பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –
அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்
நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில
வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய
வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க
வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –
நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்
நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன
ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-
ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை
வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்
வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்
ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி
நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை
நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்
ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்
அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்
ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –
பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை
1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –
பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு
2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு
3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்
4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது
பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –
குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –
5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது
அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்
நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –
பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்
ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –
6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –
அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது
இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்
ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது
இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்
ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –
யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு
அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்
யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –
ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்
அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –
அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்
உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு
ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்
வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி
ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –
இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –
அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –
இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply