்களைச் சொல்லி மேற்கூறிய ஸ்தானங்களைத் தியானிக்க வேண்டும்.

இந்த மானஸீக கோவிலின் த்வாரத்தினை (கர்ப்பக்கிரஹ நுழைவு வாயில்) மூன்றாக பிரித்து
அதன் நடுபாகத்தினை மீண்டும் இரண்டாக பிரித்து, பின்பு இந்த இரண்டுபாகத்தின்,
இடது பாகத்தில் மெதுவாக வலதுகாலை முன்வைத்து நுழைய வேண்டும்.

பூமியினை கொஞ்சமாக பறித்து, எம்பெருமானையும், ஆச்சார்யனையும் மனதினால் வணங்கி
அவர்களுடைய ஆக்ஞையினை சிரமேற்கொண்டு, தமக்கு விரும்பிய பலனை மனதினால் எண்ணி,
அதனை அங்குள்ள எம்பெருமானிடத்துத் தெரிவி்க்கவேண்டும். பின்பு அந்த குழி பறித்துள்ள இடத்தின் நடுவில்
நாம் தியானித்து கற்பனைச் செய்த எம்பெருமானின் விக்ரஹத்தினை மனதினால் அங்கு பொருத்தி,
தர்பத்தினால் அந்த இடத்தினைத் துடைக்கவேண்டும்.

நிறைய தீர்த்தத்தினைச் சேர்த்து, கோமயத்தினால் அந்த மூலஸ்தானத்தினை சுத்தம் செய்து,
பஞ்சகவ்யம், சந்தனம், தீர்த்தம் இவைகளை அஸ்த்ர மந்திரம் சொல்லி, அவ்விடத்தில் ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

குங்குமம், அகில், பச்சைக்கற்பூரம் ஆகிய கலவைக் கொண்டு மொழுக வேண்டும்.

தர்ப்பங்கள், அருகம்புல், அக்ஷதை ஆகியவற்றை அவ்விடத்தில் தூவவேண்டும்.

இவ்விதமாக கர்ப்பகிரஹத்தினை சுத்தம் செய்து பின்பு மௌனியாக எம்பெருமானுக்கு முன்பே அல்லது
வலதுபுறமான இருந்து, வழக்கம் போல் ஆராதனம் செய்யவேண்டும்.

சரி..! எப்போதும் கோமயம் (பசுவினுடைய சாணம்) எப்படி எடுக்கவேண்டும்..?

புதிதாக இடப்பட்ட சாணமாகயிருக்க வேண்டும்.
கொழகொழவென்றோ, புழுக்கள் உள்ளதாகவோ இருக்கக்கூடாது.

திருவாராதனம் தொடங்கும் சமயம் திரைப் போ்ட்டுக்கொள்ள வேண்டும்.
இதற்கானக் காரணத்தினையும் சொல்கின்றார் சாண்டில்யர்.
“பாபிகளும், ப்ரஷ்டர்களும் (தங்களது தர்மத்திலிருந்து நழுவியவர்கள்),
நாஸ்திகர்களும், திருவாராதனத்தினைக் காணல் ஆகாது. எனவே திரையிடுக” என்கிறார்.

பின்னர் திருமணி அடிக்க வேண்டும்..! திருமணி ஒலிக்கச் செய்வதற்கும் காரணம் சொல்கிறார்..!
”தேவர்கள் வருவதற்கும், ராட்சஸர்கள் போவதற்கும், தேவர்களை அழைப்பதற்கும் சின்னமாயுள்ள
மணியோசையை ஒலிக்கச் செய்ய வேண்டும்..”

திருமணியோசையோடு என்னென்ன ஒலித்தல் வேண்டும்..?

திருமணியோசையோடு சங்க முழக்கமும், நாதஸ்வரத்தின் மங்கல ஓலியுடன் கூட திருமணியோசை ஒலிக்க வேண்டும்.

எவ்வப்போது ‘சங்கொலி’ முழங்க வேண்டும்..?

1) ஆவாஹணம் சமயத்தில்
2) எண்ணைக் காப்பு சாற்றும் போது
3) திருமஞ்சனம் ஆரம்பத்திலும் முடிவிலும்
4) திலகமிடும் போது
5) தீபம் சமர்ப்பிக்கும் போது
6) ‘மாத்ரா’ (பச்சரிசி) நிவேதனம் போது
7) கற்பூர ஹாரத்தியின் போது
8) திரு மடப்பள்ளியிலிருந்து நைவேத்தியங்கள் கொண்டு வரும் போது
9) நைவேத்தியம் கண்டருளும் போது
10) பூர்ணாஹூதியின் போது
11) தீர்த்தம் கொண்டுவரும் போது
12) பெருமாள் வாகனங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும்.
13) திருக்கதவுகள் தாளிடும் போதும் – விலக்கும் போதும்.

மேற்கூறிய சமயங்களில் சங்கொலி முழங்க வேண்டும். எத்தனை முறைத் தெரியுமா..? – “மூன்று முறை“.

இதெல்லாம் திருவாராதன காலத்தில் செய்யவேண்டிய கிரமங்கள். சரி..! நாம் என்ன கடைப்பிடிக்க வேண்டும்..

எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் சமயம் ஆரம்பம் முதல் மௌனமாயிருந்து, நம் புத்தியினை அலைப்பாய விடாமல்,
எம்பெருமானிடத்தில் செலுத்தி சிரத்தையுடன் செய்யவேண்டும்.

திருவாராதன சமயத்தில் எக்காரணம் கொண்டும் பேசுதல் கூடாது.
இச்சமயத்தில் பேசுவது பலமான விரோதத்தினை ஏற்படுத்தும்.

எவ்விதமான ஜாடைகளோ, செய்கைகளோ, மூக்கினால் முனகுவதோ கூடாது. இதனை மீறினால் நமது சித்தியானது தடைப்படும்.

மௌனம் ஸர்வ சித்திகளையும் தரவல்லது.

தியான முத்ரையோடு, அஸ்த்ர மந்திரத்தினால் உள்ளங்கை, புறங்கை, விரல்கள் முதலானவற்றை அலம்பிக்கொள்ள வேண்டும்.
இந்த கரசுத்தி முடிந்தவுடன் ஸ்தான சுத்தி செய்யவேண்டும்.

சூரியனை ஒத்த ஒளியுடையவனும், ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் திருமுகமண்டலமுடைய எம்பெருமானை தியானித்து,
அவனாலே பிரம்மலோகம் வரையுள்ள உலகங்கள் ஒளிபொருந்தியதாய் தியானிக்க வேண்டும் –
அனைத்துத் திக்குகளும் அவனது தேஜஸ்ஸினால் ஜ்வலிப்பதாக எண்ண வேண்டும்.

மண்ணால் ஆன பாத்திரம் நெருப்பினால் சுடப்பட்டு பயன்பாட்டுக்கு உதவுவது போல, இந்த பூமியான பாத்திரம்,
எம்பெருமானாகிய நெருப்பினால் சுடப்பட்டு, அம்ருத அலைகளால் அனைத்து இடங்களும் நினைந்து, பவித்ரமானதாய் எண்ண வேண்டும்.

பின்பு திக்பந்தனம் செய்யவேண்டும்.

பிராணயாமம் செய்யவேண்டும்.

பிராணயாமம் எதற்காக செய்யவேண்டும்..? காரணம் சொல்கின்றார் சாண்டில்யர்..!

மன உளைச்சலையும், நிலையற்ற தன்மையையும் உடைய மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கும்,
பிராணன் முதலான வாயுக்களை ஜெயிப்பதற்கும், நம்முடைய “தமோ“ குணத்தினைப் போக்குவதற்காகவும்
பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

சரீரத்திலுள்ள நாடிகளின் அமைப்பையும், பிராணன் முதலிய வாயுக்கள் இருக்கும் இடத்தினையும்,
ப்ராணயாமத்தின் சொரூபத்தினையும் அறிந்து கொண்டு பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும் (கந்தம் = ஹ்ருதயம்..? ).
நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“
(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி
(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.
இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது.
கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம் இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.
கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை
பிங்களா – சிகப்பு
காந்தாரி – மஞ்சள்
ஹஸ்திஜிஹ்வா – கருப்பு
பூஷா – கருமஞ்சள்
யஸஸ்வினி – பச்சை
அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)
குஹூ – இளஞ் சிகப்பு
கோசினி – கருப்பு
இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்
பிங்களா – அபானன்
அலம்புஸா – சமானன்
குஹூ – வ்யானன்
சுழும்னா – உதானன்
பிங்களா – நாகன்
பூஷா – கூர்மன்
யஸஸ்வினி – க்ருகரன்
ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்
கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்
கூர்மன், அபானன் – இந்திர கோபன்
சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்
தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்
தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

(மெய்ஞானம் கொண்டு அறிந்த இந்த நாடி அறிவிற்கு ஏதும் சமமாகுமா..?
நம் மஹரிஷிகள் காட்டிச் சென்ற பாதையினை நாம் மறந்து மேலைநாட்டு விஞ்ஞானத்தில் ஆழ்ந்து
இன்று பல குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.
நாடி பார்த்து நோய் தீர்க்கும் மிகச் சிறந்த வழிமுறை மறந்து போனோம்..! )

ப்ராணாயாமம் ::

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.
சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.
வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.
உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.
இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேக வேகமாக சுவாசத்தினை உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும்
ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி நிதானமாக சுவாசிக்கின்றோமோ
ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும், ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?
இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.
இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக உங்கள்
கைவிரல்களால் ஒரு சொடுக்குப் போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம்
குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம் “அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.
அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது

::பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–சுருக்கம் —

June 20, 2021

ஸ்ரீ பர வாஸூ தேவன் மூலவர் -பூம வித்யை -சாந்தோக்யம் –
லீலைகள் மூலம் 30 வித்யைகளைக் காட்டி
ஸ்ரீ ராஜகோபாலன் -உத்சவர் மூலம் 32 வது வித்யை

2-பூதனா நிரஸனம் – பஞ்சாக்னி வித்யை
3-யசோதா பால் அமுது உண்டது -மது வித்யை
4-வையம் எல்லாம் பிள்ளை வாயுள்ளே கண்டது –சம் வ்ருத்த வித்யை
5-தவழ்ந்து -தளர் நடை நடந்து -பிருகு வாரிணி
6-வெண்ணெய்க்கு ஆடும் உஷஸ்தல கபால வித்யை
7-மாடு மேய்த்து காட்டி -இந்த்ரங்கள் பட்டி மேயாமல் காத்து -காயத்ரி வித்யை –
அவனுக்கு முத்திற கறவைகளும் உண்டே -எறுமை பசு ஆடு -முக் குணங்களையும் காட்டும்-கறைவைகள் பின் சென்று
எறுமை -தமஸ் -ஆடு ரஜோ குணங்களும்-உலகம் மேய்ச்சல் நிலம் -பசு ஸத்வ குணம் -அவனையே பார்த்து இருக்கும்
எறுமை ஆடு பின்னால் மேய்ந்து இருக்கும் படங்கள் முன்பு உண்டே
8-தயிர் கடைதல் ஜோதிர் வித்யை
9-குருந்திடை கூறை பறித்தல் -ந்யாஸ வித்யை –தைத்ரியம் அஹங்காரம் மமகாரம் ஆடைகள் போல்–சரணாக–மஹா விசுவாசம்-இரண்டு கைகளையும் தூக்கி அநந்ய கதித்வம் ஆகிஞ்சனம்
10-புல்லாங்குழலுதல் — ஆச்சார்யர் உபதேசம்-சாந்தோக்யம் ஆகாச வித்யை
11-கட்டுண்ட அங்குஷ்ட பிர வித்யை
12- மீண்டும் குழலூதும் சேவை –பாபங்கள் உதித்தள்ளி மங்களங்கள் தருவான் சாந்தோக்யம் வ -அஷீ வித்யை
13-கையில் கோல் வைத்து மாடு மேய்த்து -அக்ஷர வித்யை-ப்ரஹதாரண்யம்
14-பால் கறக்கும் கண்ணன் புருஷ வித்யை சாந்தோக்யம்
15-கன்று குணிலா எறிந்தாய் -கன்றை எறிந்ததாகவும் விளாம்பழத்தை எறிவதும் உண்டே -மன்னார்குடி பிரகாரத்தில் இதுவே காட்டப்பட்டுள்ளது -அந்தர்யாமி வித்யை ப்ரஹதாரண்யம்
16-காளிங்க நர்த்தனம் பாலாகிவித்யை-கௌஷீதிக்கு
17-ஸிம்ஹாஸன சேவை -அந்தராதித்ய வித்யை-சாந்தோக்யம்
18-மதன கோபாலன் மன்மதன் பர்யங்க வித்யை-கௌஷீதகி உபநிஷத்
19-ராஸ க்ரீடை -ஷோடச கலா வித்யை-பிரஸ்னோ உபநிஷத்
20-ததி பாண்டன் முக்தி -தயிர் பானைக்கும் முக்தி -கட உபநிஷத் பரம புருஷ வித்யை -உபாயமும் உபேயமும் அவனே

21-கோபிகள் உடன் உணவு உண்டு -ஜோதிஷம் ஜோதி
22- கோவர்த்தனம் -ஈசாவாச வித்யை
23- பிரமனின் கர்வம் அடக்கி -சாந்தோக்யம் ஸத்வித்யை
24- கோபிகள் உடன் ஸரஸம் –தைத்ரியம் ஆனந்த மய வித்யை
25-மைத்ரீய வித்யை ப்ரஹதாரண்யம் பாமா ருக்மிணி உடன் சேவை
26-துலாபார சேவை -துளஸீ இல்லை மஹாத்ம்யம் -சாண்டில்ய வித்யை சாந்தோக்யம் -பக்திக்கு விலை இல்லையே –
27-மலருக்கு எமன் கோபிகளுக்கு மன்மதன் -சத்யா காம வித்யை சாந்தோக்யம்
28-குழல் ஓசை கேட்டு உப கோசல வித்யை
29 பாண்டவ தூதன் சேவை – அக்ஷர பர வித்யை முண்டகம்
30 கீதா உபதேசம் — வைஸ் வாநர வித்யை
31- ஜலக்ரீடை பிராண வித்யை
32-உத்சவர் -சாந்தோக்யம் தஹர வித்யை 8-1-ப்ரஹ்மபுரம் -உபாஸக சரீரம் -அவன் வசித்தால்–க்ஷேத்ரம் தானே
இதயம் வீடு -கவிழ்ந்த தாமரை -அதில் கேவிட்டி=தத் மந்த்ய வர்த்தி -பரஸ்ய ப்ரஹ்மம் உபாசாய அனுக்ரஹ –
பகவானுக்கு உள்ளேயும் அபஹத -பாப் மாதி அஷ்ட -குண ஜாதம் -குணங்களோடு கூடிய பகவானை உபாசனம்

—————-

1-ஸ்ரீ ஈஸா வாஸ்ய உபநிஷத்–ஸ்ரீ ஈஸா வாஸ்ய வித்யை

ஸ்ரீ வேத புருஷன்-மக்களுக்கு உபதேசம் –

இவ்வுலகம் முழுவதும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப்பட்டபடியால் அவர் சொத்து என்று அறிந்து, வைராக்யத்தோடு, தனக்கு
விதிக்கப்பட்ட கர்மங்களைத் தவறாமல் செய்து கொண்டு, பரமாத்மாவையே அனைத்து ஜீவர்களிலும் காண்பவனாக,
ஸ்வயம் ப்ரகாசமாய், ப்ராக்ருதமான உடல் இல்லாதவராய்,
அவித்யை மற்றும் புண்ய பாபங்கள் அற்றவராக அவரை த்யாநிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட உபாஸகன் தன் நற் செயல்களால் ஸம்ஸாரத்தைத் தாண்டி உபாஸநத்தால் முக்தி அடைகிறான்.

——-

2-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ நாசிகேத வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசம்

தந்தையால் யமனுக்கு தானம் செய்யப்பட்ட நசிகேதஸ் யமனிடம் மூன்றாைவது வரமாக
வித்யை உபதேசம் பெருதல்
முக்தியைப் பற்றிக் கேட்ட நசிகேதஸ்ஸைக் குறித்து யமன் கூறியது
ஜீவாத்மா நித்யமானவர்
அவரது ஹ்ருதயத்தினுள் பரமாத்மா இருக்கிறார்
அவர் எந்த ஜீவாத்மாவைக் குறித்துத் தன்னைக் காட்டுகிறாரோ அவன் தான் இவ்விரண்டையும் அறிந்து
பரமாத்மாவை உபாஸித்து இன்ப துன்பங்களைத் தாண்டுகிறான் –

————-

3-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ பரம புருஷ வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி –

உடல் என்ற தேரில் இருக்கும் ஆத்மா என்ற ரதீ,
புத்தி என்ற ஸாரதியைக் கொண்டு,
மனது என்ற கடிவாளத்தால்
இந்த்ரியங்கள் என்ற குதிரைகளை
உலக விஷயங்கள் என்ற வழிகளில் செல்ல
விடாமல் பரமபதத்தை அடைய வேண்டும்
புலன்கள் அர்த்தங்கள் மனது புத்தி ஆத்மா உடல் ஆகியவற்றை விட உயர்ந்தவர் பரமாத்மா

————

4-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ அங்குஷ்ட ப்ரஹ்ம வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி

அனைவருக்குள்ளும் இருக்கும் பரமாத்மா ஒருவரே .
அவர் உபாஸகன் நன்மைக்காக கட்டை விரல் அளவில் ஒளி மயமானவராக
வெறுப்பில்லாமல் முக்காலத்திலும் ஹ்ருதயத்துக்குள் இருந்தாலும் இங்குள்ள தோஷங்கள் அவரைத் தீண்டா.
தூய மனதால் அவரை அறிபவன் இங்கேயே அவரை அநுபவித்து,
பின்னால் முக்தி அடைந்து நிரந்தரமான சாந்தி அடைகிறான் –

————-

5- ஸ்ரீ முண்டக உபநிஷத்– ஸ்ரீ அக்ஷர பர வித்யை

ஸ்ரீ அங்கிரஸ் என்ற ரிஷி ஸ்ரீ சௌநகரைக் குறித்து உபதேசம்
ஸ்ரீ சௌநகர் ஸ்ரீ அங்கிரஸ்ஸிடம் எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று
கேட்க, அவர் உபதேசித்தார்

எந்தப் பொருளை அடைய நூல்களால் எற்படும் வித்யையும்
உபாஸநம் என்ற வித்யையும் தேவையோ அவரே சிலந்தி போல் இருந்து உலகைப் படைக்கிறார்.
கர்மங்களால் மட்டும் அவரை அடைய முடியாதபடியால் ஆசார்யனிடம் சென்று,
அக்ஷரம் என்ற ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவனையும் விட உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கற்க வேண்டும்.
அவர் ஜீவனோடு இவ்வுடலிலேயே இருக்கிறார்,
ஆனால் கர்ம பலன்களை அநுபவிக்காமல் அவரைக் காண்பவன் பாப புண்யங்கள் நீங்கி அவருக்கு ஸமமாக ஆகிறான்.

———————

6 –ஸ்ரீ தைத்ரிய உபநிஷத்–ஸ்ரீ ஆனந்த மய வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

என்றும் மாறாததாய், ஜ்ஞாந வடிவமாய் எல்லை யற்றதாய் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிபவன்
அவரைக் குணங்களோடு ஸ்ரீ வைகுந்தத்தில் அநுபவிக்கிறான்.
அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் உடல் ப்ராணன் மனது ஜீவாத்மா ஆகியோருக்கும் உள்ளிருக்கும் ப்ரஹ்மம்
வேதமும் அளக்க முடியாத ஆநந்தத்தை உடையவர் (ஆநந்த மயன்).
அவரை அறிந்தவன் ஸத், ஆநந்திக்கிறான், பயமின்றி இருக்கிறன்.

————-

7–ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ வாருணீ வித்யை

ஸ்ரீ வருண பகவான் தன் மகனான ப்ருகுவைக் குறித்து உபதேசம்

யாரிடமிருந்து அனைத்து ஜீவ ராசிகளும் தோன்றுகின்றனவோ – யாரால் வாழ்கின்றனதோ , யாரிடம் லயம் அடைகின்றனதோ –
யாரால் முக்தி அடைகின்றனதோ – அவரே ப்ரஹ்மம் என்று ஸ்ரீ வருணன் உபதேசிக்க,
ப்ருகு தபஸ் செய்து, அன்னம் ப்ராணன் மனது ஆத்மா ஆகியவை ப்ரஹ்மம் அல்ல,
ஆநந்தமுடைய பரமாத்மாவே ப்ரஹ்மம் என்று அறிந்தார்.
இப்படி அறிபவன் ப்ரஹ்மத்தை அடைந்து, பின் தொடர்ந்து, ஆசைப்பட்ட இடங்களில் உருவங்களோடு
அவரை உண்டு -அனுபவித்து ஸாமகானம் செய்து, தானும் ப்ரஹ்மத்துக்கு உணவாகிறான்.

————

8- ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ ந்யாஸ வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

ஸ்ரீ பரமபதத்தில் இருக்கும் மிக இனிய பரமாத்மாவை அடைய ந்யாஸம் என்ற சரணாகதியே வழி;
கர்மங்கள், செல்வம் முதலானவை யல்ல.
வேதாந்தத்திலிருந்து தத்வங்களை நிச்சயித்து, இந்த்ரியங்களை அடக்கி, சரணாகதி செய்தவர்கள் முக்தி அடைகிறார்கள்.
ப்ரணைம் கொண்டு அவரை அடைய அவரையே உபாயமாகப் பற்ற வேண்டும்.

—————-

9–ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பர்யங்க வித்யை

சித்ரன் அன்ற அரசன் ஆருணி மற்றும் அவர் மகனான ஸ்வேத கேது என்பவர்களைக் குறித்து உபதேசம்

சித்ரன் என்ற அரசன், தனக்காக யாகம் செய்ய வந்த ஸ்வேத கேதுக்கும் அவருடைய தந்தை ஆருணிக்கும்,
அந்த யாகத்தால் தான் அடைய இருக்கும் உலகத்தின் ரஹஸ்யத்தைக் கூறினார்.

கர்மங்களையோ உபாஸநமோ செய்தவன் சந்த்ரனை அடைய , அவர் இவனிடம் “நீ யார்” என்று கேட்க,
“நான் இதுவரை பலமுறை பிறந்துள்ளேன், எனக்குள் இருக்கும் பரமாத்மாவை அறிந்தேன்,
இனி ஸம்ஸாரம் வேண்டாம்,” என்று சொல்பவர்களை மேலே பரமபதத்திற்கும்,
இப்படிச் சொல்லாதவர்களைப் பூவுலகுக்கும் அனுப்புகிறார்.
முக்தி அடைபவன் திவ்யமான உருவத்தோடு விரஜா நதீ, குளங்கள், நகரங்கள், மண்டபம், ஆஸநம், படுக்கை எல்லம்
கடந்து பரமாத்மாவின் மடியில் ஏறி அமர்ந்து, நீரே எனக்கு ஆத்மா என்று கூறி அவரோடே சேர்ந்து ஆநந்தமாக இருக்கிறான்.

————

10-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ ப்ரதர்தந வித்யை –

இந்த்ரன் ஸ்வர்கத்தில் ப்ரதர்தநன் என்பவரைக் குறித்து உபதேசம்

இந்த்ர லோகத்துக்குச் சென்ற ப்ரதர்தநனுக்கு இந்த்ரன் வரம் வழங்க,
தனக்கு மிக்க நன்மையை விளைக்கக் கூடிய ஒன்றை அவரே உபதேசிக்க வேண்டும் என்று ப்ரதர்தநன் கேட்டான்

இந்த்ரன் கூறியது – “என்னையே உபாஸிப்பாய். அதன் மூலம் முக்தி அடையலாம் என்ற படியால்
அதுவே உனக்கு நன்மை தருவது. நானே ப்ராணனாகவும் ஜீவாத்மாவாகவும் உள்ளேன்.
சக்கரத்தின் விளிம்பு அதன் குச்சிகளிலும், அவை அதன் நடுவிலும் தாங்கப் படுவது போல்
அசேதநப் பொருட்கள் சேதநர்களாலும், சேதநர்கள் ப்ராணனாலும் தாங்கப்படுகின்றன” என்று.
இங்கு இந்த்ரன் ’நான்’ என்று சொல்வது தன்வன மட்டும் அல்ல.
தனக்குள் பரமாத்மா இருப்பதை நன்றாக உணர்ந்தபடியால் தன்னைக் குறிக்கும் ’நான்’ என்ற சொல்
பரமாத்மா வரையில் குறிக்கும் என்று அறிந்து, அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

———

11-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பாலாகி வித்யை

அஜாதசத்ரு என்ற அரசன் பாலாகியைக் குறித்து உபதேசம் –

பாலாகி என்பைர் காசியின் அரசனான அஜாதசத்ரு என்பவரிடம் ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறேன் என்று
கூறி, இறுதியில் அவரிடம் உபதேசம் பெற்றார்

ஸூர்யன், சந்த்ரன், மின்னல், மேகம், ஆகாசம், வாயு, நெருப்பு, ஜலம், கண்ணாடி, திசைகள், நிழல், மனது, வலது கண், இடது கண்
ஆகியவற்றுக்குள் இருக்கும் புருஷன், எதிரொலி, உடலில் இருக்கும் ஆத்மா முதலானவர்களை ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல,
அதை நிராகரித்து, இவை அனைத்தையும் , ஏன் உலகனைத்தையும் கூடப்,படைப்பவர் தான் ப்ரஹ்மம் என்று அஜாத சத்ரு கூறினார்.
மேலும் , உறக்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்கிறார்,
பரமாத்மா அவனத்து ஜீவர்களோடும் சேர்ந்து ஆநந்திக்கிறார் என்று கூறினார்

————–

12-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்– மைத்தரயீ வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி மைத்தரயீ என்ற தன் மனைவியைக் குறித்து உபதேசம் –
யாஜ்ஞவல்க்யர் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை விடுவதற்காக தன் சொத்தை மைத்தரயீ காத்யாயனி என்ற இரு மனைவிகளுக்கும் பிரித்துக்
கொடுக்க, மைத்தரயீ அதை ஏற்காமல் அவர் அறிந்த ப்ரஹ்மத்தை உபதேசிக்கக் கேட்டாள்-

யாஜ்ஞவல்க்யர் உபதேசித்தது – “கணவன், மனைவி, மக்கள்,செல்வம் , ஸ்வர்கம், தேவதைகள் ஆகியவர் யாருமே தங்கள்
ஸங்கல்பத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின்
ஸங்கல்பத்தால் தான். அந்த ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, ஆராய்ந்து, நேரே காண்பது போல் த்யாநித்தால், அவனத்தையும் அறிந்தவன்
ஆகிறான். அப்படிக் காண்பவன் இனி ஸம்ஸாரத்தில் பிறப்பதில்வல,
ஆசைப்பட்ட அவனத்துமாகவும் ப்ரஹ்மத்தையே அடைகிறான்.
அப்பொழுது இவனுக்கு தேஹாத்ம ப்ரமமோ ஸ்வாதந்த்ர்ய ப்ரமமோ இருக்காது. அவரை அவரருளில்லாமல் அறிவது அரிது.

————

13–ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–ஸ்ரீ சர்வ அந்தராத்ம வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உஷஸ்தர் கஹோர் என்ற இரு ரிஷிகளைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் பல ரிஷிகள் சேர்ந்து யாஜ்ஞவல்க்யரின் அறிவை பரீஷை செய்யக் கேள்விகள் கேட்டனர்.
அப்பொழுது இருவர் கேட்ட கேள்விகளுக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை –

முதலில் உஷஸ்தர் “ப்ரஹ்மம் யார்?” என்று கேட்க,
“ப்ராண வாயு கொண்டு வாழ வைப்பவர் ப்ரஹ்மம்” என்று கூறி, உடல் புலன்கள் ப்ராணன் முதலானவற்றிலிருந்து வேறு பாட்டையும்,
“இந்த்ரியங்களின் உதவியால் அறிவு பெரும் ஜீவனை இங்கு நினைக்க வேண்டாம்”என்று ஜீவனைக் காட்டிலும் வேறுபாட்டையும் கூறினார்.
அதுவும் புரியாமல் கஹோளர் “ஜீவனே ப்ரஹ்மமா?” என்று மறுபடியும் கேட்க,
“சோகம் பசி தாகம் அறிவின்மை மூப்பு மரணம் இவை அனைத்தையும் கடந்தவரே ப்ரஹ்மம்” என்று கூறி ஸ்பஷ்டமாக
ஜீவனைக் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே ப்ரஹ்மம் என்றார்.

14-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அந்தர்யாமி வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உத்தாலகர் என்ற ரிஷியைக் குறித்து உபதேசம்
உத்தாலகர் கல்வி கற்ற காப்யர் என்ற ஆசானிடம்
ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விகளை அவர் ஜநகனின் சபையில்
யாஜ்ஞவல்க்யரிடம்
கேட்க, அவர் அவற்றுக்கு
பதில் உரைத்தார்.

“உலகங்கள் அனைத்தையும் கட்டி வைக்கும் கயிறு எது? உலகங்கள் அனைத்துக்கும் அந்தர்யாமி
(உள்ளே புகுந்து செலுத்துபவர்) யார்?” என்று உத்தாலகர் கேட்க,
“வாயு (காற்று) தான் அனைத்தையும் கட்டும் கயிறு என்றும், ப்ருதிவீ ஜலம் அக்நி வான், காற்று, ஸ்வர்கம்,
ஸூர்யன், திசைகள், சந்த்ரன், ப்ராணன், வாக், கண், காது, மனது,தோல், ஜீவாத்மா
ஆகிய அனைத்துக்குள்ளும் இருந்து அவற்றை இயக்குபவர், என்றுமே தானாக மரணமற்றவராய்,
தான் மற்றவரால் அறியப்படாமல் தான் அனைத்தையும் அறிபவரான இவணயற்ற ப்ரஹ்மமே ” என்று கூறினார் யாஜ்ஞவல்க்யர்.

——-

15 –ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அக்ஷர வித்யை

ஸ்ரீ யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி கார்கீ என்ற பெண்ணைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் கார்கீ என்ற பெண் கேட்ட கேள்விக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை

கார்கீ ஒவ்வொன்றாகக் கேள்விகளைக் கேட்க, பூமி ஜலம் காற்று ஸூர்யலோகம், சந்த்ரலோகம், நக்ஷத்ர லோகம், தேவ லோகம் ,
இந்த்ரலோகம், ப்ரஜாபதிலோகம், ப்ரஹ்மாவின் லோகம், அவ்யாக்ருதமான ஆகாசம் ஆகியவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த
உலகால் தாங்கப்படுகின்றன என்று கூறி,
அவ்வாகாசம் அக்ஷரம் என்று சொல்லப்படும் பரமாத்மாவால் தாங்கப்படுகிறது, அந்த பரமாத்மாவின் கட்டளையால் தான்
ஸூர்யன் சந்த்ரன் காலம் நதிகள் ஆகிய அனைத்தும் இயங்குகின்றன,
அவரை உபாஸிப்பவன் அவரையே அடைகிறான் என்று யாஜ்ஞவல்க்யர் கூறினார்.

————

16-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக–உபநிஷத்–ஜோயோதிஷாம் ஜோதிர் வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி ஜநக மஹாராஜனைக் குறித்து உபதேசம் –
இந்த உலகத்தில் ப்ராணிகள் அனைத்தும் எந்த ஒளியின் உதவியால் செயல் படுகின்றன என்று ஜநகன் கேட்க,
அதற்கு பதில் உரைக்கிறார் யாஜ்ஞவல்க்யர்

ஸூர்யனும் சந்த்ரனும் அஸ்தமிக்கிற படியாலும், அக்நியும் பேச்சும் நின்று விடுகிற படியாலும்,
ஜீவாத்மாவின் ஜ்ஞாநமும் குறைந்த சக்தியை உடைய படியாலும் எப்பொழுதும் ப்ராணிகளுக்குப்
ப்ரகாசகம் ஆக முடியாது.
இந்த ஜ்யோதிஸ்ஸுகளை விட உயர்ந்த ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவே ப்ராணிகள் செயல்பட உதவும் ஒளி ஆவார்.
ஸ்வப்நத்தில் நாம் பார்க்கும் பொருள்களை எல்லாம் அவரே படைக்கிறார்
அவரை உபாஸித்தால் அவரை அடையலாம்.

———-

17-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–அந்தராதித்ய வித்யை –

வேத புருஷன் உபதேசம்

ஸூர்ய மண்டலத்துக்குள்ளும் நம் கண்ணுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா பொன் மயமான திருமேனியும்,
தாமரை போன்ற திருக்கண்களும், உத் என்ற திருநாமமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பாபங்களைக் கடந்தவர், அவரை உபாஸிப்பவர்களும் தங்கள் பாபங்களைக் கடக்கிறார்கள்,
பரமாத்மாவையே அடைகிறார்கள் –

————–

18-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஆகாச வித்யை

ப்ரவாஹணர் என்ற அரசன் தால்ப்யர் மற்றும் சிலகர் என்ற ரிஷிகளைக் குறித்து உபதேசம்

மூன்று ரிஷிகள் ஸாமத்தின் முடிவைப் பற்றி விவாதிக்க,
மற்ற இருவரும் அறியாத ப்ரஹ்மத்தை ப்ரவாஹணர் அவர்களுக்கு உபதேசித்தார்

சிலகர் தால்ப்யரிடம் வரிசையாகக் கேள்விகள் கேட்க,
தால்ப்யரும் ஸாமம், ஸ்வரம், ப்ராண வாயு, அன்னம், ஜலம், ஸ்வர்கம், பூமி ஆகியவற்றில் ஒவ்வொன்றும்
அடுத்தடுத்தை அண்டி உள்ளது என்று கூற, அதற்கு மேல் தால்ப்யருக்குத் தெரியாததால்,
பூமிக்கும் ஆதாரமாய் இருப்பவர் எங்கும் ஒளி பொருந்தியபடியால் ’ஆகாசம்’
என்று சொல்லப்படும் பரமாத்மா என்று ப்ரவாஹணர் கூறினார்.

————-

19-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ப்ராண வித்யை

உஷஸ்தி என்ற ரிஷி யாகம் செய்யும் மூவரைக் குறித்து உபதேசம்

உஷஸ்தி என்பவர் அருகில் அரசனின் யாகத்தைச் செய்து கொண்டிருந்த மூவரைப் பார்த்து,
அவர்கள் புகழும் தேவதை யார் என்று கூறினார்.

யாகத்தில் ப்ரஸ்தோதா உத்காதா ப்ரதிஹர்தா என்று மூவர் ஸாமம் என்ற இசையோடு மந்த்ரங்களைப் பாட வேண்டும்.
அவர்களால் பாடப்படும் தேவதைகள் முறையே ப்ராணன், ஆதித்யன் மற்றும் அன்னம் என்று உஷஸ்தி கூறினார்.
இங்கு ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா,
அவரே அனைத்து உயிர்களையும் படைத்து அழித்து வாழ வைக்கும் ப்ராணனானபடியால்.

———

20-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–மது வித்யை

வேத புருஷன் உபதேசம்

ஸூர்யனே தேனாகவும் -ஆகாசத்தையே தேன் -அடையாகவும் ,
வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் என்ற பூக்களிலிருந்து வேத மந்த்ரங்கள் என்ற வண்டுகள் ஹவிஸ்ஸின் ரஸத்தை
ஸூர்யனின் கதிர்கள் என்ற ஓட்டைகள் மூலம் ஸூர்யன் என்ற தேனாக சேமித்து வைப்பதாகவும்,
அதை வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் ஸாத்யர்கள் ஆகிய தேவதைகள் ஒவ்வொரு
திசையிலிருந்து உண்பதாகவும்,
அந்த ஸூர்யனுக்குள் பரமாத்மா இருப்பதாகவும் த்யாநம் செய்தால் பரமாத்மாவையே அடைந்து
என்றும் அளவற்ற ஜ்ஞாநத்தோடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

————-

21-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–காயத்ரீ வித்யை

வேதபுருஷன் உபதேசம்

நான்கு பாதங்களும் ஆறு தன்மைகளும் கொண்ட காயத்ரீ என்ற
சந்தஸ் (விருத்தம்) போல் இருப்பவர் பரமாத்மா என்று த்யாநிக்க வேண்டும்.
பரமாத்மாவுக்கும் உயிரினங்கள், ப்ருதிவீ, உடல்கள், ஹ்ருதயம் என்று நான்கு பாதங்களும், ஆறு தன்மைகளும் உள்ளன.
இவை அனைத்தும் அவருடைய செல்வத்தின் சிறு பகுதியே
இதை விட பன்மடங்கு அதிகமான செல்வம் பரமபதத்தில் உள்ளது

————–

22-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பரம் ஜ்யோதிர் வித்யை

வேதபுருஷன் உபதேசம்

ஸம்ஸாரத்தையே தாண்டி, ஶ்ரீவைகுண்டத்தில் ஒளிவிடும் மிக உயர்ந்த ஒப்பில்லாத ஜ்யோதிஸ்ஸான பரமாத்மா தான்
நமது இந்த உடலுக்குள் இருந்து நாம் உண்ணும் உணவைச் சமைக்கக் கூடிய வைச்வாநரன் என்ற நெருப்பாகவும் உள்ளார்.
அந்த நெருப்பின் ஒலியைக் தகட்டு, வெப்பத்தை அறிந்து, அதற்குள் இருக்கும் பரமாத்மாவை த்யாநிக்க வேண்டும் –

———-

23–ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–சாண்டில்ய வித்யை

சாண்டில்யர் என்ற ரிஷி உபதேசம்

இவ்வுலகம் அனைத்தும் ப்ரஹ்மத்தாலேயே படைத்து அழித்து காக்கப்படுகிறபடியால் இவ்வுலகம் அனைத்தும் அவரே
என்று அறிந்து, அதனால் தேவையில்லாத விருப்பு வெறுப்புகளில்லாமல் சாந்தி அடைந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.
ஒருவன் இவ்வுலகில் எவ்வாறு பரமாத்மாவை உபாஸிக்கிறானோ அவன் ஸ்ரீ வைகுந்தத்தில் அவ்வாறே அவனை அநுபவிக்கிறான்.
பரமாத்மா தூய மனதால் மட்டும் அறியப்படுபவர், ஒளிமிக்கவர், எல்லாச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர்,
இயற்கையில் இவ்வுலகங்கள் அனைத்தையும் காட்டிலும் பெரியவர், உபாஸநத்தை எளிமை யாக்க நம் இதயத்தில்
மிகச் சிறியவராக உள்ளார் என்று த்யாநித்து அவரை அடையலாம் –

———–

24-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஸம்வர்க வித்யை

ரைக்குவர் என்ற ரிஷி ஜாநச்ருதி என்ற அரசனைக் குறித்து உபதேசம்

ஜாநச்ருதி என்ற அரசன் தர்மங்களைச் செய்தாலும் ப்ரஹ்மத்தை அறியாதவன்.
அவனுக்கு அதை போதிக்க இரண்டு ரிஷிகள் பறவை உருவம் கொண்டு, அவனை விட ரைக்குவர் உயர்ந்தவர் என்று சொல்ல,
அதைக்கேட்ட அரசன் ரைக்குவரைத் தேடித் சென்று ப்ரஹ்ம உபதேசம் பெற்றான்.

ஸம்வர்கம் என்றால் அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடியது.
தேவதைகளுக்குள் வாயு தான் ஸம்வர்கம் என்றும்
ஆத்மாவோடு தொடர்பு யுடையவற்றுள் ப்ராணன் தான் ஸம்வர்கம் என்றும் ரைக்குவர் கூறினார்.
இங்கு வாயு ப்ராணன் என்ற சொற்கள் அவற்றுக்குள் இருக்கும் பரமாத்மாவைக் குறிக்கின்றன.
சௌநகர் அபிப்ரதாரி என்ற ரிஷிகளிடம் ஒருவர் வந்து நான்முகக் கடவுளே ஸம்வர்கம் என்று சொல்ல,
சௌநகர் பதிலுக்கு “தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய், தான் அழியாமல் மற்றவற்றை அழிப்பவராய்,
ந்ருஸிம்ஹ அவதாரம் செய்தவரான பரமாத்மாவே ஸம்வர்கம்” என்று கூறினார் என்ற கதையையும்
ரைக்குவர் ஜாந ச்ருதிக்கு விளக்கினார்.
இதை அறிந்து உபாஸிப்பைன் முக்தி பெற்று ஸர்வஞ்ஞன் ஆகிறான் —

———

25 -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ஸத்யகாம வித்யை / ஷோடச கல ப்ரஹ்ம வித்யை –

ஹாரித்ருமதர் என்ற ரிஷி ஸத்யகாமன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்

ஹாரித்ருமதரிடம் கல்வி கற்க வந்த ஸத்யகாமன், தன் கோத்ரம் அறியாததை நேர்மையாகச் சொல்ல
அவரும் அவனுக்கு 400 மாடுகளைக் கொடுத்தார்
அந்த மாடுகளை 1000ஆக வளர்த்து வரச் சொன்னார். அவனும் செய்தான்.
அதனால் த்ருப்தி அடைந்து காளை , அக்நி, ஹம்ஸம்,மத்கு பறவை ஆகிய நால்வரும்
ப்ரகாசவான், அநந்தவான், ஜ்யோதிஷ்மான், ஆயதநவான் என்ற நான்கு கால்களையும், அவை
ஒவ்வொன்றிலும் நான்கு கலைகளையும் கொண்டவர் பரமாத்மா என்று உபதேசித்தனர்.
ஆசார்யனும் அதையே உபதேசித்தார்.

————–

26-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–உபகோஸல வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம் –

வெகு காலம் குருகுலத்தில் இருந்த போதிலும் உபகோஸலனுக்கு ஸத்யகாமர் ப்ரஹ்மத்தை உபதேசிக்காததால்,
அக்நிகள் கருணையோடு அவனுக்கு உபதேசித்தனர்
அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும் ப்ராணனாகவும், அளவற்ற ஆநந்தத்தை உடையவராகவும் இருப்பவரே பரமாத்மா
என்று பரமாத்மாவை உபாஸிக்கும் முறையையும் , அந்த உபாஸநத்தின் அங்கமாகத் தங்களை உபாஸிக்கும் முறையையும்
கூறிவிட்டு, மீதமிருப்பதை உன் ஆசார்யரே உபதேசிக்க வேண்டும் என்று அக்நிகள் மூவரும் கூறினர்.
ஆசார்யரும் குருகுலம் திரும்பி, நடந்ததை அறிந்து, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல்
பரமாத்மாவை உபாஸிப்பவனிடம் அவன் கவனக் குறைவால் செய்யும் பாபங்கள் ஒட்டாது என்று முக்தியை உபதேசித்தார்.

————

27-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அக்ஷி வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்
மேற்கண்ட உபதேசத்தின் தொடர்ச்சியே இது

பரமாத்மாவை நம் கண்ணில் இருப்பவராகவும், அனைத்து கல்யாண குணங்களையும் உடையவராகவும்,
தன் அடியார்க்கு மேன்மை ஏற்படுத்துபவராகவும், அழகிய ஒளி பொருந்திய திருமேனி உடையவராகவும் த்யாநிக்கும் உபாஸகன்,
அர்சிஸ் பகல் சுக்லபக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் ஆதித்யன் சந்த்ரன் மின்னல் முதலான தேவதைகளின்
லோகங்கள் வழியாகச் சென்று பரமபதத்தை அடைகிறான். அவன் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பதில்லை

————-

28-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பஞ்சாக்நி வித்யை

ப்ரவாஹணர் என்ற ரிஷி ஆருணி என்பவரைக் குறித்து உபதேசம்

ப்ரவாஹணர் என்ற அரசன் சபையில் தன் மகனிடம் கேட்ட ஐந்து கேள்விகளின் விடைகளைத் தானும்
அறியாததால், தந்தையான ஆருணி ப்ரவாஹணரிடம் சென்று கேட்டு அறிந்தார்

பரமாத்மாவின் உடலான ஜீவாத்மா ஸவர்கம், மேகம், பூமி, ஆண்,பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு,
ஸோமன் மழை செடிகள் ரேதஸ் கர்ப்பம் என்ற ஐந்து வடிவங்களை எடுக்கிறார். இதை அறிந்தவனும் ப்ரஹ்மத்தை உபாஸிப்பவனும்
தேவ யாநம் என்ற வழியால் முக்தி அடைகிறான்.
வேதம் சொன்ன கர்மங்களை மட்டும் செய்பவன் பித்ருயாணம் என்ற வழியால் சந்த்ரனை அடைந்து,
புண்ணியம் உள்ள வரை அங்கு ஸுகம் அநுபவித்து, பின்பு ஆகாயம், வாயு, புகை , மேகம், மழை மூலமாக பூமியை அடைகிறான்.
உபாஸநமும் செய்யாமல் கர்மங்களையும் செய்யாதவன் இந்த இரண்டு வழிகைளாலும் செல்லாமல்,
ஸ்வர்கத்தை அடையாமல் தாழ்ந்த பிறவிகளை எடுக்கிறான்.

————-

29-ஸ்ரீ சாந்தோக்ய–உபநிஷத்–வைச்வாநர வித்யை

அச்வபதி என்ற கேகய தேசத்து அரசன்–
ப்ராசீநசாலர் ஜநர் ஸத்யயஜ்ஞர் புடிலர் இந்த்ரத்யும்நர் உத்தாலகர் என்ற அறுவரைக் குறித்து உபதேசம்

ஐவர் சேர்ந்து வைச்வாநரர் என்ற பரமாத்மாவைப் பற்றி விவாதம் செய்து, தெளிவு பெற உத்தாலகர்
என்பவரிடம் செல்ல,
அவரும் அவர்களோடு சேர்ந்து அச்வபதியிடம் உபதேசம் பெற்றார்கள்.

ஆறு ரிஷிகளும் தனித்தனியாக த்யு லோகம், ஸூர்யன்,,வாயு ,ஆகாசம், ஜலம், பூமி ஆகியைற்றையே பரமாத்மா என்று
உபாஸிப்பதை அறிந்து கொண்ட அச்வபதி, ப்ரஹ்மம் அப்படி அளவு பட்டவர் அல்ல -அளவற்றவர் , இவை அனைத்தும் அவர்
உடலின் சிறு பகுதிகளே என்றும், முழுமையான ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் அந்த ப்ரஹ்மம் தன் உடலின் பகுதிகளிலும்
இருப்பதாக எண்ண வேண்டும் என்றும் கூறி, அந்த உபாஸகன் முற் செய்த பாபங்கள் அவனத்தும் எறிக்கப்படுகின்றன என்றார்.

————

30-ஸ்ரீ சாந்தோக்ய-உபநிஷத் –ஸத் வித்யை

உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேதகேது என்ற தன் மகனைக் குறித்து உபதேசம்
ஸ்வேதகேது குருகுலம் சென்று வந்த போதும் ப்ரஹ்மத்தை அறியாமல் கர்வத்தோடு
இருந்தபடியால் அவனுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார் தந்தையான உத்தாலகர்

உலகம் அனைத்தையும் இயக்கும் எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அதை நீ அறிந்தாயா என்று தந்தை மகனிடம் கேட்டு, அவன் அறியாதபடியால் அப்படிப்பட்ட பரமாத்மாவை உபதேசித்தார்.

மண் என்பது குடம் முதலானவற்றின் உபாதாந காரணம் ஆனபடியால் மண்ணை அறிந்தால் அவை அனைத்தையும்
அறிந்ததாவது போல்,
ப்ரஹ்மமே இவ்வுலகின் உபாதாந காரணமானபடியால் அவரை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.

அவரே தான் உலகுக்கு நிமித்த காரணமாகவும் உள்ளார், அதாவது அவர் தான் வேறே ஒருவரை எதிர்பார்க்காமல்
தானே ஸங்கல்பம் செய்து உலகைப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதுமே அவரை ஆத்மாவாகக் கொண்டது தான் -அவரால் வ்யாபிக்கப்பட்டது தான்.
ஆகவே , ஸ்வேதகேது என்ற உனக்குள்ளும் அதே பரமாத்மாவே இருக்கிறபடியால் அவரே தான் நீ
என்று தந்தை உபதேசித்தார். மகனும் ப்ரஹ்மத்தை அறிந்தான்.

————

31-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பூம வித்யை

ப்ரஹ்மாவின் மகனான ஸநத்குமாரர் நாரதரைக் குறித்து உபதேசம்

தான் வேதங்கள் முதலான அனைத்து நூல்களையும் அறிந்திருந்தாலும்
பரமாத்மாவை அறியாதபடியால் சோகம் நீங்கவில்லை என்று நாரதர் கூற, அவருக்கு ப்ரஹ்மத்தை
உபதேசித்தார் ஸநத்குமாரர்

சொற்கள், பேச்சு, மனது, உறுதி, சித்தம், த்யாநம், அறிவு, பலம்,
அன்னம், ஜலம், தேஜஸ், ஆகாசம், நினைவு, ஆசை , ப்ராணன் என்று வழக்கப்படும் ஜீவாத்மா ஆகியவற்றில் ஒவ்வொன்றைக்
காட்டிலும் அடுத்தடுத்தது உயர்ந்தது என்று உபதேசித்துவிட்டு,
அந்த ஜீவனையும்விட உயர்ந்த பரமாத்மா ஸத்யம் என்று அழைக்கப்படுகிறார் என்றும்,
அவரை அறிபவன் அவரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றும், அந்த பரமாத்மா அளவற்ற ஸுகமே வடிவானவர் என்றும்,
அவரை ஒருவன் கண்டால் வேறே எதையும் காண மாட்டான் என்றும்,
அந்த ப்ரஹ்மம் நமக்கும் ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும் என்றும்,
இப்படி உபாஸிப்பவன் கர்மங்கள் நீங்கி, முக்தி அவடந்து, வேண்டிய உருவம் எடுத்து பரமாத்மாவுக்கு
கைங்கர்யம் செய்கிறார் என்றும் ஸநத்குமாரர் உபதேசித்தார்.

——————

32-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–தஹர வித்யை

வேதபுருஷன் உபதேசம்

இந்த உடல் பரமாத்மாவின் இருப்பிடமான பட்டணம் ஆகும்.
இதற்குள் தாமரை வடிவத்தில் இருக்கும் ஹ்ருதயத்திற்குள் இருக்கும் நுண்ணிய ஆகாசம் தான் பரமாத்மா. அவர் சிறியவரல்ல,
ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசத்வத விடப் பெரியவர். உபாஸகன் அடைந்த பொருட்கள், அடைய ஆசைப்படும் பொருட்கள்
அனைத்தும் இவருக்குள் உண்டு.
அந்த பரமாத்மாவையும், அவரிடம் இருக்கும் எட்டு கல்யாண குணங்கவையும் உபாஸிக்க வேண்டும்.
அவையாைன –
பாபங்களால் தீண்டப்படாமை , மூப்பின்மை , மரணமின்மை , சோகமின்மை , பசியின்மை , தாகமின்மை ,
நித்ய விபூதிக்குத் தலைவனாய் இருத்தல் மற்றும் தடையற்ற ஸங்கல்பம் என்பவையாம்.
ஜீவாத்மாவுக்கும் இந்த எட்டு குணங்களும் உண்டு என்று ப்ரஜாபதி இந்த்ரனுக்கு உபதேசித்தார்.
இப்படிப்பட்ட பரமாத்மாவை அறிந்து த்யாநம் செய்பவன், பாபங்கவைத் தள்ளி, சரீரத்தைத் துறந்து,
ப்ரஹ்ம லோகம் என்ற ஶ்ரீவைகுண்டத்தை அடைந்து, என்றும் மீண்டு வராமல் இன்பப்படுகிறார்கள்.

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –

June 20, 2021

16 ப்ரஹ்ம வித்யைகள் இதில் உண்டே –

1-அந்தராதித்ய அந்தர அஷ வித்யை –சாந்தோக்யம் -1-1-6-7–

இயமேவர்க³க்³நி: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴़ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யத இயமேவ
ஸாக்³நிரமஸ்தத்ஸாம ॥ 1.6.1॥

அந்தரிக்ஷமேவர்க்³வாயு: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதேঽந்தரிக்ஷமேவ ஸா
வாயுரமஸ்தத்ஸாம ॥ 1.6.2॥

த்³யௌரேவர்கா³தி³த்ய: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே த்³யௌரேவ
ஸாதி³த்யோঽமஸ்தத்ஸாம ॥ 1.6.3॥

நக்ஷத்ராந்யேவர்க்சந்த்³ரமா: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே நக்ஷத்ராண்யேவ ஸா சந்த்³ரமா
அமஸ்தத்ஸாம ॥ 1.6.4॥

ஸத்வித்யா முக்கியம் இதில் –
ருக் சாமம் -மந்த்ரம் இசை கூட்டி -பிருத்வி -ருக் சாமம் அக்னி / அந்தரிக்ஷம் வாயு / மேல் லோகம் ஆதித்யன் /
நக்ஷத்ரங்கள் -சந்திரன் / போலே இவை இரண்டையும்

அத² யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே ॥ 1.6.5॥

வெள்ளை ருக் -கரு நீல ஓளி சாமம் /அரவணை மேல் பள்ளியான் -முகில் வண்ணன் /

அத² யதே³வைததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவ
ஸாத² யந்நீலம் பர: க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாமாத²
ய ஏஷோঽந்தராதி³த்யே ஹிரண்மய: புருஷோ த்³ருʼஶ்யதே
ஹிரண்யஶ்மஶ்ருர்ஹிரண்யகேஶ ஆப்ரணஸ்வாத்ஸர்வ ஏவ
ஸுவர்ண: ॥ 1.6.6॥

தங்கமய மீசை –அந்தராத்திய -ஹிரண்மய புருஷ -தலை கேசம் -சர்வ ஏவ ஸ்வர்ணம் -ஸ்ப்ருஹநீயத்வம் –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஓளி -ஒவ்வாதே-இல் பொருள் உவமை –

தஸ்ய யதா² கப்யாஸம் புண்ட³ரீகமேவமக்ஷிணீ
தஸ்யோதி³தி நாம ஸ ஏஷ ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴ய உதி³த
உதே³தி ஹ வை ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴யோ ய ஏவம் வேத³ ॥ 1.6.7॥

உத் -திரு நாமம் விளக்கவே திருவாய்மொழி-உயர்வற ஆரம்பித்து –பிறந்தார் உயர்ந்தே -முடித்து –
தாமரைக்கண்ணன் விண்ணோர் பரவும் கமலக்கண்ணன் -பரத்வ சிஹ்னம்
ஜகத் காரணத்வம் -ஸ்ரீ யபதித்தவம் -கருட வாஹனத்வம் -திருவானந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து –
ஸ்ரீ விஷ்வக் சேனர் திருக்கை பிரம்பின் கீழே -வர்த்திக்கும் வான் இளவரசு வைகுந்த குட்டன்
கம்பீராம்ப ஸமுத்பூத ஸ்ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள-ஆம்லா -ஆயத -ஈஷண
கம் பிபதீ சூர்யன் -கபி தேன அஸ்யதே சூர்யன் கிரணங்களால் மலர்த்தப்பட்ட தாமரை
கம் -த்ண்ணீரைக் குடிப்பது நாளம் மூலம் -நாளத்தில் வசிக்கும் தாமரை
தண்ணீரில் வாழும் -தாமரை
அமலங்களாக விளிக்கும்–நெடும் நோக்கு –
காரியவாகிப் –புடை பெயர்ந்து –மிளிர்ந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்

தஸ்யர்க்ச ஸாம ச கே³ஷ்ணௌ
தஸ்மாது³த்³கீ³த²ஸ்தஸ்மாத்த்வேவோத்³கா³தைதஸ்ய ஹி கா³தா
ஸ ஏஷ யே சாமுஷ்மாத்பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே
தே³வகாமாநாம் சேத்யதி⁴தை³வதம் ॥ 1.6.8॥

இப்படி உபாசிப்பவன் மேல் லோகம் அடைகிறான்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————–

அதா²த்⁴யாத்மம் வாகே³வர்க்ப்ராண: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ
ஸாம தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே।
வாகே³வ ஸா ப்ராணோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.1॥

ரிக் சாமம் -வாக் பிராணன் –

சக்ஷுரேவர்கா³த்மா ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
சக்ஷுரேவ ஸாத்மாமஸ்தத்ஸாம ॥ 1.7.2॥

ஶ்ரோத்ரமேவர்ங்மந: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
ஶ்ரோத்ரமேவ ஸா மநோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.3॥

அத² யதே³தத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
அத² யதே³வைதத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவ ஸாத² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாம ॥ 1.7.4॥

கண் சாயாத்மா
கண்ணில் உள்ள கரு நீலம்

அத² ய ஏஷோঽந்தரக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யதே ஸைவர்க்தத்ஸாம
தது³க்த²ம் தத்³யஜுஸ்தத்³ப்³ரஹ்ம தஸ்யைதஸ்ய ததே³வ ரூபம் யத³முஷ்ய ரூபம்
யாவமுஷ்ய கே³ஷ்ணௌ தௌ கே³ஷ்ணௌ யந்நாம தந்நாம ॥ 1.7.5॥

ஸ ஏஷ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே மநுஷ்யகாமாநாம்
சேதி தத்³ய இமே வீணாயாம் கா³யந்த்யேதம் தே கா³யந்தி
தஸ்மாத்தே த⁴நஸநய: ॥ 1.7.6॥

அத² ய ஏததே³வம் வித்³வாந்ஸாம கா³யத்யுபௌ⁴ ஸ கா³யதி
ஸோঽமுநைவ ஸ ஏஷ சாமுஷ்மாத்பராஞ்சோ
லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி தே³வகாமாꣳஶ்ச ॥ 1.7.7॥

மேல் லோகத்தவனாக உபாசித்தால் மேல் லோகம் அடைந்து

அதா²நேநைவ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி
மநுஷ்யகாமாꣳஶ்ச தஸ்மாது³ ஹைவம்விது³த்³கா³தா ப்³ரூயாத் ॥ 1.7.8॥

கம் தே காமமாகா³யாநீத்யேஷ ஹ்யேவ காமாகா³நஸ்யேஷ்டே ய
ஏவம் வித்³வாந்ஸாம கா³யதி ஸாம கா³யதி ॥ 1.7.9॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

கப்யாசம்–மூன்று பூர்வ பக்ஷ அர்த்தங்கள் மூன்று சம்ப்ரதாயம்
உத்கீதம்
கொடிய வினை
ஆதித்ய மண்டல மதியவர்த்தி -12 ஆதித்யர்கள்
அஷி க்குள்ளும் -இவனே -ஸமஸ்த லோக நிர்வாஹகன் –

—–

2-ஆகாச வித்யை 1-1–8-9-அடுத்து –

த்ரயோ ஹோத்³கீ³தே² குஶலா ப³பூ⁴வு: ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநோ
தா³ல்ப்⁴ய: ப்ரவாஹணோ ஜைவலிரிதி தே ஹோசுருத்³கீ³தே²
வை குஶலா: ஸ்மோ ஹந்தோத்³கீ³தே² கதா²ம் வதா³ம இதி ॥ 1.8.1॥

ததே²தி ஹ ஸமுபவிவிஶு: ஸ ஹ ப்ராவஹணோ ஜைவலிருவாச
ப⁴க³வந்தாவக்³ரே வத³தாம் ப்³ராஹ்மணயோர்வத³தோர்வாசꣳ ஶ்ரோஷ்யாமீதி
॥ 1.8.2॥

ஸ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம் தா³ல்ப்⁴யமுவாச
ஹந்த த்வா ப்ருʼச்சா²நீதி ப்ருʼச்சே²தி ஹோவாச ॥ 1.8.3॥

கா ஸாம்நோ க³திரிதி ஸ்வர இதி ஹோவாச ஸ்வரஸ்ய கா
க³திரிதி ப்ராண இதி ஹோவாச ப்ராணஸ்ய கா
க³திரித்யந்நமிதி ஹோவாசாந்நஸ்ய கா க³திரித்யாப
இதி ஹோவாச ॥ 1.8.4॥

அபாம் கா க³திரித்யஸௌ லோக இதி ஹோவாசாமுஷ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ஸ்வர்க³ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச ஸ்வர்க³ம்
வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸம்ஸ்தா²பயாம: ஸ்வர்க³ஸꣳஸ்தாவꣳஹி
ஸாமேதி ॥ 1.8.5॥

தꣳ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம்
தா³ல்ப்⁴யமுவாசாப்ரதிஷ்டி²தம் வை கில தே தா³ல்ப்⁴ய ஸாம
யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மூர்தா⁴ தே
விபதேதி³தி ॥ 1.8.6॥

ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி வித்³தீ⁴தி ஹோவாசாமுஷ்ய
லோகஸ்ய கா க³திரித்யயம் லோக இதி ஹோவாசாஸ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ப்ரதிஷ்டா²ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச
ப்ரதிஷ்டா²ம் வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸꣳஸ்தா²பயாம:
ப்ரதிஷ்டா²ஸꣳஸ்தாவꣳ ஹி ஸாமேதி ॥ 1.8.7॥

தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாசாந்தவத்³வை கில தே
ஶாலாவத்ய ஸாம யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மூர்தா⁴ தே விபதேதி³தி ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி
வித்³தீ⁴தி ஹோவாச ॥ 1.8.8॥

ப்ரவாஹனன் ராஜா க்ஷத்ரியர்
சிலையின் ஸலவாத் பிள்ளை அந்தணர்
டால்வர் அந்தணர்
மூவரும் உத்கீதா பிரணவம் பற்றி பேச
சாமத்துக்கு சுரம் ஆதாரம்
அதுக்கு பிராணன் ஆதாரம்
அதுக்கு அன்னம்
அதுக்கு தண்ணீர் -ஆப
அதுக்கு லோகம்
இதுக்கு -சுவர்க்கம் ஆதாரம் டால்வார் சொல்ல சிலைகள் ஒத்துக் கொள்ள வில்லை -தப்பாக சொன்னீர்
பூமிக்கு ஆதாரம் எது தெரியவில்லை
பிரவாஹனன் -நீ சொல்லு என்று இவன் இடம் கேட்க -லோகத்துக்கு ஆகாசம் சிலகர் சொல்ல -ப்ரவாஹனன் பேச
ப்ரஹ்ம வாசக சப்தம் ஆகாசம் –
ப்ரஹ்மம் தான் படைத்து
அறிந்தவனே உயர்ந்த கத்தி அடைகிறான் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

அஸ்ய லோகஸ்ய கா க³திரித்யாகாஶ இதி ஹோவாச
ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாந்யாகாஶாதே³வ ஸமுத்பத்³யந்த
ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்த்யாகாஶோ ஹ்யேவைப்⁴யோ ஜ்யாயாநகாஶ:
பராயணம் ॥ 1.9.1॥

ஸ ஏஷ பரோவரீயாநுத்³கீ³த:² ஸ ஏஷோঽநந்த: பரோவரீயோ
ஹாஸ்ய ப⁴வதி பரோவரீயஸோ ஹ லோகாஞ்ஜயதி
ய ஏததே³வம் வித்³வாந்பரோவரீயாꣳஸமுத்³கீ³த²முபாஸ்தே ॥ 1.9.2॥

தꣳ ஹைதமதித⁴ந்வா ஶௌநக உத³ரஶாண்டி³ல்யாயோக்த்வோவாச
யாவத்த ஏநம் ப்ரஜாயாமுத்³கீ³த²ம் வேதி³ஷ்யந்தே பரோவரீயோ
ஹைப்⁴யஸ்தாவத³ஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴விஷ்யதி ॥ 1.9.3॥

ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தே
பரோவரீய ஏவ ஹாஸ்யாஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴வதி
ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி லோகே லோக இதி ॥ 1.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

பரன் வரீயான்
பரஞ்சோதி
ரூடி அர்த்தம்
உயர்வு அற உயர் நலம் உடையவன்
குணங்களை த்யானம் –
கோவர்தனம் -மும்மாரி தாபத்ரயம் -அவனுக்குள்ளே இருக்கும் கல்யாண குணங்களை த்யானம்

——-

3-பிராண வித்யை –1-1-10-11–

மடசீஹதேஷு குருஷ்வாடிக்யா ஸஹ ஜாயயோஷஸ்திர்ஹ
சாக்ராயண இப்⁴யக்³ராமே ப்ரத்³ராணக உவாஸ ॥ 1.10.1॥

ஸ ஹேப்⁴யம் குல்மாஷாந்கா²த³ந்தம் பி³பி⁴க்ஷே தꣳ ஹோவாச ।
நேதோঽந்யே வித்³யந்தே யச்ச யே ம இம உபநிஹிதா இதி
॥ 1.10.2॥

ஏதேஷாம் மே தே³ஹீதி ஹோவாச தாநஸ்மை ப்ரத³தௌ³
ஹந்தாநுபாநமித்யுச்சி²ஷ்டம் வை மே பீதꣳஸ்யாதி³தி ஹோவாச
॥ 1.10.3॥

ந ஸ்விதே³தேঽப்யுச்சி²ஷ்டா இதி ந வா
அஜீவிஷ்யமிமாநகா²த³ந்நிதி ஹோவாச காமோ ம
உத³பாநமிதி ॥ 1.10.4॥

ஸ ஹ கா²தி³த்வாதிஶேஷாஞ்ஜாயாயா ஆஜஹார ஸாக்³ர ஏவ
ஸுபி⁴க்ஷா ப³பூ⁴வ தாந்ப்ரதிக்³ருʼஹ்ய நித³தௌ⁴ ॥ 1.10.5॥

ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச யத்³ப³தாந்நஸ்ய லபே⁴மஹி
லபே⁴மஹி த⁴நமாத்ராꣳராஜாஸௌ யக்ஷ்யதே ஸ மா
ஸர்வைரார்த்விஜ்யைர்வ்ருʼணீதேதி ॥ 1.10.6॥

தம் ஜாயோவாச ஹந்த பத இம ஏவ குல்மாஷா இதி
தாந்கா²தி³த்வாமும் யஜ்ஞம் விததமேயாய ॥ 1.10.7॥

தத்ரோத்³கா³த்ரூʼநாஸ்தாவே ஸ்தோஷ்யமாணாநுபோபவிவேஶ
ஸ ஹ ப்ரஸ்தோதாரமுவாச ॥ 1.10.8॥

ப்ரஸ்தோதர்யா தே³வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.9॥

ஏவமேவோத்³கா³தாரமுவாசோத்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.10॥

ஏவமேவ ப்ரதிஹர்தாரமுவாச ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி தே ஹ ஸமாரதாஸ்தூஷ்ணீமாஸாஞ்சக்ரிரே
॥ 1.10.11॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநம் யஜமாந உவாச ப⁴க³வந்தம் வா அஹம்
விவிதி³ஷாணீத்யுஷஸ்திரஸ்மி சாக்ராயண இதி ஹோவாச ॥ 1.11.1॥

ஸ ஹோவாச ப⁴க³வந்தம் வா அஹமேபி:⁴ ஸர்வைரார்த்விஜ்யை:
பர்யைஷிஷம் ப⁴க³வதோ வா அஹமவித்த்யாந்யாநவ்ருʼஷி ॥ 1.11.2॥

ப⁴க³வாꣳஸ்த்வேவ மே ஸர்வைரார்த்விஜ்யைரிதி ததே²த்யத²
தர்ஹ்யேத ஏவ ஸமதிஸ்ருʼஷ்டா: ஸ்துவதாம் யாவத்த்வேப்⁴யோ த⁴நம்
த³த்³யாஸ்தாவந்மம த³த்³யா இதி ததே²தி ஹ யஜமாந உவாச
॥ 1.11.3॥

அத² ஹைநம் ப்ரஸ்தோதோபஸஸாத³ ப்ரஸ்தோதர்யா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி
॥ 1.11.4॥

ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாநி
ப்ராணமேவாபி⁴ஸம்விஶந்தி ப்ராணமப்⁴யுஜ்ஜிஹதே ஸைஷா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ராஸ்தோஷ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.5॥

அத² ஹைநமுத்³கா³தோபஸஸாதோ³த்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி ॥ 1.11.6॥

ஆதி³த்ய இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி
பூ⁴தாந்யாதி³த்யமுச்சை: ஸந்தம் கா³யந்தி ஸைஷா
தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா தாம் சேத³வித்³வாநுத³கா³ஸ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.7॥

அத² ஹைநம் ப்ரதிஹர்தோபஸஸாத³ ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா
ஸா தே³வதேதி ॥ 1.11.8॥

அந்நமிதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தந்யந்நமேவ
ப்ரதிஹரமாணாநி ஜீவந்தி ஸைஷா தே³வதா ப்ரதிஹாரமந்வாயத்தா
தாம் சேத³வித்³வாந்ப்ரத்யஹரிஷ்யோ மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய
மயேதி ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.9॥

கிராமம்-குரு தேசம் -ரிஷி போக -சாப்பிட -தண்ணீர் கொடுக்க சாப்பிட மாட்டேன்
பிராணன் போகும் சமயம் நீ கொடுத்ததை சாப்பிட்டேன்
பிராணன் நிலை நிறுத்தும் பொழுது கொள்ள மாட்டேன்
அவன் மனைவியும் அப்படியே

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥
கல்லுக்குள்ளும் ஜீவாத்மா உண்டே
ஆத்மாவுக்கு பிராணன் காரணம் இல்லையே -நித்யம் அன்றோ
பிராண வாயுவை நம்பி இல்லையே
ஸமஸ்த வஸ்துக்களும் பிராணன் இடம் தோன்றியவை என்பதால் பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –
சர்வ பூதாநி -கீதையில் -ஸ்ருஷ்டி லயம் -கல்பாதியில் படைத்து –
காரணப்பெயர் வாழ வைப்பவன் -பிராணன் பரமாத்மாவே –
ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -பிராண சப்தம் அங்கும் –
பிரஸ்தாபம் பகுதியால் சொல்லப்படும் பிராணன் பரமாத்மாவே
உத்கீதம் அடுத்து -ஆதித்யன் -மேலே உள்ளவன் ஸ்துதிக்கப்படுபவன் -உச்சைஸ் சந்தம்
ப்ரதிஹர்த்தா -அன்னம் -ப்ரதிஹரணம் -அன்னம் —
1-1-9-அத ஏவ பிராண -முன் ஆகாசாத் தல் லிங்காத்
ஆர் உயிரேயோ-பிராணன் ஆதி சப்தம் அவனுக்கே
அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த –பெரிய நீர் படைத்து
ஓர் உயிர் உலகுக்கு எல்லாம் –
ஆதித்யன் அன்னம் -அவற்றையே குறிக்கும்
அனைவராலும் போற்றப்படுவது சூரியனுக்கும் பரமாத்மாவுக்கு பொருந்தாது –
அனைத்து பூதங்களும் அன்னம் உண்டு வாழ வில்லையே -பரமாத்மாவை அனுபவித்து வாழ வில்லையே
அர்த்தம் குறைத்து -உலக வழக்கு படியே இவற்றுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும் –
பிராணன் -உலகு அனைத்துக்கும் காரணம் லயம் -பரமாத்மா –

——

4-மது வித்யை –3-1 –3-11-வரை இது சொல்லப்பட்டுள்ளது –

॥ த்ருʼதீயோঽத்⁴யாய: ॥

அஸௌ வா ஆதி³த்யோ தே³வமது⁴ தஸ்ய த்³யௌரேவ
திரஶ்சீநவꣳஶோঽந்தரிக்ஷமபூபோ மரீசய: புத்ரா: ॥ 3.1.1॥

தஸ்ய யே ப்ராஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ராச்யோ மது⁴நாட்³ய: ।
ருʼச ஏவ மது⁴க்ருʼத ருʼக்³வேத³ ஏவ புஷ்பம் தா அம்ருʼதா
ஆபஸ்தா வா ஏதா ருʼச: ॥ 3.1.2॥

ஏதம்ருʼக்³வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ
இந்த்³ரியம் வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.1.3॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் ॥ 3.1.4॥

ஆகாசம் -அந்தரிக்ஷம் -லோகம் -தேனீக்கள் -மூங்கில் -தேனடை -தேன் வண்டுகள் சாரா க்ராஹி –
ஆசை அனைவருக்கும் -பூ -சுற்று ஆ என்று பார்க்குமவர்கள்
தேவர்களுக்கு மது ஆதித்யன் -ஸ்வர்க்க லோகம் மூங்கில் /-தேன் ஆடை ஆகாசம் நாடு லோகம் /
கிரணங்கள் -தண்ணீர் /அறிந்து -கொண்டு
ஹோமம் ஆஹுதி புஷபங்கள் -தேன் வண்டுகள் வேதங்கள்–சக்தி ரசம் எடுத்து மேலே கொண்டு ஆதித்யன் இடம் சேர்க்க
யாக பலம் யஜஸ் தேஜஸ் வீர்யம் –
வசுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் -இதை அனுபவிக்க இருக்க
ருக் வேதம் கிழக்கே சென்று –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————–

அத² யேঽஸ்ய த³க்ஷிணா ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய த³க்ஷிணா
மது⁴நாட்³யோ யஜூꣳஷ்யேவ மது⁴க்ருʼதோ யஜுர்வேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼத ஆப: ॥ 3.2.1॥

தாநி வா ஏதாநி யஜூꣳஷ்யேதம்
யஜுர்வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோஜாயத ॥ 3.2.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லꣳ ரூபம் ॥ 3.2.3॥

தெற்கு திசை யஜுஸ் -கிரணங்களே வாஹனம் போக –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்ய ப்ரத்யஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ரதீச்யோ
மது⁴நாட்³ய: ஸாமாந்யேவ மது⁴க்ருʼத: ஸாமவேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼதா ஆப: ॥ 3.3.1॥

தாநி வா ஏதாநி ஸாமாந்யேதꣳ
ஸாமவேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.3.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.3.3॥

மேற்கு திசை சாம வேதம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² யேঽஸ்யோத³ஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோதீ³ச்யோ
மது⁴நாட்³யோঽத²ர்வாங்கி³ரஸ ஏவ மது⁴க்ருʼத
இதிஹாஸபுராணம் புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.4.1॥

தே வா ஏதேঽத²ர்வாங்கி³ரஸ ஏததி³திஹாஸபூராணமப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியாம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.4.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய பரம் க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்யோர்த்⁴வா ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோர்த்⁴வா
மது⁴நாட்³யோ கு³ஹ்யா ஏவாதே³ஶா மது⁴க்ருʼதோ ப்³ரஹ்மைவ
புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.5.1॥

தே வா ஏதே கு³ஹ்யா ஆதே³ஶா ஏதத்³ப்³ரஹ்மாப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.5.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய மத்⁴யே க்ஷோப⁴த இவ ॥ 3.5.3॥

தே வா ஏதே ரஸாநாꣳரஸா வேதா³ ஹி ரஸாஸ்தேஷாமேதே
ரஸாஸ்தாநி வா ஏதாந்யம்ருʼதாநாமம்ருʼதாநி வேதா³
ஹ்யம்ருʼதாஸ்தேஷாமேதாந்யம்ருʼதாநி ॥ 3.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

தத்³யத்ப்ரத²மமம்ருʼதம் தத்³வஸவ உபஜீவந்த்யக்³நிநா முகே²ந ந வை
தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா
த்ருʼப்யந்தி ॥ 3.6.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.6.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ வஸூநாமேவைகோ பூ⁴த்வாக்³நிநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ய ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.6.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
வஸூநாமேவ தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.6.4॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————————————————–

அத² யத்³த்³விதீயமம்ருʼதம் தத்³ருத்³ரா உபஜீவந்தீந்த்³ரேண
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.7.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.7.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ருத்³ராணாமேவைகோ பூ⁴த்வேந்த்³ரேணைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.7.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவத்³த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா ருத்³ராணாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

————————————————-

அத² யத்த்ருʼதீயமம்ருʼதம் ததா³தி³த்யா உபஜீவந்தி வருணேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.8.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.8.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேதா³தி³த்யாநாமேவைகோ பூ⁴த்வா வருணேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.8.3॥

ஸ யாவதா³தி³த்யோ த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவத்பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதாதி³த்யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.8.4॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————————–

அத² யச்சதுர்த²மம்ருʼதம் தந்மருத உபஜீவந்தி ஸோமேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.9.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.9.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ மருதாமேவைகோ பூ⁴த்வா ஸோமேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.9.3॥

ஸ யாவதா³தி³த்ய: பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவது³த்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா மருதாமேவ
தாவதா³தி⁴பத்ய்ꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

அத² யத்பஞ்சமமம்ருʼதம் தத்ஸாத்⁴யா உபஜீவந்தி ப்³ரஹ்மணா
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.10.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.10.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ஸாத்⁴யாநாமேவைகோ பூ⁴த்வா
ப்³ரஹ்மணைவ முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.10.3॥

ஸ யாவதா³தி³த்ய உத்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவதூ³ர்த்⁴வம் உதே³தார்வாக³ஸ்தமேதா ஸாத்⁴யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.10.4॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

————————————————

அத² தத ஊர்த்⁴வ உதே³த்ய நைவோதே³தா நாஸ்தமேதைகல ஏவ
மத்⁴யே ஸ்தா²தா ததே³ஷ ஶ்லோக: ॥ 3.11.1॥

ந வை தத்ர ந நிம்லோச நோதி³யாய கதா³சந ।
தே³வாஸ்தேநாஹꣳஸத்யேந மா விராதி⁴ஷி ப்³ரஹ்மணேதி ॥ 3.11.2॥

ந ஹ வா அஸ்மா உதே³தி ந நிம்லோசதி ஸக்ருʼத்³தி³வா ஹைவாஸ்மை
ப⁴வதி ய ஏதாமேவம் ப்³ரஹ்மோபநிஷத³ம் வேத³ ॥ 3.11.3॥

தத்³தை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதய உவாச ப்ரஜாபதிர்மநவே
மநு: ப்ரஜாப்⁴யஸ்தத்³தை⁴தது³த்³தா³லகாயாருணயே ஜ்யேஷ்டா²ய புத்ராய
பிதா ப்³ரஹ்ம ப்ரோவாச ॥ 3.11.4॥

இத³ம் வாவ தஜ்ஜ்யேஷ்டா²ய புத்ராய பிதா ப்³ரஹ்ம
ப்ரப்³ரூயாத்ப்ரணாய்யாய வாந்தேவாஸிநே ॥ 3.11.5॥

நாந்யஸ்மை கஸ்மைசந யத்³யப்யஸ்மா இமாமத்³பி:⁴ பரிக்³ருʼஹீதாம்
த⁴நஸ்ய பூர்ணாம் த³த்³யாதே³ததே³வ ததோ பூ⁴ய இத்யேததே³வ
ததோ பூ⁴ய இதி ॥ 3.11.6॥

மது வித்யை இப்படி அறிந்து
பார்த்து கொண்டே திருப்தி அடையும் –
ஆதித்யனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் உபாசனம் மண்ணும் விண்ணும் ஆள்வர்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

தேன் -சூரியனையே தேனாக நினைத்து -த்ருஷ்ட்டி
அந்தரிக்ஷம் அபூப தேன் அடை -மரக்க்கிளை -த்யுலோகம் -தேவ மது -ரூபகம் –
ஊர்த்வம் பக்கவாட்டில் நான்கு திக்குகள் –நான்கு வேதம் -உபநிஷத்துக்கள் -ஐந்தும் -இவையே பூக்கள்
கர்மங்கள் -கிழக்கே ருக் -வேதம் இத்யாதி
உபாசனம் -உபநிஷத் -ப்ரஹ்மம் ரஸம் -தேன் –

மந்த்ரம் சொல்லி யாகம் -ரசத்தை கொண்டு சேர்க்கும் -ரஸ்மை -கிரணங்கள் -மூலம் சேமித்து –
கிழக்கு -ரிக் மந்த்ர தேனீக்கள் கிழக்குப்புறம் -வசுக்கள் உண்பார்
தெற்கு யஜுர் வேதம் கர்மம் -ருத்ரர்
மேற்கு -ஆதித்யர்
வடக்கு -மருத்துக்கள்
மேல் ஸாத்ய கணங்கள்
அந்த தேன் =-உண்ண ஐந்து தேவதைகள் -த்ருஷ்ட்வா -பார்த்து த்ருப்தி அடைவதே உண்பது -கண்டு களிக்கிறார்கள்
இவர்களுக்குள் பரமாத்மா அந்தர்யாமி -மோக்ஷம் கொடுப்பவன் இவனே
வசுக்களாக பிறவி எடுத்து பின்பு மோக்ஷம்
இதே போல் ஆதித்யனாக இருந்து பின்பு மோக்ஷம்
தேவதா அதிகாரணம் -1-3-25-அவர்களும் உபாஸனம் செய்யலாமே –
மது அதிகரணம்
இவற்றை சொல்லும்
தாங்களே தங்களை த்யானிப்பார்களோ
இருக்கும் பலத்துக்கு செய்ய வேண்டாமே
மது -அசம்பாவித ஜைமினி ரிஷி -அதிகாரம் இல்லை
அதிகாரம் உண்டு பாரதராயணர் அந்தர்யாமியான பரமாத்மாவை உபாசனம் -மோக்ஷ பலத்துக்கு –
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை

5-காயத்ரி வித்யை –சந்தஸ்ஸூ சாந்தோக்யம் —3-12-

கா³யத்ரீ வா ஈத³ꣳ ஸர்வம் பூ⁴தம் யதி³த³ம் கிம் ச வாக்³வை கா³யத்ரீ
வாக்³வா இத³ꣳ ஸர்வம் பூ⁴தம் கா³யதி ச த்ராயதே ச ॥ 3.12.1॥

யா வை ஸா கா³யத்ரீயம் வாவ ஸா யேயம் ப்ருʼதி²வ்யஸ்யாꣳ ஹீத³ꣳ
ஸர்வம் பூ⁴தம் ப்ரதிஷ்டி²தமேதாமேவ நாதிஶீயதே ॥ 3.12.2॥

யா வை ஸா ப்ருʼதி²வீயம் வாவ ஸா யதி³த³மஸ்மிந்புருஷே
ஶரீரமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.3॥

யத்³வை தத்புருஷே ஶரீரமித³ம் வாவ தத்³யதி³த³மஸ்மிந்நந்த:
புருஷே ஹ்ருʼத³யமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.4॥

ஸைஷா சதுஷ்பதா³ ஷட்³விதா⁴ கா³யத்ரீ ததே³தத்³ருʼசாப்⁴யநூக்தம்
॥ 3.12.5॥

காயத்ரி வித்யை -நாலு ஆறு -எட்டு மூன்று -பாதங்கள் -24-அக்ஷரங்கள் –
கீதா ஸ்லோகங்கள் அனுஷ்டுப் சந்தஸ் –யாப்பு இலக்கணம் தமிழ் போலே –
சந்தஸாம் மாதா காயத்ரி -இங்கு நாலு ஆறு
பூதம் –ஜீவா ராசி -பிருத்வி இருக்க -சரீரம்-வாழ – ஹிருதயம்-ஆத்மா இருக்கும் இடம் -இப்படி நாலு
ஒவ் ஒன்றுக்கும் இரண்டு குணங்கள் -கடைசி இரண்டுக்கும் ஒன்றாக்கி
காயந்தம் பாடுபவனை காப்பாற்றும் காயத்ரி –

கானம் -குறிக்கப்படும் காப்பாற்றுப்படும்
பூதம் சர்வ பூதம் பிரதிஷ்டிதம் தாண்டி போக முடியாதே
சர்வ பிராண ப்ரதிஷ்டிதம் -ஆனால் தாண்ட முடியாதே -ஆக இப்படி ஆறு குணங்கள் –

தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயாꣳஶ்ச பூருஷ: ।
பாதோ³ঽஸ்ய ஸர்வா பூ⁴தாநி த்ரிபாத³ஸ்யாம்ருʼதம் தி³வீதி ॥ 3.12.6॥

பிரகிருதி மண்டலம் கால் பாகம்

யத்³வை தத்³ப்³ரஹ்மேதீத³ம் வாவ தத்³யோயம் ப³ஹிர்தா⁴
புருஷாதா³காஶோ யோ வை ஸ ப³ஹிர்தா⁴ புருஷாதா³காஶ: ॥ 3.12.7॥

அயம் வாவ ஸ யோঽயமந்த: புருஷ அகாஶோ யோ வை ஸோঽந்த:
புருஷ ஆகாஶ: ॥ 3.12.8॥

அயம் வாவ ஸ யோঽயமந்தர்ஹ்ருʼத³ய ஆகாஶஸ்ததே³தத்பூர்ணமப்ரவர்தி
பூர்ணமப்ரவர்திநீꣳஶ்ரியம் லப⁴தே ய ஏவம் வேத³ ॥ 3.12.9॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

நான்கு பாதங்கள் -ஆறு வகைப்பட்ட -ஒவ்வொரு பாதத்திலும் ஆறு எழுத்துக்கள்
காயத்ரி -சந்தஸ்ஸூக்கு-சாம்யம் பரமாத்மா -இவ்வாறு உபாசனம்
இவனுக்கும் நான்கு கால்கள் -சர்வானி பூதானி முதல் பகுதி -உடலுடன் கூடிய ஜீவர்கள் அனைவரும் பூதாநி –
பிருத்வி இரண்டாவது -சரீரம் மூன்றாவது -ஹ்ருதயம் நான்காவது என்று நினைத்து
ஆறு – பூதங்களை -வாக் சொல் -பொருளை குறிக்கும் -தானே சொல்லி தானே அனைத்துக்கும் நல்லது பண்ணுகிறான்
காயதி -சொல்கிறது -த்ராயதி-உபதேசித்து -காக்கும் -காயத்ரி -இரண்டையும் காட்டும் –
சொல்லுக்கு பரமாத்மா பர்யந்தம் -காயதி
பிருத்வியில் பூதங்கள் அனைத்தும் நிலை பெற்று உள்ளன -இவனே உள்ளே இருந்து தாங்கும் சக்தி கொடுக்கிறான்
சர்வ பூத இருப்பிடம் -எங்கும் தாண்டி போக முடியாதே -ஆஸ்ரயித்தே இருக்க வேண்டும் -தாண்ட முடியாமல் இருப்பது -ஆக இரண்டும் இத்தால் –
சரீரம் -ஹ்ருதயம் -பிராணனுக்கு இருப்பிடம் -பிராணனால் வெளியே போக முடியாதே -இரண்டுக்கும் சேர்ந்து இந்த இரண்டு தன்மைகள் –
இவ்வளவு மட்டும் அல்ல
ஒரு சிறு பகுதியை மட்டும் சொன்னேன் -வேதமே சொல்லும் இறுதியில் –
தவான் அஸ்ய மஹிமா -அநந்தன் -சொத்துக்களில் ஒரு பகுதி -த்ரிபாத் -அம்ருதம் -லீலா விபூதி போல் மூன்று மடங்கு -அளவு பட்டது அல்ல என்றவாறு
ஆகாசம் -பரந்து விரிந்து -உருவம் அற்று -அசையாமல் –மூன்று தன்மைகள் -அமலத்வம் -இவற்றால் பரமாத்மாவுக்கு நிகர் –
வெளியில் உள்ள ஆகாசமே உடலுக்குள்ளும் ஹிருதயத்துக்குள்ளும் –
பூர்ணம் -த்ரிவித அபரிச்சேத்யன் -அப்ரவர்த்தி அசையாமல் -ஸ்ரீ யம் லபதே -செல்வம் பெறுகிறான் -அசையா அளவில்லா முக்தி ஐஸ்வர்யம் பெறுகிறான் –
1-1-26 ஸூத்ரம் இத்தைச் சொல்லும்
விருத்தம் சொல்வதால் -காயத்ரி சந்தஸ்ஸுவை சொல்வதால்
அப்படி சொல்ல வில்லை -பரமாத்மாவையே சொல்லிற்று
மனதை தியானிக்கும் வழியைச் சொன்னவாறு –

——

6-பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-13-

தஸ்ய ஹ வா ஏதஸ்ய ஹ்ருʼத³யஸ்ய பஞ்ச தே³வஸுஷய:
ஸ யோঽஸ்ய ப்ராங்ஸுஷி: ஸ ப்ராணஸ்தச்சக்ஷு:
ஸ ஆதி³த்யஸ்ததே³தத்தேஜோঽந்நாத்³யமித்யுபாஸீத
தேஜஸ்வ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.1॥

காவல் ஆள்கள் -த்வார பாலகர்கள் -கிழக்கே பிராண தேவதை வாசல் காப்பான் –
அதுக்கு ஒரு தேவதை –பிராண வாயு கண்ணில் -கண்ணுக்கு அதிஷ்டானம் தேவதை ஆதித்யன் –
இப்படி உபாஸிக்க வேண்டும் -தேஜஸ் அன்னம் பெறுகிறான்

அத² யோঽஸ்ய த³க்ஷிண: ஸுஷி: ஸ வ்யாநஸ்தச்ச்²ரோத்ரꣳ
ஸ சந்த்³ரமாஸ்ததே³தச்ச்²ரீஶ்ச யஶஶ்சேத்யுபாஸீத
ஶ்ரீமாந்யஶஸ்வீ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.2॥

வியான வாயு தக்ஷிண திக்கு காதுகளில் சந்திரன் தேவதை -ஸ்ரீ யசஸ் பெறுகிறான் செல்வமும் கீர்த்தியும் பெறுவார்கள் –

அத² யோঽஸ்ய ப்ரத்யங்ஸுஷி: ஸோঽபாந:
ஸா வாக்ஸோঽக்³நிஸ்ததே³தத்³ப்³ரஹ்மவர்சஸமந்நாத்³யமித்யுபாஸீத
ப்³ரஹ்மவர்சஸ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.3॥

மேற்கு திக்குள் அபான வாயு -வாக்கில் -அக்னி -ஓளி -தேஜஸ் -பேச பேச ஒருவனை அறிகிறோம் –
அக்ரம் முன்னால் நடத்தி போகும் -யா காவாராயானும் நா கா காக்க –
ப்ரஹ்ம வர்ஜஸ் பெறுகிறான் -ப்ரஹ்ம ஞானி போலே தேஜஸ் பெறுகிறான் –

அத² யோঽஸ்யோத³ங்ஸுஷி: ஸ ஸமாநஸ்தந்மந:
ஸ பர்ஜந்யஸ்ததே³தத்கீர்திஶ்ச வ்யுஷ்டிஶ்சேத்யுபாஸீத
கீர்திமாந்வ்யுஷ்டிமாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.4॥

சமான வாயு -மனசில் பர்ஜன்ய தேவதை -ஓளி படைத்த சரீரம் -கீர்த்தி யுடையவன் ஆகிறான்

அத² யோঽஸ்யோர்த்⁴வ: ஸுஷி: ஸ உதா³ந: ஸ வாயு:
ஸ ஆகாஶஸ்ததே³ததோ³ஜஶ்ச மஹஶ்சேத்யுபாஸீதௌஜஸ்வீ
மஹஸ்வாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.5॥

மேல் நோக்கி -ஆகாசம் -உத் -இந்திரிய கிங்கரன் ஆகிறான் -வாயு தேவதை -ப்ரஹ்ம பிராப்தி –

தே வா ஏதே பஞ்ச ப்³ரஹ்மபுருஷா: ஸ்வர்க³ஸ்ய லோகஸ்ய
த்³வாரபா: ஸ ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேதா³ஸ்ய குலே வீரோ ஜாயதே ப்ரதிபத்³யதே
ஸ்வர்க³ம் லோகம் ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேத³ ॥ 3.13.6॥

ஆதி வாஹிகர்கள் என்று அறிந்து உபாசனம் –

அத² யத³த: பரோ தி³வோ ஜ்யோதிர்தீ³ப்யதே விஶ்வத: ப்ருʼஷ்டே²ஷு
ஸர்வத: ப்ருʼஷ்டே²ஷ்வநுத்தமேஷூத்தமேஷு லோகேஷ்வித³ம் வாவ
தத்³யதி³த³மஸ்மிந்நந்த: புருஷே ஜ்யோதி: ॥ 3.13.7॥

ஜோதி மயம் -சுயம் பிரகாசம் -பரஞ்சோதி–ஜாடராக்னியாக வயிற்றில் -பரமாகாச ஜோதியே இங்கும்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் —
அந்தப்புர ஜோதி
குதிரை முக அக்னி கடலுக்குள்

தஸ்யைஷா த்³ருʼஷ்டிர்யத்ரிதத³ஸ்மிஞ்ச²ரீரே ஸꣳஸ்பர்ஶேநோஷ்ணிமாநம்
விஜாநாதி தஸ்யைஷா ஶ்ருதிர்யத்ரைதத்கர்ணாவபிக்³ருʼஹ்ய நிநத³மிவ
நத³து²ரிவாக்³நேரிவ ஜ்வலத உபஶ்ருʼணோதி ததே³தத்³த்³ருʼஷ்டம் ச
ஶ்ருதம் சேத்யுபாஸீத சக்ஷுஷ்ய: ஶ்ருதோ ப⁴வதி ய ஏவம் வேத³
ய ஏவம் வேத³ ॥ 3.13.8॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

அனைத்தும் இவன் சங்கல்பத்தால் தேஜஸ்ஸின் ஒரு பகுதி
அந்த புருஷே இதே தேஜஸ் -ஜாடராக்னி -வைஸ்வானர அக்னி -இவனும் பரமாத்மாவே –
உடலைச் தொட்டு அக்னியை அறிந்து உபாசனம் -இதுவே காண்பது போல் —
ரதம் ரிஷபம் போல் சப்தம் உள்ளே இருந்து கேட்க்கும் –
இப்படி கண்டு கேட்டு உபாசனம் –
ஸ்வரூபம் -பரஞ்சோதிஸ்ஸூ
திருமேனியும் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
விபூதியும் ஜோதி -தமச பரஸ்தாத் தேஜோ மயம் பரம சத்வ மயம் -அப்ராக்ருதம் –
1-1-25-ஜ்யோதிர் அதிகரணம் –

——

7-சாண்டில்ய வித்யை -சாந்தோக்யம் -3-14-

ஸர்வம் க²ல்வித³ம் ப்³ரஹ்ம தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத ।
அத² க²லு க்ரதுமய: புருஷோ யதா²க்ரதுரஸ்மிꣳல்லோகே
புருஷோ ப⁴வதி ததே²த: ப்ரேத்ய ப⁴வதி ஸ க்ரதும் குர்வீத
॥ 3.14.1॥

சாண்டில்ய வித்யை
யதா உபாசனம் ததா பலம் –எப்படி நினைத்து உபாசித்தாலும் -அப்படியே -தூய்மை -ஆனந்தமயம் –
கண்ணன் பிறந்து விட்டுப்போன நியாயம் சாஸ்திரம் வெட்க்கி போகும்படி –
யசோதை கட்டி வைக்க -நாம் உபாஸிக்க சம்சார கட்டில் இருந்து விலகும் –
சாந்த– ராக த்வேஷம் பசி தாகம் சோகம் மோகம் இல்லாமல் -உபாஸீதா –
ஸூவ பர பேதம்-இல்லாமல் -அனைத்தும் ப்ரஹ்மமே அவனுக்கே சரீரம் அந்தராத்மா படைத்தது அவனே –
சர்வம் -கண்ணால் பார்க்கும் அனைத்தும் ப்ரஹ்மம்
இதி–தஜ்ஜ–அதனிடம் பிறந்து / தல்ல அதிலே லயம் /ததனு-அதனால் ரக்ஷிக்கப்பட்டு /
த்ரிவித காரணம் ப்ரஹ்மமே -ஆதி மூலமே –அகில காரணாய– அத்புத காரணாய — நிஷ் காராணாய –
லயம் முன் நிலை -காரண பாவத்தை கார்ய பாவம் அடைவதே லயம் -ப்ரக்ருஷ்ட லயம் பிரளயம் –
விசிஷ்ட ஆத்ம வேஷம் நிஷ் க்ருஷ்ட ஆத்ம வேஷம் வாசி அறிந்து -சாந்த உபாசனம் –
பிறர் நம்மை ஏச -நமது கர்மமே அவர் உரு -அது தானே காரணம்– இந்த காரியத்துக்கு நாம் துக்கப்படுவதற்கு –

மநோமய: ப்ராணஶரீரோ பா⁴ரூப: ஸத்யஸங்கல்ப
ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யத்தோঽவாக்யநாத³ர: ॥ 3.14.2॥

அவாக்ய அ நாதராக -அப்படி இருப்பவன் தான் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாக இங்கே

ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யேঽணீயாந்வ்ரீஹேர்வா யவாத்³வா
ஸர்ஷபாத்³வா ஶ்யாமாகாத்³வா ஶ்யாமாகதண்டு³லாத்³வைஷ
ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யே ஜ்யாயாந்ப்ருʼதி²வ்யா
ஜ்யாயாநந்தரிக்ஷாஜ்ஜ்யாயாந்தி³வோ ஜ்யாயாநேப்⁴யோ
லோகேப்⁴ய: ॥ 3.14.3॥

அரிசியை விட -கோதுமையை விட கடுகை விட சோளப்பொறியை விட சிறியதாக இருந்தும்
பிருத்வி மண்டலம் விடவும் அந்தரிக்ஷ லோகம் விட பெரியவர்
அவ்வளவு பெரியவர் நம்மை -கொள்ள இவ்வளவு சிறியதாக —
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்கும் என்று -நாள் பார்த்து இருக்கும் –

ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யாத்தோঽவாக்யநாத³ர ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³ய
ஏதத்³ப்³ரஹ்மைதமித: ப்ரேத்யாபி⁴ஸம்ப⁴விதாஸ்மீதி யஸ்ய ஸ்யாத³த்³தா⁴
ந விசிகித்ஸாஸ்தீதி ஹ ஸ்மாஹ ஶாண்டி³ல்ய: ஶாண்டி³ல்ய:–॥ 3.14.4॥

கர்மங்களை செய்வேனும் யானே என்னும் -இத்யாதி –
விசாரம் இல்லாமல் சங்கை இல்லாமல் உறுதியாக உபாசித்தால் அடைகிறான் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

சர்வம் கல் இதம் ஸர்வம் ப்ரஹ்ம தஜ் ஜலான் -சாந்த உபாஸீத
உலகம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -அனைத்துக்கும் அந்தராத்மா ப்ரஹ்மமே –
ஜம் -லம் -அன் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸ்திதி மூன்றுமே ப்ரஹ்மத்தால்
அபர்யவசான விருத்தி -அனைத்தும் அவன் வரை சொல்லுமே
இந்த அறிவாலேயே சாந்தி வருமே
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -அவனே அஃது உண்டு உமிழ்ந்து அளந்தான் –
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அனைத்தும் அறிந்தனமே-
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே முக்காலத்தில் சர்வமும் ப்ரஹ்மமே –
அறிந்த பின்பு மித்ரர் அமித்ரர் வாசியே வராதே -எனவே ராக த்வேஷம் இல்லாமல் சாந்தி கிட்டும் –
வியாப்த கத தோஷம் கிட்டாதே -முண்டகம் -சமண வ்ருக்ஷம்

——————-

8-சம் வர்க்கம் வித்யை –4-1/4-2/4-3-

॥ சதுர்தோ²ঽத்⁴யாய: ॥
ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண: ஶ்ரத்³தா⁴தே³யோ ப³ஹுதா³யீ ப³ஹுபாக்ய ஆஸ
ஸ ஹ ஸர்வத ஆவஸதா²ந்மாபயாஞ்சக்ரே ஸர்வத ஏவ
மேঽந்நமத்ஸ்யந்தீதி ॥ 4.1.1॥

அத² ஹꣳஸா நிஶாயாமதிபேதுஸ்தத்³தை⁴வꣳ ஹꣳ ஸோஹꣳ ஸமப்⁴யுவாத³
ஹோ ஹோঽயி ப⁴ல்லாக்ஷ ப⁴ல்லாக்ஷ ஜாநஶ்ருதே: பௌத்ராயணஸ்ய
ஸமம் தி³வா ஜ்யோதிராததம் தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா
மா ப்ரதா⁴க்ஷீரிதி ॥ 4.1.2॥

ப⁴ல்லாக்ஷ-ஆதரத்தை ஸூ சிக்கும் -மந்த த்ருஷ்ட்டி என்றுமாம் -மஹாராஜர் படுத்து இருக்க மேலே பறக்கலாமோ
அன்ன தானாதிகளால் பெற்ற தேஜஸ்-ஸமம் தி³வா ஜ்யோதிராததம்- உண்டே இவனுக்கு-

தமு ஹ பர: ப்ரத்யுவாச கம்வர ஏநமேதத்ஸந்தꣳ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.3॥

இவன் ரைக்குவர் போன்ற மஹாத்மா இல்லையே /
ஸயுக்³வா ரைக்வ-வண்டியின் சாயையில் படுத்து -இருப்பவரா
பொறுப்பு வேறே வைராக்யம் வேறே -சந்நியாசி சம்சாரத்தில் ஆசை இல்லாமல் –
ஒரு கிராமத்தில் ஒரு இரவுக்கு மேலே இருக்காமல் -அபிமானம் வர வாய்ப்பு இல்லையே

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.4॥

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண உபஶுஶ்ராவ
ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாசாங்கா³ரே ஹ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.5॥

உபஶுஶ்ராவ-இவனும் கேட்டான்-

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.6॥

ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித³மிதி ப்ரத்யேயாய தꣳ ஹோவாச
யத்ராரே ப்³ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே³நமர்ச்சே²தி ॥ 4.1.7॥

ஸோঽத⁴ஸ்தாச்ச²கடஸ்ய பாமாநம் கஷமாணமுபோபவிவேஶ
தꣳ ஹாப்⁴யுவாத³ த்வம் நு ப⁴க³வ: ஸயுக்³வா ரைக்வ
இத்யஹꣳ ஹ்யரா3 இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ஸ ஹ க்ஷத்தாவித³மிதி
ப்ரத்யேயாய ॥ 4.1.8 ॥

ரிஷிகள் -பறவை -ஞான ஸ்ருதி -தர்மசாலைகள் எங்கும் கட்டி-தர்ம ஞானம் உள்ளது ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருக்கிறான் –
நல்லவனாக ஆக இரண்டு ரிஷிகள் -ஹம்ஸ-பறவையாக பேச -இவனுக்கு பறவை பாஷை தெரியும் –
ரைக்குவாரோ இவர் -யார் -அறிய ஆசை எந்த வண்டி சக்கரத்தின் அடியில் உள்ளான்
ஞானம் -நல்லவை எல்லாம் ரைக்குவர் இட்ட பிக்ஷை சொல்ல ஆசை பெறுக
தேடச்சொல்லி –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண: ஷட்ஶதாநி க³வாம்
நிஷ்கமஶ்வதரீரத²ம் ததா³தா³ய ப்ரதிசக்ரமே தꣳ ஹாப்⁴யுவாத³
॥ 4.2.1॥

ரைக்வேமாநி ஷட்ஶதாநி க³வாமயம் நிஷ்கோঽயமஶ்வதரீரதோ²ঽநு
ம ஏதாம் ப⁴க³வோ தே³வதாꣳ ஶாதி⁴ யாம் தே³வதாமுபாஸ்ஸ இதி
॥ 4.2.2॥

தமு ஹ பர: ப்ரத்யுவாசாஹ ஹாரேத்வா ஶூத்³ர தவைவ ஸஹ
கோ³பி⁴ரஸ்த்விதி தது³ ஹ புநரேவ ஜாநஶ்ருதி: பௌத்ராயண:
ஸஹஸ்ரம் க³வாம் நிஷ்கமஶ்வதரீரத²ம் து³ஹிதரம் ததா³தா³ய
ப்ரதிசக்ரமே ॥ 4.2.3॥

தꣳ ஹாப்⁴யுவாத³ ரைக்வேத³ꣳ ஸஹஸ்ரம் க³வாமயம்
நிஷ்கோঽயமஶ்வதரீரத² இயம் ஜாயாயம் க்³ராமோ
யஸ்மிந்நாஸ்ஸேঽந்வேவ மா ப⁴க³வ: ஶாதீ⁴தி ॥ 4.2.4 ॥

இயம் ஜாயாயம் க்³ராமோ-இவள் உனக்கு ஏற்றவள் -இந்த கிராமமும் உன் னுடையது –
எனக்கு என்று ஒன்றும் இல்லை ப்ரஹ்ம வித்யை சொல்லிக் கொடும்

தஸ்யா ஹ முக²முபோத்³க்³ருʼஹ்ணந்நுவாசாஜஹாரேமா: ஶூத்³ராநேநைவ
முகே²நாலாபயிஷ்யதா² இதி தே ஹைதே ரைக்வபர்ணா நாம
மஹாவ்ருʼஷேஷு யத்ராஸ்மா உவாஸ ஸ தஸ்மை ஹோவாச ॥ 4.2.5 ॥

பசுக்கள் தேர் கூட்டி செல்ல -பறவை சொல்லி வந்தாயா -பெண்ணையும் கல்யாணம் பண்ணி வைக்க –
ஷத்ரிய அரசனை சூத்ரா என்று சம்போதானம் இங்கு-
சூத்ர -ப்ரஹ்ம ஞானம் இல்லாத சோகம் உள்ளவனே என்றபடி

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————–

வாயுர்வாவ ஸம்வர்கோ³ யதா³ வா அக்³நிருத்³வாயதி வாயுமேவாப்யேதி
யதா³ ஸூர்யோঽஸ்தமேதி வாயுமேவாப்யேதி யதா³ சந்த்³ரோঽஸ்தமேதி
வாயுமேவாப்யேதி ॥ 4.3.1॥

யதா³ப உச்சு²ஷ்யந்தி வாயுமேவாபியந்தி
வாயுர்ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இத்யதி⁴தை³வதம் ॥ 4.3.2॥

அதா²த்⁴யாத்மம் ப்ராணோ வாவ ஸம்வர்க:³ ஸ யதா³ ஸ்வபிதி ப்ராணமேவ
வாக³ப்யேதி ப்ராணம் சக்ஷு: ப்ராணꣳ ஶ்ரோத்ரம் ப்ராணம் மந: ப்ராணோ
ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இதி ॥ 4.3.3॥

தௌ வா ஏதௌ த்³வௌ ஸம்வர்கௌ³ வாயுரேவ தே³வேஷு ப்ராண: ப்ராணேஷு
॥ 4.3.4॥

அத² ஹ ஶௌநகம் ச காபேயமபி⁴ப்ரதாரிணம் ச காக்ஷஸேநிம்
பரிவிஷ்யமாணௌ ப்³ரஹ்மசாரீ பி³பி⁴க்ஷே தஸ்மா உ ஹ ந த³த³து:
॥ 4.3.5॥

ஸ ஹோவாச மஹாத்மநஶ்சதுரோ தே³வ ஏக: க: ஸ ஜகா³ர
பு⁴வநஸ்ய கோ³பாஸ்தம் காபேய நாபி⁴பஶ்யந்தி மர்த்யா
அபி⁴ப்ரதாரிந்ப³ஹுதா⁴ வஸந்தம் யஸ்மை வா ஏதத³ந்நம் தஸ்மா
ஏதந்ந த³த்தமிதி ॥ 4.3.6॥

தது³ ஹ ஶௌநக: காபேய: ப்ரதிமந்வாந: ப்ரத்யேயாயாத்மா தே³வாநாம்
ஜநிதா ப்ரஜாநாꣳ ஹிரண்யத³ꣳஷ்ட்ரோ ப³ப⁴ஸோঽநஸூரிர்மஹாந்தமஸ்ய
மஹிமாநமாஹுரநத்³யமாநோ யத³நந்நமத்தீதி வை வயம்
ப்³ரஹ்மசாரிந்நேத³முபாஸ்மஹே த³த்தாஸ்மை பி⁴க்ஷாமிதி ॥ 4.3.7॥

தம்ஷ்ட்ராய நீண்ட பற்கள் -ஸ்ரீ நரஸிம்ஹன் -மொத்தத்தையும் விழுங்குவார்

தஸ்ம உ ஹ த³து³ஸ்தே வா ஏதே பஞ்சாந்யே பஞ்சாந்யே த³ஶ
ஸந்தஸ்தத்க்ருʼதம் தஸ்மாத்ஸர்வாஸு தி³க்ஷ்வந்நமேவ த³ஶ க்ருʼதꣳ ஸைஷா
விராட³ந்நாதீ³ தயேத³ꣳ ஸர்வம் த்³ருʼஷ்டꣳ ஸர்வமஸ்யேத³ம் த்³ருʼஷ்டம்
ப⁴வத்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 4.3.8॥

அக்னி சூர்யன் சந்திரன் அனைத்தும் வாயு இடம் சேர்வது போலே –பிராணன் இடம் கண் காது மூக்கு –
ப்ரஹ்மம் இடம் அனைத்தும் -சம்வர்க்க வித்யை -ஸங்க்ரஹண வித்யை
பிரஜாபதியுடையது இல்லை– பரமாத்மாவுடையது
விராட் ஸ்வரூபம் ப்ரஹ்மம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

வர்க்கம் ஒன்றிலே அனைத்தும் அடக்கம் -ப்ரஹ்ம ஞானமே
வாயு -பிராணன் –பிரஜாபதி -இத்யாதி ஒவ்வொன்றிலும் இவனே அந்தராத்மா –

ஞான ஸ்ருதி விருத்தாந்த-இவர் ரைக்குவரோ
ஸர்வ பாவம்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞாநம்
செய்த வேள்வியர் வையத்தேவர்
புருஷோத்தம வித்யை -ஸர்வமும் அறிந்தவர் ஆவார் இத்தை அறிந்தால் -அவனை ஆனந்திப்பவர் ஆவார்
சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம் -ஒன்றே அறிவு
ஞான தர்ஸன பிராப்தி
சர்வ வித் சர்வ பாவேந
ஸம் யாயதே– ஸம் த்ருஷ்யதே-அதி கம்யதே —ஞானம் தர்சனம் பிராப்தி

ஸுவ்நகர் உபதேசத்தை ரைக்குவர் ஞான ஸ்ருதிக்கு உபதேசம் –

——–

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை-4-4-தொடங்கி-4-9-
10-உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-
11-அந்தர் அஷி வித்யை
தஹர
பூமா
சத் வித்யைகள் மேலே பார்ப்போம்

——

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை

சாந்தோக்யம் -4-ப்ரபாதகம் -அத்யாயம் –4-4 தொடங்கி –4-9 வரை இது –

ஸத்யகாமோ ஹ ஜாபா³லோ ஜபா³லாம் மாதரமாமந்த்ரயாஞ்சக்ரே
ப்³ரஹ்மசர்யம் ப⁴வதி விவத்ஸ்யாமி கிங்கோ³த்ரோ ந்வஹமஸ்மீதி
॥ 4.4.1॥

என்ன கோத்ரம் -என்று தாயார் இடம் கேட்டான்

ஸா ஹைநமுவாச நாஹமேதத்³வேத³ தாத யத்³கோ³த்ரஸ்த்வமஸி
ப³ஹ்வஹம் சரந்தீ பரிசாரிணீ யௌவநே த்வாமலபே⁴
ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து நாமாஹமஸ்மி
ஸத்யகாமோ நாம த்வமஸி ஸ ஸத்யகாம ஏவ ஜாபா³லோ
ப்³ரவீதா² இதி ॥ 4.4.2॥

16–கலைகள் ப்ரஹ்மத்துக்கு ஷோடச கலா வித்யை
ஜபாலா பிள்ளை சத்யகாமன் -கோத்ரம் தெரியாது தாய்க்கு –
யவ்வனத்தில் நீ பிறந்தாய்-என் பெயரும் உன் பெயரும் தான் தெரியும் –

ஸ ஹ ஹாரித்³ருமதம் கௌ³தமமேத்யோவாச ப்³ரஹ்மசர்யம் ப⁴க³வதி
வத்ஸ்யாம்யுபேயாம் ப⁴க³வந்தமிதி ॥ 4.4.3॥

கௌ³தம மகரிஷியிடம் சென்று உபநயனம் பண்ண கேட்டான்-

தꣳ ஹோவாச கிங்கோ³த்ரோ நு ஸோம்யாஸீதி ஸ ஹோவாச
நாஹமேதத்³வேத³ போ⁴ யத்³கோ³த்ரோঽஹமஸ்ம்யப்ருʼச்ச²ம் மாதரꣳ
ஸா மா ப்ரத்யப்³ரவீத்³ப³ஹ்வஹம் சரந்தீ பரிசரிணீ யௌவநே
த்வாமலபே⁴ ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து
நாமாஹமஸ்மி ஸத்யகாமோ நாம த்வமஸீதி ஸோঽஹꣳ
ஸத்யகாமோ ஜாபா³லோঽஸ்மி போ⁴ இதி ॥ 4.4.4॥

தாய் சொன்ன வார்த்தையை மீண்டும் இவர் இடம் சொன்னான் –

தꣳ ஹோவாச நைதத³ப்³ராஹ்மணோ விவக்துமர்ஹதி ஸமித⁴ꣳ
ஸோம்யாஹரோப த்வா நேஷ்யே ந ஸத்யாத³கா³ இதி தமுபநீய
க்ருʼஶாநாமப³லாநாம் சது:ஶதா கா³ நிராக்ருʼத்யோவாசேமா:
ஸோம்யாநுஸம்வ்ரஜேதி தா அபி⁴ப்ரஸ்தா²பயந்நுவாச
நாஸஹஸ்ரேணாவர்தேயேதி ஸ ஹ வர்ஷக³ணம் ப்ரோவாஸ தா யதா³
ஸஹஸ்ரꣳ ஸம்பேது:³ ॥ 4.4.5॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

அத² ஹைநம்ருʼஷபோ⁴ঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ராப்தா: ஸோம்ய ஸஹஸ்ரꣳ ஸ்ம:
ப்ராபய ந ஆசார்யகுலம் ॥ 4.5.1॥

ப்³ரஹ்மணஶ்ச தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராசீ தி³க்கலா ப்ரதீசீ தி³க்கலா
த³க்ஷிணா தி³க்கலோதீ³சீ தி³க்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல:
பாதோ³ ப்³ரஹ்மண: ப்ரகாஶவாந்நாம ॥ 4.5.2॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண:
ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ப்ரகாஶவாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ப்ரகாஶவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மண: ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ॥ 4.5.3॥

குரு சிச்ருஷை செய்து ப்ரஹ்ம ஞானம் -400-பசுக்களை –ஆயிரமாக வளர்த்து –
காளை மாடு -ஓன்று பேச –தேவதை ரூபம் கொண்டு / –
ஆச்சார்யர் இடம் கூட்டிப்போக -நாலு பாதம் -நான்கு திசைகள் ஒரு காலின் ஒரு பகுதி
இத்தை அறிந்து ப்ரஹ்ம தியானம் பிரகாசவான் ஆவான்
ஹம்ஸ பறவை -அப்புறம் /நீர் பறவை -உபதேசம் –

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————–

அக்³நிஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே க³
ஆபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.6.1॥

தமக்³நிரப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.6.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ருʼதி²வீ கலாந்தரிக்ஷம் கலா த்³யௌ: கலா
ஸமுத்³ர: கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³
ப்³ரஹ்மணோঽநந்தவாந்நாம ॥ 4.6.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம்
ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தேঽநந்தவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யநந்தவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தே ॥ 4.6.4॥

அக்னி உபாசனம் அப்புறம் -பிருத்வி இத்யாதி -அனந்தாவான் பேர்
அடுத்தது ஹம்சம் சொல்லும்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————

ஹꣳஸஸ்தே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³
அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.7.1॥

தꣳஹꣳஸ உபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ
இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.7.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாசாக்³நி: கலா ஸூர்ய: கலா சந்த்³ர: கலா
வித்³யுத்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாந்நாம ॥ 4.7.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ஜ்யோதிஷ்மாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ஜ்யோதிஷ்மதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோ ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ॥ 4.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

———————————-

மத்³கு³ஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³ அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார
தா யத்ராபி⁴ ஸாயம் ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³
உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.8.1॥

தம் மத்³கு³ருபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.8.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராண: கலா சக்ஷு: கலா ஶ்ரோத்ரம் கலா மந:
கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மண ஆயதநவாந்நாம
॥ 4.8.3॥

ஸ யை ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண
ஆயதநவாநித்யுபாஸ்த ஆயதநவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யாயதநவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம்
வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண ஆயதநவாநித்யுபாஸ்தே
॥ 4.8.4॥

இப்படி நான்கு நான்கா நாலும் பிராணன் கண் காது மனஸ் கடையில்

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————

ப்ராப ஹாசர்யகுலம் தமாசர்யோঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.9.1॥

ப்³ரஹ்மவிதி³வ வை ஸோம்ய பா⁴ஸி கோ நு த்வாநுஶஶாஸேத்யந்யே
மநுஷ்யேப்⁴ய இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ப⁴க³வாꣳஸ்த்வேவ மே காமே ப்³ரூயாத்
॥ 4.9.2॥

ஶ்ருதꣳஹ்யேவ மே ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴ய ஆசார்யாத்³தை⁴வ வித்³யா விதி³தா
ஸாதி⁴ஷ்ட²ம் ப்ராபதீதி தஸ்மை ஹைததே³வோவாசாத்ர ஹ ந கிஞ்சந
வீயாயேதி வீயாயேதி ॥ 4.9.3॥

பதினாறு கலைகளை விளக்கி -ஆச்சார்யர் உபதேசம் –
உபகோஸலன் சிஷ்யன் சத்யா காமருக்கு வர –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

ஆச்சார்யர் உபதேசம் ஸ்பஷ்டம் இதில் -ஸமித் பாணி -நிர்வேதம் -அடைந்து -ப்ரஹ்ம வித்யை தேடி –
ஆச்சார்யர் மூலமே –
சத்ய காம வித்யை -சத்யகாமர் உபதேசம் பெற்றவர் -அவர் பேராலே வித்யை –
ஜாபால என்பவளின் பிள்ளை -ஜாபாலன் இவருக்கு பெயர் -இயல் பெயர் சத்ய காமர்
கோத்ரம் வம்சம் தெரியாமல் தாய் சொன்ன பதில் -விருந்தோம்பல் குரு பரிசரியையில் காலம்
நேர்மை இருக்கிறதே -மகிழ்ந்து உபதேசம் –

400 மாடுகள் தேர்ந்து எடுத்து மேய்த்து பரிபாலனம் செய்ய –
ஒல்லியான -மெலிந்த மாடுகள் -புஷ்டியாக வைத்து 1000 மாடுகள் உடன் வருவதாக சொல்லி திரும்ப
ஒரு காளை கூறியது -ஆச்சார்யர் குலத்தில் சேர்த்து விட சொல்லி –
ப்ரஹ்மம் கால் பகுதி உபதேசம் அதே காளை
16 கலைகள் –நான்கு திக்குகள் -ஒவ்வொன்றும் ஒரு கலை -ப்ரகாஸவான் -தியானத்துக்கு தானே இந்த வித்யை

பிரகாசம் உடையவன் ஆகிறான் பிரகாச லோகம் அடைவான்
அடுத்த பாகம் அக்னி தேவதை உபதேசிப்பார் சொல்லிற்று
ஆச்சார்யர் நோக்கி போக -வழியில் அக்னி கார்யம் செய்ய
அநந்தவான்–இதுக்கு பெயர் – பிருத்வி அந்தரிக்ஷம் த்யு சமுத்திரம் நான்கு கலைகள் இதுக்கு

அந்தம் அற்று அந்தம் உள்ள லோகம் அடைகிறான் -யாரும்வெள்ள முடியாது அபராஜிதா மேல் லோக பிராப்தி
அடுத்த பாதம் ஹம்சம் உபதேசிக்கும் சொல்லிற்று

ஜ்யோதிஷ்மான் ஒளி பொருந்தியது -இது
நான்கு கலைகள் சட்னி சூர்யன் சந்திரன் மின்னல்
அறிந்தவன் இங்கேயே ஒளி பொருந்தி மேல் லோகங்களை வெல்கிறான்

மத்கு பக்ஷி அடுத்த உபதேசம்
ஆயதனாவான் -இருப்பிடம் இதுக்கு பெயர் பிராணன் சஷுஸ் ஸ்ரோத்ரம் மனஸ்ஸூ -நான்கு கலைகள்
இங்கேயும் அங்கேயும் வெல்கிறான் –

ப்ரஹ்ம தேஜஸ் பார்த்து யார் உபதேசம்
மநுஷ்யர்கள் யாரும் உபதேசம் தரவில்லை
தேவர் இஷ்டப்பட்ட பொழுது உபதேசிக்க வேண்டும் –
உண்மையை சொல்லி –
நான் கேட்க்காமலே அவர்களாக உபதேசம் -ப்ரஹ்ம வித்யை நிலை நிற்பது ஆச்சார்யர் உபதேசத்தாலேயே

இதுவே
ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
ஷோடச கலை வித்யை முழுவதும் -ஒன்றும் குறையாமல் உபதேசித்தார்
உபதேசம் இல்லாவை கே கடாக்ஷம் அனுக்ரஹம் மூலம் பெற ஆசீர்வாதமும் செய்து அருளினார்

——–

உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-

உபகோஸலோ ஹ வை காமலாயந: ஸத்யகாமே ஜாபா³லே
ப்³ரஹ்மசார்யமுவாஸ தஸ்ய ஹ த்³வாத³ஶ வார்ஷாண்யக்³நீந்பரிசசார
ஸ ஹ ஸ்மாந்யாநந்தேவாஸிந: ஸமாவர்தயꣳஸ்தம் ஹ ஸ்மைவ ந
ஸமாவர்தயதி ॥ 4.10.1॥

தம் ஜாயோவாச தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலமக்³நீந்பரிசசாரீந்மா
த்வாக்³நய: பரிப்ரவோசந்ப்ரப்³ரூஹ்யஸ்மா இதி தஸ்மை ஹாப்ரோச்யைவ
ப்ரவாஸாஞ்சக்ரே ॥ 4.10.2॥

உபகோஸல வித்யை –ஆச்சார்யர் இடம் -12-வருஷம் -சிச்ருஷை -அக்னி ஆராதனை –
ப்ரவாஸாஞ்சக்ரே-வெளியூர் கிளம்பி போக

ஸ ஹ வ்யாதி⁴நாநஶிதும் த³த்⁴ரே தமாசார்யஜாயோவாச
ப்³ரஹ்மசாரிந்நஶாந கிம் நு நாஶ்நாஸீதி ஸ ஹோவாச
ப³ஹவ இமேঽஸ்மிந்புருஷே காமா நாநாத்யயா வ்யாதீ⁴பி:⁴
ப்ரதிபூர்ணோঽஸ்மி நாஶிஷ்யாமீதி ॥ 4.10.3॥

மனைவி சாப்பிட சொல்ல -பசி இல்லை -கற்றுக் கொடுக்கவில்லை சோகம் நிறைந்து

அத² ஹாக்³நய: ஸமூதி³ரே தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலம் ந:
பர்யசாரீத்³த⁴ந்தாஸ்மை ப்ரப்³ரவாமேதி தஸ்மை ஹோசு: ப்ராணோ ப்³ரஹ்ம
கம் ப்³ரஹ்ம க²ம் ப்³ரஹ்மேதி ॥ 4.10.4॥

அக்னி ஆராதனம் மட்டும் விட வில்லை –

ஸ ஹோவாச விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்³ரஹ்ம கம் ச து க²ம் ச ந
விஜாநாமீதி தே ஹோசுர்யத்³வாவ கம் ததே³வ க²ம் யதே³வ க²ம் ததே³வ
கமிதி ப்ராணம் ச ஹாஸ்மை ததா³காஶம் சோசு: ॥ 4.10.5॥

ஐந்து அக்னிகளும் சேர்ந்து -உபதேசிக்க -ப்ரானோ ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் அறிந்து கொள்
பிராணனே ப்ரஹ்மம் -சுகமும் ஆகாசமும் ப்ரஹ்மம் –
அத்தை யோசித்து யோசித்து –
எது சுகமோ அது ஆகாசம் -எது ஆகாசமோ அது சுகம் இப்படி யோசி -என்றார்கள்
ஆனந்தம் ப்ரஹ்மம் -அறிந்து -ஆனந்தவல்லி -அபரிச்சின்னம் -உயர்வற உயர்நலம் உடையவன் -ஆனந்த ஸ்வரூபம் ப்ரஹ்மம் அறிந்து
அளவுக்கு உட்படாது காட்ட ஆகாசம் த்ருஷ்டாந்தம் -திட விசும்பு –கரந்து எங்கும் பரந்துளன் –
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபன் நேராக சொல்லாமல் இப்படி –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

அத² ஹைநம் கா³ர்ஹபத்யோঽநுஶஶாஸ ப்ருʼதி²வ்யக்³நிரந்நமாதி³த்ய
இதி ய ஏஷ ஆதி³த்யே புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.11.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————–

அத² ஹைநமந்வாஹார்யபசநோঽநுஶஶாஸாபோ தி³ஶோ நக்ஷத்ராணி
சந்த்³ரமா இதி ய ஏஷ சந்த்³ரமஸி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி
ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 4.12.1॥

கார்ஹபத்ன்ய அக்னி உபதேசிக்க -அக்னியை உபாசனம் -சூர்யா மண்டலா மதியவர்த்தியே நான்

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.12.2॥

பாபங்கள் ஒழிந்து உயர்ந்த கதி பலன்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநமாஹவநீயோঽநுஶஶாஸ ப்ராண ஆகாஶோ த்³யௌர்வித்³யுதி³தி
ய ஏஷ வித்³யுதி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.13.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

தே ஹோசுருபகோஸலைஷா ஸோம்ய தேঽஸ்மத்³வித்³யாத்மவித்³யா
சாசார்யஸ்து தே க³திம் வக்தேத்யாஜகா³ம
ஹாஸ்யாசார்யஸ்தமாசார்யோঽப்⁴யுவாதோ³பகோஸல3 இதி
॥ 4.14.1॥

சந்திரனை உபாசிப்பாய் அடுத்து
மின்னலில் உள்ள புருஷனே நமக்குள்ளே இருக்கும் புருஷோத்தமன்
ஓர் அளவு சொல்லிக் கொடுத்துள்ளோம் ப்ரஹ்மத்தை பற்றி -மேலே ஆச்சார்யர் மூலம் அறிந்து கொள் –

ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்³ரஹ்மவித³ இவ ஸோம்ய தே முக²ம் பா⁴தி
கோ நு த்வாநுஶஶாஸேதி கோ நு மாநுஶிஷ்யாத்³போ⁴ இதீஹாபேவ
நிஹ்நுத இமே நூநமீத்³ருʼஶா அந்யாத்³ருʼஶா இதீஹாக்³நீநப்⁴யூதே³
கிம் நு ஸோம்ய கில தேঽவோசந்நிதி ॥ 4.14.2॥

இத³மிதி ஹ ப்ரதிஜஜ்ஞே லோகாந்வாவ கில ஸோம்ய தேঽவோசந்நஹம்
து தே தத்³வக்ஷ்யாமி யதா² புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த
ஏவமேவம்விதி³ பாபம் கர்ம ந ஶ்லிஷ்யத இதி ப்³ரவீது மே
ப⁴க³வாநிதி தஸ்மை ஹோவாச ॥ 4.14.3॥

உபகோஸலனை பார்த்து ப்ரஹ்ம ஞானம் அறிந்தவனாக அறிந்து –
பிள்ளை பாதி தான் தெரிந்து -எப்படி பதில் -பிரசன்னமாகி காட்சி
நிச்சிந்தை க்ருதார்த்தனாக -பண்ண வேண்டியதை பண்ணி முடித்தவனாக அறிந்து –
உள்ளே உள்ள ப்ரஹ்மம் -அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே
தேவதைகள் கற்றுக் கொடுத்து -ஆச்சார்யர் மூலம் முழுவதும் அறிந்து கொள்ள -சொல்லி தேவரீர் தஞ்சம்
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபம் மட்டும் அறிந்தாய் –
பாபங்கள் ஒட்டாத படி -தாமரை இலைத்தண்ணீர் போலே ஆக்குவேன் -நெருப்பில் இட்ட பஞ்சு போலே அழிக்க சொல்லவில்லையே
ப்ரஹ்ம ஸூத்ர விசாரம் –தத் அதிகம உத்தர பூர்வாகம் அஸ்லேஷ விநாசம் –
போய பிழை பூர்வாகம் -புகு தருவான் நின்றன உத்தராகம்–மாரீசன் ஸூ பாஹு போலே –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

ஆற்றம் கரை வாழும் மரம் போல் அஞ்சுகிறேன் –நிர்வேதம் வர வேண்டுமே
கம் -பிராணனே ப்ரஹ்மம் புரிந்து கொண்டான் -வாழ வைப்பதால் -ஆனந்தம் -ஆகாசம் -இரண்டும் கம் -ஸப்த வாஸ்யங்கள்
யது கம் அதுவே கம் -அளவற்றது அபரிச்சேத்யம் -என்றவாறு -ஆகாசம் பூதம் சொல்ல வில்லை
உயர்வற உயர் நலம் உடையவன் என்று சொல்லப்படுகிறது
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ஆனந்த மய ஸூத்ரம் –
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –அல்லி மகள் போக மயக்குகள் எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் -ஆழ்வார் –

இது வரை ப்ரஹ்மம் பற்றிய ‘பின்பு தங்களைப் பற்றி உபாசனம்
ஆஹவனீயம்–த்ரி அக்னி -அக்னி த்யானம் -இவை அங்கங்கள் -நேராக மோக்ஷம் பலன் கிட்டாதே –
கார்ஹபத்யம் -பிருத்வி -ஆதித்யம் என்று உபாசனம்
ஆஹவனீயம் -தண்ணீர் திக்குகள் நக்ஷத்ரம் சந்திரன் -சந்திரனாக உபாசனம்
தக்ஷிணாக்கினி பிரயாணம் ஆகாசம் மேல் உலகம் மின்னல் –

பாபங்கள் நீங்க இந்த உபாசனம் -பக்தி ஆரம்ப விரோதிகள் போக்கும் –
மனஸ் ஸூ சஸூ த்தம் ஆனால் தானே இடைவிடாமல் த்யானம்
ப்ரஹ்மமே பிராணன் -அளவற்ற ஆனந்தம் -என்று த்யானம்
மேல் ஆச்சார்யர் இடம் கேட்டு பெறுவாய் -சொல்லி அக்னிகள் நிறுத்திய பின்பு
ஸத்யகாமர் திரும்பி வந்து ப்ரஹ்ம தேஜஸ்
சின்ன விஷயங்கள்
ப்ரஹ்ம ஞானம் முழுவதும் உபதேசித்து –
தாமரை இலைத் தண்ணீர் போல் கர்மங்கள் ஒட்டாமல் போகும்
தீது ஒன்றும் சாரா ஏதம் ஒன்றும் வாரா
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

——–

11-அந்தர் அஷி வித்யை
ஸத்யகாமர் உபகோஸலருக்கு இதுவும்
கண்ணுக்குள்
அம்ருதம் –அ பயம் –ஆனந்தம் கொடுக்கும் துக்கம் கலவாமல்

ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தத்³யத்³யப்யஸ்மிந்ஸர்பிர்வோத³கம் வா ஸிஞ்சதி வர்த்மநீ ஏவ
க³ச்ச²தி ॥ 4.15.1॥

உன்னாலே அப்படி ப்ரஹ்மத்தை உபாஸிக்க முடியாது –
வலக்கண்ணில் புருஷன் -அந்தராத்மா -அவனை உபாசிப்பாய்
அஷி புருஷ உபாசனம் -கண்ணின் மூலம் சூர்யன் -உன்னிடம் உள்ளதை நினைத்தால் தான் உன்னால் அறிய முடியும் –
பரம போக்யமாக உன்னை அனுபவிக்கிறான்
அவன் சுக ரூபம் அவர்கள் சொல்லிக் கொடுக்க -உனக்கு சுகத்தை அனுபவிக்கச் செய்வார் இவர் உபதேசம் –

ஏதꣳ ஸம்யத்³வாம இத்யாசக்ஷத ஏதꣳ ஹி ஸர்வாணி
வாமாந்யபி⁴ஸம்யந்தி ஸர்வாண்யேநம் வாமாந்யபி⁴ஸம்யந்தி
ய ஏவம் வேத³ ॥ 4.15.2॥

ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி
ஸர்வாணி வாமாநி நயதி ய ஏவம் வேத³ ॥ 4.15.3॥

கல்யாண குணங்களுடன் கூடியவன்
வாமனன் -சேவிப்பாருக்கு தரிசனத்தால் சுகம் கொடுப்பார்
பாமினி-பிரகாச ரூபம் பரஞ்சோதி

ஏஷ உ ஏவ பா⁴மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா⁴தி
ஸர்வேஷு லோகேஷு பா⁴தி ய ஏவம் வேத³ ॥ 4.15.4॥

அத² யது³ சைவாஸ்மிஞ்ச²வ்யம் குர்வந்தி யதி³ ச
நார்சிஷமேவாபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந்மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ
ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம் சந்த்³ரமஸோ வித்³யுதம்
தத் புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம க³மயத்யேஷ தே³வபதோ²
ப்³ரஹ்மபத² ஏதேந ப்ரதிபத்³யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே
நாவர்தந்தே ॥ 4.15.5॥

அர்ச்சிராதி மார்க்கம் -காட்டி அருளுகிறார் இதில் -அறிந்து கொண்டால் தானே உபாசனத்துக்கு வருவோம் –
அத்புத மந்த்ரம் -நா வர்த்தந்தே-திரும்பாத மார்க்கம் –சூழ்ந்து அகன்று -பதிகம் –
அர்ச்சிஸ் -சுக்ல பக்ஷம்- அயனம்- சம்வத்சரம் -இவ்வாறு ஆறு லோகங்கள்
சூர்ய சந்த்ர லோகம் –ஏழாவது எட்டாவது
வித்யுத் ஒன்பதாவது -அமானவன்-இவன்
வருண இந்திர சத்யா லோகம் -ஆக -12-லோகங்கள் -கோசி -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
தர்ம வர்மா திருச்சுற்று -விமான திருச்சுற்று -வழியாக இன்றும் சேவை நமக்காக நம்பெருமாள்
வைகுண்ட வாசலுக்குள் -திருப்பரிவட்டம் மாற்றி -விரஜை நீராட்டத்துக்கு பின்பு –
வைகுண்டத்தில் -சந்த்ர புஷ்கரணி போலே -சஹஸ்ர தூணா மணி மண்டபம் -1000-கால்கள் இல்லை –
கொட்டாய் போட்டு நிறைப்பி -வெளி மணல் வெளியில் –
1102-உருப்படி அமுது செய்வார் திருவாய்மொழி பாசுரம் கணக்குப்படி –

இந்த உபாசகனுக்கு வரும் பிழைகளை போக்க பிராயச்சித்த முறைகளை சொல்லும் மேலே இரண்டு கண்டங்களாலே

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

மூன்று குணங்கள் -உபதேசம்
1-அம்ருதயம் அ பயம்
2-ஆஸ்ரிதற்கு நல்ல சோபை அருளுவார்
ஆச்சார்யர் காட்டிக் கொடுப்பார்
அடியார்க்கு ஆள் படுத்தும் விமலன்
தானே ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் நம்மையும் தம்மையே போல் ஆக்கி அருளுவான் –
3-மூன்றாவது -அழகான ஒளி பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவர்
நம்பியை நான் கண்ட பின் –சோதி வெள்ளம் -எழுவதோர் உரு –
கண்ணுக்குள்ளே இருப்பதாக த்யானம் –
அர்ச்சிராதி கதி விளக்கமும் இதில் உண்டு –
தேவ மார்க்கம் -ப்ரஹ்ம மார்க்கம் என்றும் இதுக்கு வேறே பெயர்கள்
ஆர்த்தி பிரபந்தம் -விளக்கும் -அமானவனால் ஒளிக் கொண்ட சோதி பெற்று
தாள் அடைந்தோர்க்கு தானே வழித்துணையாம் -மார்க்க பந்து
காளமேகம் –மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு அடைகிறான் -நச புனராவர்த்ததே –

ஆச்சார்யர் பெருமைகளை சொல்லும் வித்யைகள் இவை
முழு நம்பிக்கை இருந்தாலே பலன் பெறுவோம் –
இத்தை ஸத்யகாமர் இடம் அறிந்தோம்
சங்கை இருந்தால் முழுவதும் உபதேசம் கிட்டாதே -இத்தை உபகோஸலர் இடம் பார்த்தோம் –

———

12–பஞ்ச அக்னி வித்யை –5-3- தொடங்கி 5-10-

ஶ்வேதகேதுர்ஹாருணேய: பஞ்சாலாநாꣳ ஸமிதிமேயாய
தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச குமாராநு
த்வாஶிஷத்பிதேத்யநு ஹி ப⁴க³வ இதி ॥ 5.3.1॥

பஞ்சாக்கினி வித்யை அடுத்து பல கண்டங்கள் மூலம்
ப்ரவாஹனன் ராஜ்ஜியம் இடம் ஸ்வேதகேது போக

வேத்த² யதி³தோঽதி⁴ ப்ரஜா: ப்ரயந்தீதி ந ப⁴க³வ இதி வேத்த²
யதா² புநராவர்தந்த3 இதி ந ப⁴க³வ இதி வேத்த²
பதோ²ர்தே³வயாநஸ்ய பித்ருʼயாணஸ்ய ச வ்யாவர்தநா3 இதி
ந ப⁴க³வ இதி ॥ 5.3.2॥

வேத்த² யதா²ஸௌ லோகோ ந ஸம்பூர்யத3 இதி ந ப⁴க³வ இதி
வேத்த² யதா² பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ
ப⁴வந்தீதி நைவ ப⁴க³வ இதி ॥ 5.3.3 ॥

அதா²நு கிமநுஶிஷ்டோ²ঽவோசதா² யோ ஹீமாநி ந
வித்³யாத்கத²ꣳ ஸோঽநுஶிஷ்டோ ப்³ருவீதேதி ஸ ஹாயஸ்த:
பிதுரர்த⁴மேயாய தꣳ ஹோவாசாநநுஶிஷ்ய வாவ கில மா
ப⁴க³வாநப்³ரவீத³நு த்வாஶிஷமிதி ॥ 5.3.4 ॥

எந்த மார்க்கம் மூலம் போகிறார்கள்
சென்றவர் எப்படி திரும்புகிறார்கள்
கேட்க தெரியாது என்று சொல்ல
தேவ யானும் -அர்ச்சிராதி கதி
பித்ரு யானும் திரும்பி வருவது
போயிண்டே இருந்தால் அங்கு இடம் உள்ளதா

பஞ்ச மா ராஜந்யப³ந்து:⁴ ப்ரஶ்நாநப்ராக்ஷீத்தேஷாம்
நைகஞ்சநாஶகம் விவக்துமிதி ஸ ஹோவாச யதா² மா த்வம்
ததை³தாநவதோ³ யதா²ஹமேஷாம் நைகஞ்சந வேத³
யத்³யஹமிமாநவேதி³ஷ்யம் கத²ம் தே நாவக்ஷ்யமிதி ॥ 5.3.5॥

தெரியாமல் அப்பா இடம் போக -எனக்கும் தெரியாது
ஷத்ரியன் இவன் இடம் வந்து கேட்க -நீர் கற்று வந்து சொல்லிக் கொடும் என்ன –

ஸ ஹ கௌ³தமோ ராஜ்ஞோঽர்த⁴மேயாய தஸ்மை ஹ ப்ராப்தாயார்ஹாம் சகார
ஸ ஹ ப்ராத: ஸபா⁴க³ உதே³யாய தꣳ ஹோவாச மாநுஷஸ்ய
ப⁴க³வந்கௌ³தம வித்தஸ்ய வரம் வ்ருʼணீதா² இதி ஸ ஹோவாச தவைவ
ராஜந்மாநுஷம் வித்தம் யாமேவ குமாரஸ்யாந்தே
வாசமபா⁴ஷதா²ஸ்தாமேவ மே ப்³ரூஹீதி ஸ ஹ க்ருʼச்ச்²ரீ ப³பூ⁴வ
॥ 5.3.6॥

தꣳ ஹ சிரம் வஸேத்யாஜ்ஞாபயாஞ்சகார தꣳ ஹோவாச
யதா² மா த்வம் கௌ³தமாவதோ³ யதே²யம் ந ப்ராக்த்வத்த: புரா வித்³யா
ப்³ராஹ்மணாந்க³ச்ச²தி தஸ்மாது³ ஸர்வேஷு லோகேஷு க்ஷத்ரஸ்யைவ
ப்ரஶாஸநமபூ⁴தி³தி தஸ்மை ஹோவாச ॥ 5.3.7

ஷத்ரியருக்குள் தான் இந்த ரஹஸ்யம் –
முதல் தடவையாக அந்தணருக்கு
நீர் கேட்பதால் உபதேசிக்கிறேன்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————-

அஸௌ வாவ லோகோ கௌ³தமாக்³நிஸ்தஸ்யாதி³த்ய ஏவ
ஸமித்³ரஶ்மயோ தூ⁴மோঽஹரர்சிஶ்சந்த்³ரமா அங்கா³ரா நக்ஷத்ராணி
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.4.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஶ்ரத்³தா⁴ம் ஜுஹ்வதி
தஸ்யா அஹுதே: ஸோமோ ராஜா ஸம்ப⁴வதி ॥ 5.4.2 ॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

பர்ஜந்யோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாயுரேவ ஸமித³ப்⁴ரம் தூ⁴மோ
வித்³யுத³ர்சிரஶநிரங்கா³ராஹ்ராத³நயோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.5.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஸோமꣳ ராஜாநம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்வர்ஷꣳ ஸம்ப⁴வதி ॥ 5.5.2॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

ப்ருʼதி²வீ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா: ஸம்வத்ஸர ஏவ
ஸமிதா³காஶோ தூ⁴மோ ராத்ரிரர்சிர்தி³ஶோঽங்கா³ரா
அவாந்தரதி³ஶோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.6.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா வர்ஷம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேரந்நꣳ ஸம்ப⁴வதி ॥ 5.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

புருஷோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாகே³வ ஸமித்ப்ராணோ தூ⁴மோ
ஜிஹ்வார்சிஶ்சக்ஷுரங்கா³ரா: ஶ்ரோத்ரம் விஸ்பு²லிங்கா:³ ॥ 5.7.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா அந்நம் ஜுஹ்வதி தஸ்யா
ஆஹுதே ரேத: ஸம்ப⁴வதி ॥ 5.7.2॥

॥ இதி ஸபதம: க²ண்ட:³ ॥

ஹோம குண்டம் -ஆஹுதி —
சுவர்க்கம் -மேகம் -பிருத்வி -புருஷன் -ஸ்த்ரீ ஐந்தும்
ஸ்ரத்தா முதல் ஆஹுதி -சோமன் பிறக்க -அனுபவித்து முடித்து –
மேகம் அடுத்து ஜீவனை ஆஹுதியாக கொடுக்க -வ்ருஷடி உத்பத்தி
பிருத்வி ஹோம குண்டம் -மழை பட்டு நெல் அன்னம் -புருஷன் நாலாவது அக்னி
புருஷன் உண்டு ஆண் ரேதஸ்
பெண் ஐந்தாவது அக்னி குண்டம் -கர்ப்பம் -மனுஷ்யனாகிறான்
அடுத்த தசைக்கு போவது துர்லபம் -அரிது அரிது மானிடப்பிறவி அரிது இதனாலே –
சுழற்சி இப்படி –
வெளியில் வர ஆசைப்பட்டு வந்தால் தானே மீளலாம்
ஞான ஆனந்த மயனாக இருந்து இப்படி சுழல வேண்டுமோ என்ற எண்ணம் வேண்டுமே

————————————————

யோஷா வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா உபஸ்த² ஏவ ஸமித்³யது³பமந்த்ரயதே
ஸ தூ⁴மோ யோநிரர்சிர்யத³ந்த: கரோதி தேঽங்கா³ரா அபி⁴நந்தா³
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.8.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா ரேதோ ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்க³ர்ப:⁴ ஸம்ப⁴வதி ॥ 5.8.2 ॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

இதி து பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ ப⁴வந்தீதி
ஸ உல்பா³வ்ருʼதோ க³ர்போ⁴ த³ஶ வா நவ வா மாஸாநந்த: ஶயித்வா
யாவத்³வாத² ஜாயதே ॥ 5.9.1॥

ஸ ஜாதோ யாவதா³யுஷம் ஜீவதி தம் ப்ரேதம் தி³ஷ்டமிதோঽக்³நய
ஏவ ஹரந்தி யத ஏவேதோ யத: ஸம்பூ⁴தோ ப⁴வதி ॥ 5.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

—————————————

தத்³ய இத்த²ம் விது:³। யே சேமேঽரண்யே ஶ்ரத்³தா⁴ தப இத்யுபாஸதே
தேঽர்சிஷமபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந் ॥ 5.10.1॥

மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம்
சந்த்³ரமஸோ வித்³யுதம் தத்புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம
க³மயத்யேஷ தே³வயாந: பந்தா² இதி ॥ 5.10.2॥

அத² ய இமே க்³ராம இஷ்டாபூர்தே த³த்தமித்யுபாஸதே தே
தூ⁴மமபி⁴ஸம்ப⁴வந்தி தூ⁴மாத்³ராத்ரிꣳ
ராத்ரேரபரபக்ஷமபரபக்ஷாத்³யாந்ஷட்³த³க்ஷிணைதி
மாஸாꣳஸ்தாந்நைதே ஸம்வத்ஸரமபி⁴ப்ராப்நுவந்தி ॥ 5.10.3॥

மாஸேப்⁴ய: பித்ருʼலோகம் பித்ருʼலோகாதா³காஶமாகாஶாச்சந்த்³ரமஸமேஷ
ஸோமோ ராஜா தத்³தே³வாநாமந்நம் தம் தே³வா ப⁴க்ஷயந்தி ॥ 5.10.4॥

தஸ்மிந்யவாத்ஸம்பாதமுஷித்வாதை²தமேவாத்⁴வாநம் புநர்நிவர்தந்தே
யதே²தமாகாஶமாகாஶாத்³வாயும் வாயுர்பூ⁴த்வா தூ⁴மோ ப⁴வதி
தூ⁴மோ பூ⁴த்வாப்⁴ரம் ப⁴வதி ॥ 5.10.5॥

அப்⁴ரம் பூ⁴த்வா மேகோ⁴ ப⁴வதி மேகோ⁴ பூ⁴த்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹியவா ஓஷதி⁴வநஸ்பதயஸ்திலமாஷா இதி
ஜாயந்தேঽதோ வை க²லு து³ர்நிஷ்ப்ரபதரம் யோ யோ ஹ்யந்நமத்தி
யோ ரேத: ஸிஞ்சதி தத்³பூ⁴ய ஏவ ப⁴வதி ॥ 5.10.6॥

தேவ யானம்
தூப மானம் -இருட்டு -தேய் பிறை -தஷிணாயணம் -சம்வத்சரம் பித்ரு லோகம் ஆகாசம்
சந்த்ர லோகம் -அனுபவித்து திரும்பி -ஆகாசம் வாயு தூமம் –
மூன்றாவது மார்க்கம் -புழுவாக பிறந்து -ஞானமே இல்லாத ஜென்மமாக இங்கேயே இருப்பதால்
அங்கே போனவர்கள் குறைய

தத்³ய இஹ ரமணீயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே ரமணீயாம்
யோநிமாபத்³யேரந்ப்³ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம்
வாத² ய இஹ கபூயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே கபூயாம்
யோநிமாபத்³யேரஞ்ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா
சண்டா³லயோநிம் வா ॥ 5.10.7॥

அதை²தயோ: பதோ²ர்ந கதரேணசந தாநீமாநி
க்ஷுத்³ராண்யஸக்ருʼதா³வர்தீநி பூ⁴தாநி ப⁴வந்தி ஜாயஸ்வ
ம்ரியஸ்வேத்யேதத்த்ருʼதீயꣳஸ்தா²நம் தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே
தஸ்மாஜ்ஜுகு³ப்ஸேத ததே³ஷ ஶ்லோக: ॥ 5.10.8॥

ஸ்தேநோ ஹிரண்யஸ்ய ஸுராம் பிப³ꣳஶ்ச கு³ரோஸ்தல்பமாவஸந்ப்³ரஹ்மஹா
சைதே பதந்தி சத்வார: பஞ்சமஶ்சாசரꣳஸ்தைரிதி ॥ 5.10.9॥

அத² ஹ ய ஏதாநேவம் பஞ்சாக்³நீந்வேத³ ந ஸஹ
தைரப்யாசரந்பாப்மநா லிப்யதே ஶுத்³த:⁴ பூத: புண்யலோகோ ப⁴வதி
ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 5.10.10॥

பாபம் பண்ணி- பாப யோனி -புண்யம் செய்தால் புண்ய யோனி -திருத்தலாம் –
பஞ்சாக்னி அறிந்து வெளி வர சாஸ்திரம் சொல்லுமே

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

ஸ்வேதகேது -அருணை பிள்ளை -பாஞ்சால தேச சதஸ்ஸூ -ப்ரவாஹனர் அரசர் -இடம் சென்று -ஐந்து கேள்விகள்
தேவ யானம் பித்ரு யானம் பற்றி
பூத ஸூஷ்மங்கள் னுடனே செல்கிறான் -தண்ணீர் எப்படி புருஷனாக-ஐந்தாவது கேள்விக்கு முதல் பதில் – –
ஸ்ரத்தா -தண்ணீர் -பூத ஸூஷ்மங்களுக்கு பெயர்
பூத ஸூஷ்மம் உடன் சுவர்க்கம் மேகம் –நீர் நிறைந்து இருப்பதால் அத்தையே சொன்ன படி -மீண்டும் வந்து –
ப்ரஹ்ம வித்யை உபாசனத்துக்கு முதலில் -வைராக்யம் வர வேண்டுமே -அதற்காக இத்தை சொன்னபடி –
வேத நூல் -மனுஷர் தான் புகுவரேலும் –ஆதலால் பிறவி வேண்டேன் –
இவ்வாறு ஜீவாத்மாவை அறிந்து -உடலில் விட வேறே -ஐந்து ஆஹுதி அறிந்து ன்-
தபஸ் – உபாசனம் -தபஸ் என்று பரமாத்மாவை -ஆரண்யம் -காட்டில் இருந்து உபதேசிக்க –
தனிமை நாடி -ஜன கூட்டம் இல்லாமல் -அர்ச்சிராதி கதி–விவரிக்கும் மேல்
தேவர்கள் ஸத்காரம் செய்வதால் தேவ யானம் இதுவே –
அந்தர் ஆத்மாவாக இருக்கும் பரமாத்வா வரை த்யானம் செய்தால் தான் மோக்ஷ பிராப்தி
பலம் சொல்வதை பார்த்து – இத்தைக் கொள்ள வேண்டும் -என்ன் ஆவி ஆவி -ஆழ்வார் அருளிச் செயல்

இஷ்டம் யாகம் –பூர்த்தம் சமூக பணிகள் –தத்தம் தானம் –மூன்றும் செய்பவன் சுவர்க்கம் –
புகை உலகம் பூமாதி மார்க்கம் பித்ரு யானம்

————

13–வைச்வானர வித்யை –5–11-தொடங்கி -5-21-

ப்ராசீநஶால ஔபமந்யவ: ஸத்யயஜ்ஞ:
பௌலுஷிரிந்த்³ரத்³யும்நோ பா⁴ல்லவேயோ ஜந: ஶார்கராக்ஷ்யோ
பு³டி³ல ஆஶ்வதராஶ்விஸ்தே ஹைதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா:
ஸமேத்ய மீமாꣳஸாம் சக்ரு: கோ ந ஆத்மா கிம் ப்³ரஹ்மேதி ॥ 5.11.1॥

வைச்வானர வித்யை -முழுமையான ப்ரஹ்மம் -எது -ஆறு பேர் அரசன் இடம் சென்று
ராஜ ரிஷி -இடம் சென்று -ஆறு கேள்விகள் -கேகேய தேச ராஜா அஸ்வபதி
அஹம் வைச்வானர பூத்யா– வயிற்றில் நெருப்பாக இருக்கும் ப்ரஹ்மம்
ஆகாசம் ஆதித்யன் -தலையை மட்டும் -பிருத்வியை காளை மட்டும் பார்த்தவனாவான்
பிராணா –உதானா சுவாஹா உள்ளே உள்ள அக்னிக்கு -ஆஹுதி -தேஜஸ் மிக்கு ஜெயிக்கும் -ஆரோக்யம் கிட்டும் –

தே ஹ ஸம்பாத³யாஞ்சக்ருருத்³தா³லகோ வை ப⁴க³வந்தோঽயமாருணி:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி தꣳ
ஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳ ஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.2॥

அருணன் பிள்ளை – உத்தாலர் -இவர் பிள்ளை -ஸ்வேதகேது –

ஸ ஹ ஸம்பாத³யாஞ்சகார ப்ரக்ஷ்யந்தி மாமிமே
மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியாஸ்தேப்⁴யோ ந ஸர்வமிவ ப்ரதிபத்ஸ்யே
ஹந்தாஹமந்யமப்⁴யநுஶாஸாநீதி ॥ 5.11.3॥

தாந்ஹோவாசாஶ்வபதிர்வை ப⁴க³வந்தோঽயம் கைகேய:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி
தꣳஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.4॥

அஸ்வபதி ஞானி சிறந்த உபாசகன் இடம் இவரைக் கூட்டிப்போக –

தேப்⁴யோ ஹ ப்ராப்தேப்⁴ய: ப்ருʼத²க³ர்ஹாணி காரயாஞ்சகார
ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச ந மே ஸ்தேநோ ஜநபதே³ ந
கர்த³ர்யோ ந மத்³யபோ நாநாஹிதாக்³நிர்நாவித்³வாந்ந ஸ்வைரீ ஸ்வைரிணீ
குதோ யக்ஷ்யமாணோ வை ப⁴க³வந்தோঽஹமஸ்மி யாவதே³கைகஸ்மா
ருʼத்விஜே த⁴நம் தா³ஸ்யாமி தாவத்³ப⁴க³வத்³ப்⁴யோ தா³ஸ்யாமி
வஸந்து ப⁴க³வந்த இதி ॥ 5.11.5॥

ப்ரதிஜ்ஜை செய்து தானம் வழங்கி திருடர்கள் இல்லை -அக்னி கார்யம் விட்டவர்கள் இல்லை
தவறான நடத்தை உள்ளவர்கள் இல்லை குற்றம் இல்லாத தானம்

தே ஹோசுர்யேந ஹைவார்தே²ந புருஷஶ்சரேத்தꣳஹைவ
வதே³தா³த்மாநமேவேமம் வைஶ்வாநரꣳ ஸம்ப்ரத்யத்⁴யேஷி தமேவ நோ
ப்³ரூஹீதி ॥ 5.11.6॥

தக்ஷிணை இலக்கு இல்லை –

தாந்ஹோவாச ப்ராதர்வ: ப்ரதிவக்தாஸ்மீதி தே ஹ ஸமித்பாணய:
பூர்வாஹ்ணே ப்ரதிசக்ரமிரே தாந்ஹாநுபநீயைவைதது³வாச ॥ 5.11.7॥

நாளை சொல்கிறேன் -உங்களுக்கு எவ்வளவு தெரியும் நிலையை அறிந்து அது தொடக்கி சொல்வேன்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

ஔபமந்யவ கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி தி³வமேவ ப⁴க³வோ
ராஜந்நிதி ஹோவாசைஷ வை ஸுதேஜா ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ஸுதம் ப்ரஸுதமாஸுதம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.12.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
மூதா⁴ த்வேஷ ஆத்மந இதி ஹோவாச மூர்தா⁴ தே
வ்யபதிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.12.2॥

ஆகாசம் மேலே ஸ்வர்க்கம் லோகத்தை வைச்வானராக உபாசனம் முதலில் சொன்னவன்
தலையை மட்டும் உபாசிக்கிறாய் -முழுமையாக என்று நினைத்தாயானால் தலை போய் இருக்கும் நல்ல வேளை இன்று நீ வந்தாய்
அங்கம் மட்டும் -உபாசித்து -முக்தி கிட்டாதே -வாழும் கால நன்மை மட்டுமே கிட்டும்
அவாந்தர பலன் -நெல் குத்த வேர்வை வருவது போலே –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹோவாச ஸத்யயஜ்ஞம் பௌலுஷிம் ப்ராசீநயோக்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யாதி³த்யமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை விஶ்வரூப ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ப³ஹு விஶ்வரூபம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.13.1॥

அடுத்தவன் ஆத்யனாக உபாசனம்- ஓளி சாம்யம் உண்டே -குலம் பெருகும் ப்ரஹ்ம ஞானிகள் –
கண்ணை மட்டுமே உபாசித்தவனாக ஆவாய் –

ப்ரவ்ருʼத்தோঽஶ்வதரீரதோ² தா³ஸீநிஷ்கோঽத்ஸ்யந்நம் பஶ்யஸி
ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய ப்³ரஹ்மவர்சஸம் குலே
ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே சக்ஷுஷேததா³த்மந இதி
ஹோவாசாந்தோ⁴ঽப⁴விஷ்யோ யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

அத² ஹோவாசேந்த்³ரத்³யும்நம் பா⁴ல்லவேயம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி வாயுமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை ப்ருʼத²க்³வர்த்மாத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வாம் ப்ருʼத²க்³ப³லய ஆயந்தி
ப்ருʼத²க்³ரத²ஶ்ரேணயோঽநுயந்தி ॥ 5.14.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப்ராணஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப்ராணஸ்த
உத³க்ரமிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.14.2॥

வாயு தேவதையை -உபாசிக்கிறேன் -பல ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் -ஆனால் முழுமையாக உபாஸிக்க வில்லை
பிராணனை மட்டும் உபாசித்தாய் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

அத² ஹோவாச ஜநꣳஶார்கராக்ஷ்ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ
இத்யாகாஶமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப³ஹுல
ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபஸ்ஸே தஸ்மாத்த்வம்
ப³ஹுலோঽஸி ப்ரஜயா ச த⁴நேந ச ॥ 5.15.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ஸந்தே³ஹஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ஸந்தே³ஹஸ்தே வ்யஶீர்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.15.2॥

ஆகாசத்தை உபாசிப்பதாக -புத்ரன் ஐஸ்வர்யம் -செழிப்பாக இருப்பாய் -நடுப்பாகம் மட்டும்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² ஹோவாச பு³டி³லமாஶ்வதராஶ்விம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யப ஏவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ
வை ரயிராத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வꣳரயிமாந்புஷ்டிமாநஸி ॥ 5.16.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப³ஸ்திஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப³ஸ்திஸ்தே வ்யபே⁴த்ஸ்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.16.2॥

அடுத்து புடிலர் நீராக உபாசனம் –

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² ஹோவாசோத்³தா³லகமாருணிம் கௌ³தம கம் த்வமாத்மாநமுபஸ்ஸ
இதி ப்ருʼதி²வீமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை
ப்ரதிஷ்டா²த்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வம் ப்ரதிஷ்டி²தோঽஸி ப்ரஜயா ச பஶுபி⁴ஶ்ச 5.17.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
பாதௌ³ த்வேதாவாத்மந இதி ஹோவாச பாதௌ³ தே வ்யம்லாஸ்யேதாம்
யந்மாம் நாக³மிஷ்ய இதி 5.17.2॥

உத்தாலகர் இடம் அடுத்து -பூமியாக உபாஸிக்க -கால் பகுதி மட்டும் -பசுக்கள் செல்வம் கிட்டும்

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

தாந்ஹோவாசைதே வை க²லு யூயம் ப்ருʼத²கி³வேமமாத்மாநம்
வைஶ்வாநரம் வித்³வாꣳஸோঽந்நமத்த² யஸ்த்வேதமேவம்
ப்ராதே³ஶமாத்ரமபி⁴விமாநமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ஸ ஸர்வேஷு
லோகேஷு ஸர்வேஷு பூ⁴தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி ॥ 5.18.1॥

பிரதேச மாத்திரம் -அங்கம் மட்டும் -இவற்றை உடலாகக் கொண்டு -சேதன அசேதனங்கள் ப்ரஹ்ம சரீரம் தானே –

தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை⁴வ
ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப: ப்ராண: ப்ருʼத²க்³வர்த்மாத்மா ஸந்தே³ஹோ
ப³ஹுலோ ப³ஸ்திரேவ ரயி: ப்ருʼதி²வ்யேவ பாதா³வுர ஏவ வேதி³ர்லோமாநி
ப³ர்ஹிர்ஹ்ருʼத³யம் கா³ர்ஹபத்யோ மநோঽந்வாஹார்யபசந ஆஸ்யமாஹவநீய:
॥ 5.18.2॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

தத்³யத்³ப⁴க்தம் ப்ரத²மமாக³ச்சே²த்தத்³தோ⁴மீயꣳ ஸ யாம்
ப்ரத²மாமாஹுதிம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்ப்ராணாய ஸ்வாஹேதி
ப்ராணஸ்த்ருʼப்யதி ॥ 5.19.1॥

ப்ராணே த்ருʼப்யதி சக்ஷுஸ்த்ருʼப்யதி சக்ஷுஷி
த்ருʼப்யத்யாதி³த்யஸ்த்ருʼப்யத்யாதி³த்யே த்ருʼப்யதி த்³யௌஸ்த்ருʼப்யதி
தி³வி த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச த்³யௌஶ்சாதி³த்யஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநுத்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.19.2॥

அன்னம் மனஸ் -தண்ணீர் பிராணன் -நெய் வாக்கு –தொடர்பு இப்படி உண்டே
ஹோம குண்டம் உள்ளே -பிராணா சுவாஹா -ஆஹுதி கொடுக்க -திருப்தி வந்தால் -கண் திருப்தி –
அதனால் ஆதித்யன் திருப்தி -அத்யாத்மீகம் ஆதி தைவம் தொடர்பு -பிணைப்பு உண்டே –
ஆதித்யன் திருப்தி அடைந்தால் ஸ்வர்க்க லோகம் -தேவதைகள் திருப்தி –
அன்னம் தேஜஸ் கிட்டும்

॥ இதி ஏகோநவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————

அத² யாம் த்³விதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்³வ்யாநாய ஸ்வாஹேதி
வ்யாநஸ்த்ருʼப்யதி ॥ 5.20.1॥

வ்யாநே த்ருʼப்யதி ஶ்ரோத்ரம் த்ருʼப்யதி ஶ்ரோத்ரே த்ருʼப்யதி
சந்த்³ரமாஸ்த்ருʼப்யதி சந்த்³ரமஸி த்ருʼப்யதி தி³ஶஸ்த்ருʼப்யந்தி
தி³க்ஷு த்ருʼப்யந்தீஷு யத்கிஞ்ச தி³ஶஶ்ச சந்த்³ரமாஶ்சாதி⁴திஷ்ட²ந்தி
தத்த்ருʼப்யதி தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந
தேஜஸா ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.20.2॥

॥ இதி விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² யாம் த்ருʼதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத³பாநாய
ஸ்வாஹேத்யபாநஸ்த்ருʼப்யதி ॥ 5.21.1॥

அபாநே த்ருʼப்யதி வாக்த்ருʼப்யதி வாசி த்ருʼப்யந்த்யாமக்³நிஸ்த்ருʼப்யத்யக்³நௌ
த்ருʼப்யதி ப்ருʼதி²வீ த்ருʼப்யதி ப்ருʼதி²வ்யாம் த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச
ப்ருʼதி²வீ சாக்³நிஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.21.2॥

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

ஆறு ரிஷிகளை -பேரை ஒருவர் கேள்வி இதில் –
மீமாம்சை பூஜித விஷய விசாரம்
நம்மை செலுத்தும் அவன் யார் –
உத்தாலகர் இடம் சென்று இவரும் சென்று -இவரே அருணி
அனைவரும் அரசர் அஸ்வபதி கேகேய அரசன் -ராஜ ரிஷி இடம் சென்று உபதேசம் கேட்டுப் பெற்றார்கள் –

த்யு லோகம் -ஸ்வர்க்க லோகம் -ஆதித்யன் -வாயு -ஆகாசமே -தண்ணீரே –ப்ருத்வியே -ஆறும் சொல்ல

தலைப்பகுதி தான் த்வி லோகம் -ஸூ தேஜஸ்ஸூ -இது
ஆதித்யன் -சத்யஞ்ஞான் சொன்னது விஸ்வ ரூபன் உலகை பிரகாசப்படுத்தும் -கண்
வாயு -பிருதக் வர்த்தமான எங்கும் புகுந்து -பரமாத்மாவின் மூச்சுக்காற்று -பிராணன்
ஆகாசம் பஹுலம் -பெரிய பூதம் -மத்ய காயம் இடைப்பகுதி
மூச்சா -தண்ணீர் முடிலர் ரையி
பிரதிஷ்டா பிருத்வி திருவடிகள்
பகுதி தான் உபாசிக்கிறீர்கள்
அபரிச்சேத்யன் அவன் –

அபி விமானம் -மானம் அளவு அற்றவர் -பகுதி என்று புரிந்து கொள்ள வேண்டும் –
எங்கும் விபு -சர்வ வ்யாபி -அடைந்து அனுபவிக்கும் பலம் –
சோறு உண்கிறார்கள் -உண்ணும் சோறு இத்யாதி போல்
என்னுடைய உடலில் சேர்ந்து இருக்கிறார் என்று நினைத்து உபாஸிக்க வேண்டும்
சம்பந்தம் அறிந்து -அனைத்தும் அவன் அங்கங்கள் உடன் -இருப்பதாக அனுசந்தித்து –
இவையும் -அவையும் –1-9- என்னுடைச் சூழல் உளானே என் ஓக்கலையானே –உச்சி உளானே -அனுசந்திப்பது போல் –

இருப்பதால் தான் இந்த உடல் வேண்டும் -உபாசித்து அவனை அடைய சாதனம் –
இதுக்கு அங்கம் பிராண ஆஹுதி –அக்னி ஹோத்ரமாக இத்தை நினைத்து பண்ண வேண்டும் –
வைச்வானரனான அவனுக்கு ஆராதனம் இதுவே
இப்படி த்யானிப்பவன் -பாபங்கள் தீயில் இட்ட பஞ்சு போல் உரு மாய்ந்து போகும் –
தர்சன சமானாகார தியானத்துக்கு பின்பு –பலன் கிட்டும் –
தத் அதிகம உத்தர அகம் பூர்வ அகம் அஸ்லேஷ விநாசம்

——

14-பூமா வித்யை –7-ப்ரபாடகம் முழுவதும் -இதுவே —

॥ ஸப்தமோঽத்⁴யாய: ॥
அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

॥ இதி ஷட்³விம்ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி ஸப்தமோঽத்⁴யாய: ॥

நாரதர் -சனத்குமாரர்
அறிந்தவற்றை முதலில் பட்டியல் -சொற்கள் -அறிவேன் தாத்பர்யம் ஆத்மாவை அறிய வில்லை -சோகம் தாண்ட வில்லை
நாமம் -சொற்களே ப்ரஹ்மம் முதலில் –வாக் பேச்சு அடுத்தது -மனஸ் – அடுத்தது ஸங்கல்பம் – அடுத்தது சித்தம் சிந்தனம் ஆராய்ச்சி அடுத்தது
த்யானம் -அடுத்தது விஞ்ஞானம் -பிராமண ஜன்ய ஞானம் -அடுத்தது பலம் இது வேண்டுமே
அடுத்தது அன்னம் -அடுத்தது -ஜலம் -அடுத்தது தேஜஸ்ஸூ -அடுத்தது -ஆகாசம் -இதுவே காரணம் தேஜஸ்ஸூக்கு
அடுத்தது -நினைவு -ஸ்மரணம் -அடுத்தது ஆசை -பரமாத்மாவை அறிய ஆசை முக்கியம் –
அப்பொழுது தான் முயற்சி செய்வோம்
அடுத்தது பிராணன் -இதுவே ஜீவாத்மா இங்கு -சக்கரம் நாபி போல் இது -தங்குவது –

படிக்கட்டுக்கள் இப்படி சொல்லி -உபாசிப்பவன்
அதி வாதி பவதி -இந்த உயர்வை பேசுவான்
மேலே கேளாமல் தானாகவே சனத்குமாரர் -ஸத்யம் என்று சொல்லும் பரமாத்மாவை அறிந்து
அவன் பெருமையை பேசுபவன் மிக உயர்ந்தவன்
ஸத்யம் -என்றும் மாறாமல் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -உண்மையான அதி வாதம் இதுவே சம்ப்ரதாயம் –

கேட்டு -ஸ்ரவணம்- மனனம் ஆலோசனை அடுத்து -யுக்திகளை கொண்டு நிலை நிறுத்து -ஸ்ரத்தா வேண்டும் இவற்றுக்கு -ஆசை பிறக்க வேண்டுமே
மற்றவை தள்ளத்தக்கவை -தோஷங்கள் அறிய வேண்டும் – -அதுக்கு யோவை பூமா தத் ஸூகம்–மற்றவை அல்பம் என்று அறிய வேண்டுமே
உயர்வை வைத்து பூமா ஸப்தம் -நந்யத்ர பஸ்யதி–இத்யாதி
கரந்து எங்கும் பரந்து உளன் அன்றோ அவனைத் தவிர்ந்த வேறே ஓன்று இல்லையே -ப்ரஹ்மாத்மகம் அனைத்துமே –

தத் அம்ருதம் -ஜீவாத்மா மர்த்யம் -என்று அறிய வேண்டுமே
அஹங்கார ஆவேசம் –அஹம் ஏவ -உலகம் அனைத்தும் நானே இருப்பதாக த்யானம் –
நான் பெரியவன் நீ பெரியாய் என்பதை யார் அறிவார் -ஸ்வராட் பவதி
ஆத்ம ரதி ஆத்ம கிரீட
வாஸூ தேவம் சர்வம் -உண்ணும் நீர் எல்லாம் கண்ணன் –
ஸங்கல்பத்தால் அனைத்தையும் அடைகிறான் -சாம்யாபத்தி–சர்வம் ஆப்நோதி
ஆகார சுத்தி -சத்வம் வளர -மனஸ் சுத்தம் ஆகி – தருவா ஸ்ம்ருதி -நேரே காண்போம் -சர்வ கிரந்தி -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே

——–

15-சத் வித்யை –6 -ப்ரபாடகம்

ஶ்வேதகேதுர்ஹாருணேய ஆஸ தꣳ ஹ பிதோவாச ஶ்வேதகேதோ
வஸ ப்³ரஹ்மசர்யம் ந வை ஸோம்யாஸ்மத்குலீநோঽநநூச்ய
ப்³ரஹ்மப³ந்து⁴ரிவ ப⁴வதீதி ॥ 6.1.1॥

ஸ ஹ த்³வாத³ஶவர்ஷ உபேத்ய சதுர்விꣳஶதிவர்ஷ:
ஸர்வாந்வேதா³நதீ⁴த்ய மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்³த⁴
ஏயாய தꣳஹ பிதோவாச ॥ 6.1.2॥

ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத³ம் மஹாமநா அநூசாநமாநீ
ஸ்தப்³தோ⁴ঽஸ்யுத தமாதே³ஶமப்ராக்ஷ்ய: யேநாஶ்ருதꣳ ஶ்ருதம்
ப⁴வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதமிதி கத²ம் நு ப⁴க³வ:
ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.3॥

சத் வித்யை அடுத்து -சத் -ப்ரஹ்மம்
யாவையும் எவையும் தானாய் -அனைத்தும் சரீரம் தானே –
பிணக்கு இல்லாமல் -ப்ரஹ்மம் அடைவதே இலக்கு
ஸ்வேதகேது –பரிக்ஷை-உரையாடல் -சோம்ய-தட்டிக்கொடுத்து வேளை -அழகிய முகமானவனே –
-12-வருஷம் கற்று -ஒன்றும் அறியாமல் மரம் போலே இருக்க
ஆதேசம் -சொல்லால் சொல்லப்படுபவனை அறிந்தாயா
எத்தைக் கேட்டால் கேட்க்காதது எல்லாம் கேட்டதாகுமோ -புரியாதது எல்லாம் புரிந்தது ஆகுமோ
ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்தது போலே ஆகுமோ
நீரே சொல்லிக் கொடும் -ஆச்சார்யர் பிரியமானவன் சொல்லிக் கொடுக்க வில்லை
எது ஆணை விடுமோ அது ஆதேசம் -எந்த
நிகில ஜகத் உதய -உதார –

யதா² ஸோம்யைகேந ம்ருʼத்பிண்டே³ந ஸர்வம் ம்ருʼந்மயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் ம்ருʼத்திகேத்யேவ ஸத்யம்
॥ 6.1.4॥

மண்ணை அறிந்தால் மண்ணால் செய்யப்பட்டவை அனைத்தையும் அறியலாம்
ப்ரதிஜ்ஜைக்கு உதாரணம் -ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்தம் –

யதா² ஸோம்யைகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் லோஹமித்யேவ
ஸத்யம் ॥ 6.1.5॥

தங்கத்தால் செய்யப்பட்டவை -அடுத்த த்ருஷ்டாந்தம் சொல்லி
மண் பானை -மண் என்றே சத்யம் -பானை விகாரத்தை குறிக்கும் –
வாக்குக்கு வித்யாசம் காட்ட -பயன் வேறே என்பதால்
ஓங்கி அடித்தால் குடமும் மண் ஆகுமே -வெவ்வேறே தசைகள் இவை –

யதா² ஸோம்யிகேந நக²நிக்ருʼந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் க்ருʼஷ்ணாயஸமித்யேவ
ஸத்யமேவꣳஸோம்ய ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.6॥

நகம் வெட்டும் கருவி இரும்பால் -அடுத்த உதாரணம் -காரணம் கார்யம் ஓன்று என்று காட்ட –

ந வை நூநம் ப⁴க³வந்தஸ்த ஏதத³வேதி³ஷுர்யத்³த்⁴யேதத³வேதி³ஷ்யந்கத²ம்
மே நாவக்ஷ்யந்நிதி ப⁴க³வாꣳஸ்த்வேவ மே தத்³ப்³ரவீத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.1.7॥

மண் தங்கம் இரும்பு பஞ்சு -மூலப் பொருள்கள் அன்றோ –
இவற்றை அறிவது -இதுக்கும் மூலப் பொருள் இருந்தால் அறியலாம்
பிருத்வியா -பார்த்திப பதார்த்தங்கள் -என்று சொல்ல –
தண்ணீர் ஆகாசம் இவற்றுக்கு எப்படி பிள்ளை மேலே கேள்வி –
இன்னும் ஒரு படி மேலே -மூல பிரகிருதி காரணம் இவை காரியம்
நித்ய விபூதி -அப்ராக்ருதம் அன்றோ -மேலே சந்தேகம் –
அப்பொழுது தான் கடைசி படிக்கட்டு -ப்ரஹ்மம் –
ஆதேசம் தான் ப்ரஹ்மம் முடித்து -ஆணைக்கு உட்பட்டு அனைத்தும்
பலவற்றுக்கும் இந்த ஒன்றே காரணம் -பொருந்தும் –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

ஸதே³வ ஸோம்யேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம் ।
தத்³தை⁴க ஆஹுரஸதே³வேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம்
தஸ்மாத³ஸத: ஸஜ்ஜாயத ॥ 6.2.1॥

கார்ய ரூபமான ஜகத் -இதம் சர்வம் பார்த்து -பலவாக -இப்பொழுது -காரணம் ஓன்று
சத் ஏவ சோம்ய -மஹா வாக்கியம் இது
இதம் சர்வம் – அக்ர ஆஸீத் -முற்காலத்தில் ஸ்ருஷ்டிக்கு முன்பு
ஒன்றாகவே இருந்தது
மூன்று சப்தங்கள்
சத்காரிய வாதம்
உத்பத்தி -இருப்பதை மாற்றி செய்வதே –
ப்ரஹ்மத்துக்கு சரீரம் பெயர் உருவ மாறுதல் உடன் இப்பொழுது -வேறுபாடு இல்லாமல் முன்பு ஸூஷ்ம ரூபம் முன்பு –
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் –
ஓன்று பலவாக மாற பல காரண பொருள்கள் வேண்டாவோ என்னில் ஒன்றே உபாதான காரணம்
ப்ரஹ்மம் நித்ய நிர்விகார தத்வம் -ஒரே மயிர் காலுக்குள் அனைத்து ஜகத்தும்-
அத்விதீயம் -நிமித்த காரணம் குயவன் நெசவாளர் போலே
நான் பல வாக உருவாகப் போகிறேன் — பஹுஸ்யாம்
மண்ணை மாற்றி குடத்தைச் செய்யப் போகிறேன் -குயவன் சொல்ல -சரீரமே மண் இத்யாதி –

குதஸ்து க²லு ஸோம்யைவꣳஸ்யாதி³தி ஹோவாச கத²மஸத:
ஸஜ்ஜாயேதேதி। ஸத்த்வேவ ஸோம்யேத³மக்³ர
ஆஸீதே³கமேவாத்³விதீயம் ॥ 6.2.2॥

ததை³க்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோঽஸ்ருʼஜத தத்தேஜ
ஐக்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத³போঽஸ்ருʼஜத ।
தஸ்மாத்³யத்ர க்வச ஶோசதி ஸ்வேத³தே வா புருஷஸ்தேஜஸ ஏவ
தத³த்⁴யாபோ ஜாயந்தே ॥ 6.2.3॥

தத் ஏக யீஷத -முளை விட்டு ஸ்ருஷ்ட்டி -சங்கல்பம் -பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -மூன்றாக
சாத்விக அஹங்காரம் -கர்மா ஞான -இந்திரியங்கள் -மனஸ்
தாமச அஹங்காரம் பஞ்ச பூதம் தன்மாத்திரைகள்
ப்ரஹ்மம் விட்டுப் பிரியாமல் விசிஷ்ட ப்ரஹ்மம் எல்லா அவஸ்தைகளிலும் –

தா ஆப ஐக்ஷந்த ப³ஹ்வ்ய: ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா
அந்நமஸ்ருʼஜந்த தஸ்மாத்³யத்ர க்வ ச வர்ஷதி ததே³வ பூ⁴யிஷ்ட²மந்நம்
ப⁴வத்யத்³ப்⁴ய ஏவ தத³த்⁴யந்நாத்³யம் ஜாயதே ॥ 6.2.4॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

தேஷாம் க²ல்வேஷாம் பூ⁴தாநாம் த்ரீண்யேவ பீ³ஜாநி
ப⁴வந்த்யாண்ட³ஜம் ஜீவஜமுத்³பி⁴ஜ்ஜமிதி ॥ 6.3.1॥

பிருத்வி -மழை -பெய்து மரம் செடி கொடி உத்பிஜ்ஜம்
ஜீவஜம் -கர்ப்பம்
அண்டஜம் முட்டையில் இருந்து மூன்றாக
ஸ்வேதஜம் வியர்வையில் இருந்து உண்டாக்குவதும் உண்டே –

ஸேயம் தே³வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே³வதா அநேந
ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ॥ 6.3.2॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாம் கரவாணீதி ஸேயம்
தே³வதேமாஸ்திஸ்ரோ தே³வதா அநேநைவ ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
நாமரூபே வ்யாகரோத் ॥ 6.3.3॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாமகரோத்³யதா² து க²லு
ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதாஸ்த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி
தந்மே விஜாநீஹீதி ॥ 6.3.4 ॥

ஜீவ சரீரகனாக நான் ஜீவ சரீரத்துக்குள் ஜீவன் மூலம் புகுந்து -ஒரு சொல் மூன்றையும் குறிக்கும் –
அசித்தையும் -அதுக்குள்ளே இருக்கும் ஆத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் எல்லா சொற்களும் –
சர்வ சப்த வாச்யன் -ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் –
த்ரிவிக்ரணம் -பஞ்சீகரணம் -பாதி பகுதியை நாலாக்கி மற்ற நான்கிலும் கலந்து —
ஒவ் ஒன்றின் குணமும் எல்லாவற்றிலும் வரும் –
ஆகாசம் நீலம் நிறம் -நீலக்கடல் -வினிமயத்தாலே கலந்ததால்
தேஜோபன்னம்- த்ரிவிக்ரமணம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————–

யத³க்³நே ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த³க்³நேரக்³நித்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.1॥

யதா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³தா³தி³த்யாதா³தி³த்யத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.2॥

யச்ச²ந்த்³ரமஸோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³ச்சந்த்³ராச்சந்த்³ரத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.3॥

யத்³வித்³யுதோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த்³வித்³யுதோ வித்³யுத்த்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.4॥

ஏதத்³த⁴ ஸ்ம வை தத்³வித்³வாꣳஸ ஆஹு: பூர்வே மஹாஶாலா
மஹாஶ்ரோத்ரியா ந நோঽத்³ய
கஶ்சநாஶ்ருதமமதமவிஜ்ஞாதமுதா³ஹரிஷ்யதீதி ஹ்யேப்⁴யோ
விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.5॥

யது³ ரோஹிதமிவாபூ⁴தி³தி தேஜஸஸ்தத்³ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
ஶுக்லமிவாபூ⁴தி³த்யபாꣳரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
க்ருʼஷ்ணமிவாபூ⁴தி³த்யந்நஸ்ய ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.6॥

யத்³வவிஜ்ஞாதமிவாபூ⁴தி³த்யேதாஸாமேவ தே³வதாநாꣳஸமாஸ இதி
தத்³விதா³ஞ்சக்ருர்யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா:
புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தந்மே விஜாநீஹீதி
॥ 6.4.7॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————————————————

அந்நமஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத்புரீஷம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தந்மாꣳஸம்
யோঽணிஷ்ட²ஸ்தந்மந: ॥ 6.5.1॥

ஆப: பீதாஸ்த்ரேதா⁴ விதீ⁴யந்தே தாஸாம் ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தந்மூத்ரம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தல்லோஹிதம் யோঽணிஷ்ட:²
ஸ ப்ராண: ॥ 6.5.2॥

தேஜோঽஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத³ஸ்தி² ப⁴வதி யோ மத்⁴யம: ஸ மஜ்ஜா
யோঽணிஷ்ட:² ஸா வாக் ॥ 6.5.3॥

அந்நமயꣳஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ
வாகி³தி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.5.4॥

அன்னம் ஸூ சமம் மனசுக்கு
தண்ணீர் -மூத்திரம் ரௌத்ரம் பிராணன்
நெருப்பு -எலும்பு மஜ்ஜை வாக்கு சூஷ்மம்

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

த³த்⁴ந: ஸோம்ய மத்²யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
தத்ஸர்பிர்ப⁴வதி ॥ 6.6.1॥

ஏவமேவ க²லு ஸோம்யாந்நஸ்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ:
ஸமுதீ³ஷதி தந்மநோ ப⁴வதி ॥ 6.6.2॥

அபாꣳஸோம்ய பீயமாநாநாம் யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா ப்ராணோ ப⁴வதி ॥ 6.6.3 ॥

தேஜஸ: ஸோம்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா வாக்³ப⁴வதி ॥ 6.6.4॥

அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி
பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச
॥ 6.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————————

ஷோட³ஶகல: ஸோம்ய புருஷ: பஞ்சத³ஶாஹாநி மாஶீ:
காமமப: பிபா³போமய: ப்ராணோ நபிப³தோ விச்சே²த்ஸ்யத
இதி ॥ 6.7.1॥

தண்ணீர் மட்டும் குடித்து -பிள்ளைக்கு பரிக்ஷை-
அன்னம் -மனஸ் சம்பந்தம் -புரிய வைக்க – ருக் நினைவு இல்லாமல் -தண்ணீர் பிராணன் இருக்கும்

ஸ ஹ பஞ்சத³ஶாஹாநி நஶாத² ஹைநமுபஸஸாத³ கிம் ப்³ரவீமி
போ⁴ இத்ய்ருʼச: ஸோம்ய யஜூꣳஷி ஸாமாநீதி ஸ ஹோவாச ந வை
மா ப்ரதிபா⁴ந்தி போ⁴ இதி ॥ 6.7.2॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யா ஹிதஸ்யைகோঽங்கா³ர:
க²த்³யோதமாத்ர: பரிஶிஷ்ட: ஸ்யாத்தேந ததோঽபி ந ப³ஹு
த³ஹேதே³வꣳஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா கலாதிஶிஷ்டா
ஸ்யாத்தயைதர்ஹி வேதா³ந்நாநுப⁴வஸ்யஶாநாத² மே விஜ்ஞாஸ்யஸீதி
॥ 6.7.3॥

ஸ ஹஶாத² ஹைநமுபஸஸாத³ தꣳ ஹ யத்கிஞ்ச பப்ரச்ச²
ஸர்வꣳஹ ப்ரதிபேதே³ ॥ 6.7.4॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யாஹிதஸ்யைகமங்கா³ரம்
க²த்³யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருʼணைருபஸமாதா⁴ய
ப்ராஜ்வலயேத்தேந ததோঽபி ப³ஹு த³ஹேத் ॥ 6.7.5॥

ஏவꣳ ஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா
கலாதிஶிஷ்டாபூ⁴த்ஸாந்நேநோபஸமாஹிதா ப்ராஜ்வாலீ
தயைதர்ஹி வேதா³நநுப⁴வஸ்யந்நமயꣳஹி ஸோம்ய மந ஆபோமய:
ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி விஜஜ்ஞாவிதி
॥ 6.7.6॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————-

உத்³தா³லகோ ஹாருணி: ஶ்வேதகேதும் புத்ரமுவாச ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய
விஜாநீஹீதி யத்ரைதத்புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா³
ஸம்பந்நோ ப⁴வதி ஸ்வமபீதோ ப⁴வதி தஸ்மாதே³நꣳ
ஸ்வபிதீத்யாசக்ஷதே ஸ்வꣳஹ்யபீதோ ப⁴வதி ॥ 6.8.1॥

ஸ்வப்ன காலத்தில் ஜீவன் ப்ரஹ்மாவிடம் ஒன்றி -சம்பன்நோ பவதி –
ப்ரஹ்மம் உடன் ப்ரஹ்மம் ஒன்றி -ராக த்வேஷம் வாசி இல்லாமல் ஒன்றி –

ஸ யதா² ஶகுநி: ஸூத்ரேண ப்ரப³த்³தோ⁴ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப³ந்த⁴நமேவோபஶ்ரயத
ஏவமேவ க²லு ஸோம்ய தந்மநோ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப்ராணமேவோபஶ்ரயதே
ப்ராணப³ந்த⁴நꣳ ஹி ஸோம்ய மந இதி ॥ 6.8.2 ॥

அஶநாபிபாஸே மே ஸோம்ய விஜாநீஹீதி
யத்ரைதத்புருஷோঽஶிஶிஷதி நாமாப ஏவ தத³ஶிதம் நயந்தே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத³ப
ஆசக்ஷதேঽஶநாயேதி தத்ரிதச்சு²ங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.3॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராந்நாதே³வமேவ க²லு ஸோம்யாந்நேந
ஶுங்கே³நாபோ மூலமந்விச்சா²த்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா:
ஸத்ப்ரதிஷ்டா:² ॥ 6.8.4॥

அத² யத்ரைதத்புருஷ: பிபாஸதி நாம தேஜ ஏவ தத்பீதம் நயதே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத்தேஜ
ஆசஷ்ட உத³ந்யேதி தத்ரைததே³வ ஶுங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.5॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராத்³ப்⁴ய்ঽத்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா: ஸத்ப்ரதிஷ்டா²
யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா: புருஷம் ப்ராப்ய
த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தது³க்தம் புரஸ்தாதே³வ ப⁴வத்யஸ்ய
ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே
ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம் ॥ 6.8.6॥

சத் ஆயனதா இருப்பிடம் மூலம் லயிக்கும் -புலன்கள் மனசில் ஒன்றி-அவை பிராணனின் ஒன்றி போகும்

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா
ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.8.7॥

தத்த்வமஸி–இது தொடக்கி மேலே மேலே இப்படியே விளக்கி -ஜகத்துக்கும் ஸ்வேதகேதுவுக்கும் ஆத்மாவாக ப்ரஹ்மம் –
அனைத்துக்கும் காரணம் -சர்வமும் ஆத்மகம்-பிரகார த்வயம் -சாமானாதிகரணம்
சங்கைகள் ஒன்பது வர ஒரே பதில் சொல்லி சங்கை போக்குகிறார் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————–

யதா² ஸோம்ய மது⁴ மது⁴க்ருʼதோ நிஸ்திஷ்ட²ந்தி நாநாத்யயாநாம்
வ்ருʼக்ஷாணாꣳரஸாந்ஸமவஹாரமேகதாꣳரஸம் க³மயந்தி ॥ 6.9.1॥

தே யதா² தத்ர ந விவேகம் லப⁴ந்தேঽமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய
ரஸோঽஸ்ம்யமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய ரஸோঽஸ்மீத்யேவமேவ க²லு
ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதி ஸம்பத்³ய ந விது:³ ஸதி
ஸம்பத்³யாமஹ இதி ॥ 6.9.2 ॥

த இஹ வ்யக்⁴ரோ வா ஸிꣳஹோ வா வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா
பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி
॥ 6.9.3 ॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.9.4॥

தூங்கும் தசையில் அடைந்தால் -நினைவு இருக்குமா இல்லையா -தேன் கூடு -பூக்கள் பலவற்றில் இருந்து
எங்கு இருந்து வந்தது தெரியுமோ –
தூங்கி எழுந்ததும் அறிகிறோம் வாசிகள் -அனைத்தையும் -தேன் போலே இல்லையே -சிங்கம் புலி -வாசி -தானே நினைந்து வருமே –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————————————-

இமா: ஸோம்ய நத்³ய: புரஸ்தாத்ப்ராச்ய: ஸ்யந்த³ந்தே
பஶ்சாத்ப்ரதீச்யஸ்தா: ஸமுத்³ராத்ஸமுத்³ரமேவாபியந்தி ஸ ஸமுத்³ர
ஏவ ப⁴வதி தா யதா² தத்ர ந விது³ரியமஹமஸ்மீயமஹமஸ்மீதி
॥ 6.10.1॥

ஏவமேவ க²லு ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸத ஆக³ம்ய ந விது:³
ஸத ஆக³ச்சா²மஹ இதி த இஹ வ்யாக்⁴ரோ வா ஸிꣳஹோ வா
வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா
யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி ॥ 6.10.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.10.3॥

எங்கு இருந்து வந்தோம் எதனால் தெரியவில்லை -கடல் நீர் மழை பெய்து நதியாகி -கடலில் சேருகின்றன –
அதே போலே ப்ரஹ்மம் இருந்து உருவாகி
மூன்றாவது தடவை தத்வமஸி சொல்லி விளக்கி

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

—————————————–

அஸ்ய ஸோம்ய மஹதோ வ்ருʼக்ஷஸ்ய யோ மூலேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோ
மத்⁴யேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோঽக்³ரேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்ஸ
ஏஷ ஜீவேநாத்மநாநுப்ரபூ⁴த: பேபீயமாநோ மோத³மாநஸ்திஷ்ட²தி
॥ 6.11.1॥

அஸ்ய யதே³காꣳ ஶாகா²ம் ஜீவோ ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி
த்³விதீயாம் ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி த்ருʼதீயாம் ஜஹாத்யத² ஸா
ஶுஷ்யதி ஸர்வம் ஜஹாதி ஸர்வ: ஶுஷ்யதி ॥ 6.11.2॥

ஏவமேவ க²லு ஸோம்ய வித்³தீ⁴தி ஹோவாச ஜீவாபேதம் வாவ கிலேத³ம்
ம்ரியதே ந ஜீவோ ம்ரியதே இதி ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ
ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ
மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.11.3॥

பிறவி நினைவு இல்லையே -ஆத்மா முடிந்து போனதா -சங்கை
மரம் -கோடாரியால் வெட்டி -பால் வழியும் எங்கு வெட்டினாலும்
கிளை பட்டுப்போனால் மரம் அழியாதே –
சரீரம் தான் பட்டுப்போகும் ஆத்மா அழியாது என்று விளக்கி –

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ந்யக்³ரோத⁴ப²லமத ஆஹரேதீத³ம் ப⁴க³வ இதி பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நம்
ப⁴க³வ இதி கிமத்ர பஶ்யஸீத்யண்வ்ய இவேமா தா⁴நா ப⁴க³வ
இத்யாஸாமங்கை³காம் பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நா ப⁴க³வ இதி கிமத்ர
பஶ்யஸீதி ந கிஞ்சந ப⁴க³வ இதி ॥ 6.12.1॥

தꣳ ஹோவாச யம் வை ஸோம்யைதமணிமாநம் ந நிபா⁴லயஸ
ஏதஸ்ய வை ஸோம்யைஷோঽணிம்ந ஏவம் மஹாந்யக்³ரோத⁴ஸ்திஷ்ட²தி
ஶ்ரத்³த⁴த்ஸ்வ ஸோம்யேதி ॥ 6.12.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³த்³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.12.3॥

ஸூஷ்மத்தில் இருந்து ஜகத் -விதையில் இருந்து மரம் -பண்புகள் எல்லாம் விதையில் உண்டே -ஐந்தாவது தடவை –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

லவணமேதது³த³கேঽவதா⁴யாத² மா ப்ராதருபஸீத³தா² இதி
ஸ ஹ ததா² சகார தꣳ ஹோவாச யத்³தோ³ஷா லவணமுத³கேঽவாதா⁴
அங்க³ ததா³ஹரேதி தத்³தா⁴வம்ருʼஶ்ய ந விவேத³ ॥ 6.13.1॥

யதா² விலீநமேவாங்கா³ஸ்யாந்தாதா³சாமேதி கத²மிதி லவணமிதி
மத்⁴யாதா³சாமேதி கத²மிதி லவணமித்யந்தாதா³சாமேதி
கத²மிதி லவணமித்யபி⁴ப்ராஸ்யைதத³த² மோபஸீத³தா² இதி
தத்³த⁴ ததா² சகார தச்ச²ஶ்வத்ஸம்வர்ததே தꣳ ஹோவாசாத்ர
வாவ கில தத்ஸோம்ய ந நிபா⁴லயஸேঽத்ரைவ கிலேதி ॥ 6.13.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.13.3॥

உப்புக்கட்டி -கரைந்த நீர் -உப்பை எடுக்க முடியாதே -உப்பு கரிக்கும் -கண்ணுக்கு தெரியாது சுவையால் அறியலாம் -ஆறாவது தடவை
மீனை தொட்ட இடம் எல்லாம் தண்ணீர் போலே ஜகம் முழுவதும் ப்ரஹ்மம்

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா² ஸோம்ய புருஷம் க³ந்தா⁴ரேப்⁴யோঽபி⁴நத்³தா⁴க்ஷமாநீய தம்
ததோঽதிஜநே விஸ்ருʼஜேத்ஸ யதா² தத்ர ப்ராங்வோத³ங்வாத⁴ராங்வா
ப்ரத்யங்வா ப்ரத்⁴மாயீதாபி⁴நத்³தா⁴க்ஷ ஆநீதோঽபி⁴நத்³தா⁴க்ஷோ
விஸ்ருʼஷ்ட: ॥ 6.14.1॥

தஸ்ய யதா²பி⁴நஹநம் ப்ரமுச்ய ப்ரப்³ரூயாதே³தாம் தி³ஶம் க³ந்தா⁴ரா
ஏதாம் தி³ஶம் வ்ரஜேதி ஸ க்³ராமாத்³க்³ராமம் ப்ருʼச்ச²ந்பண்டி³தோ மேதா⁴வீ
க³ந்தா⁴ராநேவோபஸம்பத்³யேதைவமேவேஹாசார்யவாந்புருஷோ வேத³
தஸ்ய தாவதே³வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யேঽத² ஸம்பத்ஸ்ய இதி
॥ 6.14.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.14.3॥

சுவையால் அறிவது போலே ப்ரஹ்மத்தை அறிவது எப்படி -கண்ணைக் கட்டி கூட்டி வந்து –
இந்த திசையில் நீ வந்தாய் சொல்லி -காந்தாரம் போய் சேர்ந்தான் –
யோகம் த்யானம் -கண்ணை திறப்பது போலே -ஆச்சார்ய உபதேசம் ப்ரஹ்மம் அறிய வழி –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

புருஷꣳ ஸோம்யோதோபதாபிநம் ஜ்ஞாதய: பர்யுபாஸதே ஜாநாஸி
மாம் ஜாநாஸி மாமிதி தஸ்ய யாவந்ந வாங்மநஸி ஸம்பத்³யதே
மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம்
தாவஜ்ஜாநாதி ॥ 6.15.1॥

அத² யதா³ஸ்ய வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி
தேஜ: பரஸ்யாம் தே³வதாயாமத² ந ஜாநாதி ॥ 6.15.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத் ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.15.3॥

ஜீவன் -தேவன் -மனுஷ்ய -சரீர அபிமானம் அங்கு இருக்குமா -எப்படி மறைக்கிறான்
மோக்ஷம் -அடைபவனின் பூதங்கள் -இந்திரியங்கள் -மனஸ் -பிராணன் –
எட்டாம் தடவை

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

புருஷꣳ ஸோம்யோத
ஹஸ்தக்³ருʼஹீதமாநயந்த்யபஹார்ஷீத்ஸ்தேயமகார்ஷீத்பரஶுமஸ்மை
தபதேதி ஸ யதி³ தஸ்ய கர்தா ப⁴வதி தத ஏவாந்ருʼதமாத்மாநம்
குருதே ஸோঽந்ருʼதாபி⁴ஸந்தோ⁴ঽந்ருʼதேநாத்மாநமந்தர்தா⁴ய
பரஶும் தப்தம் ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸ த³ஹ்யதேঽத² ஹந்யதே ॥ 6.16.1॥

அத² யதி³ தஸ்யாகர்தா ப⁴வதி ததேவ ஸத்யமாத்மாநம் குருதே
ஸ ஸத்யாபி⁴ஸந்த:⁴ ஸத்யேநாத்மாநமந்தர்தா⁴ய பரஶும் தப்தம்
ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸந த³ஹ்யதேঽத² முச்யதே ॥ 6.16.2॥

ஸ யதா² தத்ர நாதா³ஹ்யேதைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி
விஜஜ்ஞாவிதி ॥ 6.16.3॥

ப்ரஹ்ம பிராப்தி அடைவதை எப்படி நிரூபிப்பது -திருடன் -கோடாலியை பழுக்க காய்ச்சி –
கையில் பிடித்ததும் போய் விடுவான் -திருடன் -lie detector போலே –
சரீரத்தில் சிக்கி -விலகினால் ப்ரஹ்மத்துடன் பெறுவான் -லயிக்கும் பொழுது -அங்கே தானே சேர வேண்டும்
இப்படி ஒன்பது சங்கைகளையும் தீர்த்து அருளி
பூமா தகர வித்யைகள் மேலே பார்ப்போம் –

16-தஹர வித்யை –7 —ப்ரபாடகம்

அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

———-———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

June 11, 2021

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –